கென்-பெட்வா திட்டம்: மக்களின் தாகம் தீர்க்கவா? கார்ப்பரேட்டுகளின் தாகம் தீர்க்கவா?
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சுமார் 10 கிராமங்கள் முழுமையாகவும், பல கிராமங்கள் பகுதியளவிலும் நீரில் மூழ்கும். இதனால் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் (கோண்ட் மற்றும் கோல் பிரிவினர்) தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வெளியேற்றப்படுவர்.
தொகுதி மறுவரையறையும் மகளிர் இட ஒதுக்கீடும்: பாசிஸ்டுகளின் நயவஞ்சக நாடகம்
தற்போதைய தொகுதி மறுவரையறை என்பது, ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல் தனது அதிகாரத்தை நிரந்தரமாக நிலைநாட்டிக்கொள்ள மேற்கொள்ளும் ஒரு பாசிச முயற்சியாகும். இதை முறியடிக்க, வெறும் எண்ணிக்கையை வைத்து நடக்கும் பேரங்களுக்குள் நாம் சுருங்கிவிடக் கூடாது. “இந்தியா என்பது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு” என்ற வரலாற்று உண்மையைச் சமரசமின்றி நிலைநாட்ட வேண்டும்.
மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு திறமையின் அடையாளமா?
தேசிய தேர்வு முகமை போன்ற ஆணையங்களைக் கலைக்க வேண்டும்; நீட் தேர்வை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
சிரையா இணையத் தொடர்: திருமணம் எனும் போர்வையில் நடக்கும் பாலியல் சுரண்டல்
நெஞ்சை உலுக்கும் கணத்தில், வேறு வழியே இல்லாத பூஜா, தன் பிறப்புறுப்பைத் தானே பிளேடால் காயப்படுத்திக்கொண்டு தனக்கு மாதவிடாய் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறாள். பார்ப்போரின் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இக்காட்சி, இந்தியக் குடும்பக் கட்டமைப்புக்குள் பெண்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரத்தின் உச்சக்கட்ட சாட்சியாக நெஞ்சில் தைக்கிறது.
ஆகாஷ் கொட்டடிப் படுகொலை: மதுரையில் ஜனநாயக சக்திகள் ஆர்ப்பாட்டம்
உடனடியாக சி.பி.சி.ஐ.டி. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யக் கோரியும், முதல் தகவல் அறிக்கையில் திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் உட்பட 16 போலீசுதுறை கொலையாளிகளின் பெயரைச் சேர்க்கக் கோரியும், அவர்களைக் கைது செய்யக் கோரியும் மதுரையில் உள்ள ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து, கடந்த மே 15, 2026 அன்று காலை 10:30 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்கான வழி இனவாதமா? வர்க்கப் போராட்டமா? | மீள்பதிவு
ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்துக்கும், அதன் பரந்துபட்ட மக்களுக்கும் கூட எதிரானதுதான் அந்நாட்டை ஆளும் பாசிச அரசு.
மேற்குவங்கம்: திருடப்பட்ட தேர்தல் வெற்றி
மேற்குவங்கத்தில் பாசிச பா.ஜ.க. கும்பல் பெற்ற இவ்வெற்றியானது அப்பட்டமான பார்ப்பனிய சூழ்ச்சிகள் மூலமும் தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டும் அதிகார வர்க்கத்தின் துணையுடன் கைப்பற்றப்பட்டதாகும்.
கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் பாசிச மோடி அரசு!
10.25 சதவிகிதம் சர்க்கரைச் சத்து கொண்ட ஒரு டன் கரும்புக்கான சாகுபடி செலவு ரூ.1,820 என்று ஒன்றிய அரசு கணக்கிட்டுள்ளது. ஆனால், ஒரு டன் கரும்பு சாகுபடி செய்ய உண்மையில் ஏறக்குறைய ரூ.3,500 வரை செலவாகிறது என்பதை கரும்பு விவசாயிகளும் உழவர் சங்கங்களும் அம்பலப்படுத்துகின்றன. இம்மோசடியின் மூலம் மோடி அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்குகிறது.
புதுச்சேரி தேர்தல் முடிவு: புறக்கணிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைகள்!
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதையும், ரங்கசாமியின் அடிமை ஆட்சியைப் பயன்படுத்திக்கொண்டும், பாசிச பா.ஜ.க கும்பல் தனது பாசிச திட்டங்களைத் தீவிரமாக நிறைவேற்றி வருகிறது.
உ.பி: 111 உயிர்களைக் காவு வாங்கிய கனமழை, சூறைக்காற்று
இக்கோரப் பேரிடரால் 26 மாவட்டங்களில் மின்னல் தாக்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உடல் நசுங்கியும் 111 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; 72 பேர் காயமடைந்துள்ளனர்; 227க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன; 179 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
படுபாதாளத்தில் வீழ்ந்த “நவகேரள” ஆட்சி
சி.பி.எம்-இன் “நவகேரளம்” என்பதே, கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கான, இந்துத்துவத்துடன் சமரசம் செய்துகொண்ட, பிழைப்புவாதக் கட்சிகளை ஒத்தக் கவர்ச்சிவாத ஆட்சிதான். அதனால்தான், சி.பி.எம்-இன் 10 ஆண்டுகால, நவகேரள ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – 2026: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?
மக்களின் அடித்தளத்தை இழந்துவரும் பாசிச கும்பல் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் துணையுடனும், சங்கப் பரிவாரக் கும்பலுடன் இணைந்து மோசடிகள், பொய் பிரச்சாரங்கள் மூலம் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறது. தொகுதி மறுவரையறை போன்ற இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களை நிறுவுவதற்கு துடிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு! பாசிச மோடி அரசின் கையாலாகத்தனத்தை மக்கள் தலையில் சுமத்தும் நடவடிக்கையே!
கடந்த நான்கு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் இருந்த போதெல்லாம் விலையைக் குறைக்காத கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளை அடித்தன. தற்பொழுது கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது என்று சொல்லி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது இந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் தலையில் இடியை இறக்கிய பாசிச மோடி அரசு!
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பலனை மக்களுக்குக் கடத்தாத இந்த அரசு, விலை உயரும் போது மட்டும் அந்தச் சுமையை உடனடியாக மக்கள் தலைமீது சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?
கிருஷ்ணகிரி: டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!
ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை “கமிஷன்” என்ற பெயரில் இடைத்தரகராகச் செயல்படும் டி.சி.எஃப்.எம் நிறுவனம் பெற்றுக்கொண்டு தங்களைச் சுரண்டுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக சரியான சம்பளம் வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
























