Friday, May 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 363

நீங்கள் அனைவரும் சத்தியம் என்னும் தாய்க்குப் பிறந்த ஒரே வயிற்றுப் பிள்ளைகள் !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 57

மாக்சிம் கார்க்கி

சில நிமிஷ நேரம் கழிந்த பின்னர், தாய் லுத்மீலாவின் சிறிய அறைக்கு வந்து, அங்கிருந்த அடுப்பருகிலே குளிர்காய்ந்து கொண்டிருந்தாள். லுத்மீலா கறுப்பு உடை அணிந்திருந்தாள். இடையிலே ஒரு தோல் பெல்ட் கட்டியிருந்தாள். அவள் அந்த அறைக்குள்ளே மேலும் கீழும் மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். உடையின் சரசரப்பும் அவளது கம்பீரமான குரலும் அந்த அறையில் நிரம்பியொலித்தன.

அடுப்பிலிருந்த தீ பொரிந்து வெடித்துக் காற்றை உள்வாங்கி இரைந்து கொண்டிருந்தது. அதேவேளையில் அவளது குரல் நிதானமாக ஒலித்துக்கொண்டிருந்தது.

“ஜனங்கள் கொடியவர்களாயிருப்பதைவிட முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களது கண்முன்னால் உள்ள விஷயங்களைத்தான் அவர்கள் பார்க்கிறார்கள்; அதைத்தான் உடனே புரிந்து கொள்ளவும் செய்கிறார்கள். ஆனால் கையெட்டும் தூரத்திலுள்ள எல்லாம் மலிவானவை, சாதாரணமானவை. தூரத்தில் உள்ளவைதான் அருமையானவை, அபூர்வமானவை. அந்தத் தூரத் தொலை விஷயத்தை நாம் எட்டிப் பிடித்துவிட்டால் வாழ்க்கையே மாறிப்போய் மக்களுக்கு அறிவும் சுகமும் கிட்டுமானால், அதுவே எல்லோருக்கும் ஆனந்தம். அதுவே சுகம். ஆனால் அந்த வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் கொஞ்சம் சிரமத்துக்கு ஆளாகியே தீரவேண்டும்.”

திடீரென்று அவள் தாயின் முன்னால் வந்து நின்றாள்.

“நான் ஜனங்களை அதிகம் சந்திப்பதில்லை. யாராவது என்னைப் பார்க்க வந்தால், உடனே நான் பிரசங்கம் செய்யத் தொடங்கிவிடுவேன். வேடிக்கையாயில்லை?” என்றுதான் ஏதோ மன்னிப்புக் கோருவதைப் போலக் கூறினாள் அவள்.

“ஏன்?” என்றாள் தாய். அந்தப் பெண் அவளது அச்சுவேலைகளை எங்கு வைத்துச் செய்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினாள் தாய்.

ஆனால் அங்கு எதுவுமே வழக்கத்துக்கு மாறாக இருப்பதாகத் தெரியவில்லை. தெருவை நோக்கியிருக்கும் மூன்று ஜன்னல்கள், ஒரு சோபா, ஒரு புத்தக அலமாரி, ஒரு மேஜை. சில நாற்காலிகள், ஒரு படுக்கை, அதற்கருகே ஒரு மூலையில் கை கழுவும் பாத்திரம் இருந்தது. இன்னொரு மூலையில் அடுப்பு இருந்தது. சுவர்களில் புகைப்படங்கள் தொங்கின. அங்குள்ள எல்லாப் பொருள்களுமே சுத்தமாகவும், புத்தம் புதிதாகவும் நல்ல நிலைமையிலும் ஒழுங்காக இருந்தன; இவை எல்லாவற்றின் மீதும், அந்த வீட்டுக்காரியான லுத்மீலாவின் சன்னியாசினி நிழல் படிந்திருந்தது. அங்கு ஏதோ ஒளிந்து மறைந்துகொண்டிருப்பதாக உணர்ந்தாள் தாய். ஆனால் எது எங்கே ஒளிந்து பதுங்கியிருக்கிறது என்பதைத்தான் அவளால் ஊகிக்க முடியவில்லை. அவள் கதவுகளைப் பார்த்தாள். அவற்றில் ஒரு கதவு வழியாகத்தான் சிறு நடைவழியிலிருந்து இந்த இடத்திற்கு வந்தாள். அடுத்தபடியாக, அடுப்பிருந்த பக்கத்தில் ஓர் உயரமான குறுகலான கதவு காணப்பட்டது.

“நான் இங்கு ஒரு காரியமாக வந்திருக்கிறேன்” என்று தன்னையுமறியாமல் சொன்னாள் தாய். அதே சமயம் லுத்மீலாவும் தன்னையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பதையும் அவள் கண்டாள்.

“தெரியும். என்னைத் தேடி வருபவர்கள் சும்மா வருவதில்லை.”

லுத்மீலாவின் குரலில் ஏதோ ஒரு விசித்திர பாவம் தொனிப்பதாகக் கண்டறிந்தாள் தாய். அவளது முகத்தைக் கவனித்தாள். அந்தப் பெண்ணின் மெல்லிய உதடுகளின் ஓரத்தில் ஒரு வெளுத்த புன்னகை அரும்புவதையும், அவளது மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால், அவளது உணர்ச்சியற்ற கண்கள் பிரகாசிப்பதையும் அவள் கண்டாள். தாய் வேறொரு பக்கமாகப் பார்த்துக் கொண்டு பாவெலின் பேச்சின் நகலை நீட்டினாள்.

”இதோ… இதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அச்சேற்றியாக வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்.”

பிறகு அவள் நிகலாய்க்கு நேரவிருக்கும் கைது விஷயத்தைப் பற்றிச் சொன்னாள்.

லுத்மீலா ஒன்றும் பேசாமல் அந்தக் காகிதத்தைத் தன் இடுப்புக்குள் செருகிக்கொண்டு, கீழே உட்கார்ந்தாள். அடுப்புத் தீ அவளது மூக்குக் கண்ணாடியில் பளபளத்துப் பிரகாசித்தது. நெருப்பின் அனல் அவளது அசைவற்ற முகத்தில் களித்து விளையாடியது.

“அவர்கள் மட்டும் என்னைப் பிடிக்க வந்தால், நான் அவர்களைச் சுட்டே தள்ளிவிடுவேன்” என்று தாய் கூறியதையெல்லாம் கேட்டுவிட்டு உறுதியோடும் அமைதியோடும் கூறினாள் லுத்மீலா. “பலாத்காரத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள எனக்கு உரிமை உண்டு. நான் அடுத்தவர்களைச் சண்டைக்கு அழைக்கும்போது நானும் சண்டை போட்டுத்தானே தீர வேண்டும்.”

நெருப்பின் ஒளி அவள் முகத்திலிருந்து நழுவி மறைந்துவிட்டது. எனவே மீண்டும் அவளது முகத்தில் அகந்தையும் கடுமையும் பிரதிபலித்தன.

”உன் வாழ்க்கை மோசமாயிருக்கிறது” என்று அனுதாபத்தோடு தன்னுள் நினைத்துக்கொண்டாள் தாய்.

லுத்மீலா பாவெலின் பேச்சை விருப்பமின்றிப் படிக்கத் தொடங்கினாள்; ஆனால் படிக்கப் படிக்க அவளுக்கு ஆர்வம் அதிகரித்து அந்தக் காகிதத்தின் மீதே குனிந்து விழுந்து படித்தாள். அந்தப் பேச்சுப் பிரதியைப் பக்கம் பக்கமாகப் பொறுமையற்றுப் புரட்டினாள்; கடைசியாக, படித்து முடிந்தவுடன் அவள் எழுந்தாள்; தோள்களை நிமிர்த்தி நின்றாள். தாயை நோக்கி வந்தாள்.

”அருமையான பேச்சு!” என்றாள் அவள்.

ஒரு நிமிடம் தலையைத் தாழ்த்தி யோசனை செய்தாள்.

”நான் உங்கள் மகனைப் பற்றி உங்களிடமே பேச விரும்பவில்லை; நான் அவனைச் சந்தித்ததும் இல்லை. ஏன் துயரப் பேச்சில் ஈடுபடவேண்டும், எனக்கு அது பிடிப்பதில்லை. உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருவனை தேசாந்திர சிட்சை விதித்து அனுப்புவதால் உங்களுக்கு ஏற்படும் வேதனை என்ன என்பதை நான் அறிவேன். ஆனால் ஒன்று கேட்கிறேன் – இந்த மாதிரிப் பிள்ளை பெற்றிருப்பது நல்லதுதானா?”

“ரொம்பவும் ……..” என்றாள் தாய்.

“பயங்கரமாயில்லைா?”

”இப்போது இல்லை” என்று அமைதி நிறைந்த புன்னகையோடு சொன்னாள் தாய்.

லுத்மீலா தனது பழுப்புக் கரத்தால் தன் தலைமயிரைக் கோதித் தடவிக் கொடுத்தவாறே ஜன்னல் பக்கம் திரும்பினாள். அவளது முகத்தில் ஏதோ ஒரு சாயை படர்ந்து மறைந்தது. ஒருவேளை அவள் தன் உதட்டில் எழுந்த புன்னகையை மறைக்க முயன்றிருக்கலாம்.

”சரி, நான் விறுவிறென்று அச்சு கோத்துவிடுகிறேன். நீங்கள் கொஞ்சம் படுத்துத் தூங்குங்கள். இன்று பூராவுமே உங்களுக்கு ஒரே ஆயாசமும் சிரமமுமாயிருந்திருக்கும். இதோ இந்தப் படுக்கையில் படுத்துக்கொள்ளுங்கள். நான் தூங்கமாட்டேன். ஒருவேளை நடுராத்திரியில் உதவிக்காக உங்களை எழுப்புவேன்…… படுத்தவுடனே விளக்கை அணைத்துவிடுங்கள்.”

அவள் அடுப்பில் இரண்டு விறகுகளை எடுத்துப்போட்டுவிட்டு அந்தக் குறுகிய கதவைத் திறந்து கொண்டு அப்பால் சென்றாள்; கதவையும் இறுக மூடிவிட்டுப் போனாள். தாய் அவள் போவதையே கவனித்துக் கொண்டிருந்தாள். பிறகு உடுப்புக்களைக் களைந்தாள்; அவளது சிந்தனை மட்டும் லுத்மீலாவைச் சுற்றியே வந்தது.

”அவள் எதையோ எண்ணி வருந்திக்கொண்டிருக்கிறாள்…..”

தாய்க்குக் களைப்புணர்ச்சியால் தலை சுற்றியது. எனினும் அவளது உள்ளம் மட்டும் அற்புதமான அமைதியோடு இருந்தது. அவளது கண்ணில் பட்ட ஒவ்வொன்றும் அவளது இதயத்தை ஒளி செய்து நிரம்பிப் பொழிந்தன. இந்த மாதிரியான அமைதி அவளுக்குப் புதிதானதல்ல. ஏதாவது ஒரு பெரும் உணர்ச்சிப் பரவசத்துக்குப் பிறகுதான் இந்த மாதிரி அவளுக்குத் தோன்றுவதுண்டு. முன்பெல்லாம் அந்த உணர்ச்சி அவளைப் பயந்து நடுங்கச் செய்யும். இப்போதோ அந்த உணர்ச்சியமைதி அவளது இதயத்தை விசாலமுறச் செய்து, அதில் ஒரு மகத்தான உறுதிவாய்ந்த உணர்ச்சியைக் குடியேற்றி வலுவேற்றியது. அவள் விளக்கை அணைத்துவிட்டு, குளிர் படிந்த படுக்கையில், போர்வையை இழுத்து மூடிச் சுருட்டி முடக்கிப் படுத்துக்கொண்டாள். படுத்தவுடனேயே அவள் சீக்கிரத்தில் ஆழ்ந்த தூக்கத்துக்கு ஆளாகிவிட்டாள்.

அவள் கண்களை மீண்டும் திறந்தபோது அந்த அறையில் மாரிக்காலக் காலைப் பொழுதின் வெள்ளிய, குளிர்ந்த ஒளி நிறைந்திருந்தது. கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு சோபாவின் மீது சாய்ந்திருந்த லுத்மீலா அவளைப் பார்த்தாள். புன்னகை செய்தாள்.

”அடி கண்ணே!” என்று கலங்கிப்போய் கூறினாள் தாய். ”நான் என்ன பிறவியிலே சேர்த்தி? ரொம்ப நேரம் ஆகிவிட்டதோ?”

“வணக்கம்!” என்றாள் லுத்மீலா. ”மணி பத்தடிக்கப் போகிறது. எழுந்திருங்கள். தேநீர் சாப்பிடலாம்.”

”நீங்கள் ஏன் என்னை எழுப்பவில்லை?”

”எழுப்பத்தான் வந்தேன். ஆனால் நான் வந்தபோது தூக்கத்தில் அமைதியாகப் புன்னகை செய்து கொண்டிருந்தீர்கள். அதைக் கலைக்க எனக்கு மனமில்லை.”

அவள் தன் சோபாவிலிருந்து நாசூக்காக எழுந்திருந்தாள். படுக்கையருகே வந்து, தாயின் பக்கமாகக் குனிந்தாள். அந்தப் பெண்ணின் ஒளியற்ற கண்களில் ஏதோ ஒரு பாசமும் பரிவும் கலந்து, தனக்குப் பரிச்சயமான உணர்ச்சி பாவம் பிரதிபலிப்பதைத் தாய் கண்டாள்.

“உங்களை எழுப்புவது தப்பு என்று பட்டது. ஒருவேளை இன்பக் கனவு கண்டு கொண்டிருந்தீர்களோ.”

”நான் கனவு காணவில்லை.”

“எல்லாம் ஒன்றுதான். எப்படியானாலும் நான் உங்கள் புன்னகையை விரும்பினேன். அது அத்தனை அமைதியோடு அழகாக இருந்தது…. உள்ளத்தையே கொள்ளை கொண்டது.”

லுத்மீலா சிரித்தாள், அந்தச் சிரிப்பு இதமும் மென்மையும் பெற்று விளங்கியது.

“நான் உங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். உங்கள் வாழ்க்கை என்ன, சிரமமான வாழ்க்கையா?”

தாயின் புருவங்கள் அசைந்து நெளிந்தன, அவள் அமைதியாகத் தன்னுள் சிந்தித்தாள்.

”ஆமாம், சிரமமானதுதான்” என்றாள் லுத்மீலா.

“எனக்கு அப்படி ஒன்றும் தெரியாது” என்று மெதுவாய்ப் பேசத் தொடங்கினாள் தாய். “சமயங்களில் இந்த வாழ்க்கை சிரமமாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இந்த வாழ்க்கைதான் பூரணமாயிருக்கிறது. இந்த வாழ்வின் சகல அம்சங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாயும் வியப்பு தருவனவாயும் இருக்கின்றன. ஒவ்வொரு விஷயமும் ஒன்றையொன்று விறுவிறுவென்று தொடர்ந்து செல்கின்றன…”

அவளது இயல்பான துணிச்சல் உணர்ச்சி மீண்டும் அவள் நெஞ்சில் எழுந்தது. அந்த உணர்ச்சியால் அவளது மனத்தில் பற்பல சிந்தனைகளும் உருவத் தோற்றங்களும் தோன்றி நிரம்பின. அவள் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்துகொண்டு தனது சிந்தனைகளைச் சொல்லில் வார்த்துச் சொல்லத் தொடங்கினாள்.

“இந்த வாழ்க்கை அதன் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்கிறது. ஒரே முடிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. சமயங்களில் இது மிகவும் சிரமமாய்த்தானிருக்கிறது. ஜனங்கள் துன்புறுகிறார்கள். அவர்களை அடிக்கிறார்கள். குரூரமாக வதைக்கிறார்கள்; அவர்களுக்கு எந்த இன்பமும் கிட்டாமல் போக்கடிக்கிறார்கள். இதைக் கண்டால் மிகுந்த சிரமமாயிருக்கிறது!”

லுத்மீலா தன் தலையைப் பின்னால் சாய்த்துத் தாயை அன்பு ததும்பப் பார்த்துக்கொண்டே சொன்னாள்:

”நீங்கள் சொல்வது உங்களைப் பற்றியில்லையே!’

தாய் படுக்கையை விட்டு எழுந்து உடை உடுத்திக் கொள்ளத் தொடங்கினாள்.

”தன்னை எப்படிப் பிறரிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியும்? ஒருவனை நேசிக்கிறாய். அவனோ விலைமதிப்பற்றவன். அனைவரின் நலத்திற்காகவும் பயப்படுகிறான். ஒவ்வொருவருக்காகவும் அனுதாபப்படுகிறான். இவையெல்லாம் உன் இதயத்தில் மோதுகின்றன. ஒருபுறமாய் எப்படி ஒதுங்கி நிற்க முடியும்?”

படிக்க:
♦ இதோ இவள்தான் பாவெல் விலாசவின் தாய் !
♦ தண்டனை பயங்கரமாய்த் தோன்றவில்லை , விசாரணைதான் பயங்கரமாகத் தோன்றுகிறது

அவள் அந்த அறையின் மத்தியிலே ஒரு கணம் நின்றாள். பாதி உடுத்தியவாறே சிந்தனையில் ஆழ்ந்து நின்று போய்விட்டாள். ஒரு காலத்தில் தன் மகனது உடம்பை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்ற சிந்தனையிலேயே மூழ்கிப்போய் என்றென்றும் தன் மகனைப் பற்றிய கவலையிலும் பயத்திலும் அலைக்கழிந்த அந்தப் பழைய பெண் பிறவியாக, அவள் இப்போது இல்லை என்பது அவளுக்குத் தோன்றியது. அவள் எங்கோ தூரத் தொலைவில் போய்விட்டாள்; அல்லது அவளது உணர்ச்சி நெருப்பில் அவள் சாம்பலாகிப் போயிருப்பாள். இந்த மாதிரி எண்ணிய தாயின் மனத்திலே ஒரு புதிய ஆவேசமும் பலமும் தோன்றின. அவள் தன் இதயத்தைத் துருவிப் பார்த்தாள்; அதன் துடிப்பைக் கேட்டாள். பழைய பயவுணர்ச்சிகள் மீண்டும் வந்துவிடக் கூடாதே என்று பயந்தாள்.

”என்ன யோசனை செய்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே லுத்மீலா அவள் பக்கம் வந்தாள்.

“தெரியாது” என்றாள் தாய்.

இருவரும் மெளனமாக ஒருவரையொருவர் பார்த்தார்கள்; புன்னகை புரிந்தார்கள். பிறகு லுத்மீலா அந்த அறையைவிட்டு வெளிச் சென்றவாறே சொன்னாள்:

“அங்கே என் தேநீர்ப் பாத்திரம் என்ன கதியில் இருக்கிறதோ?”

தாய் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். வெளியில் வெயிலும் குளிரும் பரவியிருந்தது. அவளது இதயமோ வெதுவெதுப்போடும் பிரகாசத்தோடும் இருந்தது. அவள் சகலவற்றைப் பற்றியும் சாங்கோபாங்கமாக மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருக்க விரும்பினாள். சந்தியா கால சூரிய ஜோதியைப் போல் இனிமையாகப் பிரகாசித்துக் கொண்டிருக்க எண்ணங்களைத் தன் இதயத்திலே புகுத்திவிட்ட யாரோ ஓர் இனம் தெரியாத நபருக்கு நன்றி காட்டிப் பேசவேண்டும் என்ற மங்கிய உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. இத்தனை நாட்களாக பிரார்த்தனை செய்வதையே கைவிட்டுவிட்ட அவளுக்கு அன்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற ஆசை யெழுந்தது.

அவளது மனக்கண்ணில் ஒரு வாலிப முகம் பளிச்சிட்டுத் தோன்றியது. அந்த முகம் அவளை நோக்கித் தெள்ளத் தெளிவான குரலில், “இவள்தான் பாவெல் விலாசவின் தாய்!” என்று கூறியது. அவள் கண் முன்னால் மகிழ்ச்சியும் அன்பும் துள்ளாடும் சாஷாவின் நயனங்கள்: ரீபினின் கரிய தோற்றம், உறுதிவாய்ந்த உலோகம் போன்ற தன் மகனின் முகம். நிகலாயின் கூச்சத்துடன் கண்சிமிட்டும் பார்வை முதலியன எல்லாம் தோன்றின. இந்த மனத்தோற்றங்கள் எல்லாம் திடீரென ஓர் ஆழ்ந்த பெருமூச்சாக ஒன்றுகலந்து உருவெடுத்து, வானவில்லின் வர்ணம் தோய்ந்த மேகப்படலத்தைப் போன்ற ஒளி சிதறி அவளது கன்னங்களைக் கவிழ்த்து சூழ்ந்து அவள் மனத்தில் ஒரு சாந்தியுணர்ச்சியை உருவாக்கின.

”நிகலாய் சொன்னது சரிதான்” என்று சொல்லிக்கொண்டே அந்த அறைக்குள் லுத்மீலா மீண்டும் வந்தாள்; “அவர்கள் அவனைக் கைது செய்துவிட்டார்கள். நீங்கள் சொன்ன மாதிரி நான் அந்தப் பையனை அனுப்பித் தெரிந்து வரச் சொன்னேன். வீட்டுக்கு வெளியே போலீஸ்காரர்கள் இருந்ததாகவும், வெளிக்கதவுக்குப் பின்னால் ஒரு போலீஸ்காரன் ஒளிந்து கொண்டிருந்ததாகவும் அவன் சொன்னான். சுற்றிச் சூழ உளவாளிகள் இருக்கிறார்களாம். அந்தப் பையனுக்கு அவர்களையெல்லாம் தெரியும்.”

“ஆ!” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னாள் தாய்:

”பாவம், அப்பாவி…”

அவள் பெரு மூச்சுவிட்டாள். அதில் துக்க உணர்ச்சியில்லை. இதைக்கண்டு அவள் தன்னைத்தானே வியந்து கொண்டாள்.

”சமீபகாலமாக அவன் இந்த நகரத்திலுள்ள தொழிலாளர்களுக்கு எவ்வளவோ வகுப்புகள் நடத்தி வந்தான். பொதுவாக இது அவன் அகப்பட்டுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம்தான்” என்று அமைதியாக, ஆனால் முகத்தைச் சுழித்துக்கொண்டே சொன்னாள் லுத்மீலா. “அவனது தோழர்கள் அவனைத் தலைமறைவாகப் போகச் சொன்னார்கள். ஆனால் அவன் கேட்கவில்லை. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் இவனைப் போன்ற ஆசாமிகளைப் போ, போ என்று போதித்துக் கொண்டிருக்கக்கூடாது, நிர்ப்பந்த வசமாகத்தான் போகச் செய்ய வேண்டும்.”

இந்தச் சமயத்தில் சிவந்த கன்னங்களும் கரிய தலைமயிரும் முன்வளைந்த மூக்கும் அழகிய நீலக் கண்களும் கொண்ட ஒரு சிறுவன் வாசல் நடையில் வந்து நின்றான்.

“நான் தேநீர் கொண்டு வரட்டுமா?’ என்று கேட்டான் அவன்.

கொண்டு வா, செர்கேய் என்று கூறிவிட்டுத் தாயின் பக்கமாகத் திரும்பினாள் லுத்மீலா. ”இவன் என் வளர்ப்புப் பையன்” என்றாள்.

அன்றைய தினத்தில் லுத்மீலா வழக்கத்துக்கு மாறாக சுமூகபாவத்தோடும் எளிமையோடும் பழகுவதாகவும் தாய்க்குத் தோன்றியது. அவளது உடலின் லாவகம் நிறைந்த அசைவுகளிலே ஒரு தனி அழகும் உறுதியும் நிறைந்திருந்தன. இத்தன்மை அவளது வெளுத்த முகத்தின் நிர்த்தாட்சண்ய பாவத்தை ஓரளவு சமனப்படுத்தியது. இரவில் கண் விழித்ததால் அவளது கண்களைச் சுற்றிக் கருவளையங்கள் விழுந்திருந்தன. என்றாலும் அவளது இதய வீணையில் ஏதோ ஒரு தந்தி முறுக்கேறி விறைத்து நிற்பது போன்ற தன்மையை எவரும் கண்டு கொள்ள முடியும்.

அந்தப் பையன் தேநீர்ப் பாத்திரத்தைக் கொண்டு வந்தான்.

”செர்கேய்! உனக்கு இவளை நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். இவள்தான் பெலகேயா நீலவ்னா. நேற்று விசாரணை நடந்ததே. அந்தத் தொழிலாளியின் தாய்.”

செர்கேய் ஒன்றும் பேசாமல் தலைவணங்கினான். தாயின் கையைப் பிடித்துக் குலுக்கினான். அறையை விட்டு வெளியே போனான். ஒரு ரொட்டியை எடுத்துக் கொண்டுவந்து, மீண்டும் தன் இடத்தில் அமர்ந்துகொண்டான். லுத்மீலா நேநீரைக் கோப்பையில் ஊற்றியவாறே, தாயை வீட்டுக்குப் போக வேண்டாம் என்றும், அந்தப் போலீசார் யாருக்காகக் காத்துக் கிடக்கிறார்கள் என்பது தெளிவாகிற வரையில், அவள் அந்தப் பக்கமே செல்லாமலிருப்பதே நல்லதென்றும் எடுத்துக்கூறினாள்.

“ஒருவேளை அவர்கள் உங்களையே எதிர்பார்த்துக் கிடக்கலாம். பிடித்துக் கொண்டு போய் ஏதாவது கேள்விகளைக் கேட்டுத் தொலைப்பார்கள்.”

”இருக்கட்டுமே” என்று பதில் சொன்னாள் தாய். “அவர்கள் விரும்பினால் என்னையும்தான் கைது செய்து கொண்டு போகட்டுமே. அதனால் என்ன பெரிய குடி முழுகிவிடப் போகிறது? ஆனால் பாவெலின் பேச்சை மட்டும் நாம் முதலில் விநியோகித்து விட்டோமானால்!”

”நான் அச்சுக் கோத்து முடித்துவிட்டேன். நாளைக்கு நகரிலும் தொழிலாளர் குடியிருப்பிலும் விநியோகிப்பதற்குத் தேவையான பிரதிகள் தயாராகிவிடும். உங்களுக்கு நதாஷாவைத் தெரியுமா?”

”நன்றாய்த் தெரியும்.”

”அவற்றை அவளிடம் கொண்டு சேருங்கள்.”

அந்தப் பையன் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தான், அவர்கள் பேசியது எதையுமே அவன் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. ஆனால் இடையிடையே பத்திரிகைக்கு மேலாக நிமிர்ந்து தாயின் முகத்தைப் பார்த்தான். அவனது உணர்ச்சி நிறைந்த பார்வையைக் காணும் போதெல்லாம், தாய்க்கு மகிழ்ச்சி பொங்கும்; புன்னகை புரிந்து கொள்வான். கொஞ்சம்கூட வருத்தமின்றி மீண்டும் நிகலாயைப் பற்றிப் பேசத் தொடங்கினாள் லுத்மீலா. அவள் அப்படிப் பேசுவது இயற்கைதான் என்பதைத் தாய் கண்டுகொண்டாள். நேரம் வழக்கத்தை மீறி வெகு வேகமாகச் செல்வது போலிருந்தது. அவர்கள் காலைச் சாப்பாட்டை முடிப்பதற்குள்ளே மத்தியானப் பொழுது வந்துவிட்டது.

”எவ்வளவு நேரமாகிவிட்டது!” என்று அதிசயித்தாள் லுத்மீலா.

அந்தச் சமயத்தில் யாரோ வெளியிலிருந்து கதவை அவசர அவசரமாகத் தட்டினார்கள். அந்தப் பையன் எழுந்திருந்து கண்களைச் சுருக்கி விழித்தவாறே லுத்மீலாவைப் பார்த்தான்.

“கதவைத் திற செர்கேய். யாராயிருக்கலாம்?

அவள் தனது உடுப்பின் பைக்குள்ளே அமைதியாகக் கையை விட்டவாறே தாயைப் பார்த்துச் சொன்னாள்:

“அவர்கள் போலீஸ்காரராயிருந்தால், பெலகேயா நீலவ்னா, அந்த மூலையிலே நின்று கொள்ளுங்கள். செர்கேய், நீ …”

“எனக்குத் தெரியும்” என்று சொல்லிக்கொண்டு அந்தப் பையன் வெளியே சென்றான்.

தாய் புன்னகை புரிந்தாள். இந்த மாதிரியான ஏற்பாடுகள் அவளைக் கலவரப்படுத்தவே இல்லை; ஏதோ ஒரு விபரீதம் நிகழப் போகிறது என்ற பயபீதி உணர்ச்சியும் அவளுக்கு இல்லை.

ஆனால் உள்ளே அந்த குட்டி டாக்டர்தான் வந்து சேர்ந்தான்.

வந்ததுமே அவன் அவசரமாகப் பேசத் தொடங்கினான்; ”முதலாவது – நிகலாய் கைதாகிவிட்டான். ஆஹா! நீலவ்னா, இங்கேயா வந்திருக்கிறீர்கள்? கைது நடந்தபோது நீங்கள் வீட்டில் இல்லையா?”

“அவன்தான் இங்கு அனுப்பினான்.”

“ஹூம். இதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. சரி, இரண்டாவது – நேற்று இரவு சில இளைஞர்கள் பாவெலின் பேச்சை சைக்கோஸ்டைலில் ஐநூறு பிரதிகள் தயார் பண்ணிவிட்டார்கள். நான் அவற்றைப் பார்த்தேன். மோசமாக இல்லை. எழுத்துத் தெளிவாகவும் சுத்தமாகவும் இருந்தது. அவர்கள் அவற்றை இன்றிரவு நகர் முழுவதிலும் விநியோகித்து விடுவதை விரும்பினார்கள். நான் அதை எதிர்த்தேன். அச்சடித்த பிரதிகளை வேண்டுமானால் நகரில் விநியோகிக்கலாம், இவற்றை வேறு இடங்களுக்கு அனுப்புவோம் என்றேன்.”

“அவற்றை என்னிடம் கொடுங்கள். நான் இப்போதே நதாஷாவிடம் கொண்டு சேர்க்கிறேன்” என்று ஆர்வத்தோடு சொன்னாள் தாய்.

பாவெலது பேச்சை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விநியோகிக்க, தன் மகனது சொற்களை உலகமெங்கும் பரப்ப, அவள் பேராவல் கொண்டு தவித்தாள்; எனவே கொஞ்சுவது போல அந்த டாக்டரின் முகத்தை பார்த்தாள், அவனது பதிலுக்காகக் காத்து நின்றாள்.

”நீங்கள் இந்த வேலையை இப்போது மேற்கொள்ளத்தான் வேண்டுமா என்பது சைத்தானுக்குத்தான் தெரியும்” என்று தயங்கிக்கொண்டே கூறிவிட்டு, அவன் தன் கடிகாரத்தை எடுத்தான். “இப்போது மணி பதினொன்று நாற்பத்தி மூன்று. இரண்டு மணி ஐந்து நிமிஷத்துக்குப் புறப்பட்டு ஐந்தே கால் மணிக்குப் போய் சேருவதற்கு ஒரு ரயில் இருக்கிறது. மாலை வேளைதான். இருந்தாலும் அப்படியொன்றும் காலதாமதமில்லை. ஆனால் இப்போது அது பிரச்சினையல்ல…”

“அது பிரச்சினையில்லை” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டு அதையே திரும்பக் கூறினாள் லுத்பீலா.

“எதுதான் பிரச்சினை?” என்று கேட்டுக்கொண்டே அவன் பக்கமாகச் சென்றாள் தாய். “காரியம் வெற்றியோடு முடிய வேண்டும். அவ்வளவுதானே…”

லுத்மீலா அவளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே நெற்றியைத் துடைத்துவிட்டுக்கொண்டாள்.

“இந்தக் காரியத்தை மேற்கொள்ளுவது ஆபத்தானது.”

“ஏன்?” என்று அழுத்தத்தோடு கேட்டாள் தாய்.

”அதனால்தான்” என்று படபடவென்று பேசத் தொடங்கினான் அந்த டாக்டர். “நிகலாய் கைதாவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் நீங்கள் வீட்டைவிட்டுக் கிளம்பியிருக்கிறீர்கள். தொழிற்சாலைக்கும் போய் வந்திருக்கிறீர்கள். எனவே அந்த ஆசிரியையின் அத்தை என்று எல்லோரும் உங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் அந்தச் சட்ட விரோதமான பிரசுரங்கள் தொழிற்சாலையில் தலைகாட்டிவிட்டன. இதையெல்லாம் வைத்து ஜோடித்தால், உங்கள் கழுத்தில் சரியான சுருக்கு வந்து விழுந்துவிடும்.”

“என்னை அங்கு எவரும் கண்டுகொள்ள முடியாது!” என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினாள் தாய். ”தான் திரும்பி வரும்போது அவர்கள் ஒருவேளை என்னைக் கைது செய்து எங்கு போய்விட்டு வருகிறாய்?’ என்று கேட்டாலும்…”

அவள் ஒரு கணம் தயங்கினாள். பிறகு சத்தமிட்டுச் சொன்னாள்:

”என்ன சொல்வேன் என்பது எனக்குத் தெரியும். அங்கிருந்து நேராக நான் தொழிலாளர் குடியிருப்புக்குச் செல்வேன். அங்கு எனக்கு ஒரு சிநேகிதன் இருக்கிறான் – சிஸோவ். விசாரணை முடிந்ததும் நேராக அவன் வீட்டுக்கு மன ஆறுதல் பெறுவதற்காகச் சென்றுவிட்டு வருவதாகக் கூறுவேன். அவனுக்கு ஆறுதல் தேவைதான். அவனது மருமகனும் தண்டனை பெற்றிருக்கிறான். அவனும் நான் சொல்வதையே ஆமோதிப்பான்.”

அவர்கள் நிச்சயம் தனது ஆசைக்கு இணங்குவார்கள் என்று அவள் உணர்ந்தாள்; எனவே அவர்களைச் சீக்கிரம் இணங்க வைக்கவேண்டும் என்பதற்காக அவள் ஆத்திரத்தோடும் அழுத்தத்தோடும் பேசிக்கொண்டே போனாள். கடைசியில் ஒருவழியாக அவர்களும் சம்மதித்துவிட்டார்கள்.

”சரி. துணிந்து போங்கள்” என்று விருப்பமின்றிச் சொன்னான் அந்த டாக்டர்.

லுத்மீலா எதுவும் சொல்லவில்லை. சிந்தனையில் ஈடுபட்டவாறே முன்னும் பின்னும் நடந்துகொண்டுதானிருந்தாள். அவளது முகம் குழம்பி வாடிப்போயிருந்தது. அவளது எழுத்துத் தசைநார்கள் அவளது தலையைக் கீழே சாய்க்காதபடி இறுக்கமாய்த் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. தாய் இதைக் கவனித்துவிட்டாள்.

”நீங்கள் எல்லோரும் என்னைப் பற்றியே கவலைப்படுகிறீர்களே” என்று புன்னகையோடு கூறினாள் தாய்: “நீங்கள் உங்களைப் பற்றித்தான் கவலையே படக்காணோம்!”

“நீங்கள் சொல்வது உண்மையல்ல” என்றான் அந்த டாக்டர். “நாங்கள் எங்களைப் பற்றியும் கவலைப்படுகிறோம். அது எங்கள் கடமை. ஆனால் ஒன்றுமற்ற காரியத்துக்காக, தங்கள் சக்தியை விரயம் செய்பவர்களிடம்தான் நாங்கள் கடுமையாக நடந்து கொள்கிறோம். சரி போகட்டும். பேச்சின் நகல் பிரதிகள் நீங்கள் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தவுடன் அங்கு வந்து சேரும்…”

அவன் அவளுக்கு அந்தக் காரியத்தை எப்படியெப்படிச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் விளக்கிக் கூறினான். பிறகு அவளது முகத்தையே கூர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னான்:

“சரி, உங்களுக்கு அதிருஷ்டம் உண்டாகட்டும்!”

ஆனால் அவன் வெளியே செல்லும்போது அவன் முகத்தில் ஒரு மகிழ்ச்சியின்மை பிரதிபலித்தது. லுத்மீலா தாயை நோக்கினாள்.

“உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியும்” என்று அமைதி நிறைந்த சிரிப்போடு சொன்னாள் அவள்.

பிறகு அவள் தாயின் கரத்தை எடுத்துப் பிடித்தாள், மீண்டும் மேலும் கீழும் உலாவ ஆரம்பித்தாள்.

“எனக்கும் ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு இப்போது பதின்மூன்று வயதாகிவிட்டது. ஆனால், அவன் தன் தந்தையோடு வாழ்கிறான். என் கணவர் ஓர் அரசாங்க வக்கீலின் நண்பர். அந்தப் பையன் அவரோடு இருக்கிறான். அவன் எப்படி மாறப் போகிறானோ? அதைப் பற்றி நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு……”

அவளது குரல் அடைபட்டு நின்றது. ஒரு நிமிஷம் கழித்து அவள் மீண்டும் அமைதியாக, சிந்தனையோடு பேசத் தொடங்கினாள்.

”நான் எந்த ஜனங்களை நேசிக்கிறேனோ, இந்த உலகத்தில் எந்த ஜனங்களை அருமையான மக்கள் என்று மதிக்கிறேனோ அந்த ஜனங்களுக்குப் பரம எதிரியானவரிடம்தான் அவன் வளர்ந்து வருகிறான். என் மகனே எனக்கு எதிரியாக வளர்ந்து வரக்கூடும்; அவனால் என்னுடன் வாழ முடியாது. நான் இங்கு மாற்று பெயரில் வாழ்ந்து வருகிறேன். அவளை நான் பார்த்தே எட்டு வருஷங்கள் ஆகின்றன. எட்டு வருஷங்கள்! எவ்வளவு காலம்!”

அவள் ஜன்னலருகே நின்றாள். நிர்மலமாக வெளுத்துக்கிடந்த வானத்தைப் பார்த்தாள்.

“அவன் மட்டும் என்னோடு வாழ்ந்திருந்தால். நான் இன்னும் பலம் பெற்றிருப்பேன். எனது இதயத்தில் இந்த வேதனை இன்னும் உறுத்திக்கொண்டிருக்காது……. அவன் இறந்து போயிருந்தால்கூட எனக்குச் சிரமமில்லாது போயிருக்கும்……”

“அடி என் கண்ணே?” என்று பாசத்தால் புண்பட்ட இதயத்தோடு பெருமூச்செறிந்தாள் தாய்.

”நீங்கள் அதிருஷ்டக்காரர்” என்று ஒரு கரத்த புன்னகையோடு சொன்னாள் லுத்மீலா. “அதிசயமான ஒற்றுமை – தாயும் மகனும் ஒரே அணியில் ஒருவர் பக்கம் ஒருவர் – அபூர்வமான நிகழ்ச்சி!”

”ஆமாம், அதிசயமானதுதான்” என்று தன்னைத்தானே வியந்து கூறிக்கொண்டாள் பெலகேயா. பிறகு தன் குரலைத் தாழ்த்தி ஏதோ ஓர் அந்தரங்க ரகசியத்தைக் கூறுவதுபோல அவள் பேசினாள். “நீங்கள் எல்லோரும் – நிகலாய் இவான்விச்சும், சத்தியத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் – நீங்கள் எல்லோருமே ஒருவர் பக்கம் ஒருவராகத்தான் நிற்கிறீர்கள். திடீரென்று மக்கள் அனைவரும் நமக்கு உறவினர்களாகிவிடுகிறார்கள். உங்கள் அனைவரையும் நான் புரிந்துகொள்கிறேன். எனக்கு வார்த்தைகள்தான் புரியாது போகலாம்; ஆனால் அதைத் தவிரப் பிறவற்றையெல்லாம் என்னால் புரிந்து கொள்ளமுடியும்.”

“ஆமாம். அப்படித்தான்” என்று முனகினாள் லுத்மீலா: “அப்படித்தான்…”

தாய் தன் கையை லுத்மீலாவின் மார்பின் மீது வைத்துக் கொண்டே ரகசியக் குரலில் மேலும் பேசினாள்; ஒவ்வொரு வார்த்தையையும் நினைத்து நினைத்துப் பேசுவது போலிருந்தது அவள் பேச்சு.

“நமது பிள்ளைகள் உலகில் அணிவகுத்துச் செல்கிறார்கள். அதைத்தான் நான் புரிந்து கொள்கிறேன் – நமது பிள்ளைகள் உலகில் அணி வகுத்துச் செல்கிறார்கள், உலகெங்கும், சகல மூலைமுடுக்குத் திசைகளிலிருந்தும் ஒரே ஒரு லட்சியத்தை நோக்கி அணிவகுத்து முன்னேறுகிறார்கள். பரிசுத்தமான உள்ளத்தோடும், அருமையான மனத்தோடும், தீமையை எதிர்த்து தமது பலத்த காலடியால் பொய்மையை மிதித்து நசுக்கிக்கொண்டே, கொஞ்சங்கூடத் தயக்கமின்றி முன்னேறிச் செல்கிறார்கள். அவர்கள் இளைஞர்கள். ஆரோக்கியசாலிகள்; அவர்களது சகல சக்தியையும் ஒரே ஒரு விஷயத்தை நோக்கி – நியாயத்தை எதிர்நோக்கிப் பிரயோகித்துச் செல்கிறார்கள். மனிதகுலத்தின் துயரத்தை வெல்வதற்காக அவர்கள் முன்னேறுகிறார்கள். சகல துரதிருஷ்டங்களையும் துடைத்துத் தூர்ப்பதற்காக சகல அசுத்தங்களையும் கழுவிப் போக்குவதற்காக அவர்கள் அணியணியாக முன்னேறிச் செல்கிறார்கள். அவற்றை அவர்கள் போக்கித்தான் தீருவார்கள். அவர்கள் ஒரு புதிய சூரியனை உலகுக்குக் கொண்டுவருவார்கள் என்று அவர்களில் ஒருவன் சொன்னான்; நிச்சயம் அந்தச் சூரியனை அவர்கள் கொண்டு வந்தே தீருவார்கள்! மனமுடைந்து போன சகல இதயங்களையும் ஒன்றுபடுத்துவார்கள்; ஒன்றுபடுத்தியே தீருவார்கள்!”

அவள் தான் மறந்துவிட்ட பிரார்த்தனை வாசகங்களை எண்ணிப் பார்த்தாள். அந்த வார்த்தைகளால் அவளது மனத்திலே புதியதொரு நம்பிக்கை பிறந்தது. அந்த வாசகங்கள் அவளது இதயத்திலிருந்து தீப்பொறிகளைப் போல் சுடர்விட்டுத் தெறித்துப் பிறந்தன:

“நமது பிள்ளைகள் சத்தியமும் அறிவும் சமைத்த பாதையிலே செல்கிறார்கள். மனித இதயங்களுக்கு அன்பைக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். இவ்வுலகத்திலே புதியதொரு சொர்க்க பூமியை உண்டாக்குகிறார்கள். இவ்வுலகத்தைப் புதியதொரு ஒளி வெள்ளத்தால், ஆத்ம ஆவேசத்தின் அணையாத தீபத்தால், ஒளிரச் செய்கிறார்கள். அந்த ஒளிப்பிழம்பின் தீ நாக்குகளிலிருந்து புதிய வாழ்க்கை பிறப்பெடுத்துப் பொங்குகிறது. மனித சமுதாயத்தின் மீது நமது பிள்ளைகள் கொண்டுள்ள அன்பிலிருந்து அந்த வாழ்க்கை பிறப்பெடுக்கிறது. அந்த அன்பை எவரால் அணைக்க முடியும்? இதை எந்த சக்திதான் அழிக்க முடியும்? எந்த சக்திதான் இதை எதிர்க்க முடியும்? பூமியிலிருந்து இது ஊற்றெடுத்துப் பொங்கி வருகிறது; வாழ்க்கை முற்றும் இதன் வெற்றிக்காகப் பாடுபடுகிறது. ஆம், வாழ்க்கை முற்றும்தான்!”

அவளது உணர்ச்சியாவேசத்தால் அவள் சோர்ந்துபோய் லுத்மீலாவை விட்டுப் பிரிந்து இரைக்க மூச்சு வாங்கிக்கொண்டே கீழே உட்கார்ந்தாள். லுத்மீலாவும் சத்தம் செய்யாமல் ஜாக்கிரதையோடு நடந்து சென்றாள். எதையோ கலைத்துவிடக் கூடாது என்ற பயத்தோடு நடந்தாள். அவள் தனது ஒளியற்ற கண்களை முன்னால் பதித்துப் பார்த்தவாறு அந்த அறைக்குள்ளே நாசூக்கோடு நடந்தாள். அவள் முன்னைவிட உயரமானவளாக, நிமிர்ந்தவளாக, மெலிந்துவிட்டதாகத் தோன்றினாள். அவளது மெலிந்த கடுமை நிறைந்த முகத்தில் ஓர் ஆழ்ந்த கவனம் தோன்றியது. அவளது உதடுகள் துடிதுடித்து இறுகி மூடியிருந்தன. அந்த அறையிலே நிலவிய அமைதி தாயின் மனத்தைச் சாந்தி செய்தது. லுத்மீலாவின் நிலைமையைக் கண்டறிந்த தாய்தான் ஏதோ தவறாகச் சொல்லிவிட்டதுபோல் கேட்டாள்:

“நான் ஏதும் சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டேனா?”

லுத்மீலா அவள் பக்கம் திரும்பி, பயந்து போனவள் மாதிரி அவளைப் பார்த்தாள். பிறகு எதையோ நிறுத்தப் போவது மாதிரி தாயை நோக்கிக் கையை நீட்டிக்கொண்டு அவசர கதியில் பேசினாள்:

“இல்லையில்லை. இப்படித்தான் இருக்கிறது, இப்படித்தான். ஆனால் அதைப் பற்றி நாம் இனிமேல் பேசவே கூடாது. நீங்கள் சொன்னதோடு இருக்கட்டும்.” அவளது குரல் மிகுந்த அமைதியோடிருந்தது. அவள் மேலும் சொன்னாள்: “சரி சீக்கிரம் புறப்பட வேண்டும். நீங்கள் போக வேண்டிய தூரமோ அதிகம்.”

“சீக்கிரமே கிளம்புகிறேன். நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்பதை மட்டும் நீங்கள் அறிந்தால் என்னுடைய மகனின், என்னுடைய சதையையும் ரத்தமும் கொண்ட என் மகனுடைய வாசகங்களை நான் பிறரிடம் கொண்டு செல்லும்போது எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன். எனது இதயத்தையே வழங்குவதுபோல் இருக்கிறது எனக்கு!”

அவள் புன்னகை செய்தாள். ஆனால் அந்தப் புன்னகையால் லுத்மீலாவின் முகத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை. அந்தப் பெண்ணின் அடக்கக் குணத்தால் தனது மகிழ்ச்சியெல்லாம் அடைபட்டு ஆழ்ந்து போவது மாதிரி தாய்க்குத் தோன்றியது. அந்தக் கடின சித்தக்காரியின் இதயத்திலே தனது உணர்ச்சித் தீயை மூட்டிவிடத்தான் வேண்டும் என்ற உறுதியான ஆர்வ உணர்ச்சி தாயின் மனத்தில் திடீரெனத் தோன்றியது. அந்தக் கடின சித்தத்தையும் வசப்படுத்தி, ஆனந்தப் பரவசமான தன் இதயத்தின் உணர்ச்சிகளை அந்தக் கடின சித்தமும் பிரதிபலிக்கும்படி செய்துவிட வேண்டும் எனத் தாய் விரும்பினாள். அவள் லுத்மீலாவின் கைகளை எடுத்து அவற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டே பேசினாள்:

“அன்பானவளே, சகல மக்களுக்கும் ஒளியூட்டுவதற்கு ஒன்று இருக்கிறதென்பதை அந்த ஜோதியைச் சகல மக்களும் ஏறிட்டு நோக்கும் காலம் வரத்தான் செய்யும் என்பதை, அந்த ஜோதியை அவர்கள் இதயபூர்வமாக வரவேற்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க எவ்வளவு நன்றாயிருக்கிறது!”

தாயின் அன்பு ததும்பும் அகன்ற முகத்தில் ஒரு நடுக்கம் குளிர்ந்தோடிப் பரந்தது, அவளது கண்கள் பிரகாசம் எய்தின. புருவங்கள் அந்தப் பிரகாசத்தை நிழலிடுவது போலத் துடிதுடித்தன. பெரிய பெரிய எண்ணங்களால் அவள் சிந்தை மயங்கிப் போயிருந்தாள். அந்த எண்ணங்களுக்குள் தனது இதயத்துக்குள்ளே உள்ள சகல நினைவுகளையும், தான் வாழ்ந்த வாழ்வனைத்தையும் பெய்துவைத்தாள். அந்த எண்ணங்களின் சாரத்தை அவள் ஸ்படிக ஒளி வீசும் உறுதியான வார்த்தைகளாக வடித்தாள். அந்த வார்த்தைகள் அவளது இலையுதிர்கால இதயத்தில் பிரமாண்டமாகப் பெருகி வளர்ந்தது. அங்கு வசந்தகால சூரியனின் சிருஷ்டி சக்தியைக் குடியேற்றி ஒளி ஊட்டின. என்றென்றும் வளர்ந்தோங்கும் பிரகாசத்தோடு அவை அவள் இதயத்தில் நின்று நிலைத்து ஒளி செய்தன.

“மக்களுக்கு ஒரு புதிய கடவுளே பிறந்து விட்டது போல் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் – எல்லாம், எல்லோருக்காகவும் – ஒவ்வொன்றும் இப்படித்தான் நான் உங்களைப் புரிந்து கொள்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால், நீங்கள் அனைவரும் தோழர்கள்; நீங்கள் அனைவரும் அன்பர்கள், நீங்கள் அனைவரும் சத்தியம் என்னும் தாய்க்குப் பிறந்த ஒரே வயிற்றுப் பிள்ளைகள்!”

மீண்டும் அவள் உணர்ச்சியாவேசத்துக்கு ஆளாகிவிட்டாள். அவள் பேச்சை நிறுத்தி மூச்செடுத்தாள். தழுவப் போகிற மாதிரி தனது கைகளை அகல விரித்துக் கொண்டு பேசினாள்:

“அந்த வார்த்தையை – தோழர்கள் என்னும் அந்த வார்த்தையை – எனக்கு நானே சொல்லிக்கொள்ளும்போது, என் இதயத்திலே அவர்கள் அணிவகுத்துச் செல்லும் காலடியோசையை என்னால் கேட்க முடிகிறது.”

அவள் தன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டாள். லுத்மீலாவின் முகம் சிவந்தது, உதடுகள் துடிதுடித்தன; தெள்ளத் தெளிந்த பெருங் கண்ணீர்த்துளிகள் அவளது கன்னத்தில் வழிந்தோடின.

தாய் அவளைத் தன் கரங்களால் இறுகத் தழுவினாள். மெளனமாகப் புன்னகை செய்தாள். தனது இதயத்தின் வெற்றியை எண்ணி அன்போடு மகிழ்ந்து கொண்டாள்.

அவர்கள் பிரியும்போது, லுத்மீலா தாயின் முகத்தைப் பார்த்து, மெதுவாகச் சொன்னாள்:

“உங்களருகில் இருப்பது எவ்வளவு நன்றாயிருக்கிறது தெரியுமா?”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்

த்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் இந்தாண்டு ஜனவரி 14 தொடங்கிய “அர்த் கும்பமேளா” மார்ச் 3 வரை நடைபெறவிருக்கிறது. அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றிய ஆதித்யநாத் அரசு 6 ஆண்டுகளுக்கொருமுறை வரும் அர்த் கும்பமேளாவை “கும்ப்” என்றும் 12 ஆண்டுகளுக்கொரு முறை வரும் கும்பமேளாவை “மஹாகும்ப்” என்றும் மாற்றியுள்ளது. இந்த கும்பமேளாவின் முதல் நாளில் 2 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள் என்று தெரிவித்திருக்கிறது அம்மாநில அரசு.  கங்கை, யமுனை நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புராணப் புரட்டின்படி சரஸ்வதி நதியும் கலக்கிறதாம். இந்த திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் அது பெரும் புண்ணியம் என்பது வட இந்திய ‘இந்துக்களிடையே’ அழுத்தமாக நிலவும் ஒரு மூடநம்பிக்கை!

ஊரான் காசை எடுத்து உலையில் போட்டுவிட்டு விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கும் மோடி, யோகி

மோடி அரசின் திட்டங்களால் பாஜக-வின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் வாய்ப்புள்ள இடங்களில் பார்ப்பனிய இந்துமதத்தின் பிற்போக்குத்தனத்தை கட்டவிழ்த்து விட நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பமேளா நிகழ்வுக்காக ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே அதற்கான திட்டங்களை போட்டு செயல்படுத்தியிருக்கிறது சாமியார் யோகியின் தலைமையிலான உ.பி. அரசு. இந்த அரசுதான் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்ததற்குக் காரணம். மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வாங்க பணமில்லாத உ.பி. பாஜக அரசு இந்த அர்த் கும்பமேளா விழாவிற்காக ரூ.4300 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. இந்த ஒதுக்கீட்டில் மத்திய அரசின் ஒதுக்கீடும் உண்டு. மறைமுகமாக இரு அரசுகளும் இன்னும் அதிக பணத்தை ஒதுக்கியிருப்பது நிச்சயம்.

இம்மாதிரியான கும்பமேளாக்கள் இந்தியாவின் அலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் ஆகிய நான்கு நகரங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதனை பூர்ண கும்பமேளா என்கிறார்கள். அதில் அலகாபாத் மற்றும் ஹரித்துவார் ஆகிய இடங்களில் மட்டும் ஆறு ஆண்டுக்கு ஒருமுறையும் நடத்தப்படுகிறது. தற்போது உபி அலகாபத்தில் நடைபெற்று வருவது இந்த வகையைச் சார்ந்ததுதான்.

குவிந்து கிடக்கும் மீடியாக்கள்

கும்பமேளா தோன்றிய புராணக்கதை மற்ற எந்த பார்ப்பனிய புரட்டுக் கதைகளுக்கும் குறைவானது அல்ல. தன்னை மதிக்காத இந்திரனைக் கண்டு கோபமடையும் துர்வாசர் அவனை பிச்சைக்காரனாக ஒழிந்து போ என்று சாபம் கொடுக்கிறார். இதனால் இந்திரன் மட்டுமல்ல, தேவர்கள் அத்தனை பேரும் தங்களது சுகமான தேவலோக வாழ்க்கையை இழந்தனர். ரம்பா, ஊர்வசி, மேனகைகளால் ஆடப்படும் இந்திர லோகத்து குத்தாட்டங்கள் உள்ளிட்ட தேவலோக வாழ்க்கை ஆட்டம் காண்கிறது.

இதனால் அசுரர்கள் கை ஓங்கியது. இதனால் கலங்கிய தேவர்கள் பிரம்மா தலைமையில் சிவனிடம் புகார் கொடுத்தார்களாம். அவர் கொடுத்த ஆலோசனையின் படி விஷ்ணுவிடம் வழி கேட்க, அவரோ பாற்கடலை கடைந்து அமுதத்தை எடுத்து அருந்தினால் இழந்த சுகபோக வாழ்க்கை, பலம் அனைத்தும் கிடைக்கும் என்றாராம்.

ஆனால் அமுதத்தை தனியாக கடைந்து எடுக்க முடியாது என்பதால் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு தேவர்கள் பாற்கடலை கடைய இறுதியில் தன்வந்திரி அமுதக் கலசத்துடன் தோன்றுகிறார். கடைவதற்கு துணை நின்ற அசுரர்களுக்கு பாதி பங்கை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் தேவர்கள். இதற்காகவே விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமுதக் குண்டானை எடுத்துக் கொண்டு ஓடுகிறார். அசுரர்கள் துரத்துகிறார்கள். இந்த ஓட்டம் தேவலோக கணக்குப்படி 12 நாளுக்கு நடந்ததாம். நமது கணக்கின் படி 12 ஆண்டுகளாம். இந்த ‘சேசிங்கில்’ அமுதக் குண்டானிலிருந்து நான்கு துளிகள் மேற்படி கும்பமேளா இடங்களில் விழுந்ததாம். இதனால் அந்த தலங்கள் புனிதமடைந்து அமுதத் துளி விழுந்த தினத்தில் கும்பமேளா நடக்கிறதாம்.

அமுதத் துளி விழுந்த நீர்நிலைகளில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கி முக்தி அடையப் பெறுவார்களாம். மோடி அரசு பதவியேற்ற பிறகு பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி திட்டங்களால் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வேலைகளை பறிகொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் மக்களை ஒடுக்குமுறையால் மோடி அரசு பூலோக வாழ்விலிருந்து ‘விடுதலை’ செய்யும் போது தனியே ஆற்றில் முங்கி முக்தி அடைய வேண்டிய அவசியம் இல்லை.

கும்பமேளா நிகழ்வை நேரில் கண்டு, அங்கு தங்கி மக்களோடு உரையாடுவதன் மூலம் வட இந்திய, இந்து உளவியலை அறிந்து கொள்ளலாம் என்று வினவு செய்தியாளர்கள் அங்கே சென்றார்கள். நேரில் பேசிய பலரும் மோடி அரசின் மீது அதிருப்தி தெரிவித்தாலும் கும்பமேளாவின் புனிதத்தை நம்புகிறார்கள். பலர் ஆற்றில் முங்கி குளிக்கவில்லை என்றாலும் திரிவேணி சங்கமத்திற்கு வந்து செல்வதை ஒரு மரபாக வைத்திருக்கிறார்கள்.

இந்த கும்பமேளாவிற்காக அலகாபாத் என்கிற பெயரை “பிரயாக்ராஜ்” என மாற்றி தங்களது நீண்டநாள் கனவை நிறைவேற்றிக் கொண்டது உ.பியை ஆளும் இந்துத்துவ கும்பல். பெயர் மாற்றப்பட்டு நடக்கும் உபியின் முதல் கும்பமேளா இது. இதையே இந்து ராஷ்டிரத்தின் மாபெரும் வெற்றியாக பிரகடனம் செய்து கொள்கின்றது இக்கும்பல்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சில மாதங்களுக்கு முன்பிருந்தே தொடங்கப்பட்டுவிட்டன. அலகாபாத்தின் சுவர்கள் முதல் பாலத்தின் தூண்கள் வரை கும்ப மேளா கதையை விளக்கும் வண்ண ஓவியங்கள், அலகாபாத்தில் மூன்று மாதங்கள் திருமணம் நடத்த தடை, சாமியார்கள் மற்றும் மேட்டுக்குடிகளின் ஆன்மிக பயணத்துக்கு தோதாக சுங்கக் கட்டணம் ரத்து என பல அறிவிப்புகள் வெளியாகின. அரசுத்துறைகளின் செயல்பாடு அனைத்தும் பாஜக முதல்வர் யோகியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.

சுமார் பத்து கிலோ மீட்டருக்கு  தூரத்தில் இருந்தே மேளாவிற்கான வரவேற்பு தூண்கள் மற்றும் மோடி-யோகியின் முகம் பொறித்த பேனர்கள், சாலைகள் எங்கும் ஆக்கிரமித்திருந்தன. அதற்கு துப்பாக்கி ஏந்திய போலிசு-ராணுவத்தின் பாதுகாப்பு வேறு!

படிக்க:
♦ உத்திரப் பிரதேசம் : கும்பமேளாவிற்கு வரும் இந்துக்களிடம் மதவெறியேற்ற ஆர்.எஸ்.எஸ். திட்டம்
கும்பமேளா: இந்தியாவின் புனிதமா, அழுக்கா?

குடில்கள் மற்றும் தற்காலிக பாலங்கள், மின்விளக்குகள் அமைப்பது, சாலைகள் அமைப்பது, கழிவறை அமைப்பது என அனைத்து பணிகளும் ஒப்பந்தம் விடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. உ.பி போன்ற ஒரு பின்தங்கிய மாநிலத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத மாநிலத்தில் கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாய் இருந்தன. இந்த ஏற்பாடுகளின் மூலம் பாஜக ஆதரவு முதலாளிகள், வணிகர்கள், சங்கி பிரமுகர்கள் பலர் ஆதாயம் அடைந்திருப்பதோடு, பாரதிய ஜனதா கட்சிக்கும் கமிஷன் என்பது சட்டப்பூர்வமான நன்கொடையாக கூட வந்திருக்கலாம். 4000 கோடி ரூபாய் என்றால் சும்மாவா என்ன?

கும்பமேளாவின் நுழைவுவாயிலில் ருத்ராட்ச கொட்டை தாங்கிய தூண்கள் வரவேற்க, சாலையின் இரு புறங்களிலும் மோடி மற்றும் யோகியின் சாதனை விளக்க விளம்பர பேனர்கள் கண்களை பறித்தன. அதை விட முக்கியம் மோடி அரசின் “மேக் இன் இந்தியா” திட்டத்தை காட்சிபடுத்தும் விதமாக உ.பியின் ஒவ்வொரு மாவட்ட சுய தொழில் கண்காட்சியை யார் கண்களில் இருந்தும் தப்பிவிடாத வண்ணம் வைத்திருந்தனர். வாங்கும் சக்தியற்று மக்கள் இருக்கையில் மேக் இன் இந்தியா என்பது மாபெரும் தோல்வித் திட்டம் என்றால் பதாகைகள் என்னவோ அதன் வெற்றியை பயங்கரமாக பீற்றிக்கொண்டன.

அதனைத் தாண்டி சென்றால் பிரமாண்டமாக அமைப்பட்ட உபி சுற்றுலாத் துறையின் சார்பாக மேட்டுக்குடியினர் தங்கும் ஐந்து நட்சத்திர குடில்கள், தனியார் உணவகத்தின் கூடாரங்கள், போலிசு – ராணுவத்திற்கான பிரமாண்ட பரேடு கிரவுண்டு மற்றும் அவர்கள் தங்குவதற்கான குடில்கள் என  ஒரு மாபெரும் நகரையே உருவாக்கியிருந்தனர். ஹாலிவுட் புராணப் படங்களுக்கு போடப்படும் மாபெரும் செட்டுக்கள் போல இங்கே உண்மையாகவே அமைக்கப்பட்டிருந்தன. ஒரு புராணப் புரட்டிற்காக இத்தனை ஏற்பாடுகள், நிதி ஒதுக்கீடு, மனித வளம் என்று பார்த்தால் இந்தியா ஏன் வளரவில்லை என்ற கேள்வியை யாரும் கேட்டுவிட முடியாது.

சுருக்கமாக சொல்வதன்றால் ஒரு புதிய நகரத்திற்குள் நுழைவது போன்றதொரு உணர்வு. 3200 ஹெக்டேர் பரப்பளவு. 15 கிலோ மீட்டர் சுற்றளவில் கும்பமேளா நகரம்…! இதில் காமெடி என்னவென்றால் அலகாபாத்தின் நகருக்குள் நுழையும்போது கூட இப்படியொரு உணர்வு வரவில்லை. பார்க்கும் இடமெல்லாம் படுமோசமாக இருந்தன. மாடுகள் சாலையில் திரிவதும், பாழடைந்த கட்டிடங்களும்-புழுதியுமான மனிதர்களும் என்று நகரமே புழுதியிலும் அழுக்கிலும் குடியிருந்தது.

இதனைக் கடந்து சென்றால் எந்த திசையில் திரிவேணி சங்கமத்தை நோக்கி செல்வது என்று தெரியாமல் திக்குமுக்காட வைக்கும்படியான நிறைய சாலைகள். அதாவது இந்த சாலைகளே மொத்தமாக 250 கிலோ மீட்டருக்கு அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதில் எப்படி செல்வது என்ற ஒரு குழப்பம். ஒரு வழியாக விசாரித்துச் சென்றால் திரிவேணி சங்கமம் வரவில்லை. காஞ்சி சங்கராச்சாரியின் மடம்தான் வந்தது.

அலகாபாத்தில் உள்ள காஞ்சி சங்கர மடம்

சும்மா சொல்லக்கூடாது. சங்கரராமனை கொன்ற பாவத்தை கங்கை கரையில் கழுவிவிடலாம் என்று எண்ணும்படியாக பிரமாண்டமாக ஒரு கோவிலைக் கட்டியிருந்தது சங்கராச்சாரி மடம். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கங்கா-யமுனா மற்றும் இல்லாத நதியான சரஸ்வதி சங்கமிக்கும் இடம் உள்ளதென்றார்கள்.  குறுக்கும் நெடுக்குமாக செல்லும் சாலைகள் அனைத்திலும் இரும்பு தகடுகள் போட்டிருந்தனர். வெறுமனே மணலில் கார்கள் சென்றால் சிக்கிக் கொள்ளுமல்லவா? அதில்தான் மக்களும் நடந்து செல்கிறார்கள்.

அலகாபாத்தின் பல கிராமங்களுக்கு சென்று வர போதிய சாலைகளோ, பேருந்து வசதிகளோ இன்றும் இல்லை. இன்னமும் சைக்கிள் ரிக்‌ஷாவும், ஷேர் ஆட்டோவும்தான் மக்களுக்கு உதவுகிறது. ஆனால் கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஏதுவாக பல பத்து தற்காலிக சாலைகள், 500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

சங்கம ஏரியாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தன. இது கஜா புயலில் சாய்ந்த மின்கம்பங்களில் மூன்றில் ஒரு பகுதி. ஒரு மாவட்டத்துக்கு தேவையான பாதி மின்கம்பங்களை அந்த குறுகிய இடத்தில் மட்டும் வைத்திருந்தார்கள். உண்மையில் உபியில் பல கிராமங்களுக்கு இன்னமும் மின்சாரம் இல்லை என்பது ஒரு மன்னிக்க முடியாத உண்மை.

புனித நீராடும் மக்களுக்காக 1,22,000 கழிப்பறைகள் வைத்திருந்தார்கள். ஆனால் இந்த கழிப்பறைகளை பயன்படுத்த முடியாது. எதிலும் நீர் இல்லை. மோடி அரசின் ஸ்வச்ச பாரத் விளம்பரம் போல நாற்றமெடுக்கும் கழிவறைகள் சங்கம பகுதியின் மணத்தை தீர்மானித்தன. அவசரத்துக்கு போகிறவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் நிச்சயம் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.

அடுத்து கங்கையை கடந்து சாமியார்களிடம் ஆசி வாங்குவதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக பாலங்கள் மட்டும் 22 இருந்தன. பல மாதங்களுக்கு முன்பே தொழிலாளர்களின் உழைப்பில் இந்த பாலங்கள் உருவாக்கப்பட்டன. இந்த தொழிலாளிகள் யாருக்கும்  கங்கையில் புனித நீராடும் நேரம் கூட இருந்திருக்காது. உண்மையில் இப்பால கட்டுமானம் அவ்வளவு பெரிய வேலை.

படிக்க:
♦ இந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் !
♦ கோவில் சொத்துக்களை அபகரிக்க காவிகளின் சதி | காணொளி

எந்த பாலத்தில் நடந்து சென்றாலும் அந்த வீதியில் இருக்கும் சாதா மற்றும் ஸ்பெசல் சாமியார்களான நாகா சாமியார்களிடம் சென்று தரிசனம் பெறலாம்.  இந்த நாகா சாமியார்களுக்கு மட்டும் பலநூறு ஏக்கரில் நிலம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. கூடாரம், மின்சாரம் என்று ஏக போகமாய் இந்த முற்றும் துறந்த அம்மண சாமியார்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.

நாகா (நிர்வாண) சாமியார்களின் கூடாரம் அனைத்தும் கங்கை ஆற்றின் கரையை ஆக்கிரமித்து அமைத்திருக்கிறார்கள். ஒரு சாமியாரே முதல்வராக இருக்கும் போது நாகா சாமியார்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். அதில் கார்ப்பரேட் சாமியார்களுக்கு தனி குடில், சாதா சாமிகளுக்கு தனி குடில் என்று காசுக்கு ஏற்ற மாதிரி அமைதிருந்தார்கள். சாமியார்களும் வர்க்க ரீதியாக பிரிந்திருந்தார்கள். இதில் வேடிக்கை என்ன்வெனில் கார்ப்பரேட் சாமியார்களுக்கும், மடாதிபதிகளுக்கும் ஏர்டெல், குயிக் ஹீல் போன்ற பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்திருக்கின்றன.

அதேபோல் கவுரி எண்டர்பிரைசஸ், ஃபேர் அண்ட் லவ்லி போன்ற பல தனியார் நிறுவனங்கள் சார்பில் பக்தர்கள் குளித்துவிட்டு உடைமாற்றுவதற்கென்று தங்கள் நிறுவன விளம்பரத்தை தாங்கிய கூடாரத்தை அமைத்துக் கொடுத்திருந்தார்கள். ஒரு பக்கம் திருநீறு பூசிய நிர்வாண சாமியார்கள். மறுபக்கம் சிவப்பாக்கும் களிம்பு விளம்பரம். இல்லறம் துறவறம் இரண்டையும் கார்ப்பரேட் அறம் கவுட்டுக்கிடையில் பிடித்து வைத்திருந்தது.

பாரம்பரிய விழாவிற்கான UNESCO-வின் அங்கீகாரத்தை கும்பமேளா பெற்றுள்ளதால் 192 நாடுகளின் ஆன்மீகவாதிகளை கவர சுமார் 450 கோடி வரை விளம்பரத்திற்காக செலவிடப்பட்டதாக பீற்றிக் கொள்கிறது பாஜக அரசு. இந்த வெளிநாட்டு ஆன்மீகவாதிகளுக்காக தனிச் சிறப்பான நட்சத்திரக் குடில்கள் திரிவேணி சங்கமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டு ஆன்மீகமானாலும் இந்த விதேசிகள் இந்தியா எனும் பாம்பாட்டி நாடுகளின் விசித்திரங்களை கண்டு ரசித்து சிரித்திருப்பார்கள்.

அடுத்தபடியாக இந்தியாவின் பணக்கார மேட்டுக்குடியினர் தங்குவதற்கு கங்கா மற்றும் யமுனா நதிக்கரையில் பல ஏக்கர் நிலம் ஒதுக்கியிருந்தார்கள். இதில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட குடில்கள் போடப்பட்டுள்ளன. இந்தக் குடில்கள் அனைத்தும் ஒரு நட்சத்திர விடுதியின் விருந்தினர் அறையோடு போட்டி போடும் தன்மை கொண்டவை. இந்த ஆடம்பர குடில்களுக்கு சற்று தள்ளி பொது மக்கள் அல்லது ஏழைகள் சதையைக் கிழித்து எலும்பைத் துளைக்கும் கடுங்குளிரில் ஒடுங்கிக் கிடக்கிறார்கள். ஆக வறுமைதான் உண்மையான துறவறம். துறவறம்தான் உண்மையான இல்லறம். இதுதான் இந்துத்துவ அறம்.

இந்திய  தொழில் கூட்டமைப்போ  “இந்த திருவிழாவின் மூலம் சுமார் 1.2 லட்சம் கோடி வருவாய் வரும்” என்று திட்டவட்டமாக அறிவிக்கிறது. சில நாடுகள் விபச்சாரத்தை உள்ளடக்கி சுற்றுலாத்தலமாக்கி வருமானம் பார்ப்பது போல இது ஆன்மீக சுற்றுலா. அதில் அரசுகள் மக்கள் பணத்தை வீசியெறிந்து பார்ப்பனியத்தின் மேலாண்மையை நிறுவ முயல்கின்றன. ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி கும்பல் தமது  பரிவாரப்படையை களத்தில் இறக்கி பக்தர்களுக்கு சேவை செய்வதென்ற பெயரில் இந்து வெறியூட்டி தங்களுடைய கேடான நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேலை செய்து வருகிறது. அதற்கு கும்பமேளா ஒரு முகாந்திரம்!

(தொடரும்)

வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து

#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு

துரைக்கு வந்த மோடி அவர்களுக்கு தமிழக பா.ஜ.க செய்த வரவேற்பை விட ‘தரமான’ வரவேற்பு தந்தவர்கள் தமிழக மக்கள்தான். சும்ம சொல்லக்கூடாது செய்முறை செய்வதில் நம்மை மிஞ்ச ஆளில்லை என பெருமை கொள்ளலாம். நம்மைப் போன்றே கேரள மக்களும் சிறப்பாக செய்துள்ளனர்.

டிவிட்டரில் உலக அளவில் #PoMoneModi, #GoBackModi இரண்டும் டிரண்டிங் ஆனது. இப்போது மெய்நிகர் உலகில் டிரண்டிங் ஆனது நாளை மெய்யுலகிலும் ஆகும், ஆக்குவோம்…

*****

Villavan Ramadoss :

நீ வர்றது தெரிஞ்சா அவனுங்க லீவு போட்டுட்டு வந்து ட்வீட்டர்ல குத்த வைப்பானுங்க. இதுல நீ ரெண்டுநாள் லீவு இருக்குறப்போ அங்க போயிருக்க..

Joe Milton :

மோடி : மூன்று பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்போம்
தமிழன் : தமிழ்நாட்டுல எத்தனை பாராளுமன்ற தொகுதி ?
மோடி : 39
தமிழன் : அப்போ எத்தனை கல்லூரி ?
மோடி : 13
தமிழன் : இங்க ஏற்கனவே 29 இருக்கே . மீதி 16 – ஐ மூடுறதா ப்ளானா ?
மோடி : புடுச்சேரிக்கோ வணக்கம் !

Lakshmanasamy Odiyen Rangasamy :

அடேய்…..ரொம்ப ஓவராத்தான் போறீங்கடா

 

Villavan Ramadoss :

ஏம்பா மோடி, கம்பெனி கொஞ்சம் டல்லா போவுது.. தமிழ்நாட்டுக்கு ஒருக்கா போயிட்டு வா. ஏன்னா நீ போனாத்தான் இவனுங்க டிவிட்டர் பக்கமே வர்றான்னுங்க.

– டிவிட்டர் ஓனர். #GoBackModi

Arul Ezhilan :

#GoBackModi
முகிலனின் தரமான சம்பவம்!


Kalis Kalimuthu :

Troll Mafia

மோடியின் தமிழக வருகை மரண கலாய் #GoBackModi 😅 வச்சு செஞ்சிருக்காங்க

Mathavaraj :

மதுரைக்கு வந்த சோதனை இது.

தனது முதல் சுதந்திர தின உரையின் போது “குண்டு துளைக்காத கண்ணாடிக்குள்ளிருந்து பேச மாட்டேன், என் மக்களிடையே பேச எனக்கு எதற்கு பாதுகாப்பு?; என வீறாப்பு பேசியவர்தான் இந்த மோடி. அப்போது அதை ஆஹோ ஓஹோவென்று சங்கிகளும், ஊடகங்களும் புகழந்து தள்ளினர்.

இன்று அதே மோடி மதுரையில் பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் 3 கி.மீ சுற்றளவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பகுதி முழுவதையும் மத்தியப் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். மத்தியப்படை, சிஐஎஸ்எப், அதிரடிப்படை, கருப்புப் பூனைப்படை, சிறப்புப் படை, சிறப்பு கண்கானிக்கும் பிரிவு, ஆயுதப்படை, உள்ளூர் போலீஸ் எல்லாம் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எதோ படையெடுப்பு போல பரிவாரங்கள் அணிவகுத்து இருக்கின்றன. இவ்வளவு செலவும், இவ்வளவு பாதுகாப்பும் இவ்வளவு அவமானமும் எதற்கு? பொன்னார், தமிழிசை, எச்சை ராஜாவைத் தவிர மோடி வந்து அடிக்கல் நாட்ட வேண்டும் என யார் இங்கு அழுதார்கள்?

இதையெல்லாம் விட மகா கேவலம் என்னவென்றால், அருகிலேயே பாஜகவின் கட்சிக் கூட்டம் நடக்க இருக்கிறதாம். அதில் பங்கேற்க வரும் சொந்தக் கட்சியினரைக் கூட மெடல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகுதான் உள்ளே அனுமதிக்கப் போகிறார்களாம். பாஜக விலும் ’தமிழக’ பாஜக என்றால் தனி கெத்துத்தான் போல.

அது.
#GobackModi #GobacksadistModi #BoycottModi

Abdul Hameed Sheik Mohamed :

தமிழ் நாட்டில் ஆயிரம் பற்றி எரியும் பிரச்சினைகள். கஜா புயல் நிவாரணம் உட்பட ஆயிரம் கோரிக்கைகள். எதைப்பற்றியும் பிரதமர் வாய் திறக்கவில்லை. மாறாக தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையைப் பற்றி பேசுகிறார். மத அரசியல்- சாதி அரசியல் இரண்டையும் தவிர ஒரு பிரதமருக்கு எந்த ஆர்வமும் அரசியலில் இல்லை #GoBackModi

Aazhi Senthil Nathan :

சேச்சே, தமிழர்களுக்கு வரவர டிப்ளமசின்னாவே என்னென்னு தெரியமாட்டங்குது. தமிழ்நாட்டை அந்நிய நாடாக நினைக்கும் நம்ம அண்டைநாட்டுப் பிரதமர் மோடி வரார்னா, சர்வதேச மரபுப்படி நாம வரவேற்கத்தானே செய்யணும்! கோல்டு வார் பீரியட்ல கூட இப்படியெல்லாம் கிடையாதேய்யா! இப்படி மூணு லட்சம் நாலு லட்சம் ட்வீட் போட்டு ஓடவச்சா நாளைக்கு அமெரிக்க, ரஷ்ய ஜனாதிபதிகள்ளாம் எப்படியா நம்மூருக்கு வருவான்? வந்தாரை வரவேற்கும் தமிழகம் இப்படி குட்டிச்சுவரா போச்சேன்னு நினைக்கும்போதுதான் –
(சோடா குடுய்யா!) – மிடில!
( #GoBackModi ன்னு இங்க ஹேஷ்டேக் போடணும்னு ஒருத்தர் மிரட்டரார். முடியாது முடியாது. போட மாட்டேன்).

Vijai Prasad :

தவறான பிரச்சாரங்களை மக்கள் கருத்தில் கொள்ள கூடாது. யாரும் எங்களை எதிர்க்க கூடாது. பயத்தாலும், எதிர்மறை எண்ணங்களாலும் எனக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளோர். மோசமானவர்களை புறந்தள்ளுங்கள். நான் உங்கள் பக்கம் இருக்கிறேன்.. பாரத் மாதா கீ ஜெ.. வணக்கம்

Rajagopal Subramaniam :

என்ன இருந்தாலும் அவர் நம்ம பிரதமர்டா..கொஞ்சம் நாகரீகமா செய்ங்கடா…

விசாரணைன்னு வந்துட்டா ஜட்ஜை கொலை பண்றவன், உச்சநீதிமன்றத்தை மயிரா கூட மதிக்காம சிபிஐ டைரக்டரை கொஞ்சம் கூட வெக்கம், மானம், சூடு, சொரணை இல்லாம மாத்துற பிரதமனுக்கு இல்லாத நாகரிகம் எங்களுக்கு எதுக்குடா இருக்கணும்…?
#GoBackModi

தமிழச்சி (Tamizachi) :

#GoBackModi ஹாஷ்டேக் இந்திய அளவில் இருந்து உலகளவில் முதலிடத்திற்கு வந்துள்ளது. சொந்த நாட்டு பிரதமரை தங்கள் மாநிலத்திற்குள் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை நோக்கி  #தேச_விரோதிகள்  என்று  #பாஜக / #ஆர்எஸ்எஸ்  கும்பல்கள் குற்றம் சாட்டலாம்.

ஆனால் உலகளவில் அரசியல் ஆய்வாளர்களாலும், உலக மக்களாலும் கவனிக்கும்படி #மோடி வெறுப்பை தமிழர்கள் காட்டுகிறார்கள் என்றால் மோடியின் கழிச்சடை திட்டங்களும், தமிழக மக்களுக்கு எதிரான செயல்களும் #தமிழர்கள் மீதான வெறுப்பை எவ்வாறு அரசியலாக்கினார் என்பதையும் இன்று உலகத்தினரே கவனிக்கும்படி மோடியின் தமிழக வருகை அடையாளப்படுத்தி இருக்கிறது.

கேவலம் ஒரு செங்கல்லை நட்டு #எய்ம்ஸ்_மருத்துவமனை க்கு அடிக்கல் நாட்டுவிழா நடத்தி, “முட்டாள் மக்களை ஏமாற்றி வாக்கு சேகரித்து விடலாம் என்பது மகா முட்டாள் மோடியின் கணக்கு.” அது தமிழர்களிடம் எடுபடாது என்பதை மக்கள் நிருபித்துவிட்டார்கள்.

சென்ற முறை மோடி தமிழகம் வந்தபோது கருப்பு கொடிகளுக்கு பயந்து சந்து பொந்து சுவர்களை இடித்து திருட்டுத்தனமாக ஒருவழியாக தப்பிச் சென்ற கோழை இம்முறை மதுரையில் சிக்கிக் கொண்டு உலகளவில் அவமானத்தோடு நிற்பதற்கான காரணத்தை அவர்களுக்கு மக்களே உணர்த்திவிட்டார்கள்.
வாழ்க! வெல்க!! தமிழர்களின் எதிர்ப்பு அரசியல் விழிப்புணர்வு!!!
தமிழச்சி (Tamizachi)
27/01/2019
#GoBackSadistModi

படிக்க:
என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !

Abdul Hameed Sheik Mohamed :

மோடியை வைகோ திட்ட ஆரம்பித்ததும் ஒரு சேனல் மின்னல் வேகத்தில் லைவ் வை கட் பண்ணின வேகம் இருக்கே…..ஒரு தனியார்சேனலில் வேலை பார்க்கும் ஆன் லைன் எடிட்டர் சொல்கிறார் ‘ சர்க்கஸ் கம்பெனில வேலை பார்க்கிற மாதிரி இருக்கு ப்ரோ….தினமும் நெருப்பு வளையத்தில் புகுந்து வெளிய வர வேண்டியிருக்கு..”

Bala G :

அடிமைகள் vs தமிழர்கள்..

Bala G :

விடாது கருப்பு..

தமிழர்கள் பாதிக்கப்பட்டு நிற்கும் போது ஒரு பிரதமரா வந்து எட்டிப்பார்க்க துப்பில்ல..

Bala G :

Mathavaraj :

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு

Aazhi Senthil Nathan :

Cpiml Tamilnadu :

#GoBackModi
பாசிச பாஜக ஆட்சி ஒழிக!

கதிர் நிலவன் :

 

ராஜ குலோத்துங்கன் :

பெரியார் மண்ணில்..
Sadist-க்கு இடமில்லை..

Ramesh Periyar :

Arunkumar Veerappan :

பாவத்த😒😒😒

#PoMoneModi
#GoBackModi

Error 404 Tamil
என்னாமா கூவுறண்டா கொய்யால 🤣🤣🤣🙈🙈👏👏
Dumilisai Vera Level Kalaaai

 

ஐசிஐசிஐ வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

0

சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வழங்கியது பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சந்தா கோச்சார், அவருடைய கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முக்கிய வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கிறது என சிபிஐ கருதுகிறது. அதன் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது.

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை தனக்குச் சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக ‘ஜனநாயக’ அமைப்புகளின் துணையுடன் தூக்கி அடித்தது மோடி அரசு. சுதந்திரமான அமைப்பான சிபிஐ-க்கு இந்த நிலைமையா எனக் கூப்பாடு போட்டாலும் மோடி அரசு அதை பொருட்படுத்தவில்லை. சிபிஐ இயக்குனரை அவமானப்படுத்தி அனுப்பியதோடு, பல்வேறு வழக்குகளை விசாரித்து வந்த மோடி அரசுக்கு ‘ஒத்துழைக்காத’ சிபிஐ அதிகாரிகள் தூக்கி அடிக்கப்பட்டனர். அனைத்தையும் ஐசிஐசிஐ – வீடியோகான் போன்ற சில வழக்குகளில் குறைந்தபட்சமாக செயல்பட பார்க்கிறது சிபிஐ. எதேச்சதிகாரத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் காவி கும்பலுக்கு அது எரிச்சலை, குடைச்சலைத் தருகிறது.

திசு புற்றுநோய் சிகிச்சைக்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்கா சென்றிருக்கிறார். அவருடைய உடல்நலன் குறித்த தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக வைக்கப்பட்டிருக்கிறார். தங்களுடைய ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்குக்கூட வர இயலாத நிலையில் உள்ள அருண் ஜேட்லி, புற்றுநோய் படுக்கையில் இருக்கும் அருண் ஜேட்லி ஐசிஐசிஐ – வீடியோகான் முறைகேட்டில் சிக்கிய புள்ளிகளை காப்பாற்றும் பொருட்டு சிபிஐயின் விசாரணையை ‘புலனாய்வு சாகசம்’ என தனது முகநூலில் எழுதுகிறார்.

“புலனாய்வு சாகசத்துக்கு தொழில்ரீதியான புலனாய்வுக்கு அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது” என ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிப்போன இந்திய தொழிலதிபர்களின் நண்பரான அருண் ஜேட்லி, ஐசிஐசிஐ மோசடியாளர்களுக்கு ஒத்து ஊதும் பதிவை தொடங்குகிறார்.

“ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கிறேன். ஐசிஐசிஐ வழக்கின் முக்கியமான இலக்குகளின் பட்டியலை வாசித்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் மீண்டும் அது வந்து போனது. முக்கியமான இலக்குகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, போகத் தெரியாத இடத்துக்கு (அல்லது எல்லா இடங்களிலும்) பயணம் மேற்கொள்ளப்படுகிறதா? வங்கித் துறையில் உள்ள அனைவரையும் ஆதாரம் இருந்தோ இல்லாமலோ சேர்க்கும்போது, நாம் என்ன விளைவுகளை உருவாக்குகிறோம் அல்லது காயப்படுத்துகிறோம்?” என வங்கி மோசடிகளை விசாரிப்பதில் மோசடியாளர்களின் சார்பாக பதற்றம் கொள்கிறார் அருண் ஜேட்லி. இதைச் செய்வது யார்? நிதியமைச்சராக இருந்தவர். இந்தியா திரும்பி வந்தால் இப்போது நிதியமைச்சர் ஆகக் கூடியவர். அவர் சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால், மேற்கொண்டு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க முட்டுக்கட்டை போடுகிறார் அமைச்சர்.

இந்த வழக்கின் பின்னணி என்ன? யாரெல்லாம் தொடர்புபடுத்தப்படுகிறார்கள்?

2012-ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார், வீடியோ கான் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை கடனாகக் கொடுத்தார். வீடியோ கான் நிறுவனம், இந்த பணத்தை, சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்துக்கு அப்படியே மாற்றிவிட்டது. இந்த முறைகேடான பணப்பரிமாற்றம் குறித்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில் செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார் சந்தா கோச்சார். சிபிஐ முறைகேட்டில் தொடர்புள்ள மூவர் மீது வழக்கு பதிவு செய்தது.

இடமிருந்து: தீபக் கோச்சார், சாந்தா கோச்சார், மற்றும் வேணுகோபால் தூத்.

ஆனால், முறைகேடு இவர்கள் மூவரோடு முடியவில்லை. ஐசிஐசிஐ-யின் தற்போதைய செயல் அதிகாரி சந்தீப் பாஸ்கி, பிரிக்ஸ் நாடுகளின் வங்கியான நியூ டெவலப்மெண்ட் பாங்கின் தலைவர் கே.வி. காமத், கோல்மென் சாக்ஸின் தலைவர் சஞ்ஜோய் சாட்டர்ஜி, ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குனர் கே. ராம்குமார். ஐசிஐசிஐ புருடென்ஸியல் லைஃப் செயல் அதிகாரி என். எஸ். கண்ணன், ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கியின் செயல் அதிகாரி ஸாரின் துருவாலா, டாடா கேப்பிடல் செயல் அதிகாரி மற்றும் தலைவர் ராஜீவ் சபரிமால், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹோமி குருஸ்ரோகான் ஆகியோர் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் வருகின்றனர். கிட்டத்தட்ட இந்தியாவின் வங்கி – நிதித்துறை வட்டத்தில் உள்ள பெரிய ‘தலைகள்’ பாதி பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

இந்தியாவின் வங்கி – நிதிச் சூழல் இத்தகைய கேடு கெட்ட நிலையில் இருப்பது குறித்து கொஞ்சமாவது கூச்சநாச்சத்துடன் கவலைப்பட்டிருக்க  வேண்டிய அல்லது கவலைப்படுவதாக நடித்திருக்க வேண்டிய அருண் ஜேட்லி, வெளிப்படையாக நோய் படுக்கையில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை காப்பாற்றத் துடிக்கிறார்.  சிபிஐ சாகசத்துடன் இந்த அதிகாரிகளின் பெயர்ப்பட்டியலை ஊடகங்களில் கசியவிட்டிருப்பதாக கவலைப்படுகிறார் ஜேட்லி.

prashant-bhushan
பிரசாந்த் பூஷண்

“மத்திய நிதியமைச்சர் சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் கருத்து சொல்வது சரியானதல்ல.  சிபிஐ தொடர்ந்து பலரை விசாரித்து வருகிறது,  அது சுதந்திரமாக தன்னுடைய பணியைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.

“எந்த ஒரு நீதிமன்றமும் அதிகாரமும் சுதந்திரமான புலனாய்வு அமைப்பான சிபிஐ எப்படி செயல்பட வேண்டும் என சொல்ல முடியாது.  மேற்பார்வையில் நடப்பது என்பதும்கூட பரந்துபட்ட மேற்பார்வை என்பதுதான் பொருளே அன்றி, குறிப்பிட்ட வழக்கு விசாரணையில் தலையிடுவது அல்ல” என்கிறார்  உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெட்கே.

படிக்க:
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் !
புராணக் குப்பைகள் அறிவியலாகுமா | பேராசிரியர் வீ அரசு

கடந்த நாலே முக்கால் ஆண்டுகால ஆட்சியில் ‘ஜனநாயக’ப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு, ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் துணை அமைப்புகளை காலில் போட்டு மிதித்தது.  கார்ப்பரெட் கயவாளிகள் ஆயிரக்கணக்கானக் கோடியைத் தூக்கிக் கொண்டு, போகும் முன் நிதியமைச்சருக்கு ‘டாடா’காட்டி விட்டு சொகுசு நாடுகளுக்கு சென்று விட்டனர். மீதமிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு பெரிய தல மோடி நாட்டை விற்று விட்டார். இதெல்லாம் அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகிவிட்ட பிறகும், ஆட்சி அதிகாரத்தின் கடைசி நாட்களிலும்கூட மோடி, ஜேட்லி பரிவாரம் காப்பரேட்களின் நலனுக்காக ஓடி ஓடி உழைக்கிறது.


கலைமதி
செய்தி ஆதாரம்:த வயர்


இதையும் பாருங்க …

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை

புராணக் குப்பைகள் அறிவியலாகுமா | பேராசிரியர் வீ அரசு

”புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தை தலைமையேற்று நடத்திய CCCE அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சென்னைப் பல்கலைகழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவருமான பேராசிரியர் வீ.அரசு அவர்கள் ஆற்றிய உரை…

♠ இந்த அறிவியல் மாநாடு என்பது பல ஆண்டுகளாக அதன் போக்கில் பல விஞ்ஞானிகள் தங்களுக்குள் கலந்துரையாடக்கூடிய ஒரு இடமாக அதைப்பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், அண்மையில் அந்த மாநாட்டை மூடநம்பிக்கை சார்ந்த கருத்துக்களின் பிரச்சாரத் தளமாக அதை மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.
மதம் சார்ந்த கருத்தாக்கங்களைத்தான் அறிவியல் என்று சொல்லக்கூடிய மிகக் கேவலமான தன்மையை இந்த நாட்டின் தலைமையாக இருக்கக்கூடிய மோடி முன்னெடுக்கிறார்.

♠ எது எப்படி இருந்ததோ? அது அப்படி இருக்கிறது… எது எப்படி நடக்கிறதோ… அது அப்படி நடக்கிறது… எது எதிர்காலத்தில் எப்படி நடக்குமோ? அது அப்படி நடக்கும்… இடியட்ஸ் இதவந்து பிலாசபிங்கிறான்…

முழுமையான வீடியோவைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

தொகுப்பு:

இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !

இலங்கையில் நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் இயக்கம் !

தோட்டத்தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1000 ரூபாயக மாற்ற வேண்டும் எனக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்றும் (28.01.2019) போராட்டங்கள் நடைபெருகின்றன.

தொழிலாளிகள் கோரிக்கையை நீத்துப் போகச் செய்யும் சதித்தனமான அறிவிப்பாக நாளொன்றுக்கு 700 ரூபாய் சம்பளம் என பேசப்படுகிறது. ஆனால் தொழிலாளிகள் இதனை ஏற்கவில்லை. மேலும் இப்போராட்டத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல 1000 Movement என்ற அடிப்படையில் ஒரு முகநூல்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

தகவல் :
1000 இயக்கம் முகநூல் பக்கத்திலிருந்து…

*****

லங்கையில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து, கரடுமுரடான மலைகளை சீர்படுத்தி தங்கள் “உள்ளங்கால் வெள்லெலும்பு” தெரிய உழைத்த மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர்.

ஆம் கடந்த 23 ஜனவரி 2019 அன்று தோட்டத் தொழிலாளர்கள் தங்களது தினக்கூலியாக 1000 ரூபாய் வழங்க வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்து நாடுதழுவிய அளவில் பல்வேறு இடங்களில் தங்கள் போராட்டத்தை நடத்தினர். உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக இலங்கையின் மூன்று இன மக்களும் ஒன்றாக கைகோர்த்து உள்ளனர்.

இந்த போராட்டத்தை சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு மற்றும் பல்வேறு இடதுசாரி அமைப்புகள் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைத்து நடத்தினர்.

மாத்தளையில் நடந்த போராட்டம்…

யாழ்பாணத்தில் நடைபெற்ற போராட்டம்…

கண்டியில் நடைபெற்ற போராட்டம்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, இலங்கை
முகநூல் பக்கத்திலிருந்து…

*****

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து பலரும் தங்களது முகநூல் பக்கத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்…

Mohana Dharshiny

லையக தோட்டத் தொழிலாளர்களின் 1000/- அடிப்படைச் சம்பளக் கோரிக்கைகான போராட்டங்கள் இலங்கை முழுவதும் சுமார் 30 இடங்களில் இன்று நடைபெற்றிருக்கிறது. இன, மொழி , பிரதேசவாதங்களைக் கடந்து இலங்கை முழுவதிலுமுள்ள உழைக்கும் வர்க்கத்தினரும் அவர்தம் பிள்ளைகளும் இந்தப் போராட்டத்தில் கைகோர்த்திருக்கிறார்கள்.

அரசியலற்றவர்களாக தங்களைச் சொல்லிக்கொள்ளும் நலன்விரும்பிகளும் இளைஞர்களும் சமூக ஜனநாயகவாதிகளும் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைக் கேட்கும் மலையக மக்களின் போராட்டத்தில் பங்கேற்றிருப்பது நம்பிக்கையான முன்னேற்றம்.
ஆனால் , இந்த சம்பள கோரிக்கையை வென்றெடுப்பதில் தொழிற்சங்க அரசியல் இருக்கிறது.

40% தொழிற்சங்க பலத்தைக் கொண்ட தொழிற்சங்கங்களே , முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்கள்.

அவர்கள் யாருக்கு சார்பாக முடிவெடுப்பார்கள் என்பது தொழிலாளர்கள் அறிந்ததே…
பெருந்தோட்ட கம்பனிகளுக்காக உழைக்கும் அதே தொழிற்சங்கங்களுக்கு தொடர்ந்தும் சந்தா செலுத்திக் கொண்டு இருக்கப் போகிறோமா என்பதை தோட்டத் தொழிலாளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

*****

Kalai Marx

லையகத் தமிழர்கள் வெறும் கூலிக்காக மட்டும் போராடவில்லை. அது அவர்களது நில உரிமைக்கான போராட்டமும் கூட. நூற்றி ஐம்பது வருடங்களாக பண்படுத்தி பயிரிட்டு வந்த நிலம், அந்த மக்களுக்கு சொந்தமாக வேண்டும். அதை மறுப்பதற்கு நீங்கள் யார்?

“வடக்கிற்கு வந்து குடியேறுங்கள். அதிக கூலி கொடுக்கிறார்கள்.” என்று சில வடக்கத்திய வலதுசாரிகள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். மலையகத் தமிழர்கள் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதை இது.

பெருந்தோட்ட முதலாளிகள் அந்த மக்களை சுரண்டி முடிந்து, தற்போது வடக்குத் தமிழ் முதலாளிகள் சுரண்ட விரும்புகிறார்கள். “அதிகம் சுரண்டுவது யார்?” என்று சிங்கள முதலாளிகளும், தமிழ் முதலாளிகளும் போட்டி போடுகிறார்கள். இந்த அயோக்கியத்தனத்திற்கு தமிழ்த் தேசிய முகமூடி ஒரு கேடு.

ஏற்கனவே கிளிநொச்சி போன்ற இடங்களில் குடியேறிய பெருந்தொகையான மலையகத் தமிழர்கள், மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரும் ஏழைகளாக, கூலித் தொழிலாளர்களாக தான் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு முதலாளியை காட்டுங்கள் பார்ப்போம்.

உங்களுக்கு தெரியுமா? நீங்கள் குறிப்பிடும் அதிக கூலி மலையகத்திலும் கிடைக்கிறது! தேயிலைத் தோட்டங்களை விட்டு விட்டு வேறு துறைகளில் வேலை செய்பவர்களுக்கு நாட்கூலி ஆயிரம் ரூபாய்களுக்கு மேலே கிடைக்கிறது. இதனால் பல மலையக இளைஞர்கள் காய்கறித் தோட்டங்களிலும், கட்டுமானத் துறைகளிலும் வேலை செய்கிறார்கள்.

ஆகவே, மலையகத் தமிழரின் கோரிக்கை வெறும் கூலி உயர்வு சார்ந்தது அல்ல. அதுவும் அரசியல் உரிமைப் போராட்டம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஆர்.எஸ்.எஸ் அறிவியலுக்கு மட்டுமல்ல ஆசிரியர் போராட்டத்துக்கும் எதிரி !

1

மிழகம் முழுவதும் காலவரையறையற்ற போராட்டத்தை அரசு ஊழியர் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பானது முன்னெடுத்து நடத்தி வருகிறது.

அதன்  நான்காவது நாளான 25.01.2019 அன்று நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும் அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் அப்போராட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர் – பேராசிரியர்களின் நியாமான கோரிக்கையை ஆதரித்து முழக்கங்களை எழுப்பினர். அதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் வரவேற்றனர்.

போராட்டத்தில் புகுந்து கலாட்ட செய்ய முயன்று தோற்று ஓடிய ஆர்.எஸ்.எஸ்.காரர்.

இவ்வாறு போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில் அறிவியல் மாநாட்டை  மோடி அரசு மூடத்தனத்தை பரப்பும் மாநாடாக நடத்தியதை கண்டித்து பு.மா.இ.மு சார்பாக போடப்பட்ட துண்டறிக்கையை விநியோகம் செய்தனர். இதைப் பார்த்த ஒரு RSS-காரர் நோட்டிசை பார்த்து காண்டாகி நமது மாணவர் ஒருவரிடம் சண்டைக்கு வந்தார்.

உடனே அங்கிருந்த ஜாக்டோ ஜியோவினர் முழக்கமிட்டு RSS காரரை வெளியேற்றினர். பிறகு மீண்டும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென்று போலீசார் 20 பேர் மாணவர்களை சுற்றிவளைத்து தாக்கி யாருக்கும் தெரியாமல் போராட்டக் களத்திலிருந்து இழுத்து சென்றனர்.

இத்தகவல் அறிந்து பிற தோழர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என அனைவரும் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு விசாரித்தபோது போலீசு, “மாணவர்களை அங்கிருந்து பாதுகாப்பதற்காகவே இங்கு கொண்டு வந்தோம்…” என்று கூறினர் அதன்பின்னர் வேறு வழியின்றி மாணவர்களை விடுவித்தனர்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தை இழிவுபடுத்துவதும், போராடும் மாணவர்களை மிரட்டுவதுமே RSS – BJP யின் செயல்பாடாக உள்ளது. அதிலும் ஆர்.எஸ்.எஸ். -கும்பல் புராண குப்பைகளை அறிவியல் என்று கூறி மக்கள் தலையில்  கட்டும் பித்தலாட்டத்தை பு.மா.இ.மு தோழர்கள் அம்பலப்படுத்துவது ஆர்.எஸ்.எஸ்.-க்கு மிளகாய் கடித்தமாதிரி எரிகிறது. அதனால்தான் சவுண்டுவிட்டுப் பார்த்து அங்கிருந்து துரத்தப்பட்டதும், “இஞ்சி தின்ற குரங்காக” வெறியேறி போலீசை நாடியுள்ளது. போலீசும் தனது ‘கடமையை’ செய்து தாங்கள் யாருக்காக வேலை செய்கிறோம் எனக் காட்டிவிட்டது.

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாகவும், ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராகவும் அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களும் ஒன்று சேர வேண்டியதன் அவசியத்தை இந்த நிகழ்வானது நம் அனைவருக்கும் காட்டிவிட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி,
திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.

நான்கு ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் : வரும் ஆனா வராது !

4 ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள்: உண்மை நிலை என்ன?

தாங்கள் ஆட்சிக்கு வரும் வரை இந்தியாவில் 7 எய்ம்ஸ் மருத்துவ மனைகள்தான் இருந்ததாகவும் 2014-ல் ஆட்சிக்கு வந்து 48 மாதங்களில் 13 அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனைகளை உருவாக்க ஒப்புதல் அளித்திருப்பதாகவும் மத்திய அரசு சொல்கிறது.

இந்த 13 மருத்துவமனைகளின் நிலை என்ன என்பது குறித்து இந்தியா டுடே இதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல்களைப் பெற்று, இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது (21 ஜூன் 2018-ல் இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது).

1. ஒப்புதல் அளிக்கப்பட்ட 13 மருத்துவமனைகளில் ஜம்மு, காஷ்மீர், பிஹார், தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் வரவிருக்கும் 5 மருத்துவமனைகளுக்கு இதுவரை எந்தப் பணமும் ஒதுக்கப்படவில்லை.

2. ஜம்மு, காஷ்மீர், பிஹார், தமிழ்நாடு, குஜராத்தில் வரவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் எப்போது துவங்கப்படும் என்பதற்கு எவ்வித கால வரையரையும் வகுக்கப்படவில்லை.

3. 2020 மார்ச்சில் துவங்கப்படவிருப்பதாகக் கூறப்படும் உத்தரப்பிரதேச எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான பணத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூரில் அமையவிருக்கும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மொத்தச் செலவு 1,011 கோடி. ஆனால், இதுவரை 98.34 கோடி மட்டுமே நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆக, இந்த மருத்துவமனை அடுத்த ஆண்டு துவங்கப்படாது.

This slideshow requires JavaScript.

5. ஆந்திர மாநிலத்தில் 1,618 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது. இதுவரை 233.88 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 2020 அக்டோபரில் இயங்கவேண்டிய மருத்துவமனை இது.

6. மேற்குவங்கத்தின் கல்யாணியில் கட்டப்படும் மருத்துவமனையின் திட்டச் செலவு 1,754 கோடி ரூபாய். இதுவரை 278.42 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 2020 அக்டோபரில் துவங்கப்பட வேண்டிய மருத்துவமனை இது.

7. மகாராஷ்டிராவின் நாக்பூரிலும் 2020 அக்டோபரில் மருத்துவமனை துவங்கப்பட வேண்டும். ஆனால், திட்டச் செலவு 1,577 கோடியில் 231.29 கோடியே விடுவிக்கப்பட்டுள்ளது.

8. அசாமின் காமரூப் மாவட்டத்தில் அமையவிருக்கும் இந்த மருத்துவமனையின் திட்டச் செலவு 1,123 கோடி ரூபாய். இதுவரை 5 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

9. பஞ்சாபின் பதிந்தாவில் கட்டப்படும் எய்ம்ஸின் திட்டச் செலவு 925 கோடி ரூபாய். 2020 ஜூனில் துவங்க வேண்டிய மருத்துவமனைக்கு இதுவரை 36.57 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.

10. ஜம்முவின் விஜய்பூரிலும் காஷ்மிரின் அவந்திபுராவிலும் எய்ம்ஸிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆனால், 90.84 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.

11. இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் 1,350 கோடியில் மருத்துவமனையைச் செயல்படுத்தத் திட்டம். 2017 அக்டோபர் 3ஆம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால், இதுவரை ஒரு பசை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

படிக்க:
என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ
பாஜகவிற்கு நன்கொடை அளிக்கும் மர்ம முதலாளிகள் யார் ?

12. பிஹாரில் எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க 2015-16 நிதி அறிக்கையில் உத்தேசிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. இடமோ, நிதியோ முடிவுசெய்யப்படவில்லை.

13. தமிழ்நாட்டின் தோப்பூரில் இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எப்போது துவங்குமென்ற அறிவிப்பும் இல்லை.

14. ஜார்க்கண்டின் தேவ்கடில் எய்ம்ஸ் துவங்கப்படுமென அறிவிப்பு. திட்டச் செலவு 1103 கோடி ரூபாய். 9 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 2021ல் மருத்துவமனை செயல்படுமாம்.

இந்தியா டுடே கட்டுரை : Reality check: Modi government fails to keep its promise of 13 more AIIMS

நன்றி: முகநூலில் Muralidharan Kasi Viswanathan

#GoBackModi காவிக் கம்பளம் விரிக்க இது மதுரா இல்ல மதுர | கேலிச்சித்திரங்கள்

காவிக் கம்பளம் விரிக்க இது மதுரா இல்ல மதுர !

கருத்துப்படம்: வேலன்

♠ ♠ ♠ 

தெக்கே தலைய வக்காதேள்னு சொன்னா கேக்குறேளா?
இப்போ நன்னா வாங்கிக் கட்டிகின்னு வந்திருக்கேள்…!

கருத்துப்படம்: வேலன்


இதையும் பாருங்க:

♦ நாடு முன்னேத்தமுண்ணு மோடி முழங்குறாரு-கோவன் பாடல் MP3

♦ GST… GST… போலோ பாரத்…மாதாகி ஜெ…! ம.க.இ.க  பாடல் !

♦ இது போராட்டக்காலம் ! புரட்சி வெற்றி கொள்ளும் !! ம.க.இ.க பாடல்

இதோ இவள்தான் பாவெல் விலாசவின் தாய் !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 56

மாக்சிம் கார்க்கி

நீதி மன்றத்தைவிட்டு அவள் வெளியே வந்தாள். அதற்குள் பொழுது இருண்டு போய்விட்டதைக் கண்டு அவள் அதிசயப்பட்டாள். தெருமூலைகளில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வானத்தில் நட்சத்திரங்கள் மின்னிச் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. நீதி மன்றத்துக்கு வெளியே கும்பல் கும்பலாக ஜனங்கள் கூடி நின்றார்கள். அந்தக் குளிர்ந்த காற்றில் வெண்பனி சரசரத்தது. இளமை நிறைந்த குரல்கள் ஒலித்தன. சாம்பல் நிற நிலையங்கி தரித்த ஒரு மனிதன் சிஸோவின் முகத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டு அவசர அவசரமாகக் கேட்டான்:

”என்ன தண்டனை?”

“தேசாந்திர சிட்சை”

“எல்லோருக்குமா?”

”ஆம்.”

அந்த மனிதன் போய்விட்டான்.

”பார்த்தாயா?” என்றான் சிஸோவ், “அவர்களுக்கும் இதில் ஆர்வம்.”

சிறிது நேரத்தில் பல யுவதிகளும் இளைஞர்களும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகக் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். அவர்களது பரபரப்பு, சுற்றுச் சூழ நின்ற மற்ற மனிதர்களைக் கவர்ந்திழுக்க தாயும் சிஸோவும் நின்றார்கள். தண்டனையைப் பற்றியும், கைதிகள் எப்படியெப்படி நடந்துகொண்டார்கள் என்பதைப் பற்றியும், யார் யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதைப் பற்றியும் அந்த வாலிபர்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களது கேள்விகளிலெல்லாம் ஒரு ஆர்வம் நிறைந்த குறுகுறுப்பு நிறைந்திருந்தது. அந்த நேர்மையையும் ஆர்வத்தையும் கண்டு அவர்களது ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.

கார்க்கியின் தாய்

“இதோ இவள்தான் பாவெல் விலாசவின் தாய்” என்று யாரோ சொன்னார்கள்; உடனே எல்லோரும் அமைதியானார்கள்.

“நான் உங்கள் கையைப் பிடித்துக் குலுக்கலாமா?”

யாரோ ஒருவனின் பலத்த கை தாயின் விரல்களைப் பற்றிப் பிடித்துக் குலுக்கியது. யாரோ ஒருவனின் உத்வேகமான குரல் ஒலித்தது.

“உங்கள் மகன் எங்கள் அனைவருக்கும் தைரியம் ஊட்டும் சிறந்த உதாரணமாய் விளங்குவான்…”

“ருஷ்யத் தொழிலாளர்கள் நீடூழி வாழ்க” என்று ஒரு உரத்த குரல் ஒலித்தது.

அந்தக் கோஷக்குரல்கள் பற்பலவாகி, இங்குமங்கும் எங்கும் ஒலிக்கத் தொடங்கின. ஜனங்கள் நாலாதிசைகளிலுமிருந்து ஓடிவந்து தாயையும் சிஸோவையும் சூழ்ந்துகொண்டார்கள். போலீஸ்காரர்களின் விசில் சப்தங்கள் கீச்சிட்டு அலறின. எனினும் அந்தச் கீச்சுக் குரலால் இந்தக் கோஷ வெள்ளத்தை அமுங்கடிக்க முடியவில்லை. சிஸோவ் சிரித்தான். தாய்க்கு இதெல்லாம் ஒரு ஆனந்தமயமான கனவு போலிருந்தது. அவள் புன்னகை செய்தவாறே தலை குனிந்தாள். ஜனங்களோடு கை குலுக்கினாள். ஆனந்த பரவசத்தால் எழுந்த கண்ணீரால் அவளது தொண்டையும் அடைபட்டுத் திணறியது. அவளது கால்கள் களைப்பினால் உழன்று தடுமாறின. எனினும் அவள் இதயத்தில் ஏதோ ஒரு பிரகாசமான ஏரியின் பிரதிபலிப்பைப் போல் எண்ணங்கள் பொழிந்து வழிந்தன.

அவளருகிலே நின்றுகொண்டிருந்த யாரோ ஒருவன் தெளிவாக உணர்ச்சிவசப்பட்டு நடுநடுங்கும் குரலில் பேசத் தொடங்கினான்.

“தோழர்களே! ருஷ்ய மக்களைக் கொன்று குலைத்துத் தின்று தீர்க்கும் ராட்சச மிருகம் இன்று மீண்டும் தனது பேராசை நிறைந்த பற்களைத் திறந்து மூடியது.”

”அம்மா நாம் போகலாமே” என்றான் சிஸோவ்.

இந்தச் சமயத்தில் சாஷா அங்கு வந்து சேர்ந்தாள். அவள் வந்தவுடன் தாயின் கரத்தைப் பற்றிப் பிடித்து அவளைத் தெருவின் அடுத்த பக்கமாக அழைத்துக்கொண்டு போனாள்.

படிக்க:
♦ எங்களுக்கு நீதி வழங்கும்படி உங்களுக்கு மக்கள் உரிமை வழங்கியிருக்கிறார்களா ?
♦ நரிக்கு நாட்டாண்மை கொடுத்துவிட்டால் காட்டில் வெறும் இறகுகள்தான் மிஞ்சும், பறவைகள் மிஞ்சாது

”அவர்கள் ஏதாவது கலாட்டா செய்வதற்கு முன், அல்லது யாரையேனும் கைது செய்யத் தொடங்குமுன் வந்து விடுங்கள்” என்றாள் அவள். “சரி, தேசாந்திர சிட்சையா? சைபீரியாவுக்கா?”

“ஆமாம். ஆமாம்.”

“அவன் எப்படிப் பேசினான்? ஆனால் எனக்குத் தெரியும். அவன்தான் அவர்கள் அனைவரிலும் எளிமை நிறைந்தவன். எல்லோரைக் காட்டிலும் உறுதி வாய்ந்தவன். ஆனால் அவன் ரொம்பக் கண்டிப்பான பேர்வழிதான்; இயற்கையில் அவன் நுண்ணிய உணர்ச்சியுள்ளவன், மென்மையானவன். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள வெட்கப்படுகிறான். அவளது காதல் வார்த்தைகள் ஆர்வங்கலந்து உணர்ச்சி வேகத்தோடு வந்தன. எனவே அந்த வார்த்தைகள் தாயின் மனத்துக்கு அமைதியைத் தந்தன; புதிய பலத்தைத் தந்தன.

”நீங்கள் அவனோடு போய் எப்போது சேரப்போகிறீர்கள்?” என்று சாஷாவின் கரத்தை அன்போடு பற்றிக்கொண்டு கேட்டாள் தாய்.

“என் வேலையை யாராவது ஏற்றுக்கொண்டவுடனேயே!” என்று தன்னம்பிக்கையோடு முன்னோக்கிப் பார்த்தவாறே கூறினாள் சாஷா, “நானும் ஒரு தண்டனையை எதிர்நோக்கித்தான் இருக்கிறேன். அனேகமாக, அவர்கள் என்னையும் சைபீரியாவுக்குத்தான் அனுப்புவார்கள். அப்படிச் செய்தால், அவனை அனுப்பிய இடத்துக்கே என்னையும் அனுப்பும்படி நான் கேட்டுக்கொள்வேன்.”

“அப்படி நீங்கள் போனால், என் அன்பை அவனிடம் போய்ச் சொல்லுங்கள்” என்று சிஸோவின் குரல் இடையில் ஒலித்தது, சிஸோவிடமிருந்து வருவதாக மட்டும் சொல்லுங்கள். அதுபோதும். அவனுக்கு என்னைத் தெரியும். பியோதர் மாசினின் மாமன் என்று தெரியும். சாஷா திரும்பினாள். தன் கரத்தை நீட்டினாள்.

“எனக்கு பியோதரைத் தெரியும். என் பெயர் சாஷா”

“உங்கள் தந்தைவழிப் பெயர்?”

அவள் அவனைப் பார்த்தாள். பதில் சொன்னாள்.

“எனக்குத் தந்தை கிடையாது.”

“செத்துப் போனாரா?”

“இல்லை. சாகவில்லை.” அவளது குரலில் ஏதோ ஒரு அழுத்தமும் உறுதியும் குடிபுகுந்தன; அது அவள் முகத்திலேயே பிரதிபலித்தது. “அவர் ஒரு நிலப்பிரபு. இப்போது ஜில்லா அதிகாரி: அவர் விவசாயிகளைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்.”

“ஹும்” என்று முனகினான் சிஸோவ். அதற்குப் பின் நிலவிய அமைதியில் அவன் அவள் பக்கமாக நடந்து சென்றான். அவள் பக்கமாக அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டான்.

“சரி, அம்மா. நான் வருகிறேன்” என்று கூறினான் அவன்; “நான் இடது பக்கமாகத் திரும்புகிறேன். பெண்ணே! போய் வருகிறேன். அப்பாவிடம் கடுமையாயிருக்கிறீர்கள். இல்லையா? ஆமாம். அது உங்கள் விஷயம்…”

”உங்கள் மகன் நல்லவனாக இல்லாமலிருந்தால், ஜனங்களைக் கொடுமை செய்தால் நீங்கள் அவனைப் புறக்கணித்துவிட்டால் நீங்களும் அப்படித்தான் சொல்வீர்கள். இல்லையா?” என்று உணர்ச்சியோடு சொன்னாள் சாஷா.

“ஆமாம். ஒருவேளை” என்று ஒரு கணம் கழித்துச் சொன்னான் சிஸோவ்.

“அதாவது மகனைவிட நீதிதான் உங்களுக்கு அருமை வாய்ந்தது என்று அர்த்தம், இல்லையா? அதுபோலத்தான் எனக்கும், தர்மம்தான் என் தந்தையைவிட அருமையாயிருக்கிறது…”

சிஸோவ் புன்னகை செய்தான். தலையை ஆட்டிக்கொண்டான்.

”சரி. நீங்கள் ஒரு புத்திசாலிப் பெண். நீங்கள் மட்டும் இதைக்கொண்டு செலுத்தினால், கிழவர்களைச் சமாளித்துவிடுவீர்கள். உங்களுக்கு அழுத்தம் அதிகம். உங்களுக்கு எல்லா நன்மையும் உண்டாகட்டும். ஜனங்களிடம் இன்னும் கொஞ்சம் அன்பாயிருக்கப் பாருங்களேன்! நீலவ்னா, நான் வருகிறேன். பாவெலை நீ பார்த்தால், நான் அவன் பேச்சைக் கேட்டதாக அவனிடம் சொல். அந்தப் பேச்சு பூராவும் புரியவில்லை. சமயத்தில் ஓரளவு பயங்கரமாய்க்கூட இருந்தது. ஆனால் பொதுவாக, அவன் சொன்னதுதான் ரொம்ப சரி.”

அவன் தன் தொப்பியை எடுத்து வணங்கிவிட்டு, தெரு மூலையைக் கடந்து திரும்பினான்.

”இவன் ஒரு நல்ல ஆசாமிதான் போலிருக்கிறது” என்று தன் பெரிய கண்களில் களிப்புக் குமிழிட அவனைப் பார்த்துக்கொண்டே கூறினாள் சாஷா.

இன்று அந்தப் பெண்ணின் முகத்தில் இதுவரையில் இல்லாத மென்மையும் அருமையும் குடியேறியிருப்பதாகத் தாய்க்குத் தோன்றியது.

வீட்டுக்கு வந்தவுடன் அவர்கள் இருவரும் ஒருவர் பக்கம் ஒருவராக ஒரு சோபாவின் மீது நெருங்கி உட்கார்ந்து, அமைதியில் ஓய்வு கொண்டிருந்த தாய் பாவெலிடம் சாஷா சொல்லப்போகும் பயணத்தைப் பற்றி மீண்டும் பேசத் தொடங்கினாள். சாஷா தன் புருவங்களை உயர்த்திக் கனவு காணும் அகன்ற கண்களோடு எங்கோ தொலைவில் ஏறிட்டுப் பார்த்தாள். அவளது வெளுத்த முகத்தில் ஏதோ ஒரு அமைதியான சிந்தனையின் சாயை படர்ந்து பிரதிபலித்தது.

“உங்களுக்குக் குழந்தைகள் பிறந்தவுடன் நான் வருவேன். வந்து அந்தக் குழந்தைகளுக்கு செவிலித்தாயாக இருப்பேன். இங்கிருப்பதைவிட, நமது வாழ்க்கை அங்கு ஒன்றும் அவ்வளவு மோசமாக இருந்துவிடப் போவதில்லை. பாவெலுக்கும் வேலை வெட்டி கிடைப்பதில் சிரமமிருக்காது. திறமையுள்ள அவனால் எந்த வேலையையும் செய்ய முடியும்.”

சாஷா தாயையே கூர்ந்து நோக்கினாள்.

“நீங்கள் அவனை இப்போது பின் தொடர்ந்து செல்ல விரும்பவில்லையா?’ என்று கேட்டாள்.

”இப்போது என்னால் அவனுக்கு என்ன ஆகப்போகிறது?” என்று பெருமூச்சோடு சொன்னாள் தாய். “அவன் தப்பிவர எண்ணினால் நான் அவனுக்கு ஒரு தொல்லையாயிருப்பேன். அவனோடு நானும் போவதற்கு அவன் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டான்.”

சாஷா தலையை ஆட்டினாள்.

”நீங்கள் சொல்வது சரிதான். அவன் சம்மதிக்கத்தான் மாட்டான்.”

”மேலும் எனக்கு இங்கு என் வேலையே சரியாயிருக்கிறது” என்று பெருமையோடு சொல்லிக்கொண்டாள் தாய்.

”ஆமாம். அதுவும் நல்லதுதான்” என்றாள் சாஷா.

திடீரென அவள் எதையோ விட்டெறியப்போவது போல் துள்ளியெழுந்தாள்; எளிமையோடும் அமைதியோடும் பேசத் தொடங்கினாள்.

“அவள் ஒன்றும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கமாட்டான். எப்படியும் அவன் ஓடிவந்துவிடுவான்……”

”அப்படியானால் நீங்கள் என்ன செய்வீர்கள்? குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையின் கதி?”

“அதெல்லாம் சமயம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அவன் என்னை ஒன்றும் பொருட்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. அவனது போக்குக்கு இடையூறாக நான் என்றுமே இருக்கமாட்டேன். அவனைப் பிரிந்திருப்பது எனக்குச் சிரமம்தான். இருந்தாலும் நான் சமாளித்துக் கொள்வேன். அவன் வழியிலே நான் நிற்கவே மாட்டேன்.”

சாஷா சொன்னபடியே செய்வாள் என்பதைத் தாய் உணர்ந்துகொண்டாள். அந்தப் பெண்ணுக்காக அனுதாபப்பட்டாள்.

”உங்களுக்கு ரொம்பச் சிரமமாயிருக்குமே. கண்ணு!” என்று அவளைத் தழுவிக்கொண்டே சொன்னாள் தாய்.

சாஷா மிருதுவாகச் சிரித்தாள்; தாயின் பக்கமாக நெருங்கிக் கொண்டாள்.

இந்தச் சமயத்தில் களைப்போடும் ஆயாசத்தோடும் நிகலாய் இவானவிச் உள்ளே வந்தான். தனது உடுப்புக்களை அவசரமாகக் கழற்றிக்கொண்டே அவன் பேசினான்.

“சாஷா! சந்தர்ப்பம் இருக்கிறபோதே நீங்கள் வெளியே தப்பிப் போய்விடுவது நல்லது. இன்று காலை முதல் இரண்டு உளவாளிகள் என்னைப் பின்தொடர்ந்தே திரிகிறார்கள். என்னைக் கைது செய்யத்தான் இப்படி வருகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. நான் நினைத்தது என்றும் தவறியதில்லை. ஏதோ நடந்து போயிருக்கிறது. இதற்குள், இதோ பாவெலின் பேச்சு இருக்கிறது. இதை அச்சிட்டு வழங்குவதெனத் தீர்மானித்து விட்டோம். இதை லுத்மீலாவிடம் கொண்டு போங்கள். இதை வெகு சீக்கிரம் அச்சடித்து முடிக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள். பாவெல் மிகவும் அருமையாகப் பேசினான். நீலவ்னா..! போகிறபோது அந்த உளவாளிகளையும் ஒரு கண் பார்த்துக் கொள்ளுங்கள். சாஷா!….”

அவன் பேசிக்கொண்டே குளிர்ந்து விறைத்த தன் கரங்களைத் தேய்த்து விட்டுக்கொண்டான். மேஜையருகே சென்று டிராயரைத் திறந்து ஏதேதோ காகிதங்களை வெளியே எடுத்தான். சிலவற்றைக் கிழித்தெறிந்தான். சிலவற்றை ஒருபக்கமாக ஒதுக்கி வைத்தான். அவன் மிகவும் கவலைப்பட்டுக் களைத்து போனவனாகத் தோன்றினான்.

”நான் இந்த டிராயர்களைச் சுத்தம் செய்து அப்படியொன்றும் நாட்களாகிவிடவில்லை. இந்தப் புதிய தாள்களையெல்லாம் எப்படி இங்கு வந்தன என்பது சைத்தானுக்குத்தான் தெரியும். சரி, நீலவ்னா, நீங்கள் இன்றிரவு இங்குத் தங்காமல் வேறெங்காவது போயிருப்பதே நல்லது. என்ன சொல்கிறீர்கள். இங்கே நடக்கப்போகும் களேபரத்தைக் காண உங்களுக்குச் சகிக்காது. மேலும் அவர்கள் உங்களையும் கொண்டு போய்விடக்கூடும். பாவெலின் பேச்சுப் பிரதியை ஊர் ஊராய் விநியோகிப்பதற்கு நீங்கள் அவசியம் தேவை.”

”அவர்கள் என்னை என்ன செய்யப்போகிறார்கள்?”

நிகலாய் தன் கண்களுக்கு முன்னால் கையை உயர்த்தி வீசிக்கொண்டே உறுதியோடு சொன்னான்.

”இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் மோப்பம் பிடித்து உணர எனக்குத் தெரியும். நீங்கள் லுத்மீலாவுக்கும் பேருதவியாய் இருக்க முடியும். நாம் சந்தர்ப்பங்களை இழக்காதிருப்பதே நல்லது…”

தன் மகனது பேச்சை அச்சடிப்பதில் தானும் உதவ முடியும் என்ற எண்ணம் தாய்க்கு மனமகிழ்ச்சியைக் கொடுத்தது.

“அப்படியானால் நான் இதோ போகிறேன்” என்றாள்.

அவள் அத்துடன் வியப்புணர்ச்சி மேலிடப் பேசினாள்.

”நான் எதைக் கண்டும் இனிமேல் பயப்படவே போவதில்லை. எல்லாம் ஆண்டவன் அருள்”

”சபாஷ்!” என்று அவளைப் பார்க்காமலேயே கூறினான் நிகலாய். “சரி, என் டிரங்குப் பெட்டியும் துண்டும் எங்கிருக்கின்றன என்பதைக் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்களோ எல்லாவற்றையும் சூறையாடி விட்டீர்கள்! எனவே என் சொந்தச் சாமான்களைக் கண்டுபிடிப்பதுகூட எனக்குச் சிரமமாய்ப் போய்விட்டது.”

சாஷா ஒன்றுமே பேசாமல் கிழித்துப் போட்ட காகிதங்களை அடுப்பில் போட்டு எரித்துச் சாம்பலாக்கி, அந்தச் சாம்பலைக் கரியோடு சேர்த்து நிரவிக் கொண்டிருந்தாள்.

“போவதற்கு நேரமாகிவிட்டது. சாஷா” என்று தன் கையை நீட்டிக்கொண்டே சொன்னான் நிகலாய். “போய்வாருங்கள். ஏதாவது சுவாரசியமான புத்தகங்கள் அகப்பட்டால் எனக்கு அனுப்பி வைக்க மறந்துவிடாதீர்கள். போய் வாருங்கள். அருமைத் தோழியே, போய் வருக! ஜாக்கிரதை…”

”உங்களுக்கு என்ன நெடுங்காலச் சிறைவாசம் கிட்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டாள் சாஷா.

”யாருக்குத் தெரியும்? ஒருவேளை அப்படியே நேரலாம். எனக்கு எதிரான சாட்சியங்கள் பல அவர்களிடம் இருக்கின்றன. நீலவ்னா.

நீங்களும் இவளுடனேயே போகலாமே. இரண்டு பேரையும் ஒரே சமயத்தில் பின் தொடர்வதென்பது அவர்களுக்குச் சிரமம். இதனால் இப்போதே போவது நல்லது.”

“சரி.” என்றாள் தாய். “இதோ நான் உடுப்பு மாற்றிக் கொள்கிறேன்.”

அவள் நிகலாயையே கவனத்தோடு பார்த்தாள். ஆனால் அவனது அன்பும் ஆதரவும் நிறைந்த முகத்தில் ஏதோ ஒரு ஆத்திரம் பதைபதைப்புத்தான் லேசாகத் திரையிட்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனிடம் எந்தக் கலவரக் கலக்க உணர்ச்சியும் காணோம். மற்றவர்களையெல்லாம் விட, தனக்கு மிகவும் அருமையானவனாய்ப் போய்விட்ட அவனிடம் எந்தவித உத்வேகப் பரபரப்புக் குறிகளும் காணப்படவில்லை. அவன் எப்போதும் யாரிடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் பழகி வந்தான். எல்லோரிடமும் அன்போடும் நிதான புத்தியோடும், ஒட்டாமலும்தான் பழகி வந்தான். மற்றவர்களது வாழ்க்கைக்கெல்லாம் மேலானதாக விளங்கும் எதோ ஒரு அந்தரங்க வாழ்க்கையை அவன் தனக்குத்தானே வாழ்ந்து வந்தான். இன்றும் அவன் அப்படியேதான் இருந்தான்.

மற்றவர்களிடம் அவன் பழகுவதைவிட, தாயிடமே அவன் மிகவும் ஒட்டுறவோடு நெருங்கிப் பழகினான் என்பதும் தாய்க்குத் தெரியும். அவனை அவள் நேசித்தாள். தன்னைத்தானே நம்ப முடியாத ஒரு பாசத்தால் அவனை நேசித்தாள். இப்போதும் அவள் அவனுக்காகக் கொண்ட அனுதாப உணர்ச்சியை அவளால் தாங்க முடியவில்லை. ஆனால் அவள் அதை வெளிக் காட்டிக்கொள்ளவும் துணியவில்லை. வெளிக்காட்டிக்கொண்டால் அவன் ஒருவேளை கலக்கமுற்று குழம்பக்கூடும் என அஞ்சினாள். அப்படி அவன் குழம்பினால், அவன் வழக்கம் போலச் சற்று வேடிக்கையானவனாகத் தெரியக்கூடும் என்று அவளுக்குத் தோன்றிது. அவனை அந்தக் கோலத்தில் பார்க்க அவள் விரும்பவில்லை.

அவள் மீண்டும் அறைக்குள் நுழைந்தாள். நுழைந்தபோது நிகலாய் சாஷாவின் கையைப் பற்றிப் பிடித்தவாறு பேசிக்கொண்டிருந்தான்.

”அபாரம்! அவனுக்கும் உங்களுக்கும் அது ஒரு நல்ல காரியம்தான் என்பது எனக்கு நிச்சயம். தனி நபரின் ஒரு சிறு சொந்தச் சுகத்தால், யாருக்கும் எந்தக் கெடுதலும் விளையப் போவதில்லை. தயாராகி விட்டீர்களா நீலவ்னா?”

அவன் அவளருகே வந்தான். புன்னகை புரிந்தவாறே தன் மூக்குக் கண்ணாடியைச் சரியாக்கிக் கொண்டான்.

”நல்லது போய் வாருங்கள். மூன்று அல்லது நாலு மாசம், மிஞ்சிப் போனால் ஆறு மாசம். அதற்கு மேல் போகாது என நம்புகிறேன். ஆறு மாதங்கள் வாழ்க்கையில் அது ஒரு பெரும் பகுதிதான் சரி. ஜாக்கிரதையாக இருங்கள். சரி, கடைசி முறையாக நாம் தழுவிக் கொள்வோம்.

ஒல்லியாய் மெலிந்த தனது உறுதி வாய்ந்த கரங்களை அவள்மீது இங்கிதத்தோடு மெதுவாகப் போட்டு அவளது கண்களையே பார்த்தான் அவன்.

“உங்கள் மீது நான் காதல் கொண்டுவிட்டேன் போலிருக்கிறது” என்று கூறிச் சிரித்தான். அதனால்தான் இப்படித் தழுவுகின்றேன்……”

அவள் அவனது நெற்றியையும் கன்னங்களையும் ஒன்றும் பேசாது முத்தமிட்டாள். ஆனால் அவளது கைகள் மட்டும் நடுநடுங்கின. அவன் அதைக் கண்டுவிடக் கூடாது என்பதற்காக அவள் கைகளைச் சட்டென்று விலக்கிக்கொண்டாள்.

”நாளைக்கு ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். காலையிலே ஒரு சிறுவனை அனுப்புங்கள். அந்த மாதிரி சிறுவன் லுதமீலாவிடம் இருக்கிறான். அவன் நான் இருக்கிறேனா போய்விட்டேனா என்று பார்த்துவிட்டு வந்து சொல்வான். சரி, போய் வாருங்கள். தோழர்களே எல்லாம் நல்லபடியாக நடக்கும்.”

அவர்கள் வீட்டை விட்டு வெளியேறித் தெருவுக்குள் வந்ததும் சாஷா அமைதியோடு கூறினாள்.

”அவன் சாகப் போவதென்றாலும் கூட, இப்படித்தான். இதே அவசரத்தோடுதான் நடந்து கொள்வான். அவனை மரணமே எதிர்நோக்கி வரும்போது கூட அவன் தன் கண்ணாடியைச் சரி செய்து பார்த்துக்கொண்டே ‘அபாரம்’ என்று கூறிக்கொண்டே சாகத் துணிவான்.”

“நான் அவனை நேசிக்கிறேன்” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.

”நான் அவனை நேசிக்கவில்லை. ஆனால் அவனைக் கண்டு வியக்கிறேன். அவனைப் பிரமாதமாக மதிக்கிறேன். அவன் சில சமயங்களில் அன்போடும் ஆதரவோடும் இருக்கத்தான் செய்கிறான். இருந்தாலும் அவனிடம் ஏதோ ஒரு வறட்சி காணப்படுகிறது. அவன் போதுமான அளவுக்கு மனிதத் தன்மை பெற்றவனாக இல்லை…. சரி. நம்மைப் பின்தொடர்ந்து ஆட்கள் வருவதாகத் தெரிகிறது. நாம் இருவரும் ஆளுக்கொரு திசையாகப் பிரிந்து போவதே மேல். யாராவது பின்தொடர்வதாகத் தெரிந்தால், லுத்மீலாவின் இருப்பிடத்துக்குப் போகாதீர்கள்.”

”போவேனா?” என்று அதை ஆமோதித்தாள் தாய். சாஷாவோ தான் கூறியதையே மீண்டும் அழுத்திக் கூறினாள்.

“போகவே போகாதீர்கள். என் இடத்துக்கு வந்துவிடுங்கள். சரி. நாம் தற்போதைக்குப் பிரிந்துவிடலாம்.”

அவள் விருட்டெனத் திரும்பி வந்தவழியே நடக்க ஆரம்பித்தாள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

மொழிப் போர் தியாகிகள் நினைவை உயர்த்திப் பிடிப்போம் – பு.மா.இ.மு !

0

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொழிப்போர் தியாகிகளின் 54-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

*****

சிதம்பரம்

மொழி போர் தியாகிகளின் 54-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சிதம்பரம் அண்ணமலை பல்கலைக் கழகத்தில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி  சார்பாக மொழிப்போர் தியாகி மாணவர் ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்தி – சமஸ்கிருதம் மொழியை திணித்து, பல்வேறு மொழி, இன கலாச்சாரத்தை அழித்து இந்து-இந்தி-இந்தியா எனும் அகண்ட பாரதத்தை திணிக்கும் மோடி அரசை கண்டித்தும், நாடு முழுவதும் பரவிவரும் பார்ப்பன பாசிசத்தை வேரறுக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்வில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சிதம்பரம்.

*****

கடலூர்
னவரி 25 மோழிபோர் தியாகிகளின் 54-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடலூர், பெரியார் கலைக் கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் பேராசிரியர், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம், தொடர்புக்கு – 97888 08110.

*****

பென்னாகரம்

ஜனவரி-25 மொழிப்போர் தியாகிகள் தினம் !

“மொழி உரிமை, சமூகநீதி ஜனநாயகம் காக்க! பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த ஒன்றுப்படுவோம்!” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக  25.10.2019 அன்று பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தெருமுனைக் கூட்டம் நடைப்பெற்றது.

இந்த தெருமுனை கூட்டத்தில் தருமபுரி மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துகுமார் மொழி போர் தியாகிகளை நினைவு கூறினார்.

பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு மொழி காப்பது நமது கடமை என்பதை விளக்கினார். இறுதியாக பு.மா.இ.மு. தோழர் பாலன் நன்றியுரை ஆற்றினார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தர்மபுரி.

என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ

7

டந்த ஜனவரி 19 மற்றும் 20-ம் தேதிகளில் சென்னை லயோலா கல்லூரியும், மாற்று ஊடக மையமும் இணைந்து ”வீதி விருது வழங்கும் விழா” ஒன்றை நடத்தியது. விழாவின் ஒரு பகுதியாக ஓவியர் முகிலனின் ஓவியக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகவும், இதற்காக லயோலா கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கிகள் பல பெயர்களின் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து தோழர் முகிலனின் அந்த ஓவியங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இதுவரை அந்த ஓவியங்களை பார்க்காதவர்களும், அறிந்தவர்களும் முகிலனை ஆதரித்தனர். மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். – பாஜக தரப்பு நபர்கள் முகிலனுக்கு மிரட்டல் விடுத்ததோடு அந்த ஓவியங்கள் இந்து மதத்தை – பெண்களை இழிவுபடுத்துவதாக அவதூறு பிரச்சாரத்தையும், வன்மத்தையும் கட்டவிழ்த்து விட்டனர்.

உண்மையில் அந்த கண்காட்சியில் கார்ப்பரேட் சுரண்டல், மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் உள்ளிட்டு 34 ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. மோடியை விமர்சிக்க கூடாது என்பதையே பெண்கள் மீதான அவதூறு என சங்கிகள் திசைதிருப்பினர்.

இது தொடர்பாக பத்திரிகையாளர் மு.வி.நந்தினி, ஓவியர் முகிலனை நேர்காணல் செய்தார். தனது பின்னணி, தனது சமூக அரசியல் பார்வை விரிந்த வரலாறு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தான் வரைந்த வலி நிறைந்த ஓவியங்கள், அரசியல் போராட்டங்களில் கலைஞனின் பங்கு என விரிந்த அளவில் முகிலன் உணர்ச்சிகரமாக பேசுகிறார். தனது ஓவியங்களில் இருக்கும் ‘மூர்க்கம்’ ஏன் என்பதையும் விளக்குகிறார். சிறுபான்மை மக்கள், தலித் மக்கள், உழைக்கும் மக்கள் மீது நடக்கும் மூர்க்கமான தாக்குதலை மென்மையாக எப்படி வரைய முடியும், சாதாரண மக்களிடம் இருக்கும் திரிசூலத்தை இந்துத்துவம் எப்படி அரசியல் ஆயுதமாக பயன்படுத்திகிறது என்பதையும் விளக்குகிறார். தொடர்ந்து தனது தூரிகை மக்களுக்கான ஓவியங்களை படைப்பாகத் தரும் என்கிறார். இந்துத்துவ வெறியர்களின் மிரட்டலுக்கு பணியமாட்டேன் என்றும் உறுதிபடக் கூறுகிறார்.

#LoyolaControversy #LoyolaCollege  #Loyolaart #BJPFails

முழுமையான நேர்காணலை பாருங்கள், பகிருங்கள்!!

 

நேர்காணல்:

ஜாக்டோ ஜியோ போராட்டம் | போலீசு அடக்குமுறைதான் தீர்வா? | மக்கள் அதிகாரம்

மக்கள் எதற்காகப் போராடினாலும் போலீசு அடக்குமுறைதான்  தீர்வா? விடக்கூடாது ! அரசின் அநீதிக்கு எதிரான ஜாக்டோ ஜியோ போராட்டம் வெல்லட்டும் !
அனைவரும் ஆதரிப்போம்!”

ஜாக்டோ ஜியோ போராட்டத்தை அடக்கி ஒடுக்கி போராடுபவர்களை அச்சுறுத்தும் விதமாக மாவட்டந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகளை தனிமைப்படுத்தி கைது செய்து சிறையலடைப்பதை, மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

ஜாக்டோ – ஜியோ போராட்டம்

தனியார் பள்ளியில் 15 ஆயிரம் கொடுத்து கசக்கி பிழிவதை எதிர்த்து போராடாமல், அரசு ஊழியர்களை அவ்வாறு வேலை செய்யச் சொல்வது சரியல்ல. அரசு ஊழியர்கள் அநியாயமாக அதிக சம்பளம் கேட்கிறார்கள் என பொய் பிரச்சாரம் செய்து மக்களிடம் எதிர் கருத்தை உருவாக்க முயற்சிக்கும், எடப்பாடி அரசின் சதித்தனத்தை முறியடிக்க வேண்டும். மக்கள் எதற்காக போராடினாலும் போலீசு அடக்குமுறைதான் தீர்வு என்பதுதான் எடப்பாடி அரசின் அணுகுமுறை. கோரிக்கையின் நியாயத்தை பற்றி பேச எடப்பாடி மாஃபியா கும்பலுக்கு எந்த அருகதையும் இல்லை.

கடந்த சட்ட மன்றத் தேர்தலில் “புரட்சித்தலைவி அம்மா” கொடுத்த வாக்குறுதியை, தமிழக அரசு தற்போது உயர் நீதிமன்றத்தில் நிறைவேற்றுகிறோம் என ஒத்துக்கொண்ட கோரிக்கைகளை  சொன்னபடி நிறைவேற்று என அரசு ஊழியர்கள் கேட்கிறார்கள். போராடுபவர்களை அழைத்து பேசாமல் அவர்களை நயவஞ்சகமாக ஏமாற்றி ஒடுக்க முயல்கிறது எடப்பாடி அரசு.

படிக்க:
♦ அ.தி.மு.க அரசுக்கு அஞ்சாமல் போராடும் போக்குவரத்து தொழிலாளிகள் – நேரடி ரிப்போர்ட்
♦ செவிலியர்களின் போராட்ட உரிமையைப் பறித்த நீதிமன்ற பயங்கரவாதம் !

பல லட்சம் அரசு ஊழியர்களின் போராட்டத்தை எளிதாக அடக்கி ஒடுக்க முயலும் எடப்பாடி அரசுதான் எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து போராடும் மக்களை ஒடுக்கி வருகிறது. இத்தகைய அரசு ஒடுக்குமுறை என்ற பொது எதிரிக்கு எதிராக ஜாக்டோ ஜியோ ஊழியர்களின் போராட்டத்தை அனைவரும் ஆதரித்து பங்கேற்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகளை மூடுவது, அங்கன்வாடிகளை மூடுவது, காலி பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, அத்துக்கூலிக்கு கொத்தடிமைகளாக ஆள் சேர்ப்பது, ஓய்வூதிய பணத்தை கொள்ளையடிப்பது போன்ற அனைத்தையும் எதிர்த்துப் போராடுவது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் மட்டுமல்ல. அனைத்து மக்களுக்குமான போராட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

தொடரும்  ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் அரசு நிறுவனங்கள், அரசு பள்ளிகள் ஸ்தம்பித்து போய் உள்ளது. மக்கள் பாதிக்கப்படுவதற்கு எடப்பாடி அரசின் ஆணவம்தான் காரணம். போராடும் ஊழியர்கள் காரணமல்ல. கோரிக்கையை பற்றி போராடுபவர்களை அழைத்து பேசி பரிசீலிப்பதுதான் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்கும். குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் செய்தால் போக்குவரத்து தடைபட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குற்றவாளி யார் ? குடி நீர் கொடுக்க தவறிய அதிகாரிகளா? பாதிக்கப்பட்டு வெயிலில் போராடும் மக்களா?

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளப் பணத்தை பிடித்து ஓய்வூதிய பலன்களை தராமல் சுமார் பல ஆயிரம் கோடி களவாடி விட்டார்கள். எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை அநியாயமாக விவசாயிகளிடமிருந்து பறிக்கிறார்கள். டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தி பாலைவனமாக்க துடிக்கிறார்கள். 13 பேரை சுட்டு கொலை செய்துவிட்டு ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி செய்கிறார்கள். மேலும் பேச்சுரிமை கருத்து சுதந்திரம் அனைத்தையும் பறிக்கிறார்கள். இவ்வாறு மோடி அரசின் கூலிப்படையாக செயல்படும் எடப்பாடி அரசு. ஜாக்டோ ஜியோ ஊழியர்களின் போராட்டத்தின் மீது நடத்திவரும் அடக்குமுறைகளை அனைவரும் எதிர்த்துப் போராட வேண்டும்.

வழக்கறிஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
26-1-2019

ஊறுகாய் அப்பள அரங்குகள் + சினிமா செட்டிங்குகளோடு நடந்த சென்னை உலக முதலீட்டாளர் மாநாடு !

டப்பாடி, பாஜக புகழ் பாடும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் 23-24 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டின் மூலம் உலக அளவில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு தொழிற்துறை வளர்ச்சியடையும் என்று தமிழக அரசும், ஊடகங்களும் சொல்கின்றன.

ஏற்கனவே 2015-ல் ஜெயலலிதா முதன் முதலாக இதே போன்றதொரு மாநாட்டினை நடத்தினார். அதில் 2.42 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு ஈர்க்கப்பட்டதாக கூறினார்கள். ஆனால் அந்த முதலீடு எங்கு, எதில் போடப்பட்டது… அதன் மூலம் அடைந்த வளர்ச்சி – வேலைவாய்ப்பு என்ன என்பதெல்லாம் தேவ ரகசியம்.

தொழிற்துறை அமைச்சர் சம்பத் வாழ்த்திய இந்த பேனர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல இடங்களில் முதுகு சொறிந்து கொண்டிருந்தது.

அந்த தேவ ரகசியத்தின் பின்னே உள்ளபடியே ஒன்றுமில்லை. தற்போது நடைபெற்ற இந்த மாநாட்டினை தொடங்கி வைத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “இந்த மாநாட்டின் மூலம் நிர்ணயித்த இலக்கினை விட கூடுதலாக முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டமான 2023” வளர்ச்சியை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருப்பதாக கூறினார். பாஜக-வின் அடிமை அரசாக நீடிக்கும் எடப்பாடி ஓபிஎஸ் அரசின் ஆட்சியில் ஊழல்களின் பட்டியல்தான் வெகுவேகமாக வளர்ச்சியடைவதை பார்க்கிறோம்.

அதேமாநாட்டில் தொழில்நிறுவனங்களின் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.  அதற்கு பெயர் “டிஜிட்டல் கண்காட்சியாம்”. அந்த அரங்கத்திற்குள் நுழைந்து பார்த்தால் இது உலக முதலீட்டாளர்கள் மாநாடா? இல்லை ஊறுகாய் விற்பவர்களின் சந்தையா? என்று சாலமன் பாப்பையா தலைமையில் பட்டி மன்றமே நடத்தலாம்.

கண்காட்சி என்றால் சும்மாவா….. டில்லி அப்பளம் கோன் ஐஸ், கரும்பு ஜூஸ் இதையே மாற்றி டிஜிட்டலில் உலக முதலீட்டாளர்கள் கண்காட்சியின் கண்கொள்ளா காட்சி.  கவின்ஸ், ஆவின், பிரிட்டானியா. சக்தி மசாலா, ஆச்சி மசலா, ஜி.பி.ஆர் என்று இப்படி மணக்க,ருசிக்க முதலீடு தமிழ்நாட்டில் பாயுமாம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த ஊறுகாய் முதலாளிகளை சந்திக்கத்தான் கடந்த ஆறு மாதங்களாக அரசு செலவில் வெளிநாடுகளில் உல்லாச பயணங்கள் சென்றிருக்கிறார்கள் அமைச்சர்கள். மாநாட்டை கோடிக்கணக்கில் செலவு செய்து சிறப்பாக ஏற்பாடு செய்திருப்பதாக பெருமைப்படுகின்றன தமிழக ஊடகங்கள். உண்மையில் இந்தப் பெருமை விளம்பர வருவாய் என்ற நலனுக்காக அளிக்கப்பட்ட எழுத்து மொய்.

இந்த மாநாட்டிற்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாரமனும், து.குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் சிறப்பு விருந்தினர்களாம்..! ஜெயலலிதா இறந்து போன நேரத்தில் இருந்து குத்துக்கல்லாக அரசியல் நகர்வுகளை இயக்கியவர் வெங்கையா நாயுடு. அந்த இயக்கம் இந்த மாநாட்டிலும் நீடிக்கிறது. நிர்மலா சீதாராமன் “வானூர்திக் கொள்கை”யை வெளியிட்டார். தமிழகத்தில் இத்துறை தொழில் மண்டலத்தை ஆரம்பிக்கிறார்களாம். சரி போகட்டும் அந்த வானூர்திக் கொள்கையில் ரஃபேல் விமான ஊழல் மாதிரிகள் உண்டா என்று தெரியவில்லை.

கொரியா, சிங்கப்பூர் என்று சில நாடுகளில் இருந்தும், அதிலும் சென்னையில் இருக்கும் வெளிநாட்டு தூதர்களே நிறைந்திருக்க, இந்த ‘முதலீட்டாளர்களை’ மகிழ்விக்க பல கோரி ரூபாயில் ஏற்பாட்டுச் செலவுகள். வெண்தோல் விருந்தினர்களை மகிழ்விக்க ஆட்டம்….பாட்டம்… கொண்டாட்டம் என நடந்து முடிந்திருக்கிறது இந்த மாநாடு. இறுதியாக இந்த மாநாட்டின் மூலம் 3.431 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளாதாகவும், பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் அறிவித்திருக்கிறார்கள். இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் மோசடி என்பது ஊரறிந்த உண்மை. ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் தமது தொழிலில் போட்டுள்ள சிறு எண்ணிக்கையிலான முதலீடு கூட இந்த பட்டியலில் இருப்பது ஒரு சோறு பதம்.

இந்த அறிவிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “முதல் உலக மாநாட்டிற்கு பிறகு நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79 சதவீதம் மட்டுமே. அதிமுக ஆட்சியின் வரலாறு காணாத “கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்” ஆகியவற்றால் நம்பிக்கையிழந்த முதலீட்டாளர்கள் வேறு மாநிலத்திற்குச் சென்று விட்டார்கள்” எனவும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு அரசின் செலவில் நடத்தப்பட்ட அதிமுகவின் தேர்தல் பிரச்சார மாநாடு எனவும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாக சொல்வதெல்லாம் வரைமுறையின்றி அளந்து விட்டிருக்க்கிறார்கள். இது “2019-ம் ஆண்டிற்கான” முதல் பொய் வாக்குறுதி என்றும்  தெரிவித்திருக்கிறார். இந்த பொய் வாக்குறுதி அரசாங்கத்தை தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பது இந்த அரசமைப்பின் தரத்தைக் காட்டுகிறது.

எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ வாழ்த்தி பிளக்ஸ் பேனர்கள், ஏராளமான போலீசு அதிகாரிகள், காவலர்கள், துப்புறவு தொழிலாளிகள், சமையற் கலைஞர்கள், வாகன ஓட்டுநர்கள் இவர்கள்தான் மாநாட்டின் ஜனத்தொகையில் 95% இருந்தனர். போலீசு அதிகாரிகள் அன்று சுத்தமான அல்லது புதிதாக தைக்கப்பட்ட சீருடையை அணிந்திருந்தார்கள். துப்புறவு தொழிலாளிகளின் ஃப்ளோரசண்ட் ஜாக்கட் புதிதாக இருந்தது. போலீசு அதிகாரிகள் அனைவரும் எந்த பதட்டமுமின்றி சாப்பிட்டுக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் இருந்தார்கள். வேலை என ஒன்று இருந்தால் அல்லவா பதட்டம் இருக்கும்.

மொத்தத்தில் மக்கள் பணம் கோடிக்கணக்கில் விரயமானதுதான் இந்த மாநாடு கண்ட பலன்.

அன்று மட்டும் கத்திப்பாரா பாலம் சுத்தபத்தமாக விளங்கியதோடு வராத முதலீடுகளுக்காக விளம்பரங்களையும் தாங்கியிருந்தது.

எடப்பாடி ஒப்பற்ற முதல்வராம், ஓபிஎஸ் ஈடில்லா துணை முதல்வராம் – துதிபாடுதலின் ஆக கடைத்தரமான கவிதை!

திரும்பிய பக்கமெல்லாம் மொபைல் டாய்லட்டுகள், தண்ணீர் டாங்குகள் – என்ன பலன்?

நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் – அலங்கார வண்டி விளம்பரம்! எம்ஜிஆரின் நூற்றாண்டுக்கும் ஜப்பான் முதலீட்டாளருக்கும் என்ன தொடர்பு?

சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி… கல்விக் கடன், விவசாய குறுங்கடன் வாங்கியவர்களை கிரிமினலாக்கி தற்கொலைக்கு தூண்டும் வங்கிகள்… பன்னாட்டு முதலாளிகளுக்காக காத்திருக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நாமிருப்பது சென்னையா, இலண்டனா என சினிமா செட்டிங்கில் போட்டி போடும் அலங்கார வாயில்கள், சர்வதே நாடுகளின் கொடிகள், பில்டப்புகள்!

அதானி…! மோடிக்கு எஜமான்….. எடப்பாடிக்கு முதலீட்டாளர்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மத்திய மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் அரங்குகள் – உலக முதலீட்டாளர்களை அசத்தும் அரிய அரங்குகள்!

நடைபாதை வைத்தியர் பாணியில் சர்வரோக நிவாரண கடை விரிப்பு….

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குண்டும் குழியுமான சாலையில் இந்த வாகனங்களை யார் ஓட்ட முடியும்? குளோபல் இன்வெஸ்டர் மாநாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் யாருக்காக ?

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

முதலீட்டாளர் மாநாட்டில் நாம் என்ன செய்வது எனப் குழப்பமடைந்து காஃபி கடைகளில் குழுமி இருக்கும் கூட்டம்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அருகாமை பொறியியல் கல்லூரிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மாணவ தொண்டர்கள் மற்றும் நுனி நாக்கு ஆங்கிலப் பேசும் இதர ‘தொண்டர்கள்’

நூல் நெசவு கண்காட்சி: கோவை ஜவுளித் துறையின் நலிவை மறைத்து விட்டு இங்கு வெட்டி பந்தா காட்டுவதில் என்ன பயன்?

ட்ரோன் டாக்ஸி….ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்க பயன்பட்ட ட்ரோன் காமராவின் வளர்ச்சி – ரஃபேல் புகழ் பாஜகவின் வானியல் துறை வளர்ச்சி!

ஐந்து நட்சத்திர விடுதி கொண்டாட்ட ஏற்பாட்டை பின்னால் இருந்து நிறைவேற்றிய உழைக்கும் மக்கள்… நிகழ்ச்சியின் முதுகெலும்பு…! இன்று மட்டும் புதிய சீருடை!

உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?

உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?

“மற்ற பிரச்சினைகளெல்லாம் காத்திருக்கலாம். ஆனால், விவசாயம் காத்திருக்க முடியாது” என நாடு ’சுதந்திரமடைந்த’ சமயத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினாராம். ஆனால், எழுபத்தொரு ஆண்டுகள் கடந்த பிறகும்கூட விவசாயிகள் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது என்பதை நாடெங்கும் அவர்கள் நடத்திவரும் போராட்டங்களே எடுத்துக் காட்டுகின்றன.

விவசாயிகள் ஆட்சியாளர்களிடம் சொர்க்கத்தையெல்லாம் கோரவில்லை. தங்களின் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை சந்தையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துமாறுதான் கோருகிறார்கள்.

இப்பிரச்சினையோடு தொடர்புடைய வேறொரு விடயத்துக்கு வருவோம். ஜார்கண்டு மாநிலத்தில் செயல்பட்டு வரும் உணவு உரிமைக்கான இயக்கம், அம்மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்குள்ளாகவே 17 பழங்குடியினர் பட்டினியால் இறந்துபோயிருப்பதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தப் பழங்குடியினர் இறந்து போனதற்குக் – பட்டினிபோட்டுக் கொல்லப்பட்டதற்கு என்றுகூடச் சொல்லலாம் – காரணம், உணவுப் பொருட்களை வாங்க முடியாத

ஏழ்மை.

ரேஷன் அட்டைகளோடு ஆதார் இணைக்கப்பட்ட பிறகு, ஜார்கண்டு மாநிலத்தில் ரேஷன் பொருள் விநியோகத்தில் நேரடிப் பணப்பட்டுவாடா முறை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகுதான் இவர்கள் இறந்துபோனார்கள்.
இப்பட்டினிச் சாவுகளைத் தடுக்க நேரடிப் பணப்பட்டுவாடா முறையைக் கைவிட்டு, அனைவருக்கும் மானிய விலையில் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் முறைமையை மீண்டும் அமலுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கோரி வருகிறது, உணவு உரிமைக்கான இயக்கம்.

படிக்க:
♦ ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!
♦ கார்ப்பரேட் உணவு நிறுவனங்களின் அமெரிக்கத் தரம் எப்படி ?

விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை என்ற விவசாயிகளின் கோரிக்கையும் அனைவருக்கும் உணவு மானியம் என்ற அடித்தட்டு மக்களின் கோரிக்கையும் தனித்தனியான தீவுகளல்ல. விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை கிடைக்க வேண்டும் என்றால், நெல், கோதுமை, பயறு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை உற்பத்திச் செலவுக்கு ஏற்ப இலாபம் தரக்கூடிய வகையில் உயர்த்தி அளிக்க வேண்டும். அவ்விலை சந்தையில் கிடைப்பதற்கு ஏற்ப அரசு தனது கொள்முதல் கொள்கையை, நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்.

அனைவருக்கும் பொது விநியோக முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், அரிசி, கோதுமை, பாமாயில் மட்டுமின்றி, மற்றைய முக்கிய உணவுப் பொருட்களையும் ரேஷனில் விநியோகிக்கும் வண்ணம் கொள்முதலையும் விநியோக முறைகளையும் மாற்றியமைக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளுக்கு மோடி அரசின் எதிர்வினை என்ன என்பதைப் பார்க்கும் முன், மோடி அரசின் எஜமானர்களான ஏகாதிபத்திய முதலீட்டாளர்களும், பன்னாட்டு ஏகபோகத் தொழில் நிறுவனங்களும் இந்திய அரசு விவசாயத்திற்கும் ரேஷன் விநியோகத்திற்கும் அளித்துவரும் மானியங்கள் குறித்துக் கருதுவதைப் பார்த்துவிடலாம்.

கடந்த மே மாதத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக வர்த்தகக் கழகத்திடம் இந்திய அரசுக்கு எதிரான மனுவொன்றை அளித்திருக்கிறது. அதில், இந்திய அரசு 2011-12 முதல் 2013-14 முடியவுள்ள நிதியாண்டுகளில், நெல்லுக்கும் கோதுமைக்கும் அதிக மானியம் அளித்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பதாகவும், இது உலக வர்த்தகக் கழகத்தின் விதிகளுக்கு எதிரானதென்றும் குற்றஞ்சுமத்தியிருப்பதோடு, இப்படி அதிக மானியம் அளித்துவருவதைக் கைவிடாவிட்டால் இந்தியா மீது வழக்குத் தொடுப்போம் என்றும் எச்சரித்திருக்கிறது.

உலக வர்த்தகக் கழகத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் விவசாயம் தொடர்பான ஒப்பந்தம் (Agreement on Agriculture) உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் விவசாய விளைபொருட்களுக்கு எவ்வளவு மானியம் அளிக்க வேண்டும் என வரையறுக்கிறது. இதன்படி, விவசாயத்திற்கு அளிக்கப்படும் மானியங்கள் மூன்று பிரிவுகளாகப் (நீலம், பச்சை, பழுப்பு மஞ்சள் – Blue box, Green box, Amber box ) பிரிக்கப்பட்டு, அவற்றுள் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் மானியத்திற்கு (பழுப்பு மஞ்சள்) கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஏகாதிபத்திய – முதலாளித்துவ நாடுகள் 1986-88-ம் ஆண்டுகளில் உற்பத்தி செய்த விளைபொருட்களின் மொத்த மதிப்பில் 5 சதவீதம் வரையிலும், இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் அதே ஆண்டில் உற்பத்தி செய்த விளைபொருட்களின் மதிப்பில் 10 சதவீதம் வரையிலும் மானியம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

2010-11-ம் ஆண்டு தொடங்கி 2013-14-ம் ஆண்டு முடியவுள்ள நிதியாண்டுகளில் இந்திய விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் குறித்து உ.வ.க.விற்கு அறிக்கை அளித்துள்ள இந்திய அரசு, அவ்வாண்டுகளில் அரிசிக்கு முறையே 7.22%, 7.44%, 7.68%, 5.45%; கோதுமைக்கு -0.73%, 0.48%, -2.5%, -3.53% என்ற அளவில், 10 சதவீதத்திற்குள்ளாகத்தான் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

இப்புள்ளிவிவரப்படி 2010-11, 2012-13, 2013-14-ம் ஆண்டுகளில் இந்திய அரசு கோதுமைக்கு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை, அதற்கு முந்தைய ஆண்டுகளைவிடக் குறைவானதாகும்.

ஆனால், அமெரிக்க அரசோ, உ.வ.க.விற்கு அளிக்கப்பட்டிருக்கும் விவரங்கள் தவறென்றும், இந்திய அரசு அக்குறிப்பிட்ட ஆண்டுகளில் அரிசிக்கு முறையே 74%, 80.1%, 84.2%, 76.9% என்ற அளவிலும், கோதுமைக்கு முறையே 60.1%, 60.9%, 68.5%, 65.3% என்ற அளவிலும் சந்தை ஆதார விலை அளித்திருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறது.

மலைக்கும் மடுவுக்குமான இவ்வேறுபாடு எப்படிச் சாத்தியமானதென்றால், அமெரிக்க அரசு உ.வ.க.வின் விவசாய மானிய விதிகளைத் தனது கெடுமதி நோக்கத்திற்கேற்ப வளைத்து, இந்திய அரசு விவசாயிகளுக்கு அளித்திருக்கும் நேரடி மானியம் 10 சதவீதத்திற்கு அதிகமானது என மோசடியானதொரு கணக்கை அளித்திருக்கிறது.

அமெரிக்காவின் மோசடிக் கணக்கு

2013-14-ம் ஆண்டில் இந்திய அரசு கோதுமைக்கு நிர்ணயித்திருந்த குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) 1,386 ரூபாய். 1986-88-ம் ஆண்டுகளில் கோதுமையின் சர்வதேச சந்தைவிலை சராசரியாக 354 ரூபாய்.

2013-14-ம் ஆண்டின் கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலைக்கும், 1986-88-ம் ஆண்டுகளில் இருந்த கோதுமையின் சர்வதேச விலைக்கும் இடையிலான வித்தியாசம் சராசரியாக 1,032 ரூபாய் எனக் கணக்கிட்டு, ஒரு குவிண்டால் கோதுமைக்கு 1,032 ரூபாய் நேரடி மானியம் அளிக்கப்பட்டிருப்பதாக வாதிடுகிறது, அமெரிக்கா. இதுபோல, அதே ஆண்டில் அரிசிக்கு அளிக்கப்பட்ட மானியம் 1,019 ரூபாய் எனக் குறிப்பிடுகிறது.

இந்திய அரசு தனது விவசாயிகளுக்கு அளவுக்கு அதிகமாக மானியம் அளிப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த அமெரிக்க அரசு இரண்டு மோசடிகளை நடத்தியிருக்கிறது. 2010 முதல் 2014 வரை நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையை, 1986-88-ம் ஆண்டுகளில் இருந்த சர்வதேச விலையோடு ஒப்பிடுவதே முட்டாள்தனமானது. அப்படியே அச்சர்வதேச விலையை எடுத்துக்கொள்வதென்றால், அவ்விலை 2010-2014 கால பணவீக்கத்தின்படி எவ்வளவு உயர்ந்திருக்கும் எனக் கணக்கிட வேண்டும்.

குறிப்பாக, அமெரிக்க டாலரோடு இந்திய ரூபாயை ஒப்பிட்டால், இந்த ஆண்டுகளில் இந்திய ரூபாய் கிட்டத்தட்ட நான்கு மடங்குக்கு மேல் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், அமெரிக்கவோ, 1986-88-ம் ஆண்டுகளில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு (அன்றைய மதிப்பு ரூ.12.50) எவ்வளவு இருந்ததோ, அதுவே 2010 தொடங்கி 2014 வரை இருந்தது போல எடுத்துக்கொண்டு, அவ்வாண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையையும் 1986-88-ம் ஆண்டின் சர்வதேச விலையையும் ஒப்பிடுகிறது.

எடுத்துக்காட்டாக, 2013-14-ம் ஆண்டில் ஒரு குவிண்டால் அரிசிக்குத் தரப்பட்ட சராசரி குறைந்தபட்ச ஆதார விலை இந்திய ரூபாயில் சராசரியாக ரூ.1,348. 1986-88-ம் ஒரு குவிண்டால் அரிசிக்குக் கிடைத்த சர்வதேச சந்தை விலை 26.3 அமெரிக்க டாலர்கள். இதனை 2013-14-ம் ஆண்டில் இருந்த பரிமாற்ற மதிப்பின்படி (ஒரு அமெரிக்க டாலரின் அன்றைய மதிப்பு ரூ.60.50) இந்திய ரூபாய்க்கு மாற்றினால், சர்வதேச சந்தை விலை ரூ.1,592. இவையிரண்டுக்குமான வித்தியாசம் ரூ.244 தான்.

ஆனால், அமெரிக்க அரசோ 1986-88-ம் ஆண்டுகளில் இருந்த சர்வதேச சந்தை விலையை 2013-14-ம் ஆண்டுகளில் இருந்த பரிமாற்ற மதிப்பின்படி (ரூ.60.50) மாற்றாமல், 1986-88-ம் ஆண்டுகளில் இருந்த பரிமாற்ற மதிப்புதான் (ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.12.50) 2013-14-லும் இருப்பதைப் போல அனுமானித்துக்கொண்டு, இந்திய ரூபாய்க்கு மாற்றி (ரூ.329/-), இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு 1,019/- என வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறது.

இரண்டாவது மோசடி என்னவென்றால், இந்திய அரசு பரிசீலனைக்குரிய ஆண்டுகளில் விளைந்த மொத்த நெல்லையும், கோதுமையையும் குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து வாங்கியிருப்பதாகக் கூறி, அதன் அடிப்படையில் பரிசீலனைக்குரிய ஆண்டுகளில் எவ்வளவு அதிகமாக மானியம் அளிக்கப்பட்டிருக்கிறது என்ற மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரத்தை உ.வ.க.விடம் அளித்திருக்கிறது.

படிக்க:
♦ வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?
♦ சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?

இந்திய அரசு எந்தவொரு ஆண்டிலும் விளைச்சல் முழுவதையும் கொள்முதல் செய்வது கிடையாது. அப்படிச் செய்வதாகக் கூறுவது அடுக்கமாட்டாத பொய். விளைச்சலில் பாதியளவைகூட இந்திய அரசு கொள்முதல் செய்வதில்லை என்பதே உண்மை.

எடுத்துக்காட்டாக, 2013-14-ம் ஆண்டுகளில் மொத்த நெல் உற்பத்தி 10.66 கோடி டன். அந்த ஆண்டில் இந்திய உணவுக் கழகம் 3.4 கோடி டன் அளவிற்குத்தான் கொள்முதல் செய்தது. இதுபோல 2017-18-ம் ஆண்டில் 9.71 கோடி டன் கோதுமை விளைந்ததில், 3.2 கோடி டன் கோதுமை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் தமது விளைபொருட்களுக்கு அளித்துவரும் மானியத்தைப் படிப்படியாகக் குறைத்து முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் கடந்த நான்கு ஆண்டுகளாகவே நெருக்கடி கொடுத்து வருகின்றன. அதன் தொடர்ச்சிதான் இந்தியா மீது அமெரிக்கா கொடுத்திருக்கும் புகார்.

ஏகாதிபத்தியங்களின் நயவஞ்சகம்

நேரடி விவசாய மானியத்தைக் குறைக்குமாறு இந்தியாவிற்குக் கட்டளையிடுவதற்கு அமெரிக்க உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு நியாய உரிமையும் கிடையாது, தார்மீக உரிமையும் கிடையாது. ஏனென்றால், இந்த நாடுகள் பல இலட்சம் கோடி ரூபாய் மானியங்களைப் பல்வேறு பெயர்களில் அந்நாட்டு விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன.

ஒரு குறிப்பிட்ட பயிரின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கில்கூட அமெரிக்க உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளில் விவசாய மானியம் வழங்கப்படுகிறது. உ.வ.க.வில் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் மானியங்களில், பச்சைப் பெட்டியின் கீழ் வரும் மானியங்களைக் குறைக்கத் தேவையில்லை எனக் கொடுக்கப்பட்டிருக்கும் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு இத்தகைய மானியங்களை ஏகாதிபத்திய நாடுகள் வாரிவழங்கிவருகின்றன. வர்த்தகத்தைப் பாதிக்காத மானியங்கள் என்ற முகாந்திரத்தின் கீழ் இந்த வகை விவசாய மானியங்களை நியாயப்படுத்தியும் வருகின்றன.

எடுத்துக்காட்டாக, அமெரிக்க அரசு 2000-ம் ஆண்டில் தனது விவசாயிகளுக்கு வழங்கிய நேரடி மானியம் (பழுப்பு மஞ்சள் மானியம்) 1,684.30 கோடி அமெரிக்க டாலர்கள். இதனை 2010-ம் ஆண்டில் 411.9 கோடி அமெரிக்க டாலர்களாகக் குறைத்துவிட்டாலும், பச்சைப் பெட்டியின் கீழ் வரும் மானியங்களை விண்ணைமுட்டும் அளவிற்கு அதிகரித்திருக்கிறது. அம்மானியம் 2000-ம் ஆண்டில் 9,700 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது, 2010-ம் ஆண்டில் 24,200 கோடி அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.

2015-ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒவ்வொரு விவசாயிக்கும் அந்நாட்டு அரசு அளித்திருக்கும் மொத்த மானியம் 7,860 அமெரிக்க டாலர்கள். ஒரு பிரிட்டிஷ் விவசாயி பெறும் மானியம் 28,300 பவுண்டுகள், ஜப்பானிய விவசாயி பெறுவது 14,136 அமெரிக்க டாலர்கள். இந்தியாவிலோ, நேரடி மற்றும் மறைமுக மானியங்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு விவசாயி பெறுவது 417 அமெரிக்க டாலர்கள்தான்.

உத்சா பட்நாயக்

மேற்குலக ஏகாதிபத்திய-முதலாளித்துவ நாடுகளின் தேசிய உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு நான்கு சதவீதத்திற்கும் குறைவானது. ஐந்து சதவீதத்திற்கும் குறைவான மக்கட்தொகையினர்தான் விவசாயத்தில் நேரடியாக ஈடுபடுகின்றனர். அமெரிக்காவிலோ இந்த சதவீதம் மற்ற மேற்குலக நாடுகளைவிடக் குறைவு. இதனால், அந்நாடுகளுக்குத் தமது மொத்த விவசாய உற்பத்தியின் மதிப்பில் ஏறத்தாழ 50 சதவீதத்தை மானியமாக வழங்குவது எளிதாக உள்ளது. அந்நாடுகளின் மொத்த உற்பத்தி மதிப்போடு ஒப்பிடும்போது விவசாய மானியங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை 2 சதவீதத்திற்கும் குறைவானது. வருடாந்திர பட்ஜெட் செலவில் இம்மானியங்களின் பங்கு 8 சதவீதத்திற்கும் குறைவு” எனச் சுட்டிக்காட்டுகிறார், மார்க்சியப் பொருளாதார வல்லுநரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பொருளாதாரப் பேராசிரியருமான உத்சா பட்நாயக்.

விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியத்தை எந்த ஆண்டை அடிப்படையாகக் கொண்டு குறைப்பது, எவ்வளவு குறைப்பது, எந்த மானியத்தைக் குறைப்பது, எதனை அதிகரிப்பது என உ.வ.க.வில் உருவாக்கப்பட்டிருக்கும் விதிகள் அனைத்துமே ஏகாதிபத்திய நாடுகளின் நலனை முன்னிறுத்தியும், அவர்களின் ஆலோசனைகளின்படிதான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் வகுத்து வைத்திருக்கும் விதிகளுக்கு ஏற்ப இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளை ஆடச் சொல்லுகின்றன.

சுதந்திர வர்த்தகமா, சுருக்குக் கயிறா?

குறைந்தபட்ச ஆதார விலை, உணவு மானியம், ரேஷன் விநியோகம், தனியார் கொள்முதல் மற்றும் ஏற்றுமதி -இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் ஆகிய இவையனைத்தும் சுதந்திரமான வர்த்தகத்துக்குத் தடை போடுவதாக ஏகாதிபத்திய நாடுகள் குற்றஞ்சுமத்துகின்றன.

இவற்றை ஒவ்வொன்றாக, படிப்படியாக ஒழித்துக்கட்டுவதன் மூலம் இந்திய உணவுச் சந்தையை பன்னாட்டு ஏகபோக உணவுக் கழகங்களும், அவர்களது அடிவருடிகளான இந்தியத் தரகு முதலாளிகளும் கவ்விக்கொள்ளத் திட்டமிடுகின்றனர்.

இவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு அமெரிக்கா உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியா மீது புகார் கொடுக்கிறது. அதனது உள்நாட்டு அடிவருடிகளோ உணவுப் பொருட்களைக் குறைந்த விலையில் ரேஷனில் விநியோகிப்பது மக்களைச் சோம்பேறிகளாக்குகிறது எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள்.

உணவுப் பயிர்களைப் பயிரிட்டு ஏன் கடனாளியாகிறீர்கள், ஏற்றுமதிக்கான பணப் பயிர்களைப் பயிரிடுங்கள் என விவசாயிகளுக்கு உபதேசிக்கிறார்கள். இந்திய அரசோ, ஒருபுறம் மானியங்களை வெட்டுகிறது, இன்னொருபுறம் ஆதார் இணைப்பு, நேரடி பணப் பட்டுவாடா என்ற போர்வையில் அரசு கொள்முதல், ரேஷன் கடைகளை ஒழித்துக்கட்டத் திட்டமிடுகிறது.

உணவுப் பயிர்களுக்குப் பதிலாக ஏற்றுமதிக்கான பணப் பயிர்களைப் பயிரிட ஊக்குவிப்பதன் மூலம் ஏகாதிபத்திய நாடுகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்திவிடத் திட்டமிடுகின்றன. ஒன்று, உணவுப் பொருட்களுக்குத் தம்மை அண்டிப் பிழைக்குமாறு இந்தியாவை மாற்றுவது. மற்றொன்று, தமக்குத் தேவையான பயிர்களைப் பயிரிடுவதற்கு ஏற்ப இந்திய விவசாயத்தை மாற்றியமைப்பது.

”சோவியத் யூனியனின் சிதைவும், மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களின் உணவுப் பொருள் நுகர்வு 1990-களுக்குப் பின் குறைந்து போனதும் பன்னாட்டு ஏகபோக உணவுக் கழகங்களைப் புதிய சந்தையைப் பிடித்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளின. இந்த நோக்கில்தான் உலக வர்த்தகக் கழகம் உருவாக்கப்பட்டவுடனேயே, அதில் ஏகபோக நிறுவனங்களுக்குச் சாதகமான விவசாய ஒப்பந்தம் திணிக்கப்பட்டது” எனக் கூறுகிறார், உத்சா பட்நாயக்.

மேலும், “வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைவிட, மேற்குலக நாடுகளில்தான் விவசாய உற்பத்தி அதிக அளவில் நடந்துவருவதைப் போலச் சித்தரிக்கப்பட்டு வருவது ஒரு மாயத் தோற்றம். தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மூலம் மேற்குலக நாடுகள் தமது விவசாய உற்பத்தித் திறனைப் பல மடங்கு அதிகரித்திருக்கலாம்.

ஆனால், அந்நாடுகளில் நிலவும் பருவ நிலை காரணமாக, அந்நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைப் போல பலவிதமான பயிர்களைப் பயிரிடும் வாய்ப்பை இயற்கையாகவே பெற்றிருக்கவில்லை. இந்தியா போன்ற ஏழைநாடுகளின் விவசாயிகள் ஒரே ஆண்டில் இரண்டு அல்லது மூன்றுவிதமான பயிர்களைப் பயிரிடும் இயற்கை வாய்ப்புகளைப் பெற்றிருக்கும்போது, குளிர் பிரதேசங்களைச் சேர்ந்த மேற்குலக நாடுகள் ஆண்டு முழுவதும் ஒரே பயிரை மட்டுமே பயிரட முடியும்.”

இதன் காரணமாகவே, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் அவுரி உள்ளிட்ட மூலப்பொருட்களை ஆண்டு முழுவதும் பயிரிடுமாறு இந்திய விவசாயிகளைக் கட்டாயப்படுத்தினர். இப்பொழுது மூலப்பொருட்களுக்குப் பதிலாக, மேற்குலக நாடுகளைச் சேர்ந்த மேட்டுக்குடி வர்க்கம் விதவிதமாக நுகர்வதற்கு ஏற்ற உணவுப் பொருட்களை ஏழை நாடுகளில் பயிரிடச் செய்து இறக்குமதி செய்துகொள்ள விழைகின்றன.”

படிக்க:
♦ ரேசன் மானியம் இரத்து – மறுகாலனியாக்கத்தின் கோர முகம்
♦ ஆதாரில் இருக்கும் கார்ப்பரேட் கொள்ளை : ஏர்டெல் ஆதாரம் !

“இப்படியாக ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகள் மீது இரண்டு நுகத்தடிகளைச் சுமத்துகின்றன. ஒன்று, தமது நாடுகளில் அதீதமாகவும் அராஜகமாகவும் உற்பத்தி செய்து குவிக்கப்படும் தானியங்களை விற்பதற்கான சந்தையாகவும், தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கும் கேந்திரமாகவும் ஏழை நாடுகளை மாற்றியமைக்க முயலுகின்றன. இந்த அடிப்படையில்தான் விவசாயத்திற்குக் கொடுக்கப்படும் அற்பமான மானியத்தையும் கைவிடவும், ஏற்றுமதி மதிப்பு கொண்ட பயிர்களைப் பயிரிடுமாறும் ஏழை நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் நிர்பந்திக்கின்றன” என அம்பலப்படுத்துகிறார், உத்சா பட்நாயக்.

இந்திய விவசாயிகள் மத்தியில் கடன் சுமையும் தற்கொலைச் சாவுகளும் அதிகரித்து வரும் வேளையில், ஏறத்தாழ 19 கோடி இந்திய மக்கள் அரைகுறை பட்டினியில் காலந்தள்ளிவரும் வேளையில், மானியங்களைக் குறைக்குமாறு ஏகாதிபத்தியங்கள் நெருக்கடி கொடுத்துவரும் வேளையில், மோடி அரசோ விவசாய மானிய விடயத்தில் இரட்டை வேடம் போடுகிறது. உ.வ.க.வில் ஏகாதிபத்திய நெருக்கடிகளுக்கு எதிராக நிற்பது போலக் காட்டிக்கொண்டு, உள்நாட்டிலோ மானிய வெட்டைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

2011-12-ம் ஆண்டில் மின்சாரம், பாசன வசதிகள், உரம் ஆகியவற்றுக்கு 2,910 கோடி அமெரிக்க டாலர்கள் மானியமாக வழங்கப்பட்டிருந்த நிலையில், 2014-15-ம் ஆண்டில் இதனை 2,280 கோடி அமெரிக்க டாலர்களாகக் குறைத்துவிட்டது, மோடி அரசு. 2,450 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்த பச்சைப் பெட்டி மானியங்கள், 1,830 கோடி அமெரிக்க டாலர்களாகக் குறைக்கப்பட்டது. 2014-15-ம் ஆண்டில் 1.13 இலட்சம் கோடியாக இருந்த உணவு மானியம், 2015-16-ம் ஆண்டில் 1.35 இலட்சம் கோடி உயர்ந்து, 2016-17-ம் ஆண்டுகளில் 1.05 இலட்சம் கோடியாகச் சரிந்துவிட்டது.

இந்நிலையில் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திக் கொடுக்கக் கோரி நடந்துவரும் விவசாயிகளின் போராட்டங்கள்தான் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகின்றன. இப்போராட்டங்கள்தான் நகர்ப்புற ஏழைகளுக்கு மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்துக்கும்கூட உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

ரஹீம்

(சி.பி.எம். கட்சியின் அதிகாரப்பூர்வ தத்துவார்த்த இதழான மார்க்சிஸ்டு (ஆங்கிலம்) ஏப்ரல்-ஜூன் 2018 இதழில் மார்க்சியப் பொருளியல் வல்லுநரான உத்சா பட்நாயக், Destroying Public Provisioning of Food in India எனும் தலைப்பில் எழுதியிருந்த ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது.)

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart