நீட் முறைகேடுகள்: அதிர்ச்சியளிக்கும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி
தோழர் தீரன், தோழர் மதி
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

நீட் முறைகேடுகள்: அதிர்ச்சியளிக்கும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி
தோழர் தீரன், தோழர் மதி
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
புதிய ஜனநாயகம் ஜூலை 2024 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தென்கொரிய சாம்சங் நிறுவனத்தில் ஜூலை 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது சாம்சங் மின்னணு தொழில் தேசியத் தொழிற்சங்க (Samsung electronics national union) தலைமை.
உலகின் தென்கிழக்கு மூலையிலிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு, உலகின் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களையும் கதிகலங்க செய்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
இதுவரை பேச்சுவார்த்தை நடத்த சாம்சங் நிறுவாகம் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், போராடும் தொழிலாளர்கள் “எங்களது மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜூலை 10 முதல் காலவரையற்றப் போராட்டமாக அறிவித்திருக்கிறோம் என்று தொழிற்சங்க தலைமை தங்கள் இணையத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
***
உலகில் குறைக்கடத்தி உற்பத்தியிலும் நினைவகச்சில்லு (MemoryCards) தயாரிப்பிலும் தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது அனைவரும் அறிந்ததே. A.I(செயற்கை நுண்ணறிவு) தொழில் நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன்கள் செயல்முறைக்கு வந்திருக்கும் நிலையில் புதிய நினைவகச்சில்லுகளின் சந்தை பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. இந்த நிலைமையை பயன்படுத்தி நடப்பு ஆண்டு, இரண்டாவது காலாண்டில் தங்களது இலாபம் சென்ற ஆண்டைவிட பல மடங்காக உயரும் என்று கணக்குப்போட்டு வைத்திருந்த நிர்வாகத்தின் பேராசையில் மண் விழுந்துள்ளது.
படிக்க : கும்மிடிப்பூண்டி ராஜ்குமார் இறப்பு: இது தற்கொலையல்ல, அரசின் கொலை
நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகள் 2024, ஜனவரி மாதத்தில் இருந்தே தொடர்ந்து நடந்து வருகிறது. நிர்வாகம் முன்வைத்த 5.1 சதவிகித ஊதிய உயர்வை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. மாறாக, 5.6 சதவிகிதம் என்ற ஊதிய உயர்வையும் வெளிப்படையான செயல் திறனை அடிப்படையாகக் கொண்ட போனஸ் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்; அடுத்து ஆண்டுக்கு ஒரு நாள் கூடுதல் விடுப்பு வழங்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை முன் தள்ளியது சங்கத் தலைமை.
சாம்சங் நிறுவனத்தில் மின்னணு உற்பத்தி தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பல்வேறு உற்பத்தி பிரிவுகளிலிருந்தும் 30 ஆயிரம் பேர் இந்த புதிய தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்கள். இது சாம்சங் நிறுவனத்தின் மொத்தத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதத்துக்கும் அதிகமாகும்.
ஜூன் 7-ஆம் தேதி, ஒரு நாள் அடையாள மொத்த விடுப்பு (Mass Leave) போராட்டமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், திட்டமிட்டவாறு ஒரு மாதம் கழித்து ஜூலை 8,9,10 ஆகிய மூன்று நாள் வேலை நிறுத்தப்போராட்டமாக அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்தேறியது. கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் வேலை நிறுத்தம் காலவரையற்றதாக மாற்றப்படும் என்று முன்பே எச்சரிக்கையும் விடுத்திருந்தது தொழிற்சங்க தலைமை.
நினைவகச் சில்லு உற்பத்தி பிரிவிலிருந்து மட்டும் 6000-க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், அசெம்பிளி லைனில் உள்ள தொழிலாளர்களும் அடங்குவர். 3000-க்கும் மேற்பட்டோர் தலைமையகத்தின் முன்னால் நடத்தப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மூன்றாம் நாளான ஜூலை 10 அன்றும் நிர்வாகம் அசைந்து கொடுக்காத நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமாக அறிவித்துள்ளது தொழிற்சங்க தலைமை.
இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் முடிவில் சாம்சங் நிர்வாகம் இந்த வேலை நிறுத்தம் உற்பத்தியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் ஆயினும் நிர்வாகம் பேச்சுவார்த்தையில் எப்போதும் நல்ல நம்பிக்கை வைத்துள்ளது என்று பொதுவான முறையில் கருத்து வெளியிட்டிருந்தது.
உண்மையில், உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் போராட்டம் தொடர்ந்தால் நிறுவனம் மேலும் மேலும் பெரும் நட்டங்களை சந்திக்கும் என்றும் நடந்து முடிந்த போராட்டத்தில் வேலை தடைபட்ட இயந்திர அமைப்புகளை பழைய நிலைமைக்கு சரி செய்யவே நீண்ட நாட்கள் பிடிக்கும் என்றும் நிர்வாகத்தின் கருத்துக்களை மறுத்திருக்கிறது சங்கத் தலைமை.
தொழிலுற்பத்தியில் நிலவும் களச்சூழ்நிலையும் தொழிலாளர்களின் வாழ்நிலையும்தான் வேலை நிறுத்தப்போராட்டம் வெடிக்க காரணம். நிலைமைகளை சரி செய்ய வேண்டிய இடத்தில் இருப்பது நிர்வாகம் மட்டுமே.
ஆனால், நிர்வாகம் நிலைமைகளை சீர் செய்ய அக்கறை செலுத்தவில்லை. பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, போராட்டத்தை நீர்த்துப்போக செய்வதற்கு நைச்சியமாகவும் இரகசியமாகவும் எல்லா வேலைகளையும் செய்து வருகிறது. எனவேதான், நாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கிறோம். நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனத்திற்காக அவர்கள் நிச்சயம் வருந்த நேரிடும் என்கிறது தொழிற்சங்கத்தின் இணைய அறிக்கை.
படிக்க : பிரிட்டன் தேர்தல்: தொழிலாளர் கட்சியின் வெற்றியில் கொண்டாட ஏதுமில்லை
“தொழிலாளர்களின் உறுதிதான் எமது போராட்டத்தை வெற்றியடையச் செய்யும்; தொழிலாளர்களின் சிறந்த எதிர்க்காலத்திற்காகவே எமது போராட்டம் என்பதை உணர்ந்து ஊசலாட்டத்தில் இருக்கின்ற மற்ற தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும்; தொழிலாளர் வேலை நிறுத்தம் நிர்வாகத்தை இறுதியில் மண்டியிடச் செய்யும்; அவர்களுக்கு வேறுவழி இருக்காது” என்று தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது சங்கத் தலைமை.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஊடாகவே “சாம்சங் மின்னணு தொழில் உற்பத்தி தேசிய தொழிற்சங்கத்தின்” உறுப்பினர் எண்ணிக்கை 28,000 லிருந்து 31,000 ஆக அதிகரித்திருக்கிறது என்பதை CNN செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சாம்சங் தொழிலாளர்களும் அவர்களது புதிய தொழிற்சங்கமும் இந்தப் போராட்டத்தில் நிர்வாகத்தை பணிய செய்யப்போவது நிச்சயம். அவர்களது கோரிக்கைகளை வெல்லப் போவதும் நிச்சயம்.
ஆதி
10/07/2024
புதிய ஜனநாயகத்தின் ஜூலை 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்: போலீசு ராஜ்ஜியம் | வழக்கறிஞர் தோழர் கதிர்வேல்
புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்: தடுத்து நிறுத்த வேண்டும் | வழக்கறிஞர் முத்து அமுதநாதன்
காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா உச்சப்பட்டி கிராமத்துக்குச் செல்லும் சேவை சாலையை கப்பலூர் சுங்கச் சாலை நிர்வாகம் அடைக்க முயன்றது. ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக பின் வாங்கியது டோல்கேட் நிர்வாகம்.
திருமங்கலத்தில் இருந்து கப்பலூர் டோல்கேட்டுக்கு செல்லும் பாதையில் உச்சப்பட்டி தர்மத்துப்பட்டி கிராமத்தின் பாதை இணைப்பு பாதையாக நான்கு வழிச் சாலையில் இணைகிறது.
அந்த இரண்டு கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் “சுங்கச்சாவடி கட்டணத்தை தவிர்க்க இந்த கிராம பாதையை பயன்படுத்துகிறார்கள்” என்று கூறி அந்த பாதையை டோல்கேட் நிர்வாகம் அடாவடியாக அடைக்க முயன்றுள்ளது.
ஏற்கெனவே இந்த நான்கு வழிச் சாலை வந்த பின்பு பல்வேறு குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்கள், நீர்த்தேக்க மற்றும் பாசனப்பகுதிகள்,போக்குவரத்து பகுதிகள், மற்றும் கிராமப்புறங்களில் இருந்து திருமங்கலம் நகருக்கு வரக்கூடிய பல்வேறு இணைப்பு குறுக்கு சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு வரம்புக்கு உட்பட்ட அளவில்தான் கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.
படிக்க: தொடரும் கப்பலூர் டோல்கேட்-இன் அடாவடித்தனம்! | தோழர் நாகராஜ்
நகர்ப் பகுதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில்தான் டோல்கேட் அமைக்க வேண்டும். ஆனால், இந்த டோல்கேட் சட்ட விரோதமாக திருமங்கலம் நகர்ப் பகுதியில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்ததும் இந்த சுங்கச்சாவடி அகற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் இந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக டோல்கேட் எதிர்ப்பு குழு என்ற ஒன்றை உருவாக்கி திருமங்கலம் வியாபாரிகள், அனைத்து வாகன ஓட்டிகள் சங்கம் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புறக்கணிப்பு செய்வதாகவும் அறிவித்திருந்தனர்.
நீண்ட காலமாகப் போராடிக் கொண்டிருந்த போதும், தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தபோதும் அதைப் பற்றி எல்லாம் டோல்கேட் நிர்வாகம் துளியும் பொருட்படுத்தவில்லை.
மேலும் மேலும் மக்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் இறங்குவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு எதிராக பல்வேறு மோதல் போக்குகள், சச்சரவுகள் தினந்தோறும் நடந்த வண்ணமே உள்ளன.
படிக்க: சுங்கச்சாவடி நிர்வாகிகளை பணிய வைத்த திருமங்கலம் நகர மக்கள்
தென்னிந்திய அளவில் இருக்கக் கூடிய டோல்கேட் நிர்வாகத்தில் திருமங்கலம் டோல்கேட் தான் ஒரு அடாவடியான டோல்கேட் என்ற அளவுக்கு மிகவும் மோசமாக குண்டர்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டுவது என்ற செயலை தொடர்ந்து செய்து வருகிறது. பொது மக்களும் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த கிராம சாலையைப் பயன்படுத்தி கட்டணமின்றி வாகனங்கள் சொல்கிறது என்று ஆத்திரத்தில் கிராமத்துக்கு செல்லும் பாதையே மூடும் அளவுக்கு ஆடாவடியாக டோல்கேட் நிர்வாகம் சென்றுள்ளது.
அதற்காக நெடுஞ்சாலை ஆணையத்திடம் “இந்த பகுதியில் விபத்துகள் அதிகமாக நடப்பதால் தடுப்பு அறன் அமைக்க வேண்டும்” என்று அனுமதி வாங்கிக்கொண்டு, மோசடியாக அந்த கிராம பாதைகளை அடைக்க முயற்சிகளை எடுத்துள்ளது டோல்கேட் நிர்வாகம்.
இதை அறிந்து கொண்ட உச்சப்பட்டி, தர்மத்துப்பட்டி, கப்பலூர் பொதுமக்கள் உடனடியாக நூற்றுக்கணக்கான பேர் திரண்டு டோல்கேட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
உடனே போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீசார் டோல்கேட் நிர்வாகத்தின் சார்பாக “அனுமதி வாங்கி தான் இதை செய்கிறார்கள். சட்டப்படி இதை தடுக்க முடியாது. அனைவரும் கலைந்து செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் இறங்கினர். மக்கள் போராட்டத்தைக் கண்டு பின்வாங்கிய டோல்கேட் நிர்வாகம் தற்காலிகமாக இந்த பணியை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
டோல்கேட் நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்களை அளித்தும் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வருகின்றனர். இந்நிலையில், உச்சப்பட்டி, தர்மத்துப்பட்டி மக்களின் தற்போதைய போராட்டம் டோல்கேட் நிறுவனம் தற்காலிகமாக தனது நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் அளவுக்கு பணியவைத்துள்ளது.
சட்ட விரோதமாக இயங்கி வரும் இந்த டோல்கேட்டை திருமங்கலம் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தாமல் மக்களுக்கு நிம்மதி ஏற்படாது. ஆகையால் இந்த டோல்கேட்டை அகற்ற விரிந்த அளவில் ஒரு மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்த வேண்டிய தேவை உள்ளது.
![]()
களச்செய்தியாளர்,
மதுரை
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தமிழகத்தில் அதிகரித்துவரும் சாதிவெறி கொலைகள்! | தோழர் யுவராஜ்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

டோல் கேட்டை கைப்பற்றிய விவசாயிகள்
விவசாயிகளின் போர் குணத்தை வரித்துக்கொள்வோம்! | தோழர் ரவி
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்கினால் என்ன நடக்கும்? | தோழர் ரவி
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube


பாசிச மோடி அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான
வழக்கறிஞர் போராட்டம் வெல்லட்டும்!
வழக்கறிஞர் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும்!
ஆதரவளிக்கும்!
01.07.2024
பத்திரிகை செய்தி
இன்று முதல் பாசிச மோடி அரசால் புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. நாட்டை இந்துராஷ்டிரமாக்குவதற்கு ஏற்றபடி தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள், பாசிச மோடி அரசுக்கு எதிராக செயல்படுபவரை ஒழித்துக் கட்டவும் அடிப்படை உரிமைகளைக்கூட இனி யாரும் பேச முடியாது என்ற நிலைக்குத் தள்ளவும் செய்கின்றன.
இதற்கு முன்பு சட்டங்களில் இருந்த இந்தியா என்ற பெயர், தற்போதைய புதிய சட்டங்கள் மூன்றிலும் பாரதிய என்ற மாற்றப்பட்டிருக்கிறது.
ஒரு நாட்டின் பெயரையே யாருக்கும் தெரியாமல் மாற்றி இருக்கிறது பாசிச மோடி அரசு.
ஒரு குற்றவாளியை கைவிலங்கிட்டு அழைத்து வருவது தவறு என்று சொல்கிறது பழைய சட்டம். புதிய சட்டமோ கை விலங்கிட்டு அழைத்து வருவது தவறல்ல என்று விளக்கம் கொடுக்கிறது.
கணவனாக இருந்தாலும் மனைவியின் அனுமதி இன்றி உறவு கொள்வது தவறு என்றும் அது தண்டனைக்குரிய குற்றம் என்றும் உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள நீதிமன்றங்கள் தெரிவித்து இருக்கின்றன. இந்திய நீதிமன்றங்களும் இக்கருத்தை தெரிவித்திருந்த நிலையில் தான், மனைவியின் அனுமதியின்றி உடலுறவு கொள்வது “ரேப்” என்ற குற்றமாகாது என்று விதிவிலக்கு செய்திருக்கிறது புதிய சட்ட திருத்தம்.
மாநில அரசு முடிவு செய்தால், ஒரு மாவட்டக் கண்காணிப்பாளரையே சிறப்பு நிர்வாக நடுவராக நியமிக்க முடியும். இதன்படி போலீசால் பாதிக்கப்படும் எந்த ஒரு நபருக்கும் போலீஸ் உயரதிகாரியே நீதி வழங்குவார் என்று நம்பச் சொல்கிறது.
படிக்க: “உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – உழைக்கும் மக்களே! வழக்குரைஞர் போராட்டத்திற்கு துணைநிற்போம்!
இந்த மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு வெளிநாட்டு வழக்குரைஞர்களை இந்திய நீதிமன்றங்களில் வாதாடுவதற்கு உரிமை பெற்றுக் கொடுத்த இந்த பார் கவுன்சில், உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர்களை மறைமுகமாக மிரட்டுகிறது.
ஏற்கெனவே குற்றவியல் சட்டங்களில் இருந்த காலனிய ஆதிக்க பிரிவுகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வழக்குரைஞர்கள் போராடி வந்த நிலையில் இப்போது பாசிச மோடி அரசு அதைவிட மிகக் கொடூரமான மூன்று சட்டங்களை இயற்றியுள்ளது.
இந்த மூன்று புதிய சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர் போராட்டங்களை மக்கள் அதிகாரம் ஆதரிப்பதுடன் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டங்களிலும் மக்கள் அதிகாரம் கலந்து கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
பாசிச மோடி அரசின் புதிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

கெஜ்ரிவாலை வெளியிலேயே வரவிடாமல் முடக்குறாங்க! | தோழர் ரவி
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மணிப்பூர்: மோடி அரசே அமைதியை நிலைநாட்டு!
கிளர்ந்தெழும் குக்கி – சோ பழங்குடியின மக்கள்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

திருமாவளவன் பேசும்போது மைக் ஆஃப்!
இனியும் நாடாளுமன்றத்தை நம்புவதா? |தோழர் ரவி
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மாஞ்சோலை தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
| தோழர் வெற்றிவேல் செழியன்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயப் படுகொலைகள்!
கொத்துக் கொத்தாக மக்கள் செத்து மடியும் அவலம்!
21-06-2024 மாலை 5 மணி வரை சாவின் எண்ணிக்கை 51.
இன்னும் மருத்துவமனையில் 170 பேருக்கு மேல்
உயிருக்குப் போராடி வருகிற அவலம்!
இறப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டும் என்ற அச்சம் பகுதியில் நிலவுகிறது! இவற்றை மூடி மறைக்கவே அரசும் ஆட்சியாளர்களும் செயல்பட்டு வருகிறனர்!
உண்மை அறியும் குழு உறுப்பினர்கள்:
1) தோழர் முருகானந்தம், கடலூர் மண்டல செயலாளர், மக்கள் அதிகாரம்.
2) வழக்கறிஞர் ராம்குமார், சென்னை உயர்நீதிமன்றம்.
3) வழக்கறிஞர் உத்தரவேல், கடலூர்.
4) வழக்கறிஞர் முஜுபூர் ரஹ்மான், கடலூர்.
5) தோழர் சரவணன், வி.சி.க., கடலூர்.
6) தோழர் ராஜசங்கர், இ.க.க. (மா-லெ ), விடுதலை, விருதாச்சலம்.
7) தோழர் பஞ்சாட்சரம், மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்.
8) தோழர் விநாயகம், மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்.
மேற்கண்ட எட்டு பேர் அடங்கிய உண்மை அறியும் குழு அமைத்து 21/06/2024 காலை கள்ளக்குறிச்சிக்குச் சென்றோம்.

கண்டறிந்தவை:
கள்ளச்சாராயம் விற்ற வீடு, கருணாபுரம் பகுதியில் கள்ளக்குறிச்சி நீதிமன்றம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ளது; 100 மீட்டர் இடைவெளி கூட கிடையாது. வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் தான் போலீசு நிலையம் கூட உள்ளது. சாராயம் வாங்கிக் கொண்டு முதன்மை சாலைக்கு வரும் வழியில் தான் இந்தப் போலீசு நிலையம் உள்ளது.
இந்த கருணாபுரம் பகுதியோ பேருந்து நிலையம் அருகில் தான் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் அன்றாடம் உழைக்கும் தலித் மக்கள். பெரும்பாலும் நிரந்தர வேலை ஏதுமற்ற அன்றாடம் காய்ச்சிகளாகத் தான் வாழ்கின்றனர்.
டாஸ்மாக் சரக்கு ஒரு குவாட்டர் விலை 150 முதல் 200 வரை விற்பனை ஆகிறது. முதலில் இந்த டாஸ்மாக் சரக்குக்கு அடிமையானவர்கள், தொடர்ந்து கூடுதலாக விலை கொடுத்து வாங்கி குடிக்க முடியாமல் போகிறது. எனவே விலை குறைவாகவும் கூடுதலான போதையும் கிடைக்கும் கள்ளச்சாராயச் சரக்கை நாடி ஓடுகின்றனர். இதன் விலை ரூபாய் 60 தான்.
இந்த கருணாபுரத்தில் கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவன் 20 முதல் 25 வருடங்களாக தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருகிறான். ஒரு பாக்கெட்டின் விலையான அறுபது ரூபாயில் எம்.எல்.ஏ.வுக்கு 20 ரூபாய் கமிஷன் ஆகவும், வருவாய்த்துறையைச் சேர்ந்த தலையாரி முதல் தாசில்தார் வரை ஒரு கமிஷன் என்றும், உள்ளூர் போலீஸ் முதல் உளவுத்துறை போலீஸ் வரை அவர்களுக்கும் ஒரு கமிஷன், வார்டு மெம்பர் முதல் அரசியல்வாதிகள் வரை கமிஷன் என அனைவருக்கும் லஞ்சம் கொடுத்து வீடு, பேருந்து நிலையம், ஆற்றங்கரை என மூன்று இடங்களில் கள்ளச் சாராயம் விற்று வந்துள்ளார்.
விழுப்புரம் சாராய சாவுக்குப் பின் தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்றவர்களை கைது செய்த போதும் இந்த கன்னுக்குட்டி என்பவர் கைது செய்யப்படவில்லை. அந்த அளவுக்கு அரசியல், அதிகார வட்டாரப் பகுதியில் செல்வாக்கு மிகுந்தவராக உலா வந்துள்ளான். பகுதியில் மக்கள் மத்தியில் இவனுக்கு செல்வாக்கு உள்ளது. அப்பகுதியில் கந்துவட்டி கொடுமையிலிருந்து பாதிப்புக்குள்ளனவர்களைப் பாதுகாத்து உள்ளான். பணம் நெருக்கடி உள்ளவர்களுக்கு கடன் கொடுத்து உதவியுள்ளான். அனைவரிடமும் மரியாதை கொடுத்துப் பழகி வந்துள்ளான். சுருக்கமாகச் சொன்னால் மக்களின் நல்லது கெட்டதுகளில் பங்கெடுத்து வந்துள்ளான்.
மேற்கண்ட காரணங்களால் பகுதியில் இவனைத் தங்களில் ஒருவராகப் பார்த்து வந்துள்ளனர். இதையும் மீறி, பகுதியில் வசிக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேர் போலீசு நிலையத்தில் வெவ்வேறு காலங்களில் தனித்தனியே புகார் கொடுத்துள்ளனர். போலீசோ மனு மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் விசுவாசமாக கள்ளச் சாராய ரவுடி கன்னுக்குட்டியிடம் ஒப்படைத்து விட, அவனோ புகார் அளித்த நபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி வைத்துள்ளான். அதன் பின் பெரும்பாலும் யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை.
நாங்கள் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது இவ்வளவு பேருடைய இறப்புக்கு காரணமான இவன் மீது கோபமோ வெறுப்போ யாரிடமும் காண முடியவில்லை. மக்கள் கையறு நிலைக்குத தள்ளப்பட்டுள்ளனர். அரசின் நிவாரண உதவி, உத்தரவாதமான ஒரு வேலை என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இறந்து போனவர்களைத் தவிர உயிருக்கு போராடிவரும் பலருக்கும் கண் தெரியாமல் காது கேட்காமலும் மூளை சாவடைந்தும் உள்ளனர். இந்த விவகாரத்தை தெரிந்து கொள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு எங்களை அனுமதிக்கவில்லை. போலீசுத்துறை உயர் அதிகாரியிடம் பேசிய போது அவர்கள் பதில் அளிக்கவில்லை. எனவே இதன் முழு விவரத்தை எங்களால் வெளியில் கொண்டு வர இயலவில்லை. எங்களது வேலையை முழுமையாக செய்து முடிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பரிந்துரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
