Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 293

அடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி !

0

ச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக அரவிந்த் பாப்டே வை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே (S.A. Bobde) எதிர்வரும் நவம்பர் 18, 2019 அன்று இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நவம்பர் 17, 2019 அன்று முடிவடைய உள்ளது . இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதிக்காக எஸ்.ஏ. பாப்டேவின் பெயரை பரிந்துரை செய்து கடந்த அக்டோபர் 18, 2019 அன்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினார் ரஞ்சன் கோகாய்.

நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே (S.A. Bobde)

இந்தியாவின் தலைமை நீதிபதி பதவி என்பது குடியரசு தலைவர் பதவியின் அளவிற்கு அதிகாரம் மிக்க பதவியாகும். தலைமை நீதிபதி மட்டுமல்ல உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்றாலே பெரும் அதிகாரம் கொண்ட பதவிதான்.

தற்போதைய தலைமை நீதிபதி மற்றும் இதற்கு முந்தைய தலைமை நீதிபதி ஆகியோரைப் போன்றே நமது நீதித்துறைக்கு ஏற்ற ஒருவர்தான்  அடுத்த தலைமை நீதிபதி என்பதை வாசகர்களுக்கு எடுத்துக் கூறுவது என்பது மட்டுமே இப்பதிவின் நோக்கம்.

ரஞ்சன் கோகாய்க்கு முன்னால் தலைமை நீதிபதியாக இருந்தவர் தீபக் மிஸ்ரா. குலோக்கல் மருத்துவக் கல்லூரி மோசடி வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தீபக் மிஸ்ரா, தன் மீதான குற்றச்சாட்டை தானே விசாரித்த நீதிபதி இவர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதியதியாகும் முன்னரே போலி ஆவணம் கொண்டு சொத்து வாங்கிய வழக்கு இவர் மீது இருந்தது குறிப்பிடத்தக்கது. அமித்ஷாவை நீதிமன்றத்திற்கு ஒழுங்கு மரியாதையாக வந்து ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதிபதி லோயா கொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க தொடுக்கப்பட்ட வழக்கில் அதனை குறிப்பான அமர்வுக்கு விசாரணைக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டார் தீபக் மிஸ்ரா.

படிக்க :
♦ பாஜக – மோடி – அமித்ஷா – நீதிபதி லோயா மர்ம மரணம் ?
♦ கண்டன தீர்மானம் விவாதிக்க மறுப்பு : தீபக் மிஸ்ராவைக் காப்பாற்றும் மோடி அரசு

இதுபோன்று நீதிமன்றத்தில் ‘முக்கியமான’ வழக்குகளை எல்லாம் குறிப்பான நீதிபதிகள் இருக்கும் அமர்வுக்கு மட்டும் ஒதுக்குவதாக இவர் மீது நீதிபதி செல்லமேஸ்வர் தலைமையிலான நான்கு நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினர்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 12 -ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “நீதிமன்றத்தின் மரபுகளை மீறி எந்த ஒரு நேர்மையான அடிப்படையும் இன்றி தமக்கு விருப்பமான நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதாக” தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் மேல் நான்கு மூத்த நீதிபதிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

தீபக் மிஸ்ரா மற்றும் எஸ்.ஏ. பாப்டேவுடன் ரஞ்சன் கோகாய்.

அந்த மூத்த நீதிபதிகளுள், நமது தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் ஒருவர். அச்சமயத்தில் நடுவீதிக்கு வந்து விட்ட நீதிமன்றத்தின் ‘மாட்சிமையை’க் காப்பாற்ற தீபக் மிஸ்ராவுக்கும் அந்த நான்கு நீதிபதிகளுக்கும் இடையில் சமரச நாயகனாக செயல்பட்டுள்ளார் வருங்கால தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே.

ஒரு தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகளே தகுந்த காரணங்களைக் கூறி குற்றச்சாட்டு வைக்கையில் அதை ஏற்றுக் கொள்ளவோ, எதிர்க்கவோ செய்யாமல் நடுநிலையாக இருந்துள்ளார். தீபக் மிஸ்ராவின் சார்பில் நால்வரைச் சந்தித்து சமரசம் பேசியுள்ளார். நீதிபதிகள் ‘நடு’நிலையாக இருக்க வேண்டும் என்பதை இப்படிப் புரிந்து கொண்டுவிட்டார் போலும்.

கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 64 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தீபக் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதனை துணைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தார். அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை நேரடியாக செல்லமேஷ்வர், கவுல் ஆகியோர் இருந்த அமர்வில் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என கபில் சிபல் கோரிக்கை மனு வைத்தார். அவர்கள் 08-05-2019 அன்று அவ்வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் 07-05-2019 அன்று மாலை திடீரென இம்மனுவிற்கு வழக்கு எண் அளிக்கப்பட்டு நீதிபதிகள் எஸ்.கே.சிக்ரி, .எஸ்.ஏ.பாப்டெ, என்.வி.ரமணா, அருண் மிஷ்ரா, ஏகே கோயல் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு ஒதுக்கப்பட்டது.

தன் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் ஒரு வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என ஒரு தலைமை நீதிபதி முடிவெடுக்கிறார். இதுவே நீதித்துறையின் யோக்கியதையைக் காட்டுகையில், அவர் காட்டிய அமர்வில் அடங்கியிருந்த நீதிபதிகளின் யோக்கியதையும் கூடுதலாக கைகாட்டி விட்டுச் செல்கிறது. அந்த நீதிபதிகளில் ஒருவர் வருங்கால தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே.

2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் பிற மூன்று நீதிபதிகளுடன் தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளை பத்திரிகையாளர் சந்திப்பில் அம்பலப்படுத்திய ரஞ்சன் கோகாய், அடுத்த தலைமை நீதிபதியாக தமது பெயர் பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் ஒருமுறை தீபக் மிஸ்ரா மீது மூத்த நீதிபதிகள் புகாரளிக்கச் செல்கையில் ‘உடல்நிலை சரியில்லை’ என்று கூறி ஜகா வாங்கிக் கொண்டார் கோகாய்.

அடுத்ததாக தலைமை நீதிபதி பதவியில் அமர்ந்தார் ரஞ்சன் கோகாய். ஆதார் வழக்கில், “ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்” என்ற கணக்கில் தீர்ப்பெழுதி மக்களின் அந்தரங்க உரிமைகளைப் பறிக்கும் ஆதார் திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டினார். இடையே சபரி மலையில் பெண்கள் நுழையலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்.

சரி, நீதிபதி ஐயா கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும் பெண் உரிமையை மதிக்கிறவர் என்று நினைத்தால், 2019-ம் ஆண்டு மே மாதத்தில் தன் மீது உடன் பணிபுரியும் பெண்ணால் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிக்க தாமே ஒரு அமர்வைக் கைகாட்டினார். அந்த அமர்விலும் நமது வருங்கால தலைமை நீதிபதி பாப்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நீதிபதிகள் அமர்வு எதிர்பார்த்ததைப் போலவே ரஞ்சன் கோகாய் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்தது.

முந்தைய – தற்போதைய – வருங்கால – தலைமை நீதிபதிகளுக்கு இடையிலான உறவு இப்படியிருக்க, எஸ்.ஏ. பாப்டே அவர்கள் விசாரித்துத் தீர்ப்பெழுதிய ஒரு வழக்கைப் பற்றியும் தற்போது விசாரித்து முடித்து தீர்ப்பெழுதக் காத்திருக்கும் ஒரு வழக்கு பற்றியும் மட்டும் சொல்லிவிட்டு இந்தப் பதிவை முடித்துக் கொள்வோம்.

சொரபுதீன் போலி மோதல் கொலை வழக்கில் அமித்ஷா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டு ஹர்ஷ் மந்தெர் என்ற சமூக செயற்பாட்டாளர் தொடுத்த வழக்கை விசாரித்த அமர்வில் எஸ்.ஏ. பாப்டே-வும் ஒருவர். அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன்பே, ”இந்தப் பிரச்சினையால் உண்மையாகவே பாதிக்கப்பட்டவராக இருந்தால் இந்த வழக்கு வேறு விதமாக கருதப்பட்டிருக்கும். ஆனால் வழக்கு தொடுப்பவர் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத சூழலில் வழக்கை திரும்ப விசாரிக்கக் கோருவது வேறு விவகாரம்” என்று கூறி அவ்வழக்கை நிராகரித்தது அந்த அமர்வு.

வழக்கில் பொதிந்துள்ள நியாயத்தின் அடிப்படையில் ஒரு வழக்கை நிராகரிக்கலாம். ஆனால், வழக்கைத் தொடுத்தவர் பாதிக்கப்பட்டவராக இருந்தால்தான் வழக்கை எடுப்பேன் என்றால் செத்துப் போன சொராபுதீனோ அல்லது செத்துப் போன அவரது மனைவியோதான் மேல்முறையீடு செய்ய வேண்டியது இருக்கும்.

படிக்க :
♦ இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !
♦ பிரஜாபதி போலி மோதல் கொலையில் முதன்மை சதிகாரர் அமித்ஷா – சிபிஐ அதிகாரி கோர்ட்டில் சாட்சி

சரி பழைய கதை எல்லாம் எதற்கு ? தற்போதைய தலைமை நீதிபதி தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னால் தீர்ப்பு வழங்கத் தயாராக உள்ள பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் அமர்விலும் நமது வருங்கால தலைமை நீதிபதி இடம்பெற்றுள்ளார். இந்த வழக்கிலும் இருதரப்பினரும் நீதிமன்றத்திற்கு வெளியே சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வலியுறுத்திக் கூறியவர் நமது பாப்டெ தான்.

தீபக் மிஸ்ரா விவகாரத்திலும் நீதியின் படி நின்று சரி தவறு பேசாமல் சமரசம் செய்யச் சென்ற நீதிபதி பாப்டே, பாபர் மசூதியை இந்துத்துவ வெறியர்கள் இடித்த விவகாரத்திலும் நீதியின் படி நில்லாமல் ‘நடு’நிலையாக ஒரு தீர்வை வலியுறுத்தியிருக்கிறார்.

இப்போது சொல்லுங்கள்! தனக்கு முந்தைய இரண்டு தலைமை நீதிபதிகளைப் போன்றே நமது நீதித்துறைக்கு ‘ஏற்ற’ தலைமை நீதிபதியாகத்தானே எஸ்.ஏ. பாப்டே பதவியேற்க உள்ளார் !


நந்தன்

நன்றி : தி பிரிண்ட்

நவீன வேதியியலின் கதை | பாகம் 01

நவீன வேதியியலின் கதை | பகுதி – 01

வேதியியல் வகுப்பில் மிகவும் அடிப்படையாகக் கருதப்படும் தனிம வரிசை அட்டவணையை யார் கண்டுபிடித்தார் தெரியுமா ? தனிம வரிசை அட்டவணை என்றால் என்ன என்று கேட்கிறீர்களா ? அதுதாங்க… பீரியாடிக் டேபிள் (Periodic Table)

அதனை அமைத்தவர் ரஷ்ய வேதியியலாளரான திமீத்ரி மெண்டெலீவ். இவர் தனிமங்களின் அணு எடை அடிப்படையிலான நவீன தனிம வரிசை அட்டவணையை (Periodic Table) 150 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைத்தார். அதையொட்டி 2019 -ம் ஆண்டை தனிமவரிசை அட்டவணையின் ஆண்டாக கடைப்பிடிப்பதாக ஐநா சபையும் யுனிசெப் நிறுவனமும் அறிவித்திருக்கின்றன.

தனிம வரிசை அட்டவணையின் வரலாறானது வேதியியலின் வரலாறாகவும் தவிர்க்க இயலாமல் இயற்கை விஞ்ஞானத்தின் (Natural Philosophy) வரலாறாகவும் அமைகின்றது. ஏனெனில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியலானது இன்று இருப்பது போல் இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று பல்வேறு தனித்துறைகளாக இல்லை.

நமது உலகம் எதனால் ஆக்கப்பட்டது என்ற கேள்விக்கு இயற்கை விஞ்ஞானிகள் நீர், நிலம், காற்று, நெருப்பு என்ற அடிப்படைத் துகள்களால் ஆனது என்று கூறி வந்தனர். இதுவே அரிஸ்டாட்டில் காலம் தொட்டு 1000 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த கோட்பாடாகும். பண்டைய இந்தியா மற்றும் கிரேக்க தத்துவவியலாளர்கள் அணு கோட்பாட்டை முன்வைத்திருந்தாலும் அவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை, பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

படிக்க:
அறிவியல் கட்டுரை : உலகில் மிக ஆபத்தான உயிரினம் !
அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி

இயற்கை விஞ்ஞானத்தில் இரசவாதம் (Alchemy) இன்றைய நவீன வேதியியலின் முன்னோடியாகும். எல்லா இயற்கை விஞ்ஞானங்கள் போலவே இரசவாதமும் இயற்கையை ஆய்ந்தறிவது, அதைப் பயன்படுத்திக் கொள்வது என்ற அடிப்படையில் இயங்கி வந்தது. பண்டைய காலத்தில் வெண்கலம் போன்ற உலோகக் கலவைகள் உருவாக்கப்பட்டது, தாவரங்கள், இதர பொருட்களை மருந்தாக பயன்படுத்தியது முதலாக இரசவாதம் தோன்றியது எனக் கூறலாம்.

இந்திய ரசவாத மரபு.

இந்திய துணைக்கண்டம் உள்ளிட்டு கிரேக்கம், ரோம், எகிப்து, சுமேரியா, சீனா, பாரசீகம் என உலகின் பண்டைய நாகரிகங்கள் அனைத்திலுமே இரசவாத மரபு இருந்தது. உதாரணமாக நமது தமிழகத்திலிருந்த சித்தர்களை ஒருவகையான இரசவாதிகள் (Alchemist) என்று குறிப்பிடலாம்.

இரசவாதம் என்பது மருத்துவம், வேதியியல், இயற்பியல் மட்டுமின்றி கலை, ஆரம்ப கால தத்துவம், ஆன்மீகம், ஒழுக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவர்களுடைய முக்கியமான குறிக்கோள்கள்: 1) இயற்கையை மேலும் அறிந்து இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவைச் புரிந்துகொள்வது, 2) அனைத்து நோய்களையும் குணப்படுத்தக் கூடிய மருந்து அதாவது சர்வரோக நிவாரணியைக் கண்டறிவது, 3) இறவாத் தன்மையை அடையும் மருந்து அதாவது அமிர்தத்தை கண்டறிவது, 4) எளிதில் கிடைக்கும் மலிவான உலோகங்களை அரிதான – மதிப்பு அதிகமான தங்கமாக மாற்றும் வேதிப்பொருளை (philosopher’s stone) கண்டறிவது.

மேற்கூறிய காரணங்களால் பண்டைய இரசவாதிகள் அவர்களுடைய காலத்திற்கேற்ற வரம்புக்குட்பட்ட அளவில் அறிவியலை பின்பற்றி – பயன்படுத்தி வந்தாலும் மறுபுறம் அவர்களுடைய செயல்பாடுகள் தெய்வீகம், மாந்திரீகம், ஆன்மீகம் போன்றவற்றை சார்ந்திருந்தது.

இரசவாதம் (இயற்கை விஞ்ஞானம்) நவீன அறிவியலின் வளர்ச்சிக்கு பங்களிப்புகளை செய்திருந்தாலும், அதன் கோட்பாடுகள்  நவீன அறிவியலை போல் சோதனைகளால் நிறுவப்படுவதற்கும் பல்துறைகளாக பிரிக்கப்படுவதற்குமான காலம் கனிந்திருக்கவில்லை.

ஜாபிர் இப்னு ஹையான் (Jabir ibn Hayyan)

மத்தியகால இஸ்லாமிய பொற்காலத்தைச் சேர்ந்த ஜாபிர் இப்னு ஹையான் (Jabir ibn Hayyan) என்ற பாரசீக இரசவாதி (Alchemist), நீர்மமாக்குதல்(dilution), தனிமங்களை பிரித்தெடுத்தல், வடிகட்டுதல் (distillation), படிகமாக்கல் (Crystallization) போன்ற வேதியலுக்கான செயல்முறைகளையும், அதன் அடிப்படை பரிசோதனை முறைகளையும் உருவாக்கினார். இதன் மூலம் இரசவாதம் நவீன அறிவியலின் பக்கம் தனது அடியை எடுத்து வைத்தது.

ஆங்கிலேய அறிவியலாளர் ராபர்ட் பாயில் (Robert Boyle) 1661-ம் ஆண்டு வெளியிட்ட ஸ்கெப்டிகல் கெமிஸ்ட் (The Sceptical Chymist) என்ற தனது நூலில் முதன் முதலாக  நான்கு அடிப்படை துகள்கள் கோட்பாட்டை நிராகரித்தார். அதில் முதன் முதலாக ’தனிமம்’ என்ற சொல்லை அடிப்படை துகளுக்குப் பயன்படுத்தினார். சில பொருட்கள் (Substances) மற்றவற்றுடன் சேர்ந்து சிதைகின்றன. அவ்வடிப்படை பொருட்களை வேதிவினைகளின் மூலம் மேலும் உடைக்கவோ பிரிக்கவோ இயலாது; அவற்றை தனிமங்கள் (elements) என அழைத்தார்.

ஜெர்மன் இரசவாதி ஹென்னிங் பிராண்ட் (hennig brandt) மதிப்பு குறைந்த உலோகத்தை தங்கமாக மாற்றும் பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தார். 1669-ம் ஆண்டில் மனித சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் அதில் ஏதேனும் கிடைக்கக்கூடும் என்று அதைக் கொண்டு ஆய்வு செய்து வந்தார். சிறுநீரை அது பசையாகும் (paste) அளவுக்கு குடுவையில் விட்டு சூடேற்றும்போது குடுவை வெளிர் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது.

அப்பொருள் அவர் எதிர்பார்த்த தங்கமாக மாற்றும் வேதிப்பொருள் (philosopher’s stone) அல்ல. மாறாக பாஸ்பரஸ் என்ற தனிமம். இக்கண்டுபிடிப்பை சிலகாலம் இரகசியமாக அவர் வைத்திருந்தார்.

சிறுநீரை தங்கமாக மாற்ற முயன்ற, ஹென்னிங் பிராண்ட் (hennig brandt).

இவ்வாறாக இரசவாதிகள் தற்செயலாக தனிமங்களை கண்டறிவதில் பங்களித்திருந்தாலும், 18-ம் நூற்றாண்டில் தான் நவீன வேதியியல் தன் முதலடியை எடுத்து வைத்தது. இவ்வுலகம் அதாவது பொருள் எதனால் ஆக்கப்பட்டது என்ற கேள்வியை தீர்ப்பதற்கான முதல் தடயம் நாம் கண்ணால் காணும் திட அல்லது நீர்மப் பொருட்களை ஆய்தறிந்ததிலிருந்து கிடைக்கவில்லை. மாறாக காற்றை பகுப்பாய்வு செய்ததிலிருந்து வந்தது. பண்டைய காலத்திலிருந்தே காற்றை பற்றி மக்கள் அறிந்திருந்தனர். ஆனால் ஒட்டுமொத்த காற்றென்பதே அடிப்படைத் துகளாக இருந்தது.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு இளம் மருத்துவ மாணவரான ஜோசப் பிளாக் 1754-ல் சிறுநீரக கற்களை குணப்படுத்துவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தார். சிறுநீரக கற்களின் மீது அமிலத்தை ஊற்றும் போது அதில் இருந்து ஒரு வகையான வாயு வெளியானது. ஆனால் அது காற்றின் பண்புகளைப் பெற்றிருக்கவில்லை. அதாவது அவ்வாயுவில் நெருப்பை கொண்டு சென்றபோது அது நெருப்பை அணைத்தது. இதை எரியும் தன்மை இல்லாத நிலையான வாயு என்று பெயரிட்டார்.

இதைத் தொடர்ந்து 1766 இல் ஹென்றி கேவன்டிஷ் ஹைட்ரஜன் வாயுவையும் 1772 இல் டேனியல் ரூதர்ஃபோர்டு நைட்ரஜன் வாயுவையும் கண்டறிந்தனர். இந்தக் கண்டுபிடிப்பை தொடர்ந்து காற்று என்பது அடிப்படைத் துகள் அல்ல அதனுள் பல்வேறு வகையான வாயுக்கள் இருக்கின்றன என்ற கருத்து உருவானது.

சமகாலத்தில் ஜோசப் பிரிஸ்ட்லி (Joseph Priestley) என்ற ஆங்கிலேய விஞ்ஞானி பொருட்களின் மீது அமிலத்தை ஊற்றி அதனுள் அடங்கி இருக்கும் காற்றை வெளியேறச் செய்து அதை குடுவையில் பிடித்துக்கொண்டார். அந்தக் குடுவைக்குள் எரியும் மெழுகுவர்த்தியையும் தாவரங்களையும் வைத்து தனது ஆய்வுகளை நடத்தி வந்தார்.

ஜோசப் பிரிஸ்ட்லி (Joseph Priestley)

தனது ஆய்வுகளின் ஊடாக பிரிஸ்ட்லி நிலையான வாயுவை அதாவது கார்பன்-டை-ஆக்சைடை நீரில் கரைக்கும் முறையை கண்டறிந்தார். உலகின் முதல் சோடா பிறந்தது.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட வாயுக்கள், அறிவியல் முன்னேற்றங்கள் உளவாளிகளின் மூலம் பிரான்சிற்கு செல்கிறது. பிரான்சில் புகழ்பெற்ற வேதியியலாளர் அன்டோன் லவாய்சியர் பொருட்களில் ஏற்படும் வேதிமாற்றங்கள் மற்றும் நிறைமாற்றங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். லவாய்சியரின் சிறப்பு அறிவியல் ஆய்வுகளில் துல்லிய அளவீடுகள், சோதனை முறைகள், தரவுகள் அனைத்தையும் முழுமையாக சேகரித்து ஆய்வு செய்யும் நேர்த்தியுமாகும்.

லவாய்சியரின் காதல் மனைவி மேரி ஆன்னி லவாய்சியர், அவரது அறிவியல் ஆய்வுகளில் உற்ற துணையாக இருந்துள்ளார். அவர் லவாய்சியரின் ஆய்வுகளை ஆவணப்படுத்தியதோடு ஆய்வு செய்முறைகளை ஓவியங்களாக தீட்டி வைத்தார்.

லவாய்சியர் பொருட்களிலிருந்து வெளிப்பட்ட அல்லது அவற்றால் உறிஞ்சப்பட்ட வாயுக்கள் குறித்த மற்ற அறிவியலாளர்களின் சோதனைகளை ஒத்திசைவான கோட்பாட்டை உருவாக்கும் நோக்கில் தாமே திரும்ப செய்து பார்ப்பது என்ற முடிவுக்கு வருகிறார்.

அதுவரை நெருப்பு என்பது ஃபிலாஜிஸ்டன்  என்ற அடிப்படை துகளால் உருவாகிறது, இந்தத் துகள் எரியும் பொருட்களின் உள்ளார்ந்த இயல்பாக இருக்கிறது. எரியும்போது வெப்பம், ஒளி, புகை ஆகியவற்றை வெளியிடுகிறது என்பதே ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாக இருந்தது.

லவாய்சியர் தனது மனைவியுடன்.

லவாய்சியர் தனது துல்லியமான ஆய்வுகளின் மூலம் எரியக் கூடிய பொருளை  நெருப்பில் இடும்போது அல்லது எரியா பொருளை வெப்பமூட்டும் போது அவற்றின் எடை அதிகரிப்பதை அறிந்தார். உலோகத்தையும் வெப்பமூட்டும் போது காற்றை அது உள்வாங்கி உறிஞ்சிக் கொள்கிறது. அதனாலேயே அந்த உலோகத்தின் எடை உயர்கிறது என்று கண்டறிந்தார். இது ஃபிலாஜிஸ்டன் கோட்பாட்டுடன் முரண்பட்டது. இந்த ஆய்வுகளின் மூலம் லவாய்சியர் நிறை அழிவுறா கோட்பாட்டை நிறுவினார்.

லவாய்சியர் உலோகங்கள் துருப்பிடிக்கும் போது ஒரு பகுதியை காற்றை உறிஞ்சுகின்றது என்பதை கண்டறிந்தார். காற்றின் அந்த ஒரு பகுதி எது?

ஜோசப் பிரிஸ்ட்லி (Joseph Priestley) மற்ற எல்லா காற்றிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட புதிய வகையான வாயுவைக்  கண்டறிந்தார். தனது வழமையான சோதனைகளின் போது ஒரு வகையான வாயுவில் எரியும் மெழுகுவர்த்தி கூடுதலான பிரகாசத்துடன் எரிவதைக் கண்டார். அந்தக் குடுவையில் செஞ்சூடான மரக் குச்சியை செலுத்தும்போது அது பற்றி எரிந்தது. பின்னர் பிரான்ஸ் சென்று பிரெஞ்சு அறிவியல் கழக உறுப்பினர்களுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைக்கிறது. அங்கு அவர் லவாய்சியரை சந்தித்து தனது ஆய்வுகளை – புதிய எரியூட்டும் வாயுவை விவரிக்கிறார்.

பிரிஸ்ட்லி சோதனை.

பிரிஸ்ட்லி  தனது சோதனைகளை லவாய்சியரிடம் எடுத்துரைத்த பின் இங்கிலாந்திற்கு திரும்பிய பிறகு தனது சோதனையை மேலும் தொடர்ந்தார். அதில் எரிய துணை புரியக் கூடிய வாயுவை உயிருள்ளவற்றின் மீது சோதிக்க தலைப்பட்டார். அவ்வாறு எலியை அந்தக் குடுவையில் இட்டபோது அதிக உற்சாகத்தோடும், மிக அதிகமான நேரம் உயிருடனும் இருந்தது. அவ்வாயு எரிவதற்கு துணை புரிவதோடு மட்டுமின்றி உயிர் வாழ்வதற்கும் (சுவாசத்திற்கும்) ஆதராமானது என கண்டறிந்தார்.

பிரிஸ்ட்லியுடனான சந்திப்பிற்குப்பின் அவரது ஆய்வுகளையும் லவாய்ஸியர் தனது ஆய்வுக் கூடத்தில் திருப்பி செய்து பார்ப்பது என்று முடிவெடுக்கிறார். அவரும் அதே எரியூட்டும் வாயுவைக் கண்டறிந்து அதற்கு ஆக்சிஜன் என பெயரிடுகிறார்.

லவாய்சியர் தனது ஆய்வு முடிவுகளை சமர்பித்த போது அதில் பிரிஸ்ட்லியின்  கண்டுபிடிப்பை அங்கீகரித்து குறிப்பிடவில்லை. ஆனாலும் இதை கருத்துத் திருட்டு என்று குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஏனெனில் அதுவரை பிரிஸ்ட்லி  உள்ளிட்ட அனைத்து அறிவியலாளர்களும் ஃபிலாஜிஸ்டன் கருதுகோளையே ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் லவாய்சியர் ஃபிலாஜிஸ்டன் கருதுகோளை தனது ஆய்வுகளின் மூலம் தவறென நிரூபித்தார்.

படிக்க:
சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !
அறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா ?

கேவன்டிஷ் ஏற்கனவே கண்டுபிடித்து இருந்த இரண்டு வகையான வாயுக்களின் கலவையே நீர் என்பதை ஆய்வுகூடத்தில் உறுதிப்படுத்தி, கேவன்டிஷ் கண்டறிந்த வாயுவுக்கு ஹைட்ரஜன் என பெயரிட்டார் லவாய்சியர்.

ஆக்சிஜனின் கண்டுபிடிப்பு பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த இயற்கை விஞ்ஞானத்தின் கோட்பாடுகளை தவறென தவிடு பொடியாக்கி விட்டது.

காற்றை பற்றிய இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் காற்று அடிப்படை துகள் அல்ல என்பதை மட்டும் நிராகரிக்கவில்லை. நெருப்பு, நீர், நிலம் ஆகிவற்றைப் பற்றிய கருதுகோளையும் மாற்றியமைத்தது. இவையனைத்தும் அடிப்படை துகள்கள் என்ற நிலையை இழந்தன. 1789-ல் தனது elementary treatise of chemistry என்ற தனது புத்தகத்தை வெளியிட்டார் லவாய்சியர். இந்த புத்தகத்தில் 33 அடிப்படை பொருட்கள் (தனிமங்கள் – elements) பட்டியலிடப்பட்டு இருந்தன.

அதுமுதல் நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகியவை அடிப்படை துகள்கள் என்பது போய் தனிமங்களைக் கண்டறிய உலக அறிவியலாளர்கள் தலைப்பட்டனர். இயற்கைப் பொருள்களில் பொதிந்துள்ள ஆக்சிஜனை வெளியேற்றினால் அடிப்படை பொருட்களை (elements) கண்டறியலாம் என்று பலரும் அறிந்து கொண்டனர். இதையடுத்து உலகம் முழுவதிலும் ஸ்வீடன் – மெக்ஸிகோ  – சைபீரியா என உலகம் முழுவதிலும் 15 புதிய தனிமங்கள் குறுகிய காலத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டன.

(தொடரும்)

மார்ட்டின்

அடுத்த பாகம் »

செய்தி ஆதாரங்கள் :
From Alchemy to Chemistry
From Alchemy to Chemistry: The Originsof Today’s Science
History of chemistry
History of Chemistry | Famous Chemists

https://youtu.be/AfIi4JUK034

அமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் !

பிரேசிலின் ரொண்டோனியா, போர்டோ வெல்ஹோ மாகாணத்தில் காடுகளில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. காடுகளை சோயா வயல்களாகவும், கால்நடை மேய்ச்சலாகவும் மாற்றும் நில அபகரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் வேளாண் வணிக நிறுவனங்களால் தான் பெரும்பாலான தீ விபத்து ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (INPE) படி, 2018 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அமேசான் காட்டுத் தீ எண்ணிக்கை 84 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரொண்டோனியாவின் மேற்குப் பகுதி அதிகமான காடுகள் அழிக்கப்பட்ட இடமாகத் தோன்றுகிறது, நிலத்தை சுரண்டுவதே இதற்கான முக்கியக் காரணம்.

ஆகஸ்டில், ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ, எந்தவித ஆதாரங்களும் இல்லாமல், அங்கு களத்தில் சேவையாற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தான் இந்த காட்டுத்தீக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அமேசானிய நில அபகரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் வேளாண் வணிக நிறுவனங்கள், அரசாங்கத்தின் சொல்லாட்சியின் ஆதரவுடன், காடுகளுக்கு தீ வைத்ததற்கும், நிலத்தை சுரண்டுவதற்கும் எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

பெருவாரியான நிலத்தில் ஒற்றைப்பயிரான சோயா அல்லது கால்நடைகளுக்கான தீவனங்களே பெரும்பாலும் பயிரிடப்படுகின்றன. சோயா வணிகம், உணவாகவும், தீவிர கால்நடை விலங்குகளின் தீவனமாகவும், ஒரு சில பெரிய நிறுவனங்களின் கைகளில் உள்ளது என்பது மட்டுமல்லாமல் இது உலகில் மிகவும் இலாபகரமான ஒன்றாக மாறியுள்ளது.

“வளர்ச்சியின் பெயரில், அமேசானின் நிலங்களை சுரண்டுவதில் குறைவான கட்டுப்பாடான கொள்கைகளை அமல்படுத்துகிறது, இதனால் காடழிப்பு அதிகரிப்பதை நியாயப்படுத்துகிறது,” என்று சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ரொன்டோனியாவில் உள்ள பூர்வீகக் குழுக்களுடன் இணைந்து  செயல்படும் கனிண்டே என்ற அமைப்பை நடத்தி வரும் நெய்டின்ஹா கூறினார்.

படிக்க:
பேராசிரியர் கிலானியின் மனித உரிமைப் பணிகளை முன்னெடுப்போம்! பாசிச சூழலை திடமாக எதிர்கொள்வோம் !
பொருளாதார நெருக்கடி : அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா ?

கரிட்டியானா மற்றும் உரு-யூ-வாவ்-பழங்குடியினரின் உறுப்பினர்களின் கூற்றுப்படி, பூர்வீக பிரதேசங்களுக்குள் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன.

ஜமாரி கிராமத்தின் தலைவரான ஜூரிப் கூறுகையில், செப்டம்பர் மாதம், தங்கள்  நிலத்தை அபகரிப்பவர்கள் சிலர் காட்டில் தீ வைத்தபோது ஒரு குழுவால் அடையாளம் காணப்பட்டு கைதும் செய்யப்பட்டனர்.

“பூர்வீக பழங்குடியினர் மட்டுமே இயற்கை இருப்புக்களில் வாழ முடிகிறது என்றாலும், காடுகளின் சுரண்டலால் இலாபம் ஈட்டுவதற்காக மரங்களை கடத்துபவர்கள் மற்றும் நில அபகரிப்பாளர்கள் தொடர்ந்து எங்கள் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர்” என்று ஜூரிப் கூறினார்.

உரு-யூ-வாவ்-வாவ் இனத்தைச் சேர்ந்த 45 வயதான புருவா, தனது கோத்திரத்தின் இருப்புக்குள் நில அபகரிப்பாளர்களின் குடிசைக்கு தீ வைத்தார். செப்டம்பர் 2019 இல், நிலப்பரப்பைக் கைப்பற்ற காடுகளுக்கு தீ வைக்கும் ஒரு குழு, ஃபனாய்-யால் (பழங்குடியின மக்களைப் பாதுகாப்பதற்கான அரசு நிறுவனம்) தடுத்துநிறுத்தப்பட்டு, உரு-யூ-வாவ்-வாவ் இருப்புக்குள்ளேயே போலீசாரால் கைதும் செய்யப்பட்டது. புருவாவின் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு குழு சம்பவ இடத்திற்குத் திரும்பி அவர்கள் திரும்பி வராமல் இருக்க சட்டவிரோத குடிசைக்கு தீ வைத்தது.

ஆல்டியா ஜமாரேவின் கிராமத் தலைவரான ஜூரிப், நிலத்தை அபகரித்தவர்களால் அழிக்கப்பட்ட காட்டில் நடந்து, பூர்வீகப் பகுதியை எரித்த நிலத்தை உரிமை கோரி அதை சாகுபடி செய்யச் செய்தார். செப்டம்பர் 26 அன்று, ஜூரிப், நில அபகரிப்பாளர்களுக்காக காடுகளுக்கு தீ வைக்கும் கும்பல் வசிக்கும்  சட்டவிரோத குடிசைகளை அழிக்கும் ஒரு திட்டத்தை தலைமைதாங்கி வழிநடத்தினார்.

போர்டோ வெல்ஹோ மாகாணத்தில் அண்டை காட்டில் ஏற்பட்ட தீவிபத்தால் எரிந்த தனது கசவா வயலுக்கு முன்னால் ஜெல்சன் நிற்கிறார்.

கரிஷியானா பழங்குடியினரின் சென்ட்ரல் ஆல்டியா, ரொண்டோனியாவின் பூர்வீக பிரதேசத்தில் ஜியோவால்டோவுக்கு சொந்தமான ஒரு வீட்டின் எச்சங்கள். பக்கத்து காட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் இவரது வீடும் தீப்பிடித்தது. பூர்வீக நிலப்பரப்பைச் சுற்றியுள்ள தனியார் பண்ணைகள் கரிட்டியர்களையும் காடுகளையும் அச்சுறுத்துகின்றன.

போர்டோ வெல்ஹோவில் மடிரா ஆற்றைக் கடக்கும் பாலத்தின் கீழ் மீனவர்கள். பின்புறம் உள்ள சாலோஸில் உள்ள குழிகள், உலகின் அதிக சாகுபடி செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் ஒன்றான சோயாவை சேமிக்க பயன்படுத்தப்படுகின்றன.

போர்டோ வெல்ஹோவிற்கு அருகில் கால்நடை மேய்ச்சலாக மாறிய வனப்பகுதி. மாட்டிறைச்சி வர்த்தகம் நாட்டின் மிகவும் இலாபகரமான வணிகங்களில் ஒன்றாகும். மேலும் மேய்ச்சல் நிலத்தின் தேவை காடழிப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். சட்டவிரோத விற்பனைக்கு சிறந்த மரத்தை திருடுவதன் மூலம் இந்த செயல்முறை தொடங்குகிறது. பின்னர் நிலங்களும் தொடர்ச்சியாக தீ வைக்கப்படுகிறது. நிலம் அகற்றப்பட்டதும், கால்நடைகளை மேய்ச்சலுக்காகவும், பின்னர் சோயாவை வளர்க்கவும் காடு பயன்படுத்தப்படுகிறது.

ரொண்டோனியாவின் போர்டோ வெல்ஹோவில் உள்ள ஃப்ரிகோ 10 இறைச்சிக் கூடத்தில் மேலாளர் மற்றும் கால்நடை மருத்துவர். மாட்டிறைச்சி வர்த்தகம் நாட்டின் மிகவும் இலாபகரமான வணிகங்களில் ஒன்றாகும்.

ரோண்டோனியாவில் உள்ள பூர்வீக பிரதேசத்தின் மத்திய ஆல்டியாவில் உள்ள கரிஷிய பழங்குடி மக்கள். பூர்வீக நிலப்பரப்பைச் சுற்றியுள்ள தனியார் பண்ணைகள் கரிஷியர்களையும் அந்தக் காடுகளையும் அச்சுறுத்துகின்றன.

அமேசான் ரிசர்வ் பகுதியில் உள்ள உரு-யூ-வாவ்-வாவ் பழங்குடியினத்தைச் சேர்ந்த மேட் (32), புருவா (45), மற்றும் அலெஸாண்ட்ரா (27)
செப்டம்பர் 26 அன்று, மூவரும் அண்டை காடுகளுக்கு தீ வைத்த நில அபகரிப்பாளர்களால் ஒரு தளமாக பயன்படுத்தப்பட்ட ஒரு சட்டவிரோத குடிசையை நோக்கிச் சென்ற பணியில் பங்கேற்றனர்.

பிரேசிலின் ரொண்டோனியா, போர்டோ வெல்ஹோ அருகே ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து புகை எழுகிறது.

ரொண்டோனியா பிராந்தியத்தில் ஜாசி பரணா அருகே தொழிலாளர்கள். அமேசானிய மரங்களை திருடுதல் மற்றும் சட்டவிரோதக் கடத்தல் உலக சந்தையில் 30 சதவீதத்தைப் பிடித்திருகிறது. காடழிப்பு செயல்பாட்டில், காட்டை தீ வைப்பதற்கு முன்பு, நில அபகரிப்பாளர்கள் கறுப்பு சந்தையில் விற்க மிகச்சிறந்த மரங்களை வெட்டுவர்.

அமேசானின் மிகவும் காடழிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பிரேசிலின் ரொண்டோனியாவில் உள்ள போர்டோ வெல்ஹோ மாகாணத்தில் ஏற்பட்ட தீ.

ரொண்டோனியாவிலுள்ள போர்டோ வெல்ஹோவில் ஏற்பட்ட தீ.


தமிழாக்கம் : மூர்த்தி
நன்றி : aljazeera

அறிவியக்க சகாப்தம் | பொருளாதாரம் கற்போம் – 41

0
the-age-of-enlightenment-Political-Economy-1

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 41

அத்தியாயம் எட்டு | டாக்டர் கெனேயும் அவரது குழுவும்

அ.அனிக்கின்

வ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் புகழ்வாய்க்கிறது. பிரான்சுவா கெனே மருத்துவராகவும் இயற்கை விஞ்ஞானியாகவும் இருந்தார். அறுபது வயதை நெருங்கும் வரையிலும் அவர் அரசியல் பொருளாதாரத்தைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் மருத்துவத் துறையில் பல டஜன் நூல்களை எழுதியிருந்தார். அவர் தன்னுடைய வாழ்க்கையின் கடைசி வருடங்களை நண்பர்கள், மாணவர்கள், தன்னைப் பின்பற்றியவர்கள் ஆகியோரைக் கொண்ட நெருக்கமான வட்டத்துக்குள் கழித்தார்.

லரோஷ் ஃபுகோ “வயோதிகராகும் கலையை நன்றாக அறிந்தவர்கள் வெகு சிலரே” என்று சொன்னதுண்டு. அந்தக் கலையை நன்கு அறிந்திருந்த வெகு சிலரில் கெனேயும் ஒருவர். அவருடைய உடலுக்கு எண்பது வயது, அவருடைய தலைக்கு முப்பது வயது மட்டுமே என்று அவரது நண்பர்களில் ஒருவர் அவரைப் பற்றிக் கூறினார். 18-ம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தில் மிகச் சிறந்து விளங்கிய பொருளியலாளர் கெனே என்று கூறலாம்.

அறிவியக்க சகாப்தம்

“பிரான்சில் வரப்போகின்ற புரட்சிக்கு மனிதர்களின் உள்ளங்களைத் தயாரித்த மாபெரும் மனிதர்கள் தாங்களும் தீவிரமான புரட்சிக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் எப்படிப்பட்ட அந்நியக் கட்டுப்பாட்டையும் அங்கீகரிக்கவில்லை. மதம், இயற்கை விஞ்ஞானம், சமூகம், அரசியல் முறை – இவை ஒவ்வொன்றும் அதிகக் கறாரான விமரிசனத்துக்கு உட்படுத்தப்பட்டன. பகுத்தறிவு என்ற நீதிபதியின் ஆசனத்துக்கு முன்பு ஒவ்வொன்றும் தான் இருப்பதற்குரிய நியாயத்தை எடுத்துக் கூற வேண்டும்; அவ்வாறு கூற முடியவில்லையென்றால் அழிந்து விட வேண்டும்.(1)

Doctor-Quesnay_Political-economy
பிரான்சுவா கெனே

18-ம் நூற்றாண்டின் சிறப்பு மிக்க சிந்தனையாளர்கள் வரிசையில் மூலச் சிறப்புடைய பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தை உருவாக்கியவர்களான கெனே, டியுர்கோ ஆகிய இருவருக்கும் மிக மேன்மையான இடம் உண்டு.

கதிரவனின் பிரகாசமான கதிர்கள், விடுதலையடைந்த மனித அறிவின் கதிர்கள் பட்டு நிலப்பிரபுத்துவப் பனி படிப்படியாக உருக ஆரம்பிக்கும் என்று அறிவியக்கத்தினர் நம்பினார்கள். ஆனால் அது நடக்கவில்லை. உறைந்து போயிருக்கும் பனியை உடைப்பதற்குப் புரட்சியைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை மென்மேலும் அதிகரித்தது. பிஸியோகிராட் பொருளியலாளர்கள் உட்பட அறிவியக்கத்தின் இளைய தலைமுறையினர் தங்களுடைய நீண்ட வாழ்க்கையில் இதைப் பார்த்து அஞ்சினர்; மக்களின் ஆவேசம் என்ற பூதம் வாயைப் பிளந்து கொண்டு தயாராவதைப் பார்த்துப் பின்வாங்கினார்கள்.

18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கெனே தன்னுடைய ஆராய்ச்சிகளைத் தொடங்கிய பொழுது பிரெஞ்சுப் பொருளாதாரத்தின் நிலை எப்படியிருந்தது?

அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அதைப் பற்றி புவாகில்பேர் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் எப்படியிருந்ததோ அந்த நிலையிலிருந்து அதிகமாக மாறாதபடி இருந்தது. பிரான்ஸ் இன்னும் விவசாய நாடாகவே இருந்தது. கடந்த ஐம்பது வருடங்களில் விவசாயிகளின் நிலையில் மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டிருந்தது. புவாகில்பேரைப் போல, கெனேயும் பிரெஞ்சு விவசாயத்தின் சீர்கேடடைந்த நிலையைப் பற்றிய வர்ணனையோடு தமது பொருளாதார நூல்களை எழுதத் தொடங்கினார்.

படிக்க:
‘நான்காம்’ தொழிற்புரட்சி மக்கள் புரட்சியைத் தடுத்து விடுமா ?
♦ புவாகில்பேர் : காலமும் பணியும் | பொருளாதாரம் கற்போம் – 22

கடந்த ஐம்பது வருடங்களில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன என்பது உண்மையே. சொந்தமாக நிலம் வைத்திருந்த அல்லது நிலவுடைமையாளர்களிடமிருந்து குத்தகைக்கு நிலம் வாங்கிய முதலாளித்துவ விவசாயிகள் வர்க்கம் தோன்றியிருந்தது; அது குறிப்பாக பிரான்சின் வடபகுதியில் வளர்ச்சி அடைந்திருந்தது. கெனே விவசாய முன்னேற்றத்தைப் பற்றிய தனது நம்பிக்கைகளை இந்த வர்க்கத்தின் மீதே வைத்தார்; அத்தகைய முன்னேற்றமே சமூகமுழுவதிலும் ஆரோக்கியமான பொருளாதார, அரசியல் வளர்ச்சி ஏற்படுவதற்கு அடிப்படை என்று அவர் சரியாகவே கருதினார்.

பிரான்ஸ் முட்டாள்தனமான, நாசப்படுத்தும் யுத்தங்களை நடத்திக் களைத்துப் போயிருந்தது. இந்த யுத்தங்களின் விளைவாகக் கடல் கடந்த பகுதிகளில் அதன் பிரதேசங்களையும் அவற்றோடு செய்து வந்த லாபகரமான வர்த்தகத்தையும் அது இழந்திருந்தது. ஐரோப்பாவிலும் அதன் நிலை பலவீனமடைந்திருந்தது. அரசவையினர், மேல்வர்க்கங்கள் ஆகியோருடைய ஊதாரித்தனத்துக்கும் வளமான வாழ்க்கைக்கும் தேவையான பொருள்களையே தொழிற்சாலைகள் பிரதானமாக உற்பத்தி செய்தன; விவசாயிகள் அநேகமாகக் கைத்தொழிற் பொருள்களையே பயன்படுத்தி வந்தார்கள்.

லோவின் திட்டங்கள் பரபரப்பைத் தூண்டும் வகையில் தோல்வியடைந்ததன் விளைவாகக் கடன், வங்கித் தொழிலின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரான்சில் பொதுமக்களது எண்ணங்களைப் பிரதிபலித்த பலருடைய கருத்தில் தொழில்துறை, வர்த்தகம், நிதி ஆகியவை எப்படியோ பலவிதமான சந்தேகங்களுக்கு ஆளாகியிருந்தன. சமாதானம், வளப்பெருக்கம், இயற்கையான தன்மை ஆகியவற்றின் கடைசிப் புகலிடமாக விவசாயம் தோன்றியது.

misisipi bubble political economy
லோ-வின் திட்டங்கள் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் அமைந்திருந்த் மிசிசிப்பி பங்குசந்தை வீதியை சுட்டிக்காட்டும் ஓவியம்.

லோ கடன் வசதிகளைப் பற்றி புத்தார்வக் கற்பனைகளைக் கொண்டிருந்தாரென்றால், கெனே விவசாயத்தைப் பற்றி அத்தகைய கற்பனைகளை வைத்திருந்தார். இத்தனைக்கும் அவருடைய ஆளுமையிலும் குணத்திலும் புத்தார்வக் கற்பனையாக ஒன்றுமே கிடையாது. ஆசிரியரிடம் இந்த குணம் இல்லையே தவிர அவருடைய மாணவர்களிடம் குறிப்பாக மார்கீஸ் மிராபோவிடம் – அளவுக்கு மீறிய உற்சாகம் ஏற்பட்டு ஆசிரியரிடம் இல்லாததையும் ஈடு செய்தது.

பிரெஞ்சு நாடு முழுவதுமே விவசாயத்தால் ஈர்க்கப்பட்டிருந்தது; ஆனால் வித்தியாசமான வெவ்வேறு வழிகளில் ஈர்க்கப்பட்டிருந்தது. அரசவையில் அதைப் பற்றிப் பேசுவது நாகரிகமான பொழுது போக்காக இருந்தது; வெர்சேய் அரண்மனைத் தோட்டத்தில் மாதிரிப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டன. மாகாணங்களில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கென்று சில சங்கங்கள் அமைக்கப்பட்டன; அவை “ஆங்கில முறைகளை”, அதாவது அதிக உற்பத்தியைக் கொடுக்கின்ற விவசாய முறைகளைப் புகுத்துவதற்கு முயற்சி செய்தன. வேளாண்மையியல் சம்பந்தமான கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின.

படிக்க:
மதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை ! – ம.உ.பா.மையம் கள அறிக்கை !
♦ பள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா ?

இத்தகைய நிலைமைகளில் கெனேயின் கருத்துக்கள் – விவசாயத்தில் அவர் கொண்டிருந்த அக்கறை வேறு வகையானது என்ற போதிலும் – சிலரிடம் ஆர்வத்தைத் தூண்டின. கெனேயும் அவருடைய மரபினரும் பொருளாதாரத்தில் பயனுள்ள ஒரே துறை விவசாயமே என்ற கருத்தைத் தமக்கு அடிப்படையாகக் கொண்டனர்; நிலப்பிரபுத்துவ எதிர்ப்புத் தன்மையைக் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பட்டியலைத் தயாரித்தனர். பிற்காலத்தில் டியுர்கோ இந்த சீர்திருத்தங்களை அமுல்படுத்த முயற்சி செய்தார். புரட்சி அவற்றில் பெரும்பாலானவற்றை அமுலாக்கியது.

டியுர்கோ

டிட்ரோவின் தலைமையிலிருந்த அறிவியக்கவாதிகளின் முக்கியமான உள்மையப் பகுதியாக இருந்தவர்களோடு ஒப்பிடும் பொழுது அடிப்படையாகவே கெனேயும் அவரைப் பின்பற்றியவர்களும் புரட்சி உணர்வு, ஜனநாயகத்தன்மை ஆகியவற்றில் குறைந்தவர்களே; எனவே பிற்காலத்தில் கற்பனா சோஷலிஸ்டுகளைத் தோற்றுவித்த அதன் இடது சாரி அணியைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு வரலாற்றாசிரியரான டெ டாக்குவில் எழுதியிருப்பது போல, அவர்கள் ”அமைதியான, நிதானமான மனோபாவம் கொண்டவர்கள், வசதியானவர்கள், நேர்மையான அதிகாரிகள், திறமைமிக்க நிர்வாகிகள்…..”(2)  அந்தக் காலத்தில் பிரான்சில் பேச்சுக்கலை என்பது பாஸ்டிலிக்குப் போய்ச் சேர்ந்து விடாமல் எல்லாவற்றையும் சொல்லத் தெரிந்திருப்பது என்று ஒருவர் வேடிக்கையாகச் சொன்னார். அதிகத் தீவிரமான உற்சாகத்தைக் கொண்டிருந்த மிராபோ கூட இந்த மூதுரையைப் பின்பற்றினார். அவர் கைது செய்யப்பட்டுச் சில நாட்கள் சிறை வாசம் செய்ய நேர்ந்தது உண்மைதான். ஆனால் செல்வாக் குள்ளவரான டாக்டர் கெனே அவரை உடனே சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். அந்தக் குறுகிய சிறைவாசத்தின் பலனாக அவருடைய புகழ் அதிகரித்தது; அதன் பிறகு அவர் கவனமாக நடந்து கொண்டார்.

ஆனால் பிஸியோகிராட்டுகளின் நடவடிக்கைகள் யதார்த்த ரீதியில் அதிகப் புரட்சிகரமாகவே இருந்தபடியால் “பழைய அமைப்பின்” அடிப்படைகளைத் தகர்த்தன. உதாரணமாக, “பிரெஞ்சுப் புரட்சியின் உடனடித் தந்தையர்களில் ஒருவராக டியுர்கோ இருந்தார்” (3) என்று மார்க்ஸ் உபரி மதிப்புத் தத்துவங்கள் என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1979, பக்கங்கள் 31-32 பார்க்க.

(2) A. de Tocqueville, L’ancien regime et la revolution, Paris, 1856, p. 265.

(3) K. Marx, Theories of Surplus-Value, Part I, p. 344

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

பொருளாதார நெருக்கடி : அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா ?

1

இந்தியாவின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது தான் – ஆனால் அபிஜித் பானர்ஜியின் நோபல் பரிசு தீர்வல்ல !

மெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி சமீபத்தில் அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ (Esther Duflo) மற்றும் மைக்கேல் கிரிமருடன் (Michael Kremer) [முதலாளித்துவ] பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றதை இந்திய ஊடகங்கள் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். அவருடன் நேர்காணல்கள் பல எடுக்கப்பட்டன. வெளிவரவிருக்கும் அவரது நூலிலிருந்து சாராம்சங்கள் பல வெளியாகியிருக்கின்றன. அவரது தாயாரையும் ஊடகங்கள் நேர்காணல் செய்திருக்கின்றன. வறுமை ஒழிப்பு குறித்து மம்தா பானர்ஜியுடனான தேனிர் சந்திப்பு ஒன்றும் அவரது தாயாருடன் நடந்தேறியிருக்கிறது.

அபிஜித் பானர்ஜி

ஊடகங்கள் எதையும் சிந்திக்காமல் தனிநபர் புகழ்பாடுவது என்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு இயல்பானது என்பது சரிதான். இந்தியாவின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், மோடியை எதிர்ப்பவர்கள் இந்த நோபல் பரிசு வெற்றியை பாரதீய ஜனதா கட்சியின் மோசமான கொள்கைகளை குறை கூறும் வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர்.

ஆபத்தான வகையில், பாஜகவைப் பற்றிய விமர்சனங்கள் உண்மையான ஜனநாயக விவாத வடிவத்தில் வரவில்லை. மாறாக ஒரு அதிகார மையத்திற்கு பதிலாக, மன்மோகன் சிங், இரகுராம் இராஜன், இப்போது அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட தாராளமய பொருளாதார வல்லுனர்களை மற்றொரு அதிகார மையமாக மாற்றுவதன் மூலம் இது மேற்கொள்ளப்படுகிறது .

அபிஜித் ஒரு மோடி எதிர்ப்பாளரா ?

சான்றாக, பானர்ஜியை ஒரு சுதந்திரப் போராளி மற்றும் ஒரு புரட்சியாளர் என்பது போல ஊடகவியலாளார் வினோத் துவா (Vinod Dua) சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பாராட்டினார். இது பானர்ஜியை மோடி எதிர்ப்பு அடையாளமாக மாற்றியது: ஏனென்றால் பானர்ஜி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் மற்றும் நோபல் பரிசையும் வென்றவர் என்பதால் அவரை மதச்சார்பின்மையாளார், நல்ல பொருளாதார கொள்கைகள் மற்றும் இந்திய ஏழைகளின் மீட்பனாக உருவகப்படுத்தினார். ஆனால் மோடியுடனான பானர்ஜியின் நட்புறவு நிகழ்ச்சிக்குப் பின்னர் துவாவின் ஏமாற்றத்தை ஒருவர் கற்பனை செய்யலாம்.

படிக்க:
‘முசுலீம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள்’ : வெறுப்பு பிரச்சாரத்தில் காவிகள்
காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !

முரண்பாடாக, இந்த நோபல் பரிசு தடையற்ற விமர்சன சிந்தனையின் இன்றியமையாத தன்மை குறித்த தீர்மானகரமான முடிவு என்பது துவாவின் மையமான கருத்தாகும். ஆனால் பானர்ஜியின் ஆராய்ச்சி எதைச் சாதித்தது என்பது குறித்து நமக்கு உணர்த்த அவரது தடையற்ற விமர்சன சிந்தனையை அவர் பயன்படுத்தவில்லை. உலகின் பிற பகுதிகளைப் போலவே, துவாவும் இந்த விடயத்தில் தனது சிந்தனையை நோபல் பரிசு குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். ஆனால் உண்மையில், பானர்ஜியின் நோபல் பரிசை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? அவரது பார்வை நமக்கு உண்மையில் புரிகிறதா? அவருடைய அரசியல் நமக்குத் தெரியுமா? அதற்கு நாம் உடன்பட வேண்டுமா? உள்ளிட்ட கேள்விகளை கேட்க நம்முடைய சுதந்திரமான விமர்சன சிந்தனையை பயன்படுத்துவது இன்றியமையாதது.

முதலாளித்துவ பொருளாதார முன்னேற்றத்திற்கு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை மூலம் பங்களிப்பு செய்ததற்காக பானர்ஜிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது: அதாவது வறுமைக்கான காரணியை எண்ணற்ற, ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத சிறு சிறு துண்டுகளாக சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை முறை உடைக்கிறது. சான்றாக, மோசமான சுகாதார விளைவுகளுக்கான காரணி(கள்) – மருத்துவ ஊழியர்கள் வேலைக்கு வராதது, தரமற்ற மருந்துகள், தடுப்பு தடுப்பூசிகளின் பற்றாக்குறை போன்ற சிறிய காரணிகளாக பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு காரணியும் தனித்தனியாக “ஆய்வு” செய்யப்படுகிறது.

சான்றாக, ஒரு செவிலியர் குழுவை தேர்ந்தெடுத்து வேலைக்கு ‘மட்டம்’ போடும் நாட்களில் ஊதியத்தை வெட்டுவது. இன்னொரு செவிலியர் குழுவை தேர்ந்தெடுத்து அதே காரணங்களுக்காக ஊதியத்தை வெட்டாமல் விடுவது. இதன் மூலம் செவிலியர்களை தண்டிப்பது வேலைக்கு ‘மட்டம்’ போடும் சிக்கலைத் தீர்க்குமா என்று ஆராய்ச்சி செய்ய உதவுமாம். இதே போன்றதான ஆராய்ச்சிகள் மற்ற அனைத்து சிக்கல்களுக்கும் செய்யப்பட்டு முடிவில், அனைத்து சிக்கலுக்குமான சிறிய பரிந்துரைகள் கொண்ட கொள்கை ‘பொதி’ வடிவமைக்கப்படும்.

செயற்முறை சிக்கல்கள் :

புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் இம்முறையை பல வழிகளில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

முதலாவதாக, சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் உருவாக்கக்கூடிய சான்றுகள் அளவில் மிகச் சிறியது. மேலும், கிடைக்கும் முடுவுகளை அளவிடுவதற்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளன: இராஜஸ்தானில் கிராமப்புறங்களுக்கு ஏதுவான ஒரு பரிந்துரை டெல்லி பெருநகரத்திலும் வேலை செய்யுமா? எந்த இடங்களுக்கு எந்த முடிவுகள் பொருந்தும் என்பதை நாம் எப்படி அறிவது?

இரண்டாவதாக, தற்போதுள்ள பொருளாதார தரவுகளிலோ அல்லது எதார்த்தமான உலக சூழ்நிலைகளின் அடிப்படையில் கூட இந்த சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் நடக்காது. மாறாக ஒரு ஆய்வகத்தை போலவே நடத்தப்படும். அதே சமயம் எதார்த்த உலகமோ குழப்பம் நிறைந்ததாக உள்ளது.

மூன்றாவதாக, சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் தனிநபர்களது விருப்பத்தோடு இயைந்த குறுகிய கேள்விகளில் கவனம் செலுத்துகின்றன: வேலைக்கு ஏன் வரக்கூடாது என்று செவிலியர்கள் முடிவு செய்கிறார்கள்? அதில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் ஏழைகளின் தவறுகளாக கருதப்படுவது பற்றியது. அதாவது, அவர்கள் ஏன் சேமிக்கவில்லை? அவர்கள் ஏன் தேநீர் குடிக்காமல் சோறு மட்டும் சாப்பிடக்கூடாது? அவர்கள் ஏன் விலையுயர்ந்த விவசாயக்கருவிகளை வாங்கக்கூடாது? ஏன் பகுத்தறிவற்று இருக்கிறார்கள்? போன்றவை.

படிக்க:
பொருளாதார வீழ்ச்சி : மோடியை விமர்சிக்கும் நோபல் பரிசு தம்பதி !
♦ முறைகேடுகள் : அம்பலப்படுத்தும் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் !

இங்குதான் கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன : முதலில் பானர்ஜியின் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை போன்ற ஒரு அணுகுமுறையானது வறுமைக்கான அனுபவபூர்வமாக நிறுவப்பட்ட தரவுகளை புறக்கணிக்கிறது. பதிலாக, வறுமைக்கான தனிப்பட்ட காரணத்தை மையமாகக் கொண்டு, 2015 நோபல் பரிசு பெற்ற அங்கஸ் டீட்டன் (Angus Deaton) அழைத்த “விசித்திரக் கதைகள் (fairy stories)” போன்ற விளக்கங்களை பானர்ஜியின் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை வழங்குகிறது.

கட்டமைப்பு காரணிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன :

பானர்ஜி வசிக்கும் அமெரிக்க அரசாங்கம் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 விழுக்காட்டை சுகாதாரத்துக்காக செலவிடுகிறது ( குடிமக்கள் மேலும் அதிகம் கோருகின்றனர் ). நேர்மாறாக, இந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 விழுக்காடு மட்டுமே ஒவ்வொரு குடிமகனுக்கும் செலவிடுகிறது. அமெரிக்காவின் வளர்ச்சி என்பது என்ன, அது எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பானர்ஜிக்கு தெளிவாகத் தெரியும். இந்தியாவிலும் பிற ஏழை நாடுகளில் அவரது ஆராய்ச்சியானது பெரிய கட்டமைப்பு காரணிகளை தவிர்த்து சிறிய முதன்மையற்ற காரணிகளை ஆரத் தழுவுகிறது. இந்த அணுகுமுறை வறுமையை தீர்க்காது என்பதுடன் தங்கம் போன்ற மதிப்பான அறிவியல் தரத்தை விட நன்கொடையாளரை மகிழ்விக்கும் வித்தையாகவே இது இருக்கிறது.

சுகாதார அமைப்பிற்கு குறைவான நிதியை இந்தியா ஒதுக்குவதன் எதிர்வினையாக சரி செய்யப்படக்கூடிய நோய்களால் இந்திய மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுப் பள்ளி முறை செயலிழந்துவிட்டதால் மக்களில் கணிசமானவர்கள் கல்வியறிவற்றவர்களாக இருக்கிறார்கள். வலுவான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் போதுமான ஊதியம் தரும் எந்த வேலைகளும் இல்லாததால் மக்களுக்கு வருமானம் குறைவாகவே உள்ளது. வறுமைக்கான காரணத்தை இப்படி நாம் புரிந்துகொண்டால், தேவையான தீர்வுகளை கண்டுபிடிப்பது மிகவும் எளிமையானவை – மேலும் அதற்காக போராடுவது மிகவும் கடினமானது. மக்களுக்கான பொருளாதாரக் கொள்கைக்கு போராடுவதே பணி என்பதை நாம் கண்டவுடன், பானர்ஜி போன்ற பொருளாதார வல்லுநர்கள் சிக்கலின் ஒரு பகுதியாகிவிடுவார்கள் என்பது கண்கூடு.

பொதுத்துறைகளில் முதலீடு செய்வது தான் வறுமைக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு என்று சந்தை அடிப்படைவாதத்தை மறுக்கின்ற வல்லுனர்கள் பலர் கூறுகிறார்கள். அதற்கு பதிலாக, தற்போதுள்ள முதலீடுகள் கூட மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதே பானர்ஜியின் பரிந்துரை. அவரை ஏழைகளின் மீட்பனாக அறிவிப்பதற்கு முன், அவரது உலகளாவிய அடிப்படை வருமான பரிந்துரை பற்றிய பார்வையானது மாநில சேவைகளை தனியாற்கு விற்பதற்கும் அதை குறைப்பதற்குமான பரிந்துரைகளுடன் வருகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ( கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதற்கான ஒரு சட்டம் ) ஊதியம் வழங்குவதற்கான பானர்ஜியின் ஆதரவானது இந்தச் சட்டம் நாளடைவில் அகற்றப்பட வேண்டும் என்ற புரிதலுடன் வருகிறது.

அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு மறுவுற்பத்தி செய்யப்படுகிறது :

பானர்ஜியின் மேட்டுக்குடி சார்ந்த தாராளமய கொள்கையானது ஒரு பழமைவாத பக்கத்தைக் கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, தாராளமய பொருளாதார வல்லுனரும், 1991 ல் தாராளமய கொள்கைகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்தியவருமான மன்மோகன் சிங், தற்போதைய நெருக்கடிக்கு எதிரான குரலாக வியந்தோதப்படுகிறார். அந்த அழிவுகரமான பொருளாதார மறுசீரமைப்பு தான் தற்போதைய வேலையின்மை (இது ஒரு நுகர்வுப் பிரச்சினையாக தற்போது கருதப்படுகிறது) , கட்டுப்பாடற்ற நிழல் வங்கி மற்றும் வரி ஏய்ப்பிற்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்தது. விளைவாக, சிறிய மாற்றங்களுக்கு கூட தனியார் துறைகளுக்கு துண்டு துண்டாக நாட்டை விற்பதுதான் அரசாங்கத்தின் ஒரே சாத்தியமான எதிர்வினையாக இருக்கிறது.

இந்தியாவின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததனாலல்ல மாறாக பணமதிப்பழிப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிகள் நடைமுறைபடுத்தப்பட்ட காரணமாகதான். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் கட்டங்கள் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு ஒரு நெருக்கடியாக இருக்கின்றன. பல பத்தாண்டுகளாக கிடைத்த பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகு, 1% பணக்கார இந்தியர்கள் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட செல்வத்தை வைத்திருக்கிறார்கள். அதே சமயம் 60% பேர் 5% க்கும் குறைவான செல்வத்தையே வைத்துள்ளனர். மோடியின் பாரதிய ஜனதா கட்சியினர் திறமையற்றவர்களாக இருந்தாலும் இந்த சூழ்நிலையை அவர்கள் உருவாக்கவில்லை. இது மோடியின் தோல்வியடைந்த பொருளாதார நிர்வாகத்தை மன்னித்து அவரை விடுவிப்பதற்காக அல்ல, ஆனால் அந்த தோல்விக்கு அவரது போட்டியாளர்களான தாராளவாத பொருளாதார வல்லுனர்களை உட்படுத்துவதும் ஆகும். இந்த நெருக்கடியை உருவாக்கிய அதே நபர்கள் இப்போது அதிலிருந்து நம்மை மீட்பார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

அபிஜித் பானர்ஜியின் நோபலுக்கு தகுதியான பங்களிப்பானது NREGA ஊதியத்தை வழங்கக் கோரவில்லை: இது ஏற்றத்தாழ்வு மற்றும் பொதுத்துறைகள் பற்றிய விவாதங்களை வறுமை ஒழிப்பு நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்குவதாக இருக்கிறது. உண்மையில், பலரும் நீண்ட காலமாகவே NREGA ஊதியத்தை அனைத்து தொழிலாளார்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டு வருகின்றனர். பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ் (Jean Dreze) நோபல் பரிசு வென்ற இருவருடன் சேர்ந்து பல ஆண்டுகளாகவே இதற்கு குரல் கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் ஆதார் மற்றும் உலகலாவிய அடிப்படை வருமானம் (பொதுத்துறை முதலீடுகளுக்கு மாற்றாக ஒரு சிறு தொகையை குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை ஏழைகளின் வங்கிக்கணக்கிற்கு பரிவர்த்தனை செய்வது) ஆகியவற்றின் பிரச்சாரத்தை கடுமையாக எதிர்க்கிறார். வறுமை ஒழிப்பிற்கான இன்றியமையாத விடயங்களுக்கு குரல் கொடுக்கும் அதே வேளையில் மோடி அரசாங்கத்தையும் கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் யாரும் ட்ரீஸிற்காக பெருமையடையவில்லையே ஏன்? பானர்ஜி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

நிபுணர்களிடம் குருட்டு நம்பிக்கை வைத்து விட்டு சுதந்திரமான விமர்சன சிந்தனையைப் பற்றி வெறும் வாயை மெல்லுவது பலனளிக்காது.

ஜனநாயகக் கண்காணிப்பு :

பாஜகவின் அதிகாரத்தை பொருளாதார வல்லுநர்களின் அதிகாரத்துடன் மாற்றுவதற்கும், இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுடன் மாற்றுவதற்கும் பதிலாக, உண்மையான மாற்றத்திற்காக ஜனநாயக ஆய்வு மற்றும் விவாதங்களால் அவர்களது அதிகார பீடத்தை வீழ்த்த வேண்டும்.

NDTV ரவிஷ்குமாரின் நோபல் பரிசு வெற்றியை குறித்த ஒரு முன்மாதிரியான கவரேஜ் இதைச் செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறது. பானர்ஜியை தனது சொந்த-மோடி எதிர்ப்பு அரசியல் அடையாளமாக்குவதற்கான வாய்ப்பை எதிர்கொண்ட குமார், அதற்கு பதிலாக அதனை வறுமை ஒழிப்பு குறித்த அரசியல் மற்றும் அறிவார்ந்த விவாதமாகப் அதை பயன்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் பானர்ஜியின் பணிகள் குறித்து கருத்துத் தெரிவிக்க ஒரு மாற்று சிந்தனை கொண்ட நிபுணரையும் அத்துடன் ஒரு எச்சரிக்கையையும் கொண்டு வருகிறார்.

”யாராவது நோபலை வென்றால் குதிக்க வேண்டாம் இல்லையென்றால் அரசியல்வாதிகளின் லட்டு போன்ற இனிமையான சொற்கள் தான் நமக்கு மிச்சமிருக்கும்” என்று அவர் எச்சரித்தார். அந்த எச்சரிக்கையை நாம் செவிமடுப்பது நல்லது.

பின்குறிப்பு : எழுத்தாளரும் கல்வியாளருமான அபர்ணா கோபாலன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். கிராமப்புற இந்தியாவில் ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமையின் மறுவுருவாக்கம் குறித்து அவரது ஆய்வு கவனம் செலுத்துகிறது.


கட்டுரையாளர் : Aparna Gopalan
மொழியாக்கம் :
சுகுமார்
நன்றி : ஸ்க்ரால்

 

சிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் !

0

சிலி நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத அளவுக்கு  சுமார் 12 இலட்சம் பேர் பங்குபெற்ற பிரம்மாண்ட பேரணி முதலாளித்துவத்தின் அடிவயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

உலக கந்துவட்டிக் குழுமத்தின் தலைமையகமான சர்வதேசிய நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.) கொடுத்த அழுத்தத்திற்கு உடன்பட்ட சிலி ஜனாதிபதி செபஸ்டியான் பிஞேரா, மேற்கொண்ட பொருளாதார சிக்கன நடவடிக்கையினால் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துவிட்டன. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தையே நம்பியிருந்த மாணவ மாணவிகள் பெரும் போராட்டத்தை அரசுக்கெதிராக நடத்தத் தொடங்கினர்.

மேலும் படிக்க :
சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்

ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இது மக்கள் போராட்டமாக மாறி சுமார் 12 இலட்சம் மக்கள் இப்போது வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். அகுஸ்டோ பினோச்சே-யின் சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய போராட்டமாக இந்தப்போராட்டம் வர்ணிக்கப்படுகிறது. பிஞேரா-வின் அரசோ ஒரு யுத்தத்திற்குத் தயாராவதைப் போன்று ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, பீரங்கிகளையும், இராணுவத்தையும் குவித்து போராட்டத்தை முடக்க நினைக்கிறது.

18 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் மற்றும் 7000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மக்கள் போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்து கொண்ட அதிபர் பிஞேரா தொலைக்காட்சி மூலம் பேசுகையில், மக்களின் கோரிக்கைகள் என்னவென்று தெளிவாகப் புரிந்து கொண்டேன்; நடந்தவற்றிற்காக மன்னிப்பு கோருகிறேன்;  மேலும் மின்சாரக் கட்டண உயர்வை இரத்து செய்ய இருக்கிறேன். அதோடு கூட குறைந்தபட்ச வருமானமாக மாதத்திற்கு 480 டாலர்கள் கிடைப்பதை உறுதி செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆனால் இவை எதுவும் வேண்டாம் என்று கோரும் மக்கள், பிஞேரா ஆட்சியை விட்டு விலக வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என்கின்றனர்.  சிலி நாட்டு மக்களில் 29% மக்கள் மட்டும் பிஞேரா-வின் ஆட்சி மீது நல்ல அபிப்ராயம் கொண்டிருக்கின்றனர். மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் சர்வே ஒன்றில் 83% மக்கள் போராட்டத்திற்கு தங்களின் பேராதரவைத் தருவதாக அறிவித்துள்ளனர். சிலி மக்களின் போராட்டம் வெல்லட்டும், முதலாளித்துவமும் அதன் தீய சக்திகளும் ஒழியட்டும்.

Chile Protest 1அக்டோபர் 23, 2019 அன்று நடந்த ஒரு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் ஒருவன் ‘ என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா, எனக்கு என் எதிர்காலம்தான் மிக முக்கியம்’ என்று எழுதிய பதாகையுடன் போராட்டக்களத்தில் இருக்கும் காட்சி.

மெரினா எழுச்சி போன்றதொரு மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் சிலி நாட்டின் தலைநகரம் சான்டியாகோ.

ஐ.எம்.எஃப் மற்றும் சிலி அதிபர் பிஞேரா இருவரும் 12 இலட்சத்திற்கும் அதிகமானோரை வீதிக்கு வரவழைத்துவிட்டனர்

மக்கள் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் எடுக்கப்பட்ட மிக நேர்த்தியான புகைப்படம் ஒன்று . சிலியின் மப்பூச்சே பழங்குடியினரின் கொடி உச்சத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

சாட்டிலைட் புகைப்படம்.

சிலி-யைப் புரட்டிப் போடும் மக்கள் சூறாவளி.

வீதிகளில் பாயும் மக்கள் பெருங்கடல்.

புதிய உலகை காணத்துடிக்கும் விழிகளே! சிலியைப் பார்.!

தங்கள் வாழ்வுக்காக களமிறங்கியுள்ள இளம் தலைமுறை.

போராட்டத்தின் ஒற்றைக் குரல் கூட ஓங்கி ஒலிக்கும்.

ஒரு கையில் ஆண்ட்ராய்ட் போன்; மறு கையில் தேசியக் கொடி. கண்முன்னே போராட்டத் தீ.


– வரதன்
நன்றி : Redfish

நூல் அறிமுகம் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு

பெரியாரும் அம்பேத்கரும் இந்து மதத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து ஒரே நேர்கோட்டில் பயணித்து களமாடியவர்கள். இந்து மதம் ஒழியாமல் சாதி ஒழியாது என்று பிரகடனம் செய்த புரட்சியாளர்கள் என்பது வரலாறு.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதைக் கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர புராணங்களை பொசுக்கிய இரு பெருநெருப்பின் சிறு பொறியை – வரலாற்றைத் திரிக்கும் வன்முறையாளர்களுக்குப் பதிலடியாகத் தருகிறது இந்நூல். (நூலின் அறிமுகத்திலிருந்து)

பெருங்குடி மக்களாகிய ஆதிதிராவிடர்கள் என்று சொல்லப்படும் நீங்கள் இன்று சமூகத்தில் கடை ஜாதி மக்களாக, கீழ்மைப் படுத்தப்பட்ட மக்களாக, உடலுழைப்பு செய்தே வாழவேண்டிய பாட்டாளி மக்களாக ஆக்கப்பட்டு இருக்கிறீர்கள். இரண்டாவது, நீங்கள் அத்துணைபேரும் தொழிலாளர்கள். இவை இரண்டைப் பற்றியும் (அதாவது கீழ்ஜாதி – பாட்டாளி மக்கள் என்பது பற்றி) பேசுதல் இந்தச் சமயத்தில் மிகப் பொருத்தமாயிருக்கும் என்று நான் கருதுகிறேன்.

இந்நாட்டில் எத்தனையோ அரசியல், பொருளாதார, சமூக சீர்திருத்தக்கழகங்கள் இருந்தாலும் எல்லா ஸ்தாபனங்களும், உங்களுக்கு உள்ள இழிவு, உழைப்பு பற்றிக் கவலைப்படுவதில்லை… இவை மாற்றமடைய ஏதாவது மார்க்கமுண்டா? அல்லது இப்படியே தான் நீங்கள் வாழ்ந்து மடிய வேண்டுமா? இதை நன்றாக நீங்கள் மனதில் படிய வைத்துக் கொள்ளுங்கள்.

என்ன செய்தால் இவ்விழிவு நீங்கும்? இவ்விழிவு உங்களுக்கு ஏற்பட்டது எதனால்? படிப்பு இல்லாததாலா? அல்லது பணம் இல்லாததாலா? அல்லது அறிவோ, உழைப்போ, ஒழுக்கமோ இல்லாததாலா? எதனால் நீங்கள் இழிமக்களாக்கப்பட்டீர்கள்? உங்களில் பொறுப்புள்ள பெரிய தலைவர்கள் இல்லாததாலா? அல்லது யோக்கியமான மக்கள் இல்லாததாலா? அல்லது உங்களுக்கு என்று ஒரு மகாத்மா, கோவில், குளம், சாமி இல்லாததாலா? இல்லை, இல்லை, முக்காலும் இல்லை. ஏன்? படிப்பு வாசனையற்ற எத்தனையோ பிற ஜாதி மக்கள் உயர் ஜாதியினராக இன்னும் இருக்கிறார்கள் அல்லவா? பணமில்லாத எத்தனையோ அன்னக்காவடிகள், பிச்சையால் பிழைப்பவர்கள் இன்றும் உயர் ஜாதியினராக இருக்கிறார்களே, எத்தனையோ அயோக்கியர்களும், பொறுப்பற்ற சோம்பேறிகளும் ஒண்ணாம் நம்பர் பித்தலாட்டக்காரர்களும் கேடிகளும், மடையர்களும் இன்றும் பெரிய ஜாதியாய் இருக்கவில்லையா?

படிக்க:
சாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா ?
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !

… ஆகவே, இந்த இழிவின் மூலகாரணம் என்னவென்று சிந்தித்துப் பார்த்து அவ்விழிவு உங்கள் சந்ததிக்கும் என்றென்றுமே திரும்பி வரமுடியாதபடி பரிகாரம் தேடுவதுதான் உண்மைச் சீர்திருத்தவாதியின் கடமை. இதைவிட்டு மந்திரியாகி விட்டால் இழிவு நீங்கிவிடும் என்றோ , கவர்னர், சட்டசபைத் தலைவர் ஆகிவிட்டால் இழிவு நீங்கிவிடும் என்றோ நினைப்பது அசல் பைத்தியகாரத்தனம். மந்திரியாயுள்ள போதும் அவன் இழிஜாதிதான். அவ்வுத்தியோகம் உள்ளவரை அவ்விழிவு கொஞ்சம் மறைக்கப்பட்டு இருக்கலாமே தவிர, அவ்விழிவு அடியோடு நீங்கிவிடாது.

ஒருவனுக்கு மலேரியா காய்ச்சல் வந்திருந்தால் அவனுக்கு கொய்னா மாத்திரை கொடுத்துவிட்டால் மட்டும் அவ்வியாதி நீங்கிவிடுமா? அந்த சுரம் எதனால் வந்தது? என்று சிந்திக்கவேண்டும். கொசுவினால் வந்ததென்றால் அக்கொசுவைப் போக்க மார்க்கம் கண்டுபிடிக்க வேண்டும். அதற்குக் கொசுவலை போட்டுக் கொண்டால் மட்டும் போதுமா? படுத்துக் கொள்ளும் போதுதான் கொசுவலை போட்டுக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் கொசு கடிப்பதாயிருந்தால் அதற்கென்ன செய்வது? கொசுவுக்குப் பயந்து நாள் முழுவதுமே கொசுவலைக்குள் புகுந்து கொண்டிருப்பதா? அல்லது அக்கொசுக் களை விசிறி, விளக்குமாறு கொண்டு விரட்டுவதா? அப்படித்தான் எத்தனை காலம் அவற்றை விரட்டிக் கொண்டிருக்கமுடியும்? ஆகவே, அந்தக் கொசுக்கள் எங்கு, எதனால் உற்பத்தியாகின்றன என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும்.

… ஆகவே, நம் சமூகத்தின் வியாதிக்குக் காரணமான இவ்விழி ஜாதிக் கொசுக்கள் எந்த கசுமால ஜலதாரையில் உண்டாயின என்று நாம் ஆராய்தல் வேண்டும். ஆராய்ந்து பார்த்தால் தெரியும். இந்து மதம் என்ற கசுமால நீர் வருணாஸ்ரமம் என்ற சாக்கடையில் சென்று கொண்டிருப்பதால் இவ்விழி ஜாதி என்ற கொசுக்கள் தோன்றி நமக்குத் தொல்லை என்னும் மலேரியா காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இந்து மத வருணாஸ்ரம தருமத்தை ஒப்புக் கொண்டதால்தான் நீங்கள் இன்று இழிஜாதிகளாய் இருக்கிறீர்கள்.

… நீங்கள் இழிமக்களாய் இருக்க, நீங்கள் இந்து மதத்தை ஒப்புக் கொண்டதுதான் காரணமே ஒழிய, வேறென்ன நீங்கள் செய்து விட்டீர்கள்? நாங்களென்ன பாபிகளா? பாடுபடாதவர்களா? அல்லது நோய் கொண்டவர்களா?

ஆகவே, உங்களுடைய இந்த இழிவு நீங்க வேண்டுமானால் நீங்கள் உங்களை இழி மக்களாக்கிய இந்த இந்து மதத்தை ஒன்று ஒழிக்கவேண்டும் அல்லது அதைவிட்டு நீங்கவேண்டும்.  (தந்தை பெரியார், விடுதலை – 10.12.1947. ) (நூலிலிருந்து பக். 9-13)

… சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்து மதம் மனித நல முன்னேற்றக் கோட்பாடுடையது என்று கூறுவதற்கு முடியாததாக உள்ளது. எனவேதான், பால்ஃபோரின் மொழியில் சொல்வதென்றால் இந்து மதம் ஊடுருவினால் சாதாரண மனித இனத்தின் உள்ளார்ந்த வாழ்வினைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகாது. அதனால் ஏதாவது செய்ய முடியுமென்றால், அது அவர்களை முடக்கிவிடக் கூடியது மட்டுமே. சாதாரண மனித உள்ளங்களுக்கு ஊட்டமளிக்கக் கூடியதோ, சாதாரண மனிதத் துயரங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியதோ, சாதாரண மனிதர்களின் நலிவுகளுக்கு உதவக்கூடியதோ இந்துமதத்தில் எதுவும் இல்லை. பயனற்ற போராட்டத்திற்குப் பின் மரணமடையச் செய்யக்கூடிய பிறப்பைத் தரும் இயற்கையின் நினைக்க முடியாத சக்தியை நேருக்கு நேராகச் சந்திக்கும் இருளில் நிறுத்துகின்றது. கொடூரமான மதப் புறக்கணிப்பை விட எவ்வகையிலும் கொடுமை யில் குறைவில்லாத வகையில் கடவுளோடு மனிதனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் செய்துவிடுகிறது.

இந்து மதத்தின் தத்துவம் இத்தகையதுதான். அது உயர்ந்த மனிதனின் சொர்க்கம். சாமானிய மனிதனின் மீளமுடியாத நரகம். – அம்பேத்கர். (நூலிலிருந்து பக்.16)

நூல் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு
ஆசிரியர் : தந்தை பெரியார் – அம்பேத்கர்

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
தொலைபேசி எண் : 94438 22256 | 94421 28792

பக்கங்கள்: 32
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : periyarbooksudumalai

ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் தனித்துவத்தை படைத்த ஆசிரியர் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 01

தனிநபர் (கடைசி, 170-வது நாள்)

லா இருநூறு பக்கங்களைக் கொண்ட நான்கு பெரிய நோட்டுப் புத்தகங்களில் எனது ஆறு வயதுக் குழந்தைகளுக்கு நான் படிப்பு சொல்லித் தந்ததைப் பற்றியும் குழந்தை வளர்ப்பைப் பற்றியும் எனது மனப்பதிவுகளை நாட் குறிப்பாக எழுதியுள்ளேன். என் கண் முன்னரே அவர்கள் வளர்ந்த போதிலும் எனது வியப்பை என்னால் மறைக்க இயலவில்லை. இவர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு பாய்ச்சல் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் கல்வியாண்டு முடிந்து நான் நீண்ட நாட்களுக்குக் குழந்தைகளிடமிருந்து விடைபெறும் போதும் ஒரு சோகமயமான மகிழ்ச்சி என்னைத் தழுவும். அவர்களுக்காக மகிழ்ச்சியடையும் நான் அதே சமயம் அவர்களை விட்டுப் பிரிய வேண்டியுள்ளதே என்று வருந்துகிறேன். எங்களுக்குக் கவலை தந்த விஷயங்கள், மகிழ்ச்சியளித்த சம்பவங்கள், எங்கள் ஏமாற்றங்கள், நாங்கள் எப்படி வாழ்ந்தோம், கல்வி கற்பதிலும் வளர்ப்பிலும் எப்படிப்பட்ட இடர்ப்பாடுகள் எங்கள் முன் தோன்றின, நாங்கள் இவற்றை எப்படிச் சமாளித்தோம் ஆகிய எல்லாமே இந்தப் பெரிய நோட்டு புத்தகங்களில் உள்ளன.

ஒவ்வொரு குழந்தையின் மன நிலையும் எப்படி உருவாகியது என்பது பற்றிய உண்மைகள் இதில் உள்ளன. என் வகுப்புக் குழந்தைகள் ஒவ்வொருவரையும் ஒரு தனி நபராக உருவாக்க நான் முயன்றேன், ஏனெனில் மனிதர்களின் மகிழ்ச்சிக்கான நவீனப் போராளியை இந்தத் தனிநபரில் தான் நான் காணுகிறேன். இலட்சியங்கள், நோக்கங்கள், சித்தம், அறிவு, உணர்வுகள், மனிதநேயம் ஆகியவற்றின் மிகச் சிறப்பான, ஈடு இணையற்ற கலவையாகத்தான் நான் மனிதனைப் பார்க்கிறேன். எனது சின்னஞ்சிறு வகுப்பு மாணவர்களிடம் முதல் நாளிலிருந்தே இந்தக் கலவையை ஏற்படுத்த ஆரம்பித்தேன்; மூன்றாண்டுகள் கழித்து இவர்கள் பள்ளி வாழ்க்கையின் அடுத்த படியில் காலடி எடுத்து வைப்பார்கள், அப்போது எனது சக ஆசிரியர்கள் இப்பணியைத் தொடருவார்கள் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் இந்தத் தனித்துவத்தை நான் எப்படிப் படைத்தேன்? 800 பக்கங்களில் அடங்கியுள்ள ஏராளமான விஷயங்களைப் பார்க்கிறேன்; இவை பின்வரும் முக்கிய முடிவிற்கு என்னை இட்டுச் செல்கின்றன.

தன்னைத் தானே சுயமாக அறிந்து கொள்ளும் போது, சுயமாக தன் நிலையைத் தானே நிர்ணயம் செய்யும் போது, தன்னுடன் நடக்கும் போராட்டத்தில் தான் தனிநபர் உருவாகிறான்; குழந்தை வளர்ப்பும் கல்வி போதனையும், குழந்தையை இப்பாதையில் வழிநடத்தி, இப்போராட்டத்தில் அவன் வெற்றி பெற உதவுவதைத் தான் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

மேற்கூறிய போராட்டத்தில் தோல்வி ஏற்படக் கூடும். ஆறு வயதுக் குழந்தைகளின் விஷயத்தில் மேற்கூறிய கருத்து நிலை திட்டவட்டமான உட்பொருளைப் பெறுகிறது; அதாவது பெரும் கவனம் தேவைப்படுகிறது, ஏனெனில், தன்னுடனேயே நடக்கும் இப்போராட்டம் தனிநபரின் உயர்விற்கு மட்டுமின்றி அழிவிற்கும் வழிகோலக் கூடும், மோசமான சூழலில் தன்னைத் தானே சுயமாக அறியும் குணமும், சுயமாகத் தன் நிலையை நிர்ணயிக்கும் தன்மையும் குழந்தையின் மனதில் கீழான கருத்துக்களையும் உறவு முறைகளையும் தோற்றுவிக்கக் கூடும்.

இந்த நோக்கிலிருந்து என் நாட்குறிப்புகளைத் திருப்பிப் பார்ப்பதென முடிவு செய்தேன்.

செப்டம்பர் 5. வார்த்தைகள், வாக்கியங்களின் வீரதீரம்

முன்னர் நான், வார்த்தைகளும் வாக்கியங்களும் எளியவையாக, புரியக் கூடியவையாக இருக்கின்றனவா என்று பார்த்துத் தேர்ந்தெடுத்தேன். உதாரணமாக, வார்த்தைகள் தெட்டத் தெளிவானவையாக, குழந்தைகளுக்கு புரியக் கூடியவையாக இருக்க வேண்டும் (டெஸ்க், சூரியன், வெங்காயம்); வாக்கியங்களும் இதே மாதிரியானவையாக இருக்க வேண்டும் (குழந்தைகள் முற்றத்தில் விளையாடுகின்றனர்; கீகா தோட்டத்திற்கு உலாவச் சென்றான்; அப்பா மகளுக்குப் பரிசு கொண்டு வந்தார்). இப்படிப்பட்ட வாக்கியங்களும் வார்த்தைகளும் “இதற்கென்ன பொருள்?” என்று அவர்களை சிந்திக்க வைக்காது; எனவே, இவை வார்த்தைகள், வாக்கியங்களைப் பகுப்பாய்வு செய்யக் கற்றுத் தர உதவுமென நான் எண்ணினேன்…

ஆனால், தாய் மொழிப் பாடத்தின் போது, அதாவது நாட்டுப் பற்றையும் தனிநபர் உணர்வுகளையும் வளர்க்க வேண்டிய பாடத்தில் இப்படிப் பட்ட முழு முறையியல் விஷயங்களை ஏன் தர வேண்டும்? உள்ளடக்கத்தில் எளிய, புரியும்படியான, ஆனால் தனிநபர் உணர்வுகளைப் படைக்கும் நிபந்தனையை உட்பொருளாகக் கொண்ட வார்த்தைகள், வாக்கியங்களைக் கொண்டே குழந்தைகள் இவற்றைப் பகுப்பாய்வு செய்யக் கற்றுக் கொள்ளலாம். தாய் மொழிப் பாடப் பயிற்சிக்கு விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதில் இப்படிப்பட்ட அணுகுமுறையை வார்த்தைகள், வாக்கியங்களின் வீர தீரக் கோட்பாடு என்றழைக்கலாமா? வார்த்தைகள், வாக்கியங்களை இந்தக் கோட்பாட்டின் படிதான் தேர்ந்தெடுக்க வேண்டுமென நான் கூறவில்லை, ஆனால் இது பயிற்சிகளின் சாரத்தைச் செழுமைப்படுத்தும், இவற்றிற்கு பன்முகத் தன்மையை அளிக்கும், இவற்றிற்கு வளர்ப்புப் போக்கைத் தரும்.

இன்று அட்டைவில்லைகளின் உதவியோடு பின்வரும் வாக்கியத்தைக் கரும்பலகையில் எழுதினேன். “புரோமித்தியஸ் நெருப்பை எடுத்துச் சென்றான்!”

“இந்த வாக்கியத்தை எல்லோரும் சேர்ந்து ‘படியுங்கள்’!”

குழந்தைகள் ஒரே குரலில் இதைப் படித்தனர்.

“புரோமித்தியஸ் யார்?” என்று நீக்கா என்னைக் கேட்டான்.

அனேகமாக, இப்படிப்பட்ட கேள்விகள் தான் கல்வி நிபுணர்களை அச்சுறுத்தக் கூடும்; “புரோமித்தியஸ் நெருப்பை எடுத்துச் சென்றான்” என்ற வாக்கியத்திற்குப் பதில் “தாத்தா நெருப்பை மூட்டினார்” என்ற வாக்கியத்தைச் சொல்ல இவர்கள் விரும்புகின்றனர். ஆனால் இந்த அச்சம் வீணானது இப்படிப்பட்ட கேள்விகள் வருவது நல்லதுதான். நான் குழந்தைகளிடம் சொன்னேன்.

“புரோமித்தியஸ்’ என்ற இப்பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! வீட்டிற்குப் போனதும் புரோமித்தியஸ் பற்றிய புராணக் கதையைச் சொல்லுமாறு பெரியவர்களிடம் கேளுங்கள். சரி, இப்போது சொல்லுங்கள்: இந்த வாக்கியத்தில் எவ்வளவு வார்த்தைகள் உள்ளன?”

இந்த வாக்கியத்தில் ஒரு பண்டைய கதை அடங்கியிருப்பதானது, சரியாகச் சொன்னால், இதன் வீரதீரத் தன்மை, இதன் வார்த்தைப் பகுப்பாய்விற்கும், வார்த்தைகளை மாற்றிப் போடவும், எந்த வரிசையில் வார்த்தைகள் இருந்தால் நன்றாயிருக்கும் என்று கவனிக்கவும் சிறிது கூட இடையூறாக இல்லை.

ஒலிப் பகுப்பாய்வு முறையைக் கற்றுக் கொள்ள குழந்தைகளுக்கு “குடிமகன்” எனும் வார்த்தையைத் தந்தேன். இதில் ஒலிகளின் வரிசையைக் கண்டுபிடித்து, வட்டக் குறியிடுவது, “பாட்டி” என்று நன்கு தெரிந்த ஒரு வார்த்தையின் விஷயத்தில் இவற்றைச் செய்வதை விட எவ்விதத்திலும் அதிகச் சிக்கலானதாக இருக்கவில்லை.

வார்த்தைகள், வாக்கியங்களை எழுதும் பொது முறைகளை கிரகிப்பதில் எனது வகுப்புக் குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்க நான் சில வாக்கியங்களையும் வார்த்தைகளையும் தேர்ந்தெடுத்தேன்.

வார்த்தைகள்: தாய்நாடு, மனிதன், வீரன், சித்தம், உழைப்பு, கட்டுமானம், முயற்சி, போராட்டம், கடமை, மென்மை, அன்பான, நாகரிகமான, நேர்மையான, இன்ன பிற.

வாக்கியங்கள்: நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய்; நல்லதைச் செய்ய விரைந்து செல்; மக்களுக்கு மகிழ்ச்சியைத் தா; உழைப்பு மனிதனை மேன்மைப்படுத்துகிறது; சிறுவயதிலிருந்தே நேர்மையானவனாக இரு.

இந்த வார்த்தைகள், வாக்கியங்களின் உட்பொருளை நான் ஒரு போதும் குழந்தைகளுக்கு விளக்க மாட்டேன். அவசியமெனில், பெற்றோர்களிடம் சென்று கேட்குமாறு சொல்வேன். “நேர்மை”, “கடமை” என்றால் என்ன, அல்லது “நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய்” என்றால் என்ன பொருள் என்றெல்லாம் பெற்றோர்களிடம் கேட்கட்டும்.

படிக்க:
குழந்தை சுஜித்: ஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் !
மதுவால் பள்ளி மாணவி தற்கொலை : யார் குற்றவாளி ?

வார்த்தைகள், வாக்கியங்களின் இப்படிப்பட்ட சாரம் குழந்தைகளுக்கு என்ன தரும்? வார்த்தைகள், வாக்கியங்களை எழுதும் முறைகளை கிரகிக்க இது நிச்சயமாக இடையூறு செய்யாது, ஒருவேளை இன்றைய குழந்தைகள் எப்போதாவது வீரஞ்செறிந்த வகையில் சிந்திக்க உதவுக் கூடும். இவ்வாறாக, பின்வரும் முதுமொழியை” எழுதுகிறேன்:

மொழிப் பயிற்சிகளின் உட்பொருளைத் தேர்ந்தெடுக்கும் போது இன்று குழந்தை அந்தந்தப் பேச்சு, எழுத்து முறையை கிரகிப்பதை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், வெகுவிரைவிலோ, நீண்ட காலத்திற்குப் பின்னரோ அக்குழந்தை தனி நபராக மாறுவதற்குரிய அடிப்படைகளில் ஒன்றாக இது விளங்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

குழந்தை சுஜித்: ஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் !

2

ந்தாண்டு தீபாவளியை குழந்தை சுஜித்-ஐக் (2 வயது) காப்பாற்ற வேண்டி பிரார்த்தனைகளுடன் கழித்தனர் பெரும்பாலான தமிழக மக்கள். சுஜித்-ன் தந்தை பிரிட்டோ திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர். சுஜித்தின் தாய் கலாமேரி. மூத்த அண்ணன் புனித் ரோஷன் (வயது 4). தனது வீட்டின் அருகே விவசாயம் செய்து வந்த பிரிட்டோ விவசாயம் இல்லாத நாட்களில் கட்டிடத் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தார்.

சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் சொந்த தேவைகாக போடப்பட்ட ஆழ்குழாய்க் கிணறு கடந்த ஆண்டு தூர்ந்து போனதை அடுத்து அதனை மூடுவதற்காக மேல்மட்டம் வரை மண்ணை கொட்டி வைத்துள்ளார். அந்த இடத்தில் தற்போது சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையை அடுத்து கிணற்றை மூடியிருந்த மண் கீழே இறங்கியுள்ளது. இந்நிலையில், 25-ம் தேதி மாலை 5:30 மணி அளவில் சுஜித் அந்த கிணற்றின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தவன் எதிர்பாராத வகையில் அதில் தவறி விழுந்துள்ளான்.

அப்போது பிரிட்டோ கூலி வேலைக்கு சென்றிருந்தார். சுஜித் விழுந்ததைக் கண்ட கலாமேரி அலறிச் சத்தமிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். பகுதி மக்கள் அளித்த புகாரை அடுத்து மணப்பாறை தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். இதற்கிடையே தகவல் கிடைத்து பிரிட்டோவும் வந்துள்ளார். தீயணைப்புத் துறை குழந்தையை மீட்பதற்கு எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்காத நிலையில் சுஜித்தின் நிலைமை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவத் துவங்கியது. #savesujith மற்றும் #savesurjith ஆகிய ஹேஷ்டேகுகளில் சுஜித் ஆழ்குழாய்க் கிணற்றில் மாட்டிக் கொண்டிருப்பது குறித்த தகவல்கள் தீயாய்ப் பரவத் துவங்கியது.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படை, போலீசு சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் ஒரு படை என அதிகார வர்க்கமும், பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சம்பவ இடத்திற்கு வந்து குவிந்தனர். ரஜினி கமல் துவங்கி அனைத்து நடிகர்களும், ஹர்பஜன் சிங் போன்ற விளையாட்டுத் துறை பிரபலங்களும் சுஜித் காப்பாற்றப்பட வேண்டி பிரார்த்திப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோரும் சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளனர். அமைச்சர்கள் வெல்லமண்டிநடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி, கலெக்டர் சிவராசு ஆகியோர் அந்த பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.

இதற்கிடையே 4 பொக்லைன் எந்திரங்கள் உள்ளிட்ட 5 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுள்ளது. இதற்காக அந்த பகுதியில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் முத்துகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் சிறிய டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையின் அசைவுகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

கிணறு இருக்கும் பகுதியில் நிலத்தின் கீழே பாறைகள் இருப்பதால் 26-ம் தேதி இரவு 8.15 மணியளவில் சுமார் 17 அடி வரை மட்டுமே குழி தோண்ட முடிந்தது. எனவே மதுரையில் இருந்து, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நிபுணர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருடன் சேர்ந்து சுஜித்-ஐ மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மணிகண்டன் கண்டுபிடித்துள்ள கருவி மூலம், குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த கருவி மூலம் மீட்பு பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து கணினியால் இயங்கக்கூடிய சுருக்கு கயிறுகள் மூலம் மீட்பு பணி தொடங்கியது. இரவு 11 மணிக்கு மேலாகியும், அந்த பணி தொடர்ந்து நடைபெற்றது. குழாய்களில் கயிறுகளை விட்டு, குழாய்களை பிணைத்து ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கி, குழந்தையை மீட்க முயன்றனர்.

படிக்க :
திரை விமர்சனம் : அறம் ஒரு வரம்தான் ஆனாலும்….
♦ கூடங்குளம் அணுமின் நிலையம் : அணுக்கழிவை கொட்டுவதற்கு இடமில்லையாம் !

எனினும் குழந்தையின் கைகளில் கயிற்றை பிணைக்க முடியாததால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் மீட்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. மீண்டும், மீண்டும் கயிறுகளை ஆழ்துளை கிணற்றில் இறக்கி குழந்தையை மீட்க முயன்றும் முடியவில்லை. 27ம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு நாமக்கல்லில் இருந்து வெங்கடேசன் தலைமையில் ஐ.ஐ.டி. குழுவினர் வந்தனர். இவர்கள் தாங்கள் கொண்டு வந்த நவீன கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் அங்குலம் அங்குலமாக இறக்கினார்கள். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அந்த கருவி குழந்தை சிக்கி இருந்த இடத்தின் அருகே சென்றது. அப்போது, அங்கு குழந்தை இல்லை. அதில் இருந்து மேலும் 50 அடி, அதாவது 30 அடியில் இருந்து 80 அடிக்கு சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீட்பு குழுவினர் அந்த கருவியை மேலும் கீழே இறக்க முயன்றனர். ஆனால் அந்த இடத்தில் இருந்து அதற்கு மேல் குழி குறுகலாக இருந்ததால், அந்த கருவியை கீழே இறக்க முடியவில்லை. இதனால் அந்த கருவியை மேலே எடுத்து அதில் பொருத்தப்பட்டிருந்த கைகளை மாற்றினார்கள். பின்னர் அதிகாலை 3.50 மணிக்கு மாற்று கைகள் பொருத்தி மீண்டும் அந்த கருவி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கப்பட்டது. அந்த நவீன கருவி மூலம் குழந்தை சுஜித் வில்சன் சுவாசிப்பது உறுதி செய்யப்பட்டது.

இரண்டு நாட்களாக பல்வேறு குழுக்கள் பல்வேறு வகைகளில் முயற்சி செய்தும் இதுவரை பலன் ஏதும் ஏற்படவில்லை. திருச்சி, மதுரை, நாமக்கல், கோவை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தனித்தனி குழுவினரும், திரைப்படத்துறையில் சினிமா சண்டை காட்சிகளில் விபத்து ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் குழுவினரும் மீட்புப் பணிகளில் பங்களிக்க முன் வந்தனர்.

இதனிடையே 27-ம் தேதி மதியம் 12.15 மணி அளவில் மாநில பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் இருந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து 12.35 மணி அளவில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை குழு கமாண்டர் ஆர்.சி.ஓலா தலைமையில் 33 பேர் வந்தனர். தேசிய மீட்பு படை குழுவினர் வந்ததும், அவர்களை பணி செய்யவிட்டு, விட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மற்ற குழுவினரும் மற்றும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினரும் விலகி கொண்டனர்.

இதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அதிநவீன கேமரா பொருத்திய பிரத்யேக கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் விட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

*****

கிசோர் கே ஸ்வாமி போன்ற ஒருசில பார்ப்பனிய விசப்பூச்சிகள் தவிர்த்து விசயம் அறிந்த அனைவரும் குழந்தை சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பதைத்துக் கொண்டுள்ளனர். நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பத்தை வைத்துள்ள நாட்டில் எண்பது அடி ஆழத்தில் மாட்டிக் கொண்ட குழந்தையைக் காப்பாற்றும் தொழில்நுட்பம் இல்லை என்பதே இந்தியாவின் எதார்த்தம். இந்தியாவில் “உள்ளவர்களுக்கும்”- “இல்லாததவர்களுக்கும்” இடையே சில பல ஒளியாண்டுகள் அளவுக்கான இடைவெளி நிலவிக் கொண்டிருக்கும் எதார்த்தத்தை சுஜித் உணர்த்துகிறான்.

படிக்க :
திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் ! திருச்சி அரங்கக் கூட்டம் !
♦ கீழடி அள்ளித்தரும் சான்றுகளை பாதுகாப்போம் ! கோவை அரங்கக் கூட்டம் !

அடுத்து இது போன்ற ஒரு சம்பவம் நடந்த உடனேயே அதைக் குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கையாள்வதற்கான ஒரு முறைமையும் இல்லை. சுஜித் விசயத்திலேயே இரண்டு நாட்கள் இடைவெளியில் பல்வேறு குழுவினர் பல்வேறு வகைகளில் வெவ்வேறு கருவிகளைக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஈடுபட்ட குழுவினரில் எத்தனை பேருக்கு தொழில்முறை நிபுணத்துவம் இருக்கும் என்பதைக் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.

பல்வேறு துறைகள், பல்வேறு துறைசார் நிபுணத்துவம் கொண்ட குழுக்கள் ஒருங்கிணைந்த முறையில் செயலாற்றும் வகையிலான ஒரு மீட்புப் படை அரசிடம் இல்லை – இருக்கும் குழுவிடம் போதிய கருவிகளும் இல்லை என்பதே இந்த சம்பவத்தின் மூலம் தெரியவருகின்றது.

ஒரு திட்டத்தை முயற்சிக்கும் போதே அதன் பின் விளைவுகள், அதன் அதிகபட்ச திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாற்றை முன்னேற்பாடு செய்து கொள்ளும் எந்த வழிமுறையும் அங்கு பின்பற்றப்படவில்லை.  ஒரு திட்டம் தோல்வியடைந்த பின்னர்தான் அடுத்த திட்டம் குறித்து யோசிக்கிறது அதிகாரவர்க்கம்.   அதன் காரணமாகவே அடுத்த திட்டத்திற்கான கருவிகள் வரவழைப்பதற்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்தப் பதிவு வெளியாகும் நேரம் வரையில் சுமார் 71 மணிநேரம் ஒரு இரண்டு வயதுச் சிறுவன் குறைவான ஆக்சிஜனோடு, தண்ணீர் இன்றி, உணவு இன்றி அந்தக் குழியில் சிக்கியிருக்கிறான்.

ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழுவது என்பது தமிழகத்தைப் பொறுத்தவரையில் புதியதாக நடைபெறும் சம்பவம் அல்ல. ஆண்டுக்கு ஒரு குழந்தையையாவது இது போன்ற சம்பவங்களில் நாம் இழந்து விடுகிறோம். இதே போல மலக்குழியில் மனிதனே இறங்கி சுத்தம் செய்யும் அவலமும், அதில் விபத்து ஏற்பட்டு ஆண்டுக்கு நூற்றுக் கணக்கான தாழ்த்தப்பட்டவர்கள் உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர்.

தொழில்நுட்பத்தில் அமெரிக்காவையும் சீனாவையும் எட்டும் வகையில் நிலவுக்கும், செவ்வாய்க்கும் சேட்டிலைட் விடுவது தொடங்கி, ஆகஸ்ட் 15-க்கு போஸ் கொடுக்க போர் விமானங்களை வாங்கிக் குவிப்பது வரை சில லட்சம் கோடிகளை செலவு செய்யும் அரசுக்கு இத்தகைய மனித இழப்பைத் தடுக்கும் கருவிகளையும் கட்டமைப்பையும் உருவாக்கும் எண்ணம் துளியும் இல்லை. மாறாக பழைய நிலைமையே நீடிப்பது உறுதி செய்யப்படுகிறது.

குடிமக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு அரசால் மட்டுமே இச்சமூக அவலங்களைப் போக்க முடியும். மறுகாலனியாக்க – பார்ப்பனிய அடிமைத்தனத்தில் ஊறித் திளைத்திருக்கும் ஒரு அரசுக் கட்டமைப்பிடம் இதனை எதிர்பார்க்க முடியுமா ?

– சாக்கியன்

ஐ.எம்.எஃப் – க்கு எதிராகக் கொதித்தெழும் இலத்தின் அமெரிக்கர்கள் !

0

லக கந்துவட்டிக் கும்பலின் தலைமை நிறுவனமான சர்வதேசிய நாணய நிதியத்திற்கு எதிராக தென்னமெரிக்க நாடுகளில் கிளர்ச்சித் தீ பரவத்தொடங்கியுள்ளது. ஈகுவடார், பொலிவியா ஆகிய நாடுகளில் எழுந்த கிளர்ச்சித் தீ சிலி நாட்டில் உக்கிரமடைந்துள்ள நிலையில் இப்போது அர்ஜெண்டினியர்களும் ஐ.எம்.எஃப்-க்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

Mauricio Macri
அர்ஜெண்டினாவின் அதிபர் மொரிசியோ மேக்ரி.

உலகமயம், தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்திய மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார நிலைமை இன்று அதல பாதாளத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஆதரவின் பின்புலத்தோடு இயங்கிவரும் லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவின் அதிபர் மொரிசியோ மேக்ரி எப்படி இயற்கை வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்து நாட்டை நெருக்கடிக்குள் தள்ளினார் என்பதையும் இந்தக் காணொளி விவரிக்கிறது.

மூன்றில் ஒரு பங்கு அர்ஜெண்டீனியர்கள் வறுமையால் வாடிவருகின்றனர். உயிர்வாழ உணவும், வேலையும் தா..! எனக் கோரி இப்போது அதிபருக்கெதிராகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஐ.எம்.எஃப் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர் சில போராட்டக்காரர்களிடம் கேட்கும்போது ‘எங்கள் நாட்டை விட்டு வெளியேறு’ என்றும் ‘ஐ.எம்.எஃப் ஒரு திருட்டுக் கும்பல்’ எனவும் மக்கள் ஆக்ரோஷமாகப் பதிலளிக்கின்றனர். எதிர்காலமே இருள்மயமாகிவிட்டதாகவும்,  அரசாங்கத்தில் ஊழல் மலிந்து விட்டதாகவும், ஆளத்தகுதியற்றுப் போய்விட்டதாகவும் மக்கள் கூறுவது காணொளியில் பதிவாகியுள்ளது.

படிக்க :
சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்
♦ ஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் !

விளை நிலங்களில் ஹைட்ரோ கார்பன், கெயில் குழாய் பதிப்பு, மீத்தேன் எரிவாயு, புவிசார் குறியீடான மேற்குத்தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ, இன்னொரு புறம் சந்திராயன் 2 என்ற பெயரில் இலட்சம் கோடி ரூபாய் வீணடிப்பு, ஆனால் மக்களின் நிலைமையோ மேலும் மேலும் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவது என்ற எதார்த்த நிலை நம் நாட்டிலும் நிலவி வரும் இந்தச் சூழலில் ஆள அருகதையற்று நிற்கும் அரசுகளைத் தூக்கியெறிவதைத் தவிர உழைக்கும் வர்க்கத்துக்கு வேறுவழியில்லை என்பதை நிரூபிக்கிறது இந்த ஆவணப்படம்.


– வரதன்

திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் ! திருச்சி அரங்கக் கூட்டம் !

திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம்!
சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும்!
புஜதொமு அரங்குகூட்டம் !

திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் எனும் தலைப்பில் திருச்சியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக BHEL சமுதாய கூடத்தில் 22.10.19 அன்று அரங்குகூட்டம் நடைபெற்றது.

புஜதொமுவின் இணைப்புச் சங்கமான பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்,  ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக இணைந்து அந்த அரங்கக் கூட்டத்தை நடத்தின.

இதற்கு முன்னதாக, அரங்குகூட்டத்தின் நோக்கத்தை விளக்கும் பிரசுரத்தின் வாயிலாக பேருந்து நிலையங்களிலும், கல்லூரிகளிலும், தொழிற்சாலைகளிலும் விரிவாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இளம் மாணவர்கள், வெளியூர்களில் இருந்தும் பொருளாதார ஆய்வாளர், பேராசிரியர்களின் உரையை கேட்க பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் – புஜதொமு அமைப்பின் பொதுச் செயலர் தோழர் உத்திராபதி தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கக் கூட்டத்தில் பொருளாதார ஆய்வாளர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன், பேரா ச.அய்யம்பிள்ளை, தோழர் மா.சி. சுதேஷ்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தோழர் உத்ராபதி, பொதுச் செயலர், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் – பு.ஜ.தொ.மு., திருச்சி தனது தலைமையுரையில், ”தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கையை தீவிரமாக அமல்படுத்திவருவதால், இன்று மக்கள் வாங்கும் சக்தியை இழந்துவிட்டனர். உழைப்பு சமூகமயம் இலாபம் தனியார்மயம் என்று உள்ளது. சோசலிசத்தில் உழைப்பும் சமூகமயம் இலாபமும் சமூகமயம் என இருக்கும் என்று சுருக்கமாக எடுத்து கூறினார்.

இந்திய பொருளாதார நெருக்கடிகளும் அதன் காரணங்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய பேரா.ச.அய்யம்பிள்ளை, (செயற்குழு உறுப்பினர், CCCE) அவர்கள், ”இந்திய முதலாளிகளே முதலாளித்துவத்திற்கு எதிராக உள்ளனர் என ரகுராம்ராஜன் கூறிய கருத்தையும், சமுதாயம் முழுவதும் முதலாளிகள் சுரண்டிகொண்டே இருப்பார்கள் என்று மார்க்ஸ் கூறியதையும் விளக்கினார்.  GDP-க்கும் மக்கள் நலனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் GDP உயர உயர சாதாரண மக்கள் சொத்தை இழந்தவர்களாகின்றனர். முதலாளிகள் சொத்து மேலும் அதிகரிக்கிறது. இந்த முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பை மாற்றாமல் நாம் எந்த சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் மக்களுக்கு நலன் விளைவிக்காது” என்றார்.

பொருளாதார நெருக்கடிகளும் அதன் விளைவுகளும் என்ற தலைப்பில் உரையாற்றிய, பொருளாதார ஆய்வாளர், முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள், தனது உரையில், ”இந்த அரசுக்கு பொருளாதார அறிவு கிடையாது! முதலாளி வருமான வரி கட்டுவது அவனிடம் வேலை செய்யும் தொழிலாளியை விட குறைவாகத்தான் கட்டுகிறார்கள். இந்திய பட்ஜெட்டிலேயே பொய் சொல்லுகிறார்கள். இந்த ஆண்டு நிர்மலா சீதாராமன்  சமர்ப்பித்த   இந்திய பட்ஜெட்டில் ஒரு நம்பர் கூட கிடையாது. வரவு செலவு கணக்கே கிடையாது. உலக வர்த்தகக் கழகத்தின் பரிந்துரைப்படி இந்தியாவுக்கு எல்லை இருக்கலாம் ஆனால் இந்தியாவிற்குள் எல்லை இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் நிபந்தனை. இதுபடிதான் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை கட்டாயமாக்கினார்கள். அம்பானி ஜியோ-வுக்கு இரண்டு இலட்சம் கோடி கடன் பொதுத்துறை வங்கிகளில் உள்ளது. நாளை நட்டமென்று தப்பி ஓடுனால் நஷ்டம் மக்களுக்குத்தான். இந்தியாவில் முதலீடுகள் கடந்த பத்து வருடங்களாக இல்லை. 100 கோடி மூலதனமிட்டாலும் 100 பேருக்கு கூட நிரந்தர வேலை கிடையாது. 45 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு வேலையின்மை. முதல் உலக போருக்கும் இரண்டாம் உலக போருக்கும் இடையில் வந்தவர்கள்தான் ஹிட்லர், முசொலினி. பாசிசத்திற்கு சரியான களம் அந்த நெருக்கடிதான். அதே நிலைதான் இன்று  இந்தியாவுக்கு நடக்கிறது.

இந்த நெருக்கடியை முன்வைத்து, முதலாவதாக, இதனால் உருவாகும் லும்பன் கும்பல்கள் நாம் முன்வைக்கும் தீர்வை விட அவர்கள் சொல்லும் பாசிச தீர்வை நோக்கி செல்வார்கள். அதன் மூலம் அவர்களின் பாசிச கொள்கைகளை தீவிரபடுத்துவார்கள்.   இரண்டாவதாக, இந்த நெருக்கடியை காரணம் காட்டி எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் இனி விற்பார்கள். மேலும் மேலும் தனியாருக்கு கொடுத்து முடிந்த வரை கொள்ளை அடிப்பார்கள்” என்பதை எடுத்துரைத்தார்.

திவாலாகும் இந்திய பொருளாதாரம் சோசலிசமே மாற்று ! என்ற தலைப்பில் உரையாற்றிய, தோழர்.மா.சி.சுதேஷ்குமார், (மாநில இணைச் செயலர், பு.ஜ.தொ.மு.), ”தொழிலாளி வர்க்கம் தினந்தோறும் தனது வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். மீனவர்கள் 12 மைலுக்கு அப்பால் மீன் பிடிக்க உரிமை இல்லை. விவசாயி தற்கொலை செய்கிறான். நெசவாளிக்கு நூல் இல்லை. இவ்வாறாக உழைக்கும் வர்க்கம் மரணக் குழியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் இந்த முதலாளி வர்க்கம்தான். நல்ல கல்வி நல்ல வேலை நல்ல சம்பளம் வாழ்க்கையில் கிடைக்கவில்லை. வாழ்க்கை மிகவும் வெறுத்து போனபிறகுதான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்துவிட்டான் MRF ஆலைத் தொழிலாளி முரளி. நாம் அவருக்காக இரக்கப்படகூடாது. நமக்கு வர்க்க கோபம் வர வேண்டும். அவன் இறப்புக்கு காரணமான முதலாளித்துவத்துக்கு சவக்குழித் தோண்ட வேண்டும்” என்று உணர்த்தினார்.

 

படிக்க:
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்
தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !

மேலும், ”அன்று ஐரோப்பாவை ஆட்டியது ஒரு பூதம். அந்த பூதத்தைதான் இன்று உலகம் முழுவதும் தேடுகிறது. அது என்னதான் என்று! முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு மாற்று சோசலிச பொருளாதாரமே! ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஓட்டை வாங்கி முதலாளிகளுக்கு சேவை செய்யும் இந்த  அமைப்பு தேவையா? அனைத்தும் உழைக்கும் மக்களுக்கே என்ற சோசலிசம் வேண்டுமா?

(பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்)

அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவம் என்பது இதுவரை சோசலிசத்தில்தான் நடந்துள்ளது” என்பதை விளக்கியவர், ”இந்த ஆண்டு பிப்ரவரியில் ட்ரம்ப் தலைமையில், அமெரிக்காவில் சோசலிசம் வரக்கூடாது என முதலாளிகளுடன் இணைந்து கூட்டாக உறுதிமொழி எடுத்தனர். ஏன் இந்த பயம்? உலகம் முழுவதும் உள்ள நெருக்கடி காரணமாக உழைக்கும் மக்கள் கம்யூனிசத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். ஒருநாள் பாட்டாளிவர்க்கம் இந்த முதலாளித்துவத்தை வீழ்த்தி  கம்யூனிச சமூதாயத்தை  படைக்கும்” என தனது உரையை நிறைவு செய்தார் அவர்.

ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலர், தோழர் மணலிதாஸ் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சியின் இடையே ம.க.இ.க. கலைக்குழுத் தோழர்கள் பாடிய புரட்சிகர பாடல்கள் உணர்வூட்டின.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.
தொடர்புக்கு: 8903042388

கட்டளைக்காக காத்திருக்கும் போர் விமானங்கள் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 03

சூரியன் இன்னும் உதிக்கவில்லை. குறுகிய கோடை இரவின் மிக இருண்ட நேரம். ஆனால் போர்க்கள விமான நிலையத்தில் விமான எஞ்சின்களை சூடுபடுத்துவதற்காக அதற்குள் அவை இயக்கப்பட்டு இரைந்து கொண்டிருந்தன. காப்டன் செஸ்லோவ் பனித்துளிப் படிந்த புல் மீது வரைபடத்தைப் பரப்பி, புதிய தளத்தின் செல் வழியையும் இடத்தையும் ஸ்குவாட்ரன் விமானிகளுக்குக் காட்டினார்.

“விழிப்புடன் இருங்கள். பார்வைக்கு ஏற்பச் செயல்படுவதை விட்டுவிடாதீர்கள் நமது விமான நிலையம் மிக முன்னணியில் உள்ளவற்றில் ஒன்று” என்றார்.

ஆதவனின் முதல் கதிர்கள் வீசத் தொடங்கின. அலைபடிந்த ரோஜா நிற மூடுபனித் திடலில் இன்னும் பரவியிருந்தது. அந்த வேளையில் இரண்டாவது ஸ்குவாட்ரான் தன் கமாண்டரின் பின்னே வானில் கிளம்பிப் பறந்தது. விமானங்கள் ஒன்றையொன்று பார்வையிலிருந்து தப்பவிடாமல் தெற்கு நோக்கிச் சென்றன.

மெரேஸ்யெவும் பெத்ரோவும் தங்கள் முதலாவது சேர்ந்த பறப்பில் நெருங்கிய இணையாகச் சென்றார்கள். தன் முன்னோடியின் தயக்கமற்ற தேர்ச்சி மிக்க பறப்புத் திறமையைத் தாங்கள் பறந்த சில நிமிடங்களுக்குள் பெத்ரோவ் கண்டு கொண்டான். மெரேஸ்யெவோ வழியில் சில செங்குத்தான, திடீர் வளையங்களை வேண்டுமென்றே இட்டான். தன் பின்னோடி கூர்மையான பார்வையும் சமயோசித புத்தியும் நரம்பு உறுதியும் கொண்டிருப்பதையும் அவன் கவனித்தான்.

பெத்ரோவுக்கு ஓரளவு தயக்கமுள்ளதாயினும் நல்ல பறப்புத் திறமை இருந்தது மெரேஸ்யெவுக்கு எல்லாவற்றிலும் முக்கியமாகப்பட்டது.

புதிய விமான நிலையம் பகைவரின் துப்பாக்கி ரெஜிமென்டின் பின்புல வட்டாரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஸ்குவாட்ரன்கள் ஆயத்த நிலை இரண்டில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அர்த்தம் என்னவென்றால் விமானிகள் தங்கள் விமான அறையிலேயே இருக்க வேண்டும், முதல் வானம் ஒளிர்ந்ததுமே வானில் கிளம்பி விட வேண்டும் என்பதாகும். விமானங்கள் பிர்ச் மரக் காட்டோரத்திற்குக் கொண்டுவரப்பட்டுக் கிளைகளால் உரு மறைக்கப்பட்டன. காளான்களின் ஈரிப்பு மணம் கமழ்ந்த குளிர் காற்று காட்டிலிருந்து வீசியது. சண்டை ஆரவாரம் காரணமாகக் கொசுக்களின் நொய்யென்ற ஒலி காதில் படவில்லை. அவை விமானிகளின் முகங்களையும் கைகளையும் கழுத்துக்களையும் உக்கிரமாகத் தாக்கின.

மெரேஸ்யெவ் தலைக் காப்பைக் கழற்றி விட்டு, சோம்பலுடன் கொசுக்களை விரட்டியவாறு, காலைக் காற்றின் நறிய செழு மணத்தை அனுபவித்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பக்கத்தில் அவனது பின்னோடியின் விமானம் இருந்தது. பெத்ரோவ் அடிக்கொருதரம் இருக்கையிலிருந்து எம்பி அதன் மேல் நின்று கொண்டு, சண்டை நடக்கும் பக்கத்தைப் பார்த்தான் அல்லது வெடி விமானங்களைப் பார்வையால் பின் தொடர்ந்தான்.

படிக்க :
காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !
“கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு

தன் பின்னோடி அலைபாய்வதையும் கிளர்ச்சி அடைவதையும் கண்ணுற்று மெரேஸ்யெவ் சிந்திக்கலானான்: வயதில் அவர்கள் இருவரும் அநேகமாகச் சமமானவர்கள். அவனுக்குப் பத்தொன்பது வயது, மெரேஸ்யெவுக்கு இருபத்து மூன்று. மூன்று நான்கு ஆண்டுகள் வித்தியாசம் ஆண்களுக்குள் ஒரு பொருட்டாகுமா? எனினும் தன் பின்னோடியுடன் ஒப்பிடுகையில் தான் முதியவன், அனுபவசாலி, அமைதியான போக்குள்ளவன், அலுப்புற்றவன் என்று மெரேஸ்யெவுக்குப்பட்டது. அவன் விமானத்தின் தோலுறையிட்ட இருக்கையில் செளகரியமாகச் சாய்ந்து கொண்டான். அவன் நிம்மதியாக இருந்தான். அவனுக்குக் கால்கள் இல்லை, விமானம் ஓட்டுவது அவனுக்கு உலகில் எந்த விமானியையும் காட்டிலும் அளவிட முடியாதவாறு கடினமாக இருந்தது. ஆனால் இது கூட அவனுக்குப் பதற்றம் உண்டாக்கவில்லை. தனது திறமை அவனுக்குத் திண்ணமாகத் தெரிந்தது. எனது வெட்டுண்ட கால்கள் மேல் அவன் நம்பிக்கை கொண்டிருந்தான்.

ரெஜிமென்ட் மாலை வரையில் இரண்டாவது ஆயத்த நிலையில் இருந்தது. எதனாலோ அது சேமிப்பில் வைக்கப்பட்டிருந்தது. அதன் இருப்பிடத்தை உரிய நேரத்துக்கு முன்பே வெளிப்படுத்தத் தலைமை அதிகாரிகள் விரும்பவில்லை போலும்.

இரவு தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்பட்டன சிறு நிலவறைகள். ஒரு சமயத்தில் இங்கே இருந்த ஜெர்மானியரால் கட்டப்பட்டவை இவை. இவற்றில் வசித்தார்கள். சுவர்ப் பலகைகள் மேல் அட்டைகளும் மஞ்சள் நிறச் சுவற்றுத் தாள்களும் ஒட்டப் பட்டிருந்தன. காமவேட்கை வெறிததும்பும் பெரிய வாயினரான சில சினிமா நடிகைகளின் படங்கள் கூடச் சுவர்கள் மேல் அப்படியே இருந்தன. கூர்முனைக்கட்டிடங்கள் கொண்ட ஜெர்மானிய நகரங்களின் காட்சிகள் அடங்கிய பலவர்ணப் படங்களும் காணப்பட்டன.

பீரங்கிச் சண்டை தொடர்ந்து நடந்தது. தரை அதிர்ந்தது. உலர் மணல் காகிதத்தின் மேல் பொலபொல வென்று உதிர்ந்தது. நிலவறை முழுவதும் பூச்சிகள் மொய்த்தது போல அருவருப்பூட்டும் வகையில் சரசரத்தது.

வெட்ட வெளியில் மழைக்கோட்டுக்களை விரித்துப்படுப்பது என்று மெரேஸ்யெவும் பெத்ரோவும் தீர்மானித்தார்கள். உடுப்பைக் களையாமலே படுத்துறங்கும் படிக் கட்டளை இடப்பட்டிருந்தது. மெரேஸ்யெவ் பொய்க்கால்களின் இறுக்கு வார்களை மட்டும் நெகிழ்த்திக் கொண்டு நிமிர்ந்து படுத்து வானத்தை நோக்கினான். குண்டு வெடிப்புக்களின் சிவந்த மினுக்கொளியில் நடுங்கியது வானம்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்

1

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது பதவியிலிருந்து நவம்பர் 17-ம் தேதி ஓய்வுபெற உள்ளதால், அதற்கு முன்பாகவே அயோத்தி தீர்ப்பு எந்தநேரத்திலும் வழங்கப்படலாம்.

40 நாட்கள் நீண்ட விசாரணையில் ஆத்திரமூட்டும் பல விசயங்கள் நடந்தன, ‘உச்சநீதிமன்றமே எங்களுடையது’ என இந்துத்துவ தரப்பினர் பொறுப்பில்லாத பேச்சுக்களைப் பேசினர்.

டெல்லி மற்றும் லக்னோவில் தங்களை ஏற்றுக்கொள்ளும் ஆட்சிகள் நடப்பதால், ‘தீர்க்கதரிசிகள்’ தங்களுடைய அடுத்த இலக்கு, காசியிலும் மதுராவிலும் உள்ள மசூதிகள் என அறிவிக்கிறார்கள். வெளிப்படையாக ஆத்திரமூட்டும் அறிக்கைகள் விடுவதன் மூலம் தங்களுடைய அடுத்த நிகழ்ச்சி நிரல் காசியையும் மதுராவையும் விடுவிப்பதே என அறிவிக்கிறார்கள். அவர்களின் அச்சுறுத்தல் என்னவெனில், கியான் வாபி மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா ஆகியவற்றை இடிப்பதாகும்.

ராமர் கோயில் கட்டப்பட்டவுடன், வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் மதுரா ஸ்ரீகிருஷ்ணா ஜென்மபூமி ஆகிய கோயில்களை ஒட்டியுள்ள மசூதியை கைப்பற்ற (இடிக்க எனப் படிக்கவும்) தீவிர வலதுசாரி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., அதன் தீவிரவாத துணை அமைப்பான விசுவ இந்து பரிசத், நாட்டின் அரசியலாக்கப்பட்ட சாமியார்களைக் கொண்டு முதன்மை அமைப்பான அனைத்திந்திய அகாரா பரிசத் ஆகியவை இயக்கத்தை ஆரம்பிக்க உள்ளதாக கடந்த வாரம் அறிவித்துள்ளன.

சமீபத்திய உச்சநீதிமன்ற சட்ட விவகாரத்தில் என்னமாதிரியான தீர்ப்பு வரும் என அவர்கள் அறிந்ததால் மட்டுமல்ல, பெங்களூருவிலிருந்து வெளியாகும் டெக்கான் ஹெரால்டில் இந்த செய்தி பதிவாக்கப்பட்டிருப்பதிலிருந்து வகுப்புவாத சண்டையும் சிறுபான்மையின மத நிறுவனங்கள் மற்றும் நபர்களை இலக்காக்குவதும் இன்னும் அதிக நிகழும் எனத் தெரிகிறது.

“பாபர் மசூதியைப் போலவே, மசூதிகள் கட்ட காசி மற்றும் மதுராவில் கோயில்கள் இடிக்கப்பட்டன… இந்த மசூதிகள் இடிக்கப்பட வேண்டும்” என அனைத்திந்திய அகாரா பரிசத் தலைவர் நரேந்திர கிரி தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்ல, இந்தியாவின் சக்திவாய்ந்த பின்புலம் தங்களுக்குள்ளதை தெளிவாக சொன்ன கிரி, இந்துக்களுக்கு ஆதரவான அரசாங்கம் உத்தரபிரதேசத்திலும் மத்தியிலும் இருப்பதால், இரட்டை நோக்கங்களை அடைவதில் எந்த சிக்கலும் இருக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

நிர்வாணி அகாரா அமைப்பைச் சேர்ந்த சாமியார் மகந்த் தரம் தாஸ்.

“ராமர் கோயிலைப் போலவே, காசி மற்றும் மதுராவும் உலகெங்கும் உள்ள இந்துக்களால் போற்றப்படுகிறார்கள். அவர்கள் எங்களுடையவர்கள், அவர்களையும் நாங்கள் எடுத்துக்கொள்வோம்” என கிரி சொல்லியிருக்கிறார். மத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக காசி மற்றும் மதுரா மீதான தங்களுடைய உரிமையை விட்டுத்தர வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்.

இதில் சுவாரசியமானது, அயோத்தி நில விவகார வழக்கில் முசுலீம் தரப்பின் முக்கியமான வாதியான சன்னி வக்ஃப் வாரியம், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நடுவர் குழு முன் ‘சமரச’ திட்டத்தை முன்வைத்ததாகவும் பேச்சுவார்த்தைகளின் மூலம் சர்ச்சைக்குரிய பிரச்சினையை தீர்ப்பதற்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாக இந்துக்கள் காசி மற்றும் மதுரா மசூதிகளை விட்டுத்தர வேண்டும் எனக் கோரியுள்ளது.

கிரியை போன்றவர்களுக்கும் உத்தர பிரதேச சட்டசபை மற்றும் இந்திய பாராளுமன்றத்தில் இருக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் சமரசம் என்ற ஒன்று இல்லை. எனவே, அவர் இந்துக்கள் எந்த சூழ்நிலையிலும் காசி மற்றும் மதுரா மீதான தங்களுடைய உரிமையை விட்டுத்தரக்கூடாது என தெள்ளத்தெளிவாக மீண்டும் ஒருமுறை கூறிவிட்டார்.

இந்து மதவெறி கும்பலால் குறிவைக்கப்பட்டிருக்கும் மதுராவிலுள்ள மசூதி.

வி.எச்.பி. மற்றும் பாஜகவின் ஒரு பயங்கரவாத தலைவரான வினய் காட்டியாரும் காசியும் மதுராவும் இந்துக்களுடையது எனச் சொன்னார்.

1980 – 1990-களில் ‘அயோத்தி மற்றும் பாபர் வெறும் முன்னோட்டம்தான். காசியும் மதுராவும் பாக்கி உள்ளது’ இரத்தவெறி முழக்கத்தை, காவி கும்பல் இந்தியாவின் பொதுவெளி எங்கும் முழங்கியது.

எவ்வாறாயினும், அரசாங்கத்திலும் அதன் நிறுவனங்களிலும் அரசியல் ரீதியான ஊடுருவல் முழுமையானதாக இல்லை. இன்று டெல்லியில் உள்ள மத்திய அரசாங்கமும் லக்னோவில் உள்ள மாநில அரசாங்கமும்  ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. வால் மட்டுமல்ல, 27-30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தீவிரத் தன்மையுடன் உள்ளன. எனவே, இந்த அச்சுறுத்தல்கள் இன்னும் அதிகமான தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை காட்டுகின்றன.

இந்தியா தனது சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை இன்னும் அதிகமாகக் காணும் என கணிக்க முடிகிறது. அதோடு, சிறுபான்மையினரின் உயிர்கள் மற்றும் அவர்களின் இருப்பு பற்றிய அச்சுறுத்தல்களும் அதிகமாகும்.

படிக்க:
அயோத்தி பாபர் மசூதி வழக்கு :  நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்
இந்துத்துவ சதி சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு !

1993-ம் ஆண்டு இந்தியா டுடே இப்படி எழுதியிருந்தது:

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது எழுந்த தூசு இன்னும் அடங்கவில்லை. ஆனால், அயோத்தி பேரழிவு நிகழ்ந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி கோயிலை ஒட்டியுள்ள ஷாஹி இத்கா அடுத்த இலக்காக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

காசியும் மதுராவும் தங்களது ‘உடனடி நிகழ்ச்சி நிரலில்’ இல்லை என பாஜக சொல்லிக்கொள்கிறது. ஆனால், வி.எச்.பி.யின் பொது செயலாளர் அசோக் சிங்காலும் ஆர்.எஸ்.எஸ். இணை பொது செயலாளர் ராஜேந்திர சிங்கும் மதுரா தங்களுடைய திட்டத்தில் நிச்சயமாக உள்ளது எனக் கூறுகிறார்கள். சிங் சொன்னார்: ‘அத்வானி இது எங்களுடைய உடனடி திட்டமில்லை என்றுதான் சொன்னாரே தவிர, ஒருபோதும் இல்லை எனச் சொல்லவில்லை’. இந்துத்துவ படைகளுக்கு அது எந்த நேரம் என்பது மட்டும்தான் இப்போது உள்ள கேள்வி.

வாரணாசியிலுள்ள க்யான்வாபி மசூதி.

அயோத்தி உதாரணம் போதுமென்றால், எதுவும் நன்றாகவே நடக்கும். வி.எச்.பி, ‘அயோத்தி, மதுரா மற்றும் காசி ஆகிய இடங்களில் கொள்ளையர்களால் கட்டப்பட்ட மசூதிகளை அகற்ற வேண்டும்’ என அறைகூவல் விடுத்த எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்டது.

1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வி.எச்.பி. முதல் அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1989 ஜூன் மாதம் பாஜக தனது தேசிய செயலாளர்கள் கூட்டத்தில் இதை முறையான தீர்மானமாக நிறைவேற்றியது.

இப்போது, ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி அறக்கட்டளை, மசூதிக்கு அடுத்துள்ள நான்கரை ஏக்கர் நிலத்தை மத மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தும் இடத்துக்காக வேண்டும் என உரிமை கோருகிறது. பாபர் மசூதி வழியில் மதுராவில் உள்ள இத்கா போவதற்கு அதிக காலம் எடுக்காது.

டிசம்பர் 1992- ஜனவரி 1993 வரை அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி சீர்குலைப்புக்கு எதிர்வினையாக எங்களுடைய இதழான ‘கம்யூனலிசம் காம்பாட்’ 1993-ம் ஆண்டு துவக்கப்பட்டது. www.sabrang.com என்ற இணையதளத்தில் இந்த இதழின் பிரதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இந்துமதவெறியர்களின் சதிகளை அம்பலப்படுத்தி வரும் சப்ரங் இணையதளம்.

இந்திய அரசியலின் வன்முறை திருப்பத்தை நாங்கள் பின் தொடர்ந்தது மே, 2003-ல். அதாவது, குஜராத்தின் 2002 படுகொலைக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு. தாக்குதலுக்கு சாத்தியமாகக்கூடிய தெற்காசியாவின் முக்கியமான சூஃபி தளங்கள் அல்லது இசுலாமிய அடிப்படையிலான வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றின் பட்டியலை நாங்கள் வெளியிட்டோம்.

இந்து ராஷ்டிரத்தின் இரத்தவெறி பிடித்த படைகள் வன்முறை அழிவு மற்றும் திணிப்பு மட்டுமே தங்களுடைய வழிமுறையாக நம்புகின்றன.

மேற்கண்ட பட்டியல் ஒரு மின்னஞ்சலிலிருந்து பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இந்தப் பட்டியலை நெருக்கமாக ஆய்வு செய்யும்போது, இந்தப் பட்டியல் விநியோகிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் அரசியல், ‘தேசியவாதம்’ என குறுகியுள்ளது. தூண்டப்பட்ட வன்முறை, மத மோதல்கள் இன்னும் அவர்களின் திட்டத்தில் உள்ளதையே இது காட்டுகிறது.

இந்தப் பட்டியல் விரிவானது ; எந்தவொரு யூனியன் பிரதேசத்தையோ மாநிலத்தையோ அதன் முன் தேர்வில் அது விட்டுவைக்கவில்லை. நமது தலைநகரமான டெல்லியில் இந்துத்துவ படைகளின் 72 இலக்குகள் உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசூதிகள், டெல்லி நிஜாமுதீனில் அழகாக பராமரிக்கப்பட்டுள்ள தர்கா உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.

படிக்க:
அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்
அயோத்தியில் மகாபாரதப் போர் வெடிக்கும் – ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் மிரட்டல் !

தெலுங்கானாவில் உள்ளது. யூனியன் பிரதேசமான டையூ-விலும்கூட. சொல்லத்தேவையில்லை குஜராத்தில் பெரிய பட்டியலே உள்ளது. மேற்கு வங்க (கவனம் அங்கு ஒரு பாஜக அரசாங்கம் உள்ளது) த்தில் 120-க்கும் மேற்பட்ட ‘இலக்கு வழிபாட்டிடங்கள்’ உள்ளன. அசாமிலும். ‘கம்யூனலிசம் காம்பாட்’ சுருக்கப்பட்ட பட்டியலை மட்டுமே வெளியிட்டது; தெளிவாக இந்தப் பட்டியலில் இன்னும் நிறைய இடங்கள் உள்ளன.

இந்து மதவெறியர்களின் ”ஹிட் லிஸ்ட்”.

இந்து ராஷ்டிரத்தை முன்னிறுத்தி, புது டெல்லியில் உள்ள அரசாங்கம், 2019-ல் பல மாநிலங்களில் அரசியல் அதிகாரம் செலுத்தும் நிலையில், இந்தியாவின் முகலாய ஆட்சிகாலத்தின் புகழ்பெற்ற மசூதிகள் மற்றும் நினைவுச்சின்னங்களை மிருகத்தனமான வன்முறை மூலம் சிதைத்து வரலாற்றை மாற்ற நினைக்கிறது. இதன் மூலம் உயர்சாதி, பார்ப்பன, இந்துத்துவ தேசத்தை உருவாக்கலாம் எனத் திட்டமிடுகிறது.

இந்த அரசியல் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக, இந்தியர்களின் பரந்த பிரிவினர் – மேலாதிக்க வரையறைக்குள் வராத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்டவர்கள் – இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்படுவார்கள். பவுத்தர்கள், கிறித்துவர்கள், பகுத்தறிவாளர்கள், மதச்சார்பற்றவர்கள், இடதுசாரிகள் ‘கற்பனையான இந்து தேசத்தின் எதிரிகள்’. இதில், முசுலீம்கள் மிகவும் விசம் நிறைந்த இலக்காக சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளனர்.

இத்தாலியின் முசோலினி, ஜெர்மனி இட்லரிடமிருந்து உத்வேகம் பெற்ற அவர், காந்தியின் வாழ்க்கை மீது நடத்தப்பட்ட முதல் மிருகத்தனமான தாக்குதலுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின், எம்.எஸ். கோல்வாக்கர்  We and Our Nationhood Defined (1939)  என்ற நூலை எழுதுகிறார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான காலக்கட்டத்தில் ‘முசுலீம் இசுலாம் தேசம்’ என கொடி ஏந்தியவர்கள் ஒருங்கிணைந்த இந்திய தேசத்தை வெற்றிகரமாக கிழித்து எறிந்தார்கள். புரையோடிய காயத்துடன், இந்தியா வன்முறையாகப் பிரிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபகர் கோல்வால்கர்.

1925-ம் ஆண்டு முதல், ஆர்.எஸ்.எஸ். இந்திய சமூகத்தை அரசு குறித்த கருத்தை மாற்றி வடிவமைக்கும் தனது திட்டத்தை தொடங்கியதிலிருந்து, அது நீண்ட பாதையை கடந்து வந்திருக்கிறது. இப்போது, அது நூற்றாண்டை கொண்டாட ஆறு ஆண்டுகள் உள்ள நிலையில், நாம் எச்சரிக்கைக்கு உள்ளாகியிருக்கிறோம்.  இந்தத் திட்டம், இந்தியாவின் குடியரசு மற்றும் அரசியலமைப்பின் அடித்தளத்தை குறைமதிப்பு செய்து, அதை பெரும்பான்மை, மதவாத அரசாக மாற்றுவதில் வெற்றி காணுமா?

இந்தியாவை தாங்கள் விரும்பிய இந்துத்துவ அரசாக கற்பனை செய்த ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆரம்ப கால நூல்களைப் பார்ப்போம். இதில் மற்ற அனைத்து துணை அமைப்புகளும், வி.எச்.பி. மற்றும் சாமியார்களின் அமைப்பும் இந்த தாய் அமைப்பின் அரசியல் குறிகோளுடன் இணைந்தே உள்ளன.

Bunch of Thoughts என்ற நூல் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இ-புத்தகமாக உள்ளது. இந்த தளம் கண்காணிக்கப்பட்டு வந்தாலும் ஆர்.எஸ்.எஸ். நூல்கள் இணையதளத்தில் பரவலாகக் கிடைக்கின்றன. புத்தகக் கடைகளிலும் சமூக அரசியல் சமூகங்களின் விற்பனையகங்களிலும் இவை கிடைக்கின்றன.

1939-ம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்த எம்.எஸ். கோல்வாக்கர் வரையறுத்த We or Our Nationhood இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. சில ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.கவினர் இந்த நூலை சொந்தம் கொண்டாட மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ இணையத்திலும் இந்த நூல் இல்லை.

எம்.எஸ். கோல்வாக்கர் வரையறுத்த We or Our Nationhood நூல்.

‘கம்யூனலிசம் காம்பாட்’டில் நாங்கள், இதன் 1947 பதிப்பின் நகலை எடுத்து வைத்திருக்கிறோம்.

2015-ம் ஆண்டு டிசம்பரி எழுதிய ஒரு பெரிய கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ எழுத்துக்களில் கூறப்பட்ட இந்து ராஷ்டிர கனவு குறித்து முழுமையாக ஆராய்ந்து எழுதினேன்.

அதிலிருந்து நினைவில் கொள்ள வேண்டிய சிலவை:

ஆர்.எஸ். எஸ். மற்றும் பாஜக அரசியலமைப்புக்கு எதிரானவை

ஆர்.எஸ்.எஸ். – உடன் கருத்தியல் ரீதியாக தொடர்புள்ள, தற்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக, இந்திய அரசியலமைப்பு வரையறை செய்த இந்திய தேசிய வாதம் மற்றும் இந்திய குடியுரிமை குறித்த கருத்தாக்கத்துக்கு எதிரானது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிப்படை கொள்கைகளைக் கொண்ட Bunch of Thoughts நூலின் 119-ஆம் பக்கத்தில், நூலின் ஆசிரியர் ‘பிராந்திய தேசியவாதம் என்ற கருத்து அபத்ததை முற்றிலுமாக தவறு என்கிறார்.

கோல்வாக்கர் கூறுகிறார்: அவர்கள் (அரசியலமைப்பு சபையின் தலைவர்களை சுட்டுகிறார்) இங்கே ஏற்கனவே ஒரு முழுமையான பழங்கால இந்துக்களுக்கான தேசம் இருந்ததது என்பதை மறந்துவிட்டார்கள். நாட்டில் உள்ள பல்வேறு சமூகங்கள் இங்கு விருந்தினர்களாகவோ, யூதர்கள் மற்றும் பார்சிகள் அல்லது படையெடுப்பாளர்களாகவோ, முசுலீம் மற்றும் கிறித்தவர்கள்  வந்தவர்கள்அவர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள் என எப்படி அழைக்கப்பட முடியும் என்கிற கேள்வி எழவில்லை. ஏனெனில் தற்செயலாக அவர்கள் ஒரு பொதுவான எதிரியின் ஆட்சியின் கீழ் ஒரு பொதுவான பிரதேசத்தில் வசித்தார்கள்”.

அரசியலமைப்பை ரத்து செய்வதற்கான அதன் நோக்கம் குறித்து ஆர்.எஸ்.எஸ். வெட்கம் கொள்ளவில்லை!

“…’இந்து தேசியவாதம்குறித்து பேசுவது நம்மை குறுக்கிவிடும்அவை மதவாத’, பிற்போக்குத்தனமான கருத்துக்கள் என மனித சகோதரத்துவம் குறித்த உயர்ந்த தத்துவம் கொண்டவர்கள், பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் உள்ளிட்ட பலவற்றின் பெயரால் நாம் இதுவரை முட்டாளாக்கப்பட்டோம்.

இதை ஒரு பந்தயமாக நாம் பார்க்க வேண்டும். மேலும் நமது தேசியவாதம் ஒரு பண்டைய உண்மை. பாரதத்தின் தேசிய சமூகம் இந்துக்கள் என்பதை நாம் மீண்டும் ஏற்படுத்த வேண்டும். எனவே, நமது நிறுவனர், நமது அமைப்புக்கு ராஷ்டிரியஎன்ற வார்த்தையை அதை நினைவுபடுத்தும் விதமாகவே சேர்த்தார்.

நாம் மீண்டும் ஒருமுறை முழுமையான நிலையில் எழுந்து நின்று, பாரதத்தின் இந்து தேசிய வாழ்வை பெருமையுடனும் புகழுடனும் தைரியமாக வலியுறுத்த வேண்டும். இது நமது பிறப்புரிமை (எம்.எஸ். கோல்வாக்கரின் Bunch of Thoughts பக்கம் 127)

படிக்க:
‘முசுலீம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள்’ : வெறுப்பு பிரச்சாரத்தில் காவிகள்
அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிராமனாள் வருவாளா ?

மசூதிகளும் நமது ஒத்திசைவான கலாச்சாரமும் இந்த அரசியல் திட்டத்தின் மிக வெளிப்படையான இலக்குகளாக மாறியிருக்கின்றன. கலாச்சார மறு வடிவமைப்பு மிருகத்தனமானது; நவீன இன அழிப்பு. மேலும் இந்தியாவின் பரந்துபட்ட சமூகங்களின் சம உரிமை, குறிப்பாக இப்போதும்கூட அன்றாடம் பயத்தில் வாழும் முசுலீம்களின் இருப்பையே கேள்விக்குறி ஆக்குவதாகும்.

இந்து மதவெறியர்களின் கொலை மிரட்டல்களையும் மீறி இன்றுவரை தீரத்துடன் களமாடும் தீஸ்தா சேடல்வாட்.

பயம் மற்றும் அச்சுறுத்தலின் மூலம் மதக் கலவரத்தைத் தூண்டி, பின் இனப்படுகொலை திட்டங்களை செயல்படுத்துவது அரசால் அனுமதிக்கப்பட்ட தன்மையை பெற்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் குடியுரிமை உரிமைகள் தொடர்பான திட்டங்கள் இதுபோன்ற அரசியல் திட்டங்களாக மாறியுள்ளன.

மசூதிகள் மற்றும் தர்காக்களை இடிப்பது என்கிற அச்சுறுத்தல்  எப்போதும் அவை தொடர்பான மக்கள், அவர்கள் நம்பிக்கை மீதான வன்முறையையும் சேர்த்தவையே. தேசிய குடிமக்கள் பதிவேடு (‘கரையான்கள்’ ‘துரோக ஊடுருவல்காரர்கள்’ என்ற பதங்களை ஒருபோதும் மறக்கக்கூடாது) என்ற அச்சுறுத்தலுடன் வரும் இந்த வெட்கக்கேடான முயற்சிகள், அவர்களை அடிமைகளாக்கவே செய்யப்படுகின்றன. இந்த மக்கள், ஏற்கனவே கோட்பாட்டளவில் இரண்டாம் தர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


கட்டுரையாளர் :  தீஸ்தா செடல்வாட்
தமிழாக்கம் : கலைமதி
நன்றி : தி வயர்

உரலில் தலைய விட்ட கதைதான் டெய்லர் கடைகளோட நிலைமை !

ரெங்கநாதன் தெரு முழுக்க சிறியதும், பெரியதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட தையற் கடைகள். இரண்டு மெஷின் முதல் இருபது மெஷின்கள் வரை கொண்ட பலதரப்பட்ட கடைகள்… இவையில்லாமல் சுடிதார் பிளவுஸ்களில் பல அலங்கார டிசைன்கள் வைத்துத் தைக்கும் பொருட்கள் விற்கும் கண்ணைக் கவரும் கடைகள். அங்கு நுழையும்போது … “சார், சார் இங்க வாங்க……” என்று சுடிதார், பிளவுஸ் தைக்க நம்மை கூப்பிடுகிறார்கள்.

ரெங்கநாதன் தெருவில் அமைந்துள்ள தையற் வளாகங்கள்.

அதில், ‘ஓம் ஸ்ரீ டைலர்ஸ்’ என்ற கடையை அணுகினோம். கடையின் உரிமையாளர் கல்பனா, இளம் கர்ப்பிணிப்பெண். அவர் கஸ்டமர்களிடம் புதிய துணிகளை வாங்கிக்கொண்டு, அவர்களின் அங்க அளவுகளை ஒவ்வொன்றாக நீண்ட நோட்டில் குறித்துக்கொண்டிருந்தார். அவரிடம் வந்த விஷயத்தைக் கூறி,.

“நீங்கள், முகம் தெரியாத புது வாடிக்கையாளருக்குத்தான் தைப்பீர்கள், நிரந்தர வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் அளவுக்கு உங்களுக்கு அனுபவமோ, தொழில் நேர்த்தியோ கிடையாதென்று ஊர் பக்கம் டெய்லர்கள் கூறுகிறார்களே உண்மையா” என்றோம்.

அவருக்கு சடக்கென்று கோபம் வந்தது. அதை மறைத்து நம்மைப் பார்த்து நமட்டு சிரிப்புடன் “அப்படியா? யாரோ வேலையில்லாதவர்கள் சொல்லியிருப்பார்கள். இங்கு ஒரு நாளைக்கு ஆயிரம் டிசைன்கள் காட்டி அதே மாதிரி வேண்டுமென்று கேட்கும் கஸ்டமர்கள்தான் அதிகம். ஒருவருக்கு தைத்ததை வைத்து அதே டிசைனை இன்னொருவருக்கு ஒப்பேத்த முடியாது. அதில் ஆயிரம் வித்தியாசம் கேட்பார். இப்படி தையுங்கள் என்று தனது ஆண்ட்ராய்ட் போனைக் காட்டி அதில் மாடல், மாடலாக பல ஃபோட்டோக்களை கொட்டுவார். அதில் கொஞ்சம் பிசகினாலும் கோபப்படுவார்கள்.

‘ஓம் ஸ்ரீ டைலர்ஸ்’ கடை உரிமையாளர் கல்பனா.

சில நேரத்தில், ‘நான் கொடுத்த துணியைக் கொடுத்துவிடுங்கள். நீங்கள் தைக்க வேண்டாம்…. ஆயிரம் ரூபாய் மெட்டீரியலைக் கெடுத்துவிட்டீர்கள்’ என்று அழும் காலேஜ் பெண்கள்கூட உண்டு. அவர்களை சமாளித்து அவர்கள் சொல்லும் திருத்தங்களை செய்து கொடுத்தால் கூலி மட்டும்… பஜார் கூலியிலிருந்து ஐந்து பைசா அதிகம் தர மாட்டார்கள். ஆனால் ஆயிரம் அலங்கார வேலைகளை  சொல்லி வேலையை கூட்டுவார்கள். அதற்கு கூலி பத்துரூபாய் அதிகம் கேட்டால், ‘துணியே…… ஐந்நூறூ, ஏழுநூறு…. கூலி இவ்வளவ்வா….’ என்று டக்கென்று வேறு டெய்லரிடம் தாவி விடுவார்கள்….

இதனால் பல ஆண்டுகளாக கூலியை கூட்டவேயில்லை…. சாதா சுடிதார் தைச்சா நூற்றி இருபது, லைனிங் வைச்சி தைக்க இருநூத்தி நாப்பது, லைனிங் மெட்டீரியல் நாங்களே போட்டா மூன்னூற்றி அறுபது எனக் கூலி வாங்குவோம். இதில் அவர்கள் கழுத்து, கையில் எக்ஸ்ட்ரா வேலை ஸ்பிரில், அம்பரெல்லா ரிச் மாடல் என ஆயிரம் சொல்லுவார்கள்.

படிக்க :
♦ திரிபுரா : பாஜக முதல்வரின் கூமுட்டைதனத்தை விமர்சித்த மருத்துவர் பணிநீக்கம் !
♦ அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிரமணாள் வருவாளா ?

சிலர் பார்ட்டி, பங்ஷன், பர்தேடேக்குன்னு தைக்க சொல்லுவார்கள். சுடிதாரில், சமிக்கி, கல், ஆரம் தனியாக வாங்கிக் கொடுப்பார்கள். அதற்கு மட்டும் நாங்கள் கூலியை அதிகம் கேட்போம். இப்படி எங்கள் வேலையைப் பார்த்து பிடித்துப்போய் தொடர்ந்து வரும் கஸ்டமர்களும் உண்டு. வேலை பிடிக்காமல் சாபம் விடும் கஸ்டமர்களும் உண்டு. எல்லோரையும் அனுசரித்துப் போனால்தான் இங்கு தொழில் செய்ய முடியும்.

இந்த இடத்தில் டெய்லர் தொழில் செய்வது நீங்கள் நினைப்பதுப்போல் ஏதோ துணி தைக்கும் விஷயமல்ல… கஸ்டமர்களோடு ஒன்றி அவர்கள் மனசை தைக்க வேண்டும். அவர்கள் என்ன கேட்டாலும் கோபம் வராமல் சிரித்துப் பக்குவமாகப் பதில் சொல்ல வேண்டும். அதன்பிறகுதான், நமது வேலையில் சிறு குறை இருந்தாலும், அனுசரிப்பார்கள். அதுதான் இந்த வேலையின் இரகசியம்.

இந்த ஏரியாவில் தொழில் செய்வதற்கு பல லட்சங்களைக் கொட்டியிருக்கிறோம். இந்த கடை பத்துக்கு பத்து. இதற்கு பகடி (அட்வான்ஸ்) மட்டும் பத்து லட்சம். கடை வேண்டாம் என்றால் நாமே இன்னொருவருக்கு கை மாற்றி போட்ட பணத்தை எடுக்க வேண்டும். பகடி அப்போதைய மார்கெட் நிலவரத்தைப் பொறுத்து கூடவும், குறையவும் செய்யும். இதில்லாமல் மாத வாடகை பதினெட்டாயிரம் ரூபாய். தனியாக மெயின்டனன்சு ஆயிரம், கரண்ட் பில் ஆறாயிரம் வரும். கடையில் வேலை செய்பவர்களுக்கு அட்வான்ஸ் தனி. கட்டிங் மாஸ்டருக்கு ஐம்பதாயிரத்திலிருந்து எழுபதாயிரம். டெய்லருக்கு இருபதாயிரத்திலிருந்து முப்பதாயிரம். தெருவில் நின்று கஸ்டமர்களை அழைத்துவரும் பீஸ் பிடிப்பவர்களுக்கு இருபதாயிரத்திலிருந்து முப்பதாயிரம் – இவை நிரந்தர அட்வான்ஸ்.

இவையில்லாமல், எல்லோருக்கும் அவர்கள் வேலை செய்வதற்கு ஏற்ப பீஸ் ரேட் தனி. ஒரு சுடிதாருக்கு டெய்லர், கட்டிங் மாஸ்டர், பீஸ் பிடிப்பவர் என்று எழுபது ரூபாயிலிருந்து நூற்றிருபது வரை போய்விடும் மீதிப்பணத்தில்தான் நாங்கள் இவ்வளவு செலவையும் செய்ய வேண்டும். சமயத்தில் எங்கள் கூலியையும் சேர்த்துப் பார்த்தால், எதுவும் மிஞ்சாது.

ஆண்டுக்கு ஆறு மாதங்கள்தான் வேலையே; மீதியை பண்டிகை நாட்களில்தான் சரிகட்ட வேண்டும். ஆனால் அப்போது தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்கள். மாவு உரலில் நாய் தலைய விட்டக் கதைதான் எங்க வேலை. வேறு தொழிலுக்கு போகவழியில்லை என்பதால் மாட்டிக்கொண்டு முழிக்கிறோம்” என்றார்.

கட்டிங் மாஸ்டர் ரவி :

ரவி, கட்டிங் மாஸ்டர்

இந்தத் தொழில் எனக்கு நாப்பது வருட அனுபவம். இவ்வளவு நாள் நிக்கணும்னா கஸ்டமரையும் முதலாளியையும் மனசு நோகாம நாங்க வைச்சிருக்கணும். அவங்க என்ன டிசைன் கேட்டாலும் கட் பண்ணி காண்பிக்கணும். டம்மி மாடல் கட் பண்ணுவதற்கு ஒரிஜினல் துணி தேவையில்லை, பழைய பேப்பர் வைத்தே கட் பண்ணி காண்பிப்போம். சுடிதார், பிளவுஸ் எதுவாக இருந்தாலும், கஸ்டமருக்கு கச்சிதமா பொருந்தணும். பிளவுஸ்னா பாடி, ஆர்ம்ஸ்; சுடிதாருன்னா, இடுப்பு, பாட்டம் நச்சுன்னு இருக்கணும். அதுக்கு துல்லியமா வெட்டணும். லைனுக்கு (டெய்லர்களுக்கு) சளைக்காம கட் பண்ணி கொடுத்துக்குனு இருக்கணும்.

நான் இதற்கு முன் சவுகார் பேட்டையில் வேலை செய்தவன். அதனால இந்த இடத்தில் வேலை செய்யறது சாதாரணம். மார்வாடிங்க உடம்ப தூணு மாதிரி வைச்சிக்கிணு, தைக்கிற துணி மாட்டுனா செப்பு சிலை மாதிரி தெரியுணும்னு நினைப்பாங்க…. அவங்க வந்தாங்கன்னா நம்மகிட்ட சிலை வடிக்கிற சிற்பிகிட்ட, சொல்ற மாதிரி – இப்பிடி, அப்பிடியினு இன்ச், இன்சா  சொல்லுவாங்க. நம்ம வேல அவங்களுக்கு பிடிச்சிப்போச்சினா, ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டி டஜன் கணக்குல துணி தைப்பாங்க.

இங்க தி. நகர்ல கூலி கம்மி ஆனா வேலை நிரந்தரம். ஒரு பீஸ் கட் பண்ணா சராசரியா முப்பது ரூபாய் கிடைக்கும். கொறஞ்சது இருபது பீஸ் கட் பண்ணாத்தான் வீட்டுக்கு எதாவது கொடுக்க முடியும். சில நேரத்துல கடன் வாங்கி செலவுப் பண்ணறது நடக்கும். ரொம்ப டல் அடிக்கும்.

டெய்லர் சிவா :

சிவா, டைலர்

முப்பது வருச அனுபவம். விடிஞ்சா இந்த மெஷின்லத்தான் கண் முழிக்கிறேன். பண்டிகை சீசனுக்கு ஒரு நாளைக்கு மூணு மணி நேரங்கூட தூங்க மாட்டோம். வேலைன்னு வந்தா உடம்பு தானே சுறுசுறுப்பாயிடும். நாங்க தொழில் கத்துக்கினதெல்லாம் இப்ப மாதிரி இல்ல…. அப்ப எல்லாம் குருக்கிட்ட மந்திரத்தை கத்துக்கிட்ட மாதிரி கத்துக்கிட்டோம். மெஷின்ல கால் வைக்கிறதுக்கு தவம் கிடப்போம். மொதலாளி பழைய துணிய எங்ககிட்ட ஓரம் அடிக்க கொடுக்கறதுக்கே மூணு வருசமாகும்.

படிக்க :
முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ? படங்கள்
♦ சுடிதார் தைக்கணுமா மேடம் ? நாள் முழுக்க ஒலிக்கும் குரல்கள் !

எனக்கு படிப்பு வராததால எங்க ஆயா, நடையா நடந்து இந்தத் தொழில்ல விட்டாங்க…. தொழிலுக்கு புதுசுல டீ கிளாசு கழுவுறதுதான் வேல. டீ வாங்கறதுக்கு ஒரு சீனியர் இருப்பான், நான் கடைய பெருக்கணும், மெஷின  துடைக்கணும், கிளாசக் கழுவணும். இதுதான் ஒரு வருசம் என் வேலை. சாயங்காலம் வீட்டுக்குப்போகும் போது மொதலாளி ஐம்பது பைசா கூலி கொடுப்பாரு…. அதுவும் சில நாள் வேல இல்லடானு இருபது பைசாவாக்கிடுவாரு….. மொதலாளிக்கு மொகம் கோணாம இப்படி வேல செஞ்சா… கொக்கி, பட்டனு கட்றது, எம்மிங் பண்ணறது, காஜா எடுக்கறதுனு ஒரு வருசம் போச்சு. அதுக்கு அப்புறம் புடவைய ஓரம் அடிக்கற வேலய கொடுத்தாங்க…. புதுசா மெஷுனுல உட்கார்ந்தவுடன் தலைகால் புரியாது. பெருமையா இருக்கும்….. அப்படி கத்துக்கிட்டோம் இந்த வேலையை….

ஆனா, இப்ப வர்றதுங்க…. மெஷின்ல எப்படி உட்காரதுன்னே தெரியாம நான்தான் டெய்லருன்னு காலர தூக்கி விட்டுக்குதுங்க…… அவங்கதான் மொதலாளியினு நிக்கறாங்க…. எல்லாம் காலத்துக்கேத்த கோலம்….” என்றார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

நீட் ஆள்மாறாட்டம் மட்டுமல்ல , நீட் தேர்வே மோசடி ! சிதம்பரம் RSYF கருத்தரங்கம்

0

“நீட் ஆள்மாறாட்டம் மட்டுமல்ல நீட் தேர்வே மோசடி !” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் சிதம்பரம் ஆறுமுகநாவலர் அரங்கத்தில் கடந்த அக்-23 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்ட செயலர் தோழர்  மணியரசன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி. ராஜூ; பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன்; விழுப்புரம் – அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மாணவர் மதுரை வீரன்; கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் பால்ராஜ்; மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர் பாரதிதாசன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.

நீட் தேர்வு கெடுபிடிகளும், நீட் தேர்வில் அம்பலமாகியுள்ள ஆள்மாறாட்ட மோசடிகளும் மட்டுமல்ல பிரச்சினை; நீட் தேர்வுமுறையே முறைகேடானதுதான் என்பதையும்; வியாபம் ஊழலை தேசியமயமாக்கியிருக்கிறது என்பதையும்; இவர்கள் முன்வைக்கும் தகுதி திறமை என்ற வார்த்தைகளுக்குப் பின் ஒளிந்துள்ள அரசியலையும் அம்பலமாக்கியது, இக்கருத்தரங்கம். நீட் தேர்வு, தேசியக் கல்விக்கொள்கை என அடுத்தடுத்து மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் தாக்குதல்களுக்கு எதிராக தமிழக மாணவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியது, இக்கருத்தரங்க நிகழ்வுகள்.

இக்கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரை வழங்கியோரின் பேச்சுக்களின் சாரத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

தோழர் மணியரசன்,
மாவட்ட செயலர், பு.மா.இமு. கடலூர்.

”நீட் தேர்வு கொண்டு வரும்பொழுது மருத்துவக் கல்வியில் உள்ள ஊழலை ஒழிப்பதும், தரமான மருத்துவ மாணவர்களை கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் நீட் தேர்வு முன் நிறுத்தப்பட்டது. ஆனால் நீட் தேர்வால் இன்று பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். நீட் தேர்வை பொறுத்தவரையில் மத்திய, மாநில அரசுகள், உச்சநீதிமன்றம் நம்ப வைத்து ஏமாற்றியது விளைவு மாணவி அனிதாவின் மரணம் அதைத் தொடர்ந்து பல்வேறு மாணவிகள், பெற்றோர்கள் இறந்தனர். ஆனால், இன்றோ நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து தகுதியுடைய ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தும் மருத்துவராக முடியாமல் உள்ளனர்.

தோழர் மணியரசன், மாவட்ட செயலர், பு.மா.இமு. கடலூர்.

காரணம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தால் மருத்துவ சீட் உறுதி என்ற நிலைதான் மருத்துவ கல்வியில் உள்ளது. அப்போது கோடிக்கணக்கில் பணம் கொடுத்தால் மருத்துவராகலாம் என்றால் தகுதியுடைய ஆயிரக்கணக்கான மாணவர்களுடைய மருத்துவ கனவு என்னவாவது? இறந்துபோன மாணவர்களின் உயிருக்கு பதில் என்ன ? என்பதுதான் நாம் அரசின் முன்  வைக்கக்கூடிய கேள்வியாக இருக்க வேண்டும். மேலும் இந்த ஆள்மாறாட்ட ஊழல் என்பது தமிழகம் மட்டுமல்லாது இந்திய முழுமைக்கும் உள்ள மாநிலங்கள் அனைத்துமே உள்ளடக்கப்பட்டது தான் அந்த அடிப்படையில் தேசிய மருத்துவ கல்வி ஆணையத்தை சார்ந்த அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும். எந்தவித மாற்றங்கள் இன்றி நீட் தேர்வை தடை செய்ய வேண்டும். 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மீண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை இனி நடைமுறைப்படுத்த வேண்டும்”

மதுரை வீரன் ,
மாணவர், அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி, விழுப்புரம்.

மதுரை வீரன்.

”நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி தான். அதில் நேர்மை என்பது துளிகூட கிடையாது. ஏனென்றால் பணம் கொடுத்தால் மருத்துவச் சீட்டு. பணம் இல்லை என்றால் மருத்துவ சீட்டு கிடையாது என்பதுதான் நீட் தேர்வு வந்த பின்பு நடக்கும் அவலமாக இருக்கிறது.

குறிப்பாக நீட் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டண கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறி இருக்கிறது. அதில் மாணவர்கள் முதலீடு செய்கிறார்கள். மருத்துவராக தேர்ச்சி பெற்ற பின்பு அந்த முதலீடு மீண்டும் பெறுவதற்கு பணம் மட்டுமே இவர்களின் நோக்கமாக மாறுகிறதே ஒழிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது என்பதுதான் இந்த நீட் தேர்வு இந்த சமூகத்திற்கு சொல்லித் தரக்கூடிய பாடமாக இருக்கிறது. இந்த அவலநிலையை நீக்க மாணவர்கள் நாம் ஒன்றுபட வேண்டும்”

பால்ராஜ் ,
மாணவர், பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்.

பால்ராஜ்.

”தகுதி திறமை என்று சொல்லக்கூடிய நீட் தேர்வு  கட்டணக் கொள்ளை கூடாரங்களாக மாறிவிட்டது. நீட் தேர்வு பயிற்சி மையம் என்ற பெயரில் நாமக்கல் கிரீன் பார்க் தனியார் பள்ளியில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூபாய் 50 கோடி அளவில் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திலே இவ்வளவு தொகை என்றால் இந்தியா முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் எவ்வளவு? அங்கே நடக்கும் நீட் தேர்வு பயிற்சி மையங்கள்  இன்னும் எவ்வளவு கோடி பணம் பெற்றோர்களிடம் கொள்ளை  அடிக்கிறது என்று நினைத்து பார்க்கவே அதிர்ச்சி அளிக்கிறது.

மோடி அரசு அறிவித்துள்ள ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேஷன், ஒரே தேர்தல் என்ற கோஷத்தின் அடிப்படையில் இந்தியா முழுக்க உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தேர்வாம்? இது நீட் தேர்வில் இருந்து எப்படி தகுதியான மாணவர்களின் மருத்துவ கனவை அடைய விடாமல் தடுத்ததோ. அதேபோன்று இனி பெரும்பான்மை ஏழை மாணவர்கள் உயர்கல்வியை தகுதி இருந்தும் பெற முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட போகிறது.

நீட் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டண கொள்ளை அடிப்பது போல்   நாடு முழுக்க இனி பயிற்சி மையங்களின் கட்டணக் கொள்ளை அதிகரிப்பதும்,கல்வி உரிமையை பறிக்கப் போகிறது.”

பாரதிதாசன் ,
மாணவர், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.

”தமிழகத்தில் கல்வியை காமராஜர் காலம்தொட்டு தொடங்கியபோது கல்வியை அனைவரும் பயிலவேண்டும் என மதிய உணவு திட்டத்தை அனைவருக்குமான கல்வி ஆக மாற்றுவதற்கு கொண்டுவந்தனர். அதன் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தினர். ஆனால் இன்று நீட் தேர்வு கல்வியே கூடாது என்ற அடிப்படையில் அமைந்திருக்கிறது. மருத்துவ கல்வியில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமானால் தேர்வில் மாற்றத்தை கொண்டு வரக்கூடாது; பாடத்திட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்; அதுதான் சரி. ஆனால் அதிகாரிகள் இதை தவறாக செய்துள்ளனர். தண்டனையை அனுபவிப்பது மாணவர்கள் ஆகிய நாங்கள்தான். தமிழகத்தில் 23  மருத்துவ கல்லூரிகள் இருக்கிறது இதில் 2335 மருத்துவ சீட் உள்ளது வெளிமாநிலத்தில் இருந்து கைப்பற்ற இவர்கள் வந்தால் நாம் வேடிக்கை பார்ப்பதா? யாருக்கும் கிடைக்காத கல்வியை தீயிட்டு கொளுத்துவோம் என பெரியார் சொன்னார் நாமும் அதை பின்தொடர வேண்டியிருக்கிறது.

பாரதிதாசன் , மாணவர், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.

நீட்டுக்கு முன்பு சில இலட்சங்கள் கருப்புப் பணமாக கொடுத்து மருத்துவ சீட் வாங்கினார்கள். ஆனால் நீட் வந்த பின்பு ஒரு வருடத்திற்கு 20 இலட்சம் என 5 வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் நாம் படிப்பதற்கு தரவேண்டும். நீட்டிற்கு முன்பு கறுப்பாக இருந்த பணம் இன்று நீட்டிற்கு பின்பு வெள்ளையாக மாற்றப்பட்டிருப்பதுதான் நீட் தேர்வின் சாதனையாக இருக்கிறது. இங்கே உள்ள பாடத்திட்டம் தகுதி அற்றது என கூறுகிறார்கள். இலண்டனில் உள்ள பாடத்திட்டம் தகுதியான சிறப்பான பாடத்திட்டம் தான் அதற்காக இலண்டனில் உள்ள பாடத்திட்டத்தை இங்கு கொண்டு வந்து வைத்தால் இலண்டன் மாணவர்கள்தான் மருத்துவர் ஆவார்கள். அதற்காக அவர்களை நாம் சேர்த்துக் கொள்ளலாமா” என கேள்வி எழுப்பினார்.

வழக்குரைஞர் சி. ராஜு ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

”நீட் தேர்வில் மாணவிகள் பெற்றோர்கள் என ஆறு பேர் தொடர்ச்சியாக இறந்துள்ளனர். நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் புரோக்கர்கள் மட்டும்தான் என இந்த வழக்கை முடிக்க பார்க்கிறார்கள். ஆனால்  அப்படியில்லை. அதற்குப் பதிலாக, அகில இந்திய மருத்துவக்கல்வி மருத்துவ கவுன்சில் அதனை சார்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழலை தாண்டும் மிகப்பெரிய ஒரு ஊழல் முறைகேடு.

வழக்குரைஞர் சி. ராஜு , மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

நீட்டை எதிர்த்து யார் போராடுகிறார்கள் மருத்துவ கனவு கொண்ட மாணவர்கள் மட்டும் அல்லாது மற்ற அனைத்து தரப்பினரும் தமிழகமும்  எதிர்க்கிறது. நீட் எதிர்ப்பு மட்டுமல்லாது ஜல்லிக்கட்டு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை எதிர்ப்பு ஆகியவை சமத்துவத்திற்கான அடிப்படையில் அறிவார்ந்த போராட்டங்களை முன்னெடுப்பது தமிழகம் மட்டும்தான் மற்ற மாநிலங்கள் போராட்டங்களை முன்னெடுப்பது இல்லை. அதனை தர்க்க ரீதியாகவோ,  பகுத்தறிவு அடிப்படையிலோ பார்க்க தவறுவதுதான் மற்ற மாநிலங்கள் போராட்டம் நடத்தாமல் இருப்பதற்கு காரணங்களாக இருக்கின்றன. அனிதா பிறப்பால் வேண்டுமானால் தாழ்த்தப்பட்டவர் ஆக இருக்கலாம். ஆனால் அவர் மருத்துவராக வந்திருந்தாள் அவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய ஊர் மக்களுக்கு தான் மருத்துவ சேவை ஆற்றுவார். ஆனால் நீட் தேர்வு படிக்கும் மாணவர்கள் பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்கின்றனர். அதனால் தான் நீட் தேர்வை சாதாரணமான மக்கள் கூட எதிர்த்து நின்று போராடி வருகிறார்கள் தமிழகத்தில்.

படிக்க:
மதுவால் பள்ளி மாணவி தற்கொலை : யார் குற்றவாளி ?
அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிரமணாள் வருவாளா ?

நீட் கோச்சிங் என்பது பிராய்லர் கோழியை உருவாக்குவது. ஆனால் படிப்பு என்பது கற்றல் கற்பித்தல்  முறையில் படிப்பதாகும். நீட் தேர்வு கொண்டு வந்தது இங்கே நிகழ்ந்து வந்த சமத்துவத்தையும், சமுகநீதியையும் சுக்குநூறாக உடைத்து எறிந்திருக்கிறது.

இனி நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதால் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகள் செல்லமாட்டார்கள். இதன் விளைவு அரசு மருத்துவமனை தனியார்மயமாக்கப்படும் என்பதுதான்.

நீட் எதிர்த்து போராடுபவர்களை இது அரசியலைமைப்பு சட்டத்துக்கு எதிரானது என பேசுகிறார்கள். இந்த சட்டகத்துகுள் இருந்து பேசுவதை தான் பாஜக விரும்புகிறது. பெரும்பான்மை பலத்தை கொண்டு சட்டத்தையே திருத்துகிறது.

மோடி அரசு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பெயரில் காஷ்மீர் மாநில உரிமையை பறித்து இருக்கிறது. நிதி ஆயோக் WTO கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக மக்களுக்கு வழங்கக்கூடிய சேவைகள் உணவு , உடை, இருப்பிடம் என அனைத்தையும் மக்களுக்கு தர மறுக்கிறார்கள்.

ஒவ்வொரு கொள்கை சார்ந்த சட்டம் நிறைவேற்றும்போது பாராளுமன்றத்தில் எடுக்கக்கூடிய பெரும்பான்மைதான் அரசியல் முடிவு என சொல்கிறார்கள். களத்திலே  திட்டங்களை  எதிர்த்துப் போராடும் மக்களின் எதிர்ப்புதான் பெரும்பான்மை என ஜனநாயக அடிப்படையில் தான் அந்த திட்டத்திற்கான முடிவை எடுக்க வேண்டும்.

போராட்டங்களுக்கு வெற்றி தோல்வி அளவுகோல் அல்ல, கோரிக்கையின் நியாயம் தான் அளவுகோல். அரசின் கொள்கைகளை நேரடியாக எதிர்க்கும் வகையில்தான் நமது முழக்கத்தை முன்நிறுத்தி  போராடுவதுதான் மக்களுக்கு அதிகாரம், மாணவர்களின் அதிகாரம், தொழிலாளர்களின் அதிகாரம், விவசாயிகளின் அதிகாரம்”

தோழர் த. கணேசன் ,
மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.

”தமிழகத்தில் மட்டும்தான் நீட், தேசிய கல்வி கொள்கை மற்றும் பெரும்பான்மை மக்களுக்கு மக்களை பாதிக்கக்கூடிய மோடி அரசின் பல திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றன. காரணம் வடமாநிலங்களில் மாணவர்களையும், மக்களையும் பார்ப்பன இந்துமத கட்டுக்கதைகள் அவர்களை சிந்திக்க விடாமல் வைத்துள்ளது. வடமாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகம் அதற்கு நேர் எதிரானது. குறிப்பாக எந்தத் திட்டமாக இருந்தாலும் மக்களும் சரி, மாணவர்களும் சரி பகுத்துப் பார்ப்பது, கேள்வி கேட்பது என்பதோடு  தவறுக்கு எதிரானப் போராட்டங்களை முன்னெடுப்பது ஆரம்ப காலம் தொட்டு இருந்து வருகிறது.

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் மட்டுமல்ல, நீட் தேர்வு ஒரு மோசடி. சர்வதேச மாஃபியா கும்பலே இதில் இருக்கிறது என்பதை இன்று நாம் நடைமுறையில் பார்த்து வருகிறோம். அன்றாடம் செய்திகளில் தகவல்களை நாம் படித்து வருகிறோம். நமக்கு தெரிந்த அளவில் ஐந்து மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு செய்துள்ளனர் என்பது தெளிவு. இது தமிழகத்தில் மட்டும்தான் நடந்து உள்ளது என்று திட்டமிட்டு இந்த ஊடகங்களால் பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகின்றன. இது நாடு முழுவதும் மாஃபியா கும்பலாக செயல்பட்டு புரோக்கர்கள் ஏஜென்சிகளை கொண்டு நீட் தேர்வை நடத்துகிறார்கள். 2016-ல் நீட்தேர்வு நடத்தியது ஒரு அமெரிக்க தனியார் நிறுவனம்தான் முதல் முறைகேட்டில் ஈடுபட்டது.

படிக்க:
நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

இவர்கள் சொல்லக் கூடிய தகுதி திறமை கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இங்கு எந்த வித அங்கீகாரமும் கொடுக்கப்படவில்லை.  அரசு பள்ளியில் நீட் பயிற்சி பெற்ற 40,000 மாணவர்களில் இருந்து ஒரே ஒரு மாணவர்தான் அரசுபள்ளி மாணவன். இவர்கள் சொல்லும் திறமை என்பது, பெரும்பான்மை கிராமப்புற ஏழை மாணவர்களை வடிகட்டுவது அவர்களின் மருத்துவ கனவை சிதைப்பது தான்.

நன்றியுரை : தோழர் மோகன், அமைப்பாளர், புமாஇமு, புதுச்சேரி.

ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி கிடையாது; பணம் உள்ளவர்களுக்கும், பணக்கார வீட்டுப் பிள்ளைகளையும் மெட்டீரியல் மூலதனமாக பார்க்கிறது நீட் தேர்வு முறை. உண்மையில், நவீன மருத்துவ பிக்பாக்கெட் கொள்ளையர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.”

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி.
தொடர்புக்கு : 97888 08110, 91593 51158, 81244 12013