இந்துத்துவ சதி சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு !
1949 இரவில் 50 பேர் கொண்ட கும்பல் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமன் சிலையை வைக்கிறது. இது தொடர்பாக குற்றவாளிகளின் பெயரைக் குறிப்பிட்டு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.
அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு : பல்லிளிக்கிறது பார்ப்பன சதி !
அப்படியானால் ஒரு பைசாகூட ஊழலே நடக்கவில்லையா என்று நரித்தனமான கேள்வியொன்றை பார்ப்பனக் கும்பல் எழுப்பக்கூடும். பொதுச்சொத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் தனியார்மயம்-தாராளமயம் என்ற கொள்கையே ஊழல்தான்.
தேவதாசி முறை : நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !
பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவதாசி முறையை நீட்டிக்க முயற்சிகள் நடந்த 1996-ம் ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை இது. தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்துமென்று நம்புகிறோம்.
பாபர் மசூதி வழக்கு : மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன் !
1992-இல் பாபர் மசூதியை இடிப்பதற்குத் தோதாக டிசம்பர் 6 அன்று கரசேவைக்கு அனுமதியளித்தது உச்ச நீதிமன்றம். 25 ஆண்டுகளுக்குப் பின் இன்று இந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வருவதன் மூலம் மோடிக்கு உதவியிருக்கிறது.
மோடியின் 2018 கரசேவை ! புதிய ஜனநாயகம் ஜனவரி 2018 மின்னூல்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் : ஆர்.கே நகர் தேர்தல் : அம்மா காட்டிய வழியில் ! , அன்று பாபர் மசூதி இடிப்பு! இன்று பொதுத்துறை வங்கி அழிப்பு!! மோடியின் கரசேவை, ஒக்கி புயல்: ‘’இயற்கையின் பெயரால் இனப்படுகொலை”, அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு: பல்லிளிக்கிறது பார்ப்பன சதி!....
நூலறிமுகம் : பன்றித் தீனி – பிக் பாஸ் – கொலைகார கோக் – செயற்கை நுண்ணறிவு
இன்று நமது இளைய தலைமுறையை மட்டுமல்ல, பெரியவர்களையும் அடிமைப்படுத்தி விட்டது துரித உணவுப் பழக்கம். அறுசுவைகளின் அதீத பயன்பாடும் அது உருவாக்கும் சுவை வெறியும் நம்மை எப்படி உருவாக்கும்? பதிலளிக்கிறது "பன்றித்தீனி" புத்தகம்.
நெல் கொள்முதல் விலை : மீண்டும் வஞ்சனை !
விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ஆட்சியாளர்களிடமிருந்து விவசாயிகள் தம்மிடம் எடுத்துக்கொள்வதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.
ஆர்.கே நகர் தேர்தல் : அம்மா காட்டிய வழியில் !
“தேர்தலில் நிற்பவன் பதவியை டெண்டர் எடுக்கிறான்” என்பதுதான் இன்றைய எதார்த்தம். “பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டாலும் எம்.எல்.ஏ. வைத் தட்டிக் கேட்க முடியாது” என்பது மக்களுக்குத் தெரிகிறது.
சென்னை புத்தகக்காட்சியில் வினவு – புதிய கலாச்சாரம் நூல்கள் !
41வது சென்னைப் புத்தகக் காட்சியில் புதிய கலாச்சார வெளியீடுகள் ! கிடைக்குமிடம் கீழைக்காற்று வெளியீட்டகம் கடை எண் 297, 298. இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம் ( பச்சையப்பன் கல்லூரி எதிரில் ), சென்னை – 30
பேரிடர் : புயலா – அரசா ? புதிய கலாச்சாரம் ஜனவரி வெளியீடு !
மழை, புயல், சுனாமி முதலான இயற்கைச் சீற்றங்களால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையை விட, அரசாலும் அதன் மறுகாலனியாக்க திட்டங்களாலும் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகம்.
புது தில்லி ஓபராய் விடுதியில் தரமான காற்று கிடைக்குமாம் !
புது டெல்லியில் காற்று மாசுபாடு மக்கள் வாழ முடியாத அளவு எட்டி விட்டதால் நான்கு அடுக்கு காற்று சுத்திகரிப்பான் அமைப்பை பொருத்தி தங்களது வாடிக்கையாளர்களுக்கு மிக தூய்மையான காற்றை வழங்க இருக்கிறது ஓபராய் விடுதி.
மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்
பத்து வேலைக்கு இருபதாயிரம் பேர் போட்டி. எலும்புத் துண்டுக்கு அடித்துக் கொள்ளும் நாய்களாக நம்மை மாற்றி விட்டு, இதையே பெரிய கவுரவம் என்று கருதுமாறும் பழக்குகிறார்கள். அடுத்தவனை வீழ்த்தாமல் வாழமுடியாது என்ற பண்பாட்டை நமது மரபணுக்கள் வரை பதிக்கிறார்கள்.
பணிந்தால் பதவி – சதாசிவம் ! மறுத்தால் மரணம் – ஹர்கிஷன் லோயா !!
நீதிபதி லோயா இறந்து போன மூன்றாவது மாதத்திலேயே அவரது அகால மரணம் குறித்து விசாரணை வேண்டுமென லோயாவின் மகன் அனுஜ் மும்பய் உயர்நீதி மன்ற நீதிபதி மோஹித் ஷாவிடம் நேரிலேயே கடிதம் கொடுத்தும் அது கமுக்கமாகக் குப்பைக்கூடைக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
நமது தொழிலாளர்களின் நிலை 18, 19 -ஆம் நூற்றாண்டின் நிலைமைதான் ! தோழர் எஸ்.பாலன்
டொயோட்டோ கார் ஜெர்மனியில் என்ன விலையோ அதேதான் பெங்களுரிலும், சென்னையிலும், இங்கிலாந்து, அமெரிக்காவிலும். ஆனால், அதே இந்தியத் தொழிலாளியின் கூலி மட்டும் ஒரு டாலரில் கால் பங்கு, ஜெர்மனியில் 32 டாலர்.
மூலதனம் : மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு ! தோழர் தியாகு
மார்க்சும், எங்கெல்சும் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆற்றிய பணி என்பது தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே அறியும்படி செய்ததும், உணரும்படி செய்ததும் தான். இதில் ஒரு வார்த்தைகூட வீணாக எழுதவில்லை. அவர்களுடைய பணியின் சாரம் கனவுகளின் இடத்தில் அறிவியலை வைத்தார்கள்.





















