Sunday, June 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 116

‘One Nation’: Tamil Nadu resists!

Governor Ravi would now have understood what “Tamil Nadu” is; Tamil Nadu had made him to understand. We have to thank him for making this year’s Pongal a festival of protest, especially after the Jallikattu protests during 2017 Pongal. The year started with a political freshness.

Governor RN Ravi held a felicitation programme at the Raj Bhavan in Guindy on January 4 to appreciate the organizers and the participants of the Kasi Tamil Sangamam programme, which was organized with the aim of corrupting the history and culture of Tamil Nadu and the Tamil people. He said “In Tamil Nadu, there has been a regressive politics that we are Dravidians. Here in Tamil Nadu, a different kind of narrative has been created. Everything applicable for the whole of the country, Tamil Nadu will say no. It has become a habit” and expressed his ‘anguish’. Moreover, he said “Thamizhagam would be a more appropriate word to call Tamil Nadu. We all know that Tamil Nadu is an integral part of India”.

He had previously said “Tirukkural is not just a code of ethics and morality but also an epic holding the wisdom of eternal spirituality”, “Dravidians was mainly a geographical, rather than racial, division. But the British made it racial to suit their needs”, “‘Sanatana dharma’ that gave rise to a ‘Sanatan culture started from ‘Thamizhagam’ and spread to the entire country”. His saying that “Tamil Nadu should be called Thamizhagam” expresses the peak of his arrogance.

Ravi provoked the political forces in Tamil Nadu to a situation where they could no longer tolerate and faced the consequence for his action.


Also Read: Tripura Model Electoral Violence: Lessons the Fascists teach us!


MP TR Baalu had criticised the Governor that “Tamil Nadu, Tamils and Tamil language taste bitter for Mr. Ravi. It is for him to make a decision to leave them”. Political leaders, including K Veeramani, had also objected to the Governor’s remarks. In response to the Governor’s speech, the hashtag #TamilNadu became trending on Twitter.

On January 9, Viduthalai Chiruthaigal Katch (VCK), Tamizhaga Vazhvurimai Katchi (TVK), CPI, CPM and the Congress had come out in protest against RN Ravi, who had come to deliver the Governor’s address on the first assembly session of the year. The Assembly reverberated with slogans ‘Tamil Nadu Vazhgave’ (Long live Tamil Nadu) and ‘Engal Nadu Tamil Nadu’ (Our land is Tamil Nadu) and ‘Let’s boycott the Governor’s address’. Later, they boycotted the Governor’s address and walked out of the House. It is to be noted that the PMK, along with the DMK allies, also staged a walkout.

RN Ravi’s Vigilantism!

Even though his speech was opposed in the Assembly, the arrogant RN Ravi behaved even more arrogantly. Instead of reading the Governor address as exactly prepared by the Government of Tamil Nadu, he read it by cutting and pasting some information. In particular, he ignored the word “Tamil Nadu government” and read it as “this government”.

He ignored words like “social justice”, “self-respect”, “equality”, “rationalism”, “Dravidian model”, and the names of leaders like “Thanthai Periyar”, “Annal Ambedkar”, “Perunthalaivar Kamarajar”, “Perarignar Anna” and “Muthamizh Arignar Kalaignar”.

Since the Governor did not read the approved content, Chief Minister MK Stalin moved a resolution to retain only the printed and approved speech copy on the Assembly records. RN Ravi, who could not tolerate this, ran away even before the national anthem was played.

If RN Ravi had to oppose the DMK, he could have done it in other ways. The Governor may have even boycotted the assembly session without delivering his speech. Not sticking to the approved text is not only an act against an individual party called DMK, but also, it calls into question the sovereignty of the government of Tamil Nadu.


Also Read: ‘Freebie’ Antagonism and Abolition of Social Welfare Schemes!


Next, on January 10, in the Pongal invitation issued by the Raj Bhavan, the Governor referred to himself as “Tamizhaga Aalunar” (Governor of Tamizhagam) instead of “Governor of Tamil Nadu”. Instead of the emblem of the government of Tamil Nadu, the emblem of the union government was used. And the invitation mentioned the dates according to the Roman calendar, instead of referring to the Tamil year as ‘Tiruvalluvar Aandu’ and the month as ‘Thai’.

Thinking that he was opposing the DMK government and its allies, Ravi is challenging the people of Tamil Nadu through his actions.

A befitting reply to fascist arrogance!

Apart from the BJP and the slave AIADMK, all other parties and organisations protested against RN Ravi’s actions and there was a strong opposition from the students and people of Tamil Nadu.

Following the Governor’s arrogance on Day 1 of the Assembly, the VCK and CPM announced a demonstration to lay siege to Raj Bhavan.

On January 12, a high-level DMK delegation led by law minister S Raghupathy and accompanied by the DMK MPs TR Baalu, A Raja, P Wilson and NR Elango met President Draupadi Murmu and handed over the memorandum from the Chief Minister of Tamil Nadu to instruct the Governor to act according to the Constitution.

At several places in Chennai, long posters with the hashtag #GetOutRavi were put up by the DMK condemning the Governor. Moreover, the SDPI has put up posters demanding the resignation of the Governor and the Makkal Needhi Maiam put up posters at various places saying “Long live Tamil Nadu”. In various districts of Tamil Nadu, the DMK and its student wing protested by holding black flags and burning a photo of Governor Ravi.

In Tiruppur and Puducherry, Thanthai Periyar Dravidar Kazhagam activists protested against the Governor by raising slogans and beating the Governor’s effigy with slippers. In Pollachi, the Viduthalai Chiruthaigal Katchi (VCK) burnt an effigy of the Governor. Apart from this, protests were held on behalf of various organisations against the Governor at various places in Tamil Nadu.


Also Read: Enjoying on Tamilnadu’s Tax Money! Shameless Ravi Get Out! | People’s Power


In Tiruvallur district, lawyers staged a protest in front of the Ponneri sub-court by trampling on the Governor’s portrait.

College students and the youth started protesting against the Governor. More than 100 students from various colleges, including Chennai Presidency College, New College, Tiruttani Arts College, Edappadi Government Arts and Science College, Salem Government Arts College, staged protests against the Governor by raising slogans such as “Our Land Tamil Nadu”, “Get out Governor” and “Long live Tamil Nadu”.

In Chennai’s Pattabiram, traffic jams were witnessed on Tirupati highway as more than 100 students of Hindu College sat on the road and staged a picketing. When the students of Kalaignar Karunanidhi Government Arts College in Thiruvannamalai staged a protest in front of the college gate, they tore the Governor’s portrait and burnt it to register their objection.

Chief Minister MK Stalin in his Pongal greetings indirectly quoted the assembly event. He said, “This Pongal festival has become an extra-sweet Pongal for us because we have waged a righteous struggle guaranteed by the Constitution to protect the dignity and the self-respect of Tamil Nadu in the Assembly”. Moreover, he said, “Let us welcome the first day of the Tamil month of Thai (Pongal) by drawing rangolis outside your homes with the slogan Vaazhga Tamil Nadu (Long Live Tamil Nadu)”.

Welcoming the this, slogans like “Tamil Nadu”, “Long live Tamil Nadu”, “Our Land Tamil Nadu”, “GetOutRavi” adorned the houses of many people during Pongal. Moreover, for more than two days, social media platforms, including Twitter, were dominated by hashtags like #தமிழ்நாடு (Tamil Nadu) and #GetOutRavi.

Why the word “Tamil Nadu” infuriates Saffrons?

Earlier, most people, who used both the names Tamil Nadu and Tamizhagam interchangeably, are now consciously chanting “Tamil Nadu”. Because the difference between “Tamil Nadu” and “Tamizhagam” is not just about the word.

Many questioned that if “Nadu” in Tamil Nadu was the issue, then the “Rashtra” and “Pradesh” in the names of the states like Maharashtra and Uttar Pradesh also refers to a ‘separate region’. In the name of “one country”, “one nation”, the RSS-BJP mob is trying to establish a Hindu Rashtra by crushing the autonomy of many nationalities. The reason for their anguish is that “Tamil Nadu” remains the only nightmare for them.

That’s why the saffron mob could not digest even the name “Tamil Nadu”. Tamil Nadu is questioning their principle that “Bharat is one”. RN Ravi’s speech is an expression of this anguish.

Not just Ravi, the pro RSS-BJP newspapers, including “Dinamalar”, “Thuglak”, etc. are using “Tamizhagam” instead of “Tamil Nadu”. Ravi publically expressed the RSS-BJP’s views and got back from the Tamil people what he deserved.

Let’s drive out the fascist spy!

The RSS-BJP mob, which has been vocal in its campaigns against the DMK on “corruption”, “anti-Hindu” and “law and order break down”, was unable to bolster Ravi who had insulted the sentiments of the Tamils and has been at the receiving end. In the end, RN Ravi himself bowed down before Tamil Nadu.

“I referred to the word ‘Tamizhagam’ while dwelling upon the age-old historical cultural connect between the Tamil people and Kashi. In those days, there was no Tamil Nadu. Hence, in a historical, cultural context I referred to the word Tamizhagam as a more appropriate expression. An interpretation or inference that it was a suggestion to change the name of Tamil Nadu is erroneous and far-fetched”, Governor Ravi said in his statement.

Ravi says that he didn’t say that in that sense, and we had misunderstood. If so, if you ask why the Pongal invitation card does not bear the name Tamil Nadu and the logo of the Tamil Nadu government, then there will be no answer. After deciding to kneel down, he chose to do that with ‘dignity’!

Ravi didn’t stop there. Nowadays, wherever he goes, he has made it a habit to pronounce ‘Tamil Nadu’ as a ‘security measure’. Recently, speaking to the newly recruited IAS cadres who joined the training, R N Ravi said, “Wherever Tamils go, they love the name Tamil Nadu and the Tamil language very much”. In another meeting, while he was speaking, he chanted “Long live Tamil Nadu” and “Long live Bharat”.

Ravi, who was portrayed as a ‘hero who suppressed militant groups in Nagaland and established peace’, was made to surrender by Tamil Nadu. Ever since Ravi took over as Governor, there have been several protests against his anti-Tamil Nadu attitude. But, Ravi never explained his actions. He has been walking with fascist arrogance. It is important that such an arrogant Ravi has been made to bend down.

But this is only the beginning. RN Ravi is sitting on more than 20 Bills passed by the Tamil Nadu Assembly without giving his assent. He acted deceitfully without deciding till the very end on the files on the release of seven Tamils. How many protests were required to send the NEET Bill to the President? The number of corpses has been on the rise as the Bill banning online gambling has been dragged on till date without being approved by him.

Therefore, our victory will be incomplete without driving out this RSS-BJP spy. We need to give shape to the slogan Get-out-Ravi!

Tamil Nadu’s blow to RN Ravi should be a warning to the RSS-BJP mob, which is of the view that ‘there are no strong forces in the political arena who can oppose us’ and that ‘we can establish a Hindu Rashtra without any hindrance’.

The spies of the fascist invasion, like RN Ravi, also exist in other opposition-ruled states like Kerala, Telangana, West Bengal and Delhi. The fascist mob is creating troubles to the government elected by the people, in the name of Governor. The blow from Tamil Nadu will set an example for the people of other states; It will encourage the anti-fascist forces. Therefore, driving out the fascist spy RN Ravi should be the immediate task of all the revolutionary and democratic forces fighting the RSS-BJP in Tamil Nadu!

Baanu

ஆட்சியை பிடிக்க கலவரம் செய்வோம்: காவிக் கும்பல்களின் பார்முலா!

ந்து மதவெறி காவிகும்பல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இந்தியா முழுவதும் திட்டமிட்டு மதக்கலவரங்களை உருவாக்கி வருகிறது. மதக்கலவரங்களை இயல்பாக்கி உழைக்கும் மக்களை சாதி-மத ரீதியாக பிளவுபடுத்துகிறது காவிக் கும்பல்.

1992 பாபர் மசூதி இடிப்பு 2014-ஆம் ஆண்டில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்க வித்திட்டது. 2002 குஜராத் இனப்படுகொலையின் மூலம் அம்மாநிலத்தில் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டது. அந்த குஜராத் கலவர மாடலை மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த தொடங்கிவிட்டது.

அந்த வகையில், விநாயகர் சதுர்த்தி கலவரங்களை போல சமீப காலமாக ராம நவமியன்று கலவரங்களை நிகழ்த்துகிறார்கள். கடந்த மார்ச் 31-ஆம் தேதி வரவிருந்த ராம நவமி பண்டிகையை எதிர்நோக்கி இருந்த காவிக் குண்டர்கள் பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கர்நாடகா, குஜராத்  போன்ற மாநிலங்களில் திட்டமிட்டு மதக் கலவரங்களை நிகழ்த்தினர்.

பீகாரில் நடைபெற்ற ராம நவமி பேரணியின்போது மதக்கலவரங்களை உருவாக்கும் திட்டத்தில் இருந்த காவிக் குண்டர்கள் இஸ்லாமியர்களுடன் திட்டமிட்டே மோதல்களை உருவாக்கினர். குறிப்பாக, சசாராம் பகுதியில் காவிக் குண்டர்கள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதோடு இஸ்லாமியர்களின் வாகனங்களுக்குத் தீவைத்து பெரும் கலவரமாக மாற்றினர். அதையடுத்து மாநிலத்தின் சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்தபோதே சசாராம் பகுதில் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது இந்து மதவெறி காவிக் கும்பல். இதில், ஆறு பேர் காயமடைந்தனர். வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக இஸ்லாமியர்கள் உட்பட 160-க்கும் மேற்பட்டோரை பீகார் போலீசுத்துறை கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறது.

இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து நிகழ்ச்சி ஒன்றுக்காக பீகார் வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷா பீகார் மாநிலத்தில் இம்மாதிரியான கலவர சம்பவங்கள் நடைபெறமால் இருக்க அமைதியை நிலைநாட்ட பாரதிய ஜனதா கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என மேடையில் பேசினார்.


படிக்க: ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !


அதேபோல, மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சம்போஜி நகரிலும் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்திய காவிக் கும்பல் அங்குள்ள மசூதிகளில் நேரடியாக தாக்குதல் தொடுத்தது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்திற்கும் தீ வைத்ததுடன் இஸ்லாமியர்களை விரட்டி விரட்டி தாக்குலில் ஈடுபட தொடங்கியது. இப்படி அங்கேயும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ’இந்து’ மக்களை அணிதிரட்டி மதக் கலவரத்தை முன்நின்று நடத்தியுள்ளனர் காவிக் குண்டர்கள்.

அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனங்களையும் தீ வைத்து எரித்துள்ளது இக்கும்பல். பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நொறுக்கப்பட்டு கலவரம் அடுத்த நிலைக்கு சென்றதன் அடிப்படையில் கூடுதல் போலீஸ்படை இறக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இப்படி மாநில அரசுகளையே ஆட்டம் காண விட்டுக்கொண்டிருக்கிறது காவிக் கும்பல்.

மேற்குவங்கத்திலும் ராமநவமியை முன்னிட்டு ஹவுரா மாநகரில் மிகப்பெரிய அளவிலான ராம நவமி ஊர்வலம் நடைபெற்றது. பேரணியாக சென்ற காவிக் கும்பல் காசிபரா என்ற இடத்தின் அருகில் நெருங்கியதும் சிறுபான்மையினருக்கு எதிராக மதக் கலவரங்களை தூண்டும் வகையில் முழக்கமிட ஆரம்பித்தது.

மேலும் மசூதி அமைந்துள்ள பகுதிகளில் நின்றுகொண்டு தொடர்ந்து இஸ்லாமிய கடவுளுக்கெதிராக முழக்கமிட்டதுடன் அங்கு நின்ற இஸ்லாமியர்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட தொடங்கியது. அதோடு அங்கிருந்த கடைகளையும் சூறையாடியது. இதையடுத்து மோதலில் ஈடுபட்டதாக கூறி இஸ்லாமியர் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டனர். இப்பிரச்சினை முடிந்து இயல்புநிலைக்கு திரும்பி கொண்டிருந்த மறுநாளே ஷிப்பூர் பகுதியில் மீண்டும் மதக்கலவரங்களில் ஈடுபட்டு மோதல்களில் இறங்கினர் காவிக் குண்டர்கள். இப்படி தொடர்ந்து அம்மாநிலத்தில் சட்டஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி ஆளும் அரசிற்கு கடும் நெருக்கடியை கொடுத்தனர்.

நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ”ஊர்வலங்கள் நடத்தும்போது பாஜக – ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இதுபோன்ற மதக் கலவரங்களை ஏற்படுத்துவதற்காகவே வெளியில் இருந்து குண்டர்படைகள் அழைத்து வரப்பட்டு கைகளில் பயங்கிர ஆயுதங்களுடன் தடைகளை மீறி ஊர்வலம் நடத்துகின்றனர்.

குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கங்கள் போடுவது, ஜே.சி.பி வாகனங்களை எடுத்து சென்று இஸ்லாமிய பகுதிகளின் மசூதி, கடைகளை இடிப்பது போன்று ஓட்டிச்செல்வது என வேண்டுமென்றே தொடர் கலவரங்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்று கூறினார். ஆனால், சி.பி.எம், காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வை எதிக்காமல், மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த மம்தா பானர்ஜி தவறிவிட்டார் என்று பா.ஜ.க-வோடு இணைந்து பேசி வருகிறார்கள்.


படிக்க: ராஜஸ்தான் : ரம்சான் அன்று கலவரத்தை நடத்திய காவி பாசிஸ்டுகள் !


தொடர்ச்சியாக  இஸ்லாமியர்களுக்கும் இந்து மக்களுக்குமிடையே கலவரங்கள் மோதல்களை மாநிலம் முழுவதும் திட்டமிட்டு உருவாக்குகின்றன. அந்த அளவிற்கு நேரடியாக களத்தில் இறங்கி ஆளும் கட்சிகளின் தடைகளை மீறி தீவிரமாக செயல்பட்டு தங்களுடைய திட்டத்தின்படி மதக்கலவரங்களை நிறைவேற்றுகிறார்கள்.

இப்படி ஒரே நாளில் இந்தியா முழுவதும் திட்டமிட்டு பல்வேறு சாதி, மதக்கலவரங்களை நடத்திவரும் காவி பாசிச கும்பல், மாநிலங்கள் அமைதியாக கலவரமின்றி பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் பா.ஜ.க ஆட்சிக்கு வர வேண்டும் என்கின்றனர்.

தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ளவும் ஆட்சியில் அமர்வதற்காக காவி பாசிச கும்பல் செய்த மதக் கலவரங்கள் எண்ணிலடங்காதவை. கலவரங்களை அரங்கேற்றும் இவர்களே கலவரங்களை தடுக்கும் காவலனாக பேசிவருவது அயோக்கியத்தனமானது. இதன்மூலம் பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள்.

டேவிட்

Tripura Model Electoral Violence: Lessons the Fascists teach us!

The Election Commission of India (ECI), on January 18, announced the schedule for Assembly elections in Tripura, Meghalaya and Nagaland. The BJP, which has an absolute majority in Tripura, is restraining the opposition parties by indulging in violence since they assumed power in 2018. The ECI has even launched a special campaign called “mission zero poll violence” for the 2023 Tripura Assembly polls. Within hours after the election announcement, the fascist BJP goons unleashed murderous attack on the opposition parties thereby making the ECI’s announcement a mockery.

The BJP goons attacked the Congress party workers in the bike rally they conducted in Majlishpur Assembly constituency in West Tripura district. Not only this, “there were incidents of stone pelting in rallies in Sachindra Lal colony, Mohanpur, Ranirbazar and Pritha Nagar. Moreover, petrol bombs were hurled at the Congress party office in Udaipur” said senior Congress leader and MLA Sudip Roy Barman. Barman  alleges that Sushanta Chowdhury, Majlishpur  MLA and minister in charge of the departments of Information & Cultural Affairs, acted as the brain of this attack.

Many including Tripura’s All India Congress Committee in-charge Ajoy Kumar and ex-MLA Gopal Chandra Roy were attacked. More than 15 were severely injured and admitted to the hospital. The police has arrested 8 persons in connection with this violence. Moreover, the Election Commission has suspended 3 police officers for “not taking appropriate action in time”. CPI(M) has been continuously complaining that the state police were just mute spectators from 2018, i.e., after BJP’s victory. This attack too happened in front of the eyes of the Central Paramilitary Force personnel.

In Udaipur, CPI(M) cadres were attacked by the BJP goons and the party office was set on fire. There were attacks in South Tripura and in S N Colony of Jirania, where CPI(M) ex-minister Manik Dey participated in a meeting. A CPI(M) party office in West Tripura was demolished. In Dhalai district, Pranajit Namasudra belonging to the TIPRA Motha party was killed while he was returning home in a four-wheeler.


Also Read: Karnataka, Tripura, Assam : ‘The Hindurashtra menace’ spreading like wildfire !


Seven parties including the Congress and the CPI(M) held a joint rally condemning the attacks by the BJP goons on January 21. Displaying banners and placards with ‘My Vote, My Right’, ‘Stop Poll Violence’, thousands took out the rally. Following the rally, they complained to the state Chief Election Commissioner about the violence.

Until BJP took power in Tripura, religious riots and electoral violence were unheard of. But, after the RSS–BJP Sangh Parivar mob placed their foot in Tripura, the colour of Tripura has changed. Religious riots and electoral violence became rampant. To be specific, electoral violence first occurred in Tripura during the 2018 Assembly elections. According to the statistics of the Election Commission, 370 complaints regarding electoral violence were registered during that time.

The electoral violence which began in 2018 Tripura Assembly elections attained its peak during 2021 Tripura civic body elections. Capturing polling booths, blackmailing opposition candidates and forcing them to withdraw, attacking opposition parties’ offices and their homes, intimidating people and preventing them from casting their votes have reached unprecedented heights in the history of Tripura. And the RSS-BJP saffron mob is the proprietor of this electoral violence. The BJP won 112 out of the total 334 seats uncontested in the civic body polls in Tripura. From this we can understand about the violence unleashed by the BJP.

But these attacks cannot be viewed as attacks that usually happen during elections for ensuring electoral victory. The violence has entered new dimensions and we can call it as “Tripura Model”. The attacks on the Congress and the CPI(M) are not just for temporary electoral gains but orchestrated with the intent to wipe out these parties. The fascists are creating an ecosystem which would not allow any opposition party to exist. These attacks indicate us that the saffron fascists who were taking away even the namesake democratic rights provided in the existing pseudo-democratic State structure are now dared to annihilate them.

Till date, the bourgeois parties, which could not compete with the extreme religious fanatic campaigns of the fascist RSS-BJP mob, claim that they too were protectors of Hindus. They view this as a measure to counter the BJP and put forward soft hindutva as their ideology. But they lost in the ‘Hindu protector’ competition.


Also Read: Hindu fanatic goons go berserk in Tripura ! Need An Anti-Fascist People’s Front and Protests!


The opposition parties, which do not have any intention to mobilize the people against the fascists, are now petrified as the fascists directly attack them. They stand disarmed in front of a enemy who is fully armed. No one is ready to smash the anti-people anti-democratic hindutva ideology by exposing it before the people. They are not even ready to propose an alternative democratic programme (even within the parliamentary system they believe in) and win the hopes of the people.

The CPI(M) has been in this condition for the past 25 years. Since they call themselves as Communists they need to put forward certain programs. But they do not have any obligation to implement it. So, they continue to lose their support base and vote bank among the tribals and non-tribals.

The CPI(M) Central Committee in its review of the 17th Lok Sabha elections stressed the need for concerted political, ideological and organisational work to win the people. But, the review did not transform into serious action plan. Instead the party indulges in the usual economic struggles and works which could reap them electoral benefits. The election review reports and party congress reports reveal that the party along with its support base is shrinking throughout India except Kerala.

CPI(M) is ideologically deteriorated and it thinks that revolution is capturing power through parliamentary means. It lacks proper understanding on fascism and thinks that the fascist BJP mob, like other usual political parties, can be defeated through electoral means. Even in this situation when the fascists are attacking with weapons, they ‘strictly condemn’ them and indulge in the business of publishing condemnation reports.

During the 2019 parliamentary elections, the Left Front could not post polling agents in 27 percent of the polling booths in the Tripura East Lok Sabha constituency. Now, the fascists have pushed the Left Front into a situation where they could not even announce candidates and campaign for elections. Both the party leadership and the rank and file have constricted themselves to the limits prescribed by the elections. So, they do not know what to do when the fascists attack and they make complaints to the Election Commissioner.

Because of these methods, CPI(M) did not gain anything, even in elections; but it lost many. In particular, the party is at the verge of losing its recognition as a national party. Since the people view it as just another opposition party, the votes the party gets has also reduced. The party struggle to get even 2 percent votes, no matter in how many constituencies the party contests. Therefore, CPI(M) should set aside their day dream of bringing about a societal change and defeating fascism through electoral means. In order for the party to survive, CPI(M) should at least implement the lessons we published as resolutions in our party conference.

The fascists are making the opposition parties realize that their wish of defeating the fascists in the electoral arena is impossible. The fascists should be combated politically, ideologically and organisationally by organising the masses outside the spheres of elections. This is the only possible solution. This is the lesson that the opposition parties who consider election as the solution and the democratic forces who consider elections as a method to defeat fascism should learn from Tripura experience.

Appu

கேளாத செவிகள் கேட்கட்டும்!

1929 ஏப்ரல் 8 – பகத்சிங், பதுகேஷ்வர் தத் இருவரும் டெல்லி, பிரிட்டிஷ் இந்திய சட்டசபையில்  வெடிகுண்டு வீசி சரணடைந்தனர். கேளாத செவிகள் கேட்கட்டும் என்ற முழக்கத்துடன் வீசப்பட்ட வெடிகுண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் செவிப்பறையை கிழித்தது. வெடிகுண்டு வீசியது தொடர்பாக கேளாத செவிகள் கேட்கட்டும் என்ற நூலில் இருந்து சில பகுதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

– வினவு

0-0-0

சட்டமன்ற அறையினுள் வெடிகுண்டுகள் வீசப்பட்டதா, அவ்வாறெனில் ஏன் வீசப்பட்டது?

கீழ் நீதிமன்றம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு சரியா இல்லையா?

முதல் கேள்வியின் முதற்பாதிக்கு எங்களது பதில் ‘என்பதுதான். ஆனால் அதை ‘நேரில் பார்த்த சாட்சிகள்’ என்று சொல்லப்படுபவர்களில் சில பொய்ச்சாட்சி கூறியுள்ளாதாலும், அந்த அளவு வரை (வெடிகுண்டு வீசப்பட்டது என்பது வரை) எங்களது பொறுப்பை நாங்கள் மறுக்கவில்லை என்பதாலும் அவர்களது சாட்சியத்தின் உண்மைத் தன்மை என்ன என்பதை அவர்களைப் பற்றிய எங்களது வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, எங்களில் ஒருவரிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்ததாக சார்ஜன்ட் டெர்ரி கூறியுள்ள சாட்சியம் ஒரு திட்டமிட்ட பொய். நாங்களாகவே முன்வந்து சரணடைந்த அத்தருணத்தில் எங்களில் எவரும் கைத்துப்பாக்கி வைத்திருக்கவில்லை. நாங்கள் வெடிகுண்டை வீசுவதை பார்த்ததாகக் கூறும் பிற சாட்சிகளும் நா கூசாமல் பொய்யுரைக்கின்றனர். நீதிமன்றத்தின் தூய்மையினையும் பாரபட்சமற்ற விசாரணையினையும் குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்களுக்கு இவ்வுண்மைதானாகவே புலப்படும்.

அதே நேரத்தில், அரசு தரப்பு வழக்கறிஞரின் நேர்மையினையும் இந்த நீதிமன்றத்தின் நடுநிலை தவறாத போக்கையும் இதுவரையிலும் நாங்கள் ஒப்புக் கொண்டவர்களாகவே உள்ளோம்.

முதல் கேள்வியின் அடுத்த பாதிக்கு எங்களது பதிலைக் கூற வேண்டுமானால், இன்று ஒரு வரலாற்று நிகழ்வாக ஆகியிருப்பது வரை கொண்டுவந்து விட்டிருக்கும் எங்களது நோக்கத்தையும் சூழ்நிலையையும் முழுமையாகவும் ஒளிவு மறைவின்றியும் நாங்கள் விளக்கியாக வேண்டும். அவற்றை விளக்குவதற்கு நாங்கள் சில விபரங்களுக்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

படிக்க : பகத்சிங் பார்வையில் காதல், தியாகம், மரணம் | தோழர் யுவராஜ் | வீடியோ

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் நிகழ்த்திய தனது உரையில் இர்வின் பிரபு அவர்கள், “இந்தத் தாக்குதல் எந்தவொரு தனிநபருக்கும் எதிராகத் தொடுக்கப்பட்டதல்ல; மாறாக நிறுனத்திற்கு எதிராகவே தொடுக்கப்பட்டுள்ளது” என இந்நிகழ்வை விவரித்துள்ளார். இதனை நிறையில் எங்களை சந்தித்த சில போலீஸ் அதிகாரிகள் எங்களிடம் கூறினார்கள். நாங்கள் இதனை அப்படியே ஏற்றுக் கொள்கின்றோம். அந்நிகழ்வின் உண்மையான முக்கியத்துவம் மிகச் சரியாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

போலித்தனமான நாடாளுமன்றம்: இந்திய அடிமைத் தனத்தின்  அடையாளம்

மனித குலத்தை நேசிப்பதில் நாங்க யாரும் சளைத்தவர்கள் அல்ல. எந்தவொரு தனிநபருக்கும் எதிரான பழிதீர்க்கும் எண்ணங்களையெல்லாம் தாண்டி மனித உயிர்களை  வார்த்தைகளால் வடிக்க இயலாத அளவிற்கு புனிதமானதாகக் கருதுகின்றோம்.

போலி சோஷலிஸ்ட், திவான் சாமன் லால் வர்ணிப்பது போல் நாங்கள், கீழ்த்தரமான கொடுஞ்செயலைச் செய்து அதன் மூலம் நாட்டிற்கு அவப்பெயரை தேடித்தந்தவர்களுமல்ல ; லாகூர் ‘தி டிரிபியூன்’ பத்திரிக்கையும் மற்றவர்களும் நினைப்பதுபோல் நாங்கள் வெறிபிடித்தவர்களும் (Lunatics) அல்ல.

தாய்நாட்டின் நிலைமைகளையும் அவளின் விருப்பங்களையும் அறிந்த வரலாற்று மாணவர்கள் நாங்கள் என்பதற்கு மேல் வேறொன்றுமில்லை என்று மிகத்தாழ்மையுடன் கூறிக் கொள்கிறோம். போலித்தனங்களை நாங்கள் இழிவாகக் கருதுகிறோம். தான் உருவான நாள் முதல், தனது பயனற்ற தன்மையினை மட்டுமல்லாது, சொல்லொனா கேடுகளையும் விளைவிக்கவல்ல தனது ஆற்றலையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்திற்கு (நாடாளுமன்றத்திற்கு) எதிரானதே எங்களது இச்செயல்முறை எதிர்ப்பு.

இந்தியாவின் சிறுமையையும் கையறு நிலையினையும் உலகிற்கு காட்டுவதற்காகவும், பொறுப்பற்ற கொடுங்கோல் ஆட்சியின் மேலாதிக்கத்திற்கு அடையாளமாகவும் மட்டுமே இந்த நிறுவனம் இருக்கின்றது என்று நாங்கள் தீர்க்கமான ஆலோசனையுடன் மிக உறுதியாக நம்புகிறோம். மக்கள் பிரதிநிதிகளால் பல முறை வலியுறுத்தப் படும் தேசியக் கோரிக்கையானது அதன் இறுதி இலக்காக குப்பைக் கூடையையே சென்றடைகின்றது.

நிறுவனத்தின் மீதான தாக்குதல்

அவையில் நிறைவேற்றப்படும் மதிப்பு மிக்க தீர்மானங்கள், இந்திய நாடாளுமன்றம் என்பதாகச் சொல்லப்படும் அதன் தரையிலேயே ஏளனத்தோடு காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் யதேச்சதிகார நடவடிக்கைகளை ரத்து செய்யும் தீர்மானங்கள் இறுமாப்புடன் புறக்கணிக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப் உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரிக்கப்பட்ட அரசாங்க நடவடிக்கைகளுக்கும் முன்மொழிவுகளுக்கும் ஒரே வரியில் எழுதப்பட்ட உத்தரவின் மூலம் உயிர் கொடுக்கப் படுகின்றது.

சுருங்கக் கூறின், இந்தியாவின் கோடானு கோடி உழைக்கும் மக்களின் வியர்வைப் பணத்தை செலவு செய்து, ஆடம்பரமாகவும் பகட்டாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நாடாளுமன்றமானது, போலித்தனமும் பாசாங்கும் நிறைந்த கேடுவிளைவிக்கத்தக்க கேலிக்கூத்து என்பதைத் தவிர, அது ஓர் நிறுவனமாக இருப்பதற்கு வேறெந்த முகாந்திரத்தையும் எங்களால் காணமுடியவில்லை. அதுபோலவே, இந்தியாவின் கையாலாகாத அடிமை நிலையை காட்டுவதற்காகவே வெளிப்படையாக அரங்கேற்றப்படும் இந்நாடகத்திற்காக, பொதுமக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் வேலையில் அரசாங்கத்திற்கு உதவியாக இருக்கும் மக்கள் தலைவர்களின் மனநிலையை புரிந்து கொள்வதற்கும் எங்களால் முடியவில்லை.

தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன

தொழிற்தகராறு மசோதாவின் அறிமுகமானது, அவை நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பதற்காக எங்களை அவைக்குள் இழுத்து வந்தது. அவ்வேளையில்தான் மேற்கண்ட விஷயங்கள் அனைத்தைப் பற்றியும், தொழிலாளர் இயக்கங்களின் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்படுவது குறித்தும் நாங்கள் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தோம்.

அவையில் நடந்து கொண்டிருந்த விவாதத்தின் போக்கானது, சுரண்டல்காரர்களின் அடக்குமுறைக்கும், நிராதரவான தொழிலாளர்களின் அடிமைத்தனத்திற்கும் அச்சுறுத்தும் நினைவுச் சின்னமாக மட்டுமே நிற்கக் கூடிய இந்த நிறுவனத்திடமிருந்து இந்தியாவின் கோடானு கோடி உழைக்கும் மக்கள் எதிர்பார்ப்பதற்கென்று எதுவுமில்லை என்ற எங்களது நம்பிக்கையினை உறுதி செய்வதற்கு மட்டுமே பயன்பட்டது.

இறுதியாக, மனிதத் தன்மையற்றது என்றும் மிராண்டித்தனமானது என்றும் நாங்கள் கருதும் அடக்குமுறைகள் இந்நாட்டு மக்களின் அர்ப்பணிப்புமிக்க பிரதிநிதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. வறுமையிலும் வாழ்க்கைப் போராட்டத்திலும் உழன்று கொண்டிருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளும், அவர்கள் தங்களது பொருளாதார வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரே வழியும் மறுக்கப்பட்டன.

எதிர்த்துக் கேட்பதற்கும் உரிமையற்ற கொத்தடிமைகளாய் கிடக்கும் தொழிலாளர்களுக்காக உணர்வு பெற்ற எங்களைப் போன்ற எவராலும் இந்தக் காட்சியை உள்ளக் குமுறலின்றி பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாட்டின் பொருளாதார கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்காக அமைதியாய் தங்களது இரத்தத்தையும் வியர்வையையும் சிந்திக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் பொருட்டு இதயத்தில் இரத்தம் வழியும் எவராலும் ஈவிரக்கமற்ற இந்தக் தாக்குதலால் தம் இதயத்தில் எழும் போர்க்குரலை அடக்கி வைக்க முடியாது.

கேளாத செவிகள் கேட்கட்டும் !

கவர்னர் – ஜெனரலின் நிர்வாகக் குழுவின் முன்னாள் சட்ட உறுப்பினர், திரு.S.R. தாஸ், தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார் : “இங்கிலாந்தை அவளது கனவுகளில் இருந்து தட்டி எழுப்புவதற்கு வெடிகுண்டு அவசியமானது”. அவரது வார்த்தைகளை மனதிற்கொண்டே நாங்களும், இதயம் பிளக்கும் வேதனைகளை வெளிப்படுத்த எவ்வழியும் இல்லாதவர்களின் சார்பாக, எங்களது எதிர்ப்பை பதிவு செய்வதற்காக சட்டமன்ற அறையில் வெடிகுண்டுகளைப் போட்டோம்.

“கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதும்”, எச்சரிக்கை உணர்வின்றி இருப்போரை சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்வதுமே எங்களது நோக்கமாகும். எங்களைப் போல் மற்றவர்களும் கூர்ந்து கவனித்தால், வெளித்தோற்றத்திற்கு அமைதியாய் காட்சியளிக்கும் இந்திய ஜனசமுத்திரத்தின் அடியில் பெரும்புயலொன்று வெடித்துக் கிளம்பவிருப்பதை உணரமுடியும் எதிர்வரும் இந்தப் பேராபத்தை முன்னறியாது கண்மூடித்தனமாக சென்று கொண்டிருப்பவர்களை எச்சரிப்பதற்கான “அபாய அறிவிப்பை” மட்டுமே நாங்கள் பறக்க விட்டுள்ளோம்.

வருங்கால தலைமறையினராகிய இளைஞர்களால் சந்தேகத்திற்கிடமின்றி பயனற்றது என்று புரிந்து கொள்ளப்பட்டு விட்ட கற்பனாவாத அஹிம்சையின் சகாப்தம் முடிந்துவிட்டது என்பதற்கான அடையாளத்தை மட்டுமே நாங்கள் காட்டியுள்ளோம்.

முந்தய பத்தியில் நாங்கள் பயன்படுத்திய “கற்பனாவாத அஹிம்சை” எனும் வார்த்தைகளுக்கு சில விளக்கம் தேவைப்படுகின்றது. ஒருவர் வலியச் சென்று தாக்குதல் நடத்தும் போது அது ‘வன்முறை’ ஆகின்றது. எனவே அதனை அறநெறிப்படி நியாயப்படுத்த இயலாது. ஆனால் அது சரியான நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்படும்போது அதற்கு அடிப்படை நியாயம் கிடைத்து விடுகின்றது. எக்காரணத்திற்காகவும் வன்முறை கூடாது என்பது கற்பனாவாதமாகும்.

நாட்டில் தற்போது எழுந்துள்ள புதிய இயக்கமானது – எதனுடைய தொடக்கத்தை நாங்கள் முன்னறிவித்துள்ளோமோ அப்புதிய இயக்கமானது – குருகோவிந் சிங்கையும் சிவாஜியையும், கமால் பாஷாவையும் ரிஸா கானையும், வாஷிங்டனையும் கரிபால்டியையும், லஃபாயட்டேயையும் லெனினையும் வழி நடத்திய கொள்கைகளால் எழுச்சியுற்று எழுந்துள்ளது.

அந்நிய அரசாங்கமும் இந்திய மக்கள் தலைவர்களும் இந்த இயக்கம் இருப்பதையே அங்கீகரிக்க மறுத்து தங்கள் கண்களை இறுக மூடிக் கொண்டிருப்பதால், எங்கே எழுப்பினால் அவர்களது செவிகளுக்கு கேட்டே தீருமோ, அங்கே எங்களது எச்சரிக்கை ஒலியை எழுப்புவது எமது கடமை என்று நாங்கள் எண்ணினோம்.

இதுவரையிலும் பிரச்சனைக்குரிய நிகழ்வின் பின்னணியில் இருந்த நோக்கத்தை விவரித்தோம். இப்பொழுது எங்களது உள்நோக்கம் எதுவரையிலும் என்பதை வரையறுப்பது அவசியமாகும்.

மனித உயிர்கள் மதிப்புமிக்கவை

லேசான காயங்கள் அடைந்தவர்கள் மீதோ சட்டமன்றத்தில் இருந்த மற்றவர்கள் மீதோ எங்களுக்கு தனிப்பட்ட விரோதமோ பழிவாங்கும் எண்ணமோ இல்லை. மாறாக, மனித உயிர்களை வார்த்தைகளால் வடிக்க இயலாத அளவிற்கு புனிதமானதாகக் கருதுபவர்கள் நாங்கள் என்பதை மீண்டும் கூறிக் கொள்கிறோம்.

மற்றவர்கள் எவரையும் காயப்படுத்துவதைவிட, வெகுவிரைவில் இம்மனித குலத்தின் சேவையில் எங்கள் உயிர்களை நாங்களே பலியிடுவோம். மனச்சாட்சியின் உறுத்தலின்றி கொலை செய்வதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்திய இராணுவத்தின் கூலிப் படைவீரர்கள் போன்றவர்கள் அல்ல நாங்கள். மனித உயிர்களை நாங்கள் உயர்வாக மதிக்கின்றோம்.

எங்களின் சக்திக்கு உட்பட்டதாக இருக்கும் பட்சத்தில், மனித உயிர்களை காக்கவும் முயற்சிப்போம் இருந்தபோதிலும், சட்டமன்ற அறையில் திட்டமிட்டு வெடிகுண்டை வீசினோம் என்று நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம். உண்மை, தனக்காகத் தானே பேசும். நடந்த நிகழ்வுகளின் மீது கற்பனையாகப் புனைந்துரைக்கப்பட்ட சூழ்நிலைகளையும் அனுமானங்களையும் ஏற்றிவைக்காமல் எங்களது செயலின் விளைவுகளில் இருந்து மட்டுமே எங்களது உள்நோக்கம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

தனிநபர்களைக் கொல்வது எங்கள் நோக்கமல்ல

அரசாங்க வல்லுனரின் சாட்சியத்திற்கு மாறாக, சட்டமன்ற அறையினுள் வீசப்பட்ட குண்டுகள், அங்கிருந்த காலி இருக்கைகளுக்கு லேசான சேதத்தையும் ஆறுபேருக்கும் குறைவான நபர்களுக்கு லேசான சிராய்ப்புக் காயங்களையுமே ஏற்படுத்தியுள்ளன. அரசாங்க விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் இந்த விளைவுகளை வியப்புடன் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த சம்பவம் அனைத்திலும் விஞ்ஞான நடைமுறையை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். முதலாவதாக, மரத்தடுப்புகளுக் குள்ளிருந்த காலி சாய்வு மேசைகள் மற்றும் காலி இருக்கைகள் இருந்த பகுதியிலேயே இரண்டு குண்டுகளும் வெடிக்கப்பட்டன.

இரண்டாவதாக, திரு. P.ராவ், திரு. சங்கர் ராவ் மற்றும் சர் ஜார்ஜ் சவுஸ்டர் போன்றவர்களுக்கும் கூட எவ்வித காயமும் ஏற்படவில்லை அல்லது லேசான சிராய்ப்புக் காயங்களே ஏற்பட்டுள்ளன. செயல்முனைப்பேற்றப்பட்ட பொட்டாசியம் குளோரேட் மற்றும் எளிதில் வெடிக்கக்கூடிய பைக்ரேட் ஆகியன நிரப்பட்ட அவ்வெடிகுண்டுகள் அரசாங்க வல்லுனர் தனது வாக்குமூலத்தில் கூறிய அளவிற்கு (அவரது மதிப்பீடு கற்பனையானதாகவும் மிகைப்படுத்தப்பட்டதாகவும் இருந்தாலும்) சக்தி வாய்ந்தவையாக இருந்திருந்தால் மரத்தடுப்புகளை உருத்தெரியாமல் அழித்திருக்கும் ; அது வெடித்த இடத்தில் இருந்த சில கெஜங்கள் தூரத்திற்குள் இருந்த பல உயிர்களைப் பலி கொண்டிருக்கும்.

மேலும், அவ்வெடிகுண்டுகள் அழிவை உண்டாக்கக்கூடிய ரவைகளையும் விசிறியடிக்கத்தக்க எறிகணைகளையும் உள்ளடக்கிய அதிக சக்திவாய்ந்த வேறுவகை வெடிமருந்துகளால் நிரப்பப்பட்டிருந்தால், சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரை ஒழித்துக் கட்டுவதற்கு அதுவே போதுமானதாக இருந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால், அக்குண்டுகளை சில முக்கியப் பிரமுகர்கள் அமர்ந்திருந்த அரசு அதிகாரிகள் பகுதியில் எறிந்திருக்க எங்களால் முடியும். இறுதியாக, எவருடைய அதிர்ஷ்டங்கெட்ட கமிஷனை பொறுப்புள்ள மக்கள் அனைவரும் வெறுத்தார்களோ அந்த சர்.ஜான் சைமன் அந்நேரத்தில் அவைத் தலைவரின் மேடையில் தான் வீற்றிருந்தார். எங்களால் அவரைக் குறிவைத்துத் தாக்கியிருக்கவும் முடியும்.

இருந்தபோதிலும் இவையெல்லாம் எங்களது நோக்கங்கள் அல்ல. எதைச் செய்வதற்காக அவ்வெடிகுண்டுகள் செய்யப்பட்டனவோ அதனைத் தவிர வேறெதையும் அவை செய்யவில்லை. அக்குண்டுகளை (யாருடைய உயிருக்கும் தீங்கு விளைவிக்காத) பாதுகாப்பான இடத்தில் எறிய வேண்டும் என்ற எங்களது வெளிப்படையான நோக்கத்தைத் தவிர வேறெதிலும் அரசாங்க வல்லுனர்களின் வியப்பிற்கான காரணம் அடங்கியிருக்கவில்லை.

எங்களை அழிப்பதன் மூலம் இத்தேசத்தை அழிக்க முடியாது

அதன்பிறகு, நாங்கள் செய்த செயலுக்குரிய தண்டனையை ஏற்றுக் கொள்ளவும், தனிநபர்களை அழிப்பதன்மூலம் கருத்துக்களை கொல்லமுடியாது என்பதை ஏகாதிபத்திய சுரண்டல் காரர்களை அறியச் செய்வதற்கும் நாங்களாகவே வலிய முன்வந்து கைதானோம். ஒரு தேசத்தின் முக்கியத்துவமற்ற இரண்டு நபர்களை அழிப்பதன் மூலம் அத்தேசத்தையே அழித்துவிட முடியாது. நாங்கள் வலியுறுத்திக் கூற விரும்பும் வரலாற்றுப் படிப்பினை இதுதான் :

அடக்குமுறைச் சட்டங்களாலும் பாஸ்டில் சிறைச் சாலை ப்ரெஞ்சுப் புரட்சியை நசுக்கி விட முடியவில்லை. தூக்கு மேடை சைபீரியச் சுரங்கங்களாலும் ரஷ்யப் புரட்சியை அழித்துவிட முடியவில்லை. இரத்த ஞாயிறாலும் ஐரிஷ் துணை ராணுவப் படைகளான பிளாக் அன் டான்ஸ் (black and tans) களாலும் ஜரிஷ் சுதந்திரப் போராட்டத்தை அடக்கிவிட முடியவில்லை. அவசரச் சட்டங்களும் பாதுகாப்பு மசோதாக்களும் இந்தியாவின் சுதந்திரத்தீயை அணைத்துவிட முடியுமா ?

இட்டுக் கட்டப்பட்ட அல்லது கண்டுபிடிக்கப்பட்ட சதிவழக்குகளும், மாபெரும் தத்துவத்தின் பார்வையை கைக்கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களின் சிறைவைப்பும் புரட்சியின் அணிவகுப்பை தடுத்துவிட முடியாது. ஆனால் சரியான நேரத்தில் செய்யப்படும் எச்சரிக்கையானது, அக்கறையுடன் கவனிக்கப்பட்டால் உயிரிழப்புகளையும் பல்வேறு துயரங்களையும் தடுத்துவிட முடியும்.

அந்த எச்சரிக்கையினை வழங்குவதை எங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டோம் ; எங்கள் கடமையை நிறைவேற்றி விட்டோம்.

புரட்சி என்பது வெடிகுண்டுகளின் வழிபாடு அல்ல

[‘புரட்சி’ எனும் வார்த்தையின் மூலம் எதனைக் குறிக்கின்றீர்கள் என்று கீழ் நீதிமன்றத்தில் பகத்சிங்கிடம் கேட்கப்பட்டது. அக்கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் கூறினார்:]

‘புரட்சி’ என்பது, இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. ‘புரட்சி’ என்பதன் மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூகஅமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.

பொருள்களை உண்டாக்குபவர்கள் அல்லது தொழிலாளர்கள் சமுதாயத்தின் மிக இன்றியமையாத அங்கமாக இருந்துங்கூட அவர்களது உழைப்பைச் சுரண்டுபவர்களால் அவர்கள் சூறையாடப்படுகின்றனர். அவர்களது ஆதார உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அனைவருக்கும் தானியங்கள் விளைவித்து கொடுக்கும் விவசாயி, தனது குடும்பத்தோடு பட்டினியில் கிடக்கின்றான் ; உலகச் சந்தைக்கு ஆடைகளை உற்பத்தி செய்து கொடுக்கும் நெசவாளி, தன் உடலையும் தன் குழந்தைகள் உடலையும் மறைப்பதற்கும் போதுமான ஆடைகள் இன்றி தமிக்கிறான்.

நேர்த்தியான கட்டிடங்களை எழுப்பித்தரும் கட்டிடத் தொழிலாளர்களும் கொல்லர்களும் தச்சர்களும் இழிந்தோராய் சேரிகளில் வாழ்கின்றனர். ஆனால் சமுதாயத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகளும் சுரண்டல்காரர்களும் கோடிக்கணக்கான பணத்தை தங்கள் விருப்பம்போல் ஊதாரித் தனமாக செலவு செய்கின்றனர். இத்தகைய பயங்கரமான சமத்துவமின்மையும் வாய்ப்பு வசதிகளில் வலிந்து திணிக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகளும் நிச்சயம் குழப்பத்திற்கே வழிவகுக்கும். இந்த நிலைமை நீடித்து நிலைத்திருக்க முடியாது. மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருக்கும் தற்போதைய சமுதாய அமைப்பு முறை ஓர் எரிமலை வாயின் விளிம்பில் அமர்ந்திருக்கின்றது என்பது வெளிப்படை.

படிக்க : பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள்: வீரநினைவுகளை நெஞ்சிலேந்தி வீறுநடைபோடுவோம்! | வீடியோ

சரியான நேரத்தில் காப்பாற்றவில்லையெனில் இந்த நாகரீகத்தின் முழுக்கட்டமைப்பும் நொறுங்கி விழுந்துவிடும். எனவே இந்த நாட்டில் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகிறது. இதனை உணர்ந்தவர்களின் கடமை, சமுதாயத்தை சோஷலிசத்தின் அடிப்படையில் புதிதாக மாற்றியமைக்க வேண்டியதே ஆகும். இது செய்யப்படவில்லையெனில், ஏகாதிபத்தியம் என்ற பெயரால் அறியப்படும் மனிதன் மனிதனால், தேசங்கள் தேசங்களால் சுரண்டப்படும் கொடுமையை ஒழிக்க முடியாது ; மனித குலம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் படுகொலைகளில் இருந்து (Carnage) விடுதலை பெற முடியாது. போர்களே இல்லாமல் செய்து உலகளாவிய அமைதிக்கான சகாப்தத்திற்கு அழைத்துச் செல்வது பற்றிய பேச்சுக்கள் அனைத்தும் ஒளிவு மறைவற்ற போலித்தனமாகவே இருக்கும்.

“புரட்சி” என்பதன் மூலம், இவ்விதம் (அதாவது, தற்போது நிலவும் சமுதாய அமைப்பு முறையைப் போல் – மொர்) நிலை குலையக்கூடிய அபாயம் இல்லாததும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுமான (ஓர் சமூக அமைப்பை, முதலாளித்துவத்தின் அடிமைத்தளையிலிருந்தும் ஏகாதிபத்தியப் போர்களின் கொடுமைகளில் இருந்தும் மனித குலத்தை விடுவிக்கவல்ல உலகக் கூட்டரசு ஒன்றை இறுதியாக ஏற்படுத்துவதையே நாங்கள் குறிக்கின்றோம்.)

இதுவே எங்களது கொள்கை. இந்தக் கொள்கையினால் உத்வேகம் பெற்றே நாங்கள் இச்சரியான, உரத்த எச்சரிக்கையை செய்தோம்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலைநாட்டப்படும்

இருப்பினும் இந்த எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படாமல் விடப்பட்டு தற்போதைய அரசு அமைப்பு முறையானது வளர்ச்சியடைந்து வரும் இயற்கை சக்திகளின் பாதையில் தொடர்ந்து ஒரு தடையாகவே இருந்து வருமானால், ஓர் கடுமையானப் போராட்டத்தின் முடிவில் அனைத்து தடைகளும் தகர்த்தெறியப்பட்டு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலை நாட்டப்பட்டு புரட்சியின் குறிக்கோளை அடைவதற்கான பாதை அமைக்கப்படும். புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை. சுதந்திரம் என்பது அனைவரின் அழிக்க முடியாத பிறப்புரிமை. தொழிலாளர்களே சமுதாயத்தை உண்மையில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள். மக்கள் அதிகாரமே தொழிலாளர்களின் இறுதி இலக்கு.

இக்கொள்கைகளுக்காகவும் இந்த நம்பிக்கைகளுக்காகவும் எங்களுக்கு வழங்கக்கூடிய தண்டனையின் மூலம் ஏற்படும் எத்தகைய துன்பத்தையும் நாங்கள் வரவேற்கவே செய்கின்றோம். புரட்சியின் பலிபீடத்தில் எங்களது இளமையை காணிக்கையாக்குகின்றோம். எங்களது இம்மகத்தான இலட்சியத்தோடு ஒப்பிடுகையில் நாங்கள் செய்யும் எந்த தியாகமும் பெரிதல்ல. நாங்கள் மனநிறைவுற்றுள்ளோம். புரட்சியின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.

“புரட்சி நீடூழி வாழ்க”

பகத் சிங் – பட்டுகேஷ்வர் தத்

நூல்: கேளாத செவிகள் கேட்கட்டும்…
(தியாகி பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்)
தொகுப்பும், தமிழும்: த. சிவக்குமார்

இலங்கை அரசின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட (ATA) வரைவு: ஐ.எம்.எப்-ன் (IMF) வேட்டைக்காக இலங்கை மக்கள் மீதான கொடும் தாக்குதல்

மார்ச் 21 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மசோதா (ATA – Anti-Terrorism Act) கொண்டு வரப்பட்டிருக்கிறது. இலங்கையில் ஏற்கனவே 1979 ஆம் ஆண்டில்  பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PTA – Prevention of Terrorism Act) ஒன்று கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் துணைகொண்டு குறிப்பாக தேசிய இன உரிமைகளுக்காக போராடிய தமிழ் இளைஞர்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டனர்.

இதன் பின்னர் 2019 ல் புதிதாக ஒரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (CTA) கொண்டு வர எடுக்கப்பட்ட இலங்கை அரசின் முயற்சி மக்கள் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் இலங்கை அரசு கொண்டு வரவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) என்பது இலங்கையின் இரண்டேகால் கோடி மக்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து வடிவமைக்கப்பட்டுள்ள சட்ட வரைவாகும். பயங்கரவாதம் என்றால் என்ன என்பது பற்றிய வரைவிலக்கணங்களைக் கூட வரையறுக்காமல் இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தை எதிர்த்துப் பேசுகின்ற, விமர்சிக்கின்ற, தவறுகளை ஜனநாயகரீதியாக முன்வைக்கின்ற அனைவரையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்ற காட்டுமிராண்டித்தனமான சட்டமாக இது கொண்டு வரப்பட இருக்கிறது.

படிக்க: மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி

இலங்கை அரசு கொண்டுவரவுள்ள சட்டத்தின் மூலம் சாதாரண சப் இன்ஸ்பெக்டர் ஒரு இலங்கை குடிமகனின் ஆடையைக் கழற்றி பரிசோதனை செய்யும் அதிகாரம் வழங்கப்படுகிறது. கைவிரல் ரேகையைப் பெற வேண்டுமானால் நீதிமன்றத்தில் சென்று அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை மாற்றி சாதாரண போலீசுக்கு அந்த வாய்ப்பை இச்சட்டம் வழங்குகிறது. இச்சட்டம் போலீசு அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அதிகாரத்தை வழங்குகிறது.

இலங்கையினுடைய அதிபர் நினைத்தால் எந்த ஒரு அரசியல் கட்சியையும், இயக்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் பயங்கரவாத அமைப்பு என அறிவித்து தடை செய்யக் கூடிய வாய்ப்பை இச்சட்டம் வழங்குகிறது. இம்முடிவை பரிசீலிக்க முறையிட வேண்டுமென்றாலும் இலங்கை அதிபரிடம்தான் முறையிட வேண்டும்.

இச்சட்டமசோதா நிறைவேற்றப்பட்டால், மக்கள் ஜனநாயக ரீதியாக பேசவோ, கருத்து தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படும். சங்கம் அமைக்க முடியாது. ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்ற முடியாது. துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதும், சுவரொட்டி ஒட்டுவதையும்கூட பயங்கரவாத நடவடிக்கையாக முத்திரை குத்த முடியும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையே  (PTA) அகற்ற வேண்டும் என்று அரசியல் இயக்கங்களும், மக்களும், சர்வதேச இயக்கங்களும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் இப்புதிய சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது.

படிக்க: புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !

இப்புதிய சட்டத்தைக் கொண்டு வர தேவை என்ன? இலங்கையின் பொருளாதாரம் திவாலான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்க அடியாளான ஐஎம்எப் (IMF) எனப்படும் உலக நாணய நிதியத்தின் கட்டுப்பாட்டில் இலங்கை அரசு கொண்டு வரப்பட்டுள்ளது. அரசின் அனைத்துத் துறைகளையும் தனியார்மயப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ஐஎம்எப் இலங்கை அரசுக்கு விதித்திருக்கிறது.

இந்த நிபந்தனைகள் இலங்கை அரசால் வலுக்கட்டாயமாக நிறைவேற்றுகின்ற போக்கில் மக்கள் பன்மடங்காக கிளர்ந்தெழுவார்கள். அப்படி கிளர்ந்தெழுகின்ற மக்களை கொடூரமாக ஒடுக்குவதற்கே உத்தசே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) என்ற பெயரில் ஒரு சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வர இருக்கிறது.  இலங்கையில் உள்ள அனைத்து புரட்சிகர ஜனநாயக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், உழைக்கும் மக்கள் அனைவரும் இச்சட்டத்தை முறியடிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

மோடி அரசை விமர்சிக்கின்ற அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள், தொழிற்சங்கவாதிகள், தனிநபர்கள்  என அனைவரும் இந்தியாவில் ஊபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் வாயிலாக வரைமுறையின்றி ஒடுக்கப்படுவதை நாம் அறிவோம். ஏற்கனவே ஊபா சட்டத்தை (Unlawful Activities Prevention Act) மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் எதிர்க்கும் நிலையில், ஊபா சட்டம் குறித்து சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற காரணத்திற்காகவே ஒருவரை கைது செய்ய முடியும் என்று கூறுகிறது. ஏகாதிபத்திய கார்ப்பரேட் கும்பல், அதானி – அம்பானி கும்பல் ஆகியோரின் நலனுக்காக நாட்டின் வளங்களையும், அரசுத்துறைகளையும் தனியார்மயப்படுத்தி மக்கள் வாழ்வை சூறையாடும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் சூழலில் பாசிசமயமாகிவரும் அரசுகளிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

இந்தியாவில் உள்ள புரட்சிகர ஜனநாயக இயக்கங்கள், அறிவுஜீவிகள், உழைக்கும் மக்கள் அரசியல் கட்சிகள் என அனைவரும் இலங்கை அரசைக் கண்டனம் செய்ய வேண்டும். உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (ATA) திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும். போராடும் இலங்கை மக்களுக்கு துணை நிற்க வேண்டும்.

நாடு முழுவதும் இலங்கை மக்களின் கடும் எதிர்ப்பாலும் எதிர்க்கட்சிகளும் வழக்கறிஞர்களும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாலும் இச்சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை தற்காலிகமாக தாமதப்படுத்தியுள்ளது இலங்கை அரசு.

அய்யனார்

Fascist Forces Encircling: Tamil Nadu won’t fall! Fight Relentlessly! | Pamphlet

Dear Working People!

Tamil Nadu always been a protesting site, then and now.
The name itself is a protesting weapon.
Yes, “Long Live Tamil Nadu!”
This has been the slogan of Tamil Nadu people during Pongal.

Not just election, Hindi also represent power.
This is known to Amit Shah.
And the Tamil Nadu people also understand it well.

The saffron mob was stunned
by the protests that took place in Tamil Nadu.
“Anti-Hindi sentiments have not yet faded”
This has shocked them.
Yes, Tamil Nadu is still protesting,
And we should be proud of that.

The ideology of Hindu – Hindi – India
is not only anti-Tamil Nadu, but also anti-Tamil
Tholkappiyam, Tirukkural, Sitham,
Samarasa Sanmarga – Tamil tradition
Yes, these are anti-Veda anti-brahminist tradition.

We seized Karnataka,
Next is Tamil Nadu and Kerala
cackled Modi-Amit Shah mob
But years passed by
In Tamil Nadu, BJP is wobbling
even to save the party.
Journey that started in Karnataka,
got stagnated in Karnataka.
Because, this is Tamil Nadu.

RSS rallies in every district
to instigate riots;
spread ethnic hate against
North Indian workers and Arunthathiyars;

Manu Dharma dishonouring women
Empty screams to arrest
Thiruma and A Raja who roared against it;
Creating panics through
Kovai car cylinder blast – Islamic terrorism;
Rumours on religious conversion when a
girl student died.. nothing worked.
Because, this is Tamil Nadu.

Arjun Sampath mob tried
saffronising Ambedkar
and tried to garland him.
Tamil Nadu gave them slipper shots.
Saffron fascist mob was shocked.

Saffron mob born in Tamil Nadu
tries to proselytize Tamil and Thiruvalluvar.
They have a treacherous mind.
Saffron mob pretends to give up
their lives for the sake of Tamil.
This is a Brahministic trick to persuade.

Sama, Dana, Beda, Danda were used
against Tamil Nadu
by the RSS mob.
But these became ineffective
like shooting with a bubble gun.
Because, this is Tamil Nadu.

But, the RSS – BJP; Ambani – Adani fascist mob
haven’t given up.

Parandur airport, Chennai-Salem eight-lane expressway,
hydrocarbon projects to destroy the delta…
Numerous such projects are carried out
to destroy farming in Tamil Nadu.

Thoothukudi Sterlite is for Agarwal..
Katupalli Port is for Adani..
Kavuthi-Vediyappan Hills is for Jindal..
Numerous Marwari, Gujarati, Sindhi, Brahmin, Baniya corporates
are exploiting the country.

A spy called RN Ravi
is the Governor of Tamil Nadu
The spies are infiltrating in
Police, Judiciary and civil administration.
Caste associations, rowdy mobs,
YouTube and cinema celebrities…
The sanghi mob tied everything
to penetrate Tamil Nadu.

The Modi – Nimmi mob is sucking
the blood of the states through GST,
and giving it as feast to
Ambani and Adani.
The backbones of the states are broken by
turning the workers into bonded labourers,
turning the farmers into dead meat,
throwing away fishermen and tribals,
amending hundreds of laws.

Through new laws like NEET, New Education Policy
the nervous system of states are being cut.
Imposing its fascist One Language, One Culture, One Religion
by destroying various linguistic, ethnic and cultural specialties.

The fascist mob roars 2024, One Nation One Election
is the establishment of Hindu Rashtra fascist monarchy
Ambani, Agarwal, Adani will be the Gods.
The RSS – BJP will be its foot soldiers.

Many states of the country are suppressed.
Some states had adhered.
What is Tamil Nadu going to do?
What are we, the Tamil people, going to do?

This is the soil of Tamil Sangams.
This is the soil where Siddhar, Valluvar and Vallalar lived.
This is where Periyar built his self-respect force.
This is the land which said “Pirappokkum ellaa uyirkkum” (By birth all are equal).
Keezhadi and Adichanallur are our traditions.

Pulithevan, Ondiveeran, Kattabomman, Velu Nachiyar, Marudhu Brothers,
Chinnamalai, Sundaralinganar, Azhagumuthu Kon, VOC, Singaravelu…
Our conscience for liberation is strong.

These discrete traditions of Tamil Nadu
act as as the nightmare of the RSS mob.

Let’s pledge on May 1,
The proletarian historical victory day!

Let’s make RSS’s nightmares come true!
Let’s the streets resound with:
Tamil Nadu won’t fall,
Fight relentlessly!

***

Let’s smash RSS – BJP; Ambani – Adani Fascism!
Let’s establish Anti-Fascist Democratic Republic!

  • RSS infiltration will destroy
    Mother tongue and
    Motherland!
  • Let’s uproot Hindi hegemony!
    Let’s uphold Tamil!
  • Let’s reject Hindu – Hindi – Hindurashtra which is against various nationality – ethnicity – culture
  • Let’s vanquish the attacks on Muslims, Christians and Dalits who are treated as second class citizens!
  • Let’s chase away the RSS – BJP,
    the henchmen of Marwari, Gujarati, Brahmin, Baniya corporates!
    Let’s uphold the anti-aryan anti-brahminist tradition of
    Valluvar, Vallalar, Siddhar, Periyar, Ambedkar!
  • Let’s take the tradition of freedom struggle of Pulithevan,
    Ondiveeran, Kattabomman, Velu Nachiyar, Marudhu Brothers,
    Dheeran Chinnamalai, Sundaralingam, Tipu Sultan, VOC, Singaravelu!
    Let’s smash Privatisation – Liberalisation – Globalisation!
  • Let’s get rid of the myths on pseudo -democratic structure!
    Let’s struggle to establish an anti-Fascist Democratic Republic!

On May 1!
Proletarian historical victory day!
Down with RSS – BJP; Ambani – Adani Fascism!

Fascist Forces Encircling:
Tamil Nadu won’t fall!
Fight Relentlessly!

Rally – Conference – Cultural Event
Palangantham, Near Natraj Theatre,
Madurai.

We welcome all the revolutionary and democratic forces!

People’s Art and Literary Association,
Revolutionary Students – Youth Front,
New Democratic Labour Front (State Coordination Committee),
People’s Power,
Tamil Nadu – Puducherry.

9791653200, 9444836642,
7397404242, 996236631



மதுரை : சாதித் தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறும் அவலம்

மிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சாதித்தீண்டாமை வன்கொடுமைகள் முற்போக்கு, ஜனநாயக சிந்தனை கொண்ட, மனிதநேயமுள்ள அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது.

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமையின் மீதான விவாதங்கள் கனன்று கொண்டிருக்கும்போதே அதே அளவுக்கு இணையாக மதுரையில் நடக்கும் சம்பவங்கள் தமிழகம் வேகமாக பின்னோக்கிச் செல்வதை உணர்த்துகின்றன.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பழையூர் பஞ்சாயத்து தலைவர் வித்யா, பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர். அவருக்கு அப்பஞ்சாயத்தில் இருக்கும் ஆதிக்கசாதியினர் இழைத்த கொடுமைகள் வேங்கைவயலை விட கொடுமையாக உள்ளது. “பழையூர் ரேசன் கடை முன்புள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கழித்தது, அதே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பைப் லைன்களை அறுத்தது, சாதியைச் சொல்லித் திட்டியது, ஊராட்சி மன்ற வாசலில் மலம் கழித்தது, கிராமசபைக் கூட்டம் நடத்த விடாமல் தடுப்பது, குளியல் தொட்டியில் 15 தடவை மலம் கழித்தது” ஆகிய கொடூரமான வன்கொடுமைகள் மூலம் தன்னைப் பணி செய்யவிடாமல் தடுப்பதாக வித்யா கூறுகிறார். “வன்கொடுமை திருத்தச்சட்டத்தின் கீழ் சாதிவெறிக் கும்பலை கைது செய்ய வேண்டும், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” எனவும் தமிழ்நாடு அரசிற்கு புகார் அனுப்பியுள்ளார்.

“பழையூரில் ஆதிக்கசாதியைச் சார்ந்த இரண்டு சாதியினருக்கு தனியே சமுதாயக் கூடம் உள்ளது. தற்போது அனைத்து சாதி மக்களுக்கும் பொதுவான சமுதாயக்கூடம் ஒன்று அரசின் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் தங்களது வருமானம் பாதிக்கப்படும் என்று ஆதிக்கசாதியினர் இவ்வன்கொடுமைகளை செய்திருக்கலாம்” என இது  குறித்து விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவின் டி.எஸ்.பி கருப்பையா மாவட்ட கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பொருளாதாரம் என்பதைத் தாண்டி பட்டியலின மக்களும், தாங்களும் ஒரே இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதா என்ற சாதித் தீண்டாமை கண்ணோட்டமே முக்கியமான காரணமாக இருக்க முடியும்.

படிக்க: மதுரை: தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினரின் கொலைவெறித் தாக்குதல்!

போலீசோ, சாப்டூர் காவல்நிலையத்தில் வித்யா கொடுத்த புகாரின் மீது எப்.ஐ.ஆர் பதிந்து நடவடிக்கை எடுக்காமல், வெறும் மனு ரசீதை மட்டும் கொடுத்துவிட்டு இருதரப்பையும் கூட்டி சமாதானம் பேசியுள்ளது.

இதேபோல் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், அச்சம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் பட்டியலின மாணவர்கள் அன்புதாஸ், சக்திவேல் இருவரும் அங்குள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.

மார்ச் 21 அன்று  மாணவர்கள் இருவரும் அருகில் உள்ள ஆலம்பட்டிக்கு சென்று அங்குள்ள ஆதிக்க சாதியைச் சார்ந்த சந்தோஷ் என்பவரது கடையில் மிட்டாய் வாங்கியுள்ளனர். மாணவர்கள் இருவரையும் மிட்டாய் திருடியதாகக் குற்றம் சுமத்தி, சந்தோஷும் அவரது உறவினர்களும் தூணில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதன் பின்னர் மாணவர் சக்திவேலின் உறவினர் ஒருவர், தாக்கியவர்களிடம் சமாதானம் பேசி, கட்டி வைத்து தாக்கப்பட்ட மாணவர்களை விடுவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் நல விடுதியின் காப்பாளர் விஜயன்,  மாணவர்கள் இருவரையும் விடுதியை விட்டு அனுப்பியுள்ளார்.

இச்செய்தி ஊடகங்களில் வெளியானதால், குற்றவாளி சந்தோஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குழந்தைகள் மீதான வன்முறை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்படவில்லை. ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தச் செய்திகளும் ஏப்ரல் 3 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக கள ஆய்வு மேற்கோண்டபோதுதான் தெரிய வந்துள்ளது.

படிக்க: மலத்தைவிடக் கொடியது சாதிய அரசு!

தொடர்ந்து நடைபெறும் இத்தகைய தீண்டாமை வன்கொடுமைக் குற்றங்களில் அரிதினும் அரிதாகவே குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதிகார வர்க்கமே சாதிவெறியர்களை பாதுகாக்கும் இடமாகவும் உள்ளது. வேங்கைவயல் சம்பவம் சமீபத்திய உதாரணம். இவையனைத்தும் ஆதிக்கசாதி வெறியர்களுக்கு மேலும் உரமேற்றுகிறது.

ஒரு பக்கம் தமிழ்நாடு, வடமாநிலங்களை விட முன்னேறியுள்ளது என்று சொல்லிக் கொண்டாலும், சாதி ஒடுக்குமுறைகளில் முன்னணியிலேயே உள்ளது என்பது சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டிய தேவையை ஆழமாக உணர்த்துகிறது.

இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக போராடும் அதேசமயம், சாதி ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்தும் பார்ப்பனிய வர்ணாஸ்ரமக் கட்டமைப்பின் யோக்கியதையை உழைக்கும் மக்களிடம் தொடர்ச்சியாக, இயக்கமாக அம்பலப்படுத்த வேண்டும். அதோடு சாதி ஏற்றத்தாழ்வைப் பாதுகாக்கும் இந்த அரசுக்கட்டமைப்பை அகற்றுவதே நமது இலக்காக இருக்க வேண்டும்.

இனியன்

வீழாது தமிழ்நாடு – HD Video Song | பாடல் தொகுப்பு 1 | ம.க.இ.க சிவப்பு அலை | PALA Red Wave Official Song

வினவு யூடியூப் சேனலில் ம.க.இ.க சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவின் “வீழாது தமிழ்நாடு” பாடல்

வீழாது தமிழ்நாடு – HD Video Song | பாடல் தொகுப்பு 1
ம.க.இ.க சிவப்பு அலை | Red Wave Official Song

பாருங்கள் ! பகிருங்கள் !!

வேதாந்தா ஸ்டெர்லைட்டின் ஏஜெண்ட் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

06.04.2023

தூத்துக்குடி போராளிகளின் ஒப்பற்ற தியாகத்தை இழிவுபடுத்தாதே!
வேதாந்தா ஸ்டெர்லைட்டின் ஏஜெண்ட் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு!

கண்டன அறிக்கை

ல ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களையும் மண்ணையும் நாசமாக்கிய ஸ்டெர்லைட் வேதாந்தா காப்பர் நிறுவனத்துக்கு எதிராக 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி லட்சத்திற்கும் மேற்பட்ட தூத்துக்குடி மக்கள் வீரம் செறிந்த போராட்டம் நடத்தினர்.

கார்ப்பரேட் வேதாந்தாவின் அடியாட் படையாக செயல்பட்டு போலீசு துப்பாக்கி குண்டுகள் பொழிந்தது. 15 பேர் வரை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிப் போயினர். நூற்றுக்கணக்கானவர்கள் சிறைப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இவ்வளவு பாதிப்புகளை மேற்கொண்டபோதும் ஸ்டெர்லைட்டை மூடாமல் தியாகிகளின் உடல்களைப்பெற மாட்டோம் என்று உறுதியாய் இருந்தனர் மக்கள். அப்படிப்பட்ட வீரம் செறிந்த போராட்டம் நடத்தியதன் விளைவாகத்தான் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.

படிக்க : கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி! போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்! | மக்கள் அதிகாரம்

6 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இப்போது வரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சாரத்துக்கோ ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் நினைவு நாளுக்கு போலீஸ் அனுமதி கொடுப்பதில்லை. மாறாக ஸ்டெர்லைட் ஆதரவு பிரச்சாரங்களை போலீசும் அரசு நிர்வாகமும் தொடர்ந்து அனுமதிக்கிறது.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் ஆளுநராக செயல்படும் ஆர்.என்.ரவி “வெளிநாட்டு நிதியில் பணம் பெற்று மக்களை தூண்டிவிட்டு அதனால் ஸ்டெர்லைட் மூடப்பட்டது” என்கிறார். ஆர்.என்.ரவியும் அவரின் தலைவர்களான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல் தமிழ்நாட்டு மக்களின் எதிரி என்பதை எப்போதும் நிரூபித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு மோடி வருகின்ற வேளையில் ஆர்.என்.ரவி எதையும் தெரியாமல் உளரவில்லை ஆர்.என்.ரவியின் கருத்துதான் மோடியின் கருத்தும் ஆகும். எப்போதும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வை கொச்சைப்படுத்துவதும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும் செயல்படக் கூடிய இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தமிழ்நாட்டு மக்களால் முறியடிக்கப்பட வேண்டும் என்பதே ரவியின் பேச்சு நமக்கு உணர்த்தக்கூடிய உண்மை.

இனியும் இந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உண்டு கொழுத்து தமிழ்நாட்டு மக்களையும் தியாகிகளையும் இழிவுபடுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஆகவே ஆர்.என்.ரவி உடனடியாக தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். அது தொடர்பான சட்டசபையிலே தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் மருது
செய்தி தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு –  புதுவை
99623 66321.

டெல்டாவை பாதுகாப்போம்! || தோழர் மருது || வீடியோ

மிழ்நாடு தஞ்சை டெல்டா பகுதியை ஒழித்துக்கட்டுவதற்காக மோடி அரசு திட்டமிட்டிருக்கிறது. குறிப்பிட்ட பகுதிகளை தெரிவு செய்து நிலக்கரி சுரங்கம் அமைக்க நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடின் டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிக்கப்பட்டுள்ள நிலையிலும் சூறையாட வருகிறார்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிவப்பு அலை | RED Wave | PALA Song | Audio Launch

மார்ச் 30 அன்று “சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு” என்ற பாடல் இசை வெளியீட்டு விழா மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ப்பில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவினரால் வெளியிடப்பட்ட “இவங்க எல்லாம் சங்கிங்க” என்ற பாடல் காணொலி வடிவில் இங்கே வெளியிடுகிறோம்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணம்! ஏன் அவசியம்?

டந்த நான்கு மாதங்களில் எனது நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் சிலர் சாதி மறுப்பு திருமணம் செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் ஒன்று கூட சடங்கு மறுப்பு, சுயமரியாதை திருமணமாக இருக்கவில்லை என்பதுதான் வருத்தம்.

இது பற்றி நண்பர்கள் சொல்லும்போது, “சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விருப்பம்தான். ஆனால் குடும்பத்தினரை உறவினர்களை அதற்கு சம்மதிக்க வைப்பது இயலாத காரியம்” என்றனர்.

இப்படி சொன்ன நண்பர்கள் அனைவரும் பெரியாரியம், மார்க்சியம் போன்ற கருத்துக்களை வாசிக்கக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அமைப்புக்களில் சேர்ந்து இயங்கக் கூடியவர்கள் அல்ல.

இவர்களுக்கு சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணத்தின் நோக்கமும் முக்கியத்துவமும் புரியவில்லை என்பது ஒருபக்கமிருக்கட்டும், இங்கே குறிப்பான பிரச்சினை என்னவென்றால், இந்த நண்பர்கள் அமைப்புக்களில் இயங்காத காரணத்தால் சாதியும் மதமும் சமூகத்தில் எப்படி நிறுவனமயமாக இயங்குகிறது என்ற கள யதார்த்தம் இவர்களுக்கு புலப்படுவதில்லை.

தாங்கள் பேசுவது முற்போக்கான கருத்து அதனால் தங்களது பெற்றோர்களை தங்களது வழிக்கு கொண்டுவந்து விடலாம் என்று இவர்கள் நினைக்கின்றனர். ஆனால் குடும்பம் எப்படி நிறுவனமயப்பட்ட அதிகாரமாக இருக்கிறது என்பதை நண்பர்கள் புரிந்துகொள்வதில்லை. அந்த அதிகார மையத்தை உதிரிகளாக இருக்கும் நமது நண்பர்களால் எதிர்கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

படிக்க: சமுதாயப் புரட்சிப் பிரகடனமாய் சாதி – தீண்டாமை மறுப்பு மணவிழா!

மேலும் சாதியை ஒரு பிரச்சினையாக கருதாமல் காதல் திருமணங்களுக்கு ஒப்புக்கொள்ளும் பெற்றோர்கள் கூட, ஏன் சடங்கு மறுப்பை ஏற்றுக்கொள்வதில்லை என்பதில் இருந்துதான் குடும்பம் உறவினர்கள் என்ற வடிவத்தில் யதார்த்த வாழ்வில் சாதி எப்படி நிறுவனமயப்பட்ட அதிகாரமாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

சமீபத்தில் “நடுவயதுப் பார்ப்பார் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து” நடந்தி வைத்த, அதாவது பார்ப்பன சடங்குகளைப் பின்பற்றி நடத்தி வைத்த, தமது மகனின் திருமணம் பற்றி எழுத்தாளர் பெருமாள் முருகன் அருஞ்சொல் இணைய இதழில் ஒரு சுயவிளக்கக் கட்டுரையை எழுதியிருந்தார்.

அவரது திருமணமும் அவரது மகனின் திருமணமும் சடங்கு மறுப்பு முறையில் இல்லாமல் போனதற்கான காரணங்களாக அவர் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது இரண்டு விஷயங்கள் தான்.

ஒன்று சடங்கு செய்ய வேண்டும் என்ற உறவினர்களின் “அன்புக் கட்டளைகளை” மீற முடியாமல் இருப்பது, மற்றொன்று சடங்கு மறுப்பு செய்வதில் இரு வீட்டாருக்கும் இருக்கு சிக்கல்கள் என்று இரண்டை பற்றிதான் எழுதுகிறார்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நமது எளிய நண்பர்களும், சமூகத்தின் “முன்னோடிகள்” ஆன எழுத்தாளர்களும் எதிர்கொள்ளவது ஒரே விதமான பிரச்சினையைதான். ஆனால் பெருமாள் முருகன் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. “சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணங்களில் உறவினர்களுக்கு எந்த பங்கு இல்லை. பெற்றோருக்கூட இடமில்லை. பரிதாபமாக ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒலிவாங்கியை பிடித்து வெகுநேரம் முழங்கும் அரசியல் பரப்புரை மேடையாக மணமேடை மாறிவிடுகிறது” என்று தனது ஆதங்கத்தை பதிவு செய்கிறார்.

படிக்க: சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!

இங்கே சாதியை சடங்கு வழியாக கட்டிக் காக்கும் சாதாரண சாதியவாதிக்கும் இந்த ’முற்போக்கு எழுத்தாளருக்கும்’ எந்த வேறுபாடும் இல்லை. ஏன் இவர் திருமணத்தில் உறவினர்களின், பெற்றோரின் “இடங்கள்” பற்றி இவ்வளவு கவலைப்படுகிறார்? சடங்கு சாதியை எப்படி தக்கவைப்பதாக உள்ளது? என்ற கேள்விகளுக்கு நாம் விடை சொல்ல வேண்டியிருக்கிறது.

முதலில், “சடங்கு” என்பது ஒரு அதிகார மையத்தை பொது வெளியில் நிறுவிக் கொள்வது என்று அர்த்தம். உதாரணமாக, ஆதியில் பழங்குடி மக்கள் மழை வேண்டி தாங்கள் புரியும் நடனம் தான் “சடங்காக” இருந்தது. அதை அந்த பழங்குடி இனத் தலைவர் தான் தொடங்கி வைப்பார்.

பின்னர் அதில் மற்றவர்களும் கலந்து கொண்டு நடனமாட வேண்டும். இதில் முதலில் நடனம் புரியும் உரிமை “தலைவருக்கே உண்டு”. ஒவ்வொரு முறை அந்த தலைவர் தான் முதலில் நடனம் புரிந்து “நான் தான் தலைவர்” என்று பொதுவில் நிறுவிக்கொள்வது தான் சடங்காக இருந்தது.

இந்த சடங்கு தான் தற்போது “ஆகம விதிகள்” என்ற பெயரில் சூத்திரர்கள் கோவில் கருவறைக்குள் வரக்கூடாது, சிதம்பரம் கோவிலில் தமிழில் பாடக்கூடாது என்பதாக பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது. இதுதான் சடங்கு முறையில் நடக்கும் திருமணங்களிலும் நிகழ்கிறது.

ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு விதமான சடங்கு இருக்கிறது. அதை பொதுவில் நிகழ்த்திக் காட்டுவதன் மூலமாக தங்கள் சாதியை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். இதன் வழி சாதியை, மதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட சாதியில் குறிப்பிட்ட உறவு முறைகள் முக்கியத்துவமுடையதாக இருக்கிறது.

சில சாதிகளில் “தாய்மாமன் உறவு”, சில சாதிகளில் “சித்தாப்பா, பெரியப்பா உறவு”. இப்போது சடங்கு மறுப்பு திருமணம் செய்தால் இந்த நபர்களுக்கான முக்கியத்துவம் இருக்காது. இது யதார்த்தத்தில் சாதி வழங்கும் சிறப்புரிமைகளை மறுப்பதாக இருக்கிறது. இது சாதியத்திற்கு நிறுவன ரீதியான அடியாகும்.

இவ்வாறு “சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணம்” என்பது பொது வெளியில் சாதி அதிகார மையங்களை கேள்விக்குள்ளாக்குவது என்பதாகும், சாதியின் அதிகாரத்தை கீழறுப்பதாகும். இதில் தான் சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணத்தின் முக்கியத்துவம் உள்ளது.

இதனால்தான் நாம் “சடங்கு மறுப்பு திருமணம்” செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். வறட்டு கௌரவத்திற்காக அல்ல. “மணமேடை அரசியல் முழங்கும் மேடையாக மாறுவது”, “சடங்கு மறுப்பு திருமணத்தின்போது உறவினர்களின் மனம் நொந்து கொள்வது” எல்லாம் பெருமாள் முருகனுக்கு பிடிக்கவில்லை என்றால் அது சாதி அவருக்கு தரும் சிறப்புரிமைகளை அவர் இழக்க விரும்பவில்லை என்றே பொருள்படுகிறது.

இதில் அதிகம் விவாதிக்க ஒன்றுமில்லை. ஆனால் “சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணம்” இத்தனை முக்கியத்துவமுடையது என்று நாம் விளக்கிய பிறகும், யதார்த்த வாழ்க்கையில் அதை நண்பர்களால் சாத்தியப்படுத்திக் காட்ட தடையாக இருப்பது குடும்பம், உறவினர்கள் என்ற அதிகார நிறுவனங்கள்தான். அதை உதிரிகளாக நாம் எதிர்கொள்ள முடியாது என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

படிக்க: தினமலர் | திருமணம் – பொது வாழ்க்கை | கொரோனா வைரஸ் | அர்ஜுன் ரெட்டி | சாதி மறுப்பு | கேள்வி – பதில் !

முற்போக்கு இயக்கங்களை சுற்றி சித்தாந்த ரீதியாக, அமைப்பு ரீதியாக அணி திரளும்போதே ஓர் நிறுவனமயப்படுத்தப்பட்ட அதிகாரத்தை நம்மால் எதிர்கொள்ள முடியும். அமைப்பில் இணைந்து பணி செய்ய முடியாத நண்பர்கள், முற்போக்கு இயக்கங்களின் நட்பு சக்திகளாக அணி திரள்வதில் எந்த பிரச்சினையும் இருக்கப்போவதில்லை.

ஒரு அமைப்பின் பத்திரிகையை சந்தா செலுத்தி வாங்குவது, அந்த அமைப்பு நடத்தும் கூட்டங்களில் முடிந்த வரை பங்கேற்பது, அந்த அமைப்புத் தோழர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது என முற்போக்கு இயக்கங்களின் நட்பு சக்திகளாக இருப்பதன் வழியாகவே சாதிய மத அதிகார மையங்களை எதிர்கொள்ள முடியும்.

இந்துத்துவ பாசிச சக்தி அதிகாரத்தில் இருக்கும் இந்த சூழலில் நம் வாழ்வில் ஒவ்வொரு அரங்கிலும் பிற்போக்கு தாக்குதல்களை சந்தித்து வருகிறோம். இந்த நிலையில் வெறுமனே வாய் வீச்சில் மட்டும் முற்போக்காக இருந்தால் போதாது. சங்கப் பரிவார அமைப்புகளில் இருப்பவர்கள் அமைப்பு ரீதியாக செயல்படும் போது, முற்போக்கு பேசும் நாம் உதிரிகளாக இருப்பதில் பயன் எதுவுமில்லை.

அதனால் அரசியல் இயக்கங்களில் இணைந்து அல்லது அரசியல் இயக்கங்களை சுற்றி நட்பு சக்திகளாக திரண்டு சாதி – சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணம் போன்ற அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்தி சாதியையும் மதத்தையும் அமைப்பு ரீதியாக எதிர்கொள்வோம் நண்பர்களே. காவி பாசிசத்தை வீழ்த்துவதில் கலாச்சாரத்தின் பங்கு இன்றியமையாதது.

ராஜன்

ஏப்ரல் 11 : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கோட்டை முற்றுகைப் போராட்டம் வெல்லட்டும்!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை, முடக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு உடனே வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக வரன் முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் ஏப்ரல் 11 அன்று சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் 84-வது பக்கத்தில் 309–வது வாக்குறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் நெருங்கும் நிலையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதேபோல் பணிநிரந்தரக் கோரிக்கைகளும் முன்னேற்றமில்லாமல் தேங்கிக் கிடக்கின்றன.

படிக்க : என்.சி.இ.ஆர்.டி (NCERT)-யின் பாடத்திட்ட நீக்க அறிவிப்பு! காவி பாசிஸ்டுகளின் பாய்ச்சல் நடவடிக்கை!

தனியார் மயத்தை தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம் கார்ப்பரேட் கும்பல்கள் கொள்ளையடிக்கவும், அதன் அடுத்த கட்டமாக கார்ப்பரேட் கும்பல் அரசுத் துறைகளை கைப்பற்றி கொள்வது என்ற அடிப்படையில் இருந்தே மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அதிகப்படியான நிதி செலவாகிறது, அரசிடம் நிதி பற்றாக்குறை உள்ளது என்ற காரணத்தைக் காட்டி வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசு 2004-ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது. இதைக் காரணம் காட்டியே தமிழக அரசும் பேசுகிறது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வூதியத்திற்கு அரசு பொறுப்பு என்ற விதி தளர்த்தப்பட்டு, தனியார் காப்பீடு நிறுவனங்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்களின் சேமிப்பை பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் சூதாடி கொள்ளையடிக்கவே வழிவகை செய்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசின் எல்லாத் துறைகளுக்கும் அவுட்சோர்சிங் முறையில்தான் வேலைக்கு எடுக்கிறார்கள். உலகின் பல நாடுகளிலும் இந்த அவுட்சோர்சிங் வேலைமுறையே பெருமளவில் கோலோச்சுகிறது. கார்ப்பரேட் கும்பல்களின் நரவேட்டைக்காக தொழிலாளர்கள் எந்த உரிமையும் இன்றி வரைமுறையற்று சுரண்டப்படுவதற்கே இந்த அவுட்சோர்சிங் முறை.

புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி ஓய்வூதியத்திற்கு அரசு பொறுப்பு என்ற விதி தளர்த்தப்பட்டு தனியார் காப்பீடு நிறுவனங்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. ஓய்வூதியத்தில் பங்களிப்பு செலுத்துவதிலிருந்து அரசு ஒதுங்கிக் கொண்டது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி தொழிலாளர்களின் வருமானத்திலிருந்து ஓய்வூதியத்திற்கான தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்களின் சேமிப்பை பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் சூதாடி கொள்ளை அடிக்கவே வழிவகை செய்கிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் போராடி வரும் நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் அதானியின் ஊழல் அம்பலப்பட்ட பிறகும், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி(EPF)-யை அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட் ஆகியவற்றின் பங்குகளில் அதிகளவு முதலீடு செய்துள்ளது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO). நாட்டை வரைமுறையற்று சூறையாடி வரும் ஒரு கிரிமனலுக்கு 27.73 கோடி ஊழியர்களின் சேமிப்பைத்  தூக்கிக் கொடுக்கும் இந்நடவடிக்கை கிரிமனல் தன்மையானது.

இன்று உலகளாவிய அளவிலும் பல நாட்டு அரசாங்கங்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்களின் ஓய்வூதியங்களை கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கேற்ற திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. இதை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் எழுச்சியாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, பிரான்சில் ஓய்வூதியத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதாக கூறி, பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தையே மறுக்கும் வகையில் புதிய திட்டத்தை அந்நாட்டு அதிபர் மக்ரோன் கொண்டு வர முயல்கிறார். இப்புதிய திட்டத்தின்படி ஓய்வூதியம் பெறுவதற்கான வயது 62-ல் இருந்து 64-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

படிக்க : பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்த கலாஷேத்ரா நிர்வாகம்!

பல்வேறு அடக்குமுறைகளை மக்ரோன் அரசு ஏவிவிட்ட போதும் லட்சக்கணக்கான பிரான்சின் தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகளை முடக்கியுள்ளனர். சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து எரிபொருள் வெளியேறாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பேரணிகளில் பங்கேற்கின்றனர்.

இந்தப் போராட்டங்களில் பங்கேற்கும் சிஜிடி சங்கத்தின் தலைவர் லாரென்ட் பெர்ஜெர், ‘ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக இருக்கும் நாட்டின் அனைத்து ஊழியர்கள், குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களை போராட்டக்களத்திற்கு வந்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று அழைக்கிறேன். மிகப்பெரிய சமூக இயக்கம் இன்று உருவாகியுள்ளது. இதற்கு அரசியல் ரீதியான பதிலை எதிர்பார்க்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

நம் நாட்டில் நடக்கும் அரசு ஊழியர்களின் போராட்டங்கள், கோரிக்கைகளுக்கான போராட்டங்களாக மட்டுமல்லாமல் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் சூறையாடலுக்காக ஒன்றிய, மாநில அரசுகள் அமல்படுத்தி வரும் தனியார்மயக் கொள்கைகளை வீழ்த்துகின்ற அரசியல் போராட்டங்களாக பரிணமிக்கும் பொழுது தான் சரியான தீர்வை நோக்கி நகர முடியும்.

சிவக்குமார்

திரிபுரா : அதிகாரத் திமிரில் விவசாயிகளை தாக்கும் காவி பாசிஸ்டுகள்!

ரண்டாவது முறையாக திரிபுராவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பல் சி.பி.எம் ஊழியர்கள் மீதும், அலுவலகங்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களின் மீதும் இடைவிடாது தாக்குதல் தொடுத்து வருகிறது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மார்ச் 2 முதலாகவே இத்தாக்குதல் தொடர்கிறது. சி.பி.எம் ஊழியர்கள் மட்டுமல்லாமல், விவசாயிகள் சங்கம் மீதும் கொடூரத் தாக்குதலை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தொடுத்து வருகிறது.

மார்ச் 27 அன்று கோவாய் மாவட்டத்தில் விவசாயிகள் மீது மிகப்பெரும் வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கிலடலி பகுதியில் வசிக்கும் நிவேஷ் சர்கார் என்ற விவசாயியின் பவர் டிரில்லர் இயந்திரத்தை எரித்துள்ளனர். அன்றே, விவசாயிகளின் மீன்தொட்டிகளில் விசம் கலந்து மொத்த மீன்களும் இறந்து போனதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். ஏழை விவசாயிகளின் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

படிக்க : திரிபுரா தேர்தல்: பாசிசத்தின் புதிய மாடல்!

விவசாயிகள் இடது முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது, அப்படி ஆதரவு தெரிவித்தால் இதுதான் கதி என்று பா.ஜ.க குண்டர்கள் மிரட்டி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்ற தனது காவி பாசிசத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே திட்டமிட்ட முறையில் பாசிச குண்டர் படைகளின் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் வாழ முடியாது என்ற அச்ச உணர்வை ஊட்டவே இவ்வளவு திமிராக விவசாயிகளைத் தாக்குகிறார்கள், காவி பாசிச குண்டர்கள்.

திரிபுராவில் இன்று நடப்பது, நாளை நாடு முழுக்க இருக்கும் விவசாயிகளுக்கும் நடக்கும். இதோ தங்களின் ஆதிக்கத்துக்கு அடங்காத தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அறிவிப்பாணை வெளியிட்டு எக்காளமிடுகிறது மோடி – அமித்ஷா கும்பல்.

புதிய வேளாண் சட்டத்திற்கெதிராக டெல்லியில் கோடிக்கணக்கான விவசாயிகள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தின்போது விவசாயிகளின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறிய மோடி கும்பல் இன்று வரை நிறைவேற்றாமல் நயவஞ்சகமாக இழுத்தடித்து வருகிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனே தனது லட்சியமாக கொண்டு இயங்கி வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல், இயல்பாகவே விவசாயிகளை தனது எதிரியாக கருதுகிறது.

படிக்க : திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை : பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?

இத்தகைய விவசாயிகளின் விரோதிகளை சட்டப்பூர்வ வழிமுறைகளில் வீழ்த்த முடியும், தண்டிக்க முடியும் என்று யாராவது எண்ணினால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்காது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தங்கள் ஊருக்குள் நுழையக் கூடாது, நுழைந்தால் ஓட ஓட விரட்டுவோம் என்று விவசாயிகள் போராட்டத்தின்போது, பஞ்சாப் விவசாயிகள் தீர்ப்பு எழுதினார்களே, அதைப்போல் நாடு முழுவதும் விவசாயிகள் இந்தக் கேடுகெட்ட மிருகங்களை விரட்டியடிக்க வேண்டும். எந்த ஊரிலும் நுழைய முடியாதவாறு செய்ய வேண்டும். அதற்கான போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.

அய்யனார்

New Democracy – March 2023 | Magazine

New Democracy March – 2023 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.

New Democracy (Puthiya Jananayagam) March – 2023

List of Articles Present in this Issue :

Oxfam Report: This is Modi’s ‘New India’
‘Hindu Rashtra’: A Nation of the Adanis!
”One Nation, One Election”: Hindu Rashtra gateway to turn states into graveyards!
Judiciary always served its Conqueror!
”One Nation”: Tamilnadu resists!
Chhattisgarh: Rising Attacks on Christian Adivasis by Saffron Fascists!
The Telecommunication Bill, 2022: A move to establish fascist dictatorship!
Subsiding Joshimath: A disaster in the name of ‘development’!
The saffron fascist mob taking root in the US!
Tripura Model Electoral Violence: Lessons the Fascists teach us!

To get Free e-magazine, mail us : puthiyajananayagam@gmail.com

To Get the Magazine by Post :
Contribution : Rs. 25
Pay through G-Pay : 94446 32561

Make Payment and send your address details along with Payment receipt to our email : puthiyajananayagam@gmail.com