ராஜபக்சே – மோடியைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் – படங்கள்
1. கோவை
கோவையில்
- முதல் நாளே கழன்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி!
- ஈழத் தமிழின அழிப்புக் குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சே மோடியின் அழைப்பு எதிர்பாராதது அல்ல ! வைகோ வகையறாக்கள் காட்டும் எதிர்ப்புதான் நாடகம்! பார்ப்பன பாசிசக் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம் !
- தமிழின விரோத பா.ஜ.க-வை தமிழர்களின் காவலனாக சித்தரித்த வைகோ, நெடுமாறன் கும்பல் ஆர்.எஸ்.எஸ்-ன் அய்ந்தாம் படையே!
- விஜயகாந்த், ராமதாசு, பாரிவேந்தர், உள்ளிட்ட பிழைப்புவாதிகள் தமிழ் மக்களின் விரோதிகளே!
என்ற முழக்கங்களுடன்
ராஜபக்சே இந்தியா வரவை கண்டித்து மக்கள் கலை இலக்கிய கழகம் , புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்!
சிங்கள இனவெறி பாசிஸ்டு
ராஜபக்சேவை விரட்டியடிப்போம்!
கழண்டு போச்சு, கழண்டு போச்சு
முதல் நாளே கழண்டு போச்சு
இந்துத்துவ மோடியின் முகமூடி!
கழண்டு போச்சு, கழண்டு போச்சு!
கூட்டா..ளிதான் கூட்டா..ளிதான்
மத வெறியன் நரேந்திர மோடியும்
இனவெறியன் ராஜபக்சேவும்
கூட்டாளிதான் கூட்டாளிதான்!
வேறல்ல வேறல்ல
ஈழத் தமிழரை கொன்றொழித்து
இரத்தம் குடித்த இராஜபக்சேவும்
சிறு..பான்மை முசுலிம் மக்களை
கொலை செய்த மோடியும்
வேறல்ல வேறல்ல
வை.கோ, இராமதாசு, நெடுமாறன்
ஆர்.எஸ்.எஸ்-ன் அய்ந்தாம் படையே!
இந்த கும்பலின் எதிர்ப்பெல்லாம்
நாடகமே, நாடகமே!
பா.ஜ.க-வின் இராதாகிருஷ்ணனை
பார்ப்பன-பாசிஸ்டு இராதாகிருஷ்ணனை
முள்ளி வாய்க்கால் முற்றத்துக்கு
வரவைத்து…. நம்ப வைத்து
ஈழத்தமிழரின் நண்ப..னென்று
தமிழக மக்களை நம்ப வைத்தது
வை.கோ, நெடுமா கும்பலே!
தமிழக மக்களை மட்டுமல்ல
புலிகளை..யும் நம்ப வைத்து
கழுத்தறுத்தது அய்ந்தாம் படையே
வை.கோ நெடுமா அய்ந்தாம் படையே!
காங்கிரசு எதிர்ப்பு என்ற பெயரில்
ஆர்.எஸ்.எஸ்-க்கு வேலை செய்ய
தி.மு.க எதிர்ப்பு என்ற பெயரில்
பார்ப்பன கும்பலுக்கு சொம்பு தூக்கும்
வை.கோ, நெடுமா– வோடு
தமிழருவி என்ற பெயரில்
கூவம் ஒன்று அலையுது!
விஜயகாந்து, இராமதாசு
பாரி வேந்தர் உட்பட
பிழைப்புவாதிகளை இனம் காண்போம்!
தமிழின விரோதிகளை விரட்டியடிப்போம்!
வேறல்ல வேறல்ல
கய..வாளி காங்கிரசும்
மதவெறி கும்பல் பா.ஜ.க-வும்
வேறல்ல வேறல்ல!
காங்கிரசும் பா.ஜ.க-வும் வேறல்ல
இந்திய முதலாளிகள் கொள்ளைக்காக
தெற்… காசிய பிராந்தி…யத்தில்
மேலா…திக்கம் பெறுவதற்..காக
ஈழத் தமிழரை அழிக்கிறான்
தமிழக மீனவரக் கொல்லுறான்
கூட்டாளிதான் கூட்டாளிதான்
காங்கிரசும் பா.ஜ.க-வும்
டாடா அம்பானி நலனுக்காக
தமிழனக் கொல்வதில் கூட்டாளிதான்
நம்பாதீங்க, நம்பாதீங்க
காங்கிரசுக்கு மாற்றுன்னு
பா.ஜ.க-வை நம்பாதீங்க!
விரட்டியடிப்போம், விரட்டியடிப்போம்
கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளை
காங்கிரசை, பா.ஜ.க-வை
விரட்டியடிப்போம், விரட்டியடிப்போம்!
வைகோ, நெடுமாறன்ஆகியோர் தாங்கள் என்னதான் பெரியாரின் பேரன் என்றும் தமிழினத்தின் காவலன் என்றும் சவடால் அடித்தாலும் இவர்கள் ஆர்.எஸ், எஸ்-ன் அய்ந்தாம் படையினரே என்பது அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. இவர்களை அம்பலப்படுத்தியும் தமிழ் மக்கள் இந்த விபீடணர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறையிலும் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மக்கள் கலை இலக்கிய கழகத்தின் செயலாளர் மணிவண்ணன் சிறப்புரை ஆற்றினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
செய்தி :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை
2. ஒசூர்
மோடியின் முகமூடியை திரைக்கிழைத்த ஓசூர் பு.ஜ. தொ.மு வின் ஆர்ப்பாட்டம்.
வரலாறு காணாத தனிப்பெரும்பான்மை பெற்ற ராஜாதிராஜ, ராஜ கம்பீர, ராஜகுலோத்துங்க ராஜசக்கரவர்த்தி, நரவேட்டைபுகழ் நரேந்திரமோடியின் பட்டாபிஷேகத்தில் எல்லா நாட்டு ராஜாக்களும் பங்கேற்க வேண்டும் என்பதன் ஒருபகுதியாக மோடியின் பதவியேற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கொலைகாரன் ராஜபக்சேவை அழைத்திருக்கிறது பார்ப்பன பாஜக அரசு. இது குஜராத்தின் இனப்படுகொலைக் குற்றவாளி, ஈழத் தமிழினக் கொலைகாரனுக்கு அளிக்கும் விருந்துபச்சாரம்!. மன்மோகன் அரசு ராஜபக்சேவுக்கு கள்ளத்தனமாக ஆதரவு கொடுத்தது என்றால்…, சிங்கள் இனவெறி அரசுக்குத் தனது ஆதரவைப் பகிரங்கமாகவே பிரகடனம் செய்திருக்கிறார் மோடி
இந்த விழாவில் பங்கேற்க சார்க் அமைப்பின் தலைவர்களை அழைப்பது என்ற கொள்கை முடிவின் அடிப்படையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதையேற்று அவரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் எனவும் ஒரு விளக்கம் தரப்படுகிறது, வேலிக்கு ஓணான் சாட்சியாம்! ‘இந்த விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் புனிதமான பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்சேவை அழைக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்’ என்று வை.கோ, ராமதாஸ், நெடுமாறன், தமிழருவி மணியன், பாரிவேந்தன் உள்ளிட்ட ஐந்தாம் படையினரின் கெஞ்சல் கூத்துகள் ஒருபுறம். இந்நிலையில் இவர்களனைவரையும் அம்பலப்படுத்தி தமிழ் மக்கள் முன்னிலையில் இந்த கபடவேடதாரர்களை தோலுரித்து,
மைய முழக்கங்களை முன்வைத்து மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் பெண்கள் விடுதலை முன்னணி, ஆகிய புரட்சிகர அமைப்புகளால் தமிழகம் முழுவதும் 26.05.2014 அன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியுடன் இணைந்து 26.05.2014 மாலை 5.00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் வேல்முருகன் தலைமை தாங்கினார். இவ்வமைப்பின் மாவட்டச் செயலாளர் தோழர் இரா.சங்கர் சிறப்புரையாற்றினார். இறுதியாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் விஜயபிரகாஷ் நன்றியுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தோழர்பரசுராமன், சின்னசாமி, சாந்தக்குமார், வெங்கடேஷ் மற்றும் உறுப்பினர்கள் தொழிலாளர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
முழக்கங்கள்:
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
போர்க்குற்றவாளி இராஜபக்சேவுக்கு
அழைப்பு விடுத்த பாஜக கும்பலை
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
ஈழத்தமிழர்களை கொன்று குவித்த
இனப்படுகொலை குற்றவாளிக்கு
சிவப்பு கம்பள வரவேற்பா?
தமிழர்களுக்கு பகையாளி!
மோடிக்கு பங்காளியா?
வெட்கக்கேடு! வெட்கக்கேடு!
தமிழினத்துக்கே வெட்கக்கேடு!
வெளியேற்று! வெளியேற்று!
ரத்த வெறியன் ராஜபக்சேவை
வெளியேற்று! வெளியேற்று!
திரும்பிப்போ! திரும்பிப்போ!
வேட்டை மிருகம் இராஜபக்சேவே
மனித குல எதிரியே
திரும்பிப்போ! திரும்பிப்போ!
கழன்டு விட்டது! கழன்டு விட்டது!
மோடியின் முகமூடி
கழன்டு விட்டது! கழன்டு விட்டது!
பாஜகவை தமிழர்களின்
காவலனாக சித்தரித்து
ஓட்டுப் பொறுக்கிய விஜயகாந்தே
ராமதாஸ், வைகோவே
பதில் சொல்! பதில் சொல்!
தமிழர்களுக்கு பதில் சொல்!
பொங்கிவரும் கண்ணீரோடும்
கும்பிட்ட கரங்களோடும்
மன்றாடும் வைகோவே!
நீலிக்கண்ணீர் வடிக்காதே!
கபட நாடகம்! கபட நாடகம்!
கோமாளி வைகோவின்
எதிர்ப்பு என்பது கபட நாடகம்!
கரசேவை செய்வதற்கு
கருப்புத்துண்டு உனக்கெதற்கு!
பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு
இராஜபக்சே அழைப்பு என்பது
மோடியின் இராஜதந்திரமாம்!
சார்க் நாடுகளின் உறுப்பினராம்!
பச்சைப்புரட்டு! பச்சைப்புரட்டு!
பார்ப்பன ஊடகங்களின்
பச்சைப்புரட்டு! பச்சைப்புரட்டு!
விஜயகாந்தும், ராமதாசும்
ஈஸ்வரனும், பாரிவேந்தனும்
மோடி- இராஜபக்சேவின்
கூட்டாளிகளே! கூட்டாளிகளே!
பதவிக்காகவும், பணத்துக்காகவும்
தமிழ் மக்களை ஏமாற்றி
வயிறு வளர்க்கும் தலைவர்களை
பிழைப்புவாதக் கூட்டங்களை
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
வரலாறு முழுக்க உழைக்கும் மக்களை
ஒடுக்கி வந்த பார்ப்பனர்களுக்கு
வேரூன்ற வழிவகுக்கும்
வைகோ, நெடுமாறன், ராமதாஸ் கும்பல்
பாஜகவின் ஐந்தாம் படையே!
புரிந்து கொள்வோம்! புரிந்து கொள்வோம்!
ஓட்டுக் கட்சிகளின் துரோகத்தை
புரிந்து கொள்வோம்! புரிந்து கொள்வோம்!
இந்திய தரகு முதலாளிக்காக
பன்னாட்டுக் கம்பெனிக்காக
ஜனநாயக சக்திகள் மீதும்
உழைக்கும் மக்கள் பிணங்கள் மீதும்
கட்டியமைப்பதே! கட்டியமைப்பதே!
குஜராத் மாடல் வளர்ச்சி என்பது!
குஜராத்திலே கொள்ளையடித்து
ருசிகண்ட அம்பானிகளும்
டாடா, பிர்லா, அதானிகளும்
இந்தியா முழுக்க கொள்ளையடிக்க
தொடங்கி வைக்கும் வைபவமே!
இன்று பிரதமர் பதவியேற்பு விழா!
கொண்டாட்டமென்ன, கொண்டாட்டமென்ன,
உழைக்கும் மக்களே! உழைக்கும் மக்களே!
இதில் உங்களுக்கென்ன கொண்டாட்டம்
நீ இந்துவானாலும், முசுலீமானாலும்
ஆலையில் பணி நிரந்திரமில்லை
கல்வியில்லை, வேலையில்லை
விலைவாசி உயர்வுகளோ
நிற்கவே போவதில்லை
உன் போராட்டம் ஓயப்போவதில்லை
புரட்சியின்றி தீர்வு இல்லை!
ஒன்றே தீர்வு! ஒன்றே தீர்வு!
ராஜபக்சேவின் பாசிசத்திற்கும்
மோடியின் பாசிசத்திற்கும்
முடிவுகட்ட முடிவுகட்ட
உலகின் முற்போக்கு, புரட்சிகர
ஜனநாயக சக்திகளின்
வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்பது
ஒன்றே தீர்வு! ஒன்றே தீர்வு!
இன, மதவெறி பாசிசத்திற்கு
தமிழகத்தில் பாடைக் கட்டுவோம்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
ஓசூர்.
தொடர்புக்கு: செல்-9788011784.
—————————————————————-
3. மதுரை
இந்துமத வெறியன் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழின அழிப்புக் குற்றவாளி பாசிச ராஜபக்சே வருகையை எதிர்த்து மதுரையில் 26/05/2014 திங்கள் காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே , மகஇக, புமாஇமு, புஜதொமு, விவிமு, பெவிமு ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு மகஇக அமைப்பாளர் தோழர் ராமலிங்கம் தலைமை தாங்கினார் . மோடிக்கு காவடி தூக்கிய வைகோ, ராமதாஸ் போன்றோரை அம்பலப்படுத்தி தலைமையுரை ஆற்றினார் .
உசிலை வட்டார விவிமு தோழர் ஆசை தனது உரையில், ராஜபக்சேவை அழைத்துள்ள மோடியின் அழைப்பின் பின் உள்ள இந்திய மேலாதிக்க நோக்கத்தை அம்பலப்படுத்தினார்.
ஒத்தக்கடை புஜதொமு தோழர் போஸ் ஓட்டுக்கட்சிகளை அம்பலப்படுத்தியும் தெற்காசிய நாட்டு தலைவர்களை தன் பதவியேற்பு விழாவிற்கு அழைத்ததன் நோக்கத்தை அம்பலப்படுத்தி பேசினார்.
மஉபாமை, மதுரை மாவட்ட இணைச் செயலர் தோழர் வாஞ்சிநாதன், தமிழின விரோத பாஜக வை வைகோ, ராமதாஸ் , நெடுமாறன் போன்றோர் தமிழினக் காவலனாக சித்தரித்ததையும், தற்போது மோடியின் முகமூடி கிழிந்து தொங்குவதையும் அம்பலமாக்கினார்.
இறுதியாக மஉபாமை மதுரை மாவட்டச் செயலர் தோழர் லயனல் அந்தோனி ராஜ், மோடியின் அய்ந்தாம் படையான தமிழினப் பிழைப்புவாதிகளை திரை கிழித்தும் , பன்னாட்டு நிறுவனங்களின் ஏவலாள் மோடியின் நோக்கத்தையும், புரட்சிகர அமைப்புகளே மாற்று எனவும் எழுச்சிகரமாக பேசினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை
4. தருமபுரி
தருமபுரி தந்தி அலுவலகம் அருகில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் தோழர் அருண் தலைமை தாங்கினார். தோழர் ஜானகிராமன், வழக்கறிஞர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தோழர் கோபிநாத் விவசாயிகள் விடுதலை முன்னணி, வட்டார செயலர் சிறப்புரை ஆற்றினர்.
ஒலிபெருக்கி அனுமதி மறுக்கப்பட்ட போதும், கடைவீதியில் மக்கள் கவனத்தை ஈர்க்கும்படி முழக்கங்கள் போடப்பட்டன.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி
5. கோத்தகிரி
நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக கோத்தகிரி ஜீப் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலமலை அனைத்து தொழிலாளர் சங்க தலைவர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார், பொருளாளார் விஜயன் உரையாற்றினார். துணை செயலாளர் ராஜா நன்றியுரை நிகழ்த்தினார். சுப்பிரமணி, புவனேஷ், அசோக், பாலா, பரத், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்:
நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம்
6. தஞ்சை
தஞ்சை சாந்தி-கமலா திரையரங்கம் அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ம.க.இ.க தஞ்சை கிளை செயலர் இராவணன் தலைமையில், விவசாயிகள் விடுதலை முன்னணி பட்டுக்கோட்டை வட்டார அமைப்பாளர் மாரிமுத்து, மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை.
7. கடலூர்
கடலூரில் உழவர் சந்தை அருகில் 26-05-2014 அன்று மாலை 5.௦௦ மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி கடலூர் இணை செயலாளர நந்தா தனது தலைமை உரையில் இனவாதிகளை அம்பலபடுத்தியும் பாசிச ஜெயா என்றுமே ஈழத்துக்கு ஆதரவு இல்லை என்றும் பிழைப்புவாதிகளின் கபட நாடகத்தை தோலுரித்து பேசினார்.
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, நெய்வேலி அமைப்பாளர் குழந்தைவேலு தனது கண்டன உரையில் சுயமரியாதை கற்றுக் கொடுத்த பெரியார் பிறந்த மண்ணில் பா.ஜ.க. இந்த அளவுக்கு வளர்ந்தது என்றால் பெரியாரியம், திராவிடம், தமிழினம் என்று பேசுகின்ற பிழைப்புவாத தலைமைகளை பொறுப்பாக்க வேண்டும் என அறைகூவினார்.
ஜெயங்கொண்டம் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பாளர் சேகர் தனது உரையில் தனியார்மயம், தாராளமயம், உலக மயம் அடிப்படையிலான பொருளாதார கொள்கைகளை தீவிரமாக அமுல்படுத்தியது பா.ஜ.க. ஆட்சியில்தான் என்றும் நம் நாட்டின் ராஜபட்சே இந்த நரேந்திரமோடிதான் என்றும் பேசினார்.
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த மூன்று பேர் இறுதிவரை இருந்து போராட்டத்தில் பங்கெடுத்தனர். அடுத்தமுறை எங்களுக்கும் பேச வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
தொழிற் பயிற்சி மாணவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போராட்டத்திற்கு வாழ்த்து கூறி கலந்து கொண்டார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
முழக்கம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி-வாழ்க!
புதிய ஜனநாயக புரட்சி ஓங்குக!
வெளியேற்று, வெளியேற்று
2 லட்சம் ஈழத் தமிழர்களை
கொன்று குவித்த கொலைகாரன்,
சிங்கள இனவெறி போர்வெறியன்
இலங்கையின் ராஜபட்சேவை
நாட்டை விட்டு வெளியேற்று
உடனடியாக வெளியேற்று!
முள்வேலி முகாமில் பல்லாயிரம் தமிழ் மக்கள்
தமிழ்மக்கள் வீடுகளில சிங்களர்களின் குடியேற்றம்
ஈழத்தமிழ் பெண்கள் மீது தொடர்கின்ற பாலியல் தாக்குதல்!
ஈழத்தமிழ் இளைஞர்களை சுட்டுக் கொல்லும் சிங்கள ராணுவம்
கொடுரங்களை நிகழ்த்திக் கொண்டு
கொலைகாரன் வருகிறான் விருந்தாளியாய்,
அனுமதியோம்,அனுமதியோம்
கொலைகாரன் ராஜபட்சேவை
இந்திய மண்ணில் அனுமதியோம்!
டாடா,அம்பானிகளின் எடுபிடி!
இந்துமதவெறி பாசிஸ்டு!
இந்தியாவின் ராஜட்சே !
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு
சிங்கள இனவெறி ராஜபட்சேவுக்கு
சிவப்பு கம்பள வரவேற்பாம்!
வெட்ககேடு!வெட்ககேடு!
தமிழகமே வெட்ககேடு!
மோடி பிரதமர் ஆனாலே
இலங்கையில் ஈழம் மலரும் என்று
வீரவசனம் பேசி வந்த வை.கோ.வும்,நெடுமாறனும்
ராஜபட்சேவின் வருகை எதிர்த்து ஒப்பாரி வைப்பது ஏமாற்று!
கபட நாடகம், கபட நாடகம்!
அம்பலப்படுத்துவோம்! அம்பலப்படுத்துவோம்!
வை.கோ., நெடுமாறன், ராமதாசு!
விஜயகாந்த், பாரிவேந்தர்
தமிழின துரோகிகளின்
சந்தர்ப்பவாத, பிழைப்புவாத
நடவடிக்கைகளை அம்பலபடுத்துவோம்!
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி-வாழ்க!
புதிய ஜனநாயக புரட்சி ஓங்குக!
தகவல்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்.
8. விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தர மறுத்து இழுத்தடித்தனர் காவல் துறையினர். அனுமதி இல்லாமலேயே ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுத்து ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம் உட்பட நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
26-ம் தேதி திங்கள் கிழமை காலை 9.30 மணிக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர் தோழர்கள். தோழர்கள் முழக்கம் எழுப்பி, பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டியும் அளித்தனர். போலீஸ் குவிக்கப்பட்டது.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி விழுப்புரம் மாவட்டச் செயலாளர் தோழர் செல்வகுமார் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார். விவசாயிகள் விடுதலை முன்னணி திருவெண்ணெய் நல்லூர் வட்டார செயலாளர் தோழர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
அனுமதி இல்லாமல் நடத்துவதாக கூறி தடுத்து நிறுத்த முயற்சித்த காவல்துறை ஆய்வாளரிடம் அனுமதி கேட்டு தராததால் நடத்துகிறோம் என்று தோழர்கள் பதில் சொல்லவும் நகர்ந்து நின்று வேடிக்கை பார்த்தனர். திட்டமிட்டபடி 45 நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அடுத்த நாள் பத்திரிகைகளில் ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி வெளிவந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்
தேடப்படும் குற்றவாளி துணைவேந்தர் கல்யாணியைக் கைது செய்!
தேடப்படும் குற்றவாளி துணைவேந்தர் கல்யாணியைக் கைது செய்!
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
நாள் : 26.05.2014
நேரம் : காலை 10.30 மணி
- துணைவேந்தரின் ஊழலுக்கு எதிராகப் போராடிய மதுரை காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்புக் குழு அமைப்பாளர் பேராசிரியர் சீனிவாசன் மீது கொலை வெறித் தாக்குதல்!
- இரண்டு கைகளும் உடைக்கப்பட்டு படுத்த படுக்கையாய் மருத்துவமனையில் சிகிச்சை!
- பேராசிரியர் சீனிவாசனை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய குற்ற எண்.216/2014, பிரிவுகள்: 294(b),324,307,109 I.P.C. வழக்கில் தேடப்படும் முதல் குற்றவாளி-மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் தலைமறைவு
துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே கைது செய்!
- கூலிப்படை கும்பல் தி.மு.க. தொண்டரணிச் செயலர் சரவணன், ஜெயராமன் பதுங்கியுள்ள பல்கலைக் கழக ‘விருந்தினர் இல்லத்தை’ உடனே ரெய்டு செய்!
- குற்ற எண்.216/2014 வழக்கின் இதர குற்றவாளிகள் பதிவாளர் முத்து மாணிக்கம், பி.ஆர்.ஓ.அறிவழகன், செல்லத்துரை, எஸ்.வி.கே.செல்வராஜைக் கைது செய்!
- அ.தி.மு.க. துணைவேந்தர் கல்யாணி மதிவாணனுக்கு தி.மு.க.வின் எஸ்.வி.கே.செல்வராஜ்- தொண்டரணி சரவணன் அடியாட்கள்!
- தி.மு.க. அடியாட்களை காவல்துறை கைது செய்ய விடாமல் தடுக்கும் மதுரை அ.தி.மு.க. நிர்வாகிகள்!
- உரிய கல்வித் தகுதி இல்லாத வெறும் அரசியல் செல்வாக்கால் துணைவேந்தர் பதவிக்கு வந்த துணை வேந்தர் கல்யாணி மதிவாணனால் ஊழல் தலைவிரித்தாடும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம்!
- பேராசிரியர்-அலுவலகப் பணியாளர் என அனைத்துப் பணிகளும் ஏலம் விடப்படும் அவலம்!
- தட்டிக் கேட்டால் தாக்கி-பழிவாங்கப் படும் அவலம்!
- உயர்கல்வி நிலையம் ஊழல் கூடாரமாய், ரவுடிகளின் ராஜ்யமாய் மாறிய கொடுமை!
- தகுதியற்ற துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே பதவி நீக்கம் செய்!
- உயர் கல்வி நிலையங்களில் தகுதியுள்ள கல்வியாளர்களைப் பணியில் அமர்த்து!
- மதுரையின் அடையாளமான மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தைக் காப்போம்!
- ஊழல் துணைவேந்தருக்கெதிராய் மக்களே வீதியில் இறங்கிப் போராடுவோம்!
மதுரை மாவட்ட காவல் துறைக்கு சில கேள்விகள்!
- நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய குற்ற எண்.216/2014, கொலை முயற்சி வழக்கின் தேடப்படும் குற்றவாளிகள் முன் ஜாமின் வாங்காமல் பல்கலைக் கழகத்தில் பணியில் உள்ளபோது கைது செய்யாத மர்மம் என்ன?
- கைதைத் தடுக்கும் அரசியல்வாதி யார்?
- சாதாரண மக்கள் மீதான வழக்கில் பாய்ந்து கைது செய்யும் காவல்துறை அதிகாரம், அரசியல் செல்வாக்கு உள்ள துணைவேந்தரிடம் பம்மிப் பதுங்குவது ஏன்?
- தாக்கிய பெயர் தெரியாத கூலிப்படையை உடனே கைது செய்த காவல்துறை, ஒப்புதல் வாக்கு மூலத்தில் மிகத்தெளிவாக ஜெயராமன் – சரவணனை முகவரியோடு சொன்ன பின்பும் 10 நாட்களாய் கைது செய்யாத காரணம் என்ன? முன் ஜாமின் வாங்கிக் கொள்ள கால அவகாசம் அளிப்பதன் பின்னணி என்ன?
- ஜெயராமன் – சரவணன் கைதானால் தி.மு.க.வின் எஸ்.வி.கே.செல்வராஜ் -துணைவேந்தர் பெயர்கள் ஒப்புதல் வாக்குமூலத்தில் வரும் என்ற அச்சமா?
- குற்றவாளிகளை கெஸ்ட் கவுசில் தங்க வைத்து பல்கலை வாயிலை அடைத்து காவல் துறை உள்ளே வரக்கூடாதென துணைவேந்தர் தடுப்பது எஸ்.பி.க்குத் தெரியாதா?
- நாகமலை காவல் துறை – I.S. – S.P.C.I.D – இன்ன பிற உளவுத் துறையெல்லாம் தலைமறைவு கூலிப்படை குற்றவாளிகளைத் தேடாமல் வாயில் விரல் வைத்து சூப்பிக் கொண்டுள்ளதா?
தகவல் :மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை
ஈழமா , பதவியா – பாமகவின் பாசப் போராட்டம் !
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், நரவேட்டை மோடிக்கு கொடி பிடிக்க தமிழகத்தின் தலைமை புரோகிதர் மற்றும் புரோக்கர் தமிழருவி மணியனால் கோர்த்து விடப்பட்ட தமிழினக் காவலர்கள் வைகோவும் ராமதாசும் இந்துமதவெறியர்களுக்கு ஜால்ரா அடிப்பதில் போட்டி போட்டு வருகின்றனர். மன்னர்களை அண்டிப்பிழைத்து கவி பாடுவதில் போட்டி போடும் தமிழ் புலவர் மரபை பல இடங்களில் பெரியார் கேலி செய்திருக்கிறார். புலவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக மானே, தேனேவென வெண்பா பாடினார்கள் என்றால் வைகோவும், ராமதாசும் மோடியை பல்லக்கிலேயே தூக்கி சுமக்கிறார்கள். என்ன இருந்தாலும் ‘தமிழன்டா’!
தி.நகர் பாஜக-விற்கு நேர்ந்து விடப்பட்ட வைகோ, வடபழனியில் விலைக்கு வாங்கிய கிளிசரின் உதவியோடு கண்ணீரும் கம்பலையுமாக டெல்லிக்கு டிக்கெட் போட்டு ஜந்தர் மந்தரில் ராஜபக்சேவுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்துகிறார். ஒரு வேளை விருதுநகர் தொகுதியில் அதிர்ச்சியூட்டும் விதமாக வைகோ வென்றிருந்தால் இந்த ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற சென்டிமெண்ட் ஆட்டங்களின்றி வேறு மாதிரி பா வரிசைப் படங்கள் போல காமெடியாக இருந்திருக்கும்.
‘வன்னியசாதி வெறியை தூண்டி விட்டு, தரும்புரியில் ‘கொடி’ நாட்டிய தன் குலக்கொழுந்து வன்னிய குல சிங்கம் அன்புமணியின் மீது மோடி பகவானின் கருணைப் பார்வை விழுந்து விடாதா, ஏதேனும் தூசு தட்டும் அமைச்சர் பதவி பிச்சை கிடைக்காதா’ என்று ராஜபக்சே விவகாரத்தை கடப்பாரை முழுங்கிய கடோத்கஜன் போல கமுக்கமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் பாமக ராமதாஸ். முனகாமல் இறுக்கமாக, கமுக்கமாக உட்கார்ந்திருக்கும் ராமதாசின் சந்தர்ப்பவாதத்தின் முன்னாள் மலை முழுங்கி மகாதேவனெல்லாம் பிச்சை எடுக்க வேண்டும்.
மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி இலங்கை இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை மோடி அரசு அழைத்திருப்பது குறித்து அவர் விடுத்த அறிக்கையில்,
“இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழா டெல்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. (அதில் இளவல் அன்புமணியும் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கிறோம்).
புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். (எங்கள் குடும்பத்தின் சார்பில் அன்புமணியையும் அமைச்சராக சேர்த்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்)வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில் பங்கேற்க சார்க் அமைப்பின் தலைவர்களை அழைப்பது என்ற கொள்கை முடிவின் அடிப்படையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதையேற்று அவரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ( இலங்கை சார்க் அமைப்பில் இருப்பதே இப்போதுதான் எனக்குத் தெரியும். முன்னரே தெரிந்திருந்தால் இலங்கைக்கு எதிராக வாயை திறந்திருக்கமாட்டேன்.)
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ள ராஜபக்சேவை பெருமைமிக்க இந்த விழாவுக்கு அழைப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். (தருமபுரியில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் வீட்டை கொளுத்திய என்னை யாரும் தவிர்க்கவில்லை என்பது வேறு விசயம்.)
இந்த விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்சேவை அழைக்கும் முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும். (இவ்வளவு அடக்கமாக காலில் விழுந்திருக்கிறோம், பார்த்து போட்டுக் கொடுங்கள்)”
என்று கூறியிருக்கிறார்.
2009 தேர்தலின் போது கடைசி வரை காங்கிரசு காலில் நக்கிவிட்டு பின்னர் ஈழம், வேழம் என்று சீன் போட்டு தேர்தலில் போட்டியிட்டார். மக்கள் டிவியில் ஈழம் குறித்த வீடியோக்கள் வெள்ளமாய் வெளியிடப்பட்டன. வன்னிய சாதி வெறியைக் கூட தற்காலிகமாக பரணில் கட்டி வைத்து விட்டு ஈழத்தமிழருக்காக பாமக அழுது அரற்றியது அத்தனையும் நாடகம் என்பது இப்போது மட்டுமல்ல அப்போதும் எங்களுக்கு தெரியும் என்று தமிழக மக்கள் தெளிந்திருந்தால் இந்த அட்சரசுத்தமான பிழைப்புவாதிகள் தமிழகத்தில் பிழைக்க வழியிருந்திருக்காது.
வடமாவட்ட வன்னிய சாதி மக்களிடையே சாதி வெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கி வெற்றி பெற்ற அன்புமணி ஒரு துணை அமைச்சர் பதவியாவது கிடைத்து விடாதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு டெல்லிக்கு ஃபிளைட் பிடித்து போயும் எதுவும் விழாமல் வெறுங்கையோடு மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். ஏற்கனவே, “மத்தியில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரதிநிதித்துவம் தேவை. எங்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக எந்த உறுதியும் தரப்படவில்லை. பதவி தர முன்வந்தால், எங்கள் கட்சி அதுபற்றி முடிவெடுக்கும்.” என்று சோகத்தை அடக்கிக் கொண்டு கூறி விட்டு ‘அதிமுகவோடு இணைந்து தமிழர்களின் நலன்களுக்காக போராட தயார்’ என்று அம்மாவின் காலடியிலும் ஒரு துண்டை போட்டு வைத்திருந்தார்.
வன்னிய சாதி பெயரைச் சொல்லி இந்த காளான்கள் செய்யும் சந்தர்ப்பவாதத்தை வன்னிய சாதி உழைக்கும் மக்களை உள்ளிட்டு தமிழக உழைக்கும் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய வெத்து வேட்டு வீரர்களையும், துரோகிகளையும் ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு உதவக்கூடிய நட்பு சக்திகளாக ஆராதிக்கும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இவர்களது யோக்கியதையை உணர வேண்டும்.
மேலும் படிக்க
ராஜபக்சேவும் மோடியும் கூட்டாளிதான் – திருச்சி, சென்னை ஆர்ப்பாட்ட படங்கள்
1. திருச்சி
- முதல் நாளே கழன்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி!
- ஈழத் தமிழின அழிப்புக் குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சே மோடியின் அழைப்பு எதிர்பாராதது அல்ல ! வைகோ வகையறாக்கள் காட்டும் எதிர்ப்புதான் நாடகம்! பார்ப்பன பாசிசக் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம் !
- தமிழின விரோத பா.ஜ.க-வை தமிழர்களின் காவலனாக சித்தரித்த வைகோ, நெடுமாறன் கும்பல் ஆர்.எஸ்.எஸ்-ன் அய்ந்தாம் படையே!
- விஜயகாந்த், ராமதாசு, பாரிவேந்தர், உள்ளிட்ட பிழைப்புவாதிகள் தமிழ் மக்களின் விரோதிகளே!
என்ற தலைப்பில் தமிழகம் முழுக்க இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் இன்று, (26.05.2014) ஆர்ப்பாட்டமும், இராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பும் நடத்தப்பட்டது. இதில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவுள்ள மோடி, தனது முடி சூட்டு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் தலைவர் என்ற வகையில் தமிழினப் படுகொலையாளன் ராஜபக்சேவை அழைத்ததன் மூலம் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ் மக்களுக்குத் தான் அளித்த நாடகத்தை கலைத்து விட்டு உண்மை முகத்தை காட்டியுள்ளார். வைகோ, நெடுமாறன், இராமதாசு போன்றோர் தேர்தலின் போது இவருக்கு மாட்டி விட்ட முகமூடி பதவியேற்புக்கு முன்பே கிழிந்து தொங்குகிறது.
பா.ஜ.க-வைப் பற்றி ஒன்றுமே தெரியாதவரைப் போல வைகோ உள்ளிட்டோர் இன்று நாடகமாடுகின்றனர். ஆனால், 2000-ம் ஆண்டில் புலிகள் யாழ்குடா நாட்டில் சிங்கள இராணுவத்தினர் 40,000 பேரை சிறை பிடித்து சிங்கள அரசு பணிய நிர்ப்பந்திக்கப் பட்டிருந்த நிலையில்,… கடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு சிங்களர்கள் இராணுவ வீரர்களை மீட்க வேண்டும் என்ற நிலைக்கு வந்த நிலையில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் புலிகளை மிரட்டி சிங்கள இராணுவ வீரர்களை விடுவித்தார் என்பதை அறியாதவரல்ல. அப்போதும் வாஜ்பாய் அரசுக்கு வக்காலத்து வாங்கியவர்தான் இந்த வைகோ.
வைகோ, நெடுமாறன்ஆகியோர் தாங்கள் என்னதான் பெரியாரின் பேரன் என்றும் தமிழினத்தின் காவலன் என்றும் சவடால் அடித்தாலும் இவர்கள் ஆர்.எஸ், எஸ்-ன் அய்ந்தாம் படையினரே என்பது அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. இவர்களை அம்பலப்படுத்தியும் தமிழ் மக்கள் இந்த விபீடணர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறையிலும் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாய்லர் பிளாண்ட ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலர் தோழர் சுந்தரராசு தலைமை வகித்தார். ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் தர்மராசு சிறப்புரையாற்றினார்.
காவல் துறை அனுமதியுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் சிங்கள இன வெறியன் இராஜபக்சேவின் கொடும்பாவியைக் கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி தோழர்கள் கைதாயினர். இந்த போராட்டத்திற்கு சட்டக்கல்லூரி மாணவரும் பு.மா.இ.மு மாவட்ட செயலருமான தோழர் சேக் தலைமை தாங்கினார்.
இராஜபக்சே கொடும்பாவியை எரித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியே வந்த ஊனமுற்ற நண்பர் ஒருவர் தானும் தன்னார்வத்துடன் இணைந்து முழக்கமிட்டார். போராட்டம் முடிந்து தோழர்களைக் கைது செய்யும் போது நீங்கள் ம.க.இ.க-வா, கைது செய்யப் போகிறோம். என்ற போது, “ நான் ம.க.இ.க இல்லை. ஆனால், கைது செய்வதென்றால் கைது செய்து கொள்ளுங்கள். சரியான விசயத்திற்காக கைதாவில் தவறில்லை” என்று கூறினார். எனினும் காவல் துறை அவரைக் கைது செய்யாமல் தவிர்த்தனர்.
விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்!
சிங்கள இனவெறி பாசிஸ்டு
ராஜபக்சேவை விரட்டியடிப்போம்!
கழண்டு போச்சு, கழண்டு போச்சு
முதல் நாளே கழண்டு போச்சு
இந்துத்துவ மோடியின் முகமூடி!
கழண்டு போச்சு, கழண்டு போச்சு!
கூட்டா..ளிதான் கூட்டா..ளிதான்
மத வெறியன் நரேந்திர மோடியும்
இனவெறியன் ராஜபக்சேவும்
கூட்டாளிதான் கூட்டாளிதான்!
வேறல்ல வேறல்ல
ஈழத் தழிழரை கொன்றொழித்து
இரத்தம் குடித்த இராஜபக்சேவும்
சிறு..பான்மை முசுலிம் மக்களை
கொலை செய்த மோடியும்
வேறல்ல வேறல்ல
வை.கோ, இராமதாசு, நெடுமாறன்
ஆர்.எஸ்.எஸ்-ன் அய்ந்தாம் படையே!
இந்த கும்பலின் எதிர்ப்பெல்லாம்
நாடகமே, நாடகமே!
பா.ஜ.க-வின் இராதாகிருஷ்ணனை
பார்ப்பன-பாசிஸ்டு இராதாகிருஷ்ணனை
முள்ளி வாய்க்கால் முற்றத்துக்கு
வரவைத்து…. நம்ப வைத்து
ஈழத்தமிழரின் நண்ப..னென்று
தமிழக மக்களை நம்ப வைத்தது
வை.கோ, நெடுமா கும்பலே!
தமிழக மக்களை மட்டுமல்ல
புலிகளை..யும் நம்ப வைத்து
கழுத்தறுத்தது அய்ந்தாம் படையே
வை.கோ நெடுமா அய்ந்தாம் படையே!
காங்கிரசு எதிர்ப்பு என்ற பெயரில்
ஆர்.எஸ்.எஸ்-க்கு வேலை செய்ய
தி.மு.க எதிர்ப்பு என்ற பெயரில்
பார்ப்பன கும்பலுக்கு சொம்பு தூக்கும்
வை.கோ, நெடுமா, – வோடு
தமிழருவி என்ற பெயரில்
கூவம் ஒன்று அலையுது!
கூடி நாம விரட்டாம
அசிங்கம் என்றும் அகலாது!
விஜயகாந்து, இராமதாசு
பாரி வேந்தர் உட்பட
பிழைப்புவாதிகளை இனம் காண்போம்!
தமிழின விரோதிகளை விரட்டியடிப்போம்!
வேறல்ல வேறல்ல
கய..வாளி காங்கிரசும்
மதவெறி கும்பல் பா.ஜ.க-வும்
வேறல்ல வேறல்ல!
காங்கிரசும் பா.ஜ.க-வும் வேறல்ல
இந்திய முதலாளிகள் கொள்ளைக்காக
தெற்… காசிய பிராந்தி…யத்தில்
மேலா…திக்கம் பெறுவதற்..காக
ஈழத் தமிழரை அழிக்கிறான்
தமிழக மீனவரக் கொல்லுறான்
கூட்டாளிதான் கூட்டாளிதான்
காங்கிரசும் பா.ஜ.க-வும்
டாடா அம்பானி நலனுக்காக
தமிழனக் கொல்வதில் கூட்டாளிதான்
நம்பாதீங்க, நம்பாதீங்க
காங்கிரசுக்கு மாற்றுன்னு
பா.ஜ.க-வை நம்பாதீங்க!
விரட்டியடிப்போம், விரட்டியடிப்போம்
கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளை
காங்கிரசை, பா.ஜ.க-வை
விரட்டியடிப்போம், விரட்டியடிப்போம்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள்
திருச்சி
_______________
2. சென்னை
இந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ள பா.ஜ.கவின் மோடி தனது பதவி ஏற்பு விழாவிற்கு தமிழின அழிப்பு போர் குற்றவாளி இலங்கை அதிபர் இராஜபட்சேவை அழைத்ததைக் கண்டித்து 26.5.2014 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில்
- முதல் நாளே கழண்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி!
- ஈழத்தமிழின அழிப்புக் குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சே மோடியின் அழைப்பு எதிர்பாராதது அல்ல. வைகோ வகையறாக்கள் காட்டும் எதிர்ப்புதான் நாடகம்!
- தமிழின விரோத பா.ஜ.க.வை தமிழர்களின் காவலனாக சித்தரித்த வைகோ, நெடுமாறன் கும்பல் ஆர்.எஸ்.எஸ்-ன் ஐந்தாம் படையே!
- விஜயகாந்த், ராமதாசு, பாரிவேந்தர் உள்ளிட்ட பிழைப்புவாதிகள் தமிழ்மக்களின் விரோதிகளே!
தமிழ்மக்களே
- பார்ப்பன பாசிசக் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம் !
என்ற முழக்கங்களின் அடிப்படையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் தலைமை ஏற்று நடத்தினார். பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னை செயலாளர் தோழர் உஷா மற்றும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி மாநிலக் குழு தோழர் சரவணன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
இவண் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி.
3. திருச்சி மனித உரிமை பாதுகாப்பு மையம்
ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் சிங்கள இனவெறியன் இராஜபக்சேவிடமிருந்து காப்பதாக நாடகமாடியது உண்மைதான் என்று நிரூபிக்கும் விதமாக, தற்போது பதவியேற்பு நிகழ்ச்சிக்கே தமிழின அழிப்பாளன் சிங்கள இராஜபக்சேவை அழைத்துள்ள பா.ஜ.க-வின் பிரதமர் மோடியை கண்டித்து நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், திருச்சி கிளை அமைப்பின் சார்பில் இன்று 26.05.2014 காலை 11 மணியளவில் திருச்சி நீதிமன்ற வாயிலில் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டு வருகை தரும் ஈழத்தமிழின கொலையாளி இராஜபக்சேவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருச்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது இதே மோடிதான் ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் நலன் காக்க நான் பாடுபடுவேன் என பச்சையாக பொய் பேசி வாக்குறுதியளித்தார். இது பொய்தான் என்பதை பதவியேற்பு விழாவுக்கே தமிழினக் கொலைகாரனை அழைத்ததன் மூலம், தான் தமிழர்களின் விரோதி என்பதை நிரூபித்துக்கொண்டார். பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர்களும் இதை நியாயப்படுத்தி பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
பா.ஜ.க-வால்தான் தமிழர் பிரச்சினையை முற்றாகத் தீர்க்க முடியும் என்று கூறி காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து வாக்களிக்கக் கூறிய தமிழக கட்சிகளின் தலைவர்களான வைகோ, இராமதாசு, விஜயகாந்த், பாரிவேந்தர், கொங்கு ஈஸ்வரன் மற்றும் தமிழருவி மணியன், நெடுமாறன் போன்றோர் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. இவர்கள் தமிழின துரோகிகளே என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தமிழக மீனவர் மற்றும் ஈழத் தமிழர் நலன் காக்க தமிழ் மக்கள் ஒன்று பட்டு போராட வேண்டும் என்றும் அறைகூவி அழைக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கிளர்ச்சியாளன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காவேரிநாடன் சிறப்புரையாற்றினார். பல மூத்த வழக்கறிஞர்கள் நமது தோழர்களை கைகுலுக்கி பாராட்டினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் :
மனித உரிமைப்பாதுகாப்பு மையம்,
திருச்சிக் கிளை
டியூப் புராடக்ட்ஸ் தொழிற்சங்கத் தேர்தலில் பு.ஜ.தொ.மு வெற்றி !
ஆவடி டி.பி.ஐ தொழிற்சங்கத் தேர்தலில் பு.ஜ.தொ.மு அணி மகத்தான வெற்றி!
சென்னை ஆவடியில் உள்ள முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் புராடக்ட்ஸ் தொழிலாளர் சங்கத்துக்கான தேர்தல் 24.5.2014 அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அணி சார்பாக மொத்தம் உள்ள 7 பதவிகளுக்கும் போட்டியிட்டோம். இந்த 7 பதவிகளுக்கும் பு.ஜ.தொ.மு அணித் தோழர்கள் தேர்வு செய்யப்பட்டு மகத்தான வெற்றியை நிலைநாட்டியுள்ளனர். பல்வேறு அவதூறுகள், அச்சுறுத்தல்களை தொழிலாளர்கள் புறக்கணித்து தொழிலாளர்கள் இந்த வெற்றியை சாதித்துள்ளனர்.

தலைவர் பதவிக்கு பு.ஜதொமு-வின் மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் போட்டியிட்டார். இந்த நிறுவனத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் நல அமைப்பு சார்பாக சி.ஐ.டி.யு-வின் அம்பத்தூர் நகர செயலாளரும், இதே சங்கத்தில் பல ஆண்டுகள் தலைவராக இருந்தவருமான ஏ.ஜி.காசிநாதன் போட்டியிட்டார். நமது தோழரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே மற்றொரு அணியான பாரதி அணியினர் திரு.காசிநாதனை பொது வேட்பாளராக அறிவித்து வேலை செய்தனர். இந்த பொது வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் நிர்வாகமும் களம் இறங்கி வேலை செய்தது.
செயலாளர் பதவிக்கு பு.ஜ.தொ.மு-வின் ஆவடி-அம்பத்தூர் பகுதிக்குழுவின் தலைவரான தோழர்.ம.சரவணன் போட்டியிட்டார். இதில் மும்முனைப் போட்டியை எதிர்கொண்டோம். இதே போல ஏனைய பதவிகளுக்கும் மும்முனைப் போட்டியினை எதிர்கொண்டோம்.
எதிரணியினர் ‘பு.ஜ.தொ.மு அணி வெற்றி பெற்றால் ஆலைமூடல் நடக்கும்’ என்கிற எச்சரிக்கை பிரசுரத்தை தேர்தலுக்கு முந்திய தினத்தில் இரவு 8 மணிக்கு மேல் விநியோகித்து பீதியூட்டினர். அதே இரவில் 11 மணிக்கு இதற்கு பதிலடி கொடுத்து பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. “எந்த ஆலை மூடலுக்கும் தொழிற்சங்கம் காரணமாக இருப்பதில்லை” எனவும், “முதலாளிகளது லாபவெறியே ஆலைமூடலுக்கு காரணமாக இருப்பது” எனவும் அம்பலப்படுத்தப்பட்டது.
இரண்டு தொழிலாளர் அணிகள் மற்றும் நிர்வாகம் ஆகிய 3 அணிகளையும் எதிர்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. “தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்டிட பு.ஜ.தொ.மு அணிக்கு வாக்களியுங்கள்” என்பதே நமது முழக்கமாக இருந்தது. நமது முழக்கம் தொழிலாளர்களிடம் உருவாக்கிய நம்பிக்கையே மகத்தான வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது. இரண்டு அணிகள் நிறுத்திய பொதுவேட்பாளர் மண்ணைக் கவ்வியதற்கும் அதுவே அடித்தளமாக இருந்தது.
இந்த வெற்றியில் மற்றொரு சிறப்பும் உள்ளது. இந்த தொழிற்சங்கம் சுமார் 52 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இதன் நிர்வாகிகளுக்கான தேர்தலில் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றிருப்பது இது தான் முதல்முறை. முருகப்பா குழுமத்தின் பல்வேறு ஆலைகளில் பு.ஜ.தொ.மு-வின் செங்கொடி உயர்வதற்கு இந்த வெற்றி கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்
முதல்நாளே கழண்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி !
இனக்கொலையாளி ராஜபக்சேவை அழைத்த மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
இடம் : சென்னை வள்ளுவர் கோட்டம்
நேரம் : காலை 11 மணி முதல் 12 மணி வரை
இந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ள பா.ஜ.கவின் மோடி தனது பதவி ஏற்பு விழாவிற்கு தமிழின அழிப்பு போர் குற்றவாளி இலங்கை அதிபர் இராஜபட்சேவை அழைத்ததைக் கண்டித்து 26.5.2014 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் தலைமை ஏற்று நடத்த பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னை செயலாளர் தோழர் உஷா கண்டன உரை நிகழ்த்த உள்ளார்.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு
9444834519
ராஜபக்சே வருகை: வைகோவின் கபடநாடகம்
மோடியின் பதவியேற்பு விழாவின் சிறப்பு விருந்தினராக கொலைகாரன் ராஜபக்சேவை அழைத்திருக்கிறது பாஜக அரசு. இது குஜராத்தின் இனக் கொலைக்குற்றவாளி, ஈழத் தமிழினக் கொலையாளிக்கு அளிக்கும் விருந்துபசாரம். மன்மோகன் அரசு ராஜபக்சேவுக்கு கள்ளத்தனமாக ஆதரவு கொடுத்தது என்றால், சிங்கள் இனவெறி அரசுக்குத் தனது ஆதரவைப் பகிரங்கமாகவே பிரகடனம் செய்திருக்கிறார் மோடி.
இந்த செய்தி வெளிவந்தவுடனேயே வைகோ நடிக்கத்தொடங்கி விட்டார். மோடி இப்படியொரு முடிவெடுப்பார் என்று வைகோ எதிர்பார்க்கவே இல்லையாம். இந்தச் செய்தி அவரது தலையில் ஒரு இடியைப்போல இறங்கியதாம். அதிகாரிகள் மோடிக்கு தவறாக வழிகாட்டி விட்டார்களாம். பொங்கி வரும் கண்ணீரோடு கும்பிட்ட கரங்களுடன் “ராஜபக்சேவை அழைக்காதீர்கள்” என்று தமிழர்கள் சார்பில் மோடியை வேண்டிக் கேட்டுக் கொள்கிறாராம். மோடி இதற்கெல்லாம் பதில் சொல்லவில்லை. “ராஜபக்சே வருவதுதான் தமிழர்களுக்கு நல்லது” என்று பொன் இராதா கிருஷ்ணன் பதில் சொல்லி விட்டார். “ராஜபக்சேவை எதிர்ப்பவர்கள் அரை வேக்காடுகள்” என்று அறிக்கை விட்டிருக்கிறார் பாஜக வின் எச்.ராசா.
ஈழத்தமிழ் மக்களுக்கு சம உரிமை பெற்றுத் தரப்போவதாகவும், தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தப்போவதாகவும் தமிழகத்தில் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடி அடித்த சவடால்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவையெல்லாம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக வைகோ எழுதிக் கொடுத்த வசனங்கள்தான்.
மோடியின் பேச்சு முழுவதும் பொய் என்பதும், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், அது காங்கிரசைக் காட்டிலும் தீவிரமாக ராஜபக்சேவை ஆதரிக்கும் என்பதும் வைகோ, நெடுமாறன், ராமதாசு, விஜயகாந்த், தமிழருவி மணியன் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். 2000 ஆண்டில் புலிகள் யாழ் குடாப் பகுதியைக் கைப்பற்றி, சிங்கள இராணுவத்தை முற்றிலுமாகத் தோற்கடித்திருந்த தருணத்தில், வாஜ்பாய் அரசு புலிகளை மிரட்டிப் பின்வாங்க வைத்தபோது, வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்த யோக்கியர்தான் வைகோ.
“இலங்கையில் நடந்தது போர்க்குற்றமே அல்ல, சர்வதேச போர்க்குற்ற விசாரணை கூடாது, இனப்படுகொலை என்று சொல்லவே கூடாது, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்ககக் கூடாது” என்பதெல்லாம்தான் பாரதிய ஜனதாவின் கொள்கைகள். இதை அவர்கள் பல முறை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். 2009-ல் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த காலத்தில், அவர்கள் மன்மோகன் அரசுக்கு பக்கபலமாக நின்றார்களேயொழிய, போரை நிறுத்த வேண்டும் என்று பேச்சுக்கு கூடக் கோரியதில்லை.
சிங்கள இராணுவத்தின் இன அழிப்புக் குற்றங்கள் அம்பலமாகி, சர்வதேச அரங்கில் ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, ராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பாரதிய ஜனதாவினர்தான். ராஜபக்சே அரசின் பேராதரவுடன்தான் இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ் இலங்கையில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மோடியின் குஜராத் அரசுதான் ராஜபக்சே அரசுடன் சிறப்பான வர்த்தக உறவுகளை வைத்திருந்தது. இத்தனை உண்மைகளையும் இருட்டடிப்பு செய்து, காங்கிரசு மீதும் திமுக மீதும் தமிழக மக்கள் கொண்டிருந்த வெறுப்பை தந்திரமாக பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக திருப்பி விட்டவர்கள்தான் வைகோ, தமிழருவி மணியன், நெடுமாறன் போன்றவர்கள்.

தமிழக மக்களை மட்டும் இவர்கள் ஏமாற்றவில்லை. புலிகளையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள். இறுதிப் போரின் போது, 2009-ம் ஆண்டின் துவக்கத்திலேயே புலிகள் பெரும் பின்னடைவுக்கு ஆளாகத் தொடங்கியிருந்தனர். இருப்பினும் ‘மே 2009 தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெறப்போகிறது என்றும், அடுத்த கணமே போர் நிறுத்தம் வந்து விடும்’ என்றும் புலிகளுக்கு இவர்கள் பொய் நம்பிக்கை ஊட்டினார்கள். டெல்லிக்கு காவடி எடுத்துச் சென்று, அத்வானிக்கு மேடை அமைத்துக் கொடுத்தார் வைகோ. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு கேட்டு தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வைத்தார்கள். மொத்தத்தில் புலிகளும் மக்களும் முள்ளிவாய்க்காலின் மரணக்குழியில் சிங்கள இராணுவத்திடம் சிக்கும் வரை அரசியல் ஆலோசனை வழங்கியவர்கள் இவர்கள்தான்.
எந்த பாரதிய ஜனதாவின் மீது நம்பிக்கை வைக்குமாறு இவர்கள் புலிகளுக்கு ஆலோசனை சொன்னார்களோ அந்த பாஜக, ராஜபக்சேவுக்கு எதிராக “போர்க்குற்றம்” என்ற சொல்லைப் பயன்படுத்துவதையே எதிர்த்தது. இருப்பினும் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவுக்கு பொன் ராதாகிருஷ்ணனை அழைத்து வந்து, பாரதிய ஜனதாவை ஈழத்தமிழர்களின் நண்பன் என்று தமிழக மக்களை நம்பவைத்தவர்கள் இவர்கள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா? 2009 ஈழப்போரைக் காட்டி, காங்கிரசு எதிர்ப்பு என்ற பெயரில்தான் தமிழருவி மணியன் என்ற புரோக்கர் தமிழகத்தில் தனது வேலையைத் தொடங்கினார். தமிழகத்தில் அநாமதேயமாக இருந்த பாரதிய ஜனதா கட்சி இன்று 5 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. காங்கிரசு எதிர்ப்பு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-க்கு காலாட்படை வேலை செய்வதும், திமுக எதிர்ப்பு என்ற பெயரில் பார்ப்பனக் கும்பலுக்கு சொம்பு தூக்குவதும்தான் வைகோ, தமிழருவி, நெடுமாறன் ஆகியோர் நடத்தி வரும் அரசியல். தங்கள் நோக்கத்திற்கு ஈழப்பிரச்சினையை இவர்கள் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இவர்களைத் துரோகிகள் என்று கூறுவதை விட, ஆர்.எஸ்.எஸ்-ன் ஐந்தாம் படையினர் என்று மதிப்பிடுவதே சரியானது. இந்த ஐந்தாம் படைதான், ராஜபக்சே வருகைக்கு கண்டனம் தெரிவிப்பது போல இன்று நடிக்கிறது. விஜயகாந்த், ராமதாசு போன்ற அருவெறுக்கத்தக்க பிராணிகளோ, ஒப்புக்கு ஒரு கண்டனம் தெரிவிக்கக் கூட வாய் திறக்காமல், பதவி எலும்புக்காக எச்சில் ஒழுக காத்திருக்கின்றனர்.
குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளியான மோடியை, இந்தியாவின் இராஜபக்சே என்று அழைப்பதே பொருத்தம் என்று நாங்கள் கூறியிருந்தோம். பசில் ராஜபக்சே அதனை வழிமொழிந்திருக்கிறார். “மோடி குஜராத்தில் சாதித்திருக்கும் வளர்ச்சியைத்தான் மகிந்த இலங்கையில் சாதித்திருக்கிறார் என்றும், எனவே மோடி இந்தியாவின் ராஜபக்சே” என்றும் கூறியிருக்கிறார் பசில். எனவே, வைகோ, நெடுமாறன், தமிழருவி மணியன், ராமதாசு, விஜயகாந்த், ஈசுவரன், பாரிவேந்தர் உள்ளிட்ட அனைவரும் இந்திய இராஜபக்சேவின் கூட்டாளிகள் மட்டுமல்ல, இலங்கை இராஜபக்சேவின் கூட்டாளிகளும்தான் என்பதில் ஐயமில்லை.
தெற்காசிய விரிவாதிக்கமும் அமெரிக்க கைக்கூலித்தனமும் இணைந்ததுதான் பாஜக வின் இலங்கைக் கொள்கை. இதுவேதான் காங்கிரசின் கொள்கையும். அகண்ட பாரதம் என்பது அந்தக் கனவுக்குப் போடப்பட்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் சாம்பிராணி. “பாகிஸ்தான் இராணுவம் நமது சிப்பாயின் தலையைக் கொய்து அனுப்பும்போது, அவர்களுக்கு சிக்கன் பிரியாணி போட்டு விருந்து வைக்கிறார் மன்மோகன் சிங்” என்று பேசிய மோடி, “அது நாற வாய், இது வேற வாய்” என்று கூறி இப்போது நவாஸ் ஷெரிபுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
தனது முடிசூட்டு விழாவுக்கு குறுநில மன்னர்களை அழைக்கும் சக்ரவர்த்தியைப் போல எண்ணிக்கொண்டு தெற்காசிய நாடுகள் அனைத்துக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் மோடி. இதனைக் காணாததைக் கண்ட அற்பனுக்குரிய நடத்தை என்றும் கூறலாம். இந்தியத் தரகு முதலாளிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் அடிமையின் நடத்தை என்றும் கூறலாம்.
தெற்காசிய நாணயமாக ரூபாயை மாற்றுவது, தெற்காசியா முழுவதற்குமான சுதந்திர வர்த்தக வலயம் ஆகியவை இந்தியத் தரகு முதலாளிகளின் நெடுநாளைய கோரிக்கைகள். அதை நிறைவேற்றித் தருவதற்கான துவக்கம்தான் இந்த முடிசூட்டு வைபவம்.
சவுதியில் நாத்திகர் கதி என்ன ?
பதில்களுக்கு வழியில்லாத கேள்விகளால் துளைப்போரை ஓயாமல் ”வாங்கடா விவாதிக்கலாம்” என்று பணிவோடு அழைக்கும் தவ்ஹீதுவாதிகளையும் அவர்களின் ‘ஜனநாயக மாண்பையும்’ நாம் அறிவோம். பகிரங்க விவாதம் எனும் ஜனநாயக வழிமுறையை மதமோ இல்லை மார்க்கத்தை பின்பற்றும் இசுலாமிய நாடுகளோ அனுமதிப்பதில்லை. ஏன் அனுமதிப்பதில்லை என்று கேட்டால் அப்படிக் கேட்பது மதத்தை இழிவுபடுத்துவது என்கிறார்கள்.

இவர்களே இப்படியென்றால் இவர்களுக்கு ஜனநாயக ’விழுமியங்களை’ கற்றுக் கொடுத்த சித்தாந்த மூலவர்களான சவுதி அரேபியாவின் அரசியல் சூழல் எப்படியிருக்கும்? சவுதியில் குழந்தைகள் மண்ணில் குழி தோண்டி விளையாடினாலே பெட்ரோலும் டீசலும் பீறிட்டு அடிக்கும் என்கிற அம்புலிமாமா கதைகளை விடுத்து அங்கே ஜனநாயகம் என்கிற வஸ்து கிலோ என்ன விலைக்கு விற்கிறது என்ற இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.
கடந்த ஜனவரி 31-ம் தேதி சவுதி அரசு தீவிரவாத தடுப்புச் சட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ’தீவிரவாதம்’ என்றால் என்னவென்று அமெரிக்கா துவங்கி இந்தியா வரை உழைக்கும் மக்களை இனம், மொழி, மதத்தின் பெயரில் ஒடுக்குவதறத்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், சவுதி அரசு தீவிரவாதத்திற்கு புதிய விளக்கங்களை அளிக்கிறது. மேற்படி சட்டப் பிரிவின் முதல் ஷரத்தின் படி “சவுதி நாட்டின் அடித்தளமான இசுலாமிய மதத்தின் அடிப்படைகளை கேள்விக்கு உள்ளாக்குவதோ, நாத்திக கருத்தை எந்த வடிவத்திலாவது கொண்டிருப்பதோ” தண்டனைக்குரிய குற்றம் என்றாகிறது.
தீவிரவாத தடுப்பு சட்டம் என்று அவர்களே சொல்லிக் கொள்ளும் இந்த கேலிக்கூத்தில், எது தீவிரவாதம் என்பதற்கான குறிப்பான விளக்கங்களே இல்லை. மாறாக, அரசை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, அரசரை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, நாத்திக கருத்துக்களை கொண்டிருப்பது, இசுலாத்தை விமர்சிப்பது போன்ற இயல்பான கருத்து சுதந்திரம் சார்ந்த நடவடிக்கைகளை தீவிரவாத செயல்களாக சித்தரிக்கிறார்கள். சவுதி அரசால் ’தீவிரவாதி’ என்று முத்திரை குத்தப்பட்டவர் என்றால் ’குற்றத்தின்’ தன்மைக்கேற்ப தலையைக் கூட இழக்க நேரிடலாம் என்பதை நினைவில் கொள்க.
கடவுள் மறுப்பு மட்டுமல்ல, இசுலாத்தை மறுத்து வேறு மதங்களைத் தேர்ந்தெடுத்தாலும் (apostasy), சவுதியில் ஏற்கனவே நடப்பில் உள்ள ஷரியா சட்டங்களின் படி மரண தண்டனை தான். இசுலாத்தை உள்ளிருந்தே விமர்சிப்பதும் கூட மத விரோதம் என்கிற பிரிவுக்குள் அடங்கி உயிரை பலிவாங்கி விடக்கூடும். சுதந்திரம் என்கிற வார்த்தை மூளைக்குள் நுழையும் முன்பே தலை துண்டிக்கப்பட்டிருக்கும்.
சவுதியைச் சேர்ந்த ராயீஃப் பதாவி சொந்தமாக இணையதளம் ஒன்றை நடத்தும் இணைய எழுத்தாளர். ’சவுதியின் தாராள சிந்தனையாளர்களை விடுவி’ (Free Saudi Liberals) என்ற இணையதளத்தில் இசுலாத்தை விமர்சித்து எழுதிய ‘குற்றத்திற்காக’ 2012 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். மத விரோத (apostasy) குற்றச்சாட்டை எதிர்கொண்ட ராயீஃப் பதாவி, சர்வதேச அழுத்தங்கள் மற்றும் மேற்கத்திய ஊடகங்களின் தொடர்ச்சியான அவதானிப்பை அடுத்து கடந்த ஏழாம் தேதி 10 ஆண்டு சிறை வாசத்தையும் ஆயிரம் சவுக்கடியையும் ஒரு லட்சம் ரியால் அபாரதத்தையும் தண்டனையாகப் பெற்று தலையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
அரசரை கேலியாக பேசியவர்கள், இசுலாத்தை கிண்டலடித்து எழுதியவர்களெல்லாம் ஒன்று முதுகுத் தோல் உரிக்கப்பட்டு அலைகிறார்கள் அல்லது தலையைத் தொலைத்து விட்டு மண்ணுக்குள் உறங்குகிறார்கள். உலக சுதந்திரத்தின் ஒரே காவல் தெய்வமான அமெரிக்காவோ அதன் இன்னபிற அடிவருடி அறிவுஜீவிகளோ, இது வரைக்கும் சவுதியில் சுதந்திரம், ஜனநாயகம் என்பதெல்லாம் அரசர் அணிந்து வீசிய கிழிந்த ஜட்டி போல பாலைவன புயலில் பறப்பதைப் பற்றி மூச்சு விடுவதில்லை.

வானத்தில் துப்பிய எச்சில் ஏன் மூஞ்சியில் விழுகிறது என்று அதிசயப்பட்ட முல்லாவின் கதையை படித்திருப்போம். அது புவியீர்ப்பு விசையின் அடிப்படை விதி என்பதைப் புரிந்து கொள்ள அவரிடம் அறிவும் இல்லை, அதிகாரமுமில்லை – பின்னது இருந்திருக்குமானால் சவுதி அரசைப் போல், எச்சில் மூஞ்சியில் விழுவதைத் தவிர்க்க சட்டமியற்றியிருப்பார். சவுதி அரசு நாத்திகத்தைக் குறித்து அஞ்சுவதற்கும் இந்த தீவிரவாத அச்சத்திற்கும் காரணமில்லாமல் இல்லை.
சவுதியில் வஹாபிய பாணி இசுலாமிய மதமும் அதிகாரமும் வேறு வேறல்ல. சவுதி போன்ற நாடுகளில் அதிகாரத்திற்கு எதிரான எந்த சிந்தனையும் மதத் துறப்பிலிருந்தும் இறை மறுப்பிலிருந்தும் தான் இயல்பாகவே துவங்குகிறது – இந்தியாவில் பார்ப்பனிய படிநிலை சாதி அமைப்பைத் தொடாமல் ஜனநாயகம் குறித்து பேசவே முடியாது என்பதைப் போல.
சமீபத்தில் கல்லப் என்கிற வலைத்தளம் எடுத்த இணைய வாக்கெடுப்பில் சவுதியில் சுமார் 5 சதவீதம் நாத்திகர்கள் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. ‘நாத்திகம் என்றாலே ஆபாசமானது, தீங்கானது, சபிக்கப்பட்ட பரலோக வாழ்வுக்கு இட்டுச் செல்லக் கூடியது’ என்றெல்லாம் சவுதி மதகுருமார்களால் விளக்கமளிக்கப்படுகிறது. உலகிலேயே முத்தவீன்கள் எனப்படும் மத போலீசைக் கொண்டு தடிக்கம்பாலும் தலைவெட்டி தண்டனைகளாலும் மதப் பாரம்பரியத்தை கட்டிக் காக்கும் வெகு சில நாடுகளில் ஒன்றான சவுதியில், ஐந்து சதவீதம் பேர் தங்களை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்றால், அடக்குமுறைகள் விலகினால் அந்த சதவீதத்தின் அளவு எந்தளவுக்கு கூடும் என்பதை நாம் அனுமானிக்கலாம்.
சவுதியில் நாத்திகர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
”யாரேனும் தங்களை இறை நம்பிக்கையற்றவர் என்று அறிவித்துக் கொண்டால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, குடும்பத்திலிருந்து முதலில் வெளியேற்றப்படுவார். அவரது வேலை பறிபோகலாம். அவரைச் சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் அவரைப் பற்றியே பேசுவார்கள் – பிறரிடமும் அவரைக் குறித்து எச்சரிப்பார்கள். ஒருவேளை அவர் தாக்கப்படலாம், ஏன் கொலை கூட செய்யப்படலாம்” என்கிறார் ஜாபிர்.
ஜாபிர் இருபதுகளின் இறுதியில் இருக்கும் துடிப்பான இளைஞர். சவுதியின் மதிப்பு வாய்ந்த பல்கலைக் கழகம் ஒன்றில் உயர் கல்வி படித்தவர். கடுமையான இசுலாமிய நெறிமுறைகளின் அடிப்படையில் வளர்க்கப்பட்டவர். சொந்த முறையில் குரான் மற்றும் பிற ஹதீதுகளைப் படித்து அதன் முரண்பாடுகளை ஆராய்ந்து, அதனடிப்படையில் நாத்திகராக மாறியவர்.
’உங்கள் மத்திய கிழக்கு’ (your middle east) என்கிற பத்திரிகையின் செய்தியாளருக்கு தனது அடையாளங்களை மறைத்துக் கொண்டு ஜாபிர் (மாற்றப்பட்ட பெயர்) அளித்த பேட்டியில் ’இது போன்ற சமூக நிலைமைகளில் ஒரு சவுதிக்காரனாக இருப்பது குறித்து எவ்வாறு உணர்கிறார்’ என்று பேட்டியாளர் கேட்டதற்கு அவர் மேலும் இவ்வாறு குறிப்பிடுகிறார் –
”சவுதி ஒரு மதச்சார்பற்ற நாடல்ல என்கிற எதார்த்தம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. எனது நாடு ஒரு மதச்சார்புள்ள நாடு என்பதும் இசுலாத்தின் அதிதீவிரமான பிரிவு ஒன்றை முன்மொழிகிறது என்ற எதார்த்தமும் என்னை அச்சுறுத்துகிறது. நான் இந்தச் சமூகத்தில் மாற்றங்களைக் காணவில்லை, அரச குடும்பத்தில் மாற்றங்களைக் காணவில்லை. வெளியுலகைப் பொருத்தவரை, இங்கே தாம் பிறந்த மதத்தை நம்ப மறுத்த எளிமையான காரணத்தை முன்வைத்து எத்தனை பேர் கொல்லப்படுகின்றனர் என்பதைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. அவர்களுக்குத் தேவையெல்லாம் எண்ணெய் மட்டும் தான்.”
“சவுதியில் ஒருவர் தனது சுதந்திரமான எண்ணத்தை வெளியிடுவதும் ஒன்று தான்; கழுத்தை வெட்டுக்கத்திக்கு முன் தானே முன்வந்து நீட்டுவதும் ஒன்று தான். ஆகவே, நவீன தொழில்நுட்பங்களான இணையதளமும், சமூக வலைத்தளங்களுமே நாத்திகர்களின் ஒரே தொடர்பு சாதனமாக உள்ளது. பல்வேறு நகரங்களில் நாத்திக குழுக்கள் இரகசியமான முறையில் இயங்கி வருகின்றன.”
”இறை நம்பிக்கையற்ற நாங்கள் பல்வேறு நகரங்களில் எங்களது சந்திப்புகளை நடத்தி வருகிறோம். அவை பிறரின் அவதானிப்புக்கு வருவது கடினம் என்றாலும் நீங்கள் அந்தக் கூட்டங்களுக்குச் சென்றால் அங்கே கூடுபவர்களின் எண்ணிக்கையும், பல்வேறு சமூகத்தட்டுகளைப் பிரதிபலிக்கும் உறுப்பினர்களையும் பார்த்து வியப்படைவீர்கள்” என்கிறார் ஜாபிர்.

மிர்ஸா காலிப் என்ற இந்திய முசுலீம் ஒருவரின் அனுபவமோ வேறு சில செய்திகளைச் சொல்கிறது. கடுமையான மதக்கோட்பாடுகளின் அடிப்படையில் வளர்க்கப்பட்ட மிர்ஸா காலிப், பணி நிமித்தமாக சுமார் பத்தாண்டுகளாக சவுதியில் வசித்துள்ளார். சவுதிக்குச் செல்லும் போது தீவிர மதப்பற்றாளராக சென்ற மிர்ஸா, திரும்பி வரும் போது நாத்திகராகத் திரும்பியுள்ளார். இங்கே வந்ததும் எழுபது வயதான தனது தந்தையிடம் சுமார் பத்தாண்டு காலம் விவாதித்து அவரது எண்பதாவது வயதில் அவரையும் நாத்திகராக மாற்றியுள்ளார்.
“நான் நாத்திகனாக மாறியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. என்னோடு பணிபுரிந்த அரபிக்கள் என்னை மிக மோசமான முறையில் கேலி பேசியது அதில் பிரதானமானது. நான் ஒரு சரியான முஸ்லீம் இல்லை என்றார்கள். அது எனது மத பெருமிதத்தை இழிவு படுத்தியது. ஏனெனில், நான் ஒரு சிறந்த முஸ்லீம் என்றே நம்பிக் கொண்டிருந்தேன். பின்னர் இந்த உளவியல் சித்திரவதைகளைத் தாள முடியாமல், நானே சொந்த முறையில் இசுலாத்தை ஆய்வு செய்யத் துவங்கினேன்” என்கிறார் மிர்ஸா.
மேற்கத்திய நாடுகளுக்கு தனது எணணெய் கிணறுகளைத் திறந்து விட்டு, அவர்கள் அளிக்கும் எச்சில் காசில் கொட்டமடித்து வரும் சவுதி ஆளும் வர்க்கத்துக்கு மக்களின் அதிருப்தி தங்களை நோக்கித் திரும்பாமல் தடுக்கும் தடுப்பணையாக இசுலாம் பயன்படுகிறது. ஓரளவுக்கு வசதி வாய்ப்புகளைப் பெற்றுள்ள நடுத்தர மற்றும் உயர் வர்க்க சவுதிகளோ தடித்தனத்தில் ஊறி வேறு நாடுகளைச் சேர்ந்த இசுலாமியர்களையே கூட மிக இழிவாக நடத்துகிறார்கள். இந்த இனவெறியாலேயே சுயமரியாதை கொண்ட பிறநாட்டு முசுலீம் மக்கள் மனதளவில் இசுலாத்தை விட்டு இயல்பாகவே விலகுகிறார்கள்.
நடுத்தர வர்க்க சவுதிகளுக்கு அந்நிய நிறுவனங்களில் வேலைக்கான ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நிதாகத் என்கிற சட்டம் நடப்பில் உள்ளது. இது வேலையே செய்யாமல் கையெழுத்துப் போட்டு சம்பளம் மட்டும் வாங்கும் ஒரு பிரிவினரை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் அமெரிக்காவின் எச்சில் காசில் சவுதி அரசு மக்களிடமிருந்து எதிர்ப்புகள் ஏதும் வராமலிருப்பதை உறுதி செய்ய அறிவித்துள்ள ஏராளமான சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்பும் இவர்களுக்கு உள்ளது. மொத்த நாடும் அமெரிக்காவிடம் அடகு வைக்கப்பட்டிருப்பது குறித்து இவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை. சொரணையின் நெருப்பு தோலைச் சுடாதபடிக்கு வஹாபியம் அரணாக போர்த்திக் கொள்கிறது.
உள்ளூரில் விறைப்பு காட்டும் அதே வஹாபிய அதிகாரத் திமிர், பணக்கார சவுதிகளுக்கு நாட்டின் எல்லைகளை மத்திய கிழக்கின் விபச்சார சொர்க்கங்களை நோக்கி இருபத்து நான்கு மணி நேரமும் திறந்து வைத்திருக்கிறது. நாட்டிற்கு வெளியே விபச்சாரத்தில் மூழ்கித் திளைத்து விட்டு, நாட்டிற்கு உள்ளே ஐந்து வேளை தவறாமல் தொழுது தங்கள் ஈமானைக் காத்துக் கொள்ள, வசதியான ஷேக்குகளுக்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் பணக்கார ஷேக்குகளின் முதலீட்டு இலக்கே அமெரிக்கா தான் எனும் போது தனது சொந்த நாடு தொடர்ந்து அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் இயல்பான விருப்பம்.

ஆனால், சமூகத்தின் நிலைமை, சக மக்களின் இழிந்த வாழ்க்கை, ஏழை சவுதிகளை வாட்டும் வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் சுதந்திரம் பறிபோய் மேற்குலகங்களின் செருப்பாக சவுதி மாற்றப்பட்டிருப்பது என்கிற எதார்த்தமான உண்மைகளுக்கு முகம் கொடுத்து, நேர்மையாக பரிசீலிக்கும் திறன் உள்ளவர்கள் சவுதியில் அதிகாரமும் மதமும் பிரிக்கவொண்ணாதபடிக்கு இணைந்திருப்பதை சுலபமாக புரிந்து கொள்வார்கள்.
அதிகாரத்திற்கு எதிரான அமைப்பாக திரளவோ, ஒரு கட்சியின் தலைமையில் சவுதி அரச குடும்ப சர்வாதிகார அரசை வீழ்த்தவோ சாதகமான சூழல் உடனடியாக இல்லை. ஆகவே இயல்பாகவே மதக் கடுங்கோட்பாட்டு வாதத்தின் பிடியில் இருந்து விடுபடுவதே சுதந்திரத்தை நேசிப்பவர்களின் முன் உள்ளே முதல் தேர்வாக உள்ளது. அடிவருடி அதிகார வர்க்கத்தின் மேலான கசப்பின் உடனடி விளைவாக அவர்கள் எடுத்து வைக்கும் முதல் அடியே வஹாபிய இசுலாத்தின் எதிர் திசையை நோக்கி இருக்கிறது.
இது சவுதியின் பாசிச மன்னர் குடும்பத்திற்கும் தெரியும். அதனால் தான் நாத்திகர்களைத் தீவிரவாதிகள் என்று அறிவித்த முதல் ஷரத்தை தொடர்ந்து வரும் 2-வது ஷரத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது –
”ஆட்சியாளர்கள் மேல் விசுவாசம் வைக்காதவர்கள் மற்றும் வேறு கட்சிகள், இயக்கங்கள், சிந்தனை போக்குகள், நாட்டிற்கு உள்ளே – வெளியே உள்ள தனிநபர்களையோ குழுவையோ உணர்வுப்பூர்வமாக ஆதரிப்பவர்கள்” – இவர்களெல்லாம் தீவிரவாதிகள் என்கிறது சவுதி.
அரசரைத் தவிர, வஹாபியத்தைத் தவிர வேறு ‘சிந்தனைப் போக்குகள்’ கொண்டவர்களை எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்பது தான் இதில் உள்ள கோணங்கித்தனத்தின் உச்சம். என்னதான் வல்லமை கொண்டதாயினும், மண்டையோட்டைத் துளைத்துக் கொண்டு மூளைக்குள் ஊடுருவி, அதன் நியூரான்கள் அல்லாவையும் அரசனையும் விடுத்து வேறு எதை யோசித்துக் கொண்டிருக்கின்றன என்பதை பீராய்ந்து வந்து மதக் கோர்ட்டின் விசாரணைக் கூண்டுக்குள் நிப்பாட்டும் ஆற்றல் இசுலாத்திற்கு இல்லை. அதற்காகத்தான் வஹாபிய தடிக்கொம்பை வைத்திருக்கிறார்கள்.
இசுலாத்தால் இயலாதது எல்லாவற்றையும் வஹாபிய வெறி சாதிக்கும். ஏனெனில், மத நீதிமன்றத்தில் குருமார்கள் சொல்வது தான் சட்டம். எந்த அடிப்படையும் இன்றி சர்வதேச மனித உரிமை இயக்கங்களின் அழுத்தங்களைக் காலில் போட்டு மிதித்து விட்டு அப்பாவிப் பெண் ரிசானா நபீக்கின் தலையை ஊரே பார்க்க அறுத்தெறிந்த வாட்களுக்கும் அறிவும் இல்லை அதை இயக்கும் அதிகாரத்திற்கு மனசாட்சியும் இல்லை.
மெல்லிய சலசலப்பைக் கூட இசுலாமியத்துக்கே ஏற்பட்ட ஆபத்தாக அறிவித்து நாத்திகர்கள் என்று முத்திரை குத்தி எத்தனை பேரை வேண்டுமானாலும் கொன்று குவிக்கும் வாய்ப்புகள் உள்ளது. அப்படி நடந்தால் அதற்கும் கூட்டம் போட்டு சவுதி அரச பரம்பரைக்கு வக்காலத்து வாங்கி சொம்படித்து நியாயப்படுத்த உலகெங்கும் வஹாபியர்கள் உண்டு. நம்மூரிலும் கூட ’மண்ணடி மார்க்க அறிஞர்கள்’ படை ஒன்று உள்ளதை நீங்களே அறிவீர்கள் தானே.
வஹாபியத்தை வாயில் திணித்து, தொண்டைக்குழிக்குள் கம்பால் அடித்து இறக்க முயலும் ஒரு தேசத்தில் நாத்திகர்களாகவும் அதன் வழி அதிகாரத்திற்கு சவால் விடுபவர்களாகவும் இருப்பது அசாதாரணமானது. மதப் பிற்போக்குவாதத்தை எதிர்த்து நீண்டதொரு பயணத்தைத் துவங்கியுள்ள சவுதி நாத்திகர்களின் பயணம் அதிகாரத்திற்கு எதிரானதாக வெகு விரைவில் மிளிர வேண்டும்.
தங்கள் நம்பிக்கைகளுக்கான தனிப்பட்ட சுதந்திரம் என்பதும் சமூகத்திற்கான பொதுவான சுதந்திரம் என்பதும் வேறு வேறு அல்ல என்பதை அவர்கள் தங்கள் சொந்த அனுபவத்திலேயே உணர்வார்கள். அப்படி நடக்கும் போது ஜனநாயகத்துக்கான கோரிக்கை வலுப்பெற்று சவுதி அரச வம்சத்தினரை பாலைவனப் புழுதியில் விசிறியடிக்கும் நாள் வந்தே தீரும். அதைச் சாதிக்கப் போகும் அமிலத்தில் பூத்த அந்த மலர்களை நாம் வாழ்த்துவோம்.
– தமிழரசன்
- Saudi Arabia: New Terrorism Regulations Assault Rights
- Saudi Arabia: Terrorism Law Tramples on Rights
- Islam, Saudi and apostasy
- ‘Fighting Reality’: Life as an atheist in Saudi Arabia
- Interview with a Saudi atheist
- Saudi Arabia declares all atheists are terrorists in new law to crack down on political dissidents
- Supporting Islam’s apostates
- Enlightening My Father about the Real Islam and the Fatal Consequence
ஒரு விபத்து – கொஞ்சம் குற்ற உணர்ச்சி
பேருந்து சிறுசேரி சிப்காட்டினுள் நுழைந்து, டி.சி.எஸ் முதல் கேட்டை தாண்டி விட்டிருந்தது. வழக்கம் போல, அரைத் தூக்க மயக்கத்திலிருந்து விடுபட்டு, காதிலிருந்து இயர் போனை கழற்றிவிட்டு, பையில் இருக்கும் அடையாள அட்டையை துளாவிக் கொண்டிருந்தேன். திடீரென பேருந்தில் இருந்தவர்கள் கலவரமாக சத்தமிட்டார்கள், சிலர் உச் கொட்டினார்கள். எதிர் திசையில் பைக்கில் வந்து கொண்டிருந்த ஒருவர் நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் மோதி விழுந்திருக்கிறார். டி.சி.எஸ் நிறுவனத்தின் வாயிலுக்கு சற்று தூரத்தில் தான் இந்த விபத்து நடந்தது. பேருந்து மெதுவாக ஊர்ந்து அவரை நெருங்குவதற்குள், தலையை வெளியே விட்டு எட்டிப் பார்த்தேன். டி.சி.எஸ் வாயிலில் சிகிரெட் பிடித்துக் கொண்டிருக்கும் ஊழியர்கள் முதல் ஆட்டோ டிரைவர்கள் என அவரைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிவிட்டதை பார்க்க முடிந்தது. சுற்றி நின்றவர்களின் கால்களுக்கு ஊடே ஒருவர் விழுந்து கிடப்பதும் அவரை சுற்றி இரத்தம் வழிந்தோடுவதும் தெரிந்தது.
பேருந்தும் நகர்ந்து விடவே விபத்து நடந்த இடத்திற்கு சென்று என்ன நடந்தது என்று விசாரிக்க வேண்டும் என்று தோன்றினாலும், அலுவலகத்துக்கு ஏற்கனவே தாமதமாக செல்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கியதாலும் செய்ய வேண்டிய அமெரிக்க வாடிக்கையாளரின் பணிகள் மனதை நிறைக்க ஆரம்பித்ததாலும் பேருந்தில் இருந்து இறங்கி அலுவலகத்திற்கு நடக்க ஆரம்பித்தேன். என்ன இருந்தாலும், ஒருவர் விழுந்து அடிபட்டு கிடக்கிறார், போய் பார்த்து விட்டு வந்து விடுவோம் என்று மனசாட்சி கொஞ்சம் குற்ற உணர்வைக் கிளப்பவே முடிவை மாற்றிக் கொண்டு வெளியில் வந்து விழுந்து கிடந்த நபரின் அருகில் சென்று பார்த்தேன்.
ஒரு இளைஞர் விழுந்து கிடந்தார், அவரைச் சுற்றிலும் இரத்தம். கோயில் கொடையில் கெடா வெட்டும் போது தான் இவ்வளவு இரத்தத்தை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த அளவு இரத்தம் ஒரு மனிதனது மண்டையில் இருந்து கொட்டுகிறது. காது வழியே இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவரின் கால்கள் இரண்டும் வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டிருந்தன. ஒரு நிமிடம் சிந்தனையே மறந்து போனது. நாம் எவ்வளவு வாய்ச்சொல் வீரர்களாக இருக்கிறோம் என்பதை பின்னால் யோசிக்கும் போது தான் தெரிகிறது.
நான் உட்பட சுற்றி இருந்தவர்களில் பலர் அருகில் செல்லவே பயந்தோம். சிலருக்கு உதவி செய்யப் போய் போலீஸ், கேஸ் என்று அலைய வேண்டும் என்ற பயமிருந்திருக்கலாம், என்னைப் பொறுத்த வரை தலையில் கைவைத்து அவரை தூக்கினால் அவருக்கு ஏதும் ஆகிவிடுமோ என்றும் பயந்தேன். என் எண்ணத்தை பிரதிபலிப்பது போல ஒருவர் “நாம கைய வெக்க போயி மண்டை மேலும் பிளந்து இரத்தம் அதிகமாக வெளியேறினால என்ன செய்வது” என்று சொல்லிக் கொண்டிருந்தார். மவுசில் தொழில் நுட்ப வித்தைகளை சுழற்றும் மூளைக்கு குறைந்தபட்ச முதலுதவி கூட செய்யத்தெரியாது என்ற உண்மையும் அச்சுறுத்தியது.
அருகில் இருப்பவர்கள் 108 அவசர ஊர்திக்கும், குளோபல் மருத்துவமனை அவசர ஊர்திக்கும் ஏற்கனவே தகவல் சொல்லி விட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் வரும் வரை இவர் தாக்கு பிடிப்பது சிரமம் என்பது அங்கிருக்கும் அனைவருக்கும் தெரிந்தது. வெளியேறும் இரத்தமும், உடல்துடிப்பதும், கால்கள் வெட்டுவதுமாக உயிரைப் பிடித்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர் உயிருக்கு ஆபத்து என்பதை உணர முடிந்தது.
டி.சி.எஸ் நிறுவனத்தின் வாயிலுக்கு அருகில் தான் இந்த சம்பவம் நடந்தது. அந்தப் பகுதியில் மேலும் பல்வேறு தகவல் தொடர்புத் துறை நிறுவனங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும் கண்டிப்பாக அவசர ஊர்தி (ambulance) வைத்திருப்பார்கள். மேலும் நூற்றுக்கணக்கான கார்களும், பேருந்துகளும் வளாகங்களுக்குள் நின்று கொண்டிருக்கும்.
அவர் யார் என்பது அங்கு இருக்கும் எவருக்கும் அதுவரை தெரியாது. அவரின் சட்டைப் பையில் “NPT கேப் சர்வீஸ்” என்று அடையாள அட்டை இருந்ததை அப்பொழுதுதான் பார்த்தோம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இரவு பணிபுரியும் ஊழியர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் கேப் ஓட்டுநராக இருக்கலாம் என்று யூகித்துக் கொண்டோம்.
மருத்துவ ரீதியாக முதல் உதவிக்கான உபகரணங்கள் அனைத்து நிறுவனங்களிலும் இருக்கும். அதைக் கொண்டு ஏதேனும் உதவ முடியுமா என்று சிலர் ஆலோசனை கூறினார்கள். டி.சி.எஸ் அலுவலகத்தில் செட்டிநாடு மருத்துவமனையின் அவசர ஊர்தி எப்பொழுதும் தயாராக இருக்கும் என்று சொல்லியபடியே டி.சி.எஸ் அடையாள அட்டை அணிந்திருந்த நபர் அதன் வாயிலை நோக்கி ஓடினார். அருகில் இருந்த ஒருவர், தான் முன்பு சி.டி.எஸ் அலுவலகத்தில் வேலை செய்ததாகவும் அதன் அவசர தொடர்பு எண்ணுக்கு (Emergency) அழைத்து ஏதேனும் உதவி கிடைக்கிறதா என்று பார்ப்பதாகவும் சொல்லி தொலைபேசிக் கொண்டிருந்தார்.
அவரவரவர்களுக்கு சாத்தியமான வழிகளில் ஏதேனும் உதவி கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பகுதியில் வந்து கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி அதில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று நானும் சிலரும் முயற்சி செய்து கொண்டிருந்தோம். ஐ.டி நிறுவனங்களுக்கு காரில் வேலைக்கு வரும் எவரும் காரை நிறுத்தி உதவி செய்யத் தயாரில்லை. வளர்ச்சியின் சின்னமான கார்களுக்கு ஒரு மனிதனை காப்பாற்றுவது முக்கியம் என்று தெரிந்திருக்கவில்லை. அடிபட்டவரோ இரத்தம் வெளியேறி உயிருக்கு போராடி துடித்துக் கொண்டிருக்கிறார்.
சி.டி.எஸ் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டவரிடம், அந்த நிறுவனத்தினர், அடிபட்ட நபர் தங்கள் நிறுவனத்தை சேர்ந்தவரா என்று கேட்டிருக்கிறார்கள். சி.டி.எஸ் ஊழியர் இல்லை என்பதால் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்று கூறி எதிர் முனையில் போனை வைத்து விட்டார்கள் அந்த மனிதாபிமானிகள். தங்கள் நிறுவனத்திற்காக கேப் ஓட்டுபவராகக் கூட இருக்கலாம் என்று தெரிந்தே அவர்கள் கைவிரித்தார்கள்.
டி.சி.எஸ் நோக்கி ஓடியவர் கையுடன் ஒரு செக்யூரிட்டியை அழைத்துக் கொண்டு வந்தார். செக்யூரிட்டி என்றால் சாதாரணமானவர் அல்ல, அதன் அதிகாரியாக இருக்கக் கூடும். ஒரு போலீசுக்கே உரிய தோரணையுடன் கையில் வாக்கிடாக்கி சகிதமாக வந்தார். இந்தியில் யாருக்கோ தகவல் கொடுத்துக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்து வாக்கிடாக்கியில் தகவல் கொடுத்துவிட்டு டி.சி.எஸ் ஊழியர் இல்லை என்றதும் கிளம்பி விட்டார். இத்தகைய பாதுகாப்பு சூரப்புலிகளின் காவலில்தான் உமா மகேஸ்வரியும் கொலை செய்யப்பட்டிருந்தார்.
அடிப்படை மனிதாபிமானம் கூட இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இருப்பதில்லை என்பது பளார் என்று முகத்தில் அறைந்தது போல புரிந்தது. கார்ப்பரேட்டுகளுக்கும் மனிதநேயத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பதை அந்த கணத்தில் அனுபவபூர்வமாக உணரமுடிந்தது. அடிபட்டவர் தங்கள் நிறுவனத்தை சேர்ந்தவர் இல்லை என்பது மட்டுமில்லாமல், அவர் சாதாரண ஒரு கேப் டிரைவர் தானே என்று அவர்கள் சிந்தித்திருக்கிறார்கள்.
“கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பானிசிபிலிட்”டி என்று பெயரில் அலுவலகத்தில் நடந்த எண்ணற்ற விளக்கக் கூட்டங்களை நினைத்துப் பார்த்தேன். நிறுவன ஊழியர்களை கொண்டு கடற்கரைகளில் பிளஸ்டிக் பொறுக்குவது, கேன்சருக்கு எதிராக மாரத்தான் ஓடுவது போன்று மொன்னையாக எதையாவது செய்துவிட்டு அதையே பெரிய சாதனையாக சித்தரிக்கும் இவர்களின் உண்மை முகம் எப்படிப்பட்டது என்பதை அன்று தான் பார்க்க முடிந்தது. வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளை பெறுவதற்காகவும் சமூகத்தில் தங்கள் பிம்பத்தை உயர்த்துவதற்காகவும் மட்டுமே திட்டமிட்ட முறையில் ஊடக வெளிச்சத்தில் ‘சமூக அக்கறை’யை வெளிப்படுத்தும் இவர்களின் மூஞ்சியில் காறித் துப்பலாம் போல இருந்தது. இவர்களுக்காகவா பெருமையுடன் வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று அவமானமாக இருந்தது. ஒன்றுக்கொன்று எதிரான கார்ப்பரேட் இலாப வெறியும், மனிதநேயமும் என்றைக்குமே சேர்ந்து இயங்க முடியாது என்பதை கண்ணெதிரே பார்க்க முடிந்தது.
நேரம் ஆக ஆக என்ன செயவது என்று செய்வது என்று தெரியவில்லை. ஆம்புலன்ஸ் நெருங்கும் சத்தம் எதுவும் அருகில் கேட்கவுமில்லை. நம்பிக்கையற்று இருந்த வேளையில் அந்த வழியாக வந்த ஒரு வாடகை வண்டி ஓட்டுநர் தன் வண்டியில் அடிபட்டவரை கொண்டு செல்ல அனுமதித்தார். ஏதோ வினவில் சொல்கிறார்கள் என்று இல்லை உண்மையில் உழைக்கும் வர்க்கம் உழைக்கும் வர்க்கம் தான். சக மனிதனின் வலி, வேதனைகளை இரத்தமும் சதையுமாக உணர்ந்தவர்கள் அவர்கள் மட்டும்தான். பல்லாயிரம் கோடிகளோடு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களிடம் இல்லாத மனிதாபிமானம் சில ஆயிரங்களை மட்டும் ஊதியமாக பெறும் அந்த கார் ஓட்டும் தொழிலாளியிடம் இருந்தது.
அவரை வண்டியில் ஏற்றி சிப்காட் வாயிலை நெருங்கும் போது எதிரில் நல்ல வேளையாக ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. அருகில் இருப்பது கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனைதான் என்று முடிவு செய்து அங்கு போகச் சொன்னோம். முதலுதவி அளித்தபடியே வண்டி அங்கு போய்ச் சேர்ந்து அவசர பிரிவுக்கு அழைத்துச் சென்றார்கள்.
அடிபட்டவரை மனிதர்களின் உயிரை காப்பாற்ற சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டவர்களின் உலகமான ஒரு மருத்துவமனைக்கு கொண்டு வந்து விட்டோம், அதுவும் நவீன வசதிகளையும் திறமை வாய்ந்த மருத்துவர்களையும் கொண்ட இடம். அவரை மருத்துவ சிகிச்சைகள் சூழ்ந்து கொண்டு அவரை காப்பாற்றும் முயற்சி ஆரம்பித்து விடும் என்று பரபரப்பாக எதிர்பார்த்திருந்தேன்.
சற்று நேரத்தில் ஒரு மருத்துவர் வெளியே வந்தார்.
“அவருக்கு நீங்கள் யார்?”
“யாருனு தெரியல மேடம். வழியில அடிபட்டு கிடந்தார், கூட்டிட்டு வந்தோம்”
“அப்படியா. நாங்க ஃபர்ஸ்ட் எய்ட் டிரீட்மென்ட் பண்றோம். நீங்க அவங்க ஃபேமிலிக்கு தகவல் சொல்லிருங்க. அவஙக வந்திரட்டும்”. அப்புறம்தான் சிகிச்சை ஆரம்பிப்பார்கள் என்று தெரிந்தது.
“காசு பிரச்சனையில்ல மேடம். நாங்க கட்டுறோம். நீங்க ஃபர்ஸ்ட் எய்ட் மட்டுமில்ல டிரீட்மென்டை கூட ஆரம்பிசிருங்க”
“அப்படியா. அப்படினா இந்தாங்க, இத ரிசெப்சென்ல கொடுத்து அட்மிட் போட்டுட்டுவாங்க, அன்கான்சியசா தான் இருக்காரு. ஸ்கேன் பண்ண வேண்டி இருக்கும்”. ஒரு பட்டியலை கையில் திணித்தார்.
“ம்ம்”
உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவருக்கு சிகிச்சை அளிக்கும் முன் அவரால் பணம் கட்ட இயலுமா என்பதை சோதனை செய்து விட்டுதான் ஆரம்பிக்கிறார்கள். காசில்லாதவனுக்கு என்ன மயித்துக்கு உயிர் வேண்டியிருக்கு என்பது தான் இவர்கள் மறைமுகமாக சொல்ல வருவது.
பணத்தைக் கட்டுவதற்கு போன இடத்திலும், மருத்துவமனை ஊழியர் கூடவே வந்து பணத்தை கட்டி விட்டீர்களா, ரசீது எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தார். பணம் கட்டத்தான் வந்து விட்டேன், போய் சிகிச்சையை ஆரம்பியுங்கள் என்று கண்ணீரும் கோபமுமாக அவரை போய் சிகிச்சை ஆரம்பிக்க சொன்னேன். ஆனால், அவரது விதிமுறைகள் தெளிவானவை. காசு இல்லை என்றால் சிகிச்சை இல்லை காசு கட்டி ரசீது வந்தால்தான் எதுவும் ஆரம்பிக்கும் என்று தெளிவானது.
பணத்தைக் கட்டி விட்டு வந்து அடிபட்டவரின் உறவினர்களுக்கு தகவல் சொல்லலாம் என்று அவரின் பர்சை எடுத்து பார்த்தோம் அதில் சிறிது பணமும், நகை அடகு வைத்த இரசீதுகள் நாலைந்தும் இருந்தன. அவரது அலுவலக எண் கிடைத்தது. அதற்கு அழைத்து தகவல் கூறினோம். சற்று நேரத்தில் அவரின் அலுவலக நண்பர்களும், குடும்பத்தினரும் வந்தார்கள்.
அடிபட்டவர் வாடகை வண்டி நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்யும் மருதமுத்து . சிப்காட்டில் இயங்கும் ஐ-கேட் மற்றும் ஆஸ்பைர் நிறுவனங்களுக்கு வாடகை வண்டி சேவை செய்கிறது அந்நிறுவனம். இவரின் வயது 30-க்கு குறைவாக தான் இருக்கும், ஒரு வயதில் குழந்தை இருக்கிறது.
காலை 9-10 மணி வாக்கில் அலுவலகத்துக்கு போவதற்கு முன்பு, அலுவலக சம்பளம் போதாமல் கூடுதல் வருமானத்துக்காக அதிகாலை 3 மணிக்கு எழுந்து வீடுகளுக்கு பால் பாக்கெட் போடுவாராம். அதை முடித்து விட்டு, பல நாட்கள் காலை உணவு கூட சாப்பிடாமல் வேலைக்கு போய் விடுவாராம். இரவில் தாமதமாகப் போய் சில மணி நேரம் தூங்கி விட்டு அல்லது தூங்காமலே கூட அடுத்த நாள் அதிகாலையில் உழைப்பை ஆரம்பித்து விடுவார் என்று அவரது நண்பர்கள் கூறினார்கள். அரைப்பட்டினி, அதீத உழைப்பு என்று அவரது உடல்நிலை மோசமாகி மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாகவும், மேலும் விடுமுறை எடுக்க முடியாத நிலையில் அன்றுதான் வேலைக்கு சென்றதாகவும் அவரது உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் சொன்னதிலிருந்து அவர் பசியிலும், வெயிலிலும், சோர்வடைந்து மயக்கமடைந்து விட வண்டி கட்டுப்பாடில்லாமல் நின்று கொண்டிருந்த பேருந்தில் மோதியிருக்கலாம் என்று புரிந்து கொள்ள முடிந்தது.
உறவினர்கள் வந்தபடியால் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நாங்கள் கிளம்பி விட்டோம். அவ்வப்போது தொலைபேசி, எப்படி இருக்கிறார் என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தான் தகவல் கிடைத்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று உடல்நிலை மேலும் மோசமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். “ஏற்கனவே தினமும் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறீர்கள். இனி இன்னும் அதிகமாகும். உங்களால் முடியுமென்றால் இங்கே சிகிச்சை செய்கிறோம். இல்லை என்றால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விடுங்கள்” என்று செட்டிநாடு மருத்துவமனையில் கூறியிருக்கிறார்கள். செட்டிநாடு மருத்துவமனையை இயக்கும் பண ஓட்டம் வறண்டு போய் விடவே அடிபட்டவருக்கான சிகிச்சை நடைமுறையும் முடிவுக்கு வந்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவரை ஆம்புலனசில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அங்கு சென்றதும் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிர் போய்விட்டதை கூறியிருக்கின்றனர்.
அவரது விபத்தை அரையும் குறையுமாக பார்த்து விட்டு அலுவலகத்திற்கு செல்ல முதலில் முடிவெடுத்ததால் ஏற்பட்ட குற்ற உணர்வு மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது. நிறுவனங்கள், மருத்துவமனைகளை விடுங்கள், ஒரு குடிமகனாக நானும் கூட முதலில் அலட்சியமாகத்தானே இருந்தேன்? இந்த அலட்சியம் என்னுள்ளே இயல்பாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. சமூக வாழ்க்கையை நிபந்தனையாகவும், பண்பாகவும் கொண்டிருக்கும் அனேக தமிழ் நாட்டுக் கிராமங்களில் எனது கிராமும் அடக்கம். ஊரிலே இருந்திருந்தால் உதவி செய்வதற்கு இத்தகைய இழுபறி போராட்டங்கள் இருந்திருக்காது. சென்னையில்?
இப்படியே அடுத்த சில நாட்களில் அவதிப்பட்டேன். ஊரிலிருந்து அம்மாவும், நண்பர்களும் அழைத்த போது கூட பேசத் தோணவில்லை. உலகமே என்னை புறக்கணித்துவிட்டது போல ஒரு தனிமை உணர்வு. முக்கியமாக அந்த விபத்தில் நானிருந்தால் எனக்கும் இதுதானே நிலைமை? இருப்பினும் இதை வெளியே கொண்டு வரவேண்டும் தோழர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய போதுதான் உங்களது குற்ற உணர்வை கோபமாக மாற்றுங்கள் என்றார்கள். கோபமா? உதவி செய்ய தயங்கியவன் யார் மீது கோபம் கொள்ள முடியும்?
“நீங்கள் தயங்கினாலும் அன்று முழுவதும் மருத்துவமனைக்கு சென்று இறுதி வரை உடன் இருந்தீர்கள். ஆனால் ஓரிரு ஊழியர்களை அனுப்பி இந்த விபத்தில் உதவி செய்வதால், ஐ.டி நிறுவனங்களோ இல்லை மருத்துவமனைகளோ எதையும் இழக்கப் போவதில்லை. என்றாலும் பணம் மட்டுமே அவர்களது உலகம் என்பதால் ஒரு மனித உயிரை அலட்சியத்துடன் கொன்றிருக்கிறார்கள். அந்த தொழிலாளிக்கு உரிய வருமானம் இல்லாமல் சிரமப்பட வைத்து கொல்வதற்கு ஏற்ற உடல்நலக் கேட்டை இந்த சமூக அமைப்பு உருவாக்கி வைத்தது என்று நீண்டது அந்த விவாதம். விபத்தின் இரத்தத்தின் பின்னே உள்ள மர்மங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெளிய ஆரம்பித்தன.
என் கண்முன்னால் துடிதுடித்து கால்கள் வெட்டிவெட்டி இழுத்துக்கொண்டிருந்த ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது நானே கேள்வி கேட்கிறேன். ஏன் இந்த விபத்து? ஏன் அவர் காப்பாற்றப்படவில்லை? இந்த உலகை இயங்க வைத்து பாதுகாக்கும் தொழிலாளி வர்க்கத்தை சேர்ந்த ஒரு ஏழை என்பதாலேயே அவர் இறந்து போயிருக்கிறார். இல்லை கொல்லப்பட்டிருக்கிறார்.
இப்போது இந்தக் கொலைக்கு வருந்தி அழும் நிலையை கடந்து விட்டேன். வந்திருப்பதோ கோபம். இத்தனை வசதிகள் இருக்கும் சென்னை மாநகரில் ஒரு மனித உயிரைக் கொன்ற கொலைகாரர்கள் மீதான கோபம். அந்த கோபத்தீ என்னைத் தின்று செரிக்கவே விரும்புகிறேன். அப்போதுதான் நான் பழிவாங்க முடியும்.
இப்போது என்னிடம் குற்ற உணர்வு இல்லை.
( ஐ.டி துறை நண்பர் ஒருவரின் உண்மை அனுபவம்)
– வினவு செய்தியாளர்.
திருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்
கவுத்தி வேடியப்பன் மலைகள். நீண்ட நெடிய சாலையில் பயணித்தபடி பார்க்கும் போது தூரத்தில் மேகங்கள் கவிழ்ந்து தொடுவானத்திற்கு திரை போட்டது போல சாம்பல் நிறப் பரப்பாக விரிந்திருக்கும் இரண்டு மலைகள். இம்மலைகள் சார்ந்த பகுதியில் வாழும் 51 கிராம மக்களைப் பொறுத்த வரை அது அவர்களது வாழ்வுக்கு உயிர் கொடுக்கும் தாய்மையின் சின்னம். பருவமழை காலத்தில் சுமார் 40 ஏரிகளுக்கு நீர் கொண்டு வரும் ஓடைகளின் நீர் பிடிப்புப் பகுதி. பல வகையான அரிய விலங்கு, தாவர இனங்களின் தாயகம். 28,000 ஏக்கர் விளைநிலங்களில் விவசாயத்துக்கு உயிர் கொடுக்கும் ஆதாரம்.

இனாம் காரியந்தல் கிராமத்தில் 4 ஏரிகள், திருவண்ணாமலை குடிநீருக்கு பயன்படும் வேங்கிக்கால் ஏரி, ஆடையூர் ஏரி, ஊசம்பாடி ஏரி, தாங்கல் ஏரி, மன்னை ஏரி, கொளக்கரை வாடி ஏரி, வாய்விடந்தாங்கல் ஏரி, படூர், மேல் படூர், பெரியகுளம் ஏரி, நத்தவாடி ஏரி, வடமாத்தூர் ஏரி, நாச்சிப்பட்டு ஏரி, கன்னக் குரிக்கை பாய்ச்சல், பெரிய கோலப்பாடி, சின்ன கோலப்பாடி, பீமாநந்தல், தேவநந்தல், கருந்துவம்பாடி, பெரியகுளம், குலால்பாடி, ஏந்தல், ஆலத்தூர், பெரிய பாலிப்பட்டி, சின்ன பாலிப்பட்டி, புனல்காடு, தேவநந்தல் ஆகிய கிராமங்களின் நீர்நிலைகள் கவுத்தி வேடியப்பன் மலையை சார்ந்து இருக்கின்றன.
அந்த மலை அடிவாரத்தில் கொட்டிக் கிடக்கும் கற்கள் தம்முள் அடக்கியிருக்கும் இரும்புத் தாதுவின் பளபளப்பில் வெயிலில் மின்னுகின்றன. பல லட்சம் ஆண்டுகளாக இந்த கற்களுக்குள் உறைந்திருக்கும் இரும்புத் தாது அப் பகுதியில் வசிக்கும் 5 லட்சம் மக்களைப் பொறுத்த வரை அந்த மலையின் பிரிக்க முடியாத ஒரு அங்கம். கவுத்தி வேடியப்பன் மலைகளிலிருந்து இறங்கி வரும் நீருக்கு நோய்களை தீர்க்கும் அரிய மருந்து குணத்தை கொடுக்கும் ஜீவ சத்து. மக்களுக்கு சொந்தமான இந்த கனிம வளம் மக்களின் பொது நலனுக்காக கூட பயன்படப்போவதில்லை. அதை பறித்து தின்ன ஒரு தனியார் முதலாளி ஆலாய் பறக்கிறான்.
இம்மலைகள் அமைந்துள்ள திருவண்ணாமலையிலிருந்து சுமார் 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரியானா மாநிலத்தின் ஹிசாரைச் சேர்ந்த ஜிண்டால் குடும்பத்தினரை பொறுத்த வரை அம்மலை, அவர்களது உருக்குத் தொழில் சாம்ராஜ்யத்தை விரிவாக்குவதற்கு தேவைப்படும் இரும்புத் தாதை பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு பொதி மட்டுமே. மலையை உடைத்து வெளியில் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, உருக்கு ஆக்கப்பட்டு, கிராக்கி உள்ள இடங்களில் விற்று இலாபத்தை சுருட்டக் காத்திருப்பதுதான் அந்த இரும்புத் தாது. தனது உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு லாபம் குவிக்க தேவைப்படுவதுதான் அந்த மலை. மக்களின் இரும்பு தாது கூட மக்களுக்கோ அரசுக்கோ பயன்படப்போவதில்லை.
கவுத்தி வேடியப்பன் மலைகளை வெடி வைத்து துளையிட்டு, 30 மீட்டர் அகலமான பள்ளங்கள் தோண்டி திறந்தவெளி சுரங்கம் வெட்டி ஆண்டுக்கு 10 லட்சம் டன் தாது எடுப்பதற்கு ஜிண்டால் திட்டம் தயாரித்திருக்கிறது. 1:0.36 என்ற விகிதத்தில் இரும்புத் தாது அடங்கியிருக்கும் கற்களிலிருந்து 1 டன்னுக்கு 360 கிலோ இரும்புத் தாது எடுத்து விட்டு 640 கிலோ சக்கையை கொட்டி விடும்.

இந்தப் பணிகளின் போது சுரங்கப்பகுதியில் 36.7 முதல் 56 டெசிபல் சத்தம் ஏற்படும் என்றும் சுற்று வட்டாரத்தில் 35.7 முதல் 52 டெசிபல் சத்தம் ஏற்படும் என்றும் ஜிண்டாலின் அறிக்கை தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு 1.35 லட்சம் லிட்டர் தண்ணீர் தூசியை தணிப்பதற்கும், மரம் வளர்ப்பதற்கு 30,000 லிட்டர் தண்ணீரும், குடிநீருக்காக 20,000 லிட்டர் தண்ணீரும், 4 லட்சம் லிட்டர் தண்ணீர் இரும்புத் தாதுவை செறிவூட்டவும் என மொத்தம் 560 கனமீட்டர் (5.6 லட்சம் லிட்டர்) தண்ணீர் பயன்படுத்தப்படும் என்று கூறுகிறது திட்ட அறிக்கை.
இந்த திட்டத்தின்படி எடுக்கப்படும் 1 டன் இரும்புத் தாதுவுக்கு ஜிண்டால் அரசுக்கு ரூ 27 மட்டும் உரிமத் தொகை செலுத்தும். சந்தையில் சுத்திகரிக்கப்பட்ட தாதுவின் விலை ஒரு டன்னுக்கு ரூ 6,000 வரை விலை வைத்து விற்கும். மக்களுக்கு நாமம், ஜிண்டாலுக்கு பெரும் இலாபம். அரசோ தரகு வேலை பார்க்கிறது.
இந்தத் திட்டத்தில் சுமார் 180 பேர் வரை நிரந்தரத் தொழிலாளர்களாக வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்றும் இன்னும் பல நூறு பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுகிறது ஜிண்டால். இந்த திட்டத்தின் மூலம் பகுதியில் கல்வி, நீர் வழங்கல், மின்சாரம், மருத்துவ வசதிகள் மேம்படும் என்றும் சேலத்தில் உள்ள உருக்கு ஆலைக்கு இரும்புத் தாது அனுப்பப்படும் என்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் மலை தகர்க்கப்படும் என்றும் தாது மணல் லாரிகளில் பத்திரமாக மூடப்பட்டு கொண்டு போகப்படும் என்றும் ஊழியர்களுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் சுற்றுச் சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் ஜிண்டால் உறுதி அளித்திருக்கிறது. இங்கு வெட்டப்படும் 2.2 லட்சம் மரங்களுக்கு பதிலாக திருநெல்வேலி மாவட்டத்தில் மரங்கள் வளர்க்கப்படும் என்று கூறியிருக்கிறது. நல்ல வேளை ஜிண்டாலின் தாயகத்திற்கு அருகில் உள்ள தார் பாலைவனத்தில் மரங்கள் வளர்ப்பதாக அவர்கள் கூறவில்லை.
இந்தத் திட்டத்துக்கு எதிராக “இப்போது எங்களுக்கு காது நன்கு கேட்கிறது. எங்களுக்கு உங்கள் திட்டமும் வேண்டாம், அதனால் ஏற்படும் பாதிப்புக்கு உங்கள் செவிட்டு மெசினும் வேண்டாம்.” என்றும் “இங்கு 2 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டி விட்டு எங்கோ திருநெல்வேலியில் மரம் வளர்ப்பீர்கள் என்று என்ன உத்தரவாதம், அப்படியே வளர்த்தாலும் அதனால் எங்களுக்கு என்ன பயன்” என்றும் “இங்கு யாரும் வேலை இல்லாமல் சுத்திக் கொண்டிருக்கவில்லை, உங்கள் திட்டம் கொண்டு வரப் போகும் 150 வேலைவாய்ப்புகளை நீங்களே வைச்சுக்கோங்க, மீதி பேரை தினக் கூலி அகதிகளாக நகரங்களுக்கு விசிறியடிக்கும் உங்கள் திட்டம் எங்களுக்கு வேண்டாம்” என்றும், “எங்களை கொன்று போட்டு விட்டு எங்கள் மலை மீது கை வையுங்கள்” என்றும் தமது நிலத்தையும், விவசாயத்தையும், வாழ்க்கையையும் பாதுகாக்க போராடுகின்றனர் மண்ணின் மைந்தர்களான திருவண்ணாமலை மக்கள்.
இம்மக்களுக்கும் இந்திய/தமிழக அரசுகள் மற்றும் பன்னாட்டு நிதி மூலதனத்தால் ஆதரிக்கப்படும் ஜிண்டால் குழுமத்துக்கும் இடையேயான முரண்பாடு எப்படி தீர்க்கப்படும்?

ஓ.பி. ஜிண்டால் அரியானா மாநிலத்தின் ஹிசார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு அம்மாநிலத்தின் மின்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். ஜிண்டால் உருக்கு நிறுவனத்தின் (Jindal Steel Works Corporation) முதலாளியான அவரது மனைவி சாவித்திரி, ஜிண்டால் அவரது மறைவுக்குப் பிறகு அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் அரியானா அமைச்சராகவும் இருந்து வருகிறார். நான்காவது மகன் நவீன் ஜிண்டால் குருக்சேத்திரா நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய சுரங்கத் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அதிகாரவர்க்க முதலாளிகள் குடும்பத்தில் முக்கியமானவர்களாக பரிணமித்திருப்பவர்கள் ஜிண்டால் குடும்பத்தினர். சாவித்திரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் 295-வது இடத்தையும் இந்தியாவில் 10-வது பெரிய பணக்காரராகவும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் மதிப்படப்பட்டுள்ளனர்.
ஓ.பி. ஜிண்டால் 2005-ம் ஆண்டு இறப்பதற்கு முன்பு தான் சேர்த்து வைத்த சொத்துக்களை தனது மனைவி சாவித்திரி ஜிண்டாலின் பெயருக்கு மாற்றியிருந்தார். பிருத்விராஜ் ஜிண்டால், சஜ்ஜன் ஜிண்டால், ரத்தன் ஜிண்டால், நவீன் ஜிண்டால் ஆகிய நான்கு மகன்களுக்கும் அந்த சொத்துக்கள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டன. ஆனால், சொத்துக்களின் உடைமை பல அடுக்கு பினாமி கம்பெனிகளை முன் வைத்து இந்து கூட்டுக் குடும்பம் என்ற வடிவிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றது.
சஜ்ஜன் ஜிண்டால் தலைமையில் இயங்கும் ஜிண்டால் விஜயநகர் ஸ்டீல் லிமிட்டெட் (JVSL) என்ற நிறுவனம் கர்நாடகாவிலும் மகாராஷ்டிராவிலும் உருக்கு ஆலைகளை இயக்கி வருகிறது. பங்குதாரர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு லாபத்தை அதிகரிக்க வேண்டும், அதற்கு உருக்கு உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்க வேண்டும், அதற்கு ஆண்டுக்கு ஆண்டு அதிக இரும்புத் தாது தேவை. அந்த தேடலில் இருந்த ஜிண்டாலின் கண்ணில் விழுந்ததுதான் சேலத்தில் இயங்கி வந்த தென்னக இரும்பு/உருக்கு நிறுவனம் (Southern Iron and Steel Company – SISCOL).

1990-களில் கோவை லட்சுமி மில் வொர்க்ஸ் 40%, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ – TIDCO) 10% ஆகியவற்றின் கூட்டு பங்கு நிறுவனமாக உருவாக்கப்பட்ட சிஸ்கால் ஆலைக்கு தேவையான கடன் கொடுக்காமல் இழுத்தடித்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தேடிப் பிடித்த புதிய முதலாளிதான் ஓ.பி.ஜிண்டால். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓ.பி. ஜிண்டால் லட்சுமி மில் வொர்க்சிடமிருந்து சிஸ்காலின் பங்குகளை வாங்கி அந்நிறுவனத்தை தனது குடும்பத்துக்கு சொந்தமாக்கிக் கொண்டார். அந்நிறுவனத்தில் 11% பங்குகளை வைத்திருந்தது டிட்கோ.
இது ஒருபக்கம் நடந்து முடிந்திருக்க, இதற்கு இணையாக அந்த ஆண்டு ஜூலை மாதம் திருவண்ணாமலை கவுத்தி வேடியப்பன் மலைகளில் புதைந்திருக்கும் 3.5 கோடி டன் இரும்புத் தாதை தோண்டி எடுப்பதற்கான கூட்டு நிறுவனம் அமைக்க எடுக்க தனியார் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பம் கோரியது, டிட்கோ. அந்த மலையை குத்தகைக்கு விடப் போவது ஜிண்டாலுக்குத்தான் என்று ஏற்கனவே திரைமறைவு பேரங்களில் முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் மக்கள் சொத்தை முதலாளிகளுக்கு ஏலம் விடுவதை விதிமுறைகளின் படி செய்வதாக போக்கு காட்டப்பட்டது. விண்ணப்பித்த 15 நிறுவனங்களில் 6 மட்டுமே தேவைப்படும் ரூ 250 கோடி நிகர சொத்து மதிப்பு கொண்டிருந்தன. கோவாவிலும், கர்நாடகாவிலும் இரும்புத் தாது வெட்டி ஏற்றுமதி செய்து நாட்டிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி வரும் 4 நிறுவனங்கள் கேட்கப்பட்ட விபரங்களை சமர்ப்பித்திருந்தன.
மே 4-ம் தேதி நடந்த டிட்கோ இயக்குனர்கள் கூட்டத்தில் ஜிண்டாலுக்கு ஒப்பந்தம் வழங்குவதாக முடிவு செய்து இயக்குனர் குழு சார்பில் ரமேஷ்ராம் மிஸ்ரா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்புகிறார். சரியாக 20 நாட்களுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் தொழில்துறையின் செயலராகவும் இருக்கும் ரமேஷ்ராம் மிஸ்ரா டிட்கோவுக்கு ஜிண்டாலுடன் ஒப்பந்தம் போட அனுமதி அளித்து கடிதம் அனுப்புகிறார். அடுத்த நாளே டிட்கோவுக்கும் ஜிண்டாலுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்படுகிறது. ஒரு ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கே பல நாட்கள் இழுத்தடிக்கும் அரசு நடைமுறைகளுக்கு மத்தியில் அம்மாவின் பொற்கால ஆட்சியில் ஒரு சில மலைகளை தாரை வார்ப்பதற்கான ஒப்பந்தம் 3 வாரத்தில் போடப்பட்டு விட்டது என்ற சாதனையை எண்ணிப் பாருங்கள். ஐஏஎஸ் அதிகார வர்க்கம் இந்த நாட்டு தரகு முதலாளிகளுக்கு அடியாள் வேலை செய்யும் வேகத்தை பாருங்கள்!

டிட்கோவுக்கும், ஜிண்டாலுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் படி, ஜிண்டால் குழுமம் டிம்கோ (தமிழ்நாடு இரும்புத் தாது சுரங்க நிறுவனம்) என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும்; திட்டப்பணிக்கும் தேவையான அனுமதிகள் அனைத்துக்கும் ஜிண்டால் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்; வெட்டி எடுக்கப்பட்ட இரும்புத் தாது சிஸ்கால் நிறுவனத்துக்கு தரப்பட வேண்டும்; டிட்கோ தன் பங்காக 1% முதலீடு செய்யும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு டிட்கோ தனது பங்கு மூலதனத்தை ஜிண்டாலுக்கு விற்று விட வேண்டும்.
இந்நிறுவனத்தின் பெயரில் 99% பங்குகளை வைத்திருக்கும், 3 ஆண்டுகளில் அதை 100% ஆக உயர்த்திக் கொள்ளவிருக்கும், தனக்கு சொந்தமான சிஸ்காலுக்கு இரும்புத் தாதுவை எடுக்கவிருக்கும் ஜிண்டாலின் பெயர் அடையாளமே இல்லாமல், 1% வைத்திருக்கும் டிட்கோவை முன் வைத்து, டிம்கோ என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிறுவனம் போல பிம்பத்தை கட்டியமைக்கின்றனர்.
இதற்கு 3 ஆண்டுகளுக்குள் 22.2.2008 அன்று மும்பை உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிஸ்கால் முழுமையாக ஜிண்டால் விஜயநகர் ஸ்டீலுடன் இணைக்கப்பட்டு செரிக்கப்பட்டு விட்டது என்பதை பார்க்கும் போது இந்த மோசடி அப்பட்டமாக புரிய வரும்.
2005-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி ஜிண்டாலின் பினாமி நிறுவனங்களான விருந்தாவன் சர்வீசஸ், சன் இன்வெஸ்ட்மென்ட் முதலானவற்றுக்கு 99% பங்குகள், தமிழக அரசு நிறுவனமான டிட்கோவுக்கு 1% பங்குகள் என்ற வகையில் புதிய நிறுவனமான டிம்கோ உருவாக்கப்படுகிறது.
டிம்கோ நிறுவனத்தில் பங்கு யார் பெயரில் இருக்கிறது என்று பார்த்தால் அது ஜிண்டால் -1, ஜிண்டால் -2, ஜிண்டால் -3 என்று வரிசையாக ஜிண்டால் குடும்பத்தினரையும் பல உறவினர்களையும் உள்ளடக்கியிருக்கிறது.
சன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் ஓம் பிரகாஷ் ஜிண்டால், ரத்தன் கே ஜிண்டால், புரான் சந்த் சர்மா, பி ஆர் ஜிண்டால், சங்கீதா ஜிண்டால், ஓ பி ஜிண்டால் (இந்து கூட்டுக் குடும்பம்), சாவித்ரி தேவி ஜிண்டால், ஸ்மினு ஜிண்டால், திருப்தி ஜிண்டால், தாரிணி ஜிண்டால், தான்வி ஜிண்டால், அபுதய் ஜிண்டால், ஊர்வி ஜிண்டால், தீபிகா ஜிண்டால், நவீன் ஜிண்டால் என்று வரிசையாக ஓ.பி.ஜிண்டாலின் வீட்டில் பிறந்த குஞ்சு குளுவான்கள் வரை பங்குதாரர்களாக உள்ளனர். இன்னொரு முக்கிய நிறுவனமான விருந்தாவன் கம்பெனியை கட்டுப்படுத்தும் அளவு பங்குகளை வைத்திருப்பது சன் சர்வீசஸ் நிறுவனம். இப்படி ஒன்றுக்குள் ஒன்று என புரிந்து கொள்ள முடியாத இடியாப்பச் சிக்கலாக இருப்பவைதான் இந்திய தரகுமுதலாளிகளின் சொத்து விவகாரங்கள்.

ஆர்.எஸ்.எஸ்சின் பொருளாதார மேதை குருமூர்த்தி உலகுக்கே வழிகாட்டக் கூடியதாக முன் வைத்த இந்திய பாணி இந்து கூட்டுக் குடும்ப, சாதி அடிப்படையிலான முதலாளித்துவத்தின் லட்சணம் இதுதான்.
“நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன் ஊதி ஊதி தின்னலாம்” என்ற இந்த ஒப்பந்தத்திற்குள் இருக்கும் பூனைக் குட்டி 2 நாட்களுக்குப் பிறகு வெளி வந்தது. ஒப்பந்தத்தில் இரும்புத் தாதுவை பெறவிருக்கும் சிஸ்கால் நிறுவனமும் ஜிண்டாலின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற விபரம் குறிப்பிடப்படவில்லை. அதாவது, தமிழக மக்களுக்கு சொந்தமான இரும்புத் தாதுவை பெற்று லாபம் குவிக்கப் போவது ஜிண்டால், அதை வெட்டும் நிறுவனத்தின் உரிமையும் ஜிண்டாலுக்கு, ஆனால் பெயரளவில் பங்குதாரராக தமிழக அரசு நிறுவனமான டிட்கோ.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 26.5.2000 அன்று கவுத்தி-வேடியப்பன் மலையை உடைத்து 325 ஹெக்டேரில் இரும்புத் தாது எடுப்பதற்கு உரிமம் கோரி டிட்கோ மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தது. ஜிண்டாலுடன் ஒப்பந்தம் போட்ட பிறகு பொறுப்பான அடியாளாக செயலில் இறங்கிய டிட்கோ, தான் அனுப்பியிருந்த விண்ணப்பத்தை புதிய நிறுவனமான டிம்கோ (ஜிண்டாலுக்கு சொந்தமானது) வுக்கு மாற்றிக் கொள்ளும்படி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது.
இவ்வாறு, கவுத்தி வேடியப்பன் மலையையும், டிம்கோ நிறுவனத்தையும் இவர்களிடம் ஒப்படைப்பதற்கு அம்மாவின் பொற்கால ஆட்சியின் கீழ் இருந்த டிட்கோ நிறுவனம் முழு முயற்சிகளுடன் உழைத்தது. என்ன இருந்தாலும் ஜிண்டால் குடும்பத்தினர் பாசப் பிணைப்பும், தேசப் பற்றும் உடைய அற்புத மனிதர்கள். கவுத்தி வேடியப்பன் மலையைச் சார்ந்துள்ள 51 கிராமங்களைச் சேர்ந்த 3 லட்சம் மனிதர்கள் ஜெயலலிதாவுக்கு என்ன நிதி கொடுத்து விட முடியும். தேர்தல் வந்தால் தலைக்கு இத்தனை நூறு ரூபாய் என்று கொடுக்க வேண்டிய மக்கள் தொகைதான் அது, தரக் கூடியது அல்ல என்று ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும்.
3.3.2006 அன்று கவுத்தி மலையில் 30 ஆண்டுகளுக்கு இரும்புத் தாது எடுக்க டிம்கோவுக்கு அனுமதி வழங்கும் படி தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்புகிறது. அடுத்த 10 நாட்களில் 13.6.2006 அன்று மத்திய அரசின் சுரங்கத் துறை கவுத்தி வேடியப்பன் மலையில் இரும்புத் தாது எடுக்க அனுமதியை வழங்கி விடுகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும் பிரச்சனைக்கோ, காவிரியில் நீர் விடச் சொல்லியோ தமிழகத்திலிருந்து எழுதும் கடிதங்களுக்கு ஆண்டுக் கணக்கில் நிவாரணம் கிடைக்காமல் இழுத்தடிக்கும் போது ஜிண்டாலுக்கு சென்னையில் அம்மா அடியாள் வேலை பார்க்க, மத்தியில் ஜிண்டால் குடும்பம் நேரடியாக செல்வாக்கு செலுத்த அனுமதிகள் மழையாக கொட்டியிருக்கின்றன.
மேலும் கவுத்திமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தாது எடுப்பதற்காக 325 ஹெக்டேரில் 2.22 லட்சம் இயற்கையாக வளர்ந்த மரங்களை வெட்டுவதற்கும் இரும்பு தாதுவை சுத்தம் செய்தல் மற்றும் அடர்ப்பித்தல் ஆலை அமைப்பதற்கும் வன பாதுகாப்பு சட்டத்தின் படி அனுமதி கேட்டு டிம்கோ விண்ணப்பத்தது.
27.12.2008 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எம் ராஜேந்திரன் மற்றும் வேலூர் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் இளங்குமரன் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினர். டிம்கோ பிரதிநிதி விஜய் சர்மாவும், 1000-க்கும் அதிகமான மக்களும் கலந்து கொண்டனர். 3 மணி நேரம் கூட்டம் நடந்தது.
டிம்கோ சார்பாக ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் திட்டத்தினால் பகுதிக்கு வரப் போகும் வேலை வாய்ப்பு, சுற்றுச் சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள், மருத்துவமனை திறத்தல் என பட்டியலிட்டிருக்கிறார்.
கூடியிருந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தமது எதிர்ப்பை தெரிவித்தனர். “எங்களை கொன்று போட்டு விட்டு எங்கள் மலை மீது கை வையுங்கள்” என்று 80 வயதான மூதாட்டி ஒருவர் கூறியிருக்கிறார். திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த படூர் கே ரமேஷ் என்ற வழக்கறிஞரை சூழ்ந்து கொண்டு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர். திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தால் மாவட்டத்தில் கடுமையான சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை அனுப்பியிருக்கிறார். இரண்டு கிராம பஞ்சாயத்துக்கள் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றன.
அத்தோடு திட்டம் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் 2011-ம் ஆண்டு அம்மாவின் பொற்கால ஆட்சி மீண்டும் மலர்ந்த பிறகு ஜிண்டாலுக்கு மீண்டும் உயிர் துளிர்க்கிறது. 2014 பிப்ரவரி 7-ம் தேதி அதிகாரம் பெற்ற குழுவின் தலைவர் ஜெயகிருஷ்ணன் ஆய்வு செய்ய வருகிறார். அதைத் தொடர்ந்து இனாம் காரியந்தல், பெரிய பாலியப்பட்டு, சின்ன பாலியப்பட்டு, அடி அண்ணாமலை உள்ளிட்டு 51 கிராம மக்கள் ஜிண்டால் திட்டத்தை எதிர்த்து போராட ஆரம்பித்தனர்.
சில இயக்கங்கள், தனிநபர்கள், உள்ளிட்ட பலரும் இந்த திட்டத்தை எதிர்த்து கிராமங்களில் பிரச்சாரம் செய்திருக்கின்றனர். கிராம மக்களில் பலர் ஜிண்டால் நிறுவனம் இயங்கும் குதிரேமுக் பகுதிக்கு சென்று வந்திருக்கின்றனர் அந்த பகுதிகளில் விவசாயம் முழுவதுமாக அழிக்கப்பட்டிருக்கிறது; குடிநீர் கூட 15 நாட்களுக்கு ஒருமுறைதான் விடப்படுகிறது; துங்கபத்ரா, நேத்ரா நதிகள் வறண்டு போயிருக்கின்றன என்ற அறிந்து தமது மலைகளை பாதுகாப்பதில் மேலும் உறுதியடைந்திருக்கின்றனர்.

கிராம இளைஞர்கள் ஆட்டோ வைத்து கிராமம் கிராமமாக ஜிண்டால் திட்டத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்திருக்கின்றனர். கனிமவளத் துறை வண்டி ஒன்று வந்து கல்லை ஜீப்பில் எடுத்துச் செல்ல முயற்சித்த போது மக்களை அதை சிறைப்பிடித்து வைத்து, விட மறுத்திருக்கின்றனர்.
ஜனவரி மாதம் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 3 நாள் பைக் பிரச்சாரம் நடத்தப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளால் அணிதிரட்டப்பட்டு 2014 மார்ச் 14 அன்று திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. இதில் ஆடையூர், வேடியப்பனூர், சின்னபாலியப்பட்டு, பெரியபாலியப்பட்டு, வெங்காயவேலூர், தேவனந்தல், வடமாத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டத்தை எதிர்த்து பேசியிருக்கின்றனர்.
அவர்களில் ஒருவரான இந்து முன்னணியைச் சேர்ந்த சங்கர் என்ற வழக்கறிஞர் மற்றவர்களை கலந்து ஆலோசிக்காமலேயே, “நாம் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையை பாதுகாக்க, மார்ச் 17-ம் தேதி கிரிவலத்துக்கு வரும் பக்தர்களிடம் நோட்டீஸ் கொடுத்து பிரச்சாரம் நடத்துவோம்” என்று போராட்டத்தை இந்துத்துவ பாதையில் திருப்ப முயற்சித்திருக்கிறார்.
அதன்படி, மார்ச் 17-ம் தேதி ஆதி அண்ணாமலையார் கோயில் அருகே கிரிவலப் பாதுகாப்பு குழு மற்றும் இந்து முன்னணி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 600 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். வேடியப்பன் சாமி அருள் வந்துவிட்டதாக கூறி 5 பெண்கள் ஆடியிருக்கின்றனர். உடனே வழக்கறிஞர் சங்கர் “அண்ணாமலை யாரை தவிர நமக்கு வேறு கதியில்லை. அதனால், அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் நாளை (இன்று) அங்க பிரதட்சணம் செய்து ஜிண்டால் திட்டத்தை எதிர்ப்போம்” என்று அறிவித்திருக்கிறார். அடுத்த நாள் அங்க பிரதட்சண போராட்டத்துக்கு சுமார் 50 பேர் போயிருக்கின்றனர். “எல்லாம் வல்ல அண்ணாமலையார் உங்களை காப்பாற்றுவார்” என்று சொன்னால் வேலைக்காகாது என்று சங்கரையும் தொண்டு நிறுவனத்தின் பண உதவியையும் துரத்தி விட்டிருக்கின்றனர் போராடும் மக்கள்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் ஆரம்பித்து விட ஓட்டுக் கட்சிகள் படையெடுத்திருக்கின்றன. தி.மு.கவின் ஸ்டாலின் போராட்டக் குழுவினரை சந்தித்திருக்கிறார். “எனக்கும் இதற்கும் தொடர்பில்லை” என்ற அவரிடம், “நீங்களும் பணம் வாங்கி விட்டீர்கள்” என்று சந்தேகமாக இருக்கிறது என பொதுமக்களில் ஒருவர் கேட்டிருக்கிறார். “நான் இதைப் பற்றி கேள்விப்படவேயில்லை, எ.வ.வேலு சொல்லித்தான் தெரியும். எங்கள் ஆட்சியில் சில அனுமதிகள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அ.தி.மு.க ஆட்சியில்தான் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்” என்றும் “இதை தடுப்பதற்கு மாநில அரசு எதுவும் செய்ய முடியாது, மத்திய அரசில் நாங்கள் பங்கேற்கும்படி நிலை வந்தால் செய்ய முடியும்” என்ற அவர் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி கூறியிருக்கிறார்.
“இந்த புராஜக்ட் ரத்து ஆகவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்” என்ற மக்களிடம், “அது பலன் தராது, தேர்தலை புறக்கணித்தால் உங்களுக்கு கேள்வி கேட்க உரிமை இருக்காது. போன தேர்தலில் அ.தி.மு.கவின் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஓட்டு போட்டீர்கள், அவர் என்ன செய்தார், இந்த தேர்தலில் அவரது கட்சியை தோற்கடிக்கும்படி பிரச்சாரம் செய்யுங்கள்” என்று தனது ஓட்டுப் பொறுக்கலில் குறியாக இருந்திருக்கிறார்.
தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஜிண்டாலும், ஜெயாவும் நிற்கும் போட்டோவை காட்டி பேசியிருக்கிறார்.
அ.தி.மு.க சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி பூமிக்கு கீழ் இருப்பவை பற்றி தீர்மானிக்கும் உரிமை மத்திய அரசுக்குத்தான் உள்ளது. எனவே மத்தியில் நாம் கட்டுப்படுத்தும் ஆட்சி அமைய உதவுங்கள் என்று கூறியிருக்கிறார்.
ஜெயா சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது கவுத்தி வேடியப்பன் மலையை ஜிண்டாலுக்கு கொடுப்பதை எதிர்த்து பேசியிருக்கிறார். தானே அனுமதிகளையும், ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டு இப்போது திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம் என்று முழங்கியிருக்கிறார்.
இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு அ.தி.மு.கவோ எதிர்க்கும் தி.மு.கவோ எதையும் செய்யப் போவதில்லை. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம் என்று தி.மு.க மாவட்டச் செயலாளரும் கல்வி கொள்ளையருமான எ.வ.வேலு அறிக்கை வெளியிட்டாலும் அவரும் அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நகரசபைத் தலைவர் பாலச்சந்திரன் போன்றவர்களும் ஏற்கனவே மலையை உடைத்தும், கல்விக் கொள்ளை அடித்தும் சேர்க்கும் பணத்தை பெருக்கிக் கொள்ள புதிய காண்டிராக்ட் வாய்ப்புகளை அள்ளித்தரும் ஜிண்டால் திட்டத்தை தனிப்பட்ட முறையில் வரவேற்கவே செய்வார்கள்.
எது எப்படியோ ஜிண்டால் தரப்பில் அரசு தெளிவாக இருக்கிறது.
இது போன்ற இயற்களை வளங்கள் அடங்கிய இடத்தை கைப்பற்றுவதற்கு ஒரு காலில் வளர்ச்சி, இன்னொரு காலில் ஆயுதம் தரித்து போக வேண்டும் என்கிறார் சத்தீஸ்கர் மாநிலத்தில் நியமகிரி மலையை பாதுகாக்க போராடும் பழங்குடி மக்களை எதிர்த்து இறக்கப்பட்ட சி.ஆர்.பி.எஃப் இயக்குனர் விஜயகுமார்.
‘தேர்தல் ஆணையம் போல, ஆளும்/எதிர்க்கட்சி தலையீடுகள் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக காவல் துறை மாற்றப்பட்டால் இத்தகைய பிரச்சனைகளை எளிதில் முடித்து விடலாம்’ என்று இப்போது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் கூறியிருக்கிறார். இதுதான் இந்திய ஆளும் வர்க்கத்தின் கருத்து.
‘கவுத்தி வேடியப்பன் மலைப் பகுதி மக்கள் ஜிண்டால் தரவிருக்கும் 180 வேலை வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு தமது நிலங்களையும், நீராதாரங்களையும், மலையையும் விட்டுக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை, அதை செய்தேதீர வேண்டும்’ என்பதுதான் அரசின் நோக்கம். அதை நிறைவேற்றுவதற்கு ஒரு காலில் வளர்ச்சியை தரித்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் முதல், உள்ளூர் அரசியல்வாதிகள் வரை இறங்க, மறுகாலில் ஆயுதம் தரித்து ஆயுதப் படைகள் இறக்கப்படும். ஒரு கையில் பைபிள், இன்னொரு கையில் துப்பாக்கி கொண்டு போன காலனிய ஆட்சியாளர்கள் போல நம் மக்களின் நிலங்களையும், வாழ்க்கையையும் பிடுங்கும் மறுகாலனியாக்கத்தை செயல்படுத்துவதற்கான ஏஜெண்டாக இந்திய அரசு தயாராக இருக்கிறது.
இந்நிலையில் கேள்வி எளிமையானது : கவுத்தி – வேடியப்பன் மலையிலேயே இரும்புத் தாதுவை விட்டு வைப்பது, கிராம மக்களின் பொருளாதாரத்தை கட்டியமைப்பது என்ற அடிப்படையில் போராட யார் முன்வருவார்கள்?
தன்னார்வக் குழுக்களும், ஓட்டுக் கட்சிகளும் ஜிண்டாலுக்கு எதிராக போராடுவது போல போக்கு காட்டிவிட்டு துரோகம் செய்வார்கள். மக்களும், ஜனநாயக சக்திகளும், அறிஞர்களும் இந்த பிரச்சனையை கிராமங்களை சார்ந்த பெரும்பான்மை விவசாய மக்களின் விடுதலைக்காக போராடும் புரட்சிகர நக்சல்பாரி இயக்கங்களில் அணிதிரண்டு போராடுவது மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது.
ஜிண்டால் பிரச்சினையை வெறும் சுற்றுச் சூழல் பிரச்சினையாகவோ இல்லை திருவண்ணாமலை பகுதியின் உள்ளூர் பிரச்சினையாக பார்ப்பது தவறு. இது இந்தியாவை மறுகாலனியாக்கும் திட்டத்தின் ஓர் அங்கம். அதை புரிந்து கொண்டு மறுகாலனியாக்க எதிர்ப்பு போராட்டங்களோடு இதை சேர்ப்பதும், போர்க்குணமிக்க வழிகளில் போராடுவதும் மட்டுமே சரியாக இருக்கும்.
– செழியன்
மேலும் படிக்க
- CEC Report
- TNPCB Report
- MINUTES OF THE PUBLIC HEARING CONDUCTED ON 27.12.2008
- முதல் பூட்ஸ் ஆயுதப் படைகள், இரண்டாவது பூட்ஸ் வளர்ச்சி: விஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி
- JSW Steel, SISCOL merger ratio at 1:22
- Jindal Steel and Power
- Sajjan Jindal
- O. P. Jindal
- Southern Iron & Steel Company Ltd
- SISCOL, JSW likely to be merge
- #210 Savitri Jindal & family
உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று என்ன ? புஜதொமு ஓசூர் கருத்தரங்கம்
அன்பார்ந்த தொழிலாளர்களே!
தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, போனசு, பி.எப்., ஈ.எஸ்.ஐ. உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகளைக் கூட எந்த ஆலை முதலாளிகளும் மதிப்பதில்லை. ஒசூர் தொழிற்சாலைகளில் நடக்கும் அடக்குமுறைகளை காணும்போது இது ஒரு உச்சநிலையை அடைந்திருப்பதை உணர முடிகிறது. குறிப்பாக, எல்லா ஆலை முதலாளிகளும் அங்கீகரிக்கப்பட்ட, சட்டபூர்வமான, பெரும்பான்மை சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வருவதில்லை. சங்க நிர்வாகிகளை இடைநீக்கம், இடமாற்றம், பணிநீக்கம் செய்து சங்கத்தின் செயல்பாடுகளை முடக்குகின்றன. மேலும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஆண்டுக் கணக்கில் நிறைவேற்றாதது மட்டுமல்ல, அவ்வாறு நிறைவேற்றுவதாக இருந்தால், ஆலை நிர்வாகம் விரும்புகின்ற சட்டவிரோத, கட்டப்பஞ்சாயத்து ஒப்பந்தத்தை (தொழிற்தகராறு சட்டம், பிரிவு18 உட்பிரிவு 1 அடிப்படையில்) மட்டும் தான் போடுகின்றனர்.
கமாஸ் வெக்ட்ரா ஆலையில் சங்க நிர்வாகி உட்பட 3 பேர் பணிநீக்கம், ஒருவர் இடைநீக்கம், 7 பேர் கட்டாய பணி இடமாற்றம் என சங்கத்திற்கு கடுமையான நெருக்கடியைக் கொடுத்துவிட்டு கடந்த 7 மாதங்களாக, தனிநபருடன் ஹோட்டலில்தான் ஒப்பந்தம் பேசமுடியும் என கட்டப்பஞ்சாயத்து செய்கிறது ஆலை நிர்வாகம்.
முருகப்பா குழும நிறுவனமான கார்போரண் டம் ஆலையில் ஊதிய உயர்வு கோரிக்கைக்கான பேச்சுவார்த்தையை பெரும்பான்மை சங்கத்துடன் நடத்தினாலும் அதனை சட்டபூர்வமான ஒரு ஒப்பந்தமாக போட மறுக்கிறது. ஆலை நிர்வாகத்தின் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து (18/1) ஒப்பந்தத்தை ஏற்க மறுக்கும் பெரும்பான்மை சங்க நிர்வாகிகள் 3 பேர் பணிநீக்கம், 3 பேர் இடைநீக்கம் மற்றும் ஒருவர் இடமாற்றம் என்று ஒட்டுமொத்த சங்க நிர்வாகிகளையே ஆலையைவிட்டு வெளியேற்றியுள்ளது. இதனை சாதகமாகக் கொண்டு ஆலையில் பெரும்பான்மை சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது செல்போனில் படம் பிடிப்பது, கேமாரா முன்னால் நின்று டீ குடிக்க வேண்டும் என்பது, தொழிலாளர்களின் ஜட்டியில் கையை விட்டு சோதனை செய்வது, அவமானப்படுத்துவது போன்ற பல அடக்குமுறைகளை செலுத்தி, தொழிலாளர்களிடையே முரண்பாடுகளைத் தூண்டிவிட்டு சங்கத்தை உடைப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்கிறது.
வெக் இந்தியா ஆலையில் பெரும்பான்மை சங்க நிர்வாகிகள் மீது தொடர்ந்து பல அடக்குமுறைகளை இவ்வாலை நிர்வாகம் செலுத்தி வருகிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை பெரும்பான்மை சங்கத்துடன் பேச மறுப்பது மட்டுமன்றி விரல்விட்டு எண்ணத்தக்க சிலரை வைத்துக் கொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சட்டவிரோதமான (18/1) ஒப்பந்தம் போட இருப்பதாகவும் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு தொழிலாளர்களை ஆண்டுக்கணக்கில் ஏமாற்றி வருகிறது.
டி.வி.எஸ். குழும நிறுவனமான ஹரிதா ரப்பர் ஆலை 12 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பணிமூப்பை ரத்து செய்துள்ளது. இங்கு சங்கத்தை ஒழித்துக்கட்டிவிட்டு தொழிலாளர்கள் மீது டி.வி.எஸ். நிர்வாகம் செலுத்தும் அடக்குமுறைகள், பண்ணையடிமைத்தனத்தைவிட கேடானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.டி.சி. ஆலையில் 36 மாதங்கள் ஒப்பந்த பேச்சுவார்த்தை இழுத்தடித்து, இறுதியில் 8 சங்க நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த பிறகுதான் கட்டப்பஞ்சாயத்து ஒப்பந்தம் ஒன்றைப் போட்டது இவ்வாலை நிர்வாகம். ஜி.எம்.டி. ஆலையில் ஊதியஉயர்வு வழங்கால் 60 நாட்களாக தொழிலாளர்களைப் பட்டினி போட்டு பணிய வைப்பதற்கான அடக்குமுறையை அவ்வாலை நிர்வாகம் செலுத்தி வருகிறது.
எக்ஸைடு, குளோபல் ஃபார்மாடெக், அசோக் லேலாண்டு, பாராகோட் போன்ற பல ஆலைகளில் பெரும்பான்மை சங்கத்தை வைத்தே கட்டப் பஞ்சாயத்து (18/1) ஒப்பந்தங்களை திணித்துள்ளன அவ்வாலை நிர்வாகங்கள். பல ஆலைகள் சங்கமே வைக்க விடாமல் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்துகின்றன.
லேலாண்டு, டி.வி.எஸ்., டைடான், வெண்ட் இன்டியா, கேட்டர்பில்லர், ஆவ்டெக், லுக்இன்டியா உள்ளிட்ட பல ஆலைகளில் உற்பத்தியின் பெரும் பகுதி அவுட்சோர்ஸ், ஒப்பந்த – தற்காலிக தொழிலாளர்கள், டீம் லீடர், ஸ்டாப் ஒர்க்கர் போன்ற முறைகளைக் கொண்டே நிறைவேற்றப்படுகிறது. பணி நிரந்தரம், 8 மணிநேர வேலை, ஊதிய உயர்வு, போனசு உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
மொத்தத்தில், தொழிற்சாலைகளில் சட்டத்தைப் பற்றி பேசமுடியாது என்ற நிலையை முதலாளிகள் உருவாக்கிவிட்டனர். தொழிற்சங்க சட்டங்கள் நடைமுறையில் செல்லா காசாகி விட்டன. அறிவிக்கப்படாத பாசிச காட்டாட்சியை ஆலைக்குள் முதலாளிகள் செலுத்துகின்றனர்.
முதலாளிகளின் இந்த காட்டாட்சிக்கு அரசு எந்த அளவிற்கு துணை போகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை உங்கள் முன் வைக்கிறோம். சென்ற 2012ம் ஆண்டு கமாஸ் வெக்ட்ரா ஆலையில் நடத்தப்பட்ட 105 நாள் உள்ளிருப்புப் போராட்டத்தின் இறுதியாக போலீசு, ஐ.ஜி., மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் உதவி ஆணையர் போன்ற அரசின் உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கமாஸ் வெக்ட்ரா ஆலை நிர்வாகம் தூக்கியெறிந்து விட்டது. ஒப்பந்த மீறல் – கிரிமினல் குற்றவாளிகளான இந்த ஆலை அதிகாரிகள் உள்ளே தள்ளப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் பொதுவானது என்ற கூற்று நடைமுறையில் பொய் என்பது மட்டுமல்ல, முதலாளிகள் எவ்வளவு கொடிய குற்றங்கள் இழைத்தாலும் அவர்களை இந்த அரசு ஆதரிக்கும் என்பதையும் மேற்கண்ட இந்த சம்பவம் காட்டுகிறது.
மற்றொருபுறம், தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதிகள் என்பது எந்தவித அடிப்படை சுகாதாரமும் அற்ற அடிப்படை வசதிகளற்ற நவீன சேரிகளாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக, பேடர்பள்ளி பகுதி முழுவதும் கழிப்பிடம், குடிநீர், சுகாதாரம் போன்ற எந்த வசதிகளும் இல்லை. பெண்கள் துணி துவைப்பதற்கு அருகில் ஆண்கள் கழிப்பிடம் இருக்கும் அவலம் இங்கே நிலவுகிறது. குளிப்பதற்கு இடமில்லாமல் தெருக்களில் குளிக்க வேண்டிய அவலமும் இங்கே நிலவுகிறது. மூக்கண்டப்பள்ளி, பேடர்பள்ளி, சின்ன எலசகிரி போன்ற பல பகுதிகளில் குடிநீர் மிகவும் உப்புத்தன்மையும், குடிப்பதற்கும் சமைப்பதற்கும் இலாயக்கற்ற நீராகத்தான் உள்ளது. சாலை வசதி, போக்குவரத்து வசதி எதுவும் திட்டமிட்ட வகையில் இல்லை. கொத்தகொண்டப்பள்ளி, மோரனப்பள்ளி தொழிலாளர்களுக்கு பேருந்து வசதிகூட இன்றுவரை போதுமான அளவு இல்லை. தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, சிறு பட்டறைகள் கூட எந்த அடிப்படை வசதிகளுமின்றி உழல்கின்றன. மொத்தத்தில், தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க இந்த அரசு தயாராக இல்லை.
***
ஆலைக்குள் தொழிலாளர் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. ஆலைக்கு வெளியே தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்குகூட இந்த அரசு தயாராக இல்லை. முதலாளிகளுடன் சேர்ந்து நம்மை ஒடுக்குவதை மட்டும் செய்கிறது. இனி நாம் என்ன செய்வது என்பதைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும். இந்த இழி நிலைமையை தீர்க்கக்கோரி யாரிடம் சென்று கேட்பது? கலெக்டரிடமா, போலீசிடமா, தொழிலாளர்துறை அதிகாரிகளிடமா, நீதிமன்றத்திடமா… இவர்கள் தான் முதலாளிகளின் ஏவாலாட்கள், கையாட்கள் தொழிலாளர்களின் எதிரிகள். பன்னாட்டுக் கம்பெனிகள், டாடா, லேலாண்டு, டிவிஎஸ், முருகப்பா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர். அதனால், இவர்களிடம் போய் மண்டியிடுவதும் மனு கொடுப்பதும் நமது உரிமைகளை நாம் காவு கொடுத்து விட்டதாக ஒப்புக்கொள்வதற்கு சமமானது.
இதற்கு மாறாக, தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டிகள் மூலம் ஆலையில் சட்டபூர்வ உரிமைகள் அமுல்படுத்துவதைக் கண்காணிக்க வேண்டும். சட்டத்தை மீறி செயல்படும் ஆலை முதலாளிகள், அதிகாரிகளை இந்தக் கமிட்டிகளே தண்டிக்கவேண்டும். தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டிகள் தொழிலாளர் குடியிருப்பைப் பராமரிப்பது, சாலைகளை சீரமைப்பது, நமது அடிப்படைத் தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வது, தொழிலாளர்களின் சுகாதாரத்திற்கு கேடான முதலாளிகளின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட எல்லா தேவைகளையும் தீர்மானிக்கும் அதிகாரம் தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டிகளுக்கே இருக்க வேண்டும்.
இந்த நிலைமையை நாம் எட்டமுடியுமா? நிச்சயம் முடியும். இதற்கு முதல் தேவை, ஒசூர் தொழிலாளர்களிடையே ஓர் ஒற்றுமை. இதனைக் கட்டியமைக்க வேண்டும். அண்மையில் திருப்பூர், ஈரோடில் உள்ள லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறித் தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து போராடி ஊதிய உயர்வைப் பெற்றனர். அதுபோல, ஒசூர் தொழிலாளர்களும் ஓரணியாக சேர்ந்து முதலாளிகளுக்கு எதிரான நமது உரிமைகளை போராடி வென்றெடுக்க வேண்டும். ஒரு ஆலையில் தொழிலாளர்களுக்கு பிரச்சனை என்றால் ஒசூரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களும் திரண்டு வருவார்கள் என்ற அச்சம் முதலாளிகளுக்கு ஏற்பட வேண்டும். இந்த நிலைமை மட்டும் தான் சங்கம் வைக்கும் உரிமை, ஊதிய உயர்வு உள்ளிட்ட உரிமைகளையும் சட்டத்தில் கொண்டுவரப்படாத பிற உரிமைகளையும் வென்றெடுக்கவும் நிலைநாட்டுவதை நோக்கி முன்னேறவும் உதவும். அப்படி ஒரு தொழிலாளர் வர்க்க எழுச்சியை ஒசூரில் கட்டியமைக்க ஓரணியில் திரள்வோம்!
_______________________________________
கருத்தரங்கம்
நிகழ்ச்சி நிரல்
நேரம் : 25–05–2014, மாலை 4.30 மணி
இடம் : செங்குந்தர் கல்யாண மண்டபம்
சீனிவாசா தியேட்டர் எதிரில், ஒசூர்.
தலைமை :
தோழர் பரசுராமன்,
மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு.,
சிறப்புரை :
தோழர் பா. விஜயகுமார்,
மாநில பொருளாளர், பு.ஜ.தொ.மு.
தோழர் சங்கர்,
மாவட்ட செயலாளர்.
தோழர் வேல்முருகன்,
மாவட்ட செயற்குழு.
மற்றும்
உரிமைக்காகப் போராடும் ஆலைத் தொழிலாளர்கள், தொழிற்சங்க தலைவர்களின் அனுபவங்கள்
தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்க்கும் காட்சிப்படங்கள், விடியோ காட்சிகள், காட்சி விளக்கங்கள்
நன்றியுரை:
தோழர் சாந்தக்குமார்,
மாவட்டப் பொருளாளர்.
கம்யூனிசமே வெல்லும்! முதலாளித்துவம் கொல்லும்!
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!
பணிநிரந்தரம், 8 மணிநேரவேலை,
ஊதிய உயர்வு, சங்கமாக சேருதல் உள்ளிட்ட
உரிமைகளுக்காகப் போராடுவோம்!
குடிநீர், பேருந்து, கழிப்பிட வசதி உள்ளிட்ட
உழைக்கும் மக்களின் அடிப்படை
வசதிகளுக்காகப் போராடுவோம்!
உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று
அதிகார அமைப்புகளைக்
கட்டியெழுப்புவோம்!
[நோட்டிஸ், போஸ்டரை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்]
கமாஸ் வெக்ட்ரா கிளைச் சங்கம்
வெக் இண்டியா கிளைச் சங்கம்
கார்போரண்டம் யூனிவர்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம்
ஒருங்கிணைப்பு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி – தரும்புரி – சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784 – ஒசூர்.
மோடி அழுதார் !
சாதாரண மனிதர்கள் உணர்ச்சி வசப்படலாம், வரலாறு படைக்கின்ற அசாதாரணமான ‘மாமனிதர்’கள் உணர்ச்சி வசப்படலாமா?

2002 குஜராத் இனப்படுகொலை. அகமதாபாத் வீட்டின் முன் உயிர்ப்பிச்சை வேண்டி அழுத கண்களும், பற்றிக் கொள்ள பிடிமானமின்றி கூப்பிய கைகளுமாய் தோன்றிய குதுபுதீன் அன்சாரியின் படம் உலகமெங்கும் பிரபலமானது நினைவிருக்கலாம். அந்த கண்ணீரின் துயரம் எத்தகையதொரு அவல நிலையிலிருந்து தோன்றியிருக்கும் என்பது வெறுமனே நினைவில் மட்டும் மீட்டிக் கொண்டு வரும் விசயமா? படம் வேறு பாடம் வேறு.
குதுபுதீன் அன்சாரியின் கையறு நிலை கோரிய கருணை, ஒரு விதத்தில் பார்ப்பனிய அடிமை சமூக அமைப்பில் சிக்கியிருக்கும் அடிமைகள், பிழைத்திருப்பதற்கு செய்ய வேண்டிய அன்றாட நடைமுறை. பசித்திருக்கும் ஏழைகளுக்கு பசி கிளப்பும் பண்ணையார்கள், உப்பரிகை மாளிகையின் முகடுகளில் நின்று காசுகளை வீசும் காட்சிகள் நமது சினிமாக்களில் இன்றும் இடம் பெறுகின்றன.
தருமமும், கருணையும், வள்ளல் குணமும் பண்ணையார்களின் தயவில்தான் இந்தியாவில் விளக்கப்பட்டன. இந்த கருணைக் கடலில் துளி பங்கு வேண்டுமென்றாலும், குதுபுதீன் அன்சாரி போன்று அழுது அரற்றி தொழ வேண்டும். ஏழைகள் எனும் ஏதிலிகளின் போராட்டம் உரிமைக்காக அல்ல, கருணைக்காகவே நடந்தாக வேண்டும். ஆம். அன்சாரியின் கண்ணீரை கண்டு வருந்தியவர்கள் அனைவரும் பண்ணையார்கள் மீது கோபம் கொண்டிருக்க வேண்டியதில்லை. இது உணர்ச்சிகளின் குழப்பம் மட்டுமல்ல, உணர்ச்சிகள் தோற்றுவிக்கும் மனிதாபிமானத்தின் குழப்பமும் கூட.
சக மனிதரின் மீதான அபிமானம் அவர்களிடம் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டிய சுதந்திரம், ஜனநாயகத்தின் அடிப்படையில் உருவாவதில்லை. அது மறுக்கப்படுவதால், அவர்களுக்கு வரும் துயரத்தினை, மறுப்பை ஆதிக்கமாக கொண்டிருக்கும் ஆளும் வர்க்கத்தின் அதிகாரம் சில நேரங்களில் பிழைத்துப் போ என்று மக்களுக்கு அருள் தரும். இதுதான் பார்ப்பனியத்தில் விதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச கருணையின் ‘அறம்’. இந்த ‘அறத்தால்’ பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் மக்களிடம் அறச்சீற்றத்தை எதிர்பார்க்க முடியாது.
எனினும் அன்சாரி ஒரு பாமரன். ஏழை. தனது குடும்பத்தை பராமரிக்க இன்றும் கடின உழைப்பில் ஈடுபடும் மற்ற இந்தியர்களில் அவரும் ஒருவர். அவர் கண்ணீர் விடுவது அசாதாரணச் செயலல்ல. அடிமைகள் வீறு கொண்டு எழுவதை தவிர, அன்றாடம் செத்துப் பிழைப்பதெல்லாம் தவிர்க்கவியலாத விதி என்றே இந்த நாடும் மக்களும் கருதியாக வேண்டும். அதுவே கர்மபலன். கர்மத்தின் காரணங்களை ஆராயாமல் இருத்தலே பலனை சகித்துக் கொள்வதற்கான வழிமுறை.
இந்தியாவில் ஒரு பாமர ஏழையின் வாழ்வில் வீடு, வீதி, பொதுஇடங்கள், பொருளாதார மையங்கள், அரசியல் தளங்கள், பண்பாட்டு பிரதேசங்கள் அனைத்தும் எப்போதும் ஏதோ ஒரு பிரச்சினையை தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றன. அதுவே மதவெறிக் கலவரம் எனும் போதும், அவனே ஒரு இசுலாமியன் எனும் போதும் ஏற்படும் கையறு நிலைக்கு போதிய விளக்கமளிக்கும் மொழிவளம் நம்மிடம் போதுமானதாக இல்லை. சொல்லில் விளக்க முடியாத ஒரு துயரத்தின் உளவியல் அது. அதனால் ‘பாவம்’தான் நம்மிடம் தோன்றும். இது வேறு வழியின்றி தொழிற்படும் ஒரு பாவனையின் சிக்கலும் கூட.
ஆனால் மோடி ஒரு பாமரன் அல்ல. பண்ணையார்களின் மரபில் உதித்த ஒரு நவீன பண்ணையார். அவர் மீது நாம் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளைத் தாண்டி, ‘மோடி ஒரு உறுதியான நபர், கலங்காத ஆளுமை, பாரத மாதாவின் பெருமிதமான புத்திரன்’ என்றே ஊடகங்களும், சங்கபரிவாரங்களும் சான்றளிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் வரலாற்றில் ‘போர்க்குணம்’ கொண்ட மராட்டிய சிவாஜி, சாவர்க்கர், விவேகானந்தர் போன்றோரே, ஸ்வயம் சேவகர்களின் ஆதர்ச (முன்னுதாரணமிக்க) நாயகர்களாக போற்றப்படுகின்றனர். மோடி இதில் கடைசியாக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்.
இந்த ஆதர்ச மாமனிதர்களெல்லாம் அழுதார்களா என்பதை விட அவர்கள் கண்ணீர் விட முடியாத கரும்பாறை உறுதியைக் கொண்டவர்கள் என்றே ஆர்.எஸ்.எஸ் குழுமம் கதை பரப்புகின்றது. இன்னும் கொஞ்சம் வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் அல்லது ரத்து செய்து விட்டு பார்த்தால் புராண ‘வரலாற்றி’லும் இத்தகையோரே கம்பீரமாக அமர்ந்திருக்கின்றனர். கீதை அருளிய கிருஷ்ணனோ, ஷத்திரியர்களை கொஞ்சம் கொல்ல வரம்புடன் வேட்டையாடிய பரசுராமனோ, கதாயுதத்துடன் வேங்கையாக சுற்றிய பீமனோ கூட அழுகை என்றால் என்னவென்றே அறியாத மாமனிதர்கள்தான். ராமன் சீதைக்காக அலைந்து திரிந்த போது சில சொட்டு கண்ணீர் துளிகளை சிந்தியிருந்தாலும் அதற்கு பிராயச்சித்தமாக அவளை உயிரோடு புதைத்துக் கொன்று விட்டான். ஆகவே, இவர்கள் அழுத தருணங்கள் கூட அடக்கிய பெருமிதத்தின் நீட்சியாகவே இருப்பதால், அது வெறுமனே அழுகை மட்டுமல்ல. இது மோடிக்கும் பொருந்தும்.
மகாபாரதமும், ராமாயணமும் எண்ணிறந்த கதைகள், பாத்திரங்கள், சம்பவங்கள், இடைச்செருகல்களுடன் படைக்கப்பட்டாலும் அவற்றின் ஒரு வரி நீதி என்ன? அல்லது அறம்தான் என்ன?
இந்த உலகின் உணர்ச்சிகளையும் அந்த உணர்ச்சிகளை தோற்றுவித்து கட்டுப்படுத்தும் உணர்வுகளும் ஆள்வோரால் மட்டுமே தீர்மானிக்கப்படும். அதை கேள்வியின்றி பின்தொடருவதே ஆளப்படுவோரின் கடமை. இந்தக் கடமையை அனிச்சையாக செரித்துக் கொண்டு நடமாடும் போதுதான் மக்கள் தமது வாழ்க்கையை நடத்திக் கொள்ளும் சலுகையினை ஏதோ கொஞ்சமாவது பெறுகிறார்கள். மீறி கேட்பவர்களுக்கு கதைகளும், நீதிகளும், தண்டனைகளும், வரலாறாய், எச்சரிக்கையாய், அறிவிப்பாய் தெரிவிக்கப்படும். கூத்து முதல் டிஜிட்டல் வரை இன்றும் புராணங்கள் உயிர் வாழ இந்த ஆளும் வர்க்க நீதியே அடிப்படை. அவற்றை கேட்காமலேயே பின்தொடர்வது நமது தெரிவின் பாற்பட்டதல்ல.

எந்த சோப்பை, பற்பசையை வாங்க வேண்டுமென நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள் என்று மனப்பால் குடித்தாலும் உங்கள் மூளையின் சேமிப்பு மடல்களில் அவை யாரோ சிலரால் ஏற்கனவே திணிக்கப்பட்டு உத்தரவிடுகின்றன. புராணங்களின் அறமும் அப்படித்தான், இரண்டறக் கலந்து உங்களது சொந்த தத்துவமாக, வழிகாட்டியாக காட்டிக் கொள்கின்றன. இது சுயசிந்தனை இல்லை என்ற பிரச்சினையின் பாற்பட்டதல்ல. சுயமே யாரால், எப்படி வடிவமைக்கப்படுவது குறித்த பிரச்சினை.
ஆகவே புராணங்கள் முன்வைக்கும் மாமனிதர்கள் ஆளப்படும் மக்களை சாமர்த்தியமாக எப்படி பிடிக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே அவர்களது மாமனித பெரு நடவடிக்கைகள் வியந்தோதப்படுகின்றன. ராமன் காலத்தில் அது ஏகபத்தினி விரதமாக இருக்கலாம். மோடியின் காலத்தில் அது ஏழைகளுக்காக அழுவதாக இருக்கலாம். ஒழுக்கங்களின் பெருவியப்பு சாதனைகள் நேற்று போல இன்றிருக்க தேவையில்லை.
இதையே பார்ப்பனியம் ஸ்ருதி – ஸ்மிருதி என்று வகுத்து வைத்திருக்கிறது. எளிய விளக்கத்தின் படி ஸ்ருதி நிலையானது, அடிப்படை ‘அறங்’களையும், தத்துவங்களையும், எப்போதும் மாற்ற முடியாது, மாற்றக் கூடாது என்பதால் அவை ஸ்ருதி. அந்த ஸ்ருதியின் நடைமுறை சார்ந்த விதிகள், நடவடிக்கைகள் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றது. இது காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும்,
இவற்றுக்கு இன்னும் பல்வேறு விளக்கங்களை பார்ப்பனிய சித்தாந்தவாதிகள் அளிக்கிறார்கள். இறைவன் அருளிய நேரடி குரல் ஸ்ருதி என்றும், ஞானிகளின் நினைவில் கூறப்படுபவை ஸ்மிருதி என்றும் கூறுகிறார்கள். இது குர்ஆனுக்கும், ஹதீசுக்கும் கூட பொருந்தும். இது போக இன்னும் பல விளக்கங்களும் ஒன்றை ஒன்று மறுத்தவாறும் இருக்கின்றன. நாம் இந்த வியாக்கியானங்களுக்கும் சிக்கி விவாதிக்க வேண்டியதில்லை.
ஒரு சமூக பயன்பாட்டில் ஸ்ருதி, ஸ்மிருதியின் பொருள் என்ன? இருப்பவன், இல்லாதவன் என்று, உலகம் உடைமை வர்க்கங்களாய் பிரிக்கப்பட்ட பிறகு அந்த வேறுபாட்டை அரசு, அரசன், படை, தருமம் கொண்டு விதி போல நிலை நிறுத்த வேண்டியிருக்கிறது. இப்படி பிரிந்திருப்பதே நிலையானது என்பதால் அது ஸ்ருதி என்றால், அந்த மாறா நிலையை, மாற்றக் கூடாத நிலையை அமல்படுத்தும் அல்லது ஒடுக்குமுறை மூலம் நிலைநாட்டும் வன்முறையை ஸ்மிருதி என்றும் அழைக்கலாம்.
அந்த வன்முறையின் வடிவங்கள், விளக்கங்கள் நேற்று போல இன்றிருத்தல் தேவையில்லை. அதைத்தான் ஸ்மிருதி, மாறுவது என்கிறார்கள். ஆனால் ஸ்மிருதியின் வடிவங்கள் மாறுமே அன்றி உள்ளடக்கம் மாறாது. அது போல ஸ்ருதியின் உள்ளடக்கம் மாறாதே அன்றி அதன் விளக்கங்கள் காலந்தோறும் மாறலாம். இப்படி இரண்டிலும் மாறும், மாறாது என இரண்டும் சேர்ந்தும் பிரிந்தும் இருக்கின்றன.

இதையே சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் “சாம, தான, பேத, தண்ட” என்று விளக்குகிறார். ஒடுக்குமுறையை நிலைநாட்ட அமைதி வழி, தானம் கொடுத்து வழிக்கு வரவைத்தல், ஒதுக்கி,பிரித்து எச்சரிக்கை விடுத்தல் இறுதியில் தண்டனை, போர் மூலம் செய்தல் – இவையே இந்த நான்கிற்கும் தரப்படும் விளக்கம்.
இன்னும் எளிய முறையில் சொன்னால் அடிக்கிற மாட்டை அடித்தும், பாட்டு கேட்கிற மாட்டை பாடியும் பால் கறத்தல் என்றும் சொல்லலாம். சாம, தான, பேத, தண்ட முறையினை மகாபாரதத்தில் கிருஷணனே பல முறை செய்து பார்த்திருக்கிறான். அளிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை வைத்து ராஜிய பரிபாலன விளையாட்டை இந்த நான்கு ஆயுதங்கள் மூலம் விளையாடுவதில் அவன் கைதேர்ந்தவனாக இருந்திருக்கின்றான். இந்த முறைகளின் பேதங்களை மறந்து வறட்டுத்தனமாக செய்தால் அந்த ஒடுக்குமுறையின் மூலம் ஆளும் அரசன் தேவையின்றி பலவற்றை இழப்பான். அது அரசனுக்கு மட்டுமல்ல அவனைச் சார்ந்து வாழும் ஆளும் வர்க்கத்தின் இழப்பாகவும் மாறுகிறது.
மோடி தான் பிரதமர் பதவி ஏற்புக்காக அழுததும், இனக்கலவரத்தில் இசுலாமிய மக்களின் அழுகையை அலட்சியப்படுத்தியதற்கும், ஊடகங்களுக்கு விளம்பரங்கள் மூலம் கொட்டிக் கொடுத்ததும், வைகோ முதலான தமிழ் விபீடணர்களை பிரித்து ஒதுக்கியதும், சாணக்கியனின் “சாமா, தான, பேத, தண்ட” வழிமுறைகளின் சில பிரயோகங்கள்.
ஆகவே மோடியின் அழுகை இங்கே இந்த விதத்தில் தேவைப்படுகிறது. 2002 இனப்படுகொலையில் குஜராத்தின் முழு முசுலீம் சமூகமுமே அழுது அரற்றிக் கொண்டிருந்த போது மோடியின் கண்கள் இரக்கமற்ற பெருமிதத்தின் ஒளியில் மின்னிக் கொண்டிருந்தன. “ஒரு நாய் அடிபட்டாலும் வருந்துவேன்” என்று இன்று ‘பெருந்தன்மையாக’ சொன்ன மோடி அன்று நரவேட்டையை கட்டளையிட்டு இயக்கினார். கோத்ராவின் எதிர்வினை என்று ‘அடக்கப்படும்’ இந்துமதவெறியின் கோரத்தாண்டவத்தை நியாயப்படுத்தினார்.
இந்தியாவின் பிரதமராக பதவியேற்பேன் எனும் நிலை அவரை உணர்ச்சிவசப்பட வைத்தது போல 2000 முசுலீம் மக்களின் உயிர்ப்பலி மோடியின் இதயத்தை அசைத்தோ, இல்லை தொட்டுவிடக்கூடவோ செய்யவில்லை. சி.ஐ.ஏ.வின் உயர் அதிகாரிகள் தமது அழகான வீடுகளில் அமர்ந்து கொண்டு அலங்காரமான மனைவியையும், துறுதுறுப்பான குழந்தைகளையும் கொஞ்சிக் கொண்டு இருக்கும் போதே, தென்னமெரிக்காவில் போராடும் மக்களை குண்டு வைத்து கொல்லும் கட்டளைகளை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். தன்னில்லத்தில் அன்பே உருவாக வாழ்பவர்கள் தொலைதூரத்தில் இரக்கமே இல்லாமல் ஆடுகிறார்கள் என்பது உண்மையில் ஒரு முரண்பாடல்ல.
இந்த இல்லற அன்பு இவ்வளவு வசதிகளுடன் தொடர வேண்டுமெனில் அங்கே அவ்வளவு இரக்கமின்றி கொலை செய்ய வேண்டும். ஆகவே நாம் கருதுவது போல அவர்கள் கருதிக் கொள்வதில்லை. ஆரியப் பெருமை பேசிய இட்லர் ஏனைய மக்களை காட்டுமிராண்டிகள் என்று கருதவில்லையா? இந்த உலகில் அன்பு, பாசம், காதல் அனைத்தும் இப்படி வர்க்கம் சார்ந்தே வேறு வேறு உணர்ச்சிகளைக் கொண்டிருக்கின்றன. இலக்கியவாதிகள் சொல்வது போல இவற்றுக்கு உலகு தழுவிய அல்லது காலம் கடந்த பொதுமையோ ஒற்றுமையோ இல்லை.
நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில், கடந்த செவ்வாய்க் கிழமை (20.05.2014) பேசிய நரேந்திர மோடி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியது திட்டமிட்ட ஒன்றா இல்லை தற்செயலாக நடந்த ஒன்றா?
இதையே இப்படியும் விளக்கலாம். மன்மோகன் சிங்கை மறுகாலனியாக்கத்தை அமல்படுத்த இலாயக்கற்றவர் என்று வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்த ஆளும் வர்க்கங்கள் அதை திட்டமிட்டே முடிவு செய்தன. அந்த இடத்திற்கு மோடியை கொண்டு வரவும் அவர்கள் திட்டமிட்டே காய் நகர்த்தினார்கள். ஆனாலும் அந்த தகுதியைப் பெற்ற மோடி முதல் முறை முதலமைச்சராய் வந்தது தற்செயலானதுதான். கேசுபாய் பட்டேல் கோஷ்டியை வீழ்த்த அன்று ஒரு கோஷ்டிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பை வரலாறு தற்செயலாகவே மோடிக்கு அளித்தது.
இன்று திட்டமிட்ட முறையில் அவர் பிரதமராக உருவானாலும் அந்த தற்செயல் வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை என்றால் பாரதப் பேரரசின் பேரரசராக சிம்மாசனத்தில் அமரும் வாய்ப்பு அவருக்கு கிட்டியிருக்காது. அந்த தற்செயல் விபத்துதான் இங்கே திட்டமிட்ட முறையில் கொஞ்சம் கண்ணீரை வரவழைத்திருக்கிறது. ஆகவே இது கிளிசரின் கண்ணீராக இருக்கும் என்று புறந்தள்ள முடியாது. பந்தயக் குதிரை போல திட்டமிட்டு வளர்க்கப்படும் ராஜகுமாரர்களை விட தற்செயலாக மாறிய ராஜகுமாரர்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவார்கள். அந்த உணர்ச்சி ஒரு வாய்ப்பற்ற பாமரன் திடீரென்று மாபெரும் பணக்காரனாக அமர்த்தப்பட்டதால் வரும் பெரு மகிழ்ச்சியின் உணர்ச்சி. அதை வெறும் ஆனந்தக் கண்ணீர் என்று பார்ப்பதும் போதுமானதல்ல. பேரானந்தக் கண்ணீர் என்றால் சரியாக இருக்குமோ?
ஜூனியர் புஷ்ஷோடு போட்டியிட்ட அல் கோர் கூட உண்மையில் பந்தயக் குதிரை போல வாஷிங்டன் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட ராஜதந்திரிதான். ஆனால் அவரை விட எந்த அறிவுமற்ற ஒரு மைனர் குஞ்சான புஷ்ஷே போதுமென்று அமெரிக்க மக்களும் முதலாளிகளும் முடிவு செய்தது வரலாறா, விபத்தா? ஏதோ ஒன்று. புஷ்ஷின் காலத்தில்தான் அமெரிக்காவின் 21-ம் நூற்றாண்டுக்கான முக்கியமான ஏகாதிபத்திய நடவடிக்கைகள் அமலுக்கு வந்தன. அதன் விரிபொருளை புரிந்து கொள்ளும் அளவுக்கு புஷ்ஷுக்கு அறிவோ, ஆற்றலோ கிடையாது. ஆப்கானோ இல்லை நைஜிரியாவோ நாடுகளா இல்லை கண்டமா என்று பிரித்தறியும் பொது அறிவு கூட அந்த மாங்கா மடையனுக்கு இல்லை. ஆனாலும் புஷ் ஆப்கான் போருக்கு முன் உரையாற்றிய போது அவரது போர்க்குணத்திற்காக கைத்தட்டல் வாங்காமல் இல்லை. ஒரு முட்டாளே பாசிஸ்டாக வந்தமர்ந்தாலும் அவனை ஒரு வீரன் போன்று சித்தரிக்காமல் ஆளும் வர்க்கம் இருப்பதில்லை. அவர்களது மேடைக்கு ஒரு கழுதை வந்தாலும் அது குதிரைதான்.
ஆர்.எஸ்.எஸ். கையில் சிக்கிய வரலாறும், அது குதிரை என்று போற்றப்பட்டாலும் கழுதை வாயில் சிக்கிய காகிதம்தான். “பீகாரிகளாகிய நீங்கள் உலகத்தையே வென்ற அலெக்சாண்டரை கங்கைக் கரையில் வைத்து முறியடித்த மாவீரர்கள்” என்று பீகார் பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார். பஞ்சாபின் சட்லெஜ் நதிக்கரையோடு வந்தவழியே திரும்பிப் போன அலெக்சாண்டர், எப்போது கங்கைக்கரையில் நம்மோடு சண்டை போட்டான்? என்று ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு வரும் சந்தேகம் கூட மோடிக்கு கிடையாது. பாசிஸ்டுகள் முட்டாளாக மட்டும் இருப்பதில்லை, தாம்தான் அறிவாளிகள் என்றும் நம்புகிறார்கள்.
இந்த நம்பிக்கையும் அவர்களால் சொந்தமாக பெறப்பட்ட ஒன்றல்ல. மோடிக்கு உரை எழுதிய மாபெரும் அறிஞர் கூட்டம் உருவாக்கிய மாயை அது. பாரதத்தில் கிருஷ்ணனுக்குரியதாக கூறப்படும் மதிநுட்பங்கள் கூட உண்மையில் வெண்ணெய் திருடி, கோபியர் சேலையை ஒளித்து வைத்த ஒரிஜினல் கிருஷ்ணனது சாமர்த்தியங்கள் அல்ல. அவை பார்ப்பன சித்தாந்தவாதிகளால் காலந்தோறும் ஏற்றி நுழைக்கப்பட்ட ஒரு கற்பனை. தனது அச்சங்களையும், ஆயுதங்களையும் கொடுத்து கடவுளை உருவாக்கிய ஆதிகால மனிதன் போல, பார்ப்பனர்களும், ஷத்திரியர்களும் தமது அரசாளும் நடவடிக்கைகளின் சரி தவறுகளை பரிசீலித்து அதாவது ஒடுக்குமுறையின் சாமர்த்தியத்தை புனைந்துரைத்து கிருஷ்ணனது பாத்திரத்தை வடிவமைத்தார்கள்.
கண்ணன் இப்படி இருந்தான் என்பதை விட இப்படி இருக்க வேண்டும் என்பதே அவர்களது உள்ளக் கிடக்கை. ஆளும் வர்க்க மேடைகளில் கண்ணன்கள், புஷ்கள் என்று யார் வேண்டுமானாலும் வரலாம், ஆடலாம், பாடலாம். ஆனால் அவர்களை எப்படி வாசிப்பது என்று பார்ப்பனியம் நமக்கு பயிற்றுவிக்கிறது. அதனால்தான் மோடி ஒரு போராளியாக நம்மிடம் பொருத்தமின்றி இருந்தாலும் திணிக்கப்படுகிறார்.
இதை அம்பி ஒருவரின் வாயாலேயே பார்ப்போம்.
இணையத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் அறிஞர் படையாக தங்களைத்தாமே நியமித்திக் கொண்ட செல்ப் ஜெனரல்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை நாம் நாகரீகமாக அறிவடியாட்கள் என்று அழைப்போம். அதில் ஒருவர் ஜடாயு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி பகிர்ந்திருந்தார்.
“ராமனுக்கு அனுமன் போல நரேந்திர மோதிக்கு அமித் ஷா. தருமத்தின் தனிமை தீர்ப்பான் !” என்று நான் முன்பு ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன். ஓரளவு இலக்கியப் பரிச்சயம் உள்ளவர்கள் “தருமத்தின் தனிமை தீர்ப்பான்” என்பது கம்பனின் புகழ்பெற்ற வரி என அறிந்திருக்கலாம். துணையின்றித் தனியாக இருந்த தர்மத்தின் வடிவங்களான இராம லட்சுமணர்களுக்குப் பேருதவியாக அனுமன் வந்து சேர்ந்தான் என்பது அதன் பொருள்.
அந்த ஒருவரிப் பதிவு குறித்து வினவு இணையதளம் இவ்வாறு எழுதியுள்ளது.
// நீதி: பயங்கர புகழ் மோடி, மர்மப் புகழ் அமித் ஷா உடனான கூட்டணி இல்லை என்று தருமம் தனிமையில் கேவிக் கேவி அழுததாம், கருமம், கருமம்! //
வழிந்தோடும் வசையைத் தவிர வேறு எந்த வகை இலக்கியத்தையும் அறியாத புரட்சித் தோழர்களுக்கு உருப்படியாகத் திட்டும் அளவுக்குக் கூட நான் எழுதிய வரி புரியவில்லை என்பதில் எனக்கு ஆச்சரியமும் இல்லை.”
“தருமத்தின் தனிமை தீர்ப்பான்” என்ற கம்பனது புகழ் பெற்ற வரியை, ராமனைப் போன்ற மோடி எனும் தருமகீர்த்தி புத்திரனின் தனிமையை அனுமன் போன்ற அமீத்ஷா உதவி செய்து தீர்ப்பார் என்பதின் இலக்கிய நயம் நமக்கு புரியவில்லையாம். போகட்டும்.
முசாஃபர்நகர் கலவரத்தில் பழி தீர்ப்போம், முசுலீம்களை பாகிஸ்தானுக்கு விரட்டுவோம் என்று பகிரங்கமாக முழங்கிய அமீத் ஷாவையும், அவரது பாஸான மோடியையும் கம்பனது கவிச்சுவையோடு ஒப்பிட்டு பார்ப்பது இவர்களே சொல்லக்கூடிய அளவில், கம்பனை படித்தவர் செய்யக்கூடிய காரியமா?
புரியும்படிச் சொன்னால் ஷகிலா படத்தின் ‘விழுமியங்களை’ சாக்ரடீஸின் தத்துவஞானக் கேள்விகளோடு ஒப்பிட்டு விளக்கினால் படிப்பவருக்கு வாந்தி வருமா, பேதி வருமா? அல்லது அதே கம்பனது கவித்துவத்தை ஒப்பிட்டு விஜயகாந்தும், அர்ஜூனும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பந்தாடுவதை வைத்து ஒரு வெண்பாதான் பாட முடியுமா?
கம்பன் அவனது காலத்தின் படிமங்களை, விழுமியங்களை ஆகச்சாத்தியமான முறையில் அதீத கற்பனை வளத்தோடு சிக்கென்ற வார்த்தைகளோடு பாடினான் என்றாலும் அந்த கவிவித்தை ஆள்வோரின் அறத்தை பற்றி நின்றே அழகு காட்டுகிறது. அதை ரசிப்பது என்பது உங்களது வரலாற்று உணர்வின் தரத்தை பொறுத்தது. அந்த ‘தரம்’ நம்மிடமில்லை. ஒருவேளை அந்த கவித்திறனை ரசித்தே தீருவேன் என்று அடம் பிடிப்போர் அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். நீட்டித்து மோடிக்கும், பாடிக்கும் நீட்டினால் அது கைப்புள்ளயின் கதியைத்தான் வந்தடையும்.
பம்பை நதியின் அழகை வருணிக்க வந்த கம்பன், எளிய சொற்களைக் கொண்டு பெரும் பொருள் ஆழத்தை காட்டும் சான்றோர் போல, பம்பை நதி அதி ஆழத்தில் உள்ள பாதாள உலகத்தை அருகில் காட்டும் தெளிவுடன் ஓடுகிறது என்கிறான். இதை மோடியின் உரையில் பீகாருக்கு அலெக்சாந்தர் படையெடுப்பு உளறலோடு ஒப்பிட்டு எளிமையாக, ஆழமாக பேசும் சான்றோர் போல பேசினார் என்று பாராட்ட முடியுமா?
அப்படித்தான் ஜடாயு உள்ளிட்ட அடியாட்கள் முதல் கார்ப்பரேட் ஊடகங்கள் வரை மோடியின் ஆளுமையை கற்பனைக்கும் எட்டாத உயரத்தில் பறக்க விடுகின்றன. பாரதக் கிருஷ்ணனது யோக்கியதையை நாம் நேரில் பார்க்க வாய்ப்பில்லை என்றாலும் இன்றைய பாரதத்தில் நரேந்திர மோடியின் வார்த்தைகளை வசியம் செய்து மறைக்க முடியாது. மோடியோ, புஷ்ஷோ திணிக்கப்பட்ட பாசிச முட்டாள்கள் என்பதை ஒருவேளை கம்பனே இன்று உயிரோடு இருந்தாலும் தனது கவித்துவ திறனை வைத்து மறைக்க முடியாது. மறைப்பவர்களின் ரசனை என்ன என்பதை ஷகிலா படங்களை பார்த்தும், சாக்ரடீஸை படித்தும் புரிந்து கொள்க.
பாராளுமன்ற அரங்கில் பேசிய மோடி “நாம் ஜனநாயகத்தின் கோயிலில் இருக்கிறோம், புனிதமாக பணியாற்றுவோம்” என்று ஆரம்பித்தார். இந்த கோவிலில் ஹரேன் பாண்டியா, இஷ்ரத் ஜஹான், வன்சாரா போன்றோருக்கு என்ன நடந்தது என்பதறிவோம், முதலிருவர் மோடியின் பெருமை காக்க பலியிடப்பட்டார்கள். பின்னவர் பெருமை காக்கத் தவறியதால் தண்டிக்கப்பட்டார். ஜனநாயகக் கோவிலின் பெருமையும், புனிதமும் இந்த அழுகுணி ஆட்டங்கள் நடத்தித்தான் காப்பாற்றப்படவேண்டும் என்றால் அதை செய்துதான் ஆக வேண்டும்.
இதில் சரி, தவறு, நீதி, அநீதி, ஒழுக்கம், மீறல் என்று பார்க்க முடியாது. அதுதானே கீதை, கிருஷ்ணன்? ராஜிய பரிபாலனங்களை இருமைகளின் விதியால் எளிமைப்படுத்தி பார்க்கக் கூடாது என்பதே பார்ப்பனியத்தின் ராஜதருமம். அதுவும் ஒடுக்குபவனுக்கு அத்தகைய இருமைக் குழப்பம் வரவே கூடாது.
“என் வாழ்நாளில் நான் எப்போதுமே பதவிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. பதவியைவிட என் பார்வையில் பொறுப்புகளே முக்கியத்துவம் வாய்ந்தவை.” – என்றார் மோடி. இது வழக்கமான ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் கூறும் ஒரு உத்தி. அதாவது ஜனநாயகத்தை உரிமையாக கோரினால், ‘இவர்கள் பதவி முக்கியமல்ல, பொறுப்பே முக்கியம்’ என்பார்கள். அப்படி பதவியும், பொறுப்பும், அதிகாரமும் வேறு வேறாக பிரிந்திருக்கிறதா என்ன?
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஸ்வயம் சேவகர்கள் வாக்களித்து தமது தலைவர்களையும், பிரச்சாரகர்களையும் தேர்வு செய்வதில்லை. ஹெட்கேவார் மரணத்திற்கு முன் கோல்வால்கரை நியமித்தார், கோல்வால்கர் சாவதற்கு முன் தேவரசை நியமித்தார். இந்த ஆதீன நடைமுறைதான் இன்றும் சங்க பரிவாரங்களில் தொடர்கிறது. மோடியைப் பொறுத்த வரை இந்த ஆதீன முறையில் பதவிக்கு வந்தாலும் அது ஆர்.எஸ்.எஸ் ஆண்டிகள் மட்டும் முடிவு செய்யவில்லை. ஆளும் வர்க்கமும் சேர்ந்தே முடிவு செய்திருக்கிறது.
ஆளும் வர்க்கம் அளித்திருக்கும் பொறுப்பினை நிறைவேற்றுவதைத் தவிர பதவிகள் முக்கியமல்ல என்றும் நாம் விளங்கிக் கொள்ளலாம். அதனால்தான் மன்மோகன் சிங் விரட்டப்பட்டு மோடி வரவழைக்கப்பட்டிருக்கிறார். நாளை மோடி போய் இன்னொரு கேடியும் வரலாம். அந்த நிலை வரக்கூடாது என்பதால்தான் மோடி தனது வார்த்தைகளில் தினமும் 36 மணிநேரம் உழைப்பேன், ஐந்தாண்டுகளுக்கு அறிக்கை கொடுப்பேன் என்று ஏகப்பட்ட வாக்குறுதிகளை அளிக்கிறார்.
மோடிக்கு பதவி முக்கியமில்லை என்றால் அவர் ஆறுமாதங்களாக நாடு முழுவதும் விமானத்தில் சுற்றி வந்த போது குஜராத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்பை சரியாக ஆற்ற முடியவில்லை அல்லவா? அப்போதே ஒரு புதிய முதலமைச்சரை தெரிவு செய்யாமல் போன காரணம் என்ன? ஒருவேளை பிரதமர் போட்டியில் தோற்றால் குஜராத்தின் ஆதீன பதவி வேண்டும் என்ற பொறுப்புதானே அதை செய்ய விடாமல் தடுத்திருக்கும்.
இன்று கூட ஆனந்தி பென் என்ற 73 வயது ஆபத்தில்லாத பாட்டியை தனது முதலமைச்சர் பதவியில் நியமித்திருக்கிறார் என்றால் மோடியின் பொறுப்புணர்ச்சிக்கு அளவே இல்லை என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். அடுத்த மாநில சட்டமன்ற தேர்தலில் இந்த பாட்டி போய் இன்னொரு பூட்டன் வருவார். பாசிஸ்டுகள் தமது அருகில் இப்படிப்பட்டவர்களைத்தான் வைத்துக் கொள்வார்கள் என்பது மோடிக்கு மட்டுமல்ல நமது லேடிக்கும் பொருந்தும்.
“அரசு என்பது ஏழை மக்களைப் பற்றிச் சிந்திப்பதாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் அவர்களுக்காகவே இயங்க வேண்டும். எனவே, புதிய அரசு ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.” – என்று மோடி பேசிய போது தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அதானியும், அம்பானியும், அமெரிக்க தூதர்களும் கள்ளச் சிரிப்பு சிரித்திருப்பார்கள். தங்களைப் போன்ற ‘ஏழை’களுக்கு மோடி எனும் ஏழைக்காவலன் கிடைத்திருப்பதை வைத்து அந்த முதலாளித்துவ ஏழைகள் நன்றிக்கடனாய் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தால் கூட ஆச்சரியமல்ல.
“அத்வானி அவர்கள் பேசியபோது “இந்த முறை மக்களவைத் தேர்தலின் பொறுப்புகளை ஏற்று பா.ஜ.க-வுக்குக் கருணை செய்திருக்கிறார் மோடி” என்றார். அத்வானிஜி, நீங்கள் மீண்டும் இந்த வார்த்தையை உபயோகிக்காதீர்கள். (மோடியின் குரல் கம்மி, கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பிக்கிறது.)
ஒரு மகன் தனது தாய்க்குச் செய்யும் பணிவிடையை அவருக்குச் செய்யும் கருணை எனக் கூற முடியாது. தாய்க்குப் பணிவிடை செய்யக் கடமைப்பட்டவர் மகன். எனவே, எனது தாயான இந்தக் கட்சிக்கு நான் கருணை செய்ததாகக் கூற முடியாது.”
மோடி குறிப்பாக அழுத இடம் இதுதான். தாதாக்கள் தமது சமூக நடவடிக்கைகளில் எத்தகைய கொடூரங்களைக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கிடையான உறவில் மட்டும் இத்தகைய உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடும். ஏனெனில் தாதாக்கள் எவரும் குட்டி தாதாக்களால் தெரிவு செய்யப்பட்டு பொறுப்பாக்கப்பட்டு வருவதில்லை.அது அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் சாமர்த்தியத்தால் வருவது.
“கர்த்தரே என்னை ஏன் கைவிட்டு விட்டீர்” என்று ஏசுநாதர் கூட சிலுவையில் அறைந்த தருணத்தில் அழுதார். அது, தான் கொண்டிருந்த நன்னெறிகளுக்கு இறுதியில் இதுதான் தீர்வா என்று தளர்வுற்ற நேரம். மோடியோ இசுலாமிய மக்களை சிலுவையில் அறைந்ததால் அரசனானவர். அதனால் சிலுவையில ஆணி அடித்த ஒருவனுக்கு இத்தகைய பெரும் பதவியா என்று அவர் ஒரு கணம் நினைத்திருக்கக் கூடும்.
இங்கே ஏசுநாதர் இறுதியில் வந்தது தற்செயலானது என்பதோடு முடித்துக் கொள்கிறோம்.
நைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் ‘ஜிகாத்’!
கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முன்னிரவு. நைஜீரிய நாட்டின் வடகிழக்கு பிராந்தியமான போர்னோ மாநிலத்திற்கு உட்பட்ட சிபோக் பகுதியினுள் டொயோட்டா ஜீப்புகளில் ஆயுதம் ஏந்திய ஜிஹாதி தீவிரவாதிகள் நுழைகிறார்கள். சிபோக் ஒரு ஒதுக்குப்புறமான கிராமப் பகுதி. அங்கே இருந்த உறைவிடப் பள்ளி ஒன்றில் இறுதித் தேர்வுகளை எழுத நூற்றுக்கணக்கான மாணவிகள் குழுமியிருக்கிறார்கள். பள்ளிக் கட்டிடத்தை சுற்றி வளைக்கும் ‘ஜிகாதி’கள், அங்கே பரீட்சைக்காக கூடியிருந்த மாணவிகளில் சுமார் 300 பேரை துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு நைஜீரியா – காமரூன் எல்லைப் பகுதியை ஒட்டிய சம்பீசிய வனப் பகுதிக்குள் புகுந்து விடுகிறார்கள்.

கடத்தப்பட்ட மாணவிகளில் சுமார் 50 பேர் வரை செல்லும் வழியில் தப்பி விட்டார்கள் என்று செய்திகள் வந்துள்ளன. எனினும், தப்பிய மாணவிகளின் எண்ணிக்கையையோ தீவிரவாதிகள் பிடியிலிருக்கும் மாணவிகளின் எண்ணிக்கையையோ இது வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சுமார் 267 மாணவிகள் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. கடத்தப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை தொடர்பாக மாறுபட்ட செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வந்துள்ளன. சில செய்திகள் 300 என்றும், வேறு சில செய்திகள் 276 என்றும், சில செய்திகள் 267 என்றும் வெவ்வேறு எண்ணிக்கைகள் சொல்லப்படுகின்றது.
மாணவிகள் கடத்தப்பட்ட அதே நாளில் அருகில் இருந்த இன்னொரு நகரத்துக்குள் நுழைந்த தீவிரவாதக் குழுவினர் 300-க்கும் மேற்பட்ட அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். மாணவிகள் கடத்தப்பட்ட சில நாட்களுக்குள் ‘ஜிகாதி’ தீவிரவாத குழுவின் சார்பாக காணொளிக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் அக்குழுவின் தலைவன் அபூபக்கர் ஷெகா, கடத்தப்பட்ட மாணவிகளை அடிமைகளாக விற்க தனக்கு அல்லா கட்டளை இட்டிருப்பதாகவும், அவ்வாறு விற்பதை இஸ்லாம் அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடத்தப்பட்ட மாணவிகளில் கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர்களை கட்டாயமாக இசுலாத்திற்கு மதம் மாற்றியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
சர்வதேச சமூகங்களின் நீலிக் கண்ணீர்
தங்கள் அமைப்பை போகோ ஹராம் என்று அழைத்துக் கொள்ளும் இந்த இயக்கத்தின் பின்னணி குறித்தும் இந்தக் கடத்தல் சம்பவம் குறித்தும் நாம் அறிந்து கொள்ளும் முன் வேறு சில அடிப்படைத் தகவல்களைப் பார்த்து விடுவது நல்லது. அதற்கும் முன், இந்த சம்பவம் சர்வதேச அளவில் எழுப்பியிருக்கும் அதிர்வலைகளின் பரிமாணத்தையும் பார்த்து விடுவோம்.
மாணவிகள் கடத்தப்பட்டு ஒருவாரம் கழித்து நைஜீரியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் ஒபியாகிலி ஆற்றிய உரையில் ”எங்கள் பெண்களைத் திரும்ப கொண்டு வாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதை இப்ராஹிம் அப்துல்லாஹி என்பவர் தனது ட்விட்டர் கணக்கில் தனிச்செய்தியோடைத் தலைப்பாக (ஹேஷ்டேக்) குறிப்பிடுகிறார்(#Bringbackourgirls). அடுத்த சில நாட்களுக்கு இந்த தலைப்பு மில்லியன் முறைகளுக்கும் மேல் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படுகிறது.
மே மாத துவக்கத்தில் மிஷேல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், பிரிட்டன் பிரதமர் ஜேம்ஸ் கேமரூன் போன்ற பிரபலங்கள் இதே தலைப்பில் கீச்சுகள் அனுப்பியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சூடுபிடித்தது. மே 11-ம் தேதி வரை சுமார் 30 லட்சம் பேரால் இந்தச் செய்தியோடைத் தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் நைஜீரிய பெண்களின் நிலைமை குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மேற்கத்திய உலகின் பல்வேறு நகரங்களில் நம்மூர் ‘ஆம் ஆத்மி வகைப்பட்ட’ மெழுகுவர்த்தி ஊர்வலங்களும், கூட்டுப் பிரார்த்தனைகளும் நடக்கத் துவங்கியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் கடத்தப்பட்ட பெண்களை மீட்க எந்த வகையான உதவிகளையும் செய்வதாக உத்திரவாதம் அளித்துள்ளன. நைஜீரியாவுக்கு ’உதவி’ செய்யும் பொருட்டு தனது போர் விமானங்களையும், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளையும் நைஜீரியாவில் இறக்கியிருக்கிறது அமெரிக்கா.
#Bringbackourgirls
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
போகோ ஹராம் : நதிமூலம்
”மேற்கத்திய கல்வி தீங்கானது” என்பதே போகோ ஹராம் என்கிற திருநாமத்தின் பொருள். இந்த அமைப்பின் அதிகாரபூர்வமான பெயர் ‘ஜாமாத்துல் அஹ்லிஸ் சுன்னா லித்தாவதி வல்-ஜிகாத்’ (இறைத் தூதரின் போதனைகளையும் ஜிஹாதையும் முன்னெடுத்துச் செல்லும் கடப்பாடு கொண்டவர்கள்). 1995-ம் ஆண்டு இசுலாமிய இளைஞர்களுக்கான ஷபாப் என்கிற இயக்கம் துவங்கப்படுகிறது. அதன் தலைவராக இருந்த மல்லாம் லாவல் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றதை அடுத்து 2002-ம் ஆண்டு ஷபாப் இயக்கத்தை முகம்மது யூசூப் என்கிற அடிப்படைவாதி கைப்பற்றுகிறார். அதிலிருந்து இந்த அமைப்பு சுன்னி இசுலாத்தின் கடுங்கோட்பாட்டுவாத அடிப்படைகளைக் கொண்ட சலாஃபி (வஹாபி) பிரிவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.
தாலிபான்களைப் போலவே, ‘பெண்கள் படிக்க கூடாது, வெளியிடங்களுக்குச் செல்லக் கூடாது, குரானைத் தவிர்த்து எதையும் கற்க கூடாது’ போன்ற பல ’கூடாதுகளின்’ பட்டியல் ஒன்றை வைத்திருக்கும் போகோ ஹராம், அதை அமுல்படுத்துவதற்குத் தோதாக ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியை நைஜீரியாவில் அமைப்பது ஒன்றே தமது குறிக்கோள் என்று அறிவித்துக் கொண்டது. சில்லறைத் தாக்குதல்களையும், ஆட்கடத்தல்களையும் செய்து வந்த போகோ ஹராமின் மேல் இரண்டாயிரங்களின் இறுதியில் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக 2009-ம் ஆண்டு யூசூப் கொல்லப்படுகிறார்; அதிலிருந்து அமைப்பின் இரண்டாம் இடத்தில் இருந்த அபூபக்கர் ஷெகா தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.

அபூபக்கர் தலைமைக்கு வந்த காலகட்டத்தின் சர்வதேச அரசியல் நிலைமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதற்கு சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பதாக அமெரிக்காவின் வால் வீதியில் துவங்கும் பொருளாதார பெருமந்தம் உலகு தழுவிய அளவுக்கு முதலாளித்துவ கட்டமைப்பு நெருக்கடியாக முற்றி வளர்ந்திருந்தது. அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மண்ணைக் கவ்விக் கொண்டிருந்த சமயம் அது. அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பிய, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ’வண்ணப்புரட்சிகள்’ நடப்பதற்கான சமூக பொருளாதார சூழல் ’கனிந்து’ வந்தது.
தனது சூதாட்டப் பொருளாதாரத்தை மீட்க வேண்டுமென்றால் இது வரை, தான் கால் பதித்திராத பிரதேசங்களில் நுழைந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருந்தது. மூன்றாம் உலக நாடுகளின் உள்விவகாரங்கள் வரை தலையிட்ட அமெரிக்கா, அந்நாடுகளின் பொதுத் துறைகளையும் இயற்கை வளங்களையும் பன்னாட்டு தொழிற்கழகங்களுக்குத் திறந்து விட பல்வேறு வகைகளில் நிர்பந்தித்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் பொருளாதார தர வரிசையை எஸ்&பி குறைத்ததையும் மன்மோகன் சிங்கை கையாலாகாதவர் (under acheiver) என்று டைம் பத்திரிகையில் முகப்புக் கட்டுரை வெளிவந்ததையும் இந்த இடத்தில் நினைவு படுத்திப் பார்த்துக் கொள்ளலாம். இரண்டாயிரங்களின் இறுதியில் அரபு வசந்தத்திற்கான தயாரிப்புகளில் அமெரிக்கா தீவிரமாக இருந்தது.
அதே காலப்பகுதியில் ஆப்பிரிக்க கண்டத்தை முற்று முழுதாக எந்தப் போட்டியுமின்றி கபளீகரம் செய்யும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. போகோ ஹராம் அமெரிக்காவின் கைகளில் இருந்த துருப்புச் சீட்டுகளில் ஒன்று.
முகம்மது யூசூபின் தலைமையில் இருந்த வரை, போகோ ஹராமின் கட்டுப்பாட்டு பிராந்தியம் என்பது ஒரு சில மாவட்டங்களுக்குள் சுருங்கியிருந்தது. அபூபக்கர் ஷெகா தலைமைப் பொறுப்பை ஏற்ற கடந்த ஐந்தாண்டுகளுக்குள் நைஜீரியாவின் சரிபாதி பகுதிகளில் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ள போகோ ஹராமின் வளர்ச்சி திகைப்பூட்டக்கூடியது. போகோ ஹராமின் நிதி வலைப்பின்னலைத் தொடர்ந்து சென்றால் அது இங்கிலாந்தில் உள்ள அல் முண்டாடா என்கிற அறக்கட்டளைக்கும் அமெரிக்காவின் மத்திய கிழக்கு அடியாள் சவூதி அரேபியாவினுள்ளும் அழைத்து செல்கிறது.

லிபியாவில் முவாம்மர் கடாஃபியை எதிர்த்துப் போராடிய கூட்டணியில் பங்கு பெற்றிருந்த இசுலாமிய மக்ரீபிற்கான அல்-குவைதா (Al-qaeda in Islamic Magreb / Magreb stands for North western African continent) என்கிற அமைப்பு அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏவிடமிருந்து சவூதி வழியாக நேரடியாக ஆயுதங்களைப் பெற்றது. பின்னர் லிபியாவில் தனது அமெரிக்க அடிவருடிக் ’கடமையை’ முடித்துக் கொள்ளும் மேற்படி அமைப்பு, தனது கவனத்தை அல்ஜீரியாவை நோக்கித் திருப்புகிறது.
அமெரிக்கா பிச்சையாக அளித்த ஆயுதங்களுடனும், அமெரிக்கா வகுத்துக் கொடுத்த திட்டத்துடனும் அல்ஜீரியாவில் ஷரியா சட்டத்தை அமுல்படுத்தவும், அமெரிக்க ‘ஜிகாத்’தை வழி நடத்தும் இசுலாமிய மக்ரீபிற்கான அல்-குவைதா அமைப்பு தான் போகோ ஹராமின் ஆயுதப் புரவலர். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அவ்வமைப்பின் தலைவர் அபூ மௌஸப் அப்தல் வாதௌத் என்பவர் நைஜீரியாவில் உள்ள கிருத்துவ சிறுபான்மையினரை எதிர்த்துப் போராட போகோ ஹராம் அமைப்பிற்கு தாம் ஆயுதங்களை வழங்கி வருவதாக வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார். 2011-ம் ஆண்டு வரை போகோ ஹராம் அமைப்பை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க அமெரிக்க அரசுத் துறை மறுத்து வந்தது – போதுமான வளர்ச்சியை போகோ ஹராம் அடைய வழங்கப்பட்ட இடைவெளி அது.
ஏனெனில், ஆப்கானிய முஜாஹின்கள், அல்-குவைதா, பின் லாடன் போலவே போகோ ஹராம் என்பதும் அமெரிக்கா பெற்றெடுத்த கள்ளக் குழந்தை தான். நைஜீரியா, நைஜர், மாலி ஆகிய நாடுகளில் போகோ ஹராம் செயல்பட்டு வருகிறது. இதே போன்ற இசுலாமிய கைக்கூலி அமைப்புகளை வேறு பல ஆப்பிரிக்க நாடுகளிலும் உருவாக்கி விட்டுள்ளது அமெரிக்கா.
சோமாலியா மற்றும் கென்யாவில் அல்-ஷபாப்,
அல்ஜீரியா மற்றும் மாலியில் இசுலாமிய மக்ரீபிற்கான அல்-குவைதா,
எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ கூட்டணி
லிபியாவில் இசுலாமிய போராளிகள் கூட்டணி
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் அல்-குவைதா என்கிற குடை அமைப்பின் பல்வேறு கிளைகள் (Franchise). இசுலாமிய சர்வதேசியம் இயங்கும் முறையும் அமெரிக்காவின் மெக்டொனால்ட் சங்கிலித் தொடர் துரித உணவகம் செயல்படும் முறையும் ஏறக்குறைய ஒன்று தான்.
இசுலாமிய சர்வதேசியமும் மெக்டொனால்டு மயமாதலும்
உலகெங்கும் கிளைகளைப் பரப்பியிருக்கும் மெக்டொனால்டு துரித உணவகத்தின் பல்வேறு தின் பண்டங்கள் அந்தந்த கிளைகளில் தயாரிக்கப்படுபவை அல்ல. அங்கே விற்கப்படும் குப்பை உணவுகளின் கச்சாப் பொருட்களான உறைய வைக்கப்பட்ட கோழி இறைச்சி, ஏற்கனவே வெட்டி உறைய வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு போன்ற சமாச்சாரங்கள் மையப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு அதன் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும். கிளைகளை பொறுப்பேற்று நடத்துபவர்கள் பனிப்பெட்டியில் இருந்து கச்சாப் பொருளை எடுத்து அவ்வப்போதைக்கு பொரித்து அந்தந்த நாட்டின் உள்ளூர் சுவை பாரம்பரியத்திற்கு ஏற்ப மசாலாக்களை தடவி விற்பார்கள்.

இன்றைய தேதியில் ‘ஜிகாத்’ மெக்டொனால்டுமயமாகி இருக்கிறது (Mcdonaldization). ஒரு ‘ஜிகாத்’தை துவங்கி நடத்துவதற்கு போதுமான அளவிற்கு சலாபிசம் வஹாபியம் போன்ற சித்தாந்த பயிற்சிகளை சவூதி மதகுருமார்களை வைத்து அமெரிக்காவே அளித்து விடுகிறது. மற்றபடி எந்த நாட்டில் ‘ஜிகாது’ நடக்க உள்ளதோ அந்த நாட்டின் உள்ளூர் விவகாரங்களுக்கு ஏற்ப முழக்கங்களையும் வழங்கி விடுகிறார்கள். ‘ஜிகாது’க்கு பொருத்தமான முழக்கங்களையும் (அது சில வேளைகளில் அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களாக கூட இருக்கிறது) கையில் தயாராக கொடுத்து விடுகிறார்கள்.
போகோ ஹராம் போன்ற ஜிஹாதிகளின் கடமை எளிமையானது. காஃபிர் அமெரிக்காவுக்கும், இசுலாமிய சவூதிக்கும் ஏற்பட்ட கள்ளத் தொடர்பில் பிறந்த அமெரிக்க ’ஜிஹாதின்’ கச்சாப் பொருளின் மேல் உள்ளூர் மசாலாவை (உதாரணம் – விசுவரூபம் எதிர்ப்பு, இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு போன்றவை) தடவி யாவாரத்தை சிறப்பாக நடத்த வேண்டியது தான்.
அமெரிக்காவுக்கு ஆப்பிரிக்காவின் மேல் இவ்வளவு அக்கறை ஏன்? ஏன் சொந்த முறையில் போகோ ஹராம் போன்ற ‘ஜிகாதி’களை வளர்க்க வேண்டும்?
ஆப்பிரிக்காவின் வளம்
ஆப்பிரிக்க கண்டம் அள்ளித் தீராத இயற்கை வளங்களைச் சுமந்து கொண்டிருக்கும் பெரும் நிலப்பரப்பு. சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய காலனியவாதிகளில் நடத்திய மாபெரும் சூறையாடல்களுக்கு ஈடு கொடுத்து இன்னமும் தன்னுள் ஏராளமான கனிம வளங்களைக் கொண்டிருக்கிறது. நைஜீரியா உள்ளிட்ட வடக்கு மற்றும் வட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சமீப காலத்தில் ஏராளமான எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகள் அரசியல் ரீதியில் சுயேச்சையான முடிவுகளை எடுக்கக் கூடிய சுதந்திர நாடுகள் அல்ல. பெரும்பாலும் தமது முந்தைய காலனிய காலத்து எஜமானர்களான ஐரோப்பிய நாடுகளை மறைமுகமாகவோ அமெரிக்காவை நேரடியாகவோ அண்டிப் பிழைக்கும் ஒட்டுண்ணித் தரகு வர்க்கங்களே ஆப்பிரிக்க நாடுகளை ஆட்சி செய்து வருகின்றன. எனினும், நைஜீரியா போன்ற ஓரிரு ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்காவுக்கு திறந்து வைத்த அதே வாயிற் கதவை சீனாவுக்கும் திறந்து விட்டிருக்கின்றன.
நைஜீரியாவுக்கு இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வரும் சீனா, அதன் தொலைத் தொடர்புத் துறையில் ஏராளமான முதலீடுகளைச் செய்து வருகிறது. சமீபத்தில் சுமார் 2,300 கோடி டாலர்கள் மதிப்பில் மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், எண்ணெய் துரப்பணம் மற்றும் புதிய எண்ணெய் வயல்களைக் கவளங்களைக் கண்டறிவதற்கும் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளது.
தனது பொருளாதார சிக்கலில் இருந்து மீளத் துடிக்கும் அமெரிக்காவின் சுரண்டல் வெறியும் அடங்காத எண்ணெய்ப் பசியும் சிறு அளவுக்கு பெயரளவிலான போட்டியைக் கூட விரும்புவதில்லை. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சீனாவை விரட்டுவது, ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் தனது ஐரோப்பிய கூட்டாளிகளின் செயல்பாடுகளை தனது தலைமையில் மறுஒழுங்கமைப்பது என்கிற நோக்கங்களோடு செயல்பட்டு வருகிறது.
ஆப்பிரிக்காம்
இரண்டாயிரங்களின் மத்திய காலப்பகுதி வரை அமெரிக்காவின் மத்திய கிழக்கு இராணுவ கட்டுப்பாட்டு கேந்திரம் மற்றும் ஐரோப்பியாவிற்கான அமெரிக்காவின் இராணுவ கட்டுப்பாட்டு கேந்திரத்தின் பொறுப்பில் ஆப்பிரிக்கா இருந்தது. 2008-ல் ஜார்ஜ் புஷ்ஷின் இறுதி நாட்களில் ஆப்பிரிக்காவுக்கென தனிச்சிறப்பான இராணுவ கட்டுப்பாட்டுக் கேந்திரமாக ஆப்பிரிக்காம் (USAFRICOM – United States African Command) ஏற்படுத்தப்பட்டது.

ஆப்பிரிக்காமின் இராணுவ தளம் சூயஸ் கால்வாயின் முகப்பில் அமைந்திருக்கும் வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபௌட்டியில் அமைந்திருக்கிறது. இசுலாமிய தீவிரவாதத்திலிருந்தும் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்தும் வடகிழக்கு ஆப்பிரிக்க முனைக்கு விடுதலை அளிப்பது (Operation Enduring Freedom – Horn of Africa) என்கிற பெயரில் உள்ளே நுழையவும் கேம்ப் லெமான்னியர் என்ற தற்காலிய இராணுவ தளத்தை ஆப்பிரிக்காமின் நிரந்தரமான இராணுவ தளமாக அமைத்துக் கொள்ளவும் வழி செய்து கொடுத்தது ’ஜிஹாதிகள்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நூறு இராணுவ வீரர்களோடு சோம்பிக் கிடந்த ஜிபௌட்டியின் லெமான்னியர் இராணுவ முகாம், இன்று ‘இசுலாமிய ஜிஹாதின்’ அச்சுறுத்தலைத் தொடர்ந்து பல்லாயிரம் வீரர்களைக் கொண்ட மாபெரும் இராணுவ செயல் கேந்திரமாக குறுகிய காலத்திலேயே வளர்ந்துள்ளதாக அமெரிக்காவின் ‘ஆர்மி டைம்ஸ்’ குறிப்பிடுகிறது.
அமெரிக்க வைஸ் அட்மிரல் ராபர்ட் மில்லர், “ஆப்பிரிக்காவில் இருந்து உலகச் சந்தைக்கு இயற்கை வளங்கள் சுலபமாக சென்று சேர்வதை உறுதி செய்வது தான்” ஆப்பிரிகாமின் கடமை என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறார். அமெரிக்காவின் எண்ணெய் தேவையை உத்திரவாதப்படுத்தும் வகையில் தீவிரவாத எதிர்ப்புப் போரில் ஈடுபடுவதே ஆப்பிரிகாமின் நோக்கம் என்கிறார் அமெரிக்க இராணுவ ஜெனரல் வில்லியம் வார்ட்.
ஆக, எந்த நாட்டிற்குள்ளும் அமெரிக்கா நுழைவதற்குத் தேவையான அடிப்படை முகாந்திரங்களையும் அரசியல் தேவைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் கைக்கூலிகள் தான் ஜிஹாதிகள். ”அமெரிக்காவை வெட்டுவேன், அமெரிக்கர்களைக் குத்துவேன்” என்கிற பாணியில் போகோ ஹராமின் ‘ஜிஹாதி தலைவர்கள்’ வெளியிட்ட சவடால் வீடியோக்கள் எல்லாம் சி.ஐ.ஏ.வின் திரைக்கதை வசனத்தில் உருவானவை தாம். இது போன்ற வீடியோக்களையும் சில சில்லறைத்தனமான தாக்குதல் சம்பவங்களையும் சி.என்.என் போன்ற ஊடகங்களின் மூலம் ஊதிப் பெருக்கிக் காட்டுவதன் மூலம் உருவாவது தான் ‘இசுலாமிய தீவிரவாத பூச்சாண்டி’.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (மே 20-ம் தேதி) இரவு போகோ ஹராம் தீவிரவாதிகள் என்ற சந்தேகிக்கப்படுபவர்கள் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள மூன்று கிராமங்களை தாக்கி 48 பேரை கொன்று குவித்திருக்கும் செய்தி இப்போது மேற்கத்திய ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆப்பரேஷன் நைஜீரியாவுக்கு அமெரிக்க ‘உதவி’
போகோ ஹராமின் மூலம் நைஜீரியாவுக்கான இசுலாமிய தீவிரவாத பூச்சாண்டியை உருவாக்கி முடித்து விட்ட அமெரிக்கா, தனது தலையீட்டுக்கான பொதுக்கருத்தையும் உருவாக்கி முடித்துள்ளது. நைஜீரியாவின் அதிபர் குட்லக் ஜொனாதன் துவக்கத்தில் அமெரிக்க தலையீட்டை ஏற்பதில் சுணக்கம் காட்டுகிறார், உடனடியாக ஜொனாதன் எப்பேர்பட்ட கையாலாகாதவர் என்பதையும் மாணவிகள் கடத்தப்பட்ட அதே சமயத்தில் அவர் கலந்து கொண்ட குடி விருந்தில் அடித்த சரக்கின் விலை என்ன என்பதையெல்லாம் விவரிக்கும் ‘ஆய்வு’ கட்டுரைகள் மேற்கத்திய ஊடகங்களில் பரபரப்பாக கசியத் துவங்கியன.
உடனே ‘விழித்துக்’ கொண்ட ஜொனாதன், அமெரிக்காவின் உதவியைத் தாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கிடப்பதாக அறிவித்து முவாம்மர் கடாபியின் நிலை தனக்கு ஏற்படுவதைத் தற்காலிகமாக தவிர்த்துக் கொண்டார். அமெரிக்கா தற்போது மாணவிகளைத் ‘தேடி’ வருகிறது. விரைவில் இசுலாமிய பூச்சாண்டியை ஒழித்து அமெரிக்காவின் நிரந்தர இராணுவதளம் ஒன்றின் நிழலில் ‘ஜனநாயகத்தின்’ மகாத்மியம் நைஜீரியாவில் நிலைநாட்டப்படக் கூடும். மாலி, சூடான், சோமாலியா, அல்ஜீரியா, சாட், நைஜர் உள்ளிட்ட பிற வடக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ’ஜிகாத்’ உக்கிரமாக நடந்து வருகிறது – டாம்ஹாக் எரிகணைகள் ’ஜனநாயகத்தின்’ நற்செய்தியை ஓசையோடு அறிவிக்கும் ஆசையோடு லெமான்னியர் முகாமில் காத்துக்கிடக்கின்றன.
ஆனால், அப்பாவி ஆப்பிரிக்கர்களோ ‘ஜிகாத்’தையும் அதன் அப்பனான அமெரிக்காவையும் வீழ்த்தவல்ல வர்க்கப் போராட்டம் ஒன்றுக்காக நீண்ட காலமாக காத்துக் கிடக்கின்றனர்.
– தமிழரசன்