Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 99

முருகப்பா – கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக இழுத்து மூடு!

29.12.2023

அம்மோனியா வாயு கசிவு – பொதுமக்கள் பாதிப்பு!

முருகப்பா – கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை
நிரந்தரமாக இழுத்து மூடு!

பத்திரிகைச் செய்தி

டந்த சில தினங்களுக்கு முன்பு எண்ணூர் பகுதியில் உள்ள முருகப்பா கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து குழாய் வழியாக அம்மோனியா வாயு அனுப்பும்போது கசிவு ஏற்பட்டது. இதனால் எண்ணூர் தாளங்குப்பம், பெரியகுப்பம், பர்மா நகர், எர்ணாவூர் குப்பம் ஆகிய கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இரவு 11:45 மணி அளவில் வேலை முடிந்து சென்று கொண்டிருந்த தொழிலாளிகள், வாயு கசிவை கண்டறிந்து உடனடியாக ஊர் மக்களிடம் தெரிவித்ததன் காரணமாக உயிர் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. எனினும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இப்பிரச்சனைக்கு காரணமான முருகப்பா கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் போராடியதன் விளைவாக, ஆலை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி சுற்று வட்டார கிராம மக்கள் அந்த ஆலையின் வாசலிலேயே தொடர்ந்து சில நாட்களாக போராடி வருகிறார்கள். இப்போது வரை அரசு நிர்வாக அதிகாரிகள் யாரும் தங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதையும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்பொழுது வரை அந்த நிர்வாகத்தின் சார்பாக எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை. அம்மோனியா வாயு கசிவின் காரணமாக ஆயிரக்கணக்கான மீன்கள் இருந்து கரை ஒதுங்குகின்றன.

சென்னை பெருமழையின் போது சிபிசிஎல் நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்ட எண்ணைக் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டதும் இப்பகுதி மக்கள் தான். வடசென்னை முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகள் பல லட்சக்கணக்கான கோடிகளை லாபமாக சுரண்டுகின்றன. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமையும் தொழிலாளிகளின் ஜனநாயக உரிமைகளை பறித்ததும் சுற்றுச்சூழல் சீரழித்ததுமே இந்த லாபத்திற்கு காரணம்.

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன் கடலும் பாழாக்கப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக மக்களின் உயிரும் இயற்கையும் திட்டமிட்டு பாழாக்கப்படுகின்றன. தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை நாம் கட்டியமைக்கும்போதே இப்படிப்பட்ட நாசகர கார்ப்பரேட் நிறுவனங்களை மூட முடியும்.

எண்ணூர் மக்களுடைய போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும். மேலும் அம்மோனியா கசிவுக்கு காரணமான முருகப்பா இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக தமிழ்நாடு அரசு மூட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த ஆலையிலிருந்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

அ.தி.மு.க., நாம் தமிழர் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புள்ளதா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: அ.தி.மு.க. தற்போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டது. சீமான் பக்கம் இளைஞர்கள் திரள்வது கணிசமாக இருக்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க., நாம் தமிழர் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புள்ளதா? அல்லது அ.தி.மு.க. நிலைமை மோசமாகி பா.ஜ.க. வளர்வதற்கான வாய்ப்புள்ளதா?

.தி.மு.க-வை பொறுத்தவரை பா.ஜ.க-வுடன் இருந்தால், தனது வாழ்வு மொத்தமாக அழிந்துவிடும் என்ற காரணத்தால்தான் வெளியே வந்தது. ஆனால், அப்படி வெளியேறவில்லை என்றாலும் அ.தி.மு.க-வின் கப்பல் ஏற்கனவே கவிழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அ.தி.மு.க. தனது இரண்டாவது நிலையை தக்கவைத்துக் கொள்ளவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை.

அந்த இரண்டாம் இடத்தை பா.ஜ.க. பிடித்துவிடும் என்று சொல்லுமளவிற்கு தமிழ்நாட்டில் பா.ஜ.க. பெரிய சக்தியாக இல்லை. தான் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடுவோம் என்று பா.ஜ.க. கருதிக்கொண்டிருக்கலாம். ஆனால், பார்ப்பனக் கட்சியான பா.ஜ.க. தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பது என்பது மிகவும் சிரமமான விஷயம்.

அ.தி.மு.க-விற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் கூட்டணி அமையுமா என்றால், அதில் நாம் சொல்வதற்கு எதுவும் இல்லை. சந்தர்ப்பவாத அரசியலில் எல்லாவிதமான கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும் அரங்கேறும். இதில் கவனிக்க வேண்டியவை, முதலில் நாம் தமிழர் கட்சி ஒரு கட்சியே கிடையாது; தனிநபரின் கீழ் சில விசுவாசிகள் இருக்கிறார்கள் அவ்வளவுதான். சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது நாய்குடைகள் போலதான். மக்களுக்கு மாற்று இல்லாததனால் இப்படியாக நாய்குடைகள் வளர்கிறதேயொழிய, இக்கட்சி சுயேட்சையாக இயங்கக்கூடியதல்ல. நீண்ட காலமான மரப்பட்டையில் அதிகமாக உற்பத்தியான புரோட்டீன்கள், திடீரென பெய்யும் மழையால் வெளிவருவதுதான் நாய்குடை. இதனை உயிரியல் வளர்ச்சியின் ஒரு பகுதியாக எடுத்து கொள்ள முடியாது. ஆக, சீமான் பக்கம் இளைஞர்கள் திரளுகிறார்கள் என்றால் சரியான மாற்று அரசியல் வைத்துள்ளவர்கள், இன்னும் வேகமாக வேலை செய்யவில்லை என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும்.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இராமர் கோயில் திறப்பை பாசிஸ்டுகள் எந்தளவிற்கு கொண்டுப்போவார்கள்?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: உலக கோப்பை போட்டியில் பா.ஜ.க-விற்கு சரியான அடி விழுந்துள்ளது. பா.ஜ.க. எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் அடுத்தது இராமர் கோயில் திறப்பு விவகாரம் உள்ளது. அதனை பாசிஸ்டுகள் எந்தளவிற்கு கொண்டுப்போவார்கள்?

இராமர் கோயில் விவகாரத்தில் அடுத்து என்ன நிகழும் என்று இப்போது நம்மால் சொல்ல முடியாது. தோல்விமுகத்தில் இருப்பதால் பா.ஜ.க. எதிர்பார்க்கக் கூடிய விளைவு இருக்காது என்று மட்டும் உறுதியாக சொல்லமுடியும். ஆனால், அதற்காக பா.ஜ.க. முயற்சியை கைவிடாது. எப்படி மோடி பெயரில் மைதானத்தை குஜராத்தில் உருவாக்கி அங்கு உலக கோப்பை இறுதி போட்டியை நடத்தி, மோடி பிம்பத்தை தூக்கி நிறுத்தலாம் என கனவு கண்டு அதற்கான நடவடிக்கைகளில் காவிக்கும்பல் ஈடுபட்டதோ, அதுபோன்ற நடவடிக்கைகளை கூடுதலாகவோ குறைவாகவோ இராமர் கோயில் திறப்பிலும் மேற்கொள்ளும். ஆனால் இராமர் கோவில் திறப்பு, பாசிச கும்பலின் தோல்விமுகத்தை சரிசெய்வதற்கான எந்த வாய்ப்பையும் தரப்போவது கிடையாது. எனவே, பா.ஜ.க-வை உறுதியாக ஏறி அடிக்க வேண்டும், ஒவ்வொரு செயலையும் நடவடிக்கையும் சரியாக அம்பலப்படுத்த வேண்டும்.

செய்திகளை தொடர்ந்து கவனித்து வந்தால் இதை புரிந்துக்கொள்ள முடியும். உத்தரப்பிரேதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில், கிரிக்கெட் வீரர் ஷமி ஊரில் மைதானம் கட்டப்போவதாக செய்தி வெளிவந்துள்ளது. பா.ஜ.க. ஏன் முஸ்லிம் வீரர் ஒருவருக்கு மைதானம் கட்டவேண்டும்? ஒரு விஷயம் சமூகமயமாவதை பா.ஜ.க-வால் தவிர்க்க முடியாது. அதுதான் எதார்த்தம். அதன் தொடர்ச்சியாகத்தான் இதையும் பார்க்கவேண்டும். அதே போல, இராமனுக்கு கோயில் கட்டினால் ‘இந்துக்களில்’ சிலர் மகிழ்வார்களே ஒழிய, பெரும்பான்மை ’இந்துக்களுக்கு’ இராமன் கோயில் பற்றிய கருத்து கிடையாது. இராமன் கோயில் கட்டினால் தங்கள் வாழ்வில் விடிவு வந்துவிடும் என்று மக்கள் யாரும் நினைப்பது கிடையாது.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி!

ச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் “தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்” (ELECTORAL BOND SCHEME 2018) அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகுமா? என்ற வழக்கின் மீது விசாரணை நடத்தியது.

விசாரணையின் போது, “தேர்தல் நிதிப்பத்திரங்கள் பற்றிய விவரங்கள் கொடுத்தவர் – பெற்றவர், வங்கி என எல்லாருக்கும் தெரியும்; ஆனால், வாக்காளர்களுக்கு மட்டும் அது ரகசியமாகவே உள்ளது; நீதிமன்றம் பல்வேறு முடிவுகளை எடுத்த பிறகும் இந்த ரகசியத்தன்மையை ஏற்பதற்குச் சற்றுக் கடினமானதாக இருக்கிறது” என்று நீதிபதி சஞ்சீவ் கன்னா கருத்துத் தெரிவித்திருந்தார்.

இக்கருத்துக்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 2018 சட்டத்தின்படி தேர்தல் நிதிபத்திரங்களைக் கட்சிகளுக்குக் கொடுத்தவர் யாரென்று அறிந்து கொள்ள முடியும் என்றும், கொடுத்தவர் – பெறுபவர் ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள முடியாத அமைப்புமுறை என்று ஒன்றில்லை என்றும் கூறினார். மேலும், அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற நீதிபதியின் கருத்து பற்றி கூறுகையில், “நன்கொடையாளர் யாரென்று தெரிவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாப்பது என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இரகசியத்தன்மையை இது முறியடித்துவிடும்” என்றார். அதாவது கொடுப்பவனுக்கும், வாங்குபவனுக்கும் தெரிந்தால் போதாதா? எதற்கு எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்பதைத்தான் வேறு வார்த்தைகளில் மேத்தா சொல்லியிருக்கிறார். நீதிமன்றத்துக்கு மோடி அரசு கொடுக்கும் மரியாதை இவ்வளவு தான் என மறைமுறமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய கபில் சிபல், “தேர்தல் நிதிப்பத்திரங்கள் இந்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய ஊழல்” என்றும், இது “தேர்தல் முறையையும் ஜனநாயகத்தையும் ஒழித்துக்கட்டும் திட்டம்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.


படிக்க: தேர்தல் நிதிப்பத்திரம் – கருப்புப் பணத்தை சுருட்ட பா.ஜ.க-வின் புதிய அஸ்திரம் !


விசாரணைக்குப் பிறகு, இவ்வாண்டு செப்டம்பர் 30 வரையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடையின் விவரங்களை, 15 நாட்களுக்குள் “சீலிட்ட உறையில்” வைத்து ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்த வழக்குகள் ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது பெரியளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வழக்கு விசாரணைக்குப் பிறகு, இந்தத் “தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்” இந்தியத் தேர்தல் முறையின் வெளிப்படைத்தன்மையை ஒழித்துக்கட்டுகிறது; இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பதற்கு இந்த தேர்தல் நிதிப்பத்திரத் திட்டத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர்.

ஊழலை சட்டப்பூர்வமாக்கிய பா.ஜ.க:

துஷார் மேத்தாவின் திமிர்த்தனமான வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது, அச்சு அசலாக பா.ஜ.க.வின் அயோக்கியத்தனமே. சட்டப்பூர்வமான வழிகளில் தனது பாசிச நடவடிக்கைகளை அரங்கேற்றி வரும் பா.ஜ.க அரசு, தான் செய்யும் கார்ப்பரேட் சேவைகளுக்கான லஞ்சத்தை சட்டப்பூர்வமாகவே பெற்றுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்.

இத்திட்டத்தின் மூலம் எந்தவொரு இந்தியக் குடிமகனும் அல்லது நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளையிலிருந்து, தாங்கள் நன்கொடையாக அளிக்க விரும்பும் தொகைக்கு (1000 ரூபாய் தொடங்கி 1 கோடி ரூபாய் வரை) ஏற்ப நிதிப்பத்திரத்தை வாங்கி, அரசியல் கட்சிக்கு நன்கொடையாக வழங்கலாம்.

இந்தத் திட்டத்தை கொண்டு வருவதற்காக பல்வேறு சட்டத்திருத்தங்களை பாஜக அரசு மேற்கொண்டது. நிறுவனங்கள் சட்டப்படி (Companies Act, 2013),  ஒரு நிறுவனம் தன்னுடைய லாபத்தில் இருந்து அளிக்கக்ககூடிய தேர்தல் நிதியின் உச்ச வரம்பு 7.5 சதவிகிதமாக இருந்ததை நீக்கி, யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் தேர்தல் நிதியாக அளிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியது. அதேபோல், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தில் (Foreign Contribution Regulation Act, 2010 (FCRA)) திருத்தம் செய்து வெளிநாட்டு நிறுவனங்களும் தேர்தல் நிதி அளிக்கலாம் என்று கதவை திறந்து விட்டது.

மேலும், வருமானவரிச் சட்டத்தின்படி (Income Tax Act, 1961) அரசியல் கட்சிக்கு வரும் நன்கொடைகள் குறித்து வருமானவரித் துறையிடமும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி (Representation of the People Act, 1951 (RoPA)) 20,000 ரூபாய்க்கு மேல் அரசியல் கட்சிகள் பெறும் நிதி குறித்த தரவுகளை தேர்தல் ஆணையத்திடமும் தெரிவிக்க வேண்டும் என்ற முறையைத் திருத்தியது. இதன் மூலம், தேர்தல் நிதிப்பத்திரத்தால் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களையும் தரவுகளையும் யாரிடமும் ஒப்படைக்கத் தேவையில்லை என தேர்தல் நிதிக்கு பெரிய மூடுதிரையைப் போட்டது மோடி அரசு.


படிக்க: தெலங்கானா தேர்தல் புதிய பார்முலா: களமிறங்கிய இன்ஃப்ளூயன்சர்கள்!


அரசியல் கட்சிகளுக்கு யார், எவ்வளவு நன்கொடை அளிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை தேர்தல் ஆணையத்திற்கும் கிடையாது; வருமானவரித் துறைக்கும் கிடையாது; இந்த நாட்டின் குடிமக்களுக்கும் கிடையாது என்ற நிலையை உருவாக்கி, பெயரளவில் இருந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு ஒட்டுமொத்தமாக சவக்குழி வெட்டும் வேலையைத் தொடங்கியது பா.ஜ.க அரசு.

இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது தேர்தல் ஆணையமும், ரிசர்வ் வங்கியும் இதை எதிர்த்துக் கடுமையாகக் கேள்வி எழுப்பியிருந்தன. அப்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல், இந்த தேர்தல் நிதிப்பத்திரம் குறித்து ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு செப்டம்பர் 14, 2017 அன்று கடிதம் எழுதியிருந்தார். அதில் “தற்போது கொண்டுவரப்படும் தேர்தல் நிதிப்பத்திரம் ஷெல் கம்பனிகளால் (வரி ஏய்ப்பு, பணமோசடி செய்வதற்காக உருவாக்கப்படும் பினாமி நிறுவனங்கள்) தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்பதைக் குறிப்பிட்டு, இதை டிஜிட்டல் முறையில் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார்.

செப்டம்பர் 27, 2017 அன்று ஜெட்லிக்கு எழுதிய கடிதத்தில், “ரிசர்வ் வங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது பணமதிப்பு விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலானது என்றார். குறைந்தபட்சம், தேர்தல் நிதிப்பத்திரங்களை வழங்க வேறு எந்த நிறுவனத்தையும் அரசு அங்கீகரிக்கக்கூடாது” என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் மோடி அரசு அவரது கோரிக்கையைக் கழிவறைக் காகிதமாகக் கூட மதிக்கவில்லை. 2018-இல் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டத்தை அமல்படுத்தும்போது ரிசர்வ் வங்கியை ஒரங்கட்டிவிட்டு, எஸ்பிஐ வங்கியை தேர்தல் பத்திரங்களை வழங்க அங்கீகரித்தது ஒன்றிய அரசு. இதற்கடுத்த சில நாட்களில் ரிசவ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவி விலகியதும் குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி போலவே, தேர்தல் ஆணையமும் இந்தத் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம் தேர்தல்முறையின் வெளிப்படைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கூறி முதலில் எதிர்த்தது. ஆனால், அதன்பிறகு இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு பா.ஜ.க அரசின் ஏஜெண்டாக செயல்படத் தொடங்கிவிட்டது.

இந்தத் திட்டத்தைக் கொண்டு வரும்போது பா.ஜ.க வழக்கம்போல் லஞ்சம், கருப்புப்பணத்தை ஒழிக்கப் போகிறோம், வெளிப்படைத்தன்மையை கொண்டு வரப்போகிறோம் என வாய்ச்சவடால் அடித்தது. ஆனால் உண்மையில், இதுவரை கருப்புப்பணத்தைத் திருட்டுத்தனமாக வாங்கிக்கொண்டு இருந்த அரசியல் கட்சிகள், இனிமேல் சட்டப்பூர்வமாகவே கேள்விக்கிடமற்ற வகையில் கருப்புப்பணத்தையும் லஞ்சத்தையும் பெறுவதற்கான வழியைத்தான் இது ஏற்படுத்தியிருக்கிறது.

பா.ஜ.க-வின் மெகா ஊழல்:

இத்திட்டத்தை கொண்டுவந்த பிறகு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பா.ஜ.க-வின் கஜனாவில் பணம் வந்து குவியத் தொடங்கியது. 2016-17 மற்றும் 2021-22 -க்கும் இடைப்பட்ட ஐந்து நிதியாண்டுகளில், ஏழு தேசியக் கட்சிகளும் 24 பிராந்தியக் கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாகப் பெற்ற தொகை மொத்தம் ரூ.9,188 கோடிகள். இதில் பா.ஜ.க-வின் பங்கு மட்டும் தோராயமாக ரூ.5,272 கோடி. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 57 சதவீதத்தை பா.ஜ.க மட்டுமே பெற்றுள்ளது.

2019-2020 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் பெற்ற ரூ.3,429 கோடியில், பா.ஜ.க மட்டும் ரூ.2,606 கோடியை (76 சதவிகிதம்) பெற்றுள்ளது. இதில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மட்டும் பா.ஜ.க ரூ.2,410 கோடியை திரட்டியுள்ளது, இது ஒட்டுமொத்தமாக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டியதில் கிட்டத்தட்ட 95 சதவிகிதமாகும்.

அதேபோல், 2018 முதல் 2021 வரை விற்கப்பட்ட நிதிப்பத்திரங்களில் 92 சதவிகிதத்திற்கும் அதிகமானவை ரூ.1 கோடி மதிப்புடையவை. இவை பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்களால் அளிக்கப்பட்டவை. ஜனநாயகத்திற்கான சீர்திருத்த சங்கத்தின் (ADR) பகுப்பாய்வின்படி, 2021-22 நிதியாண்டில், காப்பரேட் நிறுவனங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட மொத்த நன்கொடைகளில் ரூ.351.50 கோடி (72.17 சதவிகிதம்) பா.ஜ.க மட்டும் பெற்றுள்ளது. அகர்வாலின் வேதாந்தா நிறுவனம், கொரோனா தடுப்பூசி தயாரித்த சீரம் நிறுவனம் முதலியவை பா.ஜ.க-விற்கு நிதி அளித்ததும், அதற்குக் கைமாறாக பா.ஜ.க செய்த சேவையும் அம்பலமானது இதற்கு சிறந்த சான்று. இதனால் தான், நன்கொடை கொடுப்பவர் குறித்த விவரங்கள் ரகசியமாக இருக்க வேண்டும் என்கிறது மோடி அரசு.

இப்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொட்டிக் கொடுத்ததன் விளைவாக, 2016-17 மற்றும் 2021-22 நிதியாண்டுகளின் இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் நன்கொடையாக ரூ.10,122 கோடிகளைப் பெற்றுள்ளது பா.ஜ.க. இதன் மூலம், 6,046 கோடி நிகர சொத்துக்களுடன் இந்தியாவின் முதல் பணக்காரக் கட்சியாக பா.ஜ.க வளர்ந்துள்ளது. இவை அனைத்தும் வெளியே தெரிந்தவை மட்டுமே என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவிற்கு மட்டும் இப்படி கொட்டிக் கொடுக்கிறார்கள்? அதற்கான விடை அனைவரும் அறிந்ததே. தனக்கு கொட்டிக்கொடுத்த எஜமானனுக்கு விசுவாசத்தைக் காட்டும் வகையில் சுமார் 25 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி; வரிச்சலுகை; பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்குத் தூக்கிக் கொடுத்தல்; காடு, மலை, கனிம வளங்களைக் கொள்ளையிடத் திறந்து விடுதல் என இந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைத்தது பாசிச பாஜக அரசு.

பாஜக-வின் இந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக சாதாரண உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவரும் மீதும் பொருளாதார பயங்கரவாதத் தாக்குதல்களை அனுதினமும் தொடுத்து வருகிறது மோடி அரசு.

சாரமாகச் சொன்னால், இந்தியாவை சட்டப்பூர்வமாகவே கொள்ளையடிக்கலாம்; அப்படிக் கொள்ளையடித்த பணத்தை கார்ப்பரேட் கட்சிகளுடன் சட்டப்பூர்வமாகவே பங்கிட்டுக் கொள்ளலாம் என்பதுதான் மோடி அரசின் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்.

000

இந்த தேர்தல் நிதிப்பத்திர திட்டத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு விடயமும் உள்ளது. தற்போது பலரும் கூறுவதுபோல, தேர்தல் நிதிப்பத்திரத்தை ரத்து செய்வதால் மட்டும் இந்த ஊழலையும் கார்ப்பரேட்டுகளுக்கும் கட்சிகளுக்குமான ரகசிய உறவையும் ஒழித்துவிட்டு, இந்தியத் தேர்தல்முறையின் மூலம் ‘ஜனநாயகத்தின் மாண்பை’ கொண்டுவந்து விட முடியுமா?

இந்த ஊழலை ஒழிக்க, கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் நிதி வாங்குவதை தடைசெய்ய வேண்டும். மக்களைச் சார்ந்து அரசியல் கட்சிகள் இயங்க வேண்டும். தேர்தல் செலவிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் தற்போது இருக்கும் அரசுக் கட்டமைப்பிற்குள் செய்ய முடியுமா?

ஏற்கனவே மறைமுகமாக நடந்து வந்த ஊழலை சட்டப்பூர்வமாக, பகிரங்கமாக செய்வதற்காக கொண்டு வரப்பட்டதுதான் மோடி அரசு கொண்டுவந்த தேர்தல் நிதிப்பத்திரம். மற்றபடி, கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது நன்கொடையை பணமாகக் கொடுப்பதற்கும், தேர்தல் நிதிப்பத்திரமாகக் கொடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் தயவு இல்லாமல் எந்த ஓட்டுக்கட்சியாலும் தேர்தலைச் சந்திக்க முடியாது என்பதுதான் இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் உண்மையான நிலை. 2019 ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மட்டும் சுமார் 55 முதல் 60 ஆயிரம் கோடிகள் வரை செலவிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆன செலவைவிட அதிகம். இங்கு உண்மையில் நடந்து கொண்டிருப்பது ஜனநாயகம் அல்ல பணநாயகம்தான் என்பதற்கு இதுவே துலக்கமான சான்று; கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி பணம்தான் தேர்தலில் தீர்மானகரமான காரணியாக உள்ளது என்பதும், கார்ப்பரேட்டுகளின் ஆதரவு பெற்ற கட்சியே ஆளுங்கட்சியாக இருக்க முடியும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இப்படி மென்மேலும் அழுகி நாறிக்கொண்டே செல்வதே இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பின் இயல்பு. இதைத் விட்டெறிந்து விட்டு, இதைவிட மோசமான பாசிசத்தை நிலைநாட்டும் இலக்கில் இருந்தே பா.ஜ.க தனது திட்டங்களைக் கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் தேர்தல்நிதிப்பத்திர திட்டம். எனவே இதை ஒழித்தால் மட்டும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ மாண்பை மீட்டுவிட முடியும் என்று எண்ணுவதை என்ன சொல்வது. பாசிசத்தை எதிர்ப்பது என்ற பெயரில் அழுகிக் கொண்டிருக்கும் ஒன்றைத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று சொல்வது அறிவார்ந்த வழிமுறையாக இருக்க முடியுமா? பாசிசத்தை முறியடிக்கக் கூடியதான, மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கக் கூடியதாக ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக மக்களை தயார் செய்வதே இன்றைய தேவை.


மதி

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பேரிடர்: தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு! | தோழர் வெற்றிவேல்செழியன்

பேரிடர்: தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு! | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கிரானைட் கொள்ளை: பேரழிவின் சாட்சியங்களும், வலுக்கும் எதிர்ப்புகளும் | ஆவணப்படம்

கிரானைட் கொள்ளை:
பேரழிவின் சாட்சியங்களும், வலுக்கும் எதிர்ப்புகளும் | ஆவணப்படம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கிரானைட் கொள்ளை: பேரழிவின் சாட்சியங்களும், வலுக்கும் எதிர்ப்புகளும் | ஆவணப்படம் | டீசர்

கிரானைட் கொள்ளை:
பேரழிவின் சாட்சியங்களும், வலுக்கும் எதிர்ப்புகளும் | ஆவணப்படம் | டீசர்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கிரிக்கெட் உலக கோப்பை போட்டியை நாம் எப்படி பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: இம்முறை உலக கோப்பை போட்டிக்கு வழக்கத்திற்கு மாறான எதிர்பார்ப்பு இருந்தது. “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷத்தில் தொடங்கி “ஃப்ரீ பாலஸ்தீன்” முழக்கம் வரையில் பல்வேறு விதமான விவாதங்களை சமூகத்தில் ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. எதிர்பார்த்த எதுவும் இப்போட்டியில் நடக்கவில்லை. இந்த உலக கோப்பை போட்டியை நாம் எப்படி பார்ப்பது?

பொதுவாக கிரிக்கெட் என்பது கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்காக, போலி தேசவெறியை ஊட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. சுருக்கமாக சொல்வதெனில், சுரண்டலுக்கான ஓர் வடிவமாகவே கிரிக்கெட் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கோடிக்கணக்கான மக்களுக்கு கிரிக்கெட் ஒரு பொழுதுபோக்காக மாற்றப்பட்டுவிட்டது. கிரிக்கெட்டை தொடர்ச்சியாக உட்கார்ந்து பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் கூட ஸ்கோரை தெரிந்துகொள்ள முயல்கின்றனர். மக்கள் தங்களின் உணர்வுக்கான வடிகாலாக அதனை பார்க்கின்றனர். அதற்காக நாம் கிரிக்கெட்டை ஆதரிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், கிரிக்கெட்டுடன் சேர்ந்து இருக்கக்கூடிய அரசியலையும், சுரண்டலையும் பொதுமக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

இம்முறை கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, சரிந்துவரும் மோடி பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்கான “பேட்ச் வொர்க்” வாய்ப்பாகத்தான் பா.ஜ.க. கும்பலால் பார்க்கப்பட்டது. இதனை, “நீட்டிக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரம்”, “கிரிக்கெட் ஜி20”, “ரோகித் ஷர்மா, கோலியின் உலக கோப்பை அல்ல, மோடியின் உலக கோப்பை” என தொடக்கத்திலேயே பலரும் விமர்சித்திருந்தனர்.

அக்டோபர் 14 அன்று நடந்த பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான போட்டியை திட்டமிட்டே குஜராத்திலுள்ள “நரேந்திர மோடி மைதானத்தில்” நடத்தி மதவெறியர்கள் மூலமாக “ஜெய் ஸ்ரீ ராம்” எனக் கூவ வைத்தது, பாசிச கும்பல். இதன் தொடர்ச்சியாக பார்ப்பன கடவுளான இராமன், மோடிக்கு உலக கோப்பையை தருவது போன்ற புகைப்படங்கள், மீம்களை சமூக வலைதளங்களில் பரப்பி மதவெறியை தூண்டிவிட்டது.

ஆனால், #SorryPakistan என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனதும், பாகிஸ்தான் அணி தலைவருக்கு விராத் கோலி கையெழுத்திட்ட ஜெர்சியை தந்ததும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக சென்னை ரசிகர்கள் குரலெழுப்பியதும் பாசிச கும்பலின் மதவெறிப் பிரச்சாரத்தை சுக்குநூறாக்கியது.


படிக்க: உலகக் கோப்பை: “வேண்டாம் பிஜேபி” என்று முழங்குவதே தேசபக்தி!


மேலும், இத்தனை நாட்கள் ஓரங்கட்டப்பட்டுவந்த, வேறுவழியின்றி விளையாட அனுமதித்த இஸ்லாமிய வீரரான முகமது ஷமி ஒரே போட்டியில் 7 விக்கெட் எடுத்ததும், பார்ப்பன உயர்சாதியை சாராத விராத் கோலி 3 சதம் அடித்ததும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது; சங்கிக் கூட்டத்தை பித்துக்கொள்ள வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்திய அணி வெற்றி பெற்றால் அதனை மோடியின் வெற்றியாக சித்தரிப்பதற்கு ஏதுவாக கொல்கத்தா, டெல்லி, மும்பை போன்ற பிரபல மைதானங்களை தவிர்த்துவிட்டு, இறுதி போட்டியை சங்கிகள் புடைசூழ நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தியது, மோடி-ஜெய்ஷா கும்பல்.

இந்திய அணிக்கு உலக கோப்பை பெற்று தந்த தோனி மற்றும் கபில் தேவ் (மல்யுத்த வீராங்கணைகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததும் முக்கியமான காரணம்) போன்ற முன்னாள் இந்திய அணி தலைவர்களைக் கூட சாதி ஏற்றத்தாழ்வு காரணமாக அழைக்காமல், மோடி, அமித்ஷா, ஜெய்ஷா, ஜக்கி வாசுதேவ், பா.ஜ.க. முதல்வர்கள், பா.ஜ.க. மாநிலத் தலைவர்கள் போன்ற காவி பாசிஸ்டுகளை அழைத்து பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தை போல இறுதிப் போட்டியை நடத்தியது, பாசிச கும்பல்.

ஆனால், உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் வெற்றியை மோடியின் வெற்றியாக காட்டி, உலக கோப்பையை இந்தியா முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்று, சரிந்துப் போன தனது பிம்பத்தை தூக்கி நிறுத்தலாம் எனக் கனவு கண்ட மோடிக் கும்பலின் வாயில் மண்ணை வாரிக் கொட்டியதாக அமைந்தது இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்வி.

பத்து போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றிபெற்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் தோற்றதற்கு ஒரே காரணம் மோடிதான் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் வசைபாடினர். அதிர்ஷ்டமற்றவர் என்ற அர்த்தத்தை குறிக்கின்ற #PanautiModi (பனாட்டி மோடி) என்ற ஹேஷ்டாக் இணையத்தில் டிரென்ட் ஆகியது.

“இந்தியா தோற்றதுக்கு ஒரே காரணம் மோடி”, “மோடி மைதானத்தில் போட்டியை நடத்தியதால் தான் இந்தியா தோற்றுவிட்டது”, “ஊரில் எவ்வளவோ நல்ல மைதானங்கள் இருந்தும் வெத்து விளம்பரத்திற்காக ஒழுங்கான பிட்சே இல்லாத மோடி மைதானத்தில் போட்டியை நடத்தி மோசமான போட்டியை பார்க்க வைத்துவிட்டனர்”, “பத்து போட்டியின்போதும் மோடி எங்கு இருந்தாரோ அங்கேயே இறுதி போட்டியின்போதும் இருந்திருக்கலாம்”, “மோடி பார்த்தார், இந்தியா தோற்றுவிட்டது”, “உலகிலேயே நான் தான் பெரிய பீடை என்று நினைத்தேன், பார்த்தால் மைதானத்தில் மோடி உட்கார்ந்து இருக்கிறார்”, “மோடியைவிட ஒரு தரித்திரம் கிடையாது” என்றெல்லாம் மோடியை வறுத்தெடுத்தனர், கிரிக்கெட் ரசிகர்கள்.

முக்கியமாக, பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர், “ஃப்ரீ பாலஸ்தீன்” முழக்கம் எழுப்பியவாறு மைதானத்திற்குள் நுழைந்து இந்திய அணி வீரர்களை கட்டியணைத்தது என்பது பெரியதொரு போராட்ட வடிவமாக இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அன்று கிரிக்கெட் பார்த்த கோடிக்கணக்கான மக்களுக்கு பாலஸ்தீனத்தை நினைவூட்டியது அந்த நடவடிக்கை. மொத்தத்தில் இந்த உலக கோப்பை பாசிச கும்பலை “டக் அவுட்” ஆக்கியிருக்கிறது.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீது தாக்குதல் | வலுக்கும் கண்டனம் – பாகம் 2

தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீது தாக்குதல் | வலுக்கும் கண்டனம் – பாகம் 2

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அச்சத்தில் எண்ணூர் மக்கள் – அமோனியா கசிவால் மூச்சு திணறல் | தோழர் மருது

அச்சத்தில் எண்ணூர் மக்கள் – அமோனியா கசிவால் மூச்சு திணறல் | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு நாள்! சிவந்தது கீழ்வெண்மணி | வீடியோ

கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு நாள்! சிவந்தது கீழ்வெண்மணி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவசாயிகள் மீது குண்டாஸ்: தி.மு.க. அரசின் துரோக நடவடிக்கை!

சோறு போடும் நிலத்தினை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடினால் விவசாயிகள்மீது குண்டர் சட்டம் பாயுமாம். இத்தகைய கொடூரம் நிகழ்ந்தது பா.ஜ.க. ஆளும் வட மாநிலத்தில் அல்ல. “தனது அரசு விவசாயிகளுக்கு என்றென்றும் உற்ற தோழனாக இருக்கும்” என்று வசனம் பேசிய மு.க.ஸ்டாலின் ஆளும் தமிழ்நாட்டில்.

சிப்காட் திட்டத்திற்கு நிலம் கொடுக்க மறுத்தவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டுள்ளது என்பது இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒன்றாகும்.  இந்த அடக்குமுறைக் குறித்து மக்கள் அதிகாரம் சார்பில் உண்மை அறியும்குழு அமைக்கப்பட்டது. அக்குழு விவசாயிகள் மீது பொய்வழக்குகள் பதியப்பட்டது, பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி மன்னிப்பு கடித்ங்கள் பெற்றது, தி.மு.க. அரசே பணம் கொடுத்து  சிப்காட்டிற்கு ஆதரவான போராட்டங்களை நடத்தியிருப்பது உள்ளிட்ட பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளது.

000

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு எனும் பகுதி தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சிப்காட் தொழிற்பூங்காவாக செயல்பட்டுவருகிறது. இங்கு ஏற்கனவே இரண்டு சிப்காட் தொழில் வளாகங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில் மூன்றாவது சிப்காட் அமைப்பதற்காக செய்யாறு வட்டத்திலுள்ள மேல்மா, நர்மாபள்ளம், எருமைவெட்டி, மணிப்புரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து 3,174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தி.மு.க. அரசு முடிவு செய்தது.

இதற்கான நடவடிக்கையாக கடந்த மே மாதத்தில், 1,200 ஏக்கர் அளவுக்கான நிலத்தை கையகப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டது. அரசின் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், ஜூன் 2-ஆம் தேதி மேல்மா கிராமத்தில் ஒன்று திரண்டு, பந்தல் அமைத்து இரவு பகல் பாராமல் போராட்டம் நடத்தினர். அன்று தொடங்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக 125 நாட்களுக்கும் மேலாக நடந்தது.

ஆனால், விவசாயிகளின் போராட்டத்தினை தி.மு.க. அரசு, ஒரு பொருட்காகக்கூட மதிக்கவில்லை. தங்களது நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தபோதும் விவசாயிகளுக்கு உரிய பதிலேதும் அளிக்கப்படவில்லை. சிப்காட்டிற்கென அமைக்கப்பட்டிருந்த அலுவலகத்திற்கு விவசாயிகள் டிராக்டர்களில் சென்று மனு அளித்தும் பார்த்தனர். ஆனால் எதுவும் நகரவில்லை.


படிக்க: 🔴LIVE: மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு


இப்படியாக மாவட்ட ஆட்சியர், அமைச்சர் எ.வ.வேலு, சார் ஆட்சியர் ஆகியோரை சந்திக்க பலமுறை விவசாயிகள் முயற்சித்தும் பயனில்லை. அதிகாரிகளும் ஆளும்வர்க்கமும் விவசாயிகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனவே, செவிடாக இருக்கும் இந்த அரசுக்கு தங்களது போராட்டங்களின் மூலம் செவிப்பறையை கிழிக்கச் செய்ய முடிவுசெய்தனர் விவசாயிகள். போராட்டத்தின் வீரியம் அதிகரித்தது.

போராட்டத்தின் 125-வது நாளான நவம்பர் 2-ஆம் தேதி தங்களது ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள் ஆகியவற்றை செய்யாறு கோட்டாட்சியரிடம் திருப்பிக் கொடுக்கும் நோக்குடன் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் டிராக்டர்களில் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசு, மண்டபத்தில் அடைத்தது. மனு கொடுக்க சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், மேல்மா பகுதியில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்கள்மீது தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தது போலீசு.

போராடினால் குண்டர் சட்டமா?

திருடன், கொலைகாரன், கள்ளச்சாராயம் காய்ச்சுபவனை விரட்டி விரட்டிப் பிடிப்பதைப் போல நவம்பர் 4-ஆம் தேதி, நள்ளிரவு கிராம மக்களின் வீடுகளுக்குள் புகுந்தும், போராட்ட பந்தலில் தங்கியிருந்தவர்களையும் பிடிக்க தீவிர வேட்டையில் இறங்கியது போலீசு. போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர்களைக் குறிவைத்து தேடியது.

அன்றிரவு நடத்தப்பட்ட ‘தேடுதல் வேட்டையில்’ பிடித்துவரப்பட்டவர்கள் மீது, “தொடர் போராட்டங்களில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணி சென்றது, போலீசு வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது” என போராட்டத்தின் தொடக்கத்தில் விவசாயிகள்மீது போடப்பட்ட 11 பொய் வழக்குகளைத் தோண்டி எடுத்து அதன்கீழ் வழக்கு பதிந்து கைதுசெய்தது போலீசு. கைது நடவடிக்கையை எதிர்த்து கேள்வி கேட்ட பெண்களிடம், விபச்சாரம் மற்றும் கஞ்சா விற்ற வழக்கு போட்டுவிடுவோம் என மிரட்டியது.

“அன்னைக்கு ராத்திரி மணி ரெண்டு இருக்கும். எங்க வீட்டு கதவ தட்டிக்கிட்டே இருந்த போலீசு, தடாலடியாக உள்ளே வந்து என் புருஷன தரதரன்னு இழுத்துட்டு போனாங்க. என் புருஷன் எதுவும் தப்பு பண்ணல, போராட்டத்துல நான்தான் கலந்துக்கிட்டனு கத்திக்கிட்டே அவங்க பின்னாடி ஓடுனேன். வீட்டில கொழந்த குட்டிங்க இருக்குதுல அவங்கள பாத்துக்கும்னா ஒழுங்கா போய்டு. இல்லைனா, உன்னையும் பிடிச்சிட்டுபோய் கேஸ் போட்டுறுவோம்னு மிரட்டிட்டு, அவரை பிடிச்சி வேனில ஏத்திட்டு போயிட்டாங்க. இப்படி நடுராத்திரில வந்து கைது செய்றளவுக்கு அவர் என்ன தீவிரவாதியா” என கேள்வி எழுப்புகிறார் மேல்மா பகுதியை சேர்ந்த ராமா.

“என் புருஷன் கட்டியிருந்த கைலிய அவுத்துட்டு வெறும் உள்ளாடையோட போலீசு இழுத்துட்டு போச்சு. மறுபடியும் அடுத்த நாள் என் வீட்டுக்கு வந்து சோதனையிட்டாங்க. என்ன பண்றீங்கனு கேட்டதுக்கு, உன் வீட்டில கஞ்சா இருக்குதா, வேற ஏதாவது இருக்குதான்னு பாக்க வந்தோம்னு சொன்னாங்க” என போலீசு அராஜகமாக நடந்துக்கொண்டதாக கதறுகிறார் மணிப்புரத்தைச் சேர்ந்த கல்பனா. இப்படியாக அட்டூழிய அராஜக வேலையில் ஈடுபட்டது திராவிட மாடல் போலீசு. இதன்மூலம் மேல்மா சுற்றுவட்டார கிராமங்களை தி.மு.க. அரசு பரபரப்பான சூழ்நிலையில் வைத்திருந்தது.

அன்று போலீசால் பிடித்துவரப்பட்ட 22 பேரில் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அருள் ஆறுமுகம், திருமால், பச்சையப்பன், தேவன், சோழன், பாக்கியராஜ், மாசிலாமணி ஆகிய ஏழு பேர் மீது குண்டர் சட்டத்தை ஏவிவிட்டதோடு, தீவிரவாதிகளை சிறையிலடைப்பதை போல அவர்களை திருச்சி, மதுரை, வேலூர், கடலூர், பாளையங்கோட்டை சிறைகளில் பிரித்து அடைத்தது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு இதய பிரச்சினை இருக்கிறது என்று தெரிந்தும் அவருக்கு மருந்து ஏதும் வழங்காமல் இருந்ததோடு, அவரை பார்க்க வந்த அவரின் மனைவியிடம் “தனக்கு பைத்தியம் பிடிப்பதுபோல இருக்கு” என்று சொல்லுமளவுக்கு உளவியல் ரீதியாக சித்தரவதை செய்திருந்தது போலீசு.

அமைதி வழியில் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டது தமிழ்நாட்டு மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விவசாய சங்கங்கள், ஜனநாயக சக்திகள் தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். எதிர்ப்புகள் வலுப்பெறவே, ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. மேலும், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால், வெளியிலிருந்து போராட்டத்தைத் தூண்டினார் எனக் கூறி அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யப் மறுத்தது, தி.மு.க. அரசு. இதற்கு, அருள் ஆறுமுகம் சேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக போராடியவர் என்றும் காரணம் கூறியது.

இதுகுறித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “அந்த ஊரிலேயே இல்லாதவர்களை எல்லாம் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடச் செய்கிறார்கள். அந்த பகுதி மக்களை வெளியூரைச் சேர்ந்த ஒருவர் தூண்டிவிடுகிறார்” என விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தினார். ஆனால் இதனை மறுக்கும் அப்பகுதி மக்கள், “விவசாயிகளின் கோரிக்கையின் பேரில்தான் எட்டுவழிச் சாலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அருள் ஆறுமுகம் இப்போராட்டதில் கலந்துகொண்டார்” என்று தி.மு.க. அரசை அம்பலப்படுத்துகின்றனர்.


படிக்க: மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 1


மேலும், நவம்பர் 23, 24 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற சிப்காட் வேண்டும் என்ற போராட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள், மாவட்டப்போலீசு, திமுகவினர் ஆகியோரால் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பதையும் உண்மை அறியும் குழு அம்பலப்படுத்தியுள்ளது. இப்போராட்டங்களுக்கு வந்தவர்களுக்கு ரூ 200, பிரியாணி, மதுபானம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்காட் வேண்டும் என்ற கோரிக்கையோடு நடத்தப்படும் போராட்டப் பாணியானது ஸ்டெர்லைட் போராட்டத்தை மேற்கொள்ளப்பட்ட அதே வழிமுறையாகும். 100 நாள் வேலைக்குச் சென்றவர்களை அழைத்து வருவது, வேலை தருவதாக பொய் சொல்லி மக்களை அழைத்துவருவது ஆகிய கிரிமினல் வேலைகளில் திமுக அரசு, மாவட்டப்போலீசு, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடு பட்டுள்ளன. இதிலிருந்தே புரியும் யார் வெளியிலிருந்து போரட்டத்தை  தூண்டிவிட்டுள்ளார்கள் என்பது.

மற்றொருபுறம், ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட பத்திரிகை செய்தியில், கைது செய்தவர்களை விடுதலை செய்யும்படி கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் அரசிடம் கோரிக்கை மனு அளித்ததாக கூறப்படுகிறது. அம்மனுவில், “வருங்காலங்களில் இதுபோன்று அரசு திட்டங்களைக் காரணமில்லாமல் எதிர்க்கமாட்டோம். இத்தகைய தவறுகளை வெளியாட்கள் தூண்டுதலின் பேரில் செய்துவிட்டோம்” என உறவினர்கள் எழுதியிருந்ததாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

ஆனால், நவம்பர் 4 அன்று நள்ளிரவு குண்டுக்கட்டாகப் பிடித்து செல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் சில காதிதங்களைக் காண்பித்து, “இதில் கையெழுத்து போட்டால்தான் உன் புருஷன் எங்கே இருக்கானு சொல்லுவோம். கையெழுத்து போடலனா வீட்டை ஜப்தி பன்னுவோம், கடைக்கு சீல் வைப்போம் என மிரட்டி போலீசு கையெழுத்து வாங்கியது” என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர். மிரட்டி வாங்கப்பட்ட கையெழுத்துதான் மேலே மக்கள் கொடுத்ததாக சொல்லப்படும் ‘கோரிக்கை மனு’.

இப்படியாக விவசாயிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் ஒருபுறம் மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டு, விவசாயிகள் கோரிக்கை வைத்ததாகவும் அதனை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுகொண்டு மனமிறங்கி குண்டர் சட்டத்தை வாபஸ் பெற்றதாகவும் நாடகமாடுகிறது தி.மு.க. அரசு.

நில மாஃபியாவாக  தி.மு.க. அரசு

மக்களிடமிருந்து அடாவடியாக நிலத்தைக் கையகப்படுத்துவதை நில மாஃபியா என்போம். அதே வேலையைதான் தி.மு.க. அரசு தற்போது செய்துவருகிறது. “3-வது சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு கையகப்படுத்தவிருக்கும் 3,174 ஏக்கர் நிலத்தில் வெறும் 7 ஏக்கர் நிலம் மட்டுமே நஞ்சை நிலம். தற்போது 1,200 ஏக்கர் அளவிற்கு நிலஎடுப்பிற்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதில் நஞ்சை நிலம் எதுவுமில்லை” என புளுகுமூட்டையை அவிழ்த்துவிடுகிறது தி.மு.க. அரசு.

ஆனால் உண்மையில், 361 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை தவிர மீதமுள்ள 2,700 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் விவசாயிகளுக்குச் சொந்தமான வளமான விளைநிலங்களாகும்.

“தொழிற்சாலை கட்டுவதற்கு நிலம் தேவைப்படுகிறது. எங்கே போய் எடுப்பது. கடலிலும், வானத்திலும் கட்டமுடியாது. விவசாய நிலங்களை கையகப்படுத்தினால்தான் தொழிற்சாலை கட்ட முடியும். தொழிற்சாலை கட்டினால்தான் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்று திமிர்தனமாக பேசுகிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு.

ஆனால், “நிலம்தான் எங்களுக்கு சோறுபோடுகிறது. எங்களது தொழிலே விவசாயம்தான். அதனை எங்களிடமிருந்து பிடுங்கி எங்களுக்கு வேலைக் கொடுப்பதாக சொல்கிறது அரசு. வளர்ச்சி என்றால் யாருக்கான வளர்ச்சி. எங்களது வேலைகளை அழித்து வேலைகள் கொடுப்போம் என்பதெல்லாம் எந்தவகையில் நியாயம்” என்று விவசாயிகள் கேட்கும் கேள்விக்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை.

மேலும், “பெருந்துறை சிப்காட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட 3,000 ஏக்கர் நில பரப்பில் பாதி நிலத்தில்கூட தொழிற்சாலைகள் இல்லை. அங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதே இளைஞர்களுக்கு எங்கு வேலை கொடுக்கப்பட்டது?” என தி.மு.க.வின் செவிப்பறையில் அறைகின்றனர் மக்கள்.

“கார்ப்பரேட் மாடல்” தி.மு.க. அரசின் அராஜகம்

ஜூலை 2 முதல் போராடும் விவசாயிகளிடம் எவ்விதப்பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திட்டமிட்டே, சதித்தனமாக விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்து, போராட்டத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கத்திலே தி.மு.க அரசு செயல்பட்டுள்ளது.

அதேப்போல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை  டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கும் விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டதை ஊடகங்கள் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று எ.வ.வேலு தெரிவித்ததற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

போராடுபவர்களை கண்காணிப்பது, பொய் வழக்குகளின் கீழ் கைது செய்வது, வெளியாட்கள் தூண்டுதலின் பெயரில் நடத்தப்படும் போராட்டம் என்று சித்தரிப்பது, குடும்பங்களில் இருந்து ஆண்களை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு பெண்களை மிரட்டுவது, விவசாயிகள் போராட்டத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள் ஆதரவு தெரிவித்தால் அவர்கள் மீது வழக்கு பாயும் என்று பயபீதியைக் கிளப்புவது என அப்பட்டமான ஒடுக்குமுறைகளை விவசாயிகள் மீது செலுத்தியுள்ளது தி.மு.க. அரசு.

இந்த விவகாரத்தில் மட்டுமல்ல, இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில், பரந்தூர் விமான நிலையத்திற்காக 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதில் 3,774 ஏக்கர் பட்டா நிலங்களாகும். “விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் எதற்கு?” என ஓராண்டுக்கும் மேலாக போராடி வரும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை காகிதக் குப்பையாக்கியுள்ளது திராவிட அரசு.

தான் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டுவழிச் சாலை, டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம், ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட் திட்டங்களை எதிர்ப்பதாகவும், தனது ஆட்சி விவசாயிகளின் நலன் காக்கும் ஆட்சி, விவசாயிகளின் அனுமதியுடன்தான் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் கூறி மக்களை வாக்குவங்கியாகப் பயன்படுத்திக்கொண்ட தி.மு.க., தற்போது அதே மக்கள் விரோத திட்டங்களை நேரடியாகவும் நயவஞ்சகமாகவும் அமல்படுத்திவருகிறது; போராடும் மக்களை வன்முறையாளர்களாக சித்தரித்து மூர்க்கதனமாக ஒடுக்கிவருகிறது. இது விவசாய மக்களுக்கு தி.மு.க இழைத்துள்ள பச்சை துரோகம்.

தி.மு.க. கூட்டணி கட்சிகளும், பாசிச எதிர்ப்புக்கு தி.மு.க.தான் மாற்று என்பவர்களும் “ஸ்கிராப் குண்டாஸ்” (குண்டர் சட்டத்தை நீக்கு) என மென்மையாக தி.மு.க.வை ‘மிரட்டியதோடு’ தங்களது கடமையை முடித்துக் கொண்டார்கள். கூட்டணி கட்சிகளும் விவசாயிகள்மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியதே தவிர எந்த கட்சிகளும் “நிலத்தை கையகப்படுத்தக் கூடாது” என்ற மக்கள் கோரிக்கையை முன்வைத்து தி.மு.க. அரசை நிர்பந்திக்கவில்லை; நிர்பந்திக்கவும் நிர்பந்திக்காது என்பதுதான் எதார்த்தம்.

கார்ப்பரேட் சேவைக்காக உழைக்கும் மக்கள்மீது கொடுங்கரங்களை ஏவிவிடுவதில் எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஒன்றுதான்.எனவே, இனியும் இந்த அரசிடம் கெஞ்சி பயனில்லை. களத்தில் இறங்கி போராடுவதே தீர்வு!  இது, தி.மு.க. தனது பாசிச அடக்குமுறைகள் மூலம் போராடும் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு கற்பித்துள்ள பாடம்.


வெண்பா

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தனியார் பள்ளிக்கு நிதி ஒதுக்கி, அரசுப் பள்ளிகளை அழிக்கிறீங்க | கொந்தளிக்கும் உமா

“தனியார் பள்ளிக்கு நிதி ஒதுக்கி, அரசுப் பள்ளிகளை அழிக்கிறீங்க”
கொந்தளிக்கும் உமா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீது தாக்குதல் | வலுக்கும் கண்டனம்

தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீது தாக்குதல் | வலுக்கும் கண்டனம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | புரட்சிகர பாடல்கள்

வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | புரட்சிகர பாடல்கள்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube