குழந்தைகள் கல்வியின் வரையறை எது???
நம் குழந்தைகளை அவர்கள் பெறும் மதிப்பெண்ணை வைத்து மதிப்பு தரும் பெற்றோராக நாம் இப்போது மாறினால் நம் குழந்தைகள் நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்தும் நாம் அவர்களுக்கு சேர்த்து வைக்கும் சொத்துக்காக மட்டுமே நம்மை மதிக்கும் நிலை நாளை உருவாகும்.
கல்வி என்பது என்ன?
கல்வி என்பது பல நல்ல பழக்க வழக்கங்களை ஒருங்கே கற்பது. அதை குழந்தையின் மூளை வேகமாக உள்வாங்கி கொள்ளும் என்பதால் கல்வியை தொடக்கம் முதலே ஆரம்பிக்கிறோம்.
சப்பான், சீனா முதலிய நாடுகளில் ஆறு வயது வரை கூட தாத்தா பாட்டியிடம் கதை கேட்கட்டும் என்று விட்டு விடுகிறார்கள். தாத்தா பாட்டியிடம் ஒழுக்கங்கள்/ பழக்க வழக்கங்கள் / கதைகள் கேட்டு வரட்டும் என்று காத்திருக்கிறார்கள் .
நாம் மூன்று வயது முடியுமுன்னமே முந்தி அடித்து பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறோம்.
அங்கு குழந்தை எதை கற்கிறது ?
அதுவரை தாய் தந்தை தாத்தா பாட்டி என்ற குக்கூனுக்குள் இருந்து வெளியே வந்து தொடக்க கல்வி என்ற ப்யூப்பா கட்டத்திற்கு செல்கிறது. அங்கே தன் போன்ற சகல குழந்தைகளுடனும் விளையாடுகிறது .அங்கு பணிபுரியும் ஆசிரியைகள் தான் அவர்களுக்கு அப்போதைய தேவதைகள். தேவதைகள் செய்யும் அனைத்தையும் தானும் செய்து பார்க்கின்றன.
மனிதன் ஒரு சமூக மிருகம் என்கிறோம். சமூகத்துடன் தன்னை ஒருமித்துக்கொள்ளும் வித்தையை பள்ளிக்கூடங்கள் தான் ஆரம்பித்து வைக்கின்றன .
விட்டுக்கொடுத்தல்; தட்டிக்கொடுத்தல்; புறம்பேசுதல்; காட்டிக்கொடுத்தல்,
போன்ற பல மனித உணர்வுகள் ஊற்றெடுப்பது சமூகத்துடன் கலந்தவுடன் மட்டுமே … இவையனைத்தும் பள்ளிகளில் ஒருங்கே நிகழும்.
பிறகு பள்ளிகள் இந்த குணங்களில் எது அதிகம் தேவையோ அதை ஃபைன் ட்யூனிங் செய்து அதிகமாக்கும். எது தேவையில்லையோ அதை கொஞ்சம் கண்டிப்புடன் குறைத்து வைக்கும். ஆக பள்ளிக்கூடங்கள் என்பது மனிதனை மனிதனாக்கும் கூடங்கள்.
அல்லது, மனிதனை சமுதாயத்துக்கு தேவையுள்ளவனாக மாற்றும் கூடங்கள். பள்ளிக்கூடம் விட்டு வெளிவரும் ஒவ்வொருவரும் சமுதாயத்துக்கான தனது பணியை உணர்ந்தவர்களாக வெளிவருவது அந்த பள்ளியின் நோக்கமாக இருக்கிறது.
சரி .. இதனூடே பனிரெண்டாம் வகுப்பு எனும் மலை முகட்டில் ஏறி சிறகு விரித்து பறக்கத் தேவையான ஆயத்தப்பணிகளும் நடக்கும். ஆம்… பனிரெண்டாம் வகுப்புக்கு பிறகு ஒரு மாணவ மாணவியின் எதிர்கால தொழில் முடிவாகுவதால் அது ஒரு மலை முகட்டோடு ஒப்பிடப்படுகிறது.
சிலர் தாங்களாக சிறகு விரித்து பறக்கிறார்கள்… சிலருக்கு பெற்றோர் பணமெனும் காகிதத்தால் செயற்கை சிறகு செய்து பறக்க விடுகிறார்கள் … பலருக்கு அதற்கான எந்த பாக்கியமும் இல்லாமல் சிறகின்றி மலை முகட்டிலேயே நின்று அத்தனையையும் வேடிக்கை பார்க்கிறார்கள்.
இப்படி பனிரெண்டாம் வகுப்பின் மீது இத்தனை ப்ரஷர் ஏற்றப்பட்டு
காணும் பிள்ளைகளின் தாய் தந்தையர் அனைவருமே தன் பிள்ளைகளை டாக்டராகவும் இஞ்சினியராகவும் கனவு காண்கிறார்கள். பத்து லட்சம் பேர் தேர்வு எழுதும் இடத்தில் ஐயாயிரம் சீட்டுகள் மட்டுமே மருத்துவராக இருக்கிறது. அதே அளவுதான் சிறந்த இஞ்சினியரிங் கல்லூரிகளில் பயில இருக்கிறது.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அடிப்படை திறன் இருக்கிறது. இருக்கும்.
ஆனால், அந்த திறனை வெளிக்கொண்டு வரும் பெற்றோரும் கல்வி நிலையமும் சமுதாய சூழ்நிலையும் அமையாதிருப்பதே, பல துறை சார்ந்த மேதைகள் நம் நாட்டில் உருவாகாமல் இருப்பதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.
ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் அவரது மகனின் திறமையில் நம்பிக்கை வைக்காமல் அவரை அடித்து துன்புறுத்தி படிக்க அனுப்பியிருந்தால் அவர் இன்று ஏதோ ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்பார்.
இருப்பினும் இந்த இடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக காரணமானது
அவரது தந்தை ஒரு இசையமைப்பாளர்; தாய் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை.
கீபோர்டு கையில் எடுத்த அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானாக முடியும் என்று நான் கூறவில்லை. ஆனாலும் நிச்சயம் பல ஏ.ஆர்.ரஹ்மான்கள் உருவாகாமல் இருப்பதற்கு நமது கல்வி அமைப்பே காரணமாகிறது என்று கூறுகிறேன்.
இப்போது கல்வி நிலையத்தில் தனித்திறமைகள் போற்றப்படுவது குறைந்து வருகிறது. தனித்திறமைகள் வைத்து சம்பாதிக்க முடியாது என்ற வாதம் தான் நம் அனைவரையும் அந்த மலை முகட்டை நோக்கி உந்தித்தள்ளுகிறது.
இன்றோ ஐந்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு / பதினோறாம் வகுப்பு / பனிரெண்டாம் வகுப்பு என்று பல சிகரங்கள் உருவாகி
குழந்தைகளின் வாழ்வை போர் மயமாக்கி வைத்துள்ளன.
இந்த சிகரங்களை யாரெல்லாம் கடக்க வேண்டும்? யாரெல்லாம் பின் தங்க வேண்டும் ? என்று சமூகம் முடிவு செய்கிறது.
சிலரை வாழை இலையில் உணவு உண்ண அழைக்கிறது. சிலரை எச்சில் இலையை பொறுக்க அழைக்கிறது. சிலரை வீடு கட்டவும் , சிலரை வீட்டின் கழிவறையை சுத்தம் செய்யவும் மட்டுமே தயார் செய்கிறது.
சிலரை தகுதி இல்லாவிடினும் மருத்துவராக்குகிறது. பலருக்கு தகுதி இருந்தும் மருத்துவக்கனவு காணக்கூடாது என்கிறது. இப்படியாக சமூகம் தான் பெற்றெடுத்த குழந்தைகளிடமே ஏற்றத்தாழ்வு கற்பிக்கிறது…
எல்.கே.ஜி. பயிலும் குழந்தைக்கு பரிட்சையின் போது காய்ச்சல் அடித்தாலும் லீவ் போடாமல் பரீட்சை எழுத வைக்கும் வேலையை பெற்றோர்கள் செய்கின்றனர். இது போன்ற பெற்றோர்களுக்கு நாளை தனிமைதான் பரிசாகக்கிடைக்கப் போகிறது என்பதை உணர்கிறார்கள் இல்லை.
இன்று காய்ச்சல் இருமலில் உழலும் உங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்பி அதை தனிமைபடுத்தும் ஒவ்வொரு பெற்றோருக்கும் நாளை முதியோர் இல்லமோ தனிமையான அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையோ காத்துக்கொண்டிருக்கிறது.
படிக்க:
♦ விமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா !
♦ எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !
உண்மையில், சமுதாயத்துக்கு நன்மையை கற்றுத்தர வேண்டிய கல்வி முறையாக மாறாமல் சமுதாயத்தை இன்னும் சுயநலமிக்கதாக தான் மாற்றிக்கொண்டிருக்கிறது.
இந்த ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் குலக்கல்வியின் இருபத்தி ஓராம் நூற்றாண்டு வெர்சன்களாகவே தெரிகின்றன. மேலும் பெண்கள் கல்வி கற்பதை தடுக்கும் ராஜாராம் மோகன் ராய் காலத்துக்கு முந்தைய சமுதாயத்துக்கு இழுத்துச் செல்லும் முயற்சியாகவே இருக்கிறது.
இந்த பாதைகளெல்லாம் எங்கு சென்று முடிகின்றனவோ .. அங்கு நம் குழந்தைகளின் குழந்தைத் தன்மைகளை சேட்டைகளை சுட்டிகளை குழிதோண்டி புதைக்கும் சுடுகாடு இருக்கிறது… ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமுதாய அடுக்கில் கீழே இருக்கும் மக்களை கல்வியை விட்டு இன்னும் தூரப்படுத்தும்.
எனவே, மத்திய-மாநில அரசுகளை உடனே இது குறித்து தாய்மை உள்ளம் கொண்டு ஆராய்ந்து இந்த பரீட்சைகளை கைவிடக் கோருகிறேன்.
நன்றி : ஃபேஸ்புக்கில் – Dr. ஃபரூக் அப்துல்லா














நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு, எழுதப்பட்ட புத்தகம் இது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பாபர் மசூதி குறித்து துல்லியமான தகவல்களுடன் எழுதப்பட்ட புத்தகம் இது. 1853-க்குப் பிறகுதான், பாபர் மசூதியை சொந்தம் கொண்டாடும் போக்கு ஆரம்பித்தது. அதற்கென ஒரு கதை உருவாக்கப்பட்டது என்பதுதான் இவரது புத்தகத்தின் வாதம்.

“வாழ்வாதாரம் தேடி நாலஞ்சு மாசத்துக்குக் கேரளாவுக்குப் போற பெத்தவங்க தம்புள்ளைகளையும் சேர்த்தே கூப்பிட்டுட்டுப் போயிட்றாங்க. அதனால அவுங்களுக்கு இங்கயே எதாவது ஒரு நிரந்தரமான வேல வேணும்; அதுக்காக ஒரு மினி தொழிற்சாலை (இந்த மலையில் பருவகாலத்திற்கேற்ப விளையும் பயிர்களை அடிப்படையாகக் கொண்டு) ஒன்ன உருவாக்கினா… அவுக இங்கேயே இருப்பாங்க… புள்ளைகளோட படிப்பும் கெடாது”னும்…. இல்லேனா… “கேரள அரசுக்கிட்ட பேசி, பெரிய பெரிய மிளகுத் தோட்டத்துக்கு மிளகு எடுக்க வர்றவங்க யாரும் 6-14 வயசு இருக்கிற குழந்தைகளைக் கூட்டிட்டு வரக்கூடாது; அப்படி வந்தா இங்க வேல கிடையாதுனு சொல்லச்சொல்லுங்க”னும் State Planing Commission, UNICEF, Child Rights Commission and Collectorate வரை கத்திட்டேன் 2015-லிருந்து. ஆனா இதுநாள் வரை அதுக்கான எந்த நடவடிக்கையும் யாருமே எடுக்கல. இந்த மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கபபடும் நிதி கொஞ்ச நஞ்சமல்ல… அதெல்லாம் இறுதியில் என்ன ஆகிறது என்று கூடத் தெரிவதில்லை.








அரசியல் பொருளாதாரத்தின் வரலாற்றிலேயே அதிக சுவாரசியமான புத்தகங்களில் ஒன்று நாடுகளின் செல்வம் என்பதில் சந்தேகமில்லை. வால்டர் பேஜ்காட் கூறியது போல, அது பொருளாதார ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல, “பழைய காலத்தைப் பற்றி மிகவும் வேடிக்கையாக எழுதப்பட்ட புத்தகமாகும்”. கெனேயின் சுவையற்ற பகுப்பாராய்ச்சிகளுக்கும் டியுர்கோவின் தேற்றங்களுக்கும் ஆழமான சூக்குமப்படுத்தலைக் கொண்டிருக்கும் ரிக்கார்டோவின் நுட்பம் நிறைந்த கோட்பாடுகளுக்கும் ஸ்மித்தின் நூலுக்கும் அதிக வேறுபாடு இருக்கிறது. அதில் விரிவான புலமையும் நுட்பமான காட்சிப் பதிவும் தற்சிந்தனையான
“இடைவிடாத முரண்பாட்டில் அதிகமான எளிமையோடு 

இவர்கள் மக்களைக் கொல்வதற்கு எவ்விதத் தயக்கமும் இல்லாதவர்கள் என்பது இவர்களது சித்தாந்த குருவான கோல்வால்கர், சாவர்க்கரின் நூல்களிலேயே காணக் கிடைக்கிறது. ரத யாத்திரை முதல் சமீபத்திய ஜே.என்.யூ. வன்முறை வரை சங்க பரிவாரத்தின் கொலைவெறியைப் பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
மிஷ்கினின் பெரும்பாலான படங்களின் கதைகள் சென்னையில்தான் நடக்கும். ஆனால் அதில் சென்னையின் உக்கிரமான வெயில் இருக்காது. மிஷ்கின் ஒவ்வொரு பார்வையாளருக்கும் கூலிங்கிளாஸ் மாட்டிவிட்டிருப்பார்; அவரும் மாட்டிக்கொள்வார். அவர் படங்களில் சென்னையின் நெரிசல் மிகுந்த, பரபரப்பான போக்குவரத்து இருக்காது. பெண்களைக் கடத்துவதற்கு வசதியாக, தெருக்கள் எல்லாம் காலியாக, இருபுறம் பச்சைநிற குப்பைத்தொட்டிகளுடன் காட்சியளிக்கும். அந்தப் பச்சைநிற குப்பைத்தொட்டிக்கான குறியீடு, ‘லாஜிக்கைத் தூக்கி குப்பையில் போடு’ என்பதே.
கமலாதாஸ், சில்வியா பிளாத் போன்ற இலக்கியப் பெயர்களைத் தூவிவிட்டால் புத்திசாலிப் பாவனை. போதாக்குறைக்கு சாரு நிவேதிதா, பவா செல்லத்துரை, ஷாஜி போன்றவர்களை சில உதிரிப்பாத்திரங்களில் நடிக்க வைத்துவிட்டால் இலக்கியப் பாவனை. சாதியச் சிக்கல்களையும் முரண்களையும் நேரடியாகப் பேசக்கூடிய படங்கள் வரும் காலத்தில், “சாதிவெறியில் கொலை செய்றவனும் சைக்கோதான்; மதவெறியில் கொலை செய்றவனும் சைக்கோதான்” என்று விஜயகாந்த் காலத்து வசனம் வைக்கிறார் மிஷ்கின். ஏனென்றால் அதை அவரால் சித்திரிக்க முடியாது.
மனிதர்கள் குனிந்தபடி நிலம் நோக்குவார்கள். கிறுக்குப்பிடித்தாற்போல் திடீரென்று குறுக்கும் நெடுக்குமாக ஓடுவார்கள். இறந்தது மகள்தான் என்று தெரியும். இருந்தும் அரைகிலோ மீட்டர் நடந்துபோய், தரையில் விழுந்துதான் ‘கடவுளே’ என்று கதறுவாளா தாய்? இதிலே என்ன இழவு புதுமை இருக்கிறது? ‘அஞ்சாதே’ படத்தில் ‘குருவி’ என்று ஒரு பாத்திரம் வரும். சற்றே உரத்த குரலில் சின்ன எரிச்சலுடன் எப்போதும் பேசிக்கொண்டிருக்கும். அது அந்தப் பாத்திரத்தைப் பொறுத்தவரை சரி.
தோரத், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பொருளாதாரப் பேராசிரியராகவும், ஜோஷி, மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் (University of Maryland) சமூகவியல் துறையில் அறிஞராகவும் பணிபுரிகின்றனர். சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் தீண்டாமையின் பரவலை ஆய்வு செய்வதற்காக தகவல்களை பல்வேறு பகுதிகளாக அவர்கள் பிரித்தனர். IHDS – II இன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 42,000 வீடுகளில் தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு (National Council of Applied Economic Research) மற்றும் மேரிலாந்து பல்கலைக்கழகமும் சேர்ந்து இந்த கணக்கெடுப்பை நடத்தின. ஆய்வின் சாராம்சமான விவரங்கள்;
30 விழுக்காட்டு கிராமப்புற குடும்பங்கள் தீண்டாமை பழக்கத்தை கடைப்பிடிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நகர்ப்புறங்களில் இது 20 விழுக்காடாக குறைந்துள்ளது. நகரங்கள் மக்களை ஓரிடத்தில் குவிப்பதுடன் அவர்களின் வாழ்நிலையை ஒன்று போலானதாக்குகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” போல பிரிவினைகள் போற்றும் பழைய பிற்போக்கு கலாச்சாரங்களை கைவிட்டு அந்த இடத்தில் அனைவரையும் உள்ளடக்கும் புதியதொரு கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள நகரச்சூழல் அவர்களை நெருக்குவதே இதற்கு முதன்மையான காரணமாக இந்த ஆய்வு கூறுகிறது.


நாங்கள் வெயிலுக்கு அவரிடம் கோலி சோடா வாங்கிக்கொண்டே உங்களைப் பார்த்தால் எங்களுக்குப் பொறாமையாக இருக்கிறது, எப்படி இந்த வயதில் உற்சாகமாக இருக்கிறீரகள் என்றோம்.

அத வெச்சு, விறகு அடுப்புலேருந்து ஸ்டவ்வு அடுப்புக்கு மாறுனேன். சில்வர் தட்டு, டம்ளர்னு வாங்கி போட்டு இன்னக்கி ஒரு ஆளா நிக்கிறேன். இப்ப வயசாகி கண்ணுல புரை விழுந்து கண்ணு மங்கிடுச்சு, பேத்திங்க பெரிய ஆளாயிடுச்சுங்க, இனிமே இட்லி நெருப்புல வேக முடியலன்னு இந்த தள்ளு வண்டியில ஒக்காந்துட்டேன். ஒடம்புக்கு முடியலன்னாலும் வீட்டுல ஒக்காரக் கூடாது. நீ செய், நான் செய்-னு சண்ட வரும், அதனால இப்படியே ஓடிக்கினே செத்துடனும். இதுவரைக்கும் எனக்கு பெருசா எந்த நோயும் வரல. முட்டி நோவு, கால் வலி அடிக்கடி வரும், நான் தைலம் தேச்சுப்பேன், முடியலன்னா ஒரு ஊசி போட்டு சரிபண்ணிக்குவேன். அதான் எனக்கு வைத்தியம். வெயில் மழைன்னா கொஞ்சம் ஓரமா ஒதுங்கிக்குவேன், வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழம லீவு எடுத்துக்குவேன், அன்னக்கி வெறுமனே இங்க உக்காந்துட்டு போவேன், அப்பதான் என் மனசு சந்தோசமாக இருக்கும் என்று நம்மிடம் குழந்தையாக சிரித்தார்.


