சென்னை மக்கள் உதவிக் குழு : 50 நாட்களைக் கடந்து தொடரும் நிவாரணப் பணிகள் !
08.04.2020 அன்று தொடங்கி இன்று வரை சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உதவி வழங்கி மக்களின் துன்பத்தில் பங்கெடுத்துள்ளோம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியிலிருந்து சுப. தங்கராசு நீக்கம் !
நில மோசடியில் ஈடுபட்ட சுப. தங்கராசு அவர்கள், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், சங்கத்தில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார் - புஜதொமு பத்திரிகைச் செய்தி
சபரிமலை பெண்கள் நுழைவை ஆதரித்து சென்னை ம.க.இ.க. சுவரொட்டி பிரச்சாரம் !
அனைத்து வயது பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்பது; சாதி தீண்டாமை போலவே, சாமி தீண்டாமையாகும்.
முகிலன் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி , சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
சூழலியல் போராளி தோழர் முகிலனை கண்டுபிடித்துத் தரக் கோரியும், தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
பாஜக கும்பலை விரட்டியடித்த அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் !
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை செய்ய வந்த பி.ஜே.பி. -யை எதிர்த்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு ! PRPC ஆர்ப்பாட்டம்
கோவிலை திருமண மண்டபமாக்கியது, பக்தர்களிடம் காணிக்கை எனும் பெயரில் கொள்ளையடிப்பது, நந்தன் நுழைந்த தெற்கு வாயிலில் தீண்டாமைச் சுவரை நிறுவியுள்ளது ஆகிய அக்கிரமங்களுக்கு முடிவு கட்டுவோம் வாருங்கள்.
தேசிய பேரிடரான கொரானா தடுப்பு நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் PRPC வழக்கு !
தேசிய பேரிடரான கொரானா நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் இரு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் கவிஞர் தோழர் – வரவர ராவை விடுதலை செய் ! ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !
'மக்கள் கவிஞர் தோழர்-வரவரராவ் உள்ளிட்ட 11 போராளிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்'. என ம.க.இ.க சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கண்டன அறிக்கை என பல்வேறு வழிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.
டி.வி.எஸ் நிர்வாகத்தின் குள்ளநரித்தனம் || சங்கம் கடந்து தொழிலாளர்களைத் திரட்டும் புஜதொமு
வர்க்க விரோத ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கத்தை கைக்குள் வைத்துக் கொண்டு தொழிலாளர்களை ஒடுக்கும் ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனம், புஜதொமு-வை முடக்க தொழிலாளர்களை பல்வேறு பகுதிகளுக்கு சிதறடிக்கிறது.
தொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் ! புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் !
தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடும் யமஹா, என்ஃபீல்டு, எம்.எஸ்.ஐ., ஈடான் தொழிலாளர்களது போராட்டத்தை ஆதரித்து புதுச்சேரி புஜதொமு நடத்திய ஆர்ப்பாட்டம்.
தோழர் லெனின் 150வது பிறந்தநாள் நிகழ்வு – புஜதொமு திருவள்ளூர் !
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டத்தில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக தோழர் லெனின் அவர்களின் 150வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டது.
சென்னை பல்கலை : கிருபாமோகனை மீண்டும் இணை ! மாணவர் போராட்டம் !
ஆர்.எஸ்.எஸ். கும்பலால் வெளியேற்றப்பட்ட மாணவர் கிருபாமோகனை சென்னை பல்கலைக்கழகத்தில் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என மாணவர்கள் போராட ஆரம்பித்துள்ளனர்.
சதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் !
போராடும் உரிமைக்காக நீண்டதொரு போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், மாணவர் சுரேந்திரன். மாணவர்கள் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க வெற்றி இதுவென்றால், அது மிகையல்ல.
மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !
பொதுமக்கள், எதிர்கட்சிகள், அமைப்புகளின் களப்போராட்டம் தான் இன்று நீதிமன்ற தீர்ப்பை மாற்றி இந்த வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. பொறுக்க முடியாமல் மேல்முறையீடு செய்கிறது குடி கெடுக்கும் அரசு.
புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் ! கடலூர் புமாஇமு போராட்டம் !
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அதனை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி புமாஇமு சார்பில் 28.08.2020 அன்று கடலூர் மாவட்டம் பூவானுர் கிராமத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.