Tekfog: பாசிச கருத்தாக்கத்தின் முதுகெலும்பு | பாகம் 1
”Tek fog: வெறுப்பு பிரச்சாரங்களின், இணையவெளி தாக்குதல்களின்,
மக்கள் அதிகாரம், நெல்லை மண்டலம்
உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
உக்ரைன் போரானது வெறுமனே ஐரோப்பாவில் இருக்கும் அமைதியை மட்டும் இன்று குலைக்கப்போவதில்லை. இது உலகளவிய மக்களில் பாதிப்புகளாக மாறிபோய் உள்ளது. அமெரிக்க – ரசிய ஏகாதிபத்தியங்கள் உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கு தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் அனைத்தையும் கொண்டுவருவதற்கான நடவடிக்கையாக இருப்பதினால், இந்த போரை எதிர்க்க வேண்டியிருக்கிறது. இந்த போருக்கு காரணமாக அமெரிக்க நேட்டோ கூட்டமைப்பையும் அதனுடைய கிழக்கு ஐரோப்பா விரிவாதிக்கத்தையும் நாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது. இதுபோன்ற உக்ரைன் போர் பற்றிய பல்வேறு பிரச்சினைகளை விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.
காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!
உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா அல்பேனியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தன. இதற்கு பிரேசில் பிரிட்டன் நார்வே உள்ளிட்ட 11 நாடுகள் ஆதரவளித்தன.
சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. ரஷ்யாவோ தனது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்துவிட்டது. வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த இந்தியாவை ரஷ்யாவை பாராட்டியது. உக்ரைனோ இந்தியாவின் புறக்கணிப்பை அதிருப்தியோடு சாடியுள்ளது.
உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா, கிரிமீயாவின் மூலம் கடல்வழி தாக்குதலையும் பெலாரஸ் மூலம் தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தியது. உக்ரைன் தலைநகர் கீவ்-வை சுற்றி வளைத்துள்ளதுடன், உக்ரைனின் பல மையமான பகுதிகளையும் ஆக்கிரமித்துவிட்டது.
படிக்க :
♦ உக்ரைன் போர் : ரசிய – அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை எதிர்ப்போம் || புரட்சிகர அமைப்புகள் அறிக்கை
♦ உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே வெளியேறு | கருத்துப்படங்கள்
ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்கும் முன்பு வரை ரஷ்யா போர்தொடுத்தால் எதிர்பாராத அளவிற்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வாயால் வடை சுட்டு வந்த அமெரிக்கா, போர் தொடங்கியதும், ‘உக்ரைன் நேட்டோவில் அங்கம் வகிக்கவில்லை. எனவே அந்நாட்டுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்ப முடியாது’ என்று கைவிரித்து விட்டது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் போரைக் கைவிடும்படி வலியுறுத்தியதோடு நிறுத்திக்கொண்டன. பிரான்சோ ரஷ்யாவுடன் போரிட விரும்பவில்லை என்று வெளிப்படையாக அறிவித்து விட்டது.
ஏன் இந்த பின்வாங்கல்? தயக்கம்?. ஐநா-வை ஆட்டி படைக்கும் அமெரிக்காவும் பொருளாதாரமும் ஆட்டம் கண்டு வருகிறது. அதன் உள்நாட்டு பொருளாதாரம் பலவீனம் அடைந்து வருகிறது. இதன் விளைவாகவே அமெரிக்கா பின்வாங்குகிறது.
சீனாவோ உலக மேலாதிக்கத்திற்கான போட்டியில் ரஷ்யாவை நம்பகமான கூட்டாளி என்ற வகையில்தான் இந்த புறக்கணிப்பு . அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா உள்பட பல்வேறு நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தடை, புதின் உட்பட ரஷ்ய அமைச்சர்களின் சொத்துக்கள் முடக்கம், ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யாவின் மீது அறிவித்து வருகின்றன.
ரஷ்யாவுக்கு ஏன் இவ்வளவு போர் வெறி ? என்ன காரணம் ? ரஷ்யாவின் கடலோரப் பரப்பு நீளமாக இருப்பினும் வருடம் முழுவதும் கடல் உறைந்தே இருக்கும். இது வணிகத்திற்கும் தெற்கு பகுதிகளுக்கு பண்ட பரிவர்த்தனை தொடர்புக்கும் இதற்கேற்ப துறைமுகளை அமைக்கவும் தடையாக உள்ளது.
எனவே வருடம் முழுவதும் உறையாத கருங்கடலில் கிரிமியா அமைந்துள்ளது. அதன் வழியாக மத்திய தரை கடல் பகுதியை அடையவும் அதன் மூலம் மற்ற நாடுகளில் கடல் வாணிபம் செய்ய முடியும். மேலும் தெற்குப் பகுதிக்கு செல்ல ஏதுவாகவும் கிரிமியாவின் செவஸ்புடல் துறைமுகம் இருப்பதால் அதை ரஷ்யா குத்தகைக்கு எடுத்திருந்தது.
இதற்கு ஈடாக உக்ரைனின் இறையாண்மையை காப்பதாக உறுதியளித்தது. ஆனால் தற்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ படையில் சேர்வதாக அறிவித்ததன் விளைவு எதிர்காலத்தில் இந்த துறைமுகத்தை இழக்க வேண்டும். இதனுடன் மத்திய தரை கடலுக்கு செல்ல நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கியின் “போஸ்பரஸ்” கால்வாயை ரஷ்யா பயன்படுத்த வேண்டும். இதற்கு இதுவரை எந்த தடையும் இல்லை.
நாளை இப்போரின் விளைவாக நேட்டோவின் நிர்பந்தத்தால் மறுக்கப்படலாம் என்ற அச்சமும் இணைந்தததால் கிரிமியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யா கொண்டு வந்துவிட்டது. மேலும் எரிசக்தி – எரிவாயுவை ஐரோப்பாவிற்கு எடுத்துச்செல்லும் பல குழாய்கள் இணையும் இடமாகவும் இருப்பதால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடத்தப்படுவதே இந்த ஆக்கிரமிப்புப் போர்.
அதேபோல் அமெரிக்காவும் நேட்டோவும் மத்திய தரைகடல் வழியை ரஷ்யாவின் ஆதிக்கம் தெற்கு பகுதிக்கும் விரிவடைவதையும் குறிப்பாக ஐரோப்பாவிற்குள் நுழைவதை தடுப்பதும் அவற்றின் எதிர் நடவடிக்கையின் விளைவு அமெரிக்கா – ரஷ்யா இடையேயான மேனிலை வல்லரசுகளின் ஆக்கிரமிப்பிற்கான களமாகவும் உக்ரைனை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். உலக மேலாதிக்கத்திற்கான வல்லரசாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கனவு சீனா – ரஷ்யா வளர்ச்சியால் தகர்ந்து வருகிறது.
அதாவது ஐரோப்பாவிற்குள் எரிசக்தி – எரிவாயுவை எடுத்துச்செல்லும் வலைப்பின்னலில் ரஷ்யா நுழைவதை தடுப்பதும் எரிவாயு – எரிசக்தியை ஜெர்மனிக்கு கிடைக்கவிடாமல் தடுத்து இவற்றுக்காக அமெரிக்காவையே நம்பியிருக்கும் சூழலை உருவாக்கி ஜெர்மனியை அடிபணிய வைப்பதும் இதன் மூலம் அமெரிக்கா ஐரோப்பாவிற்குள் நுழைவதை நிரந்தரமாக்கிக் கொள்ளும் நோக்கம் நிறைவேறவில்லை.
மோசமாகிய ஆப்பிரிக்க கண்டங்களையும் கூட்டமைப்புகளையும் பிரிக்ஸ் கூட்டமைப்பு போன்றவைகளின் வளர்ச்சியும் அமெரிக்காவின் கனவை ஆட்டம் காண வைக்கிறது. ஐநா-விலும் அமெரிக்காவின் செல்வாக்கு சீனா – ரஷ்யா ஆகிய நாடுகளின் வீட்டோ பவரால் தகர்ந்து வருகிறது. தற்போது அமெரிக்காவிற்கு கைத்தடியாக இருப்பது நேட்டோ மட்டுமே.
எனவே நேட்டோவிற்குள் சாத்தியமான உலக நாடுகள் அனைத்தையும் கொண்டு வந்து தன்னுடைய ஒற்றை துருவ மேலாதிக்கத்தை வளர்த்து தனக்கேயுரிய – ஏகாதிபத்தியத்திற்குரிய – அத்துமீறலையும் ஆக்கிரமைப்பையும் போரையும் மேற்கொண்டு வருகிறது.
உலக மேலாதிக்கத்திற்கான போட்டியின் அணிவரிசையில் சீனாவும் ரஷ்யாவும் அணிவகுத்து வருவதால் சிபிஐ, சிபிஎம் கூறுவது போல இவை சோசலிச நாடுகள் / சோசலிச சாயல் கொண்ட நாடுகள் அல்ல. இதை ரஷ்ய அதிபர் புதினே, “சோவியத் யூனியன் சிதறியதை நினைத்து வருந்தாதவர்கள் இதயம் இல்லாதவர்கள். அதே நேரம் மீண்டும் ஒரு சோவியத் யூனியனை அமைக்க நினைப்பவர்கள் மூளை இல்லாதவர்கள்” என்று தனது திருவாயை மலர்ந்துள்ளார். புதினைப் பொறுத்தவரையில் ஜாரின் ரசியாவைப் போன்ற ஒரு விரிவடைந்த ரசியா தனது சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான். ஒரு ஏகாதிபத்தியம் என்ற வகையில் ரசியாவின் ஆளும் வர்க்கங்களின் விருப்பமும் இதுதான்.
உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்காக அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையே நடக்கும் கழுத்தறுப்பு போரில் மடியப்போவது என்னவோ மக்களும் ராணுவ வீரர்களும் தான். ஆனால், ஆதாயம் அடையப்போவது ஆளும் வர்க்கமும் – கார்ப்பரேட்டுகளும் தான்.
எனவே உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பையும், அமெரிக்கா தலைமையிலான கொலைகார நேட்டோவுடனான இணைப்பையும் ஆதரிக்க முடியாது. உக்ரைனை நவ நாஜிகளிடமிருந்து விடுவிக்கவே தான் போர் தொடுத்ததாக ரசியா கூறுவதும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து உக்ரைனை பாதுகாக்கவே உக்ரைன் – நேட்டோ ஒப்பந்தத்தில் இணைவதாகக் கூறுவதும் பின் தங்கிய ஏழை நாடுகளை வேட்டையாடுவதற்கான ஏகாதிபத்திய நாடுகளின் தந்திரங்களே அன்றி வேறல்ல.
படிக்க :
♦ எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் : அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புப் போரே !!
♦ பாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை
விடுதலை, சுதந்திரம் ஆகியவை வழங்குவதும், பெறுவதும் அல்ல. அந்தந்த நாட்டு மக்கள் போராடிப் பெறுவதாகும். எனவே தான் தனித்து நிற்பதா அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து நிற்பதா என்பதை உக்ரைன் மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
சுயமாக முடிவு எடுக்கும் அதிகாரத்தையும், மற்றவர்களின் ஜனநாயகத்தையும் ஏகாதிபத்தியம் ஒருபோதும் அனுமதிக்காது. எனவே ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு போரை முறியடிக்க ஒவ்வொரு நாடுகளும் விடுதலைப் போரை முன்னெடுப்பதும் அதை சோசலிசத்தோடு இணைப்பதுமே உழைக்கும் மக்களுக்கு வாழ்வையும், ஏகாதிபத்தியங்களுக்கும் அதன் ஆளும் வர்க்கங்களுக்கும் சாவையும் துரிதப்படுத்தும் என்பதை பாரதிதாசன் வரிகளோடு இணைப்போம்.
“புதியதோர் உலகம் செய்வோம்;
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”

கதிரவன்
எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? | கருத்துப்படங்கள் – பாகம் -2
எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?
♣ ஒருபுறத்தில் எல்.ஐ.சி-யை கைப்பற்றுவது; மற்றொருபுறத்தில் எல்.ஐ.சி விற்பனையில் கிடைக்கும் பல்லாயிரம் கோடிகளை சுருட்டிக் கொள்வது.
♣ இதுதான் கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டம்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் மலிவான காப்பீடுகள் தடுக்கப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் புதிய வேலை வாய்ப்புகள் நிறுத்தப்படும். சமூகநீதிக்கு வேட்டு வைக்கப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் சமூகநலத் திட்டங்களுக்கு கிடைக்கும் நிதி நிறுத்தப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் முதலீடுகளில் கிடைக்கும் இலாபம் பங்குதாரர்களுக்கு (கார்ப்பரேட்டுகள்) பிரித்து கொடுக்கப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் அரசின் வருவாய் தடுக்கப்படும். இதை ஈடுகட்ட மேலும், மேலும் பங்குகள் விற்பனை அதிகமாகும்!
♣ எல்.ஐ.சி-யில் இலாபம் குறையும். அதனால் நிறுவனம் தள்ளாடி விழுந்து விடும். அதன் பிறகு எல்.ஐ.சி மெல்ல, மெல்ல சாகும்!
♣ அதன் சொத்துக்களையும், நிதி இருப்பு மற்றும் முதலீடுகளையும் கார்ப்பரேட்டுகள் ஆள்வார்கள்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் எல்.ஐ.சி-யை நம்பியுள்ள சுமார் 28 கோடி பாலிசிதாரர்களின் ரூ.39 இலட்சம் கோடிகள் பணம் சூறையாடப்படும்!
♣ எல்.ஐ.சி-யின் துணை நிறுவனங்களான LICHFL, வீட்டுவசதி நிறுவனம் போன்றவையும் முடங்கிப்போகும்.
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் எல்.ஐ.சி முதலீடு செய்துள்ள ரிலையன்ஸ் (அம்பானி), டி.சி.எஸ் (டாடா) போன்றவற்றில் போடப்பட்ட முதலீடுகள் கபளீகரம் செய்யப்படும்!
♣ நலிவடைந்த (IDBI வங்கி போன்ற) நிறுவனங்களை தாங்கிப் பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் முடங்கி விடும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையை “பங்கு விற்பனைகளின் தாய்” என்று வர்ணிக்கின்றனர்.
♣ உண்மையில் இந்த பங்கு விற்பனையானது பாலூட்டிய தாயை விற்பதற்குச் சமம்!
எல்.ஐ.சி பங்கு விற்பனையை எதிர்க்கும் கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
நன்றி : பு.ஜ.தொ.மு,
மாநில ஒருங்கிணைப்புக் குழு.
உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே வெளியேறு | கருத்துப்படங்கள்
உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே, வெளியேறு!
♦ உக்ரைனை இணைத்துக் கொண்டு, நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பை கிழக்கு ஐரோப்பாவில் விரிவுபடுத்தி, ரஷ்யாவை முற்றுகையிட்டுத் தாக்கத் துடிக்கும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கப் போர் வெறியை முறியடிப்போம்!
♦ ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான போட்டாபோட்டியை உலகப் போராகத் தீவிரப்படுத்த குவாட் (QUAD), ஆக்கஸ் (AUKUS) போர்க் கூட்டணிகளைக் கட்டியமைத்துள்ள அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க வெறியைத் தகர்த்தெறிவோம்!
♦ உலக நாடுகளின் சுதந்திரத்தையும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் நிலைநாட்டப் போராடுவோம்!
♦ உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே, வெளியேறு!
♦ கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் கருங்கடல் பிராந்தியத்திலிருந்தும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளே, வெளியேறு!
♦ உலகப் பாட்டாளிகளே, ஒன்றுசேருங்கள்!
நன்றி :
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் அதிகாரம்
நீதிமன்றத்தில் பொய் வழக்குகளை உடைத்தெறிந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை !
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை கட்டியமைத்து நடத்தியுள்ளோம். குறிப்பாக கொரானா காலங்களில் மக்கள் வாழ்விழந்து வாழ வழியற்ற நிலையில் வாடியபோது அதனை எதிர்கொள்வதற்காக மக்களுடைய உரிமைகளை பெற்றுத்தர பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
அப்படி நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கு தருமபுரி மாவட்ட காவல்துறை பல்வேறு பொய் வழக்குகளை போட்டு மக்கள் அதிகாரம் தோழர்களை அன்றாடம் நீதிமன்றத்திற்கு வந்து செல்லும் வகையில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கினால் பல முன்னணியாளர்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டு சொந்த வேலை இழந்து தினம்தோறும் நீதிமன்றம் சென்று வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக வழக்கிற்காக அலைகழிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற STC-எண் 753,2828,399,669 ஆகிய 4 வழக்குகளில் கடந்த 21.2.2022, 22.2 2022 ஆகிய தேதிகளில் 20-க்கும் மேற்பட்ட தோழர்கள் இது பொய் வழக்குதான் என்பதை நிறுவி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நீதிமன்றம் என்பது மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான இடமாக ஒருநாளும் இருந்ததில்லை. குறிப்பாக நீதிமன்றம் என்றாலே, மக்களுக்காக போராடுபவர்களை, சமூக மாற்றத்தை விரும்புபவர்களை, நக்சல்பாரி புரட்சியாளர்களை, அடக்கி ஒடுக்கி ஆளுகின்ற ஒரு சர்வாதிகார கூட்டம் என்ற வகையிலே தான் செயல்படுகிறது. எடப்பாடி ஆட்சி செய்த காலத்தில் மத்தியில் ஆளும் பாஜக-விற்கு துணையாக நின்று எந்த போராட்டங்கள் நடத்தினாலும் பொய் வழக்குகளை போட்டு வந்தது, போலீசு.
குறிப்பாக வேளாண் சட்டம், நீட் எதிர்ப்பு, காவிரி பிரச்சனை, இப்படி பல்வேறு பிரச்னைகளில் மக்கள் அதிகாரம் தலையிட்டு போராடி வந்தது. அதேபோல் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல போராட்டங்களை முன்னின்று நடத்தினோம். பாசிச பாஜகவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியது எமது அமைப்பு தான். இப்படி ஜனநாயக முறையில் போராடுவதற்கு சட்டம் வழங்கிய ஜனநாயகத்தை ஒருபோதும் தருமபுரி காவல்துறை மதித்து நடந்தது கிடையாது.
நான் போடுவது பொய் வழக்கு தான் என்னை ஒன்றும் புடுங்க முடியாது என்று வெளிப்படையாகவே B1 காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் பேசினார். கொரானா காலத்தில் நிவாரணம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றதைக் கூட வழக்குப் போட்டு இன்று வரை நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்க வைக்கின்றனர். இப்படி எண்ணற்ற பொய் வழக்குகளை தருமபுரி மாவட்ட காவல்துறை போட்டு வருகிறது.
தற்போது ஆட்சியைப் பிடித்த திமுகவோ இதுபோன்ற போராட்ட வழக்குகளை எல்லாம் நாங்கள் ரத்து செய்கிறோம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. இன்றுவரை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு, வேளாண் சட்டத்திற்கு எதிரான வழக்கு, நீட்டுக்கு எதிரான போராட்டத்தின் வழக்கு என பல வழக்குகளுக்கு இன்றும் நீதிமன்றத்தின் படி ஏறித்தான் வருகிறோம்.
தமிழக அரசின் மூலமாக கொடுக்கப்பட்ட அரசாணையை நீதிமன்றத்தில் கொடுத்தால்கூட வழக்கு தள்ளுபடி பற்றி நான் முடிவு செய்ய முடியாது என்கிறார் நீதிபதி. சட்டம் ஒன்றாகவும், நடைமுறை வேறாக இருக்கிறது. இதுபோன்ற பொய் வழக்குகளை தமிழக அரசின் அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கூட அரசு வழக்கறிஞர்கள் முன்வருவதில்லை. சட்டத்தை துளியும் மதிப்பது கிடையாது. ஆனால் நாங்கள் வழக்குகளை எல்லாம் ரத்து செய்து விட்டோம் என்ற வெற்று அறிவிப்பு மட்டும் சாதனை பட்டியலில் உள்ளது.
படிக்க :
♦ உக்ரைன் போர் : ரசிய – அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை எதிர்ப்போம் || புரட்சிகர அமைப்புகள் அறிக்கை
♦ எச்சரிக்கை – உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் || களத்தில் காலூன்றும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக !
வேளாண் சட்டம் ரத்து செய்துவிட்ட பிறகு கூட அதற்கான வழக்கை நீதிமன்றம் நடத்துவது கேலிக்கூத்தானது. அரசின் உண்மையான நோக்கம் போராடுபவர்களை ஒடுக்குவது தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட தோழர்கள் நீதிமன்றத்தால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். அந்த வழக்குகளை எல்லாம் தருமபுரி காவல்துறை திட்டமிட்டு பதிவு செய்து அதன் மூலமாக ஒரு பழிவாங்கும் நடவடிக்கையில் இன்றளவும் ஈடுபட்டுவருகிறது.
ஏன் பழி வாங்குகிறது? மக்கள் அதிகாரம் அமைப்பு தொடர்ச்சியாக சமூக பிரச்சனைகளில் தலையிட்டு போராடுகிறது. அந்த அமைப்பின் செயல்பாடுகளை ஒடுக்க வேண்டும் என்றால் அதற்கு பொய் வழக்குதான் சரி என பார்க்கிறது காவல் துறை. மிகக் கேவலமான வேலைகளில் கீழ்த்தரமாக செயல்படுகிறது தமிழக அரசு. இதுபோன்ற பொய் வழக்குகளை துணிவோடு எதிர்கொண்டு போராடி வருகிறது மக்கள் அதிகாரம்.
இந்த வழக்குகளை எதிர்கொள்வதற்காக தோழர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர், தோழர் ஆசியஜோதி, வழக்கறிஞர், தோழர் பிரசாந்த், வழக்கறிஞர் ஆகியோர் தொடர்ந்து போராடி நீதிமன்றத்தின் பொய்களை உடைத்தெறிந்து விடுதலையை பெற்றுத் தந்துள்ளனர். இது போன்ற பல்வேறு வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. வரும் காலங்களில் பிற வழக்குகளையும் பொய் வழக்கு என்பதை நிருபித்து விடுதலை பெறுவோம்.

தகவல்:
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9097138614.
கர்நாடகாவில் ஹிஜாப் தடை – தில்லை கோவிலில் தமிழுக்கு தடை || தர்மபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
“இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை, தில்லையில் தமிழனுக்கும் தமிழுக்கும் தடை. தில்லை இருப்பது தமிழ்நாடா இல்லை அதற்குள் ஒரு தனி நாடா? தில்லைக் கோயிலை இந்து அறநிலை துறையின்கீழ் கொண்டு வர சிறப்பு சட்டம் இயற்று” என்ற முழக்கத்தின் கீழ், கடந்த 28. 02. 2022 அன்று மாலை 3 மணிக்கு, பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடகாவில் கலவரத்தைத் தூண்டி அதன் மூலம் ஆட்சியை தக்க வைக்கவும், மீண்டும் மீண்டும் இந்து மதவெறியின் சோதனைச் சாலையாக மாற்றுவதற்கும், கர்நாடக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இந்து-முஸ்லிம் என்ற மத உணர்வை தூண்டி அதன்மூலம் பிரிவினையை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்ற ஆர். எஸ். எஸ், பாஜக-வின் சதியை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
அந்தவகையில் பாஜக ஆர்.எஸ்.எஸ். கும்பல் நாடு முழுவதும் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, பொதுச்சொத்தை சூறையாடுவதை மறைப்பதற்காகவும் தங்களது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்கவும் இந்த கலவரத்தைத் தூண்டி வருகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் தில்லை நடராஜர் கோயில் தமிழ் மக்களால் கட்டப்பட்ட கோயிலாகும். இந்தக் கோயிலில் தமிழில் பாடினால் சாமி தீட்டாகிவிடும் என்றும் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடக்கூடாது என்றும் மொழி தீண்டாமையை இன்றும் கடைபிடிக்கும் தீட்சிதர்களுக்கு எதிராக, தில்லை கோயிலை தீட்சித பார்ப்பன கும்பலிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அது உழைக்கும் மக்களின் போராட்டத்தின் மூலமாக தான் வெற்றி கொள்ள முடியுமே, தவிர வெறுமனே நீதிமன்ற போராட்டத்தின் மூலமாக மட்டும் நீதி கிடைக்காது.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழர்கள் சோற்றை சாப்பிட்டுவிட்டு, தமிழ் மண்ணுக்கு துரோகமிழைக்கும் பார்ப்பனக் கும்பலை தமிழகத்தை விட்டே விரட்டி அடிக்க வேண்டும். லட்சுமி என்ற பெண்ணை தாக்கிய தீட்சதர் கும்பலை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். என்ற அடிப்படையில் தோழர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் பென்னாகரம் வட்டார செயலாளர் தோழர் அருண் அவர்கள் தலைமை தாங்கினார். கண்டன உரையாக சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் மாதையன், விசிக பென்னாகரம் தொகுதி செயலாளர் தோழர் கருப்பண்ணன், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தோழர் பெரியண்ணன், மக்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் முத்துக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக மக்கள் அதிகாரம் பென்னாகரம் வட்டார இணைச்செயலாளர் தோழர் சிவா அவர்கள் நன்றி உரையாற்றினார்.

தகவல்
மக்கள் அதிகாரம்
தர்மபுரி மண்டலம்
9790138614
நூல் அறிமுகம் : இப்போது உயிரோடிருக்கிறேன் || நமக்கு ஏன் இத்தனை எதிரிகள் ? || முரளிதரன்
நமக்கு ஏன் இத்தனை எதிரிகள்?
கடந்த நூற்றாண்டில் ஊடகங்கள், அவற்றின் போக்கு எப்படியிருந்திருக்கிறது என்பது குறித்து விரிவாக வெகுசில ஆய்வுகளே வெளியாகியிருக்கின்றன. ஆனால், ஊர் ஊராகப் பயணம் செய்து, தீவிரமாக செயல்படக்கூடிய ஒரு அரசியல் தலைவர் ஒரு கால் நூற்றாண்டிற்கு ஊடகங்களைக் கவனித்து, அவற்றின் போக்கு குறித்து மக்களிடம் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. அவர் பெரியார்!
ஒரு கால் நூற்றாண்டிற்கு, அதாவது 1925 முதல் 1949 வரை பெரியாரின் ஊடகங்கள் குறித்த கட்டுரைகளை பொருள்வாரியாகப் பிரித்து தொகுத்திருக்கிறார் டாக்டர் இரா. சுப்பிரமணி.
இந்தக் கால் நூற்றாண்டில் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி ஆகிய இதழ்களில் இதழியல், ஊடகங்கள், பத்திரிகைகள் குறித்து வெளியான உரைகள், தலையங்கங்கள், துணைத் தலையங்கங்கள், கட்டுரைகள், குறிப்புகள் ஆகியவை1. தந்தை பெரியாரின் பார்வையில் இதழ்கள்
2. ஏன் தொடங்கினேன் இத்தனை இதழ்கள்?
3. பெரியார் போற்றிய தோழமை இதழ்கள்
4.தந்தை பெரியாரின் வழக்காடும் இதழியல்
5. தந்தை பெரியாரின் நூல் மதிப்புரைகள்
2. ஏன் தொடங்கினேன் இத்தனை இதழ்கள்?
3. பெரியார் போற்றிய தோழமை இதழ்கள்
4.தந்தை பெரியாரின் வழக்காடும் இதழியல்
5. தந்தை பெரியாரின் நூல் மதிப்புரைகள்
என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கின்றன.
மொத்தம் 410 கட்டுரைகள்!
இந்தக் கட்டுரைகளையும் பெரியாரின் பார்வையையும் சரியாகப் புரிந்துகொள்ள ஏதுவாக, அந்த காலகட்டத்திலும் அதற்கு சற்று முந்தைய காலகட்டத்திலும் வெளியான இதழ்கள் குறித்தும் அந்த காலகட்டம் குறித்தும் 14 விரிவான அறிமுகக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் சுப்பிரமணி.
அந்த காலகட்டத்தின் இதழ்கள் மக்கள் மீது செலுத்திய செல்வாக்கைச் சரியாகவே உணர்ந்திருந்த பெரியார், அவற்றைப் பற்றி எழுதுவதும் சொந்தமாக பத்திரிகைகளைத் தொடங்கி தனது கருத்தைப் பரப்புவதும் மிக முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார்.
குறிப்பாக, ஏன் தொடங்கினேன் இத்தனை இதழ்கள் என்ற பகுதி மிகச் சிறப்பான ஒன்று. குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ரிவோல்ட், விடுதலை, உண்மை என வெவ்வேறு பத்திரிகைகளை அவர் தொடங்கி நடத்த வேண்டிய காரணம், ஒவ்வொரு இதழையும் கொண்டுவருவதில் அவர் எதிர்கொண்ட சிரமங்கள், ரெய்டுகள், வழக்குகள், அபராதங்கள், அவற்றை முடக்க மேற்கொள்ளப்பட்ட அரசின் நடவடிக்கைகள் போன்றவை இந்தப் பகுதியில் விரிவாக காணக்கிடைக்கின்றன. தனது பத்திரிகைகள் குறித்த சின்னச் சின்னத் தகவல்களைக்கூட வாசகர்களிடம் பகிர விரும்பியிருக்கிறார் பெரியார்.
புத்தகத்தின் இறுதியில் பல்வேறு பத்திரிகைகள் குறித்த சிறு அறிமுகக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில ஆர்வமூட்டும் தலைப்புகளைப் பாருங்களேன்:
‘நமது துணை ஆசிரியர் விலகுகிறார்’
‘குடி அரசு வாசகர்களுக்கு ஒரு உண்மையான முன்னறிவிப்பு’
‘பயமுறுத்தல் கடிதங்கள்’, ‘1550 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது’
‘ஆளவந்தாருக்கு எச்சரிக்கை’
‘மித்திரன் புரட்டு நிருபர்களின் அயோக்கியத்தனம்’!
‘குடி அரசு வாசகர்களுக்கு ஒரு உண்மையான முன்னறிவிப்பு’
‘பயமுறுத்தல் கடிதங்கள்’, ‘1550 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது’
‘ஆளவந்தாருக்கு எச்சரிக்கை’
‘மித்திரன் புரட்டு நிருபர்களின் அயோக்கியத்தனம்’!
சுதேசமித்திரன், தினமணி, விகடன் போன்றவை அவருடைய விருப்ப இலக்குகளாக இருந்திருக்கின்றன.
பெரிய சைஸில் 800 பக்கங்களோடு பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது இந்தப் புத்தகம்.
இதழியல் மாணவர்கள், ஆய்வாளர்கள், 20-ம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் தமிழ் சமூகத்தின் மீது இருந்த தாக்கங்களை புரிந்துகொள்ள விழைவோர் கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் இது!
ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?
வெளியீடு: விடியல் பதிப்பகம்
விலை : ரூ. 1000/-
புத்தகக் கண்காட்சியில் ரூ. 700க்குக் கிடைக்கும்.
முகநூலில் : முரளிதரன்
000
இப்போது உயிரோடிருக்கிறேன்
தமிழின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான இமையத்தின் நாவல்களாக இருந்தாலும் சிறுகதைகளாக இருந்தாலும், அவை படிப்பவர்களை ஒரு கணமாவது உலுக்கிவிடும்.
படிக்க :
♦ நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்
♦ நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
‘கோவேறு கழுதைகள்’லில் இருந்து இப்போது வெளியாகியுள்ள ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’வரை இதில் விதிவிலக்கு இல்லை. அவருடைய எல்லாப் படைப்புகளோடும் ஒப்பிடுகையில் மிகுந்த துயரமும் கையறுநிலையும் படிந்த படைப்பாக இந்த நாவலைச் சொல்லலாம்.
பள்ளிச் சிறுவன் ஒருவனுக்குத் திடீரென சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. இதற்குப் பிறகு அந்தக் குடும்பமே நிலைகுலைந்து விடுகிறது. கிராமத்தைச் சேர்ந்த அவனுடைய பெற்றோர் இருக்கும் பணத்தைப் புரட்டிக்கொண்டு, நகரத்திற்கு வந்து ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். வாரத்திற்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும். முடிவில் அவனது தாயாரின் சிறுநீரகம் அவனுக்குப் பொருத்தப்படுகிறது.
ஆனால், அதோடு பிரச்சனை முடியவில்லை. திடீரென க்ரியாட்டின் அளவு அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே நொறுங்கிப் போயிருக்கும் அவனுடைய தந்தை, இடி விழுந்ததைப் போல ஆகிவிடுகிறார். பயாப்சி சோதனைக்காக அந்தச் சிறுவன் காத்திருப்பதைப் போல நாவல் முடிவுக்கு வருகிறது.
இந்த ஒற்றைச் சிறுவனின் வாழ்வைச் சொல்வதின் மூலம், நாள்தோறும் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் ஊசலாடும் ஆயிரக்கணக்கான சிறுநீரக நோயாளிகளின் வாழ்விற்குள் அழைத்துச் செல்கிறார் இமையம்.
ஒரு படைப்பு என்றவகையில் இமையம் மீண்டும் ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ஆனால், இந்த நாவலைப் படிக்கும்போது உணர்வுரீதியாக பெரும் விலகலோடு படிக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்தச் சிறுவனாகவோ அவனது பெற்றோராகவோ உணர்ந்து மனமுடைய நேரும்.மருத்துவத் துறையைப் பொறுத்தவரை, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்வது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. ஆனால், ஒருவருக்கு செயலிழப்பு ஏற்பட்டுவிட்டால், அவர்கள் வாழ்நாள் முழுக்க நோயாளிதான். ஆகவே, சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகளும் அவற்றைப் பின்பற்றுவதுமே மிக முக்கியம். தமிழ்நாடு அரசின் கவனத்தை அந்தத் திசையில் இந்த நாவல் திருப்புமானால், அதுதான் இமையத்தின் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்.
நூல் : இப்போது உயிரோடிருக்கிறேன்
ஆசிரியர் : இமையம்
வெளியீடு : க்ரியா (Stall No. 228)
விலை : ரூ. 345/-










































