சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 2009–ல்தான் இந்து அறநிலையத்துறை சிதம்பரம் நடராசர் கோவிலில் முதன் முதலாக ஒன்பது உண்டியல்களை வைத்தது. அதற்கு முன்பு வரை தீட்சிதர்கள் உண்டியல் வைக்கவில்லை. தற்போது 2014–ல் உச்சநீதிமன்ற தீர்ப்பு தீட்சிதர்களுக்கு சாதகமாக வந்து விட்டது என இந்து அறநிலையத்துறை உண்டியலை அகற்றி உள்ளது. மேலும் இது வரை உண்டியல் மூலம் வசூலான தொகை ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றையும் தீட்சிதர்களிடமே ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. அதற்காக அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டு தீட்சிதர்களின் கொள்ளையை சட்டபூர்வமாக்கியிருக்கிறது அம்மா அரசு..
தமிழ்பாடும் உரிமை போராட்டத்தை தொடர்ந்து தீட்சிதர்களின் தனிச் சொத்தாக இருந்த சிதம்பரம் நடராசர் கோவிலை 2009–ல் இந்து அறநிலையத்துறை ஏற்க வைத்தோம். இதற்காக பல ஆண்டுகள் இடைவிடாமல் நாம் நடத்திய மக்கள் போராட்டம், நீதிமன்ற போராட்டம் எண்ணிலடங்கா.
‘சிதம்பரம் நடராசர் கோவிலின் ஆண்டு வருமானம் ரூ 30,000 அதில் செலவு போக கையிறுப்பு 199 ரூபாய் மட்டுமே’ என பொய்க் கணக்கு காட்டி விட்டு கோவிலில் வருமானம் முழுவதையும் தீட்சிதர்களே தங்களுக்குள் ஏலம் விட்டு பங்கு பிரித்து கொண்டனர். கோவிலை பராமரிக்கவோ, பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்கவோ இல்லை. அறநிலையத்துறை ஏற்ற பிறகுதான் ஆணையரின் பொது நிதியில் இருந்து ரூ 25 லட்சத்திற்கு ஹைமாஸ் லைட் போட்டார்கள். அது வரை சிதம்பரம் கோவில் இருட்டில்தான் இருந்தது. இந்த சூழலில் 5 ஆண்டுகளாக தில்லை நடராசனுக்காக பக்தர்கள் கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய் உண்டியல் காணிக்கையை தீட்சிதர்களின் சொத்தாக இன்று தாரை வார்த்திருக்கிறது அறநிலையத்துறை.
தீட்சிதர்கள் கோவில் வருமானத்தை வைத்து மது, மாமிசம், மங்கை என உல்லாச பேர்வழிகளாக இருந்தனர். அதற்கு கோவிலை பயன்படுத்தி வந்தனர் என்பதை நேரடியாக மக்கள் மத்தியில் பேசினோம். கோவில் சொத்தை விற்றதற்கு தீட்சிதர்கள் மீது கிரிமினல் வழக்கு, கோவிலில் நடந்த கொலைக்கு கிரிமினல் வழக்கு என நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உத்திரவு பெற்றோம். காவல்துறை மூலம் தீட்சிதர்கள் அதை முடக்கி விட்டனர்.
தில்லை கோயிலை தீட்சிதர்களுக்கு தாரை வார்க்கும் தமிழக அரசு உத்தரவு
[அரசு ஆணையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]
“2009 –ல் சிதம்பரம் நடராசர் கோவிலை அறநிலையத்துறை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என நீதியரசர் பானுமதி தீர்ப்பளித்தார். 2014 ஜனவரி மாதம் தற்போதைய தீர்ப்பு வரும் வரை தீட்சிதர்கள் கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை. மாறாக, தீட்சிதர்கள் வட இந்தியாவிலிருந்து விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலை காவிக் கொடியுடன் சிதம்பரம் கோவிலுக்குள் அழைத்து வந்து கூட்டம் போட்டார்கள். சுப்பிரமணிசாமியை அழைத்து வந்து சிறப்பு பூசை நடத்தினார்கள். அன்றைய எதிர்க்கட்சி தலைவர் அம்மாவிடம் சென்று முறையிட்டார்கள். இந்து ஆலயபாது காப்பு குழு என உருவாக்கி பிராமண சங்கத் தலைவர்களை அழைத்து பொதுக் கூட்டம் நடத்தினார்கள்.
சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் கோவில் வழக்கை தனது சொந்த வழக்காக கருதி வாதாடினார். ஜெயாவின் தமிழக அரசோ தீட்சிதர்களுக்கு சாதகமாக செயல்பட்டு, அரசுத் தரப்பை வாதாடாமல் இருந்தார். அதன் விளைவாக, இன்று கொத்துச் சாவியை மீண்டும் கொள்ளையர்கள் கையில் கொடுத்த நிலைதான். சட்டம், நீதிமன்றம், அறநிலையத்துறை, அரசு, அரசியல்வாதிகள் ஏன் தில்லை நடராசன் என அனைத்தும் அவாளாக இருக்கும்போது இப்படிதான் நடக்கும்.
இனி உண்டியல் இல்லை, அர்ச்சனை சீட்டு இல்லை, பக்தர்கள் சிற்றம்பலம் ஏறி நடராசனை தரிசிக்க, ஆம்னி பஸ், தனியார் பள்ளிகள் போல் கட்டணக் கொள்ளையை தீட்சிதர்கள் ஏற்றிக் கொண்டே வருவார்கள். சுருட்டு சாமியார், பீர்சாமியார், சவுக்கு சாமியார், தீவட்டி சாமியார் என பக்தர்களை ஆயிரங்களில் ஏமாற்றும் கிரிமினல்கள் போல் பலவித பரிகார யாகங்களை நடத்த பல லட்சங்களை வசூலிக்கும் நிறுவனமாக தில்லை நடராசனை, பாரம்பரியமிக்க கோவிலை தீட்சிதர்கள் பயன்படுத்தப் போகிறார்கள்.
கனிமவளம், ஆற்று மணல் போல சிதம்பரம் நடராசர் கோவிலும் ஒரு பொதுச் சொத்து. இயற்கை வள கொள்ளைக்கு எதிராக போராடுவதுபோல் சிதம்பரம் கோவில் சொத்தின் கொள்ளைக்கு எதிராகவும் போராட வேண்டும்.
பக்தர்களே நீங்கள் இறைவனின் பக்தர்களா? தீட்சிதனின் அடிமைகளா? கோவில் ஆகம விதி வெங்காயம் என்பதெல்லாம் பொய், உண்டியல் பணம் மட்டும் உண்மை என்று பச்சையாக தெரியவில்லையா?
தமிழக அரசு ஒரு சட்டம் இயற்றி கோவிலை எடுத்துக் கொள்ள முடியும். கோவில் சொத்தை, சாமி நகையை கொள்ளையடித்த தீட்சிதர்கள் மீதான வழக்கை விசாரிக்க முடியும். ஆனால் அரசு செய்யமறுக்கிறது.
நாம் விடக்கூடாது ஏனென்றால் சிதம்பரம் நடராசர் கோவில் மக்கள் சொத்து, நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராடவேண்டும்.
லாக்- அப் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கட்டை பஞ்சாயத்துகள், பொய்வழக்கு குறித்த நீதிமன்ற கண்டனங்கள் என்றெல்லாம் போலீசின் யோக்கியதை தினந்தோறும் நாறிக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த சமுதாயமும் வெறுத்து ஒதுக்குகின்ற போலீசு கும்பலை ஆளும் வர்க்கம் தான் மெச்சிக் கொள்கிறது. ஏனென்றால், போலீசு என்பது ஆளும் வர்க்கத்தின் அடியாள் படை!
உழைக்கும் மக்களது போராட்டங்களை ஒடுக்குவது துவங்கி பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் அடைப்பது வரையிலும் போலீசு செய்து வருகின்ற அட்டூழியங்கள் ஏராளம்… ஏராளம், தனியார்மயம்- தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலனியாக்க நடவடிக்கைகள் தீவிரமாக நடக்கின்ற இந்தத் தருணத்தில் முதலாளிகளைப் பாதுகாத்தும், தொழிலாளர்களை அடக்கியும் தன்னுடைய ராஜவிசுவாசத்தைக் காட்டி வருகிறது, போலீசு!
வேலை நேரத்தை அதிகரிப்பது, வேலை நிரந்தரத்தை மறுப்பது, உழைப்புக்கேற்ற கூலியை தராமல் அற்ப சம்பளம் கொடுத்து ஒட்ட ஒட்ட சுரண்டுவது, பாதுகாப்பற்ற இயந்திரங்களில் வேலை செய்ய வைத்து தொழிலாளர்களை சாகடிப்பது, சட்டப்படியான உரிமைகளைக் கேட்டால் வேலையை விட்டே துரத்துவது என்றெல்லாம் தொழிலாளி வர்க்கத்தின் ரத்தத்தை குடித்து வருகின்றனர், முதலாளிகள். வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்கள் பட்டினியால் அல்லல்படுகின்றனர், சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர், முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக தொழிலாளர்கள் எப்போது போராடினாலும் அரசு போலீசை வைத்து அடக்குகிறது.
பத்தாண்டுகளில் பல்லாயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்ட நோக்கியா கம்பெனி, திடீரென பல்லாயிரம் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து விட்டு ஓடிப்போனது. நோக்கியாவுக்கு உதிரிப்பாகங்களை சப்ளை செய்த பி.ஒய்.டி கம்பெனி இரவோடு இரவாக 700 பேரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.
நிசான் கம்பெனியோ புரபேசன் முடிகின்ற தருவாயில் மாதத்துக்கு 50 பேரின் வேலையைப் பறிக்கிறது. பல வருட உழைப்பு திருடப்பட்டு, ரோட்டுக்கு துரத்தப்படும் போது, “டேக்-இட் ஈசி” என்று கும்மாளம் போட முடியுமா? இதென்ன அநியாயம் என்று கேட்டால் வேலைக்கும், உயிருக்கும் உத்திரவாதமில்லை. ரவுடிகளை வைத்தும் தொழிலாளர்களை மிரட்டுகிறான், முதலாளி. ஒரு பக்கம் போலீசு; மற்றொரு பக்கம் ரவுடி! எத்தனை நாட்களுக்கு அடிவாங்கிக் கொண்டே இருப்பது.
முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவதற்கு தொழிற்சங்கம் கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. இப்படித்தான் திருப்பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிலாளர்கள் தொழிற்சங்க இயக்கங்களை நாடிச் சென்று ஐக்கியப்பட்டார்கள். இவர்களுக்கு உணர்வூட்டி, அமைப்பாக்க முயன்றது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. சட்டங்களை மதிக்காத முதலாளிகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியது, முதலாளிகள் மீது பாய வேண்டிய அரசு எந்திரம், எமது சங்கத்தின் முன்னணியாளர்கள் மீது பாய்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தொழிலாளர் துறை உதவி ஆணையர் என்கிற பெயரில் முதலாளிகளுக்கு புரோக்கராக செயல்படுகின்ற தர்மசீலன் என்பவரது பொய்ப்புகாரை அடிப்படையாக வைத்து, தோழர் சிவா கைது செய்யப்பட்டார்.
தர்மசீலன் கொடுத்த பொய்ப்புகாரில் கைது செய்யப்பட்ட தோழர் சிவா மீது காஞ்சிபுரம் மாவட்ட போலீசு குண்டர் சட்டத்தை ஏவிவிட்டுள்ளது. தொழிலாளர்களை அச்சுறுத்திய முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்களைத் திரட்டி போராடியதுதான் தோழர் சிவா செய்த குற்றச் செயல். ஜி.எஸ்.எச் என்கிற தென்கொரிய நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்த காஞ்சிபுரம் கலெக்டருக்கு எதிராக போராட்டத்துக்கு தலைமை தாங்கியது மற்றொரு குற்றம் என்கிறது போலீசு. தோழர் சிவா தன்னந்தனி ஆள் அல்ல. ஆயிரமாயிரம் தொழிலாளர்களை அணிதிரட்டியுள்ள ஒரு புரட்சிகர சங்கத்தின் பிரதிநிதி.
முதலாளிகளுக்கு எதிராகப் போராடினால் சட்டவிரோதம் என்கிறது, போலீசு. சட்டத்தை மதிக்கின்ற போலீசின் லட்சணத்தை தெரிந்து கொள்ளுங்கள். 21.9.2014 ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிக்கு தோழர் சிவாவை கைது செய்த போலீசு, மதியம் வரை கோர்ட்டில் ஒப்படைக்காமல் சட்டவிரோதமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடக் கூடாது என்று 25.9.2014 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனை மதிக்காமல் 26.9.2014 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தினை ஏவிவிட்டது, போலீசு. உயர்நீதிமன்ற தடை இருந்த போதிலும், அதனை மதிக்காத யோக்கிய சிகாமணிகள் தான் சட்டத்தின் ஆட்சியைப் பற்றி போதிக்கின்றனர்.
திருப்பெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலமானது முதலாளிகளின் சொர்க்கபுரியாகி விட்டது. தொழிலாளர்களை எவ்வளவு அடித்தாலும், வேலை பயத்தின் காரணமாக தாங்கிக் கொள்ளுகின்றனர். முதலாளித்துவ பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி, தொழிலாளர்களை அணிதிரட்டும் எந்த நடவடிக்கையையும் முதலாளிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தொழிலாளி வர்க்கத்தின் மீது தங்கு தடையற்ற அடக்குமுறையையும், சுரண்டலையும் முதலாளிகள் நடத்துவதற்கு பு.ஜ.தொ.மு தடையாக நிற்கிறது.
பு.ஜ.தொ.மு தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை லட்சியமாகக் கொண்டுள்ள புரட்சிகர சங்கமாகும். முதலாளித்துவத்தின் ஜென்ம எதிரியான கம்யூனிசத்தை நெஞ்சிலும், செயலிலும் சுமந்து கொண்டிருக்கின்ற ஆயிரமாயிரம் செஞ்சட்டை வீரர்களை தளபதிகளாகக் கொண்டிருக்கின்ற சங்கமாகும். அதனால் தான் எமது சங்கத்தை ஒடுக்கிட முதலாளிகள் வெறி கொண்டு அலைகின்றனர். அவர்களது அடியாள் படையான போலீசும் வெறிகொண்டு பாய்கிறது. எம்மீதான அடக்கு முறையானது, தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்குமுறையாகும். முதலாளிகள் போலீசை நம்பிக் கொண்டிக்கின்றனர், எமது இயக்கமோ தீரமிக்க தொழிலாளி வர்க்கத்தையும், உழைக்கும் மக்களையும் சார்ந்திருக்கிறது. முதலாளிகள் வைத்திருப்பது, கூலிப்படை. எமது படை மக்கள் படை. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!!
தொழிலாளியின் ரத்தம் குடிக்கும் முதலாளிகள்!
அடியாள் வேலை செய்யும் போலீசு!
நாசகாரக் கூட்டணியை முறியடிப்போம்!
[துண்டறிக்கையை பெரிதாகப் படிக்க படங்களின் மீது சொடுக்கவும்]
தொழிலாளி வர்க்கமாக ஒன்றிணைவோம்!
முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!
பொதுக் கூட்டம்
நாள் : 17.10.2014
நேரம் : மாலை 5 மணி
இடம் : திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில்
தலைமை தோழர் சி. வெற்றிவேல் செழியன்
மாநில அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு
சிறப்புரை தோழர் ராஜூ, வழக்குரைஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
தோழர் ம.சி.சுதேஷ்குமார்
மாநில இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு
ம.க.இ.க மைய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காஞ்சிபுரம் –திருவள்ளுர் மாவட்டம்
தொடர்புக்கு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
110\63,மாநகராட்சி வணிக வளாகம், 2-ஆம் தளம்.
என்.எஸ்.கே சாலை, கோடம்பாக்கம், சென்னை-24
தொ.பே.-9444834519, 8807532859, 9444213318
உயர்நீதி மன்றத்தால் மாநகராட்சிப் பள்ளிகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவை சந்திப்போம்! அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம்!
“மாநகராட்சிப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடு !” என்ற இயக்கத்தை இவ்வாண்டு தொடக்கம் முதல் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் வீச்சாக கொண்டு சென்றோம் என்பது அனைவரும் அறிந்ததே.
மணலி அருகே உள்ள சடையான் குப்பம் என்ற ஊரில் உள்ள மாநகராட்சிப்பள்ளி ஒன்றின் கான்கிரீட் தளம் பெயர்ந்து விழுந்ததும் அதன் காரணமாக இரு மாணவர்கள் படுகாயமுற்றதையும் கண்டித்து மாநகராட்சிப்பள்ளிகளின் அவலநிலையை அம்பலப்படுத்தும் விதமாக ரிப்பன் கட்டிடத்தை முற்றுகையிட்டோம்.
முதல்வன் படபாணியில் மேயர் சைதை துரைசாமி “மாநகராட்சிப் பள்ளிகளில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. இருப்பதாக நீங்கள் நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டார். சவாலை ஏற்றுக்கொண்டோம். கல்வி தனியார்மயத்தில் அரசுப்பள்ளிகளுக்கு இடம் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம் தான் என்றாலும் அந்த ரகசியத்தை அனைவரின் முகத்துக்கு நேராக கொண்டு வர வேண்டியவேலை எங்களின் கைகளில் வந்தது.
நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் புமாஇமுவினரும் மாநகராட்சி கல்வி அதிகாரிகளும் இணைந்த ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. குழு என்று அமைத்துவிட்டால் மட்டும் போதுமா? வேலைகள் எல்லாம் தானாக நிறைவேற இது மக்கள் நல அரசா என்ன? எருமை மாட்டுத்தோலை போர்த்திக்கொண்டு இருக்கும் இந்த அதிகார வர்க்கம் மக்களுக்காக வேலை செய்து விடுமா என்ன?
காலை 10 மணிக்கு ஒன்றிரண்டு பள்ளிகளுக்கு செல்வது, கோப்புகளில் கையெழுத்து இடுவது, மாதம் மும்மாரி மழை பொழிந்ததா என்று அமைச்சரிடம் மன்னன் கேட்பது போல “எப்படிம்மா இருக்கு ஸ்கூல்?” என்று கேட்டுவிட்டு மதியம் இரண்டு மணிக்குள் மாநகராட்சிக்கு திரும்புவது என இப்படி ஒரு வேலைப்பாணியை கொண்டுள்ளவர்களை வைத்துக்கொண்டு எப்படி ஆய்வு நடத்துவது? வேறு வழியே இல்லை. கிடைத்துள்ள சிறு வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தீர வேண்டும் . அதிகாரிகள் இழுத்தடித்தார்கள், வரமுடியாது என்றார்கள், லீவ் என்றார்கள். ஏதாவது சாக்கு சொல்லி வர மறுத்தவர்களை இழுத்துக்கொண்டும் சில இடங்களில் தவிர்த்துக்கொண்டும் ஓடினோம். 3 நாட்களில் 67 பள்ளிகளுக்குச் சென்றோம்.
தனியார்மயத்தில் அரசுப்பள்ளிகள் எவ்வாறு பலியிடப்பட்டுக்கொண்டு இருக்கின்றன என்பதை நேரடியாகக் கண்டோம். மழை பெய்தால் கணுக்கால் வரை நீர் தேங்கும் ஒரு பள்ளி, தினமும் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கும் பள்ளிகள், கழிவறையே இல்லாத பள்ளிகள், குடிக்க தண்ணீர் இல்லாத பள்ளிகள், சாக்கடை ஓடும் பள்ளிகள், வாத்தியார் இல்லாத பள்ளிகள்,விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகள், கொடுங்கையூரில் குப்பையால் புகையால் செத்துக்கொண்டு இருக்கும் பள்ளி என உழைக்கும் மக்களின் பிள்ளைகள் படிக்க இருக்கும் பள்ளிகள் தனியார்மய புதைகிணற்றில் திட்டமிட்டு மூழ்கடிக்கப்பட்டுக்கொண்டு இருப்பதைக் கண்டோம். அரசு ஊழியர்களிடம் “செஸ்” வரியென்று பிடித்தம் செய்யப்பட்ட 175 கோடி ரூபாயை செலவு செய்ய மறுத்து தனியார்பள்ளிகளை கொழுக்க வைப்பதை நேரடியாக உணர்ந்தோம். தானாகவே அரசுப்பள்ளிகள் அழியவேண்டும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட வேண்டும் என்கிறது, வாங்குகின்ற ஒவ்வொரு பொருளிலும் கல்விக்கான நிதியை பெறும் அரசு.
ஆய்வறிக்கையை தயாரித்துக்கொடுத்தோம் மேயரிடம். அவரோ உடனே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆரம்பப்பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்க தீர்மானம் கொண்டு வந்தார் மாநகராட்சியில். மக்கள் மன்றத்தில் ஆர்ப்பாட்டங்களாக, போராட்டங்களாக இந்த அரசு நமக்கானதல்ல என்பதை காட்டினோம். வீதியில் இறங்காமல் பள்ளிகளைக் காக்க முடியாது என்பதை வலியுறுத்தினோம்.
நீதிமன்றத்தில் ஆய்வறிக்கையின் படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். வழக்கு வந்த போதெல்லாம் அரசு வழக்குரைஞர் எழுந்து முதலில் சொல்லும் வார்த்தை “ 4 வாரம் டைம் கொடுங்கள் ” என்பதுதான். எதற்கு நான்கு வாரம், இருக்கிற பணத்தை கொடுக்க எத்தனை நான்கு வாரங்களைக் கேட்பாய் என்று எந்த நீதிபதியும் கேட்கவில்லை. இழுத்துக்கொண்டு வந்தோம் வழக்கை. முதலை வாயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றியது போல இந்த கேடுகெட்ட அரசின் வாயில் இருந்து தீர்ப்பைப் பெற்றோம்.
இரு தரப்பினரும் இணைந்து மாநகராட்சிப்பள்ளிகளினை ஆய்வு மேற்கொள்வது என்றும் அக்குழுவில் பச்சையப்பன் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அய்யா ஜெயச்சந்திரனும், டான் பாஸ்கோவின் முன்னாள் தலைமை ஆசிரியரும், கல்வி அதிகாரிகளும் இருப்பார்கள் என்ற தீர்ப்பு கிடைதது. போர்க்கால அடிப்படையில் 4 கோடி ரூபாயை மாநகராட்சிப்பள்ளிகளுக்கு ஒதுக்கவும் உத்தரவு கிடைத்தது. எமது அமைப்பின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக கிடைத்த இந்த உத்தரவையும் கூட உடனே நடைமுறைப்படுத்தவில்லை. பலமுறை புகார் அளித்தும் போராடிய பிறகே கடந்த சில நாட்களாக அக்குழுவை ஆய்வு மேற்கொள்ளச் செய்துள்ளோம். அக்குழுவும் பள்ளிகளை ஆய்வு செய்து வருகின்றது.
அன்பார்ந்த மாணவர்களே! பெற்றோர்களே! ஆசிரியர்களே!
அனைவருக்கும் இலவசக்கல்வி என்பது நமது உரிமை. அதைப்பெற அரசுப்பள்ளிகளை பாதுகாப்பது நமது கடமை! போராடிப்பெற்ற ஆய்வுக்குழு உங்கள் பள்ளிக்கும் வருகின்றது. ஆய்வுக்குழுவை சந்தியுங்கள் ! அரசுப்பள்ளிகளை காக்கும் போராட்டத்தில் இணையுங்கள்.
தகவல் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சென்னை 9445112675
அக்கிரகாரத்து மாமாப்பயல், அண்டப் புளுகன், ஆட்சிக் கவிழ்ப்பு சதிகாரன் – என்றெல்லாம் இழிவாகச் சித்தரிக்கப்படும் சுப்பிரமணிய சாமி, “எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களது படகுகளைச் சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை அரசுக்கு நான்தான் ஆலோசனை வழங்கினேன். அதைத்தான் இப்போது இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது” என்று தனது தமிழர்விரோத திமிர்த்தனத்தை இப்போது மீண்டும் கக்கியிருக்கிறார்.
ஈழத் தமிழின அழிப்புப் போர்க்குற்றவாளி பாசிச ராஜபக்சேவுடன் உறவாடும் தமிழ் விரோத – தமிழர் விரோத பார்ப்பன அரசியல் அதிகாரத் தரகன் சு.சாமி.
மைய அரசுக்குத் தெரிந்துதான் இலங்கைக்குச் சென்றேன்; தமிழக முதலாளிகளின் படகுகளைப் பிடித்துக் கொண்டு கூலித் தொழிலாளிகளான மீனவர்களை விடுவிக்குமாறு நான்தான் ராஜபக்சேவிடம் சொன்னேன் என்று அயலுறவு அமைச்சரைப் போலப் பேசுகிறார் சு.சாமி. தமிழர்களை ரவுடிகள் என்று சாடும் சு.சாமி, ராஜபக்சேவுக்கு ஆதரவாக இனப் படுகொலையை ஆதரித்து திமிராகப் பேட்டியளிக்கிறார். இருப்பினும், தமிழகத்தைத் தவிர வேறு எந்த பா.ஜ.க. தலைவர்களும் இவருக்கு எதிராகக் கண்டன அறிக்கைகூட வெளியிடவில்லை. இவர் பா.ஜ.க.வின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் என்று கூறப்பட்டாலும், பா.ஜ.க.வில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சு.சாமியின் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது என்று நழுவிக் கொள்கிறார் மத்திய அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன். அதேசமயம், சு.சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
யார் இந்த சு.சாமி? ஒரு அரசியல்வாதிக்குரிய சமூக ஆதரவோ, மக்களிடம் மதிப்போ இல்லாத ஒரு நபரால் இது எப்படி சாத்தியமாகிறது? அடிக்கடி விமானத்தில் பறக்கும் சு.சாமிக்கு எப்படி இவ்வளவு சொத்துக்களும் வருமானமும் கிடைத்தது?அவரது தொழில்தான் என்ன?
சில பத்திரிகையாளர்கள் தேர்தல் கூட்டணியை உருவாக்க ஒரு ஏற்பாட்டைச் செய்து, அதைத் தமது ஏடுகளில் முதன்மைச் செய்தியாக்கி எப்படி மாமா வேலை செய்கிறார்களோ, அதேபோல அரசியலில் இத்தகைய வேலையைச் செய்பவர்தான் சு.சாமி. தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வரும் வைத்தி என்ற கதாபாத்திரத்தின் மறு அவதாரம்தான் சு.சாமி. இத்தகைய நிழல் மனிதர்கள்தான் “சோர்ஸ்” என்ற பெயரில் அங்கேயும் இங்கேயும் தகவல்களைப் பரிமாறும் நபர்களாக இருக்கின்றனர். இத்தகைய அரசியல் – அதிகாரத் தரகர்களைப் பிடித்து தேர்தல் கூட்டணிக்கு நோட்டம் பார்ப்பதென்பது ஓட்டுக்கட்சிகளின் உத்தியாக உள்ளது. அந்தத் தரப்பின் கோரிக்கை என்ன, எதிர்பார்ப்பு என்ன, பலவீனம் என்ன என்பதையும், அதற்கு இந்தத் தரப்பின் கருத்து என்ன என்பதையும் பரிமாற்றம் செய்யும் இரகசிய இணைப்புச் சங்கிலியாக இவர்கள் இருக்கின்றனர்.
விபச்சார வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நடிகை புவனேஸ்வரி, சாதிக் கட்சியான மருத்துவர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சியில் சேர்ந்து மாநில மகளிர் அணிச் செயலாளராகியுள்ளார். அவரை விபச்சாரி என்பதா, அல்லது அரசியல் பிரமுகர் என்பதா? இப்படித்தான் சு.சாமி போன்ற பேர்வழிகளும் உள்ளனர். சினிமா மற்றும் வீட்டுமனைத் தொழிலில் இவர்கள் மீடியேட்டர்கள் என்ற பெயரில் குறிப்பிடப்படுகின்றனர். அரசியல், சினிமா, வீட்டுமனைத் தொழில், பெருந்தொழில் நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பண்பாட்டு அமைப்புகள் – என அனைத்திலும் இத்தகைய நபர்கள் நீக்கமற நிறைந்துள்ளனர். சசிகலா நடராசன் எத்தகைய அரசியல் தரகர் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். இருந்தாலும், தமிழினப் பிழைப்புவாதிகள் அவரைப் பயன்படுத்திக் கொள்வதை ஒரு உத்தியாகக் கொண்டுள்ளனர். அதேபோலத்தான் பல வண்ணப் பிழைப்புவாதிகளும் சு.சாமியைப் பயன்படுத்திக் கொள்வதும், மறுபுறம் இதைக் கொண்டு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள சு.சாமி ஆட்டம் போடுவதும் நடக்கிறது.
தமிழகத்தின் சோழவந்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பார்ப்பன குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சு.சாமி, பொருளாதாரப் பட்டம் பெற்று முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரித்து கம்யூனிசத்தை வெறியோடு எதிர்த்தார். அதனாலேயே அன்று சோவியத் ஆதரவு இந்திரா காந்தியின் ஆட்சியை எதிர்த்து இந்துத்துவ ஜனசங்கத்தை ஆதரித்தார். இந்திராவின் அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் தலைமறைவாகி அமெரிக்கா, பிரிட்டன் முதலான நாடுகளுக்குச் சென்று அங்குள்ள அதிகாரத் தரகர்கள் மூலம் இந்திரா காந்தியின் சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டார். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலிய மொசாத் கும்பலுடன் இரகசியத் தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகி, அதன் தலைவராகவும் செயல்பட்டார்.
இரகசிய உலக பேர்வழியும் போலி சாமியாருமான சந்திராசாமியின் (இடது) தொழில் கூட்டாளியான சு.சாமி, “நான் பிராமணன்; ஒரு பிராமணன் யாரிடமிருந்து வேண்டுமானாலும் கையேந்தி யாசகம் பெறலாம்” என்று தனது விபச்சாரத்தனத்தைப் பச்சையாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
இது தவிர, இரகசிய உலகப் பேர்வழிகளான போலிச் சாமியார் சந்திராசாமி, ஆயுதபேரத் தரகன் ஆதனன் கஷோகி முதலானோரின் நெருங்கிய கூட்டாளியான சு.சாமி, ராஜீவின் போபர்ஸ் பீரங்கிக் கொள்ளையை மூடிமறைக்க இரகசிய உலகப் பேர்வழிகளுடன் சேர்ந்து போலி ஆவணங்களைத் தயாரித்ததோடு, அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கின் மகனுக்கு செயிண்ட் கிட்டீஸ் தீவில் உள்ள வங்கிகளில் இரகசியக் கணக்கு உள்ளதாக போர்ஜரி செய்தார். சகுனித்தனங்கள், தரகு வேலைகள் மூலம் பிரபலமாகி அப்போதைய சந்திரசேகர் ஆட்சியில் நீதி மற்றும் சட்டத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அதன் பிறகு காங்கிரசுக்கு வெளியே இருந்து கொண்டு நம்பகமான தரகனாக இயங்கிய சு.சாமி, நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் டங்கல் (காட்) ஒப்பந்தக் கமிட்டிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் கையெழுத்திட்டதன் மூலம், இந்தியப் பொருளாதாரத்தை அமெரிக்காவுக்கு அடகு வைக்கும் தலைமைத் தளபதியாகச் செயல்பட்டார்.
1992-ம் ஆண்டிலேயே ஜெயா ஆட்சிக்கு எதிராக மூன்றாவது அணியைக் கட்டிவருவதாகக் கூறிக் கொண்ட சு.சாமி, அதற்காக ஜெயாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் கணவரும் அதிகாரத் தரகனுமாகிய நடராசனுடன் கைகோர்த்தார். ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்துவிட்டு, ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்புக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 1996-ம் ஆண்டில் வழக்கைத் தொடுத்தார். அதன் பிறகு சு.சாமியும் ஜெயலலிதாவும் சமரசமாகி, அ.தி.மு.க. ஆதரவோடு இரண்டாவது முறையாக வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்தது. அப்போது மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சு.சாமியை நிதியமைச்சராக்க வேண்டுமென்றும், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும் வாஜ்பாய் அரசுக்கு ஜெயலலிதா நிர்ப்பந்தங்கள் கொடுத்து வந்தார். பின்னர் எதிர்த்தரப்பின் பிழைப்புவாதத் தலைவர்களை ஒருங்கிணைத்து டீ பார்ட்டி வைத்து வாஜ்பாய் அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்று அவரது ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்ததில் முக்கிய தரகனாகச் செயல்பட்டவர்தான் சு.சாமி.
தமிழக மற்றும் வட இந்தியப் பார்ப்பனக் கும்பலால் தூக்கி நிறுத்தப்படும் அரசியலதிகாரத் தரகன் என்பதால், நீதிபதிகள்கூடப் பதவி உயர்வுக்காக சு.சாமியிடம் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அதனால்தான் வக்கீலாக இல்லாத சு.சாமி நீதிமன்றத்தில் சர்வசாதாரணமாகப் புழங்க முடிகிறது. அதிகாரத் தாழ்வாரங்களில் உள்ள இரகசியங்களைத் தெரிந்து கொண்டு பிளாக்மெயில் செய்வதும், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் உள்ள பார்ப்பன அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளை வைத்து காரியம் சாதிப்பதென்பதும் சு.சாமியின் தொழிலாக உள்ளது. இதனால்தான் தில்லைக் கோயிலைக் கைப்பற்ற தீட்சிதர்கள் தொடுத்த வழக்கு உள்ளிட்டு, ஒரு குறிப்பிட்ட வழக்கை ஒரு குறிப்பிட்ட நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும், குறிப்பிட்ட நீதிபதிகள் குழுதான் விசாரிக்க வேண்டும் என்று சு.சாமியால் செல்வாக்கு செலுத்த முடிகிறது.
1995-ம் ஆண்டில் ஹவாலா தொடர்பான ஒரு வழக்கை மையப் புலனாய்வுத்துறை விசாரித்து வந்த நிலையில், அதிகாரத் தரகனும் ஹவாலா தொழில் செய்துவந்தவருமான சுரேந்திர ஜெயின் என்ற ஹவாலா பெருச்சாளியும் சிக்கினார். அவரது டைரியில் காங்கிரசு – பா.ஜ.க. அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டு அப்போது மையப் புலனாய்வுத் துறையின் இயக்குனராக இருந்த விஜய் கரணும் இலஞ்சம் வாங்கியவர் பட்டியலில் இருந்தார். கூடவே சு.சாமியின் பெயரும் அதிலே இருந்தது. இலஞ்ச ஊழலை எதிர்க்கும் தூய்மையான அரசியல்-பொருளாதார மேதையாகச் சித்தரிக்கப்படும் சு.சாமியின் யோக்கியதைக்கு இந்தச் சான்று ஒன்றே போதுமானது.
பார்ப்பானும் ஆதிக்க சாதியினரும் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டால் தவறல்ல; ஆனால், சூத்திரனும் தாழ்த்தப்பட்டனும் ஈடுபட்டால் அது மிகப் பெரிய குற்றம் என்பதுதான் சு.சாமியின் நியாயவாதம். “2ஜி ஊழல் விவகாரத்தில் எனக்கு முன்பிருந்த அமைச்சர்கள் எத்தகைய வழிமுறைகளைக் கடைபிடித்தார்களோ அதையேதான் நானும் பின்பற்றினேன்; நான் குற்றமற்றவன் என்று ஆ.ராசா திரும்பத் திரும்பக் கூறுகிறாரே?” என்ற கேள்விக்கு, “ராசாவுக்கு முன்பிருந்த பா.ஜ.க. அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தேவையில்லை” என்றார் சு.சாமி. (குமுதம் ரிப்போர்ட்டர், 5.12.2010) ஏன் தேவையில்லை என்று அவர் விளக்கவில்லை. 2ஜி ஊழல் விவகாரத்தில் மன்மோகன், சிதம்பரம் ஆகியோர் கூட அவருக்கு முக்கியமில்லையாம்; ராசாதான் அவருக்குக் குறியாம். அது ஏன்?
தனியார்மயம் – தாராளமயம் என்பதே ஊழலுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கானதாகவும் உள்ள நிலையில், அதில் 2ஜி விவகாரத்தில் நடந்த ஊழல் மோசடியை மட்டும் பூதாகரமானதாக்கி, தி.மு.க.வை அரசியல் அரங்கிலிருந்தே ஒழிக்க சு.சாமி மூலமாக பார்ப்பன கும்பல் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியதையே சு.சாமி அளித்துள்ள பேட்டி நிரூபித்துக் காட்டுகிறது. இதற்கு முன்னர், தி.மு.க.வுக்கு எதிரான ஆயுதமாக ராமன் பாலம் விவகாரத்தை வைத்து ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகளில் இறங்கினார் சு.சாமி. 2007-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் சேதுசமுத்திரத் திட்டத்துக்கு எதிராக சு.சாமி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, சு.சாமியின் வாதத்தை அங்கீகரித்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தார், தலைமை நீதிபதி ஷா. உச்ச நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவை எதிர்த்து, இது இந்து நம்பிக்கைக்கு எதிரானது என்று அத்வானியும் இந்துத்துவ பரிவாரங்களும் அலறினர். இதனாலேயே பார்ப்பன எதிர்ப்பு மரபை தமிழகத்திலிருந்து ஒழித்துக் கட்டி, எப்படியாவது பார்ப்பன பாசிசத்தை நிலைநாட்டும் தங்களது பொது நோக்கத்துக்காக சங்கராச்சாரி கைதையொட்டி ஏற்பட்ட பகையை மறந்து துக்ளக் “சோ’’வும், சு.சாமியும், அத்வானியும், ஜெயலலிதாவுடன் கைகோர்த்தனர்.
வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்க்க ஜெயலலிதாவின் முக்கிய தரகனாகச் செயல்பட்ட சு.சாமி, காங்கிரசின் சோனியா உள்ளிட்டு எதிர்த்தரப்பு பிழைப்புவாதத் தலைவர்களை ஒருங்கிணைத்து நடத்திய டீ பார்ட்டி.
ஈழ விடுதலைக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் திமிராகப் பேசிவந்த சு.சாமி, உயர்நீதி மன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை வழக்குரைஞர்கள் நடத்திவந்த நிலையில், அதைக் கேலி செய்யும் வகையில் தில்லை தீட்சிதர்களுக்காக வாதாட வந்தார். போராடும் வழக்குரைஞர்களைத் தீவிரவாதிகள், ரவுடிகள் என்றெல்லாம் கேவலமாகப் பேசிவந்த சு.சாமி மீது வழக்குரைஞர்கள் அழுகிய முட்டையை வீசி உரிய முறையில் மரியாதை கொடுத்தனர். அதைத் தொடர்ந்து வழக்குரைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை போலீசு கட்டவிழ்த்துவிட்டதைத் தமிழக மக்கள் நன்கறிவார்கள். சு.சாமியோ வழக்குரைஞர்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தியதோடு, வழக்குரைஞர்களைப் பொறுக்கிகள், காலிகள் என்றெல்லாம் வசைபாடினார்.
அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு கிடைத்தபோது அதை கிறித்துவ சதி என்றும், கொலைகார சங்கராச்சாரியின் கைதுக்கு சோனியாவின் சதிதான் காரணம் என்றும் சு.சாமி அரிய கண்டுபிடிப்புகளை அவிழ்த்துவிட்டார். முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் முஸ்லிம்களே இந்த நாட்டில் பெரும்பான்மையாகி விடுவார்கள்; இது பேரபாயம் என்று சாமியாடினார். அவரது உளறல்களும் நடவடிக்கைகளும் எப்படியிருப்பினும், பார்ப்பன பாசிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள அதிகாரத் தரகர்தான் சு.சாமி. அன்று உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து ஆட்சியைப் பிடித்ததும், அது பார்ப்பனர்களுக்கு ஆபத்து என்று அலறிய சு.சாமி, பிராமண சுயாபிமான் அந்தோலன் சமிதி என்ற அமைப்பை உருவாக்கி, ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளில் ஈடுபட்டார். இன்று பா.ஜ.க.வில் சங்கமித்து சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்க வேண்டும் என்று பார்ப்பன வெறியைக் கக்குகிறார்.
தனிநபர், கட்சியின் பலவீனத்தையும் உள்விவகாரங்களையும் தெரிந்துகொண்டு பிளாக்மெயில் செய்வதென்பது சு.சாமியின் தொழில். அது தெரிந்திருந்தும் தமது அரசியல் ஆதாயத்துக்காக பலதரப்பட்ட பிழைப்புவாதிகளும் இந்த அரசியல் விபச்சாரியிடம் உறவு வைத்துக் கொள்கிறார்கள். சு.சாமிக்குத் தகவல்களையும் ஆதாரங்களையும் கொடுத்து காரியம் சாதிக்கப் பார்க்கிறார்கள்.
“தனியொரு மனிதனாக நின்று, உலகம் சுற்றிவந்து இப்படி அரசியல் பண்ணுகிறீர்களே, உங்களுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது?” என்று சு.சாமியிடம் கேட்டபோது, “நான் பிராமணன்; ஒரு பிராமணன் யாரிடமிருந்து வேண்டுமானாலும் கையேந்தி யாசகம் பெறலாம்; தவறில்லை” என்று தனது விபச்சாரத்தனத்தைப் பச்சையாகவே கூறினார் சு.சாமி. இருப்பினும், சு.சாமியின் அரசியலதிகாரத் தரகு வேலைகளைக் காட்டி பார்ப்பன சமூகம் பெருமைப்பட்டுக் கொள்கிறது. அன்று சு.சாமியைக் கைது செய்ய ஜெயலலிதா முயற்சித்த வேளையில், அவர் மாறுவேடம் பூண்டு கண்ணாமூச்சி விளையாடிபோது, இந்தத் துணிச்சல் யாருக்கு வரும் என்று பார்ப்பன பத்திரிகைகள் வெகுவாக சிலாகித்து எழுதின.
போபர்ஸ் பீரங்கிக் கொள்ளையை மூடிமறைக்க இரகசிய உலகப் பேர்வழிகளுடன் சேர்ந்து போலி ஆவணங்களைத் தயாரித்து போர்ஜரி வேலைகளில் ஈடுபட்ட சு.சாமியுடன் பீரங்கித் திருடன் ராஜீவ்.
சு.சாமியின் கொட்டங்களுக்கு அவர் பார்ப்பனராக இருப்பதும், சட்டம், நீதி, போலீசு, இராணுவம், அதிகாரிகள், ஊடகங்கள் – என அனைத்திலும் பார்ப்பன கும்பல் ஆதிக்கத்தில் இருப்பதும் முக்கிய காரணமாகும். தத்தமது தேவைக்கேற்ப இவரைப் பயன்படுத்திக் கொண்டு ஆதாயமடைவதால், பார்ப்பன கும்பல் இவரை தூக்கிப் பிடிக்கிறது. அதனால்தான் பார்ப்பன ஊடகங்கள் இவருக்கு மதிப்பும் மரியாதையும் அளித்து, இவரைப் பற்றிய செய்திகளை முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் போடுகின்றன. ஒருபுறம் கோமாளி என்றும், ஆதாரமில்லாமல் புளுகுவதாகவும் அவரைக் கிண்டல் செய்தாலும், மறுபுறம் அவரது நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவரிடம் கருத்துக் கேட்புகளை நடத்துகின்றன.
இன்றைய அரசியல் கட்டமைப்பில் சு.சாமி போன்ற கழிசடைப் பேர்வழிகள் கொட்டமடிக்க முடிகிறதென்றால், அது இந்த கட்டமைப்பின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. மேலும், பெரு முதலாளிகள், ஏகாதிபத்தியவாதிகள், கொள்கை வகுப்பாளர்கள் – என அனைத்து அரங்குகளிலும் தொடர்புகளை வைத்துள்ள சு.சாமிக்கு தனது பார்ப்பன பாசிச நோக்கங்களுக்கு ஏற்ப அரசியல் தரகுவேலை செய்வதும், காரியம் சாதிப்பதும் சுலபமாக உள்ளது.
அரசியலும் சமூகமும் சீரழிந்து கிடப்பதால் இத்தகைய அதிகாரத் தரகர்கள் இன்னமும் ஆட்டம் போடுகின்றனர். இதனால்தான் அழுகிய முட்டையை முகத்தில் அடித்தாலும், அம்மண ஆட்டம் நடத்தி ஜெயா கும்பலால் இழிவுபடுத்தப்பட்டாலும் கூச்சநாச்சமின்றி சு.சாமி போன்ற பேர்வழிகள் இன்னமும் கொட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தமிழர்களுக்கு எதிராகப் பேசும் சு.சாமியைத் தமிழகத்தில் நுழைய விடாமல் துரத்தியடிப்பதும், அதனைப் பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராட்டமாக முன்னெடுத்துச் செய்ல்வதும்தான் இன்றைய அவசியமாக உள்ளது.
ஜெ-சசி ஆகிய கிரிமினல்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!
இப்படி எல்லாம் பொது இடத்தில் பேசினால் என்ன ஆகும்? சிவகங்கை காளையார் கோயிலையே எரிச்சவங்க, எத வேணுமினாலும் செய்வாங்க, மக்கள் பயப்படுவார்கள் என்று பலர் நினைக்கலாம். நாங்கள் கூட சுவரொட்டிகளை ஒட்டும் போதும் பிரச்சாரத்துக்கு செல்லும் போது ஏதாவது பிரச்சினை வரலாம் என்று தான் நினைத்தோம். ஆனால் நிலைமையோ வேறொன்றாக இருக்கிறது.
மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர அமைப்புகள் சார்பில் திருச்சியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.
அதிமுகவில் இலக்கிய அணி என்று ஒன்றுஇருக்கும், அவர்களிடம் இலக்கியம் என்றால் என்ன ? என்று கேட்டால் அதில் ‘இல’ இருக்குல்ல என்பார்கள். அந்த அளவுக்கு
ஞானம் படைத்தக் கட்சி அதிமுக. ஆனால் ஜெயாவை கைது செய்த பின்னர் பாருங்கள் எதுகை மோனை இல்லாத போஸ்டர் எது? இலக்கியம் இல்லாத போஸ்டர் எது? என்ற அளவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் கரு நாகம் செய்த சதி, கரு நாடகத்தில் அரங்கேற்றம் எனத்தொடங்கி அம்மாவை விடு காவிரியை வைச்சுக்கோ என்பது போன்ற வாசகங்களைப் பார்க்கும் போது அழுவதா?சிரிப்பதா?இல்லை செருப்பை கழட்டி அடிப்பதா?என்று ஒரு கணம் புரியாமல் எவரும் நிற்க வேண்டும்.
கடந்த 27-ம் தேதியன்று தமிழ்நாடே அம்மாவுக்கு ஆதரவாக பற்றி எரிந்ததாக ஊடகங்கள் சித்தரித்தன. உண்மையில் நடந்தது என்ன? மக்கள் யாரும் ஜெயாவுக்கு ஆதரவாகப் பொங்கவில்லை, மாறாக ஓ.ப முதல் அனைத்து அல்லக்கைகளும் கண்ணீர் விட்டன.
ஒரு போராட்டத்திற்கு அனுமதி என்று கேட்டால் காக்கை கூட வராத இடத்தினை ஒதுக்கும் போலீசு அதிமுகவினர் நினைத்த இடத்தில் எல்லாம் போராட்டம் செய்யத் தடுக்கவில்லை. அனுமதி இல்லாமல் 5 பேர்களுக்கு மேல் சென்றால் கைது செய்யமுடியும் என நீதிவிளக்குப் பிடிக்கும் போலீசு, அதிமுகவினர் தாங்கள் விருப்பப்பட்ட இடத்தில் எல்லாம் பேரணி, ஆர்ப்பாட்டம் மட்டுமல்ல வணிகர்களை மிரட்டி கடையை அடைத்தும் பேருந்துகளை உடைத்தும் தீவைத்து எரித்த போது கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கைப் பார்த்தது. ஒரு கொள்ளைக்காரிக்கு ஆதரவாக அரசின் துணையுடன் ஒரு கிரிமினல் கும்பல் தமிழத்தையே அல்லோலகல்லோலப் படுத்திக் கொண்டிருக்கின்றது.
போலீசை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் விருத்தாச்சலத்தில் ஒட்டிய சுவரொட்டி
மாபெரும் எதிர்க்கட்சி என்று பீற்றிக்கொள்ளும் எந்தக் கட்சிக்காரனும் ஜெயாவை அதிமுகவை எதிர்கொள்ளத் துப்பில்லை. பத்து நாட்கள் கழித்து ராமதாசும், விசயகாந்தும், கருணாநிதியும் பாதுகாப்பான அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தார்கள்.
ஓட்டுப் பொறுக்கிகள் அப்படித்தான் இருப்பார்கள். மக்கள் எப்படித்தான் இருக்கிறார்கள்? ஜெவின் அயோக்கியத்தனத்தை சகித்துக்கொண்டார்களா?இல்லை ஊடகங்கள் கூறுவது போல மக்களும் ஜெயாவுக்கு மாரடித்துக் கொண்டுதான் இருக்கிறார்களா? அவர்களை சந்திக்கப் புறப்பட்டோம்.
ஜெயாவின் பேய் பீதியை ஆங்காங்கு கிளப்பிக்கொண்டு இருந்த வேளையில், மூன்று நாட்கள் சுவரொட்டிகளை ஒட்டினோம், மாநகரம் முழுக்க. கூடவே அம்மாவின் தொண்டர்கள் யாராவது பிரச்சினை செய்தால் பூசை செய்வதற்கு தயாராகவே. அம்மாவுக்காக தனது எல்லா வாய்களிலும் அழுகின்ற ரத்தத்தின் ரத்தங்கள் யாரும் வந்து கேள்வி கேட்கவில்லை. அம்மாவின் மீது மக்கள் பாசம் கொண்டு போராடுவதாக பொம்மை முதல்வர் கூறினாரே, அப்படி எந்த மக்களும் அம்மாவை எதிர்த்து ஏன் போஸ்டர் ஒட்டுற என்று கேள்வி கேட்கவில்லை. அவர்கள் கேட்ட முதல் கேள்வி, “ஏப்பா ரெண்டு நாள் கழிச்சு ஒட்டுறீங்க அன்னைக்கே ஒட்டியிருக்கலாம் இல்ல” என்று தான்.
ஆவடியில் அம்மாவுக்காக தொடர்ந்து அம்மாவின்முரட்டு பக்தர்கள் போராடி வருவதாக செய்திகள் கூறின. ஆனால் அங்கு சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு இருந்த நமது தோழர்களிடம் ஒரு பெண் கூறினார், “தினமும் வந்து கடையை மூடச்சொல்றாங்க்கப்பா, திருட்டுப்பசங்க, வியாபாரமே இல்லை.”
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் என்று ஒட்டப்பட்டு இருந்த ஜெயாவின் சுவரொட்டிக்கு அருகில் நமது சுவரொட்டிகளை ஒட்டினோம். கோயம்பேட்டில் பேருந்துகளில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு இருந்த போது ஒரு பூ விற்கும் அம்மா சொன்னார் “நல்லா ஒட்டுப்பா, எவளோ கொள்ளையடிக்குறா, அது சரின்னு போராட்டம் பண்ணுறாங்க”.
எவளோ கொள்ளையடிக்குறா, அது சரின்னு போராட்டம் பண்ணுறாங்க
ஆஜானுபாகுவான இருவர் சுவரொட்டிகளை ஒட்டுவதையே அருகில் இருந்து கவனித்துக்கொண்டு இருந்தனர். சரி பிரச்சினை என்று வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று தோழர்களும் இருக்க, “என் பஸ்ஸூல போஸ்டர் ஒட்டாதே”, என்று கத்திக்கொண்டு வந்தார் ஒரு ஜெ ஆதரவு நடத்துனர்.
தோழர்களின் அருகில் இருந்த அவர்களோ “யோவ் போய்யா, போய் வண்டியை எடு, வண்டி டிராபிக் ஆகப் போகுது, இங்க வந்து என்ன பேசுற” என்று அவருக்கு பதில் கொடுத்துவிட்டு “நீங்க ஒட்டுங்கப்பா” என்றனர்.
இன்னொரு உழைக்கின்ற தாயோ நம்மிடம் “தம்பி எவன் எவனோ பொறுக்கிப்பசங்க எல்லாம் போஸ்டர் ஒட்டுறானுங்க, நீ போய் அதே பஸ்ஸில ஒட்டு” என்றார்.
இப்படி நாங்கள் கவனித்தது சிலர்தான். சரியான விசயத்துக்காக தோழர்கள் நிற்கிறார்கள், அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நாம் உதவ வேண்டும் என்று பல உழைக்கும் மக்கள் இருந்தார்கள்.
எத்தனையோ பேர் சுவரொட்டிகளைப் படித்துவிட்டு வாழ்த்தியும் கைகொடுத்துவிட்டும் சென்றார்கள். இன்னும் சிலரோ “நீங்கள் இன்னும் போஸ்டர் போடலையேன்னு பார்த்தேன், நீங்க பயப்பட மாட்டீங்க இல்ல” என்றார்கள்.
என்.எஸ்.கே நகரில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை கும்பல் கும்பலாக மக்கள் படித்து விட்டும் “நீங்களும் பயந்துடுவீங்கன்னு நினைச்சேன்” என்று கூறினார்கள்.
பல்லாவரத்தில் அம்பேத்கர் சிலைக்கு அருகில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் உண்ணாவிரதம் என்ற பெயரில் இருந்தனர். அதற்கு அருகிலேயே தோழர்கள் சுவரொட்டிகளை ஒட்டினார்கள். உண்ணாவிரதத்திற்கு பிரேக் விட்டுவிட்டு ஜெயா படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வந்திருந்த அதிமுகவினர் ஜூஸ் குடித்தபடியே சுவரொட்டிகளை வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தனர். நமது தோழர்கள் சென்றபின்னர் போலீசு புடை சூழ சுவரொட்டிகளைக் கிழித்து தங்க்கள் வீரத்தை மெய்ப்பித்துக்கொண்டனர்.
மொத்தமாக சென்ற இடமெல்லாம் அம்மாவுக்கு ஆதரவாக எந்த சூடு சொரணையுள்ளவர்களும் வரவில்லை. தமிழகத்தில் எப்படி மோடிக்கு அலை என்பது இல்லையோ அதுபோல லேடிக்கும் அலையும் இல்லை; ஒரு வெங்காயமும்இல்லை.
இப்படி மக்கள் கொள்ளைக்காரி ஜெவுக்கு ஆதரவாக இல்லை. ஓடி ஒளிய வேண்டிய அதிமுக கொள்ளைக்கும்பல் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு திரிகின்றது, அம்மாவை விடு என்கிறது, தினமும் சாலை மறியல், பேருந்துகளை உடைக்கின்றது. இந்த அயோக்கியத்தனத்துக்கு எதிராக மக்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? அவர்களிடமே சென்று அந்த அதிமுக அயோக்கியர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் அதற்காக போராட வாருங்கள் என்றும் அழைக்க இன்று காலை ரயிலில் செல்லக்கூடிய மக்களை சந்தித்தோம் பிரச்சாரத்தின் வாயிலாக…
வழக்கம் போல அதிகாலை நேரம், சிலர் தூங்க முயன்று கொண்டிருக்க, சிலர் பேசவும் பேச முயன்று கொண்டிருக்க , வழக்கம் போல மாணவர்கள் பிரச்சாரத்துக்கு வந்திருக்கிறார்கள் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை கவனிக்க சிலர் இருக்க நாம் வழக்கம் போல் அமைப்பை அறிமுகப்படுத்தினோம். இது வழக்கம் தானே, என்று வழக்கம் போல தலையைக் குனிந்து கொள்ள சிலர் முயன்ற போது, வழக்கத்திற்கு மாறான ஒன்றை- அவர்கள் இது வரை கேட்டிராத ஒன்றை, இருந்தாலும் அவர்கள் மனதில் இருந்த ஒன்றை – பேசினோம்.
கொள்ளைக்காரி ஜெயாவுக்கு பிணை வழங்கக்கூடாது
பயங்கரவாத அதிமுக கும்பலை தடை செய்ய வேண்டும்
ஜெ-சசி கிரிமினல்கும்பல்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்!
என்று பேச ஆரம்பித்தவுடன் பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அனைவரும் கவனிக்கத் தொடங்கினர். காவிரியை வச்சுக்கோ அம்மாவை விடு, தர்மத்தாயை விடுதலை செய் ஆகிய சுலோகங்களையே கேட்டுப் சலித்துப்போனமக்கள் இதோ இந்த புதிய முழக்கத்தைக் கேட்டவுடன் நாளிதழ்களையும் புத்தகங்களையும் மூடிவைத்தார்கள். கல்லூரி பள்ளி மாணவர்களோ பேசிக்கொண்டு இருந்த தங்களது நண்பர்களை அமைதியாக இருக்கச்சொன்னார்கள்.
“ஊரை அடிச்சு உலையில போட்டா பெயில் கிடைக்குமா ஜெயில் கிடைக்குமா, உங்க மனசில ஜெயலலிதா ஒரு கொள்ளைக்காரி, அவருக்கு பெயில் கிடைக்கக்கூடாதுன்னுதானே இருக்கு அதைத்தானே நாங்க சொல்லுறோம்.” என்ற போது மக்களிடம் ஒரு மலர்ச்சி முகத்தில் ஏற்பட்டது. “ரயிலில் வெள்ளரிக்காய் விற்கிற ஒரு அக்கா மேல கேஸ் போடுறான் போலீசு, சமோசா விக்குற அண்ணன் மேல பொய் கேஸ் போடுறான் போலீசு, பணம் கட்டலைன்னா ஜெயிலுன்னு சொல்லுறான், அப்படீன்னா ஜெயாவுக்கு ஒரு சட்டம், இந்த அண்ணனுக்கு ஒரு சட்டமா” என்றோம்.
சமோசா விற்கின்ற ஒருவர் “தோழரே, அந்த நோட்டீசு ஒண்ணு கொடுங்க” படிக்க ஆரம்பித்தார்.
“நல்லா யோசிச்சுப்பாருங்க, ஜெயில் – லலிதா சொல்றாங்க, எனக்கு 66 வயசாயிடுச்சுன்னு, அதிமுக கட்சிக்காரன் சொல்லுறான் , அம்மாவை – தாயை விடுதலை செய்ன்னு, ஜெயலலிதா தாயா இல்லை, தாய் என்கிய பெயருக்கே அவமானம், ஆம் கோயம்பேட்டில் 70 வயசில கிழிஞ்சு போன புடவையைக் கட்டிக்கிட்டு, செருப்பில்லாமல் வேகாத வெயிலில் குப்பையில் விழுகின்ற காயை எடுத்துக்கிட்டு போய்வித்து மானத்தோடு வாழறாங்களே அவங்களும் கோடிகோடியாய் சொத்து சேர்த்து, ஆயிரக்கணக்கான தங்கப்புடவை, தங்க நகைகள், தங்கத்துல செருப்பு, ஒட்டியாணம்னு எடுத்தா அதுல பல வகைன்னு நம்ம வரிப்பணத்தை சுரண்டி எடுத்த ஜெயா தாயா இல்லைங்க, பேய்…………….”
கவனித்துக்கொண்டு இருந்த ஒரு வயதான உழைக்கின்ற தாயின் முகத்தின் உதட்டில் புன்னகை அரும்பியது.
ரயிலில் பிரச்சாரம்
“எங்க அம்மா மாட்டிக்கிட்டாளே, நான் எப்படி மக்கள் முகத்திலே முழிப்பேன்னு தலையை குனிஞ்சுகிட்டு போக வேண்டியவனுங்க, கடையை மூடச்சொல்லுறானுங்க, மிரட்டுறானுங்க, பேருந்துகளை உடைக்குறாங்க, பயணிகளை அடிச்சு துரத்திவிட்டு, பேருந்துகளுக்கு தீவைக்குறானுங்க, வேடிக்கை பாக்குது போலீசு, நாம பயந்து சாகணுமா? இதென்ன அநியாயமா இருக்கு? மொள்ளமாறிப்பசங்க எல்லாம் திமிரா திரிவானுங்க, உழைக்கின்றமக்கள் நாம் ஏன் ஓடி ஒளிய வேண்டும்………..?”
“தம்பி, எனக்கு நோட்டீஸ் கொடுப்பா!” என்று மக்கள் பிரசுரங்களை வாங்கினார்கள்.
“வீட்டுக்குள்ள கொள்ளைக்காரன் பூந்துட்டா என்ன செய்யுறோம்? கட்டிவச்சு உதைக்குறோமில்லையா, அது மாதிரி எவனாவது அம்மாவுக்கு பெயில் கிடைக்கல, கடையை மூடு, சாலை மறியல்ன்னு வந்தா செருப்பிலேயே அடிக்கணும், சாணியை கரைச்சு மூஞ்சியிலே ஊத்தணும் ”
“தம்பி நான் இறங்க வேண்டிய ஸ்டேசன் வந்துடுச்சு” என்று ஒருவர் நிதியளித்து விட்டுப்போனார்.
“நாம் எதுக்கு பயப்படணும்? தினமும் உழைத்து வாழ்க்கையை போராட்டமாக நடத்தும் நாம் ஏன் பயப்படணும்? பயப்படக் கூடாது. நாங்க தொடர்ச்சியா இந்த முழக்கங்களை முன்வச்சு போராடிட்டு வருகிறோம். ஜெயாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யணும்னு போராடிய எங்க தோழர்களை சிவகங்கையிலும் கோவையிலும் கைது செய்திருக்காங்க, எங்க இருக்கு ஜனநாயகம்? அம்மாவுக்கு அழு இல்லை அழவைப்பேன்னு மிரட்டுறானே, பார்ப்பானுக்கு ஒரு நீதி உழைக்குற மக்களுக்கு ஒரு நீதியா………………….?”
அதற்குள் ஒரு வழக்கறிஞர் ” பொது இடத்துல டிஸ்டர்ப் பண்ணுறே, இது அரசியல் மேடை இல்லை, உன் இஷ்டத்துக்கு பேசாதே” என்று இழுக்க, ரயில்வேயில் குப்பை அள்ளும் வேலை செய்யும் தொழிலாளர்கள் இருவர் “தோழரே பிரசுரம் கொடுங்க” என்று அந்த வக்கீலை முறைக்க, தலையை கீழே குனிந்த வழக்கறிஞர் அவர் மனதில் இருக்கும் அம்மா பாசத்தை பேசமுடியாத ஒரு நிலையை நினைத்து வேதனை அடைந்து கொண்டு இருந்தார்.
“இந்த அயோக்கியத்தனத்துக்கு முடிவுகட்ட எந்த ஓட்டுக்கட்சிக் காரனுங்களும் வர மாட்டாங்க, புழுத்து நாறிப் போய் கிடக்கும் இந்த அரசு அமைப்பை நொறுக்க வேணும்னா, உழைக்கின்ற மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுக்கணும். ஆயிரக்கணக்கான மக்கள் வீதியிலே இறங்கி அதிமுக ரவுடிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும், ஜெ, சசியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேணும், எங்களோடு இணைந்து போராட முன்வர வேண்டும். இதோ இந்த பிரசுரத்தை லட்சக்கணக்கில் போட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், அப்போதுதான் அப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டுவர முடியும். அதுக்காக உங்களால முடிஞ்ச நிதியை கொடுங்க உங்க தன்மான உணர்வில் இருந்து…………. ”
உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு இருந்த அந்த வழக்கறிஞர் புகார் கொடுத்து இருப்பார் போல, ஒரு காவலர் “பொது இடத்தில் அரசியல் பேசாதீர்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார், அதிமுகவினர் பேருந்துகளை உடைத்துக் கொண்டு இருந்த போது என்ன செய்தீர்கள் என்று நாம் கேள்வி கேட்பதற்குள்.
எத்தனையோ பேர் விரும்பி வந்து பிரசுரத்தை வாங்குவதும் தங்களுக்குள் விவாதிப்பதுமாக இருந்தனர். பிரச்சாரத்தை கேட்ட ஒருவர் “உங்க அமைப்பிலே இணைய வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும்” என்றார். பலர் கை கொடுப்பதும் வாழ்த்துவதுமாக இருந்தனர். பெட்டியைவிட்டு இறங்கும் போது ஒருவர் “தலைவா, சூப்பர் தலைவா” என்றார்.
உழைக்கின்ற மக்கள்யாரும் கொள்ளைக்காரி ஜெயாவுக்கு ஆதரவாகப் பேசக் கூட இல்லை. ஜெயா ஒரு கொள்ளைக்காரிதான்; கொள்ளைக்கூடாரமான அதிமுகவை தடை செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் துளி கூட மாற்றுக்கருத்துஇல்லை. ஆனால் வெளிப்படையாக பேசுவதற்கும் நடைமுறைக்கு வருவதற்கும் அச்சம் மட்டும்தான் தடையாக இருக்கிறது.
ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது? என்பதுதான் முன்னே உள்ள பிரச்சினை. நாம் முன்னே சென்று நடைமுறைக்கான நம்பிக்கையை விதைக்கும் போது மாற்று அதிகாரத்திற்கான கருத்துக்களை மக்கள் நடைமுறைப்படுத்துவார்கள். அப்போது அதிமுக ரவுடிகள்மட்டுமல்ல, ஓட்டுப்பொறுக்கிகள் அனைவரும் ஓலமிட்டுக்கொண்டு ஓடுவார்கள்.
ரயில் பிரச்சாரம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகம் நிலத்திருட்டு கும்பலின் தலைமையகமாக செயல்பட்டு வருகிறது.இதை அம்பலப்படுத்தி விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10.10.2014 வெள்ளிக் கிழமையன்று போலீஸ் தடையை மீறி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பென்னாகரம் வட்டத்தில் இருக்கின்ற ஒகேனக்கல் பிரபலமான சுற்றுலா தலம். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல்லில் இருக்கின்ற பாரத சாரணியர் முகாம் அருகில், வீரபத்திர சுவாமி கோயில் என்ற சிறு தெய்வ வழிபாட்டுத் தலம் இருக்கிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 18-க்கு ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் திரண்டு வழிபட்டு விழாவாக கொண்டாடுவது வழக்கம். இந்த கோயில் மற்றும் இடத்தை பழங்குடி இன குருமன்ஸ் மக்கள் பராமரித்தும், கந்தாய ரசீது செலுத்தியும் வருகின்றனர். இதற்கான அடங்கலும் அரசுப் பதிவேட்டில் 1987-ல் இருந்து வருகிறது.
தற்போது ஒகேனக்கல் பிரபலமான சுற்றுலா தலமாக இருப்பதாலும், ரியல் எஸ்டேட் சூதாட்டம் மூலம் நிலத்தின் விலை உயர்ந்து உள்ளதாலும் இந்த வீரபத்திர சுவாமி நிலத்தை (30 சென்ட்) எப்படியாவது அபகரித்துவிட வேண்டும் என்று நிலத்திருட்டு கும்பல் முயற்சித்து வருகிறது. இந்த கும்பலின் தலைவன் மாரிமுத்து. இவன் ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியைச் சேர்ந்தவன். இவனது கூட்டாளிகள் மணி, ஜெயபால், காளியப்பன், சக்திவேல் ஆகியவர்கள் நிலத்தை அபகரிக்க கோயிலைச் சுற்றி இருந்த சுற்றுச் சுவரை இடித்து பெயர்ப்பலகையை உடைத்து எறிந்து அடையாளம் தெரியாதவாறு சமப்பபடுத்தி உள்ளனர்.
வீரபத்திர சுவாமி கோயிலை ஒட்டியிருந்த மகாதேவ சுவாமிகள் லிங்காயித்து மடம். இந்த மடத்தில் இருந்த சிவலிங்கத்தை தூக்கி ஆற்றில் வீசிவிட்டு, சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் என்று பொய்யுரைத்து அபகரிக்க முயற்சி செய்கின்றனர். மேலும் விடுதிகள் கட்டவும், இடத்தை வாடகைக்கு விட்டு காசு பார்க்கவும் திட்டமிட்டு வருகின்றனர். மேற்கண்ட நிலத்தினை கைப்பற்றி எப்படியாவது போலி பட்டா பெறுவது என்று பென்னாகர வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள புரோக்கர்கள் மூலம் முயன்று வருகின்றனர்.
வட்டாட்சியர் கனகராஜ் இந்த நிலத்திருட்டு கும்பலிடம் பணம் பெற்றுக் கொண்டு செயல்படுவது வெளிவந்து ஊரே நாறிக் கொண்டிருக்கிறது. வட்டாட்சியர் அலுவலகத்தில் சக அதிகாரிகளே முகம் சுழித்துக் கொண்டாலும், கனகராஜ் இந்த திருட்டுக் கும்பலுடன் இணைந்து செயல்படுவதை இதுவரை நிறுத்திக் கொள்ளவில்லை. இது போதாது என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆயுத பூஜை தினத்தன்று புரோக்கர்கள்தான் பூஜை செய்துள்ளனர். அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு புரோக்கர்கள் அரசு புறம்போக்கு நிலத்தை கைப்பற்றி போலிப்பட்டா பெறுவது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. சஞ்சீவன் என்ற ஒரு புரோக்கர் மட்டும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள புறம்போக்கு நிலத்தை அபகரித்து உள்ளான்.
மேற்கண்டவாறு வீரபத்திரசுவாமி கோயில் நிலத்தை அபகரிக்கவும், இந்த கூட்டுக்கும்பல் முயல்கிறது. வீரபத்திர சுவாமி கோயிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் கொடுத்தால், வட்டாட்சியர் சொன்னால்தான் வழக்கு பதிவு செய்வேன் என்று நடவடிக்கை எடுக்க மறுக்கிறது, காவல்துறை. இதற்குப் பிறகு உயர்நீதி மன்றத்தில் கோயிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த மோசடித்தனத்திற்கு எதிராகவும், நில அபகரிப்பு கும்பலுக்கு எதிராகவும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனு கொடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணம் காட்டி காவல்துறை இரண்டு முறை அனுமதி கொடுக்க மறுத்து விட்டது. மறுபக்கத்தில் அதிமுக ரவுடிகள் கடையடைப்பு, பேருந்து எரிப்பு போன்ற சட்டவிரோத பயங்கரவாத வேலைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்ற சட்டவிரோத வேலைகளை காவல்துறை செய்து வந்தது.
பொறுத்துப் பார்த்த மக்கள் வி.வி.மு தலைமையில் தடையை மீறி திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அடுத்த கட்டமாக காவல்துறை பொய்வழக்கு போட முயற்சித்து வருகிறது. மக்களோ நிலத்திருடர்களிடமிருந்து நிலத்தை மீட்டெடுக்க வி.வி.மு தலைமையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
துண்டறிக்கை
ஒகேனக்கல்லில் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான வீரபத்திரசாமி கோயில் மற்றும் நிலத்தை மீட்டுக்கொடு!
ஆர்ப்பாட்டம்.
இடம் : பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில்
நாள் : 10.10.2014, வெள்ளிக் கிழமை காலை 11 மணி அளவில்
தலைமை : தோழர் சரவணன், விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்
முன்னிலை : கோயில் நிர்வாகிகள்
திரு நடராஜ், கே. அக்ரகாரம்
திரு. எல் மாதையன், ஜங்கமையனூர்
திரு. கிருஷ்ணன், பூதிப்பட்டி
திரு சின்னசாமி, மல்லாபுரம்
திரு சிக்கமல்லன், நாட்ராபாளையம்
திரு. முனியப்பன், பருவதனஅள்ளி
உரையாற்றுவோர்
திரு. ராசு, பழங்குடி குருமன்ஸ் சங்க மாவட்டை தலைவர்
திரு ரவி, இளம் வழக்கறிஞர் சமூக நீதி மையம், உயர்நீதிமன்றம், சென்னை
திரு இலட்சுமணன், ஒன்றிய செயலாளர், பழங்குடி குருமன்ஸ் சங்கம், பென்னாகரம்
தோழர் ஜானகிராமன், வழக்கறிஞர், தருமபுரி மாவட்ட செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்,
தோழர் ராஜ, தருமபுரி மாவட்ட அமைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தோழர் அருண், விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்
தோழர் கோபிநாத், வட்டார செயலாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்
நன்றியுரை திரு. முனிராஜ், கூத்தம்பாடி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா மையமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. சுற்றுலா மையத்திற்கு முன்பு இருந்தே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த வட்டாரத்தில் இருக்கும் மக்கள் தங்களது சிறு தெய்வங்களை எடுத்துச் சென்று, காவேரி நீரில் குளிப்பாட்டி, ஓரிரு நாட்கள் தங்கி பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட குருமன்ஸ் சமூக பழங்குடி மக்கள் தங்களின் வீரபத்திர சாமிக்கு கோயில் ஏற்படுத்தி, அதைச் சுற்றி கருங்கல் கட்டிடம் கட்டி காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோயில் ஒகேனக்கல் பாரத சாரணியர் பயிற்சி முகாம் அருகில் உள்ளது. இதன் நிலம் 30 சென்ட் ஆகும். இந்த நிலத்திற்கும், கோயிலுக்கும் சட்டபூர்வமான முறையில் உரிய ஆதாரங்களும் உள்ளன.
வழக்கம் போல இந்த ஆண்டு ஆடிமாதம் பழங்குடி மக்கள் தங்கள் தெய்வத்தை வழிபட சென்று பார்க்கும் போது அம்மக்களுக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் இந்தக் கோயிலைச் சுற்றி இருந்த கருங்கல் கட்டிடம், பெயர்ப்பலகை மற்றும் கோயிலின் பிற பகுதி இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டிருந்தது. வீரபத்திர சாமி கோயிலும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. ஏனெனில், அதிக விலை போகும் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கொள்ளலாம் என்ற கனவுகளுடன் களமிறங்கி அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இம்மகளின் நிலத்தை கைப்பற்றுவதற்கென்றே இதனை ஒட்டி இருக்கின்ற சித்தலிங்கேஸ்ரவர் என்ற சிவன் கோயிலை முதலில் கைப்பற்றி, இந்த கோயிலில் இருந்த லிங்கத்தை ஆற்றில் வீசிவிட்டு, சென்னகேசவ பொருள் கோயில் என்று உருவாக்கி இதற்கு ஒரு பூசாரியை நியமித்து, இதன்மூலம் இதனை ஒட்டி இருக்கிற வீரபத்திர சாமி கோயில் நிலத்தை அபகரிப்பது என்ற திட்டத்தில் இக்கும்பல் செயல்பட்டு வருகிறது.
ஒகேனக்கல் சுற்றுலா மையம் ஆனபிறகு இதனைச் சுற்றியுள்ள நிலம், தங்கும் விடுதிகள் மற்றும் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. இதனை சாதகமாக்கி எப்படியேனும் பெரும் பணத்தைச் சேர்த்துவிட வேண்டும் என்று குறுக்கு வழியில் பொதுச் சொத்தை அபகரிக்க திட்டம் போட்ட மாரிமுத்து என்பவர் தன்னுடன் மணி, ஜெயபால், காளியப்பன் ஆகியோரை சேர்த்துக் கொண்டு பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிக்க தீவிரமாக ஈடுபடுகின்றார். உண்மையில் இந்த நிலம் பழங்குடி குருமன்ஸ் சமூக மக்களுக்கே சொந்தமானது. இதற்காக கந்தாய ரசீதும், அடங்களும் அரசு பதிவேட்டிலும் உள்ளன.
மேலும், மேற்கண்ட நான்குபேரில் காளியப்பன் என்பவர் தள்ளுவண்டி வைத்து பிழைப்பு நடத்தி கொள்கிறேன் என்று அம்மக்களின் தலைவரிடன் சென்று விட்டு அனுமதி பெற்றுக் கொண்டவர். தற்போது மாரிமுத்துவுடன் இணைந்து நிலத்தை அபகரிக்கவும், ஆக்கிரமிக்கவும் முயற்சித்து வருகிறார். இவர்கள் இதற்கான போலி பட்டா பெறுவதற்காக அதிகாரிகளை வளைத்து போடும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற “தொழில்” மூலம் வட்டாட்சியர் சம்பளத்திற்கு அதிகமாக வருவாய் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், நிலத்தை அபகரிப்பதற்காக பல மட்டங்களில் லஞ்ச பணம் கைமாறி இருப்பது கூறப்படுகிறது. தற்போது, நிலத்தைக் கைப்பற்றி வாகன நிறுத்துமிடமாக மாற்றி காசு பார்க்க ஆரம்பித்துள்ளது இந்த கும்பல். இது தொடர்பாக குருமன்ஸ் சமூக மக்கள் அதிகாரிகள் மற்றும் காவல் துறையிடம் உரிய முறையில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நில அபகரிப்பு சட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்கள் என்பதாலே அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கிறது அரசு.
இதுநாள் வரை நிலத்தை அபகரித்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? கண்துடைப்பு பேச்சுவார்த்தை நடத்தி அம்மக்கள் மிரட்டப்படுவது ஏன்? நிலத்தை அபகரிப்பதுடன் சிறு தெய்வங்களை அழித்து பார்ப்பன கடவுளை ஏற்படுத்தி பின்னர் வழிபாட்டு உரிமைகளை பறித்து நிரந்தரமாக துரத்தியடிக்கவே சதி செய்கின்றனர். ஏனெனில், சாமியை யார் வேண்டும் என்றாலும் வணங்கி விட்டு போகட்டும், பூஜைகள் செய்யட்டும் ஆனால் கோயில் இடம் எங்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று மாரிமுத்து கூறுவதிலிருந்து நிலத்தை அபகரிக்கும் இவர்களது நோக்கம் தெரியவருகிறது.
சுற்றுலா மையத்தில் விடுதி கட்டியும், வாகன நிறுத்துமிடமாக்கியும் பணம் சம்பாதிக்கும் வேலையை செய்திட பல விடுதி உரிமையாளர்கள் இவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். எனவே, இந்த மோசடி கும்பலை தனிமைப்படுத்தி பொதுச்சொத்தை மீட்க ஒன்று திரள்வதும், இந்த கூட்டுக் கும்பல் சதியை முறியடிப்பதும் நமது கடமையாகும்.
கட்டிடத்தை இடித்தும் பெயர் பலகையை உடைத்தும் ஆக்கிரமிக்க முயற்சிக்கும் நபர்கள் மாரிமுத்து, மணி, ஜெயபால், காளியப்பன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை ஒன்றிணைந்து போராடுவோம்!
விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியில் அணிதிரள்வோம்!
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தருமபுரி மாவட்டம்.
தொடர்பு கொள்ள தோழர் கோபிநாத், வட்டார செயலாளர் 9943312467
1. இதுதாண்டா அம்மா போலீசு!
போலீசு கொட்டடியில் சந்திரா என்ற ஏழைத்தாய் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெண்களின் பாதுகாப்புக்கு முதன்மையான எதிரி போலீசுதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
2. பிரம்மஸ்ரீ கிரிமினல்கள்
3. சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம்!
என்னதான் இருந்தாலும் சு.சாமி பார்ப்பனன் என்பதாலேயே, அவரது விபச்சாரத்தனங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு, அவர் அறிவார்ந்த அரசியல்வாதி போல பார்ப்பன ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறார்.
4. இடைத்தேர்தல் தோல்விகள் : மதவெறியைக் கைவிடுமா பா.ஜ.க.?
இடைத்தேர்தல் தோல்வி காரணமாக சங்கப் பரிவாரம் மதவெறியைக் கைவிட்டு விடுமா? அல்லது முதலாளித்துவ ஊடங்கள் சிபாரிசு செய்வதைப் போல வளர்ச்சியைச் சாதிக்கும் பொருட்டு மோடி அவர்களைத் தற்காலிகமாவேனும் “ஸ்விட்ச் ஆஃப்” செய்து வைப்பாரா? இரண்டும் நடக்கப் போவதில்லை.
5. மோடியின் நூறு நாள் ஆட்சி : சவடால்களே சாதனையாக….!
முந்தைய காங்கிரசு ஆட்சியின் ஜெராக்ஸ் காப்பிதான் மோடியின் ஆட்சி என்பதை மூடிமறைக்க, அவரது சவடால்களை அறிவார்ந்த கருத்துக்களாக ஊடகங்கள் ஜோடித்துக் காட்டுகின்றன.
6. பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க்காதல் : பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!
சமஸ்கிருதம்தான் தேசிய உணர்வின் அடிப்படை என்று கூறும் தருண் விஜய் என்ற பா.ஜ.க எம்.பி இன்னொருபுறம் தமிழ் ஆர்வலர் போலத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார். இதன் நோக்கமென்ன?
7. விசாரணைக் கைதிகள் விடுதலை : இது நீதித்துறை புரட்சியா?
இலட்சக்கணக்கான நிரபராதிகள் தண்டிக்கப் படுவதற்குக் காரணமே நீதிபதிகள்தான். நிரபராதிகளான ஏழைகளை வதைத்து கோடிக் கணக்கில் பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டமாகவே போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றன.
8. வறுமை… பட்டினி…. காசநோய் : இந்தியக் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயம்!
9. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொள்ளைக்கு நீதிமன்றத்தின் நல்லாசி!
தனியார் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பலின் பாக்கெட்டில்தான் அரசு, நீதிமன்றம், மருத்துவ கவுன்சில், சி.பி.ஐ ஆகியவை அடங்கிக் கிடக்கின்றன.
10. ஆம் ஆத்மி : பிறப்பு இரகசியம்!
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசாரா நிறுவனங்களின் குடிமைச் சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக் சத்தா கட்சி, இன்ன பிற அமைப்புகள்.
11. கேட்ஸ் பவுண்டேஷன் : மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!
இந்தியா உள்ளிட்ட ஏழை நாட்டு மக்களை, பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக மாற்றும் ஏஜெண்ட்தான் கேட்ஸ் பவுண்டேஷன்.
இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 2
சட்டம் உருவாக்கிய இந்து மதம்
1955 -56-ல் இந்துக்களுக்கான உரிமையியல் சட்டத் தொகுப்புகள் நிறைவேற்றப்பட்டு விட்ட போதிலும் ஒரு மதம் என்ற முறையில் இந்து மதம் வரையறுக்கப்படாமலேயே இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால் இந்துக்களுக்கான சட்டம் தயார் நிலையில் இருந்தது. ஆனால் “யார் இந்து?” என்ற பிரச்சினை தீர்க்கப்படாமலேயே நீடித்தது.
இந்தக் கோமாளித்தனமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க ஒரு குயுக்தியான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டது.
“யார் இந்து?”
யாருக்கெல்லாம் இந்துச் ‘சட்டத் தொகுப்பு’ பொருந்துமோ அவர்களெல்லாம் இந்துக்கள் .
யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்?
யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தாதோ, அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் பொருந்தும் .
ஆகையினால் இவர்களைத் தவிர அனைவரும் சட்டப்படி இந்துக்களே ”.
இந்துச் சட்டத் தொகுப்பு (1955-56) மேற்கூறிய விளக்கத்தின் அடிப்படையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே , “இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் ஆகியோர் மதத்தால் இந்துக்களே. அந்த இந்து பெற்றோருக்குப் பிறந்தவர்கள் பிறப்பால் இந்துக்களே. முசுலீம், கிறித்தவ, யூத, பார்சி மதங்களைச் சாராத மற்றவர்கள் அனைவரும் கூட இந்துக்களே. இவர்கள் அனைவருக்கும் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்” என்றது உச்சநீதி மன்றம்.
பல்வேறு வழக்குகளில் முரண்பட்ட பல காரணங்களுக்காக “நாங்கள் இந்து இல்லை” என்று வாதாடியவர்களை மறுத்து அவர்கள் நெற்றியில் இந்துப்பட்டம் கட்டித் திருப்பியனுப்பியது உச்சநீதி மன்றம்.
“இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டு அதை நடைமுறையில் கடைப்பிடித்து, தான் ஒரு இந்து என்று அறிவித்துக் கொள்பவன் இந்துதான். அதே நேரத்தில் ஒருவன் நாத்திகனாகி விடுவதாலோ, இந்து மதக் கோட்பாடுகளைக் கைவிடுவதாலோ, மேலை நாகரீகத்தைப் பின்பற்றுவதாலோ, மாட்டுக்கறி தின்பதாலோ அவன் இந்து இல்லை என்று கூறிவிட முடியாது”, 1963-ல் அளித்த ஒரு தீர்ப்பில் உச்சநீதி மன்றம் இவ்வாறு குறிப்பிட்டது.
இந்துச் சட்டத் தொகுப்பிற்கு ஆதாரமாக விளங்கும் தரும சாத்திரங்கள் எதுவும் பிற மதத்தினர் இந்துவாக மதம் மாறுவதை அனுமதிக்கவில்லை. அவை வருணப் பிறப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கின்றன. பிற மதத்தினரை இந்துவாக மதம் மாற்ற தூய்மைப்படுத்தும் சடங்கு ஒன்றை ஆர்யசமாஜம் அறிமுகம் செய்தது. எனினும் இது தரும சாத்திரங்களால் அங்கீகரிக்கப் பட்டது அல்ல.
ஜேசுதாஸ் தீர்ப்பு!
‘தாய் மதத்திற்கு’ த் திரும்பிய ஜேசுதாஸிற்கு இந்துச் சட்டத் தொகுப்பு என்ன வருணத் தகுதியை வழங்கும்?
1975 -ல் கேரள உயர்நீதி மன்றம் இப்பிரச்சினையில் புதிய தீர்ப்பு ஒன்றை அளித்தது;
“இந்துக்கள் அல்லாதார் உள்ளே வரக்கூடாது” என்ற அறிவிப்புப் பலகையைப் பல கோயில்களில் வாசகர்கள் கண்டிருக்கக் கூடும். இவ்விதியின் அடிப்படையில் பின்னணிப் பாடகர் ஜேசுதாஸ் குருவாயூர் கோயிலில் வழிபாடு செய்ய கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்தது. ஜேசுதாஸ் இதை எதிர்த்து வழக்கு தொடுத்தார். பிறப்பால் கத்தோலிக்க கிறித்தவரான அவர் “நான் இந்து மதத்தைப் பின்பற்றுபவன்” என்று நீதிமன்றத்தில் அறிவித்தார்.
“தான் இந்து மதத்தைப் பின்பற்றுபவன் என்று ஒருவர் அறிவிக்கும் பட்சத்தில், தீய உள்நோக்கங்கள் ஏதுமின்றி நல்ல எண்ணத்துடன் அவ்வறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர் இறைவன் குறித்த இந்துக் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொண்டவராகிறார். எனவே இந்துவாக மதம் மாறிவிட்டார் என்று பொருள்.”
கேரள உயர்நீதி மன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு மேல் பார்வைக்கு ‘அதி புரட்சிகரமானதாக’ த் தென்பட்டாலும், இந்துமத விரிவாக்கத்திற்குத் துணை செய்யும் சிக்கலில்லாத எளியதொரு சம்பிரதாயத்தை இது வகுத்துத் தந்துள்ளது என்பதே உண்மை.
‘தாய் மதத்திற்கு’ த் திரும்பிய ஜேசுதாஸிற்கு இந்துச் சட்டத் தொகுப்பு என்ன வருணத் தகுதியை வழங்கும்?
“கிறித்தவத்திலிருந்து இந்துமதத்திற்கு மீண்டும் மாறி வந்தவுடன், மறைந்திருந்த அவர்களது உண்மையான சாதி மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்” என்கிறது உச்சநீதி மன்றம். அவ்வாறு இந்துவாக மதம் மாறியவருடைய மூதாதையரின் சாதியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால் அவர்கள் இந்துச் சட்டத்தின் முன் சூத்திரர்களாகக் கருதப்படுவார்கள்.
இந்துச் சட்டத்தின் முரண்பாடுகள்
வலையை அகல விரித்து அகப்பட்டவர்களையெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பிற்குள் இழுத்துப் போடும் அரசியல் நோக்கத்திற்காக இந்துச் சட்டத் தொகுப்பில் பல சமரசங்கள் செய்து கொள்ளப்பட்டன. எடுத்துக்காட்டாக,
தந்தை வழி வாரிசுரிமை மற்றும் கூட்டுக் குடும்பம் என்ற கோட்பாட்டையே இந்து சட்டம் பின்பற்றுகிறது. எனினும் கேரளத்தில் சில சமூகத்தினர் மத்தியில் நிலவும் ‘மருமக்கள் தாயம்’ மற்றும் ‘ அரிய சந்தானம்’ எனும் தாய்வழிக் குடும்ப முறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இந்துச் சட்டத்தால் தடை செய்யப்பட்ட மண உறவுகளில் (அதாவது சிறிய தந்தையின் மகனை அல்லது மகளை மணம் செய்யக்கூடாது என்பன போன்றவை) பழங்குடியினர் மற்றும் சில சமூகத்தினர் திருமணம் செய்வது நீண்டகால மரபாக இருப்பதால் அதுவும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
கோவா மாநில இந்துக்களில் சில பிரிவினரிடையே நிலவும் இருதார மணமும் சட்டத்தால அங்கீகரிக்கட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் அவர்களுக்குச செல்லாது.
அண்ணன் மறைவிற்குப் பின் அவரது மனைவியைத் தம்பி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஜாட் சாதியினரின் மரபும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் இங்கேயும் செல்லாது.
கேரளத்து மாப்ளா முசுலீம்களும், சித்தூர் மாவட்ட கிறித்தவர்களில் சிலரும் (வன்னியர்கள்) வாரிசுரிமை குறித்த பிரச்சினையில் மட்டும் அவர்களது மரபுப்படி இன்றும் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ்தான் வருகின்றனர்.
தனது பண்பாட்டுக்கு எள்ளளவும் தொடர்பற்ற குலமரபுகளையும், பண்பாடுகளையும் இந்துச் சட்டத் தொகுப்பிற்குள் பார்ப்பனியம் ஏன் அனுமதித்தது என்ற கேள்வி இங்கே எழலாம். மரபுகள் மற்றும் பண்பாடுகள் விசயத்தில் பார்ப்பனியம் தனக்குள்ளேயே வட்டார ரீதியாகப் பிளவுபட்டிருந்தது . மேலும், பார்ப்பனியப் பண்பாட்டின் எல்லைக்கு வெளியே இருந்த பலதரப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியினரின் உட்குழுப் பண்பாட்டில் ‘வரம்பு’ மீறி தலையிடுவதன் மூலம் ‘இந்து ஒற்றுமை’ என்ற தனது அரசியல் நோக்கத்திற்குக் கேடு விளைவித்துக் கொள்ள இந்திய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை.
ஆனால் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மத்தியில் நிலவிவந்த ஜனநாயக பூர்வமான மரபுகளின் மீது, தான் கொண்டுள்ள வெறுப்பையும் அது மறைத்துக் கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக மக்கள் மத்தியில் நிலவி வந்த (இன்னமும் நிலவி வரும் ) சிக்கலில்லாத எளிய ‘மணவிலக்கு’ முறையை ஒழுக்கக் கேட்டின் அடிப்படையாகப் பார்ப்பனியம் கருதியது. மணவிலக்கிற்கு நீதிமனறங்களின் தயவை நாடி அலையவைப்பதன் மூலம் அவர்கள் மீது ‘நல்லொழுக்கத்தை ‘த் திணித்து விடலாம் என்றும் கருதியது. இந்த வகையில் தலையிட்டு அவர்களை இந்து மயமாக்க முயன்றது.
எனினும், மரபு என்ற விசயத்தில் தனது தலைமையை நேருக்கு நேர் எதிர்க்கின்ற எதையும் அனுமதிக்க பார்ப்பனியம் தயாராக இல்லை.
சுயமரியாதைத் திருமணம் இந்து மரபா?
ஜேசுதாஸின் மதமாற்றத்திற்கு ஒரு புதிய ‘சம்பிரதாயத்தை’ (மரபை) உருவாக்கிய நீதிமன்றம் அதே உரிமையை மக்களுக்கு மறுத்தபோது அதற்காகச் சிறிதும் வெட்கப்படவில்லை.
தி.மு.க ஆட்சியில் 1969 -ல் சுய மரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு அந்த மண முறையின் கீழ் செய்யப்படும் திருமணம் பதிவு செய்யப்படாவிட்டாலும் செல்லும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. (சுயமரியாதைச் திருமணமும் இந்துச் சட்டத் தொகுப்பின் கீழ்தான் வருகிறது) ஆனால் இச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன் இத்திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கிடையாது.
1954-ல் இது தொடர்பான வழக்கு முதன் முதலாக நீதிமன்றத்தின் முன் வந்தது. “பார்ப்பனியச் சடங்குகளை மறுக்கும் இந்த மணமுறை 1925 முதலே கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் இதையும் ஒரு மரபாக அங்கீகரிக்க வேண்டும்” என சுயமரியாதை இயக்கத்தினர் வாதாடியிருக்கின்றனர். “இந்த மணமுறை 25 ஆண்டுகளாகத்தான் பழக்கத்திலிருக்கிறது ; எனவே இந்தப் பழக்கத்தை ஒரு மரபு என்று அங்கீகரிக்க முடியாது” என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
1966-ல் இதே விசயத்திற்காக இன்னொரு வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் இன்னும் ஒருபடி மேலே சென்றது. “நவீன காலத்தில் ஆளாளுக்கு ஒரு சட்டத்தையோ மரபையோ உருவாக்க முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மன்றம்தான் அதைச் செய்ய முடியும்” என்று தீர்ப்புளித்தது.
ஜேசுதாஸின் மதமாற்றத்திற்கு ஒரு புதிய ‘சம்பிரதாயத்தை’ (மரபை) உருவாக்கிய நீதிமன்றம் அதே உரிமையை மக்களுக்கு மறுத்தபோது அதற்காகச் சிறிதும் வெட்கப்படவில்லை. ஏனென்றால் அது இந்துச் சட்டத்தொகுப்பின் உணரச்சியின்படி நடந்து கொண்டது.
தரும சாத்திரங்களுக்கு விளக்கவுரை தரும் பார்ப்பனப் பண்டிதராக அமர்த்தப்பட்ட நீதிமன்றம், தனக்களிக்கப்பட்டுள்ள கடமையின் புனிதத்தையும் , அரசியல் நோக்கத்தையும் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தது எனபதை அதன் எண்ணிறந்த தீர்ப்புகள் பிரதிபலிக்கின்றன.
இந்துச் சட்டத் தொகுப்பின் ஜனநாயகத் தன்மை குறித்த மாயை கலைய வேண்டுமானால் அதன் உண்மை நிலை குறித்த சில விவரங்களையாவது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
‘பெண்ணுக்குத் தாய்வீடு நிரந்தரமல்ல’ என்ற கோட்பாட்டினடிப்படையில் பாரம்பரியச் சொத்தில் பெண்ணின் உரிமையை இந்து வாரிசுரிமைச் சட்டம் மறுக்கிறது. இந்த விசயத்தில் இசுலாமியச் சட்டம் கொஞ்சம் முற்போக்கானதென சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பெண்ணின் சொத்துரிமையைப் பறித்ததன் மூலம் இந்து நிலப்பிரபுக்கள் மற்றும் தரகு முதலாளிகளின் சொத்து பிளவுபடாமல் தடுக்கப்பட்டது. மேலும் இந்த பிளவுபடாத இந்து, கூட்டுக் குடும்பச் சொத்திற்கு பிற மதத்தினருக்கு இல்லாத விசேட வரிச் சலுகைகளும் தரப்பட்டுள்ளன.
முதல் மனைவி இருக்கும் போதே ஒரு கணவன் இரண்டாம் தாரமாக ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு, இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் செல்லும்போது பெண்ணுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இருப்பதில்லை. மணப்பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு மணமகன் வேள்வித் தீயைச் சுற்றி ஏழு அடி எடுத்து வைக்கும் ”சப்தபதி’ என்ற குறிப்பிட்ட சடங்கு நடைபெறவில்லை என்று ஒரு கணவன் நிரூபித்துவிட்டால், மற்றெல்லாச் சடங்களும் நடந்திருந்தாலும் அத்திருமணம் செல்லத்தக்கதல்ல என்று ஏராளமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அம்மியோ, அருந்ததியோ, புரோகிதனோ, தரகனோ, முப்பத்து முக்கோடி தேவர்களோ வந்து சாட்சி கூறியும் பயனில்லை. தலாக் என்று மூன்று முறை சொல்லி மணவிலக்குச் செய்யப்படும் இசுலாமியப் பெண்களுக்காக் கண்ணீர் சிந்தும் பார்ப்பன மதவெறியர்கள் இது பற்றி வாய் திறப்பதில்லை.
‘சப்தபதி நிரூபிக்கப்பட வேண்டியதில்லை’ என சமீபத்தில் தீர்ப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறிருந்தாலும், சாத்திர சம்பிரதாயங்களின் சந்துகளில் புகுந்து பெண்ணுக்கு அநீதி இழைக்க வழி சொல்லிக் கொடுத்த பார்ப்பனப் பண்டிதர்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடி விட்டார்கள்.
குடும்பத்தை நிர்க்கதியாகத் தவிக்கவிட்டு ஓடுபவன், அதே குற்றத்தை துறவறம் என்ற பெயரில் செய்தால் அதை அவனது மத உரிமையாக இந்துச் சட்டம் அங்கீகரிக்கிறது. அதனடிப்படையில் மணவிலக்கும் வழங்குகிறது.
1929-ல் பிரிட்டீஷாரால் கொண்டுவரப்பட்ட குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், குறைந்தபட்ச திருமண வயதாக பெண்களுக்கு -15, ஆண்களுக்கு- 18 என்ற நிர்ணயித்தது. 1978-ல் மீண்டும் ஒரு திருத்தத்தின் மூலம் இது பெண்களுக்கு -18, ஆண்களுக்கு -21 என்று உயர்த்தப்பட்டது.
தந்தை வபிளவுபடாத இந்து, கூட்டுக் குடும்பச் சொத்திற்கு பிற மதத்தினருக்கு இல்லாத விசேட வரிச் சலுகைகளும் தரப்பட்டுள்ளன.
எனினும் இந்தச் சட்டத்தை மீறி பத்து வயதுச் சிறுவனுக்கும் 5 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டு விட்டாலும் அதை ஏற்பாடு செய்தவர்களுக்கு மூன்று மாத தண்டனையோ 1000 ரூபாய் அபராதமோதான் விதிக்க முடியுமே தவிர, “அத்திருமணம் செல்லாது” என எந்த நீதிமன்றமும் அறிவிக்க முடியாது. மதச் சம்பிரதாயங்களால் உறுதி செய்யப்பட்ட ஒரு திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது என்பதே இந்த அணுகு முறைக்கான அடிப்படை.
இந்துத் திருமணச் சட்டத்தில் மொத்தம் 8 வகைத் திருமணங்கள் பற்றிக் கூறப்படுகின்றன. அவற்றின் பிரம்ம வகைப்பட்ட திருமணங்கள் மூன்று உயர் வர்ணத்தாருக்கும், அசுர வகைப்பட்ட திருமணங்கள் ‘சூத்திரர்’ க்கும் மனு நீதியால் அனுமதிக்கப் பட்டிருந்தன. பிரம்ம வகைப்பட்ட திருமணங்களை சூத்திரரும் நடத்தலாம் என்ற திருத்தம் பிரிட்டிஷ் ஆட்சியில்தான் அனுமதிக்கப்பட்டது.
பெண்ணுக்கும் அவள் வீட்டாருக்கும் பொருள் தந்து (பரிசம் ) பெண்ணை மண முடிப்பது அசுரத் திருமணம் என்றும், பெண்ணுடன் பொன்னையும் பொருளையும் மணமகனுக்குத் தானமாகக் கொடுப்பது (கன்னிகாதானம் ) பிரம்ம வகைப்பட்ட திருமணம் என்றும் மனுநீதி கூறுகிறது. இவை வெறுமனே பழைய ஏட்டுச் சுவடிகளில் இல்லை; இன்றும் இந்து திருமண சட்டத்தின் அடிப்படையாக உள்ளன. வரதட்சிணையை பார்ப்பன சாத்திரம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது; சட்டமோ அதைத் தடுப்பதாக முணுமுணுக்கிறது.
ஆகம விதிகளால் ஆளப்படும் கோயில்களில் பார்ப்பனரல்லாதாரும், பெண்களும் அர்ச்சகராக முடியாது என்ற நிலைமை இந்துச் சட்டத்தின் ஒரு அடிப்படையாக விளங்கும் மரபு என்பதனால் நியாயப்படுத்தப்படுகிறது; அரசியல் சட்டம் வழங்கும் மத உரிமையால் இதுவே பார்ப்பனர்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படுகிறது
காப்பாளராக இருக்கும் உரிமையைப் பெண்களுக்கு வழங்குதல், மண உறவிற்கு வெளியே பிறந்த குழந்தைகளின் உரிமைகள், சாதி மறுப்புத் திருமணங்கள் ஆகியவற்றில் இந்துச் சட்டத் தொகுப்பு பெரிதும் அநியாயமாக நடந்து கொள்கிறது என முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் போன்றோரே குற்றம் சாட்டுகின்றனர்.
பெண்ணினத்திற்கு எதிராகக் கடவுளும் ஆணும் இணைந்து அமைத்த கூட்டணியில் மதவேறுபாடே கிடையாது. இந்து, கிறித்தவ, இசுவாமிய, யூத, பார்சி மதச் சட்டங்கள் அனைத்துமே பெண்களுக்கு எதிரானவைதான். ஆனால் இவற்றில் இந்து மதம் மட்டும் தான் சாதி ஆதிக்கத்தையும் சேர்த்துக் தனது சட்டத்தால் புனிதப்படுத்துகிறது.
இந்துச் சட்டத்தின் பிற்போக்குத் தனங்கள் பல சீர்திருத்தப் பட்டுள்ளன என்பது உண்மைதான். ஆனால் அச்சீர்திருத்தங்கள் பார்ப்பனச் சனாதனிகளால் மனமுவந்து முன்மொழியப்பட்டவை அல்ல. வைப்பாட்டி வைத்துக் கொள்ளும் சட்டபூர்வ உரிமையைக் கூட 1955 வரை அவர்கள் தானாக முன்வந்து கைவிடத் தயாராக இல்லை.
இந்துச் சட்டத் தொகுப்பிற்காக தரும சாத்திரங்களின் ‘ காலத்துக் கொவ்வாத’ பகுதிகள் சிலவற்றில் மாற்றங்கள் முன்மொழியப் பட்டபோது, அதை எதிர்த்து பார்ப்பன சநாதனி ஒருவர் அங்கே எழுப்பிய ஆட்சேபமே இதற்குச் சான்று;
“தாங்கள் விரும்புவதை அவர்கள் நிறைவேற்றிக் கொள்ளட்டும். நாங்கள் நீதிமன்றங்களைத் தவிர்க்கவே முயல்வோம். ‘இந்துச் சட்ட மசோதா ‘ என்று அழைக்கிறார்களே அதைப் பொருத்தவரை நாங்கள் கூறுவதெல்லாம் இதுதான்; எதை வேண்டுமானாலும் சட்டமாக்கிக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து அதை ‘இந்துச் சட்டம்’ என்று மட்டும் அழைக்காதீர்கள் ஏனென்றால் அது இந்துச் சட்டமே அல்ல.”
அப்படியானால் சநாதனிகளின் விருப்பத்துக்கு எதிராகத்தான் இந்துச் சட்டத் தொகுப்பு உருவாக்கப்பட்டதா? இது சீர்திருத்தவாதிகளுக்குத் கிடைத்த வெற்றியா? என்ற கேள்விகள் எழலாம். உண்மையில் இது சீர்திருத்தவாதிகளின் வெற்றியுமல்ல, பார்ப்பனியத்தின் தோல்வியுமல்ல.
ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் விருப்பமே ஆளும் வர்க்கத்தின் பொது விருப்பமாக ஆகி விடுவதில்லை. பார்ப்பன வருண தருமத்தை அப்படியே திணிக்க விரும்பிய குருட்டுச் சநாதனிகளின் விருப்பம், ஆளும் வர்க்கங்களின் அன்றைய நோக்கம், நலன் மற்றும் தேவைக்கு உகந்ததாக இல்லை.
“இந்து மதத்தைப் புத்துருவாக்கம் செய்வது -இந்தியாவை ஒன்றுபடுத்துவது” என்ற தமது ஒருங்கிணைந்த லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள மேற்படி விருப்பத்தை ஆளும் வர்க்கங்கள் ‘ தியாகம் ‘செய்தன. அவ்வளவே.
சனாதனிகளின் தியாகம்!
இந்த ‘தியாகத்தை’ த் தான் தனது தீர்ப்பில் பாராட்டுகிறார் நீதிபதி குல்தீப் சிங். யாருடைய மன உணர்விலிருந்து இந்தப் பாராட்டுரையை நீதிபதி வழங்கியுள்ளார் என்று புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்தத் ‘தியாகங்களில்’ சிலவற்றை வாசகர்கள் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.
தீண்டாமைக்குத் தடை, தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவு, குழந்தைத் திருமணத் தடை, வரதட்சணைத் தடை, பலதாரமணத் தடை போன்ற இந்து மதக் கோட்காடுகளுக்கு எதிரான சட்டங்களை- தங்கள் மதவுணர்வுகளைப் பொருட்படுத்தாமல்- அனுமதித்தமைக்காகப் பார்ப்பன உயர்சாதி இந்துக்களுக்கு நன்றி கூறுகிறார் நீதிபதி.
ஆனால் உயர்சாதியினரும் ஆணாதிக்கவாதிகளும் ஜனநாயக உணர்வின்பாற்பட்டு இந்தச் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டனரென்று நீதிபதி குறிப்பிடவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காகத்தான் இந்தத் தியாகம் செய்யப்பட்டது என்ற உண்மையை நீதிபதி தெளிவாகவே கூறி இருக்கிறார்.
“அரசு, இந்திய ஆட்சிப்பரப்பு எங்கணும் ஒரு சீரான உரிமையியல் தொகுப்புச் சட்டம் குடிமக்களுக்கு உறுதியாகக் கிடைக்குமாறு பெருமுயற்சி செய்தல் வேண்டும்” – என்று கூறுகிறது இந்திய அரசியல் சட்டத்தின் 44- வது பிரிவு. (வழிகாட்டும் கோட்பாடு).
“விவகாரத்து மற்றும் ஜீவனாம்சம் பற்றிய பிரச்சினைகளில் எல்லா சமூகத்தினரையும் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் இந்திய ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதுதான் இந்த அரசியல் சட்டப் பிரிவின் நோக்கம்” என்று உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் பல இந்தச் சட்டப்பிரிவுக்கு விளக்கமளித்துள்ளன.
விவகாரத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சீரான விவாகரத்துச் சட்டத்தை ஒப்புக் கொள்ளாதவன் பிரிவினைவாதியா? இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கதையாக இருக்கிறதே என வாசகர்கள் நினைக்கலாம் .
இந்த முடிச்சை அவிழ்க்கும்போது தான் பாரதீய ஐனதாவின் ‘ஒரே நாடு, ஒரே மக்கள் , ஒரே சட்டம் ‘ என்ற முழக்கத்தின் முடிச்சும் அவிழும்.
பழைய சரக்கு புதிய மொந்தை. இது குப்தர் காலம் தொட்டு மக்களை ஏமாற்றப் பயன்படுத்தப்படும் ‘தொழில் நுட்பம்’. அதுவே மோடியின் பாஜக அரசு என்றால் மொந்தையைப் பற்றி நாற்பது விதமான பஞ்ச் டயலாக்குகளை தயார் செய்வார்கள். பிறகு அதை நால்வகை – அச்சு, காணொளி, ஒலி, வதந்தி – பிரச்சார கருவிகள் மூலம் திகட்டத் திகட்ட ஐம்புலன்களையும் ஆக்கிரமிப்பார்கள்.
மோடி பிரதமராகி செங்கோட்டையில் கொடியேற்றும் முதல் சுதந்திர தினம். வித்தியாசமாக என்ன செய்யலாம்? காவி கிச்சன் கேபினட் குழு யோசிக்கிறது. விளைவு “மேக் இன் இந்தியா”. “மேட் இன் இந்தியா”-வில் இங்கே தயாரிக்கப்பட்டது என்றால் மேக்கில் இங்கே தயாரிக்க வேண்டும் என்று பன்னாட்டு முதலாளிகளுக்கு கோரிக்கையாம். இதனால் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கொட்டோ கொட்டும் என்று திரைக்கதை வசனத்துடன் வெளியிட்டார்கள்.
ஏகாதிபத்தியங்களின் உலகமய ஆக்கிரமிப்பில் “இது இந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது” என்பது மூலதனம் காட்ட வேண்டிய சட்டபூர்வமான ஒரு வெற்று சடங்கு மட்டுமே. வேலை வாய்ப்போ இல்லை அந்த நாட்டின் பொருளாதார சுயசார்போ இதில் இல்லவே இல்லை. மாறாக அந்த நாட்டின் அனைத்து வளங்களும் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனத்தால் சுருட்டி அபகரிக்கப்படுவதே இந்த மேட் இன் சவடாலின் சூட்சுமம்.
என்னடா கம்யூனிஸ்டுகளின் வழக்கமான ஏகாதிபத்திய அச்சுறுத்தல் என்று சிலர் சலிக்கலாம். பரவாயில்லை இன்றோ நேற்றோ நீங்கள் பயன்படுத்தியிருக்கும் நோக்கியா செல்பேசியை எடுங்கள். மேட் இன் இந்தியா வாசகத்தை பெருமையுடன் பாருங்கள். அது மங்கள்யான் பெருமையாகவே கூட இருக்கட்டும். கூடவே மேக் இன் இந்தியாவையும் நினையுங்கள். பிறகு இனி வரும் செய்தியையும் படியுங்கள்.
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கவர்ச்சிகரமான பெயர்களின் ஒன்று நோக்கியா, இரண்டு ஹுண்டாய். செல்பேசி பயன்பாடு அத்தியாவசியமாக மாற்றப்பட்ட காலத்தில் நோக்கியாதான் அதன் குறியீடு.
நோக்கியா ஆலை இங்கே ஆரம்பித்த போது இந்த குறியீடு அதன் உச்சத்தை தொட்டது. “கனக்டிங் பீப்பிள்” விளம்பரங்களை பார்த்தவர்கள் அந்த கனெக்ஷன் நம்மூரிலேயே தயாரிக்கப்படுகிறதா என்று துள்ளிக் குதித்தார்கள்.
அப்பேற்பட்ட பரவசத்தை சல்லிசாக அளித்த நோக்கியா வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் செல்பேசி உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பலருக்கும் வேலை ‘வாய்ப்பளித்த’தாக போற்றப்பட்ட இந்த மேக் இன் இந்தியா, கில் இன் இந்தியாவாக மாறிப்போனது. ஏன்? அதுவும் மோடி பன்னாட்டு முதலாளிகளிடம் புதிய மொந்தை கோரிக்கை வைக்கும் நேரத்தில் பழைய சரக்கு நாறுவது ஏன்?
மேக் இன் இந்தியாவின் சூட்சுமமே இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதல்ல, இந்திய வளங்களைச் சுரண்டுவதுதான். 2006-ம் ஆண்டு துவங்கப்பட்ட நோக்கியா நிறுவனத்திற்காக மத்திய மாநில அரசுகள் அளித்த சலுகைகள் ஏராளம். மலிவு விலை நிலம், தடையில்லா மின்சாரம், பல வழிகளில் வரிச்சலுகை, இதர வசதிகள், தொழிலாளர் சட்டம் செல்லுபடியாகாத விதத்தில் ஏற்பாடுகள், குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள்…இவைதான் மக்களை ‘இணைத்த’ நோக்கியா நமக்கு வேலை வாய்ப்பளித்த லட்சணம்.
இதற்கு மேலும் பல்வேறு முறைகேடுகளோடு தொழில் செய்த நோக்கியா பல்லாயிரம் கோடி ரூபாய்களை அள்ளிச் சென்றது. அதிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய குறைந்த பட்ச வருமான வரியைக் கூட கட்டவில்லை.
உள்நாட்டு தேவைக்காக உற்பத்தி என்று அனுமதி வாங்கிய நோக்கியா அதை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஏமாற்றியது. அதாவது ஏற்றுமதிக்கான வரியை செலுத்த அது தயாரில்லை. அது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவிற்கும் கட்டுப்படவில்லை.
இடையில் நோக்கியா நிறுவனத்தை பில்கேட்சின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியது. வாங்கும் போதே வரி ஏமாற்றி வழக்கில் உள்ள சென்னை நிறுவனத்தை மட்டும் கையகப்படுத்தாமல் கவனமாக தவிர்த்து விட்டது. மாறாக, செல்பேசியை வாங்குவதாக மட்டும் சென்னை ஆலையுடன் ஒப்பந்தம் போட்டது. முறைகேடான வணிக உத்திகளில் பிரபலமான பில் கேட்ஸ்சுக்கு இதெல்லாம் ஜூஜூபி. பிறகு ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் கேள்வியின்றி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.
தற்போது இந்த ஆலையுடன் ஒப்பந்தம் செய்த மைக்ரோசாஃப்ட் அதை ரத்து செய்துவிட்டது. பிறகு? மிச்சமிருக்கும் 800 தொழிலாளிகளுக்கும் இனி வேலையில்லை.
நோக்கியாவை பில்கேட்ஸ் வாங்குவாராம். அதில் வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிய சென்னை ஆலையை மட்டும் வாங்காமல், உள் ஒப்பந்தம் போட்டு சரக்கை மட்டும் வாங்குவாராம். ஆனால் இருதரப்பும் நோக்கியா பேரை பயன்படுத்துமாம்.
பிறகு, நம்ம ஆலைக்கு வரி ஏய்ப்பு வழக்கில் பேரம் படியவில்லை என்று தெரிந்த பிறகு அந்த உள் ஒப்பந்தத்தை ரத்து செய்வாராம்.
கவனியுங்கள், ஒரு முதலாளிக்கு சிறு இழப்பும் ( சுரண்டுவதில் பாதிப்பு) வரக்கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் சட்டத்தை, தொழில் நடத்தும் அமைப்பு விதிகளை வடிவமைத்திருக்கிறார்கள்? திருடன் பிடிபடக்கூடாது, தண்டிக்கப்படக் கூடாது என்பதே சட்டங்களின் சாரம்! அதுதான் பங்குச் சந்தை, மேலாண்மை படிப்பு, ஆக்ஸ்போர்டு பல்கலை, உலக வங்கி, வளர்ச்சி, மோடி வித்தை என்று பல்வேறு வகைகளில் உலா வருகிறது.
முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் உலகமயத்தின் விளைவுகள் இதன்றி வேறென்ன? என்ரான் தொட்டு யூனியன் கார்பைடு பட்டு கோக் பெப்சியில் முழுகியது வரை எத்தனை எத்தனை எடுத்துக் காட்டுகள்?
மோடி அண்ட் கோவின் “மேக் இன் இந்தியா” பாட்டின் அறிமுக விழாவே எழவு வீடாக மாறிவிட்டது!
இது குறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நிச்சயமாக இது போன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்கப்படுத்துவோம். இது குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்த விவகாரமாகும். நாங்கள் இதன் மீது கவனம் செலுத்தி வருகிறோம்” என்று உறுதியளித்தார்.– (தி இந்து செய்தி)
இது போன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம் – பொருள் என்ன? வரி ஏய்ப்பு எனும் ஒரு சிக்கலில் பன்னாட்டு நிறுவனங்கள் பாதிக்காத வண்ணம் சட்ட திருத்தம், நீதிமன்ற நடைமுறைகளை மாற்றுவோம் என்பதன்றி வேறென்ன?
இல்லை இது வினவின் அபாண்டமான வியாக்கியானம் என்பார்களா? எனில் நிர்மலா சீதாராமன் என்ன சொல்லியிருக்க வேண்டும்? இங்கே தொழில் நடத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சட்டங்களை மதித்து முறையாக வரி செலுத்த வேண்டும் என்றுதானே? ஏன் சொல்லவில்லை?
இது குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்த விவகாரமாகும் என்று நிர்மலா கூறியிருப்பதிலேயே பொருள் தெளிவாக இருக்கிறது. இவர்களால் ஒரு நிறுவனத்தின் விவகாரத்தில் அதாவது மைக்ரோசாஃப்ட் மற்றும் நோக்கியாவின் திருட்டுக் கூட்டணி முறைகேடுகள் குறித்து ஒன்றும் கேட்ட முடியாது. கோழைத்தனத்தையும், துரோகத்தனத்தையும் வீரமாக சித்தரிப்பதில் பாஜக பாசிஸ்டுகள் கைதேர்ந்தவர்கள்.
ராமனின் கௌரவத்திற்காக சீதை தீக்குளித்தாள். அமைச்சர் சீதாராமனோ முழு இந்தியாவையும் தீக்குளிக்க சொல்கிறார்.
ஆம். மேக் இன் இந்தியாவின் பொருள் கில்லிங் இந்தியாதான். முன்னதை ஏற்பவர்கள் ‘பாரத் மாதாகி ஜெய்’ சொல்வார்கள். பின்னதை உணர்பவர்கள் இந்திய மக்களை காப்பாற்ற போருக்கு தயாராவார்கள்.
ஜெயாவின் முதல் ஆட்சியில் துவங்கி இன்று வரை போயஸ் தோட்டத்தின் கோயாபல்ஸ்சாக ‘தொண்டு’ செய்து வருகிறது தினமலர். தற்போது மோடிக்கும் அதை அளித்து வருகிறது. மக்களின் நாடித்துடிப்பிற்கு எதிராக பொய்யுரைக்கும் தினமலரின் கைங்கைரியத்தில் அதன் வாசகர்கள் பலர் ராமசுப்பையர் உருவாக்க நினைத்த ராமராஜ்ஜியத்திற்கு எதிரான அறிவையும், உத்வேகத்தையும் பெற்றுவிட்டனர். தினமலரின் எதிர்மறை எழுத்து வாசகர்களிடம் நேர்மறை விளைவைத்தான் தோற்றுவித்திருக்கிறது. அந்த விதத்தில் தினமலர் தோற்று விட்டது.
இங்கே ஜெயா கைது குறித்து தினமலர் இணைய தளத்தின் செய்திகளில் மறுமொழியிட்ட வாசகர்களின் கருத்துக்களை தொகுத்து தருகிறோம். பாசிச ஜெயாவிற்கு எதிராக தமிழ் மக்கள் புத்தாக்கத்துடன் பேசும் இந்த கருத்துக்கள் ஒரு விதத்தில் கவிதையாகவும் இருக்கின்றன.
– வினவு
________________
Tamilan – Chennai, இந்தியா
தமிழக மக்களின் போராட்டத்தைப் பார்த்து கர்நாடக நீதிமன்றம் மிரண்டுபோய் தீர்ப்பு வழங்கியதாக குண்டு கல்யாணம் பெரிய சவுண்ட் விட்டார்…பெண்கள் குத்தாட்டம் போட்டனர்… கடேசியில் எல்லாம் புஸ்ஸாகி விட்டது… அதிக ஆட்டம் அந்த ஆண்டவனுக்கே தாங்கமுடியலை.. அதான் ஜாமீன் கிடைக்கவில்லை…
__________________
S.KUMAR – chennai, இந்தியா
மகிழ்ச்சிக்கு எவ்வளவு ரேட் ? சோகத்துக்கு எவ்வளவு ரேட் ?
தி்ன்ன லட்டு எல்லாம் கக்கியாச்சா ?…..குத்தாட்டம் போட்டவளுங்க கொழுப்பு அடங்கிச்சா ?……அடங்காத அனகொண்டாவாச்சே !ஆடி அடங்கறது கொஞ்சம் சிரமம்தான் …….அட முட்டாள் அடிமைப்பட்டாளங்களா, போய் நாண்டுகிட்டு சாகவேண்டியதுதானே!
__________________
T.R.Radhakrishnan – Nagpur, இந்தியா
சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்,,,,நாங்க சிரித்துக் கொண்டே அழுகிறோம், அழுது கொண்டே சிரிக்கிறோம்……கொடுத்த காசுக்கு மேலே நவ ரசமும் காட்டுவோம்ல…..நாங்க வருங்கால கட்சி நிர்வாகிகள், மந்திரிகள்…..
அஞ்சே நிமிஷத்துல ….. என் தாயெனும் கோவில காக்க மறந்துட்ட பாவியடி கிளியே ன்னு ஒப்பாரி வக்கிர அளவுக்கு கொண்டு வந்துட்டீங்களே….
____________________
Panchu Mani – chennai, இந்தியா
இவ்ளோ லட்ச கணக்கிலே பெண்கள் சாபம் கொடுக்கிறாங்களே. அம்மாவை உள்ள வச்சவங்க சந்ததிங்க எல்லாம் இந்த சாபத்திலேந்து பிழைக்கும் ன்னு நினைக்கறீங்க.
____________________
SURESH SUBBU – Delhi, இந்தியா
சாபம் குடுக்குறதுக்கு முன்னாடி குத்தாட்டம் போட்டாங்களே… அடிச்சாம் பாருயா அப்பாயின்மென்ட் ஆடர….. சூப்பர் டர்னிங் பாய்ன்ட்…. இதுக்கு தான் ஓவரா ஆட்டம் போட கூடாதுன்னு சொல்றது பஞ்சு மணி……. கூன்பாண்டிகள் இனி என்ன என்ன கூத்தெல்லாம் செய்யப்போரனுகளோ காமெடி ட்ரெக்லையே போனா பரவாயில்ல இனி சுப்ரீம் கோர்ட்டுல அப்பீல் பண்ணி விசாரணை வரைக்கும் செம ஜோக்க இருக்கும்
___________________
மதுரை விருமாண்டி – சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
உங்கம்மா சாராயத்தை ஊத்தி கெடுத்த கோடிக்கணக்கான குடும்பங்களில் உள்ள பெண்களின் கண்ணீர் தான்.. உப்பும் தான்.. இது டிரெய்லர் தாண்டி.. மெயின் பிக்சர் இன்னும் இருக்கு…..மலையளவு உப்புத் தின்னா, கடலளவு தண்ணி குடிக்கணும்…..
________________
நான்தான் – பன்னிமடை கோவை, இந்தியா
மூக்கறுத்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலமா வந்த மாதிரி ஆயிப்போச்சி அடிமைகள் நிலைமை .அடிமைப் பட்டாளத்தில் மூளை உள்ளவன் எவனும் இல்லை. மூளையோடு யோசிச்சு எவனாவது ஏதாவது சொன்னாத் தான் மம்மிக்கு பிடிக்காதே….
______________________
Reality – Sohar, ஓமன்
ஜாமீன் கொடுக்காதது எவ்வளவு நல்லது உள்ளே இருப்பவர்களுக்கு ? வெளிய வந்து எப்படி இன்னும் சொத்து சேர்க்கலாம்னு யோசிக்க டைம் கிடைச்சிருக்கு. இப்பவே வந்தாங்கன்னா அதுக்கு டைம் இருக்காதே..
அட குருமட்டை குண்டாந்தடியன்களா……. நடப்பது அதி்முக ஆட்சிதான் என்பதை மறந்துட்டீங்களா? மூடர்கூடமே, தன்வீட்டுக்கு எவனாவது கொள்ளி வைப்பானா ……..அடடடா இந்த மர மண்டைங்களுக்கும் குத்தாட்டம் போடற ……பு ……..பு ……புண்ணாக்குகளுக்கும் புரியவே மாட்டேங்குதே…….. ?……..தூத்தேறி!
________________________
அ தி மு க வழக்குறைஞர்கள், இப்படி அறை வேக்காடு போல் பேசுவது சமூகத்திற்கு கேடு. நீதிபதியின் தீர்ப்பு ஆதார பூர்வமாக வெளியிடப்படாமல் எப்படி ஜாமீன் கிடைத்துவிடும் என்று கூறமுடியும். வழக்குறைஞர்கள் 16 வருடங்களில் 160 வாய்தாக்களுக்கு பிறகு செய்த வாதங்களாகிய, பினாமி பெயரில் லாபம் சேர்க்கவில்லை, நகையை உருக்கி நகை செய்தார் என்பதெல்லாம் நகைச்சுவையாகவே உள்ளது. இதை விட பெரிய நகைச்சுவை அரசு வழக்குறைஞரின் பிற்பகுதி “ஆட்சேபனையின்மை ஒப்புதல்”. எத்தனை கோடி பேரம் பேசப்பட்டதோ “அம்மா” வுக்குத்தான் வெளிச்சம். தொண்டர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. நீங்கள்தான் எல்லாவற்றையும் செய்து கெட்ட விஷயங்களை மட்டும் அனுபவிப்பவர்கள். அ தி மு க முக்கிய புள்ளிகள் போராட்டத்திற்காக பணம் செலவு செய்தாகிவிட்டது அதை எப்படி வசூல் செய்வது என்ற கவலையில் அழுது கொண்டிருக்கின்றார்கள். சிலர் வீட்டில் உள்ள தங்கத்தை “வைத்து” விளையாடிவிட்டனர். “அம்மா” நாளை வந்தவுடன் சரி செய்து விடுவார் என்று ஊமை கண்ட கனவாகிவிட்டது. மாரடித்து அழுதால் ரூ2000/- + சேலை, ஜெயா டி வி க்காக கூட்டத்தில் அழுது பேசினால் ரூ1000/- என்று பலான செய்திகள் கதில் விழுகின்றன. டாஸ் மாக் மற்றும் பிரியானி கடைகள் விற்பனையை ஆய்வு செய்தால் நிலவரம் விளங்கும்.
______________________
M Narasimman Munusamy – Coimbatore,இந்தியா
2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் திரு எ ராஜா அடைக்கப்பட்ட போது செல்வி ஜெயலலிதா அவர்கள் சொன்னது என்னவென்றால் ராஜாவை விடக்கூடாது என்றார். அதே ஊழல் வழக்கில் சிக்கி உள்ள செல்வி ஜெயலலிதாவிற்கு மட்டும் ஏன் இந்த அவசரம். சட்டம் தனது கடமையை செய்யும். சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம்.
____________________
Tamizhmagan – Singapore, சிங்கப்பூர்
மற்ற குற்றவாளிகள் மம்மிஜியின் பினாமிகள் அல்ல.. சசிகலா மம்மிஜியின் உடன்பிறவா சகோதரி.. சுதாகரன் மம்மிஜியின் வயிற்றில் பிறக்காத ‘ரத்து’ ( மொதல்ல தத்து அப்பால ரத்து ) பிள்ளை.. இளவரசி மம்மிஜியின் உறன்பிறவா ஆசை அண்ணி.. மொத்தத்துல இவர்கள் மம்மிஜியின் பினாமிகள் அல்ல.. மம்மிஜியின் தலைமையிலான ‘மன்னார்குடி மாபியாவின் தன்னிகரில்லா தளபதிகள்.
____________________
வயதில் மூத்தவர் ஜாமீனில் வெளியே வந்தால்.. வயது குறைந்து இளமை பூத்து குலுங்குமா…இல்லை நோய்கள் தான் காணாமல் போய்விடுமா…வெளிய வந்தாலும் குற்றவாளி கைதி… உள்ள இருந்தாலும் குற்றவாளி கைதி… எருமை போடுகிற சாணியில் முன்னால வந்த சாணி என்ன பின்னால வந்த சாணி என்ன…. எல்லாமே ஒன்னு தான்னு ஜாமீன் குடுக்காம இருந்து இருக்கலாம்… ஆனால் ஜாமீன் கேக்குறதுக்கு வக்கீல் லாலு வீட்டு மாட்டு கொட்டகை வரை போய் இருக்கவேண்டாம்……
______________________
டேய் அப்ரசன்டேடிவ்களா.. …இது தீபாவளி நேரம்…. கைதிக்கு இது தலை தீபாவளி… மாமியார் ஊட்டுக்கு சசி கூட போய் இருக்காங்க….பரப்பன அக்ரஹாரத்து வாசல்ல பட்டரைய போட்டு முறுக்கு அதிரசம் எல்லாம் சுட்டு கொண்டு போய் குடுங்க…. சசிக்கு பல்வலி இருக்குறதுனால குலாப் ஜாமுன், ரசகுல்லா மாதிரி உறிஞ்சு சாப்பிடுர அயிட்டம் செஞ்சு குடுங்க… என்ன புரிஞ்சுதா…
_____________________
ரெண்டு பேரு வாதத்தை மட்டுமே கேட்டு, யாரு சிறப்பா வாதாடுறாங்களோ அவங்களுக்கு சார்பா தீர்ப்பு சொல்றதுக்கு இது என்ன சாலமன் பாப்பைய்யா தலைமையில் நடக்குற பட்டிமன்றமாய்யா? நீதிபதிக்குன்னு எந்த சொந்த கருத்தோ, நீதியை நிலைநாட்ட வேண்டிய தார்மீக கடமையோ இல்லையா? அரசு வக்கீல் ஆட்சேபிக்கலைன்னா, நீதிபதிகள் ஏன் எதுக்குன்னு யோசிக்க கூடாதா? என்ன நடந்துகிட்டு இருக்குன்னு புரிஞ்சிக்க மாட்டாங்களா? நீதிபதிகள் என்ன மம்மிஜி கட்சிகாரனுங்க மாதிரி கூமுட்டைகளா? வக்கீல்ன்ற பேருல ஒரு பொறம்போக்கு சொல்லுது ‘சுதாகரன் திருமணத்தை ஜெயலலிதா நடத்தலைன்னு’ அப்ப என்ன ..றதுக்கு 35 வயசான ஒரு ‘பச்சை குழந்தையை’ மம்மிஜி தத்தெடுத்தாங்களாம்? இன்னொருத்தன் ‘அந்த திருமணத்திற்கு பல கோடி செலவழிக்க பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லைன்னு’ வாதாடுறான். அவனை எதால அடிக்கிறது? ஒட்டுமொத்த நாடே பாத்து வாய் பொளந்து நின்னுச்சே.. எவன் அப்பன் வீட்டு காசுல இந்த ஆர்ப்பாட்டம் பண்றானுங்கன்னு கேட்டுச்சே.. கோடிக்கணக்கான பேரு இங்க பிச்சை எடுத்து இருக்குரானுங்க, அவனுங்க வயித்துல அடிச்சு ஆடம்பரம் பண்றீங்கலேடான்னு நாடே காரித்துப்புச்சே.. அது இந்த பொ.போ. வக்கீலுக்கு தெரியாதா? இதையெல்லாம் கேட்டுகிட்டு குற்றவாளிகள் நாலு பேரும் ‘உத்தம புத்திரர்கள்.. பத்தரை மாற்று தங்கங்கள்னு.. நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்னு’ கூவறதுக்கு நீதிபதிகள் என்ன இவனுங்க கட்சிகாரனுங்களை மாதிரி மூளை மழுங்கடிக்க பட்ட ஆயுட்கால அடிமைகளா?
__________________________
Reality – Sohar,ஓமன்
எல்லா பயப்புள்ளைகளுக்கும் ஒரே நினைப்பு…எல்ல நீதிபதிகளும் நம்ம பல கட்சி மன்னன் உதவாக்கரை செம்பு நாட்டாமை சரத் குமாரு மாதிரி தீர்ப்பு வருமுனு……
__________________
SURESH SUBBU – Delhi,இந்தியா
அக்காவும் தங்கையும் பெங்களூரு சிறையில் …. காலில் விழுந்து கிடந்த அடிமைகூட்டம் புன்னகையுடன் சிம்மாசனத்தில் …. வக்கீல் வண்டுமுருகன் களோ ஜாமீனை லாலுவின் மாட்டு தொழுவத்தில் சென்று வாங்கும் அளவுக்கு மிக பெரிய சாணி உருண்டைகள்….. இதற்கு இவர்களுக்கு ஒருநாளைக்கு 25 லட்சம் தண்டம் வேறு அழ வேண்டும்…இனி இந்த வண்டுமுருகன்கள் டெல்லிக்கு ஓட வேண்டுமா… தீபாவளிக்கு உள்ளேவா வெளியேவா…ஆனால் அதற்குள் ….. பலகாரம் சுட்டு குடுக்க தொண்டர்கள் என்ற காட்டுமிராண்டிகள் சிறை வாசலில் கடை விரிப்பார்களே என் கண்ணாளா….. எண்ணெய் தேய்த்து விட சசி அருகே இருக்கையில் எண்ணெய் செக்கை பரப்பன அக்ரஹாரத்தில் போட்டு எண்ணெய் எடுப்பார்களே என் பிராண நாதா … தீபாவளி குளியலுக்கு மகாமக குளம் இல்லை … ஆனால் சசியுடன் ஜலக்கிரீடை உண்டு…..ஐயஹோ என்ன செய்வேன்… தாயே இது என்ன சோதனை…..
________________
vasan pon – Chennai, இந்தியா
மிக சிறிய ஒரு வெள்ளைக்காரனின் படை எப்படி மிகப்பெரும் இந்திய மக்களை ஆட்சி செய்தது என்ற கேள்விக்கு பதில் இப்பொழுது ஜெயலலிதாவின் கைது மூலம் கிடைத்துள்ளது. அன்று வெள்ளை காரன் நம்மளை ஆட்சி செய்கிறான் என்ற உண்மையே நம் முன்னோர்களுக்கு தெரியாமல் இருந்தது. அதை அவர்களுக்கு விளக்கி புரியவைக்கவே பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது. இருந்தும் ஒரு சிலரே புரிந்து கொண்டு வெள்ளையனை எதிர்த்தார்கள். அவர்கள் போதிய ஆதரவின்றி வெள்ளை காரனால் கொல்லப்பட்டார்கள். இதே போல் தான் இன்றைய நெலைமை உள்ளது. இன்று நம்மை ஆட்சி செய்பவர்கள் பெரும் கொள்ளையர்கள் என்ற எண்ணமே நம் மக்களிடம் இல்லை. இவர்களால் தான் இந்திய மக்கள் ஊரு விட்டு ஊரு ஓடி பிழைப்பு நடத்துகிறார்கள், இவர்களால் தான் சாலைகள் சரி இல்லை , இவர்களால் தான் பல்கலை கழகங்கள் தரமிழந்து உள்ளன, இவர்களால் தான் பெரும்பாலான மக்கள் ஏழைகளாக உள்ளனர், இவர்களால் தான் நாம் இன்னும் அயல் நாட்டினை அண்ணாந்து பார்த்து கொண்டிருக்கிறோம், இவர்களால் தான் ஈழத்தில் நம் சகோதரர்கள் கொல்லப்பட்டார்கள் , இவர்களால் தான் பத்திரிகைகள் பொய் பேசுகின்றன, இவர்களால் தான் ஒழுக்கம் கெட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்கிற உண்மையே நம் மக்களுக்கு புரியவில்லை. நாட்டின் முன்னேற்றம் முக்கியம் என்ற எண்ணம் இல்லாமல் தமக்கு கிடைத்த (தம் பணத்தில் ) இலவசங்களை பெருமையாக சொல்லி கேவலமான அரசியல் வாதிகள் கைது செய்யப்படுவது எதிர்ப்பது நம் மக்களின் அறியாமையை காட்டுகிறது. கருணாநிதியின் சாதனை தான் ஜெயா. அவர் செய்த ஊழலின் காரணமாக ஆட்சியில் அமர்ந்தவர் தான் ஜெயா. ஜெயா வின் ஊழல் அட்டூழியம் அராஜகம் இவற்றின் காரணமாக வாய்ப்பு பெற்றவர் தான் கருணாநிதி. இவர்கள் இருவருமே தமிழர்களுக்கு தீங்கிளைதவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்காக பரிதாப படுவது வெட்கப்பட வேண்டிய செயல்.
_____________________
நான்தான் – பன்னிமடை கோவை, இந்தியா
இந்த ஜாமீன் வழக்கு ஒரு பதினெட்டு வருஷம் இழுக்கடிக்கப்பட்டா நல்லா இருக்கும். செரீனா கைது, சசிகலா கணவர் நடராசன் கைது, சுதாகரன் கைது, பாஸ்கரன் கைது, காடுவெட்டி குரு கைது, வீரபாண்டி ஆறுமுகம் கைது, ஆடிட்டர் கைது, வக்கீல் கைதுன்னு குண்டர் சட்டம் ன்னு சட்டத்தை கேவலமாக பயன்படுத்தியதுக்கு இப்போ அனுவவிக்குறார் 7402
___________________
ஊருல ஒரு நல்ல நீதிபதி இருந்தா உங்களுக்கெல்லாம் புடிக்காதே? எல்லோரும் நம்ம ரகுபதி மாதிரி கால்ல விழுந்து கும்பிட்டுட்டு தீர்ப்பு குடுத்தா, நீதி வென்றது, தர்மம் வென்றதுன்னு கூதாடுவிங்க….கர்மம்டா…..
___________________
diravida – chennai,இந்தியா
”சுதாகரன் பெரிய தொழில் அதிபர்.” – இதை கேட்டு ஜெயா கூட அவ்வளவு சோகத்திலேயும் வாய் விட்டு சிரித்து இருப்பார்.
________________
tamilselvan – london, யுனைடெட் கிங்டம்
ஒரு டிராபிக் போலீஸ் ஒருவனை சாலையில் சோதனை செய்கிறார் ….லைசென்ஸ் வைச்சி இருக்கியா ? வீட்டில் இருக்கு சார் …..இன்சுரன்ஸ் எடுத்து இருக்கியா….6 மாசம் முன்னாடியே எடுத்துட்டேன் சார் ….ஊது பாப்போம்…குடிச்சி இருக்கியான்னு தெரியனும்…குடிக்குற பழக்கமே இல்லே சார்…ஆனா ஊத மாட்டேன் சார் ………….இது தான் ஜெயலலிதா கேஸ் ….நிரபராதி என்றால்…எதுக்கு பேசிட்டு….டாகுமென்ட்ஸ் கொடுத்து….ஊதி காமிச்சிட்டு போக வேண்டியது தானே…..சொன்னதையே 18 வருஷமா சொல்லி கிட்டு….சின்ன புள்ள தனமா இல்லே…
_____________________
tamilselvan – london,யுனைடெட் கிங்டம்
பொய் வழக்கு என்றால்…அதை எதிர்க்கும் வல்லமை உங்கள் அம்மாவுக்கு இல்லையா ? 18 வருடங்கள் பொய் வழக்கை பார்த்தா 160 வாய்தா வாங்கினார் ? பொய் வழக்கை சந்திக்கும் திராணி இல்லையா ? ஒரு முதல்வரால் ஒரு பொய் வழக்கை எதிர்க்க முடியவில்லை என்றால்….ஒரு சராசரி குடிமகன் நிலை ? 18 வருடம் இழுத்தடித்து விட்டு இப்போது வயது ஆகிவிட்டது ஜாமீன் வேண்டும் என்று மனு……ஆக இறுதி வரை பொய் வழக்கு என்று சொல்லி கொண்டே காலத்தை ஓட்ட வேண்டியது தான் …
____________________
லாலு அவர்கள் ..ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு பற்றி கிண்டலாக வட நாட்டு செய்தி சானலுக்கு அளித்த பேட்டியில்….ஜெயலலிதா வைத்துள்ள ரூபாய் 42 லட்சம் மதிப்புள்ள 750 ஜோடி செருப்பின் மதிப்பு தான் என் சொத்தின் மதிப்பு என்று கூறினார்…அப்போது கடுங்கோபம் கொண்ட ஜெயலலிதா….. இன்று அதே லாலு வழக்கை மேற்கோள் காட்டி ஜாமீனுக்கு கையேந்தி நிற்கும் பரிதாப நிலையில்….
_____________________
Kasimani Baskaran – Singapore,சிங்கப்பூர்
வாழும் மனித தெய்வத்துக்கு இழைக்க பட்ட அநீதி காரணமாக நாளை திருப்பதி முதற்கொண்டு எல்லா தெய்வங்களின் கோவில்கள் கதவடைப்பு .. கிரணத்துக்கு மூடுவதற்க்கு இப்படி ஒரு காரணம் சொல்லி கூட பாமர மக்களை ஏமாத்துவாஙக…
___________________
Nava Mayam – New Delhi,இந்தியா
இவுங்க வழக்கையும் காப்பாத்திக்க தெரியலை , அப்பன் சுப்பனுக்கெல்லாம் கிடைக்கிற ஜாமீனும் வாங்க தெரியலை ….இவுங்கதான் காவிரிக்காகவும் , முல்லை பெரியாருக்கும் வாதிட்டு காவிரியையும் , முல்லை பெரியாரையும் மீட்டு தந்தாங்களாம் , இதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கு…இந்த கேசை எப்படி அன்பழகன் திறம்பட நடத்தினாரோ அதேபோல தான் காவேரியிலும் , முல்லை பெரியாரிலும் நீதி மன்றங்களில் திமுக ஒரு அஸ்திவாரத்தை உருவாக்கி வைத்தது… காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாயுடுச்சி..
__________________
tamilan – Chennai,யூ.எஸ்.ஏ
பெங்களூருல பல்பு வாங்கினது பத்தாதா… டில்லிக்கு வேற போய் வாங்கனுமா … எதுக்கு இந்த அவசரம்… அங்கயும் வாங்குனா… அப்புறம் 4 வருஷம் கண்டிப்பா கம்பி எண்ணனும்… பதறுன காரியம் செதரிரும்… சொன்னா கேளுங்க…. நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறதுன்னு முறுக்கிக்கிட்டு நின்னீங்கன்னா…மொத்தமா நக்கிட்டு போயிரும்… இல்லை அங்கபோயும் பல்பு வாங்குவேன் என்ன பந்தயம் ன்னு கேட்டீங்கன்னா…. ஒன்னும் பண்ண முடியாது…best of luck……
____________________
பாதாளம் வரைக்கும் பாயும்ன்னு அசால்ட்டா இருந்துட்டோமேப்பா… பயபுள்ளைக பெஙகளுரு கோர்ட்டுகளை யெல்லாம் அதுக்கு கீழே கட்டி வச்சிருப்பானுக போலயிருக்கே…
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு தண்டனை கிடைத்தவுடன் அ.தி.மு.க காலிகள் ஆங்காங்கே கலவரங்களில் ஈடுபட்டது நாம் அறிந்த ஒன்று. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தமது அடிமைத்தனத்தை வெளிக்கொணரும் வகையில் பேருந்து எரிப்பு, மிரட்டி கடையடைப்பு, உண்ணாவிரதம், பால்குடம் எடுப்பது, என்று பல்வேறு அடாவடிகளை செய்து வந்தனர். அப்படி செய்வதை ‘வரலாற்றில்’ பதிவு செய்தால்தான் நாளை ‘அம்மா’வின் கடைக்கண் அருள் கிடைக்கும் என்பதால் சுவரொட்டிகளை ஒட்டியும், பிளக்சை கட்டியும் மக்களை சித்திரவதை செய்து வந்தனர்.
இடையில் சிறையிலிருக்கும் அம்மா தொடர்ந்து தொலைக்காட்சி சானல்களை பார்த்து வருவதால் அடிமைகள் மற்றும் ரவுடிகளின் குத்தாட்டம் தாங்கவொண்ணாத வகையில் பெருகி வந்தது. இந்த லீலைகளில் தங்களது அம்மா (ஜெயா) மீதான பாசத்தையும், கருணாநிதி மீதான வெறுப்பையும் உமிழ்ந்தார்கள். கூடவே தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா அவர்களையும் நாலாந்தர கெட்ட வார்த்தைகளில் திட்டி தீர்த்தார்கள்.
இத்தருணத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக ஜெயா தண்டனையை ஆதரித்து தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, எதிர்கட்சிகள் முதல் ஜெயாவை 24மணி நேரமும் எதிர்க்க விரும்பும் தி.மு.க வரை எவரும் வாய் திறக்காத அந்த தருணத்தில் ம.க.இ.க சுவரொட்டிகள் மக்களை சிந்திக்கவும் தண்டனை சரி என்ற பார்வையையும் உண்டாக்கியது.
திருச்சியில் புரட்சிகர அமைப்புகளும்,சட்டக்கல்லூரி மாணவர்களும் ஒட்டிய சுவரொட்டிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. நிறைய பேர் வாழ்த்தியுள்ளனர். நீங்கள் மட்டும்தான் துணிச்சலுடன் எதிர்க்கிறீர்கள் என உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் மறுநாள் இரவு அனைத்து சுவரொட்டிகளையும் காவல்துறையினரும், அ.தி.மு.க ரவுடிகளும் கிழித்தெரிந்தனர். சுவரொட்டியிலுள்ள தொடர்பு எண்ணுக்கு போன் செய்த காவல்துறை, யார் போஸ்டர் ஒட்டியது? யாரை கேட்டு ஒட்டினீர்கள்? என்று அதிகாரத்துடன் கேட்டது. பதில் அளித்த தோழர் நிதானமாக ”நாங்கள்தான் ஒட்டினோம் போஸ்டர் ஒட்ட யாரைக் கேட்க வேண்டும்? என திருப்பி கேள்வி கேட்டார். உடனே திருச்சி போலீசு ”இல்ல சார், இந்த நேரத்தில இது ஏன் சார்! அ.தி.மு.க காரங்க உங்க மேல நடவடிக்கை எடுக்க சொல்றாங்க அதான்…. என்று கூறியது.
”மக்கள் மத்தியில் கலவரங்களை ஏற்படுத்தியும், நீதிபதியின் தீர்பை எதிர்த்து நீதிபதியையே கேவலமாக விமர்சிக்கும் அ.தி.மு.கவினரை முதலில் கைது செய்யுங்கள்” என தோழர் கூறவே ”சார் இப்ப அவங்க நடவடிக்கை எடுக்க சொல்றாங்க” என மீண்டும் காவல்துறை அதிகாரி தயங்க, ”நீங்க என்ன செய்யனுமோ செய்யுங்க, நாங்க என்ன செய்யறோம்னு பாருங்க” என தோழர் கூறியதும் ”சரிங்க சார்” என கூறி அழைப்பை துண்டித்தனர்.
இதே போல் பொன்மலை இரயில்வே பணிமனை டெக்னீசியனாக வேலை பார்த்து வரும் சேக் மகமூத் என்பவர் ஜெயலலிதாவிற்க்கு வழங்கிய தீர்ப்பு சரியானதுதான் என்றும் தீர்ப்பை வழங்கிய நீதிபதி குன்ஹா அவர்களை பாராட்டியும் சைக்கிள் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இன்னொருபுறம் இத்தீர்ப்பை கண்டு மக்கள் கொதித்து போய் உள்ளனர் என்றும் எந்த பண்டிகையையும் கொண்டாடாமல் துக்கத்தில் உள்ளனர் என்றும் ஜெயா குழும செய்தி ஊடகங்கள் வாந்தி எடுத்து வரும் நிலையில் மக்கள் வழக்கம் போல இயல்பாக தங்களது வேலைகளை பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, பக்ரீத் என தொடர்ந்து அவரவர் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டுதான் உள்ளனர்.
வரப்போகின்ற தீபாவளி பண்டிகைக்கு துணிவாங்க திருச்சி மெயின்காட் கேட், தெப்பக்குளம் பகுதிகளில் மக்கள் அலை வழக்கத்தைவிட அதிகமாகத்தான் தென்பட்டது. இவர்கள் ஜெயா டிவி மூலம் கூறும் கட்டுக் கதைகள் மக்களிடமே நகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் ஜெயாவை பகைத்துக் கொள்ள ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும், கார்ப்பரேட் தமிழ் ஊடகங்களும், தயாரில்லாத போது புரட்சிகர அமைப்புகள் துணிச்சலாக களத்தில் இறங்கியிருப்பது அவர்களின் போலி முகத்திரையை கிழிக்கும் வண்ணமாக அமைந்ததுள்ளது.
பின் குறிப்பு:
ஊழலை எதிர்ப்பதற்காகவென்றே ஒரு கட்சியை உருவாக்கிய அரவிந்த் கேஜ்ரிவாலையும் அவரது ஆம் ஆத்மி கட்சியையும் எங்கு தேடியும் காணவில்லை என்பது ஜெயா கைது எனும் காப்பியத்தின் காமடி டிராக். சட்டப்படி குறைந்தபட்ச தண்டனை பெற்றதற்கே சாமியாடும் ஊழல் ராணியின் கலவரத்தில் காணாமல் போன அவர்களை கண்டுபிடித்து உதவுமாறு தமிழக மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருச்சியை அசிங்கப்படுத்திய அதிமுக அம்மா ரவுடிகளின் சுவரொட்டிகள்
படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்.
அதிமுக ரவுடிகளை எதிர்த்து சுவரொட்டி இயக்கம்:
படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்…
மக்கள் பண்டிகைகளை கொண்டாடாமல் சோகமாக உள்ளதாக உளறும் ஜெயா டிவியின் பொய்களை திரைகிழிக்கும் படங்கள், மக்கள் கூட்டம் அலை மோதும் திருச்சி கடை வீதிகள்….படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்..
____________________________
செய்தி: ம.க.இ.க., திருச்சி கிளை
____________________________
“தெய்வத்திற்கு மனிதன் தண்டனையா” எனும் தமிழ் சினிமா முதலாளிகள் வெளியிட்ட சுவரொட்டிதான் தற்போது அதிமுக வட்டாரத்தில் மிகவும் பிரபலம். இதை தமிழ் சினிமா படைப்பாளிகள் எப்படியோ ரூம் போட்டு டிஸ்கஷன் செய்து வெளியிட்டிருந்தாலும் அது சொல்ல வரும் பொருள் வெறும் ‘கற்பனை’ அல்ல.
ஆம். ஜெயலலிதா எனும் ‘அம்மாவின்’ நடவடிக்கைகளை இந்த நாட்டின் சட்டம், நீதிமன்றம், அரசு எதுவும் கட்டுப்படுத்த முடியாது என்பதோடு அம்மாதான் இவற்றை ஏதோ பார்த்து கட்டுப்படுத்துவார் அல்லது கருணை காட்டுவார். இது அதிமுக அடிமைகளின் மனநிலை மட்டுமல்ல அந்த ரவுடிக் கூட்டம் போடும் ஆணையும் ஆகும்.
இப்படித்தான் முழு தமிழகத்திலும் போலீசு ஆதரவுடன் இவர்கள் வன்முறையை செய்து வருகிறார்கள். இந்த கிரிமினல் கூட்டத்திற்க்கு தம்பிராஸ் – பிராமணர் சங்கம் துவங்கி, கல்வி-பேருந்துக் கொள்ளையர்கள் வரை பல்வேறு பங்காளிகள் ஆதரவு ஷோக்களையும் நடத்தி வருகின்றனர்.
இதற்கு மேல் நீதிபதி குன்ஹாவையும், கர்நாடக அரசையும், ஏன் கன்னட மக்களையும் வைது, திட்டி, மிரட்டி சுவரொட்டிகளையெல்லாம் வெளியிட்டு வருகிறார்கள். அனைத்திலும் ஊடும் இழை ஒன்றுதான். அம்மாவை பிணையில் வெளியிடாவிட்டால் நடப்பதே வேறு!
இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை ஜெயாவின் ஆதரவு அலையாக சித்தரித்து தமிழ் ஊடக முதலாளிகள் கவனமாக செய்திகளை தயாரித்து, வார்த்தைகளை தேடிப் போட்டு கருத்துக் கச்சேரிகளை செய்து வருகின்றனர். இவையெல்லாம் சேர்ந்து இன்றைய பிணை வழக்கின் எதிர்பார்ப்பை எகிற வைத்தன என்பதை விட எரிய வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
ஜெயாவுக்கு எல்லா வசதிகளையும் சிறையில் செய்து கொடுப்பதால் அதிமுக மற்றும் காங்கிரசு கட்சிகளிடையே நல்லுறவு மலருவதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டது. இது ஏதோ அரசியல் ஆய்வு என்று நினைத்தால் நீங்கள் ஏமாளி. எப்படியாவது அம்மாவுக்கு பெயில் கிடைத்தால்தான் மவுண்ட்ரோடு மஹாவிஷ்ணுவுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்பதால் எழுதப்பட்ட சாணக்கிய வார்த்தைகள்.
மஹாவிஷ்ணுவே இப்படி என்றால் தந்தி, தலைமுறை போன்ற லோக்கல் சாமிகளின் அடிமைத்தனத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இன்றைக்கு மதியம் அனைத்து தமிழ் ஊடக இணைய தளங்களிலும் ஜெயலலிதாவுக்கு நிபந்தனையின் பேரில் பிணை வழங்கப்பட்டது, அதிமுகவினர் கொண்டாட்டம் என்ற செய்தி முதலில் வெளியிடப்பட்டது. இதை உண்மை என நம்பி இலண்டன் வாழ் தமிழ் பிபிசி இணைய தளம் கூட அப்படியே காப்பி எடுத்து வெளியிட்டது.
பிறகு மக்கள் அந்த செய்திகளின் இணைப்பில் அமுக்கி பார்த்தால் பக்கங்களை காணவில்லை என்று பார்த்து குழம்பி போனார்கள். ஏன்? உண்மையில் ஜெயலலிதாவுக்கு பிணை மறுக்கப்பட்டிருக்கிறது. இதை கர்நாடக உயர்நீதிமன்றம் தெளிவாக கூறிய போதும் இந்த நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்ட ஊடக முதலாளிகள் மாற்றி பேசியது ஏன்?
எப்படியும் அம்மாவுக்கு பிணை கிடைக்கும், கிடைக்க வேண்டும், கிடைத்தே ஆகும் என்பதே இவர்களின் முடிவு. ஆகவே நீதிமன்றத்தில் ஏதோ சிறு அறிகுறி தெரிந்ததை வைத்தே பிணை என்று கொளுத்திப் போட்டு விட்டார்கள். இவர்கள் கி போர்டில் கொளுத்திய போது அதிமுக ரவுடிகள் பரப்பன அக்ஹரகார வளாகத்தில் சிவகாசி வெடிகளை போட்டு கொண்டாடினார்கள்.
பிறகு மழை பெய்யாமலே வெடிகளும் வார்த்தைகளும் நமத்துப் போய்விட்டன. அதன் பிறகு ஊடக இணைய தளங்களில் ஒன்றுமே நடக்காதது போல, முதலில் பிணை என்று செய்திகள் வந்தன, பிறகுதான் நீதிபதியின் உத்திரவு கிடைத்தது என்று நாங்களெல்லாம் யோக்கியனாக்கும் என்று மேக்கப் போடாமலேயே வேடத்தை மாற்றினார்கள். இந்தக் கூத்துக்கள் காட்டுவது என்ன?
முதலில் சொன்னது போல இந்த சட்டம், நீதி அனைத்தும் அம்மாவுக்கு பொருந்தாது. கல்விக் கொள்ளையர்களும், ஆம்னி பேருந்துக் கொள்ளையர்களும், ஊடகக் கொள்ளையர்களும் ஏக மனதாகவே அம்மாவை ஆதரித்து பேசுகிறார்கள், வேலை நிறுத்தம் செய்கிறார்கள், உண்ணாவிரதம் நடத்துகிறார்கள் என்றால் அம்மாவின் ஆட்சி யாருக்கானது?
ஏழைகளுக்கு – அதுவும் எல்லா ஏழைகளுக்கும் அல்ல – ஒரு ரூபாய் இட்டலியை கொடுத்து விட்டு சுயநிதிக் கொள்ளையர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் தமிழகத்தை கொள்ளையடிக்கலாம் என்றால் அவர்கள் ஏன் அம்மாவிற்கு போராட மாட்டார்கள்?
எங்கே பிராமணன் என்று சோ எழுதிய தொடரை வைத்து இலட்சியவாத பார்ப்பனர்களை அடிப்படையே இல்லாமல் பேசி அழகு பார்த்த பிராமண சங்கம் இன்று பச்சையாக பாசிச ஜெயாவின் கொள்ளையை ஆதரிக்கிறது என்றால் அதுதானே இலக்கண சுத்தமான பார்ப்பனியம்!
இன்று பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் வரிசைப்படி 72வது எண்ணில் இருந்த ஜெயாவின் பிணை கோரும் வழக்கை முதலிலேயே விசாரிக்க வேண்டும் என்று ஜெயா தரப்பு கோரியது. காரணம் தெய்வத்தின் வழக்கை காத்திருந்து விசாரிக்க கூடாதாம். இது மிகவும் அவசரமான வழக்கு என்றெல்லாம் அவர்கள் முழங்கினார்கள். மக்கள் சொத்தை கொள்ளையடித்த ஒரு தலைவியின் பிணை கோரும் வழக்கு மிகவும் அவசரம் வாய்ந்தது என்றால் இதில் எதய்யா அவசரம்? ஊழல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் அவரசம் காட்டினால் அதை ஏற்கலாம். மாறாக அதை ஆதரிப்பதே அரசியல் அவசரம் என்றால் அந்த அரசியலின் யோக்கியதைதான் என்ன?
எனினும் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயா தரப்பு கோரிய விஐபி அவசர முக்கியத்துவத்தை நிராகரித்து விட்டது. வரிசைப்படி வாருங்கள் என்று நெற்றியடியாக சொல்லியதுமே ராம் ஜேத்மாலினியின் மனதுக்குள் குருவி சொல்லியிருக்க வேண்டும் – ஏதோ தப்பு நடக்கப் போகிறதே என்று.
வரிசைப்படிதான் அம்மா வழக்கு விசாரிக்கப்பட இருக்கிறது என்ற செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் ஏன் அவர்கள் வரிசையை மீற முயன்றார்கள் என்று கேள்வி எழுப்பவில்லை. கியூ வரிசை எல்லாம் மக்களுக்குத்தான் என்பதால் அவர்களுக்கு அது ஒரு பிரச்சினை இல்லை.
ராம் ஜேத்மாலினி இந்த வயதிலும் பல்வேறு வழக்குகளின் சான்றுகளை எடுத்துக் கூறி அம்மாவை பிணையில் வெளியிட வலியுறுத்தினார். லாலு மீதான கால்நடை தீவன வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கினாலும் உச்சநீதிமன்றம் பிணையில் வெளியட்டதையெல்லாம் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் இந்த வழக்கின் பல்வேறு விவரங்களை எல்லாம் நீதிபதி குன்ஹா ஆழமாக பரிசீலிக்கவில்லை என்று குறிப்பிடவும் செய்தார்.
ஜெயா சட்டத்தை மதித்து நடப்பவர், பிணையில் வந்தால் எங்கேயும் தப்பி ஓட மாட்டார், இந்த வழக்கு நடைபெற்ற 18 ஆண்டுகளில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று அம்மாவின் நன்னடத்தைக்கு பட்டியல் போட்டார். ஆனால் வழக்கு ஏன் 18 ஆண்டுகள் நடைபெற்றது என்ற கேள்வியைக் கேட்டால் இதற்கு நேரெதிராகத்தான் பதில் சொல்ல முடியும். வழக்கறிஞரை மாற்றுவது, நீதிபதியை மாற்றுவது, தொட்டதுக்கெல்லாம் உச்சநீதிமன்றம் சென்று தடை பெறுவது என்று சட்டம் ஒரு இருட்டறை மட்டுமல்ல, அம்மாவின் விளையாட்டறையும் கூட என்று நீருபித்தவர் ஜெயா. இவர் சட்டத்தை மதித்து நடப்பவர் என்றால் அந்த சட்டமே விழுந்து விழுந்து சிரிக்கும்.
ஆரம்பத்தில் ராம் ஜேத்மாலினியின் வாதங்களை வேறு வழியின்றி எதிர்த்துப் பேசிய அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங், மதிய உணவுக்கு பிறகான அமர்வில் நிபந்தனையின் பேரில் பிணை வழங்கினால் ஆட்சேபமில்லை என்று ஆசை காட்டினார். இந்த ஆசைதான் பேராசையாக வெளியே வதந்தியாக மாறி, மஹாவிஷ்ணு, பிபிசி வரை அம்மாவுக்கு விடுதலை என்று அவசர அவசரமாக வெளியிடப்பட்டது.
காலையில் பேசும் போது ஜெயா வெளியே வந்தால் சாட்சிகளை கலைப்பார், தப்புவார் என்றெல்லாம் பேசிய பவானி சிங் மாலையில் மாற்றிப் பேசியது ஒன்றும் அதிசயமல்ல. ஏற்கனவே இவர் போங்காட்டம் ஆடும் போது நீதிமன்றம் அபராதம் விதித்து சந்தி சிரிக்க வைத்ததால் பவானி ரொம்ப மலிவாக நடக்க முடியவில்லை. கொஞ்சம் யோக்கியனாகவும் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டியிருந்தது. குற்றவாளி ஜெயாவுக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுவதற்கு முன்னரே பவானி சிங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது முக்கியம்.
இறுதியில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயாவை விடுதலை செய்வதற்கான முகாந்திரங்கள் எதுவும் இல்லை, ஊழல் என்பது அடிப்படை மனித உரிமைகளை மறுப்பது என்றெல்லாம் விளக்கி பிணையை மறுத்திருக்கிறது. மேலும் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை தடை செய்யக் கோரிய மனுக்களையும் ரத்து செய்திருக்கிறது.
இனி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என ஜெயா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு கூறியிருக்கிறது. ஊடகங்களில் இந்த பிணை மறுப்பு அநீதி என நாளையே சிறப்பு கட்டுரைகளை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
சென்னையில் உள்ள கன்னட மக்களை சிறை பிடிப்போம் என சுவரொட்டி போட்ட அதிமுக ரவுடிகள் இனி அடுத்த கட்டமாக என்ன ரவுடித்தனங்களை செய்யலாம் என்று ஆலோசிப்பார்கள். காவிரிப் பிரச்சினையின் போது கன்னட வெறியர்கள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் செய்தது போல இப்போதும் நடந்தால் அம்மாவின் ஊழல் வழக்கை இரு தேசிய இன மக்களின் மோதலாக மடைமாற்றி ஆதாயம் அடையலாம் எனும் அவர்களின் திட்டம் ஃசெல்ப் எடுக்கவில்லை.
தமிழகத்தில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து இனி பாக்கி ஒன்றுமில்லை என்று வந்தாலும் புதிய வன்முறை வெறியாட்டங்களை அம்மா ரவுடிக் கூட்டம் அரங்கேற்றம் செய்யும். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதாய் சீன் போடும் காவல்துறை இந்த வன்முறையை வேடிக்கை பார்த்து விட்டு எதிர்ப்போரை மட்டும் கைது செய்து உள்ளே தள்ளும். அதிமுக ரவுடித்தனத்தை கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்கே மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் தோழர்கள் தமிழகமெங்கும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.
பாசிச ஜெயா அங்கே சிறை வைக்கப்பட்டிருந்தாலும் அவரது பாசிச கும்பலின் ஆட்சி இங்கே சுதந்திரமாக நடமாடுகிறது. இதை சிறை பிடிக்காமல் தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லை.
செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய செயற்கை கோள் மங்கள்யான் குறித்து நினைவிருக்கலாம். இல்லை நினைவில் இருந்தே ஆக வேண்டும் என இந்திய ஊடகங்கள், இந்துமதவெறியர்கள் இதை மாபெரும் தேசிய சாதனையாக கருத்துப் பரப்பலில் திணித்திருந்தார்கள்.
மங்கள்யான் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ஒரு கேலிச் சித்திரத்தை வெளியிட்டிருந்தது. அந்த சித்திரத்தில் எலைட் ஸ்பேஸ் கிளப் (பணக்கார நாடுகளுக்கான விண்வெளி கழகம்) என்ற பெயரிட்ட அறையில் இரண்டு நவநாகரீக வெள்ளையின கனவான்கள் செய்தித்தாள் படிக்கிறார்கள். அந்த நாளிதழில் செவ்வாய்க்கு அனுப்பும் இந்திய திட்டம் எனும் தலைப்புச் செய்தி இருக்கிறது. அறையின் வெளியே ஒரு இந்திய விவசாயி மாட்டை கையில் பிடித்தபடி கதவை தட்டுகிறார். இதுதான் கேலிச்சித்திரம் கூறும் பொருள்.
செப்டம்பர் 28-ம் தேதி இதழில் இது வெளியானது. சிங்கப்பூரை சேர்ந்த ஹெங் கிம் சாங் என்ற ஓவியர் வரைந்த இந்த கேலிச்சித்திரத்திற்கு இனிமேல் விண்வெளி பயணங்கள் பணக்கார நாடுகளுக்கு மட்டுமல்ல ஏழை நாடுகளுக்கும் சாத்தியம் என்பதை சுட்டிக்காட்டுவதாகவே நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. உண்மையும் அதுதான். அதாவது கொஞ்சமாவது கார்ட்டூன்களை ரசிக்கும் அறிவு இருக்கும் எவரும் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்.
ஆனால் அமெரிக்காவிற்கு சென்று வாக்கப்பட்ட பல அம்பிகளுக்கு இந்த பொருள் புரியவில்லை. புரியவில்லை என்பதை விட பழைய பணக்காரர்கள் முன்னால் ஒரு புதுப் பணக்காரனுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மை அல்லது தனது நாட்டில் உள்ள ஏழைகள் மீதான வன்மம் இரண்டும் சேர்ந்து இந்த கேலிச்சித்திரத்தை எதிர்க்க வைத்திருக்கிறது.
அதை சாமர்த்தியமாக கேலிச்சித்திரத்தில் நிறவெறி இருப்பதாகவும், அதன் மூலம் நாடுகளுக்கிடையில் பிளவு ஏற்படுத்த முயல்வதாகவும் கூறி இந்திய அம்பிகள் மற்றும் அம்பிகளாக மாறும் பயணத்தில் உள்ள தம்பிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்பத்திரிகையின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் ஒவ்வொரு நிலைச்செய்தியின் மறுமொழிகளுக்கான இடத்தில் கூட்டமாக படையெடுத்து எதிர்ப்பை காட்டியுள்ளனர். அதிலும் மலையாள மொழியில் ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்தன.
ஆக அம்பிகளாகும் இலட்சியப் பயணத்தில் மலையாள ஃபாரின் சேட்டன்கள் முன்னணி வகிக்கின்றனர். தமிழோடு நெருக்கமான பிணைப்பில் உள்ள மலையாளம், சம்ஸ்கிருதமயமாகி தனித்துவத்தை இழந்தது போல மலையாள தேசமும், இந்துத்துவம் முன்வைக்கும் போலி தேசியப் பெருமிதத்தின் பரவசத்தில் உண்மைகளை பார்க்க மறுக்கிறது.
ஆண்ட்ரூ ரோசன்தால் – நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர்
எது எப்படியோ அம்பிகளின் படையெடுப்பிற்கு பின்னர் நியூயார்க் பத்திரிகையின் தலையங்கப் பக்கத்திற்கான ஆசிரியர் ஆண்ட்ரூ ரோசன்தால் தனது முகநூல் பக்கத்தில் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். பல வாசகர்களிடமிருந்து கண்டனங்கள் வரவே இந்த மன்னிப்பை கேட்பதவாகவும், ஓவியர் ஹெங் சர்வதேச விவகாரங்களை, வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் வரைவதில் வல்லவர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இருப்பினும் அம்பிகளுக்கு இது புரியாது என்பதால் அவர் தெரிவு செய்த ஓவியத்தால் புண்பட்ட வாசகர்களிடம் பத்திரிகை மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மற்றபடி ஓவியம் இந்தியா, அதன் மக்கள், அரசு ஆகியவற்றை தவறாக சித்தரிக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். அதாவது ஓவியம் தவறாக யாரையும் புண்படுத்தவில்லை என்றாலும் புண்படுத்தியதாக உணரும் முட்டாள்களிடம் மன்னிப்பு கேட்பதால் இந்த மன்னிப்பு உண்மையில் மன்னிப்பு அல்ல எனவும் கூறலாம்.
கேலிச்சித்திரத்தில் வட இந்திய விவசாயி போல உடையணிந்து தலைப்பாகை அணிந்திருக்கிறார் அந்த விவசாயி. சமீபத்திய இந்திய வளர்ச்சி பற்றி அமெரிக்கர்களுக்கு தெரியவில்லை என்று ட்விட்டரில் சிலர் கூறியிருக்கின்றனர். அதுவும் மோடி அமெரிக்காவில் இருக்கையில் இந்தப் படம் வெளியானது அவமானம் என்கிறார்கள் சிலர். இந்தியாவில் ஒரு விவசாயி இப்படித்தான் இருப்பார், இதுவே இந்தியாவின் தேசிய அடையாளம் என்பதையே இந்த அம்பிகள் ஏற்கவில்லை. ஏற்காததோடு அந்த உண்மையை அருவெறுப்பாகவும், இழிவாகவும் வன்மத்துடனும் பார்க்கிறார்கள்.
இந்தியா கிராமப்புறங்கள் நிறைந்த நாடு, விவசாயத்தை முதன்மையாக கொண்ட நாடு என்று ஒன்றாம் வகுப்பு முதல், முனைவர் ஆய்வு வரை உருப்போட்ட ஜென்மங்களுக்கு அதை ஒரு ஓவியத்தில் இந்தியாவின் வகை மாதிரியாக பார்க்கும் போது கோபம் வந்தால் என்ன பொருள்? இந்திய விவசாயிகளை இவர்கள் எவ்வளவு இழிவாகவும், மட்டமாகவும் பார்க்கிறார்கள் என்பது இதிலிருந்து வெளிப்படுகிறது. ஒருவேளை காந்தி படத்தை போடுவதாக இருந்தால் கூட கோட்டு சூட்டு போட்டுத்தான் வெளியிடவேண்டும் என்று இவர்கள் கேட்டாலும் கேட்க கூடும்.
காந்திய பக்தர்களே அப்படித்தான் கோட்டு சூட்டு போட்டு கல்யாணம் செய்யும் போது கோட்டு சூட்டு ஊரில் பிழைக்க போன அம்பிகள் வேட்டி, சட்டை, தலைப்பாகையை மட்டமாக பார்க்கத்தான் செய்வார்கள். இதில் சேப்பாக்கம் கிரிக்கெட் கிளப்பில் வேட்டி அணிந்த நீதிபதியை விட மறுத்த மேட்டுக்குடி வன்மமும் பொருத்தமாக இணைந்திருக்கிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த கேலிச்சித்திர ஓவியர் ஹெங் கிம் சாங்
இந்தியா என்றால் அங்கே இருக்கும் ஏழைகள், தொழிலாளிகள், விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் போன்றோர்தான் உண்மையான பிரதிநிதிகள் என்பதை மறுத்து ஷாப்பிங் மால்கள், மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், நவநாகரீக உடைகள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் இதர ஆடம்பரங்களத்தான் இவர்கள் ரோல் மாடல் காட்சிகளாக பார்க்கிறார்கள்.
மெரினா கடற்கரைக்கு காலை நடை வரும் கார் மனிதர்களுக்கு நொச்சிக் குப்பம் மீனவர்கள் அழுக்குருண்டைகளாக தெரிவது போல அமெரிக்க அம்பிகளுக்கும் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. பார்ப்பனியம் போற்றும் இந்திய ஞான மரபின் உள்ளொளிகளை விதந்தோதும் எழுத்தாளர் ஜெயமோகனும் கூட கேரள மீனவர்களை இத்தகைய குப்பை கூட மனிதர்களாகத்தான் அறம் பாடியிருக்கிறார். எழுத்தாளருக்கே இப்படி என்றால் அவர் வரிகளை படிக்கும் அமெரிக்க அம்பிகளுக்கு இந்திய ஏழைகள் மீது எவ்வளவு எகத்தாளம் இருக்கும்?
படத்தில் உள்ள நவநாகரீக வெள்ளையர்கள் மாடு மேய்க்கும் நாடெல்லாம் விண்வெளி ஆய்வுக்குள் வந்து விட்டால் என்ன செய்வது என்று இனவெறியை வெளிப்படுத்துகிறார்கள் என சிலர் விளக்கமளிக்க கூடும். அப்படிப் பார்த்தாலும் அது மேற்குலகின் மேல் உள்ள விமரிசனமாகத்தான் ஓவியர் வரைந்திருக்கிறாரே அன்றி அதில் இந்தியாவை இழிவு படுத்துவது எது? இப்படி பார்த்தால் சார்லி சாப்ளின் படங்களில் வரும் காட்சிகளில் ஏழைகள், வேலையற்ற இளஞர்கள், உதிரிகள் இழிவு படுத்தப்படுவதாக ஒருவர் கூறலாமே? உண்மையில் சாப்ளின் இத்தகைய எளிய மனிதர்களை அலைக்கழிக்கும் மேட்டுக்குடியினரைத்தானே கேலி செய்கிறார்?
இது புரியாதவனெல்லாம் அமெரிக்கா போய் என்ன கிழிக்கிறான் என்றே தெரியவில்லை.
முகநூலில் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. அச்சிடும் இதழிலும் மன்னிப்பு வெளியாக வேண்டும் என்கிறார் ஒரு முகநூல் அம்பி. நாசாவில் பணியாற்றுபவர்களே பலரும் இந்திய விஞ்ஞானிகள் தான் என்று அந்த பத்திரிகைக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்புகிறார் இன்னொருவர். பத்திரிகையின் இணைய பக்கத்தில் இருந்து அந்த கேலிச்சித்திரத்தை நீக்கும்படி பல முகநூல் பயன்பாட்டாளர்கள் இன்னமும் கோரி வருகின்றனர். நாங்கள் இன்னமும் மாடு மேய்த்துக் கொண்டிருக்கவில்லை என்று சிலர் எழுதியிருக்கின்றனர். சிலர் மாட்டுடன் செவ்வாய் பயணத்துக்கு தயாராக இருப்பதாக மாட்டுடன் தங்களது புகைப்படத்தைப் போட்டுள்ளனர். சரண்யா ஹரிதாஸ் என்ற பிளாக்கர் ‘எந்த ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானியும் இந்த விவசாயி போல டர்பன் உடை அணியவில்லை’ என்று காட்டாமாக வேறு சொல்லியிருக்கிறார்.
இதெல்லாம் சேம் சைடு கோல் என்று கூட இந்த என்ஆர்ஐ மோகத்திலுள்ள அம்பிகளுக்கு புரியவில்லை.
அமெரிக்கா நம்மை இழிவுபடுத்துகிறது என்றால் அந்த கோபம் போபால் விபத்தில் வந்திருக்க வேண்டும். அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் போது எதிர்த்திருக்க வேண்டும். ஈராக்கையும், ஆப்கானையும் குதறியிருக்கும் போது பேசியிருக்க வேண்டும். அப்போதெல்லாம் மேல் கீழ் வாய்களை மூடிக் கொண்டு இப்போது ஒரு விவசாயியின் உடையை பார்த்து வன்மத்துடன் கத்தினால் இவர்களை என்னவென்று அழைப்பது?
இந்த கார்ட்டூனில் இனவெறி இருப்பதாக பம்மாத்து காட்டுபவர்களுக்கு இந்தியாதான் தீண்டாமையின் தலைநகரம் என்ற உண்மை தெரியுமா? அது கயர்லாஞ்சியாக, திண்ணியமாக, கொடியன்குளமாக, பரமக்குடியாக அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் இனவெறி இருப்பதாக சொல்லி ஒரு அமெரிக்க பத்திரிக்கையை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் என்றால், அதுதான் காலந்தோறும் பார்ப்பனியம்!