Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 363

உண்மையில் பாசிசம் என்பது என்ன ?

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 3

டோக்ளியாட்டி

முன்னுரை

ங்கே பிரசுரிக்கப்பட்டுள்ள சொற்பொழிவுகள் பால்மிரோ – டோக்ளியாட்டி “எதிரிகள்” என்ற தலைப்பில் நிகழ்த்திய 15 பகுதிகளைக் கொண்ட உரையின் பிரதான பகுதியாகும். இது, 1935-ம் ஆண்டில் மாஸ்கோவில் உள்ள லெனின் பள்ளியின் இத்தாலியப் பிரிவில் நிகழ்த்தப்பட்டது. எட்டு உரைகளது மூலப் பிரதிகளின் நிழற்படப் பிரதிகளை மாஸ்கோவிலுள்ள மார்க்சிய – லெனினியக் கழகம் எர்னெஸ்டோ ரகியோனேரியிடம் அளித்தது. அவர்தான் தற்பொழுது டோக்ளியாட்டியின் தொகுப்பு நூல்களை எடிடோரி ரியூனிட்டிக்காக மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். இது 1970-ம் ஆண்டில் முதன் முறையாக புத்தக வடிவில் தோன்றியது.

அதற்குப் பின் மேலும் மூன்று உரைகள் – பாசிசம் குறித்து ஒன்றும், இத்தாலிய கம்யூனிஸ்டுகளின் இதர “எதிரிகள்” (சோசலிஸ்டுகள் மற்றும் குடியரசுவாதிகள், அராஜகவாதிகள்) – குறித்து இரண்டும் கிடைக்கப்பெற்று இத்தாலியில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. தற்பொழுதைய தொகுப்பானது பாசிசம் குறித்தும், பாசிச அரசாங்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்துமான சொற்பொழிவுகளை மட்டுமே கொண்டுள்ளது. இந்தப் பொருள் குறித்து கம்யூனிஸ்டு அகிலத்தின் தத்துவார்த்த இதழுக்காக 1934-ம் ஆண்டில் டோக்ளியாட்டி எழுதிய ஒரு கட்டுரையும் பின் இணைப்பாக இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து உரைகளையும் விரிவாகக் குறிப்பெடுத்த மாணவரான கியுசெப்பே காடியின் குறிப்புகளிலிருந்து இந்த உரை தயாரிக்கப்பட்டுள்ளது. பின்னர் காடி, டோக்ளியாட்டியின் முதல் உரை குறித்த குறிப்பை அவருடைய ஒப்புதலைப் பெறுவதற்காக அவரிடம் அளித்தார். இந்தச் சொற்பொழிவுகள் அந்தப் பள்ளியில் பெரும் ஆர்வத்தைக் கிளர்த்தியதால் பள்ளியைச் சேர்ந்த இதர நாட்டு கட்சிகளின் ஆசிரியர்களும், மாணவர்களும் இதில் கலந்து கொண்டதாக மற்றொரு இத்தாலிய கம்யூனிஸ்டான ஸ்டீஃபனோ சியாப்பரெல்லி கூறுகிறார். தெள்ளத் தெளிவாக போதிக்கும் பாணியில் இந்த உரைகள் அமைந்திருக்கின்றன என்றால் இத்தாலிய மாணவர்களின் பின்னணியே அதற்குக் காரணம். கியுசெப்பே காடி கூறுவது போல “கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் தொழிலாளி – வர்க்க குடும்பத்திலிருந்து வந்தவர்கள், பாசிச சிறைகளிலிருந்து வெளி வந்தவர்கள், போதிய படிப்பு அனுபவம் இல்லாதவர்கள். இதனாலேயே எளிமையாகவும், சாத்தியமான அளவுக்கு அடி ஆரம்பத்திலிருந்தும் விளக்குவதற்கு டோக்ளியாட்டி தொடர்ந்து முயற்சித்தார். அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே அவர் விளங்கும் முறையிலும், மெதுவாகவும் வகுப்புகளை நடத்தினார். இது என்னுடைய குறிப்பெடுக்கும் பணிக்கு மிகவும் உதவியாயிருந்தது.

இத்தாலிய பதிப்பில் தட்டச்சு தவறுகள், குறியீடுகள், இலக்கண முறைப்படி சில திருத்தங்கள் செய்தல் என்றளவுக்கு மட்டுமே மாற்றம் செய்யப்பட்டது. கோடிட்ட பகுதிகள் மூலக்குறிப்பில் அடிக்கோடிடப்பட்டுள்ளன. சொற்பொழிவுகளின் தலைப்புகளை இத்தாலியப் பதிப்பின் ஆசிரியர் எர்னெஸ்டோ ரகியோனேரி செய்துள்ளார். எண்ணிடப்பட்ட குறிப்புகள் யாவும் மொழியாக்கம் செய்தவரால் தரப்பட்டவையாகும்.”

– டேனியல் டிச்டர்.

உள்ளடக்கம்

விரிவுரை 1 : பாசிஸ்டு சர்வாதிகாரத்தின் அடிப்படை அம்சங்கள்
விரிவுரை 2 : பூர்ஷ்வாக்களின் புதுமாதிரியான கட்சி
விரிவுரை 3 : தேசிய பாசிஸ்டுக் கட்சி
விரிவுரை 4 : பாசிசத்தின் ராணுவ மற்றும் பிரச்சார அமைப்புகள்
விரிவுரை 5 : பாசிஸ்டுத் தொழிற்சங்கங்கள்
விரிவுரை 6 : டொபோலவோரோ
விரிவுரை 7 : கார்ப்பரேட்டிவிசம்
விரிவுரை 7 (தொடர்ச்சி) : கார்ப்பரேஷன்களின்பால் நமது கொள்கை
விரிவுரை  8 : கிராமப்புறங்களில் பாசிசத்தின் கொள்கை
பின் இணைப்பு
குறிப்புகள்

****

விரிவுரை 1 :

பாசிஸ்டு சர்வாதிகாரத்தின் அடிப்படை அம்சங்கள்

மது பாடத்தை துவக்குவதற்கு முன்னர் “பகைவர்கள்” என்ற பதத்தைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பதத்துக்கு உங்களில் சிலர் தவறான விளக்கத்தை அளிக்கக் கூடாதென்பதற்காக இதைச் சொல்கிறேன்; தவறான விளக்கமானது அரசியல் தவறுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

“பகைவர்கள்” என்று பேசும்பொழுது பாசிச, சமூக-ஜனநாயக மற்றும் கத்தோலிக்க அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள வெகுஜனங்களை நாம் சிந்தையில் கொண்டிருக்கவில்லை. நமது பகைவர்கள் பாசிச, சமூக-ஜனநாயகம் மற்றும் கத்தோலிக்க அமைப்புகளேயாகும். ஆனால், அந்த அமைப்புகளில் உள்ள மக்கள் நமது எதிரிகள் அல்ல. அவர்கள் உழைக்கும் வெகுஜனங்கள். அவர்களை நம் பக்கம் ஈர்ப்பதற்கு நாம் ஒவ்வொரு முயற்சியையும் செய்ய வேண்டும்.

இனி நமது விஷயத்திற்கு வருவோம். பாசிசம். பாசிசம் என்றால் என்ன? அது குறித்துக் கொடுக்கப்பட்டுள்ள மிக முழுமையான விளக்கம் என்ன?

பாசிசம் குறித்த மிக முழுமையான விளக்கமானது கம்யூனிஸ்டு அகிலத்தின் விரிவான நிர்வாகக் குழுவின் 13-வது கூட்டத்தில் கொடுக்கப்பட்டது. அது பின்வருமாறு:

“பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்தியவாதிகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்.”

பாசிசம் என்பது எப்பொழுதும் இந்த வழியில் விளக்கப்படுவதில்லை. மாறாக, வெவ்வேறு கட்டங்களில், வெவ்வேறு காலங்களில் பெரும்பாலும் தவறான விளக்கங்களே கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு காலகட்டங்களில் பாசிசம் குறித்து நாம் தந்துள்ள மாறுபட்ட விளக்கங்களை ஆராய்வது சுவையாக இருக்கும். (இந்தப் பணியை நீங்களும் மேற்கொள்ள வேண்டுமென்று உங்களுக்கு ஆலோசனை தருகிறேன்).

போர்டிகா. (amadeo bordiga)

உதாரணத்திற்கு, நான்காவது உலக காங்கிரசில் பாசிசம் குறித்து கிளாரா ஜெட்கின் ஒரு உரை நிகழ்த்தினார். அது முற்றிலும் பாசிசத்தின் குட்டி பூர்ஷுவா குணாம்சத்தை சுட்டிக்காட்டுவதையே இலக்காகக் கொண்டிருந்தது. போர்டிகா1 உரையாற்றும் பொழுது பூர்ஷுவா ஜனநாயகத்திற்கும் பாசிச சர்வாதிகாரத்திற்குமிடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது என்று வலியுறுத்தினார்; அரசாங்கத்தின் இவ்விருவகைப்பட்ட வடிவங்களுக்கிடையே ஒரு வகையான மாறி மாறிவரும் சுழற்சி இருப்பதாகக் கூறி அவை இரண்டும் ஒன்றுதான் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினார்.

இந்த உரைகள் இரண்டு அம்சங்களை இணைத்து, அவற்றினிடையே தொடர்பேற்படுத்தத் தவறிவிடுகின்றன. பூர்ஷுவா வர்க்கத்தின் சர்வாதிகாரம் மற்றும் குட்டி-பூர்ஷுவா வெகுஜன இயக்கம் என்பவையே அந்த இரண்டு அம்சங்கள்.

கோட்பாட்டு ரீதியிலான கண்ணோட்டத்தில் காணும் பொழுது இவ்விரு அம்சங்களுக்கிடையிலான இணைப்பை முற்றிலும் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. இருந்தாலும், இந்த இணைப்பு புரிந்து கொள்ளப்பட வேண்டும். முதலாவது அம்சத்தை காண்பதோடு மட்டும் ஒருவர் நிறுத்திக் கொள்வாரேயானால், பாசிசத்தின் வரலாற்றுப்பூர்வ வளர்ச்சியின் பிரதான வழியையும், அதனுடைய வர்க்க உள்ளடக்கத்தையும் அவர் காண இயலாது என்பதோடு அதைக் காணத் தவறியும் விடுவார். இரண்டாவது அம்சத்தைக் காண்பதோடு மட்டும் ஒருவர் நிறுத்திக் கொள்வாரேயானால் அதனுடைய விளைவுகளை அவர் காணத் தவறிவிடுவார்.

சமூக ஜனநாயகம் செய்த தவறு இதுதான். சிறிது காலம் முன்னர் வரை, சமூக ஜனநாயகமானது பாசிசம் குறித்து நாம் கூறிய அனைத்தையும் மறுத்து, அதை மத்தியகால வடிவம் என்றும், முதலாளித்துவ சமூகத்தின் சீரழிவு என்றுமே கருதி வந்தது. உண்மையில் பாசிசம் கொண்டிருந்த குட்டி பூர்ஷுவா வெகுஜன தன்மையை முற்றிலும் அடிப்படையாகக் கொண்டே சமூக ஜனநாயகம் இத்தகைய நிர்ணயிப்புகளை மேற்கொண்டது.

ஆனால், வெகுஜன இயக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒரே மாதிரியாக இருக்காது. சர்வாதிகாரம் என்பதுகூட ஒவ்வொரு நாட்டிலும் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால்தான், சுலபமாக செய்யக்கூடிய ஒரு தவறு குறித்து நான் உங்களை முன்கூட்டியே எச்சரிக்க வேண்டும். இத்தாலிக்கு எது பொருந்துமோ அது இதர ஒவ்வொரு நாட்டிற்கும் பொருந்தும் என்றோ, பொருந்த வேண்டும் என்றோ நினைக்காதீர்கள். பாசிசமானது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கும். வெவ்வேறு நாடுகளின் வெகுஜனப் பகுதியினர் வெவ்வேறு வடிவங்களிலான அமைப்பைக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் எந்தக் கால கட்டத்தைக் குறித்து நாம் பேசுகிறோம் என்பதையும் நாம் நினைவில் கொண்டிருக்க வேண்டும். பாசிசமானது ஒரே நாட்டில் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு நோக்குளை, கோணங்களை மேற்கொள்கிறது. எனவே, இரண்டு அம்சங்களை நாம் ஆராய வேண்டும். நாம் ஏற்கனவே பாசிசம் குறித்த மிக முழுமையான விளக்கத்தைக் கண்டோம்: “பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்தியவாதிகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்.”

படிக்க:
மாட்டிறைச்சியின் பெயரால் காவி குண்டர் படையின் வெறியாட்டம் தொடங்கியது !
தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?

இதன் பொருள் என்ன? இந்தக் கணத்தில், வரலாற்று வளர்ச்சியின் இந்த காலகட்டத்தில் நாம் ஏன் இந்த வடிவத்துடன் மோத நேரிடுகிறது? அதாவது, முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட பகுதிகளின் ஒளிவு மறைவற்ற சர்வாதிகாரத்துடன் ஏன் மோத நேரிடுகிறது?

ஒவ்வொருவரும் இந்தப் பிரச்சினை குறித்து தெளிவாக இல்லாததால் இது பற்றி பேச வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய விளக்கங்களால் மண்டை முழுவதும் நிரம்பியிருந்த ஒரு தோழரை நான் எதிர்கொள்ள நேரிட்டது; கிராம்ஷியின் கட்டுரைகளில் ஒன்றில் ஒவ்வொரு அரசும் ஒரு சர்வாதிகாரம்தான் என்று கூறப்பட்டிருப்பதைக் கண்டு அவர் வியப்படைந்தாராம்.

தெளிவாகக் கூறுவதென்றால் பூர்ஷுவா ஜனநாயகமும், சர்வாதிகாரமும் எதிரெதிரான நிலைகளில் நிறுத்தப்படக்கூடாது. ஒவ்வொரு ஜனநாயகமும் ஒரு சர்வாதிகாரம்தான்.

அடிக்குறிப்புகள் :

1. அமாடியோ போர்டிகா (1889-1971) பார்லிமெண்டரி முறைக்கு ஒரேயடியாக அவர் எதிர்ப்புத் தெரிவித்ததையும் தேர்தல்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற அவர் வாதத்தையும், இடதுசாரி கம்யூனிஸம், ஒரு சிறுபிள்ளைக் கோளாறு என்ற நூலில் லெனின் கடுமையாக விமர்சித்தார். இத்தாலிய சோஷலிஸ்டுக் கட்சியில் இருந்த கம்யூனிஸ்டுப் பிரிவுக்கு தலைமை தாங்கியவர். அந்தப் பிரிவை சோஷலிஸ்டுக் கட்சியிலிருந்து வெளியில் கொண்டு வந்து 1921 ஜனவரியில் இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியை  ஸ்தாபித்தார். இத்தாலிய சோஷலிசத்தின் மிகவும் மோசமான பாரம்பரியத்திலிருந்து ஆரோக்கியமான முறையில் மாறி, உறுதியான கட்சிக் கட்டுப்பாடு,  ஸ்தாபனம் என்ற லெனினிய கோட்பாட்டை அவர் தலைமையில் இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சி வலியுறுத்தியது. இது விஷயங்களில் இத்தாலியக் கம்யூனிஸ்டுகளின் அக்கறை சில சமயங்களில் அளவுக்கு அதிகமாக இருந்ததால், இறுதியில் அவர்களது ஸ்தூலமான அரசியல் செயல்பாடு பாதிக்கப்பட்டது. மேலும், போர்டிகாவின் இடதுசாரிப் போக்கும் யாந்திரிகமாக கொச்சைப்படுத்தும் போக்கும், பாசிசம் பற்றியும் ரோம் படையெடுப்பை  அடுத்து ஏற்பட்ட கணிசமான மாற்றத்தையும் ஆழமான பரிசீலனை செய்வதிலிருந்து கட்சியைத் தடுத்தன. 1922 நவம்பரில், கம்யூனிஸ்டு அகிலத்தின் நாலாவது உலகக் காங்கிரஸில், ரோம் படையெடுப்பு  நிகழ்ந்த சில வாரங்களுக்குள்ளேயே, பூர்ஷுவா பிற்போக்கின் வரலாற்றில் பாசிசம் ஒரு குணாம்சரீதியான வளர்ச்சியல்ல என்றும், பாசிசம் அதிகாரத்தை கைப்பற்றியது பாட்டாளி வர்க்கத்தின் கடமையை சுலபமாக்குகிறது என்றும் உறுதிபடக் கூறினார். 1923 பிப்ரவரியில் போர்டிகா இத்தாலியில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது அரசியலில் அதிருப்தி அடைந்து வந்த அகிலம் ஐந்து பேர்கள் கொண்ட ஒரு புதிய நிர்வாகக் குழுவை நியமித்தது. அதே ஆண்டு சிறையிலிருந்து குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டதும் இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் புதிய “மைய”த் தலைமையில் சேர்த்துக் கொள்வது என்ற அகிலத்தின் திட்டத்தினை போர்டிகா ஏற்க மறுத்தார். அதுவரையிலும் பின்னணியில் இருந்தவரும் அநேகமாகப் போர்டிகாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவருமான அண்டோனியோ கிராம்ஷி, படிப்படியாக கம்யூனிஸ்டுக் கட்சியின் புதிய தலைவர்களது உள்வட்ட மையத்தை 1924 மத்தியில் அமைத்தார். முடிவில் 1930-ல் கட்சியிலிருந்து போர்டிகா வெளியேற்றப்பட்டார். இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தோற்றம், போர்டிகாவிலிருந்து கிராம்ஷிக்கு மாற்றம், போர்டிகா, கிராம்ஷி டோக்ளியாட்டியும் மற்றவர்களும் முதலாவது உலக யுத்தத்தைத் தொடர்ந்து தீர்மானமான ஆண்டுகளில் எடுத்த நிலை ஆகியவை  குறித்தும் வரலாற்று ரீதியான சம்பவங்கள் பற்றியும் சிறையிலிருந்து அன்டோனியோ கிராம்ஷி எழுதிய குறிப்புப் புத்தகங்களிலிருந்து சில பகுதிகள் என்ற நூலுக்கான முன்னுரையில் காணலாம். இதை மொழிபெயர்த்து வெளியிட்ட பதிப்பாசிரியர்கள் குவின்டின் கோயரும் ஜியோப்ரே நோவல் சுமித்தும் ஆவர் (இண்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ், நியூயார்க், 1971).

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

காலமும் மனிதனும் | பொருளாதாரம் கற்போம் – 20

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 20

காலமும் மனிதனும்
அ.அனிக்கின்

பொருளாதார நிகழ்வுப் போக்குகளில் இருக்கின்ற புறவயமான விதிகளை வாணிப ஊக்கக் கொள்கையினர் பார்க்கவில்லை. பொருளாதார நிகழ்வுப் போக்குகளில் ஒழுங்கை ஏற்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் ஆட்சியிலிருப்போரின் மனதை மட்டுமே பொறுத்திருக்கிறது என்று அவர்கள் கருதினார்கள். பொருளாதாரத்தில் இன்று நாம் ‘விருப்பச் செயல்முறை’ என்று சொல்வது வாணிப ஊக்கக் கொள்கையினரின் தனிச்சிறப்பான அம்சமாக இருந்தது.

பொருளாதாரத்தில் புறவயமான, புலனறிவுக்கு உட்பட்ட விதிகள் இருக்கின்றன என்ற கருத்தை முதன்முறையாக வெளியிட்டவர் பெட்டி; அவர் இந்த விதிகளை இயற்கையின் விதிகளுக்கு ஒப்பிட்டு இயற்கையான விதிகள் என்று பெயரிட்டார். அரசியல் பொருளாதாரம் ஒரு விஞ்ஞானமாக வளர்ச்சியடைவதில் முன் எடுத்து வைக்கப்பட்ட மாபெரும் காலடி என்றே இதைக் கூற வேண்டும்.

உற்பத்தி, பகிர்ந்தளிப்பு, பரிவர்த்தனை, செலாவணி போன்ற அடிப்படையான பொருளாதார நிகழ்வுப் போக்குகள் முறையான, பெருந்திரளான வடிவத்தைப் பெறுகின்றவரை, மனித உறவுகள் பண்ட -பணத் தன்மையைப் பெற்று மேலோங்குகிற வரை பொருளாதார விதி என்ற உண்மையான கருத்து ஏற்பட முடியாது.

பண்டங்களை வாங்குவதும் விற்பதும், உழைப்பை விலைக்குப் பெறுதல், நிலத்தைக் குத்தகைக்கு விடுதல், பணவியல் செலாவணி ஆகிய உறவுகள் ஒப்பளவில் முழுமையாக வளர்ச்சி அடைந்தாலொழிய, இவை அனைத்தும் புறவயமான விதிகளின் இயக்கத்தை வெளிப்படுத்துகின்றன என்ற முடிவுக்கு மக்கள் வரமுடியாது, வாணிப ஊக்கக் கொள்கையினர் பொருளாதார நடவடிக்கையின் ஒரு துறையில் அந்நிய வர்த்தகம் என்ற துறையில் மட்டுமே மிகவும் அதிகமான அக்கறை காட்டினர். ஆனால் பெட்டி இதற்கு மாறாக நடந்து கொண்டார்; அவர் அந்நிய வர்த்தகத்தைப் பற்றி எத்தகைய அக்கறையும் காட்டவில்லை. அவர் கூலி முன்னேற்றம், நில வாரம், இன்னும் வரி விதிப்பு முதலியவற்றை நிர்ணயிக்கின்ற, அடிக்கடி ஏற்படுகின்ற விதிகளுக்கு உட்பட்ட நிகழ்வுப் போக்குகளில் அக்கறை காட்டினார்.

17-ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்து அதிகமான வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடாக மாறியிருந்தது – இது அடிப்படையில் முதலாளித்துவ வளர்ச்சியில் பட்டறைத் தொழில் கட்டம்.  இந்தக் கட்டத்தில் அதன் வளர்ச்சி புதிய இயந்திரங்களை உபயோகிப்பதாலும் புதிய உற்பத்தி முறைகளைப் பின்பற்றுவதாலும் ஏற்பட்டதல்ல; பழைய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் முதலாளித்துவ வேலைப் பிரிவினையை விரிவாக்கியதன் மூலம் அதன் வளர்ச்சி சாத்தியமாயிற்று.

உதாரணமாக, ஒரு தொழிலாளி ஒரு குறிப்பிட்ட வேலையைச் சிறப்புச் செயலாகச் செய்கிற பொழுது அதில் அதிகமான திறமையைப் பெறுகிறார்; எனவே உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது. அரசியல் பொருளாதாரத்தில் வேலைப் பிரிவினையை உயர்வாகப் பாராட்டுகின்ற வழக்கத்தைப் பெட்டி தொடங்கினார். அவர் கடிகாரம் செய்கின்ற உதாரணத்தின் மூலம் அதன் திறமையை விளக்கினார். ஆடம் ஸ்மித் அதை வன்மையாக ஆதரித்ததோடு அதையே தன்னுடைய முறையின் அடிப்படையாக ஆக்கினார்.

படிக்க:
முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்
♦ நூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …

பெட்டியின் காலத்தில் தொழில்துறை உற்பத்தி, விவசாய உற்பத்தி ஆகிய இரண்டுமே பெருமளவுக்கு முதலாளித்துவ அடிப்படையில் நடைபெற்று வந்தன. கைத் தொழில்களையும், சிறு அளவு விவசாயத்தையும் மூலதனத்துக்கு உட்படுத்துவது மெதுவாகவே நடைபெற்றது; பல்வேறு பிரிவுகளிலும் பகுதிகளிலும் அது வெவ்வேறு வழிகளில் நடைபெற்றது. விரிவான பகுதிகளில் முதலாளித்வத்துக்கு முந்திய உற்பத்தி வடிவங்கள் இன்னும் இருந்தன. ஆனால் இந்த வளர்ச்சியின் போக்கு அப்பொழுதே தோன்றிவிட்டது; இதை முதலில் கவனித்தவர்களில் பெட்டியும் ஒருவர்.

இங்கிலாந்தின் பொருளாதாரம், வர்த்தகத்தின் அடிப்படையாக இன்னும் இருந்து வந்த கம்பளித் தொழிலோடு சேர்ந்து நிலக்கரி வெட்டுதலும், இரும்பு, எஃகு தயாரிக்கும் தொழில்களும் வளர்ச்சியடைந்தன. 1680 -களில் 30 லட்சம் டன் நிலக்கரி வருடந்தோறும் வெட்டியெடுக்கப்பட்டது. அதற்கு முந்திய நூற்றாண்டின் மத்தியில் 2 லட்சம் டன் மட்டுமே வெட்டியெடுக்கப்பட்டது. (ஆனால் நிலக்கரி இன்னும் எரிபொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. நிலக்கரியைச் சுட்டுப் பயன்படுத்துகின்ற முறை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே கரியை உபயோகித்து உருக்கு தயாரிக்கப்பட்டது. இதனால் காடுகள் அழிக்கப்பட்டன.) இந்தத் துறைகள் ஆரம்பத்திலிருந்தே முதலாளித்துவ ரீதியில் வளர்ச்சியடைந்தன.

நாட்டுப்புறங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இயற்கையான பொருளியல் அமைப்பும் சிறு அளவில் பண்ட உற்பத்தியும் செய்து வந்த சிறு நிலவுடைமையாளர்களின் வர்க்கம் படிப்படியாக மறைந்து கொண்டிருந்தது. அவர்களுடைய சிறு நிலவுடைமைகளும் கிராமப் பொது நிலமும் பெரிய நிலவுடைமையாளர்களிடம் மென்மேலும் குவிந்து கொண்டிருந்தன; அவர்கள் இந்த நிலங்களை விவசாயிகளிடம் குத்தகைக்கு விட்டனர். அதிகப் பணமுள்ள விவசாயிகள் கூலி உழைப்பைப் பயன்படுத்தி முதலாளித்துவ விவசாயத்தை நடத்தத் தொடங்கியிருந்தனர்.

பெட்டியும் ஒரு பெரிய நிலவுடைமையாளரே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனினும், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, அவர் தம்முடைய எழுத்துக்களில் நிலப்பிரபுக்களின் நலன்களை வெளிப்படுத்தவில்லை. லேவ் தல்ஸ்தோய் பற்றிக் கூறும் பொழுது, இலக்கியத்தில் சரியான விவசாயியின் படத்தை இந்தப் பிரபுவுக்கு முன்பாக யாரும் சித்திரிக்கவில்லை என்றார் லெனின், அதைப் போலவே அரசியல் பொருளாதாரத்தில் சரியான முதலாளியின் படத்தை இந்த நிலவுடைமையாளருக்கு முன்பாக, யாரும் சித்திரிக்கவில்லை.

முதலாளித்துவ வளர்ச்சியால் மட்டுமே “நாட்டின் செல்வத்தைப்” பெருக்க முடியும் என்பதைப் பெட்டி தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார், அவர் தமக்குச் சொந்தமான பண்ணைகளில் இந்தக் கருத்துக்களை ஓரளவுக்கு அமுலாக்கினார். தன்னுடைய நிலங்களைக் குத்தகைக்குவிடும் பொழுது விவசாயிகள் நிலத்தையும் அதில் பயிரிடும் முறைகளையும் அபிவிருத்தி செய்வார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிறகே அவர் குத்தகைக்கு விட்டார். தன்னுடைய பண்ணையில் ஆங்கிலக் கைவினைஞர்கள் குடியேற்றத்தையும் அவர் ஏற்படுத்தினார்.

ஒரு நபர் என்ற முறையில் பெட்டியிடம் ஏராளமான முரண்பாடுகள் இருந்தன. பாரபட்சமற்ற வரலாற்றாசிரியருடைய பார்வையில் இந்த மாபெரும் சிந்தனையாளர் சில சமயங்களில் சில்லறைத்தனமான வீர சாகஸக்காரராகவும், இன்னும் சில சமயங்களில் திருப்தியடையாத லாப வேட்டைக்காரர் மற்றும் விடாப்பிடியாக வழக்குத் தொடுப்பவராகவும், வேறு சமயங்களில் சூழ்ச்சிமிக்க அரசவையாளராகவும் தோன்றுகிறார்; சில சமயங்களில் வெகுளித்தனமான தற்பெருமைக்காரராகவும் தோன்றுகிறார்.

அவர் வாழ்க்கையைச் சுவைக்க வேண்டும் என்ற அடக்க முடியாத ஆசை கொண்டவர் என்பது அவருடைய தனிச் சிறப்பான அம்சமாகும். ஆனால் அந்த ஆசை அடைந்த வடிவங்கள் அவர் வாழ்ந்த காலத்திலிருந்த சமூக நிலைமைகளினாலும் சந்தர்ப்பங்களினாலும் ஏற்படுத்தப்பட்டன. ஒரு கோணத்தில் பார்த்தால் செல்வமும் அந்தஸ்தும் அவருடைய ஒரே நோக்கம் என்று கூற முடியாது; ஆனால் அவற்றின் மீது அவருக்கு ஒரு பெருந்தன்மையான அக்கறை இருந்தது. அந்தக் காலத்துக்கும் அன்றைய நிலைமைகளுக்கும் பொருத்தமான வகையில் அவர் காட்டிய சுறுசுறுப்பும் சூழ்ச்சியும் கபடமும் அவருக்கு உள்ளூற திருப்தியைக் கொடுத்தன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் செல்வமும் பட்டங்களும் அவருடைய வாழ்க்கையையும் சிந்தனைப் போக்கையும் பெருமளவில் பாதிக்கவில்லை.

படிக்க:
விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலித்த டால்ஸ்டாய் – லெனின்
♦ எத்தனைப்பேர் நம்மை நம்பி கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது !

லண்டனில் பெட்டியுடன் பழகிய ஜான் எவெலிங் என்பவர் 1675-ம் வருடத்துக்கான தமது குறிப்பில் பிக்காடில்லி என்ற பகுதியிலிருந்த பெட்டியின் மாளிகையில் நடைபெற்ற ஒரு ஆடம்பரமான விருந்தை வர்ணித்திருக்கிறார். “அவரைச் சாதாரணமான நிலைமைகளில் அறிந்த என் போன்றவர்கள் இப்பொழுது அவருடைய சிறப்பான மாளிகையில் அவரைப் பார்க்கும் பொழுது, இவ்வளவு செல்வத்தை அவர் எப்படித் திரட்டினார் என்று வியப்படைவார்கள். ஆனால் அங்கேயிருந்த விலையுயர்ந்த மரச்சாமான்களையும் கலைப் பொருள்களையும் அவர் அதிகமாக மதித்தார் என்று சொல்ல முடியாது; அவருடைய நாகரிகம் நிறைந்த மனைவிக்கு தரக்குறைவான அல்லது நேர்த்தியில்லாத பொருள்களைப் பிடிக்காது. அவர் தன்னைப் பற்றிக் கூட அலட்டிக் கொள்ளாதவர்; உயர்ந்த சமநிலை உடையவர். கடவுளே! எனக்கு இவையெல்லாம் எதற்கு? நான் வைக்கோற் படுக்கையில் இதே திருப்தியோடு உறங்கக் கூடியவன் என்று தான் கூறுவார். அவர் தன்னுடைய வசதிகளைப் பற்றி அதிகமாகக் கவலைப்படாதவர்…” (1)

அவருடைய வாழ்க்கை நெடுகிலும் அவருக்கு எதிரிகள் – பகிரங்கமான எதிரிகளும் இரகசியமான எதிரிகளும் அதிகமே. அவரைக் கண்டு பொறாமைப்பட்டவர்களும் அவருடைய அரசியல் எதிரிகளும் அவரை எதிர்த்தனர். அவர் காரமாக ஈவிரக்கமற்ற வகையில் ஏளனம் செய்வதில் சமர்த்தர். அவருடைய பேச்சினால் புண்பட்டவர்களும் அவருக்கு எதிரிகளானார்கள். சிலர் அவரைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டுமென்று திட்டம் போட்டார்கள்; வேறு சிலர் மறைமுகமாகச் சதி செய்தார்கள். ஒருநாள் டப்ளின் நகரத்தில் அவர் தெருவில் போய்க் கொண்டிருக்கும் பொழுது, ஒரு கர்னல் இரண்டு  உதவியாளர்களோடு வந்து அவரைத் தாக்கினார். சர் வில்லியம் பெட்டி அவர்களை விரட்டியடித்தார். ஆனால் அந்தக் கர்னலின் கூர்மையான பிரம்பு முனை அவருடைய இடது கண்ணைக் குத்தி அநேகமாக அவரைக் குருடாக்கிவிட்டது. அந்தக் கர்னல் கொடுத்த அடி எளிதில் புண்படக் கூடிய இடத்தில் பட்டுவிட்டது, அதிலும் பெட்டிக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்வைக் கோளாறு இருந்தது.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) The Diary of John Evelyn, London, 1959, p. 610.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

ஆரியருக்கு அடிப்பணியாதீர் ! அரசியலில் அவர்களுக்கு ஆதிக்கம் அளிக்காதீர் !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 19


காட்சி : 26

இடம் : வீதி
உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப்பட்டர், குடியானவன்.

பாலச்சந்திரப்பட்டர் : கேசவப்பட்டரே உம்முடைய பந்துக்களெல்லாம் வந்து விட்டாளோ?

கேசவப்பட்டர் : ஆகா! சகலரும். ஏறக்குறைய பத்தாயிரம் குடும்பங்கள் இருக்கும் போல இருக்கு சமாராதனையில்.

கேசவப்பட்டர் : பத்தாயிரத்து நூறுவோய்.

பாலச்சந்திரப்பட்டர் : சிவாஜி தர்ம தாதா அவன் நீடூழி காலம் வாழ வேண்டும்.

கேசவப்பட்டர் : அந்த தர்ம தாதா கெடக்கட்டும் ஒய். இப்படிப்பட்ட தர்ம தாதாக்களை நமக்குத் தருகிற நமது குல குருமார்களைப் போற்றும் ஒய். இவ்வளவு சுக போகத்தை நமக்குத் தரும் சாஸ்திரம் குலையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலே நாம் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.

பாலச்சந்திரப்பட்டர் : காகப்பட்டர் இங்கு பிரவேசித்ததும் நமது குலத்துக்கே யோகம் பிறந்துவிட்டது. அடடா கேசவப்பட்டரே. இந்த மராட்டியா யுத்தத்திலே ஜெயித்தபோது, எவ்வளவு ஆர்ப்பரிச்சா தெரியுமா? இப்ப பொட்டிப் பாம்பாகி விட்டா. நாம் இப்போத்தான் தலை நிமிர்ந்து நடக்க முடியறது. நமது கெளரவம் காகப்பட்டரால் நிலைத்தது. அவரே நமது குல ரட்சகர்.

(குடியானவன் வருதல்)

கேசவப்பட்டர் : வாப்பா, வா!

குடியானவன் : கும்பிடுறேன் சாமி!

கேசவப்பட்டர் : ஊர் எவ்வளவு ஜெகஜோதியாயிருக்கு பார்த்தியோ?

பாலச்சந்திரப்பட்டர் : எங்கு பார்த்தாலும் வேத ஒலி , பிராமண சேவை. இப்படிப்பட்ட காட்சியைக் காணக் கொடுத்து வைத்தோமே..

குடியானவன் : மழையே காணுங்களே.

கேசவப்பட்டர் : நம்முடைய நாட்டிலே வந்திருக்கிற புண்ணிய புருஷாளைத் தரிசிச்சிண்டிருக்கா வர்ண பகவான். அவாள் சந்தோஷமா இருக்கச்சே , கண்ணீர் விடப்படாது பாரு.

குடியானவன்: சாமி என்ன கதை வேணுமானாலும் சொல்லுங்க. மழையில்லாத்தாலே வயக்காடெல்லாம் வெடிச்சப் போச்சு. மாடு கண்ணெல்லாம் எலும்பும் தோலுமாப்
போச்சுங்க.

பாலச்சந்திரப்பட்டர் : ஏன் ஒய் இவன் இந்த சாது சன்னியாசி கூட்டத்தைச் சேர்ந்தவனா இருப்பானோ?

குடியானவன் : ஏங்க, அவுங்க சொல்றதிலேயும் தப்பு ஒண்ணும் இல்லீங்களே இப்ப பாருங்க, பத்தாயிரக் கணக்கான பிராமணா போஜனத்துக்கு வந்திருக்காங்களே, இவுங்கள்ளாம் பட்டாளத்துக்கு ஆள் எடுத்தப்ப எங்க போனாங்கன்னு கேக்கறாரு பண்டாரத்தையா. நியாயந்தானுங்களே! அப்போ காணுங்களே இவுங்களெல்லாம். சமாராதனைன்னு சொன்ன உடனே, அடேங்கப்பா புத்திலேயிருந்து ஈசல் கிளம்புற மாதிரியும், பழத்தோட்டத்திலே இருந்து வெளவால் கிளம்புற மாதிரியும் வந்துட்டாங்களே.

பாலச்சந்திரப்பட்டர் : டே பிராமணாளைத் தூஷிக்காதேடா . இதிகாசத்தை, சாஸ்திரத்தைப் பழிக்காதே

குடியானவன் : என்னமோ போங்க… வரவர எங்களுக்கு இந்தப் புராணம் இதிகாசம் இதிலெல்லாம் சந்தேகம் வலுத்துக்கிட்டுத்தான் வருது.

பாலச்சந்திரப்பட்டர் : சந்தேகம் வலுக்கிறதா. அட, சர்வேஸ்வரா! இந்தப் பாபிகளுக்கு என்ன தண்டனை தருவாயோ?

கேசவப்பட்டர் : ஏண்டா விதண்டாவாதி ! விதண்டாவாதம் பேசிண்டிருக்கே அஞ்ஞானி.

குடியானவன் : அடே! நீங்கதான் பெரிய மெய்ஞானியா இருங்களேன். நாழியானாலும் ஆகட்டும். ஒரு சந்தேகம். இந்த அண்டசராசரங்களை எல்லாம் ஆயிரம் தலை படைத்த ஆதிசேஷன் தாங்குகிறதாதானே சொல்றீங்க..

கேசவப்பட்டர் : அதிலே உனக்கென்னடா சந்தேகம். ஏண்டா ஒரு வஸ்து நிக்கணும்னா, அதுக்கு ஒரு ஆதாரம் வேணுமோ, இல்லையோ?

குடியானவன் : ஆமாம் !

கேசவப்பட்டர் : அதுபோல இந்த அண்டத்தை ஆயிரம் தலை படைத்த ஆதிசேஷன் தாங்குகிறதா பெரியவா சொல்றா ! இதிலென்னடா தப்பு?

குடியானவன் : அப்படி வாங்க வழிக்கு. இப்ப நீங்க சொன்னீங்களே, இது நியாயமான பேச்சு. ஏனுங்க, அண்டத்தை ஆதிசேஷன் தாங்கினபோது, ஆதிசேஷனை எது தாங்குச்சி? அதுக்கும் ஒரு ஆதாரம் வேணும்ங்களே?

கேசவப்பட்டர் : போடா போ விதண்டாவாதி!

குடியானவன்: கோவிக்காம சொல்லுங்க. தெரியாம கேக்கறேன். நான் பட்டிக்காட்டான். நீங்கள்ளாம் எல்லாம் படிச்ச மெய்ஞானின்னு பேசுறீங்களே. எங்க சந்தேகத்தை போக்கணுமில்லே. அண்டத்த ஆதிசேஷன் தாங்குறாருன்னு சொல்றீங்க ஒரு சமயம். அப்புறம் சொல்றீங்க, பார்வதி சிறு விரல்லே மோதிரமா இருக்கிறார்ன்னு சொல்றீங்க. இன்னொரு சமயம் என்னடான்னா பார்க்கடலிலே பள்ளி கொண்டிருக்கார்னு சொல்றீங்க. அது எப்படிங்க முடியும்? ஒரே ஆதிசேஷன் பார்வதி விரல்லெ. மோதரமா இருக்காரு பரந்தாமனுக்குப் படுக்கையா இருக்காரு. இந்த அண்டத்தையும் தாங்கறார்ணா இது நம்பற சேதிங்களா? என்னமோ போங்க. ஒங்களுக்கே தெரியாது… எனக்கு எங்கே சொல்லப் போறீங்க?

♦ ♦ ♦

காட்சி : 27
இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : சிவாஜி, காகப்பட்டர், மோகன், தளபதி, பட்டர்கள்.

காகப்பட்டர் : சிவாஜி அன்று சூத்திரனாகப் பிறப்பிக்கப்பட்டாய். ஆனால் ஆகம விதிப்படி இன்று நீ க்ஷத்திரியனாக்கப்பட்டாய். அரசாளும் தகுதி பெற்றாய், அந்தணரின் ஆசி பெற்றாய்.

மராட்டியப் பிரமுகர்களே! சாஸ்திரோத்தமாக செய்யப்பட்ட யாகாதி காரியங்களின் விசேஷ பலனால் சத்திரபதி சிவாஜி க்ஷத்திரியராகிவிட்டார். ஆரிய ஆசிர்வாதம் பெற்ற அவர், ஆண்டவனின் ஆதரவைப் பெற்று விட்டார். இனி அவரே உங்களுக்கு மன்னன்.

மன்னா! மன்னன் மக்களின் தலைவன்; மகான்கள் மன்னருக்குத் தலைவர். ஆண்டவன் மகானின் தோழன். இதுவே வேதாசாரம். வேதம் உள்ளளவும், கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் மராட்டிய மண்டலம் ஜெகஜோதியாய் விளங்கும். சிவாஜி இனியாகிலும் நீ திரவியத்தை கோட்டைக் கொத்தளங்கள் கட்டுவதற்கும் அகழி , அரண் அமைப்பதற்கும், ஆயுதங்களுக்கும் வீணாக்காமல் பகவத் பக்திக்கும், பிராமண சேவைக்கும் செலவிடு, உத்தமனே! உன் ராஜ்யம் சனாதன பூமியாக விளங்கட்டும். சர்வ மங்களம் உண்டாகட்டும்.

(ஆசிர்வதிக்கிறார். சிவாஜி வணங்க, மோகன் ஆவேசமாய் ஒடிவந்து)

மோகன் : மராட்டியமே, மண்டியிடாதே வீரமே வீழ்ச்சியுறாதே மராட்டிய மாவீரர்களே மன்னன் சிவாஜியை மாற்றான் முன் மண்டியிடச் செய்த கோழைகளானீர். கொடுமை, கொடுமை இது. அறிவுலகத்திலே அனைவரும் இதைக் கண்டித்தே பேசுவர். முடி நமது சிவாஜி மன்னனிடம், பிடி இந்த வேதம் ஓதியிடம்.

படிக்க:
தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ?
இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?

காகப்பட்டர் : யார் இந்த துஷ்டன்? போக்கிரித்தனமாகப் பேசுகிறான்.

மோகன் : போதும் நிறுத்தடா உன் மோசடிப் பேச்சை.

(சிவாஜி மோகன் கன்னத்தில் அடித்தல்)

வேந்தே! தாங்கள் மண்டியிட்ட போது உண்டான வேதனையை விட இது சற்றுக் குறைவாகத்தான் இருக்கிறது.

காகப்பட்டர் : சிவாஜி உன்னுடைய ஆட்சியிலே இப்படிப்பட்ட அவலட்சணங்கள் இருக்கவே கூடாது… எவ்வளவு போக்கிரித்தனமாகப் பேசுகிறான்.

மோகன் : நாலு ஜாதி அதில் பிராமணர் அடக்கி ஆளவும், மற்றவர்கள் அடிமையாகவும் பிறக்கின்றனர் என்ற கொள்கையை எதிர்ப்பதால் போக்கிரித்தனம்? ஆண்டவன் அருள்பெற அறநெறி தேவையே ஒழிய, ஆரியரின் காலைக் கழுவி, நீரைப் பருகுவது வழியல்ல என்று எடுத்துக் கூறுவதா போக்கிரித்தனம்? எது போக்கிரித்தனம்?

காகப்பட்டர் : ஏது , இவன் போக்கிரி மட்டுமில்லை ; விதண்டா வாதக்காரனாகவும், இருக்கிறானே! ஏ, பாபஸ்வரூபமே பிராமணோத்தமர்களை நிந்தனை செய்யாதே. மீளா நரகம் போவாய்.

மோகன் : நரகம் மேல். அங்கு நயவஞ்சகர் காலிலே நாடாள்வோர் வீழ்வார்கள் என்ற கதை இல்லை. மமதை பிடித்தவனே! உன் மனம் களிப்பது எனக்குத் தெரியும். மராட்டியரின் மாவீரத் தலைவனை மண்டியிடச் செய்து விட்டோமே என்ற செருக்குடன் இருக்கிறாய். ஆனால் …

காகப்பட்டர் : துஷ்டனே முன்னம் ஒரு நாள் மாபலி என்ற மன்னர், தன் முடி மீது பரமனின் அடிவைக்க இடமளித்தான். சிவாஜி மன்னன் புத்திமான், சனாதனி. ஆகவே, பிராமண பக்தியோடு இருக்கிறார். பண்டைப் பெருமையை நிலைநாட்டுகிறார்.

சிவாஜி : மோகன், இந்த சபையிலே இனித் துடுக்குத்தனத்துக்கு இடமளிக்கப் போவதில்லை .

மோகன் : அது தெரிகிறது மகராஜ்! இனி இங்கு வீரருக்கு வேலை இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

காகப்பட்டர் : அடே, விஞ்ஞானி கேள்! வேத, புராண, சாஸ்திர, இதிகாசங்களுக்கு மேன்மையும், மகிமையும் அவைகளிலே நம்பிக்கையும் மக்கள் உள்ளத்திலே இருக்கும் மட்டும், உன் போன்ற வீரர்கள் கூவினாலும், கொக்கரித்தாலும், எம்மை அசைக்க முடியாது. வாளை வீசுவதாலேயே வெற்றி கிடைத்துவிடும் என்று எண்ணாதே வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

மோகன் : காகப்பட்டர் மண்டியிடும் மன்னர்கள் மட்டுமே மாநிலத்தில் உள்ளனர் என்று எண்ணாதீர். மக்கள் மனமயக்கம் வெகு விரைவிலே தெளியப் போகிறது. அப்போது உங்கள் அட்டகாசம் அடியோடு ஒழியும். மாவீரர்களே! மன்னன் சிவாஜியின் சபையிலே வரம்பு மீறி பேசினேன் என்று என்னைத் தண்டிக்கட்டும். ஒரு வார்த்தை உங்களுக்கு. ஆரியருக்கு அடிப்பணியாதீர். அரசியலில் அவர்களுக்கு ஆதிக்கம் அளிக்காதீர். அறமும் தழைக்காது. அரசும் நிலைக்காது. அவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். ஆறு, பத்து, இருபது தலையுடன் ஆமை வராக முகமுடையான், அண்ணன் தம்பி மகனுடையான், அந்தப்புரத்திலே அறுபதினாயிரம் பேருடையான் என்று கூறி, கடவுளையே நிந்திக்கும் கயவர்கள் அவர்கள். அவர்களுடைய கபட வேடத்தை நம்பி மோசம் போகாதீர்.

சிவாஜி : மோகனா! தோழமையின் எல்லையையும் தாண்டி விட்டாய். நில்

தளபதி – 1 : இதுவரை மன்னர் முன் இப்படி எதிர்த்துப் பேசியவர் யாருமில்லை .

தளபதி – 2 : மகராஜ் சினங்கொண்டு சீரழிவாகப் பேசிய இச் சிறுமதியாளனைச் சிறையிலே அடையுங்கள்.

காகப்பட்டர் : துஷ்டன்.. துராத்மா.. வேத நிந்தகன்.. நாஸ்திகன்.
(மோகன் வாளை உருவ)

சிவாஜி : மோகன் வாளைக் கீழே போடு.

மோகன் : மகராஜ்! (வாளை போட)

சிவாஜி : அரச சபையை அவமதித்த உன்னை நமது மெய்ப் பாதுகாவலர் வேலையின்றும் நீக்கிவிட்டோம்.

மோகன் : மகராஜ் எனக்கா இந்தத் தண்டனை?

சிவாஜி : தண்டனையின் முழு விவரமும் கூறியாகவில்லை. நாளை சூரியோதயத்துக்குள் நீ தலைநகரைவிட்டுப் போய் விடவேண்டும்?

மோகன் : தேசப்பிரஷ்டமா?

சிவாஜி : அரச சமூகத்திற்கு நீ தகுதியற்றவன்! போ. (வீரர்கள் நெருங்க)
வீரர்களே ! விலகி நில்லுங்கள். அவன் போவான் ! சர்தார் !

(போகிறான்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

100 வருசமானாலும் இங்க பிஜேபி வர முடியாது – மக்கள் கருத்து | காணொளி

நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவின் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்த தமிழக மக்களுக்குத் தேர்தல் முடிவுகள் மிகப்பெருமளவில் அதிர்ச்சியளிப்பதாகவே இருந்தன.

மோடி இந்தியாவில் வென்றதற்கும், தமிழகத்தில் பாஜக தோல்வியுற்றதற்கும் காரணம் என்னவென்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள் ?

சென்னை கோயம்பேடு பகுதி சிறு வியாபாரிகள் மற்றும் பயணிகளுடன் வினவு செய்தியாளர்கள் நேர்காணல்..

பாருங்கள் ! பகிருங்கள் !

வினவு களச் செய்தியாளர்கள்

மான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு !

மெரிக்க மான்சாண்டோ நிறுவனமானது (தற்போது ஜெர்மனியின் பேயர் நிறுவனத்திற்கு சொந்தமானது) மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை 1998 முதல் இந்தியாவில் விற்று வருகிறது. அந்த வருடத்தில் இருந்து பி.டி. காட்டன் உற்பத்தியில் ஒரு முழுமையான ஏகபோகத்தை நிறுவி உள்ளது. இந்திய பருத்தி உற்பத்தியில் 90 சதவீதம் – 11.8  மில்லியன் ஹெக்டரில் பி.டி. காட்டன் பயிரிடப்படுகிறது.

தற்போது மான்சாண்டோ நிறுவனமானது, மும்பையைச் சேர்ந்த மாஹைகோ என்ற விதை நிறுவனத்துடன் சரிவிகித பங்குடன் கூட்டு நிறுவனமாக மாஹைகோ மற்றும் மான்சாண்டோ ஹோல்டிங் (Mahyco and Monsanto Holding Pvt Ltd MMBL ) என்ற நிறுவனத்தின் பெயரில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்திய நிறுவனங்களுக்கு விற்று வருகிறது. அப்படி விற்பனை செய்யும்போது விதைகளுக்காக உரிமக் கட்டணம் அல்லது தொழில்நுட்பக் கட்டணம் என்ற பெயரில் ஒரு உரிமக் கட்டணத்தையும் விதிக்கிறது. (charges a licensing fee called ‘trait fee’, or technology fee).

நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி கண்காணிப்பு விசாரணை ஆணையமானது, தன் விசாரணை அறிக்கை மூலம் மான்சாண்டோ எவ்வாறு பி.டி. காட்டன் விதை விலை நிர்ணயிப்பில் பித்தலாட்டம் செய்து வருகிறது. என்று சி.சி.ஐ -க்கு The Competition Commission of India (CCI) தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில் மாஹைகோ மற்றும் மான்சாண்டோ ஹோல்டிங் (MMBL) நிறுவனமானது பி.டி. காட்டன் தொழில்நுட்பத்திற்கான சந்தையில் நியாயமற்ற உரிம கட்டணத்தை, விதைகளுக்கு நிர்ணயிப்பதன் மூலம், தனது மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்துகிறது . மேலும் பி.டி. காட்டன் விதைகளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நேரடியாக விலை நிர்ணயம் செய்யும் விலை நிர்ணய ஒப்பந்தங்களில் இந்நிறுவனம் நுழைகிறது.

விவசாய அமைச்சகம் மற்றும் நுசிவிடு என்ற நிறுவனமும் 2015-லேயே  மான்சாண்டோ குழுமத்திற்கு எதிராக பி.டி. காட்டன் தொழில்நுட்ப சந்தையில் அந்நிறுவனத்தின் மேலாதிக்க நிலையைப் குற்றம் சாட்டினார்கள். அதன் பின்னர்தான் விசாரணை தொடங்கியது. சி.சி.ஐ -யின் மூலம் வந்த விசாரணைக்காக மான்சாண்டோ டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

எகனாமிக்ஸ் டைம்ஸ், சி.சி.ஐ -யுடன் நடத்திய கலந்தாய்வில் உரிமம் கட்டணத்தை உயர்த்துவதானது, நேரடியாக விதைகளின்  சில்லறை விற்பனையை அதிகரிக்கும், அதன் மூலம் அந்நிறுவனமானது அதிக உபரியை இலாபமாகக் கொள்ளும். இந்த சுமை அனைத்தும் விதைகளை நேரடியாகக் கையாளும் விவசாயிகளின் தலையில்தான் விழும் என்கிறது.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : குத்தகை விவசாயிகளாகும் கார்ப்பரேட்டுகள் !
♦ குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !

விதைகளுக்கான விலை ஒழுங்குமுறை (Price Regulation) இல்லாத ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விதை உற்பத்தியாளர்களிடம் அதிக உரிமக் கட்டணத்தை தன் மேலாதிக்க நிலையைப் பயன்படுத்தி நிர்ணயம் செய்கிறது.

மான்சாண்டோ குழுமம், தனது விதைகளுக்கு ஒவ்வொரு இடங்களுலும் வெவ்வேறு விலைகளை  நிர்ணயம் செய்வதன் நோக்கம், வெறுமனே விதைக்கு விலை நிர்ணயிப்பது மட்டுமல்ல, தனது போட்டியாளர்களையும் சிதைக்கவேண்டும் என்பதுதான். இது ஒரு ஏகபோக நிறுவனம் மேற்கொள்ளும் மூன்றாம் தரமான  விலைநிர்ணயமாகும். இந்த விலைப் பாகுபாடு நுகர்வோரின் எந்த ஒரு மேம்பாட்டுக்கும் வழிவகுப்பது இல்லை. மேலும் நிலையான விலை ஒழுங்குமுறை உள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூட தன் உரிமம் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

மான்சாண்டோ குழுமம்  உரிமக் கட்டணத்தை, விதை தொழில்நுட்பத்தின் அதிக செலவினங்களுக்காகவோ மற்றும் விதை தொழில்நுட்பத்தில் புதிய ஆராய்ச்சி அடிப்படையிலோ உயர்த்தவில்லை. மான்சாண்டோ குழுமமானது மிகவும் குறைவான செலவில்தான் விதைகளுக்கான உரிமம் பெறுகிறது என்று நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி கண்காணிப்பு விசாரணை அறிக்கை அம்பலபடுத்துகிறது.

மேலும், மான்சாண்டோ குழும  நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ஒரு நிறுவனம், மான்சாண்டோவின் பிற  போட்டி நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடும்போது தனக்கு (MMBL) முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறது மான்சாண்டோ. இதன் மூலம் தன்னுடைய போட்டி நிறுவனங்களின் நுழைவைத் தடுக்கிறது என்று  அந்த அறிக்கை கூறுகிறது.

படிக்க:
விதை நெல்: விவசாயிகளுக்கு எதிராக மான்சாண்டோவின் ஏகபோகம் !
♦ 4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !

இது குறித்து சி.சி.ஐ-யின் இயக்குனர் ஜெனரல் கூறுகையில், வணிகப் போட்டி சட்டத்திற்கு புறம்பாக, தன் துணை ஒப்பந்தம் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தங்கள் சரக்குகள் அனைத்தையும் அழித்து விட வேண்டும் என்று தன் துணை ஒப்பந்ததாரர்களுக்கு மான்சாண்டோ நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளதாகக் கூறுகிறார் சி.சி.ஐ-யின் பொது இயக்குனர் .

மேலும் அவர் MMBL நிறுவனத்தின் இந்தக் கெடுபிடி, விதையின் தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை  இல்லாமல் ஆக்குவதும், விதைகளின் விலைகளை அதிகரித்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

பி.டி. பருத்தியின் காப்புரிமையைப் பெற்றிருப்பதன் மூலம் தங்கள் பங்குதாரர்கள் புதிய கலப்பின வகைகளைப் பயன்படுத்துவதைத் தவறு எனக் கூறுகிறது மான்சாண்டோ நிறுவனம். இந்த கலப்பினங்கள் பொதுச் சொத்தல்ல என்பதுதான் அதன் வாதம். இதன் மூலம் அது பருத்திக்கான தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பருத்தி என்ற பயிரையே, தான் இல்லாமல் மீண்டும் சாகுபடி செய்ய முடியாதவாறு பார்த்துக் கொள்கிறது. காலகாலத்திற்கும் விவசாயிகளை மட்டுமில்லாமல், உள்ளூர் நிறுவனங்களையும் தங்களையே சார்ந்து இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.

வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் உள்ளே கொண்டுவரப்பட்ட மான்சாண்டோ நிறுவனம், இன்று பருத்தி விதை சந்தையில் ஏகபோகமாக வளர்ந்து விவசாயிகளையும் பிற போட்டி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தி மெல்ல மெல்ல அவர்களைச் சாகடிக்கிறது.

பரணிதரன்


நன்றி: RT,  எக்னாமிக்ஸ் டைம்ஸ்

தள்ளி நின்றால் போதும் … தமிழ் வளர்ந்துவிடும் !

தள்ளி நின்றால் போதும்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
மீபத்தில் இக்வடோர் நாட்டுக்கு சென்று திரும்பிய நண்பர் ஒரு கதை கூறினார். அந்த நாட்டு அரச கரும மொழி ஸ்பானிஷ். அவர்களுடைய மக்கள் மொழியான குவெச்சா அழிந்து வருகிறது. அதை பேசுவோரும் குறைந்து விட்டார்கள். தென் அமெரிக்காவின் ஆதிவாசிகளான இன்கா இனத்தவர் பேசிய மொழி அது. அதை அழிவிலிருந்து காப்பாற்ற பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. இப்பொழுது மைக்ரோசொஃப்ட் நிறுவனம் குவெச்சா மொழி கம்ப்யூட்டரில் இடம் பெறும் தகுதி பெற்றுவிட்டது என அறிவித்திருக்கிறது.

ஒரு மொழியை பாவிக்காவிட்டால் அது அழிந்து போகும். தமிழ் நாட்டின் பிரபல கவி ஒருவர் தமிழை ஒன்றுமே செய்யத்தேவை இல்லை, அது தானாகவே வளரும் என்று சொல்லியிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் ஆங்கிலம், ஹவாய் மொழியை நசுக்கி வருவதால் ஹவாய் மொழி பேசுபவர்கள் அருகிவிட்டார்கள். 1984-ல் இருந்து அரசாங்கம் தலையிட்டு ஹவாய் மொழியை மறுபடியும் உயிர்ப்பித்து வருகிறது.

மாதிரிப் படம்

வேல்ஸ் நாட்டில் ஆங்கிலத்துக்கும் வேல்ஸ் மொழிக்கும் சம அந்தஸ்து. அப்படியிருந்தும் வேல்ஸ் மொழி பேசுபவர்கள் 20 சதவீதமாக குறைந்துவிட்டார்கள். இங்கேயும் அரசாங்கம் விழித்துக்கொண்டு மேலும் மொழி அழிவதை தடுத்து வருகிறது. அவர்கள் ஒன்றுமே செய்யாமல் விட்டால் அந்த மொழிகள் கிட்டத்தட்ட ஒழிந்தே போயிருக்கும். நூறு வருடங்களுக்கு முன்னர் ஹீப்ரு மொழி, எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. இன்று ஏழு மில்லியன் மக்கள் அதை பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். 1948 -ல் அவர்களுக்கு ஒரு நாடு கிடைத்து ஹீப்ரு மொழி புதுப்பிக்கப்பட்டது. அந்த நாடு கிடைத்திருக்காவிட்டால் அவர்கள் மொழி அழிந்துபோயிருக்கும்.

சமீபத்தில் ஒரு தமிழ் நாட்டுக்காரரை சந்தித்தேன். அவர் ஆரம்பத்திலிருந்து தமிழ்நாட்டிலேயே படித்து பல்கலைக்கழக படிப்பை முடித்து மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்தவர். தமிழ் தடக்கி தடக்கித்தான் பேசுகிறார். அவருக்கு தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரியாது. அவர் சொன்னார் தமிழ்நாட்டில் தமிழ் தெரியாமலே முழுப்படிப்பையும் படித்து முடிக்கலாம் என்று.

படிக்க:
முதல் காதல் அபத்தமா ? அழியா நினைவா ? | மு.வி. நந்தினி
♦ காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !

இது எப்படி சாத்தியமாகும்? ஸ்பெயின் நாட்டில் ஸ்பானிஷ் மொழி தெரியாமல் படிப்பை முடிக்க முடியுமா? பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்சு தெரியாமல் படிப்பை முடிக்கமுடியுமா? ஆனால் தமிழ்நாட்டில் இது சாத்தியம் என்று சொல்கிறார்கள். கனடாவில்கூட மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு தமிழ் பாடத்தில் கிடைத்த மதிப்பெண்களை அவர்களுடைய தகைமையை தீர்மானிப்பதற்கு கணக்கில் காட்டலாம். இது நம்புவதற்கு கடினமானதாகத்தான் இருக்கிறது.

கனடா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களின் மொழிகளை வளர்த்து ஊக்குவிப்பதற்கு கனடிய அரசு உதவி செய்கிறது. இம்முறை விஜயதசமியின் போது நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியர் ஏடு துவக்கி தமிழ் கற்றுக்கொண்டார்கள். வரிசையாக நின்று சுட்டுவிரலால் அரிசியிலே எழுதினார்கள். ஆனால் ஒருவர் தன் மகளுக்கு கணினியில் தமிழ் எழுதக் கற்றுக்கொடுத்தார். அந்தச் சிறுமி வெகுவிரைவிலேயே கணினியில் பல வார்த்தைகளை தமிழில் எழுதினாள். கம்ப்யூட்டரில் தமிழ் படிப்பது மிகச் சுலபம். மூன்று மாதத்தில் 2000 வார்த்தைகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம். வீரகேசரி, தினகரன் பத்திரிகைகள் படிக்குமளவுக்கு தமிழ் அறிவு பெறலாம், மீதியை அவர்களாகவே கற்றுக்கொள்ளலாம். இப்படியான வசதிகள் இன்று வந்துவிட்டன.

’சமீபத்தில் ஒரு தமிழ் நாட்டுக்காரரை சந்தித்தேன். அவர் ஆரம்பத்திலிருந்து தமிழ்நாட்டிலேயே படித்து பல்கலைக் கழக படிப்பை முடித்து மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்தவர். தமிழ் தடக்கி தடக்கித்தான் பேசுகிறார். அவருக்கு தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரியாது.’

முப்பது வருடங்களாக ஒரே கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் அடுத்த தலைமுறையில் தமிழ் வாழுமா? இவர்களுக்கு ஒரே கதையைத்தான் நான் பதிலாகச் சொல்கிறேன். ஒரு காலத்தில் மிருகண்டு முனிவர் வாழ்ந்தார். மணமுடித்து பல வருடம் ஆகியும் அவருக்கு பிள்ளை இல்லை. கடவுளை நோக்கி தவம் செய்யவும் அவர் தோன்றி ஒரு கேள்வி கேட்டார். ‘ உமக்கு 100 வயது வாழும் சாதாரண புதல்வன் வேண்டுமா அல்லது உலகுள்ளவரை பெருமை சேர்க்கக்கூடிய, 16 வயது மட்டுமே உயிர் வாழும் பிள்ளை வேண்டுமா?’ மிருகண்டு முனிவர் யோசிக்காமல் 16 வயது என்று சொன்னார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயர் என்று பெயர் சூட்டினார். மீதிக் கதை எல்லோருக்கும் தெரியும்.

புலம் பெயர்ந்த ஈழத்து தமிழர்கள் இன்று பத்து லட்சத்துக்கும் மேல் உலகமெங்கும் வாழ்கின்றனர். கனடாவில் மாத்திரம் மூன்று லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். நூறு வார்த்தைகள் தெரிந்தால் அன்றாட தேவைக்கு தமிழ் பேசி இவர்கள் வாழ்க்கையை சமாளிக்கலாம். அதனால் என்ன பெருமை? நூறு வார்த்தைகள் கற்கும் தமிழர் வேண்டுமா அல்லது தமிழில் மேல்கல்வி கற்கும் புலமைபெற்றவர் வேண்டுமா?

வருடாவருடம் ரொறொன்ரோவில் தமிழியல் மாநாடு நடக்கிறது. இந்த வருடம் நடந்த ஐந்தாவது மாநாட்டில் பல நாடுகளிலிருந்து படைப்பாளிகளும், கல்வியாளர்களும், 50 – 60 மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

நுழைவு இலவசம் அல்ல; முன்கூட்டியே பதிவுசெய்து கட்டணம் கட்டியாகவேண்டும். அப்படியிருந்தும் பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தானாக விரும்பி தமிழ் படிக்க முனையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புலம் பெயர்ந்த தமிழர்களில் எதிர்காலத்தில் குறைந்தது ஆயிரத்துக்கு ஒருவர் தமிழை உயர் பாடமாக எடுத்து முனைவர் பட்டம் வரை படிக்கும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் தமிழ் ஆராய்ச்சியில் இறங்குவார்கள், உயர்ந்த இலக்கியங்கள் படைப்பார்கள். தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துவார்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் ஃபிரான்ஸிலே சிறுவர் சிறுமியருக்கான தமிழ் கல்வித்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதை இன்று உலகத்து பல நாட்டு தமிழர்களும் பயன்படுத்துகிறார்கள். மதுரைத் திட்டம், நூலகத் திட்டம் மூலமாக ஆயிரக்கணக்கான நூல்கள் கணினி வழியாக இலவசமாக உலகம் முழுவதும் படிக்கக் கிடைக்கின்றன. தமிழ் விக்கிபீடியாவில் இன்றைய தேதியில் 22,645 கட்டுரைகள் ஏறிவிட்டன. தமிழ் விக்சனரியில் 1,15,000 வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றிற்காக எத்தனையோ புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவுசெய்து மௌனமாக உழைக்கிறார்கள். அவர்களைப்பற்றி வெளியுலகம் அறிவதே இல்லை.

படிக்க:
என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன் | அ.முத்துலிங்கம்
♦ பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !

ஈழத்து பூராடனார் என்ற பெரும் தமிழ் அறிஞர் கனடாவில் வாழ்கிறார். இதுவரை 250 தமிழ் நூல்கள் எழுதியிருக்கிறார். தமிழில் கணினியில் 1986-ல் அச்சடித்து முதல் வெளியான புத்தகம் அவருடையதுதான். அதன் பெயர் ‘பெத்தலேகம் கலம்பகம்’. அந்த நூலை அச்சடித்த தமிழ் எழுத்துருவை கணினியில் உருவாக்கியதும் அவர்தான். ஹோமரின் ஒடிசி, இலியட் ஆகிய காவியங்களை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். 48 ஆதிக்கிரேக்க நாடகங்களை மொழியாக்கம் செய்து 14 புத்தகங்களாக பதிப்பித்திருக்கிறார். ஒரு பல்கலைக் கழகம் செய்யவேண்டிய வேலையை தனியொருவராக செய்தவரை பலருக்கு தெரியாது. இவருக்கு செவ்வியல் மாநாட்டுக்கு அழைப்பு இல்லை.

ஈழத்து பூராடனார்

கனடாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத்தோட்டம் பத்து வருடங்களைப் பூர்த்தி செய்துவிட்டது. கனடிய அரசு இதை charitable organization ஆக அங்கீகரித்திருக்கிறது. ரொறொன்ரோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறப்பு இலக்கிய உரைகளை தொடர்ந்து ஏற்பாடு செய்கிறது. வருடா வருடம் இலக்கியத் தோட்டத்தின் சர்வதேச நடுவர்கள் உலகத்து சிறந்த தமிழ் படைப்பாளிகளை அடையாளம் கண்டு பரிசு கொடுத்து கௌரவிக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும் பாய்ச்சல்களை சத்தமில்லாமல் நிகழ்த்துகிறார்கள். தமிழ் கணிமைத்துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு பெரும் தொகை முதலீடு செய்யப்படுகிறது. ஒலியில் இருந்து தமிழ் எழுத்துருவுக்கு மாற்றும் திட்டத்தில் தன்னார்வத் தொண்டர்கள் இரவு பகலாக உழைக்கிறார்கள். தமிழ்நாட்டு கவி சொன்னதில் பாதி உண்மை இருக்கத்தான் செய்கிறது. கிராமத்திலே ஒரு பழமொழி உண்டு. ‘தானும் செய்யமாட்டான், தள்ளியும் நிற்கமாட்டான்.’ தமிழ்நாடு ஒன்றுமே செய்யவேண்டாம். தள்ளி நின்றால் போதும், தமிழ் வளர்ந்துவிடும்.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

நூல் அறிமுகம் : தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளைத் திறம்பட வேகமாக முடித்து வைக்கவும், வனங்கள் மற்றும் இதர இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சார்ந்த சட்ட உரிமைகளை அமல்படுத்தவும், சுற்றுச்சூழல் தொடர்பான அல்லது அதனைச் சார்ந்த விவகாரங்களைக் கையாளவும், அவற்றால் மனிதர்களுக்கும் மற்றும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்கவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க இந்தச் சட்டம் வழி வகை செய்யும்.

ஏனென்றால், ‘ஐக்கிய நாடுகள் அவை’ சார்பில் 1972 -ம் ஆண்டு, ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மனித சமுதாயத்திற்கான சுற்றுச்சூழல் (Human environment) மாநாட்டில் இந்தியாவும் கலந்துகொண்டு, மனித சமுதாயத்திற்கான சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்பாட்டுக்கு சரியான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒப்புக்கொண்டுள்ளது.

ஏனென்றால், 1992-ம் ஆண்டு, ரியோ டி ஜெனிரோவில் சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியாவும் கலந்துகொண்டது. மாசுக்கட்டுப்பாடு மற்றும் இதர சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் பொறுப்புறுதி மற்றும் இழப்பீடு கோருவதற்கு வேண்டிய தேசிய அளவிலான சட்டங்களை உருவாக்குதல் மற்றும் அவர்களுடைய கோரிக்கைகளை ஆராய்ந்து, தீர்வு காணத் தேவையான நீதித்துறை மற்றும் நிர்வாகம் சார்ந்த நடைமுறைகளை உருவாக்கித் தர வேண்டும் என அதில் கலந்துகொண்ட நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.

ஏனென்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ல் வாழ்வதற்கான உரிமை என்பதில் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் உரிமையும் அடங்கும் என்று இந்திய நீதித்துறை அங்கீகரித்துள்ளது.

ஏனென்றால், மேற்கண்ட கருத்தரங்குகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கு இதுவே சரியென்று கருதுவதாலும், சுற்றுச்சூழல் தொடர்பான பல்வகைப்பட்ட பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டும், “தேசிய பசுமைத் தீர்ப்பாயம்” ஒன்று ஏற்படுத்த வேண்டியுள்ளது.

இந்திய குடியரசின் 61-வது ஆண்டில், நாடாளுமன்றத்தில் கீழ்க்கண்டவாறு சட்டம் இயற்றப்பட்டது

குறிக்கோள்கள் மற்றும் காரணங்கள் :  கடந்த சில ஆண்டுகளில், தொழில் துறை, உள்கட்டமைப்பு  மற்றும் போக்குவரத்துத் துறைகளில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட விரிவாக்கத்தின் காரணமாகவும், வேகமான நகரமயமாதலாலும் நம்முடைய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது புதிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு நீதிமன்றங்களிலும், இதர அதிகார அமைப்புகளின் (Authorities) முன்பும் சுற்றுச்சூழல் சார்ந்த வழக்குகள் கணிசமான அளவு நிலுவையில் உள்ளன. ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளின் காரணமாக, மனிதனின் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்டுள்ள அபாயம், கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

1972 -ம் ஆண்டு, ஸ்டாக்ஹோமில் நடைபெற்று மனித சமுதாயத்திற்கான சுற்றுச்சூழல் (human environment) தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியாவும் கலந்துகொண்டது. மனித சமுதாயத்திற்கான சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கு சரியான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்று அம்மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது. 1992-ம் ஆண்டு, ரியோ டி ஜெனிரோவில் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியாவும் கலந்து கொண்டது. மாசுக்கட்டுப்பாடு மற்றும் இதர சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் பொறுப்புறுதி மற்றும் இழப்பீடு கோருவதற்கு வேண்டிய தேசிய அளவிலான சட்டங்களை உருவாக்குதல் மற்றும் அவர்களுடைய கோரிக்கைகளை ஆராய்ந்து, தீர்வு காணத் தேவையான நீதித்துறை மற்றும் நிர்வாகம் சார்ந்த நடைமுறைகளை உருவாக்கித் தரவேண்டும் என அம்மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் வலியுறுத்தப்பட்டன.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 28-ல் வாழ்வதற்கான உரிமை என்பதில் நலவாழ்வுக்கான சுற்றுச்சூழல் உரிமையும் அடங்கும் என்று இந்திய நீதித்துறை அங்கீகரித்துள்ளது.

ஆபத்து நிறைந்த பொருட்களைக் கையாளும் போது ஏற்படும் விபத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதை முழுமையாக பொறுப்புறுதி செய்யும் வகையில் தேசிய சுற்றுச் சூழல் தீர்ப்பாயச் சட்டம், 1995 கொண்டுவரப்பட்டது. அதுபோன்ற விபத்துக்கள் ஏற்படும்போது, நபர்களுக்கோ, சொத்துக்கோ மற்றும் சுற்றுச்சூழலுக்கோ ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கும் வகையில், வழக்குகளை விரைவாகவும், திறம்படவும் முடிக்கும் வகையில் தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தை நிறுவவும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. என்றாலும், குறைந்த அளவே அதிகார வரம்பு பெற்றிருந்த, தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயம் அமைக்கப்படவில்லை.

சுற்றுச் சூழல் (பாதுகாப்புச்) சட்டம், 1986-ன் கீழ்வரும் பாதுகாப்பு நடைமுறைகளின்படி செயல்படும் தொழிற்சாலைகள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் உத்திகளையோ அல்லது பலதரப்பட்ட தொழிற்சாலைகள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் உற்பத்திகளை மேற்கொள்வதற்கோ அல்லது மேற்ளொள்ள இயலாமல் போவது தொடர்பாகவோ விதிக்கப்படும் கட்டுப்பாட்டு எல்லைகள் குறித்து, மேல்முறையீடு செய்வதற்காக, தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு ஆணையச் சட்டம், 1997-ம் ஆண்டு இயற்றப்பட்டு, தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு ஆணையத்தின் விசாரணை அதிகார வரம்புகள் வரையறுக்கப்பட்டவையாக இருந்ததால், அதற்கு குறைந்த அளவே பணிகள் இருந்தன.

படிக்க:
பாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன ?
4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !

… பலவகைப்பட்ட பிரச்சினைகளை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் வழக்குகளை கையாளச் சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றை நிறுவுவது அசியமானதாகிறது. சுற்றுச்சூழல் தொடர்பான சட்டப்பூர்வ உரிமைகளை செயல்படுத்துதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனங்கள் பாதுகாப்பு மற்றும் இதர இயற்கை வளங்கள் சார்ந்த உரிமையில் வழக்குகளை வேகமாகவும், திறம்படவும் முடித்து வைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைப்பதற்கான சட்டத்தை வடிவமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. (நூலிலிருந்து பக்.3-5)

தேசிய பசுமைத் தீர்ப்பாயச்சட்டம் பற்றிய அறிமுகம், அதன் வரையறைகள்; தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமையும் விதம் குறித்து; அதன் தலைவர்கள் நீதித்துறை சார் உறுப்பினர் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர்களுக்கான தகுதிகள்; அவர்களது நியமனம் குறித்த வரையறை; தீர்ப்பாயத்தின் விசாரணை வரம்பு, அதிகாரங்கள் மற்றும் விசாரணைகள்; தீர்ப்பாயத்தின் நடைமுறை மற்றும் அதிகாரங்கள் உள்ளிட்டவை தனித்தலைப்புகளில் விளக்கப்பட்டிருக்கிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை பற்றிய சட்டரீதியான புரிதலை ஏற்படுத்துகிறது இச்சிறுநூல்.

நூல் : தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010
தமிழ் மொழியாக்கம் : ஜெய. கார்த்திகேயன்

வெளியீடு : பூவுலகின் நண்பர்கள்,
73, சாய் லட்சுமி குடியிருப்பு, குமரன் நகர், இரண்டாவது பிரதான சாலை, சின்மயா நகர், விருகம்பாக்கம், சென்னை – 600 092.
தொலைபேசி எண்: 90949 90900.
மின்னஞ்சல் : info@poovulagu.org

பக்கங்கள்: 56
விலை: ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

இணையத்தில் வாங்க : marinabooks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

நாளை குழந்தைகளை பைகள் இல்லாமல் கூட்டி வாருங்கள் !

0

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 10

அமனஷ்வீலி

முதல் நாளின் கடைசிப் பாடவேளை முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

குழந்தைகள் தாங்கள் விருப்பப்பட்டதை வரைந்த தாள்களைத் தருகின்றனர். தங்கள் பெயர், குடும்பப் பெயர், ஏதாவது தெரிந்த வார்த்தைகள், எழுத்துகள், எண்கள் முதலியவற்றையும் எழுதும்படி நான் கேட்டுக் கொண்டேன். இவற்றை எல்லாம் நான் பின்னால் பார்ப்பேன்.

முதல் பள்ளி நாளைப் பற்றிய கருத்துக்கள் இப்பொழுது கிடைத்த பின், நான் மிக முக்கியமானதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அவர்களுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது, அவர்களின் வாழ்க்கையில் முழு மாற்றம் ஏற்பட்டுள்ளது. “குழந்தைகளே, உங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் என்ன முக்கிய நிகழ்ச்சி நடந்துள்ளது” என்ற கேள்விக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? ”நாங்கள் பள்ளிக்குச் சென்றோம்!” “நாங்கள் பள்ளி மாணவர்களானோம்!” “நாங்கள் படிக்க ஆரம்பித்தோம்!” என்று அனேகமாக அவர்கள் பதில் சொல்வார்கள்.

நான் இந்தக் கேள்வியைப் பற்றி, சரியாகச் சொன்னால், குழந்தைகளிடமிருந்து எப்படிப்பட்ட பதில் கிடைத்தால், அதை ஆதாரமாகக் கொண்டு அவர்களை உலகை அறியும் போக்கினுள் மேன்மேலும் ஆழமாக இட்டுச் செல்லமுடியும் என்று நிறைய சிந்தித்தேன்.

முதல் கேள்விக்குப் பின், இன்னொரு முடிவான கேள்வியைக் கேட்பேன்: “பள்ளியில் எப்படிப்பட்ட விஷயங்கள் உங்களை எதிர்நோக்கியுள்ளன?”

இந்த இரண்டு கேள்விகளும் ஒன்றோடொன்று தர்க்க ரீதியாகத் தொடர்புடையவை என்று எனக்குப்பட்டது. இரண்டாவது கேள்வியைக் கேட்பதற்கான அடித்தளத்தை முதல் கேள்வி தயார்படுத்துகிறது.

வரையப்பட்ட தாள்கள் ஒன்றுதிரட்டப்பட்டு விட்டன. குழந்தைகள் என் கண்களைப் பார்க்கின்றனர்.

”குழந்தைகளே, உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்று என்ன முக்கிய சம்பவம் நடந்தது?”

பதில்கள் என்னை பிரமிக்க வைத்தன. “எங்கள் வீட்டை இடித்தார்கள்!” “எங்கள் வீட்டின் பின் கார் எரிந்தது!” “எங்கள் தெருவில் விபத்து நடந்தது!” “கார் ஒரு ஆள் மீது மோதியது!” “என் அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை!” “எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் இறந்தார்!” “கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன!” “எங்கள் தண்ணீர்க் குழாய் உடைந்தது!”

“என் தாத்தாவை மருத்துவமனையில் சேர்த்தார்கள்!..”

”என்ன இது? குழந்தைகள் என்னை ஏமாற்றியிருக்க முடியாது.” நான் கேள்வியை சரியாகக் கேட்கவில்லையா என்ன? அல்லது, தன் வீட்டை இடித்ததாக முதலில் பதில் சொன்னவனை அடுத்து கண் மூடித்தனமாக, ஆட்டு மந்தையைப் போல் நடந்து கொண்டார்களா? எரிந்தது, மோதியது, சாவு போன்ற சோக நிகழ்ச்சிகள் மட்டும் ஏன் எல்லோர் கவனத்திலும் முன்வந்தன?

நான் எதிர்பார்த்தபடி பதில்கள் வரவில்லை என்று தெரிந்ததுமே ஒரு வேளை நான் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டுமோ? “என்ன நீங்கள் இப்படிக் கேட்கின்றீர்கள்? நாங்களனைவரும் பள்ளிக்கு வந்தது அல்லவா எங்கள் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்ச்சி” என்று யாராவது ஒருவன் எழுந்து சொல்லுவான் என்று நான் நம்பினேன்.

ஓ, கேள்வியே! நீ ஆசிரியருக்கு ஒரு முட்டுக்கட்டை!“ இவையெல்லாம் வருத்தம் தரத்தக்கவைதான், குழந்தைகளே. ஆனால் நான் இதைப் பற்றிக் கேட்கவில்லை. உங்கள் வாழ்க்கையில் என்ன முக்கியமான, மகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்தது? நன்றாக யோசித்துப் பாருங்கள்.”

குழந்தைகளுக்கோ யோசிக்கவே விருப்பமில்லை. அவர்கள் பதில் சொல்லத் தயார். நான் காத்துக் கொண்டிருப்பதைச் சொல்ல மாட்டார்களோ! அப்படியேதான் நடந்தது.

“எங்களுக்குப் புது வீடு கிடைத்துள்ளது!”

“என்னை ஞாயிற்றுக்கிழமை சர்க்கசிற்குக் கூட்டிச் செல்வதாக அம்மா சொன்னாள்!”

“நாங்கள் பியானோ வாங்கினோம்!”

“நேற்று என் அப்பா வேலைப் பயணத்திலிருந்து திரும்பினார்!”

“கிராமத்திலிருந்து எங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்துள்ளனர்!”

“என் நாய் திரும்பி வந்தது!”

“என் தாத்தா நேற்று மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்தார்!”

“இன்று எனக்கு சைக்கிள் வாங்கித் தருவார்கள்!”

”என் அம்மாவின் தலையிலிருந்து கட்டைப் பிரித்து விட்டனர், காயம் தெரியவில்லை!”

”என்ன இது? குழந்தைகள் என்னை ஏமாற்றியிருக்க முடியாது.” நான் கேள்வியை சரியாகக் கேட்கவில்லையா என்ன? … எரிந்தது, மோதியது, சாவு போன்ற சோக நிகழ்ச்சிகள் மட்டும் ஏன் எல்லோர் கவனத்திலும் முன்வந்தன?

என்ன செய்வது! இவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் எனக்குத் தம் பாடத்தைச் சொல்லித் தந்தனர், நானும் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம், குழந்தைகளுக்கு எது மகிழ்ச்சி தருகிறது, எது வருத்தம் தருகிறது என்று எனக்கு ஓரளவு தெரியும். ஆசிரியரின் கேள்விகளுக்கான குழந்தைகளுடைய பதில்களின் துல்லியம், விசயத்தின் தர்க்கத்தை விட குழந்தையின் அனுபவத்தின் தர்க்கத்தை அதிகமாகச் சார்ந்துள்ளது என்ற ஒரு முக்கியமான முடிவிற்கு நான் வருகிறேன். தம் வாழ்க்கையில் என்ன முக்கிய, மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்றன என்று குழந்தைகள் தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கையில் நான் என் குறிப்பேட்டில் ஒரு ‘முதுமொழியை’ எழுதுகிறேன். இதை இனி மேல் பின்பற்றுவேன்:

குழந்தைகளை நோக்கி ஆசிரியர் கேட்கும் கேள்வி என்பது முறையியலுக்கு மட்டுமின்றி ஆசிரியரியல் முழுவதற்குமே ஒரு ஜீவ அணுவாகும். இதை நுண்ணோக்கி ஆடியின் கீழ் பார்த்தால் அதில் கல்வி போதிக்கும் முழு நிகழ்ச்சிப் போக்கு மற்றும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு முறைகளின் தன்மை ஆகியவற்றின் போக்கு முழுவதையும் அறிந்துணரலாம்; இதில் ஆசிரியரையே கூட அறிந்துணரலாம். ஏனெனில், கேள்வி என்பது அவருடைய ஆசிரியர் திறமையின் வெளிப்பாடாகும்.

“உங்களிடம் இவ்வளவு மகிழ்ச்சியான செய்திகள் உள்ளனவா! மிக்க நன்று! சரி, இப்போது நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள்?”

“பள்ளியில்.”

படிக்க:
பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி
மருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் !

“நல்ல, கூட்டிசையான பதில்! நன்றி, குழந்தைகளே! பள்ளியில் உங்களை என்ன விஷயங்கள் எதிர்நோக்கியுள்ளன என்று சொல்லுங்களேன்.”

”சுவாரசியமான விஷயங்கள்!” “பெரிய, மிகப் பெரிய விஷயங்கள்!” “தயவு செய்து திரும்பச் சொல்லுங்கள்!”

“மிகப் பெரிய விஷயங்கள் எம்மை எதிர்நோக்கியுள்ளன!”

எளிய, தெளிவான பதில்! இதே போன்ற உற்சாகத்துடனும் காரிய முனைப்புடனும் ஒரு சில ஆண்டுகட்கு முன் எனது ஆறு வயது மாணவர்களில் ஒருவன் கூறிய அதே வார்த்தைகளை நான் மீண்டும் கேட்டேன்….

நாங்கள் படிகளின் வழியே மாடியிலிருந்து கீழே இறங்கி வருகின்றோம். பெற்றோர்கள் வாயிலருகே எங்களுக்காகக் காத்திருக்கின்றனர்.

“நாளை குழந்தைகளை பைகள் இல்லாமல் கூட்டி வாருங்கள்!”

“புத்தகங்கள், மற்ற பொருட்கள் இல்லாமலா? வியப்பாயுள்ளது…. என்ன இருந்தாலும் பள்ளி அல்லவா!…” என்று அவர்கள் குழம்பினர்.

பெற்றோர்களின் ஆச்சரியக் குரல்களுக்கு நடுவே ஒரு சிறுவனின் உற்சாகமான குரல் மீண்டும் மீண்டும் கேட்கிறது:

“அம்மா, அம்மா! எவ்வளவு சுவாரசியமாக இருந்தது தெரியுமா! அம்மா, எவ்வளவு சுவாரசியமாக இருந்தது தெரியுமா!..”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

மருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் !

1

சாதிவெறி படிக்காதவர்களிடம் மட்டுமே இருக்கும் பண்பா ? படிப்பிற்கும் சாதிவெறிக்கும் தொடர்புண்டா ?  படித்தவர்களிடம் சாதிவெறி இருக்குமா ?

மருத்துவர் ராமதாசும், அவரது இளவல் அன்புமணியும் படிக்கவில்லையா ? ”சமூக நீதிக் காவலர்” பட்டத்தை தனக்குத் தானே சூட்டிக் கொண்ட மெத்தப் படித்த ”மருத்துவர் ஐயா” அவர்களுக்கே சாதி வெறி நிரம்பி வழிகையில், படித்துக்கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு சாதிவெறி இருக்காதா என்ன ?

இருபத்தாறு வயதான மருத்துவர் பாயல் தாத்வி, மும்பை நாயர் மருத்துவ கல்லூரியில் எம்.டி. மகப்பேறு மருத்துவம் படித்துக்கொண்டிருந்த மாணவி. ஆதிவாசி தாத்வி பில் என்ற பழங்குடியின சாதியைச் சேர்ந்தவர். அவருடைய குடும்பத்தில் மருத்துவம் படித்த முதல் பெண். ‘நீட்’ என்னும் அநீதியான வழிமுறை மூலம் அனைவரும் மருத்துவம் படித்துவிடக்கூடாது என மனுஷ்மிருதி அரசாங்கம் பல அனிதாக்களை கொன்று கொண்டிருக்கும் காலத்தில், அதையும் மீறி பாயல் எம்.டி. படிப்பு வரை சென்றார்.

உயர் படிப்புகளும் உயர்ந்த கல்விக்கூடங்களும் தங்களுக்காகவே உள்ளவை என சாதிய வன்மத்துடன் அலையும் நபர்கள் நிரம்பிய இடங்களில் பாயல் போன்றவர்கள் உயிருடன் மீள்வது மிகப் பெரும் சாதனையாகவே இருக்கும். பாயல் தாத்வியால் அத்தகையதொரு சாதனையை படைக்க முடியவில்லை, தன்னை மாய்த்துக்கொள்வதன் மூலம் சாதிய வன்மத்திலிருந்து விடுபட்டு விடலாம் என அவர் நினைத்திருக்கிறார். அதன்படி, கடந்த புதன்கிழமை தன்னுடைய அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார் பாயல்.

மருத்துவர் பாயல் தாத்வி

பாயல் தாத்வியின் பெற்றோரும் அவரது கணவரும்; பாயலுடன் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மூன்று மருத்துவர்கள்தான் அவரது இறப்புக்குக் காரணம் என்கிறார்கள். சாதிய வன்மத்துடன் பாயலை அவர்கள் நடத்தியதாகவும் இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீனுக்கு எழுதிய புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தொடர்ச்சியாக அவர்கள் பாயலை சாதிரீதியாக துன்புறுத்தியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

“எங்கள் சாதியில் மருத்துவ மேல்படிப்பு படிக்கும் முதல் பெண், என் மகள்தான். எங்கள் குடும்பத்திலும் மருத்துவம் படிக்கும் முதல் பெண். அவர் நன்றாக படிக்கக்கூடிய மாணவி, கடினமாக உழைத்துதான் இந்த நிலைக்கு வந்தார்” என கண்ணீருடன் நினைவு கூறுகிறார் பாயலின் அம்மா, அபேதா தாத்வி.

மகாராஷ்டிர மாநிலம் ஜால்கானில் உள்ள வட்டார அலுவலகத்தில் பாயலின் பெற்றோர் பணியாற்றுகிறார்கள். அவருடைய மூத்த சகோதரர் உடல் குறைபாடு கொண்டவர். “தன் அண்ணனின் உடல் குறைபாடு காரணமாகத்தான் பாயல் மருத்துவம் படிக்க விரும்பினார். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது மருத்துவம் படிக்க விரும்புவதாகக் கூறினார். எங்களுடைய ஒட்டுமொத்த குடும்பமும் பாயலின் முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்றது” என்கிறார் அபேதா.

மிரஜ் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்த பாயல், மருத்துவ மேல் படிப்புக்காக நாயர் மருத்துவமனை கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்.

“நாயர் மருத்துவமனையில் மேல்படிப்புக்காக சேர்ந்தபோது, தற்காலிகமாக ஹேமா அனுஜ் மற்றும் பக்தி மெஹர் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். அப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து பாயலை துன்புறுத்தத் தொடங்கினர்” என்கிறார் பாயலின் கணவர் மருத்துவர் சல்மான் தாத்வி.

படிக்க:
குஜராத்தில் மருத்துவர் மாரிராஜை வதை செய்யும் பார்ப்பனியம் !
♦ தோழர் மருதையன் உரை : நீட் அடிமைகள் மீது காறி உமிழ்கிறாள் அனிதா !

“அந்த இரண்டு மருத்துவர்களும் கழிப்பறை சென்றுவிட்டு வந்து, பாயலில் போர்வையில் காலை துடைத்திருக்கிறார்கள், அதில் துப்பியும் வைத்திருக்கிறார்கள். எங்காவது வெளியே சென்றிருந்தால், கணவருடன் நேரத்தை செலவிடவே வெளியே சென்றிருக்கிறார் என கூறி கேலி செய்துள்ளனர்” என மருத்துவம் படித்த அந்த சாதிவெறியர் குறித்து சொல்கிறார் சல்மான்.

இந்த இருவடன் அங்கிதா கந்தேவால் என்பவரும் சேர்ந்து பாயலை சாதிய வன்மத்துடன் ராகிங் செய்துள்ளனர். மருத்துவர்களுக்கிடையேயான வாட்சப் குழுவில் பாயலை சாதிவெறியுடன் விளித்துள்ளனர். இந்த வாட்சப் செய்திகளை தன் கணவரிடமும் அம்மாவிடமும் பகிர்ந்துள்ளார் பாயல். கணவரை சந்திக்க அனுமதி மறுப்பது, பணியின்போது உணவு உண்பதற்குரிய நேரத்தில் அவரை உண்ணவிடாமல் செய்வது என அவருக்கு தொடர்ச்சியாக மனரீதியிலான தொல்லையை பணியிடத்திலும் தந்துள்ளனர்.

புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் அவருடைய அம்மாவைக்கூட சந்திக்க விடாமல் தடுத்துள்ளனர். 2018 டிசம்பர் வாக்கில் பாயலின் அம்மா, இந்த மூன்று மருத்துவர்கள் குறித்து மகப்பேறு மருத்துவ துறையின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மருத்துவராக பட்டம் பெற்ற பாயல் , படம் : நன்றி தி ஹிந்து.

“புதன்கிழமை மாலை 4 மணி வாக்கில் பேசிய பாயல், அழுதுகொண்டே தான் அனுபவித்துவரும் சித்ரவதைகள் குறித்து பேசினார். நான் அடுத்த நாளே அங்கு வருவதாகச் சொல்லி, பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகக் கூறினேன்” என்கிறார் அபேதா.

“என் மகள் மிகவும் உறுதியானவர். தொடர்ச்சியாக இந்த மூவரும் துன்புறுத்தியதால் அவர் உடைந்து போயிருக்கிறார். இவர்கள் மூவரும் தண்டிக்கப்படுவதன் மூலம்தான் இத்தகைய கொடுமைகளை செய்பவர்களுக்கு அது உதாரணமாக இருக்கும்.” என்கிறார்.  தன்னுடைய மகளின் இறப்புக்கு நீதி கிடைக்கும் எனவும் நம்புகிறார் அபேதா.

பாயலின் சகோதரரான ரிதேஷ், “எங்களுக்கு நீதி வேண்டும். நாங்கள் ஏற்கெனவே டீனைக் காண பலமுறை முயற்சித்தோம். ஆனால், முடியவில்லை. நான் உடல் குறைபாடு உள்ளவன். அம்மா புற்றுநோயாளி. எங்களுடைய ஒரே நம்பிக்கையாக இருந்தவர் பாயல் மட்டுமே” என்கிறார்.

“என் தங்கையை துன்புறுத்திய மூன்று மருத்துவர்களின் மருத்துவ பட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்” என்கிறார் ரிதேஷ். பாயலை சாதிரீதியாக துன்புறுத்திய மூன்று மருத்துவர்களும் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ரோஹித் வெமுலா ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் பயில்கையில் விடுதியிலிருந்து வெளியேறுமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்கலை நிர்வாகமும், ஏபிவிபி குண்டர்படையும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் சேர்ந்து மிரட்டி தற்கொலைக்குத் தள்ளியது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம், எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ உயர்படிப்புக்குச் சேர்ந்த சரவணன் என்ற மாணவர் ஜுலை 10-ம் தேதியன்று மர்மமான முறையில் மரணமடைந்திருந்தார். அவர் தனது கையில் தானே விசமருந்து ஊசி ஏற்றி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியது நிர்வாகம். ஆனால் இது சரவணனின் மருத்துவக் கல்லூரி சீட்டைப் மூன்றாம் சுற்று கவுன்சிலிங்கில் விற்பதற்காக நடத்தப்பட்ட கொலை இது எனக் குற்றம்சாட்டினர் சரவணனின் பெற்றோர்.

குஜராத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்புக்குச் சென்ற மருத்துவர் மாரிராஜ் அங்கு தொடர்ச்சியாக சாதியரீதியாக இழிவுபடுத்தப்பட்டதன் விளைவாக தற்கொலைக்கு முயன்றார். உடனிருந்த நண்பர்கள் சிலர் உடனடியாகப் பார்த்ததால் அவர் மரணத்திலிருந்து மீண்டார். இருப்பினும் அவரை இறுதி வரையிலும் தேர்வு எழுதவிடாமல் தடுத்து நிறுத்தியது கல்லூரி நிர்வாகம்.

தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து மருத்துவக் கனவோடு பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி அனிதா, நீட் எனும் மனுதர்ம தேர்வுமுறையால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார். சரியாகச் சொல்வதானால், மனுவால் சனாதன தர்மப்படி கொல்லப்பட்டார்.

இவ்விவகாரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி அம்பலமான பின்னர்தான் இந்தியா முழுவதும் இது குறித்துப் பேசப்பட்டது. ரோஹித் வெமுலா, அனிதா மரணங்களைப் போல பாயலின் மரணமும் சமூக ஊடகங்கள் மூலமாக அதிர்வுகளை எழுப்பியிருக்கிறது. பாயலுக்கு நீதி கேட்டு பலர் எழுதுகின்றனர். நீதி வழங்கும் இடத்தில் அமர்ந்திருப்பது சனாதன சாதியத்தை தூக்கிப் பிடிக்கும் ஒரு அரசு. அதனிடம் வேண்டிப் பயனில்லை; போராடினால் மட்டுமே நீதி கிடைக்க வழியுண்டு…


கலைமதி
நன்றி: தி இந்து,  ஹிந்துஸ்தான் டைம்ஸ்

பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி

மீண்டும் வெற்றி பெற்றுவிட்டது பாஜக ! உற்சாக வெள்ளத்தில் கூத்தாடுகின்றனர் சங்கிகள் ! முற்போக்காளர்களும் ஜனநாயகவாதிகளும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். தமிழக மக்களோ அச்சத்திலும் ஆத்திரத்திலும் இருக்கிறார்கள். எப்படி சாத்தியமானது மோடியின் வெற்றி ?

இந்த வீழ்ச்சியிலிருந்து நாம் மீள வழி என்ன ? இந்தக் காணொளியைக் காணுங்கள் ! பகிருங்கள் !

வினவு செய்திப் பிரிவு

தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?

4

டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், கடந்த 2014-ம் ஆண்டைவிட அதிகமான ஓட்டுக்கள் பெற்றதோடு சுமார் 300 இடங்களையும் பெற்றிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. பிரதமர் நரேந்திர மோடி முழுத் திருப்தியடைவதற்கான அனைத்து நியாயங்களும் இந்த தேர்தல் முடிவுகளில் உள்ளன.

இத்தேர்தல் முடிவுகள் எப்படி உருவாக்கப்பட்டன என்பது குறித்து மற்ற அனைவரையும்விட மோடிக்கு நன்றாகத் தெரியும். கடந்த தேர்தல் பரப்புரையின் போது தாம் அளித்த வளர்ச்சி குறித்த வாக்குறுதிகள் குறித்து தனது தற்போதைய பரப்புரையில் பேசுவதை மிகக் கவனமாகத் தவிர்த்தார். அதற்குப் பதிலாக இந்துக்களின் மனதில் முசுலீம்களைப் பற்றிய பயத்தை விதைப்பது, பயங்கரவாதத்தை வீழ்த்தக் கூடிய தகுதி கொண்ட ஒரே தலைவனாகத் தம்மையே விளம்பரப்படுத்திக் கொள்வது என்ற வகையிலேயே அவரது பரப்புரை அமைந்தது.

இரட்டை நாக்கு மோடி

மேலும், புல்வாமா தற்கொலைத் தாக்குதலில் பலியான துணை இராணுவப் படையினரை தனது தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்தி அவர்கள் பெயரில் வாக்குகளைச் சேகரிக்கும் அளவிற்குத் தரமிறங்கினார். இந்த இழிவான தந்திரத்தை எப்படி எதிர்கொள்வது என்பது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்குத் தெரியவில்லை. இது பாஜகவுக்கு கை கொடுத்தது.

வார்தா-வில், மோடி நேரடியாக மதத்தின் அடிப்படையில் இந்து வாக்காளர்களிடமிருந்து வாக்குச் சேகரித்தார். குறிப்பாக மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூரை பயங்கரவாதக் குற்றங்களுக்காக விசாரித்ததன் மூலம் இந்துக்களின் நம்பிக்கைகள் இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறி வாக்கு சேகரித்தார். வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை, “சிறுபான்மையினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியிலிருந்து போட்டியிடுகிறார்” என்று கூறி ஏளனம் செய்தார் மோடி. முசுலீம்கள் இந்தியாவின் சரிசமமான குடிமக்கள் இல்லை என்பதாக சித்தரித்தார்.

மோடியின் இத்தகைய முனையாக்கம் செய்யப்பட்ட அறிக்கைகள் தொலைக்காட்சிகளில் நேரலையாகக் காட்டப்பட்டன. அவை பாஜக-வின் பிரச்சார இயந்திரத்தால் நாடு முழுவதும் பரப்பப்பட்டது, அந்த நஞ்சு பரவலாகவும், விரிவாகவும் மக்களுக்குச் சென்றடைவது உறுதிசெய்யப்பட்டது. அஸ்ஸாமிலும் மேற்கு வங்கத்திலும், வங்கதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு மதத்தை அடிப்படையாகக் கொண்ட குடியுரிமை வழங்குவது குறித்த பாஜக-வின் பரப்புரைக்கு இது வலு சேர்க்க உதவியது.

படிக்க:
4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !
♦ மோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் !

இந்தியாவின் தேர்தல் பரப்புரை சட்டங்களை பகிரங்கமாக மீறும் இது போன்ற நடவடிக்கைகளிலிருந்து மோடியைத் தடுப்பது குறித்தோ, கண்டிப்பது குறித்தோ தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியிருந்தது. இது இவ்வாறிருக்க, மோடியும் அமித்ஷாவும் குண்டுவெடிப்புக் குற்றவாளி பிரக்யாசிங்கை போபாலில் வேட்பாளராக நிறுத்துமளவுக்குச் சென்றனர். அவரை வேட்பாளராக்கியது, இந்துத்துவ ஆதிக்கத்தை மட்டும் குறியீடாகக் காட்டவில்லை, கூடுதலாக முசுலீம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பயங்கரவாதத்தையும் குறியீடாகக் காட்டியது.

(பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட) மூத்த போலீசு அதிகாரி ஹேமந்த் கார்கரேவின் படுகொலையை, போபால் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட பின்னர் பிரக்யாசிங் ஆதரித்தார். ஏனெனில் கார்கரேதான் முசுலீம்களைக் கொல்ல வெடிகுண்டு வைத்த வழக்கில் பிரக்யாசிங்கைக் கைது செய்தவர். அடுத்ததாக காந்தி படுகொலையை ஆதரித்து இவர் விட்ட அறிக்கை, மோடியையே மிரளச் செய்தது. மோடி பிரக்யாசிங்கிடமிருந்து தன்னை விலக்கிக் காட்டிக்கொண்டார்.

அப்போதும்கூட கோட்சே பிரதிநிதித்துவப்படுத்திய அரசியலின் மீதான விமர்சனத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்துக் கொண்டார் மோடி. பிரக்யா சிங்கைப் போல மோடிக்கும் காந்திக்காகவோ அவரது கொள்கைகளுக்காகவோ ஒதுக்குவதற்கு நேரம் கிடையாது. ஆனால் காந்தியை களமிறக்கச் சாத்தியமான இடங்களில் அவரைப் பயன்படுத்துவது மற்றும் காந்தி கொலையை நியாயப்படுத்துவதை தவிர்ப்பதையும் தனது நடைமுறைத் தந்திரமாகக் கொண்டுள்ளார் மோடி.

மோடி விரும்புவது போல, பாஜக-வின் இந்த தேர்தல் வெற்றியை பாரதத்தின் வெற்றி என்று யாராவது அழைக்க முடியுமா ? அப்படி அழைப்பது போபாலில் பிரக்யாசிங் தாக்கூரின் வெற்றியை இந்தியாவின் வெற்றி என்று ஏற்றுக் கொள்வது போல்  ஆகிவிடும் அல்லவா ? மோடி தேர்தலுக்கு முன்னரே பிரக்யாசிங்கிடமிருந்து விலகியிருந்ததை விட  இனி இன்னும் அதிகமாக விலகி இருப்பார் என்று அனுமானித்துக் கூறுகின்றனர்.

எனினும் அதனால் ஒருபலனும் இல்லை. குஜராத்தில் பிரவின் தொகாடியா ஒதுக்கப்பட்டதைப் போல பிரக்யாசிங் ஒதுக்கி வைக்கப்படலாம் அல்லது அவர் ஒரு அமைச்சராகக் கூட நியமிக்கப்படலாம். மோடியின் நோக்கம், இந்த நாட்டின் இரத்த ஓட்டத்திற்குள் ஒரு நச்சுக் கிருமியைச் செலுத்துவதுதான். அந்த வேலை நிறைவேறிய பின்னர், ஒவ்வொரு நோய் பரப்பிகளின் தலையெழுத்தும் கவனத்தில் கொள்ளத்தக்கவையல்ல..

மோடியின் கண்கவர் வெற்றியின் மூன்று பிற அம்சங்கள் குறித்து நாம் கவலை கொள்ளவேண்டும். நினைத்துப் பார்க்கமுடியாத அளவிலான பணபலத்தை பயன்படுத்தியிருப்பதுதான் முதல் அம்சம். இந்த மிகப்பெரும் பணபலம் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றாற்போல அவரது பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நண்பர்களின் அடையாளத்தை பொதுமக்களிடமிருந்து மறைப்பதற்கேற்ற புதிய விதிமுறைகளை தாமே எழுதிக் கொண்டார்.

இந்தக் கார்ப்பரேட்டுகள்தான் இந்தத் தேர்தலில்  பாஜகவின் பகட்டான பிரச்சாரத்திற்கு பின்னிருந்து படியளந்தவர்கள். இதன் மூலம்தான் எக்கச்சக்கமான விளம்பரங்கள், சட்ட விதிகளை மீறி தேர்தல் சமயத்தில் திடீரென முளைத்து, தேர்தல் ஆணையத்தால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு,  தேர்தலுக்குப் பின் மறைந்து போன 24 X 7 பிரச்சாரச் சேனல் என்று பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது பாஜக.  பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு யார் படியளந்தார்கள் என்பது நமக்கு நேரடியாக தெரிய வாய்ப்பில்லையாதலால், (பொருளாதார) கொள்கைகளின் மூலமாக எவ்விதத்தில் அவை திருப்பி செலுத்தப்படும் என்பது குறித்து குறிப்பிட்டுக் கூறுவதும் கடினமானது.

இரண்டாவதாக, ஊடகங்களின் பெரும் பிரிவு மோடி வழிபாட்டை சந்தைப்படுத்தியதோடு, மோடி அரசாங்கத்தின் பல்வேறு ‘திட்டங்களின்’ சாதனைகளை மிகைப்படுத்தி விற்பனை செய்தனர். மோடி மற்றும் அமித்ஷா நடத்திய பேரணிகளுக்கு அளவுக்கதிகமான நேரத்தை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒதுக்கினர்.

இதைத்தாண்டி கடந்த ஐந்தாண்டுகளாகவே, பாஜகவின் பிரிவினைவாத மற்றும் வேற்றுமைவாத நிகழ்ச்சி நிரலை சந்தைப்படுத்த உதவியதன் மூலம், பொதுமக்களை சீரழித்ததோடு, அரசாங்கத்தின் தோல்வியுற்ற கொள்கைகளின் மீதான விமர்சனக் கண்ணோட்டத்தை மழுங்கடிக்கச் செய்வதில் பெரும் ஊடகங்கள் பாஜகவுக்கு பேருதவி செய்தன. ஊடகத்தின்  இப்பிரிவினர்தான் லவ் ஜிகாத் முதல் அயோத்தி பிரச்சினை வரையிலான சங்கப் பரிவாரத்தின் மதவாதக் கருத்துக்களையும், தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் பாஜக-வின் மிகைப்படுத்தப்பட்ட சுயபிரச்சாரத்தையும் கடத்தும் குழலாகச் செயல்பட்டனர்.

”மோடியின் ஆட்சிக்காலத்தில் தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்களே நடந்ததில்லை” என்பது போன்ற நிர்மலா சீதாராமனின் சவடாலைப் போன்று, அமைச்சர்களின் அப்பட்டமான பொய்களும் கேள்விக்கிடமற்றுக் கடந்து போக அனுமதிக்கப்பட்டன. புல்வாமாவில் நடந்த பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்வி குறித்து எவ்விதக் கடுமையான கேள்விகளும் கேட்கப்படவில்லை.  அதேபோல இந்திய விமானப்படையின் மிக் ரக விமானத்தை இழந்து, இந்திய விமானி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு, சொந்த ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்திய அவலங்களை உள்ளடக்கிய பாலகோட் பதிலடித் தாக்குதல் குறித்தும் எவ்விதக் கேள்விகளும் கேட்கப்படவில்லை.

மோடி அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு ஒத்துழைக்க மறுக்கும் ஊடகங்கள் அவதூறு வழக்குகளாலும், சிபிஐ அல்லது வரி விசாரணை போன்றவைகளாலும் குறி வைக்கப்பட்டன. சில பத்திரிகையாளர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் தங்கள் பணியை இழந்தனர். வேறெங்கும் வெளிப்படுத்த முடியாத விமர்சனங்களின் மூலமாக இருக்கும் சமூக வலைத்தளங்களை மிரட்ட, இந்த நாட்டின் கணிணி சட்டங்கள் தொடர்ச்சியாக கட்சி செயல்பாட்டாளர்களாலும் போலீசாராலும் நாடு முழுவதும் தவறான முறையில் பிரயோகிக்கப்பட்டன.

மூன்றாவதாக, தேர்தல் கமிசனின் செயல்பாடுகள் நினைவு தெரிந்தவரையில் மிகவும் அதிகமான அளவிற்கு கட்சி சார்பானதாக இருந்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் நடத்தை விதிகளை மோடியும் பாஜகவும் பகிரங்கமாக மீறியதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்குக்கு அபாயம் இருப்பதாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324 -ஐப் பிரயோகித்து பிரச்சாரத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது மட்டுமல்லாமல், அங்கு பிரதமரின் பேரணிகளை அனுமதிக்கும் வகையில் நேரத்தை வெட்டிச் சுருக்கிக் கொண்டது தேர்தல் ஆணையம்.

இவையனைத்தையும் இணைத்துப் பார்த்தால், இவ்வகையான வெற்றியால் இந்தியாவிற்கு என்ன பலன் ? மோடியும் பாஜகவும் கடந்த ஐந்தாண்டுகளாக சாதித்ததாகச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொன்றும் தேர்தலால் தற்போது அங்கீகரிக்கப்பட்டிருப்பதோடு, நாட்டை மதவாதமாக்குவதற்கான அடித்தளமும் இடப்பட்டுள்ளது.

மேலும் மையப்படுத்தப்பட்ட முடிவெடுத்தல் (Centralised Decision Making),  தான்தோன்றித்தனமான கொள்கை முடிவுகள், பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான பெரும் சலுகைகள், சுதந்திர ஊடகங்களின் மீதான பெரும் வெறுப்பு மற்றும் மாற்றுக் கருத்துக் கொண்டோரின் மீதான சகிப்பின்மை ஆகியவற்றிற்கும் அடித்தளமிடப்பட்டு உறுதியாக்கப்பட்டுள்ளது.

படிக்க:
மோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்
♦ காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !

தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேச விரோத நடவடிக்கைகள் மீது கூடுதலான, கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று கூறியிருக்கிறார். இது ஒரு உதாரணம்தான். இனி வரும்காலங்களில் அரசு இயந்திரத்தின் உறுப்புகள் மீதான மோடி அரசாங்கத்தின் போர் அடுத்தகட்டத்திற்குச் செல்லும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மத்திய – மாநில உறவுகள், நீதித்துறை ஆகிய இரண்டு அரண்கள்தான் மோடியின் பல்வேறு முயற்சிகளையும் தாண்டி கடந்த ஆட்சியில் ஓரளவு தப்பின. இந்த இரண்டு அரண்களை நோக்கிதான் இனி மோடி திரும்புவார். “தனது புதிய பெரும்பான்மையைப் பயன்படுத்தி மாநிலங்களில் பணிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசிற்கு வழங்க முயற்சிப்பார். இதனைச் செய்து முடிக்க நிதிக் கமிசனை தனது  ஒடுக்கும் தடியாக உபயோகிப்பார்” என்று பிரபல பொருளாதார நிபுணர் நிதின் தேசாய் தனது அச்சத்தை வெளிப்படுத்துகிறார். நீதிபதிகள் நியமனத்தில் தலையிடுவதன் மூலம், அடுத்த ஐந்தாண்டுகளில் நீதித்துறையில் தனது தடத்தைப் பதிப்பார்.

எதிர்க்கட்சிகள் வீரியமான பரப்புரைகளைச் செய்தால்மட்டுமே, இந்த பயங்கரமான நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகப் போராட முடியும். அமித்ஷா அமைத்திருக்கும் இந்த தேர்தல் பொறியை வெறுமனே சாதிய மற்றும் குழு அடிப்படையிலான கூட்டணிகள் மூலம் போரிட முடியாது.

பாஜகவின் நடைமுறைத் தந்திரமானது, துருத்தி நிற்கும் சாதியப் பற்றுறுதியை உடைத்து, அனைத்து சாதியினரையும்  இந்துக்களாக மாற்றுவதாக இருக்கிறது. இதற்கு முன்னர், மண்டல் கமிசன் அரசியல் இந்த கமண்டல அரசியலுக்கு எதிராக அறிவார்ந்த சாதியக் கணக்கீட்டை வைத்து முறியடித்தது. ஆனால் இன்றைய நிலைமையில் அப்படிச் சாத்தியமில்லை.

பாஜக வாக்காளர்களை இந்துக்களாக (மற்றும் முசுலிம்களாகப்) பார்த்தால், எதிர்க்கட்சிகள் வாக்காளர்கள் மத்தியில் இருக்கும் விவசாயிகளிடம், பெண்களிடம், இளைஞர்களிடம் தம்மைக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இது இன்னுமொரு விவாதத்திற்குரிய விசயமே!


கட்டுரையாளர் : சித்தார்த் வரதராஜன்
தமிழாக்கம் :நந்தன்
நன்றி : தி வயர் 

பாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன ?

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 2

டோக்ளியாட்டி

முன்னுரை ( தொடர்ச்சி…)

டோக்ளியாட்டி சொற்பொழிவாற்றிய வருடங்களில் அமெரிக்காவிலிருந்த சோசலிஸ்டுக் கட்சி, அக்கட்சியினுள் ஊடுருவி, பெருமளவில் தலைமையைக் கைப்பற்றியிருந்த டிராட்ஸ்கியவாதிகளின் செல்வாக்கு காரணமாக, எவ்வகையான பாசிச – எதிர்ப்பு இயக்கத்திலும் பங்கேற்க மறுத்தது.

இப்போது நமது கடமை பாசிசத்திற்கெதிராக ஒரு பரந்துபட்ட ஒற்றுமையைக் காட்டுவதல்ல, மாறாக “வர்க்கத்திற்கெதிராக வர்க்கம்” என்னும் போராட்டத்தை நடத்துவதே நமது பணி என்னும் இடதுசாரி வாய்ச்சவடால் மூலம் பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் தான் சேர மறுத்ததை மூடிமறைத்தது. எதிர்பார்க்கப்பட்டதுபோல், ஆளும் வர்க்கமானது இத்தகைய வார்த்தை ஜாலங்களைப் பற்றி கவலைப்படவில்லை; ஏனென்றால் ஏகபோக மூலதனம், தன்னுடைய அப்பட்டமான சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் முயற்சிகளிலிருந்து அதைத் தடுக்கக்கூடிய திறனைப் பெற்றிருக்கக் கூடிய சக்திகளைப் பிளவுபடுத்துவதில் இத்தகைய இடதுசாரி வார்த்தை ஜாலமும் ஒரு அம்சமாகும்.

“வர்க்கத்திற்கெதிராக வர்க்கம்” என்பதானது, தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கான ஒரு கொள்கை அல்ல. அது முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்குத் தீங்கானதும் அல்ல. அது வெற்றுவேட்டு வார்த்தை ஜாலமே தவிர வேறன்று. ஆனால், அது சீர்குலைவுத்தன்மை வாய்ந்தது.

ஜார்ஜ் டிமிட்ரோவ், பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சி.

பாசிசம் என்பது “ஏகபோக மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான பகுதிகளின் அப்பட்டமான சர்வாதிகாரம்” என்ற சரியான கம்யூனிஸ்டு நிர்ணயிப்பும் விளக்கமும் பாசிச – எதிர்ப்புக் கூட்டணி அமைப்பதற்கான அடித்தளத்தை அளித்தன. தொடர்ச்சியான ஆய்வுகள். பிறகு கூட்டு விவாதங்கள் போன்றவை ஒரு சுற்று முழுமையடைந்ததன் விளைவாக ஒரு விஞ்ஞானப்பூர்வமான சரியான நிர்ணயிப்பு தோன்றியது. 1935-ம் ஆண்டில் நடைபெற்ற கம்யூனிஸ்டு அகிலத்தின் ஏழாவது உலக காங்கிரசுக்கு அளித்த தன்னுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையில் ஜார்ஜ் டிமிட்ரோவ், பாசிசம் என்பது “நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்” என்று விளக்கம் அளித்தார்.

அமெரிக்காவிலுள்ள நமக்கு மிக முக்கியமான வரலாற்றுப் படிப்பினையாக இருக்கக் கூடியது எதுவென்றால் நம்மிடையே இன்று காணப்படுகின்ற சில அம்சங்கள் பாசிசத்தின் வளர்ச்சிக்குத் தளமாக மாறக்கூடிய அபாயம் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதேயாகும்.

இங்குச் சில சிறிய பாசிச குழுக்கள் இருந்து வருவதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இதைவிட பாசிசத்திற்கு ஒரு வெகுஜன அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதற்காக அரசியல் மற்றும் தத்துவார்த்த தயாரிப்பு தற்போது நடைபெற்று வருவதைப் பற்றிதான் நாம் மிகவும் கவலைப்பட வேண்டும். இத்தாலி மற்றும் ஜெர்மனியின் படிப்பினைகளிலிருந்து தெளிவாகத் தெரிவது எதுவென்றால் அங்கெல்லாம் தத்துவார்த்த அரசியல் சூழ்நிலைமை என்பது முதலாளித்துவத்தின் பொதுவான தத்துவார்த்த சக்திகளால்தான் உருவாக்கப்படுகிறது என்பதாகும். “பிற்போக்குத்தனம் நோக்கிய போக்கு” பாசிசத்திற்கான இத்தகைய தத்துவார்த்த தயாரிப்புகளில் பிரதிபலிக்கின்றது.

“நடுத்தரவர்க்கத்தினராகிய நாம் பெரிய அரசாங்கத்தாலும் பெரும் தொழிலாளர்களாலும் மற்றும் பெரும் முதலாளிகளாலும் வரி விதிக்கப்பட்டு கசக்கிப் பிழியப்படுகின்றோம்.” இனவெறி கொண்ட அலபாமா ஆளுநர் ஜார்ஜ் வாலஸ், அதிதீவிர பிற்போக்குவாதியும் அலபாமாவின் முன்னாள் ஆளுநருமான ரோனால்ட் ரீகன் மற்றும் இதரர்களால் முழங்கப்படும் இத்தகைய கோஷங்கள் நடுத்தர வர்க்கத்தினரின் செவிகளில் தேனாகப் பாய்கின்றன. “பெரும் முதலாளிகள்” என்ற வார்த்தைகள் வெறும் ஒப்புக்காகச் சொல்லப்பட்டவை, தூண்டில் இரை. அவை, தொழிலாளி வர்க்கம் மற்றும் தொழிற் சங்கங்களுக்கெதிராக ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கான அவர்களுடைய முயற்சிகளுக்கு ஒரு மூடு திரை. “பெரிய அரசாங்கம்” என்று அவர்கள் குறிப்பிடுவது பொதுமக்கள் எந்தவொரு செல்வாக்கையும் பிரயோகிக்கக்கூடிய ஆட்சி அமைப்பையே ஆகும். இத்தாலியைப் போன்று அமெரிக்க பாசிசம் என்பதும் பெரும் முதலாளிகளின் அப்பட்டமான சர்வாதிகாரமாகத்தானிருக்கும்.

பாசிசம் என்பது “நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்”
– டிமிட்ரோவ்.

“பிரித்தாள்வது” என்பது ஒரு சிறுபான்மையினர், பெரும்பான்மையோரை அடக்கி ஆண்டு சுரண்டும் அதிகாரத்தின் மிகவும் அடிப்படையான அம்சமாகும். அது முதலாளித்துவ ஆட்சியின் துவக்கத்திலிருந்தே ஒரு அம்சமாக இருந்து வருகிறது. வரலாறு முழுவதிலும் திட்டவட்டமான சூழ்நிலைமைகளைப் பொருத்து அதனுடைய பயன்பாடும் வடிவங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. பெரும் முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிச எதிர்ப்பு, பேரரசு இனவாதம், வெள்ளை நிறத்தவர் மேலாதிக்கம் மற்றும் யூத-எதிர்ப்பு என்பவை “பிரித்தாளும்” பிரதான கருவிகளாக உள்ளன. அரசியல் மற்றும் சித்தாந்தத் துறைகளில் இந்தக் கருவியானது கம்யூனிஸ எதிர்ப்பு என்னும் வடிவத்தில் இருந்து வந்துள்ளது, இருந்தும் வருகின்றது.

பாசிசமானது, முதலாளித்துவத்தின் இத்தகைய தத்துவார்த்தக் கருவிகளை எடுத்துக்கொண்டு அவற்றைப் பெரும் ஆயுதங்களாக ஆக்கியுள்ளது. ஜெர்மனியில் இட்லரின் பாசிசம், கம்யூனிச எதிர்ப்பையும் யூத-எதிர்ப்பையும் தன்னுடைய பிரதான அரசியல், தத்துவார்த்தக் கருவிகளாக ஆக்கிக் கொண்டுள்ளது. இத்தாலிய பாசிசமானது கம்யூனிச எதிர்ப்பையும் இனவெறியையும் அதனுடைய பிரதான கருவிகளாகப் பயன்படுத்தி வருகிறது. எத்தியோப்பிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் மீது இத்தாலிய விமானங்களின் மிருகத்தனமான குண்டு வீச்சுத் தாக்குதலோடு சேர்த்து மிகவும் வன்முறைப்பட்ட இழிவான இனவெறிப் பிரச்சாரமும் தொடர்ந்து வந்தது.

இன்று பெரும் முதலாளிகள் “பிரித்தாள்வதற்காக” இனவெறியைப் பயன்படுத்துவதால், அமெரிக்காவிலுள்ள நாம், அந்த இனவெறியைப் “பிரித்தாளும் தத்துவார்த்த விஷயமாகவே” காணவேண்டும். அதே சமயம் பாசிசம் தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய மிகவும் ஆபத்தான சாதனமாகவும் அதைக் காண வேண்டும். அமெரிக்காவில் பாசிசத்திற்கான பாதையைத் தடுப்பதில் நாம் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், இனவெறியை ஒழித்துக்கட்ட போராட வேண்டும் என்ற அடிப்படையான படிப்பினையை நாம் பெற வேண்டும்.

பாஸ்டனில் கருப்பு இன மக்களது வீடுகள் மீது தாக்குதல் தொடுக்கும் கும்பல்கள் இனவெறி கழிசடைப் பேர்வழிகளே. ஆனால், அவர்கள் ஒரு பாசிச இயக்கத்தின் உட்கருவுமாக இருக்கிறார்கள். இதனால்தான் அவர்கள் கறுப்பு இன அமெரிக்கர்களின் வீடுகளைத் தாக்குவதை விடுத்து தொழிற்சங்கங்களைத் தாக்கி வருகின்றனர்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது, யூத எதிர்ப்புச் சக்திகள் கண்ணுக்குத் தென்படவில்லை என்பதை வைத்து நாம் தவறான முடிவுக்கு இட்டுச் செல்லப்படக்கூடாது. யூத எதிர்ப்பு என்பது அமெரிக்க அரங்கில் உயிரோடுள்ள விஷக்கிருமியாக இருந்து வருகிறது. பாசிச அபாயத்தை எதிர்த்துப் போராடுவதென்பது யூத எதிர்ப்பையும் எதிர்த்துப் போராடுவதாகும்.

பாசிச அபாயம் அதிகரிப்பதைத் தொடர்ந்து கம்யூனிச-எதிர்ப்பு, இனவெறி, பேரரசு இனவாதம் மற்றும் யூத எதிர்ப்பு போன்ற இயக்கங்களும் பிரச்சாரங்களும் அதிகரிக்கும்.

முதலாளித்துவமானது அது தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டுவதால் மட்டுமே வாழ முடிகிறது என்ற உண்மையை மூடிமறைக்கவே எப்பொழுதும் முயற்சிக்கிறது. பாசிசம் இந்த மூடிமறைத்தலை ஒருபடி முன்னெடுத்துச் செல்கிறது. பாசிசத்திற்கு முன்னர் முதலாளித்துவத்தின் பாதுகாவலர்கள் “வர்க்கக் கூட்டு” பற்றி பேசி வந்தனர். பாசிசம் அதிகாரத்திலிருக்கும்பொழுது அவர்கள் “வர்க்க முரண்பாட்டை ஒழித்துக்கட்டி விடுவது” என்று பேசினர். ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு இதுதான் அடிப்படை. சொல்லப்போனால் இது வெறும் வார்த்தை ஜாலம் என்பதுடன் பொருளற்றதுமாகும். ஏனென்றால் முதலாளித்துவம் இருக்கும் வரை வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் இருந்தே தீரும். பாசிச அபாயத்தின் இந்தக் கட்டுக்கோப்பிற்குள் மீனி மற்றும் ஏ.எப்.எல் – சி.ஐ.ஓ தலைமையின் வர்க்கக் கூட்டுக் கொள்கைகள் ஒரு கூடுதல் பரிமாணத்தை எடுக்கின்றன.

இவ்வாறு, பாசிச அபாயத்திற்கெதிரான போராட்டமென்பது இன்று வர்க்கக் கூட்டு கொள்கைகளுக்கெதிரான போராட்டத்தையே குறிக்கிறது. வர்க்கக் கூட்டு வேண்டுமென்று கூறுகின்ற தொழிற்சங்கத் தலைவர்களுக்குக்கூட டோக்ளியாட்டியின் சொற்பொழிவுகளில் ஒரு மிகவும் அடிப்படையான படிப்பினை உள்ளது. பாசிசமானது ஒருமுறை வேரூன்றிவிட்டால் அது வர்க்கக்கூட்டுக் கொள்கைகளைக் கொண்டுள்ள சங்கங்கள் உள்ளிட்டு அனைத்துத் தொழிற்சங்கங்களையும் நாசம் செய்துவிடும். அவைகளிருந்த இடத்தில் பாசிஸ்டுகள் தங்களுடைய சொந்த பாசிச தொழிலாளர் முன்னணி அமைப்புகளை உருவாக்குவார்கள்.

ஜெர்மனியிலும் இத்தாலியிலும் பாசிசத்திற்கெதிரான போராட்ட படிப்பினைகளைப் படிக்கும்பொழுதும் அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் பிரச்சினைகள் சம்பந்தமாகத் தோன்றும் பல புதிய “தீர்வுகளின்” தொலைதூரத்திய தாத்பரியங்களைக் காண்பதும் அவசியமாகிறது. “திட்டமிடுதல்” என்பது ஒரு கோட்பாடு என்ற முறையில் தான்தோன்றித்தனமான தன்னிச்சைப் போக்கை தலைமுழுகிவிட்டது. இந்த நோக்கங்கள் யாவும் வர்க்கக் கூட்டு என்ற “திட்ட” அடிப்படையிலானதாகும். ”பொருளாதாரத் திட்டமிடுதல்” என்பது ஏகபோக மூலதனத்தின் சேவைக்காக உள்ளது. அது சுரண்டல் மற்றும் பெரும் ஆதாயங்களுக்கான “திட்டமிடல்” ஆகும். பாசிசமும் “திட்டமிடுதல்” குறித்துப் பெரிதாகப் பேசுகிறது என்பதுடன் பெரும் முதலாளிகளின் நலனுக்காக அது திட்டமிடுகிறது.

“பிரித்தாள்வது” என்பது ஒரு சிறுபான்மையினர், பெரும்பான்மையோரை அடக்கி ஆண்டு சுரண்டும் அதிகாரத்தின் மிகவும் அடிப்படையான அம்சமாகும். அது முதலாளித்துவ ஆட்சியின் துவக்கத்திலிருந்தே ஒரு அம்சமாக இருந்து வருகிறது.

போர்த்துக்கல், இந்தியா மற்றும் இதர பல நாடுகளில் சமூக ஜனநாயகம் எதிர்மறையான பங்காற்றியுள்ள நிலைமையில் பாசிசம் தோன்றுவதற்கு முன்னரும் தோன்றியிருந்த சமயத்திலும் சோசலிஸ்டு கட்சியினுடைய தலைமை கடைபிடித்த கொள்கைகள் குறித்து டோக்ளியாட்டியின் விவாதமானது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இத்தாலியிலும் அதைப் போன்றே ஜெர்மனியிலும் பாசிசத்தை அதிகாரத்தில் ஏற்றுவதற்கான தயாரிப்பில் சமூக ஜனநாயகம் ஒரு காரணமாக இருந்துள்ளது. அதற்கான தயாரிப்புகளிலும் அது ஈடுபட்டிருந்தது. இதனால், டோக்ளியாட்டியினுடைய குறிப்புகளைப் படியெடுத்தவர் சமூக ஜனநாயகத்தின் பங்கைக் குறித்து அவர் விவாதித்த சில பகுதிகளை நீக்கியது துரதிருஷ்டவசமானதே.

பாசிசமானது முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை வெற்றிகொள்ள முடியவில்லை. பல காலம் வரை அது அவற்றை மூடிமறைத்திருந்தது. ஆனால், ஏதாவதொரு வழியில் அவை தொடர்ந்து தலைதூக்க ஆரம்பித்தன. இவ்வாறு பாசிசத்திற்கெதிரான போராட்டங்களுக்குப் புதிய வாய்ப்புகள் தோன்றின. போராட்டத்திற்கான சாத்தியப்பாட்டை முரண்பாடுகள் திறந்துவிட்டன. ஆனால் பாசிசத்தின் தோல்வியானது அணி திரட்டப்பட்ட வெகுஜன போராட்டத்தின் விளைவாக மட்டுமே வரமுடியும்.

“முடிவாக” டோக்ளியாட்டி கூறுகிறார் :

“பாசிஸ்டுகளால் ஒழுங்கமைக்கப்பட்டு அணி திரட்டப்பட்டு அவர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட மக்கள் ஒருநாள் காலையில் தாங்களாகவே பாசிசத்திலிருந்து விலகி, பாட்டாளி வர்க்கப் புரட்சியில் கலந்து கொள்ள நம்மிடம் வந்துவிடுவார்கள் என்று யாரும் நினைக்கக் கூடாது. அந்த மக்கள் வெளியே வருவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். நமது பக்கம் அவர்கள் வந்து சேருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.”

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
♦  காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !

பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பல அடிப்படையான கொள்கைகள் குறித்து டோக்ளியாட்டி பல நிர்ணயிப்புகளை உருவாக்கியுள்ளார். “கோட்பாடு குறித்த சரியான நிலைப்பாட்டிற்கும்” சக்திகளின் உறவு குறித்த ஒரு சரியான மதிப்பீட்டிற்கும், “நடைமுறைக் கொள்கைப் பிரச்சினைகளில் சரியான தீர்வுகளுக்கும்” அவர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். “நடைமுறைக் கொள்கைப் பிரச்சினை”களுக்கான சரியான தீர்வுகளுக்கு அடிப்படையாக “சரியான கோட்பாட்டு நிலைப்பாட்டை” மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அழுத்தமாகக் கூறுவதானது சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளில் தவறி விழுவதற்கு எதிரான எச்சரிக்கையாகும்.

உலக அனுபவம் என்ற பெட்டகத்தில் இருந்து குவிக்கப்பட்டிருக்கும் ஏராளமான சான்றாதாரங்களின் அடிப்படையில் டோக்ளியாட்டி பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார் :

• பாசிசம் என்பது முதலாளித்துவ நாடுகளில் ஒரு அபாயமாக உள்ளது. ஆனால், அது தவிர்க்க முடியாததொரு வளர்ச்சிக் கட்டமல்ல.

• பாசிசமானது, முதலாளித்துவத்தின் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் அடிப்படையில் தீர்க்க முடியாது. இதனால் அடிப்படையான வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் தொடரும்.

• பாசிசம் அதிகாரத்திலிருக்கும் பொழுது, மிக மோசமான நிலைமைகளிலும் கூட ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி பாசிசத்தைத் தோற்கடிப்பதற்குப் போராடுவது சாத்தியமே.

• பாசிசமானது தன்னுடைய சொந்த உள் முரண்பாடுகளால் நொறுங்கி விழுந்துவிடாது. ஆனால், அதை தோல்வியுறச் செய்ய அந்த முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 டோக்ளியாட்டி இந்தச் சொற்பொழிவுகளில் கம்யூனிஸ்டு அகிலத்தின் குழுக்கள் 1934 -ம் ஆண்டுவரை பெறப்பட்ட முடிவுகளையும், அனுபவங்களையும் பிரதிபலித்தார். 1935-ம் ஆண்டில் கம்யூனிஸ்டு அகிலமானது வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஏழாவது உலக மாநாட்டைக் கூட்டியது. கைதியாக இருந்து இட்லருடைய பாசிசத்திற்கு சவால்விட்ட வீரஞ்செறிந்த கம்யூனிஸ்டுத் தலைவரான ஜார்ஜ் டிமிட்ரோவ், காங்கிரசுக்கு சமர்ப்பித்த பிரதான அறிக்கையில் அந்நாள் வரையிலான அனைத்து அனுபவங்களையும் முடிவுகளையும் கொடுத்திருந்தார். “பாசிசத்திற்கெதிரான ஒற்றுமை” – என்ற அறைகூவல் அகிலத்தின் ஏழாவது காங்கிரசிலிருந்து வெளிப்பட்டது.

கஸ் ஹால், பொதுச் செயலாளர், அமெரிக்க கம்யூனிஸ்டுக் கட்சி.

டோக்ளியாட்டியின் இந்தச் சொற்பொழிவுகள் ஏழாவது உலக காங்கிரசிற்கான கூட்டுத் தயாரிப்புகளில் ஒரு முக்கியமான அம்சமாக இருந்தன. உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டு இயக்கமானது தனது பணியின் காரணமாக பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் தன்னுடைய முன்னணிப் படைப் பாத்திரத்தைப் பூர்த்தி செய்ய முடிந்தது. கம்யூனிஸ்டுக் கட்சிகளும், பாசிச-எதிர்ப்பு ஒற்றுமை என்ற அதனுடைய கொள்கைகளும்தாம் பாசிச சவாலை முறியடித்து பாசிச-எதிர்ப்புக்கு வெகுஜன அடித்தளத்தை உருவாக்கித் தந்தன.

இத்தகைய சொற்பொழிவுகள் சோவியத் யூனியனில் நிகழ்த்தப்பட்டது வரலாற்று விபத்து அல்ல. ஒரு புரட்சிகர தொழிலாளி வர்க்க சோசலிச அரசான சோவியத் யூனியன்தான் பாசிசத்திற்கான பாதையைத் தடுத்து நிறுத்திய மைய சக்தியாகும். இரண்டாவது உலக யுத்தத்தில் பாசிச சக்திகளை இராணுவ ரீதியாக தோற்கடித்ததில் சோவியத் யூனியன் பிரதான சக்தியாக திகழ்ந்ததும் வரலாற்று விபத்து அல்ல. சோவியத் யூனியனும் இதர சோசலிச நாடுகளும் இன்று உலக ஏகாதிபத்திய பாதைக்கு பிரதான தடைக்கல்லாகவும், பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் பிரதான தளமாகவும் இருப்பதும் வரலாற்றின் விபத்து அல்ல.

இந்த நூலிலுள்ள சொற்பொழிவுகள் வரலாற்றுப் படிப்பினைகள் மட்டுமல்ல. அவை மார்க்சிய – லெனினியத்தைப் பயன்படுத்துவதற்கான படிப்பினைகளும் ஆகும். அவை, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கான படிப்பினைகள் ஆகும்.

 22 ஆகஸ்டு 1975

கஸ் ஹால்,
பொதுச் செயலாளர்,
அமெரிக்க கம்யூனிஸ்டுக் கட்சி.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

இவன் சாகாமல் எப்படித் தப்பினான் ?

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 16 (தொடர்ச்சி…)

லெக்ஸேய் தன் கால்களை முதல் தடவையாகக் கவனித்துப் பார்த்தான். பாதங்கள் விகாரமாக வீங்கிக் கறுத்திருந்தன. அவற்றை தொட்ட போதெல்லாம் சுரீரென்ற வலி மின்னோட்டம் போல உடல் முழுதிலும் பாய்ந்தது. ஆனால் லேனச்காவுக்கு முக்கியமாக கவலை ஏற்படுத்திய விஷயம் விரல் நுனிகள் கறுத்துப்போய் அடியோடு உணர்விழந்து விட்டிருந்தது தான் என்பது புலப்பட்டது.

மிஹாய்லா தாத்தாவும் தெத்தியாரென்கோவும் மேஜை அருகே உட்கார்ந்திருந்தார்கள். விமானியின் பிளாஸ்க்கிலிருந்து மதுவை இரகசியமாக ஊற்றிப் பருகிவிட்டு இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மிஹாய்லா தாத்தாவின் கிழக் கீச்சுக்குரல், ஏற்கனவே எத்தனையோ தடவை சொல்லிவிட்ட கதையைத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது:

“ஆக, எங்கள் பையன்கள் காடு வெட்டிய திறப்பு வெளியிலிருந்து அவனைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். காப்பரண்கள் அமைப்பதற்காக ஜெர்மானியர் அங்கே மரங்களை வெட்டியிருந்தார்கள். இந்தப் பயல்களின் தாய், அதாவது என் மகள், சிறாய் பொறுக்கி வர இவன்களை அங்கே அனுப்பியிருக்கிறாள். அங்கே தான் பயல்கள் இவனைப் பார்த்தார்களாம். ஆகா, எப்பேர்பட்ட அற்புதம் தெரியுமா? முதலில் அது கரடி என்று நினைத்தார்களாம் குண்டடிப்பட்டு எப்படியோ புரள்கிறது என்று எண்ணினார்கள். ஓடிப்போய்விட நினைத்தார்களாம், ஆனால் ஆவலை அடக்க முடியவில்லையாம். இது என்ன கரடி, ஏன் இப்படிப் புரள்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகத் திரும்பி வந்தார்களாம். ஆகா, அப்படியா? பார்த்தார்களாம், விலாவுக்கு விலா புரண்டதாம், முனகிற்றாம்….”

“ ’புரண்டதாம்’ என்பது எப்படி?” என்று சந்தேகம் கிளப்பினான் தெத்தியாரென்கோ.

“இவன் எப்படிப் புரண்டான் என்று இவனிடமே கேள். நான் பார்க்கவில்லை. பையன்கள் சொல்லுகிறார்கள் – முதுகுப் புறமிருந்து வயிற்றுப் புறத்திற்கும் வயிற்றுப் புறமிருந்து முதுகுப் புறத்திற்குமாகப் புரண்டானாம். வெண்பனியில் ஊர்ந்து செல்வதற்கு இவனிடம் வலு இல்லையே, அதனால் அப்பேர்பட்டவனாக்கும் இவன்!” என்றார் கிழவர்.

தெத்தியாரென்கோ துள்ளி எழுந்து நண்பனைப் பார்க்கத் துடித்தான். அலெக்ஸேயின் அருகே மாதர்கள் வேலையில் முனைந்தார்கள். மருத்துவத்தாதி கொண்டுவந்திருந்த சாம்பல் நிற இராணுவக் கம்பளங்களால் அவனைச் சுற்றிப் போர்த்தார்கள்.

“நீ உட்கார் தம்பி, உட்கார். துணி உடுத்துவதும் போர்த்துவதும் நம் வேலை அல்ல, ஆண்களின் காரியம் அல்ல. நீ பதற்றப்படாமல் உட்கார்ந்து நான் சொல்வதைக் கேள். அப்புறம் உன் மேலதிகாரிகளுக்குச் சொல்லு இதை எல்லாம்… இந்த ஆள் பெரிய வீரச் செயல் செய்திருக்கிறான்! எப்பேர்பட்டவன் பார்! இந்த ஒரு வாரமாக நாங்கள் கூட்டுப்பண்ணைக்காரர்கள் எல்லோரும் இவனுக்கு பணிவிடை செய்கிறோம். இவனாலோ அசையக்கூட முடியவில்லை. ஆனால் தன் சக்தியை எல்லாம் திரட்டி எங்கள் காடு வழியாகவும் ஊர்ந்திருக்கிறான். எத்தனை பேரால் இப்படிச் செய்ய முடியும், தம்பி!”

தெத்தியாரென்கோவின் காதருகே குனிந்து கிழவர் தமது அடர்ந்த மென் தாடியால் அவனுக்குக் கிச்சுகிச்சு மூட்டினார்:

“ஒன்றுதான் எனக்குப் பிடிபடமாட்டேன் என்கிறது. இவன் சாகாமல் எப்படித் தப்பினான், ஊம்..? ஜெர்மன்காரன்களிடமிருந்து ஊர்ந்து தப்பிவிட்டான், சரிதான், ஆனால் காலனிடமிருந்து தப்பிவிட முடியுமா எங்கேயாவது? வேறும் எலும்புக் கூடு இவன், எப்படி ஊர்ந்து வந்தான் என்பது எனக்கு விளங்கவில்லை. தன்னவர்களுக்காக ரொம்ப ஏங்கி போயிருப்பான், விமான நிலையம், விமான நிலையம் என்று. இன்னும் விதம்விதமான சொற்கள். யாரோ ஒல்கா என்பவள் பெயர். அப்படி யாராவது உங்கள் ரெஜிமெண்டில் இருக்கிறார்களா? அல்லது வீட்டுக்காரியோ ஒருவேளை? நான் சொல்வதை நீ கேட்கிறாயா இல்லையா, விமானித் தம்பி, ஏய் விமானித் தம்பி, கேட்கிறாயா? அடே…

தெத்தியாரென்கோ, கிழவனாரின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இந்த ஆள், தன் நண்பன், ரெஜிமெண்டில் மிகவும் சாதாரண இளைஞனாகக் கருதப்பட்டவன், குளிரில் மறுத்தோ அல்லது அடிபட்டு நொறுங்கியோ போயிருந்த கால்களுடன், இளகிய வெண்பனி மீதாக இரவும் பகலும் ஊர்ந்து காட்டையும் சதுப்பு நிலத்தையும் கடந்தான்; வலிவை இழந்த பிறகும் விடாது ஊர்ந்தான், உருண்டான் – பகைவரிடமிருந்து அப்பால் சென்றுவிட வேண்டும், தன்னவர்களிடமிருந்து சேர்ந்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் – இது எப்படி முடிந்தது என்று அனுமானிக்க முயன்று கொண்டிருந்தான் தெத்தியாரென்கோ. சண்டை விமானியின் தொழில். தெக்தியாரென்கோவை ஆபத்துக்குப் பழக்கப்படுத்தியிருந்தது. விமான சண்டையில் ஈடுபடும்போது அவன் சாவைப்பற்றி எண்ணியதே கிடையாது, மாறாக ஏதோ தனி வகைப்பட்ட, களிபொங்கும் உள்ளக் கிளர்ச்சி கூட ஏற்படுவது உண்டு. ஆனால் இந்த மாதிரி, காடு வழியாக, தன்னந்தனியாக….

“எப்போது இவனைக் கண்டுபிடித்தீர்கள்?”

“எப்போதா?” கிழவர் உதடுகளை அசைத்தார். “எப்போது? ஆமாம், சனிக்கிழமை, போன ஞாயிற்றுக் கிழமைக்கு முந்தி ஆகவே ஒரு வாரத்துக்கு முன்பு.”

தெத்தியாரென்கோ மனதுக்குள் கணக்கிட்டுப் பார்த்தான். அலெக்ஸேய் மெரேஸ்யேவ் பதினெட்டு நாட்கள் ஊர்ந்திருக்கிறான் என்று தெரிய வந்தது. காயமுற்றவன், உணவு இல்லாமல் இவ்வளவு நீண்ட காலம் தவழ்ந்தான், ஊர்ந்தான் என்பது நம்பவே முடியாததாக இருந்தது….

இதற்குள் லேனச்கா, அலெக்ஸேயைப் போர்த்தி மூடிவிட்டாள்.

“ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள், சீனியர் லெப்டினன்ட். மாஸ்கோவில் சில நாட்களில் உங்கள் காயத்தைக் குணப்படுத்தி நடமாடச் செய்து விடுவார்கள். மாஸ்கோ பெரிய நகரமாயிற்றே! இன்னும் மோசமான காயங்களைக் கூட அங்கே குணப்படுத்தி விடுவார்கள்!” என்ற சொற்களைத் தெளிவாக, தனித் தனியாக, கடலைப்போல் உதிர்ந்தாள் லேனச்கா.

அவள் மட்டுமீறி உற்சாகக் கிளர்ச்சி கொண்டிருப்பதையும் மாஸ்கோ மருத்துவர்கள் அலெக்ஸேயை ஒரு நொடியில் குணப்படுத்தி விடுவார்கள் என்று அவள் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டு போனதையும் கண்டு, மருத்துவப் பரிசோதனையின் விளைவுகள் மகிழ்ச்சி தருபவை அல்ல, நண்பனின் நிலைமை மோசம் என்பதை தெத்தியாரென்கோ புரிந்து கொண்டான்…

தங்கள் எதிர்பாராத விருந்தாளியை வழியனுப்புவதற்குப் ப்ளாவ்னி கிராமத்தில் இருந்தவர்கள் எல்லோரும் திரண்டு வந்தார்கள். காட்டு ஏரி பனிக்கட்டியாக உறைந்து போயிருந்தது. அதன் விளிம்புகள் இளகத் தொடங்கிவிட்டன, எனினும் நடுவில் அது சமமான உறுதியுள்ள பனிப் பாளமாக இருந்தது. விமானம் இந்தப் பனிப் பாளத்தின் மேல் நின்றது. அங்கே போவதற்குப் பாதை இல்லை. ஒரு மணி நேரத்திற்கு முன் மிஹாய்லா தாத்தாவும் தெக்தியாரென்கோவும் லேனக்சாவும் பதித்திருந்த அடித்தடம், பொருபொருத்த மணல் போன்ற கன்னிவெண்பனி மீது கொடிவழியாகச் சென்றது. இப்போது இந்தச் சுவடு வழியாக உறைந்த ஏரியை நோக்கி விரைந்தது ஆட்கள் கூட்டம். கூட்டத்திற்கு முன்னே சென்றார்கள் சிறுவர்கள். ஆழ்ந்த போக்குடைய செர்யோன்காவும் கிளர்ச்சி பொங்கும் பேத்யாவும் முன்வரிசையில் நடந்தார்கள்.

படிக்க:
இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?
குஜராத் : தலித் திருமணங்களை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறி !

விமானியைக் காட்டில் தேடிக் கண்ட பழைய நண்பன் என்ற உரிமையுடன் செர்யோன்கா ஸ்டிரெச்சருக்கு முன்னால் கம்பீரமாக நடந்தான். கொல்லப்பட்ட தகப்பனாரின் பிரம்மாண்டமான நமுதா ஜோடுகளைப் போட்டுக் கொண்டிருந்தான் அவன், எனவே அவை வெண்பனியில் சிக்கிக் கொள்ளாதபடி ஜாக்கிரதையாக நடக்க முயன்றான். அழுக்கு மயமான முகங்களும் பளிச்சிடும் வெண்பற்களுமாக, நம்ப முடியாத அளவு விந்தையான கந்தல்கள் அணிந்திருந்த சிறுவர் கூட்டத்தை அதிகார தோரணையுடன் அதட்டியவாறு சென்றான் சொயோன்கா. தெத்தியாரென்கோவும் மிஹாய்லா தாத்தாவும் டிரெச்சரை முன்னும் பின்னும் தாங்கிக் கொண்டு நடந்தார்கள். அலெக்ஸேயின் போர்வையைச் சரிசெய்வதும் தன் மப்ளரை அவன் தலைக்குக் காப்பாகக் கட்டுவதுமாக லேனச்கா பக்கவாட்டில் கன்னி வெண்பனி மீது ஓடினாள். பெண்களும், சிறுமிகளும், கிழவிகளும் பின்னே சென்றார்கள்.

“ஆஸ்பத்திரியிலிருந்து எங்களுக்குக் கட்டாயம் எழுது! முகவரியை நினைவு வைத்துக் கொள்: கலீனின் பிராந்தியம், பொலொகோவ்ஸ்கிய் மாவட்டம், வருங்கால கிராமம் ப்ளாவ்னி, ஊம்? வருங்கால கிராமம், தெரிந்ததா? கவலைப் படாதே, கடிதம் வந்து சேர்ந்துவிடும், முகவரி சரியானது” என்றார் மிஹாய்லா தாத்தா.

ஸ்டிரெச்சர் விமானத்தில் ஏற்றப்பட்டது. விமானப் பெட்ரோலின் சுள்ளென்ற நெடியை முகர்ந்ததுமே மகிழ்ச்சி ஊற்றெடுப்பதை அலெக்ஸேய் உணர்ந்தான். அவனுக்கு உயரே ஸெல்லூலாய்டு முகடு இழுத்து மூடப்பட்டது. வழியனுப்ப வந்தவர்கள் கைகளை வீசி ஆட்டினார்கள். சாம்பல் நிறத் தலைகுட்டை அணிந்து காக்கை போன்று தோற்றம் அளித்த நீள்மூக்குக் கிழவி அச்சத்தை விட்டுவிட்டு, விமானச் சுழல் விசிறியால் கிளப்பப்பட்ட காற்றையும் பொருட்படுத்தாமல் விமானத்தின் அருகே பாய்ந்து சென்று விமானி அறையில் உட்கார்ந்திருந்த தெக்தியாரென்கோவை நெருங்கி, அலெக்ஸேய் சாப்பிடாமல் மிச்சம் வைத்திருந்த கோழிக் கறிப் பொட்டலத்தை அவன் கையில் திணித்தாள்.

மிஹாய்லா தாத்தா பெண்டிரை அதட்டுவதும் சிறுவர்களை விரட்டுவதுமாக விமானத்தைச் சுற்றி ஓடிச்சாடினார். காற்று அவருடைய தொப்பியைப் பிய்த்து அகற்றிப் பனிக்கட்டியில் உருட்டிச் சென்றது. அவர் வெறுந்தலையாக நின்றார். அவருடைய வழுக்கையும் காற்றால் பரத்தப்பட்ட அடர்த்தியற்ற நரை மயிரும் பளிச்சிட்டன. ஆனால் அலெக்ஸேய் இந்தக் காட்சிகளில் எதையும் பார்க்கவில்லை. விமானம் கிளம்பி ஓடத் தொடங்கியதும் மிஹாய்லா தாத்தா கையை வீசி ஆட்டினார். அந்தப் பல்வண்ண மாதர்கள் கூட்டத்தில் இருந்த ஒரே ஒரு ஆடவர் அவர் மட்டுமே.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

பட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 18


காட்சி : 25 (தொடர்ச்சி…)

இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு பட்டர், தளபதிகள், வீரர்கள், சிவாஜி, மோரோபந்த், சிட்னீஸ்.

காகப்பட்டர் : பட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை துளியும் துருவி துருவிப் பார்த்தும் பலனில்லை. நான் சம்மதிக்க முடியாது சிட்னீஸ்.

சிட்னீஸ் : ஏன்? ஏன் சம்மதிக்க முடியாது? தாங்களே கூறினீரே, சாஸ்திர முறைப்படி பட்டாபிஷேகம் செய்யலாமென்று. இப்போது தாங்களே மறுக்கிறீரே! மராட்டியரின் களிப்பைச் சிதைக்கிறீரே!

காகப்பட்டர் : சாஸ்திரத்தை மீண்டும் பார்த்தேன். சாங்கோ பாங்கமாக தீர்க்கமாக யோசித்தேன். என்ன செய்வேன் சிட்னீஸ்? சிவாஜிக்கு மகுடாபிஷேகம் செய்வது பாபகாரியம் என்றே தோன்றுகிறது. நான் சம்மதிக்க முடியாது.

சிட்னீஸ் : வீணையைக் காட்டி நரம்பை ஒடிக்கிறீரே!

காகப்பட்டர் : ஆர்வம் மிக்கவனே ! ராஜபக்தி, சினேக பக்தி, உனக்கு முக்கியமான குணங்கள் அவை. ஆனால் தேவ பக்தியை நான் இழக்கலாமோ? இவ்வளவு ஏடுகளும் கூறுகின்றனவே பாப காரியம். பாப காரியம் என்று. நான் என்ன செய்ய?

சிட்னீஸ் : இந்த ஏடுகளையெல்லாம் நாடு, ஏற்காது ஸ்வாமி. மராட்டிய மணிமுடியை அவர் தரித்தே ஆக வேண்டும். கண் இருக்கும் போதே அதைக் காண வேண்டும் என்று துடிக்கிறது மராட்டியம்.

காகப்பட்டர் : பரிதாபமாகத்தான் இருக்கு. நான் என்னத்தைச் செய்ய? பாலைவனத்திலே புகுந்த பிறகு தாகவிடாய் ஏற்பட்டால் கஷ்டந்தான்.

சிட்னீஸ் : உவமை கூற இதுவா ஸ்வாமி சமயம்?

காகப்பட்டர் : என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? உன் நாட்டு மக்களை மகிழ்விப்பதற்காக என்னைப் பாபி ஆகும் படி சொல்கிறாயா? என் தவம், ஞானம், நேமம், நிஷ்டை , அருள் இவைகளையெல்லாம் நாசம் செய்து கொள்ளச் சொல்கிறாயா? சிட்னீஸ்! நீ காகப்பட்டரை நன்னா அறிய மாட்டாய். சாஸ்திர சம்மதமற்றக் காரியத்தைச் செய்யச் சொல்லி சர்வேஸ்வரனே வந்து சொன்னால் கூடச் செய்ய மாட்டேன். ஆகமாதிகளை மேலும் ஆராய்ந்த பிறகுதான் இந்த முடிவுக்கு வந்தேன். மேலும் இந்த மண்டலத்தின் முதன் மந்திரி. முதல் மந்திரி முறையிலே இருக்கிற மோரோ பண்டிதர் என்னும் பிராமணோத்தமர் கூட இதை எதிர்த்தாராமே?

சிட்னீஸ் : ஓஹோ! அவருடைய வேலையா இது? மோரோ பண்டிதரைச் சந்தித்ததின் விளைவா இது?

காகப்பட்டர் : பைத்தியக்காரா? ஏண்டா வீணா அவர் மேலே சந்தேகப்பட்டு பாபத்தை தேடிக் கொள்றே இதோ பார்! டே ரங்கு கொஞ்சம் வெளியே போய் இரு. யாரும் இங்கே வரப்படாது. ஜாக்கிரதை, போ! இதோ பார், சிட்னீஸ் நீ காயஸ்த குலம், க்ஷத்திரியனாகலாம். சிவாஜி க்ஷத்திரியனாக முடியாது. இப்போது சம்மதம்னு சொல்லு. ராஜ்யாபிஷேகம் செய்து வைக்கிறேன். உனக்கு முடி தரித்துக் கொள். மராட்டியத்துக்கு மகாராஜனாக்குகிறேன்.

(பதறி)

சிட்னீஸ் : என்ன, என்ன? எனக்குப் பட்டமா? சிவாஜி சிருஷ்டித்த ராஜ்யத்துக்கு நான் ராஜனாவதா?

காகப்பட்டர் : நான் ஆக்றேண்டா ராஜனா?

சிட்னீஸ்: (ஆத்திரமடைந்து ) சாஸ்திரம் இதற்குச் சம்மதிக்கிறதா? நியாயம், நீதி இதிலே இருக்கிறதா? ஆகமம் இந்த அக்கிரமத்துக்கு ஆதரவு தருகிறதா? ஸ்வாமி! என்னைப் பரீட்சிக்கிறீரா?

காகப்பட்டர் : பைத்தியக்காரா? உண்மையைத் தாண்டா சொல்றேன். உனக்குப் புத்தியிருந்தா பூபதியாகலாம். முறையல்ல, நெறியல்ல, தர்மமல்ல என்றெல்லாம் தயங்கினா பலன் இல்லையே. தர்மம் எது? அதை நான் கவனித்துக் கொள்கிறேன். உனக்குச் சம்மதமா?

சிட்னீஸ் : இந்தச் சதிக்கா? சண்டாளச் செயலுக்கா?

காகப்பட்டர் : மந்த மதியடா உனக்கு.

சிட்னீஸ் : நொந்து கிடக்கும் மனதிலே தீ மூட்டாதீர். சிவாஜிக்கு மகுடாபிஷேகம் செய்ய வந்து, சிவாஜியின் மாளிகையிலே இருந்து கொண்டே, சிவாஜிக்கு உரிய ராஜ்யத்தை, சிவாஜிக்கு சேவை செய்யும் எனக்கு, ஆஹா என்னால் கேட்டுச் சகிக்கவும் முடியவில்லை. இந்தச் செயலால் சிட்னீஸைத் துரோகியாகும்படிச் சொல்கிறீர். தூபமிடுகிறீர். இவ்வளவு ஏடுகளும் உமக்கு இந்த அநீதியையா காட்டுகின்றன?

காகப்பட்டர் : சிட்னீஸ்! சித்தத்திலே சீற்றம் குடிபுகுந்தால் பலன் என்ன? கலக்கம், குழப்பம். இப்படிப்பட்ட சமயத்திலே வரத்தான் செய்யும். தர்மமா? அதர்மமா? பாபமா? புண்ணியமா? என்றெல்லாம் எண்ணிக் குழப்பம் அடையறே. சிவாஜி நம்முடைய உயிர்த் தோழனாயிற்றே, அவனுக்குத் துரோகம் செய்யலாமான்னு எண்ணித் திகைப்பு அடையறே.. குருக்ஷேத்திர பூமியிலே இதே நிலை அர்ச்சுனனுக்கு ஏற்பட்டது. காண்டீபத்தைக் கீழே போட்டுவிட்டான். பரந்தாமன் சொன்னார் ‘பார்த்திபா அண்ணன் தம்பிகள் என்றும், பந்து மித்திரர்கள் என்றும் எண்ணிக் கலங்காதே, என் மேலே பாரத்தைப் போட்டுவிடு, ஆரம்பி யுத்தத்தை என்று. கீதா வாக்கியம் தெரியுமா சிட்னீஸ் உனக்கு? என் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தைரியமாகச் சம்மதித்துவிடு.

சிட்னீஸ் : வேதியரே! எனக்கு உம்மைப் பார்க்கவும் கூசுகிறது.

காகப்பட்டர் : முட்டாளே! முடியடா முடி மராட்டிய மண்டலத்தின் மணிமுடி . சாம்ராஜ்யம், செங்கோல், சிம்மாசனம். ராஜயோகம் மன்னனாக வேண்டிய சிவாஜியும், அவனைச் சேர்ந்தவாளும் எதிர்ப்பாரே என்ற பயமா? நானிருக்கப் பயமேன்? நாட்டு மக்களைக் கூட்டி உன் பக்கம் நிற்கச் செய்கிறேன்.

சிட்னீஸ்: போதுமையா உமது போதனை. சிங்கத்தின் உணவைத் திருடும் சிறுநரி என்று எண்ணினீரோ என்னை?

காகப்பட்டர் : நரிக்குப் புத்தி உண்டு நீ மகா மண்டு போடா.

சிட்னீஸ் : உன் எதிரே நிற்பது கூடப் பாபம். என் வாழ்நாளில் நான் இப்படிப்பட்ட வஞ்சகத்தைக் கண்டதே இல்லை.

(போகிறான்; ரங்கு வருதல்)

ரங்கு : என்ன ஸ்வாமி இது? புயல் கிளப்பி விட்டீரோ?

காகப்பட்டர் : புயல் என் கோபம் ; தென்றல் என் சிரிப்பு ; மண்டலம் நம் கமண்டலத்துக்குள் அடக்கம்.

ரங்குப்பட்டர் : ஸ்வாமி, சிட்னீஸ் உம்முடைய திட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டேன்னு பிடிவாதமா சொல்லி விட்டானே?

காகப்பட்டர் : ஆமாம் அவனுக்கு என்ன ஆத்திரம், அழுகை வந்தது தெரியுமோ? சரியான பயல்களெல்லாம் கிடைத்திருக்காண்டா இந்த சிவாஜிக்கு.

படிக்க:
குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !
பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !

ரங்குப்பட்டர் : இப்ப அவன் இருக்கிற நிலையை கவனிச்சா அவனாலே ஏதாவது வம்பு வருமோன்னு தோன்றது ஸ்வாமி.

காகப்பட்டர் : நானும் கூடத்தான் அப்படி எண்றேன். இனி நாமும் முடிவுக்கு வந்தாகணும்.

ரங்குப்பட்டர் : ஆமாம் ஸ்வாமி இப்படிச் சதா ஊஞ்சல் ஆடுகிற மாதிரி இருந்தா ……

காகப்பட்டர் : திடீர்னு அறுந்து போனாலும் போகும்.

ரங்குப்பட்டர் : ஆமாம், சிட்னீஸ் சீறினதைப் பார்த்தா இனித் தங்களுடைய சம்மதத்தைக் கேட்காமலே கூட பட்டாபிஷேகத்தை நடத்திவிடுவான் போல இருக்கு.

காகப்பட்டர் : அப்படிச் செய்யமாட்டான்! சரி, எதற்கும் இனி கால தாமதம் செய்யக்கூடாது. நீ சென்று மோரோபந்தைக் கண்டு அவரிடம் சொல்லிவிடு . குரு பலமான சாஸ்திர விசாரணைக்குப் பிறகு சிவாஜிக்குப் பட்டம் சூட்டிவிடுவதுண்ணு தீர்மானித்து விட்டார். ஆரிய தர்மத்தைக் காப்பற்ற அதுதான் சிறந்த மார்க்கம் என்று குரு நம்பறார். உம்மிடம் சொல்லச் சொன்னார். விசாரப்பட வேண்டாம்; பயமும் வேண்டாம்ணு. அவரிடம் வினயமாய்ச் சொல்லிவிடு. டே ரங்கு என் ஏற்பாட்டிற்கு அவரையும் சம்மதிக்கச் சொல்லு.

ரங்குப்பட்டர் : ஆகட்டும். இதோ போகிறேன்.

காகப்பட்டர் : அங்கு எங்காவது அழுது கொண்டிருப்பான். அந்த அசட்டுச் சிட்னீஸ். அவனிடம் சொல்லு. உன் ராஜ் விசுவாசத்தையும், திடமனதையும் உத்தம் குணத்தையும் மெச்சிண்டிருக்கிறார். உன்னைக் குரு சோதிச்சுப் பார்த்தார். நீ துளி கூட சத்தியத்திலே இருந்து தவறாமல், துளி கூட மனமயக்கமே காட்டாததைப் பார்த்து பூரிச்சுப் போனார். பட்டாபிஷேகத்துக்கான காரியத்தைத் துரிதப்படுத்தப் சொன்னார். அப்படீன்னு சொல்லுடா.

ரங்குப்பட்டர் : ஸ்வாமி! இப்ப முடிவான தீர்மானமாயிடுத்துன்னு அர்த்தமோ?

காகப்பட்டர் : ஆமா! சிவாஜிக்குத்தாண்டா பட்டாபிஷேகம்.

ரங்குப்பட்டர் : குருதேவர் முதலில் முடியாது என்றீர். பிறகு சம்மதம்ணு சொன்னீர். மறுபடியும் முடியாதுண்ணு சொல்லி விட்டீர். இப்படி மறுபடியும் சம்மதம்ணு சொல்றா.

காகப்பட்டர் : நாலு முறை கர்ணம் அடித்தேன்னு சொல்றியோ!

ரங்குப்பட்டர் : கர்ணம் போட்டதாகச் சொல்வேனா குரு

காகப்பட்டர் : சீடனல்லவா சொல்லமாட்ட டே ரங்கு! நாலு கர்ணம்தான் அடித்தேன். அதிலேதப்பு என்னடா? நமக்கு இருப்பது நாலு வேதம்டா, நாலு. தெரியுமோ? போ, போ போய்ச் சொன்னதைச் செய்யடா.

(போகிறான்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்

டோக்ளியாட்டி

மிழில் பாசிசம் என்ற சொல் குறித்து பொதுவில் “சர்வாதிகாரம்” என்று மட்டும் புரிந்து கொள்கிறோம். ஆனால் பாசிசம் என்பது ஒரு நாட்டின் குறிப்பிட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து தவிர்க்கவியலாமல் எழுகிறது. பாசிசத்தின் அடிப்படையாக முதலாளித்துவத்தின் நெருக்கடி இருந்தாலும், வடிவத்தில் அது ஒவ்வொரு நாட்டிற்கேற்ற அவதாரத்தை எடுத்துக் கொள்ளும். இந்தியாவில் அது தற்போது பார்ப்பனிய பாசிச அல்லது காவி கார்ப்பரேட் பாசிச அபாயமாக எழுந்து வருகிறது.

பிரக்யா சிங் தாக்கூர், ஆனந்த்குமார் ஹெக்டே, கிரிராஜ் கிஷோர், சாக்ஷி மகாராஜ் போன்ற பாஜகவின் நாடறிந்த மதவெறியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்பதும், பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியப் பங்கு சந்தை துள்ளிக் குதிப்பதும் வேறு வேறு அல்ல! முதலாளித்துவ ஜனநாயகம் தனது கட்டுமானத்தைக் கலைத்து போலியான ஜனநாயக வேடத்தை அம்மணமாக்கி நேரடியாக போராடும் மக்களை ஒடுக்குவதில் முனைந்து நிற்கிறது. அதே நேரம் இன்னொரு பிரிவு மக்களை தனது காலாட்படையாக திரட்டிக் கொள்கிறது. காவி கார்ப்பரேட் பாசிச அபாயம் என்பதை ஆழமாக புரிந்து கொள்ள இந்த தொடர் நமக்கு உதவும். தொடர்ந்து படியுங்கள்!

பால்மிரோ டோக்ளியாட்டி – அறிமுகக் குறிப்பு :

இத்தாலியில் முசோலினியின் பாசிச ஆட்சிக் காலகட்டத்தில் (1922 – 1943) கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளான அமைப்புகளில் ஒன்று இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி. இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் பால்மிரோ டோக்ளியாட்டி.

இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் உறுப்பினராகப் பணிபுரிந்த 1934 – 1938 காலகட்டத்தைத் தவிர்த்து, இவர் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகப் பதவி வகித்தார். பாசிச ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு அமைக்கப்பட்ட அரசாங்கத்தில், 1944 – 1945 காலகட்டத்தில் இத்தாலியின் துணைப் பிரதமராகவும், 1945 -1946 காலகட்டத்தில் இத்தாலியின் நீதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

1935-ம் ஆண்டு சோவியத் ரசியாவில் உள்ள லெனின் பள்ளியின் இத்தாலியப் பிரிவில் பால்மிரோ டோக்ளியாட்டி ”எதிரிகள்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் பிரதான பகுதியை “Lectures on Fascism” என்ற பெயரில் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி 1976-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்டது. நியூ யார்க்கைச் சேர்ந்த சர்வதேச வெளியீட்டகம் இந்நூலை வெளியிட்டது. கடந்த 1998-ம் ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 17-வது அகில இந்திய மாநாட்டுச் சிறப்பிதழாக இந்நூல் தமிழில் வெளியிடப்பட்டது. இதனை NCBH வெளியீட்டகம் வெளியிட்டது. இனி நூலுக்குள் செல்லலாம்.

****

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 1

முன்னுரை:

பால்மிரோ டோக்ளியாட்டியின் இத்தகைய உரைகளை வெளியிடுவதன் மூலம் இண்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ் பிற்போக்கு சக்திகளுக்கும் பாசிச சக்திகளுக்குமெதிரான போராட்டத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளனர். வரலாற்றுக் கண்ணோட்டத்திலிருந்து காணும்பொழுது சிலருக்கு இது ஆர்வத்தைத் தூண்டும் புத்தகமாக இருக்கக்கூடும். ஆனால், அமெரிக்காவிலுள்ள மக்களுக்கு இத்தகைய சொற்பொழிவுகள் நாம் படித்துப் பயன்படுத்தப்பட வேண்டிய வரலாற்றுப் படிப்பினைகளாக இருக்கும்.

கோட்பாடு, அரசியல் மற்றும் தத்துவார்த்த சிந்தனை என்ற வடிவத்தில் வைத்துக் காணும் பொழுது அனுபவம் என்ற முக்கிய அம்சத்திற்கு மாற்று எதுவும் இருக்க முடியாது.

பால்மிரோ டோக்ளியாட்டி.

அனுபவம் அதிகரிக்கும் பொழுது அதிலிருந்து பெறப்படும் முடிவுகளும் படிப்பினைகளும் ஆழமானதாகும், விளக்கமானதாகவும் இருக்கும். ஒருவருடைய நேரடி பங்கேற்பும் அனுபவங்களும் வெகுஜனங்களின் பொதுவான அனுபவம் என்ற இழையில் ஊடும் பாவுமாக இருக்கும்பொழுது சிந்தனைகள் மேலும் தெளிவாக இருக்கும். ஒவ்வொரு நாட்டின் தொழிலாளி வர்க்கத்தின் மற்றும் மக்களின் அனுபவக் குவியல் மிகுந்த முக்கியத்துவமுடையதாகும். ஆனால், அதிலிருந்தே பொதுமைப்படுத்தப்பட்ட கோட்பாடு, நீண்ட கால மற்றும் உடனடி நடைமுறைக் கொள்கை, முடிவுகளுக்கு வருவதற்குப் போதுமானதாக இருக்காது. முடிவுகள் என்பவை பல நாடுகளின் அனுபவங்களை பரிசோதித்து, மதிப்பீடு செய்யப்படும் பொழுது மட்டுமே அவை ஏற்றுக் கொள்ளப்பட்ட பாடங்களாக விளங்கும்.

பொதுமைப்படுத்தப்பட்ட முடிவுகளைப் பெறுவது. கோட்பாட்டை மேலும் வளர்ப்பது போன்றவை இன்றியமையாத ஒரு கூட்டு நிகழ்வுப் போக்காகும்.

இந்த அம்சமானது டோக்ளியாட்டியின் பாடங்கள் ஒவ்வொன்றிலும் தெளிவாகவும் கூர்மையாகவும் தனிச்சிறப்புடனும் விளங்குகிறது. இத்தாலியில் 12 வருடங்களாகப் பாசிசத்திற்கெதிராக நடைபெற்ற போராட்ட அனுபவங்களிலிருந்து இவற்றைக் கூறுகிறார். இந்தப் “பாடங்கள்” மேலும் விரிவாக இருப்பதற்குக் காரணம் இந்தப் போராட்டத்தில் அவருக்கு இருந்த நேரடி அனுபவத்தையும் அவர் இவற்றில் சேர்த்திருப்பதுதான்.

ஆனால், டோக்ளியாட்டி மற்றொரு பரந்துபட்ட அனுபவக் குவியலையும் பயன்படுத்தியிருக்கிறார். தொடர்ச்சியான விவாதங்களிலும், பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் உலக முழுமையிலிருந்து கிடைக்கும் அனுபவங்களை ஆராய்வதிலும் மிகுந்த செயலூக்கத்துடன் பங்கேற்றவர் அவர். இத்தகைய விவாதங்கள் கம்யூனிஸ்டு அகிலத்தின் குழுக்களில் தொடர்ந்து நடந்தன. கம்யூனிஸ்டு அகிலம் என்பது உலகின் ஒவ்வொரு மூலையிலுமிருந்து கிட்டும் அனுபவங்களும் ஒவ்வொரு நாட்டின் அனுபவங்களும் பொதுமைப்படுத்தப்படும் ஒரு மையமாகும். டோக்ளியாட்டி, அவருடைய சொற்பொழிவுகளை நிகழ்த்தும் நேரத்தில் இட்லரின் பாசிசம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்களாகி விட்டன. எனவே இட்லருடைய பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் ஜெர்மன் மக்களும், ஜெர்மன் கம்யூனிஸ்டுகளும் பெற்ற அனுபவங்களை அவர் விசேஷமாகப் பயன்படுத்திக் கொண்டது முற்றிலும் இயல்பானதே. கம்யூனிஸ்டு அகிலத்தின் குழுக்களில் உள்ளவர்கள் தொழிலாளி வர்க்க அரசியல் கட்சிகளிலிருந்து வந்தவர்கள். தம்முடைய செயல்பாட்டையும், நிர்ணயிப்புகளையும் மார்க்சியம் – லெனினியம் என்ற புரட்சிகர விஞ்ஞானத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டுள்ள கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். ஆகையால் கம்யூனிஸ்டு அகிலத்தின் குழுக்கள், அனைத்துப் பிரச்சினைகளையும் தொழிலாளி வர்க்க மற்றும் மார்க்சிய – லெனினிய கண்ணோட்டத்தில் அணுகின. இந்த அணுகுமுறையானது டோக்ளியாட்டியின் சொற்பொழிவுகள் முழுவதிலும் உருக்குக் கம்பியாக ஊடுருவிச் செல்லுகிறது.

ஏகபோக மூலதனத்தின் சவால் தன்மை காரணமாக அமெரிக்காவிலுள்ள நாம் இத்தகைய சொற்பொழிவுகள் சுவையான வரலாறே தவிர குறிப்பாக நமக்குச் சம்பந்தப்பட்டதல்ல என்று மெத்தனமாகப் படிக்கும் போக்கிற்கு இடமளிக்கக் கூடாது. உண்மை என்னவென்றால், பாசிசத்திற்கு எதிரான போராட்டப் படிப்பினைகள் வேறெந்த மக்களையும்விட நமக்குத்தான் அதிகம் தேவைப்படுகின்றன. ஏனென்றால், வேறெந்த மக்களையும்விட அமெரிக்காவிலுள்ள நாம் பாசிச அபாயத்தை ஒரு தொடர்ச்சியான சவாலாக சந்திக்க வேண்டியுள்ளது. இந்த அபாயத்தை தற்பொழுது நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்; அது மட்டுமல்ல, ஏகபோக முதலாளித்துவம் நம்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் காலம் வரை பாசிசத்திற்கெதிராக போராடும்படி நாம் நிர்ப்பந்திக்கப்பட்டே தீருவோம். மிக அதிகபட்ச இலாபங்களை அடையும் தனது பாதையில் இதர வடிவங்களில் அமைந்த ஆட்சி தடைக்கற்களாக மாறும்பொழுது ஏகபோக முதலாளித்துவம் பாசிசத்தை ஆதரிக்க சற்றும் தயங்காது.

ஆனால், டோக்ளியாட்டி விவரித்து திட்டவட்டமாகக் கூறுவதுபோல வரலாற்றின் படிப்பினைகளை நாம் கற்றோமானால், “அது இங்கே நடக்காது” என்று தீர்மானிப்பதற்கான போராட்டத்தில் மக்களோடு நாமும் ஒரு முக்கியமான அம்சமாக இருப்போம்.

நாம் முதன் முதலாகக் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினையானது முதலாளித்துவத்தின் உள் கட்டமைப்புதான் ஜனநாயக  –  விரோதப் போக்கிற்கு வழி பிறக்கச் செய்கிறது என்பதும், அந்தப் போக்குதான் பாசிசத்தை நோக்கிச் செல்லும் இயக்கங்களுக்குத் தீனி போடுகிறது என்பதுமாகும். முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் சரிவு காலகட்டத்தில் “பிற்போக்கான கொள்கைகளை நோக்கிச் செல்லும் போக்கு முதலாளித்துவத்தில்” தலைதூக்கும் என்று டோக்ளியாட்டி கூறுகிறார். ஏகபோக முதலாளித்துவம், அதனுடைய பொதுவான நெருக்கடி காலகட்டத்தில் மிக உச்சபட்ச தொழில் இலாபமடையும் கொள்கைகளை பின்பற்ற முடியாது. இத்தகைய கொள்கைகளுக்கெதிராக மக்கள் தலையிடும்படியான மிகக் குறைந்தபட்ச சாத்தியப்பாட்டை ஜனநாயக அமைப்புகள் ஏற்படுத்தினால்கூட ஏகபோக முதலாளித்துவம் அத்தகைய அமைப்புகளை ஒழித்துக்கட்டுவதில் இறங்கும். அது, ஜனநாயக ஆட்சிக்குப் பதிலாகப் பிற்போக்கான இராணுவ ஆட்சிகளைக் கொண்டு வருவதற்கு முற்படும். பாசிசம் என்பது இத்தகைய பெரும் தொழில் வர்த்தக சர்வாதிகாரங்களின் மிகவும் கொடூரமான, நாசகரமான, வளர்ச்சியடைந்த வடிவமேயாகும்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்டு எம். நிக்சன்.

தோழர் டோக்ளியாட்டியின் சொற்பொழிவுகள் வாட்டர்கேட் சம்பவம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிப் போக்குகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கின்றன. ஏனென்றால் நிக்சனுடைய நிர்வாகமும் வாட்டர்கேட் சம்பவமும் ஒரு பாசிச கட்டமைப்பு உருவாவதற்கு இட்டுச்செல்லக்கூடிய ஓர் அமைப்பைத் தோற்றுவிக்கத் திட்டமிட்ட சதி நடந்திருப்பதை அம்பலப்படுத்துகின்றன.

இந்த நிகழ்ச்சிப் போக்கானது நிக்சனிலிருந்து தொடங்கவில்லை. இதற்கு முன்பாகவே இந்த வடிவமைப்பானது மிகவும் நன்கு திட்டமிடப்பட்டிருந்தது. அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார சக்தியானது நிர்வாகப் பிரிவின் கரங்களில் படிப்படியாகக் குவிக்கப்பட்டு வந்தது. இந்த நிர்வாகப் பிரிவானது பெரு முதலாளித்துவ முதலைகள் தவிர வேறு எவராலும் அணுக முடியாதது. அமெரிக்க காங்கிரசும் ஜனாதிபதியினுடைய அமைச்சரவையும்கூட மெல்ல மெல்லப் புறக்கணிக்கப்படலாயின. எஃப்பிஐயும் சிஐஏயும் சர்வாதிகார ஆட்சியின் கருவிகளாயின; இவை ஜெர்மனி மற்றும் இத்தாலிய பாசிசத்தின் கையேடுகளில் கூறப்பட்டிருப்பவற்றை ஆதாரமாகக் கொண்டு செயல்படலாயின. பெருமுதலாளித்துவ பிற்போக்குக் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் அனைவரையும் பெரும் எண்ணிக்கையில் கைது செய்வதற்காக நிக்சன் நிர்வாகம் நிர்வாக உத்தரவுகளைத் தயாரித்திருந்தது. எந்தவொரு பிரச்சினையிலும் எதிர்த்து ஒரு வார்த்தை கூறினாலும் கூட இப்படி எதிர்ப்பவர்களின் பெயர்களும் அவர்களின் வாழ்க்கை விபரங்களும் மிகப் பெருமளவில் கணிப்பொறியில் பதிவு செய்யப்பட்டு நிக்சன் நிர்வாகத்திற்குக் கிடைத்திருப்பது போன்று இட்லருக்கும் முசோலினிக்கும் கூட கிடைத்திருக்கவில்லை எனலாம். இத்தகைய பெயர் பட்டியல்கள் இன்றும் போர்டு நிர்வாகத்திடம் இருப்பதைக் காணலாம். இத்தகைய “பிற்போக்கான பாதை” பாசிசத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

டோக்ளியாட்டி சுட்டிக்காட்டியுள்ள படிப்பினைகள் நமக்கு மிகுந்த முக்கியத்துவமுடையவையாகும். ஏனென்றால் வாட்டர்கேட் சம்பவம் நிக்சனை அம்பலப்படுத்தி அவரை ராஜினாமா செய்யும்படி நிர்ப்பந்தித்ததானது இத்தகைய பிற்போக்கு சக்திகளுக்கு ஒரு பெரும் அடியாகும். ஆனாலும் அது ஏகபோக முதலாளித்துவத்தின் “உள்ளார்ந்த பிற்போக்குத்தனத்துக்கு” ஒரு முடிவு கட்டவில்லை. “இந்தப் பிற்போக்குத்தனம்” இன்னும் உயிரோடுதான் உள்ளது.

பாசிசமானது எப்பொழுதும் பொய்யான மற்றும் வாய்ச்சவடால் வடிவங்களிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான பகுதியின் அப்பட்டமான சர்வாதிகாரம் என்பதை அது மூடிமறைக்கவே முயற்சிக்கிறது.

பின்னோக்கிக் காணும் பொழுது, பாசிசம் என்பதற்கான விளக்கம் குறித்து இதற்கு முன்னர் நடைபெற்ற எத்தனை எத்தனையோ விவாதங்களும், வாதப் பிரதிவாதங்களும் தற்பொழுது அருவமானதாகவே தோன்றுகின்றன.

அதற்குக் காரணம் பாசிசத்தின் அடிப்படை இயல்பு தற்பொழுது எல்லோருக்கும் நன்கு தெரிந்துவிட்டதேயாகும். கம்யூனிஸ்டு வட்டாரங்களில் நடத்தப்பட்ட விவாதமானது இதர இடதுசாரி – மிதவாதி வட்டாரங்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களைக் குறித்த விவாதமாகவே இருந்தது. இந்தக் கருத்துக்களில் பெரும்பாலானவை வார்த்தை ஜாலங்களின் தாக்கத்தைப் பிரதிபலித்தன என்பதுடன் பாசிசம் பரப்பிய பொய்ம்மையை மூடிமறைப்பதாகவும் இருந்தன.

பாசிசம் என்பது “ஒரு நடுத்தரவர்க்க குட்டி பூர்ஷ்வா இயக்கம்” என்ற தவறான கூற்றை அம்பலப்படுத்துவது அவசியமாகும். குட்டி பூர்ஷ்வா பகுதியானது பாசிசத்தின் வெகுஜன அடித்தளமாக இருந்தது, இருந்து வருகிறது என்ற அம்சத்தைக் கூறவேண்டியது அவசியம். ஆனால் பாசிசத்தின் அரசியல் சாராம்சம் என்பது அதுவல்ல.

படிக்க:
காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !

டிராட்ஸ்கியவாதிகள் இந்தப் பிரச்சினைகளை குழப்புவதற்கு முயற்சிக்கிறார்கள்; “போனபார்ட்டிச இயக்கம்” என்று பாசிசத்தை அழைப்பதன் மூலம், பாசிசத்தின் வர்க்க வேர்களை மறைக்க எத்தனிக்கிறார்கள். வலதுசாரி சோசலிஸ்டுகளோ, பாசிசத்தில் சில சாதகமான அம்சங்களைக் கண்டுபிடித்து அவற்றைப் பரப்ப முயற்சிக்கிறார்கள்.

பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மேல்தட்டு வட்டாரங்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினருடைய அப்பட்டமான, மிகக் கொடூரமான சர்வாதிகாரம் என்று விளக்க வேண்டியது அவசியமாகும்: அவ்வாறு செய்தால்தான் உண்மையான பகைவனைத் திட்டவட்டமாக சுட்டிக்காட்டி அவனுக்கெதிரான போராட்டத்தை நடத்துவது சாத்தியமாகும். அதன்பிறகே பாசிசத்திற்கெதிராகப் பரந்துபட்ட இயக்கத்தை அணிதிரட்டுவது சாத்தியமாகும்.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்