Saturday, June 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 115

“ஸ்டிங் ஆப்பரேஷன்”: ஊடக புரோக்கர்களும் ஊடுருவும் பாசிசமும்!

டந்தாண்டு கே.டி.ராகவன் காணொளியை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், “மார்ஸ் தமிழ்நாடு” என்ற தனது யூடியூப் சானலில், “ஸ்டிங் ஆப்பரேஷன்” என்ற பெயரில் பல காணொளிகளை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட யூடியூபர்கள் பணம், சாராயம், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு 2024 தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் எதிராகவும் வேலைசெய்வதற்காக பேரம் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அந்த காணொளிகளில், நியூஸ் கிளிட்ஸ் ஐயப்பன் ராமசாமி, சத்தியம் தொலைக்காட்சி முக்தார், ஆதன் டிவி மாதேஷ், பேசு தமிழா பேசு ராஜவேல் நாகராஜன், அரசியல் விமர்சகர் என்று சொல்லிகொள்ளும் ரவீந்திரன் துரைசாமி, சங்கி கிஷோர் கே.சுவாமி உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருந்தது பெரும் பேசுபொருளானது.

இது யூடியூப் வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில யூடியூப் சேனல்கள் நேரடியாக மக்களிடம் கருத்து கேட்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த பலரும் பத்திரிகைத்துறை மீது ஏற்பட்ட அதிருப்தியையும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள், “இதழியல் துறையின் வெற்றிமாறனாக ஐயப்பனை பார்த்தோம்”, “முக்தார், ராஜவேல் நாகராஜன் போன்றோர் அப்பட்டமாக காசுக்கு மாரடிக்கும் ஆட்கள் என்பது தெரியும், ஆனால்  ஐயப்பன், உமாமகேஸ்வரன் ஆகியோர் இவ்வாறு செய்ததுதான் அதிர்ச்சியாக உள்ளது” போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

தன்னை திராவிட சித்தாந்தம் கொண்டவராகக் காண்பித்து கொள்ளும் ஐயப்பன் ராமசாமி, பிராமண சங்க தலைவரிடம் சமஸ்கிருத மந்திரம் ஒப்புவித்து “நான் ஏன் அர்ச்சகர் ஆகக் கூடாது” என்று கேட்டது; பைக் சாகசம் செய்யும் இளைஞர்களின் நாயகன் டி.டி.எஃப் வாசனை கேள்விகளால் திக்குமுக்காடச் செய்து விரட்டியது; பகாசுரன் பட இயக்குனர் மோகன்ஜி, மதுவந்தி, அமர் பிரசாத் ரெட்டி போன்றோரை அம்பலபடுத்தியது – போன்ற நேர்காணல்கள் மூலம் இணையத்திலும் இளைஞர்களும் மத்தியிலும் பிரபலமடைந்தவர்.

படிக்க : ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி: தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது!

தன்னிடம் பேட்டி காண வருபவர்கள கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்பவராகவும், அவர்களது வாயாலேயே அவர்களை அம்பலப்படுத்திக் காட்டுபவராகவும் அறியப்பட்டவர் சத்தியம் தொலைக்காட்சி முக்தார். ஐயப்பன் ராமசாமியைப் போல, முக்தார் நடுத்தர வயதினர் மத்தியில் செல்வாக்கு கொண்டவராக விளங்கினார்.

மதனின் காணொளியில் சிக்கியவர்களில் தங்களை முற்போக்காளர்களாக காட்டிகொண்டவர்கள் ஒரு பிரிவினர் என்றால், ஏற்கெனவே “சங்கிகள்” “கூலிக்கு மாரடிப்பவர்கள்” என்று அம்பலப்பட்டு போனவர்கள் மற்றொரு பிரிவினர். கிஷோர் கே.சாமி, ராஜவேல் நாகராஜன், ரவீந்திரன் துரைசாமி, மாதேஷ் ஆகியோர் இந்த வகையினர்.

இந்த இருபிரிவினருக்கு இடையிலும் கருத்தியில் வேறுபாடுகளெல்லாம் ஒன்றும் கிடையாது, கூலிக்கு மாரடிப்பதில் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதை மதனின் ஸ்டிங் ஆபரேஷன் அம்பலப்படுத்தியிருக்கிறது.

சங்கிகளை தனது வாதத் திறனால் வாயடைக்க வைப்பவர் என்று பார்க்கப்பட்ட ஐயப்பனை அவ்விடத்திற்கு அழைத்து வந்ததே சங்கி கிஷோர் கே.சாமி என்பது அம்பலமாகியிருக்கிறது. மிகவும் பிரபலமடைந்த ஐயப்பன் – அமர் பிரசாத் ரெட்டியுடனான நேர்காணலில், ஐயப்பனுக்கு கேள்வி எழுதித் தந்ததும், அமர் பிரசாத் ரெட்டிக்கு பதில் எழுதித் தந்ததும் கிஷோர்.கே.சாமிதான் என்று அவர்களே சொல்லி சிரித்துகொள்ளும் காட்சி மதனின் காணொளிகளில் இடம்பெற்றிருந்தது.

இவர்கள் அனைவருமே பணம் வாங்கிகொண்டு வெவ்வேறு கட்சிகளுக்கு மறைமுகமாக வேலை செய்தவர்கள். அதன் தொடர்ச்சியாகவே தற்போது இவ்விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.

மதன் வெளியிட்ட காணொளியில், ஐயப்பன் ராமசாமி பேசுகையில் கடந்த தேர்தலில் அவரும் நியூஸ் க்ளிட்ஸ் சேனலும் அ.தி.மு.க-விற்கு வேலை செய்துள்ளது என்பதை போட்டு உடைத்தார். தற்போதும் பணம் கொடுத்து குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சொன்னதற்கு அவர் ஒப்புகொண்டார்.

அதேபோல ஆதன் டிவி மாதேஷ், “வாழ்க்கையில் ஒரு நிலையை அடைய 2024 தேர்தலை நம்பிதான் நான் இருக்கிறேன்” என்று வெளிப்படையாகக் கூறுகிறார். மேலும், தேர்தல் சமயத்தில் சேனலோடு சேர்ந்து 4 கட்சிகளிடம் 1 கோடியே 20 லட்சம் பெற்று வேலை செய்ததாகவும் கூறுகிறார்.

சாதிவெறியன் ரவீந்திரன் துரைசாமி மோதிரத்தை வங்கி கொண்டு, வேலை செய்ய ஒப்புகொண்டதோடு தனக்கு யாரோடெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை பட்டியலிடுகிறார். மேலும், முக்தார் குடித்துவிட்டு கொஞ்சமும் பத்திரிகை அறமின்றி வக்கிரத்தை கக்கினார்.

இந்த யோக்கியவான்களின் குட்டுகளை மதனின் காணொளிகள் அம்பலப்படுத்திய நிலையில், எல்லாரும் வெளியேவந்து தனித்தனி விளக்கம் தந்தனர்.

ஐயப்பன் ராமசாமி அவர்களின் சூழ்ச்சியை புரிந்துகொண்டு தான் ஏதோ அவர்களை ஸ்டிங் செய்தது போல நாடகமாடினார். கடைசியில், உண்மையை மறைக்க முடியாமல் மாட்டிக்கொண்டார். மாதேஷ் “எனக்கு 2 வயது குழந்தை உள்ளது, அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று நீலிக்கண்ணீர் வடித்தார்.

ஆனால், ‘நேர்மையாளர்களான’ ரவீந்திரன் துரைசாமியும் ராஜவேல் நாகராஜனும் தங்களது அம்மணத்தை மறைக்க முயற்சிக்காமல், நேரடியாக ஒப்புக் கொண்டனர். “அந்த காணொளியில் இருந்தது நான்தான், யார் பணம் கொடுத்தாலும் செய்து தருவேன், இனிமேலும் செய்வேன்” என்கிறார் ரவீந்திரன் துரைசாமி. ராஜவேல் நாகராஜன் ஒரு படி மேலே சென்று, “யூடியூபர்களுக்கு  குடும்பங்கள் இல்லையா? அவர்களுக்கு செலவு இல்லையா?” என்று பேசுகிறார்.

இவர்கள் ஒருபுறம் பேசிகொண்டிருக்க சவுக்கு சங்கர், சாட்டை துரைமுருகன் போன்றோர் சரக்கு அடிப்பது, உணவகத்தில் சாப்பிடுவது எல்லாம் ஸ்டிங் ஆப்பரேஷனா? என்று ஒன்றுமே நடக்காதது போல் பூசி மெழுக முயல்கின்றனர்.

“இது மற்ற யூடியூபர்களுக்கு எதிராக மதனின் பழி வாங்கும் சதி”, “மதன் ஒரு தி.மு.க. பினாமி”, “அண்ணாமலை மீது அதிருப்தியில் இருக்கும் பாஜக-வினரால் நிதியுதவி அளிக்கப்பட்டு செயல்படுகிறார்” – என்றும் பலவாறாக பேசப்படுகிறது. ரெட் பிக்ஸ் சேனலில் அமர்ந்துகொண்டு மதனின் வரலாற்றை மணிக்கணக்காக பேசுகிறார் சவுக்கு சங்கர்.

வடிவேலு நகைச்சுவை காட்சியில் வருவதைப் போல, “என்னய்யா பண்ணிட்டான் என் கட்சிக்காரன்” என்பதுதான் அவர்களது பேச்சின் சாரம்சமாக இருந்தது. மதனின் அருகதையை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலம் மாட்டிக் கொண்ட அயோக்கியர்களை காப்பற்றும் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

மதன் ரவிச்சந்திரன் அயோக்கியனாகவே இருக்கட்டும் அவன் வெளியிட்ட காணொளிகள் அம்பலப்படுத்திய செய்தி என்ன என்பதுதான் கேள்வி.

எல்லா தொலைக்காட்சி ஊடகங்களுமே குறிப்பிட்ட கட்சிகளது ஊடகங்களாகவும் கார்ப்பரேட் முதலாளிகளுடையதாகவும் இருப்பதால், தங்களுடைய பிரச்சினைகளைப் பேசாமல், அவை தங்கள்மீது ஒருசார்பான கருத்தை திணிப்பவை என்று மக்களுக்கு ஏற்பட்ட பார்வையானது, அவர்களை யூடியூப் சானல்கள் மீதும், யூடியூபர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளச் செய்தன. மதன் ரவிச்சந்திரனின் காணொளி, அந்த நம்பிக்கையையும் சுக்குநூறாக்கியுள்ளது.

ஒரு பக்கம் மக்களுக்காக பேச வேண்டும் என்று கருதக்கூடிய ஊடகவியலாளர்களுக்கு ஒரு களமாக இருக்கும் சமூக ஊடகங்கள், காசு வாங்கிக் கொண்டு யாருக்காகவும் எப்படி வேண்டுமனாலும் பேசும் ஊடக புரோக்கர்களுக்கும் களமாக இருக்கிறது. ஆல்ட் நியூஸ் ஜுபைர், சித்திக் கப்பன் போன்ற பத்திரிகையாளர்கள் உள்ள துறையில்தான் இவர்களும் தங்களை பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.

நாம் என்ன சிந்திக்க வேண்டும், எந்தக் கட்சியைப் பற்றி எப்படி கருத வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும், எந்த கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த ஊடக புரோக்கர்கள் முடிவு செய்கிறார்கள் என்பதுதான் கொடுமை.

ஸ்டெர்லைட் விசயத்திலும் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கிலும் அப்பட்டமாக ஆளும் வர்க்கத்திற்கு துணை போகும் வகையில் பேசிய சவுக்கு சங்கரின் பேச்சுகள் குறிப்பிட்ட பிரிவினரால் ஆதரிக்கப்பட்டன. இப்போது, அவர் பணம் வாங்கிகொண்டு எடப்பாடிக்கு பழனிசாமிக்கு சொம்படித்துகொண்டு தி.மு.க-வை தாக்குவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கிறார். தி.மு.க.வின் மேலுள்ள அதிருப்தியில் சவுக்கு சங்கரின் பேச்சை பரிசீலிக்க இப்போதும் ஒரு கூட்டம் இருக்கிறது. காரணம் சவுக்கு போன்றவர்கள் ‘நடுநிலை’ என்ற போர்வையில் ஒளிந்துகொள்வதுதான்.

படிக்க : புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 | அச்சு இதழ்

தாமரை, சாணக்யா, மாரிதாஸ் பதில்கள் போன்ற சானல்கள் வெளிப்படை சங்கிகளாக உள்ளன. ‘நடுநிலை’ என்ற போர்வையில் செயல்படும் இதுபோன்ற ஊடக புரோக்கர்கள்தான், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலின் நிழல் கோயல்பல்சுகளாக செயல்படுகின்றனர் என்பது நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய ஆபத்தான விசயம்.

மாட்டுக்கறி தமிழனின் உணவு இல்லை, பிபிசி ஆவணப்படம் மூலம் பிரிட்டிஷ் இன்னும் நம்மை ஆள நினைக்கிறது போன்ற சங்கி கருத்துக்களை பரப்பும் ராஜவேல் நாகராஜன் “பேசு தமிழா பேசு”, “ஹலோ தமிழா”, “அக்னி சிறகே”, “எல்.கே.ஜி”, “திருவருள் டிவி”, “லவ் டாக்ஸ்” உள்ளிட்டு ஐந்துக்கும் மேற்பட்ட சேனல்களை வைத்துள்ளார். இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிசக் கருத்துக்களை பல்வேறு வடிவங்களில் தமிழ்நாட்டு மக்களிடையே கொண்டுசெல்லும் கருவிகளாக உள்ளன.

ஓரளவு பா.ஜ.க. மீது விமர்சன பார்வை கொண்டவராக அறியப்பட்ட மதன் கௌரி பிபிசி ஆவணப்படத்திற்கு எதிராக பேசுகிறார். அறிவியலை எளிய முறையில் இளைஞர்களை கவரும் வகையில் அறியத்தந்த எல்.எம்.இ.எஸ் சாணல், புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக காணொளி போட்டது. ஜீவா டுடே, பரிதாபங்கள் ஆகிய சேனல்கள் தமிழினவெறியை கிளப்பிவிடுகின்றன.

நம்மால் எளிதில் உணர்ந்துகொள்ள முடியாத ஒரு மறைமுகப் போர் நம் சிந்தையின் மீது தொடுக்கப்பட்டுள்ளது. எதிரி யாரென்றே தெரியாமல், அவனுக்கு நம்மை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அச்சு செய்தித்தாள்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என எதில் பரப்பப்படுகின்ற கருத்தாக இருந்தாலும் சரி, யார் பரப்புரை செய்கின்ற கருத்தாக இருந்தாலும் சரி, அதை நடைமுறையில் உரசிப் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும். ஒரு ஊடகம் சொல்கின்ற கருத்தை விட, நடைமுறையில் மக்களிடம் வேலை செய்கின்ற கட்சிகள், அமைப்புகள் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும். அந்த அமைப்புகள் முன்வைக்கும் அரசியலில் இருந்து அவர்களது கருத்தைப் பரிசீலிக்க வேண்டும். இவைதான் உண்மையை அறிந்துகொள்வதற்கான வழியாக இருக்க முடியும்.


துலிபா

தமிழ்நாட்டில் சாதி – மத கலவரங்களுக்கு திட்டமிடும் பாஜக! | தோழர் மருது | வீடியோ

மிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது. அதனடிப்படையில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற பேரணியில் தற்போதையை மாவட்ட செயலாளரை தீர்த்துக்கட்ட முன்னால் மாவட்ட செயலாளர் அடியாட்களை அனுப்பியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் பேரணியை வைத்து ஒரு நபரை கொலை செய்வதற்கான திட்டமிடல் எங்கிருந்து வருகிறது?

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தின் உண்மையான நோக்கத்தை இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நிலக்கரி சுரங்கங்கள்: டெல்டாவை சூறையாடத் துடிக்கும் கார்ப்பரேட்டுகள்

0

மிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் காவேரி டெல்டா மண்டலமாகும். தமிழகத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்காற்றுகிறது. கடந்த 2021- 2022 நிதியாண்டில், 22.05 இலட்சம் ஹெக்டர் பரப்பளவில், 122.22 இலட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முப்போகம் விளையும் விவசாய பகுதிதான் மோடி அரசால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக, வளர்ச்சி என்ற பெயரில் (மீத்தேன், ஹைட்ரோகார்பன்) இயற்கை எரிவாயுக்கள் மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் நாசகாரத் திட்டங்களை செயல்படுத்தியது மோடி அரசு. டெல்டா மாவட்ட மக்களின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் – 2020 நிறைவேற்றப்பட்டது. ஆனால் மோடி அரசு, விவசாயத்தை அழித்து டெல்டா மாவட்டங்களை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றும் தன்னுடைய நோக்கத்தில் இருந்து துளியும் பின்வாங்கவில்லை.

இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் எடுப்பதை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலக்கரி சுரங்கங்களை அமைக்க தற்போது ஏல அறிவிப்பு வெளியிட்டு இருப்பதும் அதன் வெளிப்பாடுதான். டெல்டா மாவட்டங்களில் உள்ள நிலக்கரி வளங்களை சூறையாட நீண்ட கால திட்டத்துடன்  செயல்பட்டு வந்துள்ளது. மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் போது, இது நிலக்கரி எடுப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை  என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டினர். தற்போது அது நிரூபணமாகியுள்ளது.

படிக்க : டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்! தமிழ்நாட்டை சூறையாட வரும் பாசிசக் கும்பலை முறியடிப்போம்! || மக்கள் அதிகாரம்

மேலும், தமிழ்நாட்டில் நிலக்கரி எந்தெந்த மாவட்டங்களில் எத்தகைய அளவு உள்ளது என்பதை ஆய்வு செய்து வைத்துள்ளது மோடி அரசு. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலக்கரி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மூன்று சுரங்களுக்கான அறிவிப்பு என்பது ஒரு தொடக்கம் தான். வருங்காலங்களில் பிற நிலக்கரி சுரங்களுக்கான அறிவிப்பை மோடி அரசிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

ஒருபுறம், நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதில் கார்ப்பரேட் கும்பல்களின் நலன் அடங்கியிருந்தாலும், மறுபுறம், இது காவி பாசிஸ்டுகளின் தமிழ்நாட்டு மக்களின் மீதான தாக்குதலும் ஆகும்.

தமிழ்நாட்டின் எதிர்ப்புணர்வும்
மோடி அரசின்  தற்காலிக பின்வாங்குதலும்

கடந்த மார்ச் 29 ஆம் தேதி, ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் இந்தியாவின் பல மாநிலங்களில் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான  ஏழாவது ஏல அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில் தமிழ்நாட்டில் மூன்று வட்டாரங்கள் இடம்பெற்றிருந்தன. கடலூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு சேத்தியாத்தோப்பில் 84.41 சதுர கிலோமீட்டர், தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு அருகே உள்ள வடசேரியில் 68.30 சதுர கிலோமீட்டர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டியில் 14.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலக்கரி எடுக்க உள்ளதாக அறிவித்து இருந்தது.

மேலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் எவ்வளவு பழுப்பு நிலக்கரி உள்ளது, நிலக்கரியை எடுத்துச்செல்ல தொடர்வண்டிப் பாதை எவ்வளவு அருகில் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அந்த ஏல அறிவிப்பில் வெளியிட்டு இருந்தது. இது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமல்ல, சமூக ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள் உள்ளிட்ட அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்க்கும் என்று தெரிந்தே, திமிர்த்தனமாக இத்தகைய நாசகார திட்டத்தை அறிவித்தது.

நிலக்கரி எடுப்பது போன்ற திட்டங்களை அமல்படுத்துவதற்கு மோடி அரசு, தமிழ்நாடு அரசிடம் இருந்து தொழிற்துறை அனுமதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற வேண்டும். ஆனால் மோடி அரசு, தமிழ்நாடு அரசை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை. இத்திட்டத்தை பற்றி தெரியப்படுத்த கூட இல்லை. தன்னிச்சையாக அறிவித்தது. “இந்த செய்தி வந்தபோது உங்களைப் போன்று தான் நானும் அதிர்ச்சி அடைந்தேன்” என்று கூறும் நிலைமையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே இருந்தார். இது மாநில அரசின்  பெயரளவிலான இறையாண்மையும் மதிக்காத மோடி அரசின் பாசிச அணுகுமுறையாகும்.

மோடி அரசின் இந்த பாசிச நடவடிக்கைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் சம்மட்டி அடி கொடுத்தது. இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியான அன்று மாலையிலே டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். போராட்டங்களில் ஈடுபடுவோம் என அறிவித்தனர். மக்களும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இத்திட்டத்திற்கு ஆளும் தி.மு.க அரசும் எதிராக இருந்தது. முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதினார்; சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் இதற்கு முன்னர் செயல்படுத்தப்பட்ட போது எதிர்க்காத தமிழக பா.ஜ.க, தற்போது நிலக்கரி எடுப்பதை எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது. எதிர்க்கவில்லை என்றால் தமிழக மக்களின் வெறுப்புக்கு உள்ளாக வேண்டும் என்பதே அதற்கான காரணம். ஏற்கெனவே இந்தித் திணிப்பு, ஆர்.என்.ரவி தமிழ்நாடு பெயரை தமிழகம் என்று மாற்றக்கூறியது, ஆன்லைன் ரம்மி ஆகியவற்றில் தமிழக மக்களின் வெறுப்புக்கு உள்ளான தமிழக பா.ஜ.க, வேறுவழியில்லாமல் இத்திட்டத்தை எதிர்ப்பது போன்று நாடகமாடியது.

மோடி அரசு வேறுவழியில்லாமல் ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மூன்று வட்டாரங்களை நீக்கி அறிவித்துள்ளது. இதற்கு ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்புதான் பிரதான காரணமாகும். ஆளும் தி.மு.க அரசு இத்திட்டத்திற்கு எதிராக இருப்பது முக்கிய காரணமாகும்.

இது தற்காலிக பின்வாங்கலாகும். மோடி அரசு, தமிழகத்தில் உள்ள மூன்று வட்டாரங்களை ஏல பட்டியலில் இருந்து தான் நீக்கியுள்ளது. இனிமேல் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மாட்டோம் எனக் கூறவில்லை.ஏனென்றால் கார்ப்பரேட்டுகள், தமிழகத்தின் எட்டு மாவட்டங்களுக்கு கீழ் கோடிக்கணக்கான டன் அளவில் கொட்டிக்கிடக்கும் நிலக்கரியை சூறையாடுவதில் இருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டார்கள்.

ஆத்ம நிர்பார் பாரத் அல்ல! 
அதானி நிர்பார் பாரத்!

மோடி அரசு நிலக்கரி சுரங்கங்களை கார்ப்பரேட்டுகளுக்கு திறந்து விடுவதில் பெரும் ஆதாயம் அடையப் போவது அதானி கும்பல்தான். இந்தியாவில் அதிக அளவில் நிலக்கரி சுரங்கங்களை பராமரிப்பதிலும், நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்வதிலும், நிலக்கரியை மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்வதிலும் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது.

சத்தீஸ்கர், ஒடிசா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில்  ஒன்பது நிலக்கரி சுரங்கங்களையும், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் தலா ஒரு நிலக்கரி சுரங்கங்களையும் கொண்டுள்ளது. நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஏழு மின் உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது. மேலும், அதானி குழுமத்திற்கு சொந்தமான கிட்டதட்ட 12 துறைமுகங்களில் நிலக்கரி கையாளப்படுவதாக கூறப்படுகிறது. தொலைத்தொடர்புத் துறை என்றால் அம்பானி ஞாபகம் நமக்கு வருகிறதோ, அதுபோல நிலக்கரி என்றால் அதானி கும்பல்தான்.

மோடி அரசும் அதானி கும்பலுக்கு நிலக்கரி சுரங்கங்களை அடிமாட்டு விலைக்கு தூக்கி கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஏலத்தில் மோடி அரசும் அதானியும் கூட்டு சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு, ஏலத்தை அடிமாட்டு விலைக்கு முடித்தது அம்பலமாகி உள்ளது. இதன் மூலம் மூன்று நிலக்கரி சுரங்கங்கள் அதானி குழுமத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. ஏலத்தில் ஈடுபட்ட இரு நிறுவனங்களும் அதானி குழுமத்தின் நிறுவனங்கள் ஆகும். இதற்காக மோடி அரசு ஏலத்தில் குறைந்தபட்சம் மூன்று நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்ற விதியை திருத்தி இரண்டு நிறுவனங்களாக மாற்றியுள்ளது.

படிக்க : நிலக்கரி முதல் மின் தட்டுப்பாடு வரை – தனியார்மயமாக்கத்தின் விளைவே !

அதானி குழுமம் முறைகேடுகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. அதானி குழுமம் பல்வேறு மோசடிகளின் மூலம் பங்குச் சந்தையில் தனது குழுமத்தின் பங்கை செயற்கையாக உயர்த்திக் காட்டியதை விரிவாக அம்பலப்படுத்தியது ஹிண்டன்பர்க் அறிக்கை. இந்தியாவில் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, எல்லா துறைகளும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. அதற்கு நிலக்கரி துறையும் விதிவிலக்கல்ல. அதற்கேற்ப பல்வேறு விதிகள் தளர்த்தப்பட்டன. ஆனால் தளர்த்தப்பட்ட விதிகள் கூட அதானி குழுமத்தின் இலாபவெறியை பூர்த்தி செய்யவில்லை.

நிலக்கரி சுரங்களை அதானி போன்ற கார்ப்பரேட் கும்பல்களுக்கு திறந்துவிடுவதன் மூலம், இந்தியாவின் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய உள்ளதாக காரணம் கூறுகிறது மோடி அரசு. 101 வட்டாரங்களில் நிலக்கரி சுரங்களுக்கான ஏல அறிவிப்பும் அதற்காகத்தான். அதை பறைசாற்றும் விதமாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி , “நாட்டின் நிலக்கரி உற்பத்தி 2025 -2026 ஆம் நிதியாண்டிற்குள் 1.1 பில்லியன் டன்களை எட்டும் எனவும், அதில் 200 மில்லியன் டன்கள் தனியார் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து கிடைக்கும்” என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.

அதற்கேற்ப, தனியார் நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தி அதிகரித்து வருகிறது. கடந்த 2022 -23 நிதியாண்டில் தனியார் நிலக்கரி சுரங்க உற்பத்தியாளர்கள் 121.88 மெட்ரிக் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளனர். இது முந்தைய நிதியாண்டை விட 34.59% அதிகம் ஆகும். மேலும், உபரியாகும் நிலக்கரி இலங்கை, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனக் கூறியுள்ளார் அமைச்சர். கார்ப்பரேட் கும்பல்கள் தான் ஏற்றுமதி செய்ய போகிறார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. இதற்கான விதிகள் 2020 ஆம் ஆண்டே தளர்த்தப்பட்டு விட்டன.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அதானி குழுமத்தின் மோசடிகள் அம்பலப்பட்டு போயுள்ள இச்சூழலில் மோடி அரசானது, அதானி குழுமத்தின் நெருக்கடிகளை தீர்ப்பதற்காக தீவிரமாக வேலை செய்துகொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் நாடாளுமன்ற விசாரனைக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு பொருட்டாக கூட கருதவில்லை. மாறாக, தொழிலாளர் ஓய்வூதிய நிதியை அதானி குழுமத்தில் முதலீடு செய்கிறது. அடிமாட்டு விலைக்கு நிலக்கரி சுரங்கங்களை தாரை வார்க்க காத்துக் கொண்டிருக்கிறது. அதானிகளின் வளர்ச்சி தான் தேசத்தின் வளர்ச்சி என்பதை தன்னுடைய செயல்பாட்டின் மூலம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.

பிரவீன்

கலாசேத்ராவில் நடந்தது என்ன? | தோழர் அமிர்தா | வீடியோ

சென்னை திருவான்மியூரில் இருக்கக்கூடிய கலாசேத்ரா கல்லூரியில் நிகழ்ந்த பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை செய்தவர்களே அங்கிருக்கக்கூடிய பேராசிரியர்கள் என்ற கொடூரமான உண்மை இன்று தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய பேசு பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு || மே 1 மதுரை மாநாட்டை வாழ்த்தி வரவேற்கும் ஜனநாயக சக்திகள்! | வீடியோ

மதுரையில் மே 1, 2023 அன்று ”ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” ”சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு; துவழாது போராடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பேரணி – மாநாட்டை வாழ்த்தி வரவேற்றும் ஜனநாயக அமைப்புகள்.

காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்! மாநாடு அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.

000

தேர்தலே நடத்தக்கூடாது என்பதுதான் பாசிஸ்டுகளின் நோக்கம்! | சந்தோஷ் – திவிக

000

மாநாட்டின் தலைப்பே வீரத்தையும் விழிப்புணர்வையும் தருகிறது | சு.பஷீர்

000

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் பாசிசத்தை வேரறுக்க வேண்டும் | சீ.சு.சாமிநாதன்

000

மே 1 மதுரை மாநாடு வெற்றிபெறட்டும்! | கலைப்பிரியன் | முனுசாமி

காணொலிகளை பாருங்கள் ! பகிருங்கள்!!

ராகுல் தகுதி நீக்கம்: நாடாளுமன்றத்தை முடக்கினால், மக்கள் மன்றத்தில் முழங்குவோம்!

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என்ற தீர்ப்பையோ, அதைத்தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்றோ எதிர்க்கட்சிகளால் முன்னூகித்திருக்க முடியாது. இந்த நிகழ்வுகள் எதிர்க்கட்சிகளுக்கு நிச்சயமாக அதிர்ச்சியூட்டுபவைதான். ஆனால், மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் இப்படி அதிர்ச்சியூட்டும் பல நிகழ்வுகள்  இயல்பாக்கப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற விவாதநேரம் படிப்படியாக வெட்டிச்சுருக்கப்பட்டதும், பா.ஜ.க. கொண்டுவரும் மக்கள்விரோத-கார்ப்பரேட் கொள்ளை மசோதாக்கள் விவாதங்களின்றி சட்டமாக்கப்படுவதும் நேற்றுவரை இருந்த நிலைமை. பா.ஜ.க.வின் இந்த பாசிசப் போக்கைக் கண்டித்துக் குரலெழுப்பவும், போராடவும், இதன்மூலம் ‘நாடாளுமன்ற ஜனநாயகம்’ அடைந்திருக்கின்ற அவநிலையை நாட்டுமக்கள் முன் அம்பலப்படுத்தவும் மட்டுமே எதிர்க்கட்சிகளால் செய்ய முடிந்தது.

ராகுலின் தகுதி நீக்கம் மூலம், இப்போது அந்தக் ‘கண்டக் குரலெழுப்பும் ஜனநாயகமும்’ பறிக்கப்பட்டுள்ளது. பாசிச பா.ஜ.க.வை அம்பலப்படுத்திப் பேச முயன்றால், நீங்கள் நாடாளுமன்றத்தைவிட்டே தூக்கியெறிப்படுவீர்கள் என்ற புதிய இயல்புநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ராகுலின் தகுதி நீக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சட்டப்பூர்வ பாசிசத் தாக்குதலாகும்.

படிக்க : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யார் பேசினாலும் வழக்கு போடறாங்க | தோழர் மருது

பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் மீது, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் எப்படி ஏவிவிடப்படுகிறதோ, மக்களுக்காக போராடும் செயல்பாட்டாளர்கள், அறிவித்துறையினர் மீது எப்படி ஊ.ஃபா கொடுஞ்சட்டம் பாய்ச்சப்படுகிறதோ, சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது என்.ஐ.ஏ எப்படி ஏவிவிடப்படுகிறதோ – அதுபோல, இதுவும் சட்டப்பூர்வமான பாசிசத் தாக்குதலாகும்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கர்நாடாவில் உரையாற்றிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர்? நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?”என்று பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து, குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி, “ராகுல் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் இழிவுபடுத்திவிட்டார்” என்று அவதூறு வழக்கு பதிவுசெய்தார்.

நான்கு ஆண்டுகளாக சூரத் நீதிமன்றத்தால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், 23-03-2023 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சூரத் நீதிமன்றம்.

இத்தீர்ப்புக்காகவே காத்துக் கொண்டிருந்ததைப்போல, அடுத்த 24 மணிநேரத்திற்குள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் ராகுல் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அவரது தொகுதியான வயநாடு காலியான தொகுதியாக அறிவிக்கப்படுகிறது.

1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(3)-ன் படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எந்த குற்றத்திற்காகவும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு கூடுதலான காலம் சிறைதண்டனை விதிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். இதன்படி ராகுலின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பை வழங்கிய சூரத் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எச்.வர்மா, காவிக் கும்பலுக்கு தான் செய்த கைங்கரியத்திற்கு இவ்வாறு விளக்கம் தருகிறார் : “குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அவர் ஆற்றிய உரை பொதுமக்களிடையே பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அவருக்கு குறைந்தபட்ச தண்டை வழங்கப்பட்டால், அது பொதுமக்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும். மேலும், அவதூறு சட்டத்தின் நோக்கமும் நிறைவேறாது”

ராகுல்மீது தொடர்ப்பட்ட சாதாரண அவதூறு வழக்கில், இரண்டு ஆண்டுகள் சிறை என்பது உச்சபட்ச தண்டனையாகும். பாசிசக் கும்பல், ராகுலின் பதவியைப் பறித்து நாடாளுமன்றத்தை விட்டுத் துரத்துவதற்கு தோதாகவே இத்தீர்ப்பு “தயாரிக்கப்பட்டிருக்கிறது”.

அந்நிய மண்ணில் ‘இந்திய ஜனநாயகத்தை’ இழிவுப்படுத்திய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொடர்ந்து ஒருவார காலத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்தை பா.ஜ.க. முடக்கிவந்த சூழலில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு, அதைத்தொடர்ந்து ராகுல் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

தெளிவான விசயம், ராகுல் பழிவாங்கப்பட்டிருக்கிறார். எதற்காக?

“அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய எனது பேச்சுக்கள் அனைத்தும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன”

“… பிரதமர் மோடியை நோக்கி மூன்று கேள்விகள் முன்வைத்தேன். அதானி குழுமத்தில் ரூ.20,000 கோடி முதலீடு செய்த நிறுவனங்கள் யாருடையது, அந்த பணம் யாருடையது? என்று கேட்டேன். மோடி வெளிநாடு சென்றபோதெல்லாம் அதானி குழுமத்திற்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டேன். அதானிக்காக விமான நிலையங்களின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதானி குழும முறைகேடு விவகாரத்தில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு உள்ளது. பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய தகவலை வெளியிடுவேன் என்பதாலேயே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன்” – என்று தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

அதானியின் கொள்ளைகளை அம்பலப்படுத்தும் ஹிண்டன்பர்க் அறிக்கை, மோடியின் ரத்தக் கறை படிந்த கைகளை அம்பலப்படுத்தும் குஜராத் இனப்படுகொலை தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் ஆகியவை மக்களிடயே விவாதப்பொருளானதை பாசிசக் கும்பலால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021-இல் உள்ள அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி இணையம் மற்றும் சமூக வலைதளங்களிலிருந்து பிபிசி ஆவணப்படத்தை நீக்கிய மோடி அரசு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ஐப் பயன்படுத்தி அதானியை அம்பலப்படுத்திய ராகுலை பழிதீர்த்துவிட்டது. ராகுலின் பதவி பறிப்பைக் காட்டி, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த முயற்சிக்கிறது.

லண்டனில் பேசிய ராகுல் காந்தி, பிபிசி ஆவணப்படம் தடை, ஹிண்டன்பர்க் அறிக்கையை விவாதிக்க அனுமதிக்காதது, விசாரணை அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுவது, பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பலவற்றையும் சுட்டிக்காட்டித்தான் இந்தியாவில் ஜனநாயக நிறுவனங்கள் தாக்கப்படுவதாகப் பேசினார்.

மேலும், “இந்தியா எதிர்கொண்டிருக்கும் அபாயம் பா.ஜ.க. என்ற தனிப்பட்ட கட்சி அல்ல. ஒட்டுமொத்த ஜனநாயக நிறுவனங்களையும் இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கைப்பற்றியிருக்கிறது. நாம் ஒரு கட்டமைப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிக்கிறோம்” என்றார்.

இதைக்காட்டித்தான் ராகுல் அந்நிய மண்ணில் ‘இந்தியாவின் ஜனநாயகத்தை’ இழிவுபடுத்திவிட்டார். நம் நாட்டின் மாண்புகளை குலைத்துவிட்டார் என்று ஊளையிட்டது பாசிசக் கும்பல்.

படிக்க : காக்னிட் உளவு செயலி: டிஜிட்டல் பாசிசத்தை ஏவும் மோடி அரசு!

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசக் கும்பல்தான் இந்தியாவை ஆட்சி செய்துவருகிறது; சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயகம் என்பது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. அம்பானி-அதானி பாசிச கும்பல்களுக்கான ஜனநாயகமாகவும் இந்திய மக்கள் மீதான பாசிசமாகவும் இருக்கிறது என்பது – இன்று உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அம்பலப்பட்டுவருகிறது. அடக்குமுறையை ஏவிவிடுவதன் மூலம் இதை முடிவுக்கு கொண்டுவர முயல்கிறது பாசிசக் கும்பல். அதன் ஒருபகுதிதான் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு.

தங்களை நோக்கி எழுப்பப்படும் எந்தக் கேள்விக்கும் பதில் அளிப்பதற்கு பாசிஸ்டுகளுக்கு துணிச்சல் இல்லை. இந்த அடக்குமுறை பாசிஸ்டுகள் கோழைகள் என்பதற்கான சாட்சியே. வெறும் கொலு பொம்மையாக வைத்திருக்கும் நாடாளுமன்றத்தை அவர்களே இழுத்து மூடுவதற்கு எத்தனிக்கிறார்கள்.

நாம் ஏன் இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கட்டி அழ வேண்டும்? இந்தக் குட்டிச்சுவர்தான் பாசிச ஆட்சிக்கு வழிகோலுகிறது எனும் போது, அதனை உறுதிப்படுத்த நாம் முயற்சிப்பதன் மூலம் பாசிச ஆட்சிக்கு நாமும் அடியெடுத்துக் கொடுப்பவர்களாகிவிடுகிறோம். ஆகையால், நாம் மக்கள் மன்றத்தை நிரப்புவோம்.

எதைப் பேசக்கூடாது என்று பாசிசக் கும்பல் தடை போடுகிறதோ, அதைப் உரக்கப் பேசுவோம். எப்படி பேசக்கூடாது என்று பாசிசக் கும்பல் கருதுகிறதோ, அப்படி பேசுவோம்.

“ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” என்று முங்குவோம்!

பல்லை புடுங்கிய சைக்கோ போலீசு | தோழர் மருது | வீடியோ

ம்பா சமுத்திரத்தில் ஏடிஎஸ்பி-யாக பணியாற்றிய பல்பீர் சிங் என்பவர் பலபேரின் பல்லை பிடுங்கியுள்ளார். பலரின் ஆணுருப்பை நசுக்கி சித்திரவதை செய்திருக்கிறார். இந்த பிரச்சினை வெளியே தெரிந்ததும் விசாரணையை துவங்குகிறார்கள். விசாரணை துவங்கிய பிறகுதான் அநியாயம் அக்கிரமம் அதிகமாக நடக்கிறது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி: தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது!

ண்மையில், காவிக் கும்பலுக்கு சாதமான இரண்டு தீர்ப்புகள் வெளியானது. ஒன்று தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்ச நீதிமன்றத்தின் அனுமதி; இரண்டாவது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அர்ஜூன் சம்பத்துக்கு அனுமதி. தீர்ப்புகள் இரண்டாயினும் தன்மை ஒன்றுதான். ‘நீதிமன்றத் தீர்ப்புகளின் வழியே’ தமிழ்நாட்டில் நுழைவதற்கான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலின் எத்தனிப்புகள் இவை.

சென்ற ஆண்டு காந்தி பிறந்தநாளையொட்டி தமிழ்நாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாட்டு மக்கள், புரட்சிகர ஜனநாயக அமைப்ப்புகளின் எதிர்ப்பின் காரணமாக ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது போலீசு.

ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கக் கோரி ஆர்.எஸ்.எஸ், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. பாசிசக் கும்பலுக்கு சாதகமான தீர்ப்பினை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், “ஊர்வலம் நடத்த அனுமதிக்கவில்லை என்றால், தமிழ்நாடு போலீசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” என மிரட்டியது. ஒரே நாளில் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்றது தமிழ்நாடு அரசு. கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டும் பேரணி நடத்த அனுமதி வழங்கியதோடு, சுற்றுச்சுவருடன் கூடிய காலி மைதானம் அல்லது விளையாட்டு அரங்குகளில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல், பேரணி, பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என நிபந்தனைகளை விதித்தது.

படிக்க : ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆர்.என்.ரவியின் உளறல்கள் – பின்னணி என்ன? | தோழர் ஆ.கா.சிவா வீடியோ

எந்த மாநிலத்திலும் பா.ஜ.க. சந்தித்திராத படுதோல்வி இது. இதனை சகித்துக்கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ் கும்பல், அனைத்து இடங்களிலும் பேரணிக்கும் அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திடம் முறையிட்டது.

அவ்விசாரணையில், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய ஆறு இடங்களைத் தவிர்த்து மற்ற 44 இடங்களில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ்.க்கு தமிழ்நாடு போலீசு அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இவ்வழக்கின் மீதான விசாரணையில், தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதனையடுத்து வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி, தமிழ்நாட்டில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்த தமிழ்நாடு போலீசும் அனுமதி அளித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-க்கு சாதகமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான அடுத்த தினமே, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அர்ஜூன் சம்பத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்த அனுமதியளிக்க போலீசுக்கு உத்தரவிடக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த காலங்களில் இந்து மக்கள் கட்சியினர் அம்பேத்கருக்கு மாலை அணிவிக்க சென்றபோது அளிக்கப்பட்ட உத்தரவாதத்தைப் போல உத்தரவாதம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க செல்லும்போது பிறரைப்பற்றி கோஷங்கள் எழுப்ப மாட்டோம். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம், அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவிக்க மாட்டோம்; விபூதி, சந்தனம், குங்குமம் பூச மாட்டோம், போலீசு வாகனத்தில்தான் சென்று வருவோம் என உறுதியளித்தது இந்து மக்கள் கட்சி. இதனையடுத்து அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதியளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

அம்பேத்கருக்கு காவி உடை அணிவிக்கப் படுகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அர்ஜூன் சம்பத் கையால் அம்பேத்கருக்கு மாலை அணிவிப்பதே அம்பேத்கரை காவிமயமாக்கும் நடவடிக்கைதான்.

அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்தில் மதச் சாயம் பூசியது தொடங்கி, ஆ.ராசா இந்துக்களை வேசிமகன் என்று கூறிவிட்டார், மனுநூலை சுட்டிக்காட்டிய திருமாவளவன் இந்துப் பெண்களை தவறாக பேசுகிறார் என மதவெறியை கிளரப்பார்த்தது காவிக் கும்பல். ஆனால், மதம் கடந்து அனைத்து மக்களும் நல்லிணக்கத்தோடு ஒற்றுமையுடன் வாழும் தமிழ்நாட்டில் காவிக் கும்பலின் எண்ணம் எடுப்படவில்லை; மண்ணைக் கவ்வியது. பெரியார் விதைத்த பார்ப்பனிய எதிர்ப்பும், மோடி – ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க எதிர்ப்பு அலையும் இயல்பிலேயே இருப்பதால் மற்ற மாநிலங்களைப் போல மத கலவரங்களின்மூலம் தமிழ்நாட்டில் ஊடுறுவது குதிரை கொம்புதான் என்பதை புரிந்து கொண்ட பாசிசக் கும்பல் ‘நீதிமன்ற தீர்ப்புகளின் வழியே’ தமிழ்நாட்டில் நுழைய எத்தனிக்கிறது.

வட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிராக கையாளும் நடவடிக்கைகளில் ஒன்று ஊர்வலங்கள். ராம நவமி, அனுமான் ஜெயந்தி போன்ற ‘இந்துப் பண்டிகைகளில்’ ஊர்வலங்களை நடத்துவதன் மூலம் அந்நாட்களை முஸ்லீம்கள், தலித்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான கலவர நாட்களாக அறிவித்து வருகிறது. பண்டிக்கைகள் இல்லாத நாட்களிலும், முஸ்லீம்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் பெரிய ஒலிப்பெருக்கியைக் கொண்டு, “பாரத் மாதாகீ ஜெய்” “ஜெய் ஸ்ரீராம்” போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளும் ஊர்வலங்கள் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படுவோம் என்று அச்ச மனநிலையை இஸ்லாமிய மக்களிடம் விதைத்து வருகிறது பாசிச கும்பல்.

அண்மையில் நடத்தப்பட்ட ராம நவமி ஊர்வலங்களின்போது பீகார், மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ம.பி, உ.பி, போன்ற மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய மக்கள் வாழும் வீதிகள் கலவரக்காடானது. இஸ்லாமியர் கடைகள், வீடுகள், மசூதிகள் அனைத்தும் காவிக் குண்டர்களால் சூறையாடப்பட்டன. ஊர்வலம் சென்ற வழிகளில் இருந்த மசூதிகள் மீது கற்களும் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. மதராஸாக்களில் இருந்த புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. “ஜெய் ஸ்ரீராம்” “இந்தியா இந்துக்களுக்கான தேசம்” போன்ற மதவெறி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முஸ்லீம் சிறுபான்மையினரை ஒடுக்கி, தங்களது இந்துராஷ்டிரக் கனவினை நனவாக்க பாசிசக் கும்பல் மேற்கொண்டு வரும் முதன்மையான வழிமுறை இதுபோன்ற ஊர்வலங்கள்தான்.

மதம் கடந்து சகோதரத்துவத்துடன் ஒன்றுமையாக வாழ்ந்துவரும் தமிழ்நாட்டிலும் இத்தகைய கலவரச் சூழலை கொண்டுவரக் காவிப் பாசிசக் கும்பல் முயற்சிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கும் அம்பேத்கருக்கு அர்ஜூன் சம்பத் மாலை அணிவிப்பதற்கும் நீதிமன்றங்கள் அனுமதி வழங்கிவிட்டன. எனினும், தமிழ்நாடு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது!

படிக்க : தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் அடியாள்படையாக செயல்படும் தமிழ்நாடு போலீசு!

சென்ற முறை தமிழ்நாட்டில் பேரணி நடத்தப்போவதாக ஆர்.எஸ்.எஸ். அறிவித்தபோது, அதற்கு சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதியளித்திருந்த நிலையில் தமிழ்நாடு போலீசு பேரணிக்கு அனுமதி மறுத்தது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு மக்கள், பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையாகும். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை எதிர்த்து வி.சி.க அறிவித்த சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் ம.தி.மு.க, தி.க, பல்வேறு இடதுசாரி அமைப்புகள் உள்ளிட்டு 17 கட்சிகள் மற்றும் 44 இயக்கங்கள் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

அதேபோல் சென்ற ஆண்டு, அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்த தனக்கு பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவிடக்கோரி, அர்ஜூன் சம்பத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்காக, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்த அர்ஜூன் சம்பத் வளாகத்துக்குள் இருந்த அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவ முயற்சி செய்தபோது, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டார். அன்றே, நீதிமன்ற அனுமதி பெற்று போலீசு பாதுகாப்போடு வந்த அர்ஜூன் சம்பத்தை அம்பேத்கர் மணிமண்டபத்துக்குள்ளும் நுழையவிடாமல் வி.சி.க உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காவி பாசிசக் கும்பலை நீதிமன்றம் அனுமதித்திருக்கலாம். ஆனால் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிசக் கும்பலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! இது தமிழ்நாடு என்பதை மீண்டும் ஒருமுறை சங்கிக் கும்பலுக்கு உணர்த்துவோம்!

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்
13-04-2023

பரந்தூர் செல்ல முயன்றால் கழுகாக பறந்து கைது செய்யும் தமிழ்நாடு போலீசு

டந்த ஞாயிற்றுக்கிழமை (09-04-2023) அன்று இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில துணைப் பொறுப்பாளர் ரஹ்மதுல்லா அவரது ஆதரவாளர்களுடன் பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க அப்பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது அவரை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது தமிழ்நாடு போலீஸ்.

இதேபோல் பரந்தூர் விமான நிலைய போராட்டத்தின் 200-வது நாளில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பாக போராட்டத்திற்கு ஆதரவளிக்க சென்ற வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதே போன்று தொடர்ச்சியாக அப்பகுதிக்கு செல்லும் அரசியல் இயக்கங்களை சார்ந்தவர்களை தடுத்து திருப்பி அனுப்புவதும் முக்கியமான அரசியல் தலைவர்களை கைது செய்வதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது இந்திய அரசு. அதையெடுத்து நிலங்களை கையகப்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விமான நிலைய உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 12 கிராம மக்கள் போராடி வருகிறார்கள்.தொடர்ச்சியாக 250 நாட்களுக்கு மேலாக இப்போராட்டம் நடந்து வருகிறது.

இங்கு வாழும் மக்கள் பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருபவர்கள். அவர்களின் கோரிக்கை விவசாய நிலங்களை அழித்துவிட்டு அதன்மேல் விமான நிலையம் கொண்டு வர வேண்டாம், விவசாயம் நடைபெறாத மக்கள் பயன்பாட்டில் இல்லாத காலி இடங்களை தேர்வுசெய்து இதுபோன்ற திட்டங்களை அமுல்படுத்துங்கள் என்பது தான்.

படிக்க: பரந்தூர்: விமான நிலையத்திற்காக அழிக்கப்படும் கிராமம் – கார்ப்பரேட் சேவையில் திமுக அரசு!

இதனையடுத்து இந்த கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கட்சியினர், அமைப்புகள், இயக்கங்கள் பேசி வருகின்றன. குறிப்பாக ஆளும் திமுக அரசின் கூட்டணி கட்சிகளே அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இவ்வாறு போராட்டமும் போராட்டத்திற்கான ஆதரவும் தீவிரமடைந்து வருவதனால் பரந்தூர் கிராமத்தை சுற்றி 200-க்கும் மேற்பட்ட போலீசை குவித்து 24 மணி நேரமும் அப்பகுதியை கண்காணித்து வருகிறது தொடர்ந்து கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்தி வரும் திமுக அரசு. குறிப்பாக வெளியூரை சேர்ந்தவர் யாரும் அப்பகுதிக்குள் எளிதில் நுழைய முடியாத அளவிற்கு பாதுகாப்பை பலப்படுத்தி போராட்டத்திற்கு ஆதரவு தர வரும் எவரும் அப்பகுதியை நெருங்க முடியாத அளவிற்கு செயல்பட்டு
வருகிறது.

இவ்வளவு பெரிய மக்கள் போராட்டம், கட்சிகள் இயக்கங்கள் இத்திட்டத்திற்கு எதிர்த்து பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கார்ப்பரேட் சேவைதான் கட்சியின் சேவை என உறுதியாக இருக்கிறது திமுக அரசாங்கம். மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் தொடர்ச்சியாக காவல்துறை மூலம் அப்பகுதி மக்களையும் அரசியல் இயக்கங்களையும் ஒடுக்கி வருகிறது ‘திராவிட மாடல்’ அரசு.

டேவிட்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யார் பேசினாலும் வழக்கு போடறாங்க | தோழர் மருது

ந்த நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எது தேவையோ அதை செய்துகொடுப்பதுதான் அரசின் கடமை. தூத்துக்குடி மக்கள் இன்றுவரை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாய்திறக்க முடியாத நிலையில், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க முதல் ஆளுநர் வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருப்பதுதான் ஜனநாயகம் என்றால் அதன் மீது தமிழ்நாட்டு மக்கள் காரி உமிழ்வார்கள்.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தொடர்ந்து தமிழர் நலனுக்கெதிராக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். அதை விரைவில் நாம் செய்வோம்.

https://www.youtube.com/watch?v=JqKi7RuirWE&t=1s

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

காக்னிட் உளவு செயலி: டிஜிட்டல் பாசிசத்தை ஏவும் மோடி அரசு!

0

பெகாசஸ்” (Pegasus) என்ற உளவு செயலிமூலம் அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சிகள், நீதித்துறையினர் உள்ளிட்டோரை வேவு பார்த்த மோடி அரசு, தற்போது “காக்னிட்” (Cognyte) என்ற புதிய உளவு செயலியை வாங்கவுள்ளதாகவும் இதற்காக 12 கோடி டாலர் (₹986 கோடி) செலவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 30 அன்று வெளியான பைனான்சியல் டைம்ஸின் அறிக்கையில், இஸ்ரேலின் என்.எஸ்.ஓ குழுவை விட நன்கு அறியப்படாத நிறுவனத்தால் விற்கப்படும் புதிய உளவு செயலியை வாங்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியானது. இதனைத்தொடர்ந்து, இந்தியாவின் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று இஸ்ரேலிய உளவு செயலி நிறுவனமான ”காக்னிட்”டிடம் இருந்து பெகாசஸுக்கு மாற்றாக உளவு செயலியை வாங்கவுள்ளதாக வர்த்தக தரவுகளை ஆராய்ந்த ‘தி ஹிந்து’ கடந்த ஏப்ரல் 5 அன்று ஒரு செய்தியை வெளியிட்டது.

காக்னைட் நிறுவனம் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா (META) வெளியிட்ட ”கண்காணிப்பு தொழில் பற்றிய அச்சுறுத்தல் அறிக்கை”யில் (Threat Report on the Surveillance-for-Hire Industry) இடம்பெற்றுள்ள நிறுவனமாகும். இவ்வறிக்கையானது பணம் வாங்கிக்கொண்டு இணையம் வழியாக உளவு வேலைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்தது. ஊடகவியலாளர்கள், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மாற்றுக்கருத்துடையவர்களின் சமூக வலைதள கணக்குகளில் ஊடுருவுவதன்மூலமோ அல்லது அவர்களின் செல்போன் மடிக்கணினி போன்றவற்றை ஹேக் செய்வதன் மூலமோ இம்மாதிரியான உளவு நிறுவனங்கள் அவர்களை முழுமையாகக் கண்காணிக்கும்.


படிக்க: பெகாசஸ் ஸ்பைவேர் : உளவு மென்பொருள்களின் அரசன் !!


மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, காக்னிட் மற்றும் அதன் அப்போதைய தாய் நிறுவனமான வெரின்ட் சிஸ்டம்ஸ் இன்க்., (Verint Systems Inc.) ஆகியவற்றிடமிருந்து பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் (Defence Intelligence Agency DIA) கீழ் வரும் சிக்னல் புலனாய்வு இயக்குநரகத்திற்கு (Signal Intelligence Directorate SID) கணினி உபகரணங்களை அரசு வாங்கி வழங்கி வருவதாக தி இந்துவின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எஸ்.ஐ.டி-யில் (SID) இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த பணியாளர்கள் உள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சேவைப் பகுதிகள் (in service areas), வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அஸ்ஸாம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கணினிகளிலிருந்து உருவாக்கப்பட்ட, அனுப்பப்பட்ட, பெறப்பட்ட அல்லது சேமிக்கப்பட்ட எந்தவொரு தகவலையும் இடைமறிக்க, கண்காணிக்க மற்றும் படிக்க அவர்களுக்கு அனுமதி உள்ளது. இவ்வளவு அதிகாரங்களை தன்னகத்தே கொண்ட எஸ்.ஐ.டி-யின் கையில், பெகாசஸ் போன்றதொரு உளவு செயலியான காக்னிட் இருப்பதென்பது மிகப்பெரிய பேராபத்தாகும்.

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, ”இதற்கு முன்னதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா, பெகாசஸ் மற்றும் ’டீம் ஜார்ஜ்’ தலைமையிலான இஸ்ரேலிய ஒப்பந்த ஹேக்கர்களைப் பயன்படுத்தியது மோடி அரசாங்கம். தற்போது இந்திய அரசியல் அமைப்பு மற்றும் ஜனநாயகத்தில் தலையிட ஒரு புதிய உளவு செயலியை பயன்படுத்துகிறது” என்று கூறினார்.


படிக்க: பெகாசஸ் : சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா ?


இந்திய அரசு பெகாசஸை பயன்படுத்தியது அம்பலமானபோது முதலில் அதை ஒப்புக்கொள்ள மறுத்தது. பெகாசஸ் நிறுவனமோ இறையாண்மை கொண்ட அரசுகளுக்கு மட்டும்தான் உளவு செயலியை விற்பதாகக் கூறியது. பின்னர், இந்திய அரசு சார்பாக உளவுத்துறை பணியகம் (Intelligence Bureau IB) என்.எஸ்.ஓ குழுவிடமிருந்து பெகாசஸ் செயலியை வாங்கியது உறுதியானது. நீதிமன்றத்தில் ”தேசநலன் தொடர்பானது என்பதால்  பெகாசஸ் குறித்து கூற இயலாது” என்று கூறி நீதிமன்றத்தின் துணையோடு உளவு பார்த்ததை நியாயப்படுத்திவிட்டது மோடி – அமித்ஷா கும்பல். ஆனால், 2017-ஆம் ஆண்டில் இஸ்ரேலிடம் போடப்பட்ட $2 பில்லியன் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே பெகாசஸ் வாங்கப்பட்டது என்று ஜெருசலேமில் இருந்து செய்தி வெளியிட்டது நியூயார்க் டைம்ஸ்.

தற்போது நாம் வாழும் டிஜிட்டல் யுகத்தில் காக்னிட், பெகாசஸ் போன்ற உளவு செயலிகள் பாசிஸ்டுகள் தங்களின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள பேருதவி புரிகிறது. வேவு பார்ப்பதன்மூலம் எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகங்களை முன்னறிந்து முறியடிக்க முடியும்; நீதித்துறையை – நீதிபதிகளை கட்டுப்படுத்த முடியும். அரசின் கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை கேள்வி கேட்கும் அறிவுஜீவிகள் மற்றும் அவற்றை எதிர்த்துப் போராடும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் செல்போன், மடிக்கணினி போன்றவற்றில் போலியான ஆவணங்களை இந்த உளவு செயலிகளின்மூலம் உள்நுழைத்து அவர்களை தேசிய புலனாய்வு முகமை (NIA) மூலம், எல்கர் பரிஷத் வழக்கில் வேட்டையாடியதுபோல, வேட்டையாடவும் முடியும்.

பொம்மி

சிக்கிய ஆர்.என்.ரவி – ரம்மி தடைக்கு ஒப்புதல் | தமிழ்நாடு vs ஆளுநர் | தோழர் மருது | வீடியோ

பி.டி.ஆர் தியாகராஜன் ஆளுநர் மீது பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக சட்டமன்றத்தில் கூறி ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை அதற்குள் ஆன்லைன் ரம்மி தடை தட்டத்தில் ஆர்.என்.ரவி கையெழுத்திடுகிறார்.

தமிழ்நாட்டில் செல்லும் இடங்களில் எல்லாம் காறி உமிழக்கூடிய நபராக இருக்கக்கூடிய இந்த ஆர்.என்.ரவி இப்போது கீழே விழுந்திருக்கிறார். பாவம் பார்த்து விடக்கூடாது என்பதுதான் என்கருத்து.

தமிழ்நாடு அரசு இதே எதிர்ப்பில் தொடர்ந்து நிற்க வேண்டும்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

எச்சரிக்கை: புனைவுக் கதைகளை வரலாறாக்கும் காவிக் கும்பல்!

0

காவி பாசிச கும்பல் தனக்கான மக்கள் அடித்தளத்தை நிறுவிக்கொள்ள பல வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் வரலாற்றைத் திரிப்பதும், புனைவுக் கதைகளைக் கொண்டு போலி வரலாற்றைக் கட்டமைப்பதுமாகும். தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பாசிச‌ கும்பல் பல கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுகிறது. கட்டுக் கதைகளின் மூலம் பல்வேறு ’வரலாற்று நாயகர்’களை உருவாக்குகிறது இந்த பாசிச கும்பல். அப்படி உருவாக்கிய புனைவு நாயகர்களை தமது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் மன்னிப்பு கோரிய சாவர்க்கர், வாஜ்பாய் போன்றவர்களை தேசிய விடுதலைக்காக போராடியவர்களாகவும் ‘தேச பக்தி’யின் சின்னங்களாகவும் முன்னிறுத்துகிறது காவிக் கும்பல். அவர்களை ‘இந்து’க்களின் தலைவர்களாக காட்டுகிறது. அதே சமயம், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உயிர்நீத்த திப்பு சுல்தானை இஸ்லாமிய மன்னர் என்ற காரணத்திற்காக ‘இந்து’க்களை ஒடுக்கிய கோரமுகம் கொண்டவராக சித்தரித்து அதன்மூலம் இஸ்லாமிய வெறுப்பை ஊட்டி ‘இந்து ஒற்றுமையை’ ஏற்படுத்த முயற்சிக்கிறது. மேலும் பகத்சிங், பிர்சா முண்டா, அம்பேத்கர், திருவள்ளுவர் போன்றவர்களுக்கு காவிச் சாயம் பூசி விழுங்கிக் கொள்ள எத்தனிக்கிறது. இதன் மூலமும் தனது மக்கள் அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொள்ள முற்படுகிறது.

ஒக்கலிகர் தலைவர்களின் உருவாக்கம்

கடந்த மார்ச் 12 அன்று பெங்களூர் – மைசூர் நெடுஞ்சாலை திறப்பிற்காக கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்திற்கு வரவிருந்த பிரதமர் மோடியை வரவேற்க, வரவேற்பு நுழைவாயில் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் ஒக்கலிகர் தலைவர்களான உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா மகாத்வாரா ஆகிய இருவரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

அந்த ஒக்கலிகர் தலைவர்கள்தான் மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தானை கொன்றவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவிக் கும்பலால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், திப்புவோ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர மரணம் அடைந்தவர் என்பது வரலாற்று உண்மை.

ஒக்கலிகர் சமூகம் பெரும்பான்மையாக வகிக்கும் மாண்டியா மாவட்டத்தில் காவிக் கும்பலால் வரவேற்பு நுழைவாயிலில் பயன்படுத்தப்பட்ட ஒக்கலிகர் தலைவர்கள் எனக் கூறப்பட்டவர்களின் பெயர்களும் புகைப்படங்களும் போலியானவை என விமர்சனத்திற்கு உள்ளாகின. ஆரம்பத்தில் காவிக் கும்பல் அதை ஏற்க மறுத்தது.


படிக்க: மக்களைக் கொல்லும் வாட்சப் வதந்திகளின் முன்னோடி பாரதிய ஜனதா !


உரி கவுடா, நஞ்சே கவுடா ஆகியோருக்கு உருவம் கொடுக்க தமிழ்நாட்டில் மருது பாண்டியர்களை சித்தரிக்கப் பயன்படுத்தப்படும் படங்களைப் பயன்படுத்தியது இந்த காவிக் கும்பல். தங்களது புரட்டுகள் அம்பலப்பட்டுப் போனதும் வரவேற்பு நுழைவாயிலையே மாற்றிவிட்டது.

மேலும், காவி பாசிச கும்பல்  திப்பு சுல்தானை இந்து விரோதியாக சித்தரிக்க முயன்றது. கர்நாடகா மாநில பா.ஜ.க அரசு ஆண்டுதோறும் நடத்தப்படும் திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்தது; ”திப்பு எக்ஸ்பிரஸ்” ரயிலின் பெயரை ”உடையார் எக்ஸ்பிரஸ்” என மாற்றியது. பள்ளி பாடப்புத்தகங்களில் வரும் திப்பு பற்றிய பாடங்களை நீக்கியது; சிலவற்றை தங்களின் இந்துத்துவா கதையாடலுக்கு ஏற்ப மாற்றிவிட்டது.

வரலாற்று ஆசிரியர்களோ உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா ஆகியோர் உண்மையில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும் ஒக்கலிகர் சமூக மக்களின் வாக்குகளை கவருவதற்காக காவிகளால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்தான் என்றும் கூறுகின்றனர். மேலும், திப்பு சுல்தான் நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரின் போது (1799) பிரிட்டிஷால் கொல்லப்பட்டார் என்பது வரலாற்றுப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

கர்நாடகாவில் மட்டுமல்ல, உத்தரப்பிரதேசத்தில் ராஜா சுஹேல்தேவ் மற்றும் ராம்பியாரி குஜ்ஜார் ஆகியோரை பல கட்டுக்கதைகள் மூலம் முன்னிலை படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல். ஆனால்,  இவர்கள் கூறும் வரலாற்று நாயகர்களின்‌ இருப்பே கேள்விக்குரியதாகும். இவர்கள் கூறும் கதைகளில் வரும் பாத்திரங்களின் இருப்பே சந்தேகத்திற்குரியது அல்லது கட்டுக்கதை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

பழம்பெரும் குஜ்ஜார் போராளி

அதேபோல, கடந்த மார்ச் 11 அன்று முன்னால் பா.ஜ.க தலைவரும், தற்போதைய துணை குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கர், துருக்கிய படையெடுப்பாளர் தைமூர்-ஐ வெற்றி கொள்வதற்காக ராம்பியாரி குஜ்ஜார் (Rampyari Gurjar) 40,000 பெண் போராளிகளை திரட்டிப் போரிட்டார் என்று உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் நடந்த ஒரு நிகழ்வில் கூறினார்.

தன்கருக்கு முன்னதாக கடந்த ஜனவரியில் குஜ்ஜார் சமூகத்தை புகழும் பொருட்டு ராம்பியாரி குஜ்ஜாரின் வீரத்தைப் புகழ்ந்து பேசினார் மோடி. மேலும், வரலாற்றில் அவர்களுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், புதிய இந்தியா அத்தவறுகளை சரி செய்து வருகிறது என்றும் கூறினார்.

ராம்பியாரி குஜ்ஜாரின் வீரம் பற்றிய இக்கதை, 1398 ஆம் ஆண்டு துருக்கிய படையெடுப்பாளர் தைமூருடன் நடந்த போரின் போது நடந்த நிகழ்வாக சித்தரிக்கப்படுகிறது.  ராம்பியாரி குஜ்ஜாரின் ஈட்டி தைமூரைத் தாக்கி, அதனால் ஏற்பட்ட தொற்றினால் தைமூர் மரணித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், வரலாற்றாய்வாளர்களோ 1405-ஆம் ஆண்டில் சீனாவின் மிங் சாம்ராஜ்யத்திற்கு எதிரான படையெடுப்பின் போது கடுமையான குளிர்காலத்தில் நோய்வாய்ப்பட்டதால் தைமூர் இறந்தார் என்று கூறுகின்றனர்.

“1398 போரில் தைமூர் காயம் அடைந்ததாலும் வீரர்கள் சோர்வுற்று பல இறப்புகள் நிகழ்ந்ததாலும், தைமூர் அப்பகுதியை விட்டு நகர்ந்தார் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், அந்த போரில் ஏற்பட்ட காயங்கள் தைமூர் மரணத்திற்கு பங்களித்திருக்க சாத்தியமில்லை; ஏனெனில் அவர் இடைப்பட்ட காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார்” என டெல்லி பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மனிஷா சௌத்ரி கூறுகிறார்.

ராஜா சுஹேல்தேவ் கதை

உத்தரப்பிரதேசத்தின் பிற பகுதிகளான பஹ்ரைச் (Bahraich) போன்றவற்றில் முன்பே மக்களிடையே கதையாடல் மூலம் நன்கு அறியப்பட்ட பதினொன்றாம் நூற்றாண்டின் ஆட்சியாளர் ராஜா சுஹேல்தேவ்-ஐ (Raja Suheldev) பா.ஜ.க பயன்படுத்திக் கொண்டது. கதையாடலின் படி, சுஹெல்தேவ் 1034-ஆம் ஆண்டில் காசி சையத் சலர் மசூத் (Ghazi Saiyyad Salar Masud) என்ற முஸ்லீம் போர்வீரரைக் கொன்றவர் என கூறப்படுகிறது. மசூத் துருக்கிய படையெடுப்பாளரான முகமது கஜினியின் மருமகன் என்று கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க பரிவார குழுக்கள் 1034 பஹ்ரைச் போரின் வெற்றியை “இந்து விஜய் உத்சவம்” (Hindu Vijay Utsav) என்று கொண்டாடின. இதன்மூலம், சுஹேல்தேவை ஒரு முஸ்லீம் படையெடுப்பாளரை தோற்கடித்து இந்து நம்பிக்கையை பாதுகாத்த பாதுகாவலராக முன்னிறுத்தியது பாசிசக் கும்பல்.

2016-ஆம் ஆண்டில், பஹ்ரைச்சில் சுஹேல்தேவ் சிலையை பா.ஜ.க தலைவர் அமித்ஷா திறந்து வைத்தார். 2018-ஆம்‌ ஆண்டில், ராஜா சுஹேல்தேவ் நினைவாக ஒரு தபால் தலையை மோடி வெளியிட்டார். யோகி ஆதித்யநாத் அரசு, மசூத்-ஐ சுஹேல்தேவ் கொன்றதாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் இருக்கும் ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்த ராஜ்பார் (Rajbhar) சாதியினரும் தலித் பிரிவைச் சேர்ந்த பாசி (Pasi) சாதியினரும் சுஹேல்தேவ் தங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த இரு சாதியினரின் வாக்குகளை கவர்வதற்காகவே பா.ஜ.க சுஹேல்தேவை முன்னிறுத்துகிறது.

சுஹேல்தேவ் குறித்து கூறப்படும் வரலாற்றின் உண்மைத்தன்மையை பற்றி உறுதியாக கூற இயலவில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காக தற்போது உருவாக்கப்படுகிறார் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


படிக்க: பொய், பித்தலாட்டம், கலவரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் அரசியல் ! | ரவி வீடியோ


இவ்வாறு இஸ்லாமிய வெறுப்பு மூலம் ‘இந்து’ மதவெறி ஊட்டி தனது இந்துத்துவா படைக்கு அடியாட்களை சேர்த்து வருகிறது இக்கும்பல். மக்களிடம் வேரூன்றுவதற்காக புனைவு நாயகர்களை உருவாக்கும் பாசிசக் கும்பல், அவர்களுக்கு சாதிய அடையாளங்களை கற்பித்து ’சாதித் தலைவர்’களாக மாற்றுகிறது. பின்பு, அந்த ’சாதித் தலைவர்’கள் இஸ்லாமிய படையெடுப்பாளர்களிடமிருந்து இந்து மதத்தை பாதுகாத்தவர்கள் என்று கதைகளை பரப்பி சாதிவெறியை மதவெறியோடு ஒன்றுகலக்கச் செய்கிறது. இதன்மூலம், சாதிய மனநிலைக்கு ஆட்பட்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பெருந்திரளானோரை தமது படைகளில் திரட்டி கொள்ள முயற்சி செய்கிறது. காவிக்கும்பலின் இந்த யுக்தியை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியது நமது கடமை.

பொம்மி
செய்தி ஆதாரம்: ஸ்கிரால்

‘One Nation’: Tamil Nadu resists!

Governor Ravi would now have understood what “Tamil Nadu” is; Tamil Nadu had made him to understand. We have to thank him for making this year’s Pongal a festival of protest, especially after the Jallikattu protests during 2017 Pongal. The year started with a political freshness.

Governor RN Ravi held a felicitation programme at the Raj Bhavan in Guindy on January 4 to appreciate the organizers and the participants of the Kasi Tamil Sangamam programme, which was organized with the aim of corrupting the history and culture of Tamil Nadu and the Tamil people. He said “In Tamil Nadu, there has been a regressive politics that we are Dravidians. Here in Tamil Nadu, a different kind of narrative has been created. Everything applicable for the whole of the country, Tamil Nadu will say no. It has become a habit” and expressed his ‘anguish’. Moreover, he said “Thamizhagam would be a more appropriate word to call Tamil Nadu. We all know that Tamil Nadu is an integral part of India”.

He had previously said “Tirukkural is not just a code of ethics and morality but also an epic holding the wisdom of eternal spirituality”, “Dravidians was mainly a geographical, rather than racial, division. But the British made it racial to suit their needs”, “‘Sanatana dharma’ that gave rise to a ‘Sanatan culture started from ‘Thamizhagam’ and spread to the entire country”. His saying that “Tamil Nadu should be called Thamizhagam” expresses the peak of his arrogance.

Ravi provoked the political forces in Tamil Nadu to a situation where they could no longer tolerate and faced the consequence for his action.


Also Read: Tripura Model Electoral Violence: Lessons the Fascists teach us!


MP TR Baalu had criticised the Governor that “Tamil Nadu, Tamils and Tamil language taste bitter for Mr. Ravi. It is for him to make a decision to leave them”. Political leaders, including K Veeramani, had also objected to the Governor’s remarks. In response to the Governor’s speech, the hashtag #TamilNadu became trending on Twitter.

On January 9, Viduthalai Chiruthaigal Katch (VCK), Tamizhaga Vazhvurimai Katchi (TVK), CPI, CPM and the Congress had come out in protest against RN Ravi, who had come to deliver the Governor’s address on the first assembly session of the year. The Assembly reverberated with slogans ‘Tamil Nadu Vazhgave’ (Long live Tamil Nadu) and ‘Engal Nadu Tamil Nadu’ (Our land is Tamil Nadu) and ‘Let’s boycott the Governor’s address’. Later, they boycotted the Governor’s address and walked out of the House. It is to be noted that the PMK, along with the DMK allies, also staged a walkout.

RN Ravi’s Vigilantism!

Even though his speech was opposed in the Assembly, the arrogant RN Ravi behaved even more arrogantly. Instead of reading the Governor address as exactly prepared by the Government of Tamil Nadu, he read it by cutting and pasting some information. In particular, he ignored the word “Tamil Nadu government” and read it as “this government”.

He ignored words like “social justice”, “self-respect”, “equality”, “rationalism”, “Dravidian model”, and the names of leaders like “Thanthai Periyar”, “Annal Ambedkar”, “Perunthalaivar Kamarajar”, “Perarignar Anna” and “Muthamizh Arignar Kalaignar”.

Since the Governor did not read the approved content, Chief Minister MK Stalin moved a resolution to retain only the printed and approved speech copy on the Assembly records. RN Ravi, who could not tolerate this, ran away even before the national anthem was played.

If RN Ravi had to oppose the DMK, he could have done it in other ways. The Governor may have even boycotted the assembly session without delivering his speech. Not sticking to the approved text is not only an act against an individual party called DMK, but also, it calls into question the sovereignty of the government of Tamil Nadu.


Also Read: ‘Freebie’ Antagonism and Abolition of Social Welfare Schemes!


Next, on January 10, in the Pongal invitation issued by the Raj Bhavan, the Governor referred to himself as “Tamizhaga Aalunar” (Governor of Tamizhagam) instead of “Governor of Tamil Nadu”. Instead of the emblem of the government of Tamil Nadu, the emblem of the union government was used. And the invitation mentioned the dates according to the Roman calendar, instead of referring to the Tamil year as ‘Tiruvalluvar Aandu’ and the month as ‘Thai’.

Thinking that he was opposing the DMK government and its allies, Ravi is challenging the people of Tamil Nadu through his actions.

A befitting reply to fascist arrogance!

Apart from the BJP and the slave AIADMK, all other parties and organisations protested against RN Ravi’s actions and there was a strong opposition from the students and people of Tamil Nadu.

Following the Governor’s arrogance on Day 1 of the Assembly, the VCK and CPM announced a demonstration to lay siege to Raj Bhavan.

On January 12, a high-level DMK delegation led by law minister S Raghupathy and accompanied by the DMK MPs TR Baalu, A Raja, P Wilson and NR Elango met President Draupadi Murmu and handed over the memorandum from the Chief Minister of Tamil Nadu to instruct the Governor to act according to the Constitution.

At several places in Chennai, long posters with the hashtag #GetOutRavi were put up by the DMK condemning the Governor. Moreover, the SDPI has put up posters demanding the resignation of the Governor and the Makkal Needhi Maiam put up posters at various places saying “Long live Tamil Nadu”. In various districts of Tamil Nadu, the DMK and its student wing protested by holding black flags and burning a photo of Governor Ravi.

In Tiruppur and Puducherry, Thanthai Periyar Dravidar Kazhagam activists protested against the Governor by raising slogans and beating the Governor’s effigy with slippers. In Pollachi, the Viduthalai Chiruthaigal Katchi (VCK) burnt an effigy of the Governor. Apart from this, protests were held on behalf of various organisations against the Governor at various places in Tamil Nadu.


Also Read: Enjoying on Tamilnadu’s Tax Money! Shameless Ravi Get Out! | People’s Power


In Tiruvallur district, lawyers staged a protest in front of the Ponneri sub-court by trampling on the Governor’s portrait.

College students and the youth started protesting against the Governor. More than 100 students from various colleges, including Chennai Presidency College, New College, Tiruttani Arts College, Edappadi Government Arts and Science College, Salem Government Arts College, staged protests against the Governor by raising slogans such as “Our Land Tamil Nadu”, “Get out Governor” and “Long live Tamil Nadu”.

In Chennai’s Pattabiram, traffic jams were witnessed on Tirupati highway as more than 100 students of Hindu College sat on the road and staged a picketing. When the students of Kalaignar Karunanidhi Government Arts College in Thiruvannamalai staged a protest in front of the college gate, they tore the Governor’s portrait and burnt it to register their objection.

Chief Minister MK Stalin in his Pongal greetings indirectly quoted the assembly event. He said, “This Pongal festival has become an extra-sweet Pongal for us because we have waged a righteous struggle guaranteed by the Constitution to protect the dignity and the self-respect of Tamil Nadu in the Assembly”. Moreover, he said, “Let us welcome the first day of the Tamil month of Thai (Pongal) by drawing rangolis outside your homes with the slogan Vaazhga Tamil Nadu (Long Live Tamil Nadu)”.

Welcoming the this, slogans like “Tamil Nadu”, “Long live Tamil Nadu”, “Our Land Tamil Nadu”, “GetOutRavi” adorned the houses of many people during Pongal. Moreover, for more than two days, social media platforms, including Twitter, were dominated by hashtags like #தமிழ்நாடு (Tamil Nadu) and #GetOutRavi.

Why the word “Tamil Nadu” infuriates Saffrons?

Earlier, most people, who used both the names Tamil Nadu and Tamizhagam interchangeably, are now consciously chanting “Tamil Nadu”. Because the difference between “Tamil Nadu” and “Tamizhagam” is not just about the word.

Many questioned that if “Nadu” in Tamil Nadu was the issue, then the “Rashtra” and “Pradesh” in the names of the states like Maharashtra and Uttar Pradesh also refers to a ‘separate region’. In the name of “one country”, “one nation”, the RSS-BJP mob is trying to establish a Hindu Rashtra by crushing the autonomy of many nationalities. The reason for their anguish is that “Tamil Nadu” remains the only nightmare for them.

That’s why the saffron mob could not digest even the name “Tamil Nadu”. Tamil Nadu is questioning their principle that “Bharat is one”. RN Ravi’s speech is an expression of this anguish.

Not just Ravi, the pro RSS-BJP newspapers, including “Dinamalar”, “Thuglak”, etc. are using “Tamizhagam” instead of “Tamil Nadu”. Ravi publically expressed the RSS-BJP’s views and got back from the Tamil people what he deserved.

Let’s drive out the fascist spy!

The RSS-BJP mob, which has been vocal in its campaigns against the DMK on “corruption”, “anti-Hindu” and “law and order break down”, was unable to bolster Ravi who had insulted the sentiments of the Tamils and has been at the receiving end. In the end, RN Ravi himself bowed down before Tamil Nadu.

“I referred to the word ‘Tamizhagam’ while dwelling upon the age-old historical cultural connect between the Tamil people and Kashi. In those days, there was no Tamil Nadu. Hence, in a historical, cultural context I referred to the word Tamizhagam as a more appropriate expression. An interpretation or inference that it was a suggestion to change the name of Tamil Nadu is erroneous and far-fetched”, Governor Ravi said in his statement.

Ravi says that he didn’t say that in that sense, and we had misunderstood. If so, if you ask why the Pongal invitation card does not bear the name Tamil Nadu and the logo of the Tamil Nadu government, then there will be no answer. After deciding to kneel down, he chose to do that with ‘dignity’!

Ravi didn’t stop there. Nowadays, wherever he goes, he has made it a habit to pronounce ‘Tamil Nadu’ as a ‘security measure’. Recently, speaking to the newly recruited IAS cadres who joined the training, R N Ravi said, “Wherever Tamils go, they love the name Tamil Nadu and the Tamil language very much”. In another meeting, while he was speaking, he chanted “Long live Tamil Nadu” and “Long live Bharat”.

Ravi, who was portrayed as a ‘hero who suppressed militant groups in Nagaland and established peace’, was made to surrender by Tamil Nadu. Ever since Ravi took over as Governor, there have been several protests against his anti-Tamil Nadu attitude. But, Ravi never explained his actions. He has been walking with fascist arrogance. It is important that such an arrogant Ravi has been made to bend down.

But this is only the beginning. RN Ravi is sitting on more than 20 Bills passed by the Tamil Nadu Assembly without giving his assent. He acted deceitfully without deciding till the very end on the files on the release of seven Tamils. How many protests were required to send the NEET Bill to the President? The number of corpses has been on the rise as the Bill banning online gambling has been dragged on till date without being approved by him.

Therefore, our victory will be incomplete without driving out this RSS-BJP spy. We need to give shape to the slogan Get-out-Ravi!

Tamil Nadu’s blow to RN Ravi should be a warning to the RSS-BJP mob, which is of the view that ‘there are no strong forces in the political arena who can oppose us’ and that ‘we can establish a Hindu Rashtra without any hindrance’.

The spies of the fascist invasion, like RN Ravi, also exist in other opposition-ruled states like Kerala, Telangana, West Bengal and Delhi. The fascist mob is creating troubles to the government elected by the people, in the name of Governor. The blow from Tamil Nadu will set an example for the people of other states; It will encourage the anti-fascist forces. Therefore, driving out the fascist spy RN Ravi should be the immediate task of all the revolutionary and democratic forces fighting the RSS-BJP in Tamil Nadu!

Baanu

ஆட்சியை பிடிக்க கலவரம் செய்வோம்: காவிக் கும்பல்களின் பார்முலா!

ந்து மதவெறி காவிகும்பல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இந்தியா முழுவதும் திட்டமிட்டு மதக்கலவரங்களை உருவாக்கி வருகிறது. மதக்கலவரங்களை இயல்பாக்கி உழைக்கும் மக்களை சாதி-மத ரீதியாக பிளவுபடுத்துகிறது காவிக் கும்பல்.

1992 பாபர் மசூதி இடிப்பு 2014-ஆம் ஆண்டில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்க வித்திட்டது. 2002 குஜராத் இனப்படுகொலையின் மூலம் அம்மாநிலத்தில் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டது. அந்த குஜராத் கலவர மாடலை மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த தொடங்கிவிட்டது.

அந்த வகையில், விநாயகர் சதுர்த்தி கலவரங்களை போல சமீப காலமாக ராம நவமியன்று கலவரங்களை நிகழ்த்துகிறார்கள். கடந்த மார்ச் 31-ஆம் தேதி வரவிருந்த ராம நவமி பண்டிகையை எதிர்நோக்கி இருந்த காவிக் குண்டர்கள் பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கர்நாடகா, குஜராத்  போன்ற மாநிலங்களில் திட்டமிட்டு மதக் கலவரங்களை நிகழ்த்தினர்.

பீகாரில் நடைபெற்ற ராம நவமி பேரணியின்போது மதக்கலவரங்களை உருவாக்கும் திட்டத்தில் இருந்த காவிக் குண்டர்கள் இஸ்லாமியர்களுடன் திட்டமிட்டே மோதல்களை உருவாக்கினர். குறிப்பாக, சசாராம் பகுதியில் காவிக் குண்டர்கள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதோடு இஸ்லாமியர்களின் வாகனங்களுக்குத் தீவைத்து பெரும் கலவரமாக மாற்றினர். அதையடுத்து மாநிலத்தின் சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்தபோதே சசாராம் பகுதில் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது இந்து மதவெறி காவிக் கும்பல். இதில், ஆறு பேர் காயமடைந்தனர். வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக இஸ்லாமியர்கள் உட்பட 160-க்கும் மேற்பட்டோரை பீகார் போலீசுத்துறை கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறது.

இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து நிகழ்ச்சி ஒன்றுக்காக பீகார் வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷா பீகார் மாநிலத்தில் இம்மாதிரியான கலவர சம்பவங்கள் நடைபெறமால் இருக்க அமைதியை நிலைநாட்ட பாரதிய ஜனதா கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என மேடையில் பேசினார்.


படிக்க: ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !


அதேபோல, மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சம்போஜி நகரிலும் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்திய காவிக் கும்பல் அங்குள்ள மசூதிகளில் நேரடியாக தாக்குதல் தொடுத்தது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்திற்கும் தீ வைத்ததுடன் இஸ்லாமியர்களை விரட்டி விரட்டி தாக்குலில் ஈடுபட தொடங்கியது. இப்படி அங்கேயும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ’இந்து’ மக்களை அணிதிரட்டி மதக் கலவரத்தை முன்நின்று நடத்தியுள்ளனர் காவிக் குண்டர்கள்.

அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனங்களையும் தீ வைத்து எரித்துள்ளது இக்கும்பல். பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நொறுக்கப்பட்டு கலவரம் அடுத்த நிலைக்கு சென்றதன் அடிப்படையில் கூடுதல் போலீஸ்படை இறக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இப்படி மாநில அரசுகளையே ஆட்டம் காண விட்டுக்கொண்டிருக்கிறது காவிக் கும்பல்.

மேற்குவங்கத்திலும் ராமநவமியை முன்னிட்டு ஹவுரா மாநகரில் மிகப்பெரிய அளவிலான ராம நவமி ஊர்வலம் நடைபெற்றது. பேரணியாக சென்ற காவிக் கும்பல் காசிபரா என்ற இடத்தின் அருகில் நெருங்கியதும் சிறுபான்மையினருக்கு எதிராக மதக் கலவரங்களை தூண்டும் வகையில் முழக்கமிட ஆரம்பித்தது.

மேலும் மசூதி அமைந்துள்ள பகுதிகளில் நின்றுகொண்டு தொடர்ந்து இஸ்லாமிய கடவுளுக்கெதிராக முழக்கமிட்டதுடன் அங்கு நின்ற இஸ்லாமியர்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட தொடங்கியது. அதோடு அங்கிருந்த கடைகளையும் சூறையாடியது. இதையடுத்து மோதலில் ஈடுபட்டதாக கூறி இஸ்லாமியர் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டனர். இப்பிரச்சினை முடிந்து இயல்புநிலைக்கு திரும்பி கொண்டிருந்த மறுநாளே ஷிப்பூர் பகுதியில் மீண்டும் மதக்கலவரங்களில் ஈடுபட்டு மோதல்களில் இறங்கினர் காவிக் குண்டர்கள். இப்படி தொடர்ந்து அம்மாநிலத்தில் சட்டஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி ஆளும் அரசிற்கு கடும் நெருக்கடியை கொடுத்தனர்.

நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ”ஊர்வலங்கள் நடத்தும்போது பாஜக – ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இதுபோன்ற மதக் கலவரங்களை ஏற்படுத்துவதற்காகவே வெளியில் இருந்து குண்டர்படைகள் அழைத்து வரப்பட்டு கைகளில் பயங்கிர ஆயுதங்களுடன் தடைகளை மீறி ஊர்வலம் நடத்துகின்றனர்.

குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கங்கள் போடுவது, ஜே.சி.பி வாகனங்களை எடுத்து சென்று இஸ்லாமிய பகுதிகளின் மசூதி, கடைகளை இடிப்பது போன்று ஓட்டிச்செல்வது என வேண்டுமென்றே தொடர் கலவரங்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்று கூறினார். ஆனால், சி.பி.எம், காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வை எதிக்காமல், மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த மம்தா பானர்ஜி தவறிவிட்டார் என்று பா.ஜ.க-வோடு இணைந்து பேசி வருகிறார்கள்.


படிக்க: ராஜஸ்தான் : ரம்சான் அன்று கலவரத்தை நடத்திய காவி பாசிஸ்டுகள் !


தொடர்ச்சியாக  இஸ்லாமியர்களுக்கும் இந்து மக்களுக்குமிடையே கலவரங்கள் மோதல்களை மாநிலம் முழுவதும் திட்டமிட்டு உருவாக்குகின்றன. அந்த அளவிற்கு நேரடியாக களத்தில் இறங்கி ஆளும் கட்சிகளின் தடைகளை மீறி தீவிரமாக செயல்பட்டு தங்களுடைய திட்டத்தின்படி மதக்கலவரங்களை நிறைவேற்றுகிறார்கள்.

இப்படி ஒரே நாளில் இந்தியா முழுவதும் திட்டமிட்டு பல்வேறு சாதி, மதக்கலவரங்களை நடத்திவரும் காவி பாசிச கும்பல், மாநிலங்கள் அமைதியாக கலவரமின்றி பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் பா.ஜ.க ஆட்சிக்கு வர வேண்டும் என்கின்றனர்.

தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ளவும் ஆட்சியில் அமர்வதற்காக காவி பாசிச கும்பல் செய்த மதக் கலவரங்கள் எண்ணிலடங்காதவை. கலவரங்களை அரங்கேற்றும் இவர்களே கலவரங்களை தடுக்கும் காவலனாக பேசிவருவது அயோக்கியத்தனமானது. இதன்மூலம் பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள்.

டேவிட்