Thursday, November 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 372

போர்வெறியின் எச்சங்களில் ஈராக்கின் மொசூல் நகரம் – படக்கட்டுரை

0

சுலாமிய, யூத, கிறித்தவ மக்கள் அருகருகே வாழ்ந்து வந்த பெருமை மிக்க நகரம்தான் வடக்கு ஈராக்கில் அமைந்திருக்கும் மொசூல் நகரம்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மொசூல் நகரம் முழுமையாக விடுவிக்கப்படுவதாக, ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி-யால் அறிவிக்கப்பட்டு சுமார் இரண்டு வருடங்களாகியும் எந்த முன்னேற்றமும் இன்றி கேட்பாரற்றுக் கிடக்கிறது, வரலாற்றுப் புகழ்பெற்ற மொசூல் நகரம்.

சிதைந்து போயுள்ள மொசூல் நகரம்

சுமார் 5 இலட்சம் மக்கள் வாழ்ந்து வந்த இந்நகரம் 2013-ல் ஐ.எஸ்-ன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதுவரை டைப்ரிஸ் நதிக்கரையின் மேற்குப்பகுதி முழுவதும், மொசூல் நகரத்தின் பொருளாதாரக் கேந்திரமாகவும், மொத்தத்தில் மொசூல் நகரம் இந்தப் பகுதிகளுக்கு இதயத்துடிப்பாகவும் இருந்துவந்தது. ஐ.எஸ்-ன் ஆக்கிரமிப்புக்குப் பின்னர் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது.

மொசூல் நகரத்தைத்தான் ஐ.எஸ் இயக்கத்தினர் தங்களுடைய இறுதிப்புகலிடமாக்கிக் கொள்ளத் தீர்மானித்தனர். ஏனென்றால் பழமை வாய்ந்த இந்த நகரத்தின் தெருக்கள் மிக நீண்டதாகவும், பதுங்கிக் கொள்ள மிகவும் பாதுகாப்பானதாகவும் இருந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் ஈராக் இராணுவம் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. ஐ.நா-வின் அறிக்கையின்படி, ஏறக்குறைய 5000 கட்டிடங்கள் சீர்குலைக்கப்பட்டு, சுமார் 500 கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன.

ஈராக்கில் அனைத்து மட்டங்களிலும் ஊழல், புற்றுநோய் போன்று பரவிவிட்டதால், இந்த நகரத்தைச் சீர்செய்வதற்கு எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. அப்படி ஒன்றிரண்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டாலும், நிலத்தின் கீழ் கன்னிவெடி புதைக்கப்பட்டிருப்பதாலும், அபாயகரமான வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாலும் சீரமைப்புப் பணிகள் மேலும் தொய்வடைகின்றன. மொசூல் நகரம் விடுவிக்கப்பட்ட 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இதுவரை 80 பேர் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளும் போது உயிரிழந்துள்ளனர்.

இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் மொசூல் நகரவாசிகள் சிலர், உயிரிழப்புக்கு அஞ்சாமல் துணிச்சலுடன் வீடுகளைச் சரிசெய்யும் பணிகளிலும், வேறுசிலர் தேனீர் மற்றும் பழக்கடைகள் நிறுவியும் வருகின்றனர்.

சுமார் 10 வருட காலமாக ஈராக் மீது அமெரிக்காவால் திணிக்கப்பட்ட போரின் எச்சங்களாக உருவானதுதான் ஐ.எஸ்.ஐ.எல் அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம். அதிதீவிர இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட ஒரு அழிவை ஒத்ததாக இருக்கிறது மொசூல் நகரம்.வரலாற்றுக் காலம் தொட்டே பொருளாதாரக் கேந்திரமாக விளங்கிவந்த மொசூல் நகரம் இன்று வேட்டைக்காடாக மாறி நாதியற்றுக் கிடக்கிறது.

வான்வழித் தாக்குதலிலிருந்து தப்பிக்க இரு கட்டிடங்களுக்கிடையில் துளைகளை ஏற்படுத்தியிருக்கும் ஐ.எஸ் அமைப்பு

அல் முசாஃபீ மசூதி – வான் வழித் தாக்குதலில் தப்பிய மசூதிகள் சிலவற்றில் இதுவும் ஒன்று

ஐ.எஸ்-பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் சீரழிக்கப்படும் மொசூல் நகரம்

ஐ.எஸ் அமைப்பு தங்களின் இறுதிப்புகலிடமாகப் பயன்படுத்திய கட்டிடங்கள் சூழப்பட்ட மொசூல் நகரம்

மொசூல் நகரத்தின் இதயத்துடிப்பாக விளங்கிய பழமை வாய்ந்த கட்டிடம் உருக்குலைந்து நிற்கிறது

காசீம் யாஹ்யா வயது 75 – தேனீர் விடுதியொன்றில் காலை சிற்றுண்டி தயாரிக்கிறார். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் ஐ.எஸ் அமைப்பால் தலை கொய்யப்பட்டும், கட்டிடங்களிலிருந்து தூக்கியெறியப்பட்டும் கொல்லப்பட்டனர் என்கிறார்.

வாகனங்களில் பொருத்தப்பட்ட அதிபயங்கர வெடிகுண்டுகளால் இராணுவத்தையும், அப்பாவி மக்களையும் ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்றொழித்தனர்.

சீரழிக்கப்பட்ட மொசூல் நகரத்தைப் படம்பிடிப்பவர்கள் கைது செய்யப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளார் ஆளுநர்.

மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையின் சின்னமாயிருந்த மொசூல் நகரத்தின் இப்போதைய அவல நிலை

ஏறக்குறைய 5000 கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்கிறது ஐ.நா-வின் அறிக்கை

ஐ.எஸ் அமைப்பின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமுமில்லாத  மொசூல் நகரம்.


தமிழாக்கம்: வரதன்
நன்றி:  அல்ஜசீரா 

அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

” கார்ப்பரேட் காவி பாசிசம்! எதிர்த்து நில்! ” மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டில் கோவன் மற்றும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவினர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

♠ மோடி – அம்பானி ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்தும் ”உலகத்துலே பெரிய சிலை பட்டேலு… அது உள்ள போயி ஒளிஞ்சிக்கிச்சி ரஃபேலு…” என்ற பாடல்;
♠ விடுதலை போராட்டத்தில் உணர்வுப்பூர்வமாகப் பங்கேற்று தியாகங்களை எதிர்கொண்ட இருட்டடிப்பு செய்யப்பட்ட இசுலாமியர்களின்  வரலாற்றை  நினைவுகூரும், ”சொல்லாத சோகம்… யாரும் வெல்லாத வீரம்…” என்ற பாடல்;
♠ தமிழகத்தில் தமிழிசையின் அலப்பறைகளை அலறவிடும் ”மலர்ந்தே தீரும்… தாமரை மலரந்தே தீரும்…”  என்ற பாடல்;
♠ கார்ப்பரேட் – காவி பாசிசத்தை அம்பலப்படுத்தும் ” அடக்குமுறைதான் ஜனநாயகமா? அடங்கிபோனால் மாறிடுமா…!” உள்ளிட்ட பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

தோழர் கோவனின் கலை நிகழ்ச்சிகளில் இந்த முறை கிடார் உள்ளிட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் துடிப்புடன் பாடலை அள்ளித்தந்தது !

இந்தப் பதிவில் அடக்குமுறைதான் ஜனநாயகமா? அடங்கிபோனால் மாறிடுமா…! பாடல் இடம்பெறுகிறது.

பாடலில் இடம் பெற்ற சில வரிகள்..

… நீ விரும்பவில்லை… நான் பேசக்கூடாது!
நீ ரசிக்கவில்லை… நான் பாடக்கூடாது!
நான் உண்ணுவதை நீ தடுக்கிற…
நான் எண்ணுவதை நீ மறுக்கிற…
அதிகாரம் இருப்பதால் ஆடாதே…
மக்கள் அலையாய் எழுந்தால்…
காற்றாக அழிவாய்…
காணாமல் போவாய்…
காவியே நீ ஒழிவாய்! …

பாருங்கள்.. பகிருங்கள்..!

அடக்குமுறைதான் ஜனநாயகமா? அடங்கிபோனால் மாறிடுமா…!

காஷ்மீரின் ஊடகங்களை ஒடுக்கும் மோடி அரசு !

0

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிக வாசகர்களைக் கொண்ட “கிரேட்டர் காஷ்மீர்”’ நாளிதழுக்கு அளிக்கப்பட்டு வந்த காஷ்மீர் அரசின் விளம்பரங்கள் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. காஷ்மீர் போராட்டங்களின் வரலாற்றில் முதல்முறையாக இவ்வாறு நிகழ்ந்துள்ளது. ஏற்கெனவே மத்திய அரசின் விளம்பரங்கள் மற்றும் காட்சிப்பூர்வ விளம்பர இயக்குநரகம் கடந்த 2008-ம் ஆண்டிலேயே இந்த நாளிதழை கருப்புப் பட்டியலில் வைத்துள்ளது. மேலும் “காஷ்மீர் ரீடர்” என்ற நாளிதழுக்கும் காஷ்மீர் அரசின் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்ட 2016-ம் ஆண்டு காலகட்டத்தில் 3 மாதங்களுக்கு அப்போதைய பிடிபி, பாஜக கூட்டு அரசாங்கத்தால் இந்த நாளிதழ் தடை செய்யப்பட்டது.

ஏன் இந்த நடவடிக்கை? அதுவும் இப்போது ஏன் இந்த நடவடிக்கை ? விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதாக எவ்வித அலுவலகரீதியான அதிகாரப்பூர்வ ஆணைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதற்கான காரணம் தொடர்பாக மாநில அரசு அதிகாரிகளிடம் கேட்கப்பட்டபோது, “மேலிருந்து வந்த வழிகாட்டுதல்” என இந்திய அரசாங்கத்தைக் குறிப்பிடுகின்றனர். ஆளுநர் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருக்கும் காஷ்மீர் மாநிலம், மைய அரசாலேயே ஆளப்படுகிறது.

கடந்த அக்டோபர் 18, 2017 அன்று மெஹ்பூபா முஃப்தியின் அரசாங்கத்திற்கு இந்திய உள்துறை அமைச்சகம் எழுதிய ஒரு கடிதத்தை ஆளுநர் நிர்வாகம் காலங்கடந்து தற்போது அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், அந்த கடிதத்தின் உள்ளடக்கத்தைத் தாம் கண்டதாகக் கூறியிருக்கிறது. அக்கடிதத்தில் உள்துறை அமைச்சகம் சில நாளிதழ்களைக் குறிப்பிட்டு, அவை “தீவிரவாதிகளையும் தேச விரோத சக்திகளையும் உயர்த்திப் பிடிக்கும் விதமான” தீவிரமான உள்ளடக்கங்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் அவை இந்தியா மற்றும் ஜம்மு காஷ்மீரின் அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த வகையான பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் அளிப்பதன் மூலம் ஆதரவளித்து வருவதிலிருந்து விலகிக் கொள்ளுமாறு மாநில அரசாங்கத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

“தீவிரவாதிகளையும், தேச விரோத சக்திகளையும் உயர்த்திப்பிடித்தல்” என்பதற்கான விளக்கத்தை அளிப்பதிலோ அல்லது ஒரு நாளிதழிடம் ஏன் அதற்கு விளம்பரங்கள் கொடுக்கப்படமாட்டது என்பது குறித்து விளக்கம் அளிப்பதிலோ சர்வாதிகார ஆட்சிக்கான அடையாளங்களைக் கொண்டுள்ள ஒரு அரசாங்கம் ஆர்வம் காட்டப் போவதில்லை. இருப்பினும் உள்துறை அமைச்சகத்தின் கடிதம் வந்து ஒரு ஆண்டிற்குப் பின்னர் மாநில அரசாங்கம் ஏன் இம்முடிவை இந்நேரத்தில் எடுத்திருக்கிறது என்பதை, விளம்பர இருட்டடிப்பு செய்யப்பட்ட நாளைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் விளக்குகின்றன.

படிக்க:
♦ மீடியாவை மிரட்டும் மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்
♦ காஷ்மீர் : கொல்லப்பட்டவர்களை இழிவுபடுத்துவது இயல்பானது என்கிறது இராணுவம்

நாற்பது சி.ஆர்.பி.எஃப் படையினரைப் பலி கொண்ட பிப்ரவரி 14, புல்வாமா தாக்குதல் குறித்த மத்திய அரசின் கடுமையான பேச்சைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கை போர் பயம் ஆட்கொண்டது. மாநில அரசாங்கம், விளம்பரங்களை நிறுத்துவதாக தெரிவித்த அதே நாளில், சுமார் 10,000 துணை இராணுவப் படையினர், காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு கொண்டு வரப்பட்டனர். உணவுத் துறைக்கு உணவுகளை உடனடியாக விநியோகிக்குமாறும், மருத்துவமனைகளுக்கு உடனடியாக போதுமான அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை வைத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டது. மருத்துவர்களுக்கு விடுமுறையும் ரத்து செய்யப்பட்டது.

நெருங்கிவரும் தேர்தலுக்காகத்தான் கூடுதல் படையணிகள் குவிக்கப்பட்டுள்ளன என்ற நிர்வாகத்தின் விளக்கத்தை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையில் அரசு தேர்தலுக்கான தயாரிப்புக்காகத்தான் இந்த அதீத முனைப்புடன் செயல்படுகிறது எனில், முகநூல் பக்கத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் ’லைக்’-களையும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெருவாரியான இணைய வாசகர்களைக் கொண்டுள்ள “கிரேட்டர் காஷ்மீர்” பத்திரிகைக்கு விளம்பரங்களை ஏன் நிறுத்த வேண்டும். தேர்தல் நோக்கத்தை இது எவ்வகையில் நிறைவேற்றும்? அதுவும் இவ்விளம்பரங்களில் பெரும்பாலானவை தேர்தலுக்கு நேரடியாக சம்பந்தப்பட்டவை எனும் போது குறிப்பாக இது எவ்வகையில் அந்நோக்கத்தை நிறைவேற்றும்? பரந்துபட்ட அளவில் விநியோகமாகும் ஒரு பத்திரிகையில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கிடைக்கப்பெறாமல் செய்வது எந்த நோக்கத்தை நிறைவேற்றக் கூடும்?

ஊடகங்களை மண்டியிடுவதை நோக்கித் தள்ளுவது

கடந்த பிப்ரவரி 28 அன்று ஜமாத்-இ-இஸ்லாமி என்ற சமூக – மதவாத அமைப்பு தடை செய்யபட்டத்தைத் தொடர்ந்து அவ்வமைப்பின் செயற்பாட்டாளர்கள் 400 பேரை கைது செய்ததன் பின்னணியிலும் இந்த விளம்பர ரத்து நடவடிக்கையைப் பார்க்க வேண்டும். அச்சுறுத்தும் நிலைமைகள் மேலெழும் போது, காஷ்மீர் ஊடகங்கள் சத்தமின்றி முடக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் பொருட்டு ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் தந்திரமாகவும் இது இருக்கலாம். காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே மிகப்பெரிய ஒரு ஊடகத்தையும் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் திரள் போராட்டங்களின் போது ஏற்கெனவே தண்டிக்கப்பட்ட “காஷ்மீர் ரீடர்” நாளிதழையும் தனக்கு கீழ்படிந்து இருக்கச் செய்வதற்கு விளம்பரங்களை நிறுத்துவதைத் தவிர சிறந்த வழி வேறு ஏதேனும் இருக்க முடியுமா?

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் பொறியமைவாக விளம்பரங்களை பயன்படுத்துவது காஷ்மீரில் இப்போது புதிதாக நடக்கவில்லை. இதற்கு முன்னால் காங்கிரசு கட்சி மத்தியில் ஆட்சியிலிருக்கும்போது, விளம்பரங்கள் மற்றும் காட்சிப்பூர்வ விளம்பர இயக்குநரகத்தின் மூலம் ”க்ரேட்டர் காஷ்மீர்” நாளிதழுக்கு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஊடகங்களை மண்டியிடச் செய்ய வேறு வழிமுறைகளும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. 2002-ம் ஆண்டுக்கும் 2008-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட – ஒப்பீட்டளவில் அமைதியான காலகட்டமாகக் கருதப்பட்ட – ஆண்டுகளில், “கிரேட்டர் காஷ்மீர்” நாளிதழின் மீது பத்துக்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. இப்பத்திரிகையின் மீதான பெரும்பாலான வழக்குகளை நீதிமன்றங்கள் ரத்து செய்து விட்டன. காஷ்மீரில், முதல் தகவல் அறிக்கை என்பது ஊடக மட்டறுத்தலின் மறைமுக வடிவமாகும். உதாரணத்திற்கு, முசாஃபராபாத்தில் உள்ள ஒரு வெளிநாட்டு செய்தி நிறுவனத்தின் செய்தி அறிக்கையை அப்படியே வெளியிட்டதற்காக போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் அதில் ஒன்று. இந்தியாவில் மையங்களைக் கொண்டுள்ள அந்த வெளிநாட்டு செய்தி நிறுவனத்திற்கு ஒரு நோட்டீசு கூட அனுப்பவில்லை.

படிக்க:
♦ ஸ்காட்லாந்தில் சில பாகிஸ்தானிய நண்பர்கள் | கௌதமி சுப்ரமணியம்
♦ ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை

விளம்பரங்களின் மூலம் போடப்படும் இந்த வாய்ப்பூட்டு, பெரும் கடினமான சூழலையும் எதிர்கொண்டு காஷ்மீரில் வளர்ந்த ஒரு உறுதியான நிறுவனத்தை சீர்குலைப்பதற்காகவா? கொந்தளிப்பான 1990-களின் தொடக்கக் காலகட்டத்தில் “கிரேட்டர் காஷ்மீர்” நாளிதழ், முதலில் ஒரு வார இதழாகத் தொடங்கப்பட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதல் ஆங்கில நாளிதழாக வெளிவந்து நூற்றுக்கணக்கான பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கொடுக்கும் ஒரு ஊடக நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

“கிரேட்டர் காஷ்மீர்” நாளிதழின் நிதி ஆதாரங்களில் மத்திய அரசு தாக்குதல் தொடுத்திருப்பது, காஷ்மீரின் ஒவ்வொரு நிறுவனத்தையும் “தேச விரோதமானதாகக்” கருதும் மத்திய அரசின் கொள்கையோடு தொடர்புடையதாகும்.  இச்செய்தித்தாளுக்கு இந்தியாவின் அரசியலில் அடைக்கலம் புகுந்துள்ள பல எதிர்ப்பாளர்கள் உள்ளனர். ஒரு வலதுசாரிக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கத்தில் ஒரு முன்னாள் இந்திய இராணுவ ஜெனரல், “கிரேட்டர் காஷ்மீர்” நாளிதழுக்கு இயல்பிலேயே வகுப்புவாத நோக்கம் இருப்பதாகப் பேசினார்.

முசுலீம்கள் அடித்துக் கொல்லப்படுவதைக் கண்டு மவுனமாக இருப்பதற்காகவும், பெரும்பான்மைவாத அரசியலை ஆதரிப்பதற்காகவும் விமர்சிக்கப்படும் ஒரு அரசாங்கம், பெரிய செய்தித்தாள் ஒன்றிற்கு விளம்பரங்களை நிறுத்துவது குறித்து ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆனால் இது காங்கிரஸ், பிடிபி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றிற்கு பாடங்களை வழங்கியுள்ளது. அவர்கள் ஊடகங்களைக் கையாண்ட விதமே பரவாயில்லை என்ற கருத்து, பாஜக மாதிரியான ஒரு கட்சி, பத்திரிகைகளை ஆக்ரோஷமாக ஒடுக்குவதன் மூலம் மட்டும்தான் ஏற்பட முடியும்.


கட்டுரையாளர்: ஹிலால் மிர்
தமிழாக்கம் : நந்தன்
நன்றி : ஸ்க்ரோல் இணையதளம்

பல்கேரியா : ஓர் அறிமுகம் ! | கலையரசன்

1

கலையரசன்
“உல‌கில் த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே இனப் பிர‌ச்சினை இருப்ப‌தாக‌” நினைத்துக் கொண்டிருக்கும் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளை ப‌ல்கேரியாவுக்கு கூட்டிச் சென்று காட்ட‌ வேண்டும்.

இங்கும் அதே இன‌ப்பிர‌ச்சினை. மொழி ம‌ட்டும்தான் வேறு. ம‌ற்ற ப‌டி அர‌சியல் ஒன்று தான். அர‌சிய‌ல்வாதிக‌ளின் பேச்சுக‌ளும் கேட்டால் ஒரே மாதிரித் தான் இருக்கும்.

இல‌ங்கையில் உள்ள‌ சிங்க‌ள‌வ‌ர் – த‌மிழர் பிர‌ச்சினையை விட‌ ப‌ல்கேரிய‌ இன‌ப் பிர‌ச்சினை இன்னும் மோச‌மான‌து என‌லாம். அய‌ல் நாடுக‌ளும் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்டிருப்ப‌தால் சிக்க‌லான‌து.

சுருங்க‌க் கூறின் : பெரும்பான்மை ப‌ல்கேரிய‌ர்க‌ளுக்கும், சிறுபான்மை துருக்கிய‌ருக்கும் இடையிலான பிர‌ச்சினை. இல‌ங்கையில் சிங்க‌ள‌வர் போன்று ப‌ல்கேரிய‌ர்க‌ளும் த‌மிழ‌ர் போன்று துருக்கிய‌ரும் ஒரே மாதிரியான‌ அர‌சிய‌ல் க‌தையாட‌ல்க‌ளை கொண்டுள்ள‌ன‌ர்.

துருக்கிய‌ர்க‌ள், ப‌ல்கேரிய‌ பேரின‌வாத‌ ஒடுக்குமுறை ப‌ற்றி பேசுவார்க‌ள். அதே நேர‌ம், ப‌ல்கேரிய‌ர்க‌ள் துருக்கியின் பிராந்திய‌ வல்ல‌ர‌சு ஆக்கிர‌மிப்பு ப‌ற்றி பேசுவார்க‌ள்.

அதை விட‌ இருப‌தாம் நூற்றாண்டின் ஆர‌ம்ப‌ கால‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ப்ப‌டுகொலைக‌ள், இன‌ச் சுத்திக‌ரிப்புக‌ள் ப‌ற்றி இன்றும் நினைவுகூருகிறார்க‌ள். அத‌ற்காக‌ நீதி கோரி ஜெனீவாவில் முறையிடுகிறார்க‌ள்.

இன்றைகும் இன‌ முர‌ண்பாடுக‌ளின் விளைநில‌மான‌ பால்க‌ன் பிராந்திய‌த்திற்கு உங்க‌ளை வ‌ர‌வேற்கிறோம்!

இன‌ப் பிர‌ச்சினை ப‌ற்றி தெரிந்து கொள்வோமா? நான் இன்னும் சொல்லத் தொட‌ங்க‌வேயில்லை… எங்கே த‌லை தெறிக்க‌ ஓடுகிறீர்க‌ள்?

பல்கேரியா தலைநகர், சோபியா நகர மத்தியில் அமைந்துள்ள மசூதி, ஐநூறு வருட காலப் பழமையானது. இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. சோபியாவில் வாழும் துருக்கி – இஸ்லாமிய சிறுபான்மையினர் மட்டுமல்லாது, அகதிகள், மாணவர்களும் அங்கு தினசரி தொழுகைக்காக வருகின்றனர்.

சுமார் ஐநூறு வருடங்களுக்கும் மேலாக, பல்கேரியா துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. அந்தக் காலத்தில் இலட்சக் கணக்கான பல்கேரியர்கள் இஸ்லாமியராக மதம் மாறி இருந்தனர்.

ஓட்டோமான் ஆட்சியில் கிடைத்த சலுகைகளும், குறிப்பாக அரச பதவிகள் இஸ்லாமியருக்கு மட்டுமே ஒதுக்கப் பட்டமையும் மத மாற்றத்திற்கு ஒரு காரணம். அதனால், பெரும்பாலானவர்கள் துருக்கி மொழியை தாய்மொழியாக பேசி துருக்கியராக மாறி விட்டனர்.

இதைவிட “போமாக்” எனப்படும், பல்கேரிய மொழி பேசும் முஸ்லிம்களும் அங்கே வாழ்கிறார்கள். ஆனால் அந்த சமூகத்தினரின் எண்ணிக்கை மிகக் குறைவு. தொலைதூர மலைப் பிரதேசங்களில் வாழும் அந்த சமூகம், உலகில் அழிந்து வரும் சிறுபான்மை இனங்களில் ஒன்று.

துருக்கி எல்லையோரம் இருக்கும் தெற்குப் பகுதியில் துருக்கியரின் எண்ணிக்கை அதிகம். அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் இப்போதும் துருக்கி மொழி மட்டுமே பேசுவதாகவும், பல்கேரிய மொழி பேசி கடையில் ஒரு பொருள் கூட வாங்க முடியாது என்று பல்கேரிய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கும் என்ற மாதிரி, பல்கேரிய இனப்பிரச்சினைக்கும், இலங்கை இனப்பிரச்சினைக்கும் இடையில் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டு நாடுகளிலும் ஒரே கதை தான் நடக்கிறது. அதற்குக் காரணம், தேசியவாத அரசியல் சமூகங்களும், அது தொடர்பான தீர்க்கப் படாத பிரச்சினைகளும் தான். துருக்கி சிறுபான்மையினர் தனிநாடு பிரித்து தரச் சொல்லிக் கேட்பதாகவும், அதை துருக்கி ஊக்குவிப்பதாகவும் பல்கேரியர்கள் கூறுகின்றனர்.

பல்கேரிய பெரும்பான்மை இனத்தவரின் வாதம் இப்படி இருக்கிறது. தமது நாட்டில் உள்ள துருக்கியர்கள், இனத்தால் பல்கேரியர்கள் என்றும், துருக்கி மொழி பேசுவதால் வேறு இனமாக காட்டிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள். அதே நேரம் துருக்கி சிறுபான்மையினரின் வாதம் அதற்கு நேர் எதிரானது. பல்கேரியர்கள் பூர்வீகத்தில் துருக்கியரே என்றும், ஸ்லாவிய மொழி பேசுவதால் தம்மை வேறு இனமாக காட்டிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள்.

இரண்டு தரப்பினரும் சொல்லும் வாதங்களிலும், ஓரளவு உண்மையும் இருக்கிறது. அதே நேரம் மிகைப் படுத்தல்களும் உள்ளன. பண்டைய கால அரசியல் இன்றுள்ளதை விட மிகவும் மாறுபாடானது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசியவாதம் அறிமுகமானது. அன்றிலிருந்து எல்லோரும் தேசியக் கற்பிதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எண்பதுகளில் பல்கேரிய அரசியல் போக்கும் மாறிக் கொண்டிருந்தது. பூகோள அரசியல் மாற்றங்கள் காரணமாக, அந்நாட்டிலும் மெல்ல மெல்ல தேசிய இனப் பிரச்சினை தலைதூக்கியது. அயல்நாடான துருக்கி நேட்டோ உறுப்பினராக இருந்த படியால், பல்கேரியாவில் இருந்த துருக்கி சிறுபான்மையினர் நசுக்கப் பட்டனர். பல்கேரியாவுக்கு விசுவாசமாக இருப்பதாக நிரூபிக்க வேண்டும் என கோரப் பட்டனர். பல்கேரிய மொழிப் பெயர்களை சூட்டிக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டனர். பல்கேரியாவுக்கு விசுவாசமில்லாதவர்கள் துருக்கிக்கு செல்லலாம் என அறிவிக்கப் பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான துருக்கியர்கள் அகதிகளாக வெளியேறி துருக்கிக்கு சென்றனர்.

*****

நாஸி ஜெர்மனியில் நடந்த பாராளுமன்ற எரிப்பு வழக்கில் துணிச்சலாக தனது தரப்பு வாதங்களை முன்வைத்து விடுதலையாகி உலகப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் டிமிட்ரேவ் ஒரு பல்கேரியா நாட்டுக்காரர். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் சோஷலிச பல்கேரியாவின் முதலாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். பல்கேரியாவில் அவரது காலம் பொற்காலம் என்று கூறலாம்.

பிரபலமான பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவர் டிமிட்ரோவ், சோஷலிச பல்கேரியாவில் 1949 -ம் ஆண்டு காலமானார். மொஸ்கோ நகரில் உள்ள லெனின் சமாதி போன்று, பல்கேரியாவில் இந்த சமாதி கட்டப் பட்டு, டிமித்ரோவின் பூதவுடல் அங்கு வைக்கப் பட்டிருந்தது.

பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவர் டிமிட்ரோவ்

பல்கேரியா முதலாளித்துவ- ஜனநாயக நாடான பின்னர், டிமித்ரோவின் பூதவுடல் அகற்றப் பட்டு எரிக்கப்பட்டது. 1999 -ம் ஆண்டு, வலதுசாரிக் கட்சி ஆட்சியில் இந்த சமாதியையும் இடித்து விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தில் கூட எதிர்ப்பு இருந்தது.

ஒரு கருத்துக் கணிப்பில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் சமாதி இடிக்கப்படுவதை விரும்பவில்லை. இருப்பினும், மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், டிமிட்ரோவ் நினைவாலயம் நான்கு தடவைகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் அப்படி ஒரு கட்டிடம் இருந்தமைக்கான எந்த சுவடும் இல்லை.

ப‌ல்கேரிய‌ த‌லைநகர் சோபியாவில் முன்பிருந்த‌ க‌ம்யூனிச‌ கால‌த்து சிலைக‌ளை எல்லாம் அக‌ற்றி விட்டார்க‌ள். அவ‌ற்றில் சில‌வ‌ற்றை ஓரிட‌த்தில் வைத்து மியூசிய‌ம் ஆக்கி விட்டார்க‌ள்.

அத‌ற்கு அருகில் Socialist art museum என்ற‌ பெய‌ரில் க‌ம்யூனிச‌ எதிர்ப்பு ஓவிய‌ங்க‌ளை காட்சிக்கு வைத்திருக்கிறார்க‌ள். அந்த‌ ஓவிய‌ங்க‌ள் 1989-ம் ஆண்டு முத‌லாளித்துவ‌த்திற்கு திரும்பிய‌தை கொண்டாடுகின்ற‌ன. அந்த‌ வருட‌த்திற்கு முந்திய‌ வ‌ர‌லாற்றை அழித்து விட‌ விரும்புகிறார்க‌ளாம்.

*****

லைநகர் சோபியாவில் இருந்து வடக்கு நோக்கி சுமார் நூறு கிலோமீட்டர் தூரத்தில் Montana என்ற நகரம் உள்ளது. மலைகளும், பள்ளத்தாக்குகளும், நீரோடைகளும் கொண்ட அழகிய நகரம். இன்றைக்கும் பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அங்கு பண்டைய மனிதர்கள் வாழ்ந்த குகைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

அழகிய மோண்டனா நகரம்

அங்கு ஒரு ப‌ல்கேரிய‌ ந‌ண்ப‌ரின் விருந்தாளியாக‌ த‌ங்கி இருந்தேன். அந்த‌ ப‌ல்கேரிய‌ ந‌ண்ப‌ருக்கு ஆங்கில‌ம் ஒரு சொல் கூட‌ தெரியாது. இந்த தொட‌ர்பாட‌ல் பிர‌ச்சினை ப‌ற்றி சோபியாவில் இருந்து என்னை அங்கு அனுப்பி வைத்த‌ ந‌ண்ப‌ரும் முன்கூட்டியே அறிவித்து இருந்தார். மொழிப் பிர‌ச்சினையை தீர்ப்ப‌த‌ற்கு என்ன‌ செய்ய‌லாம் என்று என்னைப் போல் அவ‌ரும் யோசித்திருப்பார். என்னை அழைத்துச் செல்ல‌ வ‌ந்த‌ நேர‌ம் “பிரெஞ்சு தெரியுமா?” என்று கேட்டார். ந‌ல்ல‌வேளையாக‌ என‌க்கும் பிரெஞ்சு தெரிந்த‌ ப‌டியால், இருவ‌ரும் பிரெஞ்சில் உரையாடினோம்.

இங்கே முக்கிய‌மாக‌ க‌வ‌னிக்க‌ப் பட வேண்டிய‌ விட‌ய‌ம் ஒன்றுள்ள‌து. ப‌ல்கேரியா சோஷ‌லிச‌ நாடாக‌ இருந்த‌ கால‌த்தில் ஆங்கில‌ம் இர‌ண்டாம் மொழியாக‌ க‌ற்பிக்க‌ப் ப‌ட‌வில்லை. அத‌ற்குப் ப‌திலாக‌ ர‌ஷ்ய‌ன் க‌ற்பித்தார்க‌ள். 90-க‌ளுக்கு பிற‌கு தான் அதை நிறுத்தி விட்டு ஆங்கில‌த்திற்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்தார்க‌ள்.

தொண்ணூறுக‌ளுக்கு முன்ன‌ர், ர‌ஷ்ய‌ன் இர‌ண்டாம் மொழியாக‌ இருந்தாலும், பாட‌சாலைக‌ளில் இன்னொரு அந்நிய‌ மொழியும் க‌ற்பித்த‌ன‌ர். அது மாண‌வ‌ர்க‌ளின் சுய‌ தெரிவாக‌ இருந்த‌து. மூன்றாம் மொழியாக‌ ஆங்கில‌ம், பிரெஞ்சு, ஜெர்ம‌ன், ஸ்பானிஷ் ஆகிய‌ மொழிக‌ளை க‌ற்ற‌ன‌ர். இதே த‌க‌வ‌லை முன்னாள் சோஷ‌லிச‌ நாடுக‌ளில் வாழ்ந்த‌ ப‌ல‌ர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அவ்வாறுதான் என‌து ப‌ல்கேரிய‌ நண்ப‌ருக்கு பிரெஞ்சு பேச‌த் தெரிந்திருக்கிற‌து. ஓய்வு பெறும் வ‌ய‌திலும் அவ‌ர் பிரெஞ்சை ம‌ற‌க்க‌வில்லை. என‌க்கும் ச‌ர‌ள‌மாக‌ பிரெஞ்சு தெரியாது. கொஞ்ச‌ம்தான் தெரியும். ஆனால், அடிப்ப‌டை விட‌யங்க‌ள் ப‌ற்றிய‌ தொட‌ர்பாட‌லுக்கு தேவையான‌ அள‌வு பிரெஞ்சு தெரிந்தால் போதும்.

விராட்சா நகரில் ஒரு பெரிய அர‌ச‌ அச்ச‌க‌ம் இருந்த‌து. பல்வேறு வகையான அரச வெளியீடுகளை அங்கு தான் அச்சடித்தார்கள். 1990 -ம் ஆண்டு வரையில், சுமார் 300 தொழிலாள‌ர்க‌ள் அங்கு வேலை செய்த‌ன‌ர். தொண்ணூறுக‌ளில் “ஜ‌ன‌நாயக‌ம்” வ‌ந்த‌ பின்ன‌ர் உற்ப‌த்தியை நிறுத்தி விட்டார்க‌ள். விலை உய‌ர்ந்த‌ அச்சு இய‌ந்திர‌ங்க‌ளை, இந்திய‌ நிறுவன‌ம் ஒன்றுக்கு அடி மாட்டு விலைக்கு விற்று விட்ட‌னர். தொன்(டன்) க‌ண‌க்கிலான‌ கட‌தாசிக‌ளை வீசி விட்ட‌ன‌ர். அங்கு வேலை செய்த‌வ‌ர்க‌ள் வேலையில்லாம‌ல் ந‌டுத் தெருவில் விட‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

அந்த‌ தொழில‌க‌த்தை நான் நேரில் சென்று பார்த்தேன். பாழடைந்த‌ க‌ட்டிட‌மாக‌, உள்ளே ஒன்றும் இல்லாம‌ல் வெறுமையாக‌ இருந்த‌து. ஜ‌ன்னல் க‌ண்ணாடிக‌ள் உடைக்க‌ப் ப‌ட்டு, த‌ரையெங்கும் க‌ண்ணாடித் துண்டுக‌ள் சித‌றிக் கிட‌ந்த‌ன‌. நொறுங்கிய‌ க‌ண்ணாடித் துண்டுக‌ள் போன்ற‌து தான், அந்த‌ ந‌க‌ர‌த்தில் வாழும் பெரும்பாலான தொழிலாள‌ர்க‌ளின் நிலைமையும். அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி க‌வலைப்ப‌ட‌ யாருமில்லை.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை ஊழல் – போதை தேசமாக மாற்றிய ஆட்சியாளர்கள் !

இலங்கையைப் போதைக் கடத்தலின் மையமாகவும், ஊழல் தேசமாகவும் ஆட்சியாளர்கள் மாற்றியுள்ளனர்.

(இலங்கை) புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் தெரிவிப்பு :

“நாட்டின் இன்றைய அரசியல் பொருளாதார நிலைமைகள் என்றுமில்லாதவாறு மோசமடைந்துவருகின்றன. உழைக்கும் மக்கள் அனைவர் மீதும் உழைப்புச் சுரண்டலும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளும் சுமத்தப்பட்டுள்ளன. அதேவேளை அடக்குமுறைகள் அதிகரித்துச் செல்கின்றன.

உயர்வர்க்க மேட்டுக்குடியினரும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளான ஆட்சி அதிகார ஆளும் வர்க்கத்தினரும் அதியுயர் சம்பளங்கள், தரகு, ஊழல் மற்றும் குறுக்கு வழிகள் போன்றவை மூலம் சொத்து சேர்த்து வருகிறார்கள். அதிகாரத்தில் இருப்போரின் துணையுடன் நாட்டின் வளங்கள் அந்நிய, உள்நாட்டு கொம்பனிகளுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன.” என புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் அவர்கள் அக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அண்மைய அரசியல் போக்குத் தொடர்பாக வெளியிட்டுள்ள கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகத் தெளிவுபடுத்தும் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில், “உழைக்கும் மக்களின் உழைப்பு கோரமாகச் சுரண்டப்படுகிறது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மறுக்கப்படுகிறது. இதற்கு அண்மைய உதாரணமாக, அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவைக் கோரிய பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, நாளந்த சம்பளத்தில் வெறும் இருபது ரூபா மட்டுமே பிச்சை பணம் போன்று வழங்கப்பட்டமையை கூறலாம். இதில் முதலாளிமார் சம்மேளனமும் அரசாங்கமும் ஒன்றாக நின்றனர். பிரதமர் முன்னிலையில் அலரி மாளிகையில் இருபது ரூபாவிற்கு முதலாளிமார்களும் காட்டிக் கொடுப்புத் தொழிற்சங்கங்களும் கைச்சாத்திட்டனர். இதனை முழுநாடும் அனைத்து உழைக்கும் மக்களும் கண்டனர். இதனூடாக வர்க்க வேறுபாட்டின் ஆழமும் சமூகத்தின் ஏற்றத் தாழ்வான நிலையும் அப்பட்டமாக வெளிப்பட்டது. இது இலங்கையின் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் ஆளும் சொத்துடைய வர்க்கத்திற்குமிடையிலான அடிப்படையான முரண்பாட்டிற்கு ஒரு சோற்றுப் பதமாகும்.

படிக்க:
♦ இலங்கைத் தேர்தல்: இனவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!
♦ இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !

இத்தகைய அடிப்படை முரண்பாட்டின் வழியாகவே, பொருளாதார நெருக்கடிகளும் வரிச் சுமைகளும் 5,300 கோடி அமெரிக்க டொலர்கள் அந்நியக் கடனும் மக்களின் தலைகளில் சுமத்தப்பட்டுள்ளன. அனைத்து அத்தியாவசிய பொருட்களினதும் மீதான அதிகரித்த வரிகளே அவற்றின் தொடர்ச்சியான விலையுயர்வுக்குக் காரணமாகும். இதனால் வாழ்க்கைச்செலவு அதிகரித்தும் வாழ்க்கைத் தரம் கீழிறங்கியும் செல்கிறது. வறுமையும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோரின் தொகையும் அதிகரித்துச் செல்கின்றன. வேலைவாய்ப்பின்மை வளர்ந்து செல்கிறது. விவசாயமும் சிறு தொழில்களும் அழிவடைந்துள்ளன.

சேவைத்துறையினைக் காட்டி இலங்கையை மத்தியதர வாழ்க்கையுடைய நாடாக மாற்றப் போவதாக ரணில் விக்கிரமசிங்க பிரகடனம் செய்து நான்கு வருடங்களாகிவிட்டது. பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று கூவியவரும் அவரே. அதேபோன்று, ஊழலை ஒழிப்போம் என்று கூறியவர்களே பெரும் ஊழலுக்குத் துணை போனார்கள். முன்னைய பெரும் ஊழல் வாதிகளைத் தண்டிப்பதற்கு பதிலாகப் பாதுகாத்தும் கொண்டனர். இன்று இலங்கை ஊழல் தேசமாகி நிற்பதையே காண முடிகிறது.

நாளாந்தம் போதைப் பொருட்களின் கடத்தலும் விற்பனையும் அதிகரித்து செல்கிறது. போதைப் பொருள் பாவனை பாராளுமன்றத்திற்கு உள்ளும் ஜனாதிபதி மாளிகைகளுக்குள்ளும் சென்றிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது போன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்போரும் எதிர்த்தரப்பில் இருப்போரும் இருந்து வருகிறார்கள்.

ராஜபக்சே, சிரிசேனா, விக்கிரமசிங்கே

இந்நிலையிலே நாடு இவ்வாண்டு மூன்று முக்கிய தேர்தல்களைச் சந்திக்கிறது. நாட்டின் தெற்கு அரசியலில் அடுத்த ஆட்சி அதிகாரத்திற்கு யார் வருவது என்பதில் மூன்று தரப்புக்களாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் தலைமையிலான பெரு முதலாளிய பேரினவாத கட்சிகளிடையே கடுமையான போட்டி இடம்பெற்று வருகிறது. ஆனால் இவர்களில் எத்தரப்பும் நாட்டின் அடிப்படை பிரச்சனையான பொருளாதார நெருக்கடிப் பிரச்சனையில் ஏகப் பெருபான்மையான உழைக்கும் மக்களுக்குச் சார்பான கொள்கை நிலைப்பாடு உடையவர்களல்லர். அதேபோன்று நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு நியாயமான தீர்வைக் கொண்டு வருவதற்குச் சாதகமானவர்களும் அல்லர். இவர்கள் அனைவருமே முப்பது வருட கொடிய போரினை நடத்தியவர்கள் என்பது மறக்கப்படமுடியாததாகும்.

அதேபோன்று கடந்த நாற்பது வருட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நாசகாரம் கொண்ட தாராளமயம் தனியார்மயம் பூகோளமயமாதல் என்பவற்றையும் அதன் தொடர்ச்சியான நவதாராள பொருளாதாரத்தையும் எக் கேள்வி நியாயங்களுக்கு அப்பால் நடைமுறைப்படுத்தி அந்நிய ஏகாதிபத்திய – பிராந்திய மேலாதிக்க சக்திகளுக்கு ஆதரவும் அரவணைப்பும் கொடுத்தவர்களும் இதே ஆட்சி அதிகார வெறிபிடித்து நிற்பவர்களேயாவர். அதே போன்று தேசிய இனப்பிரச்சினையை போர் வரை வளர்த்துச் சென்ற இனவாதத் தலைமைகளும் இத்தகைய தரப்புக்களேயாவர். அவர்களில் எத்தரப்பு அதிகாரத்திற்கு வந்தாலும் மேலே சுட்டிக் காட்டிய எந்தவொரு பிரச்சினைகளுக்கும் மக்கள் சார்பான தீர்வுகள் ஏற்படப் போவதில்லை.

அதேபோன்று வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் தமிழ் முஸ்லீம் மலையக மக்களின் வாக்குகளைப் பெற்று தத்தமது ஆதிக்க அரசியலைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளக் குறுந்தேசியவாத நிலைப்பாட்டையும் இனமத அடையாள அரசியலையும் முன்தள்ளி மக்களிடையே வாக்கு வேட்டை நடாத்த தயாராகி வருகிறார்கள். வழிவழி வந்த மேட்டுக்குடி உயர்வர்க்க உயர்சாதியத் தலைமையை நிலை நிறுத்துவதில் ஆதிக்க அரசியல் தலைமைகள் மிக கவனமாக இருந்து வருகின்றன. தங்களுக்குள் மாற்றம் வேண்டிப் போட்டி போடுகிறார்களே தவிர உழைக்கும் மக்களின் பிரதிநிதிகள் எவரும் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதுடன், தமது சாதிய சமூகச் சிந்தனை வழியாக மேட்டுக்குடி ஆதிக்க அரசியல் தலைமை தொடர்வதையே குறுந்தேசியவாத தமிழ் தலைமைகள் தமது உள்ளார்ந்த நிலைப்பாடாகக் கொண்டுள்ளன.

இச்சூழலில் உழைக்கும் மக்கள் அனைவரும் சரியானதும் தூரநோக்கிலுமான அரசியல் சிந்தனையை அறிவுபூர்வமாகவும் நடைமுறை வாயிலாகவும் விளங்கித் தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் தெளிவான நிலைப்பாட்டிற்கு வருவது அவசியமாகும் என்பதை எமது கட்சி வலியுறுத்துகின்றது.

ஏற்கனவே இருந்துவருகின்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்தை  எதிர்த்துவந்த மக்களை, அதைக் கைவிடுவதாகக் கூறி ஏமாற்றியவாறு, அச்சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எனும் முன்னிலும் கொடுமையான அடக்குமுறைச் சட்டத்தை அரசு கொண்டுவர முனைகிறது. அதனை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஆரம்பம் முதலே வலுவாக எதிர்த்து வந்ததுபோன்று எமது கட்சி மிக வன்மையாகக் கண்டித்து எதிர்க்கின்றது.

படிக்க:
♦ வீழ்ந்த விமானம் – விடாத உறுதி ! உண்மை மனிதனின் கதை 2
♦ யார் இந்த அருந்ததிராய் ?

தமது பாரம்பரிய நிலங்கள், வீடுகள், தொழிலிடங்களை மீட்பதற்காக இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போராடிவரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்தையும் அதே போன்று காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு தொடர்ச்சியாக நடந்துவரும் மக்கள் போராட்டங்களையும் எமது கட்சி ஆதரித்து வந்திருக்கிறது. அதேபோன்று அண்மையில் மன்னார் சிலாவத்துறையில் தமது நிலங்களை படையினரிடமிருந்து மீட்பதற்காக ஆரம்பித்திருக்கின்ற மக்கள் போராட்டங்களையும் நாம் ஆதரித்து நிற்கின்றோம்.

புத்தளத்தின் அருவக்காட்டில் பாரிய அளவில் குப்பையை கொண்டுவந்து கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து தமது சுற்றுச்சூழலைக் காப்பதற்காக நூறு நாட்களுக்கு மேல் போராடிவரும் புத்தளம் மக்களின் போராட்டத்தை எமது கட்சி ஆதரித்தும் அதில் பங்குகொண்டும் வந்திருக்கிறது. தொடர்ந்தும் அப்போராட்டத்துடனும் புத்தளம் மக்களோடும் கட்சி தன்னை இணைத்து நிற்கிறது.

புத்தளத்தைக் காப்போம் – இலங்கையில் தொடரும் போராட்டங்கள் !

புதியதோர் கொள்கை வகுத்து அதனை உழைப்போரிடையே கொண்டு செல்ல வேண்டும். ஆண்ட பரம்பரையினரினதும் ஆதிக்க அரசியல் தலைமைகளினதும் பிற்போக்குத்தனங்களையும் அந்நிய சக்திகளை அடிமைத்தனமாக நம்பி மக்களை ஏமாற்றுவதையும் அம்பலபடுத்துவது இன்றைய தேவையாகும். உழைக்கும் மக்களுக்கான அதிகாரத்தை நோக்கிய அரசியல் பயணத்தில் வெகுஜன மார்க்கத்தில் மக்களை அணிதிரட்டுதல் வேண்டும். அத்தகைய அணிதிரள்வு எத்தகைய அந்நிய சக்திகளுக்கும் புலம்பெயர்ந்த, தமிழ்க் குறுந்தேசியவாத மேட்டுக்குடித் தலைமைகளுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் விலை போகாத வெகுஜனப் போராட்டங்களை ஐக்கியப்பட்ட கூட்டுத்தலைமையின் ஊடே முன்னெடுக்க வேண்டும்.அதற்கான பரந்துபட்டதும் உறுதியானதுமான ஐக்கிய முன்னணி கட்டப்பட வேண்டும். அத்தகைய வெகுஜனப் போராட்ட மார்க்கத்தின் ஒரு பகுதியாக மட்டுமே தேர்தல்களம் அமைய வேண்டும். மாறாக, தேர்தல் வெற்றிக்காக மக்களைத் தவறான பாதையில் இட்டுச் செல்லக் கூடிய சந்தர்ப்பவாதக் கொள்கை கொண்டிராது, உழைக்கும் மக்களையும் ஒன்றிணைத்த மாற்று அரசியல் மார்க்கத்தில் பயணிக்க வைப்பதற்கு, நேர்மையான உழைக்கும் மக்களுக்கான சக்திகள் ஒன்றிணைய வேண்டும். அதற்கான அர்ப்பணிப்புடன் செயலாற்ற எமது கட்சி முன்னிற்கிறது.

தனது கொள்கை வேலைத்திட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கும் அதேவேளை, ஏனைய இடதுசாரி, முற்போக்கு, சனநாயக அமைப்புக்களுடன் ஐக்கியப்பட்டு முன்செல்வதை எமது கட்சி வலியுறுத்தி நிற்கின்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் : புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சி

புல்வாமா தாக்குதல் முதல் அபிநந்தன் விடுதலை வரை மோடி என்ன செய்தார்?

2

ந்தியா-பாகிஸ்தான் போர் மூளும் சூழலில் நாட்டு மக்கள் பதைபதைப்புடன் இருந்த சமயத்தில், பிரதமர் மோடி என்ன செய்துகொண்டிருந்தார்?  புல்வாமா தாக்குதல் நடந்த பின், சில மணிநேரங்கள் வரை படப்பிடிப்பில் இருந்தார்.  இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருந்தபோது பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

இந்தியா உளவுத்துறை பலவீனத்தின் காரணமாக, 40 சி.பி.ஆர்.எஃப் வீரர்களை பலிகொண்டது.  அதற்கு பதிலடி கொடுக்கிறேன் என்ற பெயரில் நடத்தப்பட்ட பாலகோட் பகுதி மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை கொன்றதாகக் கூறிக்கொண்டது. பின்னால், அதுவும் பொய்யென நிரூபணமானது. ஆனால், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தானிடையே போர் மூளும் சூழல் உருவானது, அரசு அத்தகைய சூழலை உருவாக்கியது.

பாஜகவின் ஊதுகுழல் ஊடகங்கள் நடக்காதவற்றை ஊதிப் பெரிதாக்கி, போரை விரும்பாத மக்களை போருக்கு தயார்படுத்தின. இந்தியா கூறிக்கொண்டவற்றை பாகிஸ்தான் மறுத்து வந்த நிலையில், பிரதமரோ அல்லது தொடர்புடைய அமைச்சர்களோ எதுவும் பேசவில்லை.

இந்த இரண்டு வாரங்களிலும் மோடி என்ன செய்துகொண்டிருந்தார்….

பிப்ரவரி 14:

தேசிய பாதுக்காப்பு சூழல்: புல்வாமா மாவட்டம் லெத்போரா அருகே மாலை 3.15 மணியளவில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில்  மத்திய ரிசர்வ் போலீசு படையைச் சேர்ந்த 40 பேர் கொல்லப்பட்டனர்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் தேசிய பூங்காவில் ஆவணப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்தார் மோடி.  உள்ளூர் பத்திரிகைகளின்படி அவர் தேசிய பூங்காவில் 6.40 மணி வரை, அதாவது புல்வாமா தாக்குதல் நடந்து 3 மணி நேரத்துக்குப் பிறகும் அங்கேயே இருந்திருக்கிறார்.

பிப்ரவர் 15:

தேசிய பாதுகாப்பு சூழல்: தாக்குதலுக்கு அடுத்த நாள், வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய புலனாய்வு முகமையுடன் புல்வாமா சென்றார். வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கும் ஜெய்ஸ் இ முகமது அமைப்புக்கும் ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார்.

மிகவும் ஆதரவான நாடுகள் என்ற பட்டியலிலிருந்தும் பாகிஸ்தானை நீக்கியது இந்தியா.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  ‘சி.பி.ஆர்.எஃப். வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது’ என உத்தரபிரதேசத்தின் ஜான்சியிலிருந்து இந்தத் தாக்குதல் குறித்து மோடி முதல் கருத்தை உதிர்த்தார்.

மேலும், ஜான்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் பேசினார்.

வந்தே பாரத் என்ற ரயிலை கொடியசைத்தும் தொடங்கி வைத்தார். அன்றைய நாள் மாலையில் பிரதமர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். புது டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் தாமதமாக சென்றார் மோடி.

படிக்க:
ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை
பாஜக-வுக்கு எதிராக கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !

பிப்ரவரி 16:

தேசிய பாதுகாப்பு சூழல்: டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டத்தில் பாதுகாப்புப் படைகளுடன் உறுதுணையாக நிற்பது என அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டது. இந்திய விமானப்படை தலைவர், இந்தியா தேவையான பதிலடிக்கு தயாராகிவருவதாக சொன்னார்.

உலகத்தினரின் ஆதரவை இந்தியா பெறத் துவங்கியது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்குள்ள தற்காப்பு உரிமையை ஆதரித்தார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காஷ்மீரி மாணவர்களை குறிவைத்து இந்துத்துவ காவிகள் வன்முறையை கட்டவிழ்த்தனர். ஜம்முவில் நடந்த கலவரம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200% வரியை உயர்த்தியது இந்தியா.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  படையினருக்கு உறுதுணையாக இருப்பதை தெரிவிக்க கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருந்தார் பிரதமர்.

துலே என்ற இடத்தில் நீர்ப்பாசன திட்டம் ஒன்றை தொடங்கி வைத்ததோடு, ஜல்கான் உதானா ரயில் திட்டத்தையும், ஒரு ரயிலையும் தொடங்கிவைத்தார் மோடி. இரண்டு ரயில் பாதைகளுக்கான அடிக்கல் நட்டு விட்டு, பெண்கள் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.

 

பிப்ரவரி 17:

தேசிய பாதுகாப்பு சூழல்:  ஞாயிற்றுக்கிழமை ஐந்து பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. நான்கு மாணவர்களுக்கு எதிராக ஜெய்ப்பூரில் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்து,  காஷ்மீரி மாணவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து கொண்டிருந்தது.

பாலிவுட்டின் சினிமா தொழிலாளர் அமைப்பு, பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்திய படங்களில் பணிபுரிய தடை விதிப்பதாக அறிவித்தது.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: பிரதமர் ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களுக்குச் சென்றார். ராஞ்சியில் அயூஷ்மான பாரத் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்ட பயனாளிகளுடன் உரையாடினார்.

ஹசாரிபாக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்த அவர், பரவுனியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பிப்ரவரி 18:

தேசிய பாதுகாப்பு சூழல்:  புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்ததாக சொல்லப்பட்ட அப்துல் ரசீது காசி உள்ளிட்ட ஐவர் இந்தியப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது ராணுவ மேஜர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: அர்ஜெண்டினா நாட்டின் அதிபர் மவுரிசியோ மார்சியுடன் அன்றைய பொழுதை கழித்தார் மோடி. இவர்கள் இருவரும் பல்வேறு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டனர்.

கலாச்சார இணக்கத்துக்கான தாகூர் விருதை அளித்தார் பிரதமர் மோடி.

அதோடு, சிவ சேனா – பாஜக கூட்டணி உடன்படிக்கை எட்டப்பட்டதை குதூகலத்தோடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் மோடி.

 

பிப்ரவரி 19:

தேசிய பாதுகாப்பு சூழல்: ‘100 மணி நேரத்துக்குள்’ ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைமையை காஷ்மீரில் அழித்ததாக இந்திய ராணுவம் சொன்னது.

இந்தியா இராணுவ தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் இருமுறை சிந்திக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது முதல் கருத்தை சொன்னார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  வாரணாசியில் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் மருத்துவமனையையும் தொடங்கி வைத்தார்.

புது டெல்லிக்கு திரும்பிய அவர், பாதுகாப்பு முறைகளையும் மீறி சவுதி பட்டத்து இளவரசரை வரவேற்க நேரில் சென்றார்.  இருமுறை கட்டித்தழுவி உற்சாக வரவேற்பு கொடுத்தார்.

பிப்ரவரி 20:

தேசிய பாதுகாப்பு சூழல்: புல்வாமா தாக்குதலைக் கண்டித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐநாவின் மனித உரிமைகளுக்கான தலைவர்  உள்ளிட்ட பலர் அறிக்கை வெளியிட்டனர்.

ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தானியர் ஒருவர் சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். இது புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நடக்கவில்லை என அதிகாரிகள் சொன்னபோதும், தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக தெரிவித்தனர்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: சவுதியின் பட்டத்து இளவரசருடன் அந்த நாளைக் கழித்தார் பிரதமர். இருவரும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

பின்னர், மோடி தென் கொரியாவுக்கு பயணமானார்.

பிப்ரவரி 21-22:

தேசிய பாதுகாப்பு சூழல்: நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி அரசு பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த முடிவு செய்திருப்பதாக அறிவித்தார். தற்போதைய முடிவு மட்டுமல்லாது, முந்தைய முடிவுகளை மறுபரிசீலனை செய்வது என பாஜக தலைவரின் கூற்று தெளிவாக்கியது.

ஏதேனும் ஆக்கிரமிப்பு அல்லது மீறல் முயற்சிகள் நடந்தால் தக்க பதிலடி கொடுக்க பாகிஸ்தான் இராணுவத்துக்கு முழு அதிகாரத்தையும் அளிப்பதாக இம்ரான் கான் வெளிப்படையாக தெரிவித்தார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: சியோல் சென்ற மோடி இந்திய சமூகத்தினரிடையே பேசினார். யோன்சேய் பல்கலைக்கழகத்தில் காந்தியின் உருவச் சிலையை தொடங்கி வைத்தார். இந்திய-தென்கொரிய வர்த்தக அமைப்பினரிடையே உரையாற்றினார்.

 

பிப்ரவரி 23:

தேசிய பாதுகாப்பு சூழல்: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை சேர்ந்த யாசின் மாலிக் மற்றும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. பிரிவினைவாத தலைவர்கள் குறித்து பல்வேறு செய்திகள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பரவின.

இந்தியா பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் எழுதியது.

’இந்திய-பாகிஸ்தான் நிலைமை மிகவும் அபாயகரமாக உள்ளது’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: எகனாமிக்ஸ் டைம்ஸ் நடத்திய உலக வர்த்தகர்கள் மாநாட்டில் மோடி பேசினார்.

ராஜஸ்தான் மாநிலம் டோங்கில் நடந்த பாஜக தேர்தல் பேரணியில் பேசினார். இங்கே, இறுதியாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட காஷ்மீரி மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து தனது கள்ள மவுனத்தை உடைத்தார். நாம் காஷ்மீருக்காக போராட வேண்டுமே தவிர, காஷ்மீரையோ காஷ்மீரிகளையோ எதிர்த்து அல்ல என்றார் மோடி.

பிப்ரவரி 24:

தேசிய பாதுகாப்பு சூழல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘அமைதிக்கான வாய்ப்பைக் கொடுங்கள்’ என மோடியிடம் கேட்கிறார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பிரதமரின் கிஷான் திட்டத்தை தொடங்கிவைத்தார். பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் நீராடி, சுவச் கும்ப் என்ற நிகழ்ச்சியில் பேசினார்.

அதோடு, மிகப் பெரும் அளவிலான டிஜிட்டல் அளவளாவலுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக அறிவித்த மோடி, தேர்தல் பரப்புரை வாசகம் ஒன்றையும் ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார்.

பிப்ரவரி 25:

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: அன்றைய தினம் இருவேறு நிகழ்ச்சிகளில் மோடி உரையாற்றினார். ஒன்று ரைசிங் இந்தியா சம்மிட். மற்றொன்று தேசிய போர் நினைவேந்தல் நிகழ்ச்சி. இரண்டிலும் தொடர்பே இல்லாதவகையில் காங்கிரசை தாக்கி பேசியது சர்ச்சைகளை கிளப்பியது.

நியூஸ் 18 நடத்திய ரைசிங் இந்தியா சம்மிட்-ல் பேசிய மோடி தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

பிப்ரவரி 26:

தேசிய பாதுகாப்பு சூழல்:  எல்லையை மீறி நடத்தப்பட்ட பாலகோட் விமான தாக்குதல் இந்தியாவுக்குள்ளும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயும் பதட்டத்தை உண்டாக்கியது.  வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே, இந்திய விமானப்படை தாக்குதலை உறுதி செய்தார். ‘ஜெய் இ முகமது அமைப்பைச் சேர்ந்த பெரிய அளவிலான தீவிரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த கமாண்டர்கள், ஜிகாதிகள் அழிக்கப்பட்டதாக அப்போது அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பெரிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூடுகள் போர்நிறுத்த மீறல்களும் நடக்கத் தொடங்கின.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியில் மோடி பேசினார். 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் முழக்கத்தைக் கொண்ட கவிதை ஒன்றை மேற்கோளிட்டு அவர் பேசினார். ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசை பல்வேறு முறை தாக்கிப் பேசினார்.

அன்றை தினம் டெல்லியில் இஸ்கான் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் உலகின் மிகப் பெரிய பகவத் கீதை புத்தகத்தை திறந்து வைத்தார்.  டெல்லி மெட்ரோவில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

பிப்ரவரி 27:

தேசிய பாதுகாப்பு சூழல்: புதன்கிழமை பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் இந்திய வான்வெளிக்குள் வந்து, திறந்தவெளியில் தாக்குதலை நடத்தியது. ஒரு வான்வழி சண்டையில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், சுட்டு வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் இராணுவத்தின் பிடியில் சிக்கினார்.

பிரதரின் நிகழ்ச்சி நிரல்:  தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் கலந்துகொண்டு மோடி பேசினார். பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்துரையாடினார்.

பிப்ரவரி 28:

தேசிய பாதுகாப்பு சூழல்:  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய விமானப் படை பைலர் அமைதி நடவடிக்கையாக விடுவிக்கப்படுவார் என அறிவித்தார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: டெல்லியில் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துக்கான சாந்தி ஸ்வரூப் பாத்நகர் விருதுகளை அளித்தார். அபிநந்தனை விடுவிப்பதாக இம்ரான்கான அறிவிக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தானுடனான தற்போதுள்ள சூழல் குறித்தும் விங் கமாண்டர் குறித்தும் விநோதமான கருத்தை கூறினார்.

“நீங்கள் ஆய்வகங்களில் உங்களுடைய வாழ்க்கையை கழிக்கிறீர்கள். முதலில் பைலட் புராஜெட்டை உருவாக்குவது ஒரு சடங்கு. அதன் பிறகு நடைமுறைப்படுத்துதல் நடக்கும். இப்போதுதான் ஒரு பைலட் புராஜெக்ட் முடிந்திருக்கிறது. இனி அதை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்பு அதுவொரு பயிற்சியாக மட்டுமே இருந்தது”  என்றார் மோடி.

மார்ச் 1:

தேசிய பாதுகாப்பு சூழல்: வெள்ளிக்கிழமை, பாகிஸ்தான் பல மணி நேர தாமத்துக்குப் பின் அபிநத்தனை விடுவித்தது.  பாகிஸ்தான் இராணுவம் பிரச்சார நோக்கத்துக்காக அபிநந்தனை வைத்து வீடியோ ஒன்றை எடுத்ததுதான் தாமதத்துக்கு காரணம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  அதற்கு அடுத்த நாள்,  தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தேர்தல் பேரணி கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தனின் தைரியத்தில் அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்வதாக மோடி பேசினார்.

அபிநந்தன் இந்தியா திரும்ப வாழ்த்தாத மோடி, அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து இப்படி ட்விட்டினார்..

“தாயகம் திரும்பியிருக்கும் விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கிறேன்! இந்த தேசம் உங்கள் முன்மாதிரியான தைரியத்தை எண்ணி பெருமை கொள்கிறது. நம்முடைய ஆயுதமேந்திய படைகள் 130 கோடி இந்தியர்களுக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. ஜெய் ஹிந்த்!”


நன்றி : தி வயர்
கலைமதி

அருந்ததி ராய் உரை : காவி அடிப்படைவாதமும் சந்தை அடிப்படைவாதமும் ஒன்றுதான் !

காவி அடிப்படைவாதம் சந்தை அடிப்படைவாதம் இரண்டுமே ஒன்றுதான் : எழுத்தாளர் அருந்ததி ராய்

கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பு கடந்த பிப்-23 அன்று திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தது.

பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த இம்மாநாட்டில் எழுத்தாளர் அருந்ததிராய் பங்கேற்று உரையாற்றினார். மோடி அரசின் கார்ப்பரேட் பாசிச தாக்குதலைப் பற்றியும், நாடெங்கும் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டார்.  அவர் உரையை தோழர் தியாகு தமிழில் மொழி பெயர்த்தார்.

அவரது உரையின் முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!


எதிர்த்து நில் மாநாட்டு உரைகள் – ஆடியோ வடிவில் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள் | ஆடியோ
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! ஆளுர் ஷாநவாஸ், தியாகு, பாலன் உரை | ஆடியோ
காவி பாசிசம் எதிர்த்து நில் ! அரிராகவன் – முகிலன் – வரதராஜன் உரை | ஆடியோ

நூல் அறிமுகம் | சச்சார் குழு அறிக்கை : அறிமுகம் சுருக்கம் விமர்சனம்

முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைகளை கண்டறிய ஏற்படுத்தப்பட்ட சச்சார் குழு தன் அறிக்கையின் மூலம் இஸ்லாமிய சமூகம் குறித்து நிலவிவந்த ஒற்றைப் பார்வையை மட்டுப்படுத்தியதுடன் அவர்களின் வாழ்நிலை குறித்த ஏராளமான தரவுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. நாட்டின் மிகப் பெரும் சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்பட்ட குஜராத் இன அழிப்பைத் தொடர்ந்து இந்துத்துவ சக்திகளால் கக்கி எறியப்பட்ட வார்த்தைகள். “முஸ்லீம்கள் எங்கெல்லாம் அதிகமாக வாழ்கிறார்களோ அங்கெல்லாம் பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறார்கள்” என்பதுதான். இதற்கு முற்றிலும் மாறுபட்ட அவர்களின் நிஜ பரிமாணங்களும் அவர்கள் மிகுதியாக வாழும் பகுதிகளில் எதிர்கொள்ளும் இன்னல்களும், எந்தவித அகக் கட்டுமான வசதிகளும் அற்று ஏனைய பகுதிகளின் குறைந்தபட்ச வசதிகள்கூட இன்றி வாழ்வதும் இப்போது வெளிக்கொணரப்பட்டுள்ளது.

மேலும், கல்வி பெறுவதில் அவர்களின் போதாமையும் நாட்டின் மற்ற பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினரைவிட கல்வியில் பின்தங்கி இருப்பதும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய செய்தியே ஆகும்.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்று மேற்குலக நாடுகளாலும் முஸ்லிம் தீவிரவாதம் என உள்நாட்டு ஊடகங்களாலும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் ஒரு சமூகம் தன் இன, மத அடையாளங்களுடன் வாழ்வது என்பதே அவர்களை தேச நலனுக்கு எதிராக நிறுத்தும் பிம்பத்தை கட்டமைத்துவிடுகிறது. இதுவே அவர்களுக்கு வங்கிக் கடன்களிலிருந்து அரசியல் பங்கேற்பு, கல்வி, மருத்துவம் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளைப் பெறுவதிலிருந்தும் விலக்கப்பட்ட சமுதாயமாக மாற்றியுள்ளது.

நாட்டின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த சமுதாய இன மக்களின் வளர்ச்சியே என்பதை சச்சார் குழு அறிக்கை தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது. ஏற்கனவே சிறுபான்மையினரின் நலனுக்காக நியமிக் கப்பட்ட பல கமிட்டிகளின் பரிந்துரைகளே இன்னும் நிறைவேற்றப் படாமல் தூங்கிக் கிடக்க சச்சார் குழு அறிக்கையின் மேல் முஸ்லிம் சமூகம் எத்தகைய பார்வையைச் செலுத்தும் என்பதும், அதை நடைமுறைப்படுத்த அரசியல் ரீதியாக எவ்வாறு நிர்பந்திக்கப்போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியே… (நூலின் பதிப்புரையிலிருந்து)

சச்சார் குழு அறிக்கையின் பின்புலம், முக்கியத்துவம் ஆகியவை குறித்து இந்நூலிலுள்ள பல்வேறு கட்டுரைகளிலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பேசப்பட்டுள்ளன… சரியாக 404 + 20 = 424 பக்கங்களில் விரிவாகத் தொகுக்கப்பட்ட இந்த ஆவணத்தின் அடிப்படையான அம்சங்களை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு கோணங்களிலிருந்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ‘சென்சஸ் ‘ உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களிலிருந்து தொகுக்கப்பட்ட விரிவான தரவுகளிலிருந்து பெறக்கூடிய முக்கியச் செய்திகள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முக்கிய வரைபடங்கள், அட்டவணைகள் ஆகியன தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளன. சச்சார் குழு அறிக்கையை பல கோணங்களிலிருந்து ஆய்வு செய்தும் விமர்சித்தும் எழுதப்பட்ட பல கட்டுரைகள் இந்த ஆக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை Reference பகுதியில் காணலாம். குறிப்பாக, குழு உறுப்பினர் ராகேஷ் பசந்தின் கட்டுரை அறிக்கையை அறிமுகம் செய்யப் பெரிதும் பயன்பட்டுள்ளது…

…சச்சார் அறிக்கை என்பது ஏதோ முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு மட்டுமேயான ஒரு பரிந்துரை என்பது போல இங்கு சிலரால் முன்வைக்கப்பட்டுகிறது. சமூக-பொருளாதார-கல்வி நிலை என்கிற எல்லா அம்சங்களிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள இந்திய முஸ்லிம்களை மேம்படுத்தி பிற சமூகப் பிரிவினருக்கு இணையாகக் கொண்டு வருவதற்கு இட ஒதுக்கீடு என்பது பல்வேறு வழிமுறைகளில் ஒன்று மட்டுமே.

சச்சார் குழுவின் பரிந்துரைகள் மிகவும் விரிந்த தளத்தில் இயங்குவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூகத்தின் பன்மைத்துவத்தை மதிப்பிடும் “பன்மைத்துவக் குறியெண்” (Diversity Index) ஒன்றை உருவாக்குவது பற்றிப் பேசுகிறது சச்சார் குழு அறிக்கை. பன்மைத்துவம் குறித்தும், முஸ்லிம்கள் மீது சமூகத்தில் நிலவும் புறக்கணிப்பு குறித்தும், அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பிரக்ஞையூட்டுவதையும் அது வற்புறுத்துகிறது.

பாடநூல்களின் உள்ளுறையை மதிப்பிடுகிற சட்டபூர்வமான அமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து அது கவனத்தை ஈர்க்கிறது. உயர்கல்விச் சேர்க்கையில் பன்மைத்துவம் செயல்படும் வகையில் ஒரு மாற்றுச் சேர்க்கை அளவுகோல் ஒன்றைப் பரிந்துரைக்கிறது. முஸ்லிம்கள் மேலும் மேலும் தனிமைப்பட்டு புவியியல் மற்றும் கலாச்சார அடிப்படையில் சுருங்குவதைத் (ghetoisation) தடுப்பதில் சிவில் சமூகத்தின் பொறுப்பை அது சுட்டிக்காட்டுகிறது. பஞ்சாயத்து முனிசிபாலிடி, கார்ப்பரேஷன், கூட்டுறவு வங்கி, மார்கெடிங் கமிட்டி’ ஆகியவற்றில் முஸ்லிம் உறுப்பினர்களை நியமனம் செய்யும் ஆந்திர மாநிலச் சட்டத் திருத்தங்களின்பால் பிற மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கிறது…

…முஸ்லிம்கள் குறித்த கட்டுக்கதைகளையே நம்பி உயிர்வாழும் இந்துப் பாசிச அரசியல் தொடர்ந்து முன்வைக்கும் சில மாயைகள் சச்சார் அறிக்கை மூலம் தகர்ந்துள்ளன. அதேபோல் முஸ்லிம் சமூகம் சற்றே தன்னை உள்நோக்கித் திரும்பி ஆய்வு செய்வதற்கான சில புள்ளிகளையும் அது சுட்டிக்காட்டியுள்ளது…

படிக்க:
ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை
பாஜக-வுக்கு எதிராக கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !

மசூதி இடிப்பு, தொடர்ந்த கலவரங்கள், பாசிச எழுச்சி ஆகியவற்றின் பின்னணியில் இந்திய முஸ்லிம்கள் தம்மைப் பலதுறைகளிலும் ஆற்றல்படுத்துதல், அரசதிகாரத்தில் பங்கேற்பு, கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு முதலிய கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினர். இந்தப் பின்னணியில் உருவான “முஸ்லிம் இட ஒதுக் கீட்டிற்கான தேசிய மாநாடு” (புது டெல்லி, 1994 அக்டோபர் 9), “முஸ்லிம் இந்தியர்களை ஆற்றல் படுத்துவதற்கான இயக்கத் தொடக்கத்திற்கான மாநாடு” (புது டெல்லி, 1999 மே 8) ஆகியன முக்கியமான வரலாற்று நிகழ்வுகள், இம்மாநாடுகளின் தீர்மானங்களும் பின்னிணைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில்தான் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு என்னும் கோரிக்கை தமிழ்நாட்டில் மேலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விரிவான வரலாற்றுப் பின்னணியில் சச்சார் அறிக்கையை வைத்துப் பார்க்கும்போதுதான் கடந்த அறுபது ஆண்டுகளாக முஸ்லிம்களின் கோரிக்கைகளும் முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கென முன்வைக்கப்படும் பரிந்துரைகளும் அப்படியே மாறாது இருப்பது விளங்கும். இதன் பொருள் அவை எதுவும் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை என்பதே, எனவே இப்போதைய தேவை வெறும் பரிந்துரைகளல்ல. என்ன செய்யப் போகிறோம்?’ என்பதே. (நூலின் முன்னுரையிலிருந்து)

நூல்: சச்சார் குழு அறிக்கை: அறிமுகம், சுருக்கம், விமர்சனம்
ஆசிரியர்: அ.மார்க்ஸ்

வெளியீடு: எதிர் வெளியீடு,
305, காவல் நிலையம் சாலை,
பொள்ளாச்சி – 642 001.
தொலைபேசி: 04259 – 226012 | 98650 05084
மின்னஞ்சல்: ethirveliyedu@sify.com

பக்கங்கள்: 144
விலை: ரூ 70.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: noolulagam | panuval | discovery book palace

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

பள்ளி திறக்கப் போகிறது – ஆசிரியர் தயாராவது எப்படி ?

1

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 1 | பாகம் – 1

கல்வியாண்டு துவங்கும் தருவாயில் (1) (ஆகஸ்டு 31)  குழந்தைகள்-என் ஆசிரியர்கள்!

ஜார்ஜிய சோவியத் சோஷலிசக் குடியரசின் தலைநகரமாகிய திபிலீசியில் ஆகஸ்டு மாதக் கடைசியில் எப்போதும் வெப்பமாக இருக்கும். தார் உருகி ஓடும், மக்களுக்கு எதன் மீதுமே அக்கறையில்லாததைப் போல் தோன்றும்.

தெருக்களில் குழந்தைகள் அதிகமில்லை. இவர்களில் பெரும்பாலோரை பெற்றோர்கள் கோடை ஓய்விடங்களுக்கும், சொந்த கோடையில்லங்களுக்கும், பயனீர் முகாம்களுக்கும், குறிப்பாக கிராமங்களில் உள்ள தாத்தா, பாட்டி, மற்ற உறவினர்களிடமும் அனுப்பி விட்டனர்.

கிராமத்திற்குச் செல்லவும் அங்கேயுள்ள கிராமச் சிறுவர் சிறுமியருடன் சேர்ந்து விளையாடவும் அவர்களோடு சேர்ந்து காடுகளுக்குச் சென்று பழங்களைச் சேகரிக்கவும் கூடை பின்னவும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். காஹேத்தியாவின் சமவெளிகளில் நான் கழித்த குழந்தைப் பருவம் என்னுள் இப்போது விழித்துக் கொண்டது. நான் கிராமக் குழந்தைகளோடு சேர்ந்து ஆற்றில் குளிக்க ஓடியதுண்டு, சம வெளியில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை மீதேறி அமர்ந்து களைப்பின்றி சவாரி செய்ததுண்டு; மக்காச்சோளமும் கோதுமையும் நிறைந்த மூட்டைகளைத் தோள்கள் மீது சுமந்து கொண்டு நீர் சக்தியால் இயங்கும் அரவை இயந்திரத்திற்கு எடுத்துச் சென்றதுண்டு, தானியக் களஞ்சியத்தினுள் மணம் மிகு மாவைக் கொட்டியபடி தட்டையான பெரும்வட்டக் கற்கள் சுற்றுவதைப் பார்க்க சுவாரசியமாக இருக்கும்; மல்யுத்தப் போட்டிகள் நடக்கும் போது அவற்றைக் கண்டு களிப்பதற்காக கிராமம் முழுவதுமே சிறு திறந்த வெளியில் கூடும். குழந்தைகளுக்கு கிராமத்திற்குச் செல்ல மிகவும் பிடிக்கும். இது எனக்கு நிச்சயமாகத் தெரியும், ஏனெனில் நானும் குழந்தையாக இருந்தவன், அங்கே நிறைய மகிழ்ச்சி கிடைக்கும், அதிக சுதந்திரம் உண்டு, ஆர்வம்மிக்க, ஆபத்தான அதிசாகசச் செயல்களுக்கு அங்கே பரவலான இடமுண்டு.

ஆகஸ்டில் திபிலீசியில் கடும் வெப்பம் நிலவும். செப்டெம்பர் 1-ஆம் தேதி விரைவிலேயே வரவிருக்கிறது. ஆனால் தெருக்களில் இன்னமும் குழந்தைகளின் ஆரவாரத்தைக் காணோம், குறைந்த அளவே குழந்தைகள் காணப்படுகின்றனர்.

கடும் வெப்பத்தின் காரணமாக கல்வியாண்டு இம்முறை செப்டெம்பர் 1-ஆம் தேதி துவங்கப் போவதில்லை, இரண்டு வாரமோ, ஒரு மாதமோ கழித்து தான் வகுப்புகள் ஆரம்பமாகும் என்றொரு வதந்தி மின்னல் வேகத்தில் பரவுகிறது. தம் கனவுகள் பலிக்கின்றன என்று குழந்தைகளுக்குத் தோன்றுகிறது.

பெற்றோர்களும் நம்புகின்றனர். ஏனெனில் வகுப்புகளை ஒத்திப் போடுவதற்கான காரணங்கள் நிறையச் சேருகின்றன.

ஆனால் ஆகஸ்டு மாதத்தின் கடைசி நாட்களில் இக்கனவுகள் கலைகின்றன. ”பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் கோடை விடுமுறைக்குப் பின் செப்டெம்பர் 1-ஆம் தேதி மீண்டும் துவங்கும்” என்ற பத்திரிகைச் செய்திகள் இதற்கு வழிகோலுகின்றன.

பள்ளி அழைக்கிறது! இது ஒரு புனிதமான அறைகூவல்.

பாடங்கள் விரைவில் ஆரம்பமாகும்! இரண்டு மூன்று நாட்களில் சூரிய வெப்பத்தால் தகித்துக் கொண்டிருக்கும் நகரம், மனதைக் கிறங்க வைக்கும் வாசனையுடன் கூடிய ஒரு பெரிய, அழகிய, பல வண்ண மலர் விரிவதைப் போல் காட்சியளிக்கிறது. இந்த மலரை உயரே, பறவைகள் பறக்கும் உயரத்திலிருந்து பார்த்தால் அது எவ்வளவு அழகிய, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் தெரியுமா!

நகரத்திற்கு உயிர் வருகிறது, உத்வேகம் வருகிறது, நகரம் தலையை உயர்த்தி, மெல்லிய காற்றில் ரோஜா செடியின் தண்டு ஆடுவதைப் போல் மெதுவாக ஆடத் துவங்குகிறது. ஒரு உண்மையை (இது ஒருவேளை இது வரை தெரியாமலேயே இருந்திருக்கலாம்) நன்கு உணருகிறோம்: 1500 ஆண்டுகட்கும் மேலாக நிலவி வரும் இந்நகரத்தில் இதன் மிகச் சிறு குடிமக்களாகிய குழந்தைகள் இல்லாவிடில் நகரமே வெறிச்சோடிக் களையிழந்து உள்ளது.

சத்தம்! தெருவில் தான் எவ்வளவு சத்தம், மகிழ்ச்சி, உற்சாகம்! குழந்தைகள் அவசர அவசரமாகப் போகின்றனர், ஓடுகின்றனர், பாதசாரிகளுக்கான இடங்களில் போவோர் வருவோர் மீது படாமல் வளைந்து வளைந்து மிதிவண்டி ஓட்டுகின்றனர். அமைதியாக, நிதானமாக நாம் தெருக்களில் நடப்பதற்கு அவர்கள் இடையூறு செய்கின்றனர், ”என்ன வெப்பம்” என்ற நமது வழக்கமான கோடைகாலப் பேச்சின் போக்கை மாற்றுகின்றனர். வருவோர் போவோரின் முகங்களில் ஒரு விதக்களை, கவலை, மகிழ்ச்சி-குழந்தைகள் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர்!

வெப்பமானியில் வெப்பம் இறங்கவேயில்லை. ஆனால் குழந்தைகளுக்கு வெப்பமானியைப் பற்றி என்ன கவலை!

இன்று 38 டிகிரி. அவர்களுக்கு வெப்பமாக இல்லையா என்ன ?

இல்லை, குழந்தைகளுக்கு வெப்பமாயில்லை. அவர்களுக்கு வேறு கவலை-அவர்கள் பள்ளி செல்ல தயாராகின்றனர். பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள், ஸ்கேல்கள், வரைபடச் சாதனங்கள், வண்ணப் பென்சில்கள் முதலியவற்றை வாங்க வேண்டும். இவற்றையெல்லாம் பள்ளிப் பையில் வைக்க வேண்டும். சீருடையை ஒழுங்கு படுத்தவேண்டும். அழகாகக் காட்சியளிக்க வேண்டும்….

ஆசிரியர்களாகிய நாங்களும் எம் அறைகளில் குழுமியிருக்கின்றோம். பரஸ்பரம் முகமன் கூறிக் கொண்டோம், கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். புதிய கல்வியாண்டிற்கான புதிய போதனை முறைத் திட்டங்களும் புதிய நம்பிக்கைகளும் நம்மிடமும் இருக்க வேண்டும், சிறுவர் சிறுமியரைச் சந்திக்கும் ஆர்வம் மிக்க எதிர்பார்ப்பு நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்க வேண்டும்.

படிக்க:
குழந்தைகள் உலகில் ஆத்திகம் Vs நாத்திகம் – ஓர் அனுபவம் !
எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள்

மகிழ்ச்சியும் பதட்டமும் கலந்த ஒரு தெளிவற்ற நிலை ஒருவேளை உங்களை ஆட்கொள்ளக் கூடும்; கல்வி கற்பித்தல் எனும் விஞ்ஞானம் மற்றும் கலையின் சாரத்தை நம்மால் அறிய முடியுமா என்ற அச்சம் கூடத் தோன்றலாம்.

இத்தகைய உணர்வுகள் உண்மையிலேயே உங்களை ஆட்கொண்டால் அது நல்லது, நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள், குழந்தைகளின் அன்பு, நம்பிக்கை எனும் மிக கெளரவமான பரிசு உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய எதிர்கால வகுப்புகளைப் பற்றிய எண்ணமே, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய விரும்பாத இவர்களுடனான சந்திப்பைப் பற்றிய எண்ணமே உங்களைத் துன்புறுத்தினால் என்ன செய்வது?

அது வரை விஷயம் போகமாலிருந்தால் நல்லது…. எப்படி நடந்து கொள்வதென நீங்களே முடிவு செய்யுங்கள்.

நான், ஆகஸ்டு மாதக் கடைசி நாட்களில் நள்ளிரவு வரை என் மேசையில் அமர்ந்து வேலை செய்கிறேன். நன்கு சிந்திக்கிறேன், திட்டமிடுகிறேன், மதிப்பிடுகிறேன், பொதுமைப் படுத்துகிறேன், என்னுடனேயே விவாதித்துக் கொள்கிறேன், என் ஆசிரியர் பயிற்சி அனுபவத்தை யோசித்துப் பார்க்கிறேன். பல தலைமுறைகளைச் சேர்ந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய நான் என் குழந்தைகளோடு சேர்ந்து வளர்ச்சியடைய விரும்புகிறேன்.

பள்ளிக் குழந்தைகளுடன் நூலாசிரியர்.

அவர்களை விட ஒரு நல்ல அனுகூலமான நிலையில் நான் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது . எனது ஆறு வயதுக் குழந்தைகளுக்கு நான் ஒருவன் தான் ஆசிரியன், எனக்கோ முப்பத்தாறு அல்லது அதற்கும் அதிகமான ஆசிரியர்கள். இவர்கள் அனைவரும் என து மிக விடாப்பிடியான ”ஆசிரியர்களாக” விளங்குவார்கள்.

நான் அவர்களுக்கு படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் வரையவும் பாடவும் சொல்லித்தர அவர்கள் எனக்கு மிக உயர்வான போதனை முறைக் கல்வியைத் தருவார்கள். குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட ஆசிரியர் வேண்டும் என்பதை அறிய தன்னை கல்வி கற்பவனாக, வளர்க்கப்படுபவனாக உணர வேண்டும். என் மேசை முன் அமர்ந்து, புதிய தயாரிப்பு வகுப்புடனான சந்திப்பைப் பற்றிச் சிந்திக்கும் போது ஒரு தாளில் பின்வருமாறு எழுதிக் கொள்கிறேன்:

குழந்தைகளுடைய மனதின் ரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி எனும் கலையையும், ஆசிரியனின் திறமையையும் அறிய முற்படுகையில், ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்.

இந்த வாசகத்தின் உண்மையை, பயனை இருபத்தொன்பது முறை நான் சோதித்து சரிபார்த்திருக்கிறேன். முப்பதாவது தடவையாக சரிபார்க்கப் போகிறேன்.

அடிக்குறிப்புகள் :

(1) சோவியத் நாட்டில், பள்ளியில் கல்வியாண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி ஆரம்பமாகும்.-(ப-ர்.)

(தொடரும்)

முந்தைய பகுதி:

பகுதி – 1 : குழந்தைகள் வாழ்க ! ஆரம்பப் பள்ளி கல்வி குறித்த புதிய தொடர்

மோடி விட்ட தேஜஸ் ரயிலுக்கும் வைகை விரைவு ரயிலுக்கும் வேறுபாடு அரை மணி நேரம் மட்டுமே !

1977ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று மதுரைக்கும் சென்னைக்கும் இடையில் அறிமுகப்படுத்தப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் இரு நகரங்களுக்கும் இடையிலான 497 கி.மீ. தூரத்தை முதல் நாளில் 7 மணி 5 நிமிடத்தில் கடந்தது. 42 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மற்றொரு அதிவிரைவு வண்டியான தேஜஸ், இந்த இரு நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 6.30 மணி நேரத்தில் கடக்கும். இந்த அரை மணி நேரம் குறைய 42 வருடங்களாகியிருக்கிறது.

வைகை எக்ஸ்பிரசில் ஏசி சேர் கார் கட்டணம் 665 ரூபாய். தேஜஸ் ரயிலில் சாதாரண ஏசி சேர் கார் கட்டணம் 1035 ரூபாய். எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் 2110 ரூபாய். வைகையில் சாதாரண இரண்டாம் வகுப்பு கட்டணம் 180 ரூபாய்.

மீட்டர் கேஜ் தண்டவாளத்தில் 7 மணி நேரத்தில் இரு நகரங்களையும் இணைத்த வைகையின் வேகம் பிறகு படிப்படியாக குறைக்கப்பட்டது. இப்போது அகலப் பாதையில் செல்லும் வைகை, 7 மணி 40 நிமிடங்களில் இலக்கைச் சென்றடைகிறது.

வைகை 9 இடங்களில் நின்று செல்கிறது. தேஜஸ் திருச்சி, கொடை ரோடு என இரண்டு இடங்களில் மட்டுமே நின்று செல்லும். தேஜஸிலும் இன்னும் இரண்டு மூன்று இடங்களைச் சேர்த்தால், அதன் வேகமும் கிட்டத்தட்ட வைகைக்கு இணையாகிவிடும். தேஜஸின் இந்தக் கட்டணம், அதிலிருக்கும் வசதிகளுக்காக மட்டும்தான் போலிருக்கிறது.

♦ ♦ ♦

மறுமொழிகள்:

Vediyappan M Munusamy நாடு போற போக்கே சரியில்லை.

Saravanan திமுக ஆட்சியில் மன்னார்குடி டூ சென்னை க்கு விடப்பட்ட ரயிலின் பெயர் உழவன் எக்ஸ்பிரஸ். ( உழவன் தமிழ் பெயர்,). தேஜசாம். சமஸ்கிருத பெயர்…

Ravi Senrayan முதலில் நம்மை ஆள்பவர்கள் நம்மை கெஞ்சும் நிலையில் வைத்திருப்பதே சிறப்பு அதற்குரிய ஆளுமை தலைவனை தெரிந்தாலும் தேர்வு செய்ததில்லை செய்வதுமில்லை.கண்டவன் காலில் விழுபவனை நாம் தேர்ந்தெடுக்காமல் விடுவதுமில்லை. நம் முதுகில் பயணம் செய்யும் தகுதி ” வடபுலத்தவனுக்கே இருக்கிறது என்பதே நமது தகுதி இழுக்கு என்பது நமக்கு என்று தெரிகிறதோ அன்றுதான் நமக்கு விடிவு .காங். பாஜகவை யார் ஆதரித்தாலும் “நாம்” ஒதுக்க வேண்டும். சமீபத்திய மத்திய அரசு வேலை வாய்ப்பில்1700 பேரில் 1600 பேர் வட இந்தியர்.தமிழக இளைஞர்கள் தூக்கத்திலிருந்து விழித்து வீர்கொண்டு எழுந்து போராடினால் மட்டும் தமிழும் தமிழகமும், தமிழ்நாடும் ” விளங்கும் “அதிமுக அரசு மண்டியிட்டு வேண்டும் தை விட “அம்மா” வழியில் உரிமையுடன் போராடினால் மட்டுமே தமிழ்நாடு காக்கப்படும். உரிமைக்கு குரல் .ஓங்கி ஒலிக்கட்டும். வேதனையில்…

படிக்க:
ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை
பாஜக-வுக்கு எதிராக கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !

Raja Rajendran முக்கியமான தகவல்கள். இதனால் அறியப்படும் இன்னொரு சேதி, இவன்கள் குறைத்த பல ஸ்டாப்பிங்க்ஸ் & 45 நிமிடங்களுக்காக நாம் பல நூறை எக்ஸ்ட்ராவாகச் செலவழிக்க வேண்டும். பணக்காரனா இருந்தா வண்டில ஏறு. போக, சென்னை மதுரைக்கு இடையே மட்டும் ஓடும் ரயிலுக்கு இவன்கள் வைத்த பெயர் தேஜஸ்.

Dakshinamurthy Kamatchisundaram எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் 2110.
அதற்கு விமான பயணம் சாலசிறந்த ஒன்று . நேரம் குறைவு.

Jaffersam Sathik பாஸ் எல்லாம் டிக்கெட் விலையை ஏத்துறதுக்கு பிளான். இன்னும் கொஞ்ச நாளில் இரண்டும் ஒரே பயண நேரம் மற்றும் ஒரே விலை.

Pro Moth 10 வருடம் முன்பு வைகையின் நிறுத்தங்கள் எக்மோர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி பின்னர் மதுரை.. அரசியல் வாதிகள் தங்கள் தொகுதிக்கு வசதியாக தாம்பரம், செங்கல்பட்டு, அரியலூர் போன்ற பல நிறுத்தங்களில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்… நிறுத்தங்கள் அதிகமானது பயண நேரமும் முறையே….

Samson Raja நடப்பது சேட்டு மார்வாடி அரசு -அவனுக சொகுசா போறதுக்கு தான் ரயில்விடுவானுக .சொகுசு ரயில் எல்லாம் சேட்டு மார்வாடிக்கே பிகானிர் மதுரை, திருச்சி, கங்காநகர் ,தேஜாஸ் அனைத்துமே AC

Hari Haran P S இந்த டிரயின் கொஞ்ச நாள் ல போயிடும்.. இல்லைனா, இன்னும் நாலு ஸ்டாபிங் போட்டு ரேட்ட கம்மி பன்னு வாங்க…!!

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்  முகநூல் பதிவிலிருந்து…

ஸ்காட்லாந்தில் சில பாகிஸ்தானிய நண்பர்கள் | கௌதமி சுப்ரமணியம்

நான் என்னுடைய முதுகலை படிப்பை ஸ்காட்லாந்தில் படித்துக் கொண்டிருந்த போது பல்வேறு நாட்டு மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சில பாகிஸ்தானிய நபர்களைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு சமயம் என்னுடைய பிறந்தநாள் அன்று பக்கத்து ஊருக்குத் தனியே சென்று கொண்டிருந்தேன். அப்போது என் அம்மாவிடம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது ‘birthday’ என்று அடிக்கடி சொல்வதை மட்டும் புரிந்துகொண்ட அந்த பாகிஸ்தானிய ஓட்டுனர், நான் அலைபேசியை அணைத்த உடன் ‘Happy Birthday’ என்றார்.

ஒருவிதமான வியப்பும் மகிழ்ச்சியும் தோன்ற இருவரும் நான் இறங்கும் இடம் வரை பேசிவந்தோம். அப்போது நான் இந்தியாவில் இருந்து வந்தது குறித்து அவருக்கு எந்தவித கவலையும் இல்லை. மாறாக, பிறந்தநாள் பரிசு என்று கூறி என்னை இலவசமாக இறக்கிவிட்டுப் போய்விட்டார். அந்த நபருக்கும் தெரியும் என்னை இனிமேல் சந்திக்கப் போவதே இல்லை என்று.

அதே பிறந்தநாளில் வட இந்தியர்களின் நண்பராக இருந்த ஒரு பாகிஸ்தானியருக்கு என் அறிமுகமே கிடையாது. ஆனால் வட இந்திய நண்பர்களோடு வந்து இயல்பாய் கேக் வெட்டி அதை ஊட்டிவிட்டுப் போனார். அந்நாளில் அழைப்பும் அறிமுகமும் கூட இல்லாமல் வந்து என்னுடன் நேரம் செலவழித்த அந்த நண்பருக்கு எந்தவித பகையுணர்ச்சியும் இன்னொரு நாட்டின் மீது இருந்ததாகத் தெரியவில்லை. ஸ்காட்லாந்தில் இருந்த வரை எப்போதும் புன்னகையோடு கடந்து சென்றவரிடம் இந்தியா திரும்பிய பிறகு நான் பேசியதேயில்லை.

படிக்க:
போர் ஆயுதத் தரகர்களுக்கானது ! புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டிக்கும் பாகிஸ்தான் இளைஞர்கள் !
♦ இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?

என்னுடன் எப்போதும் நெருக்கமாக இருந்தார் ஒரு பாகிஸ்தான் பெண் தோழி. நாங்கள் பல பயணங்களை ஒன்றாக மேற்கொண்டோம். அவரிடம் அன்பிற்கு குறைவாய் நான் ஒன்றை கண்டதேயில்லை. அவர் இந்தியாவிற்கு பயணம் செய்ய எப்போதும் ஆவலுடன் இருப்பார். என்னால் உங்கள் வீட்டிற்கு எப்போதுமே வரமுடியாது என்ற அவர் குரல் சற்று ஏங்கித்தான் இருந்தது. அவரை நாடு திரும்பிய பிறகு நான் ஒருமுறை கூட சந்திக்கவேயில்லை.

தினமும் ஒரு பூங்காவைக் கடந்து நான் கல்லூரிக்கு செல்வது வழக்கம். அவ்வப்போது அந்த இருக்கைகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். ஓருமுறை அந்த இருக்கையின் இன்னொரு ஓரத்தில் அமர்ந்தவருக்கு ஏறத்தாழ என் வயதிருக்கும். இருவரும் இயல்பாய்ப் புன்னைகைத்து பேசத் தொடங்கினோம். நான் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகக் கூறினேன். அவரின் தாத்தா தேச பிரிவினையின் போது தன் சொத்துகளை எல்லாம் இந்தியாவில் இழந்து பாகிஸ்தான் சென்றவர். அவரின் தந்தை பின்னர் கிளாஸ்கோவிற்கு குடிபெயர்ந்திருந்தார். இப்போது இவர் சட்டப்படி பிரித்தானிய குடிமகன். தனக்கான வேலையைத் தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார். அவர் குரலில் அவர் பாகிஸ்தான் மீதும் இந்தியா மீதும் ஒரே அன்பு கொண்டவர் என்று மட்டும் தெரிந்தது. எது தாய்நாடு என்ற கேள்விக்கு அவரின் பதில் நம்முடைய வரைபட அளவைக் கடந்து பரந்து கிடந்தது. சிறிய உரையாடலுக்குப் பின்னர் இருவரும் கையசைத்து விடைபெற்றோம். அதற்கு முன்னரும் பின்னரும் அவரை ஒரு முறை கூட நான் பார்க்கவே இல்லை.

மக்களுக்கும் போருக்கும் எப்போதும் தொடர்பில்லை. அவர்கள் அன்பை மட்டுமே கடத்துகிறார்கள். பெருநிறுவனங்களுக்கும் போருக்கும் நிறைய தொடர்பு உண்டு. அதிகாரப் பசிக்கும் பண வெறிக்கும் நாம் தான் இரையாக வீசப்படுகிறோம்.

தீவிரவாதம் போர் என்று கேட்கும் போதெல்லாம் அமைதியை மட்டும் விரும்புவோம். எப்போதும் அன்பை மட்டும் செலுத்துவோம். போர் வேண்டுமானால் மனிதர்களுக்கிடையில் நடக்கலாம். ஆனால் அந்த இடத்தில் வாழும் புல் பூடு புழு செடி பறவை விலங்கு என யாவற்றிற்கும் அதே இடத்தில் நிலைத்து வாழ உரிமை உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது . மனிதனால் மட்டும் மனிதனுக்காக மட்டும் தான் பூமி என்ற அகந்தையின் உச்சம் போர். போர் அற்ற பூவுலகு காண அமைதியையே விரும்புவோம். அன்பே ஆயுதம்.

#SayNoToWar

நன்றி :  கௌதமி சுப்ரமணியம்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆனத்தூர் கிராமத்தில் வசிக்கும் வன்னியர் சமூகத்தைச் சார்ந்த முருகன் மகள் ஜெயபிரதாவும் மேற்படி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் திருமூர்த்தி என்பவரும் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். ஜெயப்பிரதா பெரியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு (MSC) திருமூர்த்தி அதே கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு (BSc) பயின்று வருகின்றனர்.

இருவரும் காதலிப்பது பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்து மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி கடந்த 07.01.2018 அன்று கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் இருந்து கொண்டு கல்லூரிக்கு சென்று வந்தனர். இத்தகவலை தெரிந்து கொண்டு பெண்ணின் பெற்றோர் ஓசூரில் உறவினரின் வீட்டில் அடைத்து வைத்து விட்டனர். இதனை பெண் ஜெயப்பிரதா திருமூர்த்திக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவித்து இருவரும் அங்கிருந்து திருமூர்த்தியுடன் தப்பித்து சென்றுள்ளனர். உடனடியாக பெண் வீட்டார் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 2002/2019 ல் FIR பதிவு செய்துள்ளனர். அதுநாள் முதல் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தார் தாழ்த்தப்பட்ட பகுதிக்கு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.

இச்சூழலில் திருமூர்த்தியின் அண்ணன் சூரியமூர்த்தியை ஆதிக்க சாதியினர் பிடித்து மிரட்டி ஒருவார காலத்திற்குள் உனது தம்பி எங்கள் பெண்ணை கொண்டு வந்து விடவில்லை என்றால் விபரீதமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என மிரட்டியதால் அவரும் தலைமறைவாக இருந்து வருகிறார். ஒருவார காலமாக பெண் இருப்பிடம் சம்மந்தமாக எந்தவொரு தகவலும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு கிடைக்கப் பெறாததால் தன் கிராம வாட்சப் குரூப்பில் கடந்த 26.02.2019 அன்று இரவு சுமார் அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி, மறுநாள் காலை 27.02.2019 சுமார் 9 மணியளவில் திரௌபதி அம்மன் கோவில் அருகே கூட வேண்டும் என்று திட்டமிட்டு செய்தியை பரப்பினார்.

படிக்க:
பாஜக-வுக்கு எதிராக கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள் | ஆடியோ

மேற்படி செய்தி தாழ்த்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த ஆனத்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர் அரி என்பவருக்கு தெரியவந்து அவர் முன்னெச்செரிக்கையாக அன்றிரவே வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினருக்கு மேற்படி ஆதிக்க சாதியினரின் செய்தியை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி திட்டமிட்டபடி ஆதிக்க சாதி வெறியர்கள் சுமார் 300 நபர்களுக்கு மேல் திரெளபதி அம்மன் கோவில் அருகே மணல் கடத்தல் மாபியா சந்திரசேகரன் மற்றும் பா.ம.க. கட்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் ஒன்றுகூடியுள்ளனர். அவர்களுடன் பக்கத்து கிராமங்களான நத்தம், பலாபட்டு, தொட்டிமேடு பகுதிகளைச் சேர்ந்த ஆதிக்க சாதியினரும் இவர்களுடன் கலந்து அங்கிருந்து கும்பலாக ஆதிக்க சாதி வெறியினார் புறப்பட்டு தாழ்த்தப்பட்ட பகுதியை நோக்கி சென்றனர்.

அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்களை தள்ளிவிட்டு சென்று உள்ளே நுழைந்து முதல் வீடான ஆறுமுகம் மகள் சித்ரா என்பவரின் வீட்டினை சூறையாடி தடுக்க வந்த அவரை அசிங்கமாக பேசி அடித்தும் அவரின் வீட்டின் வெளியில் நின்றிருந்த Tata Ace வாகனத்தையும் ஆட்டோவையும் அடித்து நொறுக்கியும் தொடர்ந்து ஒவ்வொரு வீடாக சென்று தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது கடுமையான உழைப்பின் மூலம் வாங்கிய டி.வி., பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இதே போன்று சுமார் 20 வீட்டிற்கும் மேல் வீட்டில் இருந்து பொருட்களை அடித்து நாசம் செய்துள்ளனர். மேற்படி சம்பவம் சுமார் காலை 9.45 மணி முதல் 10.30 மணி வரை நடந்துள்ளது. அச்சமயத்தில் தாழ்த்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் சூளை வேலைக்கும் மற்றும் கூலி வேலைக்கும் அதிகாலையிலேயே சென்றுள்ளனர். அங்கிருந்த ஒரு சில பெண்களும் உயிருக்கு பயந்து கொண்டு அருகிலிருந்த கரும்பு தோட்டத்திற்கு சென்று மறைந்துள்ளனர். நடந்த சம்பவங்களை பாதிக்கப்பட்ட மக்கள் செய்தியாளர்களுக்கு தெரியப்படுத்தியும் சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் செய்து ஆதிக்க சாதி வெறியர்கள் பெயரில் வழக்குப் பதிவு செய்து கண்துடைப்பிற்காக ஒரு சிலர் மட்டுமே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறையினரின் அலட்சிய போக்கால் இதே போன்று சம்பவம் 1986 – 1987 ஆண்டுகளில் நடைபெற்றிருந்தும் இதேபோல சம்பவம் நடைபெறும் என்பதை முன்கூட்டியே கணித்து ஒரு வார காலமாக காவல்துறையினர் பெயரளவிற்கு குறுகிய அளவில் மட்டுமே பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இச்செயல் ஆதிக்க சாதியினருக்கு உறுதுணையாக காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் காவல்துறையைச் சார்ந்தவர்கள் 2 வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தகவலை கொடுத்தும் தாழ்த்தப்பட்ட பகுதி மக்களை பார்த்து, ‘’உங்க வீட்டு பெண்களை இழுத்துட்டு போனா, நீங்க சும்மா விடுவீங்களா’’ என ஆதிக்க சாதியினருக்கு சார்பாக பேசி மிரட்டியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அங்கேயே தங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளை கொளுத்துவதாக கூறி சாலை மறியல் செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள்  மற்றும் வருவாய் துறையினர் கண்துடைப்பிற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சென்றார். முதல் தகவல் அறிக்கை 27.02.2019 அன்று பதியப்பட்டுள்ளது. 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஆதிக்க சாதி வெறியினர் தாழ்த்தப்பட்ட பகுதிக்குள் சென்று ஒவ்வோர் வீடாக சென்று சேதப்படுத்தியதுடன் தண்டபாணி மனைவி சத்தியவாணி என்பவர் தன்னுடைய வீட்டினை சீரமைக்க கடனாக பெற்று பீரோவில் வைத்திருந்த ரூபாய் 20,000-த்தை ஆதிக்க சாதி வெறியினர் பிரோவினை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த சிவா என்பவரின் சுமார் 14 வயது மகளான சத்தியா என்பவரை தலையிலும் உடம்பிலும் தாள் கொண்டு தடியாலும் இரும்பு கம்பியாலும் பலமாக தாக்கியும் அறுவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசியும் தாக்கியுள்ளனர். அங்கிருந்த சிவந்தனி என்ற சுமார் 4 வயது குழந்தையை கன்னத்தில் அறைந்து பக்கத்திலிருந்த கால்வாயில் எட்டி உதைத்துள்ளனர். அவந்திகா என்ற குழந்தையையும் தாக்கியுள்ளனர்.

இப்போது அங்கிருந்த ஆதிக்க சாதி வெறியர்கள், “உங்களுக்கு போலீஸ்காரன் எவ்வளவு நாள் பாதுகாப்புக்காக உக்காந்துருப்பான். அதுக்கப்புறம் உங்க மொத்த சேரியையும் காலி பண்ணிடுறோம்’’ என மிரட்டியும், ‘’என்னிக்குமே நீங்க எங்களுக்கு அடிமை நாய்ங்கதான். பொண்ணு பையன் ஓடி போனதுக்காக நாங்க அடிக்கல பர நாய்ங்க என்றதாலதான் அடிக்கிறோம். உன் பாட்டன் முப்பாட்டன் போல எங்க கால கழுவி சாப்பிடனும்’’ என சாதி பேசி மிரட்டியுள்ளனர்.

மேலும், அனைத்துக்கும் சந்துரு என்பவன் மணலை திருடிச்செல்வதை வருவாய்த் துறையினருக்கு தொடர்ந்து தகவல்களை கொடுத்து வந்ததினை அறிந்து தாழ்த்தப்பட்டவர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு ஆதிக்க சாதி வெறியர்களிடம் சாதி வெறியைத் தூண்டி முன்னணியில் அனைத்தையும் திட்டமிட்டு செய்ததுடன் சந்துரு என்பவர் காவல்துறையினரின் கையாள் என்பதும் இவர் சொல்வது தான் காவல்நிலையத்தார் கேட்பார்கள் என்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதுடன் அவர்களுக்கு மாதா மாதம் லஞ்சம் கொடுத்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார்.

படிக்க:
பிணத்தையும் விட்டு வைக்காத வன்னிய சாதிவெறி!
விழுப்புரம்: வன்னிய மக்கள் ஆதரவுடன் வன்னிய சாதிவெறிக்கு கண்டனம்!

இத்துடன் பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பகுதி பெண்களும், குழந்தைகளும் அரசு மருத்துவமனை சென்றபோது அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து “வெட்டுபட்டிருக்கா, குத்து பட்டிருக்கா, இல்லையென்றால் கை, கால் உடைஞ்சிருக்கா என கேட்டுக்கொண்டே அப்படின்னாதான் வைத்தியம் பாப்பேன் இல்லை என்றால் பார்க்கமாட்டேன்” என தான்தோன்றித்தனமாக அலட்சியப்படுத்தி மருத்துவம் பார்க்காமல் அன்று முழுவதும் அங்கிருந்துவிட்டு இரவு பாதிக்கப்பட்ட நபர்கள் காயத்துடனேயே வீடு திரும்பியுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட பகுதி மக்களுக்கு ஆதிக்க சாதியினரின் பகுதியில் உள்ள கடைகளிலோ, மருந்தகத்திலோ எந்தப் பொருட்களும் தராமல் சாதிய கண்ணோட்டத்தோடு சமூகப் புறக்கணிப்பு செய்து வருகின்றனர்.

முடிவுகள்

1. ஆதிக்க சாதியினர் பகுதியில் வசிக்கும் சிலரின் சுயலாபத்துக்காக இந்த சாதி மறுப்பு திருமண சம்பவம் ஊதி பெரிதாக்கப்பட்டு அவர்களின் சுய லாபத்திற்காகவும் சாதி பெருமைக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் இந்த கலவரம் திட்டமிட்டு நடைபெற்றுள்ளது.

2. இந்த சம்பவத்தில் திருமணமான மணமக்கள் காரைவிட்டு சென்ற அன்றே காவல்துறைக்கு பெண்ணின் வீட்டாரால் புகார் அளிக்கப்பட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் காவலர்களை இரு பகுதியிலும் பாதுகாப்பிற்கு நிறுத்தினர். அதன் பின்னர் தினமும் ஆதிக்க சாதியினர் பெரிய விளம்பரத்துடன் ஊர் கூட்டம் நடத்தி தாக்குதலுக்காக தேதியும் நேரமும் குறிப்பிட்டு அதை வாட்சப் செய்தியாக கலவரத்திற்கு முன் இரவு (26.02.2019) அனைவருக்கும் செய்தி அனுப்பியுள்ளனர்.

3. அந்த செய்தியை தலித் பகுதி இளைஞர்கள் காவல்துறைக்கும், வருவாய்த் துறைக்கும் அன்றிரவே தகவல் தெரிவித்தும் காவலர்கள் முன்னெச்செரிக்கையுடன் செயல்படாதது மட்டுமல்லாது சம்பவம் பற்றி தகவல் தெரிந்தும் பொறுமையாக வந்து பாதிப்புகளை பற்றி குறைத்து மதிப்பிட்டு அலட்சியத்துடன் அடிபட்டவர்களையும் சேதமடைந்த சொத்துக்களையும் கணக்கிடாமல் விட்டுவிட்டனர்.

4. வருவாய்த் துறையினர் ஏற்கனவே ஆதிக்க சாதி பகுதி வழியாக மட்டுமே தலித் மக்கள் செல்லும் சூழலை அறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான மாற்று பாதையினையும் அந்த மக்களின் குடியிருப்புக்கான தொகுப்பு வீட்டினையும் பிரதான சாலையை ஒட்டி கையகப்படுத்தி அளிக்காமல், ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக பாதையை மறுத்து அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு வாங்க உதவியுள்ளனர்.

5. இவ்வாறு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தலித் மக்களை பற்றி அக்கறையில்லாமல் ஆதிக்க மனோபாவத்துடன் செயல்பட்டதால் இந்தப் பிரச்சனைகளுக்கு அவர்கள் முழுவதும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.

6. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இரு பகுதி உழைக்கும் மக்களும் தங்களுடைய வருமான இழப்பு மற்றும் பொதுத் தேர்வு சமயத்தில் பிள்ளைகளின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. ஆகையால், பிள்ளைகள் மிகவும் வேதனையில் உள்ளனர். சிலரின் தூண்டுதலால் நடக்கும் இந்தச் சம்பவங்களை ஆதங்கத்தோடு வெளிப்படுத்துகின்றனர்.

7. அரசியல் கட்சி பிரமுகவர்கள் ஒரு குடும்ப பிரச்சினை, ஒரு பெண்ணின் தனிப்பட்ட பிரச்சினையை தங்களின் சாதி பெருமையால் சுயலாபம் அடையவும் அதை தேர்தலுக்கு ஓட்டாக்கவும் முயற்சிக்கின்றனர்.

பரிந்துரைகள்:

1. அப்பாவி தலித் மக்களின் வாகனங்களையும் குடியிருப்புகளையும் சேதப்படுத்தியதற்கு, சேத மதிப்பை கணக்கிட்டு அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், அந்தத் தொகையை தாக்குதல் நடத்தியர்களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும்.

2. மேலும் சாதி வேற்றுமையை தூண்டி சுய லாபம் அடையும் தீய சக்திகளான மணல் மாபியா சந்திரசேகர், பா.ம.க.வைச் சேர்ந்த கார்த்திகேயன், பா.ஜ.கவைச் சேர்ந்த ராஜா ஆகியோர்களை கைது செய்து அவர்களை தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்கொடுமை சட்டப்பிரிவுகளிலும், தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கவும், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. இந்தத் தாக்குதல் பற்றி முன்கூட்டியே தகவல் தெரிந்தும் அலட்சியமாகவும், பொறுப்பின்றியும் இருந்த ஆதிக்க வெறியர்களின் தாக்குதலுக்கு துணை போன காவல் அதிகாரிகள் யார் என்பதை விசாரித்து கண்டறிந்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. ஆகவே இப்பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அமைதி கூட்டம் கூட்டி சாதி மத பேதங்களால் ஏற்படும் பேரிழப்பையும், மனித உறவின் மாண்பையும் விளக்கி அனைத்துத் தரப்பு மக்களும் தங்களின் வறுமை மற்றும் வாழ்வாதாரத்தை வளப்படுத்திக்கொள்ளவும் சகோதரத்துடன் பழகவும் அறிவுறுத்த வேண்டும்.


மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
தொடர்புக்கு: 94437 24403

கும்பமேளா : பாஜக ஆட்சியில் குழந்தைத் தொழிலாளிகள் | படக் கட்டுரை

ன்றுடன் கும்பமேளா நிறைவு பெறுகிறது. நிர்வாண நாகா சாமியார்கள் தொடங்கி கார்ப்பரேட் சாமியார்கள் வரையிலான காவிகளின் கூட்டம் ஒருபுறம். கடுங்குளிரிலிருந்து தப்பிக்க உருப்படியான உடைகள் கூட இல்லாத ஏழைச் சிறுவர்கள் பலரையும் கும்பமேளாவில் காண முடிந்தது. இவர்கள், ஆற்றங்கரையோரம் காந்தத்தை வைத்து சில்லறைகளை சேகரிப்பது; கயிறுகட்டி அந்தரத்தில் நடந்து சாகசம் செய்வது; தொப்பி, பூஜை பொருட்கள் விற்பது என வயிற்றுப் பிழைப்புக்காக ஏதாவது ஒரு வேலையோடு சுற்றித் திரிந்தனர்.

தமிழகம் போன்ற மாநிலங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கின்றனர். உத்திரப்பிரதேசத்திலோ அது இன்றும் அமலில் இருக்கிறது. பாஜக தயவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு ஒருபுறமிருக்க மறுபுறம் குழந்தைகளே உழைக்க வேண்டிய அவல நிலையும் இருக்கிறது.

காற்றில் கரையும் வாழ்க்கை: யமுனை கரையில் புல்லாங்குழல் விற்கும் சிறுவன்.

கங்கை ரயில் பாலத்தின் அருகே தொப்பி விற்கும் சிறுவன்.

யமுனை ஆற்றங்கரையில் பூஜைபொருட்கள் விற்கும் சிறுமி.

கும்பமேளா நுழைவாயில் அருகே, அந்தரத்தில் தொங்கும் வாழ்க்கை.

யமுனை நதிக்கரையோரம் விடியற்காலை யாசகம் கேட்கும் சிறுமி.

யமுனை கரையில் கடவுள் வேடமணிந்து யாசகம் செய்யும் சிறுவர்கள்.

யமுனை ஆற்றங்கரை கங்கை கரையோரம் நாடோடி சிறுவர்கள்.

யமுனை ஆற்றங்கரையோரம் காணிக்கையாக பக்தர்கள் வீசும் சில்லறை காசுகளை சேகரிக்கும் சிறுவர்கள்.

கங்கை சாஸ்திரி பாலத்தின் கீழ் தஞ்சமடைந்திருக்கும் சிறுவர்கள்.

இது வேறு வர்க்கம்: அம்மாவுடன் ஒரு செல்பி

அம்மாவிடம் ஆசையாய் ஏதோ கேட்டு அடம்பிடிக்கும் சிறுவன்.

குடியிருப்பும் இதே. மளிகை கடையும் இதே. பாட்டிக்கு ஒத்தாசையாக புன்னகைக்கும் சிறுவன்.

யமுனை ஆற்றிலே… தந்தையோடு படகை செலுத்தும் சிறுவன்.

திரிவேணி சங்கமத்தில் அந்தி சாயும் வேளையில் ஓர் இனிய பயணம்.

(முற்றும்)

வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து …


முந்தைய பாகம்:
பாகம் – 1: அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
பாகம் – 2: கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !
பாகம் – 3: கும்பமேளாவில் ஐந்து நட்சத்திர அக்ரகாரமும் ஐயோ பாவம் சேரிகளும் இருக்கின்றன !
பாகம் – 4:
அடுத்த முறை யோகி வரமாட்டார் – உ.பி ஆம்புலன்ஸ் ஊழியர் ஆனந்த் நேர்காணல்
பாகம் – 5 : நாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் !
பாகம் – 6 :
நாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்

யார் இந்த அருந்ததிராய் ?

கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய எழுத்தாளர் அருந்ததிராய் குறித்து  சுருக்கமான அறிமுகம் செய்கிறார் தோழர் மருதையன்.

 

 

 

 

தொகுப்பு :


எதிர்த்து நில் மாநாட்டு உரைகள் – ஆடியோ வடிவில் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள் | ஆடியோ
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! ஆளுர் ஷாநவாஸ், தியாகு, பாலன் உரை | ஆடியோ
காவி பாசிசம் எதிர்த்து நில் ! அரிராகவன் – முகிலன் – வரதராஜன் உரை | ஆடியோ

வீழ்ந்த விமானம் – விடாத உறுதி ! உண்மை மனிதனின் கதை 2

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 2

விமானி அலெக்ஸேய் மெரேஸ்யெவ் இரட்டை “இடுக்கியில்” அகப்பட்டுக் கொண்டான். விமானச் சண்டையில் நேரக்கூடிய மிக மோசமான கேடு இது. தன்னிடம் இருந்த குண்டுகளை எல்லாம் அவன் சுட்டுத் தீர்த்திருந்தான். உண்மையாகவே ஆயுதமற்றவனாகவே இருந்தான். அத்தகைய நிலையில் நான்கு ஜெர்மன் விமானங்கள் அவனுடைய விமானத்தை நெருக்கமாகச் சூழ்ந்து கொண்டு, திரும்பவோ, செல்வழியை மாற்றவோ அவனுக்கு இடந்தராமல் தங்கள் விமான நிலையத்துக்கு இட்டுச் செல்லத் தொடங்கின….

இந்தக் கதி நேர்ந்த விதம் இதுவே; பகை விமான நிலையத்தின் மேல் திடீர் தாக்கு நடத்தப் புறப்பட்டன, “இல்” விமானங்கள். லெப்டினன்ட் மெரேஸ்யெவின் தலைமையில் சண்டை விமானங்கள் அணி அவற்றிற்குத் துணையாகப் போயிற்று. துணிகரத் திடீர்த்தாக்கு வெற்றிகரமாக நடந்தேறியது. “பறக்கும் டாங்கிகள்” என்று காலாட் படையினரால் அழைக்கப்பட்ட தாக்கு விமானங்கள் பைன் மர உச்சிகள் மீதாக அனேகமாக ஊர்ந்து சென்று, பகைவர் அறியாதபடி நேரே விமானத் திடலை அடைந்தன. அங்கு வரிசையாக நின்றன “யூன்கெர்ஸ்” ரகத்தைச் சேர்ந்த பெரிய துருப்பு விமானங்கள். ரம்ப பற்கள் போன்ற மங்கிய நீல மரவரிசைகளின் பின்னியிலிருந்து திடீரென முன்னே பாய்ந்து, துருப்பு விமானங்களின் பேருடல்களுக்கு மேலாகப் பறந்து, பீரங்கிக் குண்டுகளையும் வால்வைத்த வெடிகுண்டுகளையும் அவற்றின் மீது பொழிந்தன சோவியத் தாக்கு விமானங்கள். தனது அணியின் நான்கு போர் விமானங்களுடன் தாக்கிடத்தின் மேலிருந்த வானவெளியைக் காவல் செய்து கொண்டிருந்த மெரேஸ்யெவ் கீழே நோக்கினான். ஆட்களின் கரிய உருவங்கள் விமான நிலையத்தில் ஒடிச் சாடியதும், திமிசு போடப்பட்ட வெண்பனி மீது துருப்பு விமானங்கள் பெருங்கனத்துடன் நாற்புறமும் ஊர்ந்து செல்லத் தொடங்கியதும், தாக்கு விமானங்கள் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் பாய்ந்து குண்டுமாரி பொழிந்ததும், சுய நிதானத்துக்கு வந்த “யூன்கெர்ஸ்” விமானிகள் குண்டு தாக்குக்கு இடையே தங்கள் விமானங்களை ஓட்டப் பாதைக்குச் செலுத்தி வானில் கிளம்ப ஆரம்பித்ததும் எல்லாம் அவனுக்கு நன்றாகத் தென்பட்டன.

இப்போது தான் அலெக்ஸேய் தவறு செய்தான். தாக்கு இடத்துக்கு மேலே வானத்தைக் கண்காணிப்பதற்குப் பதிலாக அவன், விமானிகள் சொல்வது போல, அனாயாசமாகக் கிட்டிய இரையால் கவர்ந்து இழுக்கப்பட்டு விட்டான். அப்போது தான் தரையிலிருந்து கிளம்பிய, மெதுவான இயக்கம் கொண்ட கனத்த துருப்பு விமானத்தின் மீது கல்லெறி போலப் பாய்ந்து, நெளிவலிவு அலுமினியத்தாலான அதன் பல நிற நாற்கோண உடல் மீது சில நீள் வரிசைக் குண்டுகளை மனநிறைவுடன் சுட்டான். தனது இலக்குத் தப்பவில்லை என்ற நம்பிக்கை காரணமாக, பகை விமானம் தரையில் வீழ்ந்து புகுந்ததை அவன் பார்க்கக் கூட இல்லை. விமான நிலையத்தின் மறுபுறத்தில் இன்னொரு “யூன்கெர்ஸ்” விமானம் உயரே கிளம்பியது. அலெக்ஸேய் அதைத் துரத்திச் சென்றான். தாக்கினான், ஆனால் குறி தவறி விட்டது. அவனுடைய குண்டு வரிசைகள், மெதுவாக எழும்பிக் கொண்டிருந்த பகை விமானத்தின் மேலாக வழுகிச் சென்றன. அவன் விமானத்தைச் சட்டெனத் திருப்பி, மறுபடி தாக்கினான். மீண்டும் இலக்கு பிசகி விட்டது. பின்னொரு முறை தன் இரையை எட்டிப் பிடித்து, அதன் சுருட்டு வடிவான அகன்ற உடலில் விமான பீரங்கிகள் அனைத்திலுமிருந்த குண்டுகளை விமானத்தைப் பல நீண்ட வரிசைகளாகச் சுட்டுச் செலுத்தி காட்டுக்கு மேலே எங்கோ ஒரு பக்கத்தில் அதை வீழ்த்தினான். “யூன்கெர்ஸ்” விமானத்தைத் தரையில் வீழ்த்திய பின், எல்லையின்றிப் பரந்து அலை வீசிய பசிய கடல் போன்ற காட்டில் கரிய புகைப் படலம் எழுந்த இடத்துக்கு மேலே இரண்டு வெற்றி வட்டங்கள் இட்டு விட்டு, ஜெர்மன் விமான நிலையத்தை நோக்கித் தன் விமானத்தைத் திருப்ப முற்பட்டான் அலெக்ஸேய்.

ஆனால், அங்கே பறந்து செல்ல அவனுக்கு வாய்க்கவில்லை. தனது அணியின் மூன்று சண்டை விமானங்கள் ஒன்பது “மெஸ்ஸெர்” ரக விமானங்களுடன் போர் செய்து கொண்டிருக்கக் கண்டான். ஜெர்மன் விமான நிலையத் தலைமைக் காரியாலயத்தினர் தாக்கு விமானங்களை எதிர்க்கும் பொருட்டு இவற்றை அழைத்திருக்க வேண்டும். எண்ணிக்கையில் தங்களைப் போல் மூன்று மடங்கான இந்த ஜெர்மன் விமானங்கள் மீது துணிவுடன் பாய்ந்து, தாக்கு விமானங்களிலிருந்து அவற்றின் கவனத்தைத் திருப்ப சோவியத் சண்டை விமானிகள் முயன்றார்கள். காயமடைந்தது போலப் பாசாங்கு செய்து வேட்டைக்காரர்களைத் தன் குஞ்சுகளிடமிருந்து அப்பால் ஈர்த்துச் செல்லும் பெட்டைக் காடை போல், அவர்கள் சண்டையிட்டவாறே பகை விமானங்களை ஒரு புறமாக மேலும் மேலும் தொலைவில் இழுத்துச் சென்றார்கள்.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! ஆளுநர் ஷாநவாஸ், தியாகு, பாலன் உரை | ஆடியோ
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள் | ஆடியோ

எளிதில் கிடைத்த இரையினால் தான் மயங்கிவிட்டது குறித்த அலெக்ஸேய் நாணமடைந்தான். தலைகாப்புக்கு இடியில் கன்னங்கள் சிவந்து காந்துவதை உணரும் அளவுக்கு அவனுக்கு வெட்கம் உண்டாயிற்று. ஒரு பகை விமானத்தை இலக்கு கொண்டு பற்களை நெரித்தவாறு சண்டையில் பாய்ந்து கலந்து கொண்டான். அவனது தாக்குக்கு இலக்கான “மெஸ்ஸெர்” விமானம் மற்றவற்றிலிருந்து சற்று தனித்து ஒதுங்கியிருந்தது. அதுவும் தனக்கு உரிய இரையைத் தேடிக் கோண்டிருந்தது போலும். தனது விமானத்தை முழு விரைவுடன் செலுத்திப் பகைவன் மீது பக்கவாட்டிலிருந்து பாய்ந்தான் அலெக்ஸெய். ஜெர்மனியனை அவன் முற்றிலும் முறைப்படியே தாக்கினான். பகை விமானத்தின் சாம்பல் நிற உடல் இலக்குக் காட்டியின் துவாரத்தில் முழுதும் தென்பட்ட போதுதான் அவன் பீரங்கி விசையை அழுத்தினான். எனினும் பகை விமானம் நிம்மதியாக அருகே வழுகிச் சென்றது. குறி தவறியிருக்க முடியாது. இலக்கு அருகாமையில் இருந்தது, அசாதாரணத் துலக்கத்துடன் தென்பட்டது. குண்டுகள் தீர்ந்து விட்டன என்பதை அலெக்ஸேய் ஊகித்துக் கொண்டான். முதுகு குப்பென்று வியர்ப்பதை உணர்ந்தான். சரிபார்ப்பதற்காக விசையை மீண்டும் அழுத்தினான். விமானப் பீரங்கியை இயக்கும் போது விமானி தன் உடல் முழுவதாலும் உணரும் அதிரொலி அவனுக்குப் புலப்பட வில்லை. குண்டுப் பெட்டிகள் வெற்றாயிருந்தன. பகைத் துருப்பு விமானங்களை விரட்டிச் செல்கையில் அவன் தன்னிடமிருந்த குண்டுகளை எல்லாம் சுட்டுத் தீர்த்துவிட்டான்.

குண்டடிபட்ட விமான எஞ்சினின் நடுப்பாகத்தை விமானி தன் உடல், உள்ளம், அனைத்தாலும் உணர்ந்தான். இது பழுதுற்ற எஞ்சினின் மரணத் துடிப்பு அல்ல போலவும் தனது சொந்த உடலைப் பீடித்த நடுங்குக் காய்ச்சல் போலவும் அவனுக்குத் தோன்றியது.

ஆனால், பகைவனுக்குத்தான் இது தெரியாதே! ஒப்பு வலிமையைக் குறைந்த பட்சம் எண்ணிக்கையிலாவது அதிகப்படுத்தும் பொருட்டு, சண்டை அமளியில் ஆயுதமின்றியே கலந்து கொள்ள அலெக்ஸேய் தீர்மானித்தான். அவன் எண்ணியது தவறு. அவன் வீணாகத் தாக்கிய போர் விமானத்தில் இருந்தவன் அனுபவம் முதிர்ந்த, கூர்ந்த கவனிப்பு உள்ள விமானி – சோவியத் விமானம் ஆயுதமற்றது எனக் கண்டுகொண்ட அந்த ஜெர்மானியன் ஏனைய விமானங்களின் விமானிகளுக்கு கட்டளையிட்டான். நான்கு ஜெர்மன் விமானங்கள். சண்டையிலிருந்து விலகி இருமருங்கிலும் மேலேயும் கீழேயுமாக அவனைச் சூழ்ந்து நெருக்கித் தாம் விரும்பிய வழியில் செல்லுமாறு நீல வானத்தில் தெளிவாகத் தென்பட்ட குண்டு வரிசைகளால் அவனை நிர்பந்தித்தவாறு இரட்டை “இடுக்கியில்” பற்றிக் கொண்டன.

இங்கே, ஸ்தாராய ருஸ்ஸா பிரதேங்களில் “ரிஹத்கோபென்” என்னும் பெயர் பெற்ற ஜெர்மனி விமான டிவிஷன் மேற்கே இருந்து வந்திருப்பதாகச் சில நாட்களுக்கு முன்பு அலெக்ஸேய் கேள்விப் பட்டிருந்தான். பாசிஸ்ட் சாம்ராஜ்யத்தின் சிறந்த விமானிகள் அதில் பணியாற்றினார்கள். கோயெரிங்கின் அரவணைப்பு அதற்குக் கிடைத்திருந்தது. இந்த விமானி ஓநாய்களின் நகங்களில் சிக்கிவிட்டோம் என்பதை அலெக்ஸேய் புரிந்து கொண்டான். அவனைத் தங்கள் விமான நிலையத்துக்கு இட்டுச் சென்று, இறங்கும் படி கட்டாயப்படுத்தி, உயிரோடு சிறைபிடிக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்பது தெளிவாயிருந்தது. அந்தக் காலத்தில் இம்மாதிரிச் சந்தர்ப்பங்கள் நேர்ந்தன. தன் நண்பன், “சோவியத் வீரனின் வீரன்” பட்டம் பெற்ற அந்திரெய் தெக்தியாரென்கோவின் தலைமையில் சண்டை விமான அணி ஒன்று ஜெர்மன் வேவு விமானத்தை இட்டு வந்து தன் விமான நிலையத்தில் இறங்கச் செய்ததை அலெக்ஸேய் கண்கூடாகப் பார்த்திருந்தான்.

சிறைப்பட்ட ஜெர்மனியனின் நீண்ட பசிய வெளிர் நிற முகமும் அவனது தள்ளாட்ட நடையும் அலெக்ஸேயின் நினைவில் கணப்போது தோற்றம் அளித்தன. “சிறைப்படுவதா? ஒருக்காலும் இல்லை! அது மட்டும் நடவாது!” என்று அவன் தீர்மானித்தான். பற்களை இறுகக் கெட்டியடித்துக் கொண்டு விரைவாக முடிந்தவரை விமானத்தின் வேகத்தை அதிகப்படுத்தினான் மெரேஸ்யேவ். பின்பு விமானத்தை செங்குத்து நிலைக்குக் கொண்டு வந்து, தன்னைக் கீழ்ப்புறம் அழுத்தி வைத்திருந்த மேற்பக்கத்துக்கு ஜெர்மன் விமானத்துக்கு அடியே புக முயன்றான். காவல் விமானங்களிடமிருந்து தப்பி வெளியேற அவனுக்கு வாய்த்து விட்டது. ஆனால், ஜெர்மனியன் சரியான நேரத்தில் பீரங்கி விசையை அழுத்திவிட்டான். அலெக்ஸேயின் விமான எஞ்சின் பழுதடைந்து அடிக்கடி வெட்டி வெட்டி இயங்கத் தொடங்கியது. விமானம் முழுவதும் மரண சுரத்தில் நடுநடுங்கிற்று.

சேதப்படுத்திவிட்டார்கள்! விமானத்தைத் திருப்பி மேகத்தின் வெண்மை மூட்டத்துக்குள் புகுந்து தன்னை, பின் தொடர்ந்தவர்களைத் தடம் தவறச் செய்வதில் அலெக்ஸேய் வெற்றி பெற்றான். ஆனால், அப்புறம் என்ன செய்வது? குண்டடிபட்ட விமான எஞ்சினின் நடுப்பாகத்தை விமானி தன் உடல், உள்ளம், அனைத்தாலும் உணர்ந்தான். இது பழுதுற்ற எஞ்சினின் மரணத் துடிப்பு அல்ல போலவும் தனது சொந்த உடலைப் பீடித்த நடுங்குக் காய்ச்சல் போலவும் அவனுக்குத் தோன்றியது.

எஞ்சின் எந்தப் பகுதியில் தாக்குண்டிருக்கிறது? இன்னும் எவ்வளவு நேரம் காற்றில் நிலைத்திருக்க விமானத்தால் முடியும்? பெட்ரோல் தொட்டிகள் வெடித்துவிடுமோ? இவற்றை எல்லாம் அலெக்ஸேய் எண்ணவில்லை, உணர்ந்தான் என்பதே சரியாயிருக்கும். தான் வெடிமருந்துப் பீப்பாய் மீது அமர்ந்திருப்பதாம் வெடித்திரி வழியாக அதை நோக்கித் தீ நாக்கு விரைந்து வந்து கொண்டிருப்பதாகவும் அவனுக்குத் தோன்றியது. விமானத்தை எதிர்ப்புறமாக, முன்னணி வரிசையை நோக்கி, தன்னவர்களின் பக்கம் திருப்பினான் அலெக்ஸேய். ஏதேனும் நேர்ந்துவிட்டால் சொந்த மனிதர்களின் கரங்களால் அடக்கம் செய்யவாவது படலாமே என்பது அவன் நோக்கம்.

முடிவுக்கட்டம் விரைவிலேயே தொடங்கிவிட்டது. எஞ்சின் சட்டென இயக்கத்தை நிறுத்தி ஓசை அடங்கிப் போயிற்று. செங்குத்தான மலையிலிருந்து சரிவதுபோல விமானம் விரைவாகக் கீழ் நோக்கிப் பாய்ந்தது. விமானத்துக்கு அடியில் பசிய சாம்பல் அலைகளாகப் பெருகியது கடல் போன்று எல்லை காண முடியாத காடு… அருகில் இருந்த மரங்கள் நீண்ட பட்டைகளாக ஒன்று கலந்து விமானத்தின் இறக்கைகளுக்கு அடியில் பாய்ந்தோடுகையில், “என்ன ஆனாலும் சிறைப்பட வில்லையே!” என்று எண்ணினான் விமானி. காடு, வனவிலங்கு போன்று தன்னை நோக்கித் துள்ளிப்பாய்ந்த போது இயல்பூக்கத்தால் தூண்டப்பட்டு எரிவூட்டி விசையைச் சட்டென மூடினான். மடாரொலி கேட்டது. அவ்வளவுதான், கணப்போதில் எல்லாம் மறைந்துவிட்டன – விமானத்தோடு அவன் கொழு கொழுப்பான கரு நீரில் மூழ்கிவிட்டது போல.

விழுகையில் விமானம் பைன் மர முடிகள் மேல் மோதியது. இது தாக்கு வேகத்தை மட்டப்படுத்திற்று. சில மரங்களை முறித்துவிட்டு விமானம் பல பகுதிகளாகச் சிதறியது. ஆனால், அதற்கு ஒரு நொடி முன்னதாக அலெக்ஸேய் தனது இருக்கையிலிருந்து பிய்த்துக் காற்றில் எறியப்பட்டான். கிளைகள் அகன்ற நூற்றாண்டுப் பிர் மரத்தின் மேல் விழுந்து அதன் கிளைகள் மீதாகச் சருக்கி அதன் அடியில் காற்றினால் திரட்டிக் குவிக்கப்பட்டிருந்த வெண்பனிக் குவியலின் ஆழத்தில் புதைந்தான். இது அவன் உயிரைக் காப்பாற்றியது.

எவ்வளவு நேரம் உணர்வற்ற நிலையில் அசையாது கிடந்தான் என்பதை அலெக்ஸேயால் நினைவுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இனந்தெரியாத மனித நிழல்களும் கட்டிடங்களின் ஒப்புயரக் கோடுகளும், நம்ப முடியாத வகை இயந்திரங்களும் இடையறாது பளிச்சிட்டவாறு அவன் முன்னே விரைந்தன. அவற்றின் சூறாவளி இயக்கம் காரணமாக அவன் உடல் முழுவதிலும் தெளிவற்ற சுறண்டல் வலி உண்டாயிற்று. பின்பு இந்தக் குழப்பத்திலிருந்து பெரிய, வெம்மையுள்ள, நிச்சயமற்ற வடிவம் கொண்ட ஏதோ ஒன்று வெளிப்பட்டு சூடான நாற்ற மூச்சை அவன் மேல் விட்டது. அவன் அப்பால் விலக முயன்றான். ஆனால், அவனுடைய உடல் வெண்பனியில் ஒட்டிக்கொண்டு விட்டதுபோல் இருந்தது. தெளிவாக விளங்காத அச்சத்தால் உலப்புற்று அவன் வெடுக்கென்று துள்ளி எழுந்தான். உடனேயே தன் நுரையீரலில் பாயும் குளிர் காற்றையும் கன்னங்களில் வெண்பனியின் குளிரையும் உணர்ந்தான். இப்போது அவன் மேனி முழுதிலும் அல்ல, கால்களில் மட்டுமே கடுமையான வலி ஏற்பட்டது.

“உயிரோடு இருக்கிறோம்!” என்ற எண்ணம் அவன் உணர்வில் பளிச்சிட்டது. எழுந்து நிற்பதற்காக அங்கங்களை அசைத்தவன், யாருடைய பாதங்களுக்கோ அடியில் வெண்பனி பாளம் நொறுங்குவதையும் இரைச்சலும் கம்மலும் கொண்ட மூச்சையும் கேட்டான். “ஜெர்மனியர்கள்!” என்று உடனே அனுமானித்தான். கண்களைத் திறக்கவும் தற்காத்துக் கொண்டு துள்ளி எழவும் உண்டான விருப்பத்தை அடக்கிக் கொண்டான்.” சிறைப்பட்டுவிட்டேன், எவ்வளவோ முயன்றுங்கூடப் போர்க் கைதி ஆகிவிட்டேன்! “…இனி என்ன செய்வது?” என்று எண்ணமிட்டான் !

கண்களைத் திறக்கவும் தற்காத்துக் கொண்டு துள்ளி எழவும் உண்டான விருப்பத்தை அடக்கிக் கொண்டான்.” சிறைப்பட்டுவிட்டேன், எவ்வளவோ முயன்றுங்கூடப் போர்க் கைதி ஆகிவிட்டேன்! “…இனி என்ன செய்வது?” என்று எண்ணமிட்டான் !

எல்லாத் தொழிலிலும் வல்லவனான தனது மெக்கானிக் யூரா, கைத்துப்பாக்கி உறையின் அறுந்த வாரைத் தைப்பதாக ஏற்றுக்கொண்டவன் தைக்காமலேயே இருந்து விட்டதும், எனவே பறக்கும் போது ரிவால்வாரை விமானி தனது உடையின் தொடைப்பையில் வைத்துக்கொள்ள நேர்ந்ததும் அவனது நினைவுக்கு வந்தன. இப்போது அதை எடுப்பதற்கு விலாப்புறம் புரண்டு படுக்க வேண்டியிருந்தது. பகைவன் கணிக்காதபடி அவ்வாறு செய்வதோ இயலாதிருந்தது. அலெக்ஸேய் முகங்குப் புறக் கிடந்தான். ரிவால்வரின் கூரிய பட்டைகள் தொடையில் அழுத்துவதை அவன் உணர்ந்தான். ஆயினும் அசையாது கிடந்தான். பகைவன் தன்னை இறந்தவன் என ஒருவேளை நினைத்து அப்பால் போய்விடுவான் என்று நினைத்தான்.

ஜெர்மனியன் பக்கத்தில் தொப்புத்தொப்பென அடிவைத்து நடந்தான், விந்தையான முறையில் பெருமூச்சுவிட்டான், மறுபடி மெரேஸ்யெவின் பக்கத்தில் வந்தான், வெண்பனிப் புறணியை நொறுக்கினான், குனிந்தான். ஜெர்மானியன் தனியாள் என்பதை மெரேஸ்யெவ் இப்போது கண்டுகொண்டான். தான் தப்புவதற்கு வாய்ப்பு எனக் கருதினான், திடீரெனத் துள்ளி எழுந்து அவன் குரல்வளையை இறுக்கி, துப்பாக்கி சுட இடம் கொடுக்காமல் சமப்போராட்டம் நடத்தினால்…… ஆனால், இதை நிதானமாகக் கணக்கிட்டுத் துல்லியமாகச் செய்து முடிக்க வேண்டியிருந்தது.

தனது கிடையை மாற்றிக் கொள்ளாமலேயே மெதுவாக, மிக மெதுவாக அலெக்ஸேய் ஒரு கண்ணைச் சிறிது திறந்தவன், தன் முன்னே ஜெர்மனியனுக்குப் பதிலாகப் பழுப்பு நிறமான சடை அடர்ந்த வேறு ஒன்றைத் தாழ்த்திய இமை மயிர்களின் ஊடாகக் கண்டான். விழியை இன்னும் கொஞ்சம் அகலத்திறந்தவன், அக்கணமே அவற்றை இறுக மூடிக் கொண்டுவிட்டான், அவனுக்கு எதிரே பின் கால்களில் குந்தியிருந்தது பெரிய மெலிந்த, பறட்டைச் சடைக்கரடி.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:

பாகம் – 1 : உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்