Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 298

அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !

0

த்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துகான அமைச்சகம் நிலக்கரி அனல் மின் நிலையத்திற்கான காற்று மாசுக்கட்டுப்பாடு அளவீடுகளை தளர்த்துவதற்கு முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. கடந்த மே 17, 2019 அன்று அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரிதேஷ்குமார் சிங்கின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களுக்கு தற்போது அனுமதிக்கப்பட்டு வரும் காற்றில் வெளியிடப்படும் நைட்ரஜன் ஆக்சைடு மாசு அளவான 300mg/Nm3-லிருந்து 450mg/ Nm3-ஆக அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆற்றல்துறை அமைச்சகம் வெகுநாட்களாகக் கோரி வந்தது. இதனை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனாலும் கடந்த மே மாதத்தில் ஆற்றல்துறை அமைச்சகத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மின்சார வாரியம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையில் நீண்டகாலமாக அனல் மின் நிலையங்களில் மாசுக் கட்டுப்பாட்டு அளவீடு தொடர்பாக ஒத்த கருத்து இல்லாமல் இருந்த காரணத்தால், இரண்டு அமைப்புகளும் இணைந்து அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியாகும் காற்று மாசு அளவைக் கண்காணிப்பது என்றும் அதன் முடிவு அறிக்கைகளில் இருந்து முடிவெடுக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இராஜஸ்தானின் கவாய் பகுதியில் உள்ள அதானி பவர் மின் உற்பத்தி நிறுவனத்தின் இரண்டு மையங்கள், நாக்பூரில் உள்ள தேசிய அனல் மின் கழக சிறப்பு அனல்மின் உற்பத்தி நிலையம், அரியானாவின் ஜாஜ்ஜார் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி மின் உற்பத்தி நிலையம், பஞ்சாபின் ராஜ்புரா பகுதியில் உள்ள நபா பவர் மின் உற்பத்தி நிலையம் ஆகிய நிறுவனங்களின் அனல் மின் உற்பத்தி நிலையங்களை இவ்விரு வாரியங்களும் இணைந்து தொடர்ந்து 48 நாட்களுக்கு (பிப்ரவரி 13, 2019 முதல் ஏப்ரல் 2, 2019 வரை) மாசு அளவைக் கண்காணித்தன.

இந்த நான்கு அனல் மின் நிலையங்களின் 7 மையங்களின் கண்காணிப்பு அறிக்கையை சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு கடந்த மே 2, 2019 அன்றுதான் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பு அறிக்கையின் படி, இந்த 7 மையங்களில் அதானி குழுமத்தின் இரண்டு மின் நிலையங்களில் நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு முறையே 509 mg/Nm3 மற்றும் 584 mg/Nm3-ஆக இருக்கிறது. இது தற்போதைய அனுமதிக்கப்பட்ட அளவான 300 mg/Nm3-க்கு மிகவும் அதிகமாகும். அதே சமயத்தில், இதர 5 அனல் மின் நிலையங்களின் நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு 200 mg/Nm3-லிருந்து 300 mg/Nm3  -குள்தான் இருந்துள்ளது.

படிக்க:
சுற்றுச் சூழலை சீரழிக்கும் அனல் மின் நிலையங்கள் – கண்டுகொள்ளாத அரசு !
♦ நூல் அறிமுகம் : கார்ப்பரேட்டும் வேலைபறிப்பும்

நைட்ரஜன் ஆக்சைடு காற்றில் அதிகமாக கலந்திருப்பது நுரையீரல் தொடர்பான கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம், சுற்றுச் சூழலியல் அமைச்சகம் அனல் மின் நிலையங்களுக்கான காற்று மாசு அளவுகளை நிர்ணயித்தது. குறிப்பாக 2003-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் தொடங்கப்பட்ட அனல் மின் நிலையங்களில், நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு 300 mg/Nm3-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என நிர்ணயித்தது. நிர்ணயிக்கப்பட்ட இந்த காற்று மாசுக் கட்டுப்பாட்டு அளவை நிறுவனங்களால் எளிமையாக எட்டிவிட முடியும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது.

அதே போல 2017-ம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட அனல்மின் நிலையங்களுக்கான அனுமதிக்கப்பட்ட நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாட்டின் அளவு 100 mg/Nm3 .

ஆனால் ஆற்றல்துறை அமைச்சகம்  2003-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுக்கு பிறகு வரை தொடங்கப்பட்ட அனைத்து அனல்மின் நிலையங்களுக்கான நைட்ரஜன் ஆக்சைடு காற்று மாசுபாட்டு அளவை 450 mg/Nm3 -ஆக உயர்த்த வேண்டும் என்று கோரி வந்தது.

அதானி நிறுவனம் தவிர மற்ற எல்லா நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவிற்கு உள்ளாகவே நைட்ரஜன் ஆக்சைடை வெளியிடும்போது, இவ்வளவு அவசரமாக கற்று மாசுபாட்டு வரம்பை உயர்த்துவது ஏன் ? நம்புங்கள் ! ஆற்றல்துறை அமைச்சகத்துக்கும் அதானி குழுமத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !

கடந்த மே மாதம் நடைபெற்ற கூட்டம் குறித்து, தி வயர் இணையதளம் சேகரித்த தகவல்கள் மற்றும் கூட்டக் குறிப்புகளின் படி, இக்கூட்டத்தில் ஆற்றல் அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, தேசிய அனல் மின் கழகம் மற்றும் சுற்றுச் சூழலியல் அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத்துறையின்  எதிர்ப்பையும் மீறி, இந்த மாசுக்கட்டுப்பாட்டு அளவை தளர்த்த முதற்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதில் இறுதி ஒப்புதல் சுற்றுச் சூழலியல் அமைச்சகம் மற்றும் ஆற்றல் அமைச்சகத்தின் செயலர்களால் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரியவருகிறது.

படிக்க:
பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !
♦ ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !

மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத் துறை விஞ்ஞானிகளின் ஆலோசனையின் பேரிலேயே சூழலியல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சுற்றுச் சூழல் அளவீடுகளை பல்வேறு துறைகளுக்கு நிர்ணயிக்கிறது. பல்வேறு துறைசார் வல்லுனர்கள் மற்றும் தொழிற்துறை வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து விவாதித்த பின்னரே அனல் மின் நிலையங்களுக்கான, தண்ணீர் நுகர்வு, சல்பர் டை ஆக்சைடு வெளியீடும் நைட்ரஜன் ஆக்சைடு வெளியீடு ஆகிவற்றிற்கான வரம்புகளை கடந்த 2015-ம் ஆண்டில் நிர்ணயித்தது.

சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தும் பல்வேறு உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளையும், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட உலகம் தழுவிய பிரச்சினைகளையும் கணக்கில் கொண்டே துறைசார் வல்லுனர்கள் மாசுக் கட்டுப்பாட்டு அளவை நிர்ணயிக்கின்றனர். ஆனால் அதானிகளின் மூலதனத்தின் இலாபவெறி இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் ‘ஹைகோர்ட்டாக’ மதித்து உதைத்துத் தள்ளி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. நமது வருங்காலத் தலைமுறை வாழ்வதற்கு ஒரு சுடுகாட்டை தயார் செய்து கொடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?


தமிழாக்கம் :நந்தன்
நன்றி : தி வயர்.

உழைக்கும்போதே இந்த உசுரு போகணும் | ஒரு உழைப்பாளி காதல் ஜோடி !

t-nagar-life-of-chennai-photo-essay

மரவள்ளி… புட்டு… வேர்க்கடல…ய்…! மாநகரத்து நடைபாதையில் கிராமத்து வாசனை!

சென்னை தி. நகர் பேருந்து நிலையம். அருகிலேயே ரெங்கநாதன் தெரு இருப்பதால், ஒருவருக்கொருவர் மோதாமல், இடிக்காமல் சர்வ சாதாரணமாக நடைபாதையில் நடந்து போய்விட முடியாது. அதற்குத் தனித்திறமை வேண்டும். அந்த இடத்தில் சகலரும் விரும்பிச் சாப்பிடும் கிராமத்து திண்பண்டத்தை விற்கும் உழைப்பாளி ஜோடியைப் பார்க்க முடியும்.

நடைபாதையில் திண்பண்டங்கள் வியாபாரம் செய்யும் வடிவம்மாள் – ஆறுமுகம் காதல் தம்பதியினர்.

வெடித்து மலர்ந்திருக்கும் மரவள்ளிக் கிழங்கு, வேகவைத்த வேர்க்கடலை. மேலும் தேங்காய், சர்க்கரை கலந்த சிவப்புப் புட்டரிசி. அந்தப் பக்கமாகச் செல்வோர், அவசர நடையிலும் இந்தத் தின்பண்டத்தைப் பார்த்ததும் சட்டென பிரேக் போட்ட மாதிரி நின்று, பழைய பள்ளிக்கூட நினைவுக்குச் சென்று வருவார்கள்.

10 ரூபாயை நீட்டி விருப்பமானதை வாங்கிக் கொண்டு, நடையை கட்டுகின்றனர் பாதசாரிகள். பெரும்பாலும் கிராமத்து வாசனை மாறாதவர்கள், தயக்கமே இல்லாமல் இயல்பாக சிரித்தபடி வாங்கிக் கொள்கிறார்கள். நகர்ப்புறத்து பெண்களும், இளசுகளும் ஓரக்கண்ணால் பார்த்தபடி அதை விட்டுப் போகவும் மனதில்லாமல், பார்க்காதது மாதிரி பார்த்துக் கொண்டே கடக்கிறார்கள்.

புட்டரிசி வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே உழைப்பாளி ஜோடியிடம் பேச்சு கொடுத்தோம். அவர்கள் நம்மிடம் இயல்பாக பேச ஆரம்பித்தவுடன், அவர்களை கலாய்க்க ஆரம்பித்தோம்.

“எந்த முதலும் போடாமல் இவ்வளவு முக்கியமான இடத்தில், இவ்வளவு பெரிய வியாபாரம் செய்கிறீர்களே, இதற்கு ஜி.எஸ்.டி, இன்கம் டாக்ஸ் எல்லாம் கட்டுகிறீர்களா என்று உங்களை சோதிக்க வந்துள்ளோம்.” என்றோம்.

அவர்களும், “ஆமா…மா…, வா … வா… வந்து செக் பண்ணு. பணத்த எடுத்தா எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்துட்டுப் போ” என்று ஏகத்துக்கும் நம்மை ஓட்டினார்கள்.

படிக்க:
சரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை
♦ ஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ

“எவ்வளவு வருசமா இந்த வியாபாரம் செய்கிறீர்கள்? இதுவரை எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறீர்கள்?” என்றோம்.

அதற்கு அந்த வயதான ஜோடியின் குடும்பத்தலைவரான ஆறுமுகம், “நான் சிந்தாதிரிப்பேட்டை பொறுக்கி. எங்க அம்மா, ‘டேய் தறுதல எங்கடா போனே’ன்னுதான் என்னைய ஆசயா கூப்பிடுவாங்க. கொஞ்சம் வளர்ந்த பிறகு, அப்படியே மாட்டு புரோக்கராகி தமிழ்நாட்டுலேயே தலைகீழா சுத்துனேன். ஆந்திரா, கேரளா பக்கம்கூட போயிருக்கேன். நல்ல பணம். அப்போ தமிழ்நாட்டுல இருக்குற எல்லா பேங்குலயும் என் கையெழுத்து இருக்கும்” என்றார்.

கொஞ்சம் கிண்டலாக, “ஏன் பேங்குக்குக்கூட கடன் கொடுத்தீர்களா” என்றோம்.

அவர், “இல்ல, இல்ல… எம்ஜியார் பீரியடுல விவசாயிகளுக்கு மாட்டு லோன் கொடுத்தாரு. அப்ப பேங்க் மேனேஜருங்க அந்த மாடுகள நான்தான் வாங்கிக் கொடுத்தேன்னு எங்கிட்டே கையெழுத்து கேட்டாங்க. காசா பணமா… சும்மா கையெழுத்துத்தானேன்னு சரஞ்சரமா போட்டுக் கொடுத்தேன். அதெல்லாம் ஒரு காலம்.

இவளகூட லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிட்டேன். நான் பொறுக்கியா அலையிறேனுன்னு என்னோட மாமன், பொண்ணு தரமாட்டேன்னு சொல்லிட்டான். விடுவேனா தூக்கிகிட்டுப் போயி தாலி கட்டிட்டேன். கல்யாணம் கட்டுன புது ஜோர்ல ஒரு படம் விடுறதில்ல. மெட்ராஸ்ல இருக்குற எல்லா தியேட்டருக்கும் போயிருக்கோம். பாக்காத படமே கிடையாது, அப்படி ஊர் சுத்துவோம். அப்புறம் குழந்தைங்க பொறந்துச்சு, எல்லாம் அடங்கி போயிருச்சு.

எனக்கும் வயசாக வயசாக பல நோய்ங்க வந்துடுச்சு. முதல்ல ஹார்ட், அப்புறம் எர்னியா (இரணியல்) கம்ப்ளய்ண்டுன்னு ஒவ்வொன்னா வர ஆரம்பிச்சிடுச்சு. தண்ணி அடிக்கிறத விட்டுட்டு சிகரெட் மட்டும் புடிச்சிட்டிருப்பேன். ஒரு நாள் ஜிஎச் பெரிய டாக்டரு பக்கத்துல செக்கப்புக்கு உக்காரும்போது, ‘டேய் மரியாதயா எழுந்து வெளியே போ… இவன வெளியே தள்ளுங்க’ன்னு சொல்லி அனுப்பிட்டாரு. ஏன்னா என்மேலே அவ்வளவு சிகரெட் கப்பு. ஹார்ட் பிரச்சினைன்னு சொல்லிட்டு சிகரெட் கப்போட போனா டாக்டர் சும்மா இருப்பாரா. எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. அதிலேருந்து சிகரெட்ட விட்டுட்டு, இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்.

இப்போவும் இந்த நோயோடுதான் பஸ்ல ஏறி இறங்கிக்கிட்டிருக்கேன். குறைஞ்சது ஒரு நாளைக்கு 50 பஸ்சாவது ஏறுனாத்தான், 100 பாக்கெட் ஓட்ட முடியும். அப்பத்தான் ஒரு 300 ரூபாயாவது பார்க்க முடியும். இங்கே இவ கடையிலேயே (நடைபாதை) உக்காந்த மாதிரி வியாபாரம் பாத்துக்குவா. எதோ எங்க செலவ பாத்துகிணு யாருகிட்டேயும் கை நீட்டாம கவுரவமா வாழுறோம்” என்றார்.

“இந்த வயசான காலத்துல பஸ்சில ஏறி இறங்குறது ஆபத்து இல்லையா!” என்றோம்.

“உயிருக்கு ஆபத்துன்னு, வயிறு பசிக்காது இருக்குமா! அதயும் சந்திச்சுத்தான் ஆகணும். டிரைவரு, கன்டக்டருங்க எனக்கு ரொம்ப ஒத்தாசயா இருப்பாங்க. வண்டி எடுக்கப் போறாங்கன்னு பதட்டத்தோடு எறங்குனாகூட, ‘நைனா பாத்து இறங்கு’ன்னு வாஞ்சையா சொல்வாங்க. கீழே எறங்குன பிறகுதான் வண்டிய ஸ்பீடா எடுப்பாங்க. எல்லாருமே மரியாதையா நடந்துக்குவாங்க. நான் வேர்க்கடலை கொடுத்தாக்கூட சும்மா வாங்க மாட்டாங்க. அவங்களோட ஒத்தாசயாலத்தான் எம் பொழப்பும் போகுது” என்றார்.

படிக்க:
சென்னை கோயம்பேடு பழச்சந்தை – படக்கட்டுரை !
♦ சிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை !

“மரவள்ளி, கடலை, சிவப்பரிசி புட்டு போன்றவற்றை எங்கே வாங்குவீர்கள்? எப்படி தயார் செய்கிறீர்கள்” என்று கேட்டபோது,

“விடியற்காலை 4 மணிக்கு எழுந்து டிவிஎஸ் ஃபிப்டியை ஓட்டிகிட்டு கோயம்பேடு போயி சரக்கு வாங்கி காலை 6 மணிக்கெல்லாம் திரும்பிடுவேன். வயசானதுனால கண்ணு ரெண்டும் சரியா தெரியாது. மூனு அடிக்கு அப்பால் இருக்குற எந்தப் பொருள் தெரியாது. உங்கக்கிட்டே கூட ஏதோ குத்து மதிப்பாத்தான் பேசிகிட்டிருக்கேன். ஏதோ, பழக்கப்பட்ட ரோட்டுலயே போயி வர்றதுனால நிதானமா வீடு வந்து சேந்துடுறேன். அதுக்குப் பிறகு அவளோட வேல.

பொருள் எல்லாம் பிஞ்சு பொறுக்கி எடுத்துட்டு சுத்தம் பண்ணி, அலசி, கிருஷ்ணாயில் ஸ்டவ்ல வேக வைப்போம். இப்படியே 11 மணியாயிடும். வேல முடிஞ்சாதான் கால சாப்பாடே சாப்பிடுவோம். 12 மணிக்கு மேலே கௌம்பி வந்துடுவோம். நான் பஸ் வியாபாரத்த பாத்துக்குவேன், இவ கடை வியாபாரத்த பாத்துக்குவா.

உடம்பு கிடம்பு சரியில்லன்னா வேலைக்கு வர முடியாது. எம் பையன்தான் சோறு எடுத்தாந்து கொடுப்பான். எனக்கு மொத்தம் ஏழு புள்ளைங்க, அதுல ரெண்டுதான் நின்னது. பையன் ஒன்னு, பொண்ணு ஒன்னு. அதயும் கட்டிக் கொடுத்துட்டேன். அவங்களும் பக்கத்துலதான் 10 ரூபா பழக்கட போட்டிருக்காங்க. பேரப்புள்ளைங்க படிக்கிறாங்க” என்றார்.

ஆறுமுகத்தின் மனைவி வடிவம்பாளிடம், “வீட்டு வேலையை முடித்து இங்கே வந்து எப்படி வியாபாரமும் செய்கிறீர்கள்?” என்றோம்.

“நான் கடைக்கு லீவு விட்டாத்தான் அன்னிக்கு வீட்டுல சோறாக்குவேன். மத்த நாளெல்லாம் ஓட்டல் சோறுதான். பழகிபோயிடுச்சு. இவரும் ஒன்னும் சொல்ல மாட்டாரு. கொடுக்குறத சாப்பிடுவாரு. ஆசப்பட்டா ஒரு நாளைக்கு மீன் குழம்பு சோறு. ஒடம்பு மக்கர் பண்ணினா அன்னிக்கு தயிர் சோறுதான்.

பல நேரம் முட்ட புரோட்டா, சமோசான்னு வாங்கிச் சாப்பிட்டு அதோட சாப்பாட்ட முடிச்சுக்குவோம். இதுவற எனக்கு உடம்புக்குன்னு எதுவும் பெரிசா வரல. அப்படியே ஓடுது” என்றார்.

“தி.நகர் பகுதிக்கு வருபவர்களிடம் வியாபாரம் செய்வது ரொம்ப கஷ்டமாச்சே, எப்படி சமாளிக்கிறீர்கள்?” என்றோம்.

“சாதாரண ஜனங்க, பொருள் என்ன சின்னதா இருக்கு, கொஞ்சமா இருக்குன்னு கேப்பாங்க, ஆனா கண்டிப்பா வாங்கிடுவாங்க. ஆனா, படிச்சவங்க இருக்காங்களே… ‘ஒரே மண்ணா இருக்குதே, ஈ மொய்க்குதே, மூடி வக்கிறதில்லயா’ன்னு நோண்டி நோண்டி கேப்பாங்க. அதுல சில பேருதான் வாங்குவாங்க. சின்னப் பசங்க எப்போதுமே ‘ஆயா ஆயா’ன்னு கேட்டு வாங்கிப் போவாங்க. வியாபாரம்னா ஆயிரம் இருக்கும். எல்லாத்தயும் அனுசரிச்சுத்தான போகணும்” என்றார்.

“உங்களுக்கு நிறைவேறாத ஆசை எதுவும் இருக்கா?” என்றோம்.

அவர், உதட்டைப் பிதுக்கியபடி, “அப்படியெல்லாம் பெருசா எந்த ஆசயும் இல்ல; சாப்பிட கொஞ்சம் சோறும், போட்டுக்க துணியும் கெடச்சா போதும். உழைக்கும் போதே இந்த உயிரு போயிடணும், யாருக்கும் பாரமா இருக்க விரும்பல…” என்று சொல்லிக்கொண்டே, ஒரு கையில் வேர்க்கடலை பாக்கெட்டுகளையும் மறு கையில் புட்டுத் தாம்புலத்தையும் சுமந்து சென்றார்.

அந்த இடத்தைக் கடந்து வெகு நேரமாகிவிட்டது. ஆனாலும், இந்த உலகத்தின் மூச்சுக் காற்றாய் ஆறுமுகத்தின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

நூல் அறிமுகம் : கார்ப்பரேட்டும் வேலைபறிப்பும்

ந்தியாவில் அந்நிய மூலதனத்தை ஈர்க்கும் இடங்களில் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது என பீற்றிக் கொள்ளும் ஆட்சியாளர்களின் அங்கலாய்ப்புகளின் அர்த்தம் என்ன என்பதை ஆற்றொழுக்கு போன்ற நடையில் விளக்க முனைந்த முயற்சியே உங்கள் கையில் தவழும் இந்த சிறுநூல். நூல் அளவில் மட்டுமே சிறியது. ஆனால், இது விவரிக்கும் மனிதத் துயரம், இழப்பு, ஏமாற்றம் மிகவும் ஆழமானது, நுட்பமானது.

நவீன கௌரவமான வேலையின் அடையாளமாகத் திகழ்ந்த நோக்கியா, பாக்ஸ்கான், டி.சி.எஸ். போன்ற மின்னணு மற்றும் தகவல்… தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு சேருவதும், தொடர்ந்து வேலை பார்ப்பதும் எவ்வளவு கௌரவமானது, சுகமானது என்ற கனவுகளோடுதான் பணிக்கு சேர்ந்தனர் உழைப்பாளிகள். இவர்களது சிறகுகள் ஓடிக்கப்பட்ட கதையை, அதனின் உள் அர்த்தத்தை, இதன் உலக பரிமாணத்தை விளக்கும் நூல் இது. (நூலின் அறிமுக உரையிலிருந்து…)

கொத்துக் கொத்தாய்ப் பஞ்சத்தில் மடிந்த மனிதர்களை விடவும் வேதனையை அனுபவிப்பவர்களாக இன்றைய இளைஞர்கள் உள்ளனர். ஒருமுறை மரணத்தைத் தருவது நோய்கள் என்றால், எப்போது வேலையை விட்டு விரட்டப் படுவோம் என்ற வேதனை, மனிதனை அன்றாடம் சாகடிக்கிறது. பெரு நிறுவனங்களின் இலாபவெறி, ஆட்கொல்லியாகச் செயல்படுவதில், பஞ்சங்களை விடவும், பெரும் நோய்களை விடவும், வலிமையானதாக இருக்கிறது.

நோக்கியா 12 ஆயிரம் வேலை வாய்ப்புகளைச் சவப்பெட்டிக்கு அனுப்பியது. ஃபாக்ஸ்கான் 6 ஆயிரம் தொழிலாளர்களை வெளியேற்றி, இப்போது 1700 நபர்களைப் படிப்படியாகச் சாகடித்து வருகிறது. இந்திய நிறுவனமான, டாடா கன்சல்டன்ட் சர்வீஸஸ் 25 ஆயிரம் சாஃப்ட்வேர் பொறியாளர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாகவும், புதிதாக 50 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு அமர்த்த இருப்பதாகவும் அறிவிப்பு செய்துள்ளது.

… அதாவது 19 முதல் இருபது வயதில் வேலைக்கு ஆள் தேவை, என்பது நிரந்தர விளம்பரம். அதே நேரத்தில், 8 முதல் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவசாலிகளுக்கு வேலைப்பறிப்பு என்பது, கார்ப்பரேட் நிறுவனங்களின் இன்றைய நடைமுறையாகி விட்டது. (நூலிலிருந்து பக்.5)

காண்ட்ராக்ட் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் உள்ளிட்ட ஏராளமான சட்டங்கள் உள்ளன. 480 நாட்கள் பணிபுரிந்தால் அந்த தொழிலாளரை நிரந்தரம் செய்யவேண்டும் என தமிழ்நாடு அரசு வகுத்த விதி குறிப்பிடுகிறது. அதன்படி மேற்குறிப்பிட்ட பல்லாயிரம் தொழிலாளர்களும், இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையில் சமூகப் பாதுகாப்புடன் கூடிய நிரந்தரத் தன்மையுள்ள வேலை வாய்ப்பைப் பெற்றிருக்க முடியும். மேலே குறிப்பிடப்பட்டத் தொழிலாளர்கள் 5 முதல் 8 ஆண்டுகள் காண்ட்ராக்ட் உள்ளிட்ட பலவேறு பெயர்களில் வேலை வாங்கப் பட்டவர்கள் ஆவார்கள். இது குறித்து அரசு மற்றும் தொழிலாளர் துறை கவலை கொள்ளவில்லை.

ஆலைமூடலுக்கு எதிரான பாக்ஸ்கான் தொழிலாளர்களின் போராட்டம். (கோப்புப் படம்)

ஐ.எல்.ஓ. ஆய்வில் கிடைத்த தகவல் தமிழகத் தொழிலாளர் துறை மற்றும் அரசின் அலட்சியத்தை சுட்டிக்காட்டுகிறது. அதாவது, காண்ட்ராக்டர்கள் நிறுவனத்தில் 20-க்கும் கீழே தொழிலாளர் எண்ணிக்கையைக் கொண்டவர்களாக உள்ளனர். மேலே ஹூண்டாய் நிறுவனத்தில் 456 காண்ட்ராக்டர்கள் உள்ளனர் என்பதைத் தெரிந்து கொண்டோம். ஆனால் அதன் உதிரிபாக உற்பத்தி ஆலைகளில் 20-க்கும் கீழானத் தொழிலாளர்களைக் கொண்ட காண்ட்ராக்டர்கள் அதிகம். இவர்கள் முறையான லைசன்ஸ் வைத்திருப்பதில்லை.

மேலும் எந்த ஒரு காண்ட்ராக்டரிடம் இருந்தும், அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர் எண்ணிக்கை, பெயர் பட்டியல், சர்வீஸ் கணக்கு போன்ற எந்த விவரமும் தொழிற்சாலைகள் ஆய்வுத் துறை கேட்டு பெறுவதில்லை. இது குறித்து அவர்களின் வரம்புக்குள் உள்ள அதிகாரம் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனாலும் தற்போது மோடி அரசு, இன்ஸ்பெக்டர் ராஜ் தொல்லை தருவதாக உள்ளது என்றும், அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறது. (நூலிலிருந்து பக்.26-27)

படிக்க:
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !
சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், சுரண்டல் மற்றும் ஆட்குறைப்புடன் நிறுத்திக் கொள்வதில்லை என்பதே அனுபவம். அந்த சமூகத்தில் உள்ள எதிர்ப்புஉணர்வு, அரசியல் விழிப்புணர் ஆகியவற்றை கொண்டே, அந்த நிறுவனம் தன்னுடைய நடவடிக்கைகளை கட்டமைக்கிறது. அதில் இருந்தே தன்னுடைய இலாப விகிதத்தை உயர்த்தும் செயலில் இறங்குகிறது. குறிப்பாக கொடும் சுரண்டலில் ஈடுபடுவதா? அல்லது நவீனத்துவ முறையில் செயல்படுவதா? என்பது உள்ளிட்டவை இந்த முறையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன. தமிழகத்தைப் பொருத்தளவில் பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. சிறந்த தொழில் நுட்பத் திறனைப் பெற்ற மாநிலமாக விளங்குகிறது. ஆனால் இது சாமான்ய மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கவில்லை .

ஐ.டி. நிறுவன வேலைபறிப்புக்கு எதிராக பு.ஜ.தொ.மு. ஐ.டி. பிரிவு நடத்திய பிரச்சார இயக்கம். (கோப்புப் படம்)

இன்றைய நிலையில் ஒருபுறம் வேலையிழப்பு மறுபுறம் நிரந்தரமற்ற வேலை என்பது எழுதப்படாத விதியாக இளைஞர்கள் முன் வைக்கப்படும் கொள்கையாக உள்ளது. அரசு பின்பற்றிய கொள்கைதான் முழு முக்கியமான காரணம் ஆகும். உலகமயமாக்கல் கொள்கை அமலான காலத்தில், அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றனர். அதன் பின் வேலைக்கு ஆள் எடுக்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட வேலையாட்களின் இடங்களை காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் நிரப்பினார்கள். மற்றொரு புறம், வேலையின்மை பல மடங்கு பெருகியது. அதேபோல் உலகமயமாக்கல் கொள்கை துவங்குவதற்கு முன்பே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதன் காரணமாக உருவான திறன் படைத்த ஊழியர்களுக்கான வேலை வாய்ப்பாக பன்னாட்டு நிறுவனங்களின் வருகையை அரசுகள் நியாயப்படுத்தின. இன்று பொதுத் துறை நிறுவனங்களில் 32%-மும், தனியார் துறையில் மதிப்பிடமுடியாத வகை காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர், என்று ஐ.எல்.ஓ. ஆய்வு குறிப்பிடுகிறது. இளைஞர்களும் இத்தகைய நிறுவனங்களின் வேலை வாய்ப்பிற்காக போட்டியிட்ட நிலையில், உரிமைகளையும் விட்டுத்தர தயாராகினர், என்பதையே மேற்படி ஆய்வு வெளிப்படுத்துகிறது. (நூலிலிருந்து பக்.28)

நூல் : கார்ப்பரேட்டும் வேலைபறிப்பும்
ஆசிரியர் : எஸ்.கண்ணன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424.
மின்னஞ்சல் : tamizhbooks@gmail.com
இணையம் : www.tamizhbooks.com

பக்கங்கள்: 32
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு சுமை தெரியாமல் கணிதம் கற்றுத்தர இயலுமா ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 06

கணிதப் பாடம்

பாடத்தின் நோக்கம்: கணிதப் பாடத்தின் அடிப்படையில் புதியவற்றை அறியும் ஆர்வத்தையும் கல்வியின்பாலான ஆக்கப்பூர்வமான அணுகுமுறையையும் மேற்கொண்டு வளர்த்தல்.

பாடத்தின் உள்ளடக்கம்: கவனத்தை வளர்க்கும் கணக்குகள்; பத்து வரையிலும், பத்து முதல் இருபது வரையிலும் உள்ள எண்களின் கூட்டல், கழித்தல் கணக்குகள், சுயமாகக் கணக்குகளை அமைத்துப் போடும் பயிற்சி.

  1. முகமன் கூறுதல். இன்று மாணவர்களுடைய மனதில் உள்ளவற்றைப் பற்றி அவர்களுடன் அவசரப்படாமல், அன்போடு கலந்து உரையாடுதல். நேரம் 3-5 நிமிடங்கள்.

“வணக்கம் குழந்தைகளே! புதிய விஷயங்கள் ஏதாவது உள்ளனவா?”

புதிய சம்பவங்கள், மனப்பதிவுகள், மகிழ்ச்சிகள், ஏமாற்றங்கள் பற்றி குழந்தைகள் சொல்வதைக் கேட்கிறேன்.

எனது மகிழ்ச்சியைத் தெரியப்படுத்துகிறேன், அவர்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன், குழந்தைகள் சொல்வதைப் பற்றிய எல்லாவற்றிற்கும் என் கருத்தை வெளியிடுகிறேன், என்னுடனும் சக நண்பர்களுடனும் தன் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு குழந்தையின் மீதும் கவனம் செலுத்தி அன்பு காட்டுகிறேன். நிறையப் பேர் பேச விரும்பினால், இடைவேளையில் அல்லது அடுத்த பாடவேளையில் அல்லது பாடங்களுக்குப் பின் பேசலாம் என்று சாமர்த்தியமாகச் சொல்லி சமாளிக்கிறேன்.

  1. பாட வேலையை முன்வைத்தல். (காரிய ரீதியான, விளையாட்டுத் தனமற்ற, நட்பு ரீதியான தொனி.) நேரம் 2 நிமிடங்கள்.

“இன்று என்ன படிக்கப் போகின்றோம் தெரியுமா? முதலில் உங்கள் கவனத்தை வளர்க்க உதவுவேன். இதோ பாருங்கள் எப்படிப்பட்ட கணக்குகளை நான் தயாரித்துள்ளேன்.”

கரும்பலகையில் எழுதியுள்ளவற்றைக் காட்டி விட்டு உடனேயே திரையால் மூடிவிடுகிறேன்.

“அடுத்து, கணக்குகளைச் சரியாகப் போட்டிருக்கின்றீர்களா என்று சரிபார்க்க வேண்டும்.”

பத்து வரையிலும், பத்து முதல் இருபது வரையிலும் உள்ள கூட்டல் கணக்குகளைக் காட்டி விட்டு, திரையால் மூடுகிறேன்.

“அடுத்து, நான் கூட்டல், கழித்தல் கணக்குகளை எப்படிப் போட்டேன் என்று கண்டுபிடித்து அவை சரியா தவறா என்று சொல்ல வேண்டும்.”

நான் கரும்பலகையில் போட்டுள்ள கணக்குகளைக் காட்டி விட்டுத் திரையால் மூடுகிறேன்.

“பின் நீங்களாகவே கணக்குகளை யோசித்து தாளில் எழுதுங்கள். இவற்றிலிருந்து மிக சுவாரசியமானவற்றை, சிக்கலானவற்றைத் தேர்ந்தெடுத்து நாளை எல்லோரும் சேர்ந்து போடுவோம்.”

“இறுதியில் நாம் என்ன படித்தோம் என்று தொகுத்துப் பார்ப்போம்.”

III. கவன உணர்வை வளர்த்தல். (விரைவான வேகம், கவர்ச்சிகரமான, உற்சாகமான தொனி.) நேரம் 5 நிமிடங்கள்.

கரும்பலகையின் ஒரு பகுதியைத் திறந்து குழந்தைகளுக்குப் படத்தைக் காட்டுகிறேன்.

“கவனமாகப் பாருங்கள்! இங்கு என்னென்ன வடிவங்கள் எங்கெங்கே உள்ளன என்று நினைவில் கொள்ளுங்கள். நான் இவற்றில் ஏதாவது மாற்றங்களைச் செய்வேன், என்ன மாற்றம் என்று கண்டுபிடிக்க முயலுங்கள்!”

நினைவு வைக்க வேண்டிய நேரம் 4-5 நொடிகள். உறுதியோடு சொல்கிறேன்:

“குனிந்து, கண்களை மூடுங்கள்!…”

கரும்பலகையை நோக்கித் திரும்பி 2-3 நொடிகளில் படத்தில் மாற்றங்களைச் செய்கிறேன். கீழ்வருமாறு செய்யலாம்:

எவ்வித மாற்றமும் செய்யாமலிருக்கலாம்;

9 என்பதற்குப் பதில் 6 என்று மாற்றலாம்;

அரை வட்டத்தை முழு வட்டமாக்கலாம்;

இரண்டு வடிவங்களை இடம் மாற்றலாம்;

புதிய வடிவத்தைச் சேர்க்கலாம்.

இவற்றில் ஏதாவது 2-3 மாற்றங்களைச் செய்து காட்டுகிறேன். ஒவ்வொரு முறையும் கரும்பலகையிலிருந்து தள்ளி நின்று உறுதியான குரலில் சொல்கிறேன்:

“தலையைத் தூக்குங்கள்! படத்தில் நான் எந்த மாற்றம் செய்துள்ளேன் என்று என் காதில் சொல்லுங்கள்!” என்று யாரெல்லாம் பதில் சொல்ல விரும்புகின்றார்களோ அவர்களை நெருங்கி விடையைக் கேட்டு, சரியா தவறா என்று காதிலேயே சொல்கிறேன். பின் எல்லோரும் விடையை உரக்கச் சொல்லும்படி கேட்கிறேன்.

முதல் பயிற்சிக்குப் பின் அடுத்த பயிற்சிக்குச் செல்கிறேன்.

“இந்தப் படத்தைப் பாருங்கள்!”

கரும்பலகையின் இன்னொரு பகுதியில் உள்ள திரையை விலக்கி படத்தைக் காட்டுகிறேன்.

“இங்கு என்னென்ன, எவ்வளவு வரையப்பட்டுள்ளது என்று கண்டு பிடிக்க வேண்டும். நீங்கள் தனியாக மனதில் எண்ணுங்கள், நானும் தனியே எண்ணுவேன். ஏனெனில் எனக்கும் எவ்வளவு உள்ளது என்று தெரியாது. வாருங்கள், முதலில் முக்கோணங்களை எண்ணுவோம்…”

குழந்தைகள் பார்க்கும்படி நானும் எண்ணுகிறேன்.

ஐந்து முக்கோணங்கள் உள்ளன. சரியா?”

பதில்கள் பல மாதிரியானவையாக இருக்கலாம்: அனேகமாக, பெரும்பாலான குழந்தைகள் நான் சொல்வதையே திரும்பச் சொல்லக்கூடும்; யாராவது, அங்கே ஐந்தல்ல, ஆறு முக்கோணங்கள் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம், ஏனெனில் எந்த பெரிய முக்கோணத்தினுள் எல்லாம் வரையப்பட்டுள்ளதோ அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமல்லவா!

தப்பைக் கண்டு பிடித்துச் சொன்னவனுக்கு நன்றி சொல்கிறேன்.

“இப்போது புள்ளிகளை எண்ணுவோம்…” சிறு இடைவெளி.

“அங்கே மூன்று… இல்லையில்லை, நான்கு புள்ளிகள் உள்ளன. சரியா?“

இதே போல் தொடரும். ஒவ்வொரு பதிலும் வந்த பின் படத்திற்கு வலது புறம் எழுதுகிறேன்:

ஒரு இடத்தில் ”தவறு” செய்கிறேன்: இங்கே 4 முக்கோணங்கள் உள்ளன என்று கூறி விட்டு 4-க்கு பதில் 5 அல்லது 6 என்று எழுதுகிறேன். எனது தவறை ”திருத்த” குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கிறேன், முதலில் என்னைத் திருத்துபவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.

  1. பத்து வரையிலும் பத்து முதல் இருபது வரையிலும் உள்ள எண்களின் கூட்டல், கழித்தல் கணக்குகள். (திடீரென விரைந்த வேகத்திற்கு மாறுகிறேன்) நேரம் 5 நிமிடங்கள்.

“நான் கையை அசைத்ததும், 6 உடன் எதைக் கூட்டினால் 10 வரும் என்று சொல்லுங்கள்!”

“7 உடன் எதைக் கூட்டினால் 10 வரும்?..”

“8 உடன் எதைக் கூட்டினால் 10 வரும்?…”

“5 உடன் எதைக் கூட்டினால் 10 வரும்?…”

“நன்றி! இப்போது இந்தக் கணக்குகளைப் பாருங்கள்!” கரும்பலகையின் திரையை விலக்குகிறேன்:

”இக்கணக்குகளைப் போட்டதில் நான் தப்பு செய்திருக்கிறேனா என்று பாருங்கள்!”

“இரண்டாவது கணக்கிலா? 3 என்பதற்குப் பதில் 5 என்று இருக்க வேண்டுமா?… நன்றி…. மூன்றாவது கணக்கிலா? 5 என்பதற்குப் பதில் 6 என்று இருக்க வேண்டுமா? நன்றி !”

இதே போல் வேகத்தைக் கூட்டிச் செல்கிறேன்.

  1. சுயமாக கணக்குகளை அமைத்து போடும் பயிற்சி. (மிதமான வேகம், நட்பு ரீதியான தொனி.) நேரம் 3-4 நிமிடங்கள்.

படிக்க:
நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !

“எனக்கு உதவி செய்கின்றீர்களா?.. ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளைத் தாளைத் தருகிறேன். 1-2 கூட்டல், கழித்தல் கணக்குகளை எழுதுங்கள். இவற்றிலிருந்து மிக சுவாரசியமானவற்றை, சிக்கலானவற்றை நாளை வகுப்பறையில் எல்லோரும் சேர்ந்து போடுவோம். இதன் மூலம் பாடம் நடந்த நீங்கள் எனக்கு உதவுவீர்கள்!”

முதல் 10 நிமிட இடைவேளை

குழந்தைகள் சுதந்திரமாக இயங்குவதை, கலந்து பழகுவதை, விளையாடுவதைக் கவனிக்கிறேன்.

தாய் மொழிப் பாடத்திற்குத் தேவையானவற்றைக் கரும்பலகையில் எழுதுகிறேன். அதே சமயம் குழந்தைகள் எதைப் பற்றித் தாமே பேச விரும்புகிறார்கள் என்பதையும் கேட்கிறேன். அவர்களுக்கு சுவாரசியமான பல விஷயங்களைப் பேசுகிறேன். தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையருகே நின்று விளையாட்டிலும் பொழுதுபோக்கிலும் ஈடுபட்டுள்ள குழந்தைகளைக் கவனிக்கிறேன்.

சாதாரண, அவசரமற்ற வேகம், பிரதான தொனி.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

சிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை !

0
Shivaji

காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு ! – இறுதி பாகம்

துனாத் சர்காரை தவிர வரலாற்றறிஞர் கோவிந்த் சகாராம் சர்தேசாயின் ‘மராட்டியர்களின் புதிய வரலாறு’ எனும் நூலும் சிவாஜியின் முடிச்சூட்டு விழாவை சுற்றியுள்ள சிக்கல்களை குறிப்பிடுகிறது.

***

முடிசூட்டு விழா………

1673-ம் ஆண்டின் தொடக்கத்தில் சிவாஜியின் முடிசூட்டு விழா குறித்த எண்ணமானது ஈடேறத் தொடங்கியது. விழாவிற்கான தயாரிப்புகள் முழுமையாக நிறைவேறியப் பின்னர், சிம்ம இராசிக்குள் சூரியன் அடியெடுத்து வைத்த 1674-ம் ஆண்டு ஜுன் 5 ஆம் நாள் ரைக்காட் அரண்மனையில் சிவாஜியின் முடிச்சூட்டு விழா நடந்தேறியது.

Shivajiசெயலால் தான் ஒரு சத்திரியன் என சிவாஜி நிரூபித்தாலும், பிறப்பால் சத்திரியனாக அங்கீகரிக்க கோரிய அவரது கூற்றுக்கு வைதீக பார்ப்பனர்களுக்கு உடன்பாடு இல்லை. இப்படி ஒரு முடிசூட்டு விழா நடந்து ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது மேலும் அது குறித்து ஆண்களுக்கு முழுமையாக மறந்தே போய்விட்டது. அலாவுதின் கில்ஜியின் தக்காண படையெடுப்பு மற்றும் தக்காணத்தை முஸ்லிம்கள் கைப்பற்றிக் கொண்டப்பிறகு பரம்பரையாக புனித மத நூல்களை கற்றறிந்த தக்காணத்தின் பார்ப்பனர்கள் அனைவரும் பெனாரசுக்கு குடிப்பெயர்ந்தனர்.

பரம்பரையாக மத நூல்களின் புலமைக்கு பெயர் போன தேவர்கள், தர்மதிகாரிகள், சேசர்கள், பட்டர்கள் மற்றும் மவுனிகள் என அனைவரும் அவர்களது சொந்த வீடுகளை விட்டு விட்டு புனித நூல்களுடன் புனித கங்கைக்கரையில் குடி பெயர்ந்தனர் மேலும் இந்து சிந்தனை மற்றும் கற்றலுக்கான புதிய பல்கலைக்கழகத்தையும் திறந்தனர். படிப்பறிவிலா சிந்தனையற்ற பைத்தானின் மக்களை ஆதிக்கம் செலுத்த இப்போது யாருமில்லை. பெனாரஸ் இப்போது இந்து சிந்தனையிலும் கற்றலிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

படிக்க:
சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் ! சூத்ரனுக்கு ராஜாபிஷேகமா ?
♦ காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !

எனவே பெனாரசின் கற்றறிந்த இந்து சட்ட நிறுவனங்களின் முன்னனியாளர்களில் ஒருவரான காகா பட்டரிடம் சிவாஜி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. பழங்கால பயன்பாட்டிற்கு இணங்கவும் தற்போதைய சூழலின் தேவைகளுக்கு ஏற்பவும் விவரங்களை தயாரிக்க அவர் ராய்காட்டிற்கு அழைக்கப்பட்டார்.

மராட்டியர்களின் புதிய வரலாறு – கோவிந்த் சகாராம் சர்தேசாய்
(இனவாதத்தை முறியடித்தல், அக்டோபர் 2001 இதழிலிருந்து காப்பகப்படுத்தப்பட்டது)


தமிழாக்கம் :
சுகுமார்
நன்றி : சப்ரங் இந்தியா 

இதன் முந்தைய பகுதிகள் :
♦ காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு ! 
♦ மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு ! 
♦ சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் !

பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !

ண்ணா பல்கலைக் கழக இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது குறித்து தொலைக்காட்சிகளில் அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. காந்தியைக் கொலை செய்ய கோட்சேவைத் தூண்டிய ஒரு கொலை நூலை மாணவர்கள் படிப்பதா என பதறுகிறார்கள் பகுத்தறிவாளர்கள். அதுவும் அண்ணா பெயரில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திலா என ஆதங்கப்படுகிறார்கள். நால் வருண சாதி அமைப்பை நியாயப்படுத்தும் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது பார்ப்பன மேலாண்மையை நிலை நாட்டுவதும் மறைமுகமாக சமஸ்கிருதத்தைப் புகுத்துவதும்தான் மோடி அரசின் நோக்கம் என்பதே பகவத் கீதையை எதிர்ப்போரின் கருத்தாக இருக்கிறது.

மோடி எதைச் செய்தாலும் எதிர்ப்பதே பெரியாரிஸ்டுகளின் வேலையாப் போச்சு என்கிறது பார்ப்பன தரப்பு. மானுடவியல், தனிமனித ஆளுமை, நிர்வாக மேலாண்மை குறித்துத் தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் கீதையில் கொட்டிக் கிடக்கிறது; மேலும் இந்து மதத்துக்கும் பகவத் கீதைக்கும் தொடர்பே கிடையாது; நால்வருண அமைப்பு என்பது செய்கிற தொழிலை அடிப்படையாகக் கொண்டது; வருண அமைப்புக்கும் சாதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என அடித்துச் சொல்கிறார்கள். கீதை அனைவருக்குமான ஒரு பண்பாட்டு நூல். பிளாட்டோவையும் அரிஸ்டாட்டிலையும் படிக்கும் போது பகவத் கீதையை ஏன் படிக்கக் கூடாது என கேள்வி எழுப்புகிறது வலதுசாரி பார்ப்பனத் தரப்பு.

இதில் எந்தத் தரப்பு சொல்வது சரி. சாதாரண மக்களுக்கு பொறியியல் பாடத்திட்டம் குறித்த விவரம் தெரியாது.  ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்பதைத்தவிர பகவத் கீதை பற்றி வேறு எதுவும் தெரியாது. “எதப் படிச்சா என்ன? வேலை கெடச்சா சரி!” என்பதைத் தாண்டி பொறியியல் மாணவர்களும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. மோடிகளும் எடப்பாடிகளும் நீடிக்கும் வரை யார் எதைப் படிச்சாலும் எந்த வேலைக்கும் உத்தரவாதம் இல்லை என்பது மட்டும்தான் தற்போதைக்கு எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இதுல மேலாண்மைக் கோட்பாடாம்! ஆளுமைத் திறனாம்! சோத்துக்கே வழியில்லையாம். ஆனால் சோக்குக்கு மட்டும் கொறச்சல் இல்ல!’

சரி! விசயத்துக்கு வருவோம்! பகுத்தறிவு தரப்பு குறித்து நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. பார்ப்பனர்களின் கருத்தை பரிசீலித்தாலே எது சரி என்பதை முடிவு செய்ய முடியும் எனக் கருதுகிறேன்.

பகவத் கீதைக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பே கிடையாது?

“ருக்ஸாம யஜூரேவ ச!” (கீதை: 9-17). இருக்கு, சாம, யஜூர் என்ற மூன்று வேதங்களும் நானேதான் என்கிறான் கிருஷ்ணன். “இருக்கு, எஜூர், சாம என்னும் பெயரையுடைய அநாதியான வேதத்தை அக்கினி, வாயு, சூரியன் இவர்கள் மூவரிடத்தினின்றும் (பிரம்மா) வெளிப்படுத்தினார்” (மனு:1-23) என்கிறான் மனு.

வேதங்கள், மனு தரும சாஸ்திரம், பகவத் கீதை இவை எல்லாம் இந்து மதத்தைப் பற்றிப் பேசாமல் கன்பூசியசிசமா பேசுகிறது? கீதைக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த சான்றுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் போது பகவத் கீதை ஒரு இந்து மத நூலே அல்ல என்று ஒருவன் பேசுகிறான் என்றால் அவனை சந்தேகப்பட வேண்டுமா? வேண்டாமா?

மனுதரும சாஸ்திரமும் கீதையும்!

“சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்” (கீதை: 4-13). “பார்ப்பனர், சத்திரியர். வைசியர், சூத்திரன் ஆகிய நான்கு வருணங்களையும்”, “கு ணகர்மவி பாக” (கீதை:4-13).  “அவர்களுக்கான குணங்களையும் கர்மங்களையும் நானே படைத்தேன்” என்கிறான் கிருஷ்ணன். இதையேதான் “உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளினின்றும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்” (மனு:1-31) என்கிறது மனுதரும சாஸ்திரம்.

“வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றல் – கற்பித்தல் இவை பார்ப்பனர்களுக்கு இயல்பாகவே உண்டான கர்மங்கள்” (கீதை:18-42), “கொடையும் ஆளும் தன்மையும் சத்திரியர்களுக்கு இயல்பான கர்மங்கள் ஆகும்” (கீதை:18-43), “உழவு செய்தலும், பொருட்களை வாங்கி விற்பதும் வைசியர்களுக்கு இயல்பாக உண்டான கர்மங்கள்” (கீதை:18-44), “மக்கள் அனைவருக்கும் சேவை புரிவது நான்காம் வர்ணத்தவர்களுக்கு இயல்பாக உண்டான கர்மம்” (கீதை:18-45) என கீதை சொல்கிறது.

இதையேதான் மனுதரும சாஸ்திரமும் சொல்கிறது. “இவர்களுக்கான கர்மங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்” (மனு: 1-87), “பார்ப்பானுக்கு வேதம் ஓதுவித்தல், யாகம் செய்தல்” (மனு:1-88), “சத்திரியனுக்கு மக்களைக் காத்தல், தானம் கொடுத்தல்” (மனு:1-89), “வைசியனுக்கு பயிரிடுதல், வாணிபம் செய்தல்” (1-90), “சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமை இன்றி பணி செய்வதை தருமமாக ஏற்படுத்தினார்” (மனு:1-91).

கீதையும் மனுதரும சாஸ்திரமும் வேறு வேறு அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? மனுதர்மத்தை சுலபமாக புரிய வைக்க, பதிய வைக்க எழுதப்பட்ட ஒரு கோனார் உரைதான் கீதை.

தொழிலை மாற்றிக் கொண்டால் வருண சாதி மாறிவிடுமா?

இதில் தொழிலை மாற்றிக் கொண்டால் அதாவது பார்ப்பனன் பிறருக்கு சேவை செய்தால் அவன் சூத்திரனாகவும், சூத்திரன் வேதம் ஓதி யாகம் வளர்த்தால் அவன் பார்ப்பானாகவும் ஆக முடியும் என்று மூச்சு முட்ட பேசுகின்றனர் பார்ப்பனர்கள்.

இசைக் கருவிகளை வாசிப்பது பார்ப்பானின் தொழில் கிடையாது.  வீணை, புல்லாங்குழல், வயலின், பக்க வாத்தியங்களான மிருதங்கம், கஞ்சிரா  வாசிக்கிற பார்ப்பனர்கள் எல்லாம் இசைவேளாளர்களாக சாதி மாறிவிட்டார்களா? அப்படி மாற்றிக் கொண்ட ஒரு பார்ப்பானையாவது காட்ட முடியுமா?

இவர்கள் சொல்வது போல அப்படி எல்லாம் மாற்றிக் கொள்ள முடியாது. “பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் தன்னுடைய தர்மம் உயர்ந்தது” (கீதை:18-47), “தனக்குரிய இயல்பான கடமையை விட்டுவிடலாகாது” (கீதை:18-48), உன்னுடைய தொழில்தான் உயர்ந்தது, அதை விட்டுவிடாதே என வலியுறுத்துகிறான் கிருஷ்ணன்.

படிக்க:
சினிமா மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு !
யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !

ஒரு வேளை ஏதோ ஒரு காரணத்திற்காக உனது தொழிலை நீ மாற்றிக் கொண்டால் உனது வருணம் மாறிவிடுமா? உனது தொழிலை நீ மாற்றிக் கொள்ள உனக்கு அதிகாரம் கிடையாது என்பதுதான் இந்து மத சாஸ்திரம். “பார்ப்பனன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பார்ப்பன சாதியாகமாட்டான். ஏனென்றால் அவனுக்கு பார்ப்பனச் சாதித் தொழிலில் அதிகாரமில்லையல்லவா. சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பார்ப்பனன் சூத்திரசாதியாகமாட்டான். ஏனென்றால் அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா. இப்படியே இந்த விசயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார். (மனு:10-73).

நீ உனது தொழிலை மாற்றிக் கொண்டாலும் உனது வருணம் – சாதி மாறாது என ஷேசாத்திரிகள், கோலாகலன்கள், இராமசுப்புக்களின் முகத்தில் கரியைப் பூசுகிறார் பிரம்மா.

ஊரான்

disclaimer

ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை

லட்சக்கணக்கான ஈராக் மக்கள் அரசிற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போராட்டங்கள் வேலையின்மை, அரசு சேவைகள் செயலிழந்தமை, ஊழல் முதலியவற்றை எதிர்த்து நடைபெற்று வருகின்றன.

எண்ணெய் வளத்தில், உலகளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கக்கூடிய ஈராக் பல ஆண்டுகளாக அமெரிக்காவின் படையெடுப்பால் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அதனால் ஈராக்கில் போராட்டம் புதிதில்லை என்றாலும், தற்போது நடைபெற்றுவரும் இந்தப் போராட்டம் அரசை கதிகலங்க வைத்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க ஈராக் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில், கடந்த அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து இதுவரை 104 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 6,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 51 வயது பெரியவர், “நாங்கள் பட்டினியில் வாடுகிறோம். அதனால்தான் போராடுகிறோம். இங்கு எண்ணெய் கிணறுகள் அதிகம் இருக்கிறது. ஆனால் எங்களது நாடோ நலிவடைந்திருக்கிறது. என்ன நடக்கிறது, நாடு எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது?” என்கிறார்.

IRAQ-POLITICS-DEMONSTRATIONதலைக்குமேல் சூழ்ந்த வெள்ளைப் புகை. ஷோகிக்கு தப்பியோடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை. ஈராக் தலைநகர் பாக்தாத்தில், பாதுகாப்புப் படையினரால் அடுத்தடுத்து வீசப்படவிருக்கும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைக் கண்டு கொத்து கொத்தாக மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடுகின்றனர்.

“அரசு ஸ்னைப்பர்களால் (மறைந்திருந்து சுடுபவர்கள்) குறிவைக்கப்படாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள்” என்று தனது அருகில் முகமூடி அணிந்து ஓடும் நபரை பார்த்துக் கூறுகிறார் ஷோகி.

அரசியல் கட்சிகளால் இல்லாமல், வெகுஜன மக்களால் ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது என்பதே இப்போராட்டத்தின் சிறப்பு. வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும், ஊழல் ஒழிய வேண்டும், மக்களது வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்று அவர்களது முழக்கங்கள் இருந்தாலும், அவர்களது முதன்மையான நோக்கம், இதற்கெல்லாம் மூலக் காரணமான ஈராக் பிரதமர் அடில் அப்துல் மக்தி பதவி விலக வேண்டும் என்பதே.

ஷியா ஆன்மீகத் தலைவரான கிராண்ட் அயதுல்லா அலி அல்-சிஸ்தானி, சில சீர்த்திருத்தங்கள் செயல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். ஈராக் ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ் போன்றவர்கள், போராடும் மக்களுக்கு எதிரான அரசின் வன்முறையை கண்டித்ததோடு, மக்களின் அரசியலமைப்பு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றனர்.

படிக்க:
மீளாத்துயரில் ஈராக்கின் பஸ்ரா நகரத்து மக்கள்… | படக்கட்டுரை
♦ பசுமை படர்ந்த தேயிலைத் தோட்டங்களில் புதைந்து கிடக்கும் தொழிலாளர்கள் !

மேலும், அப்துல் மக்தி அரசை கலைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஷியா தலைவர் முக்ததா அல்-சதரும், கூறி வருகிறார்.

ஆனால், “எங்களுக்குச் சீர்த்திருத்தங்கள் தேவையில்லை; நாங்கள் முழுமையான மாற்றத்தை விரும்புகிறோம்; அதிகாரத்திற்கு உட்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்; கைகளில் இரத்தம் படிந்த கட்சியிலிருந்து இல்லாமல், புதிய நபர்களை நாங்கள் தேர்ந்தெடுக்க விரும்புகின்றோம்” என்கிற அவர், “இனி இழக்க ஏதுமில்லை; மானமுடன் இறப்பது மேல். நாங்கள் போராட்டத்தை தொடருவோம்” – என்று போராட்டக்காரர்களின் ஒருமித்தக் குரலாக, களப்போராளி ஷோகியின் குரல் ஒலிக்கிறது.

IRAQ-POLITICS-DEMONSTRATION

அரசிற்கு எதிரானப் போராட்டத்தில் காயமடைந்த சிறுவனை மீட்டுச் செல்லும் போராட்டக்காரர்.

Mass Protest Iraq

இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு கலவர பூமியாக மாறிய பாக்தாத்தில், எரியும் டயர்களுக்கு இடையில் ஓடும் சிறுமி.

Mass Protest Iraq

வேலையின்மை, ஊழல் மற்றும் செயலிழந்துபோன அரசைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களை தங்களது ஆயுத பலத்தால் தடுத்து நிறுத்தும் ஈராக் பாதுகாப்புப் படையினர்.

Mass Protest Iraqஈராக் பாதுகாப்புப் படையினரால் வீசப்பட்ட வெடித்த குண்டுகளின் குப்பிகளை காண்பிக்கிறார் போராட்டக்காரர்.

Mass Protest Iraq

தலைநகர் பாக்தாத்தில் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில், அரசுப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட போராளியின் இறுதி ஊர்வலம்.

Mass Protest Iraq

போராட்டக்களத்தில் ஊழல், வேலையின்மை, செயலிழந்த அரசுக்கு எதிராக ஈராக் கொடியை ஏந்தி நிற்கும் போராளி.

Mass Protest Iraq

பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட பெரியவர், ஆயுதங்களுக்கு அஞ்சாமல் தனது கைத்தடியை உயர்த்தி வீரமுழக்கமிடுகிறார்.

Mass Protest Iraqபாக்தாத்தில் துவங்கிய போராட்டம் தீயைப் போல நாடு முழுவதும் பரவியது. ஈராக் தெற்கு பகுதியில் தீப்பிழம்புகளுக்கு மத்தியில், முழக்க அட்டையை ஏந்தி நிற்கும் இளைஞர்.

Mass Protest Iraqஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஈராக்கின் தென்பகுதி நகரமான நசீரியாவில், 8 போராளிகளும் ஒரு அரசு அதிகாரியும் இறந்த பிறகும்கூட தொடர்ந்து முன்னேறிச் செல்லும் மக்கள் போராட்டம்.


செய்தி ஆதாரம் : In Pictures: Mass protests shake Iraq
தமிழாக்கம்  :
ஷர்மி

கோவை அரசுக் கல்லூரியில் காவிகளுக்கு துணைபோகும் நிர்வாகம் !

0

ன்றைய காலகட்டத்தில் இந்துத்துவ பாசிசம், நாடு முழுவதிலும் மட்டுமல்ல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆதிக்கம் செலுத்தி மாணவர்களிடமும் ஒரு பிரிவினையை ஏற்படுத்துகின்றது.

கடந்தகால நிகழ்வாக டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பு சாவர்க்கரின் சிலையை வைத்து சாவர்க்கரை ஒரு தியாகி போல சித்தரித்து மாணவர்களிடம் பிரிவினைவாத கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

அதைப்போல கோவை அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை சுவற்றில் விவேகானந்தர் படத்தை வரைந்து அதற்கு காவி வண்ணம் அடித்து சமூக வலைத்தளங்களில் பிரிவினைவாத கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுகின்றன.

கடந்த ஒரு வருட காலமாக கோவை அரசு கலைக் கல்லூரி சுவற்றில் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், போன்ற தலைவர்களின் உருவப்படங்கள் அந்தத் துறையை சேர்ந்த மாணவர்களால் வரையப்பட்டுள்ளது. அது அந்தத் துறையில் உள்ள மாணவர்களின் விருப்பத்தினால் வரையப்பட்டது. ஆனாலும் அதற்கு அத்துறைத்தலைவர் அனுமதி அளிக்கவில்லை. தடைகளை மீறி மாணவர்களின் விருப்பத்தின் பேரில் மூன்று வரலாற்று முக்கியத்துவம் மிக்க தலைவர்களின் படத்தை வரைந்தனர் மாணவர்கள்.

கோவை அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை என்பது முற்போக்குக் கருத்துக்கள் நிறைந்த இடமாக இருந்து வந்தது. அதை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டது ஏபிவிபி மாணவர் அமைப்பு .

அவர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாக முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்த கணேசன் (கலை கணேசன்), மற்றும் கல்லூரியை சாராத மற்ற சில காவி குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு கல்லூரி விடுமுறை நாளான சனிக்கிழமை (28.09.2019) அன்று, மார்க்ஸ் படத்தை பாதி அழித்து விவேகானந்தர் காவி உடையில் நிற்பது போலவும், அதற்கு பின்புறம் கோவிலில் காவிக்கொடி பரப்பது போலவும் வரைந்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் மதரீதியான கருத்துக்களையும், மற்ற முற்போக்கு மாணவர் அமைப்பிற்கும், முற்போக்காளர்களுக்கு மிரட்டல் விடுவது போல தவறான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டுள்ளனர்.

இந்தக் காவி விவேகானந்தரின் படம் வரைந்தால் சர்ச்சை ஏற்படும் என்று தெரிந்தே இதற்கு அனுமதி வழங்கியுள்ளார் துறைத் தலைவர் கனகராஜ்.

இவர் இலவச IAS பயிற்சி நடத்துவதாக தெரிவித்துக் கொண்டு, கல்லூரியில் உள்ள கட்டிடத்தில் மேலே உள்ள ஒரு பகுதியை வளைத்துப் போட்டு அதற்கு தன் பெயரை வைத்துக்கொண்ட ‘யோக்கியமானவர்’ ஆவார்.

படிக்க:
டெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. !
♦ யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !

அவர் பயிற்சியளிக்கும் இடம் உள்ளிட்டு, கல்லூரி முழுமையும் மாணவர்களின் சொத்து. அவர்களுடைய கட்டணத்தில் உருவான கல்லூரியின் வளாகத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்.

அதுமட்டுமல்ல இவர்தான் கல்லூரியில் ஏற்படும் சலசலப்புகளுக்கு முக்கிய காரணமானவர். அதிகார வர்க்கத் தாழ்வாரத்தில் தனது நெருக்கத்தை அதிகரித்துக் கொள்வதற்காக பல பிற்போக்கு, பாசிச சிந்தனை உள்ள நபர்களை பேச்சாளர்களாக அழைத்து நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். இவரின் ஒப்புதலுடன் தான் காவி உடை அணிந்த விவேகானந்தர் படம் வரையப்பட்டுள்ளது.

கடந்த 30.09.2019 அன்று இது குறித்து துறையில் உள்ள மாணவர்கள் ஒரு புகார் கடிதம் எழுதி, அதில் மாணவர்கள் கையெழுத்திட்டு சர்ச்சைக்குரிய படமான காவி விவேகானந்தரை எடுக்கவேண்டும், என்ற புகார் கடிதத்தை துறைத் தலைவரிடம் கொடுத்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. நாங்கள் பேசி முடிவெடுத்து சொல்கிறோம். கமிட்டி அமைத்து முடிவு செய்கிறோம் என்றார்.

பின்பு மாணவர்கள் அந்த புகார் கடிதத்தை கல்லூரி முதல்வரிடம் கொடுத்தனர். வரும் வியாழன் விசாரணை குழு அமைக்கப்படும் என்றார். அதில் முடிவெடுத்து சொல்கிறோம் என துறைத் தலைவரும், கல்லூரி முதல்வரும் கூறியுள்ளனர். ஆனால் இன்னும் முடிவு எதையும் தெரிவிக்கவில்லை.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை மாவட்டம். தொடர்புக்கு : 94451 12675.

சினிமா மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு !

ந்தியாவில் சிறுபான்மை இசுலாமியர்கள். தலித்துகள் மீது கும்பல் கொலைகள் அதிகரித்துவருவதை சுட்டிக்காட்டி இதனை உடனே தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள் ராமச்சந்திர குஹா, சுமித்சர்க்கார், அஷிஷ் நந்தி போன்ற அறிவுத்துறையினர், அடூர் கோபாலகிருஷ்னன், மனிரத்னம், சுபாமுட்கல், ரேவதி, ஷ்யாம்பெனகல் போன்ற திரையுலக பிரபலங்கள், பினாயக் சென் போன்ற புகழ் பெற்ற மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தையே குற்றமாக்கி பிகார் மாநில போலீசு வழக்குப் பதிந்துள்ளது. 120-பி,153-பி, 290, 297, 504 ஆகிய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் தேசத்துரோகம், பொது அமைதியைக் குலைத்தல், மத உணர்வைப் புண்படுத்தல், பிரதமரை இழிவுபடுத்துதல் என மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

தேசியக் குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள ஆதாரங்களைச் சுட்டிக்காட்டியே இந்த வேண்டுகோளை அவர்கள் அனுப்பியுள்ளனர். ஆர்.எஸ். எஸ்., பா.ஜ.க.வினர் இத்தகைய கடிதத்தையும் விமர்சனத்தையும் குற்றமாகக்கருதுவது வியப்புக்குரியதல்ல. ஆனால், முசாபர்புர் நீதித்துறை நடுவர் எவ்விதப் பரிசீலனையுமின்றி வழக்குப் பதிய உத்தரவிடுவது மிகவும் ஆபத்தானது. தனக்கு எதிரான கருத்துக்கள், விமர்சனங்களை மோடி அரசு நீதித்துறையைக் கொண்டே ஒடுக்க முயல்வதன் துலக்கமான உதாரணம்தான் இந்த வழக்கு. எந்தவொரு அடிப்படை ஆதாரமுமின்றியும், எந்தவொரு நியாயமான சட்டபூர்வ செயலையும்கூட குற்றமாக்கி தண்டிக்க மோடி அரசு தயாராகிவிட்டதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது. இந்தியாவின் மதிப்பை 49 பேரும் குலைத்துவிட்டதாக  குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையாதெனில், சர்வதேச மனித உரிமைகள், இந்திய அரசியல் சட்டம், ஜனநாயக, தார்மீக நெறிகள் அனைத்தையும் நசுக்கி இந்தியாவைத் தலைகுனிய வைப்பது மோடி ஆட்சிதான்.  காஷ்மீரில் நடக்கும் கொடுமைகளை மோடியின் நண்பன் அமெரிக்காவே கண்டித்திருக்கிறது.

படிக்க:
யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து ஆகப்பெரும்பாலான மக்கள் ஓட்டாண்டியாக்கப்பட்டுவரும் நிலையில் மக்கள் போராட்டங்களையும், போராளிகளையும் அச்சுறுத்தவே பிரபலங்கள் மீது வழக்குப் போடுகின்றனர். கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்ட இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களும் மக்கள் உரிமைப் போராளிகளுமான வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 10 பேர் எந்த அடிப்படையுமின்றி இன்றுவரை சிறை வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். வரும் நாட்கள் மிகவும் ஆபத்தானவையாக மாறிவருகின்றன. எனவே மோடி அரசின் பாசிச ஒடுக்குமுறையை முறியடிப்பதே இன்றைய உடனடித்தேவை. பாசிசம் கோழைத்தனத்தின் வெளிப்பாடு. மக்கள் போராட்டத்தின் முன் தோற்றதுதான் அதன் வரலாறு.  எனவே பாசிச ஒடுக்குகுறையை முறியடிக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.

நன்றி.

காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.
99623 66321

கால்கள் இன்றி சண்டை விமானம் ஓட்டும் ஒரே மனிதர் !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 10-அ

“சரி, தோழர் சீனியர் லெப்டினன்ட்” என்று அவனை உற்சாகப்படுத்தினார் கப்பூஸ்தின். “இப்போது உட்காருங்கள். கலந்து ஆலோசிப்போம்” என்றார்.

“எதைப் பற்றி?”

“நாம் என்ன செய்வது என்பது பற்றி, வெளியே போவோமா? எனக்குப் புகை குடிக்க வேண்டும் போல இருக்கிறது, இங்கே குடிக்கக்கூடாது.”

மறைத்து மூடப்பட்டிருந்த விளக்குகளின் மங்கிய நீல வெளிச்சத்தில் அரையிருட்டாக இருந்த ஆளோடிக்கு வந்து ஜன்னல் அருகே நின்றார்கள் அவர்கள். கப்பூஸ்தின் சுங்கானை வாயில் வைத்து உறிஞ்சலானார். புகை இழுக்கும் போது சுங்கான் கனிகையில், அவரது சிந்தனை நிறைந்த அகன்ற முகம் அரையிருட்டிலிருந்து நொடிப்பொழுது வெளித் தெரிந்தது.

“உங்கள் குழு ஆசிரியருக்கு இன்று தண்டனை விதிக்கப் போகிறேன்” என்றார் அவர்.

“எதற்காக?”

“பள்ளித் தலைமை அதிகாரிகளின் அனுமதி பெறாமல் உங்களை விமானமோட்ட விட்டதற்காக … ஆமாம். என்னை ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? உண்மையைச் சொன்னால் நான் இதுவரை உங்களுடன் அளவளாமல் இருந்ததற்காக என்னையே தண்டித்துக் கொள்ளவேண்டும். நேரமே கிடைக்கவில்லை, ஒழிவு இல்லை, உங்களோடு பேச வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்… நல்லது, அது கிடக்கட்டும். விஷயம் என்னவென்றால் விமானம் ஓட்டுவது உங்களுக்கு அவ்வளவு லேசான காரியம் அல்ல. ஆமாம்… அதனால் தான் உங்கள் ஆசிரியருக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்கிறேன்.”

அலெக்ஸேய் பேசாதிருந்தான். சுங்கானைப் புகைத்தவாறு தன்னருகே நிற்கும் இந்த ஆள் எப்படிபட்டவர்? இவருக்கு என்ன வேண்டும், என்பதற்காக இவர் வந்திருக்கிறார்? இவர் இல்லாமலே மனது புளித்துப் போய்த் தற்கொலை செய்துகொள்ளலாம் போல இருக்கிறதே…….

அலெக்ஸேய்க்கு உள்ளூற ஆத்திரம் மண்டியிட்டுக் கொண்டு வந்தது. சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டான். அவன் துன்பத்தில் உழன்ற மாதங்கள் அவசரப்பட்டு எதையும் முடிவு செய்யாதிருக்கக் கற்பித்திருந்தன. தவிரவும், கமிஸார் வரபியோவை, அலெக்ஸேய் மனதுக்குள் எவரை உண்மை மனிதர் என்று அழைத்தானோ அந்தக் கமிஸாரை நினைவுபடுத்தும் இனந்தெரியாத ஏதோ ஒரு விஷயம் அசட்டுப்பிசட்டான இதே கப்பூஸ்தினிடம் இருந்தது. சுங்கானில் நெருப்பு பிரகாசமாகச் சுடர்விட்டு அணைந்தது. ஊடுருவி நோக்கும் அறிவார்ந்த விழிகள் கொண்ட, அகன்று பருத்த முகம் நீல மங்கலிலிருந்து வெளிப்பட்டுவிட்டு மறுபடி அதில் கரைந்தது.

“இதோ பாருங்கள் மெரேஸ்யெவ், நான் உங்களுக்குப் புகழுரை கூற விரும்பவில்லை. ஆனால் எப்படித்தான் சுற்றி வளைத்தாலும் முடிவில் கால்கள் இல்லாமல் சண்டை விமானம் ஓட்டும் ஒரே மனிதர் உலகில் நீங்கள் மட்டுமே. ஒரே மனிதர்!” சுங்கான் குழியில் துளைக்குள் மங்கிய விளக்கு வெளிச்சத்தில் பார்த்து விட்டுக் கவலையுடன் தலையை அசைத்தார் கப்பூஸ்தின். பின்பு பேச்சைத் தொடர்ந்தார்: “சண்டை விமானப் படைக்குத் திரும்புவதற்காக நீங்கள் செய்யும் பெருமுயற்சியைப் பற்றி இப்போது நான் பேசவில்லை. இது சந்தேகமின்றி அருஞ்செயல். ஆனால் இதில் தனிப்பட்டது எதுவும் இல்லை. இப்போது காலம் அத்தகையது – வெற்றியின் பொருட்டுத் தன்னால் முடிந்ததை எல்லாம் ஒவ்வொருவனும் செய்கிறான்…. அட இந்தப் பாழாய்ப் போகிற சுங்கானில் எது போய் அடைத்துக் கொண்டிருக்கிறது?”

அவர் மறுபடியும் சுங்கான் குழாயை நோண்டத் தலைப்பட்டார். இந்த வேலையில் அவர் ஒரேயடியாக ஆழ்ந்து விட்டார் போலத் தோன்றியது. அலெக்ஸேயோ, தெளிவற்ற முன்னுணர்வால் உந்தப்பட்டு அவர் என்ன சொல்லப் போகிறார் என்று இப்போது ஆவலே வடிவாய் எதிர்பார்த்தான்.

சுங்கானுடன் மல்லுக்கட்டுவதை நிறுத்தாமலே, தமது சொற்கள் எத்தகைய உளப்பதிவு ஏற்படுத்துகின்றன என்பது பற்றிய கவலை இன்றி, கப்பூஸ்தின் மேலே சொன்னார்:

“இங்கே விஷயம் உங்களை, சீனியர் லெப்டினன்ட் அலெக்ஸேய் மெரேஸ்யெவைப் பற்றியது அல்ல. மிகவும் உடல் நலம் வாய்ந்தவர்கள் மட்டுமே, அவர்களிலுங்கூட அதிகமாய்ப் போனால் நூற்றுக்கு ஒருவர் மட்டுமே அடைய முடியும் என்று உலகு எங்கும் இதுவரை எண்ணப்பட்டு வந்த சிறந்த தேர்ச்சியைக் கால்கள் இல்லாமலே நீங்கள் பெற்றுவிட்டீர்கள் என்பதுதான் விஷயம். நீங்கள் வெறும் பிரஜை மெரேஸ்யெவ் அல்ல, நீங்கள் மாபெரும் சோதனையாளர்… அப்படி வா வழிக்கு, கடைசியில் சுத்தமாகிவிட்டாயா? எதைப் போட்டு நான் இதை அடைத்துக்கொள்ளச் செய்யாதேனோ?… ஆக, விஷயம் இதுதான்: சாதாரண விமானி போன்று உங்களை நாங்கள் நடத்த முடியாது, அதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது. நீங்கள் மகத்தான சோதனை ஒன்றைத் திட்டமிட்டிருக்கிறீர்கள். முடிந்த வகையில் எல்லாம் உங்களுக்கு உதவ நாங்கள் கடமைப் பட்டிருக்கிறோம். ஆனால் எந்த வகையில்? அது தான் கேள்வி. நீங்களே சொல்லுங்கள், உங்களுக்கு எந்த விதத்தில் உதவ முடியும்?”

படிக்க:
காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு ?
இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்

கப்பூஸ்தின் மீண்டும் சுங்கானில் புகையிலையை நிரப்பி அழுத்திப் புகைக்கத் தொடங்கினார். சுங்கானில் செவ்வொளிர்வு கனிந்து படர்வதும் மங்கிப் போவதுமாக, பருத்த மூக்குள்ள அந்த அகன்ற முகத்தை அரையிருட்டிலிருந்து வெளிக் கொணர்வதும் மறுபடி அதிலேயே ஆழ்த்திவிடுவதுமாக இருந்தது.

மெரேஸ்யெவின் பறப்பு எண்ணிக்கையை அதிகமாக்கும் படி பள்ளித் தலைவரிடம் பேசுவதாகக் கப்பூஸ்தின் வாக்களித்தார். தனக்குரிய பயிற்சித் திட்டத்தைத் தானே அமைத்துக் கொள்ளும் படி அவனுக்கு யோசனைக் கூறினார்.

“ஆனால் இதற்கு ஏகப்பட்ட பெட்ரோல் வீணாகுமே?” என்று தயக்கப்பட்டான் அலெக்ஸேய். பாந்தமற்ற இந்தச் சிறு மனிதர் தனது சந்தேகங்களை எவ்வளவு சுளுவாக, காரியரீதியாகத் தீர்த்து வைத்துவிட்டார் என்று வியந்தான்.

“பெட்ரோல் முக்கியமான பொருள் தான் – அதிலும் முக்கியமாக இப்போது. ஆனால் பெட்ரோலைவிட மதிப்புயர்ந்த பொருள்கள் உள்ளனவே.” இவ்வாறு சொல்லிவிட்டுக் கப்பூஸ்தின் வளைந்த சுங்கானிலிருந்து வெதுவெதுப்பான சாம்பலைத் தமது பூட்சுக் குதியில் அடித்து வெளியேற்ற முற்பட்டார்.

மறுநாள் முதல் அலெக்ஸேய் தனியாகப் பயிற்சி செய்யலானான். நடக்கவும் ஓடவும் நடனமாடவும் கற்றுக் கொண்ட போது செய்தது போல வெறும் பிடிவாதத்துடன் மட்டும் அவன் பாடுபடவில்லை. உண்மையான அகத்தூண்டல் அவனை ஆட்கொண்டுவிட்டது. பறப்புத் தொழில் நுட்பத்தைப் பகுத்தாயவும், அதன் எல்லா அம்சங்களையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கவும், மிக மிகச் சிறு இயக்கங்கள், அசைவுகளாக அதைப் பாகுபடுத்தவும், ஒவ்வொரு அசைவையும் தனியாகப் பயின்று தேறவும் அவன் முயன்றான். பாலப் பருவத்தில் தானாகவே புரிந்துகொண்ட விஷயங்களை இப்போது ஆராய்ந்து கற்றான். ஆம், ஆராய்ந்து கற்றான். முன்பு அனுபவத்தாலும் பழக்கத்தாலும் தேர்ந்து கொண்டவற்றை இப்போது அறிவால் நுணுகித் தெரிந்து பயின்றான். விமானம் ஓட்டும் செயல்முறையை உறுப்பு அணைப்புள்ள அசைவுகளாகக் கூறுபடுத்தி, காலின் செயல் உணர்ச்சிகள் எல்லாவற்றையும் பாதங்களிலிருந்து கெண்டைக் கால்களுக்குக் கொண்டு வந்து, ஒவ்வோர் அசைவிலும் தனக்குத் தனிப்பட்ட தேர்ந்த திறமையை முயன்று ஏற்படுத்திக் கொண்டான்.

இது மிகவும் கடினமான, சள்ளைபிடித்த வேலையாக இருந்தது. அதன் விளைவுகள் தொடக்கத்தில் அனேகமாகத் தட்டுப்படவில்லை. எனினும் தடவைக்குத் தடவை விமானம் தன்னோடு மேலும் மேலும் இணைந்து ஒன்றாவது போலவும் தன் விருப்பத்திற்கு இணங்கச் செயல்படுவது போலவும் அலெக்ஸேய் உணர்ந்தான்.

“என்ன, எப்படியிருக்கிறது விஷயம், கலைவாணரே?” என்று அவனைத் தற்செயலாகச் சந்தித்தபோது வினவினார் கப்பூஸ்தின்.

மெரேஸ்யெவ் பெருவிரலை உயர்த்திக் காட்டினான், நன்றாக இருக்கிறது என்பதற்கு அறிகுறியாக. அவன் மிகைப்படுத்தவில்லை. விஷயம் நிரம்பச் சரளமாக இல்லவிடினும் நம்பிக்கையுடனும் திண்ணமாகவும் முன்னேறிக் கொண்டு தான் இருந்தது. எல்லாவற்றிலும் முக்கியமானது என்னவெனில், வெறிகொண்டு விரைந்தோடும் குதிரைமேல் ஒன்றும் ஏலாத, திராணியற்ற சவாரிக்காரன் அமர்ந்திருப்பது போன்று விமானத்தில் உணர்வதை இந்தப் பயிற்சிகளின் விளைவாக அலெக்ஸேய் விட்டுவிட்டான். தனது தேர்ந்த திறமையில் அவனுக்கு மீண்டும் நம்பிக்கை உண்டாயிற்று. விமானமோ, உயிர்ப் பிராணிபோல, தன்னை ஓட்டுபவன் நல்ல சவாரிக்காரன் என உணரும் குதிரை போல, வர வர அதிகக் கீழ்படிவு உள்ளதாயிற்று. தனது பறப்புப் பண்புகள் யாவற்றையும் விமானம் அலெக்ஸேய்க்குப் படிப்படியாக வெளிக்காட்டியது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

புற்றுநோயை கண்டறிவது எப்படி ? | மருத்துவர் BRJ கண்ணன்

cancer

ணக்கம், நாம் இந்த அறிவியல் ஆரோக்கியம் சேனலில், அடுத்து சில காணொளிகளில் புற்றுநோய் சம்பந்தமான காணொளிகளை பதிவேற்றலாம் என முடிவெடுத்துள்ளோம்.

புற்றுநோய் என்றால் எல்லோருக்கும் ஒரு பயம் வந்துவிடுகிறது, அது ஒரு இறப்புச்சான்றிதழ் என எல்லோரும் முடிவெடுத்து விடுகிறோம். ஆனால், அது உண்மையில் அப்படி கிடையாது. இன்றைய அறிவியல் உலகில் பல புற்று நோய்கள் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் பூரணகுணம் என்பது சாத்தியமே.

அதேபோல, பல புற்றுநோய்களுக்கு மருந்துகளை உட்கொண்டு வாழ்நாளை நீட்டிக்க முடியும். சில புற்று நோய்கள் தான் ஆபத்தானவை என கூறுகிறோம். இதைப் பற்றி உங்களுக்கு விளக்கவே இந்த காணொளி மற்றும் அடுத்தடுத்த காணொளிகளை பதிவேற்ற உள்ளோம்.

இதைப் பற்றி விவாதிப்பதற்கு நம்முடன் மருத்துவர் அழகு கணேஷ் வந்துள்ளார், அவரை வரவேற்போம் வணக்கம்.

கேள்வி : //புற்றுநோய் என்றால் என்ன என்பதை மக்களுக்கு புரியும்படி எளிமையாக விளக்குங்கள்.//

நம் உடலில் உள்ள செல்கள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. குறிப்பிட்ட காலம் வரை வளரும் பிறகு தானாகவே இறந்து போகும். இதுவே செல்லானது இறந்து போகாமல், மேலும் மேலும் வளர்வதையே புற்றுநோய் என நாம் கூறுகிறோம்.

What is cancerஎன்ன கூற வருகிறோம் என்றால், நம் உடலில் செல்லானது, உருவாகி மறைவதும் மீண்டும் உருவாகுவதும் மறைவதும் என சுழற்சி முறையில் மாறிக்கொண்டே வருகிறது. இதுவே செல்லானது அழியாமல் வளர்ச்சி அடைந்து கொண்டே போனால், அதைத்தான் புற்று நோய் என கூறுகிறோம்.

கேள்வி : //புற்று நோய் எல்லோருக்கும் வர வாய்ப்புள்ளதா, அப்படி இல்லையென்றால் யாருக்கெல்லாம் வரும்.//

புற்று நோயானது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதற்கு ஆண், பெண், சிறியவர், பெரியவர், மத வேறுபாடுகள் ஆகியன கிடையாது.

கேள்வி : //எல்லோருக்கும் வரும் என தடாலடியாக கூறிவிட்டீர்கள். யாருக்கெல்லாம் வர வாய்ப்புகள் அதிகம். அந்த ரிஸ்க் ஃபேக்டர்-ஐ கூறி விளக்குங்கள்.//

முதலில் புகைப்பிடிப்பவர்கள் அல்லது புகையிலையை உட்கொள்பவர்கள் இவர்களுக்கு வாய்ப் புற்று நோய், கணைய புற்று நோய், சிறுநீரகப் புற்று நோய் ஆகியன வர வாய்ப்புகள் அதிகம். அடுத்ததாக உடல்பருமன் மற்றும் உடற்பயிற்சி –  உடல் உழைப்பு ஆகியவற்றில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆண், பெண் இருபாலருக்கும் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகம். அதேபோல சிலர் கெமிக்கல் தொழிற்சாலைகளிலும், டையிங் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். இவர்களுக்கும் அது சார்ந்த புற்று நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

கேள்வி : //முன்பைவிட தற்போது புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் அறிவியல் நம்மிடம் உண்டு. இதை கணக்கில் கொண்டு தற்போது புற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா? என்பதை கூறுங்கள்.//

இதை நாம் இரண்டாக பிரித்துப் பார்க்கலாம் முன்பெல்லாம் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 50 அல்லது 60தான். ஆனால், இன்றைக்கோ சராசரி ஆயுட்காலம் என்பது 70 அல்லது 80. ஒருவருடைய சராசரி ஆயுட்காலம் நீடிக்கும் பொழுது அவர்களுக்கான புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். எளிமையாக கூற வேண்டுமானால், வயதாகும்போது புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.

தற்போது சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதால் புற்றுநோயின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதேபோல் முந்தைய காலங்களில் காய்கறி ஆகட்டும் அல்லது உணவு பண்டங்கள் ஆகட்டும் உடனடியாக உண்ணும் பழக்கம் நம்மிடம் இருந்தது. ஆனால் இன்று அதை பதப்படுத்தி வைப்பதும் சீக்கிரம் கெடாமலிருக்க பூச்சிக்கொல்லிகளை சேர்க்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும் புற்றுநோயானது ஏற்படுகிறது.

கேள்வி : //அசைவம் உட்கொள்வதால் புற்றுநோய் உண்டாகுமா.//

அசைவம் என்று பொதுமைப்படுத்தி கூறிவிட முடியாது ரெட் மீட் அதாவது சிவப்பு மாமிசம் உட்கொள்வதால், குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்கள். எனவே அசைவம் மட்டும் உட்கொள்வதால் புற்றுநோய் வரும் என்பது கிடையாது. கூடுதலாக அசைவத்தோடு சேர்த்து பச்சை காய்கறிகள் உட்கொண்டால் புற்றுநோய் வரும் வாய்ப்பானது குறைகிறது.

படிக்க :
♦ ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் !
♦ புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ

கேள்வி : // புற்றுநோய்க்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் என்ன? ஆரம்பத்திலேயே அவற்றை கண்டுபிடிக்கும் கருவிகள் மற்றும் வாய்ப்புகள் நம்மிடம் உள்ளதா?//

இப்போது வாய் புற்றுநோய் என எடுத்துக் கொண்டோமானால், வாயில் ஏற்படும் புண் ஆறாமல் நீண்டகாலம் இருக்கும். குறிப்பாக வாயில் பல் அல்லது வேறெங்கிலும் புண்ணானது ஏற்பட்டால் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் அந்தக் காயமானது குணமாகும். அதுவே, நீண்டகாலம் ஆறாமல் இருந்தால் அது புற்றுநோயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல் வயிற்றில் தொந்தரவு ஏற்படும் போது குடல் புண் அல்லது வாயு பிரச்சினையாக இருந்தால் அது அதிகபட்சம் நான்கு வாரங்களில் குணமடையும். அப்படி குணமடையாமல் நீண்டகாலமாக நீடித்தால் அது குடல் புற்று நோயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். இதை நாம் எண்டாஸ்கோப்பி அல்லது வேறு பரிசோதனைகள் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக மார்பகப் புற்றுநோய் சிலருக்கு மார்பகங்களில் ஏதேனும் கட்டி சிறுவயதிலிருந்தே இருக்கிறது என்றால் அது பிரச்சினை இல்லை. அதுவே சிலருக்கு மார்பகங்களில் ரத்தம் கசிவது, புதிதாக கட்டி உருவாவது அல்லது நிறம் மாறுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டு நீண்டகாலமாக நீடித்தால் அது மார்பக புற்று நோயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல் இருமல், சளி; பொதுவாக இருமல், சளி என்றால் அது 4 வாரங்கள் அல்லது 2 வாரங்களுக்குள் சரியாகும். அப்படி இல்லாமல் நீண்ட நாட்களாக நீடித்தால் அது நுரையீரல் புற்றுநோயாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இங்கு காச நோய்க்கும் இதே போன்ற அறிகுறிகள் தென்படும் ஆதலால் காசநோய்க்கான மருத்துவம் எடுத்துக் கொண்டு இருப்போருக்கும் அது நுரையீரல் புற்றுநோயாக இருக்கும் வாய்ப்புகளும் உண்டு.

சுருக்கமாக கூற வேண்டுமென்றால் நம் உடலில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரை அணுகவேண்டும். இரண்டு அல்லது நான்கு வாரங்கள் வரை அது குணமடைகிறதா என்று பார்க்கலாம். அப்படி குணமடையவில்லை என்றால் அந்த உறுப்பில் புற்றுநோய் பரிசோதனை செய்து கொண்டால், நாம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

ஒரு உதாரணத்தைக் கூறுகிறோம், ஒருவருக்கு உடலில் அனிமியா பாதிப்பு உள்ளது என்றால், அதனால் அவருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும், மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நாம் உட்கொள்ளலாம். அப்படி உட்கொள்ளும் போது நமக்கு ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கூட வேண்டும். அப்படி கூடவில்லை என்றால் நாம் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.

இதேபோல்தான் இன்னஇன்ன அறிகுறிகளால்தான் புற்றுநோய் ஏற்படும் என்று நாம் கூற முடியாது. எனவே நாம் எந்த நோயாக இருந்தாலும் அது குறிப்பிட்ட கால அளவில் குணமடையவில்லை என்றால் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அவ்வாறு செய்யும்போது அதை எளிதில் குணப்படுத்த நம்மிடம் வசதிகள் உண்டு.

கேள்வி : //புற்று நோயை கண்டறிவதற்கான அடிப்படை பரிசோதனைகள் என்னென்ன என்பதை விளக்குங்கள்.//

அடிப்படை பரிசோதனையானது உடலிலுள்ள பாகங்களை பொறுத்து மாறுபடும். உதாரணத்திற்கு வாய்புற்றுநோயை கண்டறிவதற்கு மருத்துவர் டார்ச் லைட் அடித்து பார்த்தும் அல்லது தொட்டுப் பார்த்தும் கண்டறிந்து விடுவார் அப்படியும் தென்படவில்லையானால் ஒரு சிடி ஸ்கேன் மூலம் கண்டறிந்து விடுவார்.

அதுவே, மார்பகப் புற்றுநோயானால் ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அல்லது மேமோகிராம் போதுமானவை. குடல் புற்று நோயானால் அது எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். அதேபோல் மலக்குடல் புற்று நோயை கண்டறிய டொர்னோஸ்கோஃபி பரிசோதனை உண்டு.

அதேபோல் பெண் உறுப்புகள் சார்ந்த புற்று நோயைக் கண்டறிவதற்கு அல்ட்ராசவுண்ட் அல்லது சிடி ஸ்கேன் போதுமானவை. எந்த ஒரு உறுப்பாக இருந்தாலும் அது என்ன வகையான கட்டி என்று பரிசோதனை செய்து பார்ப்பதற்கு முதலில் இமேஜிங் என்ற பரிசோதனையை மேற்கொள்வார்கள். பிறகு பயாப்சிக் மேற்கொள்வார்கள்.

ஏனென்றால், எந்த ஒரு கட்டியாக இருந்தாலும், அதை நாம் புற்றுநோய் என கூறிவிடமுடியாது. பயாப்சி பரிசோதனை செய்து கொண்ட பிறகுதான் நாம் உறுதி செய்ய முடியும்.

கேள்வி : //பயாப்ஸி என்று கூறுகிறீர்களே அப்படி என்றால் என்ன.//

பயாப்ஸி என்பது திசு பரிசோதனை அதாவது உடம்பில் உருவாகக்கூடிய கட்டியின் ஒரு பகுதியை எடுத்து பரிசோதனை செய்வார்கள். பொதுமக்களிடம் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், பயாப்சி பரிசோதனை மேற்கொண்டால் கட்டி பரவும் என யூகிக்கிறார்கள். இது தவறு, இதற்குக் காரணம் பயாப்சி பரிசோதனை மேற்கொண்ட பின், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அதுதான் கட்டி பரவுவதற்கான காரணமே தவிர, பயாப்சி பரிசோதனை மேற்கொள்வதால் கட்டி பரவாது.

பயாப்சி பரிசோதனை மேற்கொண்டால் தான், அது புற்றுநோயா, இல்லையா என்பதை நாம் உறுதி செய்ய முடியும். நாம் முன்னமே கூறியது போல் மார்பகங்களில் உண்டாகக்கூடிய கட்டியானது காச நோயாகவும் இருக்கலாம் அல்லது புற்று நோயாகவும் இருக்கலாம். அதை உறுதி செய்ய நாம் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். எனவே, பயாப்சி என்பது புற்றுநோயை கண்டறிவதற்கான அடிப்படை பரிசோதனை.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்
♦ இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன ?

கேள்வி : //புற்றுநோய்க்கு என்ன வகையான மருத்துவம் மேற்கொள்வார்கள்? உதாரணத்திற்கு கட்டியை எடுத்து விடுகிறார்களே.. அதுதான் புற்றுநோய்க்கான மருத்துவமா? அல்லது வேறு என்ன என்பதை விளக்குங்கள்.//

முன்பு எப்படி என்றால் அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றி விடுவதே மருத்துவமாக இருந்தது. ஆனால், இன்று அப்படி இல்லை. புற்று நோய்க்கான மருத்துவம் என எடுத்துக்கொண்டால், அதை நாம் மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

ஒன்று அறுவைசிகிச்சை, இரண்டு புற்றுநோய்க்கான மருந்துகளை கொடுப்பது, மூன்றாவது கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றுவது. அறுவை சிகிச்சையும் கதிர்வீச்சு முறையும் புற்றுநோய் உண்டான இடத்தை மட்டுமே மையமாக வைத்து மேற்கொள்ளும் மருத்துவம்.

அதேபோல் நாம் இரண்டாவதாகக் கூறிய கீமோதெரபி முறை, அந்தப் புற்றுநோய் உடம்பில் வேறு எங்கும் பரவி இருக்கிறது என்றால் அதற்காக மேற்கொள்ளப்படும் மருத்துவம். உடம்பில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவம் உண்டு, சிலவற்றிற்கு ஆரம்பநிலையிலேயே அறுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்படும். சிலவற்றிற்கு ஆரம்பத்தில் கீமோதெரபி மருத்துவம் மேற்கொண்டு கட்டியை சுருக்கி விட்டு பிறகு அறுவை சிகிச்சையை மேற் கொள்வோம். சிலவற்றிற்கு மூன்று முறையும் கலந்து மருத்துவம் மேற்கொள்ளப்படும். மிகவும் ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் புற்று நோய்க்கு மட்டுமே அறுவை சிகிச்சையானது போதுமானது.

இதில் நாம் என்ன எளிமையாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்றால், புற்றுநோய்க்கான வைத்தியம் நேரடியாக இதுதான் என்பது கிடையாது. முதலில் அந்த புற்றுநோய் அந்த இடத்தில் மட்டும்தான் உள்ளதா, அல்லது உடலில் பிற பாகங்களுக்கும் பரவி உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும்.

பிறகு நாம் மேல் கூறிய மூன்று வகையான புற்று நோய்க்கான மருத்துவத்தில் எதை மேற்கொள்வது என்பதை முடிவு செய்வதற்கு ஒரு குழு தேவைப்படும். அந்தக் குழுவில் அறுவை சிகிச்சை நிபுணர்களும், கீமோதெரபி மருத்துவர்களும் இடம்பெற வேண்டும். இதை ஏன் கூறுகிறேன் என்றால் சிலர் உடலில் ஏதோ ஒரு உறுப்பில் கட்டியை கண்டறிந்த பின் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு. சிறிது காலம் கழித்து உடலில் பிற பாகங்களில் கட்டி பரவி, ரொம்பவும் முற்றிய நிலையில் மருத்துவமனையை வந்து அடைகிறார்கள். இதைத் தவிர்ப்பதற்காகதான் கூறுகிறோம் அந்தந்த நிபுணர்களைக் கொண்ட குழுதான் இதை முடிவு செய்ய வேண்டும் என்று.

சுருக்கமாக ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்திற்கு செல்வது நல்லது ஏனென்றால் அங்குதான் மூன்று துறைகளின் சேர்ந்த மருத்துவர்கள் கூடி முடிவு செய்வார்கள்.

கேள்வி : //நாம் கூறுகிறோம் அல்லவா இத்தனை வசதிகள் நம்மிடம் உண்டு என்று, இருந்தும் ஏன் மக்கள் காலம் கடந்து மருத்துவமனையை அடைகிறார்கள்.//

இது மிகவும் நல்ல கேள்வி, இதற்கு சோஷியல் ஸ்டிக்மா என்று பொருள். உதாரணத்திற்கு, ஒருவர் சர்க்கரைநோய் அல்லது மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கான சிகிச்சை முறையையும் மேற்கொள்கிறார்கள் என்றால் அதைப்பற்றி பிறரிடமும் அல்லது நெருங்கியவர்களிடம் கலந்துரையாடுகிறார்.

சர்க்கரை நோய் என்றால் நான் அதற்காக இன்சுலின் எடுத்துக் கொண்டேன் என்றும், அதுவே மாரடைப்பு என்றால் அதற்காக நான் ஸ்டன்ட் வைத்துள்ளேன் என்றும், அது உடலுக்கு எந்த வகையான தீங்கும் ஏற்படுத்தாது என்றும் கலந்துரையாடுகிறார். இதுவே ஒருவர் தனக்கு புற்றுநோய்க்கான அறிகுறி நன்றாகவே தென்படுகிறது என்றாலும், அதை தனது காலத்தின் இறுதி கட்டம் என்று நினைத்துக்கொண்டு, பிறரிடமும் அல்லது நெருங்கியவர்களிடம் கூற அஞ்சுகிறார்கள்.

தன்னை இந்த சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கக் கூடிய ஒரு நோய் நம்மை பீடித்துவிட்டது என அஞ்சி யாரிடமும் கூறாமல் விட்டு விடுகிறார்கள். இந்த ஸ்டிக்மாதான் முதல் காரணம். படிக்காத மக்கள் மட்டுமல்ல படித்தவர்களும் இதையேதான் செய்கிறார்கள். ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருப்பார். ஆனால், முற்றிய நிலையில் மருத்துவரை அணுகுவார்.

நீங்களே இப்படி செய்யலாமா? என வினவினால், பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறினால் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்தில் கூறவில்லை என்பார். அவர்கள் தன்னை தன் பேரக் குழந்தைகளிடம் இருந்து ஒதுக்கி வைத்து விடுவார்களோ என அச்சப்படுகிறார்கள். சிலர் இதை தொற்றுநோய் போலவும் பாவிக்கிறார்கள். எனவேதான் அவர்கள் ஆரம்பநிலையில் அணுகாமல், நோய் முற்றிய நிலையில் வருகிறார்கள். அப்படி வரும்போது எங்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விடுகிறது.

சுருக்கமாக மற்றும் என்றால் அதைப் பற்றி ஒருவர் மற்றவரிடம் கூறுகிறார் அவரும் அந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை அடைகிறார். ஆனால், புற்றுநோயைப் பொறுத்தவரை ஒருவர் தனக்கு இந்த தொல்லை இருக்கிறது என்பதையே உணர மறுக்கிறார். அப்படி வந்தாலும் அதை வெளியில் கூறுவதற்கு தயக்கம் காட்டுகிறார். எனவே மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை, மருத்துவர்கள் நாங்கள் ஓரளவுக்கு தான் முயற்சி செய்ய முடியும்.

படிக்க :
♦ சாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள்
♦ ஸ்டெர்லைட் புற்றுநோய்க்கு பண்டாரம்பட்டி கணேசம்மாள் பலி

மக்கள்தான் இதைப்பற்றிய விழிப்புணர்வு பெற்றவர்களாக மாறவேண்டும். எனவே முதலில் புற்றுநோய் என்றால் அது தொற்றுநோய் அல்லாமல் அதுவும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்களைப் போன்ற ஒன்று தான் என்பதை உணரும் பக்குவம் வேண்டும்.

மருத்துவர் கூறிய உதாரணம் போல ஒருவர் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால், அவரை குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒரு தீண்டத்தகாதவர் போலவே கருதுவார்கள். ஒரு நிகழ்ச்சிக்குத் செல்கிறார் என்றால் அங்கும் அவரை தனிமைப்படுத்தி அறிவுரைகளை மட்டுமே கூறுவார்கள். இதன் காரணமாகவே அவர் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை தவிர்த்து விடுவார். உண்மையில் அவர் புற்றுநோயால் அவஸ்தைப் படுவதை விட இந்த வகையான மன உளைச்சலால் அவஸ்தைப்படுவது தான் அதிகம். எனவே நாம் இவற்றில் இருந்து வெளியே வரவேண்டும்.

இதை தெரிவிக்கும்போதே நான் புற்றுநோய் பற்றிய மூடநம்பிக்கைகளையும் மக்களிடம் இருந்து அகற்ற வேண்டும் என விரும்புகிறேன். புற்று நோய் என்றால் வலி அதிகமாக இருக்கும் என எண்ணுகிறார்கள் அது தவறு, பெரும்பாலான கட்டிகள் வலியில்லாமல்தான் ஏற்படும். மிகவும் முற்றிய நிலையில் தான் வலியை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப் போனால் வலி உண்டாகக்கூடிய கட்டிகள் புற்று நோயாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. சீழ்க் கட்டி இருக்கிறது என்றால் அது வலியை ஏற்படுத்தும் பின்பு குணமாகும். அது புற்றுநோயாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதுவே எந்த வலியும் இல்லாமல் ஒரு கட்டி இருக்கிறது, வளர்கிறது என்றால் அதுதான் புற்றுநோயாக இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம்.

கேள்வி : //கடைசியாக முடிப்பதற்கு முன் புற்றுநோய் பற்றி இணையதளத்தில் நாம் தேடுகிறோம் என்றால் நம்பத்தகுந்த இணையதளங்கள் சிலதை குறிப்பிடுங்கள்.//

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் அல்லது பாதிக்கப்படாதவர்களோ இணையதளத்தை அணுகினால் அதில் பெரும்பாலும் தவறான விஷயங்கள் தான் வரும், யாரோ ஒருவர் பிளாக் எழுதி இருந்தால் அதிலிருந்துதான் தகவல்கள் தென்படும்.

NCCN.ORG என்ற அனைத்துலக தகவல் மையம் உள்ளது. இந்த இணையதளத்தில் மருத்துவர்கள் என்ன செய்யவேண்டும் அல்லது நோயாளிகள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்பன போன்ற எல்லா விஷயங்களும் உள்ளது. இதை வாசிப்பதன் மூலம் நோயாளிகள் தான் சரியான மருத்துவத்தை தான் மேற்கொள்கிறோமா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இன்னொன்று CANCER.ORG இது அமெரிக்க புற்றுநோய் அசோசியேஷனுடைய வலைத்தளம். இந்த இணையதளத்திலும் எளிய முறையில் ஒவ்வொரு புற்றுநோய்க்கும் என்ன வகையான மருத்துவம் என்பது போன்ற தகவல்கள் உள்ளன.

இதை நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், மருத்துவரை நோக்கி இதில் இப்படி உள்ளது நீங்கள் ஏன் இந்த மருத்துவத்தை மேற்கொள்கிறீர்கள் என கேட்கக்கூடாது. இதை நிலைமைகள் தான் தீர்மானிக்கும். இதைப்பற்றி நாம் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வலைதளங்கள் உதவும். ஆனால், நமக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும் என்கிற தார்மீக உரிமை மருத்துவருக்குதான் உண்டு என்பதை உணர்ந்துகொண்டால், நமது மருத்துவம் எளிமையாக முடியும்.

இந்த காணொளியில் புற்றுநோய் பற்றிய ஒரு பொதுவான விவாதத்தை தான் தொடங்கியுள்ளோம். அடுத்த காணொளியில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் பற்றிய முழு விளக்கங்களை எடுத்துரைக்கிறோம். நன்றி.

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

விருதை : ஊராட்சி செயலாளர் ஊழல் – அம்பலப்படுத்திய மக்கள் அதிகாரம் !

டலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் கோ. பூவனூரில் 02.10.2019 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டார்கள். ஊர் பொதுமக்கள் சார்பில் தங்கள் அடிப்படைத் தேவைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றினர்.

பிறகு ஊராட்சியில் வரவு செலவு கணக்குகளை காண்பிக்கும்படி ஊர் பொதுமக்கள் ஊராட்சி செயலாளரிடம் கேட்டனர். இதற்கு, முன்பு கடந்த 8 ஆண்டுகளாக வரவு செலவு கணக்குகளை காண்பித்ததே கிடையாது. ஆனாலும் பொதுமக்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் குறைந்தபட்சம் நீங்கள் இந்த ஆண்டு வரையான வரவு செலவுகளைக் காட்டினால் மட்டுமே உங்களை வெளியே விடுவோம் இல்லை என்றால் இங்கேயே சிறை பிடிப்போம் என்று உறுதியாக அமர்ந்தனர்.

ஊராட்சி செயலாளரும், சிறப்பு அதிகாரியும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். பொதுமக்கள் அதிகப்படியான கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கும் போது, 100 நாள் வேலைத்திட்டத்தின் பயனாளிகளாக இறந்தவர்கள், வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றவர்களைச் சேர்த்து, அவர்களது பெயரில் ஊதியப்பணம் செலுத்தப்பட்டதாக மோசடி நிகழ்ந்துள்ளதை தோழர்கள் அம்பலப்படுத்தினர். இதற்கு ஊராட்சி செயலாளர் “இதற்கும் எனக்கும் எந்த பொறுப்பும் கிடையாது…” என்று தட்டிக்கழித்தார்.

படிக்க:
விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !
விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !

இதையடுத்து பொதுமக்கள் ஊழலை அம்பலப்படுத்தி கோஷமிட்டு தீர்மானம் நோட்டில் கையொப்பம் போட விடாமல் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து சென்றார்கள். இந்த செய்தியை கேட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் தினமலர், தினத்தந்தி ஆகிய பத்திரிகைகளில் மறுநாள் செய்தி வெளியிட்டன. இதை ஏற்க முடியாத ஊழல்வாதிகள், அரசு அதிகாரிகள் துணையோடு மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர் சங்கர் கணேஷ் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக மங்கலம்பேட்டை போலீசு நிலையத்தில் பொய் புகார் கொடுத்தனர். காலை 7 மணி அளவில் தோழரை கைது செய்து போலீசு நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

இத்தகவலறிந்த அப்பகுதி ஒருங்கிணைப்பாளர், தோழர் பாலாஜி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் மற்றும் பிற தோழர்களும்; ஊர் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் போலீசு நிலையத்திற்கு சென்றனர்.

பின்னர், ஆய்வாளரிடம் இது பொய்வழக்கு என்பதை சுட்டிக் காட்டி கைது செய்யப்பட்ட தோழரை விடுவிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆய்வாளர் இரு தரப்பினரையும் விசாரணை செய்து வழக்கு ஏதும் போடாமல் தோழரை விடுவித்தார்.

ஊழல் செய்தவர்களை அம்பலப்படுத்தினால் அவர்கள் மீது பொய் வழக்கு, கைது ஆகிய நடவடிக்கைகள்தான் பாயும் என்பதை கண்கூடாக பார்த்த பொதுமக்கள், ஊழல்வாதிகளை தண்டிக்கும் அதிகாரம், மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம் வட்டாரம்,
தொடர்புக்கு : 97912 86994

நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்

‘கருப்புப் பணக்காரர்களுக்கு எதிரான போர்’ என்று சென்ற வருடம் நவம்பர் 8 அன்று பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி (இப்படித்தான் இப்போதெல்லாம் அவருடைய கட்சிக்காரர்கள் அவரை விளிக்கிறார்கள்) அறிவித்தது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கியமான கொள்கை முடிவு. பேரழிவுமிக்க அணுஆயுதம்  வெடிக்கும்போது ஏற்படும் கதிரியக்கம்போல் வெகுஜனங்களின் எல்லாப் பகுதியினரையும் கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு வகைகளில் ஒவ்வொரு நாளும் தாக்கி வருகிறது அந்த முடிவு. அவர்கள் உழைத்து ஈட்டிய பணத்தை அவர்களே எடுத்துப் பயன்படுத்தமுடியாத கொடுமைக்கு நடுவிலும்கூட, துணிச்சல்கார மோடி நம்மைச் சுரண்டி கொழுத்திருக்கும் பணக்காரர்களின் அடிமடியில் கை வைத்துவிட்டார், இனியெல்லாம் சுகமே என்று இன்றும் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் பாமரர் பலர்.

அவர் நடத்திய ‘துல்லியத் தாக்குதல்’ பெரும்பான்மை மக்களின்மீது தொடுக்கப்பட்டது. கருப்புப் பணம் என்பது கற்றை கற்றையாக ரூபாய் நோட்டுகளாக சினிமாத்தனமாக சுவரின் மீதுள்ள ஓவியத்தைச் சுழற்றும்போது திறக்கும் கதவுக்குப்பின் சிவப்பு வெளிச்சத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதல்ல; அவை நிலமாக, தங்கமாக மாற்றப்பட்டுவிட்டன; அல்லது ஹவாலா மற்றும் பிற வர்த்தக மோசடி நடைமுறைகளின் மூலமாக வரியில்லா சொர்க்கபுரிகளுக்குச் சென்று மீண்டும் அன்னிய மூலதனமாக அரசு விரிக்கும் சிவப்புக் கம்பளங்களின் மீது நடந்துவந்து நம் பொருளாதாரத்திற்குள் வந்துவிடுகின்றன.

கருப்புப் பணம் உற்பத்திக்கு உதவிசெய்யும் வகையிலான கொள்கைகளை வகுத்து, அமைப்புகளை ஏற்படுத்தி, சட்டங்களை வளைத்தும் அவற்றின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, கம்பெனிகளின் கணக்குகளில் தில்லுமுல்லு செய்து வரி ஏய்ப்புச் செய்யும் முறைகளைச் சொல்லிக்கொடுத்துப் பிழைக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், வக்கீல்களும், ஆடிட்டர்களும் பத்திரிகையாளர்களும் இன்ன பிற ‘அறிவுஜீவிகளும் மோடியின் ‘தாக்குதலினால் சிறிதளவும் பாதிக்கப்படப்போவதில்லை என்றெல்லாம் மக்களுக்கு அவர்கள் புரியும் மொழியில், எளிமையாக ஆனால் கோட்பாடுகள் நீர்த்துப்போகாத வகையில் சொல்லிக் கொடுக்க வெகுசிலரே இருக்கின்றனர்; இருந்தனர்.

அந்த வெகுசிலரில் ஒருவர்தான் ஜெயரஞ்சன். ஏற்கெனவே தொலைக்காட்சி விவாதங்களின் வாயிலாக பரவலாக அறியப்பட்டவராக இருந்தபோதிலும், நவம்பர் 8-க்குப் பிறகு இவர் விவாதங்களில் எடுத்துவைத்த வாதங்களின் எளிமையும், ஆழமும், அவற்றின் பின்னிருந்த தார்மீகக் கோபமும் அவரை ஒரு தமிழ்கூறும் நல்லுலகின் சூப்பர் ஸ்டாராகவே மாற்றிவிட்டன என்றால் மிகையல்ல…

மோடியின் நடவடிக்கை குறித்து இவர் முன்வைத்த கூர்மையான வாதங்கள் காணொளிகளாக ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டிருக்கின்றன, ஆயினும், அச்சில் இதை ஆவணப்படுத்தி இன்னும் பரந்துபட்ட மக்களிடையே கொண்டு செல்லவேண்டிய தேவையை உணர்ந்து மின்னம்பலம் இணைய இதழுக்காக கட்டுரைகளாக ஜெயரஞ்சன் எழுதினார். அவற்றை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் மின்னம்பலத்தின் முயற்சி இந்த காலகட்டத்தின் வரலாற்றுத் தேவை. (நூலின் முன்னுரையிலிருந்து…)

ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (UNCTAD) தற்போது தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இத்தகைய அறிக்கை வருடந்தோறும் வெளியிடப்படும் ஒன்றுதான்.  ஆனால் இந்த வருட அறிக்கை உலகைப் பிடித்திருக்கும் (குறிப்பாக, மேற்கு உலகம் மற்றும் சீனம்) மந்தநிலைக்கான காரணம் என்ன என்று அலசி ஆராய்ந்திருக்கிறது. ஆராய்ந்தபின், அது முன்வைக்கும் காரணம் இதுவரையிலும் கூறப்படாத ஒரு காரணமாகும்.

2015-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் அளவைவிட உலக அளவில் நடந்த வர்த்தகத்தின் அளவு குறைவு. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் தேங்கியுள்ளன. இந்த நிலை 2016-ம் ஆண்டில் இன்னும் மோசமடையும், மோசமடைந்துள்ளது.

இதற்கு முதல் காரணமாக சுட்டப்படுவது, மேற்குலகில் ஏற்பட்டுள்ள  நிதி நெருக்கடியாகும். நிதி நெருக்கடியால் தேவையின் அளவு அதிகரிக்கவில்லை. சொல்லப்போனால் கடந்த சில வருடங்களாகவே, உலகளவில் ஏற்பட்ட தேவை அதிகரிப்பு என்பது வளரும் நாடுகளில் ஏற்பட்டதுதானே தவிர, வளர்ந்த நாடுகளில் தேவை உயரவேயில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்ட தேவையின் அதிகரிப்பு உலக அளவில் எதிரொலித்தது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆனால் அதிலும் ஒரு மாற்றம் வந்துவிட்டது. சீனம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் உயர்ந்துவந்த தேவை தற்போது குறைந்துவிட்டது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தது ஒரு காரணம். மற்றொன்று, உலகளவில் பண்டங்களின் விலையும் பெட்ரோலியப் பொருள்களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியுமாகும்.

… பின் எதனால்தான் உலக வர்த்தகம் மந்தம் அடைந்துள்ளது? UNCTAD அறிக்கை கூறுவது யாதெனில், கூலி வருமானம் குறையத் தொடங்கியதால்தான் வர்த்தகம் குன்றியுள்ளது என்பதாகும். வளர்ந்த நாடுகளில் கூலி வருமானம் தேங்கிப்போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன அல்லது அவை குறையத் தொடங்கியுள்ளன. நாட்டின் மொத்த வருமானத்தில் கூலியின் பங்கு தொடர்ந்து குறைந்துகொண்டே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது, மேற்கு உலக வர்த்தக நாடுகளில் நிலவும் சூழல்.

படிக்க:
சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்
விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !

வளரும் நாடுகளில் கூலி மட்டம் மிகப்பெரிய சவாலை சந்திக்கிறது. உலக அளவில் நிலவும் போட்டி சந்தை காரணமாக கூலிமட்டம் தொடர்ந்து குறைவாகவே வைக்கப்படுகிறது. கூலி சிறிது உயர்ந்தாலும் குறைவான கூலி இடங்கள் நோக்கி தொழில்கள் இடம் பெயர்கின்றன. அவ்வாறு இடம் பெயர்ந்தால் மட்டுமே அத்தொழில் போட்டி சந்தையில் பிழைத்திருக்க முடியும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில், கூலி மட்டம் குறைவாக இருக்க இதுவே காரணமாகும். குறைந்த கூலிக்காக தொழில்கள் நாடுவிட்டு நாடு செல்வதால் கூலி உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.

வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நிலவும் இத்தகைய சூழலால், 2002-07 ஆண்டுகளில் கூலியின் பங்கு என்பது உலக அளவில் குறைந்துபோனது. இதே காலகட்டத்தில் உலகப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியைக் கண்டபோதும் கூலியின் பங்கு குறைந்துபோனதுதான் மிகவும் அவலம். (நூலிலிருந்து பக்.156-157)

நூல் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரசஞ்சன் கட்டுரைகள்
ஆசிரியர் : ஜெ. ஜெயரஞ்சன்

வெளியீடு : மின்னம்பலம் பதிப்பகம்,
44, 3-வது மெயின்ரோடு, கஸ்தூரிபா நகர், சென்னை – 600 020.
தொலைபேசி எண் : 044- 24421307 / 24422307
மின்னஞ்சல் : books@minnambalam.com

பக்கங்கள்: 162
விலை: ரூ 150.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சின்னஞ்சிறு மனிதனின் இதயத்தைக் கவரும் பாடங்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 05

குழந்தைகளின் வயதுச் சிறப்பியல்புகளுக்கேற்ற வேகத்தில் பாடம் நடத்தும் கோட்பாடு

சிரியர் எந்த வேகத்தில் பாடத்தை நடத்த வேண்டும் என்ற பிரச்சினை உள்ளதா என்ன? ஆசிரியரியல், போதனை முறை, தனிப்பட்ட முறைகள் ஆகியவை சம்பந்தமான பாட நூல்களின்படி பார்த்தால் இப்படிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை. ஒரு வேளை உண்மையிலேயே இல்லையோ? அப்படியெனில் இப்படிப்பட்டதொரு பரிசோதனையைச் செய்து பாருங்கள்: நீங்கள் அவசரப்படும் போது மிக மெதுவாகச் சென்று பாருங்கள். ஐந்து நிமிடங்கள் இப்படி நடந்து பாருங்கள் (இதற்கு மேல் அனேகமாக உங்களால் முடியாது), சாதாரண வேகத்தில் நடந்தால் ஏற்படுவதை விட இரு மடங்கு அதிக களைப்பு தோன்றும் என உறுதியாக நம்புகிறேன். அல்லது கூட இருப்பவருடன் மிக மெதுவாகப் பேசுங்கள்: நீங்கள் மட்டுமின்றி (சிந்தனையின் வேகத்திற்குத் தடையிடுவதால்) உங்களைக் கேட்பவரும் (நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள மிகவும் பிரயாசைப்படுவதால்) களைத்துப் போவீர்கள். உங்களைக் கேட்பவர், அவருக்கு ஏற்ற அதிக வேகத்தில் பேசினால் கிரகிப்பதை விட மெதுவாகப் பேசும் போது குறைவாகவே கிரகிப்பார்.

ஆறு வயதுக் குழந்தையைக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு ஓடாமல், அசையாமல், நேராக, அமைதியாக உட்காரச் சொல்லுங்களேன் பார்க்கலாம். இப்படிப்பட்ட “ஓய்வால்” குழந்தைக்கு ஏதாவது பயனுண்டா? இம்மாதிரியான ஒரு மணி நேர “ஓய்வை” அவனால் தாங்கத்தான் முடியுமா? குழந்தை ஓடுகிறான், குதிக்கிறான், அவசர அவசரமாக உரக்கப் பேசுகிறான், எப்போதும் எங்கோ விரைகிறான். ஆனால் இதையெல்லாம் அவன் வேண்டுமென்றே செய்யவில்லை. இவனுடைய வளர்ந்து வரும் தேவைகள் தான் இவ்வாறு ஓடவும் “பொங்கியெழவும்” வைக்கின்றன. அதனால் குழந்தையால் அங்குமிங்கும் ஓடித்திரியாமல், உணர்ச்சிகரமாக இல்லாமல் இருக்க முடியாது. அவன் வேகமாகத்தான் வளர்ந்து வலுப்பெறுகிறான், இந்த வேகம் அதிகமானதாக நமக்குப் படலாம், ஏனெனில் இது நமது அமைதியான வேகத்திற்கு ஏற்றதாயில்லை; ஆனால் இவ்வேகம் அவனுக்கு இயல்பானது, சாதாரணமானது. குழந்தைகளுக்கென தனியான உடற்கூறு ரீதியான வேகமும் மூளை ரீதியான வேகமும் உள்ளது என்பதை நமது அமைதி மறக்கச் செய்கிறது.

எனவே, பாடம் சொல்லித் தரும் வேகம், குழந்தைகளுடன் கலந்து பழகும் வேகம் எங்கெல்லாம் மெதுவான படக் காட்சிகளில் வரும் வேகத்தைப் போல் உள்ளதோ அங்கெல்லாம் குழந்தை களைப்படைவான், மெதுவாக நடக்கும்படி, அமைதியாக இருக்கும்படி, சத்தம் போடாதிருக்கும் படி அவனை கட்டாயப்படுத்தினால் எப்படிக் களைப்படைவானோ அதே மாதிரி களைப்படைவான். இறக்கைகள் மட்டும் இருந்தால் அவன் சிறகடித்துப் பறப்பான்!.. குழந்தைகளுடைய வளர்ச்சி வேகத்திற்கேற்ப, அவர்களுடைய உள்சக்திகளின் இயக்கத்திற்கேற்ப கல்வி போதிக்க வேண்டும்.

இசையில் உள்ளதைப் போன்றே கல்வி போதிக்கும் தத்துவத்திலும் நடைமுறையிலும் விஷயங்களைத் துல்லியமாகக் குறிப்பிடும் வழிகள் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!

எந்த ஒரு இசையமைப்பாளரும் இசையின் எந்தப் பகுதியை எப்படி, எந்த பாவனையில், எந்த வேகத்தில் இசைக்க வேண்டுமெனக் குறிப்பிடாமல் இசையை அமைப்பதில்லை. அப்போது தான் இசை முழுமை பெறும், கேட்பவரின் மனதையும் உணர்ச்சிகளையும் தொடும்.

சின்னஞ்சிறு மனிதனின் மனதையும் இதயத்தையும் பாடங்கள் கவருவதில் ஆசிரியர்களுக்கும் இதே மாதிரியான அக்கறையில்லையா என்ன! எனவே, ஒவ்வொரு போதனை விஷயத்தையும் (அல்லது “போதனை இசையையும்”) பாடத்தில் எந்த தொனியில், எந்த வேகத்தில் செய்வது என்று யோசித்து முடிவு செய்தால் நன்றாயிருக்குமோ! இவையெல்லாவற்றையும் வேகத்தின் நோக்கிலும் தொனியின் நோக்கிலும் தீர ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் எப்போதோ இதை நன்கு உணர்ந்து கொண்டேன்.

சில ஆண்டுகளுக்கு முன் வரை கூட, கணக்குகளை எப்படி குழந்தைகளுக்குத் தருவது, இந்த “இசையை” வகுப்பில் எப்படி இசைக்கப் போகிறேன் என்பதைப் பற்றியெல்லாம் நன்கு யோசிக்காமலேயே என்னால் பாடத் திட்டத்தை தீட்ட முடிந்திருந்தது. எப்படிப்பட்ட உணர்வற்ற தொனியில், எப்படிப்பட்ட வேகத்தில் நான் எளிய கணக்குகளை என் குழந்தைகளுக்குத் தந்தேன் என்று இப்போது யோசித்துப் பார்க்கும் போது, இவற்றைப் போட அவர்கள் ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டார்கள், ஏன் அவ்வளவு விருப்பமின்றி பாடங்களில் கலந்து கொண்டார்கள் என்று எனக்குப் புரிகிறது. அந்த வகுப்புகளை – போதனை முறையை – இப்போது போதனை “இசை” என்று என்னால் சொல்ல முடியாது. முன்னர் என் பாடங்களை நான் பின்வருமாறு நடத்தினேன்.

“என்னைப் பாருங்கள்!” என்று வகுப்பைப் பார்த்துக் கூறினேன். சிறிது இடைவெளி.. “கவனமாகக் கேளுங்கள்!…”

சொல்லித் தரும் தொனியில் அழுத்தந் திருத்தமாக உச்சரித்தேன்: “6 உடன் எதைச் சேர்த்தால் 10 வரும்?”

கட்டளையிடும் குரலில் சொன்னேன்: “எல்லோரும் யோசியுங்கள்!…”

மெளனம்.

“யாருக்கு விடை தெரியுமோ கையைத் தூக்குங்கள்.”

எச்சரித்தேன்: “மற்றவர்கள்?”

கண்டிப்புடன் கூறினேன்!

“எல்லோரும்!… எல்லோரும்!…”

வகுப்பைச் சுற்றும் முற்றும் பார்த்தபடி சொன்னேன்: “சரி, லேரி! நீ சொல்!”

லேரி மெதுவாக, எச்சரிக்கையோடு சொல்கிறான்: “4 ஐக் கூட்ட வேண்டும்…”

நான் எரிச்சலோடு சொன்னேன்: “இல்லை, அப்படியில்லை! முழு பதிலைச் சொல்ல வேண்டுமென நான் சொல்லியிருக்கிறேன் அல்லவா!”

பின் மீண்டும் அதே மாதிரியான சொல்லித்தரும் தொனியில் அழுத்திக் கூறினேன்:

“ஆறுடன் சேர்க்க வேண்டும்….. கட்டளையிட்டேன்: தொடர்ந்து சொல்!” லேரி: “ஆறுடன் நான்கைச் சேர்த்தால் பத்து வரும்!” ஏளனமாக: “அப்படித்தான். உட்கார், எப்படி பதில் சொல்ல வேண்டுமென மறந்து விடாதே!”

இதே மாதிரியாகத் தொடரும்.

இதில் பொதுவாக விஞ்சி நிற்பது அதிகாரத் தொனி, பாடம் நடத்தப்படும் வேகம் மெதுவானது என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். புதியவற்றை அறியும் மகிழ்ச்சியும் ஆசிரியருடன் கலந்து பழகும் மகிழ்ச்சியும் குழந்தைகளுக்குக் கிட்டவில்லை என்பது ஒரு புறமிருக்க இப்படிப் பட்ட பாடங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்குமா என்ன!

இப்போது இதே மாதிரியான பாடத்தை இன்று நான் எப்படி நடத்துகிறேன் என்று பார்ப்போம்.

உறுதியோடு, விரைவாக, ஆர்வந்தரும் வகையில் சொல்கிறேன்:

“குழந்தைகளே! குனியுங்கள்! (சிறிது இடைவெளி.) கண்களை மூடுங்கள்!”

மெதுவான குரலில், சற்றே எச்சரிக்கும் குரலில் சொல்கிறேன்:

“கணக்கைத் திரும்பச் சொல்ல மாட்டேன்!“ ,

மெதுவாக, அமைதியாக, சிறு இடைவெளிகளுடன் சொல்கிறேன்:

“நான் ஒரு எண்ணை நினைத்திருக்கிறேன்…. அதனுடன் 6 ஐச் சேர்த்தால் 10 வரும்.” விளையாட்டுத் தொனியில் கேட்கிறேன்:

“நான் நினைத்துள்ள எண் எது? விரல்களால் காட்டுங்கள்!“

குழந்தைகள் தலையை உயர்த்தாமல், கண்களைத் திறக்காமல் விடையை விரல்களால் காட்டுகின்றனர். விரைவாக வகுப்பு முழுவதையும் சுற்றி வந்து, ஒவ்வொரு குழந்தையையும் அணுகுகிறேன், மெதுவாக விரல்களைத் தொட்டு சன்னமான குரலில் சொல்கிறேன் (விடை சரியானதாக இருந்தால்):

“சரி… நன்றி….. சரியான விடை… நல்லது!…”

விடை தவறாயிருந்தால் நம்பிக்கையேற்படுத்தும் தொனியில் (“உன்னால் முடியும்”) காதில் சொல்கிறேன்:

“தப்பு!… இன்னொரு முறை யோசி!… நான் உன்னிடம் திரும்பி வருகிறேன்!…”

எல்லோரையும் பார்த்து வந்ததும் உடனே உறுதியோடு:

“இரண்டாவது கணக்கு.” சிறு இடைவெளி. “10 லிருந்து எதைக் கழித்தேன் என்று மறந்து விட்டேன். ஆனால் எஞ்சியிருப்பது 7.”

கவர்ச்சிகரமாக, விரைவாக: “நான் மறந்து விட்ட எண் எது?” மீண்டும் ஒவ்வொரு குழந்தையையும் அணுகி காதில் மெதுவாகச் சொல்கிறேன்:

“சரி!… நன்றி!… இன்னும் ஒரு முறை யோசி!…” பின் மெதுவாக, ரகசியமாக சொல்கிறேன்: “விடுகதை சொல்லட்டுமா?”

குழந்தைகளும் தலையை உயர்த்தாமல், கண்களைத் திறக்காமல் சொல்கின்றனர்:

“சொல்லுங்கள்!”

உயிர்த்துடிப்போடு, உற்சாகமாக, சன்னமான குரலில் சொல்கிறேன்:

“ஒவ்வொரு வரும் 1-லிருந்து 5-க்குள் எதையாவது ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள்!”

இடைவெளி (எண்ணை நினைத்துக் கொள்ள அவகாசம் தருகிறேன்).

மெல்லிய குரலில் கேட்கிறேன்: “நினைத்து விட்டீர்களா ?”

குழந்தைகள் சன்னமான குரலில் பதில் சொல்கின்றனர்:

“நினைத்துக் கொண்டோம்.”

“அந்த எண்ணோடு 3-ஐக் கூட்டுங்கள்.” இடைவெளி (கூட்ட நேரம் தருகிறேன்). சன்னமான குரலில்: “கூட்டி விட்டீர்களா?”

குழந்தைகள் மெதுவாக: “கூட்டிவிட்டோம்.” கவர்ச்சிகரமாக, சன்னமான குரலில்: “இன்னும் 2-ஐக் கூட்டுங்கள்… கிடைத்த விடையிலிருந்து நீங்கள் முதலில் நினைத்த எண்ணைக் கழியுங்கள்!… இன்னும் 1-ஐக் கழியுங்கள்.”

இடைவெளி. “உங்களுக்குக் கிடைத்த விடையைச் சொல்லட்டுமா?” குழந்தைகள் ஆர்வமாக: “சொல்லுங்கள்!”

உறுதியோடு, சந்தோஷமான குரலில் கூறுகிறேன்: “தலையை உயர்த்தி என்னைப் பாருங்கள்!”

பின் விரைவாக, தீர்மானகரமாக கரும்பலகையில் ஒரு எண்ணை எழுதி, குழந்தைகள் பார்க்காமலிருக்க மூடுகிறேன்.

உற்சாகமாக, விரைவாக: “என்ன விடை கிடைத்தது? எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள்!”

கையை அசைத்ததும், குழந்தைகள் உரக்க, ஒரே குரலில் பதில் சொல்கின்றனர்:

“நான்கு!” உடனே கரும்பலகையை திறந்து காட்டுகிறேன். “என்ன, சரியா ?”

குழந்தைகள் வியப்போடும் மகிழ்ச்சியோடும்: “ஆம்!” நானும் மகிழ்ச்சியாக: ”நான் எப்படிக் கண்டு பிடித்தேன் என்று சொல்லட்டுமா?”

குழந்தைகள் மகிழ்ச்சியோடும் பொறுமையின்றியும்: “சொல்லுங்கள்!”

இதே போல் தொடரும்.

இந்த போதனை இசையின் வேகம் என்ன? இது உயிரோட்டமுள்ளது, விரைவாக முன் செல்லக் கூடியது.

தொனி எப்படிப்பட்டது? பிரதான தொனி, ஊக்கமூட்டி உற்சாகப்படுத்துவது, உறுதியளிப்பது, கவர்ச்சிகரமானது. முரட்டுத்தனம், எரிச்சல், பதட்டத்திற்கு இதில் இடமேயில்லை.

படிக்க:
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !
விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !

பாடம் நடத்தும் வேகமும் பாவனையும் தொனியும் குழந்தைகளிடம் கல்வியின் பாலான மகிழ்ச்சிகரமான உறவை வளர்ப்பதற்கும் அவர்கள் பாடங்களை முழுமையாக கிரகிக்கவும் பெரிதும் முக்கியமானது என்று நம்புகிறேன். எனவே, பாடவேளைகளில் பள்ளி மாணவர்களுக்கு எந்த வேகத்தில், எந்தத் தொனியில் பாடம் நடத்துவது, எந்த வேகத்தில் ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறுவது என்பதையெல்லாம் விஞ்ஞான பூர்வமாக நிர்ணயிப்பது அவசியமாகி வருகிறது. இந்த விஷயத்தில் தான்தோன்றித்தனம், தன்னிச்சையான போக்கு, குறிப்பாக அறிவின்மை ஆட்சி செலுத்தக் கூடாது!

♦♦♦

தாழ்வாரத்தில் கரும்பலகையருகே ஒலிக்க வேண்டிய முன் தயாரிப்பையடுத்து தலா 35 நிமிடங்களுக்கு நான்கு பாடங்கள் நடக்கும் (ஜனவரி முதல் நான் மினி-பாடங்களை நடத்துவதில்லை). இரண்டு சிறு இடைவேளைகளும் ஒரு பெரிய இடைவேளையும் உண்டு. 122-வது பள்ளி நாளின் திட்டத்தில் நான் எழுதியுள்ளபடி இந்தப் பாடங்கள், இடைவேளைகளின் சாரத்தை விளக்குவேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் !

0

காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு ! – பாகம் 3

ராட்டியர்களைக் குறித்த வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்காரின் படைப்புகளிலிருந்து கீழே உள்ள பகுதிகளை கொடுக்கிறோம். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசராக சிவாஜியை ஏற்றுக்கொள்வதில் இருந்த சாதியரீதியிலான சிக்கல்களை தன்னுடைய இரண்டு நூல்களில் இவர் ஆய்வு செய்துள்ளார்.

மராட்டிய சமூகத்தை மட்டுமல்ல, உண்மையில் இந்திய சமூகம் முழுமைக்குமான ஒரு ஆழமான ஆய்வு, நாட்டுப்பற்று என்ற பெயரில் புறக்கணிக்கப்படுகின்ற சில உண்மைகளை அம்பலப்படுத்துகிறது. சிவாஜியின் வெற்றிக்கு மிகப்பெரிய தடைகளாக முகலாயர்களோ அல்லது யூசுப் அடில் ஷாவோ (பீஜப்பூர் சுல்தான்), சித்திகளோ (ஆப்பிரிக்க பாண்டு இனக்குழுவை சேர்ந்தவர்கள்) அல்லது பரங்கியர்களோ அல்ல, மாறாக சொந்த நாட்டு மக்களே என்பதை நாம் உணர்கிறோம்.

ஏதோ 17-ம் நூற்றாண்டில் நடந்தது மட்டுமல்ல இன்றும் ஒரு இந்தியரின் வாழ்வில் மிகவும் ஆதிக்கம் செலுத்துகின்ற சக்தி மதமோ, நாடோ அல்ல சாதிதான் என்பதை புரிந்துகொள்ளாத குருடராக நாம் இருக்க முடியாது. பாடநூல்களில் மட்டுமே இருக்கும் இந்துக்களின் நான்கு வருணப்பிரிவுகளும் அதற்கு பொதுப்படையாக கொடுக்கப்படும் தத்துவ விளக்கங்களையும் சாதியாக புரிந்து கொள்ளக்கூடாது. உண்மையில் சாதி இருக்கிறது. அது மனித சமூகப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகள் அதனிலும் பிரிவுகள் (இன்னும் சரியாக சொல்வதானால் மரத்தின் கிளைகள் அல்லது இலைகள் என்று கூட நான் கூற வேண்டும்!) என்று அதனுள் ஒவ்வொரு சாதியும் பிளவுப்பட்டு, அதற்குள் கொள்வினை கொடுப்பினை செய்துக்கொள்வதும், சாப்பிடுவதும், குடிப்பதுவுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக சக்தி தான் சாதி.

மேலும் பார்ப்பன சாதிகளில் ஒவ்வொரு துணைப்பிரிவும் கூட வைசியர் அல்லது சூத்திரர் போல முழுமையான தனிச்சாதிகளாக இருக்கின்றன. சான்றாக, வட இந்தியாவைச் சேர்ந்த கன்னியாகுப்ஜா மற்றும் சராயுபாரி பார்ப்பனர்கள். மகாராஷ்டிராவின் கொங்கனாஸ்தா மற்றும் தேசஸ்தா பார்ப்பனர்களை கூறலாம்.

சிவாஜிக்கு எதிரான தனிப்பட்ட பொறாமை:

பூணூலணியவும், சடங்குகளில் வேத உபநிடதங்களை உச்சரிக்கத் தகுதியுள்ள ஒரு சத்திரியனாக அங்கீகரிக்கப்படாதவரை தான் வெற்றிக்கொண்ட நிலப்பரப்புகளாலும், கொள்ளையடித்த புதையல்களாலும் சிவாஜி மனநிறைவு கொள்ளவியலாது. அந்த அங்கீகாரம் ஒரு பார்ப்பனரால் மட்டுமே அவருக்கு தர இயலும்.

பேஷ்வாக்கள் கொங்கன் பகுதியைச் சேர்ந்த பார்ப்பனர்கள். பேஸ்வா பார்ப்பனர்களின் உதிரம் தூய்மை குறைவானது என்று மேட்டு நிலத்தை (தேஷ்) சேர்ந்த பார்ப்பனர்கள் கருதினர். இதன் விளைவாக மராட்டியத்தில் பேஷ்வாக்களின் ஆட்சியின் அராசுக் கொள்கை தேசிய எல்லைகளை நோக்கி வழிகாட்டுவதற்குப் பதிலாக, ஒரு குடும்பம் அல்லது ஒரு சமூகக் குறும்பிரிவின் கவுரவத்தை மட்டும் உயர்த்திப் பிடிப்பதாகவே அமைந்தது.

படிக்க:
மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு !
♦ விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !

கிட்டத்தட்ட தனது நாட்களின் இறுதி வரை, பொறாமை, அவதூறு, அலட்சியம் மற்றும் மராட்டிய குடும்பங்கள் சிலவற்றின் எதிர்ப்பையும் கூட எதிர்த்து சிவாஜி போராட வேண்டி இருந்தது. சிவாஜியின் சொந்த சகோதரர் வியன்கோஜி 1666-ல் பிஜாப்பூர் மீது முகலாய படையெடுப்பின் போது அவருக்கு எதிராக சண்டையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜியின் மத சகிப்புத்தன்மையும் சமமாக கருதும் போக்கு :

ஒரு இந்துத் தலைவராக இருந்ததால் அல்ல, மாறாக அவர் ஒரு சிறந்த கணவராகவும், சிறந்த அரசராகவும், மற்றும் நிகரற்ற தேசத்தைக் கட்டமைப்பவராகவுமிருந்ததால் மட்டுமே வரலாற்றில் தகுதியுள்ளவர்களின் மண்டபத்தில் ஒரு உயர்ந்த பீடத்தில் சிவாஜி நிற்கிறார். அவர் தனது தாயிடம் மரியாதையுடனும், தனது குழந்தைகளிடம் அன்பாகவும், மனைவிகளுக்கு உண்மையாகவும் இருந்தார். மற்ற பெண்களுடனான தனது உறவில் மிகவும் தூய்மையானவராக இருந்தார். போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட பேரழகிகள் கூட அவரால் அம்மா என்றே அழைக்கப்பட்டனர். அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், ஒரு மிகச்சிறந்த அரசராகவும், அமைப்பாளராகவும் தன்னுடைய மேதமையை பறைசாற்றியுள்ளார். மத வெறித்தனம் கோலோச்சிய அக்காலத்தில் அனைத்து மதங்களையும் தாராளமாக சகித்துக்கொள்ளும் கொள்கையை பின்பற்றினார்.

veer-shivajiஇந்துக்கள் மீது தேர்தல் வரி விதிக்கப்படுவதை எதிர்த்து அரங்கசீப்பிற்கு எழுதிய கடிதம், சிவாஜியின் தெளிவான தர்க்கம், பொறுமையான மனநிலை மற்றும் அரசியல் ஞானத்தின் தலைசிறந்த படைப்பாகும். அவர் ஒரு இந்து பக்திமான் என்றாலும், ஒரு முசல்மானிடத்திலும் உண்மையான புனிதத்தை அவரால் அடையாளம் காண முடிந்தது. எனவே அவர் பாபா யாகுத் என்ற இசுலாமிய புனித மனிதருக்கு கெலேசியில் தர்க்காவை நிறுவினார். அவரது சேவையில் அனைத்து மதங்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைத்தன. அவர் குவாசி ஹைதர் என்ற முஸ்லீம் செயலாளரை நியமித்தார். சிவாஜியின் மரணத்திற்குப் பிறகு டெல்லி சென்ற அவர் முகலாயப் பேரரசின் தலைமை நீதிபதியாக உயர்ந்தார்.

சிவாஜியின் படையில் பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் இருந்தனர். அவரது படைத்தலைவராக இருந்த சித்தி மிஸ்ரி ஒரு அபிசீனியன். எந்த ஒரு பெண்ணை தொடவோ அல்லது முஸ்லிம் பள்ளிவாசலையோ, ஆசிரமத்தையோ கொள்ளையடிக்கவோ கூடாதென மராட்டிய படைவீரர்களுக்கு கண்டிப்பான கட்டளை இருந்தது. படையெடுப்பின் போது கைப்பற்றப்படும் முஸ்லிம்களின் புனித நூலான குரான் மரியாதையுடன் முஸ்லிகளிடம் ஒப்படைக்க கட்டளையிடப்பட்டிருந்தது.

(ஜதுனாத் சர்காரின், ‘சிவாஜியின் வீடு’ நூலிலிருந்து)

சிவாஜியின் முடிசூட்டு விழா மற்றும் அதற்குப் பிறகு (1674-1676) :

சிவாஜி முடிசூடிக்கொள்ள விரும்பியது ஏன்?

சிவாஜி முடிசூடாமல் இருப்பதன் நடைமுறை சிக்கல்களை சிவாஜியும் அவரது அமைச்சர்களும் அவர் நீண்ட காலமாகவே உணர்ந்திருந்தனர். சிவாஜி, பல பகுதிகளைக் கைப்பற்றியதுடன் ஏராளமான செல்வங்களைச் சேகரித்திருந்தார் என்பது உண்மை. அவருக்கு ஒரு வலிமையான தரைப்படையும் கடற்படையும் இருந்தது. மேலும் ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாட்டை போலவே மனிதர்களது வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் சக்தி அவருக்கிருந்தது. ஆனால் கோட்பாட்டளவில் அல்லது முகலாயப் பேரரசரை பொறுத்தவரை அவர் வெறும் நிலக்கிழார் மட்டுமே. எந்தவொரு அரசரடனுமான சரிசமமான அரசியல் அங்கீகாரத்தை அவரால் பெற முடியவில்லை.

படிக்க:
சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் ! சூத்ரனுக்கு ராஜாபிஷேகமா ?
♦ காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !

சிவாஜி வெறும் தனிப்பட்ட நபராக இருந்தவரை தன்னுடைய ஆதிக்கத்திலுள்ள மக்களின் விசுவாசத்தையும் பக்தியையும் கோர முடியவில்லை. ஒரு அரசருக்கு இருப்பது போல புனிதத்தன்மை அவரது வாக்குறுதிகளுக்கு இல்லை. அவர் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியாது, சட்டப்பூர்வமாக மற்றும் நிரந்தரமாகவும் எந்த நிலத்தையும் அவரால் வழங்க முடியாது. அவரது வாளால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் அனைத்தும் அவரது சட்டபூர்வமான சொத்தாக மாற்ற முடியாது, நடைமுறையில் அவருக்கு அதிகாரம் இருக்கலாம். ஆனால் அவரது அதிகாரத்தின் கீழ் வாழும் மக்களால் முந்தைய அதிகார வர்க்கத்திடமிருந்த விசுவாசத்தை கைவிட முடியவில்லை அல்லது அவருக்கு கீழ்படிந்ததற்காக தேசத்துரோக குற்றச்சாட்டில் இருந்து விலக்கு பெற்றார்கள் என்பதையும் அவரால் உறுதிப்படுத்த முடியாது. அவருக்கான நிரந்தர அரசியல் ஆளுமையை ஒரு இறையாண்மையின் செயலாக சரிபார்க்கப்பட வேண்டும்.

காகா பட்டாவினால், சிவாஜி சத்திரியனாக அங்கீகரிக்கப்படுதல் :

ஆனால் இந்த இலட்சியத்தை அடைவதற்கு ஒன்று தடையாக இருந்தது. பண்டைய இந்து வேதங்களின்படி, சத்திரிய சாதியைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே சட்டப்பூர்வமாக அரசராக முடிசூட்டப்பட்டு இந்து சடங்குகளின் மரியாதைக்கு உரிமை கோர முடியும். போன்ஸலேக்கள் சத்திரியர்களோ, அல்லது வேறு இரட்டை பிறப்பு கொண்ட சாதியினரோ அல்ல மாறாக வெறும் உழவர்கள் தான். சிவாஜியின் கொள்ளு தாத்தாவும் அப்படியான ஒருவராக தான் இன்னமும் கருதப்படுகிறார். ஒரு சூத்திரன் எப்படி சத்திரியனுக்கான சடங்குகளுக்கு ஆசைப்பட முடியும்? சிவாஜி ஒரு சத்திரியன் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பார்ப்பனர்கள் அவரது முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்த முடியும்.

ஆகையால், எதிர்ப்புகள் அனைத்தையும் அமைதியாக்க முதலில் திறமையான ஒரு பண்டிதரின் ஆதரவைப் பெறுவது அவசியமாக இருந்தது, அப்படி ஒருவர் விஸ்வேஸ்வரில் வாழ்ந்து வருவது தெரிந்தது. பெனாரஸை சேர்ந்த அவரது பட்ட பெயர் காகா பட்டா. சர்ச்சைக்குரிய பெரும் சமற்கிருத அறிஞரான அவருக்கு நான்கு வேதங்களிலும், ஆறு தத்துவங்களிலும், அனைத்து இந்து மத இலக்கியங்களிலும் புலமை இருந்தது. பிரம்ம தேவா என்றும் அந்த காலத்தின் வியாஸர் என்றும் அவர் பிரபலமாக அறியப்பட்டார்.

சிவாஜியின் புத்திசாலித்தனமான செயலாளார் பாலாஜி ஆவ்ஜி மற்றும் இதர அதிகாரிகளால் புனையப்பட்ட போன்ஸ்லேயின் வம்ச வரலாற்றை காகா பட்டா ஏற்றுக்கொண்டார். சிவாஜி ஒரு தூய்மையான சத்திரியன் என்றும், உதய்பூரின் மகாராணாக்களின் நேரடி பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்றும், புராணக்கடவுளான இராமனின் பிரதிநிதி என்றும் அறிவித்தார்.

அவரது தடாலடியான இந்த அறிவிப்பிற்கு எராளமான பணம் கொடுக்கப்பட்டதுடன் சிவாஜியின் முடிச்சூட்டு விழாவின் முதன்மையான மதகுருவாகவும் அவர் மரியாதை செலுத்தப்பட்டார். அவரை வரவேற்க சதாரிவிலிருந்து பல மைல்களுக்கு அப்பால் சிவாஜியும் அவரது அதிகாரிகளும் சென்றனர்.

(சிவாஜியும் அவரது காலமும், நூலிலிருந்து – ஜாதுனாத் சர்கார்)

(தொடரும்)

இதன் முந்தைய பகுதிகள் :
காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !
மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு !


தமிழாக்கம் :
சுகுமார்
நன்றி : சப்ரங் இந்தியா