கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழுவினர் 5000 ராக்கெட்டுகளை ஏவினர். அதனையடுத்து, இஸ்ரேல் காசா மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் அரசின் இந்த கொடூர தாக்குதல்களுக்கு மோடி அரசும் மேற்குலக நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல்களில், காசாவில் பல குழந்தைகள் உட்பட 1,354 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 6,049 பேர் காயமடைந்துள்ளனர். பல பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். பாலஸ்தீனியர்களின் வழிபாட்டுத் தளங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
ஹமாஸ் குழுவால் சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று கொலைகார இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக காசா இருளில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில், காசாவிலிருந்து வெளியாகும் கீழ்க்கண்ட புகைப்படங்கள் காசாவில் வாழும் பாலஸ்தீனிய மக்களின் மோசமான நிலைமையையும் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் ஏகாதிபத்தியங்களின் இரத்தவெறியையும் நமக்கு உணர்த்துகின்றன.










ஏன்.இகிப்து காசா மக்களுக்கு உதவுவதில்லை. காசா பகுதியுடனான.எல்லையை.ஏன் நிரந்தரமாக மூடி வைத்துள்ளனர்
எகிப்து 1979-ஆம் ஆண்டிலேயே இஸ்ரேலுடன் கைக்குலுக்கிக் கொண்டது. (அமெரிக்கா தான் கட்டப் பஞ்சாயத்து செய்து வைத்தது). இஸ்ரேலை மீறி எதையும் செய்யும் நிலையில் எகிப்து இல்லை.
காசா பகுதி சுமார் 23 இலட்சம் பாலஸ்தீன மக்களைக் கொண்டிருக்கும் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாய் உள்ளது. எகிப்து – காசா எல்லையான ராபா எல்லையைத் தவிர காசாவின் மற்ற அனைத்துப் பகுதிகளும் இஸ்ரேலால் சூழப்பட்டுள்ளது. எல்லையைத் திறந்தால், இஸ்ரேலின் ஒடுக்குமுறை காரணமாக இலட்சக் கணக்கான பாலஸ்தீன மக்கள் அகதிகளாக எகிப்துக்குள் நுழைவார்கள். எகிப்து மக்கள் பாலஸ்தீன மக்களைத் தங்களின் சகோதரர்களாகக் கருதினாலும், எதிப்து அரசானது அவர்களை அகதிகளாகவே கருதுகிறது.