Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 352

மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !

ந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மட்டும் தோற்றுப்போகவில்லை. கடந்த ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் மக்கள் மீது தொடுக்கப்பட்ட பொருளாதாரத் தாக்குதல்களும் மற்ற பிற அடக்குமுறைகளும் அவர்களை மோடிக்கு எதிராக வாக்களிக்க வைக்கும் என்றும் மக்கள் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிப்பார்கள் என்றும் ஜனநாயக சக்திகள் பலரும் கொண்டிருந்த எதிர்பார்ப்பும்தான் தோற்றுப்போனது.

இந்தத் தேர்தலில் மோடியின் பிரதாபங்களைக் குறித்துப் பேசுவது மட்டுமே பிரச்சாரம் என்றவாறு அமைந்திருந்தது பா.ஜ.க.-வின் தேர்தல் பிரச்சாரம். இதன் காரணமாக விவசாய நசிவு மட்டுமல்ல, இந்திய மக்கள் கடந்த ஐந்தாண்டுகளில் சந்தித்த வாழ்வாதாரப் பிரச்சினைகள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் பின்னுக்குத் தள்ளப்பட்டன

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்பொழுது, மந்த்சௌர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மீதுதான் பா.ஜ.க. அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆனால், இத்தேர்தலில் மந்த்சௌர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சுதிர் குப்தா காங்கிரசைத் தோற்கடித்து மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். அம்மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடந்த ஜபல்பூர், சாகர், ரத்லம் தொகுதிகளையும் பா.ஜ.க.-தான் கைப்பற்றியிருக்கிறது.

மகாராஷ்டிராவின் திந்தோரி தொகுதியில் இருந்துதான் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த விவசாயிகள், பழங்குடியினரின் மும்பய்ப் பேரணி தொடங்கியது. எனினும், இத்தொகுதியிலும் பா.ஜ.க.தான் வெற்றி பெற்றிருக்கிறது.

இத்தொகுதிகள் மட்டுமின்றி, விவசாயிகளின் போராட்டம் நடந்த இராசஸ்தானின் கோட்டா, புந்தி, ஜலவார் தொகுதிகளிலும்; மகாராஷ்டிராவின் வார்தா, கோந்தியா, அகோலா தொகுதிகளிலும், கரும்பு விவசாயிகள் ஆதித்ய நாத் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய உ.பி.யின் கைரானா தொகுதியிலும் பா.ஜ.க.தான் வெற்றி பெற்றிருக்கிறது.

ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த விவசாயிகளுள் 52 சதவீதத்தினரும், பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் 44 சதவீத விவசாயிகளும், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த விவசாயிகளுள் 34 சதவீதத்தினரும், பழங்குடியின விவசாயிகளுள் 41 சதவீதத்தினரும் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்திருப்பதாக இந்து குழுமம் – லோக் நிதி இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. (இந்து, மே 28, பக்.9)

நரேந்திர மோடி கடந்த ஐந்தாண்டுகளில் விவசாயிகளின் பிரச்சினையைக் காது கொடுத்துக்கூடக் கேட்டதில்லை. டெல்லியில் அரை நிர்வாணக் கோலத்தில் போராடிய தமிழக விவசாயிகளைச் சந்திக்க மறுத்த மோடி, நடிகை பிரியங்கா சோப்ராவைச் சந்தித்து அளவளாவியது நாடெங்கும் கடும் கண்டனத்திற்குள்ளானது. எனினும், சராசரியாக 40 சதவீத விவசாயிகள் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்தற்குக் காரணம், தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட ரூ.6,000 விவசாய நிதியுதவி, பாலகோட் தாக்குதல் குறித்த பா.ஜ.க.வின் பிரச்சாரம், மோடி மீதான தனிப்பட்ட ஈர்ப்பு, மாநில அரசுகளின் மீதான அதிருப்தி உள்ளிட்டுப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

மேலும், கடந்த மோடியின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச எரிவாயு அடுப்புத் திட்டம், கிராமப்புற மின் இணைப்புத் திட்டம், கிராமப்புறங்களில் கழிவறைகள் கட்டிக் கொடுக்கும் திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டம் ஆகியவை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு கிராமப்புற ஏழைகள் மத்தியில் மோடிக்கு ஆதரவான மனோநிலையை உருவாக்கியிருப்பதாகக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

படிக்க :
♦ சத்தீஸ்கர் : சேமிப்புக் கிடங்குகளான ஸ்வச் பாரத் கழிப்பறைகள் !
♦ தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?

கடந்த ஐந்தாண்டு கால மோடியின் ஆட்சியில் 20,000 கிராமங்கள்தான் மின்மயமாக்கப்பட்டன. அதற்கு முந்தைய ஆட்சிகளில் 6.3 இலட்சம் கிராமங்கள் வரை மின்மயமாக்கப்பட்டிருந்தன. ஆனால், பா.ஜ.க.வோ, மோடியின் ஆட்சியில்தான் இந்தியக் கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டதாக அண்டப் புளுகைப் பிரச்சாரம் செய்தது.

இலவச எரிவாயுத் திட்டம் என்பது உண்மையில் இலவசமே கிடையாது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு மைய அரசு மானியம் அளிப்பதில்லை. கடன்தான் அளிக்கிறது. இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஏழைக் குடும்பப் பெண்கள் மீண்டும் விறகு அடுப்புக்கே திரும்பிவிட்டனர் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.

மீண்டும் விறகடுப்புக்கே திரும்பிச் செல்லும் உத்திரப்பிரதேச பெண்கள் (மாதிரிப் படம்)

பாலகோட் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல் தோல்வியடைந்ததை  சர்வதேச ஊடகங்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தும், “அது யாருமே செய்யாத சாதனை” எனப் பீற்றிக் கொண்டார், மோடி.

மோடி உறுதியானவர், பாலகோட்டில் “எதிரியின் வீடு புகுந்து” அடித்தவர், அவர் பிரதமரான பின்னால்தான் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு ஒரு கவுரவம் வந்திருக்கிறது, அவர் ஊழலற்றவர், அவருக்கு குடும்பம் இல்லை, மோடியோடு ஒப்பிடத்தக்க தலைவர் யாரும் எதிர்க்கட்சிகளில் இல்லை என்ற கருத்து இடைவிடாத பிரச்சாரத்தின் மூலம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு விட்டது.

இப்பிரச்சாரத்திற்கு மட்டும் ஏறத்தாழ 5,600 கோடி ரூபாய் அரசுப் பணம் செலவிடப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சசிதரூர். மோடி நிறைவேற்றாத வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டினாலும், அவற்றை நிறைவேற்றக் கூடியவர் மோடிதான் என்று பலர் கூறியிருக்கின்றனர்.

தேர்தல் பரப்புரையைப் பொருத்தவரை, 2014-இல் மோடி அளித்த வாக்குறுதிகளான 15 இலட்சம் ரூபாய், 2 கோடிப் பேருக்கு வேலை, விவசாய விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை ஆகியவற்றில் ஒன்றைக்கூட மோடி நிறைவேற்றவில்லை என்பதையும்; ரஃபேல் ஊழலையும் அம்பலப்படுத்தி “சவுக்கிதார் சோர் ஹை” என்று மேடைதோறும் பிரச்சாரம் செய்தார் ராகுல் காந்தி.

ராகுல் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் மோடி பதிலளிக்கவில்லை என்பது மட்டுமல்ல, 2014- முழங்கிய விகாஸ் (முன்னேற்றம்) என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்தவில்லை. மாறாக, புல்வாமா தாக்குதலை வைத்து தேசவெறி, மதவெறியைத் தூண்டினார். “மோடி எதிர்ப்பு ஒன்றுதான் எதிர்க்கட்சிகள் அனைவரின் கொள்கை” என்றார். “அனைவரும் ஊழல் கட்சிகள், ராகுல் ராஜா வீட்டு வாரிசு, நான் கீழிருந்து உழைத்து முன்னேறிய செயல்வீரன்” என்று தன்னைக் காட்டிக் கொண்டார்.

எதிர்க்கட்சிகளைப் பற்றிய நம்பிக்கையோ, மதிப்போ மக்களுக்கு இல்லை என்ற எதிர்மறைக் காரணமும் மோடிக்குச் சாதக மாகியிருக்கிறது. தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை தி.மு.க.வுக்குச் சாதகமாக அமைந்தது. வட மாநிலங்களிலோ, எதிர்க்கட்சிகள் மீதான இந்த அவநம்பிக்கை பா.ஜ.க வுக்குச் சாதகமான வாக்குகளாக மாறியிருக்கிறது.

அம்பானி, அதானிகளின் எடுபிடியாகச் செயல்பட்டு வரும் மோடி, தன்னை ஏழை, நடுத்தர மக்களின் பிரதிநிதியாகச் சித்தரித்துக் கொண்டதை நம்பும் அளவுக்கு அரசியல் பாமரத்தனம் மக்களைப் பீடித்திருந்ததையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மக்கள் மந்த புத்தி உள்ளவர்களாக, பகுத்தறிந்து பார்க்கும் திறன் அற்றவர்களாக இருக்க வேண்டும் என்றுதான் பாசிஸ்டுகள் விரும்புகிறார்கள். அது மட்டுமின்றி, மக்களை அறிவில்லாதவர்களாக மாற்றுவதற்கென்றே அவர்கள் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். அதற்கான நிறுவனங்களையும் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக, “முன்னேற”த் துடிக்கும் “இந்து” இளைஞர்களிடம் மோடி பற்றிய பிரமை கடவுள் நம்பிக்கையைவிட மேலோங்கி இருப்பதாகத் தேர்தலுக்குப் பிந்தைய கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த அரசியல் பாமரத்தனம்தான் மோடி ஆட்சியின் தீமைகள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, சாதி, மத, தேசியப் பெருமிதத்தின் அடிப்படையிலோ அல்லது வெற்று நம்பிக்கையின் அடிப்படையிலோ மோடிக்கு வாக்களிக்கும் மனோநிலையைப் பெரும்பாலான வாக்காளர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பாமரத்தனம்தான் மோடி ஆட்சியின் அலங்கோலங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, அவரைச் சகலகலா வல்லவனாகப் பார்க்கும் அறியாமையின் அடிப்படையாகவும்  இருக்கிறது.

அன்பு

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

பா.ஜ.க. வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 50%-க்கு மேல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதனைக் காட்டிச் சாதி கடந்த இந்து அடையாளத்துக்கு வாக்காளர்களைக் கொண்டுவருவதில் வெற்றிபெற்று விட்டதாக பா.ஜ.க. கூறிக்கொள்வது சற்று மிகையானது என்றாலும், அது முற்றிலும் நிராகரிக்கத்தக்க கூற்றும் அல்ல.

இது  இந்தத் தேர்தல் முடிவின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். பாபர் மசூதி இடிப்பின் முன்னும் பின்னும் “ராமன் எதிர் முஸ்லிம்கள்” என்ற கோணத்தில் மக்களின் பக்தியைப் பயன்படுத்தி, மதவெறியைத் தூண்டி பா.ஜ.க. வாக்குகளை அறுவடை செய்தது. அதைவிட இந்து பெரும்பான்மையின் இன்றைய மனநிலைதான் மிகவும் ஆபத்தானது.

கடந்த 5 ஆண்டு மோடியின் ஆட்சிக் காலத்தில் வட மாநிலங்கள் அனைத்திலும் முஸ்லீம்களுக்கு எதிரான எண்ணற்ற தாக்குதல்கள், கொலைகள் நடந்திருக்கின்றன. பால் வியாபாரி பெஹ்லுகான் பசுக்குண்டர்களால் இராஜஸ்தானில் கொல்லப்பட்டுள்ளார். மாட்டுக்கறி வைத்திருந்ததாக அக்லக் (உ.பி.) கொல்லப்பட்டிருக்கிறார். அவரது கொலை வழக்கைப் புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர் சுபோத்குமார் இந்து வெறியர்களால் கொல்லப்பட்டுள்ளார்.

இந்து மதவெறிக் குண்டர்களால் கொல்லப்பட்ட (இடமிருந்து) பெஹ்லு கான், முகம்மது அக்லக் மற்றும் பதின் வயது ஜுனைத் கான்.

லவ் ஜிகாத் என்று பொய்க்குற்றத்தின் பேரில் முஸ்லீம்களுக்கு எதிராக முசாஃபர்நகர் கலவரம் நடந்திருக்கிறது. இரயிலில் உட்கார இடம் தரவில்லை என்பதற்காக ஜுனைத் என்ற இளைஞன் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறான். இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே!

இந்த நிகழ்வுகள் வட இந்தியாவின் இந்துப் பெரும்பான்மையினர் மீது ஏற்படுத்திய தாக்கம் என்ன? இத்தகைய தாக்குதல்கள் இந்துப் பெரும்பான்மையினர் மத்தியில் சகஜமாக்கப்பட்டிருக்கின்றன. பலருக்குச் சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் பற்றிய அக்கறை இல்லை. பலருக்கும் பா.ஜ.க. என்பது இந்துவெறிக் கட்சி என்ற கருத்து இல்லை.

இவற்றை எதிர்த்துப் பேசுபவர்கள் சில அறிவுத்துறையினர் மற்றும் புரட்சியாளர்கள் என்ற அளவிலேயே உள்ளது. மற்ற கட்சிகளோ, மக்களோ இவற்றை எதிர்ப்பதில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை பெரும்பான்மை சமூகம் ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை. இந்து ராஷ்டிரம் என்று சங்கப் பரிவாரத்தின் மொழியில் சொல்லாவிட்டாலும், இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினர் என்பதால் இது “இந்து நாடுதான்” என்ற கருத்து பொதுக் கருத்தாகவே இருக்கிறது.

படிக்க :
♦ மேற்கு வங்கம் : தொடர்கிறது காவிக் குண்டர்களின் ‘ஜெய் ஸ்ரீராம்’ தாக்குதல்கள் !
♦ எங்க சாமி கருப்பனும் சுடலைமாடனும்தான் ! ஜெய் ஸ்ரீராம் கிடையாது | #NoToJaiShriRam

சிறுபான்மை மக்கள் மீதான வன்முறையைச் சகஜமாக எடுத்துக் கொள்ளும் மனநிலைக்கு, “சாதி ஒடுக்குமுறை குறித்துக் கடுகளவும் குற்றவுணர்வு கொள்ளாமலிருக்கும் சாதி ஆதிக்க உளவியல்” ஒரு முக்கியமான அடிப்படையாக அமைந்திருக்கிறது. இருந்த போதிலும், இந்த மாநிலங்கள் எதிலும் பார்ப்பன இந்து மதம் ஒருபோதும் கருத்தியல்ரீதியாக எதிர்க்கப்படவில்லை என்பது இன்று உருவாகியிருக்கும் இந்த நிலைமைக்கு முக்கியப் பின்புலமாக இருக்கிறது.

அது மட்டுமல்ல, லிபரல்கள் என்று சொல்லப்படுவோரிடமும் சரி, முற்போக்காளர்கள், வலது, இடது கம்யூனிஸ்டுகள் ஆகியோரிடமும் சரி பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து – இந்தி – இந்தியா எதிர்ப்பு என்ற கண்ணோட்டம் இல்லை. பார்ப்பனியம் என்பது தேசிய இன, மொழி உரிமைகளுக்கு எதிரானது என்ற புரிதலும் இல்லை.

மாறாக, “இந்து மதம் ஜனநாயகப் பூர்வமானது, பன்முகத் தன்மை கொண்டது, ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் இந்துத்துவம் என்பதுதான் ஒற்றைப் பண்பாடை வலியுறுத்தும் பாசிசத் தன்மை கொண்டது” என்ற கருத்தையே காங்கிரசு முதல் போலி கம்யூனிஸ்டுகள் மற்றும் லிபரல் அறிவுத்துறையினர் வரையிலான அனைவரும் பேசுகின்றனர். காந்தியத்தின் பெயரால் பார்ப்பனியத்தை நியாயப்படுத்தும் இந்தப் போக்கு ஒரு வரலாற்றுப் புரட்டு என்பது மட்டுமல்ல, நிகழ்காலத்திய சமூக எதார்த்தத்துக்கும் எதிரானது.

இந்து மதம் எனப்படும் பார்ப்பன மதத்திற்குத் தரப்படும் இந்த அங்கீகாரத்தைச் சங்கப் பரிவாரம் மகிழ்ச்சியுடன் வழிமொழிகிறது. “இந்துமதம் தன் இயல்பிலேயே ஜனநாயகப் பூர்வமானது, மற்ற மதங்களுடன் சகவாழ்வு நடத்துவது, அதன் காரணமாகத்தான் இந்தியா ஜனநாயக நாடாகவே இருக்கிறது. இந்துக்களின் இந்தத் தாராள மனோபாவம்தான் பிற மதத்தினரின் அடாவடித்தனத்துக்குக் காரணமாக இருக்கிறது” என்கிறது சங்கப் பரிவாரத்தின் பிரச்சாரம்.

நானிம் இந்துதான் என நிரூபிக்கும் முகமாக, ம.பி. சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது அம்மாநிலத்திலுள்ள உஜ்ஜைன் மகாகாளீஸ்வர் போவிலில் வழிபாடு நடத்திய ராகுல் காந்தி. (கோப்புப் படம்)

“முஸ்லீம்களுக்கு அவர்களுக்குரிய இடத்தை மோடிதான் காட்டியிருக்கிறார்” என்று 2002 குஜராத் படுகொலைக்குப் பின்னர் குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை கூறிய கருத்து மேற்சொன்ன கண்ணோட்டத்திலிருந்துதான் வருகிறது. இன்று வட இந்திய இந்துப் பெரும்பான்மையின் மனோபாவத்தில் இக்கருத்து குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்துகிறது எனத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.

“மண்டலை வைத்து கமண்டலை முறியடிக்க முடியும்”, “சாதி அமைப்பு முறைக்குச் சித்தாந்தரீதியில் நியாயம் கற்பிக்கும் பார்ப்பனியத்தை, சாதியைப் பயன்படுத்தியே முறியடித்துவிட முடியும்” என்று வாதிட்ட “சமூகநீதி” கட்சிகளின் தோல்வியையும் உ.பி., பிகார் உள்ளிட்ட பல மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு ஆகியவற்றையும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளிடையேயான பிளவையும் தனக்குச் சாதகமாக பா.ஜ.க.தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பார்ப்பனியத்தை வைத்துப் பார்ப்பனியத்தை முறியடிக்க முடியாது என்ற பாடத்தையும் இந்தத் தேர்தல் முடிவு கற்றுக் கொடுத்திருக்கிறது.

இந்து அடையாளத்தை இந்திய தேசியத்துடன் பிணைப்பதிலும் பாரதிய ஜனதா வெற்றி கண்டிருக்கிறது. தேசத்தின் உட்கிடையாக இந்து மதத்தை காட்டுவதன் மூலம் இந்து மதத்தை எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள் என்றும், தேசத்தின் காவலனான மோடியை எதிர்ப்பவர்களும் தேச விரோதிகள் என்றும் இதனை பா.ஜ.க. நீட்டிக்கிறது. இங்ஙனம், “மதம் – தேசம்  கட்சி – தலைவன்” ஆகியவற்றை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாத வண்ணம் பார்ப்பன பாசிசம் இணைத்திருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில் வங்க தேசத்திலிருந்து குடியேறியவர்கள் குறித்த பிரச்சினையில் “இந்து என்ற வரையறைக்குள் வருகின்றவர்களுக்கு மட்டும்தான் இந்தியாவில் குடியுரிமை தரப்படும்” என்று அமித்ஷா பேசியிருப்பது, “யூதர்களுக்கான நாடு இசுரேல்” என்பதைப்போல “இந்துக்களின் நாடு இந்தியா” என்ற புதிய வரையறையை உருவாக்கும் இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டமாகும்.

“மதச்சார்பின்மை என்ற முகத்திரையை அணிந்து கொள்ளும் தைரியம் இந்தமுறை எதிர்க்கட்சிகள் யாருக்கும் இல்லை” என்று மோடி தனது வெற்றி உரையில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மோடி சொன்னது உண்மைதான். மதச்சார்பின்மை என்ற வார்த்தையைக் கூட எதிர்க்கட்சிகள் பயன்படுத்தவில்லை. வெறுப்பு அரசியல் கூடாது, பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்று முடிந்தவரை மொன்னையான வார்த்தைகளில்தான் காங்கிரசு முதல் வலது, இடது கம்யூனிஸ்டுகள் வரையிலான அனைவரும் பேசினர்.

வாக்காளர்களின் இந்து மனோபாவத்தை தாஜா செய்வதற்காகச் சட்ட மன்றத் தேர்தலின் போது ராகுல் கோயில் கோயிலாகச் சென்றார். கோசாலை அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார். காங்கிரசு வேட்பாளர்கள் ஏகப்பட்ட சாமியார்களை விழுந்து வணங்கினர். வேள்விகள் நடத்தினர்.

எதிர்க்கட்சிகள் இவ்வாறு சரணடைந்து விட்ட நிலையில், பா.ஜ.க. அடுத்த தாக்குதல் நிலைக்குச் சென்றது. மாலேகான் குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளியும், ஊபா சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுத் தற்போது பிணையில் வெளியே வந்திருப்பவருமான பிரக்யா சிங் தாகூர் என்ற பயங்கரவாதியை, காங்கிரசு முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங்கிற்கு எதிராக போபால் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியது.

பிரக்யா சிங் தாக்கூர், கிரிராஜ் சிங், சாக்‌ஷி மகாராஜ், ஆனந்த் குமார் ஹெக்டே மற்றும் பிரதாப் சந்திர சாரங்கி.

“இந்து மதத்தை இழிவுபடுத்தும் சதிக்கு எதிராகவும், ஒரு பெண் சாமியாரை, ஒரு தேசபக்தையைச் சிறையில் வைத்துச் சட்டவிரோதமாகச் சித்திரவதை செய்தவர்களுக்கு எதிராகவும் தான் நடத்துகின்ற போராட்டம்” என்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் பிரக்யா சிங். (சித்திரவதை குறித்து அவர் அளித்த புகாரை பொய்ப்புகார் என்று தேசிய மனித உரிமைக் கமிசன் 2014-இலேயே நிராகரித்துவிட்டது) பிறகு, கோட்சேவைத் தேசபக்தன் என்றார். தன்னைக் கைது செய்த ஹேமந்த் கர்கரே கொல்லப்படுவதற்கு காரணமே தன்னுடைய சாபம்தான் என்றார். பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்றதற்காகத் தான் பெருமைப்படுவதாகப் பேசினார். இத்தனை மதவெறிப் பேச்சுகளுக்கும் பிறகு ம.பியின் தலைநகரான போபாலில் 3.5 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சாக்ஷி மகராஜ் என்ற சாமியார் உ.பி. மாநிலம் உன்னாவ் தொகுதியின் வேட்பாளர். பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர். இதுவன்றி 33 கிரிமினல் வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. 2011-இல் ஒரு கும்பல் வல்லுறவு குற்றத்தில் கைது செய்யப்பட்டு, போதிய சாட்சி இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டவர். ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. இவரும் கோட்சேவைத் தேசபக்தர் என்று புகழ்ந்தவர். இவர் 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கிரிராஜ் சிங் மத்திய அமைச்சராக இருந்தவர். பீகார் மாநிலம் பெகுசராயில் கன்னையா குமாருக்கு எதிராக நிறுத்தப்பட்டார். “தேசியக் கொடியில் இருக்கும் பச்சை நிறம் தேசத்துக்கே அவமானம்”, “முஸ்லீம்களின் கல்லறைகளுக்கு மட்டும் எதற்கு இவ்வளவு இடம்”, “மோடியை ஆதரிக்காதவனெல்லாம் பாகிஸ்தானுக்குப் போகட்டும்”, “வந்தே மாதரம் சொல்ல மறுப்பவனை வேட்பாளராக நிற்கவே அனுமதிக்கக்கூடாது” – என்றெல்லாம் மதவெறிப் பிரச்சாரம் செய்த கிரிராஜ்சிங், 4 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் கன்னையா குமாரைத் தோற்கடித்தார்.

படிக்க :
♦ முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள் : பாஜக தலைவியின் அறைகூவல் !
♦ Reason : இந்துத்துவ கும்பலின் கொலைவெறியை அம்பலப்படுத்தும் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் !

ஆனந்த் குமார் ஹெக்டே, மத்திய அமைச்சர். கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா தொகுதி வேட்பாளர். இஸ்லாம் என்றொரு மதம் இருக்கும் வரை உலகத்தில் அமைதி இருக்காது என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதற்காக வழக்கைச் சந்திப்பவர். ஜனவரி 2018 -இல் தலித் போராட்டக்காரர்களை “குரைக்கும் நாய்கள்” என்று பேசியவர். ஜனவரி 2019 தாஜ்மகால் என்பது தேஜோ மகாலயா என்ற சிவன் கோயிலாகும் என்றும் அதனை மீட்க வேண்டும் என்றும் பேசியவர். 2014 -இல் இதே தொகுதியில் 1.4 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹெக்டே, இந்தத் தேர்தலில் 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இவையனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, ஸ்டேன்ஸ் பாதிரியாரை எரித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்தபோது, அதனைச் செய்த பஜ்ரங் தள் அமைப்பின் தலைவராக இருந்த பிரதாப் சந்திர சாரங்கி, இப்போது மத்திய அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

இவையனைத்தும் இந்து பயங்கரவாதத்தையே மைய நீரோட்டமாக மாற்றுவதற்கு மோடி – அமித் ஷா கும்பல் மேற்கொண்டு வரும் முயற்சிக்குச் சில சான்றுகள். இந்தப் பயங்கரவாதிகள் அனைவரும் 3 இலட்சம், 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றிருக்கும் வெற்றி எதற்குச் சான்று?

இந்துத்துவ பயங்கரவாதம் வட இந்திய சமூகத்தின் மைய நீரோட்டமாக மாறிவருவதற்குச் சான்று. மோடியின் தேர்தல் வெற்றியை விடவும் இதுவே நமது கவலைக்குரியது.

சூரியன்

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

மின் கட்டணம் : ஆணையங்களுக்கே ஆணையம் அமைக்கும் மோடி அரசு !

அருண் கார்த்திக்
மோடி அரசு இதுவரை வரலாற்றில் இல்லாத அளவு வல்லமை பெற்ற அரசு. இந்த வல்லமையை வைத்து அது என்ன செய்யத் துடிக்கிறது தெரியுமா? மின்சார கட்டணம் நிர்ணயிப்பதில் மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமையை பிடுங்கி, மக்கள் பிரதிநிதிகளின் எந்தவித குறுக்கீடும் இல்லாத பொருளாதார நிபுணர்கள் மட்டுமே கொண்ட, ஆணையங்களிடம் தாரை வார்க்கத் துடிக்கிறது.

ஏன் அவ்வாறு துடிக்கிறது தெரியுமா? மக்கள் பிரதிநிதிகள் அடுத்த முறை ஓட்டுக் கேட்க மக்களிடம் செல்ல வேண்டும் என்பதனால் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த விரும்புவதில்லையாம். அதனால் மக்களிடம் ஓட்டுக் கேட்க செல்ல தேவையில்லாத நிபுணர்களிடம் மின்சாரக் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமையை கொடுத்துவிட்டால் அவர்கள் கட்டணத்தை எளிதில் உயர்த்தி விடுவார்கள். மின்சார கட்டணத்தை உயர்த்த இந்த அளவு சிரத்தை எடுக்கிறது நமது நாட்டுப்பற்றுடைய மோடி அரசாங்கம்.

மின்சாரக் கட்டணம் பற்றி விவாதிப்பதற்கு முன் அந்தத் துறையின் சமீபத்திய வரலாற்றையாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 1991-ல் புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வருவதற்கு முன் மக்களுக்குத் தேவையான அடிப்படை துறைகள் அனைத்துமே அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்தபின் தண்ணீர் வழங்குவதிலிருந்து, தொலைத் தொடர்பில் இருந்து, மின்சாரம் வழங்குவதில் இருந்து, அனைத்து முக்கியமான துறைகளும், அடிப்படையான துறைகளும், கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ் பி.ஜே.பி. என எந்த வேறுபாடும் இல்லாமல், அனைத்துக் கட்சிகளுமே இந்தக் கொள்கையை அமல்படுத்தி வந்தனர்.

மின்சாரத் துறையை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க 2003-ம் ஆண்டு மின்சாரச் சட்டம் (electricity act, 2003) என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் அமுலுக்கு வரும் வரையில் மின்சாரம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் அரசு மட்டுமே செய்து வந்தது. மின்சார உற்பத்தி, உற்பத்தியான மின்சாரத்தை கொண்டு செல்லுதல், அந்த மின்சாரத்தை விநியோகம் செய்தல் என அனைத்தையும் அரசே செய்தது. அனைத்து மாநில அரசுகளிலும் ஒரு மின்சாரத் துறை அல்லது வாரியம் இருந்தது. மத்திய அரசுக்குச் சொந்தமான மின்சார உற்பத்தி நிலையங்களும் இருந்தன.

இந்த மின்சாரச் சட்டம் இரண்டு முக்கிய வாதங்களின் அடிப்படையில் இயற்றப்பட்டது. முதல் வாதம், சுதந்திரம் கிடைத்து இவ்வளவு ஆண்டுகள் ஆன பிறகும் அரசால் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்க முடியவில்லை. அவ்வாறு வழங்க வேண்டும் என்றால் நிறைய முதலீடுகள் செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு முதலீடு செய்ய அரசிடம் பணம் இல்லை. இதற்கு ஒரே தீர்வு தனியார் முதலீடுகளை மின்சாரத்துறையில் ஊக்குவிப்பது தான்.

இரண்டாவது வாதம், ஓட்டுவங்கி அரசியலினால் அரசியல்வாதிகள் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதே இல்லை. கட்டணம் மிகக்குறைவாக இருப்பதால் இந்தத் துறையில் இலாபமே இல்லை. இலாபம் கிடைக்கவில்லை என்றால் தனியார் முதலீடு இந்த துறைக்கு வராது. ஆகவே இந்தத் துறையை இலாபம் ஈட்டும் துறையாக மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் தனியார் முதலீடுகள் வரும், அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கவும் முடியும். இந்த இரண்டு வாதங்களையும் அடிப்படையாகக் கொண்டே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஆக, மின்சாரச் சட்டம் 2003-ன் முக்கிய நோக்கம் மின்சாரத் துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பது. இதற்காகவே, இந்தச் சட்டம் மின்சாரத்துறையை – மின்சார உற்பத்தி, அதை கொண்டு செல்லுதல், வினியோகிப்பது என 3 பிரிவுகளாகப் பிரித்தது. இதில் எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் தனியார் நிறுவனங்கள் செயல்படலாம் என்று சட்டம் சொன்னது. இதன் பிறகுதான் இவ்வளவு மின்சார உற்பத்தி நிலையங்கள் தனியாரால் தொடங்கப்பட்டன.

படிக்க :
கார்ப்பரேட் கம்பெனி இலாபமே மின்வாரியத்தின் நட்டம்!
கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !

இந்தச் சட்டம் செய்த இன்னொரு முக்கியமான விஷயம் மின்சாரக் கட்டணத்தின் மீது அரசுக்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கியது. மின்சாரக் கட்டணத்தை முடிவு செய்யும் அதிகாரம் அரசிடம் இருந்தால் ஓட்டு வங்கி காரணத்திற்காக அரசியல்வாதிகள் மின்சார கட்டணத்தை உயர்த்தவே மாட்டார்கள் என்று ஒரு வாதம் வைக்கப்பட்டது. கட்டணம் அதிகரிக்கவில்லை என்றால் முதலீடு செய்யும் தனியாருக்கு இலாபம் கிடைக்காது. இதற்காக இந்தச் சட்டம் சொன்ன தீர்வு – மின்சார கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து பிடுங்கி ஓட்டு வாங்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லாத ஒரு அமைப்பிடம் கொடுப்பது. இதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (electricity regulatory commission).

இந்த ஆணையத்தில் பொருளாதார நிபுணர்களும் மின்சாரத் துறை நிபுணர்களும் மட்டுமே இருப்பார்கள். சட்டப்படி ஒவ்வொரு ஆண்டும் மின்சார விநியோகம் செய்யும் அரசு நிறுவனம் அதனிடம் இருக்கும் அனைத்து தகவல்களையும் இந்த ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். என்ன விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது, விநியோகிக்க எவ்வளவு செலவாகிறது, ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு, ஒவ்வொரு வகையான வாடிக்கையாளருக்கும் என்ன கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது என அனைத்துத் தகவல்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இந்தத் தகவல்களை வைத்து இந்த ஆணையம் கணக்கிட்டு என்ன விலையில் எந்தவிதமான நுகர்வோருக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கும்.

எடுத்துக்காட்டாக மின்சார வாரியம் மின்சாரத்தை சராசரியாக ஒரு யூனிட்டுக்கு நான்கு ரூபாய் செலவு செய்து வாங்குகிறது என்றால், அதற்குக் குறைவான கட்டணத்தில் அந்த மின்சாரத்தை விற்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்காது. விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் குறைந்த விலையில் அல்லது இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று அரசு விரும்பினால் அதற்கு ஆகும் செலவை மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனத்துக்கு அரசு கொடுக்க வேண்டும் என்று ஆணையம் கூறும். அதாவது, நமது மொழியில் சொல்ல வேண்டும் என்றால், மக்களால் அந்த விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க முடியுமா இல்லையா என்பதைப்பற்றி எல்லாம் ஆணையம் கவலைப்படாது. பொதுவாக மின்சாரத்துறை இலாபத்தில் செல்கிறதா என்பதை மட்டும் உறுதி செய்யும். இந்த நோக்கத்தில்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது.

இவ்வாறு அமைத்து செயல்படுவதன் மூலம் கடும் நட்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும் மின்சாரத்துறை இலாபத்தை நோக்கி திரும்பும் என்று சட்டத்தை இயற்றியவர்களும் கொள்கைகளை முடிவு செய்தவர்களும் நம்பினார்கள்.

ஆனால், இப்போது சட்டம் இயற்றி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகும், மின்சாரத்துறை இலாபத்தில் இயங்கவில்லை. மாறாக, அந்தத் துறையின் நஷ்டங்கள் அதிகமாகியுள்ளன. இலாபத்தை உறுதி செய்ய ஒழுங்குமுறை ஆணையம் இருந்தும் எவ்வாறு இப்படி நடக்கிறது என்பதற்கான காரணத்தையும் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு ஆணையம் உள்ளது. இந்த ஆணையங்களின் உறுப்பினர்கள் என்னதான் பொருளாதார நிபுணர்களாகவும், ஓட்டு வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாதவர்களாகவும் இருந்தாலும் இந்த உறுப்பினர்களை நியமிப்பது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்தான். ஆளும் அரசின் ஓட்டு வங்கியை பாதிக்கும் வண்ணம் இந்த உறுப்பினர்கள் செயல்பட்டார்கள் என்றால் அவர்களை அரசுகள் உடனே நீக்கிவிட்டு ‘ஒழுங்காக’ செயல்படுபவர்களை நியமித்துவிடும்.

அதாவது, இந்த ஆணையமும் மின்சார கட்டணத்தை அதிகம் உயர்த்தாதபடி அழுத்தத்தை மாநில அரசால் கொடுக்க முடியும், கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இதனால்தான் மின்சார வாரியம் கடும் நஷ்டத்திலும், கடும் கடன் சுமையிலும் இருந்தாலும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மின்சாரக் கட்டணம் என்பது கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமலேயே உள்ளது. அது மட்டுமல்ல, பல்வேறு விதமான இலவச மின்சார திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இன்னும் சில மாநிலங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக மின்சார கட்டணம் என்பது உயர்த்தப்படவில்லை. பல மாநிலங்களின் மின்சார வாரியங்கள் பல ஆயிரம் கோடிகள் கடன் சுமையில் உள்ளன. மின்சாரக் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதுதான் இந்தக் கடனுக்குக் காரணம் என வலதுசாரி பொருளாதார நிபுணர்கள் கூறி வருகிறார்கள். தனியார் மின்சார உற்பத்தியாளர்கள் அதிகம் இலாபம் சம்பாதிப்பதால் அல்லது அதிக விலையில் உற்பத்தி செய்வதால் நஷ்டம் ஏற்படும் என்று இந்த பொருளாதார நிபுணர்கள் சிந்திப்பது கூட இல்லை.

எது எப்படியோ, இந்த மின்சார வாரியங்களின் கடன் சுமையை குறைத்தே தீரவேண்டும் என்ற முடிவுடன் மோடி அரசாங்கம் ‘உதை’ (UDAY) என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தத் திட்டமும் மாநில நலன்களுக்கு எதிரான திட்டம்தான் என்பது வேறு செய்தி. அந்தத் திட்டமும் மோடி அரசின் மற்ற திட்டங்களை போல ‘ஃப்ளாப்’ ஆகி விட்டது என்பதுதான் முக்கியமான செய்தி. ஒரு திட்டம் ‘ஃப்ளாப்’ ஆனால் விட்டுவிடக்கூடிய அரசா மோடிஜி அரசு? மின்சார வாரியங்களின் கடனை தீர்க்கும் ஒரு புத்தம் புதிய திட்டத்துடன் வந்துள்ளது மோடி அரசு 2.0.

தேர்தலுக்குப் பின் பதவி ஏற்ற மோடி அரசு, ஒரு புதிய சட்ட வரைவை தயாரித்துள்ளது. அந்த வரைவின்படி புதிய மின்சார ஆணையங்கள் அமைக்கப்பட உள்ளன. இப்போது உள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் ஒழுங்காக செயல்படுகின்றனவா என்று கண்காணிப்பதுதான் இந்த புதிய ஆணையங்களின் வேலை. அதாவது, ‘ஆணையத்திற்கு ஆணையம்’ என்று சொல்லலாம். இது சாதாரண விஷயம் அல்ல. தற்போது உள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் உறுப்பினர்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நியமித்து வருகின்றன. இவர்கள் கூறும் புதிய ஆணையத்தின் உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கும். ஆக மற்ற துறைகளில் நடப்பதைப் போல மின்சாரத் துறையிலும் மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரங்களை மறைமுகமாகப் பிடுங்க மத்திய அரசு இந்தச் சட்டத்தை கொண்டு வருகிறது. இந்த புதிய ஆணையம் எந்த விதத்திலும் சம்பந்தப்பட்ட மக்களுக்கு கட்டுப்பட்டதாக இருக்கப்போவது இல்லை. முன்பே சொன்னது போல அவர்களுடைய ஒரே நோக்கம் மின்சாரத் துறையை இலாபம் ஈட்டும் துறையாக மாற்றுவதுதான். கட்டணத்தை அதிகரித்தால், மக்களால் அந்த கட்டணத்தை செலுத்த முடியுமா, செலுத்துவதால் அவர்களுக்கு வரும் சிரமம் என்ன, செலுத்த முடியாத விளிம்பு நிலை மக்கள் என்ன செய்வார்கள், என்பதெல்லாம் அந்த ஆணையத்திற்கு கவலையில்லை. கவலைப்படத் தேவையில்லை! ஏனென்றால், அவர்கள் மக்களிடம் ஓட்டுக் கேட்டு செல்லத் தேவையில்லை.

இதில் கொடுமை என்னவென்றால் முன்பெல்லாம் மக்களின் நலனுக்காகவே இந்த சட்டங்களும் ஆணையங்களும் உருவாக்கப்படுகின்றன என்று பெயரளவிலேனும் சொல்லி வந்தார்கள். ஆனால், இப்போது அது கூட இல்லை. மின்சாரக் கட்டணத்தை உயர்த்தத்தான் இந்த புதிய சட்ட வரைவு, புதிய ஆணையங்கள் என மோடி அரசு வெளிப்படையாகவே கூறுகிறது.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு, அதில் மக்கள் ஓட்டளித்து அரசாங்கங்களை தேர்வு செய்கின்றனர். அரசாங்கங்கள் மக்களுக்காக திட்டங்களையும் கொள்கைகளையும் வகுக்கின்றது என்றுதான் சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும் போதும் எங்களுக்கு வாக்களித்தால் நாங்கள் இதை மாற்றி விடுவோம் அதை மாற்றி விடுவோம் என்று அனைத்து தேர்தல் கட்சிகளும் சொல்வது வழக்கமாக உள்ளது.

ஆனால் உண்மை என்னவென்றால், அரசாங்கங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை ஏற்கெனவே சட்டங்கள் இயற்றி இந்த மின்சார ஆணையங்களைப் போன்ற ஆணையங்களுக்கு தாரைவார்த்து விட்டார்கள். நீங்கள் எந்த துறையை எடுத்தாலும் அரசியல் குறுக்கீடு, அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பங்கேற்பு, எதுவுமே இல்லாத ஆணையங்களை பார்க்க முடியும்.

படிக்க :
மேற்கு வங்கம் : தொடர்கிறது காவிக் குண்டர்களின் ‘ஜெய் ஸ்ரீராம்’ தாக்குதல்கள் !
மலை முழுங்கி கார்ப்பரேட் திருடர்களைக் காப்பாற்றும் ரிசர்வ் வங்கி !

எடுத்துக்காட்டாக, தொலைத் தொடர்புக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), இன்சூரன்ஸ் துறைக்கு ஒரு ஒழுங்கு முறை ஆணையம் (IRDAI), பங்குச் சந்தைக்கு SEBI, உயர்கல்விக்கு ஒரு ஆணையம் கொண்டு வருவதாக சொல்கிறார்கள் (HEERA). இந்த ஆணையங்கள் உள்ள துறைகள் அனைத்திலும் இந்த ஆணையங்களை மீறி அரசாங்கங்களால் எளிதில் முடிவெடுக்க முடியாது. அதற்கு எடுத்துக்காட்டுதான் மின்சார ஒழுங்குமுறை ஆணையம். ஆகையால், ஓட்டு போட்டு அரசுகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் நாம் எந்தவிதமான காரியங்களைச் சாதிக்க முடியும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

மோடி அரசை பொருத்தவரையில் அவர்கள் அனைத்துத் துறைகளிலும் ஒரே விஷயத்தைத்தான் செய்கிறார்கள். அனைத்து மக்களுக்கும் மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யப் போகிறோம் என்று வெளியில் சொல்வார்கள். ஆனால், மின்சாரக் கட்டணத்தை அதிகப்படுத்த சட்டம் கொண்டு வருவார்கள். இந்த சட்டத்தை நிறைவேற்ற ‘பாரத் மாதா கி ஜே’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ போன்ற ஆயுதங்களை உபயோகப்படுத்துவார்கள்.

ஆக, இந்த அரசு அமைப்பு என்பதே கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாததாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் மாற்றம் செய்து பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து விடலாம் என்று நாம் நம்பினால் அது நாம் இந்த அமைப்பைப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. இதற்கு ஒரே தீர்வு மக்களின் கையில் அதிகாரங்கள் இருப்பதுதான்!

செய்தி ஆதாரம்: economictimes

அருண் கார்த்திக்

ஆபாசத்தை ஆண்டவன் திருவிளையாடல் என்று கூறிக்கொள்ள அறிவு இடந்தரவில்லை !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 09

”இந்துக்களுக்குள் எந்தக் காரணத்தாலாவது மனக்கசப்பு இருந்தால் அதை நமக்குள் சமாதானமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஒரு வகுப்பார் தாங்கள் இந்துக்களே அல்ல என்று முஸ்லீம்களோடு சேர்ந்து ஒத்துழைப்பதா?” என்று சாஸ்திரியார் கேட்கிறார்.

இந்துக்களுக்குள் தகராறு என்ற தத்துவம் மறைந்து வெகு நாட்களாகி விட்டன! “நானும் இந்து தானே, என்னை ஏன் கொடுமைப்படுத்துகிறீர்? என்னை ஏன் தாழ்ந்த ஜாதி என்று கூறுகிறீர்?” என்று கைகூப்பிக் கேட்ட போது, நெஞ்சம் திறக்கவில்லை! பிறகே நாம் யோசித்தோம். ஒரு சிறு கூட்டம் நம்மை இங்ஙனம் கொடுமைப்படுத்தக் காரணம் என்ன என்ற உண்மை விளங்கிற்று. இது இனப்போராட்டம் என்பது தெரிந்தது. அவர்கள் ஆரியர், நாம் திராவிடர்! அதே ஆராய்ச்சியே, முஸ்லிம்கள் திராவிட இனம், இஸ்லாமிய மார்க்கம் என்ற உண்மையை உரைத்தது. ஆகவே திராவிட இஸ்லாமியக் கூட்டுப்படை கிளம்பிற்று. சாஸ்திரியார் கூறுவது போல், திராவிட நாட்டிலிருந்து ஆரியரை ஓட்ட அல்ல ; ஆரியத்தை ஓட்ட! அதற்கு முஸ்லீம்களுடன் ஒத்துழைப்பதா? என்கிறார் சாஸ்திரியார். ஆம்! அமெரியிடம் ஒத்துழைக்கிறீர் நீர். அதை மறக்க வேண்டாமென்று சாஸ்திரியாருக்குக் கூறுகிறோம். ஆங்கிலேயரும் ஆரியரும் ஒரே இனம். இனத்தோடு இனம் சேருகிறது. திராவிடரும் – இஸ்லாமியரும் ஒரே இனம்! இனத்தோடு இனம் சேருகிறது!

பெரியார் இராமசாமி நாயக்கர், பாகிஸ்தானத்துக்குட்பட்டு வாழ்ந்தாலும் வாழலாமே ஒழிய, ஆரியருடன் வாழக்கூடாது எனக் கோவை மாநாட்டில் உரைத்தார் என்று சாஸ்திரியார் சோகிக்கிறார். உண்மைதான்! பெரியார் அங்ஙனம்தான் உரைத்தார். இனம் இனத்தோடு சேரும் என்ற நியதியை எடுத்துரைத்தார்.

”இது நடக்காத காரியம்” என்றுரைக்கிறார் சாஸ்திரியார். நடக்காத காரியமானால், அதன் பொருட்டு சாஸ்திரியார், சவர்க்கார் ஜவாளி பாட , வரதர் மிருதங்கம் கொட்டத் தாசர்கள் தாளமிட, ஆரிய நாட்டியமாடியிருப்பாரா?

”பாகிஸ்தானம் எப்படி வெறுங்கனவோ, அப்படியே திராவிடஸ்தானமும் கனவுதான்” என்று கூறி, மனச் சாந்தி பெறுகிறார் சாஸ்திரியார்.

பாகிஸ்தான், திராவிடஸ்தான் கிளர்ச்சி வெறும் கனவு என்பது உண்மையானால், மதுரை மாநாட்டுக்கு அத்தனை பணச்செலவு ஆகியிருக்காது!

கனவு காண்பது யார்? என்பதைக் காலம் காட்டட்டும். அதுவரை சாஸ்திரியார் அமெரி அளித்த மகா மந்திரத்தை உச்சாடனம் செய்து கொண்டிருக்கட்டும்!

தங்களை ‘இந்துக்கள்’ அல்ல என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரல்லாதார் மீது பாய வேண்டும் என்று பற்களை நறநறவெனக் கடிக்கிறார். பல அவதாரமெடுத்த அரசியல் ஆமை டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரு! அவர் இப்போது இந்துக்களைப் படை திரட்டுகிறாராம். ஏன்? முஸ்லீம்களின்  ஆதிக்கம் வளரவொட்டாது தடுக்கலாம்; முஸ்லீம்கள் பாகிஸ்தான் கேட்பதையும் திராவிடர் திராவிடநாடு கேட்பதையும் தடுக்கலாம் என்று!

டாக்டர் வரதராஜுலு நாயுடு.

அபாரமான யோசனைதான்! வீரமான உறுமல்தான்! ஆனால், இதற்கு டாக்டர் வரதராஜுலு, மக்களை ஏன் வலையில் சிக்க வைக்க வேண்டும்? பாற்கடல் மீது பள்ளி கொண்டவர்! பக்தர் துயரைத் தீர்க்க வந்தவர் பத்மநாபா! பரந்தாமா! என்று ஆரம்பித்து ஒரு மூச்சு அர்ச்சித்து விட்டால் போதாதா? முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள், கின்னரர், கிம்புருடர், கந்தர்வர், இந்திரன், சந்திரன், பிரமன், வீரபத்திரன், முருகன், விநாயகன், சிவன், விஷ்ணு மற்றும் உள்ள இந்துக் கடவுள்கள் தம் குடும்ப சகிதமாகப் புறப்பட்டு வந்து விடுவார்களே! இதைவிட்டு ஊருக்குக் கூட்டம் ஏன்? அறிக்கைகள் எதற்கு? வடநாடு தென்நாடு வட்டமிடுவது எதற்கு? என்று கேட்கிறோம்.

அப்படி வட்டமிட்டாலும் காசி விஸ்வநாதர் காலடி தொழுது தொடர்ந்து மற்றத் ‘திவ்ய க்ஷேத்திரங்களை’ தரிசித்து விட்டு இராமேஸ்வரத்தில் மூழ்கி எழுந்து ‘’இராம நாமமே கற்கண்டு! அதுவே எங்கள் வெடிகுண்டு” என்று பஜனை செய்துவிட்டால், மலைபோல் வரும் துன்பமும் பனிபோல் போகுமே!

இந்துமதக் கற்பனைகளில் டாக்டருக்கு ஆர்வம் இருப்பதால்தான், தாமோர் இந்து என்று மீசை மேல் கைபோட எண்ணுகிறார்! மீசை இல்லை. ஆகவே டாக்டர் மூஞ்சேயிடம் முறையிடுகிறார். அவர் தமது தாடியை உருவுகிறார்! நாம் திராவிடர்; இந்து புராணத்தின் ஆபாசத்தை அலசிப் பார்த்துப் பார்த்து, நமக்கு அருவருப்புத் தட்டிவிட்டது. வெளியுலகில் உள்ள நாகரிக மக்கள் நகைக்கக்கூடிய புராணப் புளுகுகளை,  நம் மத நூல்கள் என்று கூறிக்கொள்ள மனம் இடம் தரவில்லை. ஆபாசத்தை ஆண்டவன் திருவிளையாடல் என்று கூறிக்கொள்ள, அறிவு இடந்தரவில்லை. டாக்டர் நாயுடுவுக்கு சர்வமும் இன்று சர்க்கரையாக இருக்கிறது.

படிக்க:
தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !
இந்தியா : உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு !

ஆப்பிரிக்கா நாட்டிலே ஒருவிதமான மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் கழுத்திலே மண்டை ஓடுகளை மணி ஆரமாக போட்டுக்கொண்டு இருப்பார்கள். மாடு கன்றுகளைக் கண்டால் மண்டியிட்டுத் தொழுவார்கள். கூடப் பிறந்தவரைக் கொன்று சாமிக்குப் படைப்பார்கள், கூத்தாடுவார்கள், குடிப்பார்கள் என்று கூறிவிட்டு அந்த இனத்தைச் சேர்ந்தவர் தாம் நீங்கள் என்று நம்மிடமாகட்டும் உங்களிடமாகட்டும் ஓர் ஆப்பிரிக்க வாசியோ, அல்லது இங்குள்ள வேறு எவரோ சொன்னால் சொல்பவரின் பற்கள் கீழே உதிர்ந்து விழுமா? விழாதா?

நாலுதலைச் சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்றுதலைச் சாமிகள், ஆயிரம் கண்சாமி, ஆறுதலைச்சாமி, ஆனைமுகச்சாமி, ஆளிவாய்ச்சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், காக்கை மீது பறக்கும் கடவுள், தலைமீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் ரஸமனுபவிக்க நடு நிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவர்களை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழ வேண்டுமே, இந்தச் செய்தியைக் கேட்டால் உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களை விடக் கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கண்றாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவேதான், நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

நான் உனக்கு சளைக்க மாட்டேன் அண்ணே ! கட்டாயம் பறப்பேன் !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 8-அ

“அவர், அதுதான் வில்லியம்ஸ், விமானி அல்லவே” என்று சொல்லிவிட்டுச் சுவர் பக்கம் திரும்பிக் கொண்டான் அலெக்ஸேய்.

எனினும் அவன் “மனப்பூட்டைத் திறக்கும் முயற்சிகளை கமிஸார் கைவிடவில்லை. ஒரு நாள் அலெக்ஸேய் வழக்கம் போன்று எது எப்படிப் போனால் என்ன என்ற உணர்வு மறத்த நிலையில் இருந்தபோது கமிஸாரின் இடிக்குரல் முழங்குவது அவன் காதில் பட்டது.

“அலெக்ஸேய், இதோ பார். இங்கே உன்னைப் பற்றி எழுதியிருக்கிறது.”

இதற்குள் ஸ்தெபான் இவனாவிச் சஞ்சிகையை மெரேஸ்யெவிடம் கொண்டு கொடுத்தார். சிறு கட்டுரை ஒன்று அதில் குறியிட்டுக் காட்டப்பட்டிருந்தது. அலெக்ஸேய் அந்தக் கட்டுரை மீது விரைவாகக் கண்ணோட்டினான். முதல் உலக யுத்த காலத்திய ருஷ்ய விமானிகள் பற்றியது அந்தக் கட்டுரை. சஞ்சிகையின் முதல் பக்கத்திலிருந்து அலெக்ஸேயை நோக்கியது அறிமுகமற்ற இளம் இராணுவ அதிகாரி ஒருவனது முகம். அவனது சிறுமீசை மேல் நோக்கி முறுக்கி விடப்பட்டிருந்தது. காதுவரை இழுத்துவிடப் பட்டிருந்த விமானி தொப்பி மீது வெள்ளைத் தொப்பிச் சூட்டு திகழ்ந்தது.

“படி, படி, உனக்காகவேதான்” என்று வற்புறுத்தினார் கமிஸார்.

மெரேஸ்யெவ் படித்தான். ருஷ்ய இராணுவ விமானி லெப்டினன்ட் வலெரியான் அர்க்காதியெவிச் கார்ப்போவிச் என்பவனைப் பற்றிக் கட்டுரையில் விவரிக்கப் பட்டிருந்தது. பகைவர் முனையிடங்களுக்கு உயரே பறக்கையில் லெப்டினன்ட் கார்ப்போவிச் ஜெர்மானியச் சிதறு குண்டினால் காலில் காயமடைந்தான். அடிபட்டுச் சிதைந்த காலுடன் தனது “பர்மான்” விமானத்தைத் திருப்பி ஒட்டிப் போர்முனை வரிசையின் மேலாகச் சொந்தப் படையினர் இருந்த இடத்தில் அவன் விமானத்தை இறக்கிவிட்டான். அவன் பாதம் வெட்டி அகற்றப்பட்டுவிட்டது. எனினும் அந்த இளம் அதிகாரி இராணுவத்திலிருந்து விலக விரும்பவில்லை. தானே உருவமைத்த போலிக்காலை அவன் புனைந்தான். நெடுநாட்கள் பிடிவாதமாக உடற்பயிற்சி செய்தான், போலிக்காலுடன் நடந்தும் வேலை செய்தும் பழகினான். விளைவாக யுத்த முடிவுக்குள் மீண்டும் இராணுவத்துக்குள் திரும்பி விட்டான். இராணுவ விமானிகள் கல்லூரியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினான். அதோடு, கட்டுரையில் குறித்தபடி, “சில வேளைகளில் தன் விமானத்தை ஓட்டிச் செல்லும் அபாயத்தையும் கூட மேற்கொண்டான்.” இராணுவ அதிகாரிக்கு உரிய “கியோர்கிய்” பதக்கம் அவனுக்கு வழங்கப்பட்டது, ருஷ்ய விமானப் படையில் தொடர்ந்து பணியாற்றினான். முடிவில் ஒரு விபத்தில் உயிர் துறந்தான்.

இந்தக் கட்டுரையை ஒரு தடவை, இரண்டு தடவைகள் , மூன்று தடவைகள் படித்தான். படத்தில் இருந்த ஒடிசலான இளம் அதிகாரி ஓரளவு இறுக்கத்துடன், ஆனால் துணிவு ததும்பப் புன்னகை செய்தான். அவனது களைத்த முகத்தில் சித்தவுறுதி தென்பட்டது. வார்டில் இருந்தவர்கள் எல்லோரும் பேசாமல் அலெக்ஸேயை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“படித்தாயா?” என்று தந்திரத்துடன் வினவினார் கமிஸார். (அலெக்ஸேய் ஒன்றும் பேசவில்லை. இன்னமும் வரிகள் மீது கண்ணோட்டிக் கொண்டிருந்தான் அவன்) “ஊம், என்ன சொல்கிறாய்?”

“ஆனால் அவனுக்கு ஒரு பாதம் மட்டுந்தானே இல்லை!”

“நீ சோவியத் குடிமகன் ஆயிற்றே.”

“அவன் பறந்தது ‘பர்மன்’ விமானத்தில். அதுவும் ஒரு விமானமா? வெறும் சக்கடா அல்லவா அது! அதில் பறப்பதற்கு என்ன? அதைச் செலுத்துவதற்கு இலாவகமோ விரைவோ தேவையே இல்லை.”

ஆனால் நீ சோவியத் குடிமகன் ஆயிற்றே” என்று வலியுறுத்தினார் கமிஸார்.

சோவியத் குடிமகன்” என்று இயந்திரம் போலத் திருப்பிச் சொன்னான் அலெக்ஸேய். கட்டுரையிலிருந்து அவன் இன்னமும் பார்வையை அகற்றவில்லை. அப்புறம் அவனுடைய வெளிறிய முகம் உள்ளிலிருந்து பரவிய ஏதோ செம்மையால் ஒளிர்ந்தது. வியப்பும் மகிழ்வும் பொங்கும் விழிகளுடன் எல்லோரையும் பார்த்தான்.

படிக்க:
திராவிட மலர்ச்சியைத் தடுக்க தாமதம் ஏற்படக் கூடுமே தவிர தடையேற்படாது !
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

அன்று இரவு அலெக்ஸேய் கண்களை மூடவே இல்லை. மறுபடி மறுபடி பத்திரிக்கையை எடுத்து விடிவிளக்கு வெளிச்சத்தில் லெப்டினன்டின் புன்னகைக்கும் முகத்தை நோக்கினான். “உனக்குக் கஷ்டமாக இருந்தது, ஆயினும் நீ சமாளித்து விட்டாய். எனக்கு பதின்மடங்கு அதிகக் கடினமாக இருக்கும். ஆனாலும் நானும் பின்தங்கிவிட மாட்டேன், நீயே பார்ப்பாய்.” – இவ்வாறு எண்ணமிட்டான் அலெக்ஸேய்.

இரவுக்கு நடுவில் கமிஸார் திடீரென ஓசை அடங்கிப் போனார்.. அலெக்ஸேய் சற்றே எழுந்து பார்த்தான். கமிஸார் வெளிறிப் போய், அமைதியாகப் படுத்திருந்தார். அவர் மூச்சு விடவில்லை என்பது தெரிந்தது. அலெக்ஸேய் மணியை எடுத்து வெறி கொண்டவன் போல அடித்தான். க்ளாவ்தியா மிஹாய்லவ்னா திறந்த தலையும் தொளதொளத்த முகமும் அவிழ்ந்த பின்னலுமாக ஓடி வந்தாள். சில நிமிடங்களுக்குள் உள்ளுறை மருத்துவர் அழைக்கப்பட்டார். அவர் நாடி பிடித்துப் பார்த்தார், கற்பூரத் தைலத்தை ஊசி போட்டு ஏற்றினார், ஆக்ஸிஜன் குழாயை வாயில் செருகினார். இந்தக் கெடுபிடி ஒரு மணி நேரம் போல நீடித்தது. சமயங்களில் எல்லாம் வீணாகக் கூடத் தோன்றியது. முடிவில் கமிஸார் விழிகளைத் திறந்தார், சோர்வுடன், க்ளாவ்தியா மிஹாய்லவ்னாவைப் பார்த்து முறுவலித்தார்.

“மன்னிக்க வேண்டும், உங்களைக் கலவரப்படுத்தி விட்டேன்.” என்று தணிந்த குரலில் மொழிந்தார்….

உள்ளுறை மருத்துவர் போய்விட்டார். அவருடைய ஜோடுகளின் ஒலி ஆளோடியின் கோடியில் சென்று ஓய்ந்து விட்டது. அறைத்தாதிகள் அவரவர் வார்டுக்குப் போய் விட்டார்கள். க்ளாவ்தியா மிஹாய்லவ்னா மட்டுமே கமிஸாரின் கட்டில் மீது ஓரத்தில் உட்கார்ந்திருந்தாள். நோயாளிகள் தூங்கி விட்டார்கள். ஆனால் மெரேஸ்யெவ் கண்களை மூடியவாறு உறங்காமல் படுத்திருந்தான். விமானத்தின் கால் விசைகளுடன் வார்களால் பொருத்தப்படக் கூடிய பொய்க் கால்களைப் பற்றிச் சிந்தித்து கொண்டிருந்தான் அவன். விமானப் பயிற்சி கழகத்தில் பயிற்சி ஆசிரியனாக இருந்த உள்நாட்டுப் போர் காலத்தைச் சேர்ந்த முதிர்ந்த விமானி கூறிய சேதி அவன் நினைவுக்கு வந்தது. குட்டைக் காலனான ஒரு விமானி பெடல்களுடன் மரக் கட்டைகளை கட்டி இணைத்துக் கொண்டதாக அவன் சொன்னான்.

“நான் உனக்கு சளைக்க மாட்டேன், அண்ணே” என்று படத்திலிருந்த கார்ப்போவிச்சுக்கு அலெக்ஸேய் உறுதி கூறினான். “பறப்பேன், கட்டாயம் பறப்பேன்!” என்ற சொற்கள் அவனது மூளையில் ஒலித்துத் தூக்கத்தை விரட்டிவிட்டன. கண்களை மூடியவாறு அவன் அமைதியாகப் படுத்திருந்தான். கனவில் புன்னகைத்தபடி அவன் ஆழ்ந்து உறங்குவது போலப் பார்ப்பவர்களுக்குத் தோன்றியிருக்கும்.

அப்போது ஓர் உரையாடல் அவன் காதுகளில் விழுந்தது. பின்னர் வாழ்க்கையின் கடினமான கணங்களில் இந்த உரையாடலை அவன் பலமுறை நினைவுபடுத்திக் கொண்டான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

’ நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் !

”நீட் ரிசல்ட் வந்தாச்சி, தமிழினி 654 மார்க் வாங்கியிருக்காளாம்”

”டேய், சங்கீதா பேசறேண்டா. யோகேஷ் 215 மார்க் வாங்கியிருக்கான். கொஞ்சம் வீட்டுக்கு வாயேன்”

“அந்தப் பொண்ணை பார்க்கவே கொஞ்சம் பரிதாபமாத் தாங்க இருக்கு. முன்னூத்தி இருபது மார்க்காம். நேத்தி பூரா ஒரே அழுகை”

முதலிரண்டு தகவல்கள் தொலைபேசியிலும் கடைசி தகவல் நேரிலும் சொல்லப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தெரிந்தவர்கள், உறவினர்கள் வட்டாரத்தில் மருத்துவ படிப்புக் கனவுகளோடு தேர்வெழுதியவர்கள் அரக்கப் பரக்க ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் பிடிக்க அலைந்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை உள்ளது.

***

தமிழினி :

நண்பரின் மூத்த அண்ணன் மகள். இந்த முறை 654 மார்க் வாங்கியிருக்கும் தமிழினிக்கு இது மூன்றாவது நீட் தேர்வு. மூன்று தடவைகளுக்கு மேல் முயற்சி எடுப்பது சாத்தியமில்லை என்பதால் கடந்த ஓராண்டாக இரவு பகலாக படித்து வந்தாள். இந்தாண்டு தேர்வுக்கு சரியாக பத்து நாட்களுக்கு முன் தமிழினியின் தாயார் இறந்து விட்டார்.

தமிழினியின் தாயார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கர்பப்பை புற்று நோயால் அவதியுற்று வந்தார். பத்தாண்டுகளுக்கு முன் முதன் முறையாக புற்று இருப்பது கண்டறியப்பட்டபோது கர்பப்பை அகற்றப்பட்டது. கடுமையான கீமோதெரபி சிகிச்சைகளைத் தாங்கிக் கொண்டு மீண்டு எழ அவருக்கு ஓராண்டுக்கு மேல் ஆனது. பின்னர் ஐந்தாண்டுகளுக்கு முன் இரண்டாவது தாக்குதல். மீண்டும் கீமோ. இரண்டாவது தாக்குதலில் மிகுந்த போராட்டங்களுக்குப் பின் மீண்டு வந்தவரை மீண்டும் மூன்றாவது முறையாக ஓராண்டுக்கு முன் தாக்கியது புற்று நோய்.

இரண்டாவது முறை தாக்குதலில் இருந்து தப்பிய பின் வாழ்க்கையை ஓரேயடியாக வெறுத்துப் போன தமிழினியின் தாய் இறுதி முறையாக சில அறிகுறிகள் தென்பட்ட போது யாரிடமும் சொல்லவில்லை. நோய் முற்றி ஒரு வழியாக செத்துப் போனாலும் பரவாயில்லை கீமோ எடுத்துக் கொள்ள முடியாது என இருந்து விட்டார். ஆறு மாதங்களுக்கு முன் புற்று உடலின் பிற உறுப்புகளுக்கும் பரவிய பின்னர்தான் மருத்துவமனைக்குச் சென்றனர். இம்முறை புற்று மூன்றாம் நிலைக்குச் சென்று விட்டது. தமிழினியின் நீட் தேர்வுக்கு சரியாக பத்து நாட்களுக்கு முன் அவரது தாய் அங்கையர்கண்ணி இறந்து போனார்.

தமிழினி அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் படித்தாள். பன்னிரெண்டாம் வகுப்பில் 94 சதவீதம் மதிப்பெண்கள். தாயின் நோயை அருகில் இருந்து பார்த்தவள் என்பதால் மருத்துவப் படிப்பை லட்சியமாகக் கொண்டிருந்தாள். நடுத்தர வர்க்கக் குடும்பம் என்றாலும் பெரிய குடும்பம். அங்காளி பங்காளிகள் என சேர்த்தால் பெரும் கூட்டமே சேரும்.

தமிழினி முதலிரண்டு முறை நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்றாலும் அந்தக் குடும்பமும் உறவினர்களும் அவளுக்குப் பின் நின்றது. ஒவ்வொருவதும் ஐம்பதும் நூறுமாக கொடுத்து சென்னைக்கு அனுப்பி அங்கே உறவினர் வீட்டில் தங்கவைத்து படிக்க வைத்தனர். இப்போது நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதோடு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கான தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள்.

தமிழினிக்கு சென்ற வாரம் தொலைபேசினேன், “ரெண்டு வருசம் வீணாப் போச்சி அண்ணே” என்றாள். ஆனால் அதைச் சொல்லும் போது குரலில் துக்கம் ஏதும் தெரியவில்லை.

***

யோகேஷ் :

“எனக்கு இங்கே கெடைக்கலேன்னா மொரீஷியஸ் அனுப்புங்க. இல்லேன்னா இன்னொரு வருசம் ட்ரை பண்ணி பாக்கறேன். ஆனா வேற எதுவும் படிக்க முடியாது. படிச்சா இதான். இல்லேன்னா இல்ல” நான் அருளானந்தம் வீட்டுக்குப் போன போது யோகேஷ் தொண்டை புடைக்க கத்திக் கொண்டிருந்தான். அருளானந்தம் பரிதாபமாக சோபாவில் உட்கார்ந்து முறைத்துக் கொண்டிருந்தார்.

அருளானந்தம் அடிமட்டத்தில் இருந்து உழைத்து முன்னேறியவர். சித்தாளாகத் துவங்கி, மேசனாக, மேஸ்திரியாக உயர்ந்து இப்போது காண்டிராக்டராக இருக்கிறார். எப்போதும் நான்கைந்து கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்கும். எப்படியாவது தனது ஒரே மகனை கட்டிடப் பொறியாளராக்கி தான் பார்த்துப் பார்த்து உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தை அவனிடம் கொடுத்து விட வேண்டும் எனக் கனவு கண்டு கொண்டிருந்தார்.

படிக்க:
♦ நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !
♦ நீட் : தமிழக மாணவர்களை குற்றவாளிகளாக கருதும் மோடி அரசு !

“அப்பா, எவனைப் பார்த்தாலும் பி.ஈ படிக்கிறான். நானும் பி.ஈ படிச்சா எல்லாவனும் என்னைப் பார்த்து சிரிப்பான்” எனப் பேசிப் பேசி அப்பாவின் மனதைக் கரைத்தான் யோகேஷ்.

யோகேஷ் இரண்டாவது முயற்சியாக நீட் எழுதினான். முதல் முறையாக சென்ற ஆண்டு எழுதி பெயில் ஆகி விட்டான். அதன் பின் புகழ் பெற்ற ஆகாஷ் அகாடமியில் 1.5 லட்சம் கட்டி கடந்த ஓராண்டாக படித்து வந்தான். அவனது அகாடமியிலேயே இதுதான் குறைந்த மார்க் என அருளின் மனைவி (என் கல்லூரித் தோழி) தலையில் அடித்துக் கொண்டாள்.

“ரமேசு, நீயாவது வந்து அவனை எப்படியாச்சும் பேசி பி.ஈ படிக்க ஒத்துக்க வையேண்டா. இந்த தறுதலைய நினைச்சி அருளுக்கு ஒரே பிரசர். இப்ப தொழிலும் முன்னப் போல இல்ல. ரொம்ப டவுனாகிடிச்சி. அதுவும் இதுவுமா சேர்ந்து அருளு நைட்டெல்லாம் தூங்கறதே இல்ல” சங்கீதா எனக்குத் தொலைபேசியில் பேசி வீட்டுக்கு அழைத்திருந்தாள். எப்படியாவது பேசி யோகேஷை சரிக்கட்டி விடு என தொலைபேசியில் கேட்டிருந்தாள். எனக்கு யோகேஷைத் தெரியும். அவனை சம்மதிக்க வைப்பது அத்தனை சுலபம் இல்லை என்றும் தெரியும். இருந்தாலும் தோழிக்காக சென்றேன்.

“அங்கிள், உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல. தேவையில்லாம ஏன் தலையிடறீங்க? நீங்க எங்கம்மாவோட பிரண்டுன்னா அவங்களோட உங்க பஞ்சாயத்த வச்சிக்கங்க. தேவையில்லாத என் கிட்ட வேணாம்” நான் முதல் வரி பேசுவதற்கு முன்பே யோகேஷ் பொரிந்தான்.

”டேய், கொஞ்சம் பேச விடேண்டா?” என்றேன்.

“நீங்க என்ன பேசுவீங்கன்னு தெரியும். எங்கப்பா இவ்ளோ சம்பாதிக்கிறாங்க இல்ல. நான் மட்டும் தானே பையன்? எனக்கு செலவு செய்ய ஏன் கசக்குது? என்னா ஒரு…. ஒரு கோடி செலவாகுமா? வேணும்னா நான் படிச்சி ஒரே வருசத்துல சம்பாதிச்சி கொடுத்திடறேன். தரச் சொல்லுங்க” என்றவன் அவன் அறைக்குச் சென்று படீரென கதவை அறைந்து சாத்திக் கொண்டான். உள்ளே ஜஸ்டின் பீய்பரின் அலறல் கேட்கத் துவங்கவும் அருளைக் கூப்பிட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.

இருவருமாக பக்கத்து தேனீர் கடைக்கு வந்து ஆளுக்கொரு தேனீர் சொல்லி விட்டு காத்திருந்தோம். அவரே முதலில் பேச ஆரம்பித்தார்.

“எப்படியும் சீட்டு கிடைச்சிரும்னு சொல்றாங்க”

“எப்படிங்க கிடைக்கும்? இப்ப யோகேஷோட ரேங்க்கு 5 லட்சத்துக்கு மேல. எப்படிப் பார்த்தாலும் ஒரு லட்சம் சீட்டு தானே இருக்கும்? அப்புறம் எப்படி கிடைக்கும்னு நம்பறீங்க?”

“இல்லைங்க, கவர்ன்மெண்ட்ல கிடைக்காது. பிரைவேட்ல கவர்மெண்ட்டுக்கு ஒதுக்கியிருக்க சீட்டுகளுக்கும் கிடைக்காது. ஆனா டீம்டு காலேஜுகள்லயும் பிரைவேட்லயே மேனேஜ்மெண்ட் கோட்டாவுல இருக்கிற என்.ஆர்.ஐ ரிட்டர்ன் சீட்டுகளும் கிடைக்க வாய்ப்பிருக்கு. மாப் அப் ரவுண்ட்ல கிடைக்கலாம்னு சொல்றாங்க” என்றார் அருள்.

“சரி, அங்கேயும் இருக்கிற குறைந்த சீட்டுகளுக்கு நல்ல போட்டி இருக்குமில்லே? நிறைய செலவாகுமே?” சமீபத்தில் அருள் வாங்கிப் போட்ட இடம் ஒன்று கோர்ட் வழக்கில் மாட்டிக் கொண்டதில் பெரிய தொகை ஒன்று மாட்டிக் கொண்டிருந்தது. இப்போது சில லட்சங்கள் எடுப்பதே சிக்கல் என்பது எனக்குத் தெரியும்.

“வாஸ்தவம் தான். வருசத்துக்கே முப்பத்தஞ்சி வரலாம்னு சொல்றாங்க. அதிலயும் மூன்று வருட பீசையும் ஒரே தவணையா கட்டச் சொல்றாங்க”

“எப்படி சமாளிப்பீங்க?”

“எதுனா நிலத்தை விற்க வேண்டியதுதான்… இப்ப நம்ம அவசரத்தைப் பார்த்து ரொம்பவே விலையைக் குறைச்சு கேட்கிறாங்க”

“சரிங்க, இதுக்கு பேசாம யோகேஷ் மண்டைல ஒரு தட்டு தட்டி சிவில் படிக்க சொல்ல வேண்டியது தானே?”

“இல்லைங்க. அவன் பிறந்ததிலேர்ந்து கேட்டது எதையும் நான் மறுத்ததில்லே. இப்ப நான் எதுனா சொல்லப் போயி அவன் எதுனா முடிவெடுத்திட்டா? பேப்பர்ல வேற நிறைய பார்க்கிறோம் இல்ல?”

தேனீர் முடிந்து எழுந்தோம்.

***

அந்தப் பெண் (தர்ஷினி)  :

தர்ஷினி எங்கள் ஊர்தான். எங்கள் ஊரிலேயே இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தாள். அவள் அப்பா சுந்தரவேல் எனக்கு தூரத்து முறையில் அண்ணன் வேண்டும். சுந்தரத்திற்கு பக்கத்தில் உலோக உருக்காலை ஒன்றில் வேலை; ஈய உலைக்களத்தின் ஆபரேட்டர்.

கடந்த இருபதாண்டுகளாக ஈய உலைக்களத்தில் வேலை பார்த்ததில் அவரது தோல் முழுவதும் பாதிக்கப்பட்டு ஒரு வகையான சொரியாசிஸ் போல் வந்து விட்டது. கை கால்கள் எல்லாம் மீன் செதில்கள் போல் வெள்ளை நிறத்தில் திப்பி திப்பியாக இருக்கும். சென்ற ஆண்டு வேலைக்குச் சென்ற இடத்தில் மயங்கி விழுந்து விட்டார். இரத்த வாந்தியும் எடுத்திருக்கிறார்.

அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்துப் பார்த்ததில் இரத்தத்தில் ஈயத் துகள்கள் இருப்பதாகவும் அதிகபட்சம் சில ஆண்டுகள் தான் ஆயுள் என்றும் சொல்லி இருக்கிறார்கள். தர்ஷினி அப்போது பதினோராம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதியிருந்த சமயம். பத்தாம் வகுப்பில் 90 சதவீதம் வாங்கியிருந்த தர்ஷினிக்கு இயல்பாகவே பதினோராம் வகுப்பில் முதல் வகுப்பு கொடுத்திருந்தனர். எதாவது ஒரு பட்டம் பெற்றுக் கொண்டு டீச்சர் ட்ரைனிங் சேர வேண்டும் என்கிற விருப்பத்தில் இருந்த தர்ஷினி அப்பாவின் நோயைக் குறித்து அறிந்த பின் மருத்துவராவது என முடிவு செய்தாள்.

கடந்த ஓராண்டாக மிகக் கடுமையாக நீட்டுக்கு படித்து வந்தாள். தனியார் நிறுவனத்தில் பணம் கட்டிப் படிக்க வசதியில்லை. இரவு பகலாகப் படித்து 320 மதிப்பெண் எடுத்திருந்தாள். இந்த மதிப்பெண்ணுக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்காது. தனியார் கல்லூரியில் அரசுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளிலும் இடம் கிடைக்காது. தனியார் கல்லூரியின் நிர்வாகக் கோட்டா அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கிடைக்கலாம். எப்படியும் வருடத்திற்கு 12 லட்சம் வரை செலவாகலாம். தர்ஷினி மருத்துவ படிப்புக் கனவைக் கைவிடும் முடிவை எடுத்திருப்பதாகச் சொன்னார்கள். வெளியூர் சென்று விட்டு மூன்று வாரம் கழித்துதான் அவளைப் பார்க்கச் சென்றேன்.

“என்ன படிக்கப் போறே தர்ஷி..”

“நர்சிங்குக்கு அப்ளை பண்ணிருக்கேன் சித்தப்பா” அவள் முகத்தில் மெலிதான சோகம் தவிர பெரிய துக்கம் ஏதும் இல்லை.

“வருத்தமா இல்லையா தர்ஷி?..”

“எனக்கென்ன சித்தப்பா… அப்பாவுக்கு முடியாம போனா நானே பார்த்துக்கனும்னு நினைச்சேன். அவங்க கைய பாத்தீங்களா? வேற யாரும் அக்கறையா பார்த்துக்க மாட்டாங்க. இப்ப என்ன? டாக்டரா இல்லாட்டி, நர்சா இருந்து பார்த்துக்கப் போறேன். அவ்ளோ தானே?” சிரித்தாள்.

“சரிம்மா, நல்லா படி” உச்சியில் தட்டிக் கொடுத்து விட்டுக் கிளம்பினேன்.

வசீகரன்

குட்கா – போதை வஸ்துக்களை பறிமுதல் செய்த விழுப்புரம் மக்கள் அதிகாரம் !

பெங்களூரிலிருந்து – விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் பகுதிக்கு குட்கா, பான்மசாலா, போதை சாக்லேட் போன்ற போதை வஸ்துக்கள் தொடர்ந்து கடத்தி வரப்படுகிறது.

இவை அனைத்தும் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட போதை பொருள்கள். எனினும் இவை பெங்களூரிலிருந்து தினம்தோறும் சாதாரணமாக அரசு பேருந்திலேயே கடத்திவரப்படுகின்றன. இப்படி கடத்தி வரப்படுவது குறித்து பலமுறை போலீசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பவ இடத்திற்குப் போலீசு வருவதும் இல்லை, மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவுமில்லை.

பேருந்தில் கடத்திவரப்பட்ட போதைப் பொருட்கள்.

ஆகையால் இரு மாதங்களுக்கு முன் நேரடியாக குட்கா, பான்மசாலா, போதை சாக்லேட் போன்றவற்றைக் கொண்டுவந்த நபரை, மூட்டையுடன் பிடித்து வைத்து போலீசு நிலையத்திற்கு தகவல் கொடுத்தும் ‘காவலர்கள்’ யாரும் வரவில்லை.

பிறகு அந்த போதைப் பொருள் ஆசாமி, ஒரு ஆட்டோவை வரவைத்து ஏறிச் சென்றுவிட்டார். அவ்வாறு அவர் தப்பிச் சென்றவுடன், எந்த ஆட்டோவில் எடுத்து செல்கிறார்கள் என்பதையும், ஆட்டோ எண்ணுடன் போலீசு நிலையத்தில் தகவல் கொடுத்தும் ‘காவலர்கள்’ அந்த நபரைப் பிடிக்கவில்லை..

படிக்க:
ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !
♦ மாணவர்களுக்கு உடனே லேப்டாப் வழங்கு ! விழுப்புரம் பு.மா.இ.மு கலெக்டர் அலுவலக முற்றுகை !

இந்த நிலையில் கடந்த ஞாயிறு (30.06.2019) அன்று இரண்டு மூட்டை குட்கா, பான்மசாலா, போதை சாக்லேட் ஆகியவை பெங்களுரு பேருந்தில் கடத்திவரப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் சென்ற மக்கள் அதிகாரம் தோழரக்ள், அம்மூட்டைகளை பேருந்து நிலையத்திலேயே பிரித்து, மக்கள் மத்தியில் கிழே கொட்டி அம்பலப்படுத்திவிட்டு போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பிறகு இரண்டு போலிசார் அங்கு சென்று இரண்டு மூட்டை குட்கா, பான்மசாலா, போதை சாக்லேட் ஆகியவற்றைக் கைப்பற்றினர். பேருந்தில் யாருக்காக அந்த போதை வஸ்துக்கள் அனுப்பி வைக்கப்பட்டதோ, அந்த நபரைப் பிடித்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

இதுபோன்று தொடர்ந்து கடத்திவரும் குட்கா, பான்மசாலா ,போதை சாக்லேட் போன்ற போதை பொருட்களால் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், போதை பழக்கத்திற்கு தள்ளபடுகிறார்கள். இதனால் இந்த தலைமுறையே சீரழிக்கப்படுகிறது ஆகவே இந்த போதைபொருள் கடத்திவருவதை தடுக்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதிகார வர்க்கம் இதைத் தடுக்கிறதோ இல்லையோ, அதிகாரவர்க்கத்துக்கும் கிரிமினல் கும்பல்களுக்கு இருக்கும் இரகசியக் கூட்டை மக்கள் அதிகாரம், மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தும்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்.

புவாகில்பேர் : பொருளாதாரத்தின் அடிப்படை விவசாயமே | பொருளாதாரம் கற்போம் – 25

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 25

தத்துவாசிரியர்
அ.அனிக்கின்

னக்கு முன்பிருந்த பொருளியலாளர்கள் அனைவரையும் போலவே புவாகில்பேர் தன்னுடைய தத்துவக் கட்டிடத்தைச் செய்முறைக்கு – தான் முன் வைத்த கொள்கையை வலியுறுத்துவதற்கு – உட்படுத்தினார். அவர் தம்முடைய சீர்திருத்தங்களை ஒரே இணைப்பான முறையாக இருந்த அவருடைய தத்துவ ரீதியான கருத்துக்களின் அடிப்படையில் அமைத்திருந்தார். பொருளாதார விஞ்ஞானத்தை நிறுவியவர்களில் ஒருவர் என்ற முறையில் அவருடைய பாத்திரத்தை நிர்ணயிப்பது இதுவே.

அவருடைய தர்க்கரீதியான சிந்தனை பெட்டியைப் போலவே இருந்திருக்கலாம். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எது நிர்ணயிக்கிறது என்ற கேள்வியை அவர் கேட்டார்; பிரெஞ்சுப் பொருளாதாரத்தின் தேக்கம், நலிவுக்குரிய காரணங்களைப் பற்றி விசேஷமான அக்கறை எடுத்துக் கொண்டார். இந்த இடத்திலிருந்து அவர் ஒரு பொதுவான கேள்வியை நோக்கி முன்னேறினார். தேசியப் பொருளாதாரத்தை இயக்குகின்ற, அதன் வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற விதிகள் எவை?

பொருளாதாரத் தத்துவத்தில் விலைகளின் உருவாக்கத்தையும் அவை மாற்றமடைவதையும் நிர்ணயிக்கும் விதிகளைக் கண்டு பிடிக்க வேண்டுமென்ற ஆசையே அரிஸ்டாட்டில் காலம் முதலாக இருந்திருக்கிறது என்று லெனின் கூறியதை நாம் முன்பே மேற்கோள் காட்டியிருக்கிறோம். நெடுங்காலமாக நடைபெற்று வருகின்ற இந்தத் தேடலுக்கு புவாகில்பேர் தற்சிந்தனை மிக்க கருத்துரையை வழங்கினார்.

நாம் இன்று “உசிதமான விலை உருவாக்கம்” என்று சொல்லக் கூடிய கருத்து நிலையிலிருந்து அவர் இந்தப் பிரச்சினையை அணுகினார். பொருளாதார சமநிலைக்கும் முன்னேற்றத்துக்கும் மிக முக்கியமான நிபந்தனை அளவு விகிதத்திலுள்ள விலைகள் அல்லது சகஜமான விலைகள் என்று அவர் எழுதினார்.

இந்த விலைகள் எப்படிப்பட்டவை? முதலாவதாகவும் முதன்மையாகவும், ஒவ்வொரு துறையிலும் சராசரியாக உற்பத்திச் செலவுகளை ஈடு செய்து, குறிப்பிட்ட அளவு லாபத்துக்கு இடமளித்து நிகர வருமானத்தைக் கொடுக்கின்ற விலைகள் இவை. மேலும் இந்த விலைகள் பண்ட விற்பனை எத்தகைய தடையும் இல்லாமல் நடைபெறுவதற்கும் நுகர்வு செய்வோர் நிலையாக வாங்கிக் கொண்டிருப்பது நீடிப்பதற்கும் உதவுகின்றன. கடைசியாக, இந்த விலைகளின் கீழ் பணம் “அதன் இடத்தில் இருக்கும்”; அது வழங்கீடுகள் செய்வதற்கு உதவியாக இருக்குமே தவிர மக்கள் மீது கொடுங்கோன்மையான ஆதிக்கம் செலுத்தாது.

புவாகில்பேர் விலைகளின் விதியை, அதாவது சாராம்சத்தில் மதிப்பின் விதியைப், பொருளாதாரத்திலுள்ள அளவு விகிதத் தன்மையின் வெளிப்பாடு என்று விளக்கியது அந்தக் காலத்தில் முற்றிலும் புதுமையானதாகவும் துணிச்சலானதாகவும் இருந்தது. அவருடைய தத்துவத்திலுள்ள அடிப்படையான மற்ற கருத்துக்கள் இந்தக் கருத்தோடு சம்பந்தப்பட்டவையாகும். விலைகளை இப்படி அணுகியதும் பொருளாதாரத்தில் ”உசிதமான விலைகளை” ஏற்படுத்துவது எப்படி என்ற கேள்வி இயற்கையாகவே எழுந்தது. இந்த விலை அமைப்பு சுதந்திரமான போட்டி நடைபெறும் பொழுது இயற்கையாகவே வளர்ச்சி அடையும் என்று புவாகில்பேர் கருதினார்.

தானியத்துக்கு சாத்தியமான உச்ச விலைகளை நிர்ணயித்தது போட்டியிடுகின்ற சுதந்திரத்தைப் பிரதானமாக மீறியதாகும் என்று அவர் கருதினார். தானியத்தின் உச்ச விலைகளை ரத்துச் செய்தால் அதன் சந்தை விலைகள் அதிகரிக்கும்; அதன் மூலம் விவசாயிகளின் வருமானம் கூடுதலாகும்; தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்களின் தேவை அதிகரிக்கும்; அவற்றின் உற்பத்தி பெருகும். இதரவை, சங்கிலித் தொடர் போன்ற இந்த விளைவுகளினால் எங்கும் “அளவு விகித மான விலைகள்” ஏற்படுவதும் பொருளாதாரம் ஓங்கித் தழைப்பதும் உறுதியாகும்.

Laissez faire, laissez passer (1) என்ற பிரபலமான சொற்றொடரை முதலில் சொன்னது யார் என்பது இன்னும் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிற்காலத்தில் இச்சொற்றொடர் சுதந்திரமான வர்த்தகத்துக்கும் பொருளாதாரத்தில் அரசு தலையிடாமல் இருப்பதற்கும் பின்பற்றப்படும் பொன் மொழியாயிற்று; அதன் காரணமாக மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் வழிகாட்டும் கோட்பாடாயிற்று.

இதை முழுமையாகவோ பகுதியாகவோ கூறியதாக பதினான்காம் லுயீயின் காலத்தில் வாழ்ந்த பணக்கார வியாபாரியான பிரான்சுவா லெஜான்ர், மர்கீஸ் ட அர்ஜன்சோன் (1730 -க்களில்), வர்த்தக மேற்பார்வையாளரும் டியுர்கோவின் நண்பருமான வென்சான் குர்னே ஆகியோரைக் கூறுகிறார்கள். புவாகில்பேர் இந்தச் சொற்றொடரைக் கையாளாவிட்டாலும் அதிலடங்கியிருக்கும் கருத்தை மிகத் தெளிவாகச் சொன்னது அவரே. ”இயற்கைச் சக்திகளை இயங்க அனுமதிக்க வேண்டும்…” என்று அவர் எழுதினார்.

Laissez faire, laissez passer என்ற சொற்றொடருக்கு முதலாளித்துவத் தொழில்துறை உரிமையாளரின் தன்னகங்காரமான கருத்தை புவாகில்பேர் கொடுக்கவில்லை என்பதை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். பிற்காலத்தில் தான் இந்த அர்த்தம் அதற்கு ஏற்பட்டது. அவருடைய எழுத்தில் இந்தக் கருத்து மனிதாபிமான மற்றும் முக்கியத்துவமான ஏதோ ஒன்றைக் கொண்டிருக்கிறது. இயற்கைக்குப் புறம்பான வழிகளில் வருமானத்தைப் பெருக்குவதற்கு முயன்று கொண்டிருந்த பழைய அரசின் பொருளாதாரத்துக்கு மாறுபட்டிருந்த வகையில் அது மனிதாபிமானமுடையது. முதலாளித்துவ வாழ்க்கையை விடுவிப்பதற்குச் செய்யப்பட்ட முதல் முயற்சி என்ற வகையில் அது முக்கியத்துவமானது. அது எப்படிப்பட்டது என்று காட்டுவதற்காக அதை விடுவிக்க வேண்டியிருந்தது”. (2)

அதே சமயத்தில் புவாகில்பேர் அரசின் பொருளாதாரக் கடமைகளை நிராகரிக்கவில்லை. அவரைப் போல யதார்த்த உணர்வும், செய்முறைத் தன்மையும் கொண்ட ஒருவர் அவ் வாறு நிராகரிப்பதை நினைத்துப் பார்க்கவும் முடியாது.

படிக்க:
♦ உங்களுக்குத் தேவை அறிவியல்பூர்வமான கல்வியா – அய்யர்களை குஷிப்படுத்தும் கல்வியா ?
♦ உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20

அரசு – குறிப்பாக பொருத்தமான வரி விதிப்புக் கொள்கையின் உதவியோடு- அதிகமான நுகர்வையும் பொருள்களின் விற்பனையையும் நாட்டில் ஊக்குவிக்க முடியும் என்று அவர் அனுமானித்தார். நுகர்வுச் செலவு குறைகிற பொழுது பண்டங்களின் உற்பத்தியும் விற்பனையும் தவிர்க்க முடியாதபடி குறைகிறதென்பதை அவர் உணர்ந்தார். ஏழை மக்களின் ஊதியம் அதிகரித்து அவர்கள் செலுத்த வேண்டிய வரிகளும் குறைக்கப்படுகிற பொழுது அது குறையாது; ஏனென்றால் அவர்கள் தங்களுடைய வருமானங்களைச் சீக்கிரமாகச் செலவழித்துவிடக் கூடியவர்கள். இதற்கு மாறான வகையில் பணக்காரர்கள் தங்கள் வருமானத்தைச் சேமித்து வைக்கும் பழக்கம் உடையவர்களாதலால் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதிலுள்ள கஷ்டங்கள் தீவிரமடைகின்றன.

இத்தகைய கருத்துவாதப் போக்கு இனி வரப்போகும் நூற்றாண்டுகளில் பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியில் முக்கியமானதாகும். முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி மற்றும் செல்வத்தின் வளர்ச்சிக்குரிய முக்கியமான காரணிகளைப் பற்றி இரண்டு கருத்துப் போக்குகள் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தில் தோன்றின. இவை அடிப்படையில் வெவ்வேறானவையாகும். முதலாவது போக்கு, சுருக்கமாகச் சொல்வதென்றால் உற்பத்தியின் வளர்ச்சியை நிர்ணயிப்பது திரட்சியின் அளவு மட்டுமே (அதாவது சேமிப்பும் முதலீடு செய்யப்படும் மூலதனமும்) என்பது. தேவைகளைத் தீர்ப்பதற்குரிய பணவசதியைப் பொறுத்தவரை, இது “தானாகவே ஏற்படும்” என்று கூறப்பட்டது. இந்தக் கருதுகோள் பொதுவான மிகை உற்பத்தியினால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என்பதை நிராகரிப் பதற்குத் தர்க்க ரீதியாக இட்டுச் சென்றது. இரண்டாவது போக்கு, அதிகமான விகிதத்தில் உற்பத்தி வளர்ச்சி ஏற்பட நுகர்வுத் தேவை ஒரு காரணியென்று வற்புறுத்தியது. இந்தக் கருத்தின் முன்னோடியாக புவாகில் பேர் ஓரளவுக்கு இருந்தார். முதல் கருத்துக்கு மாறான வகையில் இது பொரு ளாதார நெருக்கடிகளைப் பற்றிய பிரச்சினைக்குத் தர்க்க ரீதியாக இட்டுச் சென்றது.

புவாகில்பேர்

புவாகில்பேர் “நெருக்கடிகளை” (நெருக்கடிகள் முதலாளித்துவ வளர்ச்சியின் பிந்தைய கட்டத்துக்கு மட்டுமே உரியவை என்பதால், இங்கே நெருக்கடிகளைப் போன்ற பொருளாதார நிகழ்வுகள் என்று சொல்லலாம்) மோசமான அரசாங்கக் கொள்கையோடு இணைத்தாரே தவிர, பொருளாதாரத்தின் உள் விதிகளோடு இணைக்கவில்லை என்பது உண்மையே.

சரியான கொள்கையைப் பின்பற்றினால் குறைவான தேவை மற்றும் நெருக்கடிகளைத் தவிர்ப்பது சாத்தியம் என்று அவர் சொல்வதாகக் கருதலாம்.(3) இது எப்படியிருந்த போதிலும் செல்வம், பணம், வரிகளைப் பற்றிய ஆராய்ச்சியுரை என்று அவர் எழுதிய முக்கியமான தத்துவப் புத்தகத்தில் ஒரு பொருளாதார நெருக்கடியில் என்ன நடைபெறுகிறது என்பதை அவர் தெளிவாகவும் தத்ரூபமாகவும் வர்ணிக்கிறார். பொருள்களின் பற்றாக்குறையினால் மக்கள் செத்துப் போகலாம்; அதைப் போலவே பொருள்கள் மிகவும் அதிகமாக இருந்தாலும் மக்கள் செத்துப் போகலாம்! பத்து அல்லது பன்னிரண்டு நபர்களை ஒருவருக்கொருவர் சற்றுத் தள்ளி – மரங்களோடு சேர்த்துச் சங்கிலி போட்டுக் கட்டியிருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று எழுதுகிறார். ஒருவரிடம் ஏராளமான உணவு இருக்கிறது; ஆனால் அதைத்தவிர வேறு எதுவுமில்லை.

இன்னொருவரிடம் அதிகமான துணிகளும் இன்னொருவரிடம் அதிகமான குடிநீரும் இதரவைகளும் இருக்கின்றன. ஆனால் அவர்கள் ஒருவரோடொருவர் பொருள்களைப் பரிவர்த்தனை செய்ய முடியாது. அவர்களைக் கட்டி வைத்திருக்கும் சங்கிலிகள்தான் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துகின்ற வெளிப்புறப் பொருளாதார சக்திகள். இவற்றை மனிதன் புரிந்து கொள்ள முடிவதில்லை. அபரிமிதமான பொருள்களுக்கு மத்தியில் பெருந்துன்பத்தைப் பற்றிய இந்தச் சித்திரம் இருபதாம் நூற்றாண்டை நமக்கு நினைவூட்டுகிறது. ஏழ்மையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்கின்ற பொழுதே இங்கு பால், கடலில் கொட்டப்படுகிறது; சரக்கு வண்டிகளில் இருக்கும் தானிய மூட்டைகளை வண்டிகளோடு சேர்த்து நெருப்பு வைத்து அழிக்கிறார்கள்.

படிக்க:
♦ முசுலீம்களுக்கு விடிவைத் தருமா மத்தியப் பிரதேச அரசின் பசுவதை சட்டதிருத்தம் ?
♦ இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு !

புவாகில்பேரின் கருத்து நிலை – தத்துவத்திலும் கொள்கையிலும் – வாணிப ஊக்கக் கொள்கையினரின் கருத்துக்களிலிருந்து வேறுபடுகிறது: பெருமளவுக்கு அவர்களுக்கு எதிராகவும் இருக்கிறது. அவர் பொருளாதார விதிகளை செலாவணியின் வட்டத்தில் தேடவில்லை; பொருளாதாரத்தின் அடிப்படை விவசாயமே என்று கருதி உற்பத்தியின் வட்டத்துக்குள்ளாகவே தேடினார்.

தேசத்தின் செல்வம் பணத்திலிருப்பதாக அவர் கருதவில்லை; அவர் பணத்தையும் பண்டங்களின் வடிவத்திலிருக்கும் உண்மையான செல்வத்தையும் வேறுபடுத்திக் கண்டதோடு பணத்துக்குக் கொடுக்கப்பட்ட உயர்ந்த நிலையிலிருந்து அதைக் கீழே இழுப்பதற்கு முயற்சித்தார். கடைசியாக, அவர் பொருளாதார சுதந்திரத்தை வலியுறுத்தினார். இது வாணிப ஊக்கக் கொள்கையிலிருந்து நேரடியாகவே முறித்துக் கொண்டதாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) “சுதந்திரமான உற்பத்தி, சுதந்திரமான விநியோகம்” என்பது இச்சொற்றொடரின் கருத்தாகும். 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மன் அறிஞரான ஒளகுஸ்ட் ஓன்கென், இந்தச் சொற்றொடரின் முற்பகுதி சுதந்திரமானஉற்பத்தியையும், பிற்பகுதி சுதந்திரமான வர்த்தகத்தையும் குறிப்பிடுகிறது என்ற கருத்தை வெளியிட்டார்.

(2) K. Marx, F. Engels, Historisch-kritische Gesamtausgabe, Werke, Schriften, Briefe, Moskau u. a., Abt. I, Bd, 3, S. 575.

(3) இந்தப் பிரச்சினை பற்றி புவாகில்பேரின் கருத்துக்கள் அரைகுறையாகவும் முரண்பாடுடைய தாகவும் இருக்கின்றபடியால் பொருளாதாரச் சிந்தனை வரலாற்று ஆசிரியர்கள் அவருடைய பாத்திரத்தைப் பற்றி மாறுபட்ட கருத்துக்களைக் கூறுகிறார்கள். சுதந்திரமான போட்டிச் சூழ்நிலையில் நெருக்கடிகள் ஏற்பட முடியாது என்பது புவாகில்பேரின் கருதுகோளின் பொருள். எனவே “பொருள்களின் சுதந்திரமான பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பில் பொருள்களின் மிகை உற்பத்தி என்ற பொதுவான நிலை ஒரு போதும் இருக்க முடியாது என்று ழான் படீஸ்ட் ஸேய் கூறியதாகச் சொல்லப்படும் பிரபலமான ”சந்தைகளின் விதியை” புவா கில்பேரின் கருத்து (முன்னமேயே கொண்டிருக்கவில்லை யென்றால்) தயாரித்தளித்தது” என்று பிரெஞ்சுப் பொருளியலாளரான அன்ரீ டெனிஸ் எழுதுகிறார் (H, Denis, Histoire de la pensie economique, Paris, 1967, p. 151), ஷம் பீட்டர் இதற்கு மாறான கருத்தைக் கூறுகிறார். புவாகில்பேர் நுகர்வோர் தேவை குறைவதும் மிகை சேமிப்பும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நிலையான தன்மைக்கு ஆபத்தானதாகவும், நெருக்கடிகளுக்கு அது காரணமென்றும் கருதினார்; எனவே அவர் “ஸேயின் விதியைக்” குறை கூறுபவர்களுக்கு, குறிப்பாகக் கெய்ன்சுக்கு ஒரு முன்னோடி என்று வலியுறுத்துகிறார். (3, Schumpeter, History of Economic Arnalysis, p. 285-287).

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

இத்தாலியப் பெருமுதலாளிகளின் கட்சியாக மாறிய பாசிஸ்டுக் கட்சி !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 18

டோக்ளியாட்டி

பாசிஸ்டுக் கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் பற்றி இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்.

பூர்ஷுவாக்களில் மிகவும் பிற்போக்கான பகுதியினரின் பகிரங்கமான சர்வாதிகாரத்தை ஆரம்பத்தில் எதிர்த்து வந்த இத்தாலிய குட்டி பூர்ஷுவா மற்றும் மத்தியதர பூர்ஷுவா அணிகளுக்குள் ஏற்பட்ட மோதல்கள், முரண்பாடுகளிலிருந்துதான் பிரதானமாக இந்த நெருக்கடிகள் தலைதூக்கின.

இத்தாலிய பாசிசத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை இதர இயக்கங்களுக்கு உதாரணமாக ஜெர்மன் பாசிசத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிகளுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது. அங்கெல்லாம் மத்தியதர வர்க்கத்தினர், வேலையில்லாதோர் போன்றோரின் அதிருப்தி நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதில் மிகப் பெரும் பங்காற்றி இருக்கிறது. இத்தாலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் இத்தகைய தன்மை கொண்டவை அல்ல. அச்சமயம் உழைக்கும் வெகுஜனப் பகுதியினர் பாசிஸ்டுக் கட்சியில் இடம் பெற்றிருக்கவில்லை.

இத்தாலியில் பாசிஸ்டுக் கட்சியில் கலகக் கொடி தூக்கியவர்கள் ஸ்தல பாசிஸ்டுக் கட்சி அமைப்புகளின் குட்டி பூர்ஷுவா தலைவர்களும், பாசிஸ்டு சர்வாதிகாரம் அளவுக்கு மீறி தந்த நிர்ப்பந்தத்துக்கு ஆளான கிராமப்புறக் குட்டி பூர்ஷுவா வெகுஜனப் பகுதியினரும்தான். இதனால் அதிருப்தி பெருகி, ரோம் படையெடுப்புக்குப் பிறகு பாசிசத்தின் உள்ளூர் அமைப்புகளில் பிளவு வெடித்தது.

நம்முடைய முன்னாள் தோழர் பாஸ் குயினி 8 1925-27-ம் வருடங்களில் தோன்றிய நெருக்கடிகளைப் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் இது சம்பந்தமான விவரங்களைக் காணலாம்.

ரோம் பேரணி.

உதாரணமாக ஃபோர்னியை எடுத்துக் கொள்வோம். இவர் யுத்தப் பிற்காலத்தைச் சேர்ந்த கோபாவேசமிக்க ஒரு குட்டி பூர்ஷுவா: கிராமப்புற முதலாளிகளிடமிருந்து கைக்கூலி பெற்றவர். அப்படியிருந்தும் இத்தாலிய அரசியல் வாழ்க்கையில் தமக்கு ஒரு மிகப் பெரும் பங்கு இருப்பதாக மனக்கோட்டைக் கட்டிக் கொண்டவர். சாலா, மிசூரி போன்றோரும் இதே வகையைச் சேர்ந்தவர்களே 9, ஒவ்வொரு பாசிஸ்டு அமைப்பிலும் ஒரு கலகத் தலைவன் இருந்தான். அவன் கிளர்ச்சி செய்யவும் குழப்பம் விளைவிக்கவும் சதி செய்து வந்தான். நெருக்கடிகளைத் தூண்டிவிட்டு வந்தான்.

எனினும் எல்லோரும் இவ்வாறு செய்தார்கள் என்று கூற முடியாது. மிகப்பலர் அரசு எந்திரத்திலும் பூர்ஷுவாக்களின் பொருளாதார எந்திரத்திலும் மூழ்கிப் போயிருந்தனர். தீர்மானமான வழிகாட்டும் நெறிகளைக் கொண்டிராத காப்பீட்டுக் கழகங்கள் போன்ற பெரிய கார்ப்பரேஷன் நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆவதற்கு பாசிஸ்டுகள் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற பல ஊழல்கள் நடைபெற்றன. பெரிய நிறுவனங்களில் பாசிஸ்டுகளின் பெருமளவிலான ஊடுருவலே இதற்குக் காரணம், அங்கு அவர்கள் மோசடிகள் புரிந்தும், தில்லு முல்லுகள் செய்தும், களவாடியும் பெரிய முதலாளிகள் ஆவதற்கும், பொருளாதாரத் துறையில் முக்கிய பங்கேற்பதற்கும் பெரும் பிரயத்தனம் செய்து வந்தார்கள். இது மிக முக்கியமானது. ஏனென்றால், பாசிஸ்டுக் கட்சி இத்தாலியப் பெருமுதலாளிகளின் கட்சியாக மாறிவந்து கொண்டிருப்பதை இது பிரதிபலிக்கிறது.

தனிப்பெரும் கட்சியாக இருந்தும் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று விரும்பினால், பாசிசம் இந்தக் கலகப் போக்குக்கு முடிவு கட்டுவது இன்றியமையாததாயிற்று. எனவே, முசோலினி இந்தப் பணியில் முனைந்து ஈடுபட்டார்; பாசிஸ்டுக் கட்சி அணிகளை மாற்றத் தீர்மானித்தார். இந்தச் சமயத்தில்தான் முசோலினி இந்தக் கண்டோட்டத்தை உருவாக்கிக் கொண்டார்; எந்தக் கட்சி அணிகளின் உதவியோடு அதிகாரம் கைப்பற்றப்பட்டதோ அதே அணிகளைக் கொண்டு கட்சி அதிகாரத்தை பாசிஸ்டுக் கட்சி தக்கவைத்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்தார்.

மிசூரி (Alfredo Misuri)

பழைய அணிகளுக்கு எதிரான போராட்டம் எளிதானதாகவோ, ஒரே மாதிரியானதாகவோ இல்லை. இந்த அணிகள் பல்வேறு குழுக்களுடனும் அடிமட்ட ஊழியர்களுடனும் பின்னிப் பிணைந்திருந்தன. பாசிஸ்டுக் கட்சியின் இயைபைப் பரிசீலித்துப் பார்த்தோமானால், 1927 இல்தான் அணிகளின் உண்மையான மாற்றம் ஏற்பட்டது எனலாம். இப்போது 1919 ஆம் வருட அணிகள் இல்லை. மாறாக கிராமப்புற முதலாளிகளும் தொழிலதிபர்களும், முதலாளிகளின் புதல்வர்களான மாணவர்களும், பூர்ஷுவாக்களின் பொருளாதாரக் கட்டமைப்பில் தலைவர்களாக உயர்ந்த பாசிஸ்டுகளும்தான் இருந்தனர். அணிகளை மாற்றும் இந்தப் பணி 1927 ஆம் ஆண்டில் பூர்த்தியடைந்தது. எனினும் பிரச்சினை மிகவும் கடுமையானதாக இருந்தது. இந்தப் பிரச்சினை குறித்து பாசிஸ்டுக் கட்சியில் உக்கிரமான போராட்டம் நடைபெற்றது. சித்தாந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, கட்சியின் பாத்திரம் குறித்த பிரச்சினையை மையமாகக் கொண்டு இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஸ்தாபனக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, கட்சியை யார் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டம் நடைபெற்றது.

பாசிஸ்டுக் கட்சியின் பாத்திரத்தையும், அரசுடனான உறவில் அதற்குள்ள நிலைப்பாட்டையும் வரையறுக்கும் முதல் பிரச்சினை மிக முக்கியமானது. ஏனென்றால் இது சம்பந்தமான போராட்டத்தின் விளைவாக இந்தப் பிரச்சினையில் முற்றிலும் வேறுபட்டதொரு கண்ணோட்டம் உருவாயிற்று.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

8. பாஸ்குனி ஸ்கான்டினோ டிவின்ஸ்குல்லியின் நாம் டி குயூர்ரேயாக இருந்தார், இப்பொழுது இக்னாஸியோ சிலோனி என்று வழங்கப்படுகிறார். இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சியின் மத்தியக் கமிட்டியிலிருந்து 1930 இல் சில்லோனி நீக்கப்பட்டார். 1931 ஜூலையில் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார். நிபுணத்துவம் பெற்ற ஒருவர் என இவரை பற்றி டோக்ளியாட்டி குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சி தரும் தன்மை வாய்ந்ததாக இருக்கலாம்.

சீசாரே போர்னி (Cesare Forni)

9. பாசிஸ்டுக் கட்சியின் பல்வேறு முரண் கூறுகளையுடைய அடித்தளத்திலுள்ள முரண்பாடுகள் ரோம் படையெடுப்பையடுத்து உடனடியாக எதிரும் புதிருமாகச் செயல்படும் போக்குகளை ஏற்படுத்தின. பழைய போக்குடைய தேசியவாதிகள், மன்னராட்சி ஆதரவாளர்கள் ஒரு புறம், கட்சியின் சர்வாதிகாரத்தின் கீழ் அரசு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று விரும்பிய குட்டி பூர்ஷுவாக்கள் மறுபுறம் – இவர்களுக்கு இடையே ஜால வித்தைகள் செய்து, இவற்றை ஈடு செய்ய முசோலினி முயன்றார். “சகஜநிலைமை வாதிகளுக்கும்” “வளைந்து கொடுக்காதவர்களுக்கும்” இடையேயான நெருக்கடி 1923 மே மாதம் உச்சகட்டத்தை அடைந்தது. தத்துவார்த்த வேலைத்திட்டம் பற்றி பதப்பிரயோகங்கள் உபயோகப்படுத்தப்பட்டாலும் இந்தத் தகராறுக்கு பின்னால் பல்வேறு பிரிவின் தலைவர்களிடையே இருந்த சுயநல ஆசையும் அவர்களிடையே இருந்த உட்பகையும் வெளிவந்தன. சகஜ நிலை திரும்பவேண்டும் என்பதை அளவுக்கு அதிகமாக அனுமதித்ததாக கருதிய முசோலினி, தற்காலிகமாக வளைந்து கொடுக்காதவர்கள் பக்கம் சாய்ந்தார்.

படிக்க:
மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !
ஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை !

ஸ்குவாட்ரிஸ்டியில் உயர் மட்டத்தில் இருந்த சீசாரே போர்னியும் ரெய்மோன்டோ சாலாவும் வடமேற்கு இத்தாலியில் உள்ள பெரிய நிலவுடமையாளர்களின் கையாட்களாக (அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு) இருந்தனர். பாசிஸ்டு ஆதரவாளர்களான அரசியல்வாதிகளுடன் சமரசம் செய்து கொள்வதை எதிர்த்தார்கள். அல்பிரிடோ மிசூரி பெருகியாவில் பி.என்.எப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு பாசிஸ்டு தேசியவாதிகள் இணைப்பு ஏற்பட்டவுடன் அதில் மீண்டும் சேர்ந்தார். பி.என்.எப் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதையும் சாதாரண நிர்வாகப் பணிகளில் தலையிடுவதையும் கண்டித்து 1923 மே 29 இல் மிசூரி ஒரு உரை நிகழ்த்தினார். அதற்கு சில மணி நேரங்கள் கழித்து முசோலினியால் அனுப்பப்பட்ட ரெளடிகளால் அவர் தாக்கப்பட்டார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

உங்களுக்குத் தேவை அறிவியல்பூர்வமான கல்வியா – அய்யர்களை குஷிப்படுத்தும் கல்வியா ?

8

மும்மொழிக் கொள்கை எனும் பாழுங்கிணறு

வில்லவன்
புதிய கல்விக்கொள்கை குறித்த உரையாடல்களில் முதலாவதாக இருந்தது இந்தி கட்டாயம் எனும் அம்சம்தான். அது பற்றிய நீண்ட விவாதங்கள் தமிழகத்தில் பல்லாண்டு காலமாக தொடர்கின்றன. இந்தி வேண்டாம் என்பதற்கு நீங்கள் என்ன தர்க்கபூர்வமான வாதங்களை வைத்தாலும் இந்தி ஆதரவாளர்கள் அல்லது இந்துத்துவ ஆதரவாளர்கள் வைக்கும் எதிர்வாதம் இவை மூன்று மட்டுமே..

இந்தி படிக்காததால் நம்மவர்களுக்கு வட இந்தியாவில் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பறிபோகின்றது.

திமுக கட்சிக்காரர்கள் இந்தி படிக்கிறார்கள். நம்மை படிக்க விடாமல் தடுக்கிறார்கள்.

கூடுதலாக ஒரு மொழியைக் கற்பது நல்லதுதானே?

இந்தி ஆதரவு கும்பலை இயக்குவது இவைதான். நிச்சயமற்ற எதிர்காலம் குறித்த அச்சம் (ஒருவேளை இந்தி படிக்காததால் என் பிள்ளையின் எதிர்கால வாய்ப்பு பறிபோய்விட்டால்?)

தாராளமயம் மக்களிடையே வளர்த்தெடுத்திருக்கும் வயிற்றெரிச்சல் (ஒருவேளை ஹிந்தி படிச்சு பக்கத்து வீட்டுக்காரன் பிள்ளை மட்டும் நல்ல வேலைக்கு போய்விட்டால்?)

தாராளமயத்தின் கள்ளக்காதலியான மத அடிப்படைவாதம் வளர்த்திருக்கும் பிறமத எதிர்ப்புணர்வு (கிருஸ்தவ ஆங்கிலம் வேணும் ”நம்ம” மொழி வேணாமோ??)

மதவெறி மற்றும் மிடில்கிளாஸ் வயிற்றெரிச்சல் ஆகியவற்றின் கூட்டுவிளைவுதான் திராவிட / தி.மு.க. வெறுப்பு. அதன் பின்னணியில் ஊழல் மீதான கசப்புணர்வு இருப்பதாக நீங்கள் கருதினால் அது கபடத்தனமானது அல்லது உச்சகட்ட பாமரத்தனமானது. உயர்சாதிகளின் ஊழல் குறித்து இந்திய பொது சமூகத்துக்கு எந்த அசூயையும் இருந்ததில்லை. தங்களை ஒதுக்கிவிட்டு சூத்திரகும்பல் ஒன்றால் ஆளமுடிகிறதே எனும் கடுப்பும் (ஊழலில்) தங்கள் பங்கையும் சேர்த்து அவர்கள் தின்கிறார்களே எனும் பொச்சரிப்புமே பார்ப்பன கும்பலின் தி.மு.க. வெறுப்பை கட்டமைக்கிறது. இந்துமத அடிப்படைவாதத்திற்கு பெரிய வழிகாட்டும் நெறிமுறைகள் கிடையாது. பார்ப்பன நலன் என்பது மட்டுமே அதன் ஆதாரம். ஆகவே அவர்களின் உணர்வை தங்களை இந்து என அடையாளப்படுத்திக் கொள்ளும் எல்லோரும் பற்றிக்கொள்கிறார்கள்.

அதனால்தான் இந்த கும்பலின் வெறுப்பு அ.தி.மு.க.வை அதிகம் அண்டுவதில்லை. அண்ணாதுரை அரசியலுக்கு வெளியே சம்பாதிக்கும் வாய்ப்பு அதிகம் இருந்தது. சினிமா, நாடகம், பேச்சு என பல திறமைகளின் வழியே அவர் வருமானம் பெற வாய்ப்பிருந்தது. அவர் மிக எளிமையாகவே வாழ்ந்தார், கடனோடுதான் செத்தார். இத்தகைய கூடுதல் அடையாளம் ஏதும் காமராஜருக்கு இல்லை. ஆனாலும் எளிமையானவர் என்பதற்கு இலக்கணமாக காமராஜர் மட்டுமே இன்றளவும் வலிந்து திணிக்கப்படுகிறார். ஏன்? காமராஜர் பார்ப்பனர்களின் பங்கில் கைவைக்கவில்லை. அண்ணாதுரை அதோடு மோதினார். யார் எளிமையானவர் என்பதில் தொடங்கி எது நல்ல பாடத்திட்டம் என்பது வரைக்கும் எல்லாவற்றிலும் பார்ப்பனர்களின் விதி அசிங்கமான சுயநலம் கொண்டது. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்தி ஆதரவும்.

படிக்க:
குழந்தைகளை அடிக்காத பள்ளிகள் சாத்தியமா ? | வில்லவன்
ஆங்கில மோகத்திற்கு பலியிடப்படும் அறிவுத்திறன் – ஒரு கள ஆய்வு !

இதில் நடுத்தர வர்க்கத்தின் பார்வை கொஞ்சம் மாறுபட்டது. அவர்களுக்கும் ஊழல் ஒரு சிக்கலில்லை. இன்னும் சொல்வதானால் ஊழலை ஒரு திறமையாக பார்க்க கற்றுக்கொண்ட கும்பல் இது. நம்மை ஒத்த மனிதர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்களே எனும் வயிற்றெரிச்சல் சில சமயங்களில் அவர்களிடம் ஊழல் எதிர்ப்பாக வெளிப்படுகிறது. அதனை எதிர்கொள்ள வெறுமனே தி.மு.க. எதிர்ப்பை முன்வைக்க முடியாது (மேற்சொன்ன விதிப்படி அ.தி.மு.க.வும் அவர்கள் வெறுப்பு பட்டியலில் வருகிறது). ஆகவேதான் சங்கி கும்பல் வேறு வழியில்லாமல் திராவிட கட்சிகள் எனும் பொதுப்பதத்தை பயன்படுத்துகிறது.

தலைப்புக்கு வரலாம், இன்றைய பள்ளிச்சூழலை பரிசீலித்துப் பார்த்தாலே இந்தி மொழியை ஒரு கூடுதல் பாடமாக வைப்பது நீண்டகால அடிப்படையில் எத்தனை அபத்தமானது என்பதும் குறுகிய கால எல்லைக்குள்ளே அதன் தாக்கம் எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் விளங்கிக்கொள்ள முடியும்.

ஆரம்பக்கல்வி ஏற்கனவே அதீத சுமையானதாக இருக்கிறது இப்போது. எல்லா தனியார் பள்ளிகளிலும் இந்தி ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. அதனால் இந்தியை உண்மையில் கற்றுக்கொண்ட மாணவர்கள் யாரையும் நான் பார்த்ததில்லை. கடந்த மூன்றாண்டுகளில் 600-க்கும் மேலான குழந்தைகளோடு தனிப்பட்ட உரையாடலை மேற்கொண்டிருக்கிறேன். மூன்றாயிரத்துக்கும் மேலான பிள்ளைகளோடுதான் தினசரி பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். அந்த அனுபவத்தில் இருந்து சொல்வதானால், மூன்றாவது மொழி ஒரு தேவையில்லாத ஆணி. அது உங்கள் பிள்ளைகளின் நேரத்தைக் கொன்று அறிவுத்திறனை மந்தமாக்கும். ஹிந்தி விழுங்கும் நேரத்தை மிச்சப்படுத்தினால் அந்த நேரத்தை ஏனைய பாடங்களுக்கு கொடுக்க இயலும்.

இப்போது தனியார் பள்ளிகளில் வாரம் இரண்டு அல்லது மூன்று பீரியட்கள் மட்டுமே ஹிந்தி வகுப்புக்கு தரப்படுகிறது. அதற்கு தேர்ச்சி கட்டாயமில்லை என்பதால் பெரிய பிரச்சினை இப்போது இல்லை. ஆனால் அதன் தேர்ச்சி கட்டாயம் எனும்போது பாடவேளைகள் அதிகமாகும். இப்போதே கணக்கு மற்றும் அறிவியலில் மாணவர்களின் அடைவுத்திறன் குறைவாக இருக்கிறது. ஆகப்பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களை பதில் எழுதவைக்கும் அளவுக்கு தயாரிப்பதையே கல்வி என விளங்கிக்கொண்டிருக்கின்றன. பெற்றோர்களுக்கும் அதுவே போதுமானதாக இருக்கிறது. இந்த அழகில் இந்தி கட்டாயம் எனும் சூழல் வந்தால் அது அறிவியல் புலத்தின் அடைவுத்திறனை இன்னும் சிதைக்கும். உங்கள் பிள்ளை மூளை உண்மையாக வளரவேண்டுமா இல்லை நாள்பட்ட சாணி வறட்டியாவது போன்ற வளர்ச்சி வேண்டுமா என்பது பெற்றோர்கள் முடிவெடுத்தாக வேண்டிய அவசர சூழல் இது.

பள்ளிப் பருவத்திலேயே சில மாணவர்கள் ஹிந்தியை கற்றுக்கொள்கிறார்களே என நீங்கள் கேள்வி எழுப்பலாம். மிகச்சிலருக்கு அது சாத்தியமாகும்தான். அதில்  பெரும்பான்மையோர் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களாக இருப்பர் அல்லது அம்மொழியை தனியே கற்றுக்கொள்பவர்களாக இருப்பர். மேலும் எல்லா இடங்களிலும் ஒருசில மாணவர்களுக்கு மொழியை கற்றுக்கொள்ளும் திறன் கூடுதலாக இருக்கும். சிலருக்கு ஓவியம் சிறப்பாக கைவருவதைப்போன்றதுதான் இது. இரண்டு அல்லது மூன்று சதவிகிதம் மாணவர்களுக்கு சாத்தியமாவதை ஒரு அளவீடாக வைத்து அது எல்லோரிடத்திலும் எதிர்பார்ப்பது அபத்தம். இந்தியா எப்போதும் மூன்று சதவிகிதம் மக்களுக்காவே சிந்திக்கும். அதனை நீங்களும் கண்மூடித்தனமாக நம்பி உங்கள் பிள்ளைகளின் கல்விக்கு வாய்க்கரிசி போடப்போகிறீர்களா என்பதே எங்கள் கேள்வி.

இந்தி காட்டாயமாகும் சூழல் எப்படியிருக்கும் என்பதை பரிசீலிக்கலாம்,

♦ கூடுதல் பாடவேளைகள் இந்திக்கு பகிரப்படும். இப்போது தமிழை எழுதவே அனேக பள்ளிப் பிள்ளைகள் சிரமப்படுகிறார்கள். அதோடு இந்தி மொழியும் ஒரு அதீத சுமையை மாணவர்களுக்கு உருவாக்கும்.
♦ இதனால் பெரும்பான்மை மாணவர்களின் கற்றல் திறன் இன்னும் சிதையும்.
♦ நம்மில் பலருக்கு இந்தி தெரியாது. ஆகவே அந்த மொழிக்கு ஒரு தனிப்பயிற்சி வைக்க வேண்டும். வழக்கம்போல மற்ற பாடங்களுக்கும் தனிப்பயிற்சி வைப்பீர்கள். ஆகவே நாளொன்றுக்கு 12 மணிநேரத்துக்கும் அதிகமாக ஒரு சராசரி மாணவன் படிப்புக்கு மட்டும் செலவிட வேண்டும். இது அவர்கள் மனநல சமநிலையை குலைக்கும். பிறகு அதுவும் உங்கள் செலவுக்கணக்கில் ஏறும்.
♦ ஐந்து, எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு என பொதுத்தேர்வுகள் வரிசை கட்டி வரவிருக்கின்றன. இவை எல்லாவற்றிலும் உங்கள் பிள்ளை மூன்று மொழிப்பாடங்கள் மற்றும் ஏனைய அடிப்படைப் பாடங்களில் தேற வேண்டும். மதிப்பெண் வெறி ஏற்றப்பட்ட மத்தியதர வர்க்கத்தை முழு பைத்தியமாக்க இந்த ஒரு அம்சமே போதுமானது.
♦ இந்தி விழுங்கிய நேரம் போக மீதமிருக்கும் நேரம் அறிவியல் கணிதத்திறனை குறைக்கும் ஆகவே உங்கள் பிள்ளைகளின் போட்டித்தேர்வு கனவுகளுக்கு எள்ளும் தண்ணீரும் தெளிக்க வேண்டியதுதான்.
♦ அதே நேரம் ஒரு உ.பி. மாணவனுக்கு இந்தி ஆங்கிலம் என இரண்டே மொழிகள்தான் படிக்க வேண்டியிருக்கும். அதிலும் அவர்கள் பள்ளித் தேர்வு நடத்தும் அழகை உலகமே அறியும். ஆக, இந்தி பெல்ட் உயர்சாதி / பணக்கார மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் மட்டும் கவனம் செலுத்தி இந்தியா முழுக்க இலகுவாக சிறந்த உயர்கல்வி பெறுவார்கள். முக்கி முக்கி மூன்று மொழிகள் படிக்கும் உங்கள் பிள்ளைக்கு ஜெய் ஸ்ரீராம் சொல்லச்சொல்லி அடிக்கும் ரவுடி கும்பலில் இடம் கிடைக்கும்.

இன்றைய கல்வித்துறைக்கு தேவைப்படும் சீர்த்திருத்தங்கள் மலையளவு இருக்கின்றன. அவற்றை செய்யவே நமக்கு இன்னும் இருபதாண்டுகள் பிடிக்கும் (அதனை இலக்கு வைத்து செயல்பட்டால் மட்டும்). அதில் பா.ஜ.க.வைப்போல ஒரு சாதியின் நலனுக்கான கட்சி கைவைத்தால் நாம் கற்காலத்துக்குத்தான் போவோம். குறுகிய கால அடிப்படையில் பார்த்தாலும் நீண்டகால அடிப்படையில் பார்த்தாலும் மூன்று மொழிகளை படிப்பதால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்று எதுவுமே இல்லை. ஆனால் குறுகிய கால மற்றும் நீண்டகால ஆபத்துக்கள் என் ஏராளமானவற்றை பட்டியலிட இயலும்.

மேலும் அறிவியல்பூர்வமான கல்வி என்பது  கற்றல் களத்தை இன்னும் எளிமையாக்க வேண்டும். மும்மொழிக்கொள்கை கற்றலை எளிமையாக்காது என்பதை வேலை மெனக்கெட்டு விளக்க அவசியமில்லை. உங்களுக்குத் தேவை அறிவியல்பூர்வமான கல்வியா அல்லது அய்யர்களை குஷிப்படுத்தும் கல்வியா என்பதை தீர்மானியுங்கள். கடந்த 15 ஆண்டுகளில் நம் கண்ணெதிரே கல்விச்சூழல் சீரழிந்திருகிறது. அற நோக்கில் பார்த்தாலும் தரம் எனும் கோணத்தில் பார்த்தாலும் இதுதான் நிலைமை. அது முற்றாக சிதையாமல் இருக்க புதிய கல்விக்கொள்கை – மும்மொழிக் கொள்கையை எதிர்த்து களமிறங்குவதே இறுதி வாய்ப்பு.

இதே கல்வி முறைதானே அய்யர் வீட்டு பிள்ளைகளுக்கும் கிடைக்கப்போகிறது என பார்ப்பன தாசர்கள் தட்டை தூக்கிக்கொண்டு வரக்கூடும். அதற்கான பதில்: இது பணக்காரர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான நாடு. அவர்களுக்கு இனாமாக கிடைக்கும் பல விசயங்கள் உங்களுக்கும் எனக்கும் காசு கொடுத்தால்கூட கிடைக்காது. கபாலி கோயிலுக்கு காவல் நிற்கும் போலீஸ்காரர் வார்த்தையில் வெளிப்படும் மரியாதை மாரியம்மன் கோயில் திருவிழாவில் காவல் நிற்கும் போலீசின் வார்த்தையில் வெளிப்படாது. அவர்களால் திறக்க முடியாத கதவுகளே இந்த அதிகார கட்டமைப்பில் இல்லை. இந்திய அரசு எந்திரம் எனும் மிருகம் அவர்களைக் கண்டால் காலை நக்கும் நம்மைக் கண்டால் குரல்வலையை கடிக்கும். இங்கே எல்லோரும் சமம்தான் என நம்புவதே உங்கள் பிள்ளைகளுக்கு இழைக்கும் தீங்குதான். உங்களுக்கான விதிகளை அவர்கள் வகுக்கும்போதே தங்களுக்கான விதிவிலக்குகளையும் அவர்கள் உருவாக்கியிருப்பார்கள்.

அப்பட்டமான சுயநலத்தோடு இப்பிரச்சினையை நோக்கினாலும் நீங்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராடிதான் ஆகவேண்டும். காரணம் அது உங்கள் நேரம், உழைப்பு, பணம் என எல்லாவற்றையும் தின்றுவிட்டு உங்களுக்கு கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளை வேறொரு பிரிவு மக்களுக்கு கொடுக்கவிருக்கிறது.

படிக்க:
கும்பல் வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி முசுலீம்கள் போராட்டம் !
இந்திய நாடு, அடி(மை) மாடு !

போராடினால் மட்டும் என்னவாகிவிடப்போகிறது என்ற கேள்வி அபத்தமானது. இன்று நாம் அனுபவிக்கும் பெரும்பான்மை உரிமைகள் போராட்டத்தின் வழியே நமக்கு கிடைத்தவையே. இன்றளவும் போராட்டங்கள் அதற்கான வலுவை உலகெங்கிலும் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியே போராட்டங்களால் பலன் இல்லை என்பவர்கள் வாதப்படி பார்த்தாலும், தன் பிள்ளைகளின் அழிவைத் தடுக்கக்கூட முயலாத பெற்றோர்கள் எனும் அவப்பெயரைக் காட்டிலும் தோற்றுப்போகும் போராட்டம் மேலானதில்லையா?

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

முசுலீம்களுக்கு விடிவைத் தருமா மத்தியப் பிரதேச அரசின் பசுவதை சட்டதிருத்தம் ?

1

சுக்குண்டர்களின் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர, பசுவதை தடுப்புச்சட்டத்தில் திருத்தங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது மத்தியப் பிரதேச அரசு.

மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், கடந்த புதன்கிழமை இந்த சட்டத் திருத்த முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தத்தின்படி வன்முறையில் ஈடுபடும் பசுக் குண்டர்களுக்கு ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ.25,000 முதல் ரூ. 50,000 வரை அபராதமும் விதிக்க முடியும்.

மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்

தொடர்ச்சியான குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை இரட்டிப்பாக்குவதற்கான வாய்ப்பும் இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பசுக்குண்டர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சமீபத்தில் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இச்சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலர் மனோஜ் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றம், சமூகத்தில் கும்பல் வன்முறைகளை அனுமதிக்க முடியாது என்றும், கும்பல் கொலைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொருத்தமான சட்டப் பிரிவுகளை இயற்றும்படியும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் வன்முறை நடத்தும் கும்பல் வன்முறையாளர்கள் மற்றும் உடைமைகளைச் சேதப்படுத்துபவர்களையும், இச்சட்டத் திருத்தத்தின் கீழ் தண்டிக்க முடியும்.

மேலும் இச்சட்டத் திருத்தத்தின்படி கால்நடைகளை எடுத்துச் செல்லும் நபர்கள், அருகில் உள்ள துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற்று அதற்கான ஆவணங்களை உடன் கொண்டு செல்லவேண்டும் என்றும் ஸ்ரீவத்சவா கூறினார்.

படிக்க:
♦ பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா !
♦ இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !

இது ஒருபுறமிருக்க, மத்தியப் பிரதேசத்தின் கால்நடைத்துறை அமைச்சர் லகான் சிங் யாதவ், “பெரும்பாலான கால்நடை வணிகர்கள் தங்களுடன் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வதில்லை. அவர்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்கிறார்களா அல்லது மாட்டை வெட்ட எடுத்துச் செல்கிறார்களா என்பது தெரியாததால்தான் பசுப் பாதுகாவலர்களால் தாக்கப்படுகின்றனர். மாஜிஸ்திரேட்டிடமிருந்து பெறப்படும் ஆவணங்கள் பசுப் பாதுகாவலர்களைத் திருப்திப்படுத்தும்” என்று கூறியிருக்கிறார்.

அதாவது, இவ்வளவு நாட்களாக இந்தியா முழுவதிலும் நடந்த பசுக்குண்டர்களின் வன்முறைக்கு முறையான ஆவணம் இல்லாததுதான் காரணம் என்பது போலவும், இப்போது ஆவணங்கள் இருந்தால் பசுக்குண்டர்கள் பிரச்சினை ஏதும் செய்யமாட்டார்கள் என்றும் கூறுகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்த அமைச்சர்.

அரியானாவில் கடந்த 2017-ம் ஆண்டில் பசுக்களை தனது பால்பண்ணைக்கு வாங்கிக் கொண்டு வந்த முதியவர் பெஹ்லுகானை, அவரிடம் வாங்கி வந்ததற்கான ஆவணம் இருந்தும் அவரை அடித்தே கொன்றது.

இந்துத்துவக் கும்பலின் நோக்கம் பசுப் புனிதத்தை வைத்து நாட்டைக் கலவர பூமியாக்குவதுதானே ஒழிய, பசுவைப் பாதுகாப்பது அல்ல என்பது நன்கு தெரிந்துமே, மத்தியப் பிரதேசத்தின் காங்கிரசு அமைச்சர், பசுக் குண்டர்களை ஒன்றும் தெரியாத அப்பாவிகளாகவும் பசுப் பாதுகாவலர்களாகவும் சித்தரிக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தில் பதவியேற்று இரண்டே மாதத்தில் அதாவது கடந்த பிப்ரவரி மாதத்தில், பசுவைக் கொன்றதாகக் குற்றச்சாட்டப்பட்ட மூன்று முசுலீம்களை  “தேசியப் பாதுகாப்புச்சட்டத்தின்” கீழ் கைது செய்திருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசு.

கடந்த 2007 – முதல் 2016 வரையிலான பாஜக ஆட்சியின் போது பசுவதை தொடர்பான 22 வழக்குகளில் தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டது.

இந்துத்துவ குண்டர்களால் தாக்கப்பட்ட பெஹ்லுகான்

மத்தியப் பிரதேசத்தின் கந்துவா பகுதியைச் சேர்ந்த நதீம் குரேஷி அவரது சகோதரர் ஷக்கீல் குரேஷி மற்றும் விவசாயி அசம் கான் ஆகியோர் மீது கடந்த பிப்ரவரி மாதம் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. அதன் பின்னர் மூன்று மாத சட்டப் போராட்டத்திற்குப் பின்னர், இந்த மூவரும் தே.பா.சட்டத்தை முறியடித்து வெளியே வந்தனர்.  ஆனால் அவர்கள் பசுவதைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.

“காங்கிரஸ் ஆட்சிக்குவந்ததும் எங்களுக்கு விடிவு காலம் என்று நினைத்தோம், ஆனால் அதேநிலைமைதான் நீடிக்கிறது” என்கிறார் நதீம் குரேஷி. குரேஷி சகோதரர்கள் முன்னாட்களில் கறி விற்பனையகம் நடத்தி வந்தனர். இவர்கள் வசிக்கும் பகுதியில், போலீசு அனுமதி பெற்ற கசாப்புக் கடைகளில் பசு மாட்டுக்கறிக்கான தேடுதல் வேட்டையை அவ்வப்போது நடத்தும்.

இத்தேடுதல்வேட்டை பயமுறுத்தக் கூடியதாக இருக்கும் என்கிறார் குரேஷி. “எங்கள் பகுதியான பஸ்தியை சுமார் 500 போலீசார் சுற்றி வளைத்திருப்பார்கள். உங்களால் கேள்விக் கூட கேட்கமுடியாது. ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் சுற்றி வளைத்திருப்பார்கள். இந்த அச்சுறுத்தல் காரணமாகவே நாங்கள் அத்தொழிலை விட்டுவிட்டு, எருமை மாடுகளை வாங்கி விற்கும் வேலையை செய்து வருகிறோம்” என்கிறார் குரேஷி.

கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி கந்துவா பகுதியின் மொகாட் போலீசு நிலையத்திலிருந்து வந்த போலீசார், நதீம் மற்றும் ஷக்கீல் குரேஷியைக் கைது செய்தனர். அருகில் உள்ள கர்களி கிராமத்திலுள்ள ஒரு நிலத்தில் நீளமான கத்தியும், இறந்த பசுவின் உடலும் இருந்ததை அடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்திருக்கிறது போலீசு. ஆனால் குரேஷி சகோதரர்கள் இருவரும் சம்பவம் நடந்த அன்று தாங்கள் கந்துவா பக்தியில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.

இவர்கள் மட்டுமல்லாமல், ஒரு விவசாயியையும் இதே வழக்கில் குற்றம்சாட்டி தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறது, போலீசு.

ஆட்சிக்கு வந்ததும் இத்தோடு நிற்கவில்லை மத்தியப் பிரதேச காங்கிரசு அரசு. இரண்டாண்டுகளுக்கு முன்னர் பாஜக ஆட்சியில் பசுக்குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட பெஹ்லுகான் மீதும் அவரது இரண்டு மகன்கள் மீதும் தற்போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது காங்கிரஸ் அரசு.

பெஹ்லுகான் கொலையில், கொலைக் குற்றம்சாட்டப்பட்ட கிரிமினல்கள் அனைவரும் ஆதாரமில்லை என்ற மோசடியாக காரணம் கூறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், பலியான பெஹ்லுகானின் மீதும் அவரது இருமகன்கள் மீதும் கால்நடைகளைக் கடத்தியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாண்டுகள் பழமையான இந்த வழக்கில் அப்போதைய பாஜக அரசின் நிலைப்பாட்டை அப்படியே எடுத்துக் கொண்டு, குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது காங்கிரஸ் அரசு. பசுக்களை இடம் மாற்றிக் கொண்டு செல்வதற்கான ஆவணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை பசுவைக் கடத்துபவர்களாகச் சித்தரிக்கிறது, இந்த அரசு.

”பசுவை வெட்டுவதற்காக (கறிக்காக) யாராவது ரூ. 50,000 கொடுத்து பசுவை வாங்குவார்களா? நாங்கள் பசுவை வாங்கியதற்கான ரசீதைக் கையில் வைத்திருந்தோம். தற்போதைய (காங்கிரஸ்) அரசும் இவ்வாறு நடந்துகொள்வதைக் கண்டு எங்களது கடைசி நம்பிக்கையும் நாங்கள் இழந்துவிட்டோம்” என்கிறார் பெஹ்லுகானின் மகனான இர்ஷத் கான்.

தன்னை அழிக்கக் காத்திருக்கும், நயவஞ்சகக் காவிப் பாம்புகளை வாயில்லா ஜீவனாகச் சித்தரித்து பாலும், தேனும் வார்த்துக் கொடுக்கிறது காங்கிரஸ் கட்சி. இசுலாமியர்கள் மீது வெறுப்புணர்வைப் பரப்பி இந்துக்களை அணிதிரட்ட முயலும் இந்துத்துவக் கும்பலை அம்பலப்படுத்தாமல், அவர்களுக்கு வால்பிடித்துச் செல்கிறது காங்கிரசு. பசுப்புனிதத்தில் தான் பாஜக-வை விட ஒரு படிமேல் என்று காட்ட முயல்கிறது காங்கிரசுக் கட்சி.


நந்தன்

செய்தி ஆதாரம் :
♦ Madhya Pradesh cracks down on cow vigilantism, Cabinet approves amendment to anti-cow slaughter law
♦ Before crackdown on gau rakshaks, Congress government in MP charged cow slaughter-accused under NSA
♦ Congress Is a Silent Witness to Pehlu Khan’s Lynching

மாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் ! – பாகம் 2 | மருத்துவர் BRJ கண்ணன்

கேள்வி 1: இப்போது என் உறவினர் வருகிறார், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி முடித்து பின் ஸ்டெண்ட் வைக்கப்பட்டது. அவர்கள் கேட்கிறார்கள் இந்த ஸ்டென்ட்டின் ஆயுட்காலம் எவ்வளவு என்று.

விடை : ஆஞ்சியோ பிளாஸ்டி முடிந்தபின் அந்த ஸ்டென்டின் வேலையும் முடிந்து ஆயிற்று. அந்த ஸ்டென்டின் மீது மீண்டும் கொழுப்பானது வந்து அடைபட்டால் என்ன ஆகும்? அதற்கான மருந்துகள் கொடுக்கப்படும். அதுவும் சிறிது காலத்திற்குள் வேலை செய்யாமல் போய்விடும். இந்த ஆஞ்சியோபிளாஸ்டியை அடைப்பை நீக்குவதற்குத்தான் செய்கிறோம்.

நீக்கிய பின் மேலும் அடைப்பானது வருமா என்பது நோயாளியின் உடலை பொருத்தே அமையும். நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு என அடைப்பை ஏற்படுத்தக் கூடிய காரணி என்னவோ, அதை நாம் கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் மீண்டும் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. எந்த நோய் அடைப்பை ஏற்படுத்தும் காரணியாக விளங்கியதோ, அதை நாம் கட்டுக்கோப்பாக வைத்திருக்காமல் இருந்தால் மீண்டும் மாரடைப்பு  நேரிடும்.

இப்போது உங்களுக்கு மூன்று ஸ்டென்ட் வைத்திருக்கிறார்கள் என்றால், நீங்கள் மீண்டும் புகைப்பிடிப்பதையும் அல்லது நீரிழிவு நோய்க்கான காரணிகளையும் தொடர்கிறீர்கள் என்றால், மீண்டும் உங்களுக்கு அடைப்பு வரலாம். ஏற்கனவே வைக்கப்பட்ட ஸ்டெண்ட்டின் மேலேயும் வரலாம். எனவே, ஸ்டென்ட் எத்தனை நாள் வேலை செய்யும் என்ற கேள்வி அபத்தமான கேள்வி. உள்ளிருக்கும் அடைப்பை நீக்கிய உடன் ஸ்டென்ட்டின் வேலையானது முடிந்தது. இதற்குப் பிறகு அடைப்பு வருமா வராதா என்பது நம் உடலில் உள்ள நோயைப் பொறுத்தது.

கேள்வி 2: சில பேர் பைபாஸ் சர்ஜரி செய்தால் அடுத்த பத்து வருடத்துக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என்றும் ஆனால், ஆஞ்சியோபிளாஸ்டி செய்தால் அவ்வாறு இல்லை என்றும் சிலபேர் கூறுகிறார்கள். இதற்கு நாம் என்ன விடை கூற வேண்டும்?

விடை : எனது நோயாளிகளில் சிலர் ஆஞ்சியோ பிளாஸ்டியும், மேற்கொண்டுள்ளனர் பைபாஸ் சர்ஜரியும் மேற்கொண்டுள்ளனர். பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள் மருத்துவர்களின் அறிவுரையை முறையாக பின்தொடராமல் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு வந்துள்ளார். அவர்களுக்கு நாங்கள் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி செய்துள்ளோம். அதேபோல் ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொண்ட நோயாளிகளும் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு வந்து பைபாஸ் சர்ஜரியும் செய்துள்ளனர்.

ஏன் இதை இங்கு குறிப்பிடுகிறோம் என்றால், சில பேர் பைபாஸ் சர்ஜரி செய்தால் பத்து வருடத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்று மேம்போக்காகக் கூறுகின்றனர். அப்படி எந்தவித உத்தரவாதமும் கிடையாது. மருத்துவத்தைப் பொறுத்தவரை நாம் நம் உடலை எப்படி வைத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே உத்தரவாதம் கொடுக்க முடியுமேயன்றி, வேறுவழியில் ஏதும் கொடுக்க முடியாது.

ஆஞ்சியோ பிளாஸ்டி மேற்கொண்ட பின்பு எத்தனைக் காலம் மாத்திரை உண்ண வேண்டும் என்று கேட்கிறார்கள். நோயாளியின் தன்மைக்கேற்ப மாத்திரைகள் வழங்கப்படும். இருதயம் சீராக இயங்குவதற்கும், ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொண்டதற்கும் மருந்துகளானது வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு மாத்திரைகள் அதிகமாக இருக்கும், ஒரு வருடத்திற்கு பின்பு மாத்திரைகள் அளவில் குறைந்து விடும்.

நான் முன்னமே கூறியது போல, நம் உடம்பில் உள்ள நோயை கட்டுப்படுத்துவதற்கு தான் மாத்திரைகள் வழங்குகிறோம். நோய் வராமல் இருக்க நாம் மேற்கொண்டு முயற்சிக்க வேண்டும். இந்த மருந்து மாத்திரைகளை உட்கொண்ட பிறகு ஒரு வருடத்திற்கு மேல் சிறப்பாக இயங்குவார்கள். ஆனால், பிரச்சினை என்னவென்றால் மீண்டும் புகை பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு உடற்பயிற்சியை மேற்கொள்ளாமல் இருந்துவிடுகிறார்கள். இதுதான் மிகவும் தவறு. உடலானது நன்றாகிவிட்டது என நாம் எண்ணக்கூடாது.

நோயை நாம் கட்டுப்படுத்திதான் வைத்துள்ளோம். அது மீண்டும் வராமல் இருக்க நாம் தொடர்ந்து மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றி உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.  முடிந்த அளவு நாம் பழைய நிலைமைக்குப் போகாமல் இருக்க வேண்டும். புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களை அறவே ஒழிக்கவேண்டும். ஆனால், மற்றபடி நாம் ஓடலாம், ஆடலாம், பாடலாம் இயல்பாக இருந்து கொள்ளலாம்.

படிக்க :
♦ ‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்ல மறுத்த சிறுவனைத் தாக்கிய காவி குண்டர்கள் !
♦ மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்

கேள்வி 3 : நிறைய பேர் கேட்கத் தயங்கும் கேள்வி. இயல்பாக இருக்கலாம் என்றால், மாரடைப்பு வந்த பிறகு தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாமா என்பதுதான்?

விடை : ஒருவர் இரண்டு மாடி ஏற முடிகிறது என்றால் அவர் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாம். ஆனால், வயாகரா போன்ற மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. காரணம் இருதய நோய் வந்து போனவர்களுக்கு,  நைட்ரைட் என்னும் மாத்திரை கொடுப்பார்கள்.  இதை உட்கொள்ளும் போது வயாகரா உட்கொள்ளக் கூடாது. அது மிகவும் ஆபத்தானது. அப்படித் தேவைப்படும் பட்சத்தில் உங்களது மருத்துவரை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், முன்னமே நாம் கூறியது போல் ஒருவர் இரண்டு மாடி மூச்சு வாங்காமல் ஏறமுடிகிறது என்றால், தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாம்.

கேள்வி 4 : பல பேர் கூறுகிறார்கள் ஆண்களுக்குத்தான் அதிகமாக மாரடைப்பு வரும் என்று. பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படாதா?, அப்படி ஏற்படுவதற்கு என்னென்ன காரணிகள் அவர்களுக்கு உண்டு.

விடை : பெண்களுக்கும் மாரடைப்பானது வரும். ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடம்பில் நல்ல ஹார்மோன்கள் சுரக்கிறது. அது அவர்களை மாரடைப்பில் இருந்து பாதுகாக்கிறது.  அதை ஈஸ்ட்ரோஜன் என அழைப்பார்கள். எனவே ஒரு 45 அல்லது 50 வயதைத் தாண்டிவிட்டார்கள் என்றால். அவர்களுக்கும் ஆண்களைப்போலவே மாரடைப்பு உண்டாவதற்கான வாய்ப்புகள் வந்து விடுகிறது.

எனவே அவர்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல் 35, 40 வயதிலேயே பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணம் நீரிழிவு நோய். நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்றால், அந்த ஹார்மோன்களினால் ஏற்படக்கூடிய நன்மைகளை இது நீர்த்துப் போகச் செய்கிறது. நாம் என்ன மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், 35 வயதில் ஒரு ஆணுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்றால். அவரை விட அதே 35 வயதில் உள்ள பெண்ணுக்கு நீரிழிவு நோய் இருந்தால், அவருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம்.

எனவே சிறிய வயதில் நீரிழிவு நோய் வருகிறது என்றால். அதை நாம் கவனமாக கையாள வேண்டும். பெண்களின் உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள், பி.சி.ஓ.டி முதலியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகம். ஆண்களைப் போலவே பெண்களும் இப்போது வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆண்களுடைய வாழ்க்கைப் போக்கையே இவர்களும் தொடர்கிறார்கள். உடல் உழைப்பின்மை போன்றவற்றால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணிகளில் இனியும் வேறுபாடு பெரிதாகக் காண  முடியாது.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சர்க்கரையானது கூடி பின் குறைந்திருக்கும். அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணிகள் உண்டு. நாம் முன்னரே கூறியது போல் உணவு முறைகளை மாற்றி, மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து நோய்க்குத் தேவையான மருந்துகளை உட்கொண்டு, உடற்பயிற்சியோடு வாழ்ந்து வந்தால், நாம் மாரடைப்பை பெரிதும் தவிர்க்கலாம்.

கேள்வி 6 : பொதுவாக எழக்கூடிய கேள்வி, மாரடைப்பு வந்து சென்றபின், ஈ.சி.ஜி பரிசோதனை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும், கொலஸ்ட்ரால் பரிசோதனை எப்போது மேற்கொள்ள வேண்டும், எக்கோ எப்போது மேற்கொள்ள வேண்டும் ?

விடை : 6, 12, 18 மாதங்களுக்கு நாம் எக்கோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இ.சி.ஜி நாம் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம். கொலஸ்ட்ரால் நாம் வருடத்திற்கு ஒருமுறை பரிசோதித்தால் போதும். ஏனென்றால், நோயாளி மருந்துகளை உட்கொண்டு கொண்டிருப்பார். எனவே வருடத்திற்கு ஒருமுறை பரிசோதித்தால் போதுமானது.

கேள்வி 7 : கீலேசன் தெரப்பி (Chelation Therapy), என்ற மருந்து ஊசியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எடுப்பதன் மூலம் பைபாஸ் சர்ஜரி செய்யாமலேயே கொழுப்புகளை கரைக்க முடியும் என நம்ப வைக்கப்படுகிறார்கள் நோயாளிகள். அப்படி ஊசிகள் மூலம் கொழுப்புகளைக் கரைக்க முடியுமா? அது தவறு எனில் எவ்வாறு என்பதை விளக்கவும்.

விடை : இதற்கு பதில் முடியாது என்பதே. அடைப்புகளில் சில பேருக்கு கொழுப்புகள்  படிந்திருக்கும். அதே சில பேருக்கு கொழுப்புகள் சேர்ந்து கால்சியமும் படிந்திருக்கும். இந்த கால்சியத்தை நம்மால் சுரண்டி எல்லாம் எடுக்க முடியாது.

இவர்கள் ஊசி மூலம் இந்தக் கால்சியத்தை கரைப்பதாக கூறுகிறார்கள் அல்லவா.  அது கொழுப்பின் மேல் படிந்திருக்கும் கால்சியம் அல்ல மாறாக ரத்தத்தில் கலந்துள்ள கால்சியத்தைத்தான் இவர்கள் ஊசி மூலம் வெளியேற்றுகிறார்கள். இது கொழுப்பையோ அல்லது கொழுப்புகள் மேல் படிந்துள்ள கால்சியத்தையோ எதையும் நீக்காது. மாறாக, ரத்தத்தில் கலந்துள்ள கால்சியத்தை வெளியேற்றும்.

எனவே 80 ஆயிரம், 90 ஆயிரம் என செலவழித்து, இந்த ஊசியையும் அல்லது சில மருந்துகளை உட்கொண்டு விட்டு நோயினால் திரும்பி வந்த நோயாளிகள்தான் அதிகம். இது ஒரு தவறான நம்பிக்கையை கொடுக்கிறது. நீங்கள் இந்த ஊசி செலுத்திய பிறகு எனது கொழுப்பு அடைப்பு நீங்கியது என யாராவது கூறி நேரில் பார்த்திருக்கிறீர்களா? நிச்சயமாக பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் நான் அந்த ஊசி செலுத்தும் மருத்துவர்களிடமே கேட்டு இருக்கிறேன். அப்படி யாராவது இருந்தால் அனுப்புங்கள் என்று. இன்றுவரை அவர்கள் அப்படி யாரையும் அனுப்பவில்லை.

அப்படி என்றால் இந்த ஊசி செலுத்துவது முற்றிலும் தவறா என்றால்? நாம் அப்படிக் கூறிவிட முடியாது. ஏனென்றால், ஒரு ஆய்வு கூறுகிறது இப்படி ஊசி செலுத்துவதனால் நோயாளிக்கு ஏற்படும் வலியானது குறைகிறது என்று. ஆனால் இதை வைத்துக் கொண்டு, நாம் நடைமுறையில் பரிசோதித்து மருந்து மாத்திரைகளை உட்கொண்டு குணப்படுத்தும் முறைக்கு நிகராக இதை நாம் பாவிக்கக் கூடாது.

அப்படி யாராவது இந்த ஊசியை செலுத்துங்கள் என கூறினால் அவர்களிடம் நாம் நேராக கேட்க வேண்டும். “எனக்கு உள்ள அடைப்பை ஊசி செலுத்துவதற்கு முன்பு பரிசோதித்துவிட்டு, ஊசி செலுத்திய ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் கழித்து நான் பரிசோதித்துப் பார்த்தால் அது நீங்கி இருக்குமா?” என்று வினவுங்கள். அவர் ஆமாம், நீங்கும் என்றால் நீங்கள் என்னிடம் வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எனவே இதற்கு பதில் இதுதான். ஏனென்றால், விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட வழிமுறையைத்தான் நாம் பின்பற்ற முடியும்.

படிக்க :
♦ சைவ உணவுப் பழக்கத்தால் உடல், மனநலக் குறைபாடு ஏற்படுமா ?
♦ குழந்தைகளே உங்களுக்கு விளையாடப் பிடிக்குமா ?

இதற்கு இணையாக மற்றுமொரு சிகிச்சை உள்ளது. ஈ.ஈ.சி.பி எனக் கூறுவார்கள். இது என்னவென்றால் நம் கையில் இரத்தக் கொதிப்பை பரிசோதிக்கக் கட்டப்படும் துணியால், காலையும், தொடையையும் இறுக்க கட்டிக்கொண்டு இரத்தக் கொதிப்பை ஏறவும், இறங்கவும் செய்வார்கள். இப்படி செய்வதன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்கள் வலியானது குறையும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. வயது முதிர்ந்தவர் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் சர்ஜரியும் இனி மேற்கொள்ள முடியாது என்றால், இதை நாம் பின்பற்றலாம்.  ஆனால் இதுவுமே கொழுப்பைக் கரைக்க உதவாது என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.  எனவே இவற்றை வைத்து கொழுப்பை நீக்கி விடுவேன் என யாரேனும் கூறினால் நம்ப வேண்டாம். ஆனால், ஈ.ஈ.சி.பி-யை வைத்து வலியை குறைத்து விடுவேன் என யாரேனும் கூறினால் பரிசோதித்து பார்க்கலாம்.

கேள்வி 8: நான் அனைத்து விதமான பரிசோதனைகளை மேற்கொண்டு விட்டேன் எல்லாம் எனக்கு நார்மலாக உள்ளது. எனக்கு மாரடைப்பு வராது அல்லவா ?

விடை : எல்லாவிதமான பரிசோதனையிலும் நார்மலா வந்தது என்பது நல்ல விஷயம்தான். ஆனால், அது இன்றைய நிலைமை. இதை வைத்துக் கொண்டு நமக்கு மாரடைப்பானது ஏற்படாது என நம்மால் பிற்காலத்தை உறுதியாக சொல்ல முடியாது. எனவே நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது இதுதான். ரத்தக்கொதிப்பை நார்மலாக வைத்துக் கொள்ளுங்கள், உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள், நீரிழிவு நோயை கட்டுக்குள் வையுங்கள், புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்.

ஒருவர் டிரெட்மில் டெஸ்ட் எடுத்து இருந்து அதில் நார்மலாக காட்டியிருந்தாலும் ஒருவாரம் கழித்து அவருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் உண்டு. நாம் முன்னர் கூறிய வீடியோவை போலத்தான் 30 சதவீதம் அடைப்புள்ளவருக்கு அந்த டெஸ்டில் நார்மலாகத்தான் காட்டும். அதுவே ஜவ்வு கிழிந்து இரத்தக் கட்டி போய் அடைத்தால் அது மாரடைப்பாக மாறும். எனவே நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது நம் வாழ்க்கை முறையை மாற்றுங்கள் என்பதுதான்.

இந்த மாரடைப்பு சம்பந்தமான இரண்டு வீடியோக்களும் மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம் நன்றி வணக்கம்.


நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

மாணவர்களுக்கு உடனே லேப்டாப் வழங்கு ! விழுப்புரம் பு.மா.இ.மு கலெக்டர் அலுவலக முற்றுகை !

0

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 2017 – 18 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு அரசு அறிவித்த லேப்டாப் இன்னும் வழங்கப்படவில்லை. நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டு ஆகியும் லேப்டாப் வழங்கப்படவில்லை.

இதன் ஒரு பகுதியாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, “உடனே லேப்டாப் வழங்கு !” என்ற கோரிக்கையை முன்வைத்து 200 -க்கும் மேற்ப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக, விழுப்புரம் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு. அதன் பின் மனு அளிக்கப்பட்டது.

இந்த போராட்டத்துக்காக மாணவர்கள் கூடியிருந்த நிலையில், விழுப்புரம் நகர போலீசு மீகவும் கீழ்தரமாக செயல்பட்டது. மாணவர்களின் கோரிக்கை என்ன என்று கூட தயாராக இல்லாத போலீசு; மாணவர்கள் வந்திருந்த வாகனங்களைத் தேடித் தேடி பஞ்சர் செய்துள்ளது.

அது மட்டுமல்லாது மாணவர் சரவணன் மற்றும் இன்னும் இரண்டு மாணவர்களை தாக்கவும் செய்துள்ளது. சட்டத்தின் காவலாளிகள் என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் போலிசு சட்ட விரோதமாக ரவுடி கும்பல் போல் செயல்படுகிறது. விழுப்புரம் நகர ‘காவல்துறை’-யின் இத்தகைய செயல்பாடுகளை பு.மா.இ.மு வன்மையாக் கண்டிக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம், தொடர்புக்கு : 91593 51158.

நூல் அறிமுகம் : காவிரி டெல்டா மீத்தேன் திட்டம்

மீத்தேன் வாயு என்பது நாம் சமையலுக்கு உபயோகிக்கும் இயற்கை எரிவாயு போன்ற வாயுதான். தற்பொழுது உபயோகித்து வரும் படிம எரிபொருள் வாயுக்கள் தீர்ந்து வருகின்றன. இது நீண்ட நாட்களுக்கு இருக்காது. மேலும் எரிவாயுவின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விலையேற்றமும் அதிகரித்து வருகிறது. இந்தக் காரணங்களால் வரக்கூடிய காலகட்டத்தில் மீத்தேன் வாயு எரிவாயு பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று சொல்லப்படுகிறது. இந்த மீத்தேன் வாயு பூமிக்கடியில் சில நூறு அடிகள் ஆழத்தில் நிலக்கரி படுகைகளில் அமிழ்ந்து கிடக்கிறது.

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி வயல்களின் ஊடே மீத்தேன் வாயு இருக்கிறது என்பது சில ஆய்வுகளில் மீது கண்டறியப்பட்டிருக்கிறது. இதையடுத்து மீத்தேனை வெளியில் கொண்டுவர பல்வேறு பணிகளுக்கான திட்ட வரைவுகளை மத்திய அரசு தயார் நிலையில் வைத்துள்ளது… (நூலின் முன்னுரையிலிருந்து…)

ன்னார்குடி பகுதியில் 1970-களில் தொடங்கிய நிலத்தடி ஆய்வில் இந்தப் பகுதியில் ஏராளமான நிலக்கரிப் படிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலக்கரிப் படிமமாக (19500 மில்லியன் டன்) கூறப்படுகிறது. இந்த நிலக்கரிப் பகுதி ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது… இந்தப் பகுதி மண்ணியல் தன்மை அமெரிக்காவின் வயாமிங் (wyoming) மற்றும் மாண்டேனோ (Montanno) மாகாணங்களுக்கு இடையே அமைந்துள்ள பவுடர் ரிவர் பேஸின் (Powder River Basin) மண்ணியல் தன்மையை ஒத்ததாக மத்திய அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது. (நூலிலிருந்து பக்.5-6)

நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுப்பதால் எழும் பிரச்சினைகளில் மூன்று முக்கியமானவை என்று கருதப்படுகிறது. முன்னரே கண்டபடி மீத்தேன் வாயுவை அதைச் சுற்றியுள்ள நீர்தான் அழுத்தி அதன் இடத்தில் இறுத்தி வைத்துள்ளது. மீத்தேன் எடுக்க வேண்டுமென்றால் ஆழ்துளைக் கிணற்றின் மூலம் இந்த நீரை முதலில் வெளியேற்ற வேண்டும். இந்த நீர் மிகவும் அதிக அளவில் வரக்கூடியது மட்டுமல்ல; மிக அதிகமான உப்புகள் உள்ள உப்புநீர். புரடுயூஸ்டு வாட்டர் என அழைக்கப்படும் இந்த கழிவு நீர்தான் பெரும் பிரச்சினை. இந்தக் கழிவுநீரில் உள்ள உப்புகளும் தனிமங்களும் மண்வளத்தைப் பாழாக்கக்கூடியவை.

இவை நிலத்தில் சேர்ந்தால் பயிர்கள் தம் வளர்ச்சிக்கான தாது உப்புகள் அடங்கிய நீரை உறிஞ்சுவது சாத்தியமில்லாது போகும் எனத் தெரிகின்றது. வெளியேற்றப்படும் நீர் எவ்வாறு கையாளப்படும் என கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமோ அரசாங்கமோ தெளிவாகக் கூறவில்லை. வெளியேற்றப்படும் நீர் பாலி எத்திலின் பரப்பபட்ட குளங்களில் சேமித்து வைக்கப்படும்; சூரிய ஒளியில் ஆவியாக்கப்படும்; எஞ்சிய உப்புகள் திடக்கழிவு மேலாண்மை முறைபாட்டின்படி கையாளப்படும் என மேம்போக்காகக் கூறப்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலை வளாகத்திற்குள்ளேயே இது முழுமையாக நம்பக்கூடிய முறையல்ல. பரந்துபட்ட கிராமப்புறத்தில் இதனை எப்படி பாதுகாப்பது? எப்படி கண்காணிப்பது? எப்படி பராமரிப்பது? என்பதெல்லாம் விடை இல்லாத கேள்விகளாகவே இருக்கின்றன.

படிக்க:
‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்ல மறுத்த சிறுவனைத் தாக்கிய காவி குண்டர்கள் !
இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு !

இரண்டாவதாக ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுப்பதற்காக அங்கிருக்கும் நீரை வெளியேற்றும் பொழுது அதற்கும் மேலே உள்ள நீராதாரங்கள் கீழ் நோக்கி இறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக மன்னார்குடி பகுதியில் சராசரியாக குடிநீர் மற்றும் பாசனத்திற்காக உபயோகப்படுத்தப்படும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் என்பது 200 அடியிலிருந்து 300 அடிவரை உள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் 500 அடியிலிருந்து 1800 அடி வரை உள்ள நீரை எடுக்கும் பொழுது மேல்மட்ட நீர் ஊற்றுகளாகிய 300 அடி வரை உள்ள நீரூற்றுகள் கீழே இறங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

மூன்றாவதாக இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு நீரியல் கரைசல் (Hydro Fracturing) என்கிற முறை சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மணலுடன் பல்வேறு விதமான வேதிப் பொருட்களைக் கலந்த கரைசலை நிலக்கரிப் படுகையின் அருகே கொண்டு சென்று மிக வேகமான அழுத்தத்துடன் செலுத்துவார்கள். அப்படி உபயோகப்படுத்தக்கூடிய வேதிப்பொருட்கள் மீண்டும் வெளியேற்றக்கூடிய நீருடன் சேர்ந்து வெளியில் வரும். இந்த வேதிப்பொருட்கள் சுற்றுச்சூழலை கடுமையாகப் பாதிக்கும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் கடுமையான வியாதிகளை ஏற்படுத்தும் என்று கூறி சர்வதேச நாடுகளில் இதற்கு வலுவான எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெறுகின்றன. (நூலிலிருந்து பக்.11-12)

காவிரி டெல்டா என்றால் என்ன? என்பதில் தொடங்கி, மீத்தேன், நிலக்கரிப் படுகை மீத்தேன் என்பது என்ன? இது எவ்வாறு உருவாகின்றது? மீத்தேன் எடுப்பதால் என்ன பாதிப்பு? நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுப்பதால் என்ன பாதகம் ஏற்பட்டுவிடும்? மீத்தேன் எடுக்கப்படுவது எப்படி? இத்திட்டத்திற்கு எதிராக உள்ள வழக்கின் இன்றைய நிலை என்ன? நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது வரையிலான இயல்பாய் எழும் பல்வேறு கேள்விகளுக்கு எளிமையான முறையில் விடையளிக்கிறது, இச்சிறுநூல்.

நூல் : காவிரி டெல்டா மீத்தேன் திட்டம் (விளக்க கையேடு)
ஆசிரியர் : சேதுராமன், தேவதாஸ், ப.கு.ராஜன்

வெளியீடு : அறிவியல் வெளியீடு,
245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 600 086.
தொலைபேசி எண்: 044 – 2811 3630.

பக்கங்கள்: 32
விலை: ரூ 15.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பரம்பரை விஞ்சானி சொல்றத கேட்டுக்குங்கோ | கருத்துப்படம்

வ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும்.- மன் கி பாத்தில் மோடி
நாங்க சொட்டு சொட்டா சேக்குறோம் … நீங்க மொத்தமா வேதாந்தாவுக்குக் கொடுத்துடுங்க … !
#janSakti4VedantaShakti

♦ ♦ ♦

கூடங்குளம் அணுக்கழிவு விவகாரத்தில் திடீர் விஞ்ஞானிகள் மக்களை ஏமாற்றுகின்றனர். – பொன் ராதாகிருஷ்ணன்
பரம்பரை விஞ்சானி சொல்றத கேட்டுக்குங்கோ…!

♦ ♦ ♦

நான் ஏழைத்த்தாயின் மகன்
நான் விவசாயி மகள்
சில வார்த்தைகள்
கேமராக்களுக்கு மட்டுமே உதிர்க்கின்றன…!


இதையும் பாருங்க …

ஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் ! | தாகத்தில் தமிழகம் – ஆவணப்படம் !