Friday, May 30, 2025
முகப்பு பதிவு பக்கம் 353

பொள்ளாச்சி பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஃபேஸ்புக் பதிவுகள் !

பொள்ளாச்சி பாலியல் வன்முறை குறித்த முகநூல் பதிவுகள் தொகுப்பு …

ருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பொள்ளாச்சியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பலர் கொந்தளிப்புடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்றும் எழுதிவருகின்றனர். சில முகநூல் பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்…

இரா.கலையரசு

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண்.59/2019 ஆக இந்திய தண்டனை சட்டம் 354A, 354B, 392, தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-E மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரிவுகளின் கீழ் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது. ஆனால், வழக்கில் ஆரம்பத்தில் கோவை மாவட்ட காவல்துறையினர் செய்த தவறுகள், வரும் காலத்தில் சிபிஐ அல்லது வேறு எந்த புலானாய்வு அமைப்புகள் விசாரித்தாலும் எதிரிகளுக்கு சாதகமாகத்தான் முடியப் போகின்றது.

1. எதிரிகளை பொள்ளாச்சி காவல் துறையினர் அவர்களுடைய காவலுக்கு (Police Custody) எடுத்து விசாரிக்கவில்லை. அவ்வாறு விசாரணைக்கு எடுத்து ஏன் விசாரிக்கவில்லை. அவர்களை எது தடுத்தது. அவ்வாறு விசாரித்திருந்தால் தான் அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் யார், சம்பந்தப்பட்டுள்ள பிற நபர்கள் யார், மிரட்டி பெறப்பட்ட பணம் மற்றும் நகையினை எங்கே வைத்துள்ளார்கள் என்ற விவரம் தெரிந்திருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு விசாரணையும் நடத்த பெறவில்லை. ஒருவர் கைது செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் தான் காவல்துறை விசாரணைக்கு எடுக்க முடியும். வேறு எந்த விசாரணை அமைப்புக்கு மாற்றப்பட்டாலும் காவலுக்கு எடுத்து விசாரிக்க முடியாது.

2. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 161-ன் படி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தினை பெண் காவல் அதிகாரிதான் விசாரித்திருக்க வேண்டும். ஆனால், வழக்கு பதிவு செய்து விசாரித்தது பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆண் காவல் ஆய்வாளர். அவர் எப்படி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்திருப்பார். எப்படி அந்த பெண்ணும் தயக்கம் இல்லாமல் வாக்குமூலம் கொடுத்திருக்கும்.

3. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரினை வெளியிடக்கூடாது என பல்வேறு தீர்ப்புகளும் வழிகாட்டுதல்களும் உள்ளன. ஆனால், கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரினை வெளியிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பிற பெண்களும் புகார் கொடுக்க நிச்சயம் தயங்குவார்கள். ஏன் வேண்டுமென்றே காவல் துறையினர் அப்படி செய்தார்கள்.

4. காவல் துறையினர் ஆரம்பம் முதலே இந்த வழக்கினை சரியான முறையில் கையாளவில்லை என்றே தோன்றுகின்றது. காவல் கண்காணிப்பாளர் நான்கு வீடியோக்கள் மட்டும்தான் என உறுதிபட கூறுகின்றார். விசாரணை முடியும் முன்பே அவருக்கு இந்த விசயம் எப்படி தெரிய வந்தது. அவரை பொள்ளாச்சி எம்.பி. சந்தித்துவிட்டு செல்கின்றார். எம்.எல்.ஏ. வெளிப்படையாக புகார் கொடுக்கின்றார். ஆனால், அவர்கள் கொடுத்த புகார் மனு என்னவென்று பொது வெளியில் வைக்கவில்லை?.

5. ஆளும் கட்சியினை சார்ந்த நபர் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை அடித்ததாக கைது செய்யப்பட்டு உடனடியாக விடுதலையும் செய்யப்படுள்ளார். ஆனால், அவரின் பெயர் ஏன் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை? அதற்கு எந்த அரசியல்வாதி காரணம்?

6. தற்போது பாதிக்கப்பட்ட பெண், பொள்ளாச்சியில் ஒருவரும் உதவவில்லை ஆளும்கட்சி தலையீட்டில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறுகின்றார். அப்படியென்றால் சம்பவம் நடந்து 12 நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் பொள்ளாச்சி காவல் துறையினரை தடுத்த நபர்கள் யார்?

இந்திய வரலாற்றில் இல்லாதவகையில் ஒரு பாலியல் வழக்கினை குண்டர் சட்டத்தில் போட்டு, உடனே சிபிசிஐடிக்கு மாற்றி, அடுத்த 5 மணிநேரத்தில் சிபிஐக்கு மாற்றியது, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் மட்டுமே நடந்திருக்கும்.

7. முக்கிய எதிரி திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோரினை பிடித்து சில நபர்கள் விசாரிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வந்துள்ளன. அவர்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்த பிறகு திருநாவுக்கரசினை கைது செய்யாமல் விடுவித்த அதிகாரி யார்? யாருடைய உத்திரவின் பேரில் அவ்வாறு செயல்பட்டார். திருநாவுக்கரசின் அம்மா தனது மகன் தலைமறைவாகவில்லை, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளான் என 12.03.2019 அன்று பொள்ளாச்சி நீதிமன்றத்தில் எடுத்த வீடியோவில் கூறியுள்ளார். பிறகு எப்படி காவல் துறையினர் திருநாவுக்கரசு தலைமறைவு என கூறினார்கள்?

8. எஸ்.பி. புகார் வந்தால் மட்டுமே விசாரிப்போம் என்கிறார்கள். இந்த மாதிரி வழக்குகளில் காவல் துறையினர் புகார்தாரர்களை தேடிப்போக வேண்டும்.. வழக்கு முறையாக விசாரணை செய்யப்படவில்லை. எதிரிகள் காவலில் எடுத்து விசாரிக்ப்படவில்லை. அவர்கள் தொடர்பு குறித்து விசாரிக்கப்படவில்லை. யாரை காப்பாற்ற இப்படி செய்கின்றார்கள்?

மொத்தத்தில் காவல் துறையினரின் நடவடிக்கைகள் எதிரிகளுக்கு சார்பாகவே உள்ளது. இனிமேல் வேறு ஏஜென்சிக்கு விசாரணை மாற்றப்பட்டாலும் இவர்கள் செய்த தவறுகளால் நீதி கிடைப்பது அரிதுதான்.

நாச்சியாள் சுகந்தி:

இந்திய வரலாற்றில் இல்லாதவகையில் ஒரு பாலியல் வழக்கினை குண்டர் சட்டத்தில் போட்டு, உடனே சிபிசிஐடிக்கு மாற்றி, அடுத்த 5 மணிநேரத்தில் சிபிஐக்கு மாற்றியது, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் மட்டுமே நடந்திருக்கும். முரணா, அதிசயமா, மாற்றமா? புரியவில்லை.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது குறித்து மகிழ்ச்சிதான். இதுவரை சிபிஐ-ஆல் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் எல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துள்ளதா? கை புண்ணுக்கு எதற்கு கண்ணாடி? சிபிஐ ஒரு வழக்கை முறையாக விசாரித்து இருந்தால் ஏன் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 28 வருடங்கள் 7 பேர் தண்டனை அனுபவித்துக்கொண்டு இருப்பர்?

சரி, இந்த சிபிஐ அமைப்புதான் எப்படிபப்ட்டது? கடந்த ஜனவரி மாதம் சிபிஐ இயக்குநர்கள் மாறி மாறி பதவி மாற்றப்படட்தும், உச்சநீதிமன்றமே தலையிட்டதும் அந்த இயக்குநர்களில் ஒருவர் சிபிஐ அமைப்பை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது என்று குற்றம்சாட்டியதும் இன்னும் யாருக்கும் மறந்திருக்காது.

உலவும் பல மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. சிபிசிஐடிக்கோ அல்லது சிபிஐக்கோ வழக்கு சென்றால் நீதி கிடைக்கும் என்று, ஒரு வெங்காயமும் கிடைக்காது என்பதைத்தான் விஷ்ணுபிரியா ஐபிஎஸ் வழக்கில் உணர்ந்துகொண்டோம்.

சபரிராஜன் என்கிற குற்றவாளி முழுநேர ஆர்.எஸ்.எஸ். ஊழியராம். அதனால், அழுத்தம் அரை டவுசர்களிடமிருந்தும் அரை டவுசர்களின் தலைமை மோகன் பகவத் , அமித்ஷா, மோடியிடமிருந்தும் வராது என்பதற்கு யார் உத்திரவாதம்?

அதேவேளையில், வாச்சாத்தி வழக்கில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி நீதியை நிலைநாட்டிய இடதுசாரிகளின் போராட்டம் காலம் முழுவதுக்குமான நம்பிக்கையை அளிக்கவல்லது. இந்த வழக்கையும் நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு சிபிஐ தான் விசாரித்தது. 215 பேருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது.

இதை அரசியல் ஆக்காதீர்கள் என கதறும் பொள்ளாச்சி ஜெயராமன், நேற்றிலிருந்து இரண்டு முறை ஊடகங்களைச் சந்த்தித்து ஏன் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்? கன்னத்து அறை புகழ், பாலியல் சீண்டல் புகழ் எஸ்.பி பாண்டியராஜன் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என சொல்வது போல், இதில் அரசியல் தலையீடு இல்லை என அழுத்திக் கூறுகிறார்?

சபரிராஜன் என்கிற குற்றவாளி முழுநேர ஆர்.எஸ்.எஸ். ஊழியராம். அதனால், அழுத்தம் அரை டவுசர்களிடமிருந்தும் அரை டவுசர்களின் தலைமை மோகன் பகவத் , அமித்ஷா, மோடியிடமிருந்தும் வராது என்பதற்கு யார் உத்திரவாதம்?

இந்த பதற்றத்தை உத்திரவாதப்படுத்துகிறது, பாதிக்கப்படட் பெண்ணின் ஆடியோ என சுற்றும் பதிவு. அதில் ஏன் ஜெயராமன் பெயர் திரும்பத்திரும்ப சொல்லப்படுகிறது? ஜெயராமன் மீடியாக்களுக்கு சொன்ன விஷயத்தை அந்த பெண்குரல் எப்படி அச்சுப்பிசகாமல் சொல்கிறது?

படிக்க:
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

நம்புவோம், இந்த வழக்கில் நீதி கிடைக்கும். வாச்சாத்திப் பெண்களுக்கு கிடைத்ததைப் போல, காலம் தாழ்த்தப்பட்ட நீதி எனினும் நிச்சயம் கிடைக்கும் என நம்புவோம். அதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த வழக்குக் குறித்து சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பேசி, குரல் கொடுத்து, அரசியலாக்கி நீதியைப் பெற்றுத் தர வேண்டும். குறிப்பாக அனைத்துக் கட்சிகளுமே.

நம்புவதுத் தவிர வேறு எதுவுமே நம் கையில் இல்லையே!

அதிஷா

ஒரு ரேப் போதுமாக இருக்கிறது தங்களுடைய துருப்பிடித்த யோனிப் பூட்டு அறிவுரைகளோடு ஆணாதிக்க சைக்கோக்கள் கிளம்ப… பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ளாதே, ஆண்களிடம் சாட் பண்ணாதே, டிக்டாக் வீடியோ பண்ணாதே, பெரியாரியம் மார்க்ஸியம் தலித்தியம் கற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றிவிடுவான், உலக சினிமா பாக்காதே…  ஆண்களோடு ஊர்சுற்றாதே, ட்ரெக்கிங் போகாதே, போராட்டத்திற்குப் போகாதே, ஷால் போடு… எவ்வளவு அறிவுரை.

அறிவுரைகளைக் காண அருவருப்பாக இருக்கிறது. இதன் தொடர்ச்சிதான் பெண்கள் கல்லூரிக்குப் போகக்கூடாது, காதல் பண்ணக்கூடாது, புத்தகம் படிக்கக் கூடாது மாதிரியான வக்கிர எண்ணங்கள் எல்லாமே. பெண்கள் என்ன செய்ய வேண்டும் என இந்த உலகமகா உத்தம ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் . 24 மணிநேரமும் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஃப்ரிட்ஜூக்குள் போய் கால்மடக்கி உட்கார்ந்து கொள்ள வேண்டுமா? வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடவேண்டுமா.

பர்தா போட்டுக்கொண்டால் ரேப் நடக்காது என்று சொல்கிற மதவாத முட்டாள்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு. ஒட்டுமொத்த ஆண்சமூகமுமே குற்றவாளிகள் என்று சித்தரிப்பது இன்னொருவகை பைத்தியகாரத்தனம். எத்தனையோ ஆண் குற்றவாளிகள் இருந்தும் இரண்டு பாலினத்தவர்களிடையேயான பரஸ்பர நம்பிக்கையில்தான் பல கோடி ஆண்டுகளாக இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதை சாக்காக வைத்துக்கொண்டு அடிப்படைவாத அறிவிலிகளைப்போல காதலுக்கு எதிராக ஆண்பெண் நட்புக்கு எதிரான பரப்புரைகளை முன்னெடுப்பது இன்னும் கேவலம்… பாதுகாப்பாக இரு என்று அறிவுரை சொல்வது வேறு… ஆனால், குனிந்த தலை நிமிராமல் கட்டைவிரல் பார்த்து நட, அடக்க ஒடுக்கமாக இரு என்பது வேறு. அடிப்படைவாத மயிராண்டிகள் சொல்வது முடங்கிவிடு என்பதுதான்.

பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ளாதே, ஆண்களிடம் சாட் பண்ணாதே, டிக்டாக் வீடியோ பண்ணாதே, பெரியாரியம் மார்க்ஸியம் தலித்தியம் கற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றிவிடுவான், உலக சினிமா பாக்காதே…  ஆண்களோடு ஊர்சுற்றாதே, ட்ரெக்கிங் போகாதே, போராட்டத்திற்குப் போகாதே, ஷால் போடு… எவ்வளவு அறிவுரை.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் பெரும்பாலான ஒற்றுமை ஒன்று உண்டு. இந்த அயோக்கியர்களின் முக்கியமான ஆயுதமே குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோர்கள் மீது இருக்கிற அச்சம்தான். உலகிலேயே குழந்தைகள் தன் வீட்டில் போய் எதையாவது சொன்னால் குழந்தைகளையே சந்தேகித்து அவர்களையே குற்றவாளியாக்கி மிரட்டுகிற வினோதமான சமூகம் நம்முடையது. இந்த பாலியல் சைக்கோக்கள் இதைத்தான் பயன்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளின் தவறுகளுக்காக காத்திருப்பார்கள். அந்த தவறை பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுவார்கள். தங்களிடம் பணியவைப்பார்கள். இதில் அந்தக்குழந்தையின் குற்றம் என்ன இருக்கிறது. பொள்ளாச்சியில் நடந்திருப்பதும் அவ்வகை குற்றமே.

குழந்தைகள் மீதான குற்றங்களில் மட்டுமல்ல பெண்கள் மீது நடக்கிற பெரும்பான்மை சைபர் குற்றங்களில் நடப்பது இதுதான். பொள்ளாச்சி வன்கொடுமையில் நடந்ததும் இவ்வகை குற்றம்தான். இந்த வீடியோவை வெளியிட்டால், இந்த புகைப்படத்தை இணையத்தில் பரவவிட்டால் வீட்டில் என்ன சொல்வார்களோ, சமூகம் தன்னை என்ன நினைக்குமோ என்கிற அச்சம்தான் இந்தப்பெண்களை எல்லாம் முடக்கிவிடுகிறது. இதுதான் இந்த குற்றவாளிகளுக்கு வசதியாக இருக்கிறது. இந்தியாவில் பாலியல் வன்கொடுமை ஒன்றில் மட்டும்தான் குற்றவாளிகளை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவரை தண்டிக்கிற வினோத வழக்கமெல்லாம் வைத்திருக்கிறோம். Victim Shaming-ஐ ஒழிக்காமல் ஒரு மண்ணாங்கட்டி மாற்றத்தையும் நம்மால் உருவாக்கிவிட முடியாது.

நாம் தொடங்கவேண்டிய இடம் வீடு. குழந்தைகள் எத்தகைய தவறு செய்திருந்தாலும் அதை வீட்டில் வந்து உரையாடுவதற்கான வெளியை உருவாக்க வேண்டும். நாம் சொன்னால் பெற்றோர்கள் காதுகொடுத்து கேட்பார்கள் என்கிற நம்பிக்கையை விதைக்கவேண்டும். நாம் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுவார்களோ என்கிற அச்சம் உருவாகிவிடாத படி சிறுவயதிலிருந்தே வளர்க்க வேண்டும். பாலின பேதங்களின்றி வளர்க்க வேண்டும். ஆம்பளை சிங்கம், பொம்பளை மயில்… என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருக்கக் கூடாது.

தவறு செய்தாலும் அதை திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பையும், பரவால்ல பாத்துக்கலாம் என்று தோள் தட்டிக்கொடுக்கிற நம்பிக்கையும்தான் இவ்வகை குற்றங்களை தடுக்கும். ஏனெனில், என்னதான் கல்வி வந்தாலும் இன்னமும் இங்கே சாதி இருக்கிறது, மதவெறி இருக்கிறது, ஆணாதிக்கம் இருக்கிறது. அதற்கெல்லாம் மேல் இவ்வகை பாலியல் மனநோயாளிகள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். இருப்பார்கள்.

லக்ஷ்மி சரவணகுமார்:

இரண்டு வருடங்களுக்கு முன்னால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து பொது இடங்களில் பெண்களின் மீது பாலியல் அத்துமீறல் செய்த வழக்கில் கைதானவர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியின் மனநிலையைப் புரிந்து கொள்கிறார்.அவரது தீர்ப்பில் இப்படி ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார்.

‘பெண்கள் குறித்தான எந்தவித அடிப்படை புரிதல்களும் இல்லாமல் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு குறைந்தபட்சம் பெண்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே சிக்கலாய் உள்ளது. பதினைந்து நாட்களுக்கு கொடைக்கானல் மதர் தெரஸா பெண்கள் கல்லூரி வளாகத்தில் அவர்களோடு தங்கி நன்னடத்தைக் கடிதம் பெற்று வரவேண்டுமென’’ இந்த வழக்கிற்கு பிறகு அந்த மனிதன் என்னவானார் என்பது தெரியாது. ஆனால், அந்த நீதிபதி குறிப்பிட்ட மிக முக்கியமான விஷயம் நீ பெண்கள் குறித்த எந்தவிதமான புரிதல்களும் இல்லாமல் வளர்க்கப்பட்டிருக்கிறாய். இது இந்தியச் சூழலில் 90 சதவிகித ஆண்களுக்கு பொருந்தும். ( என்னையும் சேர்த்து.)

இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு எல்லையில் தங்களின் யோக்கியத்தனத்தையும் அயோக்கியத்தனத்தையும் நிறுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் ஒரு குடும்பத்தின் தனிப்பெரும்பான்மை சொத்தாக பார்க்கப்படுவதிலிருந்து தான் அவர்களின் மீதான எல்லா வன்முறைகளும் துவங்குகிறது. அப்பாவுக்கு பணிந்து போகும் அம்மாவை அக்காவை தங்கைகளை பார்த்து வளரும் ஒருவன் பருவ வயதில் அப்பாவைப் போலவே மாறுகிறான். பெண்கள் தனது விருப்பங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிற மனோபாவம் மிகச் சிறிய வயதிலிருந்தே ஆண்களுக்கு ஆழமாக மனதில் ஊன்றி வளர்ந்து விடுகிறது. குடும்பத்தில் பொதுவெளியிலென எல்லா இடங்களிலும் ஆண் ஆணாகவே மாறிப்போவதற்கான முதல் காரணம் அவன் குடும்பம் அவனை சரியான புரிதல்களோடு வளர்ப்பதில்லை.

இந்த உலகமகா உத்தம ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் . 24 மணிநேரமும் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஃப்ரிட்ஜூக்குள் போய் கால்மடக்கி உட்கார்ந்து கொள்ள வேண்டுமா? வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடவேண்டுமா.

2005-ம் வருடத்தின் மாட்டுப் பொங்கல் நாள். அப்போது ஒரு மருத்துவமனையோடு சேர்ந்த என்.ஜி.ஓ. வில் வேலை செய்து கொண்டிருந்தேன். மாலை நேரம், ஆட்டோவில் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். நாற்பது வயதிருக்கும். இடைக்குக் கீழ் உடையெங்கும் குருதி. பாதி மயக்கநிலை. பதறியடித்து அவரைத் தூக்கிக் கொண்டு போய் சிகிச்சைக்கு அனுப்பினோம். விசாரித்த போது அவர் பாலியல் தொழிலாளி என்று தெரிந்தது. முந்தைய நாள் மாலை இரண்டு இளைஞர்கள் அவரை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியிலிருக்கும் கன்மாய்க்கு சென்றிருக்கிறார்கள். இவர்கள் உறவு கொள்ளும் போது பக்கத்து கிராமத்திலிருந்த ஆண்கள் கொஞ்சம் பேர் அங்கு வர இவர்கள் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அதன்பிறகு 16 பேர் சேர்ந்து தொடர்ந்து மாறி மாறி அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கியுள்ளார்கள். இறுதியாக ஒருவன் முற்றிய போதையில் அந்தப் பெண்ணின் குறியில் க்ளிட்டை கடித்து துப்பியிருக்கிறான். கேட்கும் போது தலை சுற்றி மயக்கம் வந்தது.

தன்னை நம்பி வரும் ஒரு பெண்ணுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட தரமுடியாத அளவிற்கு முட்டாள்தனமும் கோழைத்தனமும் நிரம்பிய இவர்களைப் போன்று இன்னும் எத்தனை பேர். கூட்டாக சேர்ந்து பாலியல் வன்முறை செய்வது யதார்த்தமானது, அதுவொரு சுவையென இவர்களை எது நம்பச் செய்கிறது? பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான வீடியோவை என்னால் முழுமையாய் பார்க்க முடியவில்லை. அந்தப் பெண்களின் அலறல் ஒன்றாய் நூறாய் ஆயிரமாய் எதிரொலிக்கிறது. தெரிந்த பழகிய ஒவ்வொரு பெண்களின் குரல்களும் அதன் பின்னால் இருப்பதான வேதனை மனமெங்கும் எழுந்தபடியே இருக்கிறது. பாலியல் ரீதியிலான வன்முறைக்கு இணங்க வைப்பதற்காக ஒரு இளம் பெண்ணை பெல்ட்டால் அடிப்பதும் அந்தப் பெண் அடிக்க வேண்டாமென கெஞ்சுவதும் இதெல்லாம் ஒரு சாதாரண மனிதன் செய்யக் கூடியதுதானா என்கிற அச்சத்தை உருவாக்குகிறது.

அதிலும் ‘உன்ன நம்பித்தானடா வந்தேன், லூசாடா நீ இப்டிலாம் பன்ற? ‘ என அந்தப் பெண் சொல்லும் நொடியில் வீடியோவை நிறுத்திவிட்டேன். அவள் அவனை எத்தனை நேசித்திருந்தால் இதை சொல்லி இருக்கக்கூடும். ஒரு மனிதன் தான் எதிர்கொள்ளும் எந்தப் பெண்ணையும் நேசிக்காமல் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறான் என்றால் பெண்கள் குறித்து வாழ்க்கை குறித்து அவனது புரிதல் தான் என்ன? இவர்கள் எப்படி தங்கள் வீட்டுப் பெண்களை தோழிகளை இயல்பாக பார்ப்பார்கள்? இந்தக் குற்றவாளிகளில் சாதாரண ஆட்களில் இருந்து பெரும் அரசியல்வாதிகள் வரை பட்டியல் நீண்டபடி இருப்பது ஒரு அதிர்ச்சியென்றால் அவர்கள் என்னென்ன காரியத்திற்கெல்லாம் இதை செய்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் நெருங்கி விசாரித்தால் அதைவிடவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு நண்பருடன் இது குறித்து பேசிக் கொண்டிருக்கையில் இந்த கேங் பொள்ளாச்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மனைவியை இதேபோல் தங்கள் வலையில் வீழ்த்தி வீடியோவும் எடுத்து அதிலிருந்து மீள வேண்டுமானால் எண்பது லட்ச ரூபாய் தர வேண்டுமென மிரட்டி வாங்கி இருக்கிறார்கள். இதுவெறும் சாம்பிள்தான். இதுபோல் ஏராளமான ப்ளாக் மெயில்கள் ஒருபுறமென்றால் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களை அரசியல்வாதிகளுக்கு இரையாக்குவது இன்னொரு வகை. இதில் ஆளுங்கட்சியின் பல முக்கியஸ்தர்களும் அடக்கம்.

பெண்களை இத்தனை துட்சமாக நினைக்கும் ஒரு கட்சி மாநிலத்தை ஆண்டால் மயிரா விளங்கும்? கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவிகள் குடும்பப் பெண்கள் என இவர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. இத்தனையாண்டு காலம் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் இவர்களால் இதை செய்ய முடிந்திருக்கிறதென்றால் இவர்களுக்குப் பின்னால் இருந்து யாரோ பலமாக சப்போர்ட் செய்கிறார்கள் என்பதுதான் தெளிவாக விளங்குகிறது.

ஒரு சமூகத்தில் குடும்பம் அரசு யாவும் பெண்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் இருப்பதை முற்றிய மனநோய் என்று சொல்வதா? கூட்டு வன்முறை என்று சொல்வதா?

ஒரு சமூகத்தில் குடும்பம் அரசு யாவும் பெண்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் இருப்பதை முற்றிய மனநோய் என்று சொல்வதா? கூட்டு வன்முறை என்று சொல்வதா? இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனைகள் என்ன? அல்லது எப்போது இவர்களுக்கான நீதி கிடைக்கும்? தனக்கு உடமையில்லாத ஒரு பெண்ணின் உடல் மீது எல்லாவிதமான வன்முறைகளையும் செய்துவிட்டு அதுகுறித்து எந்தவிதமான குற்றவுணர்வுகளுமில்லாமல் அலையும் இவர்களோடு சேர்ந்த ஒவ்வொருவரையுமே நாம் சந்தேகிக்கத்தானே வேண்டும்.

பரஸ்பரம் புரிந்துணர்வுடன் நடக்கும் ஒவ்வொரு காதலின் மீதும் உடல் உறவுகள் மீதும் சந்தேகங்களையும் அவருவருப்புகளையும் இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இரண்டு பேர் பொதுவெளியில் நேசத்தோடு இருப்பதை பார்க்க முடியாதளவிற்கு சூழலை மாற்றிப் போட்டிருக்கிறார்கள். மாலை அயலகத்திலிருந்து அழைத்த நண்பர் ஒருவர் ஏன் உங்கள் தேசத்தில் மனிதர்கள் இத்தனை மனச்சிக்கல் கொண்டவர்களாய் இருக்கிறார்களென வருத்தப்பட்டார். இந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பில் அவர் மருத்துவமனை சென்று வந்திருக்கிறார்.

300-க்கும் மேற்பட்ட பெண்கள் என பத்திரிக்கைகள் சாதாரணமாக சொல்லும் போது நமக்குத் தெரிந்த நம்மோடு இருக்கும் பெண்கள் எல்லாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கைகள் எல்லாம் உடைந்து நொறுங்குகிறது. பாலியல் குற்றங்களை புரிகிற ஆண்கள் தனியாக எங்கிருந்தோ வருகிறவர்கள் அல்ல, நம்வீட்டில் நம் தெருவில் நமக்குத் தெரிந்தவர்களில் இருந்துதான் உருவாகிறார்கள். நம்மோடு இயல்பாக பழகும் இவர்கள் எல்லோருக்கும் சகிக்கமுடியாத இன்னொரு பக்கமுண்டு. பெண்களை இத்தனை இழிவாக நடத்தக்கூடிய இவர்களால் எந்தக் குற்றங்களையும் எளிதாக செய்ய முடியும்.

பாலியல் குற்றங்களை புரிகிற ஆண்கள் தனியாக எங்கிருந்தோ வருகிறவர்கள் அல்ல, நம்வீட்டில் நம் தெருவில் நமக்குத் தெரிந்தவர்களில் இருந்துதான் உருவாகிறார்கள். நம்மோடு இயல்பாக பழகும் இவர்கள் எல்லோருக்கும் சகிக்கமுடியாத இன்னொரு பக்கமுண்டு.

நேசத்தை தேடி வந்த ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து அடித்து துன்புறுத்துகிறவனை முதலில் மனிதன் என்று சொல்வது சரியா? எதிர்பாலினத்தின் மீதான பாலியல் இச்சை, காதல் இதுவெல்லாம் இயல்பான விஷயங்கள். இவை எந்தப் புள்ளியில் சாடிஸமாக மாறுகிறது. ஆயிரத்தில் ஒன்றல்ல, இலட்சத்தில் ஒரு முறைதான் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. பல வழக்குகள் என்னவாகின்றன என்பதே தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் வரிசையில் நாம் முதலாவதாக இருக்கிறோம் என்று பெருமையொடு சொல்லிக் கொள்ளலாம்.

நீங்கள் எதிர்கொள்ளும் பத்தில் நான்கு பெண்கள் ஏதோவொரு சமயம் பாலியல் அத்துமீறலை எதிர்கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்று கூடி இந்தப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும் போராட வேண்டும். ஏனெனில், இந்த பிரச்சனை நம் குடும்ப அமைப்புகளின் அடிப்படியை சிதைக்கக் கூடியதொன்று. பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுவதோடு அவை விரைவாக விசாரிக்கப்பட்டு நீதி வழங்குவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் குடுப்பதைப் போலவே, சிறு வயதிலிருந்தே பெண்களுடனான நட்பு அவர்களைப் புரிந்து கொள்வது குறித்து சரியான முறையில் கற்றுக் கொடுப்பதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த அநீதிகளுக்குப் பின்னாலிருக்கும் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் இடைவிடாத போராட்டம் மட்டுமே ஒரே தீர்வு.

ராஜசங்கீதன்:

பெண்ணை குடும்பத்தின் சொத்தாக நினைக்கும் நிலப்பிரபுத்துவ முறையும் நுகரும் பண்டமாக ஆக்கும் கார்ப்பரேட் மூலதனமும் ஒன்றிணைந்திருக்கும் காலத்தில் பெண் இன்னுமே அதிக ஒடுக்குமுறைக்கும் பிற்போக்குக்கும் ஆளாகிறாள்.

உயிரியல் ரீதியாக எழும் விருப்பங்களின் பின் பின்னப்படுகிற குடும்பத்தின் கவுரவமும் கார்ப்பரேட்டின் சுதந்திரக் கனவும் அவளுக்கான சுமைகளை அதிகமாக்குகிறது.

‘என்னை விட்டுடுங்க’ என ஒரு பெண் கதறும் சம்பவத்தின் மறுமுனையில் ‘என் மகன் நல்லவன்’ என கதறும் தாயும் நிற்கிறாள். ஒரு இழி சம்பவத்தின் இரு முனைகளிலும் பெண்ணையே கையறுநிலையில் நிற்க வைத்து வேடிக்கை பார்க்கிறது ஆண் கட்டிய சமூகம்.

பெண்ணின் உண்மையான விடுதலை குடும்பத்திலிருந்தும் நுகர்வு உற்பத்தியிலும் இருந்துதான் தொடங்குகிறது. ஆண் கட்டிய அதிகாரத்தை மறுப்பதிலிருந்துதான் தொடங்குகிறது.

அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக பேட்டி கொடுக்கும் எஸ்பி விசாரணை தொடங்கும் முன்னமே அரசியல் தொடர்பு இல்லை என அறிவிக்கும் அளவுக்கு தீர்க்கதரிசனம் கொண்டிருக்கிறார். எந்தெந்த அதிகார மட்டங்களுக்கு இந்த கோரம் நீண்டிருக்கிறது என அறியப்பட வேண்டும். மொத்தமாக இந்த அதிகார அமைப்பு கவிழ வேண்டும். கோவையின் மீசை முறுக்குகளின் கவுரவத்தை அம்பலம் ஏற்றப்பட வேண்டும்.

பெண்ணுரிமை மற்றும் விடுதலையில் அரசின் பங்கை கட்டாயமாக்க வலியுறுத்துவோம். இச்சம்பவம் சமூகத்தின் இழிவு எனில், இந்த இழிவில் பங்கெடுத்திருக்கும் ஆளும் அரசை பொறுப்பேற்க வைப்போம்.

பெண்ணின் விடுதலையே சமூக விடுதலை. ஆண், பெண் சமத்துவமே சமூகத்தின் சமத்துவம். ஆகவே வா. திரளுவோம்.

சுசிலா:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அதிர்ச்சிதரும் பல தகவல்கள் வருகின்றன. இதுல என்ன கொடுமையென்றால், 2 ஆண்டுகளுக்கு முன்பே இதைப்பற்றி புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் காவல்துறை இதனை அலட்சியமாக உதாசீனப்படுத்தியிருக்கிறது. இதை அப்போதே பரிசீலினை செய்து, விசாரிக்கப்பட்டிருந்தால், கடந்த இரண்டு ஆண்டுகள் நடந்த குற்றங்களையாவது தடுத்திருக்க முடியும். இது உண்மையில் அலட்சியமா அல்லது யாரை காப்பாற்ற அரசு மூடிமறைத்திருக்கிறது என்ற உண்மை வெளிவரவேண்டும். அரசியல் பிரமுகர்கள், பெரும்புள்ளிகள் என பலர் இதில் தொடர்புடையவர்களாக இருப்பார்கள் போல… அதனால் தான் இப்போதும் புகார் கொடுத்த உடனே, நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தியுள்ளனர். புகார்கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியுள்ளனர். புகார்கொடுத்தவர் பெயரை வெளியில் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

இவர்கள் எப்படி நம்பி போனார்கள்’ என்ற கேள்வியை தயவுசெய்து முன்வைக்காதீர்கள்.’ நம்பிவந்த பெண்ணை இப்படி சீரழித்திருக்கிறார்களே ‘ என்ற கேள்வியை முன்வையுங்கள். அப்போது தான் உங்கள் வீட்டு ஆண்பிள்ளைகள் கொஞ்சமாவது சிந்திப்பார்கள்!

இப்போது என்னவென்றால், எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவும், தேர்தல் சமயம் என்பதாலும், இந்த நால்வரை குண்டர்சட்டத்தில் அவசரம் அவசரமாக, போட்டிருக்கிறது. மேலும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட சிலமணி நேரங்களிலேயே, சிபிஐ க்கு பரிந்துரைத்திருக்கிறது தமிழக அரசு.!

ஆனால், விசாரணை நேர்மையாக நடந்தால் மட்டுமே உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது. பாதிக்கபட்டபெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், மீண்டும் இதுபோல் கொடூரக்குற்றங்கள் நடைபெறாவண்ணம் தடுக்கப்படவேண்டும்.!

கடைசியாக, சில ஆண்களுக்கும், பெண்களுக்கும், பெற்றோர்களுக்கும் :

இந்த பெண்கள் மீதும் தவறு இருக்கிறது. இவர்கள் எப்படி நம்பி போனார்கள்’ என்ற கேள்வியை தயவுசெய்து முன்வைக்காதீர்கள்.’ நம்பிவந்த பெண்ணை இப்படி சீரழித்திருக்கிறார்களே ‘ என்ற கேள்வியை முன்வையுங்கள். அப்போது தான் உங்கள் வீட்டு ஆண்பிள்ளைகள் கொஞ்சமாவது சிந்திப்பார்கள்!

இரா. முருகவேள்:

பொள்ளாச்சியில் நடந்திருப்பது ஒரு குற்றச் செயல். ஒரு குற்றக் கும்பல் தங்களது கேளிக்கைக்காகவும், அதிகாரம் படைத்தவர்களின் நுகர்வுக்காகவும், மிரட்டிப் பணம் பறிக்கவும் பெண்களைக் கொடூரமாக வதைத்து வந்திருக்கிறது.

இந்த அயோக்கியர்களோடு, விடுதிகளை நடத்துபவர்கள், தரகர்கள் என்று ஒரு வலைப்பின்னல் இதில் இயங்குகிறது. பொள்ளாச்சியில் இத்தகைய கும்பல்கள் எப்போதுமே இருந்து வந்துள்ளன என்று தோழரும் வழக்குரைஞருமான இளங்கோவன் கூறுகிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள இத்தகைய கும்பல்களைப் பிடிப்பதும் இக் கொடுமைக்கு முடிவுகட்டுவதுமே சமூகத்தின் முன்னுள்ள கடமை. சமூக வலைத்தளங்களில் மக்கள் வெளிப்படுத்திய கோபமே இந்த வழக்கை ஊற்றி மூட இருந்த அரசைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஒட்டு மொத்த ஆண் சமூகமும் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும்; எல்லோருக்கும் இதில் பொறுப்பு உண்டு; எல்லா ஆண்களும் குற்றவாளிகள் தான் என்பது போன்ற பதிவுகள் இணைந்து நிற்க வேண்டியவர்களை விலகிப் போகச் செய்யும்.

பெண்ணியம், பெண்விடுதலை என்பவை குறித்து எந்தவிதமான கருத்தும் இல்லாத, ஒருவர் கூட இந்த நிகழ்வுகளால் சீற்றம் கொண்டு போராட முன்வந்தால் அவரையும் இணைத்துக் கொள்ள வேண்டுமே தவிர சங்கடமான கேள்விகள் எழுப்புவது திரண்டு வரும் மக்கள் சக்தியை பலவீனப்படுத்தவே செய்யும்.

சாத்தியமான அனைவரையும் இணைப்பதும், எதிரிகளைத் தவிர மற்ற அனைவரும் நண்பர்கள் என்பதுமே ஐய்க்கிய முன்னணி தந்திரம். அதுவே மக்கள் விரோதிகளைத் தனிமைப்படுத்தும்.

கொடுங்குற்றவாளிகளைத் தண்டிப்பதும் தடுத்து நிறுத்துவதுமே இப்போதுள்ள பணி. ஆண் – பெண் உறவுகளில் சமத்துவமும் முழுமையான ஜனநாயகமும் எந்த ஒரு நல்ல சமூகத்துக்கும் முக்கியமான இலட்சியமாகும். இரண்டும் ஒரு நீண்ட நெடிய பாதையில் அடுத்தடுத்த கட்டங்கள். ஒன்றிற்காக ஒன்றைப் புறக்கணிக்க முடியாது.

இளங்கோ கிருஷ்ணன்:

“நான் எதுக்கு வெட்கப்படணும்; நீங்கதான் வெட்கப்படணும்… என் மகன் நிரபராதி” என்று பொங்குகிறார் திருநாவுக்கரசின் தாய். உடனே ஆவேசமாக அவரைத் திட்டித் தீர்க்கிறார்கள் இங்கே. மறுபுறம் புனிதமான தாய் பாசம் அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்கிறார்கள் வேறு சிலர். நம் சமூகம் இதற்கு மேல் சீழ்பிடித்து நாற முடியாது.

அந்தத் தாய் செய்தது எவ்வகையிலும் ஏற்புடையது இல்லை நமக்கு. ஆனால், வேறு எப்படி அவர் நடப்பார். என் மகன் குற்றவாளி எனக் கூனிக்குறுகி அழுவார் என்று நினைத்தீர்களா? அதெல்லாம் நமது சினிமாக்களிலும் நாவல்களிலுமே சாத்தியம். நடைமுறையில் பெரும்பாலான தாய்மார்கள் இங்கு இப்படித்தான். ஜெயிலுக்குள் இருக்கும் மகனுக்கு பீடிக்கட்டு கொடுத்துவிடுவதெல்லாம் இங்கு சர்வ சாதாரணம்.

அவளுக எதுக்கு வந்தாங்க என்று நேற்று சில மேதைகள் கேட்டன அல்லவா? அதையேதான் தாய் மனமும் கேட்கும். நம் சமூகத்தின் குரூரமான எதார்த்தம் இது. தாய் என்று இல்லை. அந்தக் குற்றவாளி குடும்பத்தினர் அனைவரின் மனநிலையுமே இதுவாய் இருந்தாலும் நாம் வியக்க ஒன்றும் இல்லை. அவ்வளவு சமூக சுரணையற்று வாழப் பழகிவிட்டன நம் குடும்பங்கள்.

குடும்பத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். குடும்பமும் தனி மனிதனுக்காக எதையும் செய்யும் எனும் ஏற்பாட்டில் சமூகம் என்பதன் விழுமியங்கள் எல்லாம் பொய்த்துவிடும்.

அறமார்ந்த விழுமியங்களை போதித்து தம் பிள்ளைகளை வளர்க்கும் குடும்பங்களும் இருக்கவே இருக்கின்றன. ஆனால், ஒரு பிரச்சனை என்று வந்தால் அந்தக் குடும்பம் நீதியின் பக்கம் நிற்பது என்பது எல்லாம் அரிதான குணங்களாகிவிட்டன. எப்படியாவது தன் குடும்ப உறுப்பினரைக் காத்தால் போதும் என்றே பெரும்பாலான குடும்பங்கள் நினைக்கின்றன.

சமூகம் x குடும்பம் என்று இரு எதிர்வுகள். இதற்கு இடையிலான உறவுகளை எப்படி சிவிக் முதிர்ச்சியோடு கையாள வேண்டும் என்பதை எல்லாம் நாம் போதுமான அளவு வளர்க்கத் தவறிவிட்டோம். தனி மனிதர்களை, குடும்பங்களோடு இணைத்து, குடும்பத்தை சாதியோடு இணைத்து, அவற்றை மதங்களோடு இணைத்து குடும்பம் என்ற அமைப்பையே சீர்குலைத்து வைத்திருக்கிறோம்.

சமூகம் என்பது குடும்பத்திலிருந்து ஒருவன் கிளம்பிப் போய் வேட்டையாடி வருவது. குடும்பத்தால் வென்றெடுக்கப்பட வேண்டியது என்ற மனநிலையை ஆழமாக வளர்த்துக்கொண்டுள்ளோம்.

குடும்பம் என்பதன் விரிவான வடிவமே சமூகம். சமூகத்தின் மீச்சிறு அலகே குடும்பம் என்பதை எல்லாம் உணர்வுப்பூர்வமாய் நாம் புரிந்ததே இல்லை.

படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !

திருநாவுக்கரசின் தந்தை ஒரு லேவாதேவித் தொழில் செய்பவராம். இன்னொரு குடும்பத்திடமிருந்து அராஜகமாய் அடித்துப் பிடிங்கி வட்டிக் காசை கொண்டு வந்து தரும் கணவனிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அதை வாங்கி பீரோவில் வைத்துப் பூட்டும் ஒரு மனைவிக்கு சக குடும்பம் பற்றி என்ன உணர்வு இருக்கும்.

இன்னொரு குடும்பத்தின் உணவுத்தட்டிலிருந்து தன்னுடைய செல்வத்தைத் திரட்டிக்கொண்டு வெற்றியுடன் வீடு திரும்பும் குடும்பத் தலைவனுக்குத்தான் என்ன விழுமியம் இருக்க முடியும். அதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை என ஆதங்கப்பட…

குடும்பத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். குடும்பமும் தனி மனிதனுக்காக எதையும் செய்யும் எனும் ஏற்பாட்டில் சமூகம் என்பதன் விழுமியங்கள் எல்லாம் பொய்த்துவிடும்.

வி. சபேசன்:

முன்னர் தமிழ்ச் சினிமாக்களில் ஒரு ரவுடிக் கதாநாயகன் மீது கதாநாயகிக்கு நல்லெண்ணம் வர வேண்டும் என்பதற்காக ஒரு வசனத்தை வைப்பார்கள். ‘விபச்சாரியைக் கூட அனுமதி இல்லாமல் நான் தொட மாட்டேன்’ என்று கதாநாயகன் வசனம் பேசுவான். இதைக் கேட்டதுமே கதாநாயகிக்கு அவன் மீது காதல் வந்து விடும்.

ரஜினிகாந்த் நடித்த ‘தங்க மகன்’ படத்தில் ஒரு காட்சி வரும். பூர்ணிமா ரஜினிகாந்தை கேலி செய்து பாட்டுப் பாடுவார். ‘ஆம்பிளையோ இவன் சோதிக்க வேணும்’ என்று வரி வருகின்ற போது ரஜினிகாந்த் கொதித்து எழுவார். பூர்ணிமாவை வன்புணருவதற்காக துரத்துவார். புதைகுழியில் ரஜினிகாந்த் விழுந்து விட, பூர்ணிமா அவரைக் காப்பாற்றி, தன்னை வன்புணரத் துரத்தியது நியாயம்தான் என்றும் சொல்லி, ரஜினி மீது காதல் வசப்படவும் செய்வார்.

ஒரு பெண்ணுக்கு காதலையும் காமத்தையும் தேடவும், நாடவும் முற்று முழுதான உரிமை இருக்கிறது. இந்தத் தேடல்கள் அவளிடம் அத்துமீறுகின்ற உரிமையை ஆணுக்கு வழங்கி விடாது.

இப்பொழுதெல்லாம் மேற்படியான வசனங்களோ, அல்லது காட்சிகளோ தமிழ்ச் சினிமாவில் வருவது இல்லை. பெண்ணுக்கு அவளுடைய உடல் சார்ந்து இருக்கின்ற உரிமை பற்றிய சிந்தனை தமிழ் சமூகத்தில் வளர்ந்திருப்பதே அதற்குக் காரணம் என்று நம்பியிருந்தேன்.

ஆனால், பொள்ளாச்சி சம்பவத்திற்கு பெண்களை குற்றஞ்சாட்டுபவர்களும் பரவலாக இருப்பதைப் பார்க்கின்ற போது, இந்தக் கூமுட்டைகள் இன்னும் திருந்தவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

ஒரு பெண்ணுக்கு காதலையும் காமத்தையும் தேடவும், நாடவும் முற்று முழுதான உரிமை இருக்கிறது. இந்தத் தேடல்கள் அவளிடம் அத்துமீறுகின்ற உரிமையை ஆணுக்கு வழங்கி விடாது. அவளுடைய உடல் மீதான முழு உரிமையையும் அவளே கொண்டிருக்கிறாள்.

காதல், காமம், நட்பு, ஈர்ப்பு என்று ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு பெண் ஒரு ஆணுடன் பொது இடத்திலோ, தனியிடத்திலோ சந்திப்பது அவளுடைய உரிமை.

பெண்ணுக்கு உள்ள இந்த உரிமைகளை சமூகம் ஏற்கின்ற போதுதான் பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் குறையும். இந்த உரிமைகளை சமூகம் ஏற்கவில்லை என்பதையே பொள்ளாச்சியின் குற்றவாளிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி, பெண்களை தொடர்ந்தும் மிரட்டி பணிய வைக்கின்றார்கள். பெண்கள் பணிந்து போகின்றார்கள். அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அந்த பெண்களை வன்கொடுமை செய்தவர்களுக்கும், செய்பவர்களுக்கும் துணை நிற்கின்ற குற்றத்தை செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

கிருஷ்ண பிரபு:

துயர் நடுவில்…

சக மனிதர்களை உடலளவிலோ மனதளவிலோ காயப்படுத்தியும் கட்டாயப்படுத்தியும் காரியம் சாதித்தல் அரக்கக் குணத்திற்கு ஒப்பானது. நாம் முகமூடி அணிந்த மனிதர்களுடன்தான் உறவாடுகிறோம்.

பத்திரிகை, சினிமா, இலக்கியம், நுண்கலைகள் என எல்லா இடத்திலும் அத்துமீறல்கள் இருக்கிறது.

பாலியல் இன்பம் என்பது விருப்பத்துடன் சேர்த்து சம்மதத்தையும் கோரி நிற்பது. அதை அதிகாரப் படிநிலை கொண்டு அபகரிக்க நினைப்பதும் மிரட்டுவதும்தான் பிரச்சனையாகிறது. பொள்ளாட்சி சம்பவம் #MeToo குரல்களின் நீட்சி.

200 பெண்களின் 1500 ஆபாசக் காணொளிகள் என்பது மிரள வைக்கும் செய்தியாக இருக்கிறது. இந்த ஏழு ஆண்டுகளில் அதில் எத்தனை எத்தனைக் காணொளி வீடியோக்கள் நம் வாட்ஸ் ஆப் குழுமங்களில் வந்து போனதோ, தெரியவில்லை.

எந்த விதப் பயிற்சியும் மேற்பார்வையும் பாதுகாப்பும் முதிர்ச்சியும் அளிக்காமல்தான் நாம் ஒரு தலைமுறைக்கே டிஜிட்டல் ஆயுதத்தைக் கைகளில் திணித்திருக்கிறோம்.

கைமீறிப் போகும் விஷயங்களைக் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கைதான் பார்க்க முடிகிறது. பொள்ளாட்சி சம்பவம் பெருந்துயர்.

தொகுப்பு:

நவீன மருத்துவம் எப்படி சரியானது ? | மருத்துவர் அர்சத் அகமத்

எது மருத்துவம் ?

வீன மருத்துவம் (Modern Medicine) எப்படி வளர்ந்து வந்திருக்கிறது என்பதை விளக்கும்  இரு படங்கள். முதலாவது படம் 1962-ம் ஆண்டு ஒரு ‘சிறு பிள்ளை வைத்திய’ நிபுணரினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மருந்துச் சிட்டினது பிரதி.

இரண்டாவது படம் குறை மாதத்தில் அதாவது கருத்தரித்து 26 வாரங்களில் (6 மாத குறைப்பிரசவம்) பிறந்த முதிராச் சிசுவின் பிறந்த நிலைத் தோற்றத்தையும், நான்கு மாதங்கள் பூர்த்தியான இன்றைய தோற்றத்தையும் காட்டி நிற்கின்றது.

இவை இரண்டிற்கும் என்ன சம்பந்தம்  என்று நீங்கள் யோசிப்பது வாஸ்தவம்தான். கடந்த  ஐம்பது ஆண்டுகளில் மருத்துவத்துறை கண்ட வளர்ச்சியின் அளவை இதை விட தெளிவாக கட்டுரையிலும் சொல்ல முடியாது. இற்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன் குறை மாதத்தில் அபார்ஸன் ஆகி விட்டது, உயிர் வாழ முடியாதது என்று  குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அல்லது குழியிலே போடப்பட்ட குழந்தைகள்  எல்லாம் இன்றைய  நவீன மருத்துவ விஞ்ஞானத்தின்  உதவியினால்  நன்றாக பராமரிக்கப்பட்டு கண்ணாடிப் பெட்டியிலிருந்து  (incubator)   நல்ல வளர்ச்சி  அடைந்த குழந்தைகளாக  வெளியேறி வருகின்றன.

நவீன மருத்துவம் கூடாது,  இயற்கை வழி, பாட்டி வழி வைத்தியம் மட்டுமே ஆரோக்கியமானது என்று  நம்பியிருந்திருந்தால் இந்தக் குழந்தையும் இன்று இயற்கை எய்தி, உக்கி நல்ல சேதன உரமாக மாறியிருக்கும். இக் குழந்தையின் தாயும் பிள்ளை  இல்லாத மலடி என்ற வசைச் சொல்லோடு செத்துத் செத்து வாழ்ந்து கொண்டிருப்பாள்.  அது போல நானும்  எனது தந்தை வழி பரம்பரைத் தொழிலான யூனானி வைத்தியத்தையும், அந்த தேன்பாணியையும், அந்த எலுமிச்சை சாற்றையும்  இன்றும் மருந்தாக கொடுத்துக் கொண்டிருந்திருப்பேனோ தெரியாது. (இதைத் தான் அன்றைய சிறு பிள்ளை நிபுணரும் கொடுத்திருக்கிறார். படம் 1-ஐ பார்க்க)

படிக்க:
ஏழைத்தாயின் மகன் # 2 – நீரவ் மோடியின் லண்டன் ‘அகதி’ வாழ்க்கை !
♦ அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி

இன்றைய நவீன மருத்துவமும்  அடிப்படையில் ஆயுர்வேத, யூனானி, அக்குபஞ்சர் போன்ற மற்றைய  எல்லா மருத்துவ முறைகள் போலவும் அதே இயற்கை மருந்துகளான இலை, குழைகளை, மரச்சாறுகளை, தேன் போன்ற பாணிகளை அடிப்படையாக கொண்டவை தான். ஆனால்  கால ஓட்டத்தில் அது மற்றைய எல்லா மருத்துவ முறைகளை விடவும் முன்னணி பெற்றுள்ளமைக்கு இரண்டு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆராய்ச்சியும் தேடலும் (Research and Development) அதோனோடிணைந்த  விஞ்ஞானபூர்வ வைத்திய முறைமைகளும் (Evidence Based Treatment) தான் அந்த முதலாவது முக்கிய அம்சம். இன்றைய  இந்த நவீன மருத்துவத்துவத்துறையை மற்றைய எல்லா மருத்துவ முறைகளை விடவும் மிகப்பெரிய அளவில் முன்னேறியதாக வளர்த்து எடுத்திருக்கின்ற மிக முக்கியமான காரணியும்  இதுவாகத்தான் இருக்கிறது.

இந்த ஒரு இயல்புதான் இந்த மருத்துவத்தின் தனிச்சிறப்பாகவும் காணப்படுகிறது.  இதனால் இந்த மருத்துவத்தில் யாரும் எதையும் கண்டபடி அடித்து விட முடியாது. வாயில் வருவதையும், பேப்பரில் வாசிப்பதையும், பேஸ்புக்கில் வருவதையும் எவரும் மருத்துவம் என்று இங்கே செய்து விட முடியாது. நவீன மருத்துவத்தில் மருந்து  அல்லது மருத்துவம் என்று சொல்லப்படுகின்ற, செய்யப்பட்டுகின்ற ஒவ்வொரு வைத்திய முறைகளும், Treatmentகளும்  கண்டிப்பாக  உரிய  ஆய்வுத் தராதரங்களை கொண்டிருக்க வேண்டும்(Research  Evidence).

அது போலவே அந்த வைத்திய முறை அந்த நோய்களைப் சுகப்படுத்தியதற்கான சான்றுகளையும் நிரூபிக்க வேண்டும்  (Evidence Based). இவை இரண்டையும்  எந்த மருத்துவ முறை கொண்டிருந்தாலும் அதை நவீன மருத்துவம் இரு கரம் நீட்டி வரவேற்கும்,  உச்சி முகர்ந்து ஏற்றுக் கொள்ளும், தலையில் வைத்துக் கொண்டாடும்.

இது கீழைத்தேச நடைமுறை, இது திப்புன் நபவி, இது ரிஷிகளின் வழக்கம்  என்று ஒதுக்கும், வேறுபாடுகள் காட்டும் தன்மை இங்கே கிடையாது. அது போலவே மேற் சொன்ன இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாத  எந்த மருத்துவ முறையும்  இங்கே நிராகரிக்கப்படும், அது மேற்கத்தேய முறையாக இருப்பினும் சரியே. இந்த ஒரு அடிப்படைதான் இந்த மருத்துவத்தின்  வெற்றிக்கான ஆதாரமாக விளங்குகிறது.

உதாரணத்திற்கு சொல்வதானால் “பப்பாளிச் சாறு குடித்தால் டெங்கு சுகப்படும்” என்ற  இந்த ஸோ கால்ட் “மருத்துவ  ஆலோசனை” பட்டி தொட்டியெல்லாம் மிகப்பிரபலமான ஒன்று. இப்பொழுது இது ஏற்றுக் கொள்ளப்படும் மருத்துவ முறைதானா என்பதை சோதித்தறிய மேற்ச்சொன்ன இரு நிபந்தனைகளையும் இது பூர்த்தி செய்கிறதா என்று பார்த்தாலே போதும், உண்மை விளங்கி விடும். இந்த  அடிப்படை அளவு கோலை எந்த மருத்துவமுறையிலும் உரை கல்லாக பாவித்தால் நிறைய மருத்துவம் சார்ந்த போலிகளின் சாயம் வெளுத்துவிடும்.

இன்றைய நவீன மருத்துவத்தின் வெற்றிக்கான இரண்டாவது மிகப் பெரிய அம்சம்  நோய்க்காரணிகளை இனம்கண்டு மருத்துவம் செய்தல். அதற்காக வேண்டி பொறியியல், பௌதீகவியல், இரசாயனவியல், கணிதவியல், தொழில்நுட்பவியல், சமூகவியல் போன்ற இன்னும் பல துறைகளிலும் உள்ள உள்ளீடுகளை, கண்டுபிடிப்புகளை இந்த மருத்துவ துறைக்குள் அனுமதித்து மருத்துவத்தின் ஒரு பகுதியாக  அதை ஏற்றுக்கொண்டிருத்தல். இந்த  இயல்பு மற்றைய மருத்துவ துறைகளில் இல்லாமை தான் இந்த  நவீன மருத்துவத்தின் வியாபித்த வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைந்திருக்கிறது. இந்தப் பல் துறை உள்ளீடுகள்  நோய் நிலைகளை துல்லியமாக இனம் காணவும், அதனை மிகச் சிறப்பாக தீர்க்கவும் மிகப் பெரும் உதவிகளை செய்து வருகின்றன.

படிக்க:
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
♦ பாஜகவின் மத வெறிப் பிரச்சாரத்தில் மண்ணள்ளிப் போட்ட சர்ஃப் எக்செல் விளம்பரம் !

மாற்று மருத்துவங்களான ஆயுர்வேதா, யூனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற  எல்லாமே ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன் கொடி கட்டிப் பறந்த மருத்துவ முறைகள்தான் என்பதையும் நாம் மறந்து விடலாகாது. உரிய ஆய்வுகள், ஆராய்ச்சிகள், முறையான கற்பித்தல்கள் இல்லாத காரணத்தினால்  இவைகள் வழக்கொழிந்து வருகின்றன என்பது ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய உண்மை.

எனினும்  இந்த எல்லா மருத்துவ  முறைகளின் அடிப்படையிலிருந்து வளர்ந்த  இன்றைய நவீன மருத்துவம் அதிலுள்ளவர்களின் விஞ்ஞான பூர்வமான தேடல்களாலும், ஆய்வுகளாலும் இன்னும் இன்னும் வளர்ந்து வருகின்றன ஒரு பேரரசாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தப் பேரரசுக்குள் சில பண முதலைகளும், மருத்துவ மாஃபியாக்களும் தங்களது வியாபாரத்தை விருத்தி செய்யும் வழி வகைகளைத் தேடி  அலைந்து கொண்டிருக்கின்றன என்ற யதார்த்தத்தையும் நாம்  உணர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது  என்பதுதான், இதன் மற்றைய பக்கத்தில் உள்ள கசப்பான உண்மையாக இருக்கிறது.

மருத்துவர் பி.எம். அர்சத் அகமத் MBBS(RUH) MD PEAD (COL)
Senior Registrar in Peadiatrics, 
Lady Ridgeway Hospital for Children
Colombo, Srilanka

எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !

“புள்ளைகளுக்கு அறிவில்லையா? படிக்கிற புள்ளைகதானே? எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா?

இதுக்குதான் புள்ளைகளுக்கு செல்போனே குடுக்கக்கூடாது. எல்லாம் இந்த செல்போன், வாட்ஸ்அப், பேஸ்புக்கால வந்ததுதான்.

அப்பா – அம்மாக்கு புத்தியில்ல? புள்ளைக என்ன செய்யுது, எங்க போகுது வருது, புள்ளைககிட்டே என்ன மாதிரி மாற்றம் தெரியுதுன்னு கவனிக்க வேணாமா?

இதுக்குத்தான் புள்ளைகளை காலாகாலத்துல கட்டிக் குடுத்துடணும்கிறது. சும்மா சுதந்திரம் அது இதுன்னு பேசறதைவிட, படிப்புக்குச் செலவு செய்யற காசுல கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டுப்போலாம்.”

ப்ளா… ப்ளா… வாதங்களுடன் உபதேசங்கள் நிறையவே வரும். இவ்வளவு உபதேசங்களும் சொல்கிற யாரையும் பாருங்கள் – ஆண் பிள்ளைகளை உருப்படியாக வளர்க்க வேண்டும் என்று சொல்லவே மாட்டார்கள்.

இதுபோன்ற குற்றச் செயல்களில் விக்டிம்களுக்குத்தான் உபதேசங்கள் குவியும். போகட்டும்…

செல்போனைக் கொடுக்கும்போதே செல்போனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டியதுதான். குட் டச் – பேட் டச் மாதிரி சமூக வலைதளங்கள் குறித்தும் எச்சரிக்க வேண்டியதுதான். பெற்றோராக பிள்ளைகளை கவனிக்கவும் வேண்டியதுதான்.

விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், குழு உரையாடல்கள் நடத்துங்கள். பாலியல் கல்வி கொடுங்கள். இவை எல்லாம் எப்போதும் செய்ய வேண்டிய விஷயங்கள்தான் செய்யுங்கள்.

ஆனால் இப்போது பேச வேண்டியது – அந்தக் கொடூரக் குற்றவாளிகளை கூண்டோடு மொத்தமாகக் கைது செய்ய வேண்டும், ஆளும்கட்சிக்காரன் என்பதற்காக காவல்துறை மழுப்பல் வேலையில் ஈடுபடாமல் இருக்க நிர்ப்பந்திக்க வேண்டும். வெட்கம்கெட்ட அரசாங்கத்தையும், இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் கள்ளமவுனம் சாதிக்கும் ஊடகங்களையும் உரித்துத் தொங்க விட வேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்தி கடும் தண்டனைகளை வாங்கித்தர வேண்டும்.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
நுகர்வு வெறி ஏவிவிடும் பாலியல் வன்கொடுமை

ஏனென்றால், இது வெறும் பாலியல் குற்றம் மட்டுமல்ல. காலம் காலமாக நிலவிவரும் சமூக வழக்கங்களிலிருந்தும் தளைகளிலிருந்தும் விடுபட்டு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து நிற்க முயன்று கொண்டிருக்கும் பெண் சமூகத்தை, மேலே குறிப்பிட்ட வாதங்களால் மீண்டும் பழைய குழிக்குள்ளேயே தள்ளிவிடக்கூடிய படுபாதகச் செயல்.

உண்மையில் சொல்லப்போனால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதே சரியாக இருக்கும். ஆனால் சிபிஐ-யை ஆட்டுவிக்கிற பாஜக அரசும், தமிழக ஆட்சியில் இருக்கும் அதிமுக-வும், இந்த கொடூரச் சம்பவங்களின் பங்குதாரர்களாக இருக்கும் ஜாதிக் கட்சியினரும் கூட்டாக இருக்கும்போது சிபிஐ வேண்டும் என்று கோருவதில் பயன் விளையுமா என்ன?

நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடந்தால்தான் முழு உண்மைகள் வெளிவரும்.

#Arrest_Pollachi_Rapists

நன்றி : ஃபேஸ்புக்கில் ஷாஜகான்

பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !

பொள்ளாச்சியில் 273 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கிரிமினல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும், இதற்கு துணை நின்ற அதிமுக எம்எல்ஏ பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினார்கள்.

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர்.

♦ ♦ ♦

பொள்ளாச்சி பாலியல் வெறியர்களை தூக்கிலிட வேண்டும் எனவும் அரசு அவர்களை தண்டிக்காது நாம்தான் தண்டிக்க வேண்டும் எனவும் நேற்று (12.03.19) செவ்வாய் கிழமை திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயிலில் முழக்கமிட்டு பின் பேரணியாகச் சென்றனர். போலீசின்  தடையை மீறி நடைபெற்ற பேரணி மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்ற 80 க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசு கைது செய்தது.

தகவல்:
அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள்,
திருச்சி.

♦ ♦ ♦

“பொள்ளாச்சி: மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை ! அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு !” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் தமிழகம் தழுவிய அளவில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.

சென்னை:

காஞ்சிபுரம்:

கோவை:

வீட்டில் முடங்கியது போதும்! வீதிக்கு வா!!ம.க.இ.க. கலைக்குழு தோழர் லதா :

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் கிரிமினல்களை பாதுகாக்கும் போலீசு கும்பலை அம்பலப்படுத்தும் முழக்கங்களை எழுப்பினர்.

பாதுகாக்குது ! பாதுகாக்குது !
அதிமுக பொறுக்கிகளை
போலீசும் அரசும் பாதுகாக்குது !

எங்கே போனார் கவர்னரு?
எங்கே போனார் எச்சை ராஜா?

இங்கு பணக்காரனுக்கு ஒரு சட்டம்!
அதிகாரிக்கு ஒரு சட்டம்!

கிடைக்காதய்யா கிடைக்காது!
நமக்கு நீதி கிடைக்காது!

நடமாட விடாதே! நடமாட விடாதே!
குற்றவாளிகளை நடமாட விடாதே!
தமிழகமே திரளட்டும்!
குற்றவாளிகளை தண்டிக்கட்டும்.

தகவல்:
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

♦ ♦ ♦

“பொள்ளாச்சி பாலியல் காம வெறியர்களை, போலீசும் நீதி மன்றமும் தண்டிக்காது, மாணவர்கள் இளைஞர்கள் நாம்தான் வீதியில் இறங்கி தண்டிக்க வேண்டும்” என திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி வாயிலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் பிருத்திவ், தோழர் சுரேஷ் மற்றும் சில மாணவர்கள் பிரச்சாரம் செய்தனர். மதியம் 1 மணியளவில் கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டம் என்றும் அறிவித்தனர்.

இதே சமயத்தில் அருகில் உள்ள சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போலீசு தடையை மீறி பேரணியாக சென்று 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைதாகியுள்ளனர். மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு மிரண்டு  போன போலீசு, போராட்டங்கள் பரவாமல் தடுக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியது போலீசு. அன்று ஈ.வெ.ரா.  கல்லூரி முன்பு சில மாணவர்களுடன் போரட்டம் குறித்து தோழர் பிருத்திவ் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த உளவுப்பிரிவு போலீசு, உடனே போலிசு ஜீப்-ஐ அழைத்து வந்தது. அதிலிருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீசு, தடதடவென வந்து தோழரை சுற்றி வளைத்து வேகமாக இழுத்து ஜீப்-பில் ஏற்றினர்.

அருகில் நின்ற மாணவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டத்தில் நின்று கொண்டிருந்தனர். அச்சமயத்தில் கல்லூரி முடிந்து வந்த தோழர் சுரேஷ் ஓடி வந்து போலீசிடம், “யார் சார் நீங்க ? யாரை எங்க கூட்டிட்டு போறீங்க ?” என்று வேகமாக யுடர்ன் அடித்து நின்ற போலீசிடம் கேட்டார்.

“என்னையவே நீ யாருனு கேட்குறியா?” எனக் கூறி அவரையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றது. செல்லும் வழியில் அந்த போலீசு, “என்னையவே யாருனு கேட்கிறீயா? வா, இன்னைக்கு உன்னை ரிமான்ட் பண்ணி, கல்லூரியே படிக்க விடாம பண்றேன்” என்றார். “ ரிமான்ட்டுக்கெல்லாம் நாங்க பயப்படல.. முதலில் எதுக்கு எங்களை இழுத்துட்டு போறீங்கன்னு சொல்லுங்க” என கேள்வி கேட்டனர் தோழர்கள்.

தோழர்கள் இருவரையும் ஸ்டேசனில் இருத்தி வைத்துவிட்டு, அவ்வப்போது சிலர் வந்து மிரட்டியுள்ளனர். தோழர்களும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். பின்னர் அப்பகுதி வழக்கறிஞர்கள் வந்து புமாஇமு தோழர்களை அழைத்துச் சென்றனர். இந்நிலையில் தோழர்களைக் கைது செய்ததைக் கண்டித்து மாணவர்கள் கல்லூரியின் உள்ளே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என நாம் போராடினால் நம்மை இந்த போலீசும் உளவு பிரிவும் அதிகாரத்தில் இருப்பவர்களும் குற்றவாளிகளாக மாற்றுகிறார்கள். எனவே குற்றவாளிகளை பாதுகாப்பதும் இந்த அரசுதான் அதற்காக நீதி கேட்டு போராடுபவர்களை குற்றவாளிகளாக்குவதும் கொல்வதும் இந்த அரசுதான்.

இப்போது சொல்லுங்கள்…
பொள்ளாச்சி சம்பவத்தில் யார் குற்றவாளி ? காம வெறியர்களா ? காப்பாற்றும் அரசா ?

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி. 99431 76246.

தொகுப்பு:

கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !

0

டந்த பிப்ரவரி 22, 2019 அன்று கரூரில் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்துநில் மாநாட்டை ஒட்டி பஸ் பிரச்சாரம் செய்து நோட்டீஸ் கொடுத்ததற்காக சுரேந்தர் வினோத் ஆகிய இரு தோழர்களையும் கைது செய்தது, கரூர் போலீசு.

முதல் தகவலறிக்கை பதிவு செய்து ரிமாண்டும் செய்தது. அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்களின் தொடர் போராட்டங்களால் தோழர்கள் இருவரும் மார்ச் 1, 2019 அன்று நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தனர்.

தோழர் வினோத்

இந்நிலையில் கடந்த மார்ச் 5-ம் தேதி அன்று போலீசு நிலையத்தில் கையெழுத்திட எதிர்த்து நில் டீ-சர்ட் அணிந்து சென்ற தோழர்களை அங்கு கையெழுத்துப் போட வந்த இந்து முன்னணி காலிகள் கண்டு பொறுமியுள்ளனர்.

கடந்த மார்ச் 12 அன்று வழக்கம் போல தோழர் வினோத் கையெழுத்து போட்டு விட்டு போலீசு நிலையத்திலிருந்து வெளியில் வந்தார்.

இந்து முண்ணனி நிர்வாகிகள், தோழரை அழைத்து, “காவல் நிலையத்தில் டிசர்ட் போட யார் உனக்கு அனுமதி கொடுத்தது, என்ன டிசர்ட் இது? நீ மே பதினேழா?” என்றனர். “இல்லை, நான் மக்கள் அதிகாரம் ” என்றார் தோழர் வினோத். அதனைத் தொடர்ந்து காவி பாசிசம் என்றால் என்ன என்று கேட்டு தகராறு செய்திருக்கிறது இந்து முன்னணி கும்பல்.

“மாநாடு நடத்தியுள்ளோம் இணையத்தில் பாருங்கள். ஆசிபா போன்ற குழந்தைகளை காவிகள் சீரழிப்பதை தான் நாங்கள் பாசிசம் என்கிறோம். பேச்சுரிமை கருத்துரிமை நசுக்கபடுவது தான் பாசிசம்” என்று கூறியிருக்கிறார் தோழர் வினோத்.

“காவிகளின் நாட்டில் இருந்து கொண்டு, காவிகளையே எதிர்க்கிறாயா? அப்போ நீ பாகிஸ்தானுக்கு போ. உனக்கு என்ன தைரியம்? இந்து மதத்தை புண்படுத்தும் நீங்கள் மக்கள் அதிகாரம் எல்லாம் நக்சலைட்” என்று கூச்சலிட்டனர் இந்து முன்னணியினர்.

“இல்லை. நாங்கள் மக்களுக்காக போராடுபவர்கள். இந்துக்கள் என்று சொல்லும் நீங்கள் ஏன் அரியலூர் நந்தினி, அனிதா பிரச்சினைகளுக்கு எட்டிக் கூட பார்க்கவில்லை” என்ற தோழரின் கேள்விக்கு காவிகளிடம் பதில் இல்லை.

காவல் நிலையத்திற்குள் தோழரை இழுத்துச்சென்று, “இவன் மோடி ஒழிக; காவி பாசிசம் ஒழிக! என்று காவல் நிலையம் முன்பு கோசம் போட்டான். இவன் மீது நான் கேஸ் கொடுக்கிறேன். நீங்கள் நடவடிக்கை எடுங்கள்.” என்றது காவிக் கூட்டம்.

பிற தோழர்களுக்கு தகவல் கொடுக்க தோழர் வினோத் போனை எடுத்த போது செல்போனை புடுங்கி, “போலீஸ் ஸ்டேசனிலேயே போன் பேசுறியே அவ்வளவு திமிரா?” என்றார் ஒரு போலீசு. இவர்கள் எல்லாம் காக்கியை வெளியில் மாட்டிக் கொண்டு காவிக்குச் சேவகம் செய்வதற்காகத்தான் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் போலும்.

இந்து முன்னணி பிரமுகர்

பாஜக மாவட்ட செயலாளர், இந்து முண்ணனி மாவட்ட செயலாளர் என காவி கும்பல் போலீசு ஸ்டேசனுக்குள் நுழைந்தது. “பாஜக நபர் ஒருவர் காவிகளையே எதிர்க்கிறாயா? என்ன துணிச்சல் வெளியே வா…” என்றதற்கு, “பார்க்கலாம் அண்ணா” என்றார் தோழர்.

“தம்பி வெளியே என்ன நடந்தது?” என்றார் காவல் ஆய்வாளர் உதயகுமார். அதற்கு தோழர் நடந்த விவரங்களை கூற “உனக்கு எதுக்கு வம்பு? டிசர்டை மாநாடு முடிந்தும் போடலாமா? காவி ஒழிக என்று கோசம் போட்டியா?” என கேள்விகளை அடுக்கினார்.

“காவி பாசிசம் இன்றோடு முடியக் கூடிய பிரச்சினை இல்லை. தொடர்ச்சியாக தொடரும் விசயம் அதனால் டீசர்ட்டை போடுவது தவிர்க்கமுடியாது. நான் கோசம் போடவில்லை. நீங்கள் வலுவாக கேஸ் போட வேண்டும் என்பதற்காக அவர்கள் பொய் சொன்னார்கள். பாஜக-விற்கு பொய் சொல்லவா கத்துக்கொடுக்கணும்?” என்று பதிலுரைத்தார் தோழர் வினோத்.

“விசாரனை நடத்தி வெளியில் விடுகிறேன். காத்திருங்கள்.” என்றார் ஆய்வாளர் உதயகுமார்.

அடுத்து வந்த கரூர் மாவட்ட டிஎஸ்பி கும்மராஜா, “ஏன்டா நாயே, உங்க மக்கள் அதிகாரத்திற்கு போலீசுக்கு தொந்தரவு கொடுப்பதுதான் வேலையா?” என்றார்.

அதற்கு தோழர் வினோத், “மரியாதையாக பேசுங்கள்” என்று கூறியதற்கு

“தெருவில் போற நாய்ங்க மாதிரி எப்ப பாத்தாலும் பிரச்சனை பண்ணுறீங்க.. உனக்கு என்னடா மரியாதை. டி சர்ட் போட்டுட்டு காவல் நிலையத்திற்கு உள்ளே வர உனக்கு யார் அனுமதி கொடுத்தது.” என்றார்.

படிக்க:
♦ விரைவில் வெளிவருகிறது ! கார்ப்பரேட் – காவி பாசிசம் புதிய நூல் !
♦ கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில் | திருச்சி மாநாடு | live streaming | நேரலை

“நான் டிசர்ட் போடுவதுதான் உங்க பிரச்சனையா?” என்று தோழர் வினோத் பதில் கேள்வி கேட்க,

“ஸ்டேசனுக்குள்ள டிசர்ட் போடுன்னு உங்க மக்கள் அதிகாரம்  சொல்லி அனுப்புதா? சொல்லுடா நாயே !” என்றார் டி.எஸ்.பி. காவிகளுக்கு அந்த டீசர்ட்டைப் பார்த்தால் கோபம் பொங்குவது நியாயம். டி.எஸ்.பிக்கும் கோபம் பொங்குவது ஏனோவென்று தெரியவில்லை.  எஜமானனைச் சொன்னால் ஏவலாளிக்கு கோபம் வருவதுதான் நியாயம். டி.எஸ்.பி-க்குமா ?

சுற்றி இருந்த உளவு போலீசு, இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி என்று எதற்கும் அச்சப்படாமல், “ஆமாம், என்ன பிரச்சனை?” என்றார் தோழர் வினோத்.

அவர் அப்படி சொன்னதும், அவரை நோக்கி டி.எஸ்.பி, “மரியாதை கொடுக்கமாட்டியா?” என்றதற்கு “என் யூனிபார்ம்க்கு நீங்கள் மரியாதை கொடுக்கல.. நானும் கொடுக்க மாட்டேன்” என்றார்.

உடனே டி.எஸ்.பி கும்மராஜா, “இவனுக்கு எவ்வளவு திமிரு கொண்டு போய் ரிமாண்டு பண்ணுங்க. அப்பதான் புத்தி வரும்” என்றார். பதிலுக்கு தோழர்,  “சந்தோசம்” என்று சொல்லி விட்டு வெளியே வந்தார்.

உளவுத்துறை போலீசு தோழரிடம் வந்து, “உயர் அதிகாரிகளுக்கு மரியாதை கொடுக்கணும்பா” என்றார்.

காவல் நிலையத்திற்கு வெளியில் தோழர்களுடன் வினோத்

அதற்கு தோழர் அவரிடமும், “என் யூனிபார்முக்கு மரியாதை இல்லை. நானும் கொடுக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார். வெறுப்படைந்த உளவுத்துறை போலீசு, “உன்னிடமெல்லாம் பேச முடியாது” என்று போய்விட்டார்.

இச்சமயத்தில் மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு, சாமானிய மக்கள் கட்சி, மே 17 இயக்கத் தோழர்களும் வழக்றிஞர்கள் தோழர் ஜெகதீஸ், தமிழ் இராசேந்திரன் மற்றும் அவர்களது ஜீனியர் வழக்கறிஞர்கள் போலீசு நிலையத்திற்கு வந்துவிட்டனர்.

தோழர்கள் டிஎஸ்பி-யிடம், “என்ன சார் பிரச்சனை, ஏன் தோழரை பிடிச்சீங்க” என்றதற்கு மேற்கண்ட விவரங்களை கூறி, “என்னங்க, அந்த பையன்… ஒரு டிஎஸ்பி-ங்குற மரியாதை கூட இல்லாம இவ்வளவு திமிரா பேசுறார். கொஞ்சம் மரியாதை கொடுக்கச் சொல்லுங்க.. நான் ஒன்னும் செய்யலங்க.. விட்டுவிடுகிறேன்..” என்றார் தோழர்களிடம்.

இறுதியில், தோழரை ரிமாண்ட் செய்ய காவிகள் போட்ட திட்டம் மண்ணைக் கவ்வியது. மக்கள் அதிகாரம் அமைப்பின் டீசர்ட், காவிகளின் வயிற்றில் புளியை கரைக்கிறது. காவிகள் கதறுகின்றனர். காவிகளை தொடர்ந்து கதற விடுவோம்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கரூர்

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்துராஜ்யம் | நாடகம் | பாகம் – 2

சி.என். அண்ணாதுரை

காட்சி – 3
இடம் : இந்துமதி வீடு
உறுப்பினர்கள் : இந்துமதி, சந்திரமோகன்

(மோகன் வர, அவன் கழுத்தில் இந்து மாலை அணிவிக்கிறாள்.)

இந்து : கண்ணாளா இந்த ஆறு மாதங்களாக இருந்து வந்த மனவேதனை அவ்வளவும் இந்த ஒரு வினாடியில் ஒழிந்து விட்டது. அப்பப்பா… எவ்வளவு பயங்கரமான செய்திகள். போரிலே நமது படை சின்னாபின்னமாகி விட்டது. கோட்டையைச் சுற்றி எதிரிகள் சூழ்ந்து கொண்டார்கள்… ஆயுதச் சாலையைப் பிடித்துக் கொண்டனர் என்றெல்லாம் வந்து கூறுவார்கள். அப்போதெல்லாம் என் நிலை… அடடா!

மோகன் : கலங்கித்தான் போயிருப்பாய் கண்மணி. களத்திலே கடும் போர்தான். ஆபத்துக்கள் நிறைய உண்டு. ஆனால், ஆற்றல் மிக்க நமது தலைவர் அளித்த தைரியம். எங்களுடைய பலத்தை பல மடங்கு அதிகமாக்கிற்று.

கண்ணே உன் காதலனும் கோழையல்ல; உன்னைக் கண்டதும் என் விழியிலே கனிவு வழியும். அதைக் கண்டு இந்தக் கண்களுக்கு இதுதான் இயல்பு என்று எண்ணி விடாதே. ஆபத்து என்ற உடனே இந்தக் கண்கள் நெருப்பைக் கக்கும். உன் மலர்க் கரத்தையும் மதுரம் தரும் அதரத்தையும் தொட்டு விளையாடும் இந்தக் கரத்திலே வாள் ஏந்தியதும், எதிரியின் தலை என் தாளிலே விழும் வரை புயலெனத்தான் சுற்றித்
திரிவேன் களத்தில்.

இந்து : போதும், போர்க்களச் செய்திகள். இனிமேல் இந்த மாளிகையிலே ஆடிப்பாடி விளையாட வேண்டும் நாம். மராட்டிய சாம்ராஜ்யத்தை கிருஷ்டிக்கும் மாவீரன் என்
காதலர் என்று ஊரெல்லாம் புகழ்கிறது.

மோகன் : ஊரெல்லாம் புகழ்ந்தாலும், உலகமே புகழ்ந்தாலும், உன் அப்பா மட்டும்…

இந்து : அவர் மட்டும் என்ன ? உங்கள் வீரதீரத்தைப் பழிக்கிறாரா? உங்கள் மீதுள்ள
அளவு கடந்த அன்பினால் போருக்குப் போக வேண்டாம் – ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறுகிறார்.

மோகன் : வேடிக்கையான சுபாவம் உன் அப்பாவுக்கு வாள் ஏந்தும் கடமையை என் போன்ற வாலிபர்கள் மறந்தால் அனைவரும் சேர்ந்து எதிரியின் தாள் ஏந்த வேண்டுமே! தாயகம் அடிமையாகிவிடுமே! நாடு பரிபூரணவிடுதலை பெற்று நமது ஆட்சி நிலைநாட்டப்படும் வரையில் போரிட்டுத்தானே ஆக வேண்டும். மராட்டிய சாம்ராஜ்யம் கிருஷ்டித்தான பிறகுதான் நமது காதல் ராஜ்யம். ஆகா! இன்பமே! நமது காதல் ராஜ்யம் அமைந்து விட்டால்…

இந்து : அமைந்துவிட்டால்….

மோகன் : புயலும் தென்றலாகும். பொற்கொடியே! அந்த ராஜ்யத்திலே வாளும் வேலும் என்ன செய்ய முடியும்?

இந்து : உங்கள் அன்பு மொழியால் என்னைப் பைத்தியமாக்கி விடுகிறீர்கள் கண்ணாளா!

மோகன் : என் மொழி உன்னை பைத்தியமாக்குவதாகச் சொல்கிறாய். இன்பவல்லி! உன் விழி என்னைப் பைத்தியமாக்கிவிடுகிறதே.

இந்து : போதும் போங்கள்! உங்களுக்கு எப்போதும் கேலிதானா?

♦ ♦ ♦ 

காட்சி – 4
இடம் : வீதி
உறுப்பினர்கள் : சந்திரமோகன், சாது.

(சாது நாட்டைப் பற்றி பாடி வருகிறார். மோகன் அதைக் கேட்டு விட்டு..)

மோகன் : பெரியவரே களிப்புக் கடலில் மூழ்கினேன். உமது கீதத்தைக் கேட்டு சாது இனிமையாக இருந்ததா தம்பி?

மோகன் : மதுரமாக இருந்தது மதிவாணரே!

சாது : இதைவிட இனிமை உண்டு , வானத்திலே வட்டமிடும் வானம்பாடியின் கீதத்தைக் கேட்டால். உற்றுக் கேட்டால் வீரனே! சிற்றருவிப் பாய்ந்தோடும் போது இனிமையான கானம் கேட்கவில்லையா? இயற்கை சதா நேரமும் இசைபாடிக் கொண்டுதான் இருக்கிறது.

மோகன் : உண்மைதான் பெரியவரே.

சாது : குழந்தையின் மழலை, குமரியின் கொஞ்சுமொழி. தென்றலிலே படும் கொடிகளின் அசைவு – இவைகளிலே இல்லாத இனிமை என் இசையிலே
ஏதப்பா ?

மோகன் : அய்யா இனிமை மட்டுமே அந்தச் சமயங்களிலே காண்கிறேன். ஆனால், தங்கள் இசையிலேயோ இனிமையுடன் பொருளும் இருக்கக் கண்டு களித்தேன்.

சாது : நல்லவனப்பா நீ! கீதத்தைக் கேட்டுவிட்டு கருத்தை கவனியாதிருப்பவரே அதிகம். நீ கவனித்தும் இருக்கிறாய்; ரசித்தும் இருக்கிறாய்!

மோகன் : ரசிக்காமல் இருக்க முடியுமா? புதுமணம் வீச வேண்டும், நாடு பொன்னாடாக வேண்டும், மக்களின் வாழ்வு மகிழ்ச்சியோடு துலங்க வேண்டும். மதிமிக வேண்டும் என்ற கருத்துக்களை நாட்டுப் பற்றுடைய யார்தான் ரசிக்காமல் இருக்க முடியும்?

சாது : அதிலும் நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ. உன் மனம் மகிழத்தான் செய்யும்.

மோகன் : உயிரைத் துரும்பென்றெண்ணி எண்ணற்ற வீரர்கள். தாயகத்தின் விடுதலைக்காகப் போரிட்டனர். குருதியைக் கொட்டினர். வெற்றியும் கிடைத்திருக்கிறது.

சாது : வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறது வீரர்களுக்கு …..

மோகன் : பெரியவரே! என்ன, ஏதோ சிறு சஞ்சலம்?

சாது : வெற்றியைப் பெற்றுத் தருகிறார்கள். ஆனால் வீணர்கள் விதைத்த விஷப்பூண்டு இன்னும் அழியவில்லையே. ராஜ்யத்துக்கு எதிரிகளால் நாசம் ஏற்படாமல் தடுக்க வீரர்களின் தியாகம் தேவைப்படுகிறது. ஆனால், அந்த வீரத்தையும் தியாகத்தையும் விழலுக்கிறைத்த நீராக்கும் விபரீத காரியம் நடைபெறுகிறதே.

மோகன் : பெரியவரே! என்ன, ஏதாவது சதி நடைபெறுகிறதா?

சாது : ரகசியமாக நடைபெறுவதல்லவா சதி? இது சதி அல்லப்பா, சாதி. அந்த சாதித் தொல்லை உள்ள மட்டும் சமூகத்துக்கு சதா ஆபத்துதானே? வீரப்போர் புரியும் போது தாய் நாட்டவர் என்ற பாசமும், எதிரி வெற்றி பெற்று விட்டால் என்ன செய்வது என்ற பயமும் மராட்டிய வீரர்களை ஒன்றாக்கி வைக்கிறது. பாசமும் பயமும் வெற்றிக் கொடி பறந்ததும், பறந்தே போய்விடும். பழையபடி ஜாதி தலைதூக்கும். அதை எண்ணித்தான் நான் சஞ்சலப்படுகிறேன்.

மோகன் : நாட்டு மக்களுக்கு ஜாதி கேட்டினைத்தான் செய்யும். அந்தக் கேட்டினை நாட்டை விட்டு ஒட்டிடலாம். அய்யா! ரத, கஜ துரக பதாதிகளையா கூட்டி வரும் இந்த ஜாதி?

சாது : அதற்கேனப்பா நால்வகைச் சேனை? அந்த ஜாதி சனியனால் தகப்பனே மகனுக்கு விரோதியாக்க முடியும். அண்ண னும் தம்பியும் போரிட்டு மடிவர், அது தூபமிட்டால், குடும்பம் கொலைக்களமாகும். ஊர் இரண்டு படும்! அது தூபமிட்டால், அந்த ஜாதித் சனியனுக்கு கோட்டைகள், மலைகள், மீதியிருந்தால் மாவீரர்கள் சென்று தாக்கித் தகர்த்துவிட முடியும். அந்த ஜாதிச் சனியனுக்குக் கோட்டைகள் நம்மவர்
மனதிலேயே இருக்கின்றன.

மோகன் : பெரியவரே! இதுவரை இருந்தது போல் இனியும் இருக்கும் என்று எண்ணாதீர்கள். புதிய ராஜ்யம் ஏற்படுகிறது. புனிதப் போருக்குப் பிறகு ஏற்படும் ராஜ்யம் இது. இதிலே புல்லர்களுக்கு ஆதிக்கம் இருக்காது. ஒற்றுமை நிலவும்; தோழமை மலரும்; சமரச மணம் வீசும் ; சன்மார்க்கம் நிலைக்கும்; ஜாதி மடியும்.

படிக்க:
பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி !
அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும் !

சாது : நல்வாக்குக் கொடுக்கிறாய், நாடாள நீயே வந்தாலும் நடவாக் காரியங்களை மடமடவெனக் கொட்டிக் காட்டுகிறாய் ஆர்வ மிகுதியால்… நீயே நாளைக்கு ராஜா ஆகிவிடுகிறாய் என்று வைத்துக் கொள்.

(மோகன் திகைத்துப் பார்க்க)

ஏனப்பா அப்படிப் பார்க்கிறாய்? அவலட்சணங்களெல்லாம் அரசர்களானபோது நீ ராஜா ஆகவா முடியாது? ஆளைப் பார்த்தால் ராஜா போலத்தான் இருக்கிறாய்; ராஜாவாகி விடுகிறாய் என்று வைத்துக் கொள். அப்போது நான் சொன்ன ஜாதிச் சனியனை விரட்டப் போரிடுவாயோ?

மோகன் : ஏன் முடியாது?

சாது : பைத்தியம் உனக்கு. நீ ராஜாவானால் உடனே உனக்கு ஒரு ராஜகுமாரி வேண்டும். ரத, கஜ, துரக பதாதிகள் வேண்டும். அரண்மனை ஐஸ்வரியங்கள் வேண்டும். அந்தப்புரம் வேண்டும். அழகுள்ள ஆடும் பெண்கள் வேண்டும். ஆலவட்டம் வீச ஆட்கள் வேண்டும். யானை மீது அம்பாரி வேண்டும் என்று இவைகள் மீது அக்கறை பிறக்குமே தவிர ஜாதிபேதத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வராது.

மோகன் : ஏன் வராது? கட்டாயம் வரும்.

சாது : வராதப்பா.

மோகன் : கட்டாயம் வரும்.

சாது : வராதப்பா வராது. வந்தாலும் ராஜா வேலை உனக்கு நிலைக்காது.

மோகன் : ஏன்?

சாது : ஏனா? உயர்ந்த ஜாதிக்காரர் என்பவர்கள் உன்னை எதிர்த்து ஒழித்தே விடுவார்கள்… சிவாஜியின் வீரத்தைக்கூட அந்த வீணர்கள் பொருட்படுத்த
மாட்டார்கள்.

மோகன் : பெரியவரே! முன்பு நடந்தது போல் இனியும் நடக்கும் என்று வாதாடுவது முறையாகாது. சிவாஜியின் கண்களிலே இந்தக் கொடுமைகள் தென்படாமல் இல்லை. அவர் தனக்காக, தாய் நாட்டுக்காக உயிர் கொடுத்த உத்தமர்களை உயர்ந்த ஜாதி என்று உரிமை பேசுவோரிடம் அடிமைப்பட விடமாட்டார். அவர் குடியானவர் வகுப்பு. குலப்பெருமை பேசும் கும்பலில் பிறந்தவரல்ல. அவர் சகலரையும் சமமாகவே நடத்துவார்.

சாது : ஆர்வம் ததும்புகிறது உன் பேச்சிலே. அனுபவமில்லாததால் ஆர்வம் அளவுக்கு மிஞ்சியிருக்கிறது. அனுபவம் பெறுவாயப்பா. நீ மராட்டியத்தின் மறுமலர்ச்சி துதூவன். போய் வா!

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி:

பகுதி 1 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை

பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி !

0

வில்லவன்
ராஜாஜிக்குப் பிறகு ஒரு நல்ல பிராமண பீஸுக்காக மயிலை ஆன்மாக்கள் பன்னெடுங்காலம் காத்திருந்த வேளையில் குத்துமதிப்பான அய்யரான எம்.ஜி.ஆர் வாய்த்தார். சுயபுத்தியும் சொல்புத்தியும் இல்லாத சுயத்தை சொறிய மட்டுமே தெரிந்த அவர்தான் நேற்றைய ஜெயாவுக்கும் இன்றைய மோடிக்கும் முன்னோடி.

கழிசடையாக இருந்தாலும் பார்ப்பனியம் கால்நூற்றாண்டு தவத்தில் பெற்ற பிள்ளை இல்லையா? ஊடகங்கள் முட்டுக்கொடுத்து முட்டுக்கொடுத்து “சோறுபோட்ட மஹாராஜா” என பாமர மக்களை நம்பவைத்தார்கள். அவரால் அடித்து மெண்ட்டலாக்கப்பட்ட ஆட்களோ, அடியாட்களுக்கு பட்டா போடப்பட்டு கொல்லப்பட்ட ஏரிகளோ கணக்கில் வரவேயில்லை.

அடுத்து கோமளவல்லி வந்து சேர்ந்தார். அக்ரஹாரவாசிகள் எல்லோரும் கும்பலாய் போய் போயஸ்கார்டனில் கொண்டாடலாம் என்றால் அங்கே ஏற்கனவே நந்தி போல சசி கும்பல் உட்கார்ந்துவிட்டது. ‘விருந்து வைத்து வாயைத் தைத்ததைப்போல’ ஆயிற்று அவர்கள் நிலை. ஜெ ஊழலின் பெரும் பங்கை சூத்திர தோழியின் குடும்பம் தின்ன, மீண்டும் பார்ப்பனியம் விரல் சப்பியபடியே சாபமிட்டு காலம் கழித்தது.

ஆரிய மாமா சோ ராமசாமியே ஜெயாவை திட்டிவிட்டு எதிரணியை ஆதரிக்க வேண்டியாயிற்று. ஆனாலும் ஜாதிப் பாசம் விட்டுபோகுமா? அந்த டபுள் பாசிஸ்ட்டை நிர்வாகப்புலி என பிரச்சாரம் செய்து ஒப்பேற்றினார்கள். சாராய ஆலை ஓனர் எனும் தட்சணையைக்கூட சோ காலம் போன கடைசியில்தான் வாங்கினார். ஜெ ஒரு சோத்து சோம்பேறி என்பதால் சோ தட்சணை பெறும் காலம்வரை இருந்தார். இல்லாவிட்டால் எதிர்த்து பேசிய காலத்திலேயே சந்திரலேகா டைப் டிரீட்மெண்ட்டை பெற்றிருப்பார்.

படிக்க:
♦ கேப்டன் பீரங்கியிலிருந்து வெடிப்பது குண்டா குசுவா ? | வில்லவன்
♦ சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட தேமுதிக விஜயகாந்த் : யார் காரணம் ? கருத்துக் கணிப்பு

அந்தம்மா போன பிறகு வாய்த்த சுமார் மூஞ்சிகள் எல்லாம் புரோக்கர் வேலையே போதும் என செட்டில் ஆயின. புரோக்கர் வேலைக்குக்கூட லாயக்கற்ற எச்.ராஜா, குருமூர்த்தி, எஸ்.வி.சேகர் போன்ற கொழுப்பெடுத்த கூமுட்டைகள் தலைவன் தோரணையில் பேசி மீதமிருக்கும் பர்னிச்சர்களை உடைத்தன. எம்ஜியார் காலம் என்றால்கூட இந்த கூமுட்டைகளை இண்டலெக்சுவல்ஸ் எல்லாம் அப்படித்தான் இருப்பா என தடவிக் கொடுத்திருப்பார்கள். சமூக ஊடகங்கள் வந்த பிறகு தடவிக்கொடுக்கும் கைகளில் ‘ஷண’ நேரத்தில் துப்பிவிடுகிறார்கள். பெரியார் காலத்தில்கூட பார்ப்பனர்கள் அறிவாளிகள் எனும் அந்தஸ்துக்கு ஆபத்து அவ்வளவாக இல்லை. பேஸ்புக் காலத்தில் வெறும் ஸ்டேட்டஸ்கள் போட்டே அந்த ஸ்டேட்டசுக்கும் எள்ளும் தண்ணீரும் தெளித்துவிடுகிறார்கள்.

பார்ப்பனர்களின் முக்கால் நூற்றாண்டு அனுபவத்தில் அரசியலுக்கு வரும் சொந்தப்பிள்ளைகள் அவர்கள் கவுரவத்தை சந்தியில் நிறுத்தும் வாய்ப்பே அதிகமாக இருந்திருக்கிறது. ஆகவே பார்ப்பனியத்தின் பிளான் பி ஆனது அடிமை சூத்திரர்களை இறக்கி அவர்கள் வழியே அதிகாரத்தை தக்கவைக்கலாம் என்பதாக இருந்தது. இது சேர, சோழ காலத்து அரத பழசு டெக்னிக்தான். என்ன செய்வது பார்ப்பனியத்தை இன்றும் கிழடு கட்டைகள்தானே காப்பாற்ற வேண்டியிருக்கிறது?

பிளான் பி மூலம் முதலில் அவிழ்த்துவிடப்பட்ட நாய்கள் சாதிச் சங்கங்கள். அவர்கள் படையெடுப்புக்குப் பிறகு பார்ப்பனர்களின் சாதி வெறிக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்தது. பாதுகாப்புக்கு சரி, அதிகாரத்தை தக்க வைக்க? அதற்குத்தான் விஜயகாந்த் வரைமுறையில்லாமல் ஊடகங்களால் ஆராதிக்கப்பட்டார். அவர் கட்சி துவங்கும் முன்பே அதற்கான நேர்மறை முன்னோட்டங்கள் வெள்ளமென பாய்ந்தன. பார்ப்பனர்கள் விரும்பியிருக்காவிட்டால் ஊடக நடத்தை இப்படி இருந்திருக்காது. பெயரளவுக்குகூட சித்தாந்தம் இல்லாத, ஓரளவு ஓட்டுக்களை திரட்டக்கூடிய கொழுப்பெடுத்த முட்டாள்கள் பார்ப்பன லாபிக்கு தேவை. அதற்கு ‘சப்ஜாடாக’ பொருந்தி வந்தவர் விஜயகாந்த். நீங்கள் சந்திக்கும் பார்ப்பனர்களிடம் பேசிப் பாருங்கள், விஜயகாந்தின் வீழ்ச்சி அவர்களை சங்கடப்படுத்தியிருக்கும்.

விஜயகாந்தும் அவர்களின் கொஞ்சலுக்கு உகந்த நியாயத்தை செய்தார். அரை ஜெயாவான மனைவி, அரை பிரேமாவான மச்சான், பணக்கார திமிரைத்தவிர வேறு தகுதியே இல்லாத பிள்ளைகள் கூடவே சினிமாக்காரனுக்கே உண்டான அதிகார மிதப்பு என எல்லா சிக்கல்களையும் தாண்டி அவர் 2011-ல் ஜெயாவை ஆதரித்து பார்ப்பனியத்துக்கு சேவை செய்தார். பிறகு ம.ந.கூ-வில் இருந்தும் ஜெவுக்கு உதவினார் (அப்படித்தான் பிரேமலதா சொல்லியிருக்கிறார்). இப்போதும் பார்ப்பனியத்துக்கு ஒரு பார்ப்பனனால்கூட செய்ய இயலாத சேவைகளை செய்யும் அதிமுகவை ஆதரிக்கிறார்.

இவற்றின் கிரெடிட் முழுமையும் விஜயகாந்துக்கு போய் அதன் பாவங்களை மட்டும் அண்ணியார் சுமக்கிறார். விஜயகாந்தை ஆதரிக்கும் மயிலை ஜீவன்கள்கூட அண்ணி பிரேமலதாவை சபிக்கிறார்கள். ஸ்டாலினுக்கு கடும் போட்டி கொடுத்திருக்க வேண்டிய ஆளை கரடி பொம்மைபோல செட் பிராப்பர்ட்டியாக மாற்றிவிட்டார் எனும் அவச்சொலை நீங்கள் கபாலி கோயில் மாடவீதிகளில் இப்போதும் கேட்க இயலும். ஆனால் உண்மை அதுவா?

2006 -ல் மட்டுமே விஜயகாந்த் ஓரளவுக்கு கோர்வையாக பேசினார். 2009 -ல் இருந்தே அவர் பேச்சு கோளாறானதாகவும் புரிந்துகொள்ள முடியாததாகவும் ஆகிவிட்டது. கேப்டன் டிவி லைவில் அவர் பேச்சு ஒளிபரப்பாகையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் உடனே ஒலி மட்டும் நிறுத்தப்பட்டு “நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” பாட்டை ஓடவிடுவதற்கென்றே ஒரு சிறப்பு டீம் ஒன்று செயல்பட்டது. ஊடகங்களிடம் ஏடாகூடமாக பேசுவது, கூட இருப்பவனை எகிறியடிப்பது போன்ற கூடுதல் இம்சைகள் வேறு. ஆனால் இத்தனைக்கும் மத்தியில் கடந்த பத்தாண்டுகளாக விஜயகாந்தை ஒரு போணியாகும் சரக்காக வைத்திருக்க அண்ணியார் எத்தனை சிரமப்பட்டிருக்க வேண்டும்? ஒரு சூத்திர நிர்மலா சீதாராமனுக்கு இது எத்தனை பெரிய சவால் என்பதை யாருமே யோசித்துப் பார்ப்பதில்லை.

படிக்க:
மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் ! சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது !!
♦ நிர்மலா சீத்தாராமன் X 24-ம் புலிகேசி – வீடியோ

இப்போது அதிமுக கூட்டணியில் கொஞ்சம் கூடுதலாக ஜாதி ஓட்டுக்களை ஓட்டிக் கொண்டுவரும் சூழலில் இருப்பது மாங்கா கும்பல்தான். குடிசைகளை கொளுத்தி, காதலித்து மணம் புரிந்த பல குடும்பங்களை சிதைத்து (பல கிராமங்களில் வன்னியர்-தலித் தம்பதிகளை ஒதுக்கி வைத்த நிகழ்வுகள் இளவரசன் மரணத்துக்குப் பிறகு நடந்தது) அடைந்த பலன் இது. அதிமுக-பாஜக-பாமக கூட்டணிக்குப் பிறகு சமூக ஊடக மக்கள் அடித்த அடியில் மாங்கனிகள் நசுங்கி மண்ணில் விழுந்திருக்கும். ஆனால் கேப்டனின் மகனும் மச்சானும் அதன் தாக்கத்தை குறைத்திருந்த வேளையில், அண்ணியார் வாய் திறந்த வினாடியே மாங்கா மைந்தனும் அப்பா மாங்காவும் சமூக ஊடகங்களில் நிபந்தனையற்ற ஜாமீன் பெற்றார்கள். இது அம்மனின் அருளுக்கு இணையான வரம். அந்த வகையில் கூட்டணிக்காக அதிகம் தியாகம் செய்தது அண்ணிஜிதான்.

இதுநாள் வரை வாய்க்கொழுப்பின் ஒற்றை பிரதிநிதியாக நிம்மி மாமியே இருந்து வந்தார். ‘ஜெ’கூட தன் திமிரை வார்த்தைகளால் பொதுவெளியில் காட்டியவரல்ல. ஆனால் ஊறுகாய் மாமியோ பிரஸ்மீட்டுக்கு 1000 ஓட்டு வீதம் தொலைக்கும் அளவுக்கு சனியை நாக்கில் குடிவைத்திருப்பவர். ஒரே பிரஸ்மீட் முலம் அந்த சனிநாக்கு நாயகி பட்டத்தை பிரேமா தட்டிப்பறித்து நிம்மி மாமியை காத்தருளியிருக்கிறார். இனி மீம்ஸ்களில் வாய்க்கொழுப்பு டெம்ப்ளேட்டுக்களை பிரேமலதாவே ஆக்கிரமிப்பார். ராஜேந்திர பாலாஜிக்கு மோடி டாடியானதில்கூட சில லாஜிக் மீறல்கள் இருக்கலாம், ஆனால் நிம்மிக்கு பிரேமாதான் மம்மி என்றால் அதை மறுக்க அகிலத்தில் யாருக்கும் திராணி இருக்காது.

யாசகம் பெற்ற அடுத்த வகையறா ஊடகவியலாளர்கள், எஸ்.வி சேகர் போன்ற சினிமா பிட்டுக் காமெடியன்களானாலும் சரி எச்.ராஜா போன்ற அரசியல் பிட்டுக் காமெடியன்களானாலும் சரி, துப்பினால் துடைத்துக் கொண்டு போவதே ஊடகங்களின் தலைவிதியாக இருந்தது. எஸ்.வி சேகர் வீட்டு வாசலில் ஆர்பாட்டம் செய்த பத்திரிக்கையாளர்கள் தங்கள் நிறுவன விசாரணைக் கமிசனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்போதோ பிரேமா அண்ணி விவகாரத்தில் தங்கள் எதிர்ப்பை கொஞ்சம் போல காட்டிக் கொள்ள அவர்கள் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். காட்சி ஊடகங்கள் விவாதங்கள் நடத்தின. நிம்மி மாமி செருப்பால் அடித்திருந்தாலும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை பரிசீலித்தால் இது எத்தனை பெரிய வாய்ப்பு என்பது உங்களுக்கு புரியும்.

வெறும் அரசியல்வாதியாக மட்டும் அவர் தியாகம் செய்தவரல்ல, ஒரு தாயாக, அக்காவாக, மனைவியாகவும் அவர் தியாகியே. தனியே போய் ஒரு தீக்குச்சி கடன் வாங்கிவரக்கூட தகுதியில்லாத திமிரெடுத்த பிள்ளையை வைத்துக் கொண்டு அவரையும் பொதுக்கூட்டத்தில் பேச அனுப்பினார். அது ஊரில் இருக்கும் கட்சிகள் எல்லாவறையும் ஒரே வாக்கியத்தில் ஒரண்டை இழுத்தது. வீட்டுக்காரர் ஃபேஸ் வேல்யூவின் கடைசி அறுவடையை எடுக்க வேண்டும். பிள்ளையின் வாயிலோ மூதேவி மல்லாக்கப் படுத்த வாக்கில் காலாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த துயரங்கள் போதாதென்று புரோக்கரேஜில் பாண்டித்யம் போதாத தங்கத் தம்பியோ இரண்டு கட்சிகளுக்கும் ஒரே நாளில் லவ் லெட்டர் கொடுத்து அம்பலப்பட்டிருக்கிறார்.

இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் எந்த மனிதரும் நிதானமிழப்பார்கள். ஆனால் அண்ணியோ திட்டமிட்டு நிதானமாக நிதானமிழந்தார் என்பதை அந்த பேட்டியை பார்த்த யாராலும் கணிக்க முடியும். தன்னை பலியிட்டு தம் பிள்ளையையும் தம்பியையும் காப்பாற்றிய தியாகத்தாய் அவர் என்பதை அறிய இந்த ஒரு உதாரணமே போதும். ஜென்டில்மேன் படத்தில் மகன் படிப்புக்காக தன்னைத்தானே தீயிலிட்ட மனோரமாதான் தமிழகத்தின் தியாகத்தாய்க்கு உதாரணமாக இருந்தார். அண்ணி பிரேமா அதனிலும் மேலானவர் என்பதை காலம் உங்களுக்கு உணர்த்தும்.

ஜெய்ஹிந்த்..

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

#Gobackmodi டிரெண்ட் செய்தது பாகிஸ்தானியர்களா ?

மிழ்நாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி விஜயம் செய்யும்போதெல்லாம் #GobackModi என்ற ஹாஷ்டாகை எதிர்க்கட்சிகள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். கடந்த முறை மோதி கன்னியாகுமரிக்கு வந்தபோதும் இதேபோல நடந்தது.

ஆனால், இதனைச் செய்தது தமிழர்கள் அல்ல. பாகிஸ்தானியர்கள். குறிப்பாக ஐஎஸ்ஐ இதற்குப் பின்னால் இருக்கிறது என்ற கருத்தை பா.ஜ.க பிரமுகர்கள் பரப்பினார்கள்.

ட்விட்டர் உலகில் மிகப் பிரபல ஹேக்கரான எலியட் ஆல்டர்சன் ( @fs0c131y ) இப்போது ஒரு ஆய்வைச் செய்திருக்கிறார். மார்ச் ஆறாம் தேதி சென்னைக்கு மோதி வந்தபோது ட்ரெண்ட் செய்யப்பட்ட ட்வீட்களை அவர் ஆய்வுசெய்து, அவை எங்கிருந்து பதிவுசெய்யப்பட்டன, எந்தெந்த ட்வீட்டர்கள் அதில் தீவிரமாக ஈடுபட்டார்கள் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

#GoBackSadistModi என்ற ஹாஷ்டாகுடன் கூடிய 68543 ட்வீட்களை அவர் முதலில் ஆராய்ந்திருக்கிறார். மோதிக்கு எதிரான மேலும் சில ஹாஷ்டாகுகள், அன்று ட்ரெண்டான வேறு சில ஹாஷ்டாகுகளையும் அவர் ஆராய்ந்திருக்கிறார்.

அந்த ஹாஷ்டாகுகளும் அவற்றின் கீழ் பதிவான ட்வீட்களின் எண்ணிக்கையும் இதுதான்:

#gobacksadistmodi – 41174
#gobackmodi – 16818
#gobackmodii – 1631
#whereismugilan – 1566
#rafaledeal –1437
#rafalescam – 1197
#tnwelcomesmodi – 681
#gobackantinationalmodi – 657
#admkfails – 477
#bjpfails – 476

அன்றைய தினம் மிகத் தீவிரமான ட்வீட்களைப் பதிவுசெய்த பதிவர்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இவர்கள் ஒவ்வொருவரும் அந்த நாளில் 350 முதல் 200 வரையிலான ட்வீட்களை பதிவுசெய்திருக்கிறார்கள்.
அன்றையை ட்வீட்களில் அதிகம் பகிரப்பட்ட படங்களையும் அவர் தொகுத்திருக்கிறார்.

முதலிடத்தில் இருப்பது கருணாநிதியும் துரைமுருகனும் சிரிக்கும் படம்.

படங்களின் பட்டியல் இது:

481 http://pbs.twimg.com/media/D098-kFU4AAJrig.jpg
409 http://pbs.twimg.com/media/D09tctFUwAEpVxF.jpg
376 http://pbs.twimg.com/media/D088tIoV4AA_nAa.jpg
322 http://pbs.twimg.com/media/D098Cw9U4AAZGCF.jpg
270 http://pbs.twimg.com/…/11031665…/pu/img/E7kgt9zJHGlIpVpV.jpg
255 http://pbs.twimg.com/media/D09iv-bVsAAbeii.jpg
246 http://pbs.twimg.com/media/D09vAxhVsAElo9T.jpg
182 http://pbs.twimg.com/media/D09d1TrVsAAPswG.jpg

மொத்த ட்வீட்டர்களில் தாங்கள் எந்த இடத்திலிருந்து ட்வீட்டை பதிவுசெய்கிறோம் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்த பதிவர்கள் 30 சதவீதம் பேர். எந்தெந்த இடங்களிலிருந்து இந்த ட்வீட்கள் பதிவாயின என்ற பட்டியலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழ்நாட்டிற்கு வெளியில் இருப்பது பெங்களூருவும் புதுதில்லியும்தான்.

படிக்க:
அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

மிகத் தீவிரமாகச் செயல்பட்ட பதிவர்களின் பெயர்களையும் ஆல்டர்சன் வெளியிட்டிருக்கிறார். அதில் முதலிடத்தில் இருப்பவர், நண்பர் பிறை கண்ணன் @piraikannan.

ஆக, இந்த மோதி எதிர்ப்புப் பிரச்சாரம் என்பது முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது என்று முடித்திருக்கிறார் ஆல்டர்சன்.

முகநூலில் : Muralidharan Kasi Viswanathan

சாவின் விளிம்பில் ! உண்மை மனிதனின் கதை 3

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 3


ண்டைச் சந்தடித்தால் குகையிலிருந்து எழுப்பப்பட்டிருந்த கரடி பசித்திருந்தது, எரிச்சல் கொண்டிருந்தது. ஆனால் பிணங்களின் இறைச்சியைக் கரடிகள் உண்பதில்லை. பெட்ரோல் நெடி சுள்ளென்று அடித்த அசைவற்ற உடலை நெடுக மோந்த கரடி சோம்பலுடன் திறப்பு வெளிக்குப் போயிற்று. முனகலும் சரசரப்பும் அதைத் திரும்பி வரச் செய்தன. அது இப்போது அலெக்ஸேயின் அருகே குந்தியிருந்தது. பிண மாமிசத்தின் பால் அருவருப்பும் வயிற்றை கிள்ளும் பசியும் அதற்குள் போராடிக் கொண்டிருந்தன. பசியே வெற்றி பெறலாயிற்று. கரடி பெருமூச்செறிந்தது, வெண்பனிக் குவியலில் கிடந்த மனிதனைப் பாதத்தால் புரட்டி திருப்பிற்று, விமானி உடையின் “பேய்த் தோலை” நகங்களால் கிழிக்க முற்பட்டது. விமானி உடை அதற்கு மசியவில்லை.

கரடி வாய்க்குள்ளாக உறுமிற்று. கண்களைத் திறக்கவும், அப்பால் விலகவும், கூச்சலிடவும், தன் மார்பின் மேல் சாய்ந்து அழுத்தும் அந்தக் கனத்த பேருடலை நெட்டித்தள்ளவும் உண்டான விருப்பத்தை அடக்கிக் கொள்ள அந்தக் கணத்தில் அலெக்ஸேய் அரும்பாடு பட வேண்டியிருந்தது. ஆவேசமும் சீற்றமும் பொங்கத் தற்காத்துக் கொள்வதற்கு அவனது உடலும் உள்ளமும் ஒருங்கே துடித்தன. ஆனால் அவனோ, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவாக, கரடிக்குத் தெரியாமல் கையைப் பைக்குள் விட்டு ரிவால்வரின் உறைகளிட்ட கைப்பிடியைத் தொட்டுணர்ந்து பெருவிரலால் குதிரையைச் சுடுநிலைக்குக் கொண்டுவந்து ஆயுதந்தரித்த கையைக் கரடி காணாதவாறு வெளியே எடுத்துவிட்டான்.

கரடி முன்னிலும் வலுவாக விமான உடையைப் பற்றிக் கிழிக்க முயன்றது. அழுத்தமான துணி முடமுடத்தது, எனினும் மறுபடியும் தாக்கு பிடித்தது. கரடி வெறித்து உறுமியது. உடையைப் பற்களால் பற்றி மென்மையாயிருக்கும் பஞ்சுப் பற்றைக்கும் ஊடாக உடலை நசுக்கியது. பெருமுயற்சி செய்து உடல் வலியைப் பொறுத்துக் கொண்டான் அலெக்ஸேய். கரடி தன்னை வெண்பனிக் குவியலிலிருந்து வெளியே இழுத்த தருணத்தில் ரிவால்வரைச் சட்டென உயர்த்திக் குதிரையை அழுத்தினான். மந்தமான வெடியோசை சடாரென்ற ஒலிப்புடன் பரவியது.

கரடி இரையை மெதுவாகப் பிடியிலிருந்து விட்டது. அலெக்ஸேய் பகை விலங்கின் மேலிருந்து பார்வையை அகற்றாமல் வெண்பனியில் விழுந்தான். விலங்கு பின்கால்களில் குந்தியிருந்தது. சிறுமயிர் அடர்ந்த அதன் பீளை சாடிய கருவிழிகள் விளங்காமையைத் தோற்றுவித்தன. கொழுகொழு வென்ற குருதி அதன் வெட்டுப் பற்களின் இடைவழியாகக் கலங்கிய தாரையாகப் பெருகி வெண்பனிமேல் சொரிந்தது. கம்மலாக, பயங்கரமாகக் கத்தி, உடற்சுமையை சிரமத்துடன் தாக்கியவாறு பின்னங்கால்களில் எழுந்த கரடி, அலெக்ஸேய் மறுமுறை சுடுவதற்குள்ளேயே, மரண மூர்ச்சையடைந்து வெண் பனியில் துவண்டு விழுந்துவிட்டது. இளநீல வெண்பனிப் புறணியில் மெதுவாகச் செம்மை பரவிற்று. உருகத் தொடங்கிய வெண்பனியிலிருந்து கிளம்பி ஆவி விலங்கின் தலையருகே படலமாகக் கிளம்பிற்று. கரடி இறந்து விட்டது.

அலெக்ஸேயின் இறுக்கம் தளர்ந்தது. பாதங்களில் சுரீரென்ற காந்தும் வலியை அவன் மீண்டும் உணர்ந்தான். வெண்பனியில் தொய்ந்து விழுந்து உணர்விழந்தான் ….

அவனுக்கு நினைவு வந்தபோது சூரியன் உயரே எழுந்து விட்டிருந்தது. பழுப்புச்சடை அடர்ந்த அலங்கோலமான அழுக்கு உடல் அருகே இளநீலப் பனிமீது கிடந்தது. காடு ஆரவாரித்தது. மரங்கொத்தி மரப்பட்டையை ஒலிப்புடன் கொத்திற்று. மஞ்சள் வயிறுகளும் துடிதுடிப்பும் கொண்ட சிட்டுக்குருவிகள் புதர்களில் தத்தியவாறு கீச்சிட்டன.

“உயிரோடிருக்கிறேன், உயிரோடிருக்கிறேன், உயிரோடிருக்கிறேன்” என்று மனதுக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டான் அலெக்ஸேய். உயிர் வாழ்வின் அற்புதமான, விறல்மிக்க, போதையூட்டும் உணர்வால் நிறைந்தது, அவனுடைய அகம் அனைத்தும், உடல் முழுவதும் களி துள்ளியது. மரண அபாயத்தை எதிர்பட்டு மீளும் ஒவ்வொரு தடவையும் மனிதனுக்கு ஏற்படுவதே இந்த உணர்வு.

வலிமைமிக்க இவ்வுணர்வால் ஆட்கொள்ளப்பட்டு அவன் துள்ளி எழுந்து நின்றான். ஆனால் அப்போதே முனகலுடன் கரடியின் உடல் மேல் தொப்பென உட்கார்ந்துவிட்டான். உள்ளங்கால்களில் உண்டான வலியால் அவன் உடல் முழுதும் காந்தியது. மண்டைக்குள் மூளையை அதிரச்செய்யும் கடகடப்புடன் தேய்ந்த பழைய திரிகை சுழல்வது போன்று ஆழ்ந்த, கனத்த ஓசை நிறைந்திருந்தது. இமைகளுக்கு மேல் யாரோ விரலால் அழுத்துவது போலக் கண்கள் வலித்தன. சுற்றிலும் இருந்தவை யாவும் ஒரு கணம் ஆதவனின் தண்ணிய மஞ்சள் கதிரொளியில் மூழ்கித் துலக்கமாகப் பளிச்செனத் தென்பட்டன. மறுகணமே, தீப்பொறிகள் மினுமினுக்கும் சாம்பல் நிறப் போர்வையால் மூடப்பட்டு பார்வைக்கு மறைந்திருந்தன.

“மோசம்… விழும்போது அடிப்பட்டிருக்கிறது போலிருக்கிறது. கால்களுக்கும் ஏதோ நேர்ந்துவிட்டது” என்று எண்ணமிட்டான் அலெக்ஸேய். வரைபடப் பெட்டியை அவன் விழும்போது தவறவிட்டு விட்டான். ஆனால் வரைபடம் இல்லாமலேயே கூட அன்றைய வழியை அலெக்ஸேய் தெளிவாக எண்ணிப் பார்த்தான். தாக்கு விமானங்களின் இலக்கான ஜெர்மனியப் போர்த்தள விமானநிலையம், போர்முனை வரிசையிலிருந்து சுமார் அறுபது கிலோமீட்டர் மேற்கே இருந்தது. ஜெர்மனியச் சண்டை விமானங்களை விமானப் போரில் ஈடுபடுத்தி, விமான நிலையத்திலிருந்து ஏறக்குறைய இருபது கிலோமீட்டர் தொலைவு கிழக்கே இட்டு வருவதில் அவனுடைய விமானிகள் வெற்றி பெற்றார்கள். ”இரட்டை இடுக்கியில்” இருந்து தப்பி வெளியேறிய பின் அலெக்ஸேய் இன்னும் சற்று தூரம் கிழக்கே சென்றிருப்பான்.

ஆகவே, முனை முகத்திலிருந்து சுமார் முப்பத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் முன்னணி ஜெர்மன் டிவிஷன்களின் முதுகுப்புறம் வெகு தூரத்தில், கருங்காடு என அழைக்கப்பட்ட விசாலமான வனப்பிரதேசத்தில் எங்கோ அவன் விழுந்திருக்க வேண்டும். அருகாமையிலிருந்த ஜெர்மன் பின்னணிகளின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற வெடி விமானங்களுக்கும் திடீர்த் தாக்கு விமானங்களுக்கும் துணையாக அவன் இந்த வனப் பிரதேசத்தின் மேலாக எத்தனையோ தடவை பறந்திருந்தான். மேலிருந்து பார்ப்பதற்கு இந்தக் காடு முடிவற்ற பச்சைக் கடல் போன்றே எப்போதும் அவனுக்குத் தோற்றமளித்தது. நல்ல வானிலையில் இந்தக் காடு, பைன் மர முடிகளின் மகுடங்கள் அணிந்து இலகும். மோசமான வானிலையில் சாம்பல் நிற மூடுபனியில் ஆழ்ந்து, சிற்றலைகள் படிந்த சுருண்ட நீர் பரப்பு போலக் காணப்படும்.

இந்த அடர்ந்த காட்டின் மைதானத்தில் அவன் விபத்துக்கு உள்ளானது ஒரு வகையில் நல்லதுதான், இன்னொரு வகையில் மோசம். வழக்கமான சாலைகளையும் குடியிருப்புகளையுமே நோக்கிச் செல்லும் ஹிட்லர் படையினர் இந்தக் கன்னிக்காட்டில் எதிர்படுவது அரிதுதான் என்பதால் இது நல்லது. ஆனால் மனிதனுடைய உதவியையோ ஒரு துண்டு ரொட்டியையோ, தங்கிடத்தையோ, ஒரு மடக்குக் கொதி நீரையோ எதிர்பார்க்க வகையற்ற அடர்காட்டுப் புதர்கள் வழியாக, வெகு நீண்டதாக இல்லாவிட்டாலும் கடினமான நடைப்பயணம் அவன் செய்ய வேண்டியிருந்தது என்பதால் இது கெட்டது. தவிர, கால்கள்… கால்கள் கிளம்புமா? அவை நடக்குமா?

கரடியின் உடல் மேலிருந்து அவன் மெதுவாக எழுந்தான். உள்ளங்கால்களில் உண்டான அதே சுரீரென்ற வலி கீழிருந்து மேல்வரை அவன் மேனியெங்கும் துளைத்துப் பரவியது. அவன் வீரிட்டான். மறுபடி உட்கார வேண்டியதாயிற்று. மென்மயிர்த் தோல் நீள் பூட்சைக் கழற்ற முயன்றான். அது கழலவில்லை. ஒவ்வொரு தடவையும் அதைச் சுண்டி இழுத்த போது வலி தாங்காமல் முனகினான். அப்போது அலெக்ஸேய் பற்களை கடித்துக் கொண்டு, கண்களை இடுக்கியவாறு, தன் பலத்தை எல்லாம் திரட்டி இரு கைகளாலும் பூட்சை வெட்டி இழுத்தான் – அக்கணமே நினைவிழந்தான்.

உணர்வு திரும்பியதும் அவன் காலில் சுற்றியிருந்த பிளானால் துணியை ஜாக்கிரதையாகப் பிரித்தான். பாதம் முழுவதும் வீங்கி ஒரு மொத்தமாக நீலம் பாரித்திருந்தது. அது மழுவாய்க் கொதித்தது. கணுக்கணுவாய்த் தெரிப்பது போல வலித்தது. அலெக்ஸேய் பாதத்தை வெண்பனி மேல் வைத்தான். வலி கொஞ்சம் மட்டுப்பட்டது. தன் பல்லைத் தானே பிடுங்குவது போன்ற ஆவேசத்துடன் இரண்டாவது பூட்சையும் வெட்டி இழுத்துச் கழற்றினான்.

படிக்க:
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் !
ஆளுநர் ஷாநவாஸ், தியாகு, பாலன் உரை | ஆடியோ

உலகை அணு ஆயுதப் போர் அபாயத்தில் தள்ளும் வல்லரசுகள் !

இரண்டு கால்களும் எதற்கும் பயன்படாத நிலையில் இருந்தன. பைன் மரமுடிகள் மீது விமானத்தின் மோதலால் அவன் தனது அறையிலிருந்து தூக்கி எறியப்பட்ட போது பாதங்களை எதுவோ நசுக்கி விரலடியும் விரல்களும் சேர்ந்த சிற்றெலும்புகளை நொறுக்கிவிட்டது போலும். சாதாரண நிலைமைகளில் முறிந்து வீங்கிய இந்தக் கால்களால் எழுந்து நிற்க அவன் நினைத்துக்கூட இருக்க மாட்டான்தான். ஆனால் அவன் இந்தக் காட்டின் உள்ளே, பகைவனின் பின்புலத்தில் தன்னந்தனியாக இருந்தான். எனவே இங்கே மனிதனை சந்திப்பது என்பது துன்பம் குறைவதற்கு அல்ல, சாவையே ஏற்படுத்தும். எனவே நடப்பது, கிழக்கு நோக்கி நடப்பது என்று அவன் தீர்மானித்தான். வசதியான பாதைகளையும் குடியிருப்புகளையும் தேடாமல் காடு வழியாகவே நடப்பது, என்ன ஆனாலும் சரியே, நடப்பது என்று முடிவு செய்தான்.

மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவன் கரடியின் உடலிலிருந்து எழுந்தான், ஐயோ என்று முனகினான், பற்களை நெறுநெறுத்து முதல் அடி எடுத்து வைத்தான். சற்று நின்று மற்றக் காலை வெண்பனியிலிருந்து வெளியில் எடுத்து இன்னோர் அடி வைத்தான். தலைக்குள் இரைச்சல் உண்டாயிற்று. காடும் திறப்பு வெளியும் அசைந்தாடின, ஒருபுறமாக மிதந்து சென்றன.

மெத்தென்ற வெண்பனி மேல் நடப்பது ஓரளவு சகிக்க கூடியதாக இருந்தது. ஆனால் வீசுக் காற்றால் துப்புரவாக்கப்பட்டிருந்த, கடினமான பனிக்கட்டிப் பாதையில் கால் வைத்ததுமே வலி பொறுக்கமாட்டாமல் அவன் நின்றுவிட்டான். மேற்கொண்டு ஓர் அடி எடுத்து வைக்கக் கூட அவனுக்கு தயக்கமாயிருந்தது.

அலெக்ஸேய் வெண்பனிமேல் உட்கார்ந்தான். முள் போன்ற உறுதியான சிறு வெட்டிழுப்புக்களால் பூட்சுகளைக் கழற்றினான். நகங்களாலும் பற்களாலும் அவற்றைப் புறங்கால் பக்கம் கிழித்தான் – அவை நொறுக்கிய பாதங்களை இறுக்காதிருப்பதற்காக. அங்கோர ஆட்டு ரோமத்தால் நெய்த பெரிய, மென்மையான லேஞ்சியைக் கழுத்திலிருந்து எடுத்து இரு பாதியாகக் கிழித்துப் பாதங்களில் சுற்றிக்கொண்டு, பூட்சுகளைப் போட்டுக் கொண்டான்.

இப்போது நடப்பது முன்னிலும் எளிதாக இருந்தது. நடப்பது என்பது சரியல்ல: நடப்பது அல்ல, இயங்குவது, சதுப்பு நிலத்தில் நடப்பது போன்று குதிகால்களை ஊன்றி, முன் பாதங்களை உயரத் தூக்கியவாறு எச்சரிக்கையுடன் இயங்குவது. வலியும் இறுக்கமும் காரணமாக, சில அடிகள் முன்னேறியதும் தலைச் சுற்றத் தொடங்கியது. ஏதேனும் அடி மரத்தில் முதுகைச் சாய்த்தபடி, கண்களை மூடிக் கொண்டு நிற்க வேண்டிவந்தது. அல்லது, இரத்த நாளங்களில் கடுமையான நாடித்துடிப்பை உணர்ந்தவாறு வெண்பனிக் குவியலில் சற்றே அமர்ந்து இளைப்பாற நேர்ந்தது.

அந்த மாதிரியாக அவன் சில மணி நேரம் நடந்தான். ஆயினும் அவன் திரும்பிப் பார்த்தபோது காட்டுப் பாதைக் கோடியில் அவனுக்குப் பரிச்சயமான திறப்பு வெளி இன்னும் தென்பட்டது. இது அலெக்ஸேய்க்கு மிக்க வருத்தத்தை ஏற்படுத்தியது, ஆனால் அச்சமூட்டவில்லை. இன்னும் விரைவாக செல்ல அவனுக்கு விருப்பம் ஏற்பட்டது. வெண்பனி குவியலிருந்து எழுந்து பற்களை இறுகக்கடித்தவாறு முன்னே சென்றான். தனக்கு முன்னே சிறு குறிக்கோள்களை வைத்துக் கொண்டு, கவனத்தை அவற்றில் மையப்படுத்தியபடி நடந்தான் – ஒரு பைன் மரத்திலிருந்து மற்றொன்றுக்கு, ஒரு வெண்பனி குவியலிலிருந்து மற்றொன்றுக்கு என்று. ஆள் நடமாட்டம் அற்ற வெற்றுக் காட்டுப் பாதையின் கன்னி வெண்பனியில் அவனது பின் கால்களை பதிந்து கோணல்மானலான, தளர்வுள்ள, தெளிவற்ற அடித்தடம் – காயமடைந்த விலங்கின் அடித்தடம் போல.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

முகிலன் எங்கே : தமிழகத்திலும் வெள்ளை வேன்கள் ?

ழத்தில் போர் நடைபெற்றக் காலங்களிலும், அதற்குப் பின்பும் கூட ஏராளமான தமிழர்கள் வெள்ளை வேன்கள் மூலமாகக் கடத்தப்பட்டுக் காணாமல் போய் இருக்கிறார்கள். சாலையோரங்களில் நடந்து செல்லும் பொழுது, வீட்டில் இருக்கும் பொழுது, கோயிலுக்குச் செல்லும் பொழுது என எந்த நேரம் வேண்டுமானாலும் கடத்தப்படலாம், காணாமல் போகலாம் என்ற சூழ்நிலையே ஈழத்திலும், கொழும்பிலும் நிலவியது. சிறீலங்கா அரசாங்கமே இவ்வாறு கடத்திச் சென்று கொன்று விடுவது அல்லது ஏதேனும் சிறைகளில் சட்டவிரோதமாக அடைத்து வைப்பது போன்றவற்றைச் செய்து வந்துள்ளது.

காஷ்மீரிலும் இந்தியப் படைகள் இது போல பல காஷ்மீரிகளை கடத்திச் சென்றுள்ளன. காணாமல் போன அவர்களின் நிலைக் குறித்து எதுவும் தெரியாது. இது குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்பு இந்தியா மீது பலக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. உலகெங்கிலும் போர்ச் சூழல் உள்ளப் பகுதிகளில் காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகம். இதில் அந்தப் பகுதியில் உள்ள அரசாங்கங்களின் பங்கு முக்கியமாக உள்ளது.

இவ்வாறான நிலைமை தமிழகத்திலும் வரும் என எதிர்பார்க்கவில்லை. சூழலியல் போராளி முகிலன் காணாமல் போய் இருக்கிறார். அவரது நிலை என்ன என்பது தெரியவில்லை.

தமிழகத்தின் அதிமுக அரசு பாஜகவின் சொல்படி இயங்கும் அடிமை அரசாங்கம். பாஜக நாக்பூர் திட்டங்களையும், கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களையும் செயல்படுத்தும் அரசாங்கம் தானே தவிர சாமானிய மக்களின் அரசாங்கம் அல்ல. இந்த அரசாங்கங்களின் உதவி இல்லாமல் முகிலன் காணாமல் போய் இருக்க முடியாது என்பது தான் எல்லோரின் எண்ணமாக உள்ளது.

இலங்கை திரிகோணமலை : சிங்கள இராஜபக்சே அரசால் கடத்தப்பட்டவர்களின் கதி என்ன? இதுவரை விடையில்லை!(கோப்புப் படம்)

தமிழகத்தில் எத்தனை செய்தி ஊடகங்கள் உள்ளன என்று எண்ன முடியாத அளவுக்கு ஊடகங்கள் வளர்ச்சிப் பெற்று விட்டன. ஆனால் தமிழகத்தில் இன்று வரை முகிலன் காணாமல் போனது ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை. தேர்தல் கூட்டணி, போர் எனச் சுவாரசியமான செய்திகளைச் சுற்றித் திரியும் ஊடகங்களுக்கு, ஒரு சூழலியல் போராளி காணாமல் போனது பெரிய பிரச்சனையா என்ன ?

படிக்க:
பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

கூட்டணிப் பேர அரசியல் செய்து வரும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் கூட இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மணல் கொள்ளைகளும், கனிமவளச் சுரண்டலும் தொடரத்தான் போகின்றன. அதனால் முகிலன் போன்றவர்கள் காணாமல் போவது அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சிக்கு நல்லது தான். அதனால் அவர்களும் அதனைப் பற்றி அதிகம் பேசுவதில்லை.

காஷ்மீர்: காணாமல் போன எங்கள் பிள்ளைகள் இறந்துவிட்டனரா? உயிருடன் உள்ளனரா? பரிதவிப்பில் பெற்றோர்கள்.

தமிழகத்திலும் இலங்கை போல வெள்ளை வேன்களின் கலாச்சாரம் வந்து விடுமோ என்ற அச்சமே ஏற்படுகிறது. அதிகப் போராட்டங்கள் நடைபெறும் தமிழகத்தில், போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர, சமூகச் செயற்பாட்டாளர்கள், வெள்ளை வேன் கலாச்சாரம் மூலமாக காணாமல் போகும் அபாயகரமானச் சூழலை தமிழகம் எதிர்கொள்ளுமோ என்ற அச்சத்தையே முகிலனின் நிலை நமக்கு ஏற்படுத்துகிறது.

ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் கேட்காத சூழலில் நாம் மட்டுமே சமூக ஊடகங்களில் கையறு நிலையுடன் கேட்க வேண்டியுள்ளது – முகிலன் எங்கே ?

முகநூலில் : தமிழ் சசி


முகிலன் வெளியிட்ட வீடியோ:

நூல் அறிமுகம் : பணம் – எமிலி பேர்ன்ஸ்

ங்கில நாட்டு மார்க்சிய சிந்தனையாளர்களுள் திரு எமிலி பேர்ன்ஸ் தலைசிறந்தவராவார். “மார்க்சியம் என்றால் என்ன?’, ‘பணம்’ ஆகிய நூல்களை எழுதி மார்க்சிய இலக்கியத்திற்குச் சிறப்பைத் தேடித்தந்துள்ளார். மார்க்சிய அரசியல் பொருளாதாரத் தத்துவத்தை எல்லாரும் புரிந்து தெளிவு பெறவேண்டும் என்ற நோக்குடன் ‘பணம்’ (Money) எனும் இந்நூலை அவர் எழுதியுள்ளார்.

‘பணம்’ என்றால் என்ன? சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் பணம் ஆற்றி வரும் பங்கு என்ன? பணம் எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது? நோட்டுகள் அச்சிடப்பட்டுப் புழக்கத்தில் விட்டதன் காரணம் என்ன? ஆகிய பிரச்சினைகளை ஆசிரியர் இந்நூலில் சுவைபட விளக்கியுள்ளார்.

சமுதாயத்தில் பணத்திற்கு மதிப்பு எதனால் ஏற்படுகிறது? எல்லாப் பண்டங்களுடைய மதிப்பை நிர்ணயிக்கும், சமுதாயக் கடமையை நிறைவேற்றக்கூடிய ஒரு பண்டமாகப் பணம் விளங்கி வருவது ஏன்? மதிப்பின் அளவுகோலாகவும், புழக்கத்தில் விடக்கூடியச் சாதனமாகவும், சேமிப்பின் கருவியாகவும், கொள்வன – கொடுப்பனவற்றின் சாதனமாகவும், சர்வ வியாபக (Universal) பணமாகவும் அது விளங்கி, முதலாளித்துவச் சமுதாயத்திற்குத் தொண்டாற்றிக் கொண்டு இருக்கிறது.

இவ்வாறு, உலகளாவியப் பணமாக விளங்கும் இப்பணத்தைப் பற்றிய வரலாற்று உண்மைகளையும் வருங்காலத்தில் இப்பணம் நிரந்தரமாக நிலைக்குமா? அல்லது மறைந்து போகுமா? என்ற பிரச்சினைகளையும் ஆசிரியர் இந்நூலில் நன்கு ஆய்வு செய்துள்ளார். (நூலின் பதிப்புரையிலிருந்து)

… ஆதிகால மக்கள் தங்களுடைய தேவைபோக மிஞ்சிய தங்களது உற்பத்திப் பொருட்களை, உழைப்பு நேரத்தை அளவையாகக் கொண்டு தங்களுக்கிடையே பரிவர்த்தனை செய்து வந்தனர். இந்நிலைமையில் மக்களிடையே மிஞ்சிய பொருட்களை சேகரித்து மக்களுக்கே பரிவர்த்தனை செய்ய ஒரு கூட்டம் உருவாயிற்று. அதுதான் வியாபாரிகள். இப்போது உலோகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றில் அதிகப்படியான வேலை நேரத்தை எடுத்துக்கொள்ளக்கூடியதும் அதிக அளவில் கிடைக்காததுமான தங்கமும் வெள்ளியும் அக்காரணங்களினாலேயே, பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்குமான பரிவர்த்தனை பொருளாக இருந்தன. இந்த உலோகங்களின் எடையினை அளவையாகக் கொண்டுதான் மக்களுக்குத் தேவையான பொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டன.

இந்தமுறை, செயல்பாட்டுக்கு வந்த ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட எடையுள்ள உலோகத்துண்டுகளுக்கு ராஜாங்க முத்திரை இடப்படுகின்றன; இதன் மூலம், எடை அடிப்படையில் பொருட்களை பரிவர்த்தனை செய்வதற்கு ஆதாரமாக இருந்த தங்கமும் வெள்ளியும் நாணயமாகப் பரிணமித்தன.

இத்தனையும் நாணயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகங்களையும் பரிவர்த்தனைக்கான பொருட்களையும் உற்பத்தி செய்வதற்கு ஆகும் உழைப்பு நேரத்தை அளவையாகக் கொண்டுதான் நிகழ்ந்தன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதிகமான உழைப்பு நேரத்தைக் கொண்ட உலோகங்களினால் ஆன நாணயங்கள் வங்கிகளில் போட்டு வைக்கப்படும் போது கொடுக்கப்படும் ரசீதுகள் அப்போது வங்கி நோட்டுகள் எனப்பட்டன. இந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சியாக உலோக நாணயங்கள் பணமாக அதாவது கரன்சி நோட்டுகளாகப் பரிணமித்தன.

ஐரோப்பிய நாடுகளைக் குறிப்பாக ஆங்கில நாடான பிரிட்டனையும் அந்நாட்டின் கரன்சி நோட்டு பவுனையும் மையமாகக்கொண்டு பணத்தின் பரிணாமத்தை இந்நூலில் ஆசிரியர், வரலாற்று உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு ஆழ்ந்த ஆய்வு செய்து விவரித்துள்ளார்.

காலப்போக்கில் நிகழ்ந்த பொருளாதார நிகழ்வுகளால் உருவான பணம், ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் உலகப் பொருளாதாரமும் ஏற்றம் காண்பதற்கு எப்படியெல்லாம் செயல்பட்டது என்பதையும் முதலாளித்துவ சமுதாயத்தில் வர்த்தகச் சூதாட்டம், பங்குச் சந்தைச் சூதாட்டம் போன்றவற்றில் பணம் நடத்தும் கைங்கரியங்களையும் விளக்கியுள்ளார். தேவை மற்றும் விநியோகத்தின் ஏற்ற இறக்கத்தில் பணத்தின் பங்கு, உலோக நாணயம், கரன்சி நோட்டுகளாகப் பரிணமித்த பின்பு ஏற்பட்ட விளைவுகள், சர்வதேச வர்த்தகம், அதில் அந்தந்த நாடுகளின் பணங்களுக்கிடையேயான பரிவர்த்தனை, வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகளில் பணத்தின் சுழற்சி, பணவீக்கம் மற்றும் பணப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பணச் செயல்பாடுகளையும் எளிமையாக அதே நேரத்தில் ஆழமாக நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார். தொழிலாளி பெறும் கூலிக்கான வேலை நேரத்தை விட கூடுதலாக உழைப்பதன் மூலம் கிடைக்கும் உபரிமதிப்பைக் கொண்டு முதலாளி தனது மூலதனத்தை பெருக்கிக்கொள்வதையும் எளிமைப்படுத்திக் கூறியுள்ளார்.

இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தங்கம், வெள்ளி, செப்பு, பித்தளை ஆகிய உலோக நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உலோக நாணயங்கள் நிரூபித்துள்ளன. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் பட்டு, வாசனைப் பொருட்கள் கிரேக்கம், ரோம் ஆகிய நாடுகளில் விற்று அங்கிருந்து கொண்டு வரப்பட்ட அந்நாடுகளின் தங்க நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

படிக்க:
நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் வாட்சப் வதந்திகள் !
பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்

பிரிட்டிஷ் காலனி ஆட்சி காலத்தில்தான் இந்தியாவில் கரன்சி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன, இன்று கறுப்புப் பணம், கள்ளப் பணம், லஞ்சப் பணம் போன்ற ஊரறிந்த ரகசிய வேடங்களைத் தரிக்கும் இந்தப் பணத்தின் அனுபவத்தால் உருவான “பணம் பாதாளம் வரை பாயும்”, “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” போன்ற புதுமொழிகள் முதலாளித்துவ முறையின் ஈவிரக்கமற்ற தன்மைகளை அம்பலப் படுத்துகின்றன.

எனவே, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் உருவான பணம் என்ற முறை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் என்பதையும் நூலின் கடைசிப் பகுதியில் ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்… (நூலின் இரண்டாம் பதிப்புக்கான பதிப்புரையிலிருந்து)

நூல்:பணம்
ஆசிரியர்: எமிலி பேர்ன்ஸ்
தமிழில்: வெ.ராமசாமி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி: 044 – 2635 9906 / 2625 1968

பக்கங்கள்: 132
விலை: ரூ 60.00 (இரண்டாம் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: noolulagam | panuval | commonfolks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

பொருளாதாரத்தில் அரசு தலையிடுவதை முதலாளிகள் விரும்புகிறார்களா ? | பொருளாதாரம் கற்போம் – 13

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 13

வாணிப ஊக்கக் கொள்கையும் நம் காலமும்

அ.அனிக்கின்
 பொருளாதாரத் தத்துவத்தில் ஒரு போக்கு என்ற வகையில் வாணிப ஊக்கக் கொள்கை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் காட்சியிலிருந்தே மறைந்து விட்டது. தொழில் துறைப் புரட்சி மற்றும் ஆலை உற்பத்தியின் நிலைமைகளுக்கு மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் கோட்பாடுகள் அதிகம் பொருந்தக் கூடியனவாக இருந்தன. அதிகமான வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளான இங்கிலாந்திலும் பிரான்சிலும் இந்தக் கோட்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு மேலோங்கியிருந்தன. பொருளாதாரத்திலும் வெளிநாட்டு வர்த்தகத்திலும் அரசின் நேரடியான தலையீடு பலவீனமடைந்தது பொருளாதாரக் கொள்கையில் இதனுடைய பிரதிபலிப்பே.

எனினும் பிற்காலத்தில் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை மேற்கொண்ட நாடுகளில் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரக் கருத்துக்கள் முழுமையாக வேரூன்ற முடியவில்லை. பொருளாதாரத்தில் எல்லாவற்றையுமே சக்திகளின் சுதந்திரமான இயக்கத்துக்கு விட்டுவிட வேண்டும் என்ற கருத்தை இந்த நாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் ஒத்துக் கொள்ளவில்லை. இந்த சுதந்திரமான ஆட்டத்தில் ஆங்கில, பிரெஞ்சு முதலாளிகளே வெற்றி பெறக் கூடிய வாய்ப்புக் கொண்டவர்கள் என்று அவர்கள் நினைத்தது தவறானதல்ல. எனவே வாணிப ஊக்கக் கொள்கையில் சில ஸ்தூலமான கருத்துக்கள் ஒருபோதும் மறையவில்லை. பொருளாதாரத்தை அரசு நிர்வாகம் செய்தல், காப்புவரிவாதம், நாட்டுக்குள் அதிகமான பணத்தைக் கொண்டு வருதல் போன்ற வாணிப ஊக்கக் கொள்கையின் முக்கியமான கருத்துக்களை அரசாங்கங்கள் பல சந்தர்ப்பங்களில் அதிகமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டு ஆரம்பமானது; தொழில் துறை வளர்ச்சி மிக்க முதலாளித்துவ நாடுகளில் அரசு-ஏகபோக முதலாளித்துவம் வளர்ச்சியடைந்தது. இந்த நிலைமைகளோடு பொருந்திய பொருளாதாரக் கருத்துக்களை, பொருளாதாரத்தின் மீது அரசு தாக்கம் செலுத்த வேண்டிய கடமையை, முப்பதுக்களில் ஆங்கிலத் தத்துவாசிரியரான ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் மிக முழுமையாக எடுத்துக் கூறினார். சமீப காலத்தில் முதலாளித்துவப் பொருளாதாரச் சிந்தனை அதிகமான அளவுக்கு அவருடைய கருத்துக்களின் தாக்கத்தில் வளர்ச்சியடைந்தது. இன்று ஏகபோகங்களும் அரசும் பின்பற்றுகின்ற நவீன முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகளை அவருடைய கருத்துக்கள் பல அம்சங்களில் நிர்ணயிக்கின்றன.

படிக்க:
♦ ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !
♦ கேள்வி பதில் : அறிவியல் வளர்ச்சி மனித வாழ்விற்கு பலனளிப்பதா ? அழிப்பதா ?

முதலாளித்துவம் சுயஒழுங்குபடுத்தலின் மூலம் ஒருபோதும் நீடிக்க முடியாது என்று கெய்ன்ஸ் வாதாடினார். பொருளாதாரத்தைத் திட்டமிடுகின்ற கடமையை அரசு மேற்கொள்ள வேண்டும். பணத்தினால் நிறுவப்படும் தேவை எப்பொழுதுமே உற்பத்தியிலிருந்து மோசமான அளவுக்குப் பின் தங்குவதால் அதற்கு உதவுவதற்கும் ஊக்குவிப்பதற்கும் இது அவசியமானது. எனவே வேலையில்லாமையையும் தொழிற்சாலைகள் வேலை நேரத்தைக் குறைத்துக் கொள்வதையும் எதிர்ப்பது அவசியம். தனிப்பட்ட முதலாளிகளிடம் முதலீடு செய்யுமாறு, அதாவது புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்துங்கள், உற்பத்தியைப் பெருக்குங்கள் என்று எப்பொழுதும் வற்புறுத்த வேண்டும் என்றார்.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், அரசு பொருளாதாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்ற கொள்கையை ஒன்றரை நூற்றாண்டுக் காலம் பறைசாற்றியது; இது போலியான, ஆபத்தான கருத்து. முதலாவதாகவும் முதன்மையாகவும் நாட்டில் ஏராளமான பணம் இருப்பதையும் அது ”மலிவாகக்” கிடைப்பதையும், அதாவது குறைவான வட்டிக்குக் கடன் கிடைப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய நிலைமை ஏற்பட்டால் முதலாளிகள் வங்கிகளில் கடன் வாங்கி முதலீடு செய்வதிலும் தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதிலும் அவர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் ஆர்வம் காட்டுவார்கள். சுதந்திர வர்த்தகம் என்பது ஒரு தவறான எண்ணம். முழு வேலை வாய்ப்புக் கொடுப்பதற்கு அது அவசியமென்றால், அந்நியப் பொருள்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்துவதும் அனுமதிக்கப்படக் கூடியதே; அது போலவே வெளி நாட்டில் பொருள்களைக் குவிப்பதும் (சந்தையைக் கைப்பற்றுவதற்காக குறைந்த விலைக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்வது) நாணய மதிப்பைக் குறைப்பதும் அனுமதிக்கக் கூடியதே.

இவருடைய ஆலோசனைகள் வாணிப ஊக்கக் கொள்கையினரது கருத்துக்களை விசித்திரமான வகையில் நமக்கு நினைவூட்டுகின்றன; ஆனால் மேற்கு ஐரோப்பாவில் 250-300 வருடங்களுக்கு முன்பு இருந்த பொருளாதார அமைப்புக்கும் இன்றுள்ள நவீன முதலாளித்துவப் பொருளாதார அமைப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுக்கு நாம் இடமளிப்பதும் தேவையே.

Eli_Heckscher
ஸ்வீடிஷ் பொருளாதார நிபுணர் எலி ஹெக்‌ஷெர்

வாணிப ஊக்கக் கொள்கையில் புலமை மிக்கவரென்று சொல்லப்படும் ஸ்வீடிஷ் பொருளாதார நிபுணரான எலி ஹெக்‌ஷெர் (1879-1952) பின் வருமாறு எழுதுகிறார்: “…..கெய்ன்சின் சமூகத் தத்துவம் வேறு விதமானது என்ற போதிலும் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய அவருடைய கருத்து வாணிப ஊக்கக் கொள்கையினருடைய கருத்துக்களோடு குறிப்பிடத்தக்க வகையில் ஒத்திருக்கிறது…” (1) அவருடைய சமூகத் தத்துவம் வேறுவிதமானது தான். கெய்ன்ஸ் நவீன அரசு – ஏகபோக முதலாளித்துவத்தின் தத்துவாசிரியர்; வாணிப ஊக்கக் கொள்கையினர் முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்த வளரும் வர்த்தக மற்றும் தொழில்துறை முதலாளிகளின் நலன்களை வெளியிட்டவர்கள்.

கெய்ன்ஸ் எதையும் மழுப்பவில்லை. அவர் ”மூலச் சிறப்புடைய கோட்பாடுகளை” (இதன் மூலம் அவர் சுய ஒழுங்குபடுத்தல், அரசு பொருளாதாரத்தில் தலையிடக் கூடாது என்ற கருதுகோள்களைக் குறிப்பிட்டார்) அம்பலப்படுத்துவதைத் தன்னுடைய கடமையாக வரித்துக் கொண்டார். இதைத் தமது புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே அறிவித்தார். வாணிப ஊக்கக் கொள்கையினர் தனது முன்னோடிகள் என்பதைப் பகிரங்கமாக ஒத்துக் கொண்டார். கெய்ன்ஸ் ஓரளவுக்குத் தன்னுடைய சொந்தக் கருத்துக்களை 17, 18-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கருத்துக்கள் என்று துணிச்சலாகக் கூறினார்; மேலும் அவர்களின் கருத்துக்களை மிக விசித்திரமான வகையில் தனக்குச் சாதகமாகப் பொருள் விளக்கம் கொடுத்தார் என்று சில விமரிசகர்கள் – குறிப்பாக ஹெக்‌ஷெர் – கூறுவது உண்மையே. எனினும் கெய்ன்சுக்கும் வாணிப ஊக்கக் கொள்கையினருக்கும் இருக்கின்ற உறவு குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறு இணைக்கின்ற நான்கு கருத்துக்களைக் கெய்ன்ஸ் எடுத்துக் கூறினார்.

முதலாவதாக, வாணிப ஊக்கக் கொள்கையினர் கடன்களுக்கு வட்டியைக் குறைத்தும் முதலீட்டை ஊக்குவித்தும் நாட்டிலுள்ள பணத்தின் அளவை அதிகரிக்க முயற்சி செய்தனர் என்பது அவருடைய கருத்து. இது கெய்ன்சின் அடிப்படையான கருத்துக்களில் ஒன்று என்பதை சற்று முன்பு பார்த்தோம். இரண்டாவதாக, அவர்கள் விலை ஏற்றத்தைக் கண்டு அச்சமடையவில்லை; அதிகமான விலைகள் வர்த்தகத்தையும் உற்பத்தியையும் விரிவுபடுத்த உதவுவதாகக் கருதினார்கள். பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் வகையில் ”நிதானமான பணவீக்கத்தை ஏற்படுத்துகின்ற நவீன சிந்தனையை நிறுவியவர்களில் கெய்ன்சும் ஒருவர்.

மூன்றாவதாக, ”வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணங்களில் பணப் பஞ்சமும் ஒன்று…. என்பதை முதலில் கூறியவர்கள் வாணிப ஊக்கக் கொள்கையினர்” (2) வங்கிகள் கொடுக்கும் கடன் வசதிகளைப் பெருக்குவதன் மூலமும் அரசின் பற்றாக்குறை வரவு செலவுத் திட்டங்களின் மூலமும் பணத்தின் அளவை அதிகப்படுத்துவது வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான ஆயுதமாகப் பயன்படும் என்றார்.

நான்காவதாக, “தங்களுடைய கொள்கைகளின் தேசியத்தன்மை பற்றியும் அவை காரணமாக யுத்தம் ஏற்பட்டுவிடக் கூடும் என்பதைப் பற்றியும் வாணிப ஊக்கக் கொள்கையினருக்கு எத்தகைய மயக்கங்களும் இருக்கவில்லை.” (3) ஒரு குறிப்பிட்ட நாட்டில் முழு வேலை வாய்ப்பை ஏற்படுத்துகின்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு காப்புவரிவாதம் உதவி செய்யுமென்று கெய்ன்ஸ் நம்பினார்; பொருளாதார தேசியவாதத்தை அவர் ஆதரித்தார்.

படிக்க:
♦ ஏழைத்தாயின் மகன் # 2 – நீரவ் மோடியின் லண்டன் ‘அகதி’ வாழ்க்கை !
♦ பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்

எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்று கெய்ன்ஸ் விட்டு விட்ட ஒரு கருத்தை ஐந்தாவது கருத்தாகச் சேர்த்துக் கொள்ளலாம். பொருளாதாரத்தில் அரசு வகிக்க வேண்டிய முக்கியமான பாத்திரத்தைப் பற்றி அவர் சிறப்பான அழுத்தம் கொடுத்தார் என்பது அந்த ஐந்தாவது கருத்தாகும்.

முன்பு குறிப்பிட்டது போல், பத்தொன்பதாம் நூற் றாண்டின் இறுதியில் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் மூலச்சிறப்புள்ள மரபினருடைய உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தையும் மற்ற தத்துவ அடிப்படைகளையும் நிராகரித்தது. இன்று அது மூலச்சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதார நிபுணர்களின் தத்துவங்களிலிருந்து ஏற்படும் பொருளாதாரக் கொள்கையையும் கைவிட்டுவிட்டது. முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் தீவிரமடைந்திருப்பது தான் இதற்குக் காரணம். அரசின் தலையீட்டை அதிகப்படுத்தி இந்த முரண்பாடுகளின் கடுமையைக் குறைப்பதற்கு முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்கள் முயற்சி செய்கிறார்கள். அரசு பொருளாதாரத்தில் சர்வ வல்லமை கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை சென்ற காலத்தில் மிகவும் முழுமையாகச் சொன்னவர்கள் வாணிப ஊக்கக் கொள்கையினரே. அதனால் தான் இந்த உறவு ஏற்படுகிறது.

நவீன முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் முழுவதுமே கெய்ன்சின் பாதையைப் பின்பற்றுவதாகச் சொல்ல முடியாது. பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை மொத்தமாக நிராகரிக்கின்ற மரபுகளும் இருக்கின்றன. இவர்கள் கெய்ன்ஸ்வாதிகள் பண வீக்கத்தை உற்சாகமாக ஆதரிப்பதை எதிர்த்து “தனிப் பட்ட தொழில் முயற்சிகளின் சுதந்திரத்தை” ஆதரிக்கின்றனர். இவர்கள் பொருளாதாரம், உற்பத்தி, வேலை வாய்ப்பு ஆகியவற்றின் மீது அரசின் தாக்கத்தை ஏற்படுத்தச் செய்கின்ற முயற்சிகளைக் குறிக்க ”புதிய வாணிப ஊக்கக் கொள்கை” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதுண்டு; அந்தச் சொல்லையும் அவர்கள் அவமதிக்கும் நோக்கத்தில் உபயோகப்படுத்துவதுண்டு.

அந்த வகையில் அரசின் தாக்கம் தனிப்பட்ட சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகும் என்பதால் அது ”மேற்கு நாடுகளின் இலட்சியங்களுக்குப் பொருந்துவதல்ல என்பது அவர்களுடைய கருத்து.” புதிய வாணிப ஊக்கக் கொள்கையின் விமரிசகர்கள் கெய்ன்ஸ்வாதிகள் தங்களுடைய கொள்கைகளின் மூலம் எதை வெளியிடுகிறார்கள் (ஒருவேளை சுய உணர்வு இல்லாமலும் கூட) என்பதைப் பார்க்கத் தவறுகிறார்கள். பொருளாதாரத்தில் நவீன முதலாளித்துவ அரசின் பாத்திரம் அதிகரிப்பது ஒரு புறவயமான விதி என்பதையே அவர்கள் எடுத்துரைக்கிறார்கள். அப்படி இல்லையென்றால் தான் உருவாக்கிய சக்திகளையே முதலாளித்துவத்தால் இனி மேல் கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.

ஜான் மேனார்ட் கெயின்ஸ்

மறு பக்கத்தில் ”புதிய வாணிப ஊக்கக் கொள்கை” என்ற சொற்றொடர் வளர்முக அரசுகளின் பொருளாதாரக் கொள்கையைப் பற்றி சந்தேகத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்தில் அரசுத் துறை, பொருளாதாரத் திட்டங்கள், வேலைத்திட்டங்கள் ஆகியவை புதிய வாணிப ஊக்கக் கொள்கை என்று சொல்லப்படுகின்றன. சுங்க வரிவிதிப்பின் மூலமாகவும் வேறு நடவடிக்கைகளின் மூலமாகவும் சொந்த நாட்டுத் தொழில் துறையைப் பாதுகாப்பது புதிய வாணிப ஊக்கக் கொள்கை. இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தங்கள், தொழில் துறைப் பெருக்கத்துக்கு அரசு கடனுதவி செய்தல், விலைகளை ஒழுங்குபடுத்துவது, ஏகபோகங்களின் லாபங்களைக் கட்டுப்படுத்துவது புதிய வாணிப ஊக்கக் கொள்கை.

அப்படியானால் இந்த நாடுகள் வளர்ச்சியடைவது எப்படி? சுதந்திரமான வர்த்தகம், அதாவது அந்நிய ஏகபோகங்களைச் சுதந்திரமாக உள்ளே நுழைய விட்டுவிட்டு அதற்கு ஆதரவாக அரசு தலையிடாமைக் கொள்கையைப் பின்பற்றுவதன் மூலமா? அப்படிச் செய்தால் அது புதிய வாணிப ஊக்கக் கொள்கையாக இருக்காது போலும். ஆனால் அங்கே சுதந்திரமான பொருளாதார வளர்ச்சியும் ஏற்படாது. ஏனென்றால் இந்த நிலைமைகளினால் தான் ஒரு நாட்டில் பின் தங்கிய நிலையும் சார்பு நிலையும் நீடிக்கின்றன!

வளர்முக நாடுகள் பலவற்றிலும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற கருவியாகக் காப்புவரிவாதம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாடுகளைப் பொறுத்த வரையிலும் இது முற்போக்கான கொள்கை; நன்கு வளர்ச்சியடைந்த பெரிய நாடுகள் சந்தைகளைக் கைப்பற்றுவதற்காக நடத்துகின்ற ஏகாதிபத்தியப் போராட்டத்தில் பின்பற்றுகின்ற ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட காப்புவரி வாதத்திலிருந்து இது மிகவும் வேறானதாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்பு:
(1) E. Heckscher, Mercantilism, N.-Y., 1955, Vol. 2, p. 340.
(2) J. Keynes, The General Theory of Employment, Interest and Money, London, 1946, p. 346.
(3) Ibid., p. 348.

  • கேள்விகள்:
  • பிரான்சு, இங்கிலாந்து நாடுகளில் பொருளாதாரக் கோட்பாடுகள் வளர்ச்சியடைய என்ன காரணம்?
  • வாணிப ஊக்கக் கொள்கை என்றால் என்ன?
  • ஏகபோக முதலாளித்துவம் – சிறு குறிப்பு வரைக!
  • பொருளாதாரத்தில் அரசு தாக்கம் செலுத்த வேண்டும் என்று கெய்ன்ஸ் கூறியதற்கு காரணம் என்ன?
  • முதலாளித்துவம் சுய ஒழுங்குபடுத்தலின் மூலம் ஒரு போதும் நீடிக்க முடியாது என்று கெய்ன்ஸ் கூறியதற்கு என்ன காரணம்?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

குழந்தையின்மை சிகிச்சையும் பார்ட்னர்ஷிப்பும் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

பார்ட்னர்ஷிப் !

மீபத்தில் கிளினிக்கில் என்னை இருபதின் இறுதிகளில் இருக்கும் ஒரு பெண்மணி சந்தித்தார். PCOD எனும் கருமுட்டையில் நீர்க்குமிழ் போன்ற கட்டிகள் உருவாகும் நோய் இருப்பதாகவும், அதனால் திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் மகப்பேறு இயற்கையாக உண்டாகவில்லை என்பது அவர்புறத்துப் பிரச்சனை.

PCOD -ஐ சரி செய்வதற்கு பேலியோ உணவு முறை உள்ளங்கையில் நெல்லிக்கனி. ஆதலால் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை குறித்து அவரிடம் விவரித்தேன். அவரும் ஆர்வம் தெரிவித்தார்.

PCOD – மாதிரிப் படம்

அவரது கணவருக்கும் உடல் பருமன் இருப்பதாக தெரிவித்தார். அடுத்த முறை அவருக்கும் அவரது கணவருக்கும் ரத்த பரிசோதனை செய்து வருமாறு கூறி அனுப்பி வைத்தேன்.

ரத்த பரிசோதனை முடிவுகளோடு பெண்மணி மட்டும் என்னை சந்தித்தார்.

ஏன்.. கணவர் வரவில்லை? என்று கேட்டதற்கு

கணவருக்கு கடையை பார்த்துக்கொள்ளும் வேலை இருப்பதாகவும், அதனால் கடையை விட்டுவிட்டு வர முடியாது என்று அவர் கூறிவிட்டதாகவும் எனக்கு தெரிவித்தார்.

“சரி.. ரத்த பரிசோதனையாவது செய்திருக்கலாமே? உடல் குண்டாக இருப்பது.. ஆண்மைத்தன்மையை குறைக்கும். அதற்காகவாவது இருவரும் சேர்ந்து பேலியோ கடைபிடித்து பார்க்கலாமே?” என்றேன்

அந்த பெண்மணி “இல்ல சார். எங்க வீட்டுக்காரருக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுனு மாமியார் சொல்லிட்டாங்க. அவரு ரத்த டெஸ்ட் கொடுக்க ரெடியாதான் இருந்தாரு. ஆனா மாமியார் விட மாட்றாங்க சார். அவுக மகனுக்கு பிரச்சனை இருக்காதாம்.. என்னை மட்டும் தான் சார் கொற சொல்றாக…”

படிக்க:
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
இன்னும் எத்தனை அனிதாக்கள் இருக்கிறார்களோ | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

“இது உலகம் பூரா இருக்கிறதுதான் மா.. எந்த அம்மாவாவது தன் புள்ளையை குத்தம்னு சொல்லுமா.. ஆனா குழந்தையின்மைல உங்கள மட்டும் டெஸ்ட் பண்ணி ப்ரயோஜனம் இல்ல. அடுத்த தடவ வரும் போது அவருக்கும் டெஸ்ட் எடுத்துட்டு வாங்க…”

அவருக்கு ஒரு முழு ரத்த பரிசோதனை மற்றும் விந்தணுக்கள் பரிசோதனை எழுதி அனுப்பினேன். மீண்டும் சில நாட்கள் கழித்து அந்த பெண்மணி மட்டும் வந்தார்.

“சார்..இந்தாங்க அவரோட ரிப்போர்ட்.. பெரும்பாடு பட்டு இந்த டெஸ்ட்ட எடுக்க வச்சேன் சார். பாத்து நல்ல வார்த்தை சொல்லுங்க…”

நினைத்ததை போலவே அந்த கணவனுக்கு விந்தணுக்கள் தேவைக்கும் குறைவாக இருந்தது. இன்னும் பெரும்பான்மை விந்தணுக்கள் நல்ல நிலையில் இல்லை.
டெஸ்டோஸ்டிரோன் எனும் ஆண்மைக்கான ஹார்மோன் குறைவாக இருந்தது..

நான் கூறினேன் “அவரு நேர்ல வரணும் மா.. வந்தா தான் டயட் தர முடியும். பிரச்சனை இருக்கு. நேர்ல வந்தே ஆகணும்னு டாக்டர் சொன்னாருனு கூட்டிட்டு வாங்க”

இன்னும் சில நாட்களுக்குப் பிறகு தம்பதி சமேதாராக வந்தனர். இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையும் உணவுப்பரிந்துரையும் வழங்கப்பட்டது.

இப்போது இருவரும் நல்ல முறையில் எடை குறைந்து வருகின்றனர். விரைவில் மகப்பேறு அடைய இறைவன் அருள் புரிய வேண்டும்..

நிற்க ; மலட்டுத்தன்மைக்கு காரணம் பெண்கள் மட்டுமே என்ற எண்ணம் நமது குடும்பங்களில் வேரூன்றி நிற்கிறது. அக்காவிற்கு குழந்தை பிறக்காவிட்டால் தங்கையை கட்டுவது போன்ற கொடூர அக்கிரமங்கள் நிகழ்ந்த வரலாறுகள் நமது சமுதாயத்தில் உண்டு.

பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை மட்டுமே செய்ய வேண்டும் என்ற எண்ணமே இதற்கு காரணம்.

சரி.. இப்போது விசயத்துக்கு வருவோம்; குழந்தையின்மை என்பது ஆண் பெண் இருவருக்கும் பொது. ஆகவே சிகிச்சை என்று வந்துவிட்டால் இருவரும் சேர்ந்து தான் எடுக்கவேண்டும். பெண்களை மட்டும் பலிகடா ஆக்குவது தவறு. அது வன்கொடுமை.

ஆண்களுக்கு இப்போதெல்லாம் விந்தணுக்கள் குறைபாடு மிக அதிகமாக காணப்படுகிறது.

எப்படி கிரிக்கெட்டில் இரண்டு பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் வைத்து ரன் எடுக்கிறார்களோ?

ஆம்.. அடுத்தவர் எடுக்கும் ரன்னுக்கும் எதிர் நிற்பவர் சேர்ந்து ஓடினால் தான் ரன் பதிவாகும். அவர் எடுக்கும் ரன்னுக்கு நான் ஓட மாட்டேன் என்று நிற்க முடியாது.

அதுபோலவே வாழ்க்கையை சேர்ந்து வாழ முடிவெடுத்த இரண்டு உயிர்கள் இணையும் பார்ட்னர்ஷிப்பே திருமணம். இதில் குழந்தையின்மைக்கு ஒருவரை மட்டும் பலிகடா ஆக்கி மற்றவர் பொறுப்பின்றி இருப்பது தவறு..

நல்லதோ கெட்டதோ, லாபமோ நட்டமோ, வெற்றியோ தோல்வியோ, ஏன் உயிரே போனாலும் சரி…. பார்ட்னர்களை எப்போதும் பிரியக்கூடாது

டாட்👆

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்

ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது 2 லட்சம் கேரட் வைரம் வாங்கியது எப்படி?

ந்திய வைரச்சந்தை பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் திடீரென விற்பனைக்கு வந்துள்ளதால், வைரத்தின் மதிப்பு சரசரவென சரிவை சந்தித்திருக்கிறது. கிட்டத்தட்ட 30 சதவிகித விலை சரிவு. இந்த விலை சரிவு ஹாங்காங் உள்ளிட்ட உலக வைர சந்தையிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. திடீரென இவ்வளவு அதிகமான மதிப்புள்ள வைரம் சந்தைக்கு விற்பனைக்கு வந்தது எப்படி என்பதை ஆராய்ந்தால் அது, ஜெயலலிதாவிடம் வந்து முடிகிறது.

இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதா 2 லட்சம் கேரட் வைரத்தை, மும்பை வைரச் சந்தையில் இருந்து வாங்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்திய வைரச்சந்தையில் திடீரென விற்பனைக்கு வந்திருக்கும் 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்தே வந்துள்ளது எனக் குறிப்பிடும் அந்த செய்தி, அப்போது ஜெயலலிதா வாங்கிய வைரமே தற்போது விற்பனை செய்யப்படுவதாகவும் கூறுகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் செய்தி, எவ்வளவு மதிப்புக்கு வரைம் வாங்கப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை, அப்போது வாங்கப்பட்டது ’+11’ எனப்படும் நகைகளில் பயன்படுத்தப்படும் வைரம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது திடீரென சந்தையில் விற்பனைக்கு வந்திருப்பதும் இந்த வகையைச் சேர்ந்த வைரம்தான்.

இந்திய வைர தொழிலின் தலைமையகமாக செயல்படுவது குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம். சூரத் வைர கூட்டமைப்பின் (Surat Diamond Association – SDA) தலைவர் பாபு குஜராத்தி இதுபற்றிக் கூறும்போது, “பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபோது இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும் தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை வைரமாக வாங்கி வைத்துக்கொண்டார்கள். இப்படித்தான், தமிழ்நாட்டை சேர்ந்த மிக உயரிய அரசியல்வாதிகள் 2 லட்சம் கேரட் வைரத்தை வாங்கினார்கள். தற்போது அந்த வைரங்களை மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதால், வைரச் சந்தையும், இதன் வணிகமும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது என்பது உண்மை” என பேட்டி கொடுத்திருக்கிறார்.

படிக்க:
♦ சர்வதேச மகளிர் தினத்தை உயர்த்தி பிடிப்போம் | கடலூர் புமாஇமு | தேனி மக்கள் அதிகாரம்
♦  உலகத்துலே பெரிய சிலை பட்டேலு … | கோவன் பாடல் !

இந்த வைர கொள்முதல் மற்றும் விற்பனையில் சந்தேகத்துக்கு உரிய பல மர்மக் கேள்விகள் முளைக்கின்றன.

01. 2016 நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட வைரம் ஜெயலலிதாவால் வாங்கப்பட்டிருக்கிறது என்றால், பண மதிப்பு நீக்கம் குறித்து ஜெயலலிதா முன்கூட்டியே அறிந்திருந்தது எப்படி?

02. ஜெயலலிதாவால் இந்த வைரம் வாங்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்குப் பயன்படுத்தப்பட்ட தொகை முழுவதும் கறுப்புப் பணம் என்பது உறுதியாகிறது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

03. 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியில் வரவே இல்லை. அப்படியானால், 2016 நவம்பர் 8-ல் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு முன்னால் ஜெயலலிதா, இத்தனை பிரமாண்ட மதிப்பில் வைரம் வாங்கியது எப்படி?

04. ஜெயலலிதா படுத்த படுக்கையாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது அவர் 2 லட்சம் கேரட் வைரம் வாங்கியதாக சொல்வது நம்பும்படியாக இருக்கிறதா?

05. அப்படியானால், ஜெயலலிதாவின் பெயரால் வாங்கப்பட்டுள்ள இந்த வைரத்தை உண்மையில் வாங்கியது யார்? யாருக்காக அந்த வைரம் வாங்கப்பட்டது?

06. ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த காலத்தில் அவர்தான் முதலமைச்சராக இருந்தார். ஒரு முதலமைச்சர் இத்தனை பிரமாண்டமான மதிப்பில் வைரம் வாங்கியிருக்கிறார் என்றால், அதற்கான கணக்கு என்ன? எங்கிருந்து வந்தது அந்தப் பணம்?

07. ஜெயலலிதாவுக்கே தெரியாமல் அவரிடம் கையெழுத்து பெற்று அல்லது அவருடைய கையெழுத்தை வேறு யாரேனும் போட்டு, இந்த வைரம் வாங்கப்பட்டுள்ளது என்றால், ஒரு முதலமைச்சரின் கையெழுத்தை போலியாக இட்டது மாபெரும் குற்றம் அல்லவா?

08. ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட அந்த வைரத்தின் தற்போதைய உரிமையாளர் அல்லது பாதுகாவலர் யார்? தற்போது அந்த வைரத்தை விற்பனை செய்பவர்கள் யார்?

09. அப்போது ஜெயலலிதாவின் பாதுகாவலராக உடன் இருந்த சசிகலா மற்றும் அவருடைய உறவினர் வலைப்பின்னலுக்கு இந்த வைரம் வாங்குவது குறித்து தெரியுமா? அவர்களின் பங்கு என்ன?

10. அப்போது செல்வாக்கு மிக்க அமைச்சர்களாக இருந்தவர்களும், நாள்தோறும் அப்பல்லோ சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிந்து ஊடகங்களிடம் பேசியவர்களுமான எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு இதில் உள்ள பங்கு என்ன?

இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன. ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்தபோது அவருடைய பெயரை பயன்படுத்தி, பெரும் தொகையிலான கறுப்புப் பணம், வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் கறுப்புப் பண ஊழல் இதன்பின்னே மறைந்திருக்கிறது. பா.ஜ.க.வுக்கு ரஃபேல் ஊழல் என்றால், அ.தி.மு.க.வுக்கு வைர ஊழல்!

நன்றி : ஃபேஸ்புக்கில் பாரதி தம்பி 

இன்னும் எத்தனை அனிதாக்கள் இருக்கிறார்களோ | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கிளினிக்கில் சந்தித்த பதினோறாம் வகுப்பு மாணவிக்கு பரிசோதனை செய்து அவருக்கான மாத்திரைகளை எழுதும் பொழுது… படிப்புல எப்டிமா? என்று பேச்சு கொடுத்தேன்.

“நல்லா படிப்பா சார்.. கெட்டிகாரி.. பத்தாவதுல 493/500 -க்கு” என்றார் அவளது தாய்.

“அருமை மா.. என்ன க்ரூப் மா எடுத்துருக்கீங்க?”

” சய்ன்ஸ் சார்”

“அருமை. என்ன ஆம்பிஷன் வச்சுருக்கீங்க?”

( இந்த கேள்வியை இனி யாரிடமும் கேட்கவே கூடாது என்று நொந்து கொண்டேன். இதற்கு கிடைத்த பதில்தான் இன்று எனக்கு கிடைத்த பேரிடி )

” டென்த் வரைக்கும் டாக்டர் ஆகணும்னு வச்சுருந்தேன் சார் . இப்ப தான் நீட் வந்துடுச்சே… போச்சு.”

சிறிது நேரம் எதுவும் பேச முடியாத கையாலாகாத ஒருவனாய் நிசப்தத்துடன் நான் ஏன் இந்த கேள்வியை கேட்டேன் என்று நொந்து கொண்டவனாய்
கண்களை ஈரமாக்கிய நீரை அவர்கள் இருவருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு…

“ஓ.. ஆமா.. நீட் வந்துடுச்சுல்ல.. அதுக்கு தனியா கோச்சிங் ஒரு வருசம் போகலாம்ல மா?”

படிக்க:
♦ மகளிர் தினம் : வெறும் கொண்டாட்டமல்ல.. உரிமையை மீட்கும் நாள் !
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாய் புதிய கலாச்சாரம் நூல்கள் !

அவளது அம்மா இடைமறித்து, “போகலாம் சார். இங்க இருந்து இவள மதுரை வரைக்கும் போய் படிக்க இவ அப்பா விடமாட்டாரு. அது போக வருசம் ஒரு லட்சம் செலவழிச்சு படிக்க வைக்க வசதி இல்ல சார்”

“ஆமா மா.. போன வாரம் கூட ஒரு பொன்னு கிட்ட கேட்டேன் ஒரு லட்சம் செலவாகுதாம். உண்மைதான்”

இப்போது அந்த மாணவி “ஏதாவது கிடைக்கிறத படிப்பேன் சார். டாக்டராகுறதலாம் இனி நினைச்சு பாக்குறது தப்பு சார்”

சிறிது நேர நிசப்தம் அவர்கள் எழுந்து சென்று விட்டார்கள்… கண்ட கனவுக்காக உழைத்து அது பலிக்காமல் போனால் கூட வலி பெரிதாய் இருக்காது, ஆனால் கனவே காணக்கூடாது என்று தடுப்பதெல்லாம் கொடுமையின் உச்சம்.

இனி ஒரு போதும் பள்ளி பயிலும் யாரிடமும், “உங்கள் ஆம்பிசன் என்ன ?” என்று நான் கேட்கப் போவதில்லை. இறைவனிடமே கையேந்துகிறேன் இது போன்ற சமூக நீதிக்கு எதிரான பரீட்சையை துடைத்தெறிவாய் இறைவா..

இது போன்ற எத்தனை Dr.அனிதாக்கள் தமிழகம் முழுவதும் இருக்கிறார்களோ? சாணை தீட்டப்படாத ரம்பத்தைக் கொண்டு நெஞ்சை அறுப்பது போல ஒரு வலி.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.