Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 695

ஆதார் : சட்டத்துக்குப் புறம்பான வலுக்கட்டாயம்

4

தார் பல வகையிலும் முழுமை பெறாத ஒரு திட்டம். அதன் சாத்தியப்பாடு மற்றும் லாபக்கணக்கு குறித்த ஆய்வு எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. தனித்துவ அடையாள எண் வைத்துள்ள ஒருவரின் கணக்கு தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்க எந்த சட்டமும் இல்லை. அடையாள மோசடி செய்யப்படுவது மற்றும் ஒருவரின் அடையாள விவரம் தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள இந்த திட்டத்தோடு தொடர்புடைய எந்த நிறுவனமும் தயாரில்லை என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது.

ஆதார்ஆதார் மூலம் திரட்டப்படும் தகவல்களின் அந்தரங்க உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டம் எதுவுமில்லை. இப்போது தனித்தனி தகவல் தளங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் நம்மைப் பற்றிய பலவகை விபரங்களை ஒரே ‘பொறியமைவுக்குள்’ கொண்டு வந்து தொகுக்கும் ‘தனித்துவ அடையாள ஆணையத்தின்’ (UIDAI) முயற்சி மக்கள் மீதான கண்காணிப்புகளையும், சமூகக் கட்டுப்பாட்டையும் சாத்தியமாக்குகிறது. ஒரு நபரை குறி வைத்து, அவரைப் பற்றிய தரவுகளை தொடர்ந்து கண்காணிப்பதையும், அவருக்கு முத்திரை குத்துவதையும் தடுப்பதற்கு எந்த பாதுகாப்பும் இல்லை. மக்களின் சொந்த வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளில் குறுக்கிடுவதற்காக புலனாய்வு அமைப்புகள் கடந்த 3-4 வருடங்களில் உருவாக்கி வைத்திருக்கும் கருவிகள்தான் NATGRID, CCTNS, NCTC, PII மற்றும் MAC போன்ற குறிச்சொற்கள்.

இந்த நிலையில் நவம்பர் 21-ம் தேதி ஆந்திர உயர்நீதிமன்ற அமர்வு ஒன்று வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இத்தீர்ப்பில் ஆதாரை காரணம் காட்டி மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு ஒருவருக்கு மறுக்கப்படக் கூடாது என்று நீதிபதி கூறியிருக்கிறார். அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் ஆதார் அட்டை கேட்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமர்வு மேற்கண்ட தீர்ப்பை வழங்கியது.

ஆதார் தேவை என்று சட்ட ரீதியாக எந்த கட்டாயத்தையும் விதிக்கவில்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நீதிமன்றத்தில் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்தது. இதே உறுதிமொழிப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்திலும் பெட்ரோலிய அமைச்சகம் சமர்ப்பித்தது.

குடிமக்கள் பற்றிய தகவல்களை உயிர்அளவை (Biometric) முறையில் சேகரிப்பது உயிர் வாழும் அடிப்படை உரிமையின் கீழ் வருகின்ற அந்தரங்க உரிமையை பறிப்பதற்கு இணையானது என்று அந்த புகார்தாரர் வாதிட்டார். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அனுபவிக்க ஆதார் அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்று சட்டமோ, ஆணையோ இயற்றப்படவில்லை என்பதும் அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

தகவல் திரட்டல்அமர்வின் சார்பாக தீர்ப்பு எழுதிய ஆந்திர உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, இது தொடர்பாக அரசு தரப்பிலிருந்து எந்த குறிப்பாணையோ, அங்கீகரிக்கப்பட்ட சட்டமோ இல்லாத நிலையில் எரிவாயு சிலிண்டர்கள் வழங்க ஆதார் அட்டை இருந்தே தீர வேண்டும் என்று கோருவதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.

மார்ச் 2, 2013 அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.சிக்ரியின் தலைமையிலான அமர்வு தனித்துவ அடையாள (UID) எண் பெற்றிருத்தல் அவசியம் என்ற சுற்றறிக்கைக்கு எதிரான வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியதையும் இங்கே குறிப்பிட வேண்டும். சுற்றறிக்கையின் சட்டப் பொருத்தப்பாடு தொடர்பாக நீதிமன்றம் சில கேள்விகள் எழுப்பிய உடனேயே மத்திய அரசு சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டது. மத்திய அரசின் இந்த முடிவு தனித்துவ அடையாள ஆணையம் என்பது சட்டபூர்வமாக எதிர்க்கப்படக் கூடியதும், பாதுகாக்க இயலாததுமாகும் என்ற அடிப்படை உண்மையை உறுதிப்படுத்தியது.

ஆதார் அட்டையை வற்புறுத்தி கேட்பதை தடை செய்யும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் ஓய்வு பெற்ற நீதியரசர் வி. ஆர். கிருஷ்ண அய்யர், பேராசிரியர் ரொமிலா தப்பார், எஸ்.ஆர்.சங்கரன், நீதியரசர் ஏ.பி. ஷா, கே.ஜி. கண்ணபிரான், பெஸ்வாடா வில்சன், அருணா ராய் மற்றும் உபேந்திர பக்சி ஆகியோரை உள்ளடக்கிய 17 சிறந்த குடிமகன்கள் வெளியிட்ட செப்டம்பர் 28, 2010 தேதியிட்ட அறிக்கையையும், நிதித் துறைக்கான பாரளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையையும் உறுதிப்படுத்துகிறது. ‘உயிரியல் அளவை முறைக்கான துணைநிலை சட்டம் சட்டவிரோதமானதும் சட்டத்துக்குப் புறம்பானதும் ஆகும்’ என்றும் ‘தனித்துவ அடையாள எண் திட்டத்துக்கு எதிரான அரசியலமைப்பு ரீதியான, சட்ட ரீதியான, வரலாற்று ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான மறுப்புகளை’ பட்டியலிட்டும் தரப்பட்ட 18/03/2013 தேதியிட்ட புகாரை மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி. கருணாகரன் தலைமையிலான துணைநிலை சட்டத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது

ஆதார் ஆணையம்
சட்ட விரோத ஆதார் ஆணையம்

இப்பிரச்சினை ஆதார் எண் கட்டாயமானதா, அல்லது விருப்பபூர்வமானதா என்பது சம்பந்தப்பட்ட கேள்வி மட்டுமல்ல என்று மேற்கு வங்க சட்ட வல்லுநர்கள் மாநில முதலமைச்சரிடம் சொல்லத் தவறியது வருத்தத்துக்குரியது. மேற்குவங்க சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் அதைத்தான் பேசுகிறது. மாறாக, இது சட்ட நெறிமுறைகளுக்கு முரணாகவும், நீதிமுறைமைக்கு எதிராகவும் இந்த உயிரியல் அளவை எண் முறை ஏற்படுத்தக் கூடிய, ஏற்கனவே வலுவாக ஆவணப்படுத்தப்பட்ட தீவிர சிக்கல்களை பற்றிய பிரச்சினை.

கேரள எதிர்க்கட்சித் தலைவரான சி.பி.எம்.மின் வி.எஸ் அச்சுதானந்தன் 26 ஆகஸ்ட் 2011-ல் ஆதார் திட்டத்தை கைவிடுமாறு கேரள அரசை கேட்டுக் கொண்டார். ஆதாருக்கு எதிரான ஆய்வாளர்களும் பிரச்சாரகர்களும் இதனை வரவேற்றார்கள். காலந்தாழ்ந்ததாக இருப்பினும் அச்சுதானந்தனின் அறிக்கை மக்களின் விரல் தடயங்களைக் கொண்டு எடுக்கப்படும் உயிரியல் அளவை தகவல்கள் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2003 ஆகியவற்றை மீறுகிறது என்றது. பல்வேறு தரப்புகளிலிருந்து எழுந்த எதிர்ப்புகளை அடுத்து ஆதார் திட்டத்தை செயல்படுத்துவதிலிருந்துகேரள அரசு பின்வாங்கியுள்ளது.

பிப்ரவரி 24, 2011-ல் அச்சுதானந்தன் முதலமைச்சராக இருந்த போது தான் கேரளாவில் தனித்துவ அடையாள எண் (UID) திட்டமான ஆதார் கொண்டு வரப்பட்டது. அதன் தொடக்க விழாவில் பேசிய அச்சுதானந்தன் மக்களிடம் ஆதார் தொடர்பாக வேறுபட்ட கருத்துக்கள் உருவாகியிருப்பதாகத் தெரிவித்தார். ‘இத்திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்’ என்றார். ஆனால், அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முன்னரே திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கி விட்டார். இப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஆன பிறகு அச்சுதானந்தன் திட்டத்தை எதிர்க்கிறார். என்ன செய்வது, எதிர்க்கட்சியில் இருக்கும் போதுதான் அரசியல்வாதிகளுக்கு ஞானம் வருகிறது!

திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காருக்கும் இத்தகைய காலங்கடந்த ஞானம் வருவதற்கு அவர் எதிர்க்கட்சி வரிசைக்கு போவது வரை காத்திருக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் முதல் மாநிலமாகவும், இந்திய அளவில் 8-வது மாநிலமாகவும் திரிபுராவில் 2010 டிசம்பர் 2-ம் தேதி ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதார் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் திரிபுரா முதலிடம் வகிக்கிறது. ஆனால், திரிபுராவின் ஆதார் வெற்றியில் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்ப்ட்ட முறைகேடு கறையாக படிந்திருக்கிறது. 15 கோடி ரூபாய் வரை நிதி முறைகேடுகள் நடந்த்தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த நெருக்கடியை சமாளிக்க 2012 மார்ச் மாதம் மாநில முதல்வர் சி.பி.ஐ விசாரணை கோரப் போவதாக அறிவித்தார்.

ஆனால், மாநில ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சவுத்திரி காங்கிரசின் மத்திய அரசு ஆதார் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் முன்னணியில் இருந்ததற்காக கவுரவித்து விருது வழங்கியதை சட்டமன்றத்தில் தெரிவித்தார். சி.பி.ஐ விசாரணை கோரிக்கை என்ன நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.

சிபிஎம் மோசடி
சிபிஎம்முக்கும் பாஜகவுக்கும் வேறுபாடு இல்லை

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசிடமிருந்து இந்த விருதை பெற்ற சி.பி.எம் 25 செப்டம்பர் 2013-ல் ‘சட்டவிரோத ஆதார்’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஆதாருக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்தது. அரசு பண விநியோகத் திட்டத்திற்கும், சமூகநலத் திட்டத்திற்கும் ஏழைகளைக் கண்டறியும் முறைக்கும் ஆதார் அடையாளத்தை சட்ட விரோதமாக பயன்படுத்துகிறது என்று மத்திய அரசை விமர்சித்து. சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் (SUCI) மார்ச் 14, 2012-ல் ஆதார்/UID திட்டத்துக்கு எதிராக 3.57 கோடி கையொப்பங்களைத் திரட்டி பிரதமரிடம் அளித்தது. இத்திட்டம் ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் வருணித்தது. நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு டிசம்பர் 13, 2011-ல் தாக்கல் செய்த அறிக்கையில் தனித்துவ அடையாள ஆணையத்துக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. அது இத்திட்டத்தை தெளிவற்றது, நோக்கமற்றது மற்றும் குழப்பம் மிகுந்தது என்று கருத்து தெரிவித்தது. மேலும் இத்திட்டம் பாராளுமன்ற முன்னுரிமைகளுக்கும், அடிப்படை அறநெறிகளுக்கும் எதிரானது என்றது.

பாராளுமன்றத்தில் சட்டமாகும் முன்னரே உயிரியல் அளவை மற்றும் தனித்தகவல்களை சிறப்பு அடையாள எண் மூலம் பெறும் முடிவுக்கு எந்த சட்ட அனுமதியும் இல்லை. ஏப்ரல் 2013 SUCI கட்சியின் ‘ப்ராலட்டேரியன் எரா’ ஆதார் திட்டம் குறித்த பல கேள்விகளை எழுப்பி அதன் பின்னுள்ள உண்மைகளை திரைகிழித்தது. இந்த திட்டம் சட்டத்துக்கும், அரசமைப்பு விதிகளுக்கும் எதிரானது என்று உரைத்தது. இத்திட்டத்தை கொண்டுவர இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நிலகேனிக்கு வரம்பற்ற அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. அக்கட்சி மேற்கொண்ட ஆய்வின் படி ஆதார் சமூக அமைப்பை இடைத்தரகர்களின் பிடியிலிருந்து காப்பாற்றும் என்று கதையளப்பது மோசடியாகும். மேலும், தகவல்களை சேகரிக்கும் சில நிறுவனங்கள் வகுப்புவாத மற்றும் மத அடிப்படைவாத சக்திகளுடன் இணைந்து நிற்பதையும் அவற்றின் தீய நோக்கத்தையும் சுட்டிக்காட்டி கட்சி எச்சரித்தது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, கனடா மற்றும் ஜெர்மனி போன்ற பல நாடுகள் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் பரீட்சித்துப் பார்த்து தோல்வி கண்டுள்ளன. கண்காணிப்புக்கு புகழ்பெற்ற அமெரிக்கா கூட்டுத் தாயக பாதுகாப்புத் துறையிடம் மாகாணங்களின் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவு தகவல்களை ஒன்று திரட்ட அனுமதி பெற முயற்சித்து தோல்வியைக் கண்டது. மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் தேசிய உயிரியல் அளவை எண் மூலமாக எடுக்கப்படும் கணக்கீடு தனிநபர் உரிமை மற்றும் அந்தரங்கத்தன்மையை பாதிப்பதை எடுத்துச் சொன்னது. மக்கள் அனைவரின் கைரேகை, உயிரணுக்களின் மாதிரி மற்றும் சந்தேகத்திற்குள்ளான ஆனால், குற்றம் நிரூபிக்கப்படாதவர்களின் டி.என்.ஏ பதிவுகளை திரட்டுவது மிக ஆபத்தானது என்பது நீதிபதிகளின் ஒருமித்த கருத்தாக இருந்தது.

நந்தன் நிலகேணி
ஆதார் எண்ணை குடிமக்கள் உடம்பில் பச்சை குத்த விரும்புகிறார் நீலகேணி.

அதிகார முறைகேடு, அரசியல் எதிரிகளை கண்காணித்தல், அடிப்படை மனித உரிமைகளை மிதிப்பது, ஜனநாயக மக்கள் இயக்கங்களின் செயல்பாட்டாளர்களை துன்புறுத்துவது, திட்டமிட்ட ரீதியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மக்கள் இயக்கங்களின் பொறுப்பாளர்களை கொடுமைப்படுத்துவது ஆகியவை தினம்தோறும் ஆயிரக்கணக்கில் நடக்கும் நமது நாட்டில் அனைத்து அதிகாரத்தையும் ஒரு அமைப்பிடம் குவிப்பது எதேச்சதிகாரத்தை உருவாக்கும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் கவனத்தை உறுதியாக ஈர்க்கும் வகையில் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

1984 மற்றும் 2002 குஜராத் படுகொலையில் அரசு எந்திரத்தின் முழு பங்கேற்பு இருந்தது என்பது ரகசியமல்ல. அரசு நிர்வாகத்தின் மறைமுக ஆதரவுடன் நடக்கும் என்கவுண்டர் படுகொலைகள், விசாரணை கைதிகள் சாவு, போலீஸ் – ராணுவம் மூலம் அரசியல் எதிரிகளை தீர்த்துக்கட்டுதல் போன்றவை எதார்த்தமாக இருக்கும் சூழலில் இது தொடர்பாக எழுகின்ற அச்சத்தை புறந்தள்ள முடியாது. அரசியல் எதிரிகளின் நடவடிக்கைகளை எப்போதும் கண்காணித்து வரும் முதலாளித்துவ அரசுக்கு ஆதார் வசதியும் அமைந்து விட்டால் கேட்கவா வேண்டும். ரயில் முன்பதிவு, ATM-லிருந்து பணம் பெறுதல் முதற்கொண்டு உணவு மானியத் தொகை வங்கியில் செலுத்தப்படும் கணக்கு வரை ஒரு ஒருங்கிணைந்த கண்காணிப்பு வளையத்துக்குள் நாம் நுழைவோம்.

கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும் போது எதேச்சதிகார, பாசிச சக்திகள் சமூகத்தில் மோசமான கண்காணிப்பு முறைகளை ஏற்படுத்தி இத்தகைய தொழில்நுட்பங்களை மக்களுக்கு எதிராக பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஜெர்மானிய ஆட்சியாளர்கள் 1933-ம் வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது IBM ஹாலரித் D II அட்டை வகைப்படுத்தும் கருவியை பயன்படுத்தினர். அதில் இருந்த இனம் பற்றிய வகைப்பாடு, IBM-ஐ பயன்படுத்தி யூதர்களை நாஜிக்கள் கொன்றழிக்க உதவியது.

எனவே சாதிய, மதவாத, இனவாத மற்றும் அரசியல் நோக்கங்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆதார் தகவல் அடிப்படையை தமது ஜனநாயக விரோத, சட்ட மற்றும் நெறிமுறையற்ற நோக்கங்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது.

தவறானவர்கள் கையில் ஆதார் தகவல்கள் சேர்வதையோ மற்றும் தவறான நோக்கங்களுக்கு ஆதாரை பயன்படுத்துவதிலிருந்து தற்காத்துக் கொள்ள என்ன வழி என்று நந்தன் நிலகேனியிடம் கேட்ட போது அவர் அளித்த பதிலில் அதன் குரூரம் ஒளிந்துள்ளது. ஆதார் எண் எங்கும் வியாபித்து இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு மக்கள் ஆதார் எண்ணை மறக்காமல் இருக்க தமது உடலில் ஓரிடத்தில் பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இப்பிரச்சினையில் நாம் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத உண்மை என்னவென்றால் ஆதார் தொடர்பான நிலைப்பாட்டில் திரிணமூல் காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் சி.பி.எம்மிற்கு நடுவே பெரிய பேதங்கள் எதுவும் இல்லை என்பதே. சட்டவிரோதமாக குடியேறுபவர்கள், இடம்பெயரும் தொழிலாளர்கள் சம்பந்தபட்ட பிரச்சினைகளை தவிர சி.பி.எம். பா.ஜ.கவிடமிருந்து வேறுபடவில்லை.

நன்றி : Frontierweekly

AADHAR—Extra Legal Coercion – Usha Ramanathan

[கொல்கத்தவின் எர்த்கேர் புத்தக நிலையத்தில் 2013-ம் ஆண்டு நவம்பர் 21 அன்று உஷா ராமநாதன் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்]

ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு : சுகதேவ்

அந்த வீரன் இன்னும் சாகவில்லை

3

மார்ச் 23 : பகத்சிங் நினைவுநாள் – முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கூட்டம்

1. சென்னை

“இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 23.03.2014 அன்று மாலை 6 மணிக்கு அம்பத்தூர் முருகன் கோயில் அருகில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய பொதுக்கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ. முகுந்தன் தலைமை தாங்கினார். தலைமையுரையில் பல்வேறு நிறுவனங்களில் தினமும் நடைபெறும் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும், தன் லாப வெறிக்காக இயற்கையையே சீரழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்காமல் தொழிலாளி வர்க்கத்துக்கு விடிவில்லை என்று தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.

தலைமையுரைக்கு முன்னதாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் முகிலன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அடுத்ததாக உரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் சிவா உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை ஏய்த்து அதன் மூலம் கொள்ளையடிக்கும் முதலாளிகளையும், சமீபத்தில் வரி ஏய்ப்பு செய்து அம்பலப்பட்டுப் போன நோக்கிய நிறுவனத்தையும் அம்பலப்படுத்தினார்.

அடுத்ததாக பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர் சொ.செல்வகுமார் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் கோரப்பிடியில் சிக்கி வாழ முடியாமல் பல்வேறு வர்க்கங்களை சார்ந்தவர்களும் தற்கொலை செய்து வருவது அதிகரித்துள்ளது சுட்டிக் காட்டினார். மக்கள் எழுச்சிக்கு பயந்து பகத்சிங்கை முந்தைய நாளே தூக்கிலிட்ட ஆங்கிலேயர்களைப் போல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வளர்ச்சியைக் கண்டு முதலாளிகள் அஞ்சி நடுங்குவதை எடுத்துரைத்தார்.

ஒரு புரட்சிகர பாடலுக்குப் பின் தன் உரையை துவக்கிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராஜன் தங்கள் மாவட்டத்தில் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் ஆலைகள் குறித்தும், தண்ணீர் தனியார்மயமானதின் விளைவாகவும் உழைக்கும் மக்கள் வாழ வழியற்ற மாவட்டமாக மாறி வருவதையும் இதை பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாது சுரண்டி சுரண்டி செல்வம் சேர்க்கும் முதலாளித்துவத்தினை ஜலசமாதி செய்திட வேண்டுமென கூறி முடித்துக் கொண்டார்.

அடுத்ததாக பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி தோழர் இரா.லோகநாதன் சிக்கனம் செய்வதாகக் கூறி தொழிலாளிகளின் உயிரை மாய்க்கும் முதலாளித்துவ லாபவெறியை பல்வேறு உதாரணங்களின் மூலம் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கோவை மாவட்ட செயலாளர் தோழர் விளவை இராமசாமி தொழிற்சங்கத் தலைவர்கள் என்ற போர்வையில் தொழிலாளிகளை ஏய்க்கும், தொழிற்சங்கத்துக்கு துரோகமிழைக்கும் முதலாளிகளை அம்பலப்படுத்தினார். குறிப்பாக கோவை தேசிய பஞ்சாலைக் கழகத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் சூழ்ச்சியையும் அதை முறியடித்து புஜதொமு தேர்தலை நடத்தி வெற்றி பெற உள்ளதையும் விளக்கி துரோகிகளை இனங்கண்டு தனிமைப்படுத்தி வேண்டுமென தொழிலாளிகளுக்கு உரைத்து தனது உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் தோழர் சு.பரசுராமன், மக்கள் குடியிருப்புகளில் வன விலங்குகள் வருவதற்கு காரணம் முதலாளித்துவ பயங்கரவாதமே, வன விலங்குகள் வாழ்கின்ற இயற்கை சார்ந்த சூழலான காட்டை அழிப்பதன் மூலம் விலங்குகள் வாழ முடியாமல் மக்கள் வசிப்பிடங்களில் வந்து அச்சுறுத்துகின்றன. இப்படி ஒட்டு மொத்த உயிரினங்களுக்கும் எதிரியான முதலாளித்துவத்தை வேரோடு வீழ்த்த தொழிலாளி வர்க்கத்தினால்தான் முடியும் எனக் கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு சமீபத்தில் கழிவுநீரை சுத்தம் செய்ய சென்று தொழிலாளிகள் மரணமடைந்த சம்பவத்தை திட்டமிட்ட படுகொலை என்று துவங்கி இப்படி நித்தம் நித்தம் படுகொலை செய்யும் முதலாளிக்கெதிராக ஒரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டி முதலாளிக்கு ஆதரவாக ஆளும் வர்க்கம் நடந்து கொள்கிறதென கூறினார். ராமலிங்கம் என்ற ஐ.பி.எஸ்-ம், சென்னை மாவட்ட ஏடிஜிபியும் போராடும் தொழிலாளிகளுக்கு எதிராக போலீசு முதல் முதலமைச்சர் தனிப்பிரிவு வரை அனைத்து துரோகிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதை பல்வேறு உதாரணங்களுடன் பதிவு செய்தார். குட்ட குட்ட தொழிலாளிகள் குனிந்து கொண்டே இருக்க வேண்டும், நிமிர்ந்து நின்றால் பயங்கரவாதிகள் கொல்லும் என்று கோவை பிரிக்காலிலும், மானோசர் மாருதி சுசுகியிலும் நடந்த தொழிலாளர் போராட்டங்களை சித்தரிக்கும் முதலாளித்துவத்தின் குரூரத்தை விவரமாக பதிவு செய்தார்.

ஆலைகளில் மாசடைந்த நீரை சட்டவிரோதமாக ஆறுகளில் கொட்டுவதும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதும், காசுகளை அழிப்பதும், குளிர்சாதனத்தை பயன்படுத்தி புவியை வெப்பமயமாக்குவதும் என மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக பூமியை மாற்றும் முதலாளித்துவத்தினை ஒழிக்காமல் தொழிலாளி வர்க்கம் விடுதலையடைய சாத்தியமில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்து தனது உரையை நிறைவு செய்தார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய தேர்தலை பற்றிய பாடல் இன்றும் கூட பொருந்துவதாக இருப்பதைக் கூறி, “கொள்ளை கூட்டணி ஒவ்வொன்னுக்கும் என்ன பின்னணி” என்ற பாடலில் தொடங்கி பல புரட்சிகரப் பாடல்களை இசைத்து மக்களை ஈர்த்த கலைக்குழுவினர் இறுதியாக பகத்சிங் பாடலுடன் நிறைவு செய்தனர்.

இணைப்பு சங்க, கிளைச்சங்க தொழிலாளிகள் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டம் ஆவடி-அம்பத்தூர் பகுதித் தலைவர் தோழர் ம.சரவணன் நன்றியுரைக்குப் பின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை

2. தருமபுரி

மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்பு நாளை முன்னிட்டு “ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தியாகத்தை நெஞ்சிலேந்துவோம் என்ற தலைப்பில் தருமபுரி புமாஇமு சார்பில் கல்லூரிகளிலும், பள்ளியிலும் பேருந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இயக்கத்தின் இறுதியாக பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பகத்சிங் படத்துக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். கூடியிருந்த மக்கள் மத்தியில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

march-23-dharmapuri

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி

3.  தூத்துக்குடி

மார்ச் 23 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் தூத்துக்குடியில் ஏகாதிபத்திய எதிர்ப்புப்போராளிகள் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது.

march-23-tuticorin-poster

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தூத்துக்குடி

போஸ்கோவின் கனிம வளக் கொள்ளை !

0

புல்டோசரை வைத்து தகர்த்ததைப் போல, கார்ப்பரேட் முதலாளிகள் தொடங்கப்போகும் பெரும் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் விதிக்கப்பட்டிருந்த பெயரளவிலான தடைகள் அனைத்தையும் நீக்கிவிட்டு, தாராள அனுமதியளித்துள்ளார் மைய அமைச்சர் வீரப்ப மொய்லி. கடந்த டிசம்பரில் சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சரான ஜெயந்தி நடராசன் பதவி விலகிய பின்னர் அத்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள பெட்ரோலியத்துறை அமைச்சரான வீரப்ப மொய்லி, பதவியேற்ற 20 நாட்களில் ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான 73 பெரும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் அடுத்தடுத்து ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு ஒரிசா மக்களின் கடும் எதிர்ப்பால் கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய முதலீட்டுத் திட்டமான போஸ்கோ இரும்பு-எஃகு ஆலைத் திட்டத்துக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜெகத்சிங்பூர் ஆர்ப்பாட்டம்
தென்கொரிய அதிபரின் வருகையையொட்டி, அவசரமாக போஸ்கோ திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்ததை எதிர்த்து, “தென்கொரிய அதிபரே வெளியேறு!” என்ற முழக்கத்துடன் வாழ்வுரிமை பறிக்கப்பட்ட ஜெகத்சிங்பூர் மாவட்ட மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

கடந்த ஜனவரியில் தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை-யின் வருகையையொட்டி, அதற்கு முன்னதாகவே தென்கொரியாவின் போஸ்கோ திட்டத்துக்கு அவசரமாக ஒப்புதல் அளித்துள்ள அமைச்சரின் இந்த முடிவானது, கார்ப்பரேட் முதலாளிகளையே பிரமிக்க வைத்துள்ளதாக முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரிக்கின்றன. சுற்றுச்சூழல், வனப் பாதுகாப்பு, இத்திட்டங்களால் வெளியேற்றப்படும் மக்களுக்கு வாழ்வுரிமையளித்தல் முதலான எதைப்பற்றியும் கவலைப்படாமல், கண்ணை மூடிக்கொண்டு அவசரஅவசரமாக அமைச்சர் வீரப்ப மொய்லி ஒப்புதல் அளித்திருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், வீரப்ப மொய்லியின் அதிர்ச்சியூட்டும் இந்த அறிவிப்பு திடீரென உருவானதல்ல. மைய அரசின் சுற்றுச்சூழல் துறையும் பிரதமர் அலுவலகமும், கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்கு ஏற்ப ஏற்கெனவே நிலவி வந்த பெயரளவிலான சட்டங்களையும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் அடுத்தடுத்து நீர்த்துப்போகும் வகையில்தான் இயங்கி வந்துள்ளன. மேலும், அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் நோக்கங்களை உடனுக்குடன் நிறைவேற்றும் விசுவாசி என்பதை பெட்ரோலியத்துறை அமைச்சரான வீரப்ப மொய்லி நிரூபித்துக் காட்டியுள்ளதாலேயே, அவரைச் சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சகத்துக்கும் பொறுப்பேற்குமாறு மைய அரசு பணித்தது.

  • கடந்த டிசம்பர் 2012-இல் முதலீட்டுக்கான அமைச்சரவை கமிட்டியை பிரதமர் மன்மோகன் தலைமையில் மைய அரசு உருவாக்கியது. ரூ 1000 கோடிக்கும் மேலான முதலீட்டுத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும், இதற்குத் தடையாக உள்ள சட்டங்களை, குறிப்பாகச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பாதுகாப்பு, குடிமக்களை இப்பகுதியிலிருந்து வெளியேற்றுவது தொடர்பான சட்டங்களில் உள்ள விதிகளை அகற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இக்கமிட்டியில் சுற்றுச்சூழல்-வனத்துறை அமைச்சரோ, பழங்குடியினர் நலத்துறை அமைச்சரோ சேர்க்கப்படாமல் திட்டமிட்டே ஒதுக்கப்பட்டனர். கடந்த மார்ச் 2013-ல் பல்வேறு பெரும் திட்டங்களுக்குப் பல அமைச்சகங்கள் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதைக் குறிப்பிட்ட மைய அமைச்சரவை, இவற்றை விரைந்து நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது.
  • ஜனவரி 2012-ல் கார்ப்பரேட் முதலாளிகளின் பெரும் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்னதாக இப்பகுதியிலுள்ள பழங்குடியின கிராமப் பஞ்சாயத்துகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும் என்ற விதி நீக்கப்பட்டு, மாநில அரசின் ஒப்புதலும் வனத்துறையின் ஒப்புதலும் இருந்தால் போதும் என்று மாற்றப்பட்டது. ஜனநாயகத்தில் பொதுமக்களின் பங்கேற்பு என்பது அவசியமானது என்று ஏற்கப்பட்டாலும், போஸ்கோ விவகாரத்தில் அது வெளிப்படையாகவே முறியடிக்கப்பட்டது.
  • பிப்ரவரி 2013-ல் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம், சிறிய திட்டங்களுக்கு – அதாவது, சாலை போடுதல், ரயில்பாதை அமைத்தல், மின்சாரக் கோபுரங்கள் அமைத்தல், மின்கம்பித் தடங்களை அமைத்தல் முதலானவற்றுக்குப் பழங்குடியின கிராமப் பஞ்சாயத்துகளின் ஒப்புதல் அவசியமில்லை என்று அறிவித்தது. மாவோயிஸ்டுகளின் செல்வாக்கிலுள்ள 82 மாவட்டங்களில் 13 வகையான அடிக்கட்டுமானத் திட்டங்களுக்கு வனத்துறையின் ஒப்புதல் அவசியமில்லை என்று அறிவித்தது. இதன் மூலம் இப்பகுதிகளிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டு, பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
  • ஒரே அமைச்சகத்தின் கீழ் இருந்தாலும், வனத்துறையின் ஒப்புதலிலிருந்து சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் தனியே பிரிக்கப்பட்டது. இதன் மூலம் வனத்துறையின் ஒப்புதல் கிடைக்காத போதிலும், சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலைக் கொண்டு தமது பெரும் திட்டங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும் இந்த அநீதிக்குத் துணை நின்றது.
  • ஒரிசாவின் நியாம்கிரி மலையில் பாக்சைட் கனிமத்தைக் கொள்ளையிடத் துடித்த வேதாந்தா நிறுவனம், வன உரிமைச் சட்டங்களை மீறுவதாகக் கூறிய போதிலும், பின்னர் நீதிமன்றத்தில் வாதிட்டபோது சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சகம், பல்டியடித்தது. காடுகளைச் சார்ந்துள்ள மக்களின் உரிமை மதிக்கப்பட்ட போதிலும், வளர்ச்சித் திட்டங்களுக்காக காடுகளை அழிப்பது தவிர்க்க வியலாதது என்றும், தனிநபரின் உரிமையைவிட அரசின் சமுதாயத் தலைமைப் பாத்திரம் முக்கியமானது என்றும் வாதிட்டது. இதன் மூலம் காடுகளைச் சார்ந்துள்ள பழங்குடியின மக்களின் உரிமையை ‘வளர்ச்சி’யின் பெயரால் அரசே நசுக்கியது. இருப்பினும், வேதாந்தாவின் கொள்ளைக்கு எதிராகப் போராடும் பழங்குடியின மக்களுக்கு ராகுல் காந்தி ஆதரவாக நிற்பதாக வேடம் போட்டுள்ளதால், தற்போதைக்கு கிராமப் பஞ்சாயத்துகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டுமென்ற விதியை வலுயுறுத்தி அத்திட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒத்திப் போட்டுள்ளது.
போஸ்கோ கட்டுமான அலுவலகம்
கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான உழைக்கும் மக்களின் போர் : தமது வாழ்வுரிமையைப் பறிக்க வந்துள்ள போஸ்கோ நிறுவனத்தின் கட்டுமான அலுவலகச் சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளி, அதனைத் தீயிட்டு கொளுத்திய ஒரிசா மக்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, 2012-ல் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராசன், “நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் எமது அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒருபோதும் இருக்காது” என்று அறிவித்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தனது அமைச்சகம், 828 திட்டங்களில் 754-க்கு ஒப்புதல் அளித்துள்ளதையும், 18,200 ஹெக்டேர் காட்டுப்பகுதி நிலங்கள் கையளிக்கப்பட்டுள்ளதையும், இன்னும் 57,469 ஹெக்டேர் நிலங்களைக் கையளிப்பதற்கான பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் பெருமையுடன் கூறினார்.

தொழிற்துறை விரிவாக்கத்தால் ஏற்படும் பேரழிவுகளுக்கு எதிராக “உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்பின் மதிப்பீடு’’-(EIA) என்பதை அடிப்படையாக வைத்து பரிசீலனையும் ஒப்புதல் அளிப்பதும், நிராகரிப்பதும் நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவில், இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்க வேண்டிய காவலனாக இருக்க வேண்டிய சுற்றுச்சூழல்-வனத்துறை அமைச்சகம், கார்ப்பரேட் முதலாளிகளின் அப்பட்டமான தரகனாக மாறிவிட்டது.

ஒரிசாவில் போஸ்கோ அமைக்கத் திட்டமிட்டுள்ள உருக்காலை ஆண்டொன்றுக்கு 1.2 கோடி டன் இரும்பை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால் இத்திட்டம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வறிக்கையோ, ஆலையின் முதல்கட்ட உற்பத்தி இலக்கான 40 லட்சம் டன் இரும்பு உற்பத்தியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டது. அதாவது 1.2 கோடிடன் இரும்பை உற்பத்தி செய்வதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பற்றி ஆவு செய்யாமல், அதில் மூன்றிலொரு பங்கான 40 லட்சம் டன் இரும்பு உற்பத்தியால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே பரிசீலித்து அதன்படி இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், போஸ்கோ அமைக்கவுள்ள இரும்பு உருக்காலை, மின் உற்பத்தி நிலையம், துறைமுகம் ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆராயாமல், அவற்றைத் தனித்தனி விவகாரமாகப் பிரித்து ஆய்வறிக்கையை அளித்தது.

போஸ்கோ ஆலை அமையவுள்ள பகுதியின் கிராமப் பஞ்சாயத்துகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டுமென்ற போதிலும், ஒரிசா மாநில அரசு இப்பகுதியில் பழங்குடியினர் வாழ்ந்து வருவதையே மறைத்துள்ளதோடு, கிராமப் பஞ்சாயத்துகளுக்குப் பதிலாக ஜெகத்சிங்பூர் மாவட்ட நீதிபதியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற்று மோசடி செய்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்னமும் போஸ்கோவுக்கு ஒப்புதல் வழங்கப்படாத நிலையில், அத்தீர்ப்பாயம் 2012-இல் அளித்த இடைக்காலத் தடையை இப்போது வீரப்ப மொய்லி நீக்கியுள்ளார். போஸ்கோவின் இரும்பு – எஃகு ஆலைத் திட்டம் என்பது வேறு, துறைமுகம் அமைக்கும் திட்டம் என்பது வேறு என்று இரண்டையும் வேறானதாகக் காட்டி ஒப்புதல் அளித்துள்ளார்.

வீரப்ப மொய்லி
கார்ப்பரேட் முதலாளிகளின் நம்பகமான விசுவாசி : சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சகத்துக்குப் பொறுப்பேற்றுள்ள பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.

இது மட்டுமின்றி, கடந்த ஜனவரி 14 அன்று வீரப்ப மொய்லியின் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம், தற்போதைய நிலக்கரிச் சுரங்கங்கள், மேலும் 50 சதவீத அளவுக்கு விரிவுபடுத்திக் கொள்வதற்கு தாராள அனுமதி அளித்துள்ளது. இத்தகைய விரிவாக்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, கனிமவள இழப்பு, பொதுமக்களுக்குஏற்படும் பாதிப்பு பற்றிய எந்த மதிப்பீடும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தனியார்மய – தாராளமய-உலகமயக் கொள்கைகளைத் திணித்தபோது, அரசுத்துறை நிறுவனங்களும் அவற்றின் அடிப்படைக் கட்டமைப்புகளும் அடிமாட்டு விலைக்குத் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன. இரண்டாவது சுற்றில் காடுகள், விளைநிலங்கள், கனிம வளங்கள், ஆறுகள் – நீர்நிலைகள், மின்சாரம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் தாரைவார்க்கப்பட்டன. இப்போது இன்னும் மூர்க்கமாகவும் திமிராகவும் அவரச அவசரமாகவும் கார்ப்பரேட் கொள்ளைக்குக் கதவுகள் அகலமாகத் திறந்துவிடப்படுகின்றன.

கார்ப்பரேட் முதலாளிகளில் ஒரு பிரிவினர், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான மோடியை ஆதரிப்பதாலும், முதலீட்டாளர்களின் நண்பனாக பா.ஜ.க. தன்னைக் காட்டிக் கொள்வதாலும், கார்ப்பரேட் முதலாளிகளிடம் நம்பிக்கையைப் பெற்று வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றும் நோக்கத்துடனேயே காங்கிரசு அரசு இத்தகைய அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளது. மொத்தத்தில், நாட்டின் – மக்களின் பொதுச்ணொத்துக்களான நீரும் நிலமும் கனிம வளமும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்குத் திறந்து விடப்படுவதும், வாழ்வுரிமை பறிக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவதும்தான் இந்த அறிவிப்பின் சாரமாகும்.

வீரப்ப மொய்லியின் அறிவிப்பைத் தொடர்ந்து போஸ்கோ நிறுவனம் கட்டுமானப் பணிகளில் இறங்கத் தொடங்கியதும், ஒரிசாவின் ஜெகத்சிங்பூர் மாவட்டத்தின் நுவாகோன், கோவிந்தபூர், தின்கியா பஞ்சாயத்துகளைச் சேர்ந்த கிராம மக்கள், தங்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் போஸ்கோ கட்டுமான அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தியதோடு, அதன் 300 மீட்டர் நீள தடுப்புச் சுவரையும் இடித்துத் தள்ளியுள்ளனர். போராடும் மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்திய அம்மாநில போலீசு, அவர்கள் மீது பொய்வழக்குகளைச் சோடித்து சிறையிலடைத்துள்ளது. நாட்டில் பெயரளவுக்கு இருந்த சட்டங்கள், விதிகள், கட்டுப்பாடுகள், நெறிமுறைகள் முதலான ஜனநாயகப் பம்மாத்துகள் அனைத்தும் கலைந்து, மூர்க்கமான கார்ப்பரேட் கொள்ளையும் அரசின் அப்பட்டமான பாசிசமும் அரங்கேற்றப்படுவதையே இவை நிரூபித்துக் காட்டுகின்றன.

– மனோகரன்
______________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014
______________________________

ஜி.எம் சிவசாம்ராஜின் சட்டவிரோத காட்டு தர்பார் !

0

ஜி.எம் சிவசாம்ராஜின் சட்டவிரோத காட்டு தர்பார்!

  • தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் அதிகாரத் திமிரை ஒடுக்குவோம் !
  • தட்டிக்கேட்க ஆளில்லாமல், தட்டுக்கெட்டுத் திரியும் ஜிஎம்மிற்கு தக்க பாடம் புகட்டுவோம் !

ன்பார்ந்த காளீஸ்வரர் “பி” யூனிட் ஆலைத் தொழிலாளர்களே!

நமது ஆலையில் தற்போது பொதுமேலாளராகப் பணிபுரியும் வி. சிவசாம்ராஜின் சட்டவிரோதமான அட்டகாசங்களை நீங்கள் அறிவீர்கள். தனியார் ஆலையில் (கே.ஜி குரூப்) வேலை செய்து வந்த அவர் குறுக்கு வழியில் (20 எல்) ஆலைப் பொதுமேலாளராக வந்ததால், ஒரு முதலாளியைப் போல அவர் ஆடுகின்ற சட்டவிரோதமான ஆட்டங்கள் சகிக்க முடியாதது.

ஆனால், காளீஸ்வரர் ஆலை ஒன்றும் தனியார் ஆலையல்ல. இது காளையார்கோவில் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதற்காகவே இந்திய அரசால் ஏற்று நடத்தப்பட்டு வருகிற பொதுத்துறை ஆலை. இங்கேயுள்ள பொதுமேலாளர் ஒன்றும் முதலாளியல்ல. அவர் தொழிலாளர்களின் உழைப்பினால் வரும் வருமானத்தில் சம்பளம் பெறுகிற ஒரு சாதாரண அரசு ஊழியர். ஆனால், இதை அவர் உணராமல் தொழிலாளரை அடிமைகளாகவே நினைக்கிறார்.

பொது வேலை நிறுத்தம் நடைபெற்றபோது வெளி ஆட்களைக் கொண்டுவந்து ஆலையை இயக்க முயற்சித்தார். தொழிலாளரை எப்போதுமே மதிப்பதில்லை. கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தியே பேசுவார். தான் ஒரு படிப்பாளி என்று சொல்லிக் கொள்ளும் அவரது நாகரீகமற்ற பேச்சுக்களை ஒரு குடிகாரனிடம்தான் நாம் எதிர்பார்க்க முடியும். அவரின் ஊழல்களையும், லீலைகளையும், திமிரையும் சட்டவிரோதப் போக்கையும் தட்டிகேட்கும் ஒரே சங்கமான புஜதொமு மற்றும் கோவை மண்டலச் சங்கத்தின் செயல்பாடுகளை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஏற்கனவே சுவற்றில் எழுதினார் என்பதற்காக தொழிலாளி ராதாகிருஷ்ணனை மிரட்டி வி.ஆர்.எஸ்ஸில் போக வைத்தார். இப்போது சுமார் 13 ஆண்டுகளாக ஆலையில் வேலை செய்து வரும் தொழிலாளி தோழர் மருதுபாண்டியனை வேலைக்கு வரவிடாமல் தடுப்பதன் மூலம் சங்கத்தை வளரவிடாமல் தடுக்கலாம் நினைக்கிறார். காற்றைக் கையால் மறைக்க முயல்கிறார். அவரின் அடாவடிச் செயல்பாடுகளினால் குமுறிக்கொண்டு இருக்கும் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட அவரது லீலைகளின் பட்டியல் இதோ;

1. மும்பையில் நடந்த ஒரு கூட்டத்திற்கு இவர் போனபோது கூடவே கட்டாயப்படுத்தி ஒரு பெண் பணியாளரையும் கூட்டிப் போனதால் அநதப் பெண்ணின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு ஆலைக்குள்ளும், வீட்டிலுமாக அவர் 2 தடவை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

2. பெண்களிடம் மிக இழிவாகவே பேசுவார், நாகரீகமே தெரியாத காட்டுமிராண்டியாகவே நடந்து கொள்வார்; வாலெண்டர்ஸ் தினத்தன்று அவரது அறையில் வெளிப்படையாக நடத்திய கூத்தும் கும்மாளமும் ஒரு கிரிமினல் குற்றம். நாகரீகம் கருதி அதை வெளிப்படையாகச் சொல்லாமல், இங்கு தவிர்க்கிறோம்.

3. இவர் தன்னை ஆன்மீகவாதி என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். இவரது ஆன்மீக நித்தியானந்தா லீலைகள் வீடியோ படம் பிடிக்கப்பட்டு, அந்த சி.டி யை வைத்து இவரை ஒரு கும்பல் மிரட்டுவதாகவும் அந்தக் கும்பலில் ஒருவர் வேலை செய்யாமலே ஆலையில் சம்பளம் வாங்குகிறார் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. யார் அந்த ஊழியர்?

இனி இந்த யோக்கியசிகாமணியின் ஊழல்கள்:

1. மூன்று டிரிப்புகளில் ஏற்றிச் செல்லவேண்டிய தொழிலாளரை ஒரே டிரிப்பில் அடைத்துக் கொண்டு ஏற்றிச் செல்ல வைத்து, ஆனால் 3 டிரிப் என கணக்கு எழுதி 2 டிரிப்பிற்கான பணத்தை ஆட்டையைப் போட்டு வருகிறார்.

2. பழைய பேருந்து ஓட்டுனர் சரவணனுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையினை விபத்து நடந்ததற்கு என ஆட்டையைப் போடுவதற்காகவே தர மறுக்கிறார்.

3. கேண்டீனுக்கான தரமான பொருட்கள் எல்லாம் யாருக்கும் கமிசன் கொடுக்காத கடையான மதுரை கண்ணன் ஸ்டோரில்தான் இதுவரை வாங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது இவர் கமிசனுக்காக உள்ளூரில் வாங்குகிறார்.

4. கேண்டீனுக்கு அரசு இண்டேன் கேஸ்தான் இதுவரை வாங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது இவர் கமிசனுக்காக தனியார் மீனா கேஸ் வாங்குகிறார்.

5. ஆலைக்கான தரமான எந்திர உதிரிப்பொருட்கள் இதுவரையிலும் கோவை சாந்தி கேர் நிறுவனத்தில்தான் வாங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது இவர் கமிசனுக்காக இவரே நேரில் போய் பில் தயாரித்து தரமற்ற பொருட்களை வாங்கி வருகிறார்.

6. ஜெனரேட்டருக்காக இதுவரையிலும் தரமான சர்வோ ஆயில்தான் வாங்கப்பட்டது. ஆனால், இப்போது இவர் கமிசனுக்காக தரமற்ற ரிலையன்ஸ் ஆயில் வாங்குகிறார்.

7. அழுக்குப் பஞ்சுக் கழிவோடு வெள்ளைப் பஞ்சையும் கலந்து அதையும் விதி முறைப்படி டெண்டர் விடாமல் தன்னிச்சையாக விற்றுள்ளார்.

8. ஆலைவளாகத்தினில் இருந்த மரங்களையும் டெண்டர் விடாமல் தனியாக விற்றுள்ளார்.

9. சிமிண்ட் மூடைகள், கம்பிகள் ஆகியவை திருட்டுப்போனதாக இவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், ஆலையின் பின்புறம் வசிப்பவர்கள் டாடா ஏசிஇ வண்டியில் அந்தப்பொருட்கள் பகிரங்கமாகக் கொண்டு செல்லப்பட்டதாகவே சொல்கிறார்கள்.

10. சில புகார்களை விசாரணை செய்யவந்த அதிகாரிகளிடம் குற்றங்களிலிருந்து தான் தப்பிப்பதற்காக ஆலையின் ஹெச். ஆர் மீது பழிபோட்டு மாட்டிவிட்டுள்ளார்.

11. பெண்களை இரவு 10 மணிக்கு மேல் வேலை செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்.

12. புது ஆலையில் ரூ 100 கூலிக்கு குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளார்.

13. பத்து மாதங்கள் ஆகியும் பயிற்சித்தொழிலாளருக்கு சி.எல்.ஆர் அட்டை தர மறுக்கிறார்.

14. சி.எல்.ஆர் தொழிலாளரை கொத்தடிமைகளைப் போல நடத்துகிறார்.

15. ஆர்.சி.எல்.ஆர்களுக்கு லே-ஆஃப்-க்கு சம்பளமும், சி.எல்லும் கொடுக்க மறுக்கிறார்.

16. ஒரு நாள் வேலைக்கு வராமல் ஆப்செண்ட் ஆனாலும், மறுநாள் அதையே காரணங்காட்டி வேலையில்லை என்று சொல்லி அலைக்கழிக்கிறார்.

17. மேஸ்திரிகளுக்கு அடிக்கடி பொய் நோட்டீஸ் கொடுக்கிறார்; வேலை முடிந்தாலும் அவரைப் பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போக வேண்டும் என சட்டமிட்டுள்ளார்.

18. சக ஊழியர்களை காட்டிக் கொடுக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்.

19. கைக்கூலிகளாக சில அல்லக்கைகளை வைத்துக்கொண்டு பலசலுகைகள் கொடுக்கிறார்.

20. வேலை ஒப்பந்தத்தையும் மீறி ஓவர் டைம் பார்க்கச்சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார். மறுக்கும் தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்கிறார்.

21. அலுவலக ஊழியர்களை வேலை செய்யவிடாமல் அடிக்கடி இடம் மாற்றுகிறார்.

22. இதுவரை ஆறு சூப்பர்வைசர்களை வெளியேற்றியிருக்கிறார்.

23. உடல்நலம் பாதிக்கப்பட்டு வி.ஆர்.எஸ் கேட்பவர்களையும்கூட, ராஜினாமா செய்யச் சொல்லிக் கடிதம் கேட்கிறார்.

24. கேண்டீனில் கொடுக்கப்பட்ட பன், டீயில் பன்னை நிறுத்தி விட்டார். உணவுகளின் எடையளவையும் குறைத்துவிட்டார்.

தோழர்களே!

இன்னும் நீங்கள் அறிந்த இதுபோன்ற சட்டவிரோத, கிரிமினல் செயல்களை உடனே எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதுவரை எந்த சங்கமும் தட்டிக்கேட்காததால்தான் இவர் இப்படி நடந்துகொண்டு வருகிறார்.

ஜி.எம்மிற்கு பாடம் புகட்ட வேண்டுமென்றால் அது பு.ஜ.தொ.மு போன்ற தொழிலாளி வர்க்கச் சங்கத்தினால்தான் முடியுமே தவிர பிழைப்புவாத ஓட்டுக்கட்சி சங்கங்களினால் முடியவே முடியாது. ஆகவே தொழிலாளர்களே நாம் ஒன்றிணைவோம்!

அதிகார வர்க்க சாம்ராஜ்யத்தைத் தகர்த்தெறிவோம்!

ஜி.எம் சிவசாம்ராஜை எதிர்த்து தேர்தல் பிரச்சாரத்தினூடாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்

கோவை மண்டலப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம்
இணைப்பு :  புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – தமிழ்நாடு

தேர்தல் குறவஞ்சி !

6

வானரங்கள் கனி கொடுத்து
மோடியோடு கொஞ்சும்
மோடிசிந்தும் கனிகளுக்கு
தமிழ் நரிகள் கெஞ்சும்.

தேர்தல் குறவஞ்சி‘தமிழருவி’ திரையெழும்பி
தினமணியில் ஒழுகும்
தறு ‘தலைகள்’ பரிக்காலும்
நரிக்காலும் வழுகும்.

காவிகளோ விழியெறிந்து
ராஜ்நாத்தை அழைப்பர்
வடகுரங்கு வந்து வந்து
ராமதாஸ், விஜயகாந்தை வளைப்பர்!

சுக்ரீவனுக்கு தம்பியாகி
கேப்டன் குரங்கு நடக்கும்
காவிபோதை தலைக்கு ஏறி
கண்டபடி கடிக்கும்.

பார்ப்பனிய பேனெடுத்து
கொங்கு குரங்கு சாயும்
மோடிமுதுகை சொறிந்தபடி
பாரி குரங்கு பாயும்.

சாதிவெறி குரங்கெல்லாம்
பா.ஜ.க.வில் அலையும்
சனம் கூட்டி ஒதுக்கிய
குப்பைக்கெல்லாம்
ஆர்.எஸ்.எஸ் மலர் வளையம்.

விபீடணன் வேலை காட்டி
தாவும் மேடைதோறும்
வை.கோ. வாயைத் திறந்தாலே
திரிகூட மலைதாண்டி நாறும்.

அந்தர்பல்டி, தாண்டி குதிப்பு
ராமதாசின் பந்தடிப்பு
அனுமாரையே மிஞ்சும்
சேலத்து மாம்பழத்தை
செழுங்குரங்கு பிய்த்தெடுக்க
ஓலமிட்ட அன்புமணி
சிறுநரியின் பிச்சையிலே
அடங்கும்!

போயசிலே தாவி நின்று
அம்மாவே சரணமென்று
ஆடிநின்ற
செங்குரங்கு ரெண்டு,
போட்ட அடியில் தாவி வந்து
எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொண்டு
இஞ்சி தின்ன குரங்காக இன்று!

இமயமலை என்னுடைய
தமயன் மலை என்று எண்ணி
காத்திருக்கும் பெண் குரங்கு இரண்டு,
எலக்சன் முடிந்தபின்பு கலெக்சனென்றால்
மம்தாவும், ஜெயாவும் சேர்ந்திடும்
பூணூல் கண்டு!

வேடுவர்கள் வினை விதைத்து
தேடுவார்கள் தெருக் கோடி…
தேர்தலென்று, ஓட்டென்று
திரும்பவும் நீ போய்விழுந்தால்
இனி தேடினாலும் கிடைக்காது
உன் ‘பாடி’.

– துரை.சண்முகம்

வாக்களிப்பது கடமையா மடமையா – மக்கள் கருத்து

27

நாட்டின் 16-வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி என ஊடகங்கள் அனைத்தும் திரும்பிய திசை முழுவதும், ‘உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள். வாக்களிக்க மறக்காதீர்கள்’ என்ற பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 65 ஆண்டுகளாக அந்த கடமையை தவறாமல் செய்துகொண்டிருக்கும் மக்களின் எண்ணவோட்டம் என்ன என்பதையும், இந்த இத்துப்போன ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த கடைசித் துளி நம்பிக்கை எது என்பதையும் தெரிந்துகொள்ள விரும்பினோம்.

நாடாளுமன்றம்
‘’எதுக்காக ஓட்டுப் போடுறோம்னா கேக்குறேள்? நாம எல்லாம் இண்டியன்ஸ். தேர்தல் வரும்போது ஓட்டுப் போடனுமில்ல..”

அதன் பொருட்டு மாபெரும் கடமையான வாக்களிப்பதையே உரையாடலின் மையமான இழையாகக் கொண்டு சிலரிடம் பேச பார்க்க முடிவு செய்தோம். ’’எதுக்காக ஓட்டுப் போடுறீங்க?” – இதுதான் நாங்கள் கேட்க விரும்பிய கேள்வி. மக்கள் தரும் பதிலை வைத்து அவர்களது கடமையின் மகத்துவம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பி விவாதிக்க திட்டமிட்டோம்.

ஆனால் நாம் எதிர்பாராத வகையில் மக்களுடனான இந்த உரையாடல்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொண்டன.

நீங்கள் செல்ல வேண்டிய ஊருக்கான சரியான பேருந்தில் ஏற வேண்டும் என்றால், முதலில் நீங்கள் அமர்ந்திருக்கும் தவறான பேருந்தில் இருந்து இறங்க வேண்டும். அப்படி இறங்கியவர்களுக்கும், உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கும் நடந்த உரையாடல் தொகுப்பு கீழே…

___________

சென்னையில் இருக்கும் மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்திற்கு நாங்கள் சென்றது ஒரு செவ்வாய்கிழமையின் மாலைப் பொழுதில். உள்ளே பஜனை சத்தம். வெளியே வாகன இரைச்சல். கோயிலின் வெளியே பக்கவாட்டு சிமெண்ட் கட்டையில் கொத்தாக ஏழெட்டு பார்ப்பனர்கள் வெற்றுடம்புடன் அமர்ந்திருந்தனர்.  சலசலவென்று பேச்சு சத்தம் ஒலித்தது. அவர்களுடன் பேசத் துவங்கிய முதல் வினாடியில் இருந்தே சுவாரஸ்யம் துவங்கி விட்டது.

‘’எதுக்காக ஓட்டுப் போடுறோம்னா கேக்குறேள்? நாம எல்லாம் இண்டியன்ஸ். தேர்தல் வரும்போது ஓட்டுப் போடனுமில்ல..”

“அதான்… எதுக்காக?”

‘’அது ஒரு அடையாளம் சார். நாம இந்த நாட்டு பிரஜைங்குறக்கான ஐடெண்டிட்டி. ஓட்டுக்கூட போடாம எப்படி நாம இந்த நாட்டு குடிமகன்னு சொல்றது?”

இன்னொருவர் குறுக்கிட்டார். “நாம ஓட்டுப்போட்டு ஒருத்தரை தேர்ந்தெடுத்து அனுப்புனாதானே பார்லிமெண்ட் நடக்கும்? அப்பதானே அவா எல்லாம் அரசாங்க திட்டத்தை மக்களண்ட கொண்டு போக முடியும்?”

‘’ஓ.. அப்போ நீங்க ஓட்டுப் போட்டு தேர்வு செய்யுற எம்.எல்.ஏ.வும், எம்.பி.யும் உங்க தொகுதிக்கு நல்லது பண்றாங்களா? திட்டங்களைக் கொண்டு வர்றாங்களா?”

‘’ம்க்கூம்… எவன் பண்றான்.. எல்லாம் பொறுக்கிப் பசங்களா இருக்கான். ஓட்டு வாங்கிட்டுப் போய் உட்கார்ந்துகிட்டு இந்தப் பக்கம் வர்றதே இல்லை. அதுக்காக நாம ஓட்டுப் போடாம இருக்க முடியாதில்லையோ? நம்ம கடமையை நாம செஞ்சுதானே ஆகனும்?”

அயோத்தியா மண்டபம்
அயோத்தியா மண்டபம்

‘’கடமையா..? சிலபேர் ஓட்டுப்போடுறது உரிமைன்னு சொல்றாங்களே… ”

‘’அது என்னமோ ஒரு மை… அதைவிடுங்க. ஓட்டுப் போடாம வீட்டுலயே உட்கார்ந்துண்டால் சாக்கடை சரியில்லை… ரோடு சரியில்லைன்னு புலம்புனா சரியாயிடுமோ என்ன?”

“ஓட்டுப்போட்டா மட்டும் எப்படி சரியாகும்?”

’’நாம தேர்ந்தெடுக்குற மக்கள் பிரதிநிதிகள்தான் அரசு திட்டங்களைக் கொண்டு வாரா”

‘’அதான் மக்கள் பிரதிநிதிகள் பொறுக்கிகளா இருக்காங்கன்னு நீங்களே சொல்றீங்களே… ஒருத்தர்விடாம எல்லா எம்.பி.யும், எம்.எல்.ஏ.வும் ஊழல்வாதிகளா இருக்காங்க. இதுல நீங்க ஓட்டுப்போட்டு எப்படி நல்லது நடக்கும்?”

‘’நல்லவங்களா தேர்ந்தெடுக்கனும் சார்..”

”யார் நல்லவன்னு எந்த அடிப்படையில் முடிவு செய்வீங்க?”

இது கொஞ்சம் சிக்கலான கேள்விதான் என்று நினைத்துவிட்டார் போல. கொஞ்ச நேரம் சிந்தித்தார். பிறகு சிரித்தார். அவரது உள்மனதை உணர்ந்து கொணடதைப் போல அருகில் இருந்தவர் பேசினார்.

”அது கஷ்டம்தாங்க. யார் வேட்பாளர்னு இன்னைய வரைக்கும் தெரியலை. இனிமேதான் வேட்பாளரையே அறிவிப்பாங்க. அதுக்குப் பிறகு ஒவ்வொருத்தரையா ஆராய்ச்சி செஞ்சு யார் நல்லவங்கன்னு கண்டுபிடிச்சு ஓட்டுப்போட முடியுமா? எல்லாரும் நான் நல்லவன்னுதான் சொல்லிக்கிறான். அதை எல்லாம் ஒவ்வொண்ணா செக் பண்ணறது நடக்குற காரியமா?”

”ஒருவேளை முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவிச்சுட்டா, நல்ல வேட்பாளர் யாருன்னு கண்டுபிடிச்சிட முடியுமா? ஒரு கட்சியில யார் நல்லவன்னு பார்த்தா சீட் குடுக்குறாங்க? கிடையாது. சாதிக்காரன், பணக்காரனுக்குதான் சீட். அப்புறம் எப்படி நல்லவனை கண்டுபிடிச்சு ஓட்டுப் போடுறது?”

’’நீங்க சொல்றது உண்மைதான். எரியுற கொள்ளியில எந்த கொள்ளியை நல்ல கொள்ளின்னு சொல்றது?”

”சரி.. இவ்வளவு தூரம் பதில் சொல்றீங்க. எதுக்காக ஓட்டுப் போடுறீங்கன்னு இப்பவாச்சும் சொல்லுங்களேன்..”

“தெரியலை சார்!”

**********

சற்றுத் தள்ளி ஒரு பெரியவர் சம்மணிமிட்டு அமர்ந்திருந்தார். ”அவர்தான் மூத்தவர் அவர்கிட்டப் போய் கேளுங்க…” என்றார்கள். அவரிடம் சென்றோம்.

”நான் இதுவரைக்கும் ஏழெட்டு தடவை ஓட்டுப் போட்டிருக்கேன். இந்த தடவையும் போடுவேன்” என்றார்.

‘’உங்களைப் பார்த்தா எப்படியும் 80 வயசு இருக்கும் போலருக்கு. ஆனால் ஏழெட்டுத் தடவைதான் ஓட்டுப் போட்டிருக்குறதா சொல்றீங்களே..”

‘’அது என்னன்னா… ஓட்டுப் போடப் போகும்போது ஆட்டோவுல கூட்டிட்டுப் போறாங்க. திரும்பி வரும்போது அழைச்சுக்கிட்டு வர்றது இல்லை… அப்படியே விட்டுறாங்க. பூத் எங்கேயோ ரெண்டு, மூணு கிலோமீட்டர் தள்ளி இருக்கும். அங்கேருந்து வேகு,வேகுன்னு நடந்து வரணும். அதனால சில தேர்தல்ல விட்டுப்போச்சு, தப்பா எடுத்துக்காதேள்..”

‘’அது இருக்கட்டும். இத்தனை தேர்தல்ல ஓட்டுப்போட்டிருக்கீங்களே… எதுனா நல்லது நடந்திருக்கா?”

”என்னாத்த நடந்துச்சு… பூரா இலவசமா கொடுத்து மக்களை சோம்பேறியாக்கி வெச்சிருக்கா. காலையிலேயே எழுந்திரிச்சு மக்கள் எல்லாரும் அம்மா மெஸ்சுல ஒரு ரூபாய் இட்லி வாங்க நிக்கிறா.. இப்படி இருந்தா நாடு எப்படி உருப்படும்?”

“அது இருக்கட்டும். ஒவ்வொரு தேர்தல்ல ஓட்டுப் போடும்போதும் ஏதாவது ஒரு நம்பிக்கையிலதானே ஓட்டுப் போட்டிருப்பீங்க. இத்தனை வருஷ அனுபவத்துல சொல்லுங்க… உங்களோட நம்பிக்கை நிறைவேறி இருக்கா?”

“நாம நினைக்கிறது எல்லாம் நடக்கனும்னா நாமதான் எம்.பி., எம்.எல்.ஏ. ஆகனும். எதையோ நினைச்சு ஓட்டுப் போடுறோம். அதெல்லாம் நடக்கும்னு சொல்ல முடியுமா?”

“பின்ன ஓட்டுப் போடுறதால என்ன பிரயோஜனம்னு நினைக்கிறீங்க?”

“இந்தா ரோடு போட்டிருக்கான். லைட் போட்டிருக்கான். எல்லாரும் செல்போன் வெச்சிருக்கா. கொஞ்சம், முன்னபின்ன இருந்தாலும் நாடு முன்னேறியிருக்கிறது நிஜமில்லையோ என்ன?..”

“இந்த முன்னேற்றத்துக்கு தேர்தல்தான் காரணம்னு சொல்ல வர்றீங்களா?”

‘’ஆமா..”

‘’ஆனா இந்த தெருவிளக்கு போடுறது மாநகராட்சி வேலை. ரோடு போடுறது, குப்பை அள்ளுறதும் அவங்க வேலைதான். அதுக்குத் தனியா உள்ளாட்சித் தேர்தல்ல நாம ஓட்டுப் போடுறோம். அப்போ எம்.பி.க்கும், எம்.எல்.ஏ.வுக்கும் என்ன வேலை?”

“அவங்களும் ரோடு போட மாட்டாங்களா..? ஒருவேளை, மேம்பாலம் கட்டுவாளா இருக்கும். அதுலதான் கமிஷன் அதிகமாம்..”

“அப்போ எல்லாரும் கமிஷன் வாங்குறாங்கன்னு உங்களுக்குத் தெரியுது. தெரிஞ்சேதான் ஓட்டுப் போடுறீங்க.. இல்லையா?”

தேர்தல் பாதை திருடர் பாதை
தேர்தல் பாதை திருடர் பாதை

‘’ஆமா.. அதுக்கு நாம என்னப்பா பண்ண முடியும். நாம சாதாரண குடிமக்கள். நம்மண்ட என்ன அதிகாரம் இருக்கு?”

‘’இது மக்களாட்சி… இதுல மக்கள்தான் மன்னர்கள்னு சொல்றாங்களே..”

“எவன் சொன்னது.. சும்மா அடிச்சு விடுவானுங்க… மன்னராவது மயிராவது”

“நீங்க இப்படி சொல்றீங்க… ஆனா டி.வி., ரேடியோவைத் திறந்தா, ‘உங்ககிட்ட இருக்குறது விலைமதிப்பு இல்லாத ஓட்டு.. மறக்காமல் போட்டிருங்கன்னுல்ல சொல்றாங்க..?”

”அவன் சொல்லுவான்.. அவனுக்கென்ன”

“அப்போ நீங்க போடுற ஓட்டுக்கு ஒண்ணும் மதிப்பு இல்லேன்னு சொல்றீங்களா?”

“ஏன் இல்லை… போன எம்.எல்.ஏ. எலெக்‌ஷன்ல 500 ரூபாய் தந்தான். இப்போ ஆயிரம் ரூபாய்ன்னு சொல்லிக்கிறாளே..”

”இதுதான் அந்த மதிப்பா.. ஆக இந்நாட்டு மன்னர்களோட விலை 500 ரூபாய். நீங்களே பணத்தை வாங்கிக்கிட்டு ஓட்டை விற்கிறீங்க.. நீங்க எப்படி அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல முடியும்?”

“சரி… அப்போ இனிமேல் பணம் குடுக்காதே.. நானா தேடிப்போய் கேட்குறேன்? அவனா வர்றான், அவனா கொடுக்குறான். அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?”

“எப்படிப் பார்த்தாலும் நீங்க பணம் வாங்குறது தப்புதானே”

”அதான் சொல்லிட்டேனேப்பா… இனிமே வேண்டாம். நீ நல்லவனா இருந்து ஒழுங்கா நல்லது பண்ணு. அதை செய்ய முடியலைன்னுதானே மக்களுக்கு லஞ்சம் தர்ற… நீ கொடுக்காதே… நானும் வாங்கலை..”

”சரி விடுங்க… உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். ஓட்டுப் போட்டு என்னத்த கண்டீங்க.. இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..”

“என்னத்த  சொல்லச் சொல்ற… ஓட்டுப் போடுறது எல்லாம் எதையும் எதிர்பார்க்காம செய்யுறது. பிள்ளைங்களை பெத்து வளர்க்குறோம். எதுக்கு? வயசான காலத்துல நம்மளை வெச்சு காப்பாத்துவாங்ககுற நம்பிக்கைதான். அப்படி இல்லாம விரட்டி விடவும் செய்யுறாங்க. அதுக்காக பிள்ளை பெத்துக்காம, பெத்த பிள்ளையை வளர்க்காம இருக்குறமா… அதுபோலதான்..”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று குழப்பமாக இருந்தது. வாக்களிப்பதையும், குழந்தை பெறுவதையும் ஒப்பிடுகிறார். இரண்டும் பிரதிபலன் எதிர்பாராமல் செய்ய வேண்டியது என்கிறார். ஓர் ஆத்ம திருப்தி போல அவர் அதை வர்ணித்தாலும், இத்தனை காலமாக வாக்களித்திருப்பதன் வாயிலாக அப்படி எந்த ஆத்ம திருப்தியையும் அவர் பெற்றிருக்கவில்லை என்பதை, அவரது பேச்சின் மூலமே உணர முடிகிறது. அவரால் எதற்கு வாக்களிக்கிறேன் என்பதை துல்லியமாக விவரிக்க முடியவில்லை அல்லது அத்தகைய துல்லியமான பதிலை பெறக்கூடிய கேள்வியை நாங்கள் கேட்க வில்லையோ?

இப்போது அவரது பேச்சை அசைபோடும்போது, வாக்களிப்பது அவருக்கு ஓர் ஆசுவாசமாக இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஓர் அரசியல்வாதி மீது, அரசியல் கட்சியின் மீது இருக்கும் கோபத்தை தணித்துக்கொள்வதற்கு அவருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாக தேர்தலை கருதுகிறார். ஒரு பொம்மையின் மீது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கத்தியால் குத்துவதால் அவர் தன்னைத்தானே வீரன் என்று கருதிக்கொள்கிறார். அந்த வகையில் இந்த பொம்மை ஜனநாயகத்தின் அட்டக்கத்தி வீரர்களாக இருக்கிறார்கள், வாக்காளர் பெருங்குடி மக்கள்!

’ஓட்டு போடுறது ஜனநாயகக் கடமை சார்’ என்று ஆரம்பித்தவர்கள் ஐந்தாவது நிமிடத்தில், ‘ஓட்டுப் போடுறதால பைசாவுக்கு பிரயோஜனம் இல்லைங்க..’ என்றார்கள். வாக்களிக்காமல் இருப்பது தேசவிரோத செயல் என்று துவங்கியவர்கள், நாம் வாக்களித்து தேர்ந்தெடுப்பவர்கள் தேசவிரோதிகளாக இருப்பதை அவர்களின் சொந்த சொற்களில் வெளிப்படுத்தினார்கள்.

மொத்தத்தில் தேர்தல் குறித்தும், இந்த ஜனநாயகம் குறித்தும் மக்களின் மனதில் எஞ்சியிருக்கும் சித்திரம் என்பது, ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் மீது கொண்ட பரிதாபத்தைப் போன்றுள்ளது. எனினும், ‘வேற என்ன சார் பண்ண முடியும்?’ என்ற ஒற்றைக் கேள்வியில் முட்டிமோதி தலைகவிழ்ந்துகொள்கிறார்கள் மக்கள். வேறு என்ன செய்வது என்பதை சிந்திக்கத்தான் வேண்டும். அதற்கு முன்பு, செய்து கொண்டிருப்பது தவறு என்று தெரிந்தபிறகு அதை நிறுத்துவது முக்கியம் அல்லவா?

–    வினவு செய்தியாளர்கள்.

தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது ! மக்கள் போராட்டமே தீர்வு !

1

தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது ! மக்கள் போராட்டமே தீர்வு !

அரங்க கூட்டம் & கலை நிகழ்ச்சி

கடல் முற்றுகைநாள் :
30.03.2014 ஞாயிறு
நேரம் :
மாலை 5.00 மணி
இடம் :
அற்புதம் சாமுவேல் கல்யாண மண்டபம், பைபாஸ்ரோடு, காந்திநகர், கூடங்குளம்

தலைமை
வழக்கறிஞர் – சே. வாஞ்சிநாதன், மதுரை உயர்நீதிமன்றம்,
துணைச் செயலாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டம்

உரையாற்றுவோர்
திரு எஸ்.ஏ.ஜோசப், தலைவர், நெல்லை மாவட்ட மீனவர் கூட்டமைப்பு
திரு எஸ்.வி அந்தோணி, முன்னாள் ஊராட்சித் தலைவர், உவரி
வழக்கறிஞர் க. சிவராசபூபதி, குமரி மாவட்ட செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்,
வழக்கறிஞர் சே தங்கப்பாண்டி, அமைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், நெல்லை

சிறப்புரை
வழக்கறிஞர் சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மற்றும் வழக்கறிஞர்கள், உள்ளூர் தலைவர்கள்

அன்பார்ந்த மக்களே!

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் 2 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் மகள் ஆதரவைப் பெற்றுள்ளது. அணு உலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தேச துரோகம், அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் உள்பட ஆயிரக்கணக்காக பொய் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகள் அங்கேயே நிலை கொண்டுள்ளன. அந்த வட்டாரமே கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அணு உலைகளை தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே போலீசுப்படை அங்கே நிரந்தரமாக வைக்கப்படும், காஷ்மீர் போல கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படும். மக்களுக்கு நிரந்தர அச்சுறுத்தலாக இருக்கும். சொந்த ஊரிலேயே அகதிகளைப் போல நாம் வாழ வேண்டும்.

ஓட்டுக்காக அப்போதைக்கு அணு உலை எதிர்ப்பு நாடகம் ஆடிவந்த ஓட்டுக் கட்சிகள் எல்லாம் தேர்தல் வந்து விட்ட நிலையில் வாய்மூடி மவுனிகளாகி விட்டனர். அணு உலை பற்றி எதுவுமே பேச மறுக்கின்றனர். அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி (தமிழ்நாட்டில் ஏழை மக்கள் கட்சி) கூட அணுஉலையை மூட வேண்டும் என்றச் சொல்லவில்லை பொத்தம் பொதுவான கருத்தையே சொல்லி வருகின்றனர். மக்கள் ஓட்டுப் போடுவதனால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் அதிகாரத்துக்கு வந்த பின் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அணு உலை, தாது மணல் மற்றும் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது, பாராளுமன்ற, சட்டமன்றங்களில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுத்தான் நடைமுறைக்கு வருகிறது. நீதிமன்றங்களும் அதை ஆதரிக்கின்றன. இயற்கை வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்து நமது வாழ்வாதாரங்களை அழிப்பதே இன்றைய உலக மயமாக்கக் கொள்கையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இவற்றைத் தடுத்து நிறுத்துவது என்பது இயலாது. அணு உலையை மூடுவது என்பது தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டது. தேர்தல் அரசியலுக்கு வெளியேதான் இதற்கு தீர்வு இருக்கிறது.

ஓட்டுப் பொறுக்கும் எந்தக் கட்சியும் தேர்தல் சமயத்தில் கூட அணு உலைக்கு எதிராகப் பேசவில்லை. கூடங்குளம் பகுதி மக்கள் என்ன நிலையெடுப்பது? ஒரு புறம் வெடிக்கக் காத்திருக்கும் அணுகுண்டு போல அணு உலை, மறுபுறம் எந்நேரமும் கைது, சித்ரவதைக்கு ஆளாகலாம் என்ற நிலையில் நூற்றுக் கணக்கான பொய் வழக்குகள், எப்போதும் ஊரில் போலீசு, உளவுத் துறை கண்காணிப்பு, நான்கு பேர் கூட சேர்ந்து போக முடியாது. மீறினால் காவல்துறை மிரட்டல் என்ற ஒரு பதட்டமான சூழல்., நீண்ட நாட்களாகப் போராடி ஒன்றும் நடக்கவில்லை. ஊரை விட்டுச் சென்று விடலாமா? என்ற சிந்தனையில் சிலர்.

கூடங்குளம் அணுஉலைகூடங்குளம் அணு உலை இயக்கப்பட்டு, மின்சாரம் வருவதாக அரசு அறிவித்தாலும் உண்மை நிலை நமக்குத் தெரியும். தினமும் 17 லாரிகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் அணு உலைக்குள் கொண்டு செல்லப்பட்டு, அதுதான் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு சிறிதளவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. யுரேனியத்தால் அணு உலை இயக்கப்படவில்லை. அணுஉலை, மின் உற்பத்திக்காகவும் இல்லை, அது ராணுவ நோக்கத்திற்காக நிறுவப்பட்டுள்ளது. மக்களிடம் அம்பலப்பட்டுப் போன நிலையில் வேறுவழியின்றி அணு உலை நிர்வாகம் மின்உற்பத்தி தொடங்கி விட்டதாக உலகை ஏமாற்றுகிறது. ஆனாலும், அணு உலையும், வழக்குகளும் இருக்கும் வரை நமக்கு நிம்மதியில்லை. இந்த சூழலை நாம் மாற்றியாக வேண்டியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாகப் போராட்டம், ஏராளமான இழப்புகள் என்றாலும், குறிப்பிடத்தக்க வெற்றியைக் கூடங்குளம்-இடிந்தகரை மக்கள் சாதி-மதம் கடந்து பெற்றுள்ளோம் என்பதே உண்மை. கூடங்குளம் அணு உலைக்கும் தமிழகத்தில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டுக்கும் ஒரு தொடர்புமில்லை என ஒட்டுமொத்த தமிழகமும் புரிந்து கொண்டுள்ளது. இந்தியாவில் தமிழகம்தான் மக்கள் போராட்டங்களில் முன்னிலை வகிக்கிறது என்பது அரசே தரும் ஒரு புள்ளி விவரம். தமிழகம் இவ்வாறு முன்னிலை பெற கூடங்குளம், இடிந்தகரை மக்கள் போராட்டம் ஓர் முன்மாதிரியாக இருந்துள்ளது. காரணம் நாம் நமது சொந்த பலத்தில் போராடினோம் என்பதே. இன்னும் நாம் அறிந்து கொள்ள வேண்டியதும் இதுவே. எந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சியும் நமக்கு உதவப் போவதில்லை.  நம்மைப் பயன்படுத்த மட்டுமே செய்வார்கள். நாம் ஒற்றுமையோடு கடற்கரை மக்கள், உள்நாட்டு மக்களையும் போராட்டத்தில் இணைத்து ஒரு நீண்ட காலத் திட்டத்தில் போராடினால் முழு வெற்றி சாத்தியமே.

மனித உரிமை பாதுகாப்பு மையம் அணு உலைக்கு எதிரான கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்களின் போராட்டத்தோடு ஆரம்பம் முதலே இணைந்து போராடி வருகிறது. இடிந்தகரை பகுதியில் மட்டும் இருந்த இந்தப் போராட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றது. மார்ச் 19 போராட்டத்தின் போதும் செப்டம்பர் 10 துப்பாக்கி சூடு நடைபெற்ற போதும் மக்களோடு மக்களாக இருந்து போராடியது மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் வழக்கறிஞர்களும். இப்போதும் அணு உலை, தாதுமணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில்  உங்களுடன் இணைந்து நிற்பதும் மனித உரிமை பாதுகாப்பு மையம்தான்.

கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதென்பது அமெரிக்கா, ரசியா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களையும், பன்னாட்டு பகாசுர-இந்திய முதலாளிகளையும் முதலாளிகளின் அடிவருடியான இந்திய அரசையும் எதிர்ப்பது என்பதைப் புரிந்து போராட தயாராவோம். மனச் சோர்வு, விரக்தியைக் களைவோம், இந்திய சுதந்திரப் போராட்டம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. தோள்சீலைப் போராட்டம் 65 ஆண்டுகள் நடந்தது. இதே நெல்லை மண்ணில் கட்டபொம்மனும், ஊமைத் துரையும் வெள்ளையத் தேவனும், சுந்தரலிங்கமும், பின்னர் எப்போதோ கிடைக்கவுள்ள மக்கள் விடுதலைக்காக, பிற்கால சந்ததியின் நலனுக்காக உயிர் துறந்தனர். இன்று கூடங்குளம் – இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கு அன்று காந்தி, வ.உ.சி, பகத்சிங் மீதும் போடப்பட்டது. மீண்டும் ஓர் விடுதலைப் போரை நடத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

அணு உலைக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் மக்களின் ஆதரவைப் பெற வேண்டும். இயற்கை வளங்களை கொள்ளையிடுவது     சுற்றுச் சூழலை மாசு படுத்தும் நாசகாரத் தொழிற்சாலைகளை அனுமதிப்பது உழைக்கும் மக்களின் வாழ்வை துச்சமாக மதிப்பது போன்ற ஆட்சியாளர்களின் வன்முறைக்கு எதிராக விடாப்பிடியாக போராடி எதிரிகளுக்குப் பெரும் சவாலாக இருந்து வரும் நந்திகிராம், சிங்கூர், நியம்கிரி மலைவாழ் மக்களின் போர்குணம் மிக்க போராட்டத்தைப் போல நாமும் நடத்துவதன் மூலமாக நாம் மக்களின் ஆதரவைப் பெறலாம். அணு உலைக்கு எதிரான போராட்டம் தலைமுறைகளைக் காக்கும் போராட்டம். வழக்குகள், காவல்துறை மிரட்டலை மக்களின் ஒற்றுமையோடு மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும், இணைந்து முறியடிக்க வேண்டும். மக்கள் பலத்தில் நாம் நம்பிக்கை வைப்போம். அஞ்சி, அஞ்சி வாழ நம்மால் முடியாது. நாம் ஊரை விட்டுச் செல்லாமல், அணு உலையை விரட்டுவோம். எந்த தேர்தல் அரசியல் கட்சிகளையும் நம்பாது நாமே அமைப்பாவோம். இளைஞர்களும், பெண்களும் போராட்டத்தில் முன் நிற்போம். பொறுமையாக விடாப்பிடியாகப் போராடி இறுதி வெற்றி காண்போம். அணு உலையை மூடுவோம். நம் மண்ணை, மக்களை, தலைமுறைகளை பாதுகாப்போம்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
ஊர் பொதுமக்கள் – கூடங்குளம்

க. சிவராஜ பூபதி 94866 43116 (நாகர்கோவில்)
ச தங்கப்பாண்டி 94423 39260 (நெல்லை)
சுப. இராமச்சந்திரன் 94434 27613 கெ அரி ராகவன் 94435 84049 (தூத்துக்குடி)

பாஜக-வின் ஆவி எழுப்பும் தேர்தல் கூட்டம் – நேரலை

18

ரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டை கடந்து செல்லும் போது உள்ளே ஏதோ பொதுக்கூட்டம் நடப்பது போல மேடையும், விளக்குகளும் தென்படவே, தேர்தல் திருவிழாவில் நாமும் கலந்து கொள்வோம் என்ற கடமை உணர்வோடு மார்க்கெட் சாலைக்குள் நுழைந்தேன். சாலை முனையில் போலீஸ் வண்டிகளும், காக்கிகளும் நிறைய தென்பட்டன.

காக்கிகள் அளவுக்கு கூட அங்கே மக்கள் இல்லை. கட்சிக் கூட்டம் ஒன்று நடப்பதாக அறிகுறியே இல்லாமல் மக்களும், கடைகளும் இயங்கிக் கொண்டிருந்தனர். இத்தகைய அமோக ஆதரவு கொண்ட கட்சி எது?

தொலைக்காட்சிகளில் நமது காதுகளை ஹை டெசிபலில் பஞ்சர் போடும் தமிழிசை சவுந்தரராஜனும், வானதி சீனிவாசனும் மேடையில் தென்பட்ட போதே இது பாஜகவின் ஆவி எழுப்பும் கூட்டம் என்று புரிந்தது. மேடைக்கு முன்பு போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில் உட்கார்ந்தவர்களை விட மேடையில் கூட்டம் அதிகம். காலியான அந்த நாற்காலிகளைப் பார்க்கும் போது கனிவுடன் கவிதை எழுதும் ஆவல் எழுந்தது.

பேனர்
மாரியம்மன் திருவிழாவிற்கு நன்கொடை கொடுத்த டியூப் லைட் புரவலர்கள் போல பேனரில் ஏராளம் பெயர்கள் நிரம்பியிருந்தன.

இது பாரதிய ஜனதா கட்சியின் தென்சென்னை தொகுதி தேர்தல் பிரச்சார தொடக்க விழாவாம். துவக்கமே துக்க வீடு போல காட்சியளித்தாலும் பக்கவாட்டில் வைக்கப்பட்ட பொதுக்கூட்டம் பற்றிய ஃபிளெக்ஸ் பேனர் கலக்கலாகவே இருந்தது. இங்கே பிளக்ஸ் பேனரில் பயன்படுத்தப்படும் மை குறித்தும் கவிதை எழுத வேண்டும் என்று தோன்றாமல் இல்லை.

தேசிய செயலர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில் தென்சென்னை தொகுதி வேட்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல கணேசன் சிறப்புரை ஆற்றவிருக்கிறாராம். இப்பேற்பட்ட அகில இந்திய மட்டும் தமிழகத் தலைவர்கள் மேடையில் இருப்பது கூடத் தெரியாமல் பின்பக்கம் மாட்டுக்கறி வறுவலை தொழிலாளிகள் பதம்பார்த்துக் கொண்டிருந்தனர். காவிக் கதறலை புறம் தள்ளி கீரைக் கட்டுகளின் பேரமே அங்கு ஆக்கிரமித்திருந்தது.

பா.ஜ.க தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி தலைவர் அலங்கார முத்து தலைமையில் கூட்டத்தை ஏற்பாடு செய்த  இளைஞரணியும், விருகை தொகுதி நிர்வாகிகளும். மாரியம்மன் திருவிழாவிற்கு நன்கொடை கொடுத்த டியூப் லைட் புரவலர்கள் போல பேனரில் ஏராளம் பெயர்கள் நிரம்பியிருந்தன. அந்த தலைகள் தலைக்கு பத்தை அழைத்து வந்திருந்தாலும் அங்கே ஆவி எழுப்ப வேண்டிய அவசியமிருக்காது.

கூட்டத்தை நடத்துபவர், “அடுத்த பேச்சாளர் 5 நிமிடம் மட்டும் பேசுவார் என்று அறிவித்து விட்டுப் போக, ஒரு அம்மா பேச வந்தார். “நான் எல்லாத்துக்கும் ஃபோன்ல பேசி தாமரைக்கு வோட் போட சொல்றேன். நீங்களும் அப்படி சொல்லுங்க. நாடு முழுதும் ஒரு சேஞ்ச் வந்துட்டு இருக்கு. நீங்க எல்லாரும் மோடி பிரதமர் ஆறதுக்கு ஓட் போடணும். பாரத மாதாவோட முகத்துலையும் தாமரை தெரியணும், கையிலையும் தெரியணும், கால்லையும் தாமரை தெரியணும்னு ஒரு கவிஞன் சொன்னான். உங்க எல்லாருக்கும் வோட்டிங் மெசின்லையும் தாமரை தெரியணும்.

ஆம் ஆத்மி கட்சியாம், அவங்க பார்ட்டி நைன் டேஸ் டெல்லீல ஆட்சி செய்ய முடியல. அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நாமளும் ஏமாந்து போய் ஜாய்ன் பண்ணிக்கிட்டோம்.  இந்த நாட்டோட கான்ஸ்டிடுயூஷன் பத்தி தெரியுமா அவங்களுக்கு. தேர்தல்ல நின்னா பத்தாது, சமாளிச்சிட்டு ஆட்சி பண்ண தெரியணும். எனக்கு பேச கொறைஞ்ச நேரம் மட்டும் தந்திருப்பதால் இத்தோட முடிச்சிக்கறேன்” என்று எம்.ஜி.ஆர் மார்க்கெட் மக்களுக்கு அல்லேலுயா அன்னிய பாஷை போல திகிலூட்டி விட்டு போனார். தூணிலும் துரும்பிலும் இருப்பது பரம் பொருள், ஜட்டி முதல் பட்டி வரை படர்வது தாமரை என்ற கவிதை இங்கே தோன்றியது.

நரேந்திர மோடி
“மத்திய அமைச்சர் சல்மான் குர்சீத் மோடியை ஆண்மையில்லாதவர் என்று சொல்லியிருக்கிறார். மோடியை ஆண்மையில்லாதவர் என்று எப்படி சொல்ல முடியும்”

அடுத்தபடியாக இளைஞர் அணியைச் சேர்ந்த ஒருவர் பேச வந்தார். “மாண்புமிகு திருமாவளவன் அவர்கள் சிதம்பரத்தில் செயல் வீரர் கூட்டத்தில் ஒரு எம்.பியாக தான் சிதம்பரம் தொகுதிக்கு செய்த பணிகள் என்னென்ன, இனிமேல் என்ன செய்வேன் என்பதைக் குறித்து பேசாமல், ‘மதவாத கட்சியான பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும்’ என்று பேசியிருக்கிறார். இப்போ அதுவா முக்கியம், மதவாதமா முக்கியம். வளர்ச்சிதான் முக்கியம். குஜராத்தைப் போல இந்தியாவையும் வளரச் செய்வதற்காக நாம் நரேந்திர மோடி அவர்களை பிரதமராக்குவோம்” என்று பேசி அமர்ந்தார். ஏலே நாங்க மதவெறியனுங்கதான், அப்பேற்பட்ட நாங்களே வளர்ச்சின்னு வந்தா கமுக்கமாக ஏத்துக்கிட்டு ஓட்டப் போடணும் என்பதை எவ்வளவு அழகாக பேசியிருக்கிறார்.

அடுத்து தென் சென்னை மாவட்டத் தலைவர் பேச வந்தார். அவர் பெயர் சொல்லி அழைத்த அவர்களே, இவர்களே எண்ணிக்கை மேடையில் இருப்பவர்களை விட அதிகம். பிறகு புரிந்தது. அவர் பிளக்சில் உள்ள வராத தீவிர தொண்டர்களையும் விடாமல் பாராட்டியிருக்கிறார். உண்மையில் இவர்தான் தலைவர். இதை நிரூபிப்பது போல அங்கு ‘குவிந்திருந்த’ அவரது அடிப்பொடிகள் நான்கைந்து பேரின் விசில் சத்தம், கொத்து புரோட்டா இசைக்கு ஈடு கொடுக்கவில்லை என்றாலும் மோசமில்லை.

அவர் பேசியபோது “மத்திய அமைச்சர் சல்மான் குர்சீத் மோடியை ஆண்மையில்லாதவர் என்று சொல்லியிருக்கிறார். மோடியை ஆண்மையில்லாதவர் என்று எப்படி சொல்ல முடியும்” என்று கேட்ட போது திடுக்கிட்டேன். ஏதோ மருத்துவர் அறிக்கையை ஆதாரமாக காட்டி ஆண்மையை நிரூபிப்பாரோ என்று மாத்ரு பூத மேட்டர் நினைவுக்கு வந்தது. கட்ச் பகுதியில் பூகம்பம் வந்த போது மோடி ஆண்மையுடன் விரைவாக நிவாரணப் பணிகளை நடத்தினார் என்று அவர் சொன்ன போதுதான் இது வேறு வகை ஆண்மை புரிந்தது. எனினும் ஆண்மையுடன் நிவாரண பணிகள் என்ற பொருளுக்குரிய புது சொல்லை யார் உருவாக்கப்போகிறார்கள் என்ற கவலையும் எழுந்தது.

ஆண்மைக்குறைவு குழப்பத்தின் போது பின்பக்கத்திலிருந்து வெடிச்சத்தம் கேட்டது. தவுசண்ட் வாலா கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். இல கணேசன் வந்து கொண்டிருந்தார். தஞ்சாவூர் பிடபிள்யூ அலுவலகத்தின் அருகில் இருக்கும் தேநீர்க்கடையில் மசால் வடை சாப்பிட்ட காலத்தில் இப்படி நினைத்திருப்பாரா, பிற்காலத்தில் நமக்கும் தவுசண்ட் வாலா வெடிப்பார்கள் என்று! மசால் வடை மற்றும் சிவகாசி வெடி என்றொரு கவிதையை குறித்துக் கொண்டேன்.

இல கணேசன் பேனர்
இல கணேசன் பேனர்

அதே நேரம் பேசிக் கொண்டிருந்த தலைவர் மோடியின் ஆண்மை பற்றிய கேள்வியை அந்தரத்தில் தொங்க விட்டு விட்டு தொகுதி இல கணேசன்ஜியை வரவேற்க தயாரானார்.

திடீரென்று, இடது பக்கத்திலிருந்து “பாரேஏஏஏஏத் மாதா கீ ஜெய்” என்று அடித்தொண்டை முழக்கம் ஒன்று கேட்டது. அருகில் உட்கார்ந்திருந்த ஒரு தொண்டர்தான் அப்படி ஒரு விபரீதத்தை நிகழ்த்தியிருக்கிறார். அதைக் கேட்டு குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்த 4 வயது குழந்தை கதறி அழ ஆரம்பித்தது. “முட்டி பந்த் கர்கே, ஹாத் உடாகே, பகுத் ஜோர் சே போலியே – பாரேஏஏஏஏத் மாதா கீ — ஜெய்!” (“முட்டியை இறுக்கமா மூடி, கையை உயர்த்தி நல்ல சத்தமா சொல்லுங்க – பாரத் மாதாவுக்கு – ஜே”) என்று நரேந்திர மோடி திருச்சி கூட்டத்தில் கற்றுக் கொடுத்ததை வீட்டில் தினமும் பயிற்சி செய்து விட்டு வந்திருக்கிறார் போல. அவரது அவ்வளவு பயங்கரமான முழக்கத்துக்கு ஒரு குழந்தை அழுததோடு ஒரு 10-15 குரல்கள் மட்டுமே எதிர் “ஜே” போட்டன. பாரத மாதாவுக்கு ஜே போட 10 குரல்கள் மட்டும்தானா என்று அறம் பாட அங்கே முனிவர் பெருமக்கள் இல்லை.

இல கணேசன் மேடையேறியதும், மேடை கலகலத்துப் போனது. ஒருவர் துண்டு போர்த்தினார். நாலைந்து பேர் பெரிய ரோஜா மாலை போட்டார்கள், எல்லோரும் மறக்காமல் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள். மாலை போடும் போது மீண்டும் “பாரேஏஏஏத் மாதா கீ” என்று ஒற்றை இடிச் சத்தம் கிளம்பியது. மைக் அருகில் நின்றிருந்த பேச்சாளரும் அருகில் இருந்தவரும் மைக்கை கைப்பற்றி, “வெல்கவே, வெல்கவே, பிஜேபி வெல்கவே” என்று அபஸ்வரத்தில் பாட்டு பாடினார்கள். இருப்பினும் ஐஜேகே கட்சி கூட்டமோ இல்லை நாடாளும் மக்கள் கட்சி கூட்டமோ இதை விட இன்னும் நேர்த்தியாக நடத்தியிருக்கும் என்ற உண்மையை இங்கு பதிவு செய்யாவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது.

தமிழிசை சவுந்தரராஜன் பேசியபோது,

“ராகுல் காந்தி சொல்கிறார், இந்தியா ஒரு பன்முகத் தன்மை உடைய நாடு. அதை முன்னேற்றுவதற்கு எந்த மந்திரவாதியும் வரப் போவதில்லை என்று. ஆனால் நான் சொல்கிறேன் குஜராத்திலிருந்து ஒரு நரேந்திர மோடி வரப் போகிறார் என்று.

தமிழிசை
தமிழிசை

ஆர்.எஸ்.எஸ் காந்தியைக் கொன்ற இயக்கம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். யார் காந்தியை கொன்றார்கள். சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுகளாக காந்தியின் கொள்கைகளை கொலை செய்து கொண்டிருப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள். அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? ஆர்.எஸ்.எஸ் காந்தியைக் கொன்ற இயக்கம் என்று சொல்வதற்கு?

ப சிதம்பரம், ‘பிஜேபி ஆர்.எஸ்.எஸ்சின் கிளை அமைப்பு’ என்று சொல்லியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்சின் கிளை அமைப்பாம். ஆர்.எஸ்.எஸ் எப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தெரியுமா. நான் ஒரு காங்கிரஸ் தலைவரின் மகள் இன்று பா.ஜ.கவில் சேர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்ன தெரியுமா? தஞ்சாவூரில் ஒரு ஏழை விவசாயிக்கு ரத்தம் கொடுக்க வேண்டும் 20 பாட்டில் ரத்தம் தேவைப்பட்டது. அப்போது ராஷ்ட்ரிய சுவயம் சேவக் சங்கத்திற்கு தொலைபேசி கேளுங்கள் என்றார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் வந்து ரத்தம் கொடுத்து விட்டார்கள். அப்படிப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.கவை அந்த ஆர்.எஸ்.எஸ்சின் கிளைக் கழகம் என்கிறார் சிதம்பரம். இப்படி பேசியதற்காகவே தேர்தலில் நீங்கள் தோற்றுப் போவீர்கள்.” என்று பேசினார். இதிலிருந்து அவர் ஆர்.எஸ்.எஸ் தொடர்பை விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. இப்படியிருக்கையில் அவர் சிதம்பரத்தை ஏன் எதிர்க்கிறார், உங்களுக்கு புரிகிறதா? அல்லது கருத்து சொல்பவர்கள் கத்தமாட்டார்கள், கத்துபவர்களிடம் கருத்து இருக்காது என்ற பழமொழிக்கு இது எடுத்துக்காட்டா?

“1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு தேசியக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்திருக்கிறோம். செங்கோட்டையை மட்டுமல்ல, செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் கைப்பற்றப் போகிறோம். நரேந்திர மோடிதான் பிரதமர் ஆகப் போகிறார், அதை நான் சொல்லவில்லை, இங்கு கூடியிருக்கும் கூட்டம் சொல்கிறது.” என்று அவர் சொன்னதும் அதிர்ச்சியாகி மேடைக்கு கீழே கூட்டத்தை பார்த்தேன்.

இல கணேசனுக்கு ஆளுயர மாலை
இல கணேசனுக்கு ஆளுயர மாலை

எதிரில் உட்கார்ந்திருப்பவர்களை எத்தனை முறை எண்ணினாலும் மொத்தம் 150 பேருக்கு மேல் தேறாது. அந்த 150 பேரில் மார்க்கெட்டு வந்த மக்கள் 50 பேராவது இருக்கும். அவர்களை கழித்து விட்டு பார்த்தால் மிச்சமிருக்கும் நூறு பேரை வைத்து வார்டு கவுன்சிலர் வீட்டுக்கு கூட போக முடியாது. கூரையேறாதவன் வைகுண்டம் போன கதை கூட இந்த காமடிக்கு அவ்வளவாக பொருந்தி வராது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கூரை, கோட்டை, இரண்டையும் வைத்து அந்தக் கவிதை தன்னை எழுதுமாறு வற்புறுத்தியது.

“திராவிடக் கட்சிகள் எப்படி கூட்டம் அழைத்துக் கொண்டு வருகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாதா. இது தானாக வந்த கூட்டம், அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல” என்று பின் வாங்கினாலும் தளராமல் ஆர்ப்பரித்து பேச்சைத் தொடர்ந்தார் தமிழிசை.

சில வாரங்களுக்கு முன்பு பாஜகவிற்கு தமிழ்நாட்டில் 41 சதவீதம் மக்கள் ஆதரவு என்று ஜூனியர் விகடன் வெளியிட்டிருந்த சர்வே முடிவுகளின் படி, சுமார் 2 லட்சம் வாக்காளர்களை கொண்டுள்ள விருகம்பாக்கம் தொகுதியில் பா.ஜ.க-விற்கு குறைந்தபட்சம் 80,000 ஆதரவாளர்கள் இருக்க வேண்டும். அவர்களில் 10% பேர் கட்சியின் தேர்தல் பிரச்சார தொடக்கக் கூட்டத்துக்கு வந்திருந்தாலும் 8,000 பேர் கூடியிருக்க வேண்டும். ஆனால், கூடியிருந்த 100 பேரை வைத்துப் பார்த்தால் பாஜகவின் ஆதரவு வெறும் எத்தனை சதவீதம், மிஸ்டர் திருமாவேலன் பதில் சொல்வாரா?

இப்படி ஒரு ‘பெரும்’ கூட்டத்தை நடத்துவதற்கு மார்க்கெட் தெரு முனையில், மேடைக்கு முன்பு, மேடைக்கு பின்புறம் என்று குவிக்கப்பட்டிருந்த மொத்த போலீஸ் படையின் எண்ணிக்கை கூட்டத்தினரின் எண்ணிக்கையை விட அதிகம். ஒரு வேளை அவர்களை மையப்படுத்தி பேசினால் கூட பத்து பதினைந்து வாக்குகளாவது கிடைத்திருக்கும்.

அடுத்ததாக, இல கணேசன் பேசினார்.

“தமிழ்நாட்டிலிருந்து ஒரு தலைவர் பிரதமர் ஆக வேண்டும் என்று சிலர் பேசுகிறார்கள். ஆகலாமே, எல்லா கட்சிக்கும் தங்கள் கட்சித் தலைவரை பிரதமர் ஆக்க வேண்டும் என்று ஆசை வரலாம். ஆனால், சென்ற தேர்தலில் நான் பிரச்சாரத்துக்கு போன போது, ‘நீங்கள் நல்லவர், உங்கள் கட்சி நல்ல கட்சி, நீங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கும் அத்வானி நல்ல தலைவர், வாஜ்பாயி நல்ல தலைவர். உங்களுக்கு ஓட்டு போடலாம் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நீங்க ஜெயிப்பீங்களா’ என்று கேட்டார்கள்.

மோடி - இல. கணேசன்
மோடி – இல. கணேசன்

அதே கேள்வியை நான் இப்போ கேட்கிறேன். ஒரு கணக்கு போட்டு பார்க்கலாம். நீங்க தமிழ்நாட்டில 39 தொகுதியில நிக்கிறீங்க. பாண்டிச்சேரியையும் சேர்த்து 40-ன்னே வைத்துக் கொள்ளலாம். அதில் 20 ஜெயிச்சிடுவீங்கன்னு வைத்துக் கொள்ளலாம். 20 தொகுதியை வைத்துக் கொண்டு எப்படி பிரதமர் ஆக முடியும். நாங்கள் 270 தொகுதியில் ஜெயித்து மோடியை பிரதமர் ஆக்கப் போகிறோம். எனவே ஜெயிக்கக் கூடிய பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களியுங்கள்.”

ஓரளவுக்கு இது ‘நாணயமான’ பேச்சு. அதாவது இல கணேசன் கொள்கையை முன் வைத்து வாக்குகள் கேட்கவில்லை. ஜெயிக்க கூடிய குதிரைக்கு வாக்களியுங்கள், வீணாக்காதீர்கள் என்று கேட்கிறார். இதையே ஜெயாவும் மற்ற கட்சிகளுக்கு வாக்களித்து வீணாக்காமல் அதிமுகவிற்கு போடுமாறு கேட்கிறார். இறுதியில் கணக்கு சாத்தியமே காவிகளின் காரிய சாத்தியமாகிறது. ஆனாலும் அதிமுக வெற்றி பெற்றாலும் அது மோடி அணிக்குத்தானே வரப்போகிறது? இப்படிக் கேட்டால் இல கணேசன் மீண்டும் மசால் வடை சாப்பிடத்தான் போக வேண்டும், ஆளுயுர ரோஜா மாலைக்கு ஆசைப்படுவது அதிகம்.

“இந்த தேர்தலை ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் இடையேயான போட்டி என்று இங்கே மாற்ற முயற்சிக்கிறார்கள். இது நாடாளுமன்றத்துக்கான தேர்தல், மறந்து விடாதீர்கள். நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டுமா அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டுமா என்று முடிவு செய்வதற்கான தேர்தல்.” என்று ஒரு தேசிய உணர்வு குன்றாத சுவயம் சேவகராக பேசினார். அப்படி எனில் தேசிய உணர்வு இல்லாத எம்ஜிஆர் நகர் மார்கெட்டுவதற்கு பதில் தேசிய உணர்வுக்கு பெயர் பெற்ற மாம்பலத்திலோ இல்லை மந்தைவெளியிலோ கூட்டம் நடத்தியிருந்தால் பார்த்தசாரதிகள் பேஷ் போட்டிருப்பார்களே?

ஆம்பூர் பிரியாணி கடைகள் அதிகமிருக்கும் எம்ஜிஆர் நகர் மார்கெட்டில் அக்கார அடிசலுக்கு ஏது மரியாதை இல.கணேசன் அவர்களே?

இல கணேசன்
இல கணேசன்

“இந்த இடத்தில் இன்னும் பல கூட்டங்கள் நடக்கும். பல கட்சிகள் வந்து ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவார்கள். தி.மு.க கூட ஊழல் ஒழிப்பு பற்றி பேசலாம். ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதி உடைய ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி. முதலில் மாநிலத்தில் ஊழலை ஒழித்து விட்டுத்தானே மத்தியில் ஊழலற்ற ஆட்சியைத் தருவோம் என்று பேச முடியும். தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சியை தந்திருக்கிறீர்களா? குஜராத்தில் ஊழலற்ற ஆட்சியை தந்த நரேந்திர மோடி இப்போது தனது சேவையை நாட்டுக்கு தர வந்திருக்கிறார்”.

குஜராத்தில் அதானிக்கும், அம்பானிக்கும் ஊழலற்ற ஆட்சி, கர்நாடகாவில் இரும்புத் தாது புகழ் ரெட்டி பிரதர்சின் ஊழலற்ற ஆட்சி என்று பா.ஜ.க மாநில அரசுகள் ஊழல் நிர்வாகத்தில் படைத்த சாதனைகள் ஆம்பூர் பிரியாணியை மட்டும் அறிந்த அந்தப் பகுதி மக்களுக்கு தெரியவா போகிறது என்ற நம்பிக்கையில் இல கணேசன் ஆவேசம் பொங்க பேசினார்.

“பாரதத்தின் மதிப்பு உலக நாடுகள் மத்தியில் எப்படி இருக்கிறது தெரியுமா. சின்னச் சின்ன நாடுகள் கூட நம்மை மதிக்க மாட்டேன் என்கிறார்கள். மோடிக்கு அமெரிக்கா விசா கொடுக்கவில்லை என்று பேசினார்கள். மோடி விசா கேட்கவேயில்லை. நேரம் வரும் போது அவர்களாக வந்து அழைப்பார்கள் என்று இருக்கிறார். அவர்கள்தான் வந்து மோடியை சந்திக்கிறார்களே தவிர அவர் அங்கு போகவில்லை. ஒபாமாவே மோதிஜியின் பேச்சுதான் என்னை கவர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்” என்று பேசிய கணேசனை உண்மையில் சிஐஏ க்வாண்டமானோ பேக்கு அனுப்பியிருக்க வேண்டும். மோடியின் பேச்சை ஒபாமா ரசித்தார் என்று பேசுவதற்கு ஒரு நெஞ்சுரம் வேண்டும்தான், அது நெஞ்சுக்கறியை சுவைத்தே இராத கணேசனிடம் நிறைய இருப்பது ஆச்சரியம்தான். மகாபாரதத்திலேய நைட்ரஜன் குண்டுகளை கண்டுபிடித்தவர்களுக்கு ஃபோட்டோஷாப்பில் ஒபாமாவை தீர்த்தம் சாப்பிட வைப்பதில் என்ன சிக்கல்?

“நான் சிறிது நேரம் முன்பு ஒரு வீடியோவை பார்த்தேன். ஏதோ அமெரிக்காவா,  ஆஸ்திரேலியாவா என்று பார்த்தால் அது குஜராத்தில் எடுக்கப்பட்ட வீடியோவாம்.  அப்படிப்பட்ட குஜராத்தை உருவாக்கிய பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பாகவே மக்கள் அவரை அறிவித்து விட்டார்கள்.

ஒரு மன்னன் என்பவன்  நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அப்படி 12 ஆண்டுகளாக குஜராத்தை பாதுகாப்பாக ஆண்டு வருபவர் மோடி. ஒரு முறை மோடியிடம் நீங்கள் முஸ்லீம்களுக்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா என்று கேட்ட போது இல்லை என்று சொன்னார். கிருஸ்வர்களுக்கும் எதுவும் செய்யவில்லை. ஆனால், குஜராத்தி மக்களுக்கு செய்திருக்கிறேன் என்று சொன்னார்.”

குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும் இந்துக்கள்தான் பெரும்பான்மை. குஜராத் பண்பாடோ, இந்தியப் பண்பாடோ இல்லை தமிழ்ப் பண்பாடோ எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருப்பது இந்துப் பண்பாடுதான் என்ற சூத்திரத்தின் படியும் இது தவறல்ல. சாணக்கியர்களின் வம்சத்திற்கு நரித்தனத்தை கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?

“விலைவாசி என்றால் ஏறிக் கொண்டுதானே போக வேண்டும். ஆனால், மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆன போது விலைவாசி குறைந்தது. வாஜ்பாயி பிரதமர் ஆன போது விலைவாசி குறைந்தது. காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத போது விலைவாசி குறைகிறது என்றால் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்தான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்று தெரிகிறது. 2ஜி ஊழல் 1.86 லட்சத்தி ஆயிரம் கோடி என்றால், நிலக்கரி ஊழல் 1.86 ஆயிரம் லட்சம் கோடி” என்று ஏதோ பெரிய தொகை போல என்று நினைக்க வைப்பதற்காக வாய்க்கு வந்த எண்களை அள்ளி வீசினார். மேடைக்கு கீழே நூறு பேர் இருக்கும் போதே இப்படி உளறுபவர் உண்மையில் இலட்சம் பேரை பார்த்து விட்டால் என்னவெல்லாம் பேசுவார்?

“முகலாயர்கள் வந்தார்கள், இந்தியாவின் செல்வத்தை கொள்ளை அடித்துச் சென்றார்கள். ஆங்கிலேயர்கள் வந்தார்கள் கொள்ளையடித்துச் சென்றார்கள். சுதந்திரம் கிடைத்த பிறகு காங்கிரஸ்காரர்கள் கொள்ளை அடித்துச் சென்ற செல்வத்தின் மதிப்பு அவற்றை எல்லாவற்றையும் விட அதிகம் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.” என்று சாமர்த்தியமாக பேசினார் இல கணேசன். முகலாயர் கொள்ளை என்பது முசுலீம் எதிர்ப்பிற்காக சொல்லப்பட்ட உளறல். போகட்டும். ஆங்கிலேயர் கொள்ளையடிக்கும் போது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஆங்கிலேயர் ஆசியுடன் ஷாகாவில் பாதுகாப்பாக கபடி விளையாடிக் கொண்டிருந்ததுதான் வரலாறு.

அதே போல காங்கிரசு ஆட்சி கூட முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு பயன்பட்டிருப்பதுதான் உண்மை. அதன்படி கொள்ளையடித்த அம்பானி, அதானி போன்ற முதலாளிகள்தான் பாஜகவிற்கும் படியளக்கிறார்கள். அந்த வகையில் கொள்ளை குறித்து பேசிய இல கணேசன் சேம்சைடு கோல் அடித்தார். கொள்ளையும் கோலும் என்றொரு கவிதை தலைப்பு புளித்த ஏப்பம் போல திடீரென வந்தது.

“திடீர் சாம்பார், திடீர் இட்லி போல திடீர் முதலமைச்சர், திடீர் அமைச்சர் ஆக சிலர் வந்திருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சியாம். காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று பாரத மக்கள் வீறு கொண்டு எழுந்திருக்கும் நேரத்தில் அந்த ஓட்டுக்கள் பிஜேபிக்கு போய் விடக் கூடாது என்று திட்டமிட்டுக் கொண்டு இவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள்.” ஆம் ஆத்மி மேலுள்ள பயம் இல கணேசனுக்கும் இல்லாமல் இல்லை. மசால் வடைகளெல்லாம் எம் பி தேர்தலில் நிற்கும் போது பிசா பர்கர்களை போன்ற ஆம் ஆத்மி நிற்பதில் என்னய்யா குற்றம்?

விஜயகாந்த்
கேப்டனின் வண்டியில் தொங்கும் பாஜக

“இந்த தேர்தலில் மோதிஜியை பிரதமராக்க நாம் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி அமைத்திருக்கிறோம். கூட்டணி அறிவிப்பதற்கு முன்னதாகவே நம்முடன் வந்து இணைந்து நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்று கூறியவர் வைகோ. அந்த வைகோவின் கட்சியைச் சேர்ந்த கன்னியப்பன், இப்போது நமது மேடையில் அமர்ந்திருக்கிறார்.” என்று அவர் பேசும் போதுதான் ஒரு உண்மை புரிந்தது. மேடையில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தேமுதிக, பாமக என்று யாரையும் காணோம். ஆனால் வைகோ கட்சி மட்டும் விடாமல் வந்திருக்கிறது. என்ன இருந்தாலும் அடிமைகளின் விசுவாசத்தில் வைகோவை விஞ்சமுடியாது. வாழ்த்துக்க்ள் கன்னியப்பன்!

இறுதியாக “நம்முடைய கூட்டணிக்கு தமிழ்நாடெங்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. கூட்டணிக் கட்சித் தலைவர் விஜயகாந்த் செல்லும் இடம் எல்லாம் பெரும் கூட்டம் திரள்கிறது. அவர் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். எனவே நமது கூட்டணி தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெறும்.” என்று ‘பிராமின்ஸ் ஒன்லி’ வீடு வாடகை கும்பலைச் சேர்ந்தவர் இனம், நிறம், சாதி கடந்து கேப்டனின் வண்டியை ஏற்றுக் கொண்டு எஸ்டிஎஸ் போல தொங்கி வருவது நிச்சயம் சாதனைதான். ஆனால் எஸ்டிஎஸ் ஒரு தனிநபர். இங்கே பாஜக ஒரு கட்சி.

கடைசியில் எஸ்டிஎஸ் எஃபெக்ட்டுதான் தமிழ்நாட்டில் பாஜக தேர்ந்தெடுத்திருக்கும் ஃபார்முலாதான் என்றால் இதற்கு அழகிரி ஃபார்முலா எவ்வளவோ மேல் !

_ வினவு செய்தியாளர்.

ரசியா: எலுமிச்சை எதிர்ப்பிற்கும் சிறை தண்டனை

3

சிய அதிபர் விளாடிமிர் புதினை எதிர்த்து போராடியவர்களுக்கு கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மாஸ்கோ நீதிமன்றம் ஒன்று  சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. 2012 மே மாதம், புதின் மீண்டும் ரசிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து நடந்த பேரணியில், போலீசுக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக இவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

போலோத்னயா குற்றம் சாட்டப்பட்டவர்கள்
போலோத்னயா குற்றம் சாட்டப்பட்டவர்கள்

2000-2008 வரை இருமுறை ரசிய அதிபராக இருந்த புதின் 2012-ம் ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அதிபர் தேர்தலில் புதின் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக கூறி நாடு முழுவதும் புதினுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. “புதின் இல்லாத ரசியா” என்ற முழக்க பதாகைகளை ஏந்தி பல்லாயிரக்கணக்கானோர் பங்குபெற்ற போராட்டங்கள் நடைபெற்றன.

அமெரிக்காவிற்கு சவால் விடும் ஆயுத பலம் உள்ள ரசியாவை வாய்ப்பு கிடைக்கும் விதத்தில் அம்பலப்படுத்தும் விதமாக மேற்குலக பத்திரிகைகளும் அதை பெரிய அளவில் விளம்பரப்படுத்தின. இதே மேற்குலகம்தான் ரசியாவில் புதினை தேர்ந்தெடுத்த முதலாளித்துவ ஜனநாயகத்தை கொண்டு வந்தது. அந்த வகையில் இருவரும் கூட்டாளிகள்தான். அதனாலேயே புதினின் ஒடுக்குமுறைகள் நியாயமாகி விடாது.

2011 டிசம்பரில் நடைபெற்ற பாராளுமன்ற (டூமா)  தேர்தலிலும் புதினின் ஐக்கிய ரசிய கட்சி முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக கூறி பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதின் எதிர்ப்பு போராட்டம்
புதின் அதிபராக பொறுப்பேற்பதற்கு முந்தைய நாளன்று, ”புதின் ஒரு திருடன்” என்ற முழக்கமிட்டபடிய இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்ட பேரணி மாஸ்கோவில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் 2012-ம் ஆண்டு மே 6-ம் தேதி, அதாவது புதின் அதிபராக பொறுப்பேற்பதற்கு முந்தைய நாளன்று, ”புதின் ஒரு திருடன்” என்ற முழக்கமிட்டபடிய இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்ட பேரணி மாஸ்கோவில் நடத்தப்பட்டது. பேரணி போலோத்னயா சதுக்கத்தை நோக்கி முன்னேறிய நிலையில் போலீசார் தடுத்தனர். போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதை தொடர்ந்து இருதரப்புக்கும் கைலப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 250 போராட்டக்காரர்கள் கைது செய்யப்படடனர்.

இதில் ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர் அலெஸ்சி நவல்னி, முன்னாள் துணை பிரதமர் போரிஸ் நெஸ்டோவ் ஆகியோரும் அடக்கம். இதில் மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளிகளாக பன்னிரெண்டு பேர் மீது வழக்கு நடத்தப்பட்டது. இவர்கள் மீது போலீசாரை தாக்கியதாகவும், கலவரத்தை தூண்டியதாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ரசியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் சமயத்தில் தன் மீதான மக்களின் எதிர்ப்பை குறைக்கும் வகையிலும், ‘அடக்குமுறை அரசு’ என்ற முத்திரையை தவிர்க்கவும் மேற்கண்ட போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு பொதுமன்னிப்பு அளித்தது ரஷ்ய அரசு.

போராட்டக்காரர்கள் கைது
தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், செர்ஜி கிரிவோவ், அலெசான்டிரா நவ்மோவா,  பார்பவோவ், போலிக்சோவிச்,  சேவியோல்வ், சிம்மின், லுட்க்ஸ்விச், பிலோவ்சோவ் ஆகிய எட்டு பேர் மீது விசாரணை முடிந்து அவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கு தண்டனை வழங்குவதை  சோச்சியில் நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த பிறகு பிப்ரவரி 24-ம் தேதி வரை ஒத்தி வைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

24-ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  பிலோவ்சோவ் என்பவர் போலீசார் மீது ‘பேரழிவு’ ஆயுதமான எலுமிச்சம்பழத்தை வீசி எறிந்த ‘கொடுங்குற்ற’த்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

“நீதிமன்றம் சுதந்திரமாக இருந்திருந்தால் இந்த வழக்கே தூக்கி எறியப்பட்டிருக்கும் ஆனால் இங்கு அனைத்து அரசியல் வழக்குகளும் ரசிய அரசின் வழிகாட்டல்படியே தான் நடக்கின்றன. இந்த வ்ழக்கு புதினால் ஆரம்பிக்கப்பட்டது என்பதால் அவர் தான் இதன் தீர்ப்பை வழங்குவார்” என்று வழக்கு விசாரணைக்கு வரும் போதே போராட்டக்காரரகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள 21வயது டென்னிஸ் லுட்ஸ்க்விச் என்பவரின் தாயார் ஸ்டெல்லா அன்டன் “இந்த வழக்கு பழிவாங்கும் நடவடிக்கை, மக்களை அச்சுறுத்தும் முயற்சி” என்று விமர்சித்துள்ளார். சட்டையில்லாமல் இரத்தக்கறையுடன் போராட்டக் களத்திலிருந்து இழுத்து செல்லப்பட்ட லுட்ஸ்க்விச் தான் போலீசை தாக்கவில்லை என்றும் அவர்கள் தான் தன்னை தாக்கியதாக் கூறி தன் மீதான் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

ரஷ்யா - போராட்டங்கள்
ரஷ்யா முழுவதும் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன.

தற்போது உக்ரைனில் நிலவும் பிரச்சனை காரணமாக சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்ககூட இல்லை என்றும் போலீசுக்கு எதிரான வன்முறையை சகித்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவிக்கவே அரசு விரும்பும் என்றும் இந்த தீர்ப்பின் பின்னால் உள்ள அரசியலை அம்பலப்படுத்துகிறார் ஸ்டெல்லா அன்டன்.

“இந்த தீர்ப்பு அரசியல் ரீதியிலானது. கிரெம்ளின் மாளிகையின் உத்தரவை ஏற்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்றும் எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெம்ஸ்டோவ் உள்ளிட்ட பலர் விமர்சித்துள்ளனர். சர்வதேச மன்னிப்பு சபை இந்த தீர்ப்பு அநீதியானது என்று கண்டித்துள்ளதோடு வழக்கு விசாரணையை நாடகம் என்று வர்ணித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த போராட்டம் மட்டுமல்ல ரசியா முழுவதும் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. 2012-ம் ஆண்டிற்கு பிறகு மாஸ்கோவை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 5000 பேர் அரச எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்தார்கள் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபோக ரசியாவில் போராட்டங்களுக்கு அரசின் அனுமதி கிடைப்பதை குதிரை கொம்பாக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதின் முகமூடி
புதின் முகமூடி அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்

இதையும் மீறி நடக்கும் அரசு எதிர்ப்பு போராட்டங்களும் போலீசை கொண்டு ஒடுக்கப்படுகின்றன. பெரிய அளவிலான போராட்டங்கள் என்றில்லை தனிநபர் போராட்டம் கூட அனுமதிக்கப்படுவதில்லை. 2012 நவம்பர் மாதம் ஒரு பல்கலைக்கழகத்திற்கு எதிரில் தனிநபர் போராட்டம் நடத்திய இருவரை அனுமதியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி  காவல்துறை கைது செய்திருக்கிறது. போராட்டம்  மட்டுமல்லாமல் அரசை எதிர்க்கும் எந்த நிகழ்வும் அனுமதிக்கப்படுவதில்லை. புதினை கேலியாக் சித்தரிக்கும் படம் வைத்ததற்காக செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருங்காட்சியகத்திற்கு பத்துநாட்களுக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு பின்னர் அந்த படங்களை போலீஸ் பறிமுதல் செய்திருக்கிறது.

சோசலிசத்தின் சாதனைகளை ரசியாவின் சாதனைகளாக காட்டுவது, உக்ரைன் பிரச்சனையை தொடர்ந்து கீரிமீயா இணைப்பு, மேற்குலக்கு அடிபணியாமை என்று ரசிய தேசிய பெருமிதத்தை வளர்த்து அதன் போர்வையில் தனக்கு எதிரான போராட்டங்களை நசுக்கி வருகிறார் விளாடிமிர் புதின். ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான  மோதல் போக்குகள் முதலில் காவு கேட்பது மக்களின் ஜனநாயக உரிமைகளைத்தான். தற்போது கீரிமியா இணைப்பு காரணமாக புதினின் செல்வாக்கு முன்னெப்போதையும் விட அதிகரித்திருப்பதாக ஊடக கணிப்புகள் கூறுகின்றன. இதன்படி புதினின் எதிர்ப்பாளர்களுக்கு எந்த உரிமையும் நீதியும் இனி கிடைக்காது.

கம்யூனிச சோவியத்தை வீழ்த்திவிட்டோம் என்று மார்தட்டிய முதலாளித்துவம் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளை கூட மக்களிடமிருந்து பறித்து வருகிறது. சோவியத் யூனியனில் அடக்குமுறை இருந்தது என்று புளுகிய மேற்குலகம், தான் கொண்டு வந்த ஜனநாயகத்தை தானே அம்பலப்படுத்தும்படி வரலாறு பழிவாங்கி விட்டது.

நெய்வேலி மத்திய படையை விரட்டுவோம் – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

2

1. விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்

  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பாதுகாப்பு பொறுப்பிலிருந்து மத்திய பாதுகாப்பு படை நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும்.
  • மத்திய படை மற்றும் தமிழக போலீசார் தொழிலாளிகள், பொது மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நீதிவிசாரணை நடத்த வேண்டும்.

என்பதை வலியுறுத்தி 19-3-14 அன்று காலை 11-00 மணியளவில் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • என்.எல்.சி ராஜா கொலை - போஸ்டர்தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க வைத்திருக்கும் மத்திய பாதுகாப்பு படையை நெய்வேலியிருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும். அதுவரை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி வைத்திருக்கக் கூடாது.
  • நீதிகேட்டு போராடிய தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் உள்ளார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
  • நீதிகேட்டு போராடிய தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டி தானமாக தாக்குதல் நடத்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள்  மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.
  • தமிழக போலீசார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை வீச்சு, இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியது, நள்ளிரவில் வீடு புகுந்து அப்பாவி மக்களை கைது செய்தது ஆகிய சம்பவங்களுக்கு நீதி விசாரணை நடத்த உத்திரவிட வேண்டும்.
  • மணல் லாரியில் அடிப்பட்டால் கூட நீதிமன்றம் 20 லட்சத்திற்கு மேல் இழப்பீடு வழங்குகிறது ஆனால் NLC நிர்வாகம் 5 லட்சம் வழங்கி இருப்பது அநீதியானது மத்திய பாதுகாப்பு படை கொடூரமாக சுட்டு கொன்ற சம்பவத்திற்கு 50 லட்சம் அபராதமாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும்.

தொழிற்சங்கத் தலைவர்கள் தாக்கப்படுகிறார்கள் தொழிலாளிகள் தாக்கப்படுகிறார்கள் என்றால், பாதுகாப்பு படை, போலீஸ் அத்துமீறல் என்பதை எதிர்த்து போராடுவதை காட்டிலும் தொழிலாளிகளின் உரிமைக்காக முழுமையாக நிற்காமல், நிர்வாகத்தின் தரப்பினராகவும், தொழிலாளிகளின் பிரதிநிதியாகவும் இருக்கின்றன தொழிற்சங்கங்கள்.

இதை தொழிலாளர்கள் வர்க்கமாக உணர்ந்து தேர்தல் அரசியல் கட்சிகளை புறக்கணித்து சங்கமாக திரளவேண்டும் என வலியுறுத்தியதோடு காவல்துறை, மத்திய பாதுகாப்பு படையின் அத்துமீறல்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பேசினார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ் நாடு
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு 9360061121

2. சென்னையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

nlc-raja-notice-front19.3.2014 அன்று மாலை 4.30 மணியளவில் , சென்னை, ஈ.வே.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள NLC அலுவலகமான ‘நெய்வேலி பவன்’ முன்பாக,

  • நெய்வேலி NLC-யில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வெறியனால் தொழிலாளி ராஜா சுட்டுக் கொலை!
  • கண்டித்த தொழிலாளர்கள் மீது போலீசு தடியடி!

என்கிற தலைப்பில் அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு. – சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் அ.முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.

தொழிலாளி ராஜாவை வம்புக்கிழுத்து, தலையில் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக்கொன்றது அரச பயங்கரவாதம் என விளக்கியும், அதைக் கண்டித்துக் கூடிய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும், தமிழகக் காவல்துறையினரும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கொடூரமாகத் தாக்கியதை வன்மையாகக் கண்டித்தும் தோழர் அ.முகுந்தன் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,

  • கொலைவெறியன் நூமென்-ஐ கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்யப் போராடுவோம்!
  • கொலையைக் கண்டித்த தொழிலாளர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு அதிகாரியைக் கைது செய்யப் போராடுவோம்!
  • நாடெங்கும் உரிமைக்காகப் போராடும் மக்களை ஒடுக்கிவரும் CISF படையைக் கலைக்கப் போராடுவோம்!

என்று தொழிலாளர்களையும், உழைக்கும் மக்களையும் போராட அறைகூவல் விடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களைக் கைதுசெய்த போலீசு பின்னர் அவர்களை விடுவித்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை.

3. ஓசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

  • நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளி சுட்டுக்கொலை!
  • மத்திய பாதுகாப்புப்படையை சேர்ந்த கொலையாளி நோமென்னை கைது செய்து தூக்கிலிடு!
  • கொலைகார மத்திய பாதுகாப்புப்படையை உடனே திரும்பப்பெறு!

டந்த 17.03.2014 அன்று மதியம் 12.30 மணியளவில் நெய்வேலி அனல்மின் நிலைய இரண்டாவது சுரங்க நுழைவுவாயிலில் ராஜ்குமார் என்கின்ற ஒப்பந்த தொழிலாளியை நோமென் என்ற மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்தவன் துப்பாக்கியால் மூன்றுமுறை சுட்டதில் மூளைசிதறி அதே இடத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தார். இதனைக் கேள்விபட்டு அங்கே நீதிக் கேட்டு திரண்டிருந்த தொழிலாளர்கள்மீது மத்திய பாதுகாப்புப்படையினரும், தமிழகப் போலீசும் சேர்ந்துக்கொண்டு காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதலை நடத்தியது.

இதனைக் கண்டித்து ஓசூரில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற புரட்சிகர தொழிலாளர் அமைப்பின் சார்பாக மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ராம்நகர் அண்ணாசிலை அருகே 20.03.2014 மாலை 5.00 மணியளவில் எழுச்சியோடு நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெக் இண்டஸ்டீரீஸ் இந்தியா லிட் கிளைச் சங்கத்தின் செயலாளர் தோழர் வேல்முருகன் முன்மொழிய மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமைத் தாங்கி உரையாற்றினார்.

அவரது உரையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு காவல்நிலையம் சென்றபோது காவல்நிலைய அதிகாரிகள் அடுக்கடுக்காக கேள்விமேல் கேள்வி கேட்டு அனுமதி மறுப்பதிலேயே குறியாக இருந்த அலட்சியப் போக்கை கண்டித்தும் தொழிலாளி இராஜ்குமார் மீது ஏவிவிடப்பட்ட கொலைவெறித்தாக்குதலை கண்டிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் பேசினார்.

அடுத்து இவ்வமைப்பின் பாகலூர் பகுதிப் பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் கண்ட உரையாற்றினர்.

தோழர் ரவிச்சந்திரன் தனது கண்டன உரையை தெலுங்கில் பேசினார் அவர் பேசுகையில் தொழிலாளி, “ராஜ்குமார் அதேநிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளி. அவரது சகோதரன் பாலகுமார் என்பவரும் ஒப்பந்ததொழிலாளியாக பணியாற்றிவருகிறார். கடந்த 6- மாதத்திற்குமுன் இதே நிறுவனத்தில் பணிபுரிந்த தனது இன்னொரு சகோதரர் சுரேஸ்குமார் விபத்தில் இறந்துள்ளார். அவருக்கான இழப்பீடு தொகையை கேட்கதானே அவர் அங்கே சென்றுள்ளார். இதற்கு அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடச் செய்து தனது அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்படுவதால் அதனை பொறுக்காமல் துப்பாக்கியால் சுட்டிருக்கிறான் இந்த நேமென் என்ற அடியாள்! இதனைக்கேள்விப்பட்டு திரண்ட தொழிலாளர்கள்மீது தடியடித் தாக்குதல் நடத்தியிருக்கிறது தமிழக காவல்துறை. வெள்ளைக்கார காலனியாட்சியில்கூட கொஞ்சம் கூச்சம் இருந்துள்ளது. ஆனால் இங்கே மறுகாலனியாதிக்க காலத்தில் அதுகூட இன்றி நிர்வாணமாக உள்ளது. இது ஜனநாயக நாடு இல்லை என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா? மறுகாலனியாக்கத்தை வீழ்த்தி புதிய ஜனநாயக அரசமைப்பதில் வேகமாக செயல்படுவோம்” என்று அறைகூவி அழைத்துப் பேசினார்.

தோழர் பரசுராமன் தனது உரையில், “அடியாள் நோமெனின் துப்பாக்கிக்குண்டு பணக்காரனையோ அல்லது முதலாளியையோ நோக்கி பாயுமா? அங்கே துப்பாக்கி என்பது முதுகு சொறிவதற்கு மட்டுமே பயன்படுத்துவான்! ஏழைகள் அதிலும் தனது உழைப்பை விற்று உயிர் வாழும் தொழிலாளி என்றால் இவன்களுக்கு கிள்ளுக்கீரைகள்தான். நாம் கிள்ளுக்கீரைகள் இல்லை என்பதை நிரூபிக்க முதலாளித்துவ பயங்கரவாத கொடுங்கோன்மைக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்களை கட்டியமைப்போம்” என்று அறைகூவல் விடுத்துப் பேசினார்.

பாதுகாப்பு என்ற பெயரில் அடியாள் வேலை செய்யும் நோமனை கொலைக் குற்றத்தில் கைது செய்து தூக்கிலிடக் கோரியும், பாதுகாப்பு என்ற பெயரில் கொலைவெறியாட்டம் செய்து வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அங்குள்ள தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் மீது தொடர்ந்து அரசு பயங்கரவாதம் நடத்தி வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியும்  தொடர்ந்துப்போராடவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து தனது உரையை முடித்துக்கொண்டார்.

இறுதியாக, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில் நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தோழர்களும் தொழிலாளர்களும் திரளாக கலந்துக்கொண்டு எழுச்சிகரமாக தொழிலாளிவர்க்க உணர்வோடு விண்ணதிர முழக்கமிட்டனர். திரளான மக்கள் ஆதரித்துச் சென்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஒசூர்

4. திருச்சி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

  • நெய்வேலி NLC யில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை (CISF) வெறியனால் தொழிலாளி ராஜ்குமார் சுட்டுக் கொலை!
  • கண்டித்த தொழிலாளர்கள் மீது போலீசு தடியடி!

என்ற தலைப்பின் கீழ் அம்பலப்படுத்தி

  • கொலைவெறியன் நோமனை கொலை குற்றத்தின் கீழ் கைது செய்ய போராடுவோம்!
  • கொலையை கண்டித்து தொழிலாளர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு அதிகாரியை கைது செய்யப் போராடுவோம்!
  • நாடெங்கும் உரிமைக்காகப் போராடும் மக்களை ஒடுக்கிவரும் CISF படையை கலைக்கப் போராடுவோம்!

என்ற கோரிக்கைகளை முன்வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, 19.03.2014 மாலை 6.30 மணிக்கு திருவரம்பூர் நவல்பட்டு ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்க்கு பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொருளாளர் தோழர்.ராமசாமி தலைமை வகித்தார்.

ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தோழர் மணலிதாஸ் கண்டன உரையாற்றினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் தோழர்.காவிரிநாடன் சிறப்புரையாற்றினார். இவர் பேசுகையில், “தொழிலாளி ராஜ்குமாரின் படுகொலைக்கு காரணமான நோமனை கொலைக் குற்றத்தில் கைது செய்ய வேண்டும், போராடிய மக்கள் மீது தடியடி நடத்த உத்திரவிட்ட போலீசு அதிகாரியை கைது செய்ய வேண்டும்” எனவும் “இப்படி குருவியைபோல சுட்டுக் கொள்ள நோமனுக்கு எப்படி தைரியம் வந்தது. அதிகாரவர்க்க திமிர்தான் இப்படிப்பட்ட திமிரும், ஆணவமும்தான் தொழிலாளியின் நெற்றிபொட்டில் துப்பாக்கியை வைத்து சுடுவதற்கு ஊக்கம் கொடுத்துள்ளது. இதனை தடுக்க வேண்டாமா? தனியாக நின்றால் தடுக்க முடியுமா? முடியாது. ஏனெனில் முதலாளித்துவ லாபவெறி நாடுமுழுவதும் தலைவிரித்தாடுகின்றது. அதனால்தான் ஆங்காங்கே படுகொலைகள் நடக்கின்றது. இன்று நாடு முழுவதும் முதலாளிகளின் லாபவெறியால் பணிபாதுகாப்பு எதையும் செய்து கொடுக்காமல் தொழிலாளிகளை படுகொலை செய்யும் பயங்கரவாதத்தையும், படுகொலைக்கு காரணமான எந்த முதலாளியையும் தண்டிக்கப்படுவதில்லை, மாறாக பாதுகாக்கப் படுகின்றனர். பொதுச் சொத்துக்களை தனியார் கார்ப்பரேட்டிடம் ஒப்படைத்து தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் அபாயத்தையும், விதவிதமான பெயர்களில் சுரண்டுபவரையும், இப்படி அன்றாடம் நடக்கும் ஆலைச்சாவுகளையும் நீர்வளம், கடல்வளம், மலைவளம் என அனைத்தும் தனியாரிடம் விற்க்கப்படுகிறது. இதற்காக மலைக்காடுகளில் வாழும் ஆயிரக் கணக்கான மக்களின் வீடுகளை தீக்கிறையாக்கி அகதிகளாக அடைத்து வைப்பது அல்லது நாடோடிகளாக விரட்டிவிடுவதும் நடக்கிறது. இதனை எவரேனும் எதிர்த்தால் அவர்களை நக்சலைட்டுகள் என முத்திரை குத்துகின்றது, ஒடுக்குவதற்கு பசுமை வேட்டை என்ற பெயரில் துணை ராணுவத்தை ஏவிவிடுகின்றனர்.”

மதுரையில் கிரானைட் கொள்ளைக்காக பல மலைக்காடுகளும், பொது கண்மாய்களும், சமுதாயக் கூடங்களும், ஏரிகளும், குட்டைகளும் பொறம்போக்கு நிலங்களும் பட்டாபோட்டு எடுத்துக் கொடுக்கப்பட்டதையும், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர தாதுமணல்களை கொள்ளையடிக்க வைகுண்டராஜன் போன்ற மாஃபியாக்களின் கையில் வளங்களை ஒப்படைத்து கொள்ளையை பாதுகாப்பதையும் உணர்வுபூர்வமாக விளக்கி பேசினார்.

துவாக்குடி, திருவரம்பூர் பகுதிகளில் நடக்கும் ஆலைச்சாவுகளையும் அதற்கு காரணமான பணிபாதுகாப்பற்ற சூழ்நிலைகளையும் விளக்கி பேசினார். BHEL-ல் ஆரோக்கியசாமி, பெல்நகரில் உள்ள ஜோதி மாலியபுல்ஸ் கம்பெனியில் S.ஜெதீஸ்வரன், வாழவந்தான் கோட்டை S.குமார் என 3 பேர் கம்பெனியில் பணிபாதுகாப்பற்ற சூழலில் கடந்த 6 மாதங்களில் அதிகாரி மற்றும் முதலாளிகளால் வேலை செய்ய நிர்பந்தப்பட்டதால் வேலை செய்த இடத்திலேயே பலியாகினர்.

BHEL -ல் ஆரோக்கியசாமியின் படுகொலைக்கு எதிராக போராடிய தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தும், பணியிட மாற்றம் செய்ததைக் கண்டும், அடுத்து யார் மீது நடவடிக்கை என பயப்பீதியை நிர்வாகம் கிளப்பிவிட்டபோது பயந்துபோய் V.பரமேஸ்வரன் என்ற தொழிலாளி பணியிடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்து நான்கு நாட்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சிப்காட்டில் ஜவுளி மில்லில் வேலை பார்த்த தொழிலாளி சாயக்கழிவை அகற்ற சென்றபோது விசவாயு தாக்கி ஏழு பேர் படுகொலையானதுக்கும் முதலாளித்துவ லாபவெறிதான் காரணம் என்றார்.

இதனை முறியடிக்காமல் உழைக்கும் வர்க்கத்துக்கு விடிவு இல்லை, இத்தகைய கொடூர கொலைகளை தடுக்க தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தை எதிர்த்து போராட வேண்டும் . பெரும்பான்மை உழைக்கும் மக்களை பாதுகாக்க துப்பில்லாத இந்த அரசமைப்பை தூக்கியெறிந்துவிட்டு மாற்று அரசமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைய வேண்டும் என தனது உரையை முடித்தார்.

இடை இடையே பாடப்பட்ட ம.க.இ.கவின் மையக் கலைக்குழு தோழர்களின் பாடல் கூடிநின்ற மக்களுக்கு புரட்சிகர உணர்வை ஏற்படுத்தியது. இறுதியாக பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலர் தோழர். சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

ஆர்ப்பாட்டத்தில் போடப்பட்ட முழக்கம்

நெய்வேலி NLC யில்
நண்பனை பார்க்க சென்ற
காண்ட்ராக்ட் தொழிலாளி ராஜ்குமாரை
CISF படைவெறியன்
குருவியப்போல சுட்டுக்கொன்றான்

கொலைகாரன் நோமனை
கொலைவழக்கில் கைது செய்ய

போராடிய தொழிலாளர்கள் மீது
போலீசின் தடியடி !

கிளர்ந்தெழுவோம்! கிளர்ந்தெழுவோம்!
படுகொலையான தொழிலாளிக்கு
நியாயம் கேட்ட மக்கள் மீது
தடியடி நடத்த உத்தரவிட்ட
போலீசு அதிகாரியை
கைது செய்ய போராடுவோம்!

கொலைகாரன் நோமன் மீது
கொலை வழக்கு பதிவு செய்ய
கிளர்ந்தெழுவோம்! கிளர்ந்தெழுவோம்!

தொடருது பார்! தொடருது பார்!
உழைக்கும் வர்க்கம் தொழிலாளர்கள் மீது
உழைப்பை உறிஞ்சும் முதலாளிகளின்
பயங்கரவாதம் தொடருதுபார்!
வேலைக்கு போன தொழிலாளர்கள்
வீடு திரும்ப உத்தரவாதமில்லை

ஈரோடு மாவட்டம்
பெருந்துறை சிப்க்காட்டிலே
ஜவுளி முதலாளி லாபத்தாலே
சாயக்கழிவை அகற்றச் சென்ற
ஏழு இளம் தொழிலாளர்களை
விசவாயு தாக்கியதாலே
படுகொலையான பயங்கரவாதம்!
முதலாளித்துவ பயங்கரவாதம்!

துவாக்குடி பெல் நகரில்
ஜோதிமாலியபுல்ஸ் கம்பெனியில்
மெயிண்டனன்ஸ் வேலைபார்த்த
இளம் தொழிலாளி ஜெகதீஸ்வரன்
எந்திரம் வந்து அடித்ததாலே
இறந்து போன கொடுமை பாரீர்!

வாளவந்தான் கோட்டையிலே
S.குமார் கம்பெனியில்
வேலை செய்த தொழிலாளி மீது
கிரேன் விழுந்து உடல்நசுங்கி
இறந்துபோன கொடுமை பாரீர்!

BHEL தொழிற்சாலையில்
பாதுகாப்பற்ற சூழலில்
வேலை செய்ய நிர்ப்பந்தம்
எலக்ட்ரானிக் பிரசிங் எந்திரத்தில்
வேலைபார்த்த தொழிலாளி மீது
வெட்ஜ் பீஸ் அடித்ததாலே
சிதறி செத்தார் ஆரோக்கியசாமி

பணி பாதுகாப்பற்ற சூழ்நிலையால்
அன்றாடம் ஆலைச்சாவுகள்
முதலாளி கொடுக்கும் நெருக்கடியாலே
நாளும் நடக்குது தற்கொலைகள்.

உயருது பார்! உயருது பார்!!
முதலாளித்துவ லாபவெறியால்
நவீன கால கொத்தடிமைகளின்
எண்ணிக்கை உயருது பார்!

காரணம் யாரு? காரணம் யாரு?
இத்தனைக்கும் காரணம் யாரு?
முதலாளித்துவ லாபவெறிதான்
இதற்கு பின்னே ஒழிஞ்சிருக்கு
தனியார்மயம் – தாராளமயம்
உலகமயம் என்ற பெயரில்
நடக்கும் இந்த படுகொலையை
தடுத்து நிறுத்துவோம்! தடுத்து நிறுத்துவோம்!

முறியடிப்போம் ! முறியடிப்போம்!
மனிதகுலத்துக்கும், விலங்குகளுக்கும்
இயற்கைக்கும் எதிரான
முதலாளித்துவ பயங்கரவாத்ததை
முறியடிப்போம் ! முறியடிப்போம்!

நாடெங்கும் உரிமைக்காகப்
போராடும் மக்களை
ஒடுக்கிவரும் CISF படைகளைக்
கலைக்கப்போராடுவோம்!

செய்தி:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (இணைப்பு)
பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்,
திருச்சி.

தவறாக வழி நடத்தப்படும் ஜெயா – உண்மையா ?

34

ரம்பம் முதல், போயஸ் தோட்டத்தின் கதவை மூடும் கடைசி நேரம் வரை, இடது, வலது கம்யூனிஸ்டுகளை அவமானப்படுத்தி கூட்டணியில் இருந்து வெளியேற்றினார் ‘புரட்சி’த் தலைவி. தமிழக கிளைமாக்சில் வீரம் காட்டும் போலீசு போல அப்போதாவது சொரணையுடன் கொதிப்பார்கள் என்று பார்த்தால், ‘அம்மா, நீங்கப் போய் இப்படி செஞ்சுட்டீங்களே’ என்று பயபக்தியுடன் மன்றாடுகின்றனர் போலிகள்.

ஜெயாவும் போலி கம்யூனிஸ்டுகளும்
போயஸ் தோட்டத்தின் கதவை மூடும் கடைசி நேரம் வரை, இடது, வலது கம்யூனிஸ்டுகளை அவமானப்படுத்தி கூட்டணியில் இருந்து வெளியேற்றினார் ‘புரட்சி’த் தலைவி.

இதுகுறித்து கருத்து சொன்ன சிபிஎம்மின் டி.கே.ரங்கராஜன், “ஜெயலலிதாவை யாரோ தவறாக வழி நடத்தியிருக்கிறார்கள்” என்று சொன்னார். இந்தக் கருத்து குறித்துதான் நாம் இங்கே பேச வேண்டியிருக்கிறது. ஏனெனில் இக்கருத்தை இதற்கு முன்னரும் பலரும் பல சந்தர்ப்பங்களில் கூறி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு தினமலர் பத்திரிகை, ‘சோவியத் யூனியன் ஆகிறதா தமிழ்நாடு?’ என்று ஒரு தலைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இலவசப் பொருட்களை நிறைய வழங்குவதாலும், அரசாங்கமே நிறைய தொழில்களை நடத்த ஆரம்பித்துவிட்டதாலும் தமிழ்நாட்டை சோவியத்துடன் ஒப்பிட்டு எழுதி ‘அபாயம் எச்சரிக்கை’என்றது தினமலர். அதன் இறுதியில், ‘இதற்கு எல்லாம் காரணம் ஜெயலலிதாவை யாரோ தவறாக வழி நடத்துவதுதான்’ என்று முடித்திருந்தனர். அதே போல அம்மா விசுவாசத்தில் முதல் இடத்தில் இருக்கும் தினமணியும் தனது தலையங்கங்களில் ஜெயா ஆட்சியில் செய்யப்படும் தவறுகளெல்லாம் யாரோ தவறாக வழிநடத்தியவை என்றே பயபக்தியுடன் குறிப்பிடும்.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு கடைசி நேரத்தில் கடும் தொந்தரவு தந்தார் ஜெயலலிதா. விழாவை நிறுத்தப் பார்த்தார். பிரபாகரன் படங்கள் வைக்க தடை விதித்தார். விழா முடிந்த உடனேயே முற்றத்தின் சுற்றுச்சுவரை காவல்துறையை ஏவி தடாலடியாக இடித்துத் தள்ளினார்.

நியாயமாகப் பார்த்தால் தமிழ்த் தேசியவாதிகள் இதற்காக வெகுண்டு எழுந்து ஜெயலலிதா அரசை உண்டு, இல்லை என்று செய்திருக்க வேண்டும். ஆனால் மாவீரன் நெடுமாறனோ, “இந்த கொடுஞ்செயலை ஈழத் தமிழர்களின் ஆன்மா மன்னிக்காது” என்று ஆவி எழுப்புதல் கூட்டத்தில் பேசுவதைப் போல பேசினார். இடிப்பதற்கு துணை போன ஜேசிபி எந்திரங்களை ஆசை தீருமட்டும் கண்டித்தார்.

நாம் தமிழர் கட்சியின் சீமானோ, ‘இது மத்திய உளவுத்துறையின் சதி’ என்று ஒரே அடியாக போட்டார். நெடுமாறனும் பிறகு இதேக் கருத்தை கூறினார். அதாவது முற்றத்தை இடித்தது மத்திய உளவுத்துறையின் சதி வேலையாம். அந்த சதிக்கு ஜெயலலிதா இரையாகி விட்டாராம். மொத்தத்தில் முற்றம் இடிப்பில் ஜெயலலிதாவை, மத்திய உளவுத்துறை தவறாக வழிநடத்திவிட்டது என்கிறார்கள் இவர்கள்.

சோ-ஜெயா
‘ஜெயலலிதாவை சோ கும்பல் தவறாக வழி நடத்துகிறது’

இவர்கள் மட்டுமா… ‘ஜெயலலிதாவை சோ கும்பல் தவறாக வழி நடத்துகிறது’ என்று சசிகலா நடராஜனும், ‘மன்னார்குடி மாஃபியா கும்பல் அ.தி.மு.க.வை ஆக்கிரமித்து ஜெயலலிதாவை தவறாக வழிநடத்துகின்றனர்’ என்று சோ கும்பலும் சொல்லி வருகின்றனர். இந்த அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால் தமிழ்நாட்டு ஊடகங்களும் இதே பாட்டைப் பாடுகின்றன.

ஒரு சில மாதங்களுக்கு முன்புவரைக்கும் கூட ஊடகங்கள் மீது சகட்டுமேனிக்கு அவதூறு வழக்காக போட்டுத் தாக்கினார். டி.வி.யில் செய்தி வாசித்த பெண் மீது எல்லாம் வழக்கு. ரிமோட்டை கையில் வைத்து அந்த டி.வி. செய்தியைப் பார்த்தற்காக பொதுமக்கள் மீது வழக்குப் போடாததுதான் பாக்கி. ஆனால் அதற்குக் கூட ஊடகங்கள் வாய் திறக்கவில்லை. ’முதல்வரை சில சக்திகள் தவறாக வழிநடத்துகிறார்கள்’ என்றுதான் சொன்னார்கள்.

இப்படி எந்தப் பக்கம் பார்த்தாலும் ‘தப்பா வழிநடத்துறாங்க… தப்பா வழிநடத்துறாங்க’ என்று கூக்குரலிடுகிறார்களே… அவ்வளவு டம்மிபீஸா ஜெயலலிதா? மற்றவர்கள் சொல்லிக் கொடுத்ததை அப்படியே திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையா? ஜெயலலிதாவுக்கு என்று சொந்தப் புத்தி இல்லையா? ஒரு அப்பாவிப் பெண்ணை, படித்த பெண்ணை அதிகார வர்க்கமும், கிச்சன் கேபினட்டும் வழி நடத்தித்தான் ஜெயாவின் பாசிச நடவடிக்கைகள் வெளிப்பட்டனவா?

நேற்றைக்கு அரசியலில் காலடி எடுத்து வைத்த கத்துக் குட்டிகள் கூட இதைக் கேட்டு சிரிப்பார்கள். ஒருமுறை முடிவு செய்துவிட்டால் யார் பேச்சையும் கேட்க மாட்டார் இந்த அம்மையார். இதனால்தான் ஜெயாவை ஆதரிக்கும் தீவிர பார்ப்பனியவாதிகளோடு கூட அவருக்கு சில நேரங்களில் முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது. சு சாமி, குரு மூர்த்தி, தினமலர், சோ என்று ஜெயாவின் முழு அரசியல் வாழ்க்கையிலும் அதை பார்க்கலாம்.

ஜெயா - தான்தோன்றித்தனம்
யாருடைய கருத்தையும் கேட்காமல், மற்றவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதை பரிசீலித்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக, தன்னகங்காரத்தில் ஊறித் திளைத்த ஜெயலலிதாவின் குணமும், போக்கும் நாடறிந்தது.

யாருடைய கருத்தையும் கேட்காமல், மற்றவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதை பரிசீலித்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக, தன்னகங்காரத்தில் ஊறித் திளைத்த ஜெயலலிதாவின் குணமும், போக்கும் நாடறிந்தது. அமைச்சர்களை தூக்கி கடாசுவது முதல், கூட்டணிக் கட்சிகளை கடைசி நேரத்தில் கழுத்தறுப்பது வரையும் எதிலும் மற்றவர்களின் கருத்தை கேட்கக் கூட மாட்டார். நிலைமை இப்படி இருக்க ஜெயலலிதாவை ஏதோ ஓ.பி.எஸ். ரேஞ்சுக்கு இறக்கி வைத்து, ‘கேட்பார் பேச்சுக் கேட்டு நடப்பதாக’ சொல்வது கேட்பதற்கே அயோக்கியத்தனமாக இருக்கிறது.

ஜெயலலிதா ஒரு திணிக்கப்பட்ட தலைவர். சினிமாவின் புகழ் வெளிச்சத்தில் திடீரென எம்.ஜி.ஆரால் கட்சிக்குள் இழுத்து வரப்பட்டவர். கட்சியின் அணிகளிடையே பணியாற்றி கிளைக்கழகம், ஒன்றியக் கழகம், மாவட்டக் கழகம், மாநிலக் கழகம் என கீழிருந்து மேலாக வந்தவர் அல்ல. நேராக மேலே திணிக்கப்பட்டவர். ஓட்டரசியல் அதிகாரத்தை சுவைப்பதில் உள்ள நடைமுறை சிரமங்கள் கூட ஜெயலலிதாவுக்கு தெரியாது. கருணாநிதிக்கு இப்போது கூட தமிழ்நாட்டின் மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களின் பெயர் தெரியும்; அவர்கள் குறித்த வரலாறு தெரியும். ஆனால் ஜெயலலிதாவுக்கோ, தமிழ்நாட்டின் வட்டார நிலைமைகள், பகுதி வாரியான பிரச்னைகள் கூட தெரியாது. தன் கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் பெயராவது தெரியுமா என்பது கூட சந்தேகமே.

இத்தகைய சூழலில்தான் ஜெயா தனது ஆட்சியை அதிகார வர்க்கம், பார்ப்பன சாணக்கியர்கள், உளவுத் துறை, கார்ப்பரேட் முதலாளிகள் முதலிய குழுக்களை வைத்து நடத்துகிறார். இதனால் இவர்கள் ஜெயாவை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று பொருளல்ல. இத்தகைய ஆளும் வர்க்கத்தின் நலனுக்கும் ஜெயாவின் நலனுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஒரு வேளை நடைமுறை சிக்கல்கள் என்ற அளவில் வேண்டுமானால் அவர்கள் ஆலோசனையை ஜெயா ஏற்கலாம்.

கட்சி அணிகளை வைத்து சமூகத்தோடு தொடர்பு கொள்ள முடியாத ஜெயா அதிகார வர்க்கத்தை வைத்து மட்டும் தொடர்பு கொள்கிறார். அதனால்தான் தமிழ்நாட்டில் போலீஸ் ஆட்சி பகிரங்கமாக நடக்கிறது. ஒரு வகையில் உலகின் எல்லா பாசிஸ்டுகளின் ஆட்சியும் இப்படித்தான் இருந்திருக்கிறது. துப்பாக்கியின் நிழலில் வாழ்ந்து கொண்டு குண்டுகளை வைத்திருக்கும் திமிரில்தான் பாசிஸ்டுகளின் வீரம் அடங்கியிருக்கிறது.

ஜெயலலிதா : இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !
கோவில் யானைகளை முகாம் அமைத்து சித்திரவதை செய்வது, வாஸ்து சாஸ்துவுக்காக கண்ணகி சிலையை இடிப்பது, கூட்டணி உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜோசியம் பார்ப்பது எல்லாம் ஜெயாவை தவறாக வழிநடத்தி வந்தவையா என்ன?

அடிப்படையில் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டுதான் ஜெயா இன்றும் செயல்படுகிறார். அதற்கு நேற்றைய ஆடு கோழி பலி தடைச் சட்டம் முதல் இன்றைய சிதம்பரம் கோவிலை தீட்சிதருக்கு கொடுத்தது வரை சான்றுகள் இருக்கின்றன. கோவில் யானைகளை முகாம் அமைத்து சித்திரவதை செய்வது, வாஸ்துவுக்காக கண்ணகி சிலையை இடிப்பது, கூட்டணி உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜோசியம் பார்ப்பது எல்லாம் ஜெயாவை தவறாக வழிநடத்தி வந்தவையா என்ன? தமிழகம் கண்ட ஒரே இந்து முதல்வர் என்று ஜெயாவை இன்றும் இராம கோபாலன் போற்றுவதற்கும் என்ன காரணம்?

இது போக கருணாநிதி மற்றும் திமுக மேல் உள்ள தனிப்பட்ட பகையால்தான் அவர் தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினார். அண்ணா நூலகத்தை மாற்ற முனைந்தார். சமச்சீர் கல்வியை எதிர்த்த வழக்கை நள்ளிரவில் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். இதிலிருந்து தெரிவது என்ன? ஜெயாவைப் பொறுத்தவரை அவரது தனிப்பட்ட ஆசை விருப்புகள் மட்டுமே வழி நடத்துகின்றன. அவை ஆளும் வர்க்கத்தின் நலனோடு ஒத்திசைவதால் அதிகார வர்க்கம், பார்ப்பன ஊடகங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜெயாவை ஆதரிக்கின்றன.

அவருக்குத் தெரிந்தது எல்லாம் ஆணைகள் பிறப்பிப்பது மட்டுமே. புகழ் வெளிச்சம், அதிகாரம், மேட்டுக்குடிப் பின்னணி எல்லாம் இணைந்து, துவக்கத்தில் இருந்தே கட்டளைகள் பிறப்பிக்கும் நபராக ஜெயலலிதா இருந்தார். யாருக்கும் கீழ்படிந்து அவருக்கு பழக்கம் இல்லை. தான் சொல்வதை ஏற்காதவர், காலில் விழுந்து வணங்காதோர், சுயமரியாதை உள்ளோர் அனைவரையும் கட்சியை விட்டு, பதவியை விட்டு தூக்கினார். தன் சொல்லை மறுப் பேச்சுக் கேட்காமல் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார். இவை அனைத்தும் ஒரு சர்வாதிகரிக்குரிய பண்புகள். ஆனால் இவற்றைதான் ஜெயலலிதாவின் தைரியம் என்று வர்ணிக்கிறார்கள், ஊடக மற்றும் அறிஞர் சொம்புகள்.

வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு பிறகு வாபஸ் வாங்குவது, வாரம் ஒருமுறை மாவட்டச் செயலாளரையும், மாதம் ஒரு முறை மந்திரியையும் மாற்றுவது, ஒரு துளி மையில் கையெழுத்திட்டு 8 லட்சம் அரசுப் பணியாளர்களை வேலையை விட்டுத்தூக்குவது… போன்றவை தைரியமான செயல்களாம். என்றால், இப்போது இடதுசாரிகளை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டதையும் கூட நாம் தைரியப் பட்டியலில்தான் சேர்க்க வேண்டும். அரசியலில் இருப்போருக்கு அவர்கள் ஓட்டுக்கட்சியே ஆனாலும் குறைந்தபட்சமாவது மக்களிடம் பயம் கொண்டிருக்க வேண்டும். அப்படி மக்களிடம் பயம் இல்லாதவர்தான் ஜெயா. இல்லையேல் எட்டு இலட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் காரியத்தை குலோப் ஜாமூன் சாப்பிடுவது போல செய்ய முடியுமா?

இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி
இதெல்லாம் ஜெயாவின் தைரியம் என்று எதன் அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள்?

இருப்பினும் இதெல்லாம் ஜெயாவின் தைரியம் என்று எதன் அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள்? ஜெயலலிதா 91-96ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்தபோது பேயாட்டம் போட்டாரே… அதை ஒரு எடுத்துக்காட்டாக சிலர் சொல்லக்கூடும். அதாவது அப்போது சசிகலா குழுவினர், ஜெயலலிதாவை சூழ்ந்துகொண்டு தவறாக வழிநடத்திவிட்டனர்’ என்று சோ, குருமூர்த்தி போன்றவர்கள் சொல்லவும் செய்தார்கள்; இப்போதும் சொல்கின்றனர். அவர்கள் சொல்வதற்கு காரணம், ‘இதுபோன்ற சூத்திரக் கூட்டத்தை கூட வைத்திருப்பதால்தான் கெட்டப்பெயர். நம்மவாளை உடன் வைத்துக்கொண்டால் எல்லா மொள்ளமாரித்தனத்தையும் நாசூக்காக செய்யலாம்’ என்பது அவர்களது அக்கறையின் பின் மறைந்திருக்கும் சேதி.

மேலும் விபத்தால் முதல்வரான ஜெயா அதற்கு வழியேற்படுத்திய அதிமுக கட்சியை சசிகலா கும்பலின் சாதிய செல்வாக்கை வைத்தே ஒரு அடியாட் படை போல உருவாக்க முடிந்தது. கட்சியை நடத்த ஊழல் பணமும், அரசியல் செல்வாக்கிற்கு இந்த அடியாட்படையும் அவருக்கு தேவையாக இருந்தன. இவையெல்லாம் சசிகலா அவரை தவறாக வழிநடத்தியதன் விளைவுதான் என்று சொல்வது அபாண்டம். அது உண்மையெனில் ஜெயா அரசியலுக்கே வந்திருக்க முடியாது. முதலமைச்சர் எனும் அதிகாரத்தை சுவைக்கும் வாய்ப்பை விரும்பும் நபர் அதை தக்கவைப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது விதி. அதிலும் அதிமுக எனும் அடிமைகள் கட்சியை புரட்சித் தலைவரிடமிருந்து சீதனாமாகப் பெற்றவருக்கு அது கூடுதல் நிபந்தனையும் கூட.

இதை விடுத்துப் பார்த்தாலும் நிஜமாகவே அப்போது மன்னார்குடி கும்பல்தான் ஜெயலலிதாவை ஆட்டுவித்தது என்று தீர்மானகரமாக சொல்ல முடியாது. ஏனெனில் எப்போதுமே ஒரு சர்வாதிகரிக்கு அருகில் இருப்பவர்கள், அவர்களது மனமறிந்து நடந்து கொள்வதில் வல்லவர்கள். ஜெயலலிதாவின் மனதில் என்ன இருக்கிறது என்று படித்து அதற்கு இசைவாகவே சுற்றியிருப்பவர்கள் கருத்துச் சொல்வார்கள். அவர் விருப்பத்துக்கு மாறாக ஒருபோதும் இவர்கள் ஒரு வார்த்தையும் பேச மாட்டார்கள். இது  சசிகலா கும்பலுக்கும் பொருந்தும், சோ கும்பலுக்கும் பொருந்தும். ஆகவே சுற்றியிருப்பவர்கள் தவறாக வழி நடத்தினார்கள் என்பதை எப்போதும் ஏற்க முடியாது. மேலும் இந்த வழிநடத்துதலும், ஜெயாவின் மனக் கிடக்கையும், ஆளும் வர்க்கத்தின் நலனும் எந்த வேறுபாடின்றியும் ஒன்று சேர்ந்திருந்தன. ஒரு வேளை இவற்றில் ஏதாவது சிறு முரண்பாடு வந்தால் இறுதி முடிவை ஜெயாதான் எடுப்பார்.

இப்படி இருக்க திரும்பத் திரும்ப ’ஜெயலலிதா தவறாக வழிநடத்தப்படுவதாக’ சொல்வதன் காரணம்தான் என்ன? ஏனெனில், ஜெயலலிதாவின் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள அனைவரும் அஞ்சுகின்றனர். இது ஜெயாவை ஆதரிப்போர், எதிர்ப்போர் இருவருக்கும் பொருந்தும். உண்மையைச் சொன்னால் உள்ளே போக வேண்டியிருக்கும் அல்லது அம்மாவின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

அதனால் ஜெயலலிதா மூக்கிலேயே குத்தினாலும் ரத்தத்தை துடைத்துக்கொண்டு ’தவறாக வழிநடத்தியவரை’ தேடுகின்றனர். ’அப்படி ஒரு கேரக்டரே கிடையாது. என்னைத் தூண்டிவிட்டதும் நான் தான், மூக்கில் குத்தியதும் நான் தான்’ என்று பலமுறை அந்தம்மாவும் நிரூபித்துவிட்டார். ஆனால் கம்யூனிஸ்டுகளும், தமிழினவாதிகளும் மறுபடியும், மறுபடியும் அந்த அரூப பாத்திரத்தை நோக்கி அம்புவிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ஜெயா நல்லகண்ணு
‘ஜெயலலிதாவை பிரதமர் ஆக்குவோம்’ என்று சில வாரங்களுக்கு முன்பு ஆர்.நல்லகண்ணு சூளுரைத்ததை மறந்துவிடக்கூடாது.

இந்த ஊடகங்களோ விஜயகாந்த் கிடைத்தால் மட்டும் நோண்டி நொங்கெடுக்கிறார்கள். அவர் அதிகம் படிக்காதவர். சுலபத்தில் டென்ஷன் ஆக்கலாம். என்ன கேட்டாலும் எதையோ ஒரு பதிலை அடித்துவிடுவார். ஜெயலலிதாவிடம் இப்படி கண்டதையும் கேட்டால் அவர் ‘அடித்து’விடுவார். அதனால் விஜயகாந்த்தை துரத்திப்பிடித்துக் கேட்பவர்கள்; கருணாநிதியிடம் எதையும் தயக்கமின்றி கேட்பவர்கள், மம்மியிடம் மட்டும் பம்முகிறார்கள். ஜெயலலிதாவின் பிரஸ்மீட்டில் மட்டும் பத்திரிகையாளர்களின் குரல்வளை வயிற்றுக்கும் கீழே போய்விடுகிறது. அவர்களின் மூளையே விமர்சனக் கேள்விகளை சுயதணிக்கை செய்துவிடுகிறது.

ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது மட்டும்தான் இந்த நிலை என்று எண்ண வேண்டாம். அவர் முதல்வராக இல்லாத நிலையிலும் கூட அவரிடம் எதிர்மறை கேள்விகளை கேட்டுவிட முடியாது. ஆக, ஜெயலலிதா தெளிவான, தீர்மானமான கருத்துக்களை கொண்டுள்ளார். அவர் பார்ப்பன பாசிசத்தை தனது சித்தாந்தமாக வரித்திருக்கிறார். அதை உடைத்துப் பேச வக்கற்றவர்கள் யாருக்கும் பிரச்சினை இன்றி காற்றில் கத்தி வீசுகின்றனர்.

இதில் வினோதம் என்னவெனில், சொந்த சரக்கு இல்லாத கிளிப்பிள்ளை என ஜெயலலிதாவை குறிப்பிடும் இவர்கள்தான் ‘அம்முதான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும்’ என்பதில் ஒத்திசைவுடன் இருக்கிறார்கள். ‘ஜெயலலிதாவை பிரதமர் ஆக்குவோம்’ என்று சில வாரங்களுக்கு முன்பு ஆர்.நல்லகண்ணு சூளுரைத்ததையும், ‘தமிழ் பிரதமர்’ என்று குமுதம் உள்ளிட்ட பத்திரிகைகள் ஜெயலலிதாவுக்கு சொம்பு தூக்குவதையும் மறந்துவிடக்கூடாது. எனில் இவர்களிடம் கேட்பதற்கு நம்மிடம் ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது.

ஜெயாவை யாரோ சிலர் தவறாக வழி நடத்துவது இருக்கட்டும். முதலில் ஜெயாவை விமரிசிக்க நினைத்தாலே உங்களுக்கு சிறுநீர் கழியும் உண்மையைச் சொல்வீர்களா?

–    வழுதி

பிக்பாக்கெட் பேர்லுக்கு பிரெட் லீ தூதராம் !

0

“இன்னும் ஒண்ணா” என்று நொந்து கொள்ளாதீர்கள். ஆமாம், ஒரு நிதி மோசடி நிறுவனம் மக்களுக்கு நாமம் போட்டுக் கொண்டிருந்த செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. உத்தர பிரதேசத்தில் சகாரா, மேற்கு வங்கத்தில் சாரதா, அதற்கு முன்பு தமிழ்நாட்டில் ஈமு கோழிப் பண்ணை, பாசி பாரெஸ்ட் டிரேடிங், கொஞ்சம் இன்னும் தள்ளி யோசித்தால் 1990-களின் தேக்குமரப் பண்ணைகளை காட்டி மோசடி செய்த அனுபவ் பிளான்டேஷன்ஸ், சிட் பண்ட் நிறுவனங்கள் என்று மக்களை மொட்டை போடும் நிதி நிறுவனங்களின் வரிசையில் இப்போது சேர்ந்திருப்பது பேர்ல் (pearl) குழுமம்.

 நிர்மல் சிங் பாங்கூ
நிர்மல் சிங் பாங்கூ

நமது உளவுத் துறை ‘புலி’களுக்கு தெரியாமலும், ஒழுங்கு முறை ஆணையங்களின் ‘கழுகு’ப் பார்வையில் படாமலும், நீதிமன்றங்களின் ‘கவன’த்தை ஈர்க்காமலும், புலனாய்வு பத்திரிகையாளர்களின் பொறிகளில் சிக்காமலும் இது போன்று எத்தனை மோசடி நிறுவனங்கள் நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற கணக்கு யாரிடமும் இல்லை.

ரிலையன்ஸ், அல்லது சகாரா என்று பிரபலமான நிறுவனங்கள் தமது பெயரோடு பல சொற்களை ஒட்டியும் வெட்டியும் புதுப் புது கம்பெனிகளை படைப்பது இந்திய தரகு முதலாளிகளின் அடிப்படை வணிக நடைமுறை. அதாவது ஒன்றில் பெற்ற பெயரை வைத்து மற்றதில் நாமம் போடலாம். பிரபலமான பெயரைப் பார்க்கும் மக்கள் அந்த பெயர் அறிமுகம் இல்லாத தொழிலில் ஈடுபட்டிருப்பது குறித்து கவலைப்படுவதில்லை.

அந்த வகையில் பஞ்சாபைச் சேர்ந்த நிர்மல் சிங் பாங்கூ 1983-ல் பேர்ல்ஸ் என்ற பெயரில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார். 1996-ல் ஜெய்ப்பூரில் பதிவு செய்யப்பட்ட பேர்ல் கோல்டன் ஃபாரஸ்ட் – பி.ஜி.எஃப் என்ற நிறுவனத்தின் பெயரிலும் தொடர்ந்து பேர்ல் அக்ரோடெக் கார்ப்பரேசன் லிமிடெட் – பி.ஏ.சி.எல் என்ற பெயரிலும் மக்களிடமிருந்து பணம் திரட்டியிருக்கிறார்கள். இப்படி பேர்ல் என்ற பெயர் கொண்ட தாய் நிறுவனம் பல லெட்டர் பேடு கம்பெனிகளை காளான்கள் போல ஆரம்பித்தது.

இந்நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 5 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து ரூ 45,000 கோடி நிதி திரட்டியிருக்கிறது. வாடிக்கையாளர்களை கொண்டு வரும் முகவர்களுக்கு முதலீட்டுத் தொகையில் 12% வரை கமிஷன் கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. ஆரம்பத்தில் அப்படி சிலருக்கும் கொடுக்கவும் செய்தது. இது மீனை பிடிக்கும் தூண்டில் புழு என்பது பல மோசடி நிறுவனங்களின் வரலாற்றில் பார்த்திருக்கிறோம். அப்படி பணம் போடுபவர்கள், தாமும் இதே அடிப்படையில் புது வாடிக்கையாளர்களை கொண்டு வந்து சேர்த்து 12% கமிஷன் சம்பாதிக்கலாம் என்று லட்சக்கணக்கானவர்களை செயின் திட்டத்தில் ஈடுபடுத்தியிருக்கிறது. இதைப் பார்த்து ஏமாந்து பல ஆயிரம் மக்கள் தமது சேமிப்பு பணத்தை போட்டார்கள்.

பேர்ல் குழுமம் தனது தொழில் ரியல் எஸ்டேட் என்று சொல்லிக் கொண்டது. ஆனால், வாடிக்கையாளர்களிடம், ‘நீங்கள் போட்ட பணம் 6 ஆண்டுகளில் இரண்டு மடங்காகி விடும்’ என்று வாக்குறுதி அளித்து வைப்புத் தொகை வாங்கியிருக்கிறார்கள். ‘பணத்தை போட்டவர்களின் பெயரில் நிலம் வாங்கி வைத்து, ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தை விற்று 2 மடங்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதாக’ கூறியிருக்கின்றனர். மறுகாலனியாக்க கால கட்டத்தில் பொன் விளையும் பூமி போல ரியல் எஸ்டேட் தொழில் பூதாகரமாக மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. இது போதாதா, மக்கள் நம்புவதற்கு?

இதற்காக நாடு முழுவதும் 1.5 லட்சம் ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக நிறுவன விவகாரத் துறையில் பதிவு செய்திருக்கிறது பி.ஏ.சி.எல். மேலும் நிறுவனத்தின் இணைய தளத்தில் கைவசம் 15 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

அனுபவ் முதலீட்டாளர்கள்
அனுபவ் தேக்குப் பண்ணை திட்டத்தில் பணம் இழந்தவர்கள்.

நோய்டா, டெல்லி, ஜிர்காபூர், மொகாலி, பதிண்டா, மும்பை, பூனே, வடோதரா (குஜராத்), மதுரை போன்ற இடங்களில் வீடு கட்டி வருவதாகவும் வட இந்தியாவில் கோதுமை, நெல், பேபி கார்ன், காய்கறிகள் பயிர்கள் விளைவிப்பதாகவும், தென்னிந்தியாவில் மாம்பழம், மாதுளை, சப்போட்டா, நெல்லிக்காய், முந்திரி விளைவிப்பதாகவும் கூறுகிறது அதன் இணையதளம். இப்படித்தான் 90-களில் அனுபவ் நிறுவனம் மல்டி கலர் ஆர்ட் பேப்பரில் தேக்கு மர படங்களை வைத்து மாத சம்பள பார்த்தசாரதிகளுக்கு முப்பரிமாண நாமம் போட்டது. இணைய தளத்தை வைத்து உயர்நீதிமன்றத்திலேயே வேலை வாய்ப்பு என்று ஏமாற்றிய காலத்தில் பழம், காய், தோட்டங்களை ஃபோட்டோஷாப்பில் காட்டி ஏமாற்றுவது ஒன்றும் சிரமமில்லை.

‘தேக்கு மரம் வளர்த்தால் நல்ல மதிப்பு இருக்கிறது, 20 ஆண்டுகளில் இத்தனை சதுர அடி மரம் கிடைக்கும், அதன் விலை இத்தனை லட்சமாக இருக்கும்’ என்று கணக்கு போட்டு ஏமாந்ததைப் போல ‘நிலத்தின் சந்தை விலை எப்படியும் ஏறிக் கொண்டோ போவதால், ஐந்தரை ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாகி விடும். அப்படியே ஏதாவது பிரச்சனை என்றாலும் கையில் நிலத்துக்கான ஆவணம் இருக்கிறது’ என்று மக்கள் ஏமாந்திருக்கின்றனர்.

ஆனால் பி.ஏ.சி.எல் வாங்குவதாகச் சொன்ன நிலத்தில் ஒரு சிறுபகுதி கூட கைவசம் இல்லை. விவசாயம் செய்யப்படாத தரிசு நிலங்களை மட்டுமே ஆங்காங்கே ஒரு சில ஏக்கர் வாங்கி போட்டிருக்கிறது. நிலம் வாங்கி வீடு கட்டுவதாக சொன்ன இடங்களில் ஒன்று மதுரை. அங்கு பேர்ல் சிட்டி என்ற பெயரில் பணம் கொடுத்தவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதாக கூறியிருக்கிறார்கள். ஆனால், இப்போது அந்நிலத்தைச் சுற்றி சுற்றுச் சுவர் மட்டும் கட்டியிருக்கிறார்கள். காம்பவுண்டு வாலை வைத்தே நடுத்தர வர்க்க வாலாக்களை வளைக்கலாம் என்றால், வாணம் விட்டே இந்தியா ஏன் வல்லரசு ஆக முடியாது?

பேர்ல் குழுமம் தனது நிதி திரட்டும் திட்டங்களை விதிமுறைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று செபி நிறுவனம் 2002-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதை எதிர்த்து முறையீடு செய்த பேர்ல் குழுமத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்து செபியின் உத்தரவை தள்ளுபடி செய்தது ராஜஸ்தான் உயர்நீதிமன்றம். அதை ஏற்றுக் கொள்ளாமல் உச்சநீதிமன்றத்துக்கு  மேல்முறையீடு செய்து விட்டு வேறு வேலைகளில் மும்முரமாகி விட்டிருந்தது செபி. உச்சநீதிமன்றமும் ஊழல் குற்றவாளிகளுக்கும், செக்ஸ் சாமியார்களுக்கும் பிணை வழங்குவது போன்ற பல முக்கியமான வழக்குகளில் பிசியாகி விட பேர்ல் குழுமத்தின் மீதான வழக்கு தூங்கிக் கொண்டிருந்திருக்கிறது.

மேற்கு வங்கம் ஏமாற்றப்பட்டவர்கள்
மேற்கு வங்கத்தில் சிட் பண்ட் மோசடியில் பணத்தை இழந்த மக்கள்.

மீண்டும் 2013-ல் செபி தாக்கல் செய்த நினைவூட்டலைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இப்போது பேர்ல் குழும நிறுவனங்களைப் பற்றி புலனாய்வு செய்யும்படி சி.பி.ஐ-க்கும் வருமான வரித் துறைக்கும் ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த தாமதம் பேர்ல் நிறுவனம் ஏற்பாடு செய்த பேரங்கள் காரணமாக மட்டும் இருந்திருக்க வேண்டும்.

இந்த உத்தரவின் படி பேர்ல் குழுமத்தின் டெல்லி, ஜெய்ப்பூர், சண்டிகர், மொகாலி, ரோபார் ஆகிய இடங்களில் உள்ள அலுவலங்களில் சி.பி.ஐ  ரெய்டு நடத்தியதாம். அப்போது கூட விவகாரம் இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று தெரிந்திருக்கவில்லையாம். ஒரு சில மடிக்கணினிகளை திறந்து பார்த்த போதுதான் மோசடியின் முழுப் பரிமாணம் புரிய வந்ததாம். உத்தர பிரதேசத்தில் 1.3 கோடி பேரிடமும், தமிழ்நாட்டில் 51 லட்சம் பேரிடமும், மகாராஷ்டிராவில் 61 லட்சம் பேரிடமும், ராஜஸ்தானில் 45 லட்சம் பேரிடமும், ஹரியானாவில் 25 லட்சம் பேரிடமும் பேர்ல் குழுமம் பணம் திரட்டியதாக விபரங்கள் கிடைத்திருக்கின்றன.

ஏமாறுவதில் ராஜஸ்தான் போன்ற பின்தங்கிய மாநிலங்களுக்கும், தமிழ்நாடு, ஹரியானா போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கும் வேறுபாடு இல்லை. அந்த வகையில் மோசடிக்கும், ஏமாற்றப்படுதலுக்கும் இந்தியாவில் ஒரு சமத்துவம் இருக்கிறது. இதில் தமிழனின் தனித்துவம் ராஜஸ்தான் சேட்டோடு கரைந்திருப்பது குறித்து தமிழினவாதிகள் என்ன சொல்வார்களோ?

பங்குகள் கை மாறுவதன் மூலமாகவே தம் மதிப்பை ஏற்றிக் கொள்ளும் பங்குச் சந்தை மோசடி வர்த்தகத்தை போலவே ‘சும்மா கிடக்கும் நிலத்தின் மதிப்பு நான்கு பேர் கை மாறுவதன் மூலமாகவே ஏற்றி விடப்படும்’ என்ற ரியல் எஸ்டேட் சந்தையை பயன்படுத்தி கொண்டுதான் சத்யம் ராஜூ முதல் சகாரா சுப்ரதா ராய் மற்றும் பல நூற்றுக் கணக்கான பேர்வழிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதில் பெரிய அளவில் செய்பவர்கள் தரகு முதலாளிகளாகவும், சிறிய அளவில் செய்பவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்களாகவும் இருக்கின்றனர்.

சி.பி.ஐ
புலனாய்வு புலி சி.பி.ஐ

இந்த நிதி மோசடி பேர்வழிகள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு இருட்டில் வீட்டை உடைத்து திருடும் பீரோ திருடர்கள் அல்ல. பட்டப் பகலில் அலுவலகம் திறந்து வைத்து, ஆண்டு தோறும் நிறுவன விவகாரங்கள் துறையில் அறிக்கை பதிவு செய்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்து 17 ஆண்டுகளாக தொழில் செய்து கொண்டிருந்தன பேர்ல் குழும நிறுவனங்கள். இக்குழும நிறுவனங்கள் நாடு முழுவதிலும் உள்ள 35 வங்கிகளில் 1,000 வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.

ஆனால் இது எல்லாம் நடப்பது தெரிந்தும் நிதிச் சந்தையை ஒழுங்கு படுத்தும் ரிசர்வ் வங்கியும், பங்குச்சந்தை, முதலீட்டுச் சந்தைகளை ஒழுங்கு படுத்தும் செபியும், உளவுத் துறையின் பொருளாதாரப் பிரிவும், வருமான வரித்துறையும் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக அலட்சியமாகவே இருந்திருக்கின்றன. ஊழல்களில் ஒரிரண்டு மட்டுமே நமது பார்வைக்கு வரும் என்பதே இதன் நீதி! பார்வைக்கு வராமல் இருப்பதற்கு திரை மறைவு ஏற்பாடுகளும், சட்ட பூர்வ ஆதாயங்களும் காரணமாக இருக்கின்றன.

மேலும் இந்நிறுவனம் ஐ.எஸ்.ஓ 9001 என்ற சேவைக்கான தரச் சான்றிதழ் மற்றும் ஐ.எஸ்.ஓ 14001 என்ற சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுக்கான சான்றிதழ் இரண்டையும் பெற்றிருக்கிறது. மக்களின் தாலியறுத்து கொள்ளை அடிப்பதையும் தரமாக  செய்கிறார்கள் என்று சான்றிதழ் கொடுப்பதுதான் இத்தகைய சான்றிதழ் நிறுவனங்களின் யோக்கியதை. அதன்படி இனி ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறும் நிறுவனங்கள் மோசடியிலும் நம்பர் ஒன் தரத்தோடு இருக்கும் என்பதறிக.

போதாக் குறைக்கு, பேர்ல் குழும முதலாளி பாங்கூ ‘கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டியை’ தவறாமல் கடைப்பிடித்திருக்கிறார். அது தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன.

ஷெரட்டன் மிராஜ்
இந்திய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து பாங்கூ வாங்கிப் போட்ட ஷெரட்டன் மிராஜ், கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா.

2012-ம் ஆண்டில் கேரளாவில் கொல்லம், ஆலப்புழை போன்ற இடங்களில் படகுப் போட்டி நடத்த பணம் கொடுத்திருக்கிறார் பாங்கூ. கேரளாவின் அனைத்து தரப்பு அரசியல்வாதிகளும் பிரபலங்களும் பி.ஏ.சி.எல்லின் செலவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் போட்டியில் நிறுவனத்தின் இயக்குனர்கள் கலந்து கொள்ளவில்லை. பணம் போட ஆள் பிடித்துக் கொடுக்கும் முகவர்கள் மட்டும் நிறுவனத்தின் சார்பில் கலந்து கொண்டிருக்கின்றனர். 2013-ம் ஆண்டு கேரள மக்களிடம் திரட்டிய நிதியோடு காசரகோடு, திரிச்சூர், கண்ணனூர் அலுவலங்களை இழுத்து மூடிக் கொண்டது பி.ஏ.சி.எல். அதிகம் படித்த சேட்டன்களது மாநிலத்திலேயே ஸ்வாகா என்றால் பாமரர்களது மாநிலத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும்?

பஞ்சாப் மாநிலத்தில் துணை முதல்வர், முதல்வரின் மகன் சுக்பீர் சிங் பாதல் தலைமையில் நடந்த அகில உலக கபடிப் போட்டிகள் நடத்துவதற்கு ரூ 35 கோடி கொடுத்திருக்கிறார் பாங்கூ. அப்படி கொடுத்ததாக பி.ஏ.சி.எல் கணக்கில் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அதை வாங்கியதாக போட்டியை நடத்தியவர்களின் கணக்கில் காட்டப்படவில்லை. இடையில் யார் பையிலோ அது தங்கிப் போயிருக்கிறது. யார் என்று சுக்பீர் சிங்கையை, பாங்கூவையோ கருப்புத் துணியால் முகத்தை மூடி கைது செய்து லாக்-அப்பில் அடித்து உதைத்து சி.பி.ஐ விசாரிக்கப் போவதில்லை. தமது விசாரணைக்கு ஒத்துழைக்கா விட்டால் மட்டும் இயக்குனர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லியிருக்கிறது சி.பி.ஐ. இந்த உலக கபடிப் போட்டியின் நிகழ்வுகளை ஆரவாரத்துடன் வெளியிட்ட ஊடகங்கள் அனைத்தும் இதன் புரவலரது யோக்கியதையை உச்சி மோந்தே வந்திருக்கின்றன.

பாங்கூ தன்னுடைய சமூக சேவையை இந்திய எல்லைக்குள் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் என்ற இடத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்த ஷெரட்டன் மிராஜ் ரிசார்ட்ஸ் என்ற சுற்றுலா சொகுசு ஹோட்டலை சுமார் ரூ 300 கோடி கொடுத்து 2009-ல் வாங்கியிருக்கிறார். அதனால், ‘கோல்ட் கோஸ்ட்டின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்க வந்த தேவதூதர்’ என்று அம்மாநில முதல்வர் உருகி கண்ணீர் வடித்திருக்கிறார். அந்த சொகுசு ஹோட்டலை புதுப்பிப்பதற்கு கூடுதலாக் ரூ 100 கோடி அள்ளிக் கொடுத்திருக்கிறார் பாங்கூ. பி.ஏ.சி.எல் குழுமத்தின் பெயரை பிரபலப்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட் லீயையும் பணம் கொடுத்து அமர்த்தியிருக்கிறார். ஒரு பிளேடு பக்கிரிக்கு பிரெட் லீ தூதர், ஆஸ்திரேலியாவில மாளிகை என்றால் பாவம் நம்மூர் பிக்பாக்கெட்டுகள்.

நாணயம் விகடன்வணிக மற்றும் முதலீட்டு பத்திரிகைகளும் இந்த மோசடியை வரும் கவரின் வெயிட்டில் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். முதலாளித்துவ ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் இந்த பத்திரிகைகள் நேற்று வரை இத்தகைய திட்டங்களையே கவர்ச்சிகரமானது முதலீடு செய்யலாம் என்று அடித்து விட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்கள். தற்போது தாம் போற்றிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் மோசடி நாளை வெளியானதும், முதலீட்டாளர்கள்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று பம்மாத்து செய்வார்கள்.

பேர்ல் குழும அலுவலகங்களில் சி.பி.ஐ ரெய்டு பற்றி நாணயம் விகடன் பத்திரிகையின் ஷேர்லக் ஹோம்ஸ் (ஜூ.வி கழுகார் போல நா.வி-யின் ஷேர்லக்) மார்ச் 9 தேதியிட்ட இதழில் குறிப்பிட்டிருந்தாராம். அதைத் தொடர்ந்து பல வாசகர்கள் தொலைபேசி கேட்கவே இது தொடர்பான தகவல்களை திரட்டி அடுத்த இதழில் அட்டைப் பட சிறப்புக் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்த வாசகர்களில் ஒருவர் கூட இதற்கு முன்னர் நாணயம் விகடனிடம் ஆலோசனை கேட்கவில்லை என்பதும், நாணயம் விகடன் நிருபர்களின் கண்ணிலும் இது தொடர்பான விபரங்கள் சிக்கவில்லை என்பதும் ஆச்சரியத்துக்குரியவை. இவ்வளவுக்கும் ஈரோட்டைச் சுற்றிய கிராமங்களில் மட்டுமே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்நிறுவனத்தால் திரட்டப்பட்டிருப்பதாக கூறுகிறது நாணயம் விகடன்.

சமீபகாலமாக பேர்ல் குழும நிறுவனங்களில் பணம் போட்டவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டால் கொடுப்பது தாமதமாகியிருக்கிறது. ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டும் பணம் தரப்படும் என்று காலையில் வரிசையில் காத்திருந்து டோக்கன் வாங்க வைத்திருக்கின்றனர். அதன்படி கொடுத்த காசோலைகளும் வங்கியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன.

நிதி மோசடி நிறுவனங்கள் இது போன்று நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் போது பழைய சினிமாக்களில் இறுதிக் காட்சியில் வந்து நிற்கும் போலீஸ் போல போலீசும், சி.பி.ஐயும் களத்தில் குதித்து மோசடி முதலாளிகளை கைது செய்து பத்திரமாக சிறையில் அடைத்து விடுகிறார்கள். இதன்படி முதலாளிகளது மோசடி பணம் பத்திரமாக இருக்கும். ஏமாந்த மக்களும் எதிர்த்துக் கேட்க முடியாத படி சிறை, வழக்கு எல்லாம் பேருக்கு நடக்கும். இறுதியில்? இன்றும் சென்னை தி.நகர் பூங்காவில் 90-களில் சிட் பண்டு கம்பெனிகளில் பணம் போட்டு ஏமாந்தோர் வாரந்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பணம்தான் வந்தபாடில்லை.

இப்படித்தான் மக்களும் வேறு வழியின்றி ஒரு தேர்தலில் ஓட்டு போட்டு ஏமாந்த பிறகும் அடுத்த தேர்தலில் இன்னொரு கட்சிக்கு ஓட்டு போடுவது போல அடுத்தடுத்து இது போன்ற மோசடி நிறுவனங்களை நம்பி ஏமாற்றப்பட்டுகின்றனர்.

1990-களில் அனுபவ் குழுமம் செய்த மோசடி தொகை ரூ 400 கோடி. பேர்ல் குழுமத்தின் மோசடி தொகை ரூ 45,000 கோடி. 1990-களுக்குப் பிறகு நாடு முன்னேறியிருக்கிறதோ இல்லையோ, மோசடி நிறுவனங்களின் மோசடி மதிப்பு சில நூறு கோடிகளிலிருந்து சில பத்தாயிரம் கோடிகளாக வளர்ந்திருப்பது மட்டும் நிதர்சனம். இத்தனை ஆண்டுகளில் இந்தியா உருவாக்கியிருக்கும் சாதனைதான் இம்மாதிரியான மோசடிகள்.

இம்மோசடிகளை வைத்தே நீங்கள் பார்க்கும் கிரிக்கெட்டோ, கபடியோ, சமூக சேவையோ, சிஎஸ்ஆரோ நடக்கின்றன. ஒரு சிக்சரில், ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை பறிகொடுத்தது மறந்து போகிறது, என்ன செய்ய?

–    பண்பரசு

மேலும் படிக்க

தேர்தல் சூட்டில் சாகவிடப்படும் சடையம்பட்டி – நேரடி ஆய்வு

0

குடிநீரில் சாக்கடை ! விஷக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி !
2 மாதமாகியும் உரியநடவடிக்கை இல்லை ! தொடரும் காய்ச்சல் !

குடிநீர் அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் கிராமங்கள் !
தேர்தலில் தீவிரம் காட்டும் ஓட்டுக்களவாணிகள்
ஒட்டுண்ணி அதிகார வர்க்கம் !

ந்திய ஆளும் வர்க்கங்கள் நம் மக்கள் மீது திணித்துவரும் உலக மயமாக்கக் கொள்கை கிராமப்புறங்களை அநாதைகளைப் போலாக்கி விட்டது. பிரதமர் மன்மோகன் சிங் விவசாயிகளை, “விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் ! மாற்றுத் தொழில்களைத் தேடுங்கள்” என்று சொல்லிவிட்டார். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவந்து விவசாயமின்றி தரிசாகக் கிடக்கும் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் அடிமாட்டு விலைக்குத் தாரை வார்த்து வருகிறார். கிராமப்புற ஏழை, நடுத்தர விவசாயிகள் கூலி வேலைகளைத் தேடி நகரங்களுக்கு அலைகிறார்கள். ஏதுமற்றவர்கள் நகரங்களின் சந்து பொந்துகள் தெருவோரங்களில் வாழ்வதற்கு இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் கூட குடிநீர், சாக்கடை, சாலைப் போக்கு வரத்து, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கின்றன. நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்ட சூழலில் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஏராளமான கிராமங்கள் தள்ளப்பட்டுள்ளன. நீர்வளம் இருக்கும் பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் 1000 அடிக்கும் மேல் ஆழ் துளைக் கிணறுகள் தோண்டி நீரை உறிஞ்சி அந்த கிராமங்களுக்கே விற்கின்றன. காசுள்ளவர்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. மற்றவர்கள் வேறுவழியில்லாமல் பாதுகாப்பற்ற குடி நீரைக் குடித்து நோய்க்கு ஆளாகி உயிரிழக்க நேரிடுகிறது.

மதுரை – திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் வைகை நதியின் வடகரையில் அமைந்துள்ளது சடையம்பட்டி கிராமம். மட்டப்பாறை ஊராட்சியைச் சேர்ந்த இந்த கிராமத்தின் பிரதான தொழில் விவசாயம், கால்நடை வளர்ப்பு. ஆனால் தற்போது இரண்டுமே சுருங்கிவிட்டது. 300 குடும்பங்கள், 1000 பேருக்கும் மேல் ஜனத்தொகை கொண்ட இந்த கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக விஷக்காய்ச்சல் பரவி 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண், குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர். இன்று வரை காய்ச்சல் கட்டுப்படுத்தப்படவில்லை. நாள்தோறும் 10-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இது என்ன வகையான காய்ச்சல்? ஏன் வந்தது? எதனால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை அறிந்து கொள்வதற்காக மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை கிளையைச் சார்ந்த வழக்கறிஞர்கள் உட்பட 5 பேர் கொண்ட குழு சடையம்பட்டி ஊருக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது. அங்கே முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினை சந்தித்துக் கேட்டபோது “குடிதண்ணீரில் சாக்கடை (Fecal Matters) கலந்து இருப்பதனால் தான் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். மேலும்,”இந்த ஊரில் கால்நடைகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன. அதனுடைய கழிவுகள் முறையாக அகற்றப்படவில்லை. அதுவும் தண்ணீரில் கலந்துள்ளதாகத் தெரிகிறது” என்று கூறியதோடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தண்ணீரை சோதனை செய்து பெறப்பட்ட சான்றிதழைக் காட்டினார்கள். அதில் “குடிப்பதற்கு உகந்த தண்ணீர். ஆனால் கழிவுகள் கலந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. (pH 7.73, Potassium K 30, Fecal Coliform 40 / 100 ml).

மருத்துவர்களிடம் மக்கள் கேட்ட கேள்வி : “ஏராளமான கால்நடைகள் இருந்த காலத்தில் எந்த பிரச்சனையும் வந்ததில்லை இப்போது பாதியாக குறைந்துவிட்டபோது மட்டும் எப்படி வரும் ?”

இதற்கு மருத்துவக் குழுவினர் “பதில்சொல்ல முடியாது” என்றனர்.

“என்ன வகையான காய்ச்சல்” என்று கேட்டபோது

“இங்கே 7 வகையான காய்ச்சல் இருக்கிறது” என்று கூறினார் மாவட்ட சுகாதாரத் துறையின் இணை இயக்குநர் அப்துல்பாரி. “டெங்கு, சிக்குன் குனியா, எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) டைபாய்டு, மலேரியா மற்றும் இனம் தெரியாத வைரஸ் காய்ச்சல். பலரிடம் ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்காக மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னமும் ஆய்வு முடிவு வரவில்லை” என்று சொன்னார்.

“என்ன மருந்து கொடுக்கிறீர்கள்?”

“ஆன்டி பயாட்டிக் மற்றும் பாராசிட்டமால் மருந்துகள் தான் கொடுக்கிறோம். காய்ச்சல் அதிகமானால் வாடிப்பட்டி, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைகளுக்கு அனுப்புகிறோம்.”

“குடி தண்ணீரில் சாக்கடை கலந்துள்ளதே அதைத் தடுக்க என்ன செய்துள்ளனர்.”

“அது எங்களுடைய வேலை அல்ல. மாவட்ட நிர்வாகம் செய்யவேண்டிய வேலை” என்று சொல்லி கழன்று கொண்டனர் மருத்துவர்கள்.

தண்ணீரில் ஏராளமான பிளீச்சிங் (குளோரின்) பவுடரைப் போட்டு எங்குபோனாலும் குளோரின் நாற்றம். பகல் நேரத்தில் கொசுவை விரட்ட புகை அடித்துக் கொண்டிருந்தார்கள். (தீவிர நடவடிக்கையாம் !)

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

8.3.14 அன்று காய்ச்சலில் காட்டுராஜா என்ற 32 வயது இளைஞர் இறந்து விட்டார். அவரது உடலை அவசர அவசரமாக அப்புறப்படுத்திய அதிகாரிகள் போலீசு துணையுடன் எரித்து விட்டனர். அவருக்கு அளித்த சிகிச்சை பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கவில்லை. இறப்புச் சான்றிதழில் பழைய காசநோய் (old TB) என்று குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் அவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்ததாகவும் முகாம் மருத்துவர்கள் கூறினர்.

காட்டுராஜாவின் வீட்டில் போய் விசாரித்த போது, “அவருக்கு எந்த நோயும் இல்லை, காய்ச்சல் தான் இருந்தது. வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே நர்ஸ் 2 ஊசி போட்டார். ஊசிபோட்ட கொஞ்ச நேரத்தில் உடம்பெல்லாம் பொக்களம் பொக்களாமக ஏற்பட்டது. அவருக்கு அம்மை நோய் வந்து இருப்பதாகக் கூறி வீட்டுக்கு டாக்டர் அனுப்பிவிட்டார். வீட்டுக்கு வந்தபின் மீண்டும் காய்ச்சலும், உடல் நடுக்கமும் ஏற்பட்டது. மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அவன் இறந்து விட்டான்” என்று அவரது அண்ணன் அலெக்சாண்டர் தெரிவித்தார். காட்டுராஜாவுக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாகவம் உள்ளார். இனி அவர்களுக்கு யார் துணை?

காட்டுராஜா
காட்டுராஜா

பென்சிலின் மருந்து முதலில் சிறிதளவு செலுத்தி சோதித்துப் பார்த்து, உடல் ஏற்றுக் கொண்டால்தான் முழுவதும் செலுத்த வேண்டும் என்பது ஆங்கில மருத்துவத்தில் அரிச்சுவடி. அவ்வாறு செய்யாமல் “இரண்டு ஊசி” போட்டதால் அவர் ஒவ்வாமை ஏற்பட்டு இறந்திருக்கிறார். இந்த உண்மையை மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட மக்கள் விரோதக் கூட்டம் ஒரே குரலில் மூடி மறைக்கிறது. ஏழை என்றால் கிள்ளு கீரை அவர்களுக்கு.

திங்கள் கிழமை 10.3.14 அன்று சடையம்பட்டி கிராமமக்கள் 150 பேர் ஆண் பெண் குழந்தைகள் உட்பட 50 கி.மீ. கொதிக்கும் வெயிலில் சரக்கு லாரியில் போய் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்தை சந்தித்த போது அவர் எடுத்த எடுப்பிலேயே, “100 பேர் கூட சாகுங்க. எனக்கென்ன? என்ன வருதுன்னு அப்புறம் பாப்போம்” என்று திமிராகப் பேசி மிரட்டி விட்டு அப்புறம் அ.தி.முக. கொ.ப.செ மாதிரி “அம்மா அத்தனை கோடி கொடுத்துச்சு ; இத்தனை கோடி கொடுத்துச்சு ; என்ன கேக்குறோமோ அதெல்லாம் கொடுக்குது” என்று சொல்லி, அம்மா புராணம் பாடினார்.

“சடையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ஒரு பெண். அவர்தான் இவற்றுக்கெல்லாம் காரணம். நீண்ட காலமாக குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது என்று நாங்கள் புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. அவர் மீது கொடுத்த புகாரை அரசு அதிகாரிகள் குப்பையில் போட்டு விட்டனர்” என்று மக்கள் சொன்னபோது,

“ஊராட்சி தலைவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. அதற்கெல்லாம் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. உங்க இஷ்டத்துக்கு எல்லாம் நடவடிக்கை எடுக்கமுடியாது” என்று சொன்னார் அந்த அம்மா விசுவாசி ஆட்சித் தலைவர்.

கைபேசியில் யாரிடமோ சொல்லும் போது காட்டுராஜா எலிக்காய்சலில் இறந்து விட்டதாக சொன்னார். மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்தைப் பற்றி சொல்லும் போது அவன் இவன் என்று ஏகவசனத்தில் பேசினார் அந்த அண்ணா திமுக கலெக்டர். அமைச்சர்களை டம்மியாக்கிவிட்டு அதிகாரவர்க்கத்தை இப்படிதான் ஊட்டி வளர்க்கிறார் அம்மா.

பாண்டியம்மாள்
பாண்டியம்மாள்

அதற்குப் பிறகு 14.3.14 அன்று 60 வயதான பாண்டியம்மாள் என்பவர் இந்தக் காய்ச்சலுக்கு பலியானார். அவரது உடலை பிணக் கூற்றாய்வு செய்து சாவுக்கு என்ன காரணம் என்பதை சொன்னால் தான் உடலை வாங்குவோம் என்று போராட்டம் நடத்தினோம். இறந்தவர்களுக்கு தலா ரூ 5 லட்சம் இழப்பீடு, தரமான சிகிச்சை, தரமான குடிநீர், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், உடனடியாக காய்சலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்.

நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் காலை 10 மணிக்கெல்லாம் போஸ்ட் மார்ட்டம் முடித்து விட்டு, உடலை வாங்கச் சொல்லி நெருக்குதல் கொடுத்தது அதிகார வர்க்கம். மக்கள் விடாப்பிடியாகப் போராடியதால் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல் துணைகண்காணிப்பாளர் ஆகியோர் வந்தனர்.

“மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி கோட்டாட்சியர் போன்ற பொறுப்பானவர் வந்து பதில் சொல்ல வேண்டும்” என்று போராடினோம்.

“எல்லோரும் தேர்தல் பணியில் உள்ளனர். உடனடியாக வரமுடியாது” என்றார் டி.எஸ்.பி. கருப்பையா.

“மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். 1½ மதத்துக்குப்பின் வரும் தேர்தலுக்கு இப்போதே என்ன அவசரம்” என்று கேட்டபின் வருவாய் கோட்டாட்சியர், இறந்த பாண்டியம்மாளின் மகன் ஜெயபாண்டியிடம் செல்போனில் பேசினார். இழப்பீடு உள்பட எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருகிறேன் என்று சொன்னதோடு அதிகாரிகளையும் உடன் அனுப்பி பணிகளைத் துரிதப் படுத்துவதாகச் சொன்னார். அதன் பின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு சடையம்பட்டியில் எரியூட்டப்பட்டது. அதிகாரவர்க்கம் மக்களுக்கு பதில்சொல்ல வேண்டிய கட்டாயத்தை சந்திக்கும் போதெல்லாம் கூடியவரை பொய்யான நம்பிக்கைகளை நைச்சியமாக ஏற்படுத்தி போராடுகிறவர்களில் பலவீனமானவர்களைக் குறிவைத்து தனிமைப்படுத்தி அப்போதைக்கு காரியத்தை சாதித்துக் கொள்கிறது. அதற்கு இந்த சம்பவம் நல்ல எடுத்துக்காட்டு.

இன்னமும் மருத்துவமனைகளில் குழந்தைகள் பெண்கள் பெரியவர் என்று 60க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். எந்த நிமிடம் யாருக்கு என்ன நடக்குமோ என்று தெரியவில்லை. இத்தனைக்கும் ஊர்மக்களின் பெரும்பான்மை ஒன்றிணைந்து போராடியும் பெரியவிளைவுகள் ஏற்படவில்லை. பஞ்சாயத்து தலைவி அதே ஊரில் தான் இருக்கிறார். ஆனால் அவர் மருத்துவமனையில் யாரையும் வந்து பார்க்கவில்லை. இறந்தவர்களின் வீடுகளில் துக்கமும் விசாரிக்கவில்லை. பகலில் ஊரைவிட்டு வெளியேறுகிறவர் இரவில் ரகசியமாக வருகிறார்.

சடையம்பட்டி ஊரில் காங்கிரஸ்காரர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊர் பெரியவர்கள், முன்பு அமைச்சர் கக்கனுடன் நெருக்கமாக இருந்துள்ளனர். தற்போது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஊராட்சி தலைவர் சாந்தா வெற்றி பெற்று பதவியிலுள்ளார். அவர் தான் இத்தனைக்கும் காரணம். அவரைக்கைது செய்யவேண்டும் என்று காவல் துறையிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் மக்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் அவர் அதிமுக மந்திரி நத்தம் விஸ்வநாதனை சந்தித்து அதிமுகவில் சேர்ந்து விட்டதாக (காட்டுராஜா இறந்த அன்று) மக்கள் தெரிவித்தனர்.

நிலக்கோட்டை தனித்தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் வேட்பாளர் ராமசாமி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது அவர் அம்மாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். ஓட்டுப் போட்டுவிட்டு இன்று செத்துப்பிழைத்துக் கொண்டிருக்கும் தன் மக்களை அவர் இதுவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தேர்தல் நேரத்தில் கூட எந்த ஓட்டுக்களவாணியும் வரவில்லை. இப்படிபட்டவர்களுக்கு சரியான பாடம் புகட்ட இளைஞர்கள் தயாராகின்றனர்.

18 ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமத்தில் வேகமதி என்ற மருந்து கம்பெனி சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பாதித்தது. மக்கள் கடுமையாகப் போராடி அந்த கம்பேனியை விரட்டியடித்தனர். ஊருக்கு அருகாமையிலேயே வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லப் படுகிறது. அதிலிருந்து தங்களுடைய கிராமத்திற்கு தண்ணீர் தரும்படி வெகுகாலமாக மக்கள் கேட்டு வருகின்றனர். அல்லது வைகையாற்றுப் படுகையில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கும்படியும் கேட்டு வருகின்றனர். ஆனால் இந்தக் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் உள்ளது. மக்கள் சாக்கடை நீரை குடிப்பது பற்றி எந்தக் கோமானுக்கும் கவலையில்லை.

பாண்டியம்மாள் உடல் எரியூட்டப்பட்டபோது மயானத்தில் இரங்கல் கூட்டம் நடத்தி அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மஉபா மைய மதுரை மாவட்ட செயலாளர் இரங்கல் உரையாற்றிய போது, “கிராமங்கள் புறக்கணிக்கப்படுவதை தடுத்து நிறுத்த ஒரே வழி மக்கள் ஓட்டுக்கட்சிகளை நம்பாமல் மக்களுக்காகப் போராடும் இயக்கங்களுடன் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும். போராட்டம் ஒன்றே தீர்வு” என்று பேசினார். இளைஞர்கள் பலர் மஉபா மையத்தோடு இணைந்து போராட முன்வந்துள்ளனர்.

இது தொடர்பாக, இழப்பீடு, முறையான சிகிச்சை, அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் மாற்று குடிநீர் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ரிட்மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீது உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம், திண்டுக்கல் அரசு மருத்துவமனை டீன் கிராமத்தில் ஆய்வு செய்து காய்ச்சல் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க பணித்துள்ளது.

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மதுரை மாவட்டக்கிளை

மேலும் படிக்க

பகத்சிங் நினைவு நாளில் புஜதொமு பொதுக்கூட்டம்

1

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் நினைவு நாளில் பொதுக்கூட்டம்

ndlf-meetநாள் : 23.3.2014
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : அம்பத்தூர் O.T பேருந்து நிலையம்

நிகழ்ச்சி நிரல்

தலைமை
தோழர் அ. முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு – தமிழ்நாடு

வரவேற்புரை
தோழர் மு. முகிலன், செயலாளர், பு.ஜ.தொ.மு – ஆவடி அம்பத்தூர் பகுதிக்குழு

உரையாற்றுவோர்

  • தோழர் சுப. தங்கராசு, பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு – தமிழ்நாடு
  • தோழர் சு. பரசுராமன், மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு – கிருஷ்ணகிரி
  • தோழர் விளவை. இராமசாமி, மாவட்டச் செயலாளர், பு.ஜ.தொ.மு – கோவை
  • தோழர் இரா. லோகநாதன், பு.ஜ.தொ.மு. – புதுச்சேரி
  • தோழர் நாகராஜன், மாவட்ட அமைப்பாளர், பு.ஜ.தொ.மு – சிவகங்கை
  • தோழர் சொ. செல்வகுமார், மாவட்டச் செயலாளர், பு.ஜ.தொ.மு – திருவள்ளூர்
  • தோழர் ஆ.கா. சிவா, மாவட்டச் செயலாளர், பு.ஜ.தொ.மு – காஞ்சிபுரம்

நன்றியுரை
தோழர் ம. சரவணன்,
தலைவர் பு.ஜ.தொ.மு – ஆவடி – அம்பத்தூர் பகுதிக்குழு

ம.க.இ.க. மைய கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி

______________________________

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

தங்களது மூலதனப் பெருக்கத்துக்காக இலாபவெறியோடு தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகள், இயற்கைச் செல்வங்களையும் சூறையாடுகின்றனர். இதனால் இயற்கையின் பேரழிவுக்கும், மனித குலத்தின் நாசத்துக்கும் முதலாளி வர்க்கம் காரணமாக இருக்கிறது.

எத்தனை கோடி மனிதர்களது பிணத்தின் மீது முதலாளித்துவம் கட்டப்பட்டதோ, அதைவிட பன்மடங்கு மரங்களையும், ஏனைய உயிர்களையும் அழித்துள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பு இல்லை என்றால் முதலாளித்துவத்தின் ஏற்றம் இல்லை. அதேபோல் இயற்கைச் செல்வங்களின் அழிவில்தான் முதலாளி வர்க்கத்தின் செல்வச் செழிப்பு கொட்டிக் கிடக்கிறது.

இரும்பைத் தேட மலைகளைக் குடைந்த முதலாளித்துவம், மலைகளைக் குடையவும், இரும்பை உருக்கவும் தொழிலாளி வர்க்கத்தை கடைந்து பிழிந்தது. நிலக்கரியைத் தோண்ட மண்ணைப் பிளந்த முதலாளி வர்க்கம் கரியோடு கரியாக தொழிலாளி வர்க்கத்தை எரித்துதான் போக்குவரத்தையும், மின்சாரத்தையும் உருவாக்கிக் கொண்டது. பிரம்மாண்ட கட்டிடங்களைக் கட்டிய முதலாளித்துவம் அதனது அடித்தளத்தில் தொழிலாளி வர்க்கத்தையும், அது பிளந்த மலைகளையும்தான் தூண்களாக நிறுத்திக் கொண்டுள்ளது. ஆலைகளுக்காக காடுகளையும், பலகோடி மரங்களையும் காவு கொடுத்த முதலாளி வர்க்கம், மழை வளத்தையும் பலியிட்டு விட்டது. இவர்களது பேராசையால் அள்ள அள்ளக் குறையாத மீன்வளம் வறண்டு போனதுடன், கடல் தாயும் சுனாமியாய் சீற்றம் கொண்டாள்.

தொழில்மயமாக்கம் என்கிற பெயரில் முதலாளி வர்க்கம் ஏற்படுத்திய பேரழிவுகள் இன்னும் பல தலைமுறைக்கு பிடித்தாட்டப் போகிறது. பொருளாதாரச் சுரண்டலை விட பலமடங்கு கொடூரமான விளைவுகளை சுற்றுச்சூழல் சீர்குலைவுகள் ஏற்படுத்தி வருகின்றன. உணவுப் பஞ்சம், குடிநீர்ப் பஞ்சம், பட்டினிச் சாவுகள், அடுத்தடுத்து வறட்சி – பெருமழை, கொள்ளை நோய்கள், கிரிமினல் குற்றங்கள், சமூக சீர்கேடுகள் அனைத்துக்கும் முதலாளித்துவமே காரணம்.

நவீன விவசாயம் என்கிற பெயரில் இரசாயன உரங்களைக் கொட்டி மண்ணை நஞ்சாக்கியது, முதலாளி வர்க்கம். பின்னர், பணப்பயிர் உற்பத்தியைத் திணித்து விவசாயியை போண்டியாக்கி விவசாயத்தை விட்டே விரட்டி வருகிறது. தொழில்மயமாக்கம், நகரமயமாக்கம் என்றெல்லாம் கதைவிட்டு விளைநிலங்களை வீட்டு மனைகளாக்கியது. ஒரு வருடம் பெருவெள்ளமும், அடுத்த வருடம் பருவமழை பொய்த்ததால் வறட்சியும் வந்து எஞ்சிய விவசாயிகளை படுகுழிக்குத் தள்ளிவிட்டது. உணவு உற்பத்தியை நாசப்படுத்திய முதலாளித்துவம், இயற்கைக்கு மாறான உணவுப் பழக்கத்தையும், டப்பா உணவையும் திணித்து மனிதகுலத்தை நோயாளியாக்கி விட்டது. தங்களது நாட்டு விவசாய நிலங்களை நாசமாக்கிவிட்டு ஆப்பிரிக்க நாட்டில் நிலங்களை வாங்கிக் குவித்து விவசாயம் செய்கின்றன, பன்னாட்டு வேளாண் கார்ப்பரேட் நிறுவனங்களும், சவூதி அரேபியா, சீனா போன்ற நாடுகளும். கார், டிவி போல உணவுப் பொருளும் உலகம் சுற்றத் தொடங்கி விட்டது.

ஆலைகள் கக்குகின்ற புகைகள், பிரம்மாண்ட ஏ.சி எந்திரங்கள் துப்புகின்ற நச்சுவாயுக்கள், இடைவிடாது ஓடும் வாகனங்கள் உமிழ்கின்ற கரிப்புகை இவையனைத்தும் முழு வான்மண்டலத்தையே விசமாக்கி விட்டது. சுவாசிக்கும் காற்றை நஞ்சாக்கியதுடன் இந்த பூமியைக் காத்து வந்த ஓசோன் மண்டலத்தை ஓட்டையாக்கி விட்டது. இதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து, பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்துள்ளது. சுனாமிகளைக் கொண்டுவந்த புண்ணியவான்கள் முதலாளிகளே! கடந்த சூன் மாதத்தில் இமயத்தில் பெருமழை பெய்து, ‘இமயத்து சுனாமி’யை ஏற்படுத்தி, பல்லாயிரம் உயிர்களை பலி கொண்டதற்கும் முதலாளிகளே காரணம்.

ரகரகமான புற்றுநோய்கள், இருதய நோய்கள், சிறுநீரக நோய்கள், நரம்பியல் பிரச்சனைகள், விதவிதமான தோல் நோய்கள், பன்றி – பறவை காய்ச்சல்கள், சுவாச நோய்கள் ஆகிய அனைத்தும் சுற்றுச் சூழல் நாசமானதால் வந்தவைதான். இதன் காரணகர்த்தாக்களே முதலாளிகள்தான். இந்த பேரழிவுகளை பணமாக்குவர்களும் முதலாளிகள்தான். இது மட்டுமின்றி, இதன் தொடர்ச்சியாய் நடக்கின்ற விலைவாசி உயர்விலும் லாபம் குவிப்பவர்கள் முதலாளிகள்தான். உழைக்கும் மக்களோ தனியாரிடம் மருத்துவம் பார்த்தே கடனாளியாகி செத்து மடிகின்றனர். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். 11 லட்சம் பேர் புதிதாக புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் மருத்துவ செலவுக்காக 4 கோடி பேர் கடனாளியாகின்றனர். இந்த கடனிலும் லாபம் பார்ப்பது, முதலாளிகள்தான்.

திடீர் திடீரென வனவிலங்குகள் மனிதக் குடியிருப்பில் புகுந்து மனிதர்களை கொல்லுகின்றன. விளைபயிர்களை நாசமாக்குகின்றன. இதற்கு என்ன காரணம்? நாம் சிறுவயதில் பார்த்து ரசித்த சிட்டுக் குருவியும், மைனாவும் ஏனைய பல நூறு சிற்றுயிரினங்களும் காணாமல் போய்விட்டனவே! இதற்கு யார் காரணம்? காடு அழிப்பினால் வனவிலங்குகள், மனிதர்களது எதிரியானதற்கும், பல சிற்றினங்கள் அழிந்து போனதற்கும் முதலாளித்துவம்தான் காரணம்.

இந்த பேரழிவு கும்பலோ தங்களது திறமையால்தான் லாபம் கொட்டுவதாக பித்தலாட்டம் செய்கின்றனர். தொழிலாளி வர்க்கத்தை அற்ப கூலி கொடுத்தும், வேலை நிரந்தரம் மறுத்தும் சுரண்டுகின்ற இந்த படுபாவிகள், ஆண்டொன்றுக்கு பல கோடிகளை சம்பளமாக திருடிக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, சன் டி.வி.யின் நிர்வாக இயக்குநர் என்கிற பெயரில் கலாநிதி மாறனும், அவரது மனைவியும் ஆண்டொன்றுக்கு தலா 56.2 கோடி ரூபாய் சம்பளத்தை வாங்கிக் கொண்டனர். ஜிண்டால் குழுமத்தின் தலைமை நிர்வாகிக்கு ரூ 54.98 கோடிகளும், பிர்லா குழுமத்தின் குமாரமங்கலம் பிர்லாவுக்கு ரூ 40.62 கோடிகளும் வருடாந்திர ஊதியமாகத் தரப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, ஏனைய செலவுகளும், ஊக்கத் தொகையும் தனியே தரப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் தங்களுடைய உழைப்புச் சக்தியில் உருவாக்கிய மதிப்பில் அற்ப பங்கை மட்டுமே கூலியாகப் பெறுகின்றனர். முதலாளிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளும்தான் 90% தொகையை சுருட்டிகின்றனர். உற்பத்தியின் எல்லா பிரிவுகளையும் அவுட்சோர்சிங் என்கிற வடிவத்தில் வெளியாட்களுக்குப் பிரித்துக் கொடுத்தும், நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டியும் லாபத்தை பன்மடங்கு பெருக்கிக் கொள்கின்றனர்.

நமது பூமிக்கே பாரமாக இருக்கின்ற முதலாளிகளுக்கு இந்த அரசுதான் வரிச்சலுகைகள், மானியங்கள், வட்டியில்லாக் கடன்கள் போன்ற எண்ணற்ற பொருளாதார உதவிகளோடு, போலீசு மூலம் முதலாளிகளுக்கு அடியாள் வேலையும் பார்க்கிறது. உளவு காமிராக்கள், உளவுத்துறை போலீசு, வாடகைக்கு குடியிருப்போர் போலீசில் கட்டாயமாக பதிவு செய்வது, ஆதார் அடையாள அட்டை போன்ற வழிகளில் ஆளும் வர்க்கத்துக்கு அடியாள் வேலை செய்கிறது, அரசு. ஏனென்றால் இது முதலாளிகளுக்கான அரசு! நம்மை ஒடுக்குவதற்கான அரசு.

தொழிலாளி வர்க்கமோ நிரந்தர தொழிலாளி – ஒப்பந்தத் தொழிலாளி – பயிற்சித் தொழிலாளி என்று பிளவுபட்டுள்ளது. அவுட்-சோர்சிங் என்கிற நவீன கொத்தடிமை முறையில், தான் யாருக்காக உழைக்கிறோம் என்பதை அறியாமலேயே எந்திரம்போல உழைக்கிறான், தொழிலாளி. வெந்த சோற்றைத் தின்றுவிட்டு, விதி வந்தால் சாவதா தொழிலாளி வர்க்கத்தின் பெருமை? நம்முடைய எதிரிதான் இந்த புவிப்பரப்புக்கே எதிரி என்பதை உணர்வோம். இயற்கைக்கும், மனித குலத்துக்கும் நாசம் விளைவிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம் வாருங்கள். அதற்கு ஓரணியாய், ஓர் அமைப்பாய் திரள்வோம்!

தொடர்புக்கு:
அ. முகுந்தன்,
110, 2-வது மாடி,
மாநகராட்சி வணிக வளாகம்,
63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை- 24
போன் நம்பர்: 9444834519

தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

ஸ்பின்னிங் போரிஸ்: தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி ?

2

லகம் முழுவதும் சென்று தீவிரவாதிகளை ஒழிப்பது யார்? காட்டுமிராண்டி மக்களுக்கு கலாச்சாரத்தை கற்றுத் தர போராடுவது யார்? சர்வாதிகாரிகளிடமிருந்து நாட்டைக் கைப்பற்றி ஜனநாயகம் தழைக்க உதவுவது யார்? சந்தேகமின்றி அவர்கள்தான் ஹாலிவுட் ஹீரோக்கள். மேலும் பூமியையும் தாண்டி அண்ட சராசரங்களில் உள்ள வேற்று கிரகவாசிகள், விண்கற்கள் முதல் சாத்தான் வரை பல ஆபத்துகளில் இருந்து அமெரிக்க மக்களை மட்டுமின்றி உலக மக்களையும் காப்பாற்றுவது என்ற அரும்பணிகளை, உலக அழகிகளின் சேவையுடனும், 3டி மற்றும் கிராபிக்ஸ் இன்னபிற நவீன தொழில் நுட்ப புரட்சியின் திறமையுடன் செய்து கொண்டிருக்கிறார்கள், இந்த ஹீரோக்கள்.

ஸ்பின்னிங் போரிஸ்
தமது சக ரசிய கூட்டாளிகளுக்கு ‘ஜனநாயகத்தை’ சரியாக நிர்வாகம் செய்ய சொல்லித் தருவதற்கு, அமெரிக்காவில் ‘ஜனநாயக’த்தை கலையாக சொல்லித் தரும், ‘ஸ்பின்னிங் டாக்டர்’ –களை பரிந்துரைக்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள்.

அமெரிக்காவின் ஜனநாயக ஏற்றுமதி போலவே, ஹாலிவுட் ஹீரோக்களின் உலக நாயகன் பிம்பமும் மோசடியானது. இரண்டின் நோக்கமும் “அமெரிக்கா இன்றி அமையாது இவ்வுலகு” என்பதை உலக மக்களின் மூளையில் அறுவை சிகிச்சை செய்தாவது நிறுவுவதே. அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு போலவே ஹாலிவுட்டின் கலாச்சார ஆக்கிரமிப்பும் அபாயகரமானது. எனினும் இரண்டையும் தொலைக்காட்சிகளின் ஹை டெபனிஷன் சேனலில் பார்த்து மயங்கும் பலரும் புரிந்து கொள்வதில்லை.

இந்த வரிசையில் வந்த ஹாலிவுட் படம் தான் ஸ்பாட்சிவுட் இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்பின்னிங் போரிஸ்’ (Spinning Boris) எனும் திரைப்படம். ரசியாவில் 1996-ம் ஆண்டு முதன் முதலாக நடந்த அமெரிக்க பாணி ‘ஜனநாயக’ தேர்தலில் அப்போதைய அதிபர் போரிஸ் எல்ட்சினை வெற்றி பெறச் செய்யும் பணியில் அமர்த்தப்பட்ட அமெரிக்க  நிபுணர்களது அனுபவங்களின் அடிப்படையிலான கதை தான் இந்தப் படம்.

1991-ம் ஆண்டு ரசியாவில் போலி-கம்யூனிச வீழ்ச்சிக்குப் பின்னர் சமூக ஏகாதிபத்தியமாக இருந்த சோவியத் யூனியன் தகர்ந்து போகிறது. அதிபர் போரிஸ் எல்ட்சின் ஆட்சியின் கீழ் ஜனநாயகத்தை இழுத்துக் கொண்டு வருவதற்காக முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. முதலாளித்துவ பாதை அமலுக்கு வந்த ஐந்து வருடங்களிலேயே அதன் சாதனைகள் வேதனையாக பல்லிளிக்க ஆரம்பித்திருந்தன. மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் தகர்க்கப்பட்டு பெரும்பான்மை மக்கள் கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டார்கள்.

போலி கம்யூனிச ஆட்சியில் இருந்த குறைந்த பட்ச தேவைகளைக் கொண்ட வாழ்க்கையும், பாதுகாப்பும் கூட இங்கே காணாமல் போயிருந்தது. அந்த ஆட்சியில் அதிகார வர்க்க முதலாளிகளாக இருந்த பலரும் முதலாளித்துவம் வந்த பின்னர் ஒரே ராத்திரியில் பெரும் முதலாளிகளாக மாறிப் போனார்கள். இத்தகைய திடீர் பணக்காரர்களும், முதலாளிகளும், மாஃபியா ரவுடிகளும் நாட்டின் பொருளாதாரத்தை கைப்பற்றியிருந்தார்கள். வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம் என்று முழு ரசியாவும் முதாளித்துவத்தின் விஷத்தாக்குதலில் அடி வாங்கியிருந்தது. எனவே இயல்பாக போரிஸ் எல்ட்சின் மேல், ரசிய மக்கள் கடும் அதிருப்தி அடைந்திருந்தார்கள்.

கென்னடி ஜுகானோவ்
ஜுகானோவும், ஆட்சியிழந்த போலிக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிதான்

இந்நிலையில் 1996-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதாவது ரசியாவின் முதல் ‘ஜனநாயக’ தேர்தலில் அதிபர் போரிஸ் எல்ட்சின் போட்டி இடுகிறார். இந்த தேர்தலில் எல்ட்சின் தோல்வி அடைந்து எதிர்த்து போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜுகானோவ் வெற்றி பெற்றால் தமது வணிக/குற்ற சாம்ராஜ்யத்தை இழக்க வேண்டி வரும்; எதிர்காலம் கேள்விக்குள்ளாகும்; வெளிநாட்டுக் கடன், மற்றும் முதலீடுகள் வராமல் போகும் என்று எல்ட்சின் பதவி இழப்பதை தடுக்க என்ன வழி என்று யோசிக்கிறார்கள், ரசிய முதலாளிகள்.

எனினும் இந்த ஜுகானோவும், ஆட்சியிழந்த போலிக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிதான். இந்தக் கட்சியின் ஆட்சியில்தான் இப்போது இருக்கும் முதலாளிகள் தந்திரமாக மறைந்திருந்தார்கள். இவர் ஆட்சிக்கு மீண்டு வந்தாலும் அது கம்யூனிசக் கட்சி ஆளும் முதலாளித்துவ ரசியா எனும் யதார்த்தத்தை மாற்றி விடாது. ஆகவே எல்சினை எதிர்ப்போரும், ஆதரிப்போரும் இரு பிரிவு முதலாளிகள்தான். இதில் எல்சின் ஆதரவு முதலாளிகள் வேகமாக முதலாளித்துவ சுரண்டல்களை அடைய நினைத்தார்கள் என்பது மட்டுமே இங்கே உள்ள வேறுபாடு.

இந்த திரைப்படம் இந்த உண்மையினைக் கூறாமல் ஜுகானோவை ஏதோ ஒரிஜினல் கம்யூனிஸ்டு போல கருதிக் கொண்டு எல்சினை காட்டுகிறது. அதன்படி இந்த தேர்தலை கம்யூனிசத்திற்கும் ‘ஜனநாயகத்திற்கும்’ நடக்கும் போட்டியாகவும் சித்தரிக்கிறது. ஜனநாயகம் என்றாலே அது முதலாளிகளுக்கான ஜனநாயகம் என்பது பலருக்கும் புரிபடாத விசயம் என்பதால் இந்த தவறான பார்வை எடுபடத்தான் செய்கிறது.

ஸ்பின் டாக்டர்கள்
‘ஜனநாயகம்’ அல்லது ஸ்பின் டாகடர் என்பது ரசியாவிற்கு புதிது. ஆனால் அமெரிக்காவில் அது அனைவரும் அறிந்த ஒன்று.

இப்பேற்பட்ட ஜனநாயகத்தின் பலனை ரசியா இதுவரை அறிந்திருக்கவில்லை என்பதால் ரசிய முதலாளிகள் எல்சினின் தேர்தல் வெற்றிக்காக தமது பங்காளிகளான அமெரிக்க முதலாளிகளை நாடுகிறார்கள். தமது சக ரசிய கூட்டாளிகளுக்கு ‘ஜனநாயகத்தை’ சரியாக நிர்வாகம் செய்ய சொல்லித் தருவதற்கு, அமெரிக்காவில் ‘ஜனநாயக’த்தை கலையாக சொல்லித் தரும், ‘ஸ்பின்னிங் டாக்டர்’ –களை பரிந்துரைக்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள்.

‘ஜனநாயகம்’ அல்லது ஸ்பின் டாகடர் என்பது ரசியாவிற்கு புதிது. ஆனால் அமெரிக்காவில் அது அனைவரும் அறிந்த ஒன்று. அவர்களின் பணி என்ன வென்றால்…

அதிபர் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் ஒருவரை வாடிக்கையாளராக வென்றெடுத்து தமக்கு தர வேண்டிய கட்டணத்தை பேரம் பேசி முடிவு செய்து ஒப்புதல் வாங்கியதிலிருந்து அவர்களது வேலை தொடங்குகிறது. தமது வாடிக்கையாளரான அதிபர் வேட்பாளர் என்ன உடை உடுத்த வேண்டும், எப்படி சிரிக்க வேண்டும், எப்பொழுது சிரிக்க வேண்டும், மக்கள் மத்தியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பிரச்சாரத்தின் போது குழந்தைகளை வாங்கி எப்படி கொஞ்ச வேண்டும் என்பது முதல் அந்த அதிபர் வேட்பாளருக்கான சொற்பொழிவுகள், கூட்டங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் ஏற்பாடு செய்வது வரை,  தங்களின் வாடிக்கையாளர் பற்றி நல்ல செய்திகள், நல்ல கட்டுரைகள் வர ஊடகங்களுக்கு கையூட்டு வழங்குவது, செயற்கையாக ‘வாழ்க’ போடும் கூட்டத்தை போகும் இடமெல்லாம் அனுப்புவது என்றும் திட்டமிட்டு அந்த வேட்பாளரை ரட்சகனாக காட்டி மக்கள் மத்தியில் வெற்றிகரமாக சந்தைப்படுத்த வேண்டும். இது தான் ஸ்பின்னிங் டாக்டர்களின் பணி. சுருக்கமாக அனைத்து நவீன மேலாண்மை தகிடுதத்தங்களையும் செய்து வேட்பாளரை வாக்காளர்களிடம் விற்க வேண்டும்.

ஜார்ஜ் புஷ்
ஜூனியர் புஷ் எனும் கோழி மாக்கான், எல்கேஜி குழந்தைகளுக்கு இருக்கும் பொது அறிவு கூட இல்லாத முட்டாளெல்லாம் அமெரிக்க அதிபராக உலா வந்ததன் காரணம் என்ன?

முதலாளித்துவ நாடுகளில் ஒரு சோப்பை எப்படி சந்தைப்படுத்துகிறார்களோ அதற்கும் அதிபர்களை வெற்றி பெறவைப்பதற்கும் பாரிய வேறுபாடு கிடையாது. சோப்பின் மணம் – அதிபரின் சிரிப்பு, சோப்பு உறையின் வண்ணம் – அதிபர் உடையின் நேர்த்தி, சோப்பின் விளம்பர வடிவமைப்பு – அதிபரின் புகைப்பட, செய்தி வடிவமைப்பு, சோப்பு குறித்த நுகர்வோரின் சாட்சியங்கள் – அதிபரின் வாழ்நாள் சாதனைகளை ஒப்பிக்கும் நபர்கள் என்று அப்படியே இது ஒரு சோப்புக் கம்பெனி விளம்பரம்தான்.

இதிலிருந்தே ஜனநாயகம் என்பது மக்களது உரிமைகள் குறித்து பேசப்படும் ஒன்றல்ல, மக்களை மயக்கும் முதலாளிகளின் மகுடி வித்தை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஜூனியர் புஷ் எனும் கோழி மாக்கான், எல்கேஜி குழந்தைகளுக்கு இருக்கும் பொது அறிவு கூட இல்லாத முட்டாளெல்லாம் அமெரிக்க அதிபர்களாக உலா வந்தது இப்படித்தான்.

அமெரிக்காவில் தமது போட்டி நிறுவனத்திடம் முக்கிய வாடிக்கையாளர் ஒருவரை இழந்து சோர்ந்து போயிருக்கும் ஜார்ஜ் கார்ட்டன், டிக் டிரெஸ்னர், ஜோ ஷூமே என்ற மூன்று ‘ஜனநாயக’ நிபுணர்களுக்கு “எல்ட்சினை வெற்றி பெற வைக்க வேண்டும், அதற்கு எவ்வளவு பணத்தையும் செலவு செய்ய முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள்” என்று அழைப்பு வருகிறது. 2.5லட்சம் டாலர் பணம் வாங்கிக் கொண்டு ஹீரோக்கள் ரசியாவில் வந்து இறங்குகிறார்கள்.

ஸ்பின் டாக்டர்கள்
எல்சினுக்காக ஒரு மாஃபியா தலைவர் அமெரிக்க ஸ்பின் டாக்டர்களை வேலை வாங்குகிறார்.

பொதுவில் அமெரிக்க திரைப்படங்களில் ரசியாவைக் காண்பித்தால் ஒரு பழைய பஞ்சாங்கமாகவும், போலிசு, இராணுவத்தின் நிழலில் வாழும் நாடு போலவும்தான் சித்தரிப்பார்கள். ரசியாவிற்கு ஜனநாயகம் தெரியாது என்பதை விளக்க புறப்பட்டிருக்கும் இப்படத்தில் இத்தகைய நுட்பமான காட்சிகளும், வசனங்களும் நிறைய இருக்கின்றன. ரசிக்க தெரிந்தவர்கள் படத்தை பார்த்து கண்டுபிடிக்க முயலலாம்.

ரசியாவில் முதலாளித்துவத்தின் சந்தேகத்துக்கிடமில்லாத ஆட்சியை ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் சுற்றும் மாஃபியா தலைவர், ஸ்பின் டாக்டர்களுக்கு விளக்குகிறார். அமெரிக்காவின் அதிபர் ஆட்சியை, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்தாலும், இராணுவம் சிஐஏ எல்லாம் நிலை பெற்றுவிட்டதால் மாஃபியா குழுக்களுக்கு முதலாளிகளை பாதுகாக்கும் வேலையோ தேவையோ இல்லை. ரசியாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பலர் முதலாளிகளாக  மாறியிருப்பதால் இத்தகைய மாஃபியா குழுக்களும் அவற்றின் தலைவர்களும் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். இப்படித்தான் இங்கே எல்சினுக்காக ஒரு மாஃபியா தலைவர் அமெரிக்க ஸ்பின் டாக்டர்களை வேலை வாங்குகிறார்.

அதிபர் எல்சின் இத்தகைய குறுக்கு வழிகளை விரும்பாத ‘ஜென்டில்மேன்’ என்பதால், ஸ்பின்னிங் டாகடர்களுக்கும் எல்ட்சினுக்கும் இடையே தொடர்பாளராகவும், அவர்களின் திட்டத்தை செயல்வடிவம் கொடுக்க உதவியாகவும் செயல்பட எல்ட்சினின் மகள் ஒத்துக் கொள்கிறார்.

டாட்டியானா
திரைப்படத்தில் எல்ட்சின் மகள் டாட்டியானா

இவர்கள் பணியை தொடங்கும் போது போரிஸ் எல்ட்சினின் வெற்றி வாய்ப்பு 6 சதவீதமாகவும், எதிர்க்கட்சியான போலி-கம்யுனிஸ்ட் வேட்பாளர் ஜுகானோவின் வெற்றி வாய்ப்பு 30 சதவீதமாகவும் இருக்கிறது. இந்த நிலைமையை மாற்றி எல்ட்சினை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் பணியை அந்த அமெரிக்கர்கள் சோப்புக் கம்பெனி தொழில்முறை பாணியுடன் மேற்கொள்கிறார்கள். ஆனால், ‘பாவப்பட்ட ரசிய மக்களுக்கு ஜனநாயகத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் தமது புனிதப் பணி’ என்று திரும்பத் திரும்பச் சொல்லுகிறார்கள். ஆனால் அந்தப் புனிதப்பணிக்கு ஊடகங்களையும், போட்டோக்களையும் மட்டும் சார்ந்திருக்கிறார்கள். என்னதான் புனிதமென்றாலும் அதை கடை விரிப்பது முக்கியமில்லையா?

இதற்காக பல்வேறு உத்திகளை செய்ய விரும்புகிறார்கள். ஆரம்பத்தில் முதல் சினிமாவில் நடிப்பதற்கு கூச்சப்படும் நாயகி போல அவற்றை செய்ய மறுக்கும், போரிஸ் எல்ட்சினை அவரது மகள் மூலம் படிப்படியாக தம் வழிக்கு திருப்பி, உண்மையான ‘ஜனநாயக’ தலைவராக வடித்தெடுக்கிறார்கள்.

போரில் எல்ட்சின்
போரில் எல்ட்சின்: குடித்து விட்டு ஆடுவதில் எல்ட்சின் பல நூறு விஜயகாந்துகளுக்கு சமம்.

குடித்து விட்டு ஆடுவதில் எல்ட்சின் பல நூறு விஜயகாந்துகளுக்கு சமம். இதனால் வரும் இமேஜை துடைக்க அவர் குடிப்பதற்கு முன் காலை வேளைகளில் பொது மக்களை சந்திக்கச் சொல்கிறார்கள். நள்ளிரவு வரை குடித்து விட்டு அடுத்த நாள் பகலில் தாமதமாக எழுந்திருக்கும் எல்சின் ஆரம்பத்தில் இந்த அதிகாலை நாடகத்திற்கு மறுக்கிறார். பின்னர் ரசியாவில் ஜனநாயகத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று இந்த தியாகத்திற்கு உடன்படுகிறார்.

இதே போல கடுகடு எல்ட்சினை சிரிக்கச் சொல்கிறார்கள். குழந்தைகளை வாங்கிக் கொஞ்சச் சொல்கிறார்கள், நடனமாட வைக்கிறார்கள். எல்ட்சினை பாரட்டி மக்கள் கூறுவதாக செயற்கை விளம்பரங்களை தொலைக்காட்சிகள் முதல் அனைத்து ஊடகங்களிலும் வெளி வரச் செய்கிறார்கள். எல்ட்சின் அடுத்த அதிபராக வந்தால் தான் ரசியா வளர்ச்சி அடையும் என மக்கள் கருதுவதாக செய்திகளை வெளியிட வைக்கிறார்கள். முதலில் இத்தகைய செட்டப் வேலைகளை எல்சின் எதிர்ப்பர் என்று மகள் கூறுகிறார். காரணம் அப்பாவிற்கு இத்தகைய நேர்மையற்ற, குறுக்கு வழிகள் பிடிக்காது என்கிறார். ஆனால் போரிஸ் எல்சின் என்பவர் ஜூனியர் புஷ்ஷுக்கு சமமான அறிவுடைய மகான் என்பதை இதே மேற்கத்திய உடகங்கள் புஷ்ஷை தவிர்த்து விட்டு எழுதியிருக்கின்றன. இங்கே படத்தில் கம்யூனிச அபாயத்திற்காக போரிசை ஒழுக்கவானாக காட்டுகிறார்கள். சிரிப்புத்தான் வருகிறது.

ஆனாலும் இந்த முயற்சிகள் எல்லாம் ரசிய மக்கள் மத்தியில் போதுமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தாததை கவனிக்கிறார்கள். எதிர்க்கட்சி வேட்பாளரை தாக்கி, எதிர்மறை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். ‘கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றால்….’ என்ற பயமுறுத்தும் தொலைக்காட்சி விளம்பரங்கள் தயாரிக்கப்பட வேண்டும். ‘பாபா (அப்பா எல்ட்சின்), அறத்தை கடைப்பிடிப்பவர்’ என்று சொல்லும் எல்ட்சினின் மகள் அதை நிராகரித்து விடுகிறாள்.

எல்ட்சின்-கோர்பசேவ்
கோர்பச்சேவ் காலத்தில் எல்ட்சினும் போலிக் கம்யூனிசக் கட்சியின் ஒரு முக்கிய பிரமுகராகவே இருந்தார்.

யார் இந்த எல்ட்சின்  என்ற கேள்வி இந்த அறப்பிரச்சினைக்கு விடையளிக்கும். கோர்பச்சேவ் காலத்தில் எல்ட்சினும் போலிக் கம்யூனிசக் கட்சியின் ஒரு முக்கிய பிரமுகராகவே இருந்தார். போலிக் கம்யூனிசக் கட்சி என்பதால் ரசியாவே ஆனாலும் அங்கே நமது காங்கிரசுக் கட்சிகளை விட கோஷ்டிகள் அதிகம். இங்கே இருக்கும் ஓட்டுக் கட்சிகளின் நாய்ச் சண்டைகள் உள்ளிட்ட இன்னபிற கலாச்சாரங்கள் அங்கேயும் உண்டு. என்ன அங்கே ஆளும் கட்சி, அதிகார வர்க்க கட்சி என்பதால் இங்கே இருப்பது போல அதிகம் வெளியே தெரியாது.

இப்படித்தான் கம்யூனிசக் கட்சியில் ஒரு கோஷ்டி தலைவராக இருந்த எல்ட்சின், போலி கம்யூனிசக் கட்சியின் அனைத்து தீமைகளையும் ஒருங்கே பெற்ற ஆளுமையான எல்ட்சின் ஒரு விபத்தின் மூலம் அதிபராகவும் பின்னர் அதிபர் தேர்தலிலும் போட்டியிடுகிறார். ரசியாவின் புதுத் திருட்டு முதலளிகள் இவரை தேர்ந்தெடுத்திலிருந்தே இவரது அறம் என்ன என்பதறியலாம். இப்போது எல்ட்சின் மகள் தனது அப்பாவின் அறம் பற்றி சீறுவது உங்களுக்கு எரிச்சலைத் தந்திருக்க வேண்டும்.

ரசிய தேர்தலில் எல்ட்சினின் செல்வாக்கு சரிவடைந்திருக்கிறது என்ற செய்தி அமெரிக்காவிலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பங்குச் சந்தையில் ரசியாவின் தனியார் எண்ணெய் நிறுவனமான லூகோவின் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைகிறது. தங்கள் சந்தைப்படுத்தல் முயற்சிகள் மூலம் எல்ட்சின் வெற்றி பெற்றால் லூகோ நிறுவன பங்கின் விலை மும்மடங்காகும் என கணிக்கிறார்கள் ஸ்பின்னிங் டாக்டர்கள். உடனடியாக, அதில் தங்கள் சேமிப்பை கணிசமான அளவு முதலீடு செய்கிறார்கள். அதாவது ரசியாவில் எல்ட்சின் வெற்றி பெற்று அமெரிக்க சந்தையில் லூகோவின் பங்குகள் அதிக விலை விற்றால் அதை வைத்திருக்கும் இந்த அமெரிக்க ஸ்பின்னிங் டாக்டர்கள் மில்லியனராகி விடுவார்கள். இப்போது எல்ட்சினின் வெற்றி ஸ்பின்னிங் டாக்டர்கள் லாட்டரி சீட்டில் வெற்றி பெறுவதற்கான காரணத்தை பெற்று விடுகிறது. இறுதியில் அமெரிக்க ஜனநாயகம் பங்கு சந்தை வளர்ச்சியில் மண்டியிடுகிறது என ஒரு கவித்துவ குறியீடாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

எல்ட்சின் - கிளின்டன்
அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் போரிஸ் எல்ட்சினுக்கு ஆதரவு தெரிவித்தால் இன்னும் சாதகமாக இருக்கும் – படத்துக்கு வெளியே சிஐஏ எழுதிய உண்மைக் கதை

ரசியாவின் ஜனநாயக வெற்றியில் தமது முன்னேற்றமும் அடங்கியிருக்கிறது என்பதால் ஸ்பின் டாக்டர்கள் தீயாய் வேலை செய்கிறார்கள். மூளையை கசக்கி பிழிந்து பொருளாதார சலுகைகளை பிரச்சாரமாக முன் வைக்கிறார்கள். ”உங்களின் குழந்தைகளின் எதிர் காலத்திற்காக எல்ட்சினுக்கு ஓட்டு போடுங்கள்” என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.

அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் போரிஸ் எல்ட்சினுக்கு ஆதரவு தெரிவித்தால் இன்னும் சாதகமாக இருக்கும் என வெள்ளை மாளிகையில் இவர்களுக்கு இருக்கும் தொடர்புகள் மூலம், கிளிண்டனை இவர்கள் எழுதிக் கொடுக்கும் உரையை வார்த்தை மாறாமல் படிக்க வைக்கிறார்கள். கிளிண்டன் எல்ட்சினின் புகழ் பாடுகிறார். ரசியாவின் வளர்ச்சி எல்ட்சினிடமும், மக்களிடமும் தான் இருக்கிறது என புகழுரைக்கிறார். கருத்துக் கணிப்பில் ஆதரவு வீதத்தில் எல்ட்சின் எதிர்க்கட்சி வேட்பாளரை எட்டிப் பிடிக்கிறார். இதெல்லாம் மூன்று ஸ்பின் டாக்டர்களின் தனிப்பட்ட திறமை என்று அவர்களும் படத்தை பார்ப்பவர்களும் நம்பினாலும் கூட சிஐஏ இதன் திரைக்கதையை எழுதி படம் எடுத்து விலைக்கும் விற்று விட்டதே வரலாறு. எனவே தற்போது எல்ட்சினின் வெற்றியில் அமெரிக்கா அரசின் நலனும் இருக்கிறது என்பதை படம் மறைமுகமாக சொல்கிறது.

போலிக் கம்யூனிசத்தை வீழ்த்துவதற்கே அமெரிக்கா இப்படி மெனக்கெட்டிருக்குமானால் உண்மையான கம்யூனிசத்தை வீழ்த்த என்னவெல்லாம் செய்திருக்கும்  என்பதை அமெரிக்க சொர்க்கத்திற்கு ஏங்கும் அடிமைகள்தான் பதில் சொல்ல வேண்டும்.

மாஃபியா
ரசிய தேர்தல் வெற்றி அமரிக்க பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க உதவுகிறது.

அமெரிக்க ‘ஜனநாயக’ நிபுணர்களின் உத்திகள் மக்கள் மத்தியில் எல்ட்சின் புகழை பரப்பினாலும், ஒரு வேளை வெற்றி பெறா விட்டால் என்ன நடக்கும் என்று ரசிய ஆளும் வர்க்கம் யோசிக்கிறது. அதன்படி தேர்தலை நிறுத்தி விடலாம் என மாஃபியா தலைவர்கள் மற்றும் முதலாளிகள் திட்டமிடுகிறார்கள். தேர்தல் நடந்தால் வெற்றி பெற முடியாது என்று எல்ட்சினுக்கு புரிய வைத்து அதை நிறுத்துவதுதான் ஸ்பின்னிங் டாக்டர்களின் பணி என்பதை தெளிவுபடுத்துகிறார்கள்.

இதில் ஸ்பின்னிங் டாக்டர்களுக்கு விருப்பம் இல்லை. அவர்களது சேமிப்பு பணம் அமெரிக்க பங்கு சந்தையில் முதலீடாக போடப்பட்டிருக்கிறது. தேர்தல் நடக்காவிட்டால் அது வீணாகும். ரசிய முதலாளிகளுக்கோ எல்ட்சின் வெற்றி பெறவில்லை என்றால் இருக்கும் தொழில் சாம்ராஜ்ஜியத்திற்கு குந்தகம் வரும். இப்படி அமெரிக்க முதலாளிகளும், ரசிய முதலாளிகளும் தத்தமது தரப்பில் யோசிக்கிறார்கள். இதுதான் ஜனநாயகத்தின் திண்டாட்டம்.

இந்நிலையில் எல்ட்சினுக்கு மாரடைப்பு ஏற்பட்டு நிலையற்ற சூழல் ரசியாவை சூழ்கிறது. இறுதியில் தங்கள் பங்குச் சந்தை முதலீட்டுக்கும், ரசியாவின் ‘ஜனநாயகத்துக்கும்’ வந்த பேராபத்துகளை உறுதியாக நின்று முறியடிக்கிறார்கள் அமெரிக்க ஹீரோக்கள்.

டைம் மேகசின்
தேர்தலில் அமெரிக்க ஸ்பின் டாக்டர்களின் வேலையைப் பற்றிய டைம் மேகசின் கட்டுரை.

எல்ட்சின் மீது விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லை, அது ஜிகொனோவிற்கு ஓட்டாக மாறலாம். ‘கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தைப் பிடித்தால், அவர்கள் பணக்காரர்களை தாக்கி சொத்துக்களை பிடுங்கி மக்களுக்கு வினியோகிப்பார்கள். பணக்காரர்கள் அதை எதிர்த்து ஆயுதம் தூக்குவார்கள்’ என்று விவசாயிகள் நினைப்பதாக ஸ்பின் டாக்டர்கள் ஏற்பாடு செய்யும் கிராமப் புற மக்கள் குழு விவாதத்தில் தெரிய வருகிறது. ஆனாலும் இந்த உண்மையை பொய்களால் மாற்ற நினைக்கிறது அமெரிக்க நிபுணர் படை.

எல்ட்சின் மீதான வெறுப்பை விட எதிர்க் கட்சி வேட்பாளர் மீதான பயம் அதிகமானால் மக்களை எல்ட்சினுக்கு ஆதரவாக திருப்பலாம் என்று வெற்றிகரமாக கணிக்கிறார்கள். இதிலும் அமெரிக்கர்கள் கொட்டை போட்டவர்கள். அப்போது கம்யூனிஸ்டுகள், இப்போது முசுலீம்கள் என பயத்தை வைத்தே அமெரிக்காவின் முதலாளித்துவ ஜனநாயகம் தனது படையெடுப்புகளையும் ஹாலிவுட் தயாரிப்புகளையும் நியாயப்படுத்துகிறது. மைக்கேல் மூரின் பவுலிங் ஃபார் கொலம்பன் எனும் ஆவணப்படம் இதை விரிவாகவும், ஆழமாகவும் சித்தரிக்கிறது, பாருங்கள்.

ஒரு வழியாக ‘கம்யூனிஸ்டுகள் கொலைகாரர்கள், ரத்த வெறி பிடித்தவர்கள், போர் வெறியர்கள் அவர்கள் மீண்டும் வந்தால் போர் வெடிக்கும்’ என அவதூறு பிரச்சாரத்தை விளம்பரங்களாக ஒளிபரப்ப எல்ட்சினின் ஒப்புதல் கிடைக்கிறது. இதே கட்சியில்தான் எல்ட்சினும் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார் என்ற செய்தியையெல்லாம் இந்த விளம்பரம் மாற்றிவிடுமென்றால் விளம்பரங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் அளிக்கும் செய்திகளை மட்டும் தெரிந்து வாழும் அமெரிக்க மக்களின் கதியை யோசித்து பாருங்கள்.

தேர்தல் நாளில் எல்ட்சின் வெற்றி பெறுகிறார். ஸ்பின் டாக்டர்கள் ரசியாவில் ஜனநாயகத்தை மலர வைத்த திருப்தியுடனும் கணிசமான சொந்த ஆதாயத்துடனும் விடை பெறுகிறார்கள்.

இந்தப்படம் நமக்கு சில விடயங்களை உறுதியாக காட்டுகிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தில் மக்களின் ஆதரவை தீர்மானிப்பது லாபியிஸ்டுகளின் திறமையும், முதலாளிகள் அளிக்கும் நிதியும்தான். உலகின் மூத்த ஜனநாயகமான அமெரிக்காவிலிருந்து இந்த ஸ்பின் டாக்டர்கள் ரசியா போன்ற நாடுகளில் மட்டுமின்றி, உலக மயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவிலும் தமது சேவையை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஊதி பெருக்கப்படும் பலூன் நரேந்திர மோடியின் ஹை-டெசிபல் பிரச்சாரங்களுக்கு பின்னால் அமெரிக்க சந்தைப்படுத்தும் நிறுவனமான ஆப்கோ வேர்ல்ட் வைட் உள்ளது என்ற வகையில் இந்தப் படம் நமக்கு இன்னும் நெருக்கமாகிறது.

டாட்டியானா - எல்ட்சின்
எல்ட்சின் மகள் டாட்டியானாவுடன்

அமெரிக்கர்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தை கருத்து சுதந்திரம் மிக்கது, முன்னேறியது என பிரச்சாரம் செய்கிறார்கள். படத்தின் நடுவே, ‘ரசியாவில் தேர்தல் ரத்து கூட செய்யப்படலாம்’ என்பதை கேலி செய்கிறார்கள். ‘இது ஜனநாயகம் இல்லை, ரசிய மக்கள் அமெரிக்காவைப் போல உண்மையான ஜனநாயகத்தை ருசிக்க வேண்டும்’ என்கிறார்கள். ஆனால் அந்த உண்மையான ஜனநாயகத்தின் யோக்கியதையை படமெடுக்க இப்போது கம்யூனிச முகாம் எதுவும் உலகில் இல்லை.

படத்தின் துணை தலைப்பு, “ரசியாவின் அதிபர் தேர்தல், அமெரிக்க வழியில்” என கூறுகிறது. உண்மையாகவே பெரும் பகுதி படம் அமெரிக்க ஸ்பின் டாக்டர்களின் தேர்தல் பரப்புரை முறைகளை நகைச்சுவையாகத் தான் சித்திரிக்கிறது. அதே நேரம் அந்த நகைச்சுவை தனிப்பட்ட தலைவர்கள், ஆளுமைகளின் முரண்பாடுகளை காட்டிய அளவுக்கு அமைப்பு என்ற முறையில் முதலாளித்துவத்தை சித்தரிக்கவில்லை. ஒரு அதிபர் வேட்பாளர் என்ன செய்ய வேண்டும் என்ற அவர்கள் தரும் பட்டியல் நம்மை மலைக்க வைக்கிறது. மோடிக்காக பாஜக செய்யும் வேலைகளை அது நினைவு கூரவும் வைக்கிறது.

ஸ்பின்னிங் போரிஸ்
ஸ்பின்னிங் போரிஸ் படம் திரையில் 2 மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது மோடியின் தயவில் 24 மணிநேரமும் ஓடிகொண்டிருக்கிறது.

படத்தில், அமெரிக்க அதிபரோ அல்லது ரசியாவின் அதிபர் வேட்பாளரோ கூட்டத்தில் பேசுவதாகக் காட்டப்படும் தொலைக்காட்சி காட்சிகளை காட்டும் போதும், அதை கவனித்து ஆய்வு செய்யும் ஸ்பின் டாக்டர்களுள் ஒருவரான டிக் டிரெஸ்னர் வசனத்தை முன் கூட்டியே சொல்லி, தாங்கள் எழுதி கொடுத்த வசனம் தான் அது என கூட இருப்பவர்களிடம் தனது திறமையைக் காட்டி அசத்துவார். முதலாளித்துவ அரசியலில் பேசப்படும் எல்லாமும் நாடகம்தான் என்பதை இப்படத்தின் மூலம் மட்டுமல்ல, மோடியின் சிரிப்பை வரவழைக்கும் வரலாற்று காமடிகளிலிருந்தும் நாம் அறியலாம்.

நரேந்திர மோடி பேசும் வீர வசனங்கள் முதல், அவரை புகழும் கட்டுரைகள் செய்திகள், போஸ்டர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என அனைத்தும் அமெரிக்க ஸ்பின் டாக்டர்களால் திட்டமிட்டு பரப்பப்படுபவையே. காங்கிரஸ் கட்சியோ இதை ராஜீவ் காந்தி காலத்திலேயே ஆரம்பித்து விட்டது.

ஸ்பின்னிங் போரிஸ் படம் திரையில் 2 மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது மோடியின் தயவில் 24 மணிநேரமும் ஓடிகொண்டிருக்கிறது. மக்களிடம் அபிமானம் இழந்து போன காங்கிரசின் இடத்தை நிரப்ப ஆளும் வர்க்கங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஜூனியர் புஷ்ஷைப் போன்ற நபர்தான் மோடி. இந்த மோடி வெற்றி பெற முதலாளிகள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை அறிய விரும்பும் நண்பர்கள் இப்படத்தை பாருங்கள்! மோடியோ எல்சினோ புஷ்ஷோ பெயர்கள் வேறுபட்டாலும் முதலாளித்துவ பரம்பொருள் எனும் ஒளியில் ஒரே பொருள்தானே!

–    ஆதவன்