Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 295

தொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது !

போலிசு நிலையத்தில் கைதிகளை விசாரிப்பதைப்போல் நம்மிடம் அலட்சியமாகப் பேசினார் முதிர் இளைஞர் ராஜ். டீ.எஸ் ஸ்போர்ட்ஸ் என்ற இளைஞர்களுக்கான விளையாட்டு ஆடைகள் தயாரிக்கும் சிறு நிறுவன முதலாளி. சென்னை தி. நகர் ரங்கநாதன் தெருவில் பிரபரல சரவணா ஸ்டோருக்கு  பின்புறம். பரபரப்பான இடம். மூன்று மாடித் தளத்தில் கீழே விற்பனை – தயாரிப்புக்கூடமும், மேலே கிளாத் பிரிண்டிங் மற்றும் டிசைனிங் பிரிவும் வைத்துள்ளார்.

நாங்கள் சென்றபோது முதலாளி ராஜ் கணினியில் கிளாத் பிரிண்டிங் செய்வதற்கான டிசைனிங் வேலையில் மூழ்கியிருந்தார். “உங்களைப் போன்ற குறுந்தொழில்கள் கொள்ளை நோய் தாக்கிய நோயாளிபோல் நலிந்து வருகின்றனவே காரணம்” என்ன என்றோம்.

டீ.எஸ் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் ராஜ்.

அதற்கு அவர், “நலிஞ்சிப் போச்சா… குறுந்தொழிலா… நோய் தாக்கிடுச்சா… அப்பிடியா… ஏன்?” என்று நக்கலாக நம் கேள்வியையே தனித் தனியாக பிரித்து மேய்ந்தார். போலீசு மாதிரியே நம்மை மீண்டும் ஏற இறங்கப் பார்த்தார். நாம் ஒரு அடி பின்வாங்கி ஒதுங்கி நின்றபடி… அவருடைய போலீசு உடல்மொழியை பார்த்து அவரிடம் எப்படி பதில் வாங்குவது என்று தவித்தோம்… எங்கள் நிலையைக் கண்டு மனம் இரங்கினார்.

பிறகு இரகசிய குரலில், “சார் தொழில் தெரியாதவன், மொதலாளின்னு ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது. தெரியாத தொழிலுக்கு மொதலாளி ஆவுறவன்தான் அழிஞ்சிப்போவான். என்னைய எடுத்துக்குங்க…. எனக்கு தெரியாததுன்னு எதுவும் கிடையாது…. பிச்சை எடுக்க சொன்னாக்கூட ஒழுங்கா செய்வேன்…. சோகமா அய்யோன்னு நமக்கு பைசா போட்றவன பாக்கணும்…. அப்பதான் பாக்கறவன் பிச்ச போடுவான்…. நீ ஏனோ, தானோன்னு பார்த்தா, கேட்டா எவன் போடுவான்….. செய்யற தொழில்ல நேர்மை வேணும்…. சின்சியரா இருக்கணும். இப்படி இருந்தா எந்தத் தொழிலும் நலிவடையாது. அதுக்கு நானே உதாரணம்.

இதுக்கு முன்ன ஹெட்கான்ஸ்டபிளா ஒர்க் பண்ணேன். நான் நேஷனல் லெவல் ஸ்போர்ட்ஸ்மேன் வேற. அங்க வேலை புடிக்கல. ஸ்போர்ட்ஸ்மேன் என்றதால விதவிதமா ஸ்போர்ட்ஸ் டிரஸ் போடுவேன். அப்புறம் அதையே அரம்பிச்சிடலாம்னு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்.

ஸ்கிரீன் பிரிண்ட் வேலை செய்யும் விஜய்.

இங்க தொண்ணூறு பர்சன்ட் நான் தொழிலாளிதான்… பத்து பர்சன்ட்தான் மொதலாளி. கடையில எவன் வேலைக்கு வர்லனாலும் டான்னு ஒன்பது மணிக்கு கடைய தொறந்துடுவேன்… கஸ்டமர் நாள் முழுக்க இல்லன்னாலும், இரவு ஒன்பது மணி வரைக்கு கடையில இருப்பேன். வேல செய்யற ஆள் ஒரு  இடத்துல  இல்லன்னா அந்த இடத்துல போய் நான் நிப்பேன்.. துணி மூட்டயகூட தூக்குவேன்… லேபர்கூட லைன்ல நின்னு துணிக்கு பிரிண்டிங் பண்ணுவேன்… நானே கம்ப்யூட்டர்ல டிசைனிங்கும் பண்ணுவேன். அப்பத்தான் வேலைக்காரனுங்க பயப்படுவானுங்க… இந்த ஆளுக்கு நாம முக்கியம் கிடையாது… நாம இல்லன்னாலும் வேல நிக்காதுனு பதறிக்கினு நமக்கு முன்ன வந்து நிப்பான்.

படிக்க :
♦ இந்த வேலை எப்பவுமே உயிருக்கு உலைதான் | கிணறு தோண்டும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை
♦ மத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை

தொழிலாளின்னா யாரு? கூலி வாங்குறவன். மொதலாளிக்கு லாபம் சம்பாதிக்கிறது அவன் வேலை இல்ல…. அவன் நம்மள பாத்துப்பானு நாம போனா… நம்ம பிச்ச எடுக்க வேண்டியதுதான்….. பிறகு மொதலாளி நலிஞ்சிட்டாரு… நொடிஞ்ச்சிட்டாருனு… சொன்னா அது வேஸ்ட்.

ஜி.எஸ்.டி வந்து தொழில் பெருசா பாதிக்கல… ஒவ்வொரு தொழிலையும் பலபேர் பங்குப்  போட்டுக்கறதாலே மொத்தத்துல தொழில் குறைஞ்சிப்போச்சி… விலவாசியெல்லாம் தனியா எதுவும் ஏறல…. பொதுவா.. எல்லா விலயும் பத்து பர்சென்ட் ஏறியிருக்கு… ஒருபக்கம் சரக்கு வெலய ஏத்தி வாங்குனா… நம்மசரக்க அதுக்குமேல ஏத்தித்தானே விக்கிறோம்… அதுதானே வியாபாரம்.

விளையாட்டிற்கான ஆடைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

முன்ன ‘வாட்’ என்ற பேர்ல வரி இருந்தது… இப்ப “ஜிஎஸ்டி”னு பேர் மாத்திக்கிட்டான். தொழில் பண்ணா வரிக் கட்டித்தான் ஆவணும்… அப்பப்ப வர்ற பிரச்சனைய சமாளிச்சித்தான் ஆவணும்… நீ விக்கிற பொருளுக்கு மட்டும் ஜிஎஸ்டி கட்டுனா போதும். வாங்குன பொருளுக்குக் கட்டண ஜிஎஸ்டிய கழிச்சி ரிட்டர்ன் எடுக்கலாமே… அந்த வசதி ஜிஎஸ்டியில இருக்கு இல்லையா? அது தெரியாதவங்க… ஜிஎஸ்டிய ரொம்ப கொழப்புறாங்க….

எப்பவும், வெலவாசி ஏறிடிச்சி…. வியாபாரம் படுத்திடுச்சி…னு வியாபாரிங்க சொல்லிக்கினுத்தான் இருப்பாங்க… இது வியாபாரத்தில ஒரு தந்திரம். தொழில் நொடிஞ்சதுக்கு ஜி.எஸ்.டி.-ய காட்றது தப்பு… தொழில் தெரியாதவனெல்லாம் மொதலாளி ஆவணும்னு நினைக்கிறான்…பாரு…! அதனால வந்த வினை…”

ஸ்கிரீன் பிரிண்ட் செய்வதற்குத் தேவையன மை.

நாம் இடைமறித்துப் பேசினோம் : “செய்யிற தொழிலுக்கு பர்மிஷன் கொடுக்கிறது யாரு? அரசுதானே… அரசு பணத்த தூக்கிக்கினு வெளிநாட்டுக்கு ஓடுறவனெல்லாம் பெரிய மொதலாளின்னு சொன்னது அரசுதானே! சொன்னது மட்டுமில்ல, அவனுக்கு அரசு மானியமும்; வங்கிக் கடனும் கொடுத்தது. ஆனா சிறு மொதலாளி சொந்த பணத்த தொழில்ல போட்டு நட்டமாகி வீட்டுச் சொத்த வித்து நடுத்தெருவுல நிக்கிறான். ஆனா, அரசு நம்ம நாட்டு மொதலாளினு அவன சொல்லல… கொள்ள அடிச்சிட்டு ஓடுனவனத்தான் பெரிய மொதலாளியினு நமக்கு கைக்காட்டுது”. என்றோம்.

“சார் உலகத்தப் பத்தி பேசாதீங்க…. என் தொழில பத்தித்தான் நான் பேச முடியும்… நான் ஏன் முன்னேறலன்னு என் காரணத்தத்தான் நான் சொல்ல முடியும். இருக்கிறத எல்லாம் முடிச்சிப் போடாதீங்க….. நான் அதுக்கு வர்ல…” என்றார்.

“சரி, உங்க தொழில் ஓ..ஓஹொன்னு செழித்து வளர்ந்துள்ளது என்று உங்கள் பேச்சிலிருந்து தெரிந்துக்கொண்டோம். ஏறியுள்ள விலைவாசியை சமாளித்து பெரும் வெற்றியாளராக நீங்கள் வளர்ந்த இரகசியத்தை மற்றவர்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கள். இவ்வளவு காலம் தொழில் செய்யிறீங்க? வீடு, கார், பங்களான்னு… நீங்க சம்பாதிச்ச வெவரத்தை கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்” என்றோம்.

ஸ்கிரீன் பிரிண்ட் செய்யப் பயன்படும் துணிப்பலகை.

அவர், தீடிரென ரிவர்சாகி “சார் நான் பணம் இருந்தா ஏன் சார் மூத்திர சந்துல  கடைய தொறந்து நடத்திகிட்டிருக்கப் போறேன்…. சாதாரணமாகவே இந்த பின் பக்கம் எவனும் வர மாட்டான். நாறுது, கப்படிக்குதுனு இந்த இடத்த கிராஸ் பண்ணும்போதே மூக்க மூடிக்குவான்…. சுத்தமா தொழில் இல்லன்னு கடனுக்குத்தான் சார் மெஷின வாங்கிப்போட்டேன். அதுக்குக் கொடுத்த செக்க ஹானர் பண்ண முடியல….. இப்ப அது பவுண்ஸ் ஆவுது… சரக்கு வித்தப் பணமும் வரல. இருந்தாலும்… அந்தக் கத வேற…. தொழில் தெரியாதவனெல்லாம் புகுந்துத்தான் இந்தத் தொழிலே நாசமாப்போச்சு….

நான் இன்னிக்கும் கடைக்கு தேவையான சாமான் மூட்டைகள, நாலு பொட்டியினாலும் சளைக்காம தனியா தூக்குவேன்; இன்னிக்கு வரைக்கும் அப்படித்தான் தொழில் செய்யறேன். ஆனா, இப்ப வர முதலாளிங்க அவன் கைப்பைய தூக்கவே நாலு ஆளு வைக்கிறான்… அவன்தான் பெரிய முதலாளியின்னு அவன் பின்னாடி ஒடுறானுங்களே சார்? எப்படி சார்…?” என்றார் கண்கள் விரிய…

முட்டியில் கிழிந்த ஜீன்ஸ், முரட்டு தங்கச் சங்கிலி… அணிந்து பவுண்ஸர் மாதிரி தோற்றம் தரும் அந்த முன்னாள் தலைமைக் காவலர் கடைசியில் பிரியத்துடன் நம்மை வழியனுப்பி வைத்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

தில்லை கோயிலை மீட்போம் ! சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்

தில்லை கோயிலை பாதுகாக்க தனி சட்டம் இயற்ற கோரியும், கணக்கில்லாமல் வசூல் வேட்டை நடத்தி வரும் தீட்சிதர்கள் மீது சிபிஐ ரெய்டு நடத்தக்கோரியும், சிதம்பரம் காந்தி சிலை அருகில் 14.10.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் இணைச் செயலர் வழக்கறிஞர் தோழர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, திரு சந்திரசேகர் (பா.ம.க), வி.சி.க மாவட்ட செயலர் பால அறவாழி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாவட்ட செயலர் தோழர் மணியரசன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட செயலர் புஷ்ப தேவன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் முக்கிய கோரிக்கைகளாக :

1) ஆயிரங்கால் மண்டபத்தை பணத்திற்காக, சிவகாசி ஸ்டாண்டர்டு – ரத்னா ஸ்டோர்ஸ் தம்பதியினருக்கு திருமணத்திற்கு நட்சத்திர விடுதியாக மாற்றி கோயிலின் புனிதத்தை கெடுத்த தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடு! சம்பந்தப்பட்டவர்கள் மீது சிதம்பரம் போலீசார் மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

2) திருமணத்திற்கு கோடிக்கணக்கில் பணம் வாங்கிய தீட்சிதர்கள் மீது உடனடியாக சி.பி.ஐ ரெய்டு நடத்த வேண்டும்.

3) கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து கைப்பற்றி இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

படிக்க:
தில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி
♦ சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கட்டிய தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் !

4) நடராஜர் கோயிலில் இருந்த நந்தனார் சிலையை அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிறுவப்பட வேண்டும். அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

5) தீண்டாமையின் அடையாளமாக நிற்கும் தெற்கு கோபுர வாசல் மூடப்பட்டுள்ளது. அது உடனடியாக திறக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சாளர்கள் ; சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் தீட்சிதர்களின் அடாவடித்தனங்களை, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஆதாரப்பூர்வமாக நிறுவி தீட்சிதர்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக சிறப்புரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் என பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பட்டத்தின் இடையே தீட்சிதர்களை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
கடலூர் மாவட்டம்.
விருதை : 9360061121.
சிதம்பரம் : 9842341583.
கடலூர் : 9842396929.

மெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 02

துரு துருவென்று செயல் புரியத் துடித்த சீனியர் லெப்டினன்ட் சாப்பாட்டு அறையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளைக் கடைசி வரை ஆர அமர இருந்து சாப்பிட பெத்ரோவை விடவில்லை. வழியே சென்ற பெட்ரோல் லாரியில் ஏறி உட்கார்ந்து அவர்கள் ஊருக்கு வெளியே காட்டோரமாக இருந்த விமான நிலையம் சென்றார்கள். ஸ்குவாட்ரன் கமாண்டர் காப்டன் செஸ்லோவுக்குத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அவர் பேசாவாயராக உர்ரென்றிருந்தார். ஆனால் மட்டுமீறிய நல்லியல்பு வாய்ந்தவர் என்பதைக் கண்டு கொள்ள முடிந்தது. பேச்சை வளர்த்தாமல் அவர், லாடவடிவில் அமைந்து முகட்டில் புல் பரப்பியிருந்த காப்பிடத்துக்கு அவர்களை இட்டுச் சென்றார். மெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது “லா-5” ரக விமானங்கள் அங்கே நின்று கொண்டிருந்தன. அவற்றின் வால்கள் மீது “11”, “12”, என்ற எண்கள் பொறிக்கப்பட்டிருந்தன. புதியவர்கள் அவற்றையே ஓட்ட வேண்டியிருந்தது. நறுமணமுள்ள பிர்ச் மரச் சோலையில் புட்கள் கூட்டாக இசைத்த கீச்சொலி விமான எஞ்சின்களின் பெரு முழக்கத்துக்கும் மேலாக ஆர்த்தது. புதியவர்கள் தங்கள் புதிய மெக்கானிக்குகளுடன் வார்த்தையாடி, ரெஜிமென்ட் வாழ்க்கை நிலவரங்களைக் கேட்டறிந்தவாறு, எஞ்சிய மாலை நேரத்தை இந்தக் காட்டில் கழித்தார்கள்.

பேச்சு சுவாரஸ்யத்தில் ஒரேயடியாக ஈடுபட்டு விட்டமையால், கடைசி லாரியில் அவர்கள் ஊர் திரும்பியபோது இருட்டிவிட்டது, மாலைச் சாப்பாட்டு நேரம் கடந்துவிட்டது. இதனால் அவர்கள் பெரிதும் வருந்தவில்லை. வழிச் சாப்பாட்டுக்காகத் தரப்பட்ட உணவுப் பண்டங்கள் அவர்களிடம் பத்திரமாக இருந்தன. இராத்தங்க இடம் பிடிப்பதுதான் கடினமாகத் தென்பட்டது. களைப் பூண்டுகள் அடர்ந்து ஆளரவம் அற்றிருந்த வெற்றுவெளிகளின் நடுவே பாலைவனச் சோலை போலத் திகழ்ந்த அந்தச் சிற்றூரில் இருவிமானப் படை ரெஜிமென்ட்டுகள் இருந்தன. அவற்றைச் சேர்ந்த விமானிகளும் அலுவலக ஊழியர்களும் அங்கே இருக்க இடமின்றி நெளிந்தார்கள். இருப்பிட வசதிப் பொறுப்பதிகாரி, பிதுங்கப் பிதுங்க நிறைந்து வழிந்த கிராம வீடுகளுக்குள் ஒவ்வொன்றாக நுழைந்து பார்த்தார். புதிதாகத் தங்க வருபவர்களைப் புகவிட விரும்பாத வீட்டுக்காரர்களுடன் சச்சரவிட்டார், வீடுகள் விருப்பப்படி நீட்டிக்கொள்ள வசதியாக ரப்பரால் கட்டப்படவில்லையே என்று தமக்குத் தாமே தத்துவ விசாரம் செய்தார், அப்புறம் எதிர்பட்ட முதல் “வீட்டுக்குள்” புதியவர்களைப் புகச் செய்தார்.

“இராப் பொழுதை இங்கே கழியுங்கள். காலையில் பார்ப்போம்” என்றார்.

அந்தச் சிறு குடிலில் ஏற்கனவே ஒன்பது ஆட்கள் அடைந்திருந்தார்கள். சிலர் கட்டில்களிலும் பெஞ்சுகளிலும் இடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் தரையில் தீனிப் புல்பற்றைகளைப் பரப்பி மலைக்கோட்டுகளை அவற்றின் மேல் விரித்து அருகருகாக முடங்கியிருந்தார்கள். தற்காலிகமாகத் தங்கியிருந்த ஒன்பது பேர் தவிர வீட்டுச் சொந்தக்காரியான கிழவியும் அவளுடைய வயது வந்த மகளும் வேறு தங்கி இருந்தார்கள். ருஷ்ய முறைப்படி அடுப்புக்கு உயரே அமைந்த பரணில் அவர்கள் இருவரும் படுத்திருந்தார்கள்.

புதியவர்கள் படுத்துறங்கும் இந்த எல்லா உடல்களையும் எப்படித் தாண்டிச் செல்வது என்று தெரியாமல் கணப்போது நிலைவாயிலில் தயங்கி நின்றிருந்தார்கள். அடுப்புப் பரண் மேலிருந்து கிழவியின் எரிச்சல் மண்டும் குரல் அவர்களை அதட்டியது:

“இடமில்லை! இடமே இல்லை! பார், செம்மச் செம்ம நிறைந்திருக்கிறது. விட்டத்தில் படுப்பீர்களா என்ன?”

பெத்ரோவ் தெருவுக்குத் திரும்பிச் செல்லத் தயராகக் கதவருகே அசட்டுப் பிசட்டென்று தயங்கி நின்றான். ஆனால் மெரேஸ்யெவா பதபாகமாக அடி வைத்து உறங்குபவர்களை மிதித்துவிடாதிருக்க முயன்றவாறு குடிலின் மறு பக்கத்திலிருந்த சாப்பாட்டு மேஜையை அணுகிவிட்டான்.

“அம்மா, எங்களுக்குச் சாப்பிட மட்டும் இடம் கிடைத்தால் போதும். பகல் பூராவும் நாங்கள் சாப்பிடவில்லை. ஒரு தட்டும் இரண்டு கோப்பைகளும் கிடைத்தால் நன்றாயிருக்கும், ஊம்? இராப் பொழுதை நாங்கள் வெளியே கழித்துக் கொள்வோம். உங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்த மாட்டோம். கோடை காலம் ஆயிற்றே” என்றான்.

கிழவி ஏதோ முணுமுணுத்தாள். ஆனால் அதற்குள் அவள் முதுகுக்குப் பின்னாலிருந்து யாருடையவோ இரண்டு சிறு வெறுங்கால்கள் வெளியே துருத்தின. கொடி போன்ற மெல்லிய ஓர் உருவம் பேசாமல் பரணிலிருந்து வழுகி இறங்கிற்று. தூங்குபவர்களுக்கு மேலே லாவகமாக உடலைச் சமப்படுத்திக் கொண்டு அறைக்கு வெளியே சென்று மறைந்தது. அடுத்த கணமே தட்டுக்களையும் மெல்லிய விரல்களில் கோத்த பல்வண்ணக் கோப்பைகளையும் எடுத்துக்கொண்டு திரும்பியது.

அவள் பத்து பன்னிரண்டு வயதுச் சிறுமி என்று பெத்ரோவுக்கு முதலில் தோன்றியது ஆனால் அவள் மேஜையை நெருங்கியதும் புகை படிந்த விளக்கின் மஞ்சள் ஒளி அவள் முகத்தை இருள் மங்கலிலிருந்து தெளிவாகப் புலப்படச் செய்தபோது அவள் பருவ மங்கை, அழகியவள், புத்திளமை முகையவிழும் வயதினள் என்பதை அவன் கண்டுகொண்டான். பழுப்பு நிற ஜாக்கெட்டும் நற்சணல் ஸ்கர்ட்டும், தலையையும் மார்பையும் மூடி, கிழவிகள் போல முதுகுப்புறம் முடிச்சிடப்பட்டிருந்த கிழிந்த தலைக் குட்டையும் தாம் அவளது வனப்பை வெகுவாகக் கெடுத்தன.

“மரீனா, மரீனா, வா இங்கே, இழிமகளே!” என்று பரணில் இருந்தபடி சீறினாள் கிழவி.

ஆனால் பெண் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. மேஜைமேல் துப்புரவான செய்தித்தாளை லாவகமாக விரித்தாள், பெத்ரோவைக் கடைக்கண்ணால் சட்டெனப் பார்த்துவிட்டு பாத்திரங்களையும் முள்கரண்டிகளையும் அதன் மேல் ஒழுங்காக வைத்தாள்.

“வயிராரச் சாப்பிடுங்கள். உங்களுக்கு எதையேனும் நறுக்கவோ சூடுபடுத்தவோ வேண்டுமோ ஒருவேளை? இதோ நொடியில் சூடுபடுத்திவிடுகிறேன்” என்றாள்.

“மரீனா, வா இங்கே!” என்றுக் கூப்பிட்டாள் கிழவி.

“அம்மாவை கவனிக்காதீர்கள். அவளுக்கு மனது கொஞ்சம் சரியாயில்லை. ஜெர்மானியர்கள் அவளைக் கிலி கொள்ளச் செய்து விட்டார்கள், ராத்திரி வேளையில் படை வீரர்களைக் கண்டுவிட்டால் போதும், என்னைப் பத்திரமாக மறைத்து வைப்பதே குறி ஆகிவிடுகிறாள். அவள் மேல் கோபித்துக் கொள்ளாதீர்கள். இரவு வேளையில் மட்டுமே இப்படி. பகலில் அவள் நல்லவள்” என்றாள் நங்கை.

மெரேஸ்யெவின் சாமான் பையில் இறைச்சிப் பணியாரமும் டப்பியிலிட்ட உணவுப்பண்டங்களும் மெலிந்த விலாக்களில் உப்புப் பூத்திருந்த இரண்டு பூவாளை மீன்களும் இராணுவ ரொட்டியும் இருந்தன. பெத்ரோவ் செட்டு குறைந்தவன் போலும். அவனிடம் இறைச்சியும் ரஸ்குகளும் மட்டுமே இருந்தன. மரீனாவின் சிறு கைகள் இவற்றை எல்லாம் கூறு போட்டு, நாவில் நீர் ஊறும்படி தட்டுக்களில் ஒழுங்காக வைத்தன. நீண்ட இமைமயிர்களால் மறைக்கப்பட்டிருந்த அவளுடைய மின் விழிகள் பெத்ரோவின் முகத்தை மறுபடி மறுபடி பார்த்தன. பெத்ரோவும் மறைவாக அவளை நோக்கலானான். இருவர் விழிகளும் சந்தித்த போது இருவரும் முகஞ்சிவந்து, களிப்புடன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்கள். தவிர இருவரும் மெரேஸ்யெவ் மூலமாகவே உரையாடினார்கள், தமக்குள் நேரில் பேசிக் கொள்ளவில்லை. அவர்களைப் கவனிப்பது மெரேஸ்யெவுக்கு வேடிக்கையாக இருந்தது. அதே சமயம் அவனுக்குச் சற்று ஏக்கமும் உண்டாயிற்று. அவர்கள் இருவரும் புத்திளைஞர்களாக இருந்தார்கள். அவர்களோடு ஒப்பிடுகையில் தான் கிழவன், களைத்துச் சோர்ந்தவன், நிரம்ப வாழ்ந்து விட்டவன் என்று அவனுக்குத் தோன்றியது.

“இந்தா அம்மா, மரீனா, வெள்ளரி ஊறுகாய் இருக்குமா?” என்று கேட்டான்.

“இருக்கும்” என்று மென்முறுவலுடன் விடையளித்தாள் அவள்.

“வெந்த உருளைக் கிழங்குகள் இரண்டொன்றாவது கிடைக்குமா?”

“கேளுங்கள் கிடைக்கும்.”

உறங்குபவர்களிடையே லாவகமாக அடிவைத்து, ஓசையின்றி, வண்ணத்திப் பூச்சி போன்று லேசாகத் துள்ளிச் சென்று மறுபடி மறைந்துவிட்டாள் அவள்.

படிக்க:
கார்ப்பரேட் இரயில் : தனியார் கையில் மேலும் 150 இரயில்கள் !
ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை

“தோழர் சீனியர் லெப்டினன்ட், அவளிடம் இப்படிப்பேச உங்களால் எப்படி முடிகிறது? முன்பின் தெரியாத மங்கை, அவளை ஒருமையில் கூப்பிடுகிறீர்கள், வெள்ளரி ஊறுகாய் கேட்கிறீர்கள்….” என்று வியப்புடன் கேட்டான் பேத்ரோவ்.

அவன் பேச்சைத் தொடரும்முன் மெரேஸ்யெவ் கட கடவென்று சிரித்தான்.

“ஏன் தம்பீ, எங்கே இருப்பதாக உன் நினைப்பு? நாம் போர்முனையில் இருக்கிறோமா இல்லையா?” என்று சொல்லி விட்டுக் கிழவியை விளித்து, “பாட்டீ, முணுமுணுத்தது போதும். இறங்கி வா. சாப்பிடுவோம். ஊம்?” என்றான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் !

“நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தை மிகப் பெரிய ராஜதந்திர வெற்றி”யாகப் புகழ்ந்து தலையங்கம் தீட்டியிருக்கிறது, தினமணி. நடுநிலை நாளேடு என வேடம் போட்டுக் கொண்டிருக்கும் தினமணியே இந்த ஊது ஊதியிருக்கிறதென்றால், சங்கிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை.

“ஹூஸ்டன் நிகழ்ச்சி, ஐ.நா. உரை, பாகிஸ்தானை ஓரங்கட்டியிருப்பது” ஆகிய முப்பெரும் சாதனைகளை நரேந்திர மோடி அமெரிக்க மண்ணில் நிகழ்த்தியிருப்பதாகப் பீற்றிக் கொண்டிருக்கிறது, துக்ளக்.

மைய அமைச்சர் ஜிதேந்திர சிங்கோ, “அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவின் தந்தை எனப் புகழ்ந்ததை ஏற்காதவர்களை இந்தியர்களாகக் கருத வேண்டாம்” என ஒரே போடாகப் போட்டிருக்கிறார்.

சுய தம்பட்டம் அடித்துக் கொள்வதிலும், விளம்பரம் தேடிக் கொள்வதிலும் நரேந்திர மோடிக்கு இணையாக வேறொரு அரசியல் தலைவர் சமீபகால அரசியல் வரலாற்றில் கிடையாது. அவரின் இந்த அற்பத்தனத்திற்கு இன்னொரு சான்று, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹூஸ்டன் நகரில் நடந்த “மோடி நலமா!” நிகழ்ச்சி.

இந்தியப் பொருளாதாரம் குப்புறக் கவிழ்ந்து, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வரும் சூழலில் மோடி நலமா என்ற தலைப்பே வக்கிரமானது, அருவெருக்கத்தக்கது. அந்நிகழ்ச்சியோ ஆடல், பாடல், செல்ஃபி, ஒருவருக்கொருவர் முதுகு சொறிவது என மூன்றாந்தர நட்சத்திர கலைநிகழ்ச்சி போல நடந்து முடிந்தது.

திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் நடத்தியிருக்கும் இத்தகைய கூத்துக்களை வரிந்துகட்டிக்கொண்டு விமர்சித்திருக்கும் அவாள் பத்திரிகைகள் மோடி நலமா நிகழ்ச்சியை விமர்சித்து ஒருவரி கூட எழுதவில்லை. மாறாக, அமெரிக்க அதிபர் டிரம்பை மேடையில் ஏற்றியதை மோடியின் வெற்றியாகக் குறிப்பிடுகின்றன.

படிக்க:
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !
♦ ஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் !

“தேர்தல் பிரச்சாரக் காலத்தில் இந்தியாவில் கட்சித் தலைவர்களுக்கு முன்னால் அவர்களது வேட்பாளர்கள் கைகூப்பி நிற்பது போல, அமெரிக்க அதிபரை நரேந்திர மோடி நிற்க வைத்ததைப் பார்த்து உலகமே வியந்தது, அதிர்ந்தது” எனக் கூச்சமின்றிப் புகழ்ந்து தள்ளியிருக்கிறது, தினமணி. கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்ற ரேஞ்சில் நரேந்திர மோடிக்குப் புதிய பட்டம் எதனையும் சூட்டாததுதான் கொஞ்சம் ஆறுதல் தரும் செய்தி.

மோடி நலமா நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டது, தினமணி குறிப்பிடுவது போல இந்தியாவிற்கோ, மோடிக்கோ தனி மரியாதை கொடுக்கும் நல்லெண்ணம் கொண்டதல்ல. மாறாக, அது டிரம்பின் தேர்தல் உத்தி. அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாம் முறையாகப் போட்டியிடவுள்ள டிரம்பிற்கு, அமெரிக்க இந்தியர்களின் வாக்குகள் தேவை. கடந்த அதிபர் தேர்தலில் அமெரிக்க இந்தியர்களில் வெறும் 16 சதவீதத்தினர்தான் டிரம்பிற்கு வாக்களித்திருந்தனர். இம்முறை அதனை அதிகரித்துக் கொள்வதற்கு இந்தியப் பிரதமர் மோடியைப் பயன்படுத்திக் கொண்டார், அவர். மோடியோ வாங்கிய காசுக்கு மேல் கூவிய கதையாக, “இந்த முறையும் டிரம்ப் சர்க்கார்தான்” (அப் கி பார், டிரம்ப் சர்க்கார்) என முழக்கமிட்டதன் மூலம், தான் டிரம்பின் நட்சத்திர பிரச்சாரக் எனக் காட்டிக்கொண்டார். ஒரு நாட்டின் பிரதமர், தனது தகுதியைக் கடாசிவிட்டு இப்படி இறங்கிப்போய் தேர்தல் பிரச்சாரம் செய்த கேவலத்தைக் கண்டுதான் உலகம் அதிர்ந்து போனது.

ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் உரையாற்றுவதற்காகத்தான் மோடி அமெரிக்கா சென்றதாகக் கூறப்பட்டாலும், இந்தப் பயணம் வேறு நோக்கங்களையும் கொண்டிருந்தது. ஒன்று, காஷ்மீர் பிரச்சினை; மற்றொன்று, அமெரிக்காவுடனான வர்த்தகப் பிரச்சினை.

நரேந்திர மோடியும் டிரம்பும் பாய்-பாய் என்றபடி ஒருவரையொருவர் ஆரத்தழுவி போஸ் கொடுத்தாலும், பெரிய அமெரிக்க முதலீடுகள் எதுவும் இந்தியாவிற்குக் கிடைக்கவில்லை. மாறாக, இந்தியப் பொதுத்துறை நிறுவனமான பெட்ரோநெட், அமெரிக்காவின் எல்.என்.ஜி. நிறுவனத்தில் 17,688 கோடி ரூபாய் முதலீடு செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. அமெரிக்காவைத் திருப்திப்படுத்த மோடி எழுதியிருக்கும் மொய்ப்பணம் இது!

இவ்வர்த்தகப் பேச்சுவார்த்தையினூடாக அமெரிக்காவின் சலுகை பெற்ற வர்த்தகக் கூட்டாளி என்ற தகுதியை மீண்டும் பெற்றுவிட வேண்டுமென்பதும், அமெரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைப் பேசி முடித்துவிட வேண்டுமென்பதும் மோடி அரசின் முக்கிய விருப்பங்களாக இருந்தன. இந்தியா இறங்கிவந்து விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தாலும், முழுத் திருப்தி கிடைக்கும் வகையில் ஒப்புக்கொண்டால்தான் உடன்பாடு என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்ததால், நரேந்திர மோடி வெறுங்கையோடுதான் இந்தியாவிற்குத் திரும்பினார்.

எனினும், ஐ.நா. பொதுக்குழுவில் அமெரிக்கா காஷ்மீர் பிரச்சினை குறித்துக் கருத்துக் கூறாததைக் காட்டி, மோடியின் பயணத்தை வெற்றியாகக் காட்ட முயலுகிறார்கள், அவரது ஆதரவாளர்கள். ஆனால், காஷ்மீர் பிரச்சினையிலோ முதுகுக்குப் பின்னிருந்துகொண்டு பெப்பே காட்டும் தந்திரத்தோடு நடந்துகொண்டு, மோடியைக் கோமாளியாக்கவிட்டார், டிரம்ப்.

ஹூஸ்டன் நிகழ்ச்சியிலும் ஐ.நா.வின் பொதுக்குழுவிலும் காணக் கிடைக்காத அமெரிக்காவின் உண்மை முகம் இம்ரான் கானும் டிரம்பும் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளிச்சத்திற்கு வந்தது. ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பாக். தீவிரவாதத்தைக் கண்டித்து மோடி ஆற்றிய உரையை, “முரட்டுத்தனமான பேச்சு” என அப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமர்சித்ததோடு, “இரண்டு நாடுகளும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் நான் மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக”வும் அறிவித்தார், டிரம்ப்.

“நான் பாகிஸ்தானை நம்புகிறேன். ஆனால், எனக்கு முன்பு இருந்தவர்கள் நம்பவில்லை. பாகிஸ்தானியர்கள் என்ன செய்தார்கள் என அவர்களுக்குத் தெரியாது” எனக் கூறி, பாகிஸ்தானை ஆசிர்வதித்தார். இவை அனைத்தும் டிரம்ப் மோடிக்கு வைத்த ஆப்புகள். பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றிகள்.

“டிரம்பின் இந்தக் கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிப்பீர்களா?” எனப் பத்திரிகையாளர்கள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதற்கு, மோடி-டிரம்ப் சந்திப்பின்போது ஆட்சேபணை தெரிவிக்கப்படும் என வீராப்பாக அறிவித்தார்கள். அச்சந்திப்பு நடந்ததேயொழிய, டிரம்பின் கருத்துக்களுக்கோ, மத்தியஸ்த விருப்பத்திற்கோ மோடி மறுப்பு தெரிவித்ததாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.

ஐ.நா.வின் பொதுக்குழுவில் பாக். பிரதமர் இம்ரான் கான் ஆற்றிய உரைக்குப் பதில் அளித்துப் பேசிய வெளியுறவுத் துறை அதிகாரி விதிஷா மைத்ராவும்கூட, அந்த எல்லைக்கு அப்பால் சென்று வினயமாகக்கூட டிரம்பின் விமர்சனங்களுக்கும் விருப்பங்களுக்கும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

படிக்க:
ஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு : மிரட்டும் ட்ரம்ப் ! பம்மிய மோடி !
♦ காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !

அதேசமயம், ஐ.நா.வில் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கான் பிரச்சினையில் அமெரிக்கா சுயநலத்தோடு பாகிஸ்தானைப் பயன்படுத்திக்கொண்டதைக் குறிப்பிட்டதோடு, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் நாங்கள் அமெரிக்காவுடன் சேர்ந்துதான் தவறு என்றும், டிரம்ப் தாலிபான்களோடு மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டுமென்றும், 19 ஆண்டுகளாக உங்களால் வெல்ல முடியாதபோது இன்னும் 19 ஆண்டுகளானாலும் உங்களால் வெல்ல முடியாது என்றும் விமர்சித்து, அமெரிக்காவைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்.

ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தானையும் சீனாவையும் தவிர்த்து ஏனைய உலக நாடுகள் காஷ்மீர் பிரச்சினையில் கருத்துச் சொல்லவில்லை என்பது உண்மைதான். இதன் பொருள் அந்நாடுகள், குறிப்பாக மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் இந்தியாவின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்பது அல்ல.

“அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இனி, பாகிஸ்தான் வசமுள்ள ஆசாத் காஷ்மீரை மீட்பதுதான் இந்திய அரசின் அடுத்த இலக்கு” என்றவாறு மோடி அரசு உதார்விட்டு வருகிறது. ஆனால், இதற்கு மாறாக, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் காஷ்மீர் பிரச்சினையை இன்னும் இரு தரப்புப் பிரச்சினையாகவே கருதி வருகின்றன. டிரம்போ தனது தலைமையில் மத்தியஸ்தம் என அதற்கு அப்பால் செல்லுகிறார். மோடி அரசோ வாய் கொள்ளாத பெரிய எலும்புத் துண்டை முழுங்கிவிட்டு, அதனை மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவித்துப் போய் நிற்கிறது.

– குப்பன்

தீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு !

1

“என்னப்பா பொசுக்குன்னு இப்புடி சொல்லிட்ட. நீ நகை தர்ரேன்னு சொன்னதாலதான காசு குடுத்தேன். இப்ப மாத்தி பேசுனா எப்புடிப்பா.”

“அக்கா நான் ஏமாத்தல! ஏமாத்துற ஆளும் கெடையாது. எங்க அப்பா காலத்துலேருந்து இங்குனக்குள்ளதான் மளிகைக்கட வச்சுருக்கோம். என்னப்பத்தி தெரியாதா ஒங்களுக்கு.”

“நீ சொல்லிதான் ஒன்னப்பத்தி தெரியனுமா என்ன? அதுயில்லப்பா நாம பாக்குற வேலைக்கும் சம்பாதிக்கிற காசுக்கும் பத்துருவா சேத்து வச்சு நகநட்டு வாங்குற நெலமையிலயா இருக்கோம்.! சிறுகசிறுக கட்டிவச்சா மொத்தமா ஒரு நக வருமேன்னு நெனச்சேன். நீ இப்புடி கைய விரிக்கிறே.”

“நாட்டு நெலமெ சரியில்லக்கா. மூனு மாசத்துல நகை வெலையெல்லாம் தாறுமாறா ஏறிப்போச்சு. யாரக்கேட்டாலும் இனிமே வெலைவாசி எல்லாம் ஒரு போதும் கொறையாதுன்றாக. நம்மப்போல ஆளுங்க நகைக்கிட்டவே நெருங்க முடியல. நகைய தவிற நம்ம பேசுனா மாறி மத்த எல்லாம் அயிட்டமும் குடுத்துற்றங்கா. இந்த வருசத்தோட இந்த வேலைய ஏறகட்டிடலான்னு இருக்கேன்”

“நீ சொல்றது சரிதான். 100 ரூவா கொண்டாந்தா ஒரு நாள் பாலு.. காயிக்கே ஆவமாட்டேங்குது. எத வாங்க? எத விடன்னு தெரியமாட்டேங்குது. போற போக்க பாத்தா நாடு கெட்டு குட்டிச்சுவரா போ..ப்பது”

என்னடா இது மளிகைக் கடையில நகை வியாபாரமான்னு எழுந்த குழப்பம், ஒரு கிலோ வெங்காயத்த பொறுக்கி எடுக்குற அடுத்த அஞ்சு நிமிச இடைவெளியில தெளிவாயிருச்சு.

கடையின் வாடிக்கையாளர்களான அப்பகுதி உழைக்ககும் மக்களை சேர்த்து தீபாவளி நகை சீட்டு போட்டுருக்காரு கடைக்காரர். கடந்த தீபாவளி தொடங்கி மாதாமாதம் கட்ட தொடங்கிய ஒரு குறிப்பிட்ட தொகைக்கி, இந்த வருட தீபாவளியின் போது கால் சவரன் நகை, ஒரு சில்வர் பாத்திரம் அதில் இனிப்பு, பட்டாசு எல்லாம் தருவதாக பேச்சு.

படிக்க:
புல்லட்டு பைக் இல்லாம கல்யாண சீர்வரிசை இல்லை !
♦ நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !

ஆனால் சொன்னபடி நகையை கொடுக்க கடைக்காரரால் முடியவில்லை. சீட்டு பிடித்து பணத்தை சுருட்டிக் கொண்டு ஓட்டம் என்று வகைவகையான தொலைக்காட்சி செய்திகளை பாத்திருப்போம். இக்கடைக்காரர் அப்படியான பேர்வழியும் இல்லை.

அவர் சொல்லும் காரணம் “ரெண்டு மூனு மாசத்துல நகை விலை தாறு..மாறா ஏறிப்போச்சு. அந்த தொழில்ல இருக்கவங்கள கேட்டா நாட்டு நெலமையே சரியில்ல. தங்கம் தொழிலே படுத்து கெடக்கு. பண்டிகைக்கான சிறப்பு விற்பனை ஆர்டரே எடுக்கல. அதுக்கு முன்னமே எடுத்த ஆர்டரும் போதிய விற்பனை இல்லாம தேங்கி போயி கெடக்குன்னு நகை வியாபாரிங்க சொல்றாங்க.

நகை வியாபாரிங்க சொல்றத பாத்தா நம்ம கடைக்கி தீபாவளி மளிகை சரக்கு எடுத்தா ஓடுமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. இந்த பண்டிகை நேரத்து வியாபாரத்துல கெடைக்கும் லாபத்துல சீட்டு கட்டுனவங்களுக்கு தேவையானத வாங்கனுன்னு நெனைச்சேன் இப்ப என்ன செய்ய போறேன்னு நெனச்சா மண்ட காயிது. ஆனா கண்டிப்பா நேர்மையா நடத்துக்குவேன்.” என்கிறார் கடைக்காரர்.

சாதாரண மக்கள் அதிகம் வசிக்கும் அப்பகுதியில் சிறு மளிகைக்கடை நடத்தும் அவர் கடையின் தேவையை ஒட்டி வெளியில் வட்டிக்கு வாங்குவதை விட சீட்டு பிடித்தால் மாசாமாசம் ஒரு தொகை கைக்கு கிடைக்கும். அதில் வரும் பணத்தை வைத்து கடைக்கு தேவையான ஏதோ கொஞ்சம் சரக்கு எடுத்து போடலாம் என்று நினைத்துள்ளார்.

படிக்க:
தமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019
♦ ஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் !

கடைக்காரருக்கு வெளியில் கடன் வாங்காததால் அந்த வட்டி மிச்சம்… கடை சரக்கு விற்பனையில் கிடைக்கும் லாபம் ஒரு லாபம். தீபாவளி பண்டு சீட்டுக்காக ஒரே இடத்தில் வாங்கப்படும் நகை, சாமான், பலகாரம் இதில் கொஞ்சம் லாபம் கிடைக்கும். இதற்கென தனிப்பட்ட உழைப்பு முயற்சி என்பது பெரிதாக இல்லை. வெளியில் கடன் வாங்கி வட்டி கட்டாமல் வாடிக்கையாளரிடம் இப்படி ஒரு தொடர்பு வைத்திருந்தால் நம்பிக்கையும் வளரும், கிடைக்கும் லாபத்தில் வாடிக்கையாளர்களுக்கு பவுனும், பரிசும் கொடுக்கலாம் என்பது அவர் எண்ணம்.

பெரிய பெரிய சிட்பண்ட்ஸ் கம்பெனியை நம்பாத மக்கள் இதுபோல் சிறு மளிகைக் கடை நடத்துபவர்களை மிகவும் நம்பிக்கைக்கு உறியவர்களாக பார்க்கிறார்கள். எப்படி இந்த நம்பிக்கை என்று கேட்டால்  “நம்ம அண்ணாச்சிதானே எங்கே போயிரப்போராரு” என்ற உரிமையும் உறவும் அவர்களுக்குள் இருக்கிறது. அதனால் இது போன்ற சிறு கடைகளில் இப்படியான தீபாவளி சீட்டு, அம்மாவசை பண்டு என்பதெல்லாம் சாதாரண நடைமுறையின் ஒன்றாக இருக்கிறது.

மாதிரிப் படம்

அதனால் தான் சாதாரண கூலி வேலை செய்பவர்கள் இது போல் கூட்டாக சேர்ந்து தங்களுக்குள் குழு சீட்டு போட்டு கொள்கிறார்கள். கொத்தனார் சித்தாள், துப்புறவு தொழிலாளி, வீட்டு வேலை செய்யும் பெண்கள், கிராமத்தில் வயலில் கூலி வேலை செய்பவர்கள் என தங்களுக்குள் பண்டிகை சீட்டு போட்டு கொள்கின்றனர். இதில் மாச சீட்டு மூறையும் உண்டு மாசாமாசம் ஏலம் விட்டு குழுவில் அவசர தேவை யாருக்கோ அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது வெளியில் வாங்கும் வட்டி கடனை விட குறைவானதாக இருப்பதாக சொல்கிறார்கள்.

சம்பாதிக்கும் பணமெல்லாம் வயித்துப் பாட்டுக்கே சரியாப்போகும் குடும்பத்தில் என்னைக்கு காசு சேத்து நகை வாங்குவது அதுற்கு வாய்ப்பில்லாத போது இது போலா நகைசீட்டு போடுவதும் ஏதோ கொஞ்சம் கொஞ்சமாக குருவியைப் போல் சேர்ப்பதும் சாதாரண மக்களின் நடைமுறை.

மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கும் ஒரு கூலி தொழிலாளி எப்புடி வயித்தக்கட்டி சேமிச்சாலும் ஒரு வருசத்துக்கு கால் சவரன் வாங்குவது என்பது குதிரை கொம்புதான். நகரத்து கூலி தொழிலாளியா இருந்தாலும் சரி கிராமத்து சிறு விவசாயியா இருந்தாலும் சரி அவர்கள் வாழ்கையில் நகை என்பது அழகுக்கான பொருளல்ல அடகுக்கான பொருள். அவசர தேவைக்கு உதவும் ஆபத்பாந்தவன்தான்.

ஒரு சிறு விவசாயி நாற்று விட்டுவிட்டு நடவு செலவுக்கு மனைவியின் காதையும் கழுத்தையும் தான் முதலில் பார்ப்பான். உழவு உழுவ ஆரம்பித்து அறுவடை வரைக்கும் அடுத்தடுத்து மனைவியின் நகை ஒவ்வொன்றாக உருவப்படும். பிறகு அறுவடை முடிந்ததும் அடகு கடையில் இருந்த நகை மனைவியின் ஆபரணமாக மாறும்.

எளிய மக்களுக்கு ஆசையும் அடிப்படை தேவையுமாக இருக்கும் நகையை இந்த முறையில் வாங்குவது வழக்கம். அதற்கும் வேட்டு வைக்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது இன்றைய பொருளாதார பிரச்சனை. பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் சாதாரண மக்களின் அடுப்படி அஞ்சறை பெட்டிவரை கைவைத்தது இந்த அரசாங்கம். அறியாத மக்கள் என்ன செய்வதனெ தெரியாது நின்றனர். அதேபோல் இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல் வல்லுனர்கள் சொல்லும் புள்ளி விவரங்கள் எதுவும் இந்த மக்களுக்கு புரியாது.

ஆனால் விற்கும் விலைவாசிக்கும் கையில் இருக்கும் இருப்புக்கும் எதை வாங்குவது எதை தவிர்ப்பது என குழம்பும் மக்கள் அவர்களை அறியாமலே “நாடு கெட்டு குட்டிச் சுவராப் போ..ப்பது” என உணர வைக்கிறது.

– சரசம்மா

ஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் !

ள்நாட்டுப் பொருளாதாரம் தேக்கமடைந்து ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில்,  சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்திய ஈகுவடார் நாட்டு அரசைக் கண்டித்து, அந்நாட்டு மக்கள் நடத்திய போராட்டம் அரசுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 4.2 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடன் பெறுவதற்காக ஈக்வடார் அதிபர் மொரினோ சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியத்தை இரத்து செய்வதாக அறிவித்தார்.

தலைநகர் கீட்டோவில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் மதச்சடங்குகளை நடத்தும் பழங்குடியினர்.

இதனால் வாகன எரிபொருட்களின் விலை இரு மடங்கு அதிகரித்த நிலையில், ஏற்கனவே பொருளாதார மந்த நிலையினால் பாதிப்புக்குள்ளான உழைக்கும் வர்க்கம் போராட்டத்தைக் கையிலெடுத்தது. ஐ.எம்.எஃப் நிறுவனமும், உலக வங்கியும் மூக்கை நுழைக்கும் நாடுகளிலெல்லாம் பொதுமக்களுக்கெதிராக வரிச்சலுகைகளை இரத்து செய்யுமாறு அரசுகளை வற்புறுத்துவது வழக்கமாகிவிட்டது.

அக்டோபர் மாதம் தொடக்கம் முதலே நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 2,100 பேர் காயமடைந்தோ அல்லது கைது செய்தோ முடக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 12.10.2019 அன்று தலைநகர் கீட்டோவில் உள்ள தொலைக்காட்சி நிலையமொன்றையும், செய்தி நிறுவனம் ஒன்றையும் அடித்து நொறுக்கிய  போராட்டக்குழுவினர், தலைமைக் கணக்காயரின் அலுவலகத்துக்குத் தீ வைத்தனர். இதையடுத்த இராணுவத்துக்கும், போராட்டக்குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டது.

படிக்க:
ஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் !
♦ தீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 ! தம்பி பர்சு பத்திரம் !

1960 மற்றும் 1970-களுக்குப் பின்னர் ஈக்வடார் நாட்டில் இப்போது தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தலைநகர் கீட்டோ இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தைக் கண்டு அச்சமுற்ற அதிபர் மொரினோ தலைமையிலான ஈகுவடார் அரசு ஐ.நா மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்கள் மூலம் உள்ளூர் அரசியல் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை நீடித்து வரும் நிலையில், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் உழைக்கும் வர்க்கத்தினரின் காசைப் பிடுங்கி, வங்கிகள் மற்றும் பணக்கார உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்ளை இலாபம் பெற வழிவகை செய்யும் அரசுக்கு எதிரான ஈகுவடார் நாட்டு மக்களின் போராட்டம் வெல்லட்டும்.

அமேசான் நதிக்கரையில் வசிக்கும் ஈகுவடார் பழங்குடி மக்களின் யுத்தக்குழுவினர் தலைநகர் கீட்டோவில் நடக்கும் போராட்டம் ஒன்றில் ஆக்ரோசமாகப் பங்கேற்கும் காட்சி

ஒரு வார காலமாக அரசு எந்திரத்தை முடக்கிய போராட்டக்குழுவின் தலைவர்கள் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை அமல்படுத்தவிடாமல் நாட்டைப் பாதுகாப்பதே எங்கள் இலக்கு என்கின்றனர்.

போராட்டக் குழுவினருடன் மோதலில் ஈடுபடும் இராணுவத்தினர்.

தலைமைக் கணக்காயரின் அலுவலகத்தை 12.10.2019 அன்று தீ வைத்து எரித்த போராட்டக்குழுவினர்.

கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக தலைநகர் கீட்டோவில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கீட்டோ முழுவதும் பரவியுள்ள கலவரத்தின் காரணமாக தற்காலிக அரசாங்கத்தை இரண்டாம் நிலை நகரமான குவாவகில்லுக்கு மாற்றிவிட்டார் அதிபர் மொரினோ.

போராட்டக்காரர்களின் பிரதான இலக்கான எண்ணெய் நிறுவனங்கள். இரு மடங்கு விலையேற்றம் வந்தால் வெறுமனே வேடிக்கை பார்க்கவா முடியும்?

அதி நவீன  பாதுகாப்புக் கருவிகளுடன் வலம் வரும் இராணுவத்தினருக்கு மத்தியில்,  வீட்டிலேயே நேர்த்தியாக மறு உருவாக்கம் செய்யப்பட்டு முகமூடிகளாக மாற்றப்பட்ட நெகிழிகள்.  மக்கள் நினைத்தால் புல்லும் ஆயுதமாக மாறும்.

ஆறு பேரின் உயிரைக் குடித்து சுமார் 2100 பேரை காயப்படுத்தியுள்ளது இப்போராட்டம்.

மக்கள் போராட்டத்தால் பின்வாங்கிய ஈகுவடார் அரசு இறுதியில் பேச்சுவார்த்தைக்கு வந்து எரிபொருள் விலையேற்றத்தை வாபஸ் பெற்றிருக்கிறது.


தமிழாக்கம் : வரதன்
நன்றி :aljazeera 

நூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா ?

ந்தியத் துணைக் கண்டத்து நதிகளை இணைப்பதில் நரேந்திரமோடி தீவிரமாக இருக்கிறார். பல்வேறு தரப்பினரும் நதிகளை இணைக்க வலியுறுத்தி வருகின்றனர். (தி இந்து, 2 செப். 2017). ஆறுகள் கழிவுநீர் சாக்கடைகளாக மாறுவதைப் பற்றிப் பேசாத, மணற்கொள்ளையை எதிர்க்காத, சாயப்பட்டறை இரசாயனங்கள் ஆறுகளில் கலப்பதைப் பற்றிக் கவலைப்படாத, காவிரி ஆற்று நீரைக் கர்நாடகமும், பாலாற்று நீரை ஆந்திரமும் மறுப்பதைப் பற்றிக் கவலைப்படாத கார்ப்பரேட் சாமியார்கள் திடீரென்று ஆறுகளை மீட்கப் போவதாகக் களம் இறங்கி ஆறுகளை இணைப்பதற்கு ஆதரவு திரட்டுகிறார்கள்.

சாமியார்கள் அழைப்பை ஏற்று, ஆறுகளை இணைப்பதற்கு ஆதரவாக இளைஞர்கள் ‘மிஸ்டு கால்’ கொடுக்கிறார்கள். மயிலாடுதுறையில் புஷ்கரம்’ குட்டைக் குளியலுக்குக் கூடிய சாமியார்கள் கூட்டம் மாநாடு போட்டு ஆறுகள் இணைப்புக்குத் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். ஊர் பெரிய மனிதர்களும், முக்கியஸ்தர்களும், பச்சைத் துண்டுகளும் தொழிலதிபர்களும் நதிநீர் இணைப்புப் பற்றிய கூட்டங்களில் பெருமை பொங்க உட்கார்ந்திருக்கிறார்கள். மேடையில் இடம் கிடைத்தது பற்றி மகிழ்ந்து போகிறார்கள்.

பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினாலும், வலியுறுத்தா விட்டாலும் ஆறுகளை இணைப்பதில் மோடியும், இந்துத்துவவாதிகளும் குறியாக இருக்கிறார்கள். இத்திட்டத்தின் பின்னே வெளியிடப்படாத நோக்கங்கள், திட்டங்கள் இருக்கின்றன.

முதல் கட்டப் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் (தி.இந்து, 2 செப்.2017) தொடங்கும் என்று செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. முதலில் வடமாநிலங்களில் கங்கை உட்பட 60 நதிகளை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. “முதல் கட்டப் பணிகளுக்கான ஒப்புதல் கிடைத்துவிட்டதாகவும், முழு பணிகளுக்கான ஒப்புதலும் இந்த ஆண்டுக்குள் கிடைத்துவிடும்” என்றும் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பால்யன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மாநிலங்களில் நதிகள் இணைப்புத் திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

சமீப காலத்தில் இந்திய (தேசிய மற்றும் ) தென்னிந்திய ஆறுகளை இணைப்பது என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் வடக்கே ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கும், மேற்கிலும் தெற்கிலும் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்சினைக்கும், தீர்வு என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது. மூளை நோகாமல் பிரச்சினைக்குத் தீர்வு தேடுகிறவர்களுக்கு இத்திட்டத்தில் தீர்வு இருப்பதாகப்படுகிறது.

பிரச்சினைகளைப் புரிந்துகொண்டுதான் ஆதரிக்கிறார்களா?

காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில், தமிழகத்துக்கு உரிமையுள்ள நீரை கர்நாடகம் வழங்க வேண்டுமென்று 2007 – லேயே காவிரித் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கிய பிறகும் கூட, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வற்புறுத்தியும், அதை அமைக்க இந்திய அரசு மறுக்கிறது. காவிரி நீரை மறுப்பதில் கர்நாடகமும் இந்திய அரசும் இணைந்து செயல்படுகின்றன. இந்நிலையில், இந்திய ஆறுகளை இணைத்துவிட்டால், தமிழகத்துக்குத் தண்ணீர் தடையில்லாமல் வரும் என்றும், இந்திய அரசு வேண்டிய அளவு ஆற்றுநீரைத் தரும் என்றும் தமிழகத்தில் பலரும் கருதிக் கொண்டு நதிகளை இணைக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.

படிக்க:
ஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் !
தீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 ! தம்பி பர்சு பத்திரம் !

இதில் தேசியக்கட்சிகள், திராவிடக்கட்சிகள், உதிரிக்கட்சிகள், விவசாய அமைப்புகள், இலக்குத் தெரியா இயக்கங்கள் எனப் பலவும் அடங்கும். கங்கை -காவிரி இணைப்பு என்ற திட்டம் பற்றியோ அல்லது தேசிய – தென்னிந்திய நதிகள் இணைப்பு என்பது பற்றியோ இவர்கள் நன்கு அறிந்து கொண்டுதான் ஆதரிக்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை. ஆறுகள் இணைப்பு என்பதன் பின்னே எவ்வளவு அழிவு இருக்கின்றன என்பதையோ, இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் பல்லாயிரம் மக்களின் கதி என்ன என்பது பற்றியோ அறிந்து கொண்டு திட்டத்தை ஆதரிக்கிறார்களா என்றால் இல்லை.

திட்டம் சாத்தியமா?

தொழில்நுட்பமும், பொறியியலும் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில், ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமா என்ற கேள்வி தேவையில்லை. பூமியைக் குடைவது, மலைகளைப் பிளப்பது, காடுகளைச் சாய்ப்பது, கான்கிரீட்டில் பாலம் கட்டி அந்தரத்தில் நீரை நிறுத்துவது என்று எல்லாமே இன்று சாத்தியம்தான்.

ஆனால், இதை யார் செய்யப் போகிறார்கள்? எந்தப் பணத்திலிருந்து செய்யப் போகிறார்கள்? இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதும் ஆறுகள் யாருக்குச் சொந்தமானதாக இருக்கும்? விவசாயிகள் தண்ணீரை யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்? விவசாயத்திற்குத் தண்ணீர் தரப்படுமா? – போன்ற கேள்விகள் இன்னமும் எழுப்பப்படவில்லை. (நூலிலிருந்து பக்.1-3)

திட்டம் என்ன?

இந்தியத் துணைக்கண்டத்தில், 37 ஆறுகளை 30 கால்வாய்களும் 3000 நீர்த்தேக்கங்களும் அமைத்து இணைப்பதன் மூலம் மிகப்பெரும் நீரிணைப்பை ஏற்படுத்துவது.

இத்திட்டத்தில் இமயமலை ஆறுகள் இணைப்பு என்பது 14 இணைப்புகளால் ஆனது. கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர்த்தேக்கங்கள் அமைத்து, மழைக்கால நீரைத் தேக்குவது, கோகி, கண்டக், காக்ரா ஆறுகளின் நீர்ப்பெருக்கைக் கொண்டு சென்று ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் பகுதிகளை வளப்படுத்துவது.

தீபகற்பப் பகுதியில் ஆறுகள் இணைப்பு என்பது 16 இணைப்புகளைக் கொண்டது. மகாந்தியையும், கோதாவரியையும் இணைத்து, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை ஆகிய ஆறுகளுக்குத் தண்ணீர் அளிப்பது. இதற்குப் பல பெரிய அணைகளும், பெரிய கால்வாய்களும் அமைக்கப்பட வேண்டும். மேலும் கென் ஆறு, பெட்வா, பர்பாதி, கலிசிந்து, சம்மல் ஆகிய ஆறுகளுடன் இணைக்கப்படும். (நூலிலிருந்து பக்.7)

Inuds River
பரந்து விரிந்துள்ள சிந்து நதி

… ஆறுகள் இணைக்கப்பட்டு விடும்; தமிழ்நாட்டு ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்; நம் விருப்பம் போல நீரைப் பயன்படுத்தலாம் என்று நம்புவது ஏமாளித்தனம்; அப்படி நம்பச் சொல்லுகிறவன் ஏமாற்றுக்காரன்.

தங்கள் மாநிலங்களின் ஆற்று நீரை அண்டை மாநிலங்கள் பயன்படுத்திக்கொள்ள அப்படியே அனுமதித்து விடுவார்கள் என்று இன்னொரு மாநிலத்துக்காரன் நம்புவதே அறிவுப் பற்றாக்குறையின் அடையாளம். காசு கொடுக்காவிட்டால் நீர் இல்லை என்பது இப்போதே நிலவும் சூழல். நாளை, இந்த ஆறுகளை இணைக்கும் போது நாம் கட்டணம் செலுத்தப்போவது நீரை விற்கப்போகிற இந்த மாநிலங்களுக்கா அல்லது காசைக் கொட்டி ஆறுகளை இணைக்க இருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கா – என்பது இனிமேல்தான் தெளிவாகும்.

ஆறுகளை இணைத்துவிட்டாலும் கூட நீரைப் பெறுவதில் உள்ள இடர்பாடு தமிழ்நாட்டுக்கு முன்னமே தெரியும். சென்னை நகருக்குத் தேவையான குடிநீரை கிருஷ்ணா ஆற்றிலிருந்து பெறுவதற்கு தமிழ்நாடு இன்றுவரை படாதபாடு படுகிறது. அதுவும், ஒவ்வொரு சொட்டு நீருக்கும் தமிழ்நாடு அரசு காசு கொடுத்தாலும் நீரைத்தர அந்த மாநிலங்கள் தயாரில்லை. இணைப்புக் கால்வாய் இருக்கிறது. ஆனால் நீர்தான் பெற முடியவில்லை. இது குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். (நூலிலிருந்து பக்.23)

நூல் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா ?
ஆசிரியர் : பேராசிரியர் த.செயராமன்

வெளியீடு : மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – தமிழ்நாடு,
19/2, சேந்தங்குடி வடக்குத் தெரு,
ஆனதாண்டவபுரம் சாலை, மயிலாடுதுறை – 609001.
தொலைபேசி : 04364 – 227484
அலைபேசி : 98420 07371, 94433 95550.
மின்னஞ்சல் : pcpd.periyar@gmail.com

பக்கங்கள்: 48
விலை: ரூ 30.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : marinabooks | commonfolks

கல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 09

கல்வி முறையியல் தவறுகள்

னது கற்பனையில், எனது முழு இசைக் குறியீட்டில் இன்றைய பள்ளி தினம் மேற்கூறியவாறு தான் காட்சியளிக்கிறது. இது இதே மாதிரி இருக்குமா? ஒரு வேளை சிறிது மாறுபடலாம்.

நான் திட்டமிட்டிருந்த எல்லாவற்றையும் குழந்தைகளிடம் கேட்க முடியாமல் போகலாம். எப்போதும் அதிகமான விஷயங்களுக்கு, கேள்விகளுக்குத் தயாராவதையே நான் விரும்புகிறேன். அப்போதுதான், திடீரென ஓய்வு நேரம் கிடைத்தால் நேரடியாகப் பாடவேளையின் போதே அவ்வளவு முக்கியமற்ற, சுவாரசியமற்ற விஷயங்களைப் பற்றி யோசித்து முடிவு செய்வதைத் தவிர்க்கலாம். வகுப்பில் அவர்கள் செய்ய முடியாதவற்றை பின்னர் அவர்கள் தாமாகவே பதில் கண்டுபிடிக்க விட்டு விடலாம் – கரும்பலகையில் இவை எழுதப்பட்டிருந்தால் அதை அழிக்காமல் விட்டு விடலாம், தாளில் எழுதப்பட்டிருந்தால் கரங்களில் வினியோகித்து விடலாம்.

முறையியல் தவறின் காரணமாக ஏற்படும் இன்னொரு விதமான மாற்றத்தையும் எதிர்பார்க்க வேண்டும்.

இதோ ஒரு உதாரணம்.

கணக்குகளைத் தாமாகவே உருவாக்க குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்க நான் அக்டோபர் நடுவிலேயே திட்டமிட்டிருந்தேன்.

“பாடப் புத்தகத்தின் 26-வது பக்கத்தைத் திறவுங்கள்… 2-ம், 6-ம்! அங்கே ஒரு படம் உள்ளது. அதைப் பார்த்து நீங்களே ஒரு கணக்கைத் தயாரியுங்கள்.”

அப்படத்தில் ஒரு புறம் 4 கோழிக் குஞ்சுகள் சேர்ந்தாற் போலும் ஒரு புறம் ஒரு கோழிக் குஞ்சு தனியாகவும் உள்ளன. இந்தத் தனியான குஞ்சு அந்த 4 குஞ்சுகளை நோக்கி ஓடுகிறது. எனவே, ஒரு கூட்டல் கணக்கு உருவாக்கப்பட வேண்டும்; “முதலில் 4 கோழிக் குஞ்சுகள் இருந்தன, இன்னுமொரு குஞ்சு ஓடி வந்தது. இப்போது எவ்வளவு கோழிக் குஞ்சுகள் உள்ளன?”

முறையியல் சிபாரிசுகளின்படி, குழந்தைகள் கணக்கை உருவாக்கிய பின், நான் பின்வரும் கேள்விகளை அவர்களிடம் கேட்க வேண்டும்: “கணக்கில் எவ்வளவு நிபந்தனைகள் உள்ளன?… அவற்றைச் சொல்லுங்கள்!… கணக்கில் என்ன கேள்வி உள்ளது?… எப்படி கணக்கை எழுதுவது?.. கணக்கைப் போடுங்கள்!… என்ன விடை கிடைத்தது?”

கணக்கு, அதன் நிபந்தனைகளைப் புரிந்து, யோசித்து முடிவு செய்ய குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது தான் இதன் நோக்கம்.

“சரி, கணக்கை யோசித்து விட்டீர்களா?”

நீக்கோ பதில் சொல்கிறான்: “கோழிக் குஞ்சுகள் தானியத்தைக் கொறிக்கின்றன”.

“இதுவல்லவே கணக்கு! கணக்கை உருவாக்க வேண்டும், வாக்கியத்தை அமைக்க வேண்டாம்.”

நீயா சொல்லுகிறாள்: 4 கோழிக் குஞ்சுகள் இருந்தன, இன்னுமொன்று ஓடி வந்தது. ஆக 5 கோழிக் குஞ்சுகள் உள்ளன”.

“நீங்கள் கணக்கை உருவாக்க வேண்டுமே தவிர விடையைச் சொல்ல வேண்டாம்.”

ஏக்கா சொல்லுகிறாள்: “4 கோழிக் குஞ்சுகள் இருந்தன. இன்னுமொரு குஞ்சு ஓடி வந்தது. இப்போது எவ்வளவு கோழிக் குஞ்சுகள் உள்ளன? இப்போது 5 கோழிக் குஞ்சுகள் உள்ளன”.

அதே பக்கத்தில் உள்ள இன்னொரு படத்தைப் பார்த்து ஒரு கணக்கை உருவாக்குமாறு முன்மொழிகிறேன். அதே மாதிரி நடக்கிறது.

விக்டர்: “பறவைகள் மரத்தின் மீது உட்கார்ந்திருக்கின்றன.”

நான்: “இது வாக்கியம். நமக்கு வேண்டியது கணக்கு.”

தாம்ரிக்கோ: “மரத்தில் 5 பறவைகள் உட்கார்ந்திருந்தன. ஒரு பறவை பறந்து விட்டது. 4 பறவைகள் மீதியுள்ளன”.

நான்: “நீ கணக்கிற்கான விடையை அல்லவா சொல்லுகிறாய்!”

கியோர்கி: “5 பறவைகள் இருந்தன. ஒரு பறவை பறந்து விட்டது. எவ்வளவு பறவைகள் மரத்தில் மீதியுள்ளன? 4 பறவைகள் மீதியுள்ளன.”

இல்லை, இந்தக் கணிதப் பாடத்தில் கணக்குகளை உருவாக்கக் குழந்தைகளுக்கு என்னால் சொல்லித்தர இயலவில்லை, எனது கேள்விகள் அவர்களது யோசனைகளைத் தட்டி விடவில்லை .

ஆனால் எனது கேள்விகள் மட்டுமா இதற்குக் காரணம்?

இங்கே இக்குழப்பத்திற்கான இரண்டு அம்சங்களை நான் கண்டுபிடித்தேன்.

முதலாவதாக, இந்தக் கணித மினி-பாடத்திற்கான இக்கேள்விகளைக் கேட்ட போது, அதற்கு முன் தாய்மொழி மினி – பாடம் இருந்ததை நான் கவனத்தில் கொள்ளவில்லை. தாய்மொழிப் பாடவேளையில் நாங்கள் வாக்கியங்களை அமைப்பதில் பயிற்சி பெற்றோம். நான் அப்போது குழந்தைகளுக்குப் படங்களைக் காட்டி வாக்கியங்களை அமைக்கச் சொன்னேன். ஐந்து நிமிட இடைவேளைக்குப் பின் நாங்கள் கணிதப் பாடத்தை ஆரம்பித்தோம். ஆனால் குழந்தைகளின் மனதிலிருந்து முந்தைய பாடவேளை அகலவேயில்லை. எனவே தான், கணிதப் பாடத்தின் போது, “கணக்கை உருவாக்குங்கள்” என்று நான் கூறியதை “வாக்கியங்களை அமையுங்கள்” என்று அவர்கள் புரிந்து கொண்டனர். எனவே தான், “கோழிக் குஞ்சுகள் தானியத்தைக் கொறிக்கின்றன” என்று இலிக்கோவும், “பறவைகள் மரத்தில் உட்கார்ந்திருக்கின்றன” என்று விக்டரும் கூறினார்கள்.

இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

“இதற்கு முன் நாம் வாக்கியங்களை அமைத்தோம். இப்போது கணக்குகளை உருவாக்குவோம்” என்று தெளிவாக, புரியும்படி குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். மேலும், எப்படி கணக்கை உருவாக்குவது என்று நினைவு படுத்தவேண்டும். இப்படிச் செய்தால் நாம் ஒன்று சொல்ல, குழந்தைகள் அதை வேறு மாதிரி புரிந்து கொள்ளும் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

இரண்டாவது அம்சம் முறையியலிலேயே அடங்கியுள்ளது. உணர்வு பூர்வமான கல்வியை எளிதாக்குவதற்காக நாம் எல்லாவற்றையும் செய்யப்போக, சில சமயங்களில் தலைகீழாக நேர்ந்து விடுகிறது. காட்சிக் கருவி கல்வி முறை பற்றிய முற்றிலும் திட்டவட்டமானதாயில்லாத கோட்பாட்டைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றி பாடநூல் எனக்கு ஒரு படத்தை முன்மொழிந்தது; இதில் 4 கோழிக் குஞ்சுகள் தனியாகவும், இவற்றை நோக்கிச் செல்லும் ஒரு குஞ்சு தனியாகவும் வரையப்பட்டுள்ளன. இன்னும் என்ன வேண்டும் என்று தோன்றும்.

எல்லாம் கண் முன் தெளிவாக உள்ளது. 4 கோழிக் குஞ்சுகள் இருந்தன, இன்னுமொன்று ஓடி வந்தது. இப்போது எவ்வளவு உள்ளன? “என்ன குழந்தைகளே, இவ்வளவு எளிய கணக்கை அமைப்பதில் உங்களுக்கு என்ன கஷ்டம்? எல்லாம் தான் கண் முன் உள்ளனவே! உங்கள் திறமைகளுக்கு எல்லைகளே இல்லையென்றும் உங்களால் பொதுமைப்படுத்திச் சிந்திக்க முடியுமென்றும் உங்களுக்குக் குறிக்கணிதம் சில சமயங்களில் ஒரு விளையாட்டு என்றும் நவீன மனவியல் நிபுணர்கள் கூறுகின்றனரே!” ஆனால், 20 வரை சுலபமாகக் கூட்டவும் கழிக்கவும் தெரிந்த என் வகுப்புக் குழந்தைகளுக்கு இவ்வளவு சுலபமான வேலையைச் செய்ய முடியவில்லை.

ஆனால், எண்ணிக்கை ரீதியில் இப்படி கண் முன் வைக்கப்பட்ட இந்தப் பயிற்சி உண்மையிலேயே நமது கேள்விகளின் பதில்களைக் குழந்தைகள் புரிந்து கொள்வதை எளிதாக்குகிறதா? சில சமயங்களில் கல்வி முறை குழந்தையின் மன நிலையிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது, கண்கூடான கோட்பாட்டை எப்படிப் பரவலாகப் பயன்படுத்துகிறது என்று நான் நன்கு உணர்ந்து கொண்டேன். “குழந்தைகள் பிம்பங்களின் மூலம் தான் சிந்திக்கின்றனர், மனோதத்துவ இயல் இதை நிரூபித்துள்ளது” என்று ஒரு கல்வி முறையியல் நிபுணர் கூறி பாடநூலில் 4 கோழிக் குஞ்சுகளின் படத்தையும் இவற்றை நோக்கிச் சொல்லும் இன்னுமொரு குஞ்சின் படத்தையும் வரைவார். இதோ பிம்பம், இப்போது கணக்கை உருவாக்க வேண்டும்.

ஆனால் குழந்தைக்கோ கணக்கை உருவாக்க கடினமாக உள்ளது. ஏன்? பிம்பங்களின் மூலம் சிந்திக்கின்ற திறமையை அவன் இழந்து விட்டானா? இதுவல்ல விஷயம். விஷயம் என்னவெனில், இங்கே பிம்பங்கள் கணக்கையே பொருளற்றதாக்கி விட்டன. ஏன் கணக்கை உருவாக்க வேண்டும்? இதை உருவாக்குவதற்கான காரணம் எங்கே உள்ளது? இங்கு தான் எல்லாம் தெட்டத் தெளிவாக உள்ளதே: 5 கோழிக் குஞ்சுகள். அவ்வளவுதான்! கணக்கும் விடையும். ஏதாவது தெரியாத ஒன்றைக் கண்டு பிடிக்கத்தான் கணக்கு தேவை, இங்கே அந்தத் ”தெரியாதது” ஏற்கெனவே தெரிந்த தாக்கப்பட்டுள்ளது. குழந்தை புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறான்: “கணக்கை உருவாக்கு” என்று நாம் சொன்னதை, “கணக்கைப் போடு” என்று அவன் புரிந்து கொள்கிறான். எனவே உடனே, எவ்வித பெரும் யோசனைகளும் இன்றி அதைப் போட்டு விடையைத் தருகிறான். குழந்தைகள் யோசிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் நாம் கண்கூடாகத் தருபவற்றில் பதிலை கண்கூடாகக் காட்டும் அம்சம் (இது யோசிப்பதை அகற்றி விடும்) இருக்கக் கூடாது. பார்த்தீர்களா! கல்வி போதிக்கும் நிகழ்வுப் போக்கு எவ்வளவு சிக்கலானதாக சில சமயங்களில் மாறுகிறது.

எனது முறையியல் தவறினால் சமீபத்தில் இன்னுமொரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மனித நட்புறவு மற்றும் பரஸ்பர உறவுகளின் முக்கியத்துவம் குறித்துக் குழந்தைகளுடன் உரையாடுவதென முடிவு செய்தேன். “மரத்திற்குப் பலம் வேர்கள், மனிதனுக்குப் பலம் நண்பர்கள்” என்ற ஜார்ஜிய பழமொழியின் உதாரணத்தில் இதைச் செய்வதென தீர்மானித்தேன். “’மரத்திற்கு எது பலம் தருகிறது? மனிதனுக்கு எது பலம் தருகிறது?” என்று கேள்விகள் கேட்க வேண்டும்; பின் குழந்தைகளின் பதில்களின் அடிப்படையில் இவர்களை மானுட நட்பைப் பற்றிய பேச்சிற்கு இட்டுச் செல்ல வேண்டும்; “மனிதனுக்குப் பலம் நண்பர்கள் என்று ஏன் மக்கள் கூறுகின்றனர்?” என்று கேட்க வேண்டும் என்பது என் திட்டம். ஆனால் எல்லாம் முற்றிலுமாக மாறியது.

நான் பழமொழியைக் கரும்பலகையில் எழுத, குழந்தைகள் அதைப் படித்தனர்.

“சரி, மரத்திற்குப் பலம் எது?” என்று நான் கேட்டேன்.

“வேர்கள்!”

“மனிதனுக்கு ?”

கோத்தே சொல்கிறான்: “எலும்புக் கூடு.”

“என்ன?!” என்று நான் வியப்போடு கேட்டேன்.

“மனித உடலுக்கு அடிப்படை எலும்புக் கூடு.”

பழமொழியின் மறைபொருளை கோத்தே புரிந்து கொள்ளவில்லையா என்ன?

“எலும்புக் கூட்டில் உடல் எப்படி நிலையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது?” என்று மற்ற குழந்தைகள் கேட்டனர்.

“மனிதனுக்கு முதுகெலும்பு இல்லாமலிருந்தால் அவனால் நிலையாக இருக்க முடியாது. முதுகெலும்பு இங்கே ஆரம்பமாகி இங்கே முடிகிறது!” என்று விரல்களால் சுட்டிக் காட்டியபடியே கோத்தே கூறினான்.

“கோத்தே சொல்வது சரி.. வரைந்து காட்டட்டுமா?”

மனித உடலின் உள் உறுப்புகளின் அமைப்பைப் பற்றிய படத்தை எனக்குப் பரிசாக வழங்கிய அதே சிறுவன் தான் இதற்குக் காரணம். இப்போது அவன் மனித எலும்புக் கூட்டைப் பற்றிய புதிய விவரங்களை அறிந்து கொண்டிருக்கிறான். அவன் தன் படங்களைக் குழந்தைகளுக்குக் காட்டி எங்கே விலா எலும்பு, எங்கே மண்டை ஓடு என்றெல்லாம் விளக்கினான்; கோத்தேவிடமும் தன் ஞானத்தை அவன் பகிர்ந்து கொண்டிருக்கிறான். கோத்தே புதிய விவரங்களின் மனப்பதிவில் இருந்ததால் “மனிதனுக்கு பலம் எது?” என்ற என் மறைமுகமான கேள்விக்கு நேரடியாகப் பதில் சொன்னான்.

படிக்க:
யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !
புற்றுநோயை கண்டறிவது எப்படி ? | மருத்துவர் BRJ கண்ணன்

இந்த விஷயம் மற்ற குழந்தைகள் மத்தியில் பேரார்வத்தை ஏற்படுத்தியது .

“அவன் எலும்புக் கூட்டை வரைந்து காட்டட்டும்!” என்று அவர்கள் கேட்டனர்.

இவ்வாறாக, நட்புறவைப் பற்றிய ஆசிரியரியல் இசை, மனித எலும்புக் கூட்டின் அமைப்பைப் பற்றிய பேச்சால் மாற்றப்பட்டது…..

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

மத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை

தியாகராயர் நகர் (தி. நகர்) – சென்னையின் பிரம்மாண்டமான துணிக்கடைகளும் நகைக்கடைகளும் மண்டிக்கிடக்கும் பகுதி. இங்கு வரும் நடுத்தர, மேட்டுக்குடி வாடிக்கையாளர்களின் நாற்சக்கர வாகனங்களால் முற்றுகையிடப்பட்ட பனகல் பூங்கா, பேரிறைச்சலுக்கும் மண்டையைப் பிளக்கும் வெயிலுக்கும் மத்தியில் சில்லென்ற குளிர்காற்றை வீசிக்கொண்டிருந்தது. நிழல் படர்ந்த மரங்கள், அடைக்கலம் தேடிவந்த உழைப்பாளர்களைத் தாலாட்டிக் கொண்டிருந்தது.

நெருக்கடியான தி. நகரின் மத்தியில் அமைதியான பனகல் பூங்கா.

லாபம் முதலாளிக்கு, அதன் வேதனை தொழிலாளிக்கு என்பது போல ஆட்டோ மொபைல், செல்ஃபோன், துரித உணவு ஊழியர்களும் மார்கெட்டிங் துறை இளைஞர்களும் தங்களின் தற்காலிக அலுவலகமாக இதைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, தங்கள் ஊழியர்கள் கூடுவதற்கு ஒரு இடம் கூட இல்லாமல் ப்ளேடு கம்பெனிபோல் இயங்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் சூப்பர்வைசர்கள் இங்குதான் அன்றாட வேலைகளை ஊழியர்களுக்குப் பிரித்துக் கொடுக்கிறார்கள். அந்த ஊழியர்கள் அலைந்து திரிந்துவிட்டு, மதிய உணவை முடித்து ஓய்வெடுக்கும் இடமும் இதுதான். இவர்கள் அவசரமாக சாப்பிட்டு வீசும் மிச்சம் மீதிகளுக்காக அணிவகுத்து வருகின்றன, தின்று கொழுத்தப் பெருச்சாளிகள்.

பலரும் ஆங்காங்கே மூன்று நான்கு பேர் கொண்ட சிறுசிறு குழுக்களாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்; சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். யூனிஃபார்ம் போட்ட சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தது, நமது கண்களை ஈர்த்தது. அருகே சென்றதும் அவர்கள் அனைவரும் பக்கத்தில் இருக்கும் RMKV துணிக்கடை ஊழியர்கள் என்பதைத் தெரிந்துகொண்டோம்.

“உங்க ஷோரூமில் சாப்பிட இடம் இல்லையா?” என்றதற்கு, அவசரமாக “அப்படியில்லை, இங்கு அமர்ந்து சாப்பிட்டா கலகலப்பா இருக்கும். திரும்பப் போகும்போது ஃப்ரெஷாக வேலை செய்வோம். அங்கேயே சாப்பிட்டால் போரடிக்கும், வெறுப்பாக இருக்கும். திரும்பவும் வேலை செய்வது சலிப்பாக இருக்கும்” என்றனர்.

கடையில் வேலை செய்யும் அனுபவம் பற்றி கேட்டதற்கு, பலரும் இறுக்கமாக வாய் மூடி மவுனமாயிருந்தனர்.

rmkv workers
அருகில் உள்ள பனகல் பூங்காவில் சாப்பிட வந்திருக்கும் RMKV துணிக்கடை ஊழியர்கள்.

சிலரை வற்புறுத்தி கேட்ட போது, “அவரைக் கேளுங்க, அவன கேளுங்க…” என்று ஒருவரையொருவர் கைகாட்டி ஒதுங்கி நின்றனர். சிறு மவுன இடைவெளிக்குப் பிறகு, ஒருவர் சேல்ஸ் கவுன்டரில் கஸ்டமரை அட்டன் பண்ணுவதைப்போல் நம்மிடம் பேசத் தொடங்கினார்.

“காஞ்சிபுரம் பக்கம் ஆரணிதான் சொந்த ஊர். இங்கே வேலைக்குச் சேர்ந்ததினால, குடும்பத்தை சென்னைக்கே கூட்டி வந்துவிட்டேன்.

விக்கிற விலைவாசியில சென்னையில குடும்பம் நடத்துறது ரொம்ப சிரமம்தான். என்ன செய்றது! பட்டுத் தறி நெய்யிற படிக்காத குடும்பத்துல பிறந்த எனக்கு இந்த வேல கெடச்சதே பெரிய விசயம்தான். ஆனா, பட்டு நுணுக்கம் அனைத்தும் தெரிந்தவர்கள் நாங்கள். அதனால்தான், பட்டு செக்சனில் போட்டிருக்காங்க.

கடைக்கு வரும் கஷ்டமரிடம் RMKV பட்டுப் புடவையின் பாரம்பரியத்தை, இழையிழையாக எடுத்துச் சொல்வோம். அதில் அவர்கள் மயங்கி புடவையை வாங்கும் வரை விடமாட்டோம். சில சமயங்களில் கஸ்டமர் கேட்கும் கேள்விகளால் நாங்கள் சோர்ந்து போய் மயக்கமாவதும் உண்டு” என்றார்.

சேல்ஸ்மேன் மூர்த்தி.

“கஷ்டமரை அட்டன் பண்ணாத நேரத்தில் உட்கார அனுமதி உள்ளதா?” என்றோம்.

“சார் நான் கவுன்டரில் கேசியர் வேலை பார்க்கிறேன். எனக்கே உட்கார சேர் இல்ல. சேல்ஸ்மேன் கவுன்டர்ல சொல்லவா வேணும். அப்புறம் எங்கே உட்காருவது. கால் வலித்தால், காலை மாற்றி ஒரே காலில் நின்றுகொள்ள வேண்டியதுதான். அதிகம் நின்று நின்று காலிலிருந்து அடிவயிருக்கும் வலி பரவும். அப்போது யாருக்கும் தெரியாத மாதிரி கவுன்டரில் சாய்ந்து கொள்வோம். வலி அதிகமாச்சுன்னா, கீழே கிடக்கும் பொருட்களை அடுக்கி வைப்பது போல, தரையில் உட்கார்ந்து வலியைச் சமாளிப்போம்” என்றனர்.

“கேரள மாநிலத்தில் விற்பனை ஊழியர்கள் நாற்காலியில் அமர்வதற்கு உரிமை உள்ளது என்று சட்டம் கூட போட்டுவிட்டார்களே” என்றோம்.

ஒருவர் மாற்றி ஒருவராக பேச ஆரம்பித்தார்கள்: “நம்ம ஓபிஎஸ், இபிஎஸ்-ஏ சின்னம்மா பெரியம்மா முன்னால சேர்ல உட்கார்ந்ததில்ல. அவங்களா நாங்க உட்கார சட்டம் போடுவாங்க!

சேல்ஸ்மேன் குமார்.

கடைக்கு வர்ற கஸ்டமர்கள்தான் முதலாளிக்கு தெய்வம். அந்தத் தெய்வங்களுக்கு எதிராக நாங்க எப்படி சார் உட்கார முடியும். இதுமட்டுமல்ல, சேல்ஸ் கவுன்டரில் நாங்கள் அனுபவிக்கிற நரக வேதனையை உங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. எங்களோடு வாழ்ந்தால்தான் அது உங்களுக்குத் தெரியும். கஸ்டமரை கவனிக்கும் கவுன்டரை தவிர, மற்ற கவுன்டர்கள் காலியாக இருந்தாலும், அங்கிருக்கும் சேல்ஸ்மேன்கள் தங்களுக்குள் பேசக்கூடாது. குறிப்பாக சிரித்தால் – பேசினால் கடுமையான தண்டனை. சம்பளம் கூட கட்டாகும்.

கஸ்டமர் வி.ஐ.பி. என்றால் காலியான கவுன்டரில் சிரித்து பேசிய சேல்ஸ்மேனை அன்றைக்கே வேலையை விட்டு அனுப்பி விடுவார்கள். ‘நம்மைத்தான் கேலி செய்கிறார்கள் என்று கஸ்டமர் மூடவுட்டாகி வாங்காமல் கடையை விட்டுப் போய்விட்டார்’ என்று பழியை நம் மீது போடுவார்கள்.

‘இனி, அந்த கஸ்டமர் நம்ம கடைக்கு வருவாரா, வியாபாரமே போய்விட்டது’ என்று கதறுவார்கள். ஆதாரமாக, அந்த கஸ்டமர் சாதாரணமாக சேல்ஸ்மேனை திரும்பிப் பார்த்த வீடியோ ஃபுட்டேஜை போட்டுக் காண்பிப்பார்கள். இதைவிட கொடுமை, கஸ்டமர் மார்வாடி என்றால், ‘அவருக்குப் பிடித்த கச்சோலி ரகத்தை நீ ஏன் காண்பிக்கவில்லை?’ என்று அப்போது பதிவான வீடியோ ஃபுட்டேஜை போட்டுக் காண்பிப்பார்கள். அதில் பழைய மோட்டா ரகம், திக்கான கலர் புடவைகளை வேண்டா வெறுப்பாக காண்பித்ததால்தான் அவர்கள் வாங்காமல் போய்விட்டார்கள்’ என்று ஏதேதோ சொல்லி எல்லோர் முன்னிலையிலும் வேலைக்கு லாயக்கு இல்லை என்று அவமானப்படுத்துவார்கள்.

‘வந்தவுங்க ரிச் கஸ்டமர், அவங்க எப்படி எதுவும் வாங்காமல் போவாங்க. நீதான் சரியில்லை’ என்பார்கள். சூப்பர்வைசர்களுக்கு வேலையே இதுதான். வாங்காமல் போனவர்கள் எந்தக் கவுன்டரிலிருந்து போனார்கள் என்று வீடியோ கவரேஜ் வைத்து ஆதாரத்துடன் காண்பிப்பார்கள். சம்பந்தப்பட்ட சேல்ஸ்மேன்களின் நிலை பெரும்பாடாயிடும். இதுல எங்க RMKV   முதலாளி கடவுள் மாதிரி. மற்ற கடைகளிளெல்லாம் இதவிடப் பெரிய பெரிய கொடுமைகளே நடக்குது.

கவர்ண்மெண்டுல கூட ஒன்னாந் தேதிதான் சம்பளம். இங்கே ஒவ்வொரு மாதமும் 28-ம் தேதியே கைக்கு வந்திரும். 4 ஞாயிறு, 2 மெடிக்கல் லீவுன்னு மாதத்துக்கு 6 நாள் லீவு எடுத்துக்கலாம். லீவு போடலன்னா அந்த 6 நாள் சம்பளமும் சேர்த்து கொடுப்பாங்க. பேட்டா, போக்குவரத்துக்கு மாதம் 950 ரூபாய் கிடைக்கும். 20 வருடம் வேலை செய்த சேல்ஸ்மேனுக்கு 12 ஆயிரம் சம்பளம், அப்புறம் 6 ஆயிரம் எக்ஸ்ட்ரா கொடுப்பாங்க. தினமும் டூட்டி காலை 9-லிருந்து மாலை 8; காலை 11.30-லிருந்து இரவு 9.45 வரைன்னு ரெண்டு ஷிப்ட். இதுல எந்த டூட்டி வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். இ.எஸ்.ஐ., பி.எஃப் எல்லாம் கரெக்டா புடிச்சி கொடுப்பாங்க. வேலையிலேருந்து நிக்கிறோமுன்னா உடனே செட்டில் பண்ணிடுவாங்க.

இங்கே வேலை செஞ்சவுங்க மத்த கடையில போயி வேலை செய்யவே முடியாது. அடங்காத சேல்ஸ்மேனை அடக்குறதுக்கு அங்கெல்லாம் ரவுடிகளை (bouncer) வேலைக்கு வச்சிகிறாங்க. அந்த மாதிரி துணிக்கடைகதான் தி. நகருல அதிகம். எங்கக் கடை சொர்க்கம். பிரச்சினை எங்கதான் சார் இல்ல. அத தினமும் நினைச்சா நம்ம கஷ்டம் பெரிசா தெரியும்” என்று சொல்லிவிட்டு ஆர்.எம்.கே.வியை நோக்கி ஓடினார்கள்.

கணக்காளர் நந்தினி.

இதில், “ஏ… மாமியாரே” என்று சேல்ஸ்மேன்களால் அன்போடு அழைக்கப்பட்ட சக பெண் தொழிலாளி. ஓட்டலில் வாங்கி வந்த சாப்பாட்டை அனைவருக்கும் பங்கிட்டு கொடுத்து அவரும் சாப்பிட்டார்.

“ஏன் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டுவரவில்லை?” என்று கேட்டோம்.

அதற்கு, “வீட்டுல கேஸ் சிலிண்டர் காலியாகி ரெண்டு நாளாகுது. கேஸ் வந்தாதான் வீட்டு சாப்பாடு” என்றார்.

“எக்ஸ்ட்ரா சிலிண்டர் வாங்க வேண்டியதுதானே?” என்றோம்.

“அதுக்குன்னு தனியா ரெண்டாயிரம் ரூபா வைக்கணும் இல்லையா. வாங்குற சம்பளத்துல அதுக்கு எங்கே போறது” என்றார்.

கேஸ் கவுன்டரில் வேலை செய்யும் மற்றொரு பெண் ஊழியர் கூறும்போது,

“எங்க ப்ராஞ்ச்ல 500 பேருக்குமேல வேல செய்யிறோம். நாங்க ஒரே குடும்பமாத்தான் பழகுறோம். குடும்பத்துல ஒவ்வொருத்தருக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். சில சின்ன வயசு பொண்ணுங்க உள்ளே நுழையும்போதே கண்ணீரோடு வருவாங்க. கொஞ்சம் நேரம் ஒதுக்கி அவங்க பிரச்சினைகளைக் கேட்டு ஆறுதல் சொல்வோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

என்னோட குடும்பத்துலயும் பிரச்சினைதான். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு, டேலியும் முடிச்சிருக்கேன். வேல எதுவும் அமையல. அம்மா, அப்பாவ காப்பாத்தணும், தங்கச்சியை கரைசேர்க்கணும். இங்கே வந்து சேந்துட்டேன். 9,500 ரூபாயில குடும்பத்த ஓட்டுறோம்” என்றார்.

28 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் கூறும்போது, “நாள் முழுக்க நிக்கிறதுனால, கெண்டக்கால் வலி தாங்க முடியாது. வீட்டுக்குப் போயி சாப்பிட்டு முடிச்சதுமே தயிலம் தேச்சிட்டுப் படுத்துடுவேன். அந்த அசதியிலேயே தூங்கி எழுந்திருப்பேன்.

எங்களோட பொழுதுபோக்கு சக ஊழியர்களோட சிரித்துப் பேசி சந்தோசமா இருக்குறதுதான். மற்றவங்க மாதிரி டிவி சீரியல், சினிமான்னு பொழுத கழிக்க முடியாது. இங்கேயிருந்து போறவுங்க வேற எந்த நிறுவனத்துலயும் வேலைக்குச் சேர்ந்து நீடிக்க முடியாது” என்றார் உறுதியாக.

***

வாடிக்கையாளர்கள் உள்ளே நுழைந்ததும் மங்களகரமாக உணரவேண்டும் என்பதற்காக, சீருடையோடு சீரணியாக நெற்றியில் சந்தனப் பொட்டு வைக்கச் சொல்வது கட்டாயப்படுத்துவதுதான். கெண்டைக்கால் வலி வந்து துவளும்போதும் நாள் முழுக்க நின்றுகொண்டே இருப்பது நரக வேதனைதான். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சிரித்துப் பேசி உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பது மனிதத்தன்மையற்றதுதான். மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் துணி வாங்காமல் செல்லும்போது, அதற்குக் காரணமாக வீடியோ ஃபுட்டேஜ் போட்டு சக ஊழியர்கள் மத்தியில் அவமானப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதுதான்.

ஆனாலும், அந்தத் தொழிலாளர்கள் அனைத்துத் துன்பங்களையும் சகித்துக் கொள்கிறார்கள்; வாழப் பழகிக்கொள்கிறார்கள். காரணம், வாழ்வதற்குத் தகுதியற்ற நரகமாய் வெளி உலகம் இருக்கும்போது, RMKV சொர்க்கமாக இருப்பதில் ஆச்சரியமில்லை அல்லவா!

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி அறிக்கை

எவர் பதவிக்கு வந்தாலும் மக்கள் மீதானதும் இயற்கைச் சூழல் மீதானதுமான அடக்குமுறைகளும் சுரண்டலும் தொடரத்தான் போகிறது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அறிக்கை.

லங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு, ஆளும் வர்க்க கட்சிகளில் இருந்து அதிகார நாற்காலிக்கு வருவதற்கான போட்டியே ஜனாதிபதித் தேர்தல். இப்பதவிக்கு யார் வந்தாலும் நாட்டின் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் மோசமடைந்து காணப்படும் நெருக்கடி மிக்க வாழ்க்கை நிலைமைகள் மாறப்போவதில்லை. அதேபோன்று ஒடுக்கப்படும் தமிழ், முஸ்லிம், மலையக தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகள் கிடைக்கப்போவதுமில்லை. எனவே இந்தத் தேர்தலின் முடிவுகளை ஊகிப்பது கடினமல்ல. இதில் வெல்லப்போவது ஆளும் வர்க்கமே. தோற்கப்போவது நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும்தான் என்பதே வெளிப்படையான உண்மையாகும்.

இதனையே கடந்த 41 ஆண்டுகால நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையில் மக்கள் கண்டு வந்துள்ளனர். எனவே, மக்களின் பணத்தில் 500 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு நடாத்தப்படும் இத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் எந்த ஜனாதிபதியாலும் நாடும் மக்களும் எதிர்நோக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காணமுடியாது என்பதே உண்மையாகும். அதனால் நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களும், குறிப்பாக ஒடுக்கப்பட்டு வரும் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் தேசிய இனங்களும் இத்தேர்தலில் அக்கறைப்படுவதிலும் ஆர்வம்கொள்வதிலும் எவ்வித அர்த்தமும் இருக்கமுடியாது.

வாக்களிப்புக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் அப்பாலான, மக்களரசியலோடும் வெகுஜனப் போராட்டங்களோடும் மக்கள் தம்மை இணைத்துக்கொள்வதே உண்மையான மாற்றத்துக்கான வழிமுறையாகும், என்பதே புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் நிலைப்பாடாகும்.

படிக்க :
♦ இலங்கை : முஸ்லீம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்டிக்கும் பு. ஜ. மா. லெ கட்சி !
♦ நாம் தமிழர் கட்சி சீமானுக்கு சொந்தமா , தம்பிகளுக்கு சொந்தமா ?

இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியற் குழு சார்பாக ஜனாதிபதித் தேர்தல் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் பொதுச்செயலாளர் சி. கா. செந்திவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, கடந்த 41 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கையும் தனியார்மயப்படுத்தலும் அந்நியப் பொருள்களின் இறக்குமதியும் பல்தேசிய கொம்பனிகளின் வருகையும் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை நாசம் செய்துள்ளன. இவற்றால் ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்து, இறக்குமதியும் நுகர்வும் அதிகரித்து, நாடு கடனில் மூழ்கியுள்ளது. இக்கடனால் இலங்கைக் குடிமக்கள் ஒவ்வொருவரும் ஐந்து இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய்களுக்குக் கடனாளிகளாக உள்ளனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அன்றாடப் பாவனைப்பொருட்களின் விலைகளும் உச்ச நிலைக்குச் சென்றுள்ளன. மக்களின் வாழ்க்கைத்தரம் கீழ் நிலைக்கு வந்துள்ளது. நாட்டில் 45 வீதத்திற்கு மேலானோர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோராக்கப்பட்டுள்ளனர். வேலையின்மை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தனியார்மயக் கொள்கையால் கல்வியும் சுகாதாரமும் சீரழிக்கப்பட்டுள்ளதையே காணமுடிகிறது.

நாட்டின் 52 வீதமானோர் பெண்களாக உள்ளனர். அவர்களின் உழைப்பு பலவழிகளில் சுரண்டப்படுகின்றது. அத்துடன் அவர்கள் மீதான பாலியல் வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் இடம்பெறுகின்றன. சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வந்துள்ளது.

போதைப்பொருட்களின் கடத்தலும் பாவனையும் என்றுமில்லாதளவு அதிகரித்து வந்துள்ளது. அதேபோன்று, ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகங்களும் பெருகியுள்ளன. அதேவேளை, உழைக்கும் மக்களுடைய உரிமைகளைக் கேட்டுப் போராடுவோருக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்கள் தொடர்ச்சியாக ஏவப்பட்டு வந்துள்ளன. பயங்கரவாதத் தடைச்சட்டம் முதல், கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் வரையான அடக்குமுறைச் சட்டங்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளின் கீழேயே கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோன்று தொழிலாளர்களுக்கு எதிரான தொழிற்சங்க உரிமைகளை மறுக்கும் சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மத்தியில் அன்னிய மூலதனத்தின் ஊடுருவல்களும் அந்நிய சக்திகளின் ஆதிக்கமும் வளங்கள் கொள்ளையிட்டுச் செல்லப்படுவதும் தாராளமாகவே இடம்பெற்று வந்துள்ளன. ஊழலாலும் குறுக்குவழிகளாலும் சேர்த்த பெருந்தொகைப் பணம், இன்று ஆளும் வர்க்கக் கட்சிகளால் ஜனாதிபதித் தேர்தலில் தண்ணீராக இறைக்கப்பட்டு வருகிறது.

மேலும், கடந்த 41 ஆண்டுகளில் நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணாமல் ஆளும் வர்க்க கட்சிகளின் அனைத்து ஜனாதிபதிகளும் இருந்து வந்தனர் என்பது வெளிப்படை.

மூன்று தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட கொடிய போரினால், வடக்கு கிழக்கு மக்கள் உயிரிழப்புகளுடன் இருப்பிடங்களையும் இழந்தனர். இறுதிப் போரின்போது பல பத்தாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர்கள் காயப்பட்டு கை, கால் இழந்தனர். இன்றும் அவர்கள் தத்தமது அவயவங்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர்.

தமது பிள்ளைகளையும் துணைவர்களையும் போரில் இழந்து, வடக்கு கிழக்கில் சுமார் 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விதவை எனும் சமூக அடையாளத்துடன் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ஆக வாழ்ந்து வருகின்றனர். மேலும், பல ஆயிரம் பேர் வரை காணாமல் ஆக்கப்பட்டனர். இன்றும் சிறைகளில் அரசியல் கைதிகளாக நூற்றுக்கு மேற்பட்டோர் இருந்து வருகின்றார்கள்.

படிக்க :
♦ “கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு
♦ அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !

மேலும், படைத்தரப்புகளால் பிடிக்கப்பட்ட நிலங்கள் இப்பொழுதும் அவர்களிடமே இருந்து வருகின்றன. அவற்றை மீட்பதற்கு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் அத்தகைய கொடிய போரை முன்னெடுத்த ஆளும் வர்க்க கட்சிகளின் பிரதிநிதிகளும் அவர்களுக்கு உறுதுணையாய் நின்றவர்களுமே இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் பிரதான போட்டியாளர்களாக நிற்கின்றனர்.

தொடர்ந்து முஸ்லீம் மக்களுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் எதிராக மோசமான இன, மத துவேஷப் பிரசாரங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்ததன் விளைவாக நாட்டின் பல பிரதேசங்களில் வன்முறைகள் ஏவிவிடப்பட்டன. இவற்றால் முஸ்லீம் மக்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டும் எரியூட்டப்பட்டும் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

மேலும் ஏப்பிரல் 21 குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லீம் மக்களுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் எதிராக மோசமான துவேஷப் பிரசாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டதுடன், கைதுகளும் அச்சுறுத்தல்களும் நிகழ்ந்தன. இலங்கையின் அனைத்து முஸ்லீம்களும் அச்சம் பீதியுடன் இருந்தனர். இவ்வாறு முஸ்லீம்கள் மீது அடக்குமுறைகள் இடம்பெற்ற போதும் ஜனாதிபதிப் பதவியில் இருந்தவரால் எதுவும் செய்யமுடியவில்லை.

அதேபோன்று ஜனாதிபதிப் பதவியில் இருந்த எவரும் மலையக மக்களை நாட்டின் வருவாய்க்கு உழைக்கும் மக்களாக பார்க்க முடியாதவர்களாகவே இருந்து வந்தனர். அதனால் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் நீண்ட காலமாகக் கோரி வந்த சம்பள உயர்வு, காணி, வீடு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஆளும் வர்க்கக் கட்சிகள் கவனம் எதனையும் செலுத்தவில்லை.

அதேவேளை தோட்ட முதலாளிகளுக்கு சார்பாக எல்லா ஜனாதிபதிகளும் இருந்து வந்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவெனில், தமிழ் மக்களும் மலையகத் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் கடந்தகால ஜனாதிபதிகளைத் தெரிவு செய்வதில் பெரும் பங்கு வகித்து வந்தமையாகும். ஆனால் எல்லா ஜனாதிபதிகளுமே தமிழ் முஸ்லீம் மலையக மக்களை பேரினவாத நிலைப்பாடில் நின்று புறந்தள்ளி வந்தனர் என்பதே வரலாறாகும்.

புத்தளத்தைக் காப்போம் – இலங்கையில் தொடரும் போராட்டங்கள் !

எனவே நாட்டின் உழைக்கும் மக்களாகவும் ஒடுக்கப்படுவோராகவும் இருந்து வரும் சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களுக்கு கடந்த காலங்கள் போன்று, எவர் வெற்றிபெற்று பதவிக்கு வந்தாலும் எவ்வித சுபீட்சமோ விமோசனமோ கிடைக்கப்போவதில்லை. பதவிக்கு வரும் எவரும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி உள்நாட்டு பெரும் – தரகு முதலாளிகளுக்கும் அந்நிய பல்தேசியக் கம்பனிகளுக்கும் சேவை செய்வர். அதே போன்று ஏகாதிபத்திய, பிராந்திய, மேலாதிக்க, வல்லரசு நாடுகளின் தேவைகளுக்கும் நலன்களுக்கும் ஏற்றவாறு நடந்து கொள்ளவே செய்வார்கள். நாடும் அனைத்து மக்களும் துன்ப துயரங்கள் நிறைந்த வாழ்வைத் தொடர வேண்டிய சூழலே நீடித்து நிற்கும்.

இவற்றின் காரணமாகவே எமது கட்சி இந்த ஜனாதிபதித் தேர்தலில் எவரையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.

ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நிலமாகவும் வளங்களைக் கொள்ளையிடக் கூடியதாகவும் எம் நாட்டை மாற்றிவைத்திருக்கும் நவதாராளவாத, முதலாளியக் கொள்கைகளும் அதற்கான ஆட்சி அதிகாரக் கட்டமைப்பும் மாறாதவரை, உண்மையான மாற்றம் என்பது சாத்தியமற்றது. ஏகாதிபத்திய முதலாளியச் சுரண்டலுக்கு எதிராக மக்கள் திரண்டெழாமல் தடுப்பதற்காகவும் உணர்ச்சி அரசியலூடாக தமது ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடந்து பேணப்படுவரும் தேசிய இன ஒடுக்குமுறையும் மாறாது.

வெறுமனே ஜனாதிபதி இருக்கையில் அமர்பவரை மாற்றுவதன் மூலம் இந்தக் கட்டமைப்பை மாற்ற முடியாது. ஏற்கனவே மாறி மாறி பதவியில் இருப்பவர்களை விட்டுவிட்டு ஊழலற்ற நேர்மையான நல்லவரொருவரை ஜனாதிபதியாக்கினால், மாற்றம் வந்துவிடும் என்று சிலர் மக்களை நம்பவைக்க முயற்சிக்கிறார்கள். இந்தச் சுரண்டல் கட்டமைப்பை சரியாகப் புரிந்துகொள்ளாமல் அதனைக் காப்பாற்றும் முயற்சியாகவே இந்த வாதத்தினை நாம் காண முடியும்.

படிக்க:
♦ ஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை !
♦ ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!

எவர் பதவிக்கு வந்தாலும் மக்கள் மீதானதும் இயற்கைச் சூழல் மீதானதுமான அடக்குமுறைகளும் சுரண்டலும் தொடரத்தான் போகிறது. அவற்றுக்கு எதிராகப் போராடும் மக்களோடு இணைந்து நிற்பதும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடுவதுமே உண்மையான மாற்றத்துக்கான வழிமுறையாகும்.

ஜனாதிபதித் தேர்தல் எனும் வீண்செலவுப் பரபரப்புக்களுக்கு எடுபடாமல், மக்களோடு நின்று போராடும் சக்திகளை இனங்கண்டு, அவர்களைப் பலப்படுத்துவதும் தொடர்ச்சியாக அவர்களுக்கு ஆதரவினை வழங்குவதுமே மக்களுக்குச் சார்பான மாற்றங்களை இந்நாட்டில் ஏற்படுத்தும்.

இத்தகைய கொள்கைகளையுடைய இடதுசாரி சக்திகளுள் சிலவும் பதவிக்காகவன்றி, மக்களை அறிவூட்டி அரசியல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தல் மேடையைப் பயன்படுத்த முன்வந்துள்ளதனை நாம் அடையாளம் காணலாம்.

எனவே, தேர்தல் பரபரப்புக்களிலும், ஆளும் வர்க்கக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளிலும் கவனத்தையும் நம்பிக்கையையும் வைத்து ஏமாறாமல், உண்மையான மாற்றத்துக்கும், மக்கள் அதிகாரத்தை இந்நாட்டில் நிலைநிறுத்துவதற்குமாக தேர்தலுக்கு வெளியே நிகழும் தொடர்ச்சியான மக்கள் அரசியல் வேலைத்திட்டங்களை ஆதரித்து, புரட்சிகர இடதுசாரி சக்திகளோடு தம்மை இணைத்துக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என எமது கட்சி அழைப்பு விடுக்கிறது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி, இலங்கை

நான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா?

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 1-அ

“புறப்படுவோம்! இப்போது போகலாம். துரிதப்படுத்து, நண்பா, இந்த இடத்திலிருந்து தொலைவில் போய்விடுவோம்” என்று காரோட்டிக்கு உத்தரவிட்டான்.

“இப்போது அவை வர மாட்டா, நாம் போகலாம் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று இளையவன் சீனியர் லெப்டினன்டிடம் கேட்டான். நொடிகளில் குதித்துத் துள்ளிய லாரியின் லயத்துக்கு ஏற்ப உடலை அசைத்தவாறு பின்னவன் சற்று நேரம் பேசாதிருந்தான். பின்பு சொன்னான்:

“இது மிகவும் சாதாரணமான விஷயம். இவை “மெ-109” ரக “மெஸ்ஸர்” விமானங்கள். இவற்றின் எரிபொருள் சேமிப்பு நாற்பத்து ஐந்து நிமிடப் பறப்புக்குத் தான் காணும். இவ்வளவு நேரம் அவை பறந்து தீர்த்துவிட்டன. இப்போது பெட்ரோல் நிறைத்துக் கொள்ளப் போயிருக்கின்றன.”

இதை அவன் விளக்கிய அசட்டையான தோரணை, இத்தகைய சாதாரண விஷயங்களை ஒருவன் எப்படி அறியாமலிருக்க முடியும் என்று அவனுக்கு விளங்கவில்லை என்பது போல இருந்தது. இளையவனோ கூர்ந்து பார்வையிடத் தொடங்கினான். பறக்கும் “மெஸ்ஸெர்” விமானங்களைத் தானே முதலில் காண வேண்டும் என்று அவனுக்கு ஆசை உண்டாயிற்று. ஆனால் விமானங்களைக் காணோம். பூத்துக் குலுங்கிய புல், புழுதி, சூடேறிய தரை ஆகியவற்றின் இன்மணம் காற்றில் நிறைந்திருந்தது. புல்லில் தத்துக் கிளிகள் உற்சாகமும், குதூகலமும் பொங்கக் கிரீச்சிட்டன, களைகள் அடர்ந்து மண்டிச் சோகக் காட்சி அளித்த நிலத்துக்கு உயரே எங்கோ பறந்தவாறு கணீரென இசை பரப்பியது வானம்பாடி, இவற்றில் சொக்கிப் போன வாலிபன் ஜெர்மானிய விமானங்களையும் அபாயத்தையும் மறந்து விட்டு, காதுக்குக் குளிர்ச்சியான கணீர்க் குரலில் ஒரு பாட்டு பாடலானானன். அது அந்தக் காலத்தில் முனைமுகப் படை வீரர்களுக்கு மிகவும் உவப்பான பாட்டு. காப்பரணில் இருந்துகொண்டு எங்கோ தொலைவிலிருந்த காதலியை நினைத்து ஏங்கிய படைவீரனைப் பற்றியது …..

மாலைத் தருவாயில் அவர்களது லாரி சிறு கிராமம் ஒன்றின் வீதி வழியே சென்றது. சிறிய விமானப் படைப் பிரிவின் தலைமையிடம் அது என அனுபவமுள்ள விழிகள் சட்டெனக் கண்டுகொண்டன. சில கம்பிகள் புழுதிபடிந்த செர்யோமுறா மரங்கள் மீதும் முன்வாயில் தோட்டங்களில் குச்சி குச்சியாகத் துருத்திக் கொண்டிருந்த ஆப்பிள் மரங்கள் மீதும் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன. கிணற்று ஏற்றக் கால்களையும் வேலிகளின் மரக் கம்பங்களையும் சுற்றிக் கொண்டு சென்றிருந்தன இந்தக் கம்பிகள். வீடுகளின் அருகே வழக்கமாகக் குடியானவர்களின் வண்டிகள் நிறுத்தப்பட்டு, கலப்பைகளும் பரம்புகளும் வைக்கப்பட்டிருக்கும் வைக்கோல் வேய்ந்த சவுக்கைகளில் நின்றன நசுங்கிய பலவகை மோட்டார்கள். நீல ரிப்பன் சுற்றிய தொப்பிகள் அணிந்த ராணுவத்தினர் சிறு ஜன்னல்களின் மங்கிய கண்ணாடிகளுக்கு மறுபுறம் சற்றே தென்பட்டார்கள், தட்டெழுத்துப் பொறிகள் சடசடத்தன. ஒரு வீட்டுக்குள்ளிருந்து தான் கம்பிகளின் சிலந்திவலை வெளியே சென்றிருந்தது. அந்த வீட்டிலிருந்து தந்திக் கருவியின் ‘கட்டுக் கடகட்டு’ ஒலி ஒரு சீராகக் கேட்டுக் கொண்டிருந்தது.

படிக்க:
கார்ப்பரேட் இரயில் : தனியார் கையில் மேலும் 150 இரயில்கள் !
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !

லாரி கிராமத்தின் வழியே விரைந்து கிராமப் பள்ளிக் கூடத்தின் துப்புரவான கட்டிடத்திற்கு எதிரே நின்றது. உடைந்த ஜன்னலுக்குள் கொத்தாகச் சென்றிருந்த கம்பிகளையும், தானியங்கித் துப்பாக்கியைத் தயாராக மார்பின் மேல் உயர்த்திப் பிடித்தவாறு வாயிலில் நின்று கொண்டிருந்த படை வீரனையும் கொண்டு அது தலைமை அலுவலகம் என்பதைத் தெரிவித்துக் கொள்ள முடிந்தது.

“ரெஜிமென்ட் தலைவரிடம் வந்திருக்கிறோம்” என்று முறை அதிகாரியிடம் சொன்னான் சீனியர் லெப்டினன்ட்.

ரெஜிமென்ட் கமாண்டரின் அலுவலறை விசாலமான வகுப்பறையில் அமைக்கப்பட்டிருந்தது. வெற்று மரக்கட்டைச் சுவர்கள் கொண்ட அறையில் ஒரே ஒரு மேஜைதான் போடப் பட்டிருந்தது. டெலிபோன்களின் தோல் உறைகளும், வரைபடம் வைத்த விமானப்படைக் கைப்பெட்டியும், சிவப்புப் பென்சிலும் மேஜைமேல் கிடந்தன. சிறுகூடான, முறுக்கேறிய மேனியுள்ள துடியான கர்னல் கைகளை முதுகுப்புறம் வைத்தவாறு சுவரோரமாக அறை நெடுக விரைந்து நடந்தார். தமது எண்ணங்களில் ஆழ்ந்தவராக அவர் இராணுவ முறைப்படிக் கால்களைச் சேர்த்து விரைப்பாக நின்ற விமானிகளின் அருகாக இரண்டொரு முறை கடந்து சென்றார். பின்பு சட்டென அவர்களுக்கு முன்னே நின்று, உறண்ட, உறுதியான முகத்தைக் கேள்விக் குறியுடன் நிமிர்த்தினார்.

கருமுடி ஆபிசர் விரைப்பாக நின்று பூட்சுக் கதிகளை-தக்கென அடித்து, “சீனியர் லெப்டினன்ட் அலெக்ஸேய் மெரேஸ்யெவ். உங்கள் கீழ் பணியாற்ற வந்திருக்கிறேன்” என்று அறிவித்தான்.

அவனைக் காட்டிலும் நேராக நிமிர்ந்து நிற்க முயன்றவாறு, படைவீரனுக்குரிய நீள்ஜோடுகளை இன்னும் ஒலிப்புடன் தரையில் அடித்து, “சீனியர் சார்ஜென்ட் அலெக்ஸாந்தர் பெத்ரோவ்” என்று அறிக்கை செய்து கொண்டான் இளையவன்.

“ரெஜிமெண்ட் கமாண்டர் கர்னல் இவனேவ். பாக்கெட்?” என்று வெடுக்கெனக் கூறினார் கமாண்டர்.

மெரேஸ்யெவ் கைப்பெட்டியிலிருந்து பாக்கெட்டை துடியாக எடுத்துக் கர்னலிடம் நீட்டினான். அவர் பாத்திரங்கள் மீது விரைவாக கண்ணோட்டிவிட்டு வந்தவர்களைச் சட்டென ஏற இறங்கப் பார்த்தார்.

“நல்லது, சரியான சமயத்தில் வந்திருந்திருக்கிறீர்கள். ஆனால் ஏன் இவ்வளவு குறைவாக அனுப்பியிருக்கிறார்கள்?” என்றவர் எதையோ திடீரென நினைவுக் கூர்ந்து. “இருங்கள், மெரேஸ்யெவ் என்பவர் நீங்கள் தாமா? விமானப்படைத் தலைவர் உங்களைப் பற்றி எனக்குப் போன் செய்தார். அவர் சொன்னார், நீங்கள்…..” என்றுப் பேச்சைத் தொடர்ந்தார்.

“அது எவ்வித முக்கியத்துவமும் அற்றது, தோழர் கர்னல்” என்று ஓரளவு மரியாதைக் குறைவாக அவர் பேச்சை இடைமுறித்தான் மெரேஸ்யெவ். “படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா?”

கர்னல், சீனியர் லெப்டினன்டை அக்கறையுடன் பார்த்து ஆமோதிக்கும் பாவனையில் தலையசைத்துப் புன்னகை செய்தார்.

“சரிதான்!… முறையதிகாரி, இவர்களை அலுவலகத் தலைவரிடம் கூட்டிப் போங்கள். இவர்களின் சாப்பாட்டுக்கும் இராத்தங்கலுக்கும் வசதி செய்யும்படி என் பேரால் உத்தரவு கொடுங்கள். காப்டன் செஸ்லொவின் ஸ்குவாட்ரனில் இவர்களைச் சேர்ப்பதற்கு நியமன உத்தரவுப் பத்திரம் தயாரிக்கச் சொல்லுங்கள்” என்றார்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி

சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் பி.எஸ்.சி வேதியியல் பிரிவில் 3-ம் ஆண்டு படித்துவரும் மாணவர் முத்தமிழன். இவர் சேப்பாக்கம் அருகில் உள்ள விக்டோரியா விடுதியில் தங்கி படித்துவருகிறார். விடுதி நிர்வாகம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மிரட்டல் காரணமாக கடந்த 15/10/2019 அன்று தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.  உடன் தங்கியிருந்த மாணவர்கள் அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அம்மாணவர் உடல்நலம் தேறி வருகிறார்.

muthamizhan presidency college
முத்தமிழன்

ஒவ்வொரு ஆண்டும் விக்டோரியா மாணவர் விடுதியில் சேரும் மாணவர்களிடமும் பராமரிப்புச் செலவு என்ற பெயரில் ரூ.5000-மும், வைப்புத் தொகையாக ரூ.15,000-மும் பெறப்பட்டு வருகிறது.

விடுதியில் மாணவர்களுக்கு தண்ணீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. அதை நிர்வாகம் சரிசெய்யவில்லை. பராமரிப்புக்குப் பெறப்படும் ரூ.5000 ரூபாய்க்கு எவ்விதக் கணக்கையும் நிர்வாகம் கொடுப்பதில்லை. இந்நிலையில் கூடுதல் பராமரிப்புக் கட்டணமும் கேட்டிருக்கின்றனர்.

தமிழகத்தின் பல பகுதியில் இருந்து பிரெசிடென்சி கல்லூரிக்கு வந்து படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தில் இருந்துதான் வந்துள்ளனர். இந்தக் கூடுதல் கட்டணம் அவர்களது பெற்றோர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தக் கூடியது. அதனையொட்டி மாணவர்கள் அனைவரும் இரு நாட்களுக்கு முன்னர் உள்ளிருப்புப் போராட்டம் செய்துள்ளனர்.

இதில் பங்கெடுத்த மாணவர்களையெல்லாம் மிரட்டும் வகையில் இந்தப் போராட்டத்தில் உணர்வுப் பூர்வமாக கலந்து கொண்ட முத்தமிழன் என்ற மாணவரைத் தொடர்ந்து போனில் பேசி மிரட்டியிருக்கிறார், விடுதி துணைக் காப்பாளர். “போராட்டத்திற்கு நீ தான் காரணம். உன் மீது போலீசில் புகார் கொடுத்து உனக்கு டி.சி கொடுத்து அனுப்பிவிடுவோம்” என்று மிரட்டியிருக்கின்றனர்.

படிக்க :
♦ பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !
♦ சாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா ?

கல்லூரிக்கும், வேதியியல் துறைக்கும் அவப்பெயர் ஏற்படுத்திவிட்டதாகக் கூறி மிரட்டியதோட, பிற மாணவர்களை போனில் கூப்பிட்டு, “முத்தமிழன் ரேகிங் செய்தான், போராட்டத்தில் ஈடுபடத் தூண்டினான் என்று எழுதிக் கொடு” என மிரட்டியுள்ளது நிர்வாகம்.

விடுதிக் காப்பாளரான கல்லூரி முதல்வரின் பேச்சைக் கேட்டு கல்லூரி ஆசிரியர்களும், “நீ எப்படி மதிப்பெண் வாங்குவாய்? எப்படி இண்டர்னல் மார்க் வாங்கிவிடுவாய் எனப் பார்த்துக் கொள்கிறேன்” என மிரட்டியுள்ளனர். மேலும், “நீயெல்லாம் ஏன் இருக்கிறாய் ?” என்றும் கேட்டுள்ளனர் ஆசிரியர்கள்.

இதனால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான முத்தமிழன் விடுதியில் கடிதம் எழுதிவைத்து விட்டு விசம் குடித்திருக்கிறார். தனது கடிதத்தில் ” நீ ஏன் இருக்கிறாய் என்று கேட்கிறார்கள் நண்பர்களே ! நான் ஏதோ கொலை செய்துவிட்டது போல ? இனிமேல் அவர்கள் ஒவ்வொருவரையும் அச்சுறுத்தி இது போல் செய்வார்கள். இந்த நிர்வாகத்திற்கு நமது கோரிக்கை மீது எந்த அக்கறையும் இல்லை. நம்மை கொல்வதில்தான் அவர்களுக்கு அக்கறை !” என்று குறிப்பிட்டுள்ளார்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

மேலும் “நம் பெற்றோர்கள் இனி விடுதி கட்டணம் தர பிச்சையெடுக்கும் நிலைக்கும் தள்ளப்படலாம். வேண்டுமென்றால் நாமும் படிப்பை விட்டுவிட்டு விடுதி கட்டணம் செலுத்த அவர்களுடன் சேர்ந்தே பிச்சையெடுப்போம்!” என்று கூறியிருக்கிறார்.

இந்த வரிகளில் அந்த மாணவரின் வலி தெரிகிறது. இது முத்தமிழனின் மனவலி மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மாணவர்களின் மனக்குமுறல். சரியான நேரத்தில் சக மாணவர்கள் பார்த்து மருத்துவமனையில் சேர்த்ததால் முத்தமிழனின் உயிர் காப்பாற்றப்பட்டது.

கல்லூரி மற்றும் விடுதி நிர்வாகத்தின் நேர்மையற்ற சந்தேகத்திற்கிடமான அதிகாரப் போக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பதம் பார்க்கப் போகிறதோ !

தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
எழுத்து : வினவு செய்திப் பிரிவு

துருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘

வடக்கு சிரியாவில் அமைதி வசந்தம் (operation peace spring) என்ற தனது நடவடிக்கையை துருக்கியப் படைகள் தொடங்கியதையடுத்து, சிரியாவின் ராஸ் அல்-ஐன் நகரத்தில், துருக்கிய இராணுவ ஆளில்லா வானூர்திகள் அந்தப் பகுதியை நிழற்படம் எடுக்காமல் தடுக்க, அங்கு டயர்கள் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனில் புதனன்று, “ஆபரேஷன் பீஸ் ஸ்பிரிங்” என்ற பெயரில் வடகிழக்கு சிரியாவின் மீது தாக்குதல் தொடங்கப்போவதாக அறிவித்தார்.  ISIL குழுவும், துருக்கியால் சட்டவிரோதமாகக் கருதப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் தொடர்புடையதாக, சிரியா – சார்பு மக்கள் பாதுகாப்பு பிரிவுகளுமே இதன் இலக்கு என்று கூறினார்.

YPG தலைமையில் இருக்கும் சிரிய ஜனநாயக சக்திகளின் கருத்துப்படி, எஸ்.டி.எஃப். இராணுவ நிலைகள் மற்றும் டால் அபேட், ராஸ் அல்-ஐன், காம்ஷ்லி மற்றும் ஐசா-வில் உள்ள கிராமங்கள் மீது துருக்கிய ஜெட் விமானங்கள் குண்டுவீசத் தொடங்கிய பின்னர் நேர்ந்த பொதுமக்கள் இறப்புக்கள் பற்றிய ஆரம்ப நிலை அறிக்கைகள் வந்துள்ளன.

படிக்க:
சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும் : சீக்கிய அமைப்புகள்

சிரியாவின் வடகிழக்கு பகுதியை ஒட்டியுள்ள எல்லைகளை 32 கிமீ மீட்டர் வரை நீட்டிப்பதன் மூலம்,  ஒரு பாதுகாப்பான வளையத்தை உருவாக்க துருக்கி அதிபர் விரும்புகிறார்.

சிரிய – குர்திஸ் போராளிகளை இலக்கு வைத்து, 2016-ல் யூப்ரடிஸ் ஷீல்டு நடவடிக்கையையும் பின்பு 2018-ல் தொடங்கப்பட்ட ஆலிவ் கிளை நடவடிக்கையையும் தொடர்ந்து, கடந்த  மூன்று ஆண்டுகளில் துருக்கி நடத்தும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

சிரியாவிற்குள் துருக்கி நடவடிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில், தென்கிழக்கு துருக்கியின், சான்லியூர்ஃபா மாகாணத்திலுள்ள, அக்காக்கலே நகரத்தின் ஊடாக துருக்கியப் படைகளின் வாகனங்கள் வருவதால் உள்ளூர்வாசிகள் ஆரவாரம் செய்கிறார்கள்.

துருக்கிய துருப்புக்கள் வடக்கு சிரியாவில் தனது பீஸ் ஸ்பிரிங் நடவடிக்கையை தொடர்ந்ததையடுத்து, துருக்கிய இராணுவம் பீரங்கி குண்டுகளை வீசுகின்றது.

வடகிழக்கு சிரியாவில் துருக்கிய துருப்புக்களால் நீண்டகாலமாக அச்சுறுத்தப்பட்டு வந்த தனது இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து ராஸ் அல்-ஐன் நகரத்திலிருந்து புகை எழுகிறது.

குர்திஷ் தலைமையிலான படைகளை எல்லைப் பகுதியிலிருந்து அகற்றி, சிரிய அகதிகளை அங்கு மீள் குடியமர்த்த ஒரு ‘பாதுகாப்பான மண்டலத்தை’ உருவாக்க துருக்கி இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

டமாஸ்கஸின் எல்லை தாண்டிய நடவடிக்கை குறித்து தெரிவிக்க இஸ்தான்புல்லில் உள்ள சிரியாவின் தூதரகத்திற்கு ஒரு இராஜதந்திர குறிப்பை துருக்கி அரசாங்கம் அனுப்பியது.

துருக்கிய இராணுவ வாகனங்கள் சன்லியுர்பா மாகாணத்திலுள்ள, அக்காக்கலே அருகே சிரிய எல்லையை நோக்கி செல்கின்றன.

இராணுவ நடவடிக்கையை தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு, ஒரு துருக்கிய இராணுவ வாகனம் சிரியாவின் எல்லையை நோக்கி செல்கிறது.

துருக்கியின் திட்டமிட்ட நடவடிக்கைக்கு முன்னதாக வடக்கு சிரியாவில் உள்ள துருக்கியின் கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் நட்பு நாடுகள், தங்கள் படைகளை மன்பீஜ்ஜுக்கு அனுப்ப முன் வரிசையில் தயாராகின்றன.


தமிழாக்கம் :  மூர்த்தி
நன்றி : aljazeera

ஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு ! | பொருளாதாரம் கற்போம் – 39

0
1-Benjamin-Franklin-Poor-Richard-Almanac

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 39

பொருளியலாளர் பிராங்க்ளின் – பாகம் 2

அ.அனிக்கின்

பிராங்க்ளின் தன்னுடைய நூல்கள் பலவற்றிலும் “பொருளாதார உபரியை, ஈட்டப்பெறாத வருமானத்தை -அடிப்படையில் உபரி மதிப்பை- பல்வேறு கோணங்களிலிருந்து அணுகினார். அவர் மனிதாபிமானி, பகுத்தறிவுவாதி என்பதால் பலர் வியர்வை சிந்திப் பாடுபடுகின்ற உழைப்பின் பலன்களைச் சிலர் சோம்பேறித்தனமாக வீணாக்குவதென்றால் அந்த சமூக அமைப்பு எவ்வளவு “முட்டாள் தனமானது” என்பதை உணர்ந்தார். சோர்வில்லாத உழைப்பாளியான பிராங்க்ளின் இதை மனிதகுல நீதியை அவமதிப்பதாகக் கருதினார். அவர் பின்வருமாறு எழுதினார்:

”இவ்வளவு அதிகமான அளவில் ஏழ்மையும் துன்பமும் ஏற்படக் காரணமென்ன? வாழ்க்கைக்கு அவசியமான பொருள்களையோ அல்லது வசதிப் பொருள்களையோ உற்பத்தி செய்யாத வேலைகளில் (1) ஆண்களும் பெண்களும் ஈடுபடுத்தப்படுவது தான் இதற்குக் காரணம்; அவர்களும், ஒரு வேலையும் செய்யாமல் இருப்பவர்களும் சேர்ந்து அதிகமாக உழைப்பவர்கள் உற்பத்தி செய்த அவசியப் பொருள்களைச் சாப்பிட்டு விடுகிறார்கள்… ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் ஏதாவதொரு பயனுள்ள உழைப்பில் ஈடுபட்டால் அந்த உழைப்பு வாழ்க்கைக்குத் தேவையான அவசியப் பொருள்களையும் வசதிப் பொருள்களையும் உற்பத்தி செய்வதற்குப் போதுமானது; ஏழ்மை, துன்பம் ஆகியவற்றை உலகத்திலிருந்தே விரட்டி விடலாம்; இருபத்து நான்கு மணி நேரத்தில் எஞ்சியிருக்கும் காலம் ஓய்வும் மகிழ்ச்சியுமாக இருக்கும் என்று ஒரு புள்ளியியலாளர் கணக்கிட்டிருக்கிறார்”. (2) 

இந்தப் பொற்காலத்தை எப்படி ஏற்படுத்துவதென்பது பிராங்க்ளினுக்குத் தெரிந்திருக்கவில்லை. அது இயற்கையே. அவருடைய உன்னதமான கருத்துக்கள் ஒரு பக்கத்தில் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்துள்ள கற்பனை உலகங்களை நினைவுபடுத்துகின்றன; மறுபக்கத்தில் பிறரைச் சுரண்டி வாழ்வதையும் பயனில்லாத உழைப்பையும் பற்றி ஆடம் ஸ்மித்தும் அவரைப் பின்பற்றியவர்களும் செய்த நிதானமான விமரிசனத்தை நினைவு படுத்துகின்றன.

slavery in america political economyபிராங்க்ளினுக்கு ஏற்பட்ட ஆத்திரம் நிச்சயமாக முதலாளிகளைக் குறியாகக் கொண்டிருக்கவில்லை. அவர் முதலாளித்துவ உறவுகளின் முழுவளர்ச்சி இன்னும் ஏற்படாத அந்தக் காலத்தின் குழந்தை. அவர் சுரண்டல்காரர்களையும் பிறரை அடித்துப் பிழைப்பவர்களையும் தாக்கி எழுதினாலும் மூலதனத்தின் மீது கிடைக்கின்ற வட்டியை மிகவும் நியாயமான வருமானமாக, சிக்கனத்துக்குத் தரப்படுகின்ற வெகுமதியாகக் கருதினார். அவர் நிலவாரத்தையும் அதே மாதிரியாகவே கருதினார். நிலத்திலிருந்து கிடைக்கும் வாரத்துக்கும் மூலதனத்திலிருந்து வரும் வட்டிக்கும் இடையே அளவுரீதியான இடை இணைப்பை நிறுவுவதற்கு முயற்சித்தார். ”நியாயமான” வட்டி விகிதம் ஒன்று இருப்பதாக அவர் அனுமானித்துக் கொண்டார். இந்த நியாயமான அல்லது “இயற்கையான” வட்டி விகிதம் வருடத்துக்கு 4 சதவிகிதம் என்று அவர் மதிப்பிட்டார். இந்த வட்டி விகிதம் கடன் வாங்கியவர்கள், கடன் கொடுத்தவர்கள் ஆகியோருடைய நலன்களுக்கிடையே சமரசத்தை ஏற்படுத்தி வர்க்க அமைதியை ஊக்குவிப்பதாக அவர் கருதினார்.

படிக்க:
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை
♦ உழைக்கும்போதே இந்த உசுரு போகணும் | ஒரு உழைப்பாளி காதல் ஜோடி !

முதலாளி தொழிலாளியின் உழைப்பை விலைக்கு வாங்கும் பொழுது அவனைச் சுரண்டுவதாக பிராங்க்ளின் நிச்சயமாகக் கருதவில்லை. அவர்களுக்கிடையே உள்ள சமூக முரண்பாட்டை அவர் உணரவில்லை; ஏனென்றால் அவர் எதிர்காலத் தொழிலாளியை தந்தைவழிச் சமூகத்தின் விவசாயத் தொழிலாளியாக அல்லது பயிற்சியாளராக மட்டுமே பார்த்தார், அந்தத் தொழிலாளிக்குப் பக்கத்திலேயே அந்தப் பண்ணை அல்லது பட்டறையின் உடைமையாளரும் வியர்வை சிந்திப் பாடுபடுவது போலவும் கற்பனை செய்தார்.

அவருடைய வாழ்நாளில் “மின்னலை அடக்கியவர்”, புரட்சி செய்த குடியேற்றங்களின் பிரதிநிதி என்ற வகையில் மட்டும் பிராங்க்ளின் உலகப் புகழ் அடையவில்லை; ஏழை ரிச்சர்டின் பஞ்சாங்கம் என்ற வெளியீட்டின் ஆசிரியராகவும் அவர் அதிகமான புகழைப் பெற்றிருந்தார். 1733-ம் வருடம் முதல் 1757 வரை அவர் ஃபிலடெல்ஃபியாவில் ரிச்சர்டு ஸான்டர்ஸ் என்ற புனை பெயரில் வருடப் பஞ்சாங்கத்தை வெளியிட்டு வந்தார். அதில் வானஇயல் மற்றும் இதர தேவையான விவரங்களோடு பல விதமான மூதுரைகளும் குட்டிக்கதைகளும் இருந்தன. இவற்றில் பல வற்றை பிராங்க்ளினே எழுதியிருந்தார், மற்றவைகளை நாட்டுப் பாடல்கள், இன்னும் மற்றவைகளிலிருந்தும் எடுத்துப் பயன்படுத்தியிருந்தார்.

1757-ம் வருடத்தில் வெளிவந்த பஞ்சாங்கத்தின் கடைசிப் பதிப்பில் அவர் ஒரு முன்னுரை எழுதியிருந்தார். அதில் சுருக்கமான வடிவத்தில் “ஏழை ரிச்சர்டின்” மூதுரைகள் இடம் பெற்றிருந்தன. செல்வத்தை அடைவது எப்படி என்பதைப் பற்றி தந்தை ஆபிரகாமின் சொற்பொழிவு என்ற தலைப்புக் கொண்ட இந்தச் சிறு நூல் இலக்கியத்தில் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை முடிவு செய்வது கடினமே. இந்த நூல் 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் அதிகமாக விரும்பிப் படிக்கப்பட்டது ; ருஷ்ய மொழி உள்பட பல அந்நிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.

Benjamin-Franklin-Poor-Richard-Almanac“ஏழை ரிச்சர்டின்” மூதுரைகள் என்பவை வாழ்க்கையில் முன்னேற விரும்புகின்ற ஒரு ஏழையின் செறிவு மிக்க அறிவுத் திரட்டாகும். உழைப்பு, சிக்கனம், விவேகம் வளத்தையும் வெற்றியையும் ஏற்படுத்துகின்ற மூன்று பெரும் உறுதிகள் இவை. “தன்னைக் காத்துக் கொள்பவர்களைக் கடவுள் காத்தருள்வார்”, “கைகளில் உறை மாட்டிக் கொண்ட பூனையால் எலியைப் பிடிக்க முடியாது”,(3)  “பணம் சேர்க்க வேண்டுமென்றால் சம்பாதிப்பதைப் போலவே சிக்கனத்தையும் பின்பற்று”, ”சிறு துளி பெரு வெள்ளம்”.

இங்கே சில உதாரணங்களை மட்டுமே கொடுத்திருக்கிறோம். இதைக் காட்டிலும் அசாதாரணமான வடிவத்தில் ஒரு பொருளாதாரப் புத்தகத்தைப் பார்ப்பது கடினம். ஆனால் இது உண்மையில் ஒரு பொருளாதாரக் கட்டுரையே. முதலாளிகள் ஒரு வர்க்கம் என்ற அடிப்படையில் உருப்பெற ஆரம்பித்த யுகத்தின் அரசியல் பொருளாதாரத்தின் எளிமையான மூதுரைகள் நாட்டுக் கதை, அன்றாட அனுபவச் செல்வம் ஆகியவற்றோடு கலந்து வழங்கப்படுகின்றன. இத்தகைய மூதுரைகளைப் பற்றி மார்க்ஸ் பின் வருமாறு எழுதினார்: “திரட்டு! திரட்டு! இங்கே நாம் மோசஸையும் தீர்க்க தரிசிகளையும் காண்கிறோம். ”சேமிப்பு திரட்டுகின்ற பொருளை உழைப்பு படைக்கின்றது” எனவே சேமிப்புச் செய், சேமிப்புச் செய், அதாவது உபரிப் பொருள் அல்லது உபரி மதிப்பில் சாத்தியமான அளவுக்கு அதிகப் பகுதியை மீண்டும் மூலதனமாக மாற்று!” (4)

பிராங்க்ளின் மூலதனத் திரட்டலின் முக்கியத்துவத்தைப் பற்றி ஓரளவுக்குக் கறாரான வடிவத்தில் தம்முடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையின் பிற்காலத்தைச் சேர்ந்த கட்டுரைகளில் அவர் அநேகமாக அவருடைய உள்ளார்ந்த பரிசுத்த வாதத்தை விட்டு விலகி மூலதனத் திரட்டலின் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது வளமான வசதிப் பொருள்களும் தார்மிக அடிப்படையில் நியாயமானவையே என்று எழுதினார்.

படிக்க:
குழந்தைகளுக்கு சுமை தெரியாமல் கணிதம் கற்றுத்தர இயலுமா ?
♦ அறிவியலின் கதியும் அறிவியலாளனின் நிலையும்

ஏனென்றால், வளமான வசதிப் பொருள்களை அடைய வேண்டும் என்ற ஆசையும் – நம்பிக்கையும் உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் மாபெரும் தூண்டு தலாகப் பயன்படும் என்பது அவருடைய கருத்து. வளமான வசதிப் பொருள்களின் “பயனைப் பற்றி” பிராங்க்ளின் தெரிவித்துள்ள கருத்துக்களில் சில மான்டெவிலை நினைவு படுத்துகின்றன. – பிராங்க்ளின் தன்னுடைய வாழ் நாள் முழுவதும் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றியே சிந்தித்தார். அவர் யதார்த்தவாதியாகவும் பயனீட்டுவாதத்தில் நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தபடியால் அந்தப் பிரச்சினைகளை ஸ்தூலமான நிலைக்குத் தகுந்தாற் போலவும், அந்தக் குறிப்பிட்ட சமயத்தின் அரசியல் தேவைகளை ஒட்டியும் கூட வெவ்வேறு வழிகளில் அடிக்கடி தீர்த்துக் கொண்டார், அவருக்கு அடிப்படையாக இருந்த முதலாளித்துவ ஜனநாயகக் கோட்பாடுகள் மட்டுமே மாறாதபடி இருந்தன.

1760-ம் வருடத்தில் அவர் வெளியிட்ட பிரசுரத்தில், அமெரிக்கக் குடியேற்றங்களில் பட்டறைகளின் வளர்ச்சி அவசியமல்ல, அவை சமூக அடிப்படையில் ஆபத்தை உண்டாக்கக் கூடியவை என்றும் குறிப்பாக அவர் எழுதினார். விவசாயம் மட்டுமே உண்மையிலேயே மேன்மையான தொழில் என்றும் அமெரிக்காவில் அதன் வளர்ச்சிக்கு முடிவில்லாத வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றும் எழுதினார். அவர் ஐரோப்பாவிலிருந்த பொழுது தெரிந்து கொண்ட பிஸியோகிராட்டுகளின் கருத்துக்களின் தாக்கமே இதற்குக் காரணம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. இந்தக் கருத்து நியாயமானது அல்ல என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அதே சமயத்தில் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டிருப்பது போல இந்தப் பிரசுரத்தில் பிராங்க்ளின் தந்திரமாக எழுதியிருந்தார்; ஆங்கில அரசாங்கத்தின் அச்சங்களைப் போக்கி, பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து வெற்றி கொள்ளப்பட்டிருந்த கனடாவை அமெரிக்க மாநிலங்களோடு சேர்க்குமாறு ஊக்கப்படுத்துவது அவருடைய நோக்கமாகும்.(5)

Benjamin Franklinபிராங்க்ளினிடம் வாணிப ஊக்கக் கொள்கையினரின் கருத்துக்கள் சிறிதும் இல்லாதிருந்தன என்று சொல்ல முடியாது. இது தர்க்கரீதியாக இயற்கையானதே. அவருடைய மற்ற புத்தகங்களில், அமெரிக்காவில் தொழில் வளத்தைப் பெருக்க வேண்டியது அவசியமென்று – முன்பு தெரிவித்த கருத்துக்கும் இதற்குமுள்ள முரண்பாட்டைப் பற்றிக் கவலைப்படாமல் – வாதாடுகிறார்; அதற்குரிய வழிகள் என்று வாணிப ஊக்கக் கொள்கையினரின் மருந்துப் பட்டியலைத் தருகிறார். இறக்குமதி வரிகள், பொருளாதாரத்தில் அதிகமான பணம் இருக்க வேண்டும், அரசாங்கம் தீவிரமாக ஆதரவு கொடுக்க வேண்டும், புதிய குடியேற்றங்களை ஏற்படுத்துதல் முதலிய வழிகளைச் சிபாரிசு செய்கிறார்.

18, 19-ம் நூற்றாண்டுகளில் அவருடைய நாட்டினர் பலரிடத்தில் குறுகிய எண்ணமுடைய, பிராந்திய ரீதியான, தொலை நோக்கு இல்லாத வாணிப ஊக்கக் கொள்கை காணப்பட்டது. ஆனால் இதுவும் அப்படிப்பட்ட கொள்கை என்று கூற முடியாது. உலகச் சந்தையை ஆதாரமாகக் கொண்டு சிந்திக்கும் பொழுது சர்வதேச ரீதியில் உற்பத்தியின் தனித்துறை வளர்ச்சியும் சுதந்திரமான வர்த்தகமும் அமெரிக்காவில் தொழில்துறை வளர்ச்சியைத் தடை செய்யாது என்றும் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற எல்லா நாடுகளுக்குமே அது லாபகரமாகவும் இருக்கும் என்றும் அவர் அனுமானித்துக் கொண்டார்.

நாம் முன்னர் குறிப்பிட்ட அமெரிக்க எழுத்தாளர், இந்தக் கொள்கையிலிருந்த தனி வகையான அமெரிக்கத் தன்மையைச் சுட்டிக்காட்டிய பிறகு, இதற்கு “சுதந்திர வர்த்தக வாணிப ஊக்கக் கொள்கை என்று புதிரான வகையில் பெயர் சூட்டுகிறார்.” (6) எனினும், அமெரிக்கக் குடியேற்றங்களின் தொழில்துறை வளர்ச்சியைப் பற்றி பிராங்க்ளின் அளவுக்கு ஹியூமும் ஸ்மித்தும் அக்கறை எடுத்துக் கொண்டவர்களல்ல என்ற போதிலும், அவர்களுடைய கருத்துக்கள் பிராங்க்ளினுடைய கருத்துக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தன என்பதைக் கூறுவது அவசியம். சுதந்திரமான வர்த்தகத்தை ஆதரிக்கின்ற பொழுது அவர்கள் அந்தப் பொருளை வறட்டுத்தனமாக அணுகவில்லை, பொது அறிவின்பாற்பட்டே அதைப் பற்றிச் சிந்தித்தார்கள்.

படிக்க:
முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !
♦ நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்

இந்தத் தனி வகையான பொது அறிவு ஆடம் ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தில் அதிகமாகக் காணப்படுகிறது; மற்றவற்றைக் காட்டிலும் இதுதான் பிராங்க்ளினை அந்த மாபெரும் ஸ்காட்லாந்துக்காரரோடு இணைக்கிறது. பிராங்க்ளின் ஸ்மித்தைக் காட்டிலும் பதினேழு வருடங்கள் மூத்தவர்; அவர்களுடைய தனிப்பட்ட தொடர்புகளில் அவர் ஸ்மித்திடம் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். 1773-75-ம் வருடங்களில் லண்டனில் ஸ்மித் தன்னுடைய புத்தகத்தை எழுதி முடித்துக் கொண்டிருந்த பொழுது பிராங்க்ளின் அதைப் பரிசீலனை செய்து திருத்தங்கள் சொல்லி உதவியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

அவர்கள் இருவரும் மரணமடைந்த பிறகு (இருவருமே 1790-ம் வருடத்தில் மரண மடைந் தார்கள்) பிராங்க் ளினுடைய நண்பராக இருந்த மருத்துவரும் அரசியல்வாதியுமான ஜியார்ஜ் லோகான் பிராங்க்ளினிடமிருந்து தான் கேள்விப்பட்டதாகப் பின் வரும் செய்தியைத் தன்னுடைய உறவினர்களிடம் கூறியிருக்கிறார். அவர்கள் பிற்காலத்தில் எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் அதைப் பரப்பிவிட்டார்கள். “புகழ் மிக்கவரான ஆடம் ஸ்மித் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த பொழுது அதில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் அவரிடமும் (பிராங்க்ளின்-ஆ-ர்), டாக்டர் பிரைஸ், மற்ற கல்வி மிக்கோரிடமும் படித்துக் காட்டுகின்ற பழக்கத்தைக் கொண்டிருந்தார்; அவர்களுடைய அபிப்பிராயத்தைப் பொறுமையோடு கேட்டு அங்கே நடைபெறும் விமரிசனம், விவாதம் ஆகியவற்றால் பயனடைந்தார்; சில சமயங்களில் அத்தியாயங்களை மறுபடியும் திருத்தி எழுதுவதற்கும் தம்முடைய கருதுகோள்களில் சிலவற்றைத் தலைகீழாக மாற்றுவதற்கும் கூட அவர் சம்மதிப்பதுண்டு.”

மேலே தரப்பட்டிருக்கும் கூற்றில் எது உண்மை , எது கற்பனை என்று எடுத்துக் கூறுவது கடினமானதாகும். பிராங்க்ளின் சொன்னவற்றை லோகான் குடும்பத்தினர் திரித்துக் கூறியிருக்கலாம், அந்த நூலை முழுமையாக்குவதில் பிராங்க்ளின் வகித்த பாத்திரத்தை மிகைப்படுத்திச் சொல்லியிருக்கலாம். அவர்கள் இருவருக்குமிடையே அவ்வளவு நெருக்கமான உறவு நெடுங்காலமாக இருந்திருக்குமானால் அதைப் பற்றி இன்னும் அதிகமான ஆதாரங்கள் கிடைத்திருக்கும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)  வீடுகளில் வேலை பார்க்கின்ற எண்ணற்ற உதவியாளர்கள், வேலைக்காரர்கள் மற்றும் அதிகாரிகள், மதகுருக்கள் முதலியோரைக் குறிப்பிடுகிறார்.

(2)  Quoted from V. Parrington, Main Currents in American Thought, N.-Y., 1930, Vol. 1, part 2, p. 174.

(3) இங்கே மார்க்ஸ் ஆடம் ஸ்மித்திடமிருந்து மேற்கோள் காட்டுகிறார்; இந்தப் பிரச்சினையைப் பற்றி அவருடைய கருத்துக்கள் அதிகமான அளவுக்கு பிராங்க்ளினுடைய கருத்துக்களைப் போலவே இருக்கின்றன.

(4) K. Marx, Capital, Vol. 1, 1972, p. 558.

(5) P. Conner, Poor Richard’s Politics. Benjamen Franklin and His New American Order, London, 1965, p. 73.

(6) Ibid., p. 74.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !

2

85 ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் 23, 1931 அன்று, பகத் சிங் மற்றும் அவரது இரு தோழர்களான ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் லாகூரில் தூக்கிலிடப்பட்டனர். பகத்சிங் வீரமரணம் அடையும் போது, அவருக்கு வயது 23 மட்டுமே. வாழ வேண்டிய வாழ்க்கை எவ்வளவோ இருக்க, அவரது நலம் விரும்பிகளும் குடும்ப உறுப்பினர்களும் பிரிட்டன் அரசாங்கத்திடம் அவரை மன்னிப்பு கேட்கக் கோரினாலும் பகத்சிங் மறுத்துவிட்டார். தனது கடைசி விண்ணப்பத்திலும், சாட்சியத்திலும், காலனித்துவ அரசுக்கு எதிராக போரை நடத்தியதாக அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு பிரிட்டன் உண்மையாக இருக்க வேண்டும் என்றும், தன்னை தூக்கிலிடக்கூடாது; மாறாக, துப்பாக்கி முனையில் மூலமே தன்னுடைய மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார். பிரிட்டிஷ் அல்லது இந்திய “ஒட்டுண்ணிகளின்” சுரண்டலிலிருந்து உழைக்கும் மக்கள் விடுதலை பெற்ற ஒரு இந்தியாவுக்கான அவரது பார்வையை அவரது ஆவணம் முன்வைக்கிறது.

[இந்தி] தேசியவாத அறைகூவலை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகி கையிலெடுத்துள்ள நேரத்தில், பகத்சிங்கின் நாட்டுப்பற்றுமிக்க அணுகுமுறை மற்றும் பார்வையை ‘இந்துத்துவா’ கருத்தாக்கத்தின் தோற்றுவிப்பாளரும் சங்க பரிவாரின் முன்னணியாளருமான ’வீர்’சாவர்க்கருடன் ஒப்பிடுவது பயனுள்ளது.

தனது புரட்சிகர நடவடிக்கைக்காக, 1911-ம் ஆண்டில் அந்தமானிலுள்ள செல்லுலார் சிறைக்கு அனுப்பப்பட்ட சாவர்க்கர், தனது 50 ஆண்டு சிறைத் தண்டனையைத் தொடங்கிய சில மாதங்களுக்குள், தன்னை விடுதலை செய்யுமாறு முதல்முதலாக மன்னிப்புக் கடிதம் எழுதினார். அடுத்ததாக 1913-ம் ஆண்டில் மற்றும் 1921-ம் ஆண்டில் இந்திய சிறைக்கு மாற்றப்படும் முன்பாக, இறுதியாக 1924 -ம் ஆண்டில் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் பலமுறை மன்னிப்பு கடிதங்கள் எழுதினார். ”என்னை விட்டுவிடுங்கள். நான் விடுதலைப் போராட்டத்தை கைவிட்டு காலனித்துவ அரசாங்கத்திற்கு உண்மையாக இருப்பேன்” – இதை தான் அவரது மன்னிப்புக் கடிதங்கள் சுமந்தன.

சாவர்க்கரின் வாக்குறுதிகள் ஒரு தந்திரம் என்று அவரது ஆதரவாளார்கள் கூறுகின்றனர்; ஆனால், அவரது விமர்சகர்கள் அப்படி இல்லை என்கிறார்கள். அந்தமான் சிறையிலிருந்து விடுதலையான பிறகு பிரிட்டனுக்கு தான் அளித்த வாக்குறுதிகளுக்கு உண்மையாக சாவர்க்கர் நடந்து கொண்டார் என்றும் முஸ்லீம் லீக்கின் “இரு நாடுகள் கோட்பாட்டின்” இன்னொரு வடிவமான ’இந்துத்துவா” பிளவுவாத கோட்பாட்டின் மூலம் உண்மையில் பிரிட்டிஷுக்கு அவர் உதவி செய்தார் என்றும் கூறுகிறார்கள்.

இங்கே பகத்சிங்கின் கடைசி விண்ணப்பமும், வீ.டி.சாவர்க்கர் 1913 -ம் ஆண்டு எழுதிய விண்ணப்பமும் இங்கே பகிரப்படுகிறது.

பகத்சிங்கின் கடைசி விண்ணப்பம் :

லாகூர் சிறைச்சாலை, 1931

பெறுனர் : பஞ்சாப் ஆளுனர்

ஐயா, பின்வருவனவற்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்: 1930 அக்டோபர் 7 -ம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் எச்.இனால் பிரகடனப்படுத்தப்பட்டு, லாகூர் சதி வழக்கு சிறப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட எல்.சி.சி. தீர்ப்பாயம் (LCC Tribunal) என்ற பிரிட்டிஷ் நீதிமன்றத்தால் எங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்து மன்னன் எச்.எம். ஜார்ஜுக்கு எதிராக போர் தொடுத்ததுதான் எங்களுக்கெதிரான முதன்மையான குற்றச்சாட்டு.

நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பு இரண்டு முன் அனுமானங்களை வைக்கிறது :

முதலில் இந்திய தேசத்திற்கும் பிரிட்டனுக்கும் போர் நடக்கிறது என்பதையும் இரண்டாவதாக, நாங்கள் உண்மையில் அந்தப் போரில் பங்கேற்றோம், எனவே நாங்கள் போர்க் கைதிகள் என்றும் அது கூறுகிறது.

இரண்டாவது முன் அனுமானம் கொஞ்சம் புகழ்ச்சியாகத் தோன்றுகிறது. முதல் முன் அனுமானத்தை பொறுத்தவரை, நாங்கள் சில விவரங்களுக்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த சொற்றொடர் குறிப்பிடுவது போன்ற போர் எதுவும் இல்லை என்று தெரிகிறது.

ஆயினும் அதை சரியாக புரிந்து கொள்வதற்கு நாங்கள் மேற்கொண்டு விளக்க விரும்புகிறோம்.

விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்திய உழைக்கும் மக்களும் இயற்கை வளங்களும் சுரண்டப்படும் வரை எங்கள் யுத்தம் தொடரும்.

அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளியாகவும் இருக்கலாம். இந்திய முதலாளிகளின் கலப்பாகவும் இருக்கலாம் அல்லது இந்திய முதலாளிகளாகக் கூட இருக்கலாம். பிரிட்டிஷ் மற்றும் இந்திய கலப்பு இயந்திரத்தைக் கொண்டோ அல்லது கலப்பறற இந்திய இயந்திரத்தைக் கொண்டோ அவர்கள் தங்கள் நயவஞ்சகமான சுரண்டல்களை நடத்தி வரலாம்.

சலுகைகளாலும் சமரசங்களாலும் இந்திய சமுதாயத்தின் மேல்தட்டுத் தலைவர்களை வென்றெடுப்பதில் முயற்சி செய்து வெற்றியும் பெற்று, அதன் மூலம் புரட்சி அணிகளிடம் ஒரு தற்காலிக மனச்சோர்வை உங்களது அரசாங்கம் ஏற்படுத்தினாலும் பரவாயில்லை.

போரின் கடுமையினால், இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னனிப்படையான புரட்சிகர [சோசலிச] கட்சி காணாமல் போனாலும் பரவாயில்லை.

தலைவர்கள் எங்களுக்காக வெளிப்படுத்திய பரிவுக்கு தனிப்பட்ட முறையில் நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். ஆயினும் சோசலிச இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட ஏதுமற்ற ஏழை பெண் தொழிலாளிகளை, காலாவதியாகிப் போன தங்களது கற்பனாவாத அகிம்சை வழிபாட்டு முறைக்கு எதிராக இருப்பதாக கூறி, அவர்கள் குறித்து தங்களது சமாதான பேச்சுவார்த்தையில் குறிப்பிடக் கூட செய்யாமல் புறக்கணித்ததை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. தங்களையும், தங்களது கணவர்கள், தமையன்கள் மற்றும் நெருக்கமான அனைவரையும் தியாகம் செய்துள்ள அந்த கதாநாயகிகளை சட்டத்திற்கு புறம்பானவர்கள் என்று உங்களது அரசாங்கம் கூறியுள்ளது.

உங்களது தரகர்கள், அவர்களது கட்சியின் புகழை கெடுக்க எவ்வளவு தான் குனிந்து அவர்களுக்கு புலப்படாத பாத்திரங்கள் மீது அடிப்படையற்ற அவதூறுகளை  புனைந்தாலும்  பரவாயில்லை.  போர் தொடரும்.

இது வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கலாம். இப்போது நேரடியாகவோ மறைமுகமாகவோ, முற்றிலும் கிளர்ச்சியூட்டும்படியாகவோ அல்லது மரண போராட்டமாக கூட அது இப்போது ஆகலாம்.

இரத்தம் சிந்தும் போராட்டமோ அல்லது அமைதியான போராட்டமோ எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுங்கள். ஆனால் பொருளற்ற அற்பமான இந்த சித்தாந்தங்களை கருத்தில் கொள்ளாமல் போர் இடைவிடாமல் நடத்தப்படும்.

சோசலிச குடியரசு அமைக்கப்படும் வரை,புதிய வீரியத்துடனும் அதிக துணிவுடனும் தீர்மானகரமாகவும் இது நடத்தப்படும். தற்போதைய சமூக ஒழுங்கமைப்பானது புதிய ஒரு செழிப்பான சமூக ஒழுங்கமைப்பினால் மாற்றப்படும் வரையிலும், ஒவ்வொரு வகையான சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மனிதநேயம் உண்மையான மற்றும் நிரந்தர அமைதியின் சகாப்தத்திற்குள் நுழையும் வரையிலும் இந்த போர் தொடரும்.

மிக விரைவில் எதிர்காலத்தில் இறுதி போரானது நடத்தப்பட்டு இறுதி தீர்வு வரும்.

முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய சுரண்டலின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை. வரலாற்று நிகழ்ச்சி போக்குகளினாலும், நிலவும் சூழ்நிலைகளாலும் தவிர்க்க முடியாததன் விளைவே இந்த போர்.

திரு [ஜதின்]தாஸின் ஈடு இணையற்ற தியாகத்தாலும், தோழர் பகவதி சரணின் துன்பம் நிறைந்த உன்னதமான தியாகத்தாலும், எங்கள் அன்புக்குரிய சந்திரசேகர் ஆசாத்தின் பெருமைமிக்க மரணத்தாலும் பிழையின்றி அணிசெய்யப்பட்ட தியாகச் சங்கிலியின் ஓர் இணைப்புக் கண்ணியே எங்களது எளிய தியாகங்கள்.

எங்களைக் கொல்வதென்று நீங்கள் முடிவு செய்து விட்டதால், அதனைக் கட்டாயம் நிறைவேற்றிவிடுவீர்கள். ஏனெனில் உங்கள் கையில் அதிகாரம் உள்ளது. அதிகாரமே உலகின் உயரிய நியாயத்தைக் கொடுக்கிறது. நீங்கள் எது செய்தாலும் அது நியாயம் தானே!! எங்கள் விசாரணையே, அதற்கு ஒரு சான்று.

மேலும் உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி நாங்கள் உங்கள் அரசிற்கு எதிராகப் போர் தொடுத்துள்ளோம், எனவே நாங்கள் போர்க்கைதிகள். ஆதலால் எங்களைப் போர் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற சுட்டுக் கொல்வது போல், எங்களையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதற்கு நீங்கள் இராணுவத் துறைக்கு ஆணையிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்கிறோம்.”

இப்படிக்கு,
பகத் சிங்.

(இந்த விண்ணப்பத்தை பகத் சிங் ஆராய்ச்சி குழு (shahidbhagatsingh.org) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது)

வீ.டி சாவர்க்கரின் விண்ணப்பம்:

செல்லுலார் சிறை, அந்தமான், 1913

பெறுனர்: இந்திய அரசின் உள்துறை உறுப்பினர்

உங்களின் முன் பின்வரும் விடயங்களை அளிக்க இறைஞ்சுகிறேன்:

(1) ஜூன் 1911 -ல் எனது தரப்பின் மற்ற கைதிகளுடன் தலைமை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு நான் ஆபத்தான “D” குற்றவாளி என்று வகைப்படுத்தப்பட்டேன்; மீதமுள்ளவர்கள் “டி” என வகைப்படுத்தப்படவில்லை. பின்னர் நான் 6 மாதங்கள் தனிமைச் சிறையில் இருக்க வேண்டியிருந்தது. ஆனால் மற்றவர்கள் இல்லை. அந்த நேரத்தில் என் கைகளில் இரத்தப்போக்கு இருந்தாலும் நான் சணல்திரிக்கும் வேலை, எண்ணெய் ஆலை போன்ற கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தபட்டேன். எல்லா நேரங்களிலும் எனது நடத்தை சிறப்பாக இருந்தபோதிலும், இந்த ஆறு மாதங்களின் முடிவில் என்னுடன் வந்த மற்றவர்கள் விடுவிக்கப்பட்டாலும் நான் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.

(2) சலுகைக்காக நான் விண்ணப்பித்த போது, நான் ஒரு சிறப்பு வகுப்பு கைதி என்று கூறப்பட்டதால் அதனை பெற முடியவில்லை. நல்ல உணவு கொடுக்குமாறு எங்களில் யாராவது கேட்டால் “நீங்கள் சாதாரண குற்றவாளிகள் மட்டுமே, மற்றவர்கள் சாப்பிடுவதை தான் நீங்களும் சாப்பிட வேண்டும்” என்று கூறப்பட்டது. எனவே ஐயா, தனிவகை இன்னல்களுக்காகவே என்னை சிறப்புக் கைதியாக வகைப்படுத்தப்படுத்தியிருப்பதைக் நீங்கள் காணமுடியும்.

(3) குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் வெளியே அனுப்பப்பட்டபோது என்னையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் நான் அவர்களது பிரச்சினைக்குரியவன் என்பதால் விடுவிக்கப்படவில்லை. ஆனால் என்னை விடுவிக்க ஆணை வந்த பிறகு வெளியில் இருந்த சில அரசியல் கைதிகளால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டதால் மீண்டும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டேன்.

(4) நான் இந்திய சிறைகளில் இருந்திருந்தால், இந்நேரத்தில் அதிக நன்மதிப்பை பெற்றிருப்பேன், அதிக கடிதங்களை அனுப்பியிருக்கலாம், வருகைகளையும் பெற்றிருக்கலாம். நான் ஒரு நாடு கடத்தப்பட்டவராக இருந்திருந்தால், இச்சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதுடன பிணையையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் இந்திய சிறைச்சாலை அல்லது காலனி ஒழுங்குமுறை அனுகூலங்களோ எதுவும் எனக்கு இல்லை; இரண்டின் இன்னல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.

(5) எனவே, தயைக் கூர்ந்து என்னை இந்திய சிறைகளுக்கு அனுப்பியோ அல்லது மற்றவர்களை போல நாடு கடத்தியோ இந்த கொடுமையான சூழ்நிலைக்கு முடிவு கட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் எந்தவிதமான முன்னுரிமைகளையும் கேட்கவில்லை. ஆனால் ஒரு அரசியல் கைதியாக உலகின் எந்தவொரு சுயாதீனமான நாடுகளின் நாகரிக நிர்வாகத்திலும் இதை எதிர்பார்க்க முடியும். மோசமான குற்றவாளிகளுக்கு மட்டுமே இந்த சலுகைகளும் உதவிகளும் கிடைக்குமா? என்னை இந்த சிறைச்சாலையில் நிரந்தரமாக அடைப்பது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை எனக்கு சாத்தியமற்றதாக்குகிறது. ஆயுள் தண்டனை குற்றவாளிகளின் நிலை வேறு. ஆனால், ஐயா, 50 ஆண்டுகள் சிறை தண்டனை வெறித்து பார்க்கிறது. என்னுடன் இருக்கும் பயங்கரமான குற்றவாளிகள் பெற்ற சலுகைகள் எனக்கு மறுக்கப்படும்போது நான் எப்படி தார்மீக பலத்தை பெற முடியும். தயை கூர்ந்து, (ஒன்று) என்னை இந்திய சிறைக்கு அனுப்புங்கள்.

அங்கே என்னால் (a) நன்மதிப்பை பெற முடியும். (b) அங்கு என்னைப் பார்ப்பதற்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மக்கள் வருவார்கள். ஒவ்வொருமுறையும் அருகிலுள்ளவர்களையும் நெருக்கமானவர்களையும் பார்ப்பது எத்தனை கொடுப்பினை என்பது கெடுவாய்ப்பாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும். (c) எல்லாவற்றிற்கும் மேலாக, சட்டபூர்வமானது இல்லையென்றாலும் 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை அடைவதற்கான உரிமை கிடைக்கும். (d) மேலும் அதிகபடியான கடிதங்கள் மற்றும் வேறு சிற்சில நன்மைகள் கிடைக்கும்.

(அல்லது) என்னை இந்தியாவுக்கு அனுப்ப முடியாவிட்டால், மற்ற குற்றவாளிகளைப் போலவே, என்னை விடுவித்து நம்பிக்கையுடன் வேறு எங்காவது அனுப்ப வேண்டும். எனக்கு பிணை வழங்கி எனது குடும்பத்தினரை இங்கே வரவழைக்க முடியும். அதன் பிறகு எனது சொந்த தவறுகளுக்கு மட்டுமே நான் பொறுப்பேற்க வேண்டும், மற்றவர்களுக்கு அல்ல. இதை நான் கேட்பது ஒரு பரிதாபமான நிலை – இது ஒவ்வொரு மனிதனுக்குமான அடிப்படை உரிமை! ஒருபுறம், சுறுசுறுப்பான சில 20 இளம் புரட்சிகர போராளிகள். மறுபுறம், காலனிய குற்ற விதிமுறைகள். இது விடுதலை உணர்வையும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உரிமையையும் கீழாக்குகிறது.

மாட்சிமை தாங்கிய தங்களுக்கு 1911-ம் ஆண்டு நான் எழுதிய கருணை மனுவை பரிசீலிக்கவும் இந்திய அரசாங்கத்திற்கு அதை அனுப்பவும் நினைவூட்ட அனுமதிக்க வேண்டும்?

இந்திய அரசியலின் சமீபத்திய போக்கும் அரசாங்கத்தின் இணக்கமான கொள்கையும் அரசியலமைப்பு விவாதத்தை மீண்டும் ஒரு முறை திறந்துவிட்டிருக்கின்றன.

1906-1907 -ம் ஆண்டில் இந்தியாவின் நம்பிக்கையற்ற சூழல் எங்களை கரடுமுரடான பாதைகளுக்கு தள்ளியது. ஆனால் இன்று இந்தியாவின் மீது அக்கறை கொண்ட மனிதாபிமான எந்த மனிதனும் கண்மூடித்தனமாக அதில் அடியெடுத்து வைக்க மாட்டான்.

ஆங்கில அரசாங்கம் கருணையுடன் என்னை விடுவித்தால், அரசியலமைப்பு முன்னேற்றத்திற்கு உறுதியாக பாடுபடுவதுடன் அரசாங்கத்திற்கும் நம்பகமாக நடந்து கொள்வேன்.

தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பதால் நாங்கள் சிறையில் இருக்கும் வரை நூற்றுக்கணக்கான இந்திய குடும்பங்களில் மகிழ்ச்சி என்பதே கிடையாது. ஆனால், நாங்கள் விடுதலையடைந்தால் அவர்கள் மேலும் அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிப்பார்கள்.

படிக்க:
சாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா ?
கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !

அரசாங்கத்திற்கு உண்மையானவனாக நான் மாறியிருப்பதால் என்னை முன்பு வழிகாட்டியாக எண்ணி தவறான பாதைக்கு சென்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இளைஞர்கள் அனைவரும் மாறிவிடுவார்கள். என்னுடைய மாற்றம் சொந்த விருப்பத்தின் பேரில் இருப்பதால் அரசாங்கம் விரும்பும் எதையும் எதிர்காலத்திலும் கூட செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால், என்னை சிறையிலேயே வைத்திருந்தால் எந்த பயனும் இல்லை.

மாட்சிமை தாங்கியவர் மட்டுமே கருணையுள்ளவராக இருக்க முடியும். இந்த ஊதாரிக்கு வேறு என்ன போக்கிடம் இருக்கிறது?

மாட்சிமை தாங்கிய தாங்கள் இந்த விவரங்களை கணக்கில் எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

வி.டி சாவர்கர்.

(குறிப்பு: ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கம் பகத்சிங்கால் அல்ல, மவுலானா ஹசன் மோகானியால் உருவாக்கப்பட்டது.)


தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : தி வயர்