Tuesday, June 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 720

பெண்களுக்கு எதிரான வன்முறை – தமிழகம் தழுவிய பிரச்சாரம்!

2

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பாக புரட்சிகர அமைப்புகளின் மாநிலம் தழுவிய பிரச்சார இயக்க விபரங்கள்:

1. திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகம் அனுப்பிய செய்தி

130218-trichy-poster

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!
ஆணாதிக்க திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

என்ற தலைப்பில் திருச்சியில் பேரணி-பொதுக்கூட்டம் என்பதை மையமாக வைத்து பிரச்சார இயக்கம் எடுக்கப்பட்டது. நகரம் முழுவதும் மையமான இடங்களில் சுவரெழுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. 40,000 பிரசுரம் தயாரித்து நகரம், புறநகர் என அனைத்து பகுதியிலும் விநியோகிக்கப்பட்டது.

வன் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

பெண்களை போகப் பொருளாய்
ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாய் நடத்தும்
ஆணாதிக்க நிலவுடைமை பண்பாட்டை அறுத்தெறிவோம்!
மறுகாலனியாக்க கொள்ளையை எதிர்ப்பின்றி நடத்த
சாராயம்,போதை,நுகர்வு வெறியில் ஆழ்த்தி
மக்களை உழைக்கும் விலங்குகளாக்கும்
ஆளும் வர்க்க சதியை முறியடிப்போம்!

சினிமாக்கள்,பத்திரிக்கைகள்,விளம்பரங்கள்
இணையம்,செல்போன் அனைத்திலும்
ஆபாச காமவெறியை அனுமதித்து
மக்களை சீரழிப்பதே இந்த அரசுதான்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை
புரிந்தவர்களில் முதல் குற்றவாளிகள்
போலிசு-இராணுவம்-அதிகாரவர்கமே!

பாலியல் துன்புறுத்தல்களை
அவமானமாக கருதி முடங்கிக் கொள்ளாமல்
ஆணாதிக்கப் பொறுக்கிகளை அடையாளம் காட்டுவோம்!
அடித்து நொறுக்குவோம்!

சட்டத்தை கடுமையாக்குவது
தூக்கு தண்டனை என்பது பம்மாத்து!
இந்த அரசமைப்பு துறைக்குள்ளேயே
தீர்வு என்பது ஏமாற்று!

போன்ற முழக்கங்கள் பிரசுரத்திலும், சுவரெழுத்துகளிலும் பயன்படுத்தப்பட்டது இது ஆண்களிடம் விவாதத்தையும், ஆதரவையும் பெற்றது.

நகரம், புறநகரங்களில் தெருமுனைக்கூட்டங்கள், வேன்பிரச்சாரம், ஆட்டோபிரச்சாரம், சுவரொட்டி பிரச்சாரம், வாயிற்கூட்டங்கள், கருத்துக் கேட்பு, ஆலைகள், கல்லூரிகள், விடுதிகள்,  அலுவலகங்கள், பேருந்துநிலையம், இரயில்பயணிகளிடம், கடைவீதி, குடியிருப்புகள் என மக்கள் குவிந்துள்ள அனைத்து பகுதிகளிலும் மேற்க்கண்ட வழிமுறைகளில் கடந்த 15 நாட்களாக பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் மைய நிகழ்ச்சியாக நகரின் முக்கிய பகுதியில் பேரணி-பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. திருச்சி நகரின் மைய சந்தையான காந்திமார்கெட்டில் பேரணி துவங்கி முக்கிய பகுதிகளான பெரியகடைவீதி, தேரடிபஜார், என்.எஸ்.பி.ரோடு,  அண்ணாசிலை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வந்தடைந்தது. வழிநெடுக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு பேரணியை கவனித்தனர். பெண்கள் மீதான தொடர்ச்சியான பாலியல் செய்திகள் பற்றி தெறிந்திருந்ததும் அதற்கான தீர்வை பல்வேறு ஊடகங்கள், அறிவுஜீவிகள் பெண்கள் மீதே பழிபோட்டது பற்றியும் தெரிந்து இருந்தனர்.

ஆனால் இத்தகைய குற்றங்கள் பெருகவும், தொடரவும் முதல் எதிரி இந்த அரசுதான் என்பதை விளக்கும் விதமாக பேரணியில் பல்வேறு காட்சி விளக்க பதாகைகளும், கார்ட்டூன்களும் உணர்வுபூர்வமான முழக்கங்களும் பயன்படுத்தப்பட்டதை பார்த்தவர்கள் ஆச்சர்யத்தையும் அவர்களுக்குள்ளே விவாதத்தையும் தூண்டியதை பார்க்க முடிந்தது. இதனை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஊர்வலத்தின் இருபுறமும் சில தோழர்களை சிவில் உடையில் வரச்செய்து மக்கள் பேசிக் கொள்வதை கேட்க சொல்லப்பட்டது.

மக்கள் பேசியவற்றில் ஆதரவு கருத்தும், எதிர்பு கருத்தும் வெளிபட்டது. அவைகளில் சிலவற்றை கீழே தொகுத்துள்ளோம்.

  • இவர்கள் எல்லோரையும் திட்டுவார்கள் என்பது தெரியும்
    இப்போது ஆண்களையும் திட்ட துவங்கிவிட்டனர்.பெண்களின் ஆபாச உடைகளை பேசாமல்
    ஆண்களை குறை சொல்வது என்ன நியாயம்!
  • டாஸ்மாக்கை எப்படி இவர்களால் ஒழிக்க முடியும்!
  • ம.க.இ.க போராட்டம் நியாயமானதாகவே இருக்கும் ஆனால் இவர்கள் நக்ஸலைட்டுகள்
  • தீவிரவாதத்தை ஒழிக்க அரசுக்கு எதிராக பேசினால் உடனே கண்டுபிடித்துவிடுகிறார்கள். ஆனால் இணையதளம் விசயத்தில் அரசுதான் சீரழிவை உண்டுபண்ணுகிறது.
  • ஆணும்,பெண்ணும், சிலம்பாட்டம் ஆடிக்கொண்டே சென்றதை பார்த்த பெண்கள் இவர்கள் அமைப்பில் தற்காப்பு கலைகள் எல்லாம் கற்று தருவார்கள் போலிருக்கே என பேசிக்கொண்டனர்.
  • இவர்களுடைய புதிய ஜனநாயக புத்தகம் விளம்பரம்,ஆபாசம் இல்லாமல் நக்கீரன்,ரிப்போர்ட்டர் போல இல்லாமல் சரியான அரசியல் பேசும் பத்திரிக்கையாக நட்த்துகின்றனர்.
  • பெண்களை அடிமைப்படுத்துவதாக கூறுகின்றனர் ஆனால் ஆண்களும் பெண்களால் அடிமைப்படுத்தப்படுகின்றனர். பொய்யான புகார் கொடுத்து சிக்கவைக்கின்றனர் –ஆண்களில் சிலர்.
  • செல்போனை இளைஞர்களிடமிருந்து பிடுங்க வேண்டும்.
  • யாருக்கும் ஓட்டுப்போடாதே என சொல்லும் கம்யூனிஸ்ட்டு இவர்கள்.
  • அது என்ன ம.க.இ.க/பெ.வி.மு –என்ன அது ஒன்னும் புரியலையே!

மக்கள் ஆங்காங்கே தெரிவித்த கருத்துக்களை மேலே தொகுத்துள்ளோம்.

பேரணி சத்திரம் பேருந்து நிலையம் வந்தடைந்ததும் சில நிமிடங்களில் பொதுக்கூட்டம் துவங்கியது.

பொதுக்கூட்டத்தில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர். ஆதவன் தலைமையேற்று நடத்தினார். இந்த பேரணி –பொதுக்கூட்ட தேவைபற்றியும் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள்,வன்கொடுமைகளுக்கு யார் காரணம் முதல் குற்றவாளி யார் என்பதை அடையாளப்படுத்துவதற்கே மக்கள் இக்கயவர்களை எதிர்த்து போராட முன் வரவேண்டும் என தலைமை உரையில் பேசினார்.

அதனை தொடர்ந்து பெண்கள் விடுதலை முன்னணி தோழர்.கலா இன்றைய சூழலில் பெண்கள் படும் சிரமங்களையும் அவர்கள் சந்திக்கும் பல்வேறு இன்னல்களையும் கணவன், மகன், தந்தை அனைவரும் பெண்ணை படுத்தும் பாட்டை சாடினார். வெளியில் நடக்கும் பாலியல் ரீதியான பல்வேறு குரூர பார்வை, குதர்க்க பேச்சு, இடிப்பது, உரசுவது மூலம் பெண் படும் அவஸ்தைகளை வெளிப்படுத்தி இத்தகைய தொல்லைகளில் இருந்து விடுபட ஆணாதிக்க திமிரையும் இதனை பாதுகாக்கும் அரசையும் எதிர்த்து போராட வேண்டும் என வேண்டுகோள்விட்டார்.

ஆணாதிக்க திமிரை ஒழித்துக்கட்டுவோம் என்ற தலைப்பில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புசங்க சிறப்புதலைவர் தோழர்.தர்மராஜ் பேசினார். கடுமையான தண்டனை மூலம் இத்தகைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றால் இந்த உலகில் உள்ள மனிதர்களை சரிபாதியான ஆண்களை தண்டிக்க வேண்டும். பெண்களை காமுகர்கள் துன்புறுத்துவது மட்டும் குற்றமாக பார்க்கப்படுகிறது.

ஆண்களில் பலரும் தான் சாப்பிட்ட தட்டை மட்டுமல்ல, தன்னுடைய எச்சில் கையை கழுவகூட தண்ணீரை கொண்டு வரசொல்வது, கைதுடைக்க துண்டு கேட்பது முதல் ஒவ்வொரு விசயத்திலும் பெண்களை தமது எடுபிடிகளாக பார்ப்பதும் அவர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடுவதும் என்ன நியாயம்?

தான் சம்பாதிக்கின்றோம் என்ற கர்வமும் பெண் வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு சும்மா பொழுதை கழிக்கிறாள் என கருதுவதும் எவ்வளவு ஆணாதிக்க பார்வை!

குழந்தைகளை 1மணி நேரம் ஆண்களால் பராமரிக்கவோ,அதன் சேட்டைகளை பொருத்துக்கொள்ளவோ முடியாது, ஆனால் பெண்களின் உழைப்பை சாதாரனமாக பார்ப்பது அற்பத்தனமானதாகும்.

தான் போட்டு கழட்டின ஜட்டி, பனியனை கூட துவைக்க முடியாமல் பெண்களிடம் தள்ளிவிடுவது இவை எல்லாம் ஆணாதிக்க திமிரே ஆகும்.

இத்தகைய ஆண்கள் தான் பெண்களின் உடை ஆபாசமாக உள்ளது என குறை கூறுகின்றனர். தெருவில் சுற்றும் நாய்கூட தன்னுடைய துணையை தேடும் போது முறையாக சமிச்சைகள் கொடுத்து அனுமதி பெறுகிறது.

ஆனால் அவள் உடையை பார்த்து எனக்கு உணர்ச்சிவசியப்பட்டு மேலே விழுந்து குதறுகிறேன் என்பவன் எப்படி மனிதனாக இருக்க முடியும்!

4வயது குழந்தையிடமும், 70வயது பாட்டியிடமும் என்ன ஆபாசத்தை பார்த்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து இருப்பார்கள் என புரியவில்லை.

கற்பழிக்க வரும் காமவெறியர்களிடம் அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சி இருந்தா டெல்லி பிரச்சனை ஏற்பட்டு இருக்காது என R.S.S மற்றும் இந்துமத துறவிகள் கூறுகின்றனர். காமுகர்கள் அண்ணன், தங்கை, தாய், மகள் உறவை பார்ப்பார்களா?

பெண்களுக்கு அறிவுரை சொல்லும் இந்த பக்த கோடிகள் முதலில் தமது கடவுள்களுக்கு புத்திமதி சொல்லி திருத்தட்டும், வன்புணர்ச்சி மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண் இனத்தையும் அடிமைப்படுத்தும் இந்த ஆணாதிக்க திமிரை ஒவ்வொரு ஆண்களும் விட்டொழிப்பது முக்கிய பணி என பேசினார்.

இறுதியாக சிறப்புறையாற்றிய ம.க.இ..க மாநில இணைச்செயலாளர் அவர்கள் பேசும்போது மறுகாலனிய தாக்குதலில் தினம்,தினம் பாதிக்கப்பட்டு வருகிறோம். உலகமகா கிரிமினல் மன்மோகன்சிங் மொத்த நாட்டையும் அந்நியனுக்கு அடகு வைக்க துடிக்கிற செயலின் ஒரு பகுதிதான் பெண்கள் மீதான தாக்குதல்களும் ஆகும்.

பார்ப்பனர்களும்,வட மாநில பொருக்கி சாமியார்கள் அம்மணமாகவும், பார்ப்பனர்கள் அரை நிர்வாணமாக ஊருக்குள் சுற்றுவது ஆபாசமாக படவில்லையா. பெண் தனது வசதிக்காக உடை உடுத்தினால் ஆபாசம் என்பது பித்தலாட்டமாகும்.

இத்தகய பெண்கள் மீதான வன்புணர்வை அதிகார வர்க்கத்தால் தான் அதிகமாக நடக்கிறது. உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி வர்மா கமிசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சாலையோரத்தில் வசிக்கும் சிறுமிகளைக்கூட டெல்லி போலீஸார் விட்டுவைக்க வில்லை. அவர்களை பற்றி வெளியே பேசினால் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என வர்மா போன்ற உயர்ந்த பதவியில் இருந்தவர்களே பேசும்போது போலீசு, இராணுவம்,அரசு யோக்கியதை எப்படிபட்டது என்பதை புரிந்துக்கொள்ள முடியும். இத்தகைய ஆணாதிக்க திமிரையும், சினிமா, செல்போன், இணையம், பத்திரிக்கைகளையும் அதனை பரப்பும் இந்த அரசையும் எதிர்த்து மக்கள் போராடுவதும் தன்னை தொந்தரவு செய்யும் பொறுக்கிகளை உடனடியாக எதிர்த்து போராடுவதும் தான் நாம் செய்ய வேண்டிய முக்கிய பணியாகும் என்பதை விளக்கி பேசினார்.

இறுதியாக மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி வந்திருந்த 700க்கும் மேற்ப்பட்ட தோழர்கள், பொதுமக்கள் பிற அமைப்பை சார்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவரையும் தன்னிடமுள்ள ஆணாதிக்க சிந்தனையை விட்டொழிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது.

ம.க.இ.க. திருச்சி மாவட்ட செயலாளர் தோழர். சீனிவாசன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

மக்களிடையே இந்த அரசுதான் இத்தனைக்கும் அடிப்படை காரணம் என்ற விவாதம் துவங்கியுள்ளது.

தகவல்
ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு – திருச்சி.

2. புதுவை பேரணி, பொதுக்கூட்டம்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

என்ற தலைப்பில் 22.02.2013 அன்று புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் புதுச்சேரியில் பேரணி – பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் புதுவை மாநிலத் தலைவர் தோழர் பழனிச்சாமி பேரணியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். சுதேசி மில்லிலிருந்து புறப்பட்ட பேரணி கம்யூனிச ஆசான்களின் பட பதாகைகளும், செங்கொடிகளும் பிடித்து முழக்கமிட்டவாறு லெனின் தெரு வழியாக பொதுக்கூட்ட மேடைக்கு வந்து சேர்ந்தது.

பொதுக்கூட்டத்தை பு.ஜ.தொ.மு மாநில துணைச் செயலர் தோழர் அனந்தகுமார் தொடங்கி வைத்தார். சிறப்புரை நிகழ்த்திய பு.ஜ.தொ.மு மாநில பொதுச்செயலாளர் தோழர் கலை பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய முதல் குற்றவாளி இந்த அரசுதான், அரசு அதிகாரிகள் செய்யாத பாலியல் குற்றங்களா? ரானுவம், போலிசு, அரசியல்வாதிகள் செய்யாத பாலியல் குற்றங்களா? எனவே பெண்கள் மீது நடத்துகிற பாலியல் வன்கொடுமைகளை ஒழிக்க இந்த அரசு தகுதியற்றது. எனவே இந்த அரசை ஒழிக்காமல் இப்பிரச்சனைக்கு  தீர்வு காண  முடியாது, என்று பேசினார்.

இறுதியாக பேசிய மதுரை மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் செயலாளர் தோழர் லயனல் அந்தோனிராஜ் அவர்கள், தனிவுடைமையின் தோற்றமும்,பெண்ணடிமையின் தோற்றமும், நிலவுடைமையின் ஆணாதிக்கப் பிடியும் எவ்வாறு பெண்ணை அடிமையாக்கியது என்பதும், இச்சமுதாயத்தையே மறு உற்பத்தி செய்கிற வல்லமை கொண்ட பெண்ணினத்தை அடிமைப்படுத்துகிற நிலவுடைமை ஆணாதிக்கத் திமிரை ஒழிக்காமல், பெண்களை போகப்பொருளாய், நுகர்வுப்பண்டமாய் நடத்தும் ஏகாதிப்பத்திய சீரழிவு கலாச்சாரத்தை தகர்க்காமல் பெண்களுக்கு விடிவு இல்லை! என்ற அடிப்படையில் உரை நிகழ்த்தினார்.

இறுதியாக ம.க.இ.க-வின் மைய்ய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி சாலையில் சென்ற பொதுமக்களையெல்லாம் நிற்க வைத்தது.

கூட்டத்தில் கலந்துக்கொண்ட பொதுமக்களின் கருத்து:

  • ஒவ்வொரு பேச்சும் கலைநிகழ்ச்சியும் நல்ல கருத்தாக இருந்தது. இந்த கலைநிகழ்ச்சி மூலம் சொல்லுகிற கருத்து பயனுள்ளதாக இருந்தது.
  • இந்த கலைநிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் கிராமத்தில் நடத்தினால் மக்கள் விழிப்புனர்வு அடைவார்கள்.
  • நான் எப்போதும் இந்தமாதிரி பொதுக்கூட்டத்தை பார்த்ததில்லை நல்லா இருந்தது.
  • கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆணாதிக்கத்தை மாற்றணும், கொஞ்சம் டைம் ஆகும்.
  • நீங்கள் தொடர்ந்து நிதி வசூல் செய்து அடிக்கடி புதுவை பகுதியில் இதைமாதிரி நடத்தினால் மக்களுக்கு விரைவாக விழிப்புணர்வு கிடைக்கும்.
  • பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி 100% நல்லா இருக்கு.
  • வன்கொடுமைகளை நல்லா எடுத்துச் சொன்னிங்க.
  • அடிக்கடி இந்தமாதிரி பொதுக்கூட்டம் நடத்தினால் இன்னும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்.
  • பொதுக்கூட்டம் மற்றும் போராட்டம் நடத்தும்போது ”புதிய ஜனநாயகம்” பத்திரிக்கையில் பதிவு செய்து புதுவை முழுவதும் கொடுங்கள்.
  • இந்த நிகழ்ச்சியில் சொன்ன கருத்துக்கள் 75% ஏற்கக்கூடியதாக இருந்தது.
  • ஜெயலலிதா சொன்னப்படி போலிசுக்கு ’தனி’ சலுகை, மக்களுக்கு தனி சலுகை  இந்த கருத்து நல்லா சொன்னிங்க.
  • மக்களுக்கு விழிப்புணர்வு இன்னும் அதிகமாக வரவைக்க வேண்டும்.
  • பெண்களை பற்றி விழிப்புணர்வு வரும்வகையில் இந்த நிகழ்ச்சி எனக்கு உதவியாக இருந்தது.
  • பொதுவாக இந்த நாட்டில் நடக்கும் அத்தனை அநியாயம்களையெல்லாம் சுட்டிக்காட்டி பேசினார்கள் சிறப்பு.
  • பத்திரிக்கை செய்தியை மட்டும் பேசக்கூடாது. மற்ற விசியங்களையும் பேசவேண்டும்.

தகவல்
பு.ஜ.தொ.மு—புதுச்சேரி
தொடர்புக்கு:9488778940

3. உசிலம்பட்டி பொதுக்கூட்டம்

  • பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம் !
  • ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
  • மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

என்ற அடிப்படையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 20.02.2013 அன்று மாலை 6 மதியளவில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தோழர் அ. சந்திரபோஸ் தலைமையில் நடந்த இந்தப் பொதுக்கூட்டத்தில் உசிலை வட்டார வி.வி.மு. செயலாளர் தோழர்.குருசாமி, சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்டம் பு.ஜ.தொ.மு. அமைப்பாளர் தோழர் கோ.நாகராசன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டன்ர். கூட்டம் ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள், சிறு வணிகர்கள், மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தோழர் குருசாமி உரையில் பாலியல் வல்லுறவுக்குக் காரணம் அப்பெண்களின் ஆடைதான் காரணம் என்று பேசுவதுதான் ஆணாதிக்கம் என்று இந்த பகுதி மக்களின் நடைமுறை எதார்த்தத்திலிருந்து விளக்கினார். பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தண்டனையை கடுமையாக்குவது என்பது புண்ணுக்கு மருந்து போடுவது போல அது நோயைக் குணப்படுத்தாது, நோயைக் குணப்படுத்த வேண்டுமானால் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற இந்த மறுகாலனியாக்கக் கொள்கைக்கு எதிராக அனைவரும் நக்சல்பாரிகள் தலைமையில் ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசியது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தோழர்.நாகராசன் தனது சிறப்புரையில் புராதனபொதுவுடமை சமூகத்திலிருந்து ஆண்டை அடிமைச் சமுதாயத்தில் உருவான சொத்துடைமைப் பாதுகாக்க என்று அரசு தோன்றியதோ அன்றிலிருந்து இன்று வரை ஆணாதிக்கத்தை பாதுகாக்கும் நிறுவனமாக அரசுதான் முக்கியப் பாத்திரமாக உள்ளது என்பதை புராணகதைகளிலும், மன்னர் காலத்திலும், அதைத்தொடர்ந்து பண்ணையார்கள் முதல் இன்று மறுகாலனியாக்கம் ஏற்படுத்தும் தாக்கம் வரை சொல்லி விளக்கினார்.

குறிப்பாக செல்பேசி, இணையம், தொலைக்காட்சி மற்றும் சினிமா போன்ற ஊடகங்களும், அரசின் டாஸ்மாக் கடைகளும் ஒரு ஆணாதிக்கச் சிந்தனை உள்ள சராசரி மனிதனை பெண்களை வல்லுறவு செய்யும் மிருகமாக மாற்றுகிறது என்று விளக்கியது படிப்பறிவு இல்லா மக்களும் எளிமையாக புரிந்து கொள்ளும்படி இருந்தது.

இந்தப் பகுதியில் இந்த பாலியல் வன்முறைகளை கண்டித்து எந்த ஒரு ஓட்டுக்கட்சி அமைப்புகளும் பேசாத நிலையில் நாம் அவர்களை அம்பலப்படுத்தியும் தலைநகர் டெல்லியில் நடந்த மக்கள் போராட்டத்தை ஆதரித்தும், மக்கள் திரளாக அமைப்பாக போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் பேசியது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இறுதியாக நடந்த ம.க.இ.க-வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து வரும் இந்த சூழலில் “நாங்க ஆம்பளைங்க” என்ற பாடல் மக்களிடம் மனதில் ஆணாதிக்கம் உறுத்தலைப் பாடல் மூலம் கேட்டது மிகவும் உற்சாகமாக இருந்து என்று பலரும் கருத்து கூறினர்.

புஜ செய்தியாளர், உசிலம்பட்டி

4. திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகம் அனுப்பிய செய்தி

  • திருச்சி ஜீயபுரத்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த பொறுக்கி கைது!
  • செய்தி ஊடகங்கள் மற்றும் ம.க.இ.க வினர் கண்களில்படாமல் குற்றவாளியை பாதுகாத்த போலீசு!
  • அரசுதான் முதல் குற்றவாளி என்பதற்கு திருச்சியில் நேற்று(18.02.2013) நடந்த சம்பவமே சாட்சி!

பெண்கள், குழந்தைகள், முதியோர் என தொடர்ச்சியாக காமவெறியர்களால் குதறப்படுவதும், கொளுத்தப்படுவதும், அமிலத்தால் கருக்கப்படுவதும் நாள்தோறும், பொழுதுதோறும் நடந்தேறி வருகிறது.

அரசும் அவர்களின் துதிபாடிகளும், “சட்டம் கடுமையாக்கணும், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கனும், ஆண்மை நீக்கணும்” என பிதற்றுவது கேலிக்கூத்தானது என ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு., ஆகிய அமைப்புகள் தொடர்ச்சியாக பிரச்சார இயக்கம் செய்து வருகின்றன. இத்தகைய காம கொடுரன்களை பாதுகாப்பதும் அவர்களின் வெறிச்செயலை தூண்டிவிடும் செல்போன், இணையதள சீரழிவுகள், சினிமா பொறுக்கித்தனங்கள், குடிக்கவைத்து மதிகெடுக்கும் டாஸ்மாக்குகள் இவற்றை ஊக்குவிக்கும் இந்த அரசும்தான் முதல் குற்றவாளி என்பதை நிருபிக்கும் வகையில் நேற்றைய சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி அருகே உள்ள ஜீயபுரம், கம்பரசம்பேட்டையை சேர்ந்த ஜாபர் அலி (வயது 19) என்பவன் 4 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்து வெறித்தனத்தில் ஈடுபட்டுள்ளான். இதனால் அச்சிறுமி கடும் வலியால் துடித்ததை கண்ட பெற்றோர் அக்குழந்தையிடம் உண்மையை தெரிந்துச் சென்று சம்மந்தபட்டவன் மீது காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இதனை ரகசியமாக வைத்திருந்த காவல்துறை சாதாரண வழக்குகளின் கீழ் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முயன்றனர். இப்பிரசனை சம்பந்தமாக ம.க.இ.க., பு.மா.இ.மு., பெ.வி.மு., பு.ஜ.தொ.மு., தோழர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக நீதிமன்றத்தில் ஒன்று திரள வழிகாட்டப்பட்டது. தொடர்ச்சியாக பிரச்சார வேலைகளின் காரணமாக சோர்வுற்று இருந்தாலும் கைக் குழந்தைகளுடன் செல்வது சிரமமாக இருந்தாலும் இத்தகைய பொறுக்கிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற உத்தேசத்துடன் செருப்பு, அழுகிய முட்டை, மாட்டுச்சாணம் ஆகியவற்றுடன் நீதிமன்றத்தில் குழுமினர் தோழர்கள். தினசரி பத்திரிக்கைகள் முதல் ஊடகங்கள் வரை மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை காத்திருந்தும் காவல்துறையினர் குற்றவாளியை நீதிமன்றத்திற்க்கு கொண்டுவரவில்லை. இதற்கிடையே தோழர்களை நீதிமன்றத்தை விட்டு அப்புறப்படுத்த முயன்று உதவி ஆணையர் மிரட்டும் தொனியில் பேசினார். தோழர்கள் வழக்கறிஞர்களின் பதிலடியால் பின்வாங்கினர்.

நேரம் கடந்தது. நீதிபதியிடம் சென்ற நமது வழக்கறிஞர்கள் “குற்றவாளியை நீங்கள் வீட்டில் பார்க்கக் கூடாது. நீதிமன்றத்தில்தான் ஆஜர்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியதும் நீதிபதி ஏற்றுக் கொண்டு செய்கிறேன் என ‘தலையாட்டினார்’ ஆனால் இரவு 8 மணி ஆகியும் கொண்டுவரவில்லை. இதன் பின் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள், தோழர்கள் திரண்டு போலீசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமும், நீதிமன்ற வழியை மறித்து தர்ணா போராட்டமும் நடத்தினர்.

“சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு பல பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதால் நாளை காலை 6 மணிக்குதான் ஆஜர்படுத்துவோம்” என பத்திரிகைகள் முன் பேட்டியளித்தனர் காவல் துறையினர். இதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றோம்.

ஆனால் திருட்டுத்தனமாக இரவு 10 மணிக்கு மேல் நீதிபதி வீட்டிற்குள் அழைத்து சென்று ‘தேசியத் தலைவரை’ பாதுகாப்பாக கொண்டு சென்று சிறையில் அடைத்துள்ளனர். போலீசுடன் நீதிபதியும் கூட்டுசேர்ந்து மோசடியாக ஏமாற்றி உள்ளனர்.

இத்தகைய பேடித்தனத்தை தவிர வேறு எதை இவர்களிடம் எதிர்பார்க்க முடியும்.

பொதுமக்கள் மத்தியில் காமக்கொடுரன்களை கண்டிப்பதும், தண்டிப்பதுமே மக்களிடம் விழிப்புணர்வும், தைரியமும் ஏற்படுத்தும். குற்றவாளிகள் திருந்தவும் வாய்ப்பு ஏற்படும். ஆனால் இத்தகைய மாற்றம் வரக்கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கும் இந்த அரசையும் அவர்களின் கைத்தடிகளையும் எதிர்த்து போராடுவதே நமது முதல்பணியாக உள்ளது.

தொடர்ந்து போராடுவோம்! சமூகமாற்றத்தை நோக்கி முன்னெடுத்து செல்வோம்.

ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு.,
திருச்சி.

5. ஓசூர் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அனுப்பிய செய்தி

பெண்கள்மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

என்ற முழக்கத்தின்கீழ் ஓசூரில் செயல்பட்டுவரும் புரட்சிகர அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தனது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியுடன் இணைந்து மாபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை 17.02.2013 மாலை 5 மணிக்கு ஓசூரில் எழுச்சியுடன் நடத்தின. ராயக்கோட்டை சாலையிலிருந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் செயற்குழு உறுப்பினர் தோழர் சின்னசாமி தலைமையில் தொடங்கிய பேரணி விண்ணதிரும் முழக்கங்களுடன் புறப்பட்டு மக்கள் குழுமியிருக்கும் முக்கிய சாலைகள் வழியாக சென்று ராம்நகர் அண்ணாசிலை அருகே அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடை அருகே முடிவடைந்து பொதுக்கூட்டம் தொடங்கியது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் ஆம்பள்ளி முனிராஜ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் செல்வி, தோழர் வெங்கடேசன் ஆகியோர் தாங்கள் மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரம் செய்தபோது கிடைத்த அனுபவங்களை தொகுத்து சிற்றுரையாக பேசினர். இவர்களைத் தொடர்புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் செயற்குழு உறுப்பினர் தோழர் சின்னசாமி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராஜ் சிறப்புரையாற்றினார். இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் நன்றியுரையாற்றினார். திரளான மக்கள் கூடிநின்று ஆதரவளித்தனர். நிதி தந்தும், தொடர்புகொள்ள தங்களின் முகவரி அளித்தும் சென்றனர்.

6.  திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்திய தெருமுனைக் கூட்டம்.

“பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்.”, என்ற தலைப்பில் திருவள்ளுர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 25.02.13 அன்று மாலை 6 மணிக்கு பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய தெருமுனைக்கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளுர் மாவட்ட இணை செயலாளர் தோழர் வி கந்தர் தலைமை தாங்கினார். தலைமையுரையில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிற்சங்கமாக இருந்துகொண்டு இது போன்ற அரசியல் பிரச்சாரங்களை செய்ய வேண்டியதன் நோக்கம் என்ன என்பது குறித்தும், காவல் துறையினராலேயே பெண்கள் சீரழிக்கப்படுவதை கோடிட்டுக்காட்டி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக சிறப்புரையாற்றிய திருவள்ளூர் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சொ.செல்வகுமார் பெண்ணடிமைத்தனமானது, தாய்வழி சமூகம் மறைந்து தனியுடைமை தோன்றிய காலம் தொட்டு, உடன்கட்டை ஏறுவது, கைம்பெண்ணாக வாழ்வது என கடைப்பிடிக்கப்பட்டு வந்ததையும், இதற்கு புராணங்களும், இதிகாசங்களும் துணை நிற்பதையும் தோலுரித்தார். பெண் சுதந்திரம், பெண்ணுரிமை என்று இப்போது பேசி வந்தாலும், சமூக பொருளாதார நெருக்கடியின் விளைவாகவே பெண்கள் வேலைக்கு செல்கின்றனரே ஒழிய பெண் விடுதலை, சுதந்திரம் என பேசப்படுவது அனைத்தும் முதலாளித்துவ பொய் பிரச்சாரமே என்று பதியவைத்தர். இன்றைய முதலாளித்துவம் பரப்பி வரும் நுகர்வு கலாச்சாரமானது, சமூக விழுமியங்களை சிதைத்து பெண்களை போகப்பொருளாக்கி சீரழிவை உண்டாக்கி வருவதை சாடினார்.

இதை சட்டத்தின் மூலம் தீர்த்து விடுவது என்பது ஏமாற்று சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய போலிஸ் அதிகாரிகளே பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதை விளக்கினார். தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்ற நீதிபதியே புலம்பியுள்ளதை எடுத்துரைத்து, இந்த அரசியலமைப்பு முறையில் இந்த பிரச்சனையை தீர்த்து கொள்ள முடியாது .ஆகவே உழைக்கும் மக்களாகிய நாம்தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும், உடனடி தீர்வாக எங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கின்றதோ அங்கேயே பொறுக்கிகளை செருப்பால் அடிப்போம் என்றும், நிரந்தர தீர்வாக நம்முள் உள்ள ஆணாதிக்க சிந்தனையை ஒழித்து, சமூக மாற்றத்துக்காக போராடுவதன் மூலமே இப்பிரச்சனையை தீர்க்க முடியும், அத்தகைய போராட்டத்துக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டும் என அறைகூவி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

திருவள்ளூர் மாவட்ட பிரச்சார குழு சார்பாக புரட்சிகர கலை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. நமக்குள் உள்ள ஆணாதிக்க சிந்தனைகளை உடைத்தெறியும் விதமாகவும், சீரழிவு கலாச்சாரத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த கலை நிகழ்ச்சி, உழைக்கும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இணைப்பு சங்க தொழிலாளிகள், உழைக்கும் மக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த தெருமுனைக்கூட்டம், இனணப்பு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் கணேஷ்பாபு நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வதேசியகீதத்துடன் நிறைவு பெற்றது.

SAMSUNG SAMSUNG

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்திய பொதுக்கூட்டம்

“பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்.’’, என்ற தலைப்பில் திருவள்ளுர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 18.02.13 அன்று மாலை 6 மணிக்கு செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய பொதுக்கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணை செயலாளரும், திருவள்ளுர் மாவட்ட செயலாளருமான தோழர் ம. சி. சுதேஷ்குமார் தலைமை தாங்கினார். தலைமையுரையில், இன்றைய மறுகாலனியாக்க சூழலானது, எதை குறித்தும் கவலைப்படாமல், நுகர்வதை மட்டுமே வாழ்வின் நோக்கமாக கருதும் தலைமுறையை உருவாக்கியுள்ள இந்த முதலாளித்துவத்தை வேரறுக்க பெரியரியத்தாலோ, தமிழ் தேச விடுதலையினாலோ சாத்தியமில்லை, நக்சல்பாரி பாதையே மாற்று என்று பேசினார்.

அடுத்ததாக சிறப்புரையாற்றிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் லயனல் அந்தோனிராஜ், கற்பு என்பது இச்சமூகத்தில் பெண்களுக்கு மட்டும் தான் என கற்பிக்கப்பட்டுள்ளதையும், பெண்ணடிமைத்தனமானது, தாய்வழி சமூகம் மறைந்து தனியுடைமை தோன்றிய காலம் தொட்டு, உடன்கட்டை ஏறுவது, கைம்பெண்ணாக வாழ்வது என கடைப்பிடிக்கப்பட்டு வந்ததையும், இதற்கு புராணங்களும், இதிகாசங்களும் துணை நிற்பதையும் தோலுரித்தார். பெண் சுதந்திரம், பெண்னுரிமை என்று இப்போது பேசி வந்தாலும், ஆணாதிக்கமே கோலோச்சுவதை உதரணங்களுடன் எடுத்துரைத்தார். இன்றைய முதலாளித்துவம் பரப்பி வரும் நுகர்வு கலாச்சாரமானது, சமூக விழுமியங்களை சிதைத்து சீரழிவை உண்டாக்கி வருவதை சாடினார்.

இதை சட்டத்தின் மூலம் தீர்த்து விடுவது என்பது ஏமாற்று என்பதை கடைநிலை ஏட்டு முதல், உயர் போலிஸ் அதிகாரிகள் வரை பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட கிரிமினல்களின் பெயர்களை வாசித்து அதை ஆதாரங்களுடன் விளக்கினார். இந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காததோடு, பணிஉயர்வு வழங்ப்பட்டுள்ளதையும் அம்பலப்படுத்தினர். இந்த அரசியலமைப்பு முறையில் இந்த பிரச்சனையை தீர்த்து விடமுடியும் என நம்புவது முட்டாள்தனம் என்பதையும், நம்முள் உள்ள ஆணாதிக்க சிந்தனையை ஒழித்து, சமூக மாற்றத்துக்காக போராடுவதன் மூலமே இப்பிரச்சனையை தீர்க்க முடியும், அத்தகைய போராட்டத்துக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டும் என அறைகூவி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. நமக்குள் உள்ள ஆணாதிக்க சிந்தனைகளை உடைத்தெறியும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்த கலை நிகழ்ச்சி, குறிப்பாக “ஏன்னா நா ஒரு ஆம்புள” என்ற பாடல் உழைக்கும் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது.

எந்த நேரத்திலும் மழை பெய்யும் என மேகம் மிரட்டிய போதும், என்ன ஆனாலும் பொதுக்கூட்டத்தை நடத்தி முடிப்பதாக தோழர்கள் உறுதி பூண்டிருந்ததால், திட்டமிட்டபடி கூட்டம் நடத்தப்பட்டது. இணைப்பு சங்க தொழிலாளிகள், உழைக்கும் மக்கள் என ஏறக்குறைய 250 பேர் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டம், திருவள்ளூர் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சொ.செல்வகுமார் நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வ தேசகீதத்துடன் நிறைவு பெற்றது.

கூட்டத்தில் வினியோகிக்கப்பட்ட துண்டறிக்கை வாசகங்கள்:

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பெண்ணை போகப் பொருளாய்,
ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாய் நடத்தும்
ஆணாதிக்க நிலவுடைமைப் பண்பாட்டை அறுத்தெறிவோம்!

ஆபாச வக்கிரங்களைக் கடை விரித்து
பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையைத் தூண்டும்
ஏகாதிபத்திய சீரழிவுக் கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

மறுகாலனியாக்கக் கொள்ளையை எதிர்ப்பின்றி நடத்த
சாராயம், போதை, நுகர்வு வெறியில் ஆழ்த்தி
மக்களை உழைக்கும் விலங்குகளாக்கும்
ஆளும் வர்க்க சதியை முறியடிப்போம்!

மனித இனத்தை உருவாக்கிப் பேணுகின்ற
பெண்ணினத்தின் மேன்மையை உயர்த்திப் பிடிப்போம்!

பாலியல் துன்புறுத்தல்களை அவமானமாக கருதி
முடங்கிக் கொள்ளாமல்,
ஆணாதிக்கப் பொறுக்கிகளை
அடையாளம் காட்டுவோம்! அடித்து நொறுக்குவோம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை புரிந்தவர்களில்
முதல் குற்றவாளிகள் போலீசு-ராணுவம்-அதிகார வர்க்கமுமே!

சினிமாக்கள் பத்திரிகைகள் விளம்பரங்கள்
இணையம் செல்போன் அனைத்திலும்
ஆபாச காமவெறியை அனுமதித்து
மக்களை சீரழிப்பதே இந்த அரசுதான்

சட்டத்தை கடுமையாக்குவது – தூக்குத் தண்டனை என்று பம்மாத்து!
இந்த அரசமைப்பு முறைக்குள்ளேயே தீர்வு என்பது ஏமாற்று!

பாலியல் வெறியாட்டங்களுக்கு காரணமான
நிலவுடைமை – பார்ப்பனிய சாதி ஆணாதிக்கத்தையும்
மறுகாலனியாக்க கலாச்சாரத்தையும்
பாதுகாப்பதே இந்த போலி ஜனநாயக அரசுதான்!

போலி ஜனநாயக அரசை வீழ்த்தி
புதிய ஜனநாயக அரசை புரட்சியின் மூலம் அமைப்பதே
பெண்களின் ஜனநாயகத்திற்கான ஒரே மாற்று!

7. தருமபுரி புதிய ஜனநாயகம் செய்தியாளர் அனுப்பிய தகவல்

தருமபுரி மாவட்டத்தில் பெண்ணாகரம் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணியின் சார்பாக பேருந்துகளிலும், பொது இடங்களிலும் பிரச்சாரம் செய்து பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர்.

pennagaram-notice

மார்ச் 1, 2013 அன்று மாலை 5 மணிக்கு ராஜகோபால் பூங்கா அருகில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது

தலைமை : தோழர் சிவா, வட்டக்குழு, விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்
சிறப்புரை : தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம்

மக்கள் கலை இலக்கியக் கழக  மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்.

notice

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி, தருமபுரி
தொடர்புக்கு: 99433 12467

ஹெலிகாப்டர் ஊழல்: இராணுவத்தின் பக்தி தேசத்திலா, பணத்திலா?

1

ந்தியாவின் பிரதமரும், ஜனாதிபதியும், மற்ற மிக முக்கியமான நபர்களும் வசதியாக பயணம் செய்தவற்காக தலா ரூ 300 கோடி விலையில் 12 ஹெலிகாப்டர்களை மொத்தம் ரூ 3,600 கோடி செலவில் வாங்குவதற்கு ரூ 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்பான சில நபர்களையும் தனியார் நிறுவனங்களையும் பற்றிய விபரங்களை பார்க்கலாம்.

இந்தியா வாங்கும் இந்த ஹெலிகாப்டர் இத்தாலிய-ஆங்கில கூட்டு நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் பின்மெக்கானிக்கா என்ற இத்தாலிய நிறுவனத்திற்கு சொந்தமானது. பின் மெக்கானிக்காவின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி (CEO) கியூசெப் ஒர்சி லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக இத்தாலிய புலனாய்வு துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இத்தாலியில் மாஃபியா, பெருநிறுவனங்கள், அரசு அமைப்புகள் இவர்களுக்கிடையேயான தொடர்புகளை விசாரணை செய்த நேப்பிள்ஸ் நகரின் நீதித் துறை அதிகாரிகள் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் ‘நிறுவன தொடர்புகள்’ துறையின் தலைமை மேலாளர் லொரன்சோ பொர்கோகினி என்பவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தார்கள்.

அதைத் தொடர்ந்து பல நாடுகளில் பல ஆண்டுகளாக பின்மெக்கானிக்காவின் நடவடிக்கைகள் பற்றிய பரவலான விசாரணையின் ஒரு பகுதியாக அதன் இந்தியக் கிளையின் செயல்பாடுகளும் விசாரணைக்குட்படுத்தப்பட்டன.

2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை துனீசியாவைச் சேர்ந்த ஐ.டி.எஸ். என்ற நிறுவனத்துக்கு பின்மெக்கானிக்கா 51 மில்லியன் யூரோ (சுமார் ரூ 360 கோடி) பணத்தை அனுப்பியிருக்கிறது. துனீசிய ஐ.டி.எஸ். நிறுவனம் சண்டிகருக்கு அருகில் உள்ள மொகாலியைச் சேர்ந்த ஐ.டி.எஸ் என்ற அதே பெயருடைய நிறுவனத்துக்கு மென்பொருள் சேவை வழங்கியதற்காக ரூ 150 கோடி அனுப்பியிருக்கிறது.

ஐ.டி.எஸ் என்ற பெயருடைய மூன்றாவது நிறுவனம் மொரீஷியசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஐ.டி.எஸ் மொரீஷியஸ் ஏரோமேட்ரிக்ஸ் இன்போசொல்யூஷன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை டெல்லியில் பதிவு செய்கிறது. சண்டிகரில் உள்ள ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பூங்காவின் டி.எல்.எப் கட்டிடத்தில் செயல்படும் ஏரோமேட்ரிக்ஸின் இயக்குனர்களாக டெல்லி வழக்கறிஞர் கவுதம் கெய்த்தான், ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் குய்டோ ரால்ப் ஹஷ்கே, கார்லோ கெரோசா ஆகியோர் இருந்தார்கள்.

அகஸ்டா வெஸ்ட்லேண்டுக்கு மென்பொருள் செய்து கொடுக்கும் வேலை 2009ம் ஆண்டு ஐ.டி.எஸ். சண்டிகரிடமிருந்து ஏரோமேட்ரிக்ஸூக்கு மாற்றப்படுகிறது.

ரால்ப் ஹஷ்கே, கார்லோ கெரோசா இருவருக்கும் பின்மெக்கானிக்கா ரூ 2.8 கோடி கொடுத்திருக்கிறது. அவர்கள் ஹெலிகாப்டர்களை விற்றுத் தருவதற்காக நியமிக்கப்பட்ட இடைத்தரகர்கள். குய்டோ ஹஷ்கே பின்மெக்கானிக்காவின் இந்திய தலைமை அலுவலர் கிரசோலே பாவ்லோவை கைக்குள் வைத்துக் கொள்ள அவருக்கு மாதா மாதம் 10,000 யூரோ ‘ஊதியம்’ கொடுத்திருக்கிறார். ‘நான் கிரசோலேவுக்கு மொத்தம் 2 முதல் 2.2 லட்சம் யூரோ (சுமார் ரூ 1.5 கோடி) கொடுத்திருப்பேன்’ என்று இத்தாலிய அதிகாரிகளுக்கு கொடுத்த வாக்குமூலத்தில் ஹஷ்கே கூறியிருக்கிறார்.

அவர்கள் விமானப் படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி. தியாகிக்கு அவரது உறவினர்கள் ஜூலி தியாகி, டோக்ஸா தியாகி, சந்தீப் தியாகி மூலமாக ரூ 72 லட்சம் கொடுத்திருக்கின்றனர். இடைத்தரகர்கள் எஸ்.பி. தியாகியை 6 அல்லது 7 முறை சந்தித்துப் பேசியுள்ளனர். ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பான துறை சார்ந்த  தகவல்களை ஹேஸ்செக், ஹெரோஸா ஆகியோருக்கு அவ்வப்போது தியாகி தெரிவித்து வந்திருக்கிறார்

லண்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மிஷெல் என்ற ஆயுதத் தரகரையும் இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்பதற்கான இடைத் தரகராக ஓர்சி சேர்த்திருக்கிறார். ‘கிறிஸ்டியன் மைக்கேலுடன் ஒன்று, ஹஷ்கேவுடன் ஒன்று என்று மொத்தம் 41 மில்லியன் யூரோவுக்கான இரண்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டன’ என்று போர்கோகினியின் வாக்குமூலத்தில் பதிவாகியுள்ளது. கிறிஸ்டியன் மிஷெல் லண்டனில் செல்சீ பகுதியில் உள்ள தனது வீட்டை விட்டு ஓடிப் போய் துபாயில் தலைமறைவாகியிருக்கிறார்.

கடந்த 7 ஆண்டுகளாக இராணுவத் தளவாடங்கள் இறக்குமதியில் உலகிலேயே முதல் இடத்தைப் பிடித்திருக்கும் இந்திய பாதுகாப்புத் துறையை நூற்றுக் கணக்கான அன்னிய ஏஜெண்டுகள் மொய்க்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் ரூ 2.5 லட்சம் கோடி மதிப்பிலான இராணுவத் தளவாடங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்த இந்திய அரசாங்கம் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ 5 லட்சம் கோடி மதிப்பிலான இறக்குமதிக்குத் திட்டமிட்டிருக்கிறது.

வெளிநாட்டு ஆயுத நிறுவனங்களின் ஏஜென்டுகள் டெல்லியிலும் அதைச் சுற்றிய தொழில் நகரங்களிலும் அலுவலங்கள் திறந்து, இந்திய இராணுவ தளவாடங்களுக்கான ஒப்பந்தங்கள் யாருக்குப் போக வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி போடுகின்றனர்.

“தவிர்க்க முடியாத இந்த ஏஜென்டுகள் அடிப்படையில் தொழில் முனைவர்கள். தேவையான தொடர்புகளை வளர்த்துக் கொள்வதிலும் ஆட்களை கையாள்வதிலும் திறமையாளவர்கள். இந்திய அரசு எந்திரத்தை சரிவர கையாண்டு ஒப்பந்தங்களை வெல்வதில் வித்தகர்கள்” என்கிறார் பாதுகாப்புத் துறை நிபுணர் ராகுல் பேடி.

எஸ்.பி.தியாகிஇராணுவ மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை பணத்தாலும், நகைகள், சொத்துக்கள், விலை உயர்ந்த கார்கள், குழந்தைகளுக்கு வெளிநாட்டுக் கல்வி, ஆடம்பர விருந்துகள் என்று பல வகைகளிலும் ஏஜென்டுகள் குளிப்பாட்டுகிறார்கள். பாலியல் சேவைகள் ஏற்பாடு செய்து கொடுப்பது, விலை உயர்ந்த மதுபானங்களை பரிசு அளிப்பது, குடும்பத்துடன் வெளிநாட்டுக்குப் போக ஏற்பாடு செய்வது, கோல்ப் உபகரணங்கள் வாங்கி கொடுப்பது, அரிதான செல்லப் பிராணிகளை வாங்கி கொடுப்பது என்று அவர்களை மகிழ்விக்கிறார்கள்.

தமது பணிகளுக்கு ஊதியமாக வெளிநாட்டு இராணுவத் தளவாட நிறுவனங்களிடமிருந்து மாதா மாதம் கணிசமான தொகை ஊதியம், செலவுகளுக்கான பணம், கூடவே வெற்றிகரமாக ஒப்பந்தம் போட்டுக் கொடுத்தால் வெளிநாட்டு வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷனும் பெறுகின்றனர் இந்த ஏஜென்டுகள்.

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் விமானங்கள், பீரங்கிகள், வாகனங்கள் என்று அதிக விலையிலான தளவாடங்களில் ஆரம்பித்து இராணுவ வீரர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது, பாதுகாப்புத் துறை நிலங்களை தனியாருக்கு கொடுப்பது போன்ற பணிகளிலும் பனி மலைகளின் உச்சியில் பணி புரியும் போர் வீரர்களுக்குத் தேவையான குளிர் தடுப்பு சாதனங்கள் வழங்குவது, போரில் இறந்த வீரர்களுக்கான சவப்பெட்டி வாங்குவது என்று ஒவ்வொரு வாய்ப்பிலும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக இந்த உறவுகளை வளர்க்கின்றனர் இந்த இந்த இடைத்தரகர்கள்.

அதிகாரிகள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், இராணுவ தளபதிகள் இவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் அடங்கிய கும்பல்கள் இந்த இடைத்தரகர் தொடர் சங்கிலியில் இடம் பெறுகின்றனர்.

வியாபாரப் போட்டி காரணமாகவோ பிற காரணங்களாலோ இந்த பரிமாற்றங்களில் சில சமயங்களில் வெளியில் வந்து கீழ்மட்டத்தில் உள்ள ஒரு சிலர் தண்டிக்கப்படுகின்றனர்.

  • 2012ம் ஆண்டு இராணுவ தலைமை தளபதி ஜெனரல் வி கே சிங், ‘இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஒருவர் தனக்கு ரூ 14 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக’ குற்றம் சாட்டியிருந்தார்.
  • ஆதர்ஷ் வீட்டு வசதித் திட்டத்தில் இராணுவ உயர் அதிகாரிகளும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் தமது பதவிகளை பயன்படுத்தி சட்ட விரோதமாக வீடுகளை ஒதுக்கி ஆதாயம் தேடிக் கொண்டார்கள் என்பது அம்பலமானது.
  • சுக்னா இராணுவ தளத்துக்கு அருகில் இருக்கும் 70 ஏக்கர் நிலத்தை தனியார் அறக்கட்டளை ஒன்றுக்கு கைமாற்றி விட்டதாக இராணுவத் தலைமைத் தளபதியின் உதவியாளர் லெப்டினன்ட் ஜெனரல் அவதேஷ் பிரகாஷூம், 33வது படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி கே ரத்தும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
  • உயரமான மலைப் பகுதிகளில் பணி புரியும் படை வீரர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதில் ஊழல் தொடர்பாக அப்போதைய இராணுவ சேவைப் பிரிவின் உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் எஸ் கே சஹானி 2011ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
  • லடாக் பகுதி படைவீரர்களுக்கு உறைய வைக்கப்பட்ட இறைச்சி வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் எஸ் கே தாஹியா மீது விசாரணை நடந்தது.

ஆனால் ஆண்டு தோறும் பல லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களில் நடக்கும் ஊழல்களும் வரிப்பணக் கொள்ளையும் யாருக்கும் தெரியாத மர்மங்களாகவே நீடிக்கின்றன.

1987 போபர்ஸ் பீரங்கி ஊழல் வெளியான பிறகு இனிமேல் இடைத்தரகர்களே கூடாது என்று விதிமுறை ஏற்படுத்தப்பட்டது. 2005ம் ஆண்டில் உணவுக்காக பெட்ரோல் ஏற்றுமதி விவகாரத்தில் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் குடும்பத்தினரின் ஊழல் வெளியானதும் நேர்மையான அமைச்சர்கள் மூலம் ஊழலை தவிர்க்கலாம் என்று தீர்வு முன் வைக்கப்பட்டது.

இடைத்தரகர்கள் வைத்துக் கொள்வதில்லை என்று வாக்களிக்கும் ஒப்பந்தம், சி.பி.ஐ. விசாரணை, உச்ச நீதி மன்ற கண்காணிப்பு, நேர்மையான அமைச்சர் என்று மாற்றி  மாற்றி மேக் அப் போட்டு விட முயற்சித்தாலும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை என்ற அழுகி வீச்சமடிக்கும் ஜந்து நாட்டு மக்களை கடுமையாகச் சுரண்டிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய நலன் சார்ந்த, மக்கள் விரோத கொள்கைகளால் அண்டை நாடுகளுடனான பகை என்ற போர்வையில் பல லட்சம் கோடி ரூபாய் நாட்டின் பணத்தை வீணாக்கப்படுகிறது. அதிகாரிகளும், அமைச்சர்களும், இராணுவத் தளபதிகளும் இந்த சுரண்டல் அமைப்பில் ஒட்டிக் கொண்டு கொழுக்கின்றனர்.

தேசபக்திக்கு இலக்கணமாகத் திகழ்வதாக போற்றப்படும் இராணுவத்தின் இலட்சணம் இதுதான்.

பார்ப்பதற்கு இன்னுமொரு பிணம்…!

80

பிணத்தைப் பார்த்து தான்
உணர்ச்சிவரும் — எனும் நிலைக்கு
மரத்துப் போனவர்களே பாருங்கள்!

நீங்கள் பார்ப்பதற்கு
இன்னுமொரு பிணம்…

புத்தக மூட்டைகளுக்கிடையே
தன் பிள்ளைமுகம்
சற்று காணத் தாமதித்தாலும்
பதறும் தாயுள்ளங்களே
பாருங்கள்…

பாலச்சந்திரன் - 2மணல் மூட்டைக் குழியில்
தான் கொலை செய்யப்படுவோம்
என்பது கூட தெரியாமல்…
சாவின் தீனியை
வாயில் வைத்தபடி
தவித்திருக்கும் பாலகனை!

என்ன நடக்கப் போகிறது
என அறியாத தனிமை…
எதையோ எதிர்நோக்கி
பீதியில் பார்வை…
கடைசிவரை நம்பியிருந்து
கைவிடப்பட்ட ஈழத்தின் சோகம்
அவன் கண்களில் தெரிகிறதா?

அதண்டு பேசினாலே
துவண்டுபோகும் வயதுடைய பிள்ளையை
ஒவ்வொரு இடமாய் நிதானமாக
வெற்றுடம்பில்
ஓட்டையிட்டிருக்கும்
துப்பாக்கி மிருகங்கள்.

அடையாளம் காணமுடியாத படி
உடல் சிதறிய
ஓராயிரம் ஈழப்பிள்ளைகளின்
படுகொலைத் தடயத்தை
பாருங்கள் பாலச்சந்திரன் உடலில்…

சத்தமே இல்லாமல்
பெண்களை வல்லுறவில் சிதைக்கவும்,
ரத்தமே இல்லாமல்
பிணங்களைத் துடைக்கவும்,
இந்திய இராணுவப் பயிற்சியின் தீவிரம்
சிங்கள இனவெறிச் செய்கையில் மொத்தமாய் தெரியுது.

கண்டிக்கத்தக்க இந்த அநீதிக்கு
காவல் இருக்குது இந்திய அரசு.
காரியவாத மவுனம் உடைத்து
தமிழகமே!
ஈழக்குரலை வெடித்துப் பேசு!

– துரை.சண்முகம்

பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் தோலுரித்த புமாஇமு!

7

பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் தோலுரித்துக்காட்டிய புமாஇமு வின் பொதுக்கூட்டம்

உழைக்கும் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து போராடுபவர்கள் மீதான போலீசின் பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் முறியடிப்போம் !

பொதுக்கூட்டம் என்றாலே அதற்கு தலைப்பு என்று ஒன்று இருக்கும், அந்த தலைப்பினை ஒவ்வொரு நொடியும் நினைவு படுத்துவது போல, பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டது முதல் இறுதி வரை அனைத்து நிகழ்வுகளும் இருந்திருக்கின்றன என்பதற்கும் இந்த பாசிச சூழலில் எப்படி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டுதான் ”உழைக்கும் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து போராடுபவர்கள் மீதான போலீசின் பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் முறியடிப்போம் !” என்ற தலைப்பில் 23.02.13 அன்று மாலை ஆறு மணியளவில் மதுரவாயல், நெற்குன்றம் பகுதியில் ம.க.இ.க, புஜதொமு,புமாஇமு,விவிமு ஆகிய அமைப்புக்களின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம்.

இந்த பொதுக்கூட்டத்தின் நிகழ்ச்சியை தெரிந்து கொள்வதற்கு முன்னர் இந்த பொதுக்கூட்டம் இப்பகுதியில் இந்த தலைப்பில் ஏன் நடத்தப்பட்டது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

புமாஇமு-RSYF- புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற அமைப்பினை சேர்ந்த நாங்கள் மதுரவாயல் பிள்ளையார் கோயில் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக இப்பகுதி இளைஞர்களை அணிதிரட்டினோம். அன்று தொடங்கிய எங்கள் போராட்டம் எவ்வளவு சரியானது என்பதை மக்கள் தினமும் உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள். சாக்கடை அடைப்பு, சாலைகள் சீரமைப்பது முதல் ஊரின் பிரதான பிரச்சினையான கழிவறை இல்லாதது போன்றவற்றிற்காக இந்த ‘ஜனநாயக’ அமைப்பு முறைப்படி அனைத்து வழிகளிலும் போராடினோம். மனுக்களை எழுதி எழுதி எங்கள் கைகள் ஓய்ந்தன. அக்காள் – தம்பி, அப்பா- மகள் என அனைவருமே அருகருகில் இருட்டினில் உட்கார்ந்து கொண்டு மலம் கழிக்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான ஊர்களைப்போலவே சபிக்கப்பட்ட பகுதிதான் இதுவும். இந்த அவல நிலைக்காக ஓட்டு கேட்டு வரும் ஓட்டு கட்சிகளும் அரசும் இம்மியளவும் அவமானமாக உணரவில்லை. இதனை தட்டிக்கேட்காமல் இருப்பதுதான் அவமானம் என்று பதிய வைத்தோம் மக்களிடம், ஆறு ஆண்டுகள் இடைவிடாத போராட்டமே அரசின் எருமைமாட்டுத்தோலுக்கு சூடு கொடுத்து உறைக்க வைத்தது, கழிவறை கட்டப்பட்டது. சிலர் வியக்கலாம் கக்கூசுக்கு போய் இப்படி ஒரு போராட்டமா? என்று. கழிவறை மட்டுமல்ல எந்த ஒரு உரிமையும் போராடாமல் கிடைக்காது என்பது தான் இதிலிருந்து கிடைக்கும் அனுபவம்.

அதன் பிறகு எத்தனைப்போராட்டங்கள், கள்ளச்சாராயம், ரவுடியிசம் என அனைத்தையும் அமைப்போடு இணைந்து மக்கள் ஆதரவோடு ஒழித்துக்கட்டினார்கள் இளைஞர்கள். இப்படி கட்டாய நன்கொடைக்கு எதிராக தனியார் பள்ளிகளை முற்றுகையிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வைத்தது, சமச்சீர் பாடத்திட்டத்திற்கான போராட்டம், அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளையும் அரசுடமையாக்கக் கோரி டிபிஐ முற்றுகை என மாணவர்கள் இளைஞர்களுக்கான போராடக்கூடிய அமைப்பாக சென்னை மக்கள் மத்தியில் அறிமுகமானது புமாஇமு. சிவப்புக் கொடி வைத்து இருப்பவர்கள், சிவப்பு உடை உடுத்தியிருப்பவர்கள், பேருந்து , ரயில்களில் பேசுபவர்கள், புமாஇமு, RSYF என்று மக்கள் தோழர்களை அடையாளம் கண்டார்கள். பிரச்சாரத்தின் போது சிவப்பு உடை அணியாமல் சென்ற தோழரிடம் வீட்டிலிருந்த ஒரு பெண்

“சமச்சீர் புத்தகத்துக்காக போராடுனவங்க RSYFதானே , நீங்க யாரு? சிவப்பு சட்டையும் போடலை, பேட்ஜ்ம் இல்லை”

என்று கூறியதே அதற்கு சாட்சி.

நாட்டின் மிகப்பெரிய எதிரியான இந்த அரசை எதிர்க்க ஒரு ஆள் இருந்து விட்டால் அவர்கள் அளவில் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும் அரசு சும்மா இருக்குமா என்ன? தனது அடியாட்களான போலீசு – சிறை – நீதிமன்றத்தின் கொடுங்கரங்கள் மூலம் எப்படி போராடுகின்ற ஜனநாயக சக்திகளை, புரட்சிகர சக்திகளை ஒடுக்குகிறதோ அதுபோலவே மக்களுக்காக போராடும் புமாஇமு அமைப்பையும் ஒடுக்க நினைத்தது. வெளிப்படையாக போலீசு அந்த வேலையை செய்ய ஆரம்பித்த நாள் ஆகஸ்டு 25, 2012. முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் என்ற கருத்தரங்கிற்கு சென்றுவிட்டு திரும்பிய புமாஇமு தோழர்கள் திவாகர், குமரேசன் இருவருக்கும் “மதுரவாயல், ஏரிக்கரைப் பகுதியில் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இதில் கொஞ்சமும் தொடர்பில்லாத பள்ளி மாணவர்களை போலீசு காவல் வாகனத்தில் ஏற்றுவதாகவும்” தகவல் கிடைக்க, உடனே அங்கு சென்றார்கள். ‘ஏன் பள்ளி மாணவர்களை கைது செய்கிறீர்கள்?’ என்று அவர்கள் கேட்டதுதான், தாமதமின்றி அங்கு இருந்த SI கோபிநாத்அதிகாரத்தை கேள்வி கேட்டதற்காக தாக்கியதும் பின்னர் ஆய்வாளர் ஆனந்த பாபு இருவரையும் கடத்திக்கொண்டு போய் வைத்ததும் அவர்களை மீட்க காவல் நிலையத்திற்கு சென்ற புமாஇமு ஆண், பெண் தோழர்கள், தாய்மார்கள் என அனைவரையும் போலீசு அடித்து துவம்சம் செய்ததும், அதில் 3 தோழர்கள் படுகாயமுற்றதும், 50 பேர்கள் வேலூர் சிறையில் 17 நாட்கள் இருந்ததும் அடுத்தடுத்து நடந்தன.

இரண்டு பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது, 50 பேர் சிறை என்றால் இனி புமாஇமு ஒழிந்து விடும் அதுமட்டுமல்ல இதே பாணியில் புரட்சிகர அமைப்புக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்க மனப்பால் குடித்தது போலீசு. ஆனால் முன்னைவிட சமூகப்பிரச்சினை அனைத்திலும் விரைவாகவும் தீவிரமாகவும் புரட்சிகர அமைப்புக்கள் தலையிட்டன. பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசினால் மரண தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தே செயலில் ஈடுபட்ட பகத் சிங்கின் வாரிசுகளை பொய் வழக்குகள் என்ன செய்யும்?

போலீசுக்கோ கோபம் தலைக்கேறியது, போலீசுக்கு கோபம் வந்தால் என்ன செய்யுமோ அதை மீண்டும் செய்தது. பிரச்சாரம் செய்தவர்களை விசாரணைக்கு அழைத்து செல்வது, சுவரொட்டி ஒட்டியவர்களை கைது செய்வது,புமாஇமுவினர் பயங்கரவாதிகள் என்று பொய்களை புனைந்து முகவரியற்ற பிரசுரத்தை கொடுப்பது என்று அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறின. பிள்ளையார் கோயிலில் நுழைந்து அங்கு முன்னணியாளர்களை கைது செய்வதன் மூலம் அமைப்பை ஒடுக்க தக்க தருணம் எதிர்பார்த்தது போலீசு.

இப்போதுதான் பிற்பாதி கதையில் ஹீரோ தாஸ் அறிமுகமாகிறார். இவரை மதுரவாயலில் தாஸ் என்றால் தெரியாது, லூசு தாஸ் என்றால் உடனே தெரிந்து விடும். ஊரில் யாருடனும் எதற்கும் சேராமல் எல்லோரும் வடக்கு பக்கம் நடந்தால் தாசும் அவரது குடும்பமும் தெற்கு பக்கம் நடப்பார்கள். அப்படிப்பட்ட தாஸ் குடும்பத்திற்கும் அருகில் வசித்த தோழர் ஒருவரின் குடும்பத்திற்கும் ஏற்பட்ட வாய்ச்சண்டையை போலீசு பயன்படுத்தியதும், தாஸ் இப்போது புமாஇமுவை ஒடுக்க கிடைத்த துருப்புச்சீட்டு. தாஸ் கூறியதை விட்டு சொந்தமாக FIRல் கதை எழுதி தோழர் நெடுஞ்செழியனை முதல் குற்றவாளியாகியது போலீசு. இந்த இந்த சினிமாவை இயக்கும் போலீசு தாஸ் மூலம் சொந்த குடிசைக்கு தீவைத்தது. அப்போதும் மக்கள் தாசுக்கு ஆதரவாக வரவில்லை. இறுதியில் ஒரு நாள் தாஸ், அவரது குடும்பம் திடீரென பகுதி இளைஞர்களைத் தாக்கிவிட்டு தங்களை பகுதி தோழர்கள் தாக்கியதாக புகார் கொடுத்தது.உடனே வாய்ப்புக்கு காத்திருந்த போலீசு முன்னணியாளர்கள் உட்பட 17 பேர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்தது.

17 பேர்களையும் தேடுதல் வேட்டை நடத்துவது என்ற பெயரில் தாஸ் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்து செலவு வைத்து விட்டுப் போனது போலீசு. இப்படித்தான் பவஸ்டார் போல லூசு தாஸ் சூப்பர் ஹீரோ ஆனார். இனி நம்மை கேள்வி கேட்க ஆளில்லை என்று தெருவில் வருபவர்களை அடிப்பது, உடனே பொய்ப்புகார் கொடுப்பது என்று இருந்தார். பகுதித் தோழர்களை கண்டவுடன் காதில் போனை வைத்து “வந்துட்டாங்க” என்பார், உடனே போலீசு வந்து ஆயிரக்கணக்கில் செலவு வைத்து விட்டுப் போகும்.

17 பேர்களையும் போலீசு தேடிக்கொண்டிருக்க, அவர்களோ யாரும் நெருங்க முடியாத, பாதுகாப்பான இடத்தில் இருந்தார்கள். ஆம் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலேயே இருந்தார்கள்.

போலீசு ஒரு தெருவில் வந்து அணிவகுப்பு நடத்திக்கொண்டு இருக்கும் போது அடுத்த தெருவில் தோழர்கள் மக்களிடம் பிரச்சாம் செய்து கொண்டு இருப்பார்கள். இது தெரிந்த போதும், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றூ தனது பதிவேட்டில் பதிவு செய்யும் போலீசு.

இந்த நிலையில் பகுதியில் சாலையை சீரமைப்பது, சாக்கடை, குப்பயை தூர் வாருவது என்ற கோரிக்கைகளை முன்வைத்து தெருமுனைக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. அடுத்த நாளே ஆய்வாளர், கவுன்சிலருடன் வந்து மாநகராட்சி ஊழியர்களுடன் வந்து சாக்கடையை தூர்வாரவும் குப்பைகளை சுத்தம் செய்யவும் ,சாலையை செப்பனிடவும் ஆரம்பித்தார். பகுதியில் இருந்து யார் எந்த விசயமாக புகார் கொடுத்தாலும் உடனே தாஸ் வரவழைக்கப்படுவார். இவருக்கு பிடிக்காதவர்கள் எனில் இவன் அமைப்புக்காரன் என்று அடையாளம் காட்டுவார், உடனே போலீசு நிலையத்தில் புகார் வாங்க மாட்டார்கள் “நீ அமைப்பில் இல்லை என்று 50 பேர்களிடம் கையெழுத்து வாங்கிட்டு வா” என்று போலீசு சொல்லும், அப்படி மானமிழக்க வேண்டிய அவசியமில்லை என்று இளைஞர்கள் புமாஇமுவினரிடம் கூறுவார்கள். இந்த போலீசு அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தை மதுரவாயல் மட்டுமல்ல சென்னை முழுவதும் பிரச்சாம செய்தார்கள், மதுரவாயல் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி கோரப்பட்டது.

“இவர்கள் நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள், பஸ் டேவை ஆதரிப்பவர்கள், பயங்கரவாதிகள்” என்று காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதும் அடுத்த 2 மாதங்களில் பல பூச்சாண்டிகளை ஒவ்வொரு நிமிடத்திற்கும் போலீசு நீதிமன்றத்தில் கூறியதும் இறுதியில் போராடி பொதுக்கூட்ட அனுமதி வாங்கியவுடன் அருகிலேயே ஜெயாவின் பிறந்த நாள்விழாவிற்கு அனுமதி கொடுத்தது போலீசு. அதுமட்டுமல்ல நூறு காவல்துறையினரை பயபீதியூட்ட குவித்தாலும் இந்த அடக்குமுறைகளே வெற்றிப்பொதுக்கூட்டமாக மாற்றியது

தோழர் முகுந்தன்
இப்பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்ற புஜதொமுவின் மாநிலத்தலைவர், தோழர் முகுந்தன் பொருளாதார கோரிக்கைகளுக்காக மட்டுமே பல தொழிற்சங்கங்கள் உள்ள நிலையில் தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல சமூகத்தில் உள்ள பிரச்சினைகளைத்தீர்க்காமல் தொழிலாளி தன்னுடைய எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்று தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக அணி திரட்டும் பணிதான் புஜதொமுவுடையது என்று கூறினார்.

“வெள்ளையன் ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்களுக்கு அன்று பயங்கரவாதிகள் என்று பட்டம் கொடுக்கப்பட்டது. அது போல முதலாளிகளுக்கான இந்த அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தீவிரவாதி என்ற பெயரை போலீசும் அரசும் வைக்கிறது. அதை மக்கள் ஒருபோதும் மக்கள் ஏற்பதில்லை. புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி சமூகத்தை மாற்றும் போதுதான் முதலாளித்துவ கொடுமைகளுக்கு முடிவு கட்டமுடியும்” என்று தனது கருத்தைப் பதியவைத்தார்.

116-madhuravoyal அடுத்ததாக உரையாற்றிய சென்னைப்பகுதியின் புமாஇமு செயலர் தோழர் கார்த்திகேயன், கடந்த ஆகஸ்ட் 25 முதல் தற்போதைய சம்பவங்களை விளக்கிவிட்டு “குண்டாஸ் வழக்கு, பொதுக்கூட்ட வழக்கிற்கு நாங்கள் செய்த செலவை விட தாஸ் செய்த செலவு தான் அதிகம்” என்றும் தற்போதும் ஊரில் யாரும் மதிக்காத நபராக தாஸ் இருப்பதையும் கூறி இப்படி போலீசுக்கு உளவு வேலைகள் செய்வோரை போலீசு பயன்படுத்திவிட்டு தானே அழித்த சில சம்பவங்களையும் எடுத்துக்காட்டினார்.

புமாஇமு மீது பொய்ப்பிரசுரம் தயாரித்து முகவரி இல்லாமல் இருந்தவுடனே அது போலீசு வேலைதான் என்று மக்கள் கூறியதையும், 2000ம் ஆண்டு முதல் மக்களுடைய பிரச்சினைகளை எப்படித் தீர்க்க முடியும் என்பதை நடைமுறையில் உணர்த்தியதாலேதான் மக்கள் தங்களின் அரணாக இருந்தார்கள் என்றும் பொய் வழக்குகளும் அடக்குமுறைகளும் மேலும் மேலும் மக்களுடன் நெருக்கமாக்கியே உள்ளன என்றும் மறுகாலனியத்தாக்குதலுக்கு எதிராக போராடுபவர்கள் நக்சல்பாரிகள் மட்டும்தான் என்பதை போலீசின் பொய்ப்பிரச்சாரமே உறுதிபடுத்தியுள்ளது
என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் கார்த்திகேயன்.

கண்டன உரையாற்றிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ
சட்டத்தை நிலை நாட்டுவதாக போலீசு கூறுகிறது, உண்மையாகவே சட்டத்தை நிலை நாட்ட வேண்டுமானால் எந்த ஒரு அரசியல் கட்சி நபரும் வெளியில் இருக்க முடியாது. ஆனால் போலீசு, உரிமைகளுக்காகப் போராடும் உழைக்கும் மக்கள் மீது பொய்வழக்குப் போடுகிறது, முதலாளிகள் மீது அல்ல. காவல்நிலையங்கள் இருக்கும் வரை பொய் வழக்குகள் இருந்தே தீரும்.ஏனெனில் காவல் துறை மக்களை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்டது. அதனால்தான் அடிப்பதற்குஎன்றே தனிப்பிரிவு, எண்கவுண்டருக்கென்றே தனிப்பிரிவு என்று போலீசுத்துறை ஆழப்படுத்துப்படுகிறது.”

தோழர் ராஜூ

“தண்ணீர் இல்லை, சாலை வசதி இல்லை என்று கேட்பது சட்டத்திற்கு எதிரானதா? மக்களுக்கு அடிப்படை உரிமைகளை செய்துதர வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதா இல்லையா?” என்று கேள்விகள் கேட்டு, ஒருவரை எந்த காரணத்திற்காக கைது செய்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் காவல் துறையை கேள்வி கேட்டதற்காக குண்டர் தடுப்புச்சட்டம் என்றால் ”சட்டப்படி நீங்கள் நடந்து கொள்ளுங்கள்” என்று போலீசு கூறுவதற்கு தகுதி இல்லை. கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி, மாமூல், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என்று குற்றவாளிகளாக நிரம்பி வழியும் இந்த போலீசுத்துறையை மறு சீரமைக்க எத்தனை கமிஷன்கள் போட்டாலும் அது நடைமுறைக்கு வராததற்கு காரணம் இந்தத்துறையே முதலாளிகளின் லாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.

போலீசு மட்டுமல்ல அரசின் உறுப்புக்களான சட்டம் – போலீசு – நீதி மன்றம் என எதுவும் மக்களுக்காக இல்லாமல் முதலாளிகள் நாட்டை கொள்ளையடிப்பதற்காக இருக்கின்றன. அதனால்தான் நாட்டையே சுரண்டி கொழுக்கும் எந்த முதலாளியின் மீதும் சட்டம் பாய்வதில்லை. இந்த கேவலமான சட்டத்தை, போலீசை, நீதிமன்றத்தை எதிர்ப்பதையும் அதனால் சிறைக்கு செல்வதையும் பெருமையாகக் கருதவேண்டும். அப்படி ஒவ்வொருவரும் சட்டத்தை எதிர்த்து ஒரு முறையேனும் சிறைக்கு செல்லும் போதுதான் இந்த அரசின் மீதான பயம் உடைக்கப்படும்.

தினமணி பத்திரிக்கையே இன்று மறுகாலனியாதிக்கம் என்று எழுதும் அளவுக்கு மறுகாலனியாக்கத் தாக்குதல்கள் சுழன்றுசுழன்று அடிக்கும் இந்த வேளையில் அதை காட் ஒப்பந்தம் வந்த காலம் முதற்கொண்டு களத்திலிறங்கி போராடிவரும் புரட்சிகர அமைப்புக்களே புதிய ஜனநாயகப்புரட்சியை சாதிக்கும் என்றும் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போலீசின் பொய்வழக்குகளுக்கு எதிராகவும் நமது தோழர்களின் தியாகத்தையும் வீரத்தையும் வரித்துக்கொண்டு முன்னேறிச்செல்வோம்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

172-madhuravoyal
கடந்த ஆறு மாதங்களாக குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையிலிருந்த திவாகர், குமரேசன் ஆகிய இரு தோழர்களும் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

போலீசின் அடக்குமுறையை அம்பலப்படுத்தியும் மறுகாலனியத்தாக்குதலுக்கு எதிராக போராட வேண்டியதை வலியுறுத்தியும் மாணவர்கள் – இளைஞர்கள் நுகர்வு மோகத்தை கைவிட்டு சமூகத்திற்காக போராடுவதே ’கெத்’ என்பதை பதிய வைக்கும் வகையில் ம.க.இ.க மய்யக் கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடந்தது.

மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டம் , அடக்குமுறைகளுக்கு எதிராக எப்படி போராட வேண்டுமென்பதையும், அரசு பாசிசமயமாகுவதை முறியடிக்க புரட்சிகர அமைப்புக்களே ஒரே மாற்று என்பதை பதிய வைக்கும் விதமாக இருந்தது.

சிறுகதை : “நார்மல்”

0

வேப்பிலையை ஒரு மாதிரி குலுக்கி, குலுக்கி தலையிலிருந்து கால் கட்டை விரல் வரை தடவிய சாமியார், திடீரென குரலெடுத்து “எங்கடா? எங்க?“என்று கத்தியபடி, வேப்பிலைக் கொத்தால் கதிரேசன் தலையில் ஓங்கி, ஓங்கி அடிக்க, பக்கத்திலிருந்த அமிர்தவள்ளிக்கு கணவனைப் பார்க்க பார்க்க பாவமாய் இருந்தது.normal-story

“தே! சாமி கேக்குறார்ல சொல்லேன். இந்த அடி வாங்கிட்டு நீ பேசாம முழிக்கறத பாக்கவா நான் உசுரோட இருக்கணும்!” அடங்க மாட்டாத கண்ணீரை முந்தானை தலைப்பால் துடைத்துக் கொண்டாள். “ஊம்! குறுக்க நீ பேசாத, எங்கடா? எங்கேந்து வர்ற?” இமைக்காமல் சாமியாரையே வெறித்துப் பார்த்து, பற்களை நறநறவென கடித்த கதிரேசன் “வயக்காடுறா, வயக்காடு… வரப்புல மிதிச்சு வாய்க்கால்ல நனச்சு… ஏய்! வயக்காடுறா!” தோளைக் குலுக்கி, தொடையைத் தட்டிக்கொண்டே வேகமாகக் கத்தியபடியே “ஊம்… ஊம்” என்று உறுமினார்.

“எந்த இடம் சொல்லி விடு! வந்த இடம் போயி விடு! வெந்தகறி வச்சிடுறேன்! விழுங்கி விட்டு ஓடி விடு! சந்தன பத்தி ஒரு கட்டு சாராயம் ஒரு லிட்ரு…

டூன்… டூன் டூன் டூம்…”

உடுக்கை நாலு தட்டு தட்டி விட்டு, “ஏய்!… ஓடுறியா? ஓடுறியா?” துள்ளிக்கொண்டு கதிரேசனை வேப்பிலையால் சாத்தினார் சாமியார். வேப்பந்தழை பிய்ந்து உதிர்வதையே கடுகடுப்பாகப் பார்த்த கதிரேசன் “டேய்! ஏன்டா! நாத்த புடுங்குன… நாயே! ஏன்டா நாத்த புடுங்குன…?” என்று கத்திக்கொண்டே சாமியாரின் கையிலுள்ள வேப்பிலைக் கொத்தை பிடுங்கப் பாய்ந்தார்… அமிர்தவள்ளியால் அடக்கிப் பிடிக்க முடியவில்லை.

சாமியாரின் மைக்கூடிலுள்ள சின்ன சூலத்தையும் எடுத்தபடியே “ஏன்டா! கதிரருவாள கால்லயா போட்டு மிதிக்குற!… வக்காளி… வச்சுட்டு தேட மாட்டேன்டா . டேய்…டேய்!” என்று சாமியார் மேல் பாய… ஒரு வழியாக துணை ஆட்கள் மூன்று பேர் மடக்கிப் பிடித்து அடிக்க… கை நிறைய சாம்பலை பளிச்சென கதிரேசன் முகத்தில் அடித்து கண்ணை மறைத்தார் சாமியார். “டேய்! அவன தள்ளிட்டு போயி, பிடிங்கடா…” என்றவர், “தோ பாரும்மா! உச்சு உருமத்துல வரப்பு முனி அடிச்சிருக்கு… உடனே எறங்காது. வர்ற அம்மாவாச அன்னிக்கி சாமத்துல வச்சு ஆணி அடிச்சாதான் கட்டுப்படும். சேவல், எலுமிச்சம்பழம்…சாராயம்… சகலமும் வச்சு பூசயும், காவும் தரணும். மேல வேலைகளும் இருக்கு. ஆயிரம் ஆவும்…”

“பணம் ஒரு பக்கம் ஆவட்டும் சாமி. ஆறு மாசமா குணம்கெட்ட தனமா பேசறாரு.. சாமத்துல எழுந்திரிச்சு ஓடுறாரு… உங்களத்தான் ஊர் சனமே நம்புது. அதான் வந்தே.. பாத்து வுடுங்க.. பணம் ஏற்பாடு பண்ணிட்டு வாரேன்…”

“தா! அது வரைக்கும் இந்த தாயத்த அவன் தூங்குறப்ப கட்டி வுட்ரு… ரா சேட்ட அதிகமாக இருக்கும். பயப்படாத… ரொம்ப படுத்துனா… இந்த துன்னுற மூஞ்சில அடி! மந்திரிச்ச துன்னூறு.. பாத்து வேற யாரும் கை படாம பாத்துக்க! தொடர்ச்சியாகப் பேசியவர் சற்று தடித்த குரலில், “கைல வாங்க மாட்டேன். தோ உண்டியல்ல நோட்ட போடு!” என்று உண்டியலைக் காண்பித்தார்.

ஆடி அடங்கியவர் போல லேசாகத் துவண்டிருந்த கதிரேசனை “தே! வா…” என்று தலையில் குப்பையாய் கிடந்த வேப்பிலையை தட்டிவிட்டு, கலைந்த முடியைக் கையால் கோதி விட்டு “மகமாயி… கண்ணு தெறக்க மாட்டியா..” என்று கன்னத்தில் போட்டபடி, கணவனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு நகர்ந்தாள்.

000

“இப்பெல்லாம் ஒரு ஏக்கர் நெலம் வச்சிருந்தா கூட மிராசுன்னு பத்திரிகைல போட்டுக்கிறானுவ. அப்புடி இல்லடா, இவன் உள்ளபடியே மிராசு. சோழபுரத்துலேந்து, திருப்பனந்தா வரைக்கும் பேர்பாதி நிலம் வச்சிருக்கான். புள்ளங்கல்லாம் பெரிய படிப்பு படிச்சு, பெரிய எடத்துல இருக்கானுவ. இந்த மனுசன் ஊர் கவுரவத்த விடாம இங்க கெடக்குறாரு!”

மணியும், பாண்டியனும் மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டி, கைப்பக்கம் கத்தி முனை மாதிரி கஞ்சி விறைப்போடு அயர்ன் பண்ணிய வெள்ளை சட்டையோடு, பேசிக்கொண்டே கல்யாண வீட்டுப் பக்கம் நெருங்கினர்.

“வௌங்குன மாதிரி தான்! குடிக்கறது எலி மூத்திரம், கடிக்கறதுக்கு பச்சடி கேட்டானாம்… போங்கடா வௌங்குன மாதிரிதான்!”கதிரேசன் தன்பாட்டுக்கு பேசுவது போல, போய் வரும் வெள்ளை சட்டைக்காரர்களைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

“வயசுல பெரியவரா இருக்காறேன்னு பாக்குறேன். இல்லேன்னா ஒரு எத்து, எத்துனேன்னு வச்சுக்க.. தட்டுகெட்டு போயிடும்.” “விடுறா! அந்தாளு மெண்டல்டா! மெட்ராஸ்ல இருக்கான்ல சுப்பிரமணி, அவன் அப்பாரு. வாழ்ந்து கெட்ட ஆளு! முன்ன பரவாயில்ல. இப்ப ரொம்ப மெண்டலாயிட்டாரு போல. போற வர்றவங்ககிட்ட வம்பு பண்ண ஆரம்பிச்சுட்டாரு!” கண்டு கொள்ளாமல் இருவரும் ஒதுங்கிக் கொண்டனர்.

“அண்ட வெட்டவே, ஊர்ல வேல கிடையாதாம். கண்ட பயலுக்கும் கேக்குதாம் வெள்ள வேட்டியும், சிலுக்கு ஜிப்பாவும்… ஒரு பய உருப்படப் போறதில்ல. ஊரு சரியில்ல. போயி சோறதான் திம்பானுகளா… இல்ல வேற எதனாச்சுமா? ஹே… ஹே…” போகிறவர்களைப் பார்த்து பேசப் பேச, சிலருக்கு கோபம் வந்து “இவன் மெண்டலா?! இல்ல திமிரா பேசிகிட்டு திரியறானா…? போய்யா அந்தப் பக்கம்.. உத வாங்குவ. ஆமாம்..” என்று துரத்தி விட்டனர்.

அந்த நேரத்துக்கு வாயை மூடிய கதிரேசன், மெல்ல நெருங்கி கல்யாண மண்டப வாசல் வாழை மரம் பக்கம் வந்து நின்று கொண்டு, அணைந்து அணைந்து எரியும் சீரியல் பல்பை பார்த்து அடிக்கொருதரம் “ஹேய்.. ஹேய்” என்று சிரித்துக் கொண்டார். “அட பார்றா! வாழ மரத்துல லைட்டு எரியுது! வாழத்தண்டு லைட்டும் எரியுது… அட ஜிங்கானாம்! எல்லாம் ரைட்டு! எதுக்கு எழவெடுத்த பயலுவ! பாட்ட போட்டு கூட்டம் சேக்குறானுவ! ”

“யோவ்! போய்யா… மெண்டல் பய… போய்யா.. அந்தப் பக்கம்..” தோளில் கிடந்த துண்டை உதறிக்காட்டி துரத்தினார்கள் வாசல் பக்கம். கொஞ்சம் அடியைப் பின்னுக்கு இழுத்தாலும் கதிரேசன் வாயை மூடவில்லை,

“ஊரக் கூட்டுங்க. இலையப் போடுங்க… போங்கடா.. கடைசில ரெண்டாவது நாள்ல தாலிய அறுத்துட்டு வந்து நிக்கப் போவுது! இதுக்கு இந்தக் கூத்து! பட்டுப் போன மரத்துல பவளமல்லி பூக்குமா? காஞ்ச வாய்க்கால்ல கப்பல் வுடுறானுவளாம்! அவன் மட்டும் என்ன! கார்ல போயி முட்டிக்க போறான்… ஹே… ஹே..”

“நாயே! நாயே! கல்யாண வீட்டுல வந்து அபசகுனமா பேசுறான் பாரு! போடுறா ரெண்டு!” இரண்டு பேர் ஓடி வந்து முதுகில் தட்டுத் தட்டி விரட்ட “ஹே..ஹே.. “ என்று சிரித்தபடியே மரக்கட்டையென விறைத்து நின்ற கதிரேசனை அமிர்தவள்ளி ஓடி வந்து, பிடித்து இழுத்தாள். “கோவிச்சுக்காதீங்க! கொஞ்சம் கொணம் சரியில்லாதவரு. இழுத்துட்டு போயிடுறேங்க! அடிக்காதீங்க! கொஞ்ச நேரம் ரேசனுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள என்னா அமளி துமளி பண்ணிட்ட?! இப்படி ஊர்ல அடி வாங்கவா உன்ன நான் பாக்கணும்!” அழுது புலம்பியபடியே இழுத்துக்கொண்டு நடந்தாள்.

“ஏன் அமிர்தவள்ளி, ரொம்ப முத்திடுச்சு! இது மந்திரத்தால சரி வராது. மெட்ராஸ்லதான் உன் புள்ள இருக்கான்ல. பேசாம அங்க அழைச்சிட்டு போயிடு! பெரிய பெரிய பைத்தியக்கார ஆசுபத்திரியெல்லாம் அங்க இருக்கும். இப்பவே காட்டுனா சரியாயிடும்! இப்புடியே இருந்தின்னா ஊரு சனமே சண்டை வளத்திடும்! கேளு அமிர்தவள்ளி! ஒரு நட உன் புள்ள வீட்டுக்கு போயி காமி! ரோசத்த பாக்காத! அங்க போனாதான் கொணமாகும்! கேளு!” சின்னப்பொண்ணு பலவாறாக வலியுறுத்தியது, இரவு முழுக்க தலையில் எதிரொலிக்க.. பணம் ஏற்பாடு செய்து கொண்டு சென்னைக்கு காலை ரயிலை பிடித்தாள் அமிர்தவள்ளி. பல நேரங்களில் கதிரேசனின் பேச்சு எரிச்சலாக இருந்தாலும், வழிநெடுக ஜன்னல் வழியே தென்படும் வயல், வரப்புகளை வெறித்தபடியே ஏதும் பேசாமலே வந்த கணவனின் மௌனமும் அவளுக்கு பெரிய வேதனையாகப் பட்டது.

000

உடல் நலம் தொடர்பான சோதனை, கேள்விகளை முடித்துக்கொண்டு பக்கத்தில் உட்கார வைத்துப் பேச ஆரம்பித்தார் மருத்துவர்.

“அய்யா என்ன வேல பாத்தாரு? எப்பயிலேந்து இப்புடி இருக்கு? கொஞ்சம் டீடெய்லா சொல்ல முடியுமா?”

“நெல்லறுத்து, கட்டுக்கட்டி, பையன படிக்க வச்சி, கல்யாணமெல்லாம் பண்ணி வச்சு நல்லா குடும்பம் பண்ண மனுசன் சார்! எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் ரோட்டு மேல இருந்துச்சு..” அமிர்தவள்ளி வரிசையாகச் சொல்ல வர, வேகமாக இடைமறித்த சுப்பிரமணி “இரும்மா! நான் சொல்றேன்” என்று முந்திக் கொண்டான். “நல்ல ஆரோக்கியமா இருந்தவர்தான். வேலைக்கு போக வேணாம்னாலும் கேக்காம, ஆறுமாசமா வேலைக்குப் போக ஆரம்பிச்சாரு! அதுக்கப்புறம் ஏதோ ஷாக் ஆனவரு மாதிரி ஒரு நாள் பேசாமல் இருந்துருக்காரு. கிராமத்துல ஒழுங்கா டாக்டரை பாக்காம, பேயோட்டு அது இதுன்னு முத்த வுட்டுட்டாங்க சார்!” என்று சுருக்கமாக முடித்தான்.

“அய்யா யாரு இது? தெரியுதா?” என்று மகனைக் காண்பித்து கதிரேசனிடம் கேட்டார் டாக்டர். உதட்டைப் பிதுக்கி, பின் மெல்ல நாக்கை நீட்டியவர் “ஊம்” என்று சுற்றும் முற்றும் பார்த்து அமைதியானார். “அய்யா! இவுரு உங்க பையன் தெரியுதா?” என்று திரும்பவும் கேட்டார், “ஊம்.. தெண்டம், தெண்டம். யாரு கண்டா, எந்த புத்துல எந்த பாம்பு?” என்று டாக்டரிடம் கையை விரித்து காண்பித்தவர், பலமாக சிரித்துக் கொண்டார்.

“இப்புடிதான் சார்! சம்பந்தா சம்பந்தமில்லாம பேசுறாரு. நானாவது மகன் பொறுத்துக்கலாம்.. என் வீட்ல கண்டபடி பேசுறாரு! பக்கத்துலயும் பிரச்சனை ஆயிடும் போல இருக்கு!” சுப்பிரமணி பயந்து போய் பேசினான்.

“நோ சார்! சம்பந்தப்படுத்திதான் பேசுறார்! இது ஒரு வகை மனச்சிதைவு நோய். தொடர்ச்சியான ட்ரீட்மெண்ட் எடுத்தா சரிப்படுத்தலாம். இப்போதைக்கு நைட்ல அவர கண்ட்ரோல் பண்ண, தூங்க வைக்க இன்ஜக்சன் எடுத்துக்கலாம். பிறகு மாத்திரை போதும். பயப்படாதீங்க..” என்றவர், “கொஞ்சம் டீடெய்ல் ஹிஸ்ட்ரி தெரிஞ்சிக்கிட்டாதான் நல்லது. நீங்க சொல்லுங்கம்மா! ஏன் இப்படி பேச ஆரம்பிச்சாருன்னு கவனிச்ச வரைக்கும் சொல்லுங்கம்மா!”

“அதான் சார்! எங்களுக்கு கோவிலாச்சேரி ஊரு, சோழபுரம் பக்கம். ரோட்டு மேலேயே நாலு ஏக்கர் நிலம் இருந்துச்சுங்க. நாளடைவிலே தண்ணி இல்லே, மழை இல்ல. புள்ளைகிட்ட போரு போடச் சொன்னாரு. அவனும் இனி வயசாகுது, விவசாயம் வேணாம், கண்டு முதலும் இல்ல, இலாபமும் இல்லன்னு, மாடு கண்ணெல்லாம் வித்துட சொல்லிட்டான். காசு அனுப்புறேன்னு சொன்னான். நம்ப கட்ட இருக்குற வரைக்கும் உழைக்கணும்னு பக்கத்து போர்லேந்து மொற வச்ச தண்ணியில முடிஞ்ச வரைக்கும் கடன வாங்கி பயிர் பண்ணிப் பாத்தாருங்க. ரெண்டு வருசமா அதுலயும் நட்டமாயிடுச்சுங்க. புள்ளயும் கடனு எதுக்குன்னு, ஒரு வருசத்துக்கு முன்னாடி ரோட்டோரம் நல்ல வெல வருதுன்னு புடிச்சு வித்துட்டானுங்க. அதுலேர்ந்து புள்ளையோட பேசாம, கொஞ்சம் வருத்தமா இருந்தாரு. புள்ள காசு அனுப்புனா திருப்பி அனுப்பிடுவாரு. திரும்ப வித்த வயல்லயே வாங்குனவங்க ஒரு ஸ்கூலு கட்டுனாங்க. அதுல வாட்சுமேனா வேலைக்கு போனாருங்க.. நல்லாதான் ஒரு மாசம் போயிட்டு வந்தாரு.. திடீர்னு ஒரு நாள் அங்க வெறி கொண்ட மாதிரி கத்திக்கிட்டு, அங்கயும் இங்கயும் ஓடுனாறாம். சனங்களால புடிக்கவே முடியலயாம். பிறகு சேதி வந்து, தெரு சனத்தோட போயி ஒரு மாதிரி கூட்டியாந்தேன்.

அப்பப்ப நல்லா இருப்பாரு.. திடீர்னு பேச ஆரம்பிச்சிருவாரு. யாரப் பாத்தாலும் திட்டித் தீக்கறதுதான் பெரிய பிரச்சனையாயிருக்கு. அங்க ஊர்ல அப்பப்ப ஒரு டாக்டரு மரத்துப் போற ஊசி போட்டாரு. அது போட்டா கொஞ்சம் பேசாம உக்காருவாரு. லேசா கண்ணு செருகுன மாதிரி இருக்கும். இப்ப ஊசியும் போடாம, அதிகமா பேச ஆரம்பிச்சுட்டாரு. நீங்க தான் சார் எங்களுக்கு வழிய காட்டணும். அங்கயாவது கிராமம், இங்க குடிக்குள்ள குடி. இவர வச்சிகிட்டு இருக்க முடியல.. மரத்துப் போற ஊசியாவது போட்டு வுடுங்க.”

“பயப்படாதீங்கம்மா.. மரத்துப் போற ஊசியா இருக்காது. வேற ஏதாவது போட்டுருப்பாங்க. இது பொறுமையாதாம்மா சரியாகும். பக்கத்துல இருந்து, நாம ஒத்துழைப்பா இருந்தோம்னா சீக்கிரம் குணப்படுத்தலாம்.”

“சார்! இன் பேஷண்ட்டா சேத்தாலும் பரவாயில்ல. இங்க குடியிருக்குற எடத்துல மெயின்டெய்ன் பண்றது கஷ்டமாக இருக்கு..” சுப்பிரமணி டாக்டரை பதமாக நச்சரித்தான்.

“புரிஞ்சுக்கோங்க சார்! இன் பேஷண்ட் அளவுக்கு இவருக்கு எதுவும் ஆகல. ட்ரீட்மெண்ட் இல்லாம இருந்ததாலயே ப்ராப்ளம் கூடியிருக்கு. ஏன் சார் டி.வி.ல ஏதேதோ டயலாக் எல்லாம் வருது. பிடிக்குதோ பிடிக்கலயோ எல்லோரும் கேட்டு அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறாங்க. அதே போல இவரு மனசுல பட்டத பேசுறாரு.. நாம அட்ஜஸ்ட் பண்ணிட்டு போவமே. ஒரு மாசம் மருந்து தர்றேன். மன்த்லி ஒரு தடவ அழைச்சிட்டு வந்து காமிங்க. இப்ப ரெண்டு நாள் மருந்து எடுத்துகிட்டு வந்து காட்டிட்டு போங்க. என்ன?” என்றார் மருத்துவர்.

“சரி சார்! வணக்கங்க. அமிர்தவள்ளியும் சுப்பிரமணியனும் மருத்துவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட, அவர்களை உற்றுப்பார்த்த கதிரேசனும் மருத்துவரைப் பார்த்து கும்பிட்டார்.

வீட்டுக்கு வந்ததிலிருந்து, சுவரோரம் போய் பேசாமல் மூலையைப் பார்த்தபடி உட்கார்ந்து கொண்டார் கதிரேசன். “அத்தை! எனக்கு மாமா முன்னாடி வர தயக்கமா இருக்கு. எதித்தாப்ல வந்தாலே திட்றாரு.. அதான் உக்காந்து பேச மாட்டேங்குறேன். தப்பா எடுத்துக்காதீங்க!” என்று காப்பியைத் தந்துவிட்டு அடுப்படிப் பக்க வேலைகளில் மூழ்கினாள் மருமகள். அங்கிருந்தபடியே “கவலைப்படாதீங்க! தொடர்ந்து பாத்தோம்னா சரியாயிடும். நல்ல டாக்டர் அவரு” என்று ஆறுதல் கூறினாள். “வந்தவளுக்கு உள்ள அக்கறை வளத்தவனுக்கு இல்லியே! அவுரு பரவாயில்ல போல இருக்கு. தாம் பாட்டுக்கும் பேசிக்கிறாரு. இவனும் அப்பனப் போல கிறுக்குப் புடிச்சவன் மாதிரி சதா உன் மேல எரிஞ்சு எரிஞ்சு விழறானே. நீயாவது பொறுத்துப் போம்மா… என்னத்தப் பண்றது?”

எதற்காக மகன் எரிந்து விழுகிறான் என்ற சூட்சுமம் தெரிந்தும் மருமகளிடம் நாகரிகமாக உரையாடிக் கொண்டாள். மேற்கொண்டு “அது சரி! அவன் கவுரவமா மெட்ராஸ்ல இருக்குற இருப்புக்கு, இவுரு அக்கம்பக்கத்துல பேசி ஏதாவது வம்பிழுத்தா அவனுந்தான் என்ன பண்ணுவான் பாவம்! அப்பா பைத்தியக்காரன்னு அக்கம்பக்கத்துல தெரிஞ்சா அவன் கௌரவம் என்னாவறது… இந்தக் காலத்துல நல்லாருக்குற வரைக்குந்தான் எல்லாம். நீ கோவிச்சுக்காதம்மா! விடுவிடுன்னு சமையலப் பாரும்மா! புள்ளைங்களுக்கு லேட்டாயிடும்” அப்படியே அமிர்தவள்ளி கணவனின் முகத்தைப் பார்த்தாள். “மூட்ட நெல்ல தலைல தூக்கி வரப்புல ஒடியாரும் உனக்கா இந்த கதி.. மகமாயி என்ன பாவம் பண்ணமோ?!” என்று தனக்குள் முனகிக் கொண்டாள்.

தாடையை வேகவேகமாக சொறிந்து கொண்டபடி, “தே! மாட்டப் புடிச்சு கட்டு. மசமசன்னு உக்காந்திருக்கியே! அமிர்தம் உன்னதான்.. கன்னுக்குட்டி வேற கத்துது. அதுக்கு தண்ணி வெக்க காணோம். தே! எழுந்திரி..” சற்று கண்ணயர்ந்த அமிர்தவள்ளியைக் கதிரேசன் விடாமல் தட்டி எழுப்பினார். பழகிப்போனவள் போல பதட்டமில்லாமல் மெல்லத் தலையைத் தூக்கி, “என்ன இப்ப!… செத்த படுத்துத் தூங்கே..!” என்றாள்.

“தே! எரும! எரும மாடு கத்துது. பேசாம படுத்துக் கெடக்கியே. போயி கொல்லப் பக்கம் பாரு. மாட்டுக்கெல்லாம் தண்ணி வச்சாச்சு. அதுங்க தூங்குது. நீயும் பேசாம படு!” பதில் சொல்லி அடக்கினாள் அமிர்தவள்ளி.

“தே! ஒரே சத்தமா கேக்குது. இரு பாக்குறேன்” என்று எழுந்தவரை மிரட்டி உட்கார வைத்தாள். சிறிது நேரம் தான் ஆகியிருக்கும். வெடுக்கென தெருப்பக்கம் ஓடியவர், “பாவிகளா! அடப் பாவிகளா! வயலப் போட்டு இப்படி புல்டோசர வுட்டு அடிச்சா என்னத்துக்கு ஆகும். என்ன மயித்துக்குடா தண்ணி வக்காம மாட்ட கத்த வுடறீங்க..? கதுரு மேலயா நடக்குறீங்க.. நவுருங்கடா எருமைங்களா…!” வேகமாக கத்தியபடியே ஓடிய கதிரேசன், பக்கத்து இடத்தில் வேலை நடக்கும் கூட்டத்தில் புகுந்து ஆட்களைத் தள்ள ஆரம்பித்தார்.

“யேய்! யார்ரா இது?! பைத்திக்காரா.. ச்சே.. போ! அந்தப் பக்கம் போ!” எல்லோரும் சேர்ந்து அவரை விரட்டினர். “விடுங்க சார். கோவிச்சுக்காதீங்க! என் வீட்டுக்காரர்தான். கொஞ்சம் புத்தி சரியா இல்லாதவருங்க. மன்னிச்சிடுங்க!” என்று கையெடுத்துக் கும்பிட்ட அமிர்தவள்ளி, “தே! வா இங்கே! உன்ன வேற இழுக்க முடியுதா என்னால. வா இப்பிடி!”

“இல்ல! அவன் ஆட்ட ஓட்டிட்டுப் போயிட்டான்… தோ பாரு! கருப்பு ஆடு!”

“அது நம்ம ஆடு இல்ல. அவங்களது. நம்ம ஆடு வீட்டுல கட்டிக் கெடக்கு. வா!” பதமாக பேசிக் கொண்டே, ஒரு வழியாக அவரை வீட்டுக்குள்ளே தள்ளினாள் அமிர்தவள்ளி.

“ஏ அப்பா! இன்னமும் இங்க இருந்தா ஊரு சிரிப்பா சிரிச்சுரும். அவனே கழுத்தப் புடிச்சு தள்ளறதுக்குள்ள ஊருக்குப் போயிடறதுதான் மரியாதை” என்று மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தாள். மகனிடம் பேச அவனும் “சரிதாம்மா! நமக்குத் தெரியும் அவுரு குணம். இங்க அக்கம்பக்கத்துல டிஸ்டர்ப் பண்ணா வீட்ட காலி பண்ண வச்சிடுவாங்க. வேற பெரிய வீடா பாத்துக்கிட்டு கூட்டிக்கலாம்னுதான் நானும் ஐடியா பண்றேன். அது வரைக்கும் ஊர்ல இருந்து வந்து போய் பாத்துக்கிறதுதாம்மா எனக்கும் நல்லதுன்னு படுது. இல்ல, உன்னால இங்கயே இவர சமாளிக்க முடியும்னா சொல்லு. என்னப் பத்தி தப்பா நெனக்காதே!” அவனது பேச்சுக்கு எதுவும் பதில் பேசவில்லை அமிர்த வள்ளி. பிறந்த போது அவனுக்கு சரியாக பேச்சு வராத போது, கோவிலாச்சேரி மாரியம்மனுக்கு வேண்டிக் கொண்டு உப்பு மிளகு போட்டதும், கூழாங்கற்களை வாயில் போட்டு மெள்ளச் சொல்லி, அவனை மெல்ல பேச வைத்ததும் இதற்குத்தானா என்பது போல் அவனை ஆழ்ந்து உற்றுப்பார்த்துக் கொண்டாள்.

மருத்துவரிடம் காண்பித்து விட்டு, அப்படியே இரவு ரயிலுக்கு புறப்படும் எண்ணத்துடன் மருமகளிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். “மாமா! பாத்துப் போங்க. உங்களுக்கு ஒண்ணும் இல்ல. எல்லா சரியாப் போயிடும்” என்று நெருங்கி வந்து நிதானமாகச் சொன்ன மருமகளிடம் கதிரேசன், “புள்ளைங்கள பாத்துக்க! டி.வி. பொட்டிப் பக்கம் உடாத! விழுந்து செத்துப் போயிடும்! ஆமா ஜாக்கிரத!” என்று முழியைப் பெரிதாக்கி, கைகளை ஆட்டி ஆட்டிப் பேசினார். மங்கலாக அர்த்தம் விளங்குவது போல மருமகள் யோசித்து விழித்தாள். “அம்மா! நீயும் பைத்தியம் தாத்தா மாதிரியே முழிக்கிற!” என்று பிள்ளைகள் சிரித்துக் குதிக்க, “ஏ! அப்படி சொல்லக் கூடாது” என்று அதட்டினாள். “வர்றேம்மா.. புள்ளங்கள பாத்துக்க!” விழியோரங்கள் சிறிது கசிய, அமிர்தவள்ளி பிள்ளைகளின் முகத்தை விரல்களால் வட்டமிட்டு திருஷ்டி முறித்தாள்.

மருத்துவரைப் பார்த்தது தான் தாமதம், கொஞ்சம் தழுதழுத்த குரலில் “முன்னக்கி கொஞ்சம் தூங்குனாருங்க. ஆனா பழைய மாதிரியே அக்கம்பக்கத்துல பேசி பிரச்சன பண்ணிட்டாரு சார்! ஒரு மரத்துப் போற ஊசி வேணும்னா போட்டு வுடுங்க. ஊரு வரைக்கும் தாங்கட்டும். பேயோட்டறதுலந்து எல்லா வைத்தியமும் மாத்திப் பாத்தாச்சு. இன்னும் எதனால இவருக்கு வியாதிய தீக்க முடியும்னு தெரியல. பழய மனுசனா எப்ப மாறுவாரோ? அந்த மகமாயியா பாத்து உங்க கிட்ட அனுப்பி வச்சிருக்கா…! நல்ல மாதிரி ஆக்கி உட்டுருங்க சார்..”

“பயப்படாதீங்கம்மா! ஊசி இப்ப வேணாம். சீட்ல எழுதித் தர்றேன். நாலு நாள் தள்ளி போடுங்க. முன்னக்கி இப்ப அய்யா முகம் தெளிவா இருக்கு! நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நாள் ஆகும்… சரி பண்ணனும்னா தொடர்ச்சியா வந்து பாக்கணும். வேற மருந்து எழுதித் தர்றேன். இத சாப்பிடக் குடுங்க!” என்று கதிரேசனைப் பார்த்தபடியே பேசினார் மருத்துவர்.

மருத்துவர் சொன்ன பிறகும், நீண்ட நேரம் நாக்கை நீட்டியபடி ஜாடை காண்பித்த கதிரேசன் “மருந்த மாத்துறீங்களா! மாத்துங்க..மாத்துங்க.. மருந்து கொடுத்தா தாளடிதான்” “ஏய், பொன்னி மேல பன்னி மேயுது. எவங் கேக்குறான்… இல்ல எவங் கேக்குறாங்கறேன்?” என ஆரம்பிக்கவே “போற வரைக்கும் இன்னும் என்னன்ன கூத்துக் கட்டி அடிக்கப்போறாரோ..?! “ அமிர்தவள்ளி தலையைப் பிடித்துக் கொண்டாள்.

“அம்மா.. நீங்க கவலைப்படாதீங்க! அய்யா.. இங்க பாருங்க, ஒடம்பு நல்லாயிடும். வேலைக்குப் போகலாம்.. நல்லா சாப்பிட்டு, மருந்து சாப்பிடணும். என்ன!” சொன்ன மருத்துவரின் கையைக் கெட்டியாகப் பிடித்த கதிரேசன் “மருந்து சாப்பிட்டா உடம்பு நல்லாகுமா? ஹா..ஹா.. என் பிரச்சினைய நீ முடிச்சு வுடு! நான் உன்னப் படிக்க வக்கிறேன்.. பாத்துக்குறேன். நீயாவது செத்துப் போவாம பாத்துக்க ஆமா” அடுக்கடுக்காக பேசித் தள்ளினார். கவலையாகப் பார்த்த அமிர்தவள்ளியிடமும், மகனிடமும் “கவலைப்படாதீங்க சார்! மெல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். அடுத்த செக்அப் அழைச்சிட்டு வந்திருங்க!” என்று நம்பிக்கையூட்டி அனுப்பினார் மருத்துவர்.

இரயில்வே ஸ்டேசன் வந்து ஒரு வழியாக இடம் பிடித்து, இருவரையும் உட்கார வைத்து விட்டு வெளியே சன்னலோரம் வந்து நின்று கொண்டான் சுப்பிரமணி. உள்ளே இரயிலில் அமர்ந்திருப்பவர்களை துருவித் துருவிப் பார்த்தபடி புன்னகைத்துக் கொண்டார் கதிரேசன். பக்கத்தில் ஒருவர் செல்போன் பேசிக் கொண்டிருக்க, மெல்லிய குரலில் அவரைப் பார்த்தபடி, “பேசு..பேசு! நீ பண்ண வேலைக்கு பேசிதான் தீக்கணும். ஆறு வேலி நிலமும், ஐவேசு பண்டார வடையுமாவா இருக்க! இருக்குறத வுட்டுப் புட்ட. இப்ப பேசிதான ஆகணும். ஹி..ஹி..ஹி..” தொடையைத் தட்டிச் சிரித்துக் கொண்டார்.

“பாத்தும்மா! பக்கத்துல ஏதாவது பிரச்சினை பண்ணப் போறாரு! ஏதாவது அவசரம்னா அக்கம்பக்கத்துல உள்ளவங்கள வுட்டு ஃபோன் பண்ணு. ஊர்ல வேலுப்பய கிட்ட சொல்லிருக்கேன். வந்து பாத்துப்பான். மறக்காம ஊசிய வாங்கிப் போட்ரு. அடுத்த மாசம் டாக்டர பாக்கலாம்” என்று சுப்பிரமணி பேசிக்கொண்டே போக, கதிரேசன் திடீரென அவனிடம் சத்தமாக “பாக்குறாணுவளாம்.. பாக்குறாணுவளாம். பேசாம நீயும் ஒரு ஊசி போட்டுக்க! உம் பொண்டாட்டிக்கும் ஒரு ஊசி போட்டுக்க! இதோ இவங்களுக்கெல்லாம் ஒரு ஊசியப் போடு! யாரு வேணான்னா… ஊசியப் போட்டுக்கிட்டு பேசாம கெடங்கடா! உனக்கெதுக்கு ஊசி? நீ போடாமயே கெடப்ப.. ஹா…ஹா…ஹா! ” என்று சப்தமாக சிரித்தவரை நெளிவு சுளிவாகப் பேசி அடக்கினாள் அமிர்தவள்ளி. சுற்றிலும் உள்ளவர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்க, “கொஞ்சம் நார்மலா இல்லாதவர் சார்! அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க!” என்று சுப்பிரமணி விளக்கினான். புரிந்து கொண்டவர்கள் போல அவர்கள் கதிரேசனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தனர். கதிரேசனும் பதிலுக்கு அவர்களை ஏற இறங்க பார்த்துக் கொண்டிருந்தார்.

– துரை. சண்முகம்

____________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013

____________________________________________________________________________________________

வக்கிரப் பண்பாட்டை வளர்க்கும் விஷக்கிருமி எது ?

8

டெல்லியில் துணை மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் சில கிரிமினல்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த நிகழ்வும், அதற்கு எதிராக வெடித்த போராட்டமும் தோற்றுவித்திருக்கும் விவாதங்கள் பல தரப்பட்டவை. ஆனால், அநேகமாக இந்த விவாதங்கள் அனைத்திலும் சரடு போல ஒரு கருத்து இழையோடுகிறது.

“தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இதுகாறும் அடுப்படியில் கட்டுண்டிருந்த பெண்களுக்கும் கூடச் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் வழங்கியுள்ளன; ஆலைகள் முதல் ஐ.டி. துறை வரையிலான பல வேலைகளுக்குப் பெண்கள் போகத் தொடங்கிவிட்டார்கள். இரவுப் பணிகளுக்குப் போகக்கூடாது என்ற மனத்தடைகளையெல்லாம் களைந்து விட்டு, துணிச்சலாக இரவு நேரங்களில் வேலைக்குப் போகிறார்கள். திரைப்படங்களுக்குப் போகிறார்கள். இவ்வாறு தனியார்மயக் கொள்கைகளுக்குப் பின்னர் ஏற்பட்டு வரும் இந்த ‘முன்னேற்றம்’ டெல்லி சம்பவம் போன்றவற்றினால் அச்சுறுத்தப்படுகின்றது.”

சுமங்கலி திட்டம்
“சுமங்கலித் திட்டத்தின்” கீழ் கோயம்புத்தூர் மில்களில் பணியாற்றும் இளம் பெண்கள் தாராளமயத்தின் நவீன கொத்தடிமைகள்

“இது போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்ற கிரிமினல் சக்திகள், பெண்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கே கூடத் தடைக்கற்கள் தான். எனவே, பெண்களையும் அவர்களது சுதந்திரத்தையும் பாதுகாக்கின்ற வகையில் சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும்; இச்செயல்களில் ஈடுபடும் கிரிமினல்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்ற கருத்து நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டுவரையுள்ள எல்லா அறிவுஜீவிகள் மற்றும் ஊடகங்களின் பொதுவான கருத்தாகப் பரவி நிற்கிறது.

மறுகாலனியாக்க கொள்கைகள் கொண்டு வரும் முன்னேற்றத்தை ‘இலஞ்ச – ஊழல்’ தடுக்கிறது, அதிகார வர்க்கத்தில் அரசியல் குறுக்கீடு தடுக்கிறது, திறமையற்ற அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தடுக்கிறார்கள் என்றெல்லாம் கருதுபவர்கள், நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக அவர்கள் கருதுவனவற்றின் பட்டியலில் இத்தகைய பாலியல் வல்லுறவுக் குற்றங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். பொதுவாக முதலாளித்துவம் ஜனநாயகத்தைக் கொண்டுவரும் என்பதைப் போல, தனியார்மய – தாராளமயக் கொள்கைகளும் ஜனநாயகத்தைக் கொண்டு வந்து விடும் என்ற மயக்கம்தான் மேற்கண்ட கருத்தில் பிரதிபலிக்கிறது.

நாட்டின் முன்னேற்றத்திற்குச் சான்றாக வானளாவிய கட்டிடங்களையும், ஷாப்பிங் மால்களையும், ஐ.டி. நிறுவனங்களையும், விதவிதமான கார்களையும், ஆறு வழிச்சாலைகளையும் காட்டுவது போல, பெண்களின் முன்னேற்றத்திற்குச் சான்றாக பெப்சி நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி, டாஃபே நிறுவன இயக்குநர் மல்லிகா சீனிவாசன், பயோகானின் கிரன் மஜும்தார் போன்றோரைக் காட்டி, இவர்களைப் போல இன்று பல பெண்கள் தொழில்முனைவோராக, நிர்வாகியாக, ஆராய்ச்சியாளராக, கலைஞராக, அரசியல்வாதியாக பொதுவெளியில் உயரும் வாய்ப்பை உலகமயம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து சித்தரித்து வருகின்றன.

இவர்கள் கூறுவது போல் தாராளமயமும் உலகமயமும் பெண்களுக்குச் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உண்மையிலேயே வழங்கியுள்ளதா?

இந்திய சமூகத்தில் பெண்கள் குடும்ப பராமரிப்பை செய்து கொண்டே, விவசாயம்,கட்டுமானத் தொழில்களில் தங்களது உழைப்பைச் செலுத்தி வந்திருப்பது காலம்காலமாக நடந்து வந்திருக்கிறது; எனினும், புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில் பல்வேறு துறைகளில் பெண் உழைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை வேகமாகப் பெருகிவருகிறது என்பது உண்மையே. இதற்குக் காரணமென்ன என்பதுதான் கேள்வியே.இரட்டை சுமை

முதற்காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக மிகக் கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி, அடிப்படை உழைக்கும் வர்க்கத்தினர் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரையிலானோரின் வாழ்க்கைத் தரத்தை வெகுவேகமாக அரித்து வருகிறது. வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள், பால், மின்சாரம், போக்குவரத்துச் செலவுகள் போன்ற வழமையான செலவுகள் அதிகரித்திருக்கின்ற அதே நேரத்தில், கல்வி-மருத்துவத் துறைகளின் தனியார்மயத்தின் காரணமாகவும், அவர்களது கட்டணக் கொள்ளை காரணமாகவும் பல குடும்பங்கள் கடனாளி ஆக்கப்பட்டனர். இந்தக் கடுமையான விலைவாசி உயர்வும் நுகர்வுக் கலாச்சாரத்தினால் ஏற்பட்ட பொருளாதாரத் தேவைகளும், கணவனின் ஒற்றை வருமானத்தில் குடும்பத்தைப் பராமரிப்பதை இயலாததாக்கியது. இதனால் நடுத்தர வர்க்கத்திலிருந்து உழைக்கும் மக்கள் வரை அனைத்துத் தரப்பு பெண்களும் தங்கள் தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

குறைவான கூலி, சங்கமாகத் திரளமாட்டார்கள் போன்ற காரணங்களால் புதிய வகைப்பட்ட வேலைவாப்புகள் பெண்களுக்கென்றே வழங்கப்பட்டுள்ளன. தன்னார்வக் குழுக்களின் தீவிர பிரச்சாரத்தால் உணவு விடுதிகள், பட்டுநெசவு போன்றவற்றிலிருந்து அகற்றப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் வேலைகளும் பெண்களுக்குச் சென்றுள்ளன. விவசாயத்தின் வீழ்ச்சி காரணமாக, நகர்ப்புறங்களில் கட்டுமான வேலைகளுக்கு வரும் விவசாயக் குடும்பத்தின் பெண்கள், வீடற்றவர்களாக தெருவோரத்தையே வீடாக மாற்றி, அங்கேயே குளித்து, சமைத்து, குழந்தைகளைப் பராமரித்து வேலைக்கும் செல்லவேண்டியவர்களாக உள்ளனர்.

பஞ்சாலைகளில் ஊதிய உயர்வு, போனஸ் போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடியதால் ஆண் தொழிலாளர்களைத் துரத்திவிட்டு, அவ்வேலைகளில் பெண்களை அமர்த்தி 10 முதல் 12 மணிநேரம் வரை சுரண்டுகின்றனர். நோக்கியா போன்ற மின்னணுத் தொழிலகங்களில் ஒப்பந்தக் கூலிகளாக, நகரங்களின் ஜவுளிக் கடல்களில் விற்பனையாளர்களாக, மென்பொருள் நிறுவனங்களில் துப்புரவு, எடுபிடி வேலைகளிலும், பாதுகாப்புப் பணிகளிலும், தொழில் தேர்ச்சி பெற்ற வேலைகளிலும், பெண்கள் பலர் வேலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளின் பெண் நர்சுகள் ஊர்விட்டு ஊர் சென்று, இரவு நேரத்திலும் உழைப்பில் ஈடுபடுகின்றனர். கால் சென்டர்களில் இரவு முழுக்க அமெரிக்காவின் வங்கிகளுக்காவும், மருத்துவமனைகளுக்காகவும் பெண்கள் உழைக்கின்றனர். ஆயத்த ஆடை (கார்மென்ட்ஸ்) தொழிலாளர்களாக இன்று பெண்களே அதிக அளவில் வேலை செய்கின்றனர். ஒரே விதமான பட்டுச்சேலைகளால் அலங்கரிக்கப்பட்ட குமரிப் பெண்கள், பணக்காரர்களின் திருமண வரவேற்பில் பன்னீர் தெளிப்பது முதல் பந்தியில் தண்ணீர் வழங்குவதுவரை ஈடுபட்டு நள்ளிரவில் வீடு திரும்புகின்றனர்.

வ்வாறு பல்வேறு துறைகளில் தங்கள் உழைப்பை வழங்கும் இப்பெண்கள் வீட்டின் சமையலையும், குழந்தைப் பராமரிப்பையும் செய்து முடித்து விட்டு நிறுவன வேலைகளுக்கு விரைகின்றனர். கைக்குழந்தைகளை அண்டை வீட்டாரிடமோ, காப்பகத்திலோ விட்டுவிட்டு 10 மணி முதல் 12 மணிநேரம் வேலை செய்து விட்டு, குழந்தைகளை அவசரமாகக் கொஞ்சிவிட்டு அடுத்த நாளுக்கான சமையல் வேலையை மீண்டும் தொடங்குகின்றனர். இதுதான் தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்துக்குப் பின்னர் பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம்.

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்
வீட்டு வேலை செய்யும் பெண்களையும் பாலியல் வன்முறைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரக் கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (கோப்பு படம்)

இதுவரை உற்பத்தியில் ஈடுபடாதவர்களாக இருந்த பெண்களைத் தற்போது பெருமளவில் ‘உற்பத்தியில் ஈடுபடுத்தியிருப்பதாக’ , பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் பற்றி ஆளும் வர்க்கங்கள் பெருமையுடன் கூறுகின்றன. பெண்கள் ஏற்கெனவே தத்தம் குடும்பங்களில் செலுத்தி வரும் உழைப்பின் மூலம் பராமரிக்கப்படுகின்ற ஆண்கள் மற்றும் அக்குடும்பத்தின் வாரிசுகள்தான் முதலாளித்துவத்தின் உற்பத்திக்கு உழைக்கிறார்கள். எனினும், தமது இலாபத்துக்குப் பயன்படுகின்ற, பெண்களின் இந்த மறைமுக உழைப்பை, முதலாளித்துவப் பொருளாதாரம் மதிப்பதில்லை. அதாவது, குடும்ப உழைப்பு மற்றும் புதிய உழைப்பாளிகளை உருவாக்கித் தரும் மறு உற்பத்தி, அவர்களுடைய பராமரிப்பு ஆகியவற்றுக்கு ஒரு பொருளாதார மதிப்பினை நிர்ணயித்து, அதனை நிகர உள்நாட்டு உற்பத்தியை நிர்ணயிக்கின்ற கணக்கில் சேர்ப்பதில்லை.

ஒரு உணவு விடுதியின் சமையல்காரர், குழந்தைகள் காப்பகத்தில் வேலை பார்க்கும் பெண், சலவைத் தொழிலாளி ஆகியோரது உழைப்பு கூலிக்கு விற்கப்படுவதால் அதற்குப் பொருளாதார மதிப்பு உள்ளதாகக் கணக்கில் கொள்ளும் முதலாளித்துவம், பெண்களுடைய குடும்ப உழைப்பின் மதிப்பை நிராகரிப்பதன் மூலம், அவர்கள் இதுவரை உழைப்பிலேயே ஈடுபடாதவர்கள் போலவும், முதன்முறையாகத் தற்போது உழைப்பில் ஈடுபடுத்தப் பட்டிருப்பது போலவுமான தோற்றத்தை உருவாக்குகிறது. உண்மையில் பெண்களின் குடும்ப உழைப்பு மூலம் தான் பெறுகின்ற பொருளாதார ஆதாயத்தைச் சுரண்டிக் கொண்டே, கூடுதலாக, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக, உற்பத்தி சார்ந்த உழைப்பைக் கோரும் வேலைகளுக்குள் இழுத்திருக்கிறது. தனியார்மயக் கொள்கை, பெண்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படும் ‘வேலைவாய்ப்பு’ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இரட்டைச் சுரண்டலுக்கு பெண்களை ஆட்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

*************

பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலை அதிகமாக்கியிருப்பது மட்டுமல்லாமல், மறுகாலனியாக்க கொள்கைகள் அவர்களுடைய உடலையும் முன்னெப்போதும் இல்லாத வடிவங்களிலெல்லாம் விற்பனைப் பண்டமாக்கியிருக்கின்றன.

சிவப்பழகு கிரீம்பத்தாண்டுகளுக்கு முன்னர் யாரும் நினைத்துக்கூட பார்த்திராத வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் .பெங்களூரு சாராய விடுதிகளில் மதுவைக் கலக்கித் தரும் “பார் டென்டர்” களாகவும், 20/20 கிரிக்கெட் போட்டிகளில் கவர்ச்சி உடை அணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் “சியர் கேர்ல்ஸ்’’ களாகவும் பெண்கள் இறக்கிவிடப்பட்டுள்ளனர். விரைவில், அமெரிக்காவின் பாலியல் வக்கிர “பிளேபாய்” பத்திரிக்கை குழுமம், இந்தியாவில் தொடங்கவிருக்கும் “பிளேபாய் கிளப்புகளில்” ஆண்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பது, சிகெரெட் பற்றவைப்பது முதலான “சேவை’’களைச் செய்கின்ற வேலைகளில் இந்தியப் பெண்களை நியமிக்கவுள்ளது.

பெண்களைப் போகப்பொருளாகக் கருதும் ஆணாதிக்கச் சிந்தனையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஆண்கள் நுகரத்தக்க பண்டமாகச் சந்தைப்படுத்தியிருக்கின்றது மறுகாலனியாக்க கொள்கை. அதே நேரத்தில், அழகுணர்ச்சி என்ற பெயரில், தம்மை ஆண்களின் நுகர்வுக்கான பண்டமாகத் தயாரித்துக் கொள்வதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொள்ளும் அளவுக்கு பெண்களின் மனோபாவத்தையும் மாற்றி அமைத்திருக்கிறது.

அழகிப் போட்டிகளை அறிமுகம் செய்து, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் – என அடுத்தடுத்து இந்தியப் பெண்களை உலக அழகிகளாகத் தேர்ந்தெடுத்து, அவர்களையே அழகு சாதனப் பொருட்களின் “பிராண்ட் அம்பாசிடர்’’களாக்கியதன் மூலம், அவர்களைப் போல மெலிந்த சிவப்பான உடல்வாகுவைப் பெறுவதையே மாபெரும் இலட்சியமாகக் கொள்ளுமாறு பெண்களிடம் தொடர் மூளைச்சலவை செய்யப்படுகிறது. இன்று இதன் விளைவாக, இரண்டுவேளை உணவுக்கு உத்திரவாதமில்லாத குக்கிராமங்கள் வரை சிவப்பழகு கிரீம்கள் உள்ளிட்ட பல்வேறு முகப்பூச்சு, அழகு சாதனப் பொருட்கள் எட்டியுள்ளன.

தெருவெங்கும் அழகு நிலையங்கள் முளைத்துள்ளன. அழகு நிலையங்களை எட்டிப்பார்க்காத பெண்களெல்லாம் ‘பத்தாம் பசலிகள்’, ‘கட்டுப்பெட்டிகள்’ போன்ற ‘கருத்து’களைப் பொதுப்புத்தியில் உறைய வைத்து, ஆண்டொன்றுக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கும் மேல் அழகு சாதனப் பொருட்களைச் சந்தையில் விற்று, வீட்டின் பொருளாதாரத் தேவைக்காக வெளியில் வேலைக்கு வந்த பெண்களின் சொற்ப வருமானத்தையும் வழிப்பறி செய்துகொண்டிருக்கிறது, தாராளமயம்.

இத்துடன் சினிமா குத்தாட்டத்திற்கென்றே வடிவமைக்கப்படும் ஆபாசமான உடைகளை நவீனம் எனக் கூறி சிறுமிகளுக்குக்கூட அறிமுகம் செய்துள்ளனர். எவ்வித நெறிமுறைகளும் இனி இருக்கக் கூடாது என்பதை ஒரு மோஸ்தராகவே உருவாக்கி, அதற்கென்றே ஆபாசமான ‘பேஷன் பரேட்’ களை நடத்துகின்றனர். அநாகரீகம் என்று இதுவரை கருதி வந்த அனைத்தையும் தலைகீழாக்கும் செயலை ஒவ்வொரு வீட்டின் உள்ளேயும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாகப் புகுத்தியுள்ளனர். எழுபது-எண்பதுகளில் தடைசெய்யப்பட்ட ரிக்கார்டு டான்ஸ் எனும் பாலுணர்வு வெறி நடனங்களைத் தொலைக்காட்சிகளைப் பார்த்து தம் பிள்ளைகள் ஆடுவதைக் கண்டு பெருமைப்படும் அளவுக்கு பெற்றோர்கள் மூளைச்சலவைக்கு ஆளாகியுள்ளனர்.

இதன் எதிரொலியாக, மனைவி என்பவள் எல்லாவிதத்திலும் தனக்குக் கட்டுப்பட்டவளாகவும், மாடல் அழகிகளைப் போலத் தன்னை அலங்கரித்துக் கொண்டு ‘கண்ணுக்குக் குளுமையாக’க் காட்சியளிப்பவளாகவும் இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தை ஆண்களிடம் ஊடகங்கள் உருவாக்கியுள்ளன.

பாய் பிரண்ட்ஸ் இல்லாத இளம் பெண்கள், கல்லூரிகளிலும் பணியிடங்களிலும் “நீ வேஸ்ட்” என்று சக பெண்களால் ஏளனப்படுத்தப்படுகின்றனர். நகர்ப்புறங்களில் டேட்டிங் செல்வது, ரிசார்ட்டுகள், டிஸ்கோத்தேகளுக்குச் சென்று வார இறுதியைக் கொண்டாடுவது போன்ற கலாச்சாரங்கள் பெண்களைப் பலிகடாவாக்குகின்றன. பண்பலை வானொலியில் பெண்மருத்துவ திலகங்கள், பாடல்களுக்கு நடுவே “திருமணம் ஆகாத பெண்கள், பாதுகாப்பாக இருந்துக்கணும். ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் எல்லாம் இன்றைக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன” என ஆலோசனை வழங்குகின்றன.

“இந்தியா டுடே” “அவுட்லுக்” உள்ளிட்டுப் பல முதலாளித்துவ இதழ்கள் இந்தப் பாலியல் ‘புரட்சிக்கு’ தயங்கும் பெண்களை “இன்னமும் இப்படி ஹைதர்காலத்துப் பெண்களாக இருக்கிறீர்களே!” எனக் கடிந்துகொண்டு, பெரும்பாலான இந்தியப் பெண்கள் சோரம் போவதாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வே எடுத்து இக்கலாச்சார ‘புரட்சியை’த் துரிதப்படுத்தி ‘முன்னேற’த் தூண்டுகின்றன. ஊடகங்கள்தான் இப்படி என்றால், அரசோ, அந்நியச் செலாவணிக்காக, கோவா, மாமல்லபுரம் போன்ற சுற்றுலாத் தலங்களில், வெளிநாட்டுப் பயணிகள் பாலியல் வக்கிரங்களைத் தணித்துக் கொள்வதற்காக, சிறுவர்-சிறுமிகளைப் பலிகடாவாக்குவதற்குத் துணைபோகிறது. இக்கொடூரம் பலமுறை அம்பலமான பின்னரும், அரசு இதுவரை இதனைக் கண்டுகொள்ளாமல், மறைமுகமாக ஆதரித்து வருகிறது.

ஆண்களின் நுகர்வுக்கான பண்டமாகப் பெண்களைச் சித்தரிப்பதும், மாற்றுவதும் எந்த அளவுக்கு நடந்திருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்களுக்கு எதிரான வெறி பிடித்த வன்முறைகள் அதிகரித்துள்ளன. தொழில்நுட்பப் பரவலால் எளிதில் கிடைத்திருக்கும் செல்பேசி மூலம் பல பாலியல் வக்கிரங்கள் கிளறிவிடப்பட்டுள்ளன. சிறுமிகள், இளம்பெண்களின் நிர்வாணப் படங்கள் சின்னஞ்சிறு மெமரி சிப்பில் ஏற்றப்பட்டு ஆண்களுக்காகச் சந்தையில் விற்கப்படுகின்றன.

தொலைபேசியில் சில குறிப்பிட்ட எண்களுடன் தொடர்பு கொண்டு பாலியல் சரச உரையாடல்களைப் பெண்களின் குரலில் கேட்டுக் கிளர்ச்சியடைய இளைஞர்கள் விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்படுகின்றனர். வீடியோ கேம்களின் வழியாகவும் ஆண்கள் வக்கிரமாக்கப்படுகின்றனர். இதில் உச்சமாக ‘ரேப் சிமுலேசன்’ எனும் பெயரில் ஜப்பானிலிருந்து வந்துள்ள ‘மெநிகர் வன்புணர்ச்சி’ வீடியோ கேம் உலகளவில் சந்தைப்படுத்தப்படுகிறது.

ஆண்களைத் தங்கள் கிராமங்களிலிருந்து பிய்த்து எடுத்து திருப்பூர் போன்ற ஊர்களில் பதியனிட்டுள்ள வேலை வாய்ப்புகள், பன்னிரண்டு மணி நேரம் வரை தொழிலாளர்களைப் பிழிந்தெடுக்கின்றன. பெண்களுக்கும் இதே கதிதான். இரவு நேர ஷிப்ட்களில் வேலை அலுப்பு தெரியாமல் இருக்க ஆபாச உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட குறுந்தகடு ஓட விடப்படுகின்றது.

குத்தாட்டம்
குத்தாட்டம்: கும்பல் பாலியல் வன்முறையின் கலை வடிவம்.

தமிழ் சினிமாவின் குத்துப்பாட்டு, இந்தி சினிமாவின் “ஐட்டம்” பாடல்கள் போன்றவை இதுவரை இலைமறை காயாக இருந்த பாலியல் உறவுக்காட்சிகளை அப்பட்டமான நடன அசைவுகளாக மாற்றி, பெண்களைச் சீண்டுவதற்குத் தோதான புது விதமான கழிசடை வார்த்தைகளையும் அறிமுகப்படுத்திச் சீரழிவையே கலாச்சாரமாக்குகின்றன. இந்த வகைப்பட்ட பாடல் காட்சிகளால் உசுப்பேற்றப்படும் ஆண், பொது இடங்களில் நடமாடும் பெண்கள் அனைவரையும் போகப்பொருளாகவே பார்க்கிறான். பேருந்துகள், திரையரங்குகள், வேலைசெய்யும் இடங்கள் என ஆண், பெண் இருபாலரும் புழங்கும் எல்லா வெளிகளிலும் ஆண்கள் பெண்களைச் சீண்டுவதும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் அதிகரித்து வருகிறது.

வேலைக்குச் செல்லும் பெண்கள், தொழிற்கூடங்களில் சக தொழிலாளர்கள், மேலாளர்களின் பாலியல் வக்கிரங்களையும் அவமதிப்புகளையும் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியைகள் பள்ளித் தாளாளரை அனுசரித்து நடக்குமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர். பிராக்டிகல், இன்டர்னல் மதிப்பெண்களில் கைவைப்பேன் – என மிரட்டும் ஆசிரியர்களின் பாலியல் சுரண்டலுக்கு கல்லூரி மாணவிகள் மட்டுமல்ல, பள்ளி மாணவிகள்கூடப் பலியாகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள், இது குறித்து குடும்பத்தில் வெளிப்படுத்தவோ அல்லது போலீசு நிலையத்தில் முறையிடவோ செய்தால், நடந்த சம்பவங்களுக்கு அவர்களே பொறுப்பாக்கப்படுகிறார்கள். “ஏன் இரவு நேரத்தில் வெளியே சுற்ற வேண்டும்?” என்கிற கேள்வி முதல், அவர்கள் அணியும் ஆடைகள் வரை அனைத்தையும் காட்டி, இந்தப் பிரச்சனையை அவளே வரவழைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

நிலவும் ஆணாதிக்க சமுதாயத்தில் பெண் என்பவள் ‘தூய்மையானவளாக’ இருக்க வேண்டும் என்பதும், தனது “கற்பை”ப் பேணிப் பாதுகாப்பதுதான் அவளது முழுநேர வேலை என்பதும் பொது விதியாக இருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் இது குறித்துப் பேசுவதற்கே அஞ்சும் நிலை உள்ளது. பொது இடங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொள்ளும் ஏதாவதொரு பெண் அதற்கு எதிர்வினையாற்றினால், சுற்றியிருப்பவர்கள் மவுனம் சாதிக்கின்றனர். இந்த மவுனம், பெண்கள் மீது நடக்கும் தொடர் வன்முறைகளுக்குத் துணை நிற்கிறது

********

மொத்தத்தில், மறுகாலனியாக்கக் கொள்கைகளின் அமலாக்கம், ஏற்கெனவே ஆணாதிக்க அடிமைத்தனத்தில் உழலும் இந்தியப் பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலை அதிகரித்திருப்பதுடன், அவர்களைப் பாலுணர்வுப் பண்டமாகக் காட்டி வெறியூட்டுவதன் மூலம், அவர்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதல்கள் அதிகரிப்பதற்கும் வழி வகுத்திருக்கிறது.

அது மட்டுமல்ல, மறுகாலனியாக்கம் திட்டமிட்டே பரப்புகின்ற, தன்னையும் தன் இன்பத்தையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட, விழுமியங்கள் ஏதுமற்ற நுகர்வு வெறி, மற்றவர் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாத விலங்குகளாக மக்களைத் திட்டமிட்டே மாற்றி வருகிறது. வகை வகையாகவும் விதவிதமாகவும் உணவுப் பொருட்கள், ஆடைகள், பல வண்ணக் கைபேசிகள், ஊடகங்களில் சந்தைப்படுத்தப்படும் நுகர்பொருட்கள் போன்றவற்றை வாங்கி அனுபவிப்பது மட்டுமே நோக்கம் என்றும், இவற்றை அடையும்பொருட்டு எல்லா நெறிகளையும் கைவிடலாம் என்பதும் சகஜமாக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி வன்முறையாளர்கள் யாரோ அல்ல. ‘நாடு விலை போவதைப் பற்றியோ, சமூகம் அழுகி நாறுவதைப் பற்றியோ, அடுத்தவன் துன்பத்தால் துடிப்பதைப் பற்றியோ, தன்னுடைய வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படுவது பற்றியோ, தன்னுடைய தனிப்பட்ட எதிர்காலத்தைப் பற்றியோ கூடக் கவலை இல்லாமல், இருக்கிற வரையில் அனுபவி‘ என்பதையே தம் விழுமியமாக வரித்துக் கொண்ட கிரிமினல்கள்.

டெல்லி வன்முறையைப் பாலியல் வெறி என்ற ஒரு கோணத்திலிருந்து மட்டும் பார்த்துப் புரிந்து கொள்ள இயலாது. நாடு முழுவதும் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏதோ சில கிரிமினல்களின் எதிர்பாராத நடவடிக்கைளும் அல்ல. அவை இந்தப் பண்பாடு தோற்றுவிக்கின்ற, எதிர்பார்க்கக்கூடிய விளைவுகளே!

– கதிர்
________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

பிணத்தையும் விட்டு வைக்காத வன்னிய சாதிவெறி!

26

செத்த பின்னும் போராடியது சேரிப்பிணம்! பிணத்திடம் போய் வீரத்தைக் காட்டுவதா! ‘வீர’ வன்னியரின் கோழைத்தனம்!

கடலூர் அருகே உள்ள கோண்டூர் பனங்காட்டு காலனியைச் சேர்ந்த உடல்நலக் குறைவால் இறந்து போன தெய்வநாயகத்தின் பிணம்தான் கடந்த 18ம் தேதி மாலை உண்ணாமலைச் செட்டி சாவடிக்கு அருகில் போராடியது.

சென்ற முறை சவ ஊர்வலத்தின் போது “எங்கள் தெருவழியாக உங்கள் சாவு வந்தால் பாடையில் உள்ள பூவையும் மாலையையும் எடுத்து எங்கள் கோயில் மீதும் பெண்கள் மீதும் வீசுகிறீர்கள். எனவே இனிமேல் பறையன் பொணம் இந்த வழியா வரக் கூடாது” என்றனர் அப்பகுதியில் வசிக்கும் வன்னியர்கள். இதோடு மட்டும் நிற்கவில்லை. ‘மேளம் அடிக்கவோ, வெடி வெடிக்கவோ கூடாது’ என்று தடையும் விதித்தனர்.

இந்த முறை தாழ்த்தப்பட்ட மக்கள் எந்த சப்தமும் இன்றி அமைதியாகவே சென்றனர்.

04-malaimalar-photoவன்னியர்கள் வசிக்கும் பகுதியான சாவடி விளையாட்டுத் திடல் அருகே 30 பேர் கொண்ட வன்னிய சாதி வெறிக் கும்பல் ஒன்று கையில் உருட்டுக் கட்டை, இரும்பு பைப்புடன் சவ ஊர்வலத்தில் வந்தவர்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியது. திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலைக் கண்டு பதட்டமடைந்த மக்கள் அடிதாங்க முடியாமல் பதறிக் கொண்டு சிதறி ஓடினர். அப்போது பிணத்தைத் தூக்கிச் சென்ற வேலாயுதம், மணி பாலன், செந்தில் குமார், விமல், ஐயனார் ஆகியோர் தலையிலும் கையிலுமாக அடிக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட  மயங்கி விழுந்தனர். ஆனாலும் அந்த குண்டர்களின் வெறி அடங்கவில்லை. பாடையை பிய்த்து எறிந்து, செத்த பிணத்தை காலால் எட்டி உதைத்து தங்கள் வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடு ரோட்டில் பிணம் மறியல் போராட்டம் நடத்தியது.

ஒன்றரை மணி நேரத்திற்கு பின் வந்திறங்கிய கடலூர் டி.எஸ்.பி. போலிஸ் சிலரை விரட்டிப் பிடித்து வேனில் ஏற்றியது. இதில் முக்கிய நபர்கள் ராஜேஷ், ராஜீவ் காந்தி, அருள், பாலமுருகன், திருமால் மோகன் ஆகியோரின் தலைமையில்தான் இந்தக் கொலைவெறியாட்டம் அரங்கேறியுள்ளது. பின்னர் 200க்கும் மேற்பட்ட அதிவிரைவு ஆயுதப் படை போலிசார் புடை சூழ அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் தெய்வநாயகம்.

கடந்த நவம்பர் 7ம் தேதி தர்மபுரி நத்தம் தாக்குதலைத் தொடர்ந்து பாச்சாரப் பாளையம், சேத்தியாத் தோப்பு, சென்னிநத்தம், பண்ருட்டி மேலிருப்பு, புதுச்சேரி காட்டேரிக்குப்பம், விழுப்புரம் அருகே கழுப்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட சாதிவெறித் தாக்குதல்களை பத்திரிகைகள் இரு பிரிவினர் மோதல் என்றே செய்தி வெளியிட்டன.

இங்கு சாவடியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பல் வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். பொறுக்கித் தின்ன அரசியல் கட்சி, தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கியாள சாதி வெறி என்று இரட்டைத்தன்மையுடன் மீண்டும் புத்துருவாக்கம் செய்து கொண்டுள்ளனர் வன்னிய சாதி வெறியர்கள்.

இப்பகுதியில் வசிக்கும் வன்னிர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கட்டிட வேலை, சூளை வேலை, ஆட்டோ ஓட்டுவது, என எல்லா வேலைகளிலும் இணக்கமாகவும் நெருக்கமாகவும் அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான் எனப் பழகிக் கொண்டாலும் இடையிடையே நடக்கும் இந்தத் தாக்குதல்களினால் உழைப்பாளி மக்கள் சாதியாக பிளவுபட்டு விடுகின்றனர்.

ஒவ்வொரு தாக்குதலிலும் ஊர்த்தெருக்கள் பாதிப்பதில்லை. சேரிகள்தான் பெரும் இழப்பை சந்திக்கின்றன. வீடு எரிப்பு, உடைமைகள் சூறையாடப்படுதல், பெண்கள் மானபங்கம், உயிரிழப்பு, உடல் உறுப்புகள் இழப்பு என்று மொத்த வாழ்க்கையுமே தொலைத்து நிற்பவர்கள் சேரிமக்கள்தான்.

நிலவுகின்ற இந்த சமூக அமைப்புக்குள், தேர்தல், இடஒதுக்கீடு, சலுகைகள், சீர்திருத்தங்கள் மூலம் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில்  மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியாது என்பதைத்தான் இத்தகைய சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் உண்மையாக உள்ளது. ஒவ்வொரு பிரச்சனையும் சமாதானக் கூட்டம், வாழக்கு வாபஸ், நட்ட ஈடு என்பதோடு முடிக்கப்படுகின்றது என்பதுதான் கடந்த கால அனுபவம்.

எனவே சாதிவெறியைக் கக்கும், கட்டி காக்கும் இந்த சமூக அமைப்பையே புரட்டிப் போட வேண்டுமானால் சாதி அடையாளத்தைத் தூக்கி எறிந்து விட்டு வெண்மணியின் திசை வழியில் வர்க்கமாய் போராடுவது ஒன்றே வழி.

எரியும் வீட்டுக்குள் இருந்து கொண்டே தீயை அணைக்க முடியாது.
சாதிக்குள் இருந்து கொண்டே சாதியை ஒழிக்க முடியாது.

தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கடலூர்

ஆணாதிக்க சமூகமே பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர்!

1
அமிர்தசரஸ் மாணவியர்
பெண் சிசுக்கொலைகளும் கருக்கொலைகளும் பஞ்சாபில் அதிகரித்த அளவில் நடப்பதைக் கண்டித்து அமிர்தசரஸ் நகரில் பள்ளி மாணவிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
காப் பஞ்சாயத்தில் பெண்கள்
உ.பி. மாநிலத்தின் பக்பத் மாவட்டத்திலுள்ள ஆசாரா கிராமத்தில் நடக்கும் “காப்” பஞ்சாயத்துக் கூட்டத்தை மறைந்திருந்து பார்க்கும் பெண்கள்.

பெண்களைப் பொருத்தவரை, தெருக்களும் வெளியிடங்களும் அவர்களுக்குப் பாதுகாப்பற்றவை என்றும்; வீடுதான், குடும்பங்கள்தான் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தரும் ஒரே இடமென்றும்” சராசரியான இந்திய மக்களால், குறிப்பாகப் பெண்களாலும் நம்பப்படுகிறது.

இந்தியாவின் தெருக்கள் பெண்களுக்குப் பாதுகாப்பற்றவை என்பது விவாதத்திற்கு இடமற்ற விடயம். ஆனால், இந்தியக் குடும்பங்கள். . . .?

தெருக்களில் போகும் பெண்களுக்கு முன்பின் அறிமுகமில்லாத போக்கிரிகளிடமிருந்து மட்டும் ஆபத்து வருவதில்லை. படித்த, கண்ணியமாகத் தெரியும் ஆண் பிள்ளைகளிடமிருந்தும் ஆபத்துகள் – வக்கிரமாகப் பார்ப்பது தொடங்கி பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டுப் பல்வேறுவிதமான ஆபத்துகள் – வருகின்றன. போக்கிரிகளை, வளர்ப்பு சரியில்லை, குடும்பம் சரியில்லை என்று குற்றஞ்சுமத்தி ஒதுக்கித் தள்ளிவிட முடியும். ஆனால், பார்வைக்குக் கண்ணியமாகத் தெரியும் இந்த ஆபத்தான ஆண்களும்கூட வானத்திலிருந்து குதிப்பதில்லை. நல்ல, பண்பாடு மிக்கதாகச் சொல்லப்படும் குடும்பங்களிலிருந்துதான் இந்தக் கண்ணியவான்கள் வருகிறார்கள்.

தலைநகர் டெல்லியில் துணை மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வன்புணர்ச்சி தாக்குதலுக்குப் பலியானதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டங்களின்பொழுது, குற்றவாளிகளைத் தூக்கில் போடுங்கள் என்று மட்டும் பெண்கள் கோரவில்லை. நாங்கள் எவ்வாறு ஆடை உடுத்த வேண்டும் என்று பாடம் எடுக்காதே; உங்கள் பையன்களிடம் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்யாதே எனச் சொல்!” என்றும் முழங்கினார்கள். இந்த முழக்கத்தின் இரண்டாவது வரி அசாதாரணமான ஒன்றாகும். இந்தியக் குடும்பங்களின் யோக்கியதையைத் தோலுரிக்கும் கண்டனமாகும்.

இந்தியப் பெற்றோர்கள், குறிப்பாகத் தந்தைமார்கள், பெண்களை வன்புணர்ச்சி செய்யுங்கள் எனக் கூறித் தமது ஆண் பிள்ளைகளை வளர்ப்பதில்லை என்ற போதும், இந்தியக் குடும்பங்கள், அவை எந்தச் சாதியை, மதத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும், பெண்களை, பெண் குழந்தைகளைப் பற்றித் தாழ்வான கருத்தைத்தான் வழிவழியாக விதைத்து வருகின்றன. “பெண், ஆணுக்கு இணையானவள் கிடையாது; ஆண்களுக்குச் சேவை செய்வதற்காகவே படைக்கப்பட்டவள்; அவள் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டும்” என வழிவழியாகப் போதிக்கப்படும் பிற்போக்குத்தனமும் ஆணாதிக்கமும் நிறைந்த கருத்துகள்தான், பெண்கள் மீது ஏவிவிடப்படும் சகலவிதமான வன்முறைத் தாக்குதல்களையும் இந்த நவீன காலத்திலும் கூட நியாயப்படுத்தி வருகின்றன.

மரபுவழிப்பட்ட இந்தியக் குடும்பங்கள் பெண்களின் நியாயமான விருப்பங்களுக்கும் உரிமைகளுக்கும் எதிரானவையாக இருப்பதோடு, பெண்கள் மீது நடத்தப்படும் பல்வேறு வன்முறைகளின் இருப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் உள்ளன. கிரிமினல்களால், உதிரிக் கும்பலால் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சட்டப்படியான குற்றங்களாகக் கருதப்படும் அதேசமயம், வீட்டிற்குள் அவளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் – அடி, உதை சித்திரவதைகள், பாலியல் தொந்தரவுகள்-தாக்குதல்கள் உள்ளிட்டவை கலாச்சாரம், மரபு என்ற பெயரில் வெளிப்படையாக நியாயப்படுத்தப்படுகின்றன; அங்கீகரிக்கப்படுகின்றன.

கிரிமினல்களால், உதிரிக் கும்பலால் பெண்கள் பாலியல்ரீதியாகத் தாக்கப்படுவதைக் கண்டிக்கும் அனைவருமே தங்கள் வீட்டிற்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்பார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. “வீட்டிற்குள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை உடனடியாக ஒழித்துக் கட்டிவிட முடியாது; காலப்போக்கில்தான் அவற்றைக் களையெடுக்க முடியும். அதுவரை பெண்கள் பொறுத்துதான் போக வேண்டும்” எனப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை ஒருபுறம் வெளிப்படையான முறையில் நியாயப்படுத்தப்படுகிறது. இன்னொருபுறமோ, “பெண்களை அடித்துத் துன்புறுத்தக்கூடாதென்றாலும், அவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவள்தாள்” எனப் பெண்ணடிமைத்தனம் நைச்சியமான முறையில் முன்னிறுத்தப்படுகிறது.

பெண் உயிர்வாழ்வது ஆணின் தயவில்

பெண்களுக்குப் பாதுகாப்பான இடமாக முன்னிறுத்தப்படும் ஆணாதிக்க குடும்ப அமைப்பு முறைதான், பல நேரங்களில் பெண்ணுக்குச் சமாதி கட்டும் இடமாகவும் மாறிவிடுகிறது. வீட்டிற்குள் நடக்கும் பெண் கருக்கொலை, பெண் சிசுக்கொலை, வரதட்சணைக் கொலைகளை வேறெப்படிச் சொல்லமுடியும்? கடந்த இருபது ஆண்டுகளில், அதாவது தனியார்மயம்-தாராளமயம் புகுத்தப்பட்ட பின்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி போன்ற குற்றச்செயல்கள் மட்டும் அதிகரிக்கவில்லை. பெண் கருக்கொலையும் அதிகரித்திருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது.

அமிர்தசரஸ் மாணவியர்
பெண் சிசுக்கொலைகளும் கருக்கொலைகளும் பஞ்சாபில் அதிகரித்த அளவில் நடப்பதைக் கண்டித்து அமிர்தசரஸ் நகரில் பள்ளி மாணவிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

ஒவ்வொரு ஏழு பெண் கருக்களிலும் ஒரு பெண் கரு, அக்கரு பெண் என்ற காரணத்தாலேயே அழிக்கப்படுவதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 1991-இல், 0 முதல் 6 வயதுள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, அதே வயதுடைய 1,000 ஆண் குழந்தைகளுக்கு 945 என இருந்தது; இது, அடுத்த பத்தாண்டுகளில், 2001-இல் 927 எனச் சரிந்து விழுந்துவிட்டதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் குழந்தை பெண்ணாகப் பிறப்பதைக்கூடப் ‘பெருந்தன்மையோடு’ ஏற்றுக் கொள்ளும் ஆணாதிக்கக் குடும்பங்கள், அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறப்பதைப் பெரும்பாலும் சகித்துக் கொள்வதில்லை. இரண்டாவது ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1,000-க்கு 731-ஆகவும்; மூன்றாவது ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1,000-க்கு 407-ஆகவும் இருப்பதே, எவ்வளவு தூரத்திற்கு பெண் கருக்கொலைகள் இரக்கமற்ற முறையிலும் குற்ற உணர்வின்றியும் நடந்து வருகின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

கருவில் மலர்வது ஆணா, பெண்ணா எனத் தீர்மானிப்பது ஆணின் விந்தணுதான் என அறிவியல் மெப்பித்த பிறகும், இந்த உண்மையை ஆணாதிக்க சமூகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பழியைப் பெண்ணின் மீதே போட்டு, அவளைத் துன்புறுத்துகிறது. இப்பெண் கருக்கொலைகளும், சிசுக் கொலைகளும் வரதட்சணையைக் காட்டி நியாயப்படுத்தப்படுகின்றன. வரதட்சணை என்பதும்கூட பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கத்தின் கருவி எனும்பொழுது, அந்த அநீதி பெண்களைக் கருவிலேயே அழித்துவிடத் துடிக்கிறது; அப்பொழுது தப்பித்து வளர்ந்துவிட்டாலோ, திருமணத்தின்பொழுது தண்டிக்கிறது; வரதட்சணை, திருமணமான பெண்களின் உயிரைப் பறிக்கும் கொலைவாளாகவும் உருவெடுக்கிறது.

பெண்களுக்கு எதிரான இந்த வன்மத்தையும் பிற்போக்கு ஆணாதிக்கத்தனத்தையும் இந்து மதம் மோட்சம், இறவாத்தன்மை போன்ற தர்க்கங்களை முன்னிறுத்தி நியாயப்படுத்துகிறது. ஒருவனுக்குப் பிறக்கும் ஆண் மகவுதான் அவனுக்கு மோட்சத்தை உத்தரவாதப்படுத்துகிறது. ஒருவன், தனது ஆண் மகவின் மூலம் இரண்டு உலகங்களையும், தனது பேரன் மூலம் இறவாத்தன்மையையும் அடைய முடியும்; அடுத்தடுத்து பெண் குழந்தைகளைப் பெறும் மனைவியைக் கணவன் தனது திருமணத்தின் 11-ஆவது ஆண்டில் கைகழுவி விடலாம்” என்று போதிக்கிறது, மனு தர்மம். முசுலீம், கிறித்தவ மதங்களிலும் பெண்களின் நிலை ஏறத்தாழ இதுதான். அம்மதங்களிலும் ஆண்டவனுக்கு அருகில் ஆண்கள்தான் நிறுத்தப்படுகின்றனரே தவிர, பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை.

சமூக உரிமைகளைப் பெறுவதில் சமமற்ற நிலை

பெண்களைப் பாகுபடுத்தி வளர்ப்பதும், ஒரு ஆணுக்கு ஈடாக அவளை மதிக்க மறுப்பதும் பெண்களின் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கி விடுகிறது. பெண் குழந்தை, ஆண் குழந்தைகளுக்கு இடையே உணவு வழங்குவதில்கூட வேறுபாடு காட்டப்படுகிறது. ஆண்கள் சாப்பிட்ட பிறகுதான், மிச்சமிருப்பதைப் பெண்கள் சாப்பிட வேண்டும்; கணவன் சாப்பிட்ட எச்சில் தட்டில்தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற சம்பிரதாயங்களெல்லாம் இந்த வேறுபாட்டை வலியுறுத்துபவைதான்.குழந்தை திருமணம்

பெண் கல்வி நிலையில் கடந்த முப்பது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருப்பினும், இது நாடெங்கும் ஒரே சீராக இல்லை. குறிப்பாக, பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காமல் இடை நிற்கும் சதவீதம் ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகள் மத்தியில்தான் அதிகமுள்ளது. இந்த இடைநிற்றலுக்கு, பொருளாதாரக் காரணங்கள் ஒருபுறமிருக்க, வீட்டு வேலைகள் பெண் குழந்தைகள் மீது சுமத்தப்படுவதும்; பெண் குழந்தைகளுக்குக் கல்வி தேவையில்லை, வயதுக்கு வந்துவிட்ட பெண்களைப் பள்ளிக்கு அனுப்பிவைத்தால் கெட்டுப் போவிடுவார்கள் என்பது போன்ற பிற்போக்கு சிந்தனைப் போக்கும்; 18 வயதுக்கு முன்பே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுவதும், அதிகமாகப் படிக்க வைத்தால், அதற்குத் தகுந்தாற் போல படித்த மாப்பிள்ளையாகப் பார்க்க வேண்டும்; அதிகமாக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பவையெல்லாம் காரணங்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் மாணவிகள் மீது நடத்தும் பாலியல் தாக்குதல்களும் பெண் கல்வியைக் காவு வாங்கி வருகின்றன. செய்முறைத் தேர்வு, உள்மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கு மதிப்பெண்களைப் போடும் அதிகாரம் தமக்கு இருப்பதைக் காட்டி மிரட்டியே, வக்கிரம் பிடித்த ஆசிரியர்கள் மாணவிகளைச் சீரழிக்கின்றனர். இவர்களின் வக்கிரத்துக்கு சிறுமிகள்கூடத் தப்புவதில்லை என்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்து வருகிறது.

இப்பாலியல் அத்துமீறல்கள் ஒருபுறமிருக்க, பெண்களுக்கு ஏற்ற வகையில் கல்விக்கூடங்களில் கழிப்பறைகள் இல்லாததால், பல பெண்கள் படிப்பைப் பாதியிலேயே விட்டுச் சென்றுவிடுவதாகச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆரம்ப வகுப்புகளில் இன்றும்கூட ஆண் என்றால் அலுவலகம் செல்பவன்; பெண் என்றால் சமையல் உள்ளிட்டு வீட்டு வேலை செய்பவள் என்ற பிற்போக்கு சிந்தனைதான் பாடமாகப் போதிக்கப்படுகிறது.

பெண்களுக்கு அளிக்கப்படும் ஊட்டச்சத்து, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குறியீடுகளைக் கொண்டு கணக்கிடப்படும் சர்வதேச பாலியல் சமத்துவப் பட்டியலில் இந்தியா 134-வது இடத்தில் (மொத்தம் 187 நாடுகள்) இருக்கிறது. இந்தியாவில் பெண்களின் நிலை எந்த அளவிற்குப் பின்தங்கிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவொரு சான்றாகும்.

சமவேலைக்கு சம ஊதியம் என்பது இன்றும்கூட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. கற்பு நெறி மட்டுமல்ல, கருத்தடை செய்து கொள்வதென்பதுகூடப் பெண்களுக்கு விதிக்கப்பட்டதாகவே நிலவி வருகிறது. பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களைக் கற்பு என்ற ஆணாதிக்கக் கண்ணோட்டத்திலிருந்துதான் சமூகம் கண்டிக்க முன் வருகிறது. அதனால்தான், குடும்பத்திற்குள் கணவனால் மனைவி மீது தொடுக்கப்படும் பாலியல் தாக்குதல்கள் சமூகத்தால் கண்டிக்கப்படுவதுமில்லை; கண்டுகொள்ளப்படுவதுமில்லை.

வரதட்சணைக் கொலைகளும் கௌரவக் கொலைகளும்:

ஒரு ஆண் மகனுக்குத் தனது துணையைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் அற்பத்தனமான சுதந்திரம் கூடப் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. படித்த, நவநாகரிகப் பெண்கள்கூடத் தாலி, மெட்டி போன்ற அடிமைச் சின்னங்களைச் சுமந்துதான் தீர வேண்டும்; வரதட்சணை, குழந்தைத் திருமணம் போன்றவை சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், பெண்களுக்கு எதிரான இந்த அநீதிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதோடு, அவற்றை நியாயமானதாக ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இன்றளவும் சமூகத்தில் நிலவுகிறது. ஏதோ பெண்ணின் நலனுக்காகத்தான் வரதட்சணை வாங்கப்படுவது போலவும்; குழந்தைத் திருமணங்கள் பாலியல் வக்கிரங்களைத் தடுக்கும் என்பது போலவும் வெளிப்படையாக நியாயப்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் 20 வயதிலிருந்து 24 வயதுக்கு உட்பட்ட திருமணமான பெண்களில் சுமார் 47 சதவீதப் பெண்கள் 18 வயதிற்கு முன்னே திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதாகவும், குழந்தை மணமகள் விவகாரத்தில் தென் மத்திய ஆசிய நாடுகளிலேயே இந்தியாதான் முதன்மையாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் ஒரு பெண் வரதட்சணை காரணமாகக் கொல்லப்படுவதாகத் தேசியக் குற்றவியல் ஆவணங்கள் கூறுகின்றன.

1961-இல் உருவாக்கப்பட்ட வரதட்சணை தடைச் சட்டம், 1984 மற்றும் 1986-களில் இரண்டு முறை திருத்தப்பட்டு, குற்றவாளிகள் உடனடியாகப் பிணையில் வெளிவரமுடியாதபடி கடுமையாக்கப்பட்ட பின்னர்கூட, இக்கொலைகளின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக, இந்த வரதட்சணைக் கொலைகள் கடந்த பத்தாண்டுகளில் அதற்கு முந்தைய பத்தாண்டுகளைவிட 14 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளன. 1998-இல் 7,146 ஆக இருந்த வரதட்சணைக் கொலைகள், 2007-இல் 8,093, 2008-இல் 8,172, 2010-இல் 8,391 என அதிகரித்திருக்கின்றன. மேலும், பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளைப் போலவே இக்கொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இது சட்டம் மற்றும் நீதி பரிபாலன முறையின் தோல்வியை மட்டுமல்ல, சமூகம் எந்தளவிற்கு பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனத்திலும் வன்கொடுமையிலும் ஊறிப் போயிருக்கிறது என்பதையும் ஒருசேர எடுத்துக் காட்டுகின்றன.

society-04-captionசிசுக்கொலை, வரதட்சணைக் கொலைகளுக்கு அடுத்து, பெண்களின் உயிரை அநியாயமாகப் பறிக்கும் பட்டியலில் தற்பொழுது கௌரவக் கொலை இடம் பிடித்து வருகிறது. இந்தியச் சாதியக் குடும்ப அமைப்புமுறை மட்டுமல்ல, இந்திய அதிகார வர்க்கமும் கௌரவக் கொலைகள் என்றழைக்கப்படும் இந்த ஆதிக்க சாதிவெறிக் கொலைளை வெளிப்படையாக நியாயப்படுத்தி வருவதற்குப் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, தனது சகோதரி கீழ்சாதிப் பையனைத் திருமணம் செய்துகொண்டதைச் சகித்துக் கொள்ளாத சகோதரன், சகோதரியின் கணவனையும் குடும்பத்தாரையும் கொலை செய்த வழக்கில், அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து” உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, அவனின் மனோநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறி, ஆதிக்க சாதிவெறிக் கொலைகளுக்கு வக்காலத்து வாங்கியது.

வீடா, பாலியல் சித்திரவதைக் கூடமா?

கிரிமினல்களால், தெருக்களில் அலைந்து திரியும் உதிரிக் கும்பலால் பெண்கள் பாலியில்ரீதியாகத் தாக்கப்படும் எண்ணிக்கையைக் காட்டிலும், வீட்டிற்குள், அந்த நான்கு சுவருக்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகும். 2011-ஆம் ஆண்டில் இந்தியாவெங்கும் பதிவான பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளில் 94.2 சதவீத வழக்குகள், அதாவது 22,549 வன்புணர்ச்சி தாக்குதல்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிந்தவர்களால்தான் நடந்திருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணத் துறை அறிவித்திருக்கிறது. இந்த 22,549 வழக்குகளில், 269 வன்புணர்ச்சி தாக்குதல்கள் அப்பெண்ணின் தந்தை அல்லது நெருங்கிய உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளன; 7,835 வன்புணர்ச்சி தாக்குதல்கள் அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்த ஆண்களால் நடத்தப்பட்டுள்ளன; 1,560 தாக்குதல்கள் தூரத்து உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளன. பெண்களுக்கு வீடும், குடும்ப அமைப்பு முறையும் தெருவைவிட அபாயகரமானதாக இருப்பதை இப்புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த வழக்குகளில் கணவனால் மனைவி மீது நடத்தப்படும் வன்புணர்ச்சித் தாக்குதல்கள் சேர்க்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்திய சமூகம் தீண்டாமையை இயல்பானதாகப் பார்ப்பது போலவே, பெண்கள் கணவன்மார்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதையும், வக்கிரமான முறையில் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுவதையும் இயல்பானதாக, கணவனின் உரிமையாக, அவனது ஆதிக்கத்திற்கான அடையாளமாகப் பார்க்கிறது. நவீன முதலாளித்துவ சமூக அமைப்புதான் கணவனின் வன்புணர்ச்சியைக் குற்றமாக வரையறுக்கிறது. ஆனால், இந்தியச் சமூகம் இன்றளவும் நிலப்பிரபுத்துவ பிற்போக்குக் கருத்துக்களால் கட்டுண்டு கிடப்பதால், இந்தியச் சட்டங்கள் இன்றுவரையும் கணவனின் வன்புணர்ச்சியைக் குற்றமாகக் கருதவில்லை. தற்பொழுதுள்ள சட்டத்தின்படி மனைவியின் வயது 16-க்குள் இருந்தால் மட்டுமே, மனைவியின் சம்மதமின்றிக் கணவன் உடலுறவு கொள்வது குற்றமாகும். இது எதார்த்தத்துக்குப் பொருந்தாத உலுத்துப் போன ஒன்று என்பது மட்டுமல்ல, கணவனுக்கு மனைவியைப் பாலியல் சித்திரவதை செய்வதற்குத் தரப்பட்ட உரிமமும் ஆகும்.

பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகள்

வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய பெண்களுக்கோ, அது முன்பின் தெரியாத அபாயங்கள் நிறைந்த, இருட்டான காட்டுக்குள் பயணம் செய்வது போன்றதாகும். பார்வை மூலம்; வார்த்தைகள் மூலம்; உரசுவது, இடிப்பதன் மூலம்; கண்ட இடங்களில் கைகளை மேயவிடுவதன் மூலம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இலட்சக்கணக்கான பெண்கள் பாலியல் தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர். இதற்கெல்லாம் வழக்கு போட ஆரம்பித்தால், கணிசமான ஆண்கள் சிறைச்சாலைக்குள்தான் இருக்க வேண்டியிருக்கும்.

அழகை ரசிக்கத்தான் இயற்கை கண்களைக் கொடுத்திருக்கிறது என்பது தொடங்கி கூட்ட நெரிசல்மிக்க பேருந்தில் கொஞ்சம் முன்னபின்ன இருக்கத்தான் செய்யும் என்பது வரை பலவாறு இப்பாலியல் சித்திரவதைகள் ஆண்களால் நியாயப்படுத்தப்படுகின்றன. பெண்களுக்கு பேருந்துகளில் தனி இருக்கைகள் ஒதுக்கப்படுவதை ஏதோ தனது உரிமையைப் பறித்துக்கொண்ட அநியாயம் போலப் பார்ப்பது; படித்த, வேலைக்குப் போகும் பெண்களைத் திமிர்பிடித்தவளாகவும்; குடும்பத்திற்கு இலாயக்கில்லாதவளாகவும்; ஆயிரம்தான் படித்து இருந்தாலும் பெண்கள் புத்திசாலிகள் கிடையாது; அவர்களிடம் பெரிய பொறுப்புகளைக் கொடுக்கக் கூடாது என்றவாறு பல்வேறு விதங்களில் பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனமும் ஆணாதிக்கமும் நிறைந்த கருத்துகள் பெரும்பாலான ஆண்களிடம் நிலவி வருகின்றன.

‘‘சீறிவரும் பாம்பை நம்பு; ஆனால் சிரித்துப் பேசும் பெண்ணை நம்பாதே” என்பது போன்ற ஆட்டோ வாசகங்கள் படிக்காத, அடித்தட்டு ஆண்களிடம் மட்டும்தான் காணப்படுவதாக எண்ணிக் கொள்வது தவறானது. பார்ப்பனக் கும்பலால் அரசியல் சாணக்கியனாகக் கருதப்படும் சோ நடத்தும் துக்ளக் இதழைப் படித்துப் பாருங்கள்; படித்த, மேல்சாதியைச் சேர்ந்த ஆண்களிடம் பெண்களைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமான பிற்போக்கு எண்ணங்களும் கருத்துக்களும் மண்டிக் கிடக்கின்றன என்பது புலப்படும்.

ஒரு பெண் படித்து முடித்து சுயமாகச் சம்பாதிக்கத் தொடங்கினால்கூட, அவளால் சுதந்திரமாகச் செயல்பட்டுவிட முடியாது. குறிப்பாக, அவள் தனது சம்பளத்தைச் செலவு செய்யும் உரிமையை அவளது கணவனே தட்டிப்பறித்து, அவளை முடக்கி விடுகிறான். வேலைக்குப் போகாத பெண்கள் கணவனுக்குப் பணிவிடை செய்யும் சம்பளம் வாங்காத வேலைக்காரி என்றால், வேலைக்குச் செல்லும் பெண்களோ கணவனுக்குப் பணிவிடையும் செய்து, அவனிடம் தனது ஊதியத்தையும் வழங்கும் பணங்காய்ச்சி மரமாக இருக்கிறாள்.

சதி மாதா கோயில்
இந்தியாவிலேயே அதிக ‘வளர்ச்சி’யடைந்த மாநிலமெனக் கூறப்படும் மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள சதி அனுசுயா மாதா கோவில்.

வேலைக்குச் செல்லும் பெண்களில் ஏறத்தாழ் 17 சதவீதப் பெண்கள் மிகவும் வெளிப்படையான, நேரடியான பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதிலும், கூலித் தொழிலாளியாக, வீட்டுப் பணிப்பெண்ணாக, சிறுதொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் நிலைமைதான் மிகவும் அபாயகரமானதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி பணியிடங்களில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களில் ஏறத்தாழ 20 சதவீதப் பெண்கள் ஆண் துணையின்றித் தனியாளாக நின்று குடும்பத்தை நடத்திச் செல்லும் பொறுப்பில் இருப்பவர்கள் என்றும், அப்பெண்களின் இக்கட்டான நிலையை மேலதிகாரிகள்/சக ஊழியர்கள் தமது பாலியல் வக்கிரங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதும் அம்பலமாகியிருக்கிறது.

இக்குற்றத்தைத் தடுக்க உருவாக்கப்பட்டிருக்கும் சட்டமென்பது சோளக்காட்டு பொம்மையைவிடக் கேவலமானது. தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இப்பிரச்சினையை விசாரித்துத் தண்டிப்பதற்கான அமைப்புகளே கிடையாது. எந்தப் பெண் தொழிலாளியாவது புகார் கொடுக்க முன்வந்தால், வேலை பறிக்கப்படும் அபாயம் மட்டுமல்ல, அவளது கணவனும் இதைச் சரியாகப் புரிந்து கொண்டு, அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நிற்பானா என்பதே சந்தேகத்திற்குரியதுதான். பணியிடங்களில் நடக்கும் பாலியல் சித்திரவதைகள் தொடர்பான புகார்களில், புகார் கொடுக்கும் பெண்ணின் பெயர் தரப்படுவதில்லை என்பது வேலைக்குச் செல்லும் பெண்களின் கையறு நிலையைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

சாதி-மதம்-அரசு

காதல்-கலப்புத் திருமணங்களைத் தடுப்பது என்ற பெயரில் ஆதிக்க சாதி சங்கங்கள் தமது சாதிப் பெண்களின் மீதான கட்டுப்பாடுகளை மேலும் மேலும் இறுக்கும் நிலைமை தற்பொழுது இந்தியாவெங்கும் எழுந்துள்ளது. “பெண்கள் கைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது; பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களின் சம்மதத்தைக் கட்டாயமாக்க வேண்டும்” என்றவாறெல்லாம் ராமதாசு உள்ளிட்ட ஆதிக்க சாதிவெறியர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த காப்” பஞ்சாயத்துகளும் அறிவுக்குப் பொருந்தாத புதுப்புது கட்டுப்பாடுகளைப் பெண்கள் மீது திணித்து வருகிறார்கள்.

அரசின் புள்ளிவிவரங்களின்படியே ஒவ்வொரு நாளும் மூன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு இரையாகிறார்கள். இப்புள்ளிவிவரமும் பதிவான வழக்கு விவரங்களின் அடிப்படையை வைத்துக் கூறப்படுவதால், இது உண்மைக்கு அருகில்கூட வரவில்லை. தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியர்கள் நடத்திவரும் அட்டூழியங்களை, ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பெண்கள்கூட ஆதரிப்பதும் கண்டும் காணாமல் நடந்துகொள்வதும்தான் இதில் வெட்கக்கேடானது.

இந்து மதவெறிக் கும்பல் குஜராத் படுகொலைகளின்பொழுது நடத்திய பாலியல் வன்புணர்ச்சி வக்கிரங்களும் படுகொலைகளும்; ஒரிசாவின் டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவ மதத்துக்கு மாறிய பழங்குடியினப் பெண்களுக்கு எதிராக நடத்திய அட்டூழியங்களும்; சதி போன்ற பிற்போக்குத்தனங்களை அக்கும்பல் இன்றும்கூட வெளிப்படையாக ஆதரித்து நிற்பதும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து மதவெறி அமைப்புகள் அனைத்து மதங்களையும் சேர்ந்த பெண்களுக்கும் எதிரானது என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராக முசுலீம் மதவெறி அமைப்புகளும், மத அடிப்படைவாதமும் வளர்ந்து வருவது முசுலீம் பெண்களை இருதலைக் கொள்ளி எறும்பு நிலைக்குத்தான் தள்ளியுள்ளன.

குடும்ப வன்முறைபெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, மதவெறி மற்றும் ஆதிக்க சாதிவெறி அமைப்புகளின் வன்முறை- பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகள் ஆகியவற்றிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் உறுப்பாகத் தன்னை முன்னிறுத்தும் இந்திய அரசு அமைப்போ, சொல்லிலும் செயலிலும் இந்தக் கும்பலுக்கு ஆதரவாகவே நடந்து வருகிறது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், தனது கணவனிடமிருந்து ஜீவானாம்ச உரிமை கோரி ஷா பானு என்ற முசுலீம் தா தொடுத்த வழக்கில் முசுலீம் அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாகவும், இராசஸ்தானில் பன்வாரி தேவி என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சமூக ஊழியர் கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு ஆதரவாகவும்; ஒவ்வொரு இந்து மதவெறிக் கலவரத்தின்பொழுதும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அனுசரணையாகவும் இந்திய அரசு அமைப்புகள் நடந்து வந்திருப்பதைக் குறிப்பிடலாம்.

இப்படி பிற்போக்கு சக்திகளுக்கு ஆதரவாக அரசு நடந்து கொள்வது ஒருபுறமிருக்க, அதனின் கொள்கைகள், திட்டங்கள் என அரசின் நடைமுறையும் பார்வையும் பெண்களை இரண்டாம் தர குடிமகளாகத்தான் கருதுகின்றன. பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்புணர்ச்சி உள்ளிட்ட தாக்குதல்களை அரசு உறுப்புகள் அணுகும் முறையிலேயே, அவற்றை விசாரிக்கும் முறையிலேயே, அரசின் ஆணாதிக்கப் பார்வை அப்பட்டமாக வெளிப்பட்டு வருகிறது. இவை அனைத்திற்கும் மேலாக போலீசும் இராணுவமும்தான் பெண்களின் உரிமைக்கும், சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.

************

இன்றைய இந்திய சமூகம் என்பது மேற்கத்திய சமூகம் போன்று ஜனநாயகப் புரட்சி, ஜனநாயகத்திற்கான அரசியல் போராட்டங்களின் வழியாகக் கட்டமைக்கப்பட்டதல்ல. மாறாக, சாதி, மத, ஆணாதிக்கக் கருத்துக்கள் நிறைந்த மத்தியகால நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு அக்கம்பக்கமாக முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறையும் அதற்குரிய அரசியல்-பண்பாட்டு நிறுவனங்களும் இறக்குமதி செய்து திணிக்கப்பட்டன. இந்தக் கலப்பானது பெண்களுக்கு எந்தவிதமான விடுதலையையும், பாதுகாப்பையும் பெற்றுத் தந்துவிடவில்லை.

இரட்டை சுமைகள்

மாறாக, தனியார்மயம்-தாராளமயம் பெண்களைச் சந்தைப் பொருளாக மாற்றியிருக்கும் பாலியல் வக்கிரம் ஒருபுறம்; ஏற்கெனவே நிலவிவரும் சாதி-மத ஆதிக்கம் நிறைந்த பிற்போக்கு சமூகத்தின் அடக்குமுறை மறுபுறம் என்ற இரட்டை நுகத்தடியைப் பெண்ணினத்தின் மீது சுமத்தியிருக்கிறது. ஒரு புறம் பாலியல் சுதந்திரம் என்ற வரம்பற்ற பாலியல் உறவு; இன்னொருபுறம் கற்பு நெறி தவறாமை, குடும்ப விளக்காகப் பெண்கள் திகழ வேண்டிய மத்தியகால ஆணாதிக்கப் பண்பாடு என்ற இரட்டைக் குழல் துப்பாக்கி பெண்களை நோக்கி நிறுத்தப்படுகிறது. மத்தியகால பிற்போக்குத்தனம் பெண்களின் மீதான ஒடுக்குமுறையின், பாலியல் தாக்குதலின் ஆணி வேராக இருக்கிறதென்றால், அதன் மீது திணிக்கப்பட்டுள்ள உலகமயம் இத்தாக்குதல்களை முன்னெப்போதும் காணாத அளவில் தீவிரப்படுத்தியிருக்கிறது.

மேல்சாதி, மேல்தட்டில் உள்ள பெண்கள் மீது இந்த இரண்டு நுகத்தடிகளும் சம அளவிலோ அல்லது ஒன்றைவிட மற்றொன்று கூடுதல் குறைவாகவோ சுமத்தப்படுகிறது. அதேசமயம் சமூகத்தின் கீழ்த்தட்டில், உழைக்கும் வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த, பார்ப்பனமயமாகாத குடும்பப் பின்னணி கொண்ட பெண்கள், ஆதிக்க சாதி மற்றும் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களைவிட, ஒப்பீட்டளவில் சுதந்திரமாக வாழ்க்கையை நடத்தி வருவது கண்கூடு. இந்த உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் கழுத்தில் கற்பு நெறியைப் பெரும் சுமையாக மாட்டிக் கொள்வதில்லை. கணவனே கண்கண்ட தெவம் என இவர்கள் வாழ்வதில்லை; அறுத்துக் கட்டிக் கொள்வதோ, மறுமணமோ அல்லது தனியாகவே நின்று குடும்பத்தை நடத்திச் செல்வதோ – இவை எதுவுமே இவர்கள் முன் மலைக்க வைக்கும் கேள்வியாக நிற்பதில்லை. அதேசமயம், தங்களைக் கவர்ச்சிப் பாவையாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியமும் இவர்களுக்குக் கிடையாது.

நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் படித்திருந்தபோதும், வேலைக்குச் சென்றாலும், அவர்களது முதலாளித்துவ, பார்ப்பனமயமான வாழ்க்கை முறையும்; அதன் காரணமாக அவர்களது சிந்தனையில் ஊறிப்போயுள்ள பெண்ணடிமைத்தனம், கற்பு நெறி போன்றவையும் – என்னதான் பெண் படித்திருந்தாலும் வேலைக்குச் சென்றாலும் ஒரு ஆணின் பாதுகாப்பில்தான் பெண் வாழ முடியும் என்ற அடிமைத்தனம் அவர்களைச் சுதந்திரமாக இயங்க விடுவதில்லை. ஆணாதிக்கம் மற்றும் அதன் வக்கிரத்தின் முன் மேல்சாதி, மேல்தட்டைச் சேர்ந்த பெண்கள் மண்டியிட்டுக் கிடப்பதன் பின்னணி இதுதான்.

எனவே, பெண் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை பெண் விடுதலையை முழுமையாகப் பெற்றுத் தந்துவிடாது. மாறாக, மேலே நாம் குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு நுகத்தடிகளும் அடித்து நொறுக்கப்படுவதுதான் இப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வாகும். இந்த இரண்டு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்குவது சாதாரணமானதல்ல. அதற்கு இச்சமூகத்தையே புரட்டிப் போடக் கூடிய போராட்டங்களை, குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தைக் கொண்டுவரக்கூடிய போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டம் இந்த இரண்டு நுகத்தடிகளையும் காத்து வருகின்ற இன்றைய சமூக-பொருளாதார-அரசியல் அமைப்பை அடியோடு மாற்றி அமைப்பதாக இருக்க வேண்டும்.

இப்புரட்சிகரமான மாற்றத்திற்குப் பதிலாக, இச்சமூக அமைப்பிற்குள்ளேயே பெண்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் சீர்திருத்தங்களைக் கோருவது – பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது, பெண்களுக்குப் பாதுகாப்புத் தரக்கூடிய சட்டங்களை வலுப்படுத்துவது, பாலியல் குற்றங்களை விசாரிக்கும் போலீசு, நீதிமன்றம் போன்ற அமைப்புகளைச் சீர்திருத்துவது போன்றவை உடனடித் தீர்வுகளாக முதலாளித்துவ அறிவுஜீவிகளாலும், அரசியல் கட்சிகளாலும், பெண்ணியவாதிகளாலும் முன்வைக்கப்படுகின்றன.

வரதட்சணைத் தடைச் சட்டம் எப்படி வரதட்சணைக் கொலைகளைத் தடுக்கவில்லையோ, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எப்படி தீண்டாமையை ஒழிக்கவில்லையோ, அதுபோலவே இச்சீர்திருத்தங்களும் பெண்ணடிமைத்தனத்தை, பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை அறவே ஒழித்துக் கட்டிவிடாது; மாறாக, புண்ணுக்குப் புனுகு தடவிவிடுவதாகவே அமையக்கூடும்.

– திப்பு
________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

அப்சல் குரு தூக்கு – HRPC கண்டன பிரச்சாரம்!

14

அப்சல் குருவை தூக்கிலிட்ட இந்திய அரசின் பயங்கரவாதச் செயலை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை உயர்நீதிமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்

மனித உரிமை பாதுகாப்பு மையம் – மதுரை மாவட்டக் கிளை சார்பாக 12.02.2013 காலை 10.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2001 டிசம்பர் 13 அன்று இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல்குருவின் சட்டபூர்வமான உரிமைகளை மறுத்து ரகசியமாக தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.

உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் பேசும் போது, “அப்சல்குரு தூக்கிலிடப்பட்டது அநீதியானது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்கப்படவில்லை. இருந்த போதும் `பாராளுமன்றம் தாக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். இந்தக் குற்றத்தை செய்தவர்களுக்கு மரணதண்டனை அளிக்கவில்லையென்றால் தேசிய மனசாட்சி சாந்தமடையாது’ என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் இவ்வாறு நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எழுத்தாளர் அருந்ததிராய் அவர்கள் இதனைக் கண்டித்து இந்து நாளிதழில் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ்-பி.ஜே.பி.,-உச்சநீதிமன்றம் சேர்ந்து செய்துள்ள இந்த சட்டவிரோத செயலை எதிர்த்து நாம் போரட வேண்டும். ஜனநாயகத்துக்காக நாம் தொடர்ந்து குரல்கொடுப்போம்” என்று பேசினார்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு பேசும் போது “அப்சல்குருவுக்கு சட்டப்பூர்வமாக இன்னும் எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அந்த வாய்ப்புகள் எல்லாம் மறுக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமல்லாமல் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்னர் அவரது குடும்பத்தாருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை. அவரது குடும்பத்தார் நேரில் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அவசரம் அவசரமாக அவர் தூக்கில் போடப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளியே ஆனாலும் அவருக்கு உள்ள உரிமைகள் மறுக்கப்படக் கூடாது” என்ற அடிப்படையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

மாவட்ட செயலாளர் லயனல் அந்தோணிராஜ் பேசும்போது, “காஷ்மீர் மக்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டுள்ளார். அப்சல்குரு பாராளுமன்றத் தாக்குதலில் நேரடியாக ஈடுபடவில்லை. மூளையாகவும் செயல்படவுமில்லை. அதற்கு எந்த ஆதாரமோ, நேரடி சாட்சியங்களோ இல்லை. காவல்துறை, உளவுத்துறை அவரை மிரட்டி வாங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படை யிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சட்ட நடைமுறைகளுக்கு முரணானது. ஆனால் இதைத் தெரிந்தே உச்சநீதிமன்றம் செய்துள்ளது. அதற்கு காரணம் புனிதமான பாராளுமன்றம் தாக்கப்பட்டது இந்திய மக்களின் மனசாட்சியை வேதனைப்படுத்திவிட்டது. அதை சாந்தப்படுத்த இப்படியொரு தண்டனை தரப்படுவதே சரியானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அந்த மனசாட்சி என்பது காஷ்மீர் மக்களுக்கு எதிரானது. இந்து, இந்திய தேசிய வெறி மனசாட்சி அல்லாமல் வேறு எதுவும் இல்லை. ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் தேசிய குழு கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ஷிண்டே, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி., சங்க பரிவாரங்கள், இந்து பயங்கரவாதிகள் என்ற கருத்தை வெளியிட்டார்.”

இதை கடுமையாக எதிர்த்த இந்து பாசிஸ்டுகள் எதிர்வரும் நாடாளு மன்றக் கூட்டத்தை முடக்குவோம். ஷிண்டே பதவி விலக வேண்டும். அல்லது பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூச்சல் போட்டு வருகின்றனர். இதை சாக்காக வைத்துக் கொண்டு இந்து ஓட்டுக்களை மனதில் வைத்து அப்சல்குருவை அவசரமாகத் தூக்கில் போட்டுள்ளது மதசார்பின்மை மூகமூடி அணிந்த காங்கிரஸ்.

இசுலாமிய பயங்கரவாதம் என்ற பெயரால் இசுலாமிய மக்கள் அனைவருமே பயங்கரவாதிகள், தேச விரோதிகள் என்பது போன்ற கருத்து இந்து தேசியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இசுலாமியர்கள் இந்த அநீதியை எதிர்த்துக்கூட பேச முடியாமல் இருக்கின்றனர். அவர்கள் பேச வேண்டும். மத அடிப்படை வாதம். பயங்கரவாதம் இவற்றைப் புறக்கணித்து ஜனநாயகத்துக்காகப் போராட வேண்டும்.

ராஜீவ் கொலையில் தொடர்பு இல்லாத மூன்று பேர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அவர்களது கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின்பும் அவர்கள் மீண்டும் நீதிமன்றம் சென்று தடையுத்தரவு பெற்றுள்ளனர். ஆனால் காங்கிரசுக்கு ராஜீவ் கொலையை விட காஷ்மீரும் ஆட்சி அதிகாரமும் முக்கியமாக உள்ளது.

ராஜீவ் கொலைக்கான பின்னணி மர்மமாக உள்ளதைப் போலவே நாடாளுமன்றத் தாக்குதல் பின்னணியும் தெளிவுபடுத்தப்படாத நிலையிலேயே உள்ளது. அந்த வழக்கும் முற்றுப் பெறாத நிலையில் (குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை) இன்றும் பலரின் தூக்கு நிறைவேற்றப்படாமல் இருக்கிற நிலையில் அப்சல்குரு அவசர, ரகசியத் தூக்கு இசுலாமிய தீவிரவாதத்தை மேலும் தூண்டுகிற வகையிலே தான் உள்ளது.

இதையே காஷ்மீர் முதல் அமைச்சர் உமர் அப்துல்லா வேறு மொழிகளில் தெரிவித்து அப்சல்குரு தூக்கை கண்டித்துள்ளார்.

இப்படிப்பட்ட அநீதிகளை எதிர்த்து, மனித உரிமை மீறல்களை எதிர்த்து மனித உரிமை பாதுகாப்பு மையம் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.” என்று பேசினார்.

“சாட்சியமே இல்லாத வழக்கில்
தேசத்தின் மனசாட்சியை
இந்து வெறியின் மனசாட்சியை
திருப்திபடுத்தவே தூக்கு
நிரபராதி அப்சல் குருவுக்கு
அவசரமாகத் தூக்கு”

“குஜராத் மாநிலத்தில்
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள்
ஊனமுற்றோர் முதியோர் என
ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த
அத்வானிக்கும் மோடிக்கும்
தூக்கு எப்போ? தூக்கு எப்போ?”

“காஷ்மீர் மக்களின் உரிமைக்காக
தன்னுரிமை கோரிக்கைக்காக
குரல் கொடுப்போரும், கூட இருப்போம்!”

போன்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாகவே வந்திருந்து ஆதரவளித்த வழக்கறிஞர்கள் உள்பட சுமார் 80 பேர் வரை உற்சாகமாய் கலந்து கொண்டனர்.

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு மதுரை மாவட்டக்கிளை

2. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சுவரொட்டிகள்
01-hrpc-banner-1

02-hrpc-banner-2

2. மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு – கடலூர் கிளையின் துண்டு பிரசுரம்
05-kadalur-notice-2
04-kadalur-notice-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘ரேப்புக்கு’ காரணம் அசைவ உணவாம் – தினமணியின் வக்கிரம்!

42

19.02.2013 தினமணியில் “அரங்கேறும் வக்கிரங்கள்” என்று பாலியல் வன்முறை குறித்து ஒரு தலையங்கம். டெல்லி பாலியல் வன்முறை சம்பவத்திற்குப் பிறகு ஊடகங்களின் அறச்சீற்றம் தாங்க முடியாத அளவுக்கு தலைவிரித்தாடுகிறது. அதில் தான் மட்டும் தனித்து தெரியவேண்டும் என்று நினைக்கிறார் ஆர்.எஸ்.எஸ்-ன் பிரியத்திற்குரிய வைத்தி மாமா!

முறை தவறிய உறவு, காரணமற்ற விவாகரத்து என்று மேலைநாட்டு நாகரீகத்தை எள்ளி நகையாடியது போய் இன்று அவர்கள் இந்தியாவை வக்கிர தேசம் என்று முகம் சுளிக்கும் அளவுக்கு நிலைமை இருப்பதாக துக்கப்படுகிறார் வைத்தி. கூடவே தாய்மை, பெண்மையை உயர்வாக கருதிய இந்திய நாகரீகம் போலித்தனமானது என்பதாய் சமீபத்திய சம்பவங்கள் தோலுரிப்பதாகவும் அவர் வருந்துகிறார்.

பாரதம் கற்புக்கும், விதேசிகள் விபச்சாரத்திற்கும் பெயர் போனவை என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் முடிவு. உண்மையில் கற்பின் மறுபக்கம்தான் விபச்சாரம் என்பது இவர்கள் அறியாதது அல்ல, மறைக்க விரும்பும் ஒன்று என்பதே உண்மை. சீதை, கண்ணகிகளை கற்புக்கரசிகளாய் தொழும் நாட்டில்தான் பார்ப்பன, ஷத்திரியர்களின் பொறுக்கித்தனத்திற்கு பயன்படும் விதத்தில் தேவதாசி எனும் உலகின் முதல் விபச்சார நிறுவனத்தை ஏற்படுத்தினார்கள். தேவசாதி முறையை ஒழிக்க வேண்டுமென்று திராவிட இயக்கம் போராடிய போது சத்திய மூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் வரலாறு பதிந்திருக்கிறது.

எடுத்ததெற்கெல்லாம் விவாகரத்து என்று மேலைநாடுகளை கிண்டல் செய்யும் அம்பிகள் முதலில் கணவன் என்னதான் பொறுக்கியாக இருந்தாலும் அவனை கண்கண்ட தெய்வமாக போற்ற வேண்டும் எனும் இந்து மதத்தின் கொடுமையைத்தான் போற்றுகிறார்கள். அதன்படி விவாகரத்து எனும் ஜனநாயக உரிமையைக் கூட வழங்காத பாரதம்தான் இழிவானதே ஒழிய அந்த உரிமையை அங்கீகரித்திருக்கும் மேலைநாடுகள் அல்ல. இன்று அந்த உரிமையை இந்தியா இறக்குமதி செய்திருப்பதாக ஓநாய் கண்ணீர் விடும் சங்க பரிவாரங்கள் மற்றும் அதன் ஊது குழலான தினமணி போன்றோரின் இதயத்தில் இருப்பது பச்சையான ஆணாதிக்கமே அன்றி பெண்ணுரிமை அல்ல.

” இறைநம்பிக்கை குறைந்ததுகூட, இன்றைய வக்கிரத்தனங்களுக்குக் காரணமாக இருக்கக் கூடும். தவறு செய்தால் தெய்வம் தண்டிக்கும் என்கிற அச்ச உணர்வும், சமுதாய ஏளனத்துக்கு நாம் ஆளாக நேரும் என்கிற பயமும் இல்லாமல் போய்விட்ட சூழல், தவறுகளுக்குக்  கதவுகளைத் திறந்து வைக்கிறது.” என்கிறார் தினமணியின் ஆசிரியர்.

ஒருவழியாக இறைநம்பிக்கை குறைந்து வருவதை இந்துக்களின் பிரச்சார பீரங்கி பத்திரிகையே ஒத்துக் கொண்டது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் பாலியல் வன்முறைகள் மட்டுமல்ல மற்ற வக்கிரங்களுக்கெல்லாம் காரணம் பக்தி உணர்வு குறைந்து போனதாக சொல்லுவது பச்சையான பார்ப்பனிய வெறியே அன்றி வேறல்ல. சங்கர ராமனை போட்டுத்தள்ளிய ஜெயேந்திரனோ, இல்லை பல் மருத்துவக் கல்லூரிக்காக முறைகேடுகளில் ஈடுபட்ட பங்காருவோ இல்லை வருமானவரி, விற்பனை வரி ஏய்ப்பு செய்த பாபா ராம்தேவோ, இன்ன பிற கிரிமினல் சாமியார்களெல்லாம் நாத்திகர்களா?

குஜராத்தில் 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்து அதை தெகல்கா வீடியோவிலும் ஒத்துக் கொண்ட இந்துமதவெறியர்களெல்லாம் சாட்சாத் கடவுள் நம்பிக்கை கொண்ட அதி தீவிர பக்தர்கள்தானே? இதிலிருந்து தெரியவரும் உண்மை என்னவென்றால் ஒருவரின் ஆன்மீகம் அல்லது நாத்திக உணர்வு மட்டும் ஒருவனின் சமூக ஆளுமையை உருவாக்கி விடாது. வரைமுறையற்ற அதிகாரம் கையில் இருக்கும் போதும், எளிய மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும் போதும்தான் இத்தகைய கிரிமினல்கள் அவர்கள் சாமியார்களாக இருந்தாலும் தவறு செய்கிறார்கள்.மட அதிபதிகள்

சங்கரமடத்தின் முடிவுகள் சேரி மக்களின் ஒப்புதலோடுதான் எடுக்க முடியும் என்று இருந்திருந்தால் சங்கரராமன் கொலை செய்யப்பட்டிருக்க முடியாது. இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதால்தான் போபார்ஸ் முதல் ஹெலிகாப்டர் ஊழல் வரை இறைநம்பிக்கை உடைய பெருச்சாளிகள் ஊழல் செய்கிறார்கள். அப்படி ஊழல் செய்பவர்கள்தான் தமது கருப்புப்பணத்தின் ஒரு பகுதியை திருப்பதி உண்டியலில் போடுகிறார்கள். மக்களுக்கு பதில் சொல்லக் கடமை பட்டவர்கள் எனும் நிலைமை உருவாகாத வரை இவர்கள் கடவுளுக்கே கமிஷன் கொடுத்து முறைகேடுகளை தொடர்வதுதான் நடக்கும். அவ்வகையில் இறைநம்பிக்கைதான் ஒரு மனிதனது தவறுகளுக்கு பரிகாரம், உண்டியல், சடங்கு என்று சலுகைகள் காண்பிக்கிறதே ஒழிய நாத்திகம் அல்லை.

“கற்பைவிட சுகம்தான் பெரிது என்று பெண்களும், ஒழுக்கத்தையும் கௌரவத்தையும்விட பணம் சம்பாதிப்பதுதான் முக்கியம் என்று ஆண்களும் கருதிவிட்டால் அந்தச் சமுதாயத்தைச் சீர்கேடிலிருந்து காப்பாற்றவே முடியாது.” என்ற வரிகளின் மூலம் தினமணி வைத்தி என்ன கூறவிரும்புகிறார்?

டெல்லி மாணவி பேருந்தில் சிதைக்கப்பட்ட செய்தி வெளியான போதே ‘அந்த மாணவி இரவில் ஏன் தனியாக சென்றாள், ஆண் நண்பருடன் தனியாக போக வேண்டிய காரணம் என்ன?’ என்றெல்லாம் அட்வைசு பண்ணியதன் மூலம் அந்த பொறுக்கிகளின் குற்றத்தை தணித்தவர்தான் இந்த வைத்தி. இப்போது அதே பெண்கள் கற்பை விட சுகம் பெரிது என்று கெட்டுப் போகிறார்கள் என்கிறார். அதாவது வீட்டுக்கு அடக்க ஒடுக்கமான அடிமைகளாக இல்லாமல் வெளியில் செல்லும் பெண்கள் சுகத்திற்க்காக அலைபவர்கள் என்று முத்திரை குத்துகிறார். இந்த வக்கிரம் வன்புணர்ச்சி செய்யும் குற்றவாளிகளை விட எந்த விதத்தில் குறைந்தது?

“ஓரினச் சேர்க்கை, திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது, இயற்கையை மீறிய திருமண பந்தங்கள், சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கும்கூட விவாகரத்து என்பவை எல்லாம் சமுதாயத்தில் சர்வ சாதாரணமான நிகழ்வுகளாக மாறிக் கொண்டிருப்பதை நாகரிகம் என்று இந்தியச் சமுதாயமும் ஏற்றுக்கொள்ளுமேயானால்,…”

மேலே வைத்தி மாமா பட்டியிலிட்டிருப்பவைகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் என்ன சம்பந்தம்? இவைதான் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம் என்றால் பாலியல் குற்றம் என்றால் என்ன என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை. விநோதினியின் மேல் அமிலம் ஊற்றிய சுரேஷ் யார்? ஏன் வீசினான்? மேற்கண்ட பட்டியலில் ஒன்று கூட அவனுக்குப் பொருந்தாது எனில் குற்றத்திற்கு காரணம் என்ன? அவன் காதல், பெண் குறித்தோ இல்லை ஒரு காதலை மறுப்பதற்கு ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டு எனும் குறைந்த பட்ச ஜனநாயக உணர்வைக்கூட புரிந்து கொண்டிருக்கவில்லை. பெண்கள் தமது வேட்கைகளுக்கு பணிந்து கிடக்கக்கூடிய அடிமைகள் என்று பழக்கப்பட்டிருக்கும் சமூகத்தால் உருவாக்கப்பட்டவன் சுரேஷ். சுரேஷைக் கேட்டால் கூட மேலே வைத்தி மாமா பட்டியிலிட்டிருப்பதுதான் ஒழுக்கக் கேடுகளுக்கு காரணம் என்பதை ஏற்றுக் கொள்வான். அதாவது பெண்ணை கட்டுப்பட்டே ஆகவேண்டிய விலங்கு என்று கருதுபவர்கள்தான் ஓரினச் சேர்க்கை, லிவிங் டுகெதர், விவாகரத்து போன்றவற்றை எதிர்க்கிறார்கள். அந்த வகையில் வைத்தி மாமா இங்கே சொல்லியிருப்பது சேம் சைடு கோல்.

இறுதியில் விசயத்திற்கு வருகிறார் வைத்தி.

“மூலைக்கு மூலை திறக்கப்பட்டிருக்கும் மதுபானக் கடைகளும், தெருவெங்கும் அசைவ உணவைப் பரிமாறும் துரித உணவகங்களும், கையேந்தி பவன்களும், அதிகரித்து விட்டிருக்கும் அசைவ உணவுப் பழக்கமும் உணர்ச்சிகளை அதிகரித்து, சாத்வீக குணத்தை மழுங்கடித்து விடுகின்றன என்கிற உண்மையை நாம் எப்போது உணரப் போகிறோம்? அவை மனிதனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மிருக உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பது விஞ்ஞானம் ஏற்றுக்கொண்டிருக்கும் உண்மை.” இதுதான் வைத்தி முத்தாய்ப்பாக சொல்ல வரும் நீதி. அல்லது காலந்தோறும் நெறி தவறாத பார்ப்பனியத்தின் வேதம்.

வைத்திமாமா கண்டுபிடிப்பின்படி படுக்கையறையை பள்ளியறையாகவும், கருவறையை காமாந்திர அறையாகவும் மாற்றிய ஜெயேந்திரன், நித்தியானந்தா, தேவநாதன் போன்றோர் ஒன்று மாட்டுக்கறியை முழுங்கி  மது குடிப்பவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் நெய், தயிர், பருப்பு வகையறாக்களை அதிகம் விழுங்குபவர்கள் காமவெறியர்களாக இருக்க வேண்டும். எது உண்மை வைத்தி அவர்களே?

சைவம் சாத்வீக உணர்ச்சி, அசைவம் அசுர உணர்ச்சி என்பது பார்ப்பன இலக்கியங்கள் தொட்டு பலரும் சொல்லும் பச்சையான பார்ப்பனியத் திமிரே அன்றி வேறல்ல. இதை விஞ்ஞானம் வேறு ஏற்றுக் கொண்டிருக்கும் உண்மை என்பதாக அடித்து விடுகிறது தினமணி. ராகு, கேது கதை மூலம் கிரகணங்களை விளக்கியதுதான் இவர்களது விஞ்ஞான யோக்கியதைக்கு சான்று.

மாட்டுக்கறி தின்னும் பஞ்சமர்கள், மற்ற கறிகளைச் சாப்பிடும் சூத்திரர்கள் என்று உணவின் மூலமும் இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தின் திமிரைத்தான் வைத்தி இங்கே பிரதிபலித்திருக்கிறார். மட்டன், சிக்கன், பீஃப் சாப்பிடுபவர்கள்தான் பாலியல் வன்கொடுமைகளை செய்கிறார்கள் என்று காட்டுவதன் மூலம் இங்கே சைவ உணவு அல்லது பார்ப்பனியத்தின் ‘கொல்லாமையை’ புனிதப்படுத்துகிறார்கள். மோடியின் குஜராத்திலோ இல்லை தாக்கரேவின் மும்பையிலோ வெட்டிக் கொல்லப்பட்ட மக்களின் ரத்தம் இன்னும் காயாத நிலையில் சைவ உணவுக்காரர்களின் கொலை வெறியை உலகமே பார்த்தது உண்மை இல்லையா?

அல்லது அமெரிக்காகாரன் அதிகம் கறி சாப்பிடுவதால்தான் ஈராக், ஆப்கானில் மக்களை கொன்று குவித்தானா? இல்லை புலால் உண்ணாமையை போதித்த புத்த மதத்தைச் சேர்ந்த ராஜபக்சேவும் சிங்கள இனவெறி இராணுவமும் அகிம்சை பிரியர்களா? உணவுக்கும் வன்முறைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதுதான் முதல் உண்மை.

சரி வைத்தியின் வாதத்தை பெண்களுக்கும் பொருத்தி பார்த்தால் என்ன வரும்? மாமிசம் சாப்பிடும் பெண்கள்தான் அதிகம் ‘கற்பழிப்பை’ விரும்பி வரவழைக்கிறார்கள் என்று கூட வியாக்கியானம் செய்யலாமே? பாலியல் வன்முறையோ இல்லை வாழ்வியல் அடக்குமுறைகளோ எதுவும் குறிப்பிட்ட  சமூக பொருளாதார அரசியல் காரணங்களில் பிறக்கின்றன. அவை உணவினால் வருகின்றன என்று சுருக்குவது முட்டாள்தனமானது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதிக்க சாதிவெறிக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் பார்ப்பனியத்தின் பச்சையான சாதிவெறியாகும்.

இந்த ஒன்றிற்காகவே வைத்தி மற்றும் தினமணி மேல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கலாம்.

தினமணி ஒரு பார்ப்பனியப் பத்திரிகை அல்லது ஆர்.எஸ்.எஸ்இன் ஊது குழல் என்று ஒவ்வொரு முறையும் நாங்கள் சொல்லும் போதும் இல்லை அது ஒரு நடுநிலைப் பத்திரிகை என்று வக்காலத்து வாங்கும் அம்பிகள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?

யார் இந்து? ஓடும் ரயிலில் பார்ப்பனர்களோடு சண்டை !

132

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 20ம் தேதி உச்சநீதி மன்றத்தில் நடக்கிறது.

இது பெரியாரின் நிறைவேறாத ஆசை. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பார்ப்பனர்கள் இதை சட்ட ரீதியாக தடுத்து வருகிறார்கள். பெரியார் பிறந்த மண் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழகத்திலிருந்து இதை எதிர்த்து எந்த அமைப்பும் வழக்காடவில்லை.

ஒரு பக்கம் தடைகோரி பார்ப்பனர்கள். இன்னொரு பக்கம் பார்ப்பனர்களை பகைத்துக்கொள்ளாமல் வாதிடும் தமிழக அரசு. எதிர்த்தரப்பாக புரட்சிகர அமைப்புகள். இந்த மூன்று பேரைத் தவிர இந்த வழக்கில் வேறு யாரும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. பார்ப்பனர்கள் தரப்பில் பணத்தை அள்ளி இறைக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள். பெரியார் படத்தையும் கோடிகளில் பணத்தையும் வைத்துக் கொண்டிருப்பவர்களோ அமைதியாக இருக்கிறார்கள் ! இந்நிலையில் ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வழக்கு நிதி திரட்டி வருகின்றனர்.

சென்னை மின்சார இரயிலில் ஒரு முழு நாள் செய்யப்பட்ட பிரச்சாரம் மற்றும் நிதிவசூல் அனுபவம் ஒன்றை வாசகர்களுக்காக இங்கு தருகிறோம்.

ஓடுகின்ற மின்சார இரயிலில் தோழர்கள் குழுக்களாக பிரிந்துகொண்டு ஒவ்வொரு பெட்டியாக ஏறி மக்களிடையே வழக்கைப் பற்றி விளக்கி கூறிய பிறகு நிதி கோருவார்கள். பிரச்சாரத்தின் போது மக்களிடையே பேசிய உரையின் சுருக்கம் இது தான்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தேர்தல் பாதை திருடர் பாதை! புரட்சி ஒன்றே மக்கள் விடுதலைப் பாதை! என்கிற முழக்கத்தோடு செயல்பட்டு வரும் புரட்சிகர நக்சல்பாரி அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்திலிருந்து வருகிறோம். வணக்கம்.

இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் என்கிறார்கள், சரி தான், ஆனால் ஒரு மதம் என்கிற வகையில் மதங்கள் பக்தனுக்கு வழங்கக்கூடிய அடிப்படையான வழிபாட்டு உரிமையை இந்து மதம் அனைத்து இந்துக்களுக்கும் வழங்கியிருக்கிறதா என்றால் இல்லை. பக்தன் தனது கடவுளை தொட்டு வணங்கி பூஜிக்கும் உரிமையை இந்து மதம் அனைவருக்கும் வழங்கவில்லை. நீங்கள் கோவில் வாசல்படி வரை தான் போக முடியும், அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, மீறி எடுத்து வைத்தால் அங்கு வன்முறை வெடிக்கும். இன்றுவரை ஆகம விதிகளின்படி அமைந்த கோவில் கருவறைக்குள் பார்ப்பனர்களைத் தவிர வேறு எந்த இந்துவும் நுழைய முடியாது. இது தான் இந்து மதம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இது தான் நிலைமை. இதை எதிர்த்து தான் தந்தை பெரியார் 1970-ல் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.

உடனே அன்றைக்கு இருந்த தி.மு.க அரசு அனைவரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. பார்ப்பனர்கள் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை வாங்கினார்கள். தமிழக அரசு அதற்கெதிராக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதன்பிறகு கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து 2006 இல் தி.மு.க அரசு அனைவரையும் அர்ச்சகராக்கும் அரசாணையை வெளியிட்டு, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி ஒன்றையும் துவங்கியது. அதில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்க்கான மாணவர்கள் படித்தார்கள். அவர்களில் 206 மாணவர்கள் முறையாக ஆகம விதிகளை கற்று, சமஸ்கிருத வேதங்கள், ஸ்லோகங்களை கற்று தீட்சையும் பெற்று கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருந்த தருணத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் பார்ப்பனர்கள் மறுபடியும் உச்சநீதி மன்றத்தில் நியமனத்திற்கு தடை வாங்கினார்கள்.

இதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? என்னைத் தவிர எவனும் கோவில் கருவறைக்குள் வரக்கூடாது என்கிறார்கள். பொதுவாக சாதியைப் பற்றி பேசினால் பலரும் இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறாங்க என்று கேட்கிறார்கள். இதோ இது தான் ஆதாரம், இது தான் சான்று. இதற்கு பெயர் என்ன? அப்பட்டமான, பச்சையான சாதிவெறி இல்லையா இது? இவர்கள் தான், இந்த பார்ப்பனர்கள் தான் வெறித்தனமாகவும், பார்ப்பன கொழுப்பு கொப்பளிக்கவும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள். கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் இவர்கள் தான் கோவில் கருவறைக்குள் முழு இடஒதுக்கீடும் தமக்கே வேண்டும் என்று ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்துக்களில் பார்ப்பனர்கள் வெறும் மூன்று சதவிகிதம் தான். மூன்று சதவிகிதம் உள்ள பார்ப்பன கும்பல் மிச்சமுள்ள தொண்ணூற்று ஏழு சதம் இந்துக்களை, அதாவது பெரும்பான்மையான இந்துக்களை கோவில் கருவறைக்குள் விட மறுப்பது ஏன்? இது தான் மிக முக்கியமான கேள்வி. நீங்கள் இந்தியாவின் ஜனாதிபதியாகலாம், பிரதமர் கூட ஆகிவிடலாம் ஆனால் கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது ! ஏனென்றால் பெரும்பான்மை மக்களை இந்து மதம் சூத்திரன், பஞ்சமன் என்கிறது. சூத்திரன் என்றால் என்ன தெரியுமா? வேசி மக்கள் என்று அர்த்தம். அந்த வேசி மக்கள் சாமியை தொட்டால் சாமி தீட்டாகி பவரை இழந்துவிடும் என்கிறான் பார்ப்பான். அதனால்தான் பிறப்பிலேயே உயர்ந்தவனாகிய என்னைத்தவிர எவனும் உள்ளே வரக்கூடாது என்கிறார்கள்.

இது செருப்பால் அடித்தது போல் இல்லை? இது அவமானமாகவும், அசிங்கமாகவும் இல்லையா? இந்த நாடு வல்லரசு ஆகிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிறார்கள், ஆனால் சாமியை கும்பிடுவதற்குக் கூட இங்கு ஜனநாயகம் இல்லை.

இங்குள்ள கோவில்களில் எல்லாம் ஆகமவிதிப்படி தான் எல்லாம் நடக்கிறதா ? கோவில்களையே லாட்ஜாகவும், டாஸ்மாக் பாராகவும் பயன்படுத்தும் கிரிமினல் சங்கராச்சாரி, தேவநாதன், தில்லை தீட்சிதர்கள் எல்லாம் ஆகமவிதிகளின் படி தான் நடந்து கொள்கிறார்களா?

இது தமிழனுக்கு நேர்ந்த இழிவு மட்டுமல்ல, தமிழுக்கும் நேர்ந்த இழிவு. தமிழனைப் போல தமிழ் மொழியும் கருவறைக்குள் நுழைய முடியாது. தமிழர்கள் வேசி மக்கள் என்றால் அவர்களின் மொழி வேசி மொழி, நீஷ பாஷை என்று கூறி கருவறைக்குள் விட மறுக்கிறது பார்ப்பனியம்.

எனவே யார் யாரெல்லாம் தன்னை இந்து என்று கருதிக்கொள்கிறார்களோ, யார் யாரெல்லாம் தமிழ் என்னுடைய தாய் மொழி என்று கூறுகிறார்களோ அவர்களுடைய பிரச்சினை இது. உங்களுடைய பிரச்சினை இது. ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் நாங்க தான் அத்தாரிட்டின்னு பேசுகின்ற பி.ஜே.பி.யோ இந்து முன்னணியோ அல்லது வேறு எந்த இந்து அமைப்புகளுமோ இந்தப் பிரச்சினையில் தலையிடவில்லை. அவர்கள் அமைதியான முறையில் ஆலையத் தீண்டாமையை அங்கீகரிக்கிறார்கள். நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தான் இந்தப்பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள்.

வருகின்ற இருபதாம் தேதி இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் இறுதி விசாரணைக்கு வருகிறது. பார்ப்பனர்களின் தரப்பில் பராசரன் என்கிற மூத்த வழக்குரைஞர் ஆஜராகிறார். அவருடைய வாதங்களை முறியடிக்க வேண்டுமானால் அவருக்கு இணையான வழக்குரைஞர்களை நியமிக்க வேண்டியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டுக்கு எல்லோரும் சாதாரணமாக போய்விட முடியாது. ஒரு வழக்குரைஞரை நியமித்து அவர் ஒரு முறை எழுந்து நின்று வாதாடினாலே சில பல லட்சங்களை எடுத்து வைக்க வேண்டியிருக்கும். பார்ப்பனர்களுக்கு பல லட்சங்களை கொட்டி அழுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் முதலாளிகளிடமோ, கந்து வட்டிக்காரர்களிடமோ, சமூக விரோதிகளிடமோ போய் கையேந்துபவர்கள் அல்ல. மாறாக அனைத்து போராட்டங்களுக்கும், வழக்குகளுக்கும் மக்களையே சார்ந்து நிற்கிறோம். உழைக்கும் மக்கள் வழங்கும் நிதியிலிருந்து தான் எமது போராட்டங்களையும் வழக்குகளையும் நடத்துகிறோம். அந்த வகையில் இந்த வழக்கை நடத்துவதற்கான நிதியை கோரி உங்கள் முன்னால் வந்திருக்கிறோம். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதன் மூலம் சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்ட உங்களையும் எங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள். சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்ட நிதியளித்து ஆதரவு தாருங்கள். நன்றி.

என்று உரையாற்றிய பிறகு தமது பங்கேற்பை உறுதிபடுத்தும் வகையில் மக்கள் நிதியளிப்பார்கள். இந்த நிதிவசூல் பிரச்சாரம் எந்த தடையுமின்றி நடந்துவிடவில்லை. இந்த பிரச்சாரம் மட்டுமல்ல எந்த பிரச்சாரமும் அப்படி நடப்பதில்லை. பல்வேறு இடையூறுகள், தடைகள், சண்டை சச்சரவுகளைக் கடந்து தான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் நிதிவசூல் நடத்தப்படுகிறது. சிறப்பாக இந்த பிரச்சாரம் நேரடியாக இந்து மதத்தின் தீண்டாமையை தாக்கக்கூடியதாக இருப்பதால் வரவேற்பும் எதிர்ப்பும் சேர்ந்தே இருக்கிறது.

இந்து முன்னணி லும்பன்கள், ஆர்.எஸ்.எஸ் இல் இல்லாத ஆர்.எஸ்.எஸ் காரர்கள், பார்ப்பனியத்தை ஆதரிப்பவர்கள், பார்ப்பனர்கள், கருப்பு பார்ப்பனர்கள் என்று பல தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு வந்தது. இவர்களைத் தவிர பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் விசயத்தை கூர்ந்து கவனித்து மகிழ்ச்சியோடு நிதியளித்தார்கள். பார்ப்பனர்களையும் கருப்பு பார்ப்பனர்களை எதிர்த்து கேள்வி எழுப்பினார்கள்.

ரு பெட்டியில் தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு பார்ப்பனரும் அவரோடு ஒரு கருப்பு பார்ப்பானரும் சேர்ந்து கொண்டு இந்து மதத்தைப் பற்றி பேசக்கூடாது என்று சண்டைக்கு வந்தனர்.

“ஏய் நிறுத்துடா மதத்தை பத்தியும், சாதியை பத்தியும் இங்க பேசாதே!” என்றனர்.

தோழர்கள் பதிலளிப்பதற்குள் தரையில் அமர்ந்துகொண்டிருந்த உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் பாய்ந்துகொண்டு வந்தார்

“ஏன் பேசக்கூடாது, அவனுங்க பன்ற அட்டகாசம் தாங்க முடியலய்யா, காது குத்திலிருந்து கல்யாணம் வரைக்கும் எல்லாத்துக்கும் ஐயாயிரம் பத்தாயிரம்னு காசப் புடுங்குறானுங்க, கொள்ளையடிக்கிறானுங்க. அதை பேசக் கூடாதா ? அவங்கள பேசக்கூடாதுன்னு சொல்ல நீ யாருய்யா? தம்பி நீ பேசுப்பா” என்றார். இரண்டு பேரும் கப்சிப் ஆகிவிட்டார்கள். அதோடு அடுத்த ஸ்டேஷனில் இறங்கியும் போய் விட்டனர்.

ன்னொரு பெட்டியில் பேசிக்கொண்டிருந்த போது குழந்தை குட்டிகளோடு வந்திருந்த நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் எழுந்து நின்று ஆவேசமாகக் கத்தத் துவங்கி விட்டார். “இந்து மதத்தை பத்தி நீ எப்படி பேசலாம், வெளிய போடா நாயே, டிரெய்ன விட்டு கீழ இறங்குங்கடா” என்றார். தோழர்கள் பொறுமையாக விளக்கமளித்தனர். இருந்தும் அவர் அடங்கவில்லை.

“சரி நாங்கள் பேசுவதைப் போல நீங்களும் உங்கள் கருத்தை மக்கள் மத்தியில் நின்று பேசுங்கள்” என்றனர். அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை. அத்துடன் “தே.பசங்களா, மகனுங்களா” என்றெல்லாம் கெட்ட வார்த்தைகளில் ஏசத்துவங்கிவிட்டார். அதன்பிறகு தோழர்கள் அவரை நையப்புடைத்து விட்டார்கள். அடி உதைகளால் அல்ல வார்த்தைகளால். நாலா பக்கமும் சூழ்ந்துகொண்டு அவரை நோக்கி தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடிப்போனார்.

இதற்கிடையில் அவருடைய வேட்டி வேறு அவிழ்ந்துவிட்டது. வேட்டியை சரி செய்வதா பதிலளிப்பதாக என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார். அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திவிட்டு தோழர்கள் அடுத்த ஸ்டேஷனில் இறங்கினர்.

தொண்ணூற்று ஒன்பது சதம் பார்ப்பனர்கள் வாயையே திறக்கவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர்.

ரு பெட்டியில் ஆறு ஏழு பார்ப்பனர்கள் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களில் நீட்டாக பேண்ட் ஷ்ர்ட் அனிந்து உச்சிக்குடுமியுடன் அமர்ந்துகொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பார்ப்பனர் துண்டறிக்கையை கேட்டு வாங்கி படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு எதிரில் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது தான் டாஸ்மாக்கிலிருந்து வந்திருக்கிறார் என்பது அவரைக் கடந்து சென்ற போது நன்றாக தெரிந்தது.

பேசிக்கொண்டிருந்த தோழர் ’பார்ப்பனக் கும்பல்’ என்ற வார்த்தையை உச்சரித்ததும் “டேய்” என்றார் லும்பன் பார்ப்பனர். அதை சட்டை செய்யாமல் தோழர் தொடரவே அடுத்ததாக “வேண்டாம்… வேண்டாம்..” என்று இழுத்தார். உடனே அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு தோழர் “என்ன வேண்டாம்.. என்ன..” என்று கேட்டுக்கொண்டே அருகில் நெருங்கியதும் உச்சிக்குடுமி பார்ப்பனர் உதிரிப் பார்ப்பனரை பார்த்து ’எதுக்கு சும்மா டென்ஷன் ஆகிறேள்’ என்றார் ஏதோ ஒரு அர்த்தத்துடன். அத்துடன்டு லும்பன் பார்ப்பனர் நிதானமாக பேச முடியாத நிலையிலும் இருந்ததால் வாயை மூடிக்கொண்டார்.

ன்னொரு கம்பார்ட்மெண்டில் உலகறிந்த பொறுக்கியான நித்தியானந்தாவைப் பற்றி பேசியதற்கு ஒருவர் சண்டைக்கு வந்துவிட்டார். தமிழகத்தில் நித்திக்கெல்லாம் ஆதரவாளர்கள் இருக்கிறார்களே என்று அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு தான் “அந்தாள் நித்தியோட சாதிக்காரன் தோழர் அதனால தான் அவனுக்கு கோபம் வருது” என்றார் ஒரு தோழர்.

வேறொரு பெட்டியில் பேசி முடித்ததும் “சங்கராச்சாரியை பற்றி தப்பா பேசாதீங்க” என்றார் ஒரு பார்ப்பனர். ஏன் என்பதில் துவங்கி பல்வேறு கேள்வி பதில் மறுப்பு என்று போய்க்கொண்டிருந்த விவாதத்தில், “சரி ஜெயேந்திரரை நீங்க மகா பெரியவான்னு சொல்றீங்க அந்த மகா பெரியவா இப்போ நித்தியானந்தாங்கிற மகா பொறுக்கியை பார்த்திருக்கிறாரே அதுக்கு என்ன சொல்றீங்க” என்றதும், “அது அவரோட பர்ஸ்னல்(!) விஷயம்” என்றார். கடைசியில் “நான் என்ன சொல்ல வர்றேன்னா ஜெயேந்திரரை நீங்கள் குற்றவாளின்னு சொல்ல முடியாது ஏன்னா வழக்கு நீதிமன்றத்தில் நடந்துட்ருக்கு அவர் குற்றவாளியா இல்லையான்னு நீதிமன்றம் தான் சொல்லணும். வேணும்னா பொறுக்கின்னு சொல்லிக்கிங்க “என்றார். இவர் நூறு ரூபாய் நன்கொடையும் போட்டார். இது என்ன மாதிரி கேஸ் என்பது புரியவில்லையே என்று எண்ணிக்கொண்டே அடுத்தப் பெட்டிக்கு ஓடினோம்.

தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டிருந்த போதே மூலையில் அமர்ந்திருந்த ஒருவர் விதம் விதமாக முகத்தை சுழித்துக்கொண்டிருந்தார். பிறகு நிதி கோரி உண்டியலை ஏந்திச் சென்ற போதும் “ச்சீ.. போ அந்தப்பக்கம்” என்பதைப் போல நிதி தர மறுத்து வேகமாக தலையை ஆட்டினார். அவ்வாறு தலையை ஆட்டியதில் ‘நான் மட்டுமல்ல நீங்களும் போடாதீர்கள்’ என்று மற்றவர்களுக்கும் சேர்த்து ஆட்டியதை போல இருந்தது. அந்த பெட்டியில் பேசி முடித்ததும் மதிய உணவு இடைவேளைக்காக இறங்க வேண்டும் என்பதால் அதே பெட்டியிலுள்ள இருக்கைகளில் அமர்ந்தோம். ஒரு தோழர் மட்டும் அந்த நபரை ஆரம்பத்திலிருந்தே கவனித்துக்கொண்டே இருந்தார்.
தமிழ்நாடு பார்ப்பனர்
அந்த நபருக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் நிதியளித்திருந்தனர். துண்டறிக்கையை அனைவரும் கூட்டாக சேர்ந்து வாசித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் தான் அந்த முக்கியஸ்தர் அமர்ந்துகொண்டிருந்தார். அவர் அந்த மாணவர்களிடம் “இதெல்லாம் என்னப்பா முட்டாள்தனமா இருக்கு, எல்லோரும் அர்ச்சகராகனும்னு பேசுறாங்களே இதெல்லாம் தேவையா? தேவையில்லாத வேலைப்பா” இது என்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்ததை அந்த தோழர் பார்த்து விட்டார்.

உடனே அனைத்து தோழர்களும் அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு மாறினர். “உங்கள் பிரச்சினையை எங்ககிட்ட சொல்லுங்க சார்” என்றதும் அவர் அதிர்ந்து போனார். இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் தோழர்கள் இறங்காமல் அதே பெட்டியில் அமர்ந்துவிட்டதை அவர் கவனிக்கவில்லை, இறங்கிப் போய்விட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு தான் மாணவர்களிடம் தனது பார்ப்பன ஆதரவுப் பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தார்.

இருந்தாலும் சமாளித்துக்கொண்டு “எதுக்கு எல்லோரும் அர்ர்சகராகனும்னு சொல்றீங்க” என்றார். “ஆகம விதிப்படி அமைந்த இந்துக்கோவில்களில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் கருவறைக்குள் நுழைய முடியாதுங்க…” என்று விளக்கிக்கொண்டிருக்கும் போதே, “ஏன் நான் நுழைஞ்சிருக்கேனே” என்றார். “நீங்க ஏதாவது ஒரு கருப்பசாமி கோவில்ல நுழைஞ்சிருக்கலாம் சிறீரங்கம், திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி போன்ற கோவில்களில் நுழைய முடியாது, ஏன் தெரியுமா? ஏன்னா அது தீட்டு” என்று விளக்கினோம்.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல காலம்காலமா இப்படித்தான் இருக்கு, இந்து மதம் எல்லோருக்கும் சொந்தமானது தான் நீங்க தான் பர்ப்பனர்களை மட்டுமே வேணும்னு திட்றீங்க அந்த கோவில் இல்லைன்னா வேற கோவிலுக்கு போங்க அங்கே ஏன் போறீங்க” என்றார்.

“வேற கோவிலுக்கு போறதெல்லாம் இருக்கட்டுங்க அந்த கோவிலுக்குள்ள ஏன் விடமாட்டேங்கிறாங்கிறதை முதல்ல பேசுங்க. இடஒதுக்கீட்டை எதிர்க்கிற இந்த பார்ப்பனர்கள் தான் கருவறைக்குள்ள நூறு சதவீதம் இடத்தையும் ஆக்கிரமிச்சிக்கிட்டு மத்தவங்களை விடமாட்டேங்கிறாங்க” என்றதும்.

“இடஒதுக்கீடே குடுக்கக்கூடாதுங்கிறேன் எதுக்கு இடஒதுக்கீடு ? இடஒதுக்கீடு கொடுக்கிறதால தான் திறமை இல்லாம போகுது” என்றார்.

“சார் நீங்க பாப்பானுக்காகவும் இந்துமதத்துக்காகவும் ரொம்ப வருத்தப்படுறீங்க. இந்து மதத்துக்காக இவ்வளவு பேசுறீங்களே பகவத்கீதையோட பதினாறாவது அத்யாயத்துல கண்ணன் என்ன சொல்றான்னு தெரியுமா?” என்றதும் திரு திருவென்று முழித்தார். அருகில் அமர்ந்திருந்த மாணவர்களையும் பார்த்துக்கொண்டார். மாணவர்கள் நக்கலாக பார்த்துக்கொண்டிருந்தனர். கடைசியில் “தெரியல நீங்களே சொல்லுங்க” என்றார்.

“சரி, மனுஸ்மிருதியில் பார்ப்பனர்களைத் தவிர உள்ள பெரும்பான்மை மக்களை என்னன்னு எழுதி வச்சிருக்கான்னு தெரியுமா?” என்றோம் அதற்கும் “தெரியாது நீங்களே சொல்லுங்க” என்றார். இதற்கிடையில் அனைவரும் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. பிளாட்பாரத்தில் இறங்கியும் அவருடைய பார்ப்பன அடிவருடித்தனத்தை அம்பலப்படுத்திக்கொண்டிருந்தோம். அந்த மாணவர்கள் பிளாட்பாரத்தில் இறங்கிய பிறகும் அவரை வடிவேலைப் பார்ப்பதைப் போல பார்ப்பதை விடவில்லை. மாணவர்களுக்கு புத்திமதி சொல்லப்போய் அவர்கள் காரித்துப்பாத குறையாக அந்த நபர் அனைவரின் முன்பாகவும் அவமானப்பட்டுப்போனார்.

இதைப்போன்று இன்னும் பல்வேறு சம்பவங்களும் இந்த நிதிவசூல் அனுபவத்தில் கிடைத்தன. அனைத்தையும் குறிப்பிட்டால் நான்கு பதிவுகளாக விரியும். பார்ப்பனியத்தை எதிர்த்து செய்யப்பட்ட இந்த பிரச்சாரத்தில் பொதுவாக பெரும்பான்மையாக உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கும், மாணவர்கள் மத்தியில் குறிப்பிடும்படியும் வரவேற்பு இருந்தது. இவர்கள் அனைவரும் நிதியளித்து ஆதரவளித்தனர்.

பிரச்சாரத்தின் வீச்சாலும் அதன் நியாயத்தாலும் பார்ப்பனர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கப்சிப் ஆகியிருந்தானர். பார்ப்பனமயமாக்கப்பட்ட பலர் பார்ப்பனர்களாக இல்லாவிட்டாலும் பார்ப்பனர்களுக்காக பரிந்துபேசினார்கள். பார்ப்பனர்களை விட இத்தைகைய கருப்புப் பார்ப்பனர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவர்களை கருத்து ரீதியாக வீழ்த்தாவிட்டால்பெரியார் பிறந்த மண் என்று இனியும் நாம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது.

பெண்கள் மீதான வன்முறை: தீர்வு அளிக்கும் திசை எது?

11
பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு

டெல்லி மக்கள் போராட்டத்தை ஒட்டி, பெருகி வரும் வல்லுறவுக் குற்றத்தை தடுப்பது குறித்து சட்டம், பண்பாடு ஆகிய இரு தளங்களில் இரு விதமான கருத்துகள் கூறப்படுகின்றன. நடந்துள்ள குற்றத்தின் கொடூரம் காரணமாக வல்லுறவுக் குற்றவாளிகளைத் தூக்கிலிடவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. பிரச்சினை சூடாக இருப்பதால், வல்லுறவுக் குற்ற வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்.

பண்பாட்டுத் தளத்தில், பெண்கள் அடக்க ஒடுக்கமாக உடையணியாதது, இரவு நேரத்தில் தனியாகப் போவது போன்ற மேற்கத்திய கலாச்சார சீரழிவுகளே இதற்கு காரணம் என்று சங்கப்பரிவாரத்தினர் உள்ளிட்ட பிற்போக்குவாதிகள் கூறுகின்றனர். இசுலாமிய மதவாதிகள் உடனே பர்தா மார்க்கெட்டிங்கை த் தொடங்குகின்றனர்.

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு
பெண்களுக்குப் பாதுகாப்பு கோரியும், பாலியல் வல்லுறவுக் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தூக்கு தண்டனை விதிக்கக் கோரியும் டிசம்பர் 23 அன்று டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம்

ஆயிரம் முறை பதிலளிக்கப்பட்டாலும், இந்த ஆணாதிக்கக் கருத்துகள் வெட்ட வெட்டத் துளிர்க்கின்றன. ஆண் சட்டையைக் கழற்றுவதும், வெற்றுடம்போடு இருப்பதும் தங்களை மிருகமாக்குவதாக பெண்கள் கூறவில்லையே, ஆண்கள் கல்லூரிகளின் பேருந்து நிறுத்தங்களில் பெண்கள் குவிவதில்லையே என்ற எளிய உண்மைகள் கூட ஆண்களுக்கு உரைப்பதில்லை. பத்து நாள் பட்டினி ஆனாலும், ஓட்டல் கடையில் தின்பண்டங்களின் மீது காசு கொடுக்காமல் யாரும் கை வைப்பதில்லை. அந்த அளவுக்குத் தனிச் சொத்துடைமையை மதிக்கும் கருத்து இரத்தத்தில் ஊறியிருப்பவர்கள்தான், யாரோ ஒரு பெண் கவர்ச்சியாக உடையணிந்து சென்றால் தன்னை கைநீட்ட வைக்கிறது என்று கூச்சமில்லாமல் பேசுகின்றனர்.

இந்த கூச்சமின்மை நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் அளித்த பண்பாட்டுக் கொடை. பெண்ணை போகப்பொருளாகப் பார்ப்பதற்குப் பழக்கியிருக்கும் நிலவுடைமைப் பண்பாடு கூட, மனித குல மறுஉற்பத்தியில் பெண்கள் ஆற்றும் பாத்திரத்தை மதிக்க வேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தால், தாய்மை – புனிதம் என்ற விழுமியங்களை வைத்திருந்தது.

ஆனால் மறுகாலனியாக்க கொள்கைகளின் கீழ் அதிரடியாகத் திணிக்கப்படும் முதலாளித்துவமோ, நிலப்பிரபுத்துவத்துடன் இணைந்த வீரிய ஒட்டு ரகப் பண்பாட்டை உருவாக்கியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெண் சிசுக்கொலை அதிகரித்திருக்கிறது. வரதட்சிணைக் கொலைகளும் அதிகரித்திருக்கின்றன. வாடகைத் தாய்களின் விலை குறைந்து வருகிறது.

“புகுந்த வீட்டில் உங்கள் மகள் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய எங்கள் கடையில் நகை வாங்குங்கள்” என்ற விளம்பரத்தை எதிர்த்து சமீபத்தில் டெல்லியில் போராட்டம் நடத்தியிருக்கிறது, ஒரு பெண்கள் அமைப்பு. புகுந்த வீடு போகும் பெண்ணின் உயிரை உத்திரவாதப்படுத்த, நகை அணிவித்து அனுப்புவதைப் போல, வெளியில் செல்லும் பெண்களின் ‘கற்பை’ உத்திரவாதப்படுத்தவும் கவசங்கள் விற்கப்படலாம். பாலியல் தாக்குதலைத் தடுக்க மாணவிகள் மேல் கோட்டு அணிய வேண்டும் என்று புதுச்சேரி அரசு கூறியிருக்கிறது. மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் அனைத்தும் ஆணாதிக்கத்துக்கு அளிக்கப்படும் அங்கீகாரங்கள்.இராணுவமும் போலீசும்

தொலைக்காட்சியும் திரைப்படங்களும் ஆணாதிக்கத்தை மேலும் வக்கிரமாக்கியிருக்கின்றன. தன்னைக் காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியதற்காக சூர்ப்பனகை மூக்கை அறுத்தான் ராமன் என்கிறது ராமாயணம். காதலிக்க மறுக்கும் பெண்கள் மீது ஆசிட் ஊற்றுவது சகஜமாகி வருகிறது. ஏனென்றால், நுகர்வியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தனிநபர்வாத வெறித்தனத்தை வளர்த்து விட்டிருக்கிறது.

எவ்வளவு நுகர்கிறோமோ அவ்வளவு மகிழ்ச்சி, விதவிதமாக நுகர்வதே வாழ்க்கையின் நோக்கம் என்ற மனோபாவமே ஒரு மனிதனின் விழுமியங்களை ஆட்சி செய்கிறது. இத்தகைய சூழலில் ஆண்களின் நுகர்பொருள் பட்டியலில் பெண்ணும் ஒரு பண்டமாகக் காட்டப்படும்போது, அவள் மிக எளிதில் பாலியல் வன்முறையின் இலக்காகி விடுகிறாள். சக மாணவன், ஆசிரியன், தெருவில் போகிறவன், பக்கத்து வீட்டுக்காரன், சொந்தக்காரப் பையன் என்று எந்த ஒரு ஆணும் தன்மீது பாலியல் வன்முறையை செலுத்தக்கூடும் என்ற அச்சத்துடன் வாழவேண்டிய நிலைக்கு ஒரு பெண் ஆளாக்கப்பட்டிருக்கும்போது, இதனை சட்டத்தின் மூலம் தடுப்பது எப்படி என்பதே கேள்வி.

வர்மா கமிசன்
நீதிபதி வர்மா கமிசன் அளித்த பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி ‘குடியரசு’ தினத்தன்று டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டப் பேரணி (உள்படம்) நீதிபதி வர்மா.

தீண்டாமையை நல்லொழுக்கமாகக் கருதும் சமூகத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஏன் இயங்க மறுக்கிறதோ, அதே காரணத்தினால்தான், ஆணாதிக்க வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களும் இயங்குவதில்லை. சட்டம் எதனைக் குற்றம் என்று விளக்குகிறதோ, அதுவே ஆண்மையின் இலக்கணமாக பண்பாட்டால் உயர்த்தப்படும்போது, பெண்ணை துரத்தி மிரட்டிப் பணியவைப்பது கதாநாயகர்களின் சாதனை ஆகிவிடுகிறது. இத்தகையொரு ‘நாயகன்’தான் காதலுக்கு இணங்க மறுத்த காரணத்தினால் விநோதினி என்ற பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றினான். முந்தையது கலை, பண்பாடு. பிந்தையது குற்றம். “புகை, குடி போன்றவற்றைக் காட்டிலும் வல்லுறவும் கொலையும் பாரிய குற்றங்கள் அல்லவா? சினிமாவில் அத்தகைய காட்சிகள் வரும்போதும் எச்சரிக்கை வாசகம் வெளியிடலாமே!” என்று கேலி செய்திருந்தார் திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்.

மறுகாலனியாக்கம் வர்க்க ரீதியில் மட்டும் சுரண்டல், ஏற்றத்தாழ்வை அதிகரிக்கவில்லை. அது ஏற்கெனவே சமூகப் படிநிலையில் அதிகம் ஒடுக்கப்படுபவர்களாக இருக்கும் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மீதான சுரண்டல் -அடக்குமுறையையும், அதன் விளைவாக முரண்பாடுகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. பெண்களின் மீதான வன்முறை அதிகரிப்பதற்கான சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணிகள் என்னவென்று யாருக்கும் தெரியாமல் இல்லை. இருப்பினும், அவை ஆளும் வர்க்க நலனுக்கானவை என்பதால், அவற்றை இருட்டடித்து விட்டு, வல்லுறவை தனியானதொரு குற்றமாகக் காட்டவே அரசு முயற்சிக்கிறது.

மறுகாலனியாக்கம்அப்பட்டமான பாலியல் குற்றங்களே தண்டிக்கப்படுவதில்லை என்ற சூழ்நிலை ஒருபுறம் நிலவும்போதே, மேட்டுக்குடி பெண்ணியவாதிகள், ஆணாதிக்கத்தின் புதிய நுட்பமான வடிவங்களைப் பட்டியலிட்டு இவையும் குற்றங்களாகச் சேர்க்கப்பட வேண்டுமென்று அரசிடம் கோருகின்றனர். இவற்றையும் குற்றம் என்று அங்கீகரித்து சட்டப் புத்தகத்தில் ஏற்றி விடுவதன் மூலம், அந்தக் குற்றங்கள் நிகழ்வதற்கான சமூகப் பண்பாட்டு காரணங்களுக்குப் பொறுப்பேற்பதிலிருந்து அரசும் ஆளும் வர்க்கமும் தார்மீக ரீதியில் விலகிக் கொண்டு விடுகின்றன.

அதுமட்டுமின்றி, ஏற்கெனவே சட்டங்கள் அளித்திருக்கின்ற அதிகாரத்தை வைத்தே குற்றங்களைத் தடுக்காத அதிகார வர்க்கமும் போலீசும், அவ்வாறு செயல்படத் தவறியதற்கு வெகுமதியாக புதிய அதிகாரங்களைக் கோருகின்றனர். வல்லுறவுக்குக் குண்டர் சட்டம், குற்றவாளிகளைக் கண்காணிக்க எல்லா பொது இடங்களிலும் வீடியோ காமெராக்கள் – என்று வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மக்கள் மீது தமது கண்காணிப்பையும் அதிகாரத்தையும் அதிகப்படுத்துவதற்கான அனைத்தையும் அரசு செய்து கொள்கிறது.

குற்றவாளிக்கு தண்டனை
அசாமில் மாவட்டக் காங்கிரசு கட்சியின் தலைவரான பிக்ராம்சிங் பிரம்மா என்பவன் பாலியல் வல்லுறவுக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட போது, பெண்கள் திரண்டெழுந்து அவனை நடுவீதியில் செருப்பால் அடித்து அவமானப்படுத்தும் முன்னுதாரணமிக்க போராட்டம்

ஆகவே வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களுக்கு மேலும் கடுமையான சட்டம், தூக்கு தண்டனை என்ற கோரிக்கைகளை அரசின் முன்வைக்கும் போது, இக்குற்றத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட பிறர் விடுவிக்கப்பட்டு விடுகின்றனர். டெல்லி சம்பவத்தையே எடுத்துக் கொண்டால், பேருந்து கண்ணாடிகள் கருப்பாக இருக்கக் கூடாது என்று தான் போட்ட உத்தரவையே கண்காணிக்காத நீதிமன்றம், நிறைவேற்றாத பேருந்து உரிமையாளர், சோதிக்காத போக்குவரத்து அதிகாரி மற்றும் போலீசார், இரவு நேர ரோந்து போலீசார் – என இத்தனை பேர் இதில் தொடர்புள்ளவர்கள். அதேபோல பாலியல் வக்கிர வீடியோக்கள் புழங்கும் செல்போன்கள், போதை மருந்துகள், ஆணாதிக்கத் திமிரைச் சாகசமாக காட்டும் திரைப்படங்கள், பள்ளி மாணவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் டைம் பாஸ்” போன்ற ஆபாசப் பத்திரிகைகள் – எனப்பல குற்றவாளிகள் இதன் பின்புலத்தில் இருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி, குற்றம் நிகழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்த அரசு, போலீசு, நீதித்துறை உள்ளிட்ட அரசு எந்திரம் முழுவதும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்குப் பதிலாக, அவர்களிடமே கோரிக்கை வைக்கப்படும்போது, ஆளும் தகுதியை இழந்துவிட்ட அரசு மீண்டும் நியாயவுரிமை பெற்றுவிடுகிறது.

பெண்கள் மீதான வன்முறை குறித்த பிரச்சினையில் பெரிதும் அக்கறையுள்ளது போல காட்டிக்கொள்ளும் பொருட்டு அரசு, நீதிபதி வர்மா தலைமையில் கமிசன் அமைத்த போதிலும், உள்துறை அமைச்சரும் உள்துறைச் செயலருமே இக்கமிசனுக்கு உரிய மதிப்பளிக்கவில்லை.

போலீசு, துணை இராணுவம் மற்றும் இராணுவப் படையினரின் மீதான வல்லுறவுக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் விசாரித்துத் தண்டனை வழங்க வேண்டும் என்றும், வல்லுறவுக் குற்றம் விசயத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் பொருந்தாது என்றும் வர்மா கமிசன் கூறியிருப்பதை அமல்படுத்தவியலாது என்று மறுநாளே அறிக்கை விட்டார் அமைச்சர் அச்வினி குமார். தற்போது அரசு கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டமோ, மேற்கூறிய கமிசன் சிபாரிசுகளை முற்றிலுமாக நிராகரித்திருப்பதாகக் கூறுகின்றன பெண்கள் அமைப்புகள்.

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துத்தான் ஐரோம் சர்மிளா உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். “எங்களை வல்லுறவு கொள்ளுங்கள்” என்று மணிப்பூர் தாமார்கள் இராணுவ அலுவலகத்தின் முன் நிர்வாணமாக நடத்திய போராட்டம், டில்லி போராட்டத்துக்கு மிகவும் முந்தையது.

டில்லி கிரிமினல்கள், ஒரு மணி நேரம் தன் கட்டுப்பாட்டில் வைத்து அந்தப் பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்கி வீசிவிட்டு, தப்பிச் செய்ன்றனர். இதே குற்றத்தை இழைக்கும் போலீசும் இராணுவமும் ஓடுவதில்லை. போலீசு நிலையமும் இராணுவ முகாமும் அவர்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகள். வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் மீது பொயாக திருட்டு வழக்கு போடுவது, விபச்சார வழக்கு போடுவது என்பது போலீசின் உத்தி. தீவிரவாதி என்று முத்திரை குத்தி சுட்டுக் கொன்று வீசியெறிந்து விடுவது ராணுவத்தின் உத்தி. மணிப்பூரைச் சேர்ந்த தங்ஜம் மனோரமாவின் படுகொலை இத்தகையதுதான்.

ஒரு குற்றத்தை சாதாரண கிரிமினல்கள் இழைப்பதற்கும், போலீசு, இராணுவத்தினர் இழைப்பதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், இது அதிகாரத்தைப் பயன்படுத்தி இழைக்கும் குற்றம்; பெண்களை ஒடுக்கும் அரசு எந்திரம்அதிகாரத்தைப் பயன்படுத்தியே மறைக்கும் குற்றம்; இறுதியாக, வேலியே பயிரை மேயும் குற்றம். வல்லுறவுக் குற்றத்துக்குத் தூக்கு தண்டனை கொடுப்பது என்றால், அது இவர்களுக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும். இருப்பினும், அவ்வாறு தண்டிப்பது போலீசு, இராணுவப் படையினரின் தார்மீக பலத்தைக் குன்றச்செய்துவிடும் என்று சொல்லித்தான் அரசு இதனைத் தொடர்ந்து நிராகரிக்கிறது.

இது ஒரு உருவகம். ஓட்டுப் பொறுக்கிகள் முதல் அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவற்றின் எல்லா மட்டங்களிலும் லஞ்ச-ஊழல் உள்ளிட்ட நெறிகெட்ட செய்யல்கள் அனைத்தும் நியாயப்படுத்தப்படுவது இப்படித்தான். இது தனியே நடைபெறவில்லை. இதுநாள்வரை நெறிகெட்டதாகவும் சட்டவிரோதமானதாகவும் கருதப்பட்ட பல விசயங்களை மறுகாலனியாக்கக் கொள்கை சட்டபூர்வமாக்கியிருக்கிறது. தண்ணீரும் ஆறுகளும் தனியார்மயக்கப்படுகின்றன.

பஞ்சமா பாதகம் என்று எனப்பட்டவையெல்லாம் இன்று சட்டமாக்கப்படுகின்றன. ஒப்புக்கொள்ளாத மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. இந்த நாடே பன்னாட்டு நிறுவனங்களால் கும்பல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது சகஜமானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. சமூக நலன் சார்ந்த விழுமியங்களைக் கைவிடுவது அவ்வளவு சுலபமாக நடக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் எப்படி நிலைக்க முடியும? அதனால்தான் மகளை வல்லுறவுக்கு ஆட்படுத்திய தந்தை, மாணவியை பாலியல் சித்திரவதை செய்த ஆசிரியர் போன்ற விபரீதங்கள் அரங்கேறுகின்றன.

பண்பாட்டில் ஒழுக்கமில்லாத நிலை என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. சீனத்தை அபினியில் மூழ்கடித்ததைப் போல, இந்த விழுமியங்களற்ற கலாச்சாரத்திற்குள் மக்கள் வீழ்த்தப்படுகிறார்கள். இதன் காரணமாகத்தான் அநீதி இழைப்பதும், அநீதியைச் சகித்துக் கொள்வதும் சகஜமாகிவிட்டது.

இந்த சமூகச் சீரழிவை, சட்டத்தின் துணைகொண்டு மாற்றியமைக்க முடியாது. காரணம், அந்தச் சட்டத்தை ஏந்தியிருப்பவர்கள்தான் இந்தச் சீரழிவை விதைத்தவர்கள். இந்தச் சூழலிலிருந்து தனியாக யாரும் பாதுகாப்பு தேடவும் முடியாது. தனித்தனியாக திருத்தவும் முடியாது. குறிப்பிட்ட சமூகச் சூழல்தான் தனிநபர் பண்பாட்டை சீரழித்தது என்றாலும், தனிநபர்களாக அதனை மாற்றிக் கொள்ள இயலாது.

தனிப்பட்ட முறையில் ஆண்-பெண் உறவில் ஜனநாயக விழுமியங்கள் வரவேண்டுமானால், புதிய ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். டில்லியில் குறுகிய காலமே நடந்த அந்த போராட்டத்தின் ஊடாக, பல ஆணாதிக்கவாதிகளுடன் கொண்டிருந்த நட்பை முறித்துக் கொண்டதாக பெண்கள் தம் அனுபவத்தைக் கூறியிருக்கின்றனர். இத்தகைய போராட்டங்கள்தான் ஆண்-பெண் உறவில் ஜனநாயகக் கூறுகளை அமல்படுத்தும். ஒரு பெண்ணுக்குப் பேருந்திலோ, பொது இடத்திலோ அநீதி நடந்தால் பார்த்துக் கொண்டு செல்லாமல் தலையிட்டுத் தட்டிக் கேட்கும் பண்பை அனைவரிடமும் வளர்க்கும். பெண்களை இழிவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகளுக்குப் பணிந்து போகாமல், எதிர்த்துப் போராடும் மனவலிமையைத் தரும்.

இதுகாறும் ஆணாதிக்கமாகத் தெரிந்திராதவற்றை ஆண்களுக்கும், பெண்ணடிமைத்தனமாகப் புரிந்து கொள்ளாதவற்றை பெண்களுக்கும் புரிய வைக்கும். அதிகாரத்தை மக்கள் கையிலெடுப்பதற்குப் பயின்று கொள்வது இப்படித்தான். இத்தகைய மக்கள் எழுச்சிகளை முடிந்தவரை விரைவாக தண்ணீர் ஊற்றி அணைப்பதன் மூலம்தான், தனது அதிகாரத்தையும் மேலாண்மையையும் அரசு தக்கவைத்துக் கொள்கிறது. இத்தகைய எழுச்சிகளை இயல்பான நிகழ்வுகளாக மாற்றுவதன் மூலம்தான், இந்த அரசதிகாரத்தைச் செல்லாக் காசாக்கவும், மக்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் முடியும்.

– அஜித்

________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

பிப்ரவரி 19 – உயர்நீதிமன்றம் மீது காவல்துறை தாக்குதல் தொடுத்த நாள்!

1

பிப்ரவரி 19 – உயர்நீதிமன்றம் மீது காவல்துறை தாக்குதல் தொடுத்த நாள்உயர்நீதிமன்ற பேனர்

  • தாக்குதலுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளையும் தாக்குதல் தொடுத்த போலீசு குண்டர்களையும் பாதுகாக்கும் தமிழக அரசினை எதிர்த்து போராடுவோம்!
  • போலீசு அதிகாரிகளை காப்பாற்ற வழக்குரைஞர்களை குற்றவாளிகளாக்கும் சி.பி.ஐ.யின் மோசடியான குற்றப்பத்திரிக்கைகளை கிழித்தெறிவோம்!
  • உயர்நீதிமன்றத் தாக்குதல் தொடர்பான வழக்குகளை விசாரிக்காமல் இழுத்தடிக்கும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் யோக்கியதையை திரை கிழிப்போம்!
  • செயலற்ற வழக்குரைஞர் சங்கத் தலைமைகளை அம்பலப்படுத்துவோம்!
  • காக்கி உடை ரவுடிகள் தண்டிக்கப்படும் வரை ஒருங்கிணைந்து விடாப்பிடியாக போராடுவோம்!

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு (HRPC), சென்னை கிளை
தொடர்புக்கு : 9842812062

 

சென்னை போலீஸ் லாயர்நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான போரை கண்டித்து வேலை நிறுத்தம் செய்த வழக்கறிஞர்களை காவல் துறை தாக்கியது தொடர்பான பதிவுகள்:

  1. ஈழம்: சுப்ரமணிய சுவாமிக்கு ஹை கோர்டில் முட்டையடி!
  2. போலீசு வக்கீல் மோதலல்ல ! ஈழத்துக்கு எதிரான பார்ப்பன பாசிச பேயாட்டம் !!
  3. வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி!
  4. உண்மை உண்மை ஒன்றே உண்மை லத்திக் கம்பு ஒன்றே உண்மை!

புதுச்சேரியில் பாலியல் வன்முறையைக் கண்டித்து பொதுக்கூட்டம்!

4

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டுவொம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

புதுச்சேரியில் பேரணி – பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக் குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நாள்: 22.02.2013 வெள்ளிக்கிழமை

பேரணி நேரம்: மாலை 4.00 மணி
பேரணி துவங்குமிடம்: சுதேசி மில் அருகில்
பேரணி முடியுமிடம்: அவ்வை திடல்

பொதுக்கூட்டம் நேரம் : மாலை 5:30 மணி,
இடம்: அவ்வை திடல்

டெல்லி மாணவி பாலியல் வன்முறையை தொடர்ந்து தமிழகம்-புதுச்சேரியில் பள்ளி மாணவிகள் மீது நடக்கும் பல பாலியல் வன்கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.புதுவை நோட்டிஸ்

புதுச்சேரியில்  11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிராக டெல்லியைப் போலவே பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு பேருந்து மறியல் வரை செய்து போராடினர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி சிகிச்சை பெற்று வந்த ராஜிவ்காந்தி குழந்தைகள் நல மருத்துவமனை எதிரில் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

இதைக் கண்ட தலைமை மருத்துவர், ”ஏதோ இப்பதான் புதுசா நடப்பதைப் போல எல்லோரும் குதிக்கிறார்கள், இது போல மாதத்திற்கு மூன்று கேஸ் வருகிறது” என்று கூறினார்.

9 லட்சம் மக்கள் கொண்ட சிறு மாநிலத்தில், ஒரு மருத்துவமனையிலேயே மாதத்திற்கு மூன்று பாதிக்கப்பட்ட பெண்கள் என்றால்? மாநிலம் முழுவதும், நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளுக்கு எத்தனை பேர் வருவார்கள்? வெளியில் சொல்லமுடியாமல் மூடிமறைக்கப்பட்டு குமுறிக் கொண்டிருக்கிற பெண்கள் எத்தனை பேர்? என்பதை நினைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

இக்கொடுமைகள் சமூகத்தில் எந்த அளவுக்கு வேருன்றி இருக்கின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்பிரச்சினைக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய நிலவுடமை ஆணாதிக்கத்தையும், இந்தியா கடைப்பிடித்து வரும் புதிய பொருளாதார கொள்கையால் ஏற்படும் மனிதமற்ற, அறநெறியற்ற சீரழிந்த கலாச்சாரத்தையும், இதற்கு காரணமான அரசு அமைப்பையும் மூடி மறைத்துவிட்டு அல்லது கவனமாக ஒதுக்கி விட்டு  ”பெண்கள் ஆடை அணிவது சரியில்லை, சட்டம் சரியில்லை” என்று மழுப்புகிறார்கள்.

இதில் எது உண்மை? யார் குற்றவாளிகள்? பெண்களின் வரலாற்று பாத்திரம் என்ன? உண்மையை விவாதிக்க அணி திரண்டு வாருங்கள்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பெண்ணை போகப்பொருளாய், ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாய் நடத்தும் ஆணாத்திக்க நிலவுடமை பண்பாட்டை அறுத்தெறிவொம்!

ஆபாச வக்கிரங்களை கடைவிரித்து பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஏகதிப்பத்திய சீரழிவுக் கலாச்சாரத்தை துடைத்தெறிவொம்!

மறு காலனியாக்க கொள்கையை எதிர்ப்பின்றி நடத்த சாராயப்போதை, நுகர்வெரியில் ஆழ்த்தி மக்களை உழைக்கும் விலங்குகளாக்கும் ஆளும் வர்க்க சதியை முறியடிப்போம்!

மனித இனத்தை உருவாக்கி பேணுகின்ற பெண்ணினத்தின் மேன்மையை உயர்த்திப்பிடிப்போம்!

பாலியல் துன்புறுத்தல்களை அவமானமாக கருதி முடங்கிக்கொள்ளாமல், ஆணாதிக்க பொறுக்கிகளை அடையாளம் காட்டுவோம்!
அடித்து நொறுக்குவொம்!

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை புரிந்தவர்களில் முதல் குற்றவாளிகள் போலிசு-ராணுவம்-அதிகார வர்க்கமுமே!

சினிமாக்கள், பத்திரிகைகள்,விளம்பரங்கள், இணையம், செல்போன் அனத்திலும் ஆபாச காமவெறியை அனுமதித்து மக்களை சீரழிப்பதே இந்த அரசுதான்!

சட்டத்தை க்டுமையாக்குவது – தூக்கு தண்டனை என்பது பம்மாத்து! இந்த அரசமைப்புக்குள்ளேயே தீர்வு என்பது ஏமாற்று!

பாலியல் வெரியாட்டங்களுக்கு காரணமான நிலவுடமை – பார்ப்ப்னிய சாதி ஆணாதிக்கத்தையும், மறுகாலனியாக்க கலாச்சாரத்தையும் பாதுகாப்பதே இந்த போலி ஜனநாயக அரசுதான்!

போலி ஜனநாயக அரசை வீழ்த்தி, புதிய ஜனநாயக அரசை புரட்சியின் மூலம் அமைப்பதே பெண்களின் ஜனநாயகத்திற்கான ஒரே மாற்று!

அணிதிரண்டு வாருங்கள்! ஆதரவு தாருங்கள்!

தகவல் :
புதிய ஜனநாயக தொழிலாள்ர் முன்னணி, புதுச்சேரி
தொடர்புக்கு: 9488778940

Even the Rain (2009) – வியர்வைத் துளிகளையும் திருடுவார்கள் !

5
ஈவன் த ரெயின்

திரை விமர்சனம் – “ஈவன் த ரெயின்” :

ஈவன் த ரெயின்”அவர்கள் நம் நதிகளை விற்றார்கள். நமது கிணறுகளை, ஏரிகளை, ஏன் நம் தலை மேல் விழும் மழையைக் கூட விற்று விட்டார்கள். லண்டனிலும், கலிபோர்னியாவிலும் வசிப்பவர்களுடைய கம்பெனி நம் தண்ணீரை வாங்கியிருக்கிறது. இனிமேல் எதைத் திருடப் போகிறார்கள்? நமது மூச்சுக் காற்றிலிருக்கும் நீர்த்துளிகளையா? அல்லது நமது நெற்றியில் முகிழ்க்கும் வியர்வைத் துளிகளையா?”

ஈவன் த ரெயின் (மழையைக் கூட) என்ற ஸ்பானிய திரைப்படத்தில், தண்ணீர் தனியார் மயமாக்கத்தை எதிர்த்துப் போராடும் மக்களிடம் கதாநாயகன் டானியல் பேசும் வசனம் இது. 2010ல் இகியார் பொலைன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம், விவசாயம் செய்ய பக்கத்து மாநிலத்தை எதிர்பார்த்து நிற்கும்போதே, தாமிரபரணி ஆற்றை கோக்கிடம் தாரை வார்த்திருக்கும் நமக்கு நெருக்கமானதுதான்.

வாள் முனையில் காலனிகளாக அடிமைப்படுத்தி, பல நூறு ஆண்டுகள் சுரண்டிய பிறகு, சுதந்திரம் என்ற பெயரில் தமது ஏஜெண்டுகளுக்கு அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்து, அதற்காக நாம் ஆடிக்கொண்டும் பள்ளு பாடிக் கொண்டும் இருக்கும்போது, வளர்ச்சி என்கிற பெயரில் மறுகாலனியாக்கத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன ஏகாதிபத்திய நாடுகள். இன்று மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்கப்படும் மறுகாலனியாதிக்கத்தையும், 16ம் நூற்றாண்டின் காலனியாக்கத்தையும் ஒப்பிட்டு அழுத்தமாக முன் வைக்கும் படம் ஈவன் த ரெயின்.

மெக்சிகோவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் செபாஸ்டினும், திரைப்படத் தயாரிப்பாளர் கோஸ்டாவும் தமது குழுவுடன் புதிய திரைப்படத்தை படம் பிடிப்பதற்காக தென் அமெரிக்காவில் இருக்கும் ஏழை நாடான பொலிவியாவுக்கு வருகிறார்கள்.

கொலம்பஸ் புதிய உலகைக் கண்டுபிடிக்க கடற்பயணம் புறப்பட்டு, மேற்கிந்திய தீவுகளின் பூர்வகுடி மக்களை விலங்குகள் போல அடிமைப்படுத்தியது, அவற்றுக்கெதிராக தைனோ இன மக்கள் அத்வே எனும் பழங்குடியினத் தலைவர் தலைமையில் எதிர்த்து சண்டையிட்டது போன்றவற்றின் அடிப்படையில் காலனியாதிக்கத்தின் கொடுமைகளைப் படமாக எடுக்க விரும்புகிறார்கள்.

நாள் கூலியாக 2 அமெரிக்க டாலர் கொடுத்தாலே ஆள் கிடைக்கும் நாட்டில், குறைந்த செலவில் பெரும் எண்ணிக்கையிலான துணை நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். விளம்பரத்தைப் பார்த்து படப்பிடிப்பில் வேலை செய்வதற்கு நூற்றுக்கணக்கான பேர் கூடி விடுகிறார்கள். தைனோ இனத் தலைவர் அத்வே கதாபாத்திரத்திற்கு டானியலையும், சிறுமியாக நடிப்பதற்கு அவன் மகள் பெலனையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

குறைந்த கூலிக்கு துணை நடிகர்களை எடுத்தது மட்டுமின்றி, படப்பிடிப்புக்கான தயாரிப்புகளையும் உள்ளூர் மக்களை வைத்து முடிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான டாலர்கள் மிச்சப்படுத்துகிறார் தயாரிப்பாளர் கோஸ்டா.

டானியலுக்கு திரைப்படத்தில் நடிக்கிறோம், அதுவும் கதாநாயகனாக என்பது போன்ற பெருமிதங்கள் ஏதுமில்லை. அவனுக்கு சினிமா என்பது காசு சம்பாதிக்க உதவும் ஒரு தொழில், அவ்வளவுதான். ஆனால் அவனது முழு நேர வேலை கோபகன் நகரில் தண்ணீரை ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு அரசு தாரை வார்த்ததை எதிர்த்த போராட்டங்களுக்கு மக்களை ஒன்றிணைப்பதுதான்.

இகியார் பொலைன்
இயக்குநர் – இகியார் பொலைன்

ஒரு பக்கம் கொலம்பஸ் தலைமையிலான காலனிய ஆதிக்கவாதிகள் மக்களை அடிமையாக்கி கொடுமைப்படுத்துவது, தண்டிப்பது போன்ற நிகழ்ச்சிகள் படம் பிடிக்கப்பட, மறுபுறம் நகரில் தண்ணீர் தனியார்மயமாக்கலுக்கெதிரான போராட்டம் சூடு பிடிக்கிறது. டானியல் இந்த போராட்டங்களில் கலந்து கொள்வது தயரிப்பாளர் கோஸ்டாவையும், இயக்குநர் செபாஸ்டினையும் கவலைக்குள்ளாக்குகிறது.

பாதிப் படம் எடுத்திருந்த நிலையில் ஒரு போராட்டத்தில் டானியல் போலிஸாரால் கைது செய்யப்பட்டு நன்றாக அடிக்கப்படுகிறான். தங்கள் சொந்த செலவில் லஞ்சம் கொடுத்து டானியலை படக் குழுவினர் மீட்டு வருகிறார்கள். இந்த போராட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அவனைக் கேட்டுக் கொள்கிறார்கள்.

நகரில் போராட்டம் முற்றி கலவரமாக மாறுகிறது. விவசாயிகளும், நகரவாசிகளும் நகர மையத்தை முற்றுகையிடுகிறார்கள். அவர்களை எதிர்த்து ஆயுதப் படைகள் துப்பாக்கிகளால் சுடுகின்றனர். மக்கள் பின்வாங்காமல் போராடுகிறார்கள்.

அந்த கலவரத்திலிருந்து தப்பிப்பதற்காக படக் குழுவினர் நகரத்தை விட்டு கிளம்ப முடிவு செய்து வேறு ஊருக்குப் புறப்படுகிறார்கள். டானியலின் மகள் பெலன் கலவரத்தில் மாட்டிக் கொண்டதாகவும், அவளைக் காப்பாற்றும்படியும் கோஸ்டாவிடம் டானியலின் மனைவி தெரசா மன்றாடுகிறாள். கோஸ்டாவும் மனம் மாறி பெலனைத் தேட நகரத்தினுள் காரில் போகிறான்.

போராடும் மக்கள் டஜன் கணக்கில் கொல்லப்படுகின்றனர், இன்னும் பலர் சிறைப்படுத்தப்படுகின்றனர். மக்கள் தளராமல் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்.

பெலனை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறான் கோஸ்டா. இயக்குநர் செபாஸ்டினையும், தயாரிப்பாளர் கோஸ்டாவையும் விட்டு விட்டு படக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டே வெளியேறுகின்றனர்.

இறுதிக் காட்சியில் தண்ணீரை வாங்கிய தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட செய்தி வெளியாகிறது. போராட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. தன் மகளைக் காப்பாற்றிய கோஸ்டாவை பார்க்க வரும் டானியல் உணர்ச்சிப் பெருக்குடன், நன்றிக் கடனாக ஒரு பரிசுப் பொதியை கொடுக்கிறான். அதனுள் ஒரு பாட்டிலில் தண்ணீர் இருக்கிறது.

கொலம்பஸ் கடல் வழி பயணத்தின் மூலம் அமெரிக்காவை கண்டுபிடித்து காலனியாக்கியது வரலாறு. பொலிவியாவில் தண்ணீர் வளங்களை தனியார் நிறுவனத்துக்கு குத்தகை கொடுத்ததை எதிர்த்து போராடி மக்கள் வெற்றி பெற்றது சமீபத்திய நிகழ்வு. இரண்டையும் பொருத்தி, காலனிய வரலாற்று நிகழ்வுகளும், மறுகாலனிய சம கால நிகழ்வுகளும் பின்னிப் பிணையும் படியான திரைக்கதை வடிவம் மிகவும் பொருத்தமாக அமைகிறது.

நகர மக்கள் மலை மீது ஒரு ஏரியை விலைக்கு வாங்கி, 7 கிலோ மீட்டருக்கு கால்வாய் தோண்டி தண்ணீரைத் தங்கள் இடத்துக்கு கொண்டு வருகிறார்கள். தண்ணீர் கம்பெனி அதற்கு அரசுப் படைகளின் உதவியுடன் பூட்டு போட்டு சீல் வைத்து விடுகிறது. ”எங்கள் குழந்தைகள் குடிப்பதற்கான தண்ணீரை ஆண்டுக்கு $300 கொடுத்து எப்படி வாங்க முடியும்?” என்று பெண்கள் சண்டை போடுகிறார்கள். அந்த ஊரில் சராசரி தினசரி கூலியே $2 தான்.

சுரண்டலை நேரடியாக எதிர்கொள்ளும் பெண்களும், முதியவர்களும் உள்ளிட்ட மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தயாராகிறார்கள். எழுச்சி மெல்ல வளர்ந்து இறுதியில் தனது இலக்கை எட்டுகிறது.

கதாநாயகனின் எழுச்சிமிக்க ஒரு உரையில் வில்லனை அடையாளம் கண்டு, உணர்ச்சிகரமான பாடல் வரிகளினால் உந்தப்பட்டு, இறுதிக் ஈவன் த ரெயின்காட்சியில் போராடச் சென்றவர்கள் அல்ல இவர்கள். சிறு சிறு தீப்பொறிகளாக மக்கள் தண்ணீர் கம்பெனியை எதிர்த்து சண்டை இடுகிறார்கள், போராடுகிறார்கள்.

அரசு சார்பில் நடத்தப்படும் விருந்தில் கலந்துகொள்ளும் படக் குழுவினரிடம் அந்த நாட்டு மந்திரி, வெளியில் நடக்கும் போராட்டத்தைக் குறிப்பிட்டு, ஒரு சில தீவிரவாதிகள் மக்களைத் தூண்டி விட்டு கலவரம் செய்வதாகச் சொல்கிறார்.

”அந்நிய முதலீடு இல்லாமல் நாட்டின் தண்ணீர் தேவையை நிறைவு செய்வது சாத்தியமில்லை. அரசாங்கத்துக்கு பணம் மரத்தில் காய்ப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் பேசும் வசனம், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நியாயப்படுத்துவதற்கு மன்மோகன் சிங் பேசியிருக்கும் அதே வசனம்.

இறுதிக் காட்சியில் மக்கள் முற்றுகையிடும் செப்டம்பர் 14 மைதானத்தில் கேடயங்களுடனும், துப்பாக்கிகளுடனும், கண்ணீர் புகைக் குண்டுகளுடனும், ரப்பர் குண்டுகளுடனும் படையினர் நிற்க பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் உள்ளிட்ட மக்கள் படையோ கையில் கம்புகளோடு அவர்களை எதிர்கொள்கிறது. மக்கள் படையின் முன் ஆயுதம் ஏந்திய கூலிப்படை எப்போதுமே வெற்றி பெறுவதில்லை என்பதை பொலிவிய மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

டானியல் போலிஸிடம் அடிபட்டுக் கிடக்கும் போது, அவனை போரட்டத்தைக் கைவிடும்படி சொல்லி, திரைப்பட வேலைகள் கெட்டுப் போவதாக கோஸ்டாவும், செபாஸ்டினும் கோபப்படுகின்றனர். டானியல் உள்ளிட்ட மக்கள் நடத்தும் போராட்டத்தை திரைப்படக் குழுவினர் ஒரு தொந்தரவாகவே பார்க்கிறார்கள். வருமானத்தைக் கூட துறந்து போராடக் கிளம்பும் டானியல் அவர்களின் கண்களுக்கு பைத்தியகாரனாகவே தெரிகிறான்.

ஆனால் இறுதியில் டானியல், அவனது மனைவி தெரசா, மகள் பெலன் மூலம் அவர்கள் மனித நேயத்தையும் போராட்ட நியாயங்களையும் உணர்கிறார்கள். இறுதிக் காட்சியில் டானியல் அன்பளிப்பாக கொடுக்கும் ஒரு பாட்டில் நீரை வாங்கும் கோஸ்டாவின் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகள் பல அரசியல் நியாயங்களை நமக்கு உணர்த்துகின்றன.

படைப்பாளிகளும், கலைஞர்களும் மக்கள் விரோத நிறுவனங்களையும், அரசையும் எதிர்க்க முதுகெலும்பில்லாமல் இருக்கும் நிலையில், உண்மையை இயல்பான முறையில் பேசும் நேர்மையான ஒரு படைப்பு இந்தத் திரைப்படம் – ஈவன் த ரெயின் – மழையைக் கூட!
____________________________________________________________
– புதிய கலாச்சாரம், ஜனவரி – 2013
____________________________________________________________