Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 352

நாடு நாசமாகக் கூடாதே என்பதால்தான் சிவாஜி முடிசூட்டுவதை தடுக்கிறேன் !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 7


காட்சி : 10

இடம் : பாலாஜி வீடு
உறுப்பினர்கள் : பாலாஜி, பகதூர்.

(பாலாஜி ஒலைச்சுவடி புரட்ட பகதூர் தலையைச் சொறிந்து நிற்கிறான்)

பாலாஜி : பகதூர் பாடத்தைப் படிடா

பாலாஜி : ஏண்டா! நீ என்ன, சின்ன பாப்பாவா? கடாப் போல வளர்ந்திருக்க… ஏன்டா, பயத்துக்கு இடம் குடுக்கிறே?

பகதூர் : நானா இடம் கொடுத்தேன்? பயம் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டதே.

பாலாஜி : பிடிச்சுக் கொள்ளவுமில்லே; அடைச்சுக் கொள்ளவுமில்லே. வீண் பொழுது போக்காதே. ஆரம்பி, பாடத்தை.

பகதூர் : நேற்றைய பாடத்தைத்தானே?

பாலாஜி : ஆமாம்! அதுக்கு ஏண்டா அழுது தொலைக்கிறே? ஐயா! உனக்கு எத்தனை தடவை சொல்றது. முகத்தை இப்படிச் சுளிக்கக் கூடாதுண்ணு . டேய்! கொஞ்சம் புன்சிரிப்பா இருண்டா, எங்கப்பா!

(பகதூர் சிரிக்க) அப்படியில்லேடா இப்படி – (புன்சிரிப்பு)

பகதூர் : வரலியே பாலாஜி!… புன்சிரிப்பு வாண்ணா வரும்; போண்ணா போகுமோ? நான் புன்சிரிப்பா இருக்கத்தான் பார்க்கறேன்.. முடியலியே.

பாலாஜி : முடியலியா? அரை வீசை அல்வாண்ணா ஒரேயடியா விழுங்க மட்டும் தெரியுமா? (பகதூர் சிரிக்க) ம்… அதேதான். அதோன் புன்சிரிப்பு…

பகதூர் : இதா புன்சிரிப்பு…?

பாலாஜி : பாடத்தைச் சொல்லு.

பகதூர் : முக்கனியே! சக்கரையோ தேனே! பாலே!

பாலாஜி : ஏண்டா நிறுத்திட்டே?

பகதூர் : திரை இருக்கே.

பாலாஜி : திரை இன்னும் எடுக்கல்லையா?

(திரையை எடுத்ததும்)

பகதூர் : உன்னை நான் பெறாவிட்டால் என் உயிர் போகும்.

பாலாஜி : ஏண்டா உயிர் போகும்ணு சொல்லிக்கிட்டு ‘மரம் போல நிண்ணா மங்கையோட மனசு இளகுமா? உயிர் போகும்னு சொல்லும் போதே உயிர் போயிட்டா மாதிரி ஆயிட வேணாமா?

பகதூர் : எங்கே ?

பாலாஜி : தோ பார்ரா! முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே! இப்படியே சொல்லிக்கிட்டே அருகே போகணும். நீ போகும் போது அவ விலகுவா. வெலகுற மாதிரி பதுமையைக் கொஞ்சம் கொஞ்சம் நகத்து.

பகதூர் : சரி!

பாலாஜி : முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே! இது போலத்தான். இதிலே என்னடா கஷ்டம்?

பகதூர் : இது ஒண்ணும் கஷ்டமில்லே. ஆனா அதுதான்…

பாலாஜி : எதுடா?

பகதூர் : உயிர் போறது.

பாலாஜி : அது ரொம்ப சுளுவுடா.

பகதூர் : எங்கே போக்கிக் காட்டு!

பாலாஜி : உன்னைப் பெறாவிட்டால் என் உயிர் போகும்.

பகதூர் : சுத்தணுமா!

எனக்கும் சிவாஜிக்கும் சொத்தில் ஏதாவது விரோதமா? அல்லது நான் எப்போதாவது சிவாஜியினுடைய குணம் கெட்டதுன்னு சொன்னேனா? இப்பவும் நான் சொல்வது நாடு நாசமாகப் படாதே என்ற நல்ல எண்ணத்தோடேதான்.

பாலாஜி : சரி! பதுமை பாடம் போதும். காதல் பேச்சு எப்படி இருக்கணும்னு சொல்லித் தர்றேன்.

பகதூர் : சரி! பாலாஜி என்னை ஏன் இப்படி உற்றுப் பார்க்கிறீர்? இப்படி ஒரு பொண்ணு கேட்டா நீ என்ன பதில் சொல்லுவே?

பகதூர் : அப்படி ஒரு பெண் கேட்டால் பயத்தாலே ஊமையாகிவிடுவேன், பாலாஜி.

பாலாஜி : பெண்கள் அப்படித்தான் கோபிக்கிற மாதிரிப் பேசுவாங்க. அதுக்கெல்லாம் பயந்தா பயப்படக்கூடாது. ஒரு பெண் உன்கிட்ட பேச ஆரம்பிச்சா அவளிடம் ஏதாவது காதல் கதையைப் படிச்சுக் காட்டணும்; இடையிடையே புன்சிரிப்பா இருக்கணும்.

பகதூர் : காதல் கதையென்று சொன்னாலே காதைப் பிடித்து திருகிப்புடுவாங்களே !

பாலாஜி : நீ ஏண்டா காதல் கதைன்னு சொல்றே? எந்த சாமிக் கதையாவது படிக்கிறேன்னு சொல்லேன்.

பகதூர் : சாமி கதைப் படிச்சா ?

பாலாஜி : நம்ம சாமி கதையே காதல் களஞ்சியண்டா ஒரு கதை படிக்கிறேன், கவனமாய்க் கேளு. கேக்கறியா? படிக்கட்டுமா?

பகதூர் : படி பாலாஜி

பாலாஜி : ஒ.. மாதர் திலகமே.

பகதூர் : யாரைக் கூப்பிட்டே?

பாலாஜி : டே படிக்கிறேன். ஒ, மாதர் திலகமே! இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும் உன்னைப்போல் ஒரு அழகியைக் கண்டதில்லை. டேய், கேக்கறியா?

பகதூர் : ஒ கேக்கறேனே.

பாலாஜி : என்ன சொன்னான்

பகதூர் : அவன் சொல்றான்

பாலாஜி : என்னடா சொல்றான்?

பகதூர் : என்ன சொல்றான்?

பாலாஜி : இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும் உன்னைப்போல் ஒரு பெண்ணை, அழகியைக் கண்டதில்லைன்னு சொல்றான். இவன் போய்ப் பார்த்தானா ஈரேழு லோகத்தையும்…

பகதூர் : நான் என்ன, அவன் கூடவா போனேன் என்ன வந்து கேக்கறியே!

பாலாஜி : சும்மா புளுகுடா காதல் கதை படிக்கும் போது நெஜத்தைவிட புளுகுதாண்டா அதிகமா கலக்கணும்!

பகதூர் : படி பாலாஜி !

பாலாஜி : ஓ மாதர் திலகமே! காந்த சக்தியால் இழுக்கப்படும் துரும்பு போல் ஆகிவிட்டேன். காந்தாமணி உன்னை நான் பெறாவிட்டால் பாம்புப் புற்றில் கைவிட்டோ, பாஷாணம் சாப்பிட்டோ, பட்டினி கிடந்தோ உயிரைப்போக்கிக் கொள்வேன். ஆகையால் நீ என்னை ஏற்றுக்கொள் ஏந்திழையே!

(படித்துவிட்டுப் பகதூரைப் பார்க்க, அவன் தூங்குகிறான். அவன் காதைத் திருகி இழுத்துச் செல்லுதல்)

♦ ♦ ♦

காட்சி : 11
இடம் : வீதி
உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், சிட்னீஸ்.

(கேசவப்பட்டர் போய்க் கொண்டிருக்கிறார். பின்னால் சிட்னீஸ் கூப்பிடுதல்)

சிட்னீஸ் : கேசவப் பட்டரே! கேசவப்பட்டரே!

(காதில் விழாதுபோல் நழுவ சிட்னீஸ் கோபத்துடன்) ஒய், கேசவப்பட்டரே..

(கேசவப்பட்டர் திரும்புகிறார்)

கேசவப்பட்டர் : கூப்பிட்டேளா? காது கேக்கல்லே! கொஞ்சம் மந்தம்.

சிட்னீஸ் : பரவாயில்லை. பாட்டாச்சாரிஸ்வாமி, உம்ம தரிசனம் கிடைக்கிறது சாமான்யமா?

கேசவப்பட்டர் : கேலி செய்றேளா?

சிட்னீஸ் : சேச்சே! நான் என்ன பிரமாணத் துவேஷியா?

கேசவப்பட்டர் : யார் சொன்னது உம்மை அப்படி ….

சிட்னீஸ் : உண்மையாகவே உம்ம தயவுக்காகத் தான் நான் வந்திருக்கிறேன்.

கேசவப்பட்டர் : என் தயவா? என்ன சிட்னீஸ்! நான் ஒரு பஞ்சப் பிராமணன். உம்ம கீர்த்தியும் செல்வாக்கும் அமோகம்.

சிட்னீஸ் : உண்மையாகவேதான் சுவாமிகளே! உம்ம சகாயம் வேண்டும். விஷயம் உமக்குத் தெரிந்ததுதான். வீணாக நாம் விவாதிக்கணுமா? சிவாஜி பட்டாபிஷேகம் சம்மந்தமாக தாங்கள் எதிர்க்கிறீர்களாம். நல்ல காரியத்தை, நாடு முழுதும் விரும்புகிற காரியத்தைக் கெடுக்கலாமா? சிவாஜி தர்மிஷ்டர்; உமக்கே தெரியும். வீரர் அதனால்தான் நாம் வாழுகிறோம். இப்போது நம் நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. அப்படிப்பட்டவருடைய பட்டாபிஷேகத்தைத் தடுப்பது சரியா, தர்மமா, நியாயமா?

கேசவப்பட்டர் : ஏம்பா சிட்னீஸ். எனக்கும் சிவாஜிக்கும் சொத்தில் ஏதாவது விரோதமா? அல்லது நான் எப்போதாவது சிவாஜியினுடைய குணம் கெட்டதுன்னு சொன்னேனா? இப்பவும் நான் சொல்வது நாடு நாசமாகப் படாதே என்ற நல்ல எண்ணத்தோடேதான்.

சிட்னீஸ் : சாஸ்திர விரோதம். இந்தப் பட்டாபிஷேகம் சிவாஜி சூத்திரர் என்று ஆட்சேபனை செய்கிறீராம்.

கேசவப்பட்டர் : நானா செய்கிறேன். அதென்னப்பா, அப்படிச் சொல்றே? நான் சாஸ்திரத்தைத்தான் சொல்கிறேன். வேறொன்றுமில்லை.

சிட்னீஸ் : சாஸ்திரம் இருக்கட்டும். கேசவப்பட்டரே ! இந்தக் காரியத்தில் உம்ம ஒத்தாசை கிடைத்தால், நீர் என்ன கேட்டாலும் சரி. இலட்ச வராகன் சன்மானம் வேண்டுமா? சரி! ஜாகீர் வேண்டுமா? சரி! அரண்மனைப் புரோகிதம் வேண்டுமா? சரி எது வேணுமானாலும் தருகிறேன்.

கேசவப்பட்டர் : ஆசை காட்டி என்னை அதர்மத்திலே தள்ள முடியாது சீட்னீஸ். எங்களுக்குத் தெரிந்த ஞானப்படி, சாஸ்திரப்படி இந்தப் பட்டாபிஷேகம் நிச்சயமாய்ப் பாவ காரியம்ணு தெரியுது. ஆனா , எங்களைவிட சிரேஷ்டமானவர், சாஸ்திரத்தை மேலும் ஆராய்ந்து பார்த்தவர் சம்மதம் கொடுத்தா எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

சிட்னீஸ் : கேசவப்பட்டரே! உம்மைவிட….

கேசவப்பட்டர் : நான் சாமான்யனப்பா சிட்னீஸ். என்னை விட ஞானஸ்தா பிரபஞ்சத்திலே அநேகம் பேர் இருக்கா. உதாரணமா காசி க்ஷேத்திரத்திலே (காகப்பட்டர்) ஒரு மகான் இருக்கார். அவர் வந்து சம்மதம் கொடுத்தால் நான் மட்டுமல்ல, பாரதவர்ஷத்திலே உள்ள பிராமணோத்தமர்கள் யாரும் ஒரு சொல் ஆட்சேபனை சொல்ல மாட்டா.

படிக்க:
தீண்டாமை வேண்டி வழக்கு போட்ட பாஸ்கர சேதுபதியின் காசில் அமெரிக்கா சென்ற விவேகானந்தர் !
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

சிட்னீஸ் : பட்டரே! சிவாஜி முடிசூட்டிக் கொள்ளக் கூடாதுன்னு உமக்கொன்றும் வஞ்சகமான எண்ணம் கிடையாதே?

கேசவப்பட்டர் : சத்தியமாச் சொல்றேன். நேக்குக் கிடையாது, கெட்ட எண்ணம்.

சிட்னீஸ் : எப்படியாவது காகப்பட்டரின் சம்மதம் கிடைத்து பட்டாபிஷேகம் நடைபெறுவதனால் உமக்கு ஆட்சேபனை இராதே? உம்முடைய ஒத்துழைப்பு இருக்குமல்லவா?

கேசவப்பட்டர் : நிச்சயமா சந்தேகமா அதற்கு.

சிட்னீஸ் : அப்படியானால் பட்டரே! காகப்பட்டரிடம் நீரே தூதுபோய்வர வேண்டும்.

கேசவப்பட்டர் : நானா?

சிட்னீஸ் : தாங்கள்தான் போகவேண்டும். சிவாஜியிடம் உங்களுக்குக் கெட்ட எண்ணம் கிடையாது என்கிறீர்.

கேசவப்பட்டர் : ஆமாம் சிட்னீஸ்

கேசவப்பட்டர் :  ஆகவே தாங்களே சென்று எப்படியாவது காகப்பட்டருடைய சம்மதம் பெற்றுக் கொண்டுவர வேண்டும். கேசவப்பட்டரே! ஒரு பெரிய ஜாகீர் உமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. துணைக்குப் பாலச்சந்திரப்பட்டர், சோமனாதப்பட்டர், யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும், தடை கூறவே கூடாது. தடை கூறினால் சிவாஜியிடம் உமக்குத் துவேஷம் இருக்கிறது கெட்ட எண்ணம் இருக்கிறது என்றுதான் பொருள். குழந்தைகூடச் சொல்லுமே, இதை.

கேசவப்பட்டர் : சரி போய் வருகிறேன்; ஆட்சேபனை என்ன?

சிட்னீஸ் : மற்ற இருவரையும் கலந்து கொண்டு தயாராய் இருங்கள் புறப்பட. நான் பல்லக்குப் பரிவாரங்கள் தயார் செய்துவிட்டு, பிறகு வந்து பார்க்கிறேன்.

(போகிறான்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

தீண்டாமை வேண்டி வழக்கு போட்ட பாஸ்கர சேதுபதியின் காசில் அமெரிக்கா சென்ற விவேகானந்தர் !

1

“நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்லாமிய – கிறிஸ்தவ சமூகத்தினருடனும், பட்டியல் இன விளிம்பு நிலை மக்களுடன் நிற்க வேண்டிய நாடார்களின் எண்ணவோட்டத்தில், இந்து வலதுசாரி சிந்தனை மிகுதியாக இருப்பதை சமீப காலமாக உணர முடிகிறது. இந்நிலையில் இருநூறு ஆண்டு கால வரலாற்றை திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியமாகிறது” என்கிறார் லஜபதிராய். இந்த மேற்கோள் அவர் எழுதிய நாடார் வரலாறு கறுப்பா? காவியா? எனும் நூலின் முதல் அத்தியாயத்தில் இருக்கிறது.

மேலும் “ஈயென இரத்தல் இழிந்தன்று என்பதைத் தவிர உழைத்து வாழும் எந்தத் தொழிலும் உயர்வானதே என்ற நிலையில் நாடார்கள் தங்கள் பனையேறும் சகோதரர்களின் அடையாளங்களையும் தீண்டத்தகாத சாதியாகக் கருதப்பட்ட அடையாளங்களையும் மறைத்துவிட அல்லது மறந்துவிட நினைப்பது ஒரு வகை பண்ணை அடிமைத்தன எண்ணவோட்டமே!” என்கிறார் லஜபதிராய்.

நாடார் சமூகம், பார்ப்பனிய அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய தமது வரலாற்றை பெருமையுடன் நினைவுகூர்வதற்குப் பதிலாக அதை சிறுமையாக நினைப்பதை மேற்கண்ட வரிகள் உணர்த்துகின்றன. கருப்பின வரலாறோ, யூதர்களின் வரலாறோ, இல்லை ஹிட்லரால் வேட்டையாடப்பட்ட கம்யூனிஸ்டுகளின் வரலாறோ அனைத்தும் இத்தகைய ஒடுக்குமுறைகளை எதிர்த்து போரிட்டதை, போராடியதை பெருமையுடன் நினைவு கூர்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கருப்பின இளைஞர் தான் வெள்ளை நிறவெறியால் துன்புறுத்தப்பட்ட வரலாற்றைச் சொந்தமாக கொண்டவன்/ள் – அதை எதிர்த்துப் போராடிய வரலாற்றில் உருவானவன்/ள் என்பதைப் பெருமையாக கருதுவார். ஆனால், இங்கே பார்ப்பனியமயமாக்கப்பட்ட ஆதிக்கச் சாதிகள் பலவும் தம்மை ஆண்ட பரம்பரை, ஆத்திக சடங்குகளை தவறாமல் பின்பற்றும் புனித பரம்பரை என்று அடிமைத்தனத்தையே கொண்டாடுகின்றன.

யூடியூபில் இந்த நூலின் அறிமுக விழாவிற்கான எமது வீடியோக்களில் சங்கிகள் சிலர் லஜபதிராயை கிறித்தவ – இஸ்லாமிய கைக்கூலி என்று திட்டுகின்றனர். எங்கே நாடார்கள் தமது வரலாற்றை அறிந்து தெளிந்து இந்துத்துவ எதிர்ப்பை கையில் எடுத்து விடுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்கு. இன்னொருபுறம் ஆய்வு என்ற பெயரில், சில அரைவேக்காடுகள்  இந்த நூல் நாடார் சாதி பெருமிதத்தை பேசுவதாக உளறுகின்றனர். அதன் ஊடாக சாதிப் பெருமிதத்தின் மூலம் இந்துத்துவத்தை கட்டியமைக்க விரும்பும் சங்கிகளை மறைமுகமாக ஆதரிக்கின்றனர். உண்மையில் இந்த நூல், சாதி பெருமிதத்திற்கு எதிராகவும் அந்த சாதிப் பெருமிதம் ஒரு பார்ப்பனிய அடிமைத்தனம் என்றும் இடித்துரைக்கிறது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள நாடார் மக்களின் கமுதி ஆலய நுழைவு முயற்சியை எடுத்துக் கொள்வோம். இந்தப் பகுதியில் இந்துமதவெறியர்கள் மட்டுமல்ல, பொதுவில் இந்துக்கள் கொண்டாடும் விவேகானந்தரைப் பற்றிய ஒரு குறிப்பு வருகிறது. விவேகானந்தர் அவரது ‘அதிரடியான’ மேற்கோள்களுக்கு பெயர் பெற்றவர். மேலும், சிகாகோ நகரின் சர்வ மத மாநாட்டில் அவர் பேசிய பேச்சை கூடியிருந்தோர் அனைவரும் மெய்மறந்து வரவேற்றதாகவும் சங்கிகள் அவ்வப்போது பேசுவதுண்டு. அதுவும் கூடியிருந்த சர்வ மத மக்களை “சகோதரர்களே, சகோதரிகளே” என்று அவர் விளித்ததைப் பார்த்து நாங்கள் எல்லாம் லேடிஸ் அண்ட் ஜென்டில்மென் என்று விளிக்கும் போது நீங்கள் உடன்பிறந்த சகோதரத்துவத்தை முன்னிறுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது என்று மேற்கத்திய அறிஞர்கள் கூறினர்களாம். இந்த சகோதரத்துவத்தின் இலட்சணத்தைத்தான் கமுதி ஆலய நுழைவுப் போராட்ட வரலாறு போட்டு உடைக்கிறது.

நூலிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம் :

“இராமநாதபுரம் மாவட்டத்தின் கிட்டத்தட்ட 6483 மக்கள் தொகை கொண்ட சிறு நகரமான கமுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நாடார் சமூகத்தினர் வாழ்ந்து வந்தனர். பத்தொன்பதாவது நூற்றாண்டில் அவர்கள் கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள் நுழையவோ வழிபாடு செய்யவோ அனுமதிக்கப்படவில்லை. 1855-ம் ஆண்டு நவம்பர் மாதம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் பரம்பரை அறங்காவலரான திரு. பாஸ்கர சேதுபதியிடம் ஆலய வழிபாட்டு உரிமையைக் கேட்ட நாடார்களின் முறையீடு நிராகரிக்கப்பட்டது.”

“1897-ம் ஆண்டு மே மாதம் பதினான்காம் நாள் மாலை ஆறு மணிக்கு மேல் இரவு ஒன்பது மணிவரை காவடி பால்குடம் எடுத்து தீவட்டி ஏந்தி மேளதாள ஆரவாரத்துடன் கமுதி கோயிலுக்குள் கோயில் ஊழியர்கள் எதிர்ப்பையும் மீறி மேற்கு வாசல் வழியாக வல்லடியாக நுழைந்த நாடார்கள் தேங்காய் உடைத்து முதலில் முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்து பின்னர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்குள் நுழைந்து சிலையை வழிபட்டனர். சட்டம் ஒழுங்கு மீறல்கள் மிகக் கடுமையான தண்டனைக்குள்ளான ஆங்கிலேயர் ஆட்சியின் போது, ஜமீன்கள் அதிகாரம் மிக்க நிறுவனங்களாக இருந்த காலகட்டத்தில் நடந்த அந்நிகழ்வை ஒரு சுயமரியாதை புரட்சியாகக் கருதலாம். இவ்வாறு நுழைந்ததற்காக குற்றவியல் வழக்கொன்றும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அது குற்றம் என்பது நிரூபணமாக வில்லை. எனவே, கமுதி ஆலயத்திற்குள் நாடார்கள் நுழைவதை நிரந்தரமாக தடை செய்யக்கோரி மதுரை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த திரு. பாஸ்கர சேதுபதி, நாடார்களின் ஆலய நுழைவால் தீட்டுப்பட்ட கோயிலை பார்ப்பன புரோகிதர்களை வைத்து செய்யும் மகா சம்ப்ரோக்ஷணம் என்ற தீட்டுக் கழிக்கும் சடங்கின் செலவுக்காக இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வழங்கவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.”

“20-07-1899 அன்று நாடார்கள் கோயிலுக்குள் நுழைவதை உரிமையியல் நீதிமன்றமான மதுரை கிழக்கு சார்பு நீதிமன்றம் தடை செய்ததுடன் கோயிலை தூய்மைப்படுத்தும் செலவுக்காக நாடார்களுக்கு விதித்த ஐந்நூறு ரூபாய் அபராதத் தொகை திரு. பாஸ்கர சேதுபதிக்கு வழங்கப்பட்டது. மதுரை சார்பு நீதி மன்றத்தில் இருதரப்பினரும் ஒத்திசைவுடன் செல்ல முடிவெடுத்து நாடார்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க முப்பதாயிரம் ரூபாய் பெற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்ட திரு. பாஸ்கர சேதுபதி, ஐயாயிரம் ரூபாயை முன்பணமாக பெற்றுக்கொண்டு, ஒத்திசைவு பத்திரத்திலும் கையெழுத்திட்டார்.”

“மேல்முறையீட்டில் தீர்ப்பு நாடார்களுக்கு சாதகமாக வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதிய மதுரை மாவட்ட ஆட்சியாளர், பாஸ்கர் சேதுபதிக்குக் கடிதமெழுதி ஒத்திசைவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டினார். நாடார்கள் தங்களுக்கென்று தனிக்கோயில்களைக் கட்டிக்கொள்ளவோ அல்லது கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றவோ செய்யட்டும் என்று தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் விளைவாக திரு. பாஸ்கர சேதுபதி ஒப்பந்தத்தை இரத்து செய்தார்.”

“உயர்நீதிமன்ற மேல்முறையீடு நாடார்களுக்கு எதிராக முடிந்தது. நாடார்களின் கோயில் நுழைவுக்கு எதிராகவே தீர்ப்பளித்தது, நாடார்களின் கோயில் நுழைவு முயற்சி கனவாகவே நீடித்தது. நாடார்கள் நுழைந்த மேற்கு வாசல் அழிக்கப்பட்டு சுவர் எழுப்பப்பட்டது. அந்த சுவடுகளை இன்றும் காண முடியும்.”

“நாடார்களுக்கு தீண்டாமை காரணமாக ஆலய நுழைவு மறுக்கப்பட்ட அதே காலகட்டத்தில் திரு. பாஸ்கர சேதுபதி இந்து மதத்தின் அருமைப் பெருமைகளை அயல்நாடுகளில் வியந்துரைக்க விவேகானந்தரின் சிகாகோ பயணத்திற்குப் பொருளுதவி செய்தார். 1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அனைத்துலக சமய மாநாட்டில் விவேகானந்தர், சகோதரர்களே, சகோதரிகளே, எனத் தனது உரையைத் தொடங்கி இந்து மதத்தின் மேன்மைகள் குறித்து பேசிய அதே காலகட்டத்தில் இந்து சனாதன தர்மங்களின் அடிப்படைத் தேவையான தீண்டாமையின் பொருட்டு, இந்துக் கோயில்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தங்களை இந்துக்களாக கருதிய உள்ளூர் நாடார் சகோதர சகோதரிகள் இந்துக் கோயிலுக்குள் தங்களை அனுமதிக்கும்படி திரு. பாஸ்கர் சேதுபதியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.”

“பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கோவில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நாடார்களுக்கு எதிராக பாஸ்கர சேதுபதி 1898-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கு ஒரு வருடத்திற்கு மேலாக மதுரை கிழக்கு சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. 20.07.1899-ம் ஆண்டு நீதிபதி டி. வரதராவ் தீர்ப்பளித்த அவ்வழக்கில் பாஸ்கர சேதுபதி தரப்பில் 38 பார்ப்பன சாட்சிகளும், நாடார்கள் தரப்பில் 23 பார்ப்பன சாட்சிகளும் சான்றளித்துள்ளனர். அச்சான்றுகளின் அடிப்படையில் நீதிபதி அளித்த தீர்ப்பு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்து மதத்தின் சாரம்சம் பற்றி பத்தி 114-ல் நீதிபதி இவ்வாறு குறிப்பிடுகிறார். “இந்துக்கள் மத்தியில் சாதி வெறுமனே ஒரு சமூக நிறுவனமன்று; அது ஒரு மதக்கோட்பாடு; கடவுள் மனிதர்களை சமமற்றவர்களாக கருதுகிறார்; பறவைகள் அல்லது விலங்குகளின் வகைகளைப் படைத்துள்ளதைப் போல தனித்தனி வகை மனிதர்களை அவர் படைத்துள்ளார்; பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் எனப் பிறந்துள்ள அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து பிரிந்தே இருக்க வேண்டுமென இந்துக்கள் நம்புகின்றனர்”.

“மேற்சொன்ன கருத்துக்கள் மட்டுமன்றி அனைத்து இந்துமத அடிப்படை நூல்களின் ஆதாரத்தோடு நாடார்கள் மது தயாரித்தல் தொடர்புடைய சாதியாதலால் தீண்டத்தகாத சாதியெனவும், அவர்கள் கோயிலுக்குள் நுழைந்ததால் ஏற்படும் தீட்டைக் கழிக்க சாந்தி ஹோமம், திசை ஹோமம், மூர்த்தி ஹோமம், வாஸ்து சாந்தி, சப்த சாந்தி, சகஸ்கர கலச ஸ்தாபனம் என்ற சடங்குகளை உள்ளடக்கிய மகாசம்ப்ரோக்ஷணம் என்ற தீட்டுக்கழிப்பு செய்யாவிட்டால் விசயமறிந்தவர்களும், பிராமணர்களும் அக்கோயிலுக்குள் நுழைய மாட்டார்கள் எனவும் அத்தகைய கோயிலுக்குச் செல்வதால் ஆன்மீக பலன் ஒன்றும் இல்லை எனச் சான்றுரைத்த இந்து சாஸ்திர வல்லுநர்களின் கருத்தை ஏற்று தீட்டுக்கழிக்கும் சடங்குகளுக்காக ரூ. 500/- ஐ பாஸ்கர சேதுபதிக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி வரதராவ் தனது தீர்ப்பின் 125-வது பத்தியில் நாடார்களை கமுதி கோயிலுக்குள் அல்லது அதன் எந்தவொரு பகுதியிலும் நுழைய தடை செய்து உத்தரவிட்டார்.”

“பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பாட்டனாரான வெள்ளச்சாமித் தேவரால் நாடார்களுக்கு எதிராக சான்றளிக்க கட்டாயப்படுத்தப்பட்ட சாட்சிகள், விலைக்கு வாங்கப்பட்ட சாட்சிகள், திருத்தப்பட்ட இந்து சாஸ்திரங்கள் இவற்றைப் புறந்தள்ளி நீதிபதி வரதராவ் பெருமளவுக்கு நம்புவது வாதி தரப்பின் 50-வது சாட்சியாவார். அவர் தமிழகம் தமிழ் தாத்தா எனக் கொண்டாடும் உ.வே. சாமிநாத அய்யர், இந்து மத சாஸ்திரங்களை அன்னார் தவறாக புரிந்து கொண்டிருப்பார் என யாரும் கூற இயலாது.”

“கமுதி கோயில் வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகு நாடார் சமூகத்தினர் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கங்களில் பங்கெடுத்தமை தற்செயலான நிகழ்வல்ல; மாறாக, விடுதலைத் தாகமே அதற்குக் காரணம் எனக் கூறலாம்.”

o0o0o0o

மேற்கண்ட பகுதிகளில் பல வரலாற்று மாந்தர்கள் வருகிறார்கள். அவர்களில் விவேகானந்தருக்கு புரவலராக திகழ்ந்த பாஸ்கர சேதுபதி முக்கியமானவர். மறவர் சாதி சங்கத்தைச் சேர்ந்த அபிமானிகள் பலரும் சேதுபதி பரம்பரையை சக்கரவர்த்தி, மன்னர் பரம்பரை என்ற ரேஞ்சுக்கு வருணிக்கிறார்கள். ஆண்ட பரம்பரை மேனியாவில் இத்தகைய பில்டப்புகளெல்லாம் சாதாரணம். உண்மையில் வெள்ளையர்கள் ஆட்சியில் திருவாளர் பாஸ்கர சேதுபதி ஒரு ஜமீன்தாராகத்தான் அதுவும் ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்ட அடிமை நிலச்சுவான்தாராகத்தான் வாழ்ந்தார்.

நாடார்கள் கோவில் நுழைவுக்கு எதிராக அவர் ஆற்றிய வரலாற்றுப் பாத்திரத்தை மேலே இடம்பெற்றுள்ள நூலின் பகுதிகளில் படித்தறியலாம். நாடார்களுக்கு அபராதம் போடுவதோ, இல்லை சுத்திகரிப்பு சடங்கு செய்வதோ, நிரந்தரமாக அவர்கள் கோவிலில் நுழையத் தடை கோருவதோ அத்தனை முயற்சிகளையும் பாஸ்கர சேதுபதி செய்திருக்கிறார். இன்றைக்கும் சேதுபதி பரம்பரையினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் புரவலர்களாகவே இருந்து வருகின்றனர்.

இவரைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளை அடித்துவிடும் மறவர் சாதி சங்க அறிஞர்கள் அன்னாரை ஒரு மெத்தப்படித்த ஆன்மீகவாதி என்றும் சொற்பொழிவில் வல்லுநர் என்றும் கூறுகிறார்கள். இவையெல்லாம் உண்மை என்றே வைப்போம். அத்தகைய சேதுபதிக்கு அமெரிக்காவில் நடக்கும் சர்வமத மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்ததாம். அதற்குப் போவதாக இருந்தவர் பின்னர் தன் சார்பில் விவேகானந்தரை பொருளுதவி செய்து அனுப்புகிறாராம். அமெரிக்கா சென்று வந்த விவேகானந்தர் இலங்கை வழியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் கால் பதிக்கும் போது “லோகத்தில் இந்துதர்மத்தை நிலைநாட்டிய தலைவனது பாதம் என் தலையில் பட்டே மண்ணில் பதிய வேண்டும்” எனத் தலையை நீட்டினாராம் சேதுபதி.

படிக்க:
அருந்ததி ராய் உரை : காவி அடிப்படைவாதமும் சந்தை அடிப்படைவாதமும் ஒன்றுதான் !
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு

ஆக, சேதுபதி மெச்சும் இந்து தர்மத்தின் இலட்சணம் என்ன என்பது கமுதி ஆலய நுழைவு போராட்டமே காட்டிக் கொடுத்து விடுகிறது. இதில் சிகாகோ மாநாட்டில் விவேகானந்தர் விளித்த சகோதரத்துவத்தின் உண்மையான இலட்சணமும் இந்த வரலாற்றில் இருக்கிறது. இந்த வரலாறு தெரிந்திருந்தால் அந்த மாநாட்டிற்கு வந்திருக்கும் மேற்கத்திய மனிதர்கள் “மிஸ்டர் விவேகானந்தர், எங்களை சகோதர சகோதரிகளாக விளிப்பது இருக்கட்டும். உங்கள் ஊரில் நாடார்களை விலங்குகள் போல நடத்துகிறீர்களே, அவர்களை அப்படி நடத்தும் ஜமீன்தாரின் காசில் இங்கே வந்து பேசுகிறீர்களே ! வெட்கமே இல்லையா? ” என்று கேட்டிருப்பார்கள்.

இத்தகைய வரலாற்று செய்திகளைக் கொண்ட இந்த நூலை ஒவ்வொருவரும் வாங்கிப் படிப்பது அவசியம். அச்சு நூலை வினவு தளத்தின் அங்காடியில் வாங்கலாம். வாங்கிப் படியுங்கள், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்! காவி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்த வரலாற்று நூல் பயன்படும்.

மதன்

வினவு தளத்தின் அங்காடியில் இந்நூலை வாங்க :

Payumoney மூலம் உள்நாடு: 100 + 20 (தபால் கட்டணம்)

100.00Read more

Paypal மூலம்- உள்நாடு: 2$ (தபால் கட்டணம் சேர்த்து)


Paypal மூலம்-வெளிநாடு: 5$ (தபால் கட்டணம் சேர்த்து)


தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered printed post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டில் வாங்கப்படும் பிரதிகள் எத்தனையாக இருந்தாலும் தபால் செலவு ரூ. 20 மட்டுமே. மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.

வெளிநாட்டிற்கு Registered Airmail – பதிவு வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும். மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.


இதையும் பாருங்க …

கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

1

2019, நாடாளுமன்றத் தேர்தலில் மோடி – அமித்ஷா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது தோல்வியடைந்துவிட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஏழை நடுத்தரவர்க்க மக்களின் மீது அந்த அளவு கடுமையான தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது பாஜக. காஷ்மீர் முதல் ஸ்டெர்லைட் வரை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்தக் கார்ப்பரேட் – காவி பாசிசம், இந்தத் தேர்தலோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இந்த அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளிலும் ஊடுறுவியிருக்கும் இந்த நச்சுப் பாம்பை வீதிப் போராட்டங்களின் மூலம்தான் வீழ்த்தமுடியும். அதற்கான ஆயுதம்தான் இந்நூல்.

அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய இந்த நூலை தரமாக தயாரித்து மலிவு விலையில் தருகிறது புதிய ஜனநாயகம் பத்திரிகை. இந்த அச்சு நூலை வினவு அங்காடி மூலம் ஆன்லைனில் விற்பனை செய்கிறோம்.

கார்ப்பரேட் – காவி பாசிசம் ! நூலின் முன்னுரையிலிருந்து ….

2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், “ஸப் கா ஸாத், ஸப் கா விகாஸ்” (அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி) என முழங்கினார், மோடி. ஆனால், அவரது இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, அஸிம் பிரேம்ஜி, ஷிவ் நாடார், குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்ட 84 பெரும் தரகு முதலாளித்துவக் குடும்பங்களின் சொத்து மதிப்புதான் கூடியிருக்கிறதேயொழிய, பெருவாரியாக உள்ள அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை வீழ்ச்சியைத்தான் கண்டிருக்கிறது.

… முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் மீது வரி பயங்கரவாதத்தை ஏவிவிடுவதாக கண்ணீர் வடித்தது, பா.ஜ.க. தனது ஆட்சியில் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, இன்னொருபுறத்தில் பெட்ரோல் – டீசல் மீது கலால் வரி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, வங்கி சேவைக் கட்டணம், ரயில் கட்டண உயர்வு, டோல்கேட் கட்டணக் கொள்ளை என்றபடியான பொருளாதாரத் தாக்குதல்களை நடுத்தர வர்க்கத்தினர் மீதும், உழைக்கும் மக்களின் மீதும் ஏவிவிட்டது.

”நானும் தின்ன மாட்டேன், மற்றவர்களையும் தின்னவிட மாட்டேன்” என சவுண்டுவிட்ட மோடியின் ஆட்சியில்தான் ஊழலும் கமிசனும் புதிய அவதாரமெடுத்திருக்கின்றன. இராணுவத்திற்கான ஆயுதத் தளவாடக் கொள்முதலில் இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது எனச் சட்டம் உள்ள நிலையில், ரஃபேல் விமானக் கொள்முதலில் அனில் அம்பானிக்காக பிரதமர் மோடியே, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைத்தரகராகச் செயல்பட்டார்.

பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம், கொள்ளைக்காக மோடி அரசு சமூகத்தின் அனைத்துப் பிரிவின் மீதும் ஏவிவிட்ட பொருளாதார பயங்கரவாதத் தாக்குதல்கள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் குண்டர் படைகள் முசுலீம்கள், தாழ்த்தப்பட்டோர் மீது மட்டுமின்றி, முற்போக்கு அறிவுத்துறையினர் மீதும் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

மோடியின் ஆட்சியில் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தப்படும் பசுவதைத் தடைச் சட்டமும், மாட்டுச் சந்தையை முறைப்படுத்த கொண்டுவரப்பட்ட சட்டமும் இந்து விவசாயிகளையும் சேர்த்தே பதம் பார்த்தது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பும், பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரி உயர்வும் இதுவொரு கொள்ளைக்கார அரசு என்பதை பா.ஜ.க.-வின் சமூக அடித்தளமாக விளங்கும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திற்கும் புரிய வைத்தது.

தூத்துக்குடியில் 14 பேரைச் சுட்டுப் பொசுக்கிக் கொன்றதை ஆதரித்துப் பேசி வரும் பா.ஜ.க.தான், தொழிற்சங்க உரிமைகள் கேட்டுப் போராடிய 13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கில் போடச் சொல்லுகிறது. தூத்துக்குடி படுகொலையைத் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ஆதரித்துப் பேசிவரும் பா.ஜ.க. தான், உரிமை கேட்டுப் போராடிய தொழிலாளர்களைத் தூக்கு மேடைக்கு அனுப்பினால்தான், மூலதனத்தை ஈர்க்க முடியும் என வாதிடுகிறது.

… இந்தியா ஓர் இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுவதை – பார்ப்பன பாசிசம் என்ற காவி பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் இரண்டறக் கலந்த இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுவதை இக்குறுக்குவெட்டுத் தோற்றம் எடுத்துக்காட்டுகிறது.

… கடந்த ஐந்தாண்டுகளில் நடந்தது என்ன என்பதை நினைவுபடுத்துவதற்கு மட்டுமல்ல; கார்ப்பரேட் – காவி பாசிசம் என்ற இரட்டை அபாயத்தை வீழ்த்துவதற்குத் தேர்தலுக்கு அப்பாலும் போராட வேண்டிய அவசியமிருக்கிறது என்பதை உணர்த்தவும் இந்த மீள்பார்வை அவசியப்படுகிறது.

பொதுமக்களை அச்சுறுத்துவதன் மூலம், அவர்களைப் பார்ப்பனிய, கார்ப்பரேட் மேலாதிக்கத்திற்கு அடிபணிய வைத்துவிடலாம் எனக் கனவு காண்கிறது, ஆர்.எஸ்.எஸ்.

எதிர்த்து நிற்பதன் வழியாகவும் திருப்பி அடிப்பதன் வழியாகவும்தான் அவர்களை வீழ்த்த முடியும், பணிய வைக்க முடியும் என்பதை மெரினா எழுச்சியும் தூத்துக்குடி – ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் கற்பிக்கின்றன.

இத்தகைய மக்கள்திரள் போராட்டங்கள் மட்டும்தான் பார்ப்பனிய மேலாதிக்கம் என்ற காவி பாசிசத்தையும், தனியார்மயம் – தாராளமயம் என்ற கார்ப்பரேட் பாசிசத்தையும் வீழ்த்தவல்ல, மக்கள் கைகளில் உள்ள உண்மையான, நம்பத்தக்க ஆயுதங்களாகும்.

ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.

வெளியீடு :
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600024.

பக்கம்: 208
விலை :
100
முதல் பதிப்பு : மார்ச் 2019

Payumoney மூலம் உள்நாடு: 100 + 20 (தபால் கட்டணம்)

100.00Add to cart

Paypal மூலம்- உள்நாடு: 2$ (தபால் கட்டணம் சேர்த்து)



Paypal மூலம்-வெளிநாடு: 6$ (தபால் கட்டணம் சேர்த்து)




தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered printed post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டில் வாங்கப்படும் பிரதிகள் எத்தனையாக இருந்தாலும் தபால் செலவு ரூ. 20 மட்டுமே. மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.

வெளிநாட்டிற்கு Registered Airmail – பதிவு வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும். மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.

நம் உணவு முறையில் எது நல்லது ? எது கெட்டது ? – கேள்வி பதில் !

முதல் கேள்வி புரோட்டா சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமென்று கூறுகிறார்கள், இதனால் வரக்கூடிய தீங்குகள் என்னவென்று விளக்கவும்?.

விடை : புரோட்டா எதில் தயாரிக்கிறார்கள் என்று பார்த்தால் கோதுமையில் இருந்து தயாரிக்கிறார்கள். கோதுமை மேல்தோலை நீக்கி ப்ளீச் செய்து மைதா தயாரிக்கிறார்கள். இவ்வாறு தயாரிக்கும் போது அதில் பல கெமிக்கல்கள் சேர்க்கப்படுவதாகவும், இந்த கெமிக்கல்கள் கணையத்தை தாக்கி டயாபட்டிக் நோயை உண்டு பண்ணும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இது உண்மையா என்று எனக்கு தெரியவில்லை. இதைப் பற்றி அறிவியல் தேடுதல்களிலும் சரியான விடை கிட்டவில்லை. ஆனால், மைதா முழுக்க முழுக்க சர்க்கரை நிரம்பிய ஒரு பொருள் அதில் சர்க்கரையை தவிர வேறு ஒன்றும் இல்லை.

அதனால், புரோட்டா மட்டும் மைதாவில் தயாரிக்கப்படுவதில்லை, அதைத் தவிர ரொட்டி, கேக் முதலிய பேக்கரி ஐட்டங்கள் அனைத்தும் மைதாவால் தான் தயாரிக்கப்படுகின்றன. புரோட்டா மேல் உள்ள பயத்தினால், அதை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், ரொட்டி முதலிய பண்டங்களை காலை உணவாக உட்கொள்ளும் பழக்கம் அதிக பேரிடம் உள்ளது. ரொட்டியும் மைதாவில் தயாரிக்கப்படும் உணவுதான்.  இந்தக் கேள்விக்கு ஏற்றவாறு பரோட்டா உண்டால் சர்க்கரை வருமா, இல்லையா? என்பதற்கான விடை எனக்கு தெரியாது. அதை பற்றி நான் ஒன்றும் கூறவிரும்பவில்லை.

ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள், பரோட்டா உண்டால் சர்க்கரை அளவை அதிகப்படுத்தும். அதேபோல் சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் மைதா உண்டால் சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதேபோல் புரோட்டா தயாரிக்கும்போது அதில் அதிகம் எண்ணெய் ஊற்றுகிறார்கள். நான் பல பேரிடம் கேட்டபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணெய் கூறினார்கள். இதனால் அதில் அதிகம் “Transfats” கலந்திருக்க வாய்ப்புள்ளது. புரோட்டாவை பொறுத்தவரை இரண்டு விடைகள் ஒன்று மைதா முழுக்க முழுக்க சர்க்கரையால் ஆனது. இரண்டாவது சுகாதாரமற்ற எண்ணெய். இந்த இரண்டு காரணங்களால் புரோட்டாவை நாம்  எப்போதாவது உணவாக எடுத்துக் கொள்ளலாமே அன்றி அடிக்கடி உண்பது நல்லதல்ல.

பொதுவாக மூன்று பாய்சன் என்று கூறுவார்கள் முதலாவது சீனி அல்லது சர்க்கரை இரண்டாவது உப்பு மூன்றாவது white rice இதை எந்த அளவு உட்கொள்ளலாம், பாஸ்சன் என்று கூறுவது சரியா?

விடை:  எந்த ஒரு உணவையும் அளவாக உட்கொண்டால் கெடுதல் இல்லை. உதாரணத்திற்கு முன்னர் மைதாவை பற்றி பேசினோம். அதேபோல் வெள்ளை சர்க்கரை என்று கூறுகிறார்கள். இது கெடுதல் எனவே, நாட்டு சக்கரை விரும்புகிறார்கள். நம் உடலுக்கு சக்கரை என்றுதான் தெரியுமே, தவிர அது நாட்டுச்சக்கரை என்பது தெரியாது. இன்னும் சில பேர் வெள்ளை சர்க்கரையை தயாரிக்கும் போது, அதில் அதிக கெமிக்கல்கள் கலப்பதாக கூறுகிறார்கள். இவை உடலுக்கு தீங்கு என்றும் சொல்கிறார்கள். இதுவும் இன்னும் ஆய்வுப்பூர்வமாக  நிரூபிக்கப்படாத ஒன்று.

எந்த ஒரு அரசாங்க ஆய்வகமும் அல்லது சுகாதார நிறுவனமும் வெள்ளை சர்க்கரை தீங்கு என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கவில்லை. மேலும் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடவும் இல்லை. இவ்வாறு இருக்கையில் வெள்ளை சர்க்கரை உடலுக்கு தீங்கானது என்று நான் கூற முடியாது. ஆனால், அதேவேளையில் வெள்ளை சர்க்கரை கெடுதல், நாட்டு சக்கரை உடலுக்கு தீங்கானது இல்லை என்ற கூற்றையும் ஏற்க முடியாது.

எந்த சர்க்கரையானாலும், அது உடலில் சர்க்கரை அளவை கூட்டத்தான் செய்யும். உதாரணம் 100 கிராம் வெள்ளை சர்க்கரையும், 100 கிராம் நாட்டு சர்க்கரையும் உடலில் ஒரே அளவு சர்க்கரையைதான் சேர்க்கும். எதுவுமே அளவுக்கு அதிகமானால் தீங்குதான். அடுத்து அரிசி, சில பேர் இட்லி பற்றி கூறுகையில் என்னிடம் கேட்பார்கள் “ஏன் சார் இட்லி சாப்பிட வேண்டாமெனக் கூறுகிறீர்கள் ?” என்று.

நான் அவ்வாறு கூறவில்லை.  இட்லியை ஒருவேளை உண்ணலாம். இரண்டுவேளையும் உணவாக இட்லியை உட்கொள்ள முடியுமா?. 1960-களில் இட்லி என்பது ஒரு பலகாரம். பசுமைப் புரட்சிக்கு பின்புதான் அரிசியின் விலை குறைந்து, அரிசி  எல்லோருக்கும் சென்று சேரும் ஒரு பொருளாக மாறியது. இதற்கு பிறகுதான் இட்லி பெருவாரியாக உண்ணப்படுகிறது.

காலை உணவாகவும் இரவு உணவாகவும் இட்லி அல்லது தோசை உணவில் சேர்ப்பது சர்க்கரை அளவை அதிகப்படுத்தத்தான் செய்யும். அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள்தான் அதிகம் உண்ண வேண்டாம் என்று கூறுகிறோம். மற்றவர்கள் இதை உண்ணலாம். ஆனால், அதிகம் உண்டால் விளைவுகளை நாம் ஏற்கத்தான் வேண்டும். இதன் மூலம் இட்லி நம் பாரம்பரிய உணவு என்று கூறுபவர்களின் கூற்றை நான் நிராகரிக்கிறேன்.

கடந்த 40,50 ஆண்டு காலமாகத்தான் நாம் இட்லியை உண்கிறோம். அதற்கு முன்பு அது ஒரு பலகார வகைதான் இவைகளில் ஒயிட் ரைஸ்க்கு பதிலாக ரெட் ரைஸ்  சாப்பிடலாமா என்று சிலர் கேட்கிறார்கள். தாராளமாக சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து அதிகம், வைட்டமின்கள் உள்ளது. ஆனால், சர்க்கரையானது  ஒரே அளவுதான்.  சிலர் கூறுவதுபோல், இந்த வகை அரிசியைக் கொண்டு வந்ததால், பழைய வகை அரிசி இல்லாமல் போய்விட்டது. இதுதான் சர்க்கரை நோய்க்கான காரணம் என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தானியங்களில் இவ்வாறு உள்ளதென்றால், சிறுதானியங்கள் உண்ணலாமா என்று சிலர் கேட்கிறார்கள். தாராளமாக உண்ணலாம் ஆனால், சர்க்கரை அளவு சிறுதானியங்களிலும் அதே அளவுதான் உள்ளது.

அடுத்து வெள்ளையாக இருப்பது உப்பு, உப்பை பொருத்தவரை உப்பில்லாமல் சாப்பிட்டால் நல்லது என்று சிலர் கூறுவார்கள். அது தவறு, தேவையான அளவு உப்பைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக மிஞ்சினால் உடலுக்கு தீங்கு. .

அடுத்த கேள்வி, அடுத்து வெள்ளையாக பால் உள்ளது, பாலானது அதிக கொழுப்புச் சத்து நிறைந்தது, செரிமானக் கோளாறை உண்டாக்கும், மனிதனுக்கு ஏற்ற உணவல்ல என்று சமூக வலைதளங்களில் சிலர் கூறுகிறார்கள் இதைப்பற்றி தங்களது கருத்து.

விடை:  பால்  மிகச் சிறந்த உணவு அதில் சந்தேகமே வேண்டாம். கொழுப்பு பற்றிய பயம் உண்டான பின்பு இந்தக் கேள்வி அதிக அளவு கேட்கப்படுகிறது. எப்போது  அமெரிக்க  நார்த்  அசோசியேஷன், கொழுப்பு இல்லாத பாலை பருகச் சொன்னார்களோ, அன்று முதல் சிலர் கொழுப்பில்லாத பாலை பருகிறார்கள். ஆனால், கொழுப்பு நிறைந்த பாலை உண்பவர்களுக்கும் கொழுப்பில்லாத பாலை உண்பவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியது, இதில் கொழுப்பு இல்லாத பாலை உண்பவர்களிடம் டயாபடீஸ்  மற்றும் இறப்பு விகிதம் கூடியுள்ளது எனவே பாலை அப்படியே உட்கொள்வது சிறந்தது.

பழங்களை அப்படியே சாப்பிட வேண்டும், ஜூஸாகவோ அல்லது பழச்சாற்றை மட்டும் குடிப்பது சர்க்கரை நோயாளிகளுக்கு முழுமையான சத்தை கொண்டு சேர்க்காது என்று கூறினீர்களே அதைப்பற்றி விளக்குங்கள்.

விடை: பழங்களை உணவாக உட்கொள்ளும்போது  முழுவதுமாக உண்கிறீர்கள். அப்போது பழங்களில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் அத்தனையும் நம் உடலுக்கு சென்று சேர்கிறது. அதுவே ஜூஸாக பருகும்போது ஆவியாகி விடும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல், பழங்களை ஜூஸ் ஆக்கிய பின் வடிகட்டி விடுகிறோம் இதன்மூலம் பழங்களில் உள்ள சர்க்கரை மற்றும் சிறிது வைட்டமின் மட்டுமே நம் உடலில் சென்று சேருகிறது மீதி சத்துக்களை நாம் இழக்கின்றோம். ஜூஸாக பருகும்போது  நாம் இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் பருகி விடுகிறோம்.

மெதுவாக உண்பதுபோல் உண்ண முடியாது, மேலும் பழங்கள் ஜூஸாக பருகும்போது இனிப்புச் சுவையை இழந்துவிடுகிறது. எனவே நாம் கூடுதலாக அதில் சர்க்கரையைச் சேர்க்கிறோம், இவை நம் உடலில் கலோரிகளையும் சர்க்கரையையும் அதிகம் சேர்க்கின்றன. இதுவே பழங்கள் அளவில் சிறியதாக  இருந்தாலும் மென்று சாப்பிடும்போது, அந்த சத்துக்களை முழுமையாக நாம் பெறுகிறோம் எனவே பழங்களை அப்படியே உண்பது நல்லது.

இப்போது நிலவுகின்ற பொருளாதார கட்டமைப்பு காலை உணவையோ அல்லது வேறு உணவையோ வேகமாக உண்ணும் பழக்கம் பரவலாக உள்ளது.  மேலும் விரல்விட்டு மற்றும் எத்தனை ஸ்பூன்கள் என எண்ணிக்கையிலும் குறிப்பிடுகிறார்கள் இதைப் பற்றி விளக்குங்கள். அதேபோல் ஒயிட் ரைஸ் சாப்பிடுவது கெடுதல் எனில் சப்பாத்தி உண்கிறார்கள் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் அதையே உண்கிறார்கள் இது சரியா?

விடை: வேகமாக உண்பது என்பது தவறான அணுகுமுறை, காரணங்கள் நாம் வாயில் உணவை மென்று உண்ணும்போது நம் உமிழ்நீரானது உணவில் கலக்கிறது அப்போதே செரிமானம் ஆரம்பமாகிறது. மேலும், நாம் வாயில் உணவை முதலில் அசை போடும்போது இரைப்பை அதற்குத் தயாராகிறது. நாம் உணவை உண்கிறோம் என்ற உணர்வை தூண்டிவிடும் செயலும் நடக்கிறது. எனவே, உணவை சிறிய அளவில் உண்டாலும் அதை நன்கு மென்று உண்ணும்போது அதற்கான நியூட்ரிஷன்கள் முழுவதையும் நாம் அடைகிறோம், அதேபோல் செரிமானமும் நன்றாக இருக்கும் போதுமென்ற மனப்பாங்கும் நமக்கு உண்டாகும்.

படிக்க :
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?

அடுத்ததாக வெள்ளை அரிசிக்கு பதிலாக கோதுமை சப்பாத்தியை உண்டால் நல்லது என எண்ணுகிறார்கள். இதுவும் தவறு இந்த எண்ணம் எவ்வாறு உண்டானது என்று தெரியவில்லை. வடமாநிலங்களில் முழுவதுமாக சப்பாத்தி, ரொட்டிதான் உண்கிறார்கள். வட மாநிலங்களில்தான் சர்க்கரையும் உடல் பருமனும் அதிகம். இந்த சின்ன விஷயம் கூட தென்படாமல் போனது வேடிக்கையாக உள்ளது. சப்பாத்தி உண்டால் அதிகம் பலன் இல்லை என்பதை நாம் உணர்ந்து வைத்திருக்கிறோம். அரிசியோடு ஒப்பிடுகையில் சப்பாத்தியில் கொஞ்சம் புரதம் அதிகம் அதேபோல் சர்க்கரையும் கொஞ்சம் குறைவு. ஆனால், கோதுமையும் முழுக்க முழுக்க சர்க்கரையால் ஆன ஒன்றுதான்.

எடுத்துக்காட்டிற்கு சர்க்கரை நோயாளியாக சர்க்கரையின் அளவை சப்பாத்தி உண்பதற்கு முன்பும் பின்பும் பரிசோதித்து பார்த்தால் தெரியும். எனவே, அரிசி உண்ண வேண்டாம் என்றால் சப்பாத்தியை உண்ணலாம் என்ற கூற்று தவறானது. இரண்டையுமே குறைத்துக்கொள்ளவேண்டும்.  நான் முன்னமே கூறியதுபோல் அரிசி, கோதுமை, கேழ்வரகு, கேப்பை, குதிரைவாலி, வரகு, தினை முதலிய அனைத்தும் நிறங்களும் சுவையும் மட்டுமே வேறு வேறு அன்றி சர்க்கரையானது அனைத்திற்கும் பொதுவானதுதான். எனவே இதற்கு பதில் அது ! அதற்கு பதில் இது ! என்று நாம் எடுக்க முடியாது. இவற்றிற்குப் பதிலாக மாற்று உணவை நாம் தேட வேண்டும். இதுதான் உண்மை.

பயிர் வகைகள் அதிகம் உட்கொண்டால் வாயு பிரச்சினை வரும் என்கிறார்கள் அதை பற்றி விளக்கவும்?

விடை: வாயு என்ற சொல்லே மிகவும் தவறாக உபயோகிக்கப்படுகிறது. வாயு என்றால் என்னவென்று கேட்டால், ‘கேஸ்’ என்பார்கள். அதேபோல் ‘கேஸ்’ என்றால் என்னவென்று கேட்டால் வாயு என்பார்கள். அதைப்பற்றி இதற்கு மேல் எதுவும் கூற மாட்டார்கள். நம் உடலில் மூன்று இடங்களில் மட்டுமே வாயு இருக்கும். ஒன்று நுரையீரல், நாம் சுவாசிக்கின்றோம். அதேபோல் வாய்வழியாக காற்றை எடுக்கும்போது குடல் காற்றை வாய் வெளியே தள்ளுகிறது அல்லது ஆசனவாய் வழிகாயக வெளியே தள்ளுகிறது. அடுத்ததாக சைனஸ்.. நமது கண்களைச் சுற்றி காற்று உள்ளது. இவைகளைத் தவிர வேறு எங்கும் நம் உடலில் வாயு என்பது கிடையாது.

சில பேர் கூறுவதுபோல், “உருளைக்கிழங்கு சாப்பிட்டேன், அதனால் தசைகளில் வாயு பிடித்துக் கொண்டது” என்பதெல்லாம் நடைமுறையில் இல்லாத ஒன்று. அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும், தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும், முட்டைக்கோஸ் சாப்பிட்டால் ‘கேஸ்’ பிடிக்கும், உருளைக்கிழங்கு சாப்பிட்டால் ‘கேஸ்’ பிடிக்கும். இவற்றை எல்லாம் வழக்கமாக சொல்லி.. சொல்லி.. அவற்றை உண்மை என்றே மக்கள் நம்புகிறார்கள்.

இது பெரும்பாலும் மனம் சம்பந்தப்பட்ட ஒன்று. உதாரணம் நாம் மூன்று வேளையும் அரிசிச் சோறு சாப்பிட்டுக் கொண்டு ஒரு வேளை மட்டும் திடீரென்று வேறு உணவை உட்கொள்கிறோம் என்றால் உடலில் ஏற்படும் மாற்றத்துக்கு அந்த உணவுதான் காரணம் என்று நாம் நம்புகிறோம். இது அந்த உணவால் ஏற்பட்டதாயினும் இதை மறுபடியும் உட்கொள்ளும்போது நம் உடலானது அதற்கு பழகிக்கொள்ளும். நம் மனம்தான் அதை ஏற்க மறுக்கும்.

உதாரணத்திற்கு நான் உங்களை ஜப்பான் நாட்டில் கொண்டு சென்று விடுகிறேன். ஒருவாரத்திற்குள் திரும்பிவர பயணச்சீட்டு உங்கள் கையில் ஒப்படைக்கிறேன் என்றால், நீங்கள் பெரும்பாலும் ரொட்டி மட்டும் உண்டுவிட்டு திரும்பி வந்து நமது ஊர் உணவை உண்பீர்கள். அப்போது நமது  ஊர் உணவு அமிர்தம் போல் உங்களுக்குத் தென்படும்.

இதுவே உங்களை ஜப்பானிலேயே விட்டுவிடுகிறேன் என்றால், நீங்கள் என்னைப் பல முறை திட்டுவீர்கள், உணவுமுறை சரியில்லை என்று. ஒரு கட்டத்தில் அந்த உணவை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு உங்கள் உடல் வந்ததும் மனதும் பழகிவிடும். சிலபேருக்கு சில உணவினால் ஒவ்வாமை ஏற்படலாம் அன்றி பெருவாரியான மக்களுக்கு அது பொதுவானது கிடையாது.

உதாரணத்திற்கு கத்திரிக்காய் உண்டால் சில பேருக்கு அரிப்பு ஏற்படலாம். இதெல்லாம் பெருவாரியான மக்களுக்கு பொருந்தும் என்று நாம் கூற இயலாது.

ஜப்பானை பற்றி இடையில் கூறினீர்கள் இப்போது கொலஸ்ட்ராலானது  சிறு குழந்தையில் இருந்தே தத்துக் குழாயில் படிய ஆரம்பிக்கிறது சில குழந்தைகள் நூடுல்ஸை விரும்பி உண்கிறார்கள் அதன் பக்கவிளைவுகளை  சிறிது விளக்குங்கள்.

விடை : முழுக்க முழுக்க மைதா-தான் நூடுல்சில் கலக்கப்படும் மசாலாவை நாக்கில் வைத்துப் பார்த்தால் சுருக்கென்று இருக்கும். அது முழுக்க முழுக்க ருசிக்காக மட்டுமே தயாரிக்கப்படும் ஒன்று. அதை தொடர்ந்து சாப்பிட்டால் கண்டிப்பாக ஆபத்துதான். அவ்வாறு உண்டால் குழந்தையின் உடல் பருமனுக்கு நாம் வழி அமைத்துக் கொடுக்கிறோம். மேலும் அந்த மசாலாக்களில் நிறைய கெமிக்கல்கள் சேர்க்கப்படுவதாக கூறுகிறார்கள். அவை பற்றி எனக்கு தெரியாது எனினும் அது உடலுக்கு நல்லது இல்லை என்பதை நாம் உணர்ந்துதான் ஆக வேண்டும்.

ஜப்பானைப் பொறுத்தவரை அவர்கள் உண்பது மைதா நூடுல்ஸ் கிடையாது. அரிசியால் ஆன நூடுல்ஸ்தான் அவர்கள் உண்கிறார்கள். ஜப்பானியர்களும் நம்மைப் போல் அரிசியைத்தான் உண்கிறார் ஆனால் அவர்கள் ஒல்லியாகவே உள்ளார்கள் எப்படி ஏனென்றால் அவர்கள் இரண்டு ஸ்பூன்கள் வைத்திருப்பார்கள். ஒரு சிறிய கோப்பையில் அரிசியையும், மற்றொன்றில் மட்டனையும் மற்றொன்றில் நீர் போன்ற ஒன்றையும் வைத்திருப்பார்கள். நாம் உண்பது போல் அதிக அளவு அரிசியை அவர்கள் உண்பதில்லை நாம் குறைவாக உண்கிறோம் என்று நினைத்துக்கொண்டு, அதிகமாக உண்டு வருகிறோம். முதலில் நாம் அரிசியை அதிகமாக உண்கிறோம்  என்று  உணர வேண்டும். அப்போதுதான் குறைப்பதற்கான வழி தேடுவோம்.

நம் தேவையானது மிகவும் குறைந்து விட்டது சில பேர் கூறுவதுபோல் நம் தாத்தா பாட்டி எல்லோரும் கேப்பை களி என உண்டார்கள் அவர்கள் ஒல்லியாகத் தானே இருந்தார்கள்.? உண்மைதான் ஆனால் அவர்கள் அந்த அளவுக்கு உழைத்தார்கள்.

low sodium salt என்பதை அறிமுகம் செய்கிறார்கள். அதை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். இது சரியானதுதானா இதைப் பற்றிய தங்களது கருத்து?

விடை: இதற்கான விடை எளிமையானது. Low Sodium Salt ஆயினும் அல்லது நார்மலான உப்பு ஆயினும் நமக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவுதான் போடப் போகிறோம். நீங்கள் கூறும் சோடியம் குறைவான உப்பில் உப்புச்சுவை குறைவு எனில் நாம் அதற்கேற்ற அளவு அந்த உப்பை நம் உணவில் அதிகமாக சேர்ப்போம். எனவே, அளவு மாறுபடுமேயன்றி உள்ளே சென்று சேரும் உப்பானது, ஒரே அளவுதான். இதேபோல் வேறு சில உப்பு வகைகளை சிலர் கொண்டு வருகிறார்கள்.

படிக்க :
♦ சைவ உணவுப் பழக்கத்தால் உடல், மனநலக் குறைபாடு ஏற்படுமா ?
♦ சர்க்கரையின் அறிவியல்

இதில் சோடியம் குறைவு எனினும் பொட்டாசியம் அதிகம். சோடியம் கூட சிறுநீர் வழியாக வெளியேறி விடும். ஆனால், பொட்டாசியம் வெளியேறாவிட்டால் சுகர் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு இது பெரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். நாம் முன்னமே கூறுவதுபோல் எதையும் அளவாக உட்கொண்டால் பிரச்சினை கிடையாது. நாம் சரியானவற்றைதான் உண்டு வருகிறோம். அளவுக்கு மீறி உண்ணும் போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. அது மைதாவாகினும் முட்டை, கீரை என எதுவாகினும் அளவாக உட்கொண்டால் எந்த தீமையும் கிடையாது. அளவுக்கு மீறும்போதுதான் பிரச்சினை உண்டாகிறது. நாம் வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் உணவு பற்றிய பல வீடியோக்கள் நம்மை அச்சுறுத்துவதாக உள்ளன.

“இந்தப் பழம் சாப்பிட்டால் இந்த நோய் வரும். இதைச் சாப்பிட்டால் இந்த நோய் வரும்.” என பெரும்பாலானவை நம்மை அச்சப்படுத்துகின்றன. இவை தவறான செயல். எதற்காக இந்த வீடியோக்கள் என்று தெரியவில்லை.

ஒரு வீடியோவில் ஒருவர் ஒரு பழத்தில் இவ்வளவு நன்மைகள் உண்டு என்று கூறுகிறார். அந்தப் பழத்தில் அவ்வளவு நன்மை உள்ளதால் நாம் அதை தினந்தோறும் உண்ண முடியுமா? அப்படி உண்டால், நம் உடலுக்கு தீங்குதான். எனவே “இந்தப் பழம் நல்லது. அந்தப் பழம் நல்லது” எனக் கூறுவது தவறு. காரணம், கெட்ட பழம் என்று ஒன்று கிடையாது. கெட்ட காய்கறி என்று ஒன்று கிடையாது. இவ்வாறு பரப்புவதால், இந்த கெமிக்கல்களுக்கு பயந்து  ஆர்கானிக் உணவு  என ஒருபுறம்  சந்தைப்படுத்துகிறார்கள். இதுவும் தவறு எதையும் நாம் அதிகமாக உட்கொள்ள போவதில்லை. சுழற்சி முறையில் தான் சாப்பிடப் போகிறோம்.

ஒருநாள் வெண்டைக்காய், ஒருநாள் கீரை, ஒருநாள் கொத்தவரங்காய், என இப்படி சுழற்சி முறையில்தான் சாப்பிட வேண்டும். ஒரு பழம் நல்லது என்பதற்காக தினமும் அதை அதிகமாக உட்கொண்டால் அது கெடுதல்தான். ஒருநாள் கொய்யாப்பழம் இன்னொரு நாள் கொடிமுந்திரி. இன்னொரு நாள் மாதுளை இப்படி மாற்றி மாற்றி தொடர்ந்து உண்டு வந்தால் நம் உடம்புக்கு தேவையான மினரல்கள் அனைத்தும், நம் உடலில் சேரத்தான் போகின்றன. எனவே நான் முதலில் இருந்து கூறிவருவது போல் நாம் அதிகமாக உட்கொள்வது, அரிசி மற்றும் கோதுமைதான். எனவே அவற்றை குறைத்து அதற்கு பதிலாக மற்ற உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும்.

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.


வாங்கிவிட்டீர்களா ?
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

திபெத் மடாலய மர்மங்கள் | கலையரசன்

2

கலையரசன்
“தலாய் லாமா”, சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை. மேற்குலகிலும் தலாய் லாமாவின் புகழ் பரவி வருகின்றது. பல நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் திபெத்திய பௌத்த மதத்திற்கு மாறியுள்ளனர். மேற்குலக ஊடகங்கள் தலாய் லாமாவை கருணையுள்ளம் கொண்ட சமாதான விரும்பியாக சித்தரிக்கின்றன. திபெத்திய பிரபுக்கள் மக்களை மந்தைகளாக மேய்த்த வரலாறு பேசப்படுவதில்லை. “நாடு கடந்த திபெத்திய அரசாங்கம்” அமைந்துள்ள இந்தியாவிலும், தலாய் லாமாவின் குண்டர்கள் திபெத்திய அகதிகளை அடக்கி ஒடுக்கி வருகின்றனர். தலாய் லாமாவின் சர்வ வல்லமை கொண்ட அதிகாரத்தை விமர்சிப்பவர்கள், சீனாவின் கைக்கூலிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில், அரச ஆதரவு பெற்ற திபெத் ஆதரவு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. பொருட்காட்சிக்கு செல்லும் குழந்தைகளையும் அரசியல்மயப்படுத்துகிறார்கள். “திபெத்தில் இருந்து தப்பிக்கும் அகதி விளையாட்டு”, தற்போது வீடியோ கேம்களிலும் கிடைக்கிறது. திபெத் அகதி போன்ற உடையணிந்த சிறுவர்கள், இமாலய சிகரங்களின் ஊடாக, சீன எல்லைக்காவல் படையிடமிருந்து தப்ப வேண்டும். ஐரோப்பிய சிறுவர்கள் மனதில் திபெத் மீது அனுதாபத்தையும், சீனா மீது வெறுப்பையும் விதைக்கும் விபரீத விளையாட்டு. அதே போல, “அல்ப்ஸ் மலைச் சிகரங்களின் ஊடாக, ஐரோப்பிய எல்லைக்காவல் படைகளை தாண்டி வரும் இலங்கை அகதி” விளையாட்டும் தயாரிக்க இவர்கள் முன்வருவார்களா?

அமெரிக்க அரசியல்வாதிகள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இன்று தலாய் லாமாவின் பக்தர்கள். பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சார்ட் கியர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வலதுசாரி அரசியல்வாதிகளை அழைத்து விருந்து வைக்கிறார். திபெத் அகதிகளுக்கு உதவுவதற்காக அந்தக் கொண்டாட்டம். அதே அமெரிக்காவில், திபெத் பௌத்த மடாலயத்தின் தலைமைக் குருவான “சொய்கள் ரிம்போச்சே” யின் காமலீலைகள் அம்பலத்துக்கு வந்தது. மடாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்லும் அமெரிக்க பக்தைகள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர். தன்னுடன் பலவந்தமாக உடல் உறவுக்கு முயன்றதாக (பௌத்தராக மாறிய) அமெரிக்க பெண்மணி போலீசில் புகார் செய்தார். “துறவியுடன் உடல் உறவு கொள்வது கடவுளின் அருட்கொடை” என்று சொய்கள் ரிம்போச்சே விளக்கம் அளித்துள்ளார்.

தலாய் லாமா ஆட்சி செய்த திபெத்தில் மதகுருக்களின் அட்டகாசம் கொடிகட்டிப் பறந்தது. சீனாவின் மக்கள் விடுதலைப் படை ஆக்கிரமிக்கும் வரை, அரச நிர்வாகம் முழுவதும் நிலப்பிரபுக்களின் எதேச்சதிகாரம் நிலவியது. பொருளாதாரத்தில் மேன் நிலையில் இருந்த நிலப்பிரபுக்கள், மதகுருக்களாகவும் இருந்தனர். பண்ணையடிமைகளாக உழைத்து ஓடாய்ப் போன மக்களை மூடர்களாக வைத்திருக்க மதம் உதவியது. விவசாயக் கூலிகளான உழைக்கும் மக்கள் குடிசைகளுக்குள், வறுமையின் துயருடன் வாழ்ந்தார்கள். அதே நேரம் அவர்களை சுரண்டிக் கொழுத்த தலாய் லாமாக்களும், மத குருக்களும் மாட மாளிகைகளில் வசதியாக வாழ்ந்தார்கள். மிகப் பெரிய மாளிகை ஆயிரம் அறைகளை கொண்டிருந்தது என்றால், அவர்களின் செல்வச் செழிப்பை புரிந்து கொள்ளலாம். அடக்குமுறைச் சின்னங்களான அரண்மனைகளும், மாளிகைகளும் திபெத் முழுவதும் காணப்பட்டன. சீனர்கள் வரும் வரை திபெத்தில் 6000 மடாலயங்கள் இருந்தன.

படிக்க:
குருகிராம் தாக்குதல் : மோடியின் புதிய இந்தியாவின் புதிய நீதி !
தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !

சாதாரண திபெத் மக்களின் வாழ்க்கை நரகமாக இருந்தது. அரைப் பட்டினியுடன் காலந் தள்ளினார்கள். உணவுக்காக திருடியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டன. சமூகப் படிநிலை ஒன்பது பிரிவுகளைக் கொண்டிருந்தது. பெண்களின் நிலையோ சொல்லுந்தரமன்று. இந்த ஒன்பது பிரிவுகளிலும் அவர்கள் அடங்கவில்லை. அதாவது திபெத்திய மடாதிபதிகளைப் பொறுத்தவரை, பெண்கள் “பேசும் மிருகங்கள்”. மக்களை மூடர்களாக வைத்திருக்க புராணக் கதைகள் பாராயணம் செய்யப்பட்டன. அதையும் மீறி எவராவது கேள்வி கேட்டால், பாதாளச் சிறைகளில் போட்டு வதைக்கப்பட்டனர். நிச்சயமாக சீனர்களின் படையெடுப்பு, நிலப்பிரபுத்துவ நுகத்தடியில் இருந்து அடிமைகளை விடுதலை செய்தது.

இந்தியாவில் அகதி முகாம்களில் வாழும் திபெத்தியர்கள், அங்கேயும் தலாய் லாமாவின் இரும்புக்கரத்திற்கு தப்ப முடியவில்லை. தலாய் லாமாவின் ஏக பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொள்ளுமாறு, அகதிகள் மிரட்டப்படுகின்றனர். திபெத்திய அகதிகள் மத்தியில் இருந்து கிளம்பும் பிற அரசியல் இயக்கங்கள் முளையிலேயே கிள்ளப்படுகின்றன. பன்முகப்பட்ட அரசியல் கலாச்சாரத்திற்கோ, அல்லது பலகட்சிகள் பங்குபெறும் பாராளுமன்றத்திற்கோ, தலாய் லாமா தயாராக இல்லை. அரசியல் வேறுபாடுகளை விட்டு விடுவோம். பிற மதங்களை, அல்லது மதப் பிரிவுகளை சகித்துக் கொள்ளும் தன்மை கூட தலாய் லாமாவிடம் கிடையாது. திபெத்தில் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினர்தான். இருந்தாலும் ஷக்டன் என்ற இன்னொரு மதத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். இந்தியாவில் சுமார் ஒரு இலட்சம் திபெத் அகதிகள் ஷக்டன் மதத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களுக்கு இந்தியாவில் கூட மதச் சுதந்திரம் கிடையாது. அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் தலாய் லாமாவின் குண்டர்களால் இடிக்கப்பட்டன. வீடுகளுக்குள் புகுந்து கூட சாமிப் படங்களை கிழித்துப் போட்டார்கள்.

தலாய் லாமா இந்தியாவில் உள்ள தலைமையகத்தில் இருந்து கொண்டே வெளிநாட்டுத் தலைவர்களுடன் தொடர்பு கொள்கின்றார். உலகின் பிற பகுதிகளில் விடுதலைப் போராட்டங்களை ஒடுக்கிய சி.ஐ.ஏ. அவரது உற்ற நண்பன். அறுபதுகளில் ஆயிரக்கணக்கான திபெத் அகதிகளுக்கு சி.ஐ.ஏ. ஆயுதப் பயிற்சி வழங்கியது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த திபெத்தினுள், சி.ஐ.ஏ. விமானங்கள் ஆயுதப் பொட்டலங்களை வீசின. தயாராக இருக்கும் விடுதலைப்படை திபெத்தை விடுவிக்க வேண்டும் என்பது ஏற்பாடு. ஆனால், சீன இராணுவம் ஈவிரக்கம் பாராமல் அடக்கியதால், கிளர்ச்சி தோல்வியுற்றது. அதற்குப் பிறகு, “கம்யூனிசத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையிலான முரண்பாட்டை பயன்படுத்திக் கொள்ளும்” இராஜதந்திர நகர்வை மேற்கொண்டார்.

தலாய் லாமாவுக்கு நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. யார் உதவுகிறார்களோ, அவர்கள் எல்லாம் நண்பர்கள்தாம். ஜப்பானில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருக்கும், “ஓம்” மதக்குழுவின் தலைவர் அசஹரா கூட தலாய் லாமாவின் மதிப்புக்குரிய நண்பர்தான். அசஹாரா “நாடு கடந்த திபெத் அரசாங்கத்திற்கு” தாராளமாக நிதி வழங்கிய புரவலர். ஒரு தடவை ஒரு இலட்சம் டாலர் அள்ளிக் கொடுத்திருக்கிறார். டோக்கியோ சுரங்க ரயில்நிலையத்தில் நச்சுவாயு பிரயோகித்த குற்றத்திற்காக அசஹாரா கைது செய்யப்பட்ட பின்னர் அந்தத் தொடர்பு அறுந்தது. சீனாவிலும், ஜப்பானிலும் ஞானவாத பௌத்த மதப்பிரிவு, உத்தியோகபூர்வ மதமாக உள்ளது. திபெத்திய பௌத்தம் பல தனித்துவமான கூறுகளைக் கொண்டுள்ளது. இதனால் ஓம் மதக்குழுவுடன் தந்திரோபாய கூட்டு அமைத்ததாக தலாய் லாமா கொள்கை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

படிக்க:
மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி
திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி

திபெத் ஹிட்லரைக் கூட வெகுவாக கவர்ந்திருந்தது. ஆரியர்களின் பூர்வீகம் திபெத் என்று அவருக்கு யாரோ கற்பித்திருக்கிறார்கள். நாசிக் கட்சியின் சின்னமான ஸ்வாஸ்திகா கூட திபெத்தில் இருந்து கடன்வாங்கியது தான். அப்படி சொல்லிக் கொடுத்தது வேறு யாருமல்ல. “தெயோசொபி” என்ற ஆன்மீக அமைப்பு. (சென்னை, அடையாரில் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.) 1939-ம் ஆண்டு, நாசிச அரசு அமைச்சர் ஹிம்லர் ஒரு தூதுக் குழுவை திபெத்திற்கு அனுப்பினார். திபெத்திய மடாலயங்களில் வாழும் “ஆரிய பூர்வகுடிகளிடம்” இனத்தூய்மை பற்றி படிப்பது அவர்கள் நோக்கம்.

திபெத் சென்று, “மாபெரும் ஆசான்களிடம்” கற்ற தூதுக்குழுவை சேர்ந்த பெர்கர் என்பவர் ஜெர்மனிக்கு திரும்பி வந்தார். நாசி கொலைக்களங்களில் நச்சுவாயுவுக்குப் பலியான யூதர்களின் மண்டையோடுகளை வைத்து “இன உடற்கூற்றியல்” பரிசோதனை செய்தார். நாசிகளின் குழுவிலிருந்த ஆஸ்திரிய நாட்டுக்காரரான ஹைன்றிஷ் ஹாரெர் 1950 வரை திபெத்தில் தங்கி இருந்தார். தலாய் லாமாவின் நம்பிக்கைக்குரிய பரப்புரையாளராகவும், வெளிநாட்டு தொடர்பாளராகவும் கடமையாற்றினார். அவரது வாழ்க்கை வரலாற்றை வைத்து, “திபெத்தில் ஏழு வருடங்கள்” என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளிவந்தது. கதையின் நாயகன் ஹாரெரின் நாசிச தொடர்பு, படத்தில் எந்த இடத்திலும் காட்டப்படவில்லை. திபெத் சார்பு திரைப்படத்தை ஆவலோடு வரவேற்ற தலாய் லாமாவும், சிறு வயதில் ஜெர்மன் நாசிகளுடனான தனது உறவு குறித்து மூச்சு விடவில்லை. வருங்காலத்தில் தலாய் லாமாவும், ஹாலிவுட்டும் தம்மை நல்லவர்களாகக் காட்டுவார்கள் என்று, நிச்சயமாக நாசிகளும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.


வாங்கிவிட்டீர்களா ?
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

அண்ணாமலை பல்கலை : விடுதிக் கட்டண உயர்வை திரும்பப் பெறு ! மாணவர்கள் போராட்டம்

0

சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவுக்கான ஒரு தளமாக விளங்குவது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம். பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களே இங்கு பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கான விடுதிக் கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிரடியாக உயர்த்தியிருக்கிறது பல்கலைக் கழக நிர்வாகம். அதிரடியான இந்த கட்டண உயர்வைக் கண்டித்து விடுதி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மாணவர்களின் போராட்டம் இரவிலும் தொடர்ந்த போதிலும், பல்கலைக்கழக துணைவேந்தர் இதுவரை மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் புறக்கணித்துவருகிறார்.

விடுதிக் கட்டண உயர்வு திரும்பப் பெறும்வரை போராட்டத்தை தொடரப் போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.


தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சிதம்பரம்.

தேர்தல் 2019 : பொது அறிவு வினாடி வினா – 18

தேர்தல் 2019 : பொது அறிவு வினாடி வினா

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. ஊடகங்களும் பத்திரிகைகளும் “தேர்தல் திருவிழா”, “ஜனநாயகத் திருவிழா”, “தேர்தல் தீபாவளி”, “தேர்தல் சூறாவளி” என விதவிதமாகப் பெயரிட்டு, தத்தமது புரவலர்களின் புகழ்பாடத் தொடங்கிவிட்டன. மக்களின் சிந்தனையும் தேர்தல்  மயமாகிவிட்டது. சரி இந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்த விவரங்கள் நம்மில் எத்தனை பேருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்கின்றன என்று பார்க்கலாம். கீழ்கண்ட கேள்விகளை முயற்சித்துப் பாருங்கள்.

(வினாடி வினா பகுதி, கேள்விகளுக்குக் கீழே உள்ளது. தவறாமல் பங்கெடுக்கவும்)

கேள்விகள்:

1. இந்த பாராளுமன்றத் தேர்தலோடு சில மாநில சட்டமன்ற தேர்தல்களும் நடக்கின்றன. கீழ்க்கண்ட மாநிலங்களில் அப்படி தேர்தல் நடக்கும் மாநிலம் எது?
2. இந்தியப் பாராளுமன்றத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
3. கீழ்க்கண்டவற்றில் எது பாராளுமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் வராது?
4. கீழ்க்கண்ட அரசு உறுப்புகளில் அதிக அதிகாரம் படைத்த உறுப்பு எது?
5. போதிய பிரதிநிதித்துவம் இல்லை என எந்த பிரிவினரில் இருந்து 2 பாராளுமன்ற உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார்?
6. மோடி அரசாங்கம் இந்திய அரசின் ஜனநாயக உறுப்புக்களை அழித்து வருகின்றது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கீழ்கண்டவற்றில் அந்தப் பட்டியலில் இடம்பெறாத உறுப்பு எது?
7. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆனால் அதிகார வர்க்கமோ நிரந்தரமாக பதவியில் இருக்கிறது. அதை தெரிவு செய்யும் உரிமை மக்களிடத்தில் இல்லை. எனில் இந்த ஆட்சி முறையை எப்படி அழைப்பது?
8. மோடி ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் படைத்த சாதனை என்ன?
9. கீழ்க்கண்ட மாநிலங்களில் எந்த மாநிலத்தில் 25 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன?
10. கடந்த மூன்று மாதங்களில் நடந்த கருத்துக் கணிப்பில் எந்த ஊடகம் பாஜக கூட்டணிக்கு 336 தொகுதிகள் கிடைக்குமென தெரிவித்தது?
11. அதிக பாராளுமன்றத் தொகுதிகள் கொண்ட மாநிலம் எது?
12. தொங்குநிலை பாராளுமன்றம் ஏற்படும் போது இந்திய அரசு செயல்படுமா, முடங்கி விடுமா?
13. பாராளுமன்றம், சட்டமன்றம் மூலம் தெரிவு செய்யப்படும் ஒரு கட்சியின் ஆட்சியை எப்படி அழைக்க வேண்டும்?
14. அரசு, அரசாங்கம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
15. ஓட்டு போட்டு தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டா?

நீங்கள் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் இந்த வினாடி வினாவில் பங்கேற்கச் செய்யுங்கள் !

ருவாங்காவின் குத்துச் சண்டை சகோதரிகள் | படக் கட்டுரை

0

.எஸ் அமைப்பின் ஆக்கிரமிப்புக்களுக்குப் பயந்து வீடு, உடைமைகளை விட்டு பாதுகாப்புக்காக ஓடி ஒளிந்த ஈராக்கிய பெண்கள் இப்போது அச்சமின்றி தங்களுக்கென ஒரு பாதுகாப்பான வசிப்பிடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

மங்கலான வெளிச்சம் கொண்ட குறுகிய அறைதான் இவர்களின் பயிற்சிக்களம். வடக்கு ஈராக்கில் உள்ள ருவாங்கா என்ற அகதிகள் முகாமொன்றில் யாசிடி மதப்பிரிவைச் சேர்ந்த 12 பெண்கள் இங்கு குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ருவாங்காவின் குத்துச்சண்டை சகோதரிகள் (Boxing Sisters) என்று தங்களை அழைத்துக்கொள்கின்றனர்.

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வீடு, உடைமைகள், சொந்த பந்தங்களையெல்லாம் விட்டுவிட்டு ஓடிவந்த இவர்களுக்கு அடைக்கலமாக அமைந்துள்ளது இந்த அகதிகள் முகாம். கூடுதல் பலமாக குத்துச்சண்டை பயிற்சி வகுப்புக்கள் இவர்களின் பிரதான விருப்பமாக அமைந்துவிட்டது.

“சிறுவயதிலிருந்தே, எந்த ஒரு விளையாட்டு தொடர்பான வாய்ப்புக்கள் கிடைத்தாலும் அதைத் தவறவிட மாட்டேன். பள்ளிக்காலத்தில் கூடைப்பந்து அணியில் இருந்தேன்” என்கிறார் 17 வயதான ஹஸ்னா. ஐ.எஸ் தீவிரவாதிகளால் இவரது கிராமம் தாக்குதலுக்குள்ளாக நேரிட்டபோது அனைத்தையும் விட்டுவிட்டு இவரது குடும்பம் வெளியேற வேண்டியதாகி விட்டது.

“காலை 7 மணியளவில், அருகாமை கிராமத்தில் வசிக்கும் ஒரு உறவினரிடமிருந்து, என் சித்தப்பாவுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. ஐ.எஸ் தீவிரவாதிகள் எங்கள் கிராமத்தைத் தாக்க வந்துகொண்டிருக்கின்றனர்; எனவே உடனடியாகத் தப்பித்துச் செல்லுமாறு செய்தி அனுப்பியிருந்தார் அந்த உறவினர். அந்தத் தருணத்தை இப்போது நினைத்தாலும் இதயம் படபடவென்று துடிக்கும்; மயக்கம் வரும்; மூச்சுவிடமுடியாமல் திணறுவேன்” என்கிறார் ஹஸ்னா.

குத்துச்சண்டை சகோதரிகள். யாசிடி மதப்பிரிவைச் சேர்ந்த இவர்களுக்கு லோட்டஸ் ஃபிளவர் என்ற பிரிட்டன் தன்னார்வ தொண்டு நிறுவனம் பயிற்சியளிக்கிறது. 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சியின் நோக்கம் போரினால் பாதிக்கப்பட்டு, பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பெண்களின் மனநலம் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்துவதுதான் என்கிறது லோட்டஸ் ஃபிளவர் நிறுவனம்.

ருவாங்கா முகாமில் சுமார் 15,000 பேர் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் யாசிடி எனப்படும் மதக்குழுவைச் சேர்ந்தவர்கள்தான். 2014-ம் ஆண்டு முதல் இவர்கள் இங்கு தங்கியிருக்கின்றனர்.

பிரிட்டனைச் சேர்ந்த லோட்டஸ் ஃபிளவர் என்னும் தனியார் தொண்டு நிறுவனம், குத்துச்சண்டை வகுப்புக்களை நடத்தி வருகிறது. பெண்களுக்கென்று பிரத்யேகமாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, இங்குள்ள பெண்களின் மன நலன் மற்றும் உடல் நலம் குறித்து கவனம் கொள்வதாகத் தெரிவிக்கிறது. ஏனென்றால் இங்குள்ள பெரும்பாலான பெண்கள் போரினால் பாதிக்கப்பட்டும், பாலியல் ரீதியாகச் சித்திரவதைக்கும் உள்ளானவர்கள். இந்த முயற்சி யாசிடி இனப்பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டப் பயிற்சி வகுப்புகளுக்காக இதுவரை 40 பெண்கள் பதிவு செய்துவிட்டனர் என்கிறார் வியான் அகமது. இவர் லோட்டஸ் ஃபிளவர் நிறுவனத்தின் பகுதி மேலாளராகச் செயல்படுகிறார். ஆண் பயிற்சியாளரைக் கொண்டு நடத்தப்படும் வகுப்புக்களைக் கூடிய விரைவில் இங்கு பயிற்சி பெறும் பெண்களையே பயிற்சியாளர்களாக மாற்றி இந்தச் சேவையைத் தொடரவேண்டும் என்கிறது லோட்டஸ் ஃபிளவர் நிறுவனம்.  ஹஸ்னா அதில் முதல் தேர்வாக இருக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

இங்குள்ள சக நண்பர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் போது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். நாங்கள் எல்லோருமே ஏறக்குறைய ஒரே விதமான சித்திரவதைக்கும், நெருக்கடிக்கும் உள்ளாக்கப்பட்டுதான் இங்குவந்தோம். அதுதான் எங்கள் மத்தியில் உடன்பிறந்த சகோதரிகள் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் ஹஸ்னா.

ஹஸ்னா – வயது 17 – கேத்தி பிரவுன் என்ற பயிற்சியாளருடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கேத்தி பிரவுன் ஓய்வுபெற்ற குத்துச்சண்டை பயிற்சியாளர் மட்டுமல்ல; பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மனநல சிகிச்சை தொடர்பான கல்வியும் பயிற்றுவிக்கிறார். ஹஸ்னா போன்ற பெண்களுக்கு சிறப்பான பயிற்சி கொடுத்து அவர்களையும் பயிற்சியாளர்களாக மாற்ற வேண்டுமென்பதே பிரவுனின் இலக்கு.

குத்துச்சண்டை சகோதரிகளுக்கு அருகாமை நகரத்திலுள்ள ஒரு குத்துச்சண்டை வீரர் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது. பெண் பயிற்சியாளர் பிரவுன் மூலம் சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டு, இங்குள்ள பெண்களும் கூடிய விரைவில் குத்துச்சண்டை பயிற்சியாளர்களாக்கப்படுவர்.

ருவாங்கா அகதிகள் முகாமின் தெருக்கள் ஒன்றில் ஹஸ்னா. விளையாட்டின் மேல் அதிகக் கவனம் செலுத்தும் இவர் ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளராகப் போவது தன் வாழ்நாளின் மிக முக்கிய தருணமென்றும், அதோடன்றி நான் மிகவும் உறுதியான பெண்மணியாகவும் இப்போது உணர்கிறேன் என்கிறார் ஹஸ்னா

ருவாங்கா அகதிகள் முகாமில் சிறு கடைகள் சில உள்ளன. ஹஸ்னா 5 வருடமாக இங்கு வாழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் சில எதிர்ப்புக்கள் இருந்தாலும், மக்கள் இப்போது குத்துச்சண்டை சகோதரிகள் என்னும் இந்த முன்னெடுப்பை வெகுவாக வரவேற்கின்றனர்.

பயிற்சி முடிந்து திரும்பிவரும் ஹன்னாவை வரவேற்கிறார் அவரது பாட்டி. என் குடும்பம்தான் எனது முழு பலத்திற்கும் காரணம் என்கிறார் ஹஸ்னா.

வாழ்க்கை மிகவும் இனிமையானது; நான் யாரையும் வெறுக்க விரும்பவில்லை. மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பும் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்; நானும் அதையே செய்ய விரும்புகிறேன் என்கிறார் ஹஸ்னா.

ஹஸ்னாவின் பாட்டியும், சித்தப்பாவும் அகதிகள் முகாமில் வசித்துவருகின்றனர். தன்னுடைய சொந்த கிராமத்திற்குத் திரும்ப வேண்டுமென்பது பாட்டியின் விருப்பம். ஹஸ்னாவுக்கோ எதிர்காலம் மிகவும் முக்கியமென்கிறார். உலகின் பல்வேறு இடங்களுக்குச் சென்று என்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு என் சொந்தங்களுக்கு உதவிசெய்வேன்

எங்கள் கிராமத்திலுள்ள அனைவரும் ஐ.எஸ் தாக்குதலுக்குப் பயந்து ஓட ஆரம்பித்தோம். ஐ.எஸ் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூடும், வெடிகுண்டுத் தாக்குதலும் அவர்கள் எங்களுக்கு மிக அருகாமையில் இருக்கின்றனர் என்பதை உணர்த்தியது

ஐந்து வருடங்களாக அகதிகள் முகாமில் நாங்கள் அனுபவித்த இன்னல்களை மறக்க முடியுமா என்ன? குறிப்பாக யாசிடி குலப் பெண்களுக்கெதிராக நடத்தப்பட்ட அநீதிகளை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. ஆனாலும் எதிர்த்துப் போராடும் வழிமுறை இப்போது என் கைகளில் உள்ளது – ஹஸ்னா

அகதிகள் முகாமில் நான் சந்திக்கும் முக்கியமான பிரச்சினை பள்ளி கல்விக்கென மிகக்குறைவான நேரமே ஒதுக்கப்படுகிறது. சிறுவயதில் கணிதப்படிப்பில் நான்  தொடர்ந்து முதலிடம் வாங்கியிருக்கிறேன். இப்போது அப்படி முடியவில்லை; ஏனென்றால் முறையாகக் கற்றுக்கொடுக்க யாருமேயில்லை என்கிறார் ஹஸ்னா

சுமார் 15,000 பேர் வசித்து வரும் ருவாங்கா அகதிகள் முகாம். வடக்கு ஈராக்கின் தோஹக் மாவட்டத்தில் மட்டும் 25 அகதிகள் முகாம்கள் உள்ளன. 2014-ம் ஆண்டு முதல் அகதிகள் இங்கே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


கட்டுரையாளர்கள்: Andrea Dijkstra & Jeroen Van Loon
தமிழாக்கம்: வரதன்
நன்றி: aljazeera 

காவி பாசிசம் – எதிர்த்து நில் | Kovan | Vinavu Official Song

க்கள் அதிகாரம் அமைப்பின் ”கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் !” திருச்சி மாநாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் பாடிய “காவி பாசிசம் – எதிர்த்து நில் !” பாடல் ரீ-ரிக்கார்டிங் செய்யப்பட்டு காணொளி வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பாருங்கள்… பகிருங்கள் …

#Resist #KovanSong #MakkalAthikaram

பாருங்கள் ! பகிருங்கள் !

பாடல், இசை : ம.க.இ.க கலைக்குழு
ஆக்கம் : வினவு

பாடல் வரிகள் :

அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிப்போனால் மாறிடுமா? (அடக்குமுறைதான்…)

எதிர்த்து நில்… எதிர்த்து நில் !
காவி பாசிசம்… எதிர்த்து நில் !

நீ விரும்பவில்லை
நான் பேசக்கூடாது…

நீ ரசிக்கவில்லை
நான் பாடக்கூடாது …

நான் உண்ணுவதை
நீ தடுக்குற?

நான் எண்ணுவதை
நீ மறுக்குற?

அதிகாரம் இருக்கலாம்
ஆடாதே!

மக்கள் அலையாய் எழுந்தால்
காணாமல் போவாய்!
காற்றாக தேய்வாய்!
காவியே நீ ஒழிவாய்!

அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிப்போனால் மாறிடுமா? (அடக்குமுறைதான்…)

எதிர்த்து நில் எதிர்த்து நில்
காவி பாசிசம் … எதிர்த்து நில் …

♦  கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

ஸ்டெர்லைட்டு எங்களுக்கு வேணாமின்னு போராடினா
சுட்டுக் கொல்லுற …
சிறையில் தள்ளுற …
பொய் கேசு போடுற …
NSA செடிசன் குண்டாஸு …
என்ன எங்க மேல அபன்ஸு ?
எங்க மண்ணை விட்டுடுனு
கேட்பது குற்றமா …
நச்சு ஆலை வேணாமுன்னு
கெஞ்சினாலும் குற்றமா?
கார்ப்பரேட்ட வாழ வைப்பதுதான்
உங்க சட்டமா?

எதிர்த்து நில் எதிர்த்து நில்
காவிபாசிசம் எதிர்த்து நில்

அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிபோனால் மாறிடுமா?

பதிமூனு பேரு செத்தாங்களே
செய்த பாவம் என்ன?

பாதுகாக்க  நினைச்சாங்க
வாழவச்ச மண்ண
எங்க ஸ்னோலின்
உனக்கு மகளில்லையா?

அங்கே செத்தவரெல்லாம்
தீவிரவாதியா ?

டெல்டாவிலே ஹைட்ரோகார்பன்
பொட்டிபுரத்தில் நியூட்ரினோ
கடற்கரை எல்லாம் சாகர்மாலா
மண்ணை ஆக்குற சுடுகாடா
தமிழகம் என்ன பகை நாடா ?

நடக்காது … நடக்காது …
கார்ப்பரேட்டின் கனவு பலிக்காது …

எதிர்த்து நில் எதிர்த்து நில் !
காவிபாசிசம் எதிர்த்து நில் !!

அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிபோனால் மாறிடுமா?

நிலத்த பறிக்குது எட்டு வழிச் சாலை …
எதிர்த்து பேசினாலே கைது சிறைச் சாலை …
வளர்ந்த மண்ணுல விவசாயி வாழமுடியல …
இழந்த உரிமைய தொழிலாளி பேசமுடியல …

மோடிய எதிர்த்தால்…
காவிய எதிர்த்தால்…
தேசவிரோதி … தீவிரவாதி … பயங்கரவாதி…
இது என்ன நீதி ?

இது நீதி இல்லை… நீதி இல்லை… இது மனுநீதி …
இதுதான் காவி

பாசிசம், காவி பாசிசம்.
இது கார்ப்பரேட்டின் பாசிசம்

எதிர்த்து நில் ! எதிர்த்து நில் ! காவி பாசிசம் – எதிர்த்து நில் !
காவி பாசிசம் – எதிர்த்து நில்!

அதிரவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கையின் அட்டகாசமான முக்கிய அம்சங்கள் !

#BJPManifesto2019

அதானி அம்பானிக்கு தினந்தோறும் அதிகாலையில் ஆட்டுக்கால் சூப்.

பாபா ராம்தேவ், சத்குரு வாசுதேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தாடிகளை பராமரிக்க தனி சலூன்.

எதிர்கால நீரவ் மோடி, மல்லையா போன்ற ஏழைகள் தப்பிக்க நவீன வசதிகொண்ட ஸ்மார்ட் சுரங்க பாதை.

போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சுட நவீன AK74.

பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு இலவச கள்ளிப்பால்.

வெஜிடேரியன்களுக்கு 97% இடஒதுக்கீடு.

மாட்டு மூத்திரத்திற்கு GST விலக்கு.

பொய் செய்திகளை பரப்புவதற்கு ஊக்கத்தொகை.

இணையத்தில் பெண்களை மிரட்டுவதற்கு தனிப்படை.

வாங்கிவிட்டீர்களா ?
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

Fake id வைத்து இருந்தால் வரி விலக்கு.

சுமந்த் சி ராமன் , மாலன் மற்றும் கோலாகல ஸ்ரீநிவாஸுக்கு தியாகிகள் பென்ஷன்.

சமூக ஆர்வலர் பானு கோம்ஸ் மற்றும் அரசியல் ஆர்வலர் ரவீந்திரன் துரைசாமிக்கு சாவர்க்கர் விருது.

பாண்டேவிற்கு தாமரை பட்டயம்.

ரஃபேல் ஊழலுக்கு முட்டு கொடுத்தால் மாதம் ஒன்றுக்கு ஜாக்கி ஜட்டி பேக்.

நடுநிலையாளர்களுக்கு உடனடி ‘மூத்திர’ லோன் .

பாஜக எதிர்ப்பு மாநிலங்களில் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில் மதக் கலவரம் அமல்.

சமூக செயல்பாட்டாளர்களுக்கு வலியின்றி கருணைக் கொலை.

இந்துத்துவ பயங்கரவாதம் தேசியமயமாக்கப்படும்.

சிறுபான்மையினருக்கு கல்வி ரத்து.

‘நான் எந்த கட்சியையும் ஆதரிப்பவன் கிடையாது. ஆனால், மோடி ஜி பிரதமராக வர வேண்டும்’ என்று innocent ஆக சொல்பவர்களுக்கு வட்டியில்லா குட்டி யானை (டாடா ACE ) வழங்கப்படும்.

முகநூலில் : Thameem Tantra



நாடாளுமன்றத் தேர்தல் 2019 : வைரல் வீடியோக்கள் … தவறாமல் பாருங்கள்!

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும்

மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க !

 

பாலியல் குற்றவாளி பேராசிரியருக்கு பிணை வழங்காதே – கரூர் மாணவர்கள் போராட்டம் !

0

ரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான பொருளியல் துறை தலைவர் இளங்கோவனின் பிணை மனு தள்ளுபடி செய்தது மாவட்ட அமர்வு நீதிமன்றம்.

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேராசிரியர் இளங்கோவனுக்கு பிணை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு 01.04.2019 அன்று விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் இளங்கோவனுக்கு பிணை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் கல்லூரி மாணவர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முருகேசன், இ.ஜெகதீசன் மற்றும் ஆதரவான வழக்கறிஞர்கள் ஆஜராகி கடந்த 7 ஆண்டுகளாக கல்லூரியில் படிக்கும் முன்னாள் இன்னாள் மாணவிகளுக்கு பேராசிரியர் இளங்கோவன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது; மதிப்பெண்ணை வைத்து மிரட்டி மாணவிகளை தன் விருப்பத்திற்கு அடிபணிய வைத்தது உள்ளிட்ட உண்மைகளை வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தனர். மாணவர்களின் உறுதியான போராட்டம் மற்றும் வழக்கறிஞர்களின் வாதத்தின் காரணமாக பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார், நீதிபதி.

படிக்க:
பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை !
குருகிராம் தாக்குதல் : மோடியின் புதிய இந்தியாவின் புதிய நீதி !


தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,

அரசு கலைக்கல்லூரி, கரூர்.

அரசியல் பொருளாதாரத்தின் தந்தை சர் வில்லியம் பெட்டி | பொருளாதாரம் கற்போம் – 14

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 14

அத்தியாயம் மூன்று : பாராட்டுக்குரிய சர் வில்லியம் பெட்டி
அ.அனிக்கின்

லக்கியத்திலும் விஞ்ஞானத்திலும் மாபெரும் புதுமைகளை ஏற்படுத்திய ஷேக்ஸ்பியரும் பேக்கனும் தாமஸ் மானுக்கு சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். அரசியல் பொருளாதாரத்தில் இது போன்ற புதுமைகளை ஏற்படுத்திய வில்லியம் பெட்டி இவர்களுக்கு ஒரு தலைமுறைக் காலத்துக்குப் பிறகு தோன்றினார்.

இவர்களுக்கு இடைக்காலத்தில் புதிய, 17-ம் நூற்றாண்டு பிறந்த பொழுது தோன்றிப் புகழ்பெற்றவர்கள் இராணுவத்தினரும் மத குருக்களுமே. நடுத்தர முதலாளிகளின் தலைவரும் வீர புருஷருமான ஓலிவெர் கிராம்வெல், அவரைக் காட்டிலும் அதிகத் தீவிரமான இடதுசாரிக் கொள்கையுடையவரும் அவரோடு அரசியலில் போட்டியிட்டவருமான ஜான் லில்பர்ன் ஆகியோர் வலது கையில் வாளும் இடது கையில் பைபிள் நூலும் வைத்துக் கொண்டு போர் புரிந்தார்கள். பதினேழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல், சமூகப் புரட்சி அன்றைய வரலாற்று நிலைமைகளினால் மதத் தன்மையை மேற்கொண்டது. அது பரிசுத்தவாதத்தின் எளிமையான, கண்டிப்பான உடையை அணிந்து கொண்டது.

கிராம் வெல்லின் ஆட்சிக் காலத்திலேயே முதலாளி வர்க்கம் தனது புரட்சிகரமான வேகத்தைச் செலவழித்து ஓய்ந்து விட்டது. 1660-ம் வருடத்தில் அது புதிய மேன்மக்களோடு கூட்டணி சேர்ந்து ஸ்டுவர்ட் மரபை மறுபடியும் பதவிக்குக் கொண்டு வந்தது. கொலை செய்யப்பட்ட அரசரின் மகன் இரண்டாம் சார்ல்ஸ் என்ற பெயரில் அரியணையில் அமர்ந்தார். ஆனால் முடியாட்சி முன்பு இருந்தது போல இனிமேல் இருக்க முடியவில்லை; புரட்சி வீண் போகவில்லை. பழைய நிலப்பிரபுத்துவ மேன்மக்களுக்குப் பாதகமான வகையில் முதலாளிகள் தங்களுடைய நிலையைப் பலப் படுத்திக் கொண்டனர்.

வில்லியம் பெட்டி

புரட்சியின் இருபது வருடங்களில் (1641-1660) ஒரு புதிய தலைமுறை – தோன்றி வளர்ச்சியடைந்திருந்தது. புரட்சி அவர்களுடைய சிந்தனையை அதிகமாக -ஆனால் வெவ்வேறுவிதமாக பாதித்திருந்தது. அரசியலும் மதமும் (அவை பிரிக்க முடியாதபடி இணைந்திருந்தன) குறிப்பிட்ட அளவுக்கு ஒதுக்கப்பட்டன. நாற்பதுக்களிலும் ஐம்பதுகளிலும் இளைஞர்களாக இருந்தவர்கள் பைபிள் புத்தகத்தை அறிவின் முக்கியமான பிறப்பிடமாகக் காட்டுகின்ற மதத்தன்மை கொண்ட வாதங்களைக் கேட்டு அலுத்துப் போனார்கள். அவர்கள் புரட்சியிலிருந்து வித்தியாசமான ஒன்றை அடைந்திருந்தார்கள். அது முதலாளித்துவ சுதந்திரம், பகுத்தறிவு, முன்னேற்றம் என்பதாகும். விஞ்ஞானத்தில் மிகச் சிறந்த திறமையுடைய சிலர் வானத்தில் நட்சத்திரக் கூட்டத்தைப் போலத் தோன்றி ஒளி வீசினார்கள். இவர்களில் முதன்மையானவர்கள் பெளதிக விஞ்ஞானி ராபர்ட் பாயில், தத்துவஞானி ஜான் லாக், கடைசியாக மாபெரும் ஐசக் நியூட்டன் ஆகியோராவர்.

இந்தத் தலைமுறையையும் மக்கள் குழுவையும் சேர்ந்தவர் வில்லியம் பெட்டி. அவர் காலத்திய அறிஞர்களில் பெட்டி கெளரவமான இடத்தைப் பெற்றிருக்கிறார். மார்க்ஸ் குறிப்பிட்டது போல, இந்த ஆங்கில கனவான் அரசியல் பொருளாதாரத்தின் தந்தை. புள்ளியியலைக் கண்டுபிடித்தவர் அவர்தான் என்றும் சொல்லலாம்.

நூற்றாண்டுகளைக் கடந்து புகழோடு விளங்கும் பெட்டி

விஞ்ஞானத்தின் வரலாற்றில் சிலர் மறக்கப்படுவதும் பிற்காலத்தில் அவர்களுக்குப் புத்துயிர் கொடுக்கப்படுவதும் உண்டு. இப்படிப்பட்டவர்களில் ஒருவர் ரிச்சர்ட் கான்டில் லாக். இவர் 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணர். சிறப்பு மிக்க பொருளாதார நிபுணர்களான பிரான்சுவா கெனே, ஜேம்ஸ் ஸ்டுவர்ட், ஆடம் ஸ்மித் ஆகியோர் இவரிடமிருந்து அதிகமாகக் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்று மார்க்ஸ் சுட்டிக் காட்டினார். இவரை அநேகமாக முற்றிலும் மறந்து விட்டார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் இவரை மறுபடியும் புதிதாகக் கண்டுபிடித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஹெர்மன் ஹென்ரிஹ் கோஸ்ஸென் என்பவர் 1854-ம் வருடத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அது எவ்விதமான கவனத்தையும் பெறவில்லை. எனவே ஏமாற்றமடைந்த ஆசிரியர், நான்கு வருடங்களுக்குப் பிறகு கடைகளிலிருந்து தமது புத்தகங்களைத் திரும்பப் பெற்று அநேகமாக தமது முதல் பதிப்பு முழுவதையும் அழித்துவிட்டார். இதற்கு இருபது வருடங்களுக்குப் பிறகு ஜெவோன்ஸ் தற்செயலாக அதன் பிரதி ஒன்றைப் பார்த்தார்.

ஹெர்மன் ஹென்ரிஹ் கோஸ்ஸென் வெளியிட்ட நூலை வரலாற்றின் பக்கத்தில் மீட்ட வில்லியம் ஸ்டேன்லி ஜெவோன்ஸ்

கோஸ்ஸென் மரணமடைந்து பல வருடங்களாகி விட்டன. ஆனால் ஜெவோன்ஸ் அவரைப் ”புதிய அரசியல் பொருளாதாரத்தைக்” கண்டுபிடித்தவர் என்று பாராட்டினார். இன்று பொருளாதாரப் பண்டங்களின் பயன்பாடு பற்றிய இனத்தோடு – அக நிலையான, உளவியல் கருத்து நிலையிலிருந்து சம்பந்தப்பட்ட கோஸ்ஸென் விதிகள் அரசியல் பொருளாதாரம் பற்றிய எந்த முதலாளித்துவப் பாடபுத்தகத்திலும் வரலாற்றிலும் கணிசமான இடத்தைப் பெற்றிருக்கின்றன.

பெட்டியை மறுபடியும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர் தம்முடைய காலத்திலேயே புகழ் அடைந்திருந்தார். ஆடம் ஸ்மித்துக்கு அவருடைய கருத்துக்கள் தெரிந்திருந்தன. ”பதினேழாம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவர் சர் வில்லியம் பெட்டி” என்று மாக்குலோஹ் 1845-ம் வருடத்தில் எழுதினார். உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை நிறுவியர் பெட்டி என்று கூடச் சொன்னார்; அவருக்கும் ரிக்கார்டோவுக்கும் ஒரு நேர்கோடான வளர்ச்சியைக் காட்டினார்.

எனினும் மார்க்ஸ் மட்டுமே வில்லியம் பெட்டியை விஞ்ஞானத்துக்காக முழுமையாகக் கண்டுபிடித்தார். மார்க்ஸ் ஒரு புதிய அரசியல் பொருளாதாரத்தைப் படைத்து அந்த விஞ்ஞான வரலாற்றில் புதிய ஒளியைப் பாய்ச்சினார்; அதன் மூலம் இந்தச் சிறப்புமிக்க ஆங்கிலேயர் அதில் வகிக்கின்ற உண்மையான இடத்தையும் விளக்கினார். கண்ணால் பார்க்கக்கூடிய பொருளாதார நிகழ்வுகளை மட்டும் ஆராய்ந்து அவற்றை வர்ணிப்பதோடு நின்றுவிடாமல் முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்விதிகளைப் பகுத்தாய்வு செய்து அதன் வளர்ச்சி விதியைத் தேடிய மூலச்சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் தந்தை பெட்டி என்று கூறலாம். பெட்டி மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் கைகளில் இந்த விஞ்ஞானம் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கும் சமூக முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவதற்கும் ஏற்ற கருவியாக மாறியது.

பெட்டியின் குறிப்பிடத்தக்க, அசாதாரணமான ஆளுமை மார்க்சையும் எங்கெல்சையும் அதிகமாகக் கவர்ந்தது. ”பெட்டி தன்னை ஒரு புதிய விஞ்ஞானத்தின் ஸ்தாபகராகக் கருதுகிறார்…”, ” அவருடைய துணிச்சல் நிறைந்த மேதாவிலாசம்…”, ”மிகவும் தனித்தன்மையான நகைச்சுவை உணர்ச்சி . அவருடைய எழுத்துக்களில் நிரம்பியிருக் கிறது…”,(1) ”இந்தத் தவறிலும் கூட மேதாவிலாசம் அடங்கியிருக்கிறது.”(2) “அளவில் சிறிய தென்றபோதிலும் கருத்திலும் உள்ளடக்கத்திலும் இது தலை சிறந்த சாதனையாகும்”. மார்க்ஸ் தாம் எழுதிய பல புத்தகங்களில் எழுதியுள்ள மேற்கூறிய கருத்துக்கள் ”பொருளாதார ஆராய்ச்சியில் மிக அதிகமான தற்சிந்தனையும் சிறப்பும் கொண்ட”(3) பெட்டியைப் பற்றி அவருடைய அணுகுமுறையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

படிக்க:
♦ பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
♦ கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !

பெட்டியின் எழுத்துக்களுக்கு ஏற்பட்ட கதி அசதாரணமானதாகும். மாக்குலோஹ் ஒரு விசித்திரமான அம்சத்தைச் சுட்டிக்காட்டினார். பெட்டி வகித்த பாத்திரம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தபோதிலும் அவருடைய புத்தகங்கள் ஒருபோதும் முழுமையாக வெளியிடப்படவில்லை; பழைய அரை குறையான பதிப்புக்களாகவே அவை இருந்தன. 19 -ம் நூற்றாண்டின் மத்தியிலேயே அவை அபூர்வமாகக் கிடைக்கக் கூடிய புத்தகங்களாகவே கருதப்பட்டன.

மாக்குலோஹ் பெட்டி பற்றிய தம்முடைய குறிப்பில் தமது எளிய பணிவான நம்பிக்கையை வெளியிட்டிருந்தார்:

“பெட்டியின் சொத்துக்களையும் அவருடைய திறமையையும் மரபுரிமையாகப் பெற்றிருக்கும் அவருடைய சிறந்த வாரிசுகள், அவருடைய புத்தகங்களுக்கு முழுமையான பதிப்பு வெளியிடுவதைக் காட்டிலும் அவருக்குச் சிறந்த நினைவுச் சின்னத்தை ஏற்படுத்த முடியாது.”

எனினும் பெட்டியின் “சிறந்த வாரிசுகளான” ஷெல் பர்ன் மற்றும் லான் ஸ்டௌன் பிரபுக்கள் ஒரு எளிய கைவினைஞரின் மகனாகப் பிறந்து பணமும் புகழும் சேர்த்து (அவை எல்லாமே நியாயமான வழிகளில் தான் என்று சொல்ல முடியாது), ஒரு சமீபத்திய வாழ்க்கை வரலாற்றாசிரியர் சொல்வதைப் போல, ”பகட்டான, ஓரளவுக்குச் சந்தேகிக்கப்பட வேண்டிய பெயரைக் கொண்டிருந்த தங்கள் முன்னோரைப் பொதுவாக எல்லோருடைய காட்சிக்கும் வைப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. – பெட்டியின் வாரிசுகளுக்கு இரண்டு நூற்றாண்டுக் காலம் இந்த அம்சம் பெரிதாகத் தெரிந்ததே தவிர, அவருடைய எழுத்துக்களின் விஞ்ஞான, வரலாற்று மதிப்பு முக்கியமானதாகத் தெரியவில்லை. 19-ம் நூற்றாண்டின் கடைசியில் தான் பெட்டியின் பொருளாதார நூல்களின் முதல் தொகுப்பு வெளியிடப்பட்டது. அதே சமயத்தில் அவருடைய சந்ததியினர் ஒருவர் அவரது வாழ்க்கை வரலாற்றையும் வெளியிட்டார்.

பெட்டியின் அரசியல் கருத்துக்களையும், அவருடைய சமூக, விஞ்ஞானப் பணிகளையும், அவர் காலத்திய மாபெரும் விஞ்ஞானிகளோடு அவருடைய உறவுகளைப் பற்றியும் இன்று நமக்குத் தெளிவான விவரங்கள் கிடைத்துள்ளன. அவருடைய வாழ்க்கையைப் பற்றி அதிகமான செய்திகள் இன்று தெரிய வந்துள்ளன. மாபெரும் மனிதர்களின் உருவப்படங்களைப் பொறுத்தவரை அவற்றைத் திருத்திக் காட்டுவது அவசியமல்ல; அவர்களுடைய குறைகளையும் பலவீனங்களையும் பூசிமெழுகுவதும் தேவையல்ல. இது வில்லியம் பெட்டிக்கு முழுமையாகப் பொருந்தும். மனித குல வரலாற்றில் அவர் ஒரு பெரிய ஐரிஷ் நிலவுடைமையாளராக, முன்யோசனை நிறைந்த (அவர் எப்பொழுதுமே வெற்றியடைந்த தாக ஒரு போதும் சொல்ல முடியாது) அரசவையாளராக அவர் நிலைத்திருக்க மாட்டார்; சமூகத்தைப் பற்றிய விஞ்ஞானத்தில் புதிய பாதைகளைத் திறந்து விட்ட, துணிச்சலான சிந்தனையாளர் என்ற முறையில் தான் அவர் புகழ் நிலைத்திருக்கும்.

மார்க்சியவாதிகள் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் ஸ்தாபகர் என்று தான் பெட்டி யைப் பற்றி முதன்மையாக நினைப்பார்கள். பெட்டி ஒரு மாபெரும் மேதை, குறிப்பிடத்தக்க ஆளுமை கொண்டவர் என்பதை முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் அங்கீகரித்தாலும், அவரை ஸ்மித், ரிக்கார்டோ, மார்க்ஸ் ஆகியோரின் முன்னோடி என்று ஒத்துக் கொள்வதில்லை. ஆராய்ச்சியில் புள்ளியியல் முறையை உருவாக்கியவர் என்ற அளவில் தான் இந்த விஞ்ஞானத்தில் அவருக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.

பெட்டியின் எழுத்துக்களில் உழைப்பளவை மதிப்புத் தத்துவம் (அல்லது பொது முறையிலாவது மதிப்பைப் பற்றிய கருதுகோள்) இல்லை; மதிப்பிடத்தக்க கூலித் தத்துவம் இல்லை; எனவே அவர் உபரி மதிப்பைப் புரிந்து கொண்டிருக்கக் கூடிய பிரச்சினையே ஏற்படவில்லை என்று ஷூம்பீட்டர் எழுதுகிறார். “பொருளாதார விஞ்ஞானத்தின் ஸ்தாபகர் பெட்டி என்று மார்க்ஸ் பிறப்பித்த ஆணையே”(4) அவர் புகழுக்குக் காரணம்; வேறு சில முதலாளித்துவ அறிஞர்களும் அவரைப் பாராட்டியிருக்கின்றனர் – இது தான் இன்னொரு காரணம்; இந்த அறிஞர்கள் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாதவர்கள் என்று ஷூம்பீட்டர் கோடி காட்டுகிறார்.

முதலாளித்துவ அறிஞர்களால் எழுதப்பட்ட பல புத்தகங்கள் பெட்டி வாணிப ஊக்கக் கொள்கையை விளக்கியவர் என்று மட்டுமே காட்டுகின்றன. அந்தத் தரப்பினரில் அவர் அதிகமான திறமையும் வளர்ச்சியும் கொண்டவராக இருந்திருக்கலாம்; ஆனால் அதற்கு மேல் எந்தப் புகழுக்கும் உரியவரல்ல. புள்ளியியல் முறையைக் கண்டுபிடித்ததைத் தவிர வரிவிதிப்பு, சுங்கவரி போன்ற தனிப்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி அவர் விளக்கியதாக அவரை அதிகபட்சமாகப் பாராட்டுவதுண்டு.

நவீன முதலாளித்துவ விஞ்ஞானத்தில் இந்தக் கருத்தே கோலோச்சுவதாகச் சொல்ல முடியாது. மற்ற கருத்துக்களும் உண்டு; பொருளாதார விஞ்ஞானத்துக்குப் பெட்டி ஆற்றிய பாத்திரம் இன்னும் அதிகமான வரலாற்றுப் பின்புலத்தில் சரியாக கணிக்கப்படுவதும் உண்டு. எனினும் ஷூம்பீட்டர் கருத்து பிரதானமான அணுகுமுறையைக் காட்டுகிறது; இது தற்செயலாக ஏற்பட்டதல்ல.

(தொடரும்…)

அடிக்குறிப்பு:

(1) K. Marx, A Contribution to the Critique of Political Economy, Moscow, 1970, pp. 52,53.

(2) பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மா ஸ்கோ , 1979, பக்கம் 403 பார்க்க .

(3) Ibid.

(4) J. Schumpeter, History of Economic Analysis, N.-Y., 1955, p. 210.

கேள்விகள்:

1.இலக்கியத்தில் ஷேக்ஸ்பியரும், அறிவியலில் பேக்கனும் ஏற்படுத்திய மாபெரும் புதுமைகள் எவை?

2. “பதினேழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல், சமூகப் புரட்சி அன்றைய வரலாற்று நிலைமைகளினால் மதத் தன்மையை மேற்கொண்டது.” – காரணம் என்ன?

3. பெட்டியை “இந்த ஆங்கில கனவான் அரசியல் பொருளாதாரத்தின் தந்தை” என்று கார்ல் மார்க்ஸ் பாராட்டுவதற்கு காரணம் என்ன?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

ஐரோப்பியர் பார்வையில் தமிழர்கள் தரங்கெட்டவர்களா… ? | பொ . வேல்சாமி

தமிழர்கள் தரங்கெட்டவர்களா… ? – சீகன்பால்கு (1682-1719)

ண்பர்களே….

16, 17-ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு வந்த ஐரோப்பிய அறிஞர்களும் பாதிரியார்களும் தமிழ் மக்களை ஆப்பிரிக்க – அமெரிக்க செவ்விந்திய பழங்குடியினரைப் போன்று நாகரிகமற்ற காட்டுமிராண்டிகள் என்றுதான் நினைத்தனர். ஆனால் தமிழ்மொழியையும் நம்முடைய திருக்குறள், தொல்காப்பியம், நன்னூல், சிந்தாமணி போன்ற நூல்களை அறிந்து கொண்ட பின்னர் ஐரோப்பியர்களாகிய நாம் நினைத்ததைப் போல தமிழர்கள் தரமற்ற காட்டுமிராண்டிகள் அல்லர் என்ற முடிவுக்கு வந்தனர்.

இப்படி அவர்களுடைய எண்ணத்தை மாற்றியது பழந்தமிழ் நூல்களும் தமிழ்நாட்டுக் கலைகளும்தான் என்பதை அவர்களால் எழுதப்பட்ட பல குறிப்புகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. அவற்றுள் ஒரு குறிப்பிடத்தகுந்த குறிப்பு தரங்கம்பாடியில் இருந்த சீகன்பால்கு-வால் எழுதப்பட்டது.

இந்தியாவிற்கு முதன்முதலாக வந்த பிராட்டஸ்டன்டு கிறிஸ்தவர் சீகன்பால்கு. பைபிளை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்தவரும் இவர்தான். இவர் அன்று தொகுத்து வைத்த பல தமிழ் நூல்களைப் பற்றிய குறிப்புகள் ஜெர்மனியில் இன்றும் உள்ளன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தமிழர்களின் மேன்மையை உலகறிய செய்த தமிழ்மொழியையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் இன்றைய தமிழ் மக்கள் புறக்கணித்து வருவது மிகவும் இரங்கத்தக்கது. ஏனெனில் ஐரோப்பியர்களால் மனித மிருகங்கள் என்று கருதப்பட்ட தமிழர்களை மனிதர்கள்தான் என்று அடையாளம் காட்டியது நம்முடைய சிறப்புமிக்க தமிழ்நூல்கள்தான் என்பதை வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. அதாவது நம்மை சிந்திக்கும் மனிதர்களாக அடையாளம் காட்டிய தமிழும் தமிழ் நூல்களும் இன்று நம்மால் புறக்கணிக்கப்படுவது என்பது நாம் மனிதத் தன்மையை இழந்து கொண்டு வருகிறமோ என்ற ஐயத்தை சிந்திப்பவர்களுக்கு ஏற்படுத்தவில்லையா?

குறிப்பு :
சீகன்பால்கு எழுதிய குறிப்பை படமாகக் கொடுத்துள்ளேன். மற்றும் சீசன்பால்கு வாழ்க்கை வரலாறு பற்றிய சிறு நூலை நண்பர்கள் படிப்பதற்கு வசதியாக தரவிறக்கம் செய்து கொள்ளும் இணைப்பையும் கொடுத்துள்ளேன். 

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் …

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

குருகிராம் தாக்குதல் : மோடியின் புதிய இந்தியாவின் புதிய நீதி !

4

“எங்களுடைய மூன்று அடுக்கு வீடு கட்டி முடிக்கப்பட்டபோது,  கட்டிடத்தின் உயரமான இடத்தில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என தீர்மானித்தோம்” என்கிறார் முகமது சஜீத். கடந்த ஹோலி பண்டிகையின்போது இந்துத்துவ குண்டர்களால் தாக்கப்பட்டவர் இவர். அன்றைய தாக்குதலில் கை உடைந்துபோய் கட்டுபோட்டு அவரால், இன்னமும் சரியாக நிற்க முடியவில்லை, தலையில் அடித்த அடியால் இன்னமும் மயக்கம் வருவதுபோன்ற நிலையிலே இருப்பதாகச் சொல்கிறார்.

கை முறிந்த நிலையில் முகமது சஜீத்

“ஆனாலும், அவர்கள் பாகிஸ்தானுக்கு போ என்கிறார்கள். நாங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு போக வேண்டும்? இது எங்களுடைய நாடு; இதை நாங்கள் நேசிக்கிறோம். இருந்தபோதும், பாருங்கள் அவர்கள் எங்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று”.

குருகிராமின் விளிம்பில் உள்ள பூப் சிங் நகரில் சஜீத்தின் வீடு உள்ளது.  இந்துத்துவ கும்பலால் உடைக்கப்பட்ட கண்ணாடி சில்லுகளை அந்த வீடு முழுவதும் பார்க்க முடிந்தது. இரத்தத் துளிகளின் சுவடுகள் இன்னமும் தரையில் இருந்தன. கும்பல் தாக்குதலின் அதிர்ச்சி அந்தக் குடும்பத்தினரின் முகத்தில் உறைந்து போயிருந்தது. பலர் இன்னமும் கால், தலை, கழுத்து போன்ற பகுதிகளில் கட்டுப்போட்டு படுக்கையில் படுத்திருந்தனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்குக்கூட வெளியே போகத் தயாராக இல்லை.

சஜீத்தின் மூத்த சகோதரர் தொடர்ந்து அழுதபடியே இருந்தார். “எங்கள் குடும்பத்துக்கு என்ன ஆகும் என தெரியவில்லை. எப்படி என் குடும்பத்தை காப்பாற்றுவேன்?” என அழுகிறார்.

மீண்டும் தேசியக் கொடியை பறக்கவிட்டது குறித்த பேச்சு எழுந்தது. சஜீத் சொன்னார், “நாங்கள் எங்களுடைய நாட்டுப் பற்றை நிரூபிப்பதற்காக கொடியை ஏற்றவில்லை. அது எங்களுடைய விருப்பம், வீட்டின் மிக உயர்ந்த இடத்தில் பறக்க விடவேண்டும் என்பது எங்களுடைய இதயத்தில் இருந்து எழுந்தது”.

“நாங்கள் எங்களுடைய நாட்டுப் பற்றை நிரூபிப்பதற்காக கொடியை ஏற்றவில்லை. அது எங்களுடைய விருப்பம், வீட்டின் மிக உயர்ந்த இடத்தில் பறக்க விடவேண்டும் என்பது எங்களுடைய இதயத்தில் இருந்து எழுந்தது”

குருகிராமிலிருந்து 70 கி.மீ. தள்ளியிருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பக்பாட் அருகே உள்ள பாஞ்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்களில் ஒருவர் சஜீத். அவர்களுக்கென்று எந்த நிலமும் சொந்தமில்லை. எனவே அவர்களுக்கு வேலை அவசியத் தேவையாக இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களில் ஒருவர் அப்போதைய நகரமயமாகி வந்த, தொழிற்சாலைப் பகுதியான குர்கானுக்கு வேலை தேடியும், சிறப்பான வாழ்க்கையைத் தேடியும் வந்தார்.  கேஸ் அடுப்பு பழுது பார்க்கும் பணியை அவர் தேடிக்கொண்டார். வாய்ப்புகள் பெருகவே, தன்னுடைய சகோதரர்களை ஒருவர் பின் ஒருவராக இங்கே அழைத்துக் கொண்டார். அவர்களுடைய மகன்களும் இங்கே வந்தார்கள்.

பகுதியளவில் உடல் குறைபாடுடைய அவருடைய மூத்த சகோதரரும் இங்கே வந்துவிட்டார். அவர் வீட்டிலேயே இருந்துகொண்டு, குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு அவர்களை பள்ளிக்கு அழைத்து போவார். சில நேரங்களில் அவர்களுடைய கடையிலும் அமர்ந்திருப்பார். அவர்களுடைய பணியை எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மரச் சாமான்களை பழுது நீக்குதல் வரை நீட்டித்தார்கள். 2006-ம் ஆண்டு ஊரில் இருந்த மொத்த குடும்பத்தையும் இங்கே அழைத்து, குர்கானின் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் குடியமர்த்தினார்கள்.

2015-ம் ஆண்டு தன்னுடைய விவசாய நிலத்தை வீட்டுமனையாக்கிய போட்சி என்பவரிடமிருந்து சஜீத் வீடு கட்ட நிலத்தை வாங்கினார். அந்த கிராமத்தில் இவர்கள் கட்டிய மூன்று அடுக்கு வீடு மெச்சக்கூடியதாக இருந்தது.  இது அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியிருக்கலாம், அதுதான் இந்த தாக்குதலுக்கு காரணமாயிருக்கும் என தற்போது இவர்கள் கருதுகிறார்கள்.

மார்ச் 21-ம் தேதி ஹோலி பண்டிகையின் போது, நான்கு சகோதரர்கள், அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகள் சஜீத்தின் வீட்டில் கூடினார்கள்.  பெண்கள் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் பேசிக்கொண்டிருந்தார்கள், பெண் குழந்தைகள் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்தார்கள், பையன்கள் வெளியே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் மூன்று வயது, ஐந்து வயது குழந்தைகளும் அடக்கம்.

கதறி அழும் சஜீத்தின் மூத்த சகோதரர்.

திடீரென்று, மூன்று இருசக்கர வாகனங்களில் முகத்தில் வண்ணங்களை பூசிய ஒன்பது நபர்கள் அங்கே வந்தார்கள். அவர்கள் வெளியே விளையாடிக்கொண்டிருந்த பையன்களை கேலி செய்தார்கள். அவர்களை முல்லாக்கள் என அழைத்து வம்பிழுத்தார்கள். ‘பாகிஸ்தானுக்கு போ’ என்றார்கள். அவர்களிடம் மூத்த பையன் விவாதம் செய்தான். அவனை இந்த கும்பல் சூழ்ந்துகொண்டது. பயந்துபோன பையன்கள், இனி இங்கே விளையாட மாட்டோம் என கெஞ்சினார்கள்.

உடனடியாக அங்கிருந்து கிளம்பிய பையன்கள் வீட்டுக்குப் போய், கதவை அடைத்துக் கொண்டார்கள்.

அரை மணி நேரம் கழித்து, கைகளில் கட்டையுடன் ஒரு கும்பலாக திரண்டு வந்து வீட்டை சூழ்ந்துகொண்டது.  ‘பாகிஸ்தானுக்கு போ’ என கத்த ஆரம்பித்தது அந்த கும்பல். சிலர் கத்தி, ஈட்டியுடனும் சில ஹாக்கி மட்டையுடனும் ஒருவர் துப்பாக்கியுடனும் வந்திருந்தனர். அவர்கள் வீட்டின் மீது கற்களால் தாக்கத் தொடங்கினர். வீட்டின் முன்புறம் இருந்த பெரிய கண்ணாடி கதவை உடைத்தனர். கண்ணாடியை உடைத்து உள்ளே வர ஆரம்பித்தனர்.

அந்தக் குடும்பம் கதற ஆரம்பித்த நிலையில், ஆண்களை கட்டையால் தாக்கத் தொடங்கிய அந்த கும்பல். வயதான பெண் ஒருவர் அந்த கும்பலின் காலில் விழுந்து ஆண்களை விட்டு விடும்படி கெஞ்சினார்கள். கத்தியைக் காட்டி, அந்தப் பெண்களை கன்னத்தில் அறைந்தார்கள். அலமாரியில் ஒளிந்துகொண்ட ஆறு வயது சிறுமியை பிடித்த அவர்கள், அந்தக் குழந்தையை கொடூரமாக அடித்தார்கள். ஒன்றரை வயது குழந்தையின் தலையை கட்டிலில் மோதி அடித்தார்கள். அந்தக் கூட்டுக்குடும்பத்தின் பெரும்பாலானவர்கள் கீழ்தளத்தில் இருந்த இரும்பு கதவுக்குள் ஒளிந்துகொண்டார்கள். அந்த கும்பல் அதை உடைக்க முயற்சித்து உள்ளே வந்தது. பிறகு, பார்த்தவரையெல்லாம் அடித்தது. ஒருவரை அடித்து ஜன்னலிலிருந்து வெளியே தூக்கி எறிந்தது.

தாக்கப்படும் இசுலாமிய குடும்பம்.

உடல் குறைபாடுடைய சகோதரர், குழந்தைகள் சிலரை அழைத்துக்கொண்டு இரண்டாம் தளத்தில் இருந்த வராந்தாவில் ஒளிந்துகொண்டார்.  தனிஷ்டா என்ற பதின்பருவ பெண், அந்த நேரத்தில் சமயோஜிதமாகவும் தைரியமாகவும் செயல்பட்டு, இந்த கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை செல்போனில் படம் பிடித்தார். அதுதான் இந்தக் கொடூரமான கும்பல் வன்முறை வெளியே தெரிய காரணமாக அமைந்தது.

இந்த குடும்பத்தையும் அது காப்பாற்றியுள்ளதோடு, தங்களுடைய பாதிப்புகளை உலகத்துக்கு காட்டவும் அது உதவியது. இரண்டாம் தளத்தில் இருந்த இரும்பு கதவை அவர்களால் உடைக்க முடியவில்லை. ஆனாலும் தனிஷ்டா வன்முறையை படமாக்கிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர்.  துணிவுமிக்க அந்தப் பெண், கேமராவை மறைத்து வைத்தார். அவர்களை மிரட்டியதோடு, அவரை நோக்கி சுடவும் செய்திருக்கிறார்கள்.

தனிஷ்டா படம் பிடித்ததாலேயே அந்த கும்பல் அந்தக் குடும்பத்தினரை கொல்லாமல் விட்டிருக்கிறது. அடுத்த 15 நிமிடங்களில் அந்த கும்பல் இடத்தை காலி செய்திருக்கிறது. “இரண்டரை நிமிட வீடியோவைத்தான் நீங்கள் பார்த்தீர்கள், அதுவே பார்ப்பதற்கு உங்களுக்கு பயங்கரமாக இருக்கும்” என்கிறார் வீட்டில் உள்ள ஒருவர். “அனுபவித்த எங்களுக்கு இது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்”.

இதையெல்லாம் அண்டை வீட்டார் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த குடும்பத்தை காப்பாற்றும் விதமாக எவரும் அந்த கும்பலை தடுத்து நிறுத்தவில்லை. “அவர்கள் ஏழைகள். அவர்களும் பயந்திருக்கலாம்” என்கிறார் சஜீத்.  அருகில் வசிக்கும் சிலர், பக்கத்தில் வசிப்பவர்களும் கும்பலுடன் சேர்ந்து வீட்டின் மீது கல்லெறிந்ததாக கூறுகின்றனர்.

குடும்பத்தினர் காவல் உதவி மையத்தை அழைத்ததோடு, இருவர் எட்டு கி.மீ. தள்ளியிருக்கும் காவல் நிலையத்துக்கும் சென்றனர். ஆனாலும் கும்பல் கிளம்பிச் சென்ற ஒன்றரை மணி நேரம் கழித்துதான் போலீசு அங்கே வந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டால் ஏற்பட்ட பிரச்சினை என்றுதான் ஆரம்பக்கட்டத்தில் இந்தத் தாக்குதலை போலீசு அணுகியிருக்கிறது. இது ஒரு வெறுப்பு குற்றம் என வீடியோ ஆதாரம் சொன்னது. சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட இரண்டாவது வீடியோவில், நீண்ட இரும்பு கம்பி மற்றும் கட்டைகளுடன் அக்கும்பல் வீட்டை சூழ்ந்துகொண்டது. இந்த தாக்குதல் குருகிராமில் மதக்கலவர சூழலை உருவாக்க திட்டமிடப்பட்டது என்பதை அது வெளிப்படுத்தியது.

எலும்புகள் உடைக்கப்பட்ட நிலையில், கழுத்து திருகப்பட்ட நிலையில் காயம்பட்ட ஆண்களை போலீசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறது. ஒரே ஒருவர் மட்டும் ஆறு நாட்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தார். ஆனால், பலர் இன்னமும் வலியுடன் வீட்டில் அவதிபட்டு வருவதை பார்க்க முடிந்தது.

இது மதரீதியிலான தாக்குதல் அல்ல, கிரிக்கெட்டால் வந்த பிரச்சினை என்பதைக் காட்டும்வகையில் இந்த முசுலீம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களை அடித்தார்கள் என காட்டுவதற்காக, கலவர கும்பலைச் சேர்ந்த சிலர் வேண்டுமென்றே மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாக வதந்திகள் பரவிக்கொண்டிருப்பதாக இந்த குடும்பம் சொல்கிறது.

இந்த குடும்பத்தின் உறவினர்கள் சிலர், இந்த இடத்தை விட்டு, முசுலீம்கள் சூழ்ந்த தங்களுடைய கிராமத்துக்கே திரும்பி விடும்படி சொல்லியிருக்கிறார்கள்.  அங்கே ஒரு வேலையும் இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு நின்றுவிடுவார்கள். ஆனாலும் முசுலீம்களுடன் வசிப்பது பாதுகாப்பானது என கருதுகிறது இந்த குடும்பம். இந்த வீட்டை விற்கவும் இவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

“எங்களுக்கு நீதி கிடைத்தால், நாங்கள் ஏன் இந்த இடத்தை விட்டு போகப்போகிறோம்? இது எங்களுடைய நாடு. எங்களுக்கு இங்கே வாழவும் பணியாற்றவும் எங்களுடைய எதிர்காலத்தை உருவாக்கவும் எங்களுக்கு உரிமை உள்ளது. எங்களை ஒரு கும்பல் பயமுறுத்த முடியாது. நாங்கள் இங்கே எங்களுடைய குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வந்தோம். நாங்கள் இங்கிருந்து வெளியேற மாட்டோம்” என்கிறார் சஜீத்.

சில நாட்கள் கழித்து, இந்த முசுலீம் குடும்பத்தில் உள்ள இருவர் மீது குற்ற வழக்கு பதிந்திருக்கிறது போலீசு. இந்த கும்பல் வெறியாட்டத்தை தலைமையேற்று நடத்திய ராஜேந்திரா என்பவன், இந்த இருவரும் தன்னை தலையிலும் வயிற்றிலும் அடித்ததாக சொல்லியிருக்கிறான்.  அடிபட்டவர்கள் மீதே வழக்கு போட்ட போலீசு தங்களுடைய ‘கடமை’யை ஆற்றியிருப்பதாக கூறுகிறது.

கும்பல் கொலைகள் குறித்து நாங்கள் விசாரித்து அறிந்த அனைத்து வழக்குகளிலும் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மீதே வழக்குப் பதிவது என்பது படுமோசமான ஒரே மாதிரியான முறையாக இருக்கிறது. மாட்டை வெட்டினார்கள் என்றும், விலங்குகளை கொடுமைப்படுத்தினார்கள் என்றும் மோசமாக வண்டி ஓட்டினார் என்றும்கூட பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தினார்கள். பாதிக்கப்பட்டவர்கள் சிறையிலும்கூட அடைக்கப்பட்டார்கள்.

எனவே, பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு போராடுவதற்கு பதிலாக, தங்களை தாங்களே இந்த வழக்குகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சில நேரம் போலீசும் கிராமத்தின் பெரிய மனிதர்களும், நீதிமன்றத்துக்கு வெளியேயான ‘சமரசத்திற்கும்’ ஆளாக வேண்டியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர் தன்னை அடித்தவர்கள் யார் என அடையாளம் தெரியவில்லை என சொல்வார்; எனவே, போலீசு அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியாமல் கைவிடும்.

இதே போன்ற இழிவான உத்தி குருகிராமிலும் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் புதிய இந்தியாவின் புதிய நீதி!

இந்தக் குடும்பம் நீதிமன்றம் செல்லவும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. அவர்கள் உடைந்து போயிருக்கிறார்கள். குருகிராமில் தொடர்ந்து வாழ்வது என்கிற அவர்களது தீர்மானம் பலவீனமடையலாம். அவர்கள் இந்த இடத்தை விட்டுப் போவது, வருந்தத்தக்க முடிவாக அமையலாம். வேறுபட்ட மத நம்பிக்கை உடையவர்கள் ஒருங்கிணைந்து நட்புடனும் நம்பிக்கை, மரியாதையுடனும் வாழ்வதே இந்தியா என்கிற கருத்தாக்கம். அதன் மீது செலுத்தப்பட்ட மற்றொரு தாக்குதல் இது.

2002-ம் ஆண்டு குஜராத்தில் அரங்கேறிய கும்பல் வெறியாட்டத்தை, முசுலீம் படுகொலையை நாடு முழுவதும் நடத்திப் பார்க்க இந்துத்துவ கும்பல் திட்டமிடுகிறது. யாருக்கோ நடக்கிறதென பொது சமூகம் கையைக் கட்டி வேடிக்கை பார்த்தால், நாளை இந்த கும்பல் வன்முறை நம் மீதும் திரும்பும் ஆபத்து இருக்கிறது.

https://youtu.be/RwsEV_GdI30


கட்டுரையாளர் : Harsh Mander
தமிழாக்கம் : அனிதா

நன்றி: Scroll

கருத்துக் கணிப்பு : பாஜக-வின் நம்பர் ஒன் அடிமையாக போட்டி போடும் கட்சி எது ?

பாஜக-விடம் நல்ல பெயர் எடுப்பதற்கு அதிமுக, பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டி போடுகிறார்கள். ஒருவேளை மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டால் ஏதாச்சும் மந்திரி-கிந்திரி பதவி கிடைத்து பிழைப்பை ஓட்டலாமே என்பது அந்தப் போட்டியின் அடிநாதம். செல்லுமிடமெல்லாம் மத்தியில் ஆண்ட மோடி ஆட்சியின் வேதனைகளை சாதனைகளாகச் சொல்லி “மோடி எங்கள் டாடி” என்றெல்லாம் ’படுத்தி’ எடுக்கின்றன இக்கட்சிகள்.

இன்றைய கேள்வி:
பாஜக-வின் நம்பர் ஒன் அடிமையாக போட்டி போடும் கட்சி எது?
♦ அதிமுக
♦ பாமக
♦ தேமுதிக
♦ புதிய தமிழகம்
♦ அனைத்தும்

டிவிட்டரில் வாக்களிக்க:

யூ-டியூப் :

வாக்களிக்க இங்கு அழுத்தவும்