Tuesday, August 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 297

டிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் !

11

மோடியின் மாமல்லபுர வருகையை தொடர்ந்து ஊடகங்கள் அனைத்தும் ஜால்ரா அடித்துவரும் நேரத்தில், தமிழக மக்கள் வழக்கம் போல #GoBackModi ஹேஸ்டேக்கை டிரண்ட் செய்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இங்கே…

***

கப்பார் :

1.25 கோடி இந்தியர்கள் காஷ்மீரில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 10 லட்சம் இந்தியர்கள் அஸ்ஸாமில் தங்களது குடியுரிமையை இழந்துள்ளனர். “நான்தான் பாசிசம்” என்று சொல்லிக் கொண்டே பாசிசம் என்றும் வருவதில்லை. அதன் குறியீடுகளை நாம்தான் புரிந்து கொள்ளவேண்டும்,
#GoBackModi #回到莫迪

அடுத்த முதல்வர் NTK :

தொடங்கட்டும் மீண்டும் தொல்குடிபந்தம். தொன்மையான இனத்தின் பிரதிநிதியாக சீன அதிபர் இன்னொரு தொன்மையான தமிழர் நிலத்திற்கு வருகை தருகிறார். வாருங்கள் சீசின்பிங் வாருங்கள். (Please Share) #வாருங்கள்சீசின்பிங் #泰米尔欢迎吉平 #TamilsWelcomeXiJinping #ஓடிப்போமோடி #GoBackModi

காயத்ரி அருண்பிரசாத் :

மோடியைப் புறக்கணிக்கும் இடத்தை சீனா உள்நோக்கத்தோடு தேர்ந்தெடுத்திருக்கிறதோ ?
#GoBackModi

தமிழ் ராட்சசி :

#GoBackModi வெளிநாடான சீனா தமிழை விரும்புகிறது. சீனாவின் முக்கியமான இரண்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கு கவுரவம் வழங்கியுள்ளது. நூற்றுக்கணக்கான சீனர்கள் தமிழ் கற்று வருகின்றனர். அதே சமயம் மோடியின் கீழ் ஹிந்தியா, தென்னிந்தியாவின் மீது இந்தியைத் திணிக்க எத்தனிக்கிறது. சீனா தமிழகத்தை விரும்புகிறது. ஆகையால்தான் சீனர்கள் தமிழகத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.

ஜெர்ரி சுந்தர் :

கிபி 1281-ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துக்கள் சீனாவின் குவான்சௌ கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதனை அங்கீகரித்திருக்கும் சீனாவை நாங்கள் மதிக்கிறோம். எங்கள் மீது இந்தியைத் திணிக்கும் மோடியை நாங்கள் உதைத்து அனுப்புகிறோம். #GoBackModi

சுந்தர்ராஜன் :

கிமு 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழகத்தின் நகர நாகரிகத்தை வெளிக் கொண்டுவந்த கீழடி நாகரீகத்தை மூடி மறைக்க முயலும் மோடி அரசின் தலைவரை தமிழகத்தின் கலாச்சார நகரான மகாபலிபுரத்திற்கு வரவேற்க முடியாது. #gobackmodi

வில்லவன் :

சங்கிஸ் நவ் : இவன் சும்மா இருந்திருந்தாக்கூட ரெண்டாயிரம் போஸ்ட் கம்மியா இருந்திருக்கும்.. ஹோமகுண்ட வாயன் சும்மா இருந்தவனை எல்லாம் கிளப்பி விட்டுட்டானே. நம்ம கூட்டிக்கிட்டு வர்றது எல்லாமே உள்ளதையும் குட்டிச்சுவராக்குற கேசாத்தான் இருக்கு. #GoBackModi

பிரதாப் :

ஒரே நாடு .. ஒரே ட்ரெண்டிங் = #GoBackModi

ஷைனி மிராகுலா :

பாசிசத்திற்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள். #GoBackModi. எனக் கூறுங்கள் !

காண்டிராக்டர் நவீன் :

மோடியேதிரும்பிப்போ #回到莫迪 #GoBackModi
தமிழகம் ஏற்கெனவே மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்டது. தமிழ், ஆங்கிலம், சைனிஸ்

தாஜ் மீடியா :

இது புலிகளின் மண் ! #gobackmodi #泰米尔纳德邦欢迎习近平

அயாஸ் ஷைல் :

#GoBackModi முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தால் மோடி தமிழகத்தில் இருக்கிறார் என்று பொருள்

ஜோக்கர் :

சை ஜின்பிங் – மோடி – இருவருக்குமான தமிழகத்தின் வரவேற்பு
#TN_welcomes_XiJinping #回到莫迪 #gobackmodi

சுரேஷ் :

#GoBackModi மோடி எப்போது தமிழகத்திற்கு வந்தாலும் !

சுந்தர் ஜெர்ரி :

ஏன் #GoBackModi ?

  • சிறுபான்மையினர் மீது குறிவைத்து தாக்குதல்
  • பொருளாதாரக் கொள்கைகள்
  • தேசிய குடிமக்கள் பதிவேடு
  • இந்தி திணிப்பு
  • நீட்
  • வேலைவாய்ப்பின்மை
  • விவசாயிகளை முதுகில் குத்தியது
  • ரஃபேல் ஒப்பந்தம்
  • நீதித்துறை, ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. உள்ளிட்ட நிறுவனங்களை பலவீனப்படுத்தியது
  • காஷ்மீர்…. (இன்னும் பல)

தந்திரன் :

இந்தியாவின் ஒவ்வொரு குழந்தையும் கூட சொல்கிறன #GoBackModi

கெளதம் :

#GoBackModi நாளை இதுதான் தமிழகத்தில் நடக்கப் போகிறது. பசங்களா ! தயாராகிக்குங்க !

#泰米尔纳德邦欢迎习近平 #TN_welcomes_XiJinping #回到莫迪 #GoBackModi

நகர்ப்புற சைக்கிளிஸ்ட் :

எனது இந்திக்கார நண்பனுக்கு #GoBackModi என ட்ரெண்டிங் செய்ய பாடமெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

சந்தோஷ் குமார் :

ஒவ்வொரு முறை மோடி தமிழகத்திற்கு வருகிறார் எனத் தெரிந்ததும் தமிழக மக்கள் #泰米尔纳德邦欢迎习近平 #回到莫迪 #GoBackModi என முழங்க ஆரம்பிக்கின்ற்னர்.

கோபிநாத் :

இந்த மோடிஜியைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள் #GoBackModi

பாலாஜி :

#泰米尔纳德邦欢迎习近平 #回到莫迪 #GoBackModi – நான் காத்திருக்கிறேன்.

ஷஹ்ரன் :

ப்ரோ, இது ரொம்ப போயிருச்சே !
#回到莫迪 #GoBackModi

அகமதுதீன் :

பாசிஸ்ட்டுகள் தமிழகத்திற்குள் நுழையும்போது…. #GoBackModi

அகதி ரமீஸ் ராஜா :

ஒருவேளை @narendramodi நீங்களே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், எங்களிடமிருந்து நீங்கள்,
#GobackModi #回到莫迪 #GoBackSadistModi என்பதைத்தான் பெற்றிருக்க முடியும்.

சகாவே :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு – ரூ. 71
வெங்காய விலை – ரூ. 80
தக்காளி விலை – ரூ. 80
பெட்ரோல் விலை – ரூ. 80
எடுடா இரண்டு லெமன… #GoBackModi

தோகா டாக்கீஸ் :

நண்பர்களே.. ம்ம்.. ஆரம்பியுங்கள்…
#GoBackModi #WelcomeXiJinping

அதிமுக ஃபெயில் :

கண்டிப்பாக பார்க்க வேண்டியது : தமிகத்தில் மோடி – டிவிட்டரில்
#GoBackModi விளக்கப்பட்டது.

அலர்ட் ஆறுமுகம்:

சீனமொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன் #gobackmodi

சாய் பிரசாத் :

வெட்கங்கெட்ட தமிழக அரசு அப்பாவி ஆத்மாக்களின் உடல் மீது பேனர்களைக் கட்டிக் கொண்டிருக்கிறது. #GoBackModi

பாரதிதாசன் :

#gobackmodi #返回莫迪 – இதோட அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. கூகுளில் தேடிப்பார்த்தேன். நான் ஷாக்காகிட்டேன்

கரிகாலன் அரிமா :

தமிழ் மீம் தேசம் : #GoBackModi

Sofia | சோபியா

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியில் சுட்டுக் கொல்லப்படாமல் இருந்திருந்தால், இந்த வாரம் ஸ்னோலினுக்கு வயது 19 ஆகியிருக்கும்.
#Sterlite #GoBackModi #返回莫迪 #ThoothukudiMassacre #SterliteProtest

போஸ்கோ

நாங்கள் அனிதாவை இன்னும் மறக்கவில்லை… #GoBackModi


தொகுப்பு :  நந்தன்

வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா

0
bjp-linguistic-agenda

சில நாட்களுக்கு முன் கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் வேலியில் விரிவுரையாற்றினேன். உலகின் தகவல் தொழில்நுட்ப மையமான சிலிக்கான் பள்ளத்தாக்கு சமீப காலங்களில் ஆப்பிள், கூகிள் மற்றும் பல முன்னோடி முயற்சிகளின் தளமாகவும் இணைய புரட்சியைத் தூண்டிய மின்னணு துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய இடமாகவும் அது உள்ளது.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஐ.டி முதல் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் வரை பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களில் வட இந்தியர்களைவிட தென்னிந்தியர்கள் அதிகமாக உள்ளனர். எந்தவொரு பெரிய தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனங்களிலும் இந்தி-பசு வளையத்தைச் சேர்ந்த இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு. அமெரிக்காவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் உள்ள இரண்டு உயர் அதிகாரிகளான சத்யா நதெல்லா மற்றும் சுந்தர் பிச்சை ஆகிய இருவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஏன்? இதற்கு இந்தி காரணம் அல்ல, ஆங்கிலம்தான் காரணம்!

காஞ்சா அய்லய்யா

தென்னிந்தியர்கள் தங்கள் பிராந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது கன்னடம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதைத் தவிர, அதிக முக்கியத்துவத்துடன் ஆங்கிலம் கற்றனர். பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு திராவிட கழக இயக்கத்தின் காரணமாக, இந்தியை முற்றிலுமாகத் தவிர்ப்பதன் மூலம் பள்ளி கல்வி மட்டத்தில் இரண்டு மொழிகளை மட்டுமே கற்க வேண்டும் என்ற இயக்கம் தமிழகத்தால் வழிநடத்தப்பட்டது.

அதிக எண்ணிக்கையிலான கிறித்துவ ஆங்கில பள்ளிகள் இருப்பதன் காரணமாக, இந்தியை மறுப்பதன் மூலம் ஆங்கில வழி கல்வியை மேம்படுத்தி கேரளா தனக்கென ஒரு மாதிரியை உருவாக்கிக் கொண்டது. தெலுங்கு மாநிலங்களும் கர்நாடகாவும் தமிழ்நாடு மற்றும் கேரள மாதிரி பள்ளிகளால் தாக்கம் கண்டன. இந்தியாவின் முதல் தலித் தலைவர் கே. ஆர். நாராயணன், இந்தியாவின் முதல் தலித் தலைமை நீதிபதி கே. ஜி. பாலகிருஷ்ணன் ஆகியோர் கேரளத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தானாக அந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஆனால் இத்தகைய உயர் பதவிகளுக்கு வருவதற்கு முன் தங்களுக்கென்று ஒரு பெயரை அவர்கள் உருவாக்கியிருந்தனர். ஏன்? இந்தி காரணம் அல்ல, ஆங்கிலமே காரணம்.

படிக்க:
நூல் அறிமுகம் : இதிகாசங்களின் தன்மைகள்
சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் !

தற்போது ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டாய தெலுங்கு பாடத்துடன் ஆங்கில வழி கற்பித்தலை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதைச் செய்ய எந்த வடமாநில முதலமைச்சரும் துணிய மாட்டார். குஜராத்தில் மிக மோசமான நிலையில் ஆங்கில வழி கல்வி உள்ளது. எந்தவொரு வட இந்திய மாநிலத்தையும்விட, இந்தி – பசு வளைய மாநிலங்களைவிட கல்வி மேம்பாட்டு முறைகள் தென்னிந்தியாவில் மிக உயரிய நிலையில் உள்ளன.

LANGUAGES-INDIAகூடுதலாக, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் ஆங்கில வழிக் கல்வி காரணமாக சில சிறந்த கல்வி நிறுவனங்களில் நுழையும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மேலும் சில தசாப்தங்களில், ஆரம்ப கல்வி ஆங்கில வழியில் தொடர்ந்தால் பல துறைகளில் அவர்கள் வழிநடத்தும் நிலைக்கு வருவார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக இந்த வளர்ச்சியை விரும்பத்தகாததாகப் பார்க்கிறது. இந்தியை திணிக்கும் அவர்களுடைய எந்த முயற்சியும் வடகிழக்கில் வரவேற்கப்படாது.

எப்படியிருப்பினும், அமித் ஷாவும் பாஜகவும் கடிகாரத்தை திருப்பி தென்னிந்தியாவிலும் வடகிழக்கிலும் இந்தியை திணித்து ஆங்கிலத்தை வெளியேற்ற திட்டமிடுகிறார்கள். இதன் மூலம் முழு இந்தியாவையும் இந்தி-பசு வளைய மாநிலங்களின் கல்வி நிலைக்கும் தரத்துக்கு கீழிறக்க முடியும். அதன்பிறகு பாஜகவின் இந்தி-இந்துராஷ்டிரத்தை நிறுவும் இலக்கு நிறைவேறும்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் நீண்டகால நிகழ்ச்சி நிரலாக உள்ள இந்தி திணிப்பு தொடர்பாக அவர்கள் மறுப்பதை நான் சந்தேகிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 22 அன்று ஹூஸ்டனில் அமித் ஷாவின் சமீபத்திய கருத்துக்கள் குறித்த அச்சங்களை மட்டுப்படுத்த முயற்சித்த போதிலும், பிரதமர் ஒரு வெளிநாட்டில் உரையாற்றுவதற்குப் பதிலாக இந்தியாவில் இதை தெளிவுபடுத்தியிருக்க முடியும்.

இந்து – இந்தி – இந்துஸ்தான் என்ற தேசத்தை உருவாக்குவதும், மெதுவாக இந்தியாவின் பெயரை மாற்றுவதும் பாஜகவின் நீண்டகால குறிக்கோளாகும். அரசியலமைப்பின் முன்னுரையில் உள்ள பாரத் – இந்துஸ்தானுக்கு நன்கு அறியப்பட்டதாகும்.

இந்த முழு திட்டத்திலும், பாகிஸ்தான் ஒரு முன்மாதிரியாகவும் மதசார்பற்ற, பின்தங்கிய முஸ்லீம் நாடுகளுடனான போட்டியிடும் திசையிலும் அவர்கள் செல்கிறார்கள். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடனான உலகளாவிய போட்டி மனப்பான்மையுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்ட சீனா அல்லது தென்னாப்பிரிக்காவுடன் இந்தப் போட்டியிடவில்லை. அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் தென்னிந்தியாவில் இருப்பதைப் போன்ற ஆர்வம் காட்டுகிறார்கள்.

நவீனமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலுக்கு பிந்தைய கட்டத்திலும் மொழி ஒரு முக்கிய இணைப்பாக உள்ளது. முன்னாள் பிரெஞ்சு காலனிகளாக இருந்த ஆப்பிரிக்காவில் தங்கள் சொந்த மொழிகளில் கல்வியை ஊக்குவிக்க வலியுறுத்தவில்லை, மெதுவாக அவர்கள் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றன. ஆங்கில மொழி தொடர்பு மற்றும் தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சியுடன் உலகளாவிய ஒருங்கிணைப்பால் அவர்களின் பொருளாதார வளர்ச்சி இப்போது வேகமாக உள்ளது.

படிக்க:
குழந்தைகளுக்கு தாய்மொழியை பயிற்றுவிப்பது எப்படி ?
♦ 1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு மொழியியல் மற்றும் கலச்சார துறைகளின் உலகளாவிய திசையைப் பற்றி எந்தவிதமான தீவிர புரிதலும் இல்லை. பாஜக, ஆர்.எஸ்.எஸ். வணங்கும் இஸ்ரேலும்கூட ஹூப்ரு தவிர, ஆங்கில கல்வியை ஊக்குவிக்கிறது, இது ஒரு பொதுவான கலாச்சார மாற்றமாகும்.

இந்தியாவில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு நிதியளிக்கும் அனைத்து தொழிற்துறை வர்க்கமும் இந்தியில் கவனம் செலுத்துகிறது. மொழியியல் மற்றும் கலாச்சார வர்க்க வேறுபாடுகள் வட இந்தியாவைவிட, தென்னிந்தியாவில் உயரிய இடத்தில் உள்ளன. தெற்கில், அனைத்து பிரிவினரும் தங்கள் பிராந்திய மொழிகளுடன் ஆங்கிலம் கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். எனவே, மொழியியல் மற்றும் கலாச்சார இடைவெளி குறுகி வருகிறது. வட இந்தியாவில் அது பரந்து வருகிறது. பொருளாதார மற்றும் கலாச்சார வளங்களின் வறுமை அப்பட்டமாகத் தெரிகிறது.

வட இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் குழந்தைகளுக்காக உலகளாவிய தரமான ஆங்கில வழி பள்ளிகளை நடத்தி வரும் முன்னணி தொழிற் நிறுவனங்களை இந்தி வழி கல்விக்கு மாறுங்கள் என அமித் ஷா அல்லது ஆர்.எஸ்.எஸ் கட்டாயப்படுத்த முடியுமா? வடக்கு மற்றும் தெற்கில் உள்ள தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளை இந்தி வழிப் பள்ளிகளுக்கு அனுப்புமாறு அமித் ஷா வற்புறுத்த முடியுமா? தென்னிந்தியா மற்றும் வடகிழக்கில் இந்தியை சரியாக யாரிடம் திணிக்க ஷா விரும்புகிறார்? எனவே, இந்தத் திட்டம் அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமங்களில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தெளிவாகிறது.

இந்துத்துவ சக்திகளால் முன்வைக்கப்படும் உணர்வுபூர்வமான மொழி பிரச்சாரம் குறித்து தலித்துகள், ஓபிசிக்கள் மற்றும் மேல்தட்டு சூத்திரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களின் குழந்தைகள் இப்போதுதான் நவீன நாகரிக மற்றும் உலகமயமாக்கப்பட்ட கலாச்சாரங்களை எட்டிப் பிடித்திருக்கிறார்கள். இந்துத்துவ கற்பனைகளான ஒரு தேசம், ஒரு மொழி மற்றும் ஒரு கலாச்சாரத்தை தாங்கிச் செல்ல அவர்கள் தங்களை அனுமதித்தால், அவர்கள் இடைக்காலக் கட்டத்தின் வறுமை, அறியாமை மற்றும் சமத்துவமின்மைக்குத் திரும்பிச் செல்வார்கள்.

இந்தி – பசு வளையத்தைச் சேர்ந்த மாநிலங்களுடன் தென்னிந்திய மக்களின் அறிவியல் மனப்பான்மையை ஒப்பிடும்போது, தென்னிந்தியாவில் மூடநம்பிக்கை, அறியாமை மற்றும் சுரண்டல் இல்லாதது அறிவியல் சிந்தனை சிறந்த பங்காற்றியிருப்பதை ஆதாரமாகக் காட்டுகிறது.

தென்னிந்தியாவில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சமத்துவத்திற்கான அறிவுநிலைகள் மற்றும் வலியுறுத்தல்கள் மிக அதிகம். ஒரு குழந்தை உலகளாவிய தகவல்தொடர்பு மொழியைக் கற்கும்போது, அந்தக் குழந்தையின் சொற்களஞ்சியம் வளமாக இருக்கும். ஒரு சிறு குழு அல்லது ஒரு சிறு பிராந்தியத்தில் பேசப்படும் ஒரு மொழியைப் பேசும் குழந்தையைவிட சிறந்த நம்பிக்கையும் அறிவும் இந்தக் குழந்தைகளுக்கு இருக்கும்.

சமூக மற்றும் இயற்கை அறிவியல் ஆய்வை பலவீனப்படுத்துவதன் மூலம் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் -ம். ஏற்கனவே பல்கலைக்கழகங்களுக்கு நிறைய சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. புராண அறிவியல் மற்றும் புராண நூல்கள் அறிவியல் அறிவை வளர்க்கும் என அவர்கள் நம்புவது நகைப்புக்குரியது. அவர்கள் போலி அறிவியலாளர்களை டி.என்.ஏ. மற்றும் தொல்பொருள் அறிவியல் நிபுணர்கள் என அறிவிப்பதும் மனித இடப்பெயர்வு குறித்த அனைத்து உலகளாவிய அறிஞர்களின் கோட்பாடுகளையும் தவறானவை என அறிவிக்கவும் செய்கிறார்கள். அறிவியல் உலகம் இவை அனைத்தையும் கேலிக்கூத்தாகவே பார்க்கின்றன. இப்போது அவர்களின் அரசியல்வாதிகள் மற்ற அனைத்து மொழிகளையும் விட்டுவிட்டு இந்தியை கட்டாயம் கற்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். அப்போதுதான் அகண்ட பாரதம் தங்கம் மற்றும் வெள்ளி விளையும் நிலமாக மாறும் என்கிறார்கள்.

அனைத்து தென்னிந்தியர்களும் நல்ல விதமாக, அமித் ஷாவின் அபத்தமான இந்தி – இந்து – இந்துஸ்தான் கோட்பாட்டுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க, தமிழகத்தின் இரு மொழி சூத்திரத்தை நாம் எடுத்துக்கொண்டு, நமது அறிவியல் மனப்பான்மையை வலுப்படுத்த வேண்டும். இதனால் சீனா போன்ற வேகமாக வளர்ந்துவரும் நாடுகளால் இந்தியா மீண்டும் காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படுவது தடுக்கப்படும்.


கட்டுரையாளர் : எழுத்தாளர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளர் காஞ்சா அய்லய்யா.
தமிழாக்கம் :
கலைமதி
நன்றி: கவுண்ட்டர் கரண்ட்ஸ் 

நூல் அறிமுகம் : இதிகாசங்களின் தன்மைகள்

திகாசங்கள் என்பன இராமாயணமும், பாரதமுமாகும். இவை இரண்டும் ஆரிய நூல்கள்.

இக்கதைகளுக்கு ஆரியப் பார்ப்பனர்கள், தெய்வத் தன்மையை ஏற்றிப் பல காரணங்களால் தமிழ்நாட்டில் புகுத்தி, அறியா மக்களிடையே அவற்றில் நம்பிக்கை உண்டாக்கித் தங்கள் உயர்வுக்கும் வாழ்வுக்கும் வழிகோலிக்கொண்டு அவற்றை நிலைநிறுத்தி வருகிறார்கள்.

உலகத்திலேயே ஒப்பற்ற அறிஞராக, உலக மக்களுக்கே நாகரிகத்தைப் பரவச் செய்த பெரியோர்களாக இருந்த தமிழ் மக்கள், காலமாற்றத்தால் நாளடைவில் அறியாமையில் மூழ்கி, இப்படிப்பட்ட கதைகளை நம்பி, தமது உண்மைப் பெருமையை மறந்து, இவ்விதிகாசங்கள் தம்மைச் சேர்ந்த நூல்களெனக் கொண்டு மயங்கித் தவிக்கின்றனர்.

இதனாலேயே தோழர் ஈ.வெ. இராமசாமிப் பெரியாரவர்களுடைய வேண்டுதலுக்கு இசைந்து இராமாயண ஆராய்ச்சியைக் ‘குடி அரசு’ இதழில் வெளியிட்டோம். அது முடிந்தவுடன் பாரத ஆராய்ச்சியும் ஓரளவு வெளிவந்து நின்றது. இராமாயண ஆராய்ச்சியை ஏழு காண்டங்களாக அச்சிட்டுப் பெரியார் இராமசாமி அவர்கள் வெளியிட்டு உலகுக்கே அழியாத பேருதவியைச் செய்திருக்கிறார்கள். (நூலிலிருந்து பக்.1)

இதிகாசங்கள் என்று தலைப்பிட்டு இச்சிறு நூல் எழுதுவதன் நோக்கம், இராமாயண, பாரதங்களின் சிறுமையைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டுவதேயாகும். இதனால் விளையும் பயன் யாதெனில், இதிகாசங்களைப் பற்றிய தமிழ் மக்களின் தவறான எண்ணங்கள் மாறி, “இதிகாசங்களைப் படிப்பதனால் சகோதரத் துரோகமும், விபச்சாரத்தனமும் வளரும்” என்ற உண்மையை ஒருவாறு உணரச் செய்யும் என்பதோடு மற்றும் இவற்றைப் படிப்பதனால் தமிழ் மக்கள் தன்மானமற்று ஆரியக் கூட்டில் வீழ்ந்து அல்லல்படுவதிலிருந்து விடுபடுவார்கள் என்பனவேயாகும். ஆதலால் தமிழ் மக்கள் அனைவரும் இதனை ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கி, உண்மை உணர்ந்து பயன்பெறுவார்களாக. (நூலிலிருந்து பக்.2)

இராமாயணம் என்பது, இராமன் என்ற ஆரிய அரசனின் மகன், இராவணேசுவரன் என்ற தமிழ் மன்னனைக் கொன்ற வரலாறு ஆகும்.

இராவணன் காட்டிலிருந்த சீதையைத் தூக்கித் தன் மடிமீது வைத்துச் சென்று, இலங்கையில் சிறைவைத்து இருந்தான்.

இராவணன் அப்படிச் செய்வதற்குக் காரணம் என்ன? என்று பார்த்தால், இராவணனுடைய தங்கையாகிய சூர்ப்பநகை என்பவளை, இராமனுடைய ஏவலால் அவனது தம்பி இலக்குவன் மூக்கு, முலை, முடி ஆகியவற்றை அறுத்து, அவமானம் செய்துவிட்டான். இதற்குக் காரணம் என்னவென்றால், “சூர்ப்பநகை இராமனையும் இலக்குவனையும் தன்னை மணந்து கொள்ள வேண்டுமென்று கேட்டாள். அதனாலேயே இலக்குவன் அவளை அவமானம் செய்தான் ” என் ஆரிய வால்மீகியே தம் இராமாயணத்தில் எழுதி இருக்கிறார்.

தன்னை மணம் செய்துகொள்ள வேண்டுமென்று கேட்ட ஒரு பெண்ணை இப்படி அவமானம் செய்வது எவ்வளவு கொடுமை? எந்த நாட்டிலாவது இப்படிப்பட்ட காரியம் நடந்ததாக யாராவது சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட கொடுஞ்செயலைப் பெரிதாக எழுதாமல், “இராவணன் சீதையைச் சிறை வைத்திருந்தான்” என்பதை மாத்திரம் ஒரு மாபெரிய கொடுஞ்செயலாகக் கூறி, இராவணன் மேல் மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படிச் செய்திருக்கின்றனர்.

படிக்க:
ரூ. 76,600 கோடி : இரகசியமாக கடன் தள்ளுபடி செய்த SBI
“பூமராங் ஆனது இராமபாணம்!” – அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்தும்டே

இராவணன் சீதையை மூக்கு, முலையை அறுத்து அவமானம் செய்தானா? அல்லது பலவந்தமாவது செய்தானா? இல்லவே இல்லை. மற்றென்ன செய்தான் எனில், தன் கூடப்பிறந்த தங்கையை அலங்கோலஞ் செய்து, அவளுடைய வாழ்க்கையையே கெடுத்த பாவியாகிய இராமனின் மனைவியைத் தூக்கிச் சென்றான். அதுவும் எப்படித் தூக்கிச் சென்றான் எனில், “தூக்கித் தன் மடிமீது வைத்துக்கொண்டு சென்றான்.” இது வால்மீகி முனிவரே சொல்லுவதாகும். –

ஆனால், கம்பர் போன்ற சிலர், “முன் இராவணனால் பலவந்தப்படுத்தப்பட்ட ஒரு பெண், வேறு பெண்களைத் தொட்டால் அவன் மண்டை வெடித்துப் போகுமென சபித்தாள்” என்ற பொய்க் கதையை வால்மீகி முனிவருடைய மூலக்கதைக்கு மாறாக எழுதி, அதனால் “இராவணன் சீதையைக் குடிசையோடு தூக்கிச் சென்றான்” என்று பொய்க்கதை புனைந்தனர். (நூலிலிருந்து பக்.3-4)

… இராமனது ராஜ்யம் வருணாசிரம ராஜ்யமாகவே இருந்திருக்கிறதுடன், அவன் ராஜ்யத்தில் பிராமணர்களுக்கே அதிக ஆதிக்கம் இருந்திருக்கிறது. ஒரு “சூத்திர அரசன்” தவம் செய்ததற்காக (சூத்திரர் தவம் செய்ய அருகதை அற்றவர்கள் என்று) கொல்லப்பட்டிருக்கிறான். அதுவும் கடவுள் அவதாரம் என்று சொல்லப்படும் இராமனாகிய அரசன் கையாலேயே கொல்லப்பட்டிருக்கிறான்.

… இராமன், அவன் மனைவி ஆகிய எல்லோருமே மாமிசத்தையும், மதுவையும் ஏராளமாக உண்டவர்களாகவேயிருக்கிறார்கள். இராமனும், இலக்குவனும் அகால மரணத்தையே அடைந்திருக்கிறார்கள். மற்றும் இதுபோன்ற அநேக சேதிகளை இராமாயண ஆராய்ச்சியில் காணலாம். (நூலிலிருந்து பக்.8)

… பாரதம் என்பது பஞ்சபாண்டவருக்கும் துரியோதனாதியருக்கும் நடந்த போரைப் பற்றிய வரலாறு. திருதராட்டிரன் என்பவனும், அவனுக்குத் தம்பி முறையாகிய பாண்டுவும் நாடாண்டு வந்தனர். திருதராட்டிரனுடைய பிள்ளைகள் துரியோதனன் முதலிய நூறு பேர். தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற அய்ந்து பேரும் பாண்டுவின் மனைவியருக்குப் பிறந்த பிள்ளைகள். திருதராட்டிரனே அரசன். அதனால் அவனுடைய மூத்த பிள்ளையாகிய துரியோதனனே அரசனாக உரியவன். தருமன் முதலியோர்  தங்களுக்கும் நாட்டில் பங்கு உண்டு என்று கெடுவழக்காடி கிருட்டினனுடைய துணையைக் கொண்டு துரியோதனாதியருடன் சண்டைபோட்டுக் கொன்று அரசாட்சியை அடைந்தனர். இதுவே பாரதப் போரின் உண்மை . இதனால் பஞ்ச பாண்டவர்களே வம்பர்கள் என்று விளங்குகின்றதல்லவா?

பாரதக் கதையின் அடிதொட்டு முடிவுவரை எங்கு நோக்கினும் விபச்சாரமே தாண்டவமாடுகின்றது. … வேதங்களையெல்லாம் வகுத்தமையால் வேதவியாசன் என்ற பெயரைப் பெற்ற அந்த வியாசனுக்கு இவ்விரண்டு பெண்களைக் கூடியும் காமவேதனை தீராமல் அம்பாலிகையின் தாதியையும் கூடி, விதுரன் என்பவனையும் பெற்றான்! நான்கு வேதங்களையும் வகுத்தமையோடு வியாசன் பாரதக் கதையையும் எழுதினான். அதனால் பாரதம் அய்ந்தாம் வேதம் என்று புகழப்படுகிறது. காமக்கலையும் அய்ந்தாம் வேதமென்றே கூறப்படுகிறது. காமக்கலைக்கும் விபச்சாரத்துக்கும் நிலைக்களமானதால்தான் பாரதம் அய்ந்தாம் வேதமெனப்படுகிறது போலும். ஆரிய முனிவனாகிய வேதவியாசனே விபச்சாரத்துக்கு நிலைக்களமானவனாகி நடந்துகாட்டியதோடு, அதையே கதையாகவும் எழுதிவிட்டான். என்னே இவன் துணிச்சல்! இத்தகைய இழிவான கதைகளையும் தமிழ் மக்கள் தம்முடையவை என எண்ணி ஏமாந்து படித்து மகிழ்கின்றனரே; ஆரிய சூழ்ச்சியின் வல்லமைதான் என்னே? (நூலிலிருந்து பக்.10)

நூல் : இதிகாசங்களின் தன்மைகள்
ஆசிரியர் : பண்டிதர் இ.மு.சு.

வெளியீடு : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 9626657609 | 7639818254

பக்கங்கள்: 32
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : dravidianbookhouse | periyarbooks.in

குழந்தைகளுக்கு தாய்மொழியை பயிற்றுவிப்பது எப்படி ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 07

தாய் மொழிப் பாடம்

பாட நோக்கம்: படிப்பது, பேசுவதன் அடிப்படையில் புதியவற்றை அறியும் ஆர்வத்தை மேற்கொண்டு வளர்த்தல்; நன்மை, தீமை பற்றிய கருத்துகளை உருவாக்குதல்.

பாடத்தின் உள்ளடக்கம்: நான் குழந்தைகளுக்கு ஏற்கெனவே படித்துக் காட்டிய தனித்தனி கவிதைகள், கதைகளிலிருந்து சிறு சிறு பகுதிகள் (”இது எதிலிருந்து என்று கண்டு பிடியுங்கள்!”); தனித்தனியான இரண்டு வாக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள் (“இந்த வாக்கியங்களைக் கண்டுபிடியுங்கள்!”); மாற்றியமைக்கப்பட்ட நாலடிப் பாடல் வரிகள் (“இந்த நாலடிப் பாடலை எப்படி வாசிப்பது?”); பழமொழிகள், முதுமொழிகள் (“இவை உங்களுக்குப் பிடித்துள்ளனவா?”); வாக்கியத்தில் விட்டுப் போன வார்த்தையைக் கண்டு பிடிக்கும் பயிற்சி (“இங்கே என்ன வார்த்தையை எழுதலாம்?”).

பாட அமைப்பு:

  1. பாட வேலைகளை முன்வைத்தல். (காரிய ரீதியான வேகம், கருத்தாழத்தோடு, நட்பு ரீதியான தொனி.) நேரம் 3 நிமிடங்கள்..

“பாருங்கள், உங்களுக்காக எதையெல்லாம் தயாரித்துள்ளேன்!”

இரண்டு கரும்பலகைகளின் திரைகளையும் அகற்றுகிறேன்.

“இந்த இடங்கள் எதிலிருந்து எடுக்கப்பட்டன என்று யோசித்துச் சொல்லுங்கள்!..”

”இங்கே நான் வேண்டுமென்றே இரண்டு வாக்கியங்களின் வார்த்தைகளையும் நாலடிப் பாடல் வரிகளையும் கலந்துள்ளேன். இவற்றைப் பிரித்துச் சொல்ல முடியுமா?”

“இந்த வாக்கியத்தில் இரண்டாவது வார்த்தையைக் ’காணோம்’. நீங்கள் அதைக் கண்டு பிடித்து உரிய இடத்தில் வைக்க வேண்டும்.”

“இதோ நான் இங்கு வார்த்தைகளை எழுதியிருக்கிறேன். தப்பு இருக்கிறதா பாருங்கள்! சரிபார்க்க வேண்டும்!”

“இதோ இங்கே (கரும்பலகையின் திரையைத் திறந்து விட்டு உடனே மூடுகிறேன்) என் ரகசியம் உள்ளது. இதைப் பற்றிப் பின்னால் சொல்வேன்.”

“உங்கள் ஒவ்வொருவரின் டெஸ்கிலும் பழமொழிகள், முதுமொழிகள் எழுதப்பட்ட சிறு அட்டை உள்ளது. இவற்றை என்ன செய்வதென்று உங்களுக்குத் தெரியும்.”

“இது தவிர, இதோ இம் மாதிரியான தாள்களை உங்களுக்காகத் தயாரித்துள்ளேன். ஒவ்வொன்றிலும் இரண்டு கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுங்கள், பின்னால் அதை மனப்பாடம் செய்யலாம். இன்னொரு தாளில் உங்களுக்குப் பிடித்தமான வேலை உள்ளது – வார்த்தைகளையும் படங்களையும் இணைக்க வேண்டும். இரண்டு தாள்களையும் வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்.”

“சரி, எதிலிருந்து துவங்குவோம்?”

குழந்தைகள் தமக்கு விருப்பமானதை முதலில் எடுக்கின்றனர்.

  1. தனிப்பட்ட பகுதிகளிலிருந்து உரிய கவிதை, கதையைக் கண்டுபிடித்தல். (சாதாரண வேகம், கவர்ச்சிகரமாக.) நேரம் 3 நிமிடங்கள்.

“முன்னர் நான் உங்களுக்குக் கதைகள், கவிதைகளைப் படித்துக் காட்டியிருக்கிறேன். இப்பகுதிகள் எவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை என்று யோசித்துச் சொல்ல முடியுமா?”

கரும்பலகையில் மூன்று வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. குழந்தைகள் அவற்றைப் படிக்க வாய்ப்பளிக்கிறேன்.

அவை எந்தக் கதை, கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என்று அவர்களால் கண்டுபிடிக்க இயலாவிடில் ஒரு சில கதை, கவிதைகளின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு உதவுகிறேன்.

III. தனித்தனியாகப் பிரித்து எழுதப்பட்டுள்ள சொற்களிலிருந்து வாக்கியங்களை உருவாக்குதல், நாலடிப் பாடலின் மாறிய வரிகளைச் சரியாக வைத்தல். (உற்சாகமாக, விரைவான வேகம், கவர்ச்சிகரமாக.) நேரம் 5 நிமிடங்கள்.

கரும்பலகையின் ஒரு பகுதியைத் திறக்கிறேன். அங்கு இரண்டு வெவ்வேறான வாக்கியங்களின் சொற்கள் கலந்து எழுதப்பட்டுள்ளன: குதிரை, சமைத்தாள், அம்மா, வேகமாக, சாப்பாடு, ஓடியது, நல்ல.

“இங்கே இரண்டு வெவ்வேறான வாக்கியங்களின் சொற்கள் கலந்துள்ளன என்று விளக்கி, இவற்றிலிருந்து அந்த வாக்கியங்களை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியுமா?” என்று கேட்கிறேன்.

குழந்தைகள் தம் விடைகளைச் சொன்னதும் நான் கரும்பலகையில் எழுதியிருந்ததைத் திறந்து காட்டுகிறேன்: “குதிரை வேகமாக ஓடியது. அம்மா நல்ல சாப்பாடு சமைத்தாள்”.

பின், உறுதியோடு, சவாலாகச் சொல்கிறேன்: “இதோ இப்போது இங்கு என்ன எழுதியுள்ளது பாருங்கள்! இங்கே ஒரு குழந்தைப் பாட்டின் வரிகள் மாறியுள்ளன. இதை ஒழுங்கான முறையில் விரைவாக உங்களால் மாற்றியமைக்க முடியுமா?”

இப்படிச் சொல்லியபடியே கரும்பலகையின் திரையை விலக்குகிறேன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

நீ ஓய்ந்திருக்கலாகாது, பாப்பா!

ஒரு குழந்தையை வையலாகாது, பாப்பா!

ஓடி விளையாடு, பாப்பா!

கூடி விளையாடு, பாப்பா!

குழந்தைகள் தம் விடைகளைச் சொல்கின்றனர். பின் நான் கரும்பலகையைத் திறந்து சரியான விடையைக் காட்டுகிறேன்:

ஓடி விளையாடு, பாப்பா!

நீ ஓய்ந்திருக்கலாகாது, பாப்பா!

கூடி விளையாடு, பாப்பா!

ஒரு குழந்தையை வையலாகாது, பாப்பா!

  1. பழமொழிகள், முதுமொழிகள் அடங்கிய சிறு அட்டைகளுடனான வேலை. (மிதமான வேகம், கருத்தாழத்தோடு, நம்பிக்கையோடு.) நேரம் 3 நிமிடங்கள்.

“உங்களுக்குப் பிரபல வார்த்தைகளும் முதுமொழிகளும் பிடித்துள்ளதைப் பார்க்க மகிழ்ச்சி. எனவே, நான் உங்களுக்காகப் புதிய மூதுரைகளைக் கண்டுபிடித்து சிறு அட்டைகளில் எழுதியிருக்கிறேன். இவை உங்கள் டெஸ்குகளின் மீது உள்ளன. இவை உங்களுக்குப் பிடிக்கும், உங்கள் நினைவில் நிலைத்திருக்குமென நம்புகிறேன்.”

சிறு அட்டைகளில் எழுதப்பட்டுள்ள மூதுரைகளை வாய் விட்டுப் படிக்கும் படி ஒரு சில குழந்தைகளிடம் சொல்கிறேன்:

உழைப்பின்றி ஊதியமில்லை.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

உண்மை வெல்லும்.

ஆபத்தில் உதவுபவன் நண்பன்.

இவை உங்களுக்குப் பிடித்துள்ளனவா?.. இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று படியுங்கள். இவை உங்களுக்குக் கண்டிப்பாகப் பயன்படும்.”

  1. வாக்கியத்தில் விட்டுப் போன வார்த்தைகளைப் பூர்த்தி செய்தல். (விரைவான வேகம், அன்பான தொனி.) நேரம் 4 நிமிடங்கள்.

வார்த்தை விடப்பட்ட வாக்கியம் கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள இடத்தைத் திறந்து காட்டுகிறேன்:

சூரியன்           உதித்தது.

“இந்த வெற்றிடத்தில் எந்த வார்த்தையை நிரப்பலாம் என்று சொல்லுங்கள்.”

குழந்தைகள் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் கரும்பலகையில் எழுதுகிறேன். பின்வருமாறு இது இருக்கலாம்:

சூரியன்           உதித்தது.

மினு மினுப்பாக

செந்நிறமாக

பழுப்பு நிறத்தில்

பெரிதாக

சந்தோஷமாக

ஆரஞ்சு வண்ணத்தில்

புன்சிரிப்போடு

பிரகாசமாக, அழகாக என்று நான் என் விடைகளை சேர்த்துக் கொள்கிறேன்.

“சரி, இப்போது இவற்றில் எது வாக்கியத்தில் நன்கு பொருந்தி வரும்?”

குழந்தைகள் தம் முடிவை நிரூபிக்க உதவுகிறேன்.

  1. வார்த்தைகளில் உள்ள தவறுகளைத் திருத்துதல்.

(நம்பிக்கையளிக்கும் தொனி.) நேரம் 1 நிமிடம்.

எழுத்துப் பிழைகளுடன் வார்த்தைகள் கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள இடத்தைத் திறந்து காட்டுகிறேன்.

“இதற்கு இப்போது நேரம் செலுத்த வேண்டாம். இதை இப்படியே விட்டு வைக்கிறேன். யாருக்கு விருப்பமோ அவர்கள் இடைவேளையின் போது இதில் ஈடுபடலாம். இப்போது மிக சுவாரசியமானது நம்மை எதிர்நோக்கியுள்ளது.”

VII. வீட்டிற்குத் தர வேண்டிய பொருட்கள்: தாமாகவே தேர்ந்தெடுக்க வசந்தத்தைப் பற்றிய கவிதைகள், வார்த்தைகளையும் படங்களையும் இணைக்கும் பயிற்சி அடங்கிய தாள்கள். (காரிய ரீதியான வேகம், நட்புத் தொனி.) நேரம் எஞ்சிய நிமிடங்கள்.

படிக்க:
புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ
தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா பெண் சிசுக்கொலை ?

“இந்த பாக்கெட்டுகளில் கவிதைகளும், இணைக்க வேண்டிய படங்களும் வார்த்தைகளும் அடங்கிய தாள்கள் உள்ளன. பயிற்சியை நீங்கள் ஓய்வு நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். கவிதைகளை நாளைக்குள் படித்து, இவற்றில் உங்களுக்கு எது மிகவும் பிடித்துள்ளது என்று சொல்லுங்கள்.”

VIII. பாடத்தை முடித்து வைத்தல். (அன்பாக, மகிழ்ச்சிகரமான தொனி.) –

“நமது பாடவேளை முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனக்கு மகிழ்ச்சி, நீங்கள் புத்திசாலியானவர்களாக, கவனமுள்ளவர்களாக, விடா முயற்சியுள்ளவர்களாக இருந்தீர்கள்! புதியவற்றை அறியும் ஆர்வமுள்ளவர்களாக நீங்கள் இருப்பதற்கு நன்றி! நீங்கள் வெகு வேகமாக முன்னேறுகின்றீர்கள், எனவே, அனேகமாக நான் உங்களுக்கு சிக்கலான வேலைகளைத் தயார்படுத்த வேண்டும்.”

“இப்போது எழுந்திருங்கள் பார்க்கலாம்!… சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!… ஓய்வெடுங்கள்!…”

இரண்டாவது பத்து நிமிட இடைவேளை

குழந்தைகள் பூந்தொட்டிகளுக்கு நீர் ஊற்றுகின்றனர், மீன்தொட்டியைக் கவனித்து சரிசெய்கின்றனர், தாழ்வாரத்தில் விளையாடுகின்றனர், தம் விருப்பப்படி கரும்பலகையில் உள்ள சொற்களில் தப்பைக் கண்டுபிடித்துத் திருத்துகின்றனர், வார்த்தைகளை சரியான படங்களுடன் இணைக்கும் பயிற்சியைச் செய்கின்றனர்.

குழந்தைகள் செய்யும் காரியங்களிலும் பொழுது போக்குகளிலும் நானும் கலந்து கொள்கிறேன், அவர்கள் செய்யும் விஷயங்கள் மீது அக்கறை காட்டுகிறேன், அவர்களுடன் பேசுகிறேன். சாதாரண வேகம், பிரதான தொனி.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

அமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை

0

ரோப்பிய முதலாளித்துவம் தனது பிறப்பிலேயே எப்படி சுரண்டலை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதை கார்ல் மார்க்ஸ் விளக்கியிருப்பார். அடிமை வர்த்தகம், காலனியச் சுரண்டல் என நவீன சமூகத்தின் கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை அன்றைய ஐரோப்பிய முதலாளிகள் கட்டவிழ்த்துவிட்டு தமது மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டனர். ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கருப்பு மனிதர்களை விலங்குகளைப் போல் பொறிவைத்துப் பிடித்து கூட்டம் கூட்டமாக கூண்டுகளில் அடைத்து அமெரிக்காவுக்கு ”ஏற்றுமதி” செய்தனர் அன்றைய ஐரோப்பிய முதலாளிகள்.

வேட்டையில் சிக்கும் மனிதர்கள் தங்கள் குடும்பங்களில் இருந்தும், உறவுகளில் இருந்தும் பிய்த்தெறியப்பட்டு விலங்குகளைப் போல் நடத்தப்பட்டு பெரும் கப்பல்களில் அடைத்து ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். பசிபிக் பெருங்கடலைக் கடப்பதற்குள் கூண்டுகளில் அடைபட்ட மனிதர்களில் பலர் இறந்தும் போயுள்ளனர். சுமார் 400 ஆண்டுகள் நடந்த அடிமை வியாபாரத்தில் இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறத்தாழ 20 கோடி. அலெக்ஸ் ஹேலி எழுதிய “ஏழு தலைமுறைகள்” நூலின் துவக்கத்தில் ஆப்பிரிக்கர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுங்கோன்மைகளின் ஒரு குறுக்கு வெட்டுச் சித்திரம் காணக்கிடைக்கிறது.

முதலாளித்துவத்தின் கொடுங்கோன்மைகளை குறித்துப் பேசும் போதெல்லாம் அதன் பண்டித சிரோமனிகள்  ஆஜராகி, ”அதெல்லாம் அந்தக்காலம். இப்போது முதலாளித்துவம் சைவமாகி விட்டது. எவ்வளவோ நாகரீகம் வளர்ந்து விட்டது. நீங்கள் ஸ்கேண்டிநேவிய நாடுகளைப் பார்த்ததில்லையோ?” எனப் பாடம் எடுப்பதைப் பார்த்திருப்போம். இது உண்மைதானா? முதலாளித்துவம் ”முதிர்ச்சியடைந்து திருந்திவிட்டதா”? கொத்தடிமைத்தனம் ஒழிந்து விட்டதா? இல்லை என்பதே பதில்.

கூலி உழைப்புதான் (அதாவது ஊதியத்திற்கு வாங்கப்பட்ட மனித உழைப்பு) முதலாளித்துவத்தின் பிரதான சுரண்டலாக இப்போது நிலவுகின்றது – என்றாலும், எங்கெல்லாம் தனக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிமை உழைப்பை உறிஞ்சிக் கொள்ள முதலாளித்துவம் தயங்குவதில்லை. சர்வதேச தொழிலாளர் அமைப்பு கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் அந்த ஆண்டில் உலகெங்கிலும் சுமார் 2.5 கோடி கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

உலகெங்கும் இருக்கும் கொத்தடிமைத் தொழிலாளர்களில் சுமார் 24 இலட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர் என்கிறது அதே அறிக்கை. இந்த எண்ணிக்கையில் உலகெங்கிலும் மாபியா கும்பல்களால் கடத்தப்பட்டு கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், அமெரிக்காவில் உள்ள சுமார் 20 இலட்சம் சிறைக்கைதிகளை அந்நாட்டின் 13-வது அரசியல் சாசனத் திருத்தம் ”அடிமைகளாக” வகைப்படுத்தியுள்ளது – இந்த எண்ணிக்கையும் மேற்படி அறிக்கையின் கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

படிக்க:
பாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் !
சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் !

குறிப்பாக 2010-ம் ஆண்டில் இருந்து கொத்தடிமைத் தொழிலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அமெரிக்காவில் கொத்தடிமைத் தொழிலாளர்களை அதிகளவில் பயன்படுத்துவது அந்நாட்டு பாதுகாப்புத் துறை.

சவுதியைச் சேர்ந்த தைமிமி குழுமம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் பெறுமானமுள்ள ஏராளமான ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட்டுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களுக்கு உணவு சப்ளை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களை வென்றுள்ள தைமிமி குழுமம், கொத்தடிமைத் தொழிலாளிகளை பணியில் ஈடுபடுத்தியிருப்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலமாகியுள்ளது. 2011-ம் ஆண்டு பரவலாக ஊடகங்களில் இப்பிரச்சினை வெடித்ததைத் தொடர்ந்து தைமிமி குழுமத்தின் மீது 11 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து ஏழைகளை கவர்ந்திழுக்கும் தைமிமி குழுமம், அவர்களிடம் ஓட்டல் வேலை என பொய் சொல்லி ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கி போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாதம் ஆயிரம் டாலர் சம்பளம் என வாய் வார்த்தையாய் சொல்லி விட்டு, ஒப்பந்தத்தில் 400 டாலரே எழுதப்பட்டிருக்கும் – இதே போல், ஒப்பந்தங்களில் மாற்றி எழுதப்பட்ட விசயங்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அத்தொழிலாளிகள் படிப்பறிவு பெற்றவர்கள் இல்லை.

வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து ஏமாற்றி பிடித்து வரப்படும் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு  ஆபத்தான இடங்களில் பணிக்கமர்த்தியுள்ளது தைமிமி குழுமம். தகிக்கும் பாலைவன வெப்பத்தில் சிறிய தகரக் கொட்டகைகளுக்குள் ஆறேழு தொழிலாளர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளது. மேலும், தொழிலாளர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் பிடுங்கி வைத்துக் கொள்ளும். அயல் நாட்டுத் தொழிலாளர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இருக்க வேண்டும் என்பது அமெரிக்க பாதுகாப்புத் துறையில் உள்ள விதி – இது மீறப்பட்டுள்ளது என்பதில் இருந்தே உயரதிகாரிகளின் ஆசியின்றி கொத்தடிமை முறை நிலவுவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்க இராணுவ முகாம்களில் பணியாற்றும் கொத்தடிமைகள்.

இதே போல் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் காண்டிராக்ட் நிறுவனமான டைன்கார்ப் எனும் மற்றொரு நிறுவனம், போஸ்னியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் வைத்து விபச்சார விடுதியே நடத்தியது 1999-ம் ஆண்டு அம்பலமாகி நாறியது. டைன்கார்ப் நிறுவனம் இந்த குற்றங்களுக்காக உரிய தண்டனை பெறவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அந்நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய அதன் முன்னாள் ஊழியரோ கொலை மிரட்டல்களுக்கு அஞ்சி போலீசுக் காவலில் முடங்கிக் கிடக்கிறார். இதே நிறுவனத்திற்கு மீண்டும் ஆப்கானில் இராணுவ ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. மீண்டும் 2009-ம் ஆண்டு ஆப்கானிய சிறார்களைக் கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபத்தியது அம்பலமானது.

இது ஏதோ ஒரு சில காண்டிராக்ட் நிறுவனங்களின் பிரச்சினை அல்ல. அமெரிக்க இராணுவம் வெளியிடும் டெண்டர்களை வெல்வதற்கான போட்டியில் குறைந்த தொகையை குறிப்பிடுகின்றன. இவ்வாறு வெல்லப்படும் ஒப்பந்தங்களில் இருந்து இலாபம் ஈட்ட ஒரே வழி தொழிலாளர்களுக்கான ஊதியத்தைக் குறைப்பது. அதற்கு ஒரே உத்திரவாதமான வழி கொத்தடிமை முறை. அனைத்தும் சட்டப்பூர்வமாகவே நடந்தேறுகின்றது. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஒரு குறிப்பிட்ட கூலி என்பது நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக யார் குறைந்த கூலிக்கு செய்ய முன் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்த வேலைக்கான ஒப்பந்தத்தைக் கொடுக்கின்றனர். இதன்மூலம் மறைமுகமாக தெரிந்தே கொத்தடிமை முறை நிலவுவதற்கான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றனர்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அடிமை முறை ஒழிந்து போகவில்லை. அது நம் பார்வையில் படாமல் சட்டப்பூர்வமான முறைகளைப் பயன்படுத்தி மிகச் செழிப்பாக வளர்ந்துள்ளது. முதலாளித்துவத்தின் லாபவெறி அதற்கு தண்ணீர் ஊற்றி உரமிட்டுக் கொண்டுள்ளது.


சாக்கியன்

செய்தி ஆதாரம் :
The US Military and the Slave Trade

ஊட்டச்சத்து குறைபாடு – காலரா : ஏமன் மக்களின் தீராத்துயரம் ! – படக்கட்டுரை

மனில் ஐந்து ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 70 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போர் பல லட்சம் மக்களை பஞ்சத்தின் விளிம்பில் தள்ளியுள்ளது. இதை ‘உலகின் மிக மோசமான மனிதநேய நெருக்கடி’ என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

ஏமன் நாட்டில் சுத்தமற்ற நீர்நிலைகளால் காலரா போன்ற தொற்று நோய்கள் அதிகரித்துள்ளது. ஆதலால், ஏமனில் நீர்நிலைகள் கூட ஆயுதபாணியாக்கப்பட்டிருக்கிறது என்று உள்ளூர் அரசுசாரா தொண்டு நிறுவனம் ஒன்று கூறுகிறது. 1.8 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.

கடந்த சில ஆண்டுகளில் இந்நாட்டில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையால், காலரா நோய்த் தொற்று ஏற்பட்டதில், 12 லட்சம் மக்கள் பாதிப்படைந்தனர்.

Malnutrition-cholera-Yemen-woes
ஏமனில் நீர்நிலைகள் கூட ஆயுதபாணியாக்கப்பட்டிருக்கிறது

அங்கு கிடைத்த தரவுகளின்படி, ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி கூட்டணிப் படை, 20 ஆயிரம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அத்தாக்குதல்கள் நடத்தப்பட்ட பகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட மக்கள் வசிப்பிடப் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்குப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வான்வழி, கடற்படைத் தாக்குதல் மற்றும்  கடல்வழிப் பாதை முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை முடக்கிவிட்டன. இதனால் ஆரோகியமான, சத்தான உணவு கிடைப்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. ஊட்டச்சத்து குறைப்பாட்டால் குழந்தைகள் பெரும்பாலும் நோஞ்சான் குழந்தைகளாகவே வளர்கிறது.

நாட்டின் பல பகுதிகளில், ஊட்டச்சத்து குறைபாடு தடுப்பு மையங்கள் இருந்தும், டஜன் கணக்கான மக்கள் நாள்தோறும் மணிக்கணக்கில் வரிசையில் காத்து நிற்கின்றனர். மையத்தின் தாழ்வாரத்தில், தன் இரண்டு வயது பெண் குழந்தையை மடியில் வைத்து அமர்ந்திருந்தார் அகமது முகமது அல் பஹியாலி. பசியால் கதறும் தன் குழந்தைக்கு தண்ணீரை மட்டுமே கொடுக்க முடிகிறதே என கவலைபடுகிறார், அகமது.

படிக்க:
ஏமன் மக்கள் மீது காலராவை ஏவிவிடும் அமெரிக்க-சவுதி கூட்டணி
♦ ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை

“என் குழந்தை தொடர்ந்து வாந்தி எடுக்கிறாள். யாராவது அவளைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இங்கு அழைத்து வந்திருக்கிறேன். இது காலராவா அல்லது வேறு நோய்த் தொற்றா என்று எனக்கு சரியாக தெரியவில்லை.

நாங்கள் ஏழைகள். போருக்கு முன்பு நான் சவூதி அரேபியாவில் வேலை செய்து கொண்டிருந்தேன். இப்பொழுது எனக்கு வேலை, வீடு என்று எதுவுமில்லை; வேறு இடத்திற்கு செல்லவும் வழியில்லை. எங்களது மோசமான இந்த நிலைமைக்கு கடவுள் மட்டுமே உதவி செய்ய முடியும்” என்கிற அகமதுக்கு இரண்டு வயது பெண் குழந்தையும் சேர்த்து மொத்தம் 11 குழந்தைகள்.

“குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவினை எங்களால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் மாவு மட்டுமே உண்கின்றனர். சில நேரங்களில் வாரக் கணக்கில்கூட அவர்களுக்கு சத்தான பழங்கள், காய்கறிகள், பால் போன்ற எதுவும் கிடைக்காது” என்கிறவர், “நான் ஒரு பிச்சைக்காரனைப் போல் உணர்கிறேன். இந்தப் போர் என் கண்ணியத்தைப் பறித்துக் கொண்டது” என்று ஆதங்கப்படுகிறார் அகமது.

Malnutrition-cholera-Yemen-woes-1ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வலுவாக உள்ள ஒரு நகரத்தில், சவூதி கூட்டணி படையினரால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தையும் தாயும், சாடா (Saadah) மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Malnutrition-cholera-Yemen-woes-2வறண்டு வரும் நீர்நிலைகளால், 1.45 கோடி மக்கள் சுத்தமான குடிநீரும் சுகாதாரமும் இன்று தவிக்கின்றனர். இதனால் காலரா போன்ற நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

Malnutrition-cholera-Yemen-woes-3ஏமனில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் கடுமையான பஞ்சத்தைச் சந்தித்துள்ளன. ஹாஜா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படும் உணவுப் பொட்டலங்கள்.

Malnutrition-cholera-Yemen-woesமருத்துவ முகாமாக மாற்றப்பட்ட பெனி கைஸ் மாவட்ட பள்ளிக்கூடத்தில், தனது இரண்டு வயது குழந்தையுடன் மருத்துவருக்காகக் காத்திருக்கும் அகமது முகமது அல் பஹியாலி.

Malnutrition-cholera-Yemen-woesஅப்ஸ் (Abs) மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவு. நோய்த் தொற்று ஆபத்து தெரிந்தும் தனது வீட்டில் கவனிக்க யாருமில்லாததால் முதல் குழந்தையையும் உடன் அழைத்துவந்துள்ள தாய்.

Malnutrition-cholera-Yemen-woesஅப்ஸ் மருத்துவமனையில் குறைப் பிரசவத்தில் பிறந்த ஒரு குழந்தை. ஏமனில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகள் பாதிக்கு பாதி மூடப்படலாம் எனவும், இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை ஆபத்துக்குள்ளாகும் எனவும் ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Malnutrition-cholera-Yemen-woesவடமேற்கு ஏமனில். அப்ஸ் மருத்துவமனை பகுதியிலிருந்து, 20 கி.மீ தூரத்தில் இருக்கும் அஸ்லாம் கிராமம் மருத்துவ முகாமில், மருந்துச்சீட்டிற்காக குழந்தைகளுடன் காத்திருக்கும் தந்தையர்கள்.

Malnutrition-cholera-Yemen-woesமருத்துவ முகாமாக மாற்றப்பட்ட பள்ளிக்கூடத்தில் சிகிச்சைப் பெற்று வரும் ஏமன் பெண்.

Malnutrition-cholera-Yemen-woesஊட்டச்சத்து குறைப்பாடுடைய 9 மாதக் குழந்தையை பரிசோதிக்கும் பெண் மருத்துவத் தாதி. அக்குழந்தையின் எடை 2.8 கிலோ.

Malnutrition-cholera-Yemen-woesஆப்ஸ் மாகாணத்தில் உள்ள தண்ணீர் கிணறு. கிணற்று தண்ணீரை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் அத்தண்ணீரில் காலரா பரவக்கூடும் என்றும் மனிதநேய அமைப்புகள் எச்சரித்துள்ளன.


செய்தி ஆதாரம் : In Pictures: Malnutrition, cholera add to Yemen woes
தமிழாக்கம்  :
ஷர்மி

மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! புதிய கலாச்சாரம் நூல்

ழுபது ஆண்டுகளில் காணாத பொருளாதார நெருக்கடி, மீள வழி தெரியாத பொருளாதார மந்தத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்” என்று பொருளாதார அறிஞர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் பொருட்கள் சேவைகள் மட்டுமின்றி கிராமப்புற நகர்ப்புற ஏழைகளின் அடிப்படையான நுகர்வும் கணிசமாக குறைந்திருக்கிறது. ஐந்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட்டுகளின் விற்பனை வீழ்ச்சி, அதற்குச் சான்று பகர்கிறது.

பெரு நிறுவனங்களின் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் இதர நுகர் பொருட்களின் வீழ்ச்சியை பேசும் ஊடகங்கள் விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டிருக்கும் மக்களின் நெருக்கடியைப் பேசுவதில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க, செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி, “ஐந்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தை 3-லிருந்து 5 ட்ரில்லியனாக உயர்த்தப் போகிறேன்; நாடு முழுவதும் 100 சுற்றுலா மையங்களை உருவாக்கப் போகிறேன்” என்று கூசாமல் சவடால் அடிக்கிறார். நாட்டு மக்களோ, சாப்பிடும் ரொட்டி-பிஸ்கெட் கூட கிடைக்கவில்லையே என்று பதறிக் கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடி குறித்து ஆளும்வர்க்கமே கூவத் தொடங்கியதால் வேறு வழியின்றிச் சில சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன். அவை ரொட்டி வாங்க முடியாத இந்தியர்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான சலுகைகள் அல்ல. பட்ஜெட்டில் போடப்பட்ட சூப்பர் ரிச் வரி நீக்கம், கருப்புப் பண முதலைகளுக்கு ஏஞ்செல் வரி ரத்து, சி.எஸ்.ஆர். மீறல் குற்றம் என்ற விதி நீக்கம், பொதுத்துறை வங்கிகள் மூலம் தாராளக் கடன் வழங்க ஏதுவாக ரூ, 70,000 கோடி மறுமூலதன உதவி, கார்ப்பரேட் கடனுக்கான வட்டி குறைப்பு, அரசு இலாகாக்கள் புதிய கார்களை வாங்குதல்… என அனைத்துமே பன்னாட்டு நிதி மூலதனச் சூதாடிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கான சலுகைகள்.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு என்ற அறிக்கையை கவுன்சில் ஃபார் சோசியல் டெவலப்மென்ட் என்ற அமைப்பு ஜூன் மாதம் வெளியிட்டுள்ளது. 2000-களில் சமூக ஏற்றத்தாழ்வு 6 மடங்கு அதிகரித்திருக்கிறது. 2015-ம் ஆண்டில் மக்கட்தொகையின் மேல்தட்டில் இருக்கும் 1 விழுக்காடு கோடீசுவரர்கள் நாட்டின் செல்வத்தில் 22% வைத்திருந்தனர். அது 2018-ல் 58.4% ஆக அதிகரித்து விட்டது என்று கூறுகிறது அவ்வறிக்கை.

மோடி அரசின் பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு மக்களின் பொருளாதாரத்தை பேரழிவுக்குள் தள்ளுவதில் பெரும்பங்காற்றின என்பது உண்மையே. எனினும், இவற்றைத் தவிர்த்திருந்தால் நெருக்கடியே வந்திருக்காது என்பது உண்மையல்ல. இன்று ஏற்பட்டிருக்கும் வேண்டல் (demand), சுருக்கம் அல்லது மக்களின் வாங்கும் சக்தியின்மை என்பது அடிப்படையில் புதிய தாராளவாதக் கொள்கை தோற்றுவித்திருக்கும் விளைவு. இந்த அபாயத்தை தொகுத்துத் தருகிறது இந்நூல்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி – புதிய கலாச்சாரம் அக்டோபர் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

“மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ.1,76,000 கோடி: யாருக்கு இலாபம்? யாருக்கு இழப்பு?
  • தேங்கிக்கிடக்கும் கார்கள்! வேலையிழக்கும் தொழிலாளர்கள்! காரணம் என்ன?
  • தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி: மோடி வித்தைகள் பலிக்காது!
  • முதலாளித்துவத்தின் சாதனை: டெட்ராய்ட் நகரம் திவால்!
  • அமெரிக்கக் கடன் நெருக்கடி: மைனரின் சாயம் வெளுத்தது!
  • தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்!
  • செல்லாக்காசாகிறது ரூபாய்! திவாலாகிறது மறுகாலனியாக்கப் பாதை!
  • படுவீழ்ச்சியில் இந்திய சேவைத்துறை: ஓராண்டு காணாத பின்னடைவு!
  • உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!
  • பொருளாதார வீழ்ச்சி: மறைக்கும் நிர்மலா! வீதிக்கு வரும் ஆதாரங்கள்!
  • மேட்டுக்குடிகளின் நுகர்வில்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதாம்!
  • கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி!
  • வாகன உற்பத்தி சரிவு: முதலாளிகளின் பொய் புரட்டுகள்!
  • பார்லே பிஸ்கெட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம்!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மீ டு இயக்கம்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

தனது விமானத்துடன் அவன் இரண்டறக் கலந்துவிட்டான் !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 11

மெரேஸ்யெவ் விடாமுயற்சியுடன் நிறையப் பறந்தான். மறுபடி விமானத்துடன் ஒன்று கலந்துவிட, பொய்க்கால்களின் உலோகம், தோல் இவற்றின் ஊடாக அதைப் புரிந்து கொள்ள அரும்பாடுபட்டான். இதில் தான் வெற்றி அடைவதாகச் சில வேளைகளில் அவனுக்குத் தோன்றும். அவன் களிப்புற்று விமானத்தை ஏதேனும் சிக்கலான வடிவுப் பறப்பில் செலுத்துவான். ஆனால் அவன் இயக்கம் சரியானதாக இல்லை, விமானம் இடக்குப் பண்ணுகிறது, தன் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறது என்று உடனேயே உணர்வான். நம்பிக்கை ஒளி மங்கிவிட்டதால் துயருற்று, சலிப்பூட்டும் பயிற்சியில் மறுபடி ஈடுபடுவான்.

இத்தகைய நிலையில் வந்தது வெண்பனி உருகத் தொடங்கும் மார்ச்சு மாதம். ஒரு நாள் விமானத்திடலில் ஒரே காலையில் வெண்பனி சிறிது இளகிக் கருத்து விட்டது. புரையோடிய வெண்பனி தரையோடு தரையாகப் படிந்துவிட்டது. அதன் மேல் இயங்கிய விமானங்கள் உழுசால் போன்ற ஆழ்ந்த தடங்களை ஏற்படுத்தின. அன்று அலெக்ஸேய் தனது சண்டை விமானத்தில் வானில் கிளம்பினான். அப்போது காற்று எதிரிலிருந்து விலாப் புறமாக வீசியது. விமானம் ஒரு பக்கம் விலகிற்று, அலெக்ஸேய் அதை ஓயாமல் நேர்படுத்த வேண்டியிருந்தது. அப்போதுதான், விமானத்தை நேர்பாதைக்குத் திருப்புகையில் தான் அலெக்ஸேய் சட்டெனக் கண்டு கொண்டான் – விமானம் தனக்குக் கீழ்படுகிறது என்பதையும், தான் அதை உள்ளத்தாலும் உடலாலும் முழுமையாக உணர்வதையும். இந்த உணர்வு மின்வெட்டுப் போலப் பளிச்சிட்டது. முதலில் அலெக்ஸேய் அதை நம்பவில்லை. மட்டுமீறிய ஏமாற்றங்களை அனுபவித்தவன் ஆதலால் தனது நல்லதிர்ஷ்டத்தை உடனே நம்ப அவனால் முடியவில்லை.

விமானத்தைச் சட்டென வலப்புறம் திருப்பி ஒரு வளையமிட்டான். விமானம் படிந்து, கணக்காகத் திரும்பியது. மப்பு மந்தாரமான நாள் திடீரென வெயிலொளியில் சுடர்வது போலிருந்தது அலெக்ஸேய்க்கு.

எத்தனை எத்தனையோ நாட்கள் செய்த கடும் உழைப்பின் பலனை இப்போது அவன் எளிதாக அனுபவித்தான். இவ்வளவு நீண்ட காலமாகக் கை வராமல் நழுவிச் சென்ற முக்கிய விஷயம் இப்போது அவனுக்குக் கைவந்து விட்டது. தனது விமானத்துடன் அவன் இரண்டறக் கலந்துவிட்டான், தனது உடலின் நீட்சி போல அதை உணர்ந்தான். உணர்ச்சியோ பிகுவோ அற்ற பொய்க் கால்கள் கூட இந்த ஒன்று கலத்தலுக்கு இப்போது தடையாக இல்லை. தனக்குள் ஊற்றெடுத்துப் பெருகும் உவகையை உணர்ந்த அலெக்ஸேய் சில குறுகிய வளையங்கள் இட்டான், கரணமடித்தான், அடித்து முடித்ததுமே விமானத்தை பம்பரமாகச் சுழலச் செய்தான். தரை சீழ்கையுடன் வெறிகொண்டு சுழன்றது. விமான நிலையமும், பள்ளிக் கட்டிடமும், காற்று நிரப்பிய கோடிட்ட பலூன் பறந்து கொண்டிருந்த வானிலை ஆராய்ச்சிக் கோபுரமும் எல்லாமே மொத்தையான சுழற்சியில் ஒன்று கலந்தன. அலெக்ஸேய் விமானத்தைத் தயக்கமின்றி நேர் நிலைக்குக் கொண்டுவந்து சுருக்கு வளையமிட்டான். அந்தக் காலத்தில் பெயர் பெற்றிருந்த “லா-5” ரக விமானம் தனது வெளிப்படையானவையும் உள்ளார்ந்தவையுமான பண்புகளை இப்போதுதான் அவனுக்குத் தெரியக் காட்டியது. அனுபவசாலியின் கைகளில் இந்த விமானந்தான் எப்படி அற்புதங்கள் செய்தது! ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்ப நுட்பமாகச் செயல்பட்டு, அது மிக மிகச் சிக்கலான கோலங்களை அனாயசமாக இட்டது, வர்ணம்போல் சர்ரென்று கோலங்களை மேலே பாய்ந்தது. கச்சிதமான, லாகவமான, விரைவுள்ள விமானம் அது.

மெரேஸ்யெவ் குடிகாரன் போலத் தள்ளாடிக் கொண்டு அர்த்தமற்ற புன்னகையால் முகம் மலர விமானத்திலிருந்து வெளியே வந்தான். தனக்கு முன்னே கோபக் கனல் வீசிய பயிற்சி ஆசிரியரை அவன் காணவில்லை, அவருடைய வசவுகளைக் கேட்கவில்லை. திட்டினால் திட்டிவிட்டுப் போகட்டும். காவல் தண்டனையா? அதற்கென்ன, குறித்த கெடுவைக் காவலறையில் கழிக்க அவன் தயார். இப்போது இவை எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டாகுமா? அவன் விமானி, நல்ல விமானி, விலைமதிப்பற்ற பெட்ரோல் அவனது பயிற்சிக்காகத் திட்ட அளவுக்கு மேல் செலவிடப்பட்டது வீண் போகவில்லை என்பது தெளிவாயிருந்தது. அவன் மட்டும் போர்முனைக்கு, சண்டை செய்வதற்கு, சீக்கிரமாக அனுப்பப்படட்டும், இந்தப் பெட்ரோல் மதிப்புக்கு நூறு மடங்கு அதிகமாக ஈடுசெய்து விடுவான்!

விடுதியில் அவனுக்கு இன்னொரு மகிழ்ச்சி காத்திருந்தது. தலையணை மேல் கிடந்தது க்வோஸ்தியேவின் கடிதம். முகவரியாளனைத் தேடுகையில் எங்கெங்கே, யார் யாருடைய பைகளில், எவ்வளவு தூரம் அது பயணம் செய்தது என்பதைத் திட்டமாக அனுமானிப்பது கடினமாக இருந்தது. ஏனெனில் உறை கசங்கி நைந்து கறைபட்டு எண்ணெயில் ஊறியிருந்தது. அன்யூத்தா கைப்பட முகவரி எழுதியிருந்த புதிய உறைக்குள் வைக்கப்பட்டு அது அலெக்ஸேயிடம் வந்திருந்தது.

க்வோஸ்தயேவ் தனக்குப் படுமோசமான அனுபவம் நேர்ந்ததாக எழுதியிருந்தான். அவன் தலையில் அடிபட்டிருந்தது. எதனால் தெரியுமோ? ஜெர்மன் விமானத்தின் இறக்கையால், இப்போது அவன் படைப்பிரிவின் மருத்துவமனையில் படுத்திருந்தான். சில நாட்களில் அங்கிருந்து வெளியேறலாம் என்று திட்டம் இட்டிருந்தான். நம்ப முடியாத இந்தச் சம்பவம் நிகழ்ந்த விதம் இதுதான்: ஆறாவது ஜெர்மன் சைனியம் மற்றப் படைகளிலிருந்து துணிக்கப்பட்டு ஸ்தாலின் கிராதின் அருகே வளைத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்களுடைய படைப்பிரிவு பின்வாங்கிய ஜெர்மானியரின் முனைமுகத்தைப் பிளந்து, அங்கு ஏற்பட்ட இடைவெளிக்குள் புகுந்து ஸ்தெப்பி வழியே ஜெர்மன் பின்புலத்தை நோக்கி எல்லா டாங்கிகளுடன் விரைந்து முன்னேறியது. இந்தத் தாக்குதலில் டாங்கிப் பட்டாளத்துக்குத் தலைமை தாங்கினான் க்லோஸ்தியேவ்.

டாங்கித் தொகுதிகள் ஜெர்மன் பின்புலப் படையின் வியூகங்களையும் கிராமக் காப்பரண்களையும் தகர்த்து நொறுக்கிக் கொண்டு முக்கிய ரெயில்வே நிலையங்களை அடைந்து, திடீரெனப் பாய்ந்து அவற்றை இடி போலத் தாக்கின. டாங்கிகள் தெருக்களில் சுற்றி வழியில் எதிர்பட்ட, பகைவரைச் சேர்ந்த எல்லாவற்றையும் குண்டு மாரியால் அழுத்தன. தாணையங்களில் எஞ்சிய படையினர் சிதறி ஓடி விட்ட பிறகு டாங்கிவீரர்களும் கவச மோட்டார்களில் கொண்டுவரப் பட்ட காலாட்படையினரும் போர்த்தளவாடக் கிட்டங்கிகளைத் தீக்கிரையாக்கினர். பாலங்களையும் இருப்புப் பாதை இணைப்பு விசைகளையும், ரெயில் நிலையங்களில் திருப்பு வளையங்களையும் பெயர்த்து அகற்றினார்கள், பின்வாங்கும் ஜெர்மானியர்களுக்கு ரெயில்கள் பயன்படாதவாறு அடைத்துவிட்டார்கள். பகைவர்களின் சேமிப்புக்களிலிருந்து டாங்கிகளுக்கும் மோட்டார்களுக்கும் பெட்ரோல் போட்டுக் கொண்டார்கள், உணவுப் பண்டங்களைத் திரட்டிக் கொண்டார்கள், பின்பு மேலே சென்றார்கள். ஜெர்மானியர்கள் சுதாரித்துக் கொண்டு எதிர்ப்புக்காகத் தங்கள் படைகளைக் கொண்டுவரவோ அல்லது டாங்கிகள் மேலே சென்ற வழியைத் திட்டமாகத் தெரிந்துகொள்ளவோ முற்படுவதற்குள் சோவியத் டாங்கிகள் நெடுந்தூரம் சென்று விட்டன.

“…. இப்படி நாங்கள் முன்னேறுகையில் தான் எனக்கு நேர்ந்தது இந்தத் தொல்லை. படைத் தலைவர் எங்களை அழைத்தார். வேவு விமானம் அவருக்குச் செய்தி தெரிவித்திருந்தது: இன்னின்ன இடத்தில் பிரமாண்டமான விமானத்தளம் இருக்கிறது. ஒரு முன்னூறு விமானங்கள், எரிபொருள், சரக்குகள் எல்லாம் அங்கு இருக்கின்றன. எங்கள் படைத்தலைவர் செம்பட்டை மீசையைக் கிள்ளியவாறு உத்தரவிட்டார்: ‘க்வோஸ்தயேவ், இரவில், சந்தடி இல்லாமல், குண்டு சுடாமல், தன்னவர்கள்போல மரியாதைப்பாங்குடன் விமான நிலையத்தை நெருங்கு. அப்புறம் ஒரு மொத்தமாகக் குண்டுகளைப் பொழிந்தவாறு பாய்ந்து தாக்கு. அவர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டி நீர்த்தூளி செய்துவிடும். ஒரு விமானங்கூடப் பறந்து தப்ப விட்டுவிடாதே.’ இந்தப் பொறுப்பு என் பட்டாளத்துக்கும் என் தலைமைக்குக் கீழ்ப்பட்ட இன்னொரு பட்டாளத்துக்கும் கொடுக்கப்பட்டது. பிரதானப் படைமுந்திய திட்டப்படியே ரஸ்தாவை நோக்கி முன்னேறியது.”

“ஆக, நாங்கள் இந்த விமானத் தளத்தை அடைந்தோம். கோழிக்குடிலுக்குள் நரி போல நுழைந்தோம். நண்பா, அலெக்ஸேய், நீ நம்பக்கூட மாட்டாய்- ஜெர்மன் ஸிக்னலர்கள் இருக்குமிடம் வரை நாங்கள் மளமளவென்று சென்றோம். ஜெர்மனியர்கள் எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, தங்களவர்கள் என்ற நினைப்பில். அதிகாலை, மூடுபனி, எதையும் தெளிவாகக் கண்டுகொள்ள முடியவில்லை. மோட்டார்களும் டாங்கிச் சக்கரங்களும் தடதடத்துக் கணகணத்துக் கொண்டிருப்பது மட்டுமே கேட்டது. அப்புறம் நாங்கள் திடீரென்று பாய்ந்து தாக்கினோம் பாரு. விமானங்கள் வரிசைகளாக நின்றன. நாங்கள் கவசந் துளைக்கும் குண்டுகளை அவற்றின் மேல் பொழிந்து ஒவ்வொரு குண்டுக்கும் ஐந்தைந்து, ஆறாறு விமானங்களாகத் தகர்த்துத் தூள் பரத்தினோம். அப்புறம் பார்த்தோம். இப்படித் தாக்கிச் சமாளிக்க முடியாது என்று பட்டது. துணிச்சல் மிக்க விமானிகள் எஞ்சின்களை முடுக்கத் தொடங்கினார்கள். அவ்வளவுதான், நாங்கள் டாங்கி மேல் கதவுகளை அறைந்து சாத்திக் கொண்டு, விமானங்களை மோதித் தகர்க்கப் புறப்பட்டோம். கவசப் பகுதியால் விமானங்களின் வால்களை இடித்து உடைத்தோம். அவை துருப்பு விமானங்கள், பிரமாண்டமானவை. எஞ்சின்களை எட்டுவது நடவாத காரியமாக இருந்தது. எனவே தான் வால்களைத் தாக்கினோம். வால் இல்லாத விமானம் எஞ்சின் இல்லாத விமானம் போன்றது தானே, அதனால் பறக்க முடியாதே.

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் நான் உற்சாகப் பெருக்கில் அசட்டுத்தனம் செய்துவிட்டேன். மேல் கதவைத் திறந்து நீட்டிச் சுற்றுமுற்றும் பார்த்தேன் நிலைமையை அவதானிப்பதற்காக அதே சமயத்தில் என் டாங்கி ஒரு விமானத்தின் மேல் மடாரென்று போட்டது. நல்ல வேளை, தலைகாப்பு அடியதிர்ச்சியைக் குறைத்துவிட்டது, இல்லா விட்டால் என் ஆட்டம் தீர்ந்திருக்கும் ஒரேயடியாக… ஆனால் இதெல்லாம் வெட்டிப் பேச்சு. நான் குணமடைந்து விரைவில் வெளியேறிவிடுவேன். என் டாங்கி வீரர்களை மறுபடி சீக்கிரமே காண்பேன். என் தொல்லை வேறு ஒன்று. மருத்துவமனையில் என் தாடியைச் சிரைத்துவிட்டார்கள். இவ்வளவுகாலமாகக் கொஞ்சங் கொஞ்சமாக வளர்த்து உருவாக்கியிருந்தேன் அதை. அடர்த்தியாக அகன்று வளர்ந்திருந்தது. அவர்களோ சிறிதும் கருணையின்றி மழித்துத் தள்ளிவிட்டார்கள். அட எக்கேடுங்கெட்டுப் போகட்டும் அந்தத் தாடி! நாம் விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்றாலும் இந்தப் போர் முடிவதற்குள் மறுபடி தாடி செழித்து வளர்ந்து என் முக விகாரத்தை மறைத்து விடும் என்று நம்புகிறேன். ஆனால் ஒன்று தெரியுமா, அலெக்ஸேய்? அன்யூத்தாவுக்கு எதனாலோ என் தாடி பிடிக்கவில்லை. தனது ஒவ்வொரு கடிதத்திலும் அதன் மேல் பாய்ந்த வண்ணமாயிருக்கிறாள்.”

அது நீண்ட கடிதம். மருத்துவமனைச் சலிப்பினால் ஏங்கிப் போய் க்வோஸ்தயேவ் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தான் என்பது தெளிவாயியிருந்தது. ஸ்தாலின்கிராதின் அருகே தன்னுடைய டாங்கிவீரர்கள் டாங்கிகளை இழந்து புதிய டாங்கிகளை எதிர்பார்த்தவாறு காலாட்படையினராக அணிவகுத்துச் சண்டை நடத்திக் கொண்டிருக்கையில் புகழ் பெற்ற மமாயேவ் குன்று வட்டாரத்தில் ஸ்தெபான் இவானவிச்சைக் கண்டதாக அவன் முடிவில் போகிறபோக்கில் எழுதியிருந்தான். முதியவர் விஷேசப் பள்ளியில் பயிற்சி பெற்று இப்போது ஸார்ஜென்ட் மேஜர் ஆகிவிட்டாராம், டாங்கி எதிர்ப்புப் பீரங்கிப் பிளாட்டூனுக்குத் தலைவராம். எனினும் ஸ்னைப்பர் பழக்கத்தை அவர் இப்போதும் விடவில்லையாம். அவருடைய சொன்னபடி பார்த்தால், இப்போது அவருடைய தாக்குக்கு இரையாகும் விலங்கு முன்னைவிடப் பெரியது: காப்பகழிலியிருந்து வெளியே வந்து வெயில் காயும் பாசிஸ்டு ஏமாளி அல்ல, ஜெர்மன் டாங்கி நுட்பமான அமைப்புள்ள உறுதியான இயந்திரம். ஆனால் இந்த விலங்குகளை வேட்டையாடுவதிலும் கிழவனார் சைபீரிய வேட்டைக்காரருக்கு இயல்பான தந்திரத்திலும் அளவற்ற பொறுமையிலும், தாங்குதிறனிலும் தவறாது தாக்குவதிலும் முன்போலவே சிறந்து விளங்குவதாக க்வோஸ்தயேவ் குறிப்பிட்டிருந்தான். தன்னைக் கண்டதும் செட்டாகச் சேமிப்பவரான ஸ்தெபான் இனாவிச் பகைவரிடமிருந்து கைப்பற்றிய மதுப் புட்டியைத் தேடி எடுத்துத் திறந்தாராம். இருவரும் அந்தப் படுமோசமான மதுவைப் பருகினார்களாம்; பழைய நண்பர்கள் எல்லோரையும் நினைவுபடுத்திக் கொண்டார்களாம். ஸ்தெபான் இனாவிச்; மெரேஸ்யெவுக்குத் தாழ்மையான வணக்கங்களைத் தெரிவிக்கச் சொன்னாராம், இருவரும் உயிரோடிருந்தால் போர் முடிந்த பிறகு சைபீரியாவில் தமது கூட்டுப்பண்ணைக்கு வந்து அணில்களையோ பறவைகளையோ வேட்டையாடிக் களிக்கும் படி அழைத்தாராம்.

படிக்க:
நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !

இந்தக் கடிதத்தைப் படித்ததும் மெரேஸ்யெவுக்கு இதமாகவும் இருந்தது, ஏக்கமும் பொங்கியது. நாற்பத்து இரண்டாம் வார்டைச் சேர்ந்த எல்லா நண்பர்களும் வெகு காலமாகவே போரிட்டுவருகிறார்கள். கிரிகோரிய் க்லோஸ்தியேவும் முதிய ஸ்தெபான் இனாவிச்சும் இப்போது எங்கே இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள் அவர்கள்? போர்க் காற்று அவர்களை எந்தெந்த இடங்களுக்கெல்லாம் அடித்துச் செல்லும்? அவர்கள் உயிரோடு தாம் இருக்கிறார்களா? ஓல்கா எங்கே இருக்கிறாள்? …

கமிஸார் வரபியோவின் சொற்களை அலெக்ஸேய் மீண்டும் நினைவு கூர்ந்தான். அவர் சொல்வார்: போர் வீரர்களின் கடிதங்கள் அணைந்துவிட்ட விண்மீன்களின் ஒளிக் கதிர்கள் போல நம்மை வந்து அடைய மிக மிக நீண்டகாலம் எடுத்துக் கொள்கின்றன. சில வேளைகளில் இப்படியும் நேர்வதுண்டு – விண்மீன் எப்போதோ அவிந்து போய்விட்டது, ஆனால் மகிழ்வும் பிரகாசமும் திகழும் அதன் கதிர் இன்னும் நெடுங்காலத்துக்கு இடவெளியை ஊடுருவிப் பாய்ந்து வந்து கொண்டே இருக்கும், அவிந்து மறைத்து விட்ட விண்விளக்கின் அன்பு சுடரும் ஒளிர்வை மக்களுக்குக் கொண்டுதரும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

நாட்டைப் பாதுகாக்க ரஃபேல் ! ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை !

7

ந்திய மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து வாங்கியுள்ள ரஃபேல் விமானத்தில் ஓம் என எழுதுவது, தேங்காய் உடைப்பது, எலுமிச்சை பழத்தை டயருக்கு அடியில் வைப்பது இந்தியாவை இந்து தேசம் என கூறும் மறைமுக அறிவிப்பு.

இதனை டிவிட்டரில் பலரும் கண்டித்துள்ளனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக…

***

எதுக்குடா ரஃபேலு… ரெண்டு எலுமிச்சை, நாலு மஞ்சா கயிறு போதாதா !
மந்திரிச்சி விட்டா எதிரி நாடுகளும் பஞ்சா பறந்திடுமே !

நாட்டைப் பாதுகாக்க ரஃபேல், ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை !

ஊடகங்களின் வாயைக் கட்டிய இந்துக் குறியீடு !

ராஜ்நாத்தைப் போல, முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஏ.கே. ஆண்டனி சிலுவையை வரைந்திருந்தால், இந்ந்தியாவும் ஊடகங்களும் கொலைவெறியோடு கதறியிருக்கும் !

கருத்துப்படம் : வேலன்

ஷாலினி :

இது நமது பாரம்பரியம், மதச் சடங்கு என்றெல்லாம் கூறுபவர்களுக்கு, இந்தியா என்பது முசுலீம்கள், கிறித்தவர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் பல்வேறு மக்கள் இந்த நாட்டைஉயர்த்த தங்களது வரியை செலுத்துகிறார்கள். மத்திய அரசாங்கம் ஏன் இந்துக்களின் சடங்குகளை மட்டும் பின்பற்றுகிறது?

சமீர் ஹூடா :

பல்லாயிரக்கணக்கான கோடி செலவழித்து நாட்டைப் பாதுகாக்க ஜெட் விமானம் வாங்கவும். அதனைப் பாதுகாக்க எலுமிச்சையை வாங்கவும். அதற்கு பதிலாக நாட்டைப் பாதுகாக்க ஏன் முதலிலேயே எலுமிச்சையை வாங்கி அனைத்து பணத்தையும் சேமிக்கக் கூடாது ?

ரஹ்மது :

டஸ்ஸால்ட் மற்றும் ஏவியேசன் குழுவினரே, நாங்கள் இப்போதுதான் ரஃபேல் பூஜையைத் துவக்கியுள்ளோம். நாங்கள் கேடு விளைவிக்கும் பார்வைகளின் எதிர்ப்பை நசுக்க, எலுமிச்சையின் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். இந்த வகையான பாதுகாப்பு அமைப்பை ஏன் ரஃபேல் விமானத்தில் நீங்கள் பொறுத்தவில்லை ?

இந்திய மின்னணுப் படை :

ஒருவழியாக ரஃபேல் தயாராகிவிட்டது !

சத்தூட்டி :

மொத்த ரஃபேல் ஒப்பந்தமும் அவரது சமூகத்திற்கு மட்டுமானது என்பதை உறுதி செய்யும் வகையில் வரிப்பணத்தை எடுத்து இந்துத்துவாவை பரப்ப முயற்சிக்கிறார் இந்த அமைதி விரும்பி !

#பாஜகதோற்றது :

இதற்காகத்தான் இந்தியா வேண்டிக் கிடந்தது.

சுஷில் யதி :

இந்த உலகிற்கு நமது பங்களிப்பு! #RafalePujaPolitics

இஷ்ரத் வளி :

மாட்டுக்கறி உண்பவர்களால் செய்துமுடிக்கப்பட்ட விமானத்தை இப்படித்தான் நீங்கள் சுத்திகரிக்க முடியும்
#RafalePujaPolitics

முகமது சமி :

என்ன இது ? தனது மதத்தின் குறியீட்டை ஏன் இவர் வரைகிறார் ? முசுலீம்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு இந்தியனின் வரிப்பணத்தில் இருந்துதான் ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒருவேளை, முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே அந்தோணி, இவரைப் போல சிலுவைக் குறியீட்டை வரைந்திருந்தால், மொத்த இந்தியாவும், அதன் ஊடகங்களும் பெரும் கொலை நடந்ததாகக் கதறியிருக்குமே ? #RafalePujaPolitics

மிதுன் கே மது :

நமது அரசியல் சாசன சட்டப் பிரிவு 51A (h) “ அறிவியல் வேட்கை, மனிதம் மற்றும் அறிந்து கொள்வதற்கும், சீர்திருத்துவதற்குமான உத்வேகம் ஆகியவற்றை வளர்ப்பதுவும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்” என்று குறிப்பிடுகிறது

சந்தீப் வர்ரி :

இந்தியா தனது முதல் ரஃபேல் விமானத்தைப் பெற்றிருக்கிறது. ஒருவேளை, பிரான்ஸ் “விமானத்தின் மீது தேங்காய் உடைத்து விட்டதால் வாரண்டி கிடையாது” என்று கூறிவிட்டது என்றால் என்ன நிலைமை என்பதை கற்பனைச் செய்து பாருங்கள் #RafalePujaPolitics #RafaleDeal

டி.ஆர்.பி.ராஜா :

ரஃபேல் விமானத்தின் சக்கரங்கள் மிகவும் சிறியதாக இருக்கின்றனவா ? அல்லது அந்த எலுமிச்சம்பழங்கள் மிகவும் பெரியதாக இருக்கின்றனவா ? ரஃபேல் பூஜை தொடர்பான அரசியலை மறந்துவிடுங்கள். நான் பெரிய எலுமிச்சைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொள்கிறேன்.

நயீம் :

இந்தியா அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வகை நிறுத்துவான்.
#RafalePujaPolitics

மணீஷ் குப்தா :

#RafalePujaPolitics Is it necessary
இது அவசியமா ?

ஸ்ரீகாந்த் :

அவை சாதாரண எலுமிச்சைகள் அல்ல. அவை மேகமூட்டமான சூழலிலும் எதிரியின் விமானங்களைக் கண்டுபிடிக்கவல்ல ரேடார்கள்.
#RafalePujaPolitics #RajnathSingh #RafaleDeal

பீர் சடாஷா:

என்னத்த சொல்ல ? #RafalePujaPolitics

சுரேஷ் திக்வால்:

“120 மில்லியன் டாலர் பாதுகாப்பு” எதிர் “5 ரூபாய் எலுமிச்சை”. இந்தியா இப்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளது.
#RafalePujaPolitics #RafaleOurPride

வொய்ட் ப்ளேஸ்:

மொத்த உலகும் இந்தியாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது! ஒன்னுத்துக்கும் ஆகாத பசங்க ! என்ன செய்கிறார்கள்? இவர்கள் என்ன பைத்தியமா ?

ஷோஹில் ரெய்னா :

மன்னிக்கவும், 56” இன்ச்சைக் காணவில்லை.
#RafalePujaPolitics

ரேட்டோபஸ் :

நம்ம பாதுகாப்பு அமைச்சரையே புரிந்துகொள்ளாத முட்டாள்களாக இருக்கிறார்கள். சக்கரத்திற்கு அடியில் வைக்கப்படும் எலுமிச்சை, நிம்பஸ் எனும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளும். ரேடார்களில் இருந்து மறைந்து கொள்ள உதவும். இது பழைய பாதுகாப்புத் தொழில்நுட்பம். எதிரி விமானம் நம்மைத் துறத்தி வந்தால் “முந்திச் செல்லாதே, பொறுத்துவா” என வரைந்து வைப்போம்.

க்ருஷிகா :

உங்கள் தலைவர் அவரது நண்பருக்கு உதவுவதற்காக அதிக விலை கொடுத்து வாங்கியதால் மட்டுமே இது பெருமைக்குரியதாகி விடுவதில்லை. அது ரஃபேல் ஊழல் என்றாகிவிடுகிறது. பிரான்சில் அமைச்சர் மூலமாக அமானுஷ்ய பூஜைகள் நடத்துவது ஊழலை இல்லாமல் செய்துவிடாது.

க்ருஷிகா :

ரஃபேல் எங்கள் பெருமை என டிவிட் செய்யும் பக்தாள்களுக்கு,
அருமை முட்டாள்களே, இவை ஃபிரெஞ்சு பொறியியலாளர்களால் கட்டப்பட்டது. பிரெஞ்சு அரசுக்கும் திப்பு சுல்தானுக்கும் 18-ம் நூற்றாண்டில் நல்ல உறவு இருந்தது. அவர் பிரெஞ்சுடன் கூட்டணி வைத்திருந்தார். இங்கு ஏதாவது பெருமைக்குரியது என்று சொல்லப்படவேண்டுமெனில், தேஜாஸ் மட்டுமே பெருமைக்குரியதாக இருக்க முடியும். ஏனெனில் அதுமட்டுமே இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

சைது முகமது கான் :

ரஃபேல் டெலிவரிக்கு முன் / டெலிவரிக்குப் பின்

ஸ்நேகா அரோரா :

இது இந்தியப் பாரம்பரியம் #RafalePujaPolitics

ஆர்.கே தகர்வால் :

#RafalePujaPolitics
வெறும் 20 நாள் இடைவெளி மட்டுமே இருந்தது. இந்த இடைவெளிக்கு இந்தியா செலவழித்த தொகை ரூ. 58,000 கோடி. பிரான்ஸ் லட்சுமியை அள்ளிக் கொண்டது. “துர்கா பூஜை” எதிர் “லட்சுமி பூஜை”

சுனில் :

நாட்டைப் பாதுகாக்க இந்தியா ரஃபேல் விமானத்தை வாங்கியது. பின்னர் ரஃபேலைப் பாதுகாக்க எலுமிச்சையை வாங்கியது. பின்னர் எலுமிச்சையைப் பாதுகாக்க பூச்சிக் கொல்லியை வாங்கியது.
#RafalePujaPolitics

சயீது அகமது :

பிரெஞ்சு பொறியாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் தொடர்ச்சியாக மாட்டுக்கறியும், பன்றிக்கறியுமே உண்டு வருகின்றனர். அதன் காரணமாகவும், மாட்டுக்கறி தின்னும் பாகிஸ்தானின் கெட்ட பார்வைக்கு எதிராகவும், புனிதப்படுத்துதலும் சுத்திகரிப்பும் இத்தகைய சடங்குகளால் செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது.#RafalePujaPolitics

ராஜேந்திர குமார் :

எலுமிச்சையும் மிளகாயும் கொண்டுவா ! ரஃபேலைப் பாதுகாப்போம் ! #RafalePujaPolitics


தொகுப்பு :  நந்தன்

நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !

1-NEET-Exam-impersonation

நீட் தேர்வின் மூலம் தகுதியான மருத்துவர்களை கொண்டு வரப்போவதாக அறிவித்து, நாடு முழுவதும் ஏராளமான கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் என்று இந்தியாவை புரட்டிப்போடும் அளவிற்கு பம்மாத்து காட்டியது மோடி அரசு. ஆனால் அதெல்லாம் தற்போது புஸ்வாணமாகி சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. மத்தியப்பிரதேசத்தின் ”வியாபம்” மோசடி போல், தற்போது நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி நடந்திருக்கிறது.

Neet Impersonation student arrest
உதித் சூர்யா

நடப்பாண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். அவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவருடைய மருத்துவப்படிப்பு சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் ஒன்றை கொடுக்க உதித் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதேசமயம் இந்த வழக்கு விசாரணையை டிஜிபி திரிபாதி சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இவ்விவகாரம் செய்தித் தாள்களிலும், அரசியல் பத்திரிகைகளிலும் பரபரப்பான செய்தியாகப் பேசப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பதியில் தலைமறைவாக இருந்த உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்தனர்.  இதனிடையே, நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அவர்களின் அறை மற்றும் புகாருக்கு உள்ளான உதித் சூர்யாவின் வகுப்பறை, நேர்காணல் நடந்த இடங்களிலும் சி.பி.சி.ஐ.டி சோதனை நடத்தியது. மேலும், தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் எழிலரசனிடமும் விசாரணை மேற்கொண்டது.

படிக்க:
ஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு ! | பொ.வேல்சாமி
♦ ’ நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் !

இதைத்தொடர்ந்து, உதித் சூர்யாவிற்கு உதவியதாக பேராசிரியர்கள் வேல்முருகன், திருவேங்கடம் உள்ளிட்டோர் மீது தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கானாவிலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில், “தான் எழுதிய தேர்வின் ஹால்டிக்கெட்டை வைத்து தான் கலந்தாய்வில் பங்கேற்க முடியும். வேறொரு நபர் புகைப்படத்துடன் பொருந்திய ஹால்டிக்கெட்டை வைத்து, இவர் எப்படி கலந்தாய்வில் ஈடுபட முடியும்” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இவருக்கு பின்னால் இருந்து உதவியவர்கள் யார்? கலந்தாய்வின் போது ஏற்பட்ட சிக்கல்கள் என்னென்ன என்பதை மேற்கொண்டு விசாரணை செய்ய வேண்டும் என்றும் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நீட் தேர்வு மையம் நடத்தி வரும் ஜார்ஜ் ஜோசப்-க்கு பெரிய அளவில் பங்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீட் தேர்வு மையம் நடத்தி வரும் ஜார்ஜ் ஜோசபை திருவனந்தபுரத்தில் கைது செய்துள்ளார்கள்.

***

இதற்கு முன்பாக, நீட் தேர்வின் மோசடி கும்பல் யார் எல்லாம் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ சீட் பெற்றார்களோ அவர்களுடைய பெற்றோர்களுக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டி இருக்கிறது ஒரு கும்பல். சத்ய சாய் மருத்துவக்கல்லூரி மாணவி அபிராமி அவருடைய தந்தை மாதவன், பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவர் பிரவீன் அவருடைய தந்தை சரவணன், எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மாணவர் ராகுல் மற்றும் அவருடைய தந்தை டேவிட்  உள்ளிட்டவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.

NEET Exam impersonation
தொடரும் நீட் மோசடி கைதுகள்.

சற்றும் எதிர்பாராத இந்த போன் கால்களால் திகைத்த பெற்றோர்கள் தங்களுடைய ஏஜெண்ட்டை தொடர்புகொள்கிறார்கள். ஏஜெண்ட் “தொடர்பு எல்லைக்கு அப்பால்” இருக்க, வேறு வழியின்றி தங்களுடைய வழக்கறிஞர் மூலம் போலிசின் உதவியை நாட அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தது போலிசு. இவர்களிடம் நடத்திய விசாரணையில் நீட்  மோசடியில் சிக்கிய அனைவரும் பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டியுட்  ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் படித்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இக்கல்லூரியில் போதிய கட்டமைப்பு வசதியில்லை என்பதால் பாதியில் இழுத்து மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் தன் நண்பரான சஃபியின் மூலம் ரஷீத் என்கிற ஏஜெண்டை தொடர்பு கொண்டு அவருடைய உதவியுடன் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். சஃபியும் தன் மகன் இர்பானுக்கு மோசடியின் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சீட் வாங்கி தந்திருக்கிறார்.  இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், இவ்விவகாரம் வெளியில் வந்தபிறகுதான் சஃபி ஒரு போலி மருத்துவர் என்பதும் அம்பலமாகியது.

ஆள்மாறாட்ட மோசடியின் மீது நம்பிக்கை இல்லாத ப்ரவீன், ராகுல் ஆகிய இருவரும் ஆவடியில் உள்ள ஒரு கோச்சிங் செண்டர் மூலம் இரண்டு இடங்களில் விண்ணப்பித்து தேர்வு எழுதி சேர்ந்திருக்கிறார்கள், என்று கூறப்படுகிறது.

படிக்க:
காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !
♦ பொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38

மேலும் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விழுப்புரம், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசு தரப்பில் கூறப்படுகிறது. அவர்களையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

impersonation சஃபியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களூரை சேர்ந்த ரஷீத் மும்பை, டெல்லி, லக்னோ ஆகிய ஊர்களில் உள்ள நீட் பயிற்சி மையங்கள் மூலம் போலியான மாணவர்களை தயாரித்து அவர்களை தமிழக மாணவர்களின் பெயரில் தேர்வு எழுத வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த மோசடி கும்பலின் நெட்வொர்க் கேரளா, உ.பி, ராஜஸ்தான், பீகார் என்று இந்தியாவின் பல மாநிலங்களில் விரிந்து இருப்பதாகச் கூறப்படுகிறது. எனில், இந்த ஆள் மாறாட்டம் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நடந்திருப்பதற்கான வாய்ப்பு கண்டிப்பாக உண்டு.

இது மத்தியப் பிரதேசத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வில் நடத்தப்பட்ட வியாபம் ஊழலை நினைவுபடுத்துகிறது. இந்தியா முழுவதும் பரந்து விரிந்த புரோக்கர் வலைப்பின்னல்கள், மருத்துவக் கல்லூரிகள், கோச்சிங் செண்டர்கள், மாநில பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மிகப்பெரிய கூட்டணிதான் வியாபம் ஊழலை நடைமுறைப்படுத்தியது.

தற்போது நடைபெற்றிருக்கும் நீட் மோசடியிலும் கோச்சிங் செண்டர் முதல் பல்கலைக் கழகம், நீட் தேர்வு வாரியம் உட்பட ஒரு மிகப்பெரிய கூட்டுக் களவானி கும்பல் ஈடுபட்டிருகிறது.

வியாபம் ஊழல் அம்பலமான போது, ஆளும் பாஜக அரசுக்கு எதிரான சாட்சியாக இருந்த ஒவ்வொருவராக மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். இது குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர் வரை 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

நீட் தேர்வின் மூலம் வியாபம் தேசியமயமாக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் கோடி மதிப்பிலான மோசடி வியாபாரம் கல்லாக் கட்டத் தொடங்கியுள்ளது. அதுவும் நம்முடைய வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், நமக்கான வாய்ப்பை பறித்துவிட்டு, இந்த ஒட்டுண்ணிகள் அமர்ந்து மருத்துவம் படிக்கவிருக்கிறார்கள் !!

ஊழலும் மோசடியும் தேசியமயமானதற்குப் பெயர்தான் நீட். ஆனால் அதற்கு வெளிப்பூச்சு என்னவோ ”தகுதியும் திறமையும்தான்” !


எழில்

ஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு ! | பொ.வேல்சாமி

0
haider-ali--sringeri-shankara-mutt

ஹைதர் அலி – சிருங்கேரி சங்கராச்சாரியார் மடம் – பீஜாபூர் தளபதி ரண்தவுல்லாகான்

நண்பர்களே…

பொ.வேல்சாமி

சென்ற வாரம், “சிருங்கேரி மடத்தின் வரலாறு” ( கி.பி.788 முதல் 1964 முடிய ) என்ற நூலைப் பார்த்தேன். என் வழக்கப்படி உடனே அந்நூலை ஒருமுறை புரட்டினேன். அப்பொழுது கண்ணில்பட்ட இரண்டு செய்திகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒன்று ஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு பற்றிய செய்திகள்; இரண்டு சிருங்கேரி மடத்தின் நலனுக்காக பீஜப்பூர் சுல்தானின் படைத்தளபதி ரண்தவுல்லாகானின் செய்த உதவிகளைப் பற்றிய செய்திகள்.

இந்த பீஜப்பூர் சுல்தானிடம் “’சத்ரபதி சிவாஜி”யின் தந்தை துணைப்படைத் தளபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்திகள் உள்ள பக்கங்களை படங்களாக உங்கள் பார்வைக்குத் தருகின்ற அதே வேளையில் இந்நூலின் pdf வடிவ இணைப்பையும் கொடுத்துள்ளேன்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குறிப்பு : சிருங்கேரி மடத்தை சங்கராச்சாரியார் முதன்முதலாக உருவாக்கப்பட்டது என்று கூறுவார்கள்.

உணர்வரிய மெய்ஞ்ஞானம் ஓங்கு பெரும் பீடம் : சிருங்கேரி வியாக்யான பீடத்தின் குரு பரம்பரை வரலாறு (A. D. 788 முதல் 1964 முடிய)

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

என்ன கதைப்பது ? | அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

ரு துறையில் பிரசித்தி பெற்றவரை திடீரென்று சந்தித்தால் வாயடைத்து நிற்பது என் வழக்கம். அப்படியிருக்க வீடு தேடிவந்த கொலைகாரனிடம் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது. அத்தோடு மொழிப்பிரச்சினை வேறு எனக்கு இருந்தது. இது நடந்தது பல வருடங்கள் முன்பு. இன்று அதையெல்லாம் தாண்டி நான் வந்திருந்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருடனும் பேசுவதை கலையாகவே வளர்த்து வைத்திருக்கும் சிலரை காணும்போது ஏற்படும் பொறாமையை நிறுத்தமுடியவில்லை.

சமீபத்தில் ஒபாமா கனடா வந்திருந்தார். அவரை கனடிய ஆளுனர் விமானத்திலிருந்து இறங்கியதும் வரவேற்றார். அரை நிமிட நேரத்தில் இருவரும் சிரித்து சிரித்து பேசினார்கள். இதை தொலைக்காட்சி காமிராக்கள் உலகெங்கும் ஒளிபரப்பின. அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்பதை எவ்வளவு கற்பனை வளம் உள்ளவராலும் ஊகிக்கமுடியாது.

ஒருமுறை நான் நைஜீரியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் வோலே சோயிங்காவுடன் கைகுலுக்க நேர்ந்தது. ஒரு முழு நிமிடம் நான் ஒன்றுமே பேசவில்லை. அப்பொழுதே அவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றிருந்தார். அந்த தருணம் நழுவிப் போனது. ‘உங்கள் சிறைக் கவிதைகள் படித்தேன், நல்லாயிருந்தது’ என்று சொல்லியிருக்கலாமோ என்று பின்னர் பட்டது. ஆனால் யோசித்துப் பார்த்தபோது மௌனமாக இருந்ததே சரியென்று தோன்றியது.

உலகப் பிரபலமானவர்களை எதேச்சையாக சந்திக்கும்போது என்ன செய்யவேண்டும்? முதல் நிமிடத்திலேயே அவரை புகழக்கூடாது. சிலருக்கு அது அவமானமாகவும் கூச்சமாகவும் இருக்கும். எரிச்சலைக்கூடத் தரும். ‘உங்கள் புத்தகத்தை வாசித்தேன், அதுபோல ஒன்றை என் வாழ்நாளில் படித்தது கிடையாது என்று சொல்லலாமா?’ அதனால் அவருக்கு என்ன பிரயோசனம். அதிக பெறுமதி வாய்ந்த அவருடைய நேரத்தை பகிர்ந்துகொள்ளும்போது நீங்கள் சொல்வது அவருக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும்; அல்லது வித்தியாசமாகவாவது இருக்கவேண்டும். குறைந்த பட்சம் ஒரு சம்பாசணையை கிளப்புவதற்கான சுவாரஸ்யத்தையாவது தரவேண்டும்.

சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டுக்கு விருந்துக்கு போயிருந்தேன். அந்த நண்பர் எந்த விசயத்தையும், எந்த ஆளுடனும், எந்த சமயத்திலும் பேசுவதற்கு தயாராயிருப்பவர். அவருடைய அறிவு ஆழமில்லாதது, ஆனால் அகலமானது. மொழி தெரியாத எஸ்கிமோவை அவர் சந்திக்க நேர்ந்தால் சில நிமிடங்களில் எஸ்கிமோக்களுக்கு பிடித்த அஸாலீக் ரொட்டியை எப்படி மிருதுவாகச் செய்வது என்று அவர் கற்றுக் கொடுத்துக்கொண்டிருப்பார். அந்த நண்பர் விருந்து முடிந்த பின்னர் ஒரு புகைப்படத்தை எனக்கு காட்டினார். அதில் நண்பரும் இன்னொரு 75 வயது மதிக்கத்தக்க வெள்ளைக்காரரும் இருந்தனர். அந்த வெள்ளைக்காரர் ஒரு காலத்தில் உலகம் முழுவதற்கும் தெரிந்தவர். ஒரு கிராமத்து குழந்தைக்குக்கூட அவருடைய பெயர் பரிச்சயம், ஆனால் எனக்கு தெரியவில்லை. நண்பர் ‘அவர் நீல் ஆம்ஸ்ரோங், சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர்’ என்றார்.

Neil-Armstrongநான் உடனே பரபரப்பாகி, அப்படியா எங்கே சந்தித்தீர்கள், என்ன பேசினீர்கள் என்று கேள்விகளை அடுக்கினேன். பொஸ்டனில் ஒரு கருத்தரங்கில் நீல் ஆர்ம்ஸ்ரோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அங்கே அவருடன் பேசுவதற்கு நண்பருக்கு சில நிமிடங்களை ஒதுக்கினார்கள். நண்பர் கேள்விகள் ஒன்றையும் முன்கூட்டியே தயாரித்திருக்கவில்லையாதலால் அந்தக் கணம் மனதில் தோன்றியதை கேட்டிருக்கிறார்.

நண்பர்: சந்திரனுக்கு போனது சரி, செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் பயணிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடக்கின்றனவா?

ஆர்ம்ஸ்ரோங்: நான் இதை உத்தியோகபூர்வமாகச் சொல்லமுடியாது. ஆனால் நாசாவில் அதற்கான ஆராய்சிகள் ஆரம்பமாகிவிட்டன. இன்னும் இருபது வருடங்களில் செவ்வாய் கிரகத்தை நோக்கி மனிதன் பயணம் செய்யக்கூடும்.

நண்பர்: முதன்முதலில் சந்திரனை நோக்கி பயணித்தபோது உங்களுக்கு பயம் இருந்ததா?

ஆர்ம்ஸ்ரோங்: இருந்தது, ஆனால் பயணம் பற்றிய பயம் அல்ல. சோவியத் யூனியன் விஞ்ஞானிகள் மனிதன் இல்லாத விண்கலம் ஒன்றை சந்திரனுக்கு அனுப்பி அங்கே நாங்கள் காலடி வைப்பதற்கு முன்னர் அவர்கள் கொடியை நாட்டுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள் என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தது. அது நடந்துவிடுமோ என்ற பயம் அந்த பயணம் முழுக்க எங்களிடம் இருந்தது. ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை.

நண்பர்: மறக்கமுடியாத சம்பவம் ஏதாவது?

ஆர்ம்ஸ்ரோங்: மறக்க முடியாதது அல்ல, துன்புறுத்திய சம்பவம். நாங்கள் சந்திரனில் இறங்கிய பிறகு உடனடியாக தரையில் கால் வைப்பது என்ற திட்டமில்லை. ஓய்வெடுத்த பிறகுதான் அதைச் செய்வதாக இருந்தோம். ஆனால் சந்திரனுக்கு போன பிறகு அதை மாற்றினோம். சந்திரனில் இரண்டரை மணி நேரம் நானும் என் சக விண்வெளிப் பயணி அல்டிரினும் சோதனைகள் நடத்தினோம். சந்திரன் தன்னைத்தானே சுற்ற 28 நாட்கள் எடுக்கும். சந்திரன் பூமியை சுற்றவும் அதேபோல 28 நாட்கள் எடுக்கும். ஆகையால் சந்திரனின் ஒரு பக்கம் எப்பவும் பூமியை பார்த்தபடியே இருக்கும். சந்திரனில் பகல் 28 நாட்கள் என்றால் இரவும் 28 நாட்கள். அங்கே காற்று இல்லாதபடியால் காலை மாலை என்றெல்லாம் கிடையாது. வெப்பமோ தாங்கமுடியாது, 102 டிகிரி செண்டிகிரேட். அந்தக் காலத்து விண்வெளி உடை கார் ரேடியேற்றர் போல தண்ணீரை சுற்றி அனுப்பி உடம்பை குளிரவைக்கும். ஆனால் அது போதாது. உடம்பு கொதித்தபடி இருந்தது. என்னால் ஓய்வெடுக்க முடியவில்லை; தூங்கமுடியவில்லை. அந்த உடைதான் என்னை இம்சைப்படுத்தியது.

படிக்க:
பகவத்கீதையை திணிக்காதே ! மதுரை ஆர்ப்பாட்டம் – தோழர்கள் கைது !
♦ சட்டவிரோதமான காரியம் | அ. முத்துலிங்கம்

ஒருவித ஆயத்தமும் இல்லாமல் நீல் ஆர்ம்ஸ்ரோங்குடன் இந்த சம்பாசணையை நண்பர் நடத்தியிருக்கிறார். எனக்கு இப்படியான வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்து பார்த்தேன். ஒன்றுமே மனதில் உடனடியாக தோன்றவில்லை. ஆற அமர சிந்தித்தபிறகு நான் ஆம்ஸ்ரோங்கிடம் இப்படி கேட்டிருக்கலாம் என்று பட்டது. ‘விண்வெளி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது நீங்களும் அனுப்பினீர்கள் ஆனால் உங்கள் விண்ணப்பம் ஒருவாரம் பிந்தி, முடிவுதேதி கடந்தபிறகு போய்ச் சேர்ந்தது. டிக்டே என்பவர் உங்கள் விண்ணப்பத்தை ரகஸ்யமாக எடுத்து ஏற்கனவே வந்திருந்த விண்ணப்பங்களுக்கு நடுவில் செருகிவிட்டார். ஆகவே நீங்கள் பயிற்சிக்கு தேர்வானீர்கள். எப்போதாவது நீங்கள் டிக்டேக்கு நன்றி சொன்னீர்களா?’ என்று கேட்டிருக்கலாம். ஆனால் உடனுக்குடன் மனதில் தோன்றியதைக் கேட்டு ஒரு சம்பாசணையை சரியான திசையில் செலுத்துவது என்பது என் நண்பர் போன்றவர்களுக்கே சாத்தியமானது.

padminiபிரபலமான ஒருவரைக் கண்டு மௌனமாக இருப்பதிலும் பார்க்க மோசமானது அவரிடம் மோசமான கேள்விகளைக் கேட்பது. நடிகை பத்மினி ஒருமுறை கனடாவுக்கு வந்திருந்தார். ஐம்பது வயதான ஒரு பெண்மணி விமான நிலையத்துக்கே வந்துவிட்டார், அவரை வரவேற்க. அவருக்கு பத்மினியை முன்பின் தெரியாது. ஆனால் அதற்காக அந்தப் பெண்மணி அதிகாலையிலேயே எழுந்து மிகையான ஒப்பனை செய்ததில் முகம் ஒரு நிறத்திலும், கழுத்தும் கைகளும் வேறு நிறத்திலும் இருந்தன. முதல் நாள் இரவே காசுகொடுத்து தலையலங்காரம் செய்து கதிரையில் உட்கார்ந்தபடியே இரவு தூங்கியதாகச் சொன்னார். இந்தப் பெண்மணி தன் மனதில் பத்மினியிடம் கேட்பதற்கான ஒரு கேள்வியை முப்பத்தைந்து வருடங்களாக காவி வருகிறாராம். பத்மினி கனடா மண்ணில் காலடி வைத்து சரியாக அரை மணி நேரம்கூட கழியும் முன்னர் அவரிடம் இந்த நடுத்தர வயது பெண் கேட்ட கேள்வி: ‘நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்துகொள்ளவில்லை?’

நான் பிரபலமானவர்களை தேடிப் போய் சந்திக்கும்போது எப்படியும் ஒரு வித்தியாசமான கேள்வியை கேட்டு சம்பாசணையை தொடங்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். அப்படிக் கேட்டால்தான் அவருக்கும் கேள்விக்கு பதில் சொல்வதற்கான ஒரு சுவாரஸ்யம் ஏற்படும். கனடாவில் வசிக்கும் பிரபல எழுத்தாளர் மார்கிரட் அட்வூட்டை சந்தித்தபோது நான் முதல் கேள்வியாக அவருடைய புத்தகத்தைப் பற்றிக் கேட்கவில்லை. அவருடைய சிவப்பு சுருண்ட தலைமுடியை பற்றிய கேள்வியை எழுப்பினேன். ‘இளவயதில் இருந்து இன்றுவரை உங்கள் தலைமுடி ஸ்டைல் மாறவில்லை. இதை பராமரிப்பதற்கு ஏதாவது விசேஷமாக செய்வீர்களா?’ இதுதான் கேள்வி. அவருடைய முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை அப்போது பார்த்திருக்கவேண்டும்.

அவர் ‘இந்த முடி என்னுடைய ஐரிஷ் மூதாதையர் மரபில் வந்தது. நான் அதை பராமரிக்க சிரமப்பட்டு ஒன்றுமே செய்ததில்லை. அதன் வளர்ச்சியில் நான் குறுக்கிடாமல் இருக்கிறேன். அவ்வளவுதான்’ என்றார். அதற்கு பிறகு மீதி கேள்விகளை இலகுவாக தொடர முடிந்தது. அதே மாதிரிதான் Zana Brisky யும். 2005-ம் ஆண்டு அவர் இயக்கிய Born into Brothels விவரணப்படத்துக்கு ஒஸ்கார் விருது கிடைத்தது. நான் அவரிடம் ‘விருதுச் சிலையை நீங்கள் எங்கே வைப்பீர்கள்? வீட்டிலா அலுவலகத்து மேசையிலா, வங்கி லொக்கரிலா?’ என்று கேட்டேன். அவர் அலுவலகத்து மேசை என்று சொல்லிவிட்டு சிரித்தார். அதன்பிறகு சம்பாசணை தடையின்றி ஓடியது.

படிக்க:
நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு | அ முத்துலிங்கம்
♦ மோடி வரும் பின்னே ! #gobackmodi வரும் முன்னே !

எனக்கு தெரிந்த ஒரு விஞ்ஞானி அமெரிக்காவில் ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பில் கேட்ஸ் உரையாற்றினார். இந்த விஞ்ஞானியும் பேசினார். அவர்களுக்கிடையில் சில அடிகள் தூரமே இருந்தது. ‘நீங்கள் பில் கேட்சிடம் ஏதாவது பேசினீர்களா?’ என்று கேட்டேன். அவர் ‘இல்லை, என்ன பேசுவது. விண்டோஸ் என்னுடைய கணினியில் நன்றாக வேலை செய்கிறது என்று சொல்வதா?’ என்றார். ‘என்ன இப்படிச் செய்து விட்டீர்கள்? பில் கேட்ஸ் நிலத்துக்கு அடியில் வீடு கட்டி வாழ்கிறார். அவர் வீட்டு கூரையில் புல் முளைக்கிறது. அதுபற்றி கேட்டிருக்கலாமே’ என்றேன். நண்பரோ ‘நீங்களே அடுத்தமுறை அதை அவரிடம் நேரில் கேளுங்கள்’ என்று பதில் இறுத்தார்.

உலகப் புகழ் பெற்றவர்களை சந்திப்பதற்கு அருமையான இடம் பறக்கும் விமானம்தான். நான் ஒன்றிரண்டு பேரை விமானத்திலேயே சந்தித்திருக்கிறேன். விமானத்தில் அவர்கள் அகப்பட்டால் அவர்கள் உங்களிடமிருந்து தப்பி ஓட முடியாது. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் அல்லது தூங்குவதுபோல பாசாங்கு செய்யலாம். தூங்கினாலும் தூக்கம் கலைந்து எழும்பும்போது மீண்டும் தொடரலாம். ஒருமுறை பக்கத்தில் அமர்ந்த எழுத்தாளர் ஒருவரிடம், ‘நீங்கள் ‘எனக்கு இன்று சுகமில்லை, ஆகவே கவிதை எழுத முடியாது. நான் கட்டுரைதான் எழுதுவேன்’ என்று சொன்னீர்களாமே? அது உண்மையா?’ என்று கேட்டேன். அவர் அப்படி சொன்னதே கிடையாது. அவர் ‘உண்மையில்லை’ என்று சொல்வார் அல்லது வேறு பதில் கூறுவார். எப்படியும் ஒரு சம்பாசணை ஆரம்பமாகிவிடும்.

இப்பொழுதெல்லாம் பயணம் செய்யும்போது சில கேள்விகளை தயாராக வைத்திருக்கிறேன். தற்சமயம் உலகத்தில் நடிப்பிற்கு அதிக சம்பளம் வாங்கும் அஞ்சலினா ஜூலியை விமானத்தில் தற்செயலாக சந்தித்தால் அவரிடம் கேட்பதற்குகூட என்னிடம் கேள்விகள் உள்ளன. ‘உங்கள் பெயரில் ஆண் பெயர் இல்லை, இரண்டுமே பெண் பெயர்கள். அதற்கென்ன காரணம்? என்று கேட்கலாம். அல்லது ‘நீங்கள் இளம் பெண்ணாக இருந்தபோது கோபம் வரும் சமயங்களிலெல்லாம் உங்கள் கைகளில் நீங்களே கத்தியால் வெட்டிக்கொள்வீர்களாமே. இப்பொழுதும் அப்படி செய்வதுண்டா?’

இந்தக் கேள்வியை, அஞ்செலினா ஜூலி சாப்பிட்டு முடித்தபின்னர் விமானப் பணிப்பெண் அவருடைய கரண்டிகளையும், கத்திகளையும் திரும்ப பெற்றுக்கொண்டு போய்விட்டார் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே கேட்பேன். அதற்கு பதிலாக அவர் என்ன சொன்னாலும் அடுத்தநாள் அது பத்திரிகை செய்திதான்.

ஒரு கேள்வியே தயாரிக்க முடியாத ஒருவர் உடனுக்குடன் பதில் சொல்வதென்பது எவ்வளவு கடினமான காரியம். முந்திய பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதங்கள் காரசாரமாக நடக்கும். சுடச்சுட பதிலடி கொடுப்பார்கள். அதையெல்லாம் புத்தகங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை மேற்கோள் காட்டப்படும் சாமர்த்தியமான வாசகம் ஒன்றுள்ளது. ஜோன் வில்க்ஸ் என்பர் எழுத்தாளர், அத்துடன் அரசியல்வாதி. ஒருமுறை அவருடைய எதிரி அவரைப் பார்த்து இப்படி வசை பாடினார். ‘நீ ஒன்றில் தூக்கில் தொங்குவாய் அல்லது மேகநோய் பிடித்து சாவாய்.’ வில்க்ஸ் மூக்குப்பொடி போடும் வழக்கமுள்ளவர். அவர் பொடியை எடுத்து சாவதானமாக மூக்கினுள் உறிஞ்சிவிட்டு இப்படி பதிலடி கொடுத்தார். ‘அது சொல்ல முடியாது. நான் உம்முடைய கொள்கையை தழுவுகிறேனா அல்லது உம்முடைய ஆசைநாயகியை தழுவுகிறேனா என்பதில்தான் அது தங்கியிருக்கிறது.’ உடனுக்குடன் பேசி எதிரியை முறியடிப்பது என்பது ஒரு கலை.

தயாரிப்பு இல்லாமல் பேசும் அறிவு பல வருடங்களுக்கு முன்னர் என்னிடம் இல்லை. ஒரு முழுக் கொலை செய்தவனுடன் இந்த உலகத்தில் எத்தனை பேர் உரையாடியிருப்பார்கள். ஒரு காலத்தில், 50 வருடங்களுக்கு முன்னர், கரோலிஸ் என்ற பெயர் இலங்கையில் பிரசித்தம். காலையில் தினப் பத்திரிகையை திறந்தால் அவனுடைய பெயரும் படமும் முதல் பக்கத்தில் இருக்கும். அந்தப் பிரபலத்துக்கு காரணம் கரோலிஸ் தன் மனைவியை கொலை செய்தவன். அவனுடைய வழக்கு தீர்ப்பு வெளியாகும்வரை அவன் பெயர் பேப்பர்களில் அடிபட்டது. அவனைக் குற்றவாளி என்று கண்ட நீதிமன்றம் அவனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. பிறகு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

நான் மணமுடித்து இரண்டு வருடங்கள் ஆனபிறகு ஒரு நாள் நானும் மனைவியும் மாடியில் நின்றுகொண்டிருந்தோம். எங்கள் ஆறுமாதக் குழந்தை உள்ளே தூங்கியது. அப்பொழுது தூரத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருத்தன் நடந்து வருவது தெரிந்தது. வெள்ளைச் சாரம், வெள்ளை சேர்ட், கறுத்த அகலமான பெல்ட். அவனைப் பார்த்துவிட்டு என் மனைவி ‘ஐயோ கரோலிஸ்’ என்று கத்திவிட்டு உள்ளே ஓடினார்.

படிக்க:
குரல் இருக்கிறது | அ.முத்துலிங்கம்
♦ நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !

நான் எதிர்பார்த்த மாதிரியே கரோலிஸ் வந்து எங்கள் வீட்டு கதவு மணியை அடித்தான். நான் திறப்பதா வேண்டாமா என்று தயங்கிவிட்டு கதவை திறப்பதற்காக கீழே இறங்கினேன். நான் மணமுடிப்பதற்கு முன்னர் என் மனைவி வீட்டில் கரோலிஸ் டிரைவராக வேலை பார்த்தவன். மனைவியுடைய நாலு வயதில் இருந்து அவருடைய 14 வயது வரை, பத்து வருடங்கள் காலையில் பள்ளிக்கூடத்துக்கு ஏற்றிப் போவதும் மாலையில் திரும்ப அழைத்து வருவதும் அவன் பொறுப்பு. நேர்மையானவன், நம்பிக்கையானவன், குணசீலன் என்று பேரெடுத்தவன். அவன்தான் தன் மனைவியை நடு ரோட்டில் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அது போதாமல் என் மனைவி வீட்டுக் காரை இரண்டுமுறை அவள் மேல் ஏற்றி அவள் செத்துப்போய்விட்டதை நிச்சயம் செய்தவன். இந்த தகவல்கள் எல்லாம் நீதிமன்றத்து விசாரணையில் வெளிவந்தன. பன்னிரெண்டு வருடங்கள் கழித்து ஆயுள் தண்டனையை முடித்துவிட்டு கரோலிஸ் வெளியே வந்திருந்தான்.

நான் கதவை திறந்தபோது அவன் இன்னொரு முறை மணியை அடிப்பதற்காக ஒருகையை தூக்கியபடி நின்றான். என்னைக் கண்டதும் அதே கையை மற்றக் கையுடன் சேர்த்து வணக்கம் என்றான். அவன் புறங்கைகளில் மயிர் எக்கச்சக்கமாக முளைத்து காணப்பட்டது. வாய் ஓரம் வெடித்து சிவப்பாக இருந்தது. நானும் வணக்கம் கூறினேன். என்னை அவனுக்கு தெரியாது, நான் மணமுடித்தபோது அவன் சிறையில் இருந்தான். ஆனால் ஊகித்திருப்பான். அவனுக்கு எவ்வளவு தமிழ் தெரியுமோ அதே அளவுக்கு எனக்கு சிங்களம் தெரிந்தது. என் மனைவி நல்லாக சிங்களம் பேசுவார், ஆனால் அவர் மாடி அறை ஒன்றில் நடுக்கத்துடன் ஒளித்துக்கொண்டிருந்ததால் எனக்கு உதவ யாரும் இல்லை. கரோலிசும் வந்த காரியத்தை முடிக்காமல் போகமாட்டான் போல இருந்தது. கரோலிஸ் தன் இடது தோளைப் பார்த்தபடி அடுத்து பேசிய வசனம் முக்கியமானது.

‘பேபி சுகமாய் இருக்கா?’

‘இப்ப தூங்குது. எழும்பியதும் தூக்கிக்கொண்டு வந்து காட்டுறன்.’

என் மனைவி குழந்தையாக இருந்த காலத்திலிருந்து கரோலிஸ் அவரை தூக்கி தோளில் வைத்து விளையாடியிருக்கிறான். அவன் பேபி என்று சொன்னது என் மனைவியைத்தான். தாகூரின் இன்னொரு காபூலிவாலா கதை. சின்ன பேபியும் பெரிய பேபியும் அறையைவிட்டு வெளியே வரவில்லை. ஒரு கொலைகாரனுடன் நான் தனியே விடப்பட்டேன். அவனுடன் என்ன பேசுவது, என்ன பேசாமல் விடுவது என்பது எனக்கு தெரியவில்லை. சாவியை நுழைத்து யாரோ கார் எஞ்சினை முடுக்கிவிட்டதுபோல என் நெஞ்சு டுக்கு டுக்கென்று அடித்தது. அடுத்த ஒரு மணிநேரம் சம்பாசணையை முடிவுக்கு கொண்டுவர நான் என்ன என்னவெல்லாமோ தந்திரங்கள் செய்யவேண்டியிருந்தது.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

பொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 38

பொருளியலாளர் பிராங்க்ளின்

அ.அனிக்கின்

ழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை ஆடம் ஸ்மித் தன்னுடைய நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தில் வகுத்துரைத்தார். ஆனால் அவருக்கு முன்பே சுமார் ஒரு நூற்றாண்டுக் காலம் முழுவதும் அநேகமாகத் தெளிவில்லாத ஊகங்கள் என்ற வடிவத்தில் அதன் மூலத்தைப் பலருடைய எழுத்துக்களில் காண முடியும். அரசியல் பொருளாதாரத்தில் பிராங்க்ளின் அதிகமான அளவுக்குப் பெட்டியைப் பின்பற்றியவர் என்றுதான் கூற வேண்டும்.

முதல் தடவை அவர் லண்டனுக்கு வருகை தந்த பொழுது பெட்டியின் புத்தகங்களைப் படித்திருக்கலாம். ஒருவேளை டாக்டர் மான்டெவில் துறுதுறுப்பான கேள்விகளைக் கேட்ட பத்தொன்பது வயது இளைஞனிடம் அவற்றைப் படிக்குமாறு சிபாரிசு செய்திருக்கலாம். சீப்ஸைட் என்ற இடத்தில் “கொம்புகள்” என்ற மதுக்கடையில் தேனீக்களின் கதையை எழுதிய டாக்டர் மான்டெவில் தனக்கு அறிமுகம் செய்யப்பட்டதாக பிராங்க்ளின் எழுதியிருக்கிறார்.

சில அறிஞர்கள் பிராங்க்ளினுடைய கருத்துக்களை அவருடைய சம காலத்தவர்களில் வயதால் மூத்தோரில் ஒருவரான டேனியல் டிஃபோவோடு – குறிப்பாக அவர் எழுதிய திட்டங்களைப் பற்றிய கட்டுரையோடு தொடர்புபடுத்துகிறார்கள்.

பல ஆராய்ச்சியாளர்கள் பிராங்க்ளின் மீது பெட்டி தாக்கம் செலுத்தியதாகக் கருதுகிறார்கள்; இவர்கள் பிராங்க்ளின் எழுதிய முதல் பொருளாதாரக் கட்டுரையை (காகிதப் பணத்தின் தன்மை, அவசியத்தைப் பற்றி ஒரு எளிமையான ஆராய்ச்சி) பெட்டியின் நூல்களோடு ஒப்பிடுகிறார்கள்.

1751-ம் வருடத்தில் பிராங்க்ளின் மக்கள் தொகை இயலை பற்றி ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார். இந்தக் கட்டுரை பொருளாதார இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இக்கட்டுரையிலும் பெட்டியின் தாக்கத்தைக் காண முடியும். அவருடைய கட்டுரைகளில் பிராங்க்ளின் அமெரிக்காவின் மாநிலங்களில் நடைமுறையில் இருந்த நிலைமைகளைப் பயன்படுத்தி வெளித்தலையீடு இல்லாமல் ”இயற்கையான நிலைமையில்” ஒவ்வொரு இருபத்தைந்து வருட காலத்திலும் மக்கள் தொகை இரண்டு மடங்காக அதிகரிக்க முற்படுகிறது என்ற சுவாரசியமான கருத்தை வெளியிட்டார். பிற்காலத்தில் மால்தஸ் இந்த மதிப்பீட்டைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கைக்கு அவசியமான பொருள்களின் உற்பத்தி மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காட்டிலும் ஆபத்தான வகையில் குறைவாகவே இருக்கும் என்றார்.

Benjamin_Franklin-Daniel_Defoe-political-economy
டேனியல் டிஃபோ (இடது) மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின்.

எனினும் மால்தசின் கருத்துக்களில் இருந்த வரலாற்று ரீதியான நம்பிக்கையின்மைக்கும் பிராங்க்ளினுக்கும் முற்றிலும் சம்பந்தமில்லை. அதோடு பகுத்தறிவுக்குப் பொருத்தமான வகையில் சமூகத்தை அமைத்துக் கொண்டால், வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை ஏராளமான அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்று அவர் நம்பினார். அமெரிக்காவின் மக்கள் தொகை அதிகமாகப் பெருக வேண்டும், அதுவே அந்தப் புதிய கண்டத்தின் வளர்ச்சிக்கு அவசியமான முன் தேவை என்றும் கருதினார்.

கிரேட் பிரிட்டனைப் பற்றி அவர் பின்வருமாறு எழுதினார்: “… இந்த தீவினால் இப்போதுள்ள எண்ணிக்கையினரைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமான பேர்களை – அவர்களை வேலையில் ஈடுபடுத்த முடியுமென்றால் – காப்பாற்ற முடியும்.(1)

பெட்டியைப் போலவே பிராங்க்ளினும் அதிக ஸ்தூலமான வேறொரு பிரச்சினையைப் பற்றி வாதாடுகிற பொழுது உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை வகுத்துரைத்தார். அவர் பிடிவாதமிக்க குவேக்கர்களின் மூளையில் காகிதப் பணத்தை உபயோகிக்கும் கருத்தைத் திணிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அன்று விலையுயர்ந்த உலோகங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தபடியால் இது குறிப்பிடத்தக்க முக்கியமான பிரச்சினையாக இருந்தது.

படிக்க:
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
♦ யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !

இதைச் செய்வதற்கு அவர் முதலில் உலோகப் பணத்தை, அது வகித்த உயர்வான இடத்திலிருந்து, கீழே இறக்க வேண்டும். இங்கே அவருடைய வாதம் பெட்டியின் கருத்துக்களைக் காட்டிலும் ஜான் லோவின் உணர்ச்சிமிக்க வாதங்களை நினைவுபடுத்துகிறது. மதிப்பின் உண்மையான அளவுகோல் பணம் அல்ல, உழைப்பே என்பது பிராங்க்ளினுடைய முக்கியமான கருத்தாகும். அவர்பின் வருமாறு எழுதுகிறார். ”வெள்ளியின் மதிப்பும் மற்ற பொருள்களின் மதிப்பும் உழைப்பின் மூலமாகவே அளக்கப்படும். ஒரு மனிதன் தானிய உற்பத்தியிலும் இன்னொருவன் வெள்ளியை வெட்டியெடுத்து அதை சுத்தப்படுத்துவதிலும் உழைப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு வருடத்தின் அல்லது வேறு ஏதாவது காலப்பகுதியின் முடிவில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த தானியத்தையும் வெள்ளியையும் எடுத்துக் கொள்வோம். ஒன்று மற்ற பொருளின் இயற்கையான விலையாகும்; ஒன்று இருபது புஷல் அளவும் மற்றது இருபது அவுன்ஸ் அளவும் இருக்குமானால், ஒரு அவுன்ஸ் வெள்ளி ஒரு புஷல் தானியத்தை உற்பத்தி செய்த உழைப்பின் மதிப்பைக் கொண்டிருக்கிறது. முன்னைக் காட்டிலும் அருகில் அதிக சுலபமாக வெட்டி எடுக்கக் கூடிய அல்லது வெள்ளி அதிகமாகக் கிடைக்கின்ற சுரங்கங்கள் கண்டு பிடிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். ஒரு நபர் முன்பு இருபது அவுன்ஸ் வெள்ளி கிடைப்பதற்குச் செலவிட்ட அதே உழைப்புக்கு இப்பொழுது நாற்பது அவுன்ஸ் வெள்ளி கிடைக்கிறது. முன்பு இருபது புஷல் தானியத்தை உற்பத்தி செய்யச் செலவிடப்பட்ட அதே உழைப்பு இப்பொழுதும் தேவைப்படுகிறது. அப்படியானால் இரண்டு அவுன்ஸ் வெள்ளியின் மதிப்பு ஒரு புஷல் தானியத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான அதே உழைப்பைக் காட்டிலும் அதிகமான மதிப்பைப் பெறுவதில்லை. ஒரு புஷல் தானியம் முன்பு ஒரு அவுன்ஸ் வெள்ளிக்கு மலிவாகக் கிடைத்தது போல இப்பொழுதும் இரண்டு அவுன்ஸ் வெள்ளிக்குக் கிடைக்கும்.”(2) 

மார்க்ஸ் தம்முடைய அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை என்ற புத்தகத்தில் இந்தப் பகுதியை மேற்கோள் காட்டுகிறார், விஞ்ஞானத்துறையில் பிராங்க்ளினுடைய சேவைகளை மார்க்ஸ் இந்தப் புத்தகத்தில் முதல் தடவையாக, மிகவும் முழுமையாக வர்ணிக்கிறார். பிராங்க்ளின் மதிப்புத் தத்துவத்தை , ”நவீன அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான விதியை வகுத்துக் கொடுத்தார்”(3)  என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் இந்தப் பிரபலமான அமெரிக்கரின் பங்கினைப் பற்றி மார்க்ஸ் கொண்டிருந்த உயர்ந்த அபிப்பிராயத்தை அவர் எழுதிய மூலதனத்தில் மறுபடியும் வலியுறுத்துகிறார். அதில் ”வில்லியம் பெட்டிக்குப் பிறகு மதிப்பின் இயல்பை ஊடுருவிக் கண்ட முதல் பொருளியலாளர்களில் ஒருவர்” (4)  என்று பிராங்க்ளின் பாராட்டப்படுகிறார்.

முதலாவதாகவும் முதன்மையாகவும் பெட்டியின் சிறப்பான கருத்துக்களைத் திறமையோடு பரப்புவதும் பிரச்சாரம் செய்வதும் ஸ்தூலமான பொருளாதாரப் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்துவதும் அவசியமாயிற்று. பிராங்க்ளின் இந்தப் பணியைத்தான் செய்தார். ஆனால் அவர் அதோடு நின்று விடவில்லை. ஸ்தூலமான உழைப்பின் பல வகைகளும் சமமானவை, பொதுவான தன்மையைக் கொண்டவை என்ற கருத்துக்கு பெட்டியைக் காட்டிலும் மிக நெருக்கமாக பிராங்க்ளின் வந்தார். அவர் பெட்டியைப் போல விலையுயர்ந்த உலோகங்களை வெட்டி எடுக்கும் உழைப்பு சிறப்பான குணாம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கருதவில்லை. இதற்கு மாறாக, அவர் தன்னுடைய செய்முறை நோக்கத்தைப் பின்பற்றிச் செல்லும் பொழுது, மதிப்பைப் படைத்தல் என்ற கருத்து நிலையிலிருந்து பார்க்கும் பொழுது இது உழைப்பின் வேறு வகைகளிலிருந்து கோட்பாட்டளவில் சிறிதும் வேறுபட்டிருக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்குத் தன்னாலியன்ற அனைத்தையும் செய்தார்.

ஒரு பண்டத்தில் அடங்கியிருக்கும் உழைப்பின் இரட்டை அம்சத்தை விளக்கும் வகையில் பொருளியல் விஞ்ஞான சிந்தனையில் ஏற்பட்ட படிப்படியான முன்னேற்றம் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தின் வளர்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது; இதன் தொடர்பாக, அரசியல் பொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபின் மொத்த வளர்ச்சியையுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அது நீளமான, கடினமான பாதையாக இருந்தது. இளைஞரான பிராங்க்ளின் இந்தப் பாதையில் அடியெடுத்து வைத்தார்.

படிக்க:
பணக்காரனுக்குச் சொர்க்கம் கூடப் பற்றாக்குறைதான்
♦ நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்

காகிதப் பணத்துக்கு ஆதரவாக பிராங்க்ளின் நடத்திய போராட்டத்துக்கு அரசியல் அடிப்படை மட்டுமல்லாமல் வர்க்க அடிப்படையும் இருந்தது. ஒரு பக்கத்தில் அது குடியேற்ற நாடுகளின் மீது கட்டுப்படுத்துகின்ற உலோகப் பண முறையைக் கண்டிப்பான கட்டுப்பாடுகளோடு திணித்து அதன் மூலமாக அவற்றின் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்த இங்கிலாந்தின் வல்லரசுக் கொள்கையை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. மறுபக்கத்தில் கடன் கொடுத்த பணத்தை உறுதியான கெட்டிப் பணத்தில் பெற விரும்பிய வட்டிக் கடையினர், வணிகர்களுக்கு எதிராக விவசாயிகள், நகரங்களிலுள்ள சாதாரண மக்களின் நல உரிமைகளுக்கு அது ஆதரவாக இருந்தது. வட்டிக் கடையினர் காகிதப் பணத்தைப் “பொய்யான” பணம் என்றும் அதற்கு எதிராக உலோகப் பணத்தை ”மெய்யான” பணம் என்றும் கூறினார்கள்.

வெள்ளியைப் பெறுவதற்காக (குடியேற்றங்களில் தங்கம் அநேகமாக இல்லை) கடன்காரர்கள் புதிய கடன்களை வாங்க வேண்டியிருந்தது அல்லது குறைவான கூலிகளை ஒத்துக் கொள்ள நேர்ந்தது. பணத்தைப் பற்றிய இந்த விவாதத்தில் அடங்கியிருந்த வர்க்க நலன்களை பிராங்க்ளின் முழுமையாக உணர்ந்திருந்தார் என்பதை அவருடைய பிற்காலத்திய எழுத்துக்களில் காண முடியும்.

உலோகப் பணத்தை விமர்சித்த வேகத்தில் பிராங்க்ளின் வெகுதூரம் போய்விட்டார்; எனவே அவருடைய வாதங்களில் தத்துவரீதியில் பலவீனமான அம்சங்கள் இடம் பெற்றன. மதிப்பைப் படைத்தல் என்ற கருத்து நிலையிலிருந்து வெள்ளிக்கும் தானியத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது என்று சரியாக முடிவு செய்த பிறகு பிராங்க்ளின் பரிவர்த்தனையில், பண்டச் செலாவணியில் அவை வகிக்கின்ற பாத்திரத்திலும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் முடிவு செய்தார். அவர் பணமாகப் பயன்படுகின்ற பண்டத்தின் தனி வகையான சமூகப் பாத்திரத்தைப் புறக்கணித்தார்.

Silver coin

அந்தக் காலத்தில் அமெரிக்காவில் வெள்ளி எக்காலத்துக்கும் உரிய சம மதிப்பாக இருந்தது. அதாவது, நீண்ட பரிணாமத்தின் விளைவாக மற்ற எல்லாப் பண்டங்களிலிருந்தும் தனித்து நிற்கின்ற ஒரு பண்டமாக இருந்தது. தானியம் அப்படிப்பட்ட பண்டமல்ல. மற்ற பண்டங்களைப் போலவே அதற்கும் அதன் மதிப்பை எடுத்துரைக்க வெள்ளி -உண்மையான பணம்- அவசியமாக இருந்தது . முதலாளித்துவப் பண்டப் பொருளாதாரத்தில் மதிப்பை எடுத்துக் கூறுவதற்கு வேறு ஒரு வழியும் கிடையாது. இந்த அர்த்தத்தில் வெள்ளி ஒரு “விசேஷமான” பண்டமாக இருந்தது. வெள்ளியின் பிரதிநிதியாக, மாற்றுப் பொருளாக மட்டுமே காகிதப் பணம் இருக்க முடியும். இந்தத் தகுதியின் அடிப்படையில்தான் அவற்றின் செலாவணி பொருளாதார ரீதியில் ”சட்டபூர்வமானதாகும்”.

பணம் ஒரு விசேஷமான சமூகக் கடமையை நிறைவேற்றுகிறது. மற்ற எல்லாப் பண்டங்களையும் போல இல்லாமல் அது சூக்குமமான உழைப்பின் நேரடியான, எக்காலத்துக்கும் உரிய கண்கூடான உருவமாக இருக்கிறது. அதன் மதிப்பை எடுத்துக் கூறுவதற்கு இன்னொரு பண்டத்தின் உதவி அதற்குத் தேவையில்லை; மற்ற பண்டங்களின் மதிப்பை அது எடுத்துரைக்கிறது. பணத்தின் தோற்றமும் பரிணாமமும் மனிதனின் விருப்பத்தோடு சம்பந்தமில்லாமல் புறநிலையான, தானாகவே தோன்றி வளர்ந்த நிகழ்வுப் போக்காகும். எனினும் பிராங்க்ளின் பணத்தை ஒரு ”செயற்கையான” கண்டுபிடிப்பாக, பரிவர்த்தனைக்கு உதவுகின்ற தொழிற்சாதனமாகக் கருதலானார். எனவே உலோகப் பணத்தை பணத்தின் வளர்ச்சியின் தர்க்கரீதியான வடிவமாக அவர் நினைக்கவில்லை; அந்நிய சக்தியினால் திணிக்கப்பட்ட செயற்கையான பொருளாக மட்டுமே கருதினார்.

கடைசியாகப் பார்க்கும் பொழுது, அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான பிரச்சினைகளைப் பற்றி பிராங்க்ளின் செய்த ஆராய்ச்சியின் குறைகளுக்கு அவர் ஆராய்ந்த சமூகத்தில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் குறைவாக வளர்ச்சியடைந்திருந்த நிலையே காரணமாகும். ஆனால் வெகு தொலைவிலுள்ள மாகாண நகரமான பென்சில்வேனியாவில் அவர் வெளியிட்ட பிரசுரம், ஆடம் ஸ்மித்தின் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்துக்கு அரை நூற்றாண்டுக் காலம் முந்தியிருப்பதை நினைத்துக் கொண்டால் அந்த மாபெரும் அமெரிக்கரின் சாதனைகளை சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இருபத்து மூன்று வயதே நிரம்பிய பிராங்க்ளின் தன்னுடைய பிரசுரத்தில் வெளியிட்ட குறிப்பிடத்தகுந்த கருத்துக்கள் பொருளாதார விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. அவர் பிற்காலத்தில் எழுதிய நூல்களில் மதிப்பின் தன்மையைப் பற்றிய பிரச்சினையை அதனளவில் ஒருபோதும் எழுப்பவில்லை; ஆனால் அதைப் பற்றி எழுதுவதற்கு நேர்ந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் பல்வேறு வழிகளில் அதை ஆராய்ந்து எழுதினார். சில சமயங்களில் அதே உழைப்புத் தத்துவத்தின் அடிப்படையிலும் சில சமயங்களில் அவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த பிசியோகிராட்டுகளின் போதனையின் உணர்ச்சியை ஒட்டியும் சில சமயங்களில் அக நிலையான வகையிலும் எழுதினார். பரிவர்த்தனையில் சமத்தன்மை என்பது இல்லை, ஏனென்றால் பரிவர்த்தனையில் ஈடுபடுகின்ற ஒவ்வொரு நபரும் அதிகமான அகமதிப்பை, அதிகமான திருப்தியை அடைகின்றார் என்பது அகநிலைக் கருத்தாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) B, Franklin, The Works of Benjamin Franklin, Vol. 3, London, 1806, p. 115.
(2)  B. Franklin, The Works, Boston, 1840, Vol. II, p. 265.
(3)  K. Marx, A Contribution to the Critique of Political Economy, London, 1971, p. 55.
(4) K. Marx, Capital, Vol. 1, Moscow, 1972, p. 57.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !

1
Pellet-victims

 “பெல்லட் குண்டுகள் உங்கள் உடலில் நுழையும்போது உங்கள் உடலின் ஒவ்வொரு பாகமும் பற்றி எரிவது போன்று உணர்வீர்கள். அவை துப்பாக்கிகளிலிருந்து கிளம்பும் போது மிகவும் சூடாக இருக்கும். உங்கள் கண்களிலோ அல்லது மிக அருகாமையிலிருந்து சுடப்பட்டு உங்கள் உடலில் அவை நுழைந்தால் அவை மிகவும் ஆபத்தானவை. உங்கள் கால்களிலோ அல்லது பின்பக்கமோ அவை மோதியிருந்தால் முதலுதவி மூலம் அந்த தாக்குதலை சமாளிக்கலாம்.” என்கிறார் அகமது (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

அகமது மருத்துவரோ அல்லது மருத்துவ மாணவரோ அல்ல. வணிகவியல் படிக்கும் மாணவர். கடந்த சில வாரங்களாக, அன்ச்சார் பகுதியின் பெல்லட் குண்டு தாக்குதலில் இருந்து மக்களைக் காக்கும் மருத்துவராக செயல்பட்டுவருகிறார்.

Pellet-victims
கோப்புப் படம்

ஸ்ரீநகரில் இருக்கும் சவுராவைச் சேர்ந்த அன்ச்சார் பகுதி, காஷ்மீர் முடக்கப்பட்ட ஆகஸ்ட் 5-ம் தேதியிலிருந்தே போராட்டத்தின் விளைநிலமாக உள்ளது. ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீரே முடக்கப்பட்டு, அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதில் இருந்து அந்தப் பகுதி கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், சவுராவை ஒட்டிய புச்புராவைச் சேர்ந்த அஸ்ரர் அகமது கான் எனும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர், பெல்லட் குண்டுகளின் கொடுங்காயங்களின் விளைவாக மரணமடைந்தார். ஆனால் அவர் கல்லடி பட்டதனால்தான் இறந்தார் என்று கூறியது போலீசு. பெல்லட் குண்டு தாக்குதலால் படுகாயமடைந்தவர்கள் குறித்த தகவல்கள் பலவும் மறைக்கப்பட்டுவருகின்றன. போலீசு அதிகாரிகள் மருத்துவமனையில் மாறுவேடமிட்டு போராட்டத்தில் பங்கு பெற்று சிகிச்சைக்கு வருபவர்களைக் கண்காணித்து வருகிறது. பல சந்தர்ப்பங்களில் காயமடைந்த இளைஞர்கள் கைது நடவடிக்கைக்குப் பயந்து மருத்துவமனைகளுக்குச் செல்வதில்லை.

காஷ்மீரின் சிறப்புத் தகுதி பறிக்கப்பட்ட பிறகு அன்ச்சார் பகுதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத வழிபாட்டிற்குப் பின்னர் போராட்டம் நடைபெறுகிறது. முதல் வெள்ளிக்கிழமை போராட்டம் கடந்த ஆகஸ்ட் 9 அன்று நடைபெற்றது. அன்ச்சார் பகுதி மக்கள் பேரணியாக ஸ்ரீநகரின் நகர்ப்பகுதி நோக்கி வந்தபோது சூனிமார் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

படிக்க:
“கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு
♦ பெல்லட் குண்டு : கண்ணில்லாத என் மகனின் கனவுகள் பொசுங்கிவிட்டன !

“குறைந்தபட்சம் 18 பேராவது அன்று சூனிமார் பகுதியில் படையினரால் காயப்படுத்தப்பட்டிருப்பார்கள். அவர்கள் அருகில் உள்ள ஷெரி காஷ்மீர் மருத்துவ அறிவியல் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஆனால் அன்று மாலையே நாங்கள் அவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். ஏனெனில் போலீசு அவர்களைத் தேடி வரும் என்று எங்களுக்குத் தெரியும்.” என்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த பெல்லட் குண்டு நீக்கு மருத்துவர்கள்.

ஆகஸ்ட் 9 சம்பவத்திற்குப் பின்னர், அப்பகுதி மக்கள் சாலைகளை தோண்டியும், தடுப்பரண்களை ஏற்படுத்தியும் படையினர் தங்களது குடியிருப்புப் பகுதிக்குள் நுழையாமல் தடுத்து வைத்திருந்தனர். பல நாட்களுக்கு அவர்களை இரவுநேர வேட்டையை நடத்த விடாமல் நுழைவாயிலிலேயே நிறுத்தி வைத்திருந்தனர் மக்கள்.

ஆனால் ஆகஸ்ட் 23 அன்று, படையினர் அன்ச்சர் பகுதியில் நுழையும் நிலைக்கு முன்னேறினர். ஜம்மு காஷ்மீர் போலீசு படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசு உள்ளிட்ட படையினர் தடை ஏற்படுத்தப்பட்ட ஐந்து பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.

Pellet-victim
கோப்புப் படம்

“அன்று தொழுகை முடிந்து வந்த சமயத்தில் படையினருடனான மோதல் அன்ச்சார் முழுவதும் தொடங்கியது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 200 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சில சிறுவர்களுக்கு கண்களுக்குள் பெல்லட் குண்டுகள் பாய்ந்தன.” என்கிறார் அகமது.

காயமடைந்தவர்கள் ஜெனாப் சாஹிப் ஆலயத்தின் ஒரு நீண்ட ஹாலில் கூடினர். அங்கு அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. “அந்த சூழல் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எங்களுக்கு உதவ மருத்துவர்கள் குழுவை வரவழைத்தனர். அவர்கள் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அவசரமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்களைப் பார்த்தனர். எங்களைப் போன்ற உள்ளூர் வாசிகள், குறைவான காயம்பட்டவர்களுக்கு உதவி புரிந்தோம். கண்களில் காயமடைந்த சிலரைத் தவிர வேறு யாரும் மருத்துவமனைக்கு செல்லவில்லை” என்கிறார் அகமது.

கடந்த ஆகஸ்ட் 23 அன்று அங்கு வீடியோ எடுத்த ஒரு புகைப்பட பத்திரிகையாளர், மக்கள் வரிசையாக சிறு சிறு குழுக்களாக ஒவ்வொரு நோயாளியையும் கவனித்து வந்தனர் என்கிறார்.

அன்ச்சரை சேர்ந்த பெல்லட் குண்டு காயத்துக்கு சிகிச்சை அளிப்பவர்கள், நோயாளிகளை குணப்படுத்த தங்களது சொந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். அவர்கள் சிகிச்சைக்குப் பயன்படுத்திய உபகரணங்கள், பிளேடு, டெட்டால் முக்கப்பட்ட பஞ்சு ஆகியவையே ஆகும்.

படிக்க:
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !
♦ காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !

பெயர் சொல்ல விரும்பாத பெல்லட் குண்டு காய சிகிச்சை அளிப்பவர் பெல்லட் குண்டுகளை எடுக்கும் வழிமுறைகளைப் பற்றி கூறுகி்றார். “பெல்லட் குண்டுகளை மனித உடலில் இருந்து வெளியேற்ற இரண்டு வழிமுறைகள் உண்டு. அவை தோலின் மேல்புறத்திற்கு அருகே பொதிந்திருந்தால், காயத்தின் இருமுனைகளையும் அழுத்தி பிதுக்கி அந்தக் குண்டை வெளியேற்றிவிடலாம். ஒரு வேளை அது தோலின் உள்ளே ஆழமாகப் பதிந்திருந்தால், முதலில் விரல் முனையைப் பயன்படுத்தி, குண்டு பொதிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்போம். பின்னர், அதன் அருகில் உள்ள தோலை பிளேடால் கீறி பெல்லட் குண்டுகளை வெளியில் எடுப்போம். அதன் பிறகு அந்தக் காயத்தை டெட்டால் முக்கிய பஞ்சால் துடைப்போம். இவை அனைத்தும் மயக்கமருந்து இல்லாமல் செய்யப்படும் சிகிச்சையாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் இவை அனைத்திற்கும் வெகு நேரம் பிடிக்கும்” என்கிறார் அவர்.

சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஆகஸ்ட் 5-ம் தேதியிலிருந்து இவ்வகையில்தான் மருத்துவ உதவி பெற்று வருகின்றனர் என்கிறார் ஒரு உள்ளூர்வாசி. பெல்லட் குண்டு சிகிச்சை அளிப்பவர்கள் முந்தைய காலகட்ட போராட்டத்தில் பங்குகொண்டு இது குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்.  கடந்த 2016-ம் ஆண்டு, புர்ஹான் வானி கொல்லப்பட்ட போது நடந்த பெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் பெல்லட் குண்டுகளால் காயமடைந்தனர். புர்ஹான் வானி கொல்லப்பட்ட போது நடந்த எழுச்சியில் காயமடைந்தவர்களில் சுமார் 15 சிறுவர்களுக்கு நானே தனியாக மருத்துவம் பார்த்தேன் என்கிறார் அகமது. அந்த ஆண்டுகளில் அவரது நண்பர்கள் சிலரும் பெல்லட் நீக்குவதில் வல்லுனர்கள் ஆகியிருக்கின்றனர்.

கைது பயம், மக்களை மருத்துவமனைக்குச் செல்வதில் இருந்து விலக்கிவைக்கிறது. அன்ச்சார் பகுதி மக்கள், பொதுவான காயங்களுக்கு கை வைத்தியங்களையே சார்ந்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருகின்றனர்.

“டைபாய்டிலிருந்து – சளி காய்ச்சல் வரை நாங்களே எங்களுக்கான சிகிச்சையை செய்து கொள்கிறோம். அன்ச்சார் பகுதிக்குள் அதிகபட்சமாக நாங்கள் பெறும் மருத்துவ வசதி, உள்ளூர் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் மூலம் மட்டும்தான் கிடைக்கிறது” என்கிறார் அன்ச்சார் பகுதியில் குடியிருக்கும் ஒருவர். அன்ச்சார் பகுதியில் இருந்து வெளியேற ஒருவரும் தயாராக இல்லை.

அன்றாட வாழ்க்கைப் பிழைப்பிற்குச் செல்லும் குடியானவர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் உள்ளூர் போலீஸ் வித்தியாசம் பார்ப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த செபடம்பர் 14 அன்று, அன்ச்சார் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சவுரா போலீசு நிலையத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு இளம்பெண்ணை தடுப்புக்காவலில் போலீசு வைத்ததை எதிர்த்து அந்த போராட்டம் நடத்தப்பட்டது. சவுரா பகுதியின் பிரதான சந்தையிலிருந்து மருந்துகள் வாங்கச் சென்ற அப்பெண்ணை போலீசு கைது செய்தது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

படிக்க:
ஜம்முவில் ரேப்பிஸ்ட்டை காக்கப் போராடும் பா.ஜ.க !
♦ அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !

சவுரா போலீசு நிலையத்தைச் சேர்ந்த போலீசோ, “அப்பெண் கைது செய்யப்பட்டதை மறுத்ததோடு, சவுரா பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரிகளிடம் கடையை மூடும்படி கூறினார்” என்கிறது. காஷ்மீர் முழுவதும் ஆகஸ்ட் 5 முடிவுகளுக்கு எதிராக உள்ளூர் கடையடைப்புக்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் துப்பாக்கி ஏந்திய சிலர், கடையடைப்பு செய்யாத வியாபாரிகளை கடையை மூடக் கூறி தாக்கியிருக்கின்றனர்.

சில பத்தாண்டுகளாக மொகரம் அனுசரிப்பு ஊர்வலம் காஷ்மீரில் தடை செய்யப்பட்டிருக்கிறது. எனினும் சிறிய அளவிலான ஊர்வலங்கள், பகுதிகளுக்குள் நடத்தப்படுவது வாடிக்கையாக இருந்தது. இத்தகைய மொகரம் ஊர்வலத்தில் மருத்துவ உதவிகள் செய்வதற்காக தன்னார்வலர்கள் பலரும் உடன் செல்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் 10 அன்று நடத்தப்பட்ட சிறிய அளவிலான மொகரம் ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. “அமைதியாக நடைபெற்ற ஊர்வலங்களின் மீது பெல்லட் குண்டு தாக்குதல்களைத் தொடுத்தது போலீசு.” என்கிறார் சடிபால் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர்.

கடந்த செப்டம்பர் 10 அன்று சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு சடிபால் முகாமில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பெண்களும் முதியவர்களும் அடக்கம்.

பெல்லட் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எக்ஸ்-ரே படங்கள். (கோப்புப் படம்)

“தீவிரவாதம் அதிகமாக இருந்த 1990 காலப்பகுதியில் கூட இப்படி பெண்கள் மீதும் முதியவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது இல்லை.

இந்த முறை மொகரம் பண்டிகைக்கு மருத்துவத் தன்னார்வலர்களாக வந்தவர்கள் அனைவரும் பெல்லட் குண்டுகளை நீக்கும் வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. ஆட்கள் அதிகமாக அடிபட்டிருக்கையில், இருக்கும் தன்னார்வ மருத்துவர்கள் போதுமானவர்களாக இல்லை. போதுமான உபகரணங்கள் இல்லை. அச்சமயத்தில்தான் நான், சைக்கிள் சக்கரக் கம்பியை எடுத்து வந்து அதன் ஒரு முனையைக் கூராக்கி, தீயில் காட்டி கிருமிநாசம் செய்து அதனைக் கொண்டு பெல்லட் குண்டுகளை உடலில் இருந்து வெளியே தோண்டி எடுத்தேன். நான் மட்டுமே 12 -க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தேன்” என்கிறார் ஒரு தன்னார்வலர்.

மருத்துவர்கள் இவ்வகைச் சிகிச்சையில் பொதிந்திருக்கும் ஆபத்தைப் பற்றிக் கூறுகின்றனர். இவ்வகை முறையற்ற சிகிச்சைகளின் காரணமாக தோல் மூலமாக பாதிப்புகள் ஏற்படுவதில் தொடங்கி, முக்கிய உறுப்புகள் பாதிப்படைவது வரை ஏற்படக் கூடும் என்கின்றனர். “பொதுவாக நாங்கள் கால் மற்றும் பின்பக்கத்தில் புகுந்த பெல்லட்களை வெளியே எடுக்க மாட்டோம். காயமடைந்தவர்களுக்கு முதலில் நோய் எதிர்ப்பு மருந்துகளைத்தான் கொடுப்போம். தோலுக்கு உட்புறம் இருக்கும் இரும்புத் துகள்கள் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாது. கல்லீரல், சிறுநீரகம், வயிறு, குடல்பகுதி ஆகியவற்றிற்கு அருகில் ஏற்பட்டிருக்கும் பெல்லட் குண்டுகளை மட்டுமே உடனடியாக வெளியே எடுப்போம்” என்கிறார் ஸ்ரீ மஹராஜா ஹரிசிங் மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர்.

காயமடைந்த யாராக இருந்தாலும், அவர் ஆயுதமேந்திய குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் மருத்துவ உதவி பெறுவதற்குத் தகுதியானவர், “பாலினம், இனம், தேசியம், மதம், அரசியல் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த ஒரு பாரபட்சமும் வெறுப்பும் இல்லாமல் மருத்துவ உதவி செய்ய வேண்டும்” என்று, 1949 – ஜெனிவா மாநாட்டுத் தீர்மானங்களின் பிரிவு 12 கூறுகிறது. இந்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது


சுருக்கப்பட்ட தமிழாக்கம் :
நந்தன்
நன்றி : ஸ்க்ரால்.

அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !

0

த்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துகான அமைச்சகம் நிலக்கரி அனல் மின் நிலையத்திற்கான காற்று மாசுக்கட்டுப்பாடு அளவீடுகளை தளர்த்துவதற்கு முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. கடந்த மே 17, 2019 அன்று அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரிதேஷ்குமார் சிங்கின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களுக்கு தற்போது அனுமதிக்கப்பட்டு வரும் காற்றில் வெளியிடப்படும் நைட்ரஜன் ஆக்சைடு மாசு அளவான 300mg/Nm3-லிருந்து 450mg/ Nm3-ஆக அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆற்றல்துறை அமைச்சகம் வெகுநாட்களாகக் கோரி வந்தது. இதனை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனாலும் கடந்த மே மாதத்தில் ஆற்றல்துறை அமைச்சகத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மின்சார வாரியம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையில் நீண்டகாலமாக அனல் மின் நிலையங்களில் மாசுக் கட்டுப்பாட்டு அளவீடு தொடர்பாக ஒத்த கருத்து இல்லாமல் இருந்த காரணத்தால், இரண்டு அமைப்புகளும் இணைந்து அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியாகும் காற்று மாசு அளவைக் கண்காணிப்பது என்றும் அதன் முடிவு அறிக்கைகளில் இருந்து முடிவெடுக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இராஜஸ்தானின் கவாய் பகுதியில் உள்ள அதானி பவர் மின் உற்பத்தி நிறுவனத்தின் இரண்டு மையங்கள், நாக்பூரில் உள்ள தேசிய அனல் மின் கழக சிறப்பு அனல்மின் உற்பத்தி நிலையம், அரியானாவின் ஜாஜ்ஜார் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி மின் உற்பத்தி நிலையம், பஞ்சாபின் ராஜ்புரா பகுதியில் உள்ள நபா பவர் மின் உற்பத்தி நிலையம் ஆகிய நிறுவனங்களின் அனல் மின் உற்பத்தி நிலையங்களை இவ்விரு வாரியங்களும் இணைந்து தொடர்ந்து 48 நாட்களுக்கு (பிப்ரவரி 13, 2019 முதல் ஏப்ரல் 2, 2019 வரை) மாசு அளவைக் கண்காணித்தன.

இந்த நான்கு அனல் மின் நிலையங்களின் 7 மையங்களின் கண்காணிப்பு அறிக்கையை சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு கடந்த மே 2, 2019 அன்றுதான் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பு அறிக்கையின் படி, இந்த 7 மையங்களில் அதானி குழுமத்தின் இரண்டு மின் நிலையங்களில் நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு முறையே 509 mg/Nm3 மற்றும் 584 mg/Nm3-ஆக இருக்கிறது. இது தற்போதைய அனுமதிக்கப்பட்ட அளவான 300 mg/Nm3-க்கு மிகவும் அதிகமாகும். அதே சமயத்தில், இதர 5 அனல் மின் நிலையங்களின் நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு 200 mg/Nm3-லிருந்து 300 mg/Nm3  -குள்தான் இருந்துள்ளது.

படிக்க:
சுற்றுச் சூழலை சீரழிக்கும் அனல் மின் நிலையங்கள் – கண்டுகொள்ளாத அரசு !
♦ நூல் அறிமுகம் : கார்ப்பரேட்டும் வேலைபறிப்பும்

நைட்ரஜன் ஆக்சைடு காற்றில் அதிகமாக கலந்திருப்பது நுரையீரல் தொடர்பான கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம், சுற்றுச் சூழலியல் அமைச்சகம் அனல் மின் நிலையங்களுக்கான காற்று மாசு அளவுகளை நிர்ணயித்தது. குறிப்பாக 2003-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் தொடங்கப்பட்ட அனல் மின் நிலையங்களில், நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு 300 mg/Nm3-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என நிர்ணயித்தது. நிர்ணயிக்கப்பட்ட இந்த காற்று மாசுக் கட்டுப்பாட்டு அளவை நிறுவனங்களால் எளிமையாக எட்டிவிட முடியும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது.

அதே போல 2017-ம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட அனல்மின் நிலையங்களுக்கான அனுமதிக்கப்பட்ட நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாட்டின் அளவு 100 mg/Nm3 .

ஆனால் ஆற்றல்துறை அமைச்சகம்  2003-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுக்கு பிறகு வரை தொடங்கப்பட்ட அனைத்து அனல்மின் நிலையங்களுக்கான நைட்ரஜன் ஆக்சைடு காற்று மாசுபாட்டு அளவை 450 mg/Nm3 -ஆக உயர்த்த வேண்டும் என்று கோரி வந்தது.

அதானி நிறுவனம் தவிர மற்ற எல்லா நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவிற்கு உள்ளாகவே நைட்ரஜன் ஆக்சைடை வெளியிடும்போது, இவ்வளவு அவசரமாக கற்று மாசுபாட்டு வரம்பை உயர்த்துவது ஏன் ? நம்புங்கள் ! ஆற்றல்துறை அமைச்சகத்துக்கும் அதானி குழுமத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !

கடந்த மே மாதம் நடைபெற்ற கூட்டம் குறித்து, தி வயர் இணையதளம் சேகரித்த தகவல்கள் மற்றும் கூட்டக் குறிப்புகளின் படி, இக்கூட்டத்தில் ஆற்றல் அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, தேசிய அனல் மின் கழகம் மற்றும் சுற்றுச் சூழலியல் அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத்துறையின்  எதிர்ப்பையும் மீறி, இந்த மாசுக்கட்டுப்பாட்டு அளவை தளர்த்த முதற்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதில் இறுதி ஒப்புதல் சுற்றுச் சூழலியல் அமைச்சகம் மற்றும் ஆற்றல் அமைச்சகத்தின் செயலர்களால் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரியவருகிறது.

படிக்க:
பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !
♦ ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !

மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத் துறை விஞ்ஞானிகளின் ஆலோசனையின் பேரிலேயே சூழலியல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சுற்றுச் சூழல் அளவீடுகளை பல்வேறு துறைகளுக்கு நிர்ணயிக்கிறது. பல்வேறு துறைசார் வல்லுனர்கள் மற்றும் தொழிற்துறை வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து விவாதித்த பின்னரே அனல் மின் நிலையங்களுக்கான, தண்ணீர் நுகர்வு, சல்பர் டை ஆக்சைடு வெளியீடும் நைட்ரஜன் ஆக்சைடு வெளியீடு ஆகிவற்றிற்கான வரம்புகளை கடந்த 2015-ம் ஆண்டில் நிர்ணயித்தது.

சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தும் பல்வேறு உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளையும், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட உலகம் தழுவிய பிரச்சினைகளையும் கணக்கில் கொண்டே துறைசார் வல்லுனர்கள் மாசுக் கட்டுப்பாட்டு அளவை நிர்ணயிக்கின்றனர். ஆனால் அதானிகளின் மூலதனத்தின் இலாபவெறி இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் ‘ஹைகோர்ட்டாக’ மதித்து உதைத்துத் தள்ளி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. நமது வருங்காலத் தலைமுறை வாழ்வதற்கு ஒரு சுடுகாட்டை தயார் செய்து கொடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?


தமிழாக்கம் :நந்தன்
நன்றி : தி வயர்.