Thursday, August 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 300

திருச்சி : டாஸ்மாக் கடையை புதிதாகத் திறக்காதே | மக்கள் போராட்டம்

இரட்டை வாய்க்கால் : ஊர் தாலியறுக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை புதிதாகத் திறக்காதே !

  • பூரண மதுவிலக்கு, படிப்படியாக கடை நேரம் குறைப்பு…
    என்பதெல்லாம் ஏமாற்று !
  • சாராயம், கஞ்சா போதையில் ஆழ்த்தி மக்களை நாசமாக்காதே !
  • அதிகாரத்தை கையிலெடுப்போம் ! டாஸ்மாக்கை விரட்டியடிப்போம் !

திருச்சி மேற்கு தாலுக்கா ரெட்டைவாய்க்கால் பகுதியில் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறப்பதை கண்டித்து, மேலத்தெரு ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இணைந்து திறக்கப்பட உள்ள கடை வாசலில் நேற்று (30.09.2019) மாலை 6.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், சிறுவர் – சிறுமியர், இளைஞர்கள், தோழர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். “பெண்களின் தாலியறுக்கும், இளைஞர்களை சீரழிக்கும் சாராயக் கடையை மூட வேண்டும்!” என முழக்கமிட்டனர். போலீசார் வந்து “கடை இங்கு திறக்கப்படாது…” என உறுதியளித்த பிறகு போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

கடை திறந்தால் வந்து மூடுவோம். என ஆவேசத்துடன் சென்றனர். இதில் மக்கள் அதிகாரத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்நிலையில் இன்றும் (01.10.2019) போலீசாரின் வாய்வழி உத்திரவாதங்களை நம்ப முடியாது என்பதை தங்கள் அனுபவத்தில் உணர்ந்துள்ள பொதுமக்கள், மீண்டும் போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதில் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அய்யா சின்னத்துரை, மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் என போராடும் அமைப்புகள், மக்களுடன் இணைந்துள்ளனர்.

இங்கு புதிதாக டாஸ்மாக் திறக்கப்படாது என்பதை எழுத்து பூர்வ உத்திரவாக வட்டாட்சியர் தரவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது போராட்டம் நடக்கும் பகுதிக்கு வட்டாட்சியர் நேரில் வந்துள்ளதால், அவரிடம் மக்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரத்தை கையிலெடுப்போம் என்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் முழக்கமானது, மக்களைப் பற்றிக் கொண்டுள்ளது. வாருங்கள் இனி உங்கள் ஊரில், உங்கள் தெருவில் உள்ள சாராயக்கடைகளையும் அகற்றுவோம்… !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மேலத்தெரு ஊர் பொதுமக்கள் (மற்றும்) 
மக்கள் அதிகாரம்
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.

நூல் அறிமுகம் : சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன் ?

சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925-ல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கிற விஷயம் முதலில் எடுத்துக்கூறவேண்டியது அவசியமல்லவா? அதற்குமுன் என்னைப் பற்றியும் சில வார்த்தைகள் சொன்னால்தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா என்பது விளங்கும்.

எனக்குச் சிறுவயது முதற்கொண்டே ஜாதியோ, மதமோ கிடையாது. அதாவது நான் அனுசரிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக்கொண்டிருந்திருப்பேன். அதுபோலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ, தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்கமாட்டேன். கடவுள் மகிழ்ச்சியடைவார் என்று கருதியோ (எனக்கு அவசியமென்று தோன்றாத) எந்தக் காரியத்தையும் செய்திருக்கவும் மாட்டேன்.

எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதியையோ, மதத்தையோ கடவுகளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னமும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பலதடவை யோசித்திருக்கிறேன். எப்பொழுதிலிருந்து எனக்கு இவைகளில் நம்பிக்கையில்லை என்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன்; கண்டுபிடிக்க முடியவே இல்லை. (நூலிலிருந்து பக்.3-4)

நான் புராணங்களையோ வேறு எந்தத் தனிப்பட்ட புத்தகங்களையோ படிப்பதில்லை என்றாலும் சைவம், வைணவம் ஆகிய இரு சமய சம்பந்தமாக உள்ள கதைகளோ சரித்திரங்களோ சதா சர்வகாலம் எங்கள் வீட்டில் இருசமய ”பக்தர்”களாலும் காலாட்சேபம் செய்யப்பட்டு வந்தது. ஏன்? பணம் வந்து குவியும்போது தர்மம் செய்து தர்மப்பிரபு பட்டம் வாங்க வேண்டாமா? ஆதலால் இவர்கள் எங்கள் வீட்டில் குவிந்துகிடப்பார்கள். என் தாயார் இவர்கள் அளப்புகளை அதக ”பக்தி சிரத்தை” யுடன் கேட்டுக் கொண்டே இருப்பார். தகப்பனாருக்கு இது ஒரு பெருமையாகவும் திருப்தியாகவும் இருக்கும். இதனால் எனக்கு சமய சம்பந்தமான விஷயங்கள் – புராண சம்பந்தமான விஷயங்கள் தானாகவே தெரியவரும். அவற்றிலிருந்தே நான் பல கேள்விகள் கேட்கவும், அவர்கள் (பக்தர்கள், பண்டிதர்கள்) பல கேள்விகளுக்குப் பதில் தாறுமாறாகவும், ஆளுக்கு ஒருவிதமாகவும் சொல்லவுமாய் இருந்ததே எனக்கு அதிக உற்சாகத்தை விளைவித்ததோடு, என்னை ஒரு ‘கெட்டிக்காரப் பேச்சுக்காரன்’ என்று அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் சொல்லுமளவுக்கு நிலைமை ஏற்பட்டுவிட்டது. என் தகப்பனார் நான் இப்படி ”விதண்டாவாதமான” கேள்வி கேட்பதில் கோபம் வந்தாலும் உள்ளுக்குள் தனது மகன் இப்படிப் புத்தியாய்ப் பேசுகிறானே என்கிற மகிழ்ச்சியுண்டு.

இந்தச் சம்பவங்கள்தான் எனக்கு மேலும் மேலும் ஜாதி மதத்திலும், கடவுள் சாஸ்திரங்கள் ஆகியவைகளிடத்திலும் நம்பிக்கையில்லாமல் போகும்படி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன். (நூலிலிருந்து பக்.8-9)

படிக்க:
காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் !
ஐதராபாத் : இந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அரங்கம் !

நிற்க, ஜாதி – மதக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டுமென்பதிலும், கடவுள் என்ற மூட நம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாத்திரம் எனக்கு உண்மையான கவலையும் உணர்ச்சியுள்ள சிரத்தையும் உண்டு. அதுவும் நான்தான் செய்யவேண்டுமென்றோ, அதற்காகத்தான் இருக்கிறேன் என்றோ கருதுவது இல்லை. என்ன காரணத்தாலோ நாம் சவுக்கியமாய் உயிர்வாழுகின்றோம். எப்படியோ உயிர்வாழ்வுக்கு மற்ற எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் இருந்து வருகின்றோம். மனிதனுக்கு இந்த இரண்டு காரியந்தான மேலான சம்பத்து ஆகும். அதாவது உழைக்க உறுதியும் ஆசையும் – அதாவது, சோம்பேறித்தனமும் கழிப்பிணித்தனமும் இல்லாத திடம் உள்ள சரீரமும் தனது வாழ்வில் எந்தத் துறைக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கவோ, தனக்கு சரியென்று தோன்றிய அபிப்பிராயங்களை, முடிவுகளைத் தனது வாழ்க்கைக்காக – வாழ்க்கை நலத்துக்காக – மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லாத – சாகும்வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத்தகுந்நிலை எதுவோ அதுவே மேற்கண்ட உயர்ந்த சம்பத்தாகும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால், (இருக்கிறதாக) நான் நினைத்துக் கொண்டிருப்பதால் அந்த நிலையை பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ, அதை செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ்விதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது.

நாளை நான் சாகும்போது எனக்கு உணர்வு இருந்தால்  நிம்மதியாகத்தான் சாவேனே ஒழிய, ஒரு குறையும் இருப்பதாக நான் கருதமாட்டேன். எதையும் நான் குறையாய் விட்டுவிட்டுப் போகிறேன் என்று அதிருப்திப்படமாட்டேன். நான் ஜீவனோடிருப்பதால் அதற்கு ஒரு வேலை இருந்துதானே ஆக வேண்டும். ஏதாவது ஒரு வேலையில்லாமல் உயிர்வாழ முடியாதே என்று கருதி ஏதோ ஒரு வேலை என்பதில் – இதை அதாவது, ஜாதி மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறேனோ அந்த வேலையைச் செய்கிறேன். இந்த உணர்ச்சி வலுத்துத்தான் அதே முக்கியமானது, முடிவானதுமான வேலையென்று இறங்கிவிட்டேன். இந்த எண்ணத்தின் மீதே ‘சுயமரியாதை இயக்கம்’ ஆரம்பித்தேன்.

இந்த எண்ணம் கைகூடினால் மனித சமூகத்தில் உள்ள போராட்டங்கள் பெரிதும் மறைந்துவிடும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ள குறைகள் நீங்கிவிடும். தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்துவிடும். உற்சாகத்துக்காக வேண்டுமானால் போராட்டங்களும் குறைகளும் அதிருப்திகளும் கவலைகளும் இருக்கலாம். அதாவது, பண்டிகைக்காக ஓய்வெடுத்துக் கொண்ட மக்கள் பலர்கூடி சதுரங்கமோ, சீட்டாட்டமோ, விளையாடும் போது யோசனைகள், கவலைகள், அதிருப்திகள் காணப்படுவது போல் இயற்கையின் ஆதிக்கத்தால் நமது வாழ்வுக்கு அவசியமில்லாததும் பாதிக்காததுமான யோசனை, கவலைகள் முதலியன காணப்படலாம். இவை எந்த மனிதனுக்கும் மனிதனல்லாத மற்ற எந்த ஜீவனுக்கும் இருந்துதான் தீரும். ஆகையால் மனிதனுக்கு எந்த நிலையிலும் வேலை, கவலையுணர்ச்சி, சுக துக்கம் இருந்தே தீரும். அதை உத்தேசித்தே இந்த வேலையை மேற்கொண்டேன். (நூலிலிருந்து பக்.11-13)

நூல் : சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன் ?
ஆசிரியர் : தந்தை பெரியார்

வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,
பெரியார் திடல், 50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.
தொலைபேசி: 8428 455 455
மின்னஞ்சல்: periyarbooks.in@gmail.com

பக்கங்கள்: 32
விலை: ரூ 8.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuval

இன்று பாடம் எப்படியிருக்க வேண்டுமென விரும்புகின்றீர்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 04

பாடவேளையின் போது குழந்தைகளுடன் காரிய ரீதியான
உறவுகளை ஏற்படுத்தும் கோட்பாடு..

தற்கு என்ன பொருள்? சோவியத் ஆசிரியரியல் நிபுணராகிய எஸ்.ஷாத்ஸ்கி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். இவரிடமிருந்து தான் இக்கருத்தை நான் பெற்றேன். “…விஷயம் என்னவெனில், ஆசிரியரியல் பிரச்சினைகள், சாதாரண மானுடப் பிரச்சினைகளிலிருந்து பெரிதும் மாறுபடுகின்றன. ஆசிரியருக்கு தன் கேள்விக்கான பதில் தெரியும், ஆசிரியர் கேட்ட கேள்விக்கான பதில் ஆசிரியருக்குத் தெரியும் என்பதை மாணவனும் அறிவான். நாம் ஒருவரையொருவர் கேள்விகள் கேட்டுக் கொள்ளும்போது நமக்குத் தெரியாததைத்தான் கேட்கிறோம். எனவே, ஆசிரியர் தெரிந்து கொண்டே கேள்வி கேட்கும் போது, இக்கேள்வி ஒரு விதமான பொறி என்னும் கருத்து மாணவனின் மனதில் உறுதிபெறுகிறது, அவன் சாராம்சத்தில் பதில் சொல்லாமல், ஆசிரியரின் மனதில் உள்ள பதிலைக் கண்டுபிடிக்க முயலுகிறான்.

நாம் நம் மாணவர்களிடம் கேட்கும் இக்கேள்விகள் இறுதியில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையில் காரிய ரீதியல்லாத உறவுகளைத் தோற்றுவிக்கின்றன. ஆசிரியர் பல அணுகுமுறைகள், பொறிகளைப் பயன்படுத்துகிறார், மாணவர்களோ இவரது நோக்கங்களைப் புரிந்து கொண்டு தற்காப்பு நிலையை மேற்கொள்ள முயலுகின்றனர். சரி, பிரச்சினையை வேறு எப்படி முன்வைப்பது? கேள்வி பதில்களில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே காரிய ரீதியான உறவுகளை, மனநிலைகளை ஏற்படுத்தலாமா? ஆசிரியர் எதைப் பற்றிக் கேட்க வேண்டும்? அவர் காரிய ரீதியான உறவுகளை ஏற்படுத்த விரும்பினால் தனக்குத் தெரியாததை, மாணவர்களுடன் கலந்து பழகுவதில் தான் அறியாததைக் கேட்க வேண்டும்.

மாணவர்கள் சந்தித்த இடர்ப்பாடுகளும், அவர்களது சந்தேகங்களும், மாணவர்களிடம் கல்வியின் பால் தோன்றும் ஆர்வங்களும் அல்லது வெறுப்புகளும் ஆசிரியருக்குத் தெரியாது. ஆகவே, ஆசிரியர் தன் மாணவர்களை எதைப் பற்றியாவது கேட்க விரும்பினால், அவர்களின் கஷ்டங்கள், சந்தேகங்கள், அக்கறைகள் போன்றவற்றைப் பற்றிக் கேட்பது தான் நல்லது. இப்படிச் செய்தால், தம் பதில்களின் மீது மாணவர்கள் பெரும் அக்கறை காட்டும்படி செய்ய முடியுமென நான் உறுதியாக நம்புகிறேன், அப்போது அவன் ஆசிரியர் இயன்றவரை அதிகமாகத் தன்னைக் கேள்விகள் கேட்க வேண்டுமென விரும்புவான், ஏனெனில் இக்கேள்விகள் அவன் வேலை செய்ய உதவுகின்றன; இதில் தான் மாணவர்கள் எப்போதும் அக்கறை கொண்டுள்ளனர்; இப்படிப்பட்ட கேள்வி பதில்களுக்குப் பின் மாணவர்களுக்கு வேலை செய்வது எளிமையாக இருக்கும்!”

மாபெரும் சோவியத் ஆசிரியரின் நூலிலிருந்து, பாட வேளையில் குழந்தைகளுடனான காரிய ரீதியான உறவுகளைப் பற்றிய கருத்துக்களைக் கண்ட நான் என்னையறியாமலேயே, நீண்ட நாட்களுக்கு முன் எப்போதோ இதே மாதிரி காரிய ரீதியற்ற கேள்விகளைக் கேட்டதையும் அக்குழந்தைகளின் முகங்களையும் எண்ணிப் பார்த்தேன். “எனக்கு எல்லாம் தெரியும், உங்களுக்குத் தெரியுமா?” என்பது தான் இக்கேள்விகளின் சாரமாயிருந்தது. இச்சமயங்களில் குழந்தைகளின் முகங்களில் சலிப்புத் தென்பட்டது, கண்களில் ஒளியில்லை, குறும்புக்காரர்கள் குறைவு, கட்டுப்பாடோ சாலச் சிறந்த தாயிருந்தது, அறையில் முன்னும் பின்னும் நடந்த படி கேள்விகளை யோசித்து கேள்! இப்படிப்பட்ட போதனை முறைக்காக யார் குற்றஞ் சொல்ல முடியும்?

இப்போது? குழந்தைகளுடனான காரிய ரீதியான உறவுகள் பற்றிய ஏதோ கோட்பாட்டை முன்வைக்கிறேன்! இக்கருத்தை வெளியிட்டவர் இது போதனைமுறைக் கோட்பாடு என்று சொல்லவில்லையே, ஆசிரியர் தனக்குத் தெரியாததைக் கேள்வியாக கேட்க வேண்டும் என்று தானே சொன்னார். நானோ எனக்கும் என்னைப் பின்பற்ற விரும்பும் மற்றவர்களுக்கும் எல்லாவற்றையும் சிக்கலாக்குகிறேன். எப்படிச் சிக்கலாக்குகிறேன்? இதோ நீங்களே பாருங்கள்.

“6+2 எவ்வளவு?” என்று குழந்தைகளிடம் கேட்கிறேன்.

“எட்டு!” என்று ஒரே குரலில் பதில் வருகிறது.

“5+3?”

“எட்டு!” என்று பதில் சொல்கின்றனர்.

இந்த இடத்தில் முகத்தில் வியப்பை வெளிப்படுத்துகிறேன், சிந்தனை வசப்படுகிறேன், என் உதடுகள் எதையோ முணு முணுக்கின்றன; குழந்தைகள் தம் கண்களை அகல விரித்தபடி “என்ன நடக்கிறது?” என்று என்னைப் பார்க்கின்றனர்.

“என்ன சொல்கின்றீர்கள்? 5 + 2 எட்டா?”

அவ்வளவு தான்: “நீங்கள் ‘5 +3′ என்று சொன்னீர்கள்!”

“இல்லை, நான் அப்படிக் கேட்கவில்லை!” என்று நான் உறுதியாகச் சொல்கிறேன். ‘5+2’ எவ்வளவு என்று தான் கேட்டேன், நீங்கள் தான் ‘எட்டு’ என்றீர்கள்!”

“இல்லை, நீங்கள் ‘5+3’ என்றீர்கள். அது 8.”

“சரி, நல்லது!” என்றாலும் எனது குழப்பத்தை பேச்சிலும் முகத்திலும் வெளிப்படுத்தியபடி கேட்கிறேன்:

”7+1 எவ்வளவு?”

“7+1 எட்டு.”

“மன்னியுங்கள், நான் 7+1 கேட்க விரும்பவில்லை. 4+4 எவ்வளவு என்று கேட்க விரும்பினேன்.”

“4+4 எட்டுதான்.”

“என்ன நீங்கள், எல்லாவற்றிற்கும் ‘எட்டு, எட்டு’ என்கின்றீர்கள்! ‘ஒன்பது’ அல்லது ‘பத்து’ என்று வேறு பதில் சொல்ல முடியாதா?” என்று உண்மையான குரலில் கேட்கிறேன்.

ஆனால் தம் ஆசிரியர் “ஞாபகமறதியானவர்”, “கவனக் குறைவானவர்” என்பதற்கு குழந்தைகள் பழகிவிட்டதால், நிரூபிக்கத் துவங்குகின்றனர்:

“நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் விடை 8 தான்! அப்படியிருக்கும் போது ‘ஒன்பது’, ‘பத்து’ என்று எங்களால் எப்படிச் சொல்ல முடியும்?”

“நான் எந்த கணக்குகளைத் தந்தேன்?”

“6+2, 5+3, 7+1, 4+4!”

நான் இவற்றை கரும்பலகையில் ஒரே வரிசையில் எழுதி விட்டு சிறிதே சிந்தித்து, அவற்றின் எதிரே சமன் குறியிட்டு, எட்டு என்று பெரிதாக எழுதி விட்டு பின் எனக்குள்ளேயே கூறிக் கொள்வதைப் போல் நடிக்கிறேன்: “ஆமாம், ஆமாம், எட்டுதான்!” இக்கணக்குகளைப் போட்ட அந்த குறுகிய நேரத்தில் குழந்தைகளின் முகங்களில் வியப்பும் கவலையும் மகிழ்ச்சியும் பொறுமையின்மையும் மாறி மாறி வருகின்றன. கண்கள் ஒளிர்கின்றன. சில சமயங்களிலோ வகுப்பில் யார் என்ன சொல்கின்றனர் என்பதைக் கேட்க முடியாத படி ஒரே சத்தம். ஆனால் அவர்கள் உண்மையை அறிவதைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர்.

இங்கே நான் குழந்தைகளுடன் எப்படிப்பட்ட காரிய ரீதியான உறவுகளை நிலை நாட்டினேன்? நான் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் எனக்குத் தெரியும், எனக்கு ஏதோ புதியதை சொல்லித் தருவதாக அவர்களும் நினைக்கவில்லை. அதாவது இங்கே புதியது எதுவும் இல்லை. ஆனாலும் உறவுகள் முற்றிலும் காரிய ரீதியாக இருந்தன என்று எனக்குத் தோன்றுகிறது. நான் முற்றிலும் காரிய ரீதியாக, கவலையோடு கணக்குகளைக் கொடுத்ததால், வேறொன்றை நிரூபிக்க முயன்றதால் தான் அவை இப்படி ஆயின. எனது “கவனக் குறைவு”, “ஞாபகமறதி”, “தவறுகள்” இவர்கள் மத்தியில் என்னைத் திருத்தும் நாட்டத்தை, என்னோடு விவாதம் புரியும் நாட்டத்தைத் தூண்டி விடுகின்றன.

ஏனெனில், உண்மையில் எனக்குத் தெரியாத கேள்விகளை மட்டுமே குழந்தைகளிடம் கேட்டுக் கொண்டிருக்க முடியாதே. எனவே தான் அவர்களுடன் கலந்து பழகுவதன் மூலம் அவர்கள் தம்மை எனக்குச் சரிசமமானவர்களாக உணர, அவர்கள் எனக்கு அவசியம், அவர்களின்றி எனக்குக் கஷ்டமாக இருக்கும் என்று புரிந்து கொள்ள நான் வாய்ப்பளிக்கிறேன். குழந்தைகளுடன் நான் கலந்து பழகி அனுபவம் கிடைக்கக் கிடைக்க, ஆசிரியரியல் என்பது குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி போதனையைப் பற்றிய விஞ்ஞானம் மட்டுமல்ல, இது குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி போதனைக் கலையைப் பற்றிய விஞ்ஞானம் என்ற விவாதத்திற்குரிய கருத்து நிலை சரியானது என்பதை மேன்மேலும் உறுதியாக நம்பி வருகிறேன். வகுப்பறையில் அமர்ந்து, என்னைப் பார்த்தபடியே, என்னிடமிருந்து முக்கியமான எதையோ எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தைகள் உண்மையிலேயே ஒவ்வொரு பள்ளி நாளையும் மகிழ்ச்சியோடு கழிக்க வேண்டுமென நான் விரும்பினால், தாம் வளர்க்கப்படுகிறோம், தமக்கு படிப்புச் சொல்லித் தருகின்றனர் என்பதை உணராமலேயே வளர்க்கப்பட வேண்டும், கல்வி பெற வேண்டும் என்று நான் விரும்பினால், எங்களுடைய காரிய ரீதியான உறவுகள் உறுதியானவையாக, தொடர்ச்சியானவையாக இருக்க வேண்டும் என்பதன் மீது நான் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த உறுதியையும் தொடர்ச்சியையும் பேணிக் காக்கும் அவசியம் ஏற்படும் போது நான் துணிவாக, ஈடு இணையற்ற ஆசிரியர் – நடிகராக நடிக்க வேண்டும். அதாவது, எனக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான காரிய ரீதியான உறவுகள் உண்மையானவையாக இருக்க வேண்டும், சுதந்திரமாக முடிவு செய்யும் உரிமையை இவை குழந்தைகளிடமிருந்து பறிக்கக் கூடாது, பாடத்தில் தமது உண்மையான பங்கேற்பின் உணர்வை அவர்களிடமிருந்து பிடுங்கக் கூடாது என்பவை தான் மேற்கூறியதன் சாரமாகும். இது ஒரு எளிய காரியமல்ல, ஆனால் நான் என் தொழிலைத் தேர்ந்தெடுக்கும் முன் கலந்து பேசிய யாருமே குழந்தைகளுடன் வேலை செய்வது சிக்கலான காரியமல்ல என்று எனக்கு உறுதி தரவில்லை.

எனது ஆறு வயதுக் குழந்தைகளுடன் நான் வேறு வழிகளிலும் காரிய ரீதியான உறவுகளை நிலை நாட்டுகிறேன். எந்தப் பாடத்தை எப்படி படிக்கப் போகின்றோம் என்று அவர்களுக்குச் சொல்லி, தம் கருத்தை வெளியிட வாய்ப்பளிக்கிறேன்.

“குழந்தைகளே, இன்று என்ன கணக்குகள், பயிற்சிகள் உங்களை எதிர்நோக்கியுள்ளன பாருங்கள்! இவற்றை எல்லாம் இன்று படிக்கப் போகின்றோம்!” என்று பாட ஆரம்பத்தில் சொல்லி கரும்பலகையில் உள்ளவற்றைக் காட்டுவேன் அல்லது வாய் மொழியாக விளக்குவேன். குழந்தைகளைக் “கவரும்படி” இதைச் செய்வேன். ஒவ்வொரு வேலையும் முடிந்ததும், வரைபடத்திற்குத் திரும்பி, “இதோ இதைச் செய்தாகி விட்டது, அடித்து விடலாம்” என்பேன்.

அல்லது, “இன்று பாடம் எப்படியிருக்க வேண்டுமென விரும்புகின்றீர்கள்!” என்று கேட்பேன்.

“சிக்கலானதாக… கவர்ச்சிகரமானதாக… விந்தையானதாக… அதிகம் சிந்திக்க வைப்பதாக… சுயமாக வேலை செய்யத்தக்கதாக… விவாதிக்கத்தக்கதாக… சிரிக்கவும் இடமிருக்கும்படியாக…”

“இப்படிப்பட்ட பாடம் நடத்த உதவுவீர்களா?”

“கண்டிப்பாக!”

பாட இறுதியில் நான் கேட்பேன்: “பாடம் உங்களுக்குப் பிடித்திருந்ததா?”

பாடம் பிடிக்காவிடில், பின்வருமாறு பதில் வரும்:

“ரொம்ப இல்லை….. சுமார்… பரவாயில்லை…. சிக்கலான கேள்விகளே இல்லை… சுயமான வேலையில்லை…”

அப்போது அவர்களிடம் உதவி கோருவேன்: “என்ன ஆலோசனை சொல்கின்றீர்கள்? நாளைய பாடத்திற்கு எந்த மாதிரி கேள்விகள், கணக்குகளைத் தயாரிக்கட்டும்?”

படிக்க:
நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !
இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்

பாடம் பிடித்திருந்தாலோ இப்படிப் பதில் வரும்: “ரொம்ப….. சுவாரசியமாயிருந்தது. நன்கு விவாதித்தோம்…. சிக்கலான கணக்குகளைப் போட்டோம்… புதியதைக் கற்றுக் கொண்டோம். பல்வேறு தவறுகளைத் திருத்தினோம்.”

“குழந்தைகளே! இப்படிப் பாடம் நடத்த உதவியதற்கு நன்றி!”

“உங்களுக்கும் நன்றி!”

என் அன்பு ஆசிரியர்களே! அப்போது தான் எழுதக் கற்றுக் கொண்ட ஒரு சிறுவன் இடைவேளையில் தாழ்வாரத்தில் “சுவாரசியமான கணிதப் பாடத்திற்காக நன்றி!” என்று எழுதியதைப் படிக்கும் போது உங்களுக்கு எம்மாதிரியான உணர்ச்சிகள் ஏற்படும்? இந்தத் தருணத்தில் என்னிடம் எந்த உணர்வுகள் தோன்றுகின்றன என்று சொல்ல எனக்கு சக்தியிருக்காது, ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் என்ன நினைக்கிறேன் என்று சொல்ல முடியும்: “குழந்தைகள் என் பாடங்களில் நன்கு பழகுகின்றனர், அவர்களுக்கு சுவாரசியமாக உள்ளது. அப்படியெனில் நான் சரியான பாதையில் செல்கிறேன் என்று பொருள்”.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை !

தேசியக் குடிமக்கள் பதிவேடு:
யாருக்கும் மனநிறைவு அளிக்காத ஒரு கேடான வழிமுறை – ஹர்ஷ் மந்தேர்

சாம் மாநிலத்தில் நடைபெற்று வந்த குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலில் ஏறத்தாழ 19 இலட்சம் பேர் அந்நியர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இறுதிப் பட்டியலை பா.ஜ.க.வும் எதிர்க்கிறது. காரணம், அந்நியர்களாக அறிவிக்கப்பட்டவர்களுள் கணிசமானோர் இந்துக்கள் என்பதுதான். மேலும், இறுதிப் பட்டியலில் வந்தேறிகளான வங்கதேச முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பிடித்துவிட்டதாகவும் கூறி, இந்த இறுதிப் பட்டியலுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறது.

முஸ்லீம்களை அந்நியர்களாக முத்திரை குத்தி ஒதுக்கும் தேசியக் குடிமக்கள் பதிவேடு நடைமுறையை நாடெங்கும் கொண்டுவரவும் பா.ஜ.க. திட்டமிடுகிறது. அதற்கேற்ப குடிமக்கள் சட்டத்தைத் திருத்தவும் முயன்று வருகிறது.

ஹர்ஷ் மந்தேர்.

இதுவொருபுறமிருக்க, அசாம் குடிமக்கள் பதிவேட்டில் அந்நியர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் நிலை என்ன? அவர்களுள் முஸ்லீம்கள் நீண்டகாலத்திற்குத் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படக் கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார், மனித உரிமைகள் மற்றும் அமைதிக்கான செயல்பாட்டாளர் ஹர்ஷ் மந்தேர்.

இட்லர் யூதர்களைத் தடுப்பு முகாம்களில் (Concentration Camps) அடைத்து வைத்ததற்கு ஒப்பான நிலை இது. இட்லரின் யூத இன அழிப்பு நாஜிசக் கொள்கை இங்கு இந்து மதவெறி பாசிசமாக, சட்டப்பூர்வமாக அரங்கேறிவருகிறது.

ஹர்ஷ் மந்தேர் இத்தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் குறித்து செப்.2, ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதிய A flawed process that pleased none என்ற கட்டுரை சுருக்கமாக மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கிறது.

–  ஆசிரியர் குழு


புதுப்பிக்கப்பட்ட தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலில் தங்களது பெயர்கள் இடம்பெறாத  காரணத்தால், தங்களுக்கு என்ன நேருமோ என்ற அச்சமும் பதட்டமும் அசாமில் வசிக்கும் சுமார் 20 இலட்சம் மக்களையும் அவர்களது உற்றார் உறவினர்களையும் இறுகக் கவ்வி இருக்கிறது. ஆனால், பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்த பின்னாலும்கூட, வங்காள வம்சாவழி அசாமிய மக்களுக்குத் துளியும் நிம்மதியில்லை. ஏனெனில், பின்னாளில் அவர்கள் சட்டவிரோத வந்தேறிகள் என்று அறிவிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அசாமுக்கும் வங்காள தேசத்திற்கும் இடையிலுள்ள எல்லை வழியாக தொடர்ந்து இலட்சக்கணக்கான வங்கதேசிகள் தடையின்றிச் சட்டவிரோதமாக ஊடுருவிய வண்ணம் இருக்கிறார்கள்; அவ்வாறு வெள்ளமென ஊடுருவும் வங்கதேசிகள், அசாமின் பண்பாடு, மொழி அனைத்தையும் மூழ்கடித்து விடுவார்கள்; மேலும் தங்களை மெல்ல மெல்ல விளிம்புக்குத் தள்ளி தங்களது நிலம் மற்றும் காடுகளை விட்டே வெளியேற்றி விடுவார்கள்” என்பன போன்ற அச்சங்கள் அசாம் போராட்ட ஆதரவாளர்களின் மனதில் படிந்துபோன நம்பிக்கைகள்.  இவ்வாறு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் எண்ணிக்கை என்ன? 50 இலட்சம் முதல் ஒரு கோடி வரை எனப்  போராட்டத் தலைவர்கள் ஆளுக்கொரு கணக்கைச் சொல்லி வருகிறார்கள். ஆனால், இறுதியாகக் கணக்கிடப்பட்டிருக்கும் எண்ணிக்கையோ 20 இலட்சத்திற்கும் குறைவு. இந்தக் குறைந்த எண்ணிக்கை அவர்களைப் பெரும் சோர்வுக்கும் கடும் கோபத்துக்கும் ஆளாக்கியிருக்கிறது.

பா.ஜ.க.-வின் மைய வேலைத்திட்டம்

காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல், ராமர் கோயில் கட்டுதல் போன்றே வங்காளதேசத்தில் இருந்து “ஊடுருவியவர்களை” வெளியேற்றுதல் என்ற செயல் திட்டமும் அசாமிலும் சரி, மத்தியிலும் சரி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க.-வின் மையமான வேலைத்திட்டத்தின் ஓர் அம்சமாகும்.  ஆனால், அவர்களது வரையறையின்படி  வங்காளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அசாமிய முஸ்லீம்கள் மட்டுமே தேசத்துக்கு ஆபத்தானவர்கள்.  அதேசமயம், வங்காளத்திலிருந்து குடியேறிய இந்துக்கள் ஊடுருவல்காரர்கள் அல்ல; அவர்களை அகதிகள் என்றும், அவர்களுக்கு இந்தியா இயற்கையான தாயகம் என்றும் கூறுகிறது பா.ஜ.க. தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விலக்கப்பட்ட 19 இலட்சம் பேர்களின் அதிகாரப்பூர்வமான பகுப்பு விவரம் நம்மிடம் இல்லை. எனினும், கிடைக்கப் பெற்ற அறிகுறிகளின்படி இவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் இந்துக்கள் ஆவர்.

தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலில் தமது குடும்பத்தினர் அனைவரும் விடுபடாமல் சேர்க்கப்பட்டிருக்கின்றனரா என உறுதி செய்துகொள்ள தேஜ்பூர் நகரிலுள்ள தெங்காபஸ்தி பகுதியில் அமைந்திருக்கும் மையத்தில் குவிந்திருக்கும் பொதுமக்கள்.

அசாமிய துணை தேசியம் என்றுமே மதவாதமாக இருந்ததில்லை; வங்காளத்தில் இருந்து குடியேறிய மக்கள் இந்துக்களா, முஸ்லீம்களா என்பதைப் பற்றி அதன் ஆதரவாளர்கள் அக்கறைப்பட்டதில்லை.  ஆனால், பா.ஜ.க.வைப் பொருத்தவரையில் வங்காளத்தில் இருந்து குடியேறிய இந்துக்களின் வாக்குரிமையைப் பறிப்பது அல்லது அவர்களை வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்புவது என்ற எதுவாயினும் அச்செயல் அவர்களது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. ஏனெனில், இதன் மூலம் அவர்கள் தமது பிரதானமான வாக்கு வங்கியைத் தியாகம் செய்ய வேண்டிவருகிறது.

எனவேதான், பா.ஜ.க.-வின் மாநிலத் தலைவர்களும், மையத் தலைவர்களும் அசாமில் தமது சொந்த அரசு செயல்படுத்திய ஒரு திட்டத்தை நேர்மையற்ற முறையில் பக்கச்சார்பானது என்று கூறிப் புறக்கணிக்கிறார்கள். சான்றாவணங்கள் இல்லாத குடியேறிகள் இந்துக்களாக இருந்தால் குடியுரிமை வழங்கவும், இஸ்லாமியர்களாக இருந்தால் குடியுரிமை மறுக்கவும் வகை செய்யும் வண்ணம் குடிமக்கள் (திருத்த) மசோதாவை நிறைவேற்றிச் சட்டமாக்கினால்தான் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

மறுபுறம் சட்டவிரோதக் குடியேற்றம் பற்றிய மதிப்பீடுகள் மிகப்பெரும் அளவில் ஊதிப் பெருக்கப்பட்டவை என்று வங்காள வம்சாவளி அசாமியர்கள் நெடுநாட்களாகவே கூறிவருகிறார்கள். மேலும், பெரும்பாலான வங்காள வம்சாவழியினர் நெடுங்காலம் முன்னர் கிழக்கு வங்காளத்தையும் சேர்த்து இந்தியா ஒரு நாடாக இருந்தபோதே சட்டபூர்வமாகக் குடியேறியவர்களின் வாரிசுகள்தான் என்றும், 1971-க்கு பிந்திய சட்டவிரோதக் குடியேற்றம் என்பது மிகமிகச் சொற்பமானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கு மிக மோசமான வழிமுறைகள் அவர்கள் மீது  திணிக்கப்பட்ட பின்னரும், குடிமைப் பதிவு மறுக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவாக இருப்பதிலிருந்து, அவர்கள் இதுகாறும் கூறிவந்தது உண்மை எனத் தோன்றுகிறது.

பிறப்பு, பள்ளிப் படிப்பு மற்றும் நிலவுடமை தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் தன்னை இந்நாட்டின் குடிமகன் என்று நிரூபிக்கும் பொறுப்பு அசாம் வாழ் மக்கள் மீது சுமத்தப்பட்டுவிட்டது. பரம ஏழைகளாகவும் படிப்பறிவு அற்றவர்களாகவும் இருக்கும் கிராமப்புற மக்களுக்கு, அவர்கள் அசாமியர்களாக இருந்தாலும் வேறு எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மேற்படி ஆவணங்களை ஆய்வுக்குச் சமர்ப்பிப்பதென்பது மிகமிகக் கடினமான ஒன்று.

முஸ்லீம்களை ஒதுக்கும் பாரபட்ச நோக்கத்தோடு நாடெங்கும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவை எதிர்த்து மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

மக்கள் எப்படியோ அலைந்து திரிந்து உரிய ஆவணங்களைத் திரட்டி வெற்றிகரமாகச் சமர்ப்பித்த போதிலும், அற்பமான வேறுபாடுகளைக் கண்டுபிடித்து, நொட்டஞ்சொல்லி அவை நிராகரிக்கப்பட்டன. ஒரு வங்காளியின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்படும் போது ஏற்பட்டுவிடும் எழுத்துப்பிழை காரணமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அது போல பெரும்பான்மையான கிராம மக்கள் தங்களது பிறந்த தேதியை அறியமாட்டார்கள் என்பது உலகறிந்த விடயம். இருப்பினும், ஆவணத்தில் பதிந்துள்ள வயதில் காணப்படும் சிறு தவறு சுட்டிக்காட்டப்பட்டு, அந்த ஆவணங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் பலரிடம் சட்டபூர்வமான நில உரிமை ஆவணங்கள் இல்லை. மேலும், இந்தத் தேசியக் குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்படும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடைச்செருகலாக, அசாமிய பூர்வகுடிகள் என்ற பொத்தாம் பொதுவாகத் தெரிவுசெய்யப்பட்ட ஒரு வகையினம் அறிமுகப்படுத்தப்பட்டது. உரிய ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்க முடியாத நிலையில்கூட இவர்களுக்கு மிதமிஞ்சிய சலுகை காட்டப்பட்டது.

இவர்களது எதிர்காலம் என்ன?

வங்காள வம்சாவளி அசாமிய மக்களின் எதிர்காலம்தான் என்ன?  தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இடம் மறுக்கப்பட்டவர்கள் வெளிநாட்டவர்களுக்கான தீர்ப்பாயத்தில் (Foreigners Tribunals – FTs) மேல் முறையீடு செய்யலாம். இது அவர்களுக்குக் காட்டப்படும் இருண்ட எதிர்காலமே அன்றி, வேறல்ல.  ஏனெனில், இத்தீர்ப்பாயங்கள் வெளிப்படையான வெறுப்புணர்ச்சியுடனும் ஒருதலைப் பட்சமாகவுமே செயல்பட்டிருக்கின்றன. வெளிநாட்டவர்கள் என்று முத்திரை குத்தப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கையை முடிந்தவரை உயர்த்த வேண்டும் என்று அரசாங்கம் வாய்வழியாகத் தீர்மானிக்கும் இலக்குகளும் உத்தரவுகளும்தான் இத்தீர்ப்பாயங்களை வழி நடத்துகின்றன.

மேலும் கூடுதலான கவலை அளிக்கக்கூடிய விடயம் என்னவென்றால், தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படாதோர் என்ற ஒரு பெரும் திரளான மக்களின் வழக்குகளை அந்நியர்களுக்கான தீர்ப்பாயம் விசாரிக்கும் என்பதோடு இந்த விவகாரம்  முடியவில்லை.   இறுதிப்பட்டியலின்படி வெளியேற்றப்பட வேண்டிய வங்காள  முஸ்லீம்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ஏமாற்றமடைந்திருக்கும் மாநில அரசு, பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களையும்கூட அரசு தொடர்ந்து பரிசீலிக்கும் என்றும் பின்னாளில் அவர்கள் அந்நியர்கள் என்று இவ்வரசு கருதுமானால்,  அவர்களையும்கூட அன்னியர்களுக்கான தீர்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

உரிமைகள் அற்ற குடிமை

மிகப்பெரிய கேள்வி இதுதான். இந்த வழிமுறைகளின் இறுதியில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்” என்று அறிவிக்கப்படும் மக்களின் தலைவிதி என்ன? வங்கதேசம் அவர்களை ஏற்றுக் கொள்ளாது. இந்திய அரசு டாக்காவுடன் இது தொடர்பாகப் பேச்சு வார்த்தை எதுவும் நடத்தவில்லை. அசாம் கிளர்ச்சியின் கோரிக்கைகள் தெளிவானவை. அவை, சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிதல், (வாக்காளர் பட்டியலில் இருந்து)  நீக்குதல் மற்றும் திருப்பி அனுப்புதல் ஆகியனவாகும்.

இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தில்கூடத் தங்கவிடாமல் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்புவேன்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.  இது எவ்வாறு நிறைவேற்றப்படும்?  இவர்கள் அடையாளம் கண்டிருக்கும் 10 இலட்சக்கணக்கான மக்கள் வங்கதேசத்திற்குள் பலாத்காரமாகத் தள்ளப்படுவார்களா? அல்லது மாபெரும் தடுப்புக் காவல் மையங்களில் அடைக்கப்படுவார்களா? ஆம் என்றால், எத்தனை காலத்திற்கு?  நடைமுறை சாத்தியப்பாடு எதுவாக இருக்கக்கூடும்?  இறுதியில் அவர்கள் குடிமக்களுக்கான எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் வாழ்வதற்கு அனுமதிக்கப்படக் கூடும்.  அவர்கள் சூடு வைக்கப்பட்ட அடிமைகளைப் போல அடையாளமிடப்பட்ட மக்களாக, உரிமையற்றவர்களாக, கும்பல் வன்முறைக்கும் அரசின் மூர்க்கமான கண்காணிப்புக்கும் எளிதில் இலக்கானவர்களாக இருப்பார்கள்.

தேசியக் குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதற்கும் விரிவாக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அதற்கு அமித் ஷா அளித்த வாக்குறுதியையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவர உத்தேசித்திருக்கும் திருத்தத்துடன் தேசியக் குடிமக்கள் பதிவேட்டு நடைமுறை நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்படும்போது என்ன நடக்கும் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். இந்தத் திருத்தத்தின்படி இஸ்லாமியர்கள் தவிர, அந்நிய நாடுகளிலிருந்து குடியேறிய அனைவரும் சான்றாதாரங்கள் இல்லையென்றாலும், இந்தியராக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவார்கள்.

படிக்க:
காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் !
ஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி

தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் அந்நியர்களுக்கான தீர்ப்பாய நடைமுறைகள் தோற்றுவிக்கும் கொடிய துயரம் எனும் சூறாவளிக்குள் இந்திய முஸ்லீம்களில் ஒருபகுதியினர் வீசியெறியப்படுவதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அழித்தொழிப்பது என்பதே இதன் பொருள். மாறுபட்ட மத நம்பிக்கைகள் கொண்ட நாம் எல்லோரும் சமமாய்ச் சொந்தம் கொண்டாடிய, நாம் அறிந்த இந்தியாவின் அழிவுக்காலம் இது என்பதே இதற்குப் பொருள்.

மொழியாக்கம் : வாசு


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா பெண் சிசுக்கொலை ?

0

மிழகத்தின் சமூக வளர்ச்சிக் குறியீட்டெண்கள் அரோக்கியமாகவும், பிற இந்திய மாநிலங்களைக் காட்டிலும் மேம்பட்டதாகவும் இருப்பது இணைய விவாதங்களில் சுட்டிக்காட்டப்படுவது வழக்கம். குறிப்பாக வடக்கு vs தெற்கு விவாதம் எழும் போதோ, இந்தி Vs தமிழ் விவாதங்களின் போதோ தமிழ் இணையவாசிகள் பயன்படுத்தும் முதலும் கடைசியுமான ஆயுதம் இந்தப் புள்ளி விவரங்கள் தான். சுட்டிக்காட்டப்படும் மேற்படி புள்ளி விவரங்களில் உண்மை இருப்பதை மறுக்க முடியாது என்றாலும், புள்ளிவிவரங்கள் காட்டும் சித்திரத்தை நாம் இதுவரை நெருங்கிச் சென்று பார்த்ததில்லை.

ஸ்க்ரோல் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரை ஒன்று தமிழகத்தில் குழந்தைப் பிறப்பில் ஆண் பெண் பால் விகிதாச்சாரம் குறித்த புள்ளிவிவரங்களை நெருக்கமாகச் சென்று ஆய்வு செய்கிறது. 2014 – 16 ஆண்டு வாக்கில் இந்திய அளவில் பால் விகிதாச்சாரம் 898 – அதாவது அந்த குறிப்பிட்ட ஆண்டுகளில் பிறக்கும் ஒவ்வொரு ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கும் 898 பெண் குழந்தைகள் பிறந்தன. இதே காலப்பகுதியில் தமிழகத்தின் விகிதாச்சாரம் 915. இந்தியாவின் பெரிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒப்பிடும் போது அப்போது நமக்கு ஒன்பதாம் இடம் கிடைத்தது.

மாதிரிப்படம்

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் நிலைமை ஓரளவிற்கு மேம்பட்டுள்ளது. 2018-19 ஆண்டில் தமிழகத்தின் பால் விகிதாச்சாரம் 931 என்கிறது தேசிய சுகாதார இயக்கம் வெளியிட்டுள்ள மின்தரவுகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரம். மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது இந்த புள்ளி விவரத்தைக் கொண்டு நாம் பெருமைப் பட்டுக் கொள்ள முடியும். ஆனால் இதே புள்ளி விவரத்தை சற்றே நெருங்கிப் பார்த்தால் வேறு விதமான சித்திரம் கிடைகின்றது.

தொன்னூறாம் ஆண்டுகளின் துவக்கத்தில் நாமக்கல், விழுப்புரம், தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதாச்சாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்தது. பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டுபிடித்து கருக்கலைப்பு செய்யும் போக்கு இம்மாவட்டங்களில் உச்சத்தில் இருந்த சமயம் அது. இதனைத் தடுக்க மாநில அரசு தொட்டில் குழந்தைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும் விழுப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டிருந்தது. பட்டாதாரி பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் போன்றவை கணிசமாக பலனளித்தன. இதன் விளைவாக குறிப்பிட்ட அந்த மாவட்டங்களில் பால் விகிதாச்சாரம் மெல்ல மெல்ல அதிகரித்தது.

படிக்க:
குழந்தைகள் தமது வாழ்க்கையை வகுப்பறையிலும் தொடர்கிறார்கள் !
♦ திறந்தவெளியில் மலம் கழித்த ‘குற்றத்திற்காக’ இரு தலித் சிறுவர்கள் அடித்துக்கொலை !

ஆனால், சமீபத்திய புள்ளிவிவரங்களை நுணுகிச் சென்று ஆராய்ந்தால் மாவட்டங்களுக்கு இடையில் பெருமளவில் ஏற்றத்தாழ்வான நிலைமை நிலவுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக கிழக்கு மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கோயில்பட்டி, பரமக்குடி போன்ற மாவட்டங்களில் பால் விகிதாச்சாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2014-ம் ஆண்டு 914-ஆக இருந்த தஞ்சாவூரின் பால் விகிதாச்சாரம், 2017-ல் 950-ஆக உயர்ந்து பின் 2018-ல் 908-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதே போல், கடலூர் மாவட்டத்தில் 2013-14 ஆண்டுகளில் 848-ஆக இருந்த பால் விகிதாச்சாரம், 2017-18 ஆண்டில் 926-ஆக உயர்ந்து பின் 2019ல் 917-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் பால்விகிதாச்சாரம் சராசரிக்கு மேலும், வேறு சில மாவட்டங்கள் சராசரிக்கு கீழும் உள்ளது. “2016 – 2019 தரவுகளை பரிசீலிக்கும் போது பல மாட்டங்களில் பால் விகிதாச்சாரம் 900க்கும் கீழே இருப்பது தெரியவருகின்றது. மாவட்டங்களுக்கு இடையிலான இந்த ஏற்றத்தாழ்வான நிலைமைக்கு காரணம் கருவிலேயே பெண் சிசுக்களை கலைத்து விடுவதுதான்” என்கிறார் இத்துறை சார்ந்த வல்லுனரான சாபு ஜார்ஜ்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கருவிலேயே ஆணா பெண்ணா என்பதைக் கண்டுபிடிக்கும் போக்கு சேலம், நாமக்கல், மதுரை, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் இருந்து தற்போது கடலூர் அரியலூர் போன்ற பிற பின் தங்கிய மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. கல்வியறிவும் நகரமயமாக்கமும் அதிகரித்துள்ள பகுதிகளில் பால் விகிதாச்சாரம் உயர்ந்துள்ளதும், பின்தங்கிய பகுதிகளில் குறைந்துள்ளதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

பெண் சிசுக்களை கருக்கலைப்பு செய்வதைத் தடுக்க தமிழக சுகாதாரத் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக கருவுறும் பெண்கள் குறித்த விவரங்களை அனைத்து மருத்துவமனைகளும் அரசுக்கு தெரிவித்து பதிவு செய்து விடுகின்றன. அதே போல் கர்ப்பிணிகளின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் மும்மாத பரிசோதனை அறிக்கையும், கருவின் வளர்ச்சி நிலையும் அரசு பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றது. இதன் மூலம் யாரெல்லாம் இடையிலேயே கருவைக் கலைத்துள்ளனர் என்பதைக் கண்டறிய சாத்தியமாகின்றது.

படிக்க:
மோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன ?
♦ இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்

இன்னொரு பக்கம், சோதனை மையங்கள் கருவுற்ற குழந்தைகளின் பாலினத்தை அறிவதைத் தடுக்கும் சட்டங்களின் (Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques Act, 1994) தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், இது போன்ற கண்காணிப்பு முறைகள் அனைத்தையும் தாண்டி பல சோதனை மையங்கள் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக பெற்றோருக்குத் தெரிவிக்கின்றன – அதே போல் சட்ட விரோத கருக்கலைப்புகளும் நடந்து வருகின்றன என்பதையே புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

சட்டங்களும், கண்காணிப்புகளும் தவறு நடப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றனவே அன்றி தவறு நடப்பதற்கான மூலகாரணத்தை களைவதில்லை. இந்த புள்ளி விவரங்களின் மேல் கருத்து தெரிவிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் “மக்களிடையே விழிப்புணர்வு இன்மை, கல்வியறிவில் பின் தங்கியிருப்பது” போன்ற காரணங்கள் களையப்பட வேண்டும் எனவும், இதற்கு அரசு முழுவீச்சில் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் தீர்வாக முன்வைக்கின்றனர்.

ஆனால், இது வெறுமனே “விழிப்புணர்வு” பிரச்சாரங்களின் மூலம் மட்டுமே களையப்படக் கூடிய பிரச்சினை இல்லை. மாறாக, பெண் குழந்தைகளை சுமையாக கருதும் பார்ப்பனிய கண்ணோட்டத்திற்கு எதிரான பிரச்சாரமாகவும், கலாச்சார போராகவும் இருக்க வேண்டும். பெண்களுக்கு சம வாய்ப்பும், பாதுகாப்பும், பொருளாதார சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமூகங்களில் பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதில்லை. பார்ப்பனிய விசம் கழுத்து வரை பரவியிருக்கும் இந்திய சமூகத்தில் நிலைமை அதற்கு நேர்மாறாக உள்ளது.

அரசின் கண்காணிப்பும், சட்டரீதியான கட்டுப்பாடுகளும் ஒருபுறம் இருக்க அதற்கு இணையாக கலாச்சார தளத்தில் பார்ப்பனியத்திற்கு எதிரான முன்னெடுப்புகள் செய்யப்பட வேண்டும் என்பதையே புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.


தமிழாக்கம் : சாக்கியன்
நன்றி : ஸ்க்ரால்

காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு ?

காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. மன்றத்துக்குக் கொண்டுபோய், அதனைச் சர்வதேசப் பிரச்சினையாக மாற்றியதுதான் நேருவின் சாதனை” என்பது பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு. பிரிவு 370-ஐ செயலற்றதாக்கியதன் மூலம் நேருவின் அச்சாதனையை” முறியடித்துவிட்டார் மோடி.

காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தானால் பயிற்றுவித்து அனுப்பப்படும் சில பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று இந்திய அரசு மிகவும் கஷ்டப்பட்டு ஊதி உப்பவைத்திருந்த பலூனைத் தனது தைரியமான நடவடிக்கையின் மூலம் ஒரே நொடியில் வெடிக்கச் செய்து, பிரச்சினையைச் சர்வதேச அரங்கில் மீண்டும் பேசுபொருளாக்கிவிட்டார் மோடி. இந்தச் சாதனையில் தனக்கே தெரியாமல், அவர் நேருவை விஞ்சிவிட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையே அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த சந்திப்பு.

சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் விவகாரம் மீண்டும் ஐ.நா. மன்றத்தின் பேசுபொருளாகியிருக்கிறது. ஊரடங்கைத் தளர்த்த வேண்டும், இணையம், தொலைபேசி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், செயல்வீரர்கள், மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்” என்றெல்லாம் வலியுறுத்தியிருப்பதுடன், காஷ்மீர் மக்களுடைய எதிர்காலம் குறித்த எந்தவிதமான முடிவையும் காஷ்மீர் மக்களையும் ஈடுபடுத்தித்தான் எடுக்கவேண்டும்” என்றும் கூறுகிறது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஹை கமிசனர் மிஷல் பேசலட்டின் அறிக்கை.

ஐ.நா. தீர்மானங்களையும் சிம்லா ஒப்பந்தத்தையும் மனித உரிமைகளையும் இந்தியா மதிக்க வேண்டும். மனித உரிமை மீறல் என்பது இருதரப்புப் பிரச்சினை அல்ல. மனித உரிமை மீறல் குற்றங்கள் அனைத்தும் விசாரிக்கப்படவேண்டும்” என்று கூறியிருக்கிறது பிரிட்டிஷ் அரசு.

காஷ்மீர் பிரச்சினையை அம்மக்களின் விருப்பத்தின்படி ஐ.நா. மன்றம் தீர்க்கவேண்டும்; அமெரிக்க அரசு அதற்கான நடவடிக்கையைத் துணிவுடன் எடுக்க வேண்டும்” என்று அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் கூறியிருக்கிறார்.

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளியுறவுத்துறைப் பிரிவும் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கின்றன.

காஷ்மீரைப் பேசவிடு” என்ற முழக்கத்தின் கீழ் இந்திய அரசைக்
கண்டித்து பாகிஸ்தானிலுள்ள லாகூர் நகரில் நடந்த ஆர்ப்பாட்டம்.

காஷ்மீரைப் பேசவிடு” என்ற உலகு தழுவிய பிரச்சார இயக்கத்தை அம்னஸ்டி இன்டர்நேசனல் தொடங்கியிருக்கிறது. இவை மேற்குலகின் எதிர்வினைகள்.

காஷ்மீர் குறித்த இந்தியாவின் நிலையை அட்டியின்றி ஆதரித்து வந்த ரசியாவின் குரலும் மாறிவிட்டது. இலங்கை, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் சரி, மத்திய ஆசியாவிலுள்ள கஜகஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற இசுலாமிய நாடுகளிலும் சரி மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிரான பொதுக்கருத்து அரசியல் அரங்கில் வலுப்பெற்றிருக்கிறது.

சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் மோடி அரசை மட்டுமின்றி, மோடி அரசுக்குக் காவடி தூக்கும் இந்திய ஊடகங்களையும் காறி உமிழ்ந்திருக்கின்றன.

விரைவிலேயே இயல்பான அரசியல் தகுதிநிலைக்கு காஷ்மீர் திரும்பும் என்று நம்புவதாக” ஆகஸ்டு இறுதியில் கூறிய அமெரிக்க அரசின் அறிக்கை, அரசியல்வாதிகளை உடனே விடுவி, தேர்தலை உடனே நடத்து” என்று செப்டம்பர் முதல் வாரத்தில் வெளிப்படையாகவே மோடிக்கு உத்தரவிட்டிருக்கிறது. இத்தகைய கண்டனங்களைச் சமாளிக்க நாடு நாடாக அலைந்து கொண்டிருக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

இருப்பினும், பாகிஸ்தானின் கண்டனமும்,  ஐ.நா.-வில் சீனா கொண்டு வந்த தீர்மானமும் தவிர, மற்ற உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நடவடிக்கையை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடி அரசு முயற்சிக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள்
கவுன்சில் ஹை கமிசனர்
மிஷல் பேசலட்.

குறிப்பாக, வளைகுடா நாடுகள் மற்றும் தென்கிழக்காசிய இசுலாமிய நாடுகளைப் பணத்தால் அடிப்பதன் மூலம் (இந்திய மக்களை சுரண்டுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம்) அவர்களின் வாயைக் கட்டி, இசுலாமிய நாடுகளே இந்தியாவைத்தான் ஆதரிக்கின்றன என்ற பிரச்சாரத்தை நடத்துகிறது.

ரிலையன்ஸில் முதலீடு, இந்திய அரசுடன் இணைந்து பெட்ரோகெமிக்கல் ஆலைகள், உள்கட்டுமானத்துறை முதலீடுகள் எனப் பல இலட்சம் கோடி முதலீடு செய்யும் சவுதியும், ஐக்கிய அரபு எமிரேட்டுகளும் தங்களது ஆதாயம் காரணமாக மவுனம் சாதிக்கின்றன. இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் சேர்ந்து கொண்டு பாலஸ்தீனம் முதல் இராக், இரான் வரை அனைவரையும் காட்டிக்கொடுத்த ஷேக்குகள், காஷ்மீருக்கும் அதேவிதமான துரோகத்தைச் செய்கிறார்கள்.

உம்மா என்பதெல்லாம் சும்மா என்றும், சர்வதேச இசுலாமிய சகோதரத்துவம் என்பதெல்லாம் பணக்கார ஷேக்குகளின் வர்க்க நலனைக் காப்பாற்றுவதற்கான தந்திரம் என்றும் பாக். ஊடகங்களே எழுதுகின்றன. இந்த உண்மை முஸ்லீம் மக்கள் மத்தியிலேயே அம்பலமாகியிருப்பது, இத்தீமையில் விளைந்திருக்கும் ஒரு நன்மையாகும்.

♦♦♦

ட்டப்பிரிவு 370- நீக்குவது என்ற தங்களது அடிப்படைக் கொள்கையை நிறைவேற்றிவிட்டதாக மோடி அரசு ஜம்பமாக கூறிக்கொண்டாலும், ஆகஸ்டு 5- தேதியன்று அவசரமாக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு வேறு பின்புலங்களும் உள்ளன. ஜுலை தேதியன்று பாக். பிரதமர் இம்ரான்கானுடன் ஊடகங்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இருநாடுகளுக்குமிடையே பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்குமாறு மோடி தன்னிடம் கோரியதாகவும் அதற்குத் தான் மகிழ்ச்சியுடன் சம்மதிப்பதாகவும்” கூற, அதை இம்ரான் உடனே வரவேற்றார். மோடி அவ்வாறு கேட்கவில்லை என்று ஈனசுரத்தில் அவசரமாக மறுப்பு வெளியிட்டது இந்திய வெளியுறவுத்துறை.

ஆகஸ்டு 2- தேதி ஒரு நிருபரின் கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், நான் இரண்டு பேரிடமும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறேன். அவர்கள் உடன்பட்டால், நிச்சயம் நான் தலையிடுவேன்” என்று மீண்டும் அறிவித்தார். இதற்குப் பிறகு ஆகஸ்டு 5- தேதி வருகிறது மோடி அரசின் அறிவிப்பு.

அமெரிக்காவிற்கும் தாலிபானுக்கும் இடையே கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அமெரிக்கப் பிரதிநிதிகள்.

காஷ்மீர் விசயத்தில் டிரம்ப் இந்தளவு அக்கறை செலுத்தக் காரணம் இருக்கிறது. தாலிபானை ஒழிப்பதற்காக 2001- ஆப்கானுக்குப் போன அமெரிக்கா, 2000 சிப்பாய்களைப் பறிகொடுத்திருக்கிறது. ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் டிரம்ப், தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்த பாக். உதவியை நாடியிருக்கிறார். இதற்கு ஈடாக, இந்தியாவின் ஆதரவுடன் பாகிஸ்தானில் தனிநாடு கேட்டுவரும் பலூசிஸ்தான் விடுதலைப் படையைச் சர்வதேசப் பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்றும் காஷ்மீர் பிரச்சினையை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் பாக். பேரம் பேசியிருக்கிறது. பலூச் விடுதலைப் படையைச் சர்வதேச பயங்கரவாத இயக்கமென்று அமெரிக்கா ஜூலை மாதமே அறிவித்துவிட்டது. இரண்டாவது கோரிக்கையின் விளைவுதான் டிரம்பின் காஷ்மீர் பஞ்சாயத்து குறித்த பேச்சு.

மூன்றாம் தரப்பின் தலையீட்டை ஏற்கமாட்டோம் என்பது இந்தியாவின் வெற்று வீராப்பு. வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா தலையிட்டுத்தான் கார்கில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இன்று மோடி இப்படி வீராப்பு பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆகஸ்டு 20 தேதியன்று டிரம்ப் காஷ்மீர் குறித்து அளித்த பேட்டியில், காஷ்மீர் அபாயகரமான நிலையில் உள்ளது, அங்குள்ள முஸ்லீம் மக்கள் ஆட்சியாளர்களை விரும்பவில்லை, அங்கே இந்து, முஸ்லீம் முரண்பாடு உள்ளது” என்றெல்லாம் விவரித்து விட்டு,  தான் தலையிட்டுத் தீர்வு காணத் தயாராக இருப்பதாக” மீண்டும் பேசியிருக்கிறார். ஒரு அமெரிக்க அதிபர் இந்த அளவுக்கு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டுப் பேசியது முன்னெப்போதும் நடந்திராத வெட்கக்கேடு” என்று கூறுகிறார்கள் முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள்.

அதுமட்டுமல்ல, தன்னை பாசிஸ்டு என்று இம்ரான் தாக்குகிறார், பதட்டத்தைக் கூட்டுகிறார் என்று மோடி தன்னிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்தார் என்றும், உடனே இம்ரான்கானை அழைத்து தான் பேசியதாகவும் தனது பஞ்சாயத்து குறித்து டிவிட்டரில் எழுதி, மோடியின் மானத்தைக் கப்பலேற்றிவிட்டார் டிரம்ப்.

காஷ்மீர் பிரச்சனையில் டிரம்ப் அவ்வாறு பேசக் காரணம் பாகிஸ்தானின் நிர்ப்பந்தம் மட்டுமல்ல, இரான், வெனிசூலா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அமெரிக்காவின் பால் மோடி அரசு காட்டி வரும் அடிமைத்தனமான அணுகுமுறையும் டிரம்பின் இந்த அணுகுமுறைக்குக் காரணமாக அமைகின்றன.

இரான், வட கொரியா, நிகராகுவா, வெனிசுலா, ஆப்கான் என்று தலையிட்ட எல்லா நாடுகளிலும் தோல்வியைத் தழுவிய டிரம்ப், தனது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் போல்டனைப் பதவி நீக்கம் செய்து விட்டு, மீண்டும் வட கொரியாவுடனும் இரானுடனும் சமரசம் பேசவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். தங்களுடனான பேச்சுவார்த்தை முறிந்து போனது குறித்து அமெரிக்கா வருத்தப்படவேண்டியிருக்கும் என்று எச்சரித்திருக்கும் தாலிபான், தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. இதுதான் வல்லரசு அமெரிக்காவின் தற்போதைய நிலை. அத்தகைய அமெரிக்காவிடம்தான் பல்லிளிக்கிறது மோடி அரசு.

காஷ்மீர் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் தெரிவித்திருக்கும் கண்டனங்கள் சர்வதேச அரசியல் கருத்துருவாக்கத்துக்குப் பயன்படக்கூடுமேயன்றி, அந்த ஏகாதிபத்தியங்கள் காஷ்மீர் மக்களின் உரிமையை ஒருபோதும் பெற்றுத் தரப்போவதில்லை. இப்பிரச்சனையைப் பயன்படுத்தி அரசியல், பொருளாதார, இராணுவரீதியாக இந்தியாவின் கையை முறுக்கி அடையக்கூடிய ஆதாயங்களே அவர்களது இலக்காக இருக்கும். அந்த வகையில் காஷ்மீர் விவகாரத்தில் சவுதி அரேபிய ஷேக்குகள், அமெரிக்க முதலாளிகள் போன்ற அனைவரின் மவுனத்தை விலைக்கு வாங்குவதற்கு பல்லாயிரம் கோடி டாலர்களை மோடி அரசு அவர்களுக்கு வாரி வழங்கி வருகிறது. பார்லே பிஸ்கெட் வாங்க முடியாத இந்தியர்கள்தான் காஷ்மீர் பெருமைக்காக இந்த விலையைக் கொடுக்கவேண்டும்.

மூன்றாம் தரப்பின் தலையீட்டை ஏற்கமாட்டோம் என்பது இந்தியாவின் வெற்று வீராப்பு. வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா தலையிட்டுத்தான் கார்கில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. … ஒரு அமெரிக்க அதிபர் இந்த அளவுக்கு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டுப் பேசியது முன்னெப்போதும் நடந்திராத வெட்கக்கேடு.

அதுமட்டுமல்ல, மதவாத அரசியலுக்கு ஆட்படாத காஷ்மீர் இளைஞர்களும் அதற்குப் பலியாவதற்கான வாய்ப்பையும், இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் பெருகுவதற்கான வாய்ப்பையும், பாகிஸ்தான் உளவுத்துறை காஷ்மீர் பிரச்சனையில் தலையிட்டுப் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பையும் மோடி அரசின் இந்த நடவடிக்கை தோற்றுவிக்கும்.

ஆப்கானில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையை நோக்கி நகர்ந்து வரும் தாலிபான், கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாமல் முதல் முறையாக காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான இன்னொரு தோற்றுவாய்.

அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற நிலைப்பாட்டை இந்திய அரசு எப்போதும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை” என்று ராஜ்நாத் சிங் கூறியதற்குப் பதிலடியாக முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற கொள்கை எங்களுக்கு என்றைக்குமே இருந்ததில்லை” என பாக். இராணுவ ஜெனரல் அறிக்கை விடுத்திருக்கிறார்.

படிக்க:
காஷ்மீர் : நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்
ஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி

தனது தலையாய இலட்சியம் என்று கூறிக்கொள்ளும் ராமன் கோயில் விவகாரத்தை, அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பா.ஜ.க. பலமுறை பற்ற வைத்திருக்கிறது, ஆறப்போட்டுமிருக்கிறது. அதே போல அபாயகரமான பொருளாதார வீழ்ச்சியையும் பலமுனைத் தோல்வியையும் மறைப்பதற்கு காஷ்மீர் நடவடிக்கையைத் தற்போது மோடி அரசு பயன்படுத்தி வருகிறது.

கருப்புப் பண ஒழிப்பு என்று சித்தரிக்கப்பட்ட பண மதிப்பழிப்பு நடவடிக்கை எப்படிச் சிறுதொழில், சுய தொழில்களை ஒழித்துக் கட்டியதோ அதே போல, காஷ்மீரின் உரிமை பறிப்பு என்று இந்தியர்கள் கருதிக் கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை, இந்தியர்களின் உரிமை பறிப்பில் வந்து முடியும். தேசவெறி, போர், பயங்கரவாதம் என்ற பேரழிவுப் பாதைக்குள் இந்தியாவை இழுத்துச் செல்லும். தங்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கே இந்தியர்கள் அனைவரும் காஷ்மீர் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தாக வேண்டும்.

– சூரியன்


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

பகவத்கீதையை திணிக்காதே ! மதுரை ஆர்ப்பாட்டம் – தோழர்கள் கைது !

1

ண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தில் தத்துவ பாடம் என்ற பெயரில் கீதையை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதிக்கு எதிராக, காவல்துறையின் தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடத்திய மதுரை ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக மதுரை தெற்கு வாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்த காவல்துறை, நேற்று (29.09.2019) இரவு திடீரென அனுமதியை இரத்து செய்து அறிவித்தது. இதனால் தடையை மீறி இன்று (30.09.2019) காலை 11 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

படிக்க:
பகவத்கீதை – புராணக்கதைகளை பொறியியல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கு ! CCCE கண்டனம்
♦ மோடி வரும் பின்னே ! #gobackmodi வரும் முன்னே !

தோழர்களை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை, தன்னை ஆர்.எஸ்.எஸ் இன் இளைய பங்காளி என அடையாளம் காட்டிக் கொண்டது. அதே நேரம் தோழர்கள் எழுப்பிய முழக்கங்கள் அங்கு சுற்றுப் பகுதியில் இருந்த மக்களை கவனிக்கச் செய்தது. அம்முழக்கங்கள் காவி கும்பலை மக்களிடம் அம்பலப்படுத்திக் காட்டியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட முழக்கஙகள் :

திணிக்காதே! திணிக்காதே!
பொறியியல் படிப்பிலே
சமஸ்கிருதத்தை திணிக்காதே!

கீதை என்ற பெயரிலே
பார்ப்பன புராண புரட்டுகளை
மாணவர் மண்டையில் திணிக்காதே!

உழைக்கும் மக்களை சாதிகளாக
பிளவு படுத்தும் கீதையை,
அம்பேத்காரும் பெரியாரும்
காரித் துப்பிய கீதையை,
பொறியியல் கல்வியில் சேர்க்காதே!

சூத்திரன் படிக்கக் கூடாது
என்று சொல்லும் கீதையை
பாடத்திலே சேர்க்காதே!
பொறியியல் மாணவரை
பார்ப்பன அடிமை ஆக்காதே!

நட்டும், போல்ட்டும், மின்னணுவும்
கீதை தந்த தத்துவமா?
‘எல்லாம் மாயை’ என்னும் கீதையை
படித்தால் பல்பு எரியுமா?

ஹவ்டி மோடி! ஹவ்டி மோடி!
பதில் சொல்! பதில் சொல்!

கிருஷ்ணன் என்ன இஞ்சீனீயரா?
கீதை என்ன அறிவியலா?
பதில் சொல்! பதில் சொல்!

படித்தவர்கள் வேலை கேட்டால்
பக்கோடாவை விற்கச் சொன்ன
காவிக் கேடி மோடியே
பக்கோடாவை விற்பதற்கு
கீதை என்ன சமையல் குறிப்பா?

ஆலை எல்லாம் மூடுறான்,
வேலையை விட்டு தொறத்துறான்!
கீதையை படித்து விட்டால்
வேலை வெட்டி கிடைக்குமா?

‘கொண்டு வந்தது எதுவும் இல்லை
கொண்டு போவது எதுவும் இல்லை’
என்று சொல்லும் கீதையை
அம்பானிக்கு கொடுத்து விட்டு
அம்பானியின் திருட்டுச் சொத்தை
பறிமுதல் செய்! பறிமுதல் செய்!

கார்ப்பரேட்டுக்கு அள்ளிக் கொடுக்கும்
காவி மாமா மோடியே!
கார்ப்பரேட்டுக்கு கீதை கொடுத்து
திருட்டுச் சொத்தை பறிமுதல் செய்!

சூரப்பா! சூரப்பா!
பொறியியல் படித்தாயா?
பஜனை மடத்தில் படித்தாயா?
அண்ணா பொறியியல் பல்கலையா?
ஆர்.எஸ்.எஸ் பஜனை மடமா?

‘அதுவும், இதுவும், எதுவும் நானே’
என்று சொல்லும் கீதையை படித்து
கர்ப்பக்கிருகத்தில் கக்கூஸ் கட்டினால்
ஆர்.எஸ்.எஸ் கும்பலே!
டீலா? நோ டீலா?

தத்துவ ஞான கீதை படித்து
இஸ்ரோ செல்லும் விஞ்ஞானிக்கு
நிலவில் லேண்டரை கண்டுபிடிக்க
பகவான் உதவி செய்வாரா?

பொறியியல் கல்வி என்பது
மக்கள் வாழ்க்கைக்காகத் தான்!
கீதை காட்டும் வழி எல்லாம்
சொந்த மக்களை கொல்வது தான்!
அறிவியல் படித்து வாழவா?
கீதை படித்து சாகவா?

பார்ப்பன புராண புரட்டுகளை
கல்வித் துறையில் திணிக்கின்ற
ஆர்.எஸ்.எஸ் இன் சதித் திட்டத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

இந்து பாசிச சித்தாந்தத்தை
மாணவர் மீது திணிக்கின்ற
காவிக் கேடி மோடியின்
முகத்திரையை கிழித்தெறிவோம்!

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
மதுரை.

மோடி வரும் பின்னே ! #gobackmodi வரும் முன்னே !

சென்னை ஐஐடி வளாகத்திற்கு வான் வழியில் வரும் மோடியை எதிர்த்து #gobackmodi இணைய வெளியில் முன்னணிக்கு வந்துவிட்டது. டிவிட்டரில் முன்னணியில் இருக்கும் #gobackmodi குறித்த செய்திகளை தொகுத்திருக்கிறோம்.

தேர்தலுக்கு முன்பு ஆந்திரப் பிரதேசத்திற்கு போலியான வாக்குறுதி. இதனால் ஆந்திராவில் பாஜகவிற்கு கிடைத்த இடங்கள் 0. தற்போது தமிழ்நாட்டிற்கு போலியான வாக்குறுதிகளுடன் மோடி வருகிறார். அங்கேயும் அவர் நிராகரிக்கப்படுவார். திராவிட மக்கள் மிகவும் உணர்வுள்ளவர்கள்

எங்களது கல்வித் துறையை அழித்து, வேலைகளை திருடி, வரிப்பணத்தை பறித்து, செல்வத்தை மூழ்கடித்து, சுற்றுச்சூழலை அழித்து, இந்தியைத் திணித்து, எமது நிறுவனங்களை பறித்து வரும் மோடி இந்தி ஏகாதிபத்தியத்தின் தந்தை. நீங்கள் தமிழ்நாட்டில் வரவேற்கப்படமாட்டீர்கள்.

அழிப்பதையும், பிரிப்பதையும் நேசிக்கும் மோடியே திரும்பிப்போ!

மோடி அரசாங்கத்தில் அனைத்துமே அபாயகரமாக இருக்கிறது.

கட்டணத்தை உயர்த்தாதே! கல்வித்துறையை முன்னேற்றுவதற்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை. எங்களை தற்குறிகளாக்காதே, மோடியே திரும்பிப் போ!

பாஜக தோற்கிறது. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை மாறிவிடுமே என்று அஞ்சுகிறேன். மோடியே திரும்பிப் போ! இது தமிழ்நாடு

தூத்துக்குடி படுகொலையை தமிழகம் ஒருபோதும் மறக்காது, மோடியே திரும்பிப் போ!

இந்தியாவிற்கு பயனற்ற மோடியே திரும்பிப் போ!

பாசிசம் எப்போதும் தோற்கடிக்கப்படவேண்டும். இதை முறியடிக்க போராடிய முன்னோர்களின் வழி நடப்போம். இந்நேரம் வேறுக்கத்தக்க, மனிதாபிமானமற்ற, வன்முறை சார்ந்த இந்துத்துவ சித்தாந்தத்தை முறியடிக்க சரியாண தருணமிது. அனைத்து தமிழர்களும் ஒன்றுபட்டு சொல்வோம், மோடியே திரும்பிப் போ!

பாசிசத்திற்கு எதிரான போரில் நமது குர்தீஸ் சகோதரர்களும், சகோதரிகளும் ஐஎஸ்ஐஎஸ்-ஐ முறியடித்தது போல நாமும் ஆர்.எஸ்.எஸ்-ன் வெறுக்கத்தக்க சித்தாந்தத்தை முறியடிப்போம்!

சென்னை விமானநிலையத்திலிருந்து 8 கீ.மீட்டர் தூரம் இருக்கும் சென்னை ஐஐடி வளாகத்திற்கு செல்ல மோடி இந்த முறையும் பறக்க வேண்டியிருக்கிறது. இதுதான் இந்துத்துவா பாசிஸ்டுகளுக்கு எதிராக தமிழகம் நடத்தும் கெத்து! மோடியே திரும்பிப் போ என்று அடிக்கடி சொல்வது போரடித்தாலும், மீண்டும் சொல்வோம் மோடியே திரும்பிப் போ!

வக்கிரம் பிடித்தவர்களின் கட்சி இது

மோடி – பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு தமிழர்கள் சொல்லும் சேதி என்னவென்றால் சில விசயங்களை மாற்றவே முடியாது! மோடியே திரும்பிப் போ!

ஒரு பிரதமர்னு கூட பார்க்காம விரட்டியா விடுரீங்க… இருங்கடா டெல்லி போனதும் 2000 ரூபாய் நோட்டு கலர மாத்துறேன்!

தூத்துக்குடி படுகொலைக்கு பதில் சொல்! மோடியே திரும்பிப்போ!

செருப்புகளும் சங்கிகளும் வெளியே விடப்படவேண்டும். இது சங்கிகளுக்கு எதிரான பிரதேசம். இதுதாண்டா தமிழ்நாடு!

தமிழகமும், இந்தியாவும் ஒருபோதும் மறக்காது! தூத்துக்குடி படுகொலையை!

இந்திய கல்வித்துறையை அழிக்கும் மோடியே திரும்பிப் போ!

அறிவார்ந்த சமூகத்திற்கு பாசிஸ்டுகள் எப்போதெல்லாம் செல்கிறார்களோ அங்கே அவர்களுக்கு ஜனநாயகம் என்ன என்பது உணர்த்தப்படும்!

சங்கிகளுக்கு ட்ரோல் படை இருக்கிறது. ஆனால் தமிழர்களோ கோபேக் மோடியை உலகளவில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்துவிட்டார்கள். கலக்குங்க மச்சான்!

மன்னியுங்கள் பிரதமரே, உங்களது பாசிச சிந்தாந்தத்தை தமிழகம் நன்கு அறியும். உங்கள் ஆட்டம் இங்கே எடுபடாது!

அதனுடன் காஷ்மீர் மக்களின் ஒடுக்குமுறையையும் நினைவில் கொள்வோம்!

கடந்த இரு மாதங்களில் பெட்ரோல் விலை ஐந்து ரூபாய் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகை! இந்தியா விரைவில் உன்னை உதைத்து துரத்தும்!

யூஜிசி-யையும், ஏஐசிடிஇ-யையும் ஒழித்து விட்டு உயர் கல்வித்துறையில் திணிக்கப்படும் பயனற்ற ஒழுங்குமுறை ஆணையங்களை வரவேற்கமுடியாது! நமது ஐஐடி நடுநிலையாகவும் அறிவியல் பூர்வமாகவும் இருக்கட்டும்.

புதிய கல்விக் கொள்கையை நிறுத்து!

திங்கட்கிழமை காலையில் இருந்து இதுதான் ட்ரெண்டிங்

இது யதார்த்தம். அது விளம்பரம்

பாஜகவை நக்கும் ஊடகங்களை விட நாய்கள் நக்குவது எவ்வளவோ மேல்!

அட்டகாசம்.
பிரதமரை குறிவைத்து தாக்க ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் திட்டம்? உளவுத்துறை தகவல்

எதுக்குயா குறிலாம் வைக்குறீங்க, கேமராவ நீட்டுங்க, அவரே குறுக்கால வந்து நின்னுடுவாரு!


தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு

மாணவர்களுடன் தோழர் பகத்சிங் 113 வது பிறந்த நாள் நிகழ்வுகள் !

0

காதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் வாழ்க என முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110.

படிக்க:
பகத்சிங் வழியில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் : பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம்
♦ பகவத்கீதை – புராணக்கதைகளை பொறியியல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கு ! CCCE கண்டனம்

***

கோவை அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி கல்லூரி (ITI) ஆகிய இரண்டு இடங்களில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங்கை நினைவு கூறும் வகையில் அவரது 113-வது பிறந்தநாள் அன்று, பகத்சிங் பற்றிய கூட்டங்கள் பு.மா.இ.மு சார்பில் நடைபெற்றது.

இன்றைய காலகட்டங்களில் பாடத் திட்டங்களிலும் விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் மற(றை)க்கப்பட்ட தலைவர்களில் ஒருவரான தோழர் பகத்சிங் பற்றி, வரலாற்றுரீதியான விஷயங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அவரைப் பற்றி வரலாற்று விவரங்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

பகத்சிங் ஒரு தீவிரவாதி என்று சித்தரிக்கப்படும் போலி வரலாற்றிலிருந்து உண்மை தன்மையை எடுத்துரைக்கும் வகையில் இந்த கூட்டம் அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை, தொடர்புக்கு : 94451 12675.

ஒகேனக்கல் : மக்களை திரட்டி சாலையை போட்ட மக்கள் அதிகாரம் !

மிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருப்பது ஒகேனக்கல். இங்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திர, கர்நாடகா, போன்ற அண்டை மாநிலங்களை சார்ந்தவர்களும், வெளிநாட்டினரும் கூட வந்து செல்கின்றனர். இப்படி புகழ்பெற்ற சுற்றுலா தலத்திற்கு செல்லும் சாலை பயணிக்க முடியாத அளவிற்கு சீர்கெட்டு உள்ளது.

இதுபோக நாட்ராம்பாளையம் முதல் ஒகேனக்கல் வரை வரக்கூடிய சாலை என்பது அடர்ந்த காடுகள் நிறைந்த சாலை ஆகும். இந்த பாதையை பெரும்பாலும் வெளிமாநிலத்தவர்கள், மற்றும் உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றர். மலை பகுதியில் இருக்கும் கொண்டை ஊசி வளைவில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு சுற்றுலாவிற்கு வரும் மக்கள் இறக்கின்றனர். சாலையில் சரியான தடுப்புகளோ, சீராகவோ இல்லை.

இதனால் 16 கிலோ மீட்டர் சாலையை கடந்து ஒகேனக்கலுக்கு வர ஒரு மணிநேரம் பிடிக்கிறது. இந்த ஆண்டு சிறிதளவு மழை பொழிந்துள்ளது இதனால் அரைகுறையாக இருந்த சாலையும் அடித்து சென்றுவிட்டது. இந்த வழியாக வரும் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் தினசரி பேருந்துகள், செல்லமுடியாத நிலை தற்போது உருவாகிவிட்டது.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை மக்கள் போராடியும், மனு கொடுத்தும் வந்தனர். அரசோ “கேளாதோர் காதில் ஊதும் சங்கு போலவே..” இருக்கிறது. கடந்த 26.06.2019 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக மக்களை திரட்டி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய போது, மக்கள் அதிகமாக வருவார்கள் பாதுகாப்பு தரமுடியாது என மொக்கையான காரணத்தை சொல்லி அனுமதி மறுத்தது போலீசு. அதுமட்டுமின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் இந்த செய்தி நாடு முழுவதும் பரவி நாறிவிடும் என்பதால் வழி எங்கும் போலிசை போட்டு மக்களை மிரட்டி ஆர்ப்பாட்டத்திற்கு வராமல் தடுத்தது அரசு.

படிக்க:
ஒக்கேனக்கல் : பேருந்து கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்ட மக்கள் அதிகாரம் !
♦ நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !

அரசுக்கு கோரிக்கை வைப்பதால் எந்த பலனும் கிடைக்காது, நாமே அதிகாரத்தை கையில் எடுத்தால் தான் காரியம் நடக்கும் என்பதை மக்களுக்கு உணர்த்தி 27.09.2019 அன்று மக்கள் அதிகாரம் தோழர்கள் 10 பேர் சென்று சாலையை நாமே போடுவோம் என மக்களிடம் எடுத்து பேசி மண்வெட்டி, கடப்பாறை இவற்றை எடுத்துக் கொண்டு களத்திற்கு சென்றனர். சாலை மிகவும் மோசமாக உள்ள இடத்தில் சீர்செய்துக் கொண்டு இருந்த போது இரண்டு தோழர்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் சாலையை சீர்செய்ய நிதி தாருங்கள் என கேட்டபோது மக்கள் தாராளமாக நிதி கொடுத்தனர்.

இவ்வாறு உண்டியல் மூலம் திரட்டப்பட்ட தொகையை கொண்டு மீண்டும் அடுத்த நாள் 28.09.2019 அன்று ஜே.சி.பி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்து சாலையை சீர்ப்படுத்தும் வேலையை மக்கள் அதிகாரம் தோழர்கள் செய்ய தொடங்கினர். முதல் நாள் பத்து பேருடன் தொடங்கிய பணியில், இரண்டாவது நாள் 30 -க்கும் அதிகமான நபர்கள் கலந்துக் கொண்டு சாலையை சீரமைத்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வருகின்ற 30-ம் தேதி வரை பணியை தொடர்வது என திட்டமிட்டு வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு சாலையை மக்களே முன்வந்து சீர்படுத்த முயற்சிக்கும் போது அரசு அதிகாரிகளும், மாவட்ட நிர்வகமும் மக்கள் செய்யும் வேலையை வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது. அது மட்டுமல்ல சுற்றுலா பயணிகளிடம் கொள்ளை அடிக்க ரோட்டை மறித்து சுங்கவரி வசூல் செய்கிறது. வாகனம் செல்ல முடியாத சாலைக்கு ஆண்டுக்கு கோடி கணக்கில் சுற்றுலா பயணிகளிடம் கொள்ளையடிக்கிறது அரசு.

மக்கள் அன்றாடம் பயன்படுத்த சாலையை சீர் அமைக்க பல முறை போராடினாலும் சாலையை போடாத எடப்பாடி அரசு. முதலாளிகளுக்கான எட்டுவழிச்சாலையை போடக்கூடாது, அது விவாசயிகளின் வாழ்க்கையை சூறையாடும் என்று எதிர்த்த போதும் போட்டே தீருவோம் என கொக்கரிக்கிறது.

தற்போது நமக்கு முன் இருப்பது ஒரே வழிதான் பெரும் திரளாக மக்களை திரட்டுவோம், சாலையை போட துப்பில்லதா அரசுக்கு எதிராக வீதிக்கு வருவோம் என்று மக்களுக்கு அறைகூறி அடுத்து கட்ட போராட்டத்திற்கு திட்டமிட்டு வருகிறது மக்கள் அதிகாரம் அமைப்பு.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நாட்ராம்பாளையம் பகுதி,
அஞ்செட்டி வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்.
தொடர்புக்கு : 91592 64938

இவனுக்கு கால்கள் இல்லை !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 09

விமானப் பயிற்சிப் பள்ளியில் மெரேஸ்யெவ் ஐந்து மாதங்களுக்கு மேல் பயின்றான். விமானத்திடல் வெண்பனியால் மூடப்பட்டுவிட்டது. விமானங்களுக்கு அடியில் சறுகுபட்டைகள் பொருத்தப்பட்டன. பறக்கும்போது அலெக்ஸேய்க்கு இலையுதிர் காலத் தரையின் பளிச்சிடும் பல் வண்ணங்களுக்குப் பதில் வெள்ளை, கறுப்பு என்ற இரண்டு நிறங்கள் மட்டுமே தென்பட்டன. ஸ்தாலின் கிராத் நகருக்கு அருகே ஜெர்மானியர் முறியடிக்கப்பட்டது, ஆறாவது ஜெர்மன் சைனியத்தின் அழிவு, பெளல்யூஸ் சிறை பிடிக்கப்பட்டது ஆகியவை பற்றிய செய்திகள் ஏற்கனவே பெருத்த ஆரவாரம் ஏற்படுத்தி அடங்கிவிட்டிருந்தன. முன் காணாத, கட்டுப்படுத்த முடியாத தாக்குதல் தெற்கே தொடங்கிவிட்டது. ஜெனரல் ரோத்மிஸ்த்ரோவின் டாங்கி வீரர்கள் போர்முனையைப் பிளந்து ஊடுருவி, துணிகரமாகத் தாக்கு நடத்தி எதிரியின் பின்புலத்தில் நெடுந்தூரம் உட்புகுந்து தகர்த்து நொறுக்கினார்கள். போர்முனையில் இத்தகைய செயல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், போர்முனைக்கு மேலே, வானில் இத்தகைய சண்டைகள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், சின்னஞ் சிறு பயிற்சி விமானங்களில் அமர்ந்து காற்றில் “கிரீச்சிடுவது” சள்ளையாக இருந்தது. மருத்துவமனை ஆளோடியில் ஒவ்வொரு நாளும் கணக்கற்ற தடவைகள் நடை பழகுவதையும் வீங்கிச் சுரீரென்ற வலித்த கால்களுடன் மஸுர்க்கா நடனமும் பாக்ஸ்டிராட் நடனமும் ஆடுவதையும் விட இது அலெக்ஸேய்க்குக் கடினமாக இருந்தது.

ஆனால் விமானப்படைக்குத் திரும்புவதாக அவன் மருத்துவமனையிலேயே சபதம் எடுத்துக் கொண்டிருந்தான். தனக்கு முன்னே ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு, துயரத்தையும் வலியையும் களைப்பையும் ஏமாற்றத்தையும் பொருட்படுத்தாமல் பிடிவாதத்துடன் அதை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவனுடைய புதிய இராணுவ முகவரிக்குப் பருத்த கடித கட்டு ஒன்று வந்தது. மருத்துவமனைக்கு வந்த கடிதங்களைக் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா இந்த முகவரிக்கு அனுப்பியிருந்தாள். அவன் எப்படியிருக்கிறான், எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறான். தன் கனவுகளை நனவாக்க அவனுக்கு வாய்த்ததா என்றெல்லாம் அவள் கேட்டிருந்தாள். !

“வாய்த்ததா இல்லையா?” என்று தன்னையே கேட்டுக் கொண்டான் அவன். இதற்குப் பதில் அளிக்காமல் கடிதங்களை வகைப் பிரிப்பதில் முனைந்தான். அனேகக் கடிதங்கள் இருந்தன. தாயாரிடமும், ஓல்காவிடமும், க்லோஸ்தியேவிடமும் இருந்து வந்திருந்தன அவை.

முதலில் தாயாரின் கடிதத்தை பிரித்தான் அலெக்ஸேய். வழக்கமாகத் தாயார் எழுதும் வகையான கடிதம் அது. அவனைப் பற்றிய கவலையும் உளப்பதைப்பும் நிறைந்தது. கிழவியின் அன்பு ததும்பும் சொற்களுக்குப் பிறகு தான் முக்கியமான விஷயம் எழுதப்பட்டிருந்தது: ஜெர்மானியர்கள் ஸ்தாலின்கிராதிலிருந்து விரட்டப்பட்டுவிட்டார்கள். அவர்கள் துரத்தியடிக்கப்பட்ட பின் ஓல்கா கமிஷினுக்கு வந்து ஐந்து நாட்கள் தங்கியிருந்தாள். ஓல்காவின் வீடு வெடி குண்டுகளால் தகர்க்கப்பட்டு விட்டபடியால் அலெக்ஸேயின் வீட்டில் அவனது தாயாருடன் இருந்தாள். இப்போது அவள் ஸேப்பர் பட்டாளத்தில் லெப்டினன்டாக வேலை செய்கிறாள். அவள் தோளில் காயம் பட்டிருந்தது. இப்போது குணமாகிவிட்டது. அவளுக்கு விருது அளிக்கப்பட்டது. என்ன விருது என்று கிழவி தெரிவிக்கவில்லை. தன்னுடன் தங்கியிருக்கையில் ஓல்கா பெரும்பாலான நேரம் உறங்கிக் கொண்டிருந்தாள் என்றும் தூங்காத வேளைகளில் அவனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள் என்றும் தாயார் எழுதியிருந்தாள். இருவரும் சேர்ந்து சீட்டுக்களைக் கொண்டு சோதிடம் பார்த்தார்களாம். கிளாவர் ராஜாவின் இதயத்தில் டயமண்ட் ராணி இருந்தாளாம். இந்த டயமண்ட் ராணியை விட மேலான மாற்றுப் பெண் தனக்கு வேண்டுமென்று தாயார் விரும்பவே இல்லையாம்.

தாயாரின் உள்ளமுருக்கும் ராஜதந்திரத்தை எண்ணி அலெக்ஸேய் புன்னகை செய்தான். அப்புறம் “டயமண்ட் ராணியிடமிருந்து” வந்தக் கடிதத்தைப் படித்தான். கடிதம் சுருக்கமாகவே இருந்தது. ஓல்கா எழுதியிருந்த செய்தி இதுதான்: “காப்பகழ்கள்” தோண்டும் வேலைக்குப் பிறகு தொழிலாளர் பட்டாளத்தின் சிறந்த வீரர்கள் முறையான ஸேப்பர் படைப் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அவள் இப்போது எஞ்சினியர் லெப்டினன்ட். இப்போது இவ்வளவு பெயர் பெற்று விளங்கும் மமாயேவ் குன்றின் அருகில் பகைவரின் குண்டு வீச்சைப் பொருட்படுத்தாமல் அரண்காப்பு அமைத்தது அவர்களுடைய படைப்பிரிவுதான். பிறகு டிராக்டர் தொழிற்சாலையின் பக்கத்தில் காப்பரண் வளையம் நிறுவியதும் அதுவே. இந்தத் தொண்டின் பொருட்டு அவர்களது படைப்பிரிவுக்குப் “போர்ச் செங்கொடி” விருது வழங்கப்பட்டது. டப்பியிட்ட உணவுப் பொருள்கள் முதல் மண்வாரிகள் வரை எல்லாச் சாமான்களும் வோல்கா ஆற்றின் மறு புறமிருந்து ஏற்றி வர வேண்டியிருந்ததாகவும் அங்கே பகைவர்களின் மெஷின்கன்கள் குண்டுமாரி பொழிந்த வண்ணமாயிருந்தன என்றும் இதனால் தாங்கள் மிகுந்த தொல்லைக்கு உள்ளாக நேர்ந்தது என்றும் எழுதியிருந்தாள் ஓல்கா. ஸ்தாலின்கிராத் நகர் முழுவதிலும் இப்போது ஒரு கட்டிடம் கூட முழுதாக மிஞ்சவில்லை என்றும், தரை குண்டும் குழியுமாகச் சந்திரனின் நிலக் காட்சிப் புகைப் படலத்தை ஒத்திருப்பதாகவும் அவள் குறிப்பிட்டிருந்தாள்.

மருத்துவமனையில் காயத்துக்குச் சிகிச்சை பெற்றபின் அவர்கள் மோட்டாரில் ஸ்தாலின் கிராத் நகரம் முழுவதையும் கடந்து சென்றார்கள். புதைப்பதற்காக மலை மலையாகக் குவிக்கப்பட்டிருந்த பாசிஸ்டுகளின் பிணங்களை அவள் கண்டாள். வழி நெடுகக் கிடந்த பிணங்களையோ, எண்ணி மாளாது! இவ்வாறு விவரித்துவிட்டு ஓல்கா மேலே எழுதியிருந்தாள்: “உன் நண்பர் டாங்கி வீரர் ஒருவர் உண்டே, அவர் பெயர் எனக்கு நினைவு வரவில்லை, அவர் தாம் என்கிறேன், அவருடைய குடும்பத்தார் எல்லோரையும் பாசிஸ்டுகள் கொன்று விட்டதாக எழுதியிருந்தாயே. அவர் இங்கே வந்து இந்தக் கோரத்தை நேரில் காணவேண்டும் என்று எனக்கு ஆசையாயிருந்தது. மெய்யாகவே சொல்லுகிறேன் இதையெல்லாம் சினிமாப்படம் பிடித்து அவர் போன்றவர்களுக்குக் காட்ட வேண்டும். அவர்களுக்காக நாங்கள் பகைவர்களை எப்படிப் பழி வாங்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவேண்டும்.” முடிவில் ஓல்கா எழுதியிருந்த வரிகள் அலெக்ஸேய்க்கு விளங்கவில்லை. அவன் அவற்றைப் பல முறை படித்தான். ஸ்தாலின் கிராத் போருக்குப் பிறகு, வீரர்களில் வீரனான அலெக்ஸேயுக்குத் தான் தகுந்தவளே எனத்தான் உணர்வதாக எழுதியிருந்தாள் ஓல்கா. ரயில் நின்ற நிலையத்தில் இவற்றையெல்லாம் அவசர அவசரமாக எழுதியிருக்கிறாள். தாங்கள் எங்கே இட்டுச் செல்லப்படும் இடம் பற்றியும், தன் புதிய இராணுவ முகவரி என்னவாயிருக்கும் என்பது பற்றியும் ஓல்காவுக்குத் தெரியவில்லை. உண்மையான வீரர்களில் வீரன் தான் அல்ல, போரின் எரி நரகில் ஆடம்பரமின்றிப் பாடுபட்டு உழைத்த சிறிய, நொய்ந்த பெண்ணான அவளே வீரர்களுக்குள் தலைசிறந்த வீரமாது என்று அவளுக்கு எழுத அலெக்ஸேய் விரும்பினான். ஆனால் அவளிடமிருந்து மறுகடிதம் வரும்வரை இதற்கான வாய்ப்பு அவனுக்கு இல்லாது போயிற்று.

…முடிவில் பயிற்சி ஆசிரியர் நவூமவ், அலெக்ஸேய்க்குப் பரீட்சை வைக்க நாள் குறித்தார். சண்டை விமானத்தின் சிறு மாதிரியான “’ஊத்-2” ரக விமானத்தை அவன் ஓட்ட வேண்டியிருந்தது. சோதனையாளராக இருந்தவர் நவூமவ் அல்ல, அலுவலகத் தலைவரே, அலெக்ஸேய் பள்ளிக்கு வந்த அன்று அவனை அவ்வளவு அதட்டல்கள் கடிந்துரைகளுடன் வரவேற்ற, செம்முகமும் பருத்த உடலும் வாய்ந்த அதே லெப்டினன்ட் கர்னலே.

தரையிலிருந்து எல்லோரும் தன்னை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். தனது விதி இப்போதே முடிவு செய்யப்படும் என்று அறிந்திருந்த அலெக்ஸேய் அன்று தன்னையே விஞ்சிவிட்டான். சின்னஞ்சிறிய, லேசான விமானத்தைக் கொண்டு வானில் அவன் இட்ட ஆபத்து நிறைந்த கோலங்களைக் கண்டு அனுபவம் முதிர்ந்த லெப்டினன்ட் கர்னல் தம் வசமின்றியே ஆகாகா என்று மெச்சினார். மெரேஸ்யெவ் விமானத்திலிருந்து இறங்கி அதிகாரிகள் முன் நிற்கையில் நவூமவினது முகத்தின் ஒவ்வொரு சுருக்கத்திலிருந்தும் சுடர்விட்ட இன்பக் கிளர்ச்சியையும் களிப்பையும் கண்டு காரியம் பழம் என்று தெரிந்து கொண்டான்.

“சிறந்த பறப்பு! ஆம், வரப்பிரசாதம் பெற்ற விமானி” என்று பாராட்டிவிட்டு, “கேள் தம்பீ, இங்கேயே பயிற்சி ஆசிரியனாக இருந்துவிடேன்? உன் போன்றவர்கள் எங்களுக்குத் தேவை” என்றார்.

மெரேஸ்யெவ் முடியாது என்று தீர்மானமாக மறுத்து விட்டான்.

“அப்படியானால் நீ முட்டாள் என்று ஆகிறது! போரிடுவது பெரிய கலை என்றாலும் இங்கே இருந்து ஆட்களுக்கு அதை நீ கற்பிக்கலாம்.”

மெரேஸ்யெவ் ஊன்றியிருந்த கைத்தடியின் மீது லெப்டினன்ட் கர்னலின் பார்வை திடீரென விழுந்தது. கோபத்தால் அவர் முகம் கருஞ்சிவப்பாகிவிட்டது.

“மறுபடியுமா? இப்படிக் கொடு அதை! நீ என்ன, கைத் தடியுடன் உல்லாசப் பயணம் செய்யக் கிளம்பிருக்கிறாயோ? உலாச்சாலையில் இருப்பதாக நினைப்போ? உத்தரவை நிறைவேற்றாததற்காகக் காவல் தண்டனை! இரண்டு நாள்!… தேர்ந்த விமானிகள் தாயத்துக் கட்டிக் கொள்ளத் தலைப்பட்டுவிட்டார்கள்…. மந்திரவாதி வேலை செய்கிறீர்களா! இரண்டு நாள் காவல் தண்டனை! கேட்டீர்களா?” என்று இரைந்தார்.

மெரேஸ்யெவின் கையிலிருந்து தடியைப் பிடுங்கி, எதன் மேல் அடித்து அதை முறிப்பது என்று சுற்றும் முற்றும் பார்த்தார்.

“தோழர் லெப்டினன்ட் கர்னல், அறிக்கை செய்து கொள்ள அனுமதியுங்கள்: இவனுக்குக் கால்கள் இல்லை“ என்று நண்பனுக்குப் பரிந்து பேசினார் பயிற்சி ஆசிரியர் நவூமவ்.

அலுவலகத் தலைவர் முன்னிலும் அதிகமாக முகம் சிவந்தார்.

“அது எப்படி? நீ வேறு என் மூளையைக் குழப்புகிறாயே மெய்தானா அலெக்ஸேய் இது?”

மெரேஸ்யெவ் ஆமாம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்துவிட்டு நிச்சயமான அபாயத்துக்கு உள்ளாகியிருந்த தனது விலைமதிப்பற்ற கைத்தடியைப் பதற்றத்துடன் பார்த்தான். வஸீலிய் வஸீலியெவிச்சின் அந்தப் பரிசுப் பொருளை அவன் சதாகாலமும் தன்னுடன் வைத்திருந்தான்.

படிக்க:
நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !
ஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் !

லெப்டினன்ட் கர்னல் நண்பர்களைச் சந்தேகத்துடன் ஓரக் கண்ணால் நோக்கினார்.

“அப்படியானால் அப்பனே… எங்கே, கால்களைக் காட்டு, பார்ப்போம்… ம் – ஆமாம்!…”

அலெக்ஸேய் மெரேஸ்யெவ் பயிற்சிப் பள்ளியிலிருந்து சிறந்த பாராட்டுரை பெற்று வெளியேறினான். சிடுசிடுப்புள்ள லெப்டினன்ட் கர்னல், அனுபவம் முதிர்ந்த போர் விமானியான இந்தப் பழங்கால மனிதர், விமானி அலெக்ஸேயின் அருஞ்செயலின் பெருமையை வேறு எவரையும் விடச் சிறப்பாக மதிப்பிட வல்லராயிருந்தார். புகழுரைகளில் அவர் சற்றும் சிக்கனம் பிடிக்கவில்லை. தமது மதிப்புரையில் அவர் மெரேஸ்யெவை “தேர்ச்சியும் அனுபவமும் உளத்திண்மையும் கொண்ட விமானி வகையில் ‘எந்த வித விமானத்திலும்’ பணியாற்றத் தகுதி உள்ளவன்” எனச் சிபாரிசு செய்தார்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !

நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !

ம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசமைப்புச் சட்டம் 370-வது பிரிவின் முக்கியக் கூறுகளை நீக்கி, அச்சட்டப்பிரிவைச் செயலற்றதாக்கிவிட்ட மோடி அரசின் நடவடிக்கையை ஆதரிக்கும் வலதுசாரிகள் அனைவரும், அச்சட்டப் பிரிவின் காரணமாகத்தான் காஷ்மீரில் தீவிரவாதம் வளர நேரிட்டதாகவும் ஏறத்தாழ 40,000 பேர் இறந்து போனதற்கும் அச்சட்டப் பிரிவுதான் காரணமென்றும்” வாதாடி வருகிறார்கள்.

1990 தொடக்கத்தில் காஷ்மீரின் சிறீநகரிலுள்ள பிஜ்பெஹரா பகுதியில் பொதுமக்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின்
சடலங்கள். (கோப்புப் படம்)

காஷ்மீரின் ஒரு பகுதியை இந்தியாவுடன் இணைக்கும் அரசியல் சாசனப் பிரிவு 370 செயல்பாட்டுக்கு வந்த நாளிலிருந்தே அங்கே தீவிரவாதம் இருந்து வருவதைப் போல வலதுசாரிகள் சித்தரிக்க முயலுவது வடிகட்டிய பொய். மாறாக, ஜம்மு காஷ்மீரில் 1989-க்கு பிறகுதான் ஆயுதப்போராட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் ஆரம்பமாகின. இதற்குக் காரணம்கூட 370-வது சட்டப்பிரிவு அல்ல. மாறாக, அச்சட்டப் பிரிவை மெல்லமெல்ல நீர்த்துப்போகச் செய்த காங்கிரசின் சதித்தனம், அதற்கு உடந்தையாக நடந்துகொண்ட தேசிய மாநாட்டுக் கட்சியின் துரோகம் – இவை காரணமாகத்தான் அம்மாநில மக்களிடம் இந்தியாவிற்கு எதிரான அரசியல் உணர்வும், முஸ்லீம் தீவிரவாத அமைப்புகளின்  செயல்பாடுகளும் வளரத் தொடங்கின.

இதனையடுத்து, தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் அம்மாநிலமே, குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியே இராணுவமயமாக்கப்பட்டது. இராணுவத்தின் அத்துமீறல்களுக்குச் சட்டரீதியாகப் பாதுகாப்பு கொடுக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ஜம்மு காஷ்மீரில் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் அம்மாநிலத்தில் பெருந்திரள் மக்கள் படுகொலைகளும் (massacres), கணக்கிலடங்காத போலி மோதல் கொலைகளும் நடைபெறத் தொடங்கின. 40,000-க்கும் மேற்பட்டோர் இறந்து போனதற்குப் பின்னுள்ள அரசு பயங்கரவாத நடவடிக்கைகளின் பங்கை மறைத்துவிட்டு, 370 பிரிவின் மீது பழியைப் போடுவது வரலாற்றைத் திரிக்கும் மாபெரும் மோசடியாகும்.

இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் காஷ்மீர்

2016-ம் ஆண்டில் வெளியான ஒரு புள்ளிவிவரத்தின்படி, இந்திய இராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீசு படை உள்ளிட்ட துணை இராணுவப் படைகளைச் சேர்ந்த 6,71,000 சிப்பாய்கள் துப்பாக்கிச் சனியன்களோடு காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். 370 பிரிவின் கூறுகளைச் சதித்தனமான முறையில் ரத்து செய்யும் முன்பாக, மேலும் 30,000 துருப்புகளை காஷ்மீரில் இறக்கியது, மோடி அரசு. இதன்படி, உலகிலேயே காஷ்மீர் பள்ளத்தாக்குதான் மிக அதிக எண்ணிக்கையில் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் பகுதி எனலாம்.

தெருவில் பத்து போலீசுக்காரன்கள் லத்தியோடு நிறுத்தப்பட்டிருந்தாலே, சாதாரண பொதுமக்களிடம் அது கலக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் என்பதை யாரும் மறுக்கவியலாது. எனில், காஷ்மீரின் நிலையை எண்ணிப் பார்ப்பதே கொடுங்கனவைப் போன்றது. உண்மையில் அம்மாநிலத்தில் நடந்து வருவது அறிவிக்கப்படாத இராணுவ ஆட்சிதான் என்பதற்குத் துருப்புக்களின் எண்ணிக்கையும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமுமே சாட்சி.

இந்திய இராணுவத்திற்கு எதிராகக் கல்லெறியும் காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்திய இராணுவம்
அகமது தர் என்ற காஷ்மீரியை ஜீப்பின் முன்பகுதியில் கட்டி வைத்து ஊர்வலம்விட்ட காட்சி. (கோப்புப் படம்)

அம்மாநிலத்தின் எந்தவொரு பகுதியையும் கலவரப் பகுதியாக அறிவிக்கும் உரிமையை அம்மாநிலத்தின் ஆளுநருக்கும் மைய அரசிற்கும் அளிக்கிறது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம். கலவரப்  பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இராணுவத்தின் கீழ்நிலை அதிகாரிகூட எவ்வித எச்சரிக்கையுமின்றிப் பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட முடியும். சந்தேகப்படும் யாரையும் வாரண்டு போன்ற சட்டபூர்வ முறைகள் எதுவுமின்றிக் கைது செய்து விசாரணைக்கு இழுத்துச் செல்ல முடியும். பொதுமக்களின் குடியிருப்புகளைச் சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டை நடத்தும் அதிகாரம் மட்டுமின்றி, பொதுமக்களின் வீடுகள், கடைகள், அரசின் பொதுச் சொத்துக்கள் உள்ளிட்டு எந்தவொரு சொத்தையும் தீவிரவாதிகளைத் தேடுவது என்ற பெயரில் இடித்தோ, தீவைத்தோ அழித்துவிட முடியும். இராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் அத்துமீறிய குற்றங்கள் என மாநில அரசே கருதினாலும், மைய அரசின் முன் அனுமதியின்றி, இக்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய்களின் மீதோ, அதிகாரிகளின் மீதோ வழக்குப் பதிய முடியாது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வழங்கியிருக்கும் இச்சட்டபூர்வ பாதுகாப்பைப் பயன்படுத்திக்கொண்டு 1990 முதல் ஐந்தாறு ஆண்டுகளுக்குள்ளாகவே காவ் கதால் படுகொலை (Gaw kadal massacre), ஹந்த்வாரா படுகொலை (Handwara massacre), ஜகூரா மற்றும் தெங்போரா இரட்டைப் படுகொலை (Zakoora and Tengpora massacre), ஹவால் படுகொலை (Hawal massacre), சோபூர் படுகொலை (Sopore massacre), பிஜ்பெஹரா படுகொலை (Bijbehera massacre) ஆகிய பெருந்திரள் படுகொலைகளை இராணுவமும் துணை இராணுவப் படைகளும் நடத்தின. இப்படுகொலைகளில் ஒன்றுகூட ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளின் மீது நடத்தப்பட்டவையல்ல. மாறாக, தெருக்களில் அரசியல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்களின் மீது நடத்தப்பட்டவையாகும்.

பெருந்திரள் படுகொலைகள்

4 ஜம்மு காஷ்மீர் ஆளுநராக ஜக்மோகன் பதவியேற்ற இரண்டாவது நாளில் காவ் கதால் படுகொலை நடந்தது. மத்திய ரிசர்வ் போலீசு படை தேடுதல் வேட்டை என்ற பெயரில் பெண்களை மானபங்கப்படுத்தியதையும், வகைதொகையின்றி இளைஞர்களைக் கைது செய்து இழுத்துப் போனதையும் கண்டித்து ஜனவரி 21, 1990 அன்று சிறீநகரின் காவ் கதால் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

4 காவ் கதால் படுகொலை நடந்த நான்காவது நாளிலேயே ஹந்த்வாரா படுகொலை அரங்கேற்றப்பட்டது. காவ் கதால் படுகொலையைக் கண்டித்து குப்வாரா மாவட்டத்திலுள்ள ஹந்த்வாரா நகர்ப்பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது எல்லைப் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

4 மார்ச் 1, 1990 அன்று சிறீநகரைச் சேர்ந்த ஜகூரா மற்றும் தெங்போரா ஆகிய இரு பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 47 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவிலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் எனக் கோரி சிறீநகரில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்று ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தினர் தங்கள் வாகனத்திற்கு வழிவிட மறுத்தனர் என்ற காரணத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு ஜகூரா பகுதியில் இந்திய இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

அதே நாளில் தெங்போரா பகுதியில் பேருந்துகளில் சென்றவர்கள் மீது இந்திய இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பெண்கள் உள்ளிட்டு 21 பேர் கொல்லப்பட்டனர். பேருந்தில் இருந்த சிலர் இந்தியாவிற்கு எதிராக முழக்கம் எழுப்பினார்கள் என்ற ஒரே காரணத்தை வைத்து இப்படுகொலையை நடத்தியது இந்திய இராணுவம்.

4 மே 21, 1990 அன்று காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லீம் மத குருவான மிர்வாயிஸ் முகம்மது பரூக் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது படுகொலையை காஷ்மீர் தேசத்தின் தியாகமாக அடையாளப்படுத்திய காஷ்மீர் மக்கள், அவரது இறுதி ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். அந்த இறுதி ஊர்வலத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

பத்ரிபால் போலிமோதல் படுகொலையை நினைவுகூர்ந்தும்,
அதற்கு நீதி கேட்டும் நடந்த ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

4 ஜனவரி 6, 1993 அன்று சோபூர் நகர மக்கள் மீது எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 55 பேர் கொல்லப்பட்டனர். இக்கொலைகளுக்கு அப்பால் அப்பகுதியைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கடைகளும் 50-க்கும் மேற்பட்ட வீடுகளும் சிப்பாய்களால் தாக்கப்பட்டு, தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

4 சிறீநகரில் உள்ள பிஜ்பெஹரா மசூதியை இந்திய இராணுவம் சுற்றிவளைத்ததைக் கண்டித்து அக்டோபர் 1993 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

4 இந்தியக் குடியரசு நாளான ஜனவரி 1994 அன்று, அதனைப் புறக்கணிக்கும் விதமாக குப்வாரா நகரில் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்குத் தண்டனை கொடுக்கும் விதத்தில், மறுநாள் இந்திய இராணுவம் குப்வாரா நகரப் பேருந்து நிலையப் பகுதியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

சித்திரவதை என்ற ஆயுதம்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு இணையாகப் பொது பாதுகாப்புச் சட்டம் என்ற மற்றொரு கருப்புச் சட்டம் அம்மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. முன்னது இந்திய இராணுவத்திற்கு அதிகாரமளிக்கிறதென்றால், பிந்தைய மாநில அரசின் சட்டம் மாநில போலீசுக்கு வரம்பற்ற அதிகாரத்தை அளிக்கிறது. இப்பொது பாதுகாப்புச் சட்டம் சந்தேகத்திற்குரிய நபர்களை இரண்டாண்டுகள் வரை விசாரணையின்றிச் சிறையில் தள்ளும் அதிகாரத்தை போலீசிற்கு அளிப்பதால், அரசியல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் இளைஞர்களைக் குறிவைத்து இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1989 தொடங்கி 2011 முடியவுள்ள 22 ஆண்டுகளில் ஏறத்தாழ எட்டாயிரத்திலிருந்து இருபதாயிரம் பேர் வரை பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கிறது, அம்னெஸ்டி இண்டர்நேஷனல். இச்சட்டத்தின் கீழ் 18 வயதுக்கும் கீழான சிறுவர்களைக் கைது செய்யக்கூடாது என விதிகள் இருந்தாலும், அதனை காஷ்மீர் போலீசு பொருட்டாகக் கருதுவதில்லை எனக் குறிப்பிடும் ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமூகங்களின் கூட்டமைப்பு, செப். 2011 தொடங்கி ஏப்ரல் 2017 முடியவுள்ள ஆறாண்டுகளில் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 1,086 பேரில் 623 பேர் பதின்வயதுச் சிறுவர்கள் என்ற உண்மையை அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரைக் கட்டுப்படுத்தும் கருவியாகக் கொட்டடிச் சித்திரவதைகள் பயன்படுத்தப்படுவதை அம்பலப்படுத்தி அக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசுப் படைகளால் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட 432 பேரின் நேரடிச் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த 432 பேரில் 238 பேர் தாங்கள் மின்சாரத்தைக் கொண்டு சித்திரவதை செய்யப்பட்டதையும், அவர்களுள் 127 பேர் தமது பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டதையும் வாக்குமூலங்களாக அளித்திருக்கிறார்கள். அமெரிக்க இராணுவம் போலவே இந்திய அரசுப் படைகளும் தண்ணீருக்குள் அமுக்கிச் சித்திரவதை செய்திருப்பதை 125 பேர் சாட்சியமாக அளித்திருக்கிறார்கள்.

2002- 2009- இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் மட்டும் 225 அப்பாவிகள் கொட்டடிச் சித்திரவதைகளால் கொல்லப்பட்டிருப்பதை இவ்வறிக்கை பதிவு செய்திருக்கிறது.

கைது செய்யப்படுவோரைப் பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கட்டாய ஓரினப் புணர்ச்சி உள்ளிட்ட பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதை இந்திய இராணுவமும் காஷ்மீர் போலீசும் வகைதொகையின்றிக் கையாண்டு வருவதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.

படிக்க:
காஷ்மீர் : நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்
காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்

2009 அக்டோபரில் கல்லெறியும் போராட்டத்தில் கலந்து கொண்டதாகப் பதியப்பட்ட குற்ற வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட 11 சிறுவர்களை ஒருவரோடு ஒருவர் கட்டாய ஓரினப் புணர்ச்சிக்கு ஆளாக்கியதைச் சாட்சியமாகப் பதிவு செய்திருக்கும் இவ்வறிக்கை, அதனை அரசுப் படையினர் புகைப்படமாக எடுத்து வக்கிரமாக நடந்துகொண்டதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

இக்கூட்டமைப்பிற்குச் சாட்சியம் அளித்திருக்கும் 24 பெண்களுள் 12 பெண்கள் தாங்கள் இந்திய இராணுவச் சிப்பாய்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைச் சாட்சியமாக அளித்திருக்கிறார்கள்.

போலிமோதல் கொலைகள்

கடந்த முப்பது ஆண்டுகளில் காஷ்மீரில் மட்டும் ஏறத்தாழ 8,000 பேர் வரை காணாமல் போயிருப்பதைப் பல்வேறு சமூக அமைப்புகளின் ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. காஷ்மீர் மாநில அரசும்கூட 4,587 பேர் காணாமல் போயிருப்பதாக அறிக்கை அளித்திருக்கிறது.

உள்ளூர்வாசிகளைக் கடத்திக் கொண்டுபோய் சுட்டுக்கொன்றுவிட்டு, அவர்களை அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் என்றோ, பாக்.தீவிரவாதிகள் என்றோ கூறிப் புதைத்துவிடும் அரசுப்படையினரின் மோசடிகளை சித்திசிங் போரா படுகொலை அம்பலப்படுத்தியது. காஷ்மீரில் இப்படி அடையாளம் தெரியாமல் புதைக்கப்பட்ட 2730 சடலங்கள் குறித்து காஷ்மீர் மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணையில், அப்படிப் புதைக்கப்பட்டவர்களுள் 574 பேர் உள்ளூர்வாசிகள் என்பதும், அவர்கள் அரசுப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதும் அம்பலமானது.

பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டுப் போலி மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டவர்களின் சடலங்கள் மறு உடற்கூறு ஆய்வுக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்படுகின்றன. (கோப்புப் படம்)

தீவிரவாதிகளைச் சுட்டுக் கொல்லும் சிப்பாய்களுக்கு பரிசுத் தொகையும் பதவி உயர்வும் அளிக்கப்படுவதைக் கேடாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய இராணுவம் எல்லைப் பகுதிகளில் நடத்திவரும் போலிமோதல் கொலைகள், தாளிப்பு நடவடிக்கைகள் என்ற சங்கேதச் சொல்லால் அழைக்கப்படுகின்றன. இத்தாளிப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகள் 2004- அம்பலமாகி, இந்திய இராணுவம் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அரசுப் படைகள் காஷ்மீரில் நடத்திய/நடத்திவரும் இப்பச்சைப் படுகொலைகள் சர்வதேச அளவில் அம்பலமானதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பதிலாக சிறிய ரக பெல்லட் குண்டுகளைச் சுடும் உத்திக்கு மாறியது இந்திய அரசு. ஆனால், கடந்த ஆண்டு வெளியான காஷ்மீர் குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையோ, பெல்லட் குண்டுகளைப் பீச்சியடிக்கும் துப்பாக்கிகளை ஆகப் பெரும் அபாயகரமான ஆயதமாகச் சித்தரித்திருக்கிறது. ஜூலை 2016 ஆகஸ்டு 2017 இடைப்பட்ட ஒரே ஆண்டில் மட்டும் பெல்லட் குண்டுகள் தாக்கி 17 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதையும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் உடலெங்கும் பெல்லட் ரவைகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்ததையும் அவ்வறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. பெல்லட் ரவைகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்தோரில் பெரும்பாலோர் தமது பார்வையைப் பகுதியளவிற்கோ அல்லது முழுமையாகவோ இழந்து குருடாகிவிட்டதை குடிமைச் சமூக அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.

போலி மோதலில் அல்லது கொட்டடியில் இரகசியமாகக் கொல்லப்பட்டு,அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு 574 உள்ளூர்வாசிகள் புதைக்கப்பட்டிருப்பதாக
ஜம்மு காஷ்மீர் மனித உரிமை ஆணையம் கூறியிருக்கிறது.

காஷ்மீரில் நடந்துவரும் இந்த மறைமுகமான இராணுவ ஆட்சி பொதுமக்கள் தெருவில் இறங்கி நடப்பதையே அச்சமூட்டக்கூடியதாக, உயிருக்கு உத்தரவாதமற்றதாக மாற்றிவிட்டது. கிரிக்கெட் விளையாடச் சென்ற ஜாஹித் பரூக் என்ற 16 வயது சிறுவன் நடுத்தெருவில் நாயைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டான். வாமிக் பரூக் என்ற 14 வயது சிறுவன் கண்ணீர்ப் புகைக்குண்டால் தாக்கப்பட்டு இறந்துபோனான். அதிகாலை நேரத்தில் தமது ஆப்பிள் தோட்டத்திற்குச் சென்ற ஷோபியான் நகரைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் மறுநாள் ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்கள். அவ்விரு பெண்களும் அரசுப் படைகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சுமத்தினர், காஷ்மீர் மக்கள்.

மறுக்கப்படும் நீதி

51 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட காவ் கதால் பெருந்திரள் படுகொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், இப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் காரணம் கூறப்பட்டு, இவ்வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

21 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட ஹந்த்வாரா படுகொலையில் சம்மந்தப்பட்ட சிப்பாய்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற அயோக்கியத்தனமான காரணத்தைக் கூறிக் குற்றவாளிகளை இதுநாள் வரையிலும் பாதுகாத்து வருகிறது, மைய அரசு.

51 பேர் கொல்லப்பட்ட பிஜ்பெஹரா படுகொலை நடந்து மூன்று ஆண்டுகள் கழித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் அப்போதைய தலைவர் தேசிய மனித உரிமை கமிசனுக்கு எழுதிய கடிதத்தில், இப்படுகொலைக்குக் காரணமான எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 12 சிப்பாய்கள் மீது விசாரணை நடைபெற்று, அதன் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக”க் குறிப்பிட்டிருந்தார். இதன் பின் இந்திய அரசு, தேசப் பாதுகாப்பு கருதி இவ்விசாரணையின் முடிவைத் தேசிய மனித உரிமை கமிசனுக்கு அளிக்க முடியாது” எனத் தெரிவித்ததன் அடிப்படையில், அக்கமிசன் தனது விசாரணையைக் கைவிட்டது.

1991-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் குப்வாரா மாவட்டத்திலுள்ள குனான்-போஷ்போரா பகுதியை இந்திய இராணுவம் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டை நடத்தியது. அந்நடவடிக்கையின்போது 100 பெண்கள் வரை வயது வேறுபாடின்றி இந்திய இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இச்சம்பவம் நடந்து 28 ஆண்டுகள் கழிந்த பிறகும் இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு முறையான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்த இந்திய அரசு மறுத்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநில அரசு 50 மனித உரிமை மீறல் வழக்குகளில் தொடர்புடைய அரசுப் படையினரை விசாரிப்பதற்கு மைய அரசிடம் அனுமதி கோரிய நிலையில், அவற்றுள் 47 வழக்குகளில் விசாரணை நடத்துவதற்கு அனுமதி மறுத்துவிட்ட மைய அரசு, மூன்று வழக்குகளில் முடிவெடுப்பதைத் தள்ளிப் போட்டிப்பருப்பதாக அறிவித்து, நீதி வழங்குவதைக் குழிதோண்டிப் புதைத்தது.

1994 தொடங்கி 2018 முடியவுள்ள 24 ஆண்டுகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய இராணுவத் தலைமையிடம் 1,037 முறையீடுகள் செய்யப்பட்டதில், 992 முறையீடுகளைப் போலியானவை எனத் தள்ளுபடி செய்தது, இந்திய இராணுவம். வெறும் 31 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஜம்முவைச் சேர்ந்த பார்ப்பன பண்டிட்டுகள் தமது வாழ்விடத்திலிருந்து வெளியேறியதைக் காட்டியே, பள்ளத்தாக்கு முஸ்லீம்கள் மீது இழைக்கப்பட்டு வரும் எல்லா அநீதிகளையும் நியாயப்படுத்தி வருகிறார்கள், இந்து தேசியவாதிகள்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் தமக்கு நீதி வேண்டும் என்று கோரித்தான் போராடி வருகிறார்களேயொழிய, வளர்ச்சி வேண்டும் என மைய அரசிடம் கெஞ்சிக் கொண்டிருக்கவில்லை. காஷ்மீரில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை நீக்க வேண்டும் என்பதுதான் அவர்களது உடனடி அரசியல் கோரிக்கைகளாக இருந்து வருகின்றன.

மோடி அரசோ பெயரளவில் 370 நீடிப்பதைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாமல், அதனைச் செயலற்றதாக்கிவிட்டது. மென்மேலும் துருப்புக்களை இறக்கியும் தகவல் தொடர்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பறித்தும் காஷ்மீரைத் திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றிவருகிறது. மாநிலத் தகுதியைப் பறித்து, யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரை மாற்றியதன் மூலம், அப்பகுதியை இந்திய அரசின் காலனியாக்கியிருக்கிறது.

– செல்வம்


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் !

காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் !

தென்ன காஷ்மீருக்கு மட்டும் தனிச் சட்டம்? அவனுக்கு மட்டும் கொம்பா முளைத்திருக்கிறது?  இதுதான் சட்டப்பிரிவு 370 பற்றி ஒரு பாமரனின் பார்வை. காஷ்மீரில் வெளியாள் யாரும் சொத்து வாங்க முடியாதாம்” என்று பா.ஜ.க.வினர் பேசினால், சொந்த ஊரில் சென்ட் நிலம் வாங்க முடியாதவன்கூடப் பெரிதும் அதிர்ச்சி அடைகிறான்.

தற்போது 370-ஐ செயலற்றதாக்கி, காஷ்மீரில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டார், மோடி. இதனால் உடனே மகிழ்ச்சி அடைபவர்கள் யார் என்று பார்ப்போம். விடுமுறை நாட்களுக்கு இரண்டாவது வீடு ஒன்று வேண்டும் என்று விரும்புகிறவர்களை ஜம்மு காஷ்மீர் ஈர்க்கும்” என்கிறார் மும்பையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தும் பங்கஜ் கபூர். அதாவது, கொடநாடு எஸ்டேட் போன்ற சொத்துகளை வாங்க முடிந்தவர்களுக்கு மகிழ்ச்சி என்பது இதன் பொருள்.

பல பத்தாண்டுகளாக காஷ்மீரில் வீட்டு மனை விலை உயரவே இல்லை. இந்தியாவின் சிறு நகரங்களில்கூடச் சதுர அடி 3000 ரூபாய் வரை விற்கும்போது, ஸ்ரீநகரின் மையப்பகுதியிலேயே சதுரஅடி 2300 ரூபாய்க்கு மேல் போகவில்லை” என்று வருத்தப்படுவது ஸ்ரீநகரில் உள்ள ஒரு வீட்டு உரிமையாளர் அல்ல, பிசினஸ் டுடே பத்திரிகை.

அம்பானி, அதானி முதல் எடப்பாடி, சசிகலா வரையிலான தேசபக்தர்களுடைய அடிப்படை உரிமையான சொத்து வாங்கும் உரிமையை ஒரு சட்டப்பிரிவு தடுத்து நிறுத்தியிருக்கிறது என்றால், அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?


ந்திய அரசியல் சாசனத்தின் 19 பிரிவு சொத்துரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கிறது. இந்தச் சட்டப்பிரிவு வழங்கியுள்ள உரிமைகளின் பின்னேதான் பெரும் நிலப்பிரபுக்கள் ஒளிந்து கொண்டு, இந்தியாவில் நிலச் சீர்திருத்த சட்டங்களை நீர்த்துப் போகச் செய்தனர். பெரும் பண்ணையார்கள் குவித்து வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இப்படித்தான் சட்டப்பூர்வமாகவே பாதுகாக்கப்பட்டன.

ஆனால், காஷ்மீர் மாநிலத்தில் பெரும் நிலப்பிரபுக்களும் மன்னர் குடும்பத்தினரும் தங்களுக்குச் சொந்தமாக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இவ்வாறு பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. காரணம், சட்டப்பிரிவு 370 வழங்கியிருந்த அதிகாரம். ஜம்மு காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி சொத்துரிமை அடிப்படை உரிமையாக அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான் இந்தியாவின் எந்த மாநிலத்தை விடவும் ஓரளவு குறிப்பிடத்தக்க முறையில் காஷ்மீரில் நிலச்சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் தேசிய
மாநாட்டுக் கட்சியின் கொள்கை
அறிக்கையான புதிய காஷ்மீர்
வெளியீட்டின் முகப்பு அட்டை.
(கோப்புப் படம்)

இந்தியாவின் பிற பகுதிகளில் காலனியாதிக்கத்தை எதிர்த்த போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது, காஷ்மீரில் அதனுடன் மன்னராட்சிக்கு எதிராகவும், உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற கோரிக்கைக்காகவும் போராட்டங்கள் நடந்தன. காஷ்மீரி தேசியத்தின் மிக முக்கியமான உள்ளடக்கமாக நிலத்திற்கான கோரிக்கையும் மன்னராட்சி ஒழிப்பும் இருந்தன. இந்தப் போராட்டங்களின் முன்னணியில் இருந்தது ஷேக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி.

இக்கட்சி 1931 மன்னருக்கு எதிராகத் தொடங்கிய இயக்கத்தில் நிலவுரிமைக்கான கோரிக்கை முக்கிய இடம் பிடித்திருந்தது. போராட்டம் உக்கிரமடைந்ததை அடுத்து, பெர்ட்ராண்ட் கிளான்சி என்பவர் தலைமையில் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினார் மன்னர். கிளான்சி கமிட்டி வழங்கிய பரிந்துரைகளின்படி, அப்போதைய காஷ்மீர் பிரதம மந்திரி கால்வின், 1933 ஆண்டு, ஏப்ரல் 10- தேதி அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கிறார். அந்த உத்தரவின்படி, அரசு நிலங்களில் குத்தகை விவசாயம் செய்துவந்த விவசாயிகளுக்கு அந்த நிலம் சொந்தமாக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இதை காஷ்மீரிகள் சாதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1944- ஆண்டு தேசிய மாநாட்டுக் கட்சி புதிய காஷ்மீருக்கான அறிக்கை (New Kashmir Manifesto) என்கிற தனது கொள்கை அறிக்கையை வெளியிட்டது. புதிய காஷ்மீருக்கான அறிக்கை குறித்துப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஆண்ட்ரூ வைட்ஹெட் சில முக்கியமான செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

அந்த அறிக்கையே முழுக்க முழுக்க கம்யூனிச சார்பு கொண்ட ஆவணம்” என்கிறார் ஆண்ட்ரூ வைட்ஹெட். புதிய காஷ்மீர் அறிக்கையின் உருவாக்கத்தில் ஷேக் அப்துல்லாவுடன் இணைந்து பணியாற்றிய பி.பி.எல். பேடி என்பவரிடம் (நடிகர் கபீர் பேடியின் தந்தை) இது குறித்து ஆண்ட்ரூ வைட்ஹெட் உரையாடியுள்ளார். அந்த அறிக்கையின் பல பத்திகள் ஸ்டாலின் கால ரசியாவின் அரசமைப்புச் சட்டத்திலிருந்து  அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன” என்று பேடி தன்னிடம் கூறியதை ஆண்ட்ரூ பதிவு செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் கொள்கை அறிக்கையை உருவாக்குவதில் முன்னணிப் பங்கு வகித்த பாபா பியாரே லால் பேடி மற்றும் அவரது துணைவியாரும்
காஷ்மீரில் மன்னராட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றியவருமான ஃபிரேடா பேடி.
(கோப்புப் படம்)

தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்திலும் சோசலிசத்தின் செல்வாக்கு பரவிவந்த அன்றைய உலகச் சூழ்நிலையின் தாக்கம் இந்தக் கொள்கை அறிக்கையில் மட்டுமின்றி, பின்னாளில் நிறைவேற்றப்பட்ட காஷ்மீரின் அரசியல் சட்டத்திலும் இருந்தது.

புதிய காஷ்மீர் அறிக்கையானது மிகவும் கலகத்தன்மை கொண்ட ஆவணம். அது பெண்களுக்குச் சாதகமாகவும், உலகளாவிய உரிமையைக் கோருவதாகவும், கருத்துச் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் போன்றவற்றை முன்னிறுத்துவதாகவும், உழவருக்கே நிலம், ஆலைகள் அரசுடைமை, விவசாயக் கடன் ரத்து போன்றவற்றை வலியுறுத்துவதாகவும் இருக்கிறது. மேலும், பெண்களுக்கு எல்லா வேலைகளிலும், தொழில்களும் சம உரிமை கோருவதாக இருக்கிறது. அந்த ஆவணம் தொலைநோக்கு கொண்டதாக இருக்கிறது என்கிறார் ஆண்ட்ரூ வைட்ஹெட்.

இந்தியாவுடனான இணைப்பு ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் 1947- ஆண்டு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து காஷ்மீரின் பிரதமராக 1948- பதவி ஏற்கிறார் ஷேக் அப்துல்லா. இதற்கிடையே காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது செல்லாது என பாகிஸ்தான் சர்வதேச அளவில் குரல் எழுப்பி வந்தது. எனினும், ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி இந்தியாவுடன் இணைந்திருப்பதையே விரும்பியதற்கு அடிப்படையான காரணம், காஷ்மீரிகளுக்கு இந்திய அரசின் தரப்பில் வாக்களிக்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதிதான். அதை உத்திரவாதப்படுத்தும் அரசியல் சாசனத்தின் 370- பிரிவு அம்மாநிலத்திற்கென தனியே சட்டமியற்றிக் கொள்ளும் உரிமையை வழங்கியிருந்த காரணத்தினால், அதனைக் கொண்டு காஷ்மீர் விவசாயிகளின் உயிராதாரக் கோரிக்கையான நில உரிமையை வென்றெடுக்க முடியும் எனத் தேசிய மாநாட்டுக் கட்சி கருதியது.

படிக்க:
முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !
ஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி

மறுபுறம், நிலப்பிரபுத்துவ கட்டமைப்பை அப்படியே பராமரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த அன்றைய பாகிஸ்தானின் ஆளும் வர்க்கத்தின் கீழ் இருந்து கொண்டு காஷ்மீர் ஏழை உழவர்களின் நிலம் குறித்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வது சாத்தியமில்லை என்பதை ஷேக் அப்துல்லா வெளிப்படுத்தியிருக்கிறார். காஷ்மீர் மக்களும் சரி, தேசிய மாநாட்டுக் கட்சியும் சரி, பாகிஸ்தானுக்குப் பதிலாக இந்தியாவைத் தெரிவு செய்ததற்கான மிக முக்கியமான காரணம் இது.

பாக். ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிடுவதற்காக உருவாக்கப்பட்ட
காஷ்மீர் சிறுவர் படை. (கோப்புப் படம்)

அதிகாரத்திற்கு வந்த தேசிய மாநாட்டுக் கட்சி, முதலில் மாநிலக் குத்தகைதாரர் சட்டத்தை (1924) உடனடியாக (1948 திருத்தியது. அதன் மூலம் குத்தகை விவசாயிகளிடமிருந்து அநியாயமாக அடித்துப் பிடுங்கப்பட்டு வந்த குத்தகைத் தொகைக்கு நியாயமான அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதன் மூலம் அன்றைய காஷ்மீரின் மொத்த சாகுபடிப் பரப்பளவான 22 இலட்சம் ஏக்கர் நிலத்தில் சுமார் 7 இலட்சம் ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்து வந்த குத்தகை விவசாயிகள் பலனடைந்துள் ளனர்.

இதையடுத்து நிலச்சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்ய ஏப்ரல் 1949 மிர்ஸா முகமது அஃப்சல் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. பின் அந்த கமிட்டியின் பரிந்துரைகளின்படி, ஜூலை 13, 1950- வரலாற்றுச் சிறப்புமிக்க நிலச் சீர்திருத்த சட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது தேசிய மாநாட்டுக் கட்சி. அதற்கு மூன்று மாதங்கள் கழித்து (18 1950) ஜம்மு காஷ்மீர் பெரும் பண்ணை ஒழிப்புச் சட்டத்தை அம்மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றுகிறது. இதன் மூலம் ஒரே வீச்சில் நிலச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. 1950 இருந்து 1952 வரையிலான இரண்டே ஆண்டுகளில் சுமார் 7 இலட்சம் நிலமற்ற கூலி விவசாயிகள் நில உரிமையாளர்கள் ஆகினர். இதில் சுமார் 2,50,000 பேர் ஜம்மு பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட (இந்து) விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலச் சீர்திருத்த சட்டத்தில் ஒரு முக்கியமான அம்சம் என்னவெனில், உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்ட நிலத்துக்கும்கூட ஒருவர் உரிமையாளராக இருக்க வேண்டுமென்றால், அவர் விவசாயத்தைச் சார்ந்து வாழ்பவராகவும், நேரடியாக விவசாய உழைப்பில் ஈடுபடுபவராகவும் இருக்க வேண்டும் என்று கூறியது அந்தச் சட்டம். தலத்தில் இல்லாத நிலவுடைமையாளர்கள் (Absentee Landlords) எனப்படுவோர் யாரும் சொந்தமாக நிலம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இத்தகைய நிலவுடைமையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, உண்மையில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலம் (1951- காலப்பகுதியில்) 3,02,301 ஏக்கர். இதன் மூலம் பலனடைந்த விவசாயிகள் மட்டும் 4,20,867 பேர்.

மன்னர் ஹரி சிங் ஆட்சியின் போது, கையில் இரும்புத் தடியுடன் இருக்கும் கங்காணியின் கண்காணிப்பின் கீழ் வயல்களில் வேலை செய்யும் காஷ்மீரத்துப் பெண்கள். (கோப்புப் படம்)

ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டதுதான் நிலச்சீர்திருத்தம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலச்சீர்திருத்தம் என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டிருப்பது ஒரு முழு மோசடி. இதனைக் கீழ்க்கண்ட புள்ளி விவரமே நிரூபிக்கும். 1947 முதல் 1970 வரையிலான காலகட்டம் வரை இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்ட நிலச் சீர்திருத்தத்தின் மூலம் நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட நிலம் 9.5 இலட்சம் ஏக்கர். காஷ்மீரில் அமல்படுத்தப்பட்ட நிலச்சீர்திருத்தம் மூலம் அந்த மாநிலத்தில் மட்டும் விநியோகிக்கப்பட்ட நிலம் 4.5 இலட்சம் ஏக்கர். அதாவது கிட்டத்தட்ட சரிபாதி.

படிக்க:
♦ காஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ்
சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?

புதிய காஷ்மீர் அறிக்கையுடைய முன்னுரை இவ்வாறு சொல்கின்றது: பல நூற்றாண்டு காலக் கொடுமையான வரலாற்றில், இந்து எதேச்சாதிகார மன்னர்கள், பௌத்த அரசர்கள் மற்றும் முகலாயப் பேரரசர்களின் பல்லக்குத் தூக்கிகளாகவே ஜம்மு காஷ்மீர் மண்ணின் ஏழை மைந்தர்கள் இருந்துள்ளனர். மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வாழும் ஏழை விவசாயக் குடிகள் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக இந்த மண்ணில் வெறும் ஒன்பதங்குல அளவுக்கே உழவோட்டிப் பிழைத்துள்ளனர். அவர்கள் இந்த பூமியின் ஆழம் வரை சென்று அதன் வளங்களை அள்ளி வரும் நவீன தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கும், அதன் மூலம் தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்குமான காலம் இப்போதுதான் கனிந்துள்ளது.”

1949 காஷ்மீரில் அதிக உணவுப் பொருட்களை விளைவிப்போம் திட்டத்தை நிலத்தை உழுது தொடங்கி வைக்கும் காஷ்மீர் பிரதம மந்திரி ஷேக் அப்துல்லா. (கோப்புப் படம்)

ஷேக் அப்துல்லா பதவிக்கு வந்தவுடனேயே உயர்குடியினருக்கு மன்னரால் வழங்கப்பட்டு வந்த மானியங்கள் நிறுத்தப்பட்டன. விவசாயக் கடன் உள்ளிட்ட வணிகம் சாராத கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. குத்தகைதாரர்களுக்கு எதிரான நிலவெளியேற்ற வழக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

ஆகப்பெரும்பகுதி நிலம் மன்னர் குடும்பத்தினரிடமும், இந்து ஆதிக்க சாதியினரிடமும்தான் இருந்தது. குறிப்பாக மக்கள் தொகையில் சுமார் 5% இருந்த பண்டிட் சாதியினருக்கு 30% நிலம் சொந்தமாக இருந்தது. முஸ்லீம் நிலவுடைமையாளர்கள் மிகக் குறைவாகவே இருந்திருக்கின்றனர். உச்ச வரம்புக்கு மேற்பட்ட உபரி நிலம் நட்ட ஈடின்றிப் பறிமுதல் செய்யப்பட்டது என்பதுதான் இந்த நிலச்சீர்திருத்தத்தின் மிக முக்கியமான அம்சமாகும். இது மட்டுமல்ல, எதிரிகளுடைய கையாட்கள் என்று கருதப்பட்டோரின் நிலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. யார் அவர்கள்? யாரெல்லாம் காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைக்கவேண்டும் என்று சொன்னார்களோ அவர்களுடைய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறுகிறார் காஷ்மீர் அபாயம் (1954) என்ற நூலின் ஆசிரியர் கார்பெல்.

இந்த நிலச்சீர்திருத்தத்தை மன்னன் ஹரிசிங் எதிர்த்தார். இந்தியாவின் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலும் எதிர்த்தார். நட்ட ஈடே கொடுக்காமல் இப்படி நிலங்களைப் பறிமுதல் செய்வது சரியல்ல.  நாங்கள் இங்கே இந்தியாவில் செய்வதற்கு நேர் எதிராக இருக்கிறது உங்கள் நடவடிக்கை. நிலம் பறிமுதல் செய்யப்படும் நிலவுடைமையாளர்கள் பெரும்பாலும் இந்துக்கள் என்பதால், உங்கள் அரசுக்கு எதிராகச் சிறுபான்மை (இந்து) சமூகம் வெறுப்படையும் என்பதை மனதில் கொள்ளுங்கள்” என்று படேலின் தனிச் செயலாளர்  வி.சங்கர் 4.5.1948 அன்று ஷேக் அப்துல்லாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். காஷ்மீரில் செயல்பட்டு வந்த சங்கப் பரிவார அமைப்பான பிரஜா பரிஷத்தும் அன்று இந்த நிலச் சீர்திருத்தத்தை எதிர்த்தது.

படேல் குறிப்பிட்டிருப்பது போல, இந்தியாவில் செய்வது போல நிலச்சீர்திருத்தம் அமலாக்கப்பட்டிருந்தால், காஷ்மீர் மக்களின் நிலைமை பீகார் விவசாயிகளைக் காட்டிலும் மோசமானதாக இருந்திருக்கும். அன்று படேலால் செய்ய முடியாத காரியத்தை இன்று மோடி செய்திருக்கிறார்.

சட்டப்பிரிவு 370 என்பது எந்த வர்க்கத்துக்கு நலன் பயத்திருக்கிறது, எந்த வர்க்கத்தின் உடைமையைப் பறித்திருக்கிறது என்பதை இந்த வரலாற்று விவரங்கள் நிரூபிக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்திலிருந்து தப்பித்த காரணத்தினால்தான், காஷ்மீர் உழவர்களுக்கு நிலம் கிடைத்தது. அந்த நிலத்தைப் பிடுங்குவதற்குத்தான் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முழக்கம்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முழக்கம் காஷ்மீர் மக்களின் நிலத்தை மட்டும் பிடுங்கப் போவதில்லை, ஹைட்ரோகார்பனுக்கும், எட்டு வழிச்சாலைக்கும் நிலத்தைப் பிடுங்கப் போவதும் அந்த முழக்கம்தான். தமிழக அரசு மருத்துவக் கல்லூரியின் இடங்களை அனிதாவிடமிருந்து பிடுங்கி, வட இந்தியப் பணக்காரர்களுக்கு வாரி வழங்கப்போவதும் அதுதான்.

– சாக்கியன்


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

ஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் !

0

‘பூலோக சொர்க்கமாம்’ அமெரிக்காவிலே ஹவுஸ்டன் மாநகரத்தில் இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொண்ட “ஹவ்டி மோடி” நிகழ்ச்சி பற்றி புகழாரம் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கின்றன இந்திய ஊடகங்களும், சங்கபரிவாரத்தினரும். மோடியை வாழ்த்தி வரவேற்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த அந்த அரங்கிற்கு வெளியேயும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

பல்வேறு மதங்கள், சிறுபான்மையினர் அமைப்புகளைச் சேர்ந்த இந்திய அமெரிக்கர்களுக்கான அமைப்புகள் ஒன்றிணைந்த, “நீதி மற்றும் பொறுப்பேற்புக்கான கூட்டணி” இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியது.

“மனித உரிமைக்கான இந்துக்கள்” (Hindus for Human Rights – HHR) , இந்திய அமெரிக்க முசுலீம் கவுன்சில் (Indian Amedican Muslim Council – IAMC), இந்திய சிறுபான்மையினருக்கான அமைப்பு (Organisation for Minorities of India), உள்ளிட்ட அமைப்புகள் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தனர். இந்த போராட்டம் இந்தியாவில் பாஜக மற்றும் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் ஜனநாயகப்பூர்வமற்ற, மக்கள் விரோத மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான நிகழ்ச்சி நிரலைக் கண்டித்து நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்டு மோடி மற்றும் டிரம்பின் அடாவடித்தனத்திற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். கும்பலாக அடித்துக் கொலை செய்தல், சட்டவிரோதக் கொலைகள், மதரீதியான துன்புறுத்தல், சாதிய ஒடுக்குமுறை, அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக் கணக்கெடுப்பு மற்றும் காஷ்மீரில் சரத்து 370 நீக்கம் ஆகியவற்றை எதிர்த்து முழக்கங்களை எழுப்பி அணிதிரண்டிருந்தனர். அனைவரின் கைகளிலும் இந்த முழக்கங்களைப் பறைசாற்றும் பதாகைகள் இருந்தன.

இது தவிர சஞ்சய் பட் உள்ளிட்டு கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறும் முழக்கங்கள் முன் வைக்கப்பட்டன.

இது குறித்து “மனித உரிமைக்கான இந்துக்கள்” அமைப்பின் இணை நிறுவனர் சுனிதா விஸ்வநாதன் கூறுகையில் இந்திய அமைப்புகள் தவிர ஒடுக்கப்பட்டவர்களுக்கான பல்வேறு சர்வதேச அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். “ஜூவிஷ் வாய்ஸ்” (Jewish Voice), “பிளாக் லைவ்ஸ் மேட்டர்” (Black Lives Matter) உள்ளிட்ட அமைப்புகளும் இதில் கலந்து கொண்டன என்றார்.

படிக்க:
ஹவ்டி மோடி : அமெரிக்காவின் இரட்டை முகம் ! கருத்துப்படம்
♦ ஐதராபாத் : இந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அரங்கம் !

“இந்தியாவில் நிலைமைகள் மோசமாக இருக்கின்றன. தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் அசாமில் முசுலீம்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை தடுப்பு முகாமில் அடைக்கும் வேலைகளைச் செய்து வருகிறது மோடி அரசு. அதற்காக தடுப்பு முகாம்களைக் கட்டிவருகிறது. முசுலீம்கள் மீதும் தலித்துகள் மீதும் இந்தியா முழுவதும் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. காஷ்மீர் இன்றளவும் இந்தியப்படைகளால் முற்றுகையிடப்பட்டு தொலைதொடர்பு தடைசெய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் மோடியோ இந்தியாவில் வளர்ச்சி குடிகொண்டிருப்பதாக கூசாமல் பொய் சொல்கிறார்” என்கிறார் சுனிதா விஸ்வநாதன்.

இந்தக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கும் 40 இலட்சம் சட்டப்பூர்வ குடியேறிகளுக்காக தாம் வேலை பார்க்க இருப்பதாகவும், மெக்சிகோவில் இருந்து வந்திருக்கும் சட்டவிரோத குடியேறிகளைப் புறந்தள்ளப் போவதாகவும் தெரிவித்தார். இனவெறியும், இடம்பெயர்பவர்களுக்கு எதிரான கருத்தும் கொண்ட அரசாங்கங்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரிக்கையில் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளை நோக்கி மக்கள் இடம்பெயர்வது நடக்கத்தான் செய்யும் என்கிறார் சுனிதா.

இந்தியாவில் நிலவும் நிலைமைகளை 1975-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட  அவசரநிலை காலகட்டத்தோடு ஒப்பிட்டு நினைவுகூர்கிறார் சுனிதா. அக்காலகட்டத்தைப் போன்றே தற்பொதும் காஷ்மீரில் தொடர்ச்சியான ஒடுக்குமுறை சுமார் 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருவதாகக் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், அங்கிருக்கும் மக்கள் மருத்துவம், மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்கப்பெறாமல் தவிக்கின்றனர். அரசுப் படைகளின் பெல்லட் குண்டுதாக்குதல், படுகொலைகள் மற்றும் சித்திரவதை குறித்த செய்திகள் அன்றாடம் வந்து கொண்டிருக்கின்றன. மத வழிபாட்டிற்கான உரிமை கூட பல இடங்களில் முடக்கப்பட்டிருக்கிறது. அங்கு காஷ்மீரிகள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது, இங்கு மோடி காஷ்மீரிகள் தங்களுக்கு விரைவில் வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகளை அள்ளித் தரவிருக்கும் உய்விப்பாளர்களை வரவேற்க வீதியில் பூக்களோடு காத்திருப்பதாகக் கதை விட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் காஷ்மீர் சுற்றுலா சொர்க்கமாக மாறும் என்றும் கூறிவருகிறார்.

இடம்பெயர்ந்து வந்த தாய்மார்களையும் குழந்தைகளையும் பிரித்ததைத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் மிகப்பெரும் சாதனையாகக் காட்டி வரும் டிரம்பைப் போல 70 லட்சம் குடிமக்களை முடக்கி வைத்திருக்கும் காஷ்மீரின் கொடுமையான நிலைமை மோடியின் உலகில் இயல்பு நிலைமையாகப் படுகிறது.

காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மோடி அரசை இரு கடினமான பாறைகளுக்கு இடையே சிக்கவைத்துள்ளது. அங்கு இயல்பு நிலைக்கு தகவல் தொடர்பையும் போக்குவரத்தையும் கொண்டுவந்தால், மீண்டும் காஷ்மீர் கொந்தளிக்கும். இதே நிலையை நீடித்தால், அதுவும் மக்களிடம் கூடுதலான கொந்தளிப்பை ஏற்படுத்தும். தற்போது என்ன செய்வது என்று தெரியாமல், காஷ்மீர் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் காஷ்மீரில் நடக்கும் நிலைமைகளை வெளியே தெரியவிடாமல் முடக்கியிருக்கிறது மோடி அரசு, என்கிறார் சுனிதா விஸ்வநாதன்.

இந்த நிலையை சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்தவே இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மோடியை “இந்தியாவின் தந்தை” என்று கொஞ்சுகிறார் டிரம்ப். டிரம்பை மீண்டும் அதிபராக வாழ்த்துகிறார் மோடி. “ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்” என்று புளகாங்கிதமடைகிறார். பாசிஸ்ட்டுகள் தங்களுக்கு இடையில் சொரிந்து கொள்ளுதலில்தான் எவ்வளவு சுகம் கண்டுகொள்கிறார்கள்?

ஹவுஸ்டன் மைதானத்திற்க் எதிரே குழுமி நிற்கும் போராட்டக்காரர்களின் ஒரு பகுதி

கும்பல் படுகொலைகளை நிறுத்து என முழக்கமிடும் போராட்டக்காரர்கள்

“உண்மையான இந்துக்கள் அடித்துக் கொல்ல மாட்டார்கள்” என்ற பதாகையுடன் ஒரு போராட்டக்காரர்.

முடக்கப்பட்ட காஷ்மீரின் நிலையை அம்பலப்படுத்தும் முழக்கங்களும் ஒலித்தன.

போலி வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சிறை வைக்கப்பட்ட சஞ்சீவ்பட்டை விடுவிக்கக் கோரி பதாகையுடன் ஒரு போராட்டக்காரர்.

இந்துக்களும் முசுலீம்களும் சகோதரர்கள், இந்துத்துவ ராஜியமே வெளியேறு என்ற பதாகைகளுடன் போராட்டக்காரர்கள்.

“ஹவுஸ்டன் நகரமே, நமக்கு ஒரு பிரச்சினை வந்திருக்கிறது. அது மோடி”

மாற்றுப் பாலினத்தவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தியும் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டனர்.

“இந்தியாவே, காஷ்மீரில் இனப்படுகொலையை நிறுத்து”

“சுதந்திர காஷ்மீரின்” (Azad Kashmir) கொடிகளை ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்ட காஷ்மீரிகள்

“மோடியே வெளியேறு” – தமிழகத்தில் மட்டுமல்ல – ஹவுஸ்டனிலும்.

“ஒரு பாசிஸ்டை விரும்பும் இன்னொரு பாசிஸ்டும் பாசிஸ்டே. – ஒரே பாசிச இறகைக் கொண்ட இரு பறவைகள் ஒன்றாக பாசிசத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்” என்று மோடி – டிரம்ப் நட்பின் பின்னணியை வார்த்தைகளில் செதுக்கியிருக்கும் போராட்டக்காரர்கள்.

“இந்து பாசிசத்தை நிறுத்து” – போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர்.

நாடு இனம் மொழி தாண்டி பாசிசத்திற்கு எதிராக பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் குரல் கொடுத்தனர்

ஹவுஸ்டனில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்க கறுப்பின மக்கள் பிரதிநிதி.


தமிழாக்கம் : நந்தன்

செய்தி ஆதாரம் :
♦ Indian-American Coalition Protests ‘Bigoted and Oppressive’ Modi, Trump in Houston
Why We, as Hindu Americans, Are Opposed to Modi’s Undeclared Emergency 

நூல் அறிமுகம் : வேதங்கள் இந்துயிசம் இந்துத்துவா

ச்சிறு நூல் இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானது. மதவாத அரசியல் நம் நாட்டில் வலுப்பெற்றுவரும்பொழுது அதுபற்றிய விமர்சனங்கள் ஏராளமாகத் தேவைப்படுகின்றன. அந்த வகையில் இந்த நூலில் இதன் ஆசிரியர்கள் தங்கள் பங்கை மிகச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர். இந்த நூலில் இந்து மதத்தின் வரலாறு. இந்தியக் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை மறுத்துவிட்டு இதனை இந்துத்துவா என்ற ஒற்றைக் கலாச்சாரத்திற்குள் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சி ஆகியவற்றை இதன் ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். (முன்னுரையிலிருந்து…)

நம்மில் பெரும்பாலோர் வேதங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு சிலருக்கு காயத்ரி மந்திரம் போன்றவற்றைத் தெரியும் அல்லது பாராயணம் செய்யமுடியும். வேதகாலக் கணிதம் பற்றி நாம் கற்றிருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். வரலாற்றில் வேதகாலம் என்று அழைக்கப்படுவது பற்றி நமக்கு ஒரு தெளிவற்ற கருத்து நமக்கு இருக்கலாம். அந்தக் காலகட்டம் எவ்வாறு இருந்தது என்ற கேள்வி கேட்கப்பட்டால் நாம் பல்வேறு விடைகளை அளிக்கும் நிலையில் உள்ளோம். எனவே, மிகப் பழங்காலத்தின் ஒரு பகுதியாக அதைக் காண்கிறோம். நம்மில் ஒரு சிலர் அதனை பெண்களுக்கான பொற்காலம் என்று கருதுகிறோம். அதாவது பெண்கள் கவிதை புனைந்தனர். சடங்குகளில் பங்கு பெற்றனர். ஊர் சபையில் பங்குபெற்றனர் என்று கருதுகிறோம். வேறு சிலர், வேதகாலம் என்பது ஒரு வகையான ஜனநாயகம் இருந்த காலம் என்று எண்ணுகிறார்கள்.

அண்மைக் காலத்தில், குறிப்பாக கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக, வேத காலத்துடன் வேறு சில பண்புகள் இணைக்கப்படுவதையும் நாம் காண்கிறோம். பத்திரிகைகளிலும், வார ஏடுகளிலும், வேத கால மக்கள் தாம் ஹரப்பா நாகரிகத்தை உருவாக்கியவர்கள் என்று கூறுவதையும் காண்கிறோம். வேத இலக்கியங்களில் குறிப்பிடப்படும் சரஸ்வதி ஆறும் ஹரப்பா நாகரிகம் அமைந்திருந்த இடத்தில் உள்ள ஆறும் ஒன்றுதான் என்ற கருத்தில் எழுந்த கூற்று இது. மிகவும் சுருக்கமாகக் கூறினால், ஹரப்பா நாகரிகமும், வேதங்களும், ஒரே இன மக்களால் உருவாக்கப்பட்டவை என்ற முடிவு இதில் இடம் பெறுகிறது. பெரிய நகரங்களில் வசித்தவர்களும், தூர தேசங்களுடன் வாணிபம் செய்தவர்களுமான உயர்ந்த நாகரிகம் உள்ள மக்களால்தான் வேத மந்திரங்கள் உருவாக்கப்பட்டன என்பது இதன் பொருள் ஆகிறது.

… எல்லா அறிவும் வேத சம்பந்தமானதா? உண்மையில் அவ்வாறு இல்லை. இது ஒரு பொதுவான சொல்லாக இருந்தாலும் இது ஒரு குறிப்பிட்ட வகை நூல்களைச் சுட்டுவதாகவே உள்ளது. இவற்றை சடங்குகள் தொடர்பான படைப்புகள் என்று தாம் வரையறுக்கலாம்.

… மந்திரங்களே அதிகமாக உள்ள மூன்று அல்லது நான்கு வேதங்கள் தவிர, பிந்திய வேதங்கள் என்று அழைக்கப்படும் ஏராளமான இலக்கியங்கள் உள்ளன. இற்றிற்கு உள்ளாக நாம் மூன்று அல்லது நான்கு வகையைக் காணமுடியும். மேலும் சூத்திரங்கள் போன்றவற்றில் இன்னும் உட்பிரிவுகள் உண்டு. இந்த நூல்களுக்கு இடையே சில பொதுப்பண்புகள் உள்ளன. முதலாவது, இவற்றில் பெரும்பாலானவை உரைநடையில் உள்ளன. மந்திரங்கள் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. இரண்டாவது இவையாவும் மனிதனால் படைக்கப்பட்டவை எனப்படுகின்றன. இவை நான்கு வேதங்களைப் போன்று ஸ்ருதிகள் அல்ல. வேதங்கள் தெய்வீகமானவை அவை கேட்கப்பட்டவை அல்லது உள்ளுணர்வின் மூலம் அறிந்து கொள்ளப்பட்டவை. காலப்போக்கில் சில நூல்களை ஸ்ருதிகள் என்று வகைப்படுத்தும் போக்கு உருவாயிற்று.

படிக்க:
பகவத் கீதை பெயரில் வருணாசிரமத் திணிப்பு ! மக்கள் அதிகாரம் கண்டனம் !
ஐதராபாத் : இந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அரங்கம் !

… பிராமணர் என்பது ஒரு சமூகப் பிரிவு என்பது நம்மில் பலருக்குத் தெரியும். பிரம்மாணங்கள் என்பதை பிராமணர்களால், பிராமணர்களுக்காக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் ஆகும். இவை மிகவும் நீளமானவை. உதாரணமாக பிரபலமான சத்பத பிரம்மாணம் என்பது நூற்றுக்கணக்கான பக்கங்களுக்குச் செல்கிறது. சடங்குகள் மிகவும் சிக்கலான போது, இந்த நூல்கள் இயற்றப்பட்டன. சிலவற்றில் சடங்குகள் செய்யப்பட வேண்டிய வரிசை விளக்கப்படுகிறது. வேறு சில, குறிப்பிட்ட மந்திரங்களின் அர்த்தம் பற்றி விவாதிக்கின்றன. அரசர்கள், குருமார்கள் ஆகியோர் பற்றி கதைகள் இவற்றில் இடம் பெறுகின்றன. அஸ்வமேதம், ராஜசூயம் போன்ற யாகங்களை எவ்வாறு செய்வது என்பது பற்றி நீண்ட விவாதங்கள் சிலவற்றில் இடம்பெறுகின்றன. மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை அறிந்தவர்கள், சடங்குகளுக்கு இவற்றில் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது பற்றி அறிந்திருப்பார்கள். ராமாயணத்தில், வீரர்களின் பிறப்பிற்காக அஸ்வமேதயாகம் செய்யப்படுகிறது. ராவணனை வெற்றிக் கொண்ட பின்னர் ராமர் இந்த யாகத்தை செய்ததாகக் கூறப்படுகிறது. மகாபாரதத்தில் யுதிர்ஷ்டிரர் ராஜசூய யாகம் செய்வது முக்கியமாகக் கூறப்படுகிறது. இது கதையில் திருப்பு முனையாகக்கூட அமைந்துள்ளது.

பிரம்மாணங்கள், பலிகள் பற்றிய நூல்கள் ஆகும். ஆனால், ஆரண்யகங்கள் (காடுகளுக்குரியவை : தனிமையில் இருந்து கற்க வேண்டியவை என்பது இதன் பொருள்) உபநிடதங்கள் (குருவின் காலடியில் அமர்ந்து கற்க வேண்டியவை) ஆகியன புதிய பாரம்பரியத்தைச் – அதாவது தத்துவ விசாரம்- சார்ந்தவை. சடங்குகளை இயந்திர கதியில் செய்தால் அவற்றின் உண்மையான பொருளைப் புரிந்துகொள்ள இயலாது என்பது இவற்றில் கூறப்படுகிறது. வாழ்வு, சாவு, படைப்பு ஆகியவற்றின் உட்பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. கர்மத்தின் அடிப்படையில் மறுபிறவி உண்டு என்ற முக்கியமான கருத்துக்கள் இவற்றில் முதன் முறையாக இடம் பெறுகின்றன. இவை செல்வாக்குள்ளவையாக இடம் பெற்றன. பிந்தியக் காலக்கட்டத்தில் வேதாந்தச் சிந்தனையாக இவை வளர்ச்சி பெற்றன. (வேதாந்தம் என்ற சொல் வேதங்களின் முடிவு அல்லது இறுதி லட்சியம் என்று பொருள்படும்). (நூலிலிருந்து பக்.1-7)

பிந்தியகால வேத நூல்களில் – குறிப்பாக சூத்திரங்களில் – பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் மந்திர உச்சாடனம் செய்யும் உரிமை இல்லை என்று கூறப்பட்டது. எனவே மக்கள் தொகையில் பெரும்பாலோருக்கு இவற்றை உச்சரிக்கவும், கற்றுக்கொள்ளவும் வழி இல்லாமல் போயிற்று. பல கதைகள் மூலம் இந்தக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டது ராமாயணத்தில் இடம் பெறும் சம்புகன் கதை நமக்குத் தெரியும் சம்புகன் என்ற சூத்திரன் தவம் செய்தான். இது பிராமணர்களுக்கு அச்சத்தை தந்தது. அவர்கள் ராமனிடம் சென்று முறையிட்டனர். சம்புகனைக் கொன்று இதனைச் சரி செய்ய ராமர் தீர்மானித்தார். இது உண்மையில்லை என்று கருதினாலும், இந்த தடையைப் புறக்கணிக்கும் சூத்திரர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கை ஆகும். (நூலிலிருந்து பக். 11 -12)

இந்து மதத்தின் புனித நூல்களுக்குரிய மற்றொரு பண்பினை நாம் குறிப்பிட வேண்டும். கொள்கையளவில் வேதங்கள் மட்டும்தான் புனைக் கருத்தளவில் இந்துக்களின் மிகவும் புனிதமான நூல்கள் என்று நாம் ஏற்கெனவே கண்டோம். ஆனால் அந்நூல்கள் இந்துக்களின் நடைமுறை வாழ்க்கைக்கு ஏன் மத வாழ்க்கைக்குக்கூட இயல்பானதாக இல்லை. மத நடவடிக்கைகளுக்கும் தொடர்பு அதிகம் இல்லை. அவ்வாறாயின் இந்துக்களுக்கு வழிகாட்டியாக உள்ள பிரபலமான புனித நூல் எதுவும் கிடையாதா? உண்மையில் இந்துக்களுக்கு நிறையவே புனித நூல்கள் உள்ளன. ஆனால் வரையறுக்கும் தன்மையுள்ள ஒரே நூல் இல்லை.

இந்து மதத்தின் உட்பிரிவில் உள்ளவர்களுக்கு அவர்களுக்குரிய சில நூல்கள் உள்ளன. அவற்றை அவர்கள் புனிதமாகக் கொள்கின்றனர். உதாரணம் வைணவர்களின் பாகவத புராணம்; சாக்தர்களின் தேவி-மகாத்மியம்-இதுவும்கூட, இடத்தைப் பொறுத்தும், உட்பிரிவுகளைப் பொறுத்தும் மாறுபடுகின்றது. உதாரணமாக சைத்தன்ய சரிதாமிர்தம் என்பது வங்காள வைணவர்களுக்கு மிக முக்கியமானது. இந்து மதத்தின் அநுசரிக்கும் தன்மையைக் கணக்கிலெடுத்தால் இது இயல்பானதே. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் நூல் என்று ஒன்றைக் கூற வேண்டுமானால், நமது மனதுக்கு உடனே வருவது ஸ்ரீமத் பகவத்கீதை ஆகும். இது குருஷேத்திப் போர்களத்தில், யுத்தம் துவங்குவதற்கு முன்னர் தனது உறவினர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த அர்ஜூனன் சஞ்சலமுற்றபொழுது, கிருஷ்ணர் அர்ஜூனனுக்குச் செய்த, நீண்ட உபதேசம் இதில் உள்ளது. கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டளவில் இது எழுதப்பட்டது. இதில் இதுவரை உருவாக்கப்பட்ட இந்து மத தத்துவங்களின் நடைமுறை சார்ந்த கூறுகள் விளக்கப்பட்டுள்ளன. ஆனால், சிந்தனை உலகில் கீதை இரண்டு முக்கியமான பங்கினை பூர்த்தி செய்துள்ளது.

♦ முக்திக்கான வழிகளான ஞானம், செயல், பக்தி ஆகியவற்றில் பெரும்பான்மையோருக்கு ஏற்றது பக்தி என்பது.

♦ பற்றுக்களை உதறி, பலனை எதிர்பாராமல் ஒருவன் அவனது கடமையைச்  செய்ய வேண்டும். ஏனென்றால் செயல்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டன; தவிர்க்க முடியாதவை. இந்த உலக நிகழ்ச்சிகளில் ஒருவன் கருவி மட்டுமே ஆவான்.

படிக்க:
பகவத் கீதையை தடை செய் !
நூல் அறிமுகம் : கீதையின் மறுபக்கம்

இந்த எளிமையான, சற்று சுய முரண்பாடு உள்ள தத்துவமானது தனிநபர் முயற்சிக்கு தடையாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் காலங்காமாக இந்திய மனதின் மீது இந்த நூல் பெரும் செல்வாக்கைப் பெற்று வந்துள்ளது. அத்வைத தத்துவவாதி சங்கராச்சாரியாரிடத்தில் துவங்கி பக்தி மார்க்கக் கவிஞர் ஞானேஸ்வரர் இந்திய தேசிய இயக்கத்தின் தலைவர் மகாத்மா காந்தி வரையுள்ள பல இந்திய சிந்தனையாளர்கள் அவரவர்கள் புரிதல், விருப்பம் ஆகியவற்றிற்கு ஏற்ப கீதைக்கு விளக்கம் எழுதியுள்ளனர். புரட்சியாளர்கள், அகிம்சை மார்க்க சத்யாகிரகிகள் ஆகிய இருவருமே, பற்றற்ற செயல் என்ற கீதையின் லட்சியத்துடன் தங்களை உயிரையே அப்பணிக்கச் சித்தமாயிருந்தனர். இதனால்தான் கீதையானது இந்துக்களின் மத நூல்களில் ஒரு சிறப்பான இடத்தைப்பெற்றுள்ளது. இது கிருஷ்ணரின் வாய்மொழியாக இருந்த போதிலும், இந்து மதத்தின் பல்வேறு பிரிவினரும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். இருப்பினும் கீதையை உபதேசம் செய்த கிருஷ்ணர் இந்துக்களின் பக்திக்கு உரியவர் அல்லர்; வெண்ணெய் திருடும் சிறு குழந்தையான கிருஷ்ணரைத்தான் அவர்கள் அதிகம் வணங்குகின்றனர். இந்துயிசத்தில் புரிந்து கொள்ள முடியாத பண்புகளில் இதுவும் ஒன்று. (நூலிலிருந்து பக்.76-78)

நூல் : வேதங்கள் இந்துயிசம் இந்துத்துவா
ஆசிரியர்கள் : கும்கும்ராய், குணாள் சக்கரவர்த்தி, தனிகாசர்க்கார்
தமிழில்: எஸ். தோதாத்ரி

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 26359906 , 26251968

பக்கங்கள்: 112
விலை: ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagamnannool