குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 09
கசப்பான மனப் புண்
யாரோ ஒருவர் தன் மகனைப் பற்றி என்னுடன் பேசத் துவங்குகிறார். “அதிகாரத் தொனியுள்ள அம்மாவிற்கு” திருப்தியில்லை: “என் மகன் ஏன் ஒரு தடவை தான் வாசித்தான்? ஏன் அவனுக்கு கிசிலாஃபானைத் தராமல் மரக் கரண்டிகளைத் தந்தீர்கள்?” இக்குழப்பத்தில் ஒரு சிறுமியின் அழுகை என் காதுகளை எட்டுகிறது. “இங்கே வா, ஏன் அழுகிறாய்?”
விழாவிற்கு அவளுடைய அம்மா வரவில்லை. அதனால் தான் அழுகிறாள். வருவதாகச் சொல்லியிருந்தும் வரவில்லை. எனவேதான் அவள் நடனமாடவில்லை. இதய வேதனை மகிழ்ச்சியில் திளைக்க விடவில்லை. அச்சிறுமி என்னோடு ஒட்டிக் கொண்டு அழுகிறாள். இதோ அம்மா வந்து விட்டாள். அவள் என்னை விட்டுப் பிரியவில்லை, அம்மாவை நோக்கிப் பாயவில்லை.
“போய் வருகிறேன்!” என்று அமைதியாகச் சொல்லி விட்டு, கண்ணீரைத் துடைத்தபடி, அம்மாவிற்கான ரகசியத்தை (பரிசை) மறந்த படி அல்லது விட்டு விட்டு அறையிலிருந்து வெளியேறுகிறாள்.
“என்னம்மா ஆயிற்று?” என்று தன் அக்கறையையும் கவனிப்பையும் எனக்கும் மற்ற பெற்றோர்களுக்கும் காட்டும் முகமாக அம்மா கேட்கிறாள்.
ஆனால் அச்சிறுமி பதிலளிக்கவில்லை. ஒருவேளை அம்மா இப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாளா இல்லையா என்று அவளுக்குக் கவலையில்லையோ, ஒருவேளை இப்போது அம்மாவை விட்டுத் தள்ளி தொலைவில், போர்டிங் பள்ளியில் சேர விரும்புகின்றாளோ!
“என் மகன் மீது அதிக அக்கறை காட்டுங்கள்!”
“அதிகாரத் தொனியுள்ள அம்மா” என்னை விட்டு அகலவில்லை.
நான் அவள் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஏனெனில், அரிச்சுவடி விழா முடிந்த உடனேயே, இந்த “அதிகாரத் தொனியுள்ள அம்மாவின் கற்பனைக் குறைகளைக் கேட்பதை விட வேறு முக்கிய வேலைகள் எனக்கு வந்தன. தாழ்வாரத்தில் ஒரு சிறுவன் நிற்கிறான். அனேகமாக அவனும் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல யாராவது வருவார்களெனக் காத்திருக்க வேண்டும். அவன் வீட்டிலிருந்தும் விழாவிற்கு யாரும் வரவில்லை. பெரும் கோபத்துடன் அவன் ஜன்னலருகே நிற்கிறான், இப்போது அவனைப் பார்த்தால் குழந்தையைப் போலவேயில்லை. பெரிய மனிதனின் கவலைகள் அவனிடம் நிறைந்துள்ளன. அவன் எதைப் பற்றிச் சிந்திக்கிறான்? “அப்பா முன் போல் என்னுடன் நட்பாக இல்லை.”
ஏதோ ஒரு நபர் வருகிறார்: “நான் உன்னைக் கூட்டிச் செல்ல வந்திருக்கிறேன். பெற்றோர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்”.
“இது என் மாமா!” என்று சிறுவன் விளக்குகிறான், என்னிடம் விடைபெற மறந்து, சன்னலருகே உள்ள பெரிய பாக்கெட்டை மறந்து செல்கிறான்.
அந்த பாக்கெட்டில் எவை இருக்கின்றன என்று எனக்குத் தெரியும். அதில் அவன் எழுதிய எழுத்துகளின் மாதிரிகள், நூறு, ஆயிரம், மில்லியன் வரையில் அவன் போட்ட கணக்குகள், வரைகணித வடிவப் படங்கள் (இவற்றில் முக்கோணங்கள், சதுரங்கள் தவிர கன வடிவங்களும் பிரமீடுகளும் கூட உள்ளன), இன்னும் சில படங்கள், மாடல்கள் முதலியன இருக்கின்றன. இவற்றில் ஒரு படம் மனிதனின் உடலாகும், இதில் ஒவ்வொரு உள் உறுப்பின் அருகேயும் அதன் பெயர் எழுதப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அவன் இடைவேளைகளில் வகுப்பறையை விட்டு வெளியே செல்லாமல் ரகசிய பாக்கெட்டைத் தயாரித்தான். வீட்டிலிருந்து சுத்தமான தாள்கள், பசை, வண்ணப் பேனாக்கள், கத்தரிக்கோல் ஆகியவற்றைக் கொண்டு வந்தான். அவன் கணக்குகளைப் போட்டான், வரைந்தான், வெட்டினான்…. சில நாட்களுக்கு முன் இதே போன்ற மனித உடலமைப்பு பற்றிய படத்தை எனக்குப் பரிசளித்தான்.
“வயிற்றில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும்! இரைப்பையினுள் உணவு எப்படி வருகிறது, அங்கு ஜீரணம் எப்படி நடைபெறுகிறது என்று எனக்குத் தெரியும்…” என்றான் அவன்.
“நீயா இதை வரைந்தாய்?”
“ஆமாம்.”
“இது என்ன ?”
“இரைப்பை !”
“அது?”
“இதயம்…. இது கல்லீரல்… இங்கே உணவு ஜீரணமாகிறது.”
“உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” “பாட்டி சொல்லித் தந்தாள். அவள் உயிரியல் விஞ்ஞானி.”
“மிக சுவாரசியமான படம்!”
“நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்… நான் இதை உங்களுக்காக வரைந்தேன்.”
“நன்றி !”
இதோ இந்தக் கனமான பாக்கெட்டை, “பெற்றோர்களுக்கான ரகசியத்தை” அவன் ஜன்னலருகே வைத்துச் சென்றுள்ளான். ஒருவேளை அவனுடைய ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள இனி யாருமில்லையோ, தனது இதயத்தை, மனதைத் திறந்து காட்ட ஒருவருமில்லையோ?
மனிதர்களின் பரஸ்பரக் கவனமும் அக்கறையும்தான் துக்கத்தைத் தாங்கிக் கொள்ளவும் மனதால் வீழ்ந்து விடாமல் இருக்கவும் புதிய சக்தி பெறவும் ஒவ்வொருவருக்கும் உதவுகின்றன. பெற்றோர்களின் தீமையோடு கலந்த, குடும்ப மகிழ்ச்சி குலைவதுடன் தொடர்புடைய துக்கத்தை குழந்தை எப்படித் தாங்குவான்? இதைத் தாங்கவல்ல எந்த ஆசிரியரியல் விஞ்ஞானம் எனக்குத் துணை புரியும்? ஒருவேளை அன்பு, பாசம், நேசம், அக்கறை, கவனம் அல்லது கண்டிப்பு – இவற்றில் எது எனக்குக் கை கொடுக்கும்? அல்லது இங்கு வேறு ஏதாவது ஒரு விசேஷ அணுகுமுறை தேவையோ?
“கடினமான குழந்தைகள்” என்றழைக்கப்படுபவர்கள் எப்படித் தோன்றுகின்றனர் என்பதன் அடிப்படைகளைக் கண்டுபிடிப்பதில் எவ்விதக் கஷ்டமும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. நாம்தான் அவர்களை அப்படி ஆக்குகின்றோம். மனதைப் பாழ்படுத்தி, இதயத்தைப் பிழிந்தெடுக்கவல்ல துக்கம் குழந்தையை ஆட்கொள்ளும் போது அவனுக்கு எப்படி உதவுவது? எனது ஆயிரக்கணக்கான சக ஆசிரியர்களைப் போன்றே நானும் இவர்களின் மனதிலும் இதயத்திலும் ஏற்பட்டுள்ள வடுவைப் போக்கும் வழிகளைத் தேட வேண்டியதாகிறது. என்னால் இது முடியுமா?
கேள்வி: //இந்தியாவில் கிறிஸ்துவ மதம் எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது ? இப்போதுள்ள கிறிஸ்துவர்கள் அக்காலத்திலேயே மதமாற்றம் செய்யப்பட்டவர்களா?//
– கமல ஹாசன்
அன்புள்ள கமலஹாசன்,
இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் வரலாறு குறித்து “கண்ணை மறைக்கும் காவிப் புழுதி” நூலின் ஒரு அத்தியாயம் விரிவாக விளக்குகிறது. அதையே இங்கு கொஞ்சம் சுருக்கி இணைக்கிறோம்.
ஏசுநாதரின் நேரடிச் சீடரான புனித தாமஸ் முதல் நூற்றாண்டிலேயே இந்தியா வந்து பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அப்போதைய கிறித்தவம் ஒரு மத நிறுவனமாக மாறியிருக்கவில்லை. எனவே வெறும் சமயக் கொள்கையைப் பரப்புதல் என்பதோடு அது நின்று விட்டது. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகே கிறித்தவ மதமாற்றம், ‘மிஷனரிகள்’ எனும் சமயநெறி பரப்பும் நிறுவனங்கள் மூலமாக உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது.
கிறித்தவ மிஷனரிகள் என்பதன் பொருள் இன்றிருப்பது போல் அன்று இல்லை. அப்போது போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் அடங்கிய ஐரோப்பியப் பகுதிகள் இசுலாமியப் பேரரசில் இருந்தன. மேலும் மங்கோலியர்களின் படையெடுப்பும் அடிக்கடி நிகழ்ந்தது. 1245-ம் ஆண்டில் திருச்சபையைக் கூட்டிய போப், கிறித்தவ உலகத்தைப் பாதுகாக்கும் வழிகளை விவாதித்தார். அதன்படி மங்கோலியர்களின் அரசியல், இராணுவ விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ‘மிஷனரிகள்’ அனுப்பப்பட்டன. இப்படி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களாகத் தோன்றிய மிஷனரிகள் பின்னாளில் சமயநெறி பரப்பி மதமாற்றம் செய்பவையாக மாறின.
அதன்பின் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் துவங்கியது. முதலாளித்துவப் புரட்சி நடப்பதற்கான சூழ்நிலைகள் அரும்ப ஆரம்பித்தன. ஐபீரிய தீபகற்ப நாடுகளான ஸ்பெயினும், போர்ச்சுகலும் வணிகம் செய்யவும், காலனிகளை உருவாக்குவதற்கும், இந்தியாவைப் போன்ற பழைய உலகைச் சேர்ந்த நாடுகளுக்குப் புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் போட்டியிட்டன. அப்படி வழி கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளைப் போட்டித் தகராறின்றி ஸ்பெயினுக்கும், போர்ச்சுகலுக்கும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுக்கும் ‘புனிதப் பணியினை’ போப் செய்து வந்தார். கூடவே கத்தோலிக்க மதத்தினைப் பரப்பும் கடமையையும் அறிவுறுத்தினார்.
1534-ல் இக்னேஷியஸ் லயோலா ஆரம்பித்த ‘ஜெசூட்ஸ்’ என்ற ஏசு சங்கம் இத்தகைய மிஷனரி மற்றும் பாதிரி – துறவியர்களுக்கு முன்னோடியாக விளங்கியது. இதன்பின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிஷனரி அமைப்புகள் தோன்றின. இவற்றில் போப்புக்கும் திருச்சபைக்கும் கட்டுப்பட்டவை ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தும், ஏனையவை புராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்தும் இருந்தன. இருப்பினும் இரு பிரிவைச் சேர்ந்த மிஷனரிகளும் மதத் தொண்டுப் பணிகளோடு தத்தமது நாட்டு ஆட்சியாளர்களின் காலனியாதிக்க நலன்களுக்குச் சேவையாற்றுவதையும் முக்கியமாகக் கொண்டிருந்தனர். இனி இந்தியாவுக்குத் திரும்புவோம்.
போர்ச்சுக்கல் நாட்டின் கடலோடி நாயகனான வாஸ்கோடகாமா தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி, மடகாஸ்கர்தீவு வழியாக இந்திய மாலுமிகளின் உதவியோடு கேரளத்தின் கோழிக்கோடு கடற்கரையில் 1498, மே மாதம் 27-ம் தேதி கரை இறங்கினார். ஆரம்பித்தில் போர்ச்சுக்கீசியர்களின் நோக்கம் வியாபாரம் செய்வதும் கிறித்தவ மதப் பிரச்சாரம் செய்வதும் என்பதாக இருந்தது. வலிமை வாய்ந்த இசுலாமியப் பேரரசினைப் போல கிறித்தவமும் அப்படி உருவாக வேண்டும் என்று திருச்சபையினால் ஊக்கங் கொடுக்கப்பட்ட போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவில் குறிப்பாக கோவா மற்றும் கேரளாவில் சுவிசேசப் பணியைத் துவங்கினர். முதலில் இந்தியாவும் கிறிஸ்தவ நாடுதான் என்று நம்பிய போர்ச்சுக்கீசியர்கள் பின்னர் அப்படி இல்லை எனப் புரிந்து கொண்டனர். எனினும் கேரளாவில் ஏற்கனவே சிரியன் கிறித்தவப் பிரிவு மக்கள் அரைகுறை கிறித்தவ மரபோடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களெல்லாம் முறையான கிறித்தவ மரபிற்கு உட்படுத்தப்பட்டு திருச்சபையின் வலைப் பின்னலில் சேர்க்கப்பட்டனர்.
பிரான்சிஸ் சேவியர்
ஆரம்பத்தில் அடாவடி வழிகள் மூலமாக மறை பரப்பிய போர்ச்சுக்கல் மிஷனரிகள் பின்னர் தமது வழிமுறைகளை மாற்றிக் கொண்டனர். இந்தியக் கிறித்தவ வரலாற்றில் கோவாவில் மட்டுமே வன்முறைப் பாதையினை மேற்கொண்ட முதலும் – கடைசியுமான மிஷனரிகள் இவர்கள் மட்டுமே. அதேசமயம் தொண்டுப் பணியியைத் துவக்கி வைத்தவர்களும் இவர்கள்தான். 1541-ல் பிரான்சிஸ் சேவியர் என்ற புகழ்பெற்ற பாதிரியார் கோவாவில் வந்திறங்கினார். இயேசு சங்க (ஜெசூட்ஸ்) நிறுவனரான இக்னோஷியஸ் லயோலாவின் சீடரான இவர், கப்பலை விட்டிறங்கி முதலில் தொழுநோயாளிகளின் மருத்துவமனைக்குத் சென்றுவிட்டு பின்னரே ஆர்ச் பிஷப் அரண்மனைக்குச் சென்றார். அடுத்த வருடமே கோவாவில் புனித – பால் கல்லூரி நிறுவப்பட்டது. இது ஆசிய மற்றும் ஐரோப்பியப் பாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனமாக விளங்கியது. சேவியரின் முயற்சியினால் கோவாவிலும், கேரளத்தில் மலபார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கிறித்தவத்தைத் தழுவினர். இந்தியாவில் பெருந்திரளான மக்கள் கத்தோலிக்கத்தில் இணைக்கப்பட்டது இதுவே முதன்முறை.
அதன்பின் ஏனைய ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் செழிப்பான பொருளாதாரத்தைச் சுரண்டும் நோக்குடன் வணிகம் செய்ய வந்தன. போர்ச்சுக்கீசியர்கள் கோவா, டாமன், டையூவிலும், டச்சுக்காரர்கள் (ஹாலந்து) கொச்சியிலும், பிரெஞ்சுக்காரர்கள் காரைக்கால், பாண்டிச்சேரி, மாஹேயிலும், ஆங்கிலேயர்கள் சென்னை, மசூலிப்பட்டினம், சூரத், கொல்கத்தா என ஏனைய இந்தியப் பகுதிகளிலும் காலூன்றினர். இவர்களில் போர்ச்சுக்கீசியர்கள் கத்தோலிக்கப் பிரிவையும், ஏனைய நாடுகள் புராட்டஸ்டண்ட் பிரிவையும் சார்ந்திருந்தன. 17, 18-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் நிலைகொண்ட ‘புராட்டஸ்டண்ட்’ நாடுகள் முதலில் முக்கியமாக வணிகத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தன. பின்னர்தான் ஆசியாவில் தமது அரசியல் ஆதிக்கத்திற்கு மதமாற்றம் உதவுமென்பதைப் புரிந்து கொண்டனர். 17ஆம் நூற்றாண்டில் முடிவுற்ற போர்ச்சுக்கீசியர்களின் மதமாற்றம் பெருமளவு மக்களைச் சேர்ப்பதில் தோல்வியுற்றது.
அதன் பின்னரே 18, 19, 20-ம் நூற்றண்டுகளில் பெருமளவு மக்கள் பல்வேறு மிஷனரிகளால் கிறித்தவர்களாய் மாறினர். இன்று இந்திய கிறித்தவ மக்களின் எண்ணிக்கை நார்வே, டென்மார்க், பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகம். மொத்த கிறித்தவர்களில் 70 சதவீதம் பேர் தென்னிந்தியாவிலும், 30 சதவீதம் பேர் வடக்கிலும் வாழ்கின்றனர். அந்தந்த மாநிலங்களின் மொத்த மக்கள் தொகையில் தமிழ்நாடு 5%, கேரளா 26%, ஆந்திரா 4%, கோவா 36%, நாகலாந்து 53%, மணிப்பூர் 19% என கிறித்தவ மக்களின் விகிதம் இருக்கிறது. இப்படிப் பெருந்திரளான மக்கள் மாறுவதற்குக் காரணம் என்ன?
இந்து மதவெறியர்கள் கூறுவதுபோல் கிறித்தவ மிஷனரிகள் ஆசைகாட்டியோ, அச்சுறுத்தியோ இதைச் செய்யவில்லை. பார்ப்பனியத்தின் கொடூரமான சாதிய சமூக அடக்குமுறையின் காரணமாக, தாழ்த்தப்பட்ட – பழங்குடியின மக்களிடம் தோன்றிய விடுதலை ஆர்வமே முதன்மையான காரணம்.
10-ஆம் நூற்றாண்டில் இருந்து தீவிரமான பார்ப்பனமயமாக்கத்திற்கு உள்ளாகிய மாநிலம் கேரளம். வடக்கிலிருந்து வந்த நம்பூதிரிகள் சில பத்தாண்டுகளுக்குள்ளாகவே கேரளத்தின் சமூக பொருளாதார ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். நம்பூதிரி, நாயர், கம்மாளர், ஈழவர் மற்றும் புலையர் என்ற இறுக்கமான சாதிய அமைப்பு கொடூரமான விதிமுறைகளுடன் அமல்படுத்தப்பட்டது. அதற்கென்றே ‘சங்கர ஸ்மிருதி’ எனும் ‘பார்ப்பனக் குற்றவியல்’ சட்டத் தொகுப்பும் இயற்றப்பட்டது. மனுஸ்மிருதியின் கேரளப் பதிப்பான இந்நூலின் விதிமுறைப்படி தொலைவில் வரும் புலையரை ஒரு நம்பூதிரியின் கண்கள் பார்த்து விட்டாலே நம்பூதிரியைத் தீட்டுப்படுத்திய குற்றத்திற்காக அந்தப் புலையரைக் கொலை செய்யலாம். நாயர்களின் மணப் பெண்கள் தமது முதலிரவை நம்பூதிரிகளின் படுக்கையில் கழிக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகள் இந்நூற்றாண்டின் ஆரம்பம் வரை அமலில் இருந்துள்ளன. கேரள சாதியக் கொடுமைகளைக் கண்ட விவேகானந்தர் கேரளாவை ‘பைத்தியக்காரர்களின் நாடு’ என்றழைத்தார். கேரளாவில் இலட்சக்கணக்கான மக்கள் மதம் மாறுவதற்கு இவையே காரணங்கள். பார்ப்பனியத்தின் சமூக அடக்குமுறைக்கு எதிராக ஈழவ மக்களுக்குத் தன்மானமளித்த நாராயண குரு தோன்றுவதற்கான காரணமும் இதுதான்.
காலனிய ஆட்சியின்போது கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கி தென்கேரளத்தை ஆண்டு வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் ஆயிரக்கணக்கான மீனவர்களும், நாடார் சாதி மக்களும் கிறித்தவத்தைத் தழுவினர். ‘பள்ளு, பறை, சாணான், சக்கிலியன்’ என்ற தாழ்த்தப்பட்டவர்களின் படியமைப்பில் மூன்றாம் நிலையிலிருந்த சாணான் என்றழைக்கப்பட்டவர்கள் நாடார் சாதி மக்களாகும். ‘நாடார் பெண்கள் மாராப்பு போடக்கூடாது’ என்ற பார்ப்பன அடக்குமுறை அங்கே சட்டமாகவே இருந்தது. தமது போராட்டத்தின் மூலம் திருவிதாங்கூர் அரசை மாராப்பு போடக்கூடாது என்ற சட்டத்தை இரத்து செய்ய வைத்தார்கள் நாடார் சாதிப் பெண்களும், ஆண்களும். நாடார்கள் கோவில்களுக்குள் நுழையக்கூடாது என்பதை எதிர்த்துத் தனிக்கோவில் – வழிபாட்டு முறையை உருவாக்கினார் ஐயா வைகுண்ட நாதர். நாராயண குருவைப் போல குமரி மாவட்டத்தில் தோன்றிய இச்சீர்த்திருத்தப் பெரியவரின் கொள்கையை ஏற்றவர்கள் ‘ஐயா வழி’ மக்கள் என இன்றும் வாழ்கிறார்கள். எனவே குமரி மாவட்டத்தில் மதமாற்றம் எளிதில் நடந்தேறியதில் வியப்பில்லை.
ஒரிசாவின் சோட்டா நாக்பூர் பகுதியில் முந்த்தா ஆரோன், காரியா போன்ற பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள். பார்ப்பன மேல் சாதி நிலப்பிரபுக்களிடம் நிலமிழந்து, வாழ்விழந்து அடிமையில் உழன்று கொண்டிருந்த இம்மக்களுக்கு பொருளாதார, கல்வி உதவிகளைச் செய்த மிஷனரிகள் வெகு விரைவிலேயே அவர்களுடைய நம்பிக்கை நட்சத்திரமாய் மாறினார்கள். 19-ம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்திற்கு மாறிய இம்மக்கள், அதன் மூலமே ஓரளவிற்கேனும் தமது சுயமரியாதையையும், வாழ்க்கையையும் மீட்க முடிந்தது.
பெண் குழந்தைத் திருமணம், வல்லுறவில் இறந்து போகும் சிறுமிகளான மணப்பெண்கள், குலின் எனப்படும் பார்ப்பனப் பிரிவில் விதவைகள் விபச்சாரிகளாக மாற்றப்பட்டது, விதவைகளுக்கும் – விபச்சாரிகளுக்கும் பிறக்கும் கள்ளக் குழந்தைகள் ஒரு மாதத்தில் சராசரியாக 1000 வரை கொல்லப்படுவது – இவையெல்லாம் வங்காள மாநிலத்தில் பார்ப்பன இந்து மதம் ஏற்றி வைத்த மணி மகுடங்கள்.
இத்தகைய பார்ப்பன ஒடுக்கு முறைகளை ஒழிக்க முகலாயப் பேரரசர்களும், முசுலீம் குறுநில மன்னர்களும் பெரிதும் முயன்றாலும் வெற்றி பெறவில்லை. பின்னர் மிஷனரிகளின் முயற்சியாலும், கிறித்தவக் கல்லூரிகளில் பயின்ற இராஜாராம் மோகன்ராய் போன்ற இந்து அறிவாளிகளின் போராட்டத்தினாலும் ஆங்கிலேய அரசு தடைச் சட்டங்களைக் கொண்டு வந்தது.
இனி, இந்து மதவெறியர்கள் அபாயச் சங்கு ஊதும் வடகிழக்கு மாநிலங்களைப் பார்ப்போம். அஸ்ஸாமும் அதைச் சுற்றியுள்ள 6 மாநிலங்களும் அடங்கிய வடகிழக்குப் பகுதி ஏனைய இந்தியாவிலிருந்து இயற்கை, இனம், மொழி, பண்பாடு என பலவற்றிலும் வரலாற்று ரீதியாகப் பிரிந்தே காணப்படுகிறது. பிரம்மபுத்திரா, பாரக் நதிகளின் இரு பள்ளத்தாக்குகளும் இவற்றினைச் சுற்றி நெருக்கமான மலைகளும் இருக்கின்றன. மலைப் பகுதியில் மங்கோலிய இனப்பிரிவைச் சேர்ந்த பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இம்மக்கள் சீனா, திபெத் வழியாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பேயே குடியேறியவர்கள். பள்ளத்தாக்குப் பகுதியில் கலப்பின மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.
காமரூபம் என்று வரலாற்றில் அழைக்கப்படும் (ஆரியர்களை எதிர்த்து நின்ற) இப்பகுதியை வேதங்கள் ‘கிராதர்கள், மிலேச்சர்கள் வாழும் நாடு’ எனக் குறிப்பிடுகின்றன. 13-ம் நூற்றாண்டில் பர்மிய மன்னரான அஹோமி இப்பகுதியைக் கைப்பற்றிய பின்னர், அவனது வம்சத்தின் ஆட்சி ஏறக்குறைய 6 நூற்றாண்டுகள் நீடித்தது. அஹோமி என்பதே பின்னர் அஸ்ஸாம் என்பதாக மாறிற்று. கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஆரியர்கள் அஸ்ஸாமில் குடியேற ஆரம்பித்தனர். பழங்குடி மக்கள் மலைப்பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். பார்ப்பனியத்தின் வர்ண – சாதிச் சமூகமும், அதை நடைமுறைப்படுத்தும் சட்ட திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டன. அஹோமி வமிச மன்னர்களும் வைணவ இந்து மதத்தைத் தழுவிய பின்னர் ஆரியமயமாக்கம் முழு வேகத்தில் நடந்தேறியது. தாந்திரீகம் எனப்படும் மந்திர வழிபாடும், நரபலி, நிர்வாண பூஜை, சக்தி வழிபாடு எனக் கொடூரமான சடங்குகள் வெறியாடும் பிரதேசமாக அஸ்ஸாம் மாறியது.
இதை எதிர்த்து வந்த புத்த மதம் நெடுங்காலம் செல்வாக்குடன் நீடித்தது. வடகிழக்கில் வர்ண சமூகம் குலைக்கப்பட்டு, புத்த மதம் வந்தது பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் வருத்தப்பட்டார். அதனால்தான் வங்கத்தில் இசுலாமும், வடகிழக்கு மாநிலங்களில் கிறித்தவமும் எளிதில் பரவமுடிந்தது என்று குமுறுகிறார் கோல்வால்கர். இன்றும் வடகிழக்கு மாநில இந்துக்களிடம், ஏனைய இந்திய இந்துக்கள் மத்தியில் காணப்படும் அசமத்துவச் சடங்குகள், இறைச்சி உண்பதில் பேதங்கள், கீழ் சாதியிடம் உணவு பெறுவதைத் தீட்டாகக் கருதுவது போன்ற பார்ப்பனப் பண்புகள் பெருமளவில் கிடையாது. காரணம் இம்மக்களிடம் மரபுரீதியாக இருந்து வந்த பழங்குடியினப் பண்பாடுதான்.
1825-ம் ஆண்டு பர்மியர்களை ஆங்கிலேயர்கள் வென்ற பிறகு வடகிழக்கு மாநிலங்களில் காலனி ஆதிக்கம் தொடங்கியது. அப்போதிருந்து கிறித்தவ மிஷனரிகளின் தொண்டுப் பணியும் தொடங்கியது. பல்வேறு பழங்குடியின மொழிகளுக்குக் கிறித்தவப் பாதிரிகள் ரோமானிய வரி வடிவம் கொடுத்தனர். தாய்மொழிக் கல்விக்கும், ஏனைய மருத்துவ பொருளாதார முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்கு முக்கியமானதாகும். இதனாலேயே கேரளாவிற்கு அடுத்து இலட்சக்கணக்கான மக்கள் இங்கே மதம் மாறினர்.
காலனிய ஆட்சியில் ஒன்றுபட்ட அஸ்ஸாமாக இருந்த வட கிழக்குப் பிரதேசம் வெள்ளையர்கள் வெளியேறிய பிறகு அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர், மேகாலயா என ஏழு மாநிலங்களாக இந்திய அரசால் பிரிக்கப்பட்டன. இவற்றில் 3 மாநிலங்கள் கிறித்தவப் பெரும்பான்மையினைக் கொண்டிருக்கின்றன. ஏராளமான பழங்குடியினப் பிரிவுகளையும், மொழிகளையும், வளர்ச்சி பெறாத தேசிய இனங்களையும் கொண்டிருக்கும் இம்மாநிலங்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கி இருப்பதற்குக் காரணம் இந்திய அரசுதான்.
வரலாற்று ரீதியாக இந்தியாவிலிருந்து பிரிந்திருந்த இம்மக்கள் இன்று தமது வாழ்வுரிமைக்காக இந்திய அரசை எதிர்த்துப் போரிடுகிறார்கள். இந்தப் போராட்டத்தைச் சீர்குலைக்கும் வண்ணம் அஸ்ஸாம் – போடோ, குக்கி – நாகா என ஒன்றுக்கெதிராக மற்றொரு இன மக்களை நிறுத்தி மோதவிட்டது இந்திய அரசின் சதி வேலையாகும். தற்போது அசாம் விடுதலைக்காகப் போராடி வரும் ‘உல்ஃபா’ இயக்கம் பெரும்பான்மையாக இந்துக்கள் அடங்கிய ஒரு குழுதான். அதனால் இவ்வமைப்பை இந்து மதவெறியர்கள் அங்கீகரிக்கிறார்களா என்ன? அவர்களை அடக்க கூடுதல் இராணுவத்தைத்தானே அனுப்புகின்றார்கள். எனவே வடகிழக்குப் பிரச்சினைகளுக்குக் கிறித்தவ மத மாற்றம் காரணமல்ல.
இந்தியாவில் மதமாற்றம் செய்ய வந்த மிஷனரிகளுக்கும் அவர்தம் நாடுகளுக்கும் ஆதிக்கம் செய்யும் நோக்கம் இருந்தது உண்மையே. ஆனால், மக்களோ, பார்ப்பனிய சாதிக் கொடுமைகளிலிருந்து விடுபடவே மதம் மாறினார்கள். பெரும்பான்மை மக்களுக்குப் பார்ப்பனியம் மறுத்த கல்வியைக் கிறித்தவம் கொண்டு செல்ல முயன்றது. அசாமி, வங்க மொழி, தமிழ், ஒரியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற தேசிய மொழிகளில் முதன் முறையாகப் பள்ளிகளும், கல்லூரிகளும் நிறுவப்பட்டன. 18-ம் நூற்றாண்டிலேயே பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்காக கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன. அச்சகங்களும், வட்டார மொழி நூல்களும் – பைபிளும் வெளியிடப்பட்டன. நவீன வங்க இலக்கியம் தோன்றுவதற்கு மிஷனரிகளே காரணமாயின. வீரமாமுனிவரும், பெர்க்லி பாதிரியாரும் தமிழுக்குச் செய்த தொண்டு அளவிடற்கரியது. ஆங்கில – வட்டார மொழி அகராதிகள் வெளியிடப்பட்டன. இன்றும் இந்திய அளவில் 15 சதவீத பள்ளி மாணவர்களும், 10 சதவீத கல்லூரி மாணவர்களும் கிறித்தவ நிறுவனங்களில்தான் படிக்கின்றனர். 15% மருத்துவச் சேவையும் கிறித்தவ மருத்துவமனைகளால்தான் இப்போதும் அளிக்கப்படுகின்றது.
இப்படி கல்வி, வட்டார மொழி வளர்ச்சி, சுகாதாரம், மருத்துவம், சிறு தொழில்கள் எனப் பல்வேறு சேவைகள் மூலம் கிறித்தவம் மக்களைக் கவர்ந்தது. சூத்திரரும், பஞ்சமரும் தங்களை முதன் முதலில் மனிதர்களாக மதித்தவர்களைக் கண்டனர்.
இருப்பினும் இந்திய மக்களைப் பெருமளவில் மதம் மாற்றுவதில் கிறித்தவம் தோல்வியுற்றது. பார்ப்பனியத்தின் சகல நோய்களையும் தீர்க்கும் வீரிய மருந்து பைபிளிடம் இல்லை. அதாவது பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை மிஷனரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனாலேயே இந்தியக் கிறித்தவ மதம் பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்டு சாதிய அமைப்பையும் ஏற்றுக்கொண்டது.
1606-ம் ஆண்டு, மதுரையில் திருமலை நாயக்கன் ஆண்ட காலத்தில் மதப்பிரச்சாரம் செய்ய வந்தார் நொபிலி என்ற பாதிரியார். அவர் தன்னை பிரம்மா அனுப்பிய பார்ப்பனனென்றும், தன்னுடன் 5-வது வேதத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் கூறிக்கொண்டார். அதன் மூலமே பார்ப்பன மேல் சாதியினர் உள்ளிட்டு ஒரு சிலரை மதம் மாற வைத்தார். மதப்பிரச்சாரம் செய்ய அனுமதியும் பெற்றார். தமது சாதியச் சமூகச் சுரண்டலுக்கும் – ஆதிக்கத்திற்கும் கிறித்துவ மதம் தடையில்லை என உணர்ந்த பிறகே பார்ப்பன மேல் சாதியினர் இந்தியாவெங்கும் கிறித்தவ மதமாற்றத்தை ஓரளவிற்கு அனுமதித்தனர்.
மேலும் மிஷனரிகளின் கல்வி – ஏனைய தொண்டுப் பணிகள் மூலமாக இந்து மதத்தின் ஆதிக்க சாதிப் பிரிவே கணிசமான ஆதாயங்களைப் பெற்றது. இவ்வாறு காலனியாதிக்கத்தின் சலுகைகளைப் பெற்று பிழைப்புவாதிகளாக மாறியதும் இவர்களே. இன்றும் நாடெங்கும் உள்ள செயின்ட் ஜோசப் – பீட்டர்ஸ் – ஜான்ஸ் – லயோலா போன்ற மிகப் பிரபலமான கிறித்தவக் கல்லூரிகளில் படித்துப் பயனடைபவர்களில் 90 சதவீதம் பேர் பார்ப்பன ‘மேல்சாதி’ மேட்டுக்குடியினர்தான். அவ்வளவு ஏன், இன்று இந்து மதவெறியர்களின் பிரபலமான தலைவர்கள் பலரும் கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர்களே!
இவையெல்லாம் கிறித்தவ மதமாற்றத்தின் இன்னொரு பக்கம். பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை காரணமாக கிறித்தவ மதத்தைத் தழுவிய கேரளம் கூட இன்று தலைகீழாக மாறிவிட்டது. கேரளத்தில ‘புதுக் கிறிஸ்தியானி’ என்ற பெயர் மிகவும் பிரபலம். அதன் பொருள் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்கள் என்பதே. மேலும் இவர்கள் சமீபத்தில் மதம் மாறியவர்கள், பரம்பரைக் கிறித்தவர்கள் அல்ல என்றும் ஒதுக்கப்படுகிறார்கள். அதேபோல ‘சிரியன் கிறித்தவர்’ என்ற ‘பரம்பரைக் கிறித்தவப் பிரிவு’ இந்துக்களின் நம்பூதிரி – நாயரைப் போன்ற ‘மேல்சாதி’ கிறித்தவர்களைக் குறிக்கும். இவர்களைத் ‘தம்புரானே, பணிக்கரே’ என்றுதான் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்கள் விளிக்க வேண்டும். மேலும் தீண்டாமையும் வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் உண்டு. தேவாலயங்களில் கூட சாதிகளுக்குக்கேற்பத் தனி வழிபாடுகள், அல்லது தனித் தேவாலயங்கள் என்பதெல்லாம் சகஜமாகி விட்டன. தமிழ்நாட்டின் பல கிறித்தவ இடுகாடுகளில் தாழ்த்தப்பட்ட கிறித்தவப் பிணங்கள் நுழைய முடியாது.
எனவே, இந்தியாவில் எந்த மதமானாலும், எத்தகைய உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவை பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பால் செரிக்கப்படும் என்பது கிறித்தவத்தின் வரலாற்றில் உண்மையாகிவிட்டது.
அதேசமயம் இத்தகைய பார்ப்பன இந்து மதத்தின் சாதிய – தீண்டாமைக் கொடுமைகளே இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் இசுலாம் – கிறித்தவ மதங்களுக்கு மாறுவதற்குக் காரணமாகிறது. இவை இந்து மதவெறியர்களுக்குத் தெரியும். அதனால்தான் “சாதி – தீண்டாமையை ஒழிக்கிறோம், யாரும் மதம் மாறாதீர்கள்” என்று கூறுவதற்குப் பதில், மதமாற்றத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். அதனாலேயே கிறித்தவப் பாதிரிகள் எரிக்கப்படுவதும், தேவாலயங்கள் இடிக்கப்படுவதும் தொடர்கின்றது.
பார்ப்பனச் சாதிய அமைப்பு என்பது வெறும் சாதிய உணர்வு என்ற கௌரவம் சார்ந்த கருத்து மட்டுமல்ல; ஒரு சமூகப் பொருளாதாரச் சுரண்டல் நிறுவனமாக இருக்கிறது என்பதுதான் அதன் பலம். மதமாற்றத்திற்கெதிரான இந்து மதவெறியர்களின் வெறுப்பும் – திமிரும் அதிலிருந்துதான் பிறக்கிறது.
நன்றி!
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
அரசு பொது மருத்துவமனைகளில் வேலை செய்யும் மருத்துவ ஊழியர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்யும் ஊழியர்களைப் பார்த்தால் இந்த சமூகத்திற்கு எப்படித் தெரிகிறது ? என்று தெரியவில்லை.
தமிழக சுகாதாரத்துறையில் தினசரி இரண்டு கோடி புறநோயாளிகளை கவனித்து வருகின்றன இந்த அரசு மருத்துவமனைகள். ஆறு மணிநேரத்தில் இரண்டாயிரம் நோயாளிகளைப் பார்த்து அவர்களுக்கு ஊசி தேவையென்றால் அதைப் போட்டு மருந்துகளைக் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.
பணியில் அதிக பட்சம் நான்கு ஐந்து மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்ப்பார்கள். ஒவ்வொரு மருத்துவனும் தினசரி முன்நூறு முதல் நானூறு நோயாளிகளை பார்த்தாக வேண்டும்.
சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை.
இது நம் நாடு, நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்கள் தொகை சார்ந்து ஒவ்வொரு மருத்துவர் மீதும் மருத்துவ ஊழியர் மீதும் விதிக்கப்பட்ட சுமை. இதை ஏற்று தான் உங்கள் ஊருக்கு ஊழியம் செய்ய ஒவ்வொரு அரசு மருத்துவத்துறை ஊழியரும் வருகிறார்கள்.
அரசு பொது மருத்துவமனைகளில் காலை 8 மணிக்கு புறநோயாளிகள் பிரிவு ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக்கொண்டால் மதியம் 12 வரை இடைவிடாது மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருப்பார்கள். கண் சிமிட்டக்கூட நேரம் இருக்காது மக்களே.
ஒரு டீ குடிக்க…
சிறுநீர் கழிக்க நேரம் இருக்காது…
ஒரு நோயாளிக்கு கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால் பின்னால் வரிசையில் நிற்கும் பெருசுகள் இருமுவார்கள். பின் உறுமுவார்கள்.
“தம்பி.. பஸ்ஸு போயிரும். ஒருத்துருக்கே எம்புட்டு நேரம் பாப்பீக” என்பார்.
கடகடவென பார்த்து அனுப்பவேண்டும். இதற்கு நடுவில் சாலை விபத்துக்களில் அடிப்படை எமர்ஜென்சி வந்தால் அதைப்பார்க்க ஒரு டாக்டர் செல்வார். பிரசவம் பார்க்க தாய்மார் வந்தால் அங்கே ஒரு பெண் மருத்துவர் சென்று விடுவார்.
இருவர் பார்க்க வேண்டிய 400 முதல் 500 புறநோயாளிகளும் மீதம் இருக்கும் இருவர் மீதுதான் சுமையாக ஏறும்.
நீங்களே சொல்லுங்கள். நாவரண்டு தொண்டை காய்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது இது போன்ற சமூக விரோதிகள் நடுவே வந்து மொபைல் போனை வைத்து படம் எடுத்து சீண்டினால் கோபம் வரத்தானே செய்யும். அந்த நியாயமான கோபம் தான் மருத்துவனுக்கும் வருகிறது. மருத்துவனும் ரத்தமும் சதையும் இருக்கும் மனிதன் தானே.
இதில் 24 மணிநேர ட்யூட்டி உண்டு…
அப்போது மது அருந்திவிட்டு வரும் குடிகாரர்கள் தரும் தொல்லை தனி. மிக மன அழுத்தம் நிறைந்த பணி சகோதரர்களே. எங்களையும் சகோதரர்களாக மதியுங்கள்.
அரசு மருத்துவமனைகளாவது தாலுக்காவில் உள்ள நல்ல ரோடு வசதி உள்ள ஊர்களில் இருக்கின்றன. அதை அடைவது ஓரளவு எளிது. ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் கிராமங்களில் குக்கிராமங்களில் இருக்கின்றன.
மாதிரிப் படம்
இவற்றை காலை ஒன்பது மணிக்கு அடைய ஒரு மருத்துவர் / நர்ஸ் / மருந்தாளுனர் காலை ஏழு மணிக்கெல்லாம் பேருந்தில் ஏறி உட்கார்ந்து வந்தடைகிறார் என்பதை அறிவீர்களா?
ஆக ஒன்பது மணிக்கு ட்யூட்டி ஆரம்பித்தாலும் அவரைப்பொறுத்த வரை ஏழு மணிக்கே கிளம்பி ஆக வேண்டும். அந்த கிராமத்திற்கும் காலை ஒரு பஸ் மாலை ஒரு பஸ் என்று தான் இருக்கும். மாலை செல்ல வேண்டிய பஸ்ஸை விட்டால் அவ்வளவு தான். ஊர் உலகை சுற்றி இரவு தான் வீடு போய் சேர முடியும்.
சரி அந்த ஊரிலேயே தங்கலாம் என்றால் பாதுகாப்பு குறைபாடு இருக்கும். நல்ல உணவகம் கூட இருக்காது. பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க பல கிலோமீட்டர் தூரம் உள்ள மாவட்ட தலைநகருக்கு அனுப்ப வேண்டும்.
இப்படியான இன்னல்களை தாண்டி ஒரு மருத்துவ ஊழியன் அந்த கிராமத்தில் பணி புரிவதை சேவை என்பதை விடுத்து வேறு வார்த்தைகளில் சுட்ட முடியுமா?
இதே கதைதான் கிராமங்களில் இருக்கும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும்.
ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறைந்தபட்சம் 150 முதல் 400 புறநோயாளிகள் வரை வருவார்கள். இதைp பார்க்க இரண்டு மருத்துவர்கள் இருப்பார்கள். ஆக இவர்களும் 200 புறநோயாளிகளை பார்த்தாக வேண்டும். நடுவே அவசர சிகிச்சை மற்றும் பிரசவம் நடக்கும். அதையும் சேர்த்து கவனிக்க வேண்டும்.
பல கிராமத்தவர்களுக்கு நினைப்பு என்னவென்றால் “எங்க காச தான சம்பளமா வாங்குறீங்க? நாங்க தான உங்களுக்கு சம்பளம் தரோம்” என்று அறியாமையால் பேசுகிறார்களா? கர்வத்தில் பேசுகிறார்களா? தெரியாது.
ஆனால் அன்பர்களே ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும். அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் தருவது அரசாங்கம். அரசாங்கத்துக்கு பணம் கிராமங்களில் இருந்து மட்டும் வருவதில்லை. அரசாங்கம் கிராமங்களை வலுவாக்க பல திட்டங்களை கொண்டு வருகிறது. அதில் பள்ளிகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களும் அடங்கும்.
அதில் பணிபுரிய வரும் ஆசிரியர்களும் மருத்துவர்களும் ஊழியர்களும் உங்களுக்கு சேவை செய்ய வருகிறார்கள். அவர்களை நீங்கள் வரவேற்க வேண்டும். அன்பை வாரி வழங்க வேண்டும். ஆனால் இங்கு நிகழ்வதோ வேறு.
உங்களுக்குத் தெரியுமா. இது போன்ற பிரச்சனைக்குரிய கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் நிரப்பப்படாமல் இருக்கும்.
அதன் ஆணிவேரை கவனித்தால் அந்த ஊர் மக்களின் எண்ண ஓட்டம் தவறாக இருக்கும். அந்த ஊருக்கு பணி செய்ய வரும் அரசு ஊழியனின் நிலையை ஏற்காமல் இவர்கள் எஜமானர்கள் போல் நடப்பது. மரியாதைக் குறைவாக நடப்பது போன்றவற்றால் அந்த ஊரில் யாரும் வந்து வேலை செய்ய ஆசைப்பட மாட்டார்கள்.
இது நிதர்சனமான உண்மை. மேலும் சில ஊர்களில் எப்போதும் மருத்துவ இடங்கள் காலியாகவே இருக்காது. ஆசிரிய இடங்களும் உடனே பூர்த்தி ஆகும். அதற்கு காரணம் அது அந்த ஊர் மக்கள் மற்றும் அவர்களின் சிறந்த பண்பாகத்தான் இருக்கும்.
ஏனய்யா.. ஒரு அரசாங்க பெண் ஊழியர் அவர் டாக்டரோ நர்ஸோ, கிராம சுகாதார செவிலியிரோ, சத்துணவு பணியாளரோ, ஆசிரியையோ அவளது வீடு பிள்ளைகள் அனைத்தையும் விட்டு காலை எழுந்து தனது வீட்டு வேலைகளை முடித்து விட்டு உங்கள் கிராமத்தை தேடி பல கிலோமீட்டர் பேருந்தில் பயணம் செய்து வருவது உங்களுக்கு சேவை செய்யத்தானே..
உங்கள் ஊரில் பிரசவ மரணம் நிகழக்கூடாது.
உங்கள் ஊரில் யாரும் கொள்ளை நோய்க்கு மடியக்கூடாது.
உங்கள் ஊரில் யாரும் படிக்காத குழந்தைகள் இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே?
அவர்களை நீங்கள் வம்புக்கு இழுத்து அடித்து துன்புறுத்துவதன் மூலம் மிகப்பெரும் இழுக்கை உங்கள் ஊருக்கு சம்பாதிக்கிறீர்கள். உங்கள் அரசியலைக் கொண்டு வந்து மருத்துவமனைகளிலும் பள்ளிகளிலும் செய்யாதீர்கள்.
மருத்துவமனைகளும் பள்ளிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. உங்கள் சிற்றின்பத்திற்கு பல நல்லவர்கள் பயன்பெற்று வந்த சேவைகளை இழக்கிறீர்கள்.
கையில் மொபைல் போன் ஒன்று இருந்தால் போதும் உடனே காணும் அனைத்தையும் படம் பிடித்து ஃபேஸ்புக்கில் போட்டு வைரலாக்கலாம் என்று நினைக்கிறீர்கள். அதனால் உங்களுக்கே பெரிய பிரச்சனைகள் உண்டாகலாம் என்பதை மறக்காதீர்கள்.
அரசு மருத்துவமனைகளையும், அரசு பள்ளிகளையும் அதன் போக்கில் சிறப்பாக நடக்க விடுங்கள் உங்களுக்கு சேவை செய்யவே அவை நடக்கின்றன.
மருத்துவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராக உங்கள் சமுதாயத்தில் சிலர் பொய் பித்தலாட்ட வேலைகளில் இறங்கினால் அவர்கள் உங்களுக்கு தீமையையே செய்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களைப்போன்ற சமூக விரோதிகளை அடக்கி வையுங்கள்.
அதுவே உங்கள் எதிர்கால சந்ததியினரின் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும், சுகாதாரத்திற்கும் நன்மை பயக்கும் செயல். அரசு மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் எந்த செயலையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
சமுதாயம் திருந்தும்… தவறு செய்பவர்களை திருத்தும் என்று எதிர்பார்க்கிறேன்!
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
கேள்வி: //வணக்கம்…. நான் சில மாதங்களாக வினவை இணையத்தில் வாசிக்கும் வாசகன். அதே நேரம் இடதுசாரி சிந்தனையும் பெரியார் மற்றும் அம்பேத்கரிய சிந்தனைகளால் ஈர்க்கபட்டவன். கேள்வி என்னவெனில் தாங்கள் கூறும் பார்பனியம், சனாதன கோட்பாடு இவைகள் தான் இன்றும் இந்தியாவை ஆள்கிறதா? ஆம் எனில் எப்படி?
வலதுசாரி சிந்தனையற்ற நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி அதெப்படி 3% உள்ளவர்கள் 97% மக்களை ஆள முடியும்? அதுவும் அரசின் முழு அதிகாரமும் எப்படி இயலும்? நானும் என்னளவில் இட ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசு உயர் பதவிகளில் அவர்களின் ஆதிக்கம் என எவ்வளவோ கூறினாலும் திருப்தி இல்லை, அவருக்கும் எனக்கும்.
BJP போன்ற கட்சிகளுக்கு மட்டும்தான் இது பொருந்துமா. அல்ல காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளில் நிலை என்ன. இதேவேளையில் இடதுசாரி தலைவர்களும் அவாள்தான் என இன்னொரு பேச்சு எழுகிறது.. உண்மையா?
“என்றும் நினைவில் கொள், மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது..” என்ற மார்க்ஸின் தத்துவத்தின் மீதும் சமூக நீதியின் மேல் பற்றும் கொண்ட எனக்கு என் அறிவிற்கு எட்டியவரை குழப்பத்துடன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளேன். காத்திருக்கிறேன் பதிலுக்காக.//
– ஜி. ஆனந்தன்
அன்புள்ள ஆனந்தன்,
பார்ப்பனியம் என்பது சமூக அளவிலும், அரசு ரீதியிலும் செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தம். அது நபர்களை வைத்து மட்டும் இயங்கவில்லை.
பார்ப்பனியம் என்பது படிநிலை சாதி – வர்க்க ஆதிக்கம் – தீண்டாமையையும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையையும், மொழி – இன ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்துகின்ற, போற்றிக் கொண்டாடுகின்ற சித்தாந்தம். இது வெறும் பண்பாடாக மட்டும் இல்லை, வரலாற்றில் சட்டமாகவே இருந்தது. இன்று நமது அரசமைப்பு சட்டத்திலும் தொடர்கிறது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு 1972-ம் ஆண்டிலேயே சட்டம் இயற்றியிருந்தாலும், அது தொடர்பாக பல வழக்குகள் போட்டிருந்தாலும் இன்று வரை அமலுக்கு வரவில்லை. கருவறையில் பார்ப்பனரல்லாத சாதியினர் நுழைந்து விடக்கூடாது என்பது இன்று வரையிலும் அமலில் இருக்கிறது. திருப்பதி வெங்கடசாலபதி, மயிலை கபாலிஸ்வரர், திருவரங்கம் ரெங்கநாதர், மதுரை மீனாட்சி, திருச்செந்தூர் செந்திலாண்டவர் என எந்தக் கோவிலிலும் சூத்திரர்களோ, பஞ்சமர்களோ பூசாரிகளாக மாற முடியாது. மாறாக அவர்களது குல தெய்வ வழிபாட்டுக் கோவில்களில் மட்டும்தான் பூசை செய்ய முடியும். இத்தெய்வங்களை சிறு தெய்வம், கறி சாப்பிடும் தெய்வம் என்று பார்ப்பனியம் இழிவுபடுத்தி வருகிறது.
அர்ச்சகர் பயிற்சி முடித்திருந்தும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி நியமனம் பெற இயலாது உள்ள மாணவர்கள்.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கவும், ஆலயத் தீண்டாமையை ஒழிக்கவும் 1993-ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தியது மக்கள் கலை இலக்கியக் கழகம். அந்தப் போராட்டம் நடந்த பிறகு தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். அந்தக் கோவிலின் கருவறையை சுத்தப்படுத்தும் பூசை நடத்தி ’தீட்டுக் கழித்துக்’ கொண்டார்கள் பார்ப்பனர்கள். 2007-ல் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்று திரட்டி சங்கமாக்கி, உச்ச நீதிமன்ற வழக்கில் தலையிட்டது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். தங்களுக்குப் பணி நியமனம் கோரி பத்து ஆண்டுகளாக அர்ச்சக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தி விட்டார்கள். ஒன்றும் பயனில்லை. ஏனெனில் இது பார்ப்பனியம் ஆளுகின்ற நாடு.
ஒரு பாதிரியாரோ, ஒரு மௌல்வியோ பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுவதில்லை. ஆனால் இந்து மதத்தில் மட்டும்தான் கடவுளுக்கு பூஜை செய்யும் வேலையை பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள். கூடவே மற்ற சாதியினர் தொட்டால் தீட்டு என்றும் பகிரங்கமாகவே கூறுகிறார்கள்.
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருந்தாலும் இன்று வரை அங்கே பெண்கள் செல்ல முடியவில்லை. பா.ஜ.க-வும் காங்கிரசும் போட்டி போட்டுக் கொண்டு அங்கே பெண்களை தடுக்க வேண்டும் என்று போராடுகின்றன. பார்ப்பன இந்துமதவெறி பக்தர்களோ ரவுடிகள் போல அங்கே வரும் பெண்களை தடுப்பதற்கு காத்திருக்கிறார்கள். இப்படி ஒரு நீதிமன்றம் தீர்ப்பே வழங்கிய பிறகும் பெண்கள் கோவிலுக்கு போக முடியவில்லை என்றால் இங்கே பார்ப்பனியத்தின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதறியலாம்.
அதே போன்று தாய் மொழி வழிபாடும் தடை செய்யப்பட்டு சமஸ்கிருதத்தில்தான் பூஜை, புனஸ்காரங்கள் நடந்து வருகின்றன. தமிழ் மொழி நீச பாசை என்று இழிவுபடுத்தப்படுகிறது. சிதம்பரம் தில்லை நடராசர் கோவிலில் தமிழில் பாடுவதற்கு சிவனடியார் ஆறுமுக சாமியார் இறக்கும் வரை போராட வேண்டியிருந்தது. அந்தப் போராட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகமும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும் பல ஆண்டுகள் நடத்த வேண்டியிருந்தது. மக்கள் பேசும் மொழியாக இல்லாத சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு கோடிகளைக் கொட்டிக் கொடுத்து பரப்பி வருகிறது. பல்வேறு பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருத துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு வருகிறது.
தன் வாழ்நாள் முழுவதும் தில்லையில் தமிழ்பாட போராடி மறைந்த ஆறுமுகசாமி.
மதத்தை தாண்டி செல்வாக்குடன் இருக்கும் சங்கர மடங்கள் அனைத்திலும் பார்ப்பனர்களே சங்கராச்சாரிகளாக பட்டமேற்க முடியும். அதே போன்று சைவ ஆதினங்களில் சைவ வேளாளர்களே ஆதீனங்களாக பதவியேற்க முடியும். இந்த மடங்களுக்கென்று பெரும் சொத்தும், விவசாய நிலங்களும் உள்ளன. சூத்திர, பஞ்சம மக்களோ இந்த நிலங்களில் வேலை பார்க்கும் தகுதியைத்தான் பெற்றிருக்கின்றனர். பார்ப்பனர்களும் இதர உயர்சாதியினரும் விவசாயம் வேலைக்காகாது என நிலங்களை சென்ற நூற்றாண்டிலேயே விற்று விட்டு, சென்னை, தில்லி, அமெரிக்கா என்று குடியேறி விட்டனர். மற்ற சாதி மக்கள்தான் வயிற்றில் அடித்தாலும் விவசாயத்தை விடமுடியாமல் இன்றும் வேலை பார்க்கின்றனர்.
பிறப்பின் அடிப்படையில் தொழில்களை வரையறுத்திருக்கிறது பார்ப்பனியம். அதன்படி இன்றுவரை அருந்ததி இன மக்கள் துப்புரவு தொழில்களையே மேற்கொண்டு வருகின்றனர். சலவை தொழிலாளி, முடிவெட்டும் தொழிலாளி, என்று சாதியின் அடிப்படையில் பணி செய்வது இன்றும் தொடர்கிறது. ஆகப்பெரும்பான்மையான தலித் மக்கள் விவசாயக் கூலிகளாகவே இன்றும் இருக்கின்றனர். இந்த வேலைகளில் ஒரிரு விதி விலக்குகள் தவிர பார்ப்பன, ஷத்ரிய, வைசிய சாதிகளைச் சார்ந்தோரை பார்க்க இயலாது.
இந்தியாவின் தொழில் துறை பெரும்பாலும் பார்ப்பன – பனியா சாதிகளைச் சார்ந்தோரால்தான் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று ஊடகங்களில் பெரும்பான்மை பார்ப்பன ஊடகங்களாகவும், பார்ப்பன கருத்தியல்களை பரப்பும் நிறுவனங்களாகவும் உள்ளன. வெள்ளி அன்று ஆன்மீக மலர் போடாத நாளேடு இல்லை. அதில் கிறித்தவ, முசுலீம் மதங்களுக்கு ஐந்து சதவீத இடத்தை ஒதுக்கிவிட்டு மற்றவை பார்ப்பன புராண புரட்டுக்களும், ஜோசிய பலன்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது இது சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்டு அனைத்து டி.வி சானல்களில் காலை நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
அரசு விடுமுறைகளில் இந்துப் பண்டிகைகளுக்குத்தான் விடுமுறை அதிகம். தீபாவளி, அக்ஷய திரியை போன்ற பண்டிகைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்பனைக்காக முன்னிலைப்படுத்துகின்றன. சந்திராயன் 2 வெற்றிகரமாக அமைவதற்கு மட்டுமல்ல, விடும் ஒவ்வொரு செயற்கை கோளுக்கும் திருப்பதி சென்று ஆசி வாங்குகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம். அதே போன்று கப்பற்படைக்கு ஒரு புதிய கப்பல் வெள்ளோட்டம் விடப்படுகிறது என்றால் தேங்காய் உடைத்து, ஐயர் பூசை செய்துதான் விடுகிறார்கள். சரஸ்வதி பூஜை என்று அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் அலுவலக ரீதியாகவே கொண்டாடுகின்றன.
பெண்களைப் பொறுத்தவரை பார்ப்பனிய பிற்போக்குத்தனங்கள் இன்றும் செல்வாக்கோடு அடிமைப்படுத்துகின்றன. ஆணவக் கொலை, குழந்தை திருமணம், வரதட்சிணைக் கொடுமைகள், காதல் மணம் மறுப்பு என்பதை ஆதிக்க சாதி இந்துக்கள் இன்றளவும் பின்பற்றுகிறார்கள். அதற்கான வழிகாட்டும் கோட்பாடுகள் கீதை, மனுஸ்மிருதியில் இருப்பது இன்றும் செல்லுபடியாகிறது.
கோமாதாவின் புனிதத்தை இந்திய அரசியல் சட்டமே வரையறுத்து வைத்திருக்கிறது. அதன்படி பசுவை எங்கேயும் கொல்ல முடியாது. வட இந்தியாவில் மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம்களும், தலித்துக்களும் தாக்கப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். கொலை செய்த குற்றவாளிகளோ நிரபராதிகளாக வரவேற்கப்படுகின்றனர். மாட்டு மூத்திரத்தை ஆய்வு செய்து சந்தைப்படுத்த நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. வட இந்தியாவில் இறைச்சி சாப்பிடுவதையே ஒரு குற்றம் போல ஆக்கி விட்டனர். இதனால் கால்நடை இறைச்சி தொழில் சரிந்து போயிருக்கிறது.
இது போக தலித்துக்களும், முசுலீம்களும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். ரோகித் வெமுலா, அக்லக், பெஹ்லுகான் என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கட்டப் பஞ்சாயத்து செய்யும் அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய சதி என அப்பாவி முசுலீம்களை கைது செய்ய தேசிய புலனாய்வு முகமை தமிழகத்திற்கு விரைந்தோடி வருகிறது. ஆனால் இந்துமதவெறியர்கள் நடத்திய கொலைகள், கலவரங்களில் யாரும் தண்டிக்கப்படவில்லை. மட்டுமல்ல பிரக்யா சிங் தாக்கூர் எம்.பியாகவே தெரிவு செய்யப்படுகிறார். அசீமானந்தா விடுதலை செய்யப்படுகிறார்.
அதிகார வர்க்கத்தின் உயர் பிரிவில் பார்ப்பன – உயர் சாதியினரே கோலேச்சுகின்றனர். ரா, சிபிஐ, இராணுவம், பிரதமர் போன்ற பதவிகளுக்கு முசுலீம்கள் வரக்கூடாது என்பது எழுதப்படாத சட்டமாகவே பின்பற்றப்படுகிறது. முசுலீம்கள் அவர்களது மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப எந்த துறையிலும் இல்லை. பாராளுமன்றத்திலும் இல்லை.
இப்படி இந்தியாவின் 24 மணி நேர வாழ்விலும் பார்ப்பனியம் முழு செல்வாக்கு செலுத்துகிறது. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை பா.ஜ.க. தீவிர இந்துத்துவத்தை பின்பற்றுகிறது என்றால் காங்கிரசு மிதவாத இந்துத்துவத்தை பின்பற்றுகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசு அரசுகள் இந்துத்துவ அஜெண்டாக்களை போட்டி போட்டுக் கொண்டு செயல்படுத்துகின்றனர்.
இடது சாரிகளைப் பொறுத்தவரை பிறப்பின் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து பயிற்சி அளிக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. மற்றபடி பார்ப்பனியத்தின் செல்வாக்கு என்பது இடதுசாரி பிரிவில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளின் கொள்கை – திட்டத்தோடு தொடர்புடையது. சி.பி.எம்., சி.பி.ஐ கட்சிகள் பார்ப்பனியம் என்று வரையறுத்து செயல்படுவதில்லை. இந்து மதத்தில் நல்ல இந்து மதம் இருப்பதாக அவர்கள் இந்துக்களிடம் அரசியல் பேசுகின்றனர். பார்ப்பனிய பண்டிகைகளுக்கு சிறப்பிதழ் கொண்டு வருகின்றனர். மார்க்சிய லெனினிய இயக்கம் தான் பார்ப்பனியம் என்ற வரையறுப்பை வைத்து செயல்படுகிறது.
இந்தியாவில் சமூக மாற்றம் குறித்து செயல்பட விரும்பும் எவரும் நமது மக்களை அடிமைச் சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் பார்ப்பனியத்தை எதிர்த்து பல்வேறு துறைகளில் அரசியல், பண்பாட்டு போராட்டங்களை நடத்த வேண்டியிருப்பது முன் நிபந்தனையாக இருக்கிறது.
நன்றி!
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
தமிழக பள்ளிக் கல்வித்துறை இந்த கல்வியாண்டு முதல் 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இது பிஞ்சு மாணவர்கள் மீது திணிக்கப்படும் மிகப்பெரிய வன்முறை. கிராமப்புறங்களைச் சார்ந்த பல லட்சம் ஏழை மாணவர்களை பள்ளிப் படிப்பிலிருந்து வெளியேற்றி, தொழிற்கல்விக்குத் தள்ளும் நவீன குலக்கல்வி. தேசிய கல்விக் கொள்கை அமலுக்கு வரும் முன்பே மோடி அரசின் அடிமையாக இருந்து தமிழக அரசு அரசாணை வழியாக நடைமுறைப்படுத்துகிறது.
இந்த சதித் திட்டத்தை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசு ஆணையை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.
3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பது தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் உள்ள ஒரு பரிந்துரை. மோடி அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை ஏற்க முடியாது என்று நாடு முழுவதுமுள்ள கல்வியாளர்களும், பேராசிரியர்களும், மாணவர் அமைப்புகளும் எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், மோடி அரசு தேசிய கல்விக் கொள்கை சட்டமாக்கப்படும் முன்பே குறுக்கு வழியில் பல பரிந்துரைகளை அமுலுக்கு கொண்டு வந்துவிட்டது.
என்.சி.இ.ஆர்.டி மூலம் பாடப் புத்தகங்களில் சாதி, மத கருத்துக்களை புகுத்துவது, ‘இந்தியாவில் படியுங்கள்’ திட்டத்திற்கும், மேன்மைதகு பல்கலைக்கழகங்கள் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி நடைமுறைப்படுத்துவது, யூ.ஜி.சி சுற்றறிக்கை மூலம் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் தொழிற்படிப்புக்கான பட்ட வகுப்புகளை ஆரம்பிப்பது என பல விசயங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டது.
அப்படித்தான் கல்வி உரிமை சட்டத்தின்படி எட்டாம் வகுப்புவரை மாணவர்களை கட்டாயத் தேர்ச்சி செய்ய வேண்டும் என்று இருந்ததில் திருத்தம் செய்து 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர்.
அமைச்சர் செங்கோட்டையன்
8 வகுப்புவரை கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது, அதனால் 5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துகிறோம் என்று மத்திய அரசு சொல்வதை அப்படியே வழிமொழிகிறார் அமைச்சர் செங்கோட்டையன். அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காமல், போதிய அடிப்படை வசதிகளை செய்யாமல், ஆசிரியர்களை போடாமல், அவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் கொடுக்காமல், தனியார் கல்வியை ஊக்குவிக்க அரசுப் பள்ளிக்கூடங்களை ஆயிரக்கணக்கில் இழுத்து மூடி, பள்ளிக்கல்வியை சீர்குலைத்துவரும் இவர்களுக்கு கல்வியின் தரத்தைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது கல்வியின் தரத்தை உயர்த்த அல்ல, பெருவாரியான மாணவர்களை பள்ளிக்கல்வியில் இருந்து விரட்டவே இந்த நடவடிக்கை.
இது மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியை நாடு முழுவதும் பொது மொழியாக்க வேண்டும் என்று பேசுகிறார். இது பல்தேசிய இன்ங்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். சமஸ்கிருதத்தை கொண்டு வருவதன் முதற்படியாக இந்தியை வன்முறையாக திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இவைகளை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து தொடர் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டங்களை நடத்தி மோடி – எடப்பாடி அரசுகளின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். இத்தகைய போராட்டங்களை எமது பு.மா.இ.மு ஆதரிப்பதோடு, முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
இந்தி தேசிய மொழி ; அமித்ஷாவின் ஆணவப்பேச்சு ! மொழி, கல்வி, பண்பாடு மீது தொடுக்கப்படும் தாக்குதலை முறியடிக்க தமிழகம் கிளர்ந்தெழட்டும் !!
பத்திரிகைச் செய்தி
நாள் : 14.09.2019
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘இந்தி நாளை’யொட்டி, இந்திதான் உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கவல்ல தகுதி இந்திக்குத்தான் உள்ளது. எனவே இந்திதான் இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தற்போதைய கூட்டாட்சி முறைமீது மட்டுமல்லாது, பல்வேறு தேசிய இன மொழி, பண்பாட்டு உரிமைகளின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும் . ஆர்.எஸ்.எஸ்–ன் இந்து ராஷ்டிரத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையே இது. இந்த மக்கள் விரோத, தேச விரோத அறிவிப்பை மக்கள் அதிகாரம் மிக வன்மையாக கண்டிக்கிறது. அமித்ஷா தனது கருத்தை உடனே திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.
பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ரயில்வே, அஞ்சல் துறை போன்ற மத்திய அரசின் துறைகளுக்கான தேர்வுகளில் மாநில மொழிகளை அகற்றியதற்கே கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் அமித்ஷாவின் இந்த அறிவிப்பு மிகவும் ஆபத்தானது. இந்தியைப் பொது மொழியாக்குவது என்பது சமஸ்கிருதத்தைப் பொது மொழியாக்குவதன் முதற்படியே. இந்தி என்பது மொழி மட்டுமல்ல, அது இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துத்துவத்தின் அடிப்படையுமாகும்.
அமித்ஷாவின் அறிவிப்பு பிற மொழிகளின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மதச் சிறுபான்மையினரின் மீதான தாக்குதலுமாகும். இந்து பாசிச சர்வாதிகாரத்தைக் கட்டியமைக்க முனையும் பாஜக – ஆர்.எஸ்.எஸ்-ன் இந்த ஒடுக்குமுறையை தமிழகம் ஒருக்காலும் ஏற்காது.
தமிழகத்தில் உள்ள பாஜகவின் அடிமை அரசு , புதிய கல்விக்கொள்கையை உடனே அமல்படுத்தும்விதமாக 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வினை அறிவித்துள்ளது. எனவே மொழி, கல்வி, பண்பாடு மீது அடுத்தடுத்து தொடுக்கப்படும் தாக்குதலை முறியடிக்க அனைவரும் அணிதிரள்வோம்.
தோழமையுடன் தோழர் காளியப்பன்
மாநிலப் பொருளாளர்
தகவல் : மக்கள் அதிகாரம் தமிழ்நாடு – புதுவை 9962366321
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் காவிரி நீரை வீணாக கடலில் கலக்க விட்ட பொதுப்பணித் துறையை கண்டித்தும், எடப்பாடி அரசை பதவி விலகக் கூறியும், கல்லூரி நுழைவுவாயிலில் 13.09.2019 அன்று போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தை நாசமாக்கும் ஹைட்ரோகார்பன் எடுப்பதே மத்திய – மாநில அரசுகளின் நோக்கம். அதன் காரணமாகவே காவிரி வறண்டு கிடப்பதை அனுமதிக்கிறது. எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை.
இந்தப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு எடப்பாடி அரசை பதவி விலகக் கூறியும் தமிழகத்தை நாசமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
1 of 4
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110.
உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 06
இராணுவ பஸ்களின் வரிசை அதிகாலையிலேயே ஆரோக்கிய நிலைய முகப்பிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
பொத்தான்கள் போடாத சட்டையுடன் படிப்பலகையில் உட்கார்ந்திருந்த மேஜர் ஸ்த்ருச்கோவ் மாஸ்கோ நகர்ப்புறக் காட்சிகளைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உள்ளம் களி துள்ளியது. ஓயாது சுற்றித்திரியும் இந்தப் படைவீரர் இப்போது இயங்கிக் கொண்டிருந்தார். தமது வழக்கமான வாழ்க்கைமுறைக்கு வந்துவிட்டதாக அவர் உணர்ந்தார். ஏதோ விமானப்படைப் பிரிவுக்குப் போய்க் கொண்டிருந்தார் அவர். அது எது என அவர் இன்னும் அறியார். எனினும் வீட்டுக்குப் போவது போல் இருந்தது அவருக்கு. மெரேஸ்யெவ் ஒன்றும் பேசாமல் கலவரத்துடன் உட்கார்ந்திருந்தான். யாவற்றிலும் கடினமான சோதனை இனிமேல்தான் வரவிருக்கிறது என்று அவன் உணர்ந்தான். இந்தப் புதிய தடைகளைக் கடக்க அவனுக்கு இயலுமோ இயலாதோ, யார் கண்டார்கள்?
பஸ்ஸிலிருந்து இறங்கியதுமே மெரேஸ்யெவ் வேறு எங்கும் போகாமல், இராத்தங்கிடத்தைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் மிரொவோல்ஸ்க்கியைத் தேடிச் சென்றான்.
அப்போது முதல் தோல்வி அவனுக்கு எதிர்பட்டது. அவன் இவ்வளவு பாடுபட்டுத் தனக்கு ஆதரவாளராக ஆக்கியிருந்த அவனது நலம் விழைபவர் அவசர வேலை நிமித்தமாக எங்கோ விமானத்தில் போயிருக்கிறார் என்றும் திரும்பக் கொஞ்சம் காலம் ஆகும் என்றும் தெரிந்தது. பொதுவான அறிக்கை எழுதித் தரும்படி அலெக்ஸேயிடம் சொன்னார்கள். அவன் அப்போதே ஆளோடி ஜன்னல் குறட்டில் அமர்ந்து அறிக்கை எழுதி முடித்தான். மெலிந்த சிறுகூடானமேனியும் களைத்த விழிகளும் கொண்ட துணைக் கமாண்டரிடம் அதைக் கொடுத்தான். அவர் தம்மால் முடிந்ததை எல்லாம் செய்வதாக வாக்களித்து இன்னும் இரண்டொரு நாள் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அலெக்ஸேய் கெஞ்சினான், மன்றாடினான், அச்சுறுத்தக்கூடச் செய்தான். துணைக் கமாண்டரோ, எலும்பு துருத்திய முட்டிகளை நெஞ்சுடன் அழுத்திக் கொண்டு வழக்கமான ஒழுங்கு அதுவே என்றும் அதை மீறுவதற்குத் தமக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறிவிட்டார். உண்மையிலேயே எவ்விதத்திலும் உதவ அவர் திறனற்றவர் போலும். மெரேஸ்யெவ் கையை உதறிவிட்டு அப்பால் சென்றான்.
மருத்துவமனையில் இருந்த அன்யூத்தாவுக்கு போன் செய்தான். அவள் ஏதோ கவலையில் அல்லது வேலையில் ஆழ்ந்திருந்தாள் என்று குரலிலிருந்து புலப்பட்டது. எனினும் அவன் போன் செய்தது குறித்து மிகவும் மகிழ்வடைந்தாள். இந்த நாட்களில் அவன் தன் வீட்டில் தங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். தான் மருத்துவமனையிலேயே வசிப்பதாகவும் எனவே வீடு வெறுமையாயிருப்பதாகவும், அவனால் ஒருவருக்கும் இடநெருக்கடி ஏற்படாது என்றும் சொன்னாள்.
ஆரோக்ய நிலையத்தினர், வெளிச்சென்ற விமானிகளுக்கு ஐந்து நாள் உணவுப்பண்டங்களைக் கொடுத்திருந்தார்கள். எனவே அலெக்ஸேய் நெடு நேரம் சிந்திக்காமல் அன்யூத்தாவின் வீட்டுக்கு புறப்பட்டான். பிரமாண்டமான புதுக் கட்டிடங்களின் பின்னே முகப்பு வெளியின் மறுகோடியில் ஒண்டியிருந்தது அந்தச் சிறு வீடு. தங்க இடமும் உண்ண உணவும் இருந்தன. இப்போது காத்திருக்கலாம்.
பணியாளர் நியமன அலுவலகத்தில் ஆஜராவதற்கு முந்திய இரவு அலெக்ஸேய் நீள் சோபாவில் திறந்த விழிகளுடன் படுத்திருந்தான். புலர்போதில் எழுந்து முகம் மழித்துக் குளித்து விட்டு, அலுவலகம் திறந்ததுமே நிர்வாகப் பணித்துறை மேஜரிடம் முதலில் சென்றான். அவன் விதியை முடிவு செய்யும் அதிகாரம் இவருக்கே இருந்தது. இந்த மேஜரை அலெக்ஸேய்க்கு முதலிலிருந்தே பிடிக்கவில்லை. அலெக்ஸேயை கவனிக்காதவர் போல மேஜை அருகே நெடுநேரம் ஏதேதோ செய்து கொண்டிருந்தார். காகித அடுக்குகளை எடுத்துத் தம் முன்னே ஒழுங்காக வைத்தார். யாருக்கோ டெலிபோன் செய்தார். சொந்த விவரப் பத்திரங்களுக்கு எவ்வாறு எண்குறி இடவேண்டும் என்று தமது செயலாளிப் பெண்ணுக்கு விரிவாக விளக்கினார். அப்புறம் எங்கோ வெளியே போய்விட்டு வெகுதாமதமாகத் திரும்பி வந்தார். அதற்குள் அலெக்ஸேய்க்கு நீண்ட மூக்குள்ள அவருடைய நீட்டுப் போக்கான முகத்தைக் காணவே கரித்தது. முடிவில் மேஜர் காலண்டர் பக்கத்தைத் திருப்பினார். அப்புறந்தான் வந்தவனை ஏறிட்டுப் பார்த்தார்.
“நீங்கள் என்னைப் பார்க்க வந்தீர்களா, தோழர் சீனியர் லெப்டினன்ட்?” என்று தன்னம்பிக்கை தொனிக்கும் கட்டைக் குரலில் வினவினார்.
மெரேஸ்யெவ் தன் விவகாரத்தை விளக்கினான்: அவனுடைய பத்திரங்களை எடுத்துத் தரும்படி செயலாளியிடம் கேட்டார் மேஜர். அவள் கொடுத்ததும் “சொந்த விவகாரங்களைப் படிக்கத் தொடங்கினார். கால்கள் வெட்டி எடுக்கப்பட்டது பற்றிய கட்டம் வந்ததும் போலும், அவர் அலெக்ஸேய்க்கு நாற்காலியைக் காட்டினார் “என்ன, நிற்கிறீர்களே, உட்காருங்கள்” என்பது போல. அப்புறம் மறுபடி காகிதங்களில் ஆழ்ந்துவிட்டார். கடைசிப் பக்கத்தைப் படித்து மடித்ததும், “என்னதான் வேண்டும் என்கிறீர்கள் நீங்கள்?” என வினவினார்.
“சண்டை விமானப் படை ரெஜிமென்டில் நியமனம் பெற விரும்புகிறேன்.”
மேஜர் நாற்காலியில் சாய்ந்து, எதிரே இன்னமும் நின்று கொண்டிருந்த விமானியை வியப்புடன் உற்று நோக்கி, தாமே அவன் பக்கம் நாற்காலியை நகர்த்தினார். அவருடைய அகன்ற புருவங்கள் எண்ணெய் வழிந்து மழமழப்பாயிருந்த நெற்றியில் இன்னும் மேலே சென்றன.
“ஆனால் உங்களால் விமானம் ஓட்ட முடியாதே?”
“முடியும், ஓட்டுவேன். பரீட்சார்த்தமாக என்னைப் பயிற்சிப் பள்ளிக்கு அனுப்புங்கள்” என்று மெரேஸ்யெவ் அநேகமாமக் கத்தி விட்டான். அடக்க முடியாத விழைவு அவன் குரலில் ஆர்த்தது. பக்கத்து மேஜையின் அருகே உட்கார்ந்திருந்த இராணுவத்தினர், சாமள நிறமான இந்த அழகிய இளைஞன் இவ்வளவு பிடிவாதமாக என்ன வேண்டுகிறான் என்று புரிந்துகொள்வதற்காக நிமிர்ந்து பார்த்தார்கள்.
“ஆனால் கால்கள் இல்லாமல் எப்படிப் பறக்க முடியும்? வேடிக்கைதான்… எங்குமே கண்டதில்லை இதை. உங்களுக்கு யார்தாம் அனுமதி தருவார்கள்?” – தனக்கு முன்னே இருப்பவன் எவனோ வெறியன், ஒருவேளை பைத்தியக்காரன் போலும் என்று நினைத்தார் மேஜர்.
அலெக்ஸேயின் சீற்றம் பொங்கும் முகத்தையும் வெறித்த விழிகளையும் ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு, முடிந்தவரை மென்மையாகவே பேச அவர் முயன்றார்.
“இதை எங்குமே கண்டதில்லைதான், ஆனால் இதை எல்லோரும் காண்பார்கள்!” என்று விடாப்பிடியாக அழுத்திக் கூறினான் மெரேஸ்யெவ். தன் குறிப்பு நோட்டுப் புத்தகத்திலிருந்து ஸெல்லோபேன் காகிதத்தில் சுற்றியிருந்த பத்திரிக்கைத் துணுக்கை எடுத்து மேஜருக்கு முன்னே மேஜைமேல் வைத்தான்.
பக்கத்து மேஜைகளின் அருகே இருந்த இராணுவத்தினர் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு இந்த உரையாடலை உற்றுக் கேட்கலானார்கள். ஒருவன் ஏதோ காரியமாகப் போல மேஜரை நெருங்கி, நெருப்புப் பெட்டி கேட்டு வாங்கிக் கொண்டு மெரேஸ்யெவின் முகத்தை ஜாடையாகப் பார்த்தான். மேஜர் கட்டுரை மீது கண்ணோட்டினார்.
“இது எங்களுக்குப் பிரமாணம் ஆகாது. எங்களுக்குக் கட்டளை உள்ளது. விமானப் படைக்கு ஏற்ற தகுதி பற்றிய எல்லாத்தரங்களும் அதில் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. இரண்டுகால்களும் அல்ல, இரண்டே விரல்கள் மட்டும் உங்களிடம் குறைவாயிருந்தால் கூட விமானம் ஓட்ட உங்களை அனுமதிக்க என்னால் முடியாது. உங்கள் பத்திரிக்கைத் துணுக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இது சான்று அல்ல. உங்கள் விழையை மதிக்கிறேன், ஆனால்….”
தனக்குள் கோபம் மண்டி எழுவதை உணர்ந்தான் மெரேஸ்யெவ். இன்னும் ஒரு கணம் தாமதித்தால் அவன் மைக்கூட்டை எடுத்து பளிச்சிடும் அவரது முன் வழுக்கை மண்டையில் எறிந்து விடுவான் போலிருந்தது. சிரமத்துடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “இதுவோ?” என்று கம்மிய குரலில் கேட்டான்.
முதல் வரிசை இராணுவ மருத்துவரின் கையொப்பம் உள்ள காகிதத்தை – தன் கடைசி வாதத்தை – மேஜைமேல் வைத்தான்.
மேஜர் அந்தக் குறிப்பைச் சந்தேகத்துடன் எடுத்துப் பார்த்தார். அது உரிய முறையில் எழுதப்பட்டிருந்தது, இராணுவ மருத்துவப் பணித்துறையின் பெயர்க்குறியுடன் முத்திரை இடப் பட்டிருந்தது. விமானப் படையினரால் மதிக்கப்பட்ட மருத்துவரின் கையொப்பம் அதன் அடியில் இருந்தது. மேஜர் அதைப் படித்த பின் அதிகப் பரிவு காட்டலானார். இல்லை, எதிரே இருந்தவன் பைத்தியக்காரன் அல்ல. இந்த அசாதாரண இளைஞன் மெய்யாகவே கால்களின்றி விமானம் ஓட்டத் திட்டமிட்டிருக்கிறான். ஆழ்ந்த போக்கும் செல்வாக்கும் கொண்ட இராணுவ மருத்துவரையும் இவன் எப்படியோ நம்ப வைத்திருக்கிறான்.
“இருந்தாலும், நான் எவ்வளவு தான் விரும்பிய போதிலும், என்னால் முடியாது” என்று பெருமூச்சு விட்டு மெரேஸ்யெவின் விவரப்பத்திரத்தை அப்பால் நகர்த்தினார் மேஜர். “முதல் வரிசை இராணுவ மருத்துவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். எங்களிடம் தெளிவான, திட்டவட்டமான உத்தரவு இருக்கிறது. அதிலிருந்து பிறழ்வதற்கு இடமே கிடையாது…. நான் இதை மீறினால் அப்புறம் பதிலளிப்பது யார், இராணுவ மருத்துவரா?” என்றார்.
வயிறார உண்ட, சுயதிருப்தி நிறைந்த இந்த மனிதரை, மட்டுமீறிய தன்னம்பிக்கையும் நிம்மதியும் மரியாதைப் பாங்கும் கொண்டவரை அலெக்ஸேய் வெறுப்புடன் நோக்கினான். அவருடைய கச்சிதமான உடுப்பின் துப்புரவான கழுத்துப் பட்டையையும் மயிரடர்ந்த கைகளையும், கவனமாகக் கத்தரிக்கப்பட்ட அழகற்ற பெரிய நகங்களையும் அருவருப்புடன் பார்த்தான். இந்த ஆளுக்கு விளக்குவது எப்படி? இவரால் புரிந்து கொள்ள முடியுமா? விமானச்சண்டை என்றால் என்ன என்று அறிவாரா இவர்? துப்பாக்கி வெடியைக் கூட அவர் வாழ்நாளில் ஒரு போதுமே கேட்டிருக்க மாட்டார். உணர்ச்சிகளை மிகச் சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டு, “அப்போது நான் என்ன செய்வது?” என்று தெளிவற்ற குரலில் கேட்டான்.
“நீங்கள் கட்டாயமாக விரும்பினால், அணியமைப்புத் துறைத் தேர்வுக் குழுவிடம் நான் உங்களை அனுப்பலாம். ஆனால் உங்கள் பாடெல்லாம் வீணே ஆகும் என்று எச்சரிக்கிறேன்.” இவ்வாறு கூறித் தோட்களைக் குலுக்கினார் மேஜர்.
அலுவலகங்களை அவன் ஒன்றன் பின் ஒன்றாகச் சுற்றி வருவது இவ்வாறு தொடங்கியது. கழுத்தளவு வேலை நெருக்கடியில் மூழ்கியிருந்த களைத்துச் சோர்ந்திருந்த மனிதர்கள் அவன் கதையைக் கேட்டார்கள், வியந்தார்கள், பரிவு காட்டினார்கள், மலைத்தார்கள், பின்பு கையை விரித்துவிட்டார்கள். உண்மையிலேயே அவர்களால் என்ன செய்திருக்க முடியும்? உத்தரவு, தலைமை அலுவலகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட, முற்றிலும் சரியான உத்தரவு இருந்தது. பல ஆண்டுகளாக வழங்கிவந்த மரபுகள் இருந்தன. அவற்றை மீறுவது எப்படி? அதிலும் சந்தேகத்துக்கே இடமற்ற இம்மாதிரி விஷயத்தில், போர்ச் செயலுக்காகத் துடித்துக் கொண்டிருந்த, வெறுமே இருக்க முடியாத இந்த அங்கவீனன் மேல் எல்லோருக்கும் உளமார்ந்த இரக்கம் உண்டாயிற்று. “முடியாது” என்று வெட்டொன்று துண்டிரண்டாக அவனிடம் சொல்ல எவருக்கும் நா எழவில்லை. பணியாளர் நியமன அலுவலகத்திலிருந்து அணியமைப்பு அலுவலகத்துக்கு, ஒரு மேஜையிலிருந்து இன்னொரு மேஜைக்கு அனுப்பப்பட்டான். அவன் மீது பரிவு கொண்டு அதிகாரிகள் அவனைத் தேர்வுக் குழுவிடம் அனுப்பி வைத்தார்கள்.
மறுதலிப்புகளோ, அறிவுறுத்தும் தொனியோ, இகழ்வுபடுத்தும் அனுதாபமும் தயையுமோ (இவற்றுக்கு எதிராக அவனது தன்மானம் மிக்க ஆன்மா அனைத்தும் பொங்கி எழுந்தது எனினும்) இப்போது மெரேஸ்யெவுக்குக் கட்டுக் கடங்காத கோபம் உண்டாகவில்லை. தன்னைக் கட்டுக்குள் வைத்திருக்க அவன் பழகிக்கொண்டான். மனுதாரனின் தோரணையை மேற்கொண்டான். சில சமயங்களில் ஒரே நாளில் இரண்டு மூன்று மறுதலிப்புக்களைப் பெற்ற போதிலும் நம்பிக்கையைக் கைவிட அவன் விரும்பவில்லை. பத்திரிக்கைத் துணுக்கும் இராணுவ மருத்துவரின் முடிவும் அடிக்கடி பையிலிருந்து எடுக்கப்பட்டமையால் நைந்து மடிப்புக்களில் விட்டுப்போயின. எண்ணெய்த் தாளில் அவற்றை ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
கேள்வி: //பொதுவாக மக்களின் செயல்பாடுகள், போக்குவரத்து, அரசு அலுவலகங்கள், காவல், அரசியல், அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள், அரசின் சில நடவடிக்கைகள், போன்றவற்றை பார்க்கும்போது அறம், நேசம், நெறிமுறை, மனிதம் அனைத்தும் ஒழிந்துவிட்டதாக நினைக்கத் தோன்றுகிறது.
அதேவேளையில் தனிமனிதனோடு பழகும்போது, சாலை விபத்தில் சிக்கியவரை காப்பது; உதவுவது, இன்னும் பிற நிகழ்வுகளில் மனிதமும் நேசமும் இறக்கவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.
தனிமனிதர்களின் கூடாரமே சமூகம் என்னும்போது, இந்த முரண்பாடுகள் எதனால் ஏற்படுகிறது? இவற்றை களையும் வழிகள் யாவை?
நன்றி//
– வெ. குணசேகரன்
அன்புள்ள குணசேகரன்,
“தி மாட்ரிக்ஸ் ரிலோடட் (The Matrix Reloaded – 2003)” திரைப்படத்தில் நாயகன் நியோவை தொடர்ந்து துரத்தும் ஏஜெண்ட் ஸ்மித் கூறும் உரையாடல் ஒன்றில் இப்படி வரும்.
“நாம் சுதந்திரமாக இருப்பதால் இங்கு இருக்கவில்லை. நமக்கு சுதந்திரம் இல்லை என்பதால் இங்கு இருக்கிறோம். இதிலிருந்து தப்பிச் செல்வதற்கு காரணம் ஏதுமில்லை; அதை மறுப்பதற்கு நோக்கமும் இல்லை. ஏனெனில் நோக்கமில்லாமல், நாம் இங்கு இருக்கமாட்டோம் என்பது நாமிருவரும் அறிவோம். அந்த நோக்கம்தான் நம்மை உருவாக்கியிருக்கிறது, நம்மை இணைத்திருக்கிறது. அந்நோக்கமே நம்மை இழுத்துச் செல்கிறது. அதுவே நம்மை வழிநடத்தவும் செய்கிறது, தூண்டிவிடவும் செய்கிறது. இந்நோக்கம்தான் நம்மை வரையறுத்திருக்கிறது. நம்மை பிணைக்கவும் செய்கிறது”
எந்திரங்களால் எழுதப்பட்ட மென்பொருளாக உலகம் மாறிவிட்டது. அதில் கனவு காண்பதால் எந்திரங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உயிருள்ள பொம்மைகளாக மக்கள். அதிலிருந்து மனித குலத்தை மீட்க வேண்டும் எனப் போராடும் சயான் போராளிகள். எந்திரங்களின் மென்பொருள் குறைபாடுகளை கண்டறியும் பொருட்டு சயான் விட்டு வைக்கப்படுகிறது. அந்த குறைபாடுகளின் (Bug) உச்சமாய் அதீத சக்தி கொண்ட நாயகன் நியோ. எந்திரங்களின் பக்கமிருந்து தோன்றிய மென்பொருள் குறைபாடாய் ஏஜெண்ட் ஸ்மித். இருவருக்கும் நடக்கும் போட்டி சண்டையில் எந்திரங்கள் தமது அடுத்த வெர்சனை சரி செய்வதாக தீர்மானிக்கிறது. சமயத்தில் அந்தச் சண்டை எந்திரங்கள் தீர்மானித்த வழியில் செல்லாமல் புதுப்புது முடிச்சுக்களோடு பயணிக்கிறது. சமநிலை பிறழ்கிறது. கனவு உலகிலிருந்து மனித குலம் யதார்த்த உலகிற்கு திரும்புமா? இல்லை மனித குலத்தின் இறுதி புகலிடமான சயான் அழிக்கப்படுமா? எந்திரங்களின் மென்பொருள் பரிசோதனையாக சயானும், நியோவும் அவனது கூட்டாளிகளும் பயன்படுகிறார்களா? இது மாட்ரிக்ஸ் வரிசையில் வந்த மூன்று திரைப்படங்களின் கதைச் சுருக்கம்.
இன்றைய நிஜ உலகும் மாட்ரிக்ஸ் போலவே இயங்குகிறது. நாம் நிஜ உலகில் பயணித்தாலும் சொத்துடமையினால் பிரிந்து போய் திட்டமிட்ட வழியில் வடிவமைக்கப்பட்ட நமது வாழ்க்கையை முதலாளித்துவம் எனும் மென்பொருள் தீர்மானித்திருக்கிறது. வாழ்க்கைப் பிரச்சினையினால் நாம் சிணுங்கினாலோ, வெடித்தாலோ அவர்கள் அடுத்த வெர்சனை வாட்ஸ் அப் வெர்சன் போல வெளியிடுகிறார்கள். நிஜ உலகிலிருந்து துண்டிக்கப்படும் நமது சிந்தை மேலும் அன்னியமாகிறது. இப்படி போகிறது வாழ்க்கை.
மக்கள் தனிப்பட்ட முறையில் அறத்தை பேணினாலும் சமூகம் என்று வரும் போது அறத்தை ஏன் புறந்தள்ளுகிறார்கள் என்பது உங்களது கேள்வி.
அறத்தை பொதுவில் மனித குல நற்குணங்களின் இலட்சியவாதம் என்று வரையறுத்தால் அது தனிநபர் சார்ந்து தோன்றியதா? இல்லை சமூகம் சார்ந்து பரிணமிக்கிறதா?
காட்டு ஓநாயை வீட்டு நாயாக மாற்றிய மனித குலத்திற்கு அதன் பின் வேட்டைக்கு ஒரு துணை கிடைக்கிறது. ஆரம்பத்தில் இனக்குழுவில் இருந்த வயதான கிழவர்கள், கிழவிகளை விட நாய்களுக்கு மதிப்பு அதிகம். சமயத்தில் நாய்களுக்கு இறைச்சி இல்லை என வயது மூத்தோரை இரையாக கொடுத்திருக்கிறது மனித குலம். முதியோரை, நோயுற்றோரை, எளியோரை பராமரிக்க வேண்டும் என்ற பண்பாடு பற்றிக் கொள்ள வெகு காலமாகிறது. அந்தப் பராமரித்தலுக்கு வாழ்க்கைத் தேவைக்கான உற்பத்தி சற்றே அதிகரிக்க வேண்டியிருக்கிறது. இப்படி சமூக வாழ்க்கையின் இயக்கமே மனித குலத்தின் இணக்கத்தை கற்றுத் தருகிறது, உருவாக்குகிறது.
முதலாளித்துவ உற்பத்தி முறை வந்ததும் முழு சமூகமும் உற்பத்தியில் பிணைக்கப்பட்டாலும் நுகர்வு, சொத்துடைமையில் முழு சமூகமும் பிரிக்கப்படுவதால் மனித குலம் இன்று தனித்தீவுகளாய் மாறி வருகிறது. நகர வாழ்க்கையோ, கிராம வாழ்க்கையோ ஒவ்வொருவருக்கும் மாநகர பேருந்து வழித்தடம் போல ஒரு தடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம். அருகாமையில் உள்ள பிற தடங்களையோ, சற்று தூரத்தில் பயணிக்கும் தொலை தடங்களையோ யாரும் ஏறிட்டுப் பார்க்கமுடியாது. நமது தடத்தில் பயணிப்பதிலேயே ஆயிரத்தெட்டு சிக்கல்கள்.
ஒரு கையில் சுமைப்பை. மறு கையை பேருந்துப் படிக்கட்டில் இருக்கும் கூட்டத்தில் துழாவி கம்பியை பிடிக்கிறார் ஒரு சலவைத் தொழிலாளி. பேருந்து வேகமெடுக்கிறது. கூட்டத்தின் நெருக்குதலில் பிடித்த கை கம்பியை விடுகிறது. அது அவரது வாழ்க்கைக்கு உணவிடும் வலது கை. கீழே விழுகிறார். நேரம் நள்ளிரவு 11 மணி. கை மூட்டு விலகி தோள் எலும்பு உடைந்து போய் விட்டது. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சொந்த கிராமத்திற்கு பயணிக்க இருந்தவர், பயணத்தை ரத்து செய்து விட்டு கிடைத்த பேருந்தை பிடித்து போரூர் பூந்தமல்லி சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு வருகிறார். முதலுதவிக்கு பிறகு அடுத்த நாள் காலையில் கை எலும்பு சிகிச்சைக்கு இலட்சத்திற்கு மேல் ஆகும் என்று அறிகிறார். உடனே தோளில் துணியையும், வலிக்கு வலி நிவாரணிகளையும் போட்டு விட்டு நூறடி சாலையில் இருக்கும் புத்தூர் கட்டு நிலையம் விரைகிறார்.
அங்கு ஆயிரத்தில் முடிகிறது அவரது சிகிச்சை. உண்மையில் அவரது மூட்டு இணைந்ததா, எலும்பு சேர்ந்ததா என்பதை எக்ஸ்ரே பார்த்து தெரிந்து கொள்ளக்கூட வழியில்லாத மக்கள் மருத்துவம் அது. தற்போது கை வலி விட்டபாடில்லை. புறநகர் அரசு மருத்துவமனை ஒன்றின் பிசியோ தெரப்பியில் ஐ.எஃப்.டி சிகிச்சை பெற்று வலியை குறைக்கிறார். கை இணைய மூன்று மாத காலம் ஆகுமென புத்தூர் வைத்தியர் தெரிவித்திருக்கிறார். பாரிமுனை பூக்கடையில் அவரது சலவை நிலையம் இருக்கிறது. நாளொன்றுக்கு 500 ரூபாய் சம்பாத்தியம் இன்று இல்லை. மனைவி இறந்து விட்டார். மகன்கள் கொடுக்கும் சிறு உதவியுடன் தனது வைத்தியத்தை தானே பார்த்துக் கொண்டு தோளில் போட்ட துண்டுடன் அரசு மருத்துவமனையிலிருந்து நம்முடன் உரையாடிவிட்டு மறைந்து போனார்.
ஒரு சலவைத் தொழிலாளிக்கு முறையான மருத்துவம் கிடைப்பதை இந்த சமூக அமைப்பு ஏன் உத்திரவாதப்படுத்தவில்லை. இன்னொரு புறம் மருத்துவச் செலவிற்கு விதவிதமாய் காப்பீடுகள். அந்தக் காப்பீடு பணம் முழுவதும் கிடைக்கும் வரை ஐசியூவில் வைத்திருக்கும் தனியார் மருத்துவமனைகள். உனக்கு திடீரென்று விபத்து நடக்கும், திடீரென்று செத்துப் போவாய் என்று பயமுறுத்தியே காப்பீடுகள் கல்லா கட்டுகின்றன. ஏன் ஒரு மனிதன் இறந்து விட்டால் இந்த சமூகம் அவரது குடும்பத்தை காப்பற்ற வழியில்லாமல் இருக்கிறது? அதை பயமுறுத்துவதே ஒரு மாபெரும் தொழிலாக ஏன் இருக்க வேண்டும்? நாய்களுக்கு கிழவர்களை இரையாக்குவதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
இழப்பு இன்னதுதான் என தெரிந்தே நாம் நமது தெரிவுகளை தெரிவு செய்கிறோம். ஏனெனில் இங்கே தெரிவு உண்மையில் தெரிவில்லை, அது ஒரு நிர்ப்பந்தம்.
தேநீர்க் கடையில் தூக்க கலக்கத்துடன் வடை மாஸ்டர் உண்மையில் வட இந்திய மாஸ்டர் வெங்காயங்களை வெட்டிக் கொண்டிருந்தார். தூக்கத்தில் விரல்களை வெட்டி விட்டால் என்ன செய்வது? உரிமையாளரிடம் கேட்டால் இரவு விடிய விடிய செல்பேசியில் படம் பார்த்த கொழுப்பு என்று திட்டுகிறார். திட்டை கேட்டுக் கொண்டே சிரித்தவாறு பான் மசாலாவை உள்ளே தள்ளுகிறார் மாஸ்டர். கண்கள் சிவக்க வெங்காயம் தடையின்றி வெட்டப்படுகிறது. சொந்த ஊர் விட்டு, தாய்மொழி, பண்பாடு விலகி அன்னியமான ஊரில் ஏன் இப்படி? அவரைத் துரத்தியது எது? இங்கே வதைப்பது எது?
உழைத்துக் களைக்கலாம். ஆனால் களைப்புக்கு இடமில்லாத வதையாகி விட்டது இன்றைய உதிரி தொழிலாளிகளின் உழைப்பு. இந்த உழைப்புச் சிறையில் இருக்கும் இம்மக்கள் சமூகநலன் சார்ந்த பிரச்சினைகளுக்கோ, போராட்டங்களுக்கோ எப்படி வர முடியும்?
பெயருக்கு ஜனநாயகமும், அமலில் அதிகாரமும் இருக்கும் நாட்டில் ஊழல்தான் பணநாயகமாக வீற்றிருக்க முடியும். லஞ்ச லாவண்யங்களை அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையங்களில் இருப்பதை நேரடியாக உணர முடிகிறது. ஆனால் முழு சமூகமும் மறைமுகமாக அதை நோக்கியே பயணிக்கிறது. சிலிண்டர் போடும் தொழிலாளிக்கு ஊதியம் மிகக் குறைவு. அதை ஈடுகட்ட அவர் வாடிக்கையாளர்களிடம் ஐம்பது ரூபாய் வாங்குகிறார். நாளிதழ்களின் ஊரக செய்தியாளர்களுக்கு ஊதியம் மிகக் குறைவு. அதை ஈடுகட்ட அவர் கவர் வாங்குகிறார். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைவு. அதை ஈடுகட்ட அவர் டியூஷன் எடுக்கிறார். விடுதிகளின் பரிசாரர்களுக்கு ஊதியம் குறைவு. அதை ஈடுகட்ட அவர் வாடிக்கையாளர்களிடம் டிப்ஸ் வாங்குகிறார். இவர்களெல்லாம் தமது தொழிலை இன்முகத்துடன் வாடிக்கையாளரோடு செய்ய இயலுமா?
இதெல்லாம் இந்த நிறுவனங்களுக்கு தெரிந்தே நடக்கும் நிகழ்வுகள். எடப்பாடி கோட்டு சூட்டுடன் வெளிநாடு சென்று வந்த கதையை ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டால்தான் கட்சி மற்றும் அரசு விளம்பரங்கள் கிடைக்கும். இது அதிகாரப்பூர்வ ஊழல். மோடியின் நூறு நாள் ஆட்சியை பாராட்டினால்தான் தொலைக்காட்சிகளுக்கு பிரச்சினை இல்லை.
ஓலா, உபர் ஓட்டுநர்களுக்கு தூங்குவதே இலட்சியம். குறிப்பிட்ட வேலை நேரத்தில் குறிப்பிட்ட சவாரிகளை முடித்தால்தான் ஊக்கத் தொகை கிடைக்கும். அதற்காக ஒரு தெரு தள்ளி இறங்கச் சொன்னாலும் வாடிக்கையாளரிடம் சிடுசிடுக்கிறார். இடுப்பொடிய வண்டி ஓட்டி உணவுகளை விநியோகிக்கும் தொழிலாளிகளுக்கு உணவில் சூடு சற்று குறைந்தால் வாடிக்கையாளரிடம் திட்டு. ரேட்டிங்கில் இழப்பீடு. பிறகு ஏன் அவர் சாலை விதிகளை மதிக்கப் போகிறார்? குடிநீர் லாரிகளும் ஒரு நாளில் இத்தனை சவாரி ஓட்டினால்தான் ஓட்டுநர்களுக்கு வருமானம். பிறகு ஏன் விபத்து நடக்காது?
இரக்கம் பார்க்காத சங்கிலித் திருடர்கள்; அவர்களது கையை ஒடித்து மாவுக்கட்டுடன் புகைப்படம் வெளியிடும் இரக்கம் பார்க்காத போலீசு. “எந்த விசாரணைக்கும் கிட்டே வராதே, எட்டி நில்” என்பதை அறிவிப்பாய் போட்டுக் கொண்டு காஷ்மீரின் தெருக்களில் காத்துகிடக்கும் இரக்கமில்லாத இராணுவம். ஓய்வூதியத்திற்கும், சமூக நல திட்டங்களுக்கும் மக்களை இரக்கமின்றி அலையவிடும் அதிகார வர்க்கம்! அதே அதிகார வர்க்கத்தை இரக்கமின்றி அப்பார்ட்டுமென்டுகளுக்கும், பொறியியல் – மருத்துவக் கல்லூரிகளுக்கும் இலட்சங்கள், கோடிகளைக் கேட்டு அலைய விடும் முதலாளிகள்! அவர்கள் கையில் நடுநிலைமையென பீதாம்பரத்துடன் நடத்தப்படும் ஊடகங்கள்!
முழு சமூகமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வன்முறை ஊழலுடன் பயணிக்கிறதோ? இன்னொருபுறம் பண்பாட்டு அரங்கில் நாளொரு மேனியாக பொழுதொரு விதமாக விதவிதமான கொலைகள்! வன்புணர்ச்சிகள்! இவரா குற்றம் புரிந்தார் என்று அதிர்ச்சியடையும் படியான சராசரி முகங்கள்! மொத்த சமூக அமைப்பும் ரணமாக மாறிவிட்டது. இதை எப்படி களைவது?
இந்தக் குறளுக்கு சாலமன் பாப்பையாவின் விளக்கப்படி “துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.”
ஏழைகள் துன்பங்களை அனுபவிக்கவேண்டுமென்பது ஏன் ஒரு விதியாக இருக்க வேண்டும்? அந்த விதியை தோற்றுவித்த சமூக அமைப்பு எது? அந்த அமைப்பைத் திருத்தி ஏழைகளை விடுதலை செய்யும் வரை இந்த சமூகம் ரணப்படுவதை எப்படி மாற்ற முடியும்?
எனில் இந்த சமூக அமைப்பில் நம்பிக்கையூட்டும் அம்சம் ஏதுமில்லையா?
இருக்கிறது. 99% மக்கள் இன்றும் என்ன துன்பம் வந்தாலும் உழைத்துத்தான் வாழ்கிறார்கள். அவர்கள் குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதோ, செய்யும் வேலையில் மோசடி செய்வதோ இல்லை. மீதம் இருக்கும் ஒரு சதவீதம்தான் நீங்கள் குறிப்பிடும் ஊழல் செய்யும் அரசியல்வாதி, அதிகாரி, முதலாளி இன்னபிறர்.
இடையில் இருக்கும் நடுத்தர வர்க்கம் இரு தரப்பிலும் ஊசலாடினாலும் அதன் நிலையும் இன்றைக்கு உழைக்கும் மக்களின் பிரச்சினைகளோடே அணி சேர்கிறது.
இப்படி உழைப்பில் நேர்மையாகவும் ஏழ்மையை பல்லைக் கடித்துக் கொண்டும் ஓடும் மக்களை அரசியல் படுத்த வேண்டும். இரண்டாவது இந்த ஜனநாயக அமைப்பில் மக்களுக்கு இடமில்லை. அதுவே அதிகார வர்க்க தடித்தனத்தையும், ஊழலையும் மக்களுக்கு இன்னல்களையும் தோற்றுவிக்கிறது. அதன்படி போலி ஜனநாயகத்தை ஒழித்து உண்மையான ஜனநாயகத்தை தோற்றுவிக்க வேண்டும். இந்த இரண்டும் என்று ஒன்று சேர்கிறதோ அன்று தனிமனிதனாகவும், சமூகமாகவும் மனித குலம் அறத்துடன் வாழும். (போலி ஜனநாயகம், புதிய ஜனநாயகம் குறித்து இன்னொரு தருணத்தில் விரிவாக பார்ப்போம்)
நன்றி!
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
காக்ஸ் பசார், வங்காளதேசம் : சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம், 23 வயதே நிரம்பிய சானா பேகம், மியான்மரின் மாங்டாவ் மாவட்டத்தில் அமைந்துள்ள முற்றிலும் கருகிப்போன தனது கிராமத்தை விட்டு வெளியேறினார், கடினமான ஈரப்பதம் நிறைந்த புல்வெளிகளையும், நெல் வயல்களையும் கடந்து, மூன்று நாட்கள் கழித்து தனது அண்டை நாடான வங்காளதேசத்தில் அமைந்துள்ள குட்டுப்புல்லாங் அகதிகள் முகாமை அடைந்தார்.
“அவர்கள்(மியான்மர் ராணுவம்) என் தந்தையையும், இரண்டு சகோதரர்களையும் என் கண் முன்னே கொன்றார்கள். நான் ஓடி ஒளிந்து உயிர் பிழைத்தேன்” என்று ஷல்பகான் அகதிகள் முகாமில் வசிக்கும் சஃபீனா அல்ஜசீரா பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.
பலுகாளி ரோஹிங்கிய அகதி முகாம்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த அகதிகள் முகாமில் வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் என்னால் இங்கு உயிர் பிழைத்திருக்க முடிகிறதே. நான் என் ஊருக்கு திரும்பி சென்றால் கொல்லப்படுவது உறுதி” என்றார்.
தெற்கு வங்காளத்தில் உள்ள 27 அகதிகள் முகாம்களில் சஃபீனாவை போன்று 10 லட்சத்துக்கு மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் வசித்து வருகின்றார்கள்.
குறிப்பாக 2017 ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி மியான்மர் ராணுவத்தால் தொடங்கப்பட்ட கொடூரமான தாக்குதல்களுக்கு பிறகுதான், ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட மியான்மரிகள் இந்த அகதிகள் முகாம்களுக்குள் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.
1970 மற்றும் 1990-களில் ஏற்பட்ட தாக்குதல்களின் விளைவால் ஏற்கெனவே, இங்கு தஞ்சம் புகுந்த ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்களோடு இவர்கள் இணைந்தார்கள்.
52 வயது நிரம்பிய அக்பர் அலி தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறார். “ஆனால், மியான்மர் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட என் மகள் திரும்பி செல்வோம் என்ற செய்தியை கூறினால் மிகவும் அதிர்ச்சியடைகிறாள்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில் “எனது மனது ராகின்கேயில் உள்ள எனது வீட்டை நினைத்து தினமும் வெம்புகிறது. எனது வாழ்வின் பெரும்பகுதியை நான் அங்குதான் கழித்தேன். அங்கு எனக்கு சொந்தமாக விவசாய நிலம் இருந்தது. ஆனால், இங்கோ ஏதுமில்லாத ஒரு அகதி வாழ்க்கையை வாழ்கிறேன்.” என்றார்.
இரண்டாம் முறையாக 3400 அகதிகளை நாடு திரும்ப ஏற்படுத்தப்பட்ட முயற்சியும் தோல்வியுற்றது. காரணம் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், குடியுரிமையும் பெறாமல் நாடு திரும்புவதற்கு அவர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர், என்பதே.
சல்பாகன் அகதி முகாமில் தனது பேரன்களுடன் வசித்து வரும் குல்சும் பேகம், ‘தங்குவதற்கு வசிப்பிடமும், உணவும் கிடைக்கிறது, எங்களுக்கு உயிரை பற்றிய அச்சமில்லை’ என்றார்.
சல்பாகன் அகதி முகாமில் தனது மகன், மருமகன் மற்றும் பேரன்களுடன் வாழ்ந்து வரும் குல்சும் பேகம், தங்குவதற்கு வசிப்பிடமும், உணவும் கிடைப்பதால் தான் திருப்தியடைவதாக அல்ஜசீரா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்கூறினார்.
மேலும், “நான் இதற்கு மேல் கடவுளிடம் ஒன்றும் கேட்டவில்லை” என்கிறார்.
‘எனது மகனுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால், அகதிகளுக்கு இங்கு வேலை கிடைப்பது மிகவும் கடினம்’ என்றார்.
பல ரோஹிங்கியாக்கள் இந்த முகாம்களிளேயே சிறிய தொழில்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
சஃபீக் 4 வயதிருக்கும்போது தனது தந்தையுடன் 1991-ல், குட்டுப்பல்லாங் முகாமுக்கு வந்தவர். இப்போது 32 வயதில் ஒரு தையல் கடையை நடத்திவருகிறார். “இங்கே இருக்கும் அகதிகளிடமிருந்து பல ஆர்டர்கள் எனக்கு கிடைக்கிறது, இப்போது என்னால் புதிய ரக துணிகளையும் இங்கு காணமுடிகிறது” என்றார்.
மேலும், தனது சொந்த ஊரை பற்றி கேட்கையில் ஞாபகமில்லை என்கிறார். “நான் குழந்தைப் பருவத்தில் இங்கு வந்து சேர்ந்தேன், என் வாழ்நாள் முழுக்க ஒரு அகதியாகவே வாழ்ந்துள்ளேன்” என்றார்.
பலுகாளி அகதிகள் முகாமில் அமைந்துள்ள உள்ளூர் சந்தை, இங்கு
ரோஹிங்கியர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.
பலுகாளி முகாமில் ஒரு ரோஹிங்கியா சிறுவன் பொருட்களை விற்பனை செய்கிறான்.
இரண்டு வருடத்திற்கு முன்னால் மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பின் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட மியான்மரிகள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.
“எனது சொந்தங்கள் இன்னும் மியான்மரில் உள்ளனர். ஆனால், அவர்கள் உயிரோடு உள்ளார்களா என்பது தெரியாது” என்கிறார் சல்பாகன் முகாமில் வசித்து வரும் ஹமீடா.
குட்டப்பல்லாங் – பலுகாளியில் உள்ள 27 முகாம்களில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியர்கள் வசிக்கிறார்கள். உலகில் அகதிகள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளாக இவை உள்ளன.
சல்பாகன் முகாமில் வசிக்கக்கூடிய சஃபீனா பேகம், “அவர்கள் என் தந்தையை என் கண் முன்னமே கொன்றார்கள், நான் அங்கு திரும்பிச்செல்ல மாட்டேன்” என்கிறார்.
அக்பர் அலி தனது சொந்த ஊருக்கு திரும்பி செல்ல விரும்புகிறார். ஆனால், “மியான்மர் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட என் மகள் ‘திரும்பி செல்வோம்’ என்ற செய்தியைக் கூறினால் மிகவும் அதிர்ச்சியடைகிறாள்” என்கிறார்.
இரண்டாம் முறையாக 3400 அகதிகளை நாடு திரும்ப ஏற்படுத்தப்பட்ட முயற்சியும் தோல்வியுற்றது. எந்த விதபாதுகாப்பும் இல்லாமல், குடியுரிமையும் பெறாமல் நாடு திரும்புவதற்கு அவர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர் என்பதே காரணமாகும்.
பலுகாளி முகாமில் வசிக்கும் ரோஹிங்கியாக்கள்.
1991-ல் தனது தந்தையுடன் 4 வயது சிறுவனாக வந்த சஃபீக், நயபாரா முகாமில் வசித்து வருகிறார், அவர் திரும்பி செல்வதற்கு இனி எந்த காரணமுமில்லை.
தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு குரல் தூக்குக் கொட்டடியிலிருந்தே கேட்கிறது. மரண தண்டனை கூடாது என்று பொதுவாகக் குரல் கொடுப்பதோடு நில்லாமல் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தன் தலைக்கு மேலேயே தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குத் தண்டனையை எதிர்த்தும் ஆணித்தரமாக வாதிடுகிறார் பேரறிவாளன்.
நாட்டின் உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டதாலேயே ஒரு தீர்ப்பு இறுதியும் அறுதியுமான உண்மையாகி விடாது. குறிப்பாக, ‘தடா’ வழக்குகள் குறித்து இதை இன்னுங்கூட அழுத்தமாகச் சொல்லலாம். தடா சட்டத்தில் நீதியைத் தளைப்படுத்தும் கூறுகளில் ஒன்று, குற்றஞ் சாட்டப்பட்டவர் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை குறுக்கி விடுவதாகும். மற்றொன்று, உயர் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் வாய்ப்பை மறுத்து முறையீட்டுப் படிகளில் ஒன்றை உருவி விடுவதாகும். இந்தக் குறையை போக்குமுகத்தான் என்று எண்ணும்படி பேரறிவாளன் நாட்டில் உள்ள நல்லோர்க்கு எல்லாம் செய்துள்ள மேல்முறையீடாகவே இம்மடலைக் கருதலாம்.
தூக்கு மரத்தின் நிழலில் நின்றபோதும் பதற்றப்படாமல் அழுத்தந்திருத்தமாகத் தன் வாதங்களை அவர் முன்வைப்பது படிப்பவர் கருத்தைக் கவரும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலிருந்தே அகச் சான்றுகளை அடுக்கடுக்காக எடுத்துக்காட்டி அவர் வாதிடுவதைப் படிக்கும் போது இன்னுமொரு மேல்முறையீட்டுக்கு வாய்ப்பிருக்குமானால் பேரறிவாளன் குற்றமற்றவராக வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்ற எண்ணமே மேலிடுகிறது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் தன் பெற்றோர் அடைந்துள்ள துன்பத்தை அவர் எடுத்துக்காட்டுவது நமது நெஞ்சைத் தொடுகிறது. நாம் சொல்கிறோம். அவர்களோடு நாங்களுமிருக்கிறோம்! பேரறிவாளனின் முறையீட்டைக் கேட்டும், பிறரைக் கேட்கச் செய்தும், அவரை ஒப்புரவு நாடும் நல்லிளைஞனாக மீட்டு வந்து விடுதலை வானில் சிறகடிக்கக் காண்பதற்கு இயன்றதனைத்தும் செய்வோம்! (நூலின் முன்னுரையிலிருந்து)
நான், அ.ஞா. பேரறிவாளன், ராஜீவ் கொலை வழக்கில் பொய்யாகப் பிணைக்கப்பட்டு மரண தண்டனைச் சிறைவாசியாக அடைக்கப்பட்டுக் கிடப்பவன். எனது கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் மேலான பரிசீலனையில் இருப்பதால் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டுள்ளவன். 19 வயதுச் சிறுவனாக அடைக்கப்பட்ட நான், 34 வயது நிரம்பிவிட்ட நிலையில் கடந்த 14.5 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும், துன்பப் பொருமல்களிலும் காலம் கரைப்பவன். வயதின் முதிர்ச்சியும் உயிர்க்காப்புப் போரின் அயர்ச்சியும் தந்துவிட்ட மாறாத தழும்புகள் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே புதல்வன் நான்.
… இம்முறையீட்டு மடலுக்கான இரண்டாவது மிக முக்கியக் காரணம், எமது வழக்கின் முன்னாள் தலைமைப் புலனாய்வு அதிகாரியும், பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் (MMDA) அதிகாரியாகவும் அங்கம் வகித்து இவ்வாண்டின் (2005) மார்ச் திங்களில் ஓய்வு பெற்றவரான திரு. இரகோத்தமன் அவர்கள் இக்கொலை தொடர்பாக, ‘குறுந்தகடு’ (CD) ஒன்றை வெளியிட்டு, அது தொடர்பாக ஏடுகளுக்கு வழங்கிய பேட்டியே.
10.8.2005 தேதியிட்ட ‘குமுதம்’ வார இதழின் பேட்டியின் இறுதியில் திரு. இரகோத்தமன் சொல்கிறார் (இணைப்பு – 4)
கொலை நடந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் இதுவரை விடை இல்லை என்கிறார், இரகோத்தமன். அவை: ஸ்ரீபெரும்புதூரிலிருந்து கொலைக்குப்பிறகு சிவராசனும் சுபாவும் ஆட்டோவில் தப்புகிறார்கள். அவர்களுடன் மூன்றாவது நபர் ஒருவரும் பயணிக்கிறார். அவர் யார் என்பது இன்று வரை தெரியவில்லை. மனித வெடிகுண்டு தனு பயன்படுத்திய வெடிகுண்டு பெல்டைத் தயாரித்துக் கொடுத்தது யார் என்பதும் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரியுமா?
இரகோத்தமன்.
31.7.2005 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ வாரமிரு முறை இதழின் பேட்டியில் இறுதிக் கேள்வியும் அவரின் பதிலும், (இணைப்பு-5) :
ராஜீவ் கொலை வழக்கில் கண்டுபிடிக்க முடியாத விஷயம் ஏதாவது உண்டா ?
ஒரே ஒரு விஷயம் இருக்கிறது.. தனு தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்டைச் செய்து கொடுத்த நபர் யார்… என்கிற விஷயம்தான்!
ஆம். இதுவரை வெளிவராத, கண்டுபிடிக்கவே முடியாமல் உள்ள, பல்நோக்கு கண்காணிப்புக் குழு (MDMA) விசாரணைக்கான கருப்பொருளாக உள்ள இந்த வெடிகுண்டு பற்றிய ரகசியத்தோடுதான், எனது வாழ்வும் கல்வியும் பொய்யாகப் பிணைக்கப்பட்டு என்னைத் தூக்குக் கயிற்றில் நிறுத்தியிருக்கிறது.
எந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை என்று முதன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல்கிறாரோ, அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் என்பதாக என்மீது பொய்யான பிரச்சாரத்தை இதே மத்தியப் புலனாய்வுத் துறையினர்தான் 1991 ஆம் ஆண்டு நான் கைது செய்யப்பட்ட போது ஏடுகள் வாயிலாகப் பரப்பினர். (நூலிலிருந்து பக். 16-18)
இக்கொலைச் சதியில் வேறு எவரையும் ஈடுபடுத்தியதாக எந்த ஆதாரமோ குற்றச்சாட்டோ என்மீது கிடையாது. இக்கொலைச் சதியில் மேற்பார்வைப் பணி மேற்கொண்டதாகவோ, என்மீது எவ்வித குற்றச்சாட்டும் கிடையாது. என் மீதான குற்றச்சாட்டெல்லாம், சிவராசன் கேட்ட பொருட்களை நான் அவருக்கு வாங்கிக் கொடுத்தேன் என்பது மட்டுமே. இந்நிலையில் எவ்வாறு என்னை நீதியரசர் தாமஸ் இரண்டாவது பிரிவில் இணைத்துத் தூக்குத் தண்டனை வழங்கினார்?
… நான் கேட்க விரும்புவது இதைத்தான்! சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட பேட்டரி செல்லை வாங்கிக் கொடுத்தேன் என்பதற்காக எனக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தாகி விட்டது. நாளை, வெடிகுண்டு செய்தவனுக்கு நீதிமன்றம் என்ன தண்டனை கொடுக்கப் போகிறது?
இது குறித்தான விசாரணை பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் (MDMA) பரிசீலனையில் உள்ளதையும், அந்த விசாரணையின் முடிவு எனது வழக்கை மிகவும் பாதிப்பதாக அமையும் என்பதையும் குறிப்பட விரும்புகிறேன்.
மேற்சொன்ன எனது தரப்பு நியாயங்களையெல்லாம் முழுக்க முழுக்க நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே முன்வைத்திருக்கிறேன். (நூலிலிருந்து பக்.43-44)
உலகின் சரிபாதிக்கு மேலான 113 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டாகி விட்டது என்பதாலோ, ‘கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை, உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது’ என்று மனிதநேயத்தின் உச்சத்தில் நின்று காந்தியடிகள் சொன்னவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்பதாலோ, நான் எனது தண்டனை மாற்றத்தைக் கோரவில்லை.
மரண தண்டனையின் கொடுங்கரங்கள் எனது வாழ்வைச் சின்னாபின்னாப்படுத்தியிருப்பினும், எனது குடும்பத்தார் வாழ்வைத் துன்பக் கடலில் ஆழ்த்தியிருப்பினும், மனித நேயத்தின் அடிப்படையில் இம்மரண தண்டனையை மாற்றியமைக்கக் கோரவில்லை .
காரணம், எனது கடந்த கால வாழ்க்கை மனித அறத்திற்கும், ஒழுக்கநெறிக்கும் உட்பட்டதாய் இருப்பினும், மனிதனை மனிதன் மதித்து வாழ வேண்டும் என்பதற்காகத் தனது வாழ்நாளெல்லாம் போராடி மடிந்த மனிதநேயர் தந்தை பெரியார் கொள்கை வழி வாழ்பவன் என்றாலும், உலகப் பொதுமறை தந்த வள்ளுவனை வழிகாட்டியாய் ஏற்று நடப்பவனாய் இருப்பினும், இன்றைய எனது சூழலில் மனிதநேயம் குறித்து நான் பேசுவது உள்நோக்கத்தோடு பார்க்கப்படும் என்பதால் தவிர்க்கிறேன்.
பிறகு நான் ஏன் தண்டனைக் குறைப்பைக் கோருகிறேன் எனில், ”எனக்கு நன்றாகத் தெரியும் – தலைச்சேரியில் இளம் வழக்குரைஞராக விசாரணை வழக்குகளில் பணி செய்து கொண்டிருந்த போது பார்த்துள்ளேன். குற்றமற்றவர்கள், நூற்றுக்கு நூறு நிரபராதிகள் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள். அவர்களுக்காக இப்போதும் என் இதயத்தில் குருதி வழிகிறது.” என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் 25.6.1998 இல் திருவனந்தபுரத்தில் ‘மரணதண்டனை’க் கெதிரான மாநாட்டில் பேசியவற்றுக்கு உதாரணமாக எனது வாழ்வு அமைந்து விட்டதே என்ற வேதனையோடு என் வழக்கை வைத்துள்ளேன்.
மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்ட பின் நிரபராதி எனத் தெரியவந்த உலகின் எத்தனையோ நீதியியல் தவறுகளை நாம் கண்டுவருகிறோம். தமிழகத்தில் பாண்டியம்மாள் கொலை வழக்கை எவரும் மறந்திருக்க முடியாது. கொலை செய்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த கணவன் கூண்டில் நிற்க, கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பாண்டியம்மாள் நீதிமன்றத்தில் தோன்றிய காட்சியை நாடு இன்னும் மறந்து விடவில்லை.
முடிவாக என் வழக்கின் சாரத்தை தருகிறேன்.
1. வழக்கு ‘தடா’ சட்டப்படி நடந்தது.
2. சாதாரண சட்டங்கள் வழங்கிய அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன.
3. இறுதியில் இவ்வழக்கிற்கு ‘தடா’ பொருந்தாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
4. அதன் பின்னரும், ‘தடா’ வாக்குமூலம் எனும் காவல்துறை அதிகாரி பதிவு செய்த ஆவணத்தின் அடிப்படையிலேயே தண்டனை.
5. அந்த வாக்குமூலத்திலும்கூட சதிச் செயல் எனக்குத் தெரியும் என்பதற்கோ சிவராசன், தனு, சுபா ஆகியோரில் எவரேனும் கூறினர் என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை .
இவற்றுக்கெல்லாம் மேலாக ‘தடா’ எனும் கொடூரச் சட்டத்தால் நீதிமன்ற முறையீட்டு வாய்ப்பு ஒன்று (High Court Appeal) பறிக்கப்பட்டது. மேலும் ஒரு சட்ட வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்குமானால் நான் விடுதலை பெற்றிருப்பேன். (நூலிலிருந்து பக்.46-47)
நூல் : தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் ஆசிரியர் : அ.ஞா. பேரறிவாளன்
வெளியீடு : மோ. ஸ்டாலின் நினைவு நூலகம், 87, கீழை அலங்கம், தஞ்சாவூர் – 613 001. தொலைபேசி எண் : 94438 65698
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 08
பெற்றோர்களுக்கான கலை நிகழ்ச்சி
இன்று அரிச்சுவடி விழா!
குழந்தைகளே ஒரு கெட்டியான காகிதத்தில் எழுதிய இந்த அறிக்கையை முன் மண்டபத்தில் மாட்டுகிறோம். அங்கு இதை எல்லோரும் பார்ப்பார்கள்.
அரிச்சுவடி விழா! கவிதைகள், விடுகதைகள், பழமொழிகள்.
பாடல்கள், நடனம்.
தாள இசைக் குழு. பெற்றோர்களுக்கு ரகசியம்.
இவையெல்லாம் உண்டு! எல்லாக் குழந்தைகளும் பங்கேற்கின்றனர்.
இது தான் எங்கள் சுவரொட்டி. இதைத் தாழ்வாரத்தில் உள்ள சுவரில் மாட்டுகிறோம். அருகே எழுத்துகளைப் பெரிதாக ஒட்டுகிறோம். உழைப்புப் பாடத்தில் குழந்தைகளே இவற்றை உருவாக்கினார்கள். வகுப்பறையில் மேசைகளை ஓரமாகப் போடுகிறோம். அவற்றிற்குப் பின் விருந்தினர்கள் அமர்வார்கள். எல்லாம் தயார்.
வலேரி மாமா இப்போது வர வேண்டும். அவர் எஞ்சிய 40 நிமிடங்களில் குழந்தைகளுடன் சேர்ந்து இசை நாடக ஒத்திகையை நடத்துவார்.
“ஏன் வலேரி மாமா வரத் தாமதமாகிறது? மணி என்ன?” என்று லேலா கவலைப்படுகிறாள்.
“அவர் ஒன்றும் தாமதிக்கவில்லை. இதோ கடிகாரம், நீயே பார்!” என்று நான் கைப்பையில் உள்ள கடிகாரத்தை எடுத்துக் காட்டுகிறேன். அவள் யோசித்தபடியே இதைப் பார்க்கிறாள்.
“கடிகாரத்தில் மணி பார்க்கவே எனக்கு முடிய மாட்டேன் என்கிறது. என்ன பண்ணுவதென தெரியவில்லை! எனக்குக் குழந்தை பிறந்து, ‘மணி என்ன?’ என்று கேட்டால் எனக்குப் பதில் சொல்லத் தெரியாது, வெட்கமாக அல்லவா இருக்கும்?”
“ஏன் வெட்கமாயிருக்கும்? நான் தான் உங்களுக்கு இதைச் சொல்லித் தரவில்லையே!”.
வலேரி மாமா வருகிறார். குழந்தைகள் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அவரைச் சூழ்ந்து கொள்கின்றனர்.
குழந்தைகள் விரைவாக இரண்டு வரிசைகளில் அரை வட்டமாக நிற்கின்றனர். முதல் வரிசையில் நிற்பவர்கள் சிறு நாற்காலிகளில் அமருகின்றனர், அவர்கள் முன் உள்ள மேசைகளில் கிசிலாஃபான்களும் பேரிகைகளும் உள்ளன. மற்றவர்களின் கரங்களில் மற்ற இசைக் கருவிகள் உள்ளன.
“எதிலிருந்து துவங்குவோம்?” என்று வலேரி மாமா கேட்கிறார்.
“விருந்தினர்கள் உள்ளே வந்ததும் வால்ட்ஸ் இசையோடு அவர்களை வரவேற்போம்.”
“எல்லாம் தயாரா…”
ஒத்திகை விரைவாக நடந்தது. இதனிடையே எங்கள் வகுப்பறை அருகே தாழ்வாரத்தில் நிறைய பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகள், பள்ளி ஆசிரியர்கள், பயனீர்கள் குழுமினர். வால்ட்ஸ் இசை ஒலிக்க, அவர்கள் வகுப்பறையினுள் நுழைந்து மேசைகளுக்குப் பின் உட்கார்ந்த போது எல்லோருக்கும் இடம் போதாதது தெரிய வந்தது. சிலர் வகுப்பறையின் உள்ளும் சிலர் தாழ்வாரத்திலும் கூட நிற்க வேண்டியிருக்கும். வகுப்பறையில் நடப்பது வெளியில் உள்ளவர்களுக்கும் கேட்பதற்காகக் கதவை அகலத் திறந்தோம்.
“அன்புள்ள அப்பாக்களே, அம்மாக்களே, தாத்தா, பாட்டிகளே! அன்புள்ள விருந்தினர்களே! எங்களை நீங்கள் பாராட்டலாம். இன்று எழுத்துகளைப் படிப்பதை முடித்தோம், எங்களால் இப்போது புத்தகங்களைப் படிக்க முடியும்!” என்று நாத்தோ முன் வந்து கம்பீரமாக இப்படிச் சொன்னாள். கர ஒலி!.
லேரியும் சாஷாவும் கவிதைகளைப் படிக்கின்றனர்.
குழந்தைகள் வரிசையாக விடுகதைகளைச் சொல்லி தாமே உடனே விடைகளையும் சொல்கின்றனர்.
வாத்திய இசைக்குழு இசைக்கிறது, குழந்தைகள் பாட்டுப் பாடுகின்றனர். ஒருவர் பின் ஒருவராகப் பழமொழிகள், வசனங்களைச் சொல்கின்றனர்.
சோம்பேறி விவசாயியைப் பற்றி இலிக்கோ கதை சொல்கிறான். மீண்டும் இசைக்குழு வாசிக்கிறது.
“அன்புள்ள அப்பாக்களே, அம்மாக்களே, தாத்தா, பாட்டிகளே! அன்புள்ள விருந்தினர்களே! எங்களை நீங்கள் பாராட்டலாம். இன்று எழுத்துகளைப் படிப்பதை முடித்தோம், எங்களால் இப்போது புத்தகங்களைப் படிக்க முடியும்!”
சில குழந்தைகள் நடனமாடுகின்றனர், வேறு சிலர் நகைச்சுவைக் காட்சிகளை நடித்துக் காட்டுகின்றனர், சிரிப்புக் கதைகளைப் படித்துக் காட்டுகின்றனர்.
“இப்போது நம் ரகசியம்! அன்புள்ள பெற்றோர்களே! உங்களுக்காக நாங்கள் பரிசுகளைத் தயாரித்துள்ளோம். இந்த பாக்கெட்டுகளில் உங்களுக்காக நாங்கள் தயாரித்த பொருட்கள் உள்ளன. நாங்கள் எப்படி எழுதுகிறோம் என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? நாங்கள் எப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறோம் தெரியுமா? நாங்கள் எப்படி வரைகிறோம் தெரியுமா? எல்லாம் இந்த பாக்கெட்டுகளில் உள்ளன” என்கிறாள் தேயா. கடைசி வாக்கியத்தை எல்லா குழந்தைகளும் சேர்ந்து சொல்கின்றனர். விருந்தினர்கள் கை தட்டுகின்றனர்.
குழந்தைகள் “அன்பு அம்மா, அப்பாவிற்கு” என்று எழுதப்பட்ட அழகிய பாக்கெட்டுகளைப் பெற்றோர்களுக்குத் தருகின்றனர்.
“விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழியுங்கள்!” என்று நான் வாழ்த்துச் சொல்கிறேன்.
ஒவ்வொருவராக என்னருகே வந்து முத்தமிட்டு விடை பெறுகின்றனர்.
அம்மா, அப்பாக்களின் முகங்களில் திருப்திகரமான புன்னகை. வளர்ந்து விட்ட, படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்ட தம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவர்கள் மெதுவாக வகுப்பறையிலிருந்து வெளியேறுகின்றனர்.
வாகனத்துறை விற்பனை வீழ்ச்சிக்கு இன்றைய தலைமுறையினர் மாதாந்திர தவணை கட்ட பயந்து ஓலா, உபேர் பயன்படுத்துவதே காரணம் என சங்கித்தனமான விளக்கத்தை அளித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். சங்கிகளின் சிந்தனை நூற்றாண்டு பழமையானது என்னும்போது, எவ்வளவு படித்தாலும்; எவ்வளவு உயர்ந்த கல்லூரிகளில் படித்தாலும் வளரவே வளராது என்பதற்கு நிர்மலா சீதாராமன் ஆகச்சிறந்த உதாரணமாகிவிட்டார்.
நிர்மலாவின் விளக்கத்துக்கு புதிய விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் மூத்த சங்கி நிதின் கட்கரி, பார்க்கிங் கட்டணத்தை தவிர்க்கவே வாகனங்களை வாங்குவதை பலர் தவிர்ப்பதாக கூறியுள்ளார். இதில் யார் சொன்ன ‘விளக்கம்’ மிகவும் முட்டாள்தனமாக உள்ளது என தனி போட்டியே நடத்தலாம்.
மத்திய அமைச்சர்களின் பொருளாதார மந்தநிலை விளக்கம் மக்கள் மத்தியில் கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் #BoycottMillenialls மற்றும் #SayItLikeNirmalaTai போன்ற ஹேஷ்டேக்குகளில் சங்கி அமைச்சர்களுக்கு மேலும் சில ‘யோசனை’களை வழங்கினர்.
வீடு விற்பனை சரிந்துள்ளது காரணம் அனைவரும் ஆன்லைனிலேயே வசிப்பதுதான் என்கிறார் சுகதா.
சாந்தனு சிங்: விமானத்துறை மந்த நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது, ஏனெனில் இன்றைய தலைமுறை இப்போதுதான் அலாவுதீன் படத்தைப் பார்த்து கார்பெட்டில் பறந்துகொண்டிருக்கிறது.
Aviation industry is facing slowdown because millennials just saw the Aladdin remake and switched to flying carpets.#SayItLikeNirmalaTai
ஸ்ரீவத்சவா : நம்முடைய நிதியமைச்சர் வாட்சப் பல்கலையில் ரேங்க் வாங்கியவராக இருப்பார். பொருளாதார வீழ்ச்சி, அரசாங்கத்தின் தவறா, தனிநபர்களின் தவறா? அடுத்த முறை நிர்மலா, இப்படியும் சொல்வார், மக்கள் வேலைக்கு செல்ல விரும்புவதில்லை என்பதாலேயே வேலைவாய்ப்பின்மை பெருகுகிறது!
Nirmala Sitharaman blames young people prefering Uber & Ola for falling automobile sales 🙄
Our FM seems to be a rank student in WhatsApp University. Crashing economy is everyone else's fault, not Govt's?
தமிழ் முகநூல் பதிவர்களும் ட்விட்டரில் வந்த பலர் பகடிகளை எடுத்து பகிர்ந்திருந்தனர். பார்ப்பனர்கள் அறிவாளிகள் என்கிற பிம்பம் உடைவதாகவும் பலர் எழுதினர்.
“பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகுதான் பார்ப்பனர்கள் எவ்வளவு பெரிய அறிவாளிகள் என்பதும், வேத காலத்துக் காட்டுமிராண்டிகள் என்பதும் முழுமையாகத் தெரிய வந்துள்ளது.” என்கிறார் பாலச்சந்திரன்.
கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கி வைத்த பொருளாதார சீரழிவை இந்த ஆட்சி காலத்தில் அனுபவிக்க வைத்துவிட்டது மோடியின் அரசாங்கம். மந்தநிலையை சீராக்குவதற்கு பதிலாக, தனது அறிவிலித்தனத்தை காட்டும் விளக்கங்கள் மூலம் மோடியின் அமைச்சர்கள் உளறிக்கொண்டிருக்கிறார்கள். செய்வதறியாத சமூகம், அறிவிலிகளை பகடி செய்துகொண்டிருக்கிறது.
தந்தை பெரியாரின் தேவை இன்று தமிழகத்துக்கு கட்டாயம் அவசியப்படுகிறது. அந்த வகையில் அவரைப் பற்றிய சில முக்கியமான விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதனை நிறைவேற்றும் வகையில் இந்த வினாடி வினா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சியுங்கள்.
(வினாடி வினா பகுதி, கேள்விகளுக்குக் கீழே உள்ளது. தவறாமல் பங்கெடுக்கவும்)
பெரியார் பிறந்த ஆண்டு எது?
1921-ம் ஆண்டில் பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது ஈரோட்டில் தலைமை தாங்கிய போராட்டம் எது?
கேரளாவில் ஈழவர், தீயர், புலையர் முதலானோர்க்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க, வைக்கம் ஊரில் உள்ள மகாதேவர் கோவில் முன்பாக நடந்த போராட்டத்தில் பெரியார் தனது துணைவியார், தங்கையாருடன் கலந்து கொண்டு ஒரு மாத தண்டனை பெற்றார். தடையை மீறி நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு 4 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார். இந்தப் போராட்டம் நடந்த ஆண்டு எது?
வ.வே.சு அய்யர் நடத்திய “பாலபாரதி தமிழ்க் குருகுலம் பரத்துவாஜ ஆசிரமத்தில்” பார்ப்பனப் பிள்ளைகளுக்கு உப்புமாவும், மற்றவர்களுக்கு பழைய சோறும் இருவருக்கும் தனிப்பந்தியும், தனி தண்ணீர் பானைகளும் வைத்திருந்தார். இதை பெரியார் எதிர்த்து காங்கிரசு சார்பில் அளிக்கப்பட்டு வந்த நிதியை நிறுத்துவதற்கு போராடினார். இந்த ஆசிரமம் எந்த ஊரில் இருந்தது?
ஈரோட்டில் 2.5.1925 அன்று பெரியார் துவக்கிய வார இதழின் பெயர் என்ன?
1925-ம் ஆண்டு பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி “இனி காங்கிரசை ஒழிப்பதே எனது வேலை” என்று முழங்கியதற்கு காரணம் என்ன?
1927-ம் ஆண்டில் பெரியார் செய்தவற்றில் முக்கியமானவை என்னென்ன?
1928-ம் ஆண்டில் எந்தப் போராட்டத்திற்காக பெரியார் சிறை வைக்கப்பட்டார்?
முக்கியத்துவம் வாய்ந்த முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டினை பெரியார் 1929-ம் ஆண்டில் நடத்தினார். டபிள்யூ.பி.ஏ. சவுந்திர பாண்டியன் இம்மாநாட்டுக்குத் தலைமையேற்றார். முக்கியத்துவம் வாய்ந்த 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாடு எந்த ஊரில் நடந்தது?
1930-ம் ஆண்டில் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின் போது பெரியார் ஆதரித்த மசோதா எது?
சோவியத் யூனியனை பெரியார் சுற்றிப் பார்த்த ஆண்டு எது?
1944-ல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்ட சங்கத்தின் பெயர் என்ன?
பெரியார் மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டதை எதிர்த்து அண்ணா பிரிந்து சென்று தி.மு.க. துவங்கிய ஆண்டு எது?
1956-ம் ஆண்டில் எந்தக் கடவுளின் படத்தை கொளுத்துமாறு பெரியார் அறைகூவல் விடுத்தார்?
1957-ம் ஆண்டில் பெரியார் அறிவித்த போராட்டம் எது?
பெரியார் இறந்த ஆண்டு எது?
நீங்கள் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் இந்த வினாடி வினாவில் பங்கேற்கச் செய்யுங்கள் !
கேள்வி: //நடிகர் சூர்யா திடீர் என்று கல்வி கொள்கை பற்றி பேச காரணம் என்ன? இவ்வளவு நாள் இல்லாம, இப்போதைய அரசு தான் இதுக்கு காரணமா?
இதனால் நடிகர் சூர்யா படத்துக்கு தமிழக அரசு மூலம் பிரச்சனை வருமா?//
– விஜயகுமார்
அன்புள்ள விஜயகுமார்,
‘அம்மா’ ஆட்சி, அடிமைகள் ஆட்சியான பிறகு கமலஹாசனுக்கே துணிச்சல் வந்திருக்கும் காலத்தில் சூர்யாவும் பேசுகிறார். அவரது ‘அகரம்’ அறக்கட்டளை கல்வி உதவிகள் சிலவற்றை செய்கிறது. புதிய கல்விக் கொள்கையின் தீமைகளை அவரது பார்வை, அனுபவத்தில் இருந்து பேசுகிறார்.
உடனே அதிமுக அடிமை அமைச்சர்கள் சூர்யாவை குறிவைத்து தாக்குகிறார்கள். பாஜக-வின் தயவில் பாசிச ஆட்சி படரந்து வரும் காலத்தில் இத்தகைய எதிர்ப்புக் குரல்கள் எழுவதை நாம் வரவேற்க வேண்டும். இதனால் சூர்யா படத்திற்கு தமிழக அரசு சார்பில் பெரிய பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. ஏற்கெனவே பாஜக-வின் விளம்பரத்தால் மெர்சல் ஓடிய கதை அவர்களுக்கும் தெரிந்திருக்கும்.
♦ ♦ ♦
கேள்வி: //நீங்கள் இவ்வளவு சொன்னீர்கள் சரி, அப்போ தமிழ்நாட்டிற்கு யாரு தான் சரியான ஆளு?
எனக்கு தெரிந்த அளவிற்கு தமிழ்நாட்டில் சரியான ஆளு யாருநா அது சீமான் மட்டும் தான், மற்றவர்கள் எல்லாம் பணத்தாசை பிடித்தவர்கள்.
அப்போது தமிழ்நாட்டிற்கு சரியான முதல்வர் யார் என்று நீங்கள் கூறுங்கள்?//
– கு. செல்வராஜ்
அன்புள்ள செல்வராஜ்,
தமிழகத்தை முதலமைச்சர்தான் முற்றிலுமாக ஆள்கிறார் என்று நாம் சிந்தையில் பழகியிருக்கிறோம். இன்றைய தேதியில் முதலமைச்சரால் என்ன செய்ய முடியும்? மின் கட்டண உயர்வை தீர்மானிப்பது யார்? மின்சார ஒழுங்குமுறை ஆணையம். பெட்ரோல் டீசல் விலை உயர்வை தீர்மானிப்பது யார்? அதுவும் எண்ணையை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள். தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை அந்நிறுவனங்களே தீர்மானிக்கிறார்கள். கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கட்டணத்தை அந்தந்த மருத்துவமனை நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. மறைமுக வரியை மத்திய அரசு முதன்மையாக தீர்மானிக்கிறது. மக்கள் அதை எண்ணிறந்த வழிகளில் செலுத்துகிறார்கள்.
பொதுத்துறை வங்கிகள் யாருக்கு கடன் கொடுக்கும்? அதை முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள். ஆம்னி பேருந்து கட்டணத்தை அந்த நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காவல்துறைக்கு அதிகம் ஆட்களை எடுப்பதை மட்டுமே தமிழக அரசு செய்ய முடியும். அந்தக் காவல்துறையும் வேதாந்தா போன்ற முதலாளிகளுக்கு ஆதரவாக போராடும் மக்களைச் சுட்டுக் கொல்லும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் முதலமைச்சர் என்பவர் மேற்கண்ட செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு அவ்வப்போது சாலையில் ஊர்வல பந்தா மட்டுமே போக முடியும்.
இதற்கு மேல் தமிழக பட்ஜெட்டில் இருக்கும் நிதிப் பற்றாக்குறையோடு கடன் வாங்கி சில நலத்திட்டங்களை அமல்படுத்தலாம். கடன் வாங்கினால் அதற்கு ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை உலக வங்கியும், ஆசிய வங்கியும், இதர வெளிநாட்டு வங்கிகளும் போடும். எனவே பண ஆசை பிடித்தவரா ஒரு முதல்வர் என்ற பிரச்சினையை விட இங்கே பணத்தை கட்டுப்படுத்தும் அதிகாரமே முதலமைச்சருக்கு கிடையாது. சாலை ஒப்பந்தங்கள், இதர கட்டுமானங்களில் ஆளும் கட்சிகள் அடிக்கும் கொள்ளைகளை வைத்து நீங்கள் யோசிக்கிறீர்கள். அது உண்மைதான். இந்த அமைப்பு முறை ஆளும் கட்சிக்கு நிறைய ஊழல் செய்ய வாய்ப்பளிக்கிறது. அப்படி ஊழல் செய்யாமல் இருப்பவர்களே ஆனாலும் மக்களுக்கு அதிகாரத்தோடு நல்ல நடவடிக்கைகளை செய்வதற்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதும் முக்கியமானது. பரிசீலித்து பாருங்கள்!
எனவே யார் நல்ல முதல்வர் என்று ஆய்வதை விட இந்த அமைப்பு முறை மக்களுக்கானதாக இல்லை. அதை எப்படி மாற்றுவது என்பதே நம் முன் உள்ள கேள்வி!
கேள்வி: //புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பட்டியலின வெளியேற்ற கோரிக்கையை வைத்து போராடுவதை தவறு என தெரிந்திருந்தும் ஏன் சமூக அக்கறை கொண்ட அமைப்புகள் டாக்டர் கிருஷ்ணசாமியை கண்டிக்கவில்லை?//
– நிலா
அன்புள்ள நிலா,
இந்த கோரிக்கையில் நமது சாதி ‘முன்னேறிய’ சாதிப் பட்டியலில் இணைந்து தாழ்த்தப்பட்டோர் என்ற இழிநிலைமை மறைந்து விடும் என்று பள்ளர் இன மக்களில் சிலர் கருத்துரீதியாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு வகையில் இது பார்ப்பனியமயமாக்கத்தோடு தொடர்புடையது. தன்னை ‘கீழ்’ சாதி என்று நடத்தும் கொடுமைகளை எதிர்த்து சமர் புரிவதற்கு பதில் தன்னை ‘மேல்’சாதியாக மாற்றிவிடுவதையே பார்ப்பனியமயமாக்கம் என்கிறோம்.
அவ்வகையில் இது சாதி உணர்வை பெருமைப்படுத்தும் கருத்தாகவும் இருக்கிறது. அதனால்தான் நீங்கள் குறிப்பிடும் சமூக அக்கறை கொண்ட அமைப்புகள் டாக்டர் கிருஷ்ணசாமியை நேரடியாக கண்டிப்பதற்கு அஞ்சுகின்றன. அமைப்புகள் மட்டுமல்ல பள்ளர் இன மக்களே கூட அப்படி கண்டிப்பதற்கு பயப்படும் நிலைதான் இருக்கிறது.
♦ ♦ ♦
கேள்வி: //2019 பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் இழுபறிக்கு காரணம்?//
– டி. கண்ணன்
அன்புள்ள கண்ணன்,
சந்தேகமில்லாமல் சாதிய உணர்வுதான். இந்த தேர்தலில் திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை வென்றிருக்கிறார். இந்த இழுபறிக்கு காரணம் திருமாவளவன் வெற்றிபெறக்கூடாது என்று பா.ம.க வரிந்து கட்டி வேலை செய்தது.
3 மாவட்டங்களில் பரந்திருக்கும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, குன்னம், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி இருக்கின்றன. இவை பெரும்பாலும் வன்னிய மக்களின் செல்வாக்கு கொண்ட தொகுதிகள்தான்.
எனினும் பல கிராமங்களில் சாதிய உணர்வை கடந்து வன்னிய மக்கள் திருமாவளவனுக்கு வாக்களித்திருந்தனர். அதனால்தான் அதிமுக – பாமக கூட்டணியின் சாதிய பலத்தினை தாண்டி மயிரிழையில் திருமாவளவன் வெற்றி பெற்றார். எனவே இதில் நல்லது கெட்டது இரண்டும் இருக்கிறது.
கேள்வி: //இந்தியாவில் இராணுவ ஆட்சி வரப் போகிறது என்று நக்கீரன் பத்திரிக்கையில் கூறுகிறார்கள். இராணுவ ஆட்சி வந்தால் மக்கள் எந்த மாதிரியான பிரச்சனையை சந்திக்க நேரிடும்?//
– திரு அன்பு
அன்புள்ள திரு அன்பு,
இந்தியாவில் அப்படி இராணுவ ஆட்சி வருவதற்கான சாத்தியமில்லை. அதே நேரம் இங்கிருக்கும் ‘ஜனநாயக’ ஆட்சியே ‘இராணுவ’ ஆட்சி போன்று சர்வ அதிகாரத்துடன் செயல்படுகிறது.
குஜராத் கலவரம் மற்றும் இந்துமதவெறியர்கள் குற்றம் சாட்டப்பட்ட குண்டு வெடிப்பு வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம்களை கும்பல் கொலை செய்த குற்றவாளிகள் குற்றப் பத்திரிகையிலேயே சேர்க்கப்படுவதில்லை. நீதித்துறை, கல்வி, வரலாறு அனைத்தும் காவி மயமாகி வருகிறது. மோடியை விமரிசிக்கும் அறிவுஜீவிகள் சிறைகளில் முடக்கப்படுகிறார்கள். இது போக காஷ்மீரும் சில வடகிழக்கு மாநிலங்களும் நீண்ட காலமாக இராணுவ ஆட்சியில்தான் வாழ்ந்து வருகின்றன.
ஒருவேளை கற்பனையாக இராணுவ ஆட்சி இங்கு வந்தால் என்ன நடக்கும்? அரசியல் சட்டம் அளித்திருக்கும் அடிப்படை உரிமைகள் அதாவது பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் வைக்கும் உரிமை, குடியுரிமை, இதர உரிமைகள் எதுவும் இருக்காது. அல்லது இராணுவம் முடிவு செய்யும். இன்றைக்கு காஷ்மீரில் இருக்கும் நிலைமை இந்தியா முழுவதற்கும் வந்து விடும். குறைந்த பட்சம் போராட்டம் நடக்கும் மாநிலங்களில் அப்படி முடக்கி விடுவார்கள்.
யாரையும் எப்போதும் கைது செய்யலாம். பிணை மறுக்கப்படும். எங்கேயும் எப்போதும் எதையும் சோதித்தறியலாம். நீதி என்பது ஒருவழிப்பாதையாக ஆளும் அரசின் நலன்களுக்காக மட்டும் இருக்கும். இராணுவம் செய்யும் கொலைகள், அட்டூழியங்களை கேள்வி கேட்க முடியாது. இவையெல்லாம் உலகில் இராணுவ சர்வாதிகாரம் நடந்த நாடுகளில் பரவலாக பார்க்க முடியும்.
உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் இக்காலத்தில் முன்னேறிய நாடுகளில் கூட கடும் சட்டங்களை இயற்றி அதிகாரப்பூர்வமாகவே அதிக அதிகாரத்தை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. எனவே நேரடி இராணுவ ஆட்சியும் சரி, மறைமுக இராணுவ ஆட்சியும் சரி தன்மையில் பெரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை.
♦ ♦ ♦
கேள்வி: //உண்மையான தலைவர் யார் தான் இப்போது தமிழ் நாட்டில் ?//
– அசபு லிங்கம்
அன்புள்ள லிங்கம்,
மீம்களை வைத்துப் பார்த்தால் வடிவேலுதான் பெரும் தலைவர்! அரசியல் விமர்சனங்களை மீம்கள் வழியாக போட்டுத் தாக்கும் தமிழக இளைஞர்களுக்கு வடிவேலு கை கொடுக்கிறார். மற்றபடி இந்தியாவிலேயே அதிகம் போராட்டம் நடக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதால் இங்கே மக்கள்தான் தலைவர்களாக இருக்கிறார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமாக இருக்கட்டும், தஞ்சை மீத்தேன் எதிர்ப்பு போராட்டமாக இருக்கட்டும், எட்டு வழிச்சாலையாக இருக்கட்டும், போக்குவரத்து தொழிலாளர் போராட்டமாக இருக்கட்டும் அனைத்திலும் மக்களே முன்னணியாக இருக்கின்றனர்.
இந்தப் போராட்டங்களை வாக்கு வங்கி அரசியலில் உள்ள கட்சிகள் நடத்தவில்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் எவரும் இப்படி ஒரு போராட்டத்தை கட்டியெழுப்பி தொடர்ச்சியாக போராடுவதில்லை. போராடும் மக்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, போராட்டத்தின் தீவிரத்தை தணிப்பது என்பதைத் தாண்டி அவர்கள் போவதில்லை. எனவே போராட்டம்தான் உண்மையான தலைவர்களை உருவாக்கும் என்ற விதிப்படி இன்றைக்கு தமிழகத்தில் தலைவர்கள் என யாரைச் சொல்ல முடியும்?
♦ ♦ ♦
கேள்வி: //இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாதத்தை விட இந்து மதவெறி தீவிர விளைவை ஏற்படுத்தும் என்பது உண்மையா? (அதாவது நாட்டையும் மக்களையும் துண்டாடுவது)//
– ஜெயபால்
உண்மைதான். முஸ்லீம் தீவிரவாதமே இந்துமதவெறியின் எதிர் விளைவுதான். இந்துமதவெறி என்பது பெரும்பான்மை மக்களின் பெயரில் செயல்படுவதால் அது அரசு, அரசாங்கம், நீதித்துறை, ஊடகம், என அனைத்து அதிகார பீடங்களின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவை பெற்றிருக்கிறது. மோடி பிரதமராகவும், குஜராத் 2002 முசுலீம் மக்கள் இனப்படுகொலைக்கு காரணம் அவர்தான் என்று உத்திரவு போட்ட முன்னாள் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பதும் சமீத்திய சான்று. இன்னும் மாட்டுக்கறியின் பெயரில் படுகொலை செய்யப்பட்ட பெஹ்லூகான், அக்லக் வழக்குகளில் குற்றவாளிகள் பகிரங்கமாக விடுதலை செய்யப்படுவதும், அவர்கள் பொது இடத்தில் வரவேற்கப்படுவதும் இப்படி பல சம்பவங்கள் இருக்கின்றன.
இந்த நாட்டில் ஜனநாயகம் முறையாக வேலை செய்யவில்லை, இந்துமதவெறிக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்ற நிலைமையே சில முசுலீம் இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் தள்ளிவிடுகிறது. அப்படி முறையாக ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரத்தினர் தண்டிக்கப்பட்டிருந்தால் எந்த முசுலீம் இளைஞன் தீவிரவாதம் பக்கம் போகப் போகிறார்?
இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர் அருள் எழிலன் பகிர்ந்திருந்த செய்தியை பொருத்தம் கருதி இங்கே இணைக்கிறோம்.
நமது இந்தியாவின் நாயகர்கள்!
2002 இருண்ட காவி இருள் இஸ்லாமிய மக்களை குஜராத்தில் வேட்டையாடிய நாட்கள் அவை. துடிக்க துடிக்க பல்லாயிரம் இஸ்லாமியர்கள் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என வேட்டையாடப்பட்ட அந்நாளில் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அந்த புகைப்படங்கள். காப்பாற்றக் கோரி ரத்தக்காயங்களுடன் கெஞ்சும் குத்புதீன் அன்சாரி..
காவி ரிப்பனுடன் கொலைவாளோடு வெறிக்கூச்சலிடும் அசோக் மோச்சி. குஜராத் கலவரம் இந்தியாவின் மாடலாக அரசியல் அரங்கில் மாற்றப்பட்டது. அதன் வடிவத்தை மாற்றி பல இடங்களிலும் பரிசோதனை செய்து அவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்க, அசோக் மோச்சி என்னும் செருப்பு தைக்கும் தொழிலாளியை அரசியல் படுத்தினார்கள் கம்யூனிஸ்டுகள்.
2014–ம் ஆண்டு கேரளாவில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் அசோக் மோச்சியும், குத்புதீன் அன்சாரியும் ஒரே மேடையில் ஏறினார்கள். காவி பயங்கரவாதிகளின் அரசியலை புரிந்து கொண்ட அசோக் மோச்சி அந்நாட்களில் தான் நடந்து கொண்டமைக்காக மன்னிப்புக் கேட்டார். அதுவரை தான் வாழ்ந்த வாழ்வை மற்றி சமூக நல்லிணக்கத்திற்கானதாக மாற்றினார்.
அகமதாபாத்தில் அசோக் மோச்சியின் ‘ஏக்தா சப்பல் கர்’ என்ற செருப்புக்கடையை குத்புதீன் அன்சாரி திறந்து வைத்துள்ளார்.
இதோ அகமதாபாத்தில் அசோக் மோச்சியின் ‘ஏக்தா சப்பல் கர்’ என்ற செருப்புக்கடையை குத்புதீன் அன்சாரி திறந்து வைத்துள்ளார். இருவருக்குமிடையில் ஆழ்ந்த நட்பை அன்பை பரஸ்பரம் மரியாதையை உருவாக்கியுள்ளது இந்த காலம். “இந்து வர்ணாசிரம அமைப்புதான் என்னை செருப்பு தைக்கும் நிலைக்கு உள்ளாக்கியது. இந்து வர்ண அமைப்பு எங்களை முன்னேற அனுமதிக்காது. அதனால் நடக்கும் அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்கிறார் அசோக் மோச்சி.
காலமும் மனித மனமும் எத்தனை உன்னதமானது அன்பை விடமதங்களும் சாதியும் எதுவும் இல்லை என்பதை அசோக் மோச்சி நிரூபித்திருக்கிறார். நாம் விரும்பும் இந்தியா இதுதானே?
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்