Saturday, August 2, 2025
முகப்பு பதிவு பக்கம் 353

சிவாஜி பட்டாபிஷேகம் … வேத நாசம் … தடுத்தே ஆக வேண்டும் !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 6


காட்சி – 9
இடம் : வீதி
உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப்பட்டர், வீரர்கள்.

கேசவப்பட்டர் : ஒய் ஒய்! வாரும் இப்படி… காலம் எவ்வளவு தலைகீழா மாறிண்டு போறது பார்த்தீரோ?

பாலச்சந்திரப்பட்டர் : என்ன! நேக்குப் புரியல்லையே?

கேசவப்பட்டர் : வேதம், சாஸ்திரம், ஆச்சாரம், அனுஷ்டானம், நேமம், நிஷ்டை எல்லாம் பாழ். பாழாகிப் போச்சுங்காணும். தலையை வெளியே நீட்ட முடியாது போலிருக்கு இனி.

பாலச்சந்திரப்பட்டர் : ஏன் ஒய்! விஷயத்தை விளக்கமா, சாவதானாமா, சாந்தமா சொல்லுமே! வறட்டுக் கூச்சல் போட்டுண்டே இருக்கறேள்?

கேசவப்பட்டர் : ஆமாம், ஒய்! இனி நம்ம வேத சத்தமே இந்த மராட்டிய மண்டலத்துக்கு வறட்டுக் கூச்சலாகத்தான் தோணப் போறது. தலைக்குத் தீம்பு வர்றது . தெரியாமெ, சாஸ்திரம் அழிக்கப்படுகிறது. அறியாமெ அவாள் அவாள் வயிறு நெறைஞ்சா போதும்னு இருந்தா என்ன ஆறது ஒய்? நம்ம குலம், கோத்திரம், பூர்வபெருமை சகலமும் பாழகிறது சர்வேஸ்வரா!

பாலச்சந்திரப்பட்டர் : ஆத்திரமாப் பேசினா ஆயாசமாத்தான் இருக்கும். நிதானமாய்ப் பேசும் ஒய்!

கேசவப்பட்டர் : முடியலை ஒய் நிசமாச் சொல்றேன். மனது பதறிண்டு இருக்கு. பதறாமலிருக்குமோ, மகாபாவம் நடக்க இருக்கும் போது நமக்குத் தெரியறது. தெரிந்தும் நாம் அதைத் தடுக்காமல் இருக்கிறதுண்ணா , ஒண்ணு , நாம் மரக்கட்டேண்ணு அர்த்தம். அல்லது நாமும் அந்தப் பாவத்துக்குச் சம்மதிக்கிற சண்டாளர்கள்ணு அர்த்தம். சம்மதிக்குமோ மனசு? சம்மதிக்குமோண்ணு கேக்கறேன்.

பாலச்சந்திரப்பட்டர் : சம்மதிக்காது! சாஸ்திரம் அழிக்கப்படுவதைப் பார்த்துண்டு, சகிச்சிண்டு இருக்கத்தான் முடியாது.

கேசவப்பட்டர் : முடியாதுண்ணு சொல்லிண்டு மூக்காலே அழுதுண்டிருந்தா போதுமா?

பாலச்சந்திரப்பட்டர் : வேறே என்ன செய்யிறது? என்ன செய்ய முடியும் நம்மாலே..?

கேசவப்பட்டர் : மண்டு மண்டு! ஏன் ஒய் முடியாது? ஏன் முடியாதுண்ணு கேக்கறேன்.

பாலச்சந்திரப்பட்டர் : சும்மா இரும் ஒய்! இது என்ன மாடா போ. மரமா போ, பூச்சியா போ, புழுவாய் போ-ன்னு சாபங் கொடுக்கிற காலமா? இல்லே. நம்ம கையிலே அக்கினி இருக்குண்ணு சொன்னா ஊரார் கேட்டு பயப்படற காலமா? காலத்தை அறிஞ்சுண்டு பேசும். கர்ச்சனை செய்யணும்னா சிங்கமா இருக்க வேணுமோ?

கேசவப்பட்டர் : காலத்தை அறிஞ்சிண்டு மட்டுமில்லெ ஒய் காலம். இன்னும் வரவர எவ்வளவு கெட்டுப் போகப் போறதுண்ணும் தெரிஞ்சுண்டுதான் பேசறேன்.

(வீரர்கள் கொடி ஏந்தி முழக்கத்துடன் வருதல்)

அடே கொஞ்சம் நில்லு! என்ன, ஒரே கூச்சல் போட்டுண்டு போறேளே. என்ன விசேஷம்?

வீரன் : மகாராஷ்டிர வீரன், மாவீரத் தலைவன் சிவாஜி மகாராஜாவுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறப்போவது உங்களுக்குத் தெரியாதா?

கேசவப்பட்டர் : ஆமாம்! கேள்விப்பட்டோம். என்ன அதுக்கு?

வீரன் : பட்டாபிஷேகத்தன்று சிவாஜி பவனி வருவதற்காக பாஞ்சாலத்திலிருந்து தருவிக்கப்பட்ட பஞ்சகல்யாணி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறது. நாங்கள் போகிறோம். சிவாஜி மகாராஜாவுக்கு … ஜே.

கேசவப்பட்டர் : எவ்வளவு துணிச்சல் இந்த சிவாஜிக்கு இவன் என்ன குலம்? இவன் குலத்துக்கு சாஸ்திரம் என்னவிதமான தருமத்தைக் கூறியிருக்கிறது, என்பதைத் துளிகூட யோசிக்காமப்படிக்கு, இவன் ராஜ்யாபிஷேகம் செய்து கொள்ளப் போகிறானாமே. அடுக்குமோ! சாஸ்திரம் சம்மதிக்குமோ?

(எதிரே மோரோபந்த் வருகிறார்)

பாலச்சந்திரப்பட்டர் : ஒய்! அதோ மோரோபந்த் வருகிறார். அவரிடம் கூறுவோம்.

கேசவப்பட்டர் : எந்த மோரோபந்த்?

பாலச்சந்திரப்பட்டர் : நம்மவர்தான் ஓய்!

கேசவப்பட்டர் : நம்ம குலந்தான். ஆனால், அவர் இப்போ சிவாஜியினிடமல்லவா வேலை செய்துண்டிருக்கிறார்? முதன் மந்திரி ஸ்தானமல்லவோ வகிச்சிண்டிருக்கிறார். அவர் சிவாஜியின் சார்பாகத்தான் பேசுவார். அவன் பட்டாபிஷேகம் செய்து கொள்வது சாஸ்திர சம்மதமான காரியம்ணு பேசுவார்.

பாலச்சந்திரப்பட்டர் : அசட்டுத்தனமான முடிவுக்கு அவசரப்பட்டு வராதீர். மோரோபந்த் சிவாஜியிடம் பெரிய உத்தியோகம் பார்த்துண்டு வருபவரானாலும், நம்ம அவர் குலம். நம்மவா எங்கே இருந்தாலும் குல ஆச்சாரத்தையும், அவர் அந்த ஆச்சாரத்துக்கு ஆதாரமாய் இருக்கிற சாஸ்திரத்தையும் ஒருநாளும் அழிஞ்சு போகப் பாத்திண்டிருக்க மாட்டா. வேணுமானாப் பாரும். அதோ, அவரே வந்துவிட்டார். வரணும். வரணும்

மோரோபந்த் : ராம் ராம் என்ன பாலச்சந்திரப்பட்டர் வாள் . ஓகோ! கேசவப்பட்டர்? ஆமாம், என்ன கோபமாகப் பேச்சுக்குரல் கேட்டதே?

கேசவப்பட்டர் : பேச்சுக் குரல்தானே? இனி அதிக நாளைக்கு இராது. நிர்ச்சந்தடியாகிவிடும். ஸ்மசான சந்தடி இருக்கும். கவலைப்பட வேண்டாம்.

மோரோபந்த் : என்ன, கேசவப்பட்டர்! ஏதோ வெறுப்படைந்தவர் போலப் பேசறேளே?

கேசவப்பட்டர் : வெறுப்பில்லை ஸ்வாமி, வெறுப்பில்லை! வேதனை தாங்க முடியாத வேதனை. வேதம் நாசமாகிறது. வேதியர்கள் வகுத்த விதிமுறைகள் நாசமாகின்றன. சாஸ்திரம் அழிகிறது; தர்மம் அழிகிறது, வேதனை இல்லாமலிருக்குமோ?

மோரோபந்த் : எதைக் குறித்துப் பேசுகிறீர், இவ்வளவு ஆக்ரோஷத்தோடு?

கேசவப்பட்டர் : ஆக்ரோஷமா? இதுவா? மோரோபந்த்! மோரோபந்து நீர் ஞானசூன்யரல்ல. நமது குலதர்மம், குலப்பெருமை அறியாதவரலல்ல.

மோரோபந்த் : அறிந்திருக்கிறேன். அதனால் என்ன ஸ்வாமி, அடேடே! அதைச் சொல்கிறீர்களா?

கேசவப்பட்டர் : அதென்ன ஸ்வாமி, அவ்வளவு சாதாரணமாகப் பேசுகிறீர், சர்வ நாசம் சம்பவிக்கும் காரியமல்லவா அது. சிவாஜி என்ன குலம்? அந்தக் குலத்துக்கு என்ன கடமை? க்ஷத்திரிய குலமல்லவா அரசாளலாம். ராஜ்யாபிஷேகம் உண்டு.

மோரோபந்த் : க்ஷத்திரியனுக்குத்தான் சிவாஜி முயற்சிக்கிறான்.

கேசவப்பட்டர் : நீர் பார்த்துக் கொண்டு இருக்கிறீர். மார்பிலே முப்பிரியும் இருக்கிறது. அறிந்து பயன்? செந்தாமரை நிறைந்த தடாகத்திலே முரட்டு எருதுகள் இறங்கி தாமரையைத் துவம்சம் செய்வதைப் பார்த்தும், அதைத் தடுக்காமல் இருந்து கொண்டே, தாமரையின் அழகு நேக்கு நன்னா தெரியுமேன்னு பேசிண்டிருந்தா போதுமா? புத்திமான் செய்கிற காரியமா இது?

மோரோபந்த் : நீர் எதைக் குறிப்பிடுகிறீர்?

கேசவப்பட்டர் : உம்ம கண் எதிரிலேயே நம்ம சாஸ்திரம் – நாசமாவதைத்தான் குறிப்பிடுறேன். சிவாஜி பட்டாபிஷேகம் செய்துக் கொள்ளப் போறானாமே?

மோரோபந்த் : பைத்தியக்காரர் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பேன்? நேக்கு தெரியாதா, வேதாச்சாரம் கெடக்கூடாது என்கிற விஷயம்.

கேசவப்பட்டர் : அப்படியானா தடுத்தீரோ?

மோரோபந்த் : கண்டிப்பாக பட்டாபிஷேகத்தை சாஸ்திர விதிப்படி செய்துக் கொள்வது மகாபாவம். அந்தப் பாவகாரியத்துக்கு நான் உடந்தையாய் இருக்க முடியாது. தடுத்தே தீருவேன். எதிர்த்தே தீருவேன் என்று தெளிவாக, தீர்மானமாகக் கூறியாகிவிட்டது.

பாலச்சந்திரப்பட்டர் : பார்த்தீரா, ஒய்… நான் சொன்னேனல்லவா. (கேசவப்பட்டர் மேரோவைத் தழுவி)

கேசவப்பட்டர் : க்ஷமிக்கணும் ஸ்வாமிகளே! ஆத்திரமாகப் பேசிவிட்டேன். தங்கள் குலப்பெருமையை உணராமல். தடுத்தீரோ? ஆரிய குல ரட்சகர் நீர். வேதாகம பாதுகாவலர் நீர்.

மோரோபந்த் : இது கலிகாலம். கலிகால தருமப்படி இப்போது பூலோகத்திலே க்ஷத்திரிய குலமே கிடையாது என்று கூறினேன்.

கேசவப்பட்டர் : ஆதாரம் என்ன கூறினீர்?

மோரோபந்த் : ஏன், அந்தக் காலத்திலேயே பரசுராமர் க்ஷத்திரியப் பூண்டையே அழித்து விட்டாரே . க்ஷத்திரியர் ஏது இப்போது என்று கேட்டேன். சிவாஜிக்குப் பட்டம் சூட்டுவது என்பதற்கு எந்த சனாதனியும் சம்மதிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஆகையாலே ஆத்திரப்பட்டு ஏதேதோ கூவிண்டிருக்க வேண்டாம். நமது ஆரிய சோதராளிடம் பேசி இது விஷயமாக, அனைவரையும், ஒன்று திரட்டும். சிவாஜி சம்மதம் கேட்டு அனுப்புவான். முடியாது’ என்று ஒரேயடியாய்க் கூறிவிடும்.

படிக்க:
முதியோர் கல்வி குறித்து முதல் அகில ரஷ்யக் காங்கிரசை வாழ்த்தி ஆற்றிய உரை !
மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! சென்னை மக்கள் கருத்து

கேசவப்பட்டர் : ஆஹா! இப்போதே கிளம்புகிறேன்! நம்ம சோதராளிடம் சொல்கிறேன் விஷயத்தை. சூட்சமமா இரண்டொரு வார்த்தை சொன்னாக்கூட புரிந்து கொள்வாளே நம்மளவா.

மோரோபந்த் : செய்யும் ஸ்வாமி! முதலில் போய் அந்தக் காரியத்தைச் செய்யும். நான் பட்டாபிஷேகத்தை நடக்க ஒட்டாதபடி என்னாலான காரியமெல்லாம் செய்துண்டு இருக்கேன்.

கேசவப்பட்டர் : மனம் நிம்மதியாச்சு. மனுமாந்தாதா கால ஏற்பாடு சாமான்யமா? நான் வர்ரேன். வாரும் ஒய், பாலச்சந்திரப்பட்டர் சந்திரரே வாரும், போய்க் காரியத்தைக் கவனிப்போம்.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி:

பகுதி 1 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை
பகுதி 2 :
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ !
பகுதி 3 : யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும் ?

பகுதி 4 : என்னதான் சொன்னாலும் சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே !
பகுதி 5 :
ஒரு விருந்துக்குத் தலைமை தாங்க குல தர்மம் தடைவிதிக்கிறது !

புதுச்சேரி : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் | நிகழ்ச்சி நிரல்

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில்!
திருச்சி மாநாட்டு அறைகூவல் விளக்கப் பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி!

02.04.2019 செவ்வாய், மாலை 5 மணி
சுதேசி மில் எதிரில், புதுச்சேரி.

தலைமை:

தோழர் சாந்தகுமார்,
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், புதுச்சேரி.

உரை:

தோழர் மங்கையர் செல்வம்,
அமைப்பாளர்,
மீனவர் விடுதலை வேங்கை,
புதுச்சேரி.

தோழர் தீனா,
அமைப்பாளர்,
பெரியார் சிந்தனையாளர் இயக்கம்,
புதுச்சேரி.

தோழர் முருகானந்தம்,
பொதுச் செயலாளர்,
மனித உரிமைகள் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்,
புதுச்சேரி.

தோழர் மருது,
தலைமை குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

சிறப்புரை:

தோழர் காளியப்பன்,
மாநில பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

நன்றியுரை:

தோழர் EK சங்கர்,
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

ம.க.இ.க. கலைநிகழ்ச்சி நடைபெறும்.

அனைவரும் வாரீர் !


மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி,
தொடர்புக்கு: 87542 05589.


இதையும் பாருங்க …

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும் – கோவன் பாடல்

மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! மக்கள் கருத்து

கோயம்பேட்ல மலராத தாமரை கோட்டையில எப்டி மலரும்? – மக்கள் கருத்து

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும் | புதிய பாடல் வெளியீடு

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த “தாமரை மலர்ந்தே தீரும்” பாடல், ரீ-ரிக்கார்டிங்கோடு காணொளி வடிவில் உங்கள் பார்வைக்கு …

பாடல் வரிகள் :

மலர்ந்தே தீரும்  …
தாமரை மலர்ந்தே தீரும் … (மலர்ந்தே தீரும்  …)

காவிரி வறண்டாலும்
கம்மா குளம் வத்தினாலும்

ஆறு புள்ளி கோலத்திலே
அக்கா வீட்டு வாசலிலே…  (மலர்ந்தே தீரும் …)

அதிமுக தோளு மேல
அஞ்சி சீட்டு தாண்ட முடியல
இதுல
நாற்பதும் மலருதாம்
நல்லா வருது சொல்ல முடியல (மலர்ந்தே தீரும் …)

மோடி சொன்ன பதினஞ்சி லட்சம்
அக்கவுண்டுல ஏறிடுச்சி
வருசத்துக்கு இரண்டு கோடி
வேலையும் வந்துருச்சி …

ஸ்கில்லு இந்தியா
மோடி பாலிசி …
ஆனா
பக்கோடா விக்க சொன்னாரு
பி.இ படிச்சி …

பணமதிப்பு அழிப்பாலே
குஜராத்தே புட்டுகிச்சி …
மோடி சொன்ன ஜி.எஸ்.டி
திருப்பூரும் செத்துருச்சி …

தறி உசுரு பிரிஞ்சிருச்சி
சிறு தொழிலும் அழிஞ்சிருச்சி
தாமரைய வச்சிசெய்யப் போறாங்க
நோட்டா மேல குந்தவச்சி …  (மலர்ந்தே தீரும்  …)

டெல்டா மாவட்டமே
புயலடிச்சி சாஞ்சிருச்சி…
ஸ்டெர்லைட்டுக்காக
பதிமூனு உசுரு போயிடுச்சி …

அப்போ எட்டிப் பாக்கல
மோடி எதுவும் சொல்லல …
அவர் ரொம்ப பிஸி
அம்பானி வீட்டு கல்யாணத்துல! (மலர்ந்தே தீரும் …)

மலர்ந்தே தீரும்
தாமரை மலர்ந்தே தீரும்
ஊரு தாலிய அறுத்தாவது
வளர்ந்தே தீரும் …

பாடல்:

பாடல், இசை : ம.க.இ.க கலைக்குழு
ஆக்கம் : வினவு

பாருங்கள் ! பகிருங்கள் !

கொள்ளையர்கள் தப்பும் போது நமது சௌகிதார் என்ன செய்தார் ?

0
கண்களை இருக்க மூடிக்கொண்ட காவல்காரார்

கிரீன்பீஸ், இந்தியா அமைப்பை சேர்ந்த பிரியா பிள்ளை 2015, ஜனவரி 11 அன்று இலண்டன் செல்ல இருந்த நிலையில் டெல்லி விமானநிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவர் செய்த குற்றம் என்ன?

இந்திய நாட்டின் தேசிய நலனுக்கு கேடு விளைவிக்கும்படியாக இங்கிலாந்து பழங்குடி மக்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவிடம் (All-Party Parliamentary Group for Tribal Peoples) வாக்குமூலம் கொடுக்க திட்டமிட்டிருந்தார் என்று மோடி அரசு குற்றம் சாட்டியது.

ஆனால் மோடி அரசு இங்கே சொன்னது யாருடைய தேசிய நலன்?

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடிகளின் வாழிடத்தில் நிலக்கரியை தோண்ட அனுமதி பெற்ற விதேசி எஸ்ஸார் குழுமம் மற்றும் சுதேசி ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹிண்டல்கோ நிறுவனங்களின் நலன் தான்.

அதற்கடுத்த ஆண்டில் மே 9-ம் தேதி பழங்குடிகள் உரிமை செயற்பாட்டாளரான கிளாட்சன் டங்டங் (Gladson Dungdung) லண்டன் செல்லவிருந்த பயணம் தடுக்கப்பட்டது. சசெக்ஸ் பல்கலைக் கழகத்தில் (University of Sussex) ‘சுற்றுச்சூழல் வரலாறு மற்றும் தெற்காசிய அரசியல்’ என்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார்.

நன்றி : NEWS CLICK

இந்த இரண்டு சம்பவங்களிலும் வெளிநாடு செல்லவிருந்த இச்செயற்பாட்டாளர்களை கட்டுப்படுத்துவதற்கு அருவருக்கத்தக்க எச்சரிக்கையை இந்த அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. அவர்களது குற்றங்கள் அதிகபட்சம் அவர்களது பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். இருப்பினும், அதே மோடி அரசாங்கம் பெரும் பொருளாதார குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பித்து வெளியேறுவதை தடுக்கவில்லை.

மோடி அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் புலனாய்வு நிறுவனத்திடம் ‘சாராய’ விஜய மல்லையாவிற்கு எதிராக ‘கவன ஈர்ப்பு சுற்றறிக்கை’ இருந்த போதிலும் இலண்டனுக்கு அவர் தப்பி செல்வதற்கு உதவி செய்தது. மல்லையாவுக்கு மட்டுமே நடந்திருந்தால் ஏதோ கண்ணசந்த நேரத்தில் கொள்ளையன் தப்பி விட்டான் என்று கருத நமக்கு இடமிருக்கும். ஆனால் தொடர்ந்து நீரவ் மோடி, மெகுல் சொக்சி, நிதின் சண்டேசரா மற்றும் இன்னபிற குற்றவாளிகள் என இப்பட்டியல் நீளுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 27 பொருளாதார கொள்ளையர்கள் முதலீட்டாளர்களது பணத்தையும் பொதுமக்களது வரிப்பணத்தையும் ‘ஆட்டைய போட்டு’ வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கின்றனர்.

படிக்க:
தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !
♦ மோடியின் மிஷன் சக்தி : சர்வதேச ஊடகங்களின் பார்வையில்…

இந்த கொள்ளையர்கள் மோடியின் பார்வையில் தான் தப்பி சென்றுள்ளனர். மாட்சிமை தாங்கிய இந்திய அரசின் வல்லமை அவர்களது திட்டங்களை தடுக்கவில்லை. அறிவுடை மாந்தர் எவருக்கும் இச்சம்பவங்கள் எளிதில் செரிக்காது.

இப்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார கொள்ளையர்கள் தப்பி செல்லுவதை வேடிக்கை பார்த்த மோடி தற்போது ‘மெயின் பிச் சௌகிதார்’ என்ற முழக்கத்தை கையிலெடுத்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘சௌகிதார்’ என்ற தம்பட்டதை சேர்க்கும் அந்த கண நேரத்திற்குள்ளேயே அவரது அடிப்பொடிகளும் ‘சௌகிதார்’ ஆகி விட்டார்கள். 27 கொள்ளையர்கள் தப்பியதை வேடிக்கை பார்த்த பின்னரும் புளகாங்கிதத்துடன் தன்னை ‘சௌகிதார்’ என்று அழைத்துக் கொள்வதை என்ன சொல்ல?

வாங்கிய ஆயிரக்கணக்கான கோடி கடனை செலுத்தாத பெரும் கொள்ளையர்களின் பட்டியல் ஒன்றை 2015, பிப்ரவரி 4 அன்று ஒன்றிய அரசாங்கத்தின் அலுவலகத்திற்கு முன்னாள் ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் அனுப்பியிருந்தார். இதுவரை அதன் மீது ஒரு நடவடிக்கை கூட இல்லை. மைய தகவல் ஆணையத்தின் தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்கு பின்னரும் ரிசர்வ் வங்கியும் தலைமை அமைச்சர் அலுவலகமும் அவர்களது பெயர்களை வெளியிடவில்லை. பா.ஜ.க.-வின் மூத்த தலைவரும் பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி கடுமையான கண்டனங்களை அதற்கு பதிவு செய்திருந்தார்.

நீரவ் மோடியின் பொருளாதார குற்றங்கள் குறித்து விசில் ப்ளோயர் எஸ்.வி.ஹரி பிரசாத்தும் தலைமை அமைச்சர் அலுவலகத்திற்கு எச்சரிக்கை செய்திருந்தார். அவரது முறையீட்டிற்கு பதிலும் கிடைத்தது. இந்தியாவின் தேசிய நலன் என்பது பொதுமக்களின் நலன் தான் என்று மோடி அரசாங்கம் கருதாயிருக்குமானால் நீரவ் மோடி தப்பியிருக்க முடியாது.

மோடி அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கினால் 2-ஜி குற்றம் சாட்டப்பட்டவர்கள்,  அனைவரும் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதரங்களுக்காக ஏழு ஆண்டுகள் வீணாகிவிட்டதாக நீதியரசர் கடுமையாக கண்டனம் செய்திருந்தார். இன்றும் தன்னை ‘சௌகிதார்’ என்று அழைத்து கொள்ளும் நெஞ்சுரம் மோடிக்கு இருப்பது தான் முரண்நகை.

கண்களை இருக்க மூடிக்கொண்ட காவல்காரார்

இந்தியாவின் வெளிப்படைத்தன்மைக்கு சிறப்பான பங்களிப்பை தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI Act) செய்திருக்கிறது. அதன் குரல்வளையை நெரித்துக்கொண்டிருக்கும் ஒரு கல்லை கூட மோடி இதுவரை புடுங்கவில்லை. மோடி அலுவலகம் பொதுவாக சொல்வதானால் மோடி அரசாங்கம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பகைமையுடனே பார்க்கிறது என்பதை என்னுடைய தனிப்பட்ட அனுபவம் சொல்கிறது. 2015-ம் ஆண்டில் தலைமை அமைச்சரை சந்திக்க யாரெல்லாம் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள் மேலும் அப்படி சந்திப்பதற்கு என்ன விதிகள் இருக்கின்றன என்று நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் தலைமை அமைச்சர் அலுவலகம் என்னுடைய கோரிக்கையை பரிகாசிக்கத்தக்க காரணங்களுக்காக நிராகரித்திருந்தது.

மேலும் தலைமை அமைச்சர் அலுவலகத்திற்கும் இன்னும் பிற அமைச்சர்கள் அலுவலகங்களுக்கும் நான் அனுப்பிய பல்வேறு கோரிக்கைகள் நியாயமற்ற முறையில் நிராகரிக்கப்பட்டன. இது மட்டுமல்ல குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக ஊழல் தடுப்பு சட்டத்தையும் மோடி அரசாங்கம் திருத்தியிருக்கிறது.

படிக்க:
உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?
♦ பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?

பதான்கோட், உரி மற்றும் புல்வாமா தாக்குதல்கள் எப்படி நடந்தன என்று கேட்பதற்கு எனக்கு அதிகாரம் இருக்கிறதா? கொஞ்சம் எச்சரிக்கையுடன் நம்முடைய சுய தம்பட்ட சௌகிதார் இருந்திருந்தால் உரி தாக்குதலுக்கு பிறகான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தேவையிருந்திருக்காது.

சௌகிதாரிடம் கேட்பதற்கு ஏரளமான கேள்விகள் நம்மிடம் இருக்கின்றன. அதே நேரத்தில் அவரது இயலாமை குறித்த எண்ணிறந்த கதைகளும் நம் முன்னே இருக்கின்றன. ஆனால் இங்கே மிகவும் கேலிக்கூத்தானது என்னவென்றால் சௌகிதாரோடு சேர்ந்து அவரது கறை படிந்த சகாக்களும் கட்சி நபர்களும் கூட சௌகிதார் என்று சுய சுயதம்பட்டம் அடித்து கொண்டதுதான்.

சான்றாக திரிணாமுல் காங்கிரசில் இருந்து பா.ஜ.க-வில் சேர்ந்த முகுல் ராயை எடுத்துக் கொள்வோம். அவர் பிரபலமான சாரதா ஊழலில் முதன்மை குற்றவாளி. மேலும் சமீபத்தில் TMC கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கொலையில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவரும் தன்னை சௌகிதார் என்று ட்விட்டரில் சொல்லிக்கொள்கிறார். மேலும் பாலியல் குற்றங்களுக்காக சமீபத்தில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜெ அக்பரும் கூட தம்மை சௌகிதார் என்றே அழைத்துக்கொள்கிறார் – காவலாளிகள் என்று சுய தம்மட்டம் அடித்து கொள்பவர்களின் யோக்கியதையை இவர்களின் கதைகள் நமக்கு பறைசாற்றுகின்றன அல்லவா.


கட்டுரையாளர் : Rohit Kumar
தமிழாக்கம் : சுகுமார்

நன்றி: The Wire


இதையும் பாருங்க :
எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி

உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?

உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா?
அதுபோல் நீங்களும் பாதுகாப்பானவர்களா?

சம்பவம் 1

ஷாணி, 16 வயது பள்ளி செல்லும் மாணவி,  மிகவும் துடிதுடிப்பானவள், கெட்டிக்காரி. அதுபோல் பேரழகி.  பள்ளி செல்லும் இளவல்களின் மங்காத பேசு பொருள். பணக்கார வீட்டு செல்லப் பிள்ளை. பெற்றோர் இருவரும் மிகப்பெரும் நிறுவனங்களில் 6 இலக்கங்களில் சம்பளம் வாங்குகிற பெரும்புள்ளிகள். இதனால் அவள்  போகின்ற வருகின்ற வழிகளெல்லாம் வாலிபக் கூட்டம். இந்தத் தொல்லைகளை தவிர்ப்பதற்காக அவள் பயணிப்பதற்கென்றே ஒரு சொகுசு கார். அதற்கென்று  தனியான ஒரு நம்பிக்கையான,  மிக நம்பிக்கையான டிரைவர்.

இப்படியாக மிகவும் பாதுகாப்பான சூழலில் வளர்ந்து வந்த அந்தப் பெண்பிள்ளை  ஒருநாள் வயிற்று  வலியால் அவதிப்படுகிறாள்.  உடனே  மருத்துவமனைக்கு எடுத்து வரப்படுகிறாள். வைத்திய பரிசோதனைகளின் போது  அவளது வயிற்றில் இரண்டு மாத சிசு வளர்வது கண்டுபிடிக்கப்படுகின்றது. இந்த செய்தியை கேள்வியுற்ற பெற்றோர்கள் இருவருமே மயங்கி விழுந்து விடுகின்றனர்.  கதை  போல் இருந்தாலும் இது உண்மை. கடைசியிலே அந்த குழந்தைக்கு காரணம் அவள் அங்கிள்,  அங்கிள் என்று  அன்போடு அழைக்கின்ற, பெற்றவர்களாலும் மற்றவர்களாலும் நம்பிக்கையானவர், மிக நம்பிக்கையானவர் என முத்திரை குத்தப்பட்ட வாகன சாரதிதான் (Driver) என்பது தெளிவாகின்றது.

சம்பவம் 2

ஐந்து வயதுள்ள சின்மயி, மிகவும் அமைதியான சுபாவம் உள்ளவள். எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் மிகுந்த  ஆரோக்கியமுடன் வளர்ந்து வருகின்ற  ஓர் சிறுமி. ஒரு சில வாரங்களாக அவளின் நடத்தையில்  பல்வேறுபட்ட மாற்றங்கள். வழமை போல் அமைதியாக இல்லை. எடுத்ததற்கெல்லாம் அழுகிறாள், முரண்டுபிடிக்கிறாள்,  ஒழுங்காக சாப்பிடுவது கிடையாது, முறையாக  தூங்குவது கிடையாது. முன்னரைப் போல் சிரித்த முகம்  இல்லாமல் சோர்ந்து போய் விடுகிறாள்.

இப்படி சில வாரங்களாக இருந்தவள் ஒருநாள் திடீர் திடீரென காரணமில்லாமல் சிரிப்பதும் அழுவதும் இடை இடையே  தனியே கதைப்பதுமாக, மொத்தமாக ஒரு பைத்தியத்தின் உருவமாக மாறி விடுகிறாள். இப்பொழுது வைத்தியத்திற்காக அனுமதிக்கப்படுகிறாள்.  பல்வேறு  பரிசோதனைகளை செய்துகொண்டு போகின்றபோது, அவள் வீட்டிற்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதற்காக வருகின்ற ஐம்பது வயது ஆசிரியரினால் முந்தைய ஒரு மாதமாக தொடர் பாலியல்ரீதியான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டது உறுதிப்படுத்தப்படுகின்றது. இதனால்  ஏற்பட்ட மனப் பிறழ்வே இவ்வாறான நிலைமைக்குக் காரணம்  எனவும்  கண்டறியப்படுகிறது.

சம்பவம் 3

முராசில் 13 வயது பள்ளி மாணவன். அடிக்கடி வயிற்று நோவு, மலச்சிக்கல் மற்றும் சிறுநீரில் கிருமித் தொற்று என வைத்தியத்திற்காக வருகின்ற ஒரு பையன்.  தொடர்ச்சியான பரிசோதனைகளின் போது பெரிதாக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் கடைசியாக ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக ஒரு வைத்திய பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அவனுக்கு சிபிலிசு எனும் பாலியல் நோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்படுகின்றது.  அதற்கு காரணம் அவனது ஆசிரியர்தான்  என்பதும்  இறுதியிலேயே தெரியவருகிறது.

(மூன்று சம்வவங்களில் வரும் பெயர்கள் மட்டுமே கற்பனை என்பதை கருத்தில் கொள்க)

இவைகளெல்லாம் கடந்த இருவாரங்களில் நான் சந்தித்த  பல்வேறுபட்ட பாலியல் துஷ்பிரயோகங்களின் ஆழ அகலத்தை தெளிவுபடுத்துகின்ற  ஒரு குறுக்கு வெட்டுமுகம் மட்டுமே.

பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக மருத்துவ பீடத்தில் நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில் சட்ட மருத்துவத்திலும், சிறுவர் மருத்துவத்திலும்   படித்தபோது இவைகள் எல்லாம் இங்கே நடக்கின்றதா இதுவெல்லாம் சாத்தியமா என்று எண்ணியவர்களில் நானும் ஒருவன். இவைகள் எல்லாம் எங்கோ உலகின் ஒரு மூலையில் வெள்ளைக்காரர்களால் செய்யப்படும் அல்லது கதைகளில் மட்டுமே சாத்தியமாயிருக்கின்ற செயல்கள் என்று  உறுதியாக நம்பியவர்களின் தலைவன்.

அதன்பின் பயிற்சி வைத்தியராக மற்றும்  சிறு பிள்ளை வைத்தியராக, பயிற்சி வைத்திய நிபுணராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றிய காலப்பகுதிகளில் நான் கண்டு, கேட்டு பெற்ற அனுபவங்களின் மூலம் இந்த எண்ணம் தலைகீழாக மாறிவிட்டுருக்கின்றது.  இன்னும் சொல்லப்போனால் நான்  கேட்பவைகளை,  பார்ப்பவைகளை எல்லாம் நீங்கள்  அறிவீர்கள்  என்றால்  குறைவாகவே சிரிப்பீர்கள் அதிகம்  அழுவீர்கள்.

பொதுவாக சிறுவர் துஷ்பிரயோகமானது பல்வேறு வடிவங்களில் நடைபெறுகிறது. இது உடலியல் ரீதியான துஷ்பிரயோகம் (Physical abuse), உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் (Psychological abuse), பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் (Sexual abuse), உணர்வு ரீதியான துஷ்பிரயோகம் (Emotional abuse) , புறக்கணிப்பு ரீதியிலான துஷ்பிரயோகம் (Neglect) எனப் பல்வேறு கோணங்களில் சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்படுகிறது. இதில்  பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்திருப்பது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவுள்ளது.

மத குருமாரினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுவர்கள், ஆசிரியர்களினால், ஆலோசகர்களினால் பலாத்காரங்களுக்கு உள்ளாகும் மாணவர்கள், வைத்தியரினால் பாலியல் இம்சைக்கு உள்ளாகும் நோயாளிச் சிறுவர்கள், தந்தையினால் வன்புணர்வுக்கு ஆளாகும் மகள், அண்ணனினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் தங்கை, மாமாவினால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் மருமகள் என்று துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகும் சம்பவங்கள் தினமும் நடந்தேறுவதை நீங்களும்  ஊடகச் செய்திகள் மூலம் அறிந்துதான் இருப்பீர்கள்.

ஆனால் மார்க்கம் பேசுபவர்களாலும், மார்க்கம் போதிக்க பாடசாலைகள் நடத்துபவர்களாலும், இந்த சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடருவது மட்டுமல்லாமல்  சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கவும், உண்மையை மறைக்கவும், இந்த இயக்க பக்தர்களும்,  நிர்வாகிகளும், அமைப்புகளும், ஏன்  ஊர் பெரியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு முண்டியிடுவதை பார்க்கும்போது மட்டுமே இந்த சிறுவர் துஷ்பிரயோகம் வியாபித்திருக்கும் விஸ்தீரணங்களை (பரப்புகளை) புரிந்து கொள்ள முடிகிறது.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் நடைபெற காரணமென்ன?, துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?, எத்தகையவர்களால் துஷ்பிரயோகம் ஏற்படுகிறது? துஷ்பிரயோகச் செயற்பாடுகளிலிருந்து சிறுவர்களை எவ்வாறு பாதுகாக்கலாம்? அதற்கான முறையான பொறிமுறைகள் எவை ? ஆகியவை உள்ளிட்ட கேள்விகளுக்கான பூரண அறிவைப் பெறுவது மிக  அவசியமாகும். இவை குறித்த முறையான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் திட்டமிட்ட அடிப்படையிலும் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கிராமம் மற்றும் நகரந்தோறும் முன்னெடுக்கப்படுவது முக்கியமாகும். இவைகள் எல்லாவற்றையும்  இப்பத்தியில் எழுவது நடைமுறை சாத்தியமற்றது  எனினும்  ஒரே ஒரு அடிப்படையை புரிந்து கொண்டால் இவைகளை தடுத்துக் கொள்ள முடியும்.

பாலியல் விடயத்தில் யாரையும் எடுத்த எடுப்பில் நம்பிவிடலாகாது என்பதுதான் அந்த  அடிப்படை. ஒருவர் எவ்வளவு நல்லவராகவும் நம்பிக்கையானவராகவும் இருக்கலாம் அது போல் உங்களுக்கு தெரியாத நிலையில் அவர் கெட்டவராகவும் இருக்கலாம். நல்லது,  கெட்டது  என்ற  இரண்டு குணங்களும் ஒரே மனிதனிடம் ஒரே நேரத்தில் இருக்கலாம்.  யாரும் 100% நல்லவர் கிடையாது.  சந்தர்ப்பம், சூழல்  என்பவைகள் தான் நல்லவர், கெட்டவர் என்பதைத் தீர்மானிக்கிறது.

சிம்பிளாக சொல்வதென்றால் ஒருவரின் நெட் ப்ரவுசிங் ஹிஸ்ட்ரி (internet browsing history) இன்னும் ஒருவருக்குத் தெரியாத வரைக்கும் அவர் நல்லவர்தான் என்பது இன்றைய உலகில் உள்ள நல்ல மனிதனுக்கான அளவுகோலாக இருக்கிறது. இந்த ஒன்றை புரிந்து கொண்டால் பெரும்பாலான சிறுவர் துஷ்பிரயோகங்களிலிருந்து தவிர்த்துக் கொள்ள முடியும். இன்னும் ஒரு படி மேலே சென்றால், இவர்கள் நமது உறவினர்கள், நன்றாக நம்முடன் பழகுபவர்கள், சாதுவான மனிதர்கள் என்று சொல்லும் எல்லா நல்ல மனிதர்கள் மீதும், அயலார், ரியுசன் மாஸ்டர் (Tuition Master), ஓதிக்கொடுக்கும் ஹஸரத், சமய குருக்கள் என  இப்படியாக ஆள் வேறுபாடு  இன்றி  எல்லோர் மீதும் எமது கவனக் குவிப்பு  அவசியமாகின்றது.

அதே போன்று தன் உறவுக்காரர், அல்லது அயல் வீட்டார், அல்லது நண்பர்கள்  என எவராவது கொஞ்சம் மேலதிகமாக, சந்தேகப்படும்படியாக பிள்ளைகளுடன்  குலாவும் போது, தூக்கி அணைத்து முத்தமிடும் போது, விழிப்பாகச் செயல்படுதல் எதிர்காலத்தில் ஏற்படும் இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க உதவியாக இருக்கும்.

பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறுவர்களை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பதற்கான  உபாயங்களாக இருக்கின்றன. உறவினர் வீடு, அயலவர் வீடு, நண்பர் வீடு என அழைப்பிற்கோ அல்லது தமது தேவையின் நிமித்தமோ, ஆண் பிள்ளையையோ அல்லது பெண் பிள்ளையையோ இரவை கழிப்பதற்காக அல்லது உறங்கச் செல்வதற்காக எக்காரணம் கண்டும் அனுமதிக்காமல் இருப்பதே உசிதமானது. அதேசமயம் வீட்டில் இடம்பெறும் விசேட வைபவங்களின் போது அல்லது   பிறவீடுகளில்  நடக்கும் வைபவங்களின் போது  தம் பிள்ளைகள்  மீது அதிக கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

பிள்ளைகளுக்கு  பிறர் வழங்கும் அன்பளிப்புகள் (டொபி, சொக்லட், விளையாட்டுப் பொருட்கள்) மீது கணிப்பாக இருத்தல் வேண்டும் அதே போன்று  இவற்றைப் பெற்றோரின் அனுமதி இன்றி பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற கண்டிப்புடனும் விளக்கத்துடனும் குழந்தைகளை  வளர்க்க வேண்டும். அதற்கு மேலதிகமாக குழந்தைகளுக்கு எங்கு, யாரால், என்ன நிகழ்ந்தாலும் முதலாவது பெற்றோரிடம் விஷேடமாக தாயிடம் கூறக் கூடிய வகையில் பெற்றோர் குறிப்பாக தாய் – பிள்ளை உறவு நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஏற்கெனவே நன்றாக பழகிய உறவினர், நண்பர், அயலார் தம் வீட்டிற்கு வந்ததும் அவர்களைக் காணப் பிடிக்காது ஒளிந்து கொண்டால் அல்லது பயந்தால், அல்லது அழுதால் அவர்களின் சிறு விளையாட்டுப் பேச்சுக்கும் ஆத்திரம் கொண்டால் அதன் அர்த்தம் அவர்கள் மூலம் விரும்பாததொன்றை பிள்ளை சந்தித்துள்ளது, பிள்ளை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள  கூடியவர்களாக பெற்றோர் இருக்க  வேண்டும்.

படிக்க:
ஆதிக்க சாதிவெறி – பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் | முகிலன் கேலிச்சித்திரங்கள்
பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

ஆக மொத்தத்தில் எந்தப் பொந்தில் எந்தப் பாம்பு இருக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது  என்ற கிராமிய  தத்துவத்தை   தெரிந்து கொண்டால் குறைந்த பட்சம் அவதானமாகவாவது  இருப்பதுதான் துஷ்பிரயோகங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான உரிய வழியாக தென்படுகிறது.  இது கு‌றி‌த்த அறிவைப் பெற்று அதற்கேற்ப  செயற்படுவது காலத்தின் தேவையாகவும் உள்ளது. அவ்வாறு செயற்படும் போதுதான், வளரும்  பிள்ளைகளை இவ்வாறான ஆபத்துகளில் இருந்து  பாதுகாக்க முடியும்.

இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா என்று அது போல்  இப்பொழுது சொல்லுங்கள் நீங்களும் பாதுகாப்பானவர்களா என்று…

மருத்துவர் பி.எம். அர்சத் அகமத், MBBS(RUH) MD PEAD (COL),
Senior Registrar in Peadiatrics,
Lady Ridgeway Hospital for Children
Colombo, Srilanka

மார்க்சின் தர்க்கவியல் என்ன ? | மார்க்ஸ் பிறந்தார் – 26

மார்க்ஸ் பிறந்தார் – 26
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

11. “மூலதனத்தின்தத்துவஞானம்

“மார்க்ஸ் தனக்குப் பின்னால் ஒரு தர்க்கவியலை (கொட்டை எழுத்துக்களில்) விட்டுச் செல்லவில்லை என்றாலும் அவர் மூலதனத்தின் தர்க்கவியலை விட்டுச் சென்றிருக்கிறார்… மார்க்ஸ் மூலதனத்தில் ஒரே விஞ்ஞானத்துக்கு தர்க்கவியலை, இயக்கவியலை மற்றும் ஹெகலிடம் மதிப்புள்ளதாக இருந்த ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு அதை மேலும் வளர்த்துச் சென்ற பொருள் முதல்வாதத்தின் அறிவுத் தத்துவத்தை (மூன்று சொற்கள் அவசியமல்ல, அது ஒரே பொருள் குறித்ததே) கையாண்டார்.” வி. இ. லெனின்(1)

மூலதனத்தின் தத்துவஞானம் என்ற தலைப்பு விசித்திரமான சொற்றொடராகத் தோன்றலாம். மூலதனம் முதலாளித்துவச் சமூகத்தில் பொருளாதார உறவுகளைப் பற்றிய ஆராய்ச்சி என்பது நமக்குத் தெரியும். சில மேற்கத்திய அறிஞர்கள் மூலதனத்தில் எந்தத் தத்துவஞானமும் இல்லை, மார்க்சும் ஒரு தத்துவஞானி அல்ல என்று மறுப்புரைக்கிறார்கள். ஒரு தத்துவஞானி என்பவர் தன்னுடைய சொந்தக் கருத்துக்களின் அமைப்பு குறித்து விசேஷமான தத்துவஞான நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

மார்க்ஸ் அப்படிப்பட்ட புத்தகங்களை எழுதவில்லை. அவர் எந்தவொரு இடத்திலும் தத்துவஞானக் “கோட்பாட்டை” விசேஷமாக விளக்கவில்லை. எனினும் அவரே தலைசிறந்த தத்துவஞானியாக இருக்கிறார். மார்க்சின் தத்துவஞானம் – இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் – அவர் எழுதிய எல்லா நூல்களிலும் விளக்கப்படுகிறது. அத்தத்துவ ஞானத்தை அறிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எழுதிய எந்த நூலைப் படிக்க வேண்டும் என்று கேட்டால், அவருடைய வாழ்க்கையின் முக்கியமான சாதனையாகிய மூலதனத்தைப் படியுங்கள் என்பதே சரியான பதிலாகும்.

சென்ற நூற்றாண்டின் கடைசியில் ருஷ்ய மிதவாதப் பிரமுகரும் சமூகவியலாளருமான நி. மிஹயிலோவ்ஸ்கிக்கு லெனின் தந்த பதில் இதுவே. மிஹயிலோவ்ஸ்கி மார்க்சியத்தை மறுத்து எழுதிய கட்டுரைகளில் ஒன்றில் இக்கேள்வியைக் கேட்டிருந்தார்: “மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை எந்த நூலில் எடுத்துக் கூறியிருக்கிறார்?” இக்கேள்விக்கு அவரே உடனடியாகக் கண்டுபிடிப்பவரின் சுயதிருப்தியோடு, அப்படி எந்த நூலையும் மார்க்ஸ் எழுதவில்லை, மார்க்சிய இலக்கியம் முழுவதிலுமே அப்படி எந்த நூலும் இல்லை என்று பதிலளித்தார்.

“மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை விளக்கிக் கூறாத நூல் ஒன்றுண்டா?” என்று லெனின் மிகச் சரியாக மறுப்புத் தெரிவித்தார். மார்க்ஸ் தனக்கு முந்திய சமூகவியலிலிருந்து, அதாவது சமூகத்தைப் பற்றிய போதனைகள் மற்றும் தத்துவங்களிலிருந்து அடிப்படையாகவே வித்தியாசமான ஒன்றைப் படைத்த காரணத்தினால் முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் மார்க்சிடம் சமூக வளர்ச்சி பற்றிய தத்துவஞானத்தைக் காணத் தவறுகிறார்கள் என்று லெனின் எடுத்துக் காட்டினார்.(2)

அக்காலத்திய முதலாளித்துவ அறிவுஜீவிகளின் வட்டாரங்களில் கெளரவம் நிறைந்த, மரியாதைக்குரிய சமூகவியலாளர் என்பவர், பொதுவாக சமூகம் என்றால் என்ன, அதன் நோக்கமும் சாரமும் எவை, “மனித இயல்புக்குப்” பொருந்துகின்ற சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பவற்றைப் போன்ற “கருத்தாழமிக்க பிரச்சினைகளை” விவாதித்திருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இச்சமூகவியலாளர்கள் இன்றைய அமைப்பு இயற்கைக்கு முரணானது, “மனித இயல்புக்கும்” நீதிக் கோட்பாடுகளுக்கும் பொருந்தாமலிருக்கிறது என்ற உண்மையைப் பற்றித் தங்களது மனப்பூர்வமான ஆத்திரத்தை வெளியிட்டு தார்மிக செல்வாக்கைப் பெற்று அநேகமாகப் புரட்சிக்காரர்களாகக் கூடத் தோன்றியிருக்கலாம்.

மார்க்சுக்கு முந்திய சமூகவியலாளர்கள் சமூகத்தின் நிகழ்வுப் போக்குகளை ஆழமாகப் பார்க்கத் தவறியதுடன் அவற்றை அந்தக் கணத்தில் நடைபெறும் சம்பவங்களின் ஒளியில் பார்த்தார்கள். சமூக உலகம் அரசர்கள், சக்கரவர்த்திகளின் முடிவுகளினால் இயக்கப்படுகிறது, சம்பவங்களின் வளர்ச்சி அவர்களுடைய சித்தத்தையும் பொதுமக்களிடம் தாக்கம் செலுத்திய சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் முற்றிலும் சார்ந்திருக்கிறது என்று நினைத்தார்கள்.

படிக்க:
போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !
♦ நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?

இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டால் வரலாறு என்பது வலிமைமிக்க தலைவர்களின் உணர்ச்சிகளின் போராட்டத்தைச் சார்ந்திருக்கின்ற சம்பவங்கள், நிகழ்வுப் போக்குகள் மற்றும் மெய்விவரங்களின் கதம்பக் குவியலாகத் தோன்றும்; இக்கதம்பக் குவியலில் முக்கியமான நிகழ்வுகளை முக்கியத்துவமில்லாத நிகழ்வுகளிலிருந்து, அதிகச் சிறப்பானவற்றை குறைவான சிறப்புடையவற்றிலிருந்து ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியாது; இதில் எவ்விதமான விதிகளையும் பார்க்க முடியாது, சமூக வளர்ச்சிக்குப் பின்னே இருக்கின்ற பொறியமைவைப் புரிந்து கொள்ள முடியாது, அல்லது அவற்றின் மீது தாக்கம் செலுத்துவது எப்படி என்பதையும் அறிய முடியாது.

இவையனைத்தும் சமூகவியலில் அகநிலைவாதம், கருத்துமுதல்வாதம். பண்டைக்காலத் தத்துவஞானத்தில் இயற்கையைப் பற்றிய கருத்துக்களில் கருத்துமுதல்வாதம் தொடங்கிய வினாடியிலிருந்தே தீவிரமான எதிர்ப்பு (அதாவது பொருள்முதல்வாதிகள்) இருந்தது என்றால் சமூகத்தைப் பற்றிய கருத்துக்களில் கருத்து முதல்வாதம் மார்க்ஸ் காலம் வரையிலும் ஆட்சி செலுத்தியது.

மார்க்ஸ்தான் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பொருள்முதல்வாதக் கருத்தை முதலில் கையாண்டவர். இது அவருடைய மேதாவிலாசத்தைக் காட்டுகிறது என்றார் லெனின். உணர்ச்சிகளும் கருத்துக்களும் நலன்களும் காரணமல்ல, அவை விளைவே, மனித உணர்விலிருந்து தனித்திருக்கின்ற மிகவும் ஆழமான காரணத்தின் விளைவு என்று மார்க்ஸ் கண்டார். எந்த ஒரு மனிதனுடைய ஏதாவதொரு கருத்து அல்லது நோக்கம் அவனுடைய சமூக வாழ்க்கையினால், சமூகத்தில் அவனுடைய நிலைமையினால் நிர்ணயிக்கப்படுகிறது.

கருத்துக்கள் முதிர்ச்சியடைந்த சமூகத் தேவைகளைச் சந்திக்க முடியுமானால், அவை சமூகத்தின் பெரும்பான்மையினரது நலன்களை, முதலாவதாகவும் முதன்மையாகவும் பொருளாயத நலன்களை வெளியிட முடியுமானால், அவை பெருந்திரளான மக்களை ஆட்கொண்டால் அப்பொழுது அவை சமூக வளர்ச்சியில் தாக்கம் செலுத்த முடியும்.

உதாரணமாக, பிரெஞ்சு முடியாட்சி 18-ம் நூற்றாண்டின் கடைசியில் வீழ்ச்சியடைந்தது ஏன்? பதினாறாம் லுயீ இந்த அல்லது அந்தத் தவறைச் செய்தது (அதுவும் கூட முக்கியமாக இருந்தபோதிலும்) அதற்குக் காரணமல்ல; எதேச்சாதிகார ஆட்சியும் நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளும் நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன, முதலாளித்துவம் மற்றும் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த முதலாளி வர்க்கத்தின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தன, அந்த வர்க்கம் ஏற்கெனவே பொருளாதார சக்தியைக் கொண்டிருந்தது, ஆனால் அரசியல் அதிகாரம் இல்லாமலிருந்தது என்பவை அதற்குக் காரணமாகும்.

மனித உணர்விலிருந்து சுதந்திரமான முறையில் வளர்ச்சியடைகின்ற சமூக உறவுகள் கடைசியில் அவ்வக்காலத்திய சித்தாந்த, அரசியல், சட்டவியல் அமைப்புகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாகப் பார்க்குங்கால் கருத்துக்களின் வளர்ச்சி சமூக-பொருளாதார நிகழ்வுப் போக்குகளின் வளர்ச்சியைச் சார்ந்திருக்கிறதே தவிர அதன் எதிர்மறையை அல்ல. அப்படியானால் சமூக உறவுகள் பொருளாயதமானவை, புறநிலையானவை என்பது இதன் பொருளாகும்! மார்க்சுக்கு முந்திய சிந்தனையாளர்கள் அடையத் தவறிய முடிவு இதுவே.

ஆனால் சமூக உறவுகள் மிகவும் பலவிதமாக இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை உற்பத்தி நிகழ்வுப் போக்கில் தோன்றுபவை; அவை உற்பத்தி உறவுகள் எனப்படும். அவை முதலாவதாகவும் முதன்மையாகவும் உற்பத்தி செய்பவருக்கும் உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளருக்கும், அதாவது அடிமைக்கும் அடிமை உடைமையாளருக்கும், பண்னையடிமைக்கும் நிலப்பிரபுத்துவ நிலவுடைமையாளருக்கும், தொழிலாளிக்கும் முதலாளிக்கும் உள்ள உறவுகள்.

இந்த மூன்று உறவுகளும் சுரண்டல் உறவுகளின் வடிவங்கள். இவற்றுக்கு இடையிலுள்ள அடிப்படையான வேறுபாட்டை எளிதில் காண முடியும். ஆகவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவு என்ற முறையில் ஒன்று மற்றொன்றாக இயற்கையாக வளர்ச்சியடைந்த மூன்று சமூக-பொருளாதார அமைப்புகளையும் நாம் எடுத்துக் கொள்வோம்.

சமூக வளர்ச்சி இயற்கையான வரலாற்று நிகழ்வுப் போக்கு, அது மனித உணர்விலிருந்து தனித்திருக்கின்ற ஆனால் அறியப்படக் கூடிய விதிகளுக்கு உட்பட்டிருக்கிறது என்று மார்க்ஸ் கண்டார்.

இக்கருத்துக்கள் அனைத்தையும் மார்க்சிய மூலவர்கள் மிக முந்திய காலமான 1840-கள் மற்றும் 1850-களிலேயே கூறினார்கள். ஆனால் மூலதனத்துக்கு முன்பு இவை விஞ்ஞான ஆதாரத்தைக் கொண்டிருந்தாலும் வெறும் கருதுகோள் என்ற அளவிலேதான் இருந்தன என்று லெனின் கூறினார். “மூலதனம் எழுதப்பட்ட பிறகு வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வெறும் கருதுகோளாக இனியும் இல்லை, அது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மையாயிற்று;”(3) சமூகவியல் விஞ்ஞானமாக மாறியது.

மூலதனம் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை உருவாக்குவதிலும் அதை நிறுவுவதிலும் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தது ஏன்? ஏனென்றால் மார்க்ஸ் சமூகம் எப்படி அமைக்கப்படுகிறது என்ற ஊக முறையான பொது விவாதங்களுடன் தன்னை நிறுத்திக் கொள்ளவில்லை, அவர் முதலாளித்துவ அமைப்பை உதாரணமாகக் கொண்டு அதன் செயல்முறை மற்றும் வளர்ச்சிப் பொறியமைவை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்தார். ஆகவே வாசகர் இந்த அமைப்பு முழுவதையும் அதன் உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற பல்தொகுதியான இயக்கவியல், முதலாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற வர்க்கங்களின் முரணியல்பு, தொழிலாளியைச் சுரண்டுவதற்கு முதலாளியின் உரிமையைப் பாதுகாக்கின்ற அரசியல், சட்டவியல் மற்றும் சித்தாந்த அமைப்புகளையும் ஒரு வாழ்கின்ற தொகுதியாகக் காண்கிறார்.

நிலப்பிரபுத்துவம் தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவத்துக்கு வழி விட்டதைப் போலப் பிந்தியதும் அதன் வளர்ச்சியின் புறநிலையான விதிகளின் விளைவாகத் தன்னுடைய சொந்த அழிவை நோக்கி, ஒரு வர்க்கமில்லாத சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை மார்க்ஸ் மறுக்க முடியாத தர்க்கவியலின் மூலம் நிரூபித்தார்.

“ஏகபோக மூலதனம், அதனுடனும் அதன் கீழும் தோன்றியதும் வளர்ச்சியடைந்ததுமான உற்பத்தி முறைக்குத் தளையாக மாறுகிறது. உற்பத்திச் சாதனங்களை ஒருமுனைப்படுத்துவதும் உழைப்பு சமூகமயமாதலும் எந்த அளவுக்கு முனைப்படைகின்றன என்றால் அவை முதலாளித்துவ மேலோட்டுக்கு முற்றிலும் முரணானதாகின்றன. இந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமைக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது, உடைமை பறித்தோர் உடைமை பறிக்கப்படுகின்றனர்.”(4)

படிக்க:
தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்
♦ மூலதனத்தின் தத்துவஞானம் !

கம்யூனிஸ்ட் சமூகம் கனவுகாண்பவர்களின் கற்பனாவாத இலட்சியமல்ல, பொருளாதார வாழ்க்கையின் மொத்த இயக்கமுமே அதை நோக்கிச் செலுத்தப்படுகிறது என்பதைச் சந்தேகமில்லாதபடி மார்க்ஸ் விளக்குகிறார். மூலதனம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியலின் வளர்ச்சியை, எல்லா உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைக் கட்டுப்பாடில்லாமல் துரிதப்படுத்துவதன் மூலம் ஒரு புதிய சமூகத்தின், ஒரு புதிய சமூக-பொருளாதார அமைப்பின் பொருளாயத முன்நிபந்தனைகளைத் தயாரிக்கிறது. மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினரைச் சுரண்டப்படுகின்ற கூலித் தொழிலாளர்களாக மாற்றி, பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்களை ஒன்றுசேர்த்து, பழைய சமூகத்தின் அடிமை விலங்குகளை நொறுக்கக் கூடிய, அதைப் புனரமைப்பதைத் தொடங்கக் கூடிய புரட்சிகர சக்தியை மூலதனம் தயாரிக்கிறது.

உழைப்பாளர்கள் அனைத்துப் பொருளாயத மற்றும் ஆன்மிக செல்வத்துக்கு உடைமையாளர்களாக இருக்கின்ற, மனிதன் சமூக உற்பத்திக்குச் சாதனமாக இல்லாமல் அவனே மிக உயர்ந்த மதிப்பாகவும் குறிக்கோளாகவும் இருக்கின்ற, ஒவ்வொருவருடைய சுதந்திரமான, பல்துறையான வளர்ச்சி எல்லோருடைய சுதந்திரமான வளர்ச்சிக்கும் நிபந்தனையாக இருக்கின்ற சமூகமே கம்யூனிஸ்ட் சமூகமாகும்.

மார்க்ஸ் இந்தப் புதிய சமூகத்தின் உருவரையை கற்பனாவாதச் சுவடு இல்லாமல், எதிர்காலத்தில் “பொற்காலம்” என்ற இலட்சியச் சித்திரத்தை மனம் போனபடி வரைவதற்கு மிகச் சிறிதளவு கூட முயற்சி செய்யாமல் தயாரித்தார். கம்யூனிசத்தை வரலாற்று ரீதியில் தவிர்க்க முடியாதபடிச் செய்கின்ற போக்குகளையும் விதிகளையும் அவர் தர்க்கவியல் ஆராய்ச்சியின் வன்மையோடு வெளிப்படுத்துகிறார், பாட்டாளி வர்க்கப் புரட்சி, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் புதிய சமூகத்துக்குச் செல்கின்ற உண்மையான வழியை எடுத்துக்காட்டுகிறார். இப்படி முதலாளித்துவ உற்பத்தியைப் பற்றிக் கடுமுயற்சி கொண்ட பொருளாதார ஆராய்ச்சியின் போக்கில் மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருதுகோளைத் தயாரிக்கிறார். அது போல மூலதனம் மார்க்சியத் தத்துவஞானத்தின் உட்கருவான இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையை உள்ளடக்கியிருக்கிறது.

இயக்கவியல்-பொருள்முதல்வாத முறை விசேஷமான சொற்களில் வர்ணிக்கப்படவில்லை, அது செய்முறையில், முதலாளித்துவச் சமூகத்தின் பொருளாதாரத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்குச் செய்முறையில் கையாளப்படுவதன் மூலம் தரப்படுகிறது. மார்க்ஸ் இந்த முறையை எப்படி உபயோகித்தார், எப்படிக் கையாண்டார் என்பதை மூலதனத்தை ஆராய்வதன் மூலம் அறிய முடியும். ஆகவே சமூகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு இந்த இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையை ஒருவர் எப்படிக் கையாள முடியும், எப்படிக் கையாள வேண்டும், தத்துவச் சிந்தனையில் இந்த வன்மையான கருவியைக் கையாளுவதில் எப்படி முழுத் திறமையைப் பெற முடியும் என்பனவற்றை மூலதனத்தின் வாசகர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.

குறிப்புகள்:

(1)V.I.Lenin, collected works, Vol. 38, p. 319.
(2)V.I.Lenin, collected works, Vol. 1, p. 143.
(3)Ibid., p.142.
(4)Karl marx, capital, vol. 1, Moscow, 1974, p. 715.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய 25 பாகங்களை படிக்க:

மார்க்ஸ் பிறந்தார் வரலாற்றுத் தொடர்

முதியோர் கல்வி குறித்து முதல் அகில ரஷ்யக் காங்கிரசை வாழ்த்தி ஆற்றிய உரை !

0

லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின் | பாகம் – 5

முதியோர் கல்வி குறித்து முதல் அகில ரஷ்யக் காங்கிரசை
வாழ்த்தி ஆற்றிய உரை (1919 மே, 6)

வி.இ.லெனின்
தோழர்களே, முதியோர் கல்வி பற்றிய காங்கிரசுக்கு எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கு முன்னால் பேசிய தோழர் லுனாசார்ஸ்கி போன்று இந்த விஷயத்தில் ஆழமாக ஆராய்ச்சி செய்து நான் உரையாற்ற வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கமாட்டீர்கள். அவர் இந்த விஷயத்தை நன்கறிந்தவர்; அதோடு சிறப்பாக ஆராய்ந்தும் இருக்கிறார். என்னைப் பொருத்தவரை ஒருசில வாழ்த்துரைகளையும், உங்கள் பணி சம்பந்தமாக மக்கள் கமிசார்களின் கவுன்சிலில் விவாதித்தபோது எழுந்த சிந்தனைகளையும், கருத்துகளையும் எடுத்துக்கூறுவதுடன் அமைகிறேன்.

முதியோர் கல்வித்துறையில் கடந்த 18 மாதங்களாக ஏற்பட்டுள்ள மாபெரும் முன்னேற்றம் சோவியத்தின் செயல்பாடுகள் வேறு எதிலும் ஏற்பட்டதில்லை என்பது நிச்சயம். இந்தத் துறையில் நீங்களும் நானும் பணியாற்றுவது, வேறு துறைகளைவிட எளிதாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தப் பணியில் நாம் பழைய தடைகளையும், பழைய முட்டுக்கட்டைகளையும் அகற்றிவிட்டோம். அறிவு வேண்டும், இலவசக் கல்வியும், சுதந்திரமான வளர்ச்சியும் வேண்டும் என்று பெரும்பாலான தொழிலாளர்களும், விவசாயிகளும் கோருகிறார்கள். அவர்களின் மிகப்பெரும் கோரிக்கைகளை நிறைவு செய்ய சிலபல செய்வது எளிதாக உள்ளது. ஏனெனில் பொதுமக்களின் வலிமைமிக்க நிர்பந்தத்தால் அவர்களின் பாதையில் குறுக்கே நின்ற புற முட்டுக்கட்டைகளை எளிதாக அகற்ற முடிகிறது.

படிக்க :
♦ பேராசிரியர் சாய்பாபா …!
மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! சென்னை மக்கள் கருத்து

நம்மை ஏகாதிபத்தியப் போருடன் பிணைத்து அந்தப் போரின் விளைவாக ஏற்பட்ட அளப்பரிய சுமையைத் தாங்குமாறு ரஷ்யாமீது திணித்த, வரலாற்றுரீதியான பூர்ஷுவா அமைப்புகளையும் ஒழிக்க முடிந்தது. இருந்தபோதிலும் வெகுஜனங்களுக்கு மறுபோதனை அளிப்பதும், கல்வியை ஸ்தாபன ரீதியாக ஏற்பாடு செய்வதும், அறிவைப் பரப்புவதும் அறியாமை மரபுகளை பத்தாம்பசலிப் போக்கை, காட்டுமிராண்டித் தன்மையை, மிருகத்தனத்தை ஒழிப்பதும் மிகவும் கடுமையான பணி என்பதை உணர்ந்தோம். இந்தத் துறையில் முற்றிலும் வேறுபட்ட முறைகளைக் கையாண்டு போராட்டம் நடத்தவேண்டும்.

இந்த விஷயத்தில் மக்களின் தலைமைப் பகுதிகள் நீண்டகால வெற்றிகளையும் உறுதியான முறையான செல்வாக்கையும் ஆதாரமாகக் கொள்ள வேண்டும். இந்தச் செல்வாக்கிற்கு மக்கள் சுயவிருப்புடன் தலைவணங்குவர். ஆனால் நாம் நம்மால் இயன்ற அளவு பணிபுரியாத குற்றத்துக்கு ஆளாகி உள்ளோம். முதியோர் கல்வியைப் பரப்புவதற்கான முதல் நடவடிக்கைகளை எடுக்கும்போது நாம் இரு தடைகளோடு மோத வேண்டியுள்ளது. முதியோர் பழைய கட்டுப்பாடுகள் மரபுகளைத் துறந்த சுதந்திரமான கல்வியை வரவேற்கிறார்கள் . இந்த இரு தடைகளும் பழைய முதலாளித்துவ சமூக அமைப்பிலிருந்து வழிவழி வந்தவை. அந்த அமைப்பு இன்னும் நம்மைத் தொத்திக் கொண்டு ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான பந்தங்கள் சங்கிலிகளால் நம்மைக் கீழே இழுத்துக் கொண்டு வருகின்றது.

முதலாவது: பெருந்தொகையாக இருக்கும் பூர்ஷுவா படிப்பாளிகள் உள்ளனர். அவர்கள் தமது சொந்த தத்துவ இயல் கலாச்சாரக் கொள்கைகளைச் சோதனை செய்வதற்கு இந்தப் புது வடிவிலான தொழிலாளர் விவசாயிகளின் கல்வி அமைப்புகளை வசதியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவற்றில் அவர்கள் மிகவும் அபத்தமான கற்பனையான பொருத்தமற்ற கருத்துகளை புதிய கருத்துகள் பாட்டாளி வர்க்கக் கலை கலாச்சாரம் என்று புகழ்ந்து புகுத்துகின்றனர்.(114) இது இயல்பே, ஆரம்ப நாள்களில் இதை மன்னித்தும் விடலாம். ஒரு விரிவான இயக்கத்தை இதற்காகக் குறை கூறலாகாது. ஆனால் நாள் பல செல்லச் செல்ல நாம் இவற்றை ஒழிக்க முயல வேண்டும்; அப்பணியில் நாம் வெற்றி காண்போம்.

இரண்டாவது : தடையும் முதலாளித்துவத்திலிருந்து மரபாக ஏற்பட்டதே. குட்டி பூர்ஷுவா உழைக்கும் மக்களின் விரிவான பகுதிகள் தமது அறிவுத் தாகத்தால் பழைய அமைப்பைத் தகர்த்தெறிந்தனர். ஆனால், ஸ்தாபன இயல்புள்ள வேறு எதையும் நிறுவுவதற்கான யோசனை அவர்களிடம் இல்லை. படித்த நபர்களை ஒன்றுதிரட்டவும் நூல்நிலையத் துறையை உருவாக்கவும் மக்கள் கமிசார் கவுன்சிலில் விவாதித்தபோது இதைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, சுருக்கமான அந்த விவாதத்திலிருந்தே இந்தத் துறையில் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். வாழ்த்துரை கூறும்போது குறைகளை எடுத்துச் சொல்வது வழக்கமல்ல என்பது உண்மையே, ஆனால் நீங்கள் அந்த பொது வழக்க நிலையிலிருந்து விடுபட்டவர்கள் என்று நம்புகிறேன்.

எனவே வருத்தம் தரும் சில கருத்துகளை நான் எடுத்துக்கூறும்பட்சத்தில் நீங்கள் அதிருப்தி அடையமாட்டீர்கள் என்று நம்புகிறேன். படித்த நபர்களை ஒன்றுதிரட்டும் பிரச்சினையை நாம் எழுப்பியபோது, பூர்ஷ்வா புரட்சியின் வரையறையிலிருந்து உடனடியாகத் தோன்றாமலேயே, நமது புரட்சி மகத்தான வெற்றியடைந்தது பெரிய சாதனையாகக் காட்சியளித்தது. இது அப்போதிருந்த சக்திகளுக்கு வளர்ச்சியடைவதற்கான சுதந்திரத்தை அளித்தது. ஆனால் அப்போதிருந்த சக்திகள் குட்டி பூர்ஷுவாக்களே. அவர்களது குறிக்கோள் அனைவருக்கும் அவனவன் அவனவனுக்கே கடவுள் என்ற சாபக் கேடான முதலாளித்துவ கோஷமாகவே இருந்தது. இது கோல்சக் பூர்ஷுவா சக்திகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்த இடமளித்தது.

எழுத்தறியாத மக்களுக்குக் கல்வி போதிக்க நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பரிசீலித்தால் நாம் மிகச் சிறிய அளவே பணியாற்றி உள்ளோம் என்ற முடிவுக்கு வருவோம். தொழிலாளி வர்க்கச் சக்திகள் ஸ்தாபன ரீதியாகத் திரட்டுவது இந்தத் துறையிலான நமது கடமை என்பதை நாம் உணர வேண்டும். இது வெறும் காகிதத்தளவில் நின்றுவிடக்கூடிய சொல்லடுக்கு அன்று. மாறாக மக்கள் மிக அவசரமாகத் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுப்பதும், ஒவ்வொரு படித்த நபரும் படிக்காத பலருக்குக் கல்வி போதிப்பதும், தனது கடமை என்று கட்டாயப்படுத்துவதும் நமது பொறுப்பாகும். இதைத்தான் நமது ஆணை கூறுகிறது.(115) ஆனால் இந்தத் துறையில் எதுவுமே செய்யப்படவில்லை.

மக்கள் கமிசார் கவுன்சிலில் இன்னொரு பிரச்சினை, அதாவது நூல்நிலையங்கள் பற்றிய பிரச்சினை வந்தபோது தொழில் துறையில் பின் தங்கி நிற்கும் நிலை காரணமாக மிகச் சில புத்தகங்களே இருப்பது பிரதானக்குறை என்று தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குறைகள் இருப்பது உண்மையே. நம்மிடம் எரிபொருள் இல்லை, நமது தொழிற்சாலைகள் செயலற்றுக் கிடக்கின்றன. நம்மிடம் உள்ள காகிதம் மிகக் குறைவு. எனவே நூல்களை வெளியிட முடியாது. இவையாவும் உண்மை. ஆனால் இருக்கும் நூல்களை  நாம் ஒன்றுதிரட்ட முடியவில்லை என்பதும் உண்மை. இந்த இடத்தில் நாம் ஒரு விவசாயியின் பாமரத்தன்மையால் செயலற்ற தன்மையால் பாதிக்கப்படுகின்றோம், ஒரு விவசாயி ஒரு நிலப்பிரபுவின் நூல்நிலையத்தை உடைக்கும் பொழுது தன்னிடமுள்ள புத்தகத்தை எவராவது எடுத்துக் கொண்டுபோய் விடுவார்கள் என்று அஞ்சுகிறார்.

காரணம் வெறுக்கத்தகாத அரசாங்க உடைமையைத் தொழிலாளர் விவசாயிகளின் பொதுவான உடைமையை நியாயமாகப் பங்கீடு செய்வதை அவன் அறியான். இதற்கு அறியாமையில் கிடக்கும் விவசாயிகளைக் குறை கூறுதல் சரியன்று. புரட்சியின் வளர்ச்சியைப் பொருத்தவரை அது முற்றிலும் நியாயமானதே! அதோடு அது ஒரு தவிர்க்கவொண்ணாத கட்டமும் ஆகும். விவசாயிகள் நூல் நிலையங்களைக் கைப்பற்றி அவற்றை ஒளித்து வைத்திருக்கலாம், அவர்களுக்கு வேறு எதுவும் செய்யத் தெரியாது. ஏனெனில் ரஷ்யாவிலுள்ள எல்லா நூல்நிலையங்களையும் ஒன்றிணைத்தால் படிக்க விழையும் ஒவ்வொருவருக்கும் தேவையான நூல்கள் கிடைக்கும்.

படிக்காதவர்களுக்குக் கல்வி கற்பிக்க முடியும் என்பதை அவர்கள் அறியார். தற்போது நாம் ஸ்தாபனக் குலைவு, குழப்பம், மோசமான வாரியப் பூசல்கள் ஆகியவற்றின் மீத மிச்சங்களை எதிர்த்துப் போராட வேண்டும், இதுவே நமது பிரதான கடமை. எழுத்தறிவின்மையைப் போக்கப் படித்தவர்களை ஒன்று திரட்டுவது உடனடிக் கடமை. ஏற்கெனவே உள்ள புத்தகங்களைப் பயன்படுத்தி நாடெங்கும் பரவலாக நூல்நிலையங்களை நிறுவ வேண்டும், உள்ள புத்தகங்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்க வேண்டும், போட்டி அமைப்புகள் இன்றி தனியே ஒருமுகப்படுத்தப்பெற்ற திட்டமிட்ட அமைப்பை நிறுவ வேண்டும். இந்தச் சிறிய விஷயம், நமது புரட்சியின் அடிப்படையான கடமைகளில் ஒன்றைப் பிரதிபலிக்கிறது.

இந்தக் கடமையை நிறைவேற்றத் தவறினால், ரஷ்யக் குழப்பம், திறமையின்மை ஆகியவற்றை அகற்றி அந்த இடத்தில் உண்மையிலேயே முறையான ஒருமுகப்பட்ட அமைப்பை நிறுவுவதில் தவறினால், இந்தப் புரட்சி பூர்ஷுவா புரட்சியாகவே இருக்கும். ஏனெனில் கம்யூனிஸத்தை நோக்கி அணி வகுத்துச் செல்லும் தொழிலாளி வர்க்கப் புரட்சியின் பிரதான சிறப்பு அம்சம் இந்த ஸ்தாபனமே. பூர்ஷுவாக்களைப் பொருத்தவரை அவர்கள் விரும்பியது பழைய அமைப்பை உடைத்து, விவசாயப் பண்ணைகள் வளர்வதற்குச் சுதந்திரமளித்து, முந்திய புரட்சிகளைப் போல மீண்டும் முதலாளித்துவத்தை நிலைநாட்டுவதேயாகும்.

நாம் நம்மைக் கம்யூனிஸ்ட் கட்சி என்று அழைத்துக் கொள்கிறோம். எனவே புறத்தடைகளை அகற்றி பழைய அமைப்புகளைத் தகர்த்துவிட்ட இன்று நாம் மகத்துவம் மிக்க உண்மையான தொழிலாளி வர்க்கப் புரட்சியின் முதற்கடமையான இலட்சோப இலட்சம் மக்களை ஸ்தாபன ரீதியாகத் திரட்டுவதில் இறங்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் துறையில் நாம் பெற்றுள்ள பதினெட்டு மாத அனுபவம் கலாச்சாரமற்ற நிலை, அறியாமை, அநாகரிகம் போன்று இதுகாறும் நம்மை வாட்டி வந்த நிலையிலிருந்து சரியான பாதைக்கும் வெற்றிக்கும் அழைத்துச் செல்லவேண்டும். (புயல் போன்ற கையொலி)

◊ பிராவ்தா இதழ்96-ல் வெளியிடப்பட்டது. (மே 7, 1919)
◊ தொகுப்பு நூல்கள், பாகம் 29, பக். 335-38.

அடிக்குறிப்புகள்:

114:    புரேலெத்கல்த் (தொழிலாளி வர்க்கக் கலாச்சார அமைப்பு என்று சொல்லப்படுவதன் உறுப்பினர்களால் தொழிலாளி வர்க்கக் கலாச்சாரம் என்பதன் பெயரால் பரப்பப்படும் மார்க்சிய – விரோத கருத்துகளை லெனின் குறிப்பிடுகிறார். புரோலெத்கல்த் உறுப்பினர்கள் உண்மையில் கடந்த காலத்தின் கலாச்சார பிதுரார்ஜிதத்தை மறுத்தனர். தம்மைத்தாமே எதார்த்தத்திலிருந்து முறித்துக்கொண்டு ”பரிசோதனைக் கூட முறையின்” மூலமாக ஒரு விசேஷ தொழிலாளி வர்க்கக் கலாச்சாரத்தை உண்டு பண்ண முயற்சித்தனர். மார்க்சியத்திற்கு உதட்டளவில் ஆதரவு தெரிவித்த பிரதான புரோலியத் கல்டின் சித்தாந்தவாதியான போக்தோனோவ், தன் நோக்கு கருத்து முதல்வாதத்திற்கும் மார்க்சியத்திற்கும் ஆதரவளித்தார். அதன் பலஅமைப்புகளின் தலைமையாக விளங்கிய பூர்ஷூவா அறிவுத்துறையினருடன் கூடவே, சோவியத் அரசின் கலாச்சார வளர்ச்சியை உண்மையில் ஊக்குவிக்க விரும்பிய இளம் தொழிலாளிகளும் அதில் இருந்தனர். புரோலெத் கல்ட் அமைப்புகள் 1919-ல் புகழ் பெற்று விளங்கின ; ஆனால் இருபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அவை சீரழியத் தொடங்கி 1932-ல் மறைந்துவிட்டன.

”தொழிலாளி வர்க்க கலாச்சாரம்” குறித்த தமது நகர் தீர்மானத்திலும், இதர பல நூல்களிலும் லெனின் புரோலெத்கல்டின் தவறான கோட்பாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

115:    1918 டிசம்பர் 10-ல் மக்கள் கமிசார் அவையினால் பிறப்பிக்கப்பட்டு, டிசம்பர் 12 இஸ்வெஸ்தியா இதழ் 272-ல் வெளியிடப்பட்ட ”படித்தவர்களை ஒன்று திரட்டி சோவியத் அமைப்பின் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்வது” குறித்த ஓர் ஆணையை இது குறிப்பிடுகிறது. சகல எழுதப்படிக்கத் தெரிந்தவர்களையும் பதிவு செய்வது என்றும் அவர்களைக் குழுக்களாக அமைப்பதற்காக அவர்களிடையேயிருந்து பேச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பது என்றும் இந்தக் குழுக்களை, ”முதலில், சர்க்கார் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இரண்டாவதாக, பொதுவாக மக்கட் தொகையினர் முழுமைக்கும் அரசியல் கல்வி அளிப்பதை ஊக்குவிக்க வேண்டும்” என்றும் இந்த ஆணை முன் மொழிந்தது.

நூல்: கலை, இலக்கியம் பற்றி – வி.இ.லெனின்
தமிழாக்கம்: கே.ராமநாதன்
ஆங்கில மூல நூல் – முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ
1974-ம் ஆண்டு – தமிழாக்க நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.

இதன் முந்தைய பாகத்திற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின்
விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலித்த டால்ஸ்டாய் – லெனின்

டால்ஸ்டாயும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும் – லெனின்
லியோ டால்ஸ்டாயும் அவரது சகாப்தமும் ! | லெனின்

தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !

நாள்: 31-3-2019

ந்திய மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் கொந்தளித்து வெடிப்பதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல, செயலிழந்து வரும் அரசுக் கட்டுமான அமைப்புகள் அனைத்தின் மீதும் மக்கள் அடியோடு நம்பிக்கை இழந்து விட்டார்கள். அதனால்தான் “யார் ஆட்சிக்கு வந்தாலும், எதுவும் செய்துவிட முடியாது.“ என்கிறார்கள்.

சமூக ஒழுக்கம், சமூக நியதி, ஆக்கப்பூர்வமான திட்டங்கள், நேர்மறைக் கொள்கைகளுக்குப் பதிலாக வெறும் கவர்ச்சித் திட்டங்கள், அரசியல் மோசடிகள், கிரிமினல்மயமாதல் தாம் அவர்களிடம் உள்ளன. கிரிமினல் குற்றக் கும்பல்கள் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் கார்ப்பரேட் தரகு முதலாளிகள் அதிகார வர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு, சிவில் சமூகத்தின் மீது ஏறி மிதித்து, முற்றும் முழுதான ஆதிக்கம் செலுத்துகின்றது.

பயங்கரவாத, பிரிவினைவாத, பீதி கிளப்பப்பட்டு மக்களுக்கு எதிராகக் கடுமையான பெருந்திரள் கண்காணிப்பும், அடக்குமுறைகளும் ஏவி விடப்படுகின்றன. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், அதிகார வர்க்க இலஞ்ச ஊழல் அத்துமீறல்கள், போலீசு அக்கிரமங்கள் அராஜகங்கள், நீதித்துறை முறைகேடுகள், ஊழல்கள், அவற்றின் பிற சமூகவிரோத குற்றங்கள், மொத்த அரசமைப்பும், சமூகமும் கடும் நெருக்கடியில், சிக்கி நொறுங்கி சரிந்து வருவதை குறிக்கின்றன. பலவிதமான முயற்சிகளுக்குப் பின்னரும் அவற்றை முட்டுக் கொடுத்து நிறுத்த முடியவில்லை.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் அடங்கிய புதிய தாராளவாதக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு, கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம், சமூக ஒழுக்கம், சமூகப் பொறுப்பு போன்றவற்றைப் பேசுவதெல்லாம் முட்டாள்தனம் என்ற கருத்து பரப்பப்படுகிறது. சுயநலம், இலாபவெறி, நுகர்பொருள் மோகம், வரைமுறையற்ற இன்பநாட்டம், சொகுசு வாழ்க்கை, தனிமனிதப் பேராசை பாலியல் வக்கிரங்கள், போதை வாழ்க்கை, கிரிமினல் குற்றக் கும்பல் வாழ்க்கை, சாதி மதவெறி போன்ற சமூகக் குற்றங்கள் ஆகியவை பன்மடங்கு பெருகி விட்டன. கொலை, கொள்ளை, வழிப்பறி ஆள்கடத்தல், கூலிக்குக் கொலை ஆகிய சமூக விரோதக் கிரிமினல் குற்றங்களையே ஒரு முறையான தொழிலாகக் கொண்ட விலங்குகள் வாழும் காடு போல நாடும், சமூகமும் மாறி வருகிறது.

அரசே தனது வருவாய்க்குரிய வழிமுறையாக, இலக்கு வைத்து சாராய வியாபாரம் நடத்தி, மக்களை குடிகாரர்களாக்கி வருகிறது. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், நிச்சயமற்ற உதிரித்தனமான தொழில்கள் (புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவாக உதிரித்தனமான தொழில்கள் அதிகரித்து வந்தன)  ஆகியவை காரணமாக 15-25 வயது வாலிபர்களில் கணிசமான பேர் குடிகாரர்களாக, காமாந்தகர்களாக, கூலிப்படையினர்களாக மாறிவருகின்றனர். இதனால் சமூக விரோதக் குற்றங்கள் ஏராளமாக வெடிக்கின்றன. சமூக விழுமியங்கள் சீரழிவதும் சமூகக் கட்டுமானங்கள் நொறுங்கிப் போவதும்  பெருமளவு நடக்கின்றன. இவையெல்லாம் சுனாமி போல சிவில் சமூகத்தை சூழ்ந்து, சர்வ நாசமாக்கி வருகின்றன. இந்த நிலைமைகளைக் கண்டு அலறும் எதிர்க் கட்சிகளும்  ஊடகங்களும் நடுத்தர வர்க்கத்தினரும் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து போய்  விட்டதாகக்கூறி போலீசையும் பெருந்திரள் கண்காணிப்பையும்  அதிகரிக்கக் கோருகின்றனர். உண்மையில் இது, ஒரு கன்னத்தில் அறையும் ஒடுக்குமுறை அரசிடமும் ஆட்சியாளர்களிடமும் மறு கன்னத்தைக் காட்டுவதாகும்.

இந்த நிலைமை எதைக் காட்டுகின்றது? நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பு முழுவதும்  தீராத, மீளமுடியாத, நிரந்தரமான, மிக மிக அசாதாரணமான  நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது.

அரசுக் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றவில்லை. அவை, திவாலாகி, தோற்றுப்போய், நிலை குலைந்து, எதிர்நிலை சக்திகளாக மாறிவிட்டன. நாட்டிலுள்ள அரசுக் கட்டுமான அமைப்புக்கள் அனைத்தும், மேலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகி, சீரழிந்து சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டன. ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்புமே நாட்டுக்கும், மக்களுக்கும் வேண்டாத சுமையாகிப் போய்விட்டது. அவற்றை இனியும் நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்?

நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஓர் உச்ச நிலையை எட்டிவிட்டது. மீள முடியாத இத்தகைய நெருக்கடிக்குள் நமது நாட்டைத் தள்ளியுள்ள அரசும், ஆட்சியாளர்களும், ஆளும் வர்க்கங்களும், அரசு அதிகாரத்தில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டன. அவற்றால் தங்களுக்கிடையிலான  முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் கூடத் தீர்வுகாண முடியவில்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித்தராத, மக்களின் உரிமைகளை மறுக்கும், மக்களின் எதிரிகளுக்கு சேவை செய்கின்ற அவை, அதிகாரத்தில் நீடிக்கும் அருகதையற்றவை. இவற்றை நமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தைத் தட்டிக் கேட்கவும், அவர்களின் அதிகாரத்துக்கு சவால் விடவும் மக்கள் ஒன்று திரள வேண்டும்.

படிக்க:
தேர்தல் புறக்கணிப்பு ஏன் ? தீர்வுதான் என்ன ?
தேர்தல் : எத்தனை முறை ஏமாறுவீர்கள் ?

நாட்டின் எல்லாச் சிக்கல்களுக்கும், கட்டமைப்பு  நெருக்கடிக்கும் தீர்வாக, அதிகாரத்தை மக்கள் தாமே கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான, உண்மையில் ஜனநாயகத் தன்மையுடைய மாற்று அரசுக் கட்டமைப்பை நிறுவிக்கொள்ள வேண்டும். மக்களே அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு, அதற்குப் பொருத்தமான ஒரு பொது அமைப்பைக் கட்டி, பொது முழக்கங்களை வகுத்து, பொது இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் புதிய, சரியான, அவசியமான, அரசியல் கடமையாகும்.

அதை விட்டுத் தனித்தனிச் சிக்கல்களுக்குத் தனித்தனித் தீர்வுகளையும் கோரிக்கைகளையும் முழக்கங்களையும் முன்வைத்து, தனித்தனி இயக்கங்களுக்கும் மக்கள் திரண்டால் போதாது. ஆகவே, எல்லாச் சிக்கல்களுக்குமான, கட்டமைப்பு நெருக்கடிக்குமான தீர்வின் தொடக்கமாக, மக்களே அதிகாரத்தை கைப்பற்றும் இயக்கமாக “மக்கள் அதிகாரம்” என்ற புதிய, சரியான, அவசியமான, அரசியல் இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளில் மக்களின் பொறுப்பும் மக்களின் கடமையுமாக இருக்கிறது.

தற்போதைய சட்டமன்ற, நாடாளுமன்ற அரசியலுக்கும் அரசு அதிகார வர்க்க – போலீசு நிர்வாக அமைப்புக்கும் மாற்றாக அவற்றுக்கு வெளியே, நேரடியாக மக்கள் பங்கேற்கும் அதிகார, நிர்வாக அரசியல் அமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும். மக்களுக்காக யாரோ சிலர் அரசு நிர்வாகம் உட்பட ஏதாவது நல்லது செய்வார்கள் என்று பொறுப்புக்களை ஒப்படைக்க முடியாது. மக்களே நேரடியாக அரசு நிர்வாகத்தை நடத்தவும், அதை மக்களே கண்காணித்து தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் முறைகள் வேண்டும்.

அதிகாரம் பற்றிய பிரச்சினை – அது யாரிடம் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான பிரச்சினை. அது மக்களிடம்தான் இருக்க வேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம். இது ஒரு புதிய அரசியல், தற்போதைய சட்டமன்ற, நாடாளுமன்ற அரசியலுக்கும், அரசு அதிகார வர்க்க – போலீசு நிர்வாக அமைப்புக்கும் – வெளியே, உருவாக்கப்பட வேண்டிய புதிய புரட்சிகர அரசியல்.

அரசியல் கட்டமைப்பு நெருக்கடியால் எழும் பிரச்சினைகளுக்கு தேர்தலை இன்னமும் ஒரு தீர்வாக ஆட்சியாளர்கள் நம்பச் சொல்கிறார்கள். யாரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நெருக்கடிகளைத் தீர்க்க முடியும் என்று பேசுகிறார்கள். ஆனால், தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தேர்தல் தீர்வு அல்ல.

தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கு ஏற்ற வகையில் நடத்தப்படும் சுரண்டலும் ஒடுக்குமுறையும்தான் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், அதுவே தேசபக்தி என்ற சித்தாந்தம்தான் இந்த அமைப்பில் கோலோச்சுகிறது. எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் தனிவுடைமையை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் நாட்டை மறுகாலனியாக்கும் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் சேவை செய்பவைதான்.

எனவே, இப்படிப்பட்ட கட்டமைப்புக்குள் நமக்கான தீர்வு கிடையாது. கட்டமைப்புக்கு வெளியில்தான் தீர்வு இருக்கிறது. கட்சிகளை மாற்றுவதால் தீர்வு வராது. கட்டமைப்பையே மாற்றுவதுதான் தீர்வு. தற்போதுள்ள அரசியல் கட்டமைப்புக்கு வெளியே, முற்றிலும் வேறான மாற்று அரசியல் கட்டமைப்புதான் நாட்டுக்குத் தேவை. ஒரு மாபெரும் புரட்சியின், ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம் நிறுவப்படும் மக்கள் அதிகாரம்தான் அதற்கு தீர்வுகாணமுடியும், என்கிறோம் நாம்.

போலீசு, நீதித்துறை, அதிகார வர்க்கம், ஊடகங்கள், கட்சிகள் என அனைத்து துறைகளிலும், தனது ஆட்களை புகுத்தி பாசிச ஆட்சியை நிறுவுவதற்கு ஏற்ப, இந்தக் கட்டுமானங்களை தனக்கேற்ற வகையில் மாற்ற வெறித்தனத்துடன் செயல்பட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ். கார்ப்பரேட் காவி பாசிச சக்திகள். இந்த அபாயத்தை எதிர்ப்பதாக சொல்லும் காங்கிரசு பாதி இந்துத்துவாவாக – மிதவாத இந்துத்துவாவாக உள்ளது. இத்தகைய பாசிச அபாயத்தை முறியடிக்க வேண்டுமானால் அவர்களை முந்திக் கொண்டு நமக்கான மக்கள் அதிகாரக் கட்டமைப்பை நிறுவுவது அவசர அவசியப் பணியாக நம்முன்னே உள்ளது.

கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல,
கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு,
தோற்றுப்போய், ஆள அருகதையற்ற
இன்றுள்ள
அரசு கட்டமைப்பை அகற்றுவோம்!
மக்கள் அதிகாரம் கட்டமைப்போம்!


தோழமையுடன்,
சி.ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களை மாற்றலும் திரித்தலும் தகுமா ?

மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களை மாற்றலும் திரித்தலும் தகுமா ?

– ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்

“பவுத்தத்தின் திறன்சார்ந்த வாழ்வில் வணக்கங்கள், சடங்குகள், தவம் அல்லது பக்தியின் மூலம் ஆதீத ஆற்றல்களைப் பெறுதல், வருவதுரைத்தல் ஆகியவற்றுக்கும் இடமில்லை.” (அ. மார்க்ஸ், புத்தம் சரணம் நூலில்.)

ஆறாம்வகுப்பில் ‘பசிப்பிணி போக்கிய பாவை’ (பக்.24) என்ற நாடகமொன்று மணிமேகலைக் காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மணிமேகலை – தீவதிலகை, மணிமேகலை – ஆதிரை, மணிமேகலை – சோழ மன்னர் – சிறைக்காவலர் என மூன்று காட்சிகள் இதிலுண்டு.

“தீவதிலகை: நம் எதிரில் பூக்கள் நிறைந்து விளங்கும் இந்தப் பொய்கையைப் பார். இதற்கு கோமுகி என்று பெயர். ‘கோ’ என்றால் பசு. முகி என்றால் முகம். பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப் பெற்றது”, (பக்.24)

“மணிமேகலை: வாழ்க்கைக்கு அறம் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது. எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே என் வேண்டுகோள் மன்னா!”, (பக்.27)

நவீன இலக்கியத்திலிருந்து கவிதைகள், சிறுகதைகள், செவ்விகள் போன்றவற்றைப் பாடநூலில் பயன்படுத்தும் போது அவை தணிக்கைக்கு உள்ளாகின்றன. தணிக்கை வாரியம் திரைப்படங்களை வெட்டுவதைப் போன்று படைப்புகளின் சில பகுதிகள் மற்றும் சொற்கள் வெட்டப்படுகின்றன. இதற்கு அந்த ஆசிரியரிடம் (தற்காலப் படைப்பாளி எனில்) அனுமதி பெறுகிறார்களா என்பதும் தெரியவில்லை. இன்னொரு பக்கம் செவ்வியல் இலக்கியங்களையும் திரித்து எழுதுவது சரியா என்பதை ஆசிரியர்களும் பேராசிரியர் பெருமக்களும் உணரவேண்டும். ஏன், எதற்காக இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்கிற விளக்கத்தை இவர்கள் அளிக்க வேண்டும். நாம் தொடர்ந்து வலியுறுத்துவது போல் ‘கிள்ளுக்கீரை’ மனநிலை மொழியை வளப்படுத்தாது; மாறாக மொழிக்கு எதிரானது.

நமது தமிழாசிரியர்கள் மற்றும் தமிழ்ப் பேராசிரியர்கள் பெருமக்கள் பலரும் நவீன இலக்கியத்தில் ஈடுபாடு இல்லாதவர்களாக இருக்கின்றனர். இதுபோக செவ்வியல் இலக்கியத்தை திரிக்கும் போக்கையும் கைவிடமாட்டார்கள் போலிருக்கிறது. ‘குமுதம்’ எனும் இதழை அனைவரும் அறிந்திருப்பர். அந்த நிறுவனம் சுமார் 15 ஆண்டுகளாக ‘தீராநதி’ என்னும் இலக்கிய இதழொன்றை நடத்தி வருவது இவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? மாத இதழான இதை யாரும் வாசித்திருப்பார்களா என்றும் தெரியவில்லை. சிற்றிதழ்கள் இவர்கள் கண்ணுக்குப் படப்போவதேயில்லை. குமுதம் தீராநதி, விகடன் தடம் போன்ற பெரிய நிறுவனங்களின் இதழைக் கூட இவர்கள் கண்ணில் படுவதில்லை என்றால் எப்படி?

‘தீராநதி’ மாத இதழில் ‘நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்’ எனும் தலைப்பில் பேரா. அ. மார்க்ஸ் ‘மணிமேகலை’ பற்றித் தொடர் எழுதிவருகிறார். இவர் தமிழ்ப் பேராசிரியரோ, தமிழாசிரியரோ அல்ல; எழுத்தாளர், மனித உரிமைப் போராளி, சமூக ஆர்வலர், பணிநிறைவு இயற்பியல் பேராசிரியர்.

“சர் கோட்ஃப்ரே லூஷிங்டன் (1885 – 1895 காலகட்டத்தில் இங்கிலாந்து உள்துறைச் செயலாளர்) என்ன இருந்தாலும் ஒரு அதிகாரி. அவரது அறத் தன்னிலைக்கும் அதிகார இருப்பிற்கும் உள்ள முரணை அவரே உணர்ந்து கொள்வதுதான் அவரது மேன்மை எனலாம். சிறைக்கைதிகள் இன்றைய சிறைச்சாலைகளின் ஊடாகக் கழிக்கும் தண்டனை வாழ்வின் மூலம் திருந்துதவற்கு வாய்ப்பே இல்லை என்பதைச் சரியாகவே அடையாளம் காணும் அவர் இந்தச் சிறை அமைப்பில் அது சாத்தியமில்லை எனப் பெருமூச்சு விடுகிறார். அதிகாரி, அவரால் வேறென்ன செய்ய முடியும்?

ஆனால், நம் தமிழிலக்கியத்தில் வேறெங்கும் காணக்கிடைக்காத ஒரு அற்புதம் நிகழ்கிறது. முற்றிலும் நாயகனே இல்லாத, ஒரு நாயகியை மட்டுமே தலைவியாய்க் கொண்டு இயங்கும் மகா காவியமான மணிமேகலையில் காவிய நாயகியான அன்னை மணிமேகலை முற்றிலும் புதுமையாய் ஒரு தீர்வைச் சொல்லுகிறாள். அவள் அதிகாரி அல்லள். குடும்பச் சிறையில் அகப்பட்ட ஒரு சாதாரண மானுடப் பெண்ணும் அல்லள். அவள் புத்த நெறியை ஏற்ற ஒரு துறவி. எனவே அவளால் அதைச் சொல்ல முடிகிறது.

அவளுக்கு புத்தபிரான் அருளால் யாருக்கும் வாய்க்காத ஒரு பெரும்பேறு வாய்க்கிறது. அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி ஒன்று அவளுக்கு அளிக்கப்படுகிறது. அதன் மூலம் மானுடரின் மிகப் பெரிய பிணியாகிய பசிப்பிணியை அகற்றும் பெரும்பேறுக்கு உரியவளாகிறாள் அந்த இளம் பிராயத்தில் அன்னை மணிமேகலை. சிங்கள மொழியில் ‘பசி’க்கு இணையான சொல் ‘படகினி’. அதன் பொருள் வயிற்றிலே தீ. அந்தத் தீயை அணைப்பதைத் தவிர பெரும்பேறு வேறு என்னவாக இருக்க முடியும்?

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியின் ஊடாக வீதிதோறும் அலைந்து பசித்தோர்க்கு அவள் உணவளித்து வரும் அந்தச் செய்தி சோழ மன்னருக்குத் தெரிவிக்கப்படுகிறது. அழைத்து வரச் சொல்கிறார். மன்னனுக்கும் மாதவி மகளுக்கும் இப்படி அமைகிறது உரையாடல்:

“மிக்க தவமுடையாய்! நீ யார்? கையிலேந்திய பாத்திரம் எங்கே கிடைத்தது?”

“அரசே! நெடுங்காலம் வாழ்வாயாக; யான் விஞ்சை மகள். இந்நகரில் வேற்று வடிவங் கொண்டு திரிந்தேன். இது பிச்சைப் பாத்திரம்; இதனை அம்பலத்தேயுள்ள தெய்வமொன்று எனக்கு அருளியது; இது தெய்வத்தன்மையோடு கூடியது. யானைப் பசியென்னும் தீராப்பசியைத் தீர்த்தொழித்தது; பசியால் மெலிந்தவர்களுக்கு மிருதஞ்சீவினியாக உள்ளது”.

“மிக்க தவமுடையாய்! நான் செய்ய வேண்டியது என்ன?”

“சிறைச்சாலையை அறச்சாலையாகச் செய்ய வேண்டும்”.

அன்னையின் வாக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிறைச்சாலை அழிக்கப்பட்டது. அது அறவோர்கள் தங்கும், அறச் செயல்களுக்கான இல்லமாக ஆக்கப்பட்டது”, (சிறைக்கோட்டமும் அறக்கோட்டமும்: பவுத்தம் சொல்வதென்ன? – அ.மார்க்ஸ், ‘தீராநதி’ பிப்.2017)

படிக்க:
மோடியின் மிஷன் சக்தி : சர்வதேச ஊடகங்களின் பார்வையில்…
இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு !

பாடநூலைப் படிக்கும்போது அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. நமது குழந்தைகள் என்ன பாவம் செய்தனர்? என்பதே நம்முன் எழும் கேள்வி. புது விளக்கங்களும் தாங்கள் விரும்பும் அறத்தை மணிமேகலை வழியே சொல்ல வைக்கும் அநீதியும் நிகழ்கிறது. முன்னதாக மணிமேகலைக் காப்பியத்தில் என்னதான் சொல்லப்படுகிறது என்பதைப் பார்த்து விடுவோம்.

“யான்செயற் பாலதென் இளங்கொடிக்கு? என்று
வேந்தன் கூற, மெல்லியல் உரைக்கும் –
“சிறையோர் கோட்டம் சீத்து, அருள் நெஞ்சத்து
அறவோர்க் காக்கும் அதுவா ழியர்” என,
அருஞ்சிறை விட்டாங்கு ஆயிழை உரைத்த
பெருந்தவர் தம்மாற் பெரும்பொருள் எய்தக்
கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க் காக்கினன், அரசாள் வேந்தென்” (பக்.193, மணிமேகலை மூலமும் உரையும் – புலியூர் கேசிகன், வெளியீடு: சாரதா பதிப்பகம்)

“இளங்கொடிக்கு யான் செய்யக்கூடியது என்ன?” என்று வேந்தன் அருளோடு வினவினான்.

மெல்லியலான அவள், “சிறைச்சாலையினை அழித்துவிட்டு அருள் உள்ளங்கொண்ட அறவோர்களுக்கு உரிய அறக்கோட்டமாக அமைத்தருள்க. அதுவே எனக்காகச் செய்யக்கூடியது. நீ வாழ்க!” என்றனள்.

அரிய சிறையிலுள்ளாரை விடுவித்துவிட்டு, அவ்விடத்திலே, ஆயிழையாள் உரைத்த பெருந்தவம் உடையோரால் பெரிதான ஞானச் செல்வத்தைப் புகார் நகரம் அடையுமாறு, கறைப்பட்ட மாக்கள் இல்லாது, அறவோர் வாழும் இடமாக அமையுமாறு, அரசாளும் வேந்தனும் செய்வித் தருளினான் என்க. (பெரும்பொருள் – ஞானச் செல்வம் மக்களிடத்தே அறவுணர்வு பெருகவேண்டும். அறவுணர்வு பெருகிய நாட்டிலே சிறைக்கூடமும் வேண்டிய தன்றாகும் என்பது உணர்க)”. (பக். 193&194, மேலே குறிப்பிட்ட நூல்)

மணிமேகலையின் கோரிக்கையை ஏற்று மன்னன் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுகிறான் என்பதே மணிமேகலைக் காப்பியம் சொல்வது. இவர்கள் இந்த நாடகத்தில் அதை ஒரு கூர்நோக்கு இல்லமாக மாற்றுகிறார்கள். இவர்களுக்குத் தேவையான அறங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று மணிமேகலை கேட்டாளாம்! என்ன விந்தை இது! பசிப்பிணி போக்குதல், பல்லுயிர் ஓம்புதல் என்கிற பவுத்த அறங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது. மனிதனுக்கு மட்டுமல்ல பிற உயிர்களையும் பேணுவது. பெற்றோர்கள், உறவினர்களைப் பேணுதல் என்று திரிப்பது மோசமானது. ‘பெரியோரை மதித்தல்’ என்பதன் மறுதலை சிறியோரை மதிக்காதிருத்தல் அல்லது இகழ்தல் என்பதே. இதற்கு அனைத்து உயிர்களையும் மதிக்கும் பவுத்தம் போன்ற அவைதீக மரபுகளில் இடமில்லை.

அக்கால மன்னராட்சிகளில் கடுந்தண்டனைகள் அளிக்கப்பட்டதும் மரண தண்டனைகள் உடனே நிறைவேற்றப்பட்டதும் சராசரி நிகழ்வுகள். முதல் முறையாக அசோகர் காலத்தில்தான் மரண தண்டனைக் கைதிகளுக்கு கருணை காட்டும் நடைமுறைகளும் தம்ம மகா மாத்திரர்கள் மூலம் சிறைக்கைதிகளுக்கு விடுதலையளிப்பதும் வழக்கத்திற்கு வந்தன. இவை பவுத்தத்தின் பாதிப்பால் நிகழ்ந்தது என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மேலும், சிறையிருப்போர் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் கீழ்க்கண்ட ‘மணிமேகலை’ வரிகள் உணர்த்தும்.

“அதிர்கழல் வேந்தன் அடிபிழைத் தோரை
ஒறுக்கும் தண்டத் துறுசிறைக் கோட்டம்
விருப்போடும் புகுந்து வெய்துயிர்த்துப் புலம்பி
ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை
வாங்கு கையகம் வருந்தநின்று ஊட்டலும்” (பக்.185, மேலே குறிப்பிட்ட நூல்)

“ஒலி முழக்கம் செய்கின்ற வீரக்கழலணிந்த சோழ அரசன், தன்னுடைய திருவடி பணியாதோரை ஒறுக்கும் தண்டனையாக அடைத்து வைத்துள்ள சிறைக்கோட்டம்” என்றே சாத்தனார் குறிப்பிடுவதும் இங்கு கவனிக்கத்தக்கது. சிறையில் இருப்போர் அனைவரும் அறநெறி பிறழ்ந்தவர்களும் அல்லர்.

‘கோமுகி’ப் பொய்கை பற்றிச் சொல்லப்படும் விளக்கம் சரியானதுதானா? ‘கோ’ என்பதற்கு அரசன் என்றும் பொருள் உண்டே! பசுவின் முகத்தில் பொய்கை இருக்கிறது என்பதைவிட, இப்பொய்கைக்கு நீர் வரும் தூம்பு (Drain Pipe) பசு வடிவத்தில் இருக்கிறது என்று சொல்வது கொஞ்சமாவது பொருத்தமுடையதாக இருக்கும். பசு முக வடிவிலான நீர் விழும் தூம்பு என்பது பொருத்தம். இதைப்போல ஆனைத்தூம்பும் உண்டு. இன்றும் கோயில்களில் விலங்குகளின் வடிவத்தில் நீர் வெளியேறும் தூம்புகளை அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.

“ஈங்கி கப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது
மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழிநீர் இலஞ்சி,
இருதிள வேனிலில்; எரிகதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்,
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலை னோடு பொருந்தித் தோன்றும்
ஆபுத் திரன்கை அமுத சுரபியெனும்
மாபெரும் பாத்திரம், மடக்கொடி கேளாய்!”, (பக்.110, மேலே குறிப்பிட்ட நூல்)

“தீவதிலகை: இப்பொய்கைக்கு வேறு ஒரு சிறப்பும் உண்டு. வைகாசித் திங்கள் முழு நிலவு நாளில் இப்பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும்”. (பக்.25) என்று வெறுமனே சொல்லப்படுகிறதே! இங்கு ஏன் இவர்களது ‘பாஷ்யம்’ இல்லாமற்போனது? இளவேனில் வைகாசித் திங்கள் முழுநிலவில் ‘அமுதசுரபி’ தோன்றக் காரணமென்ன? அதுதான் புத்தர் பெருமான் பிறந்த நாளன்றோ! அதைச் சொல்வதற்குக்கூட உங்களுக்கு அறிவு வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது? இல்லாததை ஏற்றிக் கூறுவதும் இருப்பதை விட்டுவிடுவதும் அறமாகுமா?

சுரம் என்பதற்கு இசைக்குறிப்பு, ஏழிசை, இசைவகை, பாலை, காய்ச்சல், கள், எரிந்துபோன காடு, உப்பு, வழி, உயிரெழுத்து, குரல், நகத்தின் அடி என பல பொருள்கள் உண்டு. ஆங்கிலத்தில் burnt forest, desert, musical note, fever, salt, toddy என்றெல்லாம் பொருள் சொல்லப்படுகிறது.

இங்கு ‘சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை’ (பக்.16) என்று சொல்லப்படுகிறது. ‘சுரம்’ என்பது இங்கு பாலை என்னும் பொருளில் கையாளப்படுவதாகவேத் தோன்றுகிறது. வறண்ட நிலம், மணல் சார்ந்த நிலம் என்பதைவிட நாநிலங்களும் தம் இயல்பில் திரிவது என்பதே சரியாக இருக்கும். எனவே கீழ்க்கண்ட நூல் விளக்கம் இதற்கும் பொருந்தும் எனக் கருதுகிறேன்.

எனது ‘கல்வி அறம்’ நூல் கட்டுரையிலிருந்து (பாரதி புத்தகாலயம் – புக் ஃபார் சில்ரன் வெளியீடு) இது குறித்துச் சொல்லப்பட்ட சிறு குறிப்பை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

மணலும் மணல் சார்ந்த பகுதி பாலை.

“குறிஞ்சியும் முல்லையும் தன் இயல்பில் திரிவது பாலை, என்றுதான் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதை இவ்வாறு எளிமைப்படுத்துவது பொருத்தமாக இருக்காது. தொல்காப்பியர், திருவள்ளுவர் போன்றவர்கள் சொல்லியிருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. உலகின் வெப்ப மற்றும் குளிர் பாலைகள் உள்ளன. ரஷ்யாவில் அமுதார்யா, சிர்தார்யா ஆகிய இரு நதிகளால் உருவான ஏரல் கடல் (ஏரி) வறண்டு போயுள்ளது. அண்டார்ட்டிகாவின் பெரும்பகுதி பாலைவனமே. பாலையாதல் (Desertification) இன்றுள்ள மிக முக்கிய சூழலியப் பிரச்சினை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நாநிலங்களும் பாலையாகும் வாய்ப்புண்டு”. (பக்.122&123, கல்வி அறம், பாரதி புத்தகாலயம் – புக் ஃபார் சில்ரன் வெளியீடு, டிச. 2018)

கடலூர் மாவட்டத்தினைக் கண்டுபிடிக்க 10 குறிப்புகள் உள்ளன. அவற்றில் “இந்தியாவில் அதிகளவு பழுப்பு நிலக்கரி கிடைக்கும் சுரங்கம் உடைய ஊரைக் கொண்ட மாவட்டம்”. “சுரபுன்னைக் காடுகளுடன் கூடிய ஏரி இம்மாவட்டத்தின் அழகான சுற்றுலாத்தலம் ஆகும். (பக்.23)

பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் திறந்த வெளிச் சுரங்கமாக உள்ளதால் இதை வேறு பெயரிட்டு அழைப்பது பொருத்தம். ‘அகழி’ எனலாம் என்று பழைய ‘தினமணி’யில் ஐராவதம் மகாதேவன் கருத்துரைத்திருந்தார். ‘சுரபுன்னைக் காடுகள்’ நல்ல சொல்லாக்கந்தான், இருப்பினும் சதுப்புநிலக் காடுகள், மாங்குரோவ் காடுகள் என்று ஒவ்வொரு பாடங்களிலும் வெவ்வேறுச் சொற்களால் அழைப்பதில் மாணவர்களுக்கு ஏற்படும் குழப்பத்தைத் தெளிவுபடுத்தும் வழிகள் நமது பாடத்திட்டத்திலும் கல்வியமைப்பிலும் இல்லாதது பெருங்குறையாகும். இங்கு ‘சுரம்’ என்பது உப்பு மற்றும் அப்பகுதிகளில் உள்ள மரத்தைக் குறிக்கும் பொருளில் வருகிறது.

‘தங்கைக்கு’ – மு.வரதராசன், ‘தம்பிக்கு’ – அறிஞர் அண்ணா ஆகிய நூல்கள் குறிப்பிட்ட ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. ‘பெரியார் சிந்தனைகள்’ ஆனைமுத்து அவர்களால் தொகுக்கப்பட்ட பெரியாரின் 20 நூற்தொகுப்புகளைக் குறிக்கும். இதை ‘பெரியார் சிந்தனைகள் – ஆனைமுத்து’, (பக்.46) என்று எழுதுவது பொருத்தமானதா?

பத்தியைப் படித்து வினா எழுதுதலில் வ.உ.சிதம்பரனார் பற்றிய பத்தியொன்றுள்ளது. அதில் ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்று குறிப்பிடப்படுகிறது. (பக்.15) ‘Swadeshi Steam Navigation Company’ (1906) என்று பதிவு செய்யப்பட்ட கம்பெனியை மொழிபெயர்ப்பது சாத்தியமா? Coral Mill ஐ பவள ஆலை என்றும் Sun TV சூரியத் தொலைக்காட்சி என்றும் மொழிபெயர்ப்பது சரியல்ல.

“இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு”, (பக்.11) என்ற தலைப்பில் ஏன் ‘தமிழர்கள்’ என்கிற பன்மையடையாளம் இல்லை. முத்துராமலிங்கனாரின் பங்கை மட்டும் உயர்த்திப் பிடிக்கும் மா.சு. அண்ணாமலையின் கட்டுரையைவிட நேதாஜியை, இந்திய தேசிய இராணுவத்தை நடுநிலையுடன் அணுகும் வேறு கட்டுரைகளை வெளியிட்டிருக்கலாம்.

கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதா, வேண்டாமா என்பதில் தெளிந்த சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாமல் ஓரிடத்தில் ஏற்பதும் பிறிதோரிடத்தில் மறுப்பதும் பாடநூல்களின் பொதுப்புத்தியாக உள்ளது. இதைப் படிக்கும், எழுதும் குழந்தைகளுக்கு ஏற்படும் தடுமாற்றங்கள் மற்றும் குழப்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டாமா?

“தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம், என்றார் பாரதியார்”, (பக்.24) என்ற வரிகளில் ‘ஜெகத்தினை’ ‘செகத்தினை’ என்று எழுதுபவர்கள் ஆசிய ஜோதி (பக்.42), ஜீவஜோதி, ஜீவன் ஜோதி (பக்.45), புஷ்பாஞ்சலி, ஹிதேந்திரன் (பக்.52), கைலாஷ் சத்யார்த்தி (பக்.48) என்ற சொற்களில் ஏன் கிரந்தத்தைக் காண்பதில்லை? தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன் (பக்.03) என்றும் எஸ்.ராமகிருஷ்ணன் (பக்.31) எழுதலாமா? Khalil Gibran என்பதை கலீல் கிப்ரான் (பக்.23) என்பதா கலீல் ஜிப்ரன் என்பதா? கிப்ரன்/ஜிப்ரன் என்று நீட்டாமல் சொல்லத் தோன்றுகிறது. கிரந்த வெறுப்பில் செசல்ஸ் (ஷெஷல்ஸ்) என்று எழுதுகிறார்கள். ஆனால் ஜானகி, நேதாஜி, ஜான்சிராணி என்று எழுதும்போது வேறு விதிகள் கடைபிடிக்கப்படுகின்றனவா?

இன்று 90% க்கு மேற்பட்டத் தமிழ்க்குழந்தைகள் பெயர்களில் இந்த கிரந்த எழுத்துகள் இல்லாமல் இல்லை. அவற்றை என்ன செய்வது? வருகைப் பதிவேட்டில் இம்மாதிரி மாற்றி எழுத முடியுமா? தமிழ்ப் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு என்பது போல திட்டங்களைப் பரிந்துரைக்கலாமா? (அதிலுள்ள அரசியல் மற்றும் குளறுபடிகள் வேறு கதை.) தமிழ் எழுத்துகளில் பெயரிடுதல், தனித்தமிழ் பெயரிடுதல் என்று ஒரு வகை உண்டு. தனித்தமிழை வலியுறுத்தும் தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசியர்களும் கிரந்த எழுத்துடன் பெயரிடுவது பற்றி மவுனம் சாதிக்கின்றனர். ஷேக்ஸ்பியரை ‘செகப்பிரியர்’ என்றும் ஜோதியை ‘சோதி’ என்றும் மாற்றினால் தமிழ் வளர்திடுமா, சிறந்திடுமா?

படிக்க:
ஆளுமை என்ற தமிழ்ச் சொல்லை உருவாக்கியது யார் !
உனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா

ஓரிடத்தில் உறுப்புத்தானம் (பக்.50), மற்றோரிடத்தில் உறுப்புதானம் (பக்.52). ஏன் வல்லினம் மிகுவதில்லை. தானம் தமிழா? ‘உறுப்புக்கொடை’ என்று சொல்லக்கூடாதா? புதின ஆசிரியர் (பக்.23), நாவல்கள் (பக்.31) என்று சொல்லாமல் வழக்கிலுள்ள ‘நாவல்’ என்பதைப் பயன்படுத்தினால் என்ன? ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கவா முடியும்? ‘கலைச்சொல் அறிவோம்’ பகுதியில் ‘கட்டிலாக் கவிதை’ – Free verse (பக்.68) என்றுள்ளது. இது நன்றாகவா இருக்கிறது? ‘புதுக்கவிதை’ என்றே சொன்னாலென்ன?

‘மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்’ என்ற வகையிலும் இதே சிக்கல்தான்! இலங்கைத் தீவு, இலட்சத்தீவு, இராஜாஜி (பக்.05), இராமநாதபுரம் (பக்.09), உரோம நாட்டுச் சிந்தனையாளர்கள் (பக்.51), இராணுவம், இராஜாமணி என்று ஒருபுறம் எழுதுவதும் மறுபுறம் இலட்சுமி, லோகநாதன் என்று எழுதுவதும் தொடர்கிறதே! ஏதேனும் ஒரு ஒழுங்கு வேண்டாமா?

(இன்னும் வரும்…)

நன்றி : முகநூலில் சிவகுருநாதன் முனியப்பன்

Resist Corporate Saffron Fascism ! Trichy Conference | video

This is an edited video of the conference organised by Makkal Athikaram. We were in the forefront of the Thoothukudi anti sterlite struggle and the militant mass protests against the govt run liquor network. On both these issues  the political parties of Tamilnadu  were compelled to stand in support of the struggles.

This conference,  which was conducted, defying many odds created by the police and the RSS. had attracted thousands of people, and has also made a significant impact on the mainstream  political parties.  Spread this video to all democratic forces and help build a solidarity against fascist danger.

– Makkal Athikaram

பேராசிரியர் சாய்பாபா …!

பேராசிரியர் சாய்பாபா … டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர். கார்ப்பரேட் நலன்களுக்காக பலியிடப்படும் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக இடைவிடாமல் குரல் கொடுத்தவர். பசுமை வேட்டை என்ற பெயரில் மத்திய இந்தியாவின் பழங்குடிகள் மீது நடத்தப்பட்ட இரக்கற்ற போரை கண்டித்ததில் முதன்மையானவர். சல்வா ஜூடும் என்ற அரச கூலிப்படையை அம்பலப்படுத்தி எழுதியவர். போலியோ தாக்குதலால் 90 சதவிகித உடல் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருபவர்.

பேராசிரியர் சாய்பாபா.

மாவோயிஸ்ட் சார்புள்ள ’புரட்சிகர ஜனநாயக முன்னணி’ என்ற அமைப்புடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்ததாகக்கூறி UAPA உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 2014-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார் சாய்பாபா. ஓராண்டு சிறைக்குப் பிறகு 2015 ஜூலை மாதத்தில் பிணை வழங்கினாலும், அதே ஆண்டு டிசம்பரில் மறுபடியும் கைது செய்தனர். ஐந்து மாதங்கள் கழித்து 2016 ஏப்ரலில் பிணை கிடைத்தது. ஆனால், 2017 மார்ச் மாதத்தில் வழக்கில் தீர்ப்பளித்த கச்சிரோலி செசன்ஸ் நீதிமன்றம் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதில் இருந்து இப்போதுவரை அவர் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

90 சதவிகித உடல் இயங்காத நிலையில் சிறுநீரக பிரச்னை, முதுகுத்தண்டு பிரச்னை என பல தீவிர உடல்நலக் கோளாறுகளுக்கு ஆட்பட்டிருக்கிறார் சாய்பாபா. இதயக்கோளாறு உள்ளது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் தாங்கவியலாத வலியில் துடிக்கிறார். ‘’பல நேரங்களில் சிறைக்குள் அவர் மயங்கி விழுந்துகிடக்கிறார். ஆனால், அவருக்கு உயிர் காப்பதற்கு உரிய போதுமான சிகிச்சை வழங்கப்படவில்லை” என்கிறார் சாய்பாபாவின் மனைவி வசந்தகுமாரி. சாய்பாபாவுக்கு பிணை கேட்ட இவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

நமது பொதுக் கட்டடங்களே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த உகந்ததாக இல்லை. தண்டிப்பதற்காகவே கட்டப்படும் சிறைகள் எப்படி இருக்கும்? சிறையின் கழிப்பறையை பயன்படுத்துவதற்காக தன், கை, கால்களை பயன்படுத்தி தவழ்ந்து செல்ல வேண்டியிருப்பதால் சாய்பாபாவின் ஒரு கால் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டதாக குறிப்பிடுகிறது Newslaundry இணையதளம்.

சாய்பாபா கைது செய்யப்பட்டதற்கு முந்தைய ஆண்டுகளில், அதே ’பசுமை வேட்டை’ நடவடிக்கைகளை விமர்சித்தமைக்காக, ‘மாவோயிஸ்ட் தொடர்பு’ குற்றச்சாட்டில் மருத்துவர் பினாயக் சென் கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு இவருக்கு பிணை கிடைத்தது.

அதே பசுமை வேட்டை நடவடிக்கைகளை கண்டித்தமைக்காக, அதே ‘மாவோயிஸ்ட் தொடர்பு’ குற்றத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் அருண் ஃபெரைரா கைது செய்யப்பட்டார். ஐந்து ஆண்டுகள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், கடைசியில் நிரபராதி என்று சொல்லி விடுவிக்கப்பட்டார்.

மராட்டிய பேஷ்வா படைகளை, ஆங்கிலேயர்களுடன் இணைந்து தலித் படைவீரர்கள் வெற்றிகொண்ட இடம், மகாராஷ்டிரா மாநிலம் பீமா கொரேகான். இவ்விடத்தில் அம்பேத்கர் சென்று அஞ்சலி செலுத்தியதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இங்கு 2017-ம் ஆண்டு எல்கார் பரிசத் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவோயிஸ்ட் சார்புடையவர்களால் நடத்துப்பட்டுள்ளதாக கூறி, அதன் ஏற்பாட்டாளர்களையும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையும் UAPA சட்டப்பிரிவில் கைது செய்தது காவல்துறை. இதில் ஒருவர் சாய்பாபாவுக்காக வழக்காடிய வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங். ரோனா வில்சன், சுதிர் தவாலே, மகேஷ் ராவத், சோமா சென் ஆகியவர்கள் மற்ற நான்கு பேர். இவர்கள் ஐந்து பேரும் பல்வேறு மக்கள் நல உரிமைகளுக்காக செயல்பட்டு வருவோர்.

இந்த ஐந்து பேரின் கைதை எதிர்த்த, கண்டித்த புகழ்பெற்ற வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவிஞர் வரவரராவ், வெர்னன் கல்சால்வெஸ், கௌதம் நவ்லக்கா, அருண் ஃபெரைரா (ஏற்கெனவே 5 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு நிரபராதி என விடுவிக்கப்பட்டவர்) ஆகிய ஐந்து பேரை 2018 ஆகஸ்ட்டில் கைது செய்தது புனே காவல்துறை. தற்போது வரை இவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஐந்து பேரின் கைதைக் கண்டித்த பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இருக்கிறார்.

படிக்க:
இந்திய அரசு பயங்கரவாதம் : பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை !
பேராசிரியர் சாய்பாபா கைது – அரச பயங்கரவாதம்

2015-ல், பேராசிரியர் சாய்பாபாவின் கைதை கண்டித்து அருந்ததி ராய் அவுட்லுக்கில் எழுதிய ஒரு கட்டுரைக்காக criminal contempt நோட்டீஸ் அனுப்பியது மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, துப்புரவு பணியாளர்கள் சூழ்ந்த குடியிருப்பில் வளர்ந்த பேராசிரியர் சாய்பாபாவின் முனைவர் பட்டத்துக்கான தலைப்பு : Elite bias in English writing in India

மேலும் விவரங்களுக்கு : livelaw , newslaundry

நன்றி : முகநூலில் பாரதி தம்பி


இதையும் பாருங்க …

மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! சென்னை மக்கள் கருத்து

தாமரை வந்தா வரட்டுமே…! அது லஷ்மி கடாட்சம் என்கிறார் பாஜக ஆதரவாளர் ஒருவர். அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பாஜக மற்றும் மோடி மீது கடும் வெறுப்பில் இருக்கிறார்கள். சென்னை கோயம்பேடு காய்கனி சந்தையில் மக்கள் தெரிவித்த கருத்துக்கள்…

பாருங்கள்!

நண்பர்களுக்கு பரவலாக பகிருங்கள்!

நேர்காணல்:

சாட்டிலைட்களை அழித்து சோதித்தால் விண்வெளி குப்பையாகும் !

ந்தியா டுடே இதழில் இராணுவம், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களைக் கவனித்துவருபவர் சந்தீப் உன்னிதன். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் வி.கே. சரஸ்வத்தை சந்தீப் உன்னிதன் ஒரு பேட்டி எடுத்திருந்தார். அந்தப் பேட்டி 2012-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி இந்தியா டுடே இதழில் வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியிலிருந்து:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் வி.கே. சரஸ்வத்.

கேள்வி : செயற்கைக் கோள்களை விண்வெளியிலேயே அழிக்கும் சக்தி DRDOவுக்கு உள்ளதா?

வி.கே.எஸ். : இந்தியாவில் சாட்டிலைட் எதிர்ப்பு அமைப்பிற்கான எல்லா பாகங்களும் இந்தியாவிடம் தயாராக உள்ளன. விண்வெளியை ஆயுதமயமாக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால், எல்லாம் தயாராக இருக்க வேண்டுமென விரும்புகிறோம். இவையெல்லாம் தேவைப்படும் நேரம் வரலாம். ஆகவே, ஒரு சாட்டிலைட் எதிர்ப்பு அமைப்பிற்கான எல்லாம் தயாராக இருக்கிறது. சிறிய மாறுதல்களைச் செய்ய வேண்டும். ஆனால், அதனை எலக்ட்ரானிக்கலாக செய்துவிடலாம்.

ஆனால், ஒரு சாட்டிலைட்டை மோதி, நொறுக்கி சோதனை செய்து பார்க்க மாட்டோம். ஏனென்றால், விண்வெளியில் துகள்கள் உருவாகி, பிற சாட்டிலைட்களைச் சேதப்படுத்தும்.

கேள்வி : இந்த சாட்டிலைட் எதிர்ப்புத் திறனை எப்படி உருவாக்கினீர்கள்?

வி.கே.எஸ். : சாட்டிலைட்களைக் குறுக்கிட சில அடிப்படையான அம்சங்கள் தேவை. முதலாவதாக, விண்வெளியில் சுற்றும் சாட்டிலைட்டின் பாதையைக் கணிக்கும் திறன். பிறகு, அவற்றை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி, அவற்றை அழிக்கும் திறன் வேண்டும். நம்மிடம் Long Range Tracking Radar (LRTR) இருக்கிறது. அதை 600 கி.மீ. தாண்டிச் சென்று தாக்கும் கண்டம் தாண்டும் ஏவுகணைகளில் பயன்படுத்துகிறோம். அதன் திறனை 1400 கி.மீ-ஆக உயர்த்தினால், சாட்டிலைட்களை கணிக்க முடியும்.

உண்மையில், சாட்டிலைட்களைத் தாக்குவதைவிட, கண்டம்தாண்டும் ஏவுகணைகளைத் தாக்குவதுதான் கடினம். சாட்டிலைட்டுகள், அவற்றுக்கென வகுக்கப்பட்ட பாதையில்தான் செல்கின்றன.

கண்டம் தாண்டும் ஏவுகணையைப் பொருத்தவரை ஒரு சதுர மீட்டரில் 0.1 அளவுள்ள ஏவுகணையை, கண்டுபிடித்து மறிக்கிறோம். சாட்டிலைட் அதைப் போல பத்து மடங்கு பெரிது. ஒரு மீட்டர் அளவுக்கு இருக்கும்.

படிக்க:
இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு !
கோயம்பேட்ல மலராத தாமரை கோட்டையில எப்டி மலரும் | காணொளி

கண்டம் தாண்டும் ஏவுகணைக்காகத் தயாரிக்கப்பட்ட தொலைத் தொடர்பு அமைப்பும் நம்மிடம் இருக்கிறது. அக்னி – 5க்காக தயாரிக்கப்பட்ட முதல் ஸ்டேஜ் பூஸ்டர், ஒரு ஏவுகணையை 600 கி.மீ. ஏவும் திறனுடையது. கண்டம் தாண்டும் ஏவுகணையை மோதி அழிக்கும் வாகனமும் (kill vehicle) நம்மிடம் உள்ளது.

சாட்டிலைட்டைத் தாக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளதாக சரஸ்வத் 2012-ல் சொல்கிறார். ஏன் அதனைச் சோதித்துப் பார்க்கவில்லையென்றும் சொல்கிறார். அவரது விரிவான பேட்டிக்கான இணைப்பு சுட்டி. india today

நன்றி : முகநூலில் Muralidharan Kasi Viswanathan

பேஸ்புக் மூலம் வாக்காளர்களுக்கு பரிசளிக்கும் பாஜக !

”மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, வாக்காளர்களின் தீர்மானங்களை தமக்குச் சாதகமாக மாற்ற எந்தவிதமான வற்புறுத்தல்களையும் வேட்பாளர்கள் செய்யக் கூடாது. அதே போல் வாக்காளர்கள் வற்புறுத்தப்படுகின்றனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும்” என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி. அவர் காகிதத்தில் எழுதப்பட்ட சட்டங்களைக் குறிப்பிடுகிறார். தேர்தல் காய்ச்சலில் நடுக்கம் கண்டிருக்கும் பாரதிய ஜனதாவிற்கு இச்சமயத்தில் சட்டங்களோ விதிமுறைகளோ முக்கியமல்ல – வெற்றி பெற வேண்டும். எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ளது அக்கட்சி.

முகநூலின் வாராந்திர ”ஆட் லைப்ரரி” அறிக்கையின் படி, மார்ச் 17 துவங்கி 23-ம் தேதி வரையிலான வாரத்தில் ”எனது முதல் வாக்கு மோடிக்கே” (‘My First Vote For Modi’) என்கிற மோடி ஆதரவு முகநூல் பக்கம் மட்டும் தேர்தல் விளம்பரங்களுக்காக 46.6 இலட்ச ரூபாய் செலவிட்டுள்ளது. குறிப்பிட்ட வாரத்தில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களுக்காக மட்டும் சுமார் 1.1 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த கணக்கு முதல் இருபது முகநூல் பக்கங்களின் செலவினங்களைக் குறித்தது மாத்திரமே. இந்தப் பட்டியலில் உள்ள முகநூல் பக்கங்கள் பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சி சார்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத் கி மன்கி பாத் ( ‘Bharat Ke Mann Ki Baat’ ), இந்தியன் பொலிடிக்கல் ஆக்‌ஷன் கமிட்டி (‘Indian Political Action Committee’), நேஷன் வித் நமோ (‘Nation with NaMo’) உள்ளிட்ட வெவ்வேறு பெயர்களில் துவங்கப்பட்டுள்ள முகநூல் பக்கங்கள், பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக விளம்பரங்களை வெளியிட்டு வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு வாரகாலத்தில் பாரதிய ஜனதா ஆதரவு முகநூல் பக்கங்கள் 67 இலட்ச ரூபாயும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் முகநூல் பக்கங்கள் 24 இலட்சமும், பிஜூ ஜனதா தள் ஆதரவு முகநூல் பக்கங்கள் 10.5 இலட்ச ரூபாயும், காங்கிரசு ஆதரவு பக்கங்கள் 8 இலட்ச ரூபாயும் செலவழித்துள்ளன.

முகநூலின் விளம்பர நூலகத்தின் மின்தரவுகளை ஆய்வு செய்து பார்த்த ஆல்ட் நியூஸ் இணையதளம், பாரதிய ஜனதா ஆதரவுப் பக்கங்கள் தேர்தலுக்கு மூன்று மாதங்கள் முன்பிருந்தே பிரச்சார வேலைகளைத் துவக்கி விட்டதை சுட்டிக்காட்டுகின்றது. குறிப்பாக வாக்காளர்களுக்கு “கவர்ச்சியான இலவசங்களை” அளிக்கவுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளது “எனது முதல் வாக்கு மோடிக்கே” எனும் தளம். இலட்சிணைகள், லேப்டாப் பேக்குகள், டீ-சர்ட்டுகள், கைப்பேசிக்கான கவர்கள், தொப்பி உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை தரவுள்ளதாக இந்த இணையப் பக்கம் வாக்குறுதியளித்துள்ளது. ”மோடிக்கே உங்கள் முதல் வாக்கு என்பதை உறுதி கூறுங்கள்; ஆச்சர்யமான பரிசுகளை வெல்லுங்கள்” என்கிறது அந்தப் பக்கத்தின் விளம்பர வாசகம்.

பாரதிய ஜனதாவை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பிற முகநூல் பக்கங்களும் இதே போன்ற பரிசுப் பொருட்களை வழங்கப் போவதாக விளம்பரங்கள் வெளியிட்டு வருவதை ஆல்ட் நியூஸ் செய்துள்ள ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது. மேலும், பரிசுப் பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் ஏற்கனவே நமோ செயலியில் (Namo App for Smart Phones) விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து இந்த முகநூல் பக்கங்கள் அனைத்தும் தங்களது முகவரியில் பாரதிய ஜனதாவின் தலைமை அலுவலகத்தையே குறிப்பிட்டுள்ளன.

இந்த விளம்பரங்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தண்டனைக்குரியவை. வாக்காளர்களுக்கு பணமோ பரிசுப் பொருட்களோ கொடுத்து வாக்கு சேகரிப்பதைத் தடுக்க வேண்டிய கடமை தேர்தல் கமிசனுக்கு உண்டு. எனில், இந்த நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? இந்த செலவினங்களை பாரதிய ஜனதாவின் தேர்தல் செலவுகளில் சேர்க்கப்பட்டுள்ளதா? என்பன போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய தேர்தல் ஆணையமோ இதுவரை கள்ள மவுனமே சாதித்து வருகின்றது.

தமிழகத்தைப் பொருத்தவரை, நமக்கு இதெல்லாம் புதிதில்லை. வாக்குகளுக்கு பணம் கொடுக்க ஓட்டுக் கட்சிகள் கண்டுபிடித்துள்ள “விஞ்ஞானப்பூர்வமான” வழிகள் அனைத்தையும் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சென்ற சட்டமன்றத் தேர்தலின் போதும், அதற்குப் பின் புரட்சித் தலைவி ஆட்சியில் இருந்த போது நடந்த இடைத் தேர்தல்களின் போதும், போலீசாரே குறிப்பிட்ட பகுதிக்குள் பிற கட்சிகள் நுழைவதைத் தடுத்து விளக்குப் பிடித்துக் கொண்டிருக்க, ஆளும் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்தது குறித்த செய்திகள் ஏராளம் வெளியாகியுள்ளன. அம்மாவின் வழியில் சொந்தக் கம்பெனி நடத்தி வரும் டிடிவி தினகரன் இருபது ரூபாய் டோக்கனை வைத்து ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகளைக் களவாடிய சாமர்த்தியத்தையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், பணப்பட்டுவாடாவை ”டிஜிட்டல்” மயமாக்கியிருக்கும் பாரதிய ஜனதா, அம்மாவின் தேர்தல் உத்திகளை ஒரு புதிய தளத்திற்கே உயர்த்தியுள்ளது. இதை ஏன் தேர்தல் கமிஷன் கண்டு கொள்ள மறுக்கிறது என சிலர் அங்கலாய்க்கின்றனர். இப்படி அங்கலாய்ப்பதாக இருந்தால் மோடி சார்பு தீர்ப்புகளை உதிர்க்கும் நீதிமன்றங்கள், அசீமானந்தாவை அவிழ்த்து விட்ட தேசிய புலனாய்வு முகமை, மிரட்டலுக்கான கருவிகளாய் உருமாறி இருக்கும் சி.பி.ஐ., வருமான வரித்துறை, சி.ஏ.ஜி உள்ளிட்ட மத்திய அமைப்புகள் என நமது அங்கலாய்ப்பிற்கு ஏராளமான துறைகள் வரிசை கட்டி நிற்கின்றன.

படிக்க:
ஃபேஸ்புக் பாதுகாப்பு : ஒரு முறை பயிரை மேய்ந்து விட்ட வேலி மறுமுறை மேயாதா ?
உங்கள் சிந்தனையை வடிவமைக்கும் விளம்பரங்கள்

கடந்த ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் துளியளவாவது மரியாதையைக் காப்பாற்றி வைத்திருந்த அரசு உறுப்புகள் அனைத்தும் இன்று நிர்வாணமாய் நின்று கொண்டிருக்கின்றன. அதற்கு மேலும் ஒரு உதாரணமாய் மாறியுள்ளது தேர்தல் கமிஷன். ஜனநாயகத்தின் ஆகக் கடைசியான நம்பிக்கையாக லிபரல் அறிவுஜீவிகளால் நம்பப்படும் தேர்தல் அமைப்புமுறையும் சீரழிந்து விட்டது அம்பலமாகி வருகின்றது. இனிமேலும் இந்துத்துவவாதிகளை தேர்தலின் மூலம் மட்டுமே வீழ்த்தி விடமுடியும் என கருதுகிறீர்களா?

சாக்கியன்

கோயம்பேட்ல மலராத தாமரை கோட்டையில எப்டி மலரும் | காணொளி

மோடி நாட்டையே அடமானம் வைத்து விட்டதாக ஆவேசப்படுகிறார் நாகராஜ். சென்னை கோயம்பேட்டில் சிறு காய்கறி வியாபாரியாக இருக்கும் அவர் மோடி ஆட்சியில் தொழிலாளிகளும் மக்களும் பட்ட துன்பத்தை கோபத்துடன் விவரிக்கிறார். எடப்பாடி அரசு எட்டு வழிச்சாலை இன்னபிற திட்டங்கள் மூலம் கொள்ளையடித்ததையும் பட்டியல் போடுகிறார்.

மொத்தத்தில், தாமரை மலரவே மலராது என்கிறார் நாகராஜ்.

அவரது முழு காணொளியைக் காண…

பாருங்கள்… பகிருங்கள்…!


இதையும் பாருங்க …