Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 209

Tekfog: பாசிச கருத்தாக்கத்தின் முதுகெலும்பு | பாகம் 1

”Tek fog: வெறுப்பு பிரச்சாரங்களின், இணையவெளி தாக்குதல்களின்,
பாசிச கருத்தாக்கத்தின் முதுகெலும்பு” – பாகம் 1
“தனது சொந்த இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட உள்நாட்டு, பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் இலாபங்களை உறுதி செய்துகொள்ளும் பொருட்டு மக்கள் கருத்துக்களை ஒடுக்கும், சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் தொழில்நுட்பங்களை  பாசிஸ்டுகளுக்கு கையளிக்கிறார்கள். அந்த அறமற்ற தொழில்நுட்ப சாதனங்கள்  சொல்லிக்கொள்ளபடும் சட்ட வரைமுறைகள் எதையும் மதிக்காமல் மக்கள் மீது பாசிஸ்டுகளால் ஏவப்படுகிறது”.
கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்த்தி சர்மா என்பவர் @Aarthisharma08 என்ற ட்விட்டர் கணக்கில், “Tekfog என்னும்  ரகசிய செயலியை பயன்படுத்தி ஆளும் கட்சியுடன் (பாஜக) இணைந்திருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் (Operatives) கட்சியின் பிரபலத்தை உயர்த்தி காட்டவும், கட்சியை விமர்ச்சிப்பவர்களை இணையவெளியில் தனிப்பட்டவகையில் அவதூறு செய்து துன்புறுத்தவும், மக்களின் பொது உணர்வுகளை தங்களுக்கு ஏற்றார்போல மடைமாற்றம் செய்யவும் பயன்படுத்தி வருவது குறித்து” பதிவிட்டிருந்தார்.
ஆர்த்தி சர்மா, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் (IT Wing) வேலை செய்து வந்திருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு, பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (பாஜக-வின் இளைஞர் பிரிவு)வை சேர்ந்த முன்னாள் தேசிய சமூக ஊடகத்துறை தலைவராக இருந்தவர் தேவாங் டேவ் என்பவர். இவர் தற்போது மகாராட்டிர மாநில பாஜக-வின் தேர்தல் மேலாளராக உள்ளார். இவர் 2018-ம் ஆண்டு பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்யும் செயற்பாட்டாளர்களுக்கு வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று வெகுநாட்களான பின்பும் அதை நிறைவேற்றவில்லை. அதுமட்டுமின்றி வேலை செய்யும் செயற்பாட்டாளர்களுக்கு ஒரு ட்விட்டுக்கு வெறும் ரூ.2 மட்டுமே கொடுக்கப்படுவதாக ஆர்த்தி சர்மா தெரிவிக்கிறார். அந்த அதிருப்தியில் தான் அங்கே இயக்கப்பட்டு வரும் இரகசிய செயலியான Tekfog பற்றி பொது வெளியில் தெரிவித்திருக்கிறார்.
படிக்க :
குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்
புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்பாட்டாளர்களால் மட்டுமே பயன்படுத்த முடிந்த Tekfog செயலியின் சிறப்பு அமசங்களாக சிலவற்றை குறிப்பிடுகிறார், ஆர்த்தி சர்மா. அவற்றில் “டிவிட்டர் ட்ரெண்ட்ங்கில் hashtag-களையும், செய்திகளையும் தானியங்கியாகவே பதிவேற்றம் செய்யும் திறன் கொண்டது” என்ற அம்சம் தகவல் தொழில்நுட்ப துறையில் நிபுணர்களான ஆயுஷ்மான் கவுல், தேவேஷ் குமார் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கிறது. அதனால் ஊந்தப்பட்டு Tekfog செயலியை பற்றி 20 மாதங்களுக்கு மேலாக புலனாய்வு செய்து The Wire என்னும் இணைய பத்திரிகையில் செய்தி கட்டுரைகளாக வெளியிட்டனர். அந்த செயலி பற்றி பொதுவில் வெளியிட்ட நபர் சொன்ன ஒவ்வொரு தகவலும் புலனாய்வு குழுவால் சுதந்திரமான முறையில் சரிபார்க்கப்பட்டு தான் அந்த கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.
இந்த Tekfog செயலி ஒரு முன்மாதிரி வடிவம் (Prototype) அல்ல. கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஊதியம் பெறும் செயல்பாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் இந்த புலனாய்வு குழு உறுதிப்படுத்துகிறது.
இந்த செயலியின் மிக முக்கியமான அம்சம் என்பது Twitter, Facebook போன்ற சமூக ஊடகங்களின் ட்ரெண்ட்ங் பகுதியை கைபற்றுவதாகும் (Hack). இதற்கு Tekfog செயலியிலே உள்ளார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ள அம்சங்களை பயன்படுத்தி, தானியங்கியாக  சமூக ஊடகங்களில் உள்ள தனிநபர்கள் அல்லது குழுக்கள் பதிவிடும் செய்தி அல்லது பதிவை மறுட்விட்டு செய்வது அல்லது பகிர்ந்து கொள்வது என அந்த செய்தி அல்லது பதிவுக்கு போலியான முக்கியத்துவத்தை உருவாக்குகிறார்கள். இதை Tekfog செயலியை தகவல் தொழில்நுட்ப பிரிவின் அறையில் இருந்து இயக்கும் செயற்பாட்டாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கணக்குகள் (Accounts) மூலமாக செய்ய முடிகிறது.
இதன் மூலம் வலதுசாரி அரசியல் பிரச்சார செய்திகளை உருப்பெருக்கி (Amplify) மிகப் பரவலான மக்கள் பகுதிகளிடம் சென்றடையும் விதமாக பரப்பப்படுகிறது. இதன் மூலம் வலதுசாரி தீவிரவாத கதையாடல்கள், கருத்துக்கள், அரசியல் பிரச்சாரங்கள் வழக்கத்தைவிட மிக அதிக பிரபலமானதாக முக்கியத்துவமுடையதாக மாற்றப்படுகிறது.
மற்றுமொரு முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த Tekfog செயலி ” தனிநபர்களின் செயல்பாட்டில் இல்லாத (inactive) whatsapp கணக்குகளை கைப்பற்றி அதன் மூலமாக அந்த கைபேசி எண்ணை பயன்படுத்தி, அந்த எண்ணிலிருந்து அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்ட எண்களுக்கு ( Frequently Contacted) அல்லது தொடர்பில் இருந்த அனைத்து எண்களுக்கும் (All Contacted) தானியங்கியாக செய்திகளை அனுப்புகிறது. அந்த செய்திகள் வலதுசாரி அரசியல் பிரச்சாரங்கள் தான் என்பதை குறிப்படத்தேவையில்லை. தங்களது எண்ணில் இருந்து செய்திகள் அனுப்பப்படுவது குறித்து அறியாத அந்த அப்பாவி நபர்கள் தான் அந்த செய்திகளால் நிகழும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஒருவரின் Whatsapp கணக்கை ஊடுருவி கைப்பற்றுவதற்கு முதலில் பயன்பாட்டில் இருக்கும் ( Active) WhatsApp கணக்கிற்கு ஒரு புகைப்படமோ அல்லது வீடியோவோ, அதாவது ஏதேனும் ஒரு மின்னணு கோப்பு ( digital file), அநாமதேய எண்ணிலிருந்து அனுப்பப்படுகிறது. அந்த புகைப்படமோ வீடியோவோ ஒரு Spyware என்று சொல்லப்படும் உளவு மென்பொருளை கொண்டிருக்கும். இந்த உளவு மென்பொருள், ஊடுருவப்பட்ட whatsapp கணக்கு உள்ள கைபேசியின் அனைத்து செயல்பாடுகளையும் உளவு பார்க்கும் தன்மையுடையது. அந்த மின்னணு கோப்பான புகைப்படமோ அல்லது வீடியோவோ கைபேசியில் தரவிறக்கம் செய்யப்பட்ட உடன் உளவு மென்பொருள் செயல்பட தொடங்கிவிடும். அதன் மூலம் அந்த whatsapp கணக்கு கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். எப்போது அந்த whatsapp கணக்கு பயன்பாட்டில் இல்லாமல் போகிறதோ ( become inactive) அப்போது பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ள Tekfog செயற்பாட்டாளர்கள்  அதன் கட்டுப்பாட்டை கையில் எடுத்துக்கொள்கிறார்கள். பின்பு அந்த whatsapp கணக்குடன் தொடர்புடைய அனைத்து எண்களுக்கும் (All Contacted) அல்லது அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்ட எண்களுக்கு (Frequently Contacted) செய்திகளை அனுப்பகிறது. இது பயனரின் கவனத்திற்கு தெரியாமல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒருவரின் அந்தரங்கம் முழுமையாக சுரண்டப்படுகிறது.
whatsapp கணக்கு பயன்பாட்டில் உள்ளபோதே  Tekfog செயலியால் அதை ஊடுருவி கைபற்ற முடியாது என்று  Tekfog செயலியின் தொழில்நுட்ப அம்சம் சார்ந்து இதை பார்க்க முடியாது. பயன்பாட்டில் இருக்கும் whatsapp கணக்கை கைப்பற்றி செய்திகளை அனுப்பினால் பயனரின் சந்தேகத்திற்கு ஆட்பட நேரிடும் என்பதால் அது தவிர்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி அந்த எண்ணை பயன்படுத்தும் நபரைப்பற்றிய விவரங்கள் Tekfog செயலியின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் தரவுதளத்தில் (Database) சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் அந்த நபர் வருங்காலத்தில்  பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் Tekfog செயலியை பயன்படுத்தும் செயற்பாட்டாளர்களால் (Operatives) இணைய துன்புறுத்தல்களுக்கு ( Online Harrassment) உள்ளாக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
பிறர் whatsapp கணக்குகளை கைப்பற்றுவது, அதிலிருந்து அந்த நபர்களுக்கே தெரியாமல் செய்திகளை அனுப்பவது, தனிநபர் தரவுத்தளத்தில் அவர்களின் விவரங்களை சேமித்து வைப்பது என யாவற்றையும் அந்த நபர்களின் அனுமதியின்றி அவர்களால் அறியமுடியாத படி சந்தேகிக்க முடியாதபடி செய்யும் வகையில் Tekfog செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனிநபர் குடிமக்கள் பற்றிய தரவுகளை அவர்களின் மொழி, மதம், தொழில், வயது, பாலினம், அரசியல் சார்பு மற்றும் உடல் அம்சங்கள் (Physical Attributes) ஆகியவற்றின் அடிப்படையில் வகை பிரித்து தரவுத்தளத்தில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் இருக்கும் தனிநபர்கள் அல்லது குழுக்களை இணையவெளியில் துன்புறுத்தவோ இணைய வம்பிற்கு (Trolling) உட்படுத்தவோ இந்த தரவுத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தனிநபர் தரவுகளை பயன்படுத்தி கொள்ளமுடியும். இதை பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் Tekfog செயலியை பயன்படுத்தும் செயற்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படும் கணக்குகளின் உதவியோடு தானியங்கியாகவே (Auto Generated)இந்த இணைய துன்புறுத்தல் பதிவுகள் உருவாக்கப்பட முடியும். இதற்காகவே முக்கிய வார்த்தைகள் ( keywords) , சொற்தொடர்கள் ( Phrases) , அவற்றில் பெரும்பாலானவை தவறானவை, இழிவானவை இந்த  செயலியால் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக Google Sheets போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் பயன்படுத்தப்படுகிறது.
Tekfog செயலியை இயக்கும் செயற்பாட்டாளர்கள் இணைய வம்பிற்கு உள்ளாக்கப்போகும் நபர்களை தேர்ந்தெடுப்பார்கள். அதாவது அவர்களுக்கு ஏற்கனவே மேலிடத்தில் இருந்து இணைய வெளியில் தாக்குதலுக்கு உள்ளாக்க வேண்டிய நபர்களின் பெயர்கள் தரப்பட்டிருக்கும். அந்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட போகும் நபர்கள் பற்றிய விவரங்களை Tekfog செயலியுடன் இணைந்த தனியார் தரவுத்தளத்தில் இருந்து எடுத்துக்கொள்வார்கள்.
இணைய வம்பை  (Online Trolling) தொடுப்பதற்காக தரவுத்தளத்தில் வெவ்வேறு வகையீனங்களின் அடிப்படையில் சேமிக்கப்பட்டிருக்கும் தரவுகள் அலசப்படும். மாணவர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள், சமூக வலைதள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் பலவற்றுடன் அவர்களின் மதம், மொழி, வயது, பாலினம், அரசியல் சார்பு, சில சமயங்களில் உடல் ரீதியான கூறுகளான நிறம், எடை, மார்பக அளவு என்பன போன்ற வகையீனத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும்.
படிக்க :
இனப் படுகொலைக்கான பாதையில் ஏற்கெனவே பயணிக்கும் இந்தியா !
‘பாதுகாப்பு குறைபாடு’ கூச்சலுக்கு பின்னே பஞ்சாபை ஒடுக்கத் துடிக்கும் சதிகார நோக்கம்!
இதன் மூலம் Tekfog செயலி செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்ட நபரை சில கூறுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள். அவற்றின் அடிப்படையில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி, அதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் முக்கிய வார்த்தைகள், சொற்தொடர்கள் மூலமாக தானியங்கியாகவே பதிவுகள் தயாரிக்கப்பட்டு செயற்பாட்டாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கணக்குகளின் வழியாக பகிரப்படும். அல்லது Twitter Facebook போன்ற சமூக ஊடகங்களின் அந்தரங்கமான உள்பெட்டிக்கு ( Inbox) மோசமான தாக்குதல் தன்மையுள்ள வசவு மொழியில் எழுதப்பட்ட பதிவுகள் அனுப்பப்படும்.  இவை பெரும்பாலும் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் முஸ்லிம் பெண்களை குறிவைத்தே நடத்தப்படுகிறது.
இந்த Tekfog செயலியின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த செயலியால் செய்யப்பட்ட வேலைகள், அதை செய்ய செயற்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்பட்ட கணக்குகள் ஆகியவற்றை தடம் தெரியாமல் அழிக்க முடியும் அல்லது வேறு மாதிரியாக மறு வடிவமைப்பு (Remap) செய்ய முடியும். அதனாலே இந்த Tekfog செயலியின் இந்த குறிப்பிட்ட ஒரு அம்சம் குறித்து புலனாய்வு குழுவால் எதையும் கண்டறிய முடியவில்லை.
புலனாய்வு குழு Tekfog செயலிக்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பற்றிய ஆய்வையும் செய்திருக்கிறது. இதன் மூலம் ஆளும் பாஜகவிற்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இருக்கும் பரஸ்பர இலாபம் அடிப்படையிலான பிணைப்பு பற்றிய தெளிவை பெறமுடிகிறது.
(தொடரும்…)
மக்கள் அதிகாரம், நெல்லை மண்டலம்
செய்தி ஆதாரம் : த வயர்1, த வயர்2

உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்

க்ரைன் போரானது வெறுமனே ஐரோப்பாவில் இருக்கும் அமைதியை மட்டும் இன்று குலைக்கப்போவதில்லை. இது உலகளவிய மக்களில் பாதிப்புகளாக மாறிபோய் உள்ளது. அமெரிக்க – ரசிய ஏகாதிபத்தியங்கள் உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கு தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் அனைத்தையும் கொண்டுவருவதற்கான நடவடிக்கையாக இருப்பதினால், இந்த போரை எதிர்க்க வேண்டியிருக்கிறது. இந்த போருக்கு காரணமாக அமெரிக்க நேட்டோ கூட்டமைப்பையும் அதனுடைய கிழக்கு ஐரோப்பா விரிவாதிக்கத்தையும் நாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது. இதுபோன்ற உக்ரைன் போர் பற்றிய பல்வேறு பிரச்சினைகளை விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!

0
க்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா அல்பேனியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தன. இதற்கு பிரேசில் பிரிட்டன் நார்வே உள்ளிட்ட 11 நாடுகள் ஆதரவளித்தன.
சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. ரஷ்யாவோ தனது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்துவிட்டது. வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த இந்தியாவை ரஷ்யாவை பாராட்டியது. உக்ரைனோ இந்தியாவின் புறக்கணிப்பை அதிருப்தியோடு சாடியுள்ளது.
உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா, கிரிமீயாவின் மூலம் கடல்வழி தாக்குதலையும் பெலாரஸ் மூலம் தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தியது. உக்ரைன் தலைநகர் கீவ்-வை சுற்றி வளைத்துள்ளதுடன், உக்ரைனின் பல மையமான பகுதிகளையும் ஆக்கிரமித்துவிட்டது.
படிக்க :
உக்ரைன் போர் : ரசிய – அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை எதிர்ப்போம் || புரட்சிகர அமைப்புகள் அறிக்கை
உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே வெளியேறு | கருத்துப்படங்கள்
ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்கும் முன்பு வரை ரஷ்யா போர்தொடுத்தால் எதிர்பாராத அளவிற்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வாயால் வடை சுட்டு வந்த அமெரிக்கா, போர் தொடங்கியதும், ‘உக்ரைன் நேட்டோவில் அங்கம் வகிக்கவில்லை. எனவே அந்நாட்டுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்ப முடியாது’ என்று கைவிரித்து விட்டது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் போரைக் கைவிடும்படி வலியுறுத்தியதோடு நிறுத்திக்கொண்டன. பிரான்சோ ரஷ்யாவுடன் போரிட விரும்பவில்லை என்று வெளிப்படையாக அறிவித்து விட்டது.
ஏன் இந்த பின்வாங்கல்? தயக்கம்?. ஐநா-வை ஆட்டி படைக்கும் அமெரிக்காவும் பொருளாதாரமும் ஆட்டம் கண்டு வருகிறது. அதன் உள்நாட்டு பொருளாதாரம் பலவீனம் அடைந்து வருகிறது. இதன் விளைவாகவே அமெரிக்கா பின்வாங்குகிறது.
சீனாவோ உலக மேலாதிக்கத்திற்கான போட்டியில் ரஷ்யாவை நம்பகமான கூட்டாளி என்ற வகையில்தான் இந்த புறக்கணிப்பு . அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா உள்பட பல்வேறு நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தடை, புதின் உட்பட ரஷ்ய அமைச்சர்களின் சொத்துக்கள் முடக்கம், ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யாவின் மீது அறிவித்து வருகின்றன.
ரஷ்யாவுக்கு ஏன் இவ்வளவு போர் வெறி ? என்ன காரணம் ? ரஷ்யாவின் கடலோரப் பரப்பு நீளமாக இருப்பினும் வருடம் முழுவதும் கடல் உறைந்தே இருக்கும். இது வணிகத்திற்கும் தெற்கு பகுதிகளுக்கு பண்ட பரிவர்த்தனை தொடர்புக்கும் இதற்கேற்ப துறைமுகளை அமைக்கவும் தடையாக உள்ளது.
எனவே வருடம் முழுவதும் உறையாத கருங்கடலில் கிரிமியா அமைந்துள்ளது. அதன் வழியாக மத்திய தரை கடல் பகுதியை அடையவும் அதன் மூலம் மற்ற நாடுகளில் கடல் வாணிபம் செய்ய முடியும். மேலும் தெற்குப் பகுதிக்கு செல்ல ஏதுவாகவும் கிரிமியாவின் செவஸ்புடல் துறைமுகம் இருப்பதால் அதை ரஷ்யா குத்தகைக்கு எடுத்திருந்தது.
இதற்கு ஈடாக உக்ரைனின் இறையாண்மையை காப்பதாக உறுதியளித்தது. ஆனால் தற்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ படையில் சேர்வதாக அறிவித்ததன் விளைவு எதிர்காலத்தில் இந்த துறைமுகத்தை இழக்க வேண்டும். இதனுடன் மத்திய தரை கடலுக்கு செல்ல நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கியின் “போஸ்பரஸ்” கால்வாயை ரஷ்யா பயன்படுத்த வேண்டும். இதற்கு இதுவரை எந்த தடையும் இல்லை.
நாளை இப்போரின் விளைவாக நேட்டோவின் நிர்பந்தத்தால் மறுக்கப்படலாம் என்ற அச்சமும் இணைந்தததால் கிரிமியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யா கொண்டு வந்துவிட்டது. மேலும் எரிசக்தி – எரிவாயுவை ஐரோப்பாவிற்கு எடுத்துச்செல்லும் பல குழாய்கள் இணையும் இடமாகவும் இருப்பதால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடத்தப்படுவதே இந்த ஆக்கிரமிப்புப் போர்.
அதேபோல் அமெரிக்காவும் நேட்டோவும் மத்திய தரைகடல் வழியை ரஷ்யாவின் ஆதிக்கம் தெற்கு பகுதிக்கும் விரிவடைவதையும் குறிப்பாக ஐரோப்பாவிற்குள் நுழைவதை தடுப்பதும் அவற்றின் எதிர் நடவடிக்கையின் விளைவு அமெரிக்கா – ரஷ்யா இடையேயான மேனிலை வல்லரசுகளின் ஆக்கிரமிப்பிற்கான களமாகவும் உக்ரைனை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். உலக மேலாதிக்கத்திற்கான வல்லரசாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கனவு சீனா – ரஷ்யா வளர்ச்சியால் தகர்ந்து வருகிறது.
அதாவது ஐரோப்பாவிற்குள் எரிசக்தி – எரிவாயுவை எடுத்துச்செல்லும் வலைப்பின்னலில் ரஷ்யா நுழைவதை தடுப்பதும் எரிவாயு – எரிசக்தியை ஜெர்மனிக்கு கிடைக்கவிடாமல் தடுத்து இவற்றுக்காக அமெரிக்காவையே நம்பியிருக்கும் சூழலை உருவாக்கி ஜெர்மனியை அடிபணிய வைப்பதும் இதன் மூலம் அமெரிக்கா ஐரோப்பாவிற்குள் நுழைவதை நிரந்தரமாக்கிக் கொள்ளும் நோக்கம் நிறைவேறவில்லை.
மோசமாகிய  ஆப்பிரிக்க கண்டங்களையும் கூட்டமைப்புகளையும் பிரிக்ஸ் கூட்டமைப்பு போன்றவைகளின் வளர்ச்சியும் அமெரிக்காவின் கனவை ஆட்டம் காண வைக்கிறது. ஐநா-விலும் அமெரிக்காவின் செல்வாக்கு சீனா – ரஷ்யா ஆகிய நாடுகளின் வீட்டோ பவரால் தகர்ந்து வருகிறது. தற்போது அமெரிக்காவிற்கு கைத்தடியாக இருப்பது நேட்டோ மட்டுமே.
எனவே நேட்டோவிற்குள் சாத்தியமான உலக நாடுகள் அனைத்தையும் கொண்டு வந்து தன்னுடைய ஒற்றை துருவ மேலாதிக்கத்தை வளர்த்து தனக்கேயுரிய – ஏகாதிபத்தியத்திற்குரிய – அத்துமீறலையும் ஆக்கிரமைப்பையும் போரையும் மேற்கொண்டு வருகிறது.
உலக மேலாதிக்கத்திற்கான போட்டியின் அணிவரிசையில் சீனாவும் ரஷ்யாவும் அணிவகுத்து வருவதால் சிபிஐ, சிபிஎம் கூறுவது போல இவை சோசலிச நாடுகள் / சோசலிச சாயல் கொண்ட நாடுகள் அல்ல. இதை ரஷ்ய அதிபர் புதினே, “சோவியத் யூனியன் சிதறியதை நினைத்து வருந்தாதவர்கள் இதயம் இல்லாதவர்கள். அதே நேரம் மீண்டும் ஒரு சோவியத் யூனியனை அமைக்க நினைப்பவர்கள் மூளை இல்லாதவர்கள்” என்று தனது திருவாயை மலர்ந்துள்ளார். புதினைப் பொறுத்தவரையில் ஜாரின் ரசியாவைப் போன்ற ஒரு விரிவடைந்த ரசியா தனது சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான். ஒரு ஏகாதிபத்தியம் என்ற வகையில் ரசியாவின் ஆளும் வர்க்கங்களின் விருப்பமும் இதுதான்.
உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்காக அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையே நடக்கும் கழுத்தறுப்பு போரில் மடியப்போவது என்னவோ மக்களும் ராணுவ வீரர்களும் தான். ஆனால், ஆதாயம் அடையப்போவது ஆளும் வர்க்கமும் – கார்ப்பரேட்டுகளும் தான்.
எனவே உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பையும், அமெரிக்கா தலைமையிலான கொலைகார நேட்டோவுடனான இணைப்பையும் ஆதரிக்க முடியாது. உக்ரைனை நவ நாஜிகளிடமிருந்து விடுவிக்கவே தான் போர் தொடுத்ததாக ரசியா கூறுவதும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து உக்ரைனை பாதுகாக்கவே உக்ரைன் – நேட்டோ ஒப்பந்தத்தில் இணைவதாகக் கூறுவதும் பின் தங்கிய ஏழை நாடுகளை வேட்டையாடுவதற்கான ஏகாதிபத்திய நாடுகளின் தந்திரங்களே அன்றி வேறல்ல.
படிக்க :
எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் : அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புப் போரே !!
பாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை
விடுதலை, சுதந்திரம் ஆகியவை வழங்குவதும், பெறுவதும் அல்ல. அந்தந்த நாட்டு மக்கள் போராடிப் பெறுவதாகும். எனவே தான் தனித்து நிற்பதா அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து நிற்பதா என்பதை உக்ரைன் மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
சுயமாக முடிவு எடுக்கும் அதிகாரத்தையும், மற்றவர்களின் ஜனநாயகத்தையும் ஏகாதிபத்தியம் ஒருபோதும் அனுமதிக்காது. எனவே ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு போரை முறியடிக்க ஒவ்வொரு நாடுகளும் விடுதலைப் போரை முன்னெடுப்பதும் அதை சோசலிசத்தோடு இணைப்பதுமே உழைக்கும் மக்களுக்கு வாழ்வையும், ஏகாதிபத்தியங்களுக்கும் அதன் ஆளும் வர்க்கங்களுக்கும் சாவையும் துரிதப்படுத்தும் என்பதை பாரதிதாசன் வரிகளோடு இணைப்போம்.
“புதியதோர் உலகம் செய்வோம்;
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”

கதிரவன்

எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? | கருத்துப்படங்கள் – பாகம் -2

எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?
♣ ஒருபுறத்தில் எல்.ஐ.சி-யை கைப்பற்றுவது; மற்றொருபுறத்தில் எல்.ஐ.சி விற்பனையில் கிடைக்கும் பல்லாயிரம் கோடிகளை சுருட்டிக் கொள்வது.
♣ இதுதான் கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டம்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் மலிவான காப்பீடுகள் தடுக்கப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் புதிய வேலை வாய்ப்புகள் நிறுத்தப்படும். சமூகநீதிக்கு வேட்டு வைக்கப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் சமூகநலத் திட்டங்களுக்கு கிடைக்கும் நிதி நிறுத்தப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் முதலீடுகளில் கிடைக்கும் இலாபம் பங்குதாரர்களுக்கு (கார்ப்பரேட்டுகள்) பிரித்து கொடுக்கப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் அரசின் வருவாய் தடுக்கப்படும். இதை ஈடுகட்ட மேலும், மேலும் பங்குகள் விற்பனை அதிகமாகும்!
♣ எல்.ஐ.சி-யில் இலாபம் குறையும். அதனால் நிறுவனம் தள்ளாடி விழுந்து விடும். அதன் பிறகு எல்.ஐ.சி மெல்ல, மெல்ல சாகும்!
♣ அதன் சொத்துக்களையும், நிதி இருப்பு மற்றும் முதலீடுகளையும் கார்ப்பரேட்டுகள் ஆள்வார்கள்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் எல்.ஐ.சி-யை நம்பியுள்ள சுமார் 28 கோடி பாலிசிதாரர்களின் ரூ.39 இலட்சம் கோடிகள் பணம் சூறையாடப்படும்!
♣ எல்.ஐ.சி-யின் துணை நிறுவனங்களான LICHFL, வீட்டுவசதி நிறுவனம் போன்றவையும் முடங்கிப்போகும்.
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் எல்.ஐ.சி முதலீடு செய்துள்ள ரிலையன்ஸ் (அம்பானி), டி.சி.எஸ் (டாடா) போன்றவற்றில் போடப்பட்ட முதலீடுகள் கபளீகரம் செய்யப்படும்!
♣ நலிவடைந்த (IDBI வங்கி போன்ற) நிறுவனங்களை தாங்கிப் பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் முடங்கி விடும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையை “பங்கு விற்பனைகளின் தாய்” என்று வர்ணிக்கின்றனர்.
♣ உண்மையில் இந்த பங்கு விற்பனையானது பாலூட்டிய தாயை விற்பதற்குச் சமம்!
எல்.ஐ.சி பங்கு விற்பனையை எதிர்க்கும் கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
நன்றி : பு.ஜ.தொ.மு,
மாநில ஒருங்கிணைப்புக் குழு.

உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே வெளியேறு | கருத்துப்படங்கள்

உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே, வெளியேறு!
♦ உக்ரைனை இணைத்துக் கொண்டு, நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பை கிழக்கு ஐரோப்பாவில் விரிவுபடுத்தி, ரஷ்யாவை முற்றுகையிட்டுத் தாக்கத் துடிக்கும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கப் போர் வெறியை முறியடிப்போம்!
♦ ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான போட்டாபோட்டியை உலகப் போராகத் தீவிரப்படுத்த குவாட் (QUAD), ஆக்கஸ் (AUKUS) போர்க் கூட்டணிகளைக் கட்டியமைத்துள்ள அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க வெறியைத் தகர்த்தெறிவோம்!
♦ உலக நாடுகளின் சுதந்திரத்தையும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் நிலைநாட்டப் போராடுவோம்!
♦ உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே, வெளியேறு!
♦ கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் கருங்கடல் பிராந்தியத்திலிருந்தும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளே, வெளியேறு!
♦ உலகப் பாட்டாளிகளே, ஒன்றுசேருங்கள்!
நன்றி :
மக்கள் கலை இலக்கிய கழகம்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் அதிகாரம்

நீதிமன்றத்தில் பொய் வழக்குகளை உடைத்தெறிந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை !

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை கட்டியமைத்து நடத்தியுள்ளோம். குறிப்பாக கொரானா காலங்களில் மக்கள் வாழ்விழந்து வாழ வழியற்ற நிலையில் வாடியபோது அதனை எதிர்கொள்வதற்காக மக்களுடைய உரிமைகளை பெற்றுத்தர பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
அப்படி நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கு தருமபுரி மாவட்ட காவல்துறை பல்வேறு பொய் வழக்குகளை போட்டு மக்கள் அதிகாரம் தோழர்களை அன்றாடம் நீதிமன்றத்திற்கு வந்து செல்லும் வகையில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கினால் பல முன்னணியாளர்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டு சொந்த வேலை இழந்து தினம்தோறும் நீதிமன்றம் சென்று வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக வழக்கிற்காக அலைகழிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற STC-எண் 753,2828,399,669 ஆகிய 4 வழக்குகளில் கடந்த 21.2.2022, 22.2 2022 ஆகிய தேதிகளில் 20-க்கும் மேற்பட்ட தோழர்கள் இது பொய் வழக்குதான் என்பதை நிறுவி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நீதிமன்றம் என்பது மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான இடமாக ஒருநாளும் இருந்ததில்லை. குறிப்பாக நீதிமன்றம் என்றாலே, மக்களுக்காக போராடுபவர்களை, சமூக மாற்றத்தை விரும்புபவர்களை, நக்சல்பாரி புரட்சியாளர்களை, அடக்கி ஒடுக்கி ஆளுகின்ற ஒரு சர்வாதிகார கூட்டம் என்ற வகையிலே தான் செயல்படுகிறது. எடப்பாடி ஆட்சி செய்த காலத்தில் மத்தியில் ஆளும் பாஜக-விற்கு துணையாக நின்று எந்த போராட்டங்கள் நடத்தினாலும் பொய் வழக்குகளை போட்டு வந்தது, போலீசு.
குறிப்பாக வேளாண் சட்டம், நீட் எதிர்ப்பு, காவிரி பிரச்சனை, இப்படி பல்வேறு பிரச்னைகளில் மக்கள் அதிகாரம் தலையிட்டு போராடி வந்தது. அதேபோல் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல போராட்டங்களை முன்னின்று நடத்தினோம். பாசிச பாஜகவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியது எமது அமைப்பு தான். இப்படி ஜனநாயக முறையில் போராடுவதற்கு சட்டம் வழங்கிய ஜனநாயகத்தை ஒருபோதும் தருமபுரி காவல்துறை மதித்து நடந்தது கிடையாது.
நான் போடுவது பொய் வழக்கு தான் என்னை ஒன்றும் புடுங்க முடியாது என்று வெளிப்படையாகவே B1 காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் பேசினார். கொரானா காலத்தில் நிவாரணம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றதைக் கூட வழக்குப் போட்டு இன்று வரை நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்க வைக்கின்றனர். இப்படி எண்ணற்ற பொய் வழக்குகளை தருமபுரி மாவட்ட காவல்துறை போட்டு வருகிறது.
தற்போது ஆட்சியைப் பிடித்த திமுகவோ இதுபோன்ற போராட்ட வழக்குகளை எல்லாம் நாங்கள் ரத்து செய்கிறோம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. இன்றுவரை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு, வேளாண் சட்டத்திற்கு எதிரான வழக்கு, நீட்டுக்கு எதிரான போராட்டத்தின் வழக்கு என பல வழக்குகளுக்கு இன்றும் நீதிமன்றத்தின் படி ஏறித்தான் வருகிறோம்.
தமிழக அரசின் மூலமாக கொடுக்கப்பட்ட அரசாணையை நீதிமன்றத்தில் கொடுத்தால்கூட வழக்கு தள்ளுபடி பற்றி நான் முடிவு செய்ய முடியாது என்கிறார் நீதிபதி. சட்டம் ஒன்றாகவும், நடைமுறை வேறாக இருக்கிறது. இதுபோன்ற பொய் வழக்குகளை தமிழக அரசின் அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கூட அரசு வழக்கறிஞர்கள் முன்வருவதில்லை. சட்டத்தை துளியும் மதிப்பது கிடையாது. ஆனால் நாங்கள் வழக்குகளை எல்லாம் ரத்து செய்து விட்டோம் என்ற வெற்று அறிவிப்பு மட்டும் சாதனை பட்டியலில் உள்ளது.
படிக்க :
உக்ரைன் போர் : ரசிய – அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை எதிர்ப்போம் || புரட்சிகர அமைப்புகள் அறிக்கை
எச்சரிக்கை – உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் || களத்தில் காலூன்றும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக !
வேளாண் சட்டம் ரத்து செய்துவிட்ட பிறகு கூட அதற்கான வழக்கை நீதிமன்றம் நடத்துவது கேலிக்கூத்தானது. அரசின் உண்மையான நோக்கம் போராடுபவர்களை ஒடுக்குவது தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட தோழர்கள் நீதிமன்றத்தால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். அந்த வழக்குகளை எல்லாம் தருமபுரி காவல்துறை திட்டமிட்டு பதிவு செய்து அதன் மூலமாக ஒரு பழிவாங்கும் நடவடிக்கையில் இன்றளவும் ஈடுபட்டுவருகிறது.
ஏன் பழி வாங்குகிறது? மக்கள் அதிகாரம் அமைப்பு தொடர்ச்சியாக சமூக பிரச்சனைகளில் தலையிட்டு போராடுகிறது. அந்த அமைப்பின் செயல்பாடுகளை ஒடுக்க வேண்டும் என்றால் அதற்கு பொய் வழக்குதான் சரி என பார்க்கிறது காவல் துறை. மிகக் கேவலமான வேலைகளில் கீழ்த்தரமாக செயல்படுகிறது தமிழக அரசு. இதுபோன்ற பொய் வழக்குகளை துணிவோடு எதிர்கொண்டு போராடி வருகிறது மக்கள் அதிகாரம்.
இந்த வழக்குகளை எதிர்கொள்வதற்காக தோழர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர், தோழர் ஆசியஜோதி, வழக்கறிஞர், தோழர் பிரசாந்த், வழக்கறிஞர் ஆகியோர் தொடர்ந்து போராடி நீதிமன்றத்தின் பொய்களை உடைத்தெறிந்து விடுதலையை பெற்றுத் தந்துள்ளனர். இது போன்ற பல்வேறு வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. வரும் காலங்களில் பிற வழக்குகளையும் பொய் வழக்கு என்பதை நிருபித்து விடுதலை பெறுவோம்.

தகவல்:
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9097138614.

கர்நாடகாவில் ஹிஜாப் தடை – தில்லை கோவிலில் தமிழுக்கு தடை || தர்மபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

“இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை, தில்லையில் தமிழனுக்கும் தமிழுக்கும் தடை. தில்லை இருப்பது தமிழ்நாடா இல்லை அதற்குள் ஒரு தனி நாடா? தில்லைக் கோயிலை இந்து அறநிலை துறையின்கீழ் கொண்டு வர சிறப்பு சட்டம் இயற்று” என்ற முழக்கத்தின் கீழ், கடந்த 28. 02. 2022 அன்று மாலை 3 மணிக்கு, பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடகாவில் கலவரத்தைத் தூண்டி அதன் மூலம் ஆட்சியை தக்க வைக்கவும், மீண்டும் மீண்டும் இந்து மதவெறியின் சோதனைச் சாலையாக மாற்றுவதற்கும், கர்நாடக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இந்து-முஸ்லிம் என்ற மத உணர்வை தூண்டி அதன்மூலம் பிரிவினையை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்ற ஆர். எஸ். எஸ், பாஜக-வின் சதியை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
அந்தவகையில் பாஜக ஆர்.எஸ்.எஸ். கும்பல் நாடு முழுவதும் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, பொதுச்சொத்தை சூறையாடுவதை மறைப்பதற்காகவும் தங்களது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்கவும் இந்த கலவரத்தைத் தூண்டி வருகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் தில்லை நடராஜர் கோயில் தமிழ் மக்களால் கட்டப்பட்ட கோயிலாகும். இந்தக் கோயிலில் தமிழில் பாடினால் சாமி தீட்டாகிவிடும் என்றும் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடக்கூடாது என்றும் மொழி தீண்டாமையை இன்றும் கடைபிடிக்கும் தீட்சிதர்களுக்கு எதிராக, தில்லை கோயிலை தீட்சித பார்ப்பன கும்பலிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அது உழைக்கும் மக்களின் போராட்டத்தின் மூலமாக தான் வெற்றி கொள்ள முடியுமே, தவிர வெறுமனே நீதிமன்ற போராட்டத்தின் மூலமாக மட்டும் நீதி கிடைக்காது.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழர்கள் சோற்றை சாப்பிட்டுவிட்டு, தமிழ் மண்ணுக்கு துரோகமிழைக்கும் பார்ப்பனக் கும்பலை தமிழகத்தை விட்டே விரட்டி அடிக்க வேண்டும். லட்சுமி என்ற பெண்ணை தாக்கிய தீட்சதர் கும்பலை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். என்ற அடிப்படையில் தோழர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் பென்னாகரம் வட்டார செயலாளர் தோழர் அருண் அவர்கள் தலைமை தாங்கினார். கண்டன உரையாக சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் மாதையன், விசிக பென்னாகரம் தொகுதி செயலாளர் தோழர் கருப்பண்ணன்,  மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தோழர் பெரியண்ணன்,  மக்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் முத்துக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக மக்கள் அதிகாரம் பென்னாகரம் வட்டார இணைச்செயலாளர் தோழர் சிவா அவர்கள் நன்றி உரையாற்றினார்.

தகவல்
மக்கள் அதிகாரம்
தர்மபுரி மண்டலம்
9790138614

நூல் அறிமுகம் : இப்போது உயிரோடிருக்கிறேன் || நமக்கு ஏன் இத்தனை எதிரிகள் ? || முரளிதரன்

நமக்கு ஏன் இத்தனை எதிரிகள்?
டந்த நூற்றாண்டில் ஊடகங்கள், அவற்றின் போக்கு எப்படியிருந்திருக்கிறது என்பது குறித்து விரிவாக வெகுசில ஆய்வுகளே வெளியாகியிருக்கின்றன. ஆனால், ஊர் ஊராகப் பயணம் செய்து, தீவிரமாக செயல்படக்கூடிய ஒரு அரசியல் தலைவர் ஒரு கால் நூற்றாண்டிற்கு ஊடகங்களைக் கவனித்து, அவற்றின் போக்கு குறித்து மக்களிடம் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. அவர் பெரியார்!
ஒரு கால் நூற்றாண்டிற்கு, அதாவது 1925 முதல் 1949 வரை பெரியாரின் ஊடகங்கள் குறித்த கட்டுரைகளை பொருள்வாரியாகப் பிரித்து தொகுத்திருக்கிறார் டாக்டர் இரா. சுப்பிரமணி.
இந்தக் கால் நூற்றாண்டில் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி ஆகிய இதழ்களில் இதழியல், ஊடகங்கள், பத்திரிகைகள் குறித்து வெளியான உரைகள், தலையங்கங்கள், துணைத் தலையங்கங்கள், கட்டுரைகள், குறிப்புகள் ஆகியவை
1. தந்தை பெரியாரின் பார்வையில் இதழ்கள்
2. ஏன் தொடங்கினேன் இத்தனை இதழ்கள்?
3. பெரியார் போற்றிய தோழமை இதழ்கள்
4.தந்தை பெரியாரின் வழக்காடும் இதழியல்
5. தந்தை பெரியாரின் நூல் மதிப்புரைகள்
என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கின்றன.
மொத்தம் 410 கட்டுரைகள்!
இந்தக் கட்டுரைகளையும் பெரியாரின் பார்வையையும் சரியாகப் புரிந்துகொள்ள ஏதுவாக, அந்த காலகட்டத்திலும் அதற்கு சற்று முந்தைய காலகட்டத்திலும் வெளியான இதழ்கள் குறித்தும் அந்த காலகட்டம் குறித்தும் 14 விரிவான அறிமுகக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் சுப்பிரமணி.
அந்த காலகட்டத்தின் இதழ்கள் மக்கள் மீது செலுத்திய செல்வாக்கைச் சரியாகவே உணர்ந்திருந்த பெரியார், அவற்றைப் பற்றி எழுதுவதும் சொந்தமாக பத்திரிகைகளைத் தொடங்கி தனது கருத்தைப் பரப்புவதும் மிக முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார்.
குறிப்பாக, ஏன் தொடங்கினேன் இத்தனை இதழ்கள் என்ற பகுதி மிகச் சிறப்பான ஒன்று. குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ரிவோல்ட், விடுதலை, உண்மை என வெவ்வேறு பத்திரிகைகளை அவர் தொடங்கி நடத்த வேண்டிய காரணம், ஒவ்வொரு இதழையும் கொண்டுவருவதில் அவர் எதிர்கொண்ட சிரமங்கள், ரெய்டுகள், வழக்குகள், அபராதங்கள், அவற்றை முடக்க மேற்கொள்ளப்பட்ட அரசின் நடவடிக்கைகள் போன்றவை இந்தப் பகுதியில் விரிவாக காணக்கிடைக்கின்றன. தனது பத்திரிகைகள் குறித்த சின்னச் சின்னத் தகவல்களைக்கூட வாசகர்களிடம் பகிர விரும்பியிருக்கிறார் பெரியார்.
புத்தகத்தின் இறுதியில் பல்வேறு பத்திரிகைகள் குறித்த சிறு அறிமுகக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில ஆர்வமூட்டும் தலைப்புகளைப் பாருங்களேன்:
‘நமது துணை ஆசிரியர் விலகுகிறார்’
‘குடி அரசு வாசகர்களுக்கு ஒரு உண்மையான முன்னறிவிப்பு’
‘பயமுறுத்தல் கடிதங்கள்’, ‘1550 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது’
‘ஆளவந்தாருக்கு எச்சரிக்கை’
‘மித்திரன் புரட்டு நிருபர்களின் அயோக்கியத்தனம்’!
சுதேசமித்திரன், தினமணி, விகடன் போன்றவை அவருடைய விருப்ப இலக்குகளாக இருந்திருக்கின்றன.
பெரிய சைஸில் 800 பக்கங்களோடு பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது இந்தப் புத்தகம்.
இதழியல் மாணவர்கள், ஆய்வாளர்கள், 20-ம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் தமிழ் சமூகத்தின் மீது இருந்த தாக்கங்களை புரிந்துகொள்ள விழைவோர் கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் இது!
ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?
வெளியீடு: விடியல் பதிப்பகம்
விலை : ரூ. 1000/-
புத்தகக் கண்காட்சியில் ரூ. 700க்குக் கிடைக்கும்.
முகநூலில் : முரளிதரன்
000
இப்போது உயிரோடிருக்கிறேன்
மிழின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான இமையத்தின் நாவல்களாக இருந்தாலும் சிறுகதைகளாக இருந்தாலும், அவை படிப்பவர்களை ஒரு கணமாவது உலுக்கிவிடும்.
படிக்க :
நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
‘கோவேறு கழுதைகள்’லில் இருந்து இப்போது வெளியாகியுள்ள ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’வரை இதில் விதிவிலக்கு இல்லை. அவருடைய எல்லாப் படைப்புகளோடும் ஒப்பிடுகையில் மிகுந்த துயரமும் கையறுநிலையும் படிந்த படைப்பாக இந்த நாவலைச் சொல்லலாம்.
பள்ளிச் சிறுவன் ஒருவனுக்குத் திடீரென சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. இதற்குப் பிறகு அந்தக் குடும்பமே நிலைகுலைந்து விடுகிறது. கிராமத்தைச் சேர்ந்த அவனுடைய பெற்றோர் இருக்கும் பணத்தைப் புரட்டிக்கொண்டு, நகரத்திற்கு வந்து ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். வாரத்திற்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும். முடிவில் அவனது தாயாரின் சிறுநீரகம் அவனுக்குப் பொருத்தப்படுகிறது.
ஆனால், அதோடு பிரச்சனை முடியவில்லை. திடீரென க்ரியாட்டின் அளவு அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே நொறுங்கிப் போயிருக்கும் அவனுடைய தந்தை, இடி விழுந்ததைப் போல ஆகிவிடுகிறார். பயாப்சி சோதனைக்காக அந்தச் சிறுவன் காத்திருப்பதைப் போல நாவல் முடிவுக்கு வருகிறது.
இந்த ஒற்றைச் சிறுவனின் வாழ்வைச் சொல்வதின் மூலம், நாள்தோறும் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் ஊசலாடும் ஆயிரக்கணக்கான சிறுநீரக நோயாளிகளின் வாழ்விற்குள் அழைத்துச் செல்கிறார் இமையம்.
ஒரு படைப்பு என்றவகையில் இமையம் மீண்டும் ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ஆனால், இந்த நாவலைப் படிக்கும்போது உணர்வுரீதியாக பெரும் விலகலோடு படிக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்தச் சிறுவனாகவோ அவனது பெற்றோராகவோ உணர்ந்து மனமுடைய நேரும்.
மருத்துவத் துறையைப் பொறுத்தவரை, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்வது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. ஆனால், ஒருவருக்கு செயலிழப்பு ஏற்பட்டுவிட்டால், அவர்கள் வாழ்நாள் முழுக்க நோயாளிதான். ஆகவே, சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகளும் அவற்றைப் பின்பற்றுவதுமே மிக முக்கியம். தமிழ்நாடு அரசின் கவனத்தை அந்தத் திசையில் இந்த நாவல் திருப்புமானால், அதுதான் இமையத்தின் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்.
நூல் : இப்போது உயிரோடிருக்கிறேன்
ஆசிரியர் : இமையம்
வெளியீடு : க்ரியா (Stall No. 228)
விலை : ரூ. 345/-
முகநூலில் : முரளிதரன்
disclaimer

எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? | கருத்துப்படங்கள் – பாகம் -1

எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?
♠ 1956-ல் ரூ.5 கோடி முதலீட்டில் துவக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம், எல்.ஐ.சி !
♠ எல்.ஐ.சி தொடங்கி 65 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைய சொத்து மதிப்பு ரூ.39 இலட்சம் கோடிகளுக்கும் மேல்!
♠ அரசு கொடுத்த ரூ.5 கோடி முதலீட்டுக்கான டிவிடென்ட் ஆக இதுவரை ஒரு இலட்சம் கோடிக்கு மேல் ஒன்றிய அரசுக்கு கொடுத்துள்ளது!
♣ சுமார் 1.5 இலட்சம் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வேலை கொடுத்துள்ளது. சுமார் 12 இலட்சம் முகவர்களுக்கு வாழ்வளிக்கும் ஆதாரமாகத் திகழ்கிறது!
♣ தன்வசமுள்ள ரூ.39 இலட்சம் கோடிகளில் சுமார் ரூ.36 இலட்சம் கோடிகளுக்கு பல துறைகளில் முதலீடுகள் செய்துள்ளது.
♣ ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் கடன் கொடுத்து மக்கள் நலனுக்கு மூலதன நிதியளிப்பாளனாகத் திகழ்கிறது.
♣ எல்.ஐ.சி-யில் கொழுத்த பணம் இருக்கிறது. அதனை பங்கு போட்டு விற்றால் நிறைய பணம் கிடைக்கும் என்கிறது, மோடி அரசு!
♣ எல்.ஐ.சி-யின் உரிமையாளர் அரசு என்றாலும், அதில் போடப்பட்டுள்ள 39 இலட்சம் கோடி பணமும் மக்களது பணம்தான்!
♣ மக்களது பணத்தை தனியார் நிறுவனங்கள் கைப்பற்றும் நோக்கமே இந்த பங்கு விற்பனை!
♠ சுமார் 31.6 கோடி பங்குகளை (மொத்த பங்கில் 5%) விற்பதன் மூலம் ரூ.65,000 கோடிகள் அரசின் கஜானாவுக்கு கிடைக்கும் என்கிறது, மோடி அரசு!
♠ கஜானாவில் குவியும் ரூ.65,000 கோடிகளை யாருக்கு செலவிடப் போகிறார்கள்?
♠ இவ்வளவு கோடிகளும் கார்ப்பரேட் கொள்ளைக்குத்தான் தரப் போகின்றனர்!
♠ இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனம் எல்.ஐ.சி.தான்!
♠ எல்.ஐ.சி-யின் சொத்து மதிப்பு பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட அதிகம்!
♠ கடந்த 65 ஆண்டுகளில் நட்டம் என்பதையோ, இலாபத்தில் சரிவு என்பதையோ இதுவரை சந்தித்திராத ஒரே பொதுத்துறை எல்.ஐ.சி.தான்!
♠ கடந்த 25 ஆண்டுகளாக முழுமையாகவோ, பகுதியாகவோ நடந்த அனைத்து பொதுத்துறை விற்பனைக்கும் நட்டம் என்பதைத்தான் அரசு தரப்பில் பிரதான காரணமாக காட்டப்பட்டது!
♠ உலகத்தரம் வாய்ந்த உலகின் டாப் 10 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி-யின் பங்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது!
♠ எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு நட்டம் காரணம் அல்ல; அதை அழிக்கும் முயற்சிதான்!
♠ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகள் திருடுவதற்காக கதவுகள் முற்றாகத் திறக்கப்படும்!
♠ எல்.ஐ.சி பங்கு விற்பனையால், பாலிசிதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய உபரியில் கணிசமானதை பங்குதாரர்கள் என்கிற பெயரில் கார்ப்பரேட்டுகள் உறிஞ்சிக் கொள்வார்கள்!
எல்.ஐ.சி பங்கு விற்பனையை எதிர்க்கும் கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
நன்றி : பு.ஜ.தொ.மு,
மாநில ஒருங்கிணைப்புக் குழு.

ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மார்ச் 7,8,9 மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

ர்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடைவிதித்தது அம்மாநில பிஜேபி அரசு. தில்லை நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடை ஏறிய ஒரு தலித் பெண்ணை சாதி ரீதியாக இழிவுபடுத்தி தாக்கியுள்ளனர் கோவில் தீட்சிதர்கள். கர்நாடக ஹிஜாப் தடையைக் கண்டித்தும், தில்லை கோயிலில் தலித் பெண் பக்தர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பு மார்ச் 7,8,9 தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.
♠ இசுலாமியர்களுக்கு ஹிஜாப் தடை!
♠ தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை !
♠ தில்லை இருப்பது தமிழ்நாடா ? அதற்குள் தனிநாடா ?
♠ தீண்டாமை சின்னமான நந்தன் நுழைந்த தெற்கு வாயில் சுவரை அகற்றுவோம்!
♠ தில்லை கோயிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர சிறப்புச்சட்டம் இயற்று !
மார்ச் 7,8,9 – தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் !!
அனைவரும் வாரீர்!
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

இலக்கியம் கற்றுக்கொள்ள இலக்கிய நூல்கள் மட்டும் போதுமா ? || பாவெல் சக்தி

புதிதாக இலக்கியம் கற்றுக்கொள்ளும் முனைப்பில் இருக்கும் நண்பர்கள் பலர், புத்தகக் கண்காட்சியில் எதை வாங்குவது என்றுத் தெரியாமலும், ஏமாந்து விடக்கூடாது என்ற முனைப்பிலும் மூத்த எழுத்தாளர்களின் முக்கியமான இலக்கிய நூல்களின் பட்டியல்களை ஆங்காங்கே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
என்னிடமும் கேட்கிறார்கள். நானும், நான் படித்த புதுமைப்பித்தனில் தொடங்கி ஜெயமோகன் வரையும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு பரிந்துரை செய்தும் வருகிறேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் இந்தப் பரிந்துரைகளைச் செய்யும்போதும் ஒரேயொரு கேள்வி மட்டும் எப்போதும் எழும்.
“இலக்கியம் கற்றுக்கொள்ள இது மட்டும் போதுமா?”
அப்படியே இந்தக் கேள்வி எழத் தொடங்கும்போது தோழர் பிளக்ஹானவ் அவர்களின் இந்த மேற்கோளும் கூடவே தொற்றிக்கொண்டு வந்துவிடும்.
“கலைஞர்களும் கலைப் படைப்புகளில் ஆழ்ந்த அக்கறைக் கொண்டோரும், அவர்களைச் சுற்றிலுமுள்ள சமுதாயச் சூழலிடம் தீர்வுகாண முடியுமென்ற நம்பிக்கைக்கு இடமின்றி அதனுடன் பிணக்கு கொள்ளும்போது, கலை கலைக்காவே என்ற போக்குடையவர்களாக மாறுகின்றனர்”
படிக்க :
இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா?
சுயமோகன்: ஊட்டி இலக்கியச் சந்திப்பு குறித்து…
அவர் கூறியதை கொஞ்சம் விரிவுபடுத்தினால், அவர்கள் கலை கலைக்காக என்ற போக்குடையவர்களாக மட்டுமல்ல, கலை இலக்கியம் யாவும் மக்களுக்காக என்ற கோட்பாட்டின் எதிரிகளாவும் இருக்கின்றனர் என்பதையும் நாம் காணமுடியும்.
இங்கேயும் அப்படி பலர் இருங்கிறார்கள். அவர்களின் பெயர்களைச் சொல்வது இந்தப் பதிவின் நோக்கமல்ல. இந்த இடத்தில் நீங்கள், ஆளும் வர்கத்தின் ஒடுக்குமுறையின்கீழ் ஒவ்வொருமுறையும் மக்கள் தாங்க முடியாத அளவிற்கு சித்ரவதைக்கு ஆளாகும்போதும் எந்த எழுத்தாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே போதுமானது.
இப்படிச் சொல்வதால், அவர்களை நாம் தெருவில் இறங்கிப் போராடவோ, சிறைக்கு செல்லவோ, வழக்குகளை வாங்கவோ கட்டாயப்படுத்தவில்லை. குறைந்தபட்சம் அவரவர் கதைகளில் அதை நேர்மையாக தொடர்ந்து பிரதிபலிக்கவாவது செய்திருக்கிறார்களா? பின் இவர்களை படிக்கும் நாம் மட்டும் எவ்வாறு மக்களின்பால் அக்கறை கொண்டவர்களாக இருப்போம் இல்லையா? படிப்படியாக நாமும் அவர்களைப்போலே மாறிப்போய்விடுவோம்தானே..? ஆபத்து என்பது அதுதான்.
இதைப்பற்றி பலமுறை நாம் பேசிவிட்டோம் என்பதால், இப்போது புதுமைப்பித்தன், மண்ட்டோ என்ற வெறும் இருவரை மட்டும் உதாரணத்திற்கு எடுத்துகொள்வோம்.
புதுமைப்பித்தனைப் படியுங்கள். அவர் கதைகளில் அந்தக் காலத்தில் உருவான அதிகார வர்க்கம் இருக்கும். எரியும் பனிக்காடு நாவல் பேசும் துயரத்தை துன்பக்கேனியில் அவர் முன்னெடுத்திருப்பார். பொன்னகரம், ஒப்பந்தம் போன்ற கதைகளில் அந்த காலத்தில் யாரும் கேட்க முடியாத விஷயங்கள் கேள்விகுள்ளாக்கப்பட்டிருக்கும். அப்படியே இன்னொருவரான மண்ட்டோ பக்கம் வாருங்கள். அவரைப்பற்றி சொல்ல வேண்டுமா என்ன? பிரிவினையில் மதவாதம் தின்று செரித்த மனித இறைச்சியின் கழிவையல்லவா நம் முகத்தில் விடாமல் தூக்கி வீசுகிறார்!
ஆனால் அந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி. அரசியலின் பெயரால் இதுபோன்ற துயரங்கள் நடக்கும்போதும், மனிதக் கழிவுகளை அவர்கள் வீசி எரியும்போதும்… அதைத் துடைக்கக்கூட தகுதியில்லாதவர்களும், திராணியில்லாதவர்களும், வக்கில்லாதவர்களும்தான்…
சமூகத்தில் எந்த மாதிரியான அசாதாரண சூழல் நிலவினாலும், அதன் சமகாலத்தை பேசக்கூடாது என்றும், மக்கள் பிரச்சனையை பேசும் படைப்புகள், முக்கியமாக கம்யூனிசம் பேசும் படைப்புகள் அனைத்தும் பிரச்சார இலக்கியங்கள் என்றும், எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு அவசியமில்லை; அவன் தனித்துவமானவன் என்றும், கலை கலைக்காகவே என்றும் பேசிக்கொண்டு, மதவாத பாசிச அரசியல் கருத்துக்களோடும், போலி அறங்களோடும், அரசிற்கு, அதிகாரத்திற்கு கொஞ்சமும் வலிக்காத கதைகளாக எழுதிக் குவித்துக் கொண்டிருந்தார்கள்; குவிக்கிறார்கள்.
இதற்கு மாறாக, “இலக்கியப் படைப்பு என்பது உழைக்கும் மக்களின் ஒரு ஆயுதமாக இருக்க வேண்டும்” என்று நாம் சொன்னாலோ, இப்படிப்பட்ட நூல்களைப் புறக்கணித்தாலோ… “மக்களுக்கு அறிவு கிடையாது. வாசகன் கேள்வி கேட்கக்கூடாது. இவர்கள் முட்டாள்கள். இலக்கியத்தின் ஆழத்தை உணராதவர்கள்” என்று நம்மீது பழிபோட்டு நம் குற்ற உணர்ச்சியையே தூண்டுவார்கள்.
அதேநேரம் இப்படி இலக்கியத் தூய்மைவாதம் பேசும் இவர்களின் பின்புலம் என்பது வெறும் இலக்கியத்தை மட்டுமா சார்ந்து இருக்கிறது…? அவர்களின் எழுத்துக்களும் பாசிசம், மதவாதம், பின்நவீனத்துவம், அடையாள அரசியல் போன்ற கழிசடை அரசியல்களை மையமாகக் கொண்டுதானே இயங்குகிறது? ஏதோ ஒரு வகையில் இந்தப் புரிதல் இருப்பதினால்தான் நண்பர்கள் இலக்கிய நூல்களின் பரிந்துரைகள் கேட்கும்போது எனக்கு எப்போதும் அந்தக் கேள்வி எழுகிறது.
படிக்க :
நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?
மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !
இந்த இடத்தில்தான், இலக்கியம் என்பதை கலகம் செய்யத் துணிந்து விட்டவனின் ஆயுதம் என்று மக்சிம் கார்க்கி சொன்னதையும், ஒரு இலக்கியப் படைப்பு என்பது வரலாற்று சக்கரத்தை ஒருபோதும் பின்நோக்கி இழுக்கக்கூடாது, அது அதிகாரத்திற்கு எந்த நிலையிலும் துணை போகக்கூடாது, இலக்கியம் என்பது எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்று கிடையாது; அப்படி போதிப்பவர்களை எள்ளி நகையாட வேண்டும் என்பதையும் முற்று முழுவதுமாக ஏற்கிறேன்.
அந்த வகையில்…
1. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
2. கூலியுழைப்பும் மூலதனமும் – மார்க்ஸ்
3. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் – எங்கெல்ஸ்
4. அரசும் புரட்சியும் – லெனின்
5. மார்க்சியம், தேசிய இனப் பிரச்சனை மற்றும் மொழியியல் (கட்டுரைகள்) – ஸ்டாலின்
6. முரண்பாடு பற்றி – மாவோ
என இந்த ஆறு நூல்களையும்… தொடக்க நிலையில் உள்ள ஒருவர் மக்களையும், சமூகத்தையும், இலக்கியத்தையும், அரசியலையும் புரிந்துகொள்ள கண்டிப்பாக பயில வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, எனக்கு மாபெரும் இலக்கிய நூல்கள் என்பது இந்த ஐவர் எழுதிய அனைத்து நூல்களும்தான். இவற்றுக்கு பின்தான் மற்ற அனைத்தும்.
முகநூலில் : பாவெல் சக்தி

disclaimer

நூல் விமர்சனம் : ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் || ஸ்டீபன் ஹாக்கிங் || ராஜசங்கீதன்

புத்தகச் சந்தை என்பதால் மீண்டும் ஒரு புத்தகத் தொடர் : வாசிப்பில் முதல் புத்தகம், ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள். ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு.
பிரபஞ்ச உருவாக்கம், உலகம் தோன்றியது, மனித இனத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும், ஏலியன்கள் உண்மையா முதலிய அறிவியல் விஷயங்களை உங்களுக்கு நெருக்கமான ஒருவர் சிக்கலற்ற வார்த்தைகளில் சொன்னால் எப்படி இருக்கும்? அறிவியலே அலாதி என்றால் அதை எளிமையாகச் சொல்வது பேரலாதிதான். ஸ்டீபன் ஹாக்கிங் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்.
‘என்னை ஒரு சிறு பழக்கொட்டையின் ஓட்டுக்குள் அடைத்து வைத்தாலும், பிரபஞ்ச வெளியின் சக்கரவர்த்தியாகவே என்னை நான் கருதிக் கொள்ளுவேன்’ என்ற ஷேக்ஸ்பியரின் சொல்லாடலைக் கொண்டு மனிதனின் பண்பை விளக்கத் தொடங்குகிறார்.
படிக்க :
நூல் விமர்சனம் : வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி || நக்கீரன்
நூல் அறிமுகம் : மதரிங் எ முஸ்லிம் || MOTHERING A MUSLIM – NAZIA ERUM || இ.பா. சிந்தன்
‘ஒளிக்கற்றையின் மேலமர்ந்து பயணிக்கும் கனவை’க் கொண்ட ஐன்ஸ்டீனைக் கொண்டு காலத்தை விளக்குகிறார். ஹாக்கிங்தான் ஜாலி பேர்வழி என்றால் ஐன்ஸ்டீன் எப்படியானவர் தெரியுமா?
‘ஒளியைவிட வேகமாகப் பயணித்த
ஒய்யாரப் பெண்ணொருத்தி இருந்தாள்
ஓரிடத்திற்குப் புறப்பட்டாள் இன்று
ஒயிலாய் அங்குச் சென்றடைந்தாள் நேற்று’
எனக் காலப்பயணத்தை விளக்கக் கவிதை சொல்லி இருக்கிறார் ஐன்ஸ்டீன்.
மனித குலத்துக்கு பெரும் பிரச்சினையாக காலநிலை மாற்றம் இருக்கும் என்கிறார் ஹாக்கிங். செயற்கை நுண்ணறிவு (AI) பெரும் சவாலாக மனித குல எதிர்காலத்துக்கு இருக்கும் எனவும் கணிக்கிறார். செயற்கை நுண்ணறிவு என்றதும் டெர்மினேட்டர் பட அளவுக்கு யோசிக்க வேண்டாம். இப்போதே மனித உழைப்புக்கு பதிலாக automation-க்கு நிறுவனங்கள் நகர்ந்து நம் பொருளாதாரம் கேள்விக்குறி ஆவது ஒரு வகை செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம்தான்.
ஹைலைட்டாக கடவுளையும் காலத்தையும் (Time) வைத்து ஒரு விஷயம் சொல்கிறார். ‘பெருவெடிப்பிலிருந்துதான் (Big Bang) காலம் (Time) உருவானது. எனவே பெருவெடிப்புக்கு முன் எதுவும் இருந்திருக்காது’ என சொல்லிவிட்டு கடவுள் பற்றிய கேள்விக்கு நம்மூர் சுஜாதா பாணியில் ஒரு கூட்டு வைக்கிறார் மனுஷன்:
“பெருவெடிப்புக்கு முன் கடவுளுக்கான வாய்ப்பே இல்லை. ஏனெனில் அப்போது பிரபஞ்சத்தை உருவாக்கக் கடவுளுக்கு நேரம் (Time) இருந்திருக்காது!”
சரி, இன்றைய தலைமுறை பற்றி என்ன சொல்கிறார் ஹாக்கிங்?
மனிதப் பரிணாம வளர்ச்சிக்கு தகவல்தான் அடிப்படை. குகை ஓவியம் தொடங்கி, மொழி உருவாகி, எழுத்து ஆகி, ஏடாகி, இலக்கியமாகி, வரலாறாகிதான் இன்று வரை மொத்த மனித குலத்தையும் கட்டி கட்டுக்கோப்பாக சமூகம் ஆக்கி வைத்திருக்கிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தகவல், அதன் முக்கியத்துவத்தை இழந்தால் மனிதப் பரிணாமத்துக்கு என்ன ஆகும்?
படிக்க :
மனித குல சேவையில் கியூப மருத்துவ அறிவியல் !
கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்
அதுதான் தற்போதைய தலைமுறையில் நேர்வதாக சொல்கிறார் ஹாக்கிங். தொழில்நுட்ப வளர்ச்சியாலும் சமூக தளங்கள் மற்றும் லாபவெறியாலும் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு இன்று தகவல் நிறைந்து கிடக்கிறது. சொல்லப் போனால் மொத்த மனித இனமும் இதுவரை எழுதியவற்றைத் தாண்டி இந்த ஒரு தலைமுறை தகவல்களை எழுதியிருக்கிறது. இவை எல்லாவற்றையும் அவசியம் பாராமல் நுகரும் இன்றையத் தலைமுறையினனுக்கு தகவலின் முக்கியத்துவம் குறைந்து படைப்பாற்றல் தக்கையாகி மனிதப் பரிணாம உருவாக்கத்துக்கு காரணமாக இருந்தப் போக்கு தலைகீழாய்த் திரும்பிவிடுமோ என்ற ஐயத்தை உருவாக்குகிறார் ஹாக்கிங். நமக்கும் இருக்கும் அதே ஐயம்.
என்னவொரு சிக்கல் என்றால், நாம் ரசிக்கும் விஞ்ஞானி என்றாலும் சோவியத்தை காரணமின்றி விமர்சிக்கும்போதுதான் கொண்டை படாரென தெரிந்து விடுகிறது. மேலும் interstellar-ல் நாசூக்காக சொல்லப்பட்ட ‘பூமியை கைவிட்டு வேறுலகுக்கு சென்று தப்பிக்க வேண்டும்’ என்கிற விஷயத்தை, பட்டவர்த்தனமாக விண்வெளியை colonize செய்ய வேண்டுமென காலனியாதிக்கத்துக்கு நியாயம் வேறு கற்பிக்கிறார்.
மேற்குறிப்பிட்ட conditions applyகளுடன் படிக்க வேண்டிய புத்தகம் இது. கருந்துளைகளும் குவாண்டம்களும் ஏலியன்களும் காலமும் ஆடும் விஞ்ஞானக் களியாட்டத்தை எளிமையாக விளக்கும் நூல். படித்து விடுங்கள்.
வெளியீடு : மஞ்சுள் பதிப்பகம்
விலை : ரூ. 325
முகநூலில் : ராஜசங்கீதன்

புலிகள் காப்பகம் எனும் பெயரில் முடக்கப்படும் பர்கூர் மலைப்பகுதி மக்கள் !

சிறை பிடிக்கப்பட்டதுபோல் நகர முடியாமல் முடங்கிக் கிடக்கிறது 85 பழங்குடி மற்றும் 120-க்கும் மேற்பட்ட வனக்குடி கிராமங்கள். நீதிமன்றத்தின் உத்தரவால் கிட்டத்தட்ட 1 இலட்சம் மக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்து போய்விட்டது. வாழ்க்கை பறிபோய்க் கொண்டிருப்பதை தடுக்க கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டியத் தமிழ்ச்சமூகம் தூங்கிகொண்டிருக்கிறது.
சத்தியமங்கலம் வழியாக பெங்களூரு செல்லும் திம்மம் சாலையை வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன என்று சொல்லி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரைக்கும் வாகனங்கள் செல்லக்கூடாதென முடக்கியதால்தான் இவ்வளவு விபரீதமும். இந்த வழியை பயன்படுத்திதான் மேலே சொன்ன நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தங்களுடைய காய்கறிகள் மற்றும் மலர் உள்ளிட்ட விளைபொருட்களை மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டுவர வேண்டும். கோவையின் இயந்திர பாகங்களும் உற்பத்தியும் கூட இப்பாதையில்தான் கருநாடகத்திற்கு சென்றாக வேண்டும். பழங்குடி மற்றும் வனக்குடி மக்கள் அனைவரும் மருத்துவம் பார்ப்பது முதல் நிர்வாக தேவைகளுக்காக இவ்வழியில்தான் சத்தியமங்கலம் வந்தாக வேண்டும். எதைப்பற்றியும் கவலையில்லாமல், மாற்று பாதையும் இல்லாமல் முடக்கியிருக்கிறது அரசாங்கம்.
படிக்க :
ஜம்புக்கல் மலையை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்போம் !
பறி போகும்  பாரியின்  பறம்பு மலை : வி.இ.குகநாதன்
இனிமேல் அம்மக்களுக்கு இரவில் உடல்நலக்கேடு வரக்கூடாது; இரவில் காவல்துறை உள்ளிட்டவைகளின் அவசியம் ஏற்படக்கூடாது; வெளியூர்களில் வசிக்கும் அவர்களது பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு எந்த அவசரமும் இரவில் உருவாகிடக் கூடாது. எல்லாம் பகலிலே ஆட்சியாளர்கள் அனுமதிக்கும் நேரத்திலேதான் நடக்க வேண்டும்.
பகலிலே நடந்தால் மட்டும் என்ன பிடுங்க முடியும்? மாலை முதல் அடுத்த நாள் காலை வரை முடக்கப்பட்ட வாகனங்கள் பன்னாரி செக்போஸ்டிலிருந்து இந்த பக்கம் பல கிலோமீட்டருக்கு அணிவகுத்து நிற்கும். அதுபோல் அந்தப் பக்கம் காரப்பள்ளம் செக்போஸ்டிலிருந்து பல கிலோமீட்டருக்கு வாகனங்கள் காத்துநிற்கும். பயண நேரம் தொடங்கியதும் ஒன்றையொன்று முந்தி செல்ல எதிரும் புதிருமாக வாகனங்கள் எத்தனிக்கும். அந்த போராட்டத்தில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும். 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட அந்த தரமற்ற சாலையில் இயல்பாகவே வாகனங்கள் பழுதாகும். அப்படி ஆகிவிட்டால் அதோகதிதான். அதற்கு மேல் எதுவும் நகராது. உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவரை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாது. இப்படித்தான் முட்டாள்த்தனமான உத்தரவால் இப்போது இரவும் பகலும் போக்குவரத்து முடக்கப்பட்டு இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆக்கப்பட்டுள்ளது.
ஏன் பாதையை அடைத்து மக்களின் வாழ்க்கையை பறிக்கிறார்கள்? இது புலிகள் காப்பகம் அமைந்துள்ளப் பகுதி. புலிகள் காப்பகத்தில் மக்கள் வாழக்கூடாது என்பது அரசின் கொள்கை. அப்படி வெளியேற்றுவதற்கு அவர்கள் சொல்லும் பல காரணங்களில் ஒன்றுதான், கடந்த பத்தாண்டுகளில் அதாவது 3650 நாட்களில் வாகன விபத்தால் 152 மயில் உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழந்துள்ளனவாம்! அதாவது 24 நாட்களுக்கு ஒரு விலங்கு விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்த கணக்கின் அபத்தங்களை எல்லாம் பார்ப்பதற்கு முன்னால், இந்த பிரச்சனையில் மக்களோடு நிற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியரான தோழர் மோகன்குமார், “மனிதரற்ற காடுகள் மற்றும் புலிகள் காப்பகம்” என்னும் ஏமாற்றை குறித்து கூறுவதை கேட்டுப்பாருங்கள் ஆளும்வர்க்கத்தின் மோசடி உங்களுக்கு எளிதாக விளங்கும்.
அவர் சொல்கிறார், “உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை வெறும் 4 ஆயிரம் மட்டுமே. அதில் 70% (2967 என்று ஒரு கணக்கு சொல்கிறது) புலிகள் இந்தியாவில்தான் உள்ளன. அமேசான் உள்ளிட்ட உலகில் செழித்த காடுகள் பலவற்றில் புலிகளே கிடையாது. ஆகையால் புலிகள் அழிந்துவிட்டால் காடுகள் அழிந்துவிடும் என்பது மிகப்பெரிய பொய். அடுத்த விசயம் என்னவென்றால், புலிகள் காப்பகம் வந்ததனால் புலிகள் உருவாகவில்லை, ஏற்கனவே காலாகாலமாக புலிகள் வாழும் இடத்தைதான் புலிகள் காப்பகமாக அறிவித்தார்கள். புலிகள் செழிப்பாக வாழ்ந்த இடங்கள் அனைத்திலும் அவர்களோடு மனிதர்களும் சேர்ந்தே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இருவருக்கும் தங்களது இருத்தலை ஒழுங்குபடுத்தும் அறிவு அவர்களது நீண்டகால வாழ்க்கை அனுபவத்திலிருக்கிறது. ஆகையால் புலிகளால் மனிதர்களும் அழியவில்லை; மனிதர்களால் புலிகளும் அழியவில்லை.
எனவே, இந்த “மனிதரற்ற காடுகள் மற்றும் புலிகள் காப்பகம்” என்பது காட்டின் மூலமாக கொள்ளையடிப்பவர்களின், கொள்ளையடிக்க நினைப்பவர்களின் புனைகதை. அதை ஏதோ பெரிய சங்கதியாக தூக்கித்திரிகிறார்கள் காசுக்கு மாரடிக்கும் என்.ஜி.ஓ-க்கள். இந்த களவாணிகள்தான் பழங்குடி மற்றும் வணக்குடிகளின் வாழ்க்கையை அழிக்கிறார்கள்”.
தோழர் சொல்வது உண்மைதான் என்பதை நிரூபிக்கிறார்கள் இரண்டு வழக்குரைஞர்கள். அவர்கள்தான் “வாகனங்களால் வனவிலங்குகளின் உயிர் போகிறது” என்று பொய் புள்ளி விபரங்களை காட்டி போக்குவரத்தை முடக்க காரணமாக இருந்தவர்கள். இரண்டு கைக்கூலிகள் மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள். மக்களுக்கான இயக்கங்களும் சமூக அக்கறையுடைய நாமும் என்ன செய்யப்போகிறோம்? என்கிற கேள்வியோடு உங்களை இந்த பதிவில் இணைக்கிறேன். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு குரல்கொடுங்கள். விருப்பமில்லாதவர்கள் விடுவித்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து பேசுவேன்.
முகநூலில் : திருப்பூர் குணா
disclaimer

நூல் விமர்சனம் : வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி || நக்கீரன்

எழுத்தாளர் நக்கீரன் எழுதிய “வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி” நூல் குறித்த விமர்சனம்
“அவ்வகைப் பெண்கள் (பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள்) மீது சமூகம் கொண்டிருக்கும் ஒவ்வாமை அன்று எனக்கும் இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும். அவர்களது ‘பச்சையான’ உரையாடல் அருவருப்பாகவே இருந்தது. இந்தக் குறுநாவலில் இடம்பெறும் பூட்டிய அறைநிகழ்வுகள் அனைத்தும் அங்கு ஒட்டுக் கேட்டவையே. ஆனால், நாளடைவில் அதுமட்டுமே அவர்களது பேசுபொருளாக இல்லை என்பதை உணர்ந்தேன்.
பாலியல் தொழிலுக்கும் பங்குச்சந்தைக்கும் தொடர்புண்டு. பரத்தமைக்கு முகம் சுளிக்கும் சமூகம் அவற்றை உருவாக்கும் காரணிகளுள் ஒன்றான இராணுவமயமாக்கலுக்கும், உலகமயமாக்கலுக்கும் மரியாதை தருகிறது. பண்பாட்டுச் சீரழிவு என்னும் பழைய திரையை விரிப்பதன் மூலம் பின்னுள்ள பொருளாதாரச் சீரழிவின் பங்கை மறைக்கிறது. இந்தக் குறுநாவலில் இடம்பெறும் பெண்களின் வாழ்க்கை அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டதாகும். உலகக் கண்களுக்கு மறைக்கப்பட்ட குருதிவாடை வீசும் அந்த அரசியல் வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்நூல் புரட்டிக் காட்டுகிறது. அதுவே, இதே பொருண்மையில் எழுதப்பட்ட பிற கதைகளிடமிருந்து இதை வேறுபடுத்துகிறது என்று துணிந்து கூறுவேன். அந்த அரசியலைக் கற்றுக் கொடுத்த பெண்களுக்கு நன்றி.
மேற்கண்ட இரண்டு பாராக்களும் நாவலாசிரியரின் முன்னுரையில் இருந்து நாம் எடுத்தாண்டவை.
படிக்க :
நூல் அறிமுகம் : வியட்நாமில் பிரெஞ்சுப் படைகளின் சரணாகதி
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
இந்த நாவல் குறித்த அவரது மேற்கண்ட கருத்துக்கள் நூறு சதவிகிதம் சரியானவை என்பது நாவலை வாசித்து முடிக்கும்போது நம் மனதில் தோன்றும். பாலியல் தொழிலாளிகள் பற்றி நம்மை பீடித்திருக்கும் ஒவ்வாமை அர்த்தமற்றது, இழிவானது முட்டாள்தனமானது என்பதை இந்த நாவல் உணர்வுப்பூர்வமாக முன்வைக்கிறது. நாவலில் பாலியல் தொழிலாளர்களிடையே நடக்கும் ’பச்சையான உரையாடல்கள்’ எந்த விதத்திலும் ஆபாசத்தை உருவாக்கவில்லை. உண்மையில் அவர்களது வலிகளையும், துயரங்களையும், வேறு வழியின்றி அந்தச் சூழலை அவர்கள் பகடிகளாக்கிக் கொள்வதையும் நம் கண்முன்னே விரித்துச் செல்கிறது.
இந்தோனேசியாவை கதைக்களமாக கொண்ட இந்த நாவலின் பிரதான கதாபாத்திரமான நீலம், அக்கா, ரைனா, பஞ்சசீலா உட்பட நாவலின் கதாபாத்திரங்களாக வரும் பெண்கள் எப்படி நிர்ப்பந்தமாக பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டனர் என்பதை அரசியல், சமூக வரலாற்றுக் காரணிகளோடு நாவல்  முன்வைக்கிறது.
நீலம் குடும்பத்தின் வறுமை காரணமாக ‘கவின் காண்ட்ராக்ட்’ எனும் ஒப்பந்தத் திருமண அடிப்படையில் ஒரு வெள்ளைக்காரனுக்கு விற்கப்படுகிறாள். அது ஒரு சட்டப்பூர்வமான நடைமுறையாக இருந்திருக்கிறது. அயல்நாட்டினர் உள்ளூர்ப் பெண்களை ஒரு தவணைக்காலம் அதாவது மூன்று மாதம் வரையில் ஒப்பந்த திருமணம் செய்து கொள்ள முடியும். அதாவது அவர்களின் காமவெறிக்கு இந்தோனேசியப் பெண்களை இரையாக்கிக் கொள்ள முடியும். இந்தப் போக்கின் தொடர்ச்சியில் அவள் வேறு வழி எதுவுமின்றி பாலியல் தொழிலாளியாக மாறுகிறாள்.
அக்காவின் கதையோ இந்தோனேசியாவின் இரத்தம் படிந்த அரசியல் வரலாற்றின் சாரத்தை கூறிச் செல்கிறது. பாசிச கொலைகாரன் ஜெனரல் சுகர்த்தோவின் ஆட்சியில் கம்யூனிஸ்டுகள், தொழிலாளர்கள், மாணவர்கள், உழவர்கள், அரசு அலுவலர்கள் லட்சக்கணக்கானோர் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகின்றனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் அக்காவின் அப்பாவும் ஒருவர்.
தொழிற்சங்கவாதியான அவர் இராணுவத்தின் அங்கீகாரம் பெற்ற கூலிப்படையால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார். அக்காவின் அம்மாவையும், இன்னும் பல பெண்களையும்  இராணுவம் பாலியல் வல்லுறவு செய்கிறது. அதன் பிறகு இந்தோனேசிய ரப்பர் தோட்டங்களின் உரிமையாளரான அமெரிக்க ’குட்இயர்’ டயர் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக்கப்படுகின்றனர். இந்த கொடுமையின் ஒரு  கட்டத்தில் அக்காவின் அம்மா இறந்து போகிறார். தன் தம்பி தங்கைகளை காப்பாற்ற வேண்டுமானால் அக்காதான் உழைத்தாக வேண்டும். கம்யூனிஸ்ட் தொடர்புடையவர் என்ற முத்திரை எந்த வேலையையும் கிடைக்கச் செய்யாது எனும்போது பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்.
ரைனா தனது கொடூரமான குடும்ப சூழல் காரணமாக பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார். இன்றைய குடும்ப அமைப்பை காறித் துப்புகிறது அவரது வாழ்க்கை.
பஞ்சசீலாவின் கதாபாத்திரமோ அவளின்  பஞ்சசீலா குடும்ப பெருமையும், சத்திரிய வீரப் பெருமையும் எந்த விதத்திலும் அவளது வாழ்க்கைக்கு உதவவில்லை என்பதை அவளுக்கு புரிய வைக்கிறது. அறியாத வயதில் அவளுக்கு ஊட்டப்பட்ட கம்யூனிச வெறுப்பு எவ்வளவு தவறானது என்பதை பஞ்சசீலாவுக்கு நிதர்சனமான வாழ்க்கை  ஆழமாக உணர்த்துகிறது.
படிக்க :
ஆவணப்படம் : விபச்சாரத்திற்கு விற்கப்படும் கென்யக் குழந்தைகள்
கொத்தடிமைத்தனம், விபச்சாரம்: தனியார்மயத்தின் பேரபாயங்கள் !
‘பெமூடா பஞ்சசீலா’ என்கிற தீவிர வலதுசாரி இயக்கம் இராணுவத்தோடு இணைந்து கம்யூனிஸ்டுகளை படுகொலை செய்ததில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதை நாவலினூடே ஆசிரியர் கூறிச் செல்லும்போது கண்டிப்பாக நமக்கு ஆர்.எஸ்.எஸ் நினைவுக்கு வந்தே தீரும்.
நீலத்தின் காதலன் நாவலின் இறுதிப் பகுதியில் இப்படிப் பேசுகிறான். ”நம்ம வாழ்க்கை நம்ம கையிலே இல்லைன்னு சொல்றேன். அதை, ஏதோ பத்து நாட்டுலே இருக்குற ஏதோ பத்து பேரு முடிவு பண்றாங்க. நான் படிக்கணுமா, வேண்டாமா? படிச்சா எதைப் படிக்கணும்? படிப்பை முடிச்சா எந்த வேலைக்குப் போகணும்? இதெல்லாம் ஏற்கனவே எழுதுன சினிமா ஸ்கிரிப்ட் மாதிரி. அதுலே, நாமெல்லாம் நமக்குக் கொடுத்த வேசத்தை நடிச்சிக்கிட்டு இருக்கோம். எனக்கு டிரைவர் வேசம்னா, அவளுக்கு விடுதி வேசம். இந்த வேசம் வெட்கம்னா அதைப் போடச் சொன்னவங்களும் வெட்கம் கெட்டவங்கதானே?
ஒரு அவலமான சோகத்தோடு நாவல் முடிவடைகிறது.
இந்த ஏகாதிபத்திய முதலாளித்துவ சமூக அமைப்பின் அசிங்கமான, கொடூரமான, சகிக்க முடியாத தன்மையை பாலியல் தொழிலாளிகளின் வாழ்வினூடே நாவல் ஆழமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பதியச் செய்கிறது. பாசிச இருள் சூழ்ந்து வரும் இன்றைய சூழலில் இந்த நாவலில் நாம் எடுத்துக் கொள்ள ஏராளமான விசயங்கள் இருக்கின்றன. நாவல் சோகமாக முடிந்திருக்கலாம். ஆனால், வரலாற்றை நாம் அப்படி விட்டு விடக் கூடாது என்பதே அது சொல்லும் செய்தி.
வண்ணத்துப் பூச்சிகளின் விடுதி : குறுநாவல்
ஆசிரியர்: நக்கீரன்
வெளியீடு :
காடோடி பதிப்பகம்,
6, விகேஎன் நகர்,
நன்னிலம் – 610105,
திருவாரூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 8072730977
விலை : ரூ. 70

நூல் விமர்சனம் :
இனியன்

எழுத்தும் எழுத்து ஜனநாயகமும் || மு. இக்பால் அகமது

1982, 83இல் இருந்து சென்னை புத்தக கண்காட்சியை பார்த்து வருகின்றேன், நூல்களை வாங்கி வருகின்றேன். அப்போது அண்ணா சாலை காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி மைதானத்தில் நடந்தது.
40 அல்லது 50 பதிப்பாளர்கள் மட்டுமே அரங்கு அமைப்பார்கள். அன்னம், அகரம், வானதி, தமிழ்ப்புத்தகாலயம், நர்மதா, காவ்யா, அலைகள், என் சி பி எச், சவ்த் விஷன், க்ரியா, தென்னிந்திய சைவ சித்தாந்த கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், நேஷனல் புக் ட்ரஸ்ட், சாகித்ய அகாடமி, சாளரம் ஆகிய தமிழ்ப் பதிப்பாளர்கள், தி ஹிந்து, ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ், ஹிக்கின்போதாம் போன்ற ஆங்கில நிறுவனங்களின் ஸ்டால்கள், வழக்கம்போல வெளியே பிளாட்பாரத்தில் பழைய நூல்கள் என அன்றைய மதிப்பில் 400, 500 ரூபாய்க்கு வாங்கினால் பெரிய விசயம்.
படிக்க :
குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உண்டாக்குவது எப்படி ?
நூல் அறிமுகம் || 1974 : மாநில சுயாட்சி || ஆழி செந்தில்நாதன்
குறிப்பிட வேண்டியது இன்னொன்று. 70, 80, ஏன், 90களின் தொடக்கம் வரையும் கூட தமிழில் எழுத்தாளர்கள் என்றால் மீண்டும் மீண்டும் அசோகமித்திரன், தி ஜா, லா ச ரா, சாண்டில்யன், நாபா, பாலகுமாரன், கோவி மணிசேகரன், அமுதா கணேசன், பி டி சாமி, சுஜாதா, புஷ்பா தங்கதுரை, தமிழ் வாணன், ராஜேந்திர குமார், ரா கி ரங்கராஜன், ஜ ரா சுந்தரேசன், மகரிஷி, சு சமுத்திரம், பிரபஞ்சன், வண்ண நிலவன், லட்சுமி, சிவசங்கரி, இந்துமதி, தமிழின் முன்னோடி எழுத்துக்காரர்கள் ஆன பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், கு அ, கி ரா, சி சு செ, அகிலன் … இவர்கள் இல்லாமல் வேறு தமிழ் எழுத்தாளர்கள் இன்னும் பலர் அல்லது சிலர், அவ்வளவே.
ஆங்கில நூல்கள் எனில் மவுண்ட்ரோட்டில் இருந்த ஹிக்கின்போதாம் மட்டுமே, எனக்கு தெரிந்து. அன்றைய (இப்போதும்) தி ஹிந்து நாளிதழில் ஞாயிறு வெளியாகும் ஆங்கில நூல்களின் விமர்சனம், மதிப்புரை ஆகியவற்றை வாசித்து விட்டு பெருமூச்சு விட முடியுமே தவிர வாங்குவது என்பது கனவுக்கும் அப்பாற்பட்ட பெருங்கனவு. சமூக அமைப்பில் அடித்தட்டு குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். என் போன்றோருக்கு ஆங்கில நூல்களை வாசிப்பதில் ஆர்வம் இருக்கும், நூல்களை வாங்கும் வசதி இருக்காது.
காலம் மாறும். மாறியது. காலம் எழுத்தாளர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்லவே! 90களுக்கு பின் எழுத்திலும் வாசிப்பிலும் மாற்றம் நிகழ்ந்தது. மேலே நான் குறிப்பிட்டுள்ள மூத்த எழுத்தாளர்கள் மீது இப்போதும் எனக்கு மரியாதை மரியாதை உள்ளது, மாற்றமில்லை. ஆனால் இவர்களில் பலரது எழுத்துக்களை இப்போது வாசிக்கும்போது சலிப்பு ஏற்படுவதை நான் மறைக்க விரும்பவில்லை. ஓரளவுக்கு மேல் பக்கங்கள் நகர்வதில்லை. இதுதான் கால வெள்ளம் என்பது. காலநதி ஓடுகின்றது, ஓடிக்கொண்டே இருக்கின்றது, வெள்ளத்தில் பல அடித்து செல்லப்படுவதும், பல கரை ஒதுங்குவதும், பல நீரின் அடியில் மூழ்கி ஜலசமாதி அடைவதும், பல வெள்ளத்தை எதிர்கொண்டு நிற்பதும்…. இதுதான் ஓட்டம், உயிரோட்டம். இது வெறும் எழுத்தோடு தொடர்புடையது மட்டுமே அல்ல. சமூக, அரசியல் தளத்தில் ஏற்படும் நிகழ்வுகளும் மாற்றங்களும் அறிவுசார் தளத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும், விதிவிலக்கல்ல.
புதிய எழுத்துகளும் புதிய எழுத்தாளர்களும் புதிய வடிவங்களும் தமிழ் இலக்கிய உலகில் 90களில் காண நேர்ந்தவை. 20, 30 எழுத்தாளர்கள், 40, 50 பதிப்பாளர்கள் என்ற நிலை மாறத்தொடங்கியது. இப்போது 40 வருடங்களுக்கு பிறகு 600க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள்! எழுத்திலும் பல வகை! பல்வேறு புதிய தளங்கள்! 20, 30 பேர் எழுதுவார்கள், 4 கோடி தமிழர்கள் வாசிப்பார்கள் என்ற நிலை மாறி, தெருவுக்கு இரண்டு பேர் எழுதுகின்றார்கள் என்றால் எழுதட்டுமே! வாசிக்கிறவன் வாசித்துவிட்டு போகட்டுமே! தகுதியுள்ளது நிலைக்கும், அல்லவை தள்ளப்படும், அவ்வளவுதான்!
ஒரு புகைப்படம் எடுக்க ஸ்டுடியோ செல்வதே அப்போது திருவிழாதானே! படம் ‘கழுவப்பட்டு’ பிரிண்ட் போடப்பட்டு கைக்கு வர 10 நாள் ஆகும்! இப்போது எல்லோரும் புகைப்படக் கலைஞர்தானே?!
ஒரே ஒரு கதையோ கட்டுரையோ எழுதி தபாலில் ரிட்டர்ன் ஆவதற்கான அஞ்சல் தலையோடு அனுப்பிவிட்டு, இரண்டு மாசம் தூங்காமல் இருந்தால் வருந்துகின்றோம், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று ஒரு நாள் தபால் வரும்! முகநூலும் ப்ளாக் எனப்படும் வலைப்பூவும் இந்த தடையை உடைக்கவில்லையா? கருத்து ஜனநாயகம் என்பது எவருடைய அங்கீகாரத்திற்காகவும் காத்திருப்பது அல்லவே? கருத்தை வெளிப்படுத்துவதில் இந்த மின்னணு யுகம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருப்பது உண்மைதானே? ஒருவரின் கருத்தை இன்னொருவர் ஏற்பதும் தள்ளுவதும் ஜனநாயகம் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்.
ஆனால் எவரோ ஓரு பத்திரிகை ஆசிரியர் அல்லது பதிப்பாளரின் கருணை வேண்டி காத்திருக்கும் சர்வாதிகார அணுகுமுறையில் இந்த மின்னணு யுகம் உடைப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதானே?
படிக்க :
நூல் அறிமுகம் : மதரிங் எ முஸ்லிம் || MOTHERING A MUSLIM – NAZIA ERUM || இ.பா. சிந்தன்
நூல் விமர்சனம் : நான் நிகழ்த்திய மோதல் கொலை | ராமச்சந்திரன் நாயர் | எஸ்.காமராஜ்
புத்தக விற்பனையும் அவ்வாறே. அமேஸானும் பிளிப்கார்ட்டும் சோப்பும் சீப்பும் மட்டுமே விற்கவில்லை, உலகின் எந்த மூலையிலும் எவர் எழுதுவதையும் என்னால் வாங்கிவிட முடியும். இதற்கு முன் இது பெருங்கனவு மட்டுமேதானே, நான் தொடக்கத்தில் சொன்னதைப்போல? எனக்கு இது மடை திறந்த அல்ல, மடை உடைத்த வெள்ளம்! அறிவுப்பரவல் என்றுதான் இதை நான் மதிப்பிடுவேன். கொள்வது கொள்க, தள்ளுவது தள்ளுக, அவ்வளவுதான்.
அச்சிலும் அவ்வாறே! சுய பதிப்பு எனப்படும் self publishing முறை இன்றைக்கு பல்லாயிரம் எழுத்தாளர்களை உருவாக்கி உள்ளது. மீண்டும் சொல்கின்றேன், எழுதுவது என்பது ஒருவரின் உரிமை மட்டுமே அல்லவே? ஜனநாயகம் இல்லையா? இங்கே யார் எதில் monopoly என்ற உரிமையை தக்க வைத்துக்கொள்ள முடியும்? அல்லது யாருடைய உத்தரவுக்கு யார் காத்திருப்பது?
எழுதுவோம்! வாசிப்போம்! எழுத்து, வாசிப்பு, இரண்டிலும் ஜனநாயகம் வேண்டும்.
காலம் சரியானவற்றை ஏற்கும்.
மு இக்பால் அகமது
disclaimer