Friday, June 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 604

விவசாயிகளை அழிக்க பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டு சதி – கார்ட்டூன்

3

விவசாய நிலங்களை எடுத்து
முதலாளிகளுக்கு போட்டுவிட்டு
ஒரு ரூபாய் அரிசியை வாங்கிக் கொள்ளும் முட்டாள்
உன்னைப் போல் உலகில் உண்டா?

landbill-by-admk-bjp-allianceகுடிநீரையும், இயற்கை வளங்களையும்
குடிமக்களின் உழைப்பையும்
தனியார்மயத்துக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு
“ஐய்! மடிக் கணிணி கிடைக்கப்போகிறது” என்று
ஓட்டுப்போட்டு ஏமாறும்
உன்னைப் போல் ஒரு நாயுண்டா? புழு உண்டா?

தட்டைக் காட்டி போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும்
ஓட்டைக் காட்டி தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும் வாழ்வு ஒன்றுதான்!
நீயாக எதையும் கேட்க முடியாது…

(உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் – தோழர் -துரை. சண்முகம்)

jeya-suppors-land-billபடம் : ஓவியர் முகிலன்

jj-supports-land-billபடம் : ஓவியர் முகிலன்

நோக்கியா தொழிலாளிகளுக்காக களமிறங்கிய பு.ஜ.தொ.மு

0

நோக்கியாவின் சட்டவிரோத ஆலை மூடலை முறியடிப்போம்!
வேலை பெற போராடும் தொழிலாளர்களுக்கு தோள் கொடுப்போம்!!

என்ற முழக்கங்களின் கீழ் மார்ச் 13, 2015 அன்று மாலை 5 மணிக்கு திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் நோக்கிய இந்தியா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நோக்கியாவின் சட்டவிரோத ஆலை மூடலை முறியடிப்போம்

மத்திய மாநில அரசுகளே

  • VRS வாங்க மறுத்த வேலைக்காக போராடும் 104 தொழிலாளர்களின் வேலையை உத்தரவாதப்படுத்து
  • VRS என்ற பெயரில் விரட்டி வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்க உத்தரவிடு

தொழிலாளர்களே

  • வளர்ச்சி முன்னேற்றம் என்ற முகமூடியிட்டு தொழிலாளர்களின் உரிமை பறிப்பிற்கு காரணமான தாராளமயக் கொள்ளைக்கெதிராக கிளர்ந்தெழுவோம்
  • ஆலை வேறுபாடுகளை கடந்து தொழிலாளர் கூட்டமைப்பை கட்டியமைக்க ஒன்றுபடுவோம்

nokia-india-posterஅன்பார்ந்த தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே!

செல்போன் என்றாலே, அது நோக்கியாதான் என எல்லோரின் நினைவிலும் வலம் வந்த நோக்கியாவை தாங்கிப் பிடித்தும் அதன் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாய் இருந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை இன்று புயல் காற்றில் சிக்கிய படகைப் போல தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமென்ன?

நோக்கியா ஆலை மூடப்படுவதற்கு முன்பு சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் நோக்கியா இந்தியா தொழிலாளர்கள் சங்கம் தயாரித்து வெளியிட்ட ஆவணப்படம்.

நோக்கியா தொழிலாளர்களின் கடும் உழைப்பையும், வாழ்க்கை நிலைமைகளையும், எதிர்கால நம்பிக்கைகளையும், ஆலை மூடப்பட்டு விடுமோ என்ற பயத்தையும் வெளிப்படுத்துகிறது இந்த ஆவணப்படம். இப்போது நோக்கிய இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தின் கௌரவதத் தலைவராக இருந்து, பின்னர் தொழிலாளர்களை கைவிட்டு விட்ட  சி.ஐ.டி.யு.வின் சவுந்தர் ராஜனும் இதில் பேசுகிறார். 

தொழிலாளர்களின் உயிரைப் பறித்தும், உரிமைகளை மறுத்தும் பல லட்சம் கோடிகளை லாபமாக சுருட்டியது நிர்வாகம். பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுக் கொள்வான் என்பதற்கிணங்க, வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிக் கொண்ட நோக்கியா மத்திய-மாநில அரசுகளை ரூ 25,000 கோடி அளவு ஏமாற்றியுள்ளது.

இந்நிலையில் உலகெங்கும் உள்ள நோக்கியா கிளைகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தியது. ஆனால், இந்தியாவில் வரி ஏய்ப்பு வழக்கு நிலுவையில் இருப்பதால் மைக்ரோசாஃப்ட்டுக்கு கைமாற்ற முடியவில்லை. (கைமாற்றாமல் நம் நாட்டை ஏமாற்றின நோக்கியா, மைக்ரோசாப்ட் நிறுவனங்கள்).

வழக்கிலிருந்து தப்பிக்க வி.ஆர்.எஸ் என்ற பெயரில் 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மிரட்டி கட்டாயப்படுத்தி வெளியேற்றியது நோக்கியா. வி.ஆர்.எஸ் போகாமல் மீதம் இருந்த 850 தொழிலாளர்களை, சங்க நிர்வாகிகளாயிருந்த கைக்கூலிகள் நிர்வாகத்துடன் துரோக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வேலைக்கு வேட்டு வைத்தனர்.

சட்ட விரோத ஆலை மூடல்

நோக்கியா நிர்வாகமும் – சங்க நிர்வாகிகளும் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு தொழிலாளர்களுக்கு துரோகம் செய்வதை புரிந்து கொண்ட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 18(1) ஒப்பந்தத்தை ஏற்காமல் வேலை கேட்டு நோக்கியாவின் மெயின் வாயிலுக்கு சென்ற போது, நவம்பர் 1 முதல் ஆலையை மூடி விட்டதாக மனித வளத்துறை அதிகாரி சவுந்தர்ராஜன் கூறியிருக்கிறார்.

அவரிடம், “100 பேருக்கு மேல் வேலை செய்யும் ஆலையை மூட அரசிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா? அதை காண்பியுங்கள்” என்று கேட்டதற்கு “அரசிடம் அனுமதி வாங்க அவசியம் இல்லை. எந்த சட்டமும் எங்களை எதுவும் செய்ய முடியாது” என திமிராக பதிலளித்திருக்கிறார்.

அடுத்த நாள் நிறுவன வாயிலுக்குச் சென்ற போது போலீசு பட்டாளத்தையே குவித்திருந்தனர். “இனிமேல் இங்கேயெல்லாம் வரக்கூடாது. மீறி வந்தால், கூட்டம் கூடினால் தடியடி நடத்துவோம்” என காவல்துறை உயர் அதிகாரிகள் மிரட்டியிருக்கின்றனர்.

உளவுத்துறை போலீசோ இதற்கு ஒருபடி மேலே போய் நோக்கியா தொழிலாளர்கள் யாருக்கும் கூட்டம் நடத்த அனுமதி தரக்கூடாது என திருப்பெரும்புதூர் முதல் காஞ்சிபுரம் வரையிலான அனைத்து திருமண மண்டபங்களிலும் மிரட்டி வைத்திருந்தது. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் இவர்கள் அப்பட்டமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடியாள் வேலை செய்கிறார்கள். அரசுக்குக் கட்ட வேண்டிய வரியையும் கட்டாமல், காரணமும் சொல்லாமல் ஆலையை சட்டவிரோதமாக மூடியது நோக்கியா நிர்வாகம். ஆனால், இதைத் தட்டிக் கேட்க இவர்கள் யாருக்கும் துப்பில்லை.

104 தொழிலாளர்களின் தொடர் போராட்டம்.

போராட வேண்டிய நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் தொழிலாளர்களை அநாதையாக விட்டு விட்டு வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்று விட்டதால் தொழிலாளர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தொழிலாளர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் தொலைபேசி மிரட்டி வேலையை ராஜினாமா செய்ய வைத்தது நோக்கியா நிர்வாகம்.

இருக்கின்ற தொழிலாளர்கள் பொதுக்குழுவைக் கூட்டி புதிய நிர்வாகக் குழுவை தேர்ந்தெடுத்து நோக்கியா நிறுவனத்தின் சட்ட விரோத ஆலை மூடலை எதிர்த்தும், வேலைக்காக தொடர்ந்து போராடவும் முடிவு செய்தோம். சங்கத்தின் கௌரவத் தலைவராக செயல்பட்டு வந்த சி.ஐ.டி.யு-வின் மாநிலத் தலைவர் அ. சவுந்தர்ராஜனிடம் (சட்டமன்ற உறுப்பினர்) ஆதரவு கேட்ட போது, அவர் “100 பேருக்கெல்லாம் போராட முடியாது” என்றும், “நிர்வாகம் நல்ல செட்டில்மென்ட் தொகைதான் தருகிறார்கள். பேசாமல் வாங்கிக் கொள்ளுங்கள்” எனக் கூறி துரோகத்திற்கு புதிய விளக்கமளித்தார்.

உலகின் பல நாட்டு அரசுகளை விலை பேசுகின்ற நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், நமது நாட்டிலும் ஆலையை மூடுவதற்கான எவ்வித அனுமதியையும் அரசிடம் பெறவில்லை என்றும் நாட்டையும், தொழிலாளர்களையும் ஏமாற்றும் நோக்கியா நிர்வாகத்தை எதிர்த்து போராடுவதற்கு எண்ணிக்கை முக்கியமில்லை, நாட்டின் மீதும் தொழிலாளர் மீதும் பற்றுள்ள எத்தனை பேர் வந்தாலும், அவர்களுடன் இணைந்து போராட நாங்கள் வருகிறோம் எனக் கூறி போராட வழிகாட்டியது “புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி”யின் மாநிலத் தலைமை. நிராதரவாகத் தனித்து விடப்பட்ட எங்களுக்கு வர்க்க உணர்வும், நாட்டுப்பற்றும் ஊட்டப்பட்டதால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.

தமிழகத்தில் தொழிலாளர்களின் அவலநிலை

வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் யாவும், மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்துவிட்டு, சலுகைகளை அனுபவித்தும், தொழிலாளர் உழைப்பை உறிஞ்சியும் கொள்ளையடித்த லாபத்தை மூட்டைக் கட்டிக் கொண்டுஅடுத்த நாட்டிற்கு கொள்ளையடிக்க பறந்து விடுகின்றனர்.

தொழிலாளர் நலச் சட்டங்கள் அமுலில் இருக்கும் போதே நோக்கியா, ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி என ஆரம்பித்து ஐ.டி நிறுவனமான டி.சி.எஸ் வரை, தமது நிறுவனத்திற்காக பாடுபட்ட தொழிலாளர்களின் வாழ்வையே அழித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் (4,00,000) அதிகமான தொழிலாளர்கள் வேலையிலிருந்து துரத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், நமது பிரதமர் மோடியோ, “மேக் இன் இந்தியா” திட்டத்திற்காக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று தொழில் துவங்க முதலாளிகளை கூவிக் கூவி அழைக்கிறார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்தபோது கூட நம் நாட்டுத் தொழிலாளர்கள் சங்கமாக சேர்ந்து போராடி உரிமைகளை பெற்றனர். ஆனால், இன்றோ நாம் சங்கமாக சேர்வதற்கே போராட வேண்டிய அவலநிலையில் உள்ளோம். இதற்கு என்ன காரணம்?

தொழிலாளர் – மக்களின் உரிமை பறிப்பையும், மானிய வெட்டையும், வளர்ச்சி-முன்னேற்றம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் தாராளமயமாக்கல் என்ற நாசகாரக் கொள்கையே இதற்கு அடிப்படையாக உள்ளது. இதன் விளைவே அரசிடம் அனுமதி எதுவும் பெறாமலேயே தொழிலாளர்களை வெளியேற்றி ஆலையை மூடுகிறது நிர்வாகம்.

நோக்கியா நிறுவனத்திற்கு சொந்தமானது எந்திரங்களும், கட்டிடமும் மட்டுமே. நிலம் மற்றும் பிற எல்லாம் அரசுக்கு சொந்தமானது. எனவே, வேறொரு நிறுவனத்திற்கு ஆலையை குத்தகைக்கு விட்டோ, அல்லது அரசே ஆலையில் உற்பத்தியை துவங்கியோ 104 தொழிலாளர்களுக்கும் நிரந்த வேலை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மாநில அமைச்சர், பிரதமர் ஆகியோர் நோக்கியா ஆலை விரைவில் திறக்கப்படும் என அறிவிக்கின்றனர். அரசின் அங்கமான தொழிலாளர்துறையும், மாவட்ட நிர்வாகமும் வேலைகேட்டு தொழிலாளர்கள் கொடுத்துள்ள மனுவின்மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். ஆனால், நாட்டை ஏமாற்றும் முதலாளிகளை பாதுகாப்பதே அரசின் கொள்கையாக உள்ளது. தொழிலாளர் சட்டங்களும், அதை அமுல்படுத்தும் அதிகாரிகளும் தொழிலாளர்களை பாதுகாப்பதில்லை. தொழிலாளர்களின் போராட்டமே உரிமைகளை மீட்டெடுக்கின்றது.

நோக்கியா நிர்வாகம் அறிவித்த வி.ஆர்.எஸ் மற்றும் பிற சலுகைகளை புறக்கணித்து, வேலைக்காக போராடி வரும் 104 தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்டவும், வி.ஆர்.எஸ் என்ற பெயரில் வேலையிழந்த ஏனைய தொழிலாளர்களின் வேலையை மீட்கவும் தொழிலாளர்கள் கூட்டமைப்பை கட்டியமைத்து போராடுவோம்.

தகவல்
நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கம்,
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம் – 8807532859

புதிய ஜனநாயகம் – மார்ச் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

3

puthiya-jananayagam-postபுதிய ஜனநாயகம் மார்ச் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. செய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு :  மக்களின் போர்க்கோலம்!

2. மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி!

3. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி :  மாற்றா? ஏமாற்றா?
தோற்றுப் போய், நிலைகுலைந்து மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கும் இந்த அரசமைப்பைச் சீராக்க முடியும் என்ற பிரமையை உருவாக்குகிறது ஆம் ஆத்மி.

4. மோடி ஆட்சியில்.. யாருக்கு நல்ல காலம்! யாருக்கு கேடுகாலம்!!
இந்து மதவெறியர்களும் அவர்களுக்கு நெருக்கமான அரசு பயங்கரவாதிகளும் சிறையிலிருந்து வெளியே வர, இக்கும்பலை எதிர்த்துப் போராடுபவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

5. தெருக்களில் இந்து பயங்கரவாதிகள்! பதவிகளில் அரசு பயங்கரவாதிகள்!!
குஜராத்தில் நடந்த போலி மோதல் கொலை வழக்குகளிலிருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டிருப்பதையும் வன்சாரா உள்ளிட்ட போலீசு அதிகாரிகளுக்குப் பிணை வழங்கப்பட்டிருப்பதையும் “அநீதி” என்ற வார்த்தைக்குள் மட்டும் அடக்கி விட முடியாது.

6. சிறீரங்கம் : தமிழகத்தின் அவமானச் சின்னம்
ஜெ. கும்பலின் முகத்தில் கரியைப் பூச ஒரு வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும், எவ்வித அறநெறியுமின்றி பணத்துக்கு விலை போயினர். ரூ 5,000-க்கும் ரூ 2,000-க்கும் விலை பேசப்பட்டு தன்மான உணர்வின்றி தரம் தாழ்ந்து போயினர்.

7. அதிர வைக்கும் அதிகார வர்க்க ஊழல்கள்
தனியார்மயத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டையும் மக்களையும் கொள்ளையடிப்பதில் ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகார வர்க்கம் விஞ்சி நிற்கிறது.

8. போபால் முதல் இராணிப்பேட்டை வரை  முதலாளி வர்க்கத்தின் ஆதாயக் கொலைகள்!
வளர்ச்சி, வேலைவாய்ப்பு, அந்நியச் செலாவணி என்ற மோசடியான சொல்லடுக்குகள், தொழிலாளி வர்க்கம் கொல்லப்படுவதையும், முடமாக்கப்படுவதையும் குற்றச் செயலாகக் கருதுவதை நிராகரிக்கின்றன.

9. சுண்டைக்காய் கால்பணம்! சுமைகூலி முக்கால் பணம்!!
தனது தேவையில் வெறும் 3.22 சதவீத மின்சாரத்தை, 4,940 கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்து தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குகிறது, தமிழக மின்சார வாரியம். இது, அதனின் ஆண்டு வருமானத்தில் 15 சதவீதமாகும்.

10. சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றங்களின் கள்ள ஆட்டம்
சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில் பவானிசிங் அரசு வக்கீலாக ஆஜராகி வருவது சட்டவிரோதமானது எனத் தெரிந்தும் உச்ச, உயர்நீதி மன்றங்கள் இந்த அநீதி தொடர்வதை அனுமதித்து வருகின்றன.

11. தனியார்மயம், கார்ப்பரேட்மயம்  மருத்துவத் துறையைச் சீரழித்து வரும் நோய்கள்!

12. ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன?

புதிய ஜனநாயகம் மார்ச் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம் – திருச்சி

0

திருச்சி

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் – 8

அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி திருச்சி செவனா ஹோட்டலில், பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் அரங்குக் கூட்டம் நடைபெற்றது.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8கூட்டத்திற்கு தலைமை வகித்த பெண்கள் விடுதலை முன்னணியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் அம்சவள்ளி பேசும் போது

“இன்று மகளிர் தினம் என்பதையே காதலர்தினம் போல பெண்களுக்கு ஏதோ ஒரு பரிசு கொடுத்து வாழ்த்து கூறுவது என்பது போலவும் கோலப்போட்டி, சமையல் போட்டி, அழகி போட்டி என பெண்களின் சிந்தனை திட்டமிட்டு திசை திருப்பப்படுள்ளது.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8ஆனால் உண்மையில் மார்ச் 8 என்பது 10 மணி நேர வேலைக்காகவும், வாக்குரிமைக்காகவும், உழைப்புக்கேற்ற கூலிக்காகவும் உழைக்கும் பெண்கள் ரத்தம் சிந்தி வென்றெடுத்த இந்த உரிமைகள்தான் இன்று பல நாடுகளில் ஏற்றுக் கொண்டு சட்டமாக்கப்பட்டுள்ளது,

ஆனால் போராடி பெற்ற அந்த உரிமைகள் இன்று பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது, திருப்பூர் ஈரோடு போன்ற நகரங்களில் வேலைசெய்யும் இளம் பெண்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். திருச்சி போன்ற நகரங்களில் ஜவுளிக் கடையில் வேலை செய்யும் பெண்களின் அதிக நேர உழைப்பை சுரண்டியும் வேலைக்கேற்ற கூலியுமின்றி அடக்கப்படுகின்றனர்.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8பெண்களின் மீதான அடக்குமுறைகள் வெளிப்படும் இடங்களிலெல்லாம் எமது பெண்கள் விடுதலை முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது” என்று பேசி,  டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கெதிரான தொடர் பிரச்சாரம், பெண்கள் மீதான பாலியல் வன்முறைக் கெதிரான இயக்கம், கந்துவட்டி கும்பலின் அராஜகத்துக் கெதிராக களத்தில் நின்று போராடிய அனுபவத்தை கூறினார்.

பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி மாவட்ட பொருளாளர், தோழர் பவானி பேசும் போது,

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் பல்வேறு இயக்கங்கள் எடுக்கப்படும் போது, பல தரப்பு பெண்களிடம் செல்கிறோம். பல குடும்பப் பெண்கள் தன் குடும்பம், வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு என இருக்கின்றனர். சமூகத்தின் மீது அக்கறை செலுத்துவதில்லை, அதைப்பற்றி நாம் பேசினாலும் தமக்கு விருப்பமில்லை என ஒதுங்குவது, கல்லூரி பெண்களிடம் கேட்டால் சிறுமிகள் முதல் பெண்கள் வரை நடக்கக் கூடிய பாலியல் வன்முறை பற்றி கூட தெரியாது என கூறுவது ஒரு கசப்பான யதார்த்தம். படித்த பெண்கள் கூட சமூக அக்கறையற்று இருப்பதற்க்கு காரணம், அரசே திட்டமிட்டு பெண்கள் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே நுகர்வு வெறியையும், தொலைக்காட்சி மோகத்தையும் உருவாக்கி வருகிறது. இதைமாற்ற அமைப்பாய் சேர்ந்து போராடுவதே தீர்வு” என்றார்.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8மனித உரிமைபாதுகாப்பு மைய தோழர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மீனாட்சி

“பெண்களுக்கு சட்டம் தான் பாதுகாப்பு என்கின்றனர். ஆனால் நிர்பயா வழக்கை எடுத்துக் கொண்டால் மக்கள் கடுமையான போராட்டம் நடத்திய பிறகுதான் குற்றவாளிக்கு தண்டனை என்பதே நிறைவேற்றப்பட்டது.

ஆண், பெண் எனும் பாகுபாடு இருக்கக்கூடாது என சட்டம் சொல்வது, நடைமுறையில் சாத்தியமாகியுள்ளதா?

பெண் கர்ப்பிணியாய் இருக்கும் போது அதிகமான வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது, இரவு நேரத்தில் வேலை செய்யக் கூடாது என சட்டம் இருக்ந்தாலும், நடைமுறையில் மீறப்படுகிறது. பெண்கள் 3 தடவைக்கு மேல கழிவறை செல்லக் கூடாது என முதலாளிகள் கொடுமைப்படுத்துவதற்கு சாதகமாகவே சட்டம் வளைகிறது. வழக்கறிஞர்கள், நீதிபதிகளிலும் கூடபாலியல் தொல்லை கொடுப்பவர்கள் உள்ளனர்.

சட்டங்கள் பெண்களுக்கான பாதுகாப்பை வழங்காது, அமைப்பாய் சேர்ந்து போராடுவதே தீர்வு”

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8மக்கள் கலை இலக்கியக் கழக சென்னை தோழர். கவிஞர் துரை.சண்முகம்

“பெண்கள் அன்றைக்கே போராடத்தை துவங்கிவிட்டனர், சோத்துக்காக மட்டுமல்ல தமது அனைத்து உரிமைகளுக்கும் சேர்த்தே போராடினர்.

முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டாமல் பெண்களுக்கு வாழ்க்கையில்லை, அதை நடைமுறையில் நிரூபித்தது ரசிய சோசலிசப் புரட்சி. பொதுவுடமை அகிலத்திலேயே பெண் பிரதி நிதிகளை தேர்ந்தெடுத்தக்கப்பட்டு, சமூகம் மாற ஆண்களோடு இணைந்து போராட பெண்கள் தயார் என தோழர் கிளாரா ஜெட்கின் அறிவித்தார்.

இன்றைய சூழலில் பெண்கள் இரவு முழுவதும் வேலை, மூலதனத்துக்காக உழைப்பை உறிஞ்சும் முதலாளிகள், பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர்கள் சோறு தின்னக் கூட நேரமில்லாத நிலை, வீட்டை விட்டு, குடும்பத்தைவிட்டு வெளியே சென்று தங்கி வேலை செய்யும் பாதுகாப்பற்ற நிலைமை என்பது இருக்கிறது. சுமங்கலி திட்டம், பாலியல் ரீதியாக துன்புறுத்தல், வயிற்றை கழுவதற்காக கடுமையான வேலைக்கு செல்லும் நிலையில் பெண்கள் உள்ளனர்.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8உப்பளத்தில் வேலை செய்து பெண்கள் கை அறுபட்டு புண்ணாகி சோறு சாப்பிடக் கூட முடியாத அளவு துன்பம் உண்டு. இந்த நிலைமை குறித்து ஒரு பெண் கூறும்போது, உப்பளக்காரனுக்கு கட்டிக்கொடுத்த என் அருமை அம்மாவே, நான் இறந்தால் உடனே ஓடிவராதே, நான் உப்பிலேயே இருப்பதால் என் சவம் கெட்டுவிடாது என்று உணர்த்தியிருக்கிறார். இந்த சொற்கள் ஒவ்வொருவரையும் சிறிது நேரம் கண்ணில் ஈரம் கசிய வைத்தது,

சோவியத்தில் பெண்ணை உடலாலும், மூளையாலும் உழைப்பாலும் சமமான ஆரோக்கியமான ஒரு மனுசியாக உயர்த்தி ஏற்றம் பெற்றார்கள். இங்கே பெண்கள் சாமியார்களிடம் சென்று ஏமாந்து உடலையும் உயிரையும் பறிகொடுத்தது இருக்கிறது. சமீபத்திய சான்று குற்றவாளிகள் கூடாரமான அரவிந்தர் ஆசிரமம்.

ஆகவே ஓட்டு மொத்த கட்டமைப்பும் அரசு, நீதிமன்றம், காவல்துறை அனைத்தும் தகர்த்து எறியாமல், இச் சமூகத்தில் தீர்வு தேடுவது அப்பாவித்தனமானது, எனவே, புரட்சியை நோக்கி பயணிப்போம் என சூளுறைத்தார்.

நிகழ்ச்சியின் நடுவே, சட்டக்கல்லூரி மாணவியின் சிலம்பாட்டம், இளந்தோழர்களின் கவிதை வரிகள், புரட்சிகர பாடல்கள் என புதியவர்கள் தமது பங்களிப்பை வழங்கினர்.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8ம.க.இ.க மையக் கலைக் குழுவினரின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8ஆணாத்திக்கத்தின் வெளிப்பாடுகள், ஒவ்வொருவர் வீட்டிலும் அன்றாடம் சந்திக்கும் சூழலை பாடல் மூலமாக உணர்வூட்டினர்.

இறுதியாக பெ.வி.மு தோழர் ஜெயமணி நன்றிஉரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8இந்த அரங்குக் கூட்டத்தை ஒட்டி கவிஞர் தோழர் துரை சண்முகத்தின் பெண்விடுதலைக்கு விதையூன்றும் வரிகளுடன் 20 ஆயிரம் பிரசுரங்கள் 600 சுவரொட்டிகள் , 30 பிளக்ஸ் சுவற்றில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது.

கல்லூரி பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகத்துறையினர், பிரமுகர்கள், அரசு அலுவலக ஊழியர்கள், போன்ற அறிவுத் துறையினர் இக்கூட்டத்திற்கு வந்து நிறைவுடன் வாழ்த்தினர். நமது பிரச்சார முயற்சியின் வெற்றியாக நிறைய புதியவர்கள் வந்தனர்.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8வீட்டில் மனைவியிடம் ஆணாதிக்க தன்மையை வெளிப்படுத்துபவர்களிடம் இந்த கூட்டம் மூலம் ஒரு குற்ற உணர்வை எற்படுத்தினோம் என்றால் அது மிகையல்ல.

ஆயினும் இது ஆணை மட்டும் திட்டித் தீர்க்கும் கூட்டமோ, பெண்ணை அரவணைத்து செல்லும் கூட்டமோ அல்ல. ஆண், பெண் இரு பாலாரையும் சேர்த்து கட்டிப் போட்டு வதைக்கும்  மறுகாலனியாக்க கொடுங்கரத்தை ஒடித்து ஒரு சேர போராட்டப் பாதையில் கரம் கோர்க்கும் நிகழ்வாக இந்த கூட்டம் அமைந்தது.

தகவல்:

பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி

வேலூரில் உழைக்கும் மகளிர் தினம்!

“வரலாற்றில் எல்லா இடங்களிலும் பெண்கள் தமது குழந்தைகளைப் பராமரித்தனர்.  கால்நடைகளில் பால் கறந்தனர், வயல்களில் உழவு வேலை செய்தனர், துணிகளை வெளுத்தனர், ரொட்டி சுட்டனர், வீட்டைச் சுத்தம் செய்தனர், துணிகளைத் தைத்தனர், நோயுற்றவர்களைப் பராமரித்தனர், மரணப் படுக்கையிலிருந்தவர்களின் அருகில் அமர்ந்து கண்ணீர் வடித்தனர், இறந்தவர்களைப்  புதைத்தனர்; பெண்களின்  இந்த அரும் பணிகள் இன்றும் உலகில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன”  – ரோஸலிண்ட் மைல்ஸ்.

பெண்கள் என்னதான் தங்களின் உழைப்பை பிறர் நலனுக்காக செலுத்தினாலும் சமூகத்தில் அவர்களுக்கான சமஉரிமை இன்னமும் கிடைத்த பாடில்லை. பெண்களுக்கான சமஉரிமை கிடைக்க வேண்டும் என விழைகின்ற ஒவ்வொரும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகையதொரு முயற்சி மக்கள் கலை இலக்கியக் கழகம வேலூர் கிளையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டது.

உழைக்கும் மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி அன்று பெண்கள் மட்டுமே பங்கேற்ற அறைக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வீடு வீடாகச் சென்று முதல் நாளே அழைப்பு விடுக்கப்பட்டது.

“உழைக்கும் மகளிர் தினம் கொண்டாட்ட நாள் அல்ல; அது ஒரு போராட்ட நாள். இந்நாளைப் பற்றி பெண்கள் அனைவரும் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்” என கூட்டத்திற்குத் தலைமை ஏற்ற தோழர் விஜயலட்சுமி கேட்டுக் கொண்டார்.

“பல்வேறு கட்சிகள் ஆண்-பெண் சமத்துவம் பற்றி பேசினாலும் அக்கட்சிகளிலேயே பெண்கள் பாகுபாடாக நடத்தப்படுவதும், தற்போதைய சூழலில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பதும், இன்றைய அரசும் சட்டங்களும் பணக்காரர்களை பாதுகாக்க துணை புரிவதும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கின்றது” என தோழர் ஜெயா தனது உரையில் பதிவு செய்தார்.

“இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வேன் என வாக்குறுதி கொடுத்து பிரதமரான மோடியின் ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறைத்தாக்குதல்கள் முன்பை விட அதிகரிக்கவே செய்கின்றன. பாலியல் பலாத்தகாரங்கள் அதிகரித்துள்ளன. நகைக்காக பலர் குறிப்பாக மூதாட்டிகள் படுகொலை செய்யப்படுகின்றனர். குடும்பப் பெண்கள் தனது சொந்த குடும்பத்தினராலேயே வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். காதல் மணம் புரியும் இளம் பெண்கள் சாதி-மத வெறியர்களால் கௌரவக் கொலை செய்யப்படுகின்றனர். மோடி அரசில் இந்துத்துவா சக்திகள் தலைதூக்குவதால் இத்தகைய கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது பாலியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதையும், பாலியல் கொடுமைகளைச் செய்வதில் காவல் துறையும் இராணுவமும் முன்னிலையில் இருப்பதையும் வர்மா குழ சுட்டிக் காட்டியிருப்பது இன்றும் தொடர்கிறது.

ஒரு ஆண் பிற பெண்கள் மீது வக்கிர புத்தி உள்ளவனாக, பாலியல் கொடுமை செய்பவனாக, ஆண் அதிக்கச் சிந்தனை கொண்டவனாக மாறுவதற்குமான அடிப்படை இன்றைய சமூக அமைப்பே காரணமாக இருக்கிறது.

பெண்கள் நாட்டின் கண்கள் எனக்கூறிக்கொண்டே கண்போல வளர்த்த மகள் வேற்று சாதிக்காரனை காதலித்ததற்காக ஒரு தந்தையே தனது மகளை கௌரவக் கொலை செய்வதற்கும் இன்றைய சாதிய சமூக அமைப்பே காரணமாக இருக்கின்றது.

இந்தியாவில் பெண்கள் நிலை மிக மோசமாக இருப்பதாகவும் அவர்களின் உணவு, கல்வி உள்ளிட்ட தேவைகளை அங்கீகரிப்பதில் இந்தியச் சமூகம் முனைப்பு காட்டாமல் இருப்பதாக ஜி 20 நாடுகள் மாநாட்டின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதும், நிர்பயா படுகொலையைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட “இந்தியாவின் மகள்” என்கிற ஆவணப்படத்தை இந்திய அரசு தடை செய்திருப்பதும் இந்தியாவின் நிலையை உறுதி செய்வதாகவே கருத வேண்டியுள்ளது.

உலக மயத்தின் விளைவுகள் கடுமையாகி வரும் இன்றைய சூழலில் பெண்கள் மீதான தாக்குதல்கள் மேலும் அதிகரித்து வருகின்றன.

எப்படி அன்று ரசியாவில் பெண்களுக்கு சம உரிமையை சோசலிச அரசு உறுதி செய்ததோ அதுபோன்றதொரு நிலைமை இந்தியாவில் வந்தால்தான் பெண்கள் தங்களுக்கான சமஉரிமையைப் பெறமுடியும்.

அத்தகைதொரு சமூகப்புரட்சிக்காக போராடும் போதே பெண்கள் தாங்கள் சமத்துவமாக நடத்தப்படுவதை உணர முடியும். எனவே பெண்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு ஆணும் பெண்ணும் சேர்ந்து போராடுவதும் அதற்காக மக்கள் கமிட்டிகளை அமைப்பதும் இன்றைய தேவையாக இருக்கின்றது” என தோழர் வாணி தனது சிறப்புரையில் பெண்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

“இன்றைய உணவு முறையால் சத்தான உணவு இன்மையால் பெண்கள் பலரும் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுவது போன்று அன்று இருந்ததில்லை” என 75 வயது மூதாட்டி தனது கருத்தை முன்வைத்தார்.

“தங்களுக்கு பொருளாதார வசதி இருந்த போதும் தனது கணவர் குடிகாரராக இருப்பதால் நிம்மதியான வாழ்க்கை தனக்கு இல்லை” என்பதை வேதனையோடு 45 வயது பெண் தனது சோகத்தை பகிர்ந்து கொண்டார்.

“ஆண் பிள்ளைகள் இருவர் தனக்கு இருந்த போதும் அவர்கள் சீரழிவுக்கு அடிமையாகிவிட்டதால் தன்னால் தனது மகன்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பதை” மற்றொரு பெண் பதிவு செய்தார்.

“கூலி வேலையில் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்க்கையை நடத்தினாலும் ஏதோ சிறப்பாக வாழ்வதைப் போன்று ஒரு போலியான வாழ்க்கையை நடத்துவதாகவும் அதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆட்படுவதாகவும்” மற்றொரு பெண் தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

பெண்கள் தங்களுக்கான பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டுமானால் அவர்கள் தங்களுக்கான விடிவை மட்டும் தனித்தனியாக தேடிக்கொள்ள முடியாது; மாறாக தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இச்சமூகத்தை மாற்றி அமைப்பதற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் வழிகாண முடியும் என்பதை உணரும் விதமாக இவ்விழா அமைந்தது.

நிகழ்வின் இடையிடையே “பிள்ளைக் கறி தின்னும் அரசை….”, “இந்து என்று சொல்லாதே! பார்ப்பான் பின்னே செல்லாதே…..”, “தினம் சாதி வெறியிலே……..” போன்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல்கள் பாடப்பட்ட போது பார்வையாளர் உற்சாகமடைந்தனர்.

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
வேலூர்

கோலப் போட்டியா மகளிர் தினம் ? மதுரையில் ஒரு மாற்றம்

0

சர்வதேச உழைக்கும் மகளிர் தின ஆர்ப்பாட்டம் – மதுரை

சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்மதுரையின் ஒத்தக்கடை பகுதியில் இந்த ஆண்டின் உழைக்கும் மகளிர் தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஒத்தக்கடை பகுதி மக்கள் பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் ஊடாக உழைக்கும் பெண்களின் நிலையை தெரிந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த தோழர்களுக்கு வீர வணக்கமும், ஜான்சி ராணி, ஹஜ்ரத் பேகம் போன்ற போராளிகளின் வீரத்தை உயர்த்தி பிடிக்கும் விதமாக முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

சர்வதேச உழைக்கும் மகளிர் தின ஆர்ப்பாட்டம் - மதுரை

  • பாடம் நடத்த ஆசிரியர் இல்லை, ரேசன் கடையில் சரக்கு இல்லை
  • பள்ளிக்கு அருகே டாஸ்மாக்,  எல்லா பக்கமும் டாஸ்மாக்கு, டாஸ்மாக்கை நடத்துவது அரசு
  • பெண்கள் நலத்துறை எதற்கு இருக்கு
  • நண்டு பிராண்டு லுங்கிக்கும், ஆக்ஸ்பிரே சென்ட்டுக்கும் மயங்குவதாக பெண்களைக்காட்டும் ஆபாச வக்கிர விளம்பரங்களை அடித்து நொறுக்குவோம்
  • கோலப் போட்டியும், அழகு போட்டியும், பெண்கள் தினத்திற்கு அழகல்ல
  • வர்க்க போராட்டத்திற்கு முன்கை எடுத்து வர்க்க போருக்கு வா தோழி

தலைமையுரை : தோழர் இராணி

தோழர் இராணி
தோழர் இராணி

மார்ச் 8 என்பது வெறும் கொண்டாட்டத்திற்கான ஒரு நிகழ்வு அல்ல. காதலிக்க மறுக்கும் பெண்ணுக்கு ஆசிட் வீச்சு; அதை மீறி காதலித்த பெண்ணுக்கு ‘கவுரவ’ கொலை.  போலீசும், சட்டமும், ஊடகங்களும் குற்றவாளிகளுக்கு சாதகமாக கட்டபஞ்சாயத்துகளாக செயல்படும் சூழலே இன்று நிலவுகிறது.

எனவே, தற்போதைய அரசு அமைப்பின் ஊடாக பெண் விடுதலையை சாதிக்க முடியாது . ஒட்டு மொத்த சமூக விடுதலையின் ஒரு அங்கமே பெண்விடுதலை. புரட்சியினூடாக சமூக விடுதலையையும், சமூக விடுதலையின் ஊடாக பெண் விடுதலையையும் சாதிக்க வர்க்க போராட்டத்திற்கு பெண்கள் வர வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

பாடல் : கவிமலர்

பாடல் : கவிமலர்
பாடல் : கவிமலர்

தோழர் : கயல்விழி உரை

தோழர் : கயல்விழி உரை
தோழர் : கயல்விழி உரை

தோழர் உரையாற்றுகையில் பெண்களை திசைதிருப்பும் மூன்று விஷயங்களை பட்டியலிட்டார். 1. பெண் தெய்வ வழிபாடு, 2. தொண்டு நிறுவனம், 3. சுய உதவி குழு

1. பெண் தெய்வ வழிபாடு என்பது ஒரு பெண்ணை அவள் விருப்பத்திற்கு மாறாக அனுபவித்து கொலை செய்துவிடுவதும், பிறகு குற்றத்திலிருந்து தப்பிக்க அவளை தெய்வமாக மாற்றிவிடுவதும், இதன்மூலம் மேலும் பெண்களை அடிமைப்படுத்துவதும் என்ற நடைமுறைக்குத்தான் பெண் தெய்வ வழிபாடு உருவாக்கப்பட்டது என அதன் வரலாறு இழிவாக உள்ளது.

2. தொண்டு நிறுவனங்களைப் பெறுத்தவரை போராடும் மக்களுக்கு ஆதரவாக காட்டிக் கொண்டாலும் பெண்களின் முக்கிய பிரச்சினையாக டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களில் முக்கிய குற்றவாளியான அரசை அம்பலப்படுத்துவதில்லை; போலீஸ் அதிகார வர்க்க ஊடகங்களை அம்பலப்படுத்துவதில்லை.

மாறாக, டாஸ்மாக்கை ஒழிப்பதைவிட மக்கள் குடிக்காமல் இருந்தால் சரியாகி விடும் என்றும், பெண்கள் மேல் ஏவப்படும் வன்கொடுமைகளுக்கு பெண்கள் உடை உடுத்துவது சரியில்லை என்றும் கூறி பாதிக்கப்பட்டோரின் மீதே குற்றத்தை திருப்பி விடுகின்றன.

தோழர் சினேகா உரை

தோழர் சினேகா உரை
தோழர் சினேகா உரை

மார்ச் 8 என்பது பெண்கள் கொண்டாட்டத்திற்கான தினமல்ல. மாறாக, ஏற்கனவே சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் ஆணாதிக்கச் சிந்தனைக்கும் இப்போது மக்களை சுரண்டும் மறுகாலனியாக்க கொள்கைகளுக்கும் நெருப்பு வைக்க சிந்திக்க வேண்டியதே மார்ச் 8 மகளிர் தினத்தில் ஆற்ற வேண்டிய கடமை.

பெண்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுத்து அவர்கள் மேம்பட இந்த முதலாளித்துவ அமைப்பு உதவியுள்ளதாக சில அறிவுதுறையினர் வாதிடுகின்றனர். ஆனால் நிலைமை வேறாக உள்ளது.  வீட்டிலும் சரி அலுவலகத்திலும் வேலைக்கு மிஞ்சிய வேலை. அலுவலகத்திற்கு செல்லும் முன்பே துணி துவைப்பது, பாத்திரம் விளக்குவது, சமையல் செய்வது என விடியும் முன்னே பெண் குழந்தைகளுக்கு வேலை துவங்கி விடுகிறது.

அலுவலகத்திலும் ஒரே வேலை செய்யும் ஆண்களுக்கு கூடுதல் சம்பளம் பெண்களுக்கு குறைவான சம்பளம் என்றுதான் இருக்கிறது. இப்படி வேலை சுரண்டலுக்காகத்தான் பெண்களை அதிக அளவில் முதலாளித்துவ நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கின்றனர். இதை மாற்ற முதலாளித்துவத்தை வீழ்த்தி ஒரு ஜனநாயக புரட்சியை நடத்துவதன் மூலம்தான் பெண்கள் விடுதலையை சாதிக்க முடியுமென்று அறைகூவல் விடுத்தார்.

தோழர் பாண்டி : பாடல்

தோழர் பாண்டி : பாடல்
தோழர் பாண்டி : பாடல்

தோழர் போஸ் : உரை

தோழர் போஸ் : உரை
தோழர் போஸ் : உரை

ஒத்தக்கடை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர் போஸ் பேசும் போது “உரிமைகள் மறுக்கப்படும் பெண்களுக்கு சம உரிமை கோரும் ஆர்ப்பாட்டமாக பெ.வி.மு நடத்துகிறது. குடும்பத்தில் தொடங்கி பள்ளி, கல்லுர்ரி, அலுவலகம் என அனைத்து பொது நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. இதைத் தடுக்க வேண்டிய அரசே போலீஸ், ராணுவம், நீதிமன்றம் ஆகியவற்றின் மூலம் பெண்கள் மேலான தாக்குதலை நடத்தி கொண்டிருக்கிறது. அத்தகைய அரசை தகர்த்தெறிவதற்காக போராடாமல் அதற்காக வேலை செய்யாமல் பெண் விடுதலை சாத்தியமாகாது” எனக் குறிப்பிட்டார்.

நாடகம் : பெ.வி.மு. குழுவினர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

டாஸ்மாக் ஆல் பாதிக்கப்படும் குடும்பத்தை மையமாக வைத்து பெ.வி.மு தோழர்கள் நடத்திய நாடகத்தின் இறுதியில், “டாஸ்மாக் கை நடத்தி நம் குடியை கெடுப்பதே இந்த அரசுதான். எனவே டாஸ்மாக்கை மூடச் சொல்லி அரசிடம் மனு கொடுப்பது முட்டாள்தனம். எனவே, நாமே அதை அடித்து நொறுக்கினால்தான் உண்டு” என்று முடிந்தது மிக எழுச்சிகரமாக இருந்தது.

தூரத்தில் இருந்து பார்த்துகொண்டிருந்தவர்கள் எல்லாம் அருகே கூட்டமாக வந்து பார்த்தும் வாகனங்களில் செல்வோர் நிறுத்திவிட்டு வந்தும் பார்த்தபோது நாடகத்தின் எழுச்சிகரமான உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது.

தோழர் வாஞ்சிநாதன்

டாஸ்மாக்கின் வக்கிரங்கள் எத்தனை குடும்பங்களை பாதித்தாலும் அதற்கெதிராக எத்தனை போராட்டங்களை நடத்தினாலும் டாஸ்மாக் வருமானத்தை வைத்துதான் அரசாங்கத்தையே நடத்த முடியும் என்று திமிரோடு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது, அரசு.

நாங்கள் டாஸ்மாக்கை மூடினால் பக்கத்து மாநிலத்துக்காரன் வந்துவிடுவான் என்று அரசு கூறும் காரணம் எப்படி இருக்கிறது என்றால் நான் என் மனைவி பக்கத்திலேயே இல்லாவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன் வந்து விடுவான் என்று கூறுவது போல் கேவலமாக‌ உள்ளது. ஆனால் இதுவெல்லாம் பித்தலாட்டம். டாஸ்மாக்கை நடத்துவதே இந்த அரசுதான், அதுவே அதை மூடாது எனவே இப்போது தோழர்கள் நாடகத்தில் கூறியது போல டாஸ்மாக்கை நாமே அடித்து நொறுக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும்.

சர்வதேச உழைக்கும் மகளிர் தின ஆர்ப்பாட்டம் - மதுரைமார்ச் 8-ல் மகளிர் தினத்தை உலகெங்கும் கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்த டாஸ்மாக்கால் பெண்கள் பாதிக்கப்படும் காரணத்தை எந்த ஊடகங்களும் கட்சிகளும் பேசுவதில்லை. நாங்கள்தான் இப்படி தெருவெங்கும் கூட்டம் போட்டு மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கிறோம்.

மூன்று வருடத்திற்கு முன்பு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்கின்ற பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட நிகழ்வு பெரும் புயலைகிளப்பியது. இப்போது லண்டன் பி.பி.சி அந்த குற்றவாளிகளை பேட்டி எடுத்து ஒளிபரப்பியுள்ளது. இதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்து உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க போன்ற கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அப்படி என்னதான் அந்த பேட்டியில் உள்ளது என்றால், அதில் அந்தக் குற்றவாளிகள் நாங்கள் மாட்டிக் கொண்டவர்கள் அவ்வளவுதான். ஆனால் இந்தியாவில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் என அனைவருமே இப்படித்தான் உள்ளனர். வாய்ப்பு கிடைத்தால் பெண்களை வன்புணர்ச்சி செய்வதில் எந்த ஆணும் இந்தியாவில் சளைத்தவனல்ல என்று இந்திய ஆண்களின் உண்மை முகத்தை அப்படியே கூறியுள்ளான். உண்மையில் இந்திய ஆண்களின் மனநிலை பெரும்பாலும் அப்படித்தான் உள்ளது. பல சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேல் பாலியல் வன்புணர்வு வழக்கே நிலுவையில் உள்ளது. உண்மையில் இந்த கூட்டத்தின் நோக்கமே ஆண்களின் இந்த வக்கிர புத்தியை சுட்டிகாட்டுவதுதான். .

இன்னொரு புறம் பெண் தனக்கான துணையை தேடும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. மூன்று வருடத்திற்குமுன்பு தர்மபுரி நாயக்கன் கொட்டாயில் பாமாகா வின் வன்னிய சாதி வெறியால் திவ்யா இளவரசன் ஜோடி பிரிக்கப்பட்டது. அதே போல் தற்போது உசிலம்பட்டியில் தேவர் சாதி வெறியால் விமலாதேவி படுகொலை செய்யப்பட்டது என்று தொடர்ந்து நடந்துகொண்டுதானிருக்கின்றது. இரண்டிலும் போலிசும் நீதிதுறையும், அரசும் எப்படிநடந்து கொண்டது. வெளிப்படையாக சாதி வெறியர்களுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொண்டது.

போலீசை பற்றி நமக்கு நிறையவே தெரியும் ஆனால் நீதி துறையும் நீதிபதிகளும் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

நீதிபதிகள் மேல் சக பெண் நீதிபதிகளே கொடுத்த பாலியல் தாக்குதல் வழக்குகள் இன்னும் விசாரிக்காமல் நிலுவையில் இருக்கின்றன. இப்படித்தான் அதிகார வர்க்கமும் இருக்கின்றது.

காதலை மறுத்தால் பெண்கள் மேல் ஆசிட் வீசுகிறார்கள், காதலித்தால் குடும்பத்தாலேயே படுகொலை செய்யப்படுகிறார்கள். இதைத்தான் பெண்களுக்கு முடிவெடுக்கவே உரிமை இல்லாத சமூகம் என்கிறோம். இதைத்  தடுக்க வேண்டிய அரசும் அதிகார வர்க்கமும் சீரழிந்த போயுள்ளன.

அதனால், இந்த சமூக கட்டமைப்புக்குளாகவே பெண்களின் விடுதலையை பெற்றுவிடலாம் என்று நினைத்தால் அது முட்டாள்தனம். சோசலிச அடிப்படையிலான ஒரு புதிய ஜனநாயக அமைப்பில் தான் சமூக அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சமூக விடுதலை சாத்தியம்.

அப்படிப்பட்ட ஒரு ஜனநாயக சமூகத்தில் தான் பெண்களும் விடுதலையும் சாத்தியம். எனவே சீரழிந்து சீழ்பிடித்து போயுள்ள  இந்த சமூக‌த்தை மாற்றி ஒரு புதிய சமூகத்தை நிறுவும் வகையில் புரட்சிகர இயக்கமான பெண்கள் விடுதலை முன்னணியில் பெண்கள் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

உழைக்கும் மக்கள் பெருவாரியாக வாழக்கூடிய ஒத்தக்கடை பகுதியில் பெ.வி.மு வின் நாடகமும் ஆர்ப்பாட்ட உரையும் அம்மக்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் அமைப்பை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பகூடிய வகையில் நிகழ்ச்சி அமைந்தது என்றால் மிகையாகாது.

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி,
மதுரை

இன்டெக்ரா நிர்வாகத்தை பணிய வைத்த தொழிலாளர்கள் !

3

பணிந்தது, இன்டெக்ரா நிர்வாகம்; வென்றது, தொழிலாளர் போராட்டம்!

ன்டெக்ரா தொழிலாளர்களது உள்ளிருப்பு போராட்டத்தைப் பற்றி விவரித்து,  உறுதிமிக்க தொழிலாளி வர்க்கத்தின் முன்பாக எந்த சக்தியும் வென்றதாக வரலாறு இல்லை என்று எழுதியிருந்தோம். அது உண்மைதான் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்து காட்டியுள்ளனர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இன்டெக்ரா கிளை தொழிலாளர்கள்.

இன்டெக்ரா உள்ளிருப்பு போராட்டம்
கோப்புப் படம்

5-ம் தேதி இரவு முதல் கேண்டீனை மூடி தொழிலாளர்களை பட்டினியில் தள்ளி வழிக்கு கொண்டுவந்து விடலாமென மனப்பால் குடித்துக் கொண்டிருந்தது நிர்வாகம். குடித்த மனப்பாலில் பல்லி விழுந்த கதையாக நடந்தன மூன்று சம்பவங்கள்.

  1. உணவு தரவில்லை என்பதால் தொடர்ந்து போராடி வரும் தொழிலாளர்கள் மயக்கமடைந்து வருகிறார்கள். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், சட்டவிரோதமாக நடந்து கொள்ளும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தொழிற்சாலைகள் ஆய்வாளருக்கு சங்கத்தின் சார்பில் புகார் கொடுத்ததன் அடிப்படையில், அவர் வந்து ஆலையை ஆய்வு செய்தார். நிர்வாகத்தை சட்டவிரோத நடவடிக்கைகளை கைவிட அறிவுறுத்திய போதும் நிர்வாகம் ஏற்காததால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி நிர்வாகத்துக்கு காரணம் கோரும் அறிவிப்பு நோட்டீஸ் அனுப்புவதாக கூறிச்சென்றார்.
  2. 6-ம் தேதி மதிய உணவு ஏற்பாடு செய்வதில் காலதாமதமானதால் மாலை 4 மணியளவில், ஆலைவாயிலில் முழக்கமிட்டுக்கொண்டிருந்தனர் ,தொழிலாளர்கள். அப்போது அந்த வழியாக வேனில் சென்ற தோட்ட வேலை செய்யும் பெண் தொழிலாளிகள் சிலர் வேனை நிறுத்தி அருகில் வந்து “சாப்டீங்களா தம்பி? பாவம் புள்ளங்க… ரெண்டு நாளா சோறு தண்ணி இல்லாம போராடுதுங்க, இவனுங்க (அதிகாரிகள்) கொட்டி கொட்டி தின்னுறானுங்களே, பாவி மவனுங்க” என்று ஆலை நிர்வாகத்தை ஏசினார்கள். அதோடு நில்லாமல் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலங்களை எடுத்துக்கொடுத்து “நல்லா சாப்டுங்க… தம்பிங்களா, சாப்டுட்டு போராடுங்க” என்று வாயார வாழ்த்தி விட்டு போனார்கள். தொழிலாளர்கள் பட்டினியாக போராடிக்கொண்டிருக்கும் போது திருட்டுத்தனமாக உணவை உள்ளே கொண்டு சென்று வயிறு முட்டத் தின்று விட்டு சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்த ஆலை நிர்வாகத்தின் தலையில் இடியாய் விழுந்தது, ஏனைய தொழிலாளர்களுடைய ஆதரவு.
  3. “சங்கத்தை அங்கீகரிக்க மாட்டேன், கொடி நடக்கூடாது, தோரணம் கட்டக் கூடாது, 100 மீட்டர் தாண்டி தான் நிற்க வேண்டும்” என்றெல்லாம் பாச்சா காட்டும் முதலாளிகளின் முகத்திலறைவதைப் போல ஆலைவாயிலில் கட்டப்பட்டிருந்தது பு.ஜ.தொ.மு கொடி. நூற்றுக்கணக்கான வாகனங்களும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கடந்து செல்லும் இடமாகவும் அமைந்திருந்ததினால், அனைவரும் செங்கொடியையும், போராட்டத்தையும் பார்த்து விசாரித்த வண்ணம் சென்று கொண்டிருந்தனர். வெளிநாட்டிலிருந்து வேறு ஒரு ஆலைக்கு சிறப்புப் பணிக்காக வந்திருந்த நேபாளத் தொழிலாளி ஒருவர் செங்கொடியைக் கண்டதும் தன்னெழுச்சியாக முஷ்டியை உயர்த்தி வீரவணக்கம் செய்தார். அதைக் கண்டதும் அங்கிருந்த தோழர்களுக்கும், மற்ற தொழிலாளிகளுக்கும் உற்சாகம் பெருக்கெடுத்தது. மேலும் உத்வேகம் பெற்றனர். அமந்திருந்த போலிசும் அதிர்ந்துதான் போனது.

எல்லா சம்பவங்களையும் ஆலை செக்யூரிட்டி மூலமாகவும், ஆலைவாயிலில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா வாயிலாகவும் அறிந்து கொண்ட நிர்வாகத்துக்கு ஆத்திரம் இன்னும் தலைக்கேறியது. இருந்தாலும் தற்போதிருக்கும் சூழலில் ஆத்திரத்தை வெளிக்காட்ட முடியுமா?

சிறிது நேரத்துக்குப் பிறகு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. நிர்வாகம் தொழிலாளர் ஆணையரை நேரடியாக சந்தித்து பேசியுள்ளதாகவும், போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும், கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் பேசிக்கொள்ளலாம் என்றும் உதவி ஆணையர் கூறினார்.

“நிர்வாகம் கோரியிருப்பது ஏற்கத்தக்கது தான். ஆனால் நிர்வாகம் அதை அப்படியே எழுதித் தருவதாக வாக்குறுதி கொடுப்பதாகக் கூறினால் தொழிலாளர்களிடம் நிர்வாகம் கூறியதை விளக்கி ஒப்புதல் பெற்ற பின்பு வருகிறோம்” என நமது தரப்பில் கூறப்பட்டது.

நிர்வாகத்திடம் பேசிவிட்டு வருவதாக கூறினார் தொ.உ.ஆணையர். நாமும் தொழிலாளர்களிடம் பேசிவிட்டு வருவதாகக் கூறினோம்.

தொழிலாளர்களிடம் நிலைமையை விளக்கிய போது, “நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக தருவதாக இருந்தால் உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிடலாம்” என்று கூறினர்.

நமது நிபந்தனைகளின் அடிப்படையில் மாலை 6.20 மணிக்கு பேச்சுவார்த்தை துவங்கியது. தொழிலாளிகள் சார்பில் புஜதொமு இன்டெக்ரா கிளைச் செயலாளர் தோழர் தாமோதரன், பொருளாளர் தோழர் சதீஷ் ஆகியோரும், நிர்வாகத்தின் சார்பில் அதன் நிர்வாக இயக்குநரும் தொ.உ.ஆணையர் (பொறுப்பு) முன்னிலையில் கையொப்பமிட்டனர்.

தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாதென்றும், உள்ளிருப்புப் போராட்டத்துக்கு முந்தைய நிலைமையே நீடிக்க வேண்டுமெனவும் தொழிலாளர் உதவி ஆய்வாளர் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினார். நிலுவையிலுள்ள கோரிக்கைகளை எதிர்வரும் 20-ம் தேதி பேசுவதென முடிவு செய்யப்பட்டது.

தொ.உ.ஆணையர் அலுவலகத்திலிருந்து ஆலைவாயிலுக்கு வந்தடைந்த போது இரவு 8 மணியை தொட்டிருந்தது. இரண்டு நாட்களாக போதிய உணவும், உறக்கமும் இல்லாமல் இருந்த போதிலும் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் குழுமி இருந்தனர், தொழிலாளர்கள்.

தொழிலாளர்களின் உறுதிமிக்க போராட்டத்தின் காரணமாக நாம் தற்காலிக வெற்றியடைந்ததை அறிவித்தும், தொழிற்சங்க அமைப்புகளையே அனுமதிக்காத திருப்பெரும்புதூர் வட்டார தொழிற்பேட்டைப் பகுதியில் தொழிற்சங்கத்தின் தலைமையில் இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருப்பது நம்பிக்கையை ஊட்டியிருப்பதாகவும், இதற்கு காரணமான இண்டெக்ரா தொழிலாளர்களை வாழ்த்துவதாகவும் பேசினார் பு.ஜ.தொ.மு.வின் மாநிலப் பொருளாளர் விஜயகுமார்.

அன்றிரவே உற்பத்தியை தொடங்க வேண்டுமென நிர்வாகம் கேட்டுக்கொண்டதை தொழிலாளர்கள் மத்தியில் விளக்கி அவர்களும் சம்மதம் தெரிவித்ததன் பேரில் 7-ம் தேதி இரவு 9 மணி முதல் உள்ளிருப்புப் போராட்டம் கைவிடப்பட்டு தொழிலாளிகள் பணிக்குத் திரும்பினர்.

இதே தொ.உ.ஆணையர் அலுவலகத்தில் தென்கொரிய நிறுவனமான GSH-ல் தொழிலாளர்கள் தொழிற்தாவா எழுப்பியிருந்தனர். தாவா நிலுவையில் இருக்கும் போதே தொழிலாளிகளை பணியிலிருந்து பணி இடைநிறுத்தம் செய்தும் பணிநீக்கம் செய்தும் தொழிலாளர் துறையை அவமதித்து வருகிறது GSH நிர்வாகம்.

இன்டெக்ரா ஆலைக்கு அருகிலேயே உள்ள மற்றொரு கொரிய கம்பெனியான ”டே சங்” -ல் போனசுக்காக போராடிய தொழிலாளர்களை ரவுடிகளை வைத்து அடித்து போராட்டத்தை ஒடுக்கியுள்ளது ஆலை நிர்வாகம். அடக்குமுறைகளை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

உச்சநீதிமன்ற உத்தரவுகளையே தன் கழிப்பறை காகிதமாக பயன்படுத்தி வரும் முதலாளிகள் தொழிலாளிகளின் போராட்டங்களை ஒடுக்குவதிலேயே குறியாய் இருந்து வருகின்றனர். அவை அத்தனையையும் மீறி தொழிலாளர்கள் நடத்துகின்ற உறுதிமிக்க போராட்டத்தினாலேயே நிர்வாகத்தை பணியவைக்கமுடிகிறது.

இன்டெக்ராவின் நிர்வாக இயக்குநர் சொக்கலிங்கம், தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து நடக்கும் சொக்கத்தங்கமா? தற்போது பின்வாங்கி தொழிலாளர்களை மிதிக்க நினைத்து அழியப்போகும் வெற்று பிம்பமா என காலம் தான் பதில் சொல்லும்.

முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டி, ஒரு உன்னதமான சமுதாயத்தை நோக்கிச் செல்லும் வகையில் வீரியமிக்க போராட்டங்களை நடத்த தொழிலாளி வர்க்கத்தை பயிற்றுவித்து வருகிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் உங்களை இணைத்துக் கொள்வீர். தொழிலாளி வர்க்க விடுதலைக்காக போராடுவீர்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டக் குழு

பயந்து பயந்து வாழ்கிறோம் – மகளிர் தினம் நேரடி ரிப்போர்ட்

0

மார்ச் 8 சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை பெண்கள் எப்படி பார்க்கிறார்கள்? கேள்விகளை சுமந்து கொண்டு கடற்கரைச் சாலையில் உள்ள சென்னை பல்கலைக் கழக வளாகத்தை அடைந்தோம்.

“நான் உண்மையா பேசணுமா? அல்லது சமூகம் ஏத்துக்கற மாதிரி பேசணுமா”

“வெளிப்படையாவே சொல்லுங்க”

“சரி சொல்றேன். இவங்க ரெண்டு பேரும் என் கூட வேலை செய்றவங்க”. படிப்பதற்கான மேசையில் உடன் உட்கார்ந்திருந்த இரண்டு இளைஞர்களை சுட்டிக் காட்டுகிறார்.

“நான் இவங்கள கூட்டிகிட்டு போய் எங்க வீட்டில இருந்து சேர்ந்து படிக்க முடியுமா? வீட்ல மாமியார் விடுவாங்களா? பக்கத்து வீட்டுக்காரங்க என்ன சொல்வாங்க? இதையெல்லாம் யோசிச்சுதான் நடந்துக்கணும். இதுதான் பெண்களோட நிலைமை”

அவர் சிந்துஜா. சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் எதிரில் போடப்பட்டிருந்த கூடாரத்தில் 2 இளைஞர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

“நான் சொந்தமா தொழில் செய்றேன். இப்ப சட்டக் கல்வி படிக்கிறேன். எனக்கே இந்த நிலைமைன்னா மத்த பொண்ணுங்கள பத்தி யோசிச்சிக்கோங்க”. “பேரு சொல்றேன், ஃபோட்டோ எல்லாம் வேண்டாம், பிளீஸ்” என்று தனது சகாக்களுடன் படிப்பைத் தொடர்ந்தார்.

சென்னை பல்கலைக் கழகம்
“நான் உண்மையா பேசணுமா? அல்லது சமூகம் ஏத்துக்கற மாதிரி பேசணுமா”

“முன்ன விட பல வகையில முன்னேறியிருக்கோம். எங்க அம்மா காலத்தில எல்லாம், படிக்கக் கூட விட மாட்டாங்களாம். இப்ப படிக்க வர முடியுது. இன்னைக்கு பாருங்க, லீவு நாளானாலும் வீட்ல சொல்லிட்டு வந்து இங்க உக்காந்து படிச்சிட்டு இருக்கோம். அடுத்த தலைமுறைல இன்னும் மாறலாம். ஆனா,  இருட்டுறதுக்கு முன்னால வீட்டுக்கு போயிடணும். சில ஏரியால எல்லாம் தனியா போகவே முடியாது. நம்மதான் பத்திரமா இருந்துக்கணும்” என்று பெண்களின் பாதுகாப்பற்ற நிலையை இரு மாணவிகள் வெளிப்படுத்தினர்.

“அதைப் பத்தி எல்லாம் சொல்லத் தெரியாது.” “அய்யய்யோ ஃபோட்டோ எல்லாம் வேணாங்க. பேரு சொல்ல வேணாம்”, “இது பத்தி என்ன சொல்றதுன்னு தெரியலையே” “ஏதாவது சொல்லி சீக்கிரம் அனுப்புடீ” என்று தப்பித்தல்களுமாக பல உரையாடல்களுக்கு மத்தியில் சில எதிர்ப்புக் குரல்களும் வெளிப்பட்டன.

சென்னை பல்கலைக் கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் ரேவதி, “சமீப காலமாக அதிகரித்திருக்கும் வல்லுறவுகளை எல்லா பெண்களும் சேர்ந்து எதிர்க்க வேண்டும். நமக்கு என்ன வந்தது என்று ஒதுங்கக் கூடாது. காதலித்தாள் என்பதற்காக தம் மகளையே அப்பாக்கள் கொலை செய்வது சகிக்க முடியாத காட்டுமிராண்டித்தனம். இப்படி எல்லாம் நடக்கறதுக்கு ஒட்டுமொத்த சமூகத்தைத்தான் குற்றம் சொல்லணும்.” என்கிறார்.

“இப்பல்லாம் நிறைய மாறியிருக்குதான், அதுக்காக சாதி மாறில்லாம் கல்யாணம் செய்ய முடியுமா. எப்படி பொண்ண வளர்த்திருக்காங்கன்னு திட்டுவாங்க. சொந்தக்காரங்க யாரும் நம்ம வீட்டுக்கு வர மாட்டாங்க” – என்றார் கணவருடன் உட்கார்ந்திருந்த மீனாட்சி.

சென்னை பல்கலை மாணவியர்
இத எப்படி சரி பண்ணலாம்னு ஈசியா கேட்டுடலாம். பதில் அவ்வளவு ஈசியா பதில் சொல்லிட முடியுமா

பி.பி.ஏ படிக்கும் ஆனந்தி – “ஆண்களோட நடத்தைய வெறுக்கறேன். ‘சுதந்திரமா’ பொது இடங்கள்ல எல்லாம் தப்பா நடந்துக்கறாங்க. அவங்க வீட்டில நடக்கறது வேறயா இருக்கும். வெளிய வரும்போது, ‘நம்ம இஷ்டப்படி நடக்கலாம். யார் பார்க்கப் போறாங்க’ன்னு நடந்துக்கறாங்க. இத எப்படி சரி பண்ணலாம்னு ஈசியா கேட்டுடலாம். பதில் அவ்வளவு ஈசியா பதில் சொல்லிட முடியுமா.”

எம்.சி.ஏ படிக்கும் காயத்ரி, “குழந்தைகள் உழைப்பு, பெண்கள் மீதான வன்முறைதான் நான் வெறுக்கற விஷயம். இதற்காக போலீஸ் அதிக பாதுகாப்பு கொடுக்கணும். பெண் போலீஸ் அதிகப்படுத்தணும். போலீசும் குற்றவாளியா இருக்கறது உண்மைதான். பெண்கள் வெளிய போற இடத்தில தனிப்பட்ட விபரங்கள யாருக்கும் சொல்லக் கூடாது. முன்பின் தெரியாதவங்கதான் நிறைய பாதிக்கிறாங்க. என்ன பண்றதுன்னே தெரியல..” என்று கையறு நிலையை வெளிப்படுத்தினார்.

எம்.காம் இறுதியாண்டு சரவணபிரியா, “டெல்லி பாலியல் வன்முறையால பசங்களை பிடிக்காமலே போகுது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும். எல்லார் கூடவும் போலீஸ் போட முடியாது. பசங்க பொண்ணுங்கள பார்க்கிற பார்வை மாறணும். அவங்கள தாக்கறதுக்கான உரிமை பெண்களுக்கு வேணும்.

சென்னை பல்கலை மாணவியர்
நாங்களும் கத்தி வைச்சிருக்கோம். எங்களுக்கு எதாவது பிரச்சனை வந்திச்சின்னா நாங்க தாக்குவோம்.

தப்பா நினைச்சுக்கக் கூடாது, நாங்களும் கத்தி வைச்சிருக்கோம். எங்களுக்கு எதாவது பிரச்சனை வந்திச்சின்னா நாங்க தாக்குவோம். அவங்களும் போய் வெளில சொல்ல முடியாதுல்ல.

தொலைக்காட்சில ஆபாச பாடல்களை எல்லாம் தடை பண்ணணும். சினிமால ஆபாசமா வர்றத தடுக்கணும். வெளிநாட்டு கலாச்சாரம் உள்ள வர்றதாலதான் பிரச்சனை. டெல்லி சம்பவத்தில கூட இன்னும் தண்டனை கொடுக்கல. காதல் பண்றதாலேயே மகளை கொன்ன அப்பனுங்கள கொல்லணும். இதுக்கெல்லாம் உடனுக்குடன் தண்டனை வழங்கறதுதான் தீர்வு” என்று தனக்கு தெரிந்த தீர்வை முன்வைத்தார்.

பி.பி.ஏ படிக்கும் டெய்சி, “குடிக்கிறவங்க மேலதான் எனக்கு வெறுப்பு. பொண்ணுங்கள ஒரு மாதிரி பார்க்கிறது அடுத்த விஷயம். பசங்கள விட வயசானவங்க மோசமா இருக்காங்க.” என்றார்.

அரபி ஆசிரியர்
பெண்கள் மீதே பொறுப்பு

“ஒரு பெண் என்பவள் தாய் அந்தஸ்தில் இருப்பவள், அதை ஆண்கள் உணர வேண்டும். பெண்கள் ஒழுங்கான ஆடை அணிய வேண்டும். பெண்கள் தேவையில்லாம உடலை காண்பிக்கக் கூடாது. ஆண்கள் பெண்கள் மீது மரியாதையான பார்வை வைக்க பழகணும்.” என்று பெண்கள் மீதே பொறுப்பை சுமத்தினார் குல்ஃபினா பர்வீன் என்ற அரபி ஆசிரியர்.

கோவையைச் சேர்ந்த பொறியியல் பட்டம் படித்த தீபிகா, “பாலியல் தொந்தரவுதான் பிரச்சனையா இருக்கு. அந்த பிரச்சனை இல்லாம இருக்கணும். நம்ப வீட்டில எப்படி நடந்துக்கறோமோ அப்படித்தான் பொது இடத்திலயும் நடந்துக்கணும்னு ஆண்கள் நினைச்சுக்கணும்.” என்று சொன்னார்.

கோவை பொறியியல் மாணவி
நம்ப வீட்டில எப்படி நடந்துக்கறோமோ அப்படித்தான் பொது இடத்திலயும் நடந்துக்கணும்னு ஆண்கள் நினைச்சுக்கணும்

இப்படி படித்த மாணவிகள் தமது பாதுகாப்பின்மையையும், தமக்கு உரிமைகள் மறுக்கப்படுவதையும் எதிர்த்து பேசவும், நொந்து கொள்ளவும் செய்ய அதே கடற்கரை சாலையில் ஜூஸ் விற்றுக் கொண்டிருக்கும் அம்மா, “பொண்ணு நினைச்சா என்ன வேணாலும் செய்யலாம். காலையில 11 மணிக்கு கடை திறந்தா சாயங்காலம் 7 மணி வரை கடை போட்டிருப்பேன். நான் என் கொழந்தைகளுக்காகத்தான் எல்லாம் பாடுபடறேன்.” என்கிறார்.

பழச்சாறு கடை நட்த்துபவர்
கொழந்தைகளுக்காகத்தான் எல்லாம் பாடுபடறேன்

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் சுங்குவார்ச்சத்திரம், திருப்பந்தியூர் கிராமம். மல்லிகை, ரோஜா, குறிஞ்சி, செந்தாமரை, செம்பருத்தி, கஸ்தூரி, செண்பகம், மனோரஞ்சிதம், தாழாம்பூ என்று 17 மகளிர் சுய உதவி குழுக்களிலிருந்து செல்வி, வாசுகி, துளசி, லட்சுமி, சாந்தா, தேவகி, முனியம்மா, முத்து, பவானி, அமுதா, சுந்தரி ஆகியோர் ஒரு கூட்டத்துக்கு வந்து விட்டு ஊருக்குத் திரும்புகிறார்கள்.

சுயஉதவிக் குழு பெண்கள்
சுய உதவிக் குழு அரசியல்

“ஆம்பளைங்க தண்ணி போடறதுதான் பெரிய பிரச்சனையா இருக்கு. அத நிறுத்தச் சொல்லுங்க சார். நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். குடும்பத்தில நிறைய சண்டை.

எங்க ஊர்ல சாராயம் காய்ச்சிறதை எடுத்தாந்து கோயிலாண்ட போட்டு போலீசுக்கு தகவல் கொடுத்துட்டு காத்திருந்தோம். காவலுக்கு இருந்தவங்க எதுக்கு இந்த கருமம்ணு சாராயத்தை தரையில் கொட்டிட்டாங்க. போலீஸ்காரன் வந்து, எங்க ஆதாரம்ணுன்னு எங்களையே கேட்கறான்.

எந்த ஒரு பிரச்சனைக்கு நாங்க பேச வந்தாலும், நீங்க பொம்பளைங்க ஏன் பேசறீங்கன்னு கேட்கறாங்க. கான்வென்டுக்கு 4 வயசு கொழந்தைய அனுப்பறோம். டிரைவரே குழந்தைய சீரழிச்சிட்டான்னு நியூஸ் வருது. பொம்பள பசங்க பயந்துகிட்டுதான் வெளிய போறாங்க”

“இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையே மகளிர் தினத்தன்று என்ன செய்வீர்கள்” என்று கேட்டோம்.

“மகளிர் தினத்த ஒட்டி சுத்துப் புறத்த சுத்தமா வச்சிக்கிறது எப்படி, கேன்சர் வராம பார்த்துக்கறது எப்படின்னு இன்னைக்கு கிளாஸ் எடுத்தாங்க. சாந்தோம் சர்ச்ல, கான்சர் பத்தி ஒரு டாக்டர் பேசினாங்க. சுத்துச் சூழல பத்தி பேசினாங்க, மரம் நடுறத பத்தி பேசினாங்க.

ஒவ்வொரு குழுவில இருந்தும் 2 பேரு வந்திருக்கோம். நாளைக்குதான் மகளிர் தினம். சாக்லேட் கொடுத்து இங்க நடந்ததை எல்லாம் சொல்ல மீட்டிங் போடுவோம். நாளைக்கு மீட்டிங் போட்டு சொல்லுவோம். கான்சர் விழிப்புணர்வு பத்தி பேசுவோம். செயல் விளக்கமா போட்டுக் காண்பிப்போம்.” என்று பெண்களை பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்பும் சுயஉதவிக் குழு அரசியலையும் புரிய வைத்தார்.

மெரீனா கடற்கரையில் துப்புரவு பணி செய்யும் தொழிலாளிகளிடம் பேசினோம்.
sanitary-workers-3

“இங்கயும் வேல செய்யணும். காலையில எழுந்தவுடன் ஒரு ஆபிஸ் படி பெருக்கணும். ஒரு ஆபிஸ் பெருக்கி துடைக்கணும். நம்ம வாழ்க்க முடிஞ்சி போச்சி. படிக்கிற குழந்தை வாழ்க்கை வீணா போகக் கூடாதுல்ல. இங்க 7 மணி வரைக்கும் பார்ப்போம். இந்த வேலை இல்லைன்ன எங்க கதி அவ்வளவுதான். எங்க கையில காசு இருக்கும் போது ஒருத்தருக்கொருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப்போம்.

எக்ஸ்போர்ட்டுக்கு போகணும்னா காலைல 10 மணிக்கு போய் சாயங்காலம் வரணும். அந்த சம்பளமும் பத்தாது. இங்க காலையில 6 மணிலருந்து 2 மணி அல்லது 2 மணிலருந்து 10 மணின்னு இருக்குது. காலையில எந்திச்சி சாப்பாடு செய்றோம், வீட்டு வேல செய்றோம், 2 மணிக்கு கிளம்பி வர்றோம்.

ஏண்டா பொண்ணா பொறந்தோம்னு யோசிக்காத நாளே கிடையாது. இதை யோசிச்சி பி.பி அதிகமாகி கீழ மயக்கமாகியே விழுந்திருக்கேன்.

பொண்ணா இருந்து சொல்ல முடியாத கஷ்டம்லாம் இருக்கு. பாலியல் ரீதியான தொந்தரவு இருக்கும். இதே மாதிரி வேற இடத்தில வேல செய்றப்போ தொந்தரவு கொடுத்தாங்க. அதான் இந்த வேலைக்கு வந்தேன். எங்க போனாலும் பொம்பளைங்களுக்கு தொந்தரவு.
sanitary-workers-1இன்னைக்கு ஆபிஸ்ல பெருக்கும்போது கூட நடந்தது. நாலாவது மாடியில இருந்து பெருக்கிகிட்டே வர்றேன், கட கடன்னு படியேறி வர்றாங்க. அப்படியே போயிட்டு, அடுத்த மாடிக்கு போனா அங்கயும் வர்றாங்க. உயிரையும் மானத்தையும் கையில பிடிச்சிகிட்டு வேல செய்றோம்.

ஒரு தடவை ஸ்டீல் பட்டறைல வேல செய்யும் போது வெள்ளிக்கிழமை சம்பளம் கொடுக்க ராத்திரி 10 மணி ஆயிடிச்சி. பஸ்சுக்கு வெயிட் பண்ணிகிட்டு இருக்கும் போது 4 பேரு வந்தாங்க, தகாத முறையில பேசினாங்க. ஆட்டோ கூப்பிட்டு ஏறுங்கறாங்க. ஆட்டோக்காரண்ணன் பேசிகிட்டே, என்கிட்ட “போயிடு”ன்னு கண்ண காட்டினாரு. நான் போறப்ப, அந்த ஆளுங்க பின்னாலயே வந்தாங்க. இரண்டே முடிவு எடுத்தேன். போலீஸ் காரன் யாராவது எதிர்ல வந்தா சொல்லலாம், இல்ல பிரிட்ஜ்ல இருந்து கீழே விழுந்து செத்துடுவோம்னு.

அப்போ வந்த ஒரு அம்மாகிட்ட பேசி, “என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிங்க”ன்னு கேட்டு அவங்க என் தோளில கை போட்டு நடக்க ஆரம்பிச்சாங்க. அவங்க சொல்லி லாஸ்ட் பஸ்ல ஒரு அண்ணன் கூட வீட்டுக்கு வந்து சேர்த்து விட்டாங்க. பொம்பளையா பொறந்தா எல்லா துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கு.

இதனாலேயே ஒரு இடத்தில வேலைய எங்களால செய்ய முடியல. எங்கனாவது பாதுகாப்பு கிடைக்காதான்னு அங்கங்க இடத்த மாத்திக்கிறோம். பயந்து பயந்து வாழறோம். எத்தனையோ தடவை சாவறதுக்கு முயற்சி பண்ணி, குழந்தைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அரசாங்கத்த டாஸ்மாக் கடைய மூடச் சொல்லு, நான் குடிக்கிறத நிறுத்தறேங்கறாங்க ஆம்பளைங்க. 7,000 ரூவா சம்பளம் வாங்கிட்டு வீட்டுக்கு 2,000 தரவா, 3,000 தரவான்னு யோசிக்கிறாங்க. மாசம் முழுக்க கடன் வாங்கி குடிச்சிர்றாங்க, சம்பளம் வாங்கினதும் அதை எல்லாம் கொடுத்துட்டு வீட்டுக்கு வெறுங்கையோட வர்றாங்க.

கொழந்தைங்கள எப்படி படிக்க வைக்கிறது சொல்லு. சமைக்கிறதுக்கு 300 ரூவா ஆகுது. நாங்கதான் வீட்லயும் வேல பார்த்துட்டு, வெளியிலயும் சொமக்கறோம். இந்த டாஸ்மாக்க மூடுனா பல குடும்பங்க பொழைக்கும் சார். அதைச் செய்யணும் சார். இருக்கிற கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கணும்ல.

எங்க வீட்டுக்காரர் வேலைக்கு போறதில்ல. நான்தான் வேலைக்குப் போய் குடும்பத்த பார்த்துக்கணும். என் பையன் படிக்கிறான். குடும்ப கஷ்டத்த பார்த்து அவனும் வேலைக்கு போறான்.

வீட்டுக்காரரு குடிக்கு காசு கொடுத்தாலும், கொடுக்காட்டாலும் குடிப்பாரு. குடிக்கிறதுக்கு காசு வேண்டும். சாப்பாட்டுக்கு காசு இல்லாட்டாலும் குடி தினமும் வேண்டும். எங்கனா மூட்டை தூக்கப் போனா அந்தக் காச வீட்டில கொடுக்க மாட்டாரு. குடிச்சிட்டு சாப்பாட்டுக்கு வந்து சண்ட போடுவாரு. குடிக்கிறதாலதான பிரச்சனை.

நாங்க என்ன பண்றது. உயிரைத்தான் விடணும். கெவர்ன்மென்ட்தான் வைன் ஷாப்பை நடத்துறாங்க. குடி வருமானத்திலதான் இலவசம்னு சொல்றாங்க. எங்களுக்கு அப்படி என்ன இலவசமா தர்றாங்கன்னு எங்களுக்கு தெரியல. நாங்க எல்லாத்துக்கும் வரி கட்றோம்ல, அதெல்லாம் எங்க போகுது. அவங்களுக்குத்தான் அவங்க காசு எல்லாம் கேக்கறாங்க. எல்லா சொத்தும் அவங்க பேர்ல இருக்குது.

குடிய ஒழிக்க ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணியாச்சு. ஒழிக்கணும். சின்ன பசங்க குடிக்குதுங்க. மொதல்ல இந்த டாஸ்மாக்க ஒழிச்சுக் கட்டணும் சார். உள்ள போய் நாலைஞ்சு பாட்டில ஒடைச்சாத்தான் இதை நிறுத்த முடியும்.”

பல்கலை மாணவிகளிடமிருந்து ஆரம்பித்த நேர்காணல் நகர சுத்தி தொழிலாளிகளின் வார்த்தைகளுடன் முடிவடைந்தது. மகளிர் தினத்தின் சேதி என்ன என்பதை சுருக்கிச் சொன்னால் குடி, பாலியல் வன்முறை, பயந்து வாழும் பெண்கள் எனலாம். என்ன செய்யலாம்?

வினவு செய்தியாளர்கள்

அவர்களுக்குத் தேவை கருணை அல்ல !

1

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு 9.3.2015 முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

“கர்ணகொடூரமாக நடந்துகொள்ளும் இந்த அரசிடம் கருணையை நாம் எதிர்பார்க்க முடியாது. இதை பார்வையற்ற மாணவர்கள் பிரச்சனையாக மட்டும் பார்த்து ஒரு இடத்தில் முடங்கிவிடக் கூடாது. இது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் பிரச்சனை. அனைத்து கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்களை இப்போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரட்ட வேண்டும். அப்போதுதான் குறைந்தபட்ச நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்” என்று எழுச்சியுடன் பேசினார்.

rsyf-backs-blind-students-struggle-5பார்வையற்ற இந்த மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்கள் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் என்று கோருகின்றனர். இதை செவிகொடுத்து கேட்க தயாரில்லாத போலீசோ அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நைச்சியமாக மிரட்டுகிறது.

பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகள் என்ன என்று கேட்போது அவர்கள் சொன்னது “புதிதாக ஒன்றும் கேட்கவில்லை சார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்ன கேட்டோமோ அதையேதான் இப்போது கேட்டு போராடுகிறோம்’’ என்றார்.

இந்த அரசால் செய்ய முடியாத அளவுக்கு அப்படி என்ன கேட்டுவிட்டார்கள்?

rsyf-backs-blind-students-struggle-1ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் தர வேண்டும் என்று கோருகிறார்கள். இதை செய்ய முடியாதா? செய்ய முடியாது என்பதல்ல செய்யக்கூடாது என்பதுதான் இந்த அரசின் நோக்கம்.

நீண்ட நாட்களாக ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. அவற்றை நிரப்பி வேலையற்ற படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையும், அதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வியும் கொடுக்கலாம். அப்படி செய்துவிட்டால் அரசுப்பள்ளி, கல்லூரிகள் தரமாகிவிடும், தனியார் பள்ளியை / கல்லூரியை நோக்கிச் செல்லும் மாணவர்கள் அரசுப் பள்ளி, கல்லூரியை நோக்கி திரும்பி விடுவார்கள். அப்புறம் தனியார் கல்வி முதலாளிகள் எப்படி கல்லாக் கட்ட முடியும். அவர்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே! இதை செய்யத் துணிவார்களா? அதனால்தான் தங்கள் எஜமானின் விசுவாசத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்குவதில் தப்பில்லை என்று பார்வையற்ற மாணவர்களின் வாழ்வை பறித்து வருகிறது இந்த அரசு.

  • ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
  • B.Ed பட்டம் பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தமிழ், ஆங்கிலம், வரலாறு போன்ற பாடங்களில் 550 பட்டதாரிகளை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்த வேண்டும்
  • முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தகுதியுடைய 200 பார்வையற்ற பட்டதாரிகளை உடனடியாக சிறப்பு தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும்.
  • உதவிப் பேராசியருக்கான தகுதித் தேர்வு (NET Or SET) முடித்து நீண்டகாலமாக காத்திருக்கும் தகுதி உடைய பார்வையற்ற 100 பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உடனடியாக சிறப்பு நேர்காணல் மூலம் நிரப்பப்பட வேண்டும்.
  • பார்வையற்றோருக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்பு தேர்வு ஒன்றினை நடத்துவதற்கு தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழக அரசு பார்வையற்றவர்களுக்கென கண்டறிந்துள்ள காலிப்பின்னடைவு பணியிடங்களை (9000 பணியிடங்கள்) உடனடியாக ஒரு சிறப்பு தேர்வின் மூலம் நிரப்ப வேண்டும்.
  • உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க தமிழக அரசு உடனடியாக குரூப் A மற்றும் B பிரிவு பணியிடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பணிவாய்ப்பு வழங்க ஆவண செய்ய வேண்டும்.
  • பார்வையற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படுகின்ற ஊர்தி பயணப்படியினை மத்திய அரசு வழங்குவது போல் ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
  • படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வேலையற்றோர் நிவாரண உதவித் தொகையினை ரூ.1000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
  • தற்போது பார்வையற்ற கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை இரட்டிப்பாக்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
  • 01.04.2003 க்கு பிறகு தமிழக அரசு பணியில் சேர்ந்த பார்வையற்ற அரசு ஊழியர்களுக்கும் சம பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கு அளித்து முழு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முழு ஓய்வூதியம் வழங்க ஆவன செய்தல் வேண்டும்.
  • பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுத வரும் எழுதுனர்களுக்கு ரூபாய் 300/- வழங்கி அரசாணை வெளியிட வேண்டும்.

rsyf-backs-blind-students-struggle-8பார்வையற்ற மாணவர்களின் மேற்கண்ட கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவற்றை இந்த அரசு தானாக நிறைவேற்றாது என்பதில் சந்தேகமே இல்லை.

கடந்த 2013-ம் ஆண்டு இதே போல் போராடியபோது அரசு அவர்களை நடந்திய விதம் மிகவும் கொடூரமானது. போராட்டத்தின் போது கைது செய்து சென்னைக்கு ஒதுக்குப் புறமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தன்னந்தனியாக விட்டு விட்டு வருவது என்பதை ஒவ்வொருமுறையும் செய்து மாணவர்களை உயிரோடு கொல்ல முயன்றது. அதில் பல நேரங்கள் இரவு நேரங்கள்.

அதுமட்டுமல்ல பார்வையற்ற மாணவிகளை போலீசு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கின. அரசின் இந்த அடக்குமுறைகளுக்கு பணியாத பார்வையற்ற மாணவர்கள் உறுதியாக போராடினார்கள். ஆனால் இறுதியில் அவர்கள் கண்ட பலன் வெறும் வாக்குறுதிகள்தான். இப்போதும் அதே வழிமுறைகளில் பார்வையற்ற மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு எத்தனிக்கும்.

நாம் என்ன செய்யப்போகிறோம். வேடிக்கை பார்ப்பது அவமானம். போராடும் பார்வையற்ற மாணவர்களுக்கு துணை நிற்க வேண்டியது கருணையல்ல, நமது கடமை.

தகவல்:

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை

உழைக்கும் மகளிர் தினம் – சர்வதேச கருத்துப் படங்கள்

2
எமிலியோ ஆக்ரா, வெனிசுவேலா
“ஒரு பெண், ஆண் வரைந்த ஓவியம் அல்ல. ஒரு பெண் என்பவள்… ஒரு பெண். என் மூன்று மகள்களுக்கும், ஐந்து பேத்திகளுக்கும் சமர்ப்பணம்” – எமிலியோ ஆக்ரா, வெனிசுவேலா
சாத் முர்தாதா, இராக்
“அப்பா, நீங்க ஏன் எந்த வேலையும் செய்யல” “ஏன்னா, நான் சிங்கம்” – சாத் முர்தாதா, இராக்
ஜோ மோர், அமெரிக்கா
அரபு வசந்தமும் பெண்கள் தினமும் – மதவாதிகள் பெண்களை பொந்துக்குள்ளே அடைத்து வைக்கிறார்கள். – ஜோ மோர், அமெரிக்கா
பெண்கள் தினம் - செர்ஜி டூனின், ரசியா
உழைக்கும் பெண்கள் தினம் – செர்ஜி டூனின், ரசியா
அதான் இக்லேசியஸ் டொலேடோ, கியூபா
உலகைப் படைக்கும் கரங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகம் – அதான் இக்லேசியஸ் டொலேடோ, கியூபா
செர்ஜி டூனின், ரசியா
சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் – செர்ஜி டூனின், ரசியா
எலெனா ஒஸ்பினா, கொலம்பியா
அனைவருக்கும் உரிமை வேண்டும் – எலெனா ஒஸ்பினா, கொலம்பியா

படங்கள் : நன்றி http://www.cartoonmovement.com

பொருளிலார்க்கு பிணையில்லை – நீதிமன்ற நாட்டாமைகளின் தீர்ப்பு !

1

“பொருளிலார்க்கு பிணையில்லை” – நீதிமன்ற நாட்டாமைகளின் தீர்ப்பு!

அழுகி நாறும் நீதிமன்றத்தைப் பற்றி பு.மா.இ.மு தோழர்களின் அனுபவம் – போராட்டத் தொகுப்பு வீடியோ மற்றும் புகைப்படங்களுடன்

பிப்ரவரி 15-ம் தேதி அழிவிடைதாங்கியில் டாஸ்மாக் கடை நொறுங்கியது. அப்போராட்டத்தில் முன் நின்று வழி காட்டிய 4 பெண் தோழர்களையும் 5 ஆண் தோழர்களையும் மற்றும் குத்தனூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி அம்மாவையும் போலீசு கைது செய்து அன்று இரவே வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தது. அன்று சிறைக்குச் சென்ற தோழர்களில் சாந்தி அம்மா மார்ச் 2-ம் தேதியும் பெண் தோழர்கள் மார்ச் 3-ம் தேதியும் ஆண் தோழர்கள் மார்ச் 6-ம் தேதியும் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்பு போராட்டம் காட்சித் தொகுப்பு வீடியோ

சிறையில் இருந்து வெளியே வந்தனர் என்றால் ஏதோ நீதிமன்றத்தின் கருணைப் பார்வையினால் இல்லை.

கைது செய்யப்பட்ட தோழர்கள் தங்களை காவல் நிலையத்தில் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று போராட வேண்டியிருந்தது. “கைது செய்யப்பட்டவர்கள் ரவுடிகளா, பொறுக்கிகளா? எங்களை ஏன் தனித்தனியாக படம் எடுக்க வேண்டும்? சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவை இப்படியா நடத்தினீர்கள்?” என்று கேள்விகளை அடுக்கி போராடிய போதுதான் போலீசு அடங்கியது.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்பு போராட்டம்

“கைது செய்யப்பட்டவர்கள் ரவுடிகளா, பொறுக்கிகளா? எங்களை ஏன் தனித்தனியாக படம் எடுக்க வேண்டும்? சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவை இப்படியா நடத்தினீர்கள்?”

தோழர்களின் செல்போன்களை பிடுங்கி அதில் உள்ள அனைத்து எண்களையும் பதிவு செய்து அத்துமீறியது போலீசு. பொதுவாக கைது செய்தால் கைது செய்யப்பட்டவர்களின் உடைமைகளை கொடுத்துவிட வேண்டும். போலீசு இந்த விதியை கடைபிடிக்குமா என்ன? குற்றத்துடன் தொடர்புடைய சாதனங்களாக செல்போன்களையும் சேர்த்து விட்டோம் என்றார் தூசி இன்ஸ்பெக்டர் நடராஜ். “இது மனித உரிமை மீறல் என்றதற்கு” “இப்படித்தான் செய்வோம். நாங்க வைப்பதுதான் சட்டம்” என்றார் ஏடிஎஸ்பி.

காட்சி- 1 திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம்

11 பிரிவுகளின் கீழ் தோழர்களின் மீது வழக்கு போடப்பட்டு இருந்தது. அதில் பிணையில் வர முடியாத பிரிவுகள் இரண்டு. 506/2 – கொடுங்காயம் விளைவித்தல், 3 of ppd act – அரசு சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகியவையே. பிரிவுகளின் தன்மையைப் பொறுத்து ஒரு வழக்கின் பிணையினை மாவட்ட நீதிமன்றம் தான் வழங்கும். கைது செய்யப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து அம்மாவட்ட நீதிமன்றம் எத்தனை கிலோமீட்டர் இருந்தாலும் சரி, போய்த்தான் ஆக வேண்டும்; அல்லல்பட்டுத்தான் தீர வேண்டும். செய்யாறு வட்டம் , அழிவிடைதாங்கி கிராமத்தில் நடந்த ஒரு வழக்கு என்றால் 4.30 மணி நேரம் பயணம் செய்யக்கூடிய திருவண்ணாமலைக்குத்தான் போக வேண்டும். திருவண்ணாமலையில் உள்ள மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களின் உதவியோடு 16-ம் தேதி பிணைக்கான மனு தாக்கல் செய்யப்பட்டது.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
“இது மனித உரிமை மீறல் என்றதற்கு” “இப்படித்தான் செய்வோம். நாங்க வைப்பதுதான் சட்டம்” என்றார் ஏடிஎஸ்பி.

17-ம் தேதி பிணைக்கான மனு விசாரணைக்கு வர, வழக்கு தொடர்பான ஆவணங்களை அரசு வழக்கறிஞரிடம் கொடுக்க வேண்டிய தூசி காவல் நிலையத்தின் ஆய்வாளர் நடராஜ் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார்.

நீதிபதி வழக்கு எண்ணை அறிவித்த உடனே, “அரசு வழக்கறிஞர் தனக்கு இந்த வழக்கு பற்றி எதுவும் தெரியாது” என்றும் “ஆவணங்கள் தனக்கு அளிக்கப்படவில்லை” என்றும் கூறினார். இதைக்கேட்டதும் கொதித்துப்போன ம.உ.பா.மைய வழக்கறிஞர் கண்ணன், ஆவணங்களை அளிக்க வேண்டிய ஆய்வாளர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே இருப்பதை சுட்டிக்காட்டிக் கொண்டு இருக்கும் போதே போலீசு ஆய்வாளர் நடராஜ் வெளியில் எழுந்து ஓட, அதை 10 காவலர்கள் மறைக்க என ஒரு நாடகமே நடந்தது.

“ஆய்வாளரை நீதிமன்றத்திற்குள் வரவழைத்து ஆவணங்களை கொடுக்க வைக்க வேண்டும்” என்று வழக்கறிஞர் கண்ணன் கூறிய போதும், நீதிபதி சாந்த சொருபமாக அமைதியாக இருந்தார். பிணை மனுவை தள்ளிவைத்தார்.

18-ம்தேதி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை போலீசு காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய நாள். இதுவரை அதற்கு நீதி கிடைக்காததால் தமிழகம் முழுவதும் அனைத்து நீதி மன்றங்களிலும் 18,19 ஆகிய நாட்களில் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய வழக்கறிஞர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

எனினும், திருவண்ணாமலை மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்திடம் அனுமதி பெற்று தோழர்கள் மீதான பிணைக்கான மனுவின் மீது வாதம் நடந்தது.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
டாஸ்மாக் கடையை மூடக் கோரி மக்கள் பலமுறை போராடியிருக்கின்றனர்.

அரசு தரப்பு வழக்கறிஞர், “சென்னையில் இருந்து வந்தவர்கள் திட்டமிட்டு கடையை உடைத்து உள்ளனர். பெண் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் படுகாயம் அடைந்து உள்ளனர், அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர்” என்றெல்லாம் கூறி, “பிணை கொடுக்கக்கூடாது” என்று முடித்தார்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்பு போராட்டம்
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போராடிய பெண்கள், குழந்தைகள் – பொருட்படுத்தாத அரசு நிர்வாகம்

மக்கள் பலமுறை அந்த டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடியதையும், குறிப்பிட்ட நாள் அன்று 3 மணி நேரம் வெயிலில் அமர்ந்து போராடிய போதும் அதை துளியும் மதிக்காமல் கடையில் வியாபாரம் நடந்து கொண்டு இருந்ததும் டாஸ்மாக்குக்கு காவல் காத்துக் கொண்டு இருந்த போலீசின் திமிரான நடவடிக்கைகளையும் விவரித்தார் ம.உ.பா. மைய வழக்கறிஞர் கண்ணன்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்பு போராட்டம்

அனைத்தையும் கேட்ட மாவட்ட நீதிபதி, “போலீசு இருக்கும்போது நீங்கள் எப்படி சட்டத்தை கையில் எடுக்கலாம்” என்று அரசின் பிரதிநிதியாக வாதாடினார். இதன் பிறகும் இந்த அநீதிபதியிடம் பிணை பெற முடியாது என்பதால் பிணை மனுவை டிஸ்மிஸ் செய்யக் கோரினார் எமது வழக்கறிஞர் கண்ணன். அமைதியாக இருந்தார் அரசு வழக்கறிஞர்.

ஆனால், போராட்டத்தின் போது அங்கு இல்லாமலேயே தன்னை அடித்துவிட்டார்கள் என்று நடித்த ஆய்வாளர் சும்மா இருக்க முடியுமா என்ன?

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்பு போராட்டம்

நாம் ஒட்டிய சுவரொட்டியையும், கொடுத்த பிரசுரத்தையும் கையோடு கொண்டு வந்து அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கொடுத்து அதை நீதிபதியிடம் சொல்லுங்க, சொல்லுங்க என்றார். பிணை மனுவை டிஸ்மிஸ் செய்ய கோரிய பின்னர் விவாதத்திற்கு இடமில்லை.

ஆனால், போலீசுடன் கூட்டு சேர்ந்த அரசு வழக்கறிஞரோ “ யுவர் ஹார்னர், செய்யாறு, அழிவிடை தாங்கி உழைக்கும் மக்களின் பு.மா.இ.மு தோழர்களின் சீற்றத்தால் நொறுங்கியது டாஸ்மாக் சாராயக்கடை யுவர் ஹானர்” என்று சுவரொட்டியை முழுவதுமாக அவர் படித்து முடிக்க, அடுத்து ஆய்வாளர் பிரசுரத்தை அவரிடம் கொடுத்து கடைசி பத்தியை படிக்க சொன்னார்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்பு போராட்டம்

மீண்டும் ஆரம்பித்தார் அரசு வழக்கறிஞர் “யுவர் ஹானர்…..டாஸ்மாக் கடைகளை உருவாக்கிய இந்த கேடு கெட்ட அரசோ சீரழிந்து தள்ளாடுகிறது யுவர் ஹானர். ஒருபக்கம் ஓட்டு, இன்னொரு பக்கம் துட்டு என முதலாளிகளுக்கு வேலை செய்கிறார்கள் அரசியல் வாதிகள் யுவர் ஹானர். சாராயக் கம்பெனி முதலாளிகளுக்கு மாமா வேலை பார்க்கும்…………..” என்று உணர்ச்சிப் பெருக்கில் கொந்தளித்த அவரால் அதற்கு மேல் படிக்க முடியவில்லை. மாமா வேலை பார்க்கும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் என்று பிரசுரத்தில் உள்ளதை அவரால் உச்சரிக்க முடியவில்லை, நா குழறியது.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்பு போராட்டம்

வழக்கறிஞர்கள் நியாயமாக வாதாடும் போது அதைக் கேட்காமல் வழக்கமாக எழுந்து ஓடும் நீதிபதி, அரசு வழக்கறிஞர் மூச்சு விடாமல் வாசிப்பதை அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தார். நாம் எப்படியும் உயர் நீதி மன்றம் சென்று பிணை வாங்கி விடுவோம் என்பதால், அப்படி செல்லாமல் இங்கேயே பல நாட்கள் இழுக்க வேண்டும் என்பதே இவர்கள் திட்டம். கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்ச்சி போன்ற வழக்குகளில் வெளிப்படையாக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு சில நாட்களிலேயே பிணை கொடுக்கும் இந்த லஞ்சப்பேய்கள் நியாயமான வழக்கில் இவ்வளவு அயோக்கியத்தனங்களை அரங்கேற்றுகிறார்கள்.

பொதுவாக நீதி மன்றத்திற்கு சென்று பழக்கப்பட்டவர்களுக்கு தெரியும், வழக்கறிஞர்கள் பிணைக்கு என்று பெரிய அளவில் வாதாடுவதில்லை. “யுவரானர் 15 நாள்கள் ஆகிவிட்டது. பிணை கொடுங்கள்” என்பதுதான் பெரிய வார்த்தையாக இருக்கும்.

இதைக் கண்ட அந்த நீதிமன்றத்தின் மூத்த கிளார்க் சொன்னார் “இதே தூசி காவல் நிலையத்தில் கள்ளச் சாரயத்தை ஒழித்ததற்காகவே சாரய ரவுடிகளால் தாக்கப்பட்டும் இந்த போலீசுகாரனுங்களாளேயே மெண்டலாக முத்திரை குத்தப்பட்ட ஹரிதாஸ்தான் உண்மையான மனுசன். அவன் முன்னாடி இவனுங்கள்ளாம்…” என்று போலீசின் யோக்கியதையை காறித் துப்பினார்.

காட்சி – 2 சென்னை உயர்நீதிமன்றம்

உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் புறக்கணிப்புப் போராட்டம், சனி, ஞாயிறு ஆகிய காரணங்களால் பிப் 24-ம் தேதி அன்று பிணை மனு விசாரணைக்கு வந்தது. அன்று எதிர் வழக்காட அரசு வழக்கறிஞர் வேறொரு நாள் கேட்டார். என்ன வழக்கு என்று நீதிபதி கேட்டார்.

நமது தரப்பு வழக்கறிஞர் பொற்கொடி விவரித்துக் கொண்டு இருக்கும் போதே ”அந்த காலத்துல கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டம் செய்தாங்களே அது போலவா?” என்று நீதிபதி கூறி அடுத்த நாள் பிணை மீதான விசாரணையை தள்ளி வைத்தார்.

25-ம் தேதி பிணை மனு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டார்.

தான் ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்குழி என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற பஞ்சாயத்து தீர்மானம் போட்டபோதும் அதை ஏற்காமல் அரசு செயல்பட்டதற்கு எதிரான மனு மீது அளித்த தீர்ப்பினை சுட்டிக்காட்டிப் பேசினார்.

“இது பேருக்குத்தான் காந்தி பிறந்த நாடு, சாரயம் எங்களுக்கு வேண்டாமுன்னு சொன்னால் கூட எல்லா ஊரிலும் டாஸ்மாக் வைக்கிறோம். இங்கேயும் வைக்குறோம் என்கிறார்கள். கருங்குழியில் ஊரே தீர்மானம் போட்ட போதும் டாஸ்மாக் கடையை வைத்தே தீருவோம் என்று மாவட்ட கலெக்டர் சார்பில் வாதாடுகிறார்கள். 2 குடிகாரர்களை அழைத்து வந்து அவர்களின் குடிக்கும் உரிமை பாதிக்கப்படுவதாகவும் கூறினார் மாவட்ட கலெக்டர். நோய்க்கான மருந்தினை அரசு கட்டாயமாகக் கொடுக்கலாம்; ஆனால் சாராயத்தைக் கொடுக்கக்கூடாது என்று கூறி அந்த இடத்தில் டாஸ்மாக்கை எடுக்க உத்தரவிட்டதை”யும் கூறினார் நீதிபதி.

மேலும் ஒரு நாள் அவகாசம் கேட்டார் அரசு வழக்குரைஞர். பிணையை தள்ளிப்போடுவதிலேயே குறியாக இருந்தனர் போலீசுக்காரர்களும், அரசு வழக்கறிஞர்களும்.

அடுத்த நாள் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான சண்முக வேலாயுதத்தை களம் இறக்கியது அரசுத்தரப்பு.

சண்முக வேலாயுதம் வந்த உடனே “இவரே வந்திருக்காருன்னா, டாஸ்மாக் உடைச்ச கேசுக்கு இவர் வருகிறாரா? அவ்வளவு முக்கியமான வழக்கா இது”என்று மற்ற வழக்கறிஞர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்பு போராட்டம்

பிரச்சினை டாஸ்மாக் கடை நொறுங்கியதல்ல; தனக்கு என்று அரசு தானே விதித்துக் கொண்ட விதிமுறைகளை தகர்த்துக்கொண்டு மக்களுக்கு எதிரியாக மாறிப்போன இந்த அரசை அரசமைப்பு முறைக்குள் நின்று போராடி வீழ்த்த முடியாது என்று மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்ததுதான்.

சண்முகவேலாயுதம் வந்த உடனே பிணைக்கான நீதிமன்றம் 35 வழக்கறிஞர்களின் கூட்டத்தில் சிக்கியது.

‘சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள், இவர்கள் அரசுக்கு எதிரானவர்கள், காவல் அதிகாரிகள் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள், மக்கள் போராடவில்லை, இவர்கள்( பு.மா.இ.மு )தான் போராடினார்கள்’ என்று ஜோடித்து வைத்திருந்த திரைக்கதையை வைத்து படம் ஓட்டினார்.

சினிமாபட வில்லனின் அநியாயமான செயல்களை அடித்து நொறுக்கும் ஒரு ஹீரோவைப்போல அரசு தரப்பு வழக்குரைஞரின் அபத்த வாதங்களை அவர் சொன்ன வார்த்தைகளில் இருந்தே எடுத்து வைத்து நொறுக்கிக்கொண்டு இருந்தார் நமது மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்பு.

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த இறுதியாக நீதிபதி தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தார். உடனே எப்படியாவது பிணையை தடுத்து நிறுத்த வேண்டும் அதற்கு ஏதாவது சொல்ல வேண்டுமே என்று ஆய்வாளர் நடராஜ் “சார், 10 வயசுக் குழந்தைகள் 50 பேரை கூட்டிட்டு வந்தாங்க”என்ற பாயிண்டை எடுத்துக் கொடுக்க, அரசு தலைமை வழக்கறிஞரும் இப்போதுதான் இந்த அமைப்பினர் தவிர வேறு யாரும் போராடவில்லை என்று சொன்னோமே என்று கூட யோசிக்காமல் “50 குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு போனார்கள் யுவரானர்” என்று புகார் சொன்னார்.

அவ்வளவு நேரம் பொறுமைகாத்த நீதிபதி  “சரி, பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குழந்தைகளோடு குடும்பமாக ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர். போதுமா சார்” என்று சண்முக வேலாயுதத்திடம் நீதிபதி கேட்க, சேம்சைடு கோல் ஆகிவிட்டதே , இனி நாம் எது சொன்னாலும் நமக்கு பிரச்சினை ஆகுமென்று ஆய்வாளர் அமைதியானார்.

சிறைபட்ட அனைத்து தோழர்களுக்கும் பிணை வழங்கியும், ஒவ்வொருவருக்கும் இருவர் தலா 5,000 ரூ மதிப்பு கொண்ட ஜாமீன் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

பிணை கிடைத்துவிட்டது என்று யாரும் மகிழ்ச்சியடைய முடியாது. வெள்ளியன்று பிணை பெறப்பட்ட போதும் அனைத்துத் தோழர்களையும் சிறையில் இருந்து வெளியில் கொண்டு வர கூடுதலாக ஒருவாரம் ஆனது.

சென்னைப்பகுதி என்றால் 10,000 ரூ ஜாமீன் என்றால் அதற்கு ரேசன் அட்டை போதுமானது. ஆனால் சென்னைக்கு வெளியில் என்றால் வீடு அல்லது மனை பத்திரம்,ரேசன் அட்டை, வி.ஏ.ஓவிடம் சொத்து மதிப்புச் சான்றிதழ் ஆகியவை தேவை. இவர்களுடைய நீதிமன்ற விதிப்படியே கண்டிப்பாக இவையெல்லாம் காட்ட வேண்டும் என்றில்லை. ஆனால் இவையெல்லாம் காட்ட வேண்டும் என்பதி நீதிபதிகளின் எதேச்சதிகாரம். இதன் மூலம் பொருளில்லார்க்கு ஜாமீன் கொடுக்க வழியில்லை என்று அறிவிக்கிறது அரசு. இப்படி பலர் ஜாமீன் கொடுக்க வழி இல்லாததால் பிணை கிடைத்தும் சிறையில் ஆண்டுக்கணக்கில் இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்பு போராட்டம்

இந்த நீதிமன்ற முறையில் ஒரு ஏழைக்கு விடுதலை என்பதெல்லாம் இருக்கட்டும், பிணை கிடைக்குமா? என்றால் அதுவும் இல்லை. ஜெயா என்ற கொள்ளைக்காரிக்காக தானாக முன்வந்து வக்காலத்து வாங்கும் நீதிமன்றம், மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் முதலாளிகள், ஓட்டுப்பொறுக்கிகளின் கிரிமினல் வழக்குகளில் பலமுறை பிடிவாரண்ட் பிறப்பித்தும் ஆஜராகாமல் சொகுசாக வாழ்ந்து வருபவர்களை நீதிமன்ற வாசப்படிக்கு கொண்டு வரமுடியாத நீதிபதிகள், மக்களுக்காகப் போராடியதற்காக போலீசு பொய் வழக்கு போட்டுள்ளது, பிணை வழங்கக் கூடாது என்பதற்காக நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக பொய் சொல்கிறார்கள் என்பதெல்லாம் தெரிந்தும் வழக்கிலிருந்து விடுவிக்கவில்லை.

காட்சி -3 செய்யாறு கீழமை நீதிமன்றம

பொதுவாக, பிணையில் ஜாமின் கொடுப்பதற்கான வழக்குகள் எல்லாம் காலையிலோ அல்லது மதிய அமர்வில் முதலிலோ எடுக்கப்படும். ஏனென்றால் அப்போதுதான் விரைவில் சிறையில் இருந்து வெளியே வர முடியும் என்பதுதான் வழக்கம். ஆனால், செய்யாறு நீதிமன்றத்தில் அப்படி இல்லை. காலை 10 மணி முதல் மாலை நீதிமன்றம் முடியும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும். சில சமயம் பிணை உத்தரவை கையில் வாங்க இரவு 7 மணி கூட ஆகும்.
அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்பு போராட்டம்

ஜாமீன் கொடுக்க வந்த ஒருவர் சொன்னார் “ஒரு நாள் முழுக்க உட்கார வைக்கிறாங்களே இதுக்கு பயந்துதான் ஒரு கேசுக்கு நான் வரவே இல்லை. தொழிலில் 2 லட்ச ரூபாய் நட்டாமாயிடுச்சு”. அந்த நீதிமன்றத்தில் திரும்பும் பக்கமெல்லாம் ஒவ்வொரு டேபிளுக்கும் மொய் வைக்க வேண்டும். இதுவெல்லாம் மறைமுகமாக அல்ல; வெளிப்படையாக மிகவும் பட்டவர்த்தனமாக.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்பு போராட்டம்

azhividaithangi-tasmac-siege-11

இவர்கள் ஜாமின் கொடுக்க கேட்கும் ஆதாரங்களை தயார் செய்ய வி.ஏ.ஓ க்கும் மொய் எழுத வேண்டும். ஜாமின் கொடுக்க வேண்டுமென்றால் போலீசு, நீதிமன்றம், வி.ஏ.ஓ ஆகியோர் கூட்டணிக்கு இந்தியன் சினிமாபட ரேஞ்சில் ‘முக்கியமான பேப்பர் ’ ( பணம் ) கொடுத்தால்தான் முடியும் என்று மக்கள் குமுறுகிறார்கள்.

azhividaithangi-tasmac-siege-12 azhividaithangi-tasmac-siege-13 azhividaithangi-tasmac-siege-14

எவ்வளவுதான் கொடுத்தாலும், பிணை கிடைத்துவிட்டாலும் தங்கள் பங்கிற்கு ஏதாவது கெடுதல் செய்தே ஆக வேண்டும் என்ற மனோநிலையில் ஜாமின் தாரர்களை ஏற்கும் நீதிபதியும், வி.ஏ.ஓ வும் சில நாட்களை கடத்தி விடுகிறார்கள். எமது தோழர்களின் ஜாமினிலும் அப்படித்தான் முயற்சித்தார்கள்.

ஒரு பெயில் கேசைப் பற்றி இப்படி கட்டுரை எழுத வேண்டிய அவசியம் எதுவென்றால், மக்களை காப்பதே என் வேலை என்று சொல்லிக்கொள்ளும் காவல்துறை, நீதிபரிபாலனம் செய்வதே என் வேலை என்று சொல்லிக்கொள்ளும் நீதிமன்றம், அதிகாரவர்க்கம் ஆகியவை இன்று எப்படி தான் வகுத்துக்கொண்ட விதிகளை தூக்கியெறிந்து மக்களுக்கு எதிரானதாக மாறி, மக்களை வாட்டி வதைக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

எங்கள் ஊருக்கு சாராயக்கடை வேண்டாம் என்று சொல்வதற்கு கூட இங்கு யாருக்கும் உரிமை இல்லை..நான் வைப்பதுதான் சட்டம் என்கிறது போலீசு.

azhividaithangi-tasmac-siege-15

இதை தட்டிக் கேட்க வேண்டிய நீதிமன்றம், போலீசு சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறது.

மக்கள் சொத்தைக் கொள்ளையடித்த ஜெயலலிதாவுக்கு ஜாமீன் என்றால் உடனே கிடைக்கும், உழைக்கும் மக்களுக்கு சொத்து இல்லை எனில் பிணை கிடைத்தாலும் சிறையில்தான் சாக வேண்டும்.

இனியும் இந்த அரசமைப்பு முறையின் மீது நாம் ஏன் நம்பிக்கை வைக்க வேண்டும்?

azhividaithangi-tasmac-siege-16 azhividaithangi-tasmac-siege-17 azhividaithangi-tasmac-siege-18

– புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு

டாஸ்மாக் உடைப்பு – சிறை சென்ற போராளிகள் விடுதலை

5

அழிவிடைதாங்கி டாஸ்மாக் கடையை அகற்றும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பு.மா.இ.மு தோழர்கள் சிறையிலிருந்து விடுதலை!

செய்யாறு வட்டம் அழிவிடைதாங்கி டாஸ்மாக் கடையை அகற்றும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 9 புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும் குத்தனூர் பகுதியைச் சார்ந்த பெண் சாந்தி அவர்களும் வேலூர் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தனர்.

கள்ளச் சாராயம் விற்ற சமூக விரோதிகள் போன்றவர்கள் கூட கைது செய்யப்பட்டால் ஒரு சில நாட்களிலேயே வெளியில் வரும் நிலையில், சாராயம் விற்கக் கூடாது என்று போராடிய தோழர்களும், மக்களும் 19 நாட்கள் சிறைவாசமிருக்க வேண்டி வந்தது. திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் , சென்னை உயர் நீதிமன்றம் போன்றவற்றில் மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களின் கடுமையான போராட்டத்திற்குப் பின்னரே பிணை கிடைத்தது. போதைக்கு ஆதரவாக அதிகார மையங்கள் எப்படி ஆடுகின்றன பாருங்கள்!

டாஸ்மாக்கை ஒழித்துக் கட்ட வீதியில் இறங்கி போராடு!
03-03-15 அன்று பெண் தோழர்கள் நால்வரும், மற்றும் சாந்தியம்மா விடுதலை

அதுவும் பிணை கிடைத்த உடனேயும் தோழர்களை சிறையிலிருந்து அழைத்து வர முடியவில்லை. செய்யாறு நீதிமன்றத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகள், அலட்சியங்களை முறியடித்துத்தான் கடந்த 03-03-15 அன்று பெண் தோழர்கள் நால்வரும், மற்றும் சாந்தியம்மாவையும், 06-03-15 அன்று ஆண் தோழர்கள் ஐவரையும் வேலூர் சிறையில் இருந்து வெளியே அழைத்துவர முடிந்தது.

தமிழகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை ஒழிக்க மக்கள் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்” என்பதற்கு முன்னுதாரணமான போராட்டம் நடத்தி சிறை சென்று வந்த தோழர்களை உற்சாகத்தோடு வரவேற்கும் முகமாக, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், வேலூர் பகுதி மக்கள் கலை இலக்கியக் கழக செயலர் தோழர்.இராவணன் மற்றும் தோழர்கள், வேலூர் பகுதி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தைச் சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டு சிறைச்சாலையின் நுழைவாயிலில் பறை முழக்கத்தோடு …………………..அரசியல் முழக்கங்கள் எழுப்பி தோழர்களுக்கு மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

டாஸ்மாக் சாராயக் கடை உடைப்பு
டாஸ்மாக்கை ஒழித்துக் கட்ட வீதியில் இறங்கி போராடு!

அங்கிருந்து வேலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தோழர்கள் மரியாதை செய்தனர்.

டாஸ்மாக் சாராயக் கடை உடைப்பு
பெரியார் சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை

அங்கு நடைபெற்ற நிகழ்வில் பு.மா.இ.மு சென்னை மாநகர இணைச் செயலர் தோழர் மருது தலைமையேற்றார். வேலூர் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த தோழர் ஆல்வின் சிறை சென்ற தோழர்களை வாழ்த்திப் பேசினார். இறுதியாக பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை தர வக்கில்லாத இந்த அரசாங்கம் சாராயத்தை மட்டும் ஊற்றிக் கொடுக்கும் நோக்கத்தை அம்பலப்படுத்தியும், பெரியாரின் மண்ணில் மானத்தோடும், அறிவோடும் வாழ்வதற்கு இன்று மிகப்பெரிய தடையாக உள்ள டாஸ்மாக் கடைகளை ஒழித்துக் கட்ட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.

இதன் தொடர்ச்சியாக, தோழர்களோடு டாஸ்மாக் கடை உடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதான முன்னுதாரணமிக்க பெண்மணியாக தமிழகத்தின் போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அழிவிடைதாங்கி அருகில் உள்ள குத்தனூர் கிராமத்தைச் சார்ந்த சாந்தியம்மாவின் வீட்டிற்கு தோழர்கள் அனைவரும் சென்று அவரை வாழ்த்தினர்.

சாதாரண விவசாயப் பின்னணியைச் சார்ந்த குடும்பம். சாந்தியம்மாவும், அவரது கணவரும் 80 சென்ட் நிலத்தில் வருகிற விளைச்சலைக் கொண்டுதான் தங்கள் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்கின்றனர்.

டாஸ்மாக் சாராயக் கடை உடைப்பு
சாந்தியம்மாவை வாழ்த்தும் முகமாக, பு.மா.இ.மு சென்னை மாநகர பொருளாளர் தோழர் ராஜேஸ்வரி மாலை அணிவித்தார்

இப்போராட்டத்திற்குப் பிறகு, போலீசு, ஊர்பஞ்சாயத்துத் தலைவர், வி.ஏ.ஓ, அக்கம் பக்கம் வசிப்பவர்கள், உறவினர்கள் ஆகியோரின் அவதூறான பேச்சுகள், சிறை, போலீசு குறித்த பயமுறுத்தல்கள் என மனரீதியாக உளைச்சலைக்கு ஆளாக்கப்பட்டு வந்தது அக்குடும்பம். இத்தனையும் எதிர்கொண்டு புரட்சிகர அமைப்புடன் உறுதியாக நிற்கின்றனர் உழைக்கும் விவசாயி வர்க்கத்தைச் சாந்தியம்மாவும், அவரது கணவரும்.

அவர்கள் வீட்டிற்கு சென்றபோது தோழர்களைப் பார்த்து “எம் பொண்டாட்டி, எந்த விசயமா இருந்தாலும் அநியாயத்தை தட்டிக் கேட்பா, அதிகாரிங்கள நிக்க வச்சு கேள்வி கேட்பா, புள்ளைங்கள போலீசு புடிக்கிறத பாத்துட்டு அவளால சும்மா இருக்க முடியல. தட்டிக் கேட்ட அவளும் புள்ளைங்களோட சேந்து ஜெயிலுக்குப் போயிட்டா. நல்ல விசயத்துக்காகத்தான் போயிருக்கா, எனக்கு எந்த வருத்தமும் இல்ல. என்ன ஊருக்குள்ள நாலு பேரு பேசறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு, மத்தபடி ஒண்ணுமில்லப்பா’’ என்று தன் மனைவியைப் பற்றிப் பெருமை பொங்க எதார்த்தமாகப் பேசினார்.

rsyf-cadres-come-out-of-jail-9அவருடைய சொந்தப் பிள்ளை டாஸ்மாக் கடையால் சீரழிவதை கண்டு மனம் பொறுக்க முடியாமல் மக்களைத் திரட்டி களத்திற்கு வந்த சாந்தியம்மா, கணவர் சொல்வதை அமைதியாக ஆமோதித்தார்.

வீட்டிற்கு வந்த தோழர்கள் 25 பேருக்கும் உணவு தயாரித்து விருந்தளித்தனர் சாந்தியம்மாவும், அவரது கணவரும். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் தோழர்களை அன்போடு வரவேற்றனர். தன் வீட்டுப் பிள்ளைகளை உபசரிப்பதற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் தோழர்களை வர்க்கப் பாசத்தோடு உபசரித்தது அந்தக் குடும்பம்.

பின்னர் போராட்ட ஆல்பத்தைக் கொடுத்தவுடன், சாந்தியம்மாவும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஆர்வத்தோடு பார்த்தனர். என்னதான், போலீசு அச்சுறுத்தல் காரணமாக பயம் இருந்தாலும், தாங்களும் போராட்டத்தில் பங்கு பெற்றதை பெருமிதமாகவே அம்மக்கள் பார்த்தனர்.

மாலை 4.30 மணியளவில் சாந்தியம்மா வீட்டு மாடியிலேயே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பு.மா.இ.மு சென்னை மாநகர செயற்குழு உறுப்பினர் தோழர் ஆசாத் தலைமையேற்றார். பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் ஒருங்கிணைத்து நடத்தினார். சாந்தியம்மாவை வாழ்த்தும் முகமாக, பு.மா.இ.மு சென்னை மாநகர பொருளாளர் தோழர் ராஜேஸ்வரி மாலை அணிவித்தார். அதேபோல, போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற பெண் தோழர்களுக்கு, சாந்தியம்மா மாலை அணிவித்தார். ஆண் தோழர்களுக்கு சாந்தியம்மா கணவர் சேகர் மாலை அணிவித்துது என கவுரவப்படுத்தினார்.

பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்
பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் உரை

இதன் தொடர்ச்சியாக, சிறை சென்று வந்த தோழர்கள் சிறை அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். பெண் தோழர்கள் சார்பில் பேசிய தோழர் நிவேதிதாவும், ஆண் தோழர்கள் சார்பில் பேசிய தோழர் ராஜாவும் சிறை என்பது போராடிச் சென்றவர்களுக்கு உரமேற்றும் மையமாக இருக்கிறது என்பதை தங்கள் அனுபவங்களிலிருந்து கூறினர். பெண்கள் சிறையைப் பொறுத்தவரை, மற்ற கைதிகளோடு பேசுவதற்கு போலீசு அனுமதிக்கவில்லை. தோழர்கள் பேசுவதற்கு போராடியுள்ளனர். ஆனாலும் போலீசு மறுத்துள்ளது. எனவே அமைப்புப் பாடல்களின் வழியாக மக்களின் மனங்களோடு பேசியுள்ளனர் தோழர்கள்.

ஒரு கட்டத்தில் பாடல்கள் பாடுவதையும் தடை செய்துள்ளது ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின்’ போலீசு. இதைக் கேள்விப்பட்ட ஒரு வயதான அம்மா தோழர்களோடு வந்து பேசியுள்ளார். அவர் கொலை வழக்கு ஒன்றில் ஜாமீன் போட்டுள்ளார். அதில் ஏற்பட்ட தவறுகளால் அவர் சிறைப்பட நேர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக சிறையில் வாடுபவர். “உங்க பாட்டுதான் எனக்கு ஆறுதலாக இருந்தது. நான் தனியாக இருக்கிறத மறக்கறதுக்கு காரணமா இருந்துச்சு, நீங்க பாடுங்கம்மா” என்று அன்போடு கூறியுள்ளார்.

rsyf-cadres-come-out-of-jail-6சிறையில் உள்ள பல பெண் கைதிகள் தங்கள் வாழ்க்கைக்காக சாராயம் விற்று உள்ளே வந்தவர்களாக இருப்பதை தோழர்கள் விளக்கினர். மக்களின் அடிப்படையான வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வக்கில்லாத இந்த அரசு அவர்கள் சாராயம் விற்றுத்தான் பிழைக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி, அவர்களை கைது செய்து ஒடுக்குகிற வேலையையும் செய்கிறது.

சிறையைப் பொறுத்தவரை மக்கள் பிரச்சினைக்காகப் போராடிய அரசியல் கைதிகள் என்ற காரணத்தால் கைதிகளாலும், போலீசாலும் தோழர்கள் மதிப்புடனே நடத்தப்பட்டிருக்கின்றனர் என்பதை சிறை சென்ற தோழர்களின் அனுபவங்கள் பகிர்ந்து சென்றன.

இறுதியாக பேசிய தோழர் த.கணேசன், 1930 களில் பெரியாரின் மனைவி நாகம்மையும், அவரது தங்கையும் கள்ளுக்கடை உடைப்புப் போராட்டத்தில் பங்கேற்றதைப் போல, ஒரு போராட்ட வரலாற்றை அழிவிடைதாங்கி டாஸ்மாக் கடை உடைப்புப் போராட்டம் உருவாக்கியுள்ளதையும், அதில் சாந்தியம்மாவின் பங்கையும் ஒப்பிட்டுப் பேசினார். அந்த வகையில், “சாந்தியம்மா என்பவர் தனியொருவர் அல்ல, அவருடன் பு.மா.இ.மு தோழர்கள் உள்ளனர்.’’ என்று நம்பிக்கையூட்டினார். அந்த வகையில் இந்த போராட்டம் இத்தோடு முடிவதில்லை. அதற்கு உதாரணமாக, ஜெயங்கொண்டத்தில் பள்ளி மாணவர்கள் டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி முற்றுகைப் போராட்டத்தை நடத்தியதை சுட்டிக் காட்டினார்.

இந்நிகழ்ச்சிக்கு வீட்டிலுள்ள ஆணாதிக்கத் தடைகளின் காரணமாக வரமுடியாத அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் பலர் அவரவர் வீட்டு மாடிகளில் இருந்து ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்து விடைபெற்று அழிவிடைதாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் ஒன்றான வெங்களத்தூர் பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

வெங்களத்தூர் தெருமுனையிலேயே பறைமுழக்கம் எழுப்பி, சிறை சென்ற ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்பகுதியைச் சார்ந்த மக்கள் தோழர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.

rsyf-cadres-come-out-of-jail-7போலீசின் பீதியூட்டலைத் தாண்டி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அப்பகுதி உழைக்கும் மக்கள், இளைஞர்கள், குறிப்பாக சிறுவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தோழர்கள் பேசினார்கள். உழைக்கும் மக்கள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வக்கில்லாத இந்த அரசு தாலியறுக்கும் டாஸ்மாக்கை நடத்தி நமது பிள்ளைகளை சீரழிப்பதை அம்பலப்படுத்திப் தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

rsyf-cadres-come-out-of-jail-8சிறுவர்கள், பகுதி இளைஞர்கள், தோழர்கள் என 80 க்கும் மேற்பட்டோரின் பங்கேற்போடு பறை இசை முழங்க ஊர்வலம் நடைபெற்றது. வெங்களத்தூர் பகுதியைச் சுற்றிலும் ஒரு சுற்று வந்து ஊர்வலம் முடிவு பெற்றது. இந்நிகழ்வு ஏற்கனவே அப்பகுதியில் போலீசு ஏற்படுத்தியுள்ள அச்சத்தில் இருந்த இளைஞர்களுக்கு தைரியத்தையும், அப்பகுதி உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையையும் கொடுப்பதாக அமைந்தது.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

புதிய தலைமுறையைத் தாக்கிய இந்து முன்னணி – தீர்வு என்ன ?

32

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில்குமரனை, அந்த தொலைக்காட்சி நிலையத்தின் வாயிலிலேயே வைத்து, இந்து முன்னணி, பாரதிய ஜனதா காலிகள் 30 பேர் சூழ்ந்து கொண்டு தாக்கி, அவருடைய கேமராவையும் உடைத்திருக்கின்றனர். தற்செயலாக அங்கு வந்த பத்திரிகையாளர் தியாகச்செம்மலும் பொதுமக்கள் சிலரும் குறுக்கிட்டுத் தடுத்து அவரைக் காப்பாற்றியிருக்கின்றனர்.

புதிய தலைமுறை பத்திரிகையாளர் தாக்குதல்
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில்குமரனை, அந்த தொலைக்காட்சி நிலையத்தின் வாயிலிலேயே வைத்து, இந்து முன்னணி, பாரதிய ஜனதா காலிகள் 30 பேர் சூழ்ந்து கொண்டு தாக்கி, அவருடைய கேமராவையும் உடைத்திருக்கின்றனர்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, “பெண்களை தாலி பெருமைப்படுத்துகிறதா, சிறுமைப்படுத்துகிறதா?” என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருப்பதாக அறிவித்து அதற்கான விளம்பரத்தை அத்தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. உடனே, இந்து முன்னணியினரும் பாஜகவினரும் அந்த தொலைக்காட்சி நிர்வாகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று மிரட்டியிருக்கின்றனர். நேற்று மாலை பத்துக்கும் மேற்பட்டோர் அலுவலகத்துக்கு நேரில் வந்தும் மிரட்டியிருக்கின்றனர். இருப்பினும் பிரச்சினையை எதிர்பார்த்து போலீசு பாதுகாப்பையும் கோரிப் பெற்றிருக்கின்றனர்.

ஆனால் தாக்குதல் நடந்தபோது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றனர். அடித்த இந்து முன்னணி தலைவர்கள் சிலர் போலீசு பாதுகாப்பு பெற்றவர்கள். அவர்கள் போலீசு பாதுகாப்புடன் இந்த ரவுடித்தனத்தை நடத்தியிருக்கிறார்கள்.

இது குறித்து சைதாப்பேட்டை உதவி ஆணையர், இணை ஆணையர் ஆகியோரிடம் நேரில் சென்று புகார் செய்தபோது, தங்களை அவர்கள் ஒருமையில் ஏசியதாகவும், “நீங்கள் ஏதாவது கான்ட்ராவர்சியலாக ஒளிபரப்புவீங்க, அதுக்கெல்லாம் பாதுகாப்பு கொடுக்கறதுதான் எங்க வேலையா?” என்றும் திமிராகவும் அலட்சியமாகவும் பேசியதாக தியாகச்செம்மல் கூறுகிறார். தற்போது வேறு வழியின்றி பத்து பேர் மீது போலீசு ஒப்புக்கு வழக்கு பதிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இந்தத் தாக்குதல் மூலம் இந்து வெறியர்கள் சொல்லவருவது என்ன?

இந்து முன்னணி மிரட்டல்
“தாலியைப் பற்றிப் பேசக்கூடாது என்றால் எதிர்ப்பு காட்டாமல் இணங்க வேண்டும்”

“அவள் எதிர்ப்பு காட்டாமல் இணங்கியிருந்தால் அனாவசியமாகச் செத்திருக்க வேண்டியதில்லை” இது பி.பி.சி ஆவணப்படத்தில், குற்றவாளி முகேஷ் பேசும் வசனம். இதையேதான் இந்து வெறியர்களும் சொல்கிறார்கள்.

அவர்கள் “தாலியைப் பற்றிப் பேசக்கூடாது என்றால் எதிர்ப்பு காட்டாமல் இணங்க வேண்டும்” “பகுத்தறிவு பேசக்கூடாது என்றால் அதற்கும் இணங்க வேண்டும்.”

இல்லையென்றால் தபோல்கரையும் பன்சாரேவையும் செய்ததைப்போல கொலை செய்வார்கள்.

நிர்பயாவும் தபோல்கரும் பன்சாரேவும் எதிர்த்து நின்றார்கள். நாம் எதிர்த்து நிற்கப் போகிறோமா, அல்லது இணங்கி அடங்கிப் போகப்போகிறோமா என்பதுதான் கேள்வி.

முதலாவதாக, இது இந்துமதவெறி பாசிஸ்டுகள் நாடு முழுவதும் நடத்தி வரும் வெறியாட்டத்தின் ஒரு அங்கம். அதிலும் குறிப்பாக, தமிழ் நாட்டிலிருந்து பகுத்தறிவு, சுயமரியாதையுணர்வு, தமிழ் உணர்வு ஆகிய அனைத்தையும் துடைத்து ஒழிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இந்து வெறி பாசிஸ்டு அமைப்புகள் வேலை செய்து வருகின்றன.

மாதொருபாகன் பிரச்சினையில் ஒரு எழுத்தாளரை தாக்கினார்கள். இங்கே ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊழியர்களையே தாக்கியுள்ளார்கள். அதிகாரத்தில் இருந்தால் கொலை செய்திருப்பார்கள். எனவே, “இந்து அமைப்புகள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் பயங்கரவாதிகள். ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரானவர்கள்” என்று நாம் பிரகடனம் செய்ய வேண்டும். அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும். இதனை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று மட்டும் கூறுவது தவறு.

இரண்டாவதாக, ஊடக முதலாளிகள்.

மோடி - பச்சமுத்து
தமிழகத்தில் முகவரியே இல்லாத பாரதிய ஜனதா கட்சிக்கு முகவரி ஏற்படுத்திக் கொடுத்து, மதவெறிக் கருத்தை பிரச்சாரம் செய்ய மேடை அமைத்துக் கொடுப்பதில் முதலிடம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குத்தான்.

இந்தத் தாக்குதல் பற்றி புதிய தலைமுறை நிர்வாகத்தின் நிலை என்ன? இந்து முன்னணியும் பாஜ.க வும் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாக புதிய தலைமுறையின் செய்தியறிக்கை கூறுகிறது. அடுத்த செய்தியாக, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராசன் மகளிர் தினம் கொண்டாடியதும், அவருக்கு வீரவாள் வழங்கப்படும் காட்சியும் காட்டப்படுகிறது.

“அடுத்தமுறை தாக்க வரும்போது கையில் வாளோடு வருக” என்று அழைக்கிறார்களா? திரு பச்சமுத்து பல தொழில்கள் நடத்துகிறார். கல்வி நிறுவனங்கள், பேருந்து, தொலைக்காட்சி ஆகியவற்றுடன், ஒரு கட்சியும் நடத்தி வருகிறார். அவருடைய கல்வி நிறுவனங்களில் பாஜக வினருக்கு டிஸ்கவுன்ட் கிடைக்கிறதோ இல்லையோ புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாராளமாக ‘டிஸ்கவுன்ட்’ கிடைக்கிறது. தமிழகத்தில் முகவரியே இல்லாத பாரதிய ஜனதா கட்சிக்கு முகவரி ஏற்படுத்திக் கொடுத்து, மதவெறிக் கருத்தை பிரச்சாரம் செய்ய மேடை அமைத்துக் கொடுப்பதில் முதலிடம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குத்தான்.

ஆனால், தாலி பற்றிய இந்த விவாதத்தை நடத்தக்கூடாது என்று இந்து வெறியர்கள் உத்தரவிட்டவுடனே, ஒரு சிறிய எதிர்ப்புக் கூட காட்டாமல் அதன் ஒளிபரப்பை நிறுத்துவதாக முடிவு செய்து விட்டார்கள். அடி வாங்கிய பிறகாவது ஒளிபரப்பியிருக்கலாம்.

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தை செந்தில்குமார் படமெடுத்த காரணத்தினால் தாக்கினார்களாம்.

ஒரு தொழில் நிறுவனம் என்ற அடிப்படையிலான கவுரவம் கூட அந்த நிர்வாகத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இவர்களின் ஆதாயத்துக்காக ஊழியர்களும் மானங்கெட்டவர்களாக இருக்க வேண்டுமா, அடி வாங்கவேண்டுமா என்பதுதான் கேள்வி.

புதிய தலைமுறை மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான காட்சி மற்றும் அச்சு ஊடகங்களிலும் இன்றைக்கு இதுதான் நிலை. சன் டிவியில் ஒரு பெண்ணுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பிரச்சினை நடந்தபோது, ஆகப்பெரும்பான்மையான ஊடகங்கள் அதனை கட்டுப்பாடாக இருட்டடிப்பு செய்தததை நாம் அறிவோம். தற்போது புதிய தலைமுறை ஊழியர் மீதான தாக்குதல் செய்தியையும் மற்ற ஊடகங்கள் இருட்டடிப்பு செய்திருக்கின்றன.

“இந்து அமைப்பினர் முற்றுகைப் போராட்டம்” என்று தலைப்பிட்டு “தமிழ் தி இந்து” நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தை செந்தில்குமார் படமெடுத்த காரணத்தினால் தாக்கினார்களாம். ஆர்ப்பாட்டத்தை படமெடுத்ததாகவே இருக்கட்டும், அதற்காக ஏன் தாக்கவேண்டும், போலீசு என்ன செய்தது என்ற கேள்விகளைக்கூட அந்த நாளேடு எழுப்பவில்லை. மற்ற ஊடகங்களோ, இந்த செய்தியைக் கூட வெளியிடவில்லை.

போலீசின் அணுகுமுறை
மூன்றாவது பிரச்சினை – போலீசின் அணுகுமுறை பற்றியது.

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் என்ன செய்வது? ‘பத்திரிகை சுதந்திரத்தை’ காப்பாற்றுவதைப் பிறகு பார்ப்போம்.  தங்கள் உயிரையும், மானத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்குக்கூட பிரஸ் என்ற அடையாள அட்டையையோ, தமது நிர்வாகத்தையோ அவர்கள் நம்பியிருக்க முடியுமா? முடியாது என்பதைத்தான் அடுத்தடுத்து நடைபெறும் பல சம்பவங்கள் காட்டுகின்றன. அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஒரு சங்கமாக சேருவதன் மூலம் மட்டும்தான் தங்களையும், தங்கள் தன்மானத்தையும் கருத்துரிமையையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மூன்றாவது பிரச்சினை – போலீசின் அணுகுமுறை பற்றியது.

குடியரசு தின விழாவில் தண்டிக்கப்பட்ட கிரிமினலின் படத்துக்கு வரிசையில் நின்று போலீசு அதிகாரிகள் சல்யூட் அடிப்பதை தமிழகத்திலும், மோடி ஆட்சியின் கீழ் கொலைக்குற்றவாளிகள் வரிசையாக விடுவிக்கப்படுவதை தேசிய அளவிலும் பார்க்கிறோம். இந்த சூழலில், யாரேனும் ஒரு போலீசு அதிகாரி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முயற்சித்தால், அதைத்தான் நாம் அதிசயமாகப் பார்க்கவேண்டும்.

இந்து முன்னணி அட்டகாசம்
கார்ப்பரேட்டுகளுக்கு “சிங்கிள் வின்டோ சிஸ்டம்” கொண்டு வந்த மோடி, பெண் உரிமையைப் பாதுகாப்பதற்கும் “சிங்கிள் வின்டோ” கொண்டுவரவிருப்பதாக மகளிர் தினத்தன்று காலையில் அறிவித்தார்.

முதலிரண்டு பிரச்சினைகள்தான் நாம் முதன்மையாக கவனம் செலுத்தவேண்டியவை என்று கருதுகிறோம். போலீசு கடமை தவறிவிட்டது என்பதை முதன்மைப்படுத்துவது ஊடக முதலாளிகள் குற்றத்தை பின்னுக்குத் தள்ளுவதற்கே பயன்படும். எனவேதான், “பத்திரிகையாளர்களே உடனே சங்கமாக ஓரணியில் திரளுங்கள்” என்று கோருகிறோம். இது ஊதிய உயர்வுக்கோ, பணிப் பாதுகாப்புக்கோ அல்ல. உங்கள் உயிரையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு!

டாஸ்மாக்கை வைத்து பெண்களின் தாலி அறுத்துக் கொண்டிருக்கிறார் அம்மா. அம்மாவின் இயற்கையான கூட்டாளிகளான இந்துவெறியர்கள், புனிதமான தாலியை அகற்றுவதாக பகுத்தறிவாளர்கள் மீது குற்றம் சாட்டி, பெண் உரிமைக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்கு “சிங்கிள் வின்டோ சிஸ்டம்” கொண்டு வந்த மோடி, பெண் உரிமையைப் பாதுகாப்பதற்கும் “சிங்கிள் வின்டோ” கொண்டுவரவிருப்பதாக மகளிர் தினத்தன்று காலையில் அறிவித்தார். சொல்லி முடிப்பதற்குள் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு வந்து விட்டார்கள் ஆர்.எஸ்.எஸ் காலிகள் – மோடி குறிப்பிடும் சிங்கிள் வின்டோ அவர்கள்தான்.

________________________________

பின்குறிப்பு: டிசிஎஸ் ஆட்குறைப்பிற்கு பின் எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிற்சங்கம், ஐ.டி துறை ஊழியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அணிதிரட்டி வருகிறது. அந்த நம்பிக்கையையும், சுயமிரியாதையையும் பத்திரிகையாளர்கள் அடைய வேண்டாமா? பத்திரிகையாளர்களுக்கான தொழிற்சங்கம் கட்டுவோம்!

பத்திரிகை நண்பர்களே உடன் தொடர்பு கொள்ளுங்கள்!
vinavu@gmail.com      /      97100 82506

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு மாற்றம்

5

கோவை அவிநாசி ரோட்டில் சிட்ராவில் இருக்கிறது அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி.

govt-polytechnic-kovai“அரசுக் கல்லூரி” என்றவுடன் நம் மனதில் தோன்றும் சித்திரத்திற்கு எந்த வித ஏமாற்றமும் தராமல் இருக்கும் கல்லூரி.

சாலையை பார்த்தவாறு நீளும் அதன் சுவர்களில் புரட்சித் தலைவியின் பெயரும் இன்ன பிற ஆதிக்க சாதி சாக்கடைகளின் பெயர்களும் நெடு நாட்களாக குடி கொண்டிருக்கின்றன.

பல ஆண்டுகளாக மாறிய பல வகையான பருவ நிலைகளுக்கு சாட்சியாக அதன் முகப்பு பலகை உருக்குலைந்து கிடக்கிறது.

“ஆடிட்டோரியம்” எனும் பெயரில் மைதானத்தை பார்த்தவாறு பரிதாபமாக நின்றிருக்கும் மொட்டைச் சுவரும், “பிராக்டிகல் லேப்” எனும் பெயரில் நிலை கொண்டிருக்கும் காய்லாங் கடையும் மேற்கொண்டு விளக்கத் தேவையின்றி அந்த கல்லூரியின் தரத்தையும் எதார்த்தத்தையும் நமக்கு உணர்த்துபவை.

இப்படி ஒரு அசமந்தம் போல இயங்கிக் கொண்டிருந்த அந்தக் கல்லூரிக்கு மின் அதிர்ச்சி (கரண்ட் ஷாக்) அடித்தது போல நடந்தது ஒரு நிகழ்வு. நிர்வாகத்திற்கு எதிரான மாணவர்களின் போராட்டமே அது.

சும்மா பத்திரிகைகளுக்கு போஸ் கொடுக்கும் அமைப்புகளது போல அல்லாமல் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் செலுத்தப்பட்ட போராட்டமானது உயர் அழுத்தத்திலானதுதான் என்பதை நிர்வாகத்திற்கும் பொதுவாகவே நிர்வாகங்களின் அன்புத் துணைவர்களான காவல் துறைக்கும் இன்ன பிற “மஃப்டி”களுக்கு உணர்த்தியது.

பட்டயப் (டிப்ளமோ) படிப்பு என்பது பார்க்க கல்லூரி போல இருந்தாலும் பள்ளியில் பதினொன்றாவது படிப்பவர்களின் வயதையொத்தவர்களே அறுதிப் பெரும்பான்மை. இதில், பள்ளிப் பருவம் முடியும் முன்னரே கல்லூரிக்கும் அதன் சூழலுக்கும் வந்தவர்கள் இன்னும் சிந்தனா ரீதியில் எளியவர்களாகவே இருப்பர். இங்குள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் அவர்களிடம் பக்குவமாக நடந்து சமூக எதார்த்தத்தோடு கற்றுக் கொடுப்பது  இருக்கட்டும், குறைந்த பட்சமாக மாணவர்களாக நடத்துவதே பெரிய விசயமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது அநாவசியமான “ஆப்சென்ட்”. இங்கு வருகை பதிவு குறைந்தால் மாணவர்கள் தேர்வெழுத முடியாது. ஒரு வருடம் வீணாகும். ஆனால் இங்குள்ள நிரந்தர மற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு அந்த பொறுப்புணர்வு சற்றும் அன்றி 5 நிமிடம் லேட்டாக வந்தால் “ஆப்சென்ட்”, நோட் கொண்டுவர வில்லையென்றால் “ஆப்சென்ட்”, வகுப்பில் பேசினால் “ஆப்சென்ட்”, ஆசிரியரிடம் பாடத்தில் சந்தேகம் கேட்டால் கூட கவனிக்காமல் என்ன செய்கிறாய் என “ஆப்சென்ட்”. இப்படி இவர்களின் செயல்களால் வருகைப் பதிவு குறைந்து கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 30 மாணவர்கள் தேர்வெழுத தடை (debarred) செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கல்லூரியில் வகுப்பு அட்டவணை (டைம் டேபிள்) என்பதே கிடையாது. எந்த ஆசிரியரும் தனக்கு பிடித்த வகுப்பறைக்கு எப்போது வேண்டுமானாலும் நுழையலாம். எந்த மாணவனுக்கு வேண்டுமானாலும் “ஆப்சென்ட்” போடலாம்.

இதனால் மாணவர்கள் ஒரு சிலர் லீவு போட்டால் பெற்றோரை அழைத்து வரச் சொல்வது., அழைத்து வந்து வகுப்பறையின் முன் காத்திருந்தால் கண்டு கொள்ளாமல் செல்வது, திமிராக பதில் அளிப்பது என ஆணவத்துடன் நடந்துள்ளனர். எந்நேரமும் ஒரு திகிலிலேயே வகுப்பில் அமர வேண்டிய சூழல்.

கல்லூரிக்குள் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. தண்ணீர் குடிக்க குழாய், சுகாதாரமான கழிவறை, நூலக வசதி என எதுவுமே இல்லை. பிரின்சிபாலின் கார் ஓட்டுநர் கல்லூரி நூலகத்தை நிர்வாகிக்கிறார் எனில் இதை எங்கு சொல்லி அழ? மாணவர்களுக்கு உருப்படியாய் சொல்லிக் கொள்ள ஒரு கலை விழாவோ, நிகழ்வோ இல்லை. “உடற்கல்வி” என்றால் என்னவென்று கேட்கும் நிலைதான் உள்ளது. பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் பேரார்வத்துடன் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இங்கு ஏக்கத்துடன் மைதானத்தை பார்த்தாவறே கடக்கிறார்கள்.

இதே கோவையில் பொள்ளாச்சியில் ராணுவத்தை எதிர்கொண்டு ஏறி மிதித்து இன்னுயிர் ஈந்த மாணவ வர்க்கம் இங்கு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் இருப்பது பெரும் துயரம்.

இப்படியான சூழலில் தான் கல்லூரியில் படிக்கும் நமது பு.மா.இ.மு தோழர் ஒருவரின் தகவல் மூலம் மாணவர்களை சந்திக்கலாம் என கடந்த 04.03.2015 புதனன்று  கல்லூரி சென்று காத்திருந்தோம். அப்போது வெளியே வந்த ஒரு மாணவர் குழாமை விசாரித்த போதுதான் தெரிந்தது, அவர்கள் 11 பேர் “ஆப்சென்ட்” போடப்பட்டு வெளியேற்றப்பட்டவர்களாம்.

பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் பாபு
பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் பாபு

இவர்களிடமும், அப்போது அங்கு வந்த மற்ற மாணவர்களையும் சேர்த்து திரட்டி பேச ஆரம்பித்தோம். அருகே இருக்கும் சிறிய சுவரில் ஏறி நின்று பு.மா.இ.மு தோழர் பாபு பேசத் துவங்கினார்.

தோழர் பாபுவின் எழுச்சியுரை மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கையிலேயே அதற்கு வலு சேர்க்கும் விதமாக இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது.

கல்லூரிக்குள் இருந்து இரண்டு ஆசிரியர்கள் வெளியே வந்து கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். இதை எதிர்த்த தோழர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட, இரண்டு ஆசிரியர்களும்  கேள்விகளுக்கு என்ன பதில் கூறுவதேன்றே தெரியாமல் பரிதாபமாக நின்றது கண்டு மாணவர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்றனர்.

அந்த நிகழ்வு பெருவாரியான மாணவர்களுக்கு உற்சாகமூட்டியது. வெள்ளியன்று பிரின்சிபாலை சந்தித்து பேசலாம் என மாணவர்களும், தோழர்களும் முடிவு செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

மறுநாள் எப்படியும் முந்தைய நாள் மாலை நடந்த நிகழ்வுகளுக்கு மாணவர்களை மிரட்டுவார்கள் என நினைத்தது போலவே காலையில் மீண்டும் மாணவர்களிடமிருந்து, “பிரின்சிபாலை பார்க்கச் செல்கிறோம் நீங்களும் வாங்க” என நமக்கு அழைப்பு வந்தது.

வியாழனன்று காலை 11 மணியளவில் கல்லூரிக்குள் நுழைகையில் அங்கு வந்த வாட்ச் மேன்,

“யார் நீங்க..? எதற்காக வந்துருக்கீங்க…” என அதிர்ச்சி காட்டினார்.

“நாங்கள் பு.மா.இ.மு. மாணவர் பிரச்சினை சம்பந்தமாக பிரின்சிபாலை பார்க்க வந்திருக்கோம்” என கூறினோம்.

பு.மா.இ.மு
“நாங்கள் பு.மா.இ.மு. மாணவர் பிரச்சினை சம்பந்தமாக பிரின்சிபாலை பார்க்க வந்திருக்கோம்”

“அதெல்லாம் அனுமதியில்லாமல் பார்க்க முடியாது” என தடுக்க முயன்றதோடு, அக்கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் நம்முடன் நிற்பதைப் பார்த்து,

“ஏய், நீ காலேஜ் போகாம கண்டவங்க கூட சுத்திக்கிட்டு இருக்கியா” என அதட்டியவாறே ஐ‌டி கார்டை பிடுங்கிக் கொண்டார். இதை நமது தோழர்கள் கேட்கப் போய் வாக்குவாதம் முற்றிவிட்டது.

“தம்பி, நீங்க பிரின்சிபால் கிட்ட பேசிக்கங்க” எனக் கூறியவாறு ஓட்டமும் நடையுமாக தனது விசுவாசத்தை காட்ட விரைந்தார். பிரின்சிபால் அறைக்கு சென்றோம். அங்கு வேறு ஒரு காட்சி. புகார் கொடுக்கச் சென்ற 20 மாணவர்களை ஆசிரியர்களும் பிரின்சிபாலும் சுற்றி வளைத்து தத்தமது வாதத் திறமையை காண்பித்துக் கொண்டிருந்தனர்.

நம்மைப் பார்த்தவுடன் பிரின்சிபால் தனது இயலாமையின் வெளிப்பாடை சத்தமாக வெளிக் காட்டினார். “நீங்க, யாரு எல்லாம் மொதல்ல வெளிய போங்க….!” என ஹை பிட்சில் அவர் , அதற்கு ஈடு கொடுத்து நம்மை அறிமுகப்படுத்துவதற்குள் தொண்டை தண்ணீர் தீர்ந்து போனது. “நீங்க யாரா இருந்தாலும் உங்க கூட பேச நான் தயாராக இல்லை“ எனக் கூறியவாறே., தனது ரூமுக்குள் புகுந்து கதவை சார்த்திக் கொண்டார்.

பு.மா.இ.மு
“ஐயா வர வரைக்கும் பொறுமையாக இருங்க. வந்ததும் பேசிக்கலாம்”

அதற்குள் அனைத்து ஆசிரியர்களும் நம்மை சுற்றி வளைத்து, “எங்க காலேஜ் பிரச்சினையை நாங்க பாத்துக்கறோம் நீங்க முதல்ல கிளம்புங்க” என வலுக்கட்டாயமாக நம்மை துரத்த முயன்றனர். தோழர்களும் வலுவான வாக்கு வாதத்தில் இறங்க., உடனே நிர்வாகங்களின் மனதுக்கு நெருக்கமான நாட்டாமையான காவல் துறைக்கு அழைப்பு விடுத்தனர்.

இதற்குள் அங்கிருந்து மாணவர்களை கீழே அழைத்து வந்து அமர்த்தியிருந்தோம். காவல் துறையும் ஒரு டஜன் போலீசை கூட்டிக் கொண்டு வேனுடன் உள்ளே வந்து மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. அதில் ஒரு சிலர் வந்து நம்முடன் பேச்சு வார்த்தை எனும் பெயரில் குழப்படிக்கும் வேலையை செய்து கொண்டிருந்தனர். பின் அவர்களும் சலித்து போய் , “ஐயா வர வரைக்கும் பொறுமையாக இருங்க. வந்ததும் பேசிக்கலாம்” எனஒரு இண்டர்வெல் விட்டனர்.

kovai-rsyf-govt-college-7இன்னும் பல துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் வந்து கீழே அமர்ந்திருக்கும் மாணவர்களிடம் தேன் தடவிய சொற்களால் நீட்டி முழக்கிக் கொண்டிருந்தனர். மாணவர்கள் இவர்களை கவனியாமல் அமர்ந்திருப்பினும் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போன்ற அவர்களது ஸ்டாண்ட் – அப் காமெடி மிகவும் சுவாரசியமாக இருந்தது.

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி
சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போன்ற அவர்களது ஸ்டாண்ட் – அப் காமெடி

“என்னை கேட்டிருக்கலாம்லா டா…? நான் உங்களுக்காக பேசியிருக்க மாட்டேனா…? எதுக்கு யார் யாரையோ கூட்டி வந்திருக்கீங்க…?” என அவர்களது ஒவ்வொரு வசனமும் தனித்துவம் வாய்ந்தவை.

இப்படியே நேரம் கழிய, நாம் பிரின்சிபாலை பார்த்தே ஆக வேண்டும் என உறுதியாக நிற்க, இவ்வளவு நேரம் சமாதானப்படுத்திய ஆசிரியர்கள் “இப்போது அவர் மீட்டிங் போய்ட்டார்” எனக் கூறினர்.

“ஏங்க, இவ்ளோ நேரம் நாங்க இங்கதானே இருக்கோம் எங்களுக்கு தெரியாம அவர் எப்படி போயிருக்க முடியும். ஒரு வேளை பிரின்சிபால் ரூமுக்கும் காலேஜ் கேட்டுக்கும் சுரங்கப் பாதை எதுவும் போட்டுருக்கீங்களா…?” என மேலும் துருவிய போது தான் தெரிந்தது. பிரின்சிபால் பின் வாசல் வழியே தப்பித்திருந்தார் என்ற கதை.

“அவர் வர ஆறு மணியானாலும் சரி ஆறு நாளானாலும் சரி நாங்க இங்கதான் இருப்போம். அவர்கிட்டதான் பேசுவோம். என்ன பண்ணுவீங்களோ பண்ணிக்கங்க” என நாம் கூறிவிட்டோம்.

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி
எஸ்‌.ஐ ஒருவரும் மஃப்டி போலீஸ் ஒருவரும் வந்து அவர்கள் பங்குக்கு சிறிது நேரம் பேச்சு பயிற்சி.

பின்னர், “இது சரிப்பட்டு வராது ஐயாவ (அதிகாரியாமா..!) கூப்பிடுங்க,” என ஒரு காவலர் சொல்ல எஸ்‌.ஐ ஒருவரும் மஃப்டி போலீஸ் ஒருவரும் வந்து அவர்கள் பங்குக்கு சிறிது நேரம் பேச்சு பயிற்சி எடுத்து பார்த்துவிட்டு சரி இது வேலைக்காகாது என பின் வாங்கி விட்டனர். இதில் யாருடன் தொலைபேசி தொடர்பில் பிரின்சிபால் இருந்தார் எனத் தெரியவில்லை. மூணு மணி வாக்கில் அவர்கள் பின் வாங்கியவுடன் மீட்டிங் போன பிரின்சிபால் வந்தார்.

அவர் தான் அதுவரை நடந்த விவரங்களை துல்லியமாக விரல் நுனியில் வைத்திருக்கிறாரே. அதனால் நேரடியாக விசயத்துக்கு வந்தார். நமது கோரிக்கைகளை எழுதி வாங்கிக் கொண்டு அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்பதாக கூறினார். அத்துடன் உள்ளிருப்பு போராட்டம் முடிவடைந்தது.

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி
அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்பதாக கூறினார். அத்துடன் உள்ளிருப்பு போராட்டம் முடிவடைந்தது.

கோரிக்கைகளில் ஒன்று, மாணவர்களை தரக்குறைவாக நடத்திய ஆசிரியைகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது. அதை கேட்டவுடன் ஒரு ஆசிரியர்,

என்னது, “குரு மாணவன்கிட்ட மன்னிப்பு கேட்கணுமா…?” என ஏதோ கேட்கக் கூடாதததை கேட்பது போல சகலமும் பதறி அதிர்ச்சியடைந்தார்.

டெல்லி பாலியல் வன்முறை வழக்கில் தண்டனை பெற்ற முகேஷ் சிங், அந்த நிகழ்வை பற்றிய ஆவணப்படத்தில் கருத்து கூறுகையில், “ஒழுக்கமான பெண்களுக்கு 9 மணிக்கு மேல ரோட்டுல என்ன வேல…? பெண்களும் ஆண்களும் எப்போதும் ஒன்றல்ல. அவர்களது வேலை வீட்டில் இருப்பதும் அங்கு வேலை செய்வதுமே.” எனக் கூறியுள்ளார். இத்துணை மக்கள் போராட்டத்திற்கு பிறகும் தூக்குத் தண்டனை உறுதியான பின்பும் சிறிதும் குற்றவுணர்ச்சியின்றி அவர் கூறும் கருத்தை செலுத்தும் சிந்தனை எது…? அது இந்த சமூகத்தில் ஊறி உறைந்திருக்கும் ஆணாதிக்க சிந்தனை.

அது போல, குரு-மாணவன் என ஆசிரியர் என்றாலே அடிப்பவரும் அதட்டல் பேச்சை கொண்டவருமாகவே இந்த சமூகம் கருதுகிறது. ஆசிரியர் மாணவர் உறவு என்பது ஜனநாயகத் தன்மை கொண்ட நட்புணர்வின் அடிப்படையில் இருப்பது என்பதை இவர்கள் ஏற்பதில்லை. இப்படி ஆண்டான் அடிமை கருத்து கொண்ட போன்ற பிற்போக்குவாதிகளே பல கல்லூரிகளில் பணியாற்றுகிறார்கள் என்பது வேதனையான உண்மை.

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி
குரு-மாணவன் என ஆசிரியர் என்றாலே அடிப்பவரும் அதட்டல் பேச்சை கொண்டவருமாகவே கற்பனை.

போராட்டம் நிறைவடைந்த பின், மாணவர்கள் நம்மை தாயின் மடி அறிந்த கன்றுகள் போல சூழ்ந்து அரவணைத்து அழைத்துச் சென்று அந்தக் கல்லூரியில் இருக்கும் ஒரே ஒரு பாடாவதி கேண்டீனில் அமர்த்தினர். முதன்முறையாக அராஜகம் செய்து வந்த நிர்வாகத்தையும், அடிமைத்தனத்தை செலுத்தி வந்த ஆசிரியர்களையும் வென்று காட்டிய ஜனநாயகப் பூவின் நறுமணத்தில் மாணவர்கள் திளைத்திருந்தார்கள். அடிமைகளாக இருந்த மாணவர்கள் சுயமரியாதையைக் கற்றுக் கொண்டு போராடிய முதல் தினம் இது.

வாசல் திறந்து விட்டது. இனி தமது உரிமைகளுக்காக போராடும் மாணவர்களிடமிருந்து ஆசிரியர்களும், நிர்வாகமும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை