தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா நடத்தப்பட்டிருப்பதானது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று ஜனநாயக சக்திகளில் பலரும் பெருவிழா ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கின்றனர்.
திரைப்படத்தில் காணாமல் போன “அத்திப்பட்டி” கிராமத்தைப் போல, பெயரற்ற நிலையில் இந்த “இந்திரா காலனி” மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிக்பாஸ் வீட்டில் கூட சண்டையிட்டுக் கொண்டு 30 நாட்கள் வாழ்ந்துவிடலாம்; ஆனால் எங்கள் ஊரில் நிலவும் சாதி வெறிக்கு மத்தியில் 10 நாட்கள் வாழ்வதுகூட நரகம் தான்.
“என் சகோதரரைக் குதிரையிலிருந்து கீழே தள்ளி எங்களை அடித்தனர். நால்வர் எங்களைத் தாக்கினர். இந்த மாதிரி குதிரை ஊர்வலம் உங்களுக்கு கிடையாது என்று வெளிப்படையாகக் கூறினர்” என்று ஆதிக்கச் சாதிவெறியர்களின் வெறியாட்டம் குறித்து தாக்குதலுக்கு ஆளான கோலுவின் சகோதரி விவரித்துள்ளார்.
பள்ளர் சாதியைச் சார்ந்த கிஷோர், சக்கரவர்த்தி, திலீபன் ஆகிய மூன்று சாதிவெறியர்களும் தெருவிற்குள் நுழைந்து “சக்கிலிய பயலெல்லாம் எங்கள பாத்து போக சொல்லுவியா” என்று வழக்கறிஞர் மாரிமுத்து மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு “அடுத்த மாசம் உன்தெருவுல எப்படி திருவிழா நடக்கும்னு பார்ப்போம்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு எனப் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த மக்கள், தங்களது கிராமத்தின் பெயரை “வடக்கு அச்சந்தவிழ்த்தான்” என அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
பாசிஸ்டுகளை நாடாளுமன்றத்தில் வீழ்த்தி விட முடியும் என்றோ, பாசிச எதிர்ப்பு என்றால் நிபந்தனையின்றி தி.மு.க-வை ஆதரிக்க வேண்டும் என்றோ, இந்தியாவில் பாசிசத்தை மென்மைப் போக்கு கொண்டதாக வரையறுக்கும் சி.பி.எம்-இன் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளைக் கொண்டோ ஒருபோதும் பாசிசத்தை வீழ்த்த முடியாது.
ஒடுக்கப்பட்ட மக்களின் மாண்பைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அவர்களின் உடல்களைக் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் லாப வேட்டைக்கும், வாழ்வாதாரத்தை மலிவான உழைப்புச் சுரண்டலுக்கும் தாரைவார்க்கும் கள்ள ஒப்பந்தமே இந்த திருநர் சட்டம் - 2026.
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, பெரும்பத்து நீதி கேட்கிறது. ஜான் மார்க், திரிநாத் கட்டா, தாக்குதலுக்குள்ளானவர்கள் உள்ளிட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான, நீதியின் குரல்தான் அப்பகுதி மக்களின் தேர்தல் புறக்கணிப்பு.
தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பலே ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களில் ஊடுருவி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இத்தகைய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் கலவரங்களை தூண்டிவிட்டு ஆதிக்கச் சாதி மக்களை திரட்டிக்கொள்ள விழைகிறது.
தனக்கு பேராசிரியர்களால் ஏற்படுகின்ற சாதி வன்கொடுமைகள் குறித்து கல்லூரி முதல்வரிடம் மாணவர் புகார் அளித்தும் பேராசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கல்லூரி முதல்வரும் தன்னுடைய சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே மாணவர் உயிரிழந்திருப்பது பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் அரங்கேற்றப்பட்ட நிறுவனப் படுகொலையாகும்.
பல ஆண்டுகளாக அருந்ததியர் மக்கள் கடவுளை வழிபடத் தடை, இறந்தவர்களின் உடலை பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்குத் தடை, தெருவுக்குள் செருப்பு அணிந்து வரத் தடை என ஆதிக்க சாதிவெறியர்களால் அருந்ததியர் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடூரங்கள் தீண்டாமையின் உச்சமாகும்.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் எந்த தேர்தல் கட்சியும் இதுவரை "மலக்குழி மரணங்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்ற வாக்குறுதியைப் பெயரளவில்கூட அறிவிக்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு அது குறித்து எந்தவித அக்கறையும் இல்லை.
சட்டங்கள் வருகின்றன, உத்தரவுகள் வருகின்றன, இழப்பீடுகள் அதிகரிக்கின்றன - ஆனால் மரணங்கள் நின்றபாடில்லை. இது காயத்தைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, தொடர்ந்து கட்டுகளை மாற்றுவதைப் போன்றது.
வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20 | தொடர்புக்கு : 93853 53605
காதல் எங்கள் பிறப்புரிமை | பாடல் | பெருவிழா | சிவப்பு அலை
https://youtu.be/GpD2Ep-iQW0
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

























