Wednesday, June 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 568

மோடி அரசின் கல்விக் கொள்ளையை எதிர்த்து பு.மா.இ.மு தில்லியில் போராட்டம்

0

காட்ஸ் மற்றும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு டெல்லியில் நடத்திய போராட்டம்!

12-12-2015 அன்று புதுதில்லி, ஜந்தர் மந்தரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, ‘இந்தியாவே காட்ஸிலிருந்து வெளியேறு’, ‘மோடி கும்பலின் புதியக் கல்விக்கொள்கை இந்துத்துவம் மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் கள்ளக் குழந்தை’ என்ற முழக்கத்துடன் போராட்டத்தை நடத்தியது.rsyf-delhi-protest-4டிசம்பர் 15 அன்று மோடி அரசு, உலகவர்த்தகக் கழகத்தின் காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் நாட்டின் சேவைத்துறைகளான கல்வி, தண்ணீர், இயற்கை வளங்கள், சுகாதாரம் என அனைத்தையும் முற்றாக அடகு வைத்து நாட்டை மறுகாலனியாதிக்கத்தின் நிரந்தரப்பிடியில் சிக்க வைக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, புதிய கல்விக்கொள்கை-2015, காட்ஸின் அடியொற்றி நாட்டின் கல்விக்கட்டமைப்பை தகர்க்கும் வகையிலும் இந்துத்துவ பாசிசத்தை புகுத்தும் வகையிலும் முன் கூட்டியே மோடிகும்பலால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே கடந்த சிலமாத காலமாக இக்கல்விக்கொள்கை முன்வைக்கும் அபாயங்களை மாணவர்கள் தம் அனுபவத்தில் கண்டு கொண்டு, பல்வேறு வகையான போராட்டங்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக மாணவர்களின் உதவித் தொகையை இரத்து செய்தது, கல்வி நிலையங்களுக்குள் காவல் நிலையங்களை அமைப்பது, பல்வேறு சதிகளின் மூலம் பார்ப்பனியத்தைப் புகுத்துவது மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது என பல்வேறு அட்டூழியங்களுக்கு எதிராக பல்கலைக் கழக மானியக் குழு முற்றுகை, பேரணி, ஆர்ப்பாட்டம், இணையப்பிரச்சாரம் என பலவகையான போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் இவையாவும் கல்வி என்ற ஒன்றை மட்டும் சுற்றி பொருளாதாரக் கோரிக்கைகளாக  மட்டும் புரிந்து கொள்வது சரியாக இருக்காது. நாட்டையே அடிமைப்படுத்தும் சதி இந்த புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது.

இந்த வகையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணப் பணிகளுக்கிடையே டெல்லியில் காட்ஸை எதிர்க்கும் அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு (All India Forum for Right to Education) நடத்தும் காட்ஸ் எதிர்ப்பு இயக்க மாநாட்டில் முனைப்போடு பங்கேற்றது.

ஆர்ப்பாட்ட தயாரிப்புகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

08-12-2015 முதலே AIFRTE மேடையை அலங்கரித்த பல்வேறு சமூக இயக்கங்களுக்கு (AISA-All india stuents association, AISF-All India students federation, PSDU-Progessive democratic students union, TVV-Telengana Vidhya Vedika, APSC-Ambedkar Periyar Study Circle IIT Madras, KAPSC-Karnataka Amedkar Periyar Study circle, AIRSO-All india revolutionary students organization) மத்தியில் பு.மா.இ.மு புரட்சிகரப் பாடல்களைப் பாடினர்.

குறிப்பாக Education is our right, WTO get-out; WTO-get out; RSS-kick out என நமது தோழர்கள் செங்கொடிப் பதாகையை rsyf-delhi-protest-3ஏந்தி ஆங்கிலத்தில் இயற்றிப் பாடிய பாடலை பல்வேறு மொழிபேசும் மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்! குறிப்பாக AISA, பல்கலைக்கழக மானியக்குழு முற்றுகையின் போது, காட்ஸ் ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்பதை எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

புதிய கல்விக்கொள்கை-2015, ஆரம்பக் கல்வியிலே தொழிற்கல்வியைப் புகுத்துவதன் மூலம் எப்படி நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு பார்ப்பன வருணாசிரம அதர்மத்தின் கீழ் கல்வி உரிமையை மறுக்கிறது என்பதை மேடையிலே எடுத்துக்காட்டும் விதமாக பு.மா.இ.மு தோழர்கள் “ஆயிரம் காலம் அடிமை என்றாயே? அரிசன் என்று பேருவைக்க யாரடா நாயே?” என்று நாட்டை மறுகாலனியாக்கும் இந்துத்துவ  கும்பலை அம்பலப்படுத்தி தோலுரித்தனர்.

தமிழ்நாட்டில் தோழர் கோவன் டாஸ்மாக் பாடல்கள் பாடியதற்காக எப்படி இந்த ஆளும் வர்க்கம் தேசத்துரோக வழக்கை போட்டது என்பதை எடுத்துக்காட்டி, “புதியக் கல்விக்கொள்கையை அம்பலப்படுத்தும் விதத்தில் நாங்கள் பாடும் பாடலுக்காக, காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மோடி கும்பல் தேசத்துரோகம் குற்றம் சாட்டுமானால் நாங்கள் தேசத்துரோகிகளே” என்று மேடையில் அறிவித்து பாடினார்கள்.

கலை நிகழ்ச்சி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

12-ம் தேதி பு.மா.இ.மு நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு தோழர்கள் டில்லி மாணவர்களிடம் விரிவாக பிரச்சாரம் செய்தனர்.

பிரச்சாரம், முழக்கங்கள், ஊர்வலம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“தப்லி” என்று இந்தி மொழியில் அழைக்கப்படும் பறையை தோழர்கள் விண்ணதிர இசைத்து, கேளாத செவிகள் கேட்கட்டும் என்று பகத்சிங்கின் புரட்சிகரப்பாதையை டில்லியின் பல்வேறு பல்கலைக்கழக வளாகங்களுக்கு எடுத்துச் சென்றனர். குறிப்பாக அரசியல் விவாதம் பெரும்பான்மையாக நடைபெறும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் பிரச்சாரம் செய்தனர். விடுதிவளாகம் (15 விடுதிகள்), சிற்றுண்டி வளாகம் (5 தாபாக்கள்), பொதுச்சாலை என அனைத்து இடங்களிலும் காட்சை முறியடிப்போம் என முழங்கி பிரசுரம் வினியோகித்தும், பறை இசைத்தும் புரட்சிகரப்பாடல்கள் பாடியும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தோழர்கள் நடத்திய பிரச்சாரம் ஜே.என்.யு, டில்லி பல்கலைக்கழகம், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, ஐ.ஐ.டி டில்லி, பல்கலைக் கழக மானியக்குழு முற்றுகை நடக்கும் இடம் என டில்லி எங்கிலும் சென்றடைந்தது.

இதன் ஒருபகுதியாக 12-ம் தேதி ஆர்ப்பாட்டம் பு.மா.இ.மு ஒருங்கிணைப்பில் டில்லி ஜந்தர்மந்தரில் நடந்தது. தோழர்கள் நிறுவிய கார்ட்டூன் பிரச்சாரங்கள், செங்கொடிப்பதாகைகள், முழக்கங்கள், மோடி முன்வைக்கும் புதிய கல்விக்கொள்கையை தூக்கி எறிவது மட்டுமல்ல, மாணவர்கள் மற்றும் மக்களே தங்களது சுதந்திரமான படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கல்விக்கொள்கையை தாங்களே உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை  விதைத்தது.

rsyf-delhi-protest-2பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தனது தலைமை உரையில் இங்கு நிலவும் ஜனநாயகம் எப்படி போலியானது ,மறுகாலனியாதிக்கப் பேரழிவுகள் எப்படி 90-களில் புகுத்தப்பட்ட தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் மூலம் இந்தியாவை வாரிச்சுருட்டியது, தற்பொழுது மோடி கும்பல் கையெழுத்திடப்போகும் காட்ஸ் ஒப்பந்தம் எப்படி இந்திய இறையாண்மையைப் பற்றி இறுக்குகிறது, புதியக் கல்விக்கொள்கை எப்படி பார்ப்பன பாசிசத்தைப் புகுத்துகிறது என்பதையெல்லாம் அம்பலப்படுத்தி பேசினார்.

குறிப்பாக கல்வி என்பது உரிமை என்ற நிலையில் இருந்து இந்த அரசு கைகழுவிக்கொண்டு, நிதிச்சுமை என்பதன் பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு கல்வியை விற்று தரகு வேலை பார்ப்பதன் மூலம் இந்த அரசு ஆளத்தகுதியற்று, கல்விவழங்க வக்கற்று, தோற்றுப்போய்விட்டது என்பதை எடுத்துக்காட்டினார்.

நிதி இல்லை என்று சொல்லும் அரசிடம் நிதி எங்கே இருக்கிறது என்பதை பு.மா.இ.முவால் எடுத்துக்காட்ட இயலும் என அம்பானி, டாட்டா, கோயங்கா போன்ற தரகுமுதலாளிகளிடம் தான் அது சிக்கியிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி தனியார்மயத்தை தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே கல்வியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற முடியும் என அறிவித்ததை பெரும்பாலானோர் கவனித்தனர்.

தங்களை இடதுசாரிகள் என்று அழைத்துக்கொள்பவர்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துவிட்டு அதைச் செயல்படுத்தும் பார்ப்பனியத்தை கண்டுகொள்ளாமல் விடுகிற பொழுது புதிய கல்விக்கொள்கையில் பார்ப்பனியமும் ஏகாதிபத்தியும் எப்படி ஒத்திசைவாக இணைந்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பன பாசிசம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மனுதர்மத்தின்படி மறுத்தே வந்திருக்கிறது என்பதையும் தற்பொழுது புதிய கல்விக்கொள்கை எட்டாம் வகுப்பிலேயே தொழிற்கல்வியைக் கொண்டுவருவதன் மூலம் பொதுக்கல்வி மறுக்கப்பட்டு, வருணாசிரம பாசிசம் நிலைநாட்டப்பட்டு, தாராளமாக கூலிகளை மேல்நிலை வல்லரசுகளுக்கு எப்படி விற்கப் போகிறது என்பதை எடுத்துக்காட்டிய பொழுது பார்ப்பனியம் வேரறுக்கப்படவேண்டியது எத்துணை அவசியம் என்பதை ஜந்தர்மந்தரில் கூடியிருந்த மாணவர்கள் கண்டுகொண்டனர்.

இப்படிப்பட்ட புதிய கல்விக்கொள்கை தகர்க்கப்பட வேண்டுமானால் மாணவர்கள் போராட்டம் இக்கல்விக்கொள்கையின் காரணகர்த்தாவான ஏகாதிபத்தியத்தையும் பார்ப்பனியத்தையும் வீழ்த்துகிற புரட்சிகர அரசியலாக இருக்கவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. இந்த வகையில் மாணவர்கள் அணிதிரண்டால் மட்டும்போதாது மாணவர்கள் இந்நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களான, விவசாயிகள், தொழிலாளிகள், பெற்றோர்கள் கூட்டிணைவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு எடுத்துக் காட்டாக, தமிழ்நாட்டில் மது ஒழிப்புப் போராட்டம் எப்படி மாணவர்களால் எடுத்துச்செல்லப்பட்டு வீச்சான மக்களின் போராட்டாமாக மக்கள் தங்கள் அதிகாரங்களை நிறுவிக்கொள்ளும் போராட்டமாக மாறியது என்பது விவரிக்கப்பட்டது.

இதன் அடியொற்றி தோழர்கணேசனின் உரைக்குப்பின்பாக,

நாட்டைச்சூறையாடும் மறுகாலனியாதிக்க நச்சை முறியடிப்போம்.

பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம்.

மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்

என காட்ஸை வீழ்த்துவதற்கான போர்தந்திரம், முழக்கமாக முன்வைக்கப்பட்டது. பு.மா.இ.மு தோழர்கள் பாடிய பாடலில் “ஆர்.எஸ்.எஸ்ஸா? நக்சல்பாரியா?” எனும் கேள்வி வரி, பலத்த வரவேற்பை மாணவர்கள் மத்தியில் பெற்றது.

ஆர்ப்பாட்ட பேச்சாளர்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

முழக்கத்தால் கவரப்பட்ட பிற பேச்சாளர்கள், குறிப்பாக கல்வியாளர் பேராசியர் அனில் சட்கோபால் இது சமரசமற்ற முழக்கம் என்று புரட்சிகர அரசியலின் காத்திரத்தை வரவேற்று பேசினார். AIFRTEயின் அமைப்புச் செயலாளர் தோழர் ரமேஷ் பட்நாயக், பு.மா.இ.மு தோழர்கள் மக்களை பாடல்களாலும் எழுச்சிமிகு உரைகளாலும் கட்டுக்கோப்புடன் வழிநடத்திச் சென்றதை பெருமையுடன் குறிப்பிட்டார். மேலும் பேராசிரியர் பிரேந்திர ராவத் பேசும் பொழுது புதிய ஜனநாயகப்புரட்சி எப்படி நடத்துவது என்பது தெரியாவிட்டாலும் பு.மா.இ.மு முன்வைக்கும் அரசியல் சரியானது என மேடையிலேயே பேசினர். பேராசிரியர் ரவிக்குமார், தெற்காசியப்பல்கலைக்கழகம், காட்ஸ் கொண்டு வரும் அபாயம் குறித்து விழிப்புணர்வூட்டிப் பேசினார். பேராசிரியர் சச்சின், AIFRTE, இந்தியில் புதியக்கல்விக்கொள்கையால் மாணவர் எதிர்கொள்ளும் அபாயம் குறித்து விளக்கினார்.  மேலும் தோழர் சுசிதா (AISA), தோழர் ஆனந்த் (TNM-The new materialists), தோழர் தாவா (DSU), தோழர் ரமேஷ் (அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், ஐ.ஐ.டி சென்னை) ஆகியோர் காட்ஸை எதிர்த்து ஏகாதிபத்தியத்தையும் பார்ப்பனியத்தையும் ஒழிப்பதில் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என அறைகூவல் விடுத்தனர்.

இதில் குறிப்பாக AISA மற்றும் TNM தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு பு.ம.இ.மு முன் வைக்கும் புரட்சிகர அரசியலை ஊன்றிக் கவனித்தனர். ஒரு கட்டத்தில் பிற அமைப்பைச் சேர்ந்தவர்களும் (ராஷ்ட்ரிய சேவா தள்) கூட போராட்ட உணர்வால் பு.மா.இ.மு முன்வைக்கும் முழக்கத்தை முழங்கியது (இன்குலாப் ஜிந்தாபாத்) புரட்சிகர அரசியலை மக்கள் இறுகப் பற்றுவதற்கான சாட்சியாக அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதை மெய்ப்பிக்கும் வகையில் ஓர் முரண்பாட்டை இங்கு தெரியப்படுத்தவேண்டியது அவசியமாகும். பொதுவாக ஜந்தர் மந்தர் மக்களின் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் இடமாக முழக்கமும் சத்தமுமாக இருக்கும். நம் நாட்டின் பாராளுமன்றமும் அத்தகையதுதான் என்பதை நீங்கள் அறிவீர்களோ என்னவோ, ஆனால் இந்த போலி ஜனநாயகத்தைத் தாங்கிப்பிடிப்பவர்கள் ஒவ்வொரு முறையும் இந்த போலி ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்தும் பொருட்டு, பாராளுமன்றத்தின் மாண்பு ஓட்டுக்கட்சி உறுப்பினர்களால் சீரழிக்கப்படுவதாக அங்கலாய்ப்பார்கள். ஆனால் ஆச்சரியமாக இந்த முறை காட்ஸ் கையெழுத்தாகும் சமயத்தில் காட்ஸ் குறித்து கடுகளவு சத்தமும் பாராளுமன்றத்தில் இருந்து வெளிவரவில்லை. மாறாக அது ஜந்தர் மந்தரில் 12-12-2015 அன்று போர்முழக்கமாக வந்திருந்தது.

இந்தநாட்டின் பாராளுமன்றம் யாருக்கானது? எங்கிருக்கிறது என்பது பு.மா.இ.மு ஜந்தர்மந்தரில் நடத்திய ஆர்ப்பாட்டத்திலிருந்து தெரியவரும். முன்னது இந்த ஆளும்வர்க்கத்திற்கானது; ஆகையால் தான் பேரமைதி. பின்னது மக்கள் அதிகாரத்துக்கானது; ஆகையால் தான் பெருமுழக்கம்.

பு.மா.இ.மு டெல்லியில் காட்ஸை எதிர்த்து நடத்திய போராட்டத்தின் பருண்மையான முடிவு எது என்பதை கீழ்க்கண்டவாறு ஒரு வாக்கியத்தில் தொகுக்க முடியும்;

மக்கள் தங்கள் அதிகாரத்தை புரட்சிகரபதாகையின் கீழ் நிறுவிக்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.

சிவகங்கை பாலியல் குற்ற வழக்கு – திசை திருப்பும் போலீசு

0

சிவகங்கை சிறுமி பாலியல் குற்ற வழக்கில் ஏ.டி.ஜி.பி உள்ளிட உயர்போலீசு அதிகாரிகளை காப்பாற்ற வழக்கை திசை திருப்புகிறது சி.பி.சி.ஐ.டி போலீசு! அதற்கு துணை நிற்கிறது தமிழக அரசு

sivagangai-protest-against-rapist-police-officials-1சிவகங்கை சிறுமியை பெற்ற தந்தை முதல் உயர் போலிசு அதிகாரிகள் வரை கூட்டுப் பாலியல் வன்முறையை ஏவிய கொடூரத்தை பத்திரிக்கை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பிர்கள். இந்த செய்தி மழைக்கால மின்னலைப் போல தோன்றி மறைந்து போனதையும் அறிவோம். இந்த சம்பவத்தில் ஈடுபற்ற குற்றவாளிகளாக சிறுமியின் தந்தை, அண்ணன், மாமா, அண்ணனின் நண்பன் அரவிந்த் நடத்துநர் நமச்சிவாயம் சிவகங்கை காவல்நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் சங்கர் உட்பட 8பேர் மீது வழக்கு பதியப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் கடந்த ஜூன் மாதம் காரைக்குடி மாஜிஸ்டிரேட்டிடம் தன் வாழ்க்கையை சீரழித்த மேலும் பல குற்றவாளிகள்ப் பற்றி வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மதுரை ஜி.ஜி அலுவலகத்தில் பணியாற்றும் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் சிவக்குமார், தென் மண்டல ஜி.ஜி-யாக பணியாற்றி தற்போது ஏ.டி.ஜி.பி-யாக உள்ள இராஜேஸ்தாஸ், எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸ் மற்றும் பல போலீஸ் அதிகாரிகள் என 28 பேர் பெயரை வாக்குமூலமாக குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் அனைவரும் கூட்டுச்சேர்ந்து தங்கள் விரும்பியபோதெல்லாம் அச்சிறுமியை அழைத்து வரச்செய்து கட்டாய போதையூட்டி வல்லுறவு செய்திருக்கிறார்கள். இந்த குற்றவாளிகள் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. காரணம் இவர்கள் எல்லாம் உயர்பதவியில் உள்ளவர்கள். சிறுமி என்றுகூட பாராமல் வெறிநாய்களைப் போல கடித்துக் குதறியிருக்கிறார்கள்.

இது ஏதோவிபரம் தெரியாமல் செய்த ஒருநாலாந்தர பொறுக்கியின் செயலாகக் கருதி ஒதுக்கி விட முடியாது. இந்த நாட்டையே sivagangai-protest-against-rapist-police-officials-5காவல் காப்பதாகவும், சட்ட ஒழுங்கை காப்பதாகவும் கூறிக்கொள்ளும் அரசின் அங்கமான சீருடையணிந்த மிருகங்களால் நடத்தப்பட்ட சமூக அவலம் இது. தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலிசைவிைட திறமையானவர்கள் என்கிறார்கள். சிதம்பரம் பத்மினி காவல் நிலையத்தில் கணவன் முன்னே பலாத்காரம் செய்யப்பட்டார். சிவகாசி ஜெயலெட்சுமி விவகாரத்தை நாடே காறித்துப்பியது. விரப்பன் தேடுதல் வேட்டையில் வாச்சாத்தி பழங்குடி பெண்களை பாலியல் பாலத்காரம் செய்தது காக்கிக் கூட்டம். எந்த வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

பெண்களை பாரத மாதாவாகவும், தாய் உள்ளம் கொண்ட ஆட்சி அம்மா ஆட்சி என்கிறார்கள் அ.தி.மு. அடிமைகள். பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் இந்தப் பேய்கள் பெண்ணுக்கு இறங்கவில்லை. சிறுமியை சீரழித்தவர்களை காப்பற்ற துடிக்கிறது ‘அம்மா’ அரசு. அதற்காக புகார் கொடுக்கக் காரணமான சிறுமியின் அத்தையை கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசு. இவரது தூண்டுதலால் தான் சிறுமி போலீசு அதிகாரிகள் பற்றி பொய் வாக்குமூலம் கொடுத்ததாக வழக்கையே திசைதிருப்புகிறது. பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இவரது 18-வயது மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடகங்கள் அரசியல் கட்சிகள் அமைதிக்கு என்ன காரணம்? டெல்லி மாணவி பாலியல் சம்பவத்தில் நாடே பற்றி எரிந்த போது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. உலக நாடுகளே ஆங்கில ஊடகங்கள் வாயிலாக கண்டனம் தெரிவித்தார்கள். சிவகங்கை சிறுமி சம்பவம், நம்மை பாதுகாப்பதாக சொல்லிக் கொள்ளும் போலீஸ் துறையிலே ஐ.ஜி, ஏ.டி.ஜி.பி போன்ற உயர் பொறுப்பிலே உள்ள சீருடையணிந்த கிரிமினல்களால் நடத்தப்பட்டிருக்கிறது. இது பகிரங்கமாக வெளியே நாறிய பிறகும் எதுவுமே நடக்காததுபோல மூடி மறைக்கிறார்கள், வழக்கை திசை திருப்புகிறார்கள்.

இவர்கள் செய்த குற்றத்திற்கு நடுத்தெருவில் வைத்து தூக்கிலிடவேண்டும் அவ்வளவு பெரிய குற்றம் இது. நீதித்துறையோ, போலீ, இராணுவம், உயர் அதிகாரிகளை கண்டித்தால் அரசின் ஸ்தரத்தன்மை கெட்டுவிடும் என்கிறது.

ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் உயர் அதிகாரிகள் என்பதால் அடக்கி வாசிக்கிறார்கள். குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.

தீர்வு என்ன?

sivagangai-protest-against-rapist-police-officials-6இந்த சமூகமே நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூக அமைப்பு. பெண்களை போகப் பொருளாகவும் நுகர்வு பொருளாகவும் கருதும் உளவியல் சிந்தனையை ஊட்டி வளர்க்கும் சமூக அமைப்பு, ஆபாச சீரழிவு பண்பாட்டு வக்கிரங்களை பரப்பி ஆண்களை வெறியூட்டி வருகிறது. பெற்ற தந்தையே மகளை பலாத்காரம் செய்வதும், பாதுகாக்க வேண்டிய போலீசே கூட்டு சேர்ந்து வல்லுறவு செய்வதும், நீதி வழங்க வேண்டிய நீதித்துறையோ திருடர்களை பாதுகாப்பதாகவும், போராடும் மக்களை, வழக்கறிஞர்களை ஒடுக்கும் கருவியாகவும் இருப்பது என அரசு உறுப்புகள் அருகதையற்று நிற்கிறது.

இந்நிலையில் சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் அறைகுறையான தீர்ப்பை பெறுவதற்கே 18 ஆண்டுகள் போராடவேண்டியிருந்ததை மறக்க முடியாது. எனவே சிவகங்கை சிறுமிக்கு நீதிகிடைக்க பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி இதுதான்.

21-12-2015 -அன்று மாலை 4.00 மணியளவில் போலீஸ் அனுமதி மறுத்த நிலையிலும் அதை மீறி மக்கள் அதிகாரம் அமைப்பினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். பெண்கள் உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனா். போலீஸ் அவா்களை கைது செய்தது. அங்கு கூடியிருந்த மக்கள் போலீசை திட்டினா் உங்களையும் ஒரு நாளுக்கு இப்படி ஏத்தனும்டா என்று போலீசை நோக்கி ஒருவா் கூறினாா். வழக்கு குறித்த விபரங்களை மூடி மறைப்பதற்கு போலீஸ் முழு மூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் அதிகாரத்தின் ஆா்ப்பாட்டமானது உயா் போலீஸ் அதிகாரிகளின் குற்ற செயலை அம்பலப்படுத்தும் விதத்தில் அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்
சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்கள்
8438103269

நிவாரணம் போதாது நீதி வேண்டும் – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

0

க்கள் அதிகாரம் மற்றும் விவசாய சங்க கூட்டமைப்பு சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி 21-12-2015 திங்கள் காலை 10 மணி அளவில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை : தோழர் ரவி, மக்கள் அதிகாரம்

flood-relief-sirkazhi-demo-1கடந்த இரண்டு மாதங்களாக பெய்த தொடர்மழையால் தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் கனமழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சீர்காழி வட்டத்தின் பெரும்பகுதி விவசாயம் அழிந்தும், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று மாதமாக விவசாயத் தொழிலாளர்களும் வேலையில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ இதுவரை நம்மை திரும்பி பார்க்கவில்லை. அவர்கள் தாமாக வந்து பார்க்க மாட்டார்கள். அவர்கள் சட்டையைப் பிடித்து இழுத்து வந்து நடுரோட்டில் வைத்துதான் இனி நமது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். இது அடையாள ஆர்ப்பாட்டமே ஒழிய தீர்வல்ல.

தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 25,000-ம், கூலி விவசாயத் தொழிலாளர்களுக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு உதவித் தொகையாக ரூ 15,000-ம், தோட்டப் பயிர் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 50,000-ம் வழங்க வேண்டும்.

பகுதியில் உள்ள ராஜன் வாய்க்கால், மண்ணியாற்றில் மார்ச் மாதம் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். பாசன வடிகால் வாய்க்காலைத் தூர்வாரி பாசனத்தை முறைப்படுத்த வேண்டும்.

இக்கோரிக்கைகளை உடனே நிறைவேற்றா விட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பதை இந்த அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்.

flood-relief-sirkazhi-demo-5திரு. P.S இராஜேந்திரன், விவசாய சங்கம், புதுப்பட்டினம்

நமது பகுதியை எந்த அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை. நம்மை இந்த அரசு அலட்சியப்படுத்துகிறது. நமது கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்றா விட்டால் வேறுமாதிரியான போராட்டம் நடத்த வேண்டும்.

திரு மனோகர், விவசாய சங்கம், கொடக்கார மூலை

நமது வீட்டில் உள்ள நகை, நட்டு வரை அடகு வைத்து பயிர் செய்தோம். மழை வெள்ளத்தால் அனைத்தும் அழிந்து போய் விட்டது. எங்கள் ஊர் கூட்டுறவு வங்கியில் நகையெல்லாம் இருக்கிறது. அதை இரண்டு முறை உடைத்து திருட முயன்றார்கள். காரணம் இங்குள்ள விவசாயிகள் அவ்வளவு நெருக்கடியில் இருக்கிறோம். எத்தனையோ முறை கலெக்டருக்கும், தாசில்தாரிடமும் மனு கொடுத்து மனு கொடுத்து ஓய்ந்து போய் விட்டோம். இனிமேல் மனு கொடுப்பதால் பலனில்லை என்பதை மக்கள் அதிகாரம் தோழர்கள் சொல்வதுதான் சரி. அதுதான் நமது பாதையாக இனி இருக்க வேண்டும்.

flood-relief-sirkazhi-demo-3திரு மோகன், கொடக்கார மூலை பாசன விவசாய சங்கம்

எங்கள் சங்கத்தின் சார்பாக நாங்கள் கலெக்டர் நடத்தும் எத்தனையோ குறை தீர்ப்பு கூட்டங்களில் கலந்து கொண்டோம். ஆனால், எந்த பயனுமில்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லையெனில் மக்கள் அதிகார தோழர்களோடு போராடுவோம்.

தோழர் ந. அம்பிகாபதி, மாவட்ட அமைப்பாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி

எல்லாருக்கும் சோறு போட்ட விவசாயிகள் இன்று நடுத்தெருவில் வந்து நிற்கிறோம். தொடர்மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் பாதிப்பால் கோடீஸ்வரனிலிருந்து, ஏழை வரை பாதிக்கப்பட்டனர். பெரிய பங்களாவிலிருந்து குடிசை வீடு வரை மூழ்கி சிறுகச் சிறுக சேர்த்த உடைமைகள் அழிந்து, உயிர்ச்சேதமும் ஏற்பட்டது.

flood-relief-sirkazhi-demo-2பணக்காரர்களிலிருந்து ஏழை வரை சோறு சோறு என்று கத்திய அவலத்தைப் பார்த்தோம். அந்த சோற்றை விளைவிக்கும் விவசாயிகளுக்கு இந்த அரசு எந்த உதவியும் செய்யவில்லை. 60 ஆயிரம் ஏரி, குளம் நீர்நிலைகளை நமது முன்னோர் நமக்கு அளித்துச் சென்றதை நாம் காக்கத் தவறிவிட்டோம். 68 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் அனைத்தும் அழிக்கப்பட்டு ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதற்கு இந்த அரசு அமைப்பே காரணம்.

காட் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு நாட்டையும் விவசாயத்தையும் அடகு வைத்து விட்டது. தனியால் கல்வி நிலையங்களும், அரசு கட்டிடங்களும் ஏரி, குளங்களில் கட்டப்பட்டுள்ளன. மோடி அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் கொள்ளையர்களுக்குமான அரசுதான். மாநில அரசும், மத்திய அரசும் விவசாயிகளின் குறைகளை தீர்க்கப் போவதில்லை.

இந்த அரசு அமைப்பு ஊழல், லஞ்சம், முறைகேடுகளால் புழுத்து நாறி எதிர்நிலை சக்தியாக மாறி விட்டது. ஆளத் தகுதியிழந்து முரண்பட்டு நிற்கிறது. அதிகார வர்க்கத்தையும், அரசியல் கட்சிகளையும் விரட்டி அடித்து நமது மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டும். அதற்கு எடுத்த கூட்டுதான் இந்த ஆர்ப்பாட்டம்

மிலிட்டரி அமிர்தலிங்கம், சமூக ஆர்வலர் கூட்டமைப்பு

flood-relief-sirkazhi-demo-4மக்கள் நலனுக்காக பாடிய தோழர் கோவன் அவர்களை இந்த மக்கள் விரோதிகளின் அரசு கைது செய்தது. அந்த அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் இன்று விவசாயிகளின், தொழிலாளர்களின் நலனுக்காக நடத்தும் இந்த ஆர்ப்பாட்டம் வெற்றியடைந்துள்ளது. காரணம் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வர்க்கத்தைச் சேர்ந்த பிரிவினரும் ஒன்றாகி உள்ளனர். இது வருங்காலத்தில் நமது ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு வெற்றியாக அமையும்.

திரு சிவபிரகாசம், தலைவர், கொள்ளிடம் ஒன்றிய விவசாயிகள் கூட்டமைப்பு.

எனக்கு 94 வயது இருந்தாலும் நீங்கள நல்லா வரணும் என்று நான் போராடுகிறேன். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பச்சை துண்டு பலமானது என்பதை இந்த அரசு அதிகாரிகள் உணர வேண்டும். மக்கள் அதிகாரம் தோழர்கள் நமக்கு துணையாக உள்ளனர். நாம் யார் என்பதை இந்த அதிகாரிகளுக்கு உணர்த்துவோம். எங்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.

மேலும் கொள்ளிடம் ஒன்றிய விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் செயலர் திரு விஸ்வநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

நன்றியுரை : முருகன், விவசாய சங்களம், மாதானம்.

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் அடித்து கலக்கியது போல் விவசாய பயிர் உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

முன்னதாக,

  • நிவாரணம் போதாது நீதி வேண்டும்!
  • வெள்ளப் பேரழிவிற்கு காரணமான முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்…!
  • அனைத்திலும் செயலிழந்து தோற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பை துயரத்தோடு ஏன் சுமக்க வேண்டும்?

என தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகை மாவட்டங்களில் மக்கள் அதிகாரம் சார்பாக சுவரொட்டிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

flood-relief-tnj-poster

தகவல்
மக்கள் அதிகாரம்,
சீர்காழி

ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – விழுப்புரம் ஆர்ப்பாட்டம்

0

ஆலயத்திலும் அகிலத்திலும் பார்ப்பான் வைத்ததே சட்டம்!
உச்ச நீதி (உச்சி குடுமி) மன்றம் திட்டவட்டம்!

விழுப்புரம் ஆர்ப்பாட்டம்

2006 தி.மு.க ஆட்சியின் போது கொண்டு வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்ததின் மூலம் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

archagar-verdict-vpm-demo-banners-3இந்தப் பள்ளிகளில் பல்வேறு சாதியினை சார்ந்த சுமார் 206 மாணவர்கள் பயின்று ஆகம விதிகளை முறையாக கற்று தேர்ந்து அரசு சான்றிதழும் பெற்றனர். இந்த சட்ட ஆணையை எதிர்த்து மதுரையை சார்ந்த சிவாச்சாரியார்கள் சங்கம், சட்டப்பிரிவு 25-க்கு எதிரானது என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஆதரவாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மக்கள் கலை இலக்கிய கழகமும் தம்மை இணைத்துக்கொண்டு வழக்கை நடத்தின. இந்த வழக்கின் தீர்ப்பு 2013 ஆண்டே வரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு பின்பு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த சூழலில் கடந்த 16-12-2015 அன்று தனது தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பு 1972 ஆண்டு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்விலே வழங்கப்பட்ட சேஷம்மாள் தீர்ப்பை விட நயவஞ்சகமான முறையில் நுணுக்கமாக வழங்கி பார்ப்பனிய நரித்தனத்தை நிலைநாட்டி உள்ளது.

archagar-verdict-vpm-demo-banners-1அயோக்கியத்தனமான இந்தத் தீர்ப்பை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பதாகவும், தேவைபட்டால் மேல்முறையீடு செய்வது பற்றி பரிசிலிப்போம் என்று ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற பாணியில் அறிக்கை விடுகின்றனர்.

ஆகப்பெரும்பான்மையாக உள்ள பிற சாதி உழைக்கும் மக்களை கீழானவர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் அவர்கள் சிலையை தொட்டால் சாமி செத்துவிடும் என்று கூறி மக்களை இழிவு படுத்தி வந்த பார்ப்பனியம் அதனை சட்ட ரீதியாகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதிபடுத்தியுள்ளது.

சட்டப்பிரிவு 17-ன் படி தீண்டாமை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது குற்றம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தற்பொழுது “இலை மறை காயாக“ வழங்கியுள்ள இந்த தீர்ப்பு தீண்டாமை குற்றமே.

archagar-verdict-vpm-demo-banners-2இந்த கேடுகெட்ட தீர்ப்பை கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிர அமைப்புகளின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

விழுப்புரத்தில் பு.மா.இ.மு., வி.வி.மு,.பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகள் இணைந்து 21-12-2015 திங்கள் அன்று மாலை 5.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஞானவேல் ராஜா தனது தலைமையுரையில், “உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முறையாக பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு எதிராகவும், சாதி தீண்டாமையை மறைமுகமாக திணிக்கிறது” என்பதையும் அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் தோழர் மனோகர், “உச்ச நீதி மன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் தான் என்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தீர்ப்பு என்பது பிற சாதி உழைக்கும் மக்களுக்கு எதிராக தான் தீண்டாமையை விதைத்துள்ளது. இதன் வேரறுக்க வேண்டுமானால் உழைக்கும் வர்க்கமாய் ஒன்று திரள வேண்டும்” என்பதை வலியுறுத்தி பேசினார்.

archagar-verdict-vpm-demo-poster

தோழர் லோகநாதன் உரை
தோழர் லோகநாதன் உரை

அவரைத் தொடர்ந்து கண்டன உரையாற்றிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் பாண்டிச்சேரி துணைச் செயலாளர் தோழர் லோகநாதன், “ஆகம விதிகளை பின்பற்றினால் தான் அர்ச்சகராக முடியுமென்றால் முதலில் பார்ப்பானே அர்ச்சகராக இருப்பதற்கு தகுதி இல்லை. காஞ்சி தேவநாதன் தொடங்கி சங்கராச்சாரி வரை கிரிமினல் குற்றவாளிகள். அவர்கள் பூஜை செய்யலாம். ஆனால் பஞ்சமர்களும் , சூத்திரர்களும் அர்ச்சனை செய்யக்கூடாதாம்.  இந்துக்களுக்கு நாங்கள் தான் பிரிதிநிதிகள், பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் பா.ஜ.க – இந்து முன்னணி உள்ளிட்ட கைக்கூலிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து பேசவில்லை. நாம் இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும், இழிவு படுத்தும் பார்பனிய சித்தாந்தத்தை ஒழித்துக்கட்ட அனைவரும் புரட்சிகர அமைப்புகளின் பின்னே வருவது தான் தீர்வு” என்பதை விளக்கி பேசினார்.

தோழர் ராஜு உரை
தோழர் ராஜு உரை

இறுதியாக பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, “தமிழகத்திலே பெரியாரை பேசாமல் எந்த கட்சிகளும் அரசியல் பண்ண முடியாது. ஆனால் இன்றைக்கு பெரியாரின் கொள்கைக்கு எதிராக வழங்கி இருக்கும் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை பற்றி எந்த கட்சிகளும் பேசவில்லை காரணம், பார்ப்பன விழுமியங்களை ஏற்றுக் கொண்டவர்களாக திராவிட கட்சிகள் உள்ளன. இன்னொரு பக்கம் பெரியாரை மரியாதை குறைவாக பேசித் திரியும் பா.ஜ.க வை சேர்ந்த எச்.ராஜா, சுயமரியாதை பாரம்பரியத்தை கொண்ட தமிழர்களுக்கு அவமானம்..

தில்லை கோவிலை தீட்சிதர்களிடம் பிடுங்கி கொடுத்தது தொடங்கி , அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கு வரை தமிழ் மக்களுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கி வருகிறது, உச்சநீதிமன்றம். எனினும் இந்த தீர்ப்பு ஆகம விதிகளை பின்பற்ற வேண்டும் என்கிறதே : தில்லையிலே தீட்சதர்கள் கோவில் சொத்தை திருடியிருக்கிறார்கள் , மது, மாது என்று அனைத்து மோசடி வேலைகளிலும் ஈடுபடுகிறார்களே இவர்கள் எந்த ஆகமத்தை பின்பற்றுகிறார்கள்?

ஆகம விதிகளை பின்பற்ற வேண்டும் கூறியுள்ள உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் அயோக்கியத்தனமானது. இது சட்டபூர்வமாகவே சாதி தீண்டாமையை நிலைநாட்டுகிறது. இந்த சட்டத்தையும், அரசையும் நம்பி நம் உரிமைகளையும், சுய மரியாதையையும் பெற முடியாது. சாதி இழிவை ஒழித்துக்கட்டுவதற்கு மக்களே அதிகாரத்தை கையில் எடுப்பது தான் தீர்வு” என்று பேசியது மக்களுக்கு எழுச்சியூட்டும் விதமாக அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விழுப்புரம். தொடர்புக்கு:99650 97801.

ஆகமவிதியின் பெயரில் அவாள் விதி – வீடியோக்கள்

1

னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் தந்திரமான சொற்றொடர்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றம் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு – முதல் பாகம்

மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றம் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு – பாகம் 2

‘கோயிலில் நுழையக்கூடாது, தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர்’ என்று நந்தனாருக்கு மரண தண்டனை தீர்ப்பு அன்று வழங்கப்பட்டது. அர்ச்சகர் மாணவர்களை அர்ச்சகராவதற்குத் தகுதியற்றவர்கள் என்று வெளியேற்றும் வாய்ப்பை இத்தீர்ப்பு இன்று வழங்கியுள்ளது.

ம.க.இ.க – ம.உ.பா.மை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் இறுதி பாகம்

இந்த தீர்ப்பு திமுக அரசு கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்வதாகக் கூறவில்லை என்பது வெற்றி அல்ல. நடைமுறையில் அதனை ரத்து செய்து விட்டது என்பதே உண்மை. “ஆகம விதி, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றுக்கு இணங்கவே அர்ச்சகர் நியமனங்கள் அமைய வேண்டும். அதே நேரத்தில் அந்த சம்பிரதாயங்கள் அரசியல் சட்ட உரிமைகளுக்கு முரணானதாக இருக்கக் கூடாது. இது பற்றி ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் பொருந்தும்படியன ஒரு உத்தரவைப் பிறப்பிக்க இயலாது. ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்தையும் தனித்தனியே பரிசீலித்துப் பார்த்துத்தான் முடிவு செய்ய இயலும்” என்கிறது இத்தீர்ப்பு.

அர்ச்சகர் அடையாளத்தை துறந்தார் ரங்கநாதன் – ஆர்ப்பாட்டம்

சென்னையில் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனுடன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உச்சிக் குடுமி நீதிமன்றத்தை கண்டித்தும், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும், அதற்கு துணை போகும் பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் விண்ணதிர முழக்கங்கள் முழங்கின.

ஆர்ப்பாட்டத்தின் முத்தாய்ப்பாக அர்ச்சக மாணவர் ரங்கநாதன் பெரியார் சாலைக்கு மாலை அணிவித்து பின்னர் தனது உருத்ராட்சக் கொட்டை மாலை, தீட்சை ஆகியவற்றை துறந்து இனி பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிக்கும் சுயமரியாதை போராட்டங்களில் ஈடுபடுவதாக உரையாற்றினார். அதன் பிறகு தோழர் ராஜூ உச்சநீதிமன்றத்தின் அயோக்கியத் தீர்ப்பை விளக்கி உரையாற்றினார்.

 

ஏரிகளை ஆக்கிரமித்தது மக்களா முதலாளிகளா ?

5

சென்னை மழை வெள்ளம் குறித்த தொடர் கட்டுரையின் இறுதிப் பகுதி

முந்தைய மூன்று பாகங்கள்:

ஏரிகளை ஆக்கிரமித்து உருவான சென்னை
ஏரிகளை ஆக்கிரமித்து உருவான சென்னை

க்கிரமிப்புகளை அகற்றி சென்னையை இன்னுமொரு வெள்ளத்திலிருந்து காப்பது பற்றியுமான விவாதங்கள் மெல்லத் துவங்கியுள்ளன. சென்னையின் பேரழிவிற்கு தோல்வியுற்ற அரசு நிர்வாக எந்திரத்திலிருந்து, செயல்படாத அரசாங்கத் தலைமை, மிக மோசமாக திட்டமிடப்பட்ட நகர விரிவாக்கம் போன்ற பிற காரணங்கள் இருக்க, ஆக்கிரமிப்புகள் பற்றிய உரையாடல்களுக்கு முதலாளித்துவ ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பது ஏன்?

பொத்தாம் பொதுவான ”ஆக்கிரமிப்புகள்” என்கிற வார்த்தைக்குப் பின்னே ஊடகங்கள் நிறுத்துவது கூவம், அடையாறு நதியோரங்களில் குடிசைகள் போட்டு வாழும் ஏழைகளைத் தான். 1996-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது ஆக்கிரமிப்புகள் தான் காரணமென்று பழியை மக்களின் மீது போட்டார்கள். விளைவாக அங்கே வாழ்ந்த குடும்பங்களை வேறோடு பிடுங்கி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நட்டார்கள்.

இவ்வாறாக ஆக்கிரமிப்புகள் என்றதும் குடிசைகள் மட்டும் என்பதாக ஊடகங்கள் கட்டியமைக்கின்றன. முன்பொரு காலத்தில் வேளச்சேரி மிகப் பெரிய ஏரியாக இருந்தது, மியாட் மருத்துவமனை அடையாற்றின் கரையாக இருந்தது, முகப்பேரு, ரெட்டேரி பகுதிகளில் இன்று இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் லேக் வ்யூ அப்பார்ட்மெண்டுகளும் முன்பு ஏரிகளாக இருந்தவை தாம். சரிந்து விழுந்த மவுலிவாக்கம் கட்டிடம் ஏரியின் மீது எழுப்பபட்டது தான்.

ஆக, ”ஆக்கிரமிப்பாளர்கள்” சேரிகளில் வாழும் குடிசைவாசிகள் மாத்திரமல்ல – ஐந்து அல்லது ஆறு இலக்கங்களில் சம்பாதிக்கும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரும் தான். இது தவிற தொன்னூறுகளுக்குப் பின் துரிதப்படுத்தப்ட்ட புதிய பொருளாதார கொள்கைகயின் விளைவாக ஏற்பட்டிருக்கும் ”வளர்ச்சியின்” ஆக்கிரமிப்புகளே பிரதானமான காரணமாக உள்ளன. உதாரணமாக, சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட இரண்டாம் ஓடுதளம் மிகச் சரியாக அடையாற்றின் மீதே அமைந்துள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் சிரீபெரும்புதூர் சாலையெங்கும் நிலங்களில் அமைந்துள்ள பன்னாட்டுக் கம்பெனிகளும் நீர்பிடிப்புப் பகுதிகள் அல்லது வடிகால் பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவையே. நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை, அங்கிருந்து இயல்பாக வழிந்து சிறிய குளங்களுக்கும், பின் அதிலிருந்து கால்வாய்கள் மூலம் பெரிய ஏரிகளுக்கும் வந்தடைய வேண்டும். பின் ஏரிகளில் இருந்து சிறிய ஆறுகளாக கடலை நோக்கிச் சென்றாக வேண்டும்.

சென்னையின் புற நகர்ப் பகுதிகளில் பல்லாயிரம் ஹெக்டேர் நிலத்தை வளைத்து ஏற்படுத்தப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் அதனுள் பிரம்மாண்டமான கட்டிடங்களை ஏற்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் மிகச் சரியாக நீர்வழிகளின் மீதே அமைந்துள்ளன. இவ்வாறு பெரிய கட்டிடங்களை அமைக்கும் போது குறிப்பிட்ட வளாகத்திற்குள் சேரும் நீர் வடிந்து செல்வதற்கான கால்வாய் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

1990-ம் ஆண்டில் ஒப்பீட்டளவில் பசுமையுடன் காணப்படும் சென்னை
1990-ம் ஆண்டில் ஒப்பீட்டளவில் பசுமையுடன் காணப்படும் சென்னை
2010-ல் பசுமையை அழித்து விட்டு நகரம் 'வளர்கிறது'.
2010-ல் பசுமையை அழித்து விட்டு நகரம் ‘வளர்கிறது’.

கட்டிடங்கள் எழுப்ப ஒப்புதல் வாங்கும் போது, அதோடு சேர்த்து நீர் மேலாண்மைத் திட்ட நகலையும் இணைத்து தான் அனுமதி பெற்றிருப்பார்கள். எனில், அவை ஏன் ஏற்படுத்தப்படவில்லை? ஏன் இந்த தவறுகளை உரிய துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் விசாரித்து தண்டிக்கவில்லை? ஏனெனில், அவ்வாறான நடவடிக்கைகள் தொழில் முனைவிற்கு எதிரானதாகவும், வளர்ச்சிக்கு எதிரானதாகவும் அரசால் கருதப்படுகிறது. திறந்த மடம் போல் எந்த நாட்டைச் சேர்ந்த முதலாளியும் உள்ளே புகுந்து தொழிலாளர் நலன், தொழிலாளர் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் என்று சகல விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு மலிவான கூலிக்கு உழைப்பைச் சுரண்டுவதையும் வளங்களைக் கொள்ளையடிப்பதையுமே ”வளர்ச்சி” என்கின்றனர்.

போலவே, குடிசைகளை பிடுங்கி எரிவதையும், நடைபாதையில் தக்காளி விற்கும் கிழவியை விரட்டியடிப்பதை மட்டும் ஆக்கிரமிப்பை அகற்றுவது என்பதாகப் புரிந்து கொள்பவர்கள், வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் குளங்களை ஆக்கிரமித்து அதன் மேல் அடுக்குமாடிக் குடியிருப்புகளை எழுப்பி நடுத்தர வர்க்கத்தினரின் ஆசையைத் தூண்டி ஏமாற்றும் ரியல் எஸ்டேட் முதலைகளைப் பற்றி ஏன் சிந்திப்பதில்லை?

விதிமுறைகளை மீறிக் கட்டப்படும் கட்டிடங்களின் சொந்தக்காரர்கள் ஒரு சிறிய தொகையை அபராதமாக செலுத்தி தங்களது சட்டவிரோதச் செயலை சட்டப்பூர்வமாக்கிக் கொள்ளலாம் என்கிற விதியை 28 நாட்களே ஆண்ட வி.என்.ஜானகியின் அரசு 1988-ல் கொண்டு வந்தது. 1991-1996 காலகட்டத்தில் தமிழகத்தை மொட்டையடித்த புரட்சித்தலைவின் ஆட்சியின் கீழ் ஏரி குளங்கள் ஆக்கிரமித்து ப்ளாட்டுகள் போடும் ரியல் எஸ்டேட் கொள்ளை ஒரு தொழிலாக ஒழுங்கமைக்கப்பட்டது.

ஐந்தாண்டுகளில் நீர் நிலைகளும், இயற்கையான வடிகால்களும் நாசமாக்கப்பட்ட நிலையில் தான் 1996 வெள்ளம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 1996 – 2001 தி.மு.க ஆட்சிக்காலத்தில் விதிமுறைகளை மீறி    1998-க்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களை சட்டப்பூர்வமாக்கினார்கள் (Town and country planning Act) தொடர்ந்து வந்த அ.தி.மு.க அரசுக்கு (2001-2006) கொள்ளையை சட்டப்பூர்வமாக்கும் தி.மு.க பாணி முக்காடு கூட தேவைப்படவில்லை. சென்னையின் புவியியல் சமநிலையை எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் கொள்ளையடிக்க கதவைத் திறந்து வைத்தார்கள்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ள ஐ.டி. நிறுவனங்கள்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ள ஐ.டி. நிறுவனங்கள்.

அடுத்து வந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நீதிபதி மோகன் தலைமையிலான கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அதாவது விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ள (அதாவது 98-க்குப் பிறகு) கட்டிடங்களைக் குறித்து ஆய்வு செய்த அந்தக் கமிட்டி, மீண்டும் Town and country planning act சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து 2007-க்கு முன் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களை சட்டப்பூர்வமாக்க பரிந்துரைத்தது. இவ்வாறாக, சென்னையின் 50 சதவீதத்திற்கும் மேலான கட்டிடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளன.

இவை தவிர அரசே புகுத்தும் “வளர்ச்சி” திட்டங்களின் விளைவாக ஏற்படும் ஆக்கிரமிப்புகள் தனி. சென்னை விமானநிலையம் அடையாற்றை மறித்து நிற்கிறது என்றால், ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம் என்று பீற்றிக் கொள்ளப் படும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஏரியின் மீது நிற்கிறது.

இப்போது சொல்லுங்கள் எந்த ஆக்கிரமிப்பை முதலில் அகற்றலாம்? யார் குற்றவாளிகள்?

உலகமயமாக்கல் பொருளாதாரம் அருளும் ”வளர்ச்சியென்பது” உண்மையில் வேரில்லாத மரம் போன்றது. உலகநாடுகளுக்குத் தேவையான பொருட்களை மூன்றாம் உலக நாடுகளின் சல்லிசான மனிதவளம், இயற்கை வளம் மற்றும் உழைப்புச் சுரண்டலின் மூலம் குறைந்த மூலதனத்தில் உற்பத்தி செய்து கொள்ளை லாபத்திற்கு ஏற்றுமதி செய்வதே அதன் நோக்கம். இதன் விளைவாக தனது மொத்த பொருளாதார நடவடிக்கைகளையும் நகரங்களை நோக்கியே அது குவிக்கிறது.

நோக்கியா, பாக்ஸ்கான், ஹுண்டாய், ஹோண்டா, ஃபோர்டு, மோட்டரோலா, ஐ.பி.எம் போன்ற நிறுவனங்கள் தமது கடையை இங்கே திறப்பது நமக்கு அவர்கள் கொடுக்கும் வரம் அல்ல – சாபம். இவர்கள் இயற்கையின் மீதும், புவியியல் சமநிலையின் மீது தொடுக்கும் தாக்குதலின் பாரதூரமான விளைவுகளைத் தான் பெருவெள்ளத்தின் வடிவில் நாம் கண்டோம்.

இவ்வகையில் தொன்னூறுகளுக்குப் பின் செயற்கையான முறையில் ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட சென்னை நகருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் படையெடுத்தனர். இதில் ஏற்கனவே படிக்க வசதி இருந்ததால் பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகளின் தேர்ச்சி பெற்றோர் ஐந்திலக்க சம்பளத்தோடு ஏரிகளின் மேல் அமைந்த ஏரி பார்த்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இடம் பிடித்துக் கொண்டனர். இவர்களுக்கு இரவு நேரக் காவலர்களாகவும், ஆட்டோ ஓட்டுனர்களாகவும், குப்பை வாருபவர்களாகவும் சேவை செய்ய கிராமப்புரங்களில் இருந்து – விவசாயம் பொய்த்துப் போன நிலையில் – சென்னைக்கு வந்தவர்களை அடையாறு கூவம் போன்ற நதிகளின் கரைகளே வரவேற்றன. பிந்தையவர்களைத் தூக்கி வீசலாம் என்று பேசுபவர்கள் முந்தையவர்களைப் பற்றி வாய் திறப்பதில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்களின் முக்கியமானவர்கள் சுயநிதிக் கல்விக் கொள்ளையர்கள். இந்த கொள்ளை எம்.ஜி.ஆர் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது. சாரய கொள்ளையர்கள் கல்வி தந்தைகளானார்கள். கூடவே ஏரிகள், கால்வாய்கள் என அரசு புறம்போக்கு நிலங்களை வளைத்துக்கொண்டார்கள். இன்று அது தமிழகம் முழுக்க விரிந்து பரவியிருக்கிறது.

அடையாறு நதியின் மேல் கட்டப்பட்டுள்ள சென்னை விமான தளத்தில் விமானம் ஓடுமா, மிதக்குமா?
அடையாறு நதியின் மேல் கட்டப்பட்டுள்ள சென்னை விமான தளத்தில் விமானம் ஓடுமா, மிதக்குமா?

தற்போதைய் வெள்ளத்தையொட்டி பச்சைமுத்துவின் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மனிதாபிமானம் கொப்பளித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் தான் பொத்’ஏரி’ மீது அமைந்திருக்கும் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்திலிருந்து கயிறு கட்டி மாணவர்கள் மீட்கப்படுகிறார்கள். தென்தமிழக கடற்கரையோரத்தை நாசப்படுத்திய தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனின் நியூஸ் 7 தொலைக்காட்சியோ இயற்கை பேரழிவிற்கு கண்ணீர் வடிப்பதாக கூறுகிறது. சென்னைக்கு மிக அருகில் என்று ஏரிகளை பிளாட் போட்ட ரியல் எஸ்டேட் முதலாளிகளும் கூட சாம்பார் சாதம், போர்வைகள் என தங்கள் மனிதாபிமானத்தை கடைவிரித்துவிட்டு குற்றத்தை மறைக்கிறார்கள்.

எஸ்.ஆர்.எம் மட்டுமல்ல சென்னையை சுற்றியுள்ள பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளும், பல்கலைகழகங்களும் , கார்ப்பரேட் மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள் அடையாற்றின் கரைகளையும், அதற்கான நீர்வழித்தடங்களையும் அழித்துவிட்டு அதன் மீது தான் கட்டப்பட்டுள்ளன. கூவத்தின் கரைகளை தின்று செறித்திருக்கும் ஏ.சி.சண்முகத்தின் எம்.ஜி.ஆர் பல்கலகழகம், அப்பல்லோ மருத்துவமனை, ஜேப்பியாரின் சத்யபாமா பல்கலை என இந்த பட்டியிலுக்கு முடிவில்லை.

வெள்ளம் உண்டாக்கிய பெருந்துயரும் மக்களின் கண்ணீர்க் கதைகளும் பரவலான மனிதாபிமானத்தை தோற்றுவித்துள்ளன. சென்னையின் மழை வெள்ளத்திற்கு பின்னே ஒளிந்திருக்கும் அரசியலை அறியாத வரை இந்த மனிதாபிமானத்தின் ஆயுள் சடுதியில் மறைந்து விடும்.

ஏரிகளை அழித்த சுயநிதிக் கல்விக் கொள்ளையர்கள்: பச்சமுத்து, ஜேப்பியார், ஐசரி வேலன், உடையார், ஏ.சி.சண்முகம்.
ஏரிகளை அழித்த சுயநிதிக் கல்விக் கொள்ளையர்கள்: பச்சமுத்து, ஜேப்பியார், ஐசரி வேலன், உடையார், ஏ.சி.சண்முகம்.

இந்த மழை வெள்ளம் உணர்த்தியிருக்கும் மிக முக்கியமான பாடத்தை நாம் மறந்து விடக்கூடாது. அரசும், அரசின் ஒவ்வொரு உறுப்புகளும் மிக மோசமாகத் தோற்றுச் சரிந்து போனதை இந்த மழை உணர்த்தியுள்ளது. அரசு எந்திரத்தின் ஒவ்வொரு அலகும் தனக்கேயான கடமைகளில் இருந்து வழுவியுள்ளதுடன் மக்களைக் கொல்லும் இரத்தக் காட்டேரிகளாக மாறியுள்ள எதார்த்தத்தை கண்டோம். ஆளும் வர்க்கம் ஆளத் தகுதியிழந்து விட்டதை இந்தப் பேரிடர்க் காலம் நமக்கு உணார்த்தினாலும் இந்த நிலை ஒரு மழையால் தோன்றியதன்று. இந்த மழை கோப்பை நிரம்பி வழியத் தேவையான கடைசி சொட்டு மட்டும் தான்.

மக்களைக் காப்பாற்ற வக்கற்றுப் போன, மக்களைக் கொலைக்களத்திற்கு அனுப்பிய இந்த அமைப்பு முறையின் மீது நாம் நம்பிக்கை கொள்ளத் தேவையில்லை. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும் – மக்களின் அதிகாரம் நிலை நாட்டப்படுவது ஒன்றே மக்களைக் காப்பாற்றும். தோற்றுப் போன அவர்கள் மீண்டும் வருவார்கள்; நிவாரணம் என்கிற பிச்சைக் காசை விட்டெறிந்தால் எத்தனை ஓட்டுக்கள் கிடைக்கும் என்கிற கணக்கோடு வருவார்கள்.

மீண்டும் ஒரு முறை கொலைக்களத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் தூண்டில் அது என்பதால் அவர்களைப் புறக்கணிப்பதும், புதிதாய் மக்களின் தலைமையில், மக்களுக்குக் கட்டுப்பட்ட ஒரு அதிகார அமைப்பைக் கட்டமைப்பது ஒன்றே மீண்டும் நாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாதிருக்க சாத்தியமான ஒரே வழி.

சென்னை மழை வெள்ளம் குறித்த தொடர் கட்டுரையின் முந்தைய பாகங்கள்:

  1. சென்னை மழை வெள்ளம் – புவியியல் குறிப்பு
  2. செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் – பாசிச ஜெயா அரசின் குற்றம் !
  3. இந்த சேதாரத்தை வழங்கியோர் அதிகார வர்க்கம் + ஜெயா அரசு

– தமிழரசன்

வினவு பொறுப்பாளர் தோழர் காளியப்பனுக்கு நிபந்தனை பிணை !

0
தோழர் காளியப்பன்
வினவு தளத்தின் பொறுப்பாளர் தோழர் காளியப்பன்

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலரும், வினவு தளத்தின் பொறுப்பாளருமான தோழர் காளியப்பனை (கன்னையன் ராமதாஸ்) 30-10-2015 அன்று கைது செய்ய சென்னை சி.பி.சி.ஐ.டி போலிசின் சைபர் பிரிவு  கொல்லைப்புறமாக சுவரேறிக் குதித்து வீட்டினுள்ளே நுழைந்தது. வீட்டில் இல்லாததால் காளியப்பனைக் கைதுசெய்ய தஞ்சையிலேயே முகாமிட்டது.

இதே நாளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவைச் சேர்ந்த தோழர் கோவன், 30-10-2015 அன்று அதிகாலை 2.30 மணியளவில் திருச்சி, அரவானூரில் அவரது வீட்டிலிருந்து சென்னை குற்றப்பிரிவு உளவுத்துறை போலீசாரால் கடத்திச் செல்லப்பட்டார்.

“மூடு டாஸ்மாக்கை மூடு”, “ஊருக்கூரு சாராயம், தள்ளாடுது தமிழகம்” என்ற இரண்டு பாடல்களும் வினவு தளம், வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மூலமாக பல இலட்சம் மக்களைச் சென்றடைந்துதான் இந்த நள்ளிரவுக் கைதுக்கு காரணம். இ.பி.கோ. 124ஏ தேசத்துரோகம், 153 இரு பிரிவினருக்கிடையில் மோதலைத் தூண்டுதல், 502/1 வன்முறையைத் தூண்டுதல் ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செயப்பட்டிருக்கிறது.

தோழர் காளியப்பனை கைது செய்ய நினைத்த போலிசு மற்றும் அரசின் முக்கிய நோக்கம் வினவு தளத்தினை முடக்க வேண்டும் என்பதே. இதையே தனி விருப்பமாக தந்தி டி.வி பாண்டே போன்றோர் முன்னெடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் (பா.ஜ.க. தவிர), தமிழக- தேசிய ஊடகங்களும், அறிவுத்துறையினரும், கட்ஜு, சந்துரு ஆகிய முன்னாள் நீதிபதிகளும், அம்னஸ்டி இன்டர்நேசனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளும் இக்கைதைக் கண்டித்து, கோவனை விடுதலை செய்யக் கோரின. ம.க.இ.க., மக்கள் அதிகாரம் அமைப்புகள் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. பறை என்ற ஈழத்தமிழர் பண்பாட்டு அமைப்பு லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பிரிட்டிஷ் ஆட்சி கூட மதுவிலக்கு கோரிக்கைக்குப் போராடியவர்கள் மீது ராஜத்துரோக வழக்கு போட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கொடிய அடக்குமுறை, பாசிச ஜெயாவின் வக்கிர கொடுங்கோல் ஆட்சியை உலகறியச் செய்துள்ளது. டாஸ்மாக் என்பது தமிழக மக்கள் மீது ஜெயா அரசு தொடுத்திருக்கும் யுத்தம். சசி பெருமாள் படுகொலை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றின் வரிசையில் வருவதுதான் தோழர் கோவன் மற்றும்  வினவு தளத்தின் பொறுப்பாளர் காளியப்பன் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகள்.

செசன்ஸ் நீதிமன்றத்தில் தோழர் கோவனுக்கு பிணை பிடைத்ததும், அவரை போலீஸ் காவலில் விசாரிக்க உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. அங்கேயும் மூக்குடைபட்டு வேறு வழியின்றி தோழர் கோவன் பிணையில் வெளியே வந்தார். இடையில் தோழர் காளியப்பனுக்கு முன் பிணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து அரசுத் தரப்பில் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் தோழர் காளியப்பனுக்கு கடந்த வாரம் நிபந்தனை பிணை அளித்திருக்கிறது. அதன் படி சென்னையில் தங்கி தினமும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கையெழுத்து போட வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறது நீதி மன்றம்.

தோழர் கோவன்
பாடகனைக் கைது செய்துவிட்டீர்கள், “வைரலாக”ப் பரவிய பாட்டை உங்களால் என்ன செய்ய முடியும்? விசாரணைக்கு இழுத்து வரப்படும் தோழர் கோவன்.

ஒரு அரசியல் விமரிசனத்துக்கான தேசத்துரோக வழக்கு என்றோ, ஒரு கலைஞனின் குரலை நசுக்குவதற்கான தேசத்துரோக வழக்கு என்றோ பார்ப்பதும், கருத்துரிமை என்ற அடிப்படையில் கண்டனம் தெரிவிப்பதும் பிரச்சினையின் ஒரு பரிமாணத்தை மட்டுமே பார்ப்பதாகும். இதன் மற்ற பரிமாணங்கள் மிகவும் முக்கியமானவை.

சாராய விற்பனை, ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, நிலத்தடி நீர்க் கொள்ளை, தாது மணல் கொள்ளை உள்ளிட்டு எல்லா வழிகளிலும் இயற்கை வளங்களை, மக்களின் பொதுச்சொத்தை கார்ப்பரேட் மஃபியா கும்பல்களுடன் சேர்ந்து கொண்டு அரசே சூறையாடுகிறது. இதில் அ.தி.மு.க. கட்சியினர் மட்டுமின்றி, போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் கணிசமான பிரிவினர் நேரடியாகவே ஈடுபட்டிருக்கின்றனர். இந்த கிரிமினல் மஃபியாவின் தலைமையாக ஜெயா-சசி கும்பல் இயங்குவதும், பல்லாயிரம் கோடிக்கு ஆங்காங்கே சொத்துக்களை வாங்கிக் குவிப்பதும் அடுக்கடுக்காக அம்பலமாகி வருகின்றன.

ம.க.இ.க.-வின் பாடல் இந்த மஃபியா கும்பலைக் குறிவைத்துத் தாக்குவதாலும், தோற்றுப்போன இந்த அரசமைப்பிடம் கெஞ்சிக் கொண்டிருக்காமல், மக்கள் தாமே அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு டாஸ்மாக்கை இழுத்து மூடவேண்டும் என்று அறைகூவல் விடுவதாலும்தான், இத்தனை மூர்க்கத்தனமாகப் பாய்ந்திருக்கிறது ஜெ அரசு. இந்த அரசியலை இலட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சென்றதற்காக வினவு தளத்தின் மீதும் அடக்குமுறை ஏவி ஒழிக்க நினைக்கிறார்கள்.

_________________________________

தூத்துக்குடி – கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள்

0

தூத்துக்குடி

க்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மக்கள் அதிகாரமும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியும் வெள்ளம் பாதித்த தூத்துக்குடி பகுதியில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டனர்.

tuticorin-flood-relief-04தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் நிவாரணப் பொருட்களை மக்களிடமிருந்து சேகரித்தோம். இப்பகுதியிலிருந்து கடலூருக்கும் பொருட்கள் அனுப்பப்பட்டன.

நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் வீடுகள் அதிகமாக சேதமடைந்த, அதிகாரிகளும் ஓட்டுக்கட்சியினரும் செல்லாமல் புறக்கணிக்கும் பகுதிக்கு முன்னுரிமை தந்தோம். அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டியுள்ள மாதவன் நகர், அந்தோனியார்புரம், முள்ளக்காடு பகுதியிலுள்ள கக்கன் நகர், நேரு நகர், பிச்சைமணி நகர், பார்வதிபுரம், சாமி நகர், பாலாஜி நகர், இந்திரா நகர் மற்றும் வீரநாயக்கன் தட்டு ஆகிய பகுதிகளில் தோழர்கள் நிவாரணப் பொருட்களை விநியோகித்தனர்.

tuticorin-flood-relief-05முதலில் வெளியூரிலிருந்து திரட்டி வந்த பொருட்களை குறிப்பாக துணிகளை வயதுக்கு ஏற்பவும், ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்பவும் வகைபிரித்து பண்டல்களாக்கினோம். இதன்மூலம் ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் ? என்னென்ன வயது? ஆணா – பெண்ணா? என்று கேட்டு அதற்கேற்ப துணிகளையும், பால் ஊட்டும் பாட்டில், நிப்பிள், நேப்கின்களையும் விநியோகித்தோம்.

இந்த முயற்சியை பாராட்டிய பொதுமக்களையும், பாதிக்கப்பட்ட பகுதி இளைஞர்கள், பெண்களையும் இந்த பணியில் எங்களுடன் இணைத்துக் கொண்டு செயப்பட்டோம்.

இதில் கக்கன் நகர், அந்தோனியார்புரம், பிச்சைமணி நகர், பார்வதிபுரம் மக்கள் குறிப்பிடத்தகுந்த அளவு ஊக்கத்துடன் பங்கெடுத்தனர். தமது தெருவில் மட்டுமல்லாது அருகிலுள்ள பிற பகுதிக்கும் வந்து இரவு 9.00 வரை களத்தில் நின்றனர்.

பெரும்பாலும் உப்பள தொழிலாளிகளும் உதிரித்தொழிலாளிகளும் கொண்ட இப்பகுதி மாவட்ட நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. அதிலும் துப்புரவு பணியாளர்கள் உள்ள பாலாஜி நகர், இந்திரா நகர் பகுதிக்கு வெள்ளம் வந்து ஒருமாதமாகிய நிலையிலும் எங்களைத்தவிர யாரும் போகவில்லை. “இங்கு இந்து முன்னணி இருந்தும் எதையும் செய்யவில்லை. நீங்கதான் உதவறீங்க” என்று மக்கள் தெரிவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கக்கன் நகர் பகுதியில் வீடுவாரியாக கணக்கெடுத்து பொருட்களை தனித்தனி பைகளில் போட்டு மேலே பெயர் எழுதப்பட்டு டிரை சைக்கிள் மூலம் விநியோகிக்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாதவன் நகரில் ஆதித்தமிழர் கட்சியினர் உதவிக்கு வந்தனர். அதிகம் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுத்து, அவர்களுக்கு முன்னுரிமை தந்து பொருட்களை தர உடனிருந்து செயல்பட்டனர்.

tuticorin-flood-relief-18ஒரு சுற்று நிவாரணப்பொருட்களை தந்து முடித்தவுடன் அடுத்து பிரச்சார சுற்றை தொடங்கினோம். நம் ஊருக்கு எதனால் வெள்ளம் வந்தது? ஓடைகளை யார் ஆகிரமித்தது? அரசு நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்துகொண்டிருந்தது? வானத்திலிருந்து பெருமழை ஏன் கொட்டியது? இதற்க்கு இயற்கைதான் காரணமா – இல்லை கார்ப்பரேட் முதலாளிகளா? என்று கேள்வியெழுப்பி புரியவைத்தோம். தெருமுனைப் பிரச்சாரம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களிடமும், பள்ளி மாணவர்களிடையேயும், தொழிலாளர் களிடையேயும் இதையே பிரசுரமாகவும் போட்டு விநியோகித்து வருகிறோம்.

இப்பிரச்சாரத்தின்போது  “உங்கள் வீட்டை அழித்த ஸ்டெர்லைட் போன்ற முதலாளிகள் நிவாரணம் தரும்போது பேசாமல் வாங்கிக்கொள்வது சரிதானா?” என்று சிந்திக்க தூண்டினோம்.

உப்பளத்து முதலாளி ஓடையை ஆக்கிரமித்ததால்தான் சாமி நகர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஊருக்குள் பாய்ந்தது, வடியாமல் நின்றது. பிச்சைமணி நகர் மக்கள்தான் 50 பேராக மண்வெட்டுயுடன் சென்று ஓடையை அகலப்படுத்தி வெள்ளத்தை ஓரளவு வடியவிட்டனர். அதிகாரிகள் சிறு துரும்பையும் எடுத்துப் போடவில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இப்படி பாதிக்கப்பட்ட மக்களும் சில அமைப்புகளும்தாம் களத்தில் இறங்கி வேலைகளில் ஈடுபட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் செயலிழந்து தோற்றுவிட்டது. மக்களை அச்சுறுத்துவது, வழக்குபோடுவது என்பதைத் தாண்டி உருப்படியாக எதையும் திட்டமிடவோ செயல்படுத்தவோ வக்கற்றதாகி விட்டது. உழைக்கும் மக்களுக்கு இந்த அரசின் மீது மரியாதை துளியும் இல்லை. போலீசின் மீதான அச்சத்தையும் போக்கிவிட்டால் இந்த அரசு இனியும் நீடிக்க முடியாது என்பதையே களப்பணியில் கிடைத்த அனுபவங்கள் காட்டுகின்றன.

தகவல்
மக்கள் அதிகாரம்,
தூத்துக்குடி

கடலூர் மாவட்ட மீட்பு பணிகள் தோற்றுப் போன அரசு அதிகாரம்! தோள் கொடுக்குது மக்கள் அதிகாரம்!

டந்த மாத துவக்கத்தில் கடலூர் மாவட்டத்தையே உலுக்கி கெடுத்த கனமழை – பெருவெள்ளத்தில் சிக்கி உருக்குலைந்த வேலையில் கடலூர் நகரில் மையமாக பாதிக்கப்பட்ட புருஷோத்தம்மன் நகர் துவங்கி மேலிருப்பு, கீழிருப்பு, விசூர், பெரியகாட்டுப்பாளையம், சின்னக்காட்டுப்பாளையம், ஓணாங்குப்பம், கல்குணம், பீமாராவ் நகர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களுடன் இணைந்து நிவாரண மீட்பு பணியில் ஈடுபட்டனர் மக்கள் அதிகார தொண்டர்கள். இந்நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட கனமழை பெருவெள்ளமானது தமிழகத்தையே முடக்கியது.  குறிப்பாக கடலூர், சென்னை, தூத்துக்குடி, மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்தது. மக்கள் செய்வதறியாது தவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

cuddalore-flood-relief-1212-34டி.விகளுக்கு போஸ் கொடுக்கும் வகையில் மடிப்புக்கலையாத மல்லுவேட்டி மைனர்களாக அம்மாவின் அடிமை விசுவாசிகள், அதிகாரிகள் பட்டாளம் நிவாரண பணிகளிலிருந்து மக்களை மீட்டு விட்டதாக பம்மாத்து காட்டியதை கண்டு ஆத்திரம் கொண்டு ஆங்காங்கே முற்றுகையிட்டனர். மற்ற கட்சிகளும் பெயரளவுக்கு நிவாரணம், துப்புரவு என நாடகங்களை நடத்திய வேலையில் அடுத்த சுற்று களம் இறங்கியது மக்கள் அதிகாரம்.

கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் நிவாரணம் உதவி என்ற பெயரில் சில தனி நபர்கள், அமைப்புகள் மனிதாபிமான உணர்வோடு பொருட்களை சேகரித்து தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்து உணர்வுபூர்வமாக உதவி செய்தனர். ஆனால் பல பகுதிகளில் பெரும்பான்மையான நிலைமை வேறுவகையாக இருந்தது.  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சாதி கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் என பலராலும் கொண்டு வரப்பட்ட பொருட்கள் வீதிகளில் நின்று மக்களை ஓடி வரவழைத்து நிவாரணங்களை வீசி எரிந்தனர். நேற்றுவரை 10 பேருக்கு சோறுபோட்ட இந்த உழைக்கும் கைகள் இன்று அனைத்தையும் பறிகொடுத்து குடிக்க தண்ணீரும், தின்னசோறுமின்றி தவியாய் தவிக்கிறது. இன்னொரு பக்கம் குவியும் நிவாரணப்பொருட்கள் வரும்வழியிலேயே அ.தி.மு.க.வினராலும், அதிகார திமிர்பிடித்த ரவுடிகளாலும் வழிமறிக்கப்பட்டு அ.தி.மு.க தான் நிவாரணம் கொடுப்பதுபோல் ஆங்காங்கே நாடகமும் அரங்கேறி கொண்டு இருந்தது. இந்த கேவலமான நிலையை கண்டு உதவி செய்ய வந்தவர்களும், மக்களும் இணைந்து கொண்டு அ.தி.மு.க-வினரை கேள்விகேட்டு மடக்கினார்கள், அறுவறுப்பாக பார்த்து ஆத்திரமடைந்து காறி துப்பினார்கள் மக்கள்.

உப்பு சப்பற்ற வெந்த சோத்தை மட்டுமே உணவு என்ற பெயரில்  தந்த அரசின் செலவு 40 கோடி ரூபாயாம்.  பல இடங்களில் தண்ணீரில் செல்ல முடியாமல் கால்வாய்கள் தூர்ந்து போய் நிரம்பி வழிந்து அரசின் செயல்பாடு அடியோடு முடங்கி துர்நாற்றம் அடித்தது, ஆங்காங்கே மக்களும் போராட துவங்கினார்கள்.  இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட நிர்வாகம் மாவட்ட எல்லையிலேயே போலீசை போட்டு நிவாரண வாகனங்களை மடக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்று, இப்பொருட்கள் அ.தி.மு.க-வின் செல்வாக்கு பகுதிக்கு மட்டுமே கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட காவல்துறையினர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பல இடங்களில் நிவாரண வாகனங்களை சூறையாடினார்கள், மிரட்டி பறித்தார்கள். ஆனால் இத்தகைய அனைத்து அச்சுறுத்தல்களையும், தடைகளையும், உடைத்தெறிந்து பு.ஜ.தொ.மு, பு.ம.இ.மு, மக்கள் அதிகார தோழர்களும், தொண்டர்களும், அதன் ஆதரவு நண்பர்களும், அறிவுஜீவிகளும், வணிகர்களும், தொழிலாளர்களும், மாணவர்களும் தமிழகம் எங்கும் நிவாரணப்பொருட்களை சேகரித்து தாங்களே சொந்த பொறுப்பில் வாகனம் வைத்து கொண்டு பொருட்களை எடுத்து வந்தனர்.

கடலூர் பெரியார் சிலை அருகில் நிவாரணம் முகாம் அலுவலகம் திறக்கப்பட்டது.  நம்முடைய முகாம் அலுவலகத்தையோ, நிவாரணப்பொருட்களின் விநியோகத்தையோ ஒரு செய்தி ஊடகங்கள் கூட ஒளிபரப்ப மறுத்தது. ஆர்.எஸ்.எஸ்-ன் செய்திகளை மட்டுமே வாந்தி எடுத்தனர்.  தினமும் உளவுத்துறை போலிசின் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தினர்.

நகரில் இரு இடங்களில் நிவாரணப்பொருட்கள் பிரிப்பு பணிகளும் நடைபெற்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரம், மக்கள் எண்ணிக்கை, தேவையின் விவரம் போன்றவை சேகரிக்கப்பட்டன.  இந்த அடிப்படையில் அந்தந்த பகுதிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இரவுபகலாக தோழர்கள் உழைத்தனர்.  ஆம்! கொட்டும் மழையிலும், உணவுக்கு வழியின்றியும், முகாமை துவங்கும்போது கையில் சல்லிகாசும் இல்லை, பொருளும் இல்லை.  மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உணர்வு மட்டுமே தோழர்களை எரிசக்தியாய் இயக்கியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆய்வுக்கு சென்ற ஒவ்வொரு கிராமத்திலும் மாணவர்களும், இளைஞர்களும், “நீங்க டாஸ்மாக்குக்கு எதிரா பாட்டு பாடின இயக்கம்தானே, உங்க பாட்டு உண்மை நிலையை எடுத்து சொல்லிச்சு” என்று வரவேற்றனர்.  அறிமுகமானவர்கள் நண்பர்களானார்கள். அவர்களின் மூலமே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தேவையின் அடிப்படையில் பாய், போர்வை, பிஸ்கட், உடைகள், வீட்டுச்சாமான்கள், ஸ்டவ் அடுப்புகள், மளிகைப்பொருட்கள் என தரம் பிரிக்கப்பட்டு கடலூர் புருஷோத்தம்மன் நகர், பீமாராவ் நகர், சுரேஷ் நகர், குறவன்குளம், மஞ்சக்குப்பம், ஓம் சக்தி நகர், ராணாகுப்பம், தீர்த்தனகிரி, புலியூர், பாரதி நகர், பூவாலை, குமரப்பன்நாயக்கன்பேட்டை, கரிசமங்களம், சேணாஞ்சாவடி, தானம் நகர், புதுக்குளம், தங்கலிக்குப்பம் சின்னஇருசலாம் பாளையம், பெரிய இருசலாம் பாளையம், சேத்தியார் தோப்பு, புதுச்சேரி நோனாங்குப்பம் என பல கிராமங்களில் விநியோகம் செய்யப்பட்டன.

மக்கள் அதிகாரத்தின் விநியோக முறை என்பது மற்றவர்களைவிட அடிப்படையில் வேறுபட்டதாக இருந்தது ஒவ்வொரு வீட்டிலும் முன்கூட்டியே பாதிப்புகளை கண்டறிந்து டோக்கன் வழங்கப்பட்டது.  டோக்கன் பெற்ற அனைவரையும் ஊரின் மைய இடத்தில் வரவழைத்து அங்கே வெள்ளம் ஏற்படுத்திய சேதத்திறகு யார் குற்றவாளிகள் என்று பேசப்பட்டது.

“மக்களே இது மாணவர்கள், தொழிலாளர்களால் தங்கள் உழைப்பின் மூலம் திரட்டப்பட்ட பொருட்கள் நாங்கள் கொடுக்கும் இந்த நிவாரணம் உண்மையில் இழந்துபோன உங்கள் வாழ்க்கையை முழுமையாக மீட்காது. நிவாரணம் என்பது தீர்வு அல்ல, நம் வாழ்வை பறித்ததற்கான காரணத்தை அறிந்து அதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும், பாதுகாக்க தவறிய அரசமைப்பையும் அம்பலப்படுத்தி போராட வேண்டும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த நாட்டின் காட்டையும், மலைகளையும், கனிம வளங்களையும் சூறையாடியது இந்த முதலாளி வர்க்கம், அவர்களுக்கு எடுபிடி வேலைசெய்து ஆறு, குளம், ஏரிகளை தூர்வாராமல் நம்மை இந்த துயரத்திற்கு தள்ளி வாழ்வை பறித்தது மக்களை பாதுகாக்க வக்கற்று தோற்று போன இந்த அரசு அதிகாரம். கனமழை, பெருவெள்ளம் இருக்குமென வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரித்த பின்னும் இத்தகைய இயற்கை பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க தவறிய இந்த அரசு செயலிழந்து போனதே காரணம். இனி அரசு அதிகாரிகளையும், ஆளும் கட்சியினரையும், இதர அரசியல் கட்சிகளையும் நம்பி கெஞ்சிகேட்டு, மண்டியிட்டு, மனுகொடுத்து மாற்றம் வராது. எனவே நம்வாழ்வை, நம் மக்களை, நம் கிராமத்தை, நம் நகரத்தை பாதுகாக்க நாம் அதிகாரத்தை கையிலெடுப்பதே தீர்வு. அதற்கு எங்கள் அமைப்புகளும், மக்கள் அதிகாரமும் உங்களுடன் என்றும் துணை நிற்கும்” என்ற பிரச்சாரத்தை மக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதை பார்த்த ஒவ்வொரு பெண்களும், “தம்பி யார் வந்தாலும் ஊர்முனையில் நின்று கொண்டு எங்களை நாயா போயா அலைய விடுவாங்க கிடைக்குமோ, கிடைக்காதோ என்று மக்களும் முண்டி அடித்து முட்டி மோதிக்கொண்டு சண்டை சச்சரவுகள் ஆகும். இது எங்களுக்குள்ளேயே பிரச்சனையை உருவாக்கி விடும். ஆனால் நீங்க நிவாரணம் கொடுக்கும் முறை உண்மையிலேயே எங்களை புரிந்துகொண்டு செய்கிறீர்கள்” என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தோழர்கள் ஒவ்வொருவரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று உணவு கொடுத்து உபசரித்தார்கள்.  தோழர்களோ மக்களுக்கு புரட்சிகர உணர்வூட்டி வருகிறார்கள்.

ஆம்! இதோ அரசு அதிகாரம் உதிர தொடங்கி விட்டது.  மக்கள் அதிகாரம் மக்களின் வாழ்வாக மலர்ந்து வருகிறது.

இவன்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி
கடலூர் மாவட்டம். செல்: 7200037204

அர்ச்சகர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்!

67
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்

னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு,  பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் தந்திரமான சொற்றொடர்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

2006-ல் தி.மு.க அரசு பிறப்பித்த அரசாணையைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி அமைக்கப்பட்டு, அதில் பார்ப்பன சமூகத்தினர் முதல் பல்வேறு பார்ப்பனர் அல்லாத சாதியினர் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டு மொத்தம் 206 மாணவர்கள் பயிற்சி பெற்று முறையாக தீட்சையும் பெற்றனர். இந்த பயிற்சிப் பள்ளியே சட்ட விரோதமானது என்றும், இந்த மாணவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்வது, அரசியல் சட்டத்தின் பிரிவு 25, 26 க்கு விரோதமானது என்றும், இந்து மத நம்பிக்கைக்கும், மரபுகளுக்கும் எதிரானது என்றும் கூறி மேற்படி மாணவர்களின் நியமனத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்கள் மதுரை அர்ச்சகர்கள்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒரு சங்கமாக திரட்டும் பணியை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், மக்கள் கலை இலக்கியக் கழகமும் செய்தோம். பிறகு அந்த மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கில் தலையிட்டோம். இத்தனை ஆண்டுகள் அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு இப்போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருகிறது.

இந்தத் தீர்ப்பு குறித்து, ஒரு வரியில் சொல்வதென்றால் : கோயிலில் நுழையக்கூடாது தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர் என்று கூறி நந்தனாருக்கு அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு அன்று ஒரே நாளில் வழங்கப்பட்டு விட்டது. இந்த மாணவர்களோ, சுமார் எட்டாண்டு காலம் இழுத்தடிக்கப்பட்டு நீதி கிடைக்கும் என்று நடையாய் நடந்தனர். தகுதி வாய்ந்த இந்த மாணவர்களை, பிறப்பின் காரணமாக, அர்ச்சகராவதற்குத் தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றத்தின் மூலம் வெளியேற்றும் வாய்ப்பை பார்ப்பன அர்ச்சகர்களுக்கு இத்தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை நேரடியாகச் சொல்லாமல், சுற்றி வளைத்தும், நேர்மையற்ற முறையிலும் சொல்லியிருக்கிறது இந்தத் தீர்ப்பு.

“திமுக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என்பதுதான் பார்ப்பன அர்சச்கர்கள் தொடுத்த வழக்கு. அந்த அரசாணையை ரத்து செய்வதாக இந்தத் தீர்ப்பு நேரடியாக குறிப்பிடவில்லை. இந்த 206 மாணவர்களை ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் நியமிக்கக் கூடாது என்றும் கூறவில்லை. இவர்களை நியமிக்கலாம். ஆனால் அந்த நியமனம் ஆகம விதிக்கும், மரபுகள் சம்பிரதாயங்களுக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டுமென்றும் அதனை மீற முடியாதென்றும் கூறுகிறது. அதாவது “யானையைப் பானைக்குள் அடைக்கலாம். அதே நேரத்தில் பானை உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்பதுதான் இத்தீர்ப்பு கூறும் செய்தி.

மயிலை கபாலீசுவரர் கோயிலிலோ, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலோ, திருவரங்கத்திலோ, மதுரை மீனாட்சி கோயிலிலோ இந்த மாணவர்களில் சிலரை அர்ச்சகர்களாக நியமிக்கும் பட்சத்தில், இந்தக் கோயில்களில் பணி புரியும் பார்ப்பன அர்ச்சகர்கள், “அர்ச்சக மாணவர்களின் நியமனம் ஆகம விதிக்கு முரணானது என்று உரிமையியல் நீதிமன்றத்தில் நிரூபித்து அவர்களை வெளியேற்றலாம்” என்று கூறுகிறது இந்தத் தீர்ப்பு.

அதாவது ஒரு மாணவன் ஏதோ ஒரு கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டால், நியமிக்கப்பட்ட மறுநாளே, அவரது நியமனத்துக்கு பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெறுவார்கள். மாணவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்துக்கு நடந்தாலும் நீதியைப் பெற முடியாது என்பதே உண்மை. எனவேதான் இந்தத் தீர்ப்பு மிகவும் தந்திரமானது என்று கூறுகிறோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உடன்பாடு கொண்ட சிலர், திமுக அரசு பிறப்பித்த அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவில்லை என்ற காரணத்தினால், இந்தத் தீர்ப்பை வரவேற்கின்றனர்.

“குறிப்பிட்ட கோயிலில், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியைச் சேர்ந்த நபர்களோ அல்லது  குடும்பத்தினரோதான் வழிவழியாக அர்ச்சகராக வரவேண்டும்” என்று ஆகம நூல்கள் எதிலும் குறிப்பிடப்படவில்லையாதலால், இம்மாணவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படும் பட்சத்தில், “அந்த நியமனம் ஆகம விதிக்கு முரணானது என்று பார்ப்பன அர்ச்சகர்களால் நிரூபிக்க இயலாது” என்பதே இவர்கள் முன்வைக்கும் வாதம்.

“பார்ப்பனர்கள்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்” என்று ஆகம நூல்கள் எதிலும் கூறப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் இது இன்று புதிதாகத் தெரியவந்த உண்மை அல்ல. 1971 சேஷம்மாள் தீர்ப்பின்போதே தெரிய வந்த உண்மைதான். ஆகம விதி என்று சொல்லும் இடங்களிலெல்லாம் மரபு – பழக்க வழக்கம் என்ற சொற்றொடர்களையும் சேர்த்துத்தான் பார்ப்பன அர்ச்சகர்கள் எப்போதும் பயன்படுத்துகின்றனர். எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசுவதற்கான வாய்ப்பை வழங்குகின்ற இந்தச் சொற்றொடர்களின் துணை கொண்டுதான் தங்களது ‘உரிமை’யை நீதிமன்றங்களில் அவர்கள் நிலைநாட்டி வருகின்றனர். பார்ப்பனியத்துக்கும் தீண்டாமைக்கும் அரசியல் சட்ட அங்கீகாரத்தை காலங்காலமாக இப்படித்தான் இவர்கள் பெற்று வருகின்றனர்.

பார்ப்பனரல்லாத மாணவர்களை அர்ச்சகராக நியமிப்பதைத் தடுப்பதற்கு எந்த ஆகம நூலிலும் எதுவும் இல்லை என்பதைச் சொல்லி, மாணவர்களை ஆகமக் கோயில்களில் நியமிக்குமாறு கோரி இந்த அரசுக்கும், பார்ப்பன அர்ச்சகர்களுக்கும் எதிராக நாம் போராடலாம். அந்தப் போராட்டம் சாதியைப் பாதுகாக்கும் இந்த அரசியல் சட்டத்தையும், நீதிமன்றத்தையும், அரசையும் அம்பலப்படுத்தப் பயன்படுமேயன்றி, சமத்துவ உரிமையை நிலைநாட்டிக் கொள்ளப் பயன்படாது.

மத உரிமை அல்லது மத நிறுவனங்களின் உரிமை என்பது, ஒரு குடிமகனின் சமத்துவ உரிமையின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு போதும் இருக்கக்கூடாது. ஆனால் அவ்வாறு ஆதிக்கம் செலுத்துவதை நமது அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. இதன் காரணமாகத்தான் சமூக ரீதியாக தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் தீண்டாமையை, மதரீதியில் பார்ப்பனியத்தின் மத உரிமையாக அரசியல் சட்டத்தின் பிரிவு 25 அங்கீகரிக்கிறது.

எனவே, ஆகமம், மரபு ஆகியவற்றின் துணை கொண்டும், அவற்றின் வரம்புக்கு உட்பட்டும் சமத்துவ உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முயற்சிப்பதும், பார்ப்பனியத்தையும் தீண்டாமையையும் முறியடிக்க முயற்சிப்பதும்  மதத்தின் அதிகாரத்துக்கு பணிந்து போவதன் இன்னொரு வடிவமாகவே இருக்கும். “தீண்டாமை இந்து மத நன்னெறிகளுக்கு எதிரானது என்று நிறுவுவதன் வாயிலாக தீண்டாமையை ஒழித்து விடலாம்” என்று வாதிட்ட காந்தியை மறுத்து பெரியார் கூறியவற்றை இந்த இடத்தில் நினைவு படுத்திக் கொள்வது நல்லது.

சாதி தீண்டாமை ஒழிப்பு என்ற நோக்கத்துக்காக பெரியாரால் முன்வைக்கப்பட்டதே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் கோரிக்கை. எவ்வாறேனும் அர்ச்சகர் பணி நியமனத்தைப் பெற்றுவிடுவது என்பதற்கான தந்திரமாக இதனைச் சுருக்கிவிடலாகாது.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்பதை தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளின் அங்கமாகவே இளையபெருமாள் கமிட்டி பரிந்துரைத்தது என்பதும் இங்கே நினைவு கூரத்தக்கது. ‘நம்முடைய மரபு’ சாதி, தீண்டாமையைக் காப்பாற்றும் மரபு என்பதை யாரும் மறுக்க முடியாது.

“மரபு என்ற பெயரிலோ, பழக்க வழக்கம் என்ற பெயரிலோ  பார்ப்பன ஆதிக்கத்தையோ, சாதியையோ, தீண்டாமையையோ ஒரு மத உரிமையாக அங்கீகரிக்க முடியுமா?” என்பதுதான் இந்த வழக்கில் எழும்பும் மையமான கேள்வி.

“அப்படி  அங்கீகரிக்கலாம்” என்பதைத்தான் இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. “பார்ப்பனரல்லாதவர்கள் சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்று எந்த மரபு அல்லது பழக்கம் கூறினாலும் அது ஒரு தீண்டாமைக் குற்றம் என்று சட்டப்பிரிவு 17-ஐக் குறிப்பிட்டு நாங்கள் வாதிட்டோம்.

இது தீண்டாமை குற்றம் அல்ல என்பதற்கு உச்சநீதி மன்றம் ஒரு  விசித்திரமான விளக்கத்தைத் தனது தீர்ப்பில்  சொல்லியிருக்கிறது.  “ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மட்டும்தான் பூசை செய்யவேண்டும் என்றும் அவ்வாறு இல்லையேல் சிலை தீட்டுப்பட்டு விடும் என்றும் கூறுவது தீண்டாமைக் குற்றமாகாது. குறிப்பிட்ட பிரிவினர் வரக்கூடாது என்று குறிப்பாகச் சொல்லாத வரைக்கும் அதனைத் தீண்டாமைக் குற்றமாக கருத இயலாது” என்று கூறுகிறது. இங்ஙனம் சாதி ஆதிக்கத்தையும், தீண்டாமையையும்  மிக நாசூக்கான, தந்திரமான ஆங்கிலத்தில் இந்தத் தீர்ப்பு  நிலைநிறுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பு திமுக அரசு கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்வதாகக் கூறவில்லை என்பது வெற்றி அல்ல. நடைமுறையில் அதனை ரத்து செய்து விட்டது என்பதே உண்மை. “ஆகம விதி, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றுக்கு இணங்கவே  அர்ச்சகர் நியமனங்கள் அமைய வேண்டும். அதே நேரத்தில் அந்த சம்பிரதாயங்கள் அரசியல் சட்ட உரிமைகளுக்கு முரணானதாக இருக்கக் கூடாது. இது பற்றி ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் பொருந்தும்படியன ஒரு உத்தரவைப் பிறப்பிக்க இயலாது. ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்தையும் தனித்தனியே பரிசீலித்துப் பார்த்துத்தான் முடிவு செய்ய இயலும்” என்கிறது இத்தீர்ப்பு.

“அர்ச்சகர் நியமனத்தில் வாரிசு உரிமை கோரவியலாது” என்று கூறி சிவாச்சாரியார்களின் மனுவைத் தள்ளுபடி செய்தது 1971-ல் வழங்கப்பட்ட சேஷம்மாள் தீர்ப்பு. அது வெற்றி என்று கொண்டாடப்பட்டபோது, “ஆபரேசன் வெற்றி நோயாளி மரணம்” என்று அதனை அம்பலப்படுத்தினார் பெரியார். பார்ப்பன அர்ச்சகர்கள் தோற்றது போலத் தெரிந்தாலும், வெற்றி பெற்றவர்கள் அவர்களே என்பதை அம்பலமாக்கினார்.

சேஷம்மாள் தீர்ப்புக்குப் பிறகு இன்று புற நிலைமையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், 206 பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்போது தயாராக இருக்கிறார்கள் என்பதுதான். இப்போதும், தி.மு.க அரசின் அரசாணையை ரத்து செய்யாமல் விட்டதன் மூலம், பார்ப்பன அர்ச்சகர்கள் தோற்று விட்டதைப் போன்றதொரு தோற்றத்தை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தோற்றம் உண்மையல்ல. இது சேஷம்மாள் தீர்ப்பைக் காட்டிலும் ஒரு படி மேம்பட்ட, நுண்ணயமிக்க, தந்திரமான தீர்ப்பு என்பதே உண்மை. இதனை அம்பலப்படுத்துவதுதான் சாதி ஒழிப்பில் நம்பிக்கை கொண்ட அனைவரின் பணியாகவும் இருக்க முடியும்.

மருதையன்,
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

இந்த சேதாரத்தை வழங்கியோர் அதிகார வர்க்கம் + ஜெயா அரசு

2

chennai floods people experience (2)மிழக மழை வெள்ள சேதத்திற்கு அரசு மற்றும் அரசாங்க கட்டமைப்பின் தோல்வி முக்கியமாக காரணமாகும். உணவு, உடை, இருப்பிடம், மின்சாரம், சாலைப் போக்குவரத்து, கல்வி, வேலை, மருத்துவம் என மக்களின் அடிப்படைத் தேவைகளை வழங்கும் கடமையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவற்றைத் தனியார்களிடம் தாரை வார்த்துவிட்டு போலீசு, இராணுவம், சிறை, நீதித் துறை போன்ற குண்டாந்தடிகளை மட்டும் அரசு தன்வசம் வைத்துள்ளது. எனினும், இந்த துறைகளும் கூட ஒரு ஆபத்துக் காலத்தில் மக்களைக் காப்பாற்றும் திராணியற்று மொத்தமாய்க் குலைந்து நொறுங்கியதை வெள்ளத்திற்குப் பிந்தைய நாட்களில் நாம் கண்டோம்.

இத்துறைகளின் கடைமட்ட ஊழியர்கள் ஓரளவிற்கேனும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர் என்பது உண்மை. ஆனால் அவர்களும் கூட மேலிருந்து எந்தவிதமான வழிகாட்டுதலோ, கட்டளைகளோ இன்றி சொந்த விருப்பத்தில் மட்டுமே செயல்பட்டுள்ளனர். இத்துறைகளின் உயரதிகாரிகளோ எதிர்வரும் ஆபத்தைக் குறித்தோ, ஆபத்து நேர்ந்த பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தோ கிஞ்சித்தும் அக்கறையின்றி இருந்துள்ளனர்.

ஃப்ரண்ட்லைன் பத்திரிகை அரசு இயந்திரம் பக்கவாதத்தால் முடமாகிக் கிடந்த நிலையை இவ்வாறு குறிப்பிடுகிறது – “ஒவ்வொருவரும் வேறு யாரோ ஒருவருடைய உத்தரவிற்குக் காத்திருந்தனர்”.

ஏன்?

கிழக்கிந்தியக் கம்பெனியின் காலத்தில் கருவாகி காலனிய ஆட்சிக்காலத்தில் உருவாகி பின் போலி சுதந்திர இந்தியாவில் தனது முழு பரிமாணத்தை அடைந்த அரசு எந்திரம் மக்களுக்கு எந்த வகையிலும் என்றுமே கடமைப்பட்டதில்லை. அன்றாட சிவில் நிர்வாக பணிகள் மட்டுமின்றி, மக்களால் ’ஜனநாயக’ முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நிறைவேற்றும் சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரமும் பல்வேறு துறைகளின் செயலாளர்களான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள், தாசில்தார்கள், மணியக்காரர்கள், காவல்துறை மற்றும் சிவில் நிர்வாகத்துறையின் அதிகார வர்க்க வலைப்பின்னலிடமே உள்ளது.

இந்த மொத்த நிர்வாக கட்டுமானமும், மக்களுக்கு பதிலளிக்கும் கடமையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதோடு (உங்களால் தவறிழைத்த ஒரு கலெக்ட்டரின் பதவியைப் பறிக்க முடியுமா?) மக்களுக்கு மேலானவர்களாக தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. எனவே, மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் தனது கடமையில் இருந்து தவறினாலும் கூட எவரும் தண்டிக்க மாட்டார்கள் என்கிற தடித்தனம் இவர்கள் இயல்பிலேயே உள்ளது.

bureaucracyஆனால், வெள்ள காலத்தில் இந்த நிர்வாக இயந்திரம் முற்றாகத் தோற்றுப் போனதற்கு இது மட்டுமே காரணமில்லை.

தொண்ணூறுகளுக்கு பின் துரிதப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையிலான தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயமாக்கல் நடவடிக்கைகளுக்குத் தகுந்தவாறு மொத்த அரசு எந்திரமும் மீள்கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைகளின் தலைமைச் செயலாளரும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் கையாளாக மறுவார்ப்பு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதவியே அந்நிய முதலாளிகளுக்கும் உள்நாட்டு தரகு வர்க்கத்திற்கும் சேவை செய்தற்கென மாற்றப்பட்டுள்ளது.

அடையாற்றின் கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட மியாட் மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் வெள்ள நீர் புகுந்ததால் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர்கள் செயலிழந்தன. இதன் காரணமாக 18 நோயாளிகள் படுகொலை செய்யப்பட்டனர். டிசம்பர் 4-ம் தேதி பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த தலைமைச் செயலளர் ஞானதேசிகன், ”உங்களுக்கே தெரியும் மியாட் மருத்துவமனை தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. மியாட் போன்ற பெரிய மருத்துவமனைகளுக்கு தேவையான மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பு உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளைக் கைவிட்டுள்ளது. சட்டம் அதன் கடமையைச் செய்யும்” என்கிறார்.

நன்றாக கவனியுங்கள், இந்த பேட்டி வெளியானது டிசம்பர் 4. அதாவது வெள்ள பாதிப்புகள், மக்கள் படும் துன்பங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் உண்டாக்கி விட்டிருந்த சமயத்தில் தான் மியாட் நிகழ்த்திய படுகொலைகள் பற்றிய தகவல்கள் கசிந்தன – தொடர்ந்து தலைமைச் செயலரின் பேட்டியும் வருகிறது.

அதே நாளில் ஞானதேசிகன் குறிப்பிட்ட் “சட்டத்தின் கடமையை” நிலைநாட்டும் அதிகாரம் கொண்ட சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனின் அறிக்கையும் வெளி வருகிறது. அதன்படி, சுகாதாரத் துறை நடத்திய ‘விரிவான’ விசாரணைகளின் படி, இறந்து போன நோயாளிகள் எவரும் பிராணவாயு சிலிண்டர்கள் இல்லாமலும், ஜெனரேட்டர்கள் செயலிழந்ததாலும் மரணிக்கவில்லை என்றும், அவர்கள் சில நாட்களுக்கு முன்பே வேறு மருத்துவ காரணங்களுக்காகவே இறந்தனர் என்றும் தெரிவிக்கிறது.

ஜெயா விடுதலைக்கு அடிமைகளின் நேர்த்திக் கடன்
ஜெயா விடுதலைக்கு அடிமைகளின் நேர்த்திக் கடன்

பத்திரிகை ஊடகங்கள், மக்களின் ஆவேசங்களுக்கு ஒரு பதில். அந்த பதிலுக்கு நேர் முரணாக மேற்கொண்டு இந்த கொலைகளை எப்படி ஊத்தி மூடப்படப் போகிறார்கள் என்பதற்கு ஒரு விசாரணை மற்றும் அறிக்கை.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த பெரும் விபத்துக்களையும், பேரிடர்களையும் அதனைத் தொடர்ந்து அந்த விவகாரம் எப்படி ஊத்தி மூடப்பட்டது என்பதையும் கவனித்துப் பாருங்கள். ஆந்திரத் கூலித் தொழிலாளிகளை பலிவாங்கிய மவுலிவாக்கம் கட்டிடம் கட்ட அனுமதியளித்தது அரசு நிர்வாகம் தான். தீயில் குழந்தைகளைக் கருக்கிய கும்பகோணம் பள்ளிக்கு விதிமுறைகளை மீறி அனுமதியளித்ததும் அதிகார வர்க்கம் தான்.

2012-ம் ஆண்டு இந்துப் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றின்படி (Our City, an illegal City) சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்ட கட்டிடங்களில் 50 சதவீதமானவை விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டவை தாம். இவையனைத்திற்கும் சட்ட விதிமுறைகளை மீறி அனுமதியளித்தது சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகார வர்க்கம் தான்.

இது தவிர பொருளாதார வளர்ச்சி என்கிற மந்திர மாங்காயை தரவல்லதாக சொல்லப்படும் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் சென்னை நகருக்கு உள்ளும் அதைச் சுற்றிய புறநகர்ப் பகுதிகளிலும் ஏராளமான நிலங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்தப் பன்னாட்டுத் தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, கழிவு நீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஒருபக்கம் என்றால், இந்த நிறுவனங்களில் அநேகமானவை நீர் நிலைகளின் ஆக்கிரமித்தும், சதுப்பு நிலங்களின் மீதுமே அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச் சூழல் விதிமுறைகள், கட்டுமான விதிமுறைகள், கழிவு நீர் மேலாண்மை தொடர்பான விதிமுறைகள் என்று சகலத்தையும் காற்றில் பறக்கவிட்டு இவற்றுக்கான அனுமதியை அளித்துள்ளது அதிகார வர்க்கம். பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்ளையர்களுக்கும் சுரண்டல்வாதிகளுக்கும் சேவை செய்வது மட்டுமின்றி – அதை மக்கள் எதிர்த்தால் களத்திலிறங்கி அவர்களை ஒடுக்கும் வேலையையும் அதிகார வர்க்கமே செய்கிறது.

ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை என்று இயற்கை வளங்களையும், நதிநீர்ப் படுகைகளையும் கொள்ளையர்கள் சுரண்டித் தீர்ப்பதை எதிர்த்து மக்கள் போராடினால் வருவாய்த் துறை அதிகாரிகளும் காவல்துறை குண்டாந்தடிகளும் மக்கள் எதிர்ப்பை நசுக்கி தங்கள் எஜமானர்கள் யார் என்பதை உணர்த்துகின்றனர். ஆக, மொத்த அரசு எந்திரமும் மக்கள் சேவைக்கென இல்லாமல் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களின் கைக்கூலிப் பட்டாளமாக மாற்றப்பட்டுள்ளது.

வட தமிழகமும் குறிப்பாக சென்னையும் சந்தித்த இயற்கைப் பேரழிவுக்கு அரசு எந்திரம் ஒருமுனையில் காரணமாக உள்ளது என்றால், இன்னொரு முனையில் அந்த எந்திரத்தை ‘வேலை’ வாங்கும் பொறுப்பில் தற்போது இருக்கும் ஜெயா தலைமையிலான அரசின் கையாலாகத்தனமும் உள்ளது.

stickerசமீபத்தில் (வெள்ளத்திற்குப் பின்) ஜெயலலிதாவின் பாதுகாவலுக்குப் பொறுப்பான இராண்டு போலீஸ் உயரதிகாரிகள் மாற்றப்பட்டனர். ஏன் மாற்றப்பட்டனர் என்பது பற்றி பத்திரிகைகள் தெரிவிக்கப்பட்ட காரணத்தை கவனியுங்கள் – அதாவது, பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகளைக் காண சென்னை வந்த போது அவரை வரவேற்க ஜெயலலிதா சென்றுள்ளார். அப்போது அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பை நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை புகைப்படக் கலைஞர் படமெடுக்க இந்த அதிகாரிகள் தடுத்து மறித்துள்ளனராம். எனவே அந்த அதிகாரிகளை ஜெயா பந்தாடினாராம். இது தான் ஜெயலலிதா.

ஒரு அதிகாரியோ அமைச்சரோ நிர்வாகத் திறமையில்லாத காரணத்திற்காக ஆட்சித் தலைமை மாற்றுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஜெயாவைப் பொறுத்தவரை எந்தக் காரணமும் தேவையில்லை. தன் முன்னே குனியாமல் நின்றார், மீசை ரெண்டு இன்சுக்கு மேலே முறுக்கிவிடப்பட்டிருந்தது, சட்டைப் பையில் வெளியே தெரியும் படி தனது படம் இல்லை போன்ற சல்லித் தனமான சில்லறைக் காரணங்களே ஒரு அமைச்சரையோ அதிகாரியையோ பந்தாடப் போதுமானது. இப்படித்தான் கெடா மீசை ஐ.பி.எஸ் நடராஜன் ஆள் மாறாட்ட படத்திற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சேர்க்கப்பட்டார். இத்தகைய கூத்துக்கள் உலகில் எங்கேயாவது உண்டா?

குழந்தைகள் பொம்மைகளை அடித்து உருட்டி விளையாடுவதைப் போல் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மட்டுமல்ல – மக்களையும் நடத்த தயங்காதவர் ஜெயலலிதா. ஒரே கையெழுத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வீட்டுக்கனுப்புவதோ, பத்தாயிரம் சாலைப் பணியாளர்களைத் தெருவில் நிறுத்துவதோ, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அடித்துத் துவைத்து ஊருக்கு வெளியே வீசிவிட்டு வருவதோ அவர்கள் பழக்கமில்லாத சாலையில் அவர்கள் தடுமாறுவதோ ஜெயலலிதாவின் மனதில் சிறு சலனத்தையும் கூட ஏற்படுத்தியிருக்காது.

அதனால், தான் வெள்ளத்தால் சகலத்தையும் இழந்து நின்ற மக்களைப் பார்த்து கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி “வாக்காளப் பெருமக்களே” என்று அவரால் விளிக்க முடிகிறது. அதனால் தான் இத்தனை மக்களின் வாழ்வும் பொருளாதாரமும் அழிந்து எல்லோரும் தெருவில் நிற்கும் போது மிருக காட்சி சாலையில் பிறந்த புலிக் குட்டிகளுக்கு நியூமராலஜி படி பெயர் சூட்டி மகிழ முடிகிறது. இனி ரோம் எரியும் போது பிடில் வாசித்தான் நீரோ என்ற பழமொழியில் ஜெயாதான் போட்டியின்றி உட்கார்வார்.

போனபார்டிஸ்டுதனமான அல்லது முகமது பின் துக்ளக் தனமான அல்லது பாசிஸ்டுதனமான இந்த கோமாளித்தனங்களைத் தான் பார்ப்பன அறிவுஜீவிகளும், ஊடகங்களும் நிர்வாகத் திறமை என்றனர். அம்மாவின் முன் அடிமைகளைப் போல் மந்திரிப் பிரதானிகள் விழுந்து கிடந்த காட்சியைக் கண்டு உலகமே காறித் துப்பிய போது இவர்கள் அதையெல்லாம் ஜெயலலிதாவின் அசைக்க முடியாத அதிகாரத்தின் அடையாளங்கள் என்று துதி பாடினர். மூன்று மாதங்களுக்கும் ஆறு மாதங்களுக்கும் ஒரு அமைச்சர் பந்தாடப்படும் நிலையில் அவரால் தனது துறையைப் பற்றி எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

car jayaபொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் வெளியிட்ட லஞ்சப் பட்டியலின் படி, ஒவ்வொரு பொதுப்பணித் துறை ஒப்பந்தத்திற்கும் கீழிருந்து மேல் வரை யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் கொடுக்க வேண்டும் அந்த லஞ்சப் பணம் கீழிருந்து மேல் நோக்கி எப்படி பாய்கிறது என்பது அம்பலமானது. கும்பினி ஆட்சிக் காலத்தில் ஜமீந்தார்களும், குறுநில மன்னர்களும் மக்களிடம் அடித்துப் பறித்து கும்பினிக்கு கப்பம் கட்டியதைப் போறே அமைச்சர்களும் போயஸ் தோட்டத்திற்கு கட்ட வேண்டிய கப்பத்தை வசூலிப்பதிலேயே குறியாக இருந்தனர். அமைச்சர்களின் செயல்பாடுகள் வட துருவத்திலும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் தென் துருவத்திலும் நிறுத்தப்பட்டன.

தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் அதிகாரிகளோ அமைச்சர்களோ தமது துறை சார்ந்து திறம்படச் செயல்பட வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அவர்கள் அம்மாவின் மனதைக் குளிர வைத்து விட்டாலே போதுமானது. அதனால் தான் ஜெயா கர்நாடக சிறையில் இருந்த போது மொத்த அமைச்சரவையும் பால்காவடி எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, மண்சோறு சாப்பிடுவது, மொட்டை அடித்துக் கொள்வது, தாடியை மழிக்காமல் பரதேசிகளைப் போல் திரிவது என்று கோமாளிகளைப் போல் அலைந்தார்கள்.

அதிகாரிகளும் சளைத்தவர்கள் இல்லை. ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போதும், சிறீரங்கம் இடைத்தேர்தலின் போதும் தேர்தல் கண்காணிப்பாளர்களாக இருந்த மாவட்ட ஆட்சியாளர்கள் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் போன்றே செயல்பட்டனர். நவம்பர் மாத மழையைக் குறித்து பேசிய சேலம் மாவட்ட ஆட்சியாளர், “புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க பெய்த மழை” என்று குறிப்பிடுகிறார். உண்மையில், கடுமையாக கண்டிக்க வேண்டிய இந்த கோமாளித்தனத்தை ஊடகங்கள் கேலி செய்து அந்த ஆட்சியர் பேசியதன் பின்னிருந்த அடிமைத்தனத்தைக் கண்டிப்பதில் இருந்து தவறினர்.

ஒருபக்கம் உலகமயமயமாக்கலுக்கு சேவை செய்வதற்கு தகுந்தாற்போல் ஏகாதிபத்திய சேவைக்கென கைக்கூலிகளாக வார்த்தெடுக்கப்பட்ட அதிகார வர்க்கமும், இன்னொரு பக்கம் தன்னியல்பிலேயே அரசியல் போனபார்டிஸ்ட்டான ஜெயலலிதாவும் கச்சிதமாக பொருந்திப் போனார்கள். இன்று சென்னை மற்றும் வட தமிழகத்தின் வெள்ள பாதிப்புகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் துன்ப துயரங்களுக்கும் இந்தக் கேடு கெட்ட கூட்டணியே காரணம்.

cuddalore-flood-relief-pp-posterஏரி குளங்களை ஆக்கிரமித்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரை வார்ப்பது, மணல் கொள்ளைக்கு ஆறுகளைத் திறந்து விடுவது, தாதுமணல் கொள்ளைக்கு விளக்குப் பிடிப்பது, கிராணைட் கொள்ளைக்கு துணை போவது, ஆறு குளங்களை கோக் பெப்சிக்கு சல்லிசான விலைக்கு பட்டா போட்டுக் கொடுப்பது போன்ற “வளர்ச்சித்” திட்டங்களை கொஞ்சமும் மனச்சலனமோ கருணையோ இன்றி செயல்படுத்த தயங்காதவர் என்பதால் தான் திறமையான நிர்வாகியாக ஜெயா முன்னிறுத்தப்படுகிறார். இதேகாரணங்களுக்காகத் தான் மோடியும் “வளர்ச்சி” நாயகனாக முன்னிறுத்தப்படுகிறார்.

ஜெயா ஒரு சேலை கட்டிய மோடி; மோடி வேட்டி கட்டிய ஜெயலலிதா.

அதிகாரிகளும், அமைச்சர்களும், அரசு எந்திரமும், அரசாங்க பிரதிநிதிகளும் தகுதியற்ற அடிமைக் கும்பலாக சீரழிந்து போனதன் ஒரு சுருக்கமான சித்திரம் இது தான். இவ்வாறாக தமிழக அரசு நிர்வாக ரீதியில் முற்றாகத் தோல்வியுற்ற நிலையில் தான் பெருமழை வந்து சேர்ந்தது. மக்களின் வாழ்வை மழை அழித்து விட்டது. இதை இயற்கை மனிதனுக்கு வழங்கிய தண்டனை என்று அரசியலற்ற முறையில் புலம்புகின்றனர் சில அறிஞர்கள். ஆனால், அழியத் தயாரான கொலை நிலமாக தமிழகத்தை மாற்றி வைத்தவர்களை யார் தண்டிக்கப்பது?

இப்போது வெள்ளம் வடிந்து விட்ட நிலையில், முட்டையில் பேன் பார்க்கும் வேலையைத் துவங்கியுள்ள முதலாளிய ஊடகங்கள் “ஆக்கிரமிப்புகள்” பற்றிப் பேசத் துவங்கியுள்ளன. ஆனால், இந்த அக்கறையின் இலக்கெல்லாம் அடையாறு கூவம் நதியோரங்களில் குடிசை போட்டு பிழைப்பு நடத்தும் ஏழைகளை நோக்கியே இருக்கிறது.

உண்மையில் சென்னை வெள்ளத்திற்கு குடிசைகளின் ஆக்கிரமிப்பு தான் காரணமா?

– தொடரும்

  • தமிழரசன்

சென்னை மதுரவாயிலில் மாணவர்களின் நிவாரணப் பணி

0

சென்னை பு.மா.இ.மு வின் நிவாரண பணிகள்:

people-power-chennai-flood-work-2டந்த இரண்டு நாட்களாக ஜெயா டிவியில் போர்க்கால நடவடிக்கை – மீண்டெழுந்தது தமிழகம் என்ற தலைப்பில் சில மேட்டுக்குடி மற்றும் பொறுக்கி கும்பலிடம் பேட்டி எடுத்து போர்க்கால நடவடிக்கையில் தமிழகமே மீண்டெழுந்தது என்றும் அம்மா அரசு பம்பரமாக சுழன்றியதாகவும் சீன் விடுகிறார்கள். போயஸ்கார்டன் தான் அதிமுகவுக்கு தமிழ்நாடு போலும். இந்த அரசின் நடவடிக்கையால் வெள்ளம் சிறிதும் வடியவில்லை. மாறாக இயற்கையே வடித்துக்கொண்டது. ஆனால் அதற்கு பிந்தைய மீட்பு பணிகளை மீண்டும் பல்வேறு அமைப்புக்களும் இளைஞர்களும்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அவ்வாறு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர்கள் வெள்ளம் பாதித்தப் பகுதிகளுக்குச் சென்று அவர்களுக்கு உணவு , உடைகளை அளிப்பது மட்டுமல்ல; நம்முடைய வாழ்வை அழித்த, அழித்துக் கொண்டு இருக்கும் எதிர்நிலை சக்தியாக மாறிப் போய்விட்ட இந்த அரசு எந்திரத்தை நாம் ஏன் தூக்கி சுமக்க வேண்டும் என்பதையும் சொல்லப் போனார்கள். மக்களோ அதை நடைமுறையில் உணர்ந்து கொண்டிருந்தார்கள்.

மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெரு

people-power-chennai-flood-work-4கடந்த மாத வெள்ளத்திலேயே இப்பகுதியின் வீடுகள் எல்லாம் மூழ்கிப் போயிருந்தன. இம்மாதமோ கூரைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மதுரவாயல் பகுதிக்கு வருவதாகக் கூறினார்கள். அவர்களோ அருகில் இருந்த ஹோட்டலில் மூக்குப்பிடிக்க தின்று விட்டுப் போனார்கள். இந்நிலையில் டிசம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் ஊரிலுள்ள ஜனநாயக சக்திகள்,இளைஞர்களுடன் ஒன்றிணைந்து உணவு தயாரித்து வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டது. அமைப்புடன் கருத்துவேறுபாடு கொண்டவர்களும் கூட “தம்பி நான் பணம் கொடுத்தடறேன் ஊர்காரங்களுக்கு நீங்களே சாப்பாடு செஞ்சு போடுங்க, அப்பத்தான் சரியா போய்ச்சேரும்” என்றார்கள்.

மதுரவாயல் பகுதி தண்ணீரில் மூழ்கியதைக் கேட்டு பலரும் லாரி, வேன் என ஊரில் இருந்து நிவாரணப்பொருட்களை கொண்டு வந்தனர். அவற்றில் பெரும்பாலானவற்றை போலீசே பறித்துக்கொண்டு காவல் நிலையத்தில் வைத்து அமைச்சர் கையால் தரவைக்க வேண்டும் என்று புழுக்க வைத்துக் கொண்டிருந்தது. சேலத்தில் இருந்து உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்திருந்தவர்களை வழக்கம் போல போலீசு மிரட்ட அவர்களோ “உங்ககிட்ட கொடுக்க முடியாது” என்று கூறி திருப்பி எடுத்துச் சென்றார்கள். போலீசின் தடைகளையும் மீறி பல ஊர்களில் இருந்து வரும் தன்னார்வலர்கள் கொடுக்கும் நிவாரண பொருட்களை மக்களுக்கு முறையாக பிரித்து அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி மோட்டர் ஏற்பாடு செய்து பகுதிகளில் தேங்கி இருந்த தண்ணீரை அகற்றுவதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் நம்முடைய பிரச்சினையை அரசோ அதிகாரிகளோ எள்ளளவும் தீர்க்கமாட்டார்கள் என்பதையும் அமைப்பாக இல்லாமல் இடர்களை தீர்க்க முடியாது என்பதையும் மக்கள் உணர்ந்துள்ளனர்.

ஸ்ரீலட்சுமி நகர், பகுதிக்கு சென்று அங்கிருந்த மக்களிடம் விசாரித்ததில் நிவாரணம் கொடுப்பவர்கள் எல்லாரும் தண்ணீரில் இறங்காமல் வெளியில் மட்டுமே நிவாரணம் கொடுத்திருக்கின்றனர். இதனால் குழந்தைகள், வயதனவர்கள், பெண்கள், ஊனமுற்றவர்களுக்கு நிவாரணம் போய்ச் சேராமல் இருந்தது. இதை அறிந்து புமாஇமு தோழர்கள் மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து தண்ணீரில் இறங்கி தோழர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று போர்வை,பிரட்,பிஸ்கட்,துணி போன்றவற்றை கொடுத்தோம். ” இதுவரைக்கும் 3 நாட்களாக அரசு அதிகாரியும் சரி ஓட்டு வாங்கிக்கிட்டு போனவனும் சரி வந்து பார்க்கவே இல்லை, இந்த பகுதியில் இருக்கிற இளைஞர்கள்தான் எங்களுக்கு உதவிகள் செய்தார்கள். நீங்கள் யாரு வீட்டு பிள்ளையோ எங்களுக்கு உதவி செய்ய வந்துள்ளீர்கள்.நீங்கள் நல்லா இருக்கனும்பா” என்று வாழ்த்துக் கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.

அமைந்தகரை, அப்பாராவ் கார்டன்:

RSYF-chnnai-flood-works-1கடந்த வாரம் கூவத்தை ஒட்டிய இந்த பகுதியில் நிவாரண பணிகளை தோழர்கள் மேற்கொண்டனர். கூவத்தை ஒட்டிய பகுதி என்பதால் இங்கு பெரும்பாலான வீடுகளில் சேறு புகுந்து முழுவதுமாக சேதமடைந்து வாழ லாயக்கற்றதாக மாறியுள்ளது. “நிவாரண பொருட்களை கொடுக்க வருபவர்கள் சேற்றில் இறங்காமல் மேலே நின்று கொடுக்கிறார்களே தவிர, தாழ்வான பகுதியில் வசிக்கும் எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை” என்ற மக்கள் நாம் சென்றபோது மிகவும் எதிர்பார்ப்போடு கூறினார்கள்.

நமது அமைப்பை அறிமுகப்படுத்தி பேசியவுடன் “டாஸ்மாக் போராட்டம் நடத்தியது நீங்கள் தானே” என்று கேட்டனர். DYFI லிருந்து வெளியேறிய ஒரு இளைஞர், “உங்க டாஸ்மாக் போராட்டத்தை மீடியாவில் பார்த்தேன். பல அமைப்புகள பார்த்து இருக்கிறேன். ஆனால் அரசை பற்றி யாரு பேசுவது இல்லை. நீங்கள் தான் சரியாக பேசுகிறீர்கள். உங்களை பார்க்கும் போதும் நீங்கள் பேசுவதை கேட்கும் போதும் நீங்கள் சொல்வதுதான் சரி நானும் உங்களுடன் இணைந்து வேலை செய்வதாக” கூறினார். அதே பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலரும் கடைசி வரை நம்முடன் இருந்து வேலைகளில் ஆர்வமாக வீடுகளில் இருந்த சேற்றினை அகற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சாந்தி காலனி மற்றும் மஞ்ச கொல்லை பகுதி:

10-12-2015, 11-12-2015 மற்றும்12-12-2015 ஆகிய 3 நாட்கள் இந்த இரு பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். இந்த பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக கால் வைக்க கூட இடம் இல்லாத இடத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான வீடுகளில் சாக்கடை புகுந்துள்ளதால் பல வீடுகள் நாசமடைந்துள்ளன. வீடுகளிலுள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருந்தன. ”திடீர்னு வெள்ளம் வந்த உடனே உயிரை காப்பாற்றிக்கொள்ள பொருட்களை எல்லாம் அப்படியே போட்டு விட்டு ஓடிவிட்டோம். இப்ப தங்க இடமில்லாமல் நடுரோட்டிலும், ஸ்கூலிலேயும் இருக்கிறோம். ஆனால் எங்களை நாய விரட்டர மாதிரி பள்ளி கூடத்த விட்டு விரட்டுறானுங்க, நாங்க எங்க போவோம்” என கண்ணீர் விட்டு அழுது கொட்டித் தீர்த்தார்கள் அந்த பகுதி பெண்கள்.

அந்த பகுதியில் நாம் மக்களுடன் இணைந்து வேலை செய்வதை பார்த்த உள்ளூரிலே இருக்கிற அம்மாவின் விசுவாசிகளின் சிலர் தங்களின் பெயர் மக்களிடம் டேமேஜ் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் தெருவில் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்தனர். அந்த பகுதியில் உள்ள மக்கள் ”நீங்கள் வந்ததால அவனுங்க குப்பையில் இறங்கி வேலை செய்யறானுங்க, அவனுங்க சும்மா நடிக்கிறானுங்கப்பா” என கூறினார்கள்.

மறுநாள் அதற்கு அருகில் உள்ள பகுதியில் வேலை செய்ய போன போது அந்த பகுதி கவுன்சிலர் வந்து நாம் வேலை செய்வதை பார்த்து விட்டு ”இதுல்லாம் ஏன் நீங்கள் செய்யறீங்க அவங்களே செய்வாங்கனு” என்று சொல்லி நம்மை அங்கிருந்து வெளியேற்ற பார்த்தார். ஆனால் மக்களுடன் சேற்றில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணோ கவுன்சிலரை பார்த்து ”வாங்க அக்கா, அப்போ நீங்க உள்ள வாங்க” என கூப்பிட்ட உடன் சேறும் சகதியுமாக இருந்த வீட்டை பார்த்த உடன் அலறி அடித்துக் கொண்டு ஓடிவிட்டார். அதன் பிறகு ”அவங்கள்ளாம் உள்ளே வரமாட்டங்கனு எனக்கு தெரியும்பா, அதை தெரிஞ்சுதான் கூப்பிட்டேன்” அப்படின்னு சொல்லி “இவங்க எல்லாம் மக்கள் காப்பத்த போராங்களாம்” என்று நக்கலடித்து சிரித்தார். இவ்வழியாக சென்ற அமைச்சர் கோகுல இந்திராவை, “இப்பகுதி எப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று வந்து பாருங்கள்” என மக்கள் அழைத்து இருக்கிறார்கள். அவரோ “என்னால அங்கேயெல்லாம் வரமுடியாது” என்றிருக்கிறார். அ.தி.மு.கவினரோ “ஆக்கிரமிப்புன்னு சொல்லி இன்னமும் ரெண்டு நாளைல உங்க வீட்டையே இடிச்சுருவோம், வந்து என்னாவ போகுது” என்று கூறி இருக்கின்றனர். எல்லோரும் கைவிட்ட நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்திருக்கிறார்கள் மக்கள்.

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் என பு.மா.இ.மு. தோழர்கள் உற்சாகத்துடனும், உணர்வுபூர்வமாகவும் சாக்கடையாக இருந்த வீட்டை சுத்தம் செய்வதை பார்த்த மக்கள், இதை நம்மால் செய்ய முடியுமா என்று ஒதுங்கி இருந்த பலரும் நம்முடன் இறங்கி வேலைசெய்தனர். ”எவனாவது இனிமே ஓட்டுக்கேக்கறதுக்கு வந்தானுங்க, எல்லாத்தையும் ஓடவுடணும்பா” என்றார் ஒருவர்.

வேண்டாத சதைப் பிண்டமாகிப்போன அரசு இற்றுப்போய் இருப்பது மட்டுமல்ல; எதிர்நிலைசக்தியாக மாறிப்போயிருப்பதையும் மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். இப்போது இருக்கிற பிரச்சினை, யார் முதலில் கல்லெடுப்பது என்பதுதான்.

 

 தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை, 9445112675

விழுப்புரம் மாவட்டம்

திருவெண்ணெய் நல்லூர் பகுதியில் மக்கள் அதிகார அமைப்பின் மூலம் மழையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து 12,13 தேதிகளில் ஆனத்தூர், பொய்கை அரசூர் இரண்டு கிராமங்களில் மக்கள் அதிகார தோழர்களோடு ஒருங்கிணைப்பாளர் தோழர் ஏழுமலை தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்கள் 250 பாய் அரிசி, துணிகள். பிஸ்கட் மற்றும் மருந்து பொருள்கள் உட்பட மக்களுக்கு வழங்கப்பட்டன.

– மக்கள் அதிகாரம், விழுப்புரம்

கருத்துரிமையை பாதுகாக்க மதுரையில் கருத்தரங்கம்

2

ன்புடையீர் வணக்கம்,

prpc-madurai-12th-year-banner-2சமீபத்திய மழை வெள்ளத்தில் கோடிக்கணக்கான மக்கள் குந்தக் கூட இடமில்லாமல் வெட்ட வெளியில் நின்று உயிர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த மாடிகளிலும், தாழ்ந்த குடிசைகளிலும் வாழும் மக்கள் பேதமில்லாமல் இயற்கை ஒன்றுபடுத்தியிருக்கிறது. பட்டினி, பசி, குளிர், காய்ச்சல், நோய்த் தொற்று எல்லோரையும் ஒரு சேர வாட்டி வதைத்திருக்கிறது. அரசு செயலிழந்து நிற்கிறது. இந்த அகோர மழை வெள்ளத்திற்கு யார் காரணம்? வேறுயாரும் இல்லை. அரசுதான் காரணம். தெரிந்தே இயற்கையைச் சீண்டி விளையாடுபவர்கள் ஆட்சியாளர்கள்தான். பன்னாட்டு-இந்நாட்டு முதலாளிகள்தான். ஆனால், பாதிக்கப்படுவது, செத்து மடிவது என்னவோ மக்கள்தான். ஏழைகள்தான்.

இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அம்மா தி.மு.க.வின் அரசியல் விளையாடுகிறது. நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் தன்னார்வலர்களைத் தடுத்து நிறுத்தி அம்மாவின் படத்தை ஒட்டி அம்மாவின் பெயரால்தான் வழங்க வேண்டும் என்று அடித்து உதைக்கிறார்கள் அந்தக் காலிகள். சாவிலும் ஆதாயம் பார்க்கும் வக்கிரம், எல்லாவற்றிலும் “நான்” “எனது” என்று மமதையோடு சொல்லிவரும் ஜெயலலிதா தன்னை விமர்சிப்பவர்களை அடக்கி ஒடுக்குகிறார். அவரை விமர்சிப்பது, “ராஜ துரோகம்” என்கிறார் அந்தக் கலையரசி. வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை வாக்காளர்களாக மட்டுமே அவரால் பார்க்க முடிகிறது. இதுதான் அவரது ஜனநாயகப் பண்பு. கருத்துரிமை என்பது அம்மாவைப் புகழ்பாடுவது. ஜனநாயக உரிமை என்பது எந்த ஒரு சிறு எதிர்ப்பையும் காட்டாமல் இருப்பது.

இன்னொருபுறம் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை அமல்படுத்திவரும் பா.ஜ.க அரசு. உள்நாட்டில் தனது பரிவாரங்களை தறிகெட்டுத் தாண்டவமாடவிடும் மோடி அயல் நாடுகளில் போய் ஜனநாயக வேடமிட்டுத் திரிகிறார். கோமாதாவின் பெயரால் அரங்கேறும் படுகொலைகள் தொடங்கி சிறுபான்மையினரை அச்சுறுத்தி நாட்டைவிட்டே வெளியேற்றும் தேச, பார்ப்பன இந்துமத வெறியில் திளைத்து இன்புறுகிறது அந்தக் கும்பல். “நாய்”களை விடக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள் தலித் மக்கள்.

prpc-madurai-12th-year-banner-1உயர்-உச்ச நீதிமனங்களை கைப்பற்றி விட்டால் நாட்டையே கைப்பற்றி விட்டதாகும் என்று உணர்ந்து அதற்கு எதிராக போராடும் வழக்கறிஞர்களைப் பணிநீக்கம் செய்து பழி தீர்க்கிறது ஆர்.எஸ்.எஸ் அரசு. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு சில பார்ப்பன நீதியரசர்கள் அரசியல் சாசனத்திற்கு புறம்பாக பாராளுமன்றம் சட்டமியற்றுவது போல ஆணைகளை பிறப்பிக்கிறார்கள். மக்கள் தாங்கள் சொல்கிறபடிதான் உண்ண வேண்டும், உடுத்தவேண்டும் என்று அச்சுறுத்தும் இவர்கள் இந்துக்கள் எப்படி உடையணிந்து கடவுளைக் கும்பிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கின்றனர். டிசம்பர் 6-ல் இசுலாமிய – தலித் மக்கள் போராடக் கூடாது என்று தடை விதிக்கின்றனர். தமிழகத்தின் பெருமையான சுயமரியாதை திருமண சட்டத்தை மறைமுகமாகச் சிதைக்கிறார்கள் இந்த வேதியரசர்கள்.

கருத்துரிமை, ஜனநாயக உரிமை, சமநீதி, சமத்துவம் என்பவையெல்லாம் பார்ப்பன இந்து சனாதனத்தின்படிதான் என்று அடித்துச் சொல்கிறது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பரிவாரங்கள். ஒருபுறம் சகிப்புத்தன்மை-பன்முகத்தன்மை என்பதுதான் பாரதத்தின் அடையாளம், பழம் பெருமை என்று சொல்லிக் கொண்டே வன்முறை, பார்ப்பன இந்து சனாதானக் கொடுமைகளை அரங்கேற்றி வருகிறது. இந்த அபாயங்கள் இந்திய மக்களை நிரந்தரமாக அச்சுறுத்தும் அபாயங்கள். ஆட்சிகள் மாறினாலும், இந்த அபாயம் மாறாது என்று எச்சரிக்கை செய்கிறது மக்களு உரிமைப் பாதுகாப்பு மையம். இதற்கு எதிராகப் போராட வேண்டிய பொருத்தமான தருணம் இது என்பதை சுட்டிக்காட்டி உங்களைப் போராட அழைக்கின்றோம். மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராக மாறிவிட்ட இந்த பேரபாயத்தை, வாழும் உரிமைக்கான அதிகாரத்தை மக்களே கையிலெடுப்பதன் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும்.

prpc-madurai-12th-year-poster-2

12-ம் ஆண்டில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டம்

கருத்தரங்கம்

19-12-2015 சனிகிழமை மாலை 5 மணி
மீனாட்சி அரங்கம், மடீசியா, மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை

கருத்துரிமையை பாதுகாக்க களத்தில் இறங்குவோம்!
பாய்ந்து வரும் பார்ப்பன மதவெறி பாசிசத்தை வீழ்த்துவோம்!

மனித உரிமை ஆர்வலர்களே அணிதிரண்டு வருவீர்.

தலைமை : திரு ம. லயனல் அந்தோணிராஜ்
மாவட்டச் செயலாளர், ம.உ.பா.மையம், மதுரை

வரவேற்புரை : திரு மு. சங்கையா
மாவட்டப் பொருளாளர், ம.உ.பா.மையம், மதுரை.

உரை : காவிமயமாகும் நீதித்துறை! பாசிசமயமாகும் அரசு! தீர்வின் திசை எது?
திரு சே. வாஞ்சிநாதன், B.Sc, B.L
மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்

சிறப்புரை : சகிப்புத்தன்மை – பன்முகத்தன்மை: ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.யின் கொள்கையா?
வழக்கறிஞர் எஸ்.பாலன், பெங்களூர்.

நன்றியுரை : திரு பா.நடராஜன், B.A., B.L.
மாவட்டத் துணைத்தலைவர், ம.உ.பா.மையம், மதுரை

நூல் அரங்கம் (கீழைக்காற்று)

prpc-madurai-12th-year-banner

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டம்
150 E, ஏரிக்கரை சாலை, K.K.நகர், மதுரை – 20,
தொடர்புக்கு 94434 71003

தொண்டைக்குள்ள சோறு இறங்கல !

4

chennai floods people experience (6)ருக்கப்பட்டவர் இல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் புரட்டி போட்டது சென்னையில் பெய்த மழை. உடமைகளை இழந்தவர்கள் உறவை இழந்தவர்கள் என இழப்பை எதிர் கொள்ள முடியாத சோகம் மக்களிடம். நம் கற்பனைக்கு எட்டாதமாதிரி நூற்றுக்கணக்கான வகைகளில் அந்தக் கதைகள் மக்களிடம் உள்ளன. அப்படி நான் சந்தித்தவர்ளில் சதாசிவமும் பூபதியும் இரு வேறு திசைகளில் படம் பிடித்துக் காட்டினார்கள்.

சென்னைக்கு மிக அருகாமையில், ரயில் நிலையத்துக்கு பக்கத்தில், பேருந்து நிலையத்துக்கு எதிர் புறத்தில் அகலமான உள் சாலைகளுடன் நல்ல குடிதண்ணீருடன் காற்றோட்டமான வீட்டு மனைகள் என்று கூவி கூவி நடுத்தர மக்களின் சம்பாத்தியத்தையும் எதிர் காலத்தையும் கூறு போட்ட ரியல் எஸ்டேட் கும்பல்கள் இங்கே ஏராளம். அந்த கும்பலிடம் மனை வாங்கி சம்பாத்தியத்தில் பாதியை தொலைத்துவிட்டு மீதமுள்ளதை மழை வெள்ளத்தில் இழந்து விட்டவர் சதாசிவம்.

சதாசிவம் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னை மாநகர குடிநீர் வாரியத்தில் பணியாற்றி ஓரிரு வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர். வெள்ளம் சூழ்ந்த மூன்றாம் நாள் தப்பித்தவர் குடும்பத்துடன் தேனி    சென்று விட்டார்.

“நாங்க குன்றத்தூருக்கு பக்கத்துல இருக்குற அனகாபுத்தூர்ல இருக்கோம். இங்க வீடு கட்டி குடிவந்து நாலு வருசமாச்சு. நாங்க இருக்குற ஏரியாவுல வீடுக நெருக்கமா இருக்காது. காலி மனையும் வீடுமாதான் கலந்து இருக்கும். உதவி கேக்கவோ, செய்யவோ ஒரு ஃப்ளாட்டு, ரெண்டு ஃப்ளாட்டு தள்ளித்தான் போகணும்.

நவம்பர் மாச கடைசியில கணுகாலுக்கு மேல தண்ணி தெருவுல ஓடை போல ஓடிச்சு. மழை அதிகமா பேஞ்ச அன்னைக்கி ஆறு போல ஓடுச்சு. கரண்டும் காலையிலேயே போச்சு. ராத்திரி 9 மணிக்கெல்லாம் படுத்துட்டோம். திடீர்னு ராவுல 10 மணிக்கு வீட்டுக்குள்ள தண்ணி வர ஆரம்பிச்சுருச்சு என்ன செய்றதுன்னே தெரியல. கண்ணிமைக்கிற நேரத்துல தண்ணி விறுவிறுன்னு ஏறுது. சன்னல் ஒசரத்த தாண்டியும் வந்துறுச்சு. எத எடுக்குறது எத விடுறதுன்னு தெரியல. தண்ணி வந்த வரத்துல உயிர் தப்பிச்சா போதுமுன்னு மொட்ட மாடிக்கு ஓடுனோம்.

chennai floods people experience (4)என்ன செய்யறது, எங்க போறதுன்னு நிலைதடுமாறி நின்னப்ப எங்க ஏரியா இளவட்ட பசங்க எங்கள கையைப் பிடிச்சு காப்பாத்தி அடுத்த வீட்டு மாடி முதல் தளத்துல விட்டாங்க. நாங்களாவது பரவாயில்ல முழிச்சுருந்தோம். பக்கத்து வீட்ல தண்ணி வீட்டுக்குள்ள வந்தது தெரியாம கைக்குழந்தையோட புருஷனும் பொஞ்சாதியும் தூங்கிட்டு இருந்துருக்காங்க. எங்களக் காப்பாத்துன பசங்கதான் அவங்களையும் காப்பாத்துனாங்க.

கதவு தட்டுற சத்தம் கேட்டு எழுந்து பாத்த அந்தப் பையன் கட்டில் முட்ற அளவு தண்ணிய பாத்ததும் பொறி கலங்கி போயிட்டாரு. என்ன ஏதுன்னு யோசிக்கறதுக்கு நேரமில்லாம அந்த இளைஞர்கள் பிள்ளைய தூக்கிட்டு அவரையும் அவர் மனைவியையும் கூட்டிட்டு நாங்க இருக்குற வீடு வந்து சேர்றதுக்குள்ள தண்ணி வரத்து ரொம்ப வேகமாயிருச்சு.

மூணு வருசமாச்சு அந்த ஏரியாவுக்கு குடி போயி. அக்கம் பக்கமா இருந்தாலும் நாங்க யாரும் அப்புடி ஒன்னும் அன்னியோன்யமா பழகினது கிடையாது. வெரும் ஹலோ ஹாய்யோட சரி. பழகாத ஒரு வீட்டுல உண்டு உறங்கி இயல்பா இருந்துருக்கோமுன்னா உயிர் பயந்தான் வேற என்னன்னு சொல்லெ!

நாங்க இருந்த வீட்டுக்கு எதிர் புறத்துல ஒரு அம்மாவும் மகனும் இருந்தாங்க அவங்களும் தூங்கிட்டு இருக்கும் போது தண்ணி வீட்டுக்குள்ள வந்ததுதான் முழிச்சவங்க எப்புடியோ தப்பிச்சு வீட்டு மொட்ட மாடிக்கு வந்துட்டாங்க. மூணு நாள் வரைக்கும் காப்பாத்த யாரும் இல்லாம சாப்பாடு இல்லாம தண்ணி டேங்குக்கு கீழ ஒண்டிகிட்டு இருந்தத பாக்க சகிக்கல. ஆளுங்களையும் பாத்து அவங்க கஷ்டப்படுறதையும் பாத்துகிட்டு நாம ஒன்னுமே செய்ய முடியாத நிலைமை மாதிரி ஒரு கஷ்டம் இந்த உலகத்துல இல்லேனு தோணுது.

மூணு நாளும் மழை தண்ணிய புடிச்சுதான் குடிச்சோம். வீட்டுக்குள்ள கெடந்த வெள்ளத்துல வந்த தண்ணியத்தான் டாய்லெட்டுக்கு மொண்டு விட்டோம். அந்த வீட்டுல இருந்த வச்சு மூணு குடும்பமும் மூணு நாளு சமைச்சு சாப்பிட்டோம்.

சுடச் சுட நாங்க சாப்புடும் போது எதுத்தாப்போல அந்த அம்மாவும் பையனும் பட்டினியா கெடந்தத நெனச்சா தொண்டையில சொறு இறங்குவனாங்குது. கடவுளு இருக்காறான்னு சந்தேகம் தான் வந்துச்சு. அவங்களுக்கு எந்த உதவியும் எங்களால செய்ய முடியல. உதவிக்கு யாராவது வர மாட்டாங்களான்னு கண்ணுக்கு எட்டுன தூரம் பாத்துகிட்டே இருந்தோம். கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கம் தண்ணிதான தெரிஞ்சுது, யாருமே வரல.

chennai floods people experience (5)எத்தனையோ வீடுகள்ல முதல் மாடியிலயும் தண்ணி வந்துருச்சு. எங்க வீட்டுல கட்டுன துணிய தவிர வீட்டுல இருந்த ஒரு பொருளையும் எடுக்கல. என்னோட 58 வருச உழைப்பு அந்த வீடும் அதுல இருந்த பொருளும் தான். ரிட்டயர்டு ஆன பணத்த வச்சு காரு வாங்குனேன். இருந்த பழைய பொருட்கள மாத்தி புதுசு வாங்கினேன். எல்லாம் போச்சு. இதுலேருந்து நான் மீண்டு வரவே முடியாது. ஏங்காலத்துக்குள்ள திரும்பவும் என் குடும்பத்தை இப்படி வாழ வைக்க முடியுமான்னு கேட்டா நிச்சயம் முடியாது” என்று பெருமூச்சு விட்டார் சதாசிவம்.

பூபதி தஞ்சை மாவட்டத்தின் விவசாயக் குடும்பத்திலிருந்து சென்னை வந்தவர். இவருக்கு மழை வெள்ளம் சேதம் எல்லாத்துலயும் கொஞ்ச அனுபவம் உண்டுன்னு சொல்லலாம். குடும்பத்துல முதல் பட்டதாரியான பூபதி சென்னைக்கு வந்து 17 வருடங்கள் ஆகிறது. அடையாறு நதிக்கரையில் ஆற்றை ஒட்டிய பகுதி ஒன்றின் முதல் தெருவிலேயே குடியிருக்கிறார்.

“அறநூறு சதுரடி அளவு கொண்ட இடத்துல கீழ நாலு மேல நாலுன்ன மொத்தம் எட்டு குடும்பங்க இருந்தோம். பழைய காலத்து வீடு அது. இருக்குற ரெண்டு சுவரலயும் நாலு விரிசல் விட்டுருக்கும். வெள்ளம் வந்து மாடியும் சேந்து மூழ்கிருச்சு. என்னையத் தவிர அந்த வீட்டுல உள்ள அத்தன குடும்பத்துக்கும் போக இடம் கெடையாது. முதல்ல பெஞ்ச மழையில தெரு பூறா தண்ணி ஓடிச்சு. அப்பவே மனைவி குழந்தைகள ஊருக்கு அனுப்பிட்டேன். மத்த சிலபேரு தெரிஞ்சவங்க வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. (அங்கேயும் தண்ணிதான்). லீவு போட்டு ஊருக்கு போனா பூவாவுக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். அதுக்காக இப்பையோ அப்பையோன்னு இருக்குற அந்த வீட்ட நம்பி நாங்க அத்தன பேரும் மொட்ட மாடியில தஞ்சம் அடைஞ்சோம்.

அன்னைக்கு தண்ணி வந்த வேகம் யாரையும் நிதானமா எதையும் எடுக்க விடல. பொம்பளைங்களும் பிள்ளைகளும் பயந்து கத்துனதும் கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் ஆம்பளைங்க இழக்க ஆரம்பிச்சோம். இருந்தாலும் சுதாரிச்சுகிட்டு தைரியமா சிலிண்டர், அடுப்பு, அரிசி ரெண்டு மூணு பாத்திரம் இதுகள எடுத்துகிட்டு மொட்ட மாடிக்கு போயிட்டோம். (இரண்டாம் தளத்தின் மேல்மாடி).

மெட்ட மாடியில அஸ்பஸ்டாஸ் போட்ட பத்துக்கு பத்து செட்டு ஒன்னுக்குள்ள ஏழெட்டு குடும்பமும் மூணு நாளு அடைஞ்சு கெடந்தோம். யாரு செஞ்ச புண்ணியமோ கஞ்சிக்கி மட்டும் வழி பண்ணிட்டோம். ஆனா அதுல போட்டு குடிக்க உப்பு எடுக்கல. உப்புல்லாத கஞ்சிய பிள்ளைங்க குடிக்கவே மாட்டேங்குது. பிள்ளைங்க என்ன எங்களாலயே குடிக்க முடியல. இருந்தாலும் கசாயம் போல வெடுக்கு வெடுக்குன்னு கண்ண மூடிட்டு குடிச்சுட்டோம்.

chennai floods people experience (3)இரண்டாம் நாள் காலையில ஹெலிகாப்டர்ல கைக்கு எட்டுர தூரத்துல ஆத்துத் தண்ணிய தொட்டுகிட்டு சாப்பாடு போடுவானுங்க. ஆனா நம்ம பன்னுண புண்ணியமோ, நம்ப பெத்தவங்க செஞ்ச புண்ணியமோ பக்கத்து மாடிக்கு கரெக்டா விழும் ஒரு பொட்டலங் கூட எங்க எடத்துல விழாது. அடுத்த வீட்டு மாடியில இருக்குற கூட்டத்த பாத்தா எங்களுக்கு ஒன்னு தாங்கன்னு கேக்கவும் முடியாது. அந்த மூணு நாளும் நல்லா ‘அனுபவிச்சு’ வாழந்தோமுன்னு சொல்லலாம்.

சினிமா கிராபிக்ஸ் காட்சியில பாத்துருப்போம் சோன்னு மழ (மழை), பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், மிதக்கும் வீடுக, மேல ஹெலிகாப்டர், வீடுகளுக்கு மத்தியில படகு……. வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் இப்ப நெனச்சாலும் ஆச்சரியம் தாங்கல எங்களுக்கு.

முதல் நாள் வரைக்கும் எல்லார் முகத்துலயும் சோகம். அடுத்து வந்த மூணு நாளும் சிரிப்பும் கும்மாளமுமா மொத்த குடும்பங்களும் பிக்னிக் போனது மாறி பட்டினியிலயும் அத்தனை சிரிப்பு. எல்லாம் போச்சு எப்படி வாழப்போறோங்குற கவலை இல்லாம என்ன சிரிப்பு வேண்டி கெடக்குன்னு பொம்பளைங்க அப்பப்ப திட்டுவாங்க. நாம இருந்தாதான் பொருளுக தேவை முதல் நம்ம பொழைக்கிறமான்னு பாருங்கன்னு சிரிப்பாரு டிரைவர் அண்ணன்.

chennai floods people experience (7)முதல்ல பெஞ்ச கனமழைக்கே வீட்டுக்குள்ள தண்ணி வந்துருச்சி. கீழ் வீட்டுக்காரங்க மேல் வீட்டுல சில பொருட்கள பாதுகாப்பா வச்சுட்டு எச்சரிக்கையாத்தான் இருந்தோம். தொடர்ந்து பெஞ்ச மழையும் அதனால வந்த பெருவெள்ளமும் ஒட்டு மொத்த சென்னையையே அழிச்சுட்டு போயிருச்சோன்னு தோணுது.

யாரோ ஒரு நீதிபதி ஒருத்தர் வெள்ளத்துல பாதிக்கப்பட்டு தனியா மாட்டிக்கிட்டாராம். மூணு நாள் பட்டினியில முனியாண்டி விலாஸ்ல போயி பசிக்கிதுன்னு சாப்பாடு கேட்டாராம். நாங்களலே ஒரு வாரமாச்சு அடுப்பு மூட்டி. கஞ்சி இருக்குது, ரெண்டு கிளாஸ் குடிச்சுட்டு போங்கன்னு கொடுத்தாங்களாம். அவருக்கே அந்த நெலமன்னா நாம எம்மாத்திரம். இதுக்காக கவலைபட்டு என்ன செய்றது, உயிருருந்தா பொழச்சுக்குவோம் என்ன நான் சொல்றது.” என்று சோகம் கலந்த சிரிப்புடன் முடித்தார் பூபதி.

– சரசம்மா

சென்னைக்கு குடிநீராம், கடலூருக்கு அழிவாம் – வீராணம் ஏரி அரசியல்

0

டலூர் மாவட்டத்தில் ஏற்பட்டமழை வெள்ள பாதிப்பால் சுமார் 208 கிராமங்கள் பாதிக்கபட்டிருக்கின்றன. இவற்றில் அதிக பாதிப்புக்குள்ளாகியவர்கள் கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி ஆகிய மூன்று தாலுக்காவை சேர்ந்த மக்கள். இந்த தாலுகாக்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் பெருகி விவசாய நிலங்கள், பயிர்கள், நெல், கரும்பு, வாழை என அனைத்தும் நாசமானது. கிட்டத்தட்ட 1.70 லட்சம் ஏக்கரில் இந்த மூன்று தாலுக்காவுக்குட்பட்ட விவாசாய நிலங்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

farm-land-like-lake-2
குளம் போல காட்சியளிக்கும் விளை நிலம்

இந்த கடலூர் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மூன்று முக்கிய காரணங்கள் குறிப்பிட்டிருந்தோம். அதில் இரண்டு காரணங்கள் ஏற்கனவே வினவில் வெளிவந்துள்ளன.

மூன்றாவது காரணம் என்னவென்றால் வீராணம் ஏரி தண்ணீர். வீராணத்தின் பாசன பரப்பு என்பது காட்டுமன்னார்குடி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாதோப்பு ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கியது. வீராணம் ஏரி லால்குடியில் தொடங்கி சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி வரை சுமார் பதினைந்து கிலோ மீட்டர் நீளம் வரை 28 மதகுகள் வழியாக பாசனத்திற்கு விடப்படுகிறது. இதன் மூலம் 85,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகிறது என்கிறார் வீராணம் பாசன விவசாயிகள் சங்க தலைவர்.

இந்த வீராணம் ஏறி பதினோராம் நூற்றாண்டில் பிற்கால சோழர்களால் கட்டப்பட்டது. காவிரியில் இருந்து வரக்கூடிய வெள்ளத் தண்ணீர் நேரடியாக தஞ்சை மாவட்டத்தின் வழியாக சென்று கடலில் கலந்து விடுகிறது. அதற்கு பதிலாக தென்னாற்காடு மாவட்ட விவசாயத்திற்கு பாசனம் வேண்டும் என்பதற்காக காவிரியில் இருந்து கொள்ளிடம் வழியாகவும் (காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்), கொள்ளிடத்தில் இருந்து சின்ன செங்கால் ஓடை, பெரிய செங்கால் ஓடைகள் வழியாக இந்த வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருகிறது. மேலும் மேட்டூரிலிருந்தும் வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் தான் விவசாயத்திற்கு பயன்படுகிறது.

இவ்வாறு மக்களுக்கு பயன்படக்கூடிய ஏரியை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. கடலூர் veeranam-damமாவட்டத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஏரிகள், குளங்கள் ஆறுகள் என எதுவும் பராமரிக்கப்படவில்லை என்பதை ஏற்கனவே வினவில் வந்த கட்டுரையில் பார்த்திருப்பீர்கள். இந்த அலட்சியம் வீராணம் ஏரிக்கும் பொருந்தும். வீராணம் ஏரியை தூர் வாருவதற்கு ஐம்பது கோடி ஒதுக்கியதாக கூறப்பட்டது. இதனைக் கொண்டு தூர்வாரியிருந்தாலே தற்பொழுது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தடுத்திருக்கலாம். ஆனால் தூர்வாரப்படவுமில்லை. வீராணம் எரியும் பராமரிக்கப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படவுமில்லை.

காரணம், வீராணம் என்றால் தமிழகத்தில் ஏறக்குறைய எல்லோருக்கும் தெரிந்திருக்கும் சென்னை குடிநீர் திட்டத்திற்கு முதன்மையாக வீராணம் ஏரி பயன்படுகிறது. ஆனால் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் யாருக்கு தேவைப்படுகிறது, வீராணத்தில் இருந்து ஏன் தண்ணீர் கொண்டு போகிறார்கள் என்பதற்கு முன்னால் வேறு சில காரணிகளை பார்த்து விடுவோம்.

குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் 2004-ல் சுனாமி ஏற்பட்டது. அப்பொழுது ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலலையில் சிக்கி இறந்து போனார்கள். அதற்கடுத்து 2005-ல் இது போன்ற ஒரு பாதிப்பு ஏற்பட்டது. அடுத்தது 2010-ல் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கில் வாலாஜா ஏரி உடைந்து வடலூருக்கு அருகில் உள்ள மருவாய் என்ற ஊரிலிருந்து குறிஞ்சிப்பாடி தாலுகா வரை மூழ்கிப்போனது. அதற்கடுத்தது 2011-ம் ஆண்டு தானே புயல் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தற்பொழுது இந்த கனமழை பெருவெள்ளம். இவ்வாறு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கடலூர் மாவட்டம் மிகப்பெரிய இடர்பாடுகளுக்குள் சிக்கிக்கொள்கிறது. ஆக இதுபோன்ற இடர்பாடுகளுக்கு வடிகால்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது அவசியமானவை தான். ஆனால் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகள் என்று பார்த்தால் இந்த வீராணம் குடிநீர் திட்டம் ஒரு முக்கியமான காரணம்.

veeranam-2வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி உயரமாகும். இந்த ஏரியின் அடியில் மணலும், வண்டல் மண்ணும் அதிக அளவில் படிந்துள்ளதால் தான் தண்ணீரை தேக்கி வைக்கி முடியவில்லை. இருப்பினும் தேக்கி வைக்கக்கூடிய தண்ணீரை தான் சென்னைக்கு குடிநீர் திட்டத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.

இந்த திட்டம் 1973-ல் கருணாநிதி ஆட்சி காலத்திலேயே முன்வைக்கப்பட்டது. இருப்பினும் இவ்வளவு தொலைவு தண்ணீரை கொண்டு செல்ல முடியாது என்பதாலும் அதற்காக ஒதுக்கிய நிதியை எடுத்து வள்ளுவர் கோட்டம் திட்டத்திற்கு பயன்படுத்தியதாலும் குறிப்பாக தி.மு.க-வில் நடந்த ஊழல் காரணமாகவும் இந்த திட்டம் அப்பொழுது தோல்வி அடைந்தது.

அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 2004-ல் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தினார். அதன் மூலம் சென்னைக்கு தினமும் வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக மூன்று பம்ப் ஹவுஸ்கள் பூதங்குடி, பண்ருட்டி அருகே வடக்குத்து, மற்றும் காடாம்புலியூர் ஆகிய இடங்களில் அமைக்கபட்டுள்ளது. இதில் காடாம்புலியூரில் மிகப்பெரிய தொட்டி அமைத்து “கிராவிட்டி போர்ஸ் “ என்று சொல்லக்கூடிய புவி ஈர்ப்பு அழுத்தம் மூலம் போரூர் வரை சுமார் 206 கிலோ மீட்டர் தூரம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து தான் சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

பொதுவாக வீராணம் குடிநீர் திட்டம் என்பது சென்னையிலுள்ள எல்லா மக்களுக்கும் செல்கிறது என்று சொல்லப்படுகிறது. அது உண்மை இல்லை. சென்னையில் உள்ள சாதாரண மக்களுக்கு இந்த தண்ணீரால் எந்த பயனும் இல்லை.

சென்னை இரண்டு விதமாக உள்ளது.

1. சென்னையை இயங்க வைக்கும் தொழிலாளிகள், சென்னையை பராமரிக்கம் தொழிலாளிகள்… இவர்களெல்லாம் உழைப்பாளி மக்கள்.

2. சென்னை நகரத்தில் இந்த வாய்ப்பு வசதிகளை எல்லாம் அனுபவிக்ககூடிய மேட்டுக்குடிகள் ஒரு பக்கம். இந்த மேட்டுக்குடிகள், இவர்களின் பிள்ளைகள் படிக்க கூடிய பள்ளிகள், ஷாப்பிங் மால்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், சினிமா ஸ்டுடியோக்கள், மற்றும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ராமச்சந்திரா, மலர்,அப்போல்லோ போன்ற பெரிய மருத்துவமனைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் என்று பன்னாட்டு நிறுவனகளுக்கு வழங்கப்பட்டு வரும் தடையற்ற மின்சாரம் போல் தடையற்ற நீர் வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு தான் பிரதானமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மேட்டுக்குடிகளின் வசதிகளுக்காகதான் சென்னை குடிநீர் என்பது வீராணத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.

இதற்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் மழைக்காலமாக இருந்தாலும், வெயில் காலமாக இருந்தாலும் வீராணம் தண்ணீரை முதலில் கொண்டு செல்கிறார்கள். அதாவது மன்னர்கள் காலத்தில் விவசாயத்திற்கு பயன்பட வேண்டும் என்று கொண்டு வந்த திட்டத்தை கைவிட்டு விட்டு சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என்று ஏரியில் அதிக அளவு தண்ணீரை தேக்கி வைத்தனர்.

மேலும் வறட்சியான காலங்களில் மதகுகளில் யாரும் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்பதற்காக தான் மதகுகளை சுற்றி இரும்பு veeranam-report-2கம்பி வேலி அமைத்துள்ளனர்.

தற்பொழுது பெய்த மழைக்கு முன்னாடி வீராணம் பாசனபரப்பு விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும், கண்ணீர் விட்டு கதறி அழுதும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடாததால், கடைசியாக விவசாயிகள் போராடிய போது ஜெயா அரசு கொடுத்த பரிசு விவசாயிகள் மீதான தாக்குதலும் தடியடியும் தான்.

வீராணம் விவசாயிகள் பாசன சங்கம், கொள்ளிடம் கீழணை விவசாயிகள் பாசன சங்கம் இவர்கள் போராடும் பொழுது அந்த விவசாயிகள் பிரச்சனை என்ன, நாட்டிற்க்கே சோறு போடக்கூடிய விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களே என்று சற்றும் சிந்திக்கவில்லை. என்ன தான் நாம் பணம் கட்டு கட்டாக சம்பாதித்தாலும் கரன்சி கட்டையா தின்ன முடியும் என்கிற புத்தியோ, அறிவோ கொஞ்சம் கூட இல்லாதது இந்த அதிகார வர்க்கம். எத்தனையாயிரம் விலை கொடுத்தாவது வாங்கி தின்னும் நிலைமை அவர்களுக்கு இருக்கிறது. சாதாரண மக்களுக்கு அரிசி வாங்கி சாப்பிட முடியாத நிலைமை தான் இருக்கிறது.

இதை எல்லாம் புரிந்து கொள்ளாத இந்த அதிகார வர்க்கம், அதன் திமிரில் வீராணம் பாசன பரப்பு விவசாயிகளின் வயிற்றில் அடித்து வீராணம் தண்ணீரைக் கொண்டு செல்கிறார்கள்.

விவசாயிகள் கேட்டபொழுது தண்ணீர் திறந்து விட்டிருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது. நிலைமை சீராக இருந்திருக்கும். ஏற்கனவே கணிசமான அளவு தண்ணீர் தேக்கி வைத்திருந்தார்கள். தற்பொழுது தண்ணீர் வந்த பொழுது தேக்கி வைக்க இடமில்லாமல் அதை திறந்து விட்டதன் விளைவு தான் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும், வெள்ளாறு, பரவனாறு, வெள்ளியங்கால் ஓடை இவைகள் எல்லாம் நிரம்பி வழிந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரில் மூழகியதற்கும் காரணம். இது அதிகார வர்க்கத்தால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவே.

மழைக்கு முன்னர் சென்னைக்கு தண்ணீர் வேண்டுமென திறக்க மறுத்து விவசாயிகளை ஒடுக்கினார்கள். மழை வந்த பிறகு ஏரி தாங்காது என்று திறந்து விட்டு விவசாய நிலங்களை மூழ்கடித்தார்கள். இந்த அயோக்கியத்தனத்தை என்னவென்பது?

சென்னையை பொறுத்த வரை இந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் வரக்கூடிய செய்தி என்னவென்றால் செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு அனுமதி கேட்டு கொடுக்கவே இல்லை. கடைசி நேரத்தில் திறந்து விட்டதன் விளைவாக அடையாறு ஆற்றில் வெள்ளத் தண்ணீர் சென்றதால் தான் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டது என்று கூறுகிறார்கள்.

veeranam-report-3இந்தத் தண்ணீரை அடையாறு தாங்குமா? இதற்கு குற்றவாளி யார்? நாம் ஏற்கனவே கூறுயது போல இந்த அரசு தான் குற்றவாளி. கண்ணுக்கெதிரே தெரிகிறது பொதுப்பணி துறை, நீர்பாசனத்துறை, வேளாண்துறை ஆகியவை தான் மக்கள் மீது அக்கறை இல்லாமல் அதற்குரிய வேலையை செய்யாமல் செயலிழந்து போய் விட்டது. மட்டுமல்லாமல் மக்களுக்கு எதிராக போய்விட்டது.

அதனால் தான் எந்த வித அறிவிப்புமின்றி தண்ணீரை திடீர் என்று திறந்து விட்டார்கள். இவ்வாறு தான் சென்னையிலும், கடலூரில் இவ்வளவு பெரிய பாதிப்புகள் ஏற்பட்டதற்கான அதிமுக்கிய காரணம்.

இந்த வீராணம் என்பது தென்னாற்காடு மாவட்டத்தினுடைய நீர் ஆதாரம். தென்னாற்காடு மாவட்டத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஒரு காலத்தில் ஆர்டிசீயம் ஊற்றுகள் இருந்தன. அதாவது பத்தடி, இருபது அடி தோண்டினாலே தண்ணீர தானாக சுரக்கும். இது தென்னாற்காடு மாவட்டத்தில் அதிகமாக இருந்தது. தற்பொழுது இது முழுக்க அழிந்து விட்டது. அதற்கு காரணம் நெய்வேலி சுரங்கம் என்கிற பெயரில் நூறு அடிக்கு மேல் மண்ணை வெட்டி எடுப்பதனால் நீர்கள் அனைத்தும் அதை நோக்கி சென்று விட்டது. ஆக விவசாயத்திற்கு பயன்பட்ட நீர்நிலைகள், ஊற்றுக்கள் , ஆறு,குளங்கள், வீராணம் ஏரி இவை அனைத்தையும் நாசமாக்கி விட்டு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், நிவாரண பணியும் மேற்கொள்ளாமல் போராடக்கூடிய மக்கள் மீது தடியடி நடத்துகிறது ஜெயா அரசு.

விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டும் என்று போராடியபோதும் தடியடிக்கு ஆட்பட்டார்கள், தற்பொழுது வெள்ள பாதிப்பினால் நிவாரணம் கொடு என்று கேட்ட போதும் தடியடியால் பாதிக்கப்பட்டார்கள் வீராணம் பாசன பரப்பு வாழ் மக்கள். ஊனமுற்ற ஒரு இளைஞர் நிரந்தரமாக ஊனமாகி கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு அதிகமாக மழை பெய்தது என்பதை நாம் மறுக்க முடியாது. இயற்கையை எதிர்த்து போராடுவது தான் அதாவது இயற்கையை புரிந்து கொண்டு அதன் மீது நேர்மறையான ஆளுமை செலுத்துவதுதான் மனித குலத்தின் வேலை. மனித சமூக வளர்ச்சி என்பது இயற்கையை புரிந்து கொண்டுதான் இந்த அளவு முன்னேற்றத்திற்க்கு வந்திருக்கிறோம்.

ஆனால் இயற்கையை சீரழித்து கொண்டிருக்கின்ற நாசமாக்குகின்ற முதலாளித்துவவாதிகளும், முதலாளித்துவ ஊடகங்களும், முதலாளித்துவத்தை பாதுகாக்க கூடிய அனைத்து நபர்களும் இயற்கை பேரிடர்களை குறை கூறுகிறார்கள். அதற்கு தீர்வாக இயற்கையை அழிப்பவர்களிடமே சென்று முறையிடுவது என்பது ஒருகாலும் நடக்காது.

இயற்கையை குறை சொல்ல முடியாது. இயற்கையை சீரழித்த சீர்குலைவு சக்திகள் தான் மக்களுக்கு எதிரான சக்திகள்.  இதனை வீழ்த்தி விட்டு மக்களுக்கான ஒரு அரசியலை முன் வைக்க வேண்டும். மக்களே அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். நமது ஆறுகள், ஏரிகள், குளங்கள் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மிகப்பெரிய செல்வங்களாக இருந்த இவை அனைத்தும் சில நூற்றாண்டுகளிலேயே அழிக்கப்பட்டு விட்டது. இதனை நாம் பாதுகாக்காவிட்டால் பிற்காலத்தில் வரக்கூடிய தலைமுறைகளுக்கு நாம் செய்ய கூடிய மிகப்பெரிய துரோகம்.

இன்னொரு பக்கம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இந்த இயற்கை மழை பொழிவதற்கு பருவகால மாற்றங்கள் தான் காரணம் veeranam-report-alaiyaathiஎன்று மாநாடு போட்டு கண்டு பிடிக்கிறார்கள். இந்த பருவ கால மாற்றம் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தோன்றும். ஆனால் முதாளித்துவம் வந்த பிறகு முன்னூறு ஆண்டுகளில் பாருவ காலம் மாறியுள்ளது என்பது தான் உண்மை. ஆனால் யார் இந்த இயற்கையை சீரழித்தார்களோ அவர்களே மாநாட்டு போட்டு பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தான் தவறு செய்து விட்டார்கள் என்று பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள், கரியமில வாயு வெளியிடாதீர்கள் என்று கூறுகிறார்கள்.

இதை எல்லாம் வெளியேற்றக்கூடிய மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்யக்கூடிய நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், ஏசி, பிரிட்ஜ் இவையெல்லாம் தான் மனித குளத்தை சீரழிக்க கூடிய பசுமை குடில் வாயுக்களை வெளியேற்றுகிறது.

சென்னை, கடலூர் மாவட்டத்திற்கு வந்த பேரழிவு என்பது இயற்கை நம்மை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையே எச்சரிக்கிறது என்பதே உண்மை.

எனவே சென்னை மற்றும் கடலூர் மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஒருங்கிணைந்த முறையில் இந்த கண்ணோட்டத்தில் நாம் ஆழமாக பரிசிலித்து மக்களே அதிகாரத்தை கையில் எடுத்து நமது நீர்நிலைகளை பாதுகாக்க, நிரந்தரமான தீர்வு காண நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது.

– வினவு செய்தியாளர், கடலூர்.

மக்கள் சேவையில் தொழிலாளிகள் – கார்ப்பரேட் சேவையில் நிறுவனங்கள்

0

ஒதுங்கிய குப்பைகளைsanitary-workers-flood-relief-assistance (18)
உங்களால் ஒதுக்கப்பட்டவர்கள்
அள்ளுகிறார்கள்

குப்பைவாரும் சாதியிடம்
கொள்வினை கொடுப்பினை
கூடாது எனும்
உங்கள் கொள்கையை
துப்புரவு தொழிலாளிகள்
கடைபிடித்தால்
இந்நேரம் என்னாகும் சென்னை!

எத்தனையோ
பாதாள சாக்கடைகளைப்
பார்த்தவர்கள்
கொசு முட்டையில்
வளர்ச்சி பொரிக்கும்
நகரமயத்தின்
கோரத்தைப் பார்த்து
பதைக்கிறார்கள்.

ஊர்விட்டு உறவுவிட்டு
வேலைதான் எனினும்
உடல்நலம்
இழப்புதான் எனினும்
உதவும்
மனிதசேவையில்
மனம் விரிந்த தொழிலாளிகள்
ஒருநாள் இழப்பையும்
சகிக்காமல்
ஐ.டி தொழிலாளிகளை
அடுத்த கணமே
அடுத்த லாபத்திற்கு
அடுத்த நகரத்திற்கு
வருவதை பார்த்து திகைக்கிறார்கள்.

கால்டாக்சி, செல்போன்
இணையம், இன்சாட்
எது இருந்தும்
தனியார்மக் குப்பையால்
மூடப்பட்ட
பிணங்களின் தலைநகரை பார்த்து
அஞ்சுகிறார்கள்.

குப்பைகளைப் பார்த்தல்ல
இவ்வளவு குப்பைகளை
நுகரமுடிந்த
மேட்டுக்குடி தொப்பைகளைப் பார்த்து
மலைக்கிறார்கள்.

வரலாறு காணாத
பெருவெள்ளம்
எதை எதையோ உணர்த்தியதாய்
பாடம் சொல்லும்
தருணத்தின் புதல்வர்களே,
வரலாறு நெடுக
அடிமனதில் சேகரித்த
சாதிக்குப்பையை
இப்போதும் கூட
வீசி எறியாமல்
மனிதம் கூசும்படியான
நடத்தையை பார்த்தே
அவர்கள் நடுங்குகிறார்கள்.

பார்க்கவே
குமட்டுவதாய்
நீங்கள் சொல்லும்
சாக்கடை சகதி
வெளியில் மட்டும்தானா?

காணவே அருவருக்கும்
உங்கள் கழிவுகளில்
தன் உயிரை பணயம் வைத்து
அந்த தொழிலாளிகள்
கை வைத்திருக்கிறார்கள்.

காணாத இடங்களில் எல்லாம்
ஒளித்து வைத்திருக்கும்
உங்கள் உள்மனதின்
சாதி மதவெறிக் கழிவுகளில்
கொஞ்சம் கை வையுங்களே
ஊர் சுத்தமாகட்டும்

-துரை சண்முகம்