Thursday, August 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 364

யார் இந்த அருந்ததிராய் ?

கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய எழுத்தாளர் அருந்ததிராய் குறித்து  சுருக்கமான அறிமுகம் செய்கிறார் தோழர் மருதையன்.

 

 

 

 

தொகுப்பு :


எதிர்த்து நில் மாநாட்டு உரைகள் – ஆடியோ வடிவில் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள் | ஆடியோ
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! ஆளுர் ஷாநவாஸ், தியாகு, பாலன் உரை | ஆடியோ
காவி பாசிசம் எதிர்த்து நில் ! அரிராகவன் – முகிலன் – வரதராஜன் உரை | ஆடியோ

வீழ்ந்த விமானம் – விடாத உறுதி ! உண்மை மனிதனின் கதை 2

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 2

விமானி அலெக்ஸேய் மெரேஸ்யெவ் இரட்டை “இடுக்கியில்” அகப்பட்டுக் கொண்டான். விமானச் சண்டையில் நேரக்கூடிய மிக மோசமான கேடு இது. தன்னிடம் இருந்த குண்டுகளை எல்லாம் அவன் சுட்டுத் தீர்த்திருந்தான். உண்மையாகவே ஆயுதமற்றவனாகவே இருந்தான். அத்தகைய நிலையில் நான்கு ஜெர்மன் விமானங்கள் அவனுடைய விமானத்தை நெருக்கமாகச் சூழ்ந்து கொண்டு, திரும்பவோ, செல்வழியை மாற்றவோ அவனுக்கு இடந்தராமல் தங்கள் விமான நிலையத்துக்கு இட்டுச் செல்லத் தொடங்கின….

இந்தக் கதி நேர்ந்த விதம் இதுவே; பகை விமான நிலையத்தின் மேல் திடீர் தாக்கு நடத்தப் புறப்பட்டன, “இல்” விமானங்கள். லெப்டினன்ட் மெரேஸ்யெவின் தலைமையில் சண்டை விமானங்கள் அணி அவற்றிற்குத் துணையாகப் போயிற்று. துணிகரத் திடீர்த்தாக்கு வெற்றிகரமாக நடந்தேறியது. “பறக்கும் டாங்கிகள்” என்று காலாட் படையினரால் அழைக்கப்பட்ட தாக்கு விமானங்கள் பைன் மர உச்சிகள் மீதாக அனேகமாக ஊர்ந்து சென்று, பகைவர் அறியாதபடி நேரே விமானத் திடலை அடைந்தன. அங்கு வரிசையாக நின்றன “யூன்கெர்ஸ்” ரகத்தைச் சேர்ந்த பெரிய துருப்பு விமானங்கள். ரம்ப பற்கள் போன்ற மங்கிய நீல மரவரிசைகளின் பின்னியிலிருந்து திடீரென முன்னே பாய்ந்து, துருப்பு விமானங்களின் பேருடல்களுக்கு மேலாகப் பறந்து, பீரங்கிக் குண்டுகளையும் வால்வைத்த வெடிகுண்டுகளையும் அவற்றின் மீது பொழிந்தன சோவியத் தாக்கு விமானங்கள். தனது அணியின் நான்கு போர் விமானங்களுடன் தாக்கிடத்தின் மேலிருந்த வானவெளியைக் காவல் செய்து கொண்டிருந்த மெரேஸ்யெவ் கீழே நோக்கினான். ஆட்களின் கரிய உருவங்கள் விமான நிலையத்தில் ஒடிச் சாடியதும், திமிசு போடப்பட்ட வெண்பனி மீது துருப்பு விமானங்கள் பெருங்கனத்துடன் நாற்புறமும் ஊர்ந்து செல்லத் தொடங்கியதும், தாக்கு விமானங்கள் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் பாய்ந்து குண்டுமாரி பொழிந்ததும், சுய நிதானத்துக்கு வந்த “யூன்கெர்ஸ்” விமானிகள் குண்டு தாக்குக்கு இடையே தங்கள் விமானங்களை ஓட்டப் பாதைக்குச் செலுத்தி வானில் கிளம்ப ஆரம்பித்ததும் எல்லாம் அவனுக்கு நன்றாகத் தென்பட்டன.

இப்போது தான் அலெக்ஸேய் தவறு செய்தான். தாக்கு இடத்துக்கு மேலே வானத்தைக் கண்காணிப்பதற்குப் பதிலாக அவன், விமானிகள் சொல்வது போல, அனாயாசமாகக் கிட்டிய இரையால் கவர்ந்து இழுக்கப்பட்டு விட்டான். அப்போது தான் தரையிலிருந்து கிளம்பிய, மெதுவான இயக்கம் கொண்ட கனத்த துருப்பு விமானத்தின் மீது கல்லெறி போலப் பாய்ந்து, நெளிவலிவு அலுமினியத்தாலான அதன் பல நிற நாற்கோண உடல் மீது சில நீள் வரிசைக் குண்டுகளை மனநிறைவுடன் சுட்டான். தனது இலக்குத் தப்பவில்லை என்ற நம்பிக்கை காரணமாக, பகை விமானம் தரையில் வீழ்ந்து புகுந்ததை அவன் பார்க்கக் கூட இல்லை. விமான நிலையத்தின் மறுபுறத்தில் இன்னொரு “யூன்கெர்ஸ்” விமானம் உயரே கிளம்பியது. அலெக்ஸேய் அதைத் துரத்திச் சென்றான். தாக்கினான், ஆனால் குறி தவறி விட்டது. அவனுடைய குண்டு வரிசைகள், மெதுவாக எழும்பிக் கொண்டிருந்த பகை விமானத்தின் மேலாக வழுகிச் சென்றன. அவன் விமானத்தைச் சட்டெனத் திருப்பி, மறுபடி தாக்கினான். மீண்டும் இலக்கு பிசகி விட்டது. பின்னொரு முறை தன் இரையை எட்டிப் பிடித்து, அதன் சுருட்டு வடிவான அகன்ற உடலில் விமான பீரங்கிகள் அனைத்திலுமிருந்த குண்டுகளை விமானத்தைப் பல நீண்ட வரிசைகளாகச் சுட்டுச் செலுத்தி காட்டுக்கு மேலே எங்கோ ஒரு பக்கத்தில் அதை வீழ்த்தினான். “யூன்கெர்ஸ்” விமானத்தைத் தரையில் வீழ்த்திய பின், எல்லையின்றிப் பரந்து அலை வீசிய பசிய கடல் போன்ற காட்டில் கரிய புகைப் படலம் எழுந்த இடத்துக்கு மேலே இரண்டு வெற்றி வட்டங்கள் இட்டு விட்டு, ஜெர்மன் விமான நிலையத்தை நோக்கித் தன் விமானத்தைத் திருப்ப முற்பட்டான் அலெக்ஸேய்.

ஆனால், அங்கே பறந்து செல்ல அவனுக்கு வாய்க்கவில்லை. தனது அணியின் மூன்று சண்டை விமானங்கள் ஒன்பது “மெஸ்ஸெர்” ரக விமானங்களுடன் போர் செய்து கொண்டிருக்கக் கண்டான். ஜெர்மன் விமான நிலையத் தலைமைக் காரியாலயத்தினர் தாக்கு விமானங்களை எதிர்க்கும் பொருட்டு இவற்றை அழைத்திருக்க வேண்டும். எண்ணிக்கையில் தங்களைப் போல் மூன்று மடங்கான இந்த ஜெர்மன் விமானங்கள் மீது துணிவுடன் பாய்ந்து, தாக்கு விமானங்களிலிருந்து அவற்றின் கவனத்தைத் திருப்ப சோவியத் சண்டை விமானிகள் முயன்றார்கள். காயமடைந்தது போலப் பாசாங்கு செய்து வேட்டைக்காரர்களைத் தன் குஞ்சுகளிடமிருந்து அப்பால் ஈர்த்துச் செல்லும் பெட்டைக் காடை போல், அவர்கள் சண்டையிட்டவாறே பகை விமானங்களை ஒரு புறமாக மேலும் மேலும் தொலைவில் இழுத்துச் சென்றார்கள்.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! ஆளுநர் ஷாநவாஸ், தியாகு, பாலன் உரை | ஆடியோ
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள் | ஆடியோ

எளிதில் கிடைத்த இரையினால் தான் மயங்கிவிட்டது குறித்த அலெக்ஸேய் நாணமடைந்தான். தலைகாப்புக்கு இடியில் கன்னங்கள் சிவந்து காந்துவதை உணரும் அளவுக்கு அவனுக்கு வெட்கம் உண்டாயிற்று. ஒரு பகை விமானத்தை இலக்கு கொண்டு பற்களை நெரித்தவாறு சண்டையில் பாய்ந்து கலந்து கொண்டான். அவனது தாக்குக்கு இலக்கான “மெஸ்ஸெர்” விமானம் மற்றவற்றிலிருந்து சற்று தனித்து ஒதுங்கியிருந்தது. அதுவும் தனக்கு உரிய இரையைத் தேடிக் கோண்டிருந்தது போலும். தனது விமானத்தை முழு விரைவுடன் செலுத்திப் பகைவன் மீது பக்கவாட்டிலிருந்து பாய்ந்தான் அலெக்ஸெய். ஜெர்மனியனை அவன் முற்றிலும் முறைப்படியே தாக்கினான். பகை விமானத்தின் சாம்பல் நிற உடல் இலக்குக் காட்டியின் துவாரத்தில் முழுதும் தென்பட்ட போதுதான் அவன் பீரங்கி விசையை அழுத்தினான். எனினும் பகை விமானம் நிம்மதியாக அருகே வழுகிச் சென்றது. குறி தவறியிருக்க முடியாது. இலக்கு அருகாமையில் இருந்தது, அசாதாரணத் துலக்கத்துடன் தென்பட்டது. குண்டுகள் தீர்ந்து விட்டன என்பதை அலெக்ஸேய் ஊகித்துக் கொண்டான். முதுகு குப்பென்று வியர்ப்பதை உணர்ந்தான். சரிபார்ப்பதற்காக விசையை மீண்டும் அழுத்தினான். விமானப் பீரங்கியை இயக்கும் போது விமானி தன் உடல் முழுவதாலும் உணரும் அதிரொலி அவனுக்குப் புலப்பட வில்லை. குண்டுப் பெட்டிகள் வெற்றாயிருந்தன. பகைத் துருப்பு விமானங்களை விரட்டிச் செல்கையில் அவன் தன்னிடமிருந்த குண்டுகளை எல்லாம் சுட்டுத் தீர்த்துவிட்டான்.

குண்டடிபட்ட விமான எஞ்சினின் நடுப்பாகத்தை விமானி தன் உடல், உள்ளம், அனைத்தாலும் உணர்ந்தான். இது பழுதுற்ற எஞ்சினின் மரணத் துடிப்பு அல்ல போலவும் தனது சொந்த உடலைப் பீடித்த நடுங்குக் காய்ச்சல் போலவும் அவனுக்குத் தோன்றியது.

ஆனால், பகைவனுக்குத்தான் இது தெரியாதே! ஒப்பு வலிமையைக் குறைந்த பட்சம் எண்ணிக்கையிலாவது அதிகப்படுத்தும் பொருட்டு, சண்டை அமளியில் ஆயுதமின்றியே கலந்து கொள்ள அலெக்ஸேய் தீர்மானித்தான். அவன் எண்ணியது தவறு. அவன் வீணாகத் தாக்கிய போர் விமானத்தில் இருந்தவன் அனுபவம் முதிர்ந்த, கூர்ந்த கவனிப்பு உள்ள விமானி – சோவியத் விமானம் ஆயுதமற்றது எனக் கண்டுகொண்ட அந்த ஜெர்மானியன் ஏனைய விமானங்களின் விமானிகளுக்கு கட்டளையிட்டான். நான்கு ஜெர்மன் விமானங்கள். சண்டையிலிருந்து விலகி இருமருங்கிலும் மேலேயும் கீழேயுமாக அவனைச் சூழ்ந்து நெருக்கித் தாம் விரும்பிய வழியில் செல்லுமாறு நீல வானத்தில் தெளிவாகத் தென்பட்ட குண்டு வரிசைகளால் அவனை நிர்பந்தித்தவாறு இரட்டை “இடுக்கியில்” பற்றிக் கொண்டன.

இங்கே, ஸ்தாராய ருஸ்ஸா பிரதேங்களில் “ரிஹத்கோபென்” என்னும் பெயர் பெற்ற ஜெர்மனி விமான டிவிஷன் மேற்கே இருந்து வந்திருப்பதாகச் சில நாட்களுக்கு முன்பு அலெக்ஸேய் கேள்விப் பட்டிருந்தான். பாசிஸ்ட் சாம்ராஜ்யத்தின் சிறந்த விமானிகள் அதில் பணியாற்றினார்கள். கோயெரிங்கின் அரவணைப்பு அதற்குக் கிடைத்திருந்தது. இந்த விமானி ஓநாய்களின் நகங்களில் சிக்கிவிட்டோம் என்பதை அலெக்ஸேய் புரிந்து கொண்டான். அவனைத் தங்கள் விமான நிலையத்துக்கு இட்டுச் சென்று, இறங்கும் படி கட்டாயப்படுத்தி, உயிரோடு சிறைபிடிக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்பது தெளிவாயிருந்தது. அந்தக் காலத்தில் இம்மாதிரிச் சந்தர்ப்பங்கள் நேர்ந்தன. தன் நண்பன், “சோவியத் வீரனின் வீரன்” பட்டம் பெற்ற அந்திரெய் தெக்தியாரென்கோவின் தலைமையில் சண்டை விமான அணி ஒன்று ஜெர்மன் வேவு விமானத்தை இட்டு வந்து தன் விமான நிலையத்தில் இறங்கச் செய்ததை அலெக்ஸேய் கண்கூடாகப் பார்த்திருந்தான்.

சிறைப்பட்ட ஜெர்மனியனின் நீண்ட பசிய வெளிர் நிற முகமும் அவனது தள்ளாட்ட நடையும் அலெக்ஸேயின் நினைவில் கணப்போது தோற்றம் அளித்தன. “சிறைப்படுவதா? ஒருக்காலும் இல்லை! அது மட்டும் நடவாது!” என்று அவன் தீர்மானித்தான். பற்களை இறுகக் கெட்டியடித்துக் கொண்டு விரைவாக முடிந்தவரை விமானத்தின் வேகத்தை அதிகப்படுத்தினான் மெரேஸ்யேவ். பின்பு விமானத்தை செங்குத்து நிலைக்குக் கொண்டு வந்து, தன்னைக் கீழ்ப்புறம் அழுத்தி வைத்திருந்த மேற்பக்கத்துக்கு ஜெர்மன் விமானத்துக்கு அடியே புக முயன்றான். காவல் விமானங்களிடமிருந்து தப்பி வெளியேற அவனுக்கு வாய்த்து விட்டது. ஆனால், ஜெர்மனியன் சரியான நேரத்தில் பீரங்கி விசையை அழுத்திவிட்டான். அலெக்ஸேயின் விமான எஞ்சின் பழுதடைந்து அடிக்கடி வெட்டி வெட்டி இயங்கத் தொடங்கியது. விமானம் முழுவதும் மரண சுரத்தில் நடுநடுங்கிற்று.

சேதப்படுத்திவிட்டார்கள்! விமானத்தைத் திருப்பி மேகத்தின் வெண்மை மூட்டத்துக்குள் புகுந்து தன்னை, பின் தொடர்ந்தவர்களைத் தடம் தவறச் செய்வதில் அலெக்ஸேய் வெற்றி பெற்றான். ஆனால், அப்புறம் என்ன செய்வது? குண்டடிபட்ட விமான எஞ்சினின் நடுப்பாகத்தை விமானி தன் உடல், உள்ளம், அனைத்தாலும் உணர்ந்தான். இது பழுதுற்ற எஞ்சினின் மரணத் துடிப்பு அல்ல போலவும் தனது சொந்த உடலைப் பீடித்த நடுங்குக் காய்ச்சல் போலவும் அவனுக்குத் தோன்றியது.

எஞ்சின் எந்தப் பகுதியில் தாக்குண்டிருக்கிறது? இன்னும் எவ்வளவு நேரம் காற்றில் நிலைத்திருக்க விமானத்தால் முடியும்? பெட்ரோல் தொட்டிகள் வெடித்துவிடுமோ? இவற்றை எல்லாம் அலெக்ஸேய் எண்ணவில்லை, உணர்ந்தான் என்பதே சரியாயிருக்கும். தான் வெடிமருந்துப் பீப்பாய் மீது அமர்ந்திருப்பதாம் வெடித்திரி வழியாக அதை நோக்கித் தீ நாக்கு விரைந்து வந்து கொண்டிருப்பதாகவும் அவனுக்குத் தோன்றியது. விமானத்தை எதிர்ப்புறமாக, முன்னணி வரிசையை நோக்கி, தன்னவர்களின் பக்கம் திருப்பினான் அலெக்ஸேய். ஏதேனும் நேர்ந்துவிட்டால் சொந்த மனிதர்களின் கரங்களால் அடக்கம் செய்யவாவது படலாமே என்பது அவன் நோக்கம்.

முடிவுக்கட்டம் விரைவிலேயே தொடங்கிவிட்டது. எஞ்சின் சட்டென இயக்கத்தை நிறுத்தி ஓசை அடங்கிப் போயிற்று. செங்குத்தான மலையிலிருந்து சரிவதுபோல விமானம் விரைவாகக் கீழ் நோக்கிப் பாய்ந்தது. விமானத்துக்கு அடியில் பசிய சாம்பல் அலைகளாகப் பெருகியது கடல் போன்று எல்லை காண முடியாத காடு… அருகில் இருந்த மரங்கள் நீண்ட பட்டைகளாக ஒன்று கலந்து விமானத்தின் இறக்கைகளுக்கு அடியில் பாய்ந்தோடுகையில், “என்ன ஆனாலும் சிறைப்பட வில்லையே!” என்று எண்ணினான் விமானி. காடு, வனவிலங்கு போன்று தன்னை நோக்கித் துள்ளிப்பாய்ந்த போது இயல்பூக்கத்தால் தூண்டப்பட்டு எரிவூட்டி விசையைச் சட்டென மூடினான். மடாரொலி கேட்டது. அவ்வளவுதான், கணப்போதில் எல்லாம் மறைந்துவிட்டன – விமானத்தோடு அவன் கொழு கொழுப்பான கரு நீரில் மூழ்கிவிட்டது போல.

விழுகையில் விமானம் பைன் மர முடிகள் மேல் மோதியது. இது தாக்கு வேகத்தை மட்டப்படுத்திற்று. சில மரங்களை முறித்துவிட்டு விமானம் பல பகுதிகளாகச் சிதறியது. ஆனால், அதற்கு ஒரு நொடி முன்னதாக அலெக்ஸேய் தனது இருக்கையிலிருந்து பிய்த்துக் காற்றில் எறியப்பட்டான். கிளைகள் அகன்ற நூற்றாண்டுப் பிர் மரத்தின் மேல் விழுந்து அதன் கிளைகள் மீதாகச் சருக்கி அதன் அடியில் காற்றினால் திரட்டிக் குவிக்கப்பட்டிருந்த வெண்பனிக் குவியலின் ஆழத்தில் புதைந்தான். இது அவன் உயிரைக் காப்பாற்றியது.

எவ்வளவு நேரம் உணர்வற்ற நிலையில் அசையாது கிடந்தான் என்பதை அலெக்ஸேயால் நினைவுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இனந்தெரியாத மனித நிழல்களும் கட்டிடங்களின் ஒப்புயரக் கோடுகளும், நம்ப முடியாத வகை இயந்திரங்களும் இடையறாது பளிச்சிட்டவாறு அவன் முன்னே விரைந்தன. அவற்றின் சூறாவளி இயக்கம் காரணமாக அவன் உடல் முழுவதிலும் தெளிவற்ற சுறண்டல் வலி உண்டாயிற்று. பின்பு இந்தக் குழப்பத்திலிருந்து பெரிய, வெம்மையுள்ள, நிச்சயமற்ற வடிவம் கொண்ட ஏதோ ஒன்று வெளிப்பட்டு சூடான நாற்ற மூச்சை அவன் மேல் விட்டது. அவன் அப்பால் விலக முயன்றான். ஆனால், அவனுடைய உடல் வெண்பனியில் ஒட்டிக்கொண்டு விட்டதுபோல் இருந்தது. தெளிவாக விளங்காத அச்சத்தால் உலப்புற்று அவன் வெடுக்கென்று துள்ளி எழுந்தான். உடனேயே தன் நுரையீரலில் பாயும் குளிர் காற்றையும் கன்னங்களில் வெண்பனியின் குளிரையும் உணர்ந்தான். இப்போது அவன் மேனி முழுதிலும் அல்ல, கால்களில் மட்டுமே கடுமையான வலி ஏற்பட்டது.

“உயிரோடு இருக்கிறோம்!” என்ற எண்ணம் அவன் உணர்வில் பளிச்சிட்டது. எழுந்து நிற்பதற்காக அங்கங்களை அசைத்தவன், யாருடைய பாதங்களுக்கோ அடியில் வெண்பனி பாளம் நொறுங்குவதையும் இரைச்சலும் கம்மலும் கொண்ட மூச்சையும் கேட்டான். “ஜெர்மனியர்கள்!” என்று உடனே அனுமானித்தான். கண்களைத் திறக்கவும் தற்காத்துக் கொண்டு துள்ளி எழவும் உண்டான விருப்பத்தை அடக்கிக் கொண்டான்.” சிறைப்பட்டுவிட்டேன், எவ்வளவோ முயன்றுங்கூடப் போர்க் கைதி ஆகிவிட்டேன்! “…இனி என்ன செய்வது?” என்று எண்ணமிட்டான் !

கண்களைத் திறக்கவும் தற்காத்துக் கொண்டு துள்ளி எழவும் உண்டான விருப்பத்தை அடக்கிக் கொண்டான்.” சிறைப்பட்டுவிட்டேன், எவ்வளவோ முயன்றுங்கூடப் போர்க் கைதி ஆகிவிட்டேன்! “…இனி என்ன செய்வது?” என்று எண்ணமிட்டான் !

எல்லாத் தொழிலிலும் வல்லவனான தனது மெக்கானிக் யூரா, கைத்துப்பாக்கி உறையின் அறுந்த வாரைத் தைப்பதாக ஏற்றுக்கொண்டவன் தைக்காமலேயே இருந்து விட்டதும், எனவே பறக்கும் போது ரிவால்வாரை விமானி தனது உடையின் தொடைப்பையில் வைத்துக்கொள்ள நேர்ந்ததும் அவனது நினைவுக்கு வந்தன. இப்போது அதை எடுப்பதற்கு விலாப்புறம் புரண்டு படுக்க வேண்டியிருந்தது. பகைவன் கணிக்காதபடி அவ்வாறு செய்வதோ இயலாதிருந்தது. அலெக்ஸேய் முகங்குப் புறக் கிடந்தான். ரிவால்வரின் கூரிய பட்டைகள் தொடையில் அழுத்துவதை அவன் உணர்ந்தான். ஆயினும் அசையாது கிடந்தான். பகைவன் தன்னை இறந்தவன் என ஒருவேளை நினைத்து அப்பால் போய்விடுவான் என்று நினைத்தான்.

ஜெர்மனியன் பக்கத்தில் தொப்புத்தொப்பென அடிவைத்து நடந்தான், விந்தையான முறையில் பெருமூச்சுவிட்டான், மறுபடி மெரேஸ்யெவின் பக்கத்தில் வந்தான், வெண்பனிப் புறணியை நொறுக்கினான், குனிந்தான். ஜெர்மானியன் தனியாள் என்பதை மெரேஸ்யெவ் இப்போது கண்டுகொண்டான். தான் தப்புவதற்கு வாய்ப்பு எனக் கருதினான், திடீரெனத் துள்ளி எழுந்து அவன் குரல்வளையை இறுக்கி, துப்பாக்கி சுட இடம் கொடுக்காமல் சமப்போராட்டம் நடத்தினால்…… ஆனால், இதை நிதானமாகக் கணக்கிட்டுத் துல்லியமாகச் செய்து முடிக்க வேண்டியிருந்தது.

தனது கிடையை மாற்றிக் கொள்ளாமலேயே மெதுவாக, மிக மெதுவாக அலெக்ஸேய் ஒரு கண்ணைச் சிறிது திறந்தவன், தன் முன்னே ஜெர்மனியனுக்குப் பதிலாகப் பழுப்பு நிறமான சடை அடர்ந்த வேறு ஒன்றைத் தாழ்த்திய இமை மயிர்களின் ஊடாகக் கண்டான். விழியை இன்னும் கொஞ்சம் அகலத்திறந்தவன், அக்கணமே அவற்றை இறுக மூடிக் கொண்டுவிட்டான், அவனுக்கு எதிரே பின் கால்களில் குந்தியிருந்தது பெரிய மெலிந்த, பறட்டைச் சடைக்கரடி.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:

பாகம் – 1 : உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்

விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலித்த டால்ஸ்டாய் – லெனின்

0

லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின் | பாகம் – 2

எல். என். டால்ஸ்டாயும் நவீனத் தொழிலாளர் இயக்கமும் !

வி.இ.லெனின்
ஷ்யாவில் ஏறத்தாழ சகலப்  பெருநகரங்களிலுமுள்ள ரஷ்யத் தொழிலாளர்கள் எல். என். டால்ஸ்டாய் மரணம் சம்பந்தமாகத் தமது பிரதிபலிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்கள். உலகின் மாபெரும் எழுத்தாளர் வரிசையில் இடம் பெற்றுத் தந்து மிகவும் தலைசிறந்த பல கலைப் படைப்புக்களை உருவாக்கிய எழுத்தாளரும், நவீன அரசியல் சமுதாய அமைப்புகளின் அடிப்படை அம்சங்கள் குறித்து அளப்பரிய ஆற்றலுடன் சுய நம்பிக்கையுடன் நேர்மையுடன் பல பிரச்சினைகளை எழுப்பிய சிந்தனையாளருமான அவரைப் பற்றி ஏதாவதொரு வகையில் தமது கருத்தினை வெளியிட்டிருந்தார்கள். பொதுவாக இந்தக் கண்ணோட்டம் மூன்றாம் டூமாவின் 53 தொழிலாளர் பிரதிநிதிகள் அனுப்பி வைத்து பத்திரிகைகளில் பிரசுரமான தந்திச் செய்தியில் வெளியீடாயின.

அடிமைத்தனம் நிலவிய ஆனால் அதன் இறுதி நாள்கள் நெருங்குவது ஏற்கெனவே தெளிவாகிவிட்ட காலத்தில் எல்.டால்ஸ்டாய் தமது இலக்கிய வாழ்க்கையினைத் தொடங்கினார்.  1861-1905 என்ற அதன் இரு திருப்பு முனைகளுக்கிடையிலான ரஷ்ய வரலாற்றின் காலகட்டத்தில் டால்ஸ்டாயின் பிரதான நடவடிக்கைகள் இடம் பெற்றன. இந்தக் காலகட்டம் முழுவதிலும் நாட்டின் ஒட்டு மொத்தமான பொருளாதார (குறிப்பாக நாட்டுப்புறத்தில்), அரசியல் வாழ்வில் அடிமைத்தனத்தின் அடையாளங்கள், அதன் நேரடி மீத மிச்சங்கள் பரவிக் கிடந்தன. அதே சமயம் இந்தக் காலகட்டம் முதலாளித்துவ வளர்ச்சி, கீழிருந்து துரிதப்படுவதன், மேலிருந்து நாட்டப்படுவதன் காலகட்டமாயும் இருந்தது.

அடிமைத்தனத்தின் மீத மிச்சங்கள் எவற்றால் வெளியீடாயின? வெகுவாயும் மிகவும் தெளிவாகவும் ரஷ்யா பிரதானமாயும் ஒரு விவசாய நாடு என்ற உண்மையில் வெளியீடாயின. அந்தக் காலத்தில் விவசாயம், சீரழிந்த வறுமையுற்ற விவசாயிகளின் கரத்தில் இருந்தது. அவர்கள் காலாவதியான பழம் முறைகளைக் கையாண்டு பழைய நிலப்பிரபுத்துவ ஒதுக்கு நிலங்களில் வேலை செய்து வந்தார்கள். இந்த ஒதுக்கீடுகள் கூட 1861-ல் நிலப்பிரபுக்களுக்குச் சாதகமாகக் குறைக்கப்பட்டன. மறுபுறம் விவசாயம் நிலப்பிரபுக்களின் கைகளில் இருந்தது. மத்திய ரஷ்யாவிலிருந்த இவர்கள் நிலத்தை விவசாயிகளின் உழைப்பு, மர ஏர் கொண்டு குதிரைகள் மூலம் சாகுபடி செய்தார்கள். பதிலுக்கு விவசாயிகளுக்கு வெட்டி ஒதுக்கிய நிலங்கள்”54 புல்வெளிகள், நீர்ப்பாசன இடங்கள் கிடைத்தன. எல்லா வழிகளிலும் இது பொருளாதாரத்தில் பழைய நிலப்பிரபுத்துவ அமைப்பாகவே இருந்தது.

இந்தக் காலகட்டம் முழுவதும் ரஷ்யாவின் அரசியல் அமைப்பு நிலப் பிரபுத்துவத்தால் ஊடுருவப்பட்டு கிடந்தது. 1905-ல் மாற்றுவதற்கு எடுத்த முதல் முயற்சிக்கு முன்பாக நிலவிய நாட்டின் அரசியல் சட்டத்திலிருந்து இது துலாம்பரமாகிறது. இந்தச் சட்டம் அரசாங்க விவகாரங்களில் நிலப்பிரபுக்களின் முக்கியமான செல்வாக்கிலிருந்தும், அதிகாரிகளின் – இவர்களில் பெரும்பாலோர், குறிப்பாக உயர் பதவிகளில் உள்ளோர் நிலப்பிரபுக்களிடையிருந்தே வந்தவர்கள் – வரம்பற்ற அதிகாரங்களிலிருந்தும் வந்தனர்.

1861-க்குப் பிறகு இந்தப் பழைய, தந்தை வழி ரஷ்யா உலக முதலாளித்துவத்தின் செல்வாக்கின் கீழ் துரிதமாகச் சீரழியத் தொடங்கியது. விவசாயிகள் பட்டினி கிடந்தனர், இறக்கலாயினர். முன் என்றும் இல்லா எல்லா வகையிலும் நாசமடைந்தனர். நிலத்தைக் கைவிட்டு நகரங்களை நோக்கி ஓடினார்கள். சீரழிந்த விவசாயிகள் மூலம் கிடைத்த “மலிவான உழைப்பு’’ காரணமாக ரயில்வே, மில்கள், ஆலைகள் கட்டும் வேலையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டது. பெருவித வர்த்தகத் தொழில் துறை முதலாளித்துவத்துடன் கூடவே பெரும் நிதி முதலாளித்துவமும் ரஷ்யாவில் வளர்ந்தது.

பழைய ரஷ்யாவின் இந்தப் பழைய தூண்கள், துரிதமாக வேதனை தரும் வகையில், தீவிரமாக அழிந்து வந்தன. கலைஞர் என்ற முறையில், டால்ஸ்டாயின் நூல்களில் சிந்தனையாளர் என்ற முறையில் டால்ஸ்டாயின் கருத்துகளிலும் பிரதிபலித்தது.

படிக்க:
மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?
சில பைன் மரங்களையும் ஒரு காகத்தையும் குறி பார்த்து அழித்த மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 !

கிராமிய ரஷ்யா குறித்து, நிலப்பிரபுக்கள் விவசாயிகளின் வாழ்க்கை முறை பற்றி டால்ஸ்டாய்-க்கு அபாரமான அறிவு இருந்தது. தமது கலைப்படைப்புக்களில் இந்த வாழ்க்கை பற்றிய வர்ணனைகளை அவர் கொடுத்தார். இந்த நூல்கள் உலக இலக்கியத்திலேயே  சிறந்த படைப்புக்களாக எண்ணப்படுகின்றன. கிராமிய ரஷ்யாவின் “பழைய தூண்கள்’’ அனைத்தும் தீவிரமாக அழிக்கப்பட்டன. அவரது  கவனத்தைக் கூர்மைப்படுத்தியது, தன்னைச் சுற்றி நடப்பது சம்பந்தமான அவரது அக்கறையை ஆழப்படுத்தியது, அவரது உலகக் கண்ணோட்டத்தில் அடிப்படையான மாறுதல் விளைவித்தது.

பிறப்பாலும் கல்வியாலும் டால்ஸ்டாய் மிக உயர்ந்த நிலப்பிரபு வரிசையினைச் சேர்ந்தவராவார். அவர் இந்தச் சுற்றுச்சார்பின் வழக்கமான கருத்துகளிலிருந்து முறித்துக் கொண்டார். தமது பிற்கால நூல்களில் வெகுஜனங்களை அடிமைப்படுத்தல், அவர்களது வறுமை, விவசாயிகளின், பொதுவாக நடுத்தர உரிமையாளர்  நாசமாதல், முடிமுதல் அடிவரை அனைத்து  நடப்பு வாழ்க்கையினையும் ஊடுருவி நின்றவற்றை, போலித்தனம் இவற்றை அடிப்படையாக்கிய சமகாலத்திய அரசு, சமயபீடம், சமூகப் பொருளாதார அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்துத் தாக்கினார்.

டால்ஸ்டாயின் விமர்சனம் புதிதன்று. ஐரோப்பிய இலக்கியத்திலும் ரஷ்ய இலக்கியத்திலும் உழைக்கும் மக்களின் நண்பர்கள் முன்பு சொல்லியிராத எதையும் அவர் சொல்லிவிடவில்லை. ஆனால் டால்ஸ்டாயின் விமர்சனத்தின் தனிச்சிறப்பும், அதன் வரலாற்று முக்கியத்துவமும் இந்த விமரிசனம் ஒரு மேதையான லைஞருக்கு மட்டுமே உரியதான வலிமையுடன் கிராமப்புற விவசாய ரஷ்யாவின் இந்தக் காலகட்டத்திய வெகுஜனங்களின் கருத்துகளில் ஏற்பட்டு வந்த அடிப்படையான மாறுதல்களை வெளிப்படுத்தியதில் காணக்கிடக்கின்றன.

ஏனெனில் சமகால அமைப்புகள் பற்றிய டால்ஸ்டாயின் விமரிசனம், நவீன தொழிலாளர் இயக்கத்தின் பிரதிநிதிகள் அதே அமைப்புகள் பற்றி நடத்தும் விமரிசனத்திலிருந்து மாறுபட்டது. டால்ஸ்டாயின் கருத்து ஒரு தந்தைவழி மரபினரின், பாமர விவசாயியின் கருத்தாகும். அவனது மனோ தத்துவத்தை டால்ஸ்டாய் தமது விமரிசனத்திலும் சித்தாந்தத்திலும் புகுத்தினார். டால்ஸ்டாயின் விமரிசனத்தில் “வேர்களுக்குச் செல்வதில்” மக்கள் துன்பத் துயரங்களுக்குரிய உண்மைக் காரணத்தை அறிதல் இவற்றில் எல்லாம் பேருணர்ச்சி, வலிமை, ஆவேசம் மெய்ப்படுத்தும் ஆற்றல், பசுமை, நேர்மை, அச்சமின்மை ஆகிவை சிறப்பாக விளங்கின.

நிலப்பிரபுத்துவத்திலிருந்து சுதந்திரத்தில் அடிவைத்து, இந்தச் சுதந்திரம் புதிய நகரவாசிகளின் கீழ் மட்டத்திலுள்ள மக்களுக்கு கொண்டுவரும் என்னதக்கண்ட லட்சோப லட்சம் விவசாயிகளின் கருத்துகளில் ஏற்பட்ட கூரிய மாற்றத்தை உண்மையில் வெளிப்படுத்தியது. டால்ஸ்டாய் இந்த உணர்வுகளை அப்படியே நிலைக்கண்ணாடி போன்று பிரதிபலித்தார். தமது கோட்பாடுகளில் அவர்களது பாமரத்தன்மையினை இறக்கும் செய்தார், அரசியல் வாழ்விலிருந்து விலகி நிற்றலை, அவர்களது மாயாவாதத்தை, உலகிலிருந்து எட்டி நிற்கும் “தீமையை எதிர்க்காதே” என்ற விருப்பத்தை, முதலாளித்துவத்தையும் “பணத்தின் வலிமையையும்’’ எதிர்த்த அவர்களது ஆண்மை பெற்ற பழி ஆட்டங்களைப் பிரதிபலித்தார். லட்சோப லட்சம் விவசாயிகளின் கண்டனம் அவர்களது மனக்கசப்பு – இவை டால்ஸ்டாயின் சித்தாந்தத்தில் இணைந்திருந்தன.

நவீன, தொழிலாளர் இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கு எதிர்த்துக் கண்டனம் தெரிவிப்பதற்கு ஏராளமானவை  உள்ளன.  ஆனால் எதைப்பற்றியும் அங்கலாய்க்க வேண்டுவதில்லை என்பதைக் காண்கிறார்கள். அங்கலாய்ப்பு அழிந்து வரும் வர்க்கங்களின் அடையாளம். ஆனால் கூலித்தொழிலாளர் வர்க்கம் தவிர்க்கவொண்ணாத வகையில் அதிகரித்து வருகிற ரஷ்யா உள்ளிட்ட எல்லா முதலாளித்துவ சமூகத்திலும் வளர்ந்து வலுப்பெற்று வருகிறது.

தீமையின் காரணத்தை அறியாத, தப்ப வழி புரியாதவர்கள் போராடும் சக்தியற்றவர்களின் சின்னமே அங்கலாய்ப்பு. நவீன தொழில்துறைத் தொழிலாளி வர்க்கம் அத்தகைய வர்க்கத்தைச் சேர்ந்ததன்று.

– லெனின்
நவம்பர் 28, 1910-ல் எழுதியது
லெனின் தொகுப்பு நூல்கள், பக்கம் – 16, பக்கம் 320 – 32

அடிக்குறிப்புகள்:

53: இது மூன்றாவது டூமாவின் சமூக – ஜனநாயகவாத பிரதிநிதிகளால் அஸ்தபோவோவுக்கு, லியோ டால்ஸ்டாயின் நெருங்கிய நண்பரும், சீடருமான வி.ஜி. செர்த்கோவுக்கு அனுப்பப்பட்ட தந்தியைக் குறிப்பிடுகிறது : “டூமாவிலுள்ள சமூக-ஜனநாயகவாத குழுவானது அதிகார பூர்வ மத குருவாதத்திற்கு எதிரான சமரசத்திற்கிடமற்ற, வெல்லற்கரிய போராட்டக்காரரும், மரண தண்டனைக்கு எதிராக தமது உரத்த குரலை எழுப்பிய கொடுங்கோலாட்சி, அடிமைத்தனத்தின் வைரியும், ஒடுக்கப்பட்டவர்களின் நண்பரும் ஆன தலைசிறந்த கலைசர் மரணமடைந்தது குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

54: கைப்பற்றப்பட்ட நிலங்கள் – ரஷ்யாவில் பண்ணை அடிமைமுறை நீக்கப்பட்ட பொழுது விவசாயிகளிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட (கைப்பற்றப்பட்ட) நிலங்கள்.

நூல்: கலை, இலக்கியம் பற்றி – வி.இ.லெனின்
தமிழாக்கம்: கே.ராமநாதன்
ஆங்கில மூல நூல் – முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ
1974-ம் ஆண்டு – தமிழாக்க நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.

முந்தைய பாகம் :

லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின்

காலேஜ் கல்ச்சுரல்ஸ் : மாணவர்களை கிளர்ச்சியூட்டத்தானா ?

காலேஜ் கல்ச்சுரல்ஸ் : தற்போதைய நிலையும் அதன் தாக்கமும் | விஜய் அமந்தா

ன்றளவில், கல்லூரி வளாகங்களில் கல்ச்சுரல் நிகழ்ச்சிகள் நடைபெறுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக, தனியார் கல்லூரிகளில் இந்நிகழ்ச்சிகள் ஆரவாரத்தோடு கொண்டாட்டமாக நடைபெற்று வருகின்றன. கட்டாயமாக வருடத்திற்கு ஒரு நிகழ்ச்சியாவது நடத்திவிடவேண்டும் என்பதே நிர்வாகத்தின் நிலைப்பாடு. நிர்வாகம் மட்டுமல்லாமல், மாணவர்கள் மத்தியிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்புண்டு. அவ்வெதிர்பார்ப்பின் வெளிப்பாடாய், நிகழ்ச்சியில் என்னென்ன போட்டிகள் நடத்தலாம், எந்த சினிமா நடிகரை அல்லது இயக்குனரை சிறப்பு விருந்தினராக அழைக்கலாம் எனக் கலந்தாலோசிப்பதில் அதிதீவிரம் காட்டுகின்றனர்.

நடப்பது என்னவென்றறியாத மாணவர்களின் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் இதில் பங்கேற்று பரிசுகள் பெற வேண்டும் என்ற ஆசையில் நிறைய பணம் செலவழிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், இது போன்ற கல்ச்சுரல்ஸ் மாணவர்களின் போட்டியிடும் குணத்தை தீவிரபடுத்துவதாகவும், திறமையை வெளிக்காட்ட சந்தர்ப்பத்தை உருவாக்குவதாகவும், கல்விச் சுமையை இலகுவாக்குவதாகவும் பொதுப் புத்தியில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுவதே.

(மாதிரிப் படம்)

கல்லூரியில் கல்ச்சுரல்ஸ் என்ற பெயரில் என்னதான் நடக்கிறது என்பதை விரிவாக பார்ப்போம். ஏதேதோ புரியாத கிரேக்க, இலத்தீன் மொழிகளிலிருந்து எடுத்த வார்த்தைகள் நிகழ்ச்சியின் தலைப்பாக வைக்கப்படும். இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து முப்பது நாற்பது போட்டிகள் நடத்தித் தீர்க்கப்படும். அப்போட்டிகளுக்கு நடுவர்கள் என்ற பெயரில் சினிமாத்துறையில் இருந்து எவரையாவது அழைத்து வருவார்கள். தொலைக்காட்சியில் ஒரு தடவை தோன்றியிருத்தாலும் celebrity என்று அறிமுகப்படுத்தப்படுவார்கள்.

மற்ற நாட்களில் தூங்கும் மாணவர் மன்றம் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாட்டில் தீவிரமாக செயல்படும். ஜனநாயக முறையில் மன்றத்தின் அலுவல் பொறுப்பிற்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இதற்காகத் தானோ என எண்ணத் தோன்றும் நமக்கு. நிகழ்ச்சியின் பங்குதாரர்களாக இருப்பதற்கு பெரு நிறுவனங்களிடம் மாணவர்கள் சென்று ஒப்புதல் பெற வற்புறுத்தப்படுகிறார்கள். சினிமாத் துறையில் பிரபலமான நடிகர் யாரையாவது கல்ச்சுரல்ஸ் பற்றி நல்ல விதமாக பேசச் சொல்லி ப்ரோமோ வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்படும்.

படிக்க:
மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?
அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை !

எல்லாம் சரி, இது போன்ற நிகழ்ச்சிகளில் ஆசிரியர்களின் பங்குதான் என்ன? மேடை அலங்காரம், பார்வையாளர்கள் அமர இருக்கைகள், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, சான்றிதழ் எழுதுவது, பரிசு பொருட்கள் வாங்குவது, ஒழுங்கீன நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபடாமல் தடுப்பது, நுழைவாயிலில் மாணவர்கள் அடையாள அட்டை கொண்டு வருகிறார்களா என சோதனையிடுவது, வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நின்று மாணவர்களை கண்காணிப்பது, நடுவர்களை உபசரிப்பது ஆகிய அனைத்தும் ஆசிரியர்களின் பொறுப்பாக அறிவிக்கப்படும். அறிவிப்பைத் தொடர்ந்து ஆசிரியர்களும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காகவே கல்லூரி இயங்குவது போல் அனைவரும் இரவு பகல் பாராமல் உழைப்பார்கள்.

(மாதிரிப் படம்)

உண்மையில் இங்கே நடப்பது culturals தானா? இதற்கு பதில் கூற வேண்டுமானால் culturals என்ற சொல்லின் அர்த்தத்தையும், அதன் வேர் சொல்லான culture என்ற சொல்லின் அர்த்தத்தையும் கவனமாக ஆராய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இவ்விரண்டு சொல்லுக்கும் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள அர்த்தத்தைப் பார்த்தால் மட்டும் போதாது. ஆகையால், ரேமண்ட் வில்லியம்ஸின் (Raymond Williams) Keywords என்ற நூலில் culture என்ற சொல் பல்வேறு சூழலில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்ற விரிவான விளக்கத்தை எடுத்துக்கொள்ளலாம்.

Culture என்ற சொல்லை செயல்முறையைக் குறிக்கும் சொல்லாகத்தான் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அக்கறையோடு கவனித்துக் கொள்வது, குறிப்பாக பயிர்களையும், விலங்குகளையும் பராமரிப்பது; பயிர் விளைவித்தல். பதினெட்டாம் நூற்றாண்டில் தான் இச்சொல்லின் அர்த்தம் விரிவடைந்துள்ளது. இவற்றை நாம் மூன்று வகைமைக்குள் பொருத்தலாம்: (i) அறிவு, ஆன்மீகம், மற்றும் ரசனையின் வளர்ச்சியைக் குறிக்கும் (ii) குறிப்பிட்ட மக்களின் அல்லது காலத்தின் வாழ்க்கை முறையை குறிக்கும் (iii) அறிவு மற்றும் கலை சார்ந்த செயல்பாடுகளைக் குறிக்கும். இன்றளவில் மூன்றாவது அர்த்தமே மிகப் பிரபலம். Culture – ன் பெயரடை cultural பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து தான் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மொத்தத்தில், அறிவு, ஆன்மீகம், ரசனை சார்ந்த வளர்ச்சியையும், கலை சார்ந்த செயல்பாடுகளில் இதனின் வெளிப்பாடையும் culture என்ற சொல் உள்கிரகித்துள்ளது. எளிமையாக சொல்ல வேண்டுமானால், culture வளர்ச்சியை நோக்கி பயணிப்பதை உணர்த்தும் சொல்லாக உருவெடுத்துள்ளது. Culture என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இனையான தமிழ் சொல் பண்பாடு என்பதே. இச்சொல்லுக்கும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து அர்த்தங்களும் பொருந்தும்.

தி. சு. நடராசன் பண்பாடு குறித்து கீழ்கண்டவாறு கூறுகிறார்; “மனிதனுடைய வாழ்நிலைகளில் சாரமாகக் காணப்படுகின்ற ஒழுகலாறுகள், நடத்தைகள், நம்பிக்கைகள், விழுமியங்கள், சுற்றி இருப்பவை பற்றிய உணர்வுநிலைகள் முதலியவற்றைக் குறிப்பது பண்பாடு. சமூகக்குழுக்கள், இனங்கள், நாடுகள் என்ற நிலைகளில் காணப்படும் பல்வேறுபட்ட உறவுகள், கலை அழகியல் வெளிப்பாடுகள், சடங்குகள், வழிபாடுகள் முதலியவற்றைக் குறிப்பது பண்பாடு.”

(மாதிரிப் படம்)

Culture / பண்பாடு பற்றிய விளக்கங்களை அடிப்படையாக வைத்து மேலே விரிவாக குறிப்பிடப்பட்ட கல்ச்சுரல்ஸ் நிகழ்ச்சி நடத்தப்படும் முறையை பார்த்தோமேயானால், எந்தளவுக்கு அபத்தம் என்பதை உணரலாம். இக்கலை நிகழ்ச்சிகளின் நோக்கம் கொண்டாட்டமாகத் தான் இருக்கிறது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களும், பார்வையாளராக அமர்ந்திருக்கும் மாணவர்களும் முடிந்தளவு கொண்டாடி தீர்க்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

ஒரு மாதிரியான பித்து பிடித்த மனநிலையில் மாணவர்களைப் பார்க்க முடியும். காட்டுமிராண்டித்தனம் மட்டுமே மேலோங்கி அறிவு மற்றும் ரசனை இவையெதுவுமே மேம்படாத சூழல் உருவாகிறது. முற்றிலும் தன்சார்ந்த கொண்டாட்டத்தில் மூழ்கடிக்கப்படும் மாணவர்களின் சமூக அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் போது கல்வி நிர்வாகம் மாணவர்களுக்கு ஒரு வித சுதந்திரத்தை அளித்து விடுகிறது. பெண்களை கொச்சைப்படுத்தும் பாடல்களுக்கு நடனமாடலாம். இரட்டை அர்த்த சொற்களை மேடையில் பயன்படுத்தலாம். DJ வைத்து மணிக்கணக்கில் ஆட்டம் போடலாம்.

இவை அனைத்தும் மாணவர்களின் ஆற்றலை முற்றிலும் வீணடிப்பவை. ஏற்கனவே அவனிடம் உள்ள புரியாத வேட்கையை தூண்டிவிடுபவை. மொத்தத்தில், கல்ச்சுரல்ஸ் மாணவர்களிடம் தற்காலிகமாக ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தவே பயன்படுகின்றன. சமூக உணர்வும், பொறுப்புமற்ற கற்பனையையும், திறமையையும் வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் மாணவர்களின் கல்வி, கலை சார்ந்த மதிப்பீடுகளை மேம்படுத்த வாய்ப்பேயில்லை.

அதற்காக இந்நிகழ்ச்சிகள் எவ்வித பண்பாடையும் பிரதிபலிக்கவில்லை என்றும் சொல்லமுடியாது. பண்பாடைப் பிரதிபலிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், பண்பாடு என்பது என்றும் மாறாத நிலையான ஒன்றாக கருதுகிறார்கள். தமிழர் பண்பாடு என்றாலே வேட்டி, சட்டை, சேலை, விவசாயம், ஒழுக்கம் என வரையறுக்கப்பட்டுள்ளதை, புற குறியீடுகள் மூலம் நம்மால் உணர முடியும்.

(மாதிரிப் படம்)

இக்கல்ச்சுரல்ஸ் நிகழ்ச்சிகளில் முற்றிலும் மூழ்கி, சிலாகித்துக் கொண்டிருக்கும் யாவருக்கும் உலகமயமாக்கலுக்கு பிறகு சமூக பண்பாட்டு தளத்தில் நடந்த மாற்றங்கள், சிக்கல்கள் பற்றி துளியளவும் கவலை இல்லை. பொங்கல் பண்டிகை என்றாலே வேட்டி, சேலை அணிவதும், மண் பானையில் பொங்கலிடுவதும், கரும்பு சாப்பிடுவதும், விவசாயத்தின் பெருமை பேசுவதும், போட்டிகள் நடத்துவதும் பொதுவான பழக்கமாகிவிட்டது. உண்மை என்னவெனில் இத்தகைய இலட்சியப் போக்கின் பின் மறைந்துள்ள சமூக பொருளாதார நிலை குறித்து பேச மறக்கிறோம், மறுக்கிறோம்.

ஜெய் ஜவான், ஜெய் கிஷான் என்று முழங்கிய காலம் மாறி டிஜிட்டல் இந்தியா என முழங்கும் காலம் வந்துவிட்டது. விவசாயிகளுக்கு மூலதனம் அதிகமாகிறதேயொழிய உற்பத்தி அதிகரிக்கவில்லை. அப்படியே உற்பத்தி அதிகரித்தாலும் பெரும்பாலும் மலிவான விலைக்கு விற்க வேண்டிய அவல நிலை. இது போக இடைத்தரகர்களின் சுரண்டல் வேறு. இதற்கிடையில் இயற்கை பேரிடர்கள் நேரின், அரசாங்கத்தின் அலட்சியப் போக்கு அப்பட்டமாகிறது. இதை மீறியும் விவசாயம் செய்தால் விவசாயிகள் அனைவரும் கடன்காரர்கள் என்ற சித்தரிப்பு தான் மிச்சம்.

இவை எதைப்பற்றியும் விவாதிக்காமல், கவலைப்படமால் ஒரு நாள் வேட்டி, சட்டை அணிந்து மக்கள் இசை பாடலுக்கு நடனமாடினால் போதுமா? ஆகமொத்தத்தில் தமிழர் பண்பாடு என்பது குறியீட்டு அளவில் சுருக்கப்படுகிறது. இதே போன்று குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற சடங்குகள் ஏன் நடத்தப்படுகின்றதென அர்த்தமற்று போகிறது.

அறிவு, ஆன்மீகம், ரசனை சார்ந்த வளர்ச்சியையும், கலை சார்ந்த செயல்பாடுகளில் இதனின் வெளிப்பாடையும் பிரதிபலிக்கும் வண்ணம் கல்ச்சுரல்ஸ் நடத்தப்படுவதில்லை. மாறாக, கல்ச்சுரல்ஸ் என்றாலே கொண்டாட்டமென்றும் கருத்தியலளவிலே மட்டும் பண்பாடை பிரதிபலிக்கும் என்றும் புலனாகிறது. ஒரு புறம், கல்ச்சுரல்ஸ் அதனின் அடிப்படை நோக்கத்தையே பூர்த்தி செய்யமுடியவில்லை.

மறுபுறம், இந்நிகழ்ச்சிகள் சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்யவேண்டிய கல்வியாளர்களான ஆசிரியர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதே அவர்களது தலையாயக் கடமையாகக் கொடுக்கப்படுகிறது. பெரிய பேரணி அல்லது போரட்டம் நடக்கும் முன் பாதுகாப்பு பணிக்கு செல்லும் காவலர்களுக்கு கொடுக்கப்படும் உத்தரவுகள் போல ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். மற்ற வேலை நாட்களைக் காட்டிலும் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் போது விடுப்பு எடுப்பதற்கு பல கெடுபிடிகள் உண்டு. இவையெல்லாமே ஓர் அபாயகரமான சூழலுக்கே வழிவகை செய்கிறதெனில், ஆசிரியர்களைக் கொண்டு ஆரோக்கியமான சூழல் எவ்வாறு உருவாக்கப்படலாம்?

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி… பெரும்பாலான அரசு கல்லூரிகளில் இத்தகைய விழாக்கள் நடத்தப்படுவதே இல்லை!

இவ்வழக்கத்தை விடுத்து, ஆசிரியர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சிகள் குறித்து ஒரு பொது விவாதம் நடத்தப்பட வேண்டும், நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விரிவாகப் பேசப்பட வேண்டும், சமூக, பண்பாட்டு அமைப்புகளை நன்கு புரிந்து கொண்டு அதனை கலை வழி கேள்விக்குட்படுத்தும் கலைஞர்களை வரவழைத்து மாணவர்களிடேயே விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும். அந்த விவாதங்களின் வெளிப்பாடாய் கலை நிகழ்ச்சிகள் அமைய வேண்டும். பண்பாடு சார்ந்த மதிப்பீடுகளை தொடர்ந்து மறுபரிசீலனை செய்வதற்கேற்ற சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

இல்லையெனில், இக்கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு நாள் கூத்தாய் மாறிப்போகும். மாணவனும் தன்னோடு பயிலும் பெண்களின் கை தட்டல்களை வாங்கி விடுவதையே சாதனையாக கருதிவிடுவான். மேலும், கலை என்பது சமூகத்தை மறுவாசிப்புக்குட்படுத்திக் கொண்டே இருக்கும் ஒரு அரசியல் களம் என்ற உண்மையை மாணவர்கள் அறியாமலே இருக்கும் நிலை உருவாகிவிடும்.

இம்முழு விவாதத்திற்கும், எதிர் வினையாற்றுபவர்கள் தாங்கள் நுண்கலைகள் சங்கம் சார்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதால் கலையின் நோக்கத்தைப் பற்றியோ அதன் தாக்கத்தைப் பற்றியோ கவலைப்படத் தேவையில்லை என கூறலாம். ஏனென்றால் நுண்கலைகள் அதனின் கற்பனை, அழகியல், அறிவு சார்ந்த கருத்துகளுக்காக மட்டுமே பாராட்டப்பட வேண்டும். அவர்களின் இந்த எதிர்வினையை நிச்சயமாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்பார்வை மேலை நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அழகியல் இயக்கம் (Aesthetic movement) உருவான போது பரவலாக இருந்தது. கலை கலைக்காக மட்டும் என்பதே அந்த இயக்கத்தின் மையக்கருத்து. இயக்கத்தின் முன்னணி எழுத்தாளர்கள் கலை வடிவம் சார்ந்த அழகியலின் நிறைவுதான் கலையின் நோக்கம் எனவும் கூறினார்கள். இம்மாதிரியான அணுகுமுறை மேட்டிமை உணர்வையே ஏற்படுத்தும். மேலும், அழகியல், ரசனை ஆகியவற்றுள் பொதிந்துள்ள அரசியல் கவனம் பெறாமல் போய் விடும். எடுத்துக்காட்டாக, பிரைடல் மேக்கப், நெயில் ஆர்ட், காஸ்டியூம் டிசைனிங், எத்தினிக் வாக் போன்ற போட்டிகளை அழகியல் சார்ந்தாக மட்டும் பார்த்தால் அதனடியில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கத்தின் பெண்கள் மீதான மதிப்பீடுகளை வெளி கொண்டு வர முடியாது.

படிக்க:
நாம் படித்து வாங்கும் பட்டத்திற்கு புனிதம் இருக்கிறதா ?
பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்

என்னைப் பொருத்தவரை, கலை சமூக, பண்பாட்டு வெளியைத் தாண்டி இயங்குவது சாத்தியமற்றது. ஒருவனை அதீத சமூக உணர்வு நிலைக்கு இட்டுச் செல்லும் ஆற்றலைத் தன்னுள் நிறைத்து வைத்திருப்பதே கலை. கட்டணம் செலுத்தும் மாணவர்களின் பொழுதுபோக்கிற்கென்றும், அடுத்த வருட மாணவ சேர்க்கையின் போது கல்லூரியை விளம்பரப்படுத்தவும் கல்லூரி நிர்வாகத்தினர் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

உண்மையில் கல்ச்சுரல்ஸ் என்ற பெயரில் நடத்தப்படும் கேலிக் கூத்துகள் அனைத்தும் ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, மாணவர்களின் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த சிந்தனைகளை மழுங்கடித்து, கல்லூரி வளாகத்தினுள் ஒரு ஆரோக்கியமான கல்விச் சூழல் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டிப்பாக ஏற்படுத்தாது என்பது தெளிவு.

விஜய் அமந்தா

#SayNoToWar : போரை விரும்புகிறவர்கள் உங்கள் குழந்தைகளை அனுப்பி வையுங்கள் !

புல்வாமா தாக்குதலின் விளைவாக இந்த முறை கர்நாடகத்தில் 22 பாராளுமன்ற தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அம்மாநிலத்தின் பா.ஜ.க தலைவர் எடியூரப்பா.

புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த போது ஜிம் கார்பெட் உயிரியல் பூங்காவில் டிஸ்கவரி சேனலின் ஆவணப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நரேந்திர மோடி, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானில் வீழ்த்தப்பட்டுள்ள சமயத்தில் கேலோ இந்தியா (Khelo India) என்கிற செல்போன் செயலியின் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார். ராஜ்நாத் சிங் உள்ளிட்ட சில அமைச்சர்களோ பாரதிய ஜனதா கட்சி சார்பான தேர்தல் பிரச்சாரங்களில் மூழ்கியுள்ளனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ஊறுகாய் மாமியிடமிருந்து எந்த அனக்கமும் இல்லாத நிலையில் போரை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளனர் இந்திய ஊடகங்கள். இந்தியா நடத்திய அதிரடி விமானத் தாக்குதலில் 400 பேர் மரணம் என ரிபப்ளிக் தொலைக்காட்சி தெரிவித்ததை அடுத்து பக்தாள் நடத்தும் வாட்சப் குழுமங்களில் அந்த எண்ணிக்கை நான்காயிரமாக உயர்ந்தது. போர் துவங்கும் சூழல் ஏற்பட்டால் மூன்றே நாளில் ஒரு இராணுவத்தை எழுப்பும் ஆற்றல் தமக்கு உள்ளதென வீராவேசமாக கூச்சலிட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பஜனை பாடிக் கொண்டிருக்க, அபிநந்தன் என்கிற விமானப்படை அதிகாரி பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இரண்டு இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

திட்டமிட்டு உருவாக்கப்படும் போர் வெறியும், போர்ச் சூழலும் எதற்காக என்பதை எடியூரப்பா தெளிவாக விளக்கியுள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்த அபத்த நாடகத்தின் மேல் காறியுமிழ்ந்துள்ளனர். டிவிட்டர் தளத்தில் #SayNoToWar என்கிற ஹேஷ்டேகின் கீழ் போர் வெறியைத் தணிக்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம் சங்கிகள் தரப்பில் இருந்து Say Yes to War என்கிற ஹேஷ்டேக் துவங்கப்பட்டு அதன் கீழ் “வெட்டுவோம் குத்துவோம்” ரக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

டிவிட்டரில் வெளியான போர் எதிர்ப்பு கருத்துக்களின் ஒரு சிறிய தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

♦ ♦ ♦

யாருக்கு வேண்டும் சண்டை? யார் போருக்குச் செல்ல வேண்டும்? போர் என்பது ஒரு தாயின் மடியை காலியாக்க கூடியது என்கிறார் @ComradeSourav இந்த ட்வீட்டுடன் அவர் இணைத்துள்ள படத்தில் போர் வெறி பிடித்த ஆங்கில ஊடகவியலாளர்களின் படங்களை வெளியிட்டு அதில் “இவர்கள் அனைவரையும் எடுத்துக் கொண்டு அபிநந்தனைத் திருப்பித் தாருங்கள்” என பாகிஸ்தானுக்கு கோரிக்கை வைக்கிறார்.

உஸ்மான் ஹைதர் என்கிற பாகிஸ்தானியர் எழுதியுள்ளதைப் பாருங்கள்: “ஒரு பாகிஸ்தானியாக இந்த நல்ல குணம் கொண்ட இராணுவ அதிகாரியின்  குடும்பத்தினர் படும் சிரமங்களுக்காக வருந்துகிறேன். எல்லைகளைக் கடந்து நாம் அனைவரும் ஒரே மாதிரியான கலாச்சாரம் கொண்டவர்கள். அவர் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்றும், அதுவரை அவர் நல்ல முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். பாகிஸ்தானியர்களாகிய நாங்கள் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என எங்களது பிரதமரும் இராணுவமும் சொல்கின்றனர்.

“நீயும் போருக்குச் சென்றுள்ளாயா என்று கேட்கிறவர்களுக்கான எனது பதில் – இல்லை. ஆனால், எனது குடும்ப உறுப்பினர்கள் இராணுவத்தில் இருக்கிறார்கள். எந்த குடும்பமும் இழப்பை சந்திக்க கூடாது என்று விரும்புகிறேன். நான் ஒரு சாதாரண மனிதன். எனக்கு எனது மற்றும் எங்கள் இராணுவ வீரர்களின் பாதுகாப்பும் அமைதியும் முக்கியம். நாமெல்லாம் நமது பிராந்தியத்தின் அமைதிக்காக பிரார்த்திப்போம்”

மற்றுமொரு பாகிஸ்தானியர் இரண்டு பெரும் அணுவாயுத சக்திகளின் மறுபக்கம் என்னவென்பதைச் சொல்கிறார்.

சௌமோஜித் எனும் இந்தியர் “மக்கள் போரின் விளைவுகளையும், சில தீவிரவாதிகள் மற்றும் ஊடகத்தின் போர் வெறியையும் புரிந்து கொண்டு தவிர்ப்பதற்கு இதுவே நல்ல தருணம்” என்கிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹஸிம் நிஸார் தனது நாட்டின் இராணுவம் நீங்கள் சிரிப்பதையும் நடனமாடுவதையுமே விரும்புகின்றது என்கிறார். பாகிஸ்தான் இராணுவத்தினர் என்றாலே நீண்ட தாடியுடன் தலையில் குல்லாவுடன் காட்சியளிக்கும் வெறி பிடித்த முல்லாக்கள் என்று இந்திய ஊடகம் சித்தரிப்பதற்கு மாறாக உள்ளது நடமாடும் அந்த பாகிஸ்தானிய வீரர்கள் ஏற்படுத்தும் சித்திரம்.

“போரின் விளைவுகள் உங்களையும் நீங்கள் விரும்புகிறவர்களையும் தொடும் வரையில் உங்களுக்கு புரியாது. தூரத்தில் அமர்ந்து கொண்டு போர் வெறியூட்டுவது பார்ப்பதற்கு நன்றாக இருக்கலாம்; ஆனால் நல்லதில்லை” என்கிறார் சுச்சி என்கிற இந்தியர்.

“சண்டையிடுகிறவர்கள் போரை விரும்புவதில்லை. போரை விரும்புகிறவர்களோ சண்டையிடுவதில்லை. போர் வேண்டுமெனக் கேட்டு கூச்சலிடுகிறவர்கள் போர்க்களத்திலிருந்து மிக தொலைவில் அமர்ந்துள்ளனர். நீங்கள் இந்த போரை விரும்பினால் தயவு செய்து உங்கள் குழந்தைகளை அனுப்பி வையுங்கள்” என்கிறார் இன்னொரு பாகிஸ்தானியர்.

படிக்க:
அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை !
மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?

ஜுனாய்த் அகமது என்கிற பாகிஸ்தானியர் அபினந்தன் பாகிஸ்தானிய இராணுவ அதிகாரியுடன் தேனீர் அருந்தியவாறு பேசிக் கொண்டிருக்கும் காணொலியை பதிவிட்டுள்ளார்.

”பெரிசுகள் போரைக் குறித்துப் பேசுவார்கள்; இளைஞர்களோ போரில் செத்துப் போவார்கள்..” என்கிறார் ரஞ்சித்குமார்.

”போர் என்பது தகப்பனை இழந்த குழந்தைகள், கணவனை இழந்தை மனைவிகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர். தேர்தலில் வெற்றி பெறுவதை நிறுத்தி விட்டு மனங்களை வெற்றி பெறத் துவங்குங்கள்” என்கிறார் ஜஸ்டின் ஆரோக்கியராஜ்.

♦ ♦ ♦

பிப்ரவரி 27, 28 இரண்டு நாடுகளின் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் #SayNoToWar இடம் பிடித்துள்ளது. அரசியல்வாதிகளும், இவர்களின் அல்லக்கைகளான ஊடக சில்லறைகளும் போரை விரும்பட்டும். மக்களின் விருப்பம் அமைதியும் நல்லெண்ணமும் தான் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. நாமும் உறக்கச் சொல்வோம் #SayNoToWar.

தொகுப்பு: சாக்கியன்

நூல் அறிமுகம் : மதமும் சமூகமும் – தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா

தம் பற்றிய ஆய்வுகளுக்கான அடிப்படை நூல்களில் ஒன்றாக இது திகழ்கிறது. மார்க்சிய வழிமுறையைப் பின்பற்றி பொதுவாக மதங்களின் தோற்றத்தைப் பற்றியும் – குறிப்பாக, இந்து மதம் என்று நாம் இன்று அழைக்கும் மதம் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றியுமான மிகச்சிறந்த நூல் இது.

அனாதிகாலம் தொட்டே இந்து மதம் உலகுக்கு ஆன்மீகத்தை அளித்தது என்ற புரட்டை – புனிதமுலாம் பூசப்பட்ட மடமையை – நமது பேராசிரியர் உடைத்து நொறுக்குகிறார். இந்திய ஆதி பொருள்முதல் வாதத்தில் இருந்து ஆன்மிகக் கற்பனைகள் எவ்வாறு தோன்றின? ஏன் தோன்றின? என்பன போன்ற கேள்விகளுக்கு வரலாற்றுப் பூர்வமாகவும் – தத்துவ அடிப்படையிலும் விளக்கி மதத்தின் முறிவு சமதர்ம சமூக உருவாக்கக் கட்டத்தில் சர்வ நிச்சயம் என உறுதிபட உரைக்கிறார்.

காலனி ஆட்சியாளர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தியதை எதிர்த்த விடுதலைக்கான போர் இந்திய தேசியத்தை அனைத்துத் துறைகளிலும் கட்டமைக்க வேண்டிய பணியை தேசிய இயக்கத்துக்கு வழங்கியது. இந்திய தேசியத்தின் இருப்புக்கான நியாயங்களை அது வழங்க வேண்டி வந்தது. தத்துவத் துறையிலும், வரலாற்றுத் துறையிலும் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இது பெரிதும் நிறைவேற்றப்பட்டது. இந்திய தேசியத்தின் பெருமிதங்களை முன்வைத்தபோது ஆன்மிகம் அதன் பெருமைகளில் ஒன்றாக முன்னிறுத்தப்பட்டது. சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன், தாஸ்குப்தா போன்ற அறிஞர்கள் தத்துவத் துறையில் இதனை நிலைநாட்டப் பாடுபட்டனர். இயல்பாகவே, அவர்களுடைய முயற்சிகள் இந்திய அறிவியல் மரபுக்கும், பொருள் முதல் வாத மரபுக்கும் (நாத்திக மரபு) எதிரானவையாகவே முடிந்தன. குடும்பம், ஒழுக்க நெறிகள், பண்பாடு போன்றவற்றில் காணப்படும் இந்தியத் தன்மைக்கு ஆன்மிகமே அடிப்படை எனவும், நாத்திகம் அவற்றுக்கெல்லாம் எதிரானது எனவும் மதவெறிக் கூச்சல் அதனையொட்டிப் பரப்பப்பட்டது.

இந்தியத் தத்துவஞானத்தின் வரலாற்றில் கருத்துமுதல் வாதத்துக்கும் – பொருள்முதல் வாதத்துக்கும் இடையிலான போர் – ஆன்மிகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையிலான ஓய்வறியாப் போர் நடந்துவந்த வரலாற்றை எடுத்துரைத்து இந்தியப் பொருள்முதல் வாதத்தின் மேன்மையை நிலைநாட்ட வேண்டிய அவசியம் எழுந்தது.

அதனைத் தத்துவஞானத் துறையில் பேராசிரியர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா தனியராய் நின்று சாதித்தார். இந்திய மார்க்சியத்தை வளப்படுத்தினார். இந்தியப் பகுத்தறிவு இயக்கத்துக்கு மகத்தான பங்களிப்பைச் செய்தார். வரலாற்றுத் துறையில் டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, இர்பான் ஹபீப் போன்ற மார்க்சிய அறிஞர்கள் அனைவரும் ஆற்றிய சாதனைகளுக்கு ஈடானது அது.

டாக்டர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா (பிறப்பு: 19-11-1918; மறைவு: 8-5-1993) இந்திய அறிவியல் வரலாற்றுக்கும், தத்துவஞானத்துக்கும் அளித்த மேதமை மிகுந்த பங்களிப்பு இல்லாமல் முற்போக்கு இயக்கம் தனக்கான கருத்தியல் கருவியை வளப்படுத்திக்கொள்ள இயலாது…

… மதம் குறித்த மார்க்சியத்தின் அணுகுமுறை, இந்திய மதம் / மதங்கள் தோன்றியதற்கான சமூக – பொருளியல் மற்றும் கருத்தியல் அடிப்படைகள், வேத மதம் பற்றிய மாயை, ஆதி பொருள்முதல் வாதத்தின் அழிவுக்கும் – ஆன்மிகத்தின் எழுச்சிக்குமான பொருளாயத, வரலாற்றுக் காரணிகள், மீமாம்சம் / பௌத்தம் போன்றவை ஆன்மிக வாதத்துக்குள் கொண்டு வரப்பட்டதன் வரலாறு முதலிய பலவும் இந்த நூலில் மிக எளிமையாக – ஒரு சாதாரண வாசகன் புரிந்து கொள்ளும் வரையில் “உரையாடல்’ மொழியில் சொல்லப்படுகிறது.

இந்த நூலைப் பயில்வதற்கு உதவியாக சில குறிப்புகளை இங்குத் தரவேண்டிய அவசியம் உள்ளது. தத்துவம் மட்டுமல்லாது தொல்லியல், மானுடவியல் போன்ற துறைகளின் துணையோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளதால் அத்துறை சார்ந்த சொல் வழக்குகளை அத்துறைகளின் சொல் வழக்குகளாகப் புரிந்துகொண்டு பயில்வது அவசியமாகும். அதேபோல, மாயை, மாய வித்தை போன்ற சொற்களை அவற்றின் இன்றைய புரிதல் அடிப்படையில் அல்லாது குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தின் தத்துவப் புரிதல் அடிப்படையில் புரிந்துகொண்டு பயில்வது மிகவும் அவசியமாகும். இல்லையேல், மதம் குறித்த இந்த உரையாடலைக் கொச்சைப்படுத்திப் புரிந்துகொள்ளும் அபாயம் ஏற்படும். இந்தப் பொருளைப் பற்றி மேலும் பயில்வதற்கான நூல் பட்டியலாகவே கடைசியில் இணைக்கப்பட்டுள்ள நூல் பட்டியலைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த நூல்களைப் பயில்வது மதம் குறித்த மார்க்சிய அறிதலுக்கு மேலும் துணை புரிவதாக அமையும். (நூலின் பதிப்புரையிலிருந்து)

படிக்க:
மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?
இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !

ஒரு காலத்தில் தவிர்க்கவியலாமல் தோன்றிய மதம் இறுதியில் மறைந்தே தீரவேண்டும். நமது விவாதத்துக்கு வசதியாக நாம் இதனை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். முதலாவதாக, மதத்திற்கு உறுதியான ஒரு துவக்கம் உள்ளது. இரண்டாவதாக, அது உதிர்வதைத் தவிர அதற்கு வேறு எதிர்காலம் இல்லை. முதலாவது அம்சத்தை நாம் இரு கட்டங்களாக விளக்கலாம். நாம் மதம் என்றழைப்பதை மனிதகுலம் அறியாத காலம் ஒன்று இருந்தது. அது வர்க்கங்களாகப் பிளவுபடுவதற்கு முந்திய தொல்குடி சமுதாயமாகும். காட்டுமிராண்டி மனிதர்கள் உலகின் சில பகுதிகளில் இன்னமும் வசித்து வருகின்றனர்.

வர்த்தகர்களும், தொண்டு நிறுவனங்களும் இல்லாது இருந்த இவர்களிடம் மதம் கிடையாது. மதத்திற்குப் பதிலாக இவர்கள் மாயவித்தைகளை கடைபிடித்து வந்தனர். வரலாற்றுக்கு முந்திய சமுதாயத்தை நாம் உள்நோக்கும்பொழுது அங்கு மதத்திற்குப் பதிலாக மாயவித்தை இருந்ததை நம்மால் அறிய முடிகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக, வர்க்கத்துக்கு முந்திய சமுதாயத்தில் மனிதன் இதே நிலையில்தான் இருந்து வந்தான். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மிகவும் தாழ்நிலையில் இருந்ததே இதற்குக் காரணமாகும். தமது குறைந்தபட்ச தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள மட்டுமே அதிகபட்சமாக உழைக்க வேண்டியிருந்தது.

டாக்டர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா.

உபரி எதுவும் இல்லாததால்தான் சமுதாயத்தின் ஒரு பகுதி மக்கள், மற்றொரு பிரிவினரின் உழைப்பைக் கொண்டு வாழ்வது சாத்தியமில்லாமல் இருந்தது. இத்தகைய எளிமையான உற்பத்தித் திறனைச் சார்ந்து வாழவேண்டிய, ஆதரவற்ற கட்டத்தில் மனிதன் தனது உண்மையான தொழில்நுட்பத்துக்கு மாறாக, மாயையான ஒன்றின் தேவையை உணர்ந்தான். அதுவே மாயவித்தை ஆகும்…

… உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி காரணமாக மனிதன் தனது அடிப்படைத் தேவைகளுக்குக் கூடுதலாக ஒரு கட்டத்தில் உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றான். அதாவது உபரியாக உற்பத்தி செய்யத் தொடங்கினான். இது நடைபெற்றபொழுது மனிதன் நாகரிகத்தின் வாசற்படியை எட்டினான். ஆனால், இன்னும் முழுமையான நாகரிகத்துக்கு வரவில்லை…

… சமூக உபரியை ஆரம்ப நிலையிலுள்ள நகர மையங்களுக்குக் கொண்டு செல்ல சில கருவிகள் தேவைப்பட்டன. இதற்குத் தேவையான எல்லாவிதமான கருவிகளையும் பரிசீலித்த நாம், மிகவும் சாத்தியமான, சாத்வீகமான மதம் என்ற ஒரு சித்தாந்தக் கருவி உருவானதைக் கண்டறிந்தோம். வெற்றிடத்திலிருந்து இது உருவாகவில்லை. மாயத் தன்மையுடன் விளங்கிய  புராதன மாயவித்தையிலிருந்து திறம்பட உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இது பல்வேறு தாய் தெய்வங்களும், கடவுள்களும் உருவாக வழிவகுத்தது…

… இத்தகைய தாய் தெய்வங்களும், கடவுள்களும் நேரடி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான பொருட்களை அளித்ததாக அவர்கள் கருதினர். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்காகச் செயல்பட, அவர்களது விவகாரங்களைக் கவனிக்க இகலோக அல்லது பூவுலகப் பிரதிநிதிகள் அவர்களுக்குத் தேவைப்பட்டனர். எனவே, அவர்களிடமிருந்து மதகுருமார் வர்க்கம் என்ற சமூகப் பிரிவுத் தோன்றியது. அவர்கள் மட்டுமே வாழ்வின் ரகசியங்களை அறிந்திருந்தனர். இவ்வாறுதான் மதம் உருவாக்கப்பட்டது அல்லது செயல்பாட்டுக்கு வந்தது. (நூலிலிருந்து பக். 181-183)

நூல்: மதமும் சமூகமும்
தமிழில்: டாக்டர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா
தமிழில்: இரா.சிசுபாலன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி: 044 – 2625 1968 | 2635 9906

பக்கங்கள்: 202
விலை: ரூ 100.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: noolulagam | panuval

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை !

புல்வாமா தாக்குதல் நடந்த பிறகு அரசும், ராணுவமும் அடையும் பதட்டத்தை விட, இந்துத்துவ கும்பலுக்கு அடியாள் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்களின் கூச்சல், பதட்டம் அதிகமாக இருக்கிறது. தாக்குதல் நடந்த அன்று அர்னாப் கோஸ்வாமி பாகிஸ்தானுடன் போரிட்டே ஆக வேண்டும் என குதித்தார்.

அர்னாப்பின் கதறலை மெல்லிய தொனியில் பேசும் நம்மூர் பத்திரிகையாளர் மாலன், இதுதான் சந்தர்ப்பம் பாகிஸ்தானை முற்றாக குண்டு போட்டு அழிக்க வேண்டும் என யோசனை சொன்னார்.

இரு தினங்களுக்கு முன் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் தீவிரவாத முகாம்களை அழித்ததாக  இந்தியா சொன்னபோது, மாலனுக்குள் இருந்த முழு சங்கியும் வெளிப்படுகிறார். அவர் எழுதிய முகநூல் பதிவில்,

“ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! இன்று அதிகாலை நடந்த அதிரடித் தாக்குதலின் சிறப்பு என்ன?

போர் வியூகம் வகுக்கும் மாலன்…

புல்வாமாவில் தாக்குதல் நடத்திய உடனேயே பதிலடி இருக்கும் என்று ஜெய் ஷே முகமது எதிர்பார்ததது. அதனால் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் இருந்த முகாம்களை 100 கிலோமீட்டர் உள்ளே, அதாவது பாகிஸ்தான் எல்லைக்குள் மாற்றியது. அது பத்திரமான மலைப்பகுதி. எவ்வளவு பத்திரமாணது என்றால் அமெரிக்காவிற்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டு ஒசாமா பின் லேடன் ஒளிந்திருந்த இடம் அது. அது 5 நட்சத்திர ஓட்டலின் வசதிகளோடு கூடிய இடம்.

தீவிரவாதிகள் அந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது பாகிஸ்தானில் இருக்கிறது. இந்தியா எல்லை தாண்டி வந்து தாக்காது என்று நினைத்தது. ஏனென்றால் 1971 -க்குப் பிறகு, 48 வருடங்களாக இந்தியா எல்லை தாண்டி சென்று தாக்கியதில்லை.

அதன் கணக்குகள் பொய்த்தன. அந்தக் காலங்கள் மலையேறிவிட்டன என்று அதற்குத் தெரியாது. இந்தியா தீவிரவாதிகள் பின்வாங்கக் காத்திருந்தது. அதே நேரம் வேறு பல வழிகளில் அழுத்தம் கொடுத்து வந்தது. தீவிரவாதிகள் இடம் மாறியதும் துணிந்து எல்லை தாண்டிப் போய் போட்டுத் தள்ளியது. இறந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை 400! (375 பயிற்சியாளர்கள்+25 பயிற்சி அளிப்பவர்கள்.)

40 -க்கு பதில் 400! இதுதான்(டா) இந்தியா!” என்கிறார்.

*****

ந்தியாவின் தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது குறித்து இந்திய அரசே இதுவரை உறுதியான எந்தத் தகவலையும் கூறவில்லை. வெடி சத்தம் கேட்டது உண்மைதான், ஒரே ஒருவருக்கு, அதுவும் அந்த மலைப் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு காயம் என்பதாக பிபிசி ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டது.  உண்மை இப்படியிருக்க, அக்மார்க் சங்கிபோல, மாலன் “40 -க்கு பதில் 400” என அவிழ்த்து விடுகிறார்.

புதன்கிழமை நடந்த தாக்குதலின் போது பாகிஸ்தான் வசம் அபிநந்தன் என்ற வீரர் சிக்கினார். அவரை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என சமூக ஊடகங்களில் இந்திய மக்களும் பாகிஸ்தானியர்களும்கூட வலியுறுத்திய நிலையில், கீ போர்டில் போர் புரியும் மாலன், “சிராய்ப்புக் கூட இல்லாமல் சண்டையில் ஜெயித்த ஹீரோக்கள் சினிமாவில் கூட இல்லை!” என அஞ்சா நெஞ்சனாக எழுதுகிறார்.

நல்லா கூவுற தம்பி….

மாலனைப் போல டிவி ஸ்டியோவில் உட்கார்ந்துகொண்டு  ‘போர் போர்’ என கத்திக்கொண்டிருக்கிறார் அர்னாப் கோஸ்வாமி. போர் வேண்டாம் என முழக்கங்கள் எழ ஆரம்பித்த நிலையில், போருக்கு போயாக வேண்டும் என அடம்பிடிக்கும் அர்னாபை தயவு செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வையுங்கள் என ட்விட்டரில் பலர் கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

“அன்புள்ள பாகிஸ்தானியர்களே இங்குள்ள அர்னாப் கோஸ்வாமியை அழைத்துக்கொண்டு, அபிநந்தனை திருப்பி அனுப்பி விடும்பம்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் ரவிச்சந்திரன்.

முன்னாள் இராணுவ வீரரான சாவூர், “அபிநந்தனை மீட்க அர்னாப், கவுரவ் சாவந்த், நாவிகா குமார், ராகுல் கன்வால், ராகுல் சிவசங்கர் போன்றோரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்.

அதுபோல, மாலனையும் அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ் முகநூல் பதிவர்கள் பலர் விரும்புகிறார்.

“மாலன் போன்ற போர் விரும்பிகள் தங்கள் குடும்பத்துடன் காஷ்மீர் சென்று எதிரிகளை சுட்டு வீழ்த்தி தங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டும். இதுதான் பொருத்தமான நேரம். மாலன், கூச்சப்பட்டு அமைதியாக இருந்துவிடுவார் என்பதால் நாம் அவரை போர் முனைக்கு செல்வதற்கு உற்சாகப்படுத்த வேண்டும். தேசமே பதற்றத்தில் இருக்கும்போது தேசபக்தாளுக்கு ஃபேஸ்புக்கில் என்ன வேலை?” என்கிறார் பாரதி தம்பி.

***

“நமது ராணுவத்தில் நேரடியாக யுத்தத்தில் இறங்கும் சிப்பாய்கள் அனேகமாக பஞ்சமர்களும் சூத்திரர்களுமே. 10% இடஒதுக்கீட்டின்படி உயர்சாதியினரையும் அங்கே பணியமர்த்த வேண்டும். மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்குதான் முரட்டு குணம் வரும் என்று சங்கிகள் கூறுவதால் அவர்களும் அதை சாப்பிட வேண்டும். இந்த ஏற்பாட்டிற்கு பிறகு போருக்கு போனால் வெற்றி நிச்சயம். சரிதானே மாலன்..?” எனக் கேட்கிறார் பேராசிரியர் அருணன்.

***

இந்தியாவின் தாக்குதல் குறித்து தெலுங்கு செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ராணுவ உடையணிந்து செய்தியை வழங்கினார். அதைக் குறிப்பிட்டு, “இதுபோல இனி, திரு மாலன் நாரயணன் தொலைகாட்சிவிவாதங்களுக்கு மில்ட்ரி ட்ரஸில் வரவேண்டும். அதே வேகத்தோடு எல்லைக்குப் போய் பாகிஸ்தான் மண்ணில் குதித்து… படபடவென்று தன்னைத் தானே சுட்டுக் கொள்ள வேண்டும்…” என்கிறார் இரவிக்குமார்.

***

“இந்திய ராணுவ தளபதி அவர்களுக்கு..

தமிழ்நாட்டில் மாலன் என்றொரு ஸ்பார்ட்டன் வீரர் ஒருவர் போர் புரிய துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்.. தயவு செய்து வந்து அள்ளிட்டு போகவும்.. ” என்கிறார் கார்ட்டூனிஸ்ட் பாலா.

***

“போர் வேண்டும்” என்று தினம் தினம் சமூக வளைதளங்களில் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் முதலில் தங்கள் குடும்பத்துடன் ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு சென்று குடியேற வேண்டும்.

மாலன், மாரிதாஸ் போன்ற பிஜேபி அயோக்கியர்கள் தங்கள் சுய லாபத்திற்காக, பாதுகாப்பான இடங்களில் அமர்ந்து கொண்டு போர் வேண்டும் என்று மக்களின் உணர்ச்சிகளை தூண்டி வருகிறார்கள்…” என காட்டமாகிறார் சந்திரசேகர்.

***

“மாலன் என்ற ஆளுங்கட்சி ஜால்ரா பத்திரிகையாளர் அவருடைய 300 தீவிரவாதிகள் கதையை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எழுதினார் என்று விளக்கம் கொடுப்பாரா? கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பற்றிய விவரங்களை உளவுத்துறை தெரிவிக்குமா? இந்த தாக்குதல் குறித்து இந்திய விமான படை நேரடியாக அறிக்கை அளிப்பார்களா?

ராணுவ தாக்குதல் குறித்து சந்தேகம் கொள்வதற்கு மிகவும் கஷ்டமாக தான் இருக்கிறது. ஆனால் பிஜேபி-யினர் அள்ளி விடும் கதைகளால் ராணுவத்தின் பொறுப்பு கேள்விக்குரிய விஷயமாக ஆக்கப்பட்டுள்ளது தான் இதற்கு காரணம்.” என்கிறார் அரசியல் நையாண்டி.

***

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது!
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!
– என்ற நாமக்கல் கவிஞர் வழியிலேயே மாலனுக்குப் பதில் சொல்லத் தொடங்குகிறேன்.

போர் என்றால் நடுங்குகுறார்கள் புறநானுற்றின் புலிப் போத்துகள் என்று மாலன் பதிவிட்டத்தை நான் காண நேர்ந்தது. மாலன் வரிகளையும் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. பறநானூற்றின் புலிப் போத்துகள் என்று தமிழர்களை தான் குறிப்பிடுகிறார் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவ்வரியால் தான் தமிழ்ப் பேசினாலும் தான் ஒரு தமிழினில்லை என்று தன்னுடைய அடையாளத்தையும் அதே ஒற்றை வரியில் உறுதிப் படுத்தியிருக்கிறார். புலிப் போத்துகள் என்ற சொல்லை விடுதலைப் புலிகளை சிறுமைப் படுத்தவும் பயன்படுத்திக் கொள்வதை நான் உணர்கிறேன்.

அதிகாரத் திணிப்பை எதிர்த்து போராடிய புறநானூற்றின் புலிப் போத்துகள் தன் இனத்தின் ஒரு பகுதியை இழந்தே இருக்கிறோம். போரின் வலியை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். அதன் பாதிப்புகளையும் நிகழ் காலத்தில் கண்டிருக்கிறோம்.

இந்நாட்டிலும் ஆரிய திராவிடப் போரை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறோம். நாங்கள் கருத்தியல் போர் நடத்திக் கொண்டிருக்க, கல்வி கற்பதாலேயே எதிர்த்துப் பேசுகிறார்கள் என்றறிந்து படுகொலைகளை கல்வி நிறுவனங்களின் மூலமாகவும், தகுதித் தேர்வு என்ற பெயர் மூலமாகவும் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறீர்கள் மாலன்.

உண்மையில் உங்கள் நெஞ்சில் உரமிருந்தால் அபிநந்தனின் குடும்பத்தைப் பார்த்து விட்டு வாருங்கள். போரினால் கைக்கால் இழந்த இராணுவ வீரர்களையும் அவர்கள் குடும்பத்தின் நிலையையும் பார்த்து விட்டு வருங்கள். போரினால் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களையும் சந்தித்து விட்டு வாருங்கள்.

இதற்கு மேலும் இறுதியாக ஒரு மாத காலம் காஷ்மீரில் இருக்கும் இசுலாமியர்களின் வீடுகளில் ஒரு மாதம் காலம் இருந்து விட்டு வாருங்கள்.

பின்னர் உங்கள் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் போருக்கு அனுப்பி வைத்துவிட்டு வாருங்கள்.

போலி தேசப் பக்தியால் ஓட்டுப் பொறுக்காதீர்கள் மாலன் அவர்களே!”  முரளிகிருட்டிணன் சின்னதுரையின் பதிவு இது.

***

“எல்லையில் காவல் காக்க மாலன் செல்ல இருப்பதாக செய்தி வருகிறது. உண்மையா?” எனக் கேட்கிறார் யோ. திருவள்ளுவர்.

***

மாலன், அர்னாப் வகையறா சங்கி பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், ஆளும் அரசுக்கு கூஜா தூக்கும் பல ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

“ தினந்தந்தி – தமிழ்நாட்டின் நாடித் துடிப்பு. அதிகபடியான தமிழர்களால் வாசிக்கப்படக் கூடிய தினசரி.

நேற்று : “பழி தீர்த்தது இந்தியா”.

இன்று : “பதிலடி தாக்குதலில் ஈடுபட்ட போது, சென்னை விமானி சிக்கினார். வீடியோ வெளியிட்டதுக்கு இந்தியா கண்டனம்”.

இவை இரண்டும் தான் தலைப்பு செய்திகள்.

இதை கொட்டை எழுத்தில் போட்டு விட்டு, பக்கத்தில் அபிநந்தனின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறது. வீடியோ வெளியிடக் கூடாது என்று இந்தியா சொன்னதை சொல்லிக் கொண்டே, புகைப்படங்களை வெளியிட்டு, “பார்த்தீங்களா மக்களே, இப்படி தான் பாகிஸ்தான் நம்முடைய வீரர்களை நடத்துகிறது” என்று சொல்லாமல் சொல்வது எந்த மாதிரியான நயத்தகு ஊடக தர்மம்? இதை ஊடக வேசித்தனம் என்று சொல்லாமல், வேறு எப்படி டிப்ளமேடிக்காக சொல்வது???

உள்ளே ஒரு பெட்டி செய்தியாய் ‘மசூத் அசார் ஒத்துக் கொண்டார்’ என்று ஒரு செய்தி வருகிறது. மசூத் அசார் இதற்கு முன் சொன்ன எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, இப்போது 300 – 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று சொன்ன பொய்யினை சமன் செய்ய, திடீரென என்ன மசூத் அசாரின் மீது அக்கறை? இதற்கு முன் மசூத் அசார் பேசியது அத்தனையும் பெரும் பிரசாரங்கள். பொய்கள். ஜிகாதி உளறல்கள். நேற்று சொன்னது மட்டும் சத்தியம். என்ன லாஜிக் இது?

மசூத் அசார் உருதுவில் சொன்னது பாகிஸ்தானிய உருது இதழ்களில் வெளியாகி இருக்கிறது. கூகிள் ட்ரான்ஸ்லேட் வைத்தால் ஒரளவிற்கு புரியும். அவர் சொன்னது “இந்திய விமானங்கள் அத்து மீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்திருக்கின்றன” என்பது மட்டுமே. ஆனால், தினந்தந்தி மசூத் அசார் முழுமையாக ஒத்துக் கொண்டார் என்று எழுதுகிறது.

பாகிஸ்தான் இரண்டு மிக் விமானங்களை வீழ்த்தியது என்று பாகிஸ்தான் பிரதமரே பகிரங்கமாக ட்வீட் போடுகிறார். ஆனால் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்திய சார்பு ஊடகங்கள், இந்திய நிலையினை எடுப்பதில் நமக்கு சிக்கலில்லை. ஆனால், நெடுசாண்கிடையாக இப்படி மோடிக்கு கால் கழுவி விட வேண்டிய அவசியமென்ன? பிறகு என்ன எம்-மிற்கு நடுநிலை நாளிதழ் என்கிற பெயர்? இதற்கு பேசாமல் ‘தினமலர்’ மாதிரியும், அதன் முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள் மாதிரியும் இருந்து விட்டு போகலாமே? ஊடகங்களில் இருக்கும் “மாமாக்கள்” என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது ஊரறிந்தது. ஆனால் ஊடகமே “மாமா” வேலை பார்த்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது?

ஆதித்தனார் குடும்பம் என்பதால் தான் உங்களுக்கு தமிழகத்தில் மரியாதை. அதை நீங்களே கெடுத்துக் கொண்டால், நாளை மக்களை குறை சொல்லாதீர்கள்.” என்கிறார் நரேன் ராஜகோபாலன்.

“நாட்டில் நல்லது கெட்டது என்ன நடந்தாலும் அதனால் ஒரு மயிரைக்கூட இழக்காமல் லாபம் மட்டுமே பார்க்கும் மேட்டுக்குடிகளின் கொழுப்பெடுத்த வாய்கள் இப்படித்தான் பேசும்.

பார்ப்பனீயம் என்பது மனிதக் கறியை ருசி பார்க்கும் சிந்தனை, அதனால்தான் அது ஆடு போன்ற அல்ப இறைச்சியை புசிப்பதில்லை.” என்கிறார் வில்லவன் இராமதாஸ்.

ஐந்தாண்டு கால ஆட்சி, இந்தியாவின் பேரழிவாக அமைந்துவிட்ட நிலையில், பதவி போகக்கூடும் என்ற கணிப்பில் போர் என்ற பேரழிவு ஆயுதத்தை கையிலெடுத்துள்ளது மோடி தலைமையிலான இந்துத்துவ அரசு. இந்துத்துவ கும்பலைத் தவிர, பொது மக்கள் எவரும் போரையும் விரும்பவில்லை; மோடி நடத்தும் நாடகத்தையும் இனம் கண்டுவிட்டார்கள்.

மோடியின் ஊதுகுழல்களாக மாறிவிட்ட பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் பொய் பித்தலாட்டங்களை மறைக்க தேசபக்தியின் பெயரால் போர் வெறி பரப்புரை செய்கின்றனர். இந்துத்துவ கும்பலோடு, இந்த ஊதுகுழல்களையும் மக்கள் ஒதுக்கித் தள்ள வேண்டும்.

தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு

இந்த தேசியவெறியின் பின்னால் பா.ஜ.க. மறக்கடிக்க முயல்வது …!

இந்த தேசியவெறியின் பின்னால் பா.ஜ.க. மறக்கடிக்க முயல்வது …

♣ ரஃபேல் விமான பேர ஊழல்.
♣ செல்லாத நோட்டில் செத்து மடிந்த உயிர்கள்.
♣ பண மதிப்பு நீக்கத்தால் நொடித்துப்போன தொழில்கள், இழந்த வேலைவாய்ப்புகள்.
♣ ஜி.எஸ்.டி. எனும் வரிவிதிப்பால் நிர்மூலமாகிப்போன தொழில்துறை.
♣ வேலைவாய்ப்பு வீழ்ச்சியில்1970-களின் நிலைமைக்கு சென்றுவிட்ட இந்தியா.
♣ நீட் தேர்வு என்ற பெயரில் நொறுக்கப்பட்ட ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு.
♣ அனிதாவின் உயிர்.
♣ ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், சி.பி.ஐ., தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளையும் காவி மயப்படுத்தியது.
♣ அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை அமித்ஷாவின் ஏவல்படையாக மாற்றியது.
♣ உச்சநீதிமன்ற நீதிபதிகளே பிரஸ் மீட் வைத்து கதறும் அளவுக்கு நீதித்துறையை சீரழித்தது.
♣ மாநிலக் கட்சிகளை மிரட்டி அடிபணிய செய்து, கடைசியில் கட்சியையே கபளிகரம் செய்து, அடுத்தவன் கட்சி ஆபீஸில் வெட்கமின்றி தன் கட்சி தலைவர் படத்தை வைத்துக்கொள்வது.
♣ எட்டு வயது பெண் குழந்தையை கோயிலுக்குள் வைத்து கூட்டு பாலியல் வல்லுறவு செய்த கொடூரர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் போன பா.ஜ.க.வின் கேவலம்.
♣ மாட்டுக்கறி சாப்பிடுவதை கொலைக்குற்றம் போல சித்தரித்த மக்கள் விரோத நடவடிக்கை.
♣ அக்லக் உள்ளிட்ட மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சொல்லி நிகழ்த்தப்பட்ட இந்து வெறி கும்பல்களின் கொலைகள்.
♣ கவுரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் என எழுத்தின் வழியே சமூக மாற்றத்துக்காக உழைத்தவர்களை இந்துத்துவ கும்பல் சுட்டுக் கொன்றது.
♣ நீதிபதி லோயா சுட்டுக் கொல்லப்பட்டது.
♣ உலகப் புகழ்பெற்ற வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, அருண் பெரைரா, கன்சால்வேஸ், வரவரராவ் ஆகிய இந்தியாவின் முக்கியமான மாற்றுக் குரல்களை அப்பட்டமான போலி வழக்குகளில் urban naxal என்ற பெயரில் கைது செய்தது.
♣ ஆனந்த் டெல்டும்டே மீதான தொடரும் நெருக்குதல்கள்.
♣ பள்ளிக் கல்வித்துறை தொடங்கி உயர் கல்வித்துறை வரையிலும் அனைத்தும் காவிமயப்படுத்தப்பட்டுள்ளது.
♣ மினிமம் பேலன்ஸ் இல்லை என்று ஏழைகளின் வங்கிக்கணக்குகளில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பல நூறு கோடி ரூபாய்.
♣ மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய குஜராத் பனியா கும்பலுக்கு கொடுக்கப்பட்டு, வாராக்கடனாகிப்போன சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய்.
♣ 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு எனும் அநியாயம்.
♣ மக்களின் எதிர்ப்பையும் கடந்து மீண்டும், மீண்டும் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு வழங்கப்படும் புதிய உரிமங்கள்.
♣ காவிரி மேலாண்மை வாரியத்தில் தமிழ்நாட்டை கழுத்தறுத்தது.
♣ தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக்கட்டியது.
♣ உயர்சாதி ஏழைகள் எனும் அரிய வகை ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது.
♣ இந்தியா முழுக்க பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் ஓர் இணை அரசாங்கத்தை நடத்த முயல்வது.
♣ அருவருப்பான, ஆபாசமான போலி செய்திகளையும் தப்பு தப்பான வரலாறுகளையும் எந்த கூச்சமும் இல்லாமல் தினம்தோறும் பேசுவது.
♣ சபரிமலை உள்பட பெண்களின் வழிபாட்டு உரிமையை, சுப்ரீம் கோர்ட்டே சொன்னாலும் கூட மதிக்காத திமிர்த்தனம்.
♣ 3000 கோடியில் படேல் சிலை, 15 லட்சத்தில் கோட் அணியும் ஏழைத்தாயின் மகன்

– இவை அனைத்தையும் போர்வெறியின் பின்னால் மறைத்துவிடலாம் என பா.ஜ.க நினைக்கிறது. நாம் மீண்டும் மீண்டும் இவற்றைப் பேசுவோம்.

நன்றி: முகநூலில், பாரதி தம்பி

விட்டுட்டு ஒரேடியா ஓடிட மாட்டான்னு நம்புறோம் – திருநங்கை அக்காவுடன் ஒரு பயணம் !

1

“இன்னாம்மா இப்படி ரோதன பண்ணினுக்குற ஏறும்மா சீக்கரம்.” கடுகடுப்பில் கத்தினார் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்.

“நீங்க போங்க நான் வேற வண்டியில போய்க்கிறேன்.” நானும் கோபத்துல சட்டுன்னு பேசிட்டேன்.

ஓட்டுநருக்கும் எனக்குமான பிரச்சனை முடிவுக்கு வருவதற்குள் கதவு படக்கென திறந்தது. “சண்ட போட்ற நேரமா இது. வா வா உள்ள வா. எங்க சிரிச்சிகினே ஏறு பாக்கலாம்”  என்றார் உள்ளே இருந்த திருநங்கை ஒருவர்.

அவர் முகம் நிறைய மஞ்சள். குளிச்சு நெத்தியல வைச்சிருந்த பெரிய வட்டப் பொட்டு, இறந்து போன என் பெரியம்மா கண் முன்னாடி வந்து போனாங்க. அவர் வண்டியில ஏறச் சொன்ன விதம் கன நேரத்துல கோபத்த குறைச்சுடுச்சு. உடனே ஆட்டோவுல ஏறிட்டேன்.

“ஏம்மா போலீசு ட்ராஃபிக் சரிபன்னினுக்கிறான். அந்த எடத்தாண்ட கைய நீட்டினு நிக்கிறே. போலீசு பாத்தான்னா வண்டிய ஓரங்கட்டுவான். 100 தண்டம் அழுவனும், இல்லாங்காட்டி மரியாத இல்லாம திட்டுவான். சம்பாரிக்கிற 100 – 200யும் இவனுங்க புடிங்கினு போனா வீட்டுக்கு இன்னாத்த எடுத்துனு போறது. அதான் சத்தம் போட்டுட்டேன் தப்பா எடுத்துக்காதம்மா.” என்றார் ஓட்டுநர்.

“சரி விடுங்க, நானும் போலீசு நின்னத பாக்கல. ஏதோ கவனத்துல இருந்துட்டேன். தப்புதாங்க.”

“கவனத்த வேற எங்கேயோ வச்சுட்டு ரோட்டுல நிக்கிறியே நியாயமா?” என்றார் எதிரிலிருந்த திருநங்கை.

“என்னக்கா பண்ண சொல்றீங்க மனுசனுக்கு ஆயிரத்தெட்டு கவலை. அதுல ஒன்னு ஏங்கவலை” என்றேன்.

“அக்கான்னா கூப்ட்ட!” அழுத்தமாக ஒரு தடவை சொல்லி விட்டு சிரித்தபடி கையால் என் முகத்தை வருடி முத்தமிட்டார். இந்த வெள்ளேந்தியான அன்பு திருநங்கைங்க  கிட்ட மட்டும்தான் பாக்க முடியும்.

“இன்னிக்கு நம்ம வீட்டுக்கு வர்ற விருந்தினர் ஒரு திருநங்கை. அவங்க மனசு புண்படும் படியும் வித்தியாசமாகவும் நடந்துக்க கூடாது. அவங்களும் நம்மளாட்டம் மனிதர்கள்தான்” – எங்க வீட்டுக்கு ஒரு திருநங்கை வரும்போது ஒரு தோழர் இப்படி வகுப்பெடுக்கும் நெலமையிலதான் என் பார்வை எட்டு வருசத்துக்கு முன்னாடி இருந்தது அவருக்கு தெரியாது.

“பொழுது விடிஞ்சு பொழுது போனா கவலைக்கா பஞ்சம். அதையெல்லாம் யோசன பண்ணினா வேலைக்காகுமா? அதுவா நாமளான்னு ஒரு கை பாத்துறனும். வீட்ட விட்டு கெளம்ப சொல்லோ கட்டிருந்த துணியோட சேத்து கவலையையும் அவுத்து போட்டுட்டு வந்துறனும். வெளிய வந்து நாலு பேர பாத்து முகம் மலர்ச்சியா இருக்கனும்.

காலையில தூங்கி எழுந்தா பால்காரன் வருவான். டிவிக்காரன் வருவான் அதுக்காக இதெல்லாம் ஒதுக்கிப்புட்டு வாழ முடியுமா சொல்லு. வரட்டும் வந்து பாத்துட்டு போகட்டும். இன்னைக்கி இல்லன்னா நாளைக்கி தரப் போறோம்.

யாருக்கு கவலையில்ல சொல்லு. இந்த இவளுக்கு (அருகிலிருந்த இளம் திருநங்கை) இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் வச்சுருக்கு. இன்னும் மூணு பவுனு வாங்கனும் என்ன செய்றதுன்னு தெரியல. இவ கண்ண கசக்கியே உயிர விட்டுடுவா போலருக்கு.”

அந்த அக்கா பக்கத்துல இருந்த அந்த இளம் திருநங்கை எந்த நேரத்துலயும் அழுகுற நிலையில இருந்தாங்க. இவங்க பேசினத கேட்டதும் அவங்க கலங்கிய கண்ணுல இருந்து கண்ணீரே வந்துடுச்சு.

அவங்க திருநங்கைங்கனு தெரிஞ்சுதான் பேசினேன். இருந்தாலும் திருமணம், நகைன்னு அந்த அக்கா சொன்னதும் ஒரு தடுமாற்றம் எனக்குள்ள.

“அக்கா தப்பா எடுத்துக்காதிங்க நீங்க திருநங்கை தானே? இல்ல கல்யாணம் நகநட்டுன்னு பேசிக்கிறீங்களே எப்படி என்னன்னு…….” அவங்க மனசு புண்படாமெ கேக்குறோமான்னு ஒரு பயத்துல அப்புடியே நிறுத்திட்டேன்.

“ஆமாப்பா நாங்க திருநங்கையேதான். நாங்களும் ஒங்களப்போல ஆம்பளை ஆளுகள கல்யாணம் கட்டிக்கலான்னு சட்டமே வந்திருக்கு தெரியும்ல”

“தெரியும்கா. அப்புடின்னா அது காதல் கல்யாணமா தானே இருக்க முடியும். நீங்க நகைய பத்தியெல்லாம் பேசுறீங்களே!”

“காதல்தான். அது இவளுக்கு மட்டும் தான் வந்துருக்கு. ஆட்டோ ஓட்டுற பையனோட ஒரு தபா ஆட்டோவுல போயிருக்கா. பயல புடிச்சுப் போச்சு கட்டுனா அவனத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கிறா. அவனும் போனா போவுதுன்னு ஆறு பவுன் நகை வேணுங்கற கண்டிசனோட கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான்.”

படிக்க:
பொட்டை!
♦ வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்!

“எல்லாம் சரிதான் அதுக்காக நகைய முக்கியமா நெனைக்கிற ஆள கல்யாணம் பண்ணிக்கனுமா?.”

“அட பார்டா! எந்த உலகத்துல இருக்க நீ. எந்த கல்யாணம் நகை இல்லாம நடக்குது. நகை கேக்குற மாப்பிள்ள வேண்டான்னு கர்ப்பப் பையோட இருக்குற நீங்களே, புள்ள பெத்துக்க முடிஞ்ச நீங்களே, சொல்ல மாட்டிங்க. எங்களப் போல திருநங்கைங்க எப்படி சொல்ல முடியும்?

நாங்களும் ஒங்களாட்டம் பொம்பளைதான். கல்யாணம் பண்ணி குடும்பம் குட்டியா வாழனுமுன்னுதான் ஆசைதான், நடக்குமா சொல்லு. அப்பா ஆத்தான்னு குடும்பத்தோட இருக்குற பொண்ணுங்களே அத்தன செரமப்பட வேண்டிருக்கு. எங்க கதை நல்லதங்காளை விட சோகமானது.

உருவத்துல ஆணாவும் உள்ளத்துல பொண்ணாவும் ரெண்டுங் கெட்டான் வாழ்கை எங்களுக்கு. வீட்டுலயும் ஏத்துக்க மாட்டாங்க. வீட்டுக்கு வெளியேவும் ஏத்துக்க மாட்டாங்க. ஒன்னு பிச்சயெடுக்கனும் இல்ல அப்புடி இப்புடி பொழப்பு பொழைக்கனும். இவ ஒரு வாழ்க்கைய ஆசப்பட்டு அது அமையுது அப்ப கேட்டத குடுத்துதானே அவனும் வருவான்.”

“பையன் வீட்டு குடும்பத்துல ஏத்துக்கிட்டாங்களா”

“எப்புடி ஏத்துப்பாங்க. பிள்ள பெத்து தரமுடியாதவள எந்த குடும்பத்துல ஏத்துப்பாங்க. சொத்து கித்து இல்லேனாலும் ஏத்துக்குறவங்க பிள்ள வேணான்னு சொல்லுவாங்களா, சொல்லு பாப்போம். கொஞ்ச காலம் கழிச்சு வம்ச விருத்திக்கி அந்த பையனுக்கு வேற கல்யாணம் பன்னிப்போம்னு சொல்லிட்டுதான் நாளே குறிச்சாங்க.”

“அதுக்கு பிறகு எப்டிக்கா?”

“அதுக்கு பிறகு விட்டுட்டு ஒரேடியா ஓடிட மாட்டான்னு நம்புறோம். அப்பப்ப வந்து போவான். அசிங்கப்பட்ட வாழ்க்க இல்லாமெ ஒரு குடும்பம் புருச பொஞ்சாதிங்கற அந்தஸ்தோட இருப்பா. எங்க யாருக்கும் கிடைக்காத கவுரவம் அவளுக்கு வரப்போவுதுன்னு எங்களுக்கு சந்தோசம்” என்றவர் கல்யாணப் பொண்ணு கையை நம்பிக்கையோட அழுத்தி ஆறுதலா தலையை வருடி குடுத்தார்.

“கவலை படாதீங்க. சிவனும் பார்வதியும் சேந்துருக்கும் ஒடம்பு உங்களுக்கு. அதனால உங்களப் போல உள்ளவங்க எல்லாம் கடவுள் மாதிரி. நான் சொல்றேன் கல்யாணம் நல்லபடியா நடக்கும்.” என்றார் அருகில் அமர்ந்து இருந்த தெலுங்குக்கார அம்மா.

“நீ சொல்றத கேக்குறதுக்கு சந்தோசமா இருக்கும்மா. அதுக்காக வீட்டாண்ட உக்காந்திருந்தா காசு பணம் வந்துருமா. எங்களுக்கு தெரிஞ்ச எங்க ஆளுங்க கிட்ட கேட்ருக்கோம். விசயத்த கேள்விப் பட்டதும் சந்தோசமா தர்றதா சொல்லிருக்காங்க. அவங்க மட்டும் என்ன பேங்குல இருந்தா எடுத்து தரப் போறாங்க. எல்லாம் பிச்சதான்.”

“நீங்க எனக்கு சொன்னத நான் உங்களுக்கு சொல்றேன் கவலை படாதீங்கக்கா”

“அவளாவது நல்லா இருக்கட்டும்னு ஆசைதான் எங்க எல்லாருக்கும். நானும் இன்னைக்கி திருஷ்டி சுத்தி போடத்தான் போறேன். செவ்வாய் கிழமை வழக்கத்த விட பத்து ரூவா கூட கிடைக்கும்னு நம்பிதான் போறேன். கூட வாடின்னு கூட்டிட்டு அழுமூச்சியாட்டம் வர்ரா. அடுத்ததா கூட வந்து ஆட்டோவுல ஏறுன நீயும் கோபத்தோட வர்ற. இன்னைக்கி வசூல் மட்டும் கைய கடிச்சுது நீங்க ரெண்டு பேருந்தான் காரணம்.”

“கண்டிப்பா நல்லது நடக்கும். கல்யாணப் பொண்ணுக்கு முன்கூட்டியே வாழ்த்த சொல்லிக்கிறேன்”

“எதுக்கு அவசர அவசரமா வாழ்த்து சொல்லிட்ட, எறங்கப்போறீயா?”

“ஆமாக்கா” என்றபடி பலசரக்கு பையை நகத்தினேன். பையை கையில் வாங்கியவர் என்னை இறங்கச் சொல்லி கையில் கொடுத்து “பாத்துப் போடிம்மா என் செல்லம்” என்றார்.

இறங்குறதுக்கு முன்னாடி “நீங்க எம்பெரியம்மா மாதிரி இருக்கீங்கன்னு” சொல்லணும்னு நினைச்சேன், மறந்துட்டேன்.

சரசம்மா

#MeToo – வில் விடுபட்ட பழங்குடியின – பட்டியலின பெண்களின் ‘கண்ணியத்துக்கான பேரணி’ !

0

சிலர் விசைப் பலகையை அழுத்தி தங்களுடைய ஒடுக்குமுறை கதைகளை சொல்லி விடுகின்றனர். சிலர் அதை சொல்ல 10 ஆயிரம் கி.மீ. பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவின் மீ டூ இயக்கத்தில் விடுபட்ட இந்தப் பெண்களின் கதைகள் நம்மை துயரமடைய செய்யக்கூடியவை.

பேருந்து அன்றைய நாளுக்கான கடைசி இலக்கை அடைந்துவிட்ட களைப்பில் இரைச்சலோடு ஓய்கிறது.  கடந்த சில நாட்களாக மத்திய பிரதேசத்தின் பெரும்பகுதியை கடந்து வந்த பிறகு, அது ராஜஸ்தானின் கிழக்கு முனையில் நுழைந்துள்ளது. தாஹோட் மாவட்டத்தின் தேவ்கத் பாரியா தாலுகாவின் அடிவாரத்தில் உள்ள பழங்குடிகளின் குடியிருப்பில் வாகனம் நிறுத்தப்பட்டு, பயணிகள் இறங்கி திறந்தவெளிக்கு வருகின்றனர். இவர்களில் பலர் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், சிறு அளவிலான பாதிப்புகளிலிருந்து மீண்டவர்கள், அவர்களுடைய பெற்றோர். அனைவரும் ஊரக தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

சுற்றியுள்ள சிறு வெளிச்சத்தின் ஊடே, அந்த நாளுக்காக கடைசி உணவை, ரொட்டி, பருப்பு மற்றும் வெங்காயத்தை அவர்களுக்கு பரிமாறுகிறார் உள்ளூர் பெண். மண்டபத்தில் உள்ள ஒரு அறையில் அவர்கள் அனைவரும் உறங்க பாய்கள் இடைவெளியில்லாமல் விரிக்கப்பட்டிருக்கின்றன.

34 வயதான அவருக்கு இது ஒரு நீண்ட நாள். இதுபோன்ற நாட்களை முன்பும் கடந்து வந்திருக்கிறார். பல ஆண்களால் துன்புறுத்தப்பட்டு, அதன் பின் விளைவுகளையும் நினைவு கூர்ந்தார் அவர். டைபாய்டால் கடுமையாக பாதிக்கபட்டு மீண்ட அவர், மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தை விட்டு மாநிலங்களை கடந்த இந்த யாத்திரையில் கலந்துகொண்டிருக்கிறார். 2018, டிசம்பர் 20-ம் தேதி மும்பையில் இந்த யாத்திரை தொடங்கப்பட்டது.

நாள் முழுவதும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்த அவருடைய தொண்டை, இரவில் பேசக்கூட முடியாத நிலைக்கு போய்விடுகிறது. ஆனால், அனைத்துக்கும் மேலாக, இவர் தன்னுடைய குரலை மீட்டதாக தெரிவிக்கிறார். “முன்பு அது பற்றி நான் பேசவே மாட்டேன். ஆனால், நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை. குற்றமிழைத்தவர்கள்தான் தவறு செய்தவர்கள், இந்த சமூகம் தவறானது. நாங்கள் இவர்களுடைய மனங்களை மாற்ற இந்த யாத்திரையை தொடங்கியிருக்கிறோம்”.

பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் சார்பில் மும்பை முதல் டெல்லி வரையிலான பயணத்தின் ஒரு பகுதி.

சிலர் விசைப் பலகையை அழுத்தி ஒரு இயக்கத்தை உருவாக்கிவிடுகிறார்கள். சிலர் அவர்களது கதைகள் கேட்கப்பட வேண்டும் என விடாமுயற்சியுடன் நாடு தழுவிய அளவில் 10,000 கி.மீ. நடக்கிறார்கள்.  கும்பல் பாலியல் வன்முறையாலும், கடத்தலாலும், ஏலம் விடப்பட்டும், தலைமுறைகள் தலைமுறைகளாக பெண் குழந்தைகள் சாதி ஒடுக்குமுறை காரணமாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டும், உயர் சாதி ஆண்களால் வன்முறைக்கு ஆட்பட்டும், வன்முறையால் குரல்களை நசுக்கிவிடுவேன் என மிரட்டப்பட்டும், சூனியக்காரிகள் என முத்திரை குத்தப்பட்டும், நிர்வாணமாக்கி பொதுவெளியில் நடக்கவிடப்பட்டும்… என, இப்படியான பல கொடுமைகளிலிருந்து  அவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்கள்.

இப்படியான கொடுமைகளிலிருந்து உயிர்பிழைத்த நூற்றுக்கணக்கான பெண்கள் மௌனத்தை நொறுக்கவும், இந்த இழிவுக்கு முடிவு கட்டவும், ‘கண்ணியத்துக்கான பேரணி’யில் 65 -வது நாளில் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.  கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் பட்டியலின மக்களும் பழங்குடிகளும் ஆவர். அவர்களுடைய கதைகள் இந்தியாவின் மீ டூ இயக்கத்தில் கேட்கப்படாதவை.

படிக்க:
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
♦ #MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள் !

கண்ணியத்துக்கான பேரணி சில நேரங்களில் நடை பயணமாகவும் சில நேரங்களில் வாகன பயணமாகவும் அமைந்திருக்கிறது. சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பணி செய்துகொண்டிருக்கும் ‘ராஷ்டிரிய கரிமா அபியான்’ என்ற அமைப்பு இந்த பேரணியை ஒருங்கிணைக்கிறது.

இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிறுத்ததிலும், இவர்களின் கதைகளைக் கேட்டு தூண்டுதல் பெற்ற  உள்ளூர் மக்களும் நூற்றுக்கணக்கில் இணைந்து கொண்டனர்; தங்களுடைய கதைகளையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர். 24 மாநிலங்களில் 200 மாவட்டங்களைக் கடந்திருக்கும் இந்தப் பேரணி பிப்ரவரி 22, 2019 டெல்லியில் முடிகிறது. இந்தப் பயணத்தின் பகுதியாக உள்ள 5,000 பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுடைய குடும்பங்களும் ராம்லீலா மைதானத்தில் கூட உள்ளனர்.

*****

டுத்த நாள் காலையில் தன்னுடைய தொண்டைக்கு இதமாக டீயை உறிஞ்சியபடி, 34 வயதான அந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண், இந்தப்  பயணம் தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை, குற்றம் புரிந்தவரை அடையச் செய்யும் என்கிறார். தன் கணவரின் பழங்குடி கிராமத்திலிருந்து தன்னை இருவர் கடத்தி பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கடந்த நான்கு வருடங்களாக இந்த களங்கத்தை தான் சுமக்க மறுத்து வருவதாக அவர் கூறுகிறார். பின்னர் இவர் ஒரு நிலக்கிழாரிடம் விற்கப்பட்டு, அவரால் ஆறு மாதங்கள் கடுமையான வன்முறைக்கு ஆட்படுகிறார்.  அங்கிருந்து தப்பி காவல் நிலையம் சென்றபோது, காவலர்கள் புகாரை பதிய மறுக்கின்றனர். புகார் பதிய ஒப்புக்கொண்டபோது, தடை செய்யப்பட்ட இரு விரல் சோதனையை அவரிடம் செய்கின்றனர்.

“மருத்துவ பரிசோதனை காலதாமதமாவது என்னுடைய வழக்கில் உதவவில்லை. நீதிபதி என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என சொன்னபோது, நான் வேண்டுமானால் உடையை களைந்து காட்டுகிறேன். எங்கேயெல்லாம் காயம் ஆகியிருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள் என அவரிடம் சொன்னேன்” என நடந்ததை விவரிக்கிற அவர், வீட்டிற்கு திரும்பியபோது அவருடைய கணவரும் கணவரின் குடும்பத்தினரும் தான் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டதாகக் கூறி, தன்னை ரத்தம் வரும்வரை அடித்ததாக கூறுகிறார். அவருடைய பிறந்த வீட்டிலும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. “எங்கும் போக வழியில்லாமல், எட்டு நாட்கள் ரயில் நிலையத்தில் படுத்து கிடந்தேன். ஒரு சமூக சேவகர் என்னை கண்டுபிடித்து, நான் வாழ ஒரு இடத்தை கண்டுபிடிக்க உதவினார்”.

இவர் தற்போது பலமுனை போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார். தனக்கு குற்றமிழைத்தவர்களுக்கு எதிராகவும் தனது 10 வயது மகன் மற்றும் 13 வயது மகளுக்காக தனது கணவருக்கு எதிராகவும் போராடுகிறார்.  இந்த யாத்திரையின் போது, முதல் முறையாக தனது கதையை சொன்னபோது, மற்ற பெண்களைப் போல தானும் உடைந்துபோய் அழுதுவிட்டதாக சொல்கிறார். நாட்கள் கடந்த பிறகு, தனது துயரத்தை பேசுவதாலும் தன்னை போன்ற மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதாலும் தன்னுடைய மன உறுதி அதிகமாகியுள்ளதை குறிப்பிடுகிறார்.

ராஷ்டிரிய கரிமா அபியான் அமைப்பைச் சேர்ந்த கிராந்தி என்ற தன்னார்வலர், பல்வேறு மாநிலங்களில் சமூக குழுக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் பெருந்திரளான ஆதரவை தந்ததாக குறிப்பிடுகிறார். அவர்களே உணவும் தங்குமிடமும் தந்ததாகவும் சொல்கிறார். “இந்தப் பயணத்தில் பங்கேற்றவர்கள் நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் கடுமையான அனுபவத்தைப் பெற்றவர்கள். தங்களுடைய குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து வருகிற அழுத்தங்களையும் கடந்து இப்படி வருவது பேசுவதும் மிகக் கடினமானது” என்கிறார் கிராந்தி.

தேசிய குற்ற ஆவண மையத்தின் (National Crime Record Bureau) 2016-ம் ஆண்டிற்கான அறிக்கையில் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட பெரும்பாலான வழக்குகளில் பழங்குடியின மற்றும் பட்டியலின பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமை வழக்குகளே அதிகம். பெரும்பாலான வழக்குகளின் நிலைமை வெறும் வழக்குகளாகவே உள்ளன. பட்டியலின பெண்களுக்கு எதிரான 8,259 வன்கொடுமை வழக்குகளில் 3.7 % வழக்குகள் மட்டுமே விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, பழங்குடியின பெண்களுக்கு எதிரான 3,563 வன்முறை வழக்குகளில் 2.8 % வழக்குகளில் மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சமூக சூழல் காரணமாகவும் மிரட்டல் காரணமாகவும் வழக்குகளாக பதியப்படாதவை எதுவும் இந்த கணக்குகளின் கீழ் வராது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

*****

ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்திய காரணத்தால் உயர்சாதிக்காரர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர். இவருடைய போராட்டம் காரணமாக முக்கியத்துவம் வாய்ந்த பணியிடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான ‘விசாகா வழிகாட்டுதல்’களை ஏற்படுத்த உதவியது. ஆனால், 25 ஆண்டுகள் ஆன பின்னும் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை என்கிற பன்வாரி தேவி, இந்தப் பேரணி தனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்.

“என்னுடைய போராட்டத்தை சிறிய அளவில் முன்னேடுத்தேன், இப்போது மீ டூ என்ற பெயரில் பெரிய இயக்கமாக வளர்ந்துள்ளது. ஆனால், கிராமங்களிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல்களுக்கு நீதி கிடைப்பதே இல்லை. இப்படி பெரிய எண்ணிக்கையில் தெருவில் இறங்கி போராடுவது, அரசின் கவனத்தை ஈர்க்கும்” என்கிறார் பன்வாரி தேவி.

படிக்க:
போர் ஆயுதத் தரகர்களுக்கானது ! புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டிக்கும் பாகிஸ்தான் இளைஞர்கள் !
♦ #Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை !

பேரணியை ஒருங்கிணைக்கும் அமைப்பைச் சேர்ந்த ஆசிஃப் ஷேக், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் முதலமைச்சர்கள் கமல் நாத்தும் பூபேஷ் பாகலும் இந்தப் பெண்களுக்கு உதவுவதாக சொல்லியிருப்பதாக தெரிவிக்கிறார். பாலியல் வன்முறைகளை தடுக்க சிறப்பு போலீசு குழுவையும் அத்தகைய வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களையும் அமைக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் அத்துமீறலுக்குரிய இரு விரல் சோதனை முறையையும் தடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தை அடையும் முன் மத்திய பிரதேசத்தின் ரட்லாம் பகுதியில் ‘கண்ணியத்துக்கான பேரணி’யினர் தங்கியிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள பாக்சத்தா என்ற பழங்குடியின பெண்கள் தங்களுடைய வன்முறைகளை பகிர்ந்துகொண்டனர். இந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமிகள் நெடுஞ்சாலைகளில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் அவலமும் நடந்துவருகிறது.

கைகளில் குழந்தையை ஏந்திய ஒரு சிறுமி, அப்படியான வன்முறையால் பாதிக்கப்பட்டவள். முதல் முறையாக போலீசு அதிகாரியுடன் சமமாக மேடையை பகிர்ந்துகொண்டார். இந்த இனத்துக்கு இடஒதுக்கீடும் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்தால் பாரம்பரியமாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் கொடுமைக்கு தீர்வு கிடைக்கும் என்றார் அவர்.

குஜராத் எல்லையோரமாக உள்ள மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் அதிகாரம் மிக்க சாதிகளைச் சேர்ந்த ஆண்களால், அவர்களிடம் விவசாய கூலிகளாக பணியாற்றும் பில் சாதியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தெரிவித்தனர்.  குஜராத்தின் தாஹுட் மாவட்டத்தில் கணவனை இழந்த பெண்களை சூனியக்காரிகள் என முத்திரையிட்டு அவர்களுக்கு சொத்து மறுப்பதும், அவர்களுடைய மகள்களை ஏலத்தில் விடுவது நடைமுறையில் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இந்த யாத்திரையில் இணைந்துகொண்டனர்.

தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை 2015-16-ல் சாதி மற்றும் பாலினம் ஆகிய இரண்டுவிதமான ஒடுக்குமுறைக்கு ஆளாவதும் அவர்கள்  15 வயதிலிருந்து உடல்ரீதியிலான வன்முறைக்கு ஆளாகி வருவது தெரிந்தது. பட்டியலின பெண்கள் 35.7 சதவீதமும் பழங்குடியின பெண்கள் 31 சதவீதமும் மற்ற பெண்கள் 21 சதவீதமும் இத்தகைய இரட்டை ஒடுக்குமுறைக்கு ஆளாவதைச் சொன்னது அந்த ஆய்வறிக்கை.

ஒவ்வொரு நாள் பயணத்தின் போது, உள்ளூர் மக்களுடன் பேரணியில் பங்கேற்றவர்கள் பேசினர், முழக்கங்களை எழுப்பினர். அகமதாபாத்தின் சபர்மதி ஆசிரமத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது பெண்ணின் பெற்றோர் உத்தரபிரதேசத்திலிருந்து வந்து தங்களுடைய வலியை பகிர்ந்துகொண்டனர்.

கட்டிடப் பணி செய்யும் அந்த தந்தை பேசினார். “இந்த சம்பவம் நடக்கும் முன், என் மகளை அந்த ஆள் பின் தொடர்ந்தபடியே இருந்ததோடு, நான்கு முறை அடித்தும் இருக்கிறார்.  ஆனால், நாங்கள் கொடுத்த எந்த புகாரையும் போலீசு தீவிரமாக எடுத்துக்கொள்ளவே இல்லை”.

தனது மகளின் படிப்பு முக்கியம் என கருதும் அவருடைய தாய், தினமும் பள்ளிக்கு போகும்போது கத்திரிக்கோலும் மிளகாய் பொடியை பாதுகாப்புக்கு தந்து அனுப்புவதாக சொல்கிறார். “போலீசிடமிருந்தோ நீதிமன்றத்திடமோ நாங்கள் எந்தவித மரியாதையும் பெறவில்லை. எங்களுடைய சொந்த மக்களே குற்றம் புரிந்தவனை நிராகரிப்பதற்கு பதிலாக எங்களை நிராகரித்துவிட்டார்கள்.  இந்த பேரணி நாங்கள் இழந்த மரியாதையும் நம்பிக்கையும் பெற்றுத்தரும் என நினைக்கிறோம்” என்கிறார் அவர்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணின் தாய், ஒரு மூத்த போலீசு அதிகாரி பெண்கள் சமூகத்தை குறை சொன்னதை விரும்பவில்லை. “தங்கள் மகள்களுக்கு சமூக மதிப்புகளை கற்றுத்தர வேண்டும் என அவர் சொன்னார். ஏன் அப்பாக்கள் கற்றுத்தரக்கூடாதா? அதுவும் மகள்களுக்குத்தான் கற்றுத்தர வேண்டுமா? ஏன் மகன்களுக்கு கற்றுத்தரக்கூடாதா?” என கேட்கிறார் அவர்.

பெடூலிலிருந்து வந்திருந்த 25 வயதான பெண் இப்படிச் சொன்னார், “பாலியல் வல்லுறவுகள் பெண்கள் அநாகரிகமாக உடையணிவதால்தான் ஏற்படுகிறது என இவர்கள் நினைக்கிறார்கள். நான் புடவைதான் உடுத்தியிருக்கிறேன். ஆனால், அது வல்லுறவிலிருந்து என்னைக் காப்பாற்றவில்லை” என்கிறார். இவர் சார்ந்த பழங்குடியின கிராமத்திலிருந்து இவர் உள்ளிட்ட பலர் கடத்தப்பட்டு, ரூ. 25 ஆயிரத்துக்கு உயர்சாதி ஆண்களுக்கு விற்கப்பட்டார்கள். மேலும், இந்த இனத்தில் பெண் சிசுக்கொலையும் அதிகமாக உள்ளது.

இந்த யாத்திரை முடிந்த பின், இந்தப் பெண்கள் மத்திய பிரதேசத்தின் தேவாஸ் நகரத்துக்கு இடம்பெயரப்போவதாக சொல்கிறார்கள். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது பெண், தையல் கடை ஒன்றை வைக்கப்போவதாகக் கூறுகிறார். 25 வயது பெண், பியூட்டி பார்லர் வைக்கப்போவதாகக் கூறுகிறார். இவர்கள் இருவரும் பள்ளிக்குச் சென்றதில்லை. படிப்பதையும் எழுதுவதையும் கற்கப்போவதாக இவர்கள் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு நாளின் முடிவிலும் பேருந்து இரவு தங்கலுக்காக நிற்கும்போது ஒலிக்கும் கடைசி பாடல் தோழிகளின் ஒன்றிணைவை பாடுவதாக முடிகிறது. ஒவ்வொரு நாளும் தங்களுடைய கஷ்டங்களை மறந்து இந்தப் பெண்கள் உற்சாக தாளமிட்டு, இந்தப் பாடலைப் பாடுகிறார்கள்.

இந்துத்துவ சக்திகள் ஓங்கியிருக்கிற குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்து சனாதனத்தின் முக்கிய கூறுகளான சாதியமும் பெண்ணடிமைத்தனமும் இன்னமும் உயிர்ப்போடு இருப்பதை அறிய முடிகிறது. அதிகாரத் திமிர் பிடித்த சாதி ஆண்களால் பட்டியலின-பழங்குடி பெண்கள் இரட்டை ஒடுக்குமுறைக்கு ஆளாவதும் பட்டவர்த்தனமாக தெரிகிறது. சாதியின் பெயரால் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளும் இழிவான இந்து மத ‘பாரம்பரியம்’ நடைமுறையில் இருப்பதையும் காண முடிகிறது. மத அடிப்படைவாதங்களில் மிகக் கேவலமானது இந்துமத அடிப்படைவாதமே என்பதும் தெளிவாகத் தெரிகிறது.


கட்டுரை: ஷாலினி நாயர்
தமிழாக்கம்: கலைமதி

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் 

கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த வீதியில்தான் தீர்வு | இராஜு உரை | காணொளி

க்கள் அதிகாரம் பிப்ரவரி 23-ம் தேதி, ”அடக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் !’ மாநாட்டை திருச்சியில் நடத்தியது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு சிறப்பு பேச்சாளர்கள் எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் மருதையன், தோழர் ராஜு, தோழர் தியாகு, தோழர் ஆளூர் ஷாநவாஸ், வழக்கறிஞர் பாலன் ஆகியோரின் உரைகளைக் கேட்டனர்.

இம்மாநாட்டில் தலைமை உரையாற்றிய தோழர் ராஜு பேசுகையில், “ இந்த மாநாட்டிற்கு அனுமதி வழங்காமல் போலீசு இழுத்தடித்தது. மாநாட்டுக்கு பிரச்சாரம் செய்து நோட்டீசு வழங்கிய தோழர்களைக் கைது செய்தது போலீசு. காரணம் கேட்டபோது, அனுமதியின்றி நோட்டீசு கொடுத்தது தவறு என்று கூறியிருக்கிறது. நோட்டீசு கொடுக்க அனுமதி கேட்க வேண்டிய இந்த நிலையைத் தான் பாசிசம் என்கிறோம்.

மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கிறது இந்த கார்ப்பரேட் எடுபிடி அரசு. எதிர்த்துப் போராடுபவர்களைக் கைது செய்கிறது. நமது உரிமைகளைக் காக்க கார்ப்பரேட் காவி பாசிசத்தை வேரறுக்க மக்கள் ஒன்று திரண்டு வீதியில் இறங்கி போராடுவதே தீர்வு.. ” என்றார். முழுமையான உரையைக் காண :

யூ-டியூப்:

முகநூல்:

பாருங்கள் ! பகிருங்கள் !

பாரதமாதாவின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் | படக்கட்டுரை

0

“பசி ஒரு வன்முறை” என்பார், உலக புகழ் பெற்ற முதலாளித்துவ பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென். ஒருபுறம் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்களிடம் சொத்துக்கள் குவிந்திருக்க மறுபுறமோ ஏதுமற்றவர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டிருக்கிறார்கள். இதை சென்ற ஆண்டின் இறுதியில் தாமஸ் பிக்கட்டி உள்ளிட்ட அறிஞர்கள் வெளியிட்ட ஐநா உலக வறுமை அறிக்கை அறுதியிட்டு கூறுகிறது.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் மரணிப்பதற்கு வசிப்பிட அளவு, தாய்க்கு கிடைக்கும் கல்வியறிவு, குழந்தைகள் திருமணம், மருத்துவ வசதிகள், குழந்தைகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தான உணவு, சொத்துக்கள் அளவு, திறந்த வெளி கழிப்பிடம் உள்ளிட்ட சமூக ரீதியான பிரச்சினைகளை உலகளாவிய உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் தன்னுடைய 2018-ம் ஆண்டின் அறிக்கையில் கூறுகிறது.

படிக்க:
மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !
♦ ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டில் (எண்ணிக்கை அடிப்படையில்) உலகளவில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் இந்தியா முழுதும் இது ஒன்று போலிருப்பதில்லை. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதில் முன்னணியில் இருக்கின்றன.

குறிப்பாக முட்டையுடன் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதன் வாயிலாக தமிழகம் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதில் இந்தியாவிற்கே முன்னோடியாக உள்ளது. மறுபுறம் இந்திய மாநிலங்களில் எங்கெல்லாம் பார்ப்பனிய ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் அமர்த்தியா சென் கூறியவாறு பசி ஒரு வன்முறையாகவே உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம், பண்டல்கண்ட் பகுதியில் உடல் நலம் குன்றிய தன்னுடைய பேரனை பார்த்துக் கொள்கிறார் ஒரு மூதாட்டி. சமீபத்தில் வெளியான உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி இந்தியாவில் 2.55 கோடி குழந்தைகள் மிகவும் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டல்கண்ட், லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் தன்னுடைய குழந்தையை வீட்டிற்கு வெளியே தூக்கி செல்கிறார். லலித்பூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளுமே ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இராஜஸ்தான், பாரன் மாவட்டத்தில் ஒரு சமூக நல மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள ஒரு குழந்தை. உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி உலக அளவில் மூன்றில் ஒருபங்கு குறை வளர்ச்சியுள்ள குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவதியுறும் இராஜஸ்தான் பாரன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை.

இராஜஸ்தான், பாரன் மாவட்டத்தின் மற்றுமொரு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை.

உத்திரப்பிரதேச மாநிலம், லலித்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இராஜஸ்தான், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பாரன் மாவட்டத்தின் கேல்வாடா கிராமத்தை சேர்ந்த சகாரியா பழங்குடி குழந்தை. 2018-ம் ஆண்டு வெளியான உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின்படி 4.66 கோடி எடை குறைவான குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.

இராஜஸ்தான், பாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு சமூக நல மருத்துவ கூடத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை.


தமிழாக்கம்: சுகுமார்
நன்றி:  அவுட்லுக்

துப்புரவுப் பணியாளர்கள் : நாடகமாடும் மோடி ! NSA-வைக் காட்டி மிரட்டும் போலீசு !

2

டந்த ஞாயிற்றுக்கிழமை (24-02-2019) கும்பமேளாவில் பாவங்களைக் கழுவ கங்கையில் மூழ்கி எழுந்த பிரதமர் மோடி, நேராகப் போய் கும்பமேளா குப்பைகளை அள்ளிக் கொட்டிய தூய்மை பணியாளர்கள் கால்களைக் கழுவினார். நாலாபுறமும் கேமராக்கள் அதை விதவிதமான கோணங்களில் படம்பிடிக்க, தனது ஆஸ்கர் நடிப்பை வெளிப்படுத்தினார் மோடி.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாத பூஜை !

வழக்கம்போல மோடியின் ஜால்ரா சங்கி கூட்டம், சமூக ஊடகங்களில் தூய்மை பணியாளர்களின் கால்களைக் கழுவும் மோடியின் படத்தை போட்டு இப்படியொரு பிரதமர் இந்தியா கண்டிருக்குமா என சவால் விட்டது. மோடியை பிரதமர் என்றும் பாராமல் வைத்து செய்யும் தென்னக மக்கள் சமூக ஊடகங்களில் இந்தப் படத்தை வைத்து சங்கிகளை நாறாய் கிழித்துவிட்டார்கள்.

ஆஸ்கர் விருதுகள் வெளியான நாளில் பிரதமர் மோடிக்கு ஒரு விருது பார்சல் என பகடி செய்தும் ஐந்தாண்டுகளாக கண்டுகொள்ளாத தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவினால் என்ன பயன் என விமர்சித்தும் சமூக ஊடகங்களில் எழுதினர்.

உண்மையில், கும்பமேளாவின் குப்பைகளை, கழிவுகளை சுத்தம் செய்வதற்கென்று அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தைக்கூட கொடுக்காமல் மோசடி செய்துள்ளது அம்மாநிலத்தை ஆளும் ரவுடி சாமியார் ஆதித்யநாத்தின் அரசு. உச்சகட்டமாக, போராட்டத்தை ஒருங்கிணைத்த தலித் அமைப்பினரை ‘தேசிய பாதுகாப்பு சட்டத்தில்’ கைது செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளது.

படிக்க:
நாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்
♦ அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்

ஜனவரியில் கும்பமேளா தொடங்கிய நேரத்திலிருந்து போதிய உபகரணங்கள் வழங்கக் கோரியும் சம்பள உயர்வு கேட்டும் தலித் சஃபாய் மஸ்தூர் சங்காதன் என்ற அமைப்பு போராடி வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த அன்சு மால்வியா, தினேஷ் ஆகியோர்  தூய்மை பணியாளர்களை திரட்டி பல முறை போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். இதுகுறித்து நிர்வாகத்துக்கு பல முறை கடிதங்களும் எழுதியிருக்கின்றனர்.

“எங்களுடைய முக்கியமான கோரிக்கை நாள் சம்பளமான ரூ. 295 -ஐ உயர்த்தி தர வேண்டும் என்பது. போராட்டத்துக்குப் பிறகு, ரூ. 15 உயர்த்தி ரூ. 310 -ஆக தருவதாக சொன்னார்கள். ஆனால், அந்தத் தொகையை தராமல், பழைய சம்பளத்தையே தருகிறார்கள்” என்கிறார் தினேஷ். தங்களுடைய மற்ற கோரிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

தங்கள் உரிமைக்காக போராடும் துப்புரவுத் தொழிலாளர்கள்.

“ஜனவரி மாதம், போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தபோது மாவட்ட நிர்வாகம் எங்களை அழைத்து பேசியது. அப்போது, நாங்கள் தேசத்துக்கு கெடுதல் செய்துகொண்டிருக்கிறோம் என்றும் கும்பமேளா நாட்டின் பெருமைக்குரிய விசயம். இந்த நேரத்தில் போராடுவது தேசத்துக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும். என்று கூறினர். இதனால் உங்கள் மீது தேச துரோகம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் போடுவோம் எனவும் மிரட்டினார்கள்” என்கிறார் மால்வியா.

பிப்ரவரி 7-ம் தேதி அலகாபாத் போலீசு தங்கள் இருவரையும் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் அப்போதும் தேசத்துக்கு எதிரான நடவடிக்கை காரணமாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போட இருப்பதாகவும் ஆதித்யநாத் போலீசு மிரட்டியதாகவும் தெரிவிக்கிறார்.

இவர்களின் கைதை கேள்விப்பட்டு நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் காவல் நிலையங்களுக்கு முன் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த போலீசு அவர்கள் இருவரையும் வழக்கு ஏதும் போடாமல் ஆறு மணி நேரத்துக்குப் பிறகு விடுவித்திருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் மட்டுமல்லாது பீகார், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கும்பமேளா கழிவுகளை சுத்தம் செய்ய ஏஜெண்டுகள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலருக்கு தாங்கள் கழிவறைகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்கிற விவரம் தெரியப்படுத்தப்படவில்லை. “கழிப்பறைகளை கழுவ வேண்டும் என்று என்னிடம் ஏஜெண்ட் சொல்லவில்லை. என் கணவரிடம் ஆற்றில் விழும் பூக்களை எடுத்துப்போடும் வேலை எனக் கூறிக்கொண்டு என்னை அழைத்து வந்தார். ஆரம்ப நாட்களில் அழுதேன்… இந்த வேலையை நான் இதுவரை செய்யதில்லை” என இயலாமையுடன் சொல்கிறார் ஐம்பது வயதான குரியா.

“ஆயிரக்கணக்கான பணியாளர்களை, அதிக சம்பளம் தருவதாகக் கூறி ஏஜெண்டுகள் கிராமங்களிலிருந்து அழைத்து வந்துவிடுகிறார்கள். இங்கே வந்த பிறகுதான் அவர்களுக்கு நிலைமை தெரிகிறது. கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் 10-20 சதவீதத்தை ஏஜெண்டுகளுக்கு கமிசனாக தரவேண்டும். கும்பமேளா மூன்று மாதங்கள் நடக்கும் என்பதால் அவர்களால் திரும்பிப் போகவும் முடியாது” என்கிறார் தூய்மை பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த தினேஷ்.

கும்பமேளா கழிவுகளை சுத்தம் செய்ய 14 ஆயிரம் தூய்மை பணியாளர்கள், தின சம்பள அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறது இந்த சங்கம்.

“குறைவான சம்பளம் மட்டுமில்லாமல், எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக சில நேரங்களில் 14 மணி நேரம், பணியாளர்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. ஓவர் டைம் பணிக்கு சம்பளமும் கிடையாது” என்கிறார் தினேஷ்.

தூய்மை பணியாளர்களில் 1% மட்டுமே பூட்ஸ், மாஸ்க், கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்களை நிர்வாகம் வழங்கியிருக்கிறது என்றும் இவர்கள் தெரிவிக்கிறார்கள்.  மூன்று மாத காலம் என்பதால் குடும்பத்தோடு வந்துள்ள இவர்களுக்கு சொதசொதப்பான சேரும் சகதியும் மிக்க இடங்களில்தான் டெண்ட் அமைத்து தந்திருக்கிறார்கள்.

கும்பமேளாவில் அமைக்கப்பட்டுள்ள 1,24,000 கழிப்பறைகளில் உள்ள கழிவுகளை எந்திரங்கள் கொண்டு டேங்கில் இணைக்கும் பணிகளைச் செய்தாலும் சில சமயங்கள் அதிகப்படியான மக்கள் பெருக்கம் காரணமாக அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு அதை சரிசெய்யும் போது மலம், சிறுநீர் தூய்மை பணியாளர்கள் மீது படுகிறது எனவும் இவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

“இப்போது கிட்டத்தட்ட மேளா முடியும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால், எங்களுடைய கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. அரசியல் ஆதாயத்துக்காக தூய்மை பணியாளர்களின் கால்களை மோடி கழுவுகிறார். ஒரு பிரதமர் இப்படியான நாடகத்தை நடத்துவது வேதனை அளிக்கிறது.  எங்களுடைய கால்களை கழுவதால் எங்களுக்கு ஏதேனும் பயன் உண்டா?” என கேட்கிறார் தினேஷ்.

கும்பமேளாவின் பொறுப்பாளராக உள்ள அதிகாரி, ஹைகிளாஸ் வசதிகளை தூய்மை பணியாளர்களுக்கு செய்து கொடுத்திருப்பதாக சொல்கிறார். தூய்மை பணியாளர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்துவதோடு, அதனால்தான் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போட இருந்ததாகவும் சொல்கிறார்.

சங்கிகள் கூறிக்கொள்வதைப் போல, இத்தனை கீழ்த்தரமான பிரதமரை நாடு இதுவரை கண்டிராது. சம்பள உயர்வு கேட்டு போராடியவர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்திவிட்டு, இன்னொரு பக்கம் கேமராக்கள் முன்பு அவர்களுடைய கால்களை கழுவும் நாடகத்தை இந்துத்துவ கும்பலால் மட்டுமே அரங்கேற்ற முடியும்.


அனிதா
நன்றி: தி வயர்

மக்கள் அதிகாரம் மாநாடு மாஸ் ! | மாநாட்டில் பங்கேற்றவர்களின் முகநூல் பதிவுகள் !

க்கள் அதிகாரம் பிப்ரவரி 23-ம் தேதி  ‘அடக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் !’ மாநாட்டை திருச்சியில் நடத்தியது.  இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு சிறப்பு பேச்சாளர்கள் எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் மருதையன், தோழர் ராஜு, தோழர் தியாகு, தோழர் ஆளூர் ஷாநவாஸ், வழக்கறிஞர் பாலன் ஆகியோரின் உரைகளைக் கேட்டனர்.

மக்கள் பாடகர் கோவனின் உணர்ச்சி மிக்க பாடல்களை மக்களும் விருந்தினர்களும் ரசித்தனர். ‘எதிர்த்து நில்’ மாநாட்டில் கலந்துகொண்ட சிலர் முகநூலில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதனுடைய தொகுப்பு இங்கே…

*****

தி. லஜபதி ராய் :

மக்கள் அதிகாரத்திற்காக திருச்சியில் குரல் கொடுத்த  அருந்ததி ராய்

“நான் சற்று பதட்டமாக உணர்கின்றேன் , இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் உரையாற்றியதில்லை” எனத் தொடங்கிய எழுத்தாளர் அருந்ததி ராயின் கவலையும் மக்கள் மீதான அன்பும் அவரது உரையில் பிரதிபலித்தன.

போர் வெறி ஊட்டி ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் திருவாளர் மோடிக்கு எதிரான அவரது உரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

இஸ்லாமியர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், கம்யூனிஸ்டுகள், அனைவரும் பிரிந்து கிடப்பதை சுட்டிக்காட்டிய ராய் தற்போதைய பாசிச ஆட்சியை வீழ்த்த அனைவரும் ஒருங்கிணைய வேண்டியதை வலியுறுத்தினார்.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி , எண்கர சாலைகள் என மக்கள் மீது தாக்குதல் நிகழ்த்தி அவர்களது பொருளாதாரத்தை சிதைத்த பாஜக அரசின் ஆட்சியில் முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் 175 சதவிகிதம் உயர்ந்ததை ராய் சுட்டிக்காட்டினார்.

1980 -களில் மைய அரசு இரு பூட்டுக்களை திறந்தது முதலாவதாக பாபர் மசூதியை வழிபாட்டுக்காக திறந்தது , இரண்டாவதாக நாட்டை உலக நாடுகளின் கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரத்திற்கு திறந்தது இவ்விரு பூட்டுக்களை திறந்த நாள் முதல் மாவோயிஸ்ட் பயங்கரவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் என மக்களை திசை திருப்பும் அதே பொழுது இந்து மத பாசிசம் மக்களுக்குள் விதைக்கப்படுவதை ராய் குறிப்பிட்டார்.

அரசின் திட்டமிட்ட மோதல் படுகொலைகள், மதவெறி கும்பலின் கொலைகள், இவை நிகழும் அதே கால கட்டத்தில் சத்திஸ்காரில் போலிஸ் ஆட்சியும் கஷ்மீரில் ராணுவ ஆட்சியும் நடப்பது தற்செயலானதல்ல எனக் குறிப்பிட்ட ராய், புல்வாமா நிகழ்வுக்கு பின்னர் ராணுவத்தை காஷ்மீரில் குவிப்பது அம்மாநில மக்களை பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கும் என கவலை தெரிவித்தார்.

1950-ம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தை இந்நாட்டுக்கு அன்னியமானது, மனு ஸ்மிருதியே இந்தியாவிற்கானது எனக் கூக்குரலிட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைப்படியே இன்று இந்தியாவின் 75% சொத்துக்கள் 1% தனியார்களிடம் குவிந்திருப்பதையும், 9 பேர்கள் கையில் ஐம்பது கோடி இந்தியர்களின் சொத்துக்கள் இருப்பதையும் அவர்கள் அனைவரும் ஒரே சாதியினர் என்பதையும் ராய் பட்டியலிட்டார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானி பொதுமக்களின் பணத்தைப் பெற்று பயன்பெற்றதை சுட்டிய ராய், அம்பானியின் சொத்துக்களால் இந்தியாவிற்கு ஆண்டு முழுவதும் சுத்தமும், சுகாதாரமும், குடிநீரும் வழங்க முடியும் என்றார்.

வனவிலங்குகளுக்காக செயல்படும் வயில்ட் லைப் பர்ஸ்ட் என்ற வழக்கில் இருதினங்களுக்கு முன் காட்டினுள் வசிக்கும் 18 லட்சம் பழங்குடி மக்களை வெளியே தள்ளி காட்டைக் காப்பாற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அதே காடுகளை சுரங்கங்களும், பெரு வணிக நிறுவனங்களும் சூறையாடிய போது என்ன செய்தது எனக் கேள்வி எழுப்பினார்.

வடகிழக்கு மாநிலங்களில் 18 லட்சம் பேர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

வணிக நிறுவனங்களுக்கு சமூகப் பொறுப்பு என கூறுவது தேவையற்றது ஏனெனில் மக்களுக்கு பிச்சை போட வேண்டாம் அவர்களுக்கு சேர வேண்டியதை கொடுத்தாலே போதுமென உறுதியுடன் உரைத்தார்.

பரம்பரை அரசியல் என மத்தியிலும், தமிழகத்திலும் குறை சொல்பவர்களை, பரம்பரை அரசியலில் கூட தேர்தலில் நின்று வெற்றி பெறத்தேவை. ஆனால் சாதி ஆதிக்க சொத்துரிமை வாரிசுரிமையாக தொடர்வதை விமரிசித்தார். நிலம், சொத்துரிமை பொதுவுடமையாக்கப்படுவதன் தேவையை வலியுறுத்திய ராய் வரும் தேர்தலில் மக்கள் பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

வேதாந்தா நிறுவனத்தின் குழந்தையான ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கெதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு துணை நின்ற மக்கள் அதிகாரத்தை குறிப்பிடத் தவறாத ராய் தோழர் கோவனின் ஆட்டத்துடன் கூடிய படேல் சிலை நையாண்டிப் பாடலை இரசிக்கத் தவறவில்லை.

தி. லஜபதி ராய்
23.02.2019
திருச்சி

ஆசிர் முகமது :

மகஇக நடத்திய ‘எதிர்த்து நில்’ பொதுக்கூட்டத்துக்கு சென்றிருந்தேன். உண்மையில் மார்க்சிய விமர்சனத்தை மக்கள்மயப்படுத்தியதில் மகஇக தோழர்களுக்கும் வினவு தளத்துக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. ஆரம்பத்தில் அவர்களது பாடல்கள் தான் எனக்கு அறிமுகம்.

சில முஸ்லிம் அமைப்புகளின் கூட்டங்களில் ‘சொல்லாத சோகம்…’, ‘சம்மதமா.. சம்மதமா…’ போன்ற பாடல்கள் ஒலிக்கும். ஆசிரியர் மார்க்ஸின் எழுத்துக்கள் மற்றும் இத்தகைய பாடல்கள் தான் ‘ஒடுக்குபவர்களின் அடையாளங்கள் சுமத்தப்பட்டிருப்பவர்கள் கூட விமர்சனப்பார்வையோடு ஒடுக்கப்படுபவர்களின் சார்பாக தீவிரமாக நிலையெடுக்க முடியும்’ என்பதை எனக்கு உணர்த்தின.

இந்தியாவில் முஸ்லிம் பிரச்சினை என்பது தனித்தவொரு பிரச்சினையில்லை, அது பிற பிரச்சினைகளோடு இணைந்ததே என்ற புரிதலும் எனக்குள் மெல்லப் படிந்தது. இதெல்லாம் தியரியாக அப்போது புரிந்திருக்காவிட்டாலும் அது எனக்குள் ஏற்படுத்திய பார்வைத் தாக்கம் அத்தகையதுதான்.

இதற்கு ஒரு முக்கியமான காரணம் மகஇக ‘தமிழ்நாட்டில்’ கம்யூனிஸ்ட் கட்சி வைத்து நடத்துவதால்தான். இந்தியாவில் கட்சி வைத்து நடத்துபவர்கள் ‘சம்மதமா.. சம்மதமா…’ போன்ற பாடல்களெல்லாம் போடவே முடியாது. அவர்கள் இன்னும் ‘வகுப்புவாத வன்முறை’ என்ற பழைய பல்லவியே பாடுகிறார்கள். அவர்களது universalism பம்பாய் படத்துக்கு விருது கொடுக்கும் universalism. ஏழை பிராமணர்களுக்கு 10% ஒதுக்கீடு கொடுக்கும் universalism.

ஆனால் மகஇக தோழர்களது universalism ஒடுக்கப்படுபவனோடு தீவிரமாக நிலையெடுக்கும் universalism. திராவிட, தலித், பகுஜன் விமர்சனங்களை ஆழமாக உள்வாங்கிய, அதை மக்கள் மயப்படுத்திய universalism. மேற்கண்ட தரப்புகள் இவர்களோடு எவ்வளவு வேண்டுமானாலும் முரண்படலாம். ஆனால் பெரியார்-அம்பேத்கரை வெறுமனே பெயருதிர்த்தலாக அல்லாது, அந்தப் புரிதலையும் மொழியையும் தன்னகப்படுத்திகொண்ட கம்யூனிஸ்டுகளாக இவர்கள் ஒரு போக்கை உருவாக்கினார்கள். அதனால் தான் அவர்கள் பேசும் மார்க்சியம் எல்லோருக்கும் புரிந்தது. இது கம்யூனிஸ்டுகளின் நடைமுறை பற்றிய மதிப்பீடு கிடையாது. அதை என்னால் செய்யவும் முடியாது. மாறாக தொண்ணூறுகளில் பிறந்த ஒரு நடுத்தர வர்க்கத்தின் முஸ்லிமாக, பகுஜனாக இடதுசாரி அரசியல் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைப்பதற்கு எவ்வாறு அவர்களும் ஒரு காரணமாக இருந்தார்கள் என்றே சொல்கிறேன்.

மேலும் பண்பாட்டுத்தளத்தில் வெகுஜன பாணியில் எல்லாவற்றையும் பற்றி சொல்வதற்கு அவர்களுக்கு எப்போதுமே ஒரு கருத்து இருந்தது. வெகுஜன சினிமா, கலை, இலக்கியம் என்று பண்பாட்டுத் தளத்தின் அத்தனை பரிமாணங்களையும் அக்குவேறு ஆணிவேறாகவும், அதேநேரத்தில் பல்வேறுபட்ட தரப்பினருக்கும் புரியும் வகையிலும் சுவாரசியமாகவும், ஒடுக்கும் தரப்புகளுக்கு எதிரான கோபத்தோடும் எழுதுவார்கள்.

இப்போது கூட பாருங்கள், ஆ. ரா. வேங்கடாசலபதி என்ற ‘பார்ப்பனருக்கு உகந்த வேஷ திராவிடர்’ திராவிடத்தை பார்ப்பன அறிவுக்காலனியத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கையை விமர்சித்து வினவு தளத்தில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. இதெல்லாம் வினவு தளத்தில் தான் நடக்கும். இன்றும் தமிழ்ச்சூழலைப் பற்றிய இடதுசாரி விமர்சனம் என்றால் அதில் அவர்களுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.

திலகவதி திலோ :
மக்கள் அதிகாரம் மாநாடு !

இப்படி ஒரு மாநாட்டில் நான் கலந்து கொண்டதேயில்லை. எத்தனையோ அரசியல் கட்சிகளின் அமைப்புகளின் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறேன், ஆனால் இது மிகவும் வித்யாசமாக இருந்தது.

எந்த வித அரசியல் சடங்கும் இல்லை, நேரம் வீணடிக்கப்படவில்லை, சால்வை போற்றுதல், மரியாதை செலுத்துதல், நோட்டீஸில் உள்ள அனைவரின் பெயரையும் படித்து வணக்கம் சொல்லி அனைவரின் நேரத்தையும் வீணடித்தல், மரியாதை நிமித்தமாக சிலரை பேச வைத்து கண்டன்டே இல்லாமல் மொக்கை போட வைத்தல் போன்ற எந்தவித அரசியல் நிர்பந்தமும், பகுத்தறிவற்ற செயலும் இல்லாத மேடையாக மாநாடாக அது இருந்தது.

அங்கிருந்த தோழர்கள் அத்தனை நாகரிகமாக, இருக்கையில் அமர்ந்து ஒரு சிறு சலசலப்புமின்றி 6 மணி நேரம் அமர்நது கூர்மையாக கவனித்ததை எந்த இடத்திலும் நான் பார்க்கவேயில்லை, அரசியல் படுத்தப்பட்ட தோழர்களின் மத்தியில் தான் இப்படிபட்ட பண்பை பார்க்க முடியும்.

அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் இயக்கங்குளுக்கும் உள்ள வித்யாசம் அது. அமைப்பாதல் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அந்த மக்களை அரசியல் படுத்துதல். அதன் வெற்றியே இம்மாநாடு.

அத்தனை அறிவுப்பூர்வமான, உணர்வுப்பூர்வமான, ஆதாரப்பூர்வமான உரைகள் நிகழ்த்தப்பட்டன். கொஞ்சம் கூட கவனத்தை சிதறடிக்க முடியவில்லை, அவர்கள் பேசிய ஒவ்வொரு வரிகளும் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தன.

குறிப்பாக தோழர்கள் அருந்ததி ராய், ஷா நவாஸ், தியாகு, ராஜூ, மருதையன், வழக்கறிஞர்களின் உரைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

காவிகளின் பாசிசத்தை தோலுரித்து மக்கள் முன் நிறுத்தினர் !

கோவன் தோழரின் கலை நிகழ்ச்சிகளும் மேடையில் ஒளிபரப்பப்பட்ட பல்வேறு பிரச்சனைகளின் காணொளிகளும் மாநாட்டினை அத்தனை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியது.

சட்டக் கல்லூரி தோழமைகளுடன் இதில் கலந்து கொண்டது மகிழ்ச்சி 😍
மக்கள் அதிகாரம் மாநாடு மாஸ்👌👌

-திலகவதி திலோ,
சட்டக்கல்லூரி மாணவி.

தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு

ஒன்னு சாப்பிட்டதும்… அடுத்ததுன்னு மனசு கேட்கும் | சாட் உணவு சுவைஞர்கள் | புகைப்படக் கட்டுரை

மிழகத்தில் “ஸ்ட்ரீட் ஃபுட்” கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையின் எந்த சாலைகளில் பார்த்தாலும் தள்ளுவண்டி கடைகள்… குறிப்பாக மாலை நேர பானி பூரி கடைகள் புற்றீசல்போல பெருகியுள்ளன. இதுதான் வட இந்திய இளைஞர்களின் வாழ்வாதாரம். டீக்கடை தொடங்கி தெருக்கடை வரை வட இந்திய உணவான பானி பூரியும், சமோசாவும், வட இந்திய இளைஞர்களும்தான் இருக்கின்றனர். இந்த கடைகளில் எப்பொழுதும் கூட்டம்தான்.

பள்ளி மாணவர்கள் முதல் வேலை முடித்து விட்டு வரும் நடுத்தர வயதினர் வரை அனைவருக்கும் முதல் சிற்றுண்டி பாணிபூரிதான். தென்னிந்திய சிற்றுண்டிகள் எல்லாம் இருக்கும்போது, எப்படி இந்த உணவை அவர்கள் விரும்பினார்கள்…? என தெரிந்துகொள்ள சென்னை அயோத்தி மண்டபத்தில் ஒரு பானி பூரி கடையில் மொய்த்திருந்தவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ராமச்சந்திரன். சி.., ஆந்திரா. சென்னையில் நிரந்தரமாக குடியிருக்கிறார்.

இப்ப இருக்கிற வேலைக்கும், பாஸ்ட் லைப்புக்கும் கரெக்ட்டா மேட்ச் ஆகுற ஃபுட் இதுதான். இன்ஸ்டண்ட் உணவு. அதிகபட்சம் 3 மணிநேரம் பசி தாங்கற மினி மீல்ஸ் இது.  ஜஸ்ட் லைக் தட். வந்தம்மா…. நின்னம்மா….. சாப்பிட்டம்மா….. போனம்மா..ன்னு இருக்கனும். சாப்பாட்டுக்குன்னு ஸ்பெஷலா டைம் தேவையில்லை.

இட்டிலி, தோசை வேணும்னு ஓட்டலுக்கு போய் ஆர்டர் கொடுத்தா எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியாது. அப்படியே வந்தாலும் சட்டினி சரியில்லை, சாம்பார் சரியில்ல, இட்டிலி சூடு இல்லனு எரிச்சலா வரும். இன்னும் இதுமாதிரி பல பிரச்சனை.

இன்னும் சொல்லப்போனா நம்ம சவுத் இன்டியன் புட்ல அரிசிதான் மெயின். அதை அதிகமா எடுக்கிறதாலதான் நமக்கு இல்லாத நோய் எல்லாம் வருது. ஒபிசிட்டி, டயாப்பட்டிஸ், ஹைப்பர் டென்சன், தைராய்டு இதெல்லாம் தட்டு நிறைய உள்ள போவுது. கட்டிட வேலை மாதிரி கஷ்டப்பட்டு வேலை செய்யிறவங்களுக்கு அரிசி சாப்பாடு ஓகே…! நம்மள மாதிரி காலை தொங்கப்போட்டு உட்கார்ந்து வேலை செய்யிறவங்களுக்கு அரிசி பாய்சன்.

இதப்பத்தி, உங்களுக்கு எவ்ளோ தெரியும்னு எனக்கு தெரியல! இந்த நாலேட்ஜ் இல்லாதவங்கதான் சவுத் இன்டியன் ஃபுட் பத்தி ரொம்ப அலட்டுவாங்க… நான் என் குழந்தையோடதான் இங்க வந்து சாப்பிடுவேன்.

சேகர், கிருபாகரன், எழில்மதி. ஆட்டோ ஓட்டுநர் குடும்பம்.

அய்யோ! இன்னிக்குத்தான் நாங்க இங்க அதிசயமா வந்தோம்! இது எங்களுக்கு இல்ல. வீட்டுக்குப்போனா எங்கப் பொண்ணு அடம்புடிப்பா, அவளுக்காகத்தான் இது. நம்மளுக்கு இது ஒத்து வராது. பசங்கக்கூட என்னிக்கினா ஒருநாள் டேஸ்ட் பாக்கிறதோட சரி. நம்ம பலகாரம் மாதிரி வராது. ஆனா அதெல்லாம் ஆற அமர செய்யிறது இப்ப நம்மளாள முடியலியே. பணமும் இல்ல, நேரமும் இல்ல. ஏதோ பசங்களுக்காக நம்ம வாழ்க்கை ஓடுது.

ரமேஷ், வங்கி ஊழியர்.

இங்க சாப்பிட வந்தாவே மனசே ரொம்ப கண்ட்ரோல் பண்ணிக்கிட்டுத்தான் வருவேன். ஒன்னு சாப்பிட்டதும்…அடுத்ததுனு மனசு கேட்கும். ஆனா வயிறு மக்கர் பண்ணுமே..! அதனாலே வாரத்துக்கு ஒரு தடவைதான் இந்தப்பக்கம் வருவேன். ஒரு சமோசா… இல்லனா ஒரு வடை சாப்பிட்டு திரும்பி பாக்காத போய்டுவேன். ஆனா ஜங்க் ஃபுட் மாதிரி ரொம்ப மோசமான உணவுன்னு இதை சொல்லமுடியாது.

நாராயணன், ஸ்பிக் ஊழியர், ஓய்வு.

கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரை வாலி இதெல்லாம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுதான். தெரியுது. என்ன பிரயோஜனம். நம்மளுக்கு கைக்கு எட்டற மாதிரி கிடைக்கிறது இதுதானே. நம்ம உடம்பு கிடைக்கிறத ஏத்துக்கும். எல்லாத்துக்கும் பழகிக்கும். எதனா புடிக்கலன்னா நம்ம உடம்பே நம்மக்கிட்ட சொல்லும். எனக்கு பாருங்கோ… இங்க ஒரு சமோசா சாப்பிட்டுட்டு போனா ஒன்னும் பண்ணாது. எக்ஸ்ட்ரா ஒண்ணு சாப்பிட்டா வயிறு உடனே அப்செட் ஆவும். பிரச்சனை அங்கதான் இருக்குது. அத தெரிஞ்சி  உடம்பு சொல்றத கேட்டு நாம நடந்தா ஒண்ணுமில்ல. லிமிட்ட தாண்டக்கூடாது.

சமோசாவ நீ சாப்பிடனும். சமோசா உன்ன தின்னா போச்சு… இப்ப காலம் மாறிப்போச்சு. அந்தக்காலத்தில ஊருநாட்டுக்கு போனா வழியில எதுவும் கிடைக்காது. தேவையானத வீட்டிலிருந்து கட்டிண்டு போனாத்தான் உண்டு. வழியில குழந்தைங்களுக்கு சோறு வேணும்னாலும் பெரியவங்களுக்கு காபி வேணும்னாலும் வீட்டிலிருந்து எடுத்துண்டு போவோம்.

ரயில் கூஜான்னு காபி எடுத்துண்டு போறதுக்கு ஒண்ணு தனியா இருக்கும். அது ஒரு காலம். இப்ப எதுன்னாலும் கடக்காரங்க வாயில ஊட்டிவிடாததுதான் பாக்கி. அதுவும் சீக்கிரம் வந்துடும். உபர், ஸ்விகி, மாதிரி வீடுதேடி வந்து தராங்க. இத யூசர் பிரண்ட்லீ, சர்வீஸ் ஓரியண்டட், வேல்யூ ஆடட்னு விதவிதமா சொல்றாங்க.

படிக்க:
லலிதா இனிப்பகம் : சென்னையில் ஒரு மக்கள் கடை !
♦ விளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் – பாகம் 2

விக்னேஷ்.

இப்ப உங்களுக்கு என்னா பிரச்சனை? நான் எத சாப்பிட்ட உங்களுக்கு என்னா? சமோசா நார்த் இன்டியன் ஃபுட்னா அதுக்கு நான் இன்னா பன்றது? பெருசுங்கதானே எங்களுக்கு இதை அறிமுகப்படுத்தினாங்க! அவங்கதானே இந்த  அயிட்டத்த தமிழ்நாட்டுக்குள்ள உட்டது! அப்ப வேடிக்கை பாத்துக்கினு இருந்துட்டு இப்ப நாங்க சாப்பிட்டா கேள்வி கேட்கறீங்க?  அதிரசம், தேன்குழல், உப்பு உருண்டைனு எங்கள சுத்தி நின்னு இதுமாதிரி நீங்க வித்தா சாப்பிட போறோம். அதுக்கு வழியில்ல. அப்போ, எது சீப்பா கெடைக்குதோ அதத்தானே நாங்க சாப்பிட முடியும். எல்லாத்துக்கும் கதவு திறந்து வைச்சா இதுதான் நடக்கும்.

இப்ப காஷ்மீர பாருங்க… 350 கிலோ ஆர்.டி.எக்ஸ். கேட்பார் இல்லாம  உள்ள விட்டுட்டதால இப்ப 50 ராணுவ  வீரர் செத்துட்டான். அப்படின்னா அது யார் தப்பு? இவ்ளோ பெரிய ராணுவம், பெரிய உளவுத்துறை எல்லாம் என்ன வேடிக்கை காண்பிக்கிறதுக்கா வச்சிக்கிறாங்க! இதை, கேட்டா, எங்களையே கொலைகாரன் மாதிரி பாக்கிறானுங்கோ! இங்க எதுவும் சரியில்ல!

ஆனந்தன்

தோ… இந்தமாதிரி வட இந்தியாகாரனுங்கள உள்ள விட்டதால நம்ம உணவுக்கு மவுசு இல்லாம போயிடுச்சி. இருந்தாலும் இவங்களுக்கு இதுதான் வாழ்வாதாரமா இருக்கு. நான் அதை குறை சொல்லல. இதை வாங்கி சாப்பிட ஆர்வம் காட்டுற நாம அப்பவே நம்ம உணவுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்திருக்கலாம்னு  சொல்றேன். இன்னைக்கு அது பணக்காரங்க உணவா மாறிடுச்சி.

நம்ம தாத்தா-பாட்டிங்க சாப்ட உணவெல்லாம்  இப்ப பெரிய பெரிய ஹோட்டல்ல இருக்கு. அங்க யாரு போயிட்டு சாப்பிடுவா? பணக்காரன் மட்டும்தான். அப்ப நாம கண்டுக்காம விட்டுட்டதால இப்ப அது காஸ்ட்லி அயிட்டமா ஆயிடுச்சி. ஏழைங்க சாப்பிட முடியாது. ஏழைங்க சாப்பிடுற விலையில இந்த வட இந்திய உணவுதான் இருக்கு… அதுமட்டுமில்லாம இந்த டேஸ்ட் குழந்தைங்களுக்கும் புடிச்சி போயிடுச்சி…!

சுப்பிரமணி, அரசு ஊழியர்.ஓய்வு.

நீங்க எதப்பத்தி எழுதப்போறீங்க? இருக்கிறது சவுத் இன்டியா! சாப்பிடறது நார்த் இன்டியா ஃபுட் அப்படினு இதுக்கு தலைப்பு போடுவீங்களா? எப்படி எழுதுவீங்கனு சொல்லுங்க அதுக்கு ஏத்தமாதிரி நான் உங்களுக்கு சொல்றேன்! நீங்க வந்து கேள்வி கேட்கிற எடம் எதுனு உங்களுக்கு தெரியுதா? அய்யருங்க ஏரியா இது! அதுவும் மாம்..ம்பலம் அய்யருங்க..! அங்க, மயிலாப்பூர் அய்யருங்க வேற மாதிரி! நாங்க பசிக்கு மட்டும் சாப்பிடறது இல்ல! கூட எங்க ஸ்டேட்ஸையும்(status) சேர்த்து தட்டுல வைக்கிறவாகிட்டதான் நாங்க சாப்பிட முடியும். அது முக்கியம். அய்யருங்க அவங்களுக்குள்ள பேசிக்கும் போது நீங்க கவனிச்சிருந்தா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஜம்பலம் பத்தி, இந்த வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? தெரிஞ்சவங்ககிட்ட கேளுங்க சொல்லுவாங்க! …நான் வர்றேன்.