Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 98

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஜனவரி 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – பாசிச ஆட்சியில் “பேரிடர்கள்”
  • சென்னை வெள்ளம்: யார் தான் குற்றவாளி?
  • எண்ணெய் கழிவு: நிர்கதியாக்கப்பட்ட எண்ணூர் மக்கள்
    மீளாத் துயரத்தில் வடசென்னை
  • தென்மாவட்டங்களின் வெள்ளப் பாதிப்பு: தோழர்களின் கள அனுபவம்
  • ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குற்றவாளிக்கு பதவி உயர்வு: இந்த அரசு,
    அதிகார வர்க்கத்தை ஒருபோதும் தண்டிக்காது!
  • பு.ஜ.உடன் ஓர் உரையாடல்..
  • நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீச்சு: இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை
  • காஷ்மீர் தீர்ப்பு: பாசிஸ்டுகளுக்கு சட்ட அங்கீகாரம்
  • தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்!
  • காவிகளின் கூடாரங்களாகும் பல்கலைக்கழகங்கள்
  • அட்டைப்படக் கட்டுரை பாட்டளி வர்க்க ஆசான் தோழர் லெனின்
    100-ஆம் ஆண்டு நினைவு தினம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின் உடனடி கோரிக்கையை தமிழக அரசே  நிறைவேற்று!

02.01.2024

பெருமழை துயரம்: பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின்
உடனடி கோரிக்கையை தமிழக அரசே நிறைவேற்று!

பத்திரிகை செய்தி

2023 டிசம்பர் 18ஆம் தேதி தென்காசி, நாகர்கோயில், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்து பெரும் அழிவை ஏற்படுத்தியது .

இது தொடர்பாக மக்கள் அதிகாரம் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் ரவி உள்ளிட்டோர் ஆய்வுகளை மேற்கொண்டனர். அதிலிருந்து கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுக்கு முன்வைக்கிறோம்.

இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமான தூத்துக்குடியில் மழையின் பாதிப்பு இன்று வரை நீடிக்கிறது. மக்கள் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மிகவும் முக்கியமான உடனடியாக தீர்க்க வேண்டிய இரண்டு பிரச்சனைகள் உள்ளன.

  1. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் உடுத்த துணி கூட இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றனர். இதனை தீர்ப்பதற்கு அரசு ஊர்தோறும் முகாம் அமைத்து உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றை உடனடியாக ஏற்பாடு செய்வதை உத்திரவாதப்படுத்த வேண்டும்.
  2. தூத்துக்குடியை ஒட்டிய புறநகர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மழை ஓய்ந்து 15 நாட்கள் ஆகியும் இன்று வரை மழை நீர் வடியவில்லை. ஒரு சில இடங்களைத் தவிர 90% இடங்களில் இதை அரசு கண்டு கொள்ளவே இல்லை . மழைநீர் தேங்கி சாக்கடை கழிவு நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.இதன் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு தற்காலிக முகாம்களை அமைத்து உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.அனைத்து இடங்களிலும் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் கழிவு நீர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது .


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புத்தாண்டே வருக! புரட்சியின் நாயகரைத் தருக!

புத்தாண்டே வருக!
புரட்சியின் நாயகரைத் தருக!

புதியதொரு ஆண்டு மட்டும் பிறக்கப் போவதில்லை

புதியதொரு வாழ்வும்
பிறக்கப் போகிறது

பாசிச அடக்கு முறைகள்
பிறக்கும் இதே ஆண்டில் தான்

விடுதலைக்கான கொடியும் பறக்கப் போகிறது

இதோ இந்த பாராளுமன்றம்தான் நம் உரிமைகளைப் பறிக்கிறது
என்ற முழங்கிய
பகத்சிங்கின் வார்த்தைகள்
காற்றில் கலந்து தொண்ணூற்றைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன

அடக்குமுறைகளும்
கொடுஞ் சட்டங்களும்
ஒரு போதும் விடுதலை உணர்வை சிதைக்க போவதில்லை

இங்கே கோழைகளுக்கும் துரோகிகளுக்கும் கூட இடம் உண்டு
ஆனால் வாழப்போவது வீரர்கள் மட்டும் தான்

கோழைகளும் துரோகிகளும் உருவாகின்ற இந்த காலத்தில் தான்
விடுதலையின் நாயகர்களும் உருவாக போகிறார்கள்

விடுதலையின் நாயகர்கள் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை

தோழனே
நீ மட்டும் ஏன் நம்பிக்கை இழக்கிறாய்?

இருக்கின்ற ஒரு வாழ்வை மக்களுக்காக வாழ்வதைவிட சிறப்பேதும் உண்டோ?

உரத்து முழங்கு!
இது பாசிஸ்டுகளின் மண்ணல்ல
பகத்சிங்குகளின் கட்டபொம்மன்களின்
பூலித்தேவன்களின்
தீரன்களின்
ஒண்டி வீரன்களின் மண்
நமது மண்!

புத்தாண்டே வருக!
புரட்சியின் நாயகரைத் நம்மிலிருந்து தருக!

ஆம்,
கோழைக்கு வாழ்வு கிடையாது!

வீரர்க்கு சாவே கிடையாது!


மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாலஸ்தீனம் என்ற வார்தையையே அழிக்கத் துடிக்கும் யூத மதவெறி இஸ்ரேல்! | காணொளித் தொகுப்பு

க்டோபர் 7 தொடங்கிய பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை நடவடிக்கை இன்னமும் முடியவில்லை. கிட்டத்தட்ட 9,000 குழந்தைகள் உட்பட 22,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்தும் இஸ்ரேலின் இரத்த வெறி அடங்கவில்லை. “பாலஸ்தீனம்” என்ற சொல்லையே அழிக்க நினைக்கிறது இஸ்ரேல்.

காசா: 2023-ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்த நிலையும் தற்போதைய நிலையும்.

மொத்தமாக அழிக்கப்பட்ட வடக்கு காசாவில் உள்ள பெயிட் லாகியா (Beit Lahiya) நகரம்.

பிணவறைகள் நிரம்பி வழிவதால் காசாவின் தெருக்களில் வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களின் உடல்கள். பிணங்கள் அழுகுவதால் தொற்று நோய் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவிப்பதால் துயரம் தாங்க முடியாமல் கதறி அழும் பாலஸ்தீனப் பெண்.

இஸ்ரேலின் ஒடுக்குமுறைகள் ஒருபுறம் இருந்தாலும் அதற்கு எதிரான எதிர்ப்புகளும் மக்கள் மத்தியில் வலுவாக உள்ளது.

18 வயதைக் கடந்த இஸ்ரேலிய குடிமக்கள் அனைவரும் இராணுவத்தில் கட்டாயம் பணிபுரிய வேண்டும். பெண்கள் 2 ஆண்டுகளும், ஆண்கள் 2 வருடம் மற்றும் 8 மாதங்களும் பணிபுரிய வேண்டும். மறுப்பவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஆனால் இஸ்ரேலிய இளைஞர்கள் சிலர் இராணுவத்தில் பணிபுரிய மறுத்து வருகின்றனர். அதற்காக அவர்கள் சிறை செல்லவும் தயாராக உள்ளனர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கோடிக்கணக்கான மக்கள் உலகம் முழுவதிலும் வீதிகளில் இறங்கி தங்களது ஆதரவைப் பதிவுசெய்து வருகின்றனர்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட சைலேஷ் குமார் யாதவ் டிஜிபியாக பதவு உயர்வு!

31.12.2023

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
சைலேஷ் குமார் யாதவ் டிஜிபியாக நியமனம்!

இந்த அரசு குற்றவாளிகளை ஒருபோதும் தண்டிக்காது!

பத்திரிகை செய்தி

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளக் கூடிய நபரும் அன்றைய தென்மண்டல ஐஜியுமான சைலேஷ் குமார் யாதவ் பணி மூப்பு என்ற பெயரில் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தூய காற்று, நீர், நிலம் வேண்டும் என்று போராடிய தூத்துக்குடி மக்களை காக்கை, குருவிகள் போல ஒளிந்திருந்தும் வாகனம் மீதேறியும் சுட்டுக் கொன்ற தமிழ்நாடு போலீஸ், அனில் அகர்வால் என்ற கார்ப்பரேட் கொலைகாரனுக்கு சேவகம் செய்தது. ஏறத்தாழ 15 பேர் தமிழ்நாடு போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டு தியாகிகள் ஆகினர். பலர் முடமானார்கள், பாதிக்கப்பட்டார்கள். எனினும் ஸ்டெர்லைட் கார்ப்பரேட்டுக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு தலைவணங்கியது, தோள் கொடுத்தது.

அதன் விளைவாகவே வேறு வழியின்றி ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. தனது ஆலை மூடப்பட்டதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவும் மக்களின் போர்க் குணமான போராட்டங்களின் விளைவு காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் மனு செய்திருக்கிறது; விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக அருணா ஜெகதீசனின் அறிக்கை வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. ஸ்டெர்லைட்டை மூடிய வீரம் செறிந்த போராட்டங்கள் நடந்தும் சுட்டுக் கொல்லப்பட்டும் ஐந்து ஆண்டுகள் நெருங்கிவிட்டன.

அருணா ஜெகதீசன் அறிக்கை யாரைக் குற்றவாளி என்று சுட்டிக் காட்டியதோ அவர்கள் எல்லாம் பதவி உயர்வு பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இப்போது வரை ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று போராடுவதற்கும் பேசுவதற்கும் கூட தூத்துக்குடியில் உரிமை இல்லை. அரசு எப்பொழுதும் ஆளும் வர்க்கத்தையும் அதிகாரிகளையும் காப்பாற்றி கார்ப்பரேட்டுக்காக மட்டுமே வேலை செய்யும் என்பதை இந்த நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.

தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இப்பொழுது மக்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

இதோ இப்பொழுது, துப்பாக்கிச் சூடு நடந்த போது தென் மண்டல ஐஜியாக இருந்தவரும் அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றவாளி என்று சுட்டிக் காட்டப்பட்ட சைலேஷ் குமார் யாதவை டிஜிபி ஆக்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. இச்செயலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் சைலேஷ்குமார் யாதவ் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும், துப்பாக்கி சூடு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

விரட்டியடிக்கப்படும் அனகாபுத்தூர் மக்கள்: தி.மு.க. அரசின் அராஜகம்!

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் உள்ள காயிதேமில்லத் நகர், சாந்திநகர், தாய்மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட வீடுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதிகளில் உள்ள வீடுகளை அடையாறு ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அவற்றை இடிக்கும் பணியில் அடாவடித்தனமாக ஈடுபட்டு வருகிறது தி.மு.க அரசு.

கடந்த 4-ஆம் தேதி, போலீசின் துணையோடு வந்த பல்லாவரம் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், புல்டோசர் மூலமாக டோபிகானா தெருவில் உள்ள வீடுகளை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கினர்.

அப்பகுதி மக்கள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் உடனடியாக எதிர்த்துப் போராடியதன் காரணமாக பிற பகுதிகளில் உள்ள வீடுகளை இடிக்காமல் நிறுத்திவைத்துள்ளது, தி.மு.க அரசு. ஆனால், எப்பொழுது வேண்டுமானாலும் அதிகாரிகளும் போலீசும் தங்கள் வீடுகளை இடிக்க வரலாம் என்ற அச்சத்திலேயே அப்பகுதி மக்கள் உள்ளனர்.

அகதிகளாக்கப்படும் உழைக்கும் மக்கள்!

கடந்த ஐந்து மாதங்களாக, போலீசும் அதிகாரிகளும் வீடுகளை இடிக்கப்போவதாகவும், பகுதிகளை விட்டு வெளியேறக்கூறியும் அப்பகுதி மக்களை மிரட்டி வந்துள்ளனர். மேலும் அதிகாரிகள், “அனகாபுத்தூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள தாம்பரம் முடிச்சூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள மாற்று குடியிருப்புகளில் குறைந்த அளவிலான வீடுகளே உள்ளது. முதலில் வருபவர்களுக்கே அப்பகுதியில் வீடுகள் வழங்கப்படும். இல்லையெனில், பெருங்களத்தூரைத் தாண்டிதான் வீடுகள் வழங்கப்படும்” எனக் கூறி வஞ்சகமான முறையில் அம்மக்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசும் அதிகாரிகளும் வீடுகளை இடிக்கும்போது மக்களின் உடைமைகளை கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல் மிகவும் அடாவடித்தனமாக செயல்பட்டுள்ளனர். வீட்டு வரி செலுத்தியிருப்பதற்கான ஆவணங்களையும், முன்னாள் மாவட்ட ஆட்சியர் தங்களுக்கு பட்டா அளிப்பதாக கொடுத்த சான்றிதழையும் மக்கள் அதிகாரிகளிடம் காண்பித்தபோதும் அதைப் பார்ப்பதற்குகூட அதிகாரிகள் தயாராக இல்லை. எப்படியாவது வீடுகளை இடித்துவிட வேண்டும் என்பதில்தான் ஒரே குறிக்கோளாய் இருந்துள்ளனர். எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று பேரை கைது செய்து ஒடுக்குமுறையையும் ஏவியுள்ளது, தி.மு.க. அரசு.


படிக்க: அனகாபுத்தூர் மக்களின் வீடுகளை இடிக்கும் அரசு புல்டோசர்கள்! | தோழர் மருது


வீடுகளை இடிக்கவந்த அதிகாரிகளிடம் சில பள்ளி மாணவர்கள், “வீடுகளை இடித்து எங்களை வெளியேற்றினால் எங்கள் கல்வி பாதிக்கப்படுமே” என்று கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள் “நீங்க எல்லாம் படித்து என்ன ஆகப்போகிறது? நீங்க படிச்சா என்ன? படிக்கலனா என்ன?” என மிகவும் கீழ்த்தரமாக பதிலளித்துள்ளனர். இந்த அராஜகங்கள் எல்லாம் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா முன்னிலையிலேயே நடந்துள்ளன.

“வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, கரண்ட் பில் என எல்லாமே வைத்திருக்கிறோமே இதுக்கப்புறம் என்ன? நாங்க என்ன அகதிகளா? நாங்களும் இந்த ஊரை சேர்ந்தவங்க தான? அப்ப நாங்களும் இங்க தான இருக்கணும்? எங்கள மட்டும் ஏன் இந்த மாதிரி பண்ணுறாங்க” என்று தன்னுடைய ஆதங்கத்தை வேதனையுடன் வெளிப்படுத்துகிறார் அனகாபுத்தூரை சேர்ந்த பெண் ஒருவர்.

தங்களுடைய உழைப்பால் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் கட்டப்பட்ட வீடுகள் தங்கள் கண்முன்னே இடிக்கப்படுவதைப் பார்த்து துக்கம் தாங்க முடியாமல் மக்கள் கதறி அழுதனர். சிலர் “வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனையே இன்னும் அடைக்கவில்லை, அதற்குள் வீடுகளை இடிக்கிறார்களே” என்று புலம்பினர். ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கட்டடங்களை இடிக்காமல் தங்கள் வீடுகளை மட்டும் இடிக்கும் தி.மு.க. அரசை வசைபாடினர்.

மாற்று குடியிருப்புக்காகக் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளும் வாழவே தகுதியற்றவையாக உள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள். “மருத்துவமனை, பள்ளிக்கூடம், பேருந்து நிலையம், சுடுகாடு போன்ற எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை. அவங்க கொடுக்கிற 350 அடி வீட்டுல ஒரு நாள் கூட தங்க முடியாது. சுவரைத் தொட்டாலே சுண்ணாம்பு கையோட வருது. எல்லா சுவர்களிலும் விரிசல் விட்டிருக்கு. ஜன்னல் வச்சுருக்காங்க, ஆனா ஜன்னலுக்கு கதவு இல்ல” எனத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4-ஆம் தேதி அன்றே அனகாபுத்தூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து 13-ஆம் தேதி “எங்களுக்கு எந்த சலுகையோ மானியமோ தேவையில்லை. எங்கள் இடத்தில் எங்களை வாழவிடுங்கள் போதும்” என்ற முழக்க அட்டைகளுடன் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே 17 இயக்கம், மக்கள் அதிகாரம் போன்ற இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் இப்போராட்டங்களில் கலந்துகொண்டன.

சிங்கார சென்னையில் உழைக்கும் மக்களுக்கு இடமில்லை!

அனகாபுத்தூர் பகுதியில் உழைக்கும் மக்களின் வீடுகளை “ஆக்கிரமித்து கட்டப்பட்டவை” என்று கூறி இடிக்கும் தி.மு.க. அரசு, அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மாதா கல்லூரியையும், காசா க்ராண்ட், ஒலிம்பியா போன்ற ரியல் எஸ்டேட் பெருநிறுவனங்களின் அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் ஆக்கிரமிப்பு கட்டடங்களாக கருதவில்லை. அதைபோல், மாற்று குடியிருப்பு வீடுகளையும் ஆற்றிலிருந்து 50 அடி தொலைவில்தான் கட்டிக்கொடுத்துள்ளது. இதிலிருந்தே, “ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளைப் பாதுகாக்கிறோம்” என்று தி.மு.க. அரசு கூறிவருவது அப்பட்டமான பொய் என்பது அம்பலமாகிறது.

தமிழ்நாடு முழுவதும் பல நீர்நிலைகள் தனியார் முதலாளிகளின் இலாப நோக்கத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டு பல்கலைக்கழகங்களும் வணிக வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன. எஸ்.ஆர்.எம், மதுரவாயல் ஏ.சி.எஸ், சாஸ்த்ரா போன்ற பல பல்கலைக்கழகங்களை நாம் சான்றாகக் கூற முடியும். சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அதன் மீது தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் கரையோர உழைக்கும் மக்களை மட்டும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அப்புறப்படுத்தி வருகிறது, தி.மு.க. அரசு. 2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடனே, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பாக்கம் பகுதியில் வசித்துவந்த மக்களையும், 2022-ஆம் ஆண்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் பக்கிங்காம் கால்வாய் அருகே வசித்துவந்த மக்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி விரட்டியடித்துள்ளது.

இவ்வாறு, ஆற்றங்கரையோரங்களில் வாழும் உழைக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்படுவது “ஆற்றங்கரை மேம்பாடு” (Riverfront Development) என்ற திட்டத்தின் அடிப்படையில்தான். இத்திட்டம், ஆற்றங்கரையோரங்களில் பொழுதுபோக்கு வசதிகள், பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளை உருவாக்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, உழைக்கும் மக்களை சென்னையிலிருந்து விரட்டியடித்துவிட்டு அவர்கள் வாழ்ந்த பகுதியில் மேட்டுக்குடி மக்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதே இந்த திட்டத்தின் உண்மையான நோக்கம். இந்த உழைக்கும் மக்கள் விரோத திட்டத்தையே தி.மு.க அரசு தற்போது அமல்படுத்தி வருகிறது.

சமூக நீதி, திராவிட மாடல் எனப் பேசும் தி.மு.க. அரசும் ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை 2.0 போன்ற கார்ப்பரேட் நலத் திட்டங்களால் உழைக்கும் மக்களை சென்னையிலிருந்து விரட்டியடிக்கும் கார்ப்பரேட் நல அரசே. அதனை, தி.மு.க. அரசின் அடுத்தடுத்த கார்ப்பரேட் சேவைகள் நமக்கு உணர்த்துகின்றன.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வடியாத மழை வெள்ளம்: தூத்துக்குடி | களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்

வடியாத மழை வெள்ளம்: தூத்துக்குடி களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்

ஏரல் பகுதியில் இடிந்த பாலம்

வடியாத மழை வெள்ளம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பிக்பாஸ் நிகழ்ச்சி பெறும் கவன ஈர்ப்பை எப்படிப் பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டது. செய்தி ஊடகங்கள் கூட இதை கவனித்து செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டிருந்தன. இதை எப்படிப் பார்ப்பது?

டுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பதை ஒரு போதையாக வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டியது. மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த வகை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மனிதர்களுக்கான விழுமியங்களை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறது. அதிலும் குறிப்பாக அனைத்தையும் கேலிக்குரியதாக பார்க்கும் இன்றைய 2K தலைமுறையினரிடம் இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் பல விஷயங்களை தங்களுடைய நிஜ வாழ்க்கையிலும் மக்கள் இயல்பாக பொருத்துகின்றனர்.

அதிலும் தற்போது நடந்துவரும் “பிக்பாஸ் 7” நிகழ்ச்சி மிகவும் வக்கிரமான மனநிலையை உருவாக்குவது குறித்து பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். பாலியல் சீண்டல், பாலியல் வல்லுறவு குறித்தான கீழ்த்தரமான கருத்துக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களால் பேசப்பட்டு வருகிறது. பெண்கள் பாதுகாப்பு, பாலியல் சீண்டல் போன்றவற்றை தன் டி.ஆர்.பி-க்காக விஜய் டிவி கேளிக்கை பொருளாக்கியுள்ளது. பிரதீப் ஆண்டனி போன்ற கீழ்த்தரமான நபர்கள் இன்று சமூக ஊடகங்களில் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறார்கள். இவையெல்லாம், தற்போது மனிதர்களின் நுகர்வுவெறி கலாச்சாரம் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளதையே காட்டுகின்றன.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் தலித்திய அரசியல் தலைவர்களும்

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தலித் மக்கள் தலைவர்களே பெரிதாக கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. தி.மு.க. ஆட்சியில் இந்த தாக்குதல்கள் அதிகரிப்பதை ஏற்கக் கூட மறுக்கின்றனர். சாதாரணமாக கடந்து செல்கின்றனர். இதனை எப்படி புரிந்துகொள்வது?

ப்படி ஒரு சந்தர்ப்பவாதமான போக்கு தலித் மக்கள் தலைவர்களிடம் உள்ளதுதான். தி.மு.க. ஆட்சியில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. ஆனால், தற்போது தி.மு.க. ஆட்சியில் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதை பற்றி பேசாமல் காலங்காலமாக தாக்குதல்கள் நிகழ்ந்துவருகிறது, கஞ்சா போதையில் நடக்கிறது என்று தட்டிக்கழிப்பது என்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதம், பிழைப்புவாத அணுகுமுறை. மேலும், தலித் மக்களில் ஒருபிரிவினர் (அருந்ததியர், பறையர், தேவேந்திர குல வேளாளர்) மீது தாக்குதல் தொடுக்கும்போது அதற்கு மற்ற பிரிவைச் சார்ந்த தலித் தலைவரோ சங்கமோ கண்டனங்களைத் தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொள்கின்றன. அதற்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதை விட, தங்களுடைய பிழைப்புவாத நோக்கத்திற்காகவே பாடுபடுகின்றனர் என்பதே உண்மைநிலை.

அதேபோல நடந்துவரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களுக்கு வேறொரு பரிமாணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்கள் அதிகரிப்பதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்திட்டம் உள்ளது. தனது இந்துமதவெறியின் மூலம் தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியாத சங்கப் பரிவாரக் கும்பல், சாதிவெறியின் மூலம் தனக்கான அடித்தளத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அபாயகரமான போக்கை நாம் உடனடியாக தடுத்தாக வேண்டியுள்ளது.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடி செல்ஃபி பாயிண்ட்: மக்களின் வரிப்பணத்தில் படாடோப விளம்பரம்!

ந்திய மக்களுக்கு ஒரு ‘இனிய’ செய்தி! மோடியின் கடந்த ஒன்பதரை ஆண்டுக்கால ஆட்சியில் மக்கள் பல்வேறு ‘இன்பங்களை’ அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக, வேலையின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி மூலம் சிறு, குறு தொழில்கள் நசிவு, ஏழை மாணவர்களின் கல்வி பறிப்பு, பசி – பட்டினி சாவுகள், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகள் என மோடியின் சாதனையை சொல்லிக் கொண்டே போகலாம். இதுபோன்ற எண்ணற்ற சாதனைகள் புரிந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முப்பரிமாண புகைப்படத்துடன் மக்கள் இனி செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம். ஆம், அதற்கு இந்திய ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய, வடக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து ரயில்வேக்களும் மோடியின் முப்பரிமாண செல்ஃபி பாயிண்டை ரயில்வே நிலையங்களில் நிறுவிவருகின்றனர். ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி அஜய் போஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு மத்திய ரயில்வே துறை அளித்துள்ள பதிலில் இது தெரியவந்துள்ளது.

இதன்படி, மத்திய ரயில்வே மும்பை, புசவால், நாக்பூர், பூனே மற்றும் சோலப்பூர் ஆகிய 5 மண்டலங்களில் உள்ள 50 நிலையங்களில் ₹1.65 கோடி செலவு செய்து மோடி செல்ஃபி பாயிண்டை நிறுவியுள்ளது.

சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், கல்யாண், நாக்பூர், பெதுல் ஆகிய 30 A வகை நிலையங்களில் ₹1.25 லட்சம் செலவு செய்து தற்காலிக பாயிண்டையும் கர்ஜத், கசாரா, லத்தூர், கோபர்கான் ஆகிய 20 C வகை நிலையங்களில் ₹6.25 லட்சம் செலவு செய்து நிரந்தர பாயிண்டையும் நிறுவியுள்ளது மத்திய ரயில்வே.

மேலும், மேற்கு ரயில்வேவின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான பாவ்நகர் மட்டுமே ஆர்.டி.ஐ கேள்விக்கு பதிலளித்தது. டிசம்பர் 4-ஆம் தேதி நிலவரப்படி, மேற்கு ரயில்வே பாவ்நகர் கோட்டத்தின் வெராவல், பாவ்நகர் டெர்மினஸ், பொடாட், தண்டூகா மற்றும் காந்திகிராம் ஆகிய ஐந்து நிலையங்களில் செல்ஃபி பாயிண்ட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.


படிக்க: ஆன்லைன் தணிக்கையில் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழும் பாசிச மோடி அரசு


வடக்கு ரயில்வேயும் 100 வெவ்வேறு இடங்களில் பிரதமரின் செல்ஃபி பாயிண்ட் நிறுவப்படும் என்று பதிலளித்துள்ளது. குறிப்பாக, டேராடூன், அம்பாலா, புது தில்லி, அமிர்தசரஸ், அயோத்தி, சண்டிகர் ஆகிய இடங்களில் ஒரே நிலையத்தில் மூன்று பாயிண்டை நிறுவ உள்ளது.

தெற்கு ரயில்வேவின் திருச்சிராப்பள்ளி பிரிவில், திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர், திருவாரூர் சந்திப்புகள் மற்றும் வேலூர் கன்டோன்மென்ட் உள்ளிட்ட 11 நிலையங்களில் பிரதமரின் 3டி செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்படும் என்று திருச்சிராப்பள்ளி கோட்டம் தெரிவித்துள்ளது.

செல்ஃபி பாயிண்ட் நிறுவ எவ்வளவு செலவானது என்பதை வடக்கு, தெற்கு, மேற்கு ரயில்வேக்கள் தெரிவிக்கவில்லை.

மேற்குறிப்பிட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸின் சசி தரூர் மற்றும் சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் பிரதமரின் செல்பி பாயிண்டை விமர்சித்துள்ளனர்.

“வரி செலுத்துவோரின் பணத்தை முற்றிலும் வெறுக்கத்தக்க வகையில் வீணடிக்கிறது மோடி அரசு. மாநிலங்களுக்கு வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் வழங்கவில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கான 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியும் நிலுவையில் உள்ளது” என்று கார்கே சாடியுள்ளார்.

வெள்ள நிவாரண நிதி கேட்டால் பல்வேறு உருட்டுகளை உருட்டிக் கொண்டிருக்கும் நிர்மலா – மோடி கும்பல் சுய விளம்பரத்திற்காக மக்களின் வரிப் பணத்தை அள்ளி இறைத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் எந்தவிதமான கூச்ச நாச்சமும் அற்றவர்கள்.


படிக்க: கருத்துச் சுதந்திரத்திற்கு கல்லறை கட்டிவரும் பாசிச மோடி அரசு!


பல ஆண்டுகளாக இந்திய ரயில்வே தேவைக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டே இயங்கி வருகிறது. குறிப்பாக தண்டவாளங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணிகளில் கூட போதுமான தொழிலாளர்கள் நிரப்பப்படவில்லை. தண்டவாளப் பராமரிப்புப் பணிகளும் முறையாகச் செய்யப்படவில்லை. இதை ஜூன் 2, 2023 அன்று ஒடிசா மாநிலம் பாலசோரில் நடைபெற்ற கோர ரயில் விபத்து வெளிச்சம் போட்டுக் காட்டியது. சி.ஏ.ஜி அறிக்கையும் இதை உறுதிப்படுத்தியது.

மோடியின் செல்ஃபி பாயிண்டை அமைப்பது என்பது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக, கடந்த அக்டோபர் மாதத்தில் இந்திய ஆயுதப் படையில் 822 செல்ஃபி நிலையங்களை அமைக்க உத்தரவிட்டிருந்தது மோடி அரசு. டிசம்பரில் யு.ஜி.சியும் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழங்களில் மோடி செல்ஃபி பாயிண்டை அமைக்க உத்தரவிட்டிருந்தது. பின்னர், பல்வேறு எதிர்ப்பு வந்ததன் பேரில் அந்த உத்தரவு கைவிடப்பட்டது.

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மக்கள் மத்தியில் மோடியின் பிம்பத்தை உயர்த்திக்காட்டுவதற்கு பல்வேறு முயற்சிகளை ஆர்.எஸ்.எஸ்-பாஜக மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சிகளில் ஒன்றாக இதனை நாம் பார்க்க வேண்டியுள்ளது.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாறிவரும் விஜயின் அணுகுமுறையை எப்படி பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: லியோ திரைப்பட வெற்றி விழாவிற்கு நெத்தியில் குங்குமமிட்டு வந்தது; 12 மணிநேரம் பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடத்தியது; நூலகம் திறப்பது என விஜயின் அணுகுமுறையே மாறிவருகிறது. இதை எப்படி பார்ப்பது?

ஸ்டார் ஹீரோ, சினிமா கவர்ச்சி போன்றவற்றால் விஜய் பின்னே இளைஞர்கள், மாணவர்கள் திரளுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், சீரியஸாக அரசியல் பேசாமல், குறைந்தபட்ச அரசியல் நிலைப்பாடுகளைக் கூட வைத்திருக்காமல் அரசியலுக்கேற்ற எந்தவொரு ஒழுக்கமும் இல்லாமல்தான் விஜய் உள்ளார். சினிமாவில் ஹீரோவாக இருப்பதால், அரசியல் பற்றிய அடிப்படை அறிவில்லாத, சினிமா போதைக்கு பலியாகியிருக்கின்ற பிரிவினர்தான் விஜயை ஆதரிப்பார்களேயொழிய சீரியஸாக சமுகத்தைப் பற்றி புரிந்துக்கொண்ட எவரும் விஜயை ஆதரிக்க மாட்டார்கள்.

மேலும், விஜய் தன்னை சங்கி என்று பொதுவெளியில் அறிவித்துக் கொள்ளவில்லை என்றாலும், பாசிச சக்திகள் தன்னை எளிதாக பயன்படுத்திக் கொள்ளுமளவுக்குதான் தன்னை லாவகமாக வைத்துக்கொண்டிருக்கிறார்.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பிண அரசியல் செய்த அண்ணாமலை | தோழர் மருது

பிண அரசியல் செய்த அண்ணாமலை | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இந்தியா கூட்டணி தோல்விமுகத்திற்கு வந்துள்ளது என்று சொல்ல முடியுமா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் கடந்த நவம்பர் மாதத்தில் நடந்துமுடிந்துள்ளன. இத்தேர்தலின்போது, “இந்தியா கூட்டணி” கட்சிகள் தங்களுக்குள்ளேயே ஒற்றுமையின்றி தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை அணுகியுள்ளன. இத்தேர்தலில் அக்கட்சிகள் மக்களின் கோரிக்கைகளைப் பற்றி பேசாமல் இந்துத்துவ, கவர்ச்சிவாத வாக்குறுதிகளை அளித்து சந்தர்ப்பவாதமாக இருந்ததையும் பார்க்கிறோம். மேலும், தற்சமயம் பா.ஜ.க-வைத் தோற்கடிக்கக்கூடிய வகையிலும் அக்கூட்டணி இல்லை எனத் தோன்றுகிறது. அதேசமயத்தில், பா.ஜ.க. ஆட்சியில் பாசிசத்தின் கூறுகளும் அதிகரித்து வருகின்றன. ஆக, இந்தியா கூட்டணி தோல்விமுகத்திற்கு வந்துள்ளது என்று சொல்ல முடியுமா?

முதலில் இந்தியா கூட்டணி தோல்விமுகத்தில் இருப்பதாக கூறுவது தவறு. இந்தியா கூட்டணி சந்தர்ப்பவாதமாக நிலை எடுத்திருப்பது என்பது வேறு. ஆனால், இந்தியா கூட்டணி தோல்விமுகத்தில் உள்ளது என்று ஐந்து மாநில தேர்தல் விஷயத்தில் சொல்ல முடியாது. இந்தியா கூட்டணிக்குள் குழப்பங்கள் இருக்கிறது, கூட்டணி உறுதியடையாததாக உள்ளது. மேலும், சந்தர்ப்பவாதமாக நடந்துகொள்கிறது; முக்கியமாக, இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி பா.ஜ.க-விற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல், மத்தியப்பிரதேசத்தில் பாசிச கட்சிக்கு நிகராக பஜ்ரங் சேனாவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றிபெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு சென்றுவிட்டது. இப்படிதான் சொல்ல முடியுமே தவிர இந்தியா கூட்டணி தோல்விமுகத்தில் இருப்பதாக கூற முடியாது.

மேலும், பா.ஜ.க. தோல்விமுகத்தில் இருக்கும்பொழுது இந்தியா கூட்டணி தோல்விமுகத்தில் இருக்க முடியாது. சமுதாயத்தில் ஒருநேரத்தில் மோதுகின்ற இரண்டு அடிப்படையான சக்திகளில் ஒரு சக்திதான் தோல்விமுகத்தில் இருக்க முடியும். இரண்டு சக்திகளுமே தோல்விமுகத்தில் இருக்க முடியாது. அது தோல்விமுகமே கிடையாது. தோல்விமுகம் என்பதை ஒரு ஒப்பீட்டில்தான் சொல்லமுடியும். இரண்டு சக்திகளுக்கிடையிலான இரண்டு பிரதான கூறுகளுக்கிடையிலான பிரதான போக்கை வைத்துதான் சொல்லமுடியும்.

ஆகவே, பா.ஜ.க. – பாசிச சக்திகள் எதிர் பாசிச எதிர்ப்பு சக்திகள், இதில் பாசிசத்திற்கெதிரான சக்திகள் என்றால் இந்தியா கூட்டணி மட்டுமல்ல, பெரிய அளவிலான உழைக்கும் மக்களின் போராட்டங்களும் அடங்கும். பா.ஜ.க-வின் நடவடிக்கைகள் தொடர்ந்து தவறுதலாக போவதும், பா.ஜ.க-வின் சித்தாந்தத்தில் உள்ள ஓட்டாண்டித்தனமும் அக்கட்சியை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஆக, இந்தியா கூட்டணி எவ்வளவு தவறுகள் செய்தாலும், அது தோல்விமுகத்திற்கு வந்துவிட்டதாக சொல்லமுடியாது. அதற்கான அடிப்படையும் கிடையாது.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



திமுகவின் ஜால்ராக்களால் திமுகவுக்கு தான் ஆபத்து | தோழர் மருது

திமுகவின் ஜால்ராக்களால் திமுகவுக்கு தான் ஆபத்து | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உத்தராகண்டில் சுரங்கம் இடிந்ததில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டது மோடியின் வெற்றியா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: உத்தராகண்ட் மாநிலத்தில் ல்க்யாரா சுரங்கம் இடிந்ததில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர். வழக்கம்போல சங்கிகள் இதனை மோடியின் வெற்றியாக முன்னிறுத்துகின்றனரே?

முதலில், மோடிக்கோ, பாசிச கும்பலுக்கோ இதை ஒரு வெற்றியாக சித்தரிக்க துளியும் அருகதையில்லை. உண்மையில் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள அப்பகுதியில் தங்களது கார்ப்பரேட் ஆதாயத்திற்காக சுரங்கம் கட்டிவரும் மோடி கும்பல்தான் இவ்விபத்து ஏற்பட்டதற்கு முதன்மை குற்றவாளி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது பரிவாரங்கள் புடைசூழ செல்லமுடிந்த மோடிக்கு, விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரிக்க நேரமில்லை.

மோடியின் எலும்புத்துண்டு ஊடகங்களோ இரண்டு வாரங்களாக இதனை பேசுபொருளாக்காமல் இருந்துவிட்டு, தொழிலாளர்களை மீட்பது உறுதியான பிறகு நேரலை போட்டு மோடி அரசுக்கு ‘பெருமை’ சேர்க்கும் வேலையில் இறங்கின.

இரண்டாவது, இதில் கொண்டாடுவதற்கு எதுவுமே இல்லை. நிலவின் தென்துருவத்தில் முதல் செயற்கைகோளை ஏவிய நாட்டில், ‘தெற்குலக நாடுகளின் தலைவனை’ கொண்டிருக்கும் நாட்டில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாட்டில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தொழில்நுட்பம் ஏதுமில்லை.

இறுதியில், எலிகளை போல மலைகளில் வலைத்தோண்டி நிலத்துக்கு அடியில் உள்ள நிலக்கரியை எடுக்கும், எலிவலை சுரங்க தொழிலாளர்கள்தான் தங்கள் உயிரை பணயம் வைத்து 41 தொழிலாளர்களை மீட்டுள்ளார்கள்.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube