Saturday, May 31, 2025
முகப்பு பதிவு பக்கம் 354

குழந்தையின்மை சிகிச்சையும் பார்ட்னர்ஷிப்பும் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

பார்ட்னர்ஷிப் !

மீபத்தில் கிளினிக்கில் என்னை இருபதின் இறுதிகளில் இருக்கும் ஒரு பெண்மணி சந்தித்தார். PCOD எனும் கருமுட்டையில் நீர்க்குமிழ் போன்ற கட்டிகள் உருவாகும் நோய் இருப்பதாகவும், அதனால் திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் மகப்பேறு இயற்கையாக உண்டாகவில்லை என்பது அவர்புறத்துப் பிரச்சனை.

PCOD -ஐ சரி செய்வதற்கு பேலியோ உணவு முறை உள்ளங்கையில் நெல்லிக்கனி. ஆதலால் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை குறித்து அவரிடம் விவரித்தேன். அவரும் ஆர்வம் தெரிவித்தார்.

PCOD – மாதிரிப் படம்

அவரது கணவருக்கும் உடல் பருமன் இருப்பதாக தெரிவித்தார். அடுத்த முறை அவருக்கும் அவரது கணவருக்கும் ரத்த பரிசோதனை செய்து வருமாறு கூறி அனுப்பி வைத்தேன்.

ரத்த பரிசோதனை முடிவுகளோடு பெண்மணி மட்டும் என்னை சந்தித்தார்.

ஏன்.. கணவர் வரவில்லை? என்று கேட்டதற்கு

கணவருக்கு கடையை பார்த்துக்கொள்ளும் வேலை இருப்பதாகவும், அதனால் கடையை விட்டுவிட்டு வர முடியாது என்று அவர் கூறிவிட்டதாகவும் எனக்கு தெரிவித்தார்.

“சரி.. ரத்த பரிசோதனையாவது செய்திருக்கலாமே? உடல் குண்டாக இருப்பது.. ஆண்மைத்தன்மையை குறைக்கும். அதற்காகவாவது இருவரும் சேர்ந்து பேலியோ கடைபிடித்து பார்க்கலாமே?” என்றேன்

அந்த பெண்மணி “இல்ல சார். எங்க வீட்டுக்காரருக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுனு மாமியார் சொல்லிட்டாங்க. அவரு ரத்த டெஸ்ட் கொடுக்க ரெடியாதான் இருந்தாரு. ஆனா மாமியார் விட மாட்றாங்க சார். அவுக மகனுக்கு பிரச்சனை இருக்காதாம்.. என்னை மட்டும் தான் சார் கொற சொல்றாக…”

படிக்க:
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
இன்னும் எத்தனை அனிதாக்கள் இருக்கிறார்களோ | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

“இது உலகம் பூரா இருக்கிறதுதான் மா.. எந்த அம்மாவாவது தன் புள்ளையை குத்தம்னு சொல்லுமா.. ஆனா குழந்தையின்மைல உங்கள மட்டும் டெஸ்ட் பண்ணி ப்ரயோஜனம் இல்ல. அடுத்த தடவ வரும் போது அவருக்கும் டெஸ்ட் எடுத்துட்டு வாங்க…”

அவருக்கு ஒரு முழு ரத்த பரிசோதனை மற்றும் விந்தணுக்கள் பரிசோதனை எழுதி அனுப்பினேன். மீண்டும் சில நாட்கள் கழித்து அந்த பெண்மணி மட்டும் வந்தார்.

“சார்..இந்தாங்க அவரோட ரிப்போர்ட்.. பெரும்பாடு பட்டு இந்த டெஸ்ட்ட எடுக்க வச்சேன் சார். பாத்து நல்ல வார்த்தை சொல்லுங்க…”

நினைத்ததை போலவே அந்த கணவனுக்கு விந்தணுக்கள் தேவைக்கும் குறைவாக இருந்தது. இன்னும் பெரும்பான்மை விந்தணுக்கள் நல்ல நிலையில் இல்லை.
டெஸ்டோஸ்டிரோன் எனும் ஆண்மைக்கான ஹார்மோன் குறைவாக இருந்தது..

நான் கூறினேன் “அவரு நேர்ல வரணும் மா.. வந்தா தான் டயட் தர முடியும். பிரச்சனை இருக்கு. நேர்ல வந்தே ஆகணும்னு டாக்டர் சொன்னாருனு கூட்டிட்டு வாங்க”

இன்னும் சில நாட்களுக்குப் பிறகு தம்பதி சமேதாராக வந்தனர். இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையும் உணவுப்பரிந்துரையும் வழங்கப்பட்டது.

இப்போது இருவரும் நல்ல முறையில் எடை குறைந்து வருகின்றனர். விரைவில் மகப்பேறு அடைய இறைவன் அருள் புரிய வேண்டும்..

நிற்க ; மலட்டுத்தன்மைக்கு காரணம் பெண்கள் மட்டுமே என்ற எண்ணம் நமது குடும்பங்களில் வேரூன்றி நிற்கிறது. அக்காவிற்கு குழந்தை பிறக்காவிட்டால் தங்கையை கட்டுவது போன்ற கொடூர அக்கிரமங்கள் நிகழ்ந்த வரலாறுகள் நமது சமுதாயத்தில் உண்டு.

பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை மட்டுமே செய்ய வேண்டும் என்ற எண்ணமே இதற்கு காரணம்.

சரி.. இப்போது விசயத்துக்கு வருவோம்; குழந்தையின்மை என்பது ஆண் பெண் இருவருக்கும் பொது. ஆகவே சிகிச்சை என்று வந்துவிட்டால் இருவரும் சேர்ந்து தான் எடுக்கவேண்டும். பெண்களை மட்டும் பலிகடா ஆக்குவது தவறு. அது வன்கொடுமை.

ஆண்களுக்கு இப்போதெல்லாம் விந்தணுக்கள் குறைபாடு மிக அதிகமாக காணப்படுகிறது.

எப்படி கிரிக்கெட்டில் இரண்டு பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் வைத்து ரன் எடுக்கிறார்களோ?

ஆம்.. அடுத்தவர் எடுக்கும் ரன்னுக்கும் எதிர் நிற்பவர் சேர்ந்து ஓடினால் தான் ரன் பதிவாகும். அவர் எடுக்கும் ரன்னுக்கு நான் ஓட மாட்டேன் என்று நிற்க முடியாது.

அதுபோலவே வாழ்க்கையை சேர்ந்து வாழ முடிவெடுத்த இரண்டு உயிர்கள் இணையும் பார்ட்னர்ஷிப்பே திருமணம். இதில் குழந்தையின்மைக்கு ஒருவரை மட்டும் பலிகடா ஆக்கி மற்றவர் பொறுப்பின்றி இருப்பது தவறு..

நல்லதோ கெட்டதோ, லாபமோ நட்டமோ, வெற்றியோ தோல்வியோ, ஏன் உயிரே போனாலும் சரி…. பார்ட்னர்களை எப்போதும் பிரியக்கூடாது

டாட்👆

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்

ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது 2 லட்சம் கேரட் வைரம் வாங்கியது எப்படி?

ந்திய வைரச்சந்தை பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் திடீரென விற்பனைக்கு வந்துள்ளதால், வைரத்தின் மதிப்பு சரசரவென சரிவை சந்தித்திருக்கிறது. கிட்டத்தட்ட 30 சதவிகித விலை சரிவு. இந்த விலை சரிவு ஹாங்காங் உள்ளிட்ட உலக வைர சந்தையிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. திடீரென இவ்வளவு அதிகமான மதிப்புள்ள வைரம் சந்தைக்கு விற்பனைக்கு வந்தது எப்படி என்பதை ஆராய்ந்தால் அது, ஜெயலலிதாவிடம் வந்து முடிகிறது.

இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதா 2 லட்சம் கேரட் வைரத்தை, மும்பை வைரச் சந்தையில் இருந்து வாங்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்திய வைரச்சந்தையில் திடீரென விற்பனைக்கு வந்திருக்கும் 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்தே வந்துள்ளது எனக் குறிப்பிடும் அந்த செய்தி, அப்போது ஜெயலலிதா வாங்கிய வைரமே தற்போது விற்பனை செய்யப்படுவதாகவும் கூறுகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் செய்தி, எவ்வளவு மதிப்புக்கு வரைம் வாங்கப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை, அப்போது வாங்கப்பட்டது ’+11’ எனப்படும் நகைகளில் பயன்படுத்தப்படும் வைரம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது திடீரென சந்தையில் விற்பனைக்கு வந்திருப்பதும் இந்த வகையைச் சேர்ந்த வைரம்தான்.

இந்திய வைர தொழிலின் தலைமையகமாக செயல்படுவது குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம். சூரத் வைர கூட்டமைப்பின் (Surat Diamond Association – SDA) தலைவர் பாபு குஜராத்தி இதுபற்றிக் கூறும்போது, “பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபோது இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும் தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை வைரமாக வாங்கி வைத்துக்கொண்டார்கள். இப்படித்தான், தமிழ்நாட்டை சேர்ந்த மிக உயரிய அரசியல்வாதிகள் 2 லட்சம் கேரட் வைரத்தை வாங்கினார்கள். தற்போது அந்த வைரங்களை மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதால், வைரச் சந்தையும், இதன் வணிகமும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது என்பது உண்மை” என பேட்டி கொடுத்திருக்கிறார்.

படிக்க:
♦ சர்வதேச மகளிர் தினத்தை உயர்த்தி பிடிப்போம் | கடலூர் புமாஇமு | தேனி மக்கள் அதிகாரம்
♦  உலகத்துலே பெரிய சிலை பட்டேலு … | கோவன் பாடல் !

இந்த வைர கொள்முதல் மற்றும் விற்பனையில் சந்தேகத்துக்கு உரிய பல மர்மக் கேள்விகள் முளைக்கின்றன.

01. 2016 நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட வைரம் ஜெயலலிதாவால் வாங்கப்பட்டிருக்கிறது என்றால், பண மதிப்பு நீக்கம் குறித்து ஜெயலலிதா முன்கூட்டியே அறிந்திருந்தது எப்படி?

02. ஜெயலலிதாவால் இந்த வைரம் வாங்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்குப் பயன்படுத்தப்பட்ட தொகை முழுவதும் கறுப்புப் பணம் என்பது உறுதியாகிறது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

03. 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியில் வரவே இல்லை. அப்படியானால், 2016 நவம்பர் 8-ல் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு முன்னால் ஜெயலலிதா, இத்தனை பிரமாண்ட மதிப்பில் வைரம் வாங்கியது எப்படி?

04. ஜெயலலிதா படுத்த படுக்கையாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது அவர் 2 லட்சம் கேரட் வைரம் வாங்கியதாக சொல்வது நம்பும்படியாக இருக்கிறதா?

05. அப்படியானால், ஜெயலலிதாவின் பெயரால் வாங்கப்பட்டுள்ள இந்த வைரத்தை உண்மையில் வாங்கியது யார்? யாருக்காக அந்த வைரம் வாங்கப்பட்டது?

06. ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த காலத்தில் அவர்தான் முதலமைச்சராக இருந்தார். ஒரு முதலமைச்சர் இத்தனை பிரமாண்டமான மதிப்பில் வைரம் வாங்கியிருக்கிறார் என்றால், அதற்கான கணக்கு என்ன? எங்கிருந்து வந்தது அந்தப் பணம்?

07. ஜெயலலிதாவுக்கே தெரியாமல் அவரிடம் கையெழுத்து பெற்று அல்லது அவருடைய கையெழுத்தை வேறு யாரேனும் போட்டு, இந்த வைரம் வாங்கப்பட்டுள்ளது என்றால், ஒரு முதலமைச்சரின் கையெழுத்தை போலியாக இட்டது மாபெரும் குற்றம் அல்லவா?

08. ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட அந்த வைரத்தின் தற்போதைய உரிமையாளர் அல்லது பாதுகாவலர் யார்? தற்போது அந்த வைரத்தை விற்பனை செய்பவர்கள் யார்?

09. அப்போது ஜெயலலிதாவின் பாதுகாவலராக உடன் இருந்த சசிகலா மற்றும் அவருடைய உறவினர் வலைப்பின்னலுக்கு இந்த வைரம் வாங்குவது குறித்து தெரியுமா? அவர்களின் பங்கு என்ன?

10. அப்போது செல்வாக்கு மிக்க அமைச்சர்களாக இருந்தவர்களும், நாள்தோறும் அப்பல்லோ சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிந்து ஊடகங்களிடம் பேசியவர்களுமான எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு இதில் உள்ள பங்கு என்ன?

இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன. ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்தபோது அவருடைய பெயரை பயன்படுத்தி, பெரும் தொகையிலான கறுப்புப் பணம், வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் கறுப்புப் பண ஊழல் இதன்பின்னே மறைந்திருக்கிறது. பா.ஜ.க.வுக்கு ரஃபேல் ஊழல் என்றால், அ.தி.மு.க.வுக்கு வைர ஊழல்!

நன்றி : ஃபேஸ்புக்கில் பாரதி தம்பி 

இன்னும் எத்தனை அனிதாக்கள் இருக்கிறார்களோ | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கிளினிக்கில் சந்தித்த பதினோறாம் வகுப்பு மாணவிக்கு பரிசோதனை செய்து அவருக்கான மாத்திரைகளை எழுதும் பொழுது… படிப்புல எப்டிமா? என்று பேச்சு கொடுத்தேன்.

“நல்லா படிப்பா சார்.. கெட்டிகாரி.. பத்தாவதுல 493/500 -க்கு” என்றார் அவளது தாய்.

“அருமை மா.. என்ன க்ரூப் மா எடுத்துருக்கீங்க?”

” சய்ன்ஸ் சார்”

“அருமை. என்ன ஆம்பிஷன் வச்சுருக்கீங்க?”

( இந்த கேள்வியை இனி யாரிடமும் கேட்கவே கூடாது என்று நொந்து கொண்டேன். இதற்கு கிடைத்த பதில்தான் இன்று எனக்கு கிடைத்த பேரிடி )

” டென்த் வரைக்கும் டாக்டர் ஆகணும்னு வச்சுருந்தேன் சார் . இப்ப தான் நீட் வந்துடுச்சே… போச்சு.”

சிறிது நேரம் எதுவும் பேச முடியாத கையாலாகாத ஒருவனாய் நிசப்தத்துடன் நான் ஏன் இந்த கேள்வியை கேட்டேன் என்று நொந்து கொண்டவனாய்
கண்களை ஈரமாக்கிய நீரை அவர்கள் இருவருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு…

“ஓ.. ஆமா.. நீட் வந்துடுச்சுல்ல.. அதுக்கு தனியா கோச்சிங் ஒரு வருசம் போகலாம்ல மா?”

படிக்க:
♦ மகளிர் தினம் : வெறும் கொண்டாட்டமல்ல.. உரிமையை மீட்கும் நாள் !
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாய் புதிய கலாச்சாரம் நூல்கள் !

அவளது அம்மா இடைமறித்து, “போகலாம் சார். இங்க இருந்து இவள மதுரை வரைக்கும் போய் படிக்க இவ அப்பா விடமாட்டாரு. அது போக வருசம் ஒரு லட்சம் செலவழிச்சு படிக்க வைக்க வசதி இல்ல சார்”

“ஆமா மா.. போன வாரம் கூட ஒரு பொன்னு கிட்ட கேட்டேன் ஒரு லட்சம் செலவாகுதாம். உண்மைதான்”

இப்போது அந்த மாணவி “ஏதாவது கிடைக்கிறத படிப்பேன் சார். டாக்டராகுறதலாம் இனி நினைச்சு பாக்குறது தப்பு சார்”

சிறிது நேர நிசப்தம் அவர்கள் எழுந்து சென்று விட்டார்கள்… கண்ட கனவுக்காக உழைத்து அது பலிக்காமல் போனால் கூட வலி பெரிதாய் இருக்காது, ஆனால் கனவே காணக்கூடாது என்று தடுப்பதெல்லாம் கொடுமையின் உச்சம்.

இனி ஒரு போதும் பள்ளி பயிலும் யாரிடமும், “உங்கள் ஆம்பிசன் என்ன ?” என்று நான் கேட்கப் போவதில்லை. இறைவனிடமே கையேந்துகிறேன் இது போன்ற சமூக நீதிக்கு எதிரான பரீட்சையை துடைத்தெறிவாய் இறைவா..

இது போன்ற எத்தனை Dr.அனிதாக்கள் தமிழகம் முழுவதும் இருக்கிறார்களோ? சாணை தீட்டப்படாத ரம்பத்தைக் கொண்டு நெஞ்சை அறுப்பது போல ஒரு வலி.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

சர்வதேச மகளிர் தினத்தை உயர்த்தி பிடிப்போம் | கடலூர் புமாஇமு | தேனி மக்கள் அதிகாரம்

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில்…
புரட்சிகர  மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக, கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மார்ச்- 8 சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் உரிமைக்காக போராடிய தந்தை பெரியாரின் சிலைக்கு கல்லூரி மாணவர்கள் மாலை அணிவித்தனர். மேலும் மகளிர் தினத்தை உயர்த்திப் பிடிப்போம் என்று முழக்கமிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பெரியார் சிலைக்கு இரண்டு மாணவிகள் மாலையிட்டு உரையாற்றினர். பெண் உரிமைகளைப் பற்றியும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை பற்றியும், பாசிச மோடி ஆட்சியில் பெண்களுக்கு  பாதுகாப்பில்லாத நிலைமை குறித்தும் உரையாற்றினர். பெரியாரின் புகழையும், சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தையும் உயர்த்திப் பிடித்து முழக்கமிட்டனர்.
தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, கடலூர்.
♦ ♦ ♦ 
கம்பம் – என்.டி.பட்டி கிராமத்தில்…
தேனி மாவட்டம், கம்பம் – என்.டி.பட்டி கிராமத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அப்பகுதி தோழர் பிரேமா தலைமை ஏற்றார். காலமெல்லாம் பெண்களும், கடந்துவந்த பாதையும் என்ற புகைப்படக் கண்காட்சியை தோழர் சேகர் அவர்கள் திறந்து வைத்தார். விழாவின் சிறப்பு அழைப்பாளராக ஆவணப்பட இயக்குநர், வழக்கறிஞர் தோழர் திவ்ய பாரதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆண் குழந்தைகளிடம் பேச வேண்டும்; டெல்லியில் நிர்பயா என்ற பெண் பாலியல் வன்முறைக்குப் பின் சட்டங்களால் பெண்கள் மீதான தாக்குதல்கள் குறைந்துள்ளதா?” என பெண்களின் பிரச்சினைகள் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

குழந்தைகள், மகளிர் பங்கேற்ற கவிதை வாசிப்பு, பாடல்கள், நடனம், நாடகம் என நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது. முன்னதாக ஸ்டெர்லைட் மற்றும் வன்முறைகளில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னணி பெண் தோழர்கள் கெளரவப்படுத்தப்பட்டனர். பல்வேறு பகுதியைச் சேர்ந்த தோழர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டாலும், உள்ளூர் பெண்கள் அதிகம் கலந்து கொண்டார்கள். இந்த சர்வதேச மகளிர் தின விழா இப் பகுதியில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: மக்கள் அதிகாரம், தேனி மாவட்டம்.

தொகுப்பு:

உலகத்துலே பெரிய சிலை பட்டேலு … | கோவன் பாடல் !

பிப்ரவரி 23 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் ”கார்ப்பரேட் காவி பாசிசம்! எதிர்த்து நில்!” மாநாடு திருச்சியில் சிறப்பாக நடந்தது. நிகழ்வில் கோவன் தலைமையிலான ம.க.இ.க. கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. முதல் பாடலாக மோடி – அம்பானி ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்தும் ”உலகத்துலே பெரிய சிலை பட்டேலு… அது உள்ள போயி ஒளிஞ்சிக்கிச்சி ரஃபேலு…” பாடல் பாடப்பட்டது. அருந்ததி ராய் உள்ளிட்ட அனைத்து பேச்சாளர்களும் பார்வையாளர்களும் இப்பாடலை ரசித்துப் பார்த்தனர்.

நேரலையாக பாடப்பட்ட இப்பாடல் சில நாட்களில் கிரமமான இசை, ஒலிப்பதிவு, வீடியோவாக சில நாட்களில் வெளியிடப்படும். மேடையில் நேரலையாக பாடப்பட்ட இப்பாடல் வந்திருந்த மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

பாருங்கள்.. பகிருங்கள்.. !

 

 


இதையும் பாருங்க…

மகளிர் தினம் : வெறும் கொண்டாட்டமல்ல.. உரிமையை மீட்கும் நாள் !

மிக நீண்ட நாட்களாக பெண்கள் சார்ந்த இந்த தினத்தைப்பற்றி எழுத வேண்டும் என்றும் நினைத்தேன். சமூகத்தில் பெண்களின் நிலை குறித்த எனது கண்ணோட்டத்தின் நீட்சியே இக்கட்டுரை.

இன்று நாம் கொண்டாடும் மகளிர் தினத்தில், கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகுப் போட்டி  என பல போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்படுகின்றன.  ஊடகங்களும், வர்த்தக நிறுவனங்களின் மூலம் பெண்கள் பயன்படுத்தும் பொருளுக்கு தள்ளுபடியுடன் கூடிய வாழ்த்துகளை கூறுகின்றன. இதைத்தான் கார்ப்பரேட்டுகள்,  “ஊடகங்களின்  மூலம் சந்தைப்படுத்துதல்” என  நமக்கு சொல்லி தருகின்றன. இதுதான் உண்மையில் மகளிர் தினமா ?

இல்லை.. உண்மை அதுவல்ல. மகளிர் தினம் குறித்து அறிய அதன் தோற்றத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். 1910-ம் ஆண்டு, டென்மார்க் தலைநகரில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் கிளாரா ஜெட்கின் தலைமையிலான உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில், பெண்களின் பிரச்சினைகளுக்கு சோசியலிஸ்ட் பார்வையுடன், உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் 1917-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியன்று பெண்கள் மற்றும் தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர்.  இந்தப் புரட்சிகர தினமே உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதில் ஏராளமான ஆண்களும் கலந்துகொண்டனர். ஆணும் பெண்ணும் சேர்த்தேதான் மகளிர் தினத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது கருத்தும்கூட.

இதை முன்னெடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு  தீம் (Theme) முன்னெடுக்கப்படுகிறது. அதில் இந்த ஆண்டுக்கான தீம் #BalanceforBetter   என்பதாகும். ஆணும் பெண்ணும் சமம் என்கிறது.  Gender Equality (பாலின சமத்துவம்) என்பது கல்வி, கடமை, வேலை வாய்ப்பு, உரிமை என எல்லாம் இருவருக்கும் ஒன்று என்பதே.

ஆனால், எதார்த்தத்தில் சமூகம் அப்படியானது அல்ல; அது பெண் என்பவளை உடல் சார்ந்தவளாகவும், அவளது உழைப்பை பயன்படுத்தி கொள்ளவும் மட்டுமே பார்த்து வருகிறது. தற்போது இது மாறிவிட்டதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அது தவறு.

இந்தியாவில் ஆண்கள் சராசரியாக 7 மணி நேரமும், பெண்கள்  9 முதல் 11  நேரம் வரை உழைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு சொல்கிறது. இதில் பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளை கணக்கில் கொள்வதில்லை என்கிறது. ஆனால், ஆணோ பெண்ணோ யார் எதைச் செய்தாலும் அது வேலையே. ஆனால், நம் சமூக அமைப்பு இதிலிருந்து வேறுபடுகிறது. உலக பாலியல் பேத பட்டியலில் (Global Gender Gap Index) ஆய்வறிக்கை  149 நாடுகள் கொண்ட பட்டியலில் வெளியிட்டுள்ளது. இதில்  இந்தியா 108-வது இடத்தை பெற்றுள்ளது. இதே போன்று மற்றுமொரு ஆய்வில் உலகில் சமத்துவத்தை பாதுகாக்கின்ற நாடுகளில் முதலிடத்தில் பெல்ஜியம் அதைத் தொடர்ந்து டென்மார்க், பிரான்ஸ், லட்டவியா, லக்ஸ்சம்பர்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள்தான் முன்னிலையில் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது. அதில் பிரான்ஸ் அபரித வளர்ச்சியை கொண்டுள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.

பெண்களின் பாதுகாப்பு

பெண்கள் என்றவுடன் அவர்களின் பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில், பெண்களின் பாதுகாப்பு பற்றிய ஆய்வின் முடிவுகள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உலகில் பெண்கள் வாழ்வதற்கு மிக மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. போர் சூழ்ந்து உள்ள ஆப்கானிஸ்தான், சோமாலியா, பாகிஸ்தான், காங்கோ போன்ற நாடுகள் கூட நம்மைவிட பின்னால் இருக்கின்றன. இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியா, பெண்களின் மீதான பாலியல் வல்லுணர்வு, அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடான ஒன்று.

பெண் கல்வி

பாதுகாப்பு இப்படி இருக்கையில் பெண் கல்வி கேள்விக்குறியாக மாறிவருகிறது. மாணவி அனிதாவின் டாக்டர் கனவைக் காவு வாங்கிவிட்டு ‘பேட்டி படோ’ என்கிறது மத்திய அரசு. உள்நாட்டு உற்பத்தியில் ஜி.டி.பி.யில் 6 சதவிதத்தில் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று கோத்தாரி கல்விக்குழு பரிந்துரைக்கிறது. ஆனால், 2013-14 ஆண்டு 0.71 சதம் மட்டுமே கல்விக்கு ஒதுக்கப்பட்டுவருகிறது. அதை ஆளும் மத்திய  அரசு 0.45-யாக மேலும் குறைத்துள்ளது. இப்படி கல்வியும் அடிபாதாளத்தில் போய் கொண்டு இருக்கிறது. இதில் பெரும் பாதிப்பு பெண்களுக்கே.

படிக்க:
உழைக்கும் மகளிர் தினம் – சர்வதேச கருத்துப் படங்கள்
வாழத்துடிக்கும் பெண்ணினம் ! வாழ்க்கை மறுக்கும் சமூகம் !

பள்ளி கட்டிடங்களில், கழிவறைகள் உள்ளிட்ட சுகாதார கட்டமைப்பு இல்லாமல் பெண் உயர் கல்வி இடைநிற்றலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்போது சத்துணவையும், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட முட்டை போன்ற புரதச்சத்து கொடுக்ககூடிய உணவுகளை தவிர்க்கக்கூடிய தனியார் NGO-விடம் கொடுக்க அரசு முயன்று வருகிறது. மேலும், கடந்த மாதம் 5 மற்றும்  8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்து எதிர்ப்புகள் கிளம்பியபின் அதை ரத்து செய்தது. இந்த ஆண்டு மட்டுமல்லாமல் வரும் ஆண்டும் பள்ளிக் கட்டமைப்பை, ஆசிரியர் மேம்படுத்தல், புதிய கற்றல் முறை போன்று கற்றலை மேம்படுத்த வேண்டுமே தவிர குழந்தைகளின் தலையில் சுமையை ஏற்றுவது தவறு.

இவ்வாறு செய்வதன் முலம் பெண் கல்வியை கேள்விக்குறியாக்குகிறது.  இப்படி மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல்  செயல்படுகிறது அரசு. ஆனால், இதற்கெல்லாம் மாறாக கேரளா இடதுசாரி அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு மக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றி வருகின்றனர்.

பெண்களின் வேலை மற்றும் ஊதியம்

உலக அளவில் இந்தியாவில்தான் ஊதிய பாகுபாடு பெரும் அளவில் இருப்பதாக International Labour Organization (ILO) 2018-19 ஆண்டின்  ஆய்வு அறிக்கை Business Standard இதழில் கடந்த நவம்பர் மாதம் வெளி வந்துள்ளது. 73 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியாவில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஊதியம் பெறவில்லை எனவும் அது  34% ஆண்களை விட பெண்கள்  குறைந்த ஊதியத்தை வாங்குகின்றனர் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிலும் பகுதி நேர வேலை செய்யும்  16% பெண்கள், ஆண்களை காட்டிலும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். இப்படி கல்வித்துறையில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வரும் வேளையிலும் இந்த இடைவெளி தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டு 20%-ஆக இருந்த இருந்த பாலின ஊதிய இடைவெளி (Gender Wage Gap ), இந்த 2018-19-ம் ஆண்டும் தொடர்கிறது.

இப்படி கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராட வேண்டிய நிலையில் உள்ள இச்சூழலில் மகளிர் தினக் கொண்டாட்டத்தை முன்னெடுப்போம் நம் உரிமைகளை கோரி …

சிந்துஜா சமூக ஆர்வலர்.

அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி – புதிய கலாச்சாரம் மார்ச் மின்னிதழ் !

அதிமுக குற்றக்கும்பல் ஆட்சி

டந்த ஓரிரு ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த வருமானவரித் துறை சோதனைகளின் பட்டியல் மிக நீளமானது. கரூர் அன்புநாதன், சேகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், டி.டி.வி தினகரன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், கொடநாடு, போயஸ் இல்லம், கிறிஸ்டி நிறுவனம் மற்றும் எஸ்பிகே நிறுவனம் போன்றவற்றில் எடப்பாடி, பன்னீர்செல்வத்தின் பினாமிகளும் அடக்கம்.

இவை தவிர கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கண்டெய்னர்களில் கடத்தப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்கள் சிக்கின. மேலும், துணை ராணுவப் படையை தலைமைச் செயலகத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு நிறுத்தி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் பணமும் தங்கமும் கைப்பற்றப்பட்ட செய்திகள் வெளியாகின. ஆனால் இன்று வரை இச்சோதனைகளின் மூலம் பிடிபட்ட கருப்புப் பணத்தை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்தச் சோதனைகள் அனைத்துமே ஆளும் எடப்பாடி – பன்னீர் கும்பலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க, மோடியால் மேற்கொள்ளப்படுபவை என்கின்றன தமிழக எதிர்க்கட்சிகள்.

ஜெயா எதிர்த்து வந்த மத்திய அரசின் நீட், உதய் உள்ளிட்ட திட்டங்களை எடப்பாடி அரசு ஆதரிக்கத் துவங்கியதை இதற்கு சான்றாகக் குறிப்பிடலாம். கூடவே ஜி.எஸ்.டி வரிவிதிப்பை எதிர்க்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரித்தது, மோடி அரசைக் காப்பாற்றும் முகமாக பாரளுமன்றத்தில் கூச்சலிடுவது என ஒன்று பாக்கியில்லை .

மறுபுறம் போராடும் மக்களை ஒடுக்குவதிலும் எடப்பாடி அரசு முன்னணியில் இருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கியது; அரசு ஊழியர் போராட்டம், போக்குவரத்து ஊழியர் போராட்டம் அனைத்தையும் சதி மற்றும் மிரட்டலால் அடக்கி ஒடுக்கியது.

பொதுவாக திட்டங்களைக் கொண்டு வந்துதான் ஊழல் செய்வார்கள். ஆனால், ஊழலுக்காகவே திட்டங்களைக் கொண்டு வருவதுதான் அதிமுக அரசின் பாணி. இந்த ஊழல் கும்பலை அடியாளாக்கி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைத்திருக்கிறது பாஜக. தமிழக மக்களின் விரோதியாக பெருத்து நிற்கும் எடப்பாடி – ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கும்பலின் யோக்கியதையை தோலுரித்துக் காட்டுகிறது இந்தத் தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி – புதிய கலாச்சாரம் மார்ச் 2019 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

” அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • எத்தனை அடிச்சாலும் எடப்பாடி தாங்குவது எப்படி ?
  • ரேஷனை ஒழித்துக்கட்டு ! பாஜக-வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம் !!
  • அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !
  • போயஸ் : பொறுக்கித்தனத்தில் விஞ்சி நிற்பது அத்தையா மருமகளா ?
  • பத்தாயிரம் சமூக விரோதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சட்டத்தை நிலைநாட்டிய எடப்பாடி !
  • தமிழகத்தைக் காக்க அதிமுகவை அழி !
  • மாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் !
  • அம்மாவின் ஆட்சியில் கொழிக்கும் டாஸ்மாக் – மணற்கொள்ளை !
  • அதிமுக – பாஜக: திருடன் போலீசா, திருட்டு போலீசா ?
  • ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து : அதே ஆம்பூர் பிரியாணி, அதே தேர்தல் ஆணையம் !
  • வருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக
  • எடப்பாடி ஆட்சியில் கொசுக்களின் ராஜ்ஜியம் ! தமிழகத்தில் பரவும் டெங்கு !
  • எடப்பாடியும் ஜெயலலிதாவும் ஒண்ணு ! இதை அறியாதவன் வாயில மண்ணு !
  • ஜெயா – சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான்!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

 புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

நூல் அறிமுகம் : இராமாயண ஆராய்ச்சி ( பால காண்டம் )

”குடி அரசு” இதழில் சந்திரசேகரப் பாவலர் என்பவரால் ”இதிகாசங்கள்” என்னும் தலைப்பின் கீழ் எழுதப் பெற்று வெளிவந்த இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுக்கப் பட்டிருக்கிறது.

இதிகாசங்கள் என்ற சொல்லுக்குப் பொருள், பழைய கதைகள் என்பது. பழைய கதைகளெல்லாம் இப்பொதுத் தலைப்பின்கண் வருமோ என்றால் அவை வரா. இராமாயணம், பாரதம் என்ற இரண்டுமே இதிகாசங்களெனப் பெயர் பெறுவன. இவற்றை நன்றாக ஆராய்ந்து படிப்பதால், பழைய காலத்திலிருந்த ஆரியர்களது பழக்க வழக்கங்களும், நீதி முறைகளும், இன்னும் அவர்களைப் பற்றிய ஒழுக்க முறைகளும் நன்கு புலனாகும். ஆதலின் ஈண்டுத் தலைப்பிட்டு அவ்விரண்டு நூல்களையும் ஆராயத் தொடங்குகின்றோம். இவ்வாராய்ச்சியைப் படிப்போர், இதனை ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்க வேண்டுகின்றோம். முதற்கண் இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம்.

இராமாயணம் என்பது இராமன் என்ற ஆரிய மன்னவனின் வரலாறு. தற்காலம் இவ்வரலாற்றை அறியாதவர் இலர். இது அவ்வளவு தூரம் ஆரியர்களால் தமிழ்நாட்டில் பரப்பப் பெற்றுள்ளது. நம் தமிழ் மக்களில் பெரும்பாலோர் இவ்விராம சரித்திரம், நம்மவர்களைச் சேர்ந்த சரித்திரமென்றும், இராமபிரான் திருமாலின் அவதாரமென்றும், அவன் நம் தெய்வமென்றும் நினைத்துப் பாராட்டும்படி ஆரியர் செய்து விட்டனர். இப்போது இச்சரித்திரம் பல ஊர்களில் வித்வான்கள் படிக்க, பலர் கூடிப் பக்தி சிரத்தையோடும் கேட்கப் பெறுகின்றது. அவ்வாறு படிக்கும் வித்வான்களும், கேட்கும் அறிஞர்களும் இக்கதையின் உண்மையை அறிய வேண்டிக் கொள்கின்றோம். அவர்கள் தயவு செய்து கீழே வரும் ஆராய்ச்சிக் கட்டுரையைக் கவனித்துப் படிக்கக் கேட்டுக் கொள்கிறோம். அவர்கள் படிப்பதெல்லாம் தமிழ் மகனாகிய பெரும் புலவர் கம்பர் பாடிய இராமாயணக் கதையே. கம்பர் தாம் பாடியுள்ள இராமாயணக் கதையைப் படிப்போர், அது முழுதும் உண்மைதானா என்பதை அறிந்து கொள்வதற்காக, வட மொழியிலுள்ள இராமாயணத்தையும் படிக்க வேண்டுமென்று அதன் பெருமையை முதலில் எடுத்தோதுகிறார். ஏனென்றால், கம்பர் தாம் பாடியுள்ள பாடல்களில் சிற்சில இடங்களில் தம் கதையை மாற்றி எழுதியிருக்கிறார். புலவர்களில் மிகச் சிறந்தவரிலொருவராகிய கம்பர் இக்கதையைப் பாடிய பின்னரே இது தமிழ் மக்கள் பெரும்பாலோரால் படிக்கப் பெற்றது. (நூலிலிருந்து பக்.10-11)

குரங்குகளோடு அவன் கூடி வாழ்ந்தது அவன் பெற்ற சாபப் பயனேனும், அவன் வாலியை மறைந்து நின்று கொன்று சகோதரத் துரோகியாகிய சுக்ரீவனோடு நட்பு கொண்டது. பரதனாகிய தனது சகோதரனுக்குத் துரோகம் நினைத்த அவ்விராமனுக்கு இயல்பானதே. இதுபோலவே சகோதரத் துரோகியாகிய விபீஷணனிடம் இராமன் நட்புக் கொண்டதும் அவனுக்கு இயல்பும் இராஜ தந்திரமுமாம். இவ்வாறாக இவ்விருவருடனும் நட்பு கொண்டதை இராமனுக்குப் பெருமையானதென மயங்கினார் சாமிநாதன். 3 பேராசைக்காரனும் சகோதரத் துரோகியுமாகிய விபீஷணனைத் தன்பக்கம் சேர்க்காதிருந்தால், இராமன் இராவணனைக் கொன்றிருத்தல் இயலாது.

படிக்க:
விழுப்புரம் கெடார் : மருத்துவர் இல்லாததால் இறந்து பிறந்த குழந்தை – ஆபத்தான நிலையில் தாய் !
விரைவில் வெளிவருகிறது ! கார்ப்பரேட் – காவி பாசிசம் புதிய நூல் !

“இராவணனுடைய நெஞ்சில் அம்பெய்து கொல்” எனக் கூறி அருகே நின்றானே பாவி விபீஷணன்! அநியாயம்! அநியாயம்! இன்று போய் நாளை வாவென இராமன் கூறியதாகக் கூறுவது, இராமனால் பற்றுடைய வால்மீகியும் கம்பரும் என்பதைச் சாமிநாதன் உணர்வாராக ! இனத்துரோகமும் இனத் துரோகச் சேர்க்கையும்தான் சாமிநாதனுக்குச் சமத்துவமாகத் தோன்றுகின்றன போலும். தனக்கு உதவி செய்த சடாயுவுக்கு மனமிரங்கியது உலக இயற்கையே. நல்லுணவு கிடையாது திண்டாடிய இராமனுக்குச் சபரி நல்லுணவு தர அதை அவன் ஆவலுடன் வாங்கி உண்டதும் அவனுக்கு ஒரு பெருமையே! நன்றாகச் சாப்பிட்டதை ஒரு பெருமையாகக் காட்டியது சுவாமிநாதனுக்கு ஒரு பெருமையே. இவற்றால் இராமனுடைய துரோகச் செயல்கள் இனிது புலனாகும். இராமன் சூத்திரனைக் கொன்றது அதிபாதகமே, அதனால், இராமன் சிறந்த அதர்மராஜனே என்பதும் விளங்குகிறது. இனி சீதையைப் பற்றி அவர் கூறுவதைக் கவனிப்போம்.

இராமன் சீதையின் கற்புடைமையில் அய்யுறுகிறான். சீதையை இராவணன் பற்றி மடியில் வைத்துப் போனதும் அவனுடைய வசமாக அவள் பத்துமாதம் வாழ்ந்ததுமே அவ்வையுறவுக்குக் காரணம். சீதையும் தன்னுடல் இராவணன் வசமிருந்ததை ஒப்புக் கொள்ளுகிறாள்.

இராமன் அரசாளும் நாளையிலே ஒரு வண்ணான் (சலவைத் தொழிலாளி) அந்நியனோடு வாழ்ந்த சீதையை இராமன் சேர்த்துக் கொண்ட இழிசெயலை மிக இழித்துப் பேசுகிறான். அதனால் மானம் பொறுக்க மாட்டாமல் இராமன், நிறைந்த கர்ப்பிணியாக இருந்த சீதையைக் காட்டுக்கு வஞ்சகமாக அனுப்புகிறான். இவ்விழிந்த செயலைப் பாராட்டிச் சாமிநாதன், “வண்ணான்தானே என்று அலட்சியம் செய்யாமல் அவனும் ஒரு பிரஜா உரிமையுடையவனெனக் கருதி, அவன் சொல்லுக்கும் தான் கட்டுப்பட வேண்டுமென்னும் காரணத்தால், தன்னுடைய மனைவியாகிய நாட்டின் அரசியைக் காட்டிற்கனுப்பிய நன்னடத்தைகளும்” என்று எழுதினார். பிரஜா உரிமை பற்றியும் அரசாளும் முறை பற்றியும், நன்னடத்தை பற்றியும் இச்சாமிநாதனுக்குள் அறிவு மிக அழகியதே. இவ்விழிந்த ஆராய்ச்சியையும் தமிழ்நாடு’ வெளிப்படுத்தியதே! அறிவாளர் நகையாடக் கூடிய இத்தகைய கட்டுரைகளை வெளிப்படுத்துவதிலும் நல்ல கட்டுரைகள் கிடையாது போலும். வெள்ளைத் தாள்களை மடித்துச் சந்தாதாரர்களுக்கு அனுப்பின் மிக நலமாக இருக்குமே.

” வண்ணான் ஒருவன் தன் மனைவியின் நடத்தையில் அய்யுற்றது காரணமாகத் தன் மனைவியை – அதிலும் பூரணக் கர்ப்பிணியை ஒருவன் காட்டுக்கு அனுப்பினானென்றால், அவனைப் போலும் அறிவில்லாத முழு மூடன் ஒருவன் இவ்வுலகத்தில் இதுகாறும் தோன்றியிருப்பானா என்பதைச் சாமிநாதன் சிந்திப்பாராக!

இராமன் இதனால் மிகவும் முழுமூடனாதல் வேண்டும். அன்றியும் இரக்கமற்ற பாவியுமாதல் வேண்டும். தன்னுடைய மனைவியும் பூரணக் கர்ப்பிணியுமாகிய சீதையென்ற ஒரு பெண்ணிடத்திலே இவ்வாறு மிருகத்திலும் கேடு கெட்ட மிருகம் போல நடந்துகொண்ட இராமன், தவம் செய்து கொண்டிருந்த ஒரு சூத்திரனுடைய தலையை வெட்டினானென்பது ஒரு ஆச்சரியமன்று. விவேகானந்தர் கூறுகிறாரென நம்பும் இடைச் செருகலெனும் நம்பிக்கையைச் சாமிநாதன் விட்டொழிப்பாராக! மேலும், சீதை கற்பிழந்தவளாகாதிருந்தால், அவள் கணவனாகிய இராமன் அய்யுற்றதோடு நில்லாமல் உறுதி கொண்டு அவளைக் காட்டுக்கு அனுப்பியிரானன்றோ ? அவரது பாரதக் கூற்றாராய்ச்சியை வரும்போது எழுதுவோம். இது இடனன்றாம். ( நூலிலிருந்து 83 – 84 )

நூல்: இராமாயண ஆராய்ச்சி ( பால காண்டம் )
ஆசிரியர்: பண்டித இ.மு. சுப்பிரமணியபிள்ளை

வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,
பெரியார் திடல், 50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.
தொலைபேசி: 8428 455 455
மின்னஞ்சல்: periyarbooks.in@gmail.com

பக்கங்கள்: 84
விலை: ரூ 20.00 (ஆறாம் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: periyar books

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட தேமுதிக விஜயகாந்த் : யார் காரணம் ? கருத்துக் கணிப்பு

ரசியலை நொறுக்குத்தீனி போல கொடுப்பதற்கு தமிழ் ஊடகங்கள் எப்போதும் காத்திருக்கின்றன. அந்த காத்திருப்பில் தேமுதிக விஜயகாந்த் ஒரு முக்கியமான தீனி. டாஸ்மாக்கும் சால்னா கடையும் பிரிக்க முடியாதது போல தமிழ் ஊடகங்களையும் கேப்டனின் நியூசையும் பிரிக்க முடியாது. இது இன்று நேற்று மட்டுமல்ல கடந்த 20 ஆண்டுகளாகவே நடந்து வரும் வரலாறு.

விஜயகாந்த் பிறந்த ஆண்டு 1952. அப்போது அந்த குழந்தையின் பெற்றோர்கள் பின்னொரு நாளில் நமது குழந்தைதான் வருங்கால முதலமைச்சர் என்ற முழக்கத்தினை கேட்கும் என்பதை நம்பியிருக்க மாட்டார்கள். இந்த பணக்கார விவசாய குடும்பத்தை சேர்ந்த அந்த குழந்தை வளர்ந்த விதம் ஒரு பண்ணையார் வீட்டு முறையில்தான்.

“தமிழகத்தில் வெண்தாடி வேந்தர் என அழைக்கப்படுபவர் தந்தை பெரியார் அவரைப் போலவே முற்போக்கு சிந்தனை உள்ளவர் என்பதால் இந்தியாவின் வெண்தாடி வேந்தர் என நரேந்திர மோடியை அழைக்கலாம்” என்று இந்த பொன்மொழியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தந்தவர் சாட்சாத் கேப்டன் தான். தாடிக்கு தாடி வெள்ளைக்கு வெள்ளை உருவத்திலேயே எதுகை சந்தத்தை கண்டுபிடித்தவர் இந்த விஞ்ஞானி. மோடியை முற்போக்கு சிந்தனை உள்ளவர் என்று சொல்வதற்கு ஒரு முரட்டு முட்டாள்தனம் வேண்டும். அது கேப்டனின் டி.என்.ஏ-விலேயே இருக்கிறது.

திரையுலகில் வாய்ப்பு பறிபோனதும் இனி அவர் கதாநாயகனாக நடிக்க முடியாது என்று ஆன அன்றே தமிழ் அரசியல் உலகிற்கு சிறு சனி பிடித்தது எனலாம். மரத்தையோ குளத்தையோ ஃபாரின் பூங்காக்களையும் சுற்றிச் சுற்றி நாயகியை தூக்கி டூயட் பாடுவதற்கு விஜயகாந்தின் வயிறு பெரும் பிரச்சனையாக இருந்ததால் (கோட்டு போட்ட போதும் கூட) அவருக்கே கூட இனிமேல் நாம் நாயகனாக நடித்தால் நானே கூட பார்க்க மாட்டேன் என முக்தி அடைந்து இருக்கலாம்.

1970-களின் இறுதியில் “இனிக்கும் இளமை” திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்வில் விஜயகாந்த் துவக்கினார். எண்பதுகளில் கோபம் கொண்ட சிவப்பு இளைஞனாக போராடினார். தொண்ணூறுகளில் அந்த சிவப்பு கரைந்து காக்கியாகி நேர்மையான போலீஸ் அதிகாரியாக உலா வந்தார், உரையாற்றினார். இரண்டாயிரத்தில் அந்த நேர்மை எக்ஸ்ட்ரா லார்ஜாக விரிந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடும் ராணுவ தளபதியாக பிரமோஷன் ஆனார். இறுதியில் விருதகிரி எனும் சூப்பர் கோமாளியாக அவரது திரையுலக வாழ்வு முடிந்து போனது.

படிக்க:
கேப்டன் பீரங்கியிலிருந்து வெடிப்பது குண்டா குசுவா ?
♦ விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

இதன் தொடர்ச்சியாக அவர் கட்சி ஆரம்பிக்கிறார். தற்போது கட்சியின் நிலையும்கூட விருதகிரியாகத்தான் வந்து நிற்கிறது. அவர் கட்சியை துவக்கியது ஒரு பெரும் சிரிப்பு திரைப்படத்திற்கு உரிய கதை கொண்டது. 2005 செப்டம்பர் 14 அன்று தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற எந்த பொருளுமற்ற வார்த்தைகளை அதுவும் குலதெய்வத்தின் முன் சீட்டு குலுக்கிப் போட்டு தெரிவு செய்து, ராகு காலம் – எமகண்டம் பார்த்துத்தான் இந்தக் கட்சியை விஜயகாந்த் ஆரம்பித்தார். ஆக இந்த கட்சியை ஆரம்பித்த நேரத்தையும் பெயரையும் ஜோசியர்களும் வாஸ்து நிபுணர்களும் தான் தீர்மானித்திருந்தார்கள்.

இடையில் கெடுவாய்ப்பாக அவரது திருமண மண்டபம் மேம்பாலம் கட்டுவதற்காக கொஞ்சம் இடிக்கப்பட்டது. அது இடிபடாமல் காக்க நிறைய பேரிடம் கெஞ்சிப் பார்த்தார் விஜயகாந்த். அது முடியவில்லை என்ற பொழுது என் மண்டபத்தை இடிக்கிறாயா என்ன செய்கிறேன் பார் என்று கருணாநிதிக்கு சவால் விட்டு கட்சியை ஆரம்பித்தார். ஒரு கல்யாண மண்டபம் ஒரு அரசியல் கட்சி தோன்றுவதற்கு காரணமாக இருந்தது என்ற மாபெரும் வரலாறு தமிழகத்தில் மட்டும் தான் நடக்க முடியும்.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கேப்டன் ஏழு ஏழரை அல்லது எட்டு சதவீத வாக்குகளை பெற்றார். உடனே பார்ப்பன ஊடகங்களும் துக்ளக் சோ போன்ற தரகர்களும் இந்த வெற்றியை மாபெரும் வெற்றியாக சித்தரித்து கேப்டனை உசுப்பி விட்டனர். அப்போதே அவரை அதிமுக வசம் கூட்டணியில் சேர்க்க வைக்க இந்த தரகர்கள் பெரும் பாடுபட்டனர்.

அந்த தேர்தலில் கேப்டன் சரக்கடித்துவிட்டு பேசுகிறார் என்ற உண்மையை ஜெயலலிதா சொல்ல விஜயகாந்தும் நீ தான் கூட இருந்து ஊட்டி கொடுத்தாயா என்று பதிலடி கொடுத்தார். இத்தகைய மாபெரும் தத்துவ போராட்டங்கள் தான் அன்றைய பத்திரிக்கைகளின் கவர் ஸ்டோரியாக தமிழக மக்களின் பொழுதைத் தின்றது.

அவரது 8 சதவீத வாக்குகளை பார்த்து திமுக அதிமுக போன்ற கட்சிகளில் செட்டிலாக முடியாத பண்ருட்டி போன்ற பழம் பெருச்சாளிகள் கேப்டன் கட்சியில் வந்து குவிந்தனர். அப்போது விஜயகாந்த்தோடு பிரச்சாரக் கூட்டங்களில் பயணம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆருக்கு பிறகு கேப்டனுக்கு தான் தமிழக மக்கள் ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் திரண்டு வரவேற்பதாக ஆனந்தவிகடனில் பதிவு செய்திருக்கிறார். இது போதாதா கேப்டன் மற்றும் கேப்டன் குடும்பம் குப்புறப் படுத்துக் கொண்டு கனவு காண்பதற்கு?

படிக்க:
நேற்று அண்ணாயிசம் ! இன்று அண்ணியிசம் !!
புரட்சி அண்ணி பிரேமலதா – தமிழகத்தின் புதிய சீக்கு !

2006 சட்டமன்றத் தேர்தலில் அவர் விருத்தாசலத்தில் வென்று பாமக முகத்தில் கரியைப் பூசினார். இதுவும் ஒரு மாபெரும் சாதனை என்பதை நாம் ஒத்துக் கொண்டாக வேண்டும். அந்த அளவுக்கு கேப்டனின் திரைப்பட வசனங்களை உண்மையென நம்பிய பரிதாபத்திற்குரிய மக்கள் இருக்கத்தான்  செய்தார்கள்.

இடையில் பண்ணையார் தனது வீட்டு பண்ணையார் அம்மா பிரேமலதாவை மகளிர் அணி தலைவியாக அல்லது கட்சிக்கே செயல் தலைவர் போன்று முன்னிறுத்தினார். அதுபோக கேப்டனின் மச்சான் சதீஷ் இளைஞர் அணித் தலைவராக பொறுப்பேற்றார். ஆக இந்த பண்ணையார் குடும்பம் மொத்த கட்சியையும் கையில் வைத்துக் கொண்டு இயங்கியது. மற்ற கட்சிகளில் வாரிசு முறை என்பது தந்தை அல்லது தாய் மண்டையைப் போட்ட பிறகோ அல்லது ஓய்வு பெற்ற போதோ நடக்கும். இங்கு மட்டும்தான் ஒரே ஷாட்டில் ஒரு  குடும்பம் ஒட்டு மொத்த கட்சியையும் கைப்பற்றிக் கொண்டது.

இருப்பினும் இவர்கள் தலைமைக் கழகம், தலைமைக் கழகத்தின் அறிவிப்பு, அது இது என்று ஒரு தொழிற்முறை கழகம் போல பேசுவார்கள். இதையெல்லாம் ரசிக்கும் அளவுக்கு தமிழக மக்களிடம் நகைச்சுவை உணர்வு மிளிரவில்லை என்பது ஒரு சோகமான உண்மை.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !கேப்டனின் பண்ணையார் குடும்பம் மட்டுமல்ல அந்தக் கட்சியே மூடநம்பிக்கையில் தினமும் மூன்று முறை குளித்துவிட்டுத்தான் கட்சி பணி ஆற்றும் என்பது ஒரு கொசுறு செய்தி. சான்றாக சேலத்தில் விஜயகாந்த் குடும்பத்தினர் தமது கைக்காசை போட்டு நடத்திய மாநாட்டிற்கு போவோம். அங்கே மாநாட்டுத் திடலில் பனமரத்துப்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் கருப்பு நிற ஆட்டுக்கடா பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதே போன்று வேறு சில பகுதிகளில் மாநாடு சிறப்பாக நடைபெற்றதற்காக 12 கிலோ எடை கொண்ட கருப்பு ஆடுகளை வெட்டி ரத்தத்தை மண்ணில் விட்டு பலி கொடுத்தனர்.

பிறகு ஜெயலலிதாவுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தார். எதிர்க்கட்சி தலைவராக ஆனார். அப்போதே அவர் அடுத்த தேர்தலில்ல தான்தான் முதலமைச்சர் என எண்ணியிருக்க வேண்டும். இது தண்ணி போடாமலே வந்த கருத்து என்பதை நினைவில் கொள்க. பிறகு புரட்சித் தலைவியோடு புரட்சி கேப்டன் சண்டை போட்டார். 2014 தேர்தலில் மக்கள் நல கூட்டணியாக காமெடி செய்தார். தற்போது 2019 பாராளுமன்ற தேர்தலில் என்ன செய்வது என்று அவருக்கே தெரியவில்லை. ஏனெனில் அவரது அரசியல் வாழ்க்கையில் ஆக்சன் டூயட் காமெடி சோகம் டிராமா என அனைத்தும் முடிந்து விட்டதால் வர இருக்கின்ற எபிசோடில் என்ன செய்வது என தெரியவில்லை.

கேப்டனின் தற்போதைய திரிசங்கு நிலைக்கு புரட்சி அண்ணி பிரேமலதா ஒரு முக்கியமான காரணம். கேப்டன் எப்போதெல்லாம் நிதானம் இழக்கிறாரோ அப்போதெல்லாம் கடிவாளத்தை இந்த புரட்சி அண்ணிதான் எடுத்துக் கொள்வார். யோகா தினத்தில் ஆசனங்களை செய்யாமல் விஜயகாந்த் திணறிய போதும் சரி, பொதுக்கூட்டங்களில் உணரும் போதும் சரி இவர்தான் சரி செய்வார். ஆனால் விஜயகாந்துக்கு இருக்கும் ஒரு மக்கள் தொடர்பு கூட இந்த புரட்சி அண்ணிக்கு கிடையாது. ஒரு வகையில் இவர் தேமுதிகவின் ஜெயலலிதா என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !“தமிழகத்தின் வசந்த காலமே, எங்கள் விழாக்கோலம் தமிழ் வீர மங்கையே, புரட்சி அண்ணியே என்று தேமுதிகவினர் இவருக்கு ஆங்காங்கே பிளக்ஸ் பேனர் வைத்து உசுப்பேத்தினர். தற்போது தேமுதிக என்ற கம்பெனி புரட்சி அண்ணியின் ரிமோட் கண்ட்ரோலில் தான் உள்ளது. சென்ற தேர்தலின்போதும் இவர்தான் நட்சத்திர பேச்சாளர்.

இந்த நிலையில் சென்ற தேர்தலில் டங்குவார் அறுந்து கிழிந்தாலும் கேப்டன் ஃபேமிலி தாங்களும் ஒரு கமிஷன் வாங்கக் கூடிய அளவுக்கு வலிமை உள்ள கட்சி தான் என்று நினைக்கின்றனர். எனவேதான் இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவது என திமுக அதிமுக என்று மாறி மாறி மாபெரும் ஆராய்ச்சி செய்து சதியாலோசனைகள் செய்து தரகர்கள் பலரை இறக்கி முயற்சி செய்தனர்.

அவர்களுக்கு தேவை சீட்டு மற்றும் நோட்டு. இதில் யார் அதிகம் தருவார்கள் என்பதில் கேப்டன் கம்பெனி ரொம்பவும் மிகையாக நடந்து கொண்டது. தனது கம்பெனியில் எவ்வளவு வியாபாரம் நடக்கிறது, எவ்வளவு வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் என்பதைத் தாண்டி ஒரு பெட்டிக் கடைக்காரர் ஒரு சூப்பர் மார்க்கெட் கடை போல நினைத்துக்கொண்டு கடன் வாங்கினால் எப்படி இருக்கும்?

படிக்க:
சில பைன் மரங்களையும் ஒரு காகத்தையும் குறி பார்த்து அழித்த மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 !

பாஜகவை பொருத்த வரைக்கும் கேப்டனின் ஓட்டு 8 சதவீதத்தில் இருந்து இரண்டு மூன்று என குறைந்தாலும் அது தங்களுக்கு தேவை, எப்படியாவது தமிழகத்தில் சில பல சீட்டுகள் கூட்டணியோடு ஜெயிக்க வேண்டும் என்று வெறியாக இருக்கின்றனர். ஆகவேதான் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கேப்டன் வீட்டுக்கு சென்று சால்வை போட்டு அவரிடம் பலமுறை பேசியிருக்கிறார். பதிலுக்கு கேப்டன் பேசினாரா என்று கேட்காதீர்கள். கேப்டன் சேரில் அமர்ந்து இருந்தார் என்றாலும் பேச்சுவார்த்தையை சதீஷும் புரட்சி அண்ணியும்தான் செய்திருக்கிறார்கள். கூடவே இவர்கள் திமுகவிலும் ஒரு நூல் விட்டு பார்த்திருக்கிறார்கள் இப்படி மாறி மாறி பேசுவது குறித்து வெட்கம் சூடு சொரணை இவர்களுக்கு இல்லை. அந்த வகையில் இந்த கோமாளித்தனத்தின் தர்க்க ரீதியாக கேப்டனின் கட்சி “எங்கே செல்லும் இந்த பாதை” என்னும் முக்தி நிலைக்கு வந்திருக்கிறது.

இருப்பினும் கடைசியில் கேப்டன் குடும்பம் அதிமுக கூட்டணியில் பாஜக-வின் உத்தரவிற்கு இணங்க மூன்றோ நாலோ சீட்டில் ஒதுங்கி விடும். ஆனால் ஒரு தேர்தல் கூட்டணிக்காக இப்படி சந்தி சிரிக்கும் அளவுக்கு நடந்து கொண்டது குறித்து இவர்களுக்கு கூச்சமே இல்லை. தேர்தல் அரசியலில் இத்தகைய கூத்துக்கள் நடக்கும் போது பாஜக செய்யும் சதிச் செயல்களின் பரிமாணம் எப்படி இருக்கும்? விஜயகாந்தோ, பாமக ராமதாசோ இன்று மோடி துதி பாடுகிறார்கள். நாளை மோடி மீண்டும் வெற்றி பெற்று வந்து முற்போக்காளர்களை வேட்டையாடினால் இவர்களும் எச்.ராஜாவோடு இணைந்து நம்மை தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவார்கள்!

கேள்வி : சொந்த செலவில் தேமுதிக விஜயகாந்த் சூனியம் வைத்துக் கொண்டதற்கு  யார் காரணம் ?

கேப்டன் குடும்பம்
பாஜக
அதிமுக
திமுக
ஊடகங்கள்

(பதில்களில் இரண்டைத் தெரிவு செய்யலாம்)

*****

டிவிட்டரில் வாக்களிக்க:

*****

யூ-டியூபில் வாக்களிக்க:

சொந்த செலவில் தேமுதிக விஜயகாந்த் சூனியம் வைத்துக் கொண்டதற்கு  யார் காரணம் ?

 

 

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாய் புதிய கலாச்சாரம் நூல்கள் !

“தமிழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் இலவசமாய் வழங்க உதவுங்கள் !” என வாசகர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். அதனை ஏற்று,  ரமேஷ்குமார் என்ற வாசகர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு 50 புதிய கலாச்சாரம் இதழ்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

பச்சையப்பன் கல்லூரியில் செயல்பட்டு வரும் வாசகர் வட்டத்தின் சார்பில், கடந்த 06.03.2019 அன்று அறிவியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய “காலம்” புத்தகத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் மாணவர்கள், பேராசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அந்த விவாத நிகழ்வு நிறைவு பெற்ற பின்னர், வாசகர் வட்ட உறுப்பினர்களாகிய மாணவர்களுக்கு புதிய கலாச்சாரத்தின் பிப்ரவரி,2019 நூலின் 50 படிகள் வழங்கப்பட்டது.

மாணவர்கள் அனைவரும் வெளியீடுகளை ஆர்வத்துடன் தாங்களாகவே முன்வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப்  பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

“ஸ்க்ரோலிங்குக்கு மட்டும் இளைஞர்கள் பழகியுள்ளனர்… வாசிப்புப் பழக்கம் குறைந்து போயுள்ளது… இப்போதெல்லாம் யார் படிக்கிறார்கள்…” போன்ற அவநம்பிக்கை குரல்களுக்கு மத்தியில் ஹாக்கிங்ஸ் எழுதிய நூலை விவாதிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதும், அதுவும் அரசுக் கல்லூரியில் இருக்கிறார்கள் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி !

இது போன்று பல்வேறு கல்லூரிகளில் முற்போக்கு வாசிப்பு வட்டம் நடத்தும் மாணவர்களையும், புதிதாக படிக்கத் தொடங்குபவர்களை ஊக்குவிப்பது நமது கடமை. இந்த மாதத்தில் மேலும் இரண்டு வினவு வாசகர்கள் தஞ்சை குந்தவை கல்லூரி மற்றும் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்களை இலவசமாக வழங்க ஆதரவு தெரிவித்து பணம் அனுப்பியுள்ளனர்.அது குறித்த செய்திகளை பின்னர் தெரிவிக்கிறோம். நீங்களும் உங்கள் பங்களிப்பாக புதிய கலாச்சாரம் வெளியீடுகளை மாணவர்களுக்கு வழங்குங்கள். நீங்கள் விரும்பிய கல்லூரிகளை தெரிவு செய்தும் பணம் அனுப்பலாம். கீழே உள்ள இணைப்பில் முழு விவரங்கள் உள்ளன. ஆதரவு தாருங்கள்!

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து லண்டனில் கூட்டம் நடத்தும் டிஐஜி வீ. பாலகிருஷ்ணன்

டந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதியில் ஆரம்பித்து எட்டு நாட்களுக்கும் மேலாக தமிழகத்தை மட்டுமன்றி இந்தியா முழுமையையுமே குலுக்கிய ஜல்லிக்கட்டுப் போராட்டம், பாரதிய ஜனதா கட்சியின் இயக்கத்தில் செயற்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆணையின் கீழ் தமிழ்நாடு காவல் துறையால் மூர்க்கமாக ஒடுக்கப்பட்டது.

பொதுச் சொத்துக்களையும், பொதுமக்கள் குடியிருப்புக்களையும் போலிஸ் படையே அழித்துத் துவம்சம் செய்த காணொளிகள் வெளியாகின. அப்போது களத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் சாதாரண காவல் துறை காவலர்கள் மட்டுமல்ல; உயர்மட்ட அதிகாரிகளும் தான். அப்போது காவல்துறை ஆணையாளராகவிருந்த வீ.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், போலிஸ் வன்முறைக் கும்பலோடு களத்தில் நின்று வன்முறைகளில் ஈடுபட்ட காணொளிகள் இன்றும் வலைத் தளங்களில் காணக்கிடைக்கின்றது.

எந்த வலுவான காரணமும் இன்றி, நீதிமன்ற உத்தரவைவும் மீறி, தமிழக அரசால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த திருமுருகன் காந்தி ஐரோப்பாவில் தங்கியிருந்து தூத்துக்குடிப் படுகொலைகளை ஐ.நா மனித உரிமை ஆணையகத்திற்கு எடுத்துச் சென்றார். அவ்வேளையில் அங்கு சென்ற வீ.பாலகிருஷ்ணன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடத்திய இலங்கை அரசைத் தண்டிப்பதற்கு தன்னிடம் திட்டம் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் நாட்டிற்குச் சென்ற திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பாலகிருஷ்ணன் செயற்பட்டாரா என்பது குறித்த தகவல்கள் எம்மிடமில்லை.

இதே பேர்வழி கடந்த 2018-ம் ஆண்டு செப் 22 -ம் தேதி, இந்தியர்கள் அதிகமாக வாழும் சவுத்தோல் பகுதியில் இலங்கைத் தமிழர் உணவு விடுதியொன்றில் ஒன்று கூடல் ஒன்றை நடத்தியிருக்கிறார். மேற்படிப்பிற்காக லண்டனில் தங்கியிருக்கும் பாலகிருஷ்ணன், “இனப்படுகொலையும் புலம்பெயர் தீர்வும்” என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்றை தனது மேற்படிப்பு பல்கலைகழகத்தில் சமர்பித்துள்ளார்.

படிக்க:
ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை
♦ இலங்கையை ஊழல் – போதை தேசமாக மாற்றிய ஆட்சியாளர்கள் !

இனப்படுகொலைக்கான தீர்வு அதில் அடங்கியிருப்பதாகவும் அதற்கான நடைமுறைத் திட்டங்களை முன்வைப்பதாகவுமே தனது ஒன்று கூடலை நடத்திய பாலகிருஷ்ணனின் பின்னாலும் புலம்பெயர் தமிழர்கள் சிலர் அணிவகுப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

ஈழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே இந்திய அரசினதும் அதன் உளவுத்துறையினதும் தலையீடு முள்ளிவாய்கால் வரை தொடர்ந்தது. அமைதிப்படை என்ற பெயரில் நடத்திய இராணுவ ஆக்கிரமிப்பு யுத்தம் மட்டுமன்றி ஈழப் போராட்டத்தை இந்திய பிற்போக்கு மதவாதிகளின் கரங்களில் கொண்டு சேர்ப்பது வரைக்குமான இந்திய அதிகாரவர்க்கம் மற்றும் அதன் அரசியலின் ஒரு முகவரே பாலகிருஷ்ணன். தவிர கலைஞர் கருணாநிதியின் மரணத்தின் பின்பான அரசியலில், சீர்திருத்தவாத இயக்கங்களான திராவிடர் இயக்கங்களுக்கு எதிரான அரசியலை முன்வைப்பதற்கு மதவாதிகளோடு “தமிழ்த்” தேசியவாதிகள் ஒன்றிணைவதையும் இந்தப் பின்புலத்திலேயே ஆராயவேண்டும்.

நன்றி : இனியொரு

மார்ச் 8 இலங்கையில் உழைக்கும் மகளிர் தினம் – அனைவரும் வருக !

இலங்கையில் சர்வதேச மகளிர் தினம் !

னைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் பெண்களே அணிதிரள்வீர் !

ஏற்பாடு :
பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு
சமூக மேம்பாட்டுக் கழகம்
சமூக மேம்பாட்டு இணையம்

பொதுக்கூட்டம்:
இடம்: கவிஞர் முருகையன் கேட்போர் கூடம்,
தேசிய கலை இலக்கியப் பேரவை,
இல. 62, கே.கே.எஸ். வீதி,
கொக்குவில் சந்தி.

காலம்: 10-03-2019 பிற்பகல் 3:30 மணி

மலையகத்தில் :
இடம் : ஹட்டன் நகர சபை மண்டபம்
காலம் : 09-03-2019 சனிக்கிழமை காலை 09.30 மணி

சர்வதேச மகளிர் தினம்…

ண்டுதோறும் மார்ச் 8, சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகின்றது. 1975-ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை இந்த தினத்தை சர்வதேச பெண்கள் தினமாக அறிவிருத்திருந்த போதும், இந்நாளின் வரலாறு 1917-ம் ஆண்டு சுமார் இரண்டு லட்சம் ரஷ்யப் பெண்கள், ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த நிகழ்வை நினைவுகூரும் நாளாகும். ஜார் ஆட்சிக்காலத்தில் முதலாம் உலகப்போரின் விளைவாக , பல்லாயிரக்கணக்கான ரஷ்ய ஆண்கள் மடிந்தனர்; காணாமல் ஆக்கப்பட்டனர்; பஞ்சம் தலைவிரித்தாடியது; இதனால் தமது கணவனை போருக்கு பலிகொடுத்துவிட்டு குழந்தைகள் பசியில் வாடுவதை பொறுக்க முடியாத பெண்கள், “ரொட்டிக்காகவும், போருக்கு எதிராகவும்” என்ற தொனிப் பொருளை மையமாகக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பெண்கள் எழுச்சியின் தொடர்ச்சியாகவே மாபெரும் ரஷ்ய அக்டோபர் புரட்சி ஏற்பட்டது. அதற்கு நன்றிகூறும் விதமாக, லெனின் தலைமையிலான சோவியத் அரசு மார்ச் 8-ம் திகதியை மகளிர் தினமாக அறிவித்து ரஷ்யப் பெண்களை கெளரவித்தது.

சோவியத் ஆட்சி
சோவியத்தில் ஆட்சி அதிகாரத்தில் அனைவருக்கும் வாய்ப்பு

இன்று பெண்கள் அனுபவிக்கும் மகப்பேற்று விடுமுறை, பாலூட்டும் தாய்மாருக்கான நேரச்சலுகை உட்பட பல்வேறு உரிமைகள் ரஷ்ய சோஷலிச புரட்சி எமக்கு பெற்றுத் தந்த உரிமைகளாகும்.

ஆனாலும், தமது பல்வேறு உரிமைகளுக்காக உலகெங்கிலுமுள்ள பல்வேறு நாடுகளிலும் பெண்கள் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல மாதங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்; அதே போல யுத்தத்தில் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தரும்படி போராடிக் கொண்டிருக்கின்றனர்; தமது பூர்வீக வாழ்விடங்களை மீட்டுத் தரும்படி கேப்பாபிளவு, சிலாவத்துறை மக்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றனர்; புத்தளம் பிரதேசத்தில் கொழும்பு, வெளிநாட்டு திண்மக் கழிவுகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்;

இந்த எல்லா போராட்டங்களிலும் சளைக்காமல் ஓர்மத்துடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பது பெண்களே….

கேரளாவில் தமது உரிமைகளைக் காக்க இலட்சக்கணக்கான பெண்கள் ஒருங்கிணைந்து நடத்திய மனித சங்கிலி

10-லிருந்து 50 வயதுடைய பெண்களையும் ஐயப்பன் கோயில் தரிசனத்திற்காக அனுமதிக்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் கூட , வழிபாட்டுக்கு சென்ற பெண்களுக்கு ஆணாதிக்க மதவாத சக்திகள் தாக்குதல் நடத்தினர். இதற்கெதிராக, தமது வழிபாட்டு உரிமைக்காக, சுமார் 5 லட்சம் கேரள பெண்கள் திரண்டெழுந்து மனித சங்கிலி போராட்டத்தை நடத்தி தமது உரிமைகளை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்விலிருந்து புலனாவது என்ன?

சட்டங்களில், காகிதங்களில் இருக்கும் பெண்களின் உரிமைகள் நடைமுறைக்கு வர வேண்டுமானால் கூட பெண்கள் போராட வேண்டியிருக்கிறது. பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் வெறும் காகிதங்களில் மட்டுமே இருக்கின்றன.

பல்கலைக்கழக விரிவுரையாளரான போதநாயகி, ஹட்டன் GSM தனியார் வைத்தியசாலை தாதி சாந்தினி உட்பட பல பெண்கள் குடும்ப மற்றும் வேலையிடத்தில் நிகழும் வன்முறைகளால் அத்துமீறல்களால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

குடும்ப உறுப்பினர்களினால்தான் பெண்களுக்கெதிரான அதிக வன்முறைகள் இடம்பெறுகின்றன. அவை முறைப்பாட்டிற்கு கூட வருவதில்லை. பொருளாதார உழைப்பிலும் குடும்ப உழைப்பிலுமாக பெண்கள் இரட்டைச் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதுபற்றி முதலாளித்துவ சட்டங்கள் கண்டுகொள்வதில்லை.

படிக்க:
♦ உழைக்கும் மகளிர் தினம் – சர்வதேச கருத்துப் படங்கள்
♦ புத்தகத்தைப் பார்த்து புதுக்கோலம் போடுவதல்ல மகளிர் தினம் !

அதைப்பற்றி பேசினால் முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இருப்பிற்கு அச்சுறுத்தலாகும் என்பதால், பெண் விடுதலை என்பதை மேட்டுக்குடி பெண்களின் பார்வையில் அவர்களின் கோரிக்கைகளை மட்டுமே முன்னிறுத்துகின்றனர். உழைக்கும் பெண்களின் கோரிக்கைகள் புறம்தள்ளி விடுகின்றனர்.

உண்மையில் உழைக்கும் பெண்களின் விடுதலை சமூக விடுதலையுடன் இணைந்திருக்கிறது. உழைக்காத பெண்கள் என எவருமே இல்லை; என்ன சில பெண்களிற்கு உழைப்பிற்கான ஊதியம் கிடைக்கிறது, பணப்பெறுமதி இருக்கிறது. பணப்பெறுமதியற்ற குடும்ப உழைப்பில் பெண்களின் ஆயுளும் ஆரோக்கியமும் தேய்ந்து மடிந்து போவதை எவரும் கண்டுகொள்வதில்லை.

1990-களில் வெனிசூலா நாட்டின் இல்லத்தரசிகள் , தமது குடும்ப உழைப்பையும் சமூக உழைப்பாக கருதி தமக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர்.

குடும்ப உழைப்பில் 8 மணி நேரம் என்ற நேர வரையறை இல்லை. காலை கண் விழித்ததிலிருந்து உறங்கச் செல்லும்வரை ஓய்வற்ற உழைப்பில் பெண்கள் சலிப்பின்றி உழைப்பது பற்றி எந்த கவலையும் யாருக்கும் இல்லை.

இன்று பெண்கள் பொருளாதார உழைப்பிலும் ஈடுபடுகின்ற போதிலும் குடும்ப உழைப்பு எனும் இரட்டைச் சுமையாலும் அல்லாடுகின்றனர். அதை போல பணியிடங்களில் ஆண்களுக்கு நிகரான சம்பளம் வழங்கப்படாமல் சுரண்டப்படுகின்றனர். பாலியல் வசவுகள் , பாலியல் அத்துமறல்கள் என பணியிடங்களில் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இவற்றிற்கு எதிர்பபு தெரிவித்து குரல் உயர்த்துபவர்கள் தனிப்பட்ட பழிவாங்கல்கள் மூலம் அச்சுறுத்துகின்றனர். இதற்கு பயந்து பல்வேறு வன்முறைகள் வெளிவருவது கூட இல்லை.

இலங்கையில் யுத்தத்தின் காரணமாக சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தலைமையேற்ற குடும்பங்களில் நிரந்தர வேலை இன்மை, வறுமை காரணமாக பெண்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நுண்கடன் நிறுவனங்கள் பெண்களை மேலும் சுரண்டுகின்றனர். நுண்கடன் நிறுவனங்களின் அத்துமீறல்களால் பல பெண்கள் தற்கொலையின் விளிம்பிற்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

உழைக்கும் பெண்களே…

உலகெங்கிலுமுள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு சட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட தீர்வுகள் சொற்பமே…

அவை பெண்களின் ஓர்மமான விடாப்பிடியான போராட்டங்களின் மூலமே பெற்றுக்கொள்ளப்பட்டன. பெண்கள் அமைப்பாவதும் , அவ்வமைப்புக்குள் தமது அனுபவங்களை , துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தீர்வுகளை தேட முயற்சிப்பதுமே எமக்கான விடுதலைக்கான திறவுகோலாகும்.

“நீங்கள் நடக்கத் தொடங்கும் வரை உங்கள் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது உங்களுக்கே தெரியாது” என்ற ரோசா லக்சம்பர்க் கூற்றின் படி, எமது விடுதலைக்காக எமது கால்கள் நகரும் போதுதான் எம்மைச் சுற்றிலுமுள்ள அடிமைச் சஙகிலிகளை நாம் உணரத் தொடங்குவோம்.

அவ்வாறு உணரத் தொடங்கும் போது எம்மை சரியான திசையில் வழிநடத்த அமைப்பாக்கம் பெறுவதுதான் பெண்களின் இன்றைய அடிப்படைத் தேவையாகும்.
பெண்களை அடக்குமுறைகளின் கட்டுப்பாட்டிற்குள் தனித்தனி தீவாக வைத்திருக்கும் வரை நமக்கு விடுதலை என்பது எட்டாக் கனியே…

படிக்க:
♦ மதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்
♦ தாய்மை அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றுவோம் ! பெண்கள் உரைகள் – படங்கள்

திருமணமானபின், தமது உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளக் கூட தோழிகளின்றி, மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் பெண்கள் அநேகம்.
வெளிப்படையாக பேசிக்கொள்ள யாருமின்றி போவது மாபெரும் துன்பம்.
இதைக் களைய பெண்கள் முன்வர வேண்டும். தம்மை அமைப்பாக்கிக் கொண்டு , தமக்கு எதிரான குடும்ப, சமூக, அரச வன்முறைகளை இனம்கண்டு களைய, போராட அணிதிரள வேண்டும்.

பெண் விடுதலைச் சிந்தனைகள் அமைப்பானது பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளுக்கும் எதிராக அமைப்பாக்கம் பெற்றுப் போராட, உங்களை அறைகூவி அழைக்கிறது.

“சும்மா கிடைக்க சுதந்திரம் என்பது சுக்கா மிளகா கிளியே” என்ற பாரதிதாசனின் கேள்விக்கேற்ப எமக்கான விடுதலையை நாம் சும்மா பெற்றுவிட முடியாது.

இதுவரை பெறப்பட்ட அனைத்து உரிமைகளும் யாரோ போராடி எமக்கு வாங்கித் தந்தவைகளே… எமக்கும் எமது அடுத்த சந்ததிக்குமான விடுதலைக்கான போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

அமைப்பாக்கம் பெற்ற போராட்டங்கள் மூலம் போராடுவோம்!
விடுதலைக்கான கதவுகளைத் திறப்போம்!

முகநூலில்:
பெண் விடுதலைச் சிந்தனைகள் அமைப்பு

மோகனதர்ஷினி, ஒருங்கிணைப்பாளர்

நாம வீட்டை லீசுக்கு எடுப்போம் ! பாஜக அதிமுக கட்சியையே லீசுக்கு எடுத்துட்டான் !

கருத்துப்படம் : வேலன்

திமுக- பாஜக-பாமக நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஆரம்பித்து முதல் பொதுக்கூட்டம் சென்னை கிளாம்பாக்கத்தில் நேற்று (06.03.2019) கோடிகளைக் கொட்டி கோலாகலமாக நடைபெற்றது. பொதுக்கூட்டதிற்கு செல்லும் சாலையெங்கும் கட்சிக்கொடிகள், தோரணம், வாழை மரங்கள் என்று தேசிய நெடுஞ்சாலையையே ஆக்கிரமித்திருந்தார்கள்.

சாலையில் இப்படி வைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் அவ்வப்போது சொன்னாலும் அது ஆளும் கட்சிகளுக்கு பொருந்தாது போலும். மக்களோ சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள மர நிழலைத் தேடி அலைந்து கொண்டிருக்க, அவர்களை இங்கு நிற்கக் கூடாது, அங்கு நிற்கக் கூடாது என்று போலிசு விரட்டிக் கொண்டிருந்தது.

பொதுக்கூட்ட மைதானத்தின் நுழைவில் தடுப்பரண்கள் போல் பேனரை வைத்திருந்தனர். விஐபி செல்வதற்கு தனி வழி, மக்கள் செல்வதற்கு தனி வழி என்று அமைத்திருந்தார்கள். மைதானத்தில் உள்ளே கண்ணை பறிக்கும்படி கட் அவுட்கள்… மிதமிஞ்சி இருந்தன. சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் இரண்டு அடிக்கு பத்து போலீசு என்று காக்கி உடைகள் அதிகம் தென்பட்டன.

பல இடங்களில் மெட்டல் டிடெக்டரை கையில் வைத்துக் கொண்டு போலீசார் அலைந்து கொண்டிருந்தனர். கூட்டத்திற்கு உள்ளே செல்லும் மக்கள் மிகுந்த கெடுபிடிக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேடையில் அதிமுக தலைவர்கள் வழக்கத்தை விட அதிக இறைச்சலோடு முழங்கிக் கொண்டிருந்தனர். இதுதான் கொடுத்த காசுக்கு மேலே கூவுவது போலும்.

கூட்டத்திற்குள் சென்று போலிசின் வளையத்திற்குள் மாட்டிக் கொள்ளாமல் கூட்டத்திற்கு வெளியிலேயே அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தவர்களிடம் இந்த கூட்டணி கட்சிகள், தேர்தல் குறித்து கேட்டோம்.

முனுசாமி, சாலவாக்கம், உத்திரமேரூர், அதிமுக

முனுசாமி

“நான் உத்திரமேரூர் சாலவாக்காத்தில் இருந்து வாரேன். இவ்ளோ நேரம் கூட்டத்திற்குள்தான் குந்தியிருந்தேன். ஹெலிகாப்டர்ல வந்த மோடி என் கண்ணு ரெண்டுலயும் மண்ண வாரி கொட்டிட்டார். இடம் முழுக்க தூசு பறந்துச்சு. கண் எரிச்சல் தாங்க முடியல. அதான் வெளியில் ஓடி வந்துட்டேன்” என்றார்.

அவரிடம் “உங்களோடு கூட்டணி வைத்துள்ள பிஜேபிகாரர்கள் உங்கள் ஊரில் இருந்து வந்திருக்கிறார்களா?” என்று கேட்டதும், அவர் சிரித்தார். “அப்படி எல்லாம் இல்லங்க. ஒருத்தர் ரண்டு பேர்தான் அந்த கட்சியில சேருறாராங்க. அவங்கள எங்கத் தேடி புடிக்கிறது” என்றார்.  “நீங்கள் சொல்றது நேர்மாறாக இருக்கே. உங்க தலைவர்கள் பிஜேபியை புகழ்கிறார்களே” என்றோம். “அவங்க பிஜேபிகாரன்கிட்ட பொட்டி வாங்கிட்டாங்க. அதனால புகழத்தானே செய்வார்கள்” என்றார் வெள்ளந்தியாக.

அவரிடன், “இங்கு கொடியும், தோரணமும் அதிமுகவிற்கு இணையாக பிஜேபிக்கும் பறக்கிறதே…. ஜெயலலிதா இருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா” என்று அம்மா அடிமைத்தனத்தை நினைவுபடுத்தினோம். அதற்கு அவர் “இந்த எடப்பாடி ஒபிஎஸ் எல்லாம் ஜெயலலிதாவிற்கு ஈடாக முடியுமா? இவங்க அனுபவிக்கிற பதவியே அவங்க (பிஜேபி)  தயவுல தானே இருக்குது. இவங்க வாங்குன பொட்டியில ராமதாசும் விருந்து மொய் வாங்கிட்டாரு. வீணாப்போன விஜயகாந்த இவங்க இப்ப ஹீரோவாக்கிட்டாங்க. என்னமோ  நடக்குது.”

“எங்களுக்கு ஒரு வண்டிக்கு ரூ.12000 தான் கொடுத்தாங்கன்னு சொல்றாங்க. மொத்தம் 52 பேர் வந்தோம் தலைக்கு 200 ரூபா, பிரிஞ்சி சாதம், இரண்டு டீ வாங்கி கொடுத்தாங்க. மேலிடம் கொடுத்தது ரூ.12000 தானான்னு நாங்க ஒன்றியத்த கேட்டு செக் பண்ண போறோம். எவ்ளோ வந்தாலும் எங்க ஆளுங்களும் எங்க வயித்துல தான் அடிப்பானுங்க. நான் இப்படி பேசுறதால ரெட்டை இலைக்கு ஓட்டு போட மாட்டேன்னு நெனக்காத. நான் பொறந்ததுல இருந்து ரெட்ட இலைதான் என் கண்ணுக்கு தெரிஞ்சது. எவன் பணம் கொடுத்தாலும் வாங்கிப்பேன். ஃபுல் மப்புல என்ன இட்டுனு போனாலும் ஓட்ட ரெட்ட எலையில தேடி குத்திடுவேன்” என்றார்.

வெங்கடேசன், நடத்துனர், அரசு போக்குவரத்து கழகம். அதிமுக

வெங்கடேசன் ( இடதுப்புறத்திலிருந்து இரண்டாமவர்)

நான் படிக்கும்போதே அதிமுக மாணவரணியில் சேர்ந்தேன். என் உடம்பில் ஊறிப்போனது அதிமுக கட்சி. இப்போது இருக்கும் எடப்பாடி ஓபிஎஸ் என்ன பன்னாலும் அம்மாவுக்கு இணையாக முடியாது. அம்மா பிஜேபி-ய தண்ணி காட்டுனாங்க. அந்த மாதிரி இந்த தலைவர்களுக்கு தைரியம் கிடையாது. இவங்க தலைவரா இருக்க அவங்க தானே (பிஜேபி) முழுக்காரணம். அதற்கு நன்றி காட்டனும் இல்லையா? பணம் வேற பிஜேபிகாரன் கொடுத்திருக்கிறதா சொல்றாங்க. எல்லாம் சேர்ந்து செய்யுது. உண்மைய சொல்லனும்னா பிஜேபிகாரன் இல்லன்னா கட்சி இந்நேரம் காணாம போயிருக்கும். இல்லன்னா தினகரன் கைப்பற்றி இருப்பாரு” என்றார்.

பாஸ்கர், பொதுக்கூட்டங்களில் கட்சிக்கொடி விற்பவர்.

முப்பது வருடத்திற்கு மேலாக இந்தத்தொழில் செய்கிறேன். திருவண்ணாமலை-செஞ்சி அருகே என் பூர்வீகம். சிறு வயதில் 50 ரூபாயுடன் சென்னை வந்தேன். பல வேலைகள் செய்து கடைசியாக இந்தத் தொழிலில் செட்டில் ஆயிட்டேன். தமிழகத்தின் எல்லா கட்சி தலைவர்களின் படங்களையும் எப்போதும் ஸ்டாக் வைத்திருப்பேன். தலைவர்கள் காரில் கட்டும் கொடி, படங்களைத்தான் விற்பேன். அதுதான் அதிகம் விற்பானையாகும். கொடி, துண்டு எல்லாம் வேஸ்ட். மூட்டை தான் சுமக்கனும். வியாபாரம் இருக்காது.

அதிமுக, திமுக, பாமக, விசிக, காங்கிரசு, கொடிகளோடு இப்போது பிஜேபி கொடியும் சேர்த்து விட்டேன். அந்த அம்மா இருந்த வரையில் நல்லா வியாபாரம் ஆகும். இப்போது பாதியாக குறைந்து விட்டது.  எடப்பாடி ஓபிஎஸ் போன்றோரின் படங்களை யாரும் கேட்டும் வாங்குவதில்லை. கொடுத்தாலும் வாங்குவதில்லை.

கடைசியாக கன்னியாகுமரியில் நடந்த பிஜேபி மோடி கூட்டத்திற்கு போயிருந்தேன். அங்கு லாரி லாரியாக தொப்பி, தண்ணிர், டி. சர்ட் எல்லாம் கொடுத்தனர். அதை முறையாக பிரித்துக் கொடுப்பதற்க்குக்கூட அவர்களிடம் ஆட்கள் இல்லை. கிடைத்ததுவரை லாபம் என்று சிலரே பொட்டி பொட்டியாக வாரி சென்றனர்.

பிஜேபியே சொந்தமாக கட்சி கட்டி வேலை செய்தால்கூட மக்களிடம் இந்த மவுசு வந்திருக்காது. இந்த எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் தான் அதை தலையில் தூக்கி வச்சி விக்கிறாங்க. எங்களை மாதிரி பொழப்பு பாக்குறாங்க. பிஜேபி இல்லை என்றால் இவர்களும் இல்லை. அதற்கு நன்றிக் கடன் செய்கிறார்கள்.

நாமெல்லாம் வீட்டை லீசுக்கு எடுத்து தான் குடி இருப்போம். பிஜேபிகாரனுங்க கட்சியையே லீசுக்கு எடுத்துட்டானுங்க. கூட்டம் காட்டுறானுங்க” என்றார். ஒரு போட்டோ எடுத்துக்கலாமா என்றதும்… “நான் எல்லா கட்சி கூட்டங்களுக்கும் போயிதான் என் பொழப்ப நடத்துறேன்… போட்டொ மட்டும் எடுக்காதிங்க.

பரஞ்சோதி,  பாமக, சேலம்.

பரஞ்சோதி

நான் பக்கா பாமகக்காரன். எங்க கட்சியினர் இந்த சுற்றுப்புற மாவட்டத்துல இருந்து மட்டும் வந்தா போதும்னு சொன்னதால எங்க கூட்டம் அதிகம் வர்ல. நான் சேலத்துல இருந்து டிக்கெட் எடுக்காமத்தான் வந்தேன். டிக்கெட் எங்கன்னு டி.டி.ஆர் வந்து கேட்டான். என்னோட டிக்கெட்ட மோடிகிட்ட கேளு. அவருதான் என்ன கூட்டத்துக்கு கூப்பிட்டாரு என்றேன். திரும்ப வரும்போதும் நீ…தான் வருவியா.. அப்பவும் டிக்கெட் எடுக்க மாட்டேன்னு சொன்னேன். அசந்துட்டான்.

அவரு சரி போ.போ.. அங்க போயி கீழ உக்காருன்னு சொன்னார்.

நாங்க பிஜேபிகூட கூட்டு வச்சதால உங்களுக்கு கேவலமா இல்லையான்னு கேக்குறாங்க… எங்களுக்கு அதுமாதிரி எதுவும் இல்ல. ராஜீவ்காந்தி சாவுக்கு திமுககாரன்னு காரணம்னு சொல்லிட்டு அவனுங்கள ஓட ஓட வெரட்டினான் காங்கிரசுகாரன். அப்போ சேலத்துல பாமககாரன் வீட்டுலதான் திமுககாரன் ஒளிஞ்சிக்கினானுங்க. ஏன்னா காங்கிரசுகாரன் எங்க வீட்டுல வந்தா நாங்க வெட்டுவோம்னு திமுககாரனுக்கும் , காங்கிரசுகாரனுக்கும் தெரியும். எங்களால திமுககாரன் உயிர் பொழச்சானுங்க. கடைசியில திமுககாரனோட கொடிய தான் காங்கிரசுகாரன் வெட்டினான். அவனுங்க கூடவே திமுககாரனுங்க கூட்டணி வச்சிருக்கானுங்க .. நாங்க வச்சா என்ன தப்பு…” என்றார்.

வி.சி.குமார், சென்னை ராயபுரம்.
2006 ராயபுரம் சட்ட மன்ற தொகுதி பிஜேபி வேட்பாளர்.

வி.சி.குமார்

கொடியை கையில் ஏந்தியபடி வந்துகொண்டிருந்தவரிடம், இந்தக் கூட்டணி வெற்றி பெறுமா என்றோம்..

அவரோ… அடுத்த முறையும் மோடி தான் பிரதமர் என்றார்.

தமிழ்நாட்ல ஜெயிக்குமா என்றதும்….

இங்க..என்று இழுத்துக்கொண்டே… எங்க இலக்கு அடுத்த சட்ட மன்றத்தேர்தல்தான் என்றார்.

மோடி பல தடவை அதிமுக கூட்டத்திற்கு வந்தும் 5 சீட் தான் கொடுத்திருக்கிறார்களே ஏன் என்றோம்….

அவர் ஏதோ பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் திடீரென வந்த பிஜேபி ஆட்கள் அவரை தடாலடியாக அழைத்து சென்றனர்.

கூட்டத்திற்கு வந்திருந்த பிஜேபிகாரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிகம் போனால் ஆயிரம் பேர் பிஜேபி தொப்பி, கொடியுடன் குறுக்கும் நெடுக்குமாக திரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் பங்குக்கு கருப்பு சூத்திரர்களை திரட்டி வந்திருந்தனர். தாமரை தொப்பி, தாமரை விசிறியோடு  ஜோடித்து இறக்கி விட்டிருந்தனர். ஒரு சிலர் மையிலாப்பூர் கோவிலுக்கு போவதுபோல் பட்டு வேட்டி சரசரக்க மாமிகளுடன் உற்சாகமாக மோடியைப் பார்க்க வந்திருந்தனர்.

பாமக கட்சியின் இளைஞர்கள் உள்ளூர் அளவில் தங்களுக்கும் அதிகார தாழ்வாரங்களை திறந்து விட்ட சந்தோசத்தில் கூட்டத்தில் மிதந்தனர். அதிமுக கூட்டணியில் உள்ள கிருஷ்ணசாமி, பெஸ்ட் ராமசாமி, ஏ.சி சண்முகம், ஜான் பாண்டியன், தனியரசு, பூவை ஜெகன் மூர்த்தி, சேதுராமன் இப்படி பட்ட சாதித் தலைவர்களின் தொண்டர் படையை எங்கும் காணமுடியவில்லை.

பொதுவாக அதிமுக சார்பாக வந்திருந்த முதியவர்கள் நூறு நாள் வேலைக்கு வருவது போலவே சிவனே என்று உக்காந்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் இதற்கு முன் போன பல மாநாட்டு அனுபவங்களை பேசிக்கொண்டு அதற்கு வாங்கிய பணம், சாப்பாடு இப்போது வாங்கிய பணம், சாப்பாடு என்று பேசிக்கொண்டு இருந்தனர்.

கொஞ்சம் தள்ளி கும்பலாக இருந்த பெண் தொழிலாளிகள், வயதானவர்களிடம் மண்டைக்காயும் வெயிலில் வந்திருக்கிறீர்களே மோடியை உங்களுக்கு புடிக்குமா என்றோம்.

ஆமா… எங்களுக்கு புடிக்கும் என்று கேலி செய்து சிரித்தனர். உடனே….. வாங்கடி பேர் கொடுக்கனுமாம்.. கணக்கெடுக்கிறார்கள் என்று ஓடினர். கூட்டத்தில் மற்றொரு பெண் ஏன்…டி நம்ம வண்டிய எடுக்க மாட்டானாம். டீசல் போடுறதுக்கும் பணம் கொடுக்கலயாம்..இட்னு வந்தவனையும் காணோம். நாம எப்ப போறது டி.. என்று விசாரித்தவாறே நகர்ந்தனர். இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களின் அதிகபட்ச அரசியலே பேசிய காசைக் கொடுத்து, நல்ல முறையில் உணவு தந்து, பத்திரமாக நேரத்திற்கு ஊர் போய்ச் சேர முடியுமா என்றே இருந்தது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த பல அதிமுக தொண்டருக்கும் அப்பாவி மக்களுக்கும் அதிமுக+பாஜக கூட்டணி என்பது பெரிய அதிர்ச்சியாக இல்லை. அவர்களைப் பொருத்தவரை பாஜக என்பது ஒரு கட்சி. அந்த கட்சியால் நமக்கு என்ன ஆதாயம் என்ற அளவில்தான் சிந்திக்கிறார்கள். அவர்கள் உலகில் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் என்பதைத் தாண்டி கட்சி, அரசியல் மற்றும் கோ பேக் மோடிக்கு எல்லாம் இடமில்லை.

கூடுதலாக பாமக மற்றும் இதர கட்சிகள் சேர்ந்திருப்பதால் இக்கட்சிகளின் மக்கள் பாஜகவை பிழைப்புக்கான கட்டப் பஞ்சாயத்து தலைவனாக பார்க்கிறார்கள். பாரதிய ஜனதா மக்கள் விரோத கட்சி, ஒரு மதவெறிக் கட்சி அதனை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற அரசியலை இந்த மக்களிடம் உருவாக்க நாம் தீவிரமாக முயல வேண்டும். இணையத்தில் இருந்து களத்தில் இறங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்யாமல் “கோ பேக் மோடி”  முழக்கத்தை நடைமுறையில் நாம் சாதிப்பது கடினம்.

– படம், செய்தி: வினவு செய்தியாளர்கள்.

ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !

ஜார்க்கண்டில் அதானி குழுமத்தால் ஒரு மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட இருந்தது. அதற்காக நிலம் கையகப்படுத்துவதில் ஆதிவாசிகளை அதானி நிறுவனம் மிரட்டுவதாக பல புகார்கள் எழுந்தன. இதையடுத்து இந்த சட்டத்திற்குப் புறம்பான நிலம் கையகப்படுத்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக கடந்த வாரம் செய்தி வந்தது.

நேற்றைய (06-03-2019) செய்தி என்னவென்றால் அந்த மின் உற்பத்தி நிலையத்தை ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதானியின் முந்திரா மின் நிலையம் (உதாரணப் படம்)

இதில் சிறப்பு என்னவென்றால் முன்பு, அரசின் எந்தக் குழுவால் அதானி குழுமத்தின் சிறப்பு பொருளாதார மண்டல கோரிக்கை நிராகரிக்கப்பட்டதோ, இப்போது அதே குழு அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது!

இந்த மின் நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் முழுவதும் பங்களாதேஷ்-க்கு மட்டுமே என்ற அடிப்படையில் இந்த மின் நிலைய கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டது. உள்நாட்டு பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்யும் மின் நிலையங்கள் அமைக்க, நிலம் கையகப்படுத்துவது எளிது. ஆனால், வெளிநாட்டிற்கு மட்டுமே மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த போதிய சட்டங்கள் இல்லை. இதனாலேயே அதானி குழுமம் கையகப்படுத்திய நில உரிமையாளர்கள், ஆதிவாசிகள், நீதிமன்றம் சென்று வழக்கு தொடர முடிந்தது.

படிக்க :
♦ அருந்ததி ராய் உரை : காவி அடிப்படைவாதமும் சந்தை அடிப்படைவாதமும் ஒன்றுதான் !
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள் | ஆடியோ

இந்த சிக்கலை சமாளிக்கவே இப்பொழுது ஒரே ஒரு மின் நிலையத்தை மட்டும் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்துள்ளது மோடி அரசு. சிறப்பு பொருளாதார மண்டலம் என அறிவிப்பதில் அதானி குழுமத்திற்கு நிறைய நன்மைகள் உள்ளன.

சாதாரண தனியார் நிறுவனம் என்றால் அவர்களால் வலுக்கட்டாயமாக நிலத்தை கையகப்படுத்த முடியாது. அதுவே அதானி குழுமம் சந்தித்துவந்த பிரச்சினை. இப்பொழுது சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசு நிலத்தை கையகப்படுத்தி அதானி குழுமத்திடம் தரும்.

கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலங்கள்

ஒரே ஒரு மின் நிலையம் மட்டும் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படுவது எனக்கு தெரிந்து இதுவே முதல் முறை. “Bending backwards” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் இது அதைவிட பெரிது. இதை நம் தமிழில் சொல்ல வேண்டும் என்றால் வடிவேலு வசனமான ‘படுத்தே விட்டானய்யா’ என்றுதான் சொல்ல வேண்டும்.

விமான நிலையங்களை வழங்குவதாகட்டும் மற்ற வேலைகளுக்கு அரசை பயன்படுத்துவது ஆகட்டும் அதானி குழுமத்துக்கு எது சிறந்ததோ அதை இந்த அரசு தெளிவாக செய்து வருகிறது!


கட்டுரையாளர் : அருண் கார்த்திக்
செய்தி ஆதாரம் : தி இந்து பிசினஸ் லைன் , ஸ்க்ரால்

திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் | பொ. வேல்சாமி

0

நீ கோவிலில் நுழைந்தால் உன் காலை வெட்டுவேன் (1932) – இது இறைவன் ஆணை

ண்பர்களே…

பொ. வேல்சாமி
ஒரு தமிழன் இன்னொரு தமிழனை கோவிலில் நுழைந்தால் காலை வெட்டுவேன் என்று சொல்லுவது தமிழ்க் கலாச்சாரமாகவும் இந்திய கலாச்சாரமாகவும் பார்க்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. கோவில் நுழைவை ஆதரித்த காந்தியை அவமரியாதையாகப் பேசவும் செய்தனர்.

இதே நேரத்தில் கோவிலில் நுழைவதற்கு தமிழர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தும் வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு ஈ.வெ.ரா பெரியாரின் தோழர் பி.சிதம்பரம்பிள்ளை பி.ஏ.பி.எல் எழுதிய (1935) சட்ட விவரங்கள் அடங்கிய நூலும் வெளிவந்தது. இந்த நூலை அம்பேத்காரும் பிற அறிஞர்களும் வரவேற்ற செய்திகளும் பதிவாகி உள்ளன. இந்த இரண்டு நூல்களையும் நீங்கள் பார்த்திருக்கலாம். பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த இரண்டு நூல்களுக்கான இணையதளத் தொடர்ப்பை கொடுத்துள்ளேன்.

*****

திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் – 1

ண்பர்களே…

ஆங்கில ஆட்சியாளர்களுக்கும் ஐரோப்பிய பாதிரிமார்களுக்கும் தமிழ் மக்களின் மேல் நல்ல மரியாதையை உண்டாக்குவதற்கு காரணமான நூல் திருக்குறள். இத்தகைய சிறந்த நூலை ஐரோப்பிய பாதிரிமார்கள் தங்களுடைய தாய்மொழியில் மொழிபெயர்க்க ஆர்வம் கொண்டு அதனை செய்தனர். அத்தகையவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எல்லீஸ், துறு பாதிரியார், சார்லஸ் கிரால், ஜி.யூ.போப் போன்றவர்கள்.

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களான தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், துரை அரங்கனார், மு.வரதராசன் போன்றவர்களை உருவாக்கிய மதிக்கத்தக்க பேராசிரியர் “மளிகைக் கடை கோ.வடிவேலு செட்டியார்” (வடிவேலு செட்டியார் தன்னுடைய 32 வயது வரை மளிகைக் கடை நடத்திவிட்டு தன் கடைக்கு வந்த தமிழ்ப் புலவர்களுடான உறவால் தமிழ் கற்க ஆர்வம் கொண்டு தமிழ் கற்று மகாவித்துவானாகப் பலரால் போற்றி மதிக்கப்பட்டவர்.)

இத்தகைய பெருமை வாய்ந்த பேராசிரியர் வடிவேலு செட்டியார் திருக்குறளை பரிமேலழகர் உரையுடன் 1904-ல் வெளியிட்டார். திருக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரையை விளக்கியும், அதில் உள்ள நுட்பமான பகுதிகளுக்கு தன்னுடைய விளக்கவுரையை எழுதியும் முதல்முதலாக ஒரு விளக்கவுரை பதிப்பை வெளியிட்டார்.

படிக்க:
♦ உடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ ஊஃபா – என்.எஸ்.ஏ தேச துரோக சட்டங்களை நீக்கு ! வலுக்கும் எதிர்ப்புகள் !!

இந்த நூல் பலராலும் மதிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதால் மீண்டும் 1919-ல் அதனை மறுபதிப்பாகக் கொண்டு வந்தார். அப்படி கொண்டு வரும்போது அந்த மறுபதிப்பில் தன்னுடைய நண்பர் ஒருவர் திருக்குறள் 1330 பாடல்களுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து கொடுத்ததாகவும் அந்த நண்பர் தன்னுடைய பெயரை மொழிபெயர்ப்பாளர் என்று குறிப்பிட வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் மறுத்துவிட்டதாகவும் வடிவேலு செட்டியார் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் அந்த மொழிபெயர்ப்பு 1840-லும் 1852-லும் துறு பாதிரியார் செய்ததை கிட்டத்தட்ட முழுமையாகக் காப்பியடித்தாக உள்ளது. துறு பாதிரியார் மொழிபெயர்ப்பு செய்தது 630 பாடல்கள் மட்டுமே. மீதி உள்ள பாடல்கள் வேறு ஒரு பாதிரிமாரிடம் இருந்து அபேஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் துணைவேந்தராக இருந்தபோது தன்னுடைய ஆசிரியரான வடிவேலு செட்டியாரின் பதிப்பான திருக்குறளை மறுபதிப்பு செய்தார். 3 பாகங்களாக அந்நூல் வெளிவந்துள்ளது. இந்த மொழிபெயர்ப்பு துறு பாதிரியாருடையது என்பது, சிறந்த அறிஞரான தெ.பொ.மீ. கண்ணிலும் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: தயவுசெய்து கொடுக்கப்பட்டுள்ள படங்களை கவனமாகப் பார்க்கவும்.

நன்றி: முகநூலில்  பொ. வேல்சாமி