Sunday, August 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 569

என்னாது மாசா மாசம் வருமா ?

10

வாழ்க்கைத் தரம், வளர்ச்சியின் வேகம் நகரத்தை போல கிராமத்தில் கிடையாதுன்னாலும் மோசம் என்று சொல்ல முடியாது. ஒரளவு செழிப்பா விவசாயம் நடக்கும் இடங்களில் விவசாய உற்பத்திக்கான அனைத்து வகை இயந்திரங்களும் இல்லாத கிராமமே கிடையாது. அதை வாடகைக்கு பயன்படுத்தாத நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும் கிடையாது. வீட்டு உபயோகப் பொருட்களில் நகரத்தைப் போல பயன்பாடு இல்லையென்றாலும் ஓரளவு இருக்கத்தான் செய்கிறது. பேசுவதற்கு காசு இல்லை என்றாலும் செல்போன் இல்லாத குடும்பமும் கிடையாது. அதையும் தாண்டி தெரியாதையும் தெரியவைக்க டிவியின் விளம்பரம் இருக்கிறது. டி.வி மட்டும் இல்லாத வீடுகள் கிராமங்களில் அறவே இல்லை என்று சொல்லலாம்.

இவற்றிலெல்லாம் மாற்றத்தை ஏற்றுக்கொண்ட மக்கள், பெண்களின் பருவ மாற்றத்தை தீட்டாக ஒதுக்கி வைத்து அவமதிப்பது இன்னும் தொடர்கதையாய் உள்ளது.

கிராமப்புற பெண்களிடம் கேட்டுப் பாருங்கள் மாதவிலக்குன்னா என்ன? முதல்ல இதுக்கு என்ன பொருள் என்றே தெரியாது. “தீட்டு, தலைக்கு ஊத்திகிட்டா, வெளிய, வீட்டுக்கு தூரம்”…இப்படி சொன்னால் போதும்…பருவ மங்கை முதல் பல்லு போன பாட்டி வரை வெட்கமும் அறுவெருப்பும் கலந்த முகத்துடன் குனிந்து கொள்வார்கள். அவர்களே இது தீட்டு, கெட்டது, அசுத்தம் என்றே பார்க்கிறார்கள். நகரத்தில் இருக்கும் ஓரளவு விழிப்புணர்வு கூட அங்கு இப்போதும் இல்லை.

காலையில தூங்கி எழுந்ததும் வயசுக்கு வந்த எனக்கு சாயங்காலம் (மாலை) சடங்கு செய்ய எல்லா ஏற்பாடும் தடபுடலா நடக்குதே தவிர ஒரு முழம் பழய துணிய குடுத்து ‘தீட்டு’க்கு வச்சுக்கன்னு சொல்ல யாருக்கும் தோணல. கட்டியிருந்த பாவாடை, தொடையெல்லாம் பிசுபிசுத்து போச்சு. விசேசம் எல்லாம் முடிஞ்சதும் கட்டியிருந்த பழய பாவாடையை எடுக்க வந்த சலவக்காரம்மா அதுல இருந்த ரத்தக்கரைய பாத்துட்டு ஒரு பழய துணிய கொடுத்து வச்சுக்கன்னு சொன்னாங்க. அந்த துணிய மாத்தி வச்சுக்கனுன்னு தெரியாம மூனு நாளா அதையே வச்சு நாத்தம் எடுத்து போச்சு. என்ன செய்றதுன்னு தெரியல. யார்கிட்ட கேக்கறதுன்னு கூச்சம். நாத்தம் வெளிய வந்ததுந்தான் மாத்து துணிக்கு விமோசனம் கெடச்சுச்சு.

இது நடந்தது பல ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் அதிலிருந்து துளி கூட மாறாத மனநிலையை சமீபத்தில் பாத்தேன்.

menstruation-5
படம் : இணையம்

ஏழாவது படிக்கிற பொண்ணு வயசுக்கு வந்துருச்சுன்னு அன்னைக்கே ஊர கூட்டி வெளியூரு சொந்தக்காரங்களுக்கு போன போட்டு வரவச்சு தடபுடலா தண்ணி ஊத்துர சடங்கு செஞ்சு முடிச்சாங்க. அது புரட்டாசி மாசம். ரெங்கநாதருக்கு விரதம் இருக்கும் போது தீட்டு பட்டா வீட்ட சுத்தமா தொடச்சுரமுனுன்னு பகலெல்லாம் வேப்ப இலை, கருக்கருவான்னு பேயி வெரட்ற ஆயுதத்த கையில கொடுத்து மரத்தடியில ஒக்கார வச்சாங்க. சடங்கு சம்பரதாயத்தை தீவிரமா கடைபிடிக்காத பக்கத்து வீட்டுல அந்த குழந்தையெ ராத்திரிக்கு படுக்க வச்சாங்க.

படுத்திருந்த வீட்டுல படிச்சுகிட்டு இருந்த அந்த பொண்ணு திடிர்னு தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சது. துணைக்கி கூட இருந்த பொண்ணோட பாட்டி “ஏண்டி அழுவுறே”ன்னு கேட்டாங்க.

“இது எனக்கு பிடிக்கவே இல்ல” பெரிய நகைச்சுவைய கேட்டது போல கூட இருந்த பெண்களும் சேந்துகிட்டு ஒரே சிரிப்பு.

“பொம்பளையா பொறந்துட்டு பிடிக்கலன்னு சொல்ல முடியுமா. அதுக்கு ஒங்காத்தா உன்ன ஆம்பளையா பெத்துருக்கனும்.”

“இன்னும் எத்தன நாளைக்கி தனியா படுத்துருக்கனும்?”

“பதினாரு நாளைக்கி படுத்து கெடக்கனும். தீட்டு கழிச்சு அதுக்கு அப்பறந்தான் உள்ள சேத்துக்க முடியும். பொங்கிப் போடறத தின்னுட்டு சும்மா படுத்திருக்க ஒனக்கு வலிக்குதா?”

“பதினாரு நாளைக்கி மட்டும்தான் அது வருமா?

“அட இவகிட்ட என்னடி, ஒரே கூத்தாப் போச்சு. இனிமே மாசா மாசம் தீட்டு வரும். அப்பையெல்லாம் இப்படிதான் ஒக்காந்துட்டு ஒப்பாரி வப்பியா?”

“என்னாது மாசா மாசம் வருமா?” என உடைந்த குரலில் சத்தமாக அழ ஆரம்பித்தாள்.

“அய்யய்யோ இந்த பிள்ள என்னடி மானத்த வாங்கும் போலருக்கு. இதெல்லாம் கடவுள் படைப்புடி. எங்க காலத்துல இதெல்லாம் பேசவே மாட்டோம். இப்ப உள்ளதுங்க என்னன்னே கேள்வியெல்லாம் கேக்குது பாரு.”

புதுசா உடம்பில் நடந்து விட்ட மாற்றம். அதுவும் வலி, எரிச்சல், கசகசப்பு என்று பிடிக்காத மனநிலை. மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் அச்சம். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு அனுசரனையாய் இருப்பது பெரியவர்களின் கடமை. இங்கோ அதுவும் எதிர்மறையில் இருக்கிறது.

அறியாத வயதில் முதன் முதலில் நடக்கும் உடல் மாற்றம் ஏன் என்று சொல்லித் தருவதற்கு கூட பெரியவர்களிடம் விழிப்புணர்வு இல்லை. சிறுமிகளின் அச்சத்தையும், மாற்றத்தையும் சொல்லிக் கொடுக்க முடியாத அந்த பெரியவர்கள் சும்மா படுத்துக் கிடக்கும் பெருமாளுக்கு தீட்டு என்று வீட்டை சுத்தம் கொள்வதில் அவ்வளவு கவனமாயிருந்தார்கள்.  வீட்டில் உள்ள வயது வந்த பெண் தலைக்குளிக்கும் நாளை அம்மா சரியாக கணக்கு வைத்திருப்பாள். ஆனால் அந்த நாள் சம்மந்தமான எந்த பேச்சும் மகளிடம் பேச மாட்டார். அம்மா மகளுக்கே இதுதான் கதி என்றால் ஒரு சிறுமி என்னதான் செய்வாள்?

menstruation-4பெண்கள் பூப்படைவதை உடல் வளர்ச்சியின் ஒரு மாற்றம் என்று உணராமல் ஒரு விழாவாக கொண்டாடுவதும், பூப்படையும் குழந்தைக்கு அது குறித்த எந்த விழிப்புணர்வை சொல்லித்தருவதும் கிடையாது. மாறாக தீட்டு என்றும், இது ஒழிவு மறைவாக நடந்து கொள்ள வேண்டிய விசயம் என்றும், அது ஒரு பாவச்செயல் போலவும் குழந்தைகளுக்கு வழி காட்டுகிறார்கள்.

பூப்பெய்திய பெண்ணை ஓலை குடிசையில தனியா படுக்க வைப்பது, குளிக்கவோ அல்லது ஒன்னுக்கு ரெண்டுக்கு போகனுன்னா காத்து கருப்பு அண்டிருமுன்னு இரும்பை கையில கொடுத்து வேப்பலைய தலையில சொறுகி அனுப்புறது. படுக்குற எடத்துல பாய் தலையணை இல்லாம போர்வையும் மனைக்கட்டை (மரப்பலகை) கொடுத்தும், படுக்கைய சுத்தி தொடப்பம், செருப்ப பாதுகாப்பு அறனா போட்டு வைக்கிறது மேலும் எரிச்சலடைய செய்கிறது. மனிதர்களை விட பேய்கள் அந்த சிறுமியை என்ன செய்து விடமுடியும்?

மாதவிடாய் காலத்தில் தொட்டால் தீட்டு. மூனு நாளைக்கி வீட்டுக்குள்ள வரக்கூடாது. பகலில் தூங்க கூடாது. தனி தட்டுல சோறு. சாப்பிட்ட மிச்சத்த நாயிக்கி வைக்க கூடாது. ஊறுகாய தொட்டா கெட்டு போயிரும். விதைகளை தொட்டா முளைக்காது. பூவை தொட்டா கருகிரும்.  இதுமட்டுமல்ல இன்னும் ஆயிரத்தெட்டு மூட நம்பிக்கைங்களை, பொண்ணுங்களுக்கு வயசாகி உதிரப்போக்கு நிக்கற வரைக்கும் கடைபிடிக்கனும். கொஞ்சம் பிசகினாலும் மக்கள் பார்த்தே எரித்து விடுவார்கள். பேசினால் ஆயுசுக்கும் மறக்காது.

பெண்கள், குழந்தை பிறக்கும் தருணத்தில் பெண் பிள்ளையை விட ஆண் பிள்ளையை அதிகம் விரும்பவதற்கு இதுவும் ஒரு காரணம். மாதவிலக்கு காலங்களில் அனுபவிக்கும் வலியோடு தீட்டுன்னு சொல்லி அனுசரிக்கப்படும் மூட பழக்கங்களும் சேந்து ஆண் குழந்தைகளை கூடுதலாக விரும்ப வைக்கின்றன. கிட்டதட்ட நாப்பது நாப்பத்தைஞ்சு வருசத்துக்கு மாசா மாசம் வலியும் வேதனையுமா பெண்களுக்குள் இருக்கும் இந்த விசயத்தை உடம்போட இயக்கத்துல ஒன்னுன்னு நினைக்காம பாவமாகவும், தொந்தரவாகவும நினைப்பது துயரமானது.

சடங்கு, பூப்பெய்தல், பெரிய மனுசியாயிட்டா, குச்சிக்குள்ள குந்திட்டா, தீட்டுன்னு இதுக்கு தினுசு தினுசாபேரு வைக்கிறாங்க. மூனு கிலோவுல பொறக்குற குழந்தை கடந்து வரும் நாட்கள்ல கை கால் உடல் உறுப்புகள் வளர்ச்சி அடைவதை போலத்தான், பெண் உதிரப் போக்கு சுட்டும் வளர்ச்சியும். மனிதனை உருவாக்க கருவாகும் உதிரப்போக்கின் தாய்மைத் தன்மையையும் அதற்கான விழிப்பணவையும் பேச மறுத்து, தீட்டை புனிதமாக்க சடக்கு சம்பரதாயமா அதுவும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிரா கொண்டாடுறாங்க.

குடும்பத்தார் போட்டோ போட்டு ப்ளக்ஸ் பேனர் அடிச்சு, மண்டபம் புடிச்சு கறி விருந்து போட்டு, லட்சக் கணக்குல செலவு menstruation-6பண்றவங்க அம்பது ரூபாய்க்கி நாப்கீன் வாங்கரத அனாவசியமா நினைக்கிறாங்க. பெரும்பாலும் படிக்கிற பிள்ளைகள தவிர யாரும் நாப்கீன் பயன்படுத்துறது கிடையாது. பள்ளிக்கூடத்துல குடுக்குற நாப்கீனும் உடம்போட பாதி உடையோட பாதியா ரெண்டு துண்டா பிச்சுகிட்டு வந்துருது.

பெண்கள் வீட்ட விட்டு வெளிய வராத அந்த காலத்துல இந்த விழாவை செஞ்சதோட நோக்கம் எங்க வீட்டுல கல்யாணத்துக்கு தயாரான பொண்ணு இருக்கான்னு ஊரு உலகத்துக்கு அறிவிக்கறதுக்குன்னு சொல்லுவாங்க. ஆணுக்கு சம்பாத்யமுன்னா பெண்ணுக்கு பிள்ளைத் தாய்ச்சி வேலை மட்டும்தான் என்பது கிராம சமூகத்தின் விதி. பருவம் வந்த அந்த நேரத்தை குறித்து வைத்துதான் பெண்ணின் கல்யாண சாதகமே பாக்கப்படுது. நீராட்டல் விசேசம் முடிந்ததும் கீரை விதை போட்ட பாலும் பழமும் கொடுப்பது குடும்பம் விதை போல விருத்தி அடைவதற்கு என்பார்கள்.

மாட்டை சந்தைக்கி ஓட்டிட்டு போயி விக்கிறது போல வீட்டுல பொண்ணு பெரியமனுசி ஆயிட்டா கல்யாணத்துக்கு ரெடியாயிட்டா என்று ஊரு உலகத்துக்கு தண்டோரா போட்டு சொல்லும் நிகழ்ச்சிதான் பூப்பு நீராட்டு விழா. கொச்சையா சொல்லனுமுன்னா எங்க வீட்டுல இருக்கும் பெண் பிள்ளை என்ற மிசினுக்கு பெத்துக்குற தகுதி வந்துருச்சுன்னு சொல்ற நிகழ்ச்சிதான் இது. ஏதோ சில காரணங்களால பருவம் வர தாமதமானா சம்பந்தப்பட்ட பெண்களை சமூகம் ஓரக்கண்ணாலும், வதந்தி வார்த்தையாலும் கொன்று விடும். ஆக வயசுக்கு வந்தாலும் பிரச்சினை, வரலேன்னாலும் பிரச்சினை.

ஒருத்தன் என்னை அடிச்சான்னு வெளிய சொல்ல கூச்சப்படாத பெண், பாலியல் வன்முறைகளை மட்டும் சொல்ல கூச்சப்படுவது ஏன்?. இந்த பயம் எங்கேருந்து வருது. இப்படிபட்ட சிந்தனை முறையில் வளர்க்கப்படும் பெண் எதிர்வரும் பாலியல் இன்னல்களை எப்படி எதிர்த்து போராடுவாள்? மாதவிலக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தும் சமூக கட்டமைப்பில் கருத்து ரீதியான பயிற்சிக்கு குறிப்பிடத்தக்க பாத்திரம் ஆற்றுகிறது.

சரசம்மா

“மூடு டாஸ்மாக்கை” மாநாட்டுக்கு ஏன் வரவேண்டும் ? பத்திரிகைச் செய்தி

0

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

நெ.5, எLப். எம்.பிளாசா, 3-வது மாடி, பேக்கர் தெரு, பாரி முனை,சென்னை- 01
தொடர்புக்கு 9443260164

————————

09.02.2016

சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்

பத்திரிக்கைச் செய்தி

அன்புடையீர் வணக்கம் !

shutdown-tasmac-trichy-pressmeet-1போதையிலிருந்து தமிழகத்தை மீட்க, சாராய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்ட மூடு டாஸ்மாக்கை என்ற எதிர்ப்புக் குரல், அலையாக மீண்டும் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. வயது வித்தியாசமின்றி, ஆண் பெண் பாகுபாடின்றி பாதிக்கும் மேலான தமிழக மக்கள் குடி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மையான கட்சிகள், மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி வருகின்றன. ‘படிப்படியாக என்ற அளவிலாவது மதுவிலக்கை அமல்படுத்துங்கள்’ என்ற கோரிக்கையைக் கூடப் புறக்கணித்து டாஸ்மாக்கை மூட முடியாது என சட்டமன்றத்தில் அ.தி.மு.க ஜெயா அரசு அறிவித்துள்ளது.

சாராய ஆலை அதிபர்கள் பாதிக்கப்படக்கூடாது, பார் நடத்தி வரும் கட்சிக்காரர்களின் வருமானம் பாதிக்க கூடாது, எந்தப் பிரச்சினைக்கும் மக்கள் போராடக்கூடாது, சிந்தனையை மழுங்கடித்து தமிழ்ச்சமூகத்தை மாற்றியே தீர வேண்டும் என்பதில் ஜெயலலிதா அரசு விடாப்பிடியாக இருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் இல்லை. மது ஆலை முதலாளிகளின் லாபத்தை ஜெயா அரசு, உத்திரவாதப்படுத்துவதுதான் இதற்குக் காரணம். சாராய ஆலை அதிபர்கள் நலனுக்காக தற்போது கள்ளச்சாராயத்தை ஒழித்திருக்கும் அரசால் மக்கள் நலுனுக்காக டாஸ்மாக்கை மூடிவிட்டு, கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாதா?.

குடி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது. 1984 ஆம் ஆண்டு டாஸ்மாக் ஆரம்பிக்க பட்டபோது அதன் ஆண்டு வருவாய் 134 கோடி ரூபாய் மட்டுமே. இன்றோ சுமார் 30,000 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது 230 மடங்கு அதிகரித்துள்ளது. ஜெயா ஆட்சியில்தான் இலக்கு வைத்து பல மடங்கு விற்பனை அதிகரிக்கபட்டுள்ளது. ஒரு கோடி பேர் குடிப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள் அனைவரும் குடி நோயாளிகள். இக்குடி நோயாளிகளால் பாதிக்கப்படும் பெற்றோர், பிள்ளை, மனைவி என மூன்று கோடிப் பேர் குடும்ப நோயாளிகளாக உள்ளார்கள். டாஸ்மாக் பேரழிவை படித்து தொகுப்பாக பார்த்தால் நெஞ்சம் பதறாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

தற்போது தேர்தல் திருவிழா, கூட்டணி பேரம், சூட்கேஸ் பேரம் வேட்பாளர் தேர்வு, என களை கட்டியுள்ள நிலையில் அடுத்த எம்.எல்ஏ. யார்?. என்ன செய்தார் எம்.எல்.ஏ.? என ஊடகங்கள் விவாதங்கள் டாஸ்மாக் ஒழிப்பு பிரச்சினையிலிருந்து மாற்றப்படுகிறது. டாஸ்மாக்கை மூடுவது என்பது தேர்தல் கோரிக்கை அல்ல; அது தமிழ்ச்சமூகத்தின் தலைமுறைப் பிரச்சினை – பற்றி எரியும் பிரச்சினை; அதை மூடுவதுதான் அனைவரின் முதன்மையான கடமை என்பதை வலியுறுத்தி, டாஸ்மாக் சாராயப் பிரச்சினையை மீண்டும் அரசியல் அரங்கில் விவாத பொருளாக்கி தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்படுவதுதான், திருச்சி பிப் 14 மூடு டாஸ்மாக்கை என்ற சிறப்பு மாநாடு.

சாராய சாம்ராஜ்ய அதிபர்களுடன் ஜெயலலிதாவின் உறவு பலமானது. ஜெயாவின் சொத்து ஏலத்துக்கு வந்தபோது மீட்டவர் சாராய உடையார்தான். ஐந்து தென் மாநிலங்களில் மேல் நாட்டு மதுவகைகளின் மொத்த விற்பனை முகவர் ஆந்திராவின் சுப்பிராமிரெட்டி சுட்டுக் கொல்லப்பட்டபோது ஜெயா, சசி ஆகிய இருவரும் தனி விமானத்தில் சென்று மரியாதை செலுத்தினர்.

டாஸ்மாக்கால் அரசுக்கு வருமானம் ரூ 30,000 கோடி என்றால் சாராய முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி வருமானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். டாஸ்மாக் சாராயத்தோடு ஆட்சியாளர்களின் வாழ்வும் இருப்பும் பின்னிப் பிணைந்துள்ளது. அனைத்து தேர்தல் கட்சிகளும் இதனால் ஏதோ ஒரு வகையில் ஆதாயம் அடைகின்றன. மாநாடு, கட்சிப் பிரச்சாரம் என அனைத்துக்கும், டாஸ்மாக் போதை எரிபொருளாக இருக்கிறது. எனவே சமரசமில்லாமல் மக்கள் போராடி மூடுவதுதான், நிரந்த, பூரண மதுவிலக்கு அமையும். கோடிக்கணக்கான கள்ளப் பணத்தில் வாக்குக்குப் பணத்தை வீசி எறிந்து போலீசை வைத்து மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற முடிவால்தான் அனைவரும் எதிர்த்தாலும் டாஸ்மாக்கை மூட முடியாது என பிடிவாதமாக ஜெயா அரசு நிற்பதற்குக் காரணம். தமிழக மக்கள் இதை அனுமதிக்கக் கூடாது.

வட தமிழகத்தை உருக்குலைத்த வெள்ளப் பேரழிவில் பலர் உயிரையும், வீடுவாசல்களையும் இழந்தனர். உண்ணஉணவின்றித் தவித்தனர். செம்பரபாக்கம் ஏரியைத் திறந்த அரசு கைதூக்கி விடவில்லை.  அனைத்து மக்களும்தான் களத்தில் இறங்கி உதவினர். வெள்ளப் பேரழிவு நின்று போனது.  ஆனால் டாஸ்மாக் பேரழிவு தொடர்கிறது. அனைவரும் களத்தில் இறங்கிப் போராடினால் போதை சீரழிவில் இருந்து தமிழ்ச்சமூகத்தை மீட்க முடியும்

“மூடு டாஸ்மாக்கை!” என்ற மக்கள் அதிகாரத்தின் முழக்கத்தினை, தமிழக மக்களின் குரலாக மாற்றியமைக்கும் திருப்பு முனையாக திருச்சி மாநாடு இருக்கும். தேர்தல் திருவிழாவில் பசியால் அழும் குழந்தைகளின் குரலாக, மக்களின் கவனத்தைக் கண்டிப்பாகத் திசை திருப்பும். டாஸ்மாக்கைப் பற்றி முடிவு எதுவும் எடுக்காமல் எந்த கட்சியும் மக்களிடம் வாக்கு கேட்க முடியாது என்ற நிலையை உருவாக்கவே இந்த மாநாடு.

மாநாட்டில் குடியால் குடும்பங்களை இழந்தவர்கள், தாலியறுந்த தாய்மார்கள் பேசுகிறார்கள். குடி போதைக்கு எதிராகத் தொடர்ந்து போராடும் ஆனந்தியம்மாள், மந்திரிகுமாரி. ஆகியோர் பேசுகிறார்கள். கோத்தகிரி பள்ளி மாணவி காவ்யாஸ்ரீ, டேவிட்ராஜ், நாகராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள. குடிநோய்க்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பாலகுரு, குடியின் பாதிப்புகளை நேரில் கண்டுணர்ந்து எழுதிய பத்திரிகையாளர் சஞ்சீவி குமார், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் செயலாளர் தனசேகரன். ம.க.இ.க பொதுச் செயலாளர் தோழர் மருதையன், மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு, தோழர் காளியப்பன் ஆகியோர் பேசுகின்றனர். தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட பாடகர் கோவன், “ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்” என மீண்டும் பாட உள்ளார். மதுவிலக்கை அமுல்படுத்திய கேரளாவிலிருந்து கரநாதன் நாவேர் நாட்டுக்களரி கலைக்குழுவினர் பாட உள்ளனர். “தாலியறுப்பு” என்ற நாடகம் நடத்த உள்ளோம். டாஸ்மாக்கை மூட முடியும் என்ற நம்பிக்கையை இந்த மாநாட்டின் மூலம் தமிழக மக்களுக்கு ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம்.

டாஸ்மாக் வேண்டாம் என நிறைவேற்றப்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் தீர்மானங்கள், மூடுவதற்கான நீதிமன்ற உத்தரவுகள், மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் என அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி பிடிவாதத்துடன் சாராயம் விற்கிறது அரசு. காந்தியவாதி சசிபெருமாளின் மரணம், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம், அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் நடந்த மக்கள் போராட்டங்கள் அனைத்தையும் போலீசைக் கொண்டு ஒடுக்கியது அரசு. இவ்வாறு போராடியவர்களை சிறையில் அடைத்து, போலீஸ் காவலுடன் டாஸ்மாக் கடைகளைத் திறந்தது.

டாஸ்மாக் சாராய விற்பனை நடத்தும் தமிழக முதல்வரை கண்டித்துப் பாட்டு எழுதியதற்காக தோழர் கோவனை நள்ளிரவில் கைது செய்து தேசத் துரோக வழக்கில் சிறை வைத்தது. எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் தொடர்ந்த மக்கள் போராட்டத்தின் மூலம் எதிர் கொண்டு டாஸ்மாக்கை மூட முடியும் என்பதை வலியுறுத்தவே இந்த மாநாடு. போதையிலிருந்து தெளிய வைத்து சிந்திக்கும் திறனுள்ள மனிதனாக மாற்றிய பிறகுதான் மக்களின் பிற எண்ணற்ற பிரச்சினைகளைப் பேச முடியும். அனைத்து பிரச்சினைகளிலும் முதன்மையானது டாஸ்மாக்கை மூடுவது.

மணற் கொள்ளை, டாஸ்மாக் போதை எல்லாம் அரசே முன்னின்று போலீசு பாதுகாப்போடு நடத்தகிறது. நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராடினால்தான் தீர்வு கிடைக்கும். மனுக் கொடுப்பதாலோ, கெஞ்சுவதாலோ, புலம்புவதாலோ தீர்வு ஏற்படாது. மக்களின் அழிவில்தான், மது ஆலை முதலாளிகளின் லாபம் இருக்கிறது. அரசு அவர்களைப் பாதுகாக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அனைவரும் மாநாட்டிற்கு வரவேண்டும் என ஊடகத்தின் மூலமாகவும் அழைக்கிறோம். தொடர்ந்து நடைபெறும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களில் அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் கலந்து கொள்ள வேண்டும், தமிழக மக்களைப் போதையிலிருந்து மீட்க வேண்டும். சாராய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது அனைவரின் பொறுப்பாகவும் கடமையாகவும் மாற வேண்டும்.

நன்றி!.

மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு.
9-2-16 திருச்சி

பிரிக்கால் தீர்ப்பைக் கண்டித்து புதுவை பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்

0

பிரிக்கால் தீர்ப்பு: முதலாளித்துவ பயங்கரவாதத்தின் அடியாளாக நீதிமன்றம்!

டிசம்பர் 3 -ம் தேதி கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றம் கோவை பிரிக்கால் தொழிலாளர் வழக்கில், 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அவர்களின் வாழ்வைப் பறித்துள்ளது.

puduvai-pricol-demo-2கடந்த 2009-ம் ஆண்டு கோவை பிரிக்கால் நிறுவன தொழிலாளர்கள் தங்களது சட்டபூர்வ உரிமைகளுக்காகப் போராடிய போது, அந்நிறுவன HR அதிகாரியான ராய் ஜார்ஜ் தொழிலாளர்கள் மீது கொடிய அடக்குமுறைகளை ஏவினார். பிரிக்கால் நிர்வாகமும், உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களைப் பொய்யான காரணம் கூறி பணிநீக்கம், தற்காலிக பணிநீக்கம், ஊதிய வெட்டு போன்ற அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நியாயமாகப் போராடிய தொழிலாளர்கள் மீது சட்டவிரோதமாக ரவுடிகளை வைத்துத் தாக்கியது நிர்வாகம். நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்குமிடையே நடந்த இந்தப் போராட்டத்தில் HR அதிகாரி ராய் ஜார்ஜ் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி கூட்டுச்சதி செய்து HR அதிகாரியைக் கொன்றனர் என்று கூறி வழக்கைப் பதிவு செய்தது. தொழிலாளர்களை வீடு வீடாகச் சென்று வேட்டையாடியது போலிசு. அந்த வழக்கில் தான் மேற்படி தீர்ப்பு வந்துள்ளது.

puduvai-pricol-demo-4இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கின்ற வகையிலும், தொழிலாளர்களுக்கெதிரான நீதிமன்ற பாசிசத்தை அம்பலப்படுத்தும் வகையிலும், இந்த அரசுக் கட்டமைப்பே மக்களை ஆளத் தகுதியிழந்து, மக்களுக்கே விரோதமானதாக மாறிவிட்டதை விளக்கும் வகையிலும், திருபுவனை பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்தியது. ஆர்ப்பாட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருபுவனை கிளைத் தலைவர் தோழர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருபுவனை கிளைச் செயலாளர் தோழர் மகேந்திரன் அவர்களும், புதிய ஜனநாகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநில இணைச்செயலாளர் தோழர் லோகநாதன் அவர்களும் விளக்கவுரையாற்றினார்கள்.

விண்ணதிரும் முழக்கங்களுடன் துவங்கிய ஆர்ப்பாட்டத்தில் தோழர் சங்கர் தனது தலைமையுரையில், கோவை பிரிக்கால் வழக்கின் தீர்ப்பையும், தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளையும் விளக்கி, “நீதிமன்றமும், ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் தொழிலாளர்களுக்கு விரோதமாய் மாறிப் போனது. எனவே, இனி இவர்கள் நமது பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்காமல், உழைக்கும் மக்களுக்கான அரசினை நாமே நிறுவுவோம்” என்று நிறைவு செய்தார்.

puduvai-pricol-demo-3விளக்கவுரையில் பேசிய மகேந்திரன், “திருபுவனை வட்டாரத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பெரும்பான்மை தொழிற்சாலைகளில் சொற்ப எண்ணிக்கையில் நிரந்த தொழிலாளர்களை வைத்துக் கொண்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கணக்கின்றி சுரண்டுகின்றனர் முதலாளிகள்” என்று இவ்வாட்டாரத்தில் உள்ள, ரானே பிரேக்ஸ், மதர் பிளாஸ்ட், டெக்ஸ்பாண்ட், வேல் பிஸ்கட்ஸ், ஸ்வஸ்திக், ரானே மெட்ராஸ், டிடிகே உள்ளிட்ட தொழிற்சாலைகளின் ஊதிய உயர்வுப் போராட்டங்களை பட்டியலிட்டார்.

“குறிப்பாக, வேல் பிஸ்கட்ஸ் ஆலையில், ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தின் இழுபறி, வேறு வழியில்லாமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலையை உருவாக்கியது. தொழிலாளர்கள் தமது கண்டனத்தை அமைதியான வழியில் தெரிவிக்கும் பொருட்டு கருப்பு பேட்ஜ் அணிந்து வேலைக்குச் சென்றனர். உணவுப் பொருள் தயாரிக்குமிடத்தில் குண்டூசி உள்ளிட்ட சிறு பொருளும் வரக்கூடாது எனக் கூறி, நிர்வாகமே உற்பத்தியை நிறுத்தி விட்டு, தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வேலை நிறுத்தம் செய்கின்றனர் என்றும், அதனால் 8 நாட்கள் சம்பளப் பிடித்தம் செய்யப் போவதாகவும் தொழிலாளர் துறையில் கூசாமல் பொய் புளுகி மிரட்டியது. தொழிலாளர் துறை அதிகாரியோ, அது பற்றி விசாரணை கூடச் செய்யாமல், நிர்வாகம் சொன்னதை அப்படியே பதிவு செய்து தனது வர்க்க விசுவாசத்தைக் காட்டினார். ஆனால், உண்மையில் நிர்வாகம் ஒரு புறம் கதவடைப்பு என்று சொல்லி மறுபுறம் சட்டவிரோதமான முறையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து உற்பத்தியில் ஈடுபட்டது. இதை அம்பலப்படுத்திப் பேசிய பிறகு தான், எந்தவித நிபந்தனையுமின்றி நிறுவனத்தை திறக்க வேண்டும் என ஆணை போடும் நிலைக்குத் தள்ளப் பட்டார் தொழிலாளர் துறை அதிகாரி. ஆனாலும், இன்னும் ஊதிய உயர்வு பிரச்சினை தீர்ந்தபாடில்லை”.

puduvai-pricol-demo-1“இது வேல் பிஸ்கட் கம்பெனியின் நிலை மட்டுமல்ல, பொதுவாகவே எந்த முதலாளியும் சட்டத்தை மதிப்பதில்லை. தொழிலாளர்களின் சட்ட பூர்வ உரிமைகளைக் கூட அனுமதிப்பதில்லை. ருபுவனை தொழிற் பேட்டையிலுள்ள மற்ற நிறுவனங்களின் நிலையும் அது தான்” என்பதை பகுதி மக்கள் உணரும் வகையில் சொந்த அனுபவங்களிலிருந்து விளக்கினார். “இந்தப் பின்னணியில் தான் இந்த பிரிக்கால் தொழிலாளர்களின் பிரச்சினையை நாம் பார்க்க வேண்டும். எனவே, நமது உரிமைகளை அரசின் தொழிலாளர் துறையோ, காவல்துறையோ பாதுகாக்காது, பெற்றும் தராது. நமது உரிமைகளை நாமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என சொந்த அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன” என்று கூறி தனது உரையை முடித்தார்.

தோழர் லோகநாதன் தனது உரையில், “பிரிக்கால் நிறுவனத்தில் தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளைத் தர மறுத்து, அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட HR அதிகாரி, சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்து போனதற்கு, தொழிலாளர்களைக் காரணமாக்கி, குற்றம் நிரூபிக்கப்பட்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். புதுச்சேரி பகுதியில் இந்தியா நிப்பான், எம்.ஆர்.எஃப், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை என தொழிலாளிகளை தற்கொலைக்குத் தூண்டியது அதிகாரிகள் தான் என அப்பட்டமாக நிரூபணம் ஆன பிறகும், அந்த அதிகாரிகள் மீது எந்த வழக்கும் இல்லை. ஆனால், தொழிலாளர்களுக்கு, குற்றம் நிரூபிக்கப்படாமலேயே இரட்டை ஆயுள் தண்டனை. இது தான் இந்த அரசின் யோக்கியதை.

ஆனால், தொழிற்சங்கம் ஆரம்பிப்பதால் தான் பிரச்சினைகள் ஏற்பட்டு தொழிற்சாலைகள் மூடப்படுகிறது என்ற பொய்யை திரும்பத் திரும்ப முதலாளிகளும், முதலாளித்துவ பத்திரிக்கைகளும், ஊடகங்களும், ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளும் ஓயாமல் புளுகித் திரிகின்றனர். இந்த புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளில் 13,000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதில் 800 தொழிற்சாலை களில் கூட தொழிற்சங்கங்கள் இல்லை என்ற ஒரு புள்ளி விபரமே இதற்குச் சாட்சி. மேலும், தொழிற்சாலையை மூடிய எந்த முதலாளியும் தனது தொழில் முடங்கி வீதிக்கு வந்து பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்துவதாக வரலாறு இல்லை. இந்த 800 தொழிற்சாலைகள் உட்பட மூடப்பட்டதாகச் சொன்ன அனைத்து தொழிற்சாலைகளையும் ஏதோ ஒரு பெயரில், நடத்திக் கொண்டு தான் உள்ளனர். வரி ஏய்ப்பு செய்வது, அரசின் சலுகைகளைப் பெறுவது போன்ற உண்மைகளை மறைத்து சங்கம் வைத்து பிரச்சினைகள் செய்வதால் தான் தொழிற்சாலைகள் மூடப்படுவதாக தொழிலாளர்கள் மீது பழி போடுகின்றனர் முதலாளிகள். முதலாளிகளின் இந்த சட்டவிரோத செயல்கள் அனைத்துக்கும் உடந்தையாக இருப்பவர்களே அரசின் அதிகாரிகளும், ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளும் தான்.

முதலாளிகள், ஒரு தொழிற்சாலை ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே அடுத்தடுத்த கிளைகளைத் துவக்கி வளருகின்றனர். ஒவ்வொரு புது கிளைக்கும் தனது எந்த சொத்தையும் விற்று புதிய முதலீடுகள் செய்வதில்லை. அரசின் சலுகைகள், வரி ஏய்ப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலமும் பிரதானமாக, தொழிலாளிகளின் உழைப்பை ஒட்டச் சுரண்டுவதன் மூலமும், அதாவது, ஆசான் மார்க்ஸ் சொன்னது போல், தொழிலாளர்களின் கொடுக்கப்படா கூலியின் மூலம் லாபத்திற்கும் மேல் வரும் உபரியின் மூலம் தான் அடுத்தடுத்த கிளைகளைப் பரப்பி, அதன் மூலம் மேலும் மேலும் தொழிலாளர்களைச் சுரண்டுகின்றனர்.

இவ்வாறு தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளிடம் சட்டப்படியான உரிமைகளைக் கேட்டால், ஊதிய வெட்டு, பணிநீக்கம் உள்ளிட்ட அடக்குமுறைகள். அதையும் எதிர்த்துப் போராடினால் ரவுடிகளின் தாக்குதல், பொய்வழக்கு, கைது, சிறை. இவ்வாறு தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக விடாப்பிடியாகப் போராடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை மட்டுமல்ல; மாருதி நிறுவனத்திற்கு எதிராகப் போராடி சிறையில் உள்ள தொழிலாளர் வழக்குக்கும் ஒரு முன்னுரையாகவும் தான் பிரிக்கால் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த அநீதியான தீர்ப்பு.

கோவை பிரிக்கால் தீர்ப்பில், தொழிலாளர்கள் மீதான குற்றங்கள் ஏதும் நிரூபிக்கப்படாத போதும், அரசுத் தரப்பு சாட்சிகள், பொய் சாட்சிகள் என நீதிமன்றமே கூறிய போதும், குற்றத்திற்கான சதியில் ஈடுபட்டதாலேயே தண்டனையை உறுதி செய்வதாகக் கூறியுள்ளது நீதிமன்றம். குற்றங்கள் நீரூபிக்கப்பட வேண்டும் என்பதில்லை; முதலாளிகளை எதிர்த்துப் போராடினாலே தண்டனை தான் என்பது தான் நீதிமன்றம் இதன் மூலம் தொழிலாளி வர்க்கத்திற்குச் சொல்லியிருக்கும் செய்தி.

பிரிக்கால் தீர்ப்பு மட்டுமல்ல, தொழிலாளர்கள் மீது தினம் தினம் அடக்குமுறைகளை ஏவிவரும் முதலாளித்துவத்திற்கு அடியாளாகத் தான் தொழிலாளர் துறையும், போலிசும், நீதிமன்றமும் செயல்படுகிறது. இந்த ஒட்டு மொத்த அரசுக் கட்டமைப்பும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கும் தேவையற்றதாகவும், எதிர்நிலை சக்தியாகவும் மாறிவிட்டது. எனவே, நிலவுகின்ற அரசுக் கட்டமைப்பை தகர்த்து, அதிகாரத்தை நாமே கைப்பற்றுவதும், ஆலைகள் தோறும் ஆலைக்கமிட்டிகளை அமைத்து நமக்கான தேவைகளை நாமே நிறைவேற்றுவதும் தான் தீர்வு”.

இறுதியாக, நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு: தோழர். பழனிசாமி, செல்: 9597789801.

 

பார்ப்பனிய ஆதிக்க சமூகத்திற்கு டி.என்.ஏ ஆதாரம் – பாகம் 1

66

பார்ப்பன ஆதிக்க சாதி வெறியின் தோற்றுவாய், அதன் ஆதிக்கம் புறமணத்தடையில் இருந்தே வந்துள்ளது – நீங்கள் மறுத்தாலும் உங்களின் இனக்கீற்று அமிலங்கள் (டி.என்.ஏ) மறுக்காது!

டி.என்.ஏ (DNA) அல்லது இனக்கீற்று அமிலங்கள் மனித இனத்தின் மரபணுத் தகவல்கள் மற்றும் மரபணு மாற்றங்களால் ஏற்படும் நோய்களைப் பற்றி மட்டுமே சொல்லும் என நினைத்தால், இல்லை, நாங்கள் சாதிகள் தோன்றி வளர்ந்து மேலாதிக்கம் பெற்ற காலத்தையும் துல்லியமாகச் சொல்வோம் என நிரூபித்துள்ளன. கல்கத்தாவில் இருந்து செயல்படும் தேசிய உயிர்-மருத்துவ மரபியல் நிறுவனம் (NIBMG) மற்றும் இந்தியப் புள்ளியியல் கழகத்தின் மனித மரபியல் பிரிவும் இணைந்து இந்த ஆராய்ச்சி முடிவை எட்டியுள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் PNAS என்ற ஆய்விதழில் வந்துள்ள இக்கட்டுரையின் ஆராய்ச்சியை, NIBMG-இன் ஆய்வுப்பிரிவுத் தலைவர் அனலபா பாசு தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

கடவுள் துகள்கள் (God particle) என அழைக்கபடும் ஹிக்ஸ்போசான் துகள்களின் கண்டுபிடிப்பு எவ்வாறு கடவுளை மறுத்த துகளாக மாறி இயக்க மறுப்பியலாளர்கள், சங்கப்பரிவாரங்கள் மற்றும் இதர மதக் கோட்பாட்டுவாதிகளின் வாதங்களுக்கு ஆப்பறைந்ததோ, அதைப்போல இவ்வாராய்ச்சி, இந்திய வரலாற்றில் ஆயிரமாண்டுகளாக கடைப்பிடித்து வருகிற வருணாசிரம முறை மேலாதிக்கம் பெற்று இறுகிய நிலைக்கு புறமணத்தடையை (அல்லது அகமண முறையைக் கட்டாயமாக்கிய) அமல் படுத்திய பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பும் அதன் பிரதிநிதிகளான மன்னர்களும் தான் காரணம் என்பதை அறிவியல் ஆதாரத்துடன் விளக்கி, சாதிகளைப் பற்றிப் புரிந்து கொள்ளும் சமூக ஆய்வில் வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. புறமணங்களின்மீது அகமணமானது ஏறி ஆதிக்கம் செலுத்திய காலகட்டம்தான் சாதி மேலாண்மையின் தோற்றுவாயாக இருந்தது, எனக் கூறிய அம்பேத்கரின் வாதத்திற்கு இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வலுசேர்த்துள்ளன.

இந்தியாவில் மக்கள் ஏற்றத்தாழ்வான சாதியக் கட்டமைப்பில் இருக்கிறார்கள் என்பதற்கான உயிரியல் ஆதாரங்களை இந்த ஆய்வு மெய்ப்பித்துள்ளது. அகமண முறையால் இந்த கூறு இன்றும் தொடருவதை இந்த ஆய்வு மெய்ப்பிக்கிறது. அதே நேரம் இந்த அகமண முறை அல்லது சாதியப் பிரிவினை பொருளாதார அலகுகளாக பிரிந்திருப்பதன் மூலம் இந்த சாதிய ஏற்றத்தாழ்வை ஆதிக்கம் செய்யும் சக்திகள் தமது அதிகாரத்தை கையில் வைத்திருந்தன.

வரலாற்று நோக்கில், தற்போதைய இந்திய மக்கள் தொகையின் மரபுத்தொகுதி புனரமைப்பு                  ஐந்துவகைப்பட்ட தனித்தனி
genes-study-5மூதாதையர்களையும், சிக்கலான அமைப்பையும் கொண்டது, (Genomic reconstruction of the history of extant populations of India reveals five distinct ancestral components and a complex structure) எனத் தலைப்பிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில்தான் இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரய்ச்சியின் முதல்படியாக, இந்தியாவின் பல்வேறு சமூகக் கலாச்சாரம், மற்றும் மொழியில் வேறுபட்ட சுமார் இருபது சாதிகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. இந்திய நிலப்பகுதிகளில் வாழும் 18 சாதிகளிடம் இருந்தும் அந்தமான் தீவில் வாழும் இரண்டு பழங்குடியினரின் ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டன. ஒவ்வொரு சாதியில் இருந்தும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஏறக்குறைய 20 நபர்கள் என சுமார் 367 நபர்களின் ரத்த மாதிரிகளில் இருந்து மரபணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றின் மரபணுத் தொடர்வரிசை கணக்கிடப்பட்டது (Genome sequence).

இதன்படி பல்வேறு முடிவுகளை கண்டடைந்துள்ளனர். குறிப்பாக 2009-களில் இந்திய மக்களின் மரபணுக்களைப் பரிசோதித்த ரீச் (ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக் கழகம், அமெரிக்கா) மற்றும் குமாரசாமி தங்கராஜ் (மத்திய செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் நிறுவனம், இந்தியா) குழுவினரின் ஆய்வுப்படி இரண்டு தனி மூதாதையர்கள் மட்டுமே இருக்கின்றனர் என முடிவு செய்யப்பட்டது. அதாவது பெரும்பாலான தென்னிந்தியப் பகுதிகளில் இருக்கும், திராவிட வழியிலான மூதாதையர்கள் (ASI – Ancestral South Indian) மற்றும் வட இந்தியப் பகுதிகளில் இந்திய – ஐரோப்பிய மொழிகளைப் பேசும் மூதாதையர்கள் (ஆரியர்கள் எனவும் எடுத்துக்கொள்ளலாம், ANI – Ancestral north Indian) என இருப்பிரிவினர். அனால் தற்போது, இந்தியா முழுதும் உள்ள பரந்துபட்ட மக்களின் மரபணுக்களை ஆராய்ச்சியில் எடுத்துக்கொள்ளப்பட்டதால் மேற்கூறிய இரண்டு பிரிவினரையும் சேர்த்து மொத்தம் 5 தனித்தனி மூதாதையர் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் காணப்படும் பழங்குடிகளான ஆஸ்திரிய-ஆசிய மக்கள் (AAA – Ancestral Austro -Asiatic), வடகிழக்கு இந்தியாவில் காணப்படும் திபத்திய-பர்மிய மக்கள் (ATB – Ancestral Tibeto -Burman) மற்றும் அந்தமான்-நிக்கோபர் தீவுகளில் மட்டுமே வாழ்ந்துவரும் ஜரவா, ஓங்கே உள்ளிட்ட பழங்குடிகள் உள்ளிட்ட மூன்று மூதாதையர்களை உள்ளடக்கியதுதான் இந்தியாவின் இன்றைய குடிமக்கள்.genes-study

இதற்கு முன்பு வந்த ஆய்வுகள் பல இதுபோன்ற தகவல்களைக் கூறினாலும் இச்செய்தி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவை பலவெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கூட்டு முயற்சியில் நடந்தாலும் ஆய்விற்கு சில சாதிகளின் ரத்த மாதிரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் அவர்கள் ஒரு முன்முடிவில் இருந்து அவ்வராய்ச்சியை நடத்தியுள்ளனர். ஆனால் இக்குறிப்ப்ட்ட ஆய்வு முழுக்க முழுக்க இந்தியாவில், இந்திய மரபணு ஆராய்ச்சியாளர்களால் பல வகைப்பட்ட பிரிவினரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, கடந்தகால சமூகப் பழக்கவழக்கங்களில் இருந்து நிறுவியுள்ளனர். பல சமூக ஆய்வாளர்கள் இவர்களின் அறிவியல்-சமூகப் பூர்வ தர்க்கத்தை ஏற்றுள்ளனர். நல்லவேளையாக இவ்வாராய்ச்சியின் முடிவுகள் ஏற்படுத்தப்போகும் விவாதங்கள் அல்லது எதிர்கால சமூக ஆய்வில் ஏற்படப்போகும் திருப்பங்கள் குறித்து இந்துத்துவப் பார்ப்பனப் பரிவாரங்கள் அறிந்திருக்கவில்லை. அதுமட்டும் தெரிந்திருந்தால் கண்டிப்பாக மோடி இவாராய்ச்சியை நடத்த விட்டிருக்கமாட்டார்கள்.  இல்லையென்றால் எடுக்கப்பட்ட ரத்தத்தின் மாதிரிகளை (samples) மாற்றியிருப்பார் எனக் கருத நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்த அளவிற்கு சங்க பரிவாரங்களை எரிச்சல்படுத்துவதோடு அறிவியல் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு இது.

சமீபத்திய ஆய்வின் மூலம் இந்தியா முழுவதும் 1575 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதாவது 4200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 1575 ஆண்டுகள் முன்பு வரையிலான இடைப்பட்ட காலங்களில் நமது அனைத்து மூதாதையர்களும் தங்கள் இனத்திற்கு வெளியே இருப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளனர், கலந்துள்ளனர். அதாவது புறமணமுறையானது (Exogamy) இருந்துள்ளது. ஆனால் அதற்குப் பிறகு தங்கள் கணம் அல்லது சாதி/குழுக்களைத் தாண்டி திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டது. இதற்கான காரணத்தை அவர்கள் ஆராய்ந்த பொழுதுதான் அக்கால மக்களின் சமூக வாழ்நிலை அப்போதைய ஆட்சியாளர்களால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டதைக் கண்டனர். இந்தியாவின் பொற்காலம் என்றும் வேதங்களின் காலம் என்றும் புகழாரம் சூட்டப்படும் குப்தர்கள் பேரரசில்தான் அகமணமுறை கட்டாயமாக்கப்படுகிறது. அதாவது தர்மசாஸ்திரம்/மனுதர்மத்தின் பெயரில் சாதிக்கொடுங்கோன்மைகளும் ஒரு சாதியினர் மற்ற சாதியினருடன் மணமுடிப்பது தடுக்கப்பட்டு புறமணமுறை தடைசெய்யப்பட்டது. இச்செய்திகள் நமக்கு முன்கூட்டியே தெரியும் என்றாலும், உயிரித் தொழில்நுட்பம் மூலமாக உறுதியாகியுள்ளது எனலாம்.

genes-study-4இந்தியாவில் இருக்கும் குஜராத், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க பார்ப்பனர், தமிழகத்தின் ஐயர், மற்றும் கத்ரி போன்ற ஆதிக்கச்சாதி பிரிவினர்கள் கிட்டத்தட்ட 70 தலைமுறைகளுக்கு முன்பாகவே புறமணமுறையை கைவிட்டார்கள் என இவ்வாய்வு தெரிவிக்கிறது. 1100 வருடங்களுக்கு முன்பு ஆண்ட சாளுக்கியர்கள் காலகட்டத்தில் மராத்தா பிரிவினரின் புறமணமுறை நிறுத்தப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில்தான் ராஷ்டிரகுட மன்னர்கள் விவசாயிகளிடமிருந்து ஒரு படைப்பிரிவினரைத் தோற்றுவித்து அவர்கள் மற்ற சமூகத்தினரிடையே கலப்பதைத் தடுத்துள்ளனர், இவர்களே பிற்காலத்தில் அப்பகுதியின் சத்திரிய வம்சமாகத் தோன்றினர். இச்சாதிப் பிரிவால்தான் ஒரு கட்டத்தில் அதிக அளவில் நடந்த, திராவிட- பழங்குடியின கலப்பும், வேறுபட்ட பழங்குடியினரிடையேயான கலப்பும் தடைசெய்யப்பட்டது எனலாம்.

சாதிப்பாகுபாட்டினால் பல்வேறு பிரிவினையிடையே இருந்து வந்த கலப்பு முற்றுப் பெற்றாலும் அது முழுமையாக முடியவில்லை. ஆதிக்கசாதி ஆண்களின் மரபணுக்கள் மற்றசாதி குழந்தைகளிடையே காணப்பட்டுவதாக இவ்வாய்வு தெரிவிக்கிறது. அதாவது பார்ப்பன, ஆதிக்க சாதிகளின் ஆணாதிக்கம் திராவிட, பழங்குடிப் பெண்களின் வாழ்க்கையில், அவர்களின் குடும்பங்களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதே சமயம் இது மற்றசாதி ஆண்கள் பார்ப்பன, ஆதிக்க சாதி பெண்களுடனான கலப்பைத் தடுத்திருக்கிறது. இதன் மிச்ச சொச்சம்தான் பொட்டுக்கட்டுதல், தேவதாசி மற்றும் தேவரடியார் முறைகளில் பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பனர்கள் மற்றும் இதர ஆதிக்க சாதியினர் பயன்படுத்தியுள்ளனர். இதுமட்டுமல்லாது, தாழ்த்தப்பட்ட ஏழை விவசாயிகளின் மனைவிமார்களை ஜமீந்தார்களுக்குப் பிடித்துவிட்டால் அவ்வளவுதான், அவ்விவசாயி தன் மனைவியை அவர்களின் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும், இது அம்மக்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு கட்டாயமாக இருந்துள்ளது. அதை மீறி செயல்பட முடியாத அளவிற்கு தண்டனைகள் கடுமையாக இருந்துள்ளது. வீரம்செறிந்த தெலுங்கானாப் போராட்டத்தைப் பற்றி விளக்கும் மாபூமி படத்தில் கூட இது போன்ற காட்சிகளைப் படமாகப் பார்த்திருப்பீர்கள்.

எப்படி இதைக் கண்டுபிடித்தார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் ஆராய்ச்சியில் கூறப்பட்டவை அனைத்தும் அறியியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. இதைக் கண்டுபிடிக்க மனித உடலில் காணப்படும் Y குரோமோசோம்கள் (மரபணுச்சரம், மரபணுக்கோல் அல்லது நிறமூர்த்தம் என பல கலைச்சொற்கள் உள்ளன) மற்றும் மைட்டோகான்ட்ரீயா (மணியிழை) டீ.என்.ஏக்கள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் Y மரபணுச்சரங்களின் மூலம் ஆண்களின் பரம்பரைத் தகவல்களையும், மணியிழை டி.என்.ஏக்கள் மூலம் பெண்களின் பரம்பரைத் தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். Y மரபணுச்சரமானது ஆண்களிடம் மட்டுமே காணப்படுகிறது, ஆக ஆண்களிடமிருந்தே இத்தகவல்கள் மற்றவர்களுக்குப் பரப்பப்படுகிறது. மரபணுக்களை மொத்தமாகப் படிக்கும்போது, இத்ததகவல்கள் குறிப்பிட்ட நபரின் தந்தை எந்த சமூகத்தைச் சார்ந்தவராக, சாதியைச் சார்ந்தவராக இருந்தார் என்பதைச் சொல்கின்றன. மணியிழை டி.என்.ஏ பெண்களிடமிருந்துதான் ஒருவருக்குக் கிடைக்கிறது. மணியிழை டி.என்.ஏவானது விந்துவில் மிகக் குறைவாகவும், கருமுட்டையில் அதிக அளவும் காணப்படுகிறது. கருவுறுதலின் பொழுது விந்துக்களில் உள்ள மணியிழை டி.என்.ஏக்கள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன,(மைட்டோகாண்ட்ரீயா அல்லது மணியிழைகள், இவை செல்களுக்கான ஆற்றலின் பிறப்பிடமாகும்) அதனால் ஒருவரின் உடலில் உள்ள மணியிழை டி.என்.ஏ தனது தாயிடமிருந்து பெறப்பட்டவையாக மட்டுமே இருக்கும்.

இதன்படி, இந்தியாவில் காணப்படும் திராவிட, பழங்குடியின மக்களின் மரபணுக்களில் Y மரபணுச்சரத்தின் பல்வகைப்பட்ட பிரிவுகள் காணப்படுகின்றன, அதே சமயத்தில் மணியிழை டி.என்.ஏக்கள் அனைத்தும் இப்பிரிவினரிடையே ஒன்றுபோல இருக்கின்றன. அதாவது மேல்சாதி ஆண்கள் திராவிட, பழங்குடி பெண்களை தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்டதன் மூலம் அவர்களின் வழியே பிறந்த குழந்தைகளிடம் Y மரபணுச்சரங்கள் வேறுபட்டு இருந்தன, ஆனால் தாய்க்கூறைக் கண்டுபிடிக்கும் மணியிழை டி.என்.ஏக்களில் எவ்வித வேறுபாடும் இல்லை. இத்தகைய பண்புகள் மேல்சாதியினரின் மரபணுக்களில் இல்லை, இதன் மூலம் திராவிட, பழங்குடியின ஆண்கள் மேல்சாதி பெண்களிடம் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. இதுவே பார்ப்பனிய மேலான்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இது போன்ற தனிச்சிறப்பான ஆராய்ச்சிகள் மூலம் நமது ஆப்பிரிக்க மூதாதையர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பகுதிகளுக்கு வந்தனர், திராவிடப் பாரம்பரியம், ஆரியப் படையெடுப்பு பற்றிய தகவல்களைத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.மேலும், பல்வேறு இனங்களுக்கிடையில் கலப்பு இருந்த நமது சமூகம் மிகுந்த ஆரோக்கியத்துடன்தான் இருந்துள்ளது. ஆனால் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள், பல நோய்களின் கூடாரமாக மாறியது சிலப் பல நூறாண்டுகளுக்கு முன்பு இவர்கள் கொண்டு வந்த அகமணமுறையின் மூலம்தான் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா. நம்பமுடியாவிட்டாலும் அதுதான் உண்மை. இதை அவர்களே மறுத்தாலும் அவர்களின் டி.என்.ஏக்கள் மறுக்காது. அதுபற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.

– நிகரன்

மேலும் படிக்க

திருச்சியைக் கலக்குது மக்கள் அதிகாரம் – மல்லுக்கட்டுது ஜெயா போலீசு !

0

திருச்சி

பிப்ரவரி 14 – திருச்சியில் மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாடு ! மக்கள் அதிகாரம் தோழர்களுடன் மல்லுக்கட்டும் மாநகர மது விலக்கு போலீசு!

shutdown-tasmac-trichy-02மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாட்டையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் சுவரெழுத்து விளம்பரங்கள், சுவரொட்டி பிரச்சாரம், குடியிருப்புகளுக்கே சென்று மக்களை சந்திக்கும் சிறப்பு பிரச்சாரக் குழுக்கள், விளம்பர வாகன ஏற்பாடுகள், ஆட்டோ விளம்பரத் தட்டிகள், பேருந்து, ரயில் பிரச்சாரங்கள் என பல்வேறு வகைகளில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ம.க.இ.க மையக்கலைக்குழு பாடகர் கோவன் திருச்சி மாவட்ட அளவிலான மாநாட்டு பிரச்சார வேனை கடந்த 04-02-2016 அன்று தில்லைநகர் – காந்திபுரம் பகுதியிலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பல்வேறு வடிவங்களில் தமிழகம் தழுவிய அளவில் பிரச்சாரம் நடைபெறவுள்ளதையும் விளக்கியுள்ளார். மாநாடு நடைபெறும் திருச்சி மாவட்டம் முழுவதும் எங்கு திரும்பினாலும் சுவரெழுத்து பிரச்சாரமும், மாநாட்டு பிரச்சாரக் குழுவினரின் பல்வகை பிரச்சார வடிவங்களாலும் இப்பொழுதே மாநாடு குறித்த எதிர்பார்ப்பு கூடி விட்டது.

shutdown-tasmac-trichy-21தமிழகத்தின் ‘மதுவிலக்கு’ மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனே டாஸ்மக்கை மூட முடியாது என்று கூறிவிட்டதால் நம்பிக்கையற்று பேசும் நடுத்தர வர்க்கத்திடம் தமிழக அரசின் பொய் பிரச்சாரங்களை தோலுரித்து வருகின்றனர் மக்கள் அதிகாரம் தோழர்கள். அம்மாவுக்கு எதிராக ஏதாவது பேசினால் தீக்குளிக்கவும் தயங்க மாட்டேன் என்று அதட்டலாக அடாவடி பண்ணிய சில அ.தி.மு.க அடிமைகளிடம் ஏண்டா மூடமுடியாது? என்று சவால் விட்டும் மக்கள் அதிகாரம் தன் பிரச்சார பணிகளை செய்து வருகிறது.

பேருந்து பிரச்சாரங்களில் பலதரப்பட்ட மக்களும் மனமுவந்து நமது முயற்சிகளை பாராட்டுவதும், பேசும் போதே கைதட்டி வரவேற்பதும், பேசி முடிப்பதற்குள் வந்து உண்டியலில் ரூபாய் நோட்டுகளை திணித்து விட்டுச் செல்வதும் நடக்கிறது. பேருந்து ஒன்றில் மக்கள் அதிகாரம் தோழர்களை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க முயன்ற அ.தி.மு.க கரைவேட்டி காரர் ஒருவரை எதிர்த்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர், “ஏய் அவரை ஏன் தடுக்கிற, 8 வருசமா இந்த குடியால தான் என் ஒட்டு மொத்த குடும்பமுமே அழிஞ்சிருச்சு, உனக்கென்ன தெரியும் எங்க வேதனைய பத்தி” என்று ஆத்திரத்தால் வெடித்து சீறியிருக்கிறார். “நீ பேசு தம்பி” என மக்கள் அதிகாரம் தோழர்களை அங்கீகரித்து விட்டு அவர் அமர, அவமானம் தாங்க முடியாத அ.தி.மு.க.காரரோ பேருந்தை விட்டே விருட்டென கீழே இறங்கி சென்று விட்டார்.

shutdown-tasmac-trichy-11விளம்பர சுவரொட்டிகளை நகரங்களின் முக்கிய வீதிகளில் ஒட்டிய பின்னர் குடியிருப்புகளில், தனிநபர் வீடுகளில் ஒட்டும் போது தயங்கிக்கொண்டே சுவரொட்டி ஒட்டிய தோழர்களை பார்த்து, “அட என்ன தம்பி நல்ல விசயந்தானே செய்றீங்க, அதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்குறீங்க, இங்க வந்து ஒட்டுங்க” என்று தாமாகவே முன்வந்து ஆதரவு கொடுக்கின்றனர் மக்கள். பெண்கள் தண்ணீர் பிடிக்கும் இடங்கள், மாலை இருட்டிய பின் குடிமகன்கள் ஒன்று கூடும் இடங்கள் என “இங்கே ஒட்டு, அங்கே ஒட்டு” என்று கையோடு அழைத்துக் கொண்டு சென்று சுவரொட்டிகள் ஒட்ட வேண்டிய இடத்தையும் காட்டுகின்றனர்.

” எம் புள்ளையெல்லாம் ஏற்கனவே தறுதலையா திரியுது, இதுல இந்தம்மா (ஜெயலலிதா) வேற இன்னும் தறுதலையா போ-ன்னு இப்படி (டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து) பண்ணுது” என்று கூறி ஒரு பெண்மணி ஆத்திரப்பட்டார். மாநாட்டுக்கு வந்து விடுங்கள் என்று நாம் கூறிய போது, ‘இங்க பாரு தம்பி, என் தெருவுல யாரு வராங்களோ இல்லையோ நான் தனியாளா இருந்தாலும் கண்டிப்பாக மாநாட்டுக்கு வந்துருவேன்’ என கூறியுள்ளார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு அடுத்த இடத்திற்கு நகர முயன்ற தோழர்களிடம், “இப்படி போஸ்டர் ஒட்டிக்கிட்டே போறியே காலையில சாப்பிட்டியா இல்லையா?” என்று வாஞ்சையோடு கேட்டு விட்டு, தோழர்களது பதிலுக்கு கூட காத்திராமல் வீட்டிற்குள் சென்று சாப்பாட்டு பானையை எடுத்து கிளற ஆரம்பித்து விட்டார். பசை ஒட்டி காய்ந்து போன கைகளுடன் எப்படி சாப்பிடுவது என தயங்கிய போது அவரது கையாலேயே ஊட்டி விடவும் செய்துள்ளார். கலங்கிய கண்களுடன் விடைபெற்று சென்றுள்ளனர் தோழர்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பேருந்து நிலையத்தில் ஒட்டும் போது பணியில் இருந்த கீழ் நிலை ரோந்து போலீசார், யாரு அது மக்கள் அதிகாரமா? ஒட்டுங்க … ஒட்டுங்க… நல்ல விசயந்தானே செய்யுறீங்க என்று வாழ்த்தியதோடு ”தோழரே வாங்க டீ சாப்பிடலாம்” என தயக்கத்துடன் கேட்டுள்ளார்.” நாங்க போலீசுக்காரங்க, அதனால நாங்க வாங்கிக் குடுத்தா குடிக்க மாட்டீங்கன்னு தெரியும்” என வருத்தத்துடன் பேச, “நீங்கள் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எதிரியா என்ன? டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற கோரிக்கையில் மனப்பூர்வமா எங்களை ஆதரிக்கும் உங்களை போன்றவர்களை நாங்க எப்படி எதிரியா பார்க்க முடியும்? மக்களுக்கு விரோதமா நடக்கும் போது தானே எதிர்த்து நிற்கிறோம். உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என கூறிவிட்டு அடுத்தடுத்த பிரச்சார வேலைகளுக்கு சென்றுள்ளனர்.

அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என பலதரப்பட்ட வர்களையும் சந்தித்து மாநாட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டோக்களில் விளம்பர பிளக்ஸ்கள், விளம்பர வாகனங்களில் மூடு டாஸ்மாக்கை பாடலை ஒலிபரப்பிய படி செல்லும் பகுதிகளில் பொது மக்களிடம் பலத்த வரவேற்பு இருந்துள்ளது. ஊருக்குள் நுழைந்தாலே சிறுவர்கள் டாஸ்மாக் எதிர்ப்பு பாடலை பாடிக்கொண்டே கும்பல் சேர்ந்து விடுகின்றனர். ஒரு பகுதியில் சென்று கொண்டிருந்த போது 70 வயது மற்றும் 50 வயது மதிக்கத்தக்க குடிமகன்கள் இருவர் நமது டாஸ்மாக் எதிர்ப்பு பிரச்சாரத்தை தடுத்து, “நீ யாருடா டாஸ்மாக் கடைய இழுத்து மூடுறதுக்கு” என்று தகராறு செய்ததோடு “கடைய மூடிட்டா இத எப்புடி நிறுத்துறது” என நடுங்கும் தனது கைகளை காட்டி பேசியுள்ளார். நிதானமாக இருந்த மற்றொரு குடிகாரரிடம் நாம் யார் என்பதை விளக்கி விட்டு, உங்க வீட்டு மகன் போல இருக்கும் என்னிடம் இப்படி பிரச்சனை செய்வது சரியா? நான் பேசும் விசயத்தில் ஏதாவது தப்பு இருந்தா சொல்லுங்க என நோக்கத்தை விளக்கி பேச அவரோ ‘டாஸ்மாக்கை மூடுறது தான் சரி தம்பி, இந்த ஊர் பூரா போய் பிரச்சாரம் பண்ணு, போஸ்டர் ஒட்டு, எவனாவது தடுத்தான்னா இந்த வேல்முருகன் தான் (அவரது பெயர்) செய்ய சொன்னான்னு சொல்லிட்டு போய்ட்டே இரு… என்று கூறிவிட்டு ‘மூடு டாஸ்மாக்கை’ என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மேலும் கடை வியாபாரிகள், வணிகர்கள் உள்ளிட்டோரை சென்று சந்தித்து ஆதரவும், நிதி திரட்டும் வேலைகளையும் மாநாட்டு குழுவினர் செய்து வருகின்றனர். நகரின் பிரபலமான பழமுதிர்ச்சோலை, இனிப்பகங்கள் போன்ற கடைகள் வைத்திருக்கும் வணிகப்பிரிவினரிடம் செல்லும் போது, “அடடே மக்கள் அதிகாரமா! வாங்க..வாங்க..” என வரவேற்று உபசரித்தனர். அதில் ஒருவர் “பாடகர் கோவனுடைய பாட்டை வெளி மாநிலங்கள்ல இருக்கிற என்னோட நண்பர்கள், உறவினர்களுக்கெல்லாம் கூட whats app-ல் அனுப்பியிருக்கேன், உங்கள நானே சந்திக்கனும்னு இருந்தேன், நீங்களே தேடி வந்துட்டீங்கனு” ஏதோ நீண்ட காலம் பழகிய நண்பரை போல பேச ஆரம்பித்து விட்டார். அரைமணி நேரத்திற்கு மேல் பேசிய அவர், நாம் பேச வேண்டிய அனைத்தையுமே பேசிவிட்டதால் மாநாட்டு அழைப்பிதழை அவரிடம் வழங்கியவுடன் தனது கல்லாவிலிருந்து 10,000 ரூபாயை எடுத்து மாநாட்டு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

‘உங்களுக்கெல்லாம் இத விட அதிகமாத்தான் செய்யனும் இதை இப்போதைக்கு வைத்து கொள்ளுங்கள்’ என்று கூறி மாநாடு வெற்றி பெற வாழ்த்தியுள்ளார். “எப்படியாவது டாஸ்மாக்கை மூடிவிடுங்க, இப்ப எங்க கடையிலயே 10, 15 பேரு வேலை பாக்குறானுங்க, சில பேரு பகல்லயே குடிச்சுப்புட்டு வேலைக்கு வரான், கஸ்டமருங்க முகம் சுழிக்குறாங்க! என்ன செய்யுறதுன்னே தெரியல, இவன் வாங்குற சம்பளத்தை பூரா குடிச்சே அழிச்சான்னா எத மிச்சம் பண்ண போறான்னே தெரியல” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது அவரின் ஆதங்கம் மட்டுமல்ல மனித வள அழிவின் மோசமான குறியீடும், மெல்ல அழுகி நாறும் தமிழ்ச் சமூக பண்பாட்டின் குறுக்குவெட்டுத் தோற்றமும் ஆகும். எப்படியேனும் டாஸ்மாக்கை மூடியே தீர வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டிய தருணமும் இது தான்.

shutdown-tasmac-trichy-24நாம் இப்படி சிந்திக்கிறோம். நமது பிரச்சாரம் அன்றாடம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் தாக்கத்தையும் அதன் ’அபாயத்தையும்’ நன்கு உணர்ந்த திருச்சி மாநகர கமிசனர் சஞ்சய் மாத்தூர் மாநகர போலீசுக்கு புது உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம். அதனடிப்படையில் திருச்சி மாநகரம் முழுவதும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசு சார்பில் ‘கள்ளச்சாராய’ விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகங்கள், தெம்மாங்கு பாட்டுக்கள், கரகாட்ட நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். பெண் போலீசாரை ஆடவிட்டு விடுவார்கள் என்று யாரும் அஞ்ச வேண்டாம். பெரம்பலூரில் இருந்து ஓசைக் கலைக்குழு என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை குறிப்பிட்ட தொகை பேசி ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களாம்.

இந்த முதல் சுற்று நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் பிப்ரவரி 12-ம் தேதி பாரதிதாசன் பல்கலைகழக NSS மாணவ – மாணவிகள், போலீசு நண்பர்கள் (FRIENDS OF POLICE) குழுவினர் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பேரணியும் நடைபெறவுள்ளதாம். பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடத்துவது, ஆட்டோ டிரைவர்கள் மூலம் பொதுமக்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மாநகரில் உள்ள 14 சட்டம் – ஒழுங்கு காவல் நிலையங்கள், போக்குவரத்து காவல்நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார்களாம். இதன் தொடர்ச்சியாக போலீசார் தெரிவு செய்யும் 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முதலுதவிப் பெட்டிகள் (FIRST AID BOX) வழங்கி (இல்லாத) ‘கள்ளச்சாராய’த்தை ஒழிக்கப் போவதாக ‘நாடகமாடு’கிறார்கள்.

shutdown-tasmac-trichy-23அப்படி என்னதான் இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை பார்க்கும் ஆவலுடன் கடந்த 06-02-2016 அன்று இராமக்கிருட்டிணா திரையரங்கம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். பறை இசைக்கும், கரகாட்டத்தை பார்ப்பதற்கும் கூடியிருந்த கூட்டத்தினர் மத்தியில் ‘கள்ளச்சாரா’யம் குடித்தால் நரம்பு தளர்ச்சி ஏற்படும், உடல் உறுப்புகள் நிரந்தரமாக ஊனமாகும் என்றும் வெளி மாநில மதுவோ, அந்நிய நாட்டு மதுவோ விற்பதற்கு இங்கே தடை செய்யப்பட்டுள்ளதால் அதை மீறுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்றும், யாராவது ‘கள்ளச்சாராயம்’ காய்ச்சினால் உடனடியாக போலீசிற்கு போன் பண்ண வேண்டும் என்றும் அறிவுரைசெய்து கொண்டிருந்தனர்.

சாராயமே குடிக்கக்கூடாது என்று பேசாமல் ‘கள்ளச்சாராயம்’ குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை எச்சரிக்கிறோம் என்ற பெயரில், அம்மா டாஸ்மாக் மதுபான வகைகளுக்கு நேரடி விளம்பரத் தூதர்களாக மதுவிலக்கு போலீசே களமிறங்கியதை கண்டு நமக்கே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பொது மக்களோ தலையில் அடித்து கொண்டு சென்றனர். அது சரி தான் மாவட்ட ஆட்சியர்களே அம்மாவின் ஜால்ராக்களாக மாறி கழகப் பணி ஆற்றிக்கொண்டிருக்கும் போது I.P.S முதல் ஏட்டு வரை எம்மாத்திரம்?

அடுத்த நாள் செய்தியில் காரைக்கால் பகுதியிலிருந்து மதுபான வகைகளை அளவுக்கு அதிகமாக பைகளில் வாங்கிக் கொண்டு, ரயிலில் தமிழக எல்லைக்குள் நுழைந்த வாலிபர்கள் சிலரை மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. போகிற போக்கை பார்த்தால், டாஸ்மாக்கை மூடும் வகையில் மக்கள் போராட்டங்கள் அதிகரித்தால் ‘கள்ளச்சாராயம்’ காய்ச்சி, சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக காட்டுவதற்காக மதுவிலக்கு போலீசாரே அம்மாவின் ஆணைக்கிணங்க களமிறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தகவல்
மக்கள் அதிகாரம், திருச்சி.

கரூர்

ரூர் மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராமங்களில் மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தை மையமாக வைத்து பகுதி பிரச்சாரம், கடைவீதி பிரச்சாரம், சிக்னல் பிரச்சாரம், வாயிற்கூட்டங்கள், பேருந்து பிரச்சாரம், இரயில் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்கள் என்ற வகையில் மூடு டாஸ்மாக்கை – பிப்ரவரி 14 சிறப்பு மாநாட்டை ஒட்டி வீச்சான பிரச்சாரம் செய்து வருகிறோம். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதோடு அதிகபட்சமாக நிதியும் கொடுத்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கரூர் நகரத்தில் லைட்ஹவுஸ், தாந்தோணிமலை, வெங்கமேடு, தாலுக்கா அலுவலகம் அருகில் என்று மொத்தம் 4 கூட்டங்கள் நடைபெற்றன. மாயனூர் – கட்டளை பகுதியில் 06-02-2016 அன்று மாலை 6 மணிக்கு தெருமுனைக் கூட்டம் நடத்த மக்கள் அதிகாரம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தலைமையில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு மாயனூர் காவல் ஆய்வாளர் நாகராஜன் அனுமதி வழங்கினார். கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு கட்டளை பகுதியில் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதைக் கண்டு பீதியடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளர் ரமேஸ்குமார் தலையிட்டு கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறினார். பிறகு மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்களை நேரில் சந்தித்து அனுமதி மறுத்தது தொடர்பாகப் பேசினோம். அறையை விட்டு தோழர்கள் வந்தவுடன் எஸ்.பி இன்ஸ்பெக்டர் ரமேஸ்குமார் பொங்கி எழுந்து உதிர்த்த வார்த்தைகள் இதோ…

நீங்க நாலு பேரு பேசுவீங்க. 40 பேர் அடிக்க வருவாங்க. அதுக்கெல்லாம் நாங்க பாதுகாப்பு தர முடியாது! நாலாயிரம் பேருக்கு போட்டுக் காட்டுவீங்க (வினவு தளத்தைக் குறிப்பிடுகிறார்). உங்களுக்கு 4 இடத்தில் கொடுத்ததே அதிகம். அதுக்கு மேல் ஒரு இடம் கூட அனுமதி இல்லை. வழக்கறிஞரை பார்த்து நீங்க கோர்ட்ல வாதாடுங்க. இங்க வதாடக் கூடாது. இது ஒண்ணும் கோர்ட் இல்ல. நீங்க போய் மக்களுக்கு எடுத்துச் சொன்னா மட்டும் அவன் திருந்திட போறான்களா? கரூர்ல மட்டும்தான் உங்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கோம். வேற எந்த மாவட்டத்திலும் கொடுக்கல.. அதுதான் எங்க வேலையா? மைனர் யாரும் குடிக்கல, மேஜர்தான் குடிக்கிறாங்க. நீங்க உங்க பப்ளிசிட்டி விளம்பரம் தேடுறீங்களா?”

ரவுடி போல அதிகார திமிருடன் நடந்து கொண்ட ரமேஸ்குமாரை எஸ்.பி அறைக்கு வெளியே மக்கள் அதிகாரம் தோழர்களும் வழக்கறிஞர்களும் சரமாரியாகக் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்ட களமாக்கினர். கட்டளை பகுதியில் மணல் கொள்ளையும், சந்துக்கடை சாராயம் விற்பனையும் அமோகமாக செய்து வருகின்றனர். இந்தக் கொள்ளையில் எஸ்.பி இன்ஸ்பெக்டர் ரமேஸ்குமாருக்கு நேரடியாக தொடர்பு உள்ளது. மற்றும் உள்ளூர் போலீஸ் முதல் மாவட்ட போலீஸ் வரை மணல் மாஃபியா கும்பலுக்கும் சாராய வியாபாரிகளுக்கும் சொம்பு தூக்கும் எஸ்.பி இன்ஸ்பெக்டர் ரமேஸ்குமாரை கண்டித்து நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டு ரமேஸ்குமாரின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது மக்கள் அதிகாரம்.

சுவரொட்டி முழக்கங்கள்
மூடு டாஸ்மாக்கை! மாயனூர் – கட்டளை பகுதியில் தெருமுனைக் கூட்டம் நடத்தத் தடை!

மாவட்ட நிர்வாகமே!
மாயனூர் காவல் ஆய்வாளர் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தும் SP இன்ஸ்பெக்டர் ரமேஸ்குமார் ரத்து செய்த மர்மம் என்ன?

கரூர் மாவட்டத்தில் மக்கள் உரிமைக்காக பேச வேண்டும் என்றால் இன்ஸ்பெக்டர் மனது வைத்தால்தான் சாத்தியமா?

உழைக்கும் மக்களே!
மக்களின் பேச்சுரிமையை மறுக்கும் அதிகார வர்க்கக் கும்பலை தூக்கியெறிய மக்கள் அதிகாரமே தீர்வு!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
கரூர்  செல் 9791301097

ரோகித் வெமுலா கொலை – ஏ.பி.வி.பி அவதூறுகளுக்குப் பதில்

1

லவேறு விதமான நேரடியான மற்றும் மறைமுகமான நெருக்குதல்கள் மூலம் ரோகித் வெமுலாவைத் தற்கொலைக்குத் தள்ளிய இந்துத்துவ பாசிச கும்பல், அவர் இறந்த பிறகும், தனது இழிவான பொய்ப்பிரச்சாரத்தைத் தொடர்கிறது. ரோகித் வெமுலாவின் ஜாதியில் தொடங்கி, அவருடைய கடந்தகால அரசியல் செயல்பாடுகள் வரை அனைத்தையும் தங்களுக்கு ஏற்றவகையில் வெட்டி, ஒட்டி ஊடகங்களை தங்கள் கையில் வைத்துக் கொண்டு ரோஹித் வெமுலாவை ‘பயங்கரவாதி’ என்றும் ‘ரவுடி’ என்றும் சித்தரிக்க முயல்கிறது.

முதலாவது, ஐந்து மாதத்திற்கு முன் பல்கலைக்கழக வளாகத்தில் ரோகித்துக்கும் எ.பி.வி.பி மாணவர்களுக்கும் நடந்த உரையாடல் அடங்கிய வீடியோவை எ.பி.வி.பி முகநூல் மூலமும், தெலுங்கு சேனல்கள் மூலமும் பரப்பியது. அந்த வீடியோவில் உள்ள உரையாடலின் சாரம்

.பி.வி.பி மாணவர்கள்: பேனரைக் கிழித்தாயா?
ரோகித்: ஆம். கிழித்தேன்.
.பி.வி.பி மாணவர்கள்: “எதற்காக பேனரைக் கிழித்தாய்?”
ரோகித்: “ஏ.பி.வி.பியின், இந்துத்துவாவின், ஆ.எஸ்.எஸ்ஸின் காவி நிறம் கண்ணுக்குத் தெரிந்தது, கிழித்தேன்”
.பி.வி.பி மாணவர்கள்: “உன் வீட்டில் காவி நிறம் இருந்தால் கிழிப்பாயா?”
ரோகித்: ஆம். நிச்சயமாகக் கிழிப்பேன்.
.பி.வி.பி மாணவர்கள்: உன்னைப் போல் நாங்களும் பேனரைக் கிழிக்க ஆரம்பித்தால் உங்களுடைய பேனர் ஒன்று கூட இங்கே இருக்காது.
ரோகித்: கிழித்துப்பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=sbOGvkZUhN8.

பொய்பிரச்சாரத்தையே பிழைப்பாகக் கொண்டுள்ள சங்கபரிவாரங்களிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்த விடியோவில் இருக்கும் உரையாடல் நடந்தது 2015 ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில். இந்த வீடியோவை ஏ.பி.வி.பி முகநூலில் பதிவேற்றிய அன்றே ரோகித் அதற்கு தனது முகநூலில் பதிலளித்திருந்தார். ஆகஸ்டு 8, 2015 தேதியுடைய தனது முகநூல் நிலைத்தகவலில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்

.பி.வி.பியினர் அனைவரும் இந்த வீடியோவை முகநூலில் பகிர்வதாகத் தெரிகிறது. அனைவரும் இதைப் பகிருங்கள். அந்த வீடியோவில் இருப்பது நான் தான். அதில் நான் 20 க்கும் மேற்பட்ட ஏ.பி.வி.பியினருக்கு பதிலளித்துக் கொண்டிருந்தேன். முதலில் கோபப்படாமல், நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் அம்பேத்கரையும், அம்பேத்கரிய அமைப்புகளையும் திட்டியவுடன் பொறுமை இழந்து நானும் திரும்பித் திட்ட ஆரம்பித்தேன். வளாகத்தில் உள்ள அனைத்து அம்பேத்கர் படங்களையும் கிழிப்பேன் என்று அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் கூறிய போது, எனக்கும் அவனுக்கும் சண்டை நடந்தது கூட அந்த வீடியோவில் இருக்கிறது. அதை ஏ.பி.வி.பி முழுமையாக வெளியிட வேண்டும். அதிலுள்ள ஒருவன், வளாகத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள் பஜ்ரங் தளம், அம்பேத்கரியவாதிகள் என்றால் யாரென்று ஒரு கை பார்க்கும் என்று மிரட்டினான். இந்துதுத்துவத்தைத் திட்டியதற்காக எனக்கு எந்தவிதமான குற்ற உணர்ச்சியோ வருத்தமோ இல்லை. இந்துத்துவத்தின் கலாச்சார ஆதிக்கத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக, அதைக் கொள்கையாகக் கொண்ட அமைப்புகளுக்கு எதிராக வளாகத்திற்குள்ளும், வளாகத்திற்கு வெளியேயும் தொடர்ந்து போராடுவேன். ஜெ பீம்!!!”

rohit-vemula-fb1

ரோகித் படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடும் மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கத் துப்பில்லாத மானக்கெட்ட சங்கப்பரிவாரக் கும்பலும், அதை ஆதரிக்கும் ‘அறிவாளிகளும்’ ஏதோ புதிதாக ஒரு ஆதாரத்தைக் கண்டு பிடித்தது போன்று எடிட் செய்யப்பட்ட இந்த விடியோவை வெட்கமில்லாமல் பரப்புகிறார்கள். அப்படிப் பரப்புவதன் மூலம் ரோகித் வெமுலாவை ரவுடியாகவும், சமூக விரோதியாகவும் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், யார் ரவுடியிசத்திலும், சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பது அனவருக்கும் தெரியும்.

‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை அடித்து உதைப்பது, கொலை செய்வது, ‘கலாச்சார பாதுகாப்பு’ என்ற பெயரில் பிப்ரவரி 14 அன்று சாலையில் ஜோடியாக நடந்து போகும் ஆண்-பெண்களிடம் “தாலி கட்டு, இல்லை ராக்கி கட்டு” என்று மிரட்டுவது, சமூக சிந்தனையுள்ள எழுத்தாளர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சியில் கலவரம் செய்வது, இந்துத்துவத்தை அம்பலப்படுத்தும் படங்களைத் திரையிடவிடாமல் தடுப்பது, இந்துத்துவத்தை எதிர்த்துப் பேசும் நபர்களை கொடூரமாக கொலை செய்வது என அனைத்து வன்முறைகளிலும், சமூகவிரோத செயல்பாடுகளிலும் ஈடுபடுபவர்கள் ஏ.பி.வி.பியினர் உள்ளிட்ட சங்கபரிவாரக் கும்பல்தான்.

இத்தகைய ‘யோக்கியவாதிகளான’ ஏ.பி.வி.பியினர் தான் 2006-ம் ஆண்டு மத்திய பிரதேசே மாநிலம் உஜ்ஜயினியில், மாணவர் தேர்தலில் நடந்த முறைகேடுகள் காரணமாக தேர்தலை ரத்து செய்த கல்லூரியின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் சபர்வாலை அடித்தே கொன்றனர். ரோகித் வெமுலாவைத் தற்கொலைக்கு தள்ளிய நிகழ்வுகளின் தொடக்கமே டெல்லியியில் முசாப்பர் நகர் கலவரம் பற்றிய ஆவணப்படம் (Muzaffarnagar Baaqi Hai) திரையிட்ட போது ஏ.பி.வி.பி-யினர் அந்த நிகழ்வில் வன்முறையில் ஈடுபட்டது, அதை எதிர்த்து ரோகித் சார்ந்திருக்கும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு (Ambedkar Students Association) ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியதும் தான். இவர்கள் தான், வன்முறையைப் பற்றியும், தீவிரவாதத்தைப் பற்றியும், சமூகவிரோதத்தைப் பற்றியும் பேசுகிறார்கள்.

இரண்டாவது, ரோகித்தின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை தாழத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைப் பாதுகாப்பு சட்டத்திலன் கீழ் தண்டிக்க வேண்டும் என்ற குரல் வலுத்தவுடன், ரோகித் தலித் சமுதாயத்தைச் சார்ந்தவரல்ல, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்ததவர் என்ற வதந்தியைப் பரப்பியது. போராட்டக் குழுவினர் ரோகித்தின் சாதிச் சான்றிதழை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றிய போது, அது போலியாகத் தயாரிக்கப்பட்ட சான்றிதழ் என்று கூறத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல், ரோகித்தின் தந்தை மற்றும் பாட்டியிடம் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் பேட்டி எடுத்து அதன் மூலம் ரோகித் தலித் அல்ல என்று நிரூபிக்க முயன்றனர். ரோகித்தின் சாதிச் சான்றிதழைத் தேடி காவல்துறை குண்டூரில் இருக்கும் அவரது வீட்டில் ரெய்டு கூட சென்றது.

ரோகித் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவரின் சாவுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான் போராடும் மாணவர்களின் நிலைப்பாடு. ஆனால், பா.ஜ.க, ஏ.பி.வி.பி மற்றும் துணை வேந்தர் அடங்கிய குற்ற கும்பல்தான் ரோகித்தின் மரணத்திற்குக் காரணம் என்று தெளிவாகத் தெரியும் இவ்விசயத்தில், ரோகித்தின் சாதி குறித்து கேள்வி எழுப்பவதென்பதே, மையமான பிரச்சனையிலிருந்து திசை திருப்பி குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் தந்திரம்தான். இதே வேலையைத்தான், தாத்ரி படுகொலை சம்பவத்தில் உ.பி அரசும், ஊடகங்களும் செய்தன. கொலை செய்தவனைத் தண்டிப்பது பற்றிப் பேசாமல் அவர் வீட்டில் இருந்தது ஆட்டுக்கறியா? மாட்டுக் கறியா? என்று பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். எப்படியிருப்பினும், சங்க பரிவாரங்கள் ரோகித் தந்தையின் பேட்டியை முகநூலில் பகிர்ந்து விசயத்தை திசை திருப்ப முயல்வதால், அதைப் பற்றி இங்கு பேச வேண்டியிருக்கிறது.

ரோகித்தின் தந்தை ‘வட்டெரா’ (Vaddera) என்ற சாதியைச் சார்ந்தவர். இச்சாதி ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (BC) வருகிறது. ரோகித்தின் தாய் ‘மாலா’ (Mala) என்ற சாதியைச் சார்ந்தவர். அது ஆந்திராவில் பட்டியலினத்தில் (SC) வருகிறது.

இவ்விசயம் குறித்து ரோகித் தாயார் ராதிகா அளித்த பேட்டி.

இவரை சிறுவயது முதலே தத்தெடுத்து வளர்த்தவர் ஒரு ‘வட்டெரா’ சமுதாயத்தைச் சார்ந்தவர். ராதிகாவை வளர்த்து, அவரை தனது சமுதாயத்திலேயே ஒருவருக்கு மணமுடித்து வைக்கிறார். திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் தான் இருவரும் சேர்ந்து வாழ்கின்றனர். அவர்கள் பிரிந்ததற்கு சாதியும் ஒரு முக்கியக் காரணம். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். அதில் மூத்தவர் ரோகித். கடந்த 25 வருடங்களாக ரோகித்தின் அம்மாவும், அப்பாவும் பிரிந்து வாழ்கின்றனர். ரோகித்தும், அவரது தம்பி, தங்கைகளும் தாயின் அரவணைப்பில் தான் வளர்கிறார்கள். ரோகித் வெமுலாவின் இளமைப் பருவம் எப்படி இருந்தது, எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் வளர்ந்தார். ரோகித்தின் தந்தையும், தாயும் ஏன் பிரிந்தார்கள் எனபதைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரை இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.

பொதுவாக கலப்புத்திருமணம் செய்து கொண்ட தம்பதியினரில் தந்தை ஆதிக்க சாதியாக இருந்து, தாய் தாழ்த்தப்படவராகவோ அல்லது பழங்குடியினத்தவரகவோ இருந்தால், தந்தையின் சாதியில் தான் குழந்தையையும் சேர்க்க வேண்டும் என்றுதான் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், குழந்தைகள் யாரால் வளர்க்கப் படுகின்றன எனபதைப் பொறுத்துதான் குழந்தைகள் எந்த சாதி என்பது தீர்மானிக்கப்படவேண்டும் என்று 2012 உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. மேலும், தாயின் சமூகத்தைச் சார்ந்தவர்கள் குழந்தையை தம் சமூகத்தைச் சார்ந்ததாகவே கருதுவதாலும், தாழ்த்தப்பட்ட/பழங்குடியினத்தைச் சார்ந்த தனது தாய் அனுபவிக்கும் சாதியக் கொடுமைகள், ஏற்றத்தாழ்வுகள் குழந்தையையும் பாதிக்கும் என்ற அடிப்படையில் குழந்தைகள் தாயின் சாதியில் சேர்த்துக் கொள்ளப்படலாம் என்று கூறுகின்றது.

கலப்புத் திருமணமாக இருந்தாலும் தந்தையின் சாதிதான் குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது பார்ப்பனிய இந்துமத ஆணாதிக்கக் கண்ணோட்டம்தான். சட்டப்பூர்வமாக மட்டுமல்லாமல், சமூக ரீதியாகவும் ரோகித் பிறந்தது முதல் தலித்தாகத்தான் அடையாளப்படுத்தப்படுகிறார், தலித் குடியிருப்பில், தலித்தாகத் தான் வளர்கிறார். ஒரு தலித், சமுதாயத்தில் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கிறாரோ அது அத்தனையும் அனுபவிக்கிறார். அதைத்தான், தன்னுடைய இறுதிக் கடித்ததில் “சிலருக்கு வாழக்கை என்பதே சாபம்தான். என்னுடைய பிறப்பு ஒரு அபாயகரமான விபத்து. என் சிறு வயதுத் தனிமையில் இருந்து என்னால் மீளவே முடியாவில்லை” என்று குறிப்பிடுகிறார். இவ்வளவு இருந்தும், சங்க பரிவாரங்கள் ரோகித்தின் சாதி குறித்து கேள்வி எழுப்புவது அவர்களின் இழிவான அரசியலைத் தான் குறிக்கிறது.

மூன்றாவது, அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர் யாகுப் மேமன் தூக்கிற்கு எதிராகப் போராடியதால் தான், பிரச்சனையே எழுந்தது என்று மொத்தப் பிரச்சனையையும் திசை திருப்புகின்றனர் இந்துத்துவக் கிரிமினல் கும்பல். இதன் மூலம், “யாகுப் மேமன் உச்சநீதிமன்றத்தால் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ஒரு தீவிரவாதி. ஒரு தீவிரவாதியின் தூக்குக்கு எதிராகப் போராடிய அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினரை ‘தேசத்துரோகிகள்’ என்று அழைத்து என்ன தவறு?” என்பது போன்ற கருத்தை பரப்பை ரோகித் மரணத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் அனைவருக்கும் ‘தேசத் துரோகி’ முத்திரை குத்த எத்தனிக்கிறது சங்க பரிவாரக் கிரிமினல் கும்பல்.

ஆனால், பிரச்சினை ஆரம்பித்தது யாகுப் மேமன் தூக்கிற்கு எதிராகப் போராடியதால் அல்ல, டெல்லியில் முசாபர் நகர் கலவரம் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்ட போது ஏ.பி.வி.பி அந்நிகழ்வில் கலவரம் செய்தது. இந்தத் தாக்குதலைக் கண்டித்து வளாகத்தில் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு ஒரு போராட்ட நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஏ.பி.வி.பி யின் கருத்துரிமை நசுக்கும் பாசிசத்தை வன்மையாகக் கண்டித்திருந்தது. இந்தப்போரட்டத்தைப் பற்றி ஏ.பி.வி.பி யின் தலைவர் சுஷில் குமார் தனது முகப்புத்தகத்தில் ASAவின் குண்டர்கள் ரவுடியிசத்தைப் பேகிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது” (ASA goons are talking about hooliganism…-feeling funny) என்ற நிலைத்தகவலாக இடுகிறார்.rohit-vemula-2

இதன் பிறகு தான் பிரச்சனை தொடங்குகிறது. ரோகித் உள்ளிட்ட 5 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதும் சுஷீல் குமாரைத் தாக்கியதாக வந்த குற்றச்சாட்டில் தான். பா.ஜ.க மத்திய அமைச்சர் பாண்டாரு தத்தாத்ரேயா மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு எழுதிய கடிதத்தில்தான் யாகுப் மேமன் தூக்குக்கு எதிராக அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர் போராடியது குறித்து குறிப்பிடுகிறார். பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் எந்த அறிக்கையிலும் இதைப்பற்றிக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க சார்பாகப் பேசும் அனைத்து அரைவேக்காடுகளும் யாகுப் மேமன் பிரச்சனையை மட்டுமே மையப்படுத்திப் பேசுகின்றது. அப்படி மையப்படுத்துவதன் மூலம் அனுதாப ரீதியிலும், வேறு சில காரணங்களுக்காகவும் ரோகித் மரணத்திற்கு நீதி வேண்டிய போராட்டத்தை ஆதரிக்கும் அமைப்பு சாராத நபர்கள், பொதுமக்கள் மத்தியில் ரோகித்தைப் பற்றியும், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைப் பற்றியும், இந்தப் போராட்டத்தைப் பற்றியும் ஒரு தவறான பொய்ச் சித்திரத்தை உருவாக்குவதான் இந்துத்துவக் கும்பலின் எண்ணம்.

ஆனால் நாம், யாகுப் மேமன் பிரச்சனை போராட்டத்தின் மையப்பிரச்சனையை திசை திருப்புவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று அம்பலப்படுத்தப்படுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், யாகுப் மேமன் தூக்கிற்கு எதிராகப் போராடினால் என்ன தவறு என்று கேட்டு அதற்கான நியாத்தையும் உரக்கப் பேச வேண்டும். போராட்டத்தில் பங்குகொள்வோரில் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையோர் இதைப் பற்றிப் பேசுவதில்லை.

யாகுப் மேமன் தூக்கிற்கு எதிராகப் போராடுவதைப் பற்றி கூச்சலிடும் இந்துத்துவக் கும்பல், யாகுப் மேமன் வழக்கை விசாரித்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி ராமன் அவர்களது கட்டுரையை பற்றி வாய் திறப்பதில்லை. அதுமட்டுமல்ல, யாகுக் மேமன் இந்திய விசாரணை அதிகாரிகளால் எப்படி ஏமாற்றி இந்தியா வரவழைக்கப்பட்டார், அவரது உயிருக்கு எந்தவிதப்பிரச்சினையும் ஏற்படாது என்று உறுதியளித்துவிடு அனைத்து ஆதரங்களையும் அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு அதை எப்படி அவருக்கெதிராகவே பயன்படுத்தினர் மற்றும் விசாரணையில் நடந்த பல்வேறு குளறுபடிகள் ஆகியவை பற்றி பலரும் எழுதியிருக்கின்றனர். இதைப்பற்றி எல்லாம் விவாதிக்க ஆரம்பித்தால், ஒன்று விவாதிப்பவர்களை ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்துவது, இல்லையென்றால் “உச்சநிதிமன்றமே கூறிவிட்டது. அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும், விமர்சிக்கக் கூடாது?” என்று முழுப்புவது. இதுதான் இந்துத்துவக் கும்பலின் உத்தி. ஆனால், பாபர் மசூதி இடிப்புப் பிரச்சனை உள்ளிட்டு வேறு எந்த பிரச்சினையிலாவது இவர்கள் சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதித்திருக்கிறார்களா?

ரோகித் விசயத்தில், இந்துதுவக் கும்பல் யாகுப் மேமன் பிரச்சனையை மையப் பிரச்சனையாக மாற்ற முயற்சிப்பதற்கு காரணம் இல்லாமலில்லை. 2015 ஆகஸ்டு 3-ம் தேதி நடந்ததாகக் கூறப்படும் சுஷீல் குமாரின் மீதான தாக்குதல் என்பது அப்பட்டமான பொய் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். சுஷீல் குமாரைப் பரிசோதித்த மருத்துவரின் அறிக்கையும், அவ்வறிக்கை மற்றும் சாட்சிகள் அளித்த வாக்கு மூலம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு சமர்பித்த விசாரணை அறிக்கையும் அதனை ஏற்கனவே உறுதி செய்திருந்தின. அதனால்தான், யாகுப் மேமன் பிரச்சனைய முன்னிறுத்தி தீவிரவாதப் பூச்சாண்டி காட்டி மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்டத்தை நீர்த்துப் போகச்செய்துவிடலாம் என்று கனவு காண்கிறது காவி கிரிமினல் கும்பல்.

இதற்கு வலு சேர்க்கும் விதமாக, சட்ட பூர்வமாக மேலும் சில ஆதாரங்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. கடந்த ஆகஸ்டு மாதம் சுஷீல் குமாரின் அம்மா தன் மகனுக்கு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு இல்லையென்றும், தன் மகனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதற்கு பதில் மனு தாக்கல் செய்த பல்கலைக்கழக நிர்வாகமும், சைபராபாத் (Cyberabad) காவல் துறை ஆய்வாளரும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர் சுஷீல் குமாரைத் தாக்கியதாகக் கூறப்படுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், சுஷீல் குமாரும் அவரது தாயாரும் அளித்த புகார் சற்று மிகையாகச் சித்தரிக்கப்படது என்றும், ஆகவே சுஷீல் குமாரின் தாயார் தாக்கல் செய்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்துவிடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன் மூலம் இந்துத்துவக் கும்பலின் பொய்ப் பிரச்சாரம் அம்பலப்பட்டுப் போயிருக்கின்றது.

– கனகன்

மேலும் படிக்க

திருச்சியில் பிப். 14 “மூடு டாஸ்மாக்கை” மாநாடு – நிகழ்ச்சி நிரல்

0

shutdown-tasmac-poster

ஊருக்கு ஊரு சாராயம்! கதறுது தமிழகம்!
மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாடு

14-02-2016 ஞாயிறு, மாலை 4.00 மணி
உழவர் சந்தை மைதானம், தென்னூர், திருச்சி

ஏன் முடியாது? மூடு டாஸ்மாக்கை
குடிநோயால் குடும்பம் குடும்பமாக பலியாகிறது தமிழ்ச்சமூகம்
சாராய சாம்ராஜ்யாத்துக்கு முடிவு கட்டுவோம் வாரீர்!

shutdown-tasmac-invitationதலைமை
தோழர் காளியப்பன், மாநில ஒருங்கிணைப்புக் குழு, மக்கள் அதிகாரம்

சிறப்புரை
தோழர் மருதையன், பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

உரையாற்றுவோர்
திரு டி.எம். சஞ்சீவி குமார், பத்திரிகையாளர், சென்னை
க.காவ்யாஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, அவ்வூர், நீலகிரி மாவட்டம்
திரு. தனசேகரன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம்
Dr. இரா பாலகுரு, மனநல மருத்துவர், திண்டுக்கல்

டாஸ்மாக் கொடூரம் – நேருரைகள்
திருமதி ஆனந்தி அம்மாள், உதவும் கைகள், சென்னை
திருமதி மந்திரி குமாரி, கச்சிராயநத்தம், விருத்தாசலம் வட்டம்
திரு நாகராஜ், அனுப்பராப்பாளையம், திருப்பூர்
திரு. டேவிட் ராஜ், தேசிய சாம்பியன்- வாள்வீச்சு, தேமனூர், கன்னியாகுமரி

தப்பாட்டம் – மாலை 4.00 மணி ஜான் பீட்டர் – கலா தப்பாட்டக் குழு, ரெட்டிப் பாளையம், தஞ்சாவூர்
நாடகம் – மையம் வீதி நாடக இயக்கம், மதுரை
கலை நிகழ்க்கிசகள் – கரநாதன் நாவேர் நாட்டுக்களறி கலைக்குழு, ஆலப்புழா, கேரளா
புரட்சிகர கலை நிகழ்ச்சி – ம.க.இ.க மையக் கலைக்குழு

போதையிலிருந்து தமிழகத்தை மீட்க, சாராய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்டவாரீர்!

நிதி தாரீர்

shutdown-tasmac-request-donationவெற்றிவேல் செழியன்

வங்கிக் கணக்கு எண் : 62432032779
State Bank of Hyderabad
Pozhichalur, Chennai
IFSC Code SBHY0021334

 

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
தொடர்புக்கு : 99623 66321

“மூடு டாஸ்மாக்கை” அரித்துவாரமங்கலம் மாணவர்கள் அறைகூவல்

shutdown-tasmac-kumbakonam-meeting-1மூடு டாஸ்மாக்கை மாநாடு தொடர்பாக அரித்துவாரமங்கலம் பகுதியில் கடந்த 24-01-2016 அன்று தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது.  மக்கள் அதிகாரம் தோழர்களும் பு.மா.இ.மு தோழர்களும் காலை 10 மணியளவில் தொடங்கி பறைஅடித்துக்கொண்டும் மெகாபோன் மூலமாகவும் பிரச்சாரம் செய்து வந்தார்கள். மாலை 7 மணியளவில் அரித்துவாரமங்கலம் கடை வீதியில் தெருமுனை பிரச்சாரம் செய்யும் போது காவல்துறை வந்து “அனுமதி வாங்காம பிரச்சாரம் பண்ணக்கூடாது” என்று தகராறு செய்தார்கள்.

“ஒலிஒளி அமைக்கதான் அனுமதி வாங்கனும். மெகாபோனுக்கு எல்லாம் அனுமதி வாங்க தேவையில்லை” என்று தோழர்கள் வாதிட்டார்கள். அப்போது PRPC வழக்கறிஞர் தோழரும் கூட இருந்தார் அவரிடத்தில் SI, “இது எல்லாம் தொழில் ரகசியம்” என்று பம்மினார். அந்தப் பகுதியில் கெத்து காட்ட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள் ஆனாலும் மக்கள் கடைசிவரை கலையாமல் நின்று பார்த்து கொண்டிருந்தனர். போலீஸ் விடாப்பிடியாக நின்றதால், “நாங்க மெகாபோன் வைத்து நாலுபேருக்கு தெரியனுன்னு நினைத்ததை போலீஸ் நானூறு பேறுக்கு தெரிவிக்கனுன்னு ஆசைபடுறாங்க. போலீசு ஆசைபடியே செய்துடலாம்” என்று சொல்லிவிட்டு தோழர்கள் கலைந்து விட்டார்கள்.

shutdown-tasmac-kumbakonam-meeting-3பிறகு அனுமதி வாங்கி 04-02-2016 அன்று மாலை மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாட்டு விளக்க தெருமுனை கூட்டம் சுமார் 6.45 மணியளவில் பறை அடிக்க துவங்கியது. கூட்டத்தின் துவக்கத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ஜெயபாண்டியன் பேசுகையில்

“டாஸ்மாக்கால் தமிழகம் எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பதோடு போதை தலைக்கேறியவன் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு சுயநினைவை இழந்து விடுகிறான் என்பதற்கு உதாரணமாக ஒரு அரசன் குற்றவாளிக்கு தண்டனை தருகிறான் அப்போது ஒரு பெண், ஒரு குழந்தை, ஒருபாட்டில் சாராயம் இந்தமூன்றையும் காட்டி அந்தப் பெண்ணை கற்பழிக்க வேண்டும் இல்லை என்றால் அந்தக் குழந்தையை கொலை செய்ய வேண்டும் இல்லை என்றால் இந்த சாராயத்தை குடிக்க வேண்டும் என்று சொல்கிறான். அவன் அந்த பெண்ணைக் கற்பழித்தாலோ அல்லது அந்தக் குழந்தையை கொன்றாலோ பாவம் என்று விட்டுவிட்டு சாராயத்தை குடிக்கிறான். குடித்தபிறகு போதை அதிகமானதும் பெண்ணை கற்பழிக்கிறான் அந்த குழந்தையையும் கொலை செய்கிறான். போதை தலைக்கு ஏறினா என்னவாகும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக குறிப்பிட்டு இந்த அரசு எப்படி குடிகார அரசாக இருக்கிறது என்று அரசை அம்பலப்படுத்தி பேசினார்.

அவரைத் தொடர்ந்து பிரவின் என்ற 7-ம் வகுப்பு மாணவன் பேசுகையில், “வெள்ளக்காரன் கிட்டயிருந்து நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது நம்மள குடிக்க வைக்கிறதுக்கா? எங்க பள்ளிகூடத்துக்கு பக்கத்துல உள்ள டாஸ்மாக்கை மூடுனுன்னு கலெக்டர்கிட்ட மனுகொடுக்கலான்னு பார்த்தா அந்த கலெக்டர்தான் டாஸ்மாக்கை நடத்துறதா சொல்லுறாங்க. போலீசு டாஸ்மாக்கு காவல்காக்குது” என்று அதிகாரவர்கத்தை எள்ளி நகையாடினார்.

shutdown-tasmac-kumbakonam-meeting-4அடுததபடியாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத் தோழர் சங்கத்தமிழன் பேசுகையில் “பள்ளிகூடத்துக்கு கழிப்பறை இல்லை பாடம் நடத்த வாத்தியார் இல்லை இதை எல்லாம் செய்து கொடுன்னு கேட்டா அதை செய்யமாட்டங்குது அரசாங்கம். எங்க ஊரில் டாஸ்மாக் வேண்டான்னு ஊராட்சி மன்றத்தலைவர் தீர்மானம் போடுறாரு. தீர்மானத்தை கொஞ்சமும் மதிக்காமல் செயல்படுகிறது” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அரித்துவாரமங்கலம் பகுதி அமைப்பாளர் தோழர் விஜயராகவன் பேசுகையில், “எங்களுடைய வரிப்பணத்துல சம்பளம் வாங்குற போலீசு எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்காம சாராயக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்குது. இதுதான் போலீசோட நிலைமை. அதோடு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தன்னுடைய சகமாணவன் குடித்து சீரழியிறான்னு கல்லூரி பக்கத்துல உள்ள டாஸ்மாக்கை அடித்து உடைத்தார்கள். அவர்களை போலீசு மண்டையை அடித்து உடைத்து ஜெயில்ல தூக்கி போட்டது. எப்படி காவல்துறை சாராயக்கடைக்கு காவல் காக்குது” என்று போலீசோட அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினார். “இன்னைக்கு மாணவர்கள் நாங்க போராடுறோம் நீங்க எல்லாம் வேடிக்கை பாக்குறிங்க” என்று பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

shutdown-tasmac-kumbakonam-meeting-6அடுத்த படியாக அட்சயா என்ற 5ஆம் வகுப்பு மாணவி பேசுகையில், “சாராயம் குடிச்சிட்டு வந்து எங்ககிட்ட தண்ணி கேக்குறாங்க. பாட்டிலை போட்டு உடைக்கிறாங்க. எங்களால படிக்கமுடியல. உடம்புல துணியில்லாம கெடக்குறாங்க. அந்தப் பக்கம் நடந்து போகவே அசிங்கமா இருக்கு” என்று பேசினார்.

சிறப்புரையாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர். காவிரிநாடன் பேசுகையில், “சாக்ரடீஸ் பிறந்த ரோமில் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க முடிந்தது. சாக்ரடீஸிடம் நீதிபதி நீ அரசுக்கு எதிராக போராடுற அதனால் நாங்க உனக்கு தண்டனை தரலாம் என்று இருக்கோம். உனக்கான தண்டனையை நீயே சொல்லு என்று கேட்க்கையில் சாக்ரடீஸ் எனக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளமும் தினமும் உணவும் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதை போல ஜனநாயக நாடு என்று சொல்லக்கூடிய நமது நாட்டில் அப்படி கேட்க முடியுமா? இங்கு ஜனநாயகம் எல்லாம் கிடையாது. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று சொன்ன பெரியார் பிறந்த மண்ணில் மானத்தையும் அறிவையும் இழந்து நிற்கும் அவலநிலை. ஊருக்கே சோறுபோட்ட விவசாயி நடுத்தெருவில. விவசாயம் பொய்த்துவிட்டது. ஆளும் ஆட்சியாளர்களும் அதிகாரவர்க்கமும் இனி டாஸ்மாக்கை மூடமாட்டார்கள் நாம் தான் மூடவேண்டும் மக்கள்தான் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்” என்று டாஸ்மாக்கை மூட மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்தக் கூட்டத்தில் பெருந்திரளாக மாணவர்களும் மாணவிகளும் கலந்து கொண்டனர் கூட்டத்தின் இடையே பு.மா.இ.மு தோழர்கள் வேலுவும், தமிழ்மாறனும் “மூடுடாஸ்மாக்கை”, “ஊருக்கு ஊரு சாராயம்” பாடல்களை பாடினார்கள்.

இறுதியாக மக்கள் அதிகாரம் தோழர் செல்வகுமார் நன்றியுரை ஆற்றினார்.

தகவல்
மக்கள் அதிகாரம்,
கும்பகோணம்

திருவாரூர்

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்

அகதிகளா தலித் மக்கள் ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2016 வெளியீடு !

0

Puthiya kalacharam feb 16“கடந்த காலங்களை திரும்பிப் பார்க்கும் போது யாராலும் போற்றப் படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது.” – தற்கொலை என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹைதராபாத் பல்கலை நிர்வாகத் தால் கொலை செய்யப்பட்ட ரோகித் வெமுலாவின் வார்த்தைகள் இவை.

தலித் மக்கள் மீதான அடக்குமுறை இல்லாத மாநிலமோ வருடமோ இந்தியாவில் இல்லை. இசையமைப்பாளர் இளையராஜாவின் பண்ணைப் புரத்திலேயே இன்றும் தலித் மக்களுக்கு தனித் தேநீர்க் குவளைதான். கண்டதேவி, சேலம் மாரியம்மன் கோயில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம், நத்தம் காலனி இளவரசன், கடைசியாக திருச் செங்கோட்டில் கோகுல்ராஜ். கொல்லப்பட்டவர்களுக்கும், கொடுமைப்படுத்தப் பட்டவர்களுக்கும் முடிவில்லை.

மராட்டியத்தின் “கயர்லாஞ்சி படுகொலை”யில் போட்மாங்கே என்ற தலித்தின் மனைவியையும், மகளையும் வன்புணர்ச்சியோடு கொன்று, மகன்கள் இருவரையும் கொலை செய்த ஆதிக்க சாதிக் குற்றவாளிகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

Puka Feb 16 Wrap Backஇராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி என்ற ‘கீழ்சாதி’ப் பெண்ணை ஆதிக்கசாதி இந்துக்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், “கீழ்சாதிப் பெண்ணை உயர் சாதியினர் தொட்டிருக்கக்கூட மாட்டார்கள்” எனக் கூறியது.

23 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்கவில்லை என்பதால் ஆந்திராவின் சுண்டூர் கிராம மக்கள், “எங்களது புதல்வர்களை ரெட்டி சாதிவெறியர்கள் வெட்டிக் கொல்லவில்லை என்றால் எங்களது இளைஞர்கள் அவர்களே வெட்டிக் கொண்டு, உடல்களை சாக்குப் பையில் திணித்துக் கொண்டு துங்கபத்ரா கிளைக் கால்வாயில் தாமாகவே வீசியெறிந்து கொண்டார்களா?” என்று ஆத்திரத்துடன் கேட்கின்றனர்.

பா.ஜ.க ஆட்சியில் முசுலீம்கள் மற்றும் தலித்துக்களை கொல்வதற்கு போட்டியே நடக்கிறது.

பார்ப்பனியமும், பாராளுமன்றமும் தலித் மக்களின் மீதான ஒடுக்கு முறைகளை வளர்க்கிறது. நீதிமன்ற – போலிஸ் கூட்டணியோ சாதி வெறியர்களை விடுதலை செய்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களை கைவிட்ட இந்த அரசுக் கட்டமைப்பை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதற்கு ஆதாரங்களை ஆவணப்படுத்துகிறது இந்த நூல்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

அகதிகளா தலித் மக்கள் ? – புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2016 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. ரோகித் வெமுலா கொலை – பார்ப்பனக் கொடுங்கோன்மையின் நேரடி சாட்சி
  2. தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
  3. கோலாரில் சாகக் கோருகிறது ஒரு தலித் குடும்பம்
  4. தலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை!!
  5. கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும்!!
  6. கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா?
  7. கத்ரா, பாக்னா : சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது!
  8. பொறியியல் கல்லூரி தலித் மாணவிகள் – புள்ளிவிவர மயக்கம் !
  9. பதனி டோலா படுகொலை தீர்ப்பு: நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம்!
  10. ஊராட்சியில் சேரிக்கு இடமில்லை!
  11. சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற மாயை கலையட்டும் !
  12. தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!
  13. தீண்டாமை இல்லையென்றால் பரிசு! இருந்தால் தண்டனை இல்லை!!
  14. வன்கொடுமைகள்தான் இந்தியாவின் வளர்ச்சி!
  15. சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர், பெரியாருக்குத் தடை !

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

வரலாற்றுப் பார்வையில் ஜல்லிக்கட்டு ஆதரவும் எதிர்ப்பும்

7
ஜல்லிக்கட்டை ஆதரித்தால்தான் காளை இனத்தை பாதுகாக்க முடியுமா?
jallikattu-8
ஜல்லிக்கட்டு குறித்து மூன்றாம் தரப்பினரின் பார்வையை ஊடகங்கள் வெளியிடுவதில்லை!

‘தமிழர்களின் கலாச்சாரம்’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் ஒருபுறம். ‘விலங்கு நலன்’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள் இன்னொரு புறம். இந்த இரண்டு பிரிவினர் தான் இவ்விசயத்தில் இருதுருவங்களாக இருந்து மோதிக் கொள்கின்றனர் என்பது போன்ற ஒரு சித்திரம் அனைத்து ஊடகங்களாலும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. ஆனால், இந்த இரு முகாம்களுடனும் முரண்பட்டு ஜல்லிக்கட்டை விமர்சிக்கும் இன்னொரு பிரிவினரும் உள்ளனர். அவர்கள்தான் தலித் அமைப்பினர், பெரியார் அமைப்பினர்,  இடதுசாரியச் சிந்தனையாளர்கள் (CPI, CPM அல்ல) மற்றும் மார்க்சிய-லெனினிய அமைப்பினர். ஜல்லிக்கட்டு விசயத்தில் மட்டுமல்ல , வேறு எந்த அரசியல், சமூக பிரச்சினைகள் குறித்த விவாதங்களிலும் இந்த மூன்றாம் தரப்பினரின் வாதங்களை எந்த ஊடகமும் (சில விதிவிலக்குகள் தவிர) கேட்பதில்லை. கேட்க விரும்புவதுமில்லை.

சரி, யாரெல்லாம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்கள்? சீமான் போன்ற தமிழினவாதிகள், தமிழ்க் கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பெயரில் சாதியத்தைக் காக்கும் இடைநிலை ஆதிக்கசாதி அமைப்புகள், அனைத்து ஓட்டுகட்சிகள் (தங்களைக் கம்யுனிஸ்டுகள் என்று கூறிக் கொள்ளும் CPI மற்றும் CPM ம் இதில் அடங்கும்), தமிழினவாத்தை எதிர்க்கும், தங்களை முற்போக்கு-ஜனநாயகவாதிகளாகக் காட்டிக்கொள்வோர்  சிலரும் தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில் ஜல்லிக்கட்டை ஆதரிக்கின்றனர்.

jallikattu-9
பெட்டா காமடியர்கள் அல்லது பாசிஸ்டுகள்

யாரெல்லாம் ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள்? ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பெரும்பான்மையானவர்கள் ‘விலங்கு நலன்’ என்ற பெயரில் இயங்கும் பார்ப்பன மேல்சாதியினர்/மேட்டுக்குடியினர் தான். இவர்கள் இயல்பாகவே ஆ.எஸ்.எஸ்-பி.ஜே.பி-இந்துத்துவ ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். மேலும், இவர்களில் பெரும்பாலோனோர் மாட்டுக் கறி உணவுத் தடைக்கு ஆதரவாகவும், மாடுகள் பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் படுகொலைகளைக் கூட ஆதரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவற்றில் இன்னொரு சுவையான விஷயம் என்னெவென்றால், போன வருடம் வரை “ஜல்லிக்கட்டு மேற்கத்தியக் கலாச்சாரம். ஜல்லிக்கட்டில் மாடுகள் வதைக்கபடுகின்றன” என்று கூறி ஜல்லிக்கட்டை மூர்க்கமாக எதிர்த்த ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி என்ற பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல் ஜல்லிக்கட்டில் பெரும்பாலும் ஈடுபடும் முக்குலத்தோர் வாக்கு வங்கியைக் குறிவைத்து அதன் மூலம் தமிழகத்தில் காலூன்றலாம் என்ற நோக்கோடு இந்த வருடம் ஜல்லிக்கட்டு-ஆதரவு அவதாரம் எடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இருந்து இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்பது பா.ஜ.க. முன்கூடியே அறிந்ததுதான். அவர்கள் விரும்புவதும் அதைத்தான்.

ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் ஒரு அரசாணையைக் கொண்டு வந்ததன் மூலம் “ஜல்லிக்கட்டை அனுமதிக்க நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் உச்சநீதிமன்றம் அதற்குத் தடை விதித்துவிட்டது. இப்போது நாங்கள் என்ன செய்யமுடியும்? மற்ற படி நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானவர்கள்தான்” என்ற ஒரு சித்திரத்தை உருவாக்க பா.ஜ.க முயற்சி செய்கிறது. இதற்கு பெயர்தான் பார்ப்பன நரித்தனம் என்பது. இதே வேலையைத்தான் ஏழு தமிழர்கள் விடுதலை செய்வது தொடர்பாக ஜெயலலிதாவும் செய்தார். ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை ஆயள் தண்டனையாகக் குறைக்கும் நீதிபதி சதாசிவத்தின் தீர்ப்பு வந்தவுடனே, அவசர அவசரமாக, அவர்களை விடுதலை செய்யப்போகிறேன் என்று நாடகமாடினார்.

ஜல்லிக்கட்டு தமிழ் பண்பாடு இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
ஜல்லிக்கட்டு தமிழ் பண்பாடு இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

முதலில், ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் கூறும் வாதங்களைப் பார்ப்போம். ஜல்லிகட்டுக்கு ஆதரவாக பெரும்பாலாக சொல்லப்படுவது “தமிழ்க்கலாச்சாரம்”, “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு”, “பாரம்பரியக் காளை இனங்களை ஜல்லிக்கட்டு மூலமாக பாதுகாப்பது” ஆகியவைகள்தான்.

முதலில் “ஜல்லிக்கட்டு” தமிழ்க் கலாச்சாரமா? இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு பதில் இல்லை. பெரும்பாலனவர்கள் இதைத் தமிழ்க் கலாச்சாரம் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்கு அவர்கள் காட்டும் ஆதாரங்கள் சங்க இலக்கியம் மற்றும் வேறு சில தமிழ் இலக்கிய நூல்கள். ஆனால், கல்வெட்டு ஆதாரங்களைக் கொண்டு இதை மறுக்கும் ஆய்வாளர்களும் உள்ளனர். உதாரணமாக, தொல் ஓவிய வரலாற்றாளரான காந்திராஜனும், சென்னை கவின்கலைக் கல்லூரி முதல்வரான பேராசிரியர் சந்திரசேகரனும் “தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு மாட்டை அடக்கும் “ஜல்லிக்கட்டு” அல்ல. மாறாக “மஞ்சு விரட்டு” அல்லது “எருது கட்டுதல்” தான் உண்மையான தமிழ்ப் பாரம்பரியம்” என்று கூறுகின்றனர்.

மஞ்சு விரட்டு என்பது மாடுகளை அடக்குவதல்ல. ஆய்வாளர்கள் கூறுவது போல “பொங்கல் விழாக்களின் போது காளைகள் நெடுஞ்சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு, கிராமத்து இளைஞர்கள் அவற்றை விரட்டிக் கொண்டு ஓடுவர். சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு ஆரவாரிப்பர். அப்பந்தயத்தில் முதலில் வந்து வெற்றிபெறும் வீரருக்குப் பரிசளிக்கப்படும். இதில் மாடுகளுக்கோ மனிதர்களுக்கோ காயமேற்படாது”. நீலகிரி மற்றும் மதுரை-திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கல்வெட்டுகளிலும், குகை ஓவியங்களிலும் இதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். இக்கல்வெட்டுகள் ஏறத்தாழ 3500 ஆண்டுகள் பழமையானவை. இந்த “மஞ்சு விரட்டு” தான் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன் நாயக்கர் ஆட்சிக்காலத்தில், நிலபிரபுத்துவ (சாதி) ஆணவத்தின் சின்னமாக மாட்டை அடக்கும் “ஜல்லிக்கட்டாக” மாறியது என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. இது தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிழதலில் வெளியான கட்டுரை.

jallikattu 3
மஞ்சுவிரட்டுதான் தமிழர்களின் பண்பாடு: தஞ்சை மாவட்டம் ஒன்றில் மஞ்சு விரட்டு

ராஜ் கௌதமன் போன்ற ஆய்வாளர்கள் ஜல்லிக்கட்டு என்பது அனைத்து தமிழர்களுக்கும் பொதுவான விளையாட்டாக என்றுமே இருந்ததில்லை என்று கூறுகிறார்கள். அது மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு வரலாறு முழுவதும் ஒரே மாதிரி இருந்து வந்தது இல்லை. அதற்கு பல வடிவங்கள்-பெயர்கள் (எருது அணைதல், எருது கட்டுதல், ஏறு தழுவுதல்) இருந்திருக்கின்றன. வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டு என்ற தற்போதைய வடிவம் பிரபலமாகி, ஒரு பொதுவான தமிழ் அடையாளமாக மாற்றப்பட்டு, இப்போதுவரை அவ்வாறே சொல்லப்பட்டும் வருகிறது. இப்போதும் கூட ஜல்லிக்கட்டு தமிழகத்தின் சில மாவட்டங்களில் தான் விளையாடப் படுகிறது, அனைத்து மாவட்டங்களிலும் விளையாடப்படுவதில்லை. சங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு குறித்த பாடல்கள், ஜல்லிக்கட்டு (மாட்டை அடக்குதல்) என்பது வீரத்தின அடையாளமாகவும், மாட்டை அடக்கும் இளைஞர்கள் மீது பெண்கள் காதல்வயப்படுவது குறித்தும் விவரிக்கின்றன.

முதலில், காளையை அடக்குவதை வீரத்தோடு தொடர்புபடுத்துவது என்பது நிலப்புரபுத்துவ சமூக-பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கிய கருத்தாக்கம். இந்தக் கருத்தாக்கத்தை இப்போது விமர்சனமின்றி ஏற்றுக்கொள்வது கருத்தியல் ரீதியாக ஒரு சரியான நிலைப்பாடாக இருக்கமுடியுமா? மேலும், சங்ககால ‘வீரம்’ என்ற கருத்தாக்கம் இப்போது வேறு வடிவில் இருக்கிறது. இப்போது தமிழரின் வீரம் என்ற பெயரில் முன்னிறுத்தப்படுவது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறையை ஏவும் இடைநிலை ஆதிக்க சாதியினரின் ‘வீரம்’ தானே. இந்த வீரம் நடைமுறையில் நலிந்த மக்கள் மீது வன்முறையை ஏவுவதாகவும், ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு அடிபணிந்து போவதுமாகத்தானே இருக்கிறது. ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகப் பொங்கும் இந்த ‘வீரம்’ பார்ப்பன பாசிச ஜெயா அரசு 2003-ம் ஆண்டு கிடா வெட்டுத்தடைச் சட்டம் கொண்டுவந்த போது ஏன் பொங்கவில்லை? பொங்காது. ஏனென்றால், அந்த வீரத்தின் அடிப்படை நிலபிரபுத்துவ ‘ஆண்ட பரம்பரைப்’ பெருமைதான்.

உண்மையான வீரம் என்பது காளையை அடக்குவதோ, ஒடுக்கப்பட்ட மக்களின் மீது வன்முறையை ஏவுவதோ அல்ல. மாறாக அனைத்துவிதமான ஆதிக்கங்களையும் கருத்திலும், களத்திலும் சமரசமின்றி எதிர்ப்பதாகும். இவ்வீரம் உடல் வலிமை சார்ந்ததல்ல; அரசியல் சார்ந்தது, கருத்தியல் சார்ந்தது, அந்தக் கருத்தியலின்பாற்பட்ட நடைமுறை சார்ந்தது.

jallikattu-7
காளையை அடக்குவதுதான் உண்மையான வீரமா?

பாரம்பரியம், கலாச்சாரம் என்பவை நிலையானவை அல்ல. பல ஆண்டுகளாகத் தொடர்கிறது என்பதற்காக எதையும் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்வது என்பது ஒரு சரியான பார்வையாக இருக்கமுடியாது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இருக்கிறது என்பதற்காக, கடவுள்-மத நம்பிக்கைகள் என்ற பெயரில் தொடரும் சாதித் தீண்டாமை, குழந்தைத் திருமணம், பெண்ணடிமைத்தனம் போன்ற கொடிய பழக்கவழக்கங்களை ஏற்றுக் கொள்ளமுடியுமா என்ன?

ஜல்லிக்கட்டில் இருக்கும் சாதியக் கூறுகள் பற்றி ஆதாரத்துடன் பல பேர் பேசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்ற உணர்ச்சிவாதத்தில் ஜனநாயகவாதிகள், முற்போக்காளர்கள் கூட சில நேரங்களில் தடுமாறிவிடுகிறார்கள். அப்படி தான், அப்பட்டமாக சாதி ஆதிக்கம் தெரியும் ஜல்லிக்கட்டை அவர்கள் ஆதரிக்கிறார்கள். அவர்கள், ஒன்று, ஜல்லிக்கட்டில் சாதிஆதிக்கம் இருக்கிறது என்பதை அடியோடு மறுக்கிறார்கள், இல்லையென்றால் அதற்கு சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ஜல்லிக்கட்டு பற்றிய விவாதம் பொறி பறக்கும் இதே காலகட்டத்தில் தான், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருநாள்கொண்டசேரி என்ற கிராமத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெருமாள் என்ற இறந்த முதியவரின் உடலை ஊரின் பொதுப் பாதையில் கொண்டு செல்ல அங்குள்ள ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். உயர்நிதிமன்ற உத்தரவையும் மீறி, அவரது உடல் பொதுப் பாதையின் வழியே கொண்டு செல்லப்படாமல் திருட்டுத்தனமாக காவல் துறையினரால் வேறொரு பாதையில் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. தமிழ்க் கலாச்சாரத்தையும், வீரத்தையும் பற்றி நரம்புகள் புடைக்கப் பேசும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பெரும்பான்மையோர் இந்தச் சாதிவெறியைக் கண்டிக்காதது தற்செயலானதல்ல.

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முன்வைக்கும் இன்னொரு வாதம்: “ஜல்லிக்கட்டு மூலம் தான் பாரம்பரிய காளை இனங்களைப் பாதுகாக்க முடியும். ஜல்லிக்கட்டை எதிர்க்கும் விலங்கு நல ஆர்வலர்கள் பாரம்பரிய காளை இனங்களை அழிக்க சதி செய்யும் ஏகாதிபத்திய நிறுவனக் கைக் கூலிகள்” என்பது. பெரும்பாலான விலங்கு நல ஆர்வலர்கள், அவர்கள் வைத்திருக்கும் அமைப்புகள் பெரும்பாலும் பன்னாட்டு ஏன்.ஜி.ஓ-க்களோடு தொடர்பு கொண்டிருப்பதும், அப்பன்னாட்டு நிறுவனங்களிடம் நன்கொடை பெறுவதும் மறுக்க முடியாத உண்மை. ‘விலங்கு நலன்’ என்ற பெயரில் அவர்கள் நடத்தும் பார்ப்பன மேல்சாதி, பன்னாட்டு ஏகாதிபத்திய அரசியலை கண்டிப்பாக அம்பலப்படுத்த வேண்டும்.

ஜல்லிக்கட்டை ஆதரித்தால்தான் காளை இனத்தை பாதுகாக்க முடியுமா?
ஜல்லிக்கட்டை ஆதரித்தால்தான் காளை இனத்தை பாதுகாக்க முடியுமா?

ஆனால், ஜல்லிக்கட்டு மூலம் தான் பாரம்பரிய காளையினங்களை பாதுகாக்க முடியும் என்பது எந்த அளவுக்குச் சரி? இதைச் சரியென்று வைத்துக் கொண்டால், ஜல்லிக்கட்டு நடக்காத மற்ற மாவட்டங்கள், மற்ற மாநிலங்களின் உள்ள பாரம்பரிய காளையினங்களை எப்படிப் பாதுகாப்பது? பாரம்பரிய காளையினங்களின் அழிவு என்பது விவசாயத்தைத் திட்டமிட்டு அழித்துவரும் உள்நாட்டு, பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களின் கொடூரமான சுரண்டலோடு தொடர்புடையது. 80 சதவீதம் விவசாயத்தைச் சார்ந்திருப்போர் வாழும் இந்தியாவில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வெறும் 17 சதவீதம். நாடு ‘சுதந்திரம்’ அடைந்தது முதல் இன்று வரை இந்தியாவின் பொருளாதாராக் கொள்கைகள் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும்தான் இருக்கின்றன. உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளிடமிருந்து விவசாயத்தை மீட்டெடுக்காமல், பாரம்பரியக் காளையினங்களை மட்டும் எப்படிப் பாதுகாக்க முடியும்?

jallikattu-10
ஜல்லிக்கட்டை எதிர்க்கும் மேட்டுக்குடி பெட்டாவின் பிரச்சாரம்

தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு ஆதரவின் பின்னுள்ள சாதி ஆதிக்கத்தை எந்த அளவுக்கு அம்பலப்படுத்துகிறோமோ, அதே அளவுக்கு, அதைவிட இன்னும் அதிகமாக ‘விலங்கு நலன்’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும். ஏனென்றால், முன்னவர்களை விட இவர்களது அரசியல் மிகவும் ஆபத்தானது.

PETA (People for the Ethical Treatment of Animals) போன்ற ‘விலங்குகள் நலன்’ என்ற பெயரில் இயங்கும் நிறுவனங்களில் பணிபுரிவோர் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பன ‘உயர்’ சாதி, மேடுக்குடியினராக இருப்பது எதேச்சையானதல்ல. இவர்கள் ‘விலங்கு நலன்’ என்ற பெயரில் முன்னிறுத்துவது சக மனிதர்கள் மீது கருணை காட்டாத, விலங்களின் மீது மட்டும் கருணை ‘ஜீவ காருண்யம்’ என்ற இத்துப்போன பார்ப்பனியக் கருத்தாக்கம் தான்.

இவர்கள் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதற்கான ஒரே காரணம் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்பதுதான். விலங்குகளுக்காகப் பொங்கும் கனவான்கள்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்களின் ஒரு பகுதியினரை தீண்டத்தகாதவர்களாக விலங்கினும் இழிவாக நடத்தியவர்கள். இன்றும் நடத்துபவர்கள். இவர்கள்தான் அசைவம் உண்ணுபவர்களை அசுத்தமானவர்களாகச் சித்தரிக்கிறார்கள். அவர்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கிறார்கள். சமீபத்தில் கூட PETA என்ற நிறுவனத்தைப் பற்றி ஒரு ஆய்வு வந்துள்ளது? விலங்கு நலன் என்ற பெயரில் பல விலங்குகளை அந்நிறுவனத்தினர் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு. கடந்த 11 வருடங்களில் நாய், பூனை, முயல் உள்ளிட்ட 29,426 வீட்டு விலங்குகளை கொன்றிருக்கின்றனர் PETA அமைப்பினர்.

இவர்கள் ஜல்லிக்கட்டை இத்தனை தீவிரமாக எதிர்ப்பதற்கு இன்னொரு காரணம், அனைத்து தேசிய இனங்களின் பண்பாட்டையும் அழித்து ஒற்றைப் பார்ப்பனிய இந்து மத அடையாளத்தைப் புகுத்துவதுதான். அதுவும் பார்ப்பனிய எதிர்ப்பிற்கு, சுயமரியாதை இயக்கத்திற்குப் புகழ்பெற்ற தமிழகம் என்றால் சொல்லவே வேண்டாம். இந்த அடிப்படையில்தான் கேரளாவின் கோவில்களில் யானையைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போது ஜல்லிக்கட்டு வழக்கை இத்தனை அவசரமாக எடுத்து அதற்கு எதிராக தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.

jallikattu 2
மாட்டை வைத்து ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்யும் மதவெறி அரசியல்!

தேசிய இனங்களின் பண்பாட்டை அழிப்பது என்ற வகையில் பார்ப்பனியம் என்ன செய்கிறதோ, அதைத்தான் உலகமயம் என்ற பெயரில் ஏகாதிபத்தியம் இன்னொரு வகையில் செய்கிறது. ஆனால், இவையிரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. ஏனென்றால், இவை இரண்டுக்கும் அடிநாதமாக இருப்பவை ஏற்றத்தாழ்வு, சுரண்டல். அதனால்தான் சாதித் தீண்டாமை ‘நவீன’ உலகமயக் கலாச்சாரத்தில் கரைந்து போகாமல் தன்னை மறுவார்ப்பு செய்துகொண்டு வெவ்வேறு வடிவங்களில் இன்றளவும் தொடர்கிறது. பார்ப்பனியமும், ஏகாதிபத்தியமும் சேர்ந்தியங்குவதும் இப்படித்தான்.

இறுதியாக, கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பெயரில் இடைநிலை ஆதிக்க சாதிகளின் சாதி ஆணவத்தைப் பாதுகாக்கும் ஜல்லிக்கட்டை ஆதரிப்பதும், விலங்கு நலன் என்ற பெயரில் பார்ப்பனியக் கண்ணோட்டத்துடன் ‘ஜல்லிக்கட்டை’ எதிர்ப்பது என்ற இரண்டுமே உழைக்கும் மக்களுக்கு ஆபத்துதான். இவை இரண்டையும் தவிர்த்து, உழைக்கும் மக்களின் அரசியல், சமூக விடுதலை எனும் கண்ணோட்டத்தில் கலாச்சாரம், பண்பாடு போன்றவை பற்றிய புதிய சிந்தனையை வளர்ப்பதுதான் இப்போதைய தேவை.

-கனகன்

மேலும் படிக்க

பெண்கள் சிறுமிகள் விற்பனைக்கு – நூலறிமுகம்

1

பெண் எனும் பொருள் விற்பனைக்கு: பெண்கள், சிறுமிகள் – லிடியா காச்சோ

Journalist and human rights campaigner Lydia Cacho.
மெக்சிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளர் லிடியா காச்சோ

மேலை நாடுகளின் நவீனமயமாக்கம், உலகமயமாக்கம், சட்டங்கள், சந்தைப் பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்ப புரட்சி அனைத்தும் சேர்ந்து, ஆதிகாலத்திலிருந்து இணைய காலத்திற்கு மாறியிருக்கும் விபச்சாரத்தை வலியுடன் பேசுகிறது இந்நூல். குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக சுரண்டப்படுவதை இந்த ஆய்வு நூல் அதிர்ச்சியுடன் விவரிக்கிறது. நூலாசிரியர் லிடியா காச்சோ தனது புலனாய்வின் மூலம் முதலாளித்துவ அமைப்பின் பாலியல் துறை பயங்கர முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

“சந்தைப்பொருளாதாரம்” பெண்களையும், குழந்தைகளையும் நுகர்வுக்கான பண்டமாக மாற்றியுள்ளது. இயல்பான காமத்தை வெறியுடன் தூண்டுவதோடு, நுகரத் துடிக்கும் கேளிக்கை தூண்டும் விசையாகவும் செயல்படுகிறது.

துருக்கி மத நம்பிக்கையுள்ள முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நாடு. ஆனால் இங்கு அரசே விபச்சார விடுதியை நடத்துகிறது, சட்டத்திற்க்கு புறம்பான வழிகளிலும் நடத்தப்படுகிறது. மேலும் குழந்தைகளை வைத்தும் பாலியல் வியாபாரம் நடை பெறுவதை அம்பலபடுத்தியுள்ளார் லிடியா. பெண்களையும், குழந்தைகளையும் பொருளாக விற்கும் இந்த சந்தையில் மாஃபியாக்களின் சர்வதேச வலைப்பின்னல், அரசுகளின் கபட நாடகம், அதிகாரிகளின் இலஞ்ச ஊழல், அதிகாரம் பெற்றவர்களின் இரட்டைவேடம் அத்தனையும் நூலில் அம்பலமாகியுள்ளன. இந்த வியாபாரத்தில் இராணுவம், போலிஸ் துறையினரே அதிக வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்பது நாட்டையும் மக்களையும் காப்பதாக கூறுபவர்களின் இலட்சணத்தை அம்பலப்படுத்துகிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் தொடர்ந்து யுத்தம் நடைபெறும் சூழலில் பாலஸ்தீனன் ஒருவன் தனது இரு பெண் குழந்தைகளையும் விபச்சார தரகனுக்கு விற்று விடுகிறகிறான். பின்னர் அவர்கள் விபச்சார விடுதில் வைத்து போலீசால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்காகிறது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் “இரு பெண்களும் அவர்களது தந்தையால் விற்பக்கப்பட்டதால் கவுரவமானவர்களாக இல்லை, அதனால் அந்த பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கிய தரகர்கள் இருவரும் திருமணம் செய்யலாம்” என்று நீதி வழங்கினர். வன்புணர்ந்தவனே தாலி கட்டும் கொடூரங்கள் தமிழ் சினிமாவில் மட்டுமில்லை உலகெங்கும் இருக்கிறது. குற்றவாளிகளே பெண்களை காக்கும் நீதி எப்படி இருக்கும்? இஸ்ரேலில் விபச்சாரத்திற்க்காக வெளிநாடுகளிலிருந்து பெண்களை கடத்தி வரப்படுவதையும், உடல் உறுப்புக்களுக்காக ஆள் கடத்தல் நடப்பதையும்ம் நூலாசிரியல் வெளிக் கொணர்ந்துள்ளார்.

vidiyal-lydia bookமுசுலீம் சமூகத்தில் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளிலும் இதே கதைதான். எதற்க்கெடுத்தாலும் நமது படித்த அறிவாளிகள் ஜப்பானைப் பார் எவ்வளவு முன்னேற்றம், கடுமையான உழைப்பு, வளர்ச்சி என்று வானளாவ புகழ்வர். அப்பேற்பட்ட ஜப்பானின் யோக்கியதை என்ன? வட அமெரிக்க பெண் சாராவுக்கு ஜப்பானில் ஏற்பட்ட அனுபவம் பாலியல் கொடூரத்தின் உச்சம். அத்தோடு ஜப்பானிய போலீசின் பாராமுகத்தையும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதையும் ஆசிரியர் அறியத் தருகிறார்.

முன்னைய சோசலிச நாடுகளில் அரசின் கட்டுப்பாடுகள் அதிகம், சுதந்திரம் என்பது கிடையாது என்று புலம்பும் அறிஞர்களின் குரலை இன்று வரை கேட்கிறோம். உண்மையில் அந்நாடுகளில் மக்களுக்கு சுதந்திரம் மக்களுக்கு எதிரானவர்களுக்கு கட்டுப்பாடு என்பதையே இவர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட அமெரிக்க இளம்பெண் சாரா தனது வாக்குமூலத்தில் “கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் நம்மை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடியது, ஆபத்து மிக்கது…” என்று வெளிப்படையாகக் கூறுகிறார். அதாவது முதலாளித்துவ வர்க்கத்திற்குரிய சுதந்திரமே உலகில் விபச்சாரத்திற்காக கோடிக்கணக்கான பெண்களை, குழந்தைகளை வதைத்துக் கொல்கிறது. அதை கட்டுப்படுத்துவதற்காகவே கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரம் வேண்டும் என்கிறார் சாரா.

கட்டற்ற பாலியல் சுதந்திரம் வேண்டும என்பதையே கலகத்தின் தத்துவமாக முன் வைக்கும் அறிஞர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்குமானால் இந்த நூல் விவரிக்கும் இரத்த சாட்சியங்களை பார்த்து தற்கொலை செய்து கொள்ளும். விபச்சாரத்தை ஒரு தொழிலாக அங்கீகரித்து முறைப்படுத்த வேண்டும் என்று குரல் கொடுக்கும் என்.ஜி.வோக்கள் உலகமெங்கும் கொடூரமாக கடத்தப்பட்டு வதைக்கப்படும் பெண்கள், குழந்தைகளுக்கு என்ன வழி சொல்லுவார்கள்? கடத்துவதையும் முறைப்படுத்தி கடத்த வேண்டும் என்றா? விபச்சாரத்தை தடை செய்வதை விடுத்து, சட்டபூர்வமாகவோ இல்லை சட்ட விரோதமாகவோ அதை அங்கீகரிக்கும் அரசுகளுக்கு என்.ஜி.ஓக்கள் இன்னுமொரு தூதராகவே உள்ளனர்.

மதம், பண்பாடு போன்ற ‘புனிதமான’ வழிகளின் மூலமும் பெண்களை மனமாற்றம் செய்து விபச்சாரத்திற்க்கு பயன்படுத்தும் போக்கை இந்நூல் விவரிக்கிறது.

அண்மைய வரவான இணையத்தின் மூலம் விபச்சாரம் எவ்வாறு கொடிட்டிப் பறக்கிறது என்பதை ஆசிரியர் விவரித்துள்ளார். இணையத்தை பயன்படுத்துவதில் விபச்சார மாஃபியாக்கள் அரசுகளுக்கே சவால் விடும் அளவுக்கு வளர்ந்துள்ளனர். இணையத்தில் பெண்களையும், குழந்தைகளையும் ஆபாச படங்களில் காட்டுவது அதாவது போர்னோ வியாபாரம் மிகமிக அதிகரித்துள்ளது. பல நாடுகளில் இந்த ஆபாசத்தை தடை செய்யுமாறு மக்கள் கோரினாலும் எந்த அரசும் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. நமது `மங்கிபாத்` பிரதமரும் சமீபத்தில் ஆபாச இணையதளங்களை தடை என்று உத்தரவு போட்டார் ஆனால் உத்தரவு மை காயு முன்னே உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. பெண்களை தாயாக ‘பார்க்கும்’ இந்துத்வா அரசின் இலட்சணம் இதுதான்.

இராணுவமும், விபச்சாரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமே தங்களது வீரர்களுக்கு விபச்சாரத்தை ஒரு அடிப்படை வசதியாகவே சப்ளை செய்கிறது. இதுபோக பாலியல் வன்முறையை தங்களுக்கு தோன்றும் இடங்களில் செயல்படுத்துவதும் இராணுவத்தின் அடிப்படை உரிமையாக உள்ளது. அடாவடி அமெரிக்கா வியாடநாம் மீது போர் தொடுத்த போது நான்கு லட்சம் தாய்லாந்து பெண்கள் அமெரிக்க வீரர்களுக்கு அனுப்பப்பட்டனர். அமெரிக்க செனட்டர் ஜேம்ஸ் வில்லியம் புல்பிரைட் “தாய்லாந்து ஆசியாவின் அமெரிக்க விபச்சார விடுதி” ஆக ஆனதற்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன்தான் பொறுப்பு என்கிறார்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய இராணுவத்துக்கு தேவையான பெண்களை பிலிப்பைன்ஸ், சீனா, கொரியா, வியட்நாம், மலேசியா, தைவான், இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து கடத்தி வந்தது ஜப்பானிய அரசு. இப்பெண்கள் `சுகம் தரும் பெண்கள்` எனப்பட்டனர். இந்த போரில் அமெரிக்காவும், ஜப்பானும் எதிராக மோதிக் கொண்டன. ஆனால் ஜப்பானிய மண்ணில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இராணுவத்திற்க்கு தேவையான பெண்களை ஜப்பான் அரசே சப்ளை செய்தது. அந்நியர்கள் மூலம் தங்களது இனத்தில் கலப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நிலையில் ஜப்பான் அரசு தெளிவாக செயல்பட்டது. ஈராக்கிலும்,ஆப்கனிலும் அமெரிக்கா செய்த பாலியல் வன்புணர்ச்சி உலகறிந்தது.

lydia's bookஇன்று தொழில் துறைக்கு தேவையான ஆட்களை அவுட்சோர்ஸிங் முறையில் செயல்படுத்துவது இந்த உலமயம் மூலமாக நடைபெறுகிறது. அதே போல் அமெரிக்க ராணுவத்திற்க்கு தேவையான பெண்களை தனியார் மூலம் அவுட்சோர்ஸிங் செய்வதை லிடியா தன்னுடைய ஆய்வு நூலில் விவரிக்கிறார். தனது உயிரைப் பணயம் வைத்து அவர் திரட்டியிருக்கும் விவரங்கள் மிகுந்த வேதனை அளிப்பவை.

நூலிலிருந்து….

“…..ஒரு நாளைக்கு 12 தடவைகளுக்கும் மேல் வன்புணர்ச்சிக்கு ஆளாகும் இளம் பெண்; வாடிக்கையாளர்களின் பார்வைக்காக சின்ன கண்ணாடிக் கூண்டுகளுக்குள் செல்லப் பிராணிகளைப் போல் அடைத்து வைக்கப்படும் அடிமைச் சிறுமிகள்; விபச்சார விடுதியில் இருந்து தப்பிய சிறுமியை வெட்டிச் சமைத்து கறியை மற்றப் பெண்களுக்குக் கொடுத்து எச்சரிக்கும் கொடூர எசமானி; இரவெல்லாம் விபச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டு பகலெல்லாம் தெருத் தெருவாக பிச்சை எடுக்க விரட்டப்படும் அடிமைச் சிறுமிகள்; வக்கிரம் பிடித்த மாஃபியாக்களிடம் இருந்து தப்பி முழு நிர்வாணமாக நடு ரோட்டில் ஓடி வீடு வீடாக கதவைத் தட்டி உதவி கேட்கும் இளம் பெண்; அடிமைச் சிறுமிகளின் மேல் மூத்திரம் கழிந்தும், காறி துப்பியும் சுகம் காணும் ஒரு வக்கிரக் கிழம்; சூட்டுக் கோலால் அடிமை அடையாளக் குறியிடப்பட்ட இந்தியப் பெண்கள் ……”

“….உலகில் இன்றைய தேதியில் சுமார் 20 மில்லியன் முதல் 30 மில்லியன் வரையிலான எண்ணிக்கையில் அடிமைகள் இருப்பதாகவும்; உலகளவில் நடைபெற்று வரும் ஆட்கடத்தலில் 80 சதவீதம் பாலியல் சுரண்டலுக்காகவும், 19 சதவீதம் கட்டாய உடலுழைப்புக்காகவுமாக உள்ளதாகவும் மற்றும் சர்வதேச அளவில் மனிதக் கடத்தல் சட்டவிரோத வர்த்தகம் ஆண்டுக்கு $32 பில்லியன் அளவுக்கு இலாபம் குவிப்பதாகத் தெரிய வருவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எதோ இதெல்லாம் கம்போடியாவிலும், கொலம்பியாவிலும் தானே என்று அலட்சியப்படுத்தி விட முடியாது.; கூடவும் கூடாது. நம்மூரில், நம்ம தெருவில் கூட பெண்களைத் தொடரும் அந்த ‘பணம் தின்னிப் பிசாசுகள்.’ இருக்கலாம்; எந்த உருவத்திலும், எந்த ஒரு உறவுமுறையிலும் இருக்கலாம்”

யாரும் பார்க்க விரும்பாத இந்த உலகம்தான் நமது நாகரீக உலகின் உண்மையான முகம். இந்த முகத்தை அறியத் தந்த நூலாசிரியருக்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம். இந்த நூலை மொழிபெயர்த்த விஜயசாய் மற்றும் வெளியிட்ட விடியல் பதிப்பகத்தாருக்கும் நமது நன்றிகள்.

சில இஸ்லாமிய நாடுகளில் விபச்சாரத்திற்கு மரணதண்டணை வழங்கப்படுகிறது. இதன் பொருள் அந்நாடுகளில் பணக்காரர்கள், அதிகாரிகள், மன்னர் குல ஷேக்குகளுக்கு மட்டும் விபச்சார வசதியும், வன்புணர்ச்சியும் உண்டு என்பதே. சமீபத்தில் புதுதில்லியில் நேபாள பெண்களை வன்புணர்ச்சி செய்த சவுதி தூதரக அதிகாரி விசாரணை, கைது இன்றி பாதுகாப்பாக தாயகத்திற்கு அனுப்பட்டதை நினைவு கூரலாம். இதற்கு மாறாக வளர்ந்த நாடுகள் சில விபச்சாரத்தை சட்டப்படியே அனுமதிக்கின்ற. இங்கு சட்டபூர்வம், விரோதம் என இருமுறைகளிலும் இந்த ‘தொழில்’ கொடிகட்டிப் பறக்கிறது.

ஆக எந்த வழிவகைகளிலும் விபச்சாரத்தை இவர்களால் ஒழிக்க முடியவில்லை. ஆனால் ரசியாவில் சோசலிச புரட்சி இருந்த காலங்களில் சட்டத்தின் மூலம் மட்டுமல்லாமல் எதார்த்தமாகவும் சமூகம் மாற்றம் கண்டது. அனைவருக்கும் கல்வி, வேலை,மருத்துவம்,வீடு, பாதுகாப்பு, நிலம் போன்ற அனைத்தும் அரசால் உத்திரவாதப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விபச்சாரமும் ஒழிக்கப்பட்டது. ரசியாவைத் தொடர்ந்து சீனா, மற்ற பிற சோசலிச புரட்சி நடந்த நாடுகளிலும் விபச்சாரம் ஒழிக்கப்பட்டது. இந்த உலகம் முதலாளித்துவ நாடுகளாக இருக்கும் வரையிலும் விபச்சாரம் எனும் இந்த கொடூரம் இருக்கவே செய்யும்.

“…. எப்படியும், இன்றைய பொருளுற்பத்தி அமைப்பு ஒழிக்கப்படும்போது, இந்த அமைப்பிலிருந்து எழும் பொதுப் பெண்டிர் முறையும் – அதாவது பகிரங்கப் பொது விபச்சாரமும் இரகசியத் தனி விபச்சாரமும் – கூடவே ஒழிந்தே ஆக வேண்டும் என்பது தெளிவு.”

காரல் மார்க்ஸ், பிரடரிக் ஏங்கெல்ஸ், கம்யூனிஸ்ட்டுக் கட்சி அறிக்கை…

– தம்பி அசுரன்

  • நூல்: பெண் எனும் பொருள் விற்பனைக்கு: பெண்கள்,குழந்தைகள்.
  • ஆசிரியர்: லிடியா காச்சோ.
  • தமிழில்: விஜயசாய்.
  • வெளியீடு:
    விடியல் பதிப்பகம்,
    23/5, ஏ.கே.ஜி.நகர், 3வது தெரு,
    உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் – 641015,தொலைபேசி – 0422-2576772, 9789457941
    மின்னஞ்சல் முகவரி: vidiyal@vidiyalpathippagam.org
  • பக்கம்-460, விலை,350.

காதலை வைத்து காவிகள் தயாரிக்கும் வெடி குண்டு

6

முசுலீம் குடும்பங்களைப் பாருங்கள். பன்றி குட்டி போடுவதைப் போல் எட்டு பத்து பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள். அதில் அழகான பையனாக பார்த்து மதரஸாவிற்கு தத்து கொடுத்து விடுகிறார்கள். மதரஸாவில் என்ன செய்கிறார்கள்? இந்தப் பையன்களுக்கு பெண்களை மயக்குவதற்கு பயிற்சியளிக்கிறார்கள். பின்னர், பைக், வாட்ச், மொபைல், போன் போன்றவற்றையும், நல்ல உடைகளையும் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார்கள். அவர்களும் சோனு மோனு போன்ற பெயர்களோடு வாழும் இந்துப் பெண்களை அணுகுகிறார்கள். இந்தப் பையன்களின் அழகில் மயங்கும் இந்துப் பெண்களை மெல்ல  வலையில் வீழ்த்தி அவர்களை இசுலாமுக்கு மதம் மாற்றி பின் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். இசுலாத்தில் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமில்லையா? எனவே அடுத்தடுத்து இந்துப் பெண்களாக குறி வைத்து அவர்களை மதம் மாற்றி குழந்தைகள் பெற்று இசுலாமியர்களின் மக்கள் தொகையை உயர்த்த சதி நடக்கிறது. இந்த சதி திட்டத்திற்கு பாகிஸ்தான் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் காசு வருகிறதாம்….”

– லவ் ஜிஹாத் என்ற இல்லாத ஒரு ‘சதி’யைக் குறித்த இந்துத்துவ கும்பலின் விளக்கம் இது. தமிழ் நாட்டு சாதிக்கட்சிகள் (குறிப்பாக பா.ம.க) தலித்துகள் குறித்தும் தலித் இயக்கங்கள் குறித்தும் முன்னெடுத்த அவதூறு பிரச்சாரமும் இதுவே.

இந்துக்கள் தெய்வமாக போற்றும் குடும்பப் பெண்களை இசுலாமிய பயங்கரவாதிகள் கவர்ந்து செல்வதால் இந்து சனாதன தர்மமே நிலைகுலைந்து போகிறது என்கிற குற்றச்சாட்டு சமீப காலங்களில் நடக்கும் பல்வேறு பகுதியளவிலான மதக் கலவரங்களுக்கான முன் தயாரிப்பாக உள்ளது. இத்தனைக்கும் லவ் ஜிஹாத் என்கிற கருத்துருவாக்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வடக்கு கேரளத்திலும் கடலோர தென் கருநாடகத்திலும் தேவலோக வதந்தியாக முளைவிடத் துவங்கிய போது விசாரித்த போலீசார், இதில் கடுகளவும் உண்மையில்லை என்பதை உறுதி செய்திருந்தனர். கேரளத்திலும் கருநாடகத்திலும் லவ் ஜிஹாத்தை வைத்து சரியாக கல்லா கட்ட முடியாத இந்துத்துவ கும்பல் தற்போது அதையே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வட மாநிலங்களில் கலவரங்களைத் தூண்டி வருகின்றது.

லவ் ஜிஹாத் உண்மையில்லை என்பது வெட்டவெளிச்சமாக இருக்கும் போது, ‘கலப்பு’த் திருமணங்களை வைத்து எப்படி இந்துத்துவ கும்பலால் கலவரங்களைத் தூண்ட முடிகிறது?

இதை அறிந்து கொள்ள நாம் ’ஆபரேஷன் ஜூலியட்டை’ பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். குலைல்(gulail) மற்றும் கோப்ரா போஸ்ட்(Cobrapost) இணைய பத்திரிகைகள் இணைந்து நடத்திய இரகசியப் புலனாய்வின் பெயர் தான் “ஆபரேஷ்ன் ஜூலியட்”.

cobrapost-newslaundry
இப்பத்திரிகைகளின் செய்தியாளர்கள் இந்துத்துவ முகாமுக்குள் தைரியமாக ஊடுருவி லவ் ஜிஹாதை முன்வைத்து நடத்தப்படும் கலவரங்களுக்காக எப்படித் தயாரிப்புகள் செய்கிறார்கள், இதை எப்படி தேர்தலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.

இந்த இரகசிய விசாரணையின் விவரங்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கின்றன.

கேள்வி 1: ஒரு முசுலீம் இளைஞனும் இந்துப் பெண்ணும் காதல் கலப்பு மணம் புரிவதை இந்துத்துவ கும்பல் எப்படி மோப்பம் பிடிக்கிறது?

”இங்கே நிறைய வக்கீல்கள் சுயம் சேவகர்கள் (ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்) தான். அவர்கள் திருமண பதிவு அலுவலகத்திலும் மாஜிஸ்டிரேட் கோர்ட்டிலும் ஏதேனும் கலப்புத் திருமணம் பதிவாகிறதா என்பதை கவனித்து வருவார்கள். திருமணத்திற்கு பதிவு செய்தவர்களின் பெயர் முகவரி போன்ற விவரங்களையும், சம்பந்தப்பட்ட மணமக்களின் சார்பாக வக்கீல்கள் யாராவது இருந்தால் அந்த விவரத்தையும் எங்களிடம் தெரிவித்து விடுவார்கள். பின் நாங்கள் ஒரு 50, 60 பேர்கள் கொண்ட அணியாக கிளம்பிச் செல்வோம்”.  -சஞ்சை அகர்வால், பாரதிய ஜனதா நகராட்சி உறுப்பினர். முஸாபர்பூர் கலவரத்தில் சங்க பரிவார பயங்கரவாத குழுக்களின் சார்பில் களத்தில் தளபதியாக செயல்பட்டவர்.

கலப்புத் திருமண பதிவுக்கான ”சிறப்பு திருமணச் சட்டத்தின்” படி திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் பதிவாளர் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் தங்களது விவரங்களை திருமண நாளுக்கு முப்பது நாட்களுக்கு முன்னரே எழுதி வைக்க வேண்டும். இந்த நாட்களில் குறிப்பான ஆட்சேபணைகள் ஏதும் இல்லை என்றால் தான் திருமணத்தை பதிவு செய்ய முடியும். இந்த கட்டத்திலேயே மதக் கலப்புத் திருமணம் செய்யவிருப்பவரின் விவரங்களை அறிந்து கொள்ளும் இந்துத்துவ கும்பல் களத்தில் இறங்கி விடுகிறது.

Sanjay-Agarwal-operation juliet
இரகசிய புலனாய்வு வீடியோவில் சஞ்சய் அகர்வால்

மணமகனின் மேல் ஆள் கடத்தல், கற்பழிப்பு வழக்கு போடுவது பெண்ணின் குடும்பத்தாரை வைத்து ஆட்கொணர்வு மனுபோடுவது என்று சட்ட ரீதியாகவே மேல் கையெடுக்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பின், தனது சம்மதத்தோடு தான் திருமணம் நடந்தது என்று பெண் வாக்குமூலமே கொடுத்தாலும், வழக்கு முடியும் வரை பெண்ணை அவளது பெற்றோருடன் செல்லுமாறு அறிவுருத்துகிறது நீதிமன்றம். ஒரு சில வழக்குகளில், இந்துத்துவ கும்பலின் வேலையைத் தனது சொந்த வேலையாகவே வரித்துக் கொள்ளும் நீதிமன்றம் பெண்ணுக்கு அறிவுரைகள் சொல்லி அவளை கணவனிடமிருந்து பிரித்து வீட்டாருடன் அனுப்பி வைக்கிறது.

இந்துத்துவ கும்பலின் பின்னணியில் அரசு, நீதித் துறை, அமைப்பு பலம் மற்றும் அரசியல் நோக்கங்கள் இருக்கும் அதே வேளையில், காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பவர்களின் பின்புலத்தில் அவர்களைக் காப்பாற்ற எவரும் இருப்பதில்லை.

கேள்வி 2: கலப்புத் திருமணம் பற்றிய தகவல் அறிந்து கொண்ட பின் இந்துத்துவ கும்பலின் செயல்பாடுகள் என்ன?

”நாங்கள் அந்தப் பகுதியில் சிறு சிறு கூட்டங்கள் நடத்துவோம். நம்முடைய பெண்ணை முசுலீம் பையன் தூக்கிட்டுப் போயிட்டான் என்றும் இதே மாதிரி நிறைய இந்துப் பெண்களைத் தூக்கிட்டுப் போயிருக்காங்கன்னும் மக்களுக்குச் சொல்வோம். இப்ப அந்தப் பகுதியில் இருக்கும் பெண்ணோட சாதியைச் சேர்ந்தவங்க திரண்டு வருவாங்க”

“தேர்தலுக்கு முன்னாடி என்றால் இந்த மாதிரி நிறைய கூட்டங்கள் நடக்கும். நானே அந்த மாதிரி கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நான் போனதும் இப்படிப் பேசுவேன் – “நண்பர்களே, நம்முடைய நாடு மிகப் பெரிய அபாயத்தை எதிர் நோக்கியிருக்கிறது என்று சொல்வேன். இதை தடுக்க நாம் மோடியைக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால், இந்த நாட்டிற்கு இந்துத்துவம் தேவையாய் இருக்கிறது என்பதை விளக்குவேன். இந்த முசுலீம் பசங்க நம்ம பொணணுங்களை கடத்திட்டு போறாங்க அப்படின்னு சொல்வேன். இந்த இந்த ஊரிலேர்ந்து இந்த இந்த பெண்கள் இப்படி கடத்தப்பட்டிருக்காங்கன்னு அடுக்குவேன். இந்தப் பெண்களை மீட்கனும் – லவ் ஜிஹாத்தை எதிர்த்து போரிடனும் அப்படின்னு சொல்லுவேன். மாடுகளைக் கூட வெட்றாங்கன்னு சொல்லி இதுக்கெல்லாம் ஒரே தீர்வு மோடி தான் அப்படின்னு பேசியிருக்கேன்”  –  சஞ்சைஅகர்வால்

Sangeet-Som-operation-juliet
இரகசிய புலனாய்வு வீடியோவில் சங்கீத் சோம்

பெண்ணின் குடும்பத்தார்கள் தரப்பிலிருந்து ஒரு கடத்தல் வழக்கை காவல் துறையில் பதிவு செய்து நீதிமன்றத்தின் உதவியோடு பெண்ணை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அதற்குப் பின் பெண்ணின் குடும்பத்தார் வழக்கை எப்படிக் கையாள வேண்டும், எந்த வழக்கறிஞரை வைத்துக் கொள்வது என்று அவர்களின் மொத்த நடவடிக்கைகளையும் இந்துத்துவ கும்பலே இயக்குகின்றது. இதன் பின் சம்பந்தப்பட்ட பெண் அனுபவிக்கவுள்ள உளவியல் சித்திரவதைகள் சொல்லி மாளாது. இதோ இந்துத்துவ கும்பலின் சொந்த வார்த்தைகளிலேயே அதைப் பார்க்கலாம் –

“நாங்கள் அந்தப் பெண்ணை சென்டிமென்டலாக மிரட்டுவோம். உன்னோட அப்பா செத்துப் போயிடுவாரு.. அம்மா தூக்கில தொங்கிடுவாங்க… உன்னோட அண்ணன் சமூகத்துக்கு முன்னே அவமானத்தோட வாழ பயந்து தற்கொலை செய்துக்குவான் அப்படின்னு சொல்வோம்” -சங்கீத் சோம், உத்திரபிரதேச மாநிலம் சார்தான சட்டமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ., முஸாபர்பூர் கலவரத்தின் மூளை.

என்னதான் காதல் உண்மையாகவும் உறுதியாகவும் இருந்தாலும், பெரும்பாலான இளம் பெண்கள் இந்த உளவியல் துன்புறுத்தல்களில் வீழ்ந்து விடுகிறார்கள். கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது இந்துத்துவ கும்பலின் வக்கீல் படை தயாரித்தளித்த கதையை அட்சரம் பிசகாமல் ஒப்பிக்கிறார்கள்.

கேள்வி 3: ஒருவேளை, இந்துத்துவ குண்டர்கள் கட்டவிழ்த்து விடும் அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு அந்தப் பெண் காதலில் உறுதியாக இருந்தால்?

அந்தப் பெண்ணுக்கு தற்காலிக நினைவுப் பிறழ்வு (temporary amnesia) ஏற்படுத்தும் மருந்துகளைக் கொடுத்து அவளை மனநல ஆலோசனை மையத்திற்கு (Counselling Center) அனுப்புவோம் என்று திமிராக கோப்ராபோஸ்ட் நிருபரின் இரகசிய கேமராவுக்கு முன் சொல்கிறார் எர்ணாகுளத்தில் செயல்படும் ஹிந்து உதவி மையத்தைச் சேர்ந்த சிஜித். மேற்படி ஆலோசனை மையத்தில் இந்துத்துவ நிபுணர்கள் இசுலாத்தைப் பற்றியும், இசுலாமியர்களைப் பற்றியும் இதம் பதமாக எடுத்துச் சொல்லி புரியவைப்பார்கள்.

ஒருவேளை அந்தப் பெண் இந்த தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டு தனது காதலில் உறுதியாக இருந்தால்?

Sanjiv-Balyan-operation juliet
இரகசிய புலனாய்வு வீடியோவில் சஞ்சீவ் பல்யான்

”ஆலோசனை மையத்திலிருந்து அந்தப் பெண் நீதி மன்றத்திற்கு செல்லும் போது, நாங்கள் சொல்வது போன்ற வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் கொடுத்து நாங்கள் சொல்லும் பையனைக் கல்யாணம் செய்து கொள்ள மறுத்தால் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும் போது அவளையும் அவள் திருமணம் செய்து கொண்டிருக்கும் முசுலீம் கணவனையும் கொன்று போட்டு விடுவோம் என்று மிரட்டி அனுப்புவோம்” என்கிறார் கேரளாவின் இந்து ஒற்றுமை மையத்தைச் சேர்ந்த ரவீஷ் தந்த்ரி.

கேள்வி 4: சரி இந்த அநியாயங்கள் எல்லாம் சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் ஒரு நாட்டில் இவ்வளவு துணிச்சலோடு செய்ய எப்படி முடிகிறது?

”நான் எங்க அமைப்பில் இருக்கும் மாணவர்களிடம் பேசும் போது அவர்களை போலீசில் சேரச் சொல்லி அறிவுறுத்துவேன். ஏன்னா… நாளைக்கு நமக்கு ஏதாவது உதவி தேவைப்படும் போது அங்கே நம்ம கார்யகர்த்தர்கள் (செயல்வீரர்கள்) இருக்கனும் இல்லையா. இங்க இருக்கிற போலீசு கான்ஸ்டபிள்களில் அறுபது சதவீதம் நம்ம சுயம் சேவகர்கள் தான்” என்கிறார் மங்களூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் கனேஷ் குமார்.

இது மட்டுமின்றி, அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிலும் குறிப்பாக நீதித் துறையிலும் ஊடுருவியுள்ளனர் இந்துமதவெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் தேசத்தின் பொது மனசாட்சியாக பார்ப்பன இந்துமதவெறியின் விசமப் பிரச்சாரங்கள் செல்வாக்கு செலுத்தும் நிலையில் ஊடுருவும் அவசியம் கூட தேவைப்படுவதில்லை. நிதிஷ் கட்டாரா கௌரவக் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கும் தூக்கு தண்டனை அளிக்க வேண்டிய தேவையில்லை என்ற தீர்ப்பை வழங்கிய அதே உச்ச நீதிமன்றம் தான், தேசத்தின் மனசாட்சியை சாந்தி செய்ய போதிய சாட்சியங்கள் இல்லாத நிலையிலும் அப்சல் குருவைத் தூக்கிலேற்றியது.

காதல் திருமணங்களை முன்னறிந்து கொள்வதோடு, குறிப்பிட்ட பகுதியில் பல மதவெறிக் கூட்டங்கள் நடத்தி சாதி இந்துக்களைத் திரட்டி தேசத்தின் மனசாட்சியை ஏற்கனவே இந்துத்துவ கும்பல் வடிவமைத்து விட்ட நிலையில் விசாரணைக்கு வரும் வழக்கில் தீர்ப்பு நியாயமாக இருக்கும் என்பதையும் வழக்கின் போக்கு நியாயமான திசையில் செல்லும் என்பதையும் நம்பும் அளவுக்கு நாம் வெள்ளேந்திகளா என்ன?

இந்துப் பெண்களை காப்பாற்றுவது, இந்து பாரம்பரியத்தைக் காப்பாற்றுவது என்கிற முகாந்திரங்களோடு இந்துத்துவ கும்பலின் சார்பாக திரட்டப்பட்டு கலவரங்களில் ஈடுபடுத்தப்படும் குண்டர் படையில் அந்தந்த வட்டார ஆதிக்க சாதியினர் பிரதானமாகவும் ஓரளவு அளவு தலித்துகளும் உள்ளனர். முசுலீம்களுக்கு எதிரான கலவரங்களின் பலனை உடனடியாக தேர்தல் வெற்றிகளாக பாரதிய ஜனதாவும், வணிக ரீதியில் அந்தந்த வட்டாரங்களில் இந்துத்துவ கும்பல்களுக்குப் படியளக்கும் இந்து பனியா வர்த்தகர்களும் அறுவடை செய்து கொள்கின்றனர்.

அதே வேளையில், ஒரு பெண்ணுக்கு நடக்கும் திருமணத்தில் அவளது விருப்பம் பிரதானமானதல்ல என்பதே இந்துத்துவ நீதி. இதன் படி பெண்ணின் குடும்பத்தார்கள் தங்களது சாதி, மதம் மற்றும் வர்க்க நிலைக்கு ஏற்ற மனமகனுக்கு பெண்ணை விற்கும் உரிமை நிலைநாட்டப்படுகிறது. தவிற ஒரு திருமணத்தால் இணையவுள்ள ஆணும் பெண்ணையும் தவிர்த்து பார்ப்பனிய இந்து பொதுபுத்தியே தீர்மானகரமான காரணி என்பதை நிலைநாட்டுகிறார்கள்.

இது கலவரத்தில் இந்துத்துவ கும்பலால் திரட்டப்பட்டு ஈடுபடுத்தப்படும் தலித்துகளுக்கு சொல்லப்படும் மறைமுக செய்தி. ”ஒரு பெண்ணை பெற்று சீரோடும் சிறப்போடும் வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கே அவளது திருமணத்தைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை உண்டு” என்கிற ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிக் கொடுத்த இந்த பார்ப்பனிய சூத்திரத்தைத் தான் காடுவெட்டி குருவும், கொங்கு யுவராஜும் மிரட்டலோடு வழிமொழிகின்றனர்.

காதல் திருமணத்திற்கு கோட்பாடு என்ற அளவிலும் நடைமுறையிலும் முஸ்லீம் அடிப்படைவாதிகளும் எதிர்ப்பாகவே இருக்கிறார்கள். காதலர் தினத்தை இவர்களும் கூட போட்டி போட்டுக் கொண்டு எதிர்க்கிறார்கள். பொது இடங்களில் ஆணையும் பெண்ணையும் பார்த்தால் தட்டிக் கேட்பது விரட்டி அனுப்புவது என்பதை முசுலீம் மதவெறியர்களும் செய்கிறார்கள். அதே நேரம் முஸ்லீம் மதவாதிகளின் காதல் எதிர்ப்பு என்பது வெறுமனே மதம் என்ற அளவில் நிற்கும் போது இந்துமதவெறியரின் எதிர்ப்பு என்பது வாழ்வா, சாவா என்ற விதியாக முற்றுப்பெறுகிறது. காரணம் இந்துமதவெறி என்பது வெறுமனே முட்டாள்தனங்களை மட்டும் கொண்ட ஒரு மதவெறியல்ல. அதன் பின்னே ஆதிக்க சாதி, அரசு, போலீசு, நீதிமன்றம், ஊடகம் என்று அனைவரும் திரண்டு நிற்கின்றனர்.

முசுலீம்களைக் கொன்று குவிக்க காதல் கலப்புத் திருமணத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் கும்பல் வடித்துக் கொடுத்திருக்கும் ஆயுதமும் ஆதிக்க சாதியினர் , சாதிமறுப்புத் திருமணத்தை முன்வைத்து தலித்துகளை கொன்று குவிக்கும் ஆயுதமும் வேறு வேறு அல்ல. காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு என்பது ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கும் அவளது ஜனநாயகத் தேரிவு உரிமைக்கும் மட்டும் விரோதமானதில்லை – காதல் திருமணங்களின் மூலம் சாதி / மத கலப்பு நிகழ்வதையும் இது தடுக்கிறது. இவ்வழியில் இனத் தூய்மை மற்றும் சாதித் தூய்மையைப் பேணுவதும், ஏற்றத்தாழ்வான படிநிலை சமூக அமைப்பைத் தக்க வைத்துக் கொள்வதுமே ஆர்.எஸ்.எஸ் கும்பலின் தந்திரம்.

உண்மையில் இனத் தூய்மை பேசும் மத, மொழி மற்றும் சாதி ஆதிக்க அரசியல் ஆன்மா ஒன்று தான். கருப்பு சட்டையும் ஓங்கிய கையுமாகத் திரிந்த சீமானின் முருக பக்த அவதாரமும், காஞ்சிபுரத்தின் பெளர்ணமி இரவில் வன்னிய மேடையில் முழங்கும் காடுவெட்டி குருவும், பிரவீன் தொகாடியாவும் தமது தோற்றங்களிலும், பேசும் பேச்சுக்களிலும் வேறு வேறானவர்களாகத் தெரிந்தாலும் – இவர்களை இயக்கும் ஆதாரமான அரசியல் நோக்கு ஒன்று தான்.

ஜனநாயக சக்திகளும் மக்களும் இதை உணர்ந்து கொண்டு களத்தில் வீழ்த்தாத வரை இந்த நாட்டிற்கு விடிவு காலம் இல்லை.

– தமிழரசன்

மேலும் படிக்க

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் – நவீன கொத்தடிமைகள் !

1

அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!

  • கௌரவ விரிவுரையாளர்கள் மீதான அடக்குமுறை கல்வி தனியார்மயமாக்கத்தின் ஒரு பகுதியே!
  • ஏழை மாணவர்களின் கல்வி உரிமைப் பறிப்புக்கு எதிராகவும் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்கவும் ஒன்றிணைந்து போராடுவோம்!
  • கல்வியில் தனியார்மயத்திற்கு எதிராகவும் புதிய கல்விக் கொள்கையை முறியடிக்கவும் போராடுவோம்!
  • அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி பெற மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே!

மிழ்நாடு அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஜனவரி 28-ம் தேதி முதல் போராடி வருகின்றனர். வாயில் கருப்புத் துணி கட்டுக்கொண்டு போராடுவது, உண்ணாவிரதம் என பலவடிவங்களில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு இவர்களது கோரிக்கைகளுக்கு செவி மடுக்காததால் தங்களை கருணை கொலை செய்யக் கோரி போராடுகின்றனர். அரசு உயர் கல்வித் துறையில் பணிபுரியும் இந்த விரிவுரையாளர்களது வாழ்க்கை அவலத்தின் முழு பரிமாணத்தையும் அறிந்துகொள்ள வேண்டியதும் அவர்களுடன் இணைந்து போராட வேண்டியதும் நம் அனைவரின் கடமையாகும்.

honorary-lecturers-struggleசுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கௌரவ விரிவுரையாளர்கள் என்ற பெயரில் இவர்கள் கல்லூரியில் புகுத்தப்பட்டனர். இன்று, தமிழ்நாட்டின் அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக சுமார் 3,400 பேர் பணிபுரிகின்றனர். பல கல்லூரிகளில் இவர்கள் சரிபாதி விரிவுரையாளர்களுக்கும் அதிகமானவர்களாக உள்ளனர். சில துறைகளில் தலைவர்களே இல்லாமல், ஒரு பேராசிரியரும் இல்லாமல் இந்த விரிவுரையாளர்களைக் கொண்டே இயங்குகின்றன. உதாரணத்திற்கு கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 54 பேர் கௌரவ விரிவுரையாளர்களாக வேலை செய்கின்றனர். மாலை நேரக் கல்லூரியே இவர்களை நம்பித்தான் இயங்குகிறது. கல்லூரியின் மொத்த பாடச்சுமையையும் இவர்கள்தான் சுமக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. இவ்விரிவுரையாளர்களின் தியாகத்தால்தான் பல அரசுக் கல்லூரிகளே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் இல்லையென்றால், ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் பட்டப்படிப்பு என்பது பகல் கனவாகவே முடிந்துவிடும்!

கௌரவ விரிவுரையாளர்கள் அல்ல, நவீன கொத்தடிமைகள்!

இப்படி, அரசுக் கல்லூரியின் இரத்தமும் இதயமுமாக விளங்கும் கௌரவ விரிவுரையாளர்களை இந்த அரசு எப்படி நடத்துகிறது என்பதுதான் கொடுமையான விசயம். இவர்கள் கல்லூரிகளில் பணிபுரிவதற்கு எந்த எழுத்துப் பூர்வ ஆவணங்களும் கொடுப்பது கிடையாது. மாதம் ரூ 10,000 என்று தற்போது இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘ஊதியம்’ என்பதும் முழுமையாக ஊதியமாக தரப்படுவதில்லை. இவர்கள் ஒரு நாள் விடுப்பெடுத்தாலும் அதற்குரிய தொகை பிடித்தம் செய்துகொள்ளப்படுகிறது. மே மாதத்திற்கும், ஜூன் மாதம் கல்லூரி தொடங்கும் வரையிலும் இவர்களுக்கு ஊதியம் கிடையாது. இப்படி அத்துக்கூலிகளாகவே இந்த ‘கௌரவ’ விரிவுரையாளர்கள் நடத்தப்படுகிறார்கள். இதனைவிடக் கொடுமை என்னவென்றால், சென்ற இரு ஆண்டுகளாக, ஏப்ரல் மாதத்தில் வேலை செய்தால் அதற்கு ஊதியம் தருவதாக சொல்லி வேலை வாங்கிய அரசு, இவர்களுக்கு அந்த மாத ஊதியத்தை வழங்கவில்லை. இப்படி பகல்கொள்ளையர்களைப் போல இவர்களை ஏமாற்றி வருகிறது இந்த அரசு.

பேராசிரியர்களுக்கு நிகரான கல்வித்தகுதி கொண்டிருக்கும் இவர்களுக்கு பணி பாதுகாப்பு, மருத்துவ உதவிகள், விபத்து உதவிகள் என எந்த உரிமைகளும் கிடையாது. பேராசிரியர்கள் இவர்களை மதிப்பதும் கிடையாது. வேலை வாங்கும் போது மட்டும் இவர்களை அழைத்து பேசுகின்ற, இவர்களது உழைப்பைத் துல்லியமாக கணக்கிட்டு சுரண்டுகிற அரசு, இவர்களது வாழ்வாதாரத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. இதனால், பல ஆண்டுகள் உழைத்தும் பயனின்றி வேலையைவிட்டு சென்றவர்கள் பலர்.

பாடம் நடத்தும் திறமை கொண்டவர்கள் விடைத்தாள் திருத்தும் பணியிலும் ஈடுபடலாம் என்ற வகையில் பல்கலைக் கழங்கங்களும் இவர்களை விடைத்தாள் திருத்தும் வேலை செய்ய அங்கீகரித்துள்ளது. ஆனால், கல்லூரி நிர்வாகங்களோ, இவர்களுக்கு விடைத்தாள் திருத்துவதற்கான விடுப்பு வழங்குவதில்லை. அந்தவகையில் சிறு பொருளாதார உதவியும் இவர்களுக்கு சென்று சேர்ந்துவிடக்கூடாது என்பதில் அரசு வக்கிர புத்தியுடன் நடந்து கொள்கிறது.

கௌரவ விரிவுரையாளர்களின் பிரச்சனை கல்வி தனியார்மயமாக்கத்தின் விளைவு!

1992-ல் இந்தியாவில் கல்வித்துறையில் தனியார்மயமாக்கம் தொடங்கியது. அன்று தொட்டு கல்விக்கு கொடுத்துவந்த குறைந்தபட்ச முன்னுரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வந்தது அரசு. இதன் ஒரு பகுதியாக உயர்கல்வித் துறைக்கு ஒதுக்கி வரும் நிதியையும் குறைத்தது. நேரடியாக தனியார்மயமாக்கத்தைப் புகுத்தினால் மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் அது போராட்ட உணர்வுக்கு வழி வகுத்துவிடும் என்றுணர்ந்த அரசு, கட்டம் கட்டமாக கல்வித்துறை கட்டமைப்பை சீரழித்தும் வெள்ளையர்கள் கையாண்ட பிரித்தாளும் வழிமுறையை பின்பற்றியும் கல்வித்துறையில் தனியார்மயமாக்கத்தைப் புகுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான் கௌரவ விரிவுரையாளர்கள் என்ற பதவி உருவாக்கப்பட்டது. நிரந்தர பேராசிரியர்களை நியமிக்காமல் அரசுக் கல்லூரிகளை கட்டம்கட்டமாக செயலிழக்க வைத்து இறுதியில் இழுத்து மூடுவதற்கான ஒரு இடைக்கட்டம்தான் இந்த கௌரவ விரிவுரையாளர்கள் என்ற பணி. கௌரவ விரிவுரையாளர்களும் தொடக்கத்தில் பணிநிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகளுக்காகப் போராடி வருகின்றனர்.

நம்ப வைத்து கழுத்தற்குக்கும் ஆளத் தகுதியிழந்த அரசு கட்டமைப்பு!

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் பணிநிரந்தம் செய்வோம்” என்று அறிவித்திருந்தார். ஆனால், இந்த நாலேமுக்கால் ஆண்டிலாக இவர்களை கண்டுகொள்ளவே இல்லை. மேலும், கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வும் வழங்கவில்லை. இதனால் கௌரவ விரிவுரையாளர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்த நிலையில் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கௌரவ விரிவரையாளர்களுக்கு எதிரான ஜெயா அரசின் உயர் கல்வித்துறையின் இந்த அணுகுமுறை மேலும் பல வடிவங்களில் வெளிப்பட்டுக்கொண்டுதான் வருகிறது. உதாரணமாக, தமிழக அரசுத் துறைகளில் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யமால் 6 மாதங்களாக இழுத்தடித்து வந்தது உயர்கல்வித் துறை. இதற்கு ரூ.10,000 அபராதம் விதித்து, ஜனவரி 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வலியுறுத்தியும் மீண்டும் பதில்மனு தாக்கல் செய்யாமல் இழுத்தடித்தது உயர்கல்வித் துறை. இதனால், உயர்நீதிமன்றம் தமிழக அரசை கடுமையாக கண்டனம் செய்து ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது. ஆனால், ஜெயா அரசு இந்தக் கண்டனங்களை கழிப்பறைக் காகிதம் போல கருதி வருகிறது. இந்த உயர்கல்வித்துறைதான் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வும் பணிநிரந்தரமும் வழங்க மறுத்து வருகிறது.

அதனால், சட்டத்திற்குள் போராடுவது நீதிமன்றத்தில் முறையிடுவது போன்ற எவையும் பயனளிக்கவில்லை. இதனை உணர்ந்து கொண்ட கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் “தங்களைக் கருணைக் கொலை” செய்யுமாறு அரசிடம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தவகையிலான முறையீடுகள் போராட்டங்கள் எல்லாம் இந்த அரசினை சற்றுக்கூட அசைய வைக்காது என்பதுதான் உண்மை. காரணம், கல்வித்துறை தனியார்மயமாக்கத்தை நோக்கமாக கொண்டு செயல்படும் போது, அதன் பொருட்டு உருவாக்கப்பட்ட கௌரவ விரிவுரையாளர்களை ‘கௌரவமாக’ நடத்துவது என்பது பகல்கனவாகவே இருக்கும். அதுமட்டுமல்ல, பதில் மனு தாக்கல் செய்வதற்குக் கூட நீதிமன்றத்தை அரசே மதிப்பதில்லை. அரசின் ஒரு அங்கம் மற்றொரு அங்கத்திற்கு எதிராக செயல்படுகிறது.

புதிய கல்விக் கொள்கை 2015 – அரசுக்கல்வியை ஒழிக்கும் அணுகுண்டு!

கல்வி இன்று வியாபாரப் பொருளாக்கப்பட்டுள்ளது. காசுக்கேற்ற கல்வி என்ற அநீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மோடி அரசோ, கல்வியை கடைசரக்குதான் என்று அறிவிக்கும் வகையில் சட்டம் இயற்ற இருக்கிறது. இதற்கான காட்ஸ் (General Agreement on Trade and Sevices – GATS) ஒப்பந்த்ததில் அண்மையில் கையொப்பமிட்டுள்ளது. இந்தச் சட்டப்படி மாணவர் என்பவர் கல்வி என்ற சேவையை வாங்குபவர்; ஆசிரியர் எனப்படுபவர் விற்பனையாளர் (Salesman); கல்வி நிறுவனம் என்பது கல்வி சேவை விற்பனை நிலையம் என்ற வகையில் கல்வித் துறையின் அடிப்படைக் கட்டமைப்பே மாற்றியமைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளின் முழு கட்டுப்பாட்டிற்குக் கல்வியைக் கொண்டு சென்றுள்ளது.

மேலும், இச்சட்டத்தின் மூலம், 8ம் வகுப்பு முதற்கொண்டு தொழிற்கல்வியைப் புகுத்துகிறது. இவ்வாறு புகுத்துவதன் மூலம் மாணவர்கள் அவரவர் சாதித் தொழிலைக் கற்றுக்கொடுப்பது, அதன் மூலம் 1967-களில் தமிழகத்தில் விரட்டியடிக்கப்பட்ட குலக்கல்வியை மீண்டும் நிலைநாட்டுவது என்று பார்ப்பன சதித்தனத்துடன் செயல்படுகிறது. இதன் மூலம், “யங் இந்தியா” இருக்கிறது என்று சொல்லி, குழந்தைகளை உழைப்பில் ஈடுபடுத்தி ‘கொள்ளை இலாபத்திற்கு நான் கேரண்டி’ என்று கூறி பன்னாட்டுக் கம்பெனிகளை கூவி கூவி அழைக்கிறது.

கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து பெறப்படும் வருவாயிலிருந்து (அதாவது ஃபீஸ் மற்றும் உழைப்பில் ஈடுபடுத்தி வரும் வருவாய்) நடத்தப்பட வேண்டும் எனவும் இதனால், கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதி ஒதுக்கத்தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இது போன்ற பல கொடிய சரத்துக்களை இச்சட்டம் கொண்டுள்ளது.

ஒட்டு மொத்தத்தில் ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை முற்றிலுமாக பறிக்கும் வகையிலான புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஏழைகளுக்கு கல்வி எதற்கு – புதிய மனுநீதி!

கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்காமல் இருப்பது என்பது ஏழை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் சதித்திட்டத்தின் ஒருபகுதி. இந்திய அரசியல் சாசனத்தை வகுக்கும் போதே கல்வியை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சேர்க்காமல் கவனமாக தவிர்த்துவிட்டது இந்திய அரசு. தற்போது, புதிய கல்வி கொள்கை கொண்டுவருவதன் மூலம் கல்வியையே சரக்காக்கிவிட்டது. அன்று பார்ப்பன மனுநீதி சூத்திரர்களுக்கு கல்வி உரிமையை மறுத்தது. இன்று ஏழைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. ஆம், புதிய கல்விக் கொள்கை என்பதே அந்த புதிய மனுநீதி! அதனால், கல்வி என்ற அடிப்படை உரிமைப் போராடி பெறவேண்டியுள்ளது.

மாணவர்கள் – விரிவுரையாளர்கள் இணைந்து போராட வேண்டும்!

தற்போது கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் போராட்டம் அவர்கள் மட்டும் ஈடுபடுவதாக உள்ளது. இந்த வரம்பைத் தாண்டி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, கௌரவ விரிவுரையாளர்கள் மீதான அடக்குமுறை என்பது கல்வி தனியார்மயமாக்கத்தின் ஒரு பகுதி என்பதை அவர்கள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் உணர்த்த வேண்டும். அந்தவகையில் உடனடியாக பாதிக்கப்படுகின்ற இவர்களுடன் இணைந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

மாணவர்களை இணைத்துக் கொண்டு போராடினால் கல்லூரி நிர்வாகம் (தமிழக அரசு) கடுமையான நடவடிக்கை எடுக்கும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் போன்ற வாதங்கள் எல்லாம் பத்தாம்பசலித்தனமானவை மட்டுமல்ல, மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். கௌரவ விரிவுரையாளர்களின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தால் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவது அறவே நின்றுவிட்டது என்பதுதான் உண்மை. இதற்காக கேள்வி கேட்கும் மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் மிரட்டுகின்றன. இதன் மூலம், மாணவர்களை போராட்டத்தில் இறங்கிவிடாமல் தடுத்துவிடலாம் என பகல்கனவு காண்கின்றன.

தங்களது எதிர்காலமே அழியும் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு அதனை உணர்த்தி, கல்வி தனியார்மயத்திற்கு எதிராக போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டியது, ஆசிரியர்களின் கடமை. தாங்கள் மட்டும் அரசிடம் சில சலுகைகளை வாங்கிவிடலாம் என்பதற்கான எந்த வாய்ப்பையும் இந்த அரசு விரிவுரையாளர்களுக்கு விட்டுவைக்கவில்லை என்பதையே, மேற்கண்ட தமிழக அரசின் அணுகுமுறைகளும் நீதிமன்ற உத்தரவுகள் செல்லாக்காசாகிவிட்டதும் நமக்கு உணர்த்துகின்றன.
தற்போதைய கல்வித் துறை கட்டமைப்பே காலாவதியாக இருக்கும் நிலையில் கௌரவ விரிவுரையாளர்களின் பணி நிரந்தர உரிமையை நிலைநாட்டவும் மாணவர்களுக்கு கல்வி உரிமையை நிலைநாட்டவும் இந்தச் சட்டமும் நீதியும் இலாயக்கற்றதாகிவிட்டதை உணர்த்த வேண்டும். தீர்வை இந்த அரசமைப்புக்கு வெளியே நிலைநாட்ட வேண்டும். ஏற்கனவே, சமச்சீர் கல்விக்காகவும், டாஸ்மாக்கை மூடுவதற்காகவும் மாணவர்கள் நடத்தியப் போராட்டங்கள் இதற்கான முன்னுதாரணமாகும். அந்தவகையில் மற்றொரு எழுச்சிக்குத் தயாராவோம்!

வெல்லட்டும், கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்!

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புஜ செய்தியாளர்,
கிருஷ்ணகிரி.

விவசாயக் கடனைப் பறிக்கும் நாட்டுப்புற நாட்டாமைகள் !

0

நாத்து விட்டு 40 நாளு முடியப்போகுது இன்னும் சேரடிக்காம பொட்டு வச்சுருக்கேன். கேட்ட எடத்துல பணம் கெடைக்கல. நாத்து பூத்துரும் போலருக்கு எப்படி நட்டு கரையேற போறேன்னு தெரியல”

புலம்பிக் கொண்டிருந்த பூங்கோதையிடம் “ரெண்டே நாள்ல பணம் ஏற்பாடு செய்றேன் ஆனா வட்டி 4 பைசா கேப்பாங்க உன்னால் முடியுமா” என்றாள் தேவகி.

பலகார மாஸ்டரான தன் பையனுக்கு ஆடி(மாதம்) போனா வேலைக்கு ஆடர் வரும் கடனை திருப்பி தரலாம் என்ற தைரியத்தில் ஒத்துக் கொண்டார் பூங்கோதை.

தேவகிக்கு இதில் கொழுத்த லாபம் உண்டு. வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தன் நகைகளை நூற்றுக்கு 70 பைசா வட்டிக்கு அடகு வைத்து, 4 பைசா வட்டிக்கு 20,000 பணத்தை பூங்கோதைக்கு கொடுத்தாள் தேவகி. இந்த நிகழ்வு எங்கள் ஊர்பக்கம் நடக்கும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகளுக்கு ஒரு வகை மாதிரி.

வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் நகை அடகு வைக்க அது ஒன்றும் வட்டிக்கடை சேட்டு அல்ல – அங்கே நகைக்கடன் விவசாயிகள் பயிர் வைப்பதற்கே தரப்படும், அதாவது விதிப்படி. ஆனால், எதார்த்தம் வேறு. விவசாய பயிர் கடன் செயல்படும் லட்சணத்திற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும்.

அரசு விவசாயிகளுக்கு தருவதாக சொல்லப்படும் குறைந்த வட்டியில்லான பயிர் கடன் சரியான முறையில் பயனாளிக்கு சென்றடைகிறதா? அல்லது விவசாயிகளின் கடன் சுமையை மேலும் இது அதிகரிக்கிறதா? குறுகிய கால பயிர் கடனுக்கு வட்டியில்லா சிறப்பு மானிய திட்டம், நீண்டகால பயிர் கடனுக்கு மானியம் இல்லா குறைந்த வட்டி திட்டம் இதுபோன்ற திட்டங்களால் உரிய விவசாயிகளுக்கு பயனுள்ளதா? ஒரு ஏக்கருக்கு குறைவாக, அல்லது நிலமற்ற கூலி விவசாயிக்கு இதனால் என்ன பயன்?

இந்த கேள்விகளுக்கு பதிலாக சந்தேகத்துக்கு சாட்சியாக மேலே உள்ளதைப் போன்ற பல நிகழ்வுகளை சொல்ல முடியும். அரசின் விவசாயக் கடன் திட்டத்தை தாங்களே நேரடியாக பெற ஏழை, சிறு ,குறு, நடுத்தர விவசாயிகள் பல இடையூறுகளை சந்திக்க வேண்டியுள்ளது.kaviri-farmer

இந்த கடனை பெற குறைந்தது ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். பத்தாயிரம் முதல் 3 லட்சம் வரை 7 சதவித வட்டியில் இந்த கடன் கொடுக்கப்படுகிறது. 1 லட்சத்துக்கு மேல் கடன் வாங்குபவர் நிலத்தை அடமானமாக வைக்க வேண்டும். ஒரு லட்சத்துக்கு குறைவான தொகை என்றால் கடன் வாங்குவதற்கு ஈடாக நகை, நிலத்தின் சர்வே என்னுடன் கூடிய வி.எ.ஒ-விடம் சிட்டா அடங்கல் சான்றிதழ் பெற்று கொடுக்க வேண்டும்.

கிராமபுற வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வருடத்தில் சில மாதங்கள் மட்டும் சிறப்பு சலுகையாக பயிர் கடனுக்கு எட்டு மாத காலத்துக்கு வட்டி கிடையாது. எட்டாவது மாதம் முடிந்து ஒரு நாள் கூடுதலானாலும் எட்டு மாதத்துக்கும் சேர்ந்து வட்டி கட்ட வேண்டும். குறுகிய கால வட்டியில்லா பயிர் கடனானது நீண்ட நாள் கடனாக மாறி வட்டி விகிதம் அதிகரித்து விடும்.

இந்த நடைமுறை சாதாரண நிலமற்ற விவசாயிகளுக்கு பொருந்துமா? நிலம் உள்ளவர்களுக்கு கூட சொன்ன தேதியில் கடனை திருப்பி செலுத்த இயலுமா? வட்டி, கூட்டுவட்டி என்று மாறும் கடனை கொடுக்க முடியுமா?

பெரும்பாலான விவசாயிகளிடம் சொந்த நிலம் இருப்பது இல்லை. குத்தகைக்கோ அடகுக்கோதான் விவசாயம் செய்கிறார்கள். இவர்களால் இந்த சலுகைக் கடனைப் பெற முடிவதில்லை. ஒரு ஏக்கருக்கு குறைவான சொந்த நிலம் உள்ள சாதாரண சிறு விவசாயிடம் ஈட்டுத் தொகையாக கொடுப்பதற்கு நகையும் இருப்பதில்லை.

ஒரு ஏக்கருக்கு தரப்படும் கடன் தொகையின் அளவு நடவு செலவுக்கே போதாது. நடவுக்குப் பின், களையெடுப்பு, உரம், பூச்சி மருந்து வகையறாக்கள் என்று எல்லாவற்றுக்கும் தண்ணீராக செலவு செய்த பின் அறுவடைக் கூலி, சுமைக்கூலி என்று தொடர்ந்து வரும் செலவுகளைச் சமாளிக்க வெளியில் 4, 5 வட்டிக்கு கடன் வாங்கினால் தான் சமாளிக்க முடியும். அறுவடை முடிந்ததும் எந்த கடனை அடைப்பது? காத்திருக்கும் குடும்ப செயவுக்கு என்ன செய்வது? கேள்வி மட்டும் தான் மிச்சம்.

வட்டி இல்லா சலுகையில் கொடுக்கும் விவசாயக் கடனில் முழுதும் பயனடைவது நிலத்தின் அளவு அதிகமாக உள்ள பணக்கார விவசாயிகளும், இதைப் பயன்படுத்திக் கொண்டு விவசாயத்திற்கு தொடர்பில்லாத வட்டி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் தான்.

farmers-plantingமானியம் இல்லாத குறைந்த வட்டியிலான நீண்ட நாள் கடனின் சிறப்பு பயனையும் இவர்களே அடைகிறார்கள். அதிக நிலம் வைத்திருப்பவர்கள் தான் டிராக்டர், குபேட்டா, கதிர் அறுக்கும் இயந்திரம், நடவு நடும் இயந்திரம், ஆழ்துளைக் கிணறு அமைப்பது போன்றவற்றுக்காக கடன் பெறத் தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள். விவசாயக் கடன் தள்ளுபடி என்ற நிலை வந்தால் இவர்கள் காட்டில் தான் மழை. அந்த வகையில் முந்தைய காங்கிரசு அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்த போது இவர்களே பெருமளவிற்குப் பயனடைந்தனர்.

இது குறித்து உள்ளூர் வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர் ஒருவர் கூறும் போது “நானும் ஒரு விவசாயிதான். உண்மையிலேயே விவசாயத்துக்குன்னு வாங்கறவங்க கடனை திரும்பி செலுத்த சிரம படறாங்க. பல தடவை அறிவிப்பு நோட்டீஸ் விட்டு எச்சரிக்கை செய்தாலும் கடனை புதுப்பித்து மாற்றுவார்களே தவிர உடனடியாக அடைக்க முன்வர மாட்டாங்க. காரணம் விவசாயம் மட்டும் செய்து லாபம் ஈட்ட முடியாது. விவசாயம் அல்லாத ஏதோ ஒரு வகையில் (நகர்ப்புறத்து, வெளிநாட்டு வேலைகள்) வருமானம் வரும் விவசாய குடும்பத்தால மட்டும் தான் கடனை கால தாமதம் இல்லாமல் அடைக்க முடிகிறது.” என்றார்.

பானுமதி என்கிற அம்மாள், தனது மருமகனிடம் இரண்டு ஏக்கர் நிலம் இருந்தும் அவரால் பத்து ரூபாய் கூட மிச்சம் பிடிக்க முடியவில்லை என்று வருந்தியுள்ளார். பின் எப்படியாவது பணத்தைக் கட்டி வெளிநாடு அனுப்பிவிட்டால் ஐய்ந்தாறு வருடத்தில் ஏதாவது கையில கொஞ்சம் பணத்தை பாக்கலாம் என்ற நம்பிக்கையில் மருமகனை வெளிநாடு நினைத்தார். அதற்கு பணம்? மகளுக்கு போட்ட நகைகளை பயிர் கடனில் அடகு வைத்தே பணம் புரட்டியிருக்கிறார்.

இதில் காசு வாங்கிய ஏஜெண்டு ஏமாற்றாமல் இருப்பாரா, சென்ற நாட்டில் சொன்ன கூலி கொடுப்பார்களா, அங்கே உழைத்து உடல் உருகிப் போன பின் ஆரோக்கியத்தோடு திரும்ப முடியுமா என்பதெல்லாம் அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்த விசயங்கள்.

இன்னொரு பக்கம் மகளிர் சுய உதவிக் குழு என்கிற பெயரில் அரசே முன்வந்து மக்களில் ஒரு பகுதியினரை பிழைப்புவாதிகளாக்கி விட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு ஊரில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து இயக்கும் தொண்டு நிறுவன உரிமையாளர் ஒருவர். ஒரு மாவட்டம் முழுவதும் பெரும்பாளான ஊர்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களை இயக்கி வருகிறார். இதில் கிடைத்த அறிமுகத்தால் அவருக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கிராமத்தில் இருக்கும் வங்கியில் வட்டியில்லா பயிர் கடனை பெறுவதற்காக அந்த ஊர் அரசியல் கட்சிக்காரரின் செல்வாக்கை பயன்படுத்தி அந்த ஊர் நிலத்தின் சர்வே கணக்கு படியே பயிர் கடனாக ரூபாய் 1,75,000 கடனாக வாங்கியுள்ளார்.

ஒரு ஊரிலேயே இவ்வளவு தொகையை வாங்க முடியும் என்றால் ஒரு மாவட்டம் முழுவதும் செயல்படும் சுய உதவிக் குழுவை பயன்படுத்தி எவ்வளவு கொள்ளையடிக்க முடியும்.

ஒரு கிராம பஞ்சாயத்துக்கு எத்தனை ஏக்கர் நிலத்துக்கு பயிர் கடன் தரவேண்டும் என்று வரைமுறை வைத்துத்தான் விவசாய பயிர் கடன் ஒதுக்கப்படுகிறது. பயிர் poverty-farmerகடனை பெறுவதற்கு வைத்துள்ள விதிமுறைகளை பயன் படுத்தி சாதாரண உழைக்கும் வறிய விவசாயிகள் கடன் பெற முடிவதில்லை. பஞ்சாயத்து வாரியாக ஒதுக்கப்படும் பயிர் கடன் கொடுத்து முடிந்ததாக அரசுக்கு கணக்கு மட்டும் காட்டப்படுகிறது. உரியவர்களுக்கு போய்ச் சேர்ந்ததா? யார் பயனடைந்தார்கள்? என்பதெல்லாம் அரசைப் பொறுத்தவரை தேவையற்ற விசயம்.

விவசாயத்துக்கு கொடுக்கப்படும் பயிர் கடனில் இத்தனை பிரச்சினை என்றால் பயிர் சேதம் என்று ஒதுக்கப்படும் நிவாரணம் அதற்கு மேல். அதுவாவது பாதிக்கப் பட்டவர்களுக்கு போய் சேருகிறதா என்றால் அங்கேயும் பல பிரச்சினைகள்.

வி.ஏ.ஒ கண்காணிப்பு இல்லாமல் நிவாரண தொகை கொடுக்க மாட்டார்கள். வாய்க்கும் வயித்துக்கும் எப்போதும் இழுபறியாக இருக்கும் நிலையில் உள்ள ஒரு விவசாயி வாய்தா கட்டுவது பெரும் பாடு. எப்படியாவது கழுத்தில் துண்டைப் போட்டு பிடுங்க கடங்காரனைப் போல காத்திருக்கும் வி.ஏ.ஒ-வுக்கு வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் வழிவகுத்து கொடுத்துவிடும். காத்திருந்த கழுகைப் போல் அலுவலகத்தில் வைத்து கொடுத்த கையோடு பிடுங்கிக் கொள்வார்கள். வாய்தா தொகை கட்ட ஒத்துக் கொண்டால் தான் நிலம் பாதிப்புக்கு உட்பட்டது என்று எழுதி நிவாரண தொகை கிடைக்க ஏற்பாடு செய்வார்கள். நிவாரண தொகையைப் பொறுத்த வரை அதிகாரி வைத்தது தான் சட்டம்.

நிவாரணம் வருகிறதென்று தெரிந்தாலே ஊருக்குள் பெரும் புள்ளிகள் தங்கள் குள்ளநரித்தனத்தை காட்டத் துவங்கி விடுவர். இடிந்து கிடக்கும் கோயிலைக் கட்ட, இடியாத கோயிலுக்கு கும்பாபிசேகம் செய்யவென்று ஏதாவது வகையில் காசு பார்க்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள். நிவாரண தொகை பட்டுவாடா செய்யப்படும் நாளன்று, “தலக்கட்டுக்கு இவ்வளவு வரின்னு சொல்லியும் நாளு வருசமா யாரும் குடுக்க மாட்டேங்கறிங்க. இப்படி வசுலுச்சாதான் ஆச்சு” என்று வி.ஏ.ஒ. நாற்காலிக்கு அருகிலேயே இவர்களும் நாற்காலி போட்டு உட்கார்ந்து கவனமாக வசூலித்து விடுவார்கள்.

தாசில்தார், ஆர்.ஐ.இ., வி.ஏ.ஓ., உள்ளூர் கட்சிக்காரர்கள் தவிற கோயிலுக்கும் வேறு நிவாரண தொகை பாய வேண்டும். இப்படி எல்லோர் வாயிலும் விழுந்தது போக மீதி வந்து சேர்வதைக் கொண்டு கோயில் படியில் காத்திருக்கும் பிச்சைக்காரன் திருவோட்டில் போடத் தான் காணும்.

அதிகார முறைகேடுகள் ஒரு பக்கம் இருக்க, கட்சிக்காரர்களின் செல்வாக்கும் இதில் பெரும் பகுதி ஆதிக்கம் செலுத்துகிறது. விவசாய கூட்டுறவு சுசைட்டிகளில் ஏதும் தெரியாத அல்லது தன் சொல்லுக்கு கட்டுப்பட்ட ஆட்களை தலைவராகவும், பொறுப்பாளராகவும், செயலாளராகவும் வைத்துக்கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்டம் போடுவது ஊருக்கு ஊர் நடக்கிறது.

விவசாயத்தை மேலிருந்து அழிப்பதற்கு பன்னாட்டுக் கம்பெனிகளோடு ஒப்பந்தம், உலக வர்த்தக கழகத்தோடு ஒப்பந்தம் என்று தீவிரமாக வேலை செய்யும் அரசு, அதைக் கீழிருந்து அழிக்க தனது அதிகாரிகள், அரசியல்வாதிகள் படையை பயன்படுத்திக் கொள்கிறது. முதலாளிகளுக்கு கடன் கொடுக்கும் போது கேப்பாரின்றி அள்ளிக் கொடுக்கும் அரசு, விவசாயி விசயத்தில் ஆயிரத்தெட்டு வழிமுறை சிக்கலை வைத்துள்ளது.

இந்த சூழலை சமாளித்து வாழ முடியாத ஏழை விவசாயிகள் இருக்கும் கொஞ்ச நிலங்களையும் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு நகரத்தில் வந்து விழும் விவசாயிகள் கட்டிட கூலி வேலை, சர்வர் வேலை என சம்மந்தமே இல்லாத ஏதோ ஒரு வேலைக்குச் செல்கிறார்கள். இருக்கும் மிச்ச சொச்ச நிலத்தையும் ரியல் எஸ்டேட் கும்பல் வளைத்துப் போடுகிறது.

மக்களின் பசியைப் போக்க நிலதைப் பார்த்து குனிந்து நிற்கும் ஏழை விவசாயிகள், தமக்கு தீங்கிழைக்கும் இந்த அரசின் அநீதிக்கு எதிராக நிமிர்ந்து நின்று போராடும் போது தான் இந்த நிலை மாறும். அதுவரை விவசாயத்திற்கு ஒதுக்கப்படும் எந்தந் தொகையும் எந்த விவசாயிக்கும் போய்ச் சேராது!

– சரசம்மா

SVS மருத்துவக் கல்லூரி வரலாறும் மோசடிகளும் – உண்மை அறிக்கை

3

கள்ளக்குறிச்சி SVS யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி வரலாறும் மோசடிகளும் – உண்மை அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட பங்காரம் மற்றும் இந்திலி ஆகிய இரு கிராமத்தின் எல்லையில் மட்டும் ஏழு தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் SVS யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி. இந்த கல்லூரியின் நிறுவனர் டாக்டர் சுப்ரமணியன் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ மன்றத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி வாசுகி சுப்ரமணியன் கல்லூரியின் தாளாளராக இருக்கின்றார். வாசுகியின் அனுமதி இல்லாமல் வெளியாட்கள் யாரும் உள்ளே சென்று விட்டால் மீண்டு வருவது கடினம் தான். அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் இவரும் ஒரு ஜெயலலிதா தான்.

கல்லூரியின் கட்டமைப்பு மற்றும் அனுமதியின் யோக்கியதை:

svs-college-068 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று மாடி கட்டிடங்களை கொண்டு இயங்குகிறது, கல்லூரி. அதுவும் இரண்டு மாடி சென்ற ஆண்டு தான் கட்டி முடிக்கப்பட்டது. நீண்ட வணிக வளாகங்களை கட்டி வாடகைக்கு விடுவது போல் தான் அதன் கட்டமைப்பே உள்ளது. கல்லூரிக்கு தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி அனுமதியும், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை கழகத்தின் அனுமதியும் பெற்று 2008-ல் துவங்கப்பட்டது. அப்பொழுது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாசும், தமிழக சுகாதார துறை அமைச்சராக தி.மு.க வின் MRK பன்னீர்செல்வமும் இருந்துள்ளனர். இந்தக் கல்லூரியை திறந்து வைத்தவரும் MRK தான்.

எஸ்.வி.எஸ் கல்லூரி
எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு ஆசி கொடுத்த அரசியல் தலைகள்.

2012-ம் ஆண்டு அக்கல்லூரி நிர்வாகம் ஹோமியோபதி படிப்புகளை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தால் ஹோமியோபதி படிப்புகளை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பிறகு 2014-ம் ஆண்டு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் அனுமதி பெற்று ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை துவங்கப்பட்டது. அப்பொழுது தமிழக சுகாதார துறை அமைச்சர் அ.தி.மு.க.-ன் விஜயபாஸ்கர்.

மொத்தத்தில் SVS என்ற பெயரில் எலக்ட்ரோபதி, இயற்கை மற்றும் யோகா , ஹோமியோபதி ஆகிய மூன்று வகையான படிப்புகளும் ஒரே கல்லூரியில் தான் இயங்கி வந்துள்ளன. இந்த லட்சணத்தில் கட்டுமான சம்பந்தப்பட்ட எந்த துறையிடமும் இக்கல்லூரி நிர்வாகம் அனுமதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தீயணைப்பு, பொதுப்பணித் துறையிடமும் அனுமதி பெறவில்லை. மேற்கண்ட மூன்றில் எவற்றேனும் ஒன்றில் அனுமதி பெறவில்லை என்றாலே கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தும் செய்யவில்லை. ஏன்? பல்கலை கழக நிர்வாகம் முதல் ஓட்டுப்பொறுக்கிகள், அதிகாரிகள் என அத்துணை பேரும் வாசுகி சுப்ரமணியனுக்கு வால் பிடித்துள்ளனர்.

எஸ்.வி.எஸ் கல்லூரி
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கட்டிடப்பணி

எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல், ஆசிரியர்கள், ஆய்வகங்கள் என எதுவுமே இல்லாமல் ஒரு மருத்துவக்கல்லூரியை நடத்த அனுமதிக்க முடியுமென்றால் இந்த அரசின் யோக்கியதையை பாருங்கள்.

இந்தியாவின் உயர் படிப்புகளில் ஒன்றாக கருதப்படும் மருத்துவக்கல்லூரிக்கே இந்த இந்த நிலைமை தான் என்றால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டிருக்கும். இதற்கு எத்தனை கோடி கைமாறி இருக்கும் என்று நினைக்கவே தலை சுற்றுகிறது.

dr-mgr-university-2

மாணவ-மாணவிகளின் தற்கொலையும் அதன் பின்னணியும்:

எஸ்.வி.எஸ் கல்லூரி
பாதுகாப்புடன் வாசுகி சுப்பிரமணியன்

2008-ம் ஆண்டு இக்கல்லூரி துவங்கப்பட்டதில் இருந்து இன்று வரை ஒரு மருத்துவரை கூட இக்கல்லூரி நிர்வாகம் உருவாக்கியதே இல்லை. ஆனால் ஒரேயொரு கட்டடத்தில் துவங்கப்பட்ட இவை இன்று மூன்று மாடி கட்டிடங்களாக எழுந்து நிற்கிறது எவ்வாறு என்றால் மாணவர்களை மிரட்டி கட்டணம் வசூலிப்பது, தலித் மாணவர்களின் உதவித் தொகைகளை தானே சுருட்டிக்கொள்வது, அபராதம் என்ற பெயரில் மாணவர்களிடம் இருந்து அடாவடியாக பணம் கொள்ளையடிப்பது என்ற அராஜக முறையில் தான் கட்டியுள்ளனர். அந்தக் கட்டிடத்தை கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் மாணவர்கள் தான் செய்துள்ளனர். அருகில் உள்ள கிராம மக்களைக் கூட வேலைக்கு கூப்பிட்டது இல்லை.

சின்னசேலம், கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக் கொள்வதே இல்லை. காரணம் மாணவர்கள் மீதான அடக்குமுறை, கட்டணக்கொள்ளை உள்ளிட்ட மோசடிகள் உள்ளூரில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் தனக்கு எதிராக மாறிவிடுவார்கள் என்பதை நன்கு அறிந்து திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளார் வாசுகி சுப்ரமணியன்.

எஸ்.வி.எஸ் கல்லூரி
மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட கிணறு

வாசுகியின் கொடுமைகள் அதிகரிக்கவே 2012-ல் கல்லூரியை விட்டு மாணவர்கள் விலக விரும்புவதாக கூறி சான்றிதழை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களிடம் ஐந்தரை வருடத்திற்கான முழு பணத்தையும் கட்டினால் தான் டி.சி தருவேன் என்று மிரட்டி இருக்கிறார் வாசுகி சுப்ரமணியன்.

இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராக மாணவர்கள் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். இருப்பினும் கூட நீதிமன்றத்தால் அவர்களின் அராஜகத்தை ஒன்றும் செய்து விடமுடியவில்லை. பல துறைகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இறுதியாக 2014-ம் ஆண்டு ஒரு ரிட் மனு 22 மாணவர்களின் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் கல்லூரியில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. அவை இயங்குவதற்கு தகுதியானவை தான் என்ற ஒரு தீர்ப்பை ஆகஸ்ட் 2015 அன்று வழங்கியது நீதி மன்றம்.

எஸ்.வி.எஸ் கல்லூரி
மாணவியர் படுகொலையைக் கண்டித்து மக்கள் அதிகாரம் போராட்டம்

நீதிமன்றம் இப்படி ஒரு மோசமான தீர்ப்பு வழங்கியதை சற்றும் எதிர்பாராத மாணவர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்த அரசமைப்பில் நீதி கிடைக்கப்போவதில்லை என்று தான் 07-09-2015 அன்று மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டமும், 14-09-2015 அன்று 8 மாணவர்கள் தீக்குளிப்பு போராட்டமும், 05-10-2015 அன்று மாவட்ட ஆட்சியரகம் முன்பு எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளனர். இது குறித்து விரிவான கட்டுரை 09-10-2015 அன்று “SVS மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தற்கொலை முயற்சி” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எஸ்.வி.எஸ் கல்லூரி
சீல் வைக்கப்பட்ட கல்லூரி

தற்பொழுது கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டும் பணியை SKS கன்ஸ்ரக்ஷன் மூலம் தொடங்கியுள்ளார். அதற்கும் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும். அதே அடக்குமுறை , கட்டணக்கொள்ளை, மிரட்டல் என பல வகையில் மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை தொடரவே மாணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகியோர் கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் தற்கொலை செய்து கொண்டனர்.

10 அடி நீளம், 7 அடி அகலம் 75 அடி ஆழம் கொண்ட கிணற்றில் வெறும் ஐந்து அடி மட்டுமே தண்ணீர் இல்லை. இந்த கிணற்றில் விழுந்து சாவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள் விவசாயிகள். மேலும் மாணவிகள் உடலை கைப்பற்றும் பொழுது மாணவிகளுக்கு கையில் சிராய்ப்பும், தலையில் காயமும் இருந்தது என்கிறார் கிணற்றின் உரிமையாளர் பரமசிவம்.

இந்த உயிர் பலிக்கு பிறகு கல்லூரிக்கு சீல் வைத்துள்ளனர். வாசுகி சுப்ரமணியன் அவரது மகன் மற்றும் கல்லூரி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

யார் இந்த வாசுகி சுப்ரமணியன்?

svs-college-08சங்கராபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள குக்கிராமம் செல்லம்பட்டு. ஜெயராமன் – காந்தி தம்பதியினருக்கு முதல் மகளாக பிறந்தவர் வாசுகி. கரு நாயக்கர் பிரிவை சார்ந்தவர். ஜெயராமன் அரசு ஒப்பந்ததாரராக இருந்துள்ளார். 1990 களில் கிராமத்தில் இருந்த வீடு, சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு கள்ளக்குறிச்சிக்கு வந்துவிட்டனர். அங்கு சொந்தமாக ஒரு லாட்ஜ் நடத்தி வந்துள்ளார். லேப் டெக்னீசியன் படிப்பு முடித்துள்ள வாசுகி தனியாக ஒரு ரத்த பரிசோதனை நிலையத்தை நடத்தி வந்தார். அப்பொழுது தான் செல்லம்பட்டின் அருகில் உள்ள பால்ராம்பட்டு கிராமத்தை சார்ந்த டாக்டர்.சுப்ரமணியன் கள்ளக்குறிச்சியில் ஒரு கிளினிக்கை நடத்தி வந்தார். இவர் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்தவர். பெரிய அளவில் சொத்துக்கள் இல்லை. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் தான். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு தனது தந்தை நடத்தி வந்த லாட்ஜை விற்று அந்த பணத்தை கொண்டு தான் 1996-ம் ஆண்டு பங்காரம் தற்பொழுது கல்லூரி உள்ள இடத்தை தெய்வசிகாமணியிடம் இருந்து வாங்கினார். அதற்கு முன்பு பரமசிவம் என்பவர் (தற்பொழுது மாணவிகள் இறந்து கிடந்த கிணற்றின் உரிமையாளர்) குத்தகைக்கு 3 ஏக்கரில் மரவள்ளியை போட்டிருந்தார். அதனை அறுவடை செய்ததும் நிலத்தை ரிஜிஸ்டர் செய்து கொள் என்று தெய்வசிகாமணி வாசுகிசுப்ரமணினிடம் கூறியிருக்கிறார். அதனை ஏற்றுக்கொண்ட வாசுகி முன்பணமாக 1 லட்சத்தை தெய்வசிகாமணியிடம் கொடுக்கவே, பதிவு செய்யாமலே நம்பிக்கை அடிப்படையில் பத்திரத்தை வாசுகியிடம் ஒப்படைத்துள்ளார் நிலஉரிமையாளர். விளைவு ஒரு வாரத்தில் மரவள்ளியை பாதி பயிரிலேயே JCB மூலம் பிடுங்கி எறிந்துள்ளார் வாசுகி சுப்ரமணியன். இதனை கேட்ட தெய்வசிகாமணியை பணம் தர முடியாது என்று மிரட்டியுள்ளார்.

svs-college-01ஆக கல்லூரிக்கான அனுமதி மட்டுமல்ல இடத்தையும் போர்ஜரி செய்து தான் வாங்கியுள்ளார் வாசுகி சுப்ரமணியன். அதுமட்டுமல்லாமல் கல்லூரிக்கு அருகில் ஒரு ஓடை உள்ளது. அதனை தூர்த்து தான் நுழைவு வாயில் கட்டியுள்ளார். கல்லூரிக்கு உள்ளே 1.45 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. அதனையும் ஆக்கிரமித்து இருக்கிறார்.

பங்காரம் கிராமத்தை சார்ந்த கொளஞ்சி என்பவர் வயலுக்கு செல்வதற்கு கல்லூரி வழியாக சென்றதால் 2 நாட்கள் கல்லூரியில் வேலை செய்ய வைத்து துன்புறுத்தியிருக்கிறார்.

அதே பங்காரத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஓடைக்கு விறகு பொருக்க கல்லூரி வழியாக சென்றதால், அப்பெண்ணை பிடித்து இனிமேல் இவ்வழியாக வந்தால் “மரண ஊசி போட்டு கொன்று விடுவேன்” என்று மிரட்டியுள்ளார். இவ்வளவு படுபாதக செயலையும் செய்துள்ளார் வாசுகி சுப்ரமணியன்.

எஸ்.வி.எஸ் கல்லூரி
DR முத்துசாமி நிலத்தின் வழியாக பாதை போடும் காட்சி

அதுமட்டுமல்லாமல், கல்லூரிக்கு விற்ற நிலம் போக மீதி நிலத்தை சென்னையில் உள்ள எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டர். முத்துசாமி அவர்களுக்கு விற்றுள்ளார் தெய்வசிகாமணி. அந்த நிலத்தின் வழியாக 2012-ம் ஆண்டு ரவுடிகளை வைத்து அடாவடியாக கல்லூரிக்கு பாதை போட்டுள்ளார்.

இதே முத்துசாமி மீது இரண்டு முறை பொய் வழக்கு போட்டு மிரட்டியுள்ளார். வழக்கு எண்:428/2007, 482/2010 இவை இரண்டும் பொய் வழக்கு என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டாக்டர் முத்துசாமி நிலத்தின் வழியாக பாதை அமைப்பதற்கு முற்றிலும் உதவியது அப்போதைய RDO வாக இருந்த உமாபதி என்பவர் தான். ஏரி மண்ணை சட்டவிரோதமாக கொண்டு வந்து பாதையை போட்டனர். அதன் பிறகு வந்த கள்ளக்குறிச்சி RDO குணசேகர் கல்லூரிக்கு அடியாள் போல் நடந்து கொண்டார் என்று கூறுகின்றனர் கிராம மக்கள்.

டாக்டர் முத்துசாமியின் நிலத்தில் பாதை அமைத்தது தவறு என்று கூறி அதனை அப்புறப்படுத்த கூறிய தாசில்தாரை தனது கூலிப்படையை ஏவிவிட்டு RDO குணசேகர் முன்னிலையிலேயே மிரட்டியுள்ளார் வாசுகி சுப்ரமணியன்.

முத்துசாமிக்கு ஆதரவாக சென்ற சின்னக்கண்ணு, பக்கத்து நிலத்துகாரர். அவர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி பொய் வழக்கு கொடுக்க சொல்லி மாணவ – மாணவிகளை மிரட்டி 65 வயதான சின்னக்கண்ணு மீது வழக்கு போட வைத்து, ஒரு பாசிஸ்டின் மனநிலைக்கே சென்றுள்ளார் வாசுகி சுப்ரமணியன். அப்போதைய சின்னசேலம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், SI அண்ணாதுரை கல்லூரிக்கு சாதகமாக வழக்கு எண்: 8/2012 . பிரிவு: 147, 294(B), 323, 506(I) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுள்ளார். இதனை கேட்க சென்ற இந்திலி ஊ..ம தலைவர் ஆச்சலா, சின்னகண்ணுவின் மகன் ஆகியோரையும் வழக்கில் சேர்த்து ரிமாண்ட் செய்துள்ளார். அதன் பிறகு கல்லூரியோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் இன்ஸ்பெக்டர் செல்வராஜ்.

2008-ல் கள்ளக்குறிச்சியில் DSP-யாக பணியாற்றிய ஜெயபாலன் ஓய்வு பெற சட்டவிரோதமான முறையில் உதவியதாகவும், தற்பொழுது கள்ளக்குறிச்சி உளவுப்பிரிவில் பணியாற்றும் குணசேகருக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீண்ட கால தொடர்பு இருந்து வருவதாக கூறுகின்றனர்.

எஸ்.வி.எஸ் கல்லூரி
மாணவியர் படுகொலையைக் கண்டித்து போராட்டம்

2010-ம் ஆண்டில் இருந்து கள்ளக்குறிச்சியில் பணியாற்றிய RDO-க்கள் கதிரவன், இன்வசன்ட் திவ்யா, அப்போதைய சப் கலெக்டர் விவேகானந்தன், மாலதி, ஆகிய அனைவருமே இந்த கல்லூரியின் சட்டவிரோத நடவடிக்கைகள் அத்துணைக்கும் துணைபோயுள்ளனர்.

வாசுகி சுப்ரமணியன் என்பவர் தனி ஆளாக நின்று இவ்வளவு மோசடிகளையும் செய்யவில்லை. இந்த கிரிமினலின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் துணை நின்றது இந்த அரசின் ஒவ்வொரு உறுப்புகளும் தான். ஆழமாக சிந்தித்து பார்த்தால் தனக்கென்று வரையறுக்கப்பட்ட பணிகளை செய்யாமல் தவறியதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு எதிரான குற்றக் கும்பலாக ( Mafia Gang) மாறியுள்ளது அரசு. கிரிமினல்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அதற்க்கெதிராக போராடக்கூடியவர்களையும் ஒடுக்குகிறது.

வாசுகி சுப்ரமணியன் என்ற கிரிமினலை, துணை நின்ற அதிகாரிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள், மக்கள் அதிகாரம், விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரையும் கைது செய்தது.

ஆனால், அறிஞர்கள் கூறுவது என்னவென்றால், சில அதிகாரிகள் தான் தவறு செய்கிறார்கள் .மற்றபடி அரசின் மீது குற்றம் சொல்ல முடியாது என்கிறார்கள். இல்லையேல் CBI விசாரணை கோருவது அல்லது நீதிமன்ற விசாரணை கோருகிறார்கள்.

நாடறிந்த பரபரப்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் தீர்ப்பு எவ்வாறு வந்துள்ளது என்பது நமக்கு தெரியும். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா விடுவிக்கப்பட்டதும்,குஜராத் முஸ்லீம் படுகொலையின் சூத்திதாரிகளான நரேந்திர மோடி, அமித் ஷா  போன்றோர் கொலைக் குற்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை என்னவென்று சொல்வது?

CBI விசாரணை நடத்திய வழக்கில் சத்யம் கம்ப்யூட்டர் ராமலிங்க ராஜு இன்றும், பங்குச் சந்தை ஊழல் பேர் வழி காலஞ்சென்ன ஹர்ஷத் மேத்தா போன்ற கார்பரேட் கிரிமினல்கள் நேற்றும் உல்லாசமாக சுற்றித் திரிந்தார்கள் – திரிகிறார்கள். இவ்வளவு நடந்த பிறகும் இந்த கட்டமைப்பை நம்ப வேண்டுமா?

தற்பொழுது 3 மாணவிகள் மரணத்திற்கும் CBI விசாரணை தான் கோருகின்றனர். வேண்டுமானால், வாசுகி சுப்ரமணியன் இன்னும் செய்யாத தவறு என்ன என்பதை கண்டுபிடிக்க CBI விசாரணையை கேட்கலாம். அதிகாரிகள், MLA, MP அமைச்சர் போன்ற கிரிமினல்களின் ஆதரவோடு அவ்வளவு அயோக்கிய தனங்களையும் செய்திருக்கிறார் வாசுகி சுப்ரமணியன்.

மேலும் அழுகி நாறிப்போன இந்த சட்டத்திற்கு வெளியேயும் ஒரு மாபியா கும்பலை இயக்கி வருகிறார். அவர் தான் மாடூரை சேர்ந்த பெருமாள் மகன் வெங்கடேசன். இந்த பெரு.வெங்கடேசன் முன்னர் விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து வெளியேறி 2004-ம் ஆண்டு “ஆதிதிராவிடர் புரட்சி கழகம் “ என்றவொரு லெட்டர் பேடு தலித் அமைப்பை தொடங்கி தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி கொண்டார். அரசியல் மாபியாக்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் இவருடைய தொழில். டாக்டர் முத்துசாமிக்கும் வாசுகி சுப்ரமணியத்துக்கும் ஏற்பட்ட நிலத்தகராறில் கட்டைப்பஞ்சாயத்து செய்தவர் இவர் தான். பிறகு வாசுகி சுப்ரமணியனின் அல்லக்கையாக மாறி கல்லூரியே கதி என கிடந்தார்.

மாணவர்களை மிரட்டுவது, திட்டுவது, பெற்றோர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இவர் தான் செய்து வந்தார். இந்த வெங்கடேசன் “மன்னார்குடி மாபியா” கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக கூறுகின்றனர் பிரபல வழக்கறிஞர்கள். இந்த மன்னார்குடி மாபியாவின் ஆதரவில் தான் இத்துனை காலமும் ஆட்டம் போட்டுள்ளார்.

அடுத்ததாக விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு இந்த கல்லூரிக்கு நெருக்கமானவர் என்றும், சென்னை அரும்பாக்கத்தில் மாணவர்கள் சேர்க்கையின் போது கல்லூரியில் சேர வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட மாணவர்களாகிய நாங்கள் பிரச்சாரம் செய்த போது எங்களை மிரட்டியது வன்னியரசு தான் என்றும் உறுதியாக கூறுகின்றனர் அந்த மாணவர்கள்.

இதனை உறுதிபடுத்தும் விதமாக சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய மாணவிகள் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முன்பு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் பொழுது மாணவர்களை கலைப்பது, பெற்றோரிடம் சமாதானம் பேசி பிரேத பரிசோதனை செய்ய வைத்தது உள்ளிட்ட வேலைகளை கச்சிதமாக செய்து கல்லூரியின் விசுவாசி தான் என்பதை உறுதிபடுத்தினார் விடுதலை சிறுத்தை கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலர் பாமரன். இவரின் இந்த அயோக்கிய தனத்தை கண்டு மருத்துவமனையிலேயே மாணவர்கள் அனைவரும் காரி உமிழ்ந்தனர்.

பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பொதுவாக தலித் அமைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்வதே அப்பட்டமான ஏமாற்று. SVS கல்லூரியால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலரும் தலித்துகள் தான். பெரும்பாலும் இது போன்ற மோசடி கல்லூரிகளுக்கு ஆள் பிடித்து கொடுப்பதே இவர்கள் தான். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று தலித் மாணவர்களின் பட்டியலை வாங்கிக்கொண்டு முதலில் மாணவர்களிடம் பேசுவது அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோரிடம் பேசி மனதை மாற்றுவது என்று தலித் மக்களை, மாணவர்களை பலிகடாவாக்குகிறார்கள். குறிப்பாக தலித் மாணவர்களை மட்டும் குறி வைப்பதற்கு ஒரு நோக்கம் உள்ளது. தலித் மாணவர்களுக்கென்று ஒதுக்கக்கூடிய உதவித் தொகை, அரசின் சலுகை, வங்கி கடன் போன்றவற்றை மாணவர்களின் பெயரால் தானே மொத்தத்தையும் சுருட்டிக் கொள்வதற்கு தான். இது தான் svs கல்லூரியிலும் நடந்துள்ளது. இவற்றை எல்லாம் தெரிந்தே தான் தலித் அமைப்புகள் செய்கின்றன. சாதியை கடந்து வர்க்கம் என்ற அடிப்படையில் ஆளும் வர்க்க கும்பலுக்கு சேவை செய்து வருகிறார்கள் என்பதை SVS கல்லூரியின் சம்பவங்களில் இருந்தே புரிந்து கொள்ள வேண்டும்.

மூன்று மாணவிகளின் உடலையும் உடனடியாக பிரேத பரிசோதனை செய்து பிரச்னையை சுமூகமாக முடித்து விட வேண்டும் என்று அரசு காட்டிய தீவிரம், பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தது, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தலைமையில் போராடிய மாணவர்களை அப்புறப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் என அனைத்தும் இந்த அரசு தான் செய்த தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்வது என்பது மட்டுமல்லாமல் வாசுகி சுப்ரமணியன் உள்ளிட்ட கிரிமினல் கும்பலை, கல்விக் கொள்ளையர்களை முற்றிலும் பாதுகாக்கவே விரும்புகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதன் பின்னணியில் இதனை புரிந்து கொண்டால் மாணவிகள் மரணம் தற்கொலையல்ல, கொலை தான் என்பது விளங்கும்.

svs-students-suicide-demo-01ஆக SVS கல்லூரியை பொறுத்த வரை கூட்டு சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட எல்லா அயோக்கியதனங்களையும் அரங்கேற்றியுள்ளனர். இது SVS கல்லூரி மட்டும் தான் என்றில்லாமல் நாடு முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான அடக்குமுறை, கட்டணக் கொள்ளை, மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் என அனைத்தும் பகிரங்கமாகவே நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதனை மாற்ற முடியாது என்று கூறி வேடிக்கை பார்ப்பது, காரியவாதமாக , பிழைப்புவாதிகளாக ஒதுங்கிக் கொள்ள நினைப்பது அவமானம். மனித சமூகத்திற்கு எதிராக ஒரு சிறு கும்பலால் தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றுவதே சரியானது.

இந்த கிரிமினல் கும்பல்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் அழுகி நாறிப்போன இந்த அரசுக் கட்டமைப்பில் சாத்தியமில்லை. இதனை தூக்கி எரிந்து விட்டு நாமே அதிகாரத்தை கையில் எடுப்போம்! குற்றவாளிகளை தெருவில் வைத்து தண்டிப்போம்!!

– வினவு செய்தியாளர்கள்.

ஆர்.எஸ்.எஸ்-ஐ நடுங்க வைத்த ரோகித் வெமுலா – வீடியோ

1
rohit-vemula-suicide-protests-4
“எட்டுக் கோடி கொடுத்தாலும் எங்களுக்கு வேண்டாம். என் மகனைக் கொன்ற குற்றவாளிகளை தண்டியுங்கள்” – ரோகித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா!

பார்ப்பனிய சனாதன தர்மத்தையும், ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டைக் கூறு போட்டு விற்கும் தங்களது ’சேவை’யையும் எதிர்த்தால், ஒன்று கொன்றொழிக்கப்படுவீர்கள் அல்லது உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தூண்டப் படுவீர்கள் என்பது தான் கோவிந்த் பன்சாரே தொடங்கி ரோஹித் வெமுலா வரை நடத்தப்பட்ட கொலைகளின் மூலம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் உலகிற்கு உணர்த்த விரும்புப் பாடம். ரோகித் வெமுலாவையும் அப்படித்தான் தற்கொலை என்ற பெயரில் கொன்றிருக்கிறார்கள்.

ஆனால் இந்த அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என இந்தியா முழுவதும் மாணவர்கள் கொதித்தெழுந்து போராடுகிறார்கள். ரோகித் வெமுலாவின் தற்கொலை பார்ப்பனிய பாசிச கும்பலுக்கெதிரான கலகமாகவும், போராட்டமாகவும் உருவெடுத்திருக்கிறது. மோடி-பா.ஜ.க கும்பலின் கொட்டங்கள் இனி தங்கு தடையின்றி தொடர இயலாது என்பதற்கு இது ஒரு அறிகுறி. ஒரு ஒடுக்கப்பட்ட மாணவனின் தற்கொலை அவர்களை நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது. இந்த நிகழ்வை காட்சி வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறோம். பகிருங்கள்!

– வினவு