Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 87

உயர் நீதிமன்றத்தில் தமிழ்! | வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | காணொளிகள் | நாள் 3

உயர் நீதிமன்றத்தில் தமிழ்! | வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் |
காணொளிகள் | நாள் 3

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | ஆவடி நாகராசன்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | தோழர் புவன்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் செஞ்சுடர்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | தோழர் துணைவேந்தன்

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 6

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 24 வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இணைப்பு 1:

இணைப்பு 2:

இணைப்பு 3:

இணைப்பு 4:

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு. தொடர் 6 ஆம் நாள் பட்டினி போராட்டத்தில் தோழர் மருது அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படும் காட்சி.

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube


 

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 5

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 24-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

இணைப்பு 1:

இணைப்பு 2:

இணைப்பு 3:

இணைப்பு 4:

இணைப்பு 5 :

இணைப்பு 6:

இணைப்பு 7:

இணைப்பு 8:

இணைப்பு 9:

இணைப்பு 10:

இணைப்பு 11:

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு.தொடர் 5ஆம் நாள் பட்டினி போராட்டத்தில் தோழர் மருது அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படும் காட்சி.

காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube


 

புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் மார்ச் 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – மக்களுக்கான களம் போராட்டமே!
  • டெல்லி சலோ 2.0: பாசிசத்தை வீழ்த்தும் பாதை!
  • கல்வித்துறைய விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்மயம்! தீர்வு என்ன?
  • பு.ஜ.உடன் ஓர் உரையாடல்…
  • உத்தராகண்ட் பொது சிவில் சட்டம்: இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிஸ்டுகள்!
  • ஒளிபரப்பு சேவை(ஒழுங்குமுறை) மசோதா 2023: கருத்து சுதந்திரத்திற்கு கட்டப்படும் கல்லறை!
  • மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் நூல் வெளியீடு மற்றும் மாநில கலந்தாய்வரங்கம் – புமாஇமு
  • உத்தராகண்ட் கலவரம்: இஸ்லாமிய மக்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வேதாந்தாவின் மனு தள்ளுபடி – ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற கோரும் தூத்துக்குடி மக்கள்!

வேதாந்தாவின் மனு தள்ளுபடி
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற கோரும் தூத்துக்குடி மக்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 4

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்!
வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 4

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 24-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

இணைப்பு 1:

இணைப்பு 2:

இணைப்பு: 3

இணைப்பு 4:

இணைப்பு 5:

இணைப்பு : 6

இணைப்பு : 7

இணைப்பு 8 :

இணைப்பு 9 :

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



“உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – உழைக்கும் மக்களே! வழக்குரைஞர் போராட்டத்திற்கு துணைநிற்போம்!

02.03.2024

“உயர்நீதிமன்றத்தில் தமிழ்” வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம்!

உழைக்கும் மக்களே! வழக்குரைஞர் போராட்டத்திற்கு துணைநிற்போம்!

மோடியே, உலகம் முழுவதும் தமிழைப் புகழ்ந்து பேசும் நாடகத்தை நிறுத்து!
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு என்று முழங்குவோம்!

பத்திரிகைச் செய்தி

“தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு!” என்ற கோரிக்கையை முன் வைத்து தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வழக்குரைஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என 24 பேர் தொடங்கியுள்ளனர். இது நீண்டப் போராட்டம். நான்காவது நாளாக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இந்த போராட்டம் சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரட்டத்தை ஆதரித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம்.

இப்போராட்டத்தில் வழக்குரைஞர் பகவத்சிங், மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் வழக்குரைஞர் மருது, வழக்குரைஞர் புளியந்தோப்பு மோகன், 91 வயது, 73 வயது முதியவர்கள், பெண்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டு 24 பேர் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கோயில் கருவறையிலும் தமிழ் மறுக்கப்படுகிறது, நீதிமன்றத்திலும் தமிழ் மறுக்கப்படுகிறது.

படிக்க : வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டத்தை ஆதரிக்கும் மதுரை வழக்கறிஞர்கள்

தனது இந்துராஷ்டிர கனவை நினைவாக்க சமஸ்கிருதத்தையும், இந்தியையும் தூக்கி பிடித்து மாநில மொழிகளை அழிக்கத் துடிக்கும் மோடி – அமித்ஷா பாசிசக் கும்பலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் திருக்குறளையும், தமிழ் மொழியையும் உயர்த்தி பேசுவதுபோல் நடிக்கிறார். இந்த நாடகத்தை நிறுத்தி கொள்ள வேண்டும். உடனே தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

இந்தியாவிலேயே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் இந்தி உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்கப்பட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கூட இந்தியில் மனு தாக்கல் செய்யலாம் என அந்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் வழக்காட அனுமதியில்லையென்பது தமிழ்நாட்டின், தமிழ்மொழியின் மீதான தீண்டாமை. ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணை (இந்திக்கு ஒரு நீதி? தமிழுக்கு ஒரு நீதியா?) என்பதே மோடி அரசின் அணுகுமுறையாக உள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக தமிழை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

சென்னையில் நடக்கும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு போலீசுத்துறை தற்போது தடை விதித்திருக்கிறது. மக்கள் அதிகாரத்தின் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

படிக்க : உயர் நீதிமன்றத்தில் தமிழ்! | வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | காணொளிகள் | நாள் 2

2006-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை அமல்படுத்த வேண்டுமென்றுதான் இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் போலீசுத்துறையோ போராடுபவர்களுக்கு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. பேச்சாளர்களின் பட்டியலை தர வேண்டும் என்றும் தொடர்ச்சியாக தொந்தரவு செய்கிறது. நெருக்கடிகளை கொடுத்துவரும் போலீசுத்துறையின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் போலீசுத்துறை இயங்குகிறதா? ஆளும் திமுக அரசு பதில் கூற வேண்டும்? தமிழை வழக்காடு மொழியாக்கப் போராடினால் போலீசை கொண்டு நெருக்கடியை கொடுப்பதுதான் உங்களின் தமிழ் பற்றா? சமூக நீதியா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது. ஆகவே தமிழ்நாடு அரசு உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் அமிர்தா,
செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்,
91768 01656

வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டத்தை ஆதரிக்கும் மதுரை வழக்கறிஞர்கள்

வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டத்தை
ஆதரிக்கும் மதுரை வழக்கறிஞர்கள்

இணைப்பு 1

இணைப்பு 2

இணைப்பு 3

இணைப்பு 4

இணைப்பு 5

இணைப்பு 6

இணைப்பு 7

இணைப்பு 8

இணைப்பு 9

இணைப்பு 10

இணைப்பு 11
வழக்கறிஞர் செ.சுரேஷ்,
செயலாளர்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம் – புதுச்சேரி

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சாந்தன் மரணம் – வழக்குரைஞர் ஜான்சன் கண்டனம்

சாந்தன் மரணம் – வழக்குரைஞர் ஜான்சன் கண்டனம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உயர் நீதிமன்றத்தில் தமிழ்! | வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | காணொளிகள் | நாள் 2

உயர் நீதிமன்றத்தில் தமிழ்! | வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் |
காணொளிகள் | நாள் 2

வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | பேராசிரியர் ப.சிவக்குமார்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | மேதாபட்கர்

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உயர் நீதிமன்றத்தில் தமிழ்! | வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | காணொளிகள் | நாள் 1

உயர் நீதிமன்றத்தில் தமிழ்! | வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் |
காணொளிகள் | நாள் 1

வழக்குரைஞர் போராட்டம் | ஊடக சந்திப்பு | வழக்குரைஞர் கோ.பாவேந்தன்

வழக்குரைஞர் போராட்டம் | முழக்கம்

உண்ணாநிலை போராட்டத்தின் 25 போராளிகள்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | வழக்கறிஞர் பாரதி உரை

வழக்குரைஞர் போராட்டம் | வழக்கறிஞர் பார்வேந்தன்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் ஜான்சன்

வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் கார்க்கி வேலன்

வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் சூர்யா

வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் சேல்முருகன்

வழக்குரைஞர் போராட்டம் | வழக்கறிஞர் பாரதி

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விரிவான காணொளி..

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



“உயர்நீதிமன்றத்தில் தமிழ்” வழக்குரைஞர் போராட்டம் வெல்க! | துண்டறிக்கை

“உயர்நீதிமன்றத்தில் தமிழ்”
வழக்குரைஞர் போராட்டம் வெல்க!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வழக்கறிஞர்கள் பிப்ரவரி 28 முதல் உண்ணா நிலை போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

அப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டியது மட்டுமல்ல; உயர்த்திப் பிடிக்க வேண்டியதும் நம்முடைய கடமை.

விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் என்று கூறப்பட்ட போதும் தமிழை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்கவே இன்னும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதே மிகவும் இழிவான நிலை. வழக்காடிக்கு தனக்கு புரிகின்ற மொழியில், தன்னுடைய தாய் மொழியில் ஒரு வழக்கு நடத்தக்கூட உரிமை இல்லை என்றால் இதற்குப் பெயர் என்ன ஜனநாயகம்?

மருத்துவம், பொறியியல், சட்டம் அறிவியல் என அனைத்து துறைகளிலும் தாய் மொழியில் கற்கும் போது தான் அனைவருமே அந்தத் துறையில் ஈடுபாட்டுடன் படித்து முன்னேற முடியும்.

உயர்நீதி மன்றத்தில் தமிழை, மாநிலத்தின் மொழியை வழக்காடு மொழியாக்காமல் தடுப்பது எது?

படிக்க : உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்குரைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டம் வெல்லட்டும்!

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348 (2) இன் படி ஒரு மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத் தலைவரின் முன் இசைவுடன் இந்தியையோ அல்லது அந்தந்த மாநில அலுவல் மொழியையோ ஆங்கிலத்துடன் சேர்த்து கூடுதல் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்கலாம் என்று வழிவகை செய்கிறது.

அதன் அடிப்படையில்தான் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 18 நாட்களிலேயே இராஜஸ்தான் மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரின் முன் அனுமதியைப் பெற்று இந்தியை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்கினார்.

அதற்குப் உத்தரபிரதேசம், பிந்தைய ஆண்டுகளில் மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் இந்தி மொழியானது எனது உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்கப்பட்டது.

(துண்டறிக்கை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே அழுத்தவும் – உயர்நீதிமன்றத்தில் தமிழ்)

2006 ஆம் ஆண்டு தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்க ஒப்புதல் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்று மேற்கு வங்காளம், குஜராத், சத்தீஸ்கர், கர்நாடக ஆகிய அரசுகள் தங்கள் மாநில மொழியை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்க வேண்டும் என்று தங்களது சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில்களைக் கேட்டால் உச்ச நீதிமன்றம், உணர்ச்சிப்பூர்வமான மொழி பிரச்சனை சட்டம் ஒழுங்கு சிக்கல் வரும் என்று தகவல் தெரிவிக்கிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியம் இலக்கணம் என செழுமைமிக்க மொழியானது நம்முடைய மொழி. தமிழைக் காக்க பல நூறு பேர்தங்கள் உயிரை தியாகம் புரிந்திருக்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராக மொழிப்போர் கண்டதும் நம் தமிழ் மொழியே. இப்படிப்பட்ட தொன்மை வாய்ந்த வரலாறு படைத்த நம் தமிழ் மொழிக்கு ஏன் இன்னும் உயர் நீதிமன்றத்தில் மட்டும் இடமில்லை?

தற்போது இருக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348 (2) இன் படி உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்காமல் நேரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி அதன்படி சட்டமன்றத் தீர்மானத்திற்கு இசைவு பெற முடியும் என்ற சூழல் தற்போது இருக்கும் போது கூட திட்டமிட்டு ஒன்றிய அரசுகள் மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்க மறுக்கின்றனர்.

படிக்க : வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டத்தை ஆதரிக்கும் மதுரை வழக்கறிஞர்கள்

இந்த நாட்டையே இந்துராஷ்டிரமாக்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பல் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம், என்று நாட்டையே மறுக்கட்டமைப்பு செய்து கொண்டிருக்கும் இந்தச்சூழலில்தான்,

உயர்நீதிமன்றத்தில் தமிழ் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள் வழக்குரைஞர்கள்.

இது வெறும் மொழி சார்ந்த கோரிக்கை மட்டுமல்ல, இந்துராஷ்டிரக் கனவில் மிதந்து கொண்டிருக்கும் பாசிஸ்டுகளின் கண்ணாடிக் கோட்டையில் எறியப்படும் கல்.

இதோ மொழி காக்கும். மண் காக்கும் போராட்டத்தில் தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள் முன்னணியில் முன்னணியில் நிற்கிறார்கள்.

  • தமிழுக்க! போராட்டத்தை மக்கள் போராட்டமாக்குவோம்.
  • தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவோம்.


மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தமிழை உயர்நீதிமன்ற மொழியாக அறிவித்திடுக! வழக்குரைஞர் போராட்டம் வெல்க! | தோழர் மருது

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக அறிவித்திடுக!
வழக்குரைஞர் போராட்டம் வெல்க! | தோழர் மருது

28.02.2024 முதல்
இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில்,
எழும்பூர், சென்னை.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரிக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள்!

0

2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் நாளொன்றுக்கு சராசரியாக இரண்டு முஸ்லீம் விரோத வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் நடப்பதாகவும், அதில் 498 (75 சதவிகிதம்) பாசிச பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளதாகவும் ”இந்தியா ஹேட் லேப்” (India Hate Lab) என்ற ஆராய்ச்சிக்குழு பிப்ரவரி 26 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

இந்தியா ஹேட் லேப் என்பது அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி-யை (Washington, DC) தளமாகக் கொண்ட ஒரு ஆராய்ச்சிக் குழுவாகும். இது பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்படுகிறது.

”இந்தியாவில் வெறுப்பு பேச்சு நிகழ்வுகள்” (Hate Speech Events in India) என்று தலைப்பிடப்பட்ட இக்குழுவின் ஆய்வறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் 255 நடந்துள்ளன; அதே வேளையில் ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்த எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ஆண்டின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் 62 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

வெறுப்பு பேச்சுகளில் 36 சதவிகித (239) நிகழ்வுகள் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்கு நேரடியாக அழைப்பு விடுப்பவையாகவும், 63 சதவிகிதம் (420) லவ் ஜிஹாத், நில ஜிஹாத், ஹலால் ஜிஹாத், மக்கள்தொகை ஜிஹாத் போன்ற ”சதி கோட்பாடுகளை” உள்ளடக்கியதாகவும் இருந்தன. சுமார் 25 சதவிகிதம் (169) முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைக்கும் உரைகளை கொண்டிருந்தன.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெற்றன.


படிக்க: பாசிச இனப்படுகொலைகளுக்கு பக்குவப்பட்டுவிட்டது நாடு!


மகாராஷ்டிரா மாநிலத்தில் குறைந்தது 118 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 104 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகளும், மத்தியப் பிரதேசத்தில் 65 நிகழ்வுகளும், ராஜஸ்தானில் 64 நிகழ்வுகளும், ஹரியானாவில் 48 நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. உத்தராகண்டில் 41, கர்நாடகாவில் 40, குஜராத்தில் 31, சத்தீஸ்கரில் 21, பீகாரில் 18 வெறுப்பு பேச்சு நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

இதில் விஷ்வ இந்து பரிஷத் – பஜ்ரங் தளம் 32 சதவிகித (216) வெறுப்பு பேச்சு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 46 சதவிகித (307) வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் சங்க பரிவார அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டவை.

மேலும், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் டி ராஜா சிங் மற்றும் நிதேஷ் ரானே, அந்தராஷ்ட்ரிய இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா, இந்துத்துவவாதியான காஜல் ஷிங்காலா, சுதர்சன் நியூஸ் உரிமையாளர் சுரேஷ் சவ்ஹாங்கே, இந்து மதத் தலைவர்கள் (இந்து பயங்கரவாத சாமியார்கள்) யதி நரசிங்கானந்த், காளிச்சரண் மகாராஜ், சாத்வி சரஸ்வதி மிஸ்ரா ஆகியோர் அதிக வெறுப்பு பேச்சுகளுக்குக் காரணமான முதல் எட்டு பேச்சாளர்கள் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


படிக்க: விலைவாசி உயர்வு: அசாம் முதல்வர் சர்மா முஸ்லீம் வெறுப்பு பேச்சு!


”முஸ்லீம் விரோத வெறுப்பு பேச்சு இயல்பாக்கப்பட்டு இந்தியாவின் சமூக-அரசியலில் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதை எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர்களை துருவப்படுத்த முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பரவலாக பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று ”இந்தியா ஹேட் லேப்” மற்றும் ”இந்துத்துவா வாட்ச்” ஆகியவற்றின் நிறுவனரான ரகீப் ஹமீது நாயக் (Raqib Hameed Naik) எச்சரித்துள்ளார்.

கடந்த ஜனவரி 29 அன்று, தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 இன் கீழ் ”இந்தியா ஹேட் லேப்” மற்றும் ”இந்துத்துவா வாட்ச்” ஆகியவற்றின் வலைத்தளங்களை பாசிச மோடி அரசு இந்தியாவில் முடக்கியது குறிப்பிடத்தக்கது. பாசிச மோடி அரசின் இந்த நடவடிக்கையைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதாக இவ்விரண்டின் நிறுவனரான ரகீப் ஹமீது நாயக் அப்போது கூறியிருந்தார்.

ஏதோ வெறுப்பு பேச்சுகள் தொடர்பான தரவு என்று எண்ணி இந்த செய்தியை நாம் அலட்சியமாகக் கடந்துவிடக்கூடாது. பாசிச சங்க பரிவார கும்பலின் வெறுப்பு பேச்சுகள் எவ்வளவு அபாயகரமானவை என்பதைப் புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டை மட்டும் பார்ப்போம்.

அந்தராஷ்ட்ரிய இந்து பரிஷத்தின் (Antarrashtriya Hindu Parishad) நிறுவனரும் தற்போதைய தலைவருமான பிரவீன் தொகாடியா, 2023 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ”இன்று இஸ்ரேலின் முறை. அதே பாலஸ்தீனம் நமது கிராமங்களிலும், தெருக்களிலும் எழுச்சி பெற்று வருகிறது. அவர்களிடமிருந்து எங்கள் வளத்தை, எங்கள் பெண்களைக் காப்பாற்றுவது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கிறது” என்று பேசினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தியாவில் முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வதற்கான தருணத்திற்காகக் காத்திருப்பதாகப் பொருள்படும் படி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

பாசிச கும்பலின் வெறுப்பு பேச்சுகளை இனிமேலும் அனுமதிக்க முடியாது. இந்தியாவில் காசாவைப் போன்றதொரு இனப்படுகொலையை நடத்த துடிக்கும் பாசிஸ்டுகளை முறியடிக்க வேண்டியது புரட்சிகர – ஜனநாயக சக்திகள் அனைவரின் கடமையாகும்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube