Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 107

சிவப்பின் அடையாளம் சாம்பவான் ஓடை சிவராமன்

“தன் பெண்டு தன் பிள்ளை சோறுவீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன் !”

என்ற பாரதிதாசனின் வரிகள் மனதைத் தொட்டு செல்லும். இவ்வரிகளுக்கு ஏற்ப பலர் வாழ்ந்துக்கொண்டு இருந்தாலும் சேற்றில் முளைத்த செந்தாமரை போல தஞ்சை சாம்பவான் ஓடையில் உதித்து சிவப்பின் அடையாளமாகத் திகழ்ந்தவர் தான் சிவராமன்.

பண்ணையாளர்களின் அடக்குமுறை, பண்ணைத் தொழிலாளிகளின் அடிமைமுறை அதிகம் நிலவியதும், கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டதும் தஞ்சையில் தான். இதனை எதிர்த்து போராடியவர்களில் சாம்பவான் ஓடை சிவராமன், வாட்டாக்குடி இரணியன். இருவரும் 1940 களில் பொதுப்பணியில் ஈடுபடுகின்றனர். மனிதனில் ஏது மேல், கீழ், ஏன் இந்த வேற்றுமை, ஏன் இவ்வளவு அடிமை முறைகள் என்று பண்ணையடிமை முறைக்கு எதிராக போராடினர். இருவரும் ஒரே ஆண்டில்(1950 மே 3 சிவராமன், மே 5 இரணியன்) காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்..

படிக்க : திருநெல்வேலி மாநகராட்சி : கார்ப்பரேஷன் நிர்வாகமா? கார்ப்பரேட் நிறுவனமா?

1940 களில் கீழத் தஞ்சையில் முதன்முதலாக விவசாயச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தலைமுறை தலைமுறையாகப் பயந்து பயந்தே வாழ்ந்த பண்ணை அடிமைகளுக்கு சீனிவாச ராவ், சிவராமன், இரணியன் போன்றோர் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தனர்.

இதில் குறிப்பாக சிவராமனின் வாழ்க்கை ஒரு போராட்ட களம் அதில் சிவராமன் விதைக்கப்பட்டிருக்கிறான். வாழ்பவர்கள் மனங்களில் மறைந்தவர்கள் வாழ்வது தான் தியாகத்தின் வெளிப்பாடு, அப்படிப்பட்ட தியாகத்தினால் என்றுமே சாம்பவான் ஓடை சிவராமனை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.

செல்வமிக்க குடும்பத்திலும், சமூகத்தில் உயர்நிலையில் உள்ள குடும்பத்திலும் பிறந்தவன் சிவராமன். சிவராமனின் நோக்கம் சாதியப் படிநிலைகளை ஒழிக்க வேண்டும், உழைக்கும் மக்களை ஓர் அணியாக ஒன்றுதிரட்டி ஆதிக்கத்திற்கு எதிராக போராடுவதுமாகும். கம்யூனிஸ்ட் தோழர்களை சந்திப்பதற்கு முன் சாதிய அடக்குமுறைகளை செய்தவன் தான்  சிவராமன். தோழர்களின் டீ கடை விவாதங்களுக்கு பிறகு சாதிய ஆதிக்கத்தையும், அடிமைமுறைகளையும் அதன் அட்டூழியங்களையும் கண்டபிறகு கொதித்தெழுந்தான். இந்த சாதியப் படிநிலையை ஒழிப்பதற்கு தன்னையே அர்பணித்துக்கொண்டான்.

சுந்தரராசு, சுப்ரமணியம் மற்றும் பல தோழர்கள் சிவராமன் எனும் கம்யூனிஸ்ட் உருவாவதற்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக இருந்தார்கள். சிவராமன் அதிகமாக படிக்காவிட்டாலும் நிறைய புத்தகங்களை படித்தான் தோழர்கள் மூலம் பல தகவல்களை தெரிந்துக்கொண்டான்.

திக்கித் திக்கி பேசும் சிவராமனுக்கு அந்தத் திக்குகள் ஒரு தித்திப்பை ஏற்படுத்துபவையாக இருந்தது. சீனிவாச ராவ் போன்ற தோழர்களால் பட்டைதீட்டப்பட்டு மெருகேற்றப்பட்டான். பல ரகசியக் கூட்டங்களில் கலந்துக்கொண்டு நாட்டின் நலன் பற்றியும் சேரி மக்களின் மேன்மை பற்றியும் சிந்திக்க தொடங்கினான். முழுமையாக கம்யூனிஸ்ட் கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்பட்டான்.

சிவப்பின் தாக்கம்

நாட்டில் திருடன் கூட வெளிப்படையாக நடமாட முடியும், ஆனால் ஒரு கம்யூனிசக் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டவனால் சுதந்திரமாக நடமாட முடியாது. இதில் சிவராமன் விதிவிலக்கல்ல. தன் மனைவி, தன் குழந்தை என்று தன் குடும்பத்தை இழந்த பிறகும் தான் எடுத்துக்கொண்டக் கொள்கை நெறியில் சிறிதும் விலகாமல் உறுதியாக நின்றான்.

சகமனிதனை உயர்வு தாழ்வு என்றும், எப்போதும் வேறுபாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக பிண்ணப்பட்ட சிலந்திவலை தான் சாதி. இந்த சாதியென்னும் சாக்கடையை ஒழிக்க, பண்ணையார்களின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடி சேரிகளின் நலனை காத்து சேரிமக்களை தலைநிமிர செய்தான்.

மே தினத்தில் பண்ணையாரின் வீட்டிலிருந்து நெல்மூட்டைகளை எடுத்து சேரிமக்களுக்கு கொடுத்தது, குத்தகைதாரர்களுக்கு அதிக நெல் வழங்க வேண்டும், பண்ணைத் தொழிலாளிகளின் மீதான அடக்குமுறைகள் நிறுத்த வேண்டும் என்று சேரிமக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடினான்.

புதிய தளம் கம்யூனிசம்

மனிதன் மனிதனாக உணர்வது சகமனிதனை நேசிக்கும் போது தான், அதை கம்யூனிசக் கொள்கை சிவராமனுக்கு கற்றுக்கொடுத்தது. சமூக மாற்றத்திற்காகப் பயணிக்க அமைத்த தளமாக இருந்தது. இங்கு சாதி மறந்து அனைவரும் “தோழர்” என்னும் சொல்லில் ஒன்றிணைந்தனர். இதுவெல்லாம் சிவராமனை வேறு உலகிற்கு அழைத்து சென்றது. உழைக்கும் மக்களுக்கு நிலம் சொந்தம், உயர்வு, தாழ்வு இல்லை போன்ற சிந்தனைகள் தோன்றிய தளமாக கம்யூனிசக் கொள்கை இருந்தது.

மார்க்ஸ், லெனின் என்று கம்யூனிஸ்ட்களை தெரிந்துப் புது மனிதனாக உருவெடுத்தான்.  “கம்யூனிஸ்ட்கள் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றுமே செய்யவில்லை” என்று கூறிக்கொண்டு திரியும் கூட்டத்திற்கு சிவராமன், வாட்டாக்குடி இரணியன், களப்பால் குப்பு, சீனிவாச ராவ், ஆறுமுகம் போன்றவர்களை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர்கள் சாதியை ஒழிக்க போராடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது தான். ஆனால் அதையும் தாண்டி மனிதன் மனிதனாக வாழ்வதற்கு பொதுவுடமை கருத்தை மக்களிடையே விதைத்தவர்கள். சேரிமக்களின் நலனுக்காகவும் பொதுவுடமை மலர்வதற்காகவும் தன்னை அர்பணித்தத் தோழர்களில் சிவராமனும் ஒருவன். வீழவில்லை வாழ்கிறான்

“புரட்சியாளன் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறான்”

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும், சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும், பண்ணையடிமை முறைக்கு எதிராகவும் போராடியவன். சிவராமனை நினைக்கும் போது பகத்சிங் நினைவிற்கு வருகிறார். பகத்சிங் தூக்கிலிடப்படும் நிலையில் அவரை வெளியே கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது பகத்சிங்கிடம் “நீங்கள் சரி என்று கூறுங்கள் நாம் வெளியே தப்பித்துப் போய் விடலாம்” என்று கூறப்பட்டது. ஆனால் பகத்சிங் “நான் வெளியே வந்தால் ஒரு பகத்சிங். நான் தூக்குக்கயிறை முத்தமிட்டால் லட்சக்கணக்கான பகத்சிங் வருவார்கள்” என்றார். அதுபோல தான் சிவராமனும் தனக்கு பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் உருவாவார்கள் என்று உயிரையும் நீத்தார்.

எப்போது நாம் பிறருக்காக வாழ்கிறோமோ அப்போது நம் எரிந்துப் போன சாம்பலின் மீது சூடானக் கண்ணீர் துளிகள் சிந்திக்கொண்டே இருக்கும். இந்த வரம் சிவராமனுக்கு கிடைத்ததில் ஆச்சரியமில்லை. ஏனெனில், இவன் சேரியின் மேன்மைக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்டான் பொதுவுடமைக் கொள்கைக்குத் தன்னையே ஒப்படைத்தான். ஆதலால், அவனது சாம்பல் என்றுமே சூடாகத் தான் இருக்கும்.

இதுவா மக்களுக்கான அரசு?

அன்று சமூக மாற்றத்திற்காக பயணித்த இந்தப் படகைத் துளையிட்டு நீரில் மூழ்கடித்தது யார் தெரியுமா? இவன் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியவன் தான் ஆனால், அப்போது இவன் கொல்லப்படவில்லை. 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம்(அதிகார மாற்றம்) பெற்றது என்று சொல்லி கொள்கிறோமே, எந்த நாட்டை குடியரசு நாடு என்று சொல்கிறோமோ அங்கு அனைவரும் சமம் என்று நாம் சொல்கிற நாடு தான் அன்று பண்ணையார்களுக்கு சேவகம் செய்யும் நாடாகவும் இருந்தது.

படிக்க :உ.பி இல்லை! தமிழ்நாட்டில் முஸ்லீம் வெறுப்பு! | வீடியோ

இதை தட்டிக்கேட்டான் சிவராமன். அவன் உடலை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தது, ஆம் இந்நாட்டின் விடுதலைக்காக யாரெல்லாம் போராடுகிறார்களோ அதுவும் இந்த கட்டமைப்பையே மாற்றியமைக்க வேண்டும் என்று போராடுபவர்களுக்கு நிச்சயம் துப்பாக்கி குண்டுகள் காத்திருக்கிறது என்பதை தான் ஒவ்வொரு போராளிகளின் வாழ்க்கையும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. உரிமைகளுக்காகப் போராடும், போராடக் கூடிய மக்களை நசுக்கும் இந்த அரசு யாருக்கானது? நிச்சயம் மக்களுக்கானது கிடையாது. அப்படி இருந்திருந்தால் போராளிகளின் நெஞ்சை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருக்காது.

முடியவில்லை ஆரம்பம்

போராளிகளின் இரத்தம் எங்கெங்கு சிந்தப்படுகிறதோ அங்கெல்லாம் புதிய போராளிகள் துளிர்விட்டுகொண்டுத் தான் இருக்கிறார்கள். அதைபோல தான் சிவராமன் ஓர் முடிவல்ல நாளை நாம் அடைய போகும் பொன்னுலகிற்கான ஆரம்பம். அவன் வாழ்க்கையும் நமக்கு அதைதான் கற்றுக்கொடுக்கிறது. மரங்கள் வெட்டப்பட்டாளும் வேர்களின் ஈரம் காய்வது கடினம் தான். சிவராமன் வேராக தான் இருப்பான் அவன் தியாகம் என்றும் சுடர்விட்டு எரிந்துக் கொண்டே இருக்கும், இருந்து கொண்டே இருக்கும்.

– மணிவன்னண்
(ச. சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய  “இரட்டைப் புதினங்கள் சாம்பவான் சிவராமன்” புத்தகத்தை வாசித்ததிலிருந்து கிடைத்த அனுபவம்)

திருநெல்வேலி மாநகராட்சி : கார்ப்பரேஷன் நிர்வாகமா? கார்ப்பரேட் நிறுவனமா?

வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி ஓடும் நிலத்தில் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்றால் இது யார் செய்த பிழை?

ஒரு நாளைய நெல்லை மக்களின் தண்ணீர் தேவை 70.51 மில்லியன் லிட்டர். ஆனால் நெல்லை மாநகராட்சி வினியோகம் செய்வதோ 48 மில்லியன் லிட்டர் மட்டும் தான்! பல ஆண்டுகளாக இந்த தண்ணீர் தட்டுப்பாடு நிலவினாலும் இதை மாநகராட்சி சரி செய்யாதது மாநகராட்சியின் தவறு. இதுபோக கோக் நிறுவனத்திற்கு தாமிரபரணியிலிருந்து அளவின்றி தண்ணீர் தாரைவார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் மறைத்து தற்போது 24 மணிநேரம் தண்ணீர் வினியோகம் செய்யப் போவதாக மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அப்படி வினியோகம் செய்யப்போகும் ஒவ்வொரு லிட்டர் தண்ணீருக்கும் மீட்டர் பொருத்தி அதன்படி மக்களிடமிருந்து பணம் வசூல் செய்யப்போகிறது நெல்லை மாநகராட்சி. மீட்டர் பொருத்தும் பணியும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

படிக்க : மவுரியர் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் புதிய கற்கால சமூகம் நிலவியதா ?

மின்சாரம் இயற்கையாக உருவாவதல்ல. அது செயற்கையாக உருவாக்கப்பட்டு அரசால் வினியோகிக்கப்படுகிறது. மக்கள் பயன்படுத்தும் அளவின்படி அதற்கு பணம் வசூலிக்கப்படுகிறது. அதிலும்  மக்களிடம் கொள்ளையடிக்கப்படுகிறது என்பது தனிக்கதை. ஆனால், நீரை யாரும் தயாரிப்பதில்லை. அது இயற்கையின் கொடை. அதை முறையாக, சுகாதாரமாக வினியோகம் செய்ய மாநகராட்சிக்கு என்ன கேடு?

மக்கள் தவறாது வரி செலுத்துகிறார்கள். அதுபோக, 6 மாதத்திற்கு ஒரு முறை தண்ணீர் தீர்வை என்கிற பெயரில் மக்களிடம் குறிப்பிட்ட தொகை வசூல் செய்யப்படுகிறது. இதை முறையாக கையாண்டாலே தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி அனைவருக்கும் 24 மணிநேரமும், சுத்தமான தண்ணீரை மாநகராட்சியே வழங்க முடியும்.

ஆனால், நெல்லை மாநகராட்சி தற்போது கொண்டு வந்திருக்கும் இந்த திட்டத்தின் பின்னால் சதி ஒளிந்திருக்கிறது. அது தண்ணீரை தனியார்மயமாக்கும் சதி!

அக்குவாஃபினா, கின்லே, பிஸ்லெரி போன்ற பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு, இந்த அரசும் துணை நிற்கிறது. நெல்லை மாநகராட்சியின் இந்த திட்டம் மேற்கூறிய நிறுவனங்களுக்கு இன்னும் தேன் வார்த்ததைப் போல இருக்கப்போகிறது. குப்பை அள்ளுவது முதல் விமானம் தயாரிப்பு வரை அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய, மாநில அரசுகள் தண்ணீரையும் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது.

பல்வேறு பெயர்களைக் கொண்ட குழுக்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை ஒரே ஒப்பந்த நிறுவனத்திற்கு தள்ளி அவர்களது கொஞ்ச, நஞ்ச உரிமைகளையும் துடைத்தழிக்கத் துடித்துக் கொண்டிருந்தது நெல்லை மாநகராட்சி. தூய்மைப் பணியாளர்களின் அஞ்சாத போராட்டத்தால் அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குடிக்கும் தண்ணீருக்கு மீட்டர் பொருத்துகிறேன் என்று இப்போது தண்ணீரை நோக்கி பாய்ந்துள்ளது நெல்லை மாநகராட்சி. சுகாதாரமான குடிநீர் தருகிறேன் என பின்னாலயே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வரப்போகிறது கார்ப்பரேட் நிறுவனங்கள். தனியார்மய ஒப்பந்தத்தின்படி செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகளும், நீதிமன்றமும் இதை தடுத்து நிறுத்தாது. மக்கள் தான் இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

படிக்க : மகா புஷ்கரம் : தாமிரபரணி அறியாத புரட்டு வரலாறு !

இந்த திட்டம் கொண்டு வருகிறோம் என்று மக்களிடம் மாநகராட்சி சார்பில் கருத்து கேட்கப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களிடம் கேட்கப்பட்டதா? கவுன்சிலர்களுக்கு இது சம்மதமா? மக்கள் இதை கேள்வி கேட்க வேண்டும். ஓட்டுப்போட்ட கவுன்சிலரையும் அழைத்துக் கொண்டு மாநகராட்சியை முற்றுகையிட வேண்டும். வீட்டிற்கு மீட்டர் பொருத்த அனுமதிக்கக் கூடாது. களத்தில் இறங்கிப் போராட வேண்டும். அப்படி போராடாமல் ஒதுங்கிப் போனால் நாளைய தலைமுறை கையில் பணமின்றி குடிக்க நீரின்றி அல்லாடும் நிலைக்கு தள்ளப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படியான மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதும், துணை நிற்பதும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமை!

தகவல்:
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்

உ.பி இல்லை! தமிழ்நாட்டில் முஸ்லீம் வெறுப்பு! | வீடியோ

UP இல்லை! தமிழ்நாட்டில் நடந்த அவலம்!
Kovai ஆசிரியரின் கொடூர செயல்! Islam மாணவிக்கு நடந்த கொடூரம்

நன்றி: நக்கீரன்

ஹலால் சான்று பெற்ற பொருட்கள் விற்க தடை விதித்த யோகி!

த்தரப்பிரதேச மாநிலத்தில் ஹலால் சான்றிதழ் பெற்ற அனைத்து விதமான பொருட்களுக்கும் நவம்பர் 18-ஆம் தேதி அதிரடியாக தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாசிச அரசு. இது சிறுபான்மை முஸ்லிம் மக்களை ஒடுக்க பாசிச கும்பல் மேற்கொள்ளும் வெறுப்பு நடவடிக்கையாகும்.

உ.பி.யில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஹலால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உ.பி.யில் ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப் பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைத்திருக்கவும், விநியோகிக்கவும் தடை விதிக்கப்படுகிறது என ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

படிக்க: கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது பொய்வழக்கு! | தோழர் ரவி

இதனடிப்படையில் பால் பொருட்கள், சர்க்கரை, பேக்கரி பொருட்கள், சமையல் எண்ணெய், மருந்து உபகரணங்கள், அழகு சாதனப்பொருட்கள் போன்ற ஹலால் சான்று பெற்ற அனைத்து பொருட்களுக்கும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சைலேந்திர குமார் ஷர்மா என்பவர், “ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த மக்களிடையே தங்களது விற்பனையை அதிகப்படுத்துவதற்காக, சில்லறை வியாபாரத்தில் ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களை விற்க தொடங்கியுள்ளனர்” என புகார் அளித்தார். இவரது புகாரை அடிப்படையாகக் கொண்டு நவம்பர் 17-ஆம் தேதி லக்னோ போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னையிலுள்ள ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட், டெல்லியின் ஜமீயத் உலெமா இந்த் ஹலால் டிரஸ்ட், மும்பையின் ஹலால் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் ஜமியத் உலெமா உள்ளிட்ட நிறுவனங்கள் சட்டவிரோதமாக ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களை விற்பதாக லக்னோ போலீசு வழக்கு பதிந்துள்ளது. இதைதவிர்த்து, அடையாளம் தெரியாத உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீதும், தேசவிரோத செயல்களில் ஈடுபடுடோர் மீதும், பயங்கரவாத அமைப்பினருக்கு நிதிவுதவி செய்வோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஹலால் நிறுவனங்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 120-பி, பிரிவு 153-ஏ (இரு பிரிவினரிடையே பகையை வளர்ப்பது), பிரிவு 298 (மத உணர்வுகளை புண்படுத்தும் விதமான வார்த்தைகள் உபயோகிப்பது), பிரிவு 384 (பணப்பறிப்பு), பிரிவு 467 (ஏமாற்றுதல்), பிரிவு 505 (பொதுவில் அவதூறுகளை உபயோகிப்பது) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதேநேரத்தில், அம்மாநில பிஜேபி செய்தித் தொடர்பாளர், ஹலால் என்று குறிக்கப்பட்டிருக்கும் சொல்லானது மத உணர்வை தூண்டுவதாகவும் ஒரு சமுதாயத்தை பற்றி பிரச்சாரம் செய்வதாகவும் இருப்பதாக கூறிய சிலமணி நேரத்திலேயே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, “உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கு முறையான அனுமதி இல்லாமல் ஹலால் சான்றளிக்கப்பட்டு விற்கப்படுவதை யோகி ஆதித்யநாத் தடுத்து நிறுத்துவார். ஹலால் சான்றளிக்கப்பட்ட எந்த பொருளும் உ.பி.யில் இனி விற்கப்படாது” என ஆணவமாக பேசியவர், “ஹலால் மூலம் மதப் போர்வையில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே கட்டுப்பாடற்ற பிரச்சாரம் செய்யப்படுகிறது” என்று முஸ்லிம் மக்களை தாக்கிப் பேசினார்.

படிக்க: திமுகவுக்கு பாடம் எடுக்க மருதையனுக்கு தகுதி உள்ளதா? | Part 3 | தோழர் மருது

ஹலால் செய்யப்பட பொருட்கள் என்றபெயரில் மத பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்று கூச்சலிடுகிறது சங்கிக்கூட்டம். ஆனால், பதஞ்சலி என்ற நிறுவனத்தின் மூலம் இந்துமதவெறியை பிரச்சாரம் செய்யும் பாபா ராம்தேவ் பற்றி வாய்த்திறக்காது. அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களையும் மருந்துகளையும் கவர்ச்சிகரமாக விற்கும் செயலையும் கண்டிக்காது. ஏனெனில், சங்கிகளின் நோக்கம் முஸ்லீம் வெறுப்பு மட்டுமே.

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவந்துள்ளது. ஹிஜாப் தடை, பாங்கு ஓதத்தடை, லவ் ஜிகாத், நில ஜிகாத், வெள்ளம் ஜிகாத் (flood jihad), ஹலால் ஜிகாத் என அடுத்தடுத்து வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது காவிக்கும்பல்.

ஆதினி

குமுறும் மேல்மா கிராம மக்கள் | கள வீடியோ

குமுறும் மேல்மா கிராம மக்கள் | கள வீடியோ

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது பொய்வழக்கு! | தோழர் ரவி

கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது பொய்வழக்கு! | தோழர் ரவி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

திமுகவுக்கு பாடம் எடுக்க மருதையனுக்கு தகுதி உள்ளதா? | Part 3 | தோழர் மருது

திமுகவுக்கு பாடம் எடுக்க மருதையனுக்கு தகுதி உள்ளதா? | Part 3 | தோழர் மருது

இறுதி பாகம் – காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

திருவாரூர் அரசு மருத்துவமனையின் அவலநிலை – மக்கள் அதிகாரம் மனு

நவம்பர் 20 அன்று, திருவாரூர் மருத்துவமனையில் பழுதடைந்த எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI SCAN) எடுக்கும் இயந்திரத்தை சரி செய்து தருமாறு மக்கள் அதிகாரம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருவாரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு தினம்தோறும் 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். அதில், பெரும்பாலானோர் ஏழை, எளிய உழைக்கும் மக்கள். திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் நாகை, மயிலாடுதுறை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி போன்ற சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து மக்களும் இந்த அரசு மருத்துமனையை நம்பியே வாழ்க்கை நடத்துகிறார்கள்.

படிக்க : ”ஜி.எஸ்.டி வரி” என்பதே ஒரு மோசடி! அதை வைத்து கொள்ளையடிக்கும் குற்றவாளிகள்!

ஆனால், இந்த மருத்துமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI SCAN) இயந்திரம் ஓராண்டிற்கும் பழுதடைந்திருப்பதால், ஏழை மக்கள் ஸ்கேன் (SCAN) எடுக்கவேண்டும் என்றால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் அவலநிலை ஏற்படுகிறது. ஆனால், தனியார் மருத்தவமனைகளில் ஸ்கேன்(SCAN) எடுப்பதற்கு ரூ.1000 முதல் 4000 வரை பணம் கேட்கிறார்கள். பணம் இல்லாத, இலவச மருத்துவத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் ஏழை நோயாளிகளால் என்ன தான் செய்யமுடியும் மருத்துவம் பார்க்க முடியாமல் அவதிப்படுவதை தவிர! மருத்துவ தனியார்மயத்தை நோக்கி ஏழை மக்களை தள்ளுகிறது திருவாரூர் அரசு மருத்துவமனை என்பதே உண்மை.

அதுமட்டுமின்றி, மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை, நோயாளிகளுக்கான படுக்கைகள் பற்றாக்குறை போன்றவற்றுடன் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் தரமற்ற நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும், நோயாளிகளின் வாகனங்களுக்கு கண்காணிப்புடன் கூடிய நிறுத்துமிடமில்லாமையால், வாகனங்கள் திருடபடுவதாக குற்றச்சாட்டை மக்கள் முன்வைக்கின்றனர்.

படிக்க : உலகக் கோப்பை: உண்மையில் தோற்றது மோடி கும்பல்தான்! | தீரன்

ஓராண்டாக பழுதடைந்திருக்கும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI SCAN) இயந்திரத்தை உடனே சரிசெய்ய வேண்டும் என்றும், மேற்கூறிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆசாத்,  மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் லெனின், மாவட்டப் பொருளாளர் தோழர் முரளி மற்றும் பல தோழர்கள் முன்னிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

  • திருவாரூர் அரசு மருத்துவமனையின் எம்.ஆர்.ஜ ஸ்கேன் (MRI SCAN) இயந்திரத்தை உடனே சரி செய்து கொடுத்திடுக!
  • மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்திடுக!
  • மருத்துவமனையை தரமிழக்க செய்து மருத்துவத் தனியார்மயத்தை ஊக்குவிக்காதே!
  • ஏழை மக்களுக்கு இலவச தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதிபடுத்திடுக!

மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
தொடர்புக்கு:- 6383461270

”ஜி.எஸ்.டி வரி” என்பதே ஒரு மோசடி! அதை வைத்து கொள்ளையடிக்கும் குற்றவாளிகள்!

narendra-modi-gst

மோசடிக்கு அழைத்து செல்லும் ஜி.எஸ்.டி வரி!

ஜிஎஸ்டி நடைமுறைபடுத்திய பின்பு பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று கூறிவந்த நிதியமைச்சர் முதல் மோடியின் விசிறிகள் வரை இந்த மோசடிக்கு என்ன சொல்ல காத்துருக்கின்றனர் என்று தெரியவில்லை.

“எளிமையான வரி” மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என்று முழங்கிகொண்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு “ஒரே நாடு, ஒரே வரி” என்னும் வரிக்கொள்கைக் கொண்டு வந்தது ஒன்றிய அரசு. எந்தவொரு வணிகத்தின் விற்பனை வரம்பும் ரூ.40 லட்சம், ரூ.20 லட்சம் அல்லது ரூ.10 லட்சத்தை தாண்டினால், வணிக உரிமையாளர் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் தன்னை ஒரு சாதாரண வரிக்கு உட்பட்ட நபராக பதிவு செய்ய வேண்டும். சில வணிகங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு கட்டாயமாகும்.

ஜிஎஸ்டி பதிவு இல்லாமல் ஒரு நிறுவனம் வணிகத்தை மேற்கொண்டால் அது குற்றமாக கருதப்படும். உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் என பல்வேறு வகையிலான ஜிஎஸ்டி வரி விதிப்பட்டது. இதில், பின்னலாடைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. பின்னலாடை நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி அடையாள எண் (GSTIN) கட்டாயமாக்கப்பட்டது.

படிக்க : உலகக் கோப்பை: உண்மையில் தோற்றது மோடி கும்பல்தான்! | தீரன்

ஆதனால், திருப்பூரில் ஏழைப் பெண்கள் பெயரில் போலி ஜிஎஸ்டி கணக்கு தொடங்கி, கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் செய்து வரி ஏய்ப்பு மோசடி நடத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஏழைப்  பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத்  தொகை பெற விண்ணப்பித்து, அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னணியில் இந்த மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், நடராஜா தியேட்டர் அருகே நொய்யல் ஆற்றங்கரை, பெத்தி செட்டிபுரம் பகுதியில் குடியிருந்து வரும் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். தங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த அப்பெண்கள், பொது இ-சேவை மையத்திற்குச் சென்று எதற்காக தங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்று விசாரித்துள்ளனர்.

இதில், 84 பெண்களின் பெயரில் நிறுவனங்கள் நடத்துவதாலும், ஒவ்வொருவரும் பணப்பரிமாற்றம் செய்து ஜிஎஸ்டி கணக்கு வைத்திருப்பதாலும் அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியில்லை என்று விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

சாதாரண பனியன் தொழிலாளர்கள், கூலி வேலைக்குச் செல்லக் கூடியவர்கள் என்ற ஏழ்மை நிலையில் இருக்கும் நபர்களுக்கு ஜிஎஸ்டி கணக்கு இருப்பது வேடிக்கையாக உள்ளது.

நீர்நிலைப் புறம்போக்குகளில் குடியிருக்கும் அவர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக பல்லடத்தைச் சேர்ந்த சிவக்குமார், கார்வேந்தன், விஜயகுமார், தமிழ்செல்வன் என்ற கும்பல் மேற்படி பெண்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரம், பான் அட்டை ஆகியவற்றை கேட்டுப் பெற்றுள்ளனர்.

எனவே, இவர்கள்தான் தங்கள் பெயரில் போலி நிறுவனங்கள் தயார்செய்து ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று அப்பெண்கள் மேற்கூறிய நபர்கள் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, பின்னலாடை சரக்குகளுக்கு 5 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பு  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருந்தாலோ, 10 கிலோ மீட்டருக்கு மேல் சரக்குகளை வாகனங்களில் எடுத்துச் சென்றாலோ ‘இ-வே பில்’ எனப்படும் மின்னணு பில் உருவாக்கப்பட வேண்டும். திருப்பூரில் வணிகவரித்  துறையினர் சோதனை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜிஎஸ்டி கணக்கு,  இ-வே பில் காட்டி தப்புவதற்காக, இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

படிக்க : 40 தொழிலாளிகளை காப்பாற்ற துப்பில்லாத மோடி அரசு! | வெற்றிவேல்செழியன்

இதுமட்டுமின்றி, 2020-21 காலாண்டில் மட்டும் 35,000 கோடி மோசடி நடந்துள்ளது. போலி விலைப்பட்டியல், மின்சார கட்டணம் போன்ற வழிகளில் இதுவரை 8,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.62,000 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி எனும் பெயரில், சிறு, குறு தொழில் நிறுவனங்களை அழித்து, பெரும் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி, வரி சலுகைகள் என உழைக்கும் மக்களின் மீது மிகப்பெரும் ஒடுக்குமுறையை நிகழ்த்தி கொண்டிருக்கிறது ஒன்றிய மோடி அரசு. மறுபுறம், இப்படிபட்ட மோசடி பேர்வழிகளையும் உருவாக்குகிறது.

லஞ்சம், ஊழலில் ஊரிப்போயுள்ள இந்த அரசு அதிகாரிகள் இதை கண்டுகொள்ள போவதில்லை. எனவே உழைக்கும் மக்களாகிய நாம்தான் மக்களுக்கு விரோதமான ஜிஎஸ்டி வரிமுறையை கேள்வியெழுப்ப வேண்டும்.

”வேண்டாம் ஜிஎஸ்டி; வேண்டும் ஜனநாயகம்” என முழங்குவோம்!
இதனை மக்கள் முழக்கங்களாக்குவோம்!

ஆதன்

உலகக் கோப்பை: உண்மையில் தோற்றது மோடி கும்பல்தான்! | தீரன்

உலகக் கோப்பை: உண்மையில் தோற்றது மோடி கும்பல்தான்! | தீரன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

40 தொழிலாளிகளை காப்பாற்ற துப்பில்லாத மோடி அரசு! | வெற்றிவேல்செழியன்

40 தொழிலாளிகளை காப்பாற்ற துப்பில்லாத மோடி அரசு! | வெற்றிவேல்செழியன்

சுரண்டும் அரக்கர் பணம் சேர்க்க சுரங்கம் சென்ற தொழிலாளிகளே
மனைவி மக்கள் பசி தீர்க்க சுரங்க இருளில் பசியால் தவிக்கிறீகளே
ஆன்மீக சுற்றுலாவிற்கு உங்களை குகைக்குள் தள்ளிவிட்டதே இந்த கொடிய அரசு
உங்களை மீட்க துப்பில்லாமல் சந்திராயனை பார்த்து தேச பெருமிதம் பேசுகிறதே

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவசாயிகள் என்ன தீவிரவாதிகளா? || திமுக அரசை சாடும் வெற்றிவேல்செழியன்

விவசாயிகள் என்ன தீவிரவாதிகளா? || திமுக அரசை சாடும் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

எல் நினோ: ஏழை மக்கள் எதிர்நோக்கவிருக்கும் பட்டினி அபாயம்!

ல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக ஆசியாவில் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது.

சர்க்கரை ஏற்றுமதியில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்தியா, தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகளில் எல் நினோ காரணமாக வறண்ட வானிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்நாடுகளில் கரும்பு உற்பத்தி பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது; வரத்து குறைவால் சர்க்கரையின் விலையும் உயர்ந்துள்ளது.

சர்க்கரையின் உலகளாவிய இருப்பு என்பது கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது மிகவும் குறைந்து வருகிறது. உணவிற்கு மட்டுமல்ல எத்தனால் போன்ற உயிரி எரிபொருள்கள்(biofuel) உற்பத்திக்கும் சர்க்கரை அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் விலையேற்றமும் பற்றாக்குறையும் பல துறைகளில் பெரிதளவில் பாதிப்பை உண்டாக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

படிக்க : உலகக் கோப்பை: தேசவெறிக்கு நாங்கள் பலியாக மாட்டோம்!

இந்தியாவில் வறண்ட வானிலை கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது. இதனால், கரும்பு உற்பத்தியில் முக்கிய மாநிலமாக இருக்கக் கூடிய மகாராஷ்டிரத்தில் கரும்பு சாகுபடி குறைந்து சர்க்கரை உற்பத்தி 8 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதே காரணத்தால், தாய்லாந்து நாட்டிலும் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில்(2023) 9.3 கோடி மெட்ரிக் டன் கரும்பு அறுவடை செய்யப்பட்ட நிலையில், வரும் ஆண்டில்(2024) அது 7.6 கோடி மெட்ரிக் டன் ஆக குறையும் என தாய்லாந்து கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் நரதிப் ஆனந்தசுக் தெரிவிக்கிறார்.

நடப்பு ஆண்டில் உலகளாவிய சர்க்கரை உற்பத்தி மேலும் 2 சதவிகிதம் குறையும் என ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட உற்பத்தியில் சுமார் 35 லட்சம் மெட்ரிக் டன் குறைவு என்கிறது.

இதேபோல், உலகின் சர்க்கரை ஏற்றுமதியில் பெரியளவில் பங்காற்றும் நாடான பிரேசிலில், கரும்பு அறுவடை கடந்த ஆண்டைவிட 20 சதவிகிதம் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதுவும் தற்போது ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையை உடனடியாக தீர்த்துவிடாது. அடுத்தாண்டின்(2024) இறுதியில்தான் இந்த பற்றாக்குறையை ஓரளவு சரிசெய்ய முடியும். அதுவரை சர்க்கரை இறக்குமதிக்கு பிரேசிலை நம்பியிருக்கும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான நாடுகளுக்கு மோசமான நிலைமைதான்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிற்கு 98 சதவிகித சர்க்கரை இறக்குமதி மூலம்தான் பெறப்படுகிறது. 21 கோடி மக்கள் வசிக்கும் அந்நாட்டின் ஏழை, எளிய உழைக்கும் மக்களின் முக்கிய உணவாக இருப்பது ரொட்டிதான். அந்த ரொட்டிக்கு தேவையான முக்கிய மூலப்பொருளே சர்க்கரைதான். சர்க்கரையின் விலை உயர்வால், ரொட்டி உற்பத்தியை பாதியாகக் குறைக்க முடிவு செய்துள்ள ரொட்டி விற்பனையாளர்கள், “இது மிகவும் மோசமான சூழ்நிலை” என்று வேதனை பெருமூச்சுவிடுகின்றனர். இதனால், அந்நாட்டு ஏழை, எளிய மக்கள் பட்டினி அபாயத்தை எதிர்நோக்கவிருக்கின்றனர்.

படிக்க : உலகக் கோப்பை: மோடி தோல்வி; முகமது ஷமிகள் வெற்றி!

இப்படி, உலகளாவிய உணவு சங்கிலி பாதிப்பதற்கு முக்கிய காரணம் எல் நினோ எனப்படும் காலநிலை மாற்றமாகும். எல் நினோ என்பது இயற்கையாக கடல் பரப்பிலும் அதன் மேல்பகுதியிலுள்ள வான் பரப்பிலும், வெப்ப நிலையில் ஏற்படும் உயர்வாகும். எல் நினோவும், லா நினாவும் (வெப்பநிலை குறைவு) இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிமாறி ஏற்படுகின்றன. 2020-ஆம் ஆண்டிலிருந்து லா நினா தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், புவியின் வெப்ப நிலை உயர்வு காரணமாக லா நினா தொடங்கிய பின்னரும் பூமியின் சராசரி வெப்பநிலை உயர்வு குறையவில்லை. அதாவது, பூமி தனது வெப்பநிலை உயர்வை சரிசெய்ய முடியாத நிலையை அடைந்திருக்கிறது.

இத்தகைய காலநிலை பேரழிவிற்கான மூல முதல் காரணம், முதலாளிகள் தங்களது லாபவெறிக்காக அடர்ந்த காடுகளை அழித்துவருவதும், இயற்கைக்கு கேடான தொழிற்சாலைகளை அதிகரித்துவருவதும்தான். மனிதனுக்கும் இயற்கைக்கும் விரோதமான முதலாளித்துவத்திற்கும் அதனை கட்டிக்காக்கும் ஆளும்வர்க்கத்திற்கும் முடிவு கட்டினாலொழிய காலநிலை மாற்றத்திற்கும் பட்டினி சாவுகளுக்கும் முடிவு கட்டமுடியும்.

ஆதினி

காவிமயமாக்கப்பட்டு வரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்!

டந்த செப்டம்பர் 17-ஆம் தேதி அன்று திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு Deepotsav 23 என்னும் பெயரில் ஆக்கிரோசமாக வில்லேந்திய காவி நிற இராமன் உள்ளிட்ட இந்துத்துவ அடையாளங்களை வைத்தும், ஜெய் ஸ்ரீ ராம் வாசகம் மற்றும் அயோத்தி ராமர் கோவிலைக் கோலங்களில் வரைந்தும், துணைவேந்தர் முன்னிலையில் யாகம் வளர்த்து பார்ப்பனிய முறையில் பூஜையும் நடத்தியுள்ளனர்.

இதுபோன்று, தொடர்ச்சியாக ஜனநாயகத்திற்கு எதிரான வேலைகளையும் ஆர்.எஸ்.எஸ்  சித்தாந்தத்தையும் மாணவர்கள் மத்தியில் திணிக்கும் வேலைகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது.

படிக்க : உலகக் கோப்பை: தேசவெறிக்கு நாங்கள் பலியாக மாட்டோம்!

ஒரு பக்கம் இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்ட ஆட்களைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்து இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்களைத் திட்டமிட்டே ஒழித்துக் கட்டும் வேலை செய்து வரும் சங்கிக் கும்பல், மற்றொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை மாணவர்களிடம் புகுத்தி, மாணவர்கள் மத்தியில் பிரிவினைகளைத் தூண்டிவிட்டு வருகிறது.

ABVP மாணவர் அமைப்பு வெளியிட்ட அறிக்கை

மதச்சார்பற்ற முறையில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்களில் இவ்வாறு திட்டமிட்டே ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைத் திணித்து பல்கலைக்கழகத்தைப் பார்ப்பனமயமாக்கி வருகிறது ஆர்.எஸ்.எஸ் சங்கி கும்பல்.

பல்கலைக்கழகத்தில் பார்ப்பனிய முறைப்படி பூஜை நடத்தியதோடு மட்டுமல்லாமல், பெரியாரை “காலனிய முதலாளிகளின் காலணிகளை நக்கிய பெரியார் ராமசாமி நாயக்கர் எனவும் இந்த மண்ணின் இருண்ட இருள்” என இழிவாகப் பேசி அறிக்கை வெளியிட்டுள்ள ஏபிவிபி மாணவர் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிக்க : பாலஸ்தீன குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவது குற்றமாம்!

தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மண்ணிற்கும் எதிராக வேலை செய்யும் துணைவேந்தரை மக்கள் அதிகாரம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் மதக் கலவரங்களைத் தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக, ஏபிவிபி போன்ற சங்கப் பரிவாரக் கும்பல்களைத் தமிழ்நாட்டில் தடைசெய்ய வேண்டும்.

மக்கள் அதிகாரம்,
திருவாரூர். 6383461270

உலகக் கோப்பை: தேசவெறிக்கு நாங்கள் பலியாக மாட்டோம்!

ரசியல் அரங்கில், “ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி” கும்பல், தோல்வி முகத்தில் சென்று கொண்டு இருக்கும் தருணத்தில் அதை தூக்கி நிறுத்துவதற்கான ஒரு நெம்புகோளாக! பாசிச கும்பல் மேற்கொண்ட ‘ஜி-20 மாநாடு’ தொடங்கி, ‘சந்திராயன்-3 ஏவுகனை நிலவின் தென் துருவத்தில்’ இறங்கியது. மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா போன்ற வரிசையில், அடுத்ததாக ‘உலகக் கோப்பையையும்’ அதில் இந்திய அணி வெற்றி பெற்றால், ‘தேசிய வெறி’ ஊட்டி அந்த பிம்பத்தை தூக்கி முன் நிறுத்தி; தனது அரசியல் ஆதாயத்திற்கு ‘துருப்புச் சீட்டாக’ பயன்படுத்த பெரு முயற்சி செய்தது. ஆனால் நடந்ததோ வேறு!

என்னதான்; அகமதாபாத் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டத்தில் ரசிகர்கள் போர்வையில் சங்கிகள் புகுந்து “ஜெய் ஸ்ரீ ராம்” என பாகிஸ்தான் வீரர் ‘முகமது ரிஸ்வானை’ பார்த்து வெறிக் கூச்சலிட்டிருந்தாலும், நாங்கள் எல்லாம் மதச்சார்பின்மையும், சகோதரத்துவத்தையும் விரும்புகிறவர்கள்.

சங்கிகளே! உங்களுடைய ‘மதவெறிக்கும் தேசவெறிக்கும் ஒருபோதும் பலியாக மாட்டோம்’ என்பதை உணர்த்தும் விதமாக, அதை மெய்ப்பித்தும் காட்டியுள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் உடை அணிந்து தங்களது சகோதரத்துவத்தை வெளிபடுத்தும் இளைஞர்கள்
இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காண வந்த ரசிகர்கள் – வெறுப்பு பிரச்சாரங்களுக்கு ஆட்படாத கூட்டமிது
பாகிஸ்தான் வீரர்களை வரவேற்கும் தமிழ்நாடு – வெறுப்பைத் தூண்டிய சங்கிகள் எங்கே! வரவேற்கும் சகோதரி எங்கே! சங்கிகளே இது தமிழ்நாடு!
இந்திய கிரிக்கெட் வீரரின் ரசிகராக இருக்கும் பாகிஸ்தானிய பெண்
சங்கிகளை எள்ளி நகையாடும் ஜெர்சி இது!
இஸ்லாமியராக இருந்தாலும் தேசவெறியூட்ட ஸ்டேடியம் வந்துட்டேன் மண்டியிட்டுதானே ஆகவேண்டும் – மோடி
முகமது ஷமியை தழுவும் ரோகித் – சங்கிகள் இல்லாத சகோதரத்துவ சமத்துவ இந்தியா உருவாகட்டும்!
பாகிஸ்தான் வீரருக்கு தனது ஜெர்சியை பரிசாக அளிக்கும் விராட்
இந்தியா – பாகிஸ்தான்: நாங்கள் அனைவரும் நண்பர்கள் – இந்த காட்சியை பார்த்து சங்கிகள் சாகட்டும்!
அண்டை நாட்டுடன் நாங்கள் நட்புறவு பேணுவோம்! இந்திய ரசிகரின் பதாகை சொல்வது தேச வெறியூட்ட திட்டமிட்ட சங்கிகளுக்கு செருப்படி!


வினவு செய்தியாளர்