படம் : ஓவியர் முகிலன்
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
புதிய ஜனநாயகம் அக்டோபர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள்
1. இதுதாண்டா அம்மா போலீசு!
போலீசு கொட்டடியில் சந்திரா என்ற ஏழைத்தாய் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெண்களின் பாதுகாப்புக்கு முதன்மையான எதிரி போலீசுதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
2. பிரம்மஸ்ரீ கிரிமினல்கள்
3. சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம்!
என்னதான் இருந்தாலும் சு.சாமி பார்ப்பனன் என்பதாலேயே, அவரது விபச்சாரத்தனங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு, அவர் அறிவார்ந்த அரசியல்வாதி போல பார்ப்பன ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறார்.
4. இடைத்தேர்தல் தோல்விகள் : மதவெறியைக் கைவிடுமா பா.ஜ.க.?
இடைத்தேர்தல் தோல்வி காரணமாக சங்கப் பரிவாரம் மதவெறியைக் கைவிட்டு விடுமா? அல்லது முதலாளித்துவ ஊடங்கள் சிபாரிசு செய்வதைப் போல வளர்ச்சியைச் சாதிக்கும் பொருட்டு மோடி அவர்களைத் தற்காலிகமாவேனும் “ஸ்விட்ச் ஆஃப்” செய்து வைப்பாரா? இரண்டும் நடக்கப் போவதில்லை.
5. மோடியின் நூறு நாள் ஆட்சி : சவடால்களே சாதனையாக….!
முந்தைய காங்கிரசு ஆட்சியின் ஜெராக்ஸ் காப்பிதான் மோடியின் ஆட்சி என்பதை மூடிமறைக்க, அவரது சவடால்களை அறிவார்ந்த கருத்துக்களாக ஊடகங்கள் ஜோடித்துக் காட்டுகின்றன.
6. பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க்காதல் : பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!
சமஸ்கிருதம்தான் தேசிய உணர்வின் அடிப்படை என்று கூறும் தருண் விஜய் என்ற பா.ஜ.க எம்.பி இன்னொருபுறம் தமிழ் ஆர்வலர் போலத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார். இதன் நோக்கமென்ன?
7. விசாரணைக் கைதிகள் விடுதலை : இது நீதித்துறை புரட்சியா?
இலட்சக்கணக்கான நிரபராதிகள் தண்டிக்கப் படுவதற்குக் காரணமே நீதிபதிகள்தான். நிரபராதிகளான ஏழைகளை வதைத்து கோடிக் கணக்கில் பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டமாகவே போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றன.
8. வறுமை… பட்டினி…. காசநோய் : இந்தியக் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயம்!
9. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொள்ளைக்கு நீதிமன்றத்தின் நல்லாசி!
தனியார் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பலின் பாக்கெட்டில்தான் அரசு, நீதிமன்றம், மருத்துவ கவுன்சில், சி.பி.ஐ ஆகியவை அடங்கிக் கிடக்கின்றன.
10. ஆம் ஆத்மி : பிறப்பு இரகசியம்!
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசாரா நிறுவனங்களின் குடிமைச் சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக் சத்தா கட்சி, இன்ன பிற அமைப்புகள்.
11. கேட்ஸ் பவுண்டேஷன் : மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!
இந்தியா உள்ளிட்ட ஏழை நாட்டு மக்களை, பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக மாற்றும் ஏஜெண்ட்தான் கேட்ஸ் பவுண்டேஷன்.
12. மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா?
புதிய ஜனநாயகம் அக்டோபர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு சுமார் 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.
பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது
இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 2
சட்டம் உருவாக்கிய இந்து மதம்
1955 -56-ல் இந்துக்களுக்கான உரிமையியல் சட்டத் தொகுப்புகள் நிறைவேற்றப்பட்டு விட்ட போதிலும் ஒரு மதம் என்ற முறையில் இந்து மதம் வரையறுக்கப்படாமலேயே இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால் இந்துக்களுக்கான சட்டம் தயார் நிலையில் இருந்தது. ஆனால் “யார் இந்து?” என்ற பிரச்சினை தீர்க்கப்படாமலேயே நீடித்தது.
இந்தக் கோமாளித்தனமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க ஒரு குயுக்தியான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டது.
“யார் இந்து?”
- யாருக்கெல்லாம் இந்துச் ‘சட்டத் தொகுப்பு’ பொருந்துமோ அவர்களெல்லாம் இந்துக்கள் .
- யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்?
யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தாதோ, அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் பொருந்தும் .
- யாருக்குப் பொருந்தாது ?
முசுலீம்கள் , யூதர்கள், பார்சிகள், கிறித்தவர்களுக்குப் பொருந்தாது.
- ஆகையினால் இவர்களைத் தவிர அனைவரும் சட்டப்படி இந்துக்களே ”.
இந்துச் சட்டத் தொகுப்பு (1955-56) மேற்கூறிய விளக்கத்தின் அடிப்படையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே , “இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் ஆகியோர் மதத்தால் இந்துக்களே. அந்த இந்து பெற்றோருக்குப் பிறந்தவர்கள் பிறப்பால் இந்துக்களே. முசுலீம், கிறித்தவ, யூத, பார்சி மதங்களைச் சாராத மற்றவர்கள் அனைவரும் கூட இந்துக்களே. இவர்கள் அனைவருக்கும் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்” என்றது உச்சநீதி மன்றம்.
பல்வேறு வழக்குகளில் முரண்பட்ட பல காரணங்களுக்காக “நாங்கள் இந்து இல்லை” என்று வாதாடியவர்களை மறுத்து அவர்கள் நெற்றியில் இந்துப்பட்டம் கட்டித் திருப்பியனுப்பியது உச்சநீதி மன்றம்.
“இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டு அதை நடைமுறையில் கடைப்பிடித்து, தான் ஒரு இந்து என்று அறிவித்துக் கொள்பவன் இந்துதான். அதே நேரத்தில் ஒருவன் நாத்திகனாகி விடுவதாலோ, இந்து மதக் கோட்பாடுகளைக் கைவிடுவதாலோ, மேலை நாகரீகத்தைப் பின்பற்றுவதாலோ, மாட்டுக்கறி தின்பதாலோ அவன் இந்து இல்லை என்று கூறிவிட முடியாது”, 1963-ல் அளித்த ஒரு தீர்ப்பில் உச்சநீதி மன்றம் இவ்வாறு குறிப்பிட்டது.
இந்துச் சட்டத் தொகுப்பிற்கு ஆதாரமாக விளங்கும் தரும சாத்திரங்கள் எதுவும் பிற மதத்தினர் இந்துவாக மதம் மாறுவதை அனுமதிக்கவில்லை. அவை வருணப் பிறப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கின்றன. பிற மதத்தினரை இந்துவாக மதம் மாற்ற தூய்மைப்படுத்தும் சடங்கு ஒன்றை ஆர்யசமாஜம் அறிமுகம் செய்தது. எனினும் இது தரும சாத்திரங்களால் அங்கீகரிக்கப் பட்டது அல்ல.
ஜேசுதாஸ் தீர்ப்பு!

1975 -ல் கேரள உயர்நீதி மன்றம் இப்பிரச்சினையில் புதிய தீர்ப்பு ஒன்றை அளித்தது;
“இந்துக்கள் அல்லாதார் உள்ளே வரக்கூடாது” என்ற அறிவிப்புப் பலகையைப் பல கோயில்களில் வாசகர்கள் கண்டிருக்கக் கூடும். இவ்விதியின் அடிப்படையில் பின்னணிப் பாடகர் ஜேசுதாஸ் குருவாயூர் கோயிலில் வழிபாடு செய்ய கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்தது. ஜேசுதாஸ் இதை எதிர்த்து வழக்கு தொடுத்தார். பிறப்பால் கத்தோலிக்க கிறித்தவரான அவர் “நான் இந்து மதத்தைப் பின்பற்றுபவன்” என்று நீதிமன்றத்தில் அறிவித்தார்.
“தான் இந்து மதத்தைப் பின்பற்றுபவன் என்று ஒருவர் அறிவிக்கும் பட்சத்தில், தீய உள்நோக்கங்கள் ஏதுமின்றி நல்ல எண்ணத்துடன் அவ்வறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர் இறைவன் குறித்த இந்துக் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொண்டவராகிறார். எனவே இந்துவாக மதம் மாறிவிட்டார் என்று பொருள்.”
கேரள உயர்நீதி மன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு மேல் பார்வைக்கு ‘அதி புரட்சிகரமானதாக’ த் தென்பட்டாலும், இந்துமத விரிவாக்கத்திற்குத் துணை செய்யும் சிக்கலில்லாத எளியதொரு சம்பிரதாயத்தை இது வகுத்துத் தந்துள்ளது என்பதே உண்மை.
‘தாய் மதத்திற்கு’ த் திரும்பிய ஜேசுதாஸிற்கு இந்துச் சட்டத் தொகுப்பு என்ன வருணத் தகுதியை வழங்கும்?
“கிறித்தவத்திலிருந்து இந்துமதத்திற்கு மீண்டும் மாறி வந்தவுடன், மறைந்திருந்த அவர்களது உண்மையான சாதி மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்” என்கிறது உச்சநீதி மன்றம். அவ்வாறு இந்துவாக மதம் மாறியவருடைய மூதாதையரின் சாதியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால் அவர்கள் இந்துச் சட்டத்தின் முன் சூத்திரர்களாகக் கருதப்படுவார்கள்.
இந்துச் சட்டத்தின் முரண்பாடுகள்
வலையை அகல விரித்து அகப்பட்டவர்களையெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பிற்குள் இழுத்துப் போடும் அரசியல் நோக்கத்திற்காக இந்துச் சட்டத் தொகுப்பில் பல சமரசங்கள் செய்து கொள்ளப்பட்டன. எடுத்துக்காட்டாக,
- தந்தை வழி வாரிசுரிமை மற்றும் கூட்டுக் குடும்பம் என்ற கோட்பாட்டையே இந்து சட்டம் பின்பற்றுகிறது. எனினும் கேரளத்தில் சில சமூகத்தினர் மத்தியில் நிலவும் ‘மருமக்கள் தாயம்’ மற்றும் ‘ அரிய சந்தானம்’ எனும் தாய்வழிக் குடும்ப முறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- அதேபோல, இந்துச் சட்டத்தால் தடை செய்யப்பட்ட மண உறவுகளில் (அதாவது சிறிய தந்தையின் மகனை அல்லது மகளை மணம் செய்யக்கூடாது என்பன போன்றவை) பழங்குடியினர் மற்றும் சில சமூகத்தினர் திருமணம் செய்வது நீண்டகால மரபாக இருப்பதால் அதுவும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
- கோவா மாநில இந்துக்களில் சில பிரிவினரிடையே நிலவும் இருதார மணமும் சட்டத்தால அங்கீகரிக்கட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் அவர்களுக்குச செல்லாது.
- அண்ணன் மறைவிற்குப் பின் அவரது மனைவியைத் தம்பி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஜாட் சாதியினரின் மரபும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் இங்கேயும் செல்லாது.
- கேரளத்து மாப்ளா முசுலீம்களும், சித்தூர் மாவட்ட கிறித்தவர்களில் சிலரும் (வன்னியர்கள்) வாரிசுரிமை குறித்த பிரச்சினையில் மட்டும் அவர்களது மரபுப்படி இன்றும் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ்தான் வருகின்றனர்.
தனது பண்பாட்டுக்கு எள்ளளவும் தொடர்பற்ற குலமரபுகளையும், பண்பாடுகளையும் இந்துச் சட்டத் தொகுப்பிற்குள் பார்ப்பனியம் ஏன் அனுமதித்தது என்ற கேள்வி இங்கே எழலாம். மரபுகள் மற்றும் பண்பாடுகள் விசயத்தில் பார்ப்பனியம் தனக்குள்ளேயே வட்டார ரீதியாகப் பிளவுபட்டிருந்தது . மேலும், பார்ப்பனியப் பண்பாட்டின் எல்லைக்கு வெளியே இருந்த பலதரப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியினரின் உட்குழுப் பண்பாட்டில் ‘வரம்பு’ மீறி தலையிடுவதன் மூலம் ‘இந்து ஒற்றுமை’ என்ற தனது அரசியல் நோக்கத்திற்குக் கேடு விளைவித்துக் கொள்ள இந்திய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை.
ஆனால் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மத்தியில் நிலவிவந்த ஜனநாயக பூர்வமான மரபுகளின் மீது, தான் கொண்டுள்ள வெறுப்பையும் அது மறைத்துக் கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக மக்கள் மத்தியில் நிலவி வந்த (இன்னமும் நிலவி வரும் ) சிக்கலில்லாத எளிய ‘மணவிலக்கு’ முறையை ஒழுக்கக் கேட்டின் அடிப்படையாகப் பார்ப்பனியம் கருதியது. மணவிலக்கிற்கு நீதிமனறங்களின் தயவை நாடி அலையவைப்பதன் மூலம் அவர்கள் மீது ‘நல்லொழுக்கத்தை ‘த் திணித்து விடலாம் என்றும் கருதியது. இந்த வகையில் தலையிட்டு அவர்களை இந்து மயமாக்க முயன்றது.
எனினும், மரபு என்ற விசயத்தில் தனது தலைமையை நேருக்கு நேர் எதிர்க்கின்ற எதையும் அனுமதிக்க பார்ப்பனியம் தயாராக இல்லை.
சுயமரியாதைத் திருமணம் இந்து மரபா?

தி.மு.க ஆட்சியில் 1969 -ல் சுய மரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு அந்த மண முறையின் கீழ் செய்யப்படும் திருமணம் பதிவு செய்யப்படாவிட்டாலும் செல்லும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. (சுயமரியாதைச் திருமணமும் இந்துச் சட்டத் தொகுப்பின் கீழ்தான் வருகிறது) ஆனால் இச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன் இத்திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கிடையாது.
1954-ல் இது தொடர்பான வழக்கு முதன் முதலாக நீதிமன்றத்தின் முன் வந்தது. “பார்ப்பனியச் சடங்குகளை மறுக்கும் இந்த மணமுறை 1925 முதலே கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் இதையும் ஒரு மரபாக அங்கீகரிக்க வேண்டும்” என சுயமரியாதை இயக்கத்தினர் வாதாடியிருக்கின்றனர். “இந்த மணமுறை 25 ஆண்டுகளாகத்தான் பழக்கத்திலிருக்கிறது ; எனவே இந்தப் பழக்கத்தை ஒரு மரபு என்று அங்கீகரிக்க முடியாது” என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
1966-ல் இதே விசயத்திற்காக இன்னொரு வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் இன்னும் ஒருபடி மேலே சென்றது. “நவீன காலத்தில் ஆளாளுக்கு ஒரு சட்டத்தையோ மரபையோ உருவாக்க முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மன்றம்தான் அதைச் செய்ய முடியும்” என்று தீர்ப்புளித்தது.
ஜேசுதாஸின் மதமாற்றத்திற்கு ஒரு புதிய ‘சம்பிரதாயத்தை’ (மரபை) உருவாக்கிய நீதிமன்றம் அதே உரிமையை மக்களுக்கு மறுத்தபோது அதற்காகச் சிறிதும் வெட்கப்படவில்லை. ஏனென்றால் அது இந்துச் சட்டத்தொகுப்பின் உணரச்சியின்படி நடந்து கொண்டது.
தரும சாத்திரங்களுக்கு விளக்கவுரை தரும் பார்ப்பனப் பண்டிதராக அமர்த்தப்பட்ட நீதிமன்றம், தனக்களிக்கப்பட்டுள்ள கடமையின் புனிதத்தையும் , அரசியல் நோக்கத்தையும் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தது எனபதை அதன் எண்ணிறந்த தீர்ப்புகள் பிரதிபலிக்கின்றன.
இந்துச் சட்டத் தொகுப்பின் ஜனநாயகத் தன்மை குறித்த மாயை கலைய வேண்டுமானால் அதன் உண்மை நிலை குறித்த சில விவரங்களையாவது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
‘பெண்ணுக்குத் தாய்வீடு நிரந்தரமல்ல’ என்ற கோட்பாட்டினடிப்படையில் பாரம்பரியச் சொத்தில் பெண்ணின் உரிமையை இந்து வாரிசுரிமைச் சட்டம் மறுக்கிறது. இந்த விசயத்தில் இசுலாமியச் சட்டம் கொஞ்சம் முற்போக்கானதென சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பெண்ணின் சொத்துரிமையைப் பறித்ததன் மூலம் இந்து நிலப்பிரபுக்கள் மற்றும் தரகு முதலாளிகளின் சொத்து பிளவுபடாமல் தடுக்கப்பட்டது. மேலும் இந்த பிளவுபடாத இந்து, கூட்டுக் குடும்பச் சொத்திற்கு பிற மதத்தினருக்கு இல்லாத விசேட வரிச் சலுகைகளும் தரப்பட்டுள்ளன.
முதல் மனைவி இருக்கும் போதே ஒரு கணவன் இரண்டாம் தாரமாக ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு, இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் செல்லும்போது பெண்ணுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இருப்பதில்லை. மணப்பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு மணமகன் வேள்வித் தீயைச் சுற்றி ஏழு அடி எடுத்து வைக்கும் ”சப்தபதி’ என்ற குறிப்பிட்ட சடங்கு நடைபெறவில்லை என்று ஒரு கணவன் நிரூபித்துவிட்டால், மற்றெல்லாச் சடங்களும் நடந்திருந்தாலும் அத்திருமணம் செல்லத்தக்கதல்ல என்று ஏராளமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அம்மியோ, அருந்ததியோ, புரோகிதனோ, தரகனோ, முப்பத்து முக்கோடி தேவர்களோ வந்து சாட்சி கூறியும் பயனில்லை. தலாக் என்று மூன்று முறை சொல்லி மணவிலக்குச் செய்யப்படும் இசுலாமியப் பெண்களுக்காக் கண்ணீர் சிந்தும் பார்ப்பன மதவெறியர்கள் இது பற்றி வாய் திறப்பதில்லை.
‘சப்தபதி நிரூபிக்கப்பட வேண்டியதில்லை’ என சமீபத்தில் தீர்ப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறிருந்தாலும், சாத்திர சம்பிரதாயங்களின் சந்துகளில் புகுந்து பெண்ணுக்கு அநீதி இழைக்க வழி சொல்லிக் கொடுத்த பார்ப்பனப் பண்டிதர்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடி விட்டார்கள்.
குடும்பத்தை நிர்க்கதியாகத் தவிக்கவிட்டு ஓடுபவன், அதே குற்றத்தை துறவறம் என்ற பெயரில் செய்தால் அதை அவனது மத உரிமையாக இந்துச் சட்டம் அங்கீகரிக்கிறது. அதனடிப்படையில் மணவிலக்கும் வழங்குகிறது.
1929-ல் பிரிட்டீஷாரால் கொண்டுவரப்பட்ட குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், குறைந்தபட்ச திருமண வயதாக பெண்களுக்கு -15, ஆண்களுக்கு- 18 என்ற நிர்ணயித்தது. 1978-ல் மீண்டும் ஒரு திருத்தத்தின் மூலம் இது பெண்களுக்கு -18, ஆண்களுக்கு -21 என்று உயர்த்தப்பட்டது.

எனினும் இந்தச் சட்டத்தை மீறி பத்து வயதுச் சிறுவனுக்கும் 5 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டு விட்டாலும் அதை ஏற்பாடு செய்தவர்களுக்கு மூன்று மாத தண்டனையோ 1000 ரூபாய் அபராதமோதான் விதிக்க முடியுமே தவிர, “அத்திருமணம் செல்லாது” என எந்த நீதிமன்றமும் அறிவிக்க முடியாது. மதச் சம்பிரதாயங்களால் உறுதி செய்யப்பட்ட ஒரு திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது என்பதே இந்த அணுகு முறைக்கான அடிப்படை.
இந்துத் திருமணச் சட்டத்தில் மொத்தம் 8 வகைத் திருமணங்கள் பற்றிக் கூறப்படுகின்றன. அவற்றின் பிரம்ம வகைப்பட்ட திருமணங்கள் மூன்று உயர் வர்ணத்தாருக்கும், அசுர வகைப்பட்ட திருமணங்கள் ‘சூத்திரர்’ க்கும் மனு நீதியால் அனுமதிக்கப் பட்டிருந்தன. பிரம்ம வகைப்பட்ட திருமணங்களை சூத்திரரும் நடத்தலாம் என்ற திருத்தம் பிரிட்டிஷ் ஆட்சியில்தான் அனுமதிக்கப்பட்டது.
பெண்ணுக்கும் அவள் வீட்டாருக்கும் பொருள் தந்து (பரிசம் ) பெண்ணை மண முடிப்பது அசுரத் திருமணம் என்றும், பெண்ணுடன் பொன்னையும் பொருளையும் மணமகனுக்குத் தானமாகக் கொடுப்பது (கன்னிகாதானம் ) பிரம்ம வகைப்பட்ட திருமணம் என்றும் மனுநீதி கூறுகிறது. இவை வெறுமனே பழைய ஏட்டுச் சுவடிகளில் இல்லை; இன்றும் இந்து திருமண சட்டத்தின் அடிப்படையாக உள்ளன. வரதட்சிணையை பார்ப்பன சாத்திரம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது; சட்டமோ அதைத் தடுப்பதாக முணுமுணுக்கிறது.
ஆகம விதிகளால் ஆளப்படும் கோயில்களில் பார்ப்பனரல்லாதாரும், பெண்களும் அர்ச்சகராக முடியாது என்ற நிலைமை இந்துச் சட்டத்தின் ஒரு அடிப்படையாக விளங்கும் மரபு என்பதனால் நியாயப்படுத்தப்படுகிறது; அரசியல் சட்டம் வழங்கும் மத உரிமையால் இதுவே பார்ப்பனர்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படுகிறது
காப்பாளராக இருக்கும் உரிமையைப் பெண்களுக்கு வழங்குதல், மண உறவிற்கு வெளியே பிறந்த குழந்தைகளின் உரிமைகள், சாதி மறுப்புத் திருமணங்கள் ஆகியவற்றில் இந்துச் சட்டத் தொகுப்பு பெரிதும் அநியாயமாக நடந்து கொள்கிறது என முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் போன்றோரே குற்றம் சாட்டுகின்றனர்.
பெண்ணினத்திற்கு எதிராகக் கடவுளும் ஆணும் இணைந்து அமைத்த கூட்டணியில் மதவேறுபாடே கிடையாது. இந்து, கிறித்தவ, இசுவாமிய, யூத, பார்சி மதச் சட்டங்கள் அனைத்துமே பெண்களுக்கு எதிரானவைதான். ஆனால் இவற்றில் இந்து மதம் மட்டும் தான் சாதி ஆதிக்கத்தையும் சேர்த்துக் தனது சட்டத்தால் புனிதப்படுத்துகிறது.
இந்துச் சட்டத்தைச் சீர்திருத்தியது பார்ப்பனச் சனாதனிகளா?
இந்துச் சட்டத்தின் பிற்போக்குத் தனங்கள் பல சீர்திருத்தப் பட்டுள்ளன என்பது உண்மைதான். ஆனால் அச்சீர்திருத்தங்கள் பார்ப்பனச் சனாதனிகளால் மனமுவந்து முன்மொழியப்பட்டவை அல்ல. வைப்பாட்டி வைத்துக் கொள்ளும் சட்டபூர்வ உரிமையைக் கூட 1955 வரை அவர்கள் தானாக முன்வந்து கைவிடத் தயாராக இல்லை.
இந்துச் சட்டத் தொகுப்பிற்காக தரும சாத்திரங்களின் ‘ காலத்துக் கொவ்வாத’ பகுதிகள் சிலவற்றில் மாற்றங்கள் முன்மொழியப் பட்டபோது, அதை எதிர்த்து பார்ப்பன சநாதனி ஒருவர் அங்கே எழுப்பிய ஆட்சேபமே இதற்குச் சான்று;
“தாங்கள் விரும்புவதை அவர்கள் நிறைவேற்றிக் கொள்ளட்டும். நாங்கள் நீதிமன்றங்களைத் தவிர்க்கவே முயல்வோம். ‘இந்துச் சட்ட மசோதா ‘ என்று அழைக்கிறார்களே அதைப் பொருத்தவரை நாங்கள் கூறுவதெல்லாம் இதுதான்; எதை வேண்டுமானாலும் சட்டமாக்கிக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து அதை ‘இந்துச் சட்டம்’ என்று மட்டும் அழைக்காதீர்கள் ஏனென்றால் அது இந்துச் சட்டமே அல்ல.”
அப்படியானால் சநாதனிகளின் விருப்பத்துக்கு எதிராகத்தான் இந்துச் சட்டத் தொகுப்பு உருவாக்கப்பட்டதா? இது சீர்திருத்தவாதிகளுக்குத் கிடைத்த வெற்றியா? என்ற கேள்விகள் எழலாம். உண்மையில் இது சீர்திருத்தவாதிகளின் வெற்றியுமல்ல, பார்ப்பனியத்தின் தோல்வியுமல்ல.
ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் விருப்பமே ஆளும் வர்க்கத்தின் பொது விருப்பமாக ஆகி விடுவதில்லை. பார்ப்பன வருண தருமத்தை அப்படியே திணிக்க விரும்பிய குருட்டுச் சநாதனிகளின் விருப்பம், ஆளும் வர்க்கங்களின் அன்றைய நோக்கம், நலன் மற்றும் தேவைக்கு உகந்ததாக இல்லை.
“இந்து மதத்தைப் புத்துருவாக்கம் செய்வது -இந்தியாவை ஒன்றுபடுத்துவது” என்ற தமது ஒருங்கிணைந்த லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள மேற்படி விருப்பத்தை ஆளும் வர்க்கங்கள் ‘ தியாகம் ‘செய்தன. அவ்வளவே.
சனாதனிகளின் தியாகம்!
இந்த ‘தியாகத்தை’ த் தான் தனது தீர்ப்பில் பாராட்டுகிறார் நீதிபதி குல்தீப் சிங். யாருடைய மன உணர்விலிருந்து இந்தப் பாராட்டுரையை நீதிபதி வழங்கியுள்ளார் என்று புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்தத் ‘தியாகங்களில்’ சிலவற்றை வாசகர்கள் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.
தீண்டாமைக்குத் தடை, தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவு, குழந்தைத் திருமணத் தடை, வரதட்சணைத் தடை, பலதாரமணத் தடை போன்ற இந்து மதக் கோட்காடுகளுக்கு எதிரான சட்டங்களை- தங்கள் மதவுணர்வுகளைப் பொருட்படுத்தாமல்- அனுமதித்தமைக்காகப் பார்ப்பன உயர்சாதி இந்துக்களுக்கு நன்றி கூறுகிறார் நீதிபதி.
ஆனால் உயர்சாதியினரும் ஆணாதிக்கவாதிகளும் ஜனநாயக உணர்வின்பாற்பட்டு இந்தச் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டனரென்று நீதிபதி குறிப்பிடவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காகத்தான் இந்தத் தியாகம் செய்யப்பட்டது என்ற உண்மையை நீதிபதி தெளிவாகவே கூறி இருக்கிறார்.
“அரசு, இந்திய ஆட்சிப்பரப்பு எங்கணும் ஒரு சீரான உரிமையியல் தொகுப்புச் சட்டம் குடிமக்களுக்கு உறுதியாகக் கிடைக்குமாறு பெருமுயற்சி செய்தல் வேண்டும்” – என்று கூறுகிறது இந்திய அரசியல் சட்டத்தின் 44- வது பிரிவு. (வழிகாட்டும் கோட்பாடு).
“விவகாரத்து மற்றும் ஜீவனாம்சம் பற்றிய பிரச்சினைகளில் எல்லா சமூகத்தினரையும் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் இந்திய ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதுதான் இந்த அரசியல் சட்டப் பிரிவின் நோக்கம்” என்று உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் பல இந்தச் சட்டப்பிரிவுக்கு விளக்கமளித்துள்ளன.
விவகாரத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சீரான விவாகரத்துச் சட்டத்தை ஒப்புக் கொள்ளாதவன் பிரிவினைவாதியா? இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கதையாக இருக்கிறதே என வாசகர்கள் நினைக்கலாம் .
இந்த முடிச்சை அவிழ்க்கும்போது தான் பாரதீய ஐனதாவின் ‘ஒரே நாடு, ஒரே மக்கள் , ஒரே சட்டம் ‘ என்ற முழக்கத்தின் முடிச்சும் அவிழும்.
(தொடரும் …)
முதல் பாகம் – இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 1
நோக்கியா மூடல் – மோடியின் மேக் இன் இந்தியா சாதனை !
பழைய சரக்கு புதிய மொந்தை. இது குப்தர் காலம் தொட்டு மக்களை ஏமாற்றப் பயன்படுத்தப்படும் ‘தொழில் நுட்பம்’. அதுவே மோடியின் பாஜக அரசு என்றால் மொந்தையைப் பற்றி நாற்பது விதமான பஞ்ச் டயலாக்குகளை தயார் செய்வார்கள். பிறகு அதை நால்வகை – அச்சு, காணொளி, ஒலி, வதந்தி – பிரச்சார கருவிகள் மூலம் திகட்டத் திகட்ட ஐம்புலன்களையும் ஆக்கிரமிப்பார்கள்.
எஸ்.வி.சேகரின் கடி காமடிக்கு சிரிப்பவர்கள் மோடியின் புது மொந்தை எஃபெக்ட்டுக்கு செவிசாய்க்க மாட்டார்களா என்ன?
மோடி பிரதமராகி செங்கோட்டையில் கொடியேற்றும் முதல் சுதந்திர தினம். வித்தியாசமாக என்ன செய்யலாம்? காவி கிச்சன் கேபினட் குழு யோசிக்கிறது. விளைவு “மேக் இன் இந்தியா”. “மேட் இன் இந்தியா”-வில் இங்கே தயாரிக்கப்பட்டது என்றால் மேக்கில் இங்கே தயாரிக்க வேண்டும் என்று பன்னாட்டு முதலாளிகளுக்கு கோரிக்கையாம். இதனால் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கொட்டோ கொட்டும் என்று திரைக்கதை வசனத்துடன் வெளியிட்டார்கள்.
ஏகாதிபத்தியங்களின் உலகமய ஆக்கிரமிப்பில் “இது இந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது” என்பது மூலதனம் காட்ட வேண்டிய சட்டபூர்வமான ஒரு வெற்று சடங்கு மட்டுமே. வேலை வாய்ப்போ இல்லை அந்த நாட்டின் பொருளாதார சுயசார்போ இதில் இல்லவே இல்லை. மாறாக அந்த நாட்டின் அனைத்து வளங்களும் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனத்தால் சுருட்டி அபகரிக்கப்படுவதே இந்த மேட் இன் சவடாலின் சூட்சுமம்.
என்னடா கம்யூனிஸ்டுகளின் வழக்கமான ஏகாதிபத்திய அச்சுறுத்தல் என்று சிலர் சலிக்கலாம். பரவாயில்லை இன்றோ நேற்றோ நீங்கள் பயன்படுத்தியிருக்கும் நோக்கியா செல்பேசியை எடுங்கள். மேட் இன் இந்தியா வாசகத்தை பெருமையுடன் பாருங்கள். அது மங்கள்யான் பெருமையாகவே கூட இருக்கட்டும். கூடவே மேக் இன் இந்தியாவையும் நினையுங்கள். பிறகு இனி வரும் செய்தியையும் படியுங்கள்.
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கவர்ச்சிகரமான பெயர்களின் ஒன்று நோக்கியா, இரண்டு ஹுண்டாய். செல்பேசி பயன்பாடு அத்தியாவசியமாக மாற்றப்பட்ட காலத்தில் நோக்கியாதான் அதன் குறியீடு.
நோக்கியா ஆலை இங்கே ஆரம்பித்த போது இந்த குறியீடு அதன் உச்சத்தை தொட்டது. “கனக்டிங் பீப்பிள்” விளம்பரங்களை பார்த்தவர்கள் அந்த கனெக்ஷன் நம்மூரிலேயே தயாரிக்கப்படுகிறதா என்று துள்ளிக் குதித்தார்கள்.
அப்பேற்பட்ட பரவசத்தை சல்லிசாக அளித்த நோக்கியா வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் செல்பேசி உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பலருக்கும் வேலை ‘வாய்ப்பளித்த’தாக போற்றப்பட்ட இந்த மேக் இன் இந்தியா, கில் இன் இந்தியாவாக மாறிப்போனது. ஏன்? அதுவும் மோடி பன்னாட்டு முதலாளிகளிடம் புதிய மொந்தை கோரிக்கை வைக்கும் நேரத்தில் பழைய சரக்கு நாறுவது ஏன்?
மேக் இன் இந்தியாவின் சூட்சுமமே இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதல்ல, இந்திய வளங்களைச் சுரண்டுவதுதான். 2006-ம் ஆண்டு துவங்கப்பட்ட நோக்கியா நிறுவனத்திற்காக மத்திய மாநில அரசுகள் அளித்த சலுகைகள் ஏராளம். மலிவு விலை நிலம், தடையில்லா மின்சாரம், பல வழிகளில் வரிச்சலுகை, இதர வசதிகள், தொழிலாளர் சட்டம் செல்லுபடியாகாத விதத்தில் ஏற்பாடுகள், குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள்…இவைதான் மக்களை ‘இணைத்த’ நோக்கியா நமக்கு வேலை வாய்ப்பளித்த லட்சணம்.
இதற்கு மேலும் பல்வேறு முறைகேடுகளோடு தொழில் செய்த நோக்கியா பல்லாயிரம் கோடி ரூபாய்களை அள்ளிச் சென்றது. அதிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய குறைந்த பட்ச வருமான வரியைக் கூட கட்டவில்லை.
உள்நாட்டு தேவைக்காக உற்பத்தி என்று அனுமதி வாங்கிய நோக்கியா அதை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஏமாற்றியது. அதாவது ஏற்றுமதிக்கான வரியை செலுத்த அது தயாரில்லை. அது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவிற்கும் கட்டுப்படவில்லை.
இடையில் நோக்கியா நிறுவனத்தை பில்கேட்சின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியது. வாங்கும் போதே வரி ஏமாற்றி வழக்கில் உள்ள சென்னை நிறுவனத்தை மட்டும் கையகப்படுத்தாமல் கவனமாக தவிர்த்து விட்டது. மாறாக, செல்பேசியை வாங்குவதாக மட்டும் சென்னை ஆலையுடன் ஒப்பந்தம் போட்டது. முறைகேடான வணிக உத்திகளில் பிரபலமான பில் கேட்ஸ்சுக்கு இதெல்லாம் ஜூஜூபி. பிறகு ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் கேள்வியின்றி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.
தற்போது இந்த ஆலையுடன் ஒப்பந்தம் செய்த மைக்ரோசாஃப்ட் அதை ரத்து செய்துவிட்டது. பிறகு? மிச்சமிருக்கும் 800 தொழிலாளிகளுக்கும் இனி வேலையில்லை.
நோக்கியாவை பில்கேட்ஸ் வாங்குவாராம். அதில் வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிய சென்னை ஆலையை மட்டும் வாங்காமல், உள் ஒப்பந்தம் போட்டு சரக்கை மட்டும் வாங்குவாராம். ஆனால் இருதரப்பும் நோக்கியா பேரை பயன்படுத்துமாம்.
பிறகு, நம்ம ஆலைக்கு வரி ஏய்ப்பு வழக்கில் பேரம் படியவில்லை என்று தெரிந்த பிறகு அந்த உள் ஒப்பந்தத்தை ரத்து செய்வாராம்.
கவனியுங்கள், ஒரு முதலாளிக்கு சிறு இழப்பும் ( சுரண்டுவதில் பாதிப்பு) வரக்கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் சட்டத்தை, தொழில் நடத்தும் அமைப்பு விதிகளை வடிவமைத்திருக்கிறார்கள்? திருடன் பிடிபடக்கூடாது, தண்டிக்கப்படக் கூடாது என்பதே சட்டங்களின் சாரம்! அதுதான் பங்குச் சந்தை, மேலாண்மை படிப்பு, ஆக்ஸ்போர்டு பல்கலை, உலக வங்கி, வளர்ச்சி, மோடி வித்தை என்று பல்வேறு வகைகளில் உலா வருகிறது.
முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் உலகமயத்தின் விளைவுகள் இதன்றி வேறென்ன? என்ரான் தொட்டு யூனியன் கார்பைடு பட்டு கோக் பெப்சியில் முழுகியது வரை எத்தனை எத்தனை எடுத்துக் காட்டுகள்?
மோடி அண்ட் கோவின் “மேக் இன் இந்தியா” பாட்டின் அறிமுக விழாவே எழவு வீடாக மாறிவிட்டது!
இது குறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நிச்சயமாக இது போன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்கப்படுத்துவோம். இது குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்த விவகாரமாகும். நாங்கள் இதன் மீது கவனம் செலுத்தி வருகிறோம்” என்று உறுதியளித்தார்.– (தி இந்து செய்தி)
இது போன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம் – பொருள் என்ன? வரி ஏய்ப்பு எனும் ஒரு சிக்கலில் பன்னாட்டு நிறுவனங்கள் பாதிக்காத வண்ணம் சட்ட திருத்தம், நீதிமன்ற நடைமுறைகளை மாற்றுவோம் என்பதன்றி வேறென்ன?
இல்லை இது வினவின் அபாண்டமான வியாக்கியானம் என்பார்களா? எனில் நிர்மலா சீதாராமன் என்ன சொல்லியிருக்க வேண்டும்? இங்கே தொழில் நடத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சட்டங்களை மதித்து முறையாக வரி செலுத்த வேண்டும் என்றுதானே? ஏன் சொல்லவில்லை?
இது குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்த விவகாரமாகும் என்று நிர்மலா கூறியிருப்பதிலேயே பொருள் தெளிவாக இருக்கிறது. இவர்களால் ஒரு நிறுவனத்தின் விவகாரத்தில் அதாவது மைக்ரோசாஃப்ட் மற்றும் நோக்கியாவின் திருட்டுக் கூட்டணி முறைகேடுகள் குறித்து ஒன்றும் கேட்ட முடியாது. கோழைத்தனத்தையும், துரோகத்தனத்தையும் வீரமாக சித்தரிப்பதில் பாஜக பாசிஸ்டுகள் கைதேர்ந்தவர்கள்.
ராமனின் கௌரவத்திற்காக சீதை தீக்குளித்தாள். அமைச்சர் சீதாராமனோ முழு இந்தியாவையும் தீக்குளிக்க சொல்கிறார்.
ஆம். மேக் இன் இந்தியாவின் பொருள் கில்லிங் இந்தியாதான். முன்னதை ஏற்பவர்கள் ‘பாரத் மாதாகி ஜெய்’ சொல்வார்கள். பின்னதை உணர்பவர்கள் இந்திய மக்களை காப்பாற்ற போருக்கு தயாராவார்கள்.
நீங்கள் எந்த அணி?
தினமலரில் பாசிச ஜெயாவை பிய்த்து உதறும் வாசகர்கள் !
ஜெயாவின் முதல் ஆட்சியில் துவங்கி இன்று வரை போயஸ் தோட்டத்தின் கோயாபல்ஸ்சாக ‘தொண்டு’ செய்து வருகிறது தினமலர். தற்போது மோடிக்கும் அதை அளித்து வருகிறது. மக்களின் நாடித்துடிப்பிற்கு எதிராக பொய்யுரைக்கும் தினமலரின் கைங்கைரியத்தில் அதன் வாசகர்கள் பலர் ராமசுப்பையர் உருவாக்க நினைத்த ராமராஜ்ஜியத்திற்கு எதிரான அறிவையும், உத்வேகத்தையும் பெற்றுவிட்டனர். தினமலரின் எதிர்மறை எழுத்து வாசகர்களிடம் நேர்மறை விளைவைத்தான் தோற்றுவித்திருக்கிறது. அந்த விதத்தில் தினமலர் தோற்று விட்டது.
இங்கே ஜெயா கைது குறித்து தினமலர் இணைய தளத்தின் செய்திகளில் மறுமொழியிட்ட வாசகர்களின் கருத்துக்களை தொகுத்து தருகிறோம். பாசிச ஜெயாவிற்கு எதிராக தமிழ் மக்கள் புத்தாக்கத்துடன் பேசும் இந்த கருத்துக்கள் ஒரு விதத்தில் கவிதையாகவும் இருக்கின்றன.
– வினவு
________________
Tamilan – Chennai, இந்தியா
தமிழக மக்களின் போராட்டத்தைப் பார்த்து கர்நாடக நீதிமன்றம் மிரண்டுபோய் தீர்ப்பு வழங்கியதாக குண்டு கல்யாணம் பெரிய சவுண்ட் விட்டார்…பெண்கள் குத்தாட்டம் போட்டனர்… கடேசியில் எல்லாம் புஸ்ஸாகி விட்டது… அதிக ஆட்டம் அந்த ஆண்டவனுக்கே தாங்கமுடியலை.. அதான் ஜாமீன் கிடைக்கவில்லை…
__________________
S.KUMAR – chennai, இந்தியா
மகிழ்ச்சிக்கு எவ்வளவு ரேட் ? சோகத்துக்கு எவ்வளவு ரேட் ?
___________________
SENTHIL KUMAR – MADURAI, இந்தியா
இப்புடி அழுவுராகலே இவுகல்லாம் ஆருன்னு கேட்டோம். விசாரிச்சதுல தெரிஞ்ச்சு செத்தவீட்ல கூலிக்கு அழுவுரவகலாம்.
Tiruvannamalai KULASEKARAN – AUSTRALIA
சுதர்சன ஓமம் நடத்தி்யதன் பலன் சூப்பர்
_____________________
selvarasu – k.kurichi
தி்ன்ன லட்டு எல்லாம் கக்கியாச்சா ?…..குத்தாட்டம் போட்டவளுங்க கொழுப்பு அடங்கிச்சா ?……அடங்காத அனகொண்டாவாச்சே !ஆடி அடங்கறது கொஞ்சம் சிரமம்தான் …….அட முட்டாள் அடிமைப்பட்டாளங்களா, போய் நாண்டுகிட்டு சாகவேண்டியதுதானே!
__________________
T.R.Radhakrishnan – Nagpur, இந்தியா
சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்,,,,நாங்க சிரித்துக் கொண்டே அழுகிறோம், அழுது கொண்டே சிரிக்கிறோம்……கொடுத்த காசுக்கு மேலே நவ ரசமும் காட்டுவோம்ல…..நாங்க வருங்கால கட்சி நிர்வாகிகள், மந்திரிகள்…..
____________________
Venkatesan Kuppusamy – Chennai,இந்தியா
சூட்டிங்கா… நான்கூட ஸ்டில்லோன்னு நினச்சேன்… சொல்லவே இல்லை……
_____________________
SURESH SUBBU – Delhi, இந்தியா
அஞ்சே நிமிஷத்துல ….. என் தாயெனும் கோவில காக்க மறந்துட்ட பாவியடி கிளியே ன்னு ஒப்பாரி வக்கிர அளவுக்கு கொண்டு வந்துட்டீங்களே….
____________________
Panchu Mani – chennai, இந்தியா
இவ்ளோ லட்ச கணக்கிலே பெண்கள் சாபம் கொடுக்கிறாங்களே. அம்மாவை உள்ள வச்சவங்க சந்ததிங்க எல்லாம் இந்த சாபத்திலேந்து பிழைக்கும் ன்னு நினைக்கறீங்க.
____________________
SURESH SUBBU – Delhi, இந்தியா
சாபம் குடுக்குறதுக்கு முன்னாடி குத்தாட்டம் போட்டாங்களே… அடிச்சாம் பாருயா அப்பாயின்மென்ட் ஆடர….. சூப்பர் டர்னிங் பாய்ன்ட்…. இதுக்கு தான் ஓவரா ஆட்டம் போட கூடாதுன்னு சொல்றது பஞ்சு மணி……. கூன்பாண்டிகள் இனி என்ன என்ன கூத்தெல்லாம் செய்யப்போரனுகளோ காமெடி ட்ரெக்லையே போனா பரவாயில்ல இனி சுப்ரீம் கோர்ட்டுல அப்பீல் பண்ணி விசாரணை வரைக்கும் செம ஜோக்க இருக்கும்
___________________
மதுரை விருமாண்டி – சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
உங்கம்மா சாராயத்தை ஊத்தி கெடுத்த கோடிக்கணக்கான குடும்பங்களில் உள்ள பெண்களின் கண்ணீர் தான்.. உப்பும் தான்.. இது டிரெய்லர் தாண்டி.. மெயின் பிக்சர் இன்னும் இருக்கு…..மலையளவு உப்புத் தின்னா, கடலளவு தண்ணி குடிக்கணும்…..
________________
நான்தான் – பன்னிமடை கோவை, இந்தியா
மூக்கறுத்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலமா வந்த மாதிரி ஆயிப்போச்சி அடிமைகள் நிலைமை .அடிமைப் பட்டாளத்தில் மூளை உள்ளவன் எவனும் இல்லை. மூளையோடு யோசிச்சு எவனாவது ஏதாவது சொன்னாத் தான் மம்மிக்கு பிடிக்காதே….
______________________
Reality – Sohar, ஓமன்
ஜாமீன் கொடுக்காதது எவ்வளவு நல்லது உள்ளே இருப்பவர்களுக்கு ? வெளிய வந்து எப்படி இன்னும் சொத்து சேர்க்கலாம்னு யோசிக்க டைம் கிடைச்சிருக்கு. இப்பவே வந்தாங்கன்னா அதுக்கு டைம் இருக்காதே..
____________________
Tiruvannamalai KULASEKARAN – AUSTRALIA ( Posted via: Dinamalar Android App )
அட குருமட்டை குண்டாந்தடியன்களா……. நடப்பது அதி்முக ஆட்சிதான் என்பதை மறந்துட்டீங்களா? மூடர்கூடமே, தன்வீட்டுக்கு எவனாவது கொள்ளி வைப்பானா ……..அடடடா இந்த மர மண்டைங்களுக்கும் குத்தாட்டம் போடற ……பு ……..பு ……புண்ணாக்குகளுக்கும் புரியவே மாட்டேங்குதே…….. ?……..தூத்தேறி!
________________________
அ தி மு க வழக்குறைஞர்கள், இப்படி அறை வேக்காடு போல் பேசுவது சமூகத்திற்கு கேடு. நீதிபதியின் தீர்ப்பு ஆதார பூர்வமாக வெளியிடப்படாமல் எப்படி ஜாமீன் கிடைத்துவிடும் என்று கூறமுடியும். வழக்குறைஞர்கள் 16 வருடங்களில் 160 வாய்தாக்களுக்கு பிறகு செய்த வாதங்களாகிய, பினாமி பெயரில் லாபம் சேர்க்கவில்லை, நகையை உருக்கி நகை செய்தார் என்பதெல்லாம் நகைச்சுவையாகவே உள்ளது. இதை விட பெரிய நகைச்சுவை அரசு வழக்குறைஞரின் பிற்பகுதி “ஆட்சேபனையின்மை ஒப்புதல்”. எத்தனை கோடி பேரம் பேசப்பட்டதோ “அம்மா” வுக்குத்தான் வெளிச்சம். தொண்டர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. நீங்கள்தான் எல்லாவற்றையும் செய்து கெட்ட விஷயங்களை மட்டும் அனுபவிப்பவர்கள். அ தி மு க முக்கிய புள்ளிகள் போராட்டத்திற்காக பணம் செலவு செய்தாகிவிட்டது அதை எப்படி வசூல் செய்வது என்ற கவலையில் அழுது கொண்டிருக்கின்றார்கள். சிலர் வீட்டில் உள்ள தங்கத்தை “வைத்து” விளையாடிவிட்டனர். “அம்மா” நாளை வந்தவுடன் சரி செய்து விடுவார் என்று ஊமை கண்ட கனவாகிவிட்டது. மாரடித்து அழுதால் ரூ2000/- + சேலை, ஜெயா டி வி க்காக கூட்டத்தில் அழுது பேசினால் ரூ1000/- என்று பலான செய்திகள் கதில் விழுகின்றன. டாஸ் மாக் மற்றும் பிரியானி கடைகள் விற்பனையை ஆய்வு செய்தால் நிலவரம் விளங்கும்.
______________________
M Narasimman Munusamy – Coimbatore,இந்தியா
2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் திரு எ ராஜா அடைக்கப்பட்ட போது செல்வி ஜெயலலிதா அவர்கள் சொன்னது என்னவென்றால் ராஜாவை விடக்கூடாது என்றார். அதே ஊழல் வழக்கில் சிக்கி உள்ள செல்வி ஜெயலலிதாவிற்கு மட்டும் ஏன் இந்த அவசரம். சட்டம் தனது கடமையை செய்யும். சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம்.
____________________
Tamizhmagan – Singapore, சிங்கப்பூர்
மற்ற குற்றவாளிகள் மம்மிஜியின் பினாமிகள் அல்ல.. சசிகலா மம்மிஜியின் உடன்பிறவா சகோதரி.. சுதாகரன் மம்மிஜியின் வயிற்றில் பிறக்காத ‘ரத்து’ ( மொதல்ல தத்து அப்பால ரத்து ) பிள்ளை.. இளவரசி மம்மிஜியின் உறன்பிறவா ஆசை அண்ணி.. மொத்தத்துல இவர்கள் மம்மிஜியின் பினாமிகள் அல்ல.. மம்மிஜியின் தலைமையிலான ‘மன்னார்குடி மாபியாவின் தன்னிகரில்லா தளபதிகள்.
____________________
வயதில் மூத்தவர் ஜாமீனில் வெளியே வந்தால்.. வயது குறைந்து இளமை பூத்து குலுங்குமா…இல்லை நோய்கள் தான் காணாமல் போய்விடுமா…வெளிய வந்தாலும் குற்றவாளி கைதி… உள்ள இருந்தாலும் குற்றவாளி கைதி… எருமை போடுகிற சாணியில் முன்னால வந்த சாணி என்ன பின்னால வந்த சாணி என்ன…. எல்லாமே ஒன்னு தான்னு ஜாமீன் குடுக்காம இருந்து இருக்கலாம்… ஆனால் ஜாமீன் கேக்குறதுக்கு வக்கீல் லாலு வீட்டு மாட்டு கொட்டகை வரை போய் இருக்கவேண்டாம்……
______________________
டேய் அப்ரசன்டேடிவ்களா.. …இது தீபாவளி நேரம்…. கைதிக்கு இது தலை தீபாவளி… மாமியார் ஊட்டுக்கு சசி கூட போய் இருக்காங்க….பரப்பன அக்ரஹாரத்து வாசல்ல பட்டரைய போட்டு முறுக்கு அதிரசம் எல்லாம் சுட்டு கொண்டு போய் குடுங்க…. சசிக்கு பல்வலி இருக்குறதுனால குலாப் ஜாமுன், ரசகுல்லா மாதிரி உறிஞ்சு சாப்பிடுர அயிட்டம் செஞ்சு குடுங்க… என்ன புரிஞ்சுதா…
_____________________
ரெண்டு பேரு வாதத்தை மட்டுமே கேட்டு, யாரு சிறப்பா வாதாடுறாங்களோ அவங்களுக்கு சார்பா தீர்ப்பு சொல்றதுக்கு இது என்ன சாலமன் பாப்பைய்யா தலைமையில் நடக்குற பட்டிமன்றமாய்யா? நீதிபதிக்குன்னு எந்த சொந்த கருத்தோ, நீதியை நிலைநாட்ட வேண்டிய தார்மீக கடமையோ இல்லையா? அரசு வக்கீல் ஆட்சேபிக்கலைன்னா, நீதிபதிகள் ஏன் எதுக்குன்னு யோசிக்க கூடாதா? என்ன நடந்துகிட்டு இருக்குன்னு புரிஞ்சிக்க மாட்டாங்களா? நீதிபதிகள் என்ன மம்மிஜி கட்சிகாரனுங்க மாதிரி கூமுட்டைகளா? வக்கீல்ன்ற பேருல ஒரு பொறம்போக்கு சொல்லுது ‘சுதாகரன் திருமணத்தை ஜெயலலிதா நடத்தலைன்னு’ அப்ப என்ன ..றதுக்கு 35 வயசான ஒரு ‘பச்சை குழந்தையை’ மம்மிஜி தத்தெடுத்தாங்களாம்? இன்னொருத்தன் ‘அந்த திருமணத்திற்கு பல கோடி செலவழிக்க பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லைன்னு’ வாதாடுறான். அவனை எதால அடிக்கிறது? ஒட்டுமொத்த நாடே பாத்து வாய் பொளந்து நின்னுச்சே.. எவன் அப்பன் வீட்டு காசுல இந்த ஆர்ப்பாட்டம் பண்றானுங்கன்னு கேட்டுச்சே.. கோடிக்கணக்கான பேரு இங்க பிச்சை எடுத்து இருக்குரானுங்க, அவனுங்க வயித்துல அடிச்சு ஆடம்பரம் பண்றீங்கலேடான்னு நாடே காரித்துப்புச்சே.. அது இந்த பொ.போ. வக்கீலுக்கு தெரியாதா? இதையெல்லாம் கேட்டுகிட்டு குற்றவாளிகள் நாலு பேரும் ‘உத்தம புத்திரர்கள்.. பத்தரை மாற்று தங்கங்கள்னு.. நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்னு’ கூவறதுக்கு நீதிபதிகள் என்ன இவனுங்க கட்சிகாரனுங்களை மாதிரி மூளை மழுங்கடிக்க பட்ட ஆயுட்கால அடிமைகளா?
__________________________
Reality – Sohar,ஓமன்
எல்லா பயப்புள்ளைகளுக்கும் ஒரே நினைப்பு…எல்ல நீதிபதிகளும் நம்ம பல கட்சி மன்னன் உதவாக்கரை செம்பு நாட்டாமை சரத் குமாரு மாதிரி தீர்ப்பு வருமுனு……
__________________
SURESH SUBBU – Delhi,இந்தியா
அக்காவும் தங்கையும் பெங்களூரு சிறையில் …. காலில் விழுந்து கிடந்த அடிமைகூட்டம் புன்னகையுடன் சிம்மாசனத்தில் …. வக்கீல் வண்டுமுருகன் களோ ஜாமீனை லாலுவின் மாட்டு தொழுவத்தில் சென்று வாங்கும் அளவுக்கு மிக பெரிய சாணி உருண்டைகள்….. இதற்கு இவர்களுக்கு ஒருநாளைக்கு 25 லட்சம் தண்டம் வேறு அழ வேண்டும்…இனி இந்த வண்டுமுருகன்கள் டெல்லிக்கு ஓட வேண்டுமா… தீபாவளிக்கு உள்ளேவா வெளியேவா…ஆனால் அதற்குள் ….. பலகாரம் சுட்டு குடுக்க தொண்டர்கள் என்ற காட்டுமிராண்டிகள் சிறை வாசலில் கடை விரிப்பார்களே என் கண்ணாளா….. எண்ணெய் தேய்த்து விட சசி அருகே இருக்கையில் எண்ணெய் செக்கை பரப்பன அக்ரஹாரத்தில் போட்டு எண்ணெய் எடுப்பார்களே என் பிராண நாதா … தீபாவளி குளியலுக்கு மகாமக குளம் இல்லை … ஆனால் சசியுடன் ஜலக்கிரீடை உண்டு…..ஐயஹோ என்ன செய்வேன்… தாயே இது என்ன சோதனை…..
________________
vasan pon – Chennai, இந்தியா
மிக சிறிய ஒரு வெள்ளைக்காரனின் படை எப்படி மிகப்பெரும் இந்திய மக்களை ஆட்சி செய்தது என்ற கேள்விக்கு பதில் இப்பொழுது ஜெயலலிதாவின் கைது மூலம் கிடைத்துள்ளது. அன்று வெள்ளை காரன் நம்மளை ஆட்சி செய்கிறான் என்ற உண்மையே நம் முன்னோர்களுக்கு தெரியாமல் இருந்தது. அதை அவர்களுக்கு விளக்கி புரியவைக்கவே பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது. இருந்தும் ஒரு சிலரே புரிந்து கொண்டு வெள்ளையனை எதிர்த்தார்கள். அவர்கள் போதிய ஆதரவின்றி வெள்ளை காரனால் கொல்லப்பட்டார்கள். இதே போல் தான் இன்றைய நெலைமை உள்ளது. இன்று நம்மை ஆட்சி செய்பவர்கள் பெரும் கொள்ளையர்கள் என்ற எண்ணமே நம் மக்களிடம் இல்லை. இவர்களால் தான் இந்திய மக்கள் ஊரு விட்டு ஊரு ஓடி பிழைப்பு நடத்துகிறார்கள், இவர்களால் தான் சாலைகள் சரி இல்லை , இவர்களால் தான் பல்கலை கழகங்கள் தரமிழந்து உள்ளன, இவர்களால் தான் பெரும்பாலான மக்கள் ஏழைகளாக உள்ளனர், இவர்களால் தான் நாம் இன்னும் அயல் நாட்டினை அண்ணாந்து பார்த்து கொண்டிருக்கிறோம், இவர்களால் தான் ஈழத்தில் நம் சகோதரர்கள் கொல்லப்பட்டார்கள் , இவர்களால் தான் பத்திரிகைகள் பொய் பேசுகின்றன, இவர்களால் தான் ஒழுக்கம் கெட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்கிற உண்மையே நம் மக்களுக்கு புரியவில்லை. நாட்டின் முன்னேற்றம் முக்கியம் என்ற எண்ணம் இல்லாமல் தமக்கு கிடைத்த (தம் பணத்தில் ) இலவசங்களை பெருமையாக சொல்லி கேவலமான அரசியல் வாதிகள் கைது செய்யப்படுவது எதிர்ப்பது நம் மக்களின் அறியாமையை காட்டுகிறது. கருணாநிதியின் சாதனை தான் ஜெயா. அவர் செய்த ஊழலின் காரணமாக ஆட்சியில் அமர்ந்தவர் தான் ஜெயா. ஜெயா வின் ஊழல் அட்டூழியம் அராஜகம் இவற்றின் காரணமாக வாய்ப்பு பெற்றவர் தான் கருணாநிதி. இவர்கள் இருவருமே தமிழர்களுக்கு தீங்கிளைதவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்காக பரிதாப படுவது வெட்கப்பட வேண்டிய செயல்.
_____________________
நான்தான் – பன்னிமடை கோவை, இந்தியா
இந்த ஜாமீன் வழக்கு ஒரு பதினெட்டு வருஷம் இழுக்கடிக்கப்பட்டா நல்லா இருக்கும். செரீனா கைது, சசிகலா கணவர் நடராசன் கைது, சுதாகரன் கைது, பாஸ்கரன் கைது, காடுவெட்டி குரு கைது, வீரபாண்டி ஆறுமுகம் கைது, ஆடிட்டர் கைது, வக்கீல் கைதுன்னு குண்டர் சட்டம் ன்னு சட்டத்தை கேவலமாக பயன்படுத்தியதுக்கு இப்போ அனுவவிக்குறார் 7402
___________________
ஊருல ஒரு நல்ல நீதிபதி இருந்தா உங்களுக்கெல்லாம் புடிக்காதே? எல்லோரும் நம்ம ரகுபதி மாதிரி கால்ல விழுந்து கும்பிட்டுட்டு தீர்ப்பு குடுத்தா, நீதி வென்றது, தர்மம் வென்றதுன்னு கூதாடுவிங்க….கர்மம்டா…..
___________________
diravida – chennai,இந்தியா
”சுதாகரன் பெரிய தொழில் அதிபர்.” – இதை கேட்டு ஜெயா கூட அவ்வளவு சோகத்திலேயும் வாய் விட்டு சிரித்து இருப்பார்.
________________
tamilselvan – london, யுனைடெட் கிங்டம்
ஒரு டிராபிக் போலீஸ் ஒருவனை சாலையில் சோதனை செய்கிறார் ….லைசென்ஸ் வைச்சி இருக்கியா ? வீட்டில் இருக்கு சார் …..இன்சுரன்ஸ் எடுத்து இருக்கியா….6 மாசம் முன்னாடியே எடுத்துட்டேன் சார் ….ஊது பாப்போம்…குடிச்சி இருக்கியான்னு தெரியனும்…குடிக்குற பழக்கமே இல்லே சார்…ஆனா ஊத மாட்டேன் சார் ………….இது தான் ஜெயலலிதா கேஸ் ….நிரபராதி என்றால்…எதுக்கு பேசிட்டு….டாகுமென்ட்ஸ் கொடுத்து….ஊதி காமிச்சிட்டு போக வேண்டியது தானே…..சொன்னதையே 18 வருஷமா சொல்லி கிட்டு….சின்ன புள்ள தனமா இல்லே…
_____________________
tamilselvan – london,யுனைடெட் கிங்டம்
பொய் வழக்கு என்றால்…அதை எதிர்க்கும் வல்லமை உங்கள் அம்மாவுக்கு இல்லையா ? 18 வருடங்கள் பொய் வழக்கை பார்த்தா 160 வாய்தா வாங்கினார் ? பொய் வழக்கை சந்திக்கும் திராணி இல்லையா ? ஒரு முதல்வரால் ஒரு பொய் வழக்கை எதிர்க்க முடியவில்லை என்றால்….ஒரு சராசரி குடிமகன் நிலை ? 18 வருடம் இழுத்தடித்து விட்டு இப்போது வயது ஆகிவிட்டது ஜாமீன் வேண்டும் என்று மனு……ஆக இறுதி வரை பொய் வழக்கு என்று சொல்லி கொண்டே காலத்தை ஓட்ட வேண்டியது தான் …
____________________
லாலு அவர்கள் ..ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு பற்றி கிண்டலாக வட நாட்டு செய்தி சானலுக்கு அளித்த பேட்டியில்….ஜெயலலிதா வைத்துள்ள ரூபாய் 42 லட்சம் மதிப்புள்ள 750 ஜோடி செருப்பின் மதிப்பு தான் என் சொத்தின் மதிப்பு என்று கூறினார்…அப்போது கடுங்கோபம் கொண்ட ஜெயலலிதா….. இன்று அதே லாலு வழக்கை மேற்கோள் காட்டி ஜாமீனுக்கு கையேந்தி நிற்கும் பரிதாப நிலையில்….
_____________________
Kasimani Baskaran – Singapore,சிங்கப்பூர்
வாழும் மனித தெய்வத்துக்கு இழைக்க பட்ட அநீதி காரணமாக நாளை திருப்பதி முதற்கொண்டு எல்லா தெய்வங்களின் கோவில்கள் கதவடைப்பு .. கிரணத்துக்கு மூடுவதற்க்கு இப்படி ஒரு காரணம் சொல்லி கூட பாமர மக்களை ஏமாத்துவாஙக…
___________________
Nava Mayam – New Delhi,இந்தியா
இவுங்க வழக்கையும் காப்பாத்திக்க தெரியலை , அப்பன் சுப்பனுக்கெல்லாம் கிடைக்கிற ஜாமீனும் வாங்க தெரியலை ….இவுங்கதான் காவிரிக்காகவும் , முல்லை பெரியாருக்கும் வாதிட்டு காவிரியையும் , முல்லை பெரியாரையும் மீட்டு தந்தாங்களாம் , இதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கு…இந்த கேசை எப்படி அன்பழகன் திறம்பட நடத்தினாரோ அதேபோல தான் காவேரியிலும் , முல்லை பெரியாரிலும் நீதி மன்றங்களில் திமுக ஒரு அஸ்திவாரத்தை உருவாக்கி வைத்தது… காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாயுடுச்சி..
__________________
tamilan – Chennai,யூ.எஸ்.ஏ
பெங்களூருல பல்பு வாங்கினது பத்தாதா… டில்லிக்கு வேற போய் வாங்கனுமா … எதுக்கு இந்த அவசரம்… அங்கயும் வாங்குனா… அப்புறம் 4 வருஷம் கண்டிப்பா கம்பி எண்ணனும்… பதறுன காரியம் செதரிரும்… சொன்னா கேளுங்க…. நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறதுன்னு முறுக்கிக்கிட்டு நின்னீங்கன்னா…மொத்தமா நக்கிட்டு போயிரும்… இல்லை அங்கபோயும் பல்பு வாங்குவேன் என்ன பந்தயம் ன்னு கேட்டீங்கன்னா…. ஒன்னும் பண்ண முடியாது…best of luck……
____________________
பாதாளம் வரைக்கும் பாயும்ன்னு அசால்ட்டா இருந்துட்டோமேப்பா… பயபுள்ளைக பெஙகளுரு கோர்ட்டுகளை யெல்லாம் அதுக்கு கீழே கட்டி வச்சிருப்பானுக போலயிருக்கே…
_____________________
திருச்சி அதிமுக காலிகளை எதிர்த்து ம.க.இ.க சமர் !
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு தண்டனை கிடைத்தவுடன் அ.தி.மு.க காலிகள் ஆங்காங்கே கலவரங்களில் ஈடுபட்டது நாம் அறிந்த ஒன்று. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தமது அடிமைத்தனத்தை வெளிக்கொணரும் வகையில் பேருந்து எரிப்பு, மிரட்டி கடையடைப்பு, உண்ணாவிரதம், பால்குடம் எடுப்பது, என்று பல்வேறு அடாவடிகளை செய்து வந்தனர். அப்படி செய்வதை ‘வரலாற்றில்’ பதிவு செய்தால்தான் நாளை ‘அம்மா’வின் கடைக்கண் அருள் கிடைக்கும் என்பதால் சுவரொட்டிகளை ஒட்டியும், பிளக்சை கட்டியும் மக்களை சித்திரவதை செய்து வந்தனர்.
இடையில் சிறையிலிருக்கும் அம்மா தொடர்ந்து தொலைக்காட்சி சானல்களை பார்த்து வருவதால் அடிமைகள் மற்றும் ரவுடிகளின் குத்தாட்டம் தாங்கவொண்ணாத வகையில் பெருகி வந்தது. இந்த லீலைகளில் தங்களது அம்மா (ஜெயா) மீதான பாசத்தையும், கருணாநிதி மீதான வெறுப்பையும் உமிழ்ந்தார்கள். கூடவே தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா அவர்களையும் நாலாந்தர கெட்ட வார்த்தைகளில் திட்டி தீர்த்தார்கள்.
இத்தருணத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக ஜெயா தண்டனையை ஆதரித்து தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, எதிர்கட்சிகள் முதல் ஜெயாவை 24மணி நேரமும் எதிர்க்க விரும்பும் தி.மு.க வரை எவரும் வாய் திறக்காத அந்த தருணத்தில் ம.க.இ.க சுவரொட்டிகள் மக்களை சிந்திக்கவும் தண்டனை சரி என்ற பார்வையையும் உண்டாக்கியது.
திருச்சியில் புரட்சிகர அமைப்புகளும்,சட்டக்கல்லூரி மாணவர்களும் ஒட்டிய சுவரொட்டிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. நிறைய பேர் வாழ்த்தியுள்ளனர். நீங்கள் மட்டும்தான் துணிச்சலுடன் எதிர்க்கிறீர்கள் என உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் மறுநாள் இரவு அனைத்து சுவரொட்டிகளையும் காவல்துறையினரும், அ.தி.மு.க ரவுடிகளும் கிழித்தெரிந்தனர். சுவரொட்டியிலுள்ள தொடர்பு எண்ணுக்கு போன் செய்த காவல்துறை, யார் போஸ்டர் ஒட்டியது? யாரை கேட்டு ஒட்டினீர்கள்? என்று அதிகாரத்துடன் கேட்டது. பதில் அளித்த தோழர் நிதானமாக ”நாங்கள்தான் ஒட்டினோம் போஸ்டர் ஒட்ட யாரைக் கேட்க வேண்டும்? என திருப்பி கேள்வி கேட்டார். உடனே திருச்சி போலீசு ”இல்ல சார், இந்த நேரத்தில இது ஏன் சார்! அ.தி.மு.க காரங்க உங்க மேல நடவடிக்கை எடுக்க சொல்றாங்க அதான்…. என்று கூறியது.
”மக்கள் மத்தியில் கலவரங்களை ஏற்படுத்தியும், நீதிபதியின் தீர்பை எதிர்த்து நீதிபதியையே கேவலமாக விமர்சிக்கும் அ.தி.மு.கவினரை முதலில் கைது செய்யுங்கள்” என தோழர் கூறவே ”சார் இப்ப அவங்க நடவடிக்கை எடுக்க சொல்றாங்க” என மீண்டும் காவல்துறை அதிகாரி தயங்க, ”நீங்க என்ன செய்யனுமோ செய்யுங்க, நாங்க என்ன செய்யறோம்னு பாருங்க” என தோழர் கூறியதும் ”சரிங்க சார்” என கூறி அழைப்பை துண்டித்தனர்.
இதே போல் பொன்மலை இரயில்வே பணிமனை டெக்னீசியனாக வேலை பார்த்து வரும் சேக் மகமூத் என்பவர் ஜெயலலிதாவிற்க்கு வழங்கிய தீர்ப்பு சரியானதுதான் என்றும் தீர்ப்பை வழங்கிய நீதிபதி குன்ஹா அவர்களை பாராட்டியும் சைக்கிள் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இன்னொருபுறம் இத்தீர்ப்பை கண்டு மக்கள் கொதித்து போய் உள்ளனர் என்றும் எந்த பண்டிகையையும் கொண்டாடாமல் துக்கத்தில் உள்ளனர் என்றும் ஜெயா குழும செய்தி ஊடகங்கள் வாந்தி எடுத்து வரும் நிலையில் மக்கள் வழக்கம் போல இயல்பாக தங்களது வேலைகளை பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, பக்ரீத் என தொடர்ந்து அவரவர் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டுதான் உள்ளனர்.
வரப்போகின்ற தீபாவளி பண்டிகைக்கு துணிவாங்க திருச்சி மெயின்காட் கேட், தெப்பக்குளம் பகுதிகளில் மக்கள் அலை வழக்கத்தைவிட அதிகமாகத்தான் தென்பட்டது. இவர்கள் ஜெயா டிவி மூலம் கூறும் கட்டுக் கதைகள் மக்களிடமே நகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் ஜெயாவை பகைத்துக் கொள்ள ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும், கார்ப்பரேட் தமிழ் ஊடகங்களும், தயாரில்லாத போது புரட்சிகர அமைப்புகள் துணிச்சலாக களத்தில் இறங்கியிருப்பது அவர்களின் போலி முகத்திரையை கிழிக்கும் வண்ணமாக அமைந்ததுள்ளது.
பின் குறிப்பு:
ஊழலை எதிர்ப்பதற்காகவென்றே ஒரு கட்சியை உருவாக்கிய அரவிந்த் கேஜ்ரிவாலையும் அவரது ஆம் ஆத்மி கட்சியையும் எங்கு தேடியும் காணவில்லை என்பது ஜெயா கைது எனும் காப்பியத்தின் காமடி டிராக். சட்டப்படி குறைந்தபட்ச தண்டனை பெற்றதற்கே சாமியாடும் ஊழல் ராணியின் கலவரத்தில் காணாமல் போன அவர்களை கண்டுபிடித்து உதவுமாறு தமிழக மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருச்சியை அசிங்கப்படுத்திய அதிமுக அம்மா ரவுடிகளின் சுவரொட்டிகள்
படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்.
அதிமுக ரவுடிகளை எதிர்த்து சுவரொட்டி இயக்கம்:
படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்…
மக்கள் பண்டிகைகளை கொண்டாடாமல் சோகமாக உள்ளதாக உளறும் ஜெயா டிவியின் பொய்களை திரைகிழிக்கும் படங்கள், மக்கள் கூட்டம் அலை மோதும் திருச்சி கடை வீதிகள்….படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்..
____________________________
செய்தி: ம.க.இ.க., திருச்சி கிளை
____________________________
ஜெயாவுக்கு பிணை மறுப்பு : ஊடக, அதிமுக அடிமைகள் அதிர்ச்சி
“தெய்வத்திற்கு மனிதன் தண்டனையா” எனும் தமிழ் சினிமா முதலாளிகள் வெளியிட்ட சுவரொட்டிதான் தற்போது அதிமுக வட்டாரத்தில் மிகவும் பிரபலம். இதை தமிழ் சினிமா படைப்பாளிகள் எப்படியோ ரூம் போட்டு டிஸ்கஷன் செய்து வெளியிட்டிருந்தாலும் அது சொல்ல வரும் பொருள் வெறும் ‘கற்பனை’ அல்ல.
ஆம். ஜெயலலிதா எனும் ‘அம்மாவின்’ நடவடிக்கைகளை இந்த நாட்டின் சட்டம், நீதிமன்றம், அரசு எதுவும் கட்டுப்படுத்த முடியாது என்பதோடு அம்மாதான் இவற்றை ஏதோ பார்த்து கட்டுப்படுத்துவார் அல்லது கருணை காட்டுவார். இது அதிமுக அடிமைகளின் மனநிலை மட்டுமல்ல அந்த ரவுடிக் கூட்டம் போடும் ஆணையும் ஆகும்.
இப்படித்தான் முழு தமிழகத்திலும் போலீசு ஆதரவுடன் இவர்கள் வன்முறையை செய்து வருகிறார்கள். இந்த கிரிமினல் கூட்டத்திற்க்கு தம்பிராஸ் – பிராமணர் சங்கம் துவங்கி, கல்வி-பேருந்துக் கொள்ளையர்கள் வரை பல்வேறு பங்காளிகள் ஆதரவு ஷோக்களையும் நடத்தி வருகின்றனர்.
இதற்கு மேல் நீதிபதி குன்ஹாவையும், கர்நாடக அரசையும், ஏன் கன்னட மக்களையும் வைது, திட்டி, மிரட்டி சுவரொட்டிகளையெல்லாம் வெளியிட்டு வருகிறார்கள். அனைத்திலும் ஊடும் இழை ஒன்றுதான். அம்மாவை பிணையில் வெளியிடாவிட்டால் நடப்பதே வேறு!
இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை ஜெயாவின் ஆதரவு அலையாக சித்தரித்து தமிழ் ஊடக முதலாளிகள் கவனமாக செய்திகளை தயாரித்து, வார்த்தைகளை தேடிப் போட்டு கருத்துக் கச்சேரிகளை செய்து வருகின்றனர். இவையெல்லாம் சேர்ந்து இன்றைய பிணை வழக்கின் எதிர்பார்ப்பை எகிற வைத்தன என்பதை விட எரிய வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
ஜெயாவுக்கு எல்லா வசதிகளையும் சிறையில் செய்து கொடுப்பதால் அதிமுக மற்றும் காங்கிரசு கட்சிகளிடையே நல்லுறவு மலருவதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டது. இது ஏதோ அரசியல் ஆய்வு என்று நினைத்தால் நீங்கள் ஏமாளி. எப்படியாவது அம்மாவுக்கு பெயில் கிடைத்தால்தான் மவுண்ட்ரோடு மஹாவிஷ்ணுவுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்பதால் எழுதப்பட்ட சாணக்கிய வார்த்தைகள்.
மஹாவிஷ்ணுவே இப்படி என்றால் தந்தி, தலைமுறை போன்ற லோக்கல் சாமிகளின் அடிமைத்தனத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இன்றைக்கு மதியம் அனைத்து தமிழ் ஊடக இணைய தளங்களிலும் ஜெயலலிதாவுக்கு நிபந்தனையின் பேரில் பிணை வழங்கப்பட்டது, அதிமுகவினர் கொண்டாட்டம் என்ற செய்தி முதலில் வெளியிடப்பட்டது. இதை உண்மை என நம்பி இலண்டன் வாழ் தமிழ் பிபிசி இணைய தளம் கூட அப்படியே காப்பி எடுத்து வெளியிட்டது.
பிறகு மக்கள் அந்த செய்திகளின் இணைப்பில் அமுக்கி பார்த்தால் பக்கங்களை காணவில்லை என்று பார்த்து குழம்பி போனார்கள். ஏன்? உண்மையில் ஜெயலலிதாவுக்கு பிணை மறுக்கப்பட்டிருக்கிறது. இதை கர்நாடக உயர்நீதிமன்றம் தெளிவாக கூறிய போதும் இந்த நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்ட ஊடக முதலாளிகள் மாற்றி பேசியது ஏன்?
எப்படியும் அம்மாவுக்கு பிணை கிடைக்கும், கிடைக்க வேண்டும், கிடைத்தே ஆகும் என்பதே இவர்களின் முடிவு. ஆகவே நீதிமன்றத்தில் ஏதோ சிறு அறிகுறி தெரிந்ததை வைத்தே பிணை என்று கொளுத்திப் போட்டு விட்டார்கள். இவர்கள் கி போர்டில் கொளுத்திய போது அதிமுக ரவுடிகள் பரப்பன அக்ஹரகார வளாகத்தில் சிவகாசி வெடிகளை போட்டு கொண்டாடினார்கள்.
பிறகு மழை பெய்யாமலே வெடிகளும் வார்த்தைகளும் நமத்துப் போய்விட்டன. அதன் பிறகு ஊடக இணைய தளங்களில் ஒன்றுமே நடக்காதது போல, முதலில் பிணை என்று செய்திகள் வந்தன, பிறகுதான் நீதிபதியின் உத்திரவு கிடைத்தது என்று நாங்களெல்லாம் யோக்கியனாக்கும் என்று மேக்கப் போடாமலேயே வேடத்தை மாற்றினார்கள். இந்தக் கூத்துக்கள் காட்டுவது என்ன?
முதலில் சொன்னது போல இந்த சட்டம், நீதி அனைத்தும் அம்மாவுக்கு பொருந்தாது. கல்விக் கொள்ளையர்களும், ஆம்னி பேருந்துக் கொள்ளையர்களும், ஊடகக் கொள்ளையர்களும் ஏக மனதாகவே அம்மாவை ஆதரித்து பேசுகிறார்கள், வேலை நிறுத்தம் செய்கிறார்கள், உண்ணாவிரதம் நடத்துகிறார்கள் என்றால் அம்மாவின் ஆட்சி யாருக்கானது?
ஏழைகளுக்கு – அதுவும் எல்லா ஏழைகளுக்கும் அல்ல – ஒரு ரூபாய் இட்டலியை கொடுத்து விட்டு சுயநிதிக் கொள்ளையர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் தமிழகத்தை கொள்ளையடிக்கலாம் என்றால் அவர்கள் ஏன் அம்மாவிற்கு போராட மாட்டார்கள்?
எங்கே பிராமணன் என்று சோ எழுதிய தொடரை வைத்து இலட்சியவாத பார்ப்பனர்களை அடிப்படையே இல்லாமல் பேசி அழகு பார்த்த பிராமண சங்கம் இன்று பச்சையாக பாசிச ஜெயாவின் கொள்ளையை ஆதரிக்கிறது என்றால் அதுதானே இலக்கண சுத்தமான பார்ப்பனியம்!
இன்று பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் வரிசைப்படி 72வது எண்ணில் இருந்த ஜெயாவின் பிணை கோரும் வழக்கை முதலிலேயே விசாரிக்க வேண்டும் என்று ஜெயா தரப்பு கோரியது. காரணம் தெய்வத்தின் வழக்கை காத்திருந்து விசாரிக்க கூடாதாம். இது மிகவும் அவசரமான வழக்கு என்றெல்லாம் அவர்கள் முழங்கினார்கள். மக்கள் சொத்தை கொள்ளையடித்த ஒரு தலைவியின் பிணை கோரும் வழக்கு மிகவும் அவசரம் வாய்ந்தது என்றால் இதில் எதய்யா அவசரம்? ஊழல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் அவரசம் காட்டினால் அதை ஏற்கலாம். மாறாக அதை ஆதரிப்பதே அரசியல் அவசரம் என்றால் அந்த அரசியலின் யோக்கியதைதான் என்ன?
எனினும் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயா தரப்பு கோரிய விஐபி அவசர முக்கியத்துவத்தை நிராகரித்து விட்டது. வரிசைப்படி வாருங்கள் என்று நெற்றியடியாக சொல்லியதுமே ராம் ஜேத்மாலினியின் மனதுக்குள் குருவி சொல்லியிருக்க வேண்டும் – ஏதோ தப்பு நடக்கப் போகிறதே என்று.
வரிசைப்படிதான் அம்மா வழக்கு விசாரிக்கப்பட இருக்கிறது என்ற செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் ஏன் அவர்கள் வரிசையை மீற முயன்றார்கள் என்று கேள்வி எழுப்பவில்லை. கியூ வரிசை எல்லாம் மக்களுக்குத்தான் என்பதால் அவர்களுக்கு அது ஒரு பிரச்சினை இல்லை.
ராம் ஜேத்மாலினி இந்த வயதிலும் பல்வேறு வழக்குகளின் சான்றுகளை எடுத்துக் கூறி அம்மாவை பிணையில் வெளியிட வலியுறுத்தினார். லாலு மீதான கால்நடை தீவன வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கினாலும் உச்சநீதிமன்றம் பிணையில் வெளியட்டதையெல்லாம் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் இந்த வழக்கின் பல்வேறு விவரங்களை எல்லாம் நீதிபதி குன்ஹா ஆழமாக பரிசீலிக்கவில்லை என்று குறிப்பிடவும் செய்தார்.
ஜெயா சட்டத்தை மதித்து நடப்பவர், பிணையில் வந்தால் எங்கேயும் தப்பி ஓட மாட்டார், இந்த வழக்கு நடைபெற்ற 18 ஆண்டுகளில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று அம்மாவின் நன்னடத்தைக்கு பட்டியல் போட்டார். ஆனால் வழக்கு ஏன் 18 ஆண்டுகள் நடைபெற்றது என்ற கேள்வியைக் கேட்டால் இதற்கு நேரெதிராகத்தான் பதில் சொல்ல முடியும். வழக்கறிஞரை மாற்றுவது, நீதிபதியை மாற்றுவது, தொட்டதுக்கெல்லாம் உச்சநீதிமன்றம் சென்று தடை பெறுவது என்று சட்டம் ஒரு இருட்டறை மட்டுமல்ல, அம்மாவின் விளையாட்டறையும் கூட என்று நீருபித்தவர் ஜெயா. இவர் சட்டத்தை மதித்து நடப்பவர் என்றால் அந்த சட்டமே விழுந்து விழுந்து சிரிக்கும்.
ஆரம்பத்தில் ராம் ஜேத்மாலினியின் வாதங்களை வேறு வழியின்றி எதிர்த்துப் பேசிய அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங், மதிய உணவுக்கு பிறகான அமர்வில் நிபந்தனையின் பேரில் பிணை வழங்கினால் ஆட்சேபமில்லை என்று ஆசை காட்டினார். இந்த ஆசைதான் பேராசையாக வெளியே வதந்தியாக மாறி, மஹாவிஷ்ணு, பிபிசி வரை அம்மாவுக்கு விடுதலை என்று அவசர அவசரமாக வெளியிடப்பட்டது.
காலையில் பேசும் போது ஜெயா வெளியே வந்தால் சாட்சிகளை கலைப்பார், தப்புவார் என்றெல்லாம் பேசிய பவானி சிங் மாலையில் மாற்றிப் பேசியது ஒன்றும் அதிசயமல்ல. ஏற்கனவே இவர் போங்காட்டம் ஆடும் போது நீதிமன்றம் அபராதம் விதித்து சந்தி சிரிக்க வைத்ததால் பவானி ரொம்ப மலிவாக நடக்க முடியவில்லை. கொஞ்சம் யோக்கியனாகவும் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டியிருந்தது. குற்றவாளி ஜெயாவுக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுவதற்கு முன்னரே பவானி சிங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது முக்கியம்.
இறுதியில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயாவை விடுதலை செய்வதற்கான முகாந்திரங்கள் எதுவும் இல்லை, ஊழல் என்பது அடிப்படை மனித உரிமைகளை மறுப்பது என்றெல்லாம் விளக்கி பிணையை மறுத்திருக்கிறது. மேலும் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை தடை செய்யக் கோரிய மனுக்களையும் ரத்து செய்திருக்கிறது.
இனி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என ஜெயா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு கூறியிருக்கிறது. ஊடகங்களில் இந்த பிணை மறுப்பு அநீதி என நாளையே சிறப்பு கட்டுரைகளை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
சென்னையில் உள்ள கன்னட மக்களை சிறை பிடிப்போம் என சுவரொட்டி போட்ட அதிமுக ரவுடிகள் இனி அடுத்த கட்டமாக என்ன ரவுடித்தனங்களை செய்யலாம் என்று ஆலோசிப்பார்கள். காவிரிப் பிரச்சினையின் போது கன்னட வெறியர்கள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் செய்தது போல இப்போதும் நடந்தால் அம்மாவின் ஊழல் வழக்கை இரு தேசிய இன மக்களின் மோதலாக மடைமாற்றி ஆதாயம் அடையலாம் எனும் அவர்களின் திட்டம் ஃசெல்ப் எடுக்கவில்லை.
தமிழகத்தில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து இனி பாக்கி ஒன்றுமில்லை என்று வந்தாலும் புதிய வன்முறை வெறியாட்டங்களை அம்மா ரவுடிக் கூட்டம் அரங்கேற்றம் செய்யும். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதாய் சீன் போடும் காவல்துறை இந்த வன்முறையை வேடிக்கை பார்த்து விட்டு எதிர்ப்போரை மட்டும் கைது செய்து உள்ளே தள்ளும். அதிமுக ரவுடித்தனத்தை கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்கே மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் தோழர்கள் தமிழகமெங்கும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.
பாசிச ஜெயா அங்கே சிறை வைக்கப்பட்டிருந்தாலும் அவரது பாசிச கும்பலின் ஆட்சி இங்கே சுதந்திரமாக நடமாடுகிறது. இதை சிறை பிடிக்காமல் தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லை.
நியூயார்க் டைம்ஸ் கேலிச்சித்திரத்தில் என்னடா தவறு ?
செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய செயற்கை கோள் மங்கள்யான் குறித்து நினைவிருக்கலாம். இல்லை நினைவில் இருந்தே ஆக வேண்டும் என இந்திய ஊடகங்கள், இந்துமதவெறியர்கள் இதை மாபெரும் தேசிய சாதனையாக கருத்துப் பரப்பலில் திணித்திருந்தார்கள்.
மங்கள்யான் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ஒரு கேலிச் சித்திரத்தை வெளியிட்டிருந்தது. அந்த சித்திரத்தில் எலைட் ஸ்பேஸ் கிளப் (பணக்கார நாடுகளுக்கான விண்வெளி கழகம்) என்ற பெயரிட்ட அறையில் இரண்டு நவநாகரீக வெள்ளையின கனவான்கள் செய்தித்தாள் படிக்கிறார்கள். அந்த நாளிதழில் செவ்வாய்க்கு அனுப்பும் இந்திய திட்டம் எனும் தலைப்புச் செய்தி இருக்கிறது. அறையின் வெளியே ஒரு இந்திய விவசாயி மாட்டை கையில் பிடித்தபடி கதவை தட்டுகிறார். இதுதான் கேலிச்சித்திரம் கூறும் பொருள்.
செப்டம்பர் 28-ம் தேதி இதழில் இது வெளியானது. சிங்கப்பூரை சேர்ந்த ஹெங் கிம் சாங் என்ற ஓவியர் வரைந்த இந்த கேலிச்சித்திரத்திற்கு இனிமேல் விண்வெளி பயணங்கள் பணக்கார நாடுகளுக்கு மட்டுமல்ல ஏழை நாடுகளுக்கும் சாத்தியம் என்பதை சுட்டிக்காட்டுவதாகவே நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. உண்மையும் அதுதான். அதாவது கொஞ்சமாவது கார்ட்டூன்களை ரசிக்கும் அறிவு இருக்கும் எவரும் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்.
ஆனால் அமெரிக்காவிற்கு சென்று வாக்கப்பட்ட பல அம்பிகளுக்கு இந்த பொருள் புரியவில்லை. புரியவில்லை என்பதை விட பழைய பணக்காரர்கள் முன்னால் ஒரு புதுப் பணக்காரனுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மை அல்லது தனது நாட்டில் உள்ள ஏழைகள் மீதான வன்மம் இரண்டும் சேர்ந்து இந்த கேலிச்சித்திரத்தை எதிர்க்க வைத்திருக்கிறது.
அதை சாமர்த்தியமாக கேலிச்சித்திரத்தில் நிறவெறி இருப்பதாகவும், அதன் மூலம் நாடுகளுக்கிடையில் பிளவு ஏற்படுத்த முயல்வதாகவும் கூறி இந்திய அம்பிகள் மற்றும் அம்பிகளாக மாறும் பயணத்தில் உள்ள தம்பிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்பத்திரிகையின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் ஒவ்வொரு நிலைச்செய்தியின் மறுமொழிகளுக்கான இடத்தில் கூட்டமாக படையெடுத்து எதிர்ப்பை காட்டியுள்ளனர். அதிலும் மலையாள மொழியில் ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்தன.
ஆக அம்பிகளாகும் இலட்சியப் பயணத்தில் மலையாள ஃபாரின் சேட்டன்கள் முன்னணி வகிக்கின்றனர். தமிழோடு நெருக்கமான பிணைப்பில் உள்ள மலையாளம், சம்ஸ்கிருதமயமாகி தனித்துவத்தை இழந்தது போல மலையாள தேசமும், இந்துத்துவம் முன்வைக்கும் போலி தேசியப் பெருமிதத்தின் பரவசத்தில் உண்மைகளை பார்க்க மறுக்கிறது.

எது எப்படியோ அம்பிகளின் படையெடுப்பிற்கு பின்னர் நியூயார்க் பத்திரிகையின் தலையங்கப் பக்கத்திற்கான ஆசிரியர் ஆண்ட்ரூ ரோசன்தால் தனது முகநூல் பக்கத்தில் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். பல வாசகர்களிடமிருந்து கண்டனங்கள் வரவே இந்த மன்னிப்பை கேட்பதவாகவும், ஓவியர் ஹெங் சர்வதேச விவகாரங்களை, வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் வரைவதில் வல்லவர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இருப்பினும் அம்பிகளுக்கு இது புரியாது என்பதால் அவர் தெரிவு செய்த ஓவியத்தால் புண்பட்ட வாசகர்களிடம் பத்திரிகை மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மற்றபடி ஓவியம் இந்தியா, அதன் மக்கள், அரசு ஆகியவற்றை தவறாக சித்தரிக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். அதாவது ஓவியம் தவறாக யாரையும் புண்படுத்தவில்லை என்றாலும் புண்படுத்தியதாக உணரும் முட்டாள்களிடம் மன்னிப்பு கேட்பதால் இந்த மன்னிப்பு உண்மையில் மன்னிப்பு அல்ல எனவும் கூறலாம்.
கேலிச்சித்திரத்தில் வட இந்திய விவசாயி போல உடையணிந்து தலைப்பாகை அணிந்திருக்கிறார் அந்த விவசாயி. சமீபத்திய இந்திய வளர்ச்சி பற்றி அமெரிக்கர்களுக்கு தெரியவில்லை என்று ட்விட்டரில் சிலர் கூறியிருக்கின்றனர். அதுவும் மோடி அமெரிக்காவில் இருக்கையில் இந்தப் படம் வெளியானது அவமானம் என்கிறார்கள் சிலர். இந்தியாவில் ஒரு விவசாயி இப்படித்தான் இருப்பார், இதுவே இந்தியாவின் தேசிய அடையாளம் என்பதையே இந்த அம்பிகள் ஏற்கவில்லை. ஏற்காததோடு அந்த உண்மையை அருவெறுப்பாகவும், இழிவாகவும் வன்மத்துடனும் பார்க்கிறார்கள்.
இந்தியா கிராமப்புறங்கள் நிறைந்த நாடு, விவசாயத்தை முதன்மையாக கொண்ட நாடு என்று ஒன்றாம் வகுப்பு முதல், முனைவர் ஆய்வு வரை உருப்போட்ட ஜென்மங்களுக்கு அதை ஒரு ஓவியத்தில் இந்தியாவின் வகை மாதிரியாக பார்க்கும் போது கோபம் வந்தால் என்ன பொருள்? இந்திய விவசாயிகளை இவர்கள் எவ்வளவு இழிவாகவும், மட்டமாகவும் பார்க்கிறார்கள் என்பது இதிலிருந்து வெளிப்படுகிறது. ஒருவேளை காந்தி படத்தை போடுவதாக இருந்தால் கூட கோட்டு சூட்டு போட்டுத்தான் வெளியிடவேண்டும் என்று இவர்கள் கேட்டாலும் கேட்க கூடும்.
காந்திய பக்தர்களே அப்படித்தான் கோட்டு சூட்டு போட்டு கல்யாணம் செய்யும் போது கோட்டு சூட்டு ஊரில் பிழைக்க போன அம்பிகள் வேட்டி, சட்டை, தலைப்பாகையை மட்டமாக பார்க்கத்தான் செய்வார்கள். இதில் சேப்பாக்கம் கிரிக்கெட் கிளப்பில் வேட்டி அணிந்த நீதிபதியை விட மறுத்த மேட்டுக்குடி வன்மமும் பொருத்தமாக இணைந்திருக்கிறது.

இந்தியா என்றால் அங்கே இருக்கும் ஏழைகள், தொழிலாளிகள், விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் போன்றோர்தான் உண்மையான பிரதிநிதிகள் என்பதை மறுத்து ஷாப்பிங் மால்கள், மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், நவநாகரீக உடைகள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் இதர ஆடம்பரங்களத்தான் இவர்கள் ரோல் மாடல் காட்சிகளாக பார்க்கிறார்கள்.
மெரினா கடற்கரைக்கு காலை நடை வரும் கார் மனிதர்களுக்கு நொச்சிக் குப்பம் மீனவர்கள் அழுக்குருண்டைகளாக தெரிவது போல அமெரிக்க அம்பிகளுக்கும் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. பார்ப்பனியம் போற்றும் இந்திய ஞான மரபின் உள்ளொளிகளை விதந்தோதும் எழுத்தாளர் ஜெயமோகனும் கூட கேரள மீனவர்களை இத்தகைய குப்பை கூட மனிதர்களாகத்தான் அறம் பாடியிருக்கிறார். எழுத்தாளருக்கே இப்படி என்றால் அவர் வரிகளை படிக்கும் அமெரிக்க அம்பிகளுக்கு இந்திய ஏழைகள் மீது எவ்வளவு எகத்தாளம் இருக்கும்?
படத்தில் உள்ள நவநாகரீக வெள்ளையர்கள் மாடு மேய்க்கும் நாடெல்லாம் விண்வெளி ஆய்வுக்குள் வந்து விட்டால் என்ன செய்வது என்று இனவெறியை வெளிப்படுத்துகிறார்கள் என சிலர் விளக்கமளிக்க கூடும். அப்படிப் பார்த்தாலும் அது மேற்குலகின் மேல் உள்ள விமரிசனமாகத்தான் ஓவியர் வரைந்திருக்கிறாரே அன்றி அதில் இந்தியாவை இழிவு படுத்துவது எது? இப்படி பார்த்தால் சார்லி சாப்ளின் படங்களில் வரும் காட்சிகளில் ஏழைகள், வேலையற்ற இளஞர்கள், உதிரிகள் இழிவு படுத்தப்படுவதாக ஒருவர் கூறலாமே? உண்மையில் சாப்ளின் இத்தகைய எளிய மனிதர்களை அலைக்கழிக்கும் மேட்டுக்குடியினரைத்தானே கேலி செய்கிறார்?
இது புரியாதவனெல்லாம் அமெரிக்கா போய் என்ன கிழிக்கிறான் என்றே தெரியவில்லை.
முகநூலில் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. அச்சிடும் இதழிலும் மன்னிப்பு வெளியாக வேண்டும் என்கிறார் ஒரு முகநூல் அம்பி. நாசாவில் பணியாற்றுபவர்களே பலரும் இந்திய விஞ்ஞானிகள் தான் என்று அந்த பத்திரிகைக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்புகிறார் இன்னொருவர். பத்திரிகையின் இணைய பக்கத்தில் இருந்து அந்த கேலிச்சித்திரத்தை நீக்கும்படி பல முகநூல் பயன்பாட்டாளர்கள் இன்னமும் கோரி வருகின்றனர். நாங்கள் இன்னமும் மாடு மேய்த்துக் கொண்டிருக்கவில்லை என்று சிலர் எழுதியிருக்கின்றனர். சிலர் மாட்டுடன் செவ்வாய் பயணத்துக்கு தயாராக இருப்பதாக மாட்டுடன் தங்களது புகைப்படத்தைப் போட்டுள்ளனர். சரண்யா ஹரிதாஸ் என்ற பிளாக்கர் ‘எந்த ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானியும் இந்த விவசாயி போல டர்பன் உடை அணியவில்லை’ என்று காட்டாமாக வேறு சொல்லியிருக்கிறார்.
இதெல்லாம் சேம் சைடு கோல் என்று கூட இந்த என்ஆர்ஐ மோகத்திலுள்ள அம்பிகளுக்கு புரியவில்லை.
அமெரிக்கா நம்மை இழிவுபடுத்துகிறது என்றால் அந்த கோபம் போபால் விபத்தில் வந்திருக்க வேண்டும். அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் போது எதிர்த்திருக்க வேண்டும். ஈராக்கையும், ஆப்கானையும் குதறியிருக்கும் போது பேசியிருக்க வேண்டும். அப்போதெல்லாம் மேல் கீழ் வாய்களை மூடிக் கொண்டு இப்போது ஒரு விவசாயியின் உடையை பார்த்து வன்மத்துடன் கத்தினால் இவர்களை என்னவென்று அழைப்பது?
இந்த கார்ட்டூனில் இனவெறி இருப்பதாக பம்மாத்து காட்டுபவர்களுக்கு இந்தியாதான் தீண்டாமையின் தலைநகரம் என்ற உண்மை தெரியுமா? அது கயர்லாஞ்சியாக, திண்ணியமாக, கொடியன்குளமாக, பரமக்குடியாக அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் இனவெறி இருப்பதாக சொல்லி ஒரு அமெரிக்க பத்திரிக்கையை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் என்றால், அதுதான் காலந்தோறும் பார்ப்பனியம்!
தப்பு செஞ்சா உள்ளே வைப்பாங்க – இவனுங்க ஏன் ஆடுறானுங்க ?
அய்யோ, “அம்மா” கைது! என்று அதிமுகவினர் மட்டும் அலறுகின்றனர் என்று பார்த்தால், படித்த மேல்தட்டு வர்க்கமும் அலறுவதை கண்டு அரண்டுவிட்டேன்.
தீர்ப்புக்கு முன் நாளே, பத்திரிக்கைகளும்,காணொளிகளும் கூட்டு ஒப்பாரிக்கு தயாராகின. மறுநாள்…, “தீர்ப்பு இன்னும் சற்றுநேரத்தில், இன்னும் சற்றுநேரத்தில் என்று கிரிக்கெட் போட்டியின் கடைசி ஓவர் போல சூடேற்றினர்.” கடைசியில் முதல்வர் ஜெயலலிதா கைது” என்று தீர்ப்பும் வந்தது.
இத்தீர்ப்பிக்கு பிறகு ஒரு வாரகாலமாக காஞ்சிபுர நகரின் பேருந்துகளிலும், சுற்றாத்தாரிடமும், வேலையிடத்திலும்,பயணிக்கும்போதும் கண்ட காட்சிகள், கேட்ட கருத்துக்கள்…
“அம்மா” கைதின் எதிரொலி எல்லா டாஸ்மாக்கையும் திக்கு முக்காட வைத்தது.மூச்சு முட்டும் கூட்டம்.
காஞ்சிபுரம் கம்மாளத் தெருவில் பஸ் எரிப்பு, ஏற்கனவே எம்.பி. தேர்தல் முடிவுக்கு முன்பே, “அ.தி.மு.க வெற்றி” என்ற பேனர் வைத்த காஞ்சிபுரம் புல்லட் பரிமளம், இப்போதும் தீர்ப்புக்கு முன்பே “அம்மா வழக்கில் வெற்றி” என்று பேனர் வைத்தார். “அம்மா”விடம் நல்ல பேர் வாங்கத் துடித்த, “புல்லட்” பரிமளம், தானே, தீக்குளித்து இருக்கலாம், இல்லை, தனியார் பஸ்சை கொளுத்தி வீரம் காட்டி இருக்கலாம், ஆனால்,அம்மா அரசு தன்னை எதுவும் செய்யாது என்று தெளிவாக தெரிந்துக் கொண்டு அரசு பஸ்சைக் கொளுத்தி வடிவேலுப் போல”நானும் ரவுடிதான்” என்று பெயர் வாங்கிகொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலை…
காஞ்சிபுரம் பேருந்து நிலையம்,எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு மருந்துக் கடையை திறக்கலாமா? வேண்டாமா? என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அதன் ஊழியர்கள். அப்போது, இருசக்கர வாகனங்களில் அதிமுக கொடியுடன் வெறியோடு, வந்த 30க்கும் மேற்பட்ட கும்பல், “ஏய் கடையை மூடு”, என்று நாக்கை மடித்து துருத்தி கட்டளையிட்டனர். வேடிக்கைப் பார்த்தது அங்கிருந்த போலீசு.
பயணி ஒருவர், “பஸ் எதுவும் போகலை, ஷேர் ஆட்டோக்களும் போகல… பஸ் போகாதா?”, என்றார், நடத்துனரிடம். “பஸ் போகாதானு கேப்பீங்க, போனா கொளுத்துவாங்க, நாங்க என்ன செய்யறது? நாங்க இந்த விளையாட்டுக்கு வரலை” என்றார், நடத்துனர்.
அந்த குழப்பத்தில், ஆட்டோ எடுத்த ஆட்டோகாரர், நாங்கள் சொன்ன இடத்திற்கு சவாரி ஏற்றிக் கொண்டார். காரணம், ஆட்டோவில் பயணிகள் இருந்தால், தன் ஆட்டோவை பத்திரமாக வீடு சென்று சேர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை.
“அம்மா”வின் கைதை வீட்டிலிருக்கும் பெண்கள் எப்படி நினைக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள உறவுக்கார செல்வியிடம் பேச்சுக் கொடுத்தேன்… “ஜெயலலிதாவை ஜெயில்ல போட்டுட்டாங்களாம்!” என்றேன். அதற்கு அவர், “போட்டது தப்புதான், ஏன்? மத்தவங்க ஒண்ணும் இல்லாமலா இருக்காங்க? பாவம் பொம்பளைய புடிச்சி உள்ள வைச்சிட்டாங்க!” என்று பாவப்பட்டார். அவர் பட்டு தொழில் பறிப்போய், குடிகார கணவரிடம் நாட்களை ஓட்டிக் கொண்டிருப்பவர். எனக்கு அதிர்ச்சி. வாழ்க்கையையே, கேள்விக்குறியா மாத்தின ஜெயாலலிதாவுக்கு பாவப்படவும் பெண்கள் இருக்கிறார்கள் என்று.
நான் அவரிடம், “உனக்கு தறி நெய்யற கூலி ஒழுங்கா கிடைக்கிதா? உங்க வீட்டுக்காரு கூலியை ஒழுங்கா கொடுக்குறாரா? உன் பொண்ணை படிக்க வைக்க முடிஞ்சதா? குடிக்கிற தண்ணிய… நடுராத்திரில புடிக்கிறீங்களே…. அது சரியா?” என்று வினவினேன். , “இதே மாதிரி சொத்து சேத்தவனையும் உள்ளே தூக்கிப்போடுனு, சொல்லாம, ஜெயலலிதாவை ஜெயில்ல போட்டது பாவம்னு சொன்னா எப்படி?” என்றேன். கொஞ்ச நேரம் யோசித்தவர், பிறகு “ஆமா, கரெக்டுதான்” என்றார்.
திங்கட்கிழமை….
ஆங்காங்கே உண்ணாவிரதம். நெரிசலான பல இடங்களில் பெண்களுக்கு 500 ரூபாயும், போராட்டம் முடிந்ததும் பிரியாணி, பந்தலில் தண்ணீர், ஜூஸ் என்று ஆள் பிடித்தனர். “….இவங்க…, ஆர்ப்பாட்டத்தாலே வேலைக்கும் போகமுடியாது, கொலுத்து வேலைக்கு போனாலும்,கூலி 180 ரூபாதான், சும்மா உட்கார்ந்துக் கொண்டு இருப்பதற்கு ரூ.500 கொடுக்கிறார்கள்” என்றனர் பெண்கள். பந்தல் நிறைந்தது.
பேருந்து பயணத்தின்போது, ஒருவருக்கொருவர் ஜெயா கைதை பேசக் கூட தயங்கினர். மருத்துவமனைக்கு செல்லும் முதியவர், “விதியை நினைச்சிக்கினு நாம கெடக்கறோம், வேலையில்லாதவனுங்க கொழுப்பெடுத்து அலையறானுக? ஆஸ்பத்திரியலயும்,டாக்டருங்க இருக்கிறானுகளோ, இல்லையோ,வலி உயிர எடுக்குது!” என்றார்.
நான், செங்கல்பட்டு மருத்துவமனையில் கேண்டீன் நடத்தும் சேட்டனிடம், “சேட்டா அம்மாவை உள்ள தள்ளிட்டாங்க தெரியுமா?” என்றதும், அவர், “ரொம்ப தப்பு பண்ணீட்டாங்கமா,பொம்பளனுக்கூட பாக்காம இப்படி செய்து இருக்கக் கூடாது, அவங்களுக்கு உடம்பு வேற சரியில்ல, நம்ம ஊரு (செங்கல்பட்டு) எம்.எல்.ஏ. வா இருக்கிற கணிதா சம்பத்தோட சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? 400 கோடி. அப்ப முதலமைச்சரா இருக்கிறவங்க,சினிமாவுல நடிச்சவங்க, ஏன் நிறைய சொத்து வைச்சிருக்கக் கூடாதா” என்றார்.
முறைகேடா சொத்து சேர்ப்பதெல்லாம் சகஜம் என்ற கருத்து இவருக்கு ஏன் ஏற்பட்டது?
எனக்கு தெரிந்து 6 வருட காலமா ஓய்வின்றி, உறக்கமின்றி உழைப்பவர் இந்த, சேட்டன். தினமும் சுமார் 150 பேருக்கு உணவு செய்ய குடும்பத்துடன் உழைப்பவர். தினசரி விலையேற்றத்தை தாங்க முடியாமல் தவிப்பவர். அதை எங்களோடு விவாதிப்பார். இவரிடமிருந்து இப்படி ஒரு பதிலா? நான் எதிர்பார்க்கவில்லை.
அங்கிருந்த, கர்நாடகத்தை சேர்ந்த ராஜ்குமாரும் இந்த கருத்துக்கு உடன்பட்டார். மேலும் அவர், “எவ்ளோ நல்ல திட்டங்களை தமிழ் நாட்டுக்கு தந்து இருங்காங்க, மற்ற மாநிலங்களில் இவை கிடையாது. நல்லா படிச்சவங்க அவங்களப் போய் உள்ள வைச்சிட்டாங்களே? …..வெளிநாட்டுல இருந்து வந்த அர்னால்டே…. “அம்மா”வை பாராட்டிப்பேசி இருக்காரு!,” என்றார்.
அங்கு, வேலைபார்க்கும் செவிலியர்களின் கருத்தும் இதேதான். “அவங்களுக்கு (அம்மா) சுகர், பிபி, இருக்கு. அதுக்கும் மேல தமிழ் நாட்டு ஜனங்கள் எல்லாம் நம்பி ஓட்டுப் போட்டு உட்கார வைச்சிருக்காங்க, ….ஜனங்களுக்கு தெரியாதா சொத்து சேர்த்த விஷயம், ஜனங்களை மதிக்காத தீர்ப்பு இது. இதனால, அம்மாவோட செல்வாக்கு கூடுமே ஒழிய குறையாது,”அம்மாவுக்கு பதிலா அம்மாவே தேர்ந்தெடுத்தெடுத்திருக்கும் ஓ.பி.எஸ் முகத்தை பார்த்தாலே ரொம்ப சாந்தமா, குற்றம் செய்யறமாதிரியே இல்லையே, இவங்களா தப்பு செய்வாங்க” என்றனர். …வெளிநாட்டுலயும் அம்மா பேமசா ஆயிடுவாங்க” என்றனர்.
அங்கிருந்த, நோயாளி குருவிக்கார பெண் சீதா,”புடிச்சி உள்ளே போடட்டும், வீடுதர்றேன், பட்டா தர்றேன், மிக்ஸி, கிரைண்டர் தர்றேன் என்றார், ஆனா ஒண்ணும் தரலை, அதெல்லாம்… எம்.ஜி.ஆரோடு போச்சு” என்றார்
மாலைநேரம்…
ரோட்டில் செல்லவே முடியவில்லை, முஸ்லீம்,கிறித்துவர்கள், இந்துகள் என ரோட்டில் பேனர் வைத்து … யாகம், கூட்டுப் பிரார்த்தனை, பால் குடம், தீமிதித்தல் என்று, கும்பல், கும்பலாக அதிமுகவினர் வழிமறித்தனர். அவர்களுடன் போலிசும் வழியடைத்து நின்றது.
அங்கிருந்த பூக்காரம்மாவிடம் பேச்சுக் கொடுத்தபோது, காதுக்கிட்ட வந்து, “…சத்தமா பேசாதே” என்றார், இரகசியமாக. அவரது அனுபவத்தை சொன்னார்.
“பூ வாங்க, பூக்கடைக்கு போயிருந்தேன். பூ வாங்கிட்டேன், வெளியே வர்றேன், …சினிமாவுல காட்றாமாதிரி எல்லாக் கடையும் தடதடனு மூடுனாங்க, பஸ் எதுவும் போகல……, என்ன செய்யறதுனே தெரியல….., பயந்துட்டேன். ஆனாலும் வேற,வேற பஸ்ச புடுச்சி வீட்டுக்கு வந்தேன், எம் பொண்ணு அழுதுட்டு நின்னுது, எப்படிமா வந்தே?னு, துடிச்சிப்போச்சி. தினம்,தினம் பூவாங்கி வீட்டுக்குவீடு வித்தாதான் பொழப்பு, விக்கிறதுலயேயும் எவ்ளோ கஷ்டம் தெரியுமா? டிவியில பூ விலை கம்மியா சொல்றாங்க…, நீ என்ன அதிகமா சொல்றே….னு பேரம் பேசுவாங்க, அவங்களுக்கு எங்கே தெரியப்போவுது எங்க கஷ்டம், பூவை வாங்க காலையில போயிடனும், பஸ் செலவு, பூ கட்ற வேலை, பூவை வாடாம பாதுகாக்கறது….னு நான் படற கஷ்டத்தை நினைக்காம,பேசுவாங்க, ஏம்மேல பாவப்பட…. யாரும் இல்ல, …தப்பு செஞ்சாதானே உள்ளே வைப்பாங்க, …இவனுங்க ஏன் ஆடுறானுங்கனு தெரியலயே? நீ பத்திரமா போய்ட்டு வா, …குடிகாரனுங்க எதுக்கும் துணிவானுங்க,உஷாரா போம்மா.” என்றார்.
அங்கிருந்த பள்ளி சிறுவர்களோ, “தமிழ்நாட்டுக்கு பவர் போனா யுபிஎஸ், அம்மாவுக்கு பவர் போனா ஓபிஎஸ்” என்று பாடிக் கொண்டிருந்தனர்.
ஜெயலலிதா கைது விவகாரம் தமிழகத்தை உலுக்கிவிட்டது என்பது அதிமுக வடிக்கும் கண்ணீரை, உண்மைதான் என்று நம்புவதாக நடிக்கும் கூட்டம் கையளவு. ஆனால், உழைக்கும் மக்களோ “அம்மா கைது” என்ற அளவுக்கு மீறிய சோக நாடகத்தை ரசிக்கவில்லை.
டிவியும், பத்திரிகைகளும் ‘அம்மா’ கைது குறித்து தினுசு தினுசா சோக கதைகளை எழுதி மக்களிடம் ஒரு கருத்த உருவாக்க நினைக்கிறாங்க. டிவி சீரியல் பார்த்து வீட்டுப் பிரச்சினைகளை உருவாக்கி கொள்ளும் மக்கள் இந்த பத்திரிகை அறிவாளிங்க சொல்றத மட்டும் நம்பாமவா போவாங்க?
ஆனா கொஞ்சம் உக்காந்து யோசிச்சு பேச வைச்சா அவங்களும் உண்மையை ஒத்துக்குவாங்க. அதிமுக ரவுடிங்க ஆள் போட்டு நடத்தும் ரவுடித்தனமும், கூலிக்கு அழச் சொல்லும் ஒப்பாரிகளும் பார்க்க பிரம்மாண்டமா இருந்தாலும் உள்ள கீறிப் பாத்தா பல்லிளிக்கும்.
அது பூக்கார அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு! அவங்கிட்ட பேரம் பேசி வாங்கும் அறிவாளிங்களுக்கு தெரியலையே?
– மலர்விழி, காஞ்சிபுரம்.
வீடு கட்டுவோம் – தடுத்தால் தடுப்பவனுக்கு பாடை கட்டுவோம்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்துக்குட்பட்ட பொய்கை அரசூர் கிராம தலித்து மக்கள், தொடர்ந்து 40 வருடங்களாக வீட்டு மனைக்காக போராடி வருகின்றனர். இவர்கள் தனி வட்டாட்சியர், தாசில்தார், மாவட்ட ஆட்சியாளர் என்று சந்தித்து மனு கொடுப்பது என்ற வழிமுறையில் போராடிய போது, விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களும் உடன் ஆதரவளித்து வந்தனர்.
தமிழக கிராமங்கள் பலவற்றில் நிலப்பிரபுக்கள் பல்வேறு முறைகேடான வழிகளில் சுருட்டிய நிலங்களை வைத்து முழு கிராம சமூகத்தையும், கிராம பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். இவர்கள் சொத்து சேர்த்தது சட்டபூர்வமாகவோ இல்லை தார்மீக நெறிமுறைப்படியோ எந்த வகையிலும் சேர்த்தி இல்லை. நிலமற்ற விவசாயிகளாக வாழ்க்கையை நடத்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் துண்டு துக்காணி நிலங்களை கூட இவர்களிடம் இப்படித்தான் இழந்து விடுகிறார்கள்.
இந்த போராட்டம் அப்படி பறிகொடுத்த நிலங்களை மீட்பதற்கான ஒரு துவக்கம்.
இதற்க்கிடையில் வி.வி.மு சார்பாக தனி தாசில்தாரைக் கண்டித்து சுவரொட்டி இயக்கம் எடுக்கப்பட்டது. இதன் விளைவாக அந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பின் வந்த அதிகாரியால், நில உரிமையாளரை சந்தித்து 2012-ல் நிலத்தை வாங்குவதற்கான ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கப்பட்டது. அதன் பின் மனை சம்மந்தமாக அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் கிராம மக்களை கூட்டி அந்த மனையைப் பெற வேண்டும் என்றால் அதற்கு போராட்டம் தான் தீர்வு என்று முடிவு செய்து அதற்கு இளைஞர்கள், தோழர்கள் என 6 பேர் கொண்ட போராட்டக் குழு ஒன்று அமைத்து வீடு கட்டும் போராட்டம் 27-09-14 அன்று நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
‘வீடு கட்டுவோம். தடுத்தால் தடுப்பவனுக்கு பாடை கட்டுவோம்’ என்ற முழக்கத்தோடு 150 சுவரொட்டிகளைத் தயாரிக்கப்பட்டு, 23-09-14 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் போன்ற முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டது. அதன் மறுநாள் தனித் தாசில்தார் நேரில் வந்து ‘ஏன் இது போன்ற போஸ்டர் ஒட்டினீர்கள்? இது சம்மந்தமாக அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு தயார் செய்கிறோம். கலந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார். ஒட்டிய சுவரொட்டியை எடுத்து வந்து தோழர்களிடம் விவாதித்தார்.
தோழர்களும் ‘உங்களிடம் பேசுவதால் எந்த விதமான பலனும் இல்லை. இதற்கு முன்னும் பல முறை பேசி எதுவும் நடக்கவில்லை. போராட்டம்தான் தீர்வு’ என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பி விட்டனர். இதற்கிடையில் நில உரிமையாளாரிடம் (ராமலிங்க நாயுடு – நிலப்பிரபு) கங்காணியாக வேலை செய்யும் கண்ணன் என்பவர் தோழர்கள் 3-பேர் மீது காவல் நிலையத்தில் பொய்ப்புகார் கொடுத்தார். இந்தத் தகவலை அறிந்த மக்கள் 100 பேருக்கும் மேல் திரண்டு சென்று காவல் நிலையத்தில் ‘பொய் புகாரை வாப்ஸ் வாங்குங்கள்’ என்று கோரி முற்றுகை இட்டனர்.
அப்போது காவல் உதவி ஆய்வாளார், ‘பேசிக் கொள்ளலாம். முதலில் இந்த இடத்தை விட்டு காலி செய்யுங்கள்’ என்று சமாளித்தபடி மக்களை அங்கிருந்து போகச் செய்தார். அன்று இரவே பெரிய பிளக்ஸ் பேனர் ஏற்கனவே சொன்ன தலைப்பில் அரசூரில் கட்டபட்டது. அந்த பேருந்து நிறுத்தத்திற்கு வருபவர்கள் நின்று கவனித்து படித்துவிட்டுதான் சென்றனர். அவ்வட்டாரத்தில் இது பரபரப்பான செய்தியாக மாறியது. பல நண்பர்கள் ‘இதுதான் சரியான முழக்கம்’ என்றும், ‘இது போன்ற முழக்கத்தை வி.வி.மு தோழர்கள்தான் வைப்பார்கள்’ என்றும் பேசிக் கொண்டனர்.
அதன்பின் போராட்டத்தின் முதல் நாள் 300 பிரசுரங்களை தயார் செய்து இந்த போராட்டதில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு கொடுத்தோம். இரவு ஐந்து இடங்களில் தெரு முனை கூட்டங்களைப் போட்டு இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுவது மற்றம் வெளியூரில் இருக்கும் உறவுக்காரர்களை வரவழைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கருங்காலியாகச் செயல்படும் அல்லக்கைகைளை அம்பலப்படுத்திப் பேசிய பிறகு மக்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள். மக்களும் கழி,கீற்று போன்ற வீடுகட்டும் உபகரணங்களை தயார் செய்தனர்.
போராட்டத்தின் முதல் நாள் காலை 8 மணிக்கு நில உரிமையாளர் (நிலப் பிரபு) தாமே முன்வந்து ஊர் நாட்டாமை மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து ‘நிலத்தை நான் இலவசமாக கொடுக்கிறேன். போராட்டம் வேண்டாம்’ எனறு சொல்லி அனுப்பியுள்ளார். அதைப் போராட்ட குழுவிற்கு அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதை போராட்ட குழு ஏற்றுக் கொள்ளவில்லை.
அன்று காலை 11 மணி அளவில் காவல் நிலையத்தில் இருந்து எங்களைத் தொடர்பு கொண்டு ‘போராட்டத்தைக் கைவிடுங்கள். பேச்சுவார்த்தைக்கு தயார் செய்கிறேன்’’ என்று ஆய்வாளர் தெரிவித்தார். அதையும் போராட்டக் குழு நிராகரித்து ‘போராட்டதை நடத்துவோம்’ என்று அறிவித்தனர். அதன் பின் நண்பகல் 12 மணி அளவில் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினர் மற்றும் 3 க்யூ பிரிவு போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் கிராமத்திற்குள் முகாமிட்டனர்.
சம்மந்தப்பட்ட தோழர்களிடம் ‘பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். நான் உத்திரவாதம் தருகிறேன்’ என்று நைச்சியமாக பேசினர். ஊர்த் தலைவர் மூலம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். அதை தோழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘கிராம மக்களை கைது செய்வோம்’ என்று மிரட்டிப் பார்த்தனர். ‘உங்களால் முடிந்ததை செய்யுங்கள்’ என்று மக்களும் பதிலுக்கு கூறினார்கள் . இப்படி பல வழிகளில் போராட்டத்தை முடக்க முயற்சி எடுத்தனர். தலைவர் மூலமாக தூதும் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் ‘ஜெயாவின் தீர்ப்பு இருக்கிறது. அதனால் எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்’ என்ற காவல் ஆய்வாளர் கேட்டுக் கொண்டார். ‘நான் இதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்’ என்றார்.
அப்போது தோழர்கள் ‘இதற்குமுன் பள்ளிக் கூடத்திற்கு அடிப்படை வசதி கேட்டு போராடிய போது இது போல உறுதி அளித்தார் ஆய்வாளர். அதன் பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று சுட்டிக் காட்டினர். அதுபோல ‘ஊராட்சி ஒன்றியப் பொறியாளர் அப்போது போராட்டத்தை கைவிட்டால் தான் பேச்சு வார்த்தை என்று கூறினார். அதனடிப்படையில் அப்போது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்னும் செய்து முடிக்கப்படவில்லை’ என்று அம்பலப்படுத்தி பேசினார்.
மாலையில் போராட்டக் குழு கூடி ‘நாளை ஜெயாவின் தீர்ப்பு இருக்கிறது. அதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் உயர் அதிகாரிகள் முன்னிலையில் பேச வேண்டும். அதுவும் மக்கள் மத்தியிலேயே பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும்’ என்ற முடிவு செய்தது. அதனை காவல் ஆய்வாளரிடம் கூறிய போது, ‘உயர் அதிகாரிகள் இப்போதைக்கு வர முடியாது, நேரமில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரியான வட்டாட்சியர் வருவார். அதிகாரிகளை மக்கள் மத்தியில் பேச வைப்போம். அடுத்தகட்ட நடவடிக்கைக்கு நான் உறுதி ஏற்கிறேன்’ என்று ஆய்வாளர் உறுதி கூறினார்.
இந்நிலையில் போராட்டக் குழு ஒன்று கூடி பேச்சுவார்த்தைக்குத் தயாரானார்கள். பொது மக்கள் 300 பேருடன் தலைவர் இந்தப் பேச்சுவார்த்தைக்கு தயாரானார். இந்தப் பேச்சு வார்தையில் தனி வட்டாட்சியர் ‘இன்னும் எனக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுங்கள்’ என்று கேட்டார். ஆனால் மக்களோ ‘நாங்கள் சுவரொட்டி ஒட்டி 5 நாட்கள் ஆகியும் சம்மந்தப்பட்ட துறையினைச் சார்ந்த நீங்கள் முறையான நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படுக்கிறது’ என சுட்டிக்காட்டிய போது துணை வட்டாட்சியர் ‘நான் இருந்தபோது நில உடமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது. அதற்கு பின்னர் செட்டியார் என்பருடைய நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்ற விவரத்தை தெரிந்துகொள்ள முடியாமல் போனது. ஆகவே இரண்டு நில உரிமையாளர்களிடமும் நிலம் தொடர்பான விவரங்களை வாங்கி நாங்களே முன்னின்று அதற்கான நடவடிக்கைளை எடுக்க ஆவன செய்கின்றோம்’ என்றனர்.
அதற்கு மக்கள் ‘கடந்த 5 ஆண்டுகளாக உங்களை நம்பிதான் காத்துக் கொண்டு இருந்தோம் ஆனாலும் வேலைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆகவே உயர் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும்’ என்று திட்டவட்டமாகக் கூறினார்கள். அதற்கு ஆய்வாளர் ‘அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்ய 15 நாள் அவகாசம் கொடுங்கள். அதற்கு தேவையான ஏற்பாட்டை செய்கிறோம்’ என்று உறுதி அளித்தார். மக்கள் அதனை எழுத்துப் பூர்வமாக எழுதி வந்திருக்கும் அனைத்து அதிகாரிகளும் அதில் கையொப்பம் இட்டுத் தர வேண்டும் என்று கோரினோம். அதன் அடிப்படையில் தனி வட்டாட்சியர் மற்றம் உதவி வட்டாட்சியர், காவல் துறை ஆய்வாளர், வருவாய்த் துறை ஆய்வாளர் , கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கிராம பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் கையொப்பம் இட்டு தந்துள்ளனர். விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம் என அறிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் துவக்கத்தில் மக்களிடம் ஒருவித அஞ்சும் போக்கு இருந்தது. ஆனாலும் போராட்டத்தின் தன்மையையும் நோக்கத்தையும் தனியாக எடுத்து விளக்கிய பிறகு தைரியமடைந்த அவர்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள். இளைஞர்கள் மத்தியில் முன்னர் அமைப்புடன் நெருக்கம் இல்லாமல் இருந்த நிலைமை தற்போது மாறி அவர்களும் அமைப்பு தோழர்களிடம் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பழகத் துவங்கியுள்ளனர்.
படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்.
தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி
திருவெண்ணெய்நல்லூர் வட்டாரம்.
டாஸ்மாக்கை மூடு – டாஸ்மாக் ஊழியர் போராட்டம் !
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் அருகில், டாஸ்மார்க் ஊழியர்கள் தாங்கள் வேலை பார்க்கும் கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கத்துடன் இணைந்து கடந்த வியாழன்று (02/10/2014) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.
பத்திரிக்கையின் மூலம் இப்போராட்டத் தகவல் அறிந்த பெண்கள் விடுதலை முன்னணி மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சுவரொட்டிகளும், பிரசுரங்களும் அச்சிட்டு மக்களிடம் விநியோகித்தோம். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தோம்.
எமது தோழர்கள் பந்தலை அடையும் பொழுது, உண்ணாவிரத பந்தல் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களால் நிறைந்திருந்தது. பிஇ, எம்பிஏ படித்த பட்டதாரி இளைஞர்கள், அரசு நடத்தும் மதுபானக் கடைகளில், கொத்தடிமைகளைப் போல நடத்தப்படும் அவலத்தை அவர்களின் உரை மூலம் நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது.
தங்களது 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பலரும் பேசினார்கள்.
- மது விலக்கை படிப்படியாக அமுல் படுத்து!
- மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என குறைத்து அறிவித்திடு!
- மதுக் கடை பார்களுக்கான உரிமங்களை உடனடியாக ரத்து செய்!
- வாரம் தோறும் ஞாயிற்றுகிழமை, மாதம் முதல் தேதி விடுமுறை தினமாக அறிவித்திடு!
- அரசு வேலைக்கான காலி பணியிடங்களில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நியமனம் செய்! என்பதே அவர்களின் கோரிக்கை.
போராட்டத்தில் மதுபானக் கடை ஊழியர்கள், தங்கள் அனுபவங்களையும், அல்லல்களையும் கொட்டித் தீர்த்தனர்.
திருவள்ளூரைச் சேர்ந்த ஊழியர், திரு. மாரி பேசுகையில் அன்றாட வேலையின் சிரமங்களையும், இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட வழியில்லாத அவல நிலையையும் எடுத்துரைத்தார். இந்த குடியினால் பல குடும்பங்கள் சீரழிவதை கண்கூடாக கண்டதையும் கூறினார்.
தன் பணிச்சுமை அரசால் அங்கீகரிக்கப்படாத போதும் குடிக்கு அடிமையான ஒருவரை மீட்ட கதையை கூட்டத்தினரிடம் பகிர்ந்தார். குடியிலிருந்து மீண்டவர், தன் துணைவியாருடன் வந்து, மகளின் திருமண பத்திரிக்கையுடன், ரூ. 10,000 கொடுத்து அழைத்ததையும், அவரது துணைவியார் தன் கணவரை குடியிலிருந்து மீட்டதினால் தன் குடும்பம் சரியான நிலைக்கு வந்துள்ளதையும், தான் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றிய நிலைமை மாறியதையும் நெஞ்சுருகிப் பேசியதை கூட்டத்தினரிடம் பகிர்ந்துக் கொண்டார்.
பட்டதாரி இளைஞர்கள் மதுபானக் கடைகளில் வேலை பார்த்து பலத் தரப்பட்ட மக்களுடன் பழகிப் பக்குவப்பட்டுள்ளதையும், படிப்படியாக மதுக்கடைகளை மூடிவிட்டு, அரசின் மற்ற துறைகளில் எங்களுக்கு வேலைக் கொடுத்துப் பாருங்கள் , நிலுவையில் இருக்கும் அனைத்து வேலைகளையும் கச்சிதமாக முடித்துக் காட்டுவோம் என்று அரசுக்கு சவால் விட்டனர்.
அவரைத் தொடர்ந்து பேசிய பெண்கள் விடுதலை முன்னணி தோழர் அமிர்தா, அரசு நடத்தும் மதுபானக் கடையை படிப்படியாக மூடக் கோரி அதில் பணிபுரியும் ஊழியர்களே நடத்தும் இந்த போராட்டம் ஒரு நல்ல துவக்கம் என்றும், குடிப்பவர்கள் ஆண்கள், விற்பது அரசு, ஆனால் இதில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள், குழந்தைகள் தான்! இலவச, விஞ்ஞானப்பூர்வமான கல்வியைக் கொடுக்க முடியாத அரசு மதுபானக் கடைகளுக்கு அதிக இலக்கு வைத்து குடிமக்களிடம் பணம் பறிக்கிறது. மேலும், நீதிமன்ற தீர்ப்பால், குரோம்பேட்டை அருகே நெடுஞ்சாலையிலிருந்து அகற்றிய மது கடைகளை மக்கள் நெருக்கமாக வாழும் குடியிருப்புப்பகுதி என்றும் பாராமல் கடையை திறக்கமுற்பட்டபோது, அதற்கு எதிராக பெண்கள் விடுதலை முன்னணி பகுதிப் பெண்களுடன் 10 நாட்கள் போராடி கடையை திறக்க விடாமல் செய்தோம். மேலும், இதற்காக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் என ஒரு இயக்கமாக முன்னெடுத்து அரசு நடத்தும் மதுபானக் கடை ஒழிப்புக்கு முன் நின்று போராடுகிறோம்.
அரசானது பண்டைய சாண்டில்யன் காலந்தொட்டே மக்களை மது போதைக்கு திட்டமிட்டே உட்படுத்தி, மக்கள் அரசை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருக்க மயக்கத்திலேயே வைத்திருப்பது இன்றும் தொடர்கிறது.
தொடர்ந்து குடிப்பதினால் குடும்பங்கள் சீரழிவதோடு, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் படிப்படியாக மதுக்கடை ஒழிப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் தமிழகமோ குடிமக்களின் நலனை பாரமால், கல்லா கட்டும் நோக்கதோடு அதன் விற்பனை இலக்கை அதிகமாக உயர்த்துகிறது. மேலும், அரசு மதுபானக்கடைகளை முற்றிலும் ஒழிக்கும் வரை நமது போராட்டங்கள் தொடரவேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.
பிறகு பேசிய டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு. மோகன், தனக்கு முன் பேசிய பெவிமு தோழர் அமிர்தாவின் உரையில் மக்களின் குடிகெடுக்கும் பின்னணியில் ஆணிவேராக செயல்படும் அரசின் பங்கைப் புரிந்து விளக்கியதை சுட்டிக் காட்டினார். மேலும், கடைகளில் பணிபுரியும் 60% இளைஞர்களே குடிக்கு அடிமையாகி நோய்களுக்கு ஆட்படுவதை வேதனையுடன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்கள் அலை அலையாய் எழுந்து டாஸ்மார்க் கடைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடும் பொழுது தான் அரசை பணிய வைக்க முடியும். மது விலக்கை அமுல்படுத்துமாறு அரசை பணிய வைக்க முடியும், என்றார்.
தமிழக மக்களை ஒட்டு மொத்தமாக சீரழித்து வரும் டாஸ்மாக் எனும் குடி போதையை ஒழிக்க அதை விற்பனை செய்யும் ஊழியர்களே முன் வந்து போராடுவது அரிதினும் அரிதான விசயம். இதனால் அவர்கள் வேலை வாய்ப்பு பறிபோனாலும், மாற்று ஏற்பாடுகளுக்கு உத்திரவாதம் இல்லையென்றாலும் அவர்கள் இப்படி ஒரு கோரிக்கை வைத்து போராடுவது மிக முன்னுதாரணமான விசயம். இந்த போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.
படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்.
தகவல்: பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.
பாத்ரூமில் கேமரா – சங்கரா பல்கலை மாணவர் போராட்டம்
’இந்துக்களின் ஜகத்குரு’ என்று பீற்றப்படும் சங்கர்சாரிகளின் காஞ்சி சங்கர மட யோக்கியதைகள் ஊருக்கே தெரியும். கொலையிலும் கூத்தடிப்பதிலும் கொடிகட்டி பறக்கும் மடம் அது. இப்பேற்ப்பட மடம் நடத்தும் கல்லூரிகள் மட்டும் எப்படி இருக்கும்?
ஆம். காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் உள்ளது காஞ்சி சங்கரமடத்துக்கு சொந்தமான சங்கரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஒவ்வொரு மாணவனிடமும் லட்சக்கணக்கில் பணத்தைக் கறக்கும் கல்விக் கொள்ளையில் தவறாமல் ஈடுபடும் நிகர்நிலைப் பல்கலைகழகங்களில் இதுவும் ஒன்று. மாணவர்கள் மாணவிகளுடன் பேசிக்கொள்ளக்கூடாது, இப்படித்தான் உடை அணிய வேண்டும், மாணவர்களை அடிப்பது, பேராசிரியர்கள் { கடந்தாண்டு படிப்பை முடித்த மாணவர்கள்தான் இந்தாண்டு பேராசிரியர்கள்} குச்சியை வைத்துக்கொண்டு பாடம் நடத்துவது என பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு அதன் பெயரில் மாணவர்களை ஒடுக்கி வருகிறார்கள். ஷூவில் லேஸ் கட்டவில்லை, தினம்தோறும் ஷேவ் செய்யவில்லை என்றாலும் கல்லூரியில் அலுவலக உதவியாளர்கள்தான் மாணவர்களை தண்டிப்பார்கள். அங்கு அலுவலக உதவியாளர் வேலை செய்பவர்கள் எல்லாம் கல்லூரி நிர்வாகத்திற்கு அடியாள் வேலையும் சேர்த்து பார்க்க வேண்டும்.
மேலோட்டமாக பார்த்தால் இப்படி கட்டுப்பாடுகள் இருந்தால்தான் மாணவர்கள் ஒழுங்காக வளருவார்கள் என்று சிலருக்கு கருதத் தோன்றும். மாணவர்களைக் கேட்டால் இது கல்லூரி இல்லை, சிறைச் சாலையைவிட கொடுமையானது என்று கதறுகிறார்கள். இந்த பல்கலைக்கு அரசு கொடுத்துள்ள சர்டிபிகேட் யூ . ஆனால் உள்ளே நடப்பதெல்லாம் ஏ பட ரேஞ்சுக்கான வேலைகள்.
இப்பல்கலைகழக விடுதியில் சுமார் 1500 மாணவ மாணவிகள் தங்கிப் படிக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக மாணவிகளின் பாத்ரூமில் கேமரா பொருத்தப்பட்டு வருவதும், அது பற்றி புகார் கொடுத்தால் நிர்வாகம் அமைதியாக இருப்பதுமே இருந்திருக்கிறது. மாணவிகளும் வெளியே சொன்னால் அவமானம் என்று வாய்மூடி அமைதியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் கடந்த 10 நாட்களாக பாத்ரூமில் கேமரா வைக்கப்பட்டிருப்பது குறித்து மாணவிகள் விடுதி வார்டனிடம் புகார் அளித்துள்ளனர். அந்த வார்டனோ இதைக் கேட்டு பதறாமல் நிதானமாகபார்க்கலாம், பார்க்கலாம் என இழுத்தடித்துக் கொண்டு வந்துள்ளார்.
இந்த அநியாயத்தை கண்டு பொறுக்க முடியாத மாணவிகள் தங்களுடன் படிக்கும் சக மாணவர்களிடம் கூறியுள்ளனர். மாணவர்கள் இதை விசாரித்து அப்படி படம் எடுத்த எலக்ட்ரீசியன் ராஜாவை கையும் களவுமாகப் பிடித்து விசாரித்துள்ளனர். தலைமை வார்டனான வாசுதேவன் என்பவர் சொல்லி பெண்கள் பாத்ரூமில் கேமரா வைத்ததாகவும் அந்த மெமரி கார்டை பெண்கள் விடுதி வார்டனிடம் கொடுப்பதாகவும் ராஜா மாணவர்களிடம் கூறியுள்ளான். அவனை பிடித்து நிர்வாகத்திடம் ஒப்படைத்து வாசுதேவனை கைது செய்ய வேண்டும் என மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
சங்கர ராமன் கொலை வழக்கையே ஊற்றி மூடிய போலீசு இதில் மட்டும் நடவடிக்கை எடுக்குமா என்ன? ராஜாவையும் வாசுதேவனையும் அரைமணி நேரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு பத்திரமாக விடுவித்து விட்டது. சரி லோக்கல் போலீசுதான் இப்படி, மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்தால் அவர் நீதியைத் தருவார் என்றெண்ணி மாவட்ட ஆட்சியரகத்துக்கு சுமார் 400 மாணவர்கள் ஊர்வலமாக வந்து மனு அளிக்க வந்தார்கள். 23ம் தேதி பதவியேற்ற புது கலக்டரோ அவரது நிர்வாகமோ சங்கர ராஜ்ஜியத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகளை கண்டு கொள்ளவே இல்லை. கலெக்டர் மீட்டிங்கில் இருக்ககிறார் என்ற பதிலே 2 மணி நேரமாக வந்தது.
அந்தக் காத்திருப்பில்தான் மொத்த அரசுமே இந்த கல்விக்கொள்ளையர்களுக்கும், சங்கர மட மைனர்களுக்கும் சேவை செய்கிறது என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டனர். இதற்கிடையில் காவல் நிலையத்தில் வார்டன் வாசுதேவன் “பல இடத்தில் நடக்குறதுதானே, ரொம்பப் பிரச்சினை செய்தா மெமரி கார்டில் இருப்பதை எல்லாம் இண்டர் நெட்டில் அப்லோடு செஞ்சுடுவேன்” என்று மிரட்டிய விசயம் மாணவர்களிடம் பரவ ஆரம்பித்தது. இதன் பிறகே ஆத்திரமடைந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்கள் கல்லூரிக்குள் புகுந்தார்கள்.
கல்லூரி டீனிடம் முறையிட்டார்கள்.அவரோ நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள் என்றார். அதாவது மாணவிகளை மறைவாக படம் பிடித்த அயோக்கியர்களை கைது செய், நடவடிக்கை எடு என்று சொன்னால் அது அநாகரிகமாம். துணை டீன் ரமணனோ தவறுதான் மன்னித்துவிடுங்கள் என்று கூறிவிட்டு பிரச்சினைகளை பெரிதாக்க வேண்டாம் என்று சொன்னார். ” மன்னிப்பு எங்களுக்குத்தேவை இல்லை, வாசுதேவன் இங்கே வந்து எங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும், அந்த மெமரி கார்டை ஒப்படைக்க வேண்டும்” என்றார்கள் மாணவிகள். வாசுதேவனை இங்கே கொண்டு வந்தால் அடித்தே கொன்று விடுவீர்கள் என்றது போலீசு.
இதற்கிடையில் கல்லூரி நிர்வாகத்தினை சேர்ந்த ஒரு பொறுக்கி “வீடியோதான எடுத்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க” என்று கேட்டவுடன் இந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று 3 மணி நேரமாக காத்திருந்த மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள்.
இத்தனை ஆண்டுகளாக காமவெறிப்பிடித்த இந்த பார்ப்பன அக்ரஹார கோட்டையை யாரும் கேள்வி கேட்காமல் பேசாமல் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டது போதும், இனி தன்மானத்தை இழப்பதற்கு உயிரை இழப்பதே மேல் என்று துணிந்தார்கள். அவர்கள் கண் முன்னே பிராக்டிக்கல் மார்க் வரவில்லை, எந்த HODயும் வரவில்லை. பேருந்துகள் வேன்கள், ஆய்வகம் என கண்ணில் பட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கினார்கள். இது அநாகரீகம் என்றால் இருக்கலாம் , சூடு சொரணை உள்ளவர்களுக்கு தெரிந்த மொழி இதுதானே!
மீண்டும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் பேசித்தீர்க்கலாம் என்று அமைதிப்படுத்தியது. காலை முதலே தண்ணீர்கூட குடிக்காமல் இருந்த மாணவர்கள் சோர்வடைந்தார்கள். இதற்கிடையில் விடுதிகளில் படிப்படியாக தண்ணீர், மின்வசதிகள் துண்டிக்கப்பட்டன. ஆக்கிரமிப்புப் போரில் தாக்குதலை தொடங்குவதற்கு முன்னர் ஏகாதிபத்திய படைகள் என்ன செய்யுமோ அதை பார்ப்பன பயங்கரவாதகம்பெனிகள் செய்தன. சரியாக இரவு 7.30 மணி. கல்லூரியின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன.
கல்லூரிக்குள் புகுந்தது போலீசு, வெறிகொண்ட மிருகங்களாக மாணவர்களைக் கடித்துக் குதறியது. மாணவர்களை வீதிகளில் தள்ளி பூட்டுப்போட்டது. வெற்றிக்களிப்பில் புன்னகைத்தது பார்ப்பன பயங்கரவாத காஞ்சி பல்கலைக்கழகம்.
இப்பிரச்சினையை எவ்வளவோ மூடி மறைக்க முயன்ற போதும் மாணவர்களின் போராட்டத்தால் காஞ்சிப் பல்கலை கழகத்தின் பெயர் வராமல் ஊடகங்களில் செய்தி வெளியானது. ஒவ்வொரு முறையும் மாணவிகள் இப்படி பாத்ரூமில் கேமரா உள்ளதென்று புகார் கொடுத்தால் ஒரு நாள் விடுமுறை விட்டுவிடுமாம் கல்லூரி நிர்வார்கம்.
இம்முறை 10 நாட்கள் விடுமுறை விட்டுள்ளது நிர்வாகம். போலீசு அடித்ததால் ஏற்பட்ட காயங்கள் காய்ந்து போகலாம், தழும்புகள் மறையுமா என்ன? இந்த நிர்வாகத்தின் அயோக்கியத்தனத்துக்கு முடிவே இல்லையா என்று கதறுகிறார்கள் மாணவர்கள். கல்லூரி நிர்வாகமும் அரசும் கூட்டணிக்கொண்டு செயல்படும் போது மாணவர்கள் ஒரு அமைப்பாக ஒன்றுபடாமல் வெற்றிபெறமுடியாது.
சங்கரமடம் என்பது கொலைக்கூடாரம். பல்லாண்டுகளாக உழைக்கும் மக்களை கொன்றொழித்து அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பார்ப்பன அக்கிரகாரக் கோட்டை. அதன் ஒவ்வொரு செங்கல்லும் கொலைகளின் கதைகளையும் பாலியல் வன்புணர்ச்சியின் கதறல்களையும் சொல்லும். இந்தச் சத்தங்களை மறைக்க வேதங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
இந்தப் பார்ப்பன அக்கிரகாரக் கோட்டையில் தன்மான உணர்வுடன் சுயமரியாதை உணர்வுடன் முதல் கீறலைப் போட்டிருக்கிறார்கள் மாணவர்கள். சாதி வித்தியாசங்களைக் கடந்து இந்த போராட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டிருக்கிறது.
சங்கரராமன் கொலை வழக்கை ஊற்றி மூடப்பட்டது போல இந்த விவகாரத்தை மாணவர்கள் விடக்கூடாது. போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம். சங்கர மட பயங்கரவாதிகளை முறியடிப்போம்.
படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்.
__________________________________________________________
தகவல் – புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
காஞ்சிபுரம், தமிழ்நாடு. தொடர்புக்கு: 9445112675
___________________________________________________________
கல்யாண படம் பாரு களவாண்ட கதை கேளு
1995-ம் ஆண்டு ஜெயா-சசி கும்பல் நடத்திய வளர்ப்பு மகன் திருமணம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தத் திருமணத்தின் ஆடம்பர வக்கிரம், அதிகார துஷ்பிரயோகம், எடுபிடி வேலை பார்த்த, மற்றும் இதர சங்கதிகளை உள்ளடக்கி மக்கள் கலை இலக்கியக் கழகம் 1996-ம் ஆண்டு வெளியிட்ட “கல்யாண கத கேளு” என்ற பாடல். இந்தப் பாடல் “அண்ணே வர்றாரு” என்ற பாடல் குறுந்தகடில் இடம் பெற்றுள்ளது.
ஜெயா குற்றவாளியில்லை – துக்ளக் சோ தீர்ப்பு !
தீர்ப்பு இவ்வளவு கடுமையாக இருக்குமென்று சோ எதிர்பார்க்கவில்லையாம். ஆனால் இந்த எதிர்பார்ப்பு திமுகவிடம் ஏன் இருந்தது? சந்தேகப்படும் அவர், எல் டிபிள் யூ முறையீட்டில் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு கொடுக்கும் போது, அரசியலில் போயஸ் தோட்டத்து ராணிக்கு கொடுக்கப்படவில்லை என்றால் அதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமென்கிறார். முக்கியமாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் ஜெயா என்பது அவரது நம்பிக்கை மட்டுமல்ல, மற்றவர் நம்பியாக வேண்டிய ஆணை!
கோடிகளை சம்பளமாக வாங்கிய சட்டம் படித்த மேதைகள் உதவியால் வாய்தா மேல் வாய்தாவாக 18 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கை ஏதோ ஜெயா தரப்பு உண்மைக்கும், திமுக தரப்பு பொய்மைக்குமான நீதிப் போராட்டம் என்று சித்தரிக்கிறார் சோ. வெண்மணி படுகொலை வழக்கில் “கோபால கிருஷ்ண நாயடு போன்ற மேன்மக்கள் குற்றம் இழைத்திருக்மாட்டார்கள்” என்று சாட்சியை பார்க்காமல், ஆதிக்க சாதி ‘கௌரவ’மாக பார்த்த நீதிபதிகளின் நாட்டில் குன்ஹா எனும் நீதிபதி இப்படி தீர்ப்பளித்திருப்பது சோவாலேயே நம்ப முடியவில்லை.
ஆனால் திமுக மட்டும் இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று உறுதியாக எதிர்பார்த்திருந்தது எப்படி என ஒரு ஆழ்ந்த சந்தேகம் சோவிடம் இருந்தாலும் எச்சரிக்கையாக பேசுகிறார்.
“தங்கள் முன் வைக்கப்பட்ட ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்திருந்தாலும், அந்த ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு இப்படி மட்டும்தான் அமையும் என்று சொல்லிவிட முடியாது. அதே ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வந்திருக்க முடியும். அப்படி ஒரு தீர்ப்பு வருவதற்குப் போதுமான ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டதாக வழக்கின் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.”
தினமணி வைத்தியின் “கடவுளுக்கே சோதனையா” வாதங்களை விட சோவின் சாதுர்யமான சட்ட நுணுக்க பேச்சைக் கவனிக்க வேண்டும். அதாவது சாட்சிகள் வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு அளிப்பதாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூற முடியும் என்று அடித்துச் சொல்கிறார் சோ. இது சரியா, தவறா என்ற விவரங்களுக்குள் அவர் போகவில்லை.
ஒரு வேளை கணக்கு காண்பிக்கப்படாத சொத்து, அதுவும் வருமான வரித்துறையிடம் அளிக்கப்பட்டது, அல்லது மன்னார் குடி கும்பலால் நடந்த தவறு, அதற்கும் ஜெயாவிற்கும் தொடர்பில்லை என்றெல்லாம் இந்த சட்ட நுணுக்கத்தின் பின்னே இருந்தாலும், தீர்ப்பு அவர் நினைத்த மாதிரி ஏன் அமையவில்லை?
தீர்ப்பு இப்படித்தான் வருமென்று திமுக நினைப்பதிலேயே ஏதோ பெரும் சதி நடந்திருப்பதாக சோ சொல்கிறார். ஆனால் அதற்கு மேல் விவரித்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்று நிறுத்திக் கொள்கிறார். ஏன், திரைமறைவு ஒப்பந்தங்கள் மூலம் நீதிபதி விலை போய்விட்டார், அதை நிறைவேற்றும் அளவு திமுகவிடம் பெரும் பணம் இருக்கிறது என்று சொல்ல வேண்டியதுதானே?
சட்டப்படியும் தவறு, சதிப்படியும் தவறு என்று கூறிவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு என்று நல்லபிள்ளை போல நடிப்பது ஏன்? அங்கேதான் கவனிக்க வேண்டும், மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் லேடி ஆட்சி, கர்நாடகத்தில் கூட ஜெயாவின் மல்லையா உள்ளிட்டோரின் ஆசி பெற்ற காங்கிரசு ஆட்சிதான் நடக்கிறது. திமுகவோ அரசியல் செல்வாக்கிழந்து பலவீனமாக துவண்டு போயிருக்கிறது.
இந்நிலையில் கருணாநிதி நீதித்துறையை வளைத்து விட்டார் என்று சொல்வதோ, இல்லை மோடி, காங்கிரசு ஆட்சிகள் பணிந்து விட்டதாக அளப்பதோ அதிமுகவின் அடிமட்ட தொண்டர் வேண்டுமானால் பேசலாம். சோ பேசினால் சிக்கிக் கொள்வார். அதாவது சொந்த செலவில் அவர் ஆராதிக்கும் மோடி ஆட்சியை அவரே விமரிசிக்க வேண்டியதாகிவிடும்.
ஆகவேதான் (மோடி ஆசியுடன்) மேல் முறையீட்டில் தீர்ப்பே ரத்தாகிவிடும் என்று வாதிடும் சோ, அதற்கு ஆதாரமாக ஜெயா தொடர்பான ஏனைய வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பு ரத்தாகியிருப்பதை எடுத்துக் கூறுகிறார். அவாளுக்கான நலனென்று வரும் போது தர்க்கம் பயங்கரமாக உருவெடுக்கிறது.
சட்டத்தின் முடிவு இதுவென்றால் அரசியலில் ஜெயாவுக்கு எந்த குறையும் வராது என்று சத்தியமடிக்கிறார். திமுகவின் 2ஜி விவகாரத்தை பார்த்து மக்கள் ஜெயா மீது மிகுந்த அனுதாபம் கொண்டிருக்கின்றனர் என்றும் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்.
இருப்பினும் ஓ. பன்னீர் செல்வத்தின் அரசு அவர் ஆசீர்வதிக்கும் அம்முவின் அரசு போல இருக்காது என்று சிறு சந்தேகம் மனதில் தொக்கி நிற்கிறது. அதனால், திமுகவின் மீது மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பினை கணக்கில் கொண்டு புதிய அரசு ஜெயா வழிகாட்டுதலில் ஒழுங்காக நடந்தால் கருணாநிதி, ஸ்டாலினுக்கு செல்வாக்கு வரவே வராது என்று உபதேசிக்கிறார்.
இல்லையென்றால் என்ன நடக்கும்? அப்போதும் கூட ஜெயலலிதாவின் பின்னடைவை விட தமிழக அரசியல் எதிர்காலம் சோதனைக்குள்ளாகிவிடும் என்று கவலைப்படுகிறார். அதாவது ஜெயா குற்றவாளி என்று தண்டனை பெற்று வரும் அரசியல் சூழலால் திமுக வளர்ந்து விட்டால் அதுதான் சோதனையாம்.
மருமகள் உடைத்தால் மண்குடம் பொன்குடமாகும் சங்கதியேல்லாம் அழுகை டிவி சீரியல்களில்தான் வரவேண்டுமென்பதில்லை. அறிஞர் சோவின் அட்வைசில் கூட வரலாம்.
ஜெயாவுக்காக இடுப்பை ஒடித்து வணங்கும் அடிமை அமைச்சர் கூட்டம் போலல்லாமல் சோ போன்ற சாணக்கியர்கள் மண்டையை உடைக்காமலேயே சட்ட நுணுக்கங்களை நேர்மறை ஒழுக்கங்களாக மாற்றுவதற்கு சளைக்காமல் முயல்கிறார்கள்.
“தண்டனை பெற்றால் உடனடி பதவி இழப்பு என்ற விதிமுறை சட்டத்தில் இல்லை; சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம் இந்த நிலையைத் தோற்றுவித்திருக்கிறது;….” என்று ஜெயாவின் பதவி இழப்புக்கு ஒரு லா பாயிண்டை கீழே எடுத்து வைக்கிறார் சோ.
“…இந்த மாதிரி குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகத்தான், எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்களுக்கு, அப்பீல் செய்வதற்காக மூன்று மாத அவகாசத்தை மக்கள் பிரிதிநிதித்துவச் சட்டத்தின் 8-ஆவது பிரிவின், ஒரு உட்பிரிவு அளிக்கிறது. அது செல்லுபடியாகாது என்ற சப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, குழப்பத்திற்கும், சிக்கல்களுக்கும் வழி வகுக்கக் கூடியது” என்று 14 மாதங்களுக்கு முன்னர், 24.07.2014 தேதியிட்ட துக்ளக் தலையங்கத்தில் எழுதியதை இப்போது நினைவு கூர்கிறார் சோ.
வழக்கமாக “அன்றே சொன்னேன் இன்று பலித்தது” என்று பெருமை பேசும் பாணியில் கூறப்பட்டிருந்தாலும் இதை கொஞ்சம் சீர்தூக்கி பார்த்தால் சோ நமக்கு மொட்டை அடிக்க முயல்வது நன்கு புரியும்.
96-ம் ஆண்டில் போடப்பட்ட வழக்கு 2013 வாக்கில் முடிவை நோக்கி நெருங்குகிறது. ஒருக்கால் அம்முவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் என்ன செய்வது என்று அய்யர் பரிதவிக்கிறார். அப்போது பார்த்து உச்சநீதிமன்றத்தின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8-வது பிரிவின் ஒரு உட்பிரிவு செல்லுபடியாகாது என்ற தீர்ப்பு வருகிறது.
உடனே பரப்பன அக்ரஹாரத்தின் தீர்ப்பு தரும் விளைவுகள் சோவின் மண்டையினுள் இறங்கி எச்சரிக்கையாக லா பாயிண்டை எடுத்து முன்வைக்கிறது. ஆக உச்சநீதிமன்றத்தில் அந்த குழப்பம்தான் இன்று ஜெயாவின் பதவியை பறித்திருக்கிறது என்று மதியூக்த்துடன் அவர் கண்டுபிடித்திருக்கிறார்.
ஆனாலும் மானங்கெட்டு பேசுவதெல்லாம் மதியூகம் என்று நம்பும் கூட்டம் இருக்கும் போது மொட்டை சோவிடம் இல்லை, அவரை நம்புவர்களிடம் இருக்கிறது என்றே நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்!