Sunday, May 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 299

அன்புள்ள கர்ப்பிணி தாய்மார்களே – பாகம் 2 | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

அன்புள்ள கர்ப்பிணி தாய்மார்களே – பாகம் 2

ர்ப்பம் தரித்த மூன்றாவது மாதம் முடியும் தருவாயில் ஒரு முக்கிய பரிசோதனை செய்வது நல்லது. இந்த பரிசோதனைக்கு “NT scan” என்று பெயர் அதாவது Nuchal translucency scan.

வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் கழுத்துப்பகுதிக்குப் பின் புறம் உள்ள பகுதியில் நிணநீர் சேகரிப்பு அதிகம் இருக்கிறதா, இல்லை சரியாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்வதே இந்த சோதனையின் நோக்கம். நார்மல் குழந்தைகளுக்கு நிணநீர் ஓட்டம் சரியாக இருக்கும். அதனால் கழுத்துக்கு பின் நீர் சேருவது இருக்காது.

Child-Scnஇதுவே இதயத்தில் பிறவி நோய் இருக்கும் குழந்தைகளுக்கும், மூளை நரம்பியல் நோய் இருக்கும் / மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் கழுத்துப்பகுதிக்குப்பின் நீர் அதிகமாக சேரும்.

பொதுவாக 12 வாரக்குழந்தைக்கு இந்த Nuchal translucency 3.2 mm -க்குள் இருப்பது குழந்தைக்கு பிறவிக்கோளாறு இல்லை என்பதை உறுதி செய்கிறது. சரி ஒருவேளை Nuchal translucency அதிகமாக இருந்தால் குழந்தைக்கு பிறவிக்கோளாறு கட்டாயம் இருக்கிறது என்று அர்த்தம் ஆகிவிடுமா???

நிச்சயம் ஆகாது. இந்த பரிசோதனை என்பது ஒரு screening testதான். அதாவது சமுதாயத்தில் பரவலாக செய்யப்படும் இந்தப்பரிசோதனையில் பாசிடிவ் என்று வந்தால் நோய் கட்டாயம் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை.

இந்த ஸ்கேனில் பாசிடிவ் தன்மை வந்தால் நாம் அதற்கடுத்து ட்ரிபிள் ஸ்க்ரீனிங் எனும் ரத்தப்பரிசோதனை செய்ய முடியும். இந்த ரத்தப்பரிசோதனையில்
தாயின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும் ரத்தத்தில் ஆல்பா ஃபீட்டோ ப்ரோட்டின் (இது சிசு உற்பத்தி செய்யும் ஒரு புரதம்) பீட்டா HCG (இது தொப்புள்கொடியில் இருந்து உருவாகும் ஒரு நொதி) மற்றும் ஈஸ்ட்ரையால் எனும் ஹார்மோன் இந்த மூன்றையும் தாயின் ரத்தத்தில் சோதிப்பதன் மூலம் நம்மால் சிசுவுக்கு இருக்கும் பிறவி நோய்களை கண்டறிய முடியும்.

படிக்க:
அன்புள்ள கர்ப்பிணித் தாய்மார்களே | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
♦ இந்தியாவின் பழங்கால பிரசவக் கொடுமைகள்

தாயின் ரத்தத்தில் AFP எனும் ஆல்பா ஃபீட்டோ ப்ரோட்டின் அதிகமாக இருந்தால் குழந்தைக்கு நரம்பு – மூளை சம்பந்தப்பட்ட நோய் இருப்பதாக அர்த்தம். AFP குறைவாக இருந்து HCG மிக அதிகமாக இருந்தால் குழந்தைக்கு டவ்ன் சிண்ட்ரோம் போன்ற நோய்கள் இருக்க வாய்ப்பு அதிகமாகிறது.

இத்தோடு சிசுவுக்கு மூக்கு எலும்பு உருவாகாமல் இருந்தால் டவுன் சிண்ட்ரோம் எனும் பிறவிக்குறைபாடு இருக்க வாய்ப்பு அதிகம். கர்ப்ப காலத்தின் இரண்டாவது மூன்று மாதங்களில் குழந்தை வளர்ச்சி அதற்கு பிறவிக்குறைபாடு இருக்கிறதா இல்லையா போன்ற பல விசயங்களை நம்மால் காண இயலும்.

மாதம் ஒருமுறை கட்டாயம் மருத்துவரைச் சந்தித்து ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவுகள், சிறுநீர் சர்க்கரை மற்றும் புரத அளவுகள் பரிசோதித்து வர வேண்டும்.

மூன்றாவது மாத முடிவில் ரணஜன்னி மற்றும் தொண்டை அடைப்பான் வியாதிகளுக்கு எதிரான Td எனும் தடுப்பூசியை ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் தடுப்பூசி போடப்பட்ட ஒரு மாதம் கழித்து மற்றொரு Td ( Tetanus Diphtheria) தடுப்பூசி போட வேண்டும்.

இந்த தடுப்பூசி எதற்கு ?

குழந்தை பிறக்கும் போது ஏற்படும் ரனஜண்ணி (Neonatal tetanus) எனும் உயிர் கொல்லி நோயில் இருந்து குழந்தையைக் காக்கும். தொண்டை அடைப்பான் எனும் டிப்தீரியா நோய் வராமல் தாய் மற்றும் பிறக்க இருக்கும் சேயை காக்கும்.

இந்த மூன்று மாதங்களில் செய்ய வேண்டிய மற்றுமொரு முக்கிய வேலை.. குடற்புழு நீக்கம்.

வயிற்றில் இருக்கும் கொக்கிப்புழு, நாடாப்புழு போன்றவை ரத்தத்தை உறிஞ்சி அவை வாழும் தன்மை கொண்டவை. கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைவது இயற்கை. இந்த புழுக்கள் ரத்த ஹீமோகுளோபின் அளவை இன்னும் அபாய அளவுக்கு குறைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே மருத்துவர் பரிந்துரையின் பேரில் குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்ள வேண்டும்.

ஐந்தாவது மாதம் தாய்க்கு செய்ய வேண்டிய TARGET scan எனும் பிறவிக்குறைபாடு கண்டறிதல் பரிசோதனை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

***

ந்தாவது மாதம் 18 வாரம் முதல் 21 வாரம் வரை முக்கியமான ஒரு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இதை Target scan என்று கூறுகிறோம். குழந்தையின் உடலில் ஏதேனும் உடல் சார்ந்த பிறவிக்கு குறைபாடு இருக்கிறதா என்று பார்க்கும் ஸ்கேனாகும்.

  • முகத்தில் மூக்கு எலும்பு உருவாகியிருக்கிறதா?
  • வாய்பிளவு – அன்னப்பிளவு இருக்கிறதா?
  • இதயத்தின் அறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா?
  • குடல் பகுதி எப்படி இருக்கிறது?
  • குழந்தையின் கை மற்றும் கால்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?
  • கைகளில் விரல்கள் எத்தனை இருக்கின்றன?

என்பது வரை அத்தனையும் பரிசோதிக்கப்படும். இதன் மூலம் எந்த குறைபாடும் இல்லாத குழந்தை கர்ப்பபையில் வளர்கிறது என்று முடிவுக்கு வரலாம்.

கர்ப்பிணிகளுக்கு இந்த இரண்டாவது மும்மாதத்தின் கடைசியில் இருந்து
இரும்புச்சத்து குறைபாடு ஆரம்பிக்கும். எனவே இரும்புச்சத்துக்கான மாத்திரை நான்காவது மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும்.

target scanஇந்தியாவில் 90 சதவிகிதத்திற்கும் மேல் கர்ப்பிணித் தாய்மார்கள் ரத்த சோகை எனும் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குக்காரணம் நமது வழக்கப்படி பெண்கள் வீட்டில் கடைசியாக மீதம் இருப்பதை உண்டு வாழ்ந்து வருவர்.

ஊட்டச்சத்து குறைவான உணவான அரசியை அதிகமாக உண்பர். ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும் முட்டை, மாமிசம் போன்ற உணவுகளை ஆண்களுக்கென; பிள்ளைகளுக்கென ஒதுக்கி வைக்கும் பழக்கம் நமது பெண்களிடையே உண்டு. இந்த வழக்கம் கல்வியறிவால் மெல்ல மெல்ல மாறிவருவது வரவேற்கத்தக்கது.

அசைவம் உண்ணும் கர்ப்பிணி பெண்களுக்கு தினமும் ஒரு முட்டை, வாரம் மூன்று முறையேனும் மாமிசம் உண்ணக் கிடைக்க வேண்டும். சைவம் மட்டும் உண்ணும் பெண்கள் கட்டாயம் புரதம் நிரம்பிய பயறு வகைகள், கடலை வகைகள், பருப்பு போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

காய்கறிகள் தினமும் 150 முதல் 200 கிராம் வரை உண்பது நல்லது. இன்றும் பிரசவத்தின் போதும், கர்ப்ப காலத்தின் போதும் தாய் சேய் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது “இரும்புச்சத்து குறைபாடு” எனும் அனீமியா ஆகும்.

கர்ப்பிணிக்கு முதல் மாதம் எடுக்கப்படும் Hemoglobin 12 g/dl என்ற அளவுக்கு மேல் இருந்தால் நல்லது. 10g/dl என்பது இந்திய சராசரி. இது தான் பெரும்பாலும் அனைத்து பெண்களுக்கும் இருக்கும். ஆகவே இதை நம் பெண்களுக்கு ஓகே என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

படிக்க:
உலகம் சுற்றும் எடப்பாடி – கருத்துக் கணிப்பு
♦ அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !

கர்ப்பமானது முதல் மாதங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்ல செல்ல அனீமியா கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்கும். ஆகவே கட்டாயம் நான்காவது மாதத்தில் இருந்து இரும்புச்சத்து மாத்திரையை எடுத்துக்கொள்ள அரசு பரிந்துரை செய்கிறது.

இந்த இரும்புச்சத்து மாத்திரைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதற்கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

அதற்கடுத்தபடியாக முக்கியமான சத்து “கால்சியம்”

கரு சிசுவாக வளர்ந்து குழந்தையாகும் போது குழந்தையின் எலும்புகள் உருவாக வேண்டும். அந்த எலும்புகள் உருவாகுவதற்கு தேவையான கால்சியம் தாயிடம் இருந்து செல்லும்.

அதாவது தாயின் ரத்தத்தில் இருந்து கால்சியம், சிசுவுக்குச் செல்லும். சிசு அந்த கால்சியத்தை உபயோகித்து தனது எலும்புகளை வளர்த்துக் கொள்ளும். தாயின் ரத்தத்தில் எப்போதும் கால்சியம் சத்து சரியான அளவில் இருக்க வேண்டும்

இதற்கு கால்சியம் சத்து நிரம்பிய எளிய உணவான முட்டைகள் உதவும். நாளொன்றுக்கு கட்டாயம் ஒரு முட்டை அல்லது இரண்டு முட்டைகள் உண்டு வருவது நல்லது. இத்துடன் கால்சியம் சத்துக்கான மாத்திரையையும் உட்கொள்ள அரசு பரிந்துரை செய்கிறது.

pregnancy-nutritionகால்சியம் சத்து குறைபாட்டால் தாய்க்கு கர்ப்ப காலம் முழுவதும் அதிகமான உடல் சோர்வு வலி ஏற்படும். குழந்தை என்பது ஒரு அழகிய ஒட்டுண்ணியாகும். ஒட்டுண்ணி வகை உயிரினங்களை Parasite என்கிறோம். குழந்தையும் தாயிடம் இருந்து சத்துகளையும் ரத்தத்தையும் உறுஞ்சி வாழ்வதாலும் வளர்வதாலும் அதுவும் ஒரு ஒட்டுண்ணி தான்.

இந்த மிகப்பெரும் ஒட்டுண்ணி உடலின் ஒரு பகுதியில் இருந்தாலும் உடல் அதை ஏற்றுக்கொள்கிறது. இதற்காக கர்ப்ப காலத்தில் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைக்கப்படும். ஆகவே pregnancy is a hypo immune state.
எனவே இந்த காலத்தில் எளிதாக நோய் கிருமி தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும்.

தாய்மார்கள் தண்ணீர் பருகும் விசயத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை மட்டுமே பருக வேண்டும். மிகுந்த தேவை தவிர அநாவசியமான நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும். பயணம் செய்தாலும் ரயில் வண்டியை தேர்வு செய்ய வேண்டும்.

பைக் பயணங்களை குண்டும் குழியுமான சாலைகளில் செல்வதை தவிர்த்து விட வேண்டும். கூட்டமான ஜனநெரிசலான இடங்களை தவிர்க்கவும். அங்கே காற்றினால் பரவும் சளி இருமல் போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு அதிகமாகிறது. காய்ச்சல், சளி, இருமல் வந்தால் சுய மருத்துவம் எடுப்பது தவறு. மேலும் மருந்தகங்களில் சுயமாக மருந்துகள் எடுப்பது மாபெரும் தவறாக அமையும்.

உங்கள் மகப்பேறு மருத்துவரையோ அல்லது குடும்ப மருத்துவரையோ அணுகி மருந்துகள் எடுக்கவும். கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய அபாயகரமான மருந்துகள் உள்ளன. அவற்றை மருத்துவர்கள் மட்டுமே அறிவர்.

ஆகவே கர்ப்பிணிகள் கட்டாயம் மருத்துவரை சந்தித்து மட்டுமே மருந்துகள் உட்கொள்ள வேண்டும். ஐந்தாவது மாதத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வொன்றைப் பற்றி பின்வரும் (அடுத்த) பகுதியில் காண்போம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

மலையகத் தோட்டங்களை தனியார் பிடியிலிருந்து மீட்போம் | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி

தோட்டங்களைத் தனியார் கம்பனிகளின் பிடியிலிருந்து மீட்கவேண்டும் ! – பு.ஜ.மா.லெ.க.-வின் மலையக பிராந்திய செயலாளர் தோழர் சுரேன் கோரிக்கை.

தோட்டங்களை அதாவது தோட்டக் குடியிருப்பு (லயன்அறைகள், தனி வீடுகள்) அதனோடு இணைந்த சுற்றுப்புறம் – விவசாய காணிகள், பாதைகள், மைதானம், வழிபாட்டிடம், இயற்கை வளங்கள் – ஆகியவற்றை தனியார் கம்பனிகளின் பிடியிலிருந்து மீட்டு முழுமையாக அரச நிர்வாகத்திற்குள் உள்வாங்க வேண்டும், அதற்காக நாம் அனைவரும் போராட வேண்டும். எமது பிரதிநிதிகள் முதலில் இப் பிரச்சினையை விளங்கிக் கொள்ள வேண்டும். பின் அதற்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மலையக பிராந்திய செயலாளரும் உக்குவளை பிரதேச சபை உறுப்பினருமான தோழர் டேவிட் சுரேன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மாத்தளையில் எல்கடுவ பிளாண்டேஷன் நிர்வாகத்தில் இயங்கும் எல்கடுவ தோட்டம் செம்புவத்த, ரோட்டலா, குளிராட்டி, நடுத்தோட்டம் ஆகிய ஐந்து பிரிவுகளை உள்ளடக்கிய தோட்டம் ஆகும்.

இதில் செம்புவத்த பிரிவில் குளம் சார்ந்த அழகிய பிரதேசம் காணப்படுவதால் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் இடமாக காணப்படுகிறது. பருவ காலங்களில் மாதம் ஒன்றில் பல கோடிகளை வருமானமாக பார்க்கும் இடமாக திகழ்கிறது. இங்கு சுமார் 12 வருடங்களுக்கு மேல் ஓர் தோட்ட அதிகாரியே பதவியில் இருந்து வருகின்றார்.

தொழிலாளர் மத்தியில் முன்னணியில் இருக்கும் சிலருக்கு கடந்த காலங்களில் சலுகைகளை வழங்கி தனக்கு எதிராக யாரும் கிளம்பி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக இவர் செய்த தந்திரங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சுற்றுலா பிரதேசம் என்பதால் பாதை ஓரங்களில் சிறு வியாபார கடைகளை மக்கள் நடத்தி வருகின்றனர். இதில் பல கடைகள் பிரதேச சபை அனுமதியோடு இடம்பெறுகின்றன. ஆனால் கடைகளை நடத்த முடியாது என்றும் தனது அனுமதி பெற்றே நடத்த வேண்டும் என்றும் அதிகாரம் புரிபவராக தோட்ட அதிகாரி காணப்படுகின்றார்.

செம்புவத்த பிரிவில் கன்னியம்மா ஊற்று கிணறு ஒன்று காணப்படுகின்றது. சுமார் 150 குடும்பங்கள் நீர்த் தேவையை பூர்த்தி செய்கின்ற வளமாக காணப்பட அதனை, நீர் தயாரிக்கும் தொழிற்சாலை ஆக மாற்ற தோட்ட அதிகாரி தந்திரமான முறையில் முயற்சி எடுத்து இருக்கின்றார்.

படிக்க :
மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் !
♦ இலங்கை : தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்படிக்கை !

அப்பிரதேசத்தில் இளைஞர்களில் சிலர் முச்சக்கர வண்டி ஓட்டி பிழைப்பு நடத்துகின்றனர். வாகனத் தரிப்பிடத்திற்கு அனுமதிக்க முடியாது அதனை அகற்ற வேண்டும் என மிரட்டி அழுத்தம் கொடுத்திருக்கின்றார்.

இந் நடைமுறை பிரச்சனையிலிருந்து நாம் ஒன்றை நாட்டிற்கு முன்வைக்கலாம் என முயற்சி செய்கின்றோம்.

பிரதான பாதையிலிருந்து தோட்டத்திற்கு பிரவேசிக்கும் பாதையான காங்கிரீட் மண்பாதை அரசாங்க நிறுவனமான உள்ளுராட்சிக்குள் வருகின்றதா? தோட்ட நிர்வாகத்திற்குள் வருகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

தோழர் சுரேன்

அதற்கு அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 30-ம் இலக்க பிரதேச சபை சட்டம் என்ன சொல்கின்றது எனப் பார்த்தால் ”பிரதேச சபையின் ஒரு தொகுதி நிதியை இனி தோட்டத்துக்கு கொண்டு செல்லலாம், பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட கடமை பொறுப்புகளுக்கு அமைய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம்.” என்று சொல்கின்றது.

நடைமுறையில் பிரதேச சபை பிரதான வீதியில் இருந்து தோட்டத்திற்கு பிரவேசிக்கும் வீதி ஒன்றை காங்கிரிட் இடுகின்றது என கொள்வோம், அதன்பின் அப்பாதை பராமரிப்பு பிரதேசசபையின் பொறுப்பாகும். பாதையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பிரதேச சபைக்கு சொந்தமானதாக கருதப்பட வேண்டும்.

அவ்வாறான பாதையோரத்தில் பிரதேச சபையின் அனுமதியோடு மக்கள் கடைகளை நடத்தலாம். அதனை தடுப்பதற்கு தோட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை என்பதே நியாயமானதாகும்.

ஆனால் இந்த நடைமுறை உதாரணம் மாபெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. பொறுப்பும் பராமரிப்பும் உள்ளுராட்சி நிறுவனத்திற்கா அல்லது தோட்ட நிர்வாகத்திற்கா என்பதே கேள்வியாகும்.

பிரதேசத்தின் நீர்வளம், இயற்கை வளங்கள் பிரதேச செயலாளருக்கும் பிரதேச சபைக்கும் பொறுப்பு என இருக்கையில் தோட்ட குடியிருப்புக்குள் காணப்படும், மக்கள் பயன்படுத்தும் ஊற்று கிணறு தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவது பொருத்தமானதாக இருக்குமா?

படிக்க :
தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! புதுவை அரங்க கூட்டம்
♦ “உன் உயிருக்கு இந்தியாவில் மதிப்பில்லை” – ஒரே வாரத்தில் 17 தொழிலாளர்கள் மரணம் !

இளைஞர்கள் தமது தேவை மற்றும் வாழ்வாதாரத்திற்காக முச்சக்கர வண்டி ஓடுகின்றனர். வருமானம் வாய்ப்பு வரும் இடங்களில் அதனை கொண்டு பணம் தேடுகின்றனர்.

முச்சக்கரவண்டி தரிப்பிடம் பிரதேச சபையில் பதியப்பட வேண்டும். தோட்டங்களில் வண்டி தரிப்பிடத்தை பதிவு செய்ய தோட்ட அதிகாரியின் அனுமதி கடிதத்தை பிரதேச சபை எதிர்பார்த்தால் சரியானதாக இருக்குமா?

இது செம்புவத்தை டிவிஷனில் மட்டும் உள்ள பிரச்சனை அல்ல. ஒட்டுமொத்த மலையகம் எங்கும் இவ்வாறான சிக்கலான நடைமுறை காணப்படுகின்றது.

ஏனைய இடங்களின் உதாரணங்களும் படிப்பினைகளையும் முக்கியம் பெறுகின்றது.

மலையக மக்கள் எனப்படுபவர்கள் 200 வருடங்களாக இலங்கையில் வாழ்கின்ற மக்கள் கூட்டம் ஆவர். கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட ஒரு தேசிய இனம், மலையக தேசிய இனத்தின் இருப்பு இன்றுவரை சவால்மிக்கதாகவே இருந்து வருகின்றது.

மேற்படி உதாரணங்கள் மூலம் தோட்டக் குடியிருப்புகளில் வாழ்பவர்கள் தோட்டங்களில் நிம்மதியாக வாழ முடியாத நிலையிலேயே இருக்கின்றனர் என்பது உறுதியாகிறது. மொத்தத்தில் தோட்டங்களில் மாட்டுப்பட்டி கட்டுவதற்கு கூட தோட்ட அதிகாரியிடம் அனுமதி வாங்கும் நடைமுறையை மாற்றியமைக்க நாம் போராட வேண்டும், எனவும் குறிப்பிட்டார்.

தகவல் : புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சி முகநூல் பக்கத்தில் இருந்து.

disclaimer

சென்னை பல்கலை : கிருபாமோகனை மீண்டும் இணை ! மாணவர் போராட்டம் !

0

சென்னை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் கிருபா மோகனின் சேர்க்கை செல்லாது எனக் கூறி அவரை பல்கலையிலிருந்து நீக்கியுள்ளது பல்கலை நிர்வாகம்.

சென்னைப் பல்கலையில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் எனும் மாணவர் அமைப்பு, சென்னைப் பல்கலை மாணவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காகவும், பல்கலையில் நிர்வாகத்தால் புகுத்தப்படும் இந்துத்துவக் கருத்தியல்களுக்கு எதிராகவும், பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த ஆண்டு இதே பல்கலையில் இதழியலில் முதுகலை பட்டம் முடித்த மாணவர் கிருபா மோகன், இந்த அமைப்பில் முன்னணியாக செயல்பட்டு வந்திருக்கிறார். இந்த ஆண்டு தத்துவவியலில் புத்த மதத் தத்துவம் பாடப்பிரிவில் படிக்க கல்லூரியில் மீண்டும் சேர்ந்துள்ளார்.

இதழியல் படிப்பு முடிந்தது அவரது  ‘தொல்லை’ முடிந்தது என்று கனா கண்டு கொண்டிருந்த ஏ.பி.வி.பி மற்றும் இந்துத்துவக் கும்பலின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போடும்வகையில் மீண்டும் பல்கலையில் கிருபா மோகன் சேர்ந்தார். இது பொறுக்க முடியாமல், ஆளுனர் மாளிகையிலிருந்து தத்துவவியல் துறைத்தலைவருக்கு தொடர்ச்சியாக கிருபா மோகனை கல்லூரியிலிருந்து வெளியேற்றுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலை காவிக் கும்பலுக்கு அடிபணிந்து பொய்க்காரணங்களைச் சொல்லி அவரை படிப்பிலிருந்து வெளியேற்றியதன் பின்னணியை அவரே விவரிக்கிறார். பாருங்கள் ! பகிருங்கள் !

சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் கிருபாமோகனை உடனடியாக பல்கலைக்கழகத்தில் இணைக்க வேண்டும் ! என்ற முழக்கத்தின் கீழ், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“ஆளுநரின் உத்தரவின் பெயரில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரின் தொடர் நெருக்கடியாலும் மாணவர் கிருபாமோகன் நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கப்படக் காரணம் என்னவென்றால் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தில் செயல்பட்டதுதான்.

அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ‘RSS – ஆளுநர்’ கூடாரம் மேற்கொண்டுள்ளது. இதனை அம்பேத்கர் பெரியார் வழிநின்று முறியடிப்போம்” என மாணவர்கள் முழங்கினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம். 
தொடர்புக்கு : 97888 08110.

***

அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்படுவது குற்றமா ?

  • சென்னைப் பல்கலைக்கழக மாணவர் கிருபாமோகன் நீக்கம் !
  • ஆளுநர் மாளிகை உத்தரவு !

மாணவர்கள், இளைஞர்களே !

  • சென்னைப் பல்கலைக் கழகத்தின் உத்தரவை திரும்பப் பெற குரல்கொடுப்போம் !
  • பாதிக்கப்பட்ட மாணவருக்கு துணைநிற்போம் !

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 94451 12675.

***

ம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தில் செயல்பட்டதற்காக ஆளுநரின் அழுத்தத்தின் பேரில் மாணவர் கிருபாமோகனது அட்மிசனை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் இரத்து செய்துள்ளது.

இதனை கண்டித்தும் மாணவர் கிருபாமோகனை மீண்டும் பல்கலைக்கழகத்தில் இணைக்கக் கோரியும் 05.09.2019 அன்று சென்னைப் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை சென்னை பல்கலையில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்ட தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம்.
தொடர்புக்கு : 97101 96787.

நூல் அறிமுகம் : வைக்கம் போராட்ட வரலாறு

வைக்கம் போராட்டம் என்பது கோவிலிலே நுழைவதற்காக நடந்த போராட்டம் அல்ல. அதுவே ரொம்பப் பேருக்குத் தெரியாது. முதலாவதாக வைக்கம் போராட்டத்தைப் பற்றித் தெளிவுபடுத்தப்படவேண்டிய உண்மை என்ன என்றால், தாழ்த்தப்பட்டவர்களோ, மற்றவர்களோ கோவிலுக்குள் போகவேண்டுமென்பதற்காக நடத்தப்பட்ட போராட்டமல்ல அது.

அது, கோவிலைச் சுற்றி இருந்த , தெருக்களிலே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடக்கக்கூடாது என்று நிலவி வந்த அக்கிரமத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் ஆகும்.

வைக்கம் கோவிலைச் சுற்றி இருந்த தெருக்களிலே அவர்கள் நடக்க உரிமை பெற்றவர்களல்ல; அவர்கள் போனால் தீட்டுப்பட்டுவிடும். ஆகவே அவர்கள் ஊரைச் சுற்றிக் கொண்டுதான் போகவேண்டுமென்று நடைமுறைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

எனவே, தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தெருவிலே நடக்க உரிமை வேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.

தீண்டாதார் என்பதற்கு நாம் – Un-touchable என்ற வார்த்தையைத் தொட்டால் தீட்டு என்ற கருத்திலே பயன்படுத்துகிறோம். ஆனால் வைக்கத்திலே அவர்கள் அன்று அமைத்திருந்த சமுதாய முறையிலே – தீண்டுவது என்பது மட்டுமல்ல; அந்த மக்கள் மற்றவர்களை நெருங்குவதே தீட்டு Un touchable என்பது மட்டுமல்ல; அவர்கள் எல்லாம் Un-approchables அதாவது நெருங்கவே கூடாதவர்கள் என்று வகுத்து வைத்திருந்தார்கள்.

… இந்த வைக்கம் போராட்டம் எப்படித் தொடங்கியது என்ற உண்மையைத் தந்தை பெரியாரவர்களின் ”தீண்டாமையை ஒழித்தது யார்?” என்ற புத்தகத்திலே இருந்து முதலில் எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

தந்தை பெரியார் வைக்கம் போராட்டம் பற்றிப் பேசுகிறார் கேளுங்கள்.

“வைக்கத்திலே போராட்டம் ஆரம்பமானதே ஒரு சிறு நிகழ்ச்சியிலேயிருந்துதான்.

தோழர் மாதவன் என்ற பி.ஏ., பி.எல்., படித்த ஒரு வக்கீல் ஒரு வழக்குக்காக ஆஜராகப் போனார். வழக்கு விசாரணைக்கான கோர்ட் இடம் ராஜாவுடைய கொட்டாரத்தில் (அரண்மனையில்) ஒரு இடம். ராஜாவின் பிறந்த நாள் விழாவிற்கு அந்த ராஜாவுடைய கொட்டாரத்தின் (அரண்மனையின்) எல்லாப் பாகத்திலும் பந்தல் போடப்பட்டதில் கோர்ட் நடக்கும் இடமும் பந்தலுக்குள் அடங்கிவிட்டது. இந்த மாதவன் வக்கீல் ஒரு கேசில் ஆஜராக அங்கே போகவேண்டிய அவசியம் வந்தது. இராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக முறை ஜெபம் ஆரம்பமாயிற்று. இந்த வக்கீல் ஈழவ (‘நாடார்’) சமுதாயத்தைச் சேர்ந்தவராதலால் அங்கே போகக்கூடாது என்று தடுத்தார்கள்.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

அந்த நேரம் நான் தமிழ்நாட்டிலே தீண்டாமை விலக்கு என்பதில் தீவிரமாக இருந்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நேரம்” என்கிறார் அய்யா!

தமக்கு அதிலே எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பதற்காக இதைச் சொல்லுகின்றார்.

”எனவே, இந்தச் சம்பவம் எதிலே இருந்து கிளம்பியது?

ஒரு வழக்கறிஞருக்குப் படித்த மாதவன் என்ற ஈழவ சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர், வாதாடுவதற்காக நீதிமன்றம் இருக்கின்ற இடத்திற்குப் போகின்றார். ஆனால், இவர் கீழ்ச்சாதிக்காரர் என்பதால் அங்கே போகக்கூடாது என்கிறார்கள்.

இதிலிருந்து இரண்டு செய்திகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனுடையை சாதி எங்கே போய் நிற்கிறதென்றால், அவனுடைய படிப்பையும் தாண்டி நிற்கிறது. வழக்கறிஞரானாலும் அவன் ஈழவன்தான் வக்கீல் அல்ல. அவனை ஒரு வழக்கறிஞனாகப் பார்க்கக்கூடிய சமுதாயமாக இந்த வர்ணாசிரமதர்ம சமுதாயம் இல்லை.

அந்த நிலையில், இதுதான் மற்றவர்களுக்கு ஆத்திரத்தையெல்லாம் உண்டாக்கியது.

மேலும், அய்யா சொல்லுகிறார்.

”இந்த மாவதன் (வக்கீல்) சங்கதியை வைத்தே திருவனந்தபுரத்து ஈழவ சமுதாயத் தலைவர்கள் சத்தியாகிரகம் ஆரம்பிக்க வேண்டுமென்று முடிவு செய்தனர். வக்கீல் மாதவன், டி.கே. மாதவன், கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.பி. கேசவமேனன் இவர்களோடு இன்னும் சிலரும் சேர்ந்து முடிவு செய்தார்கள்.

… ”முறை ஜெபத்தன்று ஆரம்பிப்பது என்று முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்கள். நான் அப்போது தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவராக இருக்கிறேன். எந்த ஊரில் சத்தியாகிரகம் ஆரம்பிக்கலாமென்பதற்கு வைக்கத்தையே தேர்ந்தெடுத்தார்கள்.

ஏனென்றால், அந்த ஊரில்தான் ஊர் நடுவில் கோயிலும், அதன் 4 வாசலுக்கு எதிரிலும் 4 நேர் வீதிகளும், கோயில் மதில்கள் சுற்றிலும் பிரகாரம் தெருக்கள் எல்லாம் இருக்கும்.

அந்த வீதிகளில் கீழ்ச்சாதிக்காரர்களான அவர்ணஸ்தர்களும், அயித்தக்காரர்கள் எனப்படும் தீண்டாதாரும் நான்கு புறத் தெருக்களிலும் கோயில் வாசல்களுக்கு முன்னால் நடக்கக்கூடாது! மூன்று ஃபர்லாங் தூரத்திலேயும், 4 ஃபர்லாங் தூரத்திலேயும் இருக்கிற ரோட்டில்கூட நடக்காமல் ஒரு மைல் தூரம் வேறு ரோட்டில் சுற்றிக்கொண்டுதான் எதிர் ரோட்டுக்குப் போகவேண்டும். அயித்தக்காரர்களான தீண்டப்படாதவர்களைப் போலவேதான் ஈழவர்கள், ஆசாரிகள், வாணியர்கள், நெசவாளிகள் முதலியோரும் அந்த ரோட்டில் நடந்து போகக்கூடாது.

இதே மாதிரிதான் சுசீந்திரத்திலும் உள்ள கோயில் மற்றும் அந்த ராஜ்யத்தில் உள்ள மற்றக் கோயில்கள் பக்கம் அமைந்துள்ள தெருக்களிலும் நடக்க இவர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.

வைக்கத்தில் கோயிலுக்கு பக்கமாக வாசலுக்கு எதிராக அமைந்த தெருக்களில்தான் எல்லா முக்கிய ஆபீசுகளும், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் முதலியனவும் இருந்தன. ஏதாவது போலீஸ்காரர்களையோ, இன்ஸ்பெக்டர்களையோ, குமாஸ்தாக்களையோ மாற்றுவதானாலும்கூட கீழ்ச்சாதியர்களை அங்கு மாற்ற மாட்டார்கள். ஏனென்றால், அந்தப் போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டுக்கள் இருக்கும் இடத்திற்குப்போக கீழ்ச்சாதியார்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், முக்கியமான கடைகளும் அந்த வீதிகளில்தான். ஆனதால் கீழ்ச்சாதிகள், கூலிகள் அங்கு செல்ல முடியாது. (நூலிலிருந்து பக்.9-13)

… காந்தியார் கோவில் பிரவேசத்தைப் பற்றிப் பேசும்போது அதுவும் சுயமரியாதைப் பிரச்சார நிர்ப்பந்தம் காரணமாய் கோவில் பிரவேசத்தை அனுமதிக்க வேண்டி வந்தபோது,

“கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்ல முடியுமோ அந்த அளவுவரையில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்.”

என்று சொல்லி அனுமதித்ததால் அந்த அளவுக்குத்தான் நாடார் சமுதாயம் உள்பட கோவில் பிரவேசமில்லாத எல்லா மக்களுக்கும் அனுமதி கிடைத்தது.

காந்தியாரின் தந்திரம்

அதன்மீது பெரியார் ஆத்திரப்பட்டு, “தீண்டாமை விலக்கு என்பதும், கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்குகாக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள் ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று வேகமாகப் பிரச்சாரம் செய்து வந்தார். இதன்மீது காந்தியார் மக்களை ஏமாற்ற வேறு ஒரு தந்திரம் செய்தார்.

அதாவது, “இதுவரையில் இதற்கு முன் பிராமணர்களுக்கு என்று மாத்திரம் எந்த இடம் இருந்து வந்ததோ அந்த இடத்திற்குப் பிராமணர்களும் செல்லக் கூடாது; மற்ற எல்லா சாதியாருக்கும் அனுமதிக்கப்பட்டிருந்த இடம் வரையிலுமேதான் பிராமணனும் செல்லலாம்” என்று அபிப்பிராயம் கூறி அந்தப்படியே பல கோவில்களில் மூங்கில் கழியைக் கொண்டு தடுப்புகட்டி தடை செய்யப்பட்டது.

பார்ப்பானுக்கு மட்டுமுள்ள தனி உரிமையா?

இதுபற்றி மதுரைக் கோவிலுக்குள் பெரியார் சில தோழர்களுடன் சென்று தடுக்கப்பட்ட இடத்தில் பல பார்ப்பனர்களும் பார்ப்பனத்திகளும் நிற்பதைக் கண்டு அங்கேயே அது பற்றிக் கிளர்ச்சி செய்தார்; பத்திரிகையில் எழுதினார் என்றாலும் அர்ச்சகர் என்ற பெயரில் இன்றும் பார்ப்பனர்கள் பார்ப்பனத்திகளும் உள் மண்டபத்தில் இருந்துதான் வணங்குகிறார்கள். இது எப்படியோ இருந்தாலும் பார்ப்பனன்தான் கர்ப்பக கிரகத்திற்குள் சிலை இருக்கும் இடத்திற்குள் போகலாம்; மற்றபடி சூத்திரனோ, பஞ்சமனோ என்பவர்கள் கர்ப்பக கிரகத்திற்குள் போகக்கூடாது என்கின்ற சாதிமுறை சாதிபேத முறை இன்றும்தான் இருந்து வருகிறது.

இது விஷயத்தில் காந்தியாருடையவும் பார்ப்பனர்களுடையவும் சூழ்ச்சி எல்லாம்.

பார்ப்பனர்களின் கவலை!

சாதி ஒழிக்கப்படுவதால், பார்ப்பனர்களுடைய தூய்மை கெட்டுவிடுகிறது என்பதோ, தங்கள் நிலைமை அசுத்தமாக்கப்பட்டுவிடுகிறது என்பதோ அல்லவே அல்ல. மற்றென்னவென்றால், தங்களுக்கு பார்ப்பனர்களுக்கு இருந்துவரும் உயர்வும் தனி உரிமைகளும், பாடுபடாமல் ஊரார் உழைப்பில் அனுபவிக்கும் சுகபோகமும், உயர்வாழ்வும், ஏகபோகமும் அழிந்துபோகுமே என்கின்ற கவலைதான்.

படிக்க:
பெரியார் மண்ணில் கருவறைத் தீண்டாமையை ஒழிப்போம் !
தீண்டாமையின் தலைநகரம் – மோடியின் குஜராத் !

இதை உத்தேசித்தேதான் சாதி என்பதில் எவ்வித தனிக்கடமையும் இல்லாமல் உயர்வு என்கின்ற உரிமையை மாத்திரம் அனுபவிக்கும்படி சட்டத்தால் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டார்கள் இதற்குக் காரணம் காந்தியார் செய்த மோசடியும் சூழ்ச்சியும் ஆன மாபெரும் துரோகம்தான்.  (நூலிலிருந்து பக்.75-76)

நூல் : வைக்கம் போராட்ட வரலாறு
தொகுப்பாசிரியர் : கி. வீரமணி., எம்.ஏ., பி.எல்.

வெளியீடு : திராவிடர் கழக வெளியீடு,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 044 – 2661 8161 ; 8428 455 455

பக்கங்கள்: 96
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuvalnhm | periyarbooks

தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! புதுவை அரங்க கூட்டம்

1

மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! என்ற தலைப்பின் கீழ் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்க கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு வந்திருந்த மாணவர்கள் – இளைஞர்கள், பேராசிரியர்களை பு.மா.இ.மு தோழர் பரத் வரவேற்றுப் பேசினார்.

அதன் பின் தோழர் ஏ. மோகன் அவர்கள் இக்கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். அவர் தனது தலைமையுரையில்: “இந்த தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா என்பது பல தேசிய இனங்களின் பல மொழி, கலச்சாரம் கொண்ட நாடு. இங்கு இரண்டு மொழிகளில் மட்டும் அறிக்கை வெளிடுவதும்; கிராமபுற ஏழை எளிய  மக்களிடம் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கக் கூடாது என்ற நோக்கத்திலும்தான் ஒரு நாடகத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் இதனை நாம் முறியடிக்க வேண்டும்.” என பேசினார்.

அவருக்கு பின் கருத்துரையாற்றிய மாணவி பூங்குழலி அவர்கள் “மோடி அவர்கள் பதவி ஏற்ற உடனே அவசரமாக வெளியிட்டது, இந்த அறிக்கைதான். இந்தக் கல்விக் கொள்கை மக்களுக்கானதா? 484 பக்கம் கொண்ட இந்த கல்வி அறிக்கை பிரதிநிதித்துவப் படுத்தப்படாத மக்களாகிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண் கல்வியை பற்றி எதுவும் பேசவில்லை.

எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன். நான் படித்த பள்ளி வகுப்பறையில் மொத்த மாணவர்கள் 54 பேர் அதில் இளங்கலை பட்டம் படிக்க சென்றவர்கள் 14 பேர், முதுகலை பட்டம் படிக்க சென்றவர்கள் 3 பேர்தான். மீதம் உள்ளவர்கள் எதாவது ஒரு வேலைக்கு செல்கிறார்கள். கல்வி என்பது இன்னமும் முழுவதும் போய் சேராமல் உள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் இன்னமும் உள்ளது. நிர்மலாதேவி போன்ற பேராசிரியர்கள் பெண் கல்வியை அழிக்கிறார்கள்.

படிக்க:
“உன் உயிருக்கு இந்தியாவில் மதிப்பில்லை” – ஒரே வாரத்தில் 17 தொழிலாளர்கள் மரணம் !
♦ தேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் ! – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்

இந்த நிலையில் மோடியின் கல்விக் கொள்கை பெண்களுக்கான உயர் கல்வியைப் பற்றியும், மாற்று திறனாளிகள் பற்றி எதுவும் பேசவில்லை. இவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும்விதமாக உள்ளது இந்த அறிக்கை. இதற்கு எதிராக தனித்தனியாக போராட முடியாது. அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்துதான் போராட வேண்டும்.” என பேசினார்.

அவருக்குப் பின் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க செயலர், திரு ஜெ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பேசுகையில் : “அரசு பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. காரணம் தரம் இல்லை, ஆசிரியர்கள் சரியில்லை என்ற ஒற்றை குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. நிஜம் என்னவென்றால் 1 கி.மீ அளவில் ஆரம்பப் பள்ளி, 3 கி.மீ அளவில் நடுநிலைப்பள்ளி, 5 கி.மீ அளவில் உயர்நிலைப் பள்ளி, 8 கி.மீ அளவில் மேல்நிலைப் பள்ளி இருக்க வேண்டும் என்பதை, காமராஜர் ஆட்சி காலத்தில் கல்வித்துறை இயக்குனராக இருந்த மேட்டூர் சுந்தர வடிவேலு என்பவர் பரிந்துரைத்தார்.

திண்ணைப் பள்ளிக்கூடம், குருகுல பள்ளிக்கூடம் என்றெல்லாம் இருந்தது. ஆனால், எல்லா மக்களுக்கும் சமமான கல்வி கொடுக்கும் வகையில் இருந்ததா? அரசுப் பள்ளி உருவான பிறகுதான் சாதி, பாலினம் கடந்து அது சாத்தியமானது. அரசு பள்ளி உள்ள இடங்களில் 1 கி.மீ-க்குள் தனியார் பள்ளிகளுக்கு கண்மூடித்தனமாக அனுமதி கொடுத்துவிட்டு, அரசுப் பள்ளியின் குறைகளைச் சரிசெய்யாமல் விட்டது அரசுதான்.

கிராம சபையைக் கூட்டி அங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அரசு பள்ளிகளின் அவசியத்தைப் பற்றிப் பேசி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கிறோம். அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்! மேலும் எழுத்தாளர் தமிழ் செல்வன் அவர்கள் இந்த வரைவு அறிக்கை என்பது “குழந்தை கல்விக்கான மரண சாசனம்” என்று சொல்கிறார். இது அரசு பள்ளிகளுக்கான மரண சாசனமும் கூட என்று கூறுவதற்கு ஏற்பதான் இந்த கல்விக் கொள்கை இருக்கிறது .

கோத்தாரி கல்விக் குழு 1968-ல் வெளியிட்ட அறிக்கை பத்து பக்கம் கூட இல்லை மிக அருமையான கல்விக் கொள்கை. இரண்டு முக்கியமான விஷயம் கல்வி என்பது மாநில பட்டியலில் இருந்தது. பள்ளிகளை தனியார் நடத்த அனுமதிக்கலாம் என்பது கொள்கை அளவில் இல்லை. 1986-ல் உருவான கல்வி கொள்கையில் (ராஜீவ் காந்தி ஆட்சியில்) மேலே சொன்ன இரண்டு அம்சங்களும் ஒழிக்கப்பட்டன.

தனியார்மய – தாராளமய கொள்கை அடிப்படையில் கல்வி கொடுப்பது அரசின் வேலை இல்லை. வசதி உள்ளவனுக்கு கல்வி, மருத்துவம் என்றானது. 1992-ல் (நரசிம்மராவ் ஆட்சியில்) கல்வியை வணிகமயமாக்கலாம் என காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இன்று மோடி அதை மேலும் தீவிரமாக்கும் வகையில் தனியார் முதலாளிகளுக்காகவும், இந்து மதவெறியர்களுக்காகவும் மேலும் திருத்தியுள்ளார். “மோடியின் இந்த கல்விக் கொள்கையை குப்பையில் போட வேண்டும்” என கல்வியாளர் எஸ். எஸ். இராஜகோபாலன் கூறியுள்ளார். அதனை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.” என தனது உரையில் கூறினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அவரைத் தொடர்ந்து புதுவை பல்கலைக்கழக பேராசிரியர். ஜெரொம் அவர்கள் அவரது உரையில் : “இந்த புதிய கல்வி கொள்கை என்பது பா.ஜ.க என்ன நினைக்கிறார்களோ அதை நிறைவேற்ற பார்க்கிறார்கள். நம் சமூகத்தில் நம்முடைய வாழ்க்கையில் கல்வி என்பது பள்ளிக் கூடம், கல்லூரி இவையெல்லாம் இல்லாமல் இருந்தால் என்னவாக இருந்திருப்போம்?

நாம் என்ன வேலை செய்திருப்போம் ? நமது அப்பா – அம்மா என்ன வேலை செய்திருப்பார்கள் ? கல்வி என்பது நமது சமூகத்தில் எவ்வளவு அவசியமானது ? கல்வி கிடைப்பதற்கு முன் நமக்கு என்ன அடையாளம் என்றால் சாதிகள்தான். ஆனால் நவீன காலத்தில் எல்லா மக்களுக்கும் ஒரு பொதுவான அடையாளம். கல்விக்கேற்ற,  தகுதிக்கு ஏற்ற வேலை என்று மாறியுள்ளது. சாதி சார்ந்த ஒடுக்குமுறையில் இருந்தும், சாதி சார்ந்த தொழில் முறையில் இருந்தும் தப்பிப்பதற்காக என்றுதான் நாம் இந்த கல்விமுறையை பார்க்க முடியும்.

இப்போது கூட நூற்றுக்கு பத்து சதவிதம் பேர் மட்டும்தான் உயர்கல்விக்குப் போகிறார்கள். மற்றவர்களுக்கும் போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் எந்த திறனையும் வளர்த்துக் கொள்ளலாம் என்பது மனித இயல்பு.” என்று கூறினார்.

மேலும், மாணவர்கள் கல்வி உதவித் தொகை தொடர்பான சிக்கல்களையும், கடந்த காலங்களில் அவருடைய வகுப்பில் கூலி வேலை பார்க்கும் பிள்ளைகள் படித்து வந்ததையும், கட்டண உயர்வால் ஏழை மாணவர்களின் கல்வி பறிபோனதையும்  பகிர்ந்து கொண்டார். நாம் எந்த துறையில் வளர்ந்து வர முடியும் என்பதை தேர்வு செய்வதற்கு பக்குவப்படாமல் உள்ளார்கள் என்றால், நாம் என்னமாதிரியான கல்வித் திட்டத்தை வைத்துள்ளோம் என்பதை பார்க்க வேண்டும். மூன்றாம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு என்பது மீண்டும் குலத்தொழிலுக்கு தள்ளுவதுதான் என்பதை மிக எதார்த்தமாக விளக்கிப் பேசி தொடர்ந்து நமது போராட்டம்தான் இதற்கான விடையைத் தரும் எனக் கூறினார்.

படிக்க:
அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !
♦ தமிழகத்தை நாசமாக்காதே – விழுப்புரம் கருத்தரங்கம் | செய்தி – படங்கள்

அவரைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் . இளங்கோ அவர்கள் : “நான் கலந்து கொண்ட கூட்டங்களியே இது தனித்துவம் வாய்ந்த கூட்டம் என்று கருதுகிறேன். உன்மையில் இங்கு அமர்ந்திருக்கும் நீங்கள் இந்த கூட்டத்தை ரசிக்க வேண்டும், ஏனென்றால் நமக்கு மேலே உள்ளவர்கள் எதிர்ப்புகளே இல்லாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்ற கனவில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் பொழுது இங்கு ஒரு மேடை போட்டு தனது கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யும் கருத்தாளர்கள் மத்தியில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். நாளை எங்களை அமர்த்தி நீங்கள் பேசவேண்டும் என்றால் உங்களுக்கு தேடல் இருக்க வேண்டும்.

எல்லோருக்கும் தேடல், சிரிப்பு, அழுகை உள்ளது. எதற்காக என்றால் தங்கள் சொந்த வாழ்க்கைகாக. ஆனால் சொந்த வாழ்க்கையை விட்டு பொது நலனுக்காக கோபப்பட வேண்டும். ஆனால் நமது நாட்டின் சாபக் கேடு என்னவென்றால் எது நடந்தாலும் நமக்கென்ன என்ற கூட்டம் தான் 99 சதவிதம் பேர். ஆனால் ஒவ்வொரு பிரச்சினையைப் பற்றியும் பேசி விவாதிக்க வேண்டும்.

காஷ்மீர் செல்வம் கொழிக்கும் இடம். அதானி, அம்பானி அங்கு சொத்து வாங்க வேண்டும் எனத் துடிக்கிறார்கள். அதே போலத்தான் பன்னாட்டு முதலாளிகளுக்கு கல்வியைத் திறந்து விடுவதுதான் இந்த கல்விக் கொள்கை. நாம் இதற்கு ஒரு பெயர் வைக்கலாம் என இதற்கு முன் பேசிய கூட்டத்தில் சொன்னேன், அது என்ன பெயர் என்றால் ஏகலைவனின் புதிய கட்டைவிரல்.

ஒடுக்கப்பட்டவர்களின் கல்வியறிவை பறித்துக் கொள்கின்ற வேலையை செய்கிறது இந்த கல்வி கொள்கை. மூவாயிரம் ஆண்டுகள் ஏமாந்தோம். இனி ஒரு நாளும் ஏமாற மாட்டோம். இந்த புதிய கல்வி கொள்கையில் சமுதாயம் என்ற வார்த்தைக்கு என்ன விளக்கம் என்பதை கடைசிவரை சொல்லவில்லை. அது என்ன சமுதாயம் என்றால் இனி கல்வியை RSS பார்த்துக் கொள்ளும் என்பதுதான். கல்வியை தனது வசப்படுத்திக் கொள்ளும். இந்த வரைவு அறிக்கையில் இடஒதுக்கீடு என்பதே இல்லை.” இவ்வாறு ஏராளமான விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவருக்கு அடுத்தபடியாக பேராசிரியர் ப.ரவிக்குமார் பேசுகையில் : “இந்த கல்விக் கொள்கையை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் இந்த புதிய கல்வி கொள்கை என்பது கார்ப்பரேட்டுகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் உகந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

தாய் மொழிவழிக் கல்வி என்பதை முழுவதுமாக மறுக்கவில்லை. ஆனால் மும்மொழிக் கொள்கை என்பது இந்தி பேசும் மாநிலத்திற்கு வேறொரு நீதியையும், மற்ற மாநிலங்களுக்கு ஒரு நீதியையும் முன்வைக்கிறது. மழலையர் கல்வியில் மட்டும் பென்கள் கல்வியை பற்றி பேசப்படும் வரைவு அறிக்கை உயர்கல்வியில் அது பற்றி பேசப்படவில்லை. தரம் தரம் என்று பேசப்படும் பொழுது நாம் சந்தேகப்பட வேண்டும். இந்த கல்விக் கொள்கையை பேசவேண்டியவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்தான்.” என தனது கருத்தை பதிவு செய்தார்.

இறுதியாக புமாஇமு மாநில ஒருங்கிணைப்பளர் தோழர் . கணேசன் அவர்கள் “இந்த கல்வி கொள்கையை ஏன் நிராகரிக்க வேண்டும் என்றால் ஒரு வார்த்தையில் சொல்ல முடியும், தலைப்பிலேயே தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை என்று இருப்பதாலேயே நிராகரிக்கலாம். ஏனென்றால் இங்கு பல தேசிய இனங்கள் உள்ளன, அனைத்துக்கும் சேர்த்து ஒரே கல்விக் கொள்கை என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். தமிழகம் – புதுவை இரண்டு மாநிலங்கள் என்றாலும் சமூக அடிப்படையில் அரசியல், பொருளாதார அடிப்படையில் இணைந்ததாக இருந்து வருகிறது.

நாம் இங்கு கல்விக் கொள்கையை பொருத்தவரை தமிழகத்துக்கும், புதுவைக்கும் ஒரு மாதிரியாக இருக்கலாம் என பேசலாம். ஆனால் நமக்கும் உத்திரபிரதேசத்துக்கும் எவ்வாறு ஒரே கல்விக் கொள்கையை பேச இயலும். மொழியால், இனத்தால், கலச்சாரத்தால் இணைந்தவர்களா..?

நாடு முழுவதும் உள்ள கல்வியளர்கள் பேசுகிறார்கள் இதை நிராகரிக்க வேண்டும் என்று. ஆனால் துக்ளக் குரு மூர்த்தி என்ன சொல்கிறார், எடப்பாடி என்ன சொல்கிறார்?” எனக் கேள்வி எழுப்பினார்.  இந்த 484 பக்க வரைவு அறிக்கையில் முதலில் தொடங்கி கடைசி பக்கம்வரை இரண்டு கொள்கைகள் பட்டவர்த்தனமாக சொல்லப்படுகிறது. ஒன்று இந்துத்துவா கொள்கை, மற்றொன்று கார்ப்பரேட் கொள்கை.

ஏற்கெனவே நிலவும் கல்விக் கொள்கையையே நாம் விரும்பவில்லை. நாங்கள் அதை மாற்றவேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் நீ சொல்லும் கல்வி கொள்கை வடிவத்தில் இல்லை. ஏன் பின்லாந்து கல்வி கொள்கை இந்தியாவுக்கு கொண்டு வர முடியாதா? அதை அரசு நினைத்தால் கொண்டு வரமுடியும். ஆனால் மோடி அரசு கொண்டுவருமா? வராது, ஏனென்றால் அனைவருக்குமான சமத்துவத்தை ஆர்.எஸ்.எஸ் என்றும் ஏற்காது.

இந்த கல்வி கொள்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டியதுதானே, அவ்வாறு வெளியிடமாட்டார்கள் ஏனென்றால், இதன் மீது யாரும் கருத்து சொல்லக் கூடாது என்பதுதான் அவர்களுடைய எண்ணம்.

பின்லாந்து கல்வியை பட்டியலிட்டுக் காட்டும்போது முதல் பத்து இடங்களுக்குள் வருகிறது. காரணம் அரசாங்கம் அதிக நிதி ஒதுக்குகிறது, தாய்மொழி வழியில் கல்வியை அறிவியல் பூர்வமாக கற்றுக் கொடுக்கிறது. ஆனால் இங்கு கார்ப்பரேட் முதலாளிக்கு அடிமையாக இருந்து சேவை செய்ய வேண்டும் என்பதுதான் இவர்கள் விருப்பம். இந்த கல்விக் கொள்கை என்பது கார்ப்பரேட் – காவி இரண்டும் இணைந்த புதியவகை ஹைபிரிட் வீரிய ஒட்டுரகம்.” என விரிவாக பேசினார்.

கூட்டத்தின் கடைசியாக தோழர் அரிஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார். அரங்க கூட்டத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள் மாற்று கட்சி நண்பர்கள் என சுமார் 120 பேர் கலந்துகொண்டனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, 
புதுச்சேரி. தொடர்புக்கு : 81244 12013

ஆறு வயதுக் குழந்தைகளின் அதிசயத் திறமையின் ரகசியங்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 06

அதிசயத்தின் “ரகசியங்கள்”

ன்று அதிசயம் நடக்குமா? இதோ இப்போதுதான் எல்லா எழுத்துகளையும் கற்று முடித்த ஆறு வயதுக் குழந்தைகளால் தமது மகிழ்ச்சிகளையும் வருத்தங்களையும் எழுத்து வடிவில் வடிக்க முடியுமா? நான் உணர்ச்சிவசப்படுகிறேன். என்றாலும், சென்ற ஆண்டுகளின் அனுபவம் எனக்கு நம்பிக்கையளிக்கிறது. அவர்கள் அடிப்படை எழுத்து வடிவ அம்சங்களைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு நான் 84 நாட்கள் இவர்களைத் தயார்படுத்தினேன். இதோ எனது முறையியலுக்கான பரிசோதனை நேரம் வந்து விட்டது. இன்றைய பாடத்தின் எல்லா “ரகசியங்களும்” இதில்தான் அடங்கியுள்ளன.

இதோ இந்த “ரகசியங்கள்”.

முதலில் என் வகுப்புக் குழந்தைகள் வார்த்தையின் கட்டமைப்பைப் பகுப்பாய்வு செய்யக் கற்றுக் கொள்கின்றனர். நான் செயற்கையாக நீண்டு இழுத்தபடி உச்சரிக்கும் வார்த்தைகளை இவர்கள் புரிந்து கொள்ளுமாறு செய்கிறேன், அவர்களே இம்மாதிரி உச்சரிக்கச் சொல்லித் தருகிறேன், இவற்றில் எந்த வரிசையில் ஒலிகள் ஒலிக்கின்றன என்பதையும் கவனித்துக் கொள்கிறேன். அட்டை வில்லைகளின் உதவியால் அவர்கள் வார்த்தையின் ஒலியமைப்பைக் கண்டுபிடிக்கின்றனர்.

இது பின்வருமாறு நடக்கிறது: வார்த்தையை மெதுவாக, இழுத்தபடி உச்சரித்து குழந்தை முதல் ஒலியைக் கண்டுபிடித்து அட்டை வில்லையைப் போடுகிறான் – நீல நிற அட்டைவில்லை மெய்யெழுத்தையும் சிவப்பு நிற அட்டைவில்லை உயிரெழுத்தையும் குறிக்கும்; வார்த்தையை மீண்டும் உச்சரித்து இரண்டாவது ஒலியைக் கண்டுபிடித்து அட்டைவில்லையைப் போடுகிறான். இதே போல் அடுத்து வரும் ஒலிகளைக் கண்டு பிடித்து அட்டை வில்லைகளைப் போடுகிறான். இவ்வாறாக வார்த்தையின் மாடல் இதன் ஒலியமைப்புடன் கிடைக்கிறது; இதை அவன் மாற்றியமைக்கலாம், ஒலிகளை மாற்றலாம், ஒரு ஒலிக்குப் பதிலாக வேறு ஒலியை வைக்கலாம், ஏதாவதொரு ஒலியை அகற்றலாம், இச்சந்தர்ப்பங்களில் எல்லாம் வார்த்தை எப்படி மாறுகிறது என்று கவனிக்கலாம்.

இத்திறமை தான் வார்த்தைகளை எழுதும் முறையின் அடிப்படையாகத் திகழுகிறது. நான் வார்த்தைகளை எழுதும் படி குழந்தைகளுக்குச் சொல்ல, அவர்களுக்கு இன்னமும் எழுத்துகள் தெரியாதாகையால், எந்த ஒரு எழுத்திற்கும் பதிலாக வட்டத்தைப் பயன்படுத்துவார்கள். இதை நான் அரை எழுத்து என்கிறேன். ஒவ்வொரு நாளும் செல்லச் செல்ல இந்த முறையில் வார்த்தைகளை எழுதும் திறமை வளருகிறது, ஒலிகளைக் கண்டுபிடிக்க வார்த்தைகளைப் பல முறை திரும்பச் சொல்ல வேண்டியதில்லை. முதல் முயற்சியிலேயே அவன் எழுதுகிறான். இவற்றையெல்லாம் குழந்தைகள் எழுத்துகளைக் கற்கும் முன்னரே கிரகிக்கின்றனர்.

பின்னர் எழுத்துகளைக் கற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்ள, கலப்பு முறையில் (இதுவரை கற்ற எழுத்துகளை அப்படியே எழுதியும் இதுவரை படிக்காத எழுத்துகளுக்கு வட்டங்களைப் பயன்படுத்தியும்) வார்த்தைகளை எழுதுமாறு குழந்தைகளுக்குச் சொல்கிறேன். இவ்வாறாக ஒவ்வொரு புது எழுத்தும் உடனடியாக, எதற்காக தோற்றுவிக்கப்பட்டதோ அந்த முறையினுள் (வார்த்தையின் எழுத்தாக) உடனடியாகச் சேருகிறது. அரை எழுத்து படிப்படியாக முழு எழுத்தாகிறது, எழுத்துகள் வட்டங்களை வெளித் தள்ளுகின்றன. எனவே ஆறு வயதுக் குழந்தைகள் எல்லா எழுத்துகளையும் கற்றுக் கொள்ளும் முன்னரே வார்த்தைகளை எழுதக் கற்கின்றனர். எனது முறையியலின் முதல் “ரகசியம்” இதுதான்.

அடுத்து வாக்கியங்களைப் பற்றி பார்ப்போம். படங்களைப் பார்த்து முக்கோண அட்டைகளைப் பயன்படுத்தி வாக்கியங்களை உருவாக்குமாறு குழந்தைகளுக்குச் சொல்கிறேன். பின்வருமாறு வாக்கியம் உருவாக்கப்படுகிறது: குழந்தை வாக்கியத்தை உச்சரித்து, முதல் வார்த்தையைக் கண்டுபிடித்து ஒரு அட்டையை வைக்கிறான், மீண்டும் அதே வாக்கியத்தை உச்சரித்து இரண்டாவது வார்த்தையைக் கண்டுபிடித்து மற்றொரு அட்டையை முதல் அட்டையின் அருகே வைக்கிறான், இதே போல் தொடருகிறது. இறுதியில் அவன் என்ன சொல்ல வந்தான் என்பதைப் பொறுத்து முற்றுப் புள்ளி, ஆச்சரியக் குறி அல்லது கேள்விக் குறியுடன் கூடிய அட்டையை வைக்கிறான். இவ்வாறாக வாக்கிய மாடல் கிடைக்கிறது.

இதில் வார்த்தைகளை மாற்றியமைக்கலாம், ஏதாவதொரு வார்த்தையை அகற்றலாம், புதிய வார்த்தையைச் சேர்க்கலாம். ஒவ்வொரு முறையும் அர்த்தம் எப்படி மாறுகிறது, வாக்கிய அமைப்பு எப்படி மாறுகிறது, அதன் உட்பொருள் எப்படி செழுமையடைகிறது அல்லது மோசமாகிறது என்று குழந்தை கவனிக்கிறான், வார்த்தைகளை எப்படி நன்றாக சேர்ப்பது என்று சிந்திக்கிறான். பின்னர் குழந்தைகள் “வாக்கியங்களை எழுத” கற்றுக் கொள்கின்றனர்: வாக்கியத்தை உச்சரித்து, முதல் வார்த்தையைக் கண்டுபிடித்து, அதை ”எழுதுகின்றனர்”, அதாவது நீண்ட முக்கோணத்தை வரைகின்றனர்; மீண்டும் அதே வாக்கியத்தை உச்சரித்து, இரண்டாவது வார்த்தையைக் கண்டுபிடித்து அதே வழியில் “எழுதுகின்றனர்”. வாக்கியத்தின் இறுதியில் முற்றுப் புள்ளியையோ, ஆச்சரியக் குறியையோ, கேள்விக் குறியையோ இடுகின்றனர். படங்களைப் பார்த்து சிறு கதைகளை ”எழுதவும்”, சொந்தக் கருத்துகள், உணர்ச்சிகளை “எழுதவும்” படிப்படியாக குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறேன். இவ்வாறாக இந்த 84 நாட்களில் ஒவ்வொருவரும் ஒரு சில நோட்டுப் புத்தகங்களை முடிக்கின்றனர்.

இதில் என்ன ”எழுதப்பட்டுள்ளது” என்று இவர்களால் மட்டுமே படிக்க முடியும். இவர்கள் தமது ‘கட்டுரைகளைப்’ பாடங்களிலும் இடைவேளைகளிலும் எனக்குப் படித்துக் காட்டினர். எனவே, எழுத்துகளைக் கற்றுக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே தமது மனப்பதிவுகள், உணர்ச்சிகளைப் பற்றி எழுதவும் தமது கருத்துகளை வரிவடிவத்தில் வெளியிடவும் குழந்தைகளுக்குத் தெரிந்திருந்தது என்றாகிறது. எனது முறையியலின் இரண்டாவது “ரகசியம்” இதுதான்.

படிக்க:
காஷ்மீர் : ‘இது எமெர்ஜன்சி அல்ல’ – ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகல் !
வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !

அடுத்து, உணர்வு பூர்வமாகப் பேச, அதாவது எதை, எப்படி சொல்வது என்று முதலில் யோசித்து பின் பேசச் சொல்லித் தருகிறேன். இதற்கு நான் முதலில் பின்வரும் முறையைப் பின்பற்றுகிறேன்:

ஏதாவது ஒரு விஷயத்தை மெதுவாகத் திரும்பிச் சொல்ல, தம் மனப்பதிவுகள், உணர்ச்சிகளை மெதுவாக வெளியிட குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கிறேன். அதுவும், இதுவரை எனக்குத் தெரியாததைச் சொல்லும்படி குழந்தைகளிடம் கூறுகிறேன். நான் புதிய படத்தைப் பார்க்கவில்லை, குழந்தை இதை நேற்று பார்த்திருக்கிறான். எனக்கு அப்படத்தைப் பற்றி அறிய ஆவல், அவனுக்கோ என்னுடன் பேச விருப்பம். அவன் ஞாயிற்றுக்கிழமையை எப்படிக் கழித்தான் என்று எனக்குத் தெரியாது, அவனுக்கோ தான் தந்தையுடன் எப்படி உலாவினான் என்று எனக்குச் சொல்ல விருப்பம். இவ்வாறாக எங்களிடம் பேச்சு தோன்றுகிறது, ஆனால் அவன் மெதுவாக, புரியும்படி, தெளிவாக, தேவையில்லாத வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் பயன்படுத்தாமல் சொல்ல வேண்டும்.

அவன் தன் கையில் வார்த்தை அட்டைவில்லைகளை வைத்திருக்கலாம். எனக்கோ, வகுப்பில் உள்ள அனைவருக்குமோ எதையாவது சொல்லும் போது இந்த அட்டைகளை வார்த்தைகளுக்கான அழகிய சிறு பெட்டியில் போடலாம். பகிர்ந்து கொள்ளும் இத்தேவை, எதையாவது தெரிவிக்கும் தேவை மிகவும் வலிமையானது, இது பேச்சின் உள்ளடக்கத்தை முன் கூட்டியே சிந்திப்பதில் தோன்றும் இடர்ப்பாடுகளைக் கடக்கக் குழந்தைகளுக்கு உதவும். இவையெல்லாம், தெளிவற்று, முழுமையின்றி பேச்சில் வரும் மனப்பதிவுகளை தடுத்து நிறுத்தவும் இவற்றிற்கு தெளிவைத் தரவும் இவற்றை வார்த்தைகள், சொற்றொடர்களால் அலங்கரிக்கவும் அவசியம்.

எனது நடைமுறையில், சிந்தனையையும் கருத்துக்களையும் எழுத்து வடிவில் வெளிப்படுத்தும் திறமையைக் குழந்தைகளிடம் வளர்ப்பதானது நன்கு பேசப் பழகும் போது நடைபெறுகிறது. அதுவும் பேச்சு வளர்ச்சி எழுத்து வளர்ச்சியின் ஒரு சில விதிகளின்படி நடைபெறுகிறது. எழுத்தின் அடிப்படைகளைத் தரும் நான் பேச்சுப் பழக்கத்தை அதிக விரைவாக வளர்க்க உதவுகிறேன். எழுதக் கற்றுத் தரும் எனது முறையியலின் மூன்றாவது “ரகசியம்” இதுதான்.

இப்போது எழுதும் விவரங்களைப் பார்ப்போம். குழந்தைகளிடம் எழுத்துப் பழக்கங்கள் உருவாகும் நிகழ்ச்சிப் போக்கை, இவர்களிடம் எழுத்து வடிவிலான உரையாடல் திறமையை வளர்க்கும் நிகழ்ச்சிப் போக்கிலிருந்து பிரிக்காமலிருப்பதுதான் முக்கியமென நான் கருதுகிறேன். இப்பிரச்சினையின் தீர்விற்காக பயிற்சிகள், எழுத்து மாதிரிகள் அடங்கிய நோட்டுப் புத்தகங்களை நான் தயாரித்தேன். எழுதக் கற்றுத்தரும் பொருட்டு எழுத்துகளின் தனிப்பட்ட பகுதிகளை எழுதித் தரும் பயிற்சிகளை நான் தருவதில்லை. மாறாக, தாய்மொழி எழுத்துகளை எழுதும்போது கையை எப்படியெல்லாம் அசைக்க வேண்டுமோ, அத்தகைய அசைவுகளை உள்ளடக்கிய வடிவங்களை வரைவதற்குப் பயிற்சியளிக்க நான் விரும்புகிறேன்.

படிக்க:
குழந்தைகள் உலகில் ஆத்திகம் Vs நாத்திகம் – ஓர் அனுபவம் !
இயற்கை சாதி பார்ப்பதில்லை ! ஆனால் மனிதர்கள் ?

எனவே, பின்னால் எந்த ஒரு எழுத்தையும் எழுதுவதில் குழந்தைகளுக்கு இடர்ப்பாடுகள் இருக்காது. குழந்தைகள் நோட்டுப் புத்தகங்களில் நான் சுயமாக வேலை செய்யப் பல்வேறு பயிற்சிகளை அளித்துள்ளேன்: படங்களைப் பார்த்து வார்த்தைகளையும் வாக்கியங்களையும் எழுதுவது, ஒலி ஓவியப் புதிர்களைப் போடுவது, வாக்கியங்களில் விட்டுப்போன வார்த்தைகளைப் பூர்த்தி செய்வது, கொடுக்கப்பட்ட எழுத்துகளிலிருந்து இயன்ற அளவு அதிக வார்த்தைகளை உருவாக்குவது, இன்ன பிற பயிற்சிகள் இவற்றிலடங்கும். இவ்வாறாக பல்வேறு எழுத்து வேலைகளைச் செய்யும்போது குழந்தைகள் எழுதும் பழக்கத்தைப் பெறுகின்றனர். எழுதச் சொல்லித் தரும் என் முறையியலின் நான்காவது “ரகசியம்” இதுதான்.

பிரபல சோவியத் மனவியல் நிபுணர் லேவ் விகோத்ஸ்கியின் கருத்து நிலை இந்த ”ரகசியங்கள்” அனைத்தின் அடிப்படையில் உள்ளது. எழுத்துக்கு விசேஷ மனவியல் நியதிகள் உண்டு, இதன் முறையை சாதாரணப் பேச்சு முறையோடு சேர்க்கக் கூடாது என்றார் அவர். இதனால் மனவியலின் பழைய கருத்து நிலை நிராகரிக்கப்படுகிறது. இதன்படி “பேச்சு + எழுத்துகளில் வடித்தல் = எழுத்து” என்றிருந்தது. இந்த எளிய, தவறான கருத்துதான் ஆரம்ப வகுப்புகளில் வழக்கமாக எழுத்துகளை கற்பிக்கும் முறையை இம்சிப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

எனது மாணவர்கள் தமது கட்டுரைகளை எனக்குத் தருகின்றனர். இவற்றில் பலவற்றில் பட்டாம்பூச்சிகள், மலர்கள், விமானங்கள், வீடுகள், வேறு படங்கள் உள்ளன. நான் கட்டுரைகளைப் படிக்கிறேன், அவற்றில் கற்பனைகளே இல்லை, எல்லாம் உண்மைகள். குழந்தைகள் தமது மனப்பதிவுகள், உணர்ச்சிகள், இன்ப துன்பங்களைப் பற்றி எழுத முடிந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி. இந்தக் கட்டத்தில் எனது இலட்சியம் அடையப்பட்டு விட்டது. எனக்கு எது மகிழ்ச்சி தருகிறது என்று என்னையும் எழுதச் சொன்னால் நான் இப்படி எழுதுவேன்: “எனது ஆறு வயதுக் குழந்தைகளின் திறமை குறித்து, அதிசயம் நடந்தது குறித்து எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி!” இதற்கு நிரூபணமாகக் குழந்தைகளின் 37 ஒளிவுமறைவற்ற கட்டுரைகளையும் காட்டுவேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

உலகம் சுற்றும் எடப்பாடி – கருத்துக் கணிப்பு

லையாளப் படங்களில் தமிழக அரசியல்வாதிகளை அடிக்கடி கிண்டல் செய்வார்கள். அப்படி கிண்டலடிக்கப்படும் பாத்திரத்தின் கெட்டப்பானது கறைவேட்டி, வெள்ளை சட்டை, கருப்புக் கண்ணாடி சகிதம் இருக்கும். மலையாளக் கரையோரத்து கிண்டல் விசயம் பாலக்காடு கணவாய் வழியாக கோவை, சேலத்தை எட்டியிருக்கும் போலும். எடப்பாடி உடனே கெட்டப்பை மாற்றிவிட்டார்.

தமிழகத்திற்கு புதிய முதலீடுகளைக் கொண்டு வரும் பெயரில் இலண்டன், அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். அங்கே கோட்டு சூட்டு சகிதம் சிரித்தவாறு நடக்கிறார். தொப்பையை கட்டுப்படுத்தும் ‘சூட்’டினால் மூச்சு விட திணறினாலும் ஒய்யாரமாக காட்சி அளிப்பதில் கவனமாக இருக்கிறார். காமரா கோணங்கள் ஆயிரத்தை அத்துப்பிடியாக மனனம் செய்திருக்கும் மோடியின் வழியில் பழனிச்சாமியும் பயணிக்கிறார். இருப்பினும் இலண்டன் விமான நிலையத்திலேயே அவரை எதிர்த்து ஆர்ப்பாட்ட வரவேற்பும் இருந்தது. அதனால் புறவாசல் வழியாக பத்திரமாக வெளியேறினார்.

கிங்ஸ் மருத்துவமனையின் கிளை தமிழகத்தில் துவங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தமாம். அந்தப் புரிந்துணர்வு ஷாட்டில் நம்மவர்கள் (மாநிறத்தவர்) அதிகம் இருக்க வெண் தோல் வேந்தர்களை பூதக்கண்ணாடி வைத்து எண்ண வேண்டியிருக்கிறது. இனி அம்மா சுகவீனம் அடைந்து அப்பல்லோ போனதற்கு பதில் அய்யாக்கள் கிங்ஸ் போவார்கள் என்று மனப்பால் குடிக்காதீர்கள். இது புரிந்துணர்வுதான். தொலைதூரக் கல்வி போல இலண்டனில் இருந்து கொண்டே கிங்ஸ் மருத்துவமனை இணைய வழி மருத்துவம் பார்ப்பது வேண்டுமானால் நடக்கலாம்.

இலண்டனை வென்று விட்ட எடப்பாடி அடுத்து பூலோக சொர்க்கம் அமெரிக்காவிற்குச் சென்றார். ஒவ்வொரு ஷாட்டிலும் புதிய கோட்டு சூட்டுக்கள், ஷூக்கள் அணிந்தாலும் வேட்டி சட்டை போல சுதந்திரமாக அவரால் நடக்க முடியவில்லை என்றாலும் நடந்தார். ஏர் பிடிக்காமலே விவசாயி பட்டம் பெற்றவர் பபல்லோ நகரத்துக்குச் சென்று அங்குள்ள மாட்டுப் பண்ணையை பார்வையிட்டு மாடுகளுக்கு வைக்கோலும் கொடுத்தார். அமெரிக்க மாடு எப்படி வளர்க்கப்படுகிறது, எப்படி சாணி போடுகிறது போன்ற தொழில்நுட்பங்களை கேட்டறிந்தார்.

பிறகு நியூயார்க் பறந்தார். அங்கு முதலீட்டாளர்கள் என்ற பெயரில் அமெரிக்காவில் பெட்டிக்கடை போன்று நடத்தும் சிறு தொழில் முனைவர்கள் 200 பேர்களை சந்தித்தாராம். அவர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தாராம் எடப்பாடி. ஏற்கெனவே அமெரிக்க நிறுவனங்கள் வெளியே போகக்கூடாது என்று ட்ரம்ப் சிம்ம சொப்பனமாக தாண்டவமாடும் நேரத்தில் இந்த பெட்டிக்கடைகாரர்கள் முதலுக்கே மோசமென்று முடிவெடுப்பார்களா என்ன? இருந்தாலும் தமிழகத்தில் இப்படி ஒரு ஜீவன் கோட்டு சூட்டில் சிரமப்பட்டு கோரிக்கை விடுக்கிறதே என்று அவர்கள் இரங்கியிருக்கலாம். என்ன இருந்தாலும் போடப்படுவது வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்தானே?

படிக்க:
பாசிசத்தின் பிரதிநிதிக்கு கரிசனம் காட்டலாமா ?
♦ காஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் ? கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தொழில் துவங்கினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி கேட்டர் பில்லர், ஃபோர்டு போன்ற நிறுவனங்களின் அதிகாரிகள் மற்ற பெட்டிக்கடைகாரர்களுக்கு வகுப்பு எடுத்தார்களாம். அதில் இந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனம் அதல பாதாளத்தில் வீழ்ந்திருப்பது குறித்தும் சொல்லியிருப்பார்களா தெரியவில்லை. இது போதாது என செய்தி ஒளிபரப்புத் துறை தயாரித்த ஒரு விளம்பரப் படத்தையும் அங்கே திரையிட்டிருக்கிறார்கள். அதில் தமிழகம் பூசி மெழுகி பாலிசாக ஜொலிக்கிறது. இந்த பிரசண்டேசன் பம்மாத்துகளுக்கு அமெரிக்காதான் தலைநகரம். இருட்டு கடைக்கே அல்வாவா?

இறுதியில் ஜீன் மார்ட்டின், அக்குய்ல் சிஸ்டம்ஸ், சீடஸ் பர்மா, நியூரே கெமிக்கல்ஸ், நோவிட்டியம் லாப்ஸ், ஜோஹோ ஹெல்த், எஸ்.டி. எல்.ஜி.என்., சரம்-4, எமர்சன், ஆஸ்பைர் கன்சல்ட்டிங், ரிவேச்சர்-எல்.எல்.சி., ஜில்லியோன் டெக்னாலஜீஸ் உள்ளிட்ட 16 பெட்டிக்கடை நிறுவனங்கள், தமிழ்நாட்டில் ரூ.2,780 கோடி முதலீடு செய்து, தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்களாம்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் பயன் பெறுவார்களாம்! இதன்படி ஒரு இளைஞருக்கு ரூ. 13,90,000 முதலீடாம். இலட்சக்கணக்கானோர் வேலையற்று இருக்கும் தமிழகத்தில் காகிதத்தில் உள்ள இந்த பெட்டிக்கடை முதலீடுகள் முதலில் வருமா என்பது தெரியாது. அப்படி வந்தாலும் அது எதையும் மாற்றி விடாது. ஈவண்ட் மேனேஜ்மெண்ட் போல இந்த முதலீடு மேனேஜ்மெண்ட் சுற்றுலாவை வைத்து தேம்ஸ் வென்றான், நியூயார்க் கொன்றான் என்று ரத்தத்தின் ரத்தங்கள் சுவரொட்டி ஒட்டி மீனம்பாக்கம் சுவர்களை விரயமாக்குவதைத் தவிர இந்த இன்பச் சுற்றுலாவால் எந்தப் பயனுமில்லை. ஏற்கெனவே சென்னை வர்த்தக மையத்தில் தலா 100 கோடி ரூபாயில் இரண்டு முறை நடந்த உலக முதலீட்டாளர் மாநாடுகளாலேயே எந்த பலனுமில்லை.

முக்கியமாக எடப்பாடியின் வெளிநாட்டு பயணச் செய்திகளை ஊடகங்கள் எதுவும் சொந்தமாக வெளியிடவில்லை. அவை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இடம்பெற்றவை. அரசு விளம்பரங்களுக்காக அமெரிக்க விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடுகின்றன.

இனி இன்றைய கருத்துக் கணிப்பின் கேள்வி

எடப்பாடியின் வெளிநாட்டு பயணம் ஏன்?

♣ கோட்டு சூட்டு கெட்டப்புக்காக
♣ அரசு செலவில் இன்பச் சுற்றுலா
♣ அன்னிய முதலீட்டை ஈர்க்க
♣ ஓபிஎஸ்ஸை ஓரங்கட்ட
♣ மோடிக்கு போட்டி

(பதில்களில் இரண்டை தெரிவு செய்யலாம்)
***
டிவிட்டரில் வாக்களிக்க :

யூடியூபில் வாக்களிக்க இங்கே அழுத்தவும்

பாசிசத்தின் பிரதிநிதிக்கு கரிசனம் காட்டலாமா ?

Tamilisai

திருமதி தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருப்பது என்பது எந்த வகையில் பார்த்தாலும் ஆர்.எஸ்.எஸ் / பாஜக முகாமுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு செயல்தான்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் / பாஜக மீது பொதுவாகவே ஒரு ‘நன்மதிப்பை’ அல்லது ‘எதிர்ப்புணர்வு குறைந்த ஒரு மனநிலையை’, பெருமளவில் ஒரு சமூகம் கொண்டிருக்குமானால் அது நாடார் சமூகமாக இருக்கக்கூடும். (இது ஒரு அனுமானம்தான், ஆய்வுப்பூர்வமான ஒரு முடிவு அல்ல). நாடார்கள் மிகப்பெரும்பான்மையான அளவில் இருக்கிற கன்னியாகுமரி தொகுதியில் பாஜக செல்வாக்கோடு இருக்கிறது. இந்த வளர்ச்சியை அவர்கள் ஓர் இரவில் பெற்றுவிடவில்லை. அனேகமாக 30 – 40 ஆண்டுகள் திட்டமிட்டு வேலை செய்திருக்கிறார்கள்.

Tamilisai-Ponnarகட்சியின் மாநில தலைவராக பொன். ராதாகிருஷ்ணன் இருந்தார், அவர் பிறகு மத்திய அமைச்சராக ஆக்கப்பட்டார், தமிழிசை மாநில தலைவராக நீண்டகாலம் இருந்தார், இப்போது கவர்னர் ஆக்கப்பட்டிருக்கிறார். என்னதான் கட்சிக்கு குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றியை தமிழிசை பெற்றுத்தராவிட்டாலும், அவருடைய சின்சியர் உழைப்புக்கு ஒரு வெகுமதிதான் இந்த பதவி.

ஜாதிகாரனையும் சந்தோசப்படுத்தி, கட்சியின் பல்வேறு அணியினரையும் சந்தோசப்படுத்தி, தமிழிசையையும் சந்தோசப்படுத்தி, தமிழிசை மாநில தலைவராக இருப்பதை விரும்பாதவர்களையும் சந்தோசப்படுத்தி, சாமானிய அப்பாவி தமிழர்களையும் சந்தோசப்படுத்தி – இப்படி பல்வேறு தரப்பினரையும் திருப்தி செய்யும் விதமான பாஜகவிற்கு பலவகைகளிலும் சாதகமான ஒரு முடிவு இது.

எந்த வகையிலும் பாஜக/ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு முகாமை சேர்ந்த நமக்கு சாதகமான ஒரு செயலோ அல்லது தமிழிசையை பாராட்டி வாழ்த்துவதற்கான ஒரு செயலோ அல்ல இது.

படிக்க:
பிள்ளையார் சிலையும் போதை ஆசாமியும் !
♦ தமிழிசையால் நிர்மலா சீதாராமனாகிவிட முடியுமா ? | காணொளி

தமிழிசை ஒரு பெண் என்பதாலோ, அதிலும் பார்ப்பனரல்லாத சமூக பெண் என்பதாலோ, தமிழர் என்பதாலோ, அதிலும் பார்ப்பனரல்லாத தமிழர் என்பதாலோ, குமரி அனந்தன் மகள் என்பதாலோ, நம் வீட்டு பெண் போன்றதொரு தோற்றம் கொண்டவர் என்பதாலோ – இப்படி எந்தவொரு காரணத்தினாலோ அவர் ஃபாசிசத்தின் பிரதிநிதி என்கிற உண்மை இல்லாமல் ஆகிவிடாது.

பொதுவாகவே நம்மவர்கள் பலரிடம் தமிழிசை மீது ஒரு soft corner உண்டு. நம் தலைவர்கள் வீரமணி, ஸ்டாலின், கனிமொழி போன்றோர் இன்று கொடுத்திருக்கும் வாழ்த்து செய்தியிலும் கூட அதை பார்க்கலாம்.

ஆனால், தமிழிசையால் தூக்கி பிடிக்கப்படும் இந்துத்துவ ஃபாசிசம் என்பதற்கு தமிழர்கள் மீதோ திராவிடர்கள் மீதோ எந்தவிதமான soft corner-ம் கிடையாது என்பதை நாடறியும்!

Call a spade a spade என்பதைப் போல, ஃபாசிசத்தை ஃபாசிசம் என்று தயக்கமின்றி அடையாளப்படுத்துவோம்.

தமிழிசை என்னும் ஃபாசிசத்தின் பிரதிநிதிக்கு ஆளுனர் பதவி கிடைத்ததற்கு வாழ்த்துவது என்பது, ஃபாசிசத்தின் மீது பரிவு காட்டுமாறு மக்களை பழக்குவதைத் தவிர வேறு எதற்கும் பயன்படாது !

நன்றி : ஃபேஸ்புக்கில் Prabaharan Alagarsamy 

கேள்வி பதில் : சமூக மாற்றத்திற்கு சமூக அந்தஸ்து உள்ள தலைவர் தேவையா ?

கேள்வி: //”நீ பெரிய ஆளாக (பணக்காரன், வக்கீல், சமூக அந்தஸ்து பெற்றவன்) இருந்தால் தான் மக்கள் நீ சொல்வதைக் கேட்பார்கள். இல்லையெனில் மக்களுக்காக களப்பணி செய்யும் உன்னைப் போன்ற எவரையும் மக்கள் சட்டை செய்ய மாட்டார்கள். உன் உழைப்பும், எதிர்காலமும் வீணாகிவிடும்.

அப்படித்தான் அம்பேத்கர், பெரியார், அப்துல் கலாம் சமூகத்தின் மாற்றத்திற்கு பங்களிப்பு செய்தார்கள். மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்று மக்கள் பணி செய்யும் என்னைப் போன்ற தோழர்களை அவநம்பிக்கைக்கு உள்ளாக்கி விடுகிறார்கள். அவநம்பிக்கையும் ஏற்பட்டு மனரீதியாக அழுத்தம் ஏற்படுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது?//

– மா.பேச்சிமுத்து

ன்புள்ள பேச்சிமுத்து,

அப்துல் கலாம் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு திணிக்கப்பட்டு பிரபலமானவர். அதனாலயே அவர் இறந்து போன பிறகு மக்களும் கணிசமாக மறந்து போனார்கள். அம்பேத்கரும், பெரியாரும் தங்களது திட்டமிட்ட செயல்பாட்டால் பிரபலமானார்கள். அதற்காக சொல்லடியும் கல்லடியும் பட்டு களத்தில் போராடினார்கள். அந்த போராட்டம் மலர் குவிந்த மென்மையான ரம்மியமான பாதையில் அல்ல!

periyar-ambedkarஅண்ணல் அம்பேத்கர் தனது காலத்தில் சாதி தீண்டாமைக்கு காரணமான இந்துமதத்தை, பார்ப்பனியத்தை முற்று முழுதாக அம்பலப்படுத்தினார். அதற்காகவே அவர் காலத்தில் மிகப்பெரும் ஆளுமையாக திகழ்ந்த காந்தியை துணிவுடன் எதிர்கொண்டார். காந்தியை விமரிசிப்பது என்பது மைய நீரோட்ட அரசியலை எதிர்ப்பதாகும். இருப்பினும் அதற்காக அவர் கவலைப்படவில்லை. அதே போன்று பெரியாரும் சமூகநீதிக்காகவும், பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்தும் போராடினார். எனவே இவர்களுக்கு கிடைத்த பிரபலம், புகழ் என்பது அவர்களது சொந்த முயற்சிக்கு கிடைத்த ஒன்றாகும். சொல்லப்போனால் அவர்களுக்குரிய சமூக அந்தஸ்து இதனால் ஆரம்பத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. தொடர்ச்சியான அவர்களது செயல்பாடே அவர்களுக்கு சமூகத்தில் ஒரு மதிப்பை பெற்றுத் தந்தது.

இந்திய போன்ற நிலவுடமை சமூகச் செல்வாக்கு உள்ள நாடுகளில் சமூக அந்தஸ்து உள்ளோருக்கு ஒரு செல்வாக்கும் புகழும் இருக்கும் என்பது உண்மையே. ஏற்றத் தாழ்வான வளரச்சி கொண்ட நம் நாட்டில் சொத்துடமையால் பிரிந்து கிடக்கும் சமூகத்தில் சமூக அந்தஸ்து கொண்டோர் பிரபலமாக முடியும் என்பதும் உண்மையே.

அதே நேரத்தில் சமூகத்தில் இருக்கும் மாற்றம் என்பது தனிநபர்களை மட்டும் மையமாக வைத்து தோன்றிடும் ஒன்றல்ல. அது சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டத்தின் வீச்சில் சில தனிநபர்களை குறிப்பிட்ட காலத்தில் தோற்றுவிக்கிறது. திராவிட இயக்கத்தின் செயல்பாட்டில் அத்தகைய சமூக அந்தஸ்து இல்லாத பல தலைவர்கள் தோன்றியிருக்கின்றனர்.

karunanidhiகருணாநிதியையே எடுத்துக் கொண்டால் அவர் பள்ளிப் படிப்பை கூட முடித்தவரல்ல. அவரது சாதியும் ஆதிக்க சாதி போன்று செல்வாக்கு கொண்டது அல்ல, சிறுபான்மையான மக்களைக் கொண்ட சாதி. ஆனால் அவரது முயற்சியால் அவர் தலைவரானார். பள்ளி நாட்களில் கையெழுத்து பத்திரிகை ஆரம்பித்தார். பின்பு முரசொலியை அச்சிட்டு ஆரம்பித்தார். உள்ளூரில் நாடகம் போட்டார். பின்பு நாடக வசனம் எழுதி சினிமாவிற்கு வசனம் எழுதும் நிலையை அடைந்தார். உள்ளூரில் பேசி பிறகு மாநிலம் முழுக்க பேசி பிரபலமானார். அன்றைக்கு இவரைப் போன்ற பலரை திராவிட இயக்கம் உருவாக்கியிருந்தது. முடிவெட்டும் சலூன்கள், மாணவர்களின் விடுதிகள் போன்றவை திராவிட இயக்கத்தின் அரசியல் பேசப்படும் மையங்களாகின. பார்ப்பனிய செல்வாக்கு கொண்ட ஒரு நாட்டில் சலூன்கள் எப்படி அரசியல் மையங்களாகின என்பது உங்களது கேள்விக்கு ஒரு விடை.

படிக்க:
கேள்வி பதில் : சதுர்த்தி – குழந்தை திருமணம் – நினைத்ததை எழுதுவது எப்படி ?
♦ மார்க்சியம் கற்பதற்கு கட்சி உறுப்பினராக இருப்பது நிபந்தனையா ?

இதற்கு நேரெதிராக ஜெயலலிதாவின் தலைமைப் பண்பை எடுத்துக் கொள்வோம். அவர் எம்.ஜி.ஆரால் நேரடியாக அரசியலில் திணிக்கப்பட்டார். பிறகு பார்ப்பனிய ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் அவரை தலைவராக சமூகத்தில் முன்வைத்தன. அவரும் எழுதிக் கொடுக்கப்பட்ட உரையை பிரச்சாரங்களில் வாசித்தார். அவரது பன்மொழிப்புலமையை மாபெரும் திறமையாக ஊடகங்கள் முன்வைத்து அவரை ஒரு இரும்புத் தலைவி என்றெல்லாம் சித்தரித்தன. இடையில் அரசியலை விட்டே ஓடுவதற்கும் அவர் தயாராக இருந்தார். அவர் பேசும் கூட்டங்களுக்கு மக்கள் காசு கொடுத்து அழைத்து வரப்பட்டனர். அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட சமூகநலத் திட்டங்களுக்கு அவரது பெயரே வைக்கப்பட்டு, ஏதோ ஜெயலலிதா தனது கைக்காசை போட்டு மக்களுக்கு வழங்கினார் என்பதாக சித்தரிக்கப்பட்டார். அந்த வகையில் அப்துல் கலாம் போன்று ஜெயலலிதாவும் சாதிய வர்க்க சமூகத்தில் திணிக்கப்பட்டு தலைவரானவர்களில் ஒருவர்.

நக்சல்பாரி எழுச்சி, தெலுங்கானா போராட்டம், மார்க்சிய-லெனினியக் கட்சியின் உதயம் போன்றவையும் இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் பெரும் மாற்றத்திற்கு வழிகோலிய நிகழ்வுகளாகும். இதிலெல்லாம் தனிநபர்களை விடுத்து ஒரு இயக்கமே மக்கள் மத்தியில் பேசப்பட்டது. ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள், மக்கள் அதிகாரம் போன்றவை மக்களிடையே அவற்றினது போராட்டம், கொள்கையால் மட்டுமே பிரபலமாகிறதே அன்றி அவற்றில் உள்ள தலைவர்கள், தனிநபர்களை வைத்து அல்ல!

PALAஒரு பேருந்து அல்லது ரயிலில் புதிய ஜனநாயகம் அல்லது புதிய கலாச்சாரம் பத்திரிகையை விற்கும் போது அந்த இடத்தில் பேசும் தோழரை மக்கள் தைரியமானவராக, இயக்கத்தின் செயல்பாட்டளராக கருதி ஆதரிக்கின்றனர். அதே போன்று மேடையில் பொதுக்கூட்டத்தில் பேசும் போதும் அப்படி கருதுகின்றனர். இங்கெல்லாம் தோழர்கள் ஒரு இயக்கத்தின் பிரதிநிதி என்று கருதப்பட்டு மக்களால் போற்றப்படுகின்றனர். அந்தஸ்து என்பது பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும் என்பது சாதிய சமூகத்தின் நிலை. மாறாக அந்த நிலையை செயல்பாட்டால் கிடைக்கும் ஒன்றாக மாற்றுவது இத்தகைய சமூக இயக்கங்களே!

படிக்க:
உ.பி. : மதிய உணவிற்கு ரொட்டி – உப்பு : அம்பலப்படுத்தினால் சதி வழக்கு !
♦ இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் ! நூல் – PDF வடிவில் !

ஆதிக்கசாதி மக்கள் பெரும்பான்மையாக வாழும் சில இடங்களில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளில் பிறப்பினால் தலித்துகளாக உள்ள தோழர்கள் இயக்க பொறுப்புகளில், தலைமையில் உள்ளனர். அந்த வகையில் அந்த இடத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு தலைமையும் தாங்குகின்றனர். இங்கே பிறப்பினால் கிடைக்கும் சாதிய அந்தஸ்துக்கு பதில் இயக்கத்தினால் கிடைக்கும் மதிப்பு ஒரு சான்று. அதுவும் சாதிய சமூகத்தின் நடைமுறையை மறுத்துவிட்டு கிடைக்கும் மதிப்பு அது. இத்தகைய நடைமுறையை வேறு இயக்கங்கள் செய்வது கடினம்.

எனவே நாம் பெரிய ஆளாக இல்லாமல் சமூகத்தில் வேலை செய்தால் பயனில்லை என்று பேசுவோரை வைத்து மனச்சோர்வு அடையத் தேவையில்லை. நமது காலச்சூழலை மாற்றுவதற்கு நாம் பல்வேறு தோழர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் போது அந்த மாற்றம் நிச்சயம் வரும். அப்போது நமது போராட்டம் இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்படும். இதன் போக்கில் நமது நடைமுறையில் போராட்டங்களில் புடம் போடப்பட்டு புதிய தலைவர்களும் தோன்றுவார்கள்.

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

ஆளுநர் மாளிகை அழுத்தம் : சென்னைப் பல்கலை மாணவர் கிருபாமோகன் நீக்கம் !

1
Madras-University

ம்பேதகர் – பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்டதால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் கிருபாமோகன் நீக்கம்! ஆளுநர் மாளிகை உத்தரவு!

மாணவர்களே, இளைஞர்களே!

  • சென்னைப் பல்கலைக் கழகத்தின் உத்தரவை திரும்பப் பெற குரல்கொடுப்போம்!
  • பாதிக்கப்பட்ட மாணவருக்கு துணைநிற்போம்!

சென்னைப் பல்கலையில் கடந்த ஆண்டு முதுகலை இதழியல் படிக்கும் மாணவர் த.கிருபாமோகன். அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் என்னும் ஒரு அமைப்பில் இணைந்து சமூகப் பிரச்சினைகளுக்காக கடந்த ஆண்டுகளில் போராடி வந்துள்ளார். குறிப்பாக பல்கலைக்கழக ஆசிரியர் வெளியிட்ட வரலாற்று நூலைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி காவிகள் கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தபோது, மாணவர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தி காவிக்கும்பலை புறமுதுகிட்டு ஓடச் செய்தனர் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள்.

இந்த அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது கடும்  வெறுப்பில் இருந்த சங்க பரிவாரக் கும்பல், மாணவர் கிருபா மோகம் முதுகலை தத்துவத்தில் – புத்திசம் (Budhism) என்ற பிரிவில் இந்த ஆண்டு பல்கலையில் சேர்ந்துள்ளார். இந்த ஆண்டு சேர்ந்து படிக்கத் தொடங்கிய பின்னர், அம்மாணவரை உடனடியாக கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுனர் மாளிகையிலிருந்து கல்லூரி நிர்வாகத்திற்கு தொடர் அழுத்தம் தரப்பட்டு, இறுதியில் அவரை கல்லூரியில் இருந்து நீக்கம் செய்துவிட்டதாக கடிதம் அளித்தது நிர்வாகம். அதனைத் தொடர்ந்து, இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தி கல்லூரி முதல்வருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார் கிருபாமோகன். அவர் எழுதிய கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவரின் சேர்க்கை காவிகளுக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தியிருப்பதையும், காவிகளுக்கு ஆளுனர் மாளிகையில் இருக்கும் செல்வாக்கையும் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

***

DATE: 04/09/2019
PLACE: Chepauk

அனுப்புநர்:

த. கிருபாமோகன்,
முதுகலை முதலாமாண்டு புத்திசம்,
NO:2A, ஜமீன் ராயப்பேட்டை,
சுகுணா காலனி விரிவு,
குரோம்பேட்டை,
சென்னை – 44.

பெறுநர்:

Thiru. Mangat Ram Sharma,
Principal Secratery To Government,
Higher Education Department secretariat,
Chennai – 600009.

பொருள் : எனது அட்மிஷனை ரத்து செய்த சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக்கோரி.

திப்பிற்குரிய ஐயா, வணக்கம்.

நான் சென்னைப் பல்கலைக்கழக தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு M.A (BUDDHISM) பயின்று வருகிறேன். நான் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழக இதழியல் (JOURNALISM) துறையில் பயின்றேன். கடந்த ஜூலை 31-ம் தேதி பல்கலைக்கழக விதிமுறையின் அடிப்படையில் தத்துவவியல் துறையில் முதுகலைக்கான பட்டப்படிப்பில் சேர்ந்தேன். அதைத் தொடர்ந்து கடந்த ஒருமாத காலமாக வகுப்புகளுக்குச் சென்று வருகிறேன்.

Madras University
சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி தத்துவவியல் துறைத்தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி என்னை அழைத்து, “ஆளுநர் மாளிகையில் இருந்து தொடர்ந்து பிரஷ்ஷர் வருவதால் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி, உங்களது அட்மிஷனை ரத்து செய்ய சொல்லி வற்புறுத்துகிறார். மாணவரிடம் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவரது சான்றிதழ்களும் சரியாக உள்ளது. எதைச் சொல்லி அவரது அட்மிஷனை ரத்து செய்வேன் என்று நான் துணைவேந்தரிடம் கூறினேன்” என்றார். இதைக் கேட்டதும் நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். “எனது கல்வி சான்றிதழ்களிலோ, கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலோ எதாவது பிரச்சனை இருக்கிறதா, எதற்கு என்னுடைய அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள்” என்று கேட்டேன்.

அதற்கு துறைத்தலைவர் பேரா.வெங்கடாஜலபதி, “நீங்கள் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்கிற மாணவர் அமைப்பில் ஏற்கனவே செயல்பட்டு இருக்கிறீர்களாமே. அதனால்தான், உங்களை நீக்கச் சொல்கிறார்கள். எதையாவது சொல்லி உங்களது அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள். தினந்தோறும் துணைவேந்தரிடம் இருந்தும் ஆளூநர் மாளிகையில் இருந்தும் எனக்கு பிரஷ்ஷர் கொடுக்கிறார்கள். எனக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனிப்பட்ட விரோதமும் இல்லை. ஏன் இவ்வாறு நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை” என்றார். அதன்பிறகு ஒருவாரகாலம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது.

படிக்க:
கருத்துக் கணிப்பு : ஆளுநர் புரோகித்தின் எந்தச் செயல் மிகக் கீழ்த்தரமானது ?
♦ அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் தடை – ஆர்ப்பாட்டங்கள்

மீண்டும் கடந்த 29-ம் தேதி என்னை அழைத்த பேரா.வெங்கடாஜலபதி, “தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகை மற்றும் துணைவேந்தரிடமிருந்து உங்களது அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி பிரஷ்ஷர் கொடுக்கின்றனர். எனது 20 ஆண்டுகால பணி அனுபவத்தில் இதுபோன்ற பிரஷ்ஷரை எதிர்கொண்டதில்லை. எனவே, உங்களது அட்மிஷனை ரத்து செய்துள்ளேன். அதற்கான கடிதத்தையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.

வகுப்புகள் தொடங்கி ஒருமாத காலத்திற்கு பிறகு இவ்வாறு செய்வது நியாயமா..? என்று கேட்டேன். அதற்கு “நீங்கள் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்கவில்லை, இதை முன்னிட்டு உங்கள் அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி துணைவேந்தர் கூறினார்” என்று புதிதாக ஒரு காரணத்தைக் கூறினார் பேரா.வெங்கடாஜலபதி. ஆனால், எனது அட்மிஷனின்போது “ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால், எலிஜிபிலிட்டி சான்றிதழ் தேவையில்லை, முதுகலை புரவீஷ்னல் சான்றிதழே போதுமானது என்று நீங்கள்தானே கூறினீர்கள்” என்றேன். அதற்கு அவர், “ஆளுநர் தரப்பில் இருந்து பிரஷ்ஷர், என்னால் ஒன்றும் செய்யமுடியாது” என்று கூறிவிட்டார். எனது அட்மிஷனையும் ரத்து செய்துள்ளார்.

Madras University Student kiruba mohan
மாணவர் கிருபாமோகன் நீக்கத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் வெளியிட்டுள்ள சுவரொட்டி.

சென்னைப் பல்கலைக்கழக விதிகளின்படி, வேறு பல்கலைக்கழகத்தில் இருந்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வந்தால்தான் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டும். நான் ஏற்கெனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அவ்வாறு எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெறவேண்டும் என்றாலும், அந்தந்த துறைகள் மூலமாகத்தான் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து சான்றிதழ் பெறமுடியும். தனிப்பட்ட ரீதியாக எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெற முடியாது.

மேலும், எனக்குப் பிறகு தத்துவவியல் துறையில் அட்மிஷனான இரண்டு மாணவர்கள் தற்போதுவரை எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காத நிலையில், என்னுடைய அட்மிஷன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காமல் உள்ளனர். பிரச்சினை எலிஜிபிலிட்டி சான்றிதழ் பற்றியது அல்ல. எந்தக் காரணத்தையாவது சொல்லி எனது அட்மிஷனை நீக்க வேண்டும் என்பதுதான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நோக்கமாக உள்ளது.

உரிய சான்றிதழ் கொடுத்து, கட்டணமும் செலுத்தி ஒருமாத காலம் வகுப்புகளுக்கும் சென்ற பிறகு சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எனது அட்மிஷனை ரத்து செய்து பழிவாங்கியுள்ளது.

கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து முதல் தலைமுறையாக படிக்க வந்தவர்களில் நானும் ஒருவன். முறையான எவ்வித காரணங்களும் இல்லாமல், ஏற்கெனவே அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தில் இணைந்து செயல்பட்ட காரணத்திற்காக சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எனது அட்மிஷனை ரத்து செய்துள்ளது எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மறுக்கப்படும் எனது கல்வி வாய்ப்பை மீண்டும் பெறுவதற்கும், படிப்பை தொடர்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

(கிருபாமோகன்)

DATE: 04/09/2019
PLACE: Chepauk

COPY TO:
1. Higher Education Minister
2. Vice Chancellor, University Of Madras
3. Registrar, University Of Madras
4. HOD, Department Of Philosophy, University Of Madras

***

தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு

புதுவை சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் : தொழிற்சங்கப் பலகை திறப்பும் ! நிர்வாகம் – போலீசு – ரவுடி கூட்டணியும் !

புதுச்சேரியில் திருபுவனை பகுதியில் பிளாஸ்டிக் நாற்காலிகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கும் சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் கிளை கிளைச் சங்கமாக செயல்பட்டு வருகிறது.

சங்கம் துவங்கி மூன்று வருடங்களாகியும், சங்கத்தை அழைத்துப் பேசுவது என்ற நடைமுறையும் இல்லை. சங்கம் தரும் கடிதங்களை வாங்கும் வழிமுறையும் இல்லை. ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட தொழிலாளர் பிரச்சினைகளைப் பேசுவதற்கு பலமுறைகளில் முயற்சி செய்தும் நிர்வாகம் முகம் கொடுக்கவே இல்லை.

supreme-industriesஇந்நிலையில் நமது சங்கம் ஆலையில் செயல்படுவதை நிர்வாகத்திற்கு உறைக்கும் விதமாக, 04.09.2019 அன்று ஆலைவாயிலில் பெயர்ப்பலகை வைத்து, கொடியேற்றுவது என தொழிலாளர்கள் முடிவு செய்தனர். அதற்காக 26.08.2019 அன்றே, பகுதி போலிசு நிலையத்திலும், மாவட்ட கண்காணிப்பாளரிடமும் முறையாக அறிவிப்பு செய்து பாதுகாப்பு கோரி கடிதம் கொடுத்தனர். பொதுப்பணித் துறையிடமும் அனுமதிக் கடிதம் கொடுத்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இதற்கு முன் வரை சங்கத்தை ஒரு பொருட்டாக மதிக்காத நிர்வாகம், கொடியேற்று நிகழ்ச்சியை அறிவித்தவுடன், அதைத் தடுப்பதற்கு பல்வேறு வழிகளில் குட்டிக் கரணம் போட்டுப் பார்த்தது.

ஏற்கனவே, திருபுவனை பகுதி பிப்டிக் தொழிற்பேட்டையில் எந்த பெயர்ப்பலகையும் வைக்கக் கூடாது சங்கக்கொடியும் பறக்கக் கூடாது என்பதில் முதலாளிகள் குறியாக இருந்தனர். அதற்காக, உள்ளூர் ரவுடிகளை தங்களது நிறுவனத்தில் சில வேலைகளைக் கொடுத்து ஒப்பந்ததாரர் என்ற பெயரில் அடியாள்படையாக வைத்துக் கொண்டு அராஜகங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஒப்பந்ததார ரவுடிகளுக்கு எதிராக பிப்டிக் தொழிற்பேட்டையில் 2014 ஆகஸ்டு – 05 அன்று பேரணி ஆர்ப்பாட்டம் நடத்திய போது பேரணியில் புகுந்து தொழிலாளர்களை ஒப்பந்தாரர ரவுடிகள் தாக்க முற்பட்டனர். இது வரையில் தங்களைப் பார்த்து பயந்து ஓடிய தொழிலாளர்களைப் பார்த்திருந்த அந்த ரவுடிகள் முதன்முதலாக, திருப்பி அடிக்கும் தொழிலாளர்களைப் பார்த்தனர். தொழிலாளர்களிடமிருந்து வெளிப்பட்ட வர்க்க கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் அந்த ரவுடிகள் தெறித்து ஓடினர்.

ஆகஸ்டு 05-ல் நடந்த இந்த சம்பவம், தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதுவரையில் தொழிலாளர்களை மிரட்டி வந்த ரவுடிகள் கூட்டத்தை ஓட ஓட விரட்டியது தொழிலாளி வர்க்கம். அன்று முதல் புதுச்சேரியின் நம்பிக்கை பெற்ற சங்கமாகத் திகழ்ந்து வருகிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. தற்போது இந்த கொடியேற்றம், பெயர்ப்பலகை நிகழ்ச்சியைத் தடுப்பதன் மூலம், மீண்டும் ஒப்பந்ததார ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், சுப்ரீம் ஆலை நிர்வாகம் இந்நிகழ்ச்சியைத் தடுக்க தீவிரம் காட்டி வந்தது.

இதனடிப்படையில் தான், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் தோழர். மகேந்திரன் அவர்களின் மாமனாரிடம், நிர்வாகத்தின் கைக்கூலிகளைக் கொண்டு ஏற்கனவே ஒப்பந்ததார ரவுடிகளின் கோஷ்டி மோதலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வேலழகனைப் போல, உங்கள் மருமகனையும்  யாராவது வெட்டிப் போடப் போகிறார்கள் எனச் சொல்லி, மிரட்டியுள்ளது.

supreme-industries-ndlf (11)
போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்க நிர்வாகிகள்.

அதற்கு, தொழிலாளி வர்க்கத்திற்காகப் பாடுபடும் தனது மருமகனைப் பற்றித் தெரியும் எனவும், ஆறிலும் சாவு, அறுபதிலும் சாவு. ஒரு மனிதன் எப்படிச் செத்தான் என்பதைத் தான் மக்கள் பேச வேண்டும் என்றும் பதிலடி கொடுத்து வந்துவிட்டார்.

தனது மிரட்டல் பலிக்காமல் பல்லிளித்துப் போகவே, போலிசை ஏவி விட்டது நிர்வாகம். கொடியேற்ற நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புக் கேட்டு 10 நாட்களுக்கு முன்னரே கடிதம் கொடுத்தும் பேசாத, இன்ஸ்பெக்டர், நேற்று (03.09.2019) தோழர் மகேந்திரன் அவர்களை அழைத்து, கொடியேற்ற நிகழ்ச்சியை ஒருவாரம் தள்ளி வைத்து நடத்தச் சொல்லிக் கேட்டார். தோழர் காரணம் கேட்ட போது, ஒரு தரப்பில் பிரச்சினை வருகிறது என்று சொல்லியும், பிறகு யோசித்து, தனக்கு அனுமதிக் கடிதம் வரவில்லை என்றும் ஒரு காரணத்தை சேர்த்துக் கொண்டார்.

நாம் பத்து நாட்களுக்கு முன்னரே நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக அவரிடம் அறிவித்து பாதுகாப்பு கோரியுள்ளதை தோழர் நினைவூட்டினார். மேலும், பொதுப்பணித்துறையிடம் முறையாக அனுமதி பெற்றதையும் விளக்கினார். பின், சற்றே நிதானித்து, ஒரு வாரம்… பத்து நாள் தள்ளி வைத்து நடத்துமாறும், வேறு சில பிரச்சினைகள் தனது காதுக்கு வந்துள்ளது என்று கூறியும் நிகழ்ச்சியை நடத்த விடாத வகையில் போலிசு இன்ஸ்பெக்டர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், கடைசிவரை, அந்த ‘வேறு சில பிரச்சினைகள்’ பற்றி சொல்லவே இல்லை.

படிக்க:
தொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் ! புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் !
♦ கேரள வெள்ளம் : மானிய அரிசி கிடையாது | பாஜக-வின் கோரமுகம் !

ஏற்கனவே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், பிரச்சாரம், கொடி, பலகை வேலைகள் நடந்துள்ளது. சுவரொட்டி பரவலாக ஒட்டி பிரச்சாரங்கள் செய்யப்பட்டு விட்டது. இந்நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தாமல் இருக்க முடியாது என ஆணித்தரமாக சொல்லி விட்டு வந்து விட்டார், தோழர். மகேந்திரன்.

ரவுடிகளை விட்டு மிரட்டியும், போலிசை வைத்து நைச்சியமாகப் பேசியும் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. அதனால், சுப்ரீம் நிர்வாக அதிகாரிகள், நேற்று (03.09.2019) இரவு முதல் சங்க நிர்வாகிகளில் அகப்பட்டவர்களிடம் எல்லாம் பேசுவது, இல்லாதவர்களுக்கு மொபைலில் மெசேஜ்  அனுப்புவது என எப்படியாவது நிகழ்ச்சியைத் தடுத்து விட வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்தனர்.

மேலும், 04.09.2019 அன்று காலை முதல் சுப்ரீம் நிறுவனத்தின் அருகாமைப் பகுதியில் கிட்டத்தட்ட 10 பேர் ஒப்பந்ததாரர் என்ற பெயரில் (ரவுடிகள்) சுற்றி வந்த வண்ணம் இருந்தனர். மீண்டும் ஒரு ஆகஸ்டு – 05 சம்பவத்தை எதிர்கொள்வது பற்றி தொழிலாளர்களை ஒருங்கிணைத்து பேசிய போது, உள்ளூர் என்ற அடிப்படையில் தங்களது ஊர்க்காரர்கள் சொந்தக்காரர்களைத் திரட்டி அந்த ரவுடிகளை எதிர்கொள்ளத் தயாரானார்கள் தொழிலாளர்கள். தங்களுக்கு எதிராக மக்கள் திரளுவதை அறிந்த ரவுடிகள், சற்று நேரத்திற்கெல்லாம் இடத்தைக் காலி செய்தனர்.

மறுபுறம், காலை 06.00 மணிக்கெல்லாம் ஆலை வாயிலுக்கு வந்த நிர்வாக அதிகாரிகள், கொடி, பெயர்ப்பலகை அமைக்கும் சங்க நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும், நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் எனவும், நிறுவனத்தின் துணைத் தலைவரிடம் பேசச் சொல்வதாகவும் கூறி வந்தனர். ஒரு கட்டத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக செய்த செலவுகள் மொத்தமும் கொடுத்து விடுவதாகவும், நிகழ்ச்சியை நிறுத்தும் படியும் கோரி, அந்த பணத்தை நிர்வாகிகளின் பாக்கெட்டில் திணிக்க முயற்சித்தனர். ஆனால், தொழிலாளர்கள் இறுதி வரை விடாப்பிடியாக நின்று நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர்.

காலை 8.30 மணிக்கு திட்டமிட்டபடி ஆலைவாயிலில் சுப்ரீம் நிறுவனத் தொழிலாளர்களுடன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு மற்றும் கிளைச் சங்கத் தொழிலாளர்களின் பரவலான பங்கேற்புடன், நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் கிளைச் சங்கத்தின் தலைவர். தோழர். தனுசு அவர்கள் தலைமையேற்று, இந்நிகழ்ச்சி நடத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். கிளைச் சங்கச் செயலாளர் தோழர். முத்தையன் நிகழ்ச்சி பற்றி கருத்துரை வழங்கியும் நிறுவனத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் சுருக்கமாகப் பேசினார்.

பு.ஜ.தொ.மு.- புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர். சரவணன், தொழிற்சங்கம் துவங்கியதன் நோக்க்கத்தையும், நமது தொழிற்சங்கம் செயல்படும் முறை பற்றியும் விளக்கி, இன்றைய நிகழ்ச்சியை நடத்துவதற்கான அவசியத்தை நிர்வாகம் தான் ஏற்படுத்தியுள்ளது என்பதை விளக்கினார்.

பு.ஜ.தொ.மு.– தமிழ்நாடு மாநில இணைச் செயலாளர் தோழர். பழனிசாமி, சங்கத்தின் பெயர்ப்பலகையை திறந்து வைத்து, தொழிற்சங்கம் தோன்றிய வரலாற்றுக் காரணிகளை விளக்கியும், தொழிலாளர்களை அரசியல்படுத்துதலும் சமூக ரீதியான செயல்பாடுகளும் தான் ஒரு போராட்டத்தை முழுமையடையச் செய்கிறது என்பதை தற்போதுள்ள பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்பு ஆகிய விசயங்களுடன் ஒப்பிட்டு பேசினார். எனவே, அரசியல் தான் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கிறது. இதை உணர்ந்து நமது போராட்ட முறையை கட்டியமைக்க வேண்டும் என்பதையும் விளக்கினார்.

சுப்ரீம் கிளைச் சங்கத்தின் துணைத்தலைவர் தோழர். பாலசுப்ரமணியன் அவர்கள் நன்றியுரை கூறியும், தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

படிக்க:
கிருஷ்ணரும் சில பிய்ந்துபோன செருப்புகளும் !
♦ புதுச்சேரி வரலாற்றில் திருப்பம் – ரவுடிகளை வீழ்த்திய புஜதொமு

இந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் செய்து “தலையால் நின்று தண்ணி குடித்து”ப் பார்த்தும் முடியாமல் போகவே, அங்கு நின்றிருந்த போலீசை வைத்து, நிகழ்ச்சியை சீக்கிரம் முடிக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. எனினும், திட்டமிட்ட அடிப்படையில் நிகழ்ச்சி முறையாகவும், முழுமையாகவும் நடத்தி முடிக்கப்பட்டது.

தனது அத்தனை முயற்சிகளும் பலிக்காமல் போனதால் வெறுப்பான நிர்வாகம், சங்கத்தில் இல்லாத சில தொழிலாளர்களை அழைத்துப் பேசியுள்ளது. தற்போது நிறுவனத்தில் கொடியேற்றி, பெயர்ப் பலகை திறந்துள்ளதால், எங்களது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கையெழுத்துப் பெற்று, போலீசிடம் பெயர்ப்பலகையை அகற்ற வேண்டும் என புகார் கொடுக்க முயற்சித்து வருகிறது.

மற்றொருபுறம், வேலைக்கு உள்ளே வரும்போது கொடியேற்றம், பெயர்ப்பலகை நிகழ்ச்சி என்று சொல்லி சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எங்களை வேலைக்கு வராமல் தடுத்தனர் என்று சில தொழிலாளர்களை வைத்து நிர்வாகம் புகார் பெற்றுள்ளது. இந்த புகார் கடிதங்களைக் கொண்டு பெயர்ப்பலகையை எடுப்பதற்கும், தொழிற்சங்க நிர்வாகிகளை மிரட்டி முடக்குவதற்குமான வேலைகளில் இறங்கியுள்ளது.

தொழிலாளர்களுக்கு எதிராக தொழிலாளரை நிறுத்தியுள்ளது. வர்க்க உணர்வும், அரசியல் புரிதலும் இல்லாததால் அந்தத் தொழிலாளர்கள் நமது சங்கத்திற்கு எதிராகப் புகார் கொடுத்துள்ளனர். நமது போராட்டமென்பது புகார் கொடுத்துள்ள அந்தத் தொழிலாளர்களின் உரிமைகளையும் உள்ளடக்கியது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்காக தொழிலாளர்களை அரசியல்படுத்தும் வேலைகளை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து கொண்டு சென்று வருகிறது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 95977 89801.

தமிழகத்தை நாசமாக்காதே – விழுப்புரம் கருத்தரங்கம் | செய்தி – படங்கள்

ணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச்சாலை – தமிழகத்தை நாசமாக்காதே !” என்ற தலைப்பில் கடந்த 30/8/2019 அன்று மக்கள் அதிகாரம், விழுப்புரம் மண்டலம் சார்பாக, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்திய விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ் அவர்கள் முதலில் தலைமை உரையாற்றினார். அவர் பேசுகையில் “அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை – தமிழகத்தை நாசமாக்கதே என்ற தலைப்பில் தெருமுனைக்கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த போலீசிடம் அனுமதி கேட்டு மனுக் கொடுத்தோம். அதனைத் தொடர்ந்து பேருந்துகள்ம் கடைகள் மற்றும் கிராமங்கள் என பல்வேறு வகைகளில் பிரச்சாரம் மேற்கொண்டோம். ஆனால் போலீசோ எங்களை பேருந்துகளிலும், கடைவீதிகளிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என தொடர்ந்து மிரட்டினார்கள்.

என்ன ஆனாலும் சரி நாங்கள் பிரச்சாரம் செய்வோம், கைது செய்தால் செய்துகொள்ளட்டும் என்று தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டோம். இறுதியாக பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி இல்லை என மறுத்துவிட்டனர். எனவே அதே தலைப்பில் கருத்தரங்கமாக நடத்திக்கொண்டு இருக்கிறோம். இன்று மக்கள் அதிகாரம் என்றாலே நோட்டிஸ் கொடுக்கவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ, பொதுக்கூட்டம் நடத்தவோ எதற்கும் அனுமதி இல்லை. மாற்று அமைப்பினர் நடத்தும் கூட்டங்களில் கூட மக்கள் அதிகாரம் தோழர்கள் பேசக்கூடாது என அவர்களை மிரட்டுகின்றனர்” என போலீசின் இந்த ஜனநாயக விரோத போக்குக்கு கண்டனம் தெரிவித்து பேசி முடித்தார்.

படிக்க :
♦ தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019
♦ ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !

வழக்குரைஞர் தோழர் தமிழ்குமரன் அவர்கள், “ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை போன்ற திட்டங்களை எதிர்த்து நடந்துவரும் போராட்டங்களை ஒடுக்கவே இன்று பல்வேறு ஒடுக்குமுறை சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. கர்ப்பரேட்டுகளின் பிடியில் நம் நாடு சிக்கி உள்ளது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

அடுத்து ஹைட்ரோகார்பன்-சாகர்மாலா எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர் கு.பாலசுப்ரமணியன் அவர்கள் பேசுகையில், “இன்று நமது நாடே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த சூழலிலும் நம்மைப் பாதுகாப்பது விவசாயம்தான். ஆனால் அந்த விவசாயத்தைப் பாதுகாக்க எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை. மாறாக விவசாயத்தை அழிப்பதற்காகவே பல்வேறு திட்டங்கள் கொண்டுவரபடுகிறது. விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யக்கோரி தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும்போது, அரசோ அம்பானி, அதானிகளுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்து முதலாளிகளுக்கு சேவைசெய்து கொண்டிருக்கிறது. அதேவேளையில் மக்கள் அதிகாரம் தான் தொடர்ச்சியாக விவசாயிகளுக்காக போராடி வருகிறது” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

அடுத்ததாக பேசிய மருதம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவிகார்த்திகேயன் அவர்கள் தனது உரையில், “ஆற்று மணல் கொள்ளை மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் தமிழகத்தில் நிலத்தடி நீர் குறைந்து வருவதையும், மேலும் இது போன்று அழிவு திட்டங்களால் மிக கடுமையான குடிநீர் மற்றும் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்றும் பேசினார்.

விழுப்புரம் பகுதி பு.மா.இ.மு அமைப்பாளர்  தோழர் ஞானவேல் அவர்கள் பேசுகையில், “இன்று மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நாசகார திட்டங்களை தமிழத்தில் கொண்டுவருவது மட்டுமல்லால், ஒட்டுமொத்த இந்திய மக்கள் மீதும் புதிய, புதிய கொள்கைகளையும், தங்களது அடக்குமுறைச் சட்டங்களையும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகின்றனர்” என்றார். மேலும் தற்போது கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கை பற்றியும் அதில் உள்ள அபாயங்களைப் பற்றியும் விளக்கிப் பேசினார்.

படிக்க :
♦ கேரள வெள்ளம் : மானிய அரிசி கிடையாது | பாஜக-வின் கோரமுகம் !
♦ ஜெர்மனி : வேற்றுமையில் ஒற்றுமை – ஆனால் பீஃப் கூடாது !

சிறப்புரையாக பத்திரிகையாளர் தோழர் அய்யநாதன் அவர்கள் தான் எழுதி வெளியிட்டுள்ள “ஹைட்ரோகார்பன் அபாயம்” என்ற புத்தகத்தில் உள்ளவற்றை மேற்கோள்காட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்பட இருக்கும் அபாயங்களை தெளிவாக விளக்கினர். மேலும் ஊடக விவாதங்களில் இந்த அழிவு திட்டங்களை ஆதரிப்பவர்கள், தங்களைப் போன்றவர்களை இந்த திட்டங்களால் ஏற்பட உள்ள  பாதிப்புகள் பற்றி மக்களிடம் விளக்குவதற்குகூட விடாமல் வேண்டுமென்றே குறுக்கீடு செய்வதையும் சுட்டிக்காட்டினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசுகையில், “இன்று நமது நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்தும், கடுமையான அடக்குமுறை சட்டங்கள் பற்றியும், தமிழகத்தின் மீது திணிக்கப்படும் நாசகார திட்டங்கள் பற்றியும் மக்கள் அதிகாரம் எங்கேயும் பேசி மக்களை விழிப்படைய செய்துவிட கூடாது என்பதற்காகவே நமக்குத் தொடர்ச்சியாக அனுமதி மறுக்கபடுகிறது. மேலும் மக்கள் ஆகிய நாம் போலீசின் அடக்குமுறைக்கோ, கைது சிறைக்கோ அஞ்சாமல் எதிர்த்து நின்று போராட வேண்டும்” என்று பேசினார்.

நிகழ்ச்சியின் இடையிடையேயும், நிகழ்ச்சியின் இறுதியிலும் பாடப்பட்ட மகஇக-வின் புரட்சிகர பாடல்கள் மக்களை சிந்திக்க வைப்பதாகவும், போராட அறைகூவும் வகையிலும் இருந்தது.


 மக்கள் அதிகாரம்
விழுப்புரம் மண்டலம்

என் அன்பே தியாகத்துக்கு அஞ்சுவது காதல் ஆகுமா ?

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 04

ஸீனா அலுவலகத்தின் தன் வேலையை முடித்ததுமே அவளுடைய சீடன் ஆளோடியில் அவளை எதிர்பார்த்துக் காத்திருப்பான். ஸீனா பெருமிதம் துலங்க அவனுக்குக் கை கொடுப்பாள். இருவரும் ஹாலுக்குச் செல்வார்கள். கோடைகாலம் ஆதலால் அது வெறுமையாக இருக்கும். ஈடுபாடு மிக்க சீடன் அங்கே சீட்டாட்ட மேஜைகளையும் பிங்-பாங் மேஜையையும் முன்னரே சுவரோரமாக நகர்த்தி இடம் செய்து வைத்திருப்பான். ஸீனா அவனுக்குப் புதிய ஜதிவரிசையை ஒயிலுடன் ஆடிக்காட்டுவாள். அவளுடைய எழிலார்ந்த சிறு கால்கள் தரையில் இடும் கோலங்களை அலெக்ஸேய் புருவங்களை நெரித்தவாறு உன்னிப்பாகக் கவனிப்பான். அப்புறம் ஸீனா ஆழ்ந்த முகத் தோற்றத்துடன் கைகளைக் கொட்டி தாளக்கணக்கை எண்ணத் தொடங்குவாள்:

“ஒன்று, இரண்டு, மூன்று, வலப்புறம் சறுக்கல்…. ஒன்று, இரண்டு, மூன்று, இடப்புறம் சறுக்கல்… திருப்பம். அப்படித்தான். ஒன்று, இரண்டு, மூன்று… இப்போது சேர்ந்து ஆடுவோம்.”

கால்கள் இல்லாதவனுக்கு நடனமாடக் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு அவளுக்குக் கவர்ச்சி அளித்தது போலும். வெயிலில் பழுப்பேறிய நிறம், கரிய முடியும், பிடிவாதமும் “வெறியும்” சுடர் விட்ட விழிகளும் கொண்ட இந்தச் சீடனை அவளுக்குப் பிடித்து விட்டது போலும். அல்லது, இன்னும் சரியாகச் சொன்னால் இரண்டு உணர்ச்சிகளும் சேர்ந்து இருந்தனபோலும். என்னவாயினும் சரியே. தனது ஒய்வு நேரத்தை எல்லாம் ஈடுபடுத்தி உளப்பூர்வமாக அவள் அவனுக்குக் கற்பித்தாள்.

மாலை வேளைகளில், ஏரிக்கரையும் வாலிபால், போன்ற விளையாட்டுக்களுக்கான மைதானங்களும் காலியாகிவிடும் போது ஆரோக்கிய நிலையத்தினர் நடனத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவார்கள். அலெக்ஸேய் இந்த மாலை நிகழ்ச்சிகளில் கட்டாயமாகப் பங்கு கொள்வான், மோசமில்லாமல் நடனமாடினான். ஓர் ஆட்டத்தைக் கூட அவன் விடுவதில்லை. அவனுக்கு கடுமையான பயிற்சி நிபந்தனைகளை விதித்தது பற்றி அவனுடைய ஆசிரியை பல முறை பச்சாத்தாபப்பட்டாள். அக்கார்டியன் இசைக்கும், இணைகள் சுழன்று ஆடும் அலெக்ஸேயின் விழிகளில் கிளர்ச்சி சுடர்விட, உற்சாகம் பொங்க, சறுக்கல்கள், திருப்பங்கள், நிறுத்தங்கள் முதலியவற்றை எல்லாம் லாவகமாகச் செய்வான். தழல் வீசுவது போன்ற கூந்தல் கொண்ட மெல்லிய அழகியை அவன் சிரமமுன்றித் தன்னுடன் இட்டுச் செல்வது போல் இருக்கும். இந்த லாவகமுள்ள நர்த்தனைகளைப் பார்ப்பவர்கள் எவருக்கும், சில வேளைகளில் ஹாலிலிருந்து மறைந்து அவன் என்ன செய்கிறான் என்பதை அனுமானிக்கவே முடியாது.

குப்பென்று சிவந்த வதனத்தில் புன்னகை மிளிர, கைக்குட்டையை அலட்சியமாக வீசியவாறு அவன் வெளியில் வருவான். ஆனால் நிலைவாயிலைக் கடந்து இரவுக் காட்டின் இருட்டில் அடி வைத்ததுமே அவனது புன்னகை வேதனையால் ஏற்படும் சுளிப்பாக மாறிவிடும். அழியைப் பிடித்துக் கொண்டு வாயிற்படிகளில் முனகித் தள்ளாடியபடி இறங்கி, பனி பெய்து ஈரமாயிரக்கும் புல்லில் விழுவான். பகல் வெப்பத்தால் இன்னும் கதகதப்பாகயிருக்கும் ஈரத்தரையில் உடல் முழுவதும் படியும்படி அழுத்திக்கொண்டு, உழைத்துச் சோர்ந்து வார்களால் இறுக்கப்பட்ட கால்களில் ஏற்படும் காந்தும் வலி பொறுக்க மாட்டாமல் அழுவான்.

வார்களைத் தளர்த்திவிட்டுக் கால்கள் இளைப்பாற வசதி செய்வான். அப்புறம் பொய்க்கால்களை மறுபடி மாட்டி இறுக்கிக் கொண்டு துள்ளி எழுந்து விரைவாகக் கட்டிடத்துக்கு நடப்பான். யாரும் கவனிக்காதபடி ஹாலுக்குள் புகுவான். களைப்பாறிய அங்கவீனனான அக்கார்டியன் வாத்தியக்காரன் வியர்த்துக்கொட்ட அங்கே வாசித்துக் கொண்டிருப்பான். அலெக்ஸேய் தன்னைக் கூட்டத்தில் விழிகளால் தேடும் ஸீனாவை அணுகி, பீங்கான் போன்று வெண்மையான தன்வரிசையாக பற்கள் தெரியும் படி முகம் மலர முறுவலிப்பான். பிறகு, லாவகமும் வனப்பும் வாய்ந்த இருவரும் மறுபடி நடனத்தில் கலந்துகொள்வார்கள்.

கடினமான நடனப்பயிற்சியின் விளைவை விரைவிலேயே அலெக்ஸேய் கண்டான். பொய்க்கால்களின் தளைப்பூட்டும் பாதிப்பை வர வரக் குறைவாகவே அவன் உணரலானான். கொஞ்சங் கொஞ்சமாக அவை அவனுடைய அங்கங்கள் போல் ஆகிவிட்டன.

அலெக்ஸேய் மனநிறைவு கொண்டிருந்தான். இப்போது ஒரு விஷயம் மட்டுமே அவனுக்குக் கலவரம் ஊட்டியது. ஓல்காவிடமிருந்து கடிதமே வராததுதான் அந்த விஷயம். ஒரு மாதத்துக்கு முன் அவன் அவளுக்குக் கடிதம் எழுதியிருந்தான். அது முற்றிலும் அசட்டுத்தனமான கடிதம் என்று இப்போது அவனுக்குப் புலப்பட்டது. அதற்குப் பதில் இல்லை. தினந்தோறும் காலையில் உடற்பயிற்சியும் ஓட்டமும் (ஒவ்வொரு நாளும் ஓடும் தூரத்தை நூறு தாவடிகள் அதிகப்படுத்தி வந்தான்) முடிந்ததும் அவன் அலுவலகம் சென்று தபால் பெட்டியைப் பார்த்தான். “ம” என்ற முதலெழுத்துக்கு உரிய செருகு அறையில் எப்போதுமே மற்றவற்றைவிட அதிகக் கடிதங்கள் இருக்கும். ஆனால் இந்தக் கடிதக்கட்டை மறுபடி மறுபடி பிரித்துப் பார்த்ததும் வெறுங்கையுடனேயே திரும்புவான் அலெக்ஸேய்.

ஒருநாள் அவன் நடனத்தில் ஈடுபட்டிருக்கும் போது பயிற்சி அறை ஜன்னலுக்கு வெளியே புர்நாஸியானின் கரிய தலை தென்பட்டது. அவன் கைகளில் தடியும் ஒரு கடிதமும் இருந்தன. அவன் எதுவும் சொல்வதற்குள், பள்ளி மாணவனது போன்ற குண்டு குண்டான எழுத்துக்களில் முகவரி எழுதப்பட்டிருந்த உறையை அலெக்ஸேய் வெடுக்கென்று பிடுங்கி கொண்டு வெளியே ஓடிவிட்டான். புர்நாஸியான் வியப்புடன் ஜன்னலருகேயும் கோபமுற்ற ஸீனா அறை நடுவிலும் நின்று கொண்டிருந்தார்கள்.

உறை நைந்து மங்கியிருந்தது. முகவரிக்கு உரியவனைத் தேடி நாட்டில் நெடுந்தூரம் சுற்றி வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அலெக்ஸேய் பதபாகமாக உறையைப் பிரித்துப் பார்த்தான். “முத்தங்கள், அன்பா! ஓல்கா” என்று முடிந்திருந்தது கடிதம். அவன் நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த சுமை இறங்கியது போல் இருந்தது. நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழித்து எழுதப்பட்ட காகிதங்களை நிம்மதியுடன் மடியில் பரப்பி வைத்துக் கொண்டான் அலெக்ஸேய். காகிதங்களை மண்ணும் ஏதோ கரிய பொருளும் என்ன காரணத்தாலோ கறைப் படுத்தியிருந்தன, வத்தி மெழுகு அவற்றில் கொட்டியிருந்தது. நறுவிசாகக் காரியம் செய்யும் ஓல்காவுக்கு என்ன வந்துவிட்டது? இவ்வாறு எண்ணியபடியே கடிதத்தைப் படித்தான். படிக்க படிக்க கர்வத்தாலும் கலவரத்தாலும் அவன் நெஞ்சு விம்மியது. ஓல்கா அப்போது ஒரு மாதமாகத் தொழிற்சாலை வேலையை விட்டுவிட்டு எங்கேயோ ஸ்தெப்பி வெளிகளில் வசிக்கிறாள். அங்கே “ஒரு பெரிய நகரைச் சுற்றிலும்” டாங்கித் தடைப் பள்ளங்கள் தோண்டுவதிலும் சுற்றுக் காப்பரண் நிறுவுவதிலும் கமிஷினைச் சேர்ந்த பெண்கள் முனைந்திருக்கிறார்கள். இவ்வாறு ஓல்கா எழுதியிருந்தாள். “ஸ்தாலின்கிராத்” என்ற சொல் எங்குமே குறிக்கப்படவில்லை. ஆனால் இந்த நகரைப் பற்றி கவலையும் அன்பும் ததும்ப, கலவரமும் எதிர்கால நம்பிக்கையும் தொனிக்க அவள் எழுதியிருந்த தோரணையிலிருந்து அவள் குறிப்பது ஸ்தாலின்கிராத் நகரமே என்பது தெளிவாயிருந்தது.

தன் விவகாரங்கள் ஓல்காவின் மனத்தை முழுமையாக ஆக்ரமித்திருந்தன என்பது நிச்சயம். ஏனெனில் அவற்றை விவரித்த பின்னரே அவள் அலெக்ஸேயின் கேள்விக்குப் பதில் அளித்திருந்தாள். அவனுடைய கடைசிக் கடிதம் இங்கே “காப்பகங்களில்” தனக்குக் கிடைத்தது என்றும், இந்தக் கடிதம் தன்னை அவமதித்து விட்டதாகவும் மட்டுமீறிய இறுக்கமும் பதற்றமும் உண்டாகும் போரில் அவன் ஈடுபட்டிராவிட்டால் இந்த அவமதிப்புக்கு தான் மன்னித்திருக்க முடியாது என்றும் எழுதியிருந்தாள் ஓல்கா.

“என் அன்பே, தியாகத்துக்கு அஞ்சுவது காதல் ஆகுமா? அம்மாதிரிக் காதல் கிடையாது, அருமை அலெக்ஸேய். இருந்தால் என் கருத்தில் அது காதலே அல்ல. என்னையே எடுத்துக்கொள்வோமே. ஒரு வாரமாக நான் குளிக்கவில்லை. காற் சட்டைகளையும் நுனிகள் பிய்ந்து விரல்கள் எல்லாப் புறங்களிலும் துருத்தும் பூட்சுகளையும் போட்டுக் கொண்டு வளையவருகிறேன். வெயிலில் அடிபட்டு என் தோல் நார் நாராக உரிந்து விழுகிறது. அதற்கு அடியில் ஊதா நிறமாக ஏதோ தென்படுகிறது. களைத்து, அழுக்கேறி, மெலிந்து, அழகற்றுப் போய்விட்ட நான் இப்போது இங்கிருந்து உன்னிடம் வந்தால் நீ என்னை அருவருத்து ஒதுங்கியிருப்பாயா, அல்லது கடிந்து கொள்ளத்தான் செய்வாயா? வேடிக்கையான ஆள் நீ, உனக்கு என்ன நேர்ந்தாலும் சரியே, என்னிடம் வா. எப்போதும் எந்த நிலையிலும் உன்னை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்… நான் உன்னைப் பற்றி நிறைய நினைக்கிறேன். இங்கே “காப்பகங்கள் தோண்ட” வந்த பின் நாங்கள் எல்லோருமே படுத்ததுமே அடித்துப் போட்டாற் போல உறங்கி விடுகிறோம். அதற்கு முன் நான் அடிக்கடி உன்னைக் கனவில் கண்டு வந்தேன். நான் உயிரோடு இருக்கும்வரை உன்னை எதிர்பார்க்கிற, எப்போதும், எந்த நிலையிலும் எதிர்பார்க்கிற இடம் ஒன்று இருக்கும் என்பதை மனதில் இருத்திக் கொள்…” இவ்வாறு எழுதியிருந்தாள் ஓல்கா.

படிக்க:
கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை !
வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !

“என்ன இது முன்னுணர்வா? ஊகத்திறனா?” என்று எண்ணமிட்டான் அலெக்ஸேய்.” ‘இதயம் முன்னுணர்வு உள்ளது’ என்று அம்மா எப்போதோ சொன்னாள். அது மெய்தானா? அல்லது காப்பகம் தோண்டும் வேலையின் கஷ்டங்களால் ஓல்காவின் அறிவு பக்குவம் அடைந்துவிட்டதோ? அவன் சொல்ல விரும்பாததை அவன் ”உய்த்து உணர்ந்து கொண்டாளோ?” – இப்படி நினைத்துக் கடிதத்தைப் பின்னும் ஒருமுறை படித்தான் அலெக்ஸேய். “அட, எவ்வித முன்னுணர்வும் இல்லை. எதைக் கொண்டு இப்படி எண்ணினேன்? என் சொற்களுக்கு அவள் பதில் அளித்திருக்கிறாள், அவ்வளவு தான். ஆனால் என்ன மாதிரி அளித்திருக்கிறாள் பதில்!”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

பிள்ளையார் சிலையும் போதை ஆசாமியும் !

1-Ganesha-Slider

போக்குவரத்து நெரிசல் மிக்க பல்லடம் சாலையிலிருந்து இடதுபுறம் குடியிருப்புப் பகுதிக்குத் திரும்புகிறது ஒரு குறுகிய சந்து. சந்தின் இடதுபுறத்தில் ஒரு பேக்கரி. வலதுபுற மூலையில் அந்தச் சந்தை மேலும் குறுகலாக்கும்படி எட்டுக்கெட்டு மேடையில் சகல அலங்காரங்களோடு அமர்ந்திருக்கரார் பிள்ளையார். ‘பிள்ளையார் பட்டி இறைவா போற்றி’ பாடல் ஆளுயர ஸ்பீக்கர்களில் இரைந்து கொண்டிருந்தது. நான் பேக்கரியில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தேன்.

கையில் கயிறு, காவி வேட்டி, ருத்திராட்சை மாலை சகிதமாக இரண்டு பேர் கடைக்கு வந்தார்கள். பதினெட்டு பத்தொன்பது வயது இருக்கலாம்.

‘அண்ணன் சிகிரெட் வாங்கிட்டு வரச்சொன்னாரு..’

அரைப்பாக்கெட் கோல்ட் பில்டர் சிகெரெட்டை வாங்கிக்கொண்டு அவர்கள் பாட்டுக்கு இறங்கிச் சென்றதைப் பார்த்த கடைப் பையனுக்கு அதிர்ச்சி. அருகில் நின்றிருந்த கடை முதலாளியைத் திரும்பிப் பார்த்தான். ‘போகட்டும் விடு எதுவும் கேக்காத’ என்பதைப்போல தலையசைத்தார் முதலாளி. அவரது சகிப்புத்தன்மைக்கு இரண்டு காரணங்கள் இருந்தது. முதலாவது அவர் மலையாளி. உள்ளூர் ரவுடிகளைப் பகைத்துக்கொண்டு அங்கே தொழில் செய்ய முடியாது. இரண்டாவது அவர் இஸ்லாமியர். இதற்கு விளக்கம் தேவையில்லை.

ஆச்சா..

அந்தக் கார்னர் சைட் கடைக்கு இரண்டு பக்கமும் ஆங்கில எழுத்து ‘L’ வடிவில் படிக்கட்டுகள் இருக்கும். மூன்று படிகள். பிள்ளையாரைப் பார்த்தபடி இருந்த படிக்கட்டில் ஆறேழு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். பெரும்பாலும் போதை. ஒரு சுசுகி ஜிக்சர் வாகனத்தில் ஒருவன் வந்து மேடையின் முன்பாக நிறுத்திவிட்டு இவர்களோடு படியில் அமர்ந்தான்.

நரபோதையில் ஏற்கனவே தலை தொங்கிப்போயிருந்த ‘அண்ணன்’ வாயில் சிகரெட்டை வைத்து சில வினாடி போராட்டத்துக்குப் பிறகு பற்றவைத்தான். ஏற்கனவே ‘மட்டை’ கண்டிசனில் இருந்த அண்ணனின் நுரையீரலுக்குள் சென்ற நிகோடின் வஸ்து அலாசி விட்டிருக்க வேண்டும். காலி வயிற்றில் ஆல்கஹாலும் நிகோடினும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தால் எப்பேர்ப்பட்ட ஆளுக்கும் ‘தூக்கி’ விட்டுவிடும். இது இயற்கையின் விதி. எழுந்து சாக்கடையைத் தேடி தள்ளாடி நடந்தான். பிள்ளையார் மேடையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் வாந்தியெடுத்தான்.

படிக்க:
இந்து முன்னணி பிள்ளையார்களுடன் நேருக்கு நேர் !
♦ பிள்ளையார் சிலை பொறுப்பாளர் இந்து முன்னணி அய்யப்பன் நேர்காணல் !

ஒரு டாட்டா ஏஸ் வாகனம் அந்தச் சந்துக்குள் திரும்ப முற்பட்டது. பிள்ளையாருக்கு முன்பாக மூஞ்செலி போல நின்று பாதையை மேலும் குறுகலாக்கியபடி நின்றிருந்தது சுசூகி ஜிக்சர்.

“அண்ணே அந்த வண்டிய கொஞ்சம் நகட்டுங்கண்ணே..” கெஞ்சலாகக் கேட்ட ஆட்டோ டிரைவருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கலாம்.

“டேய்.. வண்டியும் எடுக்க முடியாது ஒரு ..ண்டையும் எடுக்க முடியாது.. நீ ஒதுங்கிப்போடா..”

வண்டியை எடுப்பதற்காக எழுந்த இளைஞன் ‘அண்ண’னின் குரலைக்கேட்டு மீண்டும் அமர்ந்தான். ஆறடித் தொலைவைக் கடப்பதற்கு ஐந்து நிமிடம் போராடி வென்றார் டிரைவர்.

டீயைக் குடித்துவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தேன். சில நிமிடங்களில் பேன்சி பொருட்கள், பொம்மைகளோடு ஒரு தள்ளுவண்டி வந்தது. இந்தமுறை அண்ணனுக்கு பதிலாய் தம்பியே சவுண்டு விட்டார்.

“ங்கொம்மா… வண்டிமேல பட்டுச்சு தள்ளுவண்டிய கவுத்து விட்ருவேன்..”

drunk-manசத்தமில்லாமல் திருப்பிக்கொண்டு வந்தவழியே சென்றார் தள்ளுவண்டிக்காரர். என்ன நிறமென்றே கணிக்க முடியாத விசித்திர நிறத்தில் வாயிலும் மூக்கிலும் ஒழுகிய திரவத்தைக் காவி வேட்டியில் துடைத்துக்கொண்டு திரும்பி வந்தான் அண்ணன். தள்ளாடியபடி நடந்துவந்த அண்ணனை இரண்டுபேர் தழுவியபடி கைத்தாங்கலாக அழைத்து வந்ததைப் பார்க்க பத்தாசா நடனத்தைப் பார்ப்பதுபோல இருந்தது. (பத்தாசா நடனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் யூ டியூபில் சொடுக்கவும்)

தாங்கிப்பிடித்தவர்களில் ஒருவனின் சட்டை ஜிக்சர் வண்டியின் ஹேண்டில் பாரில் சிக்கிக்கொண்டு இழுக்க அண்ணைக் கைவிட்டான். நிலைதடுமாறி விழுந்தான் அண்ணன். படிக்கட்டின் முனையில் ‘சத்த்’ என்று மோதியது தலை. உண்மையில் அந்தச் சத்தம் எனக்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பலமாக இருந்தது. என் கணிப்பு சரியெனில் அவனுக்கு (head injuries) தலைக்காயம் ஏற்பட்டிருக்க 90 விழுக்காடு வாய்ப்புள்ளது. வெளியில் இரத்தக்கசிவு இல்லையென்றாலும் உள்ளுக்குள் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புண்டு. அவன் மயக்கமாகாமல் இருந்தது ஆச்சர்யம்தான். சிலர் ஓடிச்சென்று தூக்கி விட்டார்கள்.

‘டேய்.. விடுங்கடா ங்கொம்மா…க்கனுங்களா எனக்கு ஒண்ணும் ஆகாது..’ வந்த கூட்டம் விலகிச்சென்றது. அருகிலிருந்த யாருக்கும் நிலைமை புரியவில்லை. கூர்ந்து கவனித்தேன். வலது காதுக்கு மேல்பக்கம் ஒரு கிரிக்கெட் பந்து அளவுக்கு புடைத்திருந்தது. வலிக்காத மாதிரியே நடித்துக்கொண்டிருந்த அண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைந்துகொண்டு இருந்தான்.

சிகரெட் முடிந்துவிட்டது. கிளம்பும்போது பார்த்தேன். மேடையிலிருந்து வைத்த கண் மாறாமல் அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தார் பிள்ளையார். அண்ணனுக்கு ஒரு குடும்பம் இருக்கலாம். குழந்தைகள் இருக்கலாம். அவர்களின் அரூப உருவம் என் மனக் கண்ணில் உறுத்திக்கொண்டே இருக்கிறது.

நன்றி : ஃபேஸ்புக்கில் Samsu Deen Heera 

கேள்வி பதில் : சதுர்த்தி – குழந்தை திருமணம் – நினைத்ததை எழுதுவது எப்படி ?

QA-Slider

கேள்வி : //இந்து மதங்களையும் சாதாரண மக்களையும் எவ்வாறு பிரித்து பார்ப்பது… ஏன் என்றால்? விநாயகர் சதுர்த்தி முன் இருந்ததை விட இப்போது அதிக அளவில் கொண்டாடப்படுகிறது குறிப்பாக கிராமங்களில் எப்படி இது அதிக அளவில் பரவியது…//

– ஷாம்

ன்புள்ள ஷாம்,

இந்துமதத்தில் சாதாரண மக்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு மட்டுமே உரிமை பெற்றவர்கள். கருவறையில் நுழைந்து கடவுளைத் தொட்டு பூஜை செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அதே போன்று அவர்களது தாய் மொழியாம் தமிழை (சமஸ்கிருதம் அல்லாத மற்ற மொழிகளையும்) கருவறைக்குள் கொண்டு செல்ல முடியாது. இந்துமத தத்துவங்கள், புராணங்கள் அனைத்தும் சாதாரண மக்களை சூத்திரர்கள் – பஞ்சமர்கள் என்றே அழைக்கிறது.

Hindu-Munnani-vinayagar-07சூத்திரன் என்றால் வேசிமகன் என்கிறது வேதம். மேலும் பார்ப்பன, ஷத்திரிய, வைசிய பெண்கள் தமக்கு கீழே உள்ள வர்ண ஆண்களோடு சேர்ந்து பெற்றுக் கொள்ளும் குழந்தைகள் சூத்திரர்கள் என்று வேதம் கூறுகிறது. சாதாரண மக்களின் குல தெய்வங்களான மாரியம்மன், இசக்கி, சுடலைமாடன், காத்தவராயன், மதுரை வீரன் போன்ற நாட்டுப்புற கடவுள்களை சிறு தெய்வம் என்று இந்துமதம் இழிவுபடுத்துகிறது. நாட்டுப்புற தெய்வ வழிபாட்டில் விலங்கு பலி, கறி படையல், அனைத்தும் உண்டு. இதையும் இந்துமதம் இழிவுடனே பார்க்கிறது.

விநாயகர் சதுர்த்தி ஆரம்பத்தில் வீட்டுப் பண்டிகையாக ‘மேல்’ சாதி இந்துக்களால் கொண்டாடப்பட்டு சிறிய அளவிலான சிலைகள் ஊரின் கிணறுகள், குளத்தில் கரைக்கப்பட்டு வந்தன. 1980-களுக்குப் பிறகு இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் முயற்சியால் பொது இடங்களில் பிரம்மாண்டமாக சிலை வைத்து, அதைக் கரைக்கும் நாளில், மசூதி இருக்கும் தெரு வழியாகத்தான் போவோம் என கலவரம் செய்து வருகிறார்கள்.

பல இடங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் வாழும் பகுதியில் பணமும், சிலையும் கொடுத்து வம்படியாக விநாயகர் சதுர்த்தியை அமல்படுத்தி வருகிறார்கள். இன்று கிராமங்களிலும் இந்தப் போக்கு பரவுவதற்கு இந்து மதவெறி அமைப்புகள்தான் பிராதன காரணம். ஆளும் அரசுகளும் மறைமுகமாக இதை பக்தி என்ற பெயரில் ஆதரிக்கின்றன. இன்று பாஜக நாடாளும் கட்சியாக இருக்கும் போது இன்னும் அதிகம் செய்கிறார்கள்.

♦ ♦ ♦

கேள்வி : //பருவ வயதை அடைந்தவுடன் பெண் தாய்மைக்கு தயாராகி விடுகின்றாள். அப்படி இருக்கும் போது எதுக்கு 18 வயது வரை காத்திருக்கணும் ?//

– அன்சாரி முகமது

ன்புள்ள அன்சாரி முகமது,

ஆண் 21 வயதிலும், பெண் 18 வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இந்திய சட்டம் வரையறுத்திருக்கிறது. பருவ வயதை எட்டிய உடன் ஒரு சிறுமி தாய்மைக்கு தயாராகிவிட்டாலும், சமூக ரீதியாக அவள் ஒரு குடும்ப வாழ்வை நடத்துமளவுக்கு முதிர்ச்சி அடைவதில்லை. இதில் உயிரியில் காரணத்தை விட சமூக காரணங்களே முக்கியம்.

child-marriageஇந்தியாவில் சட்டத்தை மீறி குழந்தைகள் திருமணம் நடைபெறுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் குழந்தை திருமணங்கள் குறைந்தாலும் இந்தி பேசும் மாநிலங்களில் இன்னும் செல்வாக்கோடு இருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்திலேயே குழந்தைகள் திருமணம் தடை செய்யப்பட்டாலும் அது இன்னமும் தொடர்கிறது. பாஜக, காங்கிரசு போன்ற கட்சிகளே இந்தி பேசும் மாநிலங்களை ஆண்டு வருகின்றன. அங்கே இக்கட்சிகள் குழந்தைகள் திருமணத்தை தடை செய்ய போதிய முன்முயற்சி எடுப்பதில்லை. கூடவே கண்டுகொள்வதுமில்லை.

இந்தியாவில் குற்றவியல் சட்டப்படியும் 18 வயதுக்குட்பட்ட நபர் மைனர் என்றே நடத்தப்படுகிறார். குற்றங்கள் போக சொத்துரீதியான உரிமைகள் வரும்போது மைனர்களுக்கு ஒரு காப்பாளர் தேவைப்படுவார். இப்படி அனைத்து கோணங்களிலும் 18 வயது வரை காத்திருப்பது அவசியமாகிறது.

ஒரு பெண் இந்த சமூகத்தை புரிந்து கொண்டு ஓரளவு சுயேச்சையாக வாழ்வதற்கு இந்த காத்திருத்தல் அவசியம். சிறிய வயதிலேயே திருமணம் செய்து, குழந்தைகளை பெற்றுக் கொண்டு குடும்பம் நடத்துவதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் கொடுமையானது. இதனாலேயே உலகில் பல நாடுகள் பெண்ணுக்குரிய திருமண வயதாக 18-ஐ வைத்திருக்கின்றன.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : //புதிய தமிழகத்தின் புதிய அரசியல் சூட்சுமம் என்ன?//

– இராஜாராமசாமி

ன்புள்ள இராஜா ராமசாமி,

ஆர்.எஸ்.எஸ் – பாஜக உதவியுடன் கடையை நடத்துவதுதான் புதிய தமிழகத்தின் புதிய சூட்சுமம்.

♦ ♦ ♦

கேள்வி : //படிக்கின்ற விசயங்கள் மற்றும் தோன்றும் எண்ணங்களை வார்த்தை வடிவில் கொண்டுவர தடுமாற்றம் தோன்றுகிறது.. எழுத நினைக்கும் போது எண்ணங்கள் மறந்துவிடுகிறது ஏன்?//

– நவநீதன்

ன்புள்ள நவநீதன்,

எழுதுவதற்கு முன்னர் நாம் நிறைய படிக்க வேண்டும். அந்த படிப்பையும் ஏதேனும் ஒரு தேவையின் அடிப்படையில் குறிப்புகளோடு படிப்பது அவசியம். குறிப்பிட்ட நூலில் இருந்து நாம் என்ன புதிதாக கற்றுக் கொண்டோம், அந்த நூலில் நம் மனம் கவர்ந்தது எது – ஏன், கவராதது எது – ஏன்? என்பதை நம் சொந்த மொழியில் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தலைப்பில் நீங்கள் எழுத நினைக்கிறீர்கள். அந்த தலைப்பு குறித்து உங்கள் குறிப்புகளில் ஏதும் கருத்துக்கள் உள்ளதா என்று பார்த்து அதன் வழியில் சிந்திப்பதும், சிந்தனை துளிகளை குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டு ஓரிரு நாள் அசை போடுங்கள். பிறகு அந்த குறிப்புகளை திரைக்கதை போல சுருக்கமாக எழுதுங்கள். இப்போது அந்த குறிப்புகள் மூலம் படிப்பவர் ஏதேனும் ஒரு புதிய விசயத்தை படிக்க முடியும் என உங்களுக்குத் தோன்றுகிறதா, பாருங்கள். அப்படி இருப்பின் பிறகு திரைக்கதை குறிப்புகள் உதவியுடன் எழுதுங்கள். ஆரம்பத்தில் சில பல தயக்கம், தடுமாற்றம் இருந்தாலும் மனந்தளராமல் திரும்பத் திரும்ப எழுதுங்கள். எழுத்து வரும்.

எழுத்துக்கு திட்டமிட்ட செயல்பாடும், திட்டமிடாத கற்பனை வளம் இரண்டும் வேண்டும். அதற்கு இந்த செயல்முறை உதவுமென நம்புகிறோம். நீங்கள் குறிப்பாக இன்னதுதான் எழுதப் போகிறீர்கள் என்பதறியாமல் இந்த கருத்து பொதுவாக முன்வைக்கப்படுகிறது.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : //நான் தற்போது இதழியல் துறையில் முதுகலைப்பட்டம் பயின்று வருகிறேன்.. எனக்கு ஓர் செய்தி ஊடகத்தில் வேலை கிடைத்துள்ளது… நான் ஒரு திராவிட கட்சியில் அடிப்படை உறுப்பினராக உள்ளேன். அந்த கட்சியின் எதிரி கட்சியில், (எதிர் கட்சி அல்ல..) வேலை செய்ய போகிறேன்… ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்க நேருமா? நான் பின்பற்றி வரும் கொள்கைகளுக்கு பங்கம் நிகழுமா??//

– ரே

ன்புள்ள நண்பருக்கு,

பத்திரிகை துறையில் உள்ளவர்கள் முகநூலில் உணவு, ஆன்மீகம், ரசனை, சினிமா விமர்சனம், இலக்கியம், வீட்டு விலங்குகள், பண்டிகை தின வாழ்த்துக்கள் என்று பதிவுகள் போடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

சிலர் கட்சி சார்ந்த சானல்களில் பணியாற்றி அவர்களும் அதே கட்சிகளில் இருக்கும் போது அவர்கள் போடும் அரசியல் பதிவுகளுக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் முற்போக்காக, மோடி – அதிமுக ஆட்சியை எதிர்ப்போர், ஆதிக்க சாதிவெறியை கண்டிப்போர் இவர்கள் எந்த சானலில் வேலை பார்த்தாலும் எதாவது ஒரு தருணத்தில் கட்டம் கட்டப்படுகிறார்கள்.

அந்த வகையில் கருத்து சுதந்திரத்தைக் காக்க வேண்டிய பத்திரிகைத் துறையில் ஒரு பத்திரிகையாளருக்கே கருத்து சுதந்திரமில்லை. இதற்கு பத்திரிகையாளர்கள் வலிமையான தொழிற்சங்கமாக அணிதிரள்வதே தீர்வு.

♦ ♦ ♦

கேள்வி : //பெண்மை எதற்காக இன்னும் அடிமைப்பட்டுக்கிடக்க இந்த சமூகம் அளவிளா ஆவல் கொண்டு ஆடுகிறது.✍//

– சேஷாசலம்

ன்புள்ள சேஷாசலம்,

வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு போன்ற வேலைகளை பெண்கள் மட்டுமே செய்கிறார்கள். இதை இலவச உழைப்பாக சமூகம் குறிப்பாக ஆண்கள் கருதுகிறார்கள்.

இரண்டாவது வெளி வேலைக்கு பெண்கள் சென்றாலும் அந்த வருமானம் குடும்பத் தலைவர் என்ற முறையில் ஆண்களுக்கே வந்தாக வேண்டும். உழைக்கும் உதிரிப் பாட்டாளி வர்க்கத்திலோ பெண்கள் உழைப்பில் ஆண்கள் குடிக்கிறார்கள். எனவே பெண்கள் அடிமைப்பட்டு கிடப்பதை இந்த சமூகம் – ஆண்கள் விரும்பவே செய்கிறது.

♦ ♦ ♦

கேள்வி : //உத்திர பிரதேசத்தில் நடக்கின்ற யோகியின் ஆட்சி தான் பா.ஜ.க.-வின் ” செயல் விளக்க மாநில ஆட்சி ” என்பதற்கான மாதிரியா…?//

– எஸ். செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

ஆமாம். உத்திரப்பிரதேசத்தில் நேரடியாக ஒரு சாமியார் அதுவும் ரவுடி சாமியார் முதல்வராக இருக்கிறார். ஊர் பெயர்கள் மாற்றப்படுகின்றன. கொலைக் குற்றவாளிகளான பசுக்குண்டர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு பகிரங்கமாக வரவேற்கப்படுகிறார்கள்.

நேரடியாக முசுலீம்களுக்கு மிரட்டல் விடுவிக்கப்படுகிறது. பீம் சேனாவின் தலைவர் அவ்வப்போது கைது செய்யப்படுகிறார். காவலைரைக் கொன்ற இந்துமதவெறியர்கள் கூட பிணையில் எளிதாக வெளியே வருகிறார்கள். இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரியாக உ.பி மாற்றப்பட்டு வருகிறது.

♦ ♦ ♦

கேள்வி : //சமீபத்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் வாக்கு இயந்திரத்தின் பங்கு ஆளும்கட்சிக்கு சாதகமாக அமைந்திருக்க வாய்ப்புகள் உள்ளது என்பது எந்த அளவுக்கு உண்மை?//

– ஏ.பி.நடராசன்

ன்புள்ள நடராசன்,

பெரிய அளவுக்கு உண்மையில்லை. அதற்கு தமிழக, கேரள, தெலுங்கானா, ஆந்திர முடிவுகளே சாட்சி.

♦ ♦ ♦

கேள்வி : //உண்மையில் நம்முடைய முன்னோர்கள் யோகா செய்தார்களா ? யோகா செய்தால் உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியுமா? யோகாவால் எந்த நோயும் ஏற்படாது என அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளதா?//

– கா. அசோக் பால் ராஜன்

ன்புள்ள அசோக் பால் ராஜன்,

இன்றைக்கிருக்கின்ற யோகா ஒரு பேக்கேஜாக சென்ற நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன் அதனுடைய வெவ்வேறு வடிவங்களை துறவறம் சார்ந்தவர்கள் செய்து வந்தார்கள். இன்றைக்கு முன்வைக்கப்படுகிற யோகா உடலை நீட்டி இழுத்து மடித்து செய்கின்ற ஒரு உடற்பயிற்சி மட்டுமே.

முழுமையான உடற்பயிற்சிக்கு கலோரிகளை எரிக்கின்ற நடை, சைக்கிள் இதர பயிற்சிகள், எடை தூக்கும் பயிற்சிகள் ஆகியவையும் அவசியம். யோகா என்றில்லை பொதுவில் உடற்பயிற்சிகள் செய்வது உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும் ஒரு முன் தயாரிப்பு மட்டுமே. அதனாலேயே நோய் ஏற்படாது என்பதில்லை.

நுண்ணுயிர் தொற்றிகள் மூலம் தொற்று நோயோ மற்ற நோய்களோ கூட ஏற்படலாம். சரியான உடற்பயிற்சி, சரியான சமவிகித உணவு, ஆரோக்கியத்தை உத்திரவாதப்படுத்தும் வாழ்க்கை சுகதாரா வசதிகள் ஆகியவையும் நோயிலிருந்து காக்கும் முன் எச்சரிக்கைக்கு அவசியம். அவை வசதி, வர்க்கம் சார்ந்தே பிரிந்து இருக்கின்றன.

கீழ்க்கண்ட கட்டுரை யோகாவைப் பற்றியும் விரிவாக விளக்குகிறது. படித்துப் பாருங்கள்!

♦ ♦ ♦

கேள்வி : //திராவிடர்களுக்கும், தமிழர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? பெரியார் திராவிட கழகம் என்று தனது கட்சிக்கு பெயர் வைத்து இருந்தார். ஆனால், தமிழர்கள் என்று மட்டும் தான் பேசினாரா?//

– சுரேஷ்குமார்

ன்புள்ள சுரேஷ்குமார்,

வட இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மொழிகள் ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. தென்னிந்தியாவில் தமிழை உள்ளிட்ட பெரும்பான்மை மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அதில் தமிழ் மட்டும் சமஸ்கிருதமயமாகாமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவை திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருப்பினும் வடமொழிக் கலப்பு அதிகம். ஆரிய, சமஸ்கிருத, பார்ப்பனிய எதிர்ப்பை சுட்டுவதற்காகவே திராவிடர், திராவிட இயக்கம், திராவிடர் கழகம் என்ற பெயர்கள் வைக்கப்பட்டன. அன்றைக்கு மதராஸ் மாகாணம் என்பது தென்னிந்தியாவை குறித்ததால் நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மக்களை அதாவது தென்னிந்திய மக்களின் நலனையும், அதற்கு எதிரான பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும் முன்வைத்தார்கள்.

திராவிட இயக்கத்தை சேர்ந்த சில அறிஞர்கள் திராவிடத்தை இனம் என்றும் கூறுகிறார்கள். அது சரியல்ல. திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதைத்தாண்டி தென்னிந்திய மக்கள் அனைவரும் ஒரே இனத்தை அதாவது தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. திராவிடர் கழகத்தின் முதன்மைச் செயல்பாடு தமிழகம் என்பதால் பெரியார் தமிழ் மக்களிடையே தனது கருத்துக்களை முன்வைத்தார்.

♦ ♦ ♦

கேள்வி : //ராஜராஜ சோழன் பற்றிய ரஞ்சித் கருத்திற்கு பலதரப்பட்ட கருத்துகள் பதில்களாக வந்திருக்கும் இந்த நேரத்தில் ராஜராஜ சோழன் காலத்து உற்பத்தி முறை, சமூகவியல் வரலாறைப் பற்றி மார்க்சியப் பார்வையில் கூறுங்களேன்..//

– மா பே மு

ன்புள்ள நண்பருக்கு,

உங்கள் கேள்விக்கு புதிய கலாச்சாரத்தின் கீழ்க்கண்ட கட்டுரை நேரடியாக பதிலளிக்கிறது. படித்துப் பாருங்கள். நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்