சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள் : உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை
சுற்றுச்சூழல் சட்டங்கள் குறித்த இந்த நூல் முயற்சி, சூழல் ஆர்வலர்களுக்கு சட்டத்தை அறிமுகப்படுத்தும் எளிய முயற்சியே. எனவே, இது முழுமையானதல்ல. சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு சட்டம் குறித்த ஒரு அறிமுகத்தை கொடுப்பது மட்டுமே இந்த முயற்சியின் நோக்கம். (நூலின் அறிமுகப்பகுதியிலிருந்து…)
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் காடுகளும், நீர்நிலைகளும், மற்ற இயற்கை வளங்களும் அழிக்கப்படுகின்றன. மேலும் இயந்திரமயமாதல், நகரமயமாதல், தொழில்மயமாதல் உள்ளிட்ட காரணங்களால் நிலம், நீர், காற்று உள்ளிட்ட அனைத்தும் மாசுபடுத்தப்படுகின்றன. அரசு, தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரின் பொறுப்பற்ற போக்கால் ரசாயனக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், அணு (உலை)க் கழிவுகள் போன்ற துறை சார்ந்த கழிவுகளும் பெருகி மனிதர்களோடு இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிரிகளின் உயிருக்கும், நல்வாழ்வுக்கும் உலை வைத்துக் கொண்டிருக்கின்றன.
அரசு அமைப்புகளோ, பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிப்பதையும், சூழலை மாசுபடுத்துவதையும் ஆதரிக்கும் போக்கிலேயே தொடர்ந்து செயல்படுகின்றன. இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் அவை போன்ற தவிர்க்க முடியாத சில அமைப்புகளின் நெருக்குதல் காரணமாக சுற்றுச்சூழல் சட்டத்தை பெயரளவில் இயற்றிவிட்டு அவற்றை செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளுவதிலேயே அரசு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

நீதித்துறையிலும் பெரும்பாலான நீதிபதிகள் பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுச்சூழலை பாதிப்பதில் தவறில்லை என்ற கருத்தையே கொண்டுள்ளனர். ஆனால் இத்தகைய நீதிபதிகளுக்கு இடையிலும்கூட வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி உள்ளிட்ட நீதிபதிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அயராது பாடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எம்.சி. மேத்தா போன்றவர்களும் சுற்றுச்சூழல் சட்டவியலை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்கு வகித்துள்ளனர்.
இத்தகைய நன்முயற்சிகள் நடைபெற்று வந்தாலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முதன்மை பொறுப்பு கொண்ட அரசுத்துறைகள் சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற சட்டவிரோத அநீதிகளுக்குத் துணைபோவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் வந்தநிலையில்தான் பாலாறு பாழ்பட்டுபோனது. வேலூர் பகுதியின் நிலம் தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் நஞ்சானது. கரூர், திருப்பூர் போன்ற இடங்களின் நிலத்தடி நீர்கூட மாசுபட்டது. இவை சில உதாரணங்கள்தான். சொல்வதற்கு இன்னும் ஏளாளமிருக்கிறது.
இந்த சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கு அரசுத்துறைகளும், தனியார் துறையில் உள்ள பெருவணிக நிறுவனங்களும் முதன்மை காரணமாக இருந்தாலும், அப்பகுதியில் வசிக்கும் குடிமக்களுக்கு இதில் பங்கே இல்லை என்று முற்றிலுமாக புறம் தள்ளிவிட முடியாது. சுற்றுச்சூழல் குறித்த புரிதலின்மை, புரிந்திருந்தாலும் சீர்கேடுகள் நடக்கும்போது செயலற்று இருத்தல், சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு எதிராக போராடுபவர்களை ஏளனமாக பார்த்து அவர்களை தனிமைப்படுத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளும் குற்றச்செயல்களே! இவை மறைமுகமாக அல்ல … நேரடியாகவே சூழலை சீரழிப்பவர்களுக்கு உதவி செய்யும் செயல்களாகும். (நூலிலிருந்து பக்.14-15)
… இந்தியாவில் 1972-ம் ஆண்டில் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டமும், 1974-ம் ஆண்டில் தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டமும், 1981-ம் ஆண்டில் காற்று (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டமும், 1986-ம் ஆண்டில் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு)ச் சட்டமும் உருவாக்கப்பட்டன.
தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டம் – 1974
நகர்ப்புற, தொழில்மய உலகில் உருவாகும் மாசுகளை கட்டுப்படுத்த உருவான முதல் சட்டமாக, தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டம் 1974ஐக் கூறலாம். இந்த சட்டத்தில்தான் ”மாசுபடுதல்” என்றால் என்னவென்று வரையறை செய்யப்பட்டது.
இதன்படி, ”பொது உடல்நலம் அல்லது பாதுகாப்பு அல்லது வீட்டு, வணிக, தொழில், வேளாண் அல்லது மற்ற சட்டமுறையானச் செயல்களின் பயன்களுக்கு, அல்லது விலங்குகள் அல்லது தாவரங்கள் அல்லது நீரில் வாழும் உயிரினங்கள் ஆகியவற்றின் வாழ்க்கைக்கு அல்லது நலத்திற்கு தொல்லை ஏற்படுத்தக்கூடிய அல்லது கேடு அல்லது ஊறு விளைவிக்கும் வகையில் தண்ணீரின் தூய்மையைக் கெடுத்தல் அல்லது தண்ணீரின் இயற்பியல், வேதியியல் அல்லது உயிரியியல் கூறுகளை மாறச் செய்தல் அல்லது நேரடியாக அல்லது மறைமுகமாக சாக்கடை அல்லது தொழில்கழிவு (trade effulent) பொருள்களை அல்லது ஏதாவது ஒரு திரவ, வாயு அல்லது திடப்பொருளை தண்ணீரில் வெளியேற்றுதல் ‘மாசுபடுதல்’ ஆகும்.
இவ்வாறு தண்ணீர் மாசுபடுதலை தடுக்க மத்திய அளவிலும், மாநில அளவிலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை உருவாக்க இந்த சட்டம் வழிவகுத்தது. (நூலிலிருந்து பக்.30-31)
காற்று (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டம் 1981
காற்று மாசுபாடு என்பது உண்மையில் நம் நாட்டில் வேறு எங்கும் இல்லாத சமத்துவத்தை நடைமுறைப்படுத்துகிறது. ஏழை, பணக்காரன் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும் அம்சம் காற்று மாசுபாடுதான்.
காற்றில் இயல்பாகவே சல்பர் டை ஆக்ஸைட், ஹைட்ரஜன் சல்பைட், கார்பன் மோனாக்ஸைட் போன்ற தீய விளைவுகளை ஏற்படுத்தும் வாயுக்கள் உள்ளன. இவற்றோடு புறவெளியிலிருந்து வெளியாகும் காஸ்மிக் கதிர்கள் காற்றுவெளியில் புகுகின்றன. நம்மை சுற்றியுள்ள மண்ணிலிருந்து ரேடியம், யுரேனியம், தோரியம் போன்றவை கதிரியக்கத்தை உருவாக்குகின்றன. வாகனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை மேலும் பல நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுப் பொருட்களை வெளியிட்டு காற்றை மாசுபடுத்துகின்றன. எனவே காற்று மாசுபாட்டை நெறிப்படுத்த வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது.
இந்த சட்டத்தின்படி, ”மனித உயிர்களுக்கு அல்லது மற்ற உயிரினங்களுக்கு அல்லது தாவரங்களுக்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு ஊறுவிளைவிக்கும் அல்லது ஊறு விளைவிக்கும் வகையில் அடர்த்தியாக காற்று வெளியில் தங்கியிருக்கும் இரைச்சல் உள்ளிட்ட ஏதாவது ஒரு திட, திரவ, அல்லது வாயுப்பொருள் காற்று மாசுக்களை உருவாக்கும் பொருள்” என வரையறை செய்யப்பட்டது. … ஏறத்தாழ தண்ணீர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினை ஒத்த அதிகாரங்களே இந்த காற்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் வழங்கப்பட்டன. (நூலிலிருந்து பக்.37-38)
சுற்றுச்சூழல் (பாதுகாப்பு)ச் சட்டம், 1986
தண்ணீர் மற்றும் காற்று ஆகியவற்றில் ஏற்படும் மாசுக்களை கட்டுப்பட்டுத்த வாரியங்கள் உருவாக்கப்பட்டாலும், மீதமிருக்கும் வேறுவகையான மாசுக்களை கண்டறிந்து, அவற்றையும் தடுப்பதற்கான தேவை இருப்பது உணரப்பட்டது.
படிக்க:
♦ அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?
♦ அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !
இதைத் தொடர்ந்து 1986-ம் ஆண்டில் ”சுற்றுச்சூழல்(பாதுகாப்பு)ச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில் தண்ணீர், காற்று உள்ளிட்ட அனைத்து வகையான மாசுக்களை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைப்பதற்கான வழிவகை கண்டறியப்பட்டது.
மேலும் இந்த சட்டத்தில்தான், ”சுற்றுச்சூழல்” என்ற சொல்லுக்கான வரையறை முதல்முறையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ”தண்ணீர், காற்றும் மற்றும் நிலம் மேலும் மனித உயிர்கள், மற்ற உயிருள்ள படைப்புகள், தாவரங்கள், நுண்ணுயிர்கள், சொத்து ஆகியவற்றோடு இவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பு ஆகிய அனைத்தும் இணைந்ததே சுற்றுச்சூழல்” ஆகும்.
நூல் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள் :
உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை
ஆசிரியர் : வழக்குரைஞர் சுந்தரராஜன்
வெளியீடு : பூவுலகின் நண்பர்கள்,
106/1, கனகதுர்கா வணிக வளாகம், கங்கையம்மன் கோயில் தெரு,
வடபழனி, சென்னை – 600 026.
தொலைபேசி எண்: 044 – 4380 9132 | 98416 24006.
மின்னஞ்சல் : info@poovulagu.org
பக்கங்கள்: 96
விலை: ரூ 70.00 (முதற் பதிப்பு)
வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277













சூப்பர் ஹிட் சினிமா, கதாநாயகனை கொண்டாடும் சமூகம்… இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, அர்ஜுன் ரெட்டிபோல ஒரு கணவன் அல்லது காதலனுடன் ஒரு பெண் வாழ நேர்ந்தால் எப்படியிருக்கும் என யாரேனும் சிந்தித்ததுண்டா? அப்படி சிந்தித்தவர்கள், அப்படிப்பட்ட ஒரு ஆணழகனு-டன் (சதை முறுக்கேறிய, பார்த்தவுடன் காதல் கொள்ளத்தூண்டும் ஒருவரை ‘ஆணழகன்’ என சொல்கிறார்கள் இல்லையா?) வாழ நேர்ந்தால் அந்த வாழ்க்கை ‘ஸோ ரொமாண்டிக்’ என குதூகலிக்கக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இந்தப் பதிவு.
அதன் பிறகுதான் கதாநாயகன் அர்ஜுன் ரெட்டியை சந்திக்கிறேன். நான் பணியாற்றிய நிறுவனத்தில் அர்ஜுன் ரெட்டி, வேறொரு பிரிவில் வேலைப் பார்த்தார். ஒரு புராஜெக்ட்டுக்காக இருவரும் ஒன்றாக வேலைப் பார்க்க நேர்ந்தது. அர்ஜுன் ரெட்டி நல்ல உயரம்; முறுக்கேறிய உடல்வாகு; நன்றாகப் பாடுவார். ஆரம்பக்கட்ட ஈர்ப்புக்கு இதுபோதுமானது என்கிறது அறிவியல். எனக்கும் அப்படித்தான்.
அர்ஜுன் ரெட்டி எப்போது படுக்க அழைத்தாலும் படுக்க வேண்டும். உங்கள் விருப்பம், நிராகரிப்பு குறித்து அங்கே எந்தவித அனுசரணையும் இருக்காது. உங்களுக்கு மாதவிடாய் காலம் என்பது பற்றியோ, பகலாக இருக்கிறதே என்பது பற்றியோ, நள்ளிரவு 3 மணி, ஆழ்ந்த உறக்கத்துக்கு போய்விட்ட 12 மணிக்கு எழுப்பி உறவுக்கு அழைத்தாலும் நீங்கள் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் நாகூசும் வார்த்தைகளால் நீங்கள் அர்ச்சிக்கப்படுவீர்கள். உங்களுக்கு யாருடனோ கள்ளத்தொடர்பு இருப்பதாக உறுதிபடுத்தப்படும். சில சமயங்களில் அடியும் விழும். இது ரொமாண்டிக்காக இருக்கும் என உங்களால் மெய்சிலிர்க்க முடிகிறதா?








வெளிப்படையான பயங்கரவாதிகளே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு உறுப்பினர்களாக ஆகியிருக்கிறார்கள். பாஜக உறுப்பினர்கள் கீழவையில் பதவிப் பிரமாணம் எடுக்கும் போது ஜெய் ஸ்ரீராம் என முழங்குகிறார்கள்!
இவை அனைத்தும் வால்மீகி இயற்றிய ராமாயணத்திலிருந்து சிறிதோ, பெரிதோ மாறுபட்டும் இருக்கின்றன. வால்மீகி ராமாயணத்திலேயே முதல் காண்டமான பால காண்டம், இறுதி காண்டமான உத்தர காண்டம் இரண்டும் வால்மீகியால் எழுதப்பட்டதல்ல என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மற்ற காண்டங்களோடு உள்ள மொழிநடையும், கதையிலும் மாறுபாடு இருப்பதால் அப்படி கூறுகின்றனர்.












வீட்டு வளர்ப்பு விலங்குகள் என்பவை நமது தேவைக்காக நம்மால் வளர்க்கப்படுபவை. அவற்றை இறைச்சிக்காக கொன்று உண்பதில் பிழையில்லை. ஏனெனில் வீட்டு விலங்குகள் எவையும் பாரம்பரியமாக இயற்கையாக வீட்டு விலங்காகத் தோன்றி வளரவில்லை. நாய், ஆடு, மாடு, கோழிகள், வாத்துகள் அத்தனையும் காட்டு விலங்குகளில் இருந்து மனிதனால் கைப்பற்றப்பட்டு பின்னர் புதிதாக பழக்கப்படுத்தப்பட்டு வீட்டு விலங்குகளாக தோற்றுவிக்கப்பட்டவை. குரங்கு மூதாதையர் காலத்தில் இருந்தே மனிதன் தனது உணவுத் தேவைக்காக இந்த விலங்குகளை வளர்த்து வந்தான். சமீபத்தில் வந்த ஆல்பா என்ற ஹாலிவுட் திரைப்படம் ஓநாய் எப்படி மனித குலத்தின் வீட்டு நாயாக மாற்றப்பட்டது என்பதை சுவாரசியமாக விளக்குகிறது.
அடுத்து வள்ளலார் ஏன் அசைவ உணவை சாப்பிடக் கூடாது என்றார், எனக் கேட்டிருக்கிறீர்கள். வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஜீவகாருண்யம் பேசியவர். சத்திய ஞான சபையை நிறுவியவர். எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம், தான் தோற்றுவித்த மார்க்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். ஆகவே இவர் அன்றைய பார்ப்பன மற்றும் உயர்சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார்.
இன்று தமிழகத்தில் இருக்கும் சிறு நிறுவனங்கள், டீக்கடைகள், ஓட்டல்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் அனைத்திலும் வெளி மாநில மக்களே பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு உரிமையாளர்களாக உள்ள தமிழர்களே, இக்கடைகளில் தமிழர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதை ஏற்க மாட்டார்கள். ஏனெனில் குறைந்த கூலிக்கு நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றுவது அவர்கள் மட்டுமே. இந்தப் போக்கு தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா தென்னிந்திய மாநிலங்களிலும் உள்ளது. விவசாயத்தின் அழிவு காரணமாகவே இத்தகைய இடப்பெயர்வுகள் இந்தியா முழுவதும் நடக்கின்றன.






மற்றவர்கள் நெகிழ்ந்தார்கள். தொடர்ந்து அவருடன் பேசிக் கொண்டு வந்தார்கள். அவர்களின் உரையாடலை அருகில் அமர்ந்திருந்த கேரளத்தை சேர்ந்த ஜான் சுருக்கமாக மொழிபெயர்த்து கூறினார். ஊபர் ஓட்டுநரின் இந்தி புரியவில்லை என்றாலும் ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசியது கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது. அவரது பேச்சில் ஒரு பெருமிதத் தொனியும், நிறைவும் ஒலித்தது.
இந்த நடிப்புக்கு இரையாகும் உள்ளம் பின்னர் அதை நடிப்பு என உணர்வதில்லை. “எல்லாவற்றுக்கும் மோடியை தூற்றுகிறவர்கள் இவர்கள்” என்பன போன்ற முன்முடிவுகள் அவர்களை அந்த விசச்சூழலில் இருந்து வெளிவர விடாமல் தடுக்கிறது. ஒரு விடாப்படியான விமர்சன அணுகுமுறைக்கு அவர்கள் எண்ணங்களை உட்படுத்துவது அல்லது மோடி அரசால் நேரடியாக பாதிக்கப்படுகின்ற உணர்ச்சிப்பூர்வ அனுபவம் என்ற ஒன்று ஏற்படும் வரை இந்த சிக்கல் நீடிக்கும். பெரியார் – அம்பேத்கரை ஓரளவு படித்தறிந்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையேயான வித்தியாசமாகவும் இந்த நிலையை புரிந்து கொள்ளலாம்.
நவஜீவன் எக்ஸ்பிரசில் சென்ட்ரலிலிருந்து ஏறிய போது இரு கல்லூரி பெண்கள் ஐ லவ் மோடி பனியன்களை போட்டுக் கொண்டு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர். எனது இருக்கையில் அமர்வதற்கு ஒரு சேட்டு குடும்பம் விடவே இல்லை. தூர இருக்கை ஒன்றில் அவர்கள் குடும்ப உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட ஒற்றை இருக்கைக்கு செல்லுமாறு கேட்டு என்னுடையதை விட்டுத்தரக் கோரினர். அங்கு சென்றால் நமது ஊர் பார்ப்பனர்கள் தமிழக அரசியலை அலசிக் கொண்டிருந்தனர். மிகக் குறுகிய நேரத்திலே வேறொரு உலகுக்குக் கடத்தப்பட்டதை போன்ற உணர்வு ஏற்பட்டது.