சென்ற வாரம் 24.07.2017 முதல் 28.07.2017 வரை வினவு தளத்தில் வெளியான 26 குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன. இந்தக் குறுஞ்செய்திகளில் விவசாயப் பிரச்சினைகள், ஐரோப்பா, ஆவணப்படங்கள், புகைப்படக் கட்டுரைகள், செய்தி வீடியோக்கள், பாஜக – மோடி அரசின் மீதான விமரிசனச் செய்திகள், தமிழக அரசியல் – செய்திகள் என பல வகைகள் இருக்கின்றன. இந்தக் குறுஞ்செய்திகள் குறித்து உங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள்,விமரிசனங்களையும் அறியத் தாருங்கள்! நன்றி
– வினவு
திருச்சி பீமநகர் டாஸ்மாக் நிரந்தர மூடல் ! மக்கள் அதிகாரத்தின் அடுத்த வெற்றி ! கடைக்குள் சென்று கணக்குகள் பார்த்து விட்டு 5 மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்த அதிகாரிகள் மது பாட்டில்களை டாஸ்மாக் வண்டியில் ஏற்றிவிட்டு கடையை மூடினார்கள். |
பல்லடம் GTN நிர்வாகத்தை கண்டித்து புஜதொமு கண்டன ஆர்ப்பாட்டம் ! சசிகலா சட்டப்படி கொள்ளைக்காரி என்று நிரூபிக்கப்பட்ட குற்றவாளி. அவர் சுதந்திரமாக வெளியே செல்ல முடிகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அரைமணி நேரம் அதிகமாக ஆர்ப்பாட்டத்தில் பேசிவிட்டால் சட்டம் ஒழுங்கு கேட்டுவிடுமா? |
விவசாயியை வாழவிடு ! கிருஷ்ணகிரி, காஞ்சியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் கிருஷ்ணகிரி மாவட்டமானது ஆந்திர மாநில எல்லைப்பகுதியாகவும் அமைந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்கள் மத்தியிலும் மக்கள் அதிகாரத்தின் பிரச்சாரமானது எடுத்துச் செல்லப்பட்டது! |
விவசாயிகளை காப்பாற்ற ஐ.டி ஊழியர்களின் பிரச்சார இயக்கம் விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் வாழ்வாதார நெருக்கடி குறித்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுளோம். சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களையும், பிற ஐ.டி ஊழியர்களையும் பின்வரும் நடவடிக்கைகளில் பிரச்சாரத்தில் ஈடும்படி அழைக்கிறோம். |
நீட் தேர்வு : போராட்டம் வீறு கொண்டு எழ வேண்டாமா ? தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்கள் மருத்துவக் கனவு கலைந்து விட்டதை எண்ணி அனுதினமும் பேசுகிறார்கள். பெற்றோர்களுடன் இணைந்து இந்த அரசை எதிர்த்து முடிந்த அளவு போராடி வருகிறார்கள். தங்களது ரத்தத்தில் கடிதம் எழுதுகிறார்கள். |
போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மாணவர் குபேரன் கைது ! தமிழகத்தில் மக்கள் பிரச்சனைக்காக போராடக்கூடிய மாணவர்களை கைது செய்து அச்சுறுத்தும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது போலிசு. |
செய்தியை ‘கவர்’ செய்ய ‘கவர்’ கொடுத்த ஒடிசா பாரதிய ஜனதா ! லஞ்ச விவகாரத்தை அம்பலப்படுத்தியதோடு, எதிர்ப்பும் தெரிவித்துள்ள ஒடிய பத்திரிகையாளர்கள், பாரதிய ஜனதாவின் முகத்தில் சாணியடித்துள்ளனர் என்பதே மேற்படி செய்தியின் சிறப்பு. |
விவசாயிகளுக்காகப் போராடும் பச்சையப்பன் மாணவர்கள் மீது தடியடி – கைது ! கல்லூரி முதல்வர் வந்து பேசட்டும், மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யட்டும் நாங்களே கலைந்து செல்கிறோம் என்றனர். இதையெல்லாம் காதிலேயே வாங்காத போலீசு, மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியது. |
பத்திரிகையாளர்களும் நடுநிலைமையும் – வீடியோ குறைகள் போக இந்த சிறிய நேர்காணல் ஒரு இளம்பத்திரிகையாளருக்கு ஒரு எளிய கையேடாக இருக்கும். சமரசமின்றி எழுத விரும்பும் இளைஞர்களுக்கு ஊக்கத்தையும் கொடுக்கும். |
முன்னணி ஐ.டி நிறுவன ஊழியர்கள் பு.ஜ.தொ.மு – ஐ.டி தொழிற்சங்கத்தில் பொறுப்பேற்பு ! இந்தியாவின் சுமார் 40 லட்சம் ஐ.டி/ஐ.டி சேவைத் துறை ஊழியர்களை சங்கமாக திரட்டும் முயற்சியில் இந்நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல். ஐ.டி நிறுவனங்கள் இந்தியா முழுவதிலும் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் நிலையில், நாடு முழுவதிலும் ஊழியர்கள் சங்கங்களை அமைப்பது அவசியமான ஒன்று. |
ட்ரம்போவும் நானும் – மு.வி. நந்தினி இவர்களைப் பொறுத்த வரையில் நான் ஒரு தோற்றுப்போன பத்திரிகையாளர். பெண்கள் இதழ்களில் பணியாற்றிய அனுபவம் இருந்தாலும் என்னை அந்தப் பணிக்கு அழைக்க மாட்டார்கள். |
கதிராமங்கலம் : சப் கலெக்டரை முற்றுகையிட்ட குடந்தை அரசுக்கல்லூரி மாணவர்கள் ! அனைத்து கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டுகாக ஒன்றினைந்தது போல், போராட்டங்களில் ஈடுபடவேண்டும், தமிழகத்தை அழிக்க நினைக்கும் இந்த அரசிடம் கெஞ்சாதே! தடுக்கவரும் போலிசுக்கு அஞ்சாதே! |
கேரளா – செவிலியர்களின் போராட்டம் வெற்றி ! செவிலியர்களின் இடைவிடாத, உறுதியான போராட்டத்தின் மூலம், தற்போது கேரளாவில் இருக்கும் 1282 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 80,000 செவிலியர்கள் பயனடைவர். |
அதிகாரக் கொழுப்பு : பொண்டாட்டிய வித்தாவது கக்கூஸ் கட்டு ! ஹிந்துத்துவ பாசிஸ்டுகளையும், அதிகாரவர்க்கக் கிரிமினல்களையும் விட வேறு யாராலும் ஏழைகளை இழிவாக நடத்த முடியுமா? |
இந்தோ சீன எல்லைப் பதற்றம் : வெத்து வேட்டாக சத்தமிடும் பாஜக சீன அசுரர்களை விரட்ட “கைலாஷ், ஹிமாலயா, அவ்ர் திபெத் சீன் கி அசூரி ஷக்தி சே முக்த் ஹோ” என்கிற மந்திரத்தை இந்தியர்கள் தினமும் ஐந்து முறை உச்சரிக்க வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்த்ரேஷ் குமார். |
வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் மதத்தை அடிப்படையாக வைத்தோ, இந்தியா என்ற தேசத்தை அடிப்படியாக வைத்தோ எந்த “இந்து” மன்னனும் போரிட்டதில்லை. தனது இராஜ்ஜியத்தை விரிவாக்கிக் கொள்ள மட்டுமே போர்கள் நடத்தப்பட்டன |
விவசாயம் பொய்த்துப் போய் சென்னை நகர ஏடிஎம்-களில் காவலாளிகளாக இருக்கும் விவசாயிகளின் கதை தோழர் துரை சண்முகத்தின் கவிதையாக….. |
என்னவெல்லாம் செய்வார் ராம்நாத் கோவிந்த் ? சீக்கிரம் வைஃபை பாஸ்வேர்டை மாற்றி விட வேண்டும். இல்லையென்றான் பிரனாப் ஓசியில் நெட்ப்ளிக்சில் படம் பார்க்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து கொண்டிருப்பார். |
குண்டாஸ்.. குண்டாஸ்.. ஸ்டுடண்டுக்கு குண்டாஸ்.. புதிய பாடல் மாணவர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் அடக்குமுறையால் ஒடுக்கிவிடலாம் என கனவு காணும் தமிழக அரசை ஏளனம் செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புதிய பாடல். |
தொடரும் ஆப்கன் அவலம் – அப்பாவிகளை படுகொலை செய்யும் அமெரிக்கா அமெரிக்க விமானப்படை வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி 2017 -ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் அமெரிக்க-ஆப்கன் போர் விமானங்கள் 1634 குண்டுகளை வீசியிருக்கின்றன. |
ஏழைகளுக்கு எதற்கு எட்டாவது வரை படிப்பு ! – கவிதா சொர்ணவல்லி பத்து வயதிலயே அந்தக் குழந்தையை “நீ படிப்பதற்கு லாயக்கில்லாதவன்” என்று மன ரீதியாக சிதைப்பது. படிப்பை பாதியில் நிறுத்தினால் கூட பிழைத்துக் கொள்ளும் நம்முடைய குழந்தைகள், இது போன்ற மனரீதியான சிதைவுகளை எப்படிக் கடப்பார்கள் ? |
இனி வந்தே மாதரம் பாடாதவன் தேச விரோதி ! சென்னை உயர்நீதிமன்றம் ஒருபுறத்தில் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புகளை வழங்கித் தள்ளிக் கொண்டிருக்க மற்றொரு புறத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்த வழக்குகளில் எல்லாம் மக்கள் விரோதத் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் வழங்கி வருகிறது. |
மோடியின் ஆட்சியில் இந்தியா கலவரங்களில் நம்பர் 1 நாடு இனவாத, வன்முறைகள் மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 41% உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2014- ம் ஆண்டு நடைபெற்ற இனவாத, வகுப்புவாத வன்முறைகளின் மொத்த எண்ணிக்கை 336. ஆனால் அதுவே கடந்த 2016 -ம் ஆண்டில் 475-ஆக உயர்ந்திருக்கிறது. |
நீட் தேர்வு : மற்றுமொரு வியாபம் ஊழல் ! தேர்வெழுத வரும் மாணவர்கள், வெறுமனே கணினிகளின் முன் அமர்ந்திருக்க வேறு ஒரு இடத்தில் இருந்து அக்கணினிகளின் திரையை இயக்கி (Remote Access) ஏஜெண்டுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வேறு நபர்கள் தேர்வை எழுதியுள்ளனர். |
நம்முடைய கனவு ஏன் சிதைக்கப்பட்டது ? சிறையிலிருந்து ஒரு கடிதம் ! நாமெல்லாம் எளிய மனிதர்கள், எளிய மனிதர்களுக்காக எளிய வழிகளில் உழைக்கிறவர்கள். நம்முடைய நம்பிக்கை, அன்பு, கனவு ஆகியவற்றைப் பார்த்து இந்த அசுரத்தனமான அரசு ஏன் பயம் கொள்கிறது? |
தமிழகமெங்கும் விவசாயிகளிடம் நம்பிக்கையூட்டும் மக்கள் அதிகாரம் – படங்கள் விவசாயியை வாழவிடு ! விவசாயியின் அழிவு சமூகத்தின் பேரழிவு ! என்ற முழக்கத்தின் கீழ் வருகின்ற ஆகஸ்ட் 5, 2017 அன்று தஞ்சையில் மக்கள் அதிகாரம் சார்பில் மாநாடு நடைபெறவுள்ளது. விவசாயத்தை வாழவைக்க தஞ்சைக்கு திரண்டு வாரீர்… |
_____________
இந்தப் பதிவு உங்களுக்கு பயனளித்ததா?
- உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி