Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 292

தினமலர் | திருமணம் – பொது வாழ்க்கை | கொரோனா வைரஸ் | அர்ஜுன் ரெட்டி | சாதி மறுப்பு | கேள்வி – பதில் !

கேள்வி : போராடும் மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டவனின் முகத்தை மங்கலாக்கி தினமலர் வெளியிட்டுள்ளதே..”உண்மையின் உரைகல்லை” என்ன செய்யலாம்?

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

தினமலர் மட்டுமல்லாமல் இந்து தமிழ் திசை, ஸ்க்ரால் உள்ளிட்ட பெரும்பாலான ஊடகங்கள் அந்தக் காவித் தீவிரவாதியின் புகைப்படத்தை முகத்தை மங்கலாக்கியே வெளியிட்டிருந்தனர். காரணம் சுட்டவனுக்கு வயது 18 நெருங்கவில்லையாம்.

சும்மாவே காவிகளைக் காப்பாற்றும் பத்திரிகை, இப்படி ஒரு முகாந்திரம் இருக்கையில் அந்த காவித் தீவிரவாதியின் முகத்தைக் காட்டுவார்களா என்ன? நீங்கள் கூறுவது போல, பொய்மையின் உரைகல் மட்டுமல்ல, த்மிழ் திசை உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளும் நடுநிலை எனக் கூறிக்கொண்டு காவிகளுக்குச் சேவை புரிகின்றன. குறிப்பாக, ‘பொய்மையின் உரைகல்” காவிகளுக்காக நடத்தப்படும் ‘கட்சி’ சார்பற்ற நாளிதழ்! ‘நடுநிலைமையில்’ நின்று கொண்டு சங்கிகளுக்காக பஜனை செய்யும் தினசரி! நாமும் நடுநிலை என்ற பெயரில் வெளிவரும் காவிகளின் தினசரி தினமலரையும், இந்து தமிழ் திசையையும் அம்பலப்படுத்துவதை கடமையாகச் செய்ய வேண்டும்.

நன்றி !

♦ ♦ ♦

கேள்வி : ஆதித்ய வர்மா.. தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி மற்றும் ஹிந்தி கன்னடம் என்று பல மொழிகளில் பரவிக் கொண்டிருக்கும் திரைப்படம். இளைஞர்களை குறிவைக்கும் இப்படம் மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் செல்வராகவன் ஆகியோரின் சீரழிவு திரைப்படங்களைக் காட்டிலும் ஆபாச வக்கிரமாக இருக்கிறது என்று என் மனைவி கூறுகிறார்.

கல்லூரி மாணவர்களிடையே தாக்கத்தை உண்டாக்கிய இப்படம் ஏன் வினவால் கவனிக்கப்படாமல் இருக்கிறது?

S. கார்த்திகேயன்

ன்புள்ள கார்த்திகேயன்,

முற்றிலும் கவனிக்ககாமல் இல்லை. அர்ஜூன் ரெட்டி படம் குறித்து தமிழரசி என்பவரால் தனது அனுபவத்தோடு இணைத்து எழுதப்பட்ட இக்கட்டுரை ஓரளவு பேசுகிறது.

இன்றைய ஃபாஸ்ட் புட், டாஸ்மாக் கலாச்சாரத்திற்கு அடிமைப்படும் இளைஞர்களின் கோபம், பெண்களை வேட்டையாடி காதலிக்கும் அநாகரிகம், இவையெல்லாம் ஒரு படமாக நம் இளைஞர்களை ஏன் ஈர்க்கிறது என்பது தனியே பேசப்பட வேண்டிய விசயம். அர்ஜூன் ரெட்டி ஒரு ஆணழகன், முன் கோபி, குடிப்பான், நினைத்ததை சாதிப்பான் போன்றவை ஒரு பெண்ணுக்கு எப்படி இருக்கும் என்பதை மேற்கண்ட கட்டுரையில் தமிழரசி விளக்கியிருக்கிறார்.

இத்தகைய எழுதத்தக்க படங்கள் குறித்து அவ்வப்போது நினைவுபடுத்துங்களேன்! கண்டிப்பாக எழுதுகிறோம்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : கொரோனா வைரஸை சீனாவே உருவாக்கி வைத்திருந்ததாக செய்திகள் வருகிறதே அது உண்மைதானா?

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

பாம்பு, பல்லிகளை சாப்பிடும் தேசமென்று பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் சீனா குறித்த வாட்சப் வதந்தி இது. கொரோனா வைரஸ் குறித்தும், அதன் வரலாற்றையும் விளக்கும் விக்கி பீடியாவின் ஆங்கில தமிழ் கட்டுரைகளை படித்துப் பாருங்கள்!

கொரோனா வைரசால் சீனாவில் நூற்றுக்கணக்கானோர் இறந்து போயிருக்கிறார்கள். போர்க்கால அடிப்படையில் இந்த வைரசை கட்டுப்படுத்திய சீன அரசை ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனமே பாராட்டியிருக்கிறது. ஒருவேளை இந்த வைரஸ் இந்தியாவில் பரவியிருந்தால் நிச்சயம் பேரழிவுதான்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : தோழர்களுக்கு வணக்கம். மகேஸ்வரியின் மகள். நான் திருமணம் வேண்டாம் என்று சொல்லும் காரணத்தை குறிப்பிடாமல் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கான காரணத்தை அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். இல்லை நீங்களாவது அவர்களை கேள்வி கேட்பதோடு நிறுத்தி இருக்கலாம். முழு காரணமும் தெரியாமல் பதிலளித்து இருக்க வேண்டியதில்லை. ஒரு பெண் ஒன்று பிடிக்காத ஒன்றை படித்து கொண்டோ அல்லது ஒரு நபருக்கு மனைவியாக இருந்து கொண்டுதான் பொது வெளியில் மக்களுக்காக இருக்க வேண்டுமா என்ன?

குழலி

ன்புள்ள குழலி,

கேள்வியில் இருந்து இன்ன காரணம்தான் என்று குறிப்பாக முடிவெடுக்க முடியவில்லை. குத்துமதிப்பாக மக்களுக்காக பணியாற்றும் ஒரு பெண்ணுக்கு திருமணம் தேவையில்லை என்று உங்களது வார்த்தைகளில் இருந்து புரிந்து கொள்கிறோம். அதை பொறுமையாக பெற்றோரிடம் பேசுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் தெரிவு.

அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஒரு பெண் ஆளுமை மலருவதற்கு திருமணமும், குடும்பமும் மிகப்பெரும் தடையாக இருப்பது உண்மை. அதை ஆழமாகவும், தத்துவ நோக்கிலும் புரிந்து கொண்டு முடிவெடுத்தால் பிரச்சினையில்லை. இளைமையில் முடிவு வேகமாக இருக்கும். கூடவே அது விவேகமாகவும் இருப்பின் முதுமை வரை நம் வாழ்க்கை நம் கட்டுப்பாட்டிலும் சுதந்திரமாகவும் இருக்கும்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : சாதி மறுப்பாளராக இருக்கும் பெற்றோர் தம் குழந்தையை சாதியற்றவர் என்று பள்ளியில் சேர்க்கும் போது இட ஒதுக்கீட்டை சொல்லித்தான் பள்ளி நிர்வாகம் பயமுறுத்துகிறது. அதை புறம் தள்ளி பள்ளியில் சேர்க்கும் போது இதர எனும் பிரிவில் சேர்த்துக் கொள்கிறார்கள். பள்ளிப்படிப்பு முடிந்து பட்டப்படிப்பு தொடங்கும் போது இட ஒதுக்கீடு இல்லாதால் நம் குழந்தைகள் ‘அவாள்’ குழந்தைகளுடன் போட்டி போடும் நிலை வரும். மாணவர்களின் எதிர்காலம் என்னாவது?

பூங்கோதை

ன்புள்ள பூங்கோதை,

இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் மனச் சாந்திக்காக அளிக்கப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாடு. அதனால் நூற்றுக்கு நூறு மக்கள் முன்னேறி விடுவதில்லை. சாதி என்பது வர்க்கத்தோடும் தொடர்புடையது. எந்தப் பள்ளியில் சேர்க்கிறோம் என்பதிலேயே அது தெரிந்து விடுகிறது. இருப்பினும் அன்றாடம் கூலி வேலை செய்யும் ஏழைகளாக இருந்தாலும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் விரும்புவதில்லை. ஆங்கில வழிக் கல்வியில் தனியார் பள்ளியில் சேர்க்கவே விரும்புகிறார்கள். அப்படியும் வழியில்லாத மக்களே தமது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அரசு பள்ளியில் படித்துக் கொண்டு நீட் தேர்வில் போட்டி போட முடியாது என்பது நடுத்தர வர்க்கத்திற்கு நன்றாகவே தெரியும்.

பார்ப்பன இதர ‘மேல்’சாதி மக்கள் சாதி ரீதியாக மட்டுமல்ல வர்க்க ரீதியாகவே பொதுவில் வசதியாக இருக்கிறார்கள். எனவே இட ஒதுக்கீடு இன்றி அவர்களோடு போட்டி போடுவது என்பது சாதி ரீதியாக மட்டுமல்ல, வர்க்க ரீதியாகவும்தான். இன்றைக்கு பெரும்பான்மை ஏழை மக்கள் சாதி ரீதியாகத்தான் தமது பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அதனாலேயே அவர்களது வாழ்வில் வசந்தம் வந்து விடுவதில்லை. பெண்களாக இருப்பின் பள்ளி இறுதியோடு கல்வி முடிந்து விடும். ஆண்களாக இருந்தால் கொஞ்சம் பச்சையப்பா வரை எட்டிப் பார்க்கலாம். இதை விடுத்து பொறியியலோ, மருத்துவமோ இதர உயர் படிப்புகளோ அவர்களது கற்பனைக்கும் எட்டாத ஒன்று.

எனவே இட ஒதுக்கீடு இருக்கும் போதே இதுதான் ஏழை மக்களின் நிலைமை. மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்திற்கும் அதுதான் யதார்த்தம். இந்நிலையில் இட ஒதுக்கீடு இன்றி நமது குழந்தைகள் எதிர்காலத்தை இழந்து விடும் என்று பயப்படவேண்டியதில்லை. எல்லோருக்கும் கிடைக்கும் வாழ்க்கை நமக்கும் உண்டு. எல்லோருக்கும் இருக்கும் அபாயம் நமக்கும் இருக்கும்.

பிள்ளைகளை சாதியற்றவர்களாக பள்ளிகளில் சேர்ப்பது சாதியற்ற சமூகத்திற்கு தேவைப்படும் ஒரு தொடக்கம். அதன்படி சமூகத்தில் உங்களுக்கு உயர்ந்த இடம் எதிர்காலத்தில் காத்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய நாகரீக சமூகத்தின் வேர்களாக மாறுவதற்கு இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளை இழந்தால்தான் என்ன? எந்த ஒன்றையும் ஏதோ ஒன்றை இழந்துதான் பெற முடியும்.

இன்றைக்கு அரசு அனைத்தையும் தனியார்மயமாக்கி வரும் சூழலில் இட ஒதுக்கீடே கேள்விக்குரியதாக மாறிவிட்டது. காசு இருப்பவனே சமூகத்தில் வாழ முடியும் என்று ஆக்கிவிட்டார்கள். இட ஒதுக்கீடு இருப்பதால் நாம் அப்பல்லோவிற்கு போக முடிவதில்லை. அரசு மருத்துவமனைகளை நோக்கியே தள்ளப்படுகிறோம். இட ஒதுக்கீடு இருப்பதாலேயே பெரும்பாலான மக்கள் மிகப்பெரும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு சென்று தமது பொருட்களை வாங்குவதில்லை. ரேசன் கடைகளிலும் அருகாமை அண்ணாச்சி கடைகளில் கடன் வைத்தும்தான் வாங்குகிறார்கள்.

படிக்க :
திருமண நெருக்கடி | சாதியற்றவர்க்கு இடஒதுக்கீடு | துக்ளக் | கேள்வி – பதில் !
♦ இந்தியாவில் புற்றுநோயின் தாக்கம் : அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட் !

உங்களது பிள்ளை இட ஒதுக்கீட்டினாலும், பொருளாதார வசதியினாலும் ஒரு பல் மருத்துவராகத்தான் ஆகவேண்டுமென்பதில்லை. ஒரு பாலிடெக்னிக்கில் படித்து ஒரு தொழிலாளியாகக் கூட ஆகலாம். இந்த உலகமே தொழிலாளிகளின் வியர்வையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது எனும் போது நாம் ஏசி அறை மேன் மக்களின் கருத்துகளுக்காக அச்சப்பட வேண்டியதில்லை.

சாதியற்றவர் எனும் பிரச்சினை வெறும் பள்ளியோடு முடிந்து விடும் ஒன்றில்லை. சமூகம் அதை ஆயிரத்தெட்டு முறைகளில் எதிர்த்து பயமுறுத்தும். நல்லது கெட்டது என்றால் எட்டிப் பார்ப்பதற்கு சொந்த பந்தம் இருக்காது. உறவினர் கூட்டத்தில் இருந்து தனிமைப்படுவோம். நாளைக்கு திருமணமே பிரச்சினையாகும்.

இப்படியாக சமூகத்தின் முற்போக்கு நகர்விற்கு தடைகள் ஏராளமிருக்கிறது. சாதியற்ற சமூகமாக மாறுவதற்கு இந்த தடைகளை தாண்டினால் மட்டுமே சாத்தியம். அதன் துவக்கப் புள்ளிகளாக இருப்பதற்கு முதலில் பெருமைப்படுங்கள்!

உங்கள் குழந்தைகள் அவற்றின் திறமை விருப்பத்திற்கு ஏற்ப படிக்கட்டும். அதற்கு உங்களால் முடியும் வரை உதவுங்கள்! முடியாத போது விளக்குங்கள். நம் குழந்தைகளை நல்ல சமூக மனிதர்களாக வளர்ப்பதுதான் முதன்மையான பிரச்சினை. அதில் வெற்றி பெறும் போது இந்த மனமாச்சரியங்களுக்கு இடமில்லை.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை ! புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு

நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை பெருகியுள்ளது என இந்திய அரசின் ஆவணங்களே தெரிவிக்கின்றன. சந்தை தேக்கநிலை காரணமாக சிறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரும் ஆலைகள் வரை உற்பத்தி முடங்கிப் போயுள்ளது.

ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்குவதற்குக் கூட இயலாத நிலைக்கு ஏழைகள் தள்ளப்பட்டுள்ளனர். இன்னொருபுறம் சாதாரண மக்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு கற்பனைக்கு எட்டாதபடி அதிகரித்துள்ளது. இந்தியாவில், சுமார் 70% பொதுமக்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பைவிட நான்கு மடங்கு அதிகமான சொத்துக்கள் வெறும் 1% பணக்காரர்களிடம் குவிந்துள்ளது என்கிறது சர்வதேச ஆக்ஸ்ஃபாம் அறிக்கை.

பெரும்பான்மை மக்களிடமிருந்து சுரண்டப்படும் பணம், தொடர்ந்து சிறு எண்ணிக்கையிலான பணக்காரர்களிடம் போய்க் குவிவதையே இது காட்டுகிறது. இந்தத் தொடர் நச்சுச் சுழலின் விளைவாக வேலைவாய்ப்பின்மை, வேலையிழப்பு, தொழில் முடக்கம் என நேரடியாகப் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான்.

இச்சூழலிலிருந்து தம்மைக் காக்க வக்கற்ற – தம்மை மேலும் மேலும் சுரண்டும் – இந்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக மக்கள் இயல்பாகவே கொந்தளிப்பில் உள்ளனர். மக்களின் கோபத்தை, மத அரசியலைக் கொண்டு திசை திருப்ப முயற்சிக்கிறது சங்கபரிவாரக் கும்பல்.

அதன் ஒரு பகுதியாகவே, பொருளாதார நெருக்கடி முற்றியிருக்கும் நேரத்தில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல், குடியுரிமை சட்டத் திருத்தம் உள்ளிட்ட மக்களைப் பிளவுபடுத்தும் வேலைகளை நடைமுறைப்படுத்துகிறது பாஜக. இந்த நடவடிக்கைகள் எல்லாம், பெரும் பான்மை இந்து மக்களை, முஸ்லீம் தீவிரவாதத்திலிருந்து காப்பதற்காகவே எடுக்கப்படுவதாக சங்கப் பரிவாரக் கும்பல் பிரச்சாரம் செய்கிறது.

நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில், சங்கப் பரிவாரத்தின் இக் கட்டுக்கதைகளை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக இல்லை. அதுவே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் மோடி அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

குடியுரிமைச் சட்டத்தை முகாந்திரமாகக் கொண்டு நாடெங்கும் துவங்கியிருக்கும் இந்தப் போராட்டத்தை, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டமாக விரிவாக எடுத்துச் செல்வதே இன்று நம் முன் உள்ள கடமையாகும்! அதற்கு இந்தத் தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறோம்!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை ! – புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

“ மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை !  ” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
♦ பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும்: துக்ளக் பாதி! இட்லர் பாதி!!
♦ 45 ஆண்டு சாதனையை முறியடித்த மோடி: ஆறரை கோடிப் பேருக்கு வேலையில்லை!
♦ வாகன விற்பனையில் மந்த நிலை: 32,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!
♦ 50 இலட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு!
♦  பொருளாதார நெருக்கடி: முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது!
♦ வேலையில்லா திண்டாட்டம்: தீர்க்க என்ன வழி? (கேள்வி-பதில்)
♦ ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம்!
♦ இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி!
♦  அசோக் லேலாண்ட்: மிகை உற்பத்தி! வேலை நாள் குறைப்பு சதி!
♦ மோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம்!
♦ தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன? (கேள்வி – பதில்)
♦ எடப்பாடியின் பொங்கல் பரிசு மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன்!
♦ பொருளாதார நெருக்கடி: அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா ?
♦ காஷ்மீரில் ரூ. 10,000 கோடி பொருளாதார இழப்பு!
♦ NRC: இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா?
♦ CEO- வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம் – ஆக்ஸ்ஃ பாம் அறிக்கை !
♦ அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை : நாம் எதிர்பார்த்ததைவிட நிலைமை மோசமாகவே இருக்கிறது!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

LIC தனியார்மயம் : பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மத்திய அரசு

ந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எனப்படும் எல்ஐசி ஒரு பொன் முட்டையிடும் வாத்து. அதன் பங்குகளை விற்கப்போவதாக பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. எந்த விவசாயியும் ஒருபோதும் விதை நெல்லை விற்க மாட்டார். மத்திய அரசு அதைத்தான் செய்யப்போகிறது.

எல்ஐசி ஒரு அற்புதமான நிறுவனம். அதைப் பற்றிய சில தகவல்களைப் பாருங்கள். இனிமேல் ஒருபோதும் இப்படி ஒரு அரசு நிறுவனத்தை உருவாக்க முடியாது.

1. இந்தியாவின் காப்பீடு சந்தையில் 70 சதவீதம் எல்.ஐ.சி.யின் பிடியில் உள்ளது. எப்போதெல்லாம் அரசு நிதி நெருக்கடியை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு நல்ல நண்பனை போல வந்து எல்.ஐ.சி. காப்பாற்றும்.

2. நேரு பிரதமராக இருக்கும்போது அவரது மருமகனான ஃபெரோஸ் காந்தி காப்பீட்டுத் துறையில் நடைபெற்ற மோசடிகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்ப, 1956-ல் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு, இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டன. எல்.ஐ.சி. உருவானது.

3. 2015-ல் ஓஎன்ஜிசியின் பங்குகளை பங்குச் சந்தையில் விற்றபோது எல்.ஐ.சி அந்த நிறுவனத்தில் 1.4 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐடிபிஐ வங்கி வாராக் கடன்களில் மூழ்கியபோது எல்.ஐ.சி. மீண்டும் வந்து காப்பாற்றியது.

4. 2019, நவம்பர் 30 வரையில் எல்.ஐ.சியின் பங்கு காப்பீட்டு சந்தையில் 76.28 சதவீதம் இருந்தது. 2019 நிதியாண்டில் எல்.ஐ.சி 3.37 லட்சம் கோடி ரூபாய் வாடிக்கையாளர்களின் பீரிமியத்திலிருந்தும் 2.2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திலும் வருமானம் ஈட்டியுள்ளது.

5. 2019-ம் ஆண்டின் நிதியாண்டில் எல்.ஐ.சி பங்கு சந்தையில் 28.32 லட்சம் கோடி ரூபாயும், கடனாக 1.17 லட்சம் கோடி ரூபாயும் மற்றும் 34,849 கோடி ரூபாயை பண சந்தையிலும் முதலீடு செய்துள்ளது.

6. எல்.ஐ.சியின் மொத்த சொத்து 36 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அதன் கடன் வெறும் 4 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.

படிக்க:
LIC நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய நீரவ் மோடி ! புதிய அதிர்ச்சி !
இந்திய நாடு, அடி(மை) மாடு !

7. ஒவ்வொரு வருடமும் அரசு பத்திரங்களிலும் பங்கு சந்தைகளிலும் எல்.ஐ.சி 55 முதல் 65 ஆயிரம் கோடி முதலீடுகளை செய்கிறது.

8. 2009-லிருந்து வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்றபோதெல்லாம் எல்.ஐ.சிதான் அதை வாங்க முன்வரும் முதல் நிறுவனமாக இருந்தது. 2009லிருந்து 2012 வரை பொதுத்துறையின் பங்குகளை விற்றதில் அரசு 9 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு எல்.ஐ.சியின் பங்கு ஆகும். ஓஎன்ஜிசியின் பங்குகளை விற்க முடிவு செய்தபோது, அதனை வாங்க யாரும் வராத நிலையில், எல்ஐசி முன்வந்து வாங்கியது.

9. எல்ஐசியில் காப்பீட்டு தொகை மற்றும் போனஸுக்கு மத்திய அரசே பொறுப்பு என எல்.ஐ.சி சட்டத்தின் 37-வது பிரிவு கூறுகிறது. மற்ற தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் இது கிடையாது.

மோடி அரசின் முடிவை கண்டித்து, எல்.ஐ.சி. அதிகாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

10. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் எல்.ஐ.சி.யின் செயல்பாடுகள் சுணக்கமடைய செய்யப்பட்டுள்ளன. 2019 மார்ச் மாத ஆண்டு அறிக்கையின் படி முதலீட்டு விகிதத்தில் வருவாய் ஈட்டாத சொத்துகளில் மதிப்பு 6.15 சதவீதமாக மாறியுள்ளது. 2014-15ல் இது 3.30 சதவீதமாக இருந்தது. அதாவது கடைசி ஐந்து நிதியாண்டில் 100 சதவீதமாக உயர்ந்துள்ளது.

11. எல்.ஐ.சியின் இந்த நிலைக்கு காரணம் எல்.ஐ.சி முதலீடுசெய்ய வைக்கப்பட்ட பெரும்பாலான நிறுவனங்களின் நிலை மோசமாகியிருப்பதுதான். இதில் திவான் ஹவுசிங் ரிலையன்ஸ், இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் பிராமல் கேபிடல் ஆகியவையும் அடக்கம்.

12. பல அரசு நிறுவனங்களை விற்று அரசின் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முயல்கிறது மத்திய அரசு. ஆனால், வருடாவருடம் அதனால் இலக்குகளை எட்ட முடியாத நிலையில், எல்ஐசியை குறிவைத்திருக்கிறது மத்திய அரசு.

இது தொடர்பாக வெளியான பிபிசியின் கட்டுரைக்கான இணைப்பு :
இந்தியாவின் பொக்கிஷமான எல்.ஐ.சி-யின் பங்குகளை மத்திய அரசு விற்பது ஏன்?

நன்றி : முகநூலில் Muralidharan Kasi Viswanathan

disclaimer

உழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் – 55

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 55

உழைப்புப் பிரிவினை

அ.அனிக்கின்

டம் ஸ்மித் உழைப்புப் பிரிவினையைச் சமூக உழைப்பின் உற்பத்தித் திறனின் வளர்ச்சியில் முக்கியமான காரணியாகச் சித்திரிக்கிறார். கருவிகளும் இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டதையும் அவை அபிவிருத்தி செய்யப்பட்டதையும் அவர் உழைப்புப் பிரிவினையோடு இணைக்கிறார்.

ஸ்மித் குண்டூசி தொழிற்சாலையைப் பற்றிய அவருடைய பிரபலமான உதாரணத்தைக் கூறுகிறார்; அந்தத் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் சிறப்புத் தேர்ச்சியினாலும் நடவடிக்கைகள் அவர்களுக்கிடையே பிரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதனாலும் உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பது சாத்தியமானதாகக் கூறுகிறார். அவருடைய புத்தகம் நெடுகிலும் உழைப்புப் பிரிவினை என்பது ஒரு வகையான வரலாற்று ரீதியான முப்பட்டைக் கண்ணாடியாக இருக்கிறது; அதன் மூலமாகவே அவர் பொருளாதார நிகழ்வுப் போக்குகளை ஆராய்கிறார்.

சமூகத்தின் “செல்வம்”, அதாவது பொருள்களின் உற்பத்தி மற்றும் நுகர்வின் அளவு இரண்டு காரணிகளைப் பொறுத்திருக்கிறது என்று ஸ்மித் எழுதுகிறார்.

1) மக்கள் தொகையில் பயனுள்ள உழைப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் விகித அளவு.
2) உழைப்பின் உற்பத்தித் திறன் ஆகியவை அக்காரணிகளாகும்.

இரண்டாவது காரணியே ஒப்பிட முடியாத அளவுக்கு மிக முக்கியமானது என்று அவர் தொலைநோக்கோடு நம்பினார். உற்பத்தித் திறனை நிர்ணயிப்பது எது என்ற கேள்வியைக் கேட்டு அதற்கு உழைப்புப் பிரிவினையே என்ற பதிலைக் கொடுக்கிறார். இந்தப் பதில் அவருடைய காலத்துக்கு முற்றிலும் தர்க்க ரீதியானதாகும். முதலாளித்துவ வளர்ச்சியில் பட்டறைத் தொழில் கட்டத்தில், இயந்திரங்கள் இன்னும் அபூர்வமாகவும் உடல் உழைப்பே மேலோங்கியுமிருந்த காலத்தில், உற்பத்தித் திறனின் வளர்ச்சியில் முக்கியமான காரணியாக இருந்தது உழைப்புப் பிரிவினைதான்.

உழைப்புப் பிரிவினை இரு விதமாக இருக்கலாம். ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் வெவ்வேறு நடவடிக்கைகளில் சிறப்பான அனுபவம் பெறுகின்றனர்; எல்லோரும் சேர்ந்து ஒரு பூர்த்தியடைந்த பொருளை, உதாரணமாகக் குண்டூசியைத் தயாரிக்கின்றனர். இது ஒரு வகை.

அடுத்தது சமூகத்தில் தனி ஆலைகளுக்கும் பிரிவுகளுக்கும் இடையே உள்ள உழைப்புப் பிரிவினை – முற்றிலும் வேறு விதமான தாகும். கால்நடைகளை வளர்ப்பவர் கால்நடைகளை வளர்க்கிறார்; அவற்றைக் கசாப்புக் கடைக்காரரிடம் இறைச்சிக்காக விற்பனை செய்கிறார். கசாப்புக் கடைக்காரர் அவற்றைக் கொன்று அவற்றின் தோலைத் தோல் வியாபாரியிடம் விற்பனை செய்கிறார். அவர் அந்தத் தோலைப் பதனிட்டு செருப்புத் தைப்பவரிடம் விற்பனை செய்கிறார்……

ஸ்மித் இந்த இரண்டு வகைகளைச் சேர்ந்த உழைப்புப் பிரிவினையையும் குழப்பிக் கொள்கிறார். முதல் வகையில் வாங்குவதும் விற்பனை செய்வதும் இல்லை, ஆனால் இரண்டாவது வகையில் அவை உள்ளன-அவற்றுக்கிடையே உள்ள இந்த அடிப்படையான வேறுபாட்டை அவர் பார்க்கவில்லை. அவர் மொத்த சமூகத்தையுமே ஒரு பிரம்மாண்டமான தொழிற்சாலையாகவும் உழைப்புப் பிரிவினை என்பது “நாடுகளின் செல்வத்தின்” நன்மைக்காக மனிதர்கள் ஈடுபடுகின்ற பொருளாதார ஒத்துழைப்பின் சர்வாம்ச வடிவமாகவும் கருதினார். அவர் முதலாளித்துவ சமூகத்தை சாத்தியமான ஒரே சமூகமாகவும் இயற்கையானதாகவும் அழிவில்லாததாகவும் பொதுவான முறையில் கருதினார். உண்மையில் ஸ்மித் கண்ட உழைப்புப் பிரிவினை தனி வகையில் முதலாளித்துவ ரீதியானது என்பது அதன் முக்கியமான கூறுகளையும் விளைவுகளையும் நிர்ணயிக்கிறது. அது ஏதோ சமூகத்தின் முன்னேற்றத்தை மட்டும் ஊக்குவிக்கவில்லை ; மூலதனத்துக்கு உழைப்பு கீழ்ப்படுவதை வளர்த்து வலுப்படுத்தியது.

படிக்க :
இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி
♦ மோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு !

மற்ற பல பிரச்சினைகளைப் போலவே இந்தப் பிரச்சினையிலும் ஸ்மித் இரு பக்கத்தன்மை கொண்டவராக இருக்கிறார். அவர் தம்முடைய நூலின் தொடக்கத்தில் முதலாளித்துவ உழைப்புப் பிரிவினையை வாயாரப் புகழ்கிறார்; ஆனால் இன்னொரு பகுதியில் அது தொழிலாளியின் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதென்று வாதிடுகிறார்.

“உழைப்புப் பிரிவினை முன்னேற்றமடைகின்ற பொழுது உழைத்துப் பிழைக்கின்ற மிகப் பெரும் பகுதியினர், அதாவது மக்களில் பெருந்திரளானவர்களின் வேலையானது ஒரு சில மிகச் சுலபமான – பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு நடவடிக்கைகளோடு நின்றுவிடுகிறது….. அவனுடைய (தொழிலாளியினுடைய-ஆ-ர்) சொந்தத் தொழிலில் அவனுக்குள்ள கைத்திறன் அவனுடைய அறிவு, சமூக, போராட்டத் தகுதிகளை இழந்து இவ்விதமாக அடையப்படுவது போலத் தோன்றுகிறது. ஆனால் முன்னேற்றமும் நாகரிகமும் அடைந்த ஒவ்வொரு சமூகத்திலும் உழைக்கின்ற ஏழைகள், அதாவது மக்களில் மிகப்பெரும் பகுதியினருக்கு ஏற்படுகின்ற நிலை இது தான். இதைத் தடுப்பதற்கு அரசாங்கம் ஏதேனும் முயற்சிகளைச் செய்யவில்லை என்றால் இந்த நிலை தவிர்க்க முடியாததாகும்.” (1) மூலதனத்துக்கு, முதலாளித்துவ உற்பத்திக்கு எந்த ஆதரவும் இல்லாத ஒட்டுப் பகுதியாக, மார்க்ஸ் குறிப்பிட்ட “பகுதி உழைப்பாளியாகத்” தொழிலாளி மாற்றப்படுகிறான்.

இந்த மேற்கோளின் கடைசி வாக்கியம் நம் கவனத்தைக் கவர்கிறது. சுதந்திர உற்பத்திக்கு நிபந்தனையில்லாமல் ஆதரவு கொடுக்கின்ற ஒருவரிடம் இதை நாம் எதிர்பார்க்கவில்லை. முதலாளித்துவத்திடம் ஒரு ஆபத்தான போக்கு இருப்பதை ஸ்மித் உணர்ந்திருக்கிறார் என்பதே இங்கேயுள்ள உண்மையாகும். எல்லாவற்றையுமே இயல்பான போக்கைப் பின்பற்றுமாறு விட்டுவிட்டால் மக்கள் தொகையில் கணிசமான பகுதி சீரழிந்து விடுகிற ஆபத்து ஏற்படும். இதைத் தடுப்பதற்கு அரசைத் தவிர வேறு விதமான எந்த சக்தியையும் அவர் பார்க்க முடியவில்லை.

உழைப்புப் பிரிவினையையும் பண்டப் பரிவர்த்தனையின் நிகழ்ச்சிப் போக்கையும் வர்ணித்த பிறகு ஸ்மித் பணத்தைப் பற்றிய பிரச்சினையை எழுப்புகிறார். பணம் இல்லையென்றால் முறையான பரிவர்த்தனை என்பது இயலாததாகும். அவர் நான்காம் அத்தியாயத்தில் பணத்தின் தன்மையையும் மற்ற பண்டங்களிலிருந்து வேறுபட்ட ஒரு விசேஷமான பண்டமாக – எக்காலத்துக்கும் உரிய சமமதிப்பு என்பதாக அது தோற்றமெடுத்த வரலாற்றையும் உணர்வு பூர்வமாக விவாதிக்கிறார். இது ஒரு சிறிய அத்தியாயமாகும். ஸ்மித் பணத்தையும் கடன் வசதியையும் பற்றி அடிக்கடி எழுதுகிறார். எனினும் இந்தப் பொருளாதார இனங்கள் அவருடைய எழுத்தில் அற்பமான பாத்திரத்தையே வகிக்கின்றன.

படிக்க :
முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?
♦ நடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் !

பணத்தைப் பொருளாதார நிகழ்வுப் போக்குகளை சுலபமாக்குகின்ற தொழில் நுட்பக் கருவியாக மட்டுமே அவர் பார்க்கிறார்; அதை “செலாவணியின் மாபெரும் சக்கரம்” என்று அழைக்கிறார். கடன் வசதியை மூலதனத்தைச் சுறுசுறுப்பாக்குகின்ற சாதனமாக மட்டுமே கருதுகின்றார், அதைப் பற்றி ஒரு சிறிதே கவனம் செலுத்துகிறார். அவர் பணத்தையும் கடன் வசதியையும் உற்பத்தியிலிருந்து பரிணமிக்கச் செய்தார், உற்பத்தியோடு சார்ந்த வகையில் அவற்றின் கீழ்நிலைப் பாத்திரத்தைக் கண்டார் என்பதில் தான் அவர் கருத்துக்களின் சிறப்பு அடங்கியிருக்கிறது. ஆனால் இவையும் ஒரு தரப்பான, குறுகிய கருத்துக்களாக இருந்தன. பணவியல் மற்றும் கடன் காரணிகள் அடைகின்ற சுதந்திரத்தையும் உற்பத்தியின் மீது அவை செலுத்துகின்ற தலைகீழான மாபெரும் தாக்கத்தைப் பற்றியும் அவர் குறைத்து மதிப்பிட்டார்.

நாடுகளின் செல்வத்தின் முதல் நான்கு அத்தியாயங்களும் படிப்பதற்குச் சுலபமானவை, அவற்றிலுள்ள செய்திகளும் சுவாரசியமானவை. ஸ்மித்தினுடைய போதனையின் மூலப் பகுதியான மதிப்புத் தத்துவத்துக்கு அவை ஒரு விதத்தில் அறிமுகமாகப் பயன்படுகின்றன. அதன் தொடக்கத்தில் இந்தப் பொருள் “மிக அதிகமான அளவுக்கு சூக்குமத்தன்மை” கொண்டிருக்கின்ற படியால் வாசகர் “பொறுமையாகவும் கவனத்தோடும்” படிக்க வேண்டுமென்று ஸ்மித் மனதாரக் கேட்டுக் கொள்கிறார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) A. Smith, The Wealth of Nations, Vol. II, London, 1924, pp. 263, 264.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

கம்யூனிஸ்ட்டுகள் | பெண்ணியம் | தேவேந்திர குல வேளாளர் | தமிழ் தேசியர்கள் | கேள்வி பதில்

கேள்வி :
1.கம்யூனிஸ்டுகள் குறித்து உங்கள் பார்வை?
2.தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியமைக்க என்ன உத்தியை கடைபிடிக்க வேண்டும்..?
சக்திவேல்

அன்புள்ள சக்திவேல்,
தேர்தல் அரசியலில் இருக்கும் கம்யூனிஸ்டுகளையே நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். தேர்தல் அரசியலை மறுத்து செயல்படும் மார்க்சிய லெனினிய கம்யூனிசக் கட்சிகளும் இந்தியாவில் இருக்கின்றன. ஒரு சில மாநிலங்களில் ஓரளவு செல்வாக்கோடும் இருக்கின்றனர். தேர்தல் அரசியலில் ஈடுபடும் கம்யூனிஸ்டுகளில் சிபிஎம், சிபிஐ இரு கட்சிகளும் முதன்மையானவை. தற்போது கேரளாவைத் தாண்டி அவர்கள் ஆட்சி புரியும் மாநிலம் ஏதுமில்லை. கடந்த காலத்தில் ஆட்சி செய்த திரிபுராவையும், மேற்கு வங்கத்தையும் அவர்கள் இழந்திருக்கிறார்கள்.

தேர்தல் அரசியலில் இருக்கும் கம்யூனிஸ்டுகளின் தோல்விக்கு அவர்கள் மற்ற வாக்கரசியல் கட்சிகளை நம்பியும், கூட்டணி வைத்தும் செயல்படுவது ஒரு காரணம். கம்யூனிஸ்டுகளுக்கென்று தனித்திட்டம், கொள்கை, செயல்பாடு என்ற முறையில் அவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவில்லை. அவர்களது தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் போன்றவை அந்தந்த பிரிவின் பொருளாதாரப் போராட்டங்களை மட்டும் நடத்துகின்றன. அரசியல் ரீதியாக இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வரும் அரசியல் போராட்டங்களை மைய ரீதியாக நடத்துவதில்லை. அப்படி ஒரு பார்வையுமில்லை. மக்களும் கம்யூனிஸ்டுகள் நல்லவர்கள், ஆனால் ஆட்சி அமைக்க அவர்கள் தேவையில்லை என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்திலும் திமுக, அதிமுக-வை நம்பி மாறி மாறிக் கூட்டணி வைத்துக்கொண்டு ஒரு சில தொகுதிகளை பெறுவதே பெரும் சிரமம் என்ற நிலையில்தான் இங்குள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கின்றன. அடிப்படையில் இந்தியாவில் எப்படி புரட்சி செய்யப் போகிறோம், அதற்கு எப்படி மக்களைத் திரட்டப் போகிறோம் என்ற பார்வையின்றி வெறும் வாக்கரசியல் வளையத்தில் மட்டும் வலம் வருவதனால் அவர்கள் தேய்ந்து போய்விட்டார்கள். ஆகவே அவர்கள் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது என்பது சாத்தியமில்லை. அக்கட்சிகளுக்குள்ளே அணிகளிடம் இது குறித்த அரசியல் விவாதம், போராட்டம் நடந்து ஏதும் மாற்றம் வந்தாலொழிய வேறு ஒளிமயமான எதிர்காலம் இல்லை.

நன்றி!

o0o0o

கேள்வி:
குறிப்பிட்ட கோட்பாடுகளை பேசும் போது இஸம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தன் வாழ்வை தனக்கேற்றபடி வாழ நினைத்து போராடும் பெண்களை பெண்ணியவாதி(feminist) என்று கூறுவதன் நோக்கம் என்ன?
ச. தி. அன்பரசி

அன்புள்ள அன்பரசி,

இஸத்திற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் பெண்ணியம் அல்லது ஃபெமினிசத்திற்கும் பொருந்தும். பெண்ணியமும் தனக்கென்று சில அடிப்படைக் கோட்பாடுகளை வைத்திருக்கிறது. அதே நேரம் அவை உலகில் ஒரே மாதிரியான புரிதலில் ஏற்றுக் கொண்டிருக்கப்படவில்லை. பெண்ணியத்திற்குள்ளேயே பல கருத்து வேறுபாடுகளையும் முன்வைக்கிறார்கள்.

முதன்மையான ஆணாதிக்க சமூக அமைப்பே பெண்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் என்று பெண்ணியம் கருதுகிறது. அது ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போராக இருந்தாலும், வெனிசுலாவில் நடக்கும் வறுமைக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறையாக இருந்தாலும், அனைத்து துறைகளிலும் நிலவும் பாலியல் ரீதியான பாகுபாடுகளாக இருந்தாலும் இப்படி பார்க்கிறார்கள்.

எனினும் இந்த உலகம் ஆண்கள் X பெண்கள் என்ற முரண்பாட்டினால் மட்டும் இயங்கவில்லை. முதன்மையாக சொத்துடமை X சொத்தின்மை என்ற முரண்பாட்டினால் இயங்குவதாக கம்யூனிஸ்டுகள் கருதுகிறோம். ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர் என்பது ஒரு ஏழை மூன்றாம் உலக நாட்டின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவும், வளைகுடாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கை நிலை நிறுத்தவுமே அன்றி வேறு அல்ல. ஆக்கிரமிப்பு போரின் பாதிப்பு ஈராக்கின் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சேர்ந்தே அழிவுகளைக் கொண்டு வருகிறது.

அதே நேரம் இந்தியாவின் பார்ப்பனிய சமூக அமைப்பாக இருந்தாலும் சரி, அமெரிக்காவின் முதலாளித்துவ சமூக அமைப்பாக இருந்தாலும் சரி இரண்டிலும் கணிசமான அளவுக்கு ஆணாதிக்கம் கோலேச்சுகிறது. அதை இல்லை என்று மறுக்க முடியாது.

குடிசைப் பகுதியில் இருக்கும் பெண்ணுக்கும், மாளிகையில் வசிக்கும் பெண்ணுக்கும் பெண்ணுரிமையின் பிரச்சினைகள் ஒரே போன்று இருப்பதில்லை. அதே போன்று பொதுப்பிரிவில் வரும் ஆதிக்க சாதிப் பெண்களுக்கும், பட்டியலினப் பிரிவில் வரும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும் ஒரே போல சமூக அந்தஸ்து, பிரச்சினைகள் இருப்பதில்லை. இப்படி பெண்களுக்குள்ளேயே வர்க்கம், சாதி அடிப்படையில் பிரச்சினைகள் வேறுபடுகின்றன. சில பெண்ணியவாதிகள் இதை அங்கீகரித்தாலும் அடிப்படையில் பாலின பாகுபாட்டையே முதன்மையாக முன்வைக்கிறார்கள்.

படிக்க :
♦ ‘மகாபாரதத்தில் பெண்கள்’ – உரையை ரத்து செய்த சங்கிகள் ! காரணம் என்ன ?
♦ பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு !

நீங்கள் குறிப்பிடுவது போல தனக்கென்று ஒரு தனி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மட்டும் பெண்ணியவாதிகளின் பணியல்ல. அவர்கள் சமூக ரீதியாகவும் பணியாற்றுகிறார்கள். பணியாற்ற வேண்டும். தாங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளிற்காக சிலர் களத்திலும் வேலை செய்கிறார்கள். இந்தியாவில் அப்படி குறிப்பிட்டுச் சொல்லும் பெண்ணிய அமைப்புகள் இல்லையென்றாலும் மேற்குலகில் இருந்திருக்கின்றன. தற்போது பொதுவில் பெண்ணியவாதக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வோர் தனிநபர்களாக இருந்தாலும் தங்களை பெண்ணியவாதி என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

பெண்ணியவாதம் ஒரு பெண்ணின் தனி உரிமைக்கான வாழ்வியல் என்பது தனிநபர் உரிமை பற்றி மட்டும் பேசும் கருத்தாக சுருங்கி விடுகிறது. மாறாக அது சமூகத்தில் பெண்களின் உரிமைகளுக்கான இசமாக இருக்கும் போது சமூக மாற்றத்தில் அதற்கும் ஒரு பங்கிருக்கிறது. அத்தகைய சமூக நோக்கிலான பெண்ணிய அமைப்புகளை கம்யூனிசம் நேச சக்தியாகவே பார்க்கிறது, கொள்கையில் வேறுபாடு இருந்தாலும்!

நன்றி!

o0o0o

கேள்வி:
தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் இழுத்தடிக்கப் படுகிறது?
அசோக்

அன்புள்ள அசோக்,

பாஜக எஜமானர்களின் விசுவாசமான அடிமையாக புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அரசியல் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது நீங்கள் குறிப்பிடும் பெயர் மாற்றம் ஏன் இழுபடுகிறது, எங்களுக்கும் புரியவில்லை.

o0o0o

கேள்வி:
இன்று தஞ்சை கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய் என்று போராடும் தமிழ்தேசிய தலைவர்கள் அன்று சிதம்பரம் கோவிலில் ஐயா ஆறுமுகசாமியோடு தமிழில் பாட சிற்றம்பலம் ஏறாதது ஏன்?

சி. நெப்போலியன்

அன்புள்ள நெப்போலியன்,

இப்படி எதிர்மறையாகப் பார்க்கத் தேவையில்லை. சிதம்பரம் கோவில் தமிழ் பாடும் போராட்டம், திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், அனைத்து சாதி அர்ச்சகர் போராட்டம், தமிழ் மக்கள் இசை விழா என்று பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழ் மக்களின் பண்பாட்டுப் போராட்டத்தை ம.க.இ.க. மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் தீவிரமாக நடத்தின. அன்றைக்கு தமிழ் தேசியர்கள் அவற்றில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் தார்மீக ரீதியான ஆதரவைத் தந்தார்கள். இன்றைக்கு அவர்கள் தஞ்சை குடமுழுக்கு போராட்டத்தை முன்னின்று நடத்துவதை நாம் வரவேற்க வேண்டும். தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தை அவர்களும் புரிந்து கொண்டிருப்பது நல்ல விசயம்தானே?

o0o0o

TNPSC மோசடி : இது வெறும் ஊழல் அல்ல ! உங்கள் உழைப்பை அழிப்பது !

12

மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழக அரசுப் பணிகளுக்குத் தேவையானவர்களை குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3 மற்றும் குரூப் 4 ஆகிய போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது.  இந்தத் தேர்வுகளில் வெல்பவர்கள் அரசு அலுவலகங்களில் உதவியாளர் முதல் வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளில் அமர்த்தப்படுவர்.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப் 4 எனும் நான்காம் நிலை அரசுப் பணியாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், சர்வேயர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வு 5,575 மையங்களில் நடந்தது; மொத்தம் 16,29,865 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் வெளியாக அதன் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட போது அதில் முதல் 100 இடங்களில் இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரண்டு இடங்களில் இருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தனர். இவர்களில் பலர் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

இவ்வாறு வேறு மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் வந்து தேர்வெழுதியவர்கள் அதற்காக சொன்ன காரணமும் ஒரே போல் இருக்கவே, இதில் முறைகேடு இருப்பதாக மற்ற போட்டியாளர்கள் கூறினர். இதையடுத்து, தேர்வாணையம் சிபிசிஐடி விசாரணை கோரியது. போலீசார் நடத்திய விசாரணையில் 99 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

படிக்க :
♦ நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
♦ வியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம் !

முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் மேல் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார்,  இதுவரை தேர்வர்கள் உட்பட 14 பேரை கைது செய்துள்ளனர். மேலும், கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ், ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி ஆகியோர் விசாரணை செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் எவ்வாறு நடந்தது என்பதற்கு சிபிசிஐடி போலீசார் எழுதியுள்ள திரைக்கதை நமது சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.

முதலிடம் பெற்ற 100 பேரின் தேர்வுத் தாள்கள் சோதிக்கப்பட்டபோது, அதில் 52 பேரின் தேர்வுத் தாள்கள் மாயமாகும் மையால் முதலில் நிரப்பப்பட்டு, பிறகு திருத்தம் செய்யப்பட்டது என்பது தெரியவந்தாம். அதாவது முதலில் மாயமாகும் மையால் எழுதி, அந்த விடைத்தாள்கள் திருத்தும் மையத்திற்கு வந்து சேரும் இடைவெளியில் நல்ல மையால் எழுதப்பட்டது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஓம் கந்தன் என்பரே மூளை என்பதாகச் சொல்லி கைதுள்ளனர் போலீசார். ஓம் கந்தனும், சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்கிற இடைத்தரகரும் சேர்ந்துதான் இந்த முறைகேட்டை நடத்தியுள்ளனர்.

மாதிரி படம்
மாதிரி படம்

ராமேஸ்வரம், கீழக்கரை பகுதி தேர்வு மையத்தில் தனக்கு பணம் கொடுத்தவர்களை தேர்வெழுதச் செய்த ஜெயக்குமார், தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு, எழுதி சிறிது நேரத்தில் மாயமாகும் பேனாக்களைக் கொடுத்துள்ளார். ‘மேஜிக்’ பேனாக்களால் நிரப்பப்பட்ட விடைத்தாள்கள் தேர்வு முடிந்த பின் ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டன. விடைத்தாள்களை அங்கிருந்து சென்னை தேர்வாணையத்திற்கு கொண்டு செல்லும் பணியில் உள்ள மாணிக்கவேலு என்பவரின் உதவியாளர்தான் ஓம் கந்தன்.

குறிப்பிட்ட நாளில் விடைத்தாள் பண்டல்கள் ஒரு தனியார் சரக்கு வாகனத்தில் ஏற்றி போலீசு பாதுகாப்புடன் சென்னைக்குப் அனுப்பப்பட்டன. உடன் மாணிக்க வேலுவும், ஓம் கந்தனும் சென்றுள்ளனர். சென்னை வரும் வழியில் சிவகங்கையில் தேர்வெழுதியவர்களின் விடைத்தாள்களும் அதே வாகனத்தில் ஏற்றப்பட்டன. இந்த வாகனத்தை ஜெயக்குமார் தனது காரில் பின் தொடர்ந்தார். விடைத்தாள்களை ஏற்றிவந்த வாகனம் சிவகங்கையைத் தாண்டிய பிறகு, சிறிது தூரத்தில் உணவிற்கென நிறுத்தினார் ஓம் கந்தன்.

மற்றவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வண்டிக்கு திரும்பிய ஓம் கந்தன், குறிப்பிட்ட பண்டல்களை எடுத்து ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார். அந்த விடைத்தாள்கள் மேஜிக் மையால் எழுதப்பட்டு அழிந்து போனவை; அதில் ஜெயக்குமார் சரியான பதிலை எழுதியுள்ளார். எப்படி? சென்னை வரும் வழியில் ஓடும் காரில் வைத்தே எழுதியுள்ளார். பின்னர் மீண்டும் அதிகாலை விழுப்புரம் அருகில் உள்ள விக்ரவாண்டியில் விடைத்தாள்களின் வாகனம் மீண்டும் தேனீர் கடை ஒன்றில் நிறுத்தப்பட்டது. அப்போது ஜெயக்குமாரிடமிருந்து திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஓம் கந்தன் பெற்று மற்ற பண்டில்களோடு சேர்த்துள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை விஞ்சும் இந்த சாகசத்தில் ஈடுபட்டதற்காக தேர்வாணையத்தில் எழுத்தராக பணிபுரியும் ஓம் கந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிறரும் இதே போல் கடை நிலை ஊழியர்களும், இடைத்தரகர்களும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

o0o

இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி நடந்த குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேற்படி தேர்வில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 56 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். கடந்த 2018-ம் ஆண்டு குரூப்-2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்கள் தற்போது தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

2017-ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில் சுமார் 42 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் வடிவு, சென்னை பட்டினப்பாக்கம் பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஞானசம்பந்தம், செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஆனந்தன் ஆகியோர் குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் கைதாகி உள்ளனனர்.

இந்த முறைகேட்டிலும் குரூப்-4 தேர்வில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் மற்றும் போலீஸ்காரர் சித்தாண்டி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. குரூப்-2ஏ தேர்வு எழுதியவர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு மோசடியை அரங்கேற்றி இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குரூப்-4 விடைத்தாள்கள் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டது போன்றே குரூப்-2ஏ தேர்வு விடைத்தாள்களும் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டுள்ளன. இதில் “மேஜிக்” மை உபயோகப்படுத்தப்படவில்லை. மாறாக, தெரியாத கேள்விகளுக்கான பதில்களை எழுதாமல் விட்டுள்ளனர். நம் ஜெயக்குமார், ஓடும் காரில் வைத்து அந்த வினாக்களுக்கான பதிலை நிரப்பியுள்ளார்.

o0o

கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அனைவரும் கடைநிலை ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அரசுப் பணியிடங்கள் நிரப்புவதில் லஞ்சம் விளையாடும் என்பது யாருக்கும் தெரியாத இரகசியம் அல்ல. பாமர மக்களுக்கே இந்த விசயம் தெரியும். மேலும், கொடுக்கப்படும் லஞ்சம் யார் வழியாக யார் யாரையெல்லாம் சென்றடையும் என்பதும் தெரிந்த விசயங்கள்தான். இந்த முறை ஒருபடி மேல் சென்று தேர்விலேயே முறைகேடுகள் செய்துள்ளார்கள் என்பதுதான் வேறுபாடு.

மத்தியபிரதேச மாநில தேர்வாணையமான “வியாபம்” நடத்திய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் வெளியாகி நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை நாம் மறந்திருக்க மாட்டோம். ஏறக்குறைய இங்கும் அதே பாணியில்தான் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்தளவுக்கு துணிகரமாக முறைகேடுகளும், மோசடிகளும் நடைபெறுகிறது என்றால் அதை வெறுமனே கடைநிலை ஊழியர்கள் மட்டும் திட்டமிட்டு செயல்படுத்தி விட முடியாது. விடைத்தாள் பண்டில்களின் பாதுகாப்புக்கு போலீசார் இருக்கும் போது அதை இடையே “தேனீர் இடைவெளியின்” போது கைப்பற்றுவதோ மீண்டும் இன்னொரு ”தேனீர் இடைவெளியின்” போது மாற்றி வைப்பதோ சாத்தியமல்ல.

படிக்க :
♦ ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவாரா – சுயமரியாதை பெரியாரா ? யாரை தெரிவு செய்வது ?
♦ வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி | மனுஷ்ய புத்திரன் கவிதை

இந்த விவகாரத்தை நியாயமாக விசாரித்தால் இதில் சம்பந்தப்பட்ட பெரிய தலைகளின் பெயர்கள் அம்பலமாகும். ஆனால் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி புரட்சித்தலைவின் ஆசியும், மத்திய அரசின் ஆதரவும் பெற்றது என்பதை வைத்துப் பார்க்கும்போது இந்த வழக்கும் மத்திய பிரதேசத்தின் வியாபம் ஊழல் விசாரணை சென்ற திசையில் தான் செல்லும் என்பதை சொல்லத் தேவையில்லை.

இது வெறுமனே ஊழல் அல்ல; தங்களின் வேலை வாய்ப்புகளை கொள்ளையடிக்கும் முயற்சி என்பதை மக்கள் உணர வேண்டும். அதே போல் இப்படி முறைகேடான வழிகளில் அரசு பதவிக்கு வருபவர்கள்தான் அரசு திட்டங்களை செயல்படுத்தப் போகிறார்கள் என்றால், அந்த திட்டங்கள் எந்தளவுக்கு நியாயமாக செயல்படுத்தப்படும் என்பதையும் மக்கள் புரிந்து கொண்டு களத்தில் இறங்கிப் போராட வேண்டும்.

மித்ரன்

‘குடி’மகனைத் தேடிய கதை | ஓர் அனுபவம்

க்கீல் அலுவலகம். அன்றைக்கு காலையில் அலுவலகத்தில் அன்றாட வேலைகளை செய்ய துவங்கி இருந்த பொழுது… நண்பனின் உறவுக்கார பெண்மணி  அவருடைய அண்ணனுடன் எங்களைத் தேடிவந்தார். அந்த பெண்ணுக்கு வயது முப்பது இருக்கும். “நேற்றைக்கு முதல்நாள் காலையில் வீட்டை விட்டுப்போன கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்லுக்கு கூப்பிட்டா, போகவும் மாட்டேங்குது! நேற்றைக்கே திரும்பிவிடுவார் என எதிர்பார்த்தேன். வரவில்லை. எனக்கு தெரிந்த எல்லோரிடமும் கேட்டுப்பார்த்துவிட்டேன். யாருக்கும் விவரம் தெரியவில்லை” என எப்பொழுது வேண்டுமென்றாலும் கண்ணீர் வந்துவிடும் அளவில்.. அடக்கிக்கொண்டு பேசினார்.

“இப்ப எங்கே போயி தேடுவது? போலீசில் ஒரு புகார் கொடுத்துவிடலாமா?” அந்த பெண்ணிடமே கேட்டோம்.

“இங்க டாஸ்மாக் கடைக்கு லீவு விட்டுட்டாங்கன்னா அவரும், அவங்க கூட்டாளியும் சேர்ந்து டிரெயின் ஏறி (ஆந்திரா) சூலூர்ப்பேட்டை போயி, முன்னாடி ஒருமுறை குடிச்சாங்கண்ணா!  அதே கூட்டாளிக்கு போன் அடிச்சா ரிங் போகுது! ஆனா எடுக்க மாட்டேங்குகிறார்.” என்றார். பர பரவென வேலைகளில் இறங்கினோம். அந்த கூட்டாளியின் வீட்டை விசாரித்து கண்டுபிடித்தோம்.

நிறைபோதையில் இருந்தார். எதையும் கேட்டு பதில் சொல்லும் நிலையில் இல்லை. தண்ணீரை முகத்தில் தெளித்தும், வேறு வகைகளில் கேட்டும் பிரயோஜனமில்லை. போதை இறங்கும் வரை, காத்திருக்க வேண்டியது தான். காத்திருந்தோம்.  பிறகு கொஞ்சம் தெளிந்து, “சூலூர்ப்பேட்டைக்கு போய் குடிச்சோம். திரும்ப டிரெயின்ல நான் ஏறிட்டேன். அவனால ஏறமுடியவில்லை. அடுத்த டிரெயின்ல வந்துருவான்னு நினைச்சேன். இன்னும் வரல்லையா!” என அரைபோதையில் நம்மையே திரும்ப கேட்டார்.

சாதாரணமாக இருந்தால் பரவாயில்லை. ஆந்திரா போய் குடித்துவிட்டு காணாமல் போனால்… விசும்ப ஆரம்பித்தார். அப்போதே மதியம் 12 மணியாகிவிட்டது. சூலூர்பேட்டை போய்த்தான் தேடனும் என்ற முடிவுக்கு வந்தோம்.

படிக்க :
ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிச்சூடு ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்டனம் !
♦ மதுவால் பள்ளி மாணவி தற்கொலை : யார் குற்றவாளி ?

நானும் சக வழக்கறிஞரும், ஆந்திரா என்பதால் தெலுங்கு கொஞ்சம் தெரிந்த இன்னொரு வழக்கறிஞர், காணாமல் போனவருடைய மனைவி, அவருடைய அண்ணன், அவரது மனைவி என ஆறு பேரும் திருவெற்றியூர் போய் டிரெயின் ஏறினோம். மொத்தம் 80 கிமீ. டிக்கெட் விலை ரூ.20. டாஸ்மாக் விடுமுறை நாட்களில் இங்கிருந்து டூப்ளிகேட் சரக்கு அடிச்சு சிரமப்படுறதுக்கு அடுத்த மாநிலத்திற்கு போய் சரக்கடிச்சிரலாம் என்ற தொலைதூர சிந்தனை தான் இவ்வளவு தூரம் போகவச்சிருக்கு!

வாழ்க்கையில ஒரு குடிகாரனைத் தேடி இப்படி பயணம் போறோமே என்கிற சிந்தனை வந்தது. “இரண்டு பிள்ளை வைச்சிருக்கேண்ணா!” என  அந்த பெண் அழுதுகொண்டே சொன்னது நினைவுக்கு வந்தது.  குடிகாரன்கள் அப்பனாகவும் இருந்து தொலைக்கிறார்களே! என கோபம் வந்தது.

மதியம் 2.30மணிக்கு ஒரு வழியாக சூலூர்ப்பேட்டை வந்து சேர்ந்தோம். நிலைய அதிகாரியைப் போய் பார்த்து விசயத்தைச் சொன்னோம். தமிழ்நாட்டுல டாஸ்மாக் கடை லீவுன்னா ரயிலேறி கூட்டம் கூட்டமா வந்து குடிக்க வந்துவிடுகிறார்கள். ஒரு ரயில்ல 1000 பேர், 1500 பேரெல்லாம் வருகிறார்கள் என தெலுங்கில் அலுத்துக்கொண்டார்.

பிறகு, கடந்த இரண்டு நாட்களில் இந்த ஏரியாவில் இரண்டு பேர் ரயிலில் அடிப்பட்டு இரண்டு பேர் செத்துப்போயிருக்கிறார்கள். அதில் ஒருவர் அம்பத்தைந்து வயதுகாரர். இன்னொருவருக்கு முப்பதைந்து வயதிருக்கும் என அவர் சொன்னதும், அந்த பெண்மணி அழவே ஆரம்பித்துவிட்டார்.

இறந்ததுமே புகைப்படம் எடுத்து பைலில் வைத்துக்கொள்கிற நடைமுறை ரயில்வேதுறையில் இருந்ததால், அதை உடனே வாங்கி சோதித்தோம்.  இரண்டு புகைப்படங்களுமே கோரமாய் இருந்தன. முப்பதைந்து வயதுகாரருடைய புகைப்படம், அவர் போட்டிருந்த ஆடைகளும் நாம் தேடிவந்தவருடையதில்லை. நிம்மதி அடைந்தோம்.

பிறகு அங்கிருந்தவர்களிடம் கையில் கொண்டு போயிருந்த புகைப்படம் காட்டி விசாரித்துக்கொண்டிருந்த பொழுது, மாலை ஐந்துமணியாகிவிட்டது. அந்த பெண்ணுக்கு அவருடைய கணவர் செல்லிலிருந்து அழைப்பு வந்தது. வீட்டுக்கு வந்ததாகவும், மனைவியை காணோம் என உடனே அழைத்திருக்கிறார். இந்தம்மா இந்த விவரங்களைத் தெரிவித்ததும், “நான் என்ன சின்ன பிள்ளையா, வீடு வந்துசேர தெரியாது!” என கெத்தாக பேசினார்.  நேரில் பார்த்திருந்தால், இரண்டு அறைவிடும் அளவிற்கு கோபம் வந்தது. ஆள் கிடைத்துவிட்டார் என்றதும் எல்லோருக்குமே நிம்மதி. உடனே அடுத்த வண்டியை பிடித்து ஊர் வந்து சேர்ந்தோம்.

குடிச்சது சரி! அதென்ன ஊர் வந்து சேர இரண்டு நாள் ஏன் ஆச்சு? என பிறகு ஆற அமர விசாரித்த பொழுது, நல்லா தண்ணியடிச்சிட்டு, தெற்கு பக்கம் தமிழ்நாட்டு ரயில்ல ஏறுவதற்கு பதிலா, வடக்கு பக்கம் போகிற ரயில்ல போதையில் ஏறிவிட்டார். போதை தெளிஞ்சு ஊர்ப்பக்கம் வருவதற்கு தாமதமாகி இருக்கிறது.

படிக்க :
அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | காணொளிகள்
♦ 75% விவசாயிகளுக்கு மோடி அறிவித்த 6,000 ரூபாய் கிடைக்கவில்லை !

டாஸ்மாக் இப்படி எத்தனையோ குடும்பங்களின் வாழ்வை தினந்தோறும் சீரழித்து வருகிறது. எவன் குடி கெட்டால் என்ன? யார் தாலி அறுந்தால் என்ன? எங்களுக்கு கல்லாப்பெட்டி நிறைஞ்சா போதும் என்கிற உயர்ந்த சிந்தனை தான் அரசுக்கு இருக்கிறது.

– வழக்கறிஞர் நூர்தீன்

சரஸ்வதி – சிந்துவெளி நாகரிகம் : இணையத்தில் பரவும் பொய் ஆதாரம் !

சிந்துவெளி நாகரிகத்தை நிதியமைச்சர் சரஸ்வதி – சிந்துவெளி நாகரிகம் என்று குறிப்பிட்டது குறித்த சர்ச்சையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகளும் வரலாற்றுப் பேராசிரியருமான உபிந்தர் சிங்கூட சிந்துவெளி நாகரிகத்தை “சரஸ்வதி நாகரிகம்” என்று குறிப்பிடுகிறார் என்று கூறி ஒரு ஸ்க்ரீன் ஷாட் பகிரப்படுகிறது.

அதில் ஆச்சரியமளிப்பது, அந்த ஸ்க்ரீன் ஷாட்டில் இருக்கும் தகவல்களைக்கூட யாரும் படிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான்.

உபிந்தர் சிங்கின் History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century என்ற புத்தகத்திலிருந்துதான் அந்த ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டது. அதில் அவர் என்ன சொல்கிறார்?

//The vast geographical extent of the civilization should make the objection to the terms ‘Indus’ or ‘Indus valley’ civilization obvious. The terms ‘Indus–Sarasvati’ or ‘Sindhu–Sarasvati’ civilization are also used by some scholars. This is because a large number of sites are located on the banks of the Ghaggar-Hakra river, which is identified by some scholars with the ancient Sarasvati mentioned in the Rig Veda. However, the sort of objection to the terms ‘Indus’ or ‘Indus valley’ civilization can also be applied to the terms ‘Indus–Saraswati’ or ‘Sindhu–Saraswati’ civilization. Since civilization was not confined to the valleys of the Indus or Ghaggar-Hakra, the best option is to use the term ‘Harappan ’ civilization. This is based on the archaeological convention of naming a culture after the site where it is first identified.//

மேலே இருக்கும் பகுதியின் சுருக்கமான தமிழாக்கம் இது:

இந்த நாகரிகம் பெரும் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருப்பதால், அதனை சிந்து அல்லது சிந்துச்சமவெளி நாகரிகம் என்று குறிப்பிடுவதற்கு எதிர்ப்புக் காட்டப்படுகிறது. சில அறிஞர்கள் சிந்து – சரஸ்வதி நாகரிகம் என்ற பதங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நாகரிகத்தில் அமைந்துள்ள பல இடங்கள், Ghaggar-Hakra நதிக்கரையில் அமைந்திருப்பதுதான். இந்த நதியைத்தான் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் பழங்கால சரஸ்வதி நதியாக சில அறிஞர்கள் கருதுகிறார்கள். ஆனால், சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்வதற்கு எழும் எதிர்ப்பு சிந்து – சரஸ்வதி நாகரிகம் என்று சொல்வதற்கும் பொருந்தும். ஏனென்றால் இந்தப் பகுதிகள், சிந்து அல்லது Ghaggar-Hakra நதிகள் பாயும் சமவெளிப் பகுதிகளுக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. அதனைத் தாண்டியும் இருப்பதால், இந்த நாகரிகத்தை ஹரப்பா நாகரிகம் என்று குறிப்படுவதே சிறப்பானது. முதன் முதலில் எந்த இடத்தில் ஒரு நாகரிகம் அடையாளம் காணப்பட்டதோ அந்த இடத்தைக் குறிப்பிடுவது என்ற தொல்லியல் ஆராய்ச்சி மரபின் அடிப்படையில் இதைச் செய்யலாம்.

இதுதான் உபிந்தர் சிங் சொல்லியிருப்பது. அதாவது இதை சரஸ்வதி நாகரிகம் என்றோ சிந்து – சரஸ்வதி நாகரிகம் என்றோ அழைக்காமல் ஹரப்பா நாகரிகம் என்று அழைப்பதே பொருத்தமானது என்கிறார் அவர்.

ஆனால், அவர் எதைச் சொல்கிறாரோ, அதற்கு மாறான ஒரு கருத்தை அவர் சொல்வதாக மேற்கோள் காட்டுவது துரதிர்ஷ்டவசமானது.

படிக்க:
ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவாரா – சுயமரியாதை பெரியாரா ? யாரை தெரிவு செய்வது ?
தேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன !

உபிந்தர் சிங் வேறு சில புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அதெல்லாம் சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரீகம் என்றே இதனைக் குறிப்பிடுகிறார். எங்கேயுமே, சரஸ்வதி நதி நாகரிகமெனக் குறிப்பிடவில்லை.

முகநூலில் : Muralidharan Kasi Viswanathan

disclaimer

சமீபத்தில் கிளினிக்கில் சந்தித்த சகோதரியின் சோகக்கதை !

மீபத்தில் கிளினிக்கில் சந்தித்த சகோதரியின் சோகக் கதையினை விழிப்புணர்வுக்காக பகிர்கிறேன். நிச்சயம் அவரின் கதையில் நமக்கு படிப்பினை உண்டு.

சகோதரிக்கு பிரச்சினை உயர் ரத்த அழுத்தம் / மன அழுத்தம் / தூக்கமின்மை. மன அழுத்தத்திற்கு காரணம் அவரது கணவரின் முதிர்ச்சியடையா முன்கூட்டிய மரணம் .. இதை நாங்கள் Premature Death என்போம்.

70 வயதுக்கு குறைவாக மரணம் அடையும் அனைவரையும் இந்த Premature death என்ற வரையறைக்குள் கொண்டு வருகிறோம். ஒன்றாக இணைந்து வாழ்வோம் என்று இணைந்த மகன்றில் பறவையுள் ஒன்றை மட்டும் காலம் பறித்துக்கொண்டால் இணை பிரிந்த மற்றொரு பறவை என்ன செய்யும்..?

தாயை பிரிந்த மகனுக்கு ஆறுதல் கூறி தேற்றியிருக்கிறேன். மகனை பிரிந்த தாய்க்கு மகனாக நின்று பேசியிருக்கிறேன். ஆனால், இணை பிரிந்த ஒருவருக்கு ஆறுதல் கூறுவது எனக்கு இன்னும் கைவராத விசயமாகவே இருக்கிறது..

இவரின் கதையில் நமக்கான பாடம் படிக்க தொடர்வோம்.

(மாதிரி படம்)

அன்னாரது கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் இப்பூவலக வாழ்வை நீத்து மண்ணுலகத்துக்கு சென்றுள்ளார். திருமணமான பதினேழு வருடங்களில், பதினேழு வருடங்களாகவும் அவர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றில் பணிபுரிந்துவந்துள்ளார்.

வானம் பார்த்த பூமி இங்கு எங்கள் கஞ்சிக்கும் குறையில்லாமல் பார்த்துக்கொள்ள கிழக்கே வளைகுடா நாடுகள் மேற்கே மலேசிய தீபகற்பம்.

கடலோடிகளான இளைஞர்கள் வாழ்க்கையில் செய்யும் ஒரு சடங்காக திருமணம் இருக்கிறது. ஆசை அறுபது நாள் என்பார்கள். அந்த அறுபது நாள் கூட ஒன்றாக வாழாத இணைகள் இங்கு உண்டு.

மீண்டும் ரிட்டர்ன் டிக்கெட் போட்டு விட்டு புதிதாய் திருமணமான மனைவியுடன் வாழும் ஒவ்வொரு நாளும் இன்னும் நீடிக்காதா என்ற எண்ணமே எங்கள் கடலோடிகளுக்கு இருக்கும் …

பிரிதல் பிரிதல் நிமித்தமும் எங்கள் வாழ்க்கையில் புரையோடிவிட்டதால்
ஆங்காங்கே பச்சை தெரிந்தாலும் எந்நிலம் எப்போதும் பாலைதான்..

கதைக்குள் செல்வோம்.. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கணவர் ஊருக்கு வந்து இரண்டு மாதம் இருப்பாராம். இரண்டு வருடம் வாழ நினைத்த வாழ்க்கையை இரண்டு மாதங்களில் வாழ்வாகய்யா.. கடலோடிகளின் மனைவிக…

இப்படி இரண்டு முறை வந்து சென்றதில்.. இரண்டு குழந்தைகள்.. அதற்குப்பிறகு இருவருக்குள்ளும் சிறு ஊடல். எந்த காட்டுத்தீயும் சிறு பொறியில் தானே துவங்குகிறது.. சிறு ஊடல் .. பெரு ஊடலாகி… வெண்பாவாக முடிய வேண்டியது காண்டமாக நீண்டு.. அதற்குப்பிறகான பத்து வருடங்கள் தலைவனும் தலைவியும் சந்திக்கவே இல்லை.

இருப்பினும் கணவர் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் தேவையான பணத்தை அனுப்பியுள்ளார். பிள்ளைகளுடன் தினமும் பேசிக்கொள்வாராம்.

இதற்கிடையில் அவருக்கு வெளிநாட்டு வாழ்க்கை தரும் வரங்களான
ரத்த கொதிப்பு .. சர்க்கரை நோய் வர.. இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு ஸ்டெண்ட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன…

மழைக்கு இணங்காத மண் இல்லை. சூரியனுக்கு இணங்காத பனித்துளி இல்லை. அதுபோல,தலைவனுக்கு இணங்காத தலைவி இல்லை.

கணவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மனைவி ஊடலைக் கைவிட்டு பேச ஆரம்பித்து இரண்டு வருடங்களாக ஊருக்கு வாருங்கள் வாருங்கள் என்று அழைத்து…

ஒருவழியாக மூன்று வருடங்களுக்கு முன்பு ரமலான் மாதத்திற்கு இரண்டு மாதம் முன்பு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்கு பின் தாய்மண்ணை முத்தமிட்டிருக்கிறார் தலைவர்..

இளைப்பு நெஞ்செரிச்சல் போன்றவை அடிக்கடி வந்திருக்கிறது. இருப்பினும், தான் வாழாத இந்த வாழ்வை மனைவி மக்களுடன் வாழும் ஆசையில் முதல் இரண்டு மாதங்கள் இதய நல சிறப்பு நிபுணரை சந்திக்கவில்லை.

பத்துக்கு பத்து அறையில் முடங்கிக்கிடக்கும் அவலம்.

என் தந்தை வெளிநாட்டில் ஐந்து வருடங்கள் வாழ்ந்தவர். “தினமும் வேலை முடிந்தவுடன் உணவு சாப்பிட்டு விட்டு படுக்கையில் படுத்து உத்திரத்தை பார்க்கும் போது ஒரு வெறுமை இதயத்தை கூறுபோட்டு அழுத்தும் அந்த வலிக்கு இணையே இல்லை” என்று கூறுவார்.

ஆம்… குடும்பத்தை பிரிந்து பிழைப்பு தேடி கடலோடியாய் வாழும் ஆண் தினமும் அனுபவிக்கும் பிரசவ வலி ஐயா அது..

இப்படியாக … கார்டியாலஜிஸ்ட்டை சந்திக்காமல் இரண்டு மாதங்கள் வாழ்ந்த தலைவனுக்கு ரமலான் மாதத்தில் நடுபத்தில் லேசான நெஞ்சு வலி வரவே நான்மாடக்கூடல் நகரில் உள்ள கார்டியாலஜிஸ்ட்டிடம் காட்ட.. அவர் உடனே ஆஞ்சியோ கிராஃபி எனும் இதய ரத்த நாள அடைப்பை அறியும் பரிசோதனை செய்ய.. முக்கியமான ரத்த நாளங்களில் 90% க்கு மேல் அடைப்பு உள்ளது . ஏற்கனவே தாமதம் ஆகிவிட்டது.
உடனே பைபாஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் எப்போது வேண்டுமானாலும் அட்டாக் வந்து உயிர் போகும் என்றே எச்சரித்திருக்கிறார் அவர்.

எச்சரிக்கையை துச்சம் செய்திருக்கிறார் கணவர். அவர் கூறிய காரணம்
தான் இதுவரை ஒரு பெருநாள் கூட குடும்பத்துடன் கொண்டாடியதில்லை என்பதே.. இந்த ஆசையில் தவறேதுமில்லையே, வாழ்க்கையில் எதையுமே அனுபவிக்காத மனுசன் இதுக்கு கூட ஆசைப்படக்கூடாதா? ஆசைப்படலாம். ஆனால் அதுவே அவரது கடைசி ஆசையாகிப்போச்சே..

தன் வாழ்நாளில் மனைவி மக்களுடன் கொண்டாடிய ஒரே பெருநாளே அவரது கடைசி பெருநாளாகவும் ஆகி விட்டது. பெருநாள் கொண்டாடிய அடுத்த நாளாவது அவர் மருத்துவமனைக்கு சென்றிருக்க வேண்டும். சரியாக பெருநாள் முடிந்த ஆறாவது நாள்.. இதை ஆறு நோன்பு என்போம். அட்டாக் வந்து அன்னார் உயிர் நீத்தார்.. 😭

அந்த குடும்பத்திற்கு இறைவன் நாடியது ஒரு பெருநாள்தான் என்று எடுத்துக்கொண்டு கடந்து விடலாம். ஆனாலும் இங்கு அந்த தலைவன் செய்த மிகப்பெரிய பிழையை சுட்டி அதில் கொட்டு பட்டு பாடம் கற்காமல் விட்டால் அந்த பிழை நம்மையும் துரத்தி ஆட்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

அந்த கணவர் தாய்மண்ணை அடைந்த உடனே மருத்துவரை சந்தித்து உடனே பைபாஸ் செய்திருக்கலாம்.  அல்லது  ரமலான் மாதம் என்று பார்க்காமல் உடனே பைபாஸ் செய்திருக்கலாம். அல்லது, அவர் கூறியதைப்போல பெருநாளை கொண்டாடி விட்டு அடுத்த நாள் போய் அட்மிட் ஆகியிருக்கலாம்.

வாய்ப்புகளை வாழ்க்கை வழங்கிக்கொண்டே இருக்க.. எதையும் ஏற்காமல் மரணத்தை ஆரத்தழுவிக்கொண்ட அவரை என்னவென்று சொல்வது.. அன்னாரை இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்…

அவனிடம் இருந்து வந்த உயிர்கள் அவனிடமே செல்கின்றன..

உடல் விசயத்தில் மருத்துவர் கூறும் அறிவுரைகளை புறந்தள்ளாமல் உடனே வினையாற்றுவது பல மாற்றங்களை செய்யும். தயவு செய்து மருத்துவ அறிவுரைகளை புறந்தள்ளாதீர்கள்… தாமதிக்காதீர்கள்.

படிக்க:
எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !
அகதிகள் இல்லாமல் ஒரு நாளாவது உங்கள் நாடு இயங்க முடியுமா ?

மருத்துவரின் அறிவுரை என்பது அவரது படிப்பறிவு, ஏட்டறிவு , பட்டறிவு
அனுபவ அறிவின் ஒட்டுமொத்த சாரமாக வெளிவருவதாகும்.

மருத்துவரின் அறிவுரையை கூகுள் தராது. கோரா தராது. அவை குழப்பத்தையும் மனநோயை மட்டுமே தரும்.

ரத்தமும் சதையுமான உங்களின் மருத்துவரை நம்பாமல், நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்துக்கும் நீங்களே பொறுப்பு.. இதுவே இந்த நிகழ்வின் மூலம் நாம் அறியும் பாடம்..

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

நூல் அறிமுகம் : இயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம்

மார்க்சியத்தின் தத்துவம் இயங்கியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. இது பொருள்முதல்வாதத் தத்துவச் சிந்தனையின் ஒரு வளர்ந்த வடிவமாகும். மார்க்சியத்திற்கு முந்தியே பல பொருள்முதல்வாதத் தத்துவங்கள் இருந்திருக்கின்றன. தத்துவம் தோன்றிய காலத்திலிருந்தே, வெவ்வேறு காலக் கட்டங்களில் வெவ்வேறு வகையான பொருள்முதல்வாதக் கோட்பாடுகள் வழக்கிலிருந்திருக்கின்றன. ஆயின் மார்க்சிய தத்துவம், முந்திய பொருள்முதல்வாதங்களிலிருந்து பலவகைகளில் வேறுபட்டு விளங்குகிறது. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுவது அவசியம். எனவே பொருள்முதல்வாதத்தின் வரலாற்று வடிவங்களை நாம் காணவேண்டியுள்ளது.

பொருள்முதல்வாதம் என்றால் என்ன? 

தத்துவவரலாறு சுமார் 2500 வருட காலம் கொண்டது. இந்த நீண்ட நெடிய காலத்தில் உலக நாகரிகங்களில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தத்துவவாதிகள் தோன்றியுள்ளார்கள். மனித வாழ்வு குறித்து தத்துவவாதிகள் மிகச் சிக்கலான கேள்விகளை முன்வைத்துப் பேசி வந்திருக்கிறார்கள். இந்த உலகம், மனிதன், வாழ்க்கை இவற்றின் தோற்றம் என்ன? ஆன்மா என்ற ஒன்று உண்டா? இறந்த பின் என்ன நிகழுகிறது? உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு யாது? அறிவு என்றால் என்ன? நாம் எப்படி உலகை அறிகிறோம்? உண்மை என்றால் என்ன? அதன் அளவுகோல் யாது? நமது புலனுணர்வுகள் உண்மையை நமக்குத் தருகின்றனவா? இப்படி ஏராளமான கேள்விகளோடு தத்துவவாதிகள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இக்கேள்விகளுக்குத் தத்துவஞானிகள் தந்த பதில்களும் வேறு வேறானவை. இருப்பினும், மொத்தத் தத்துவ வரலாற்றையும் இரண்டு மிகப்பெரிய அணிகளாக வகைப்படுத்தலாம் என்று மார்க்சியம் கூறுகிறது. ஒன்று பொருள்முதல்வாத அணி, மற்றது கருத்துமுதல்வாத அணி.

தத்துவப் பிரச்சினைகளுக்கு உலகியல் ரீதியான பதிலை வழங்கியவர்கள் பொருள்முதல்வாதிகள் எனப்பட்டனர். பண்டைய இந்தியத்தத்துவத்தில் பூதவாதிகள் என்றொருபிரிவினர் இருந்தனர். உலகையும் மனித வாழ்வையும் இவர்கள் இயற்கையிலுள்ள ஐம்பூதங்கள் எனப்படும் காற்று, நீர், நெருப்பு, மண், ஆகாயம் ஆகியவற்றிலிருந்து தோற்றம் பெற்றதாக விளக்கினர். இவர்கள் பொருள்முதல்வாதிகள். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றிலிருந்து சிகப்புநிறம் கொண்ட வெற்றிலைக் குழம்பு உண்டாவது போல் பௌதீகப் பொருட்களின் சேர்க்கையினால் மனித உடலும் அதன் உயிர் என்ற பண்பும் உண்டாகிறது என்று இந்தியச் சார்வாகர்கள் விளக்கினார்கள். இது பொருள்முதல்வாத விளக்கம். வைசேடிகத் தத்துவம் அணுக்களின் சேர்க்கை, பிரிவு ஆகியவற்றைக் கொண்டு உலகை விளக்கியது. இதுவும் ஒரு பொருள்முதல்வாத விளக்கம்தான். உலகில் துன்பம் உள்ளது, துன்பத்திற்குக் காரணங்கள் உள்ளன, அக்காரணங்களை விலக்கத் துன்பம் விலகும் என்று புத்தர் கூறியதும் கூட பொருள்முதல்வாதப் பண்பு கொண்ட விவாதம்தான். இவ்வாறாகப் பருப்பொருட்கள், பருப்பொருள் இயக்கம், உலகியற் காரணிகள், இயற்கை ஆகியவற்றைக் கொண்டு தத்துவக் கேள்விகளுக்குப் பதில் காணுதல் பொருள்முதல்வாத அணுகுமுறையாகும்.

படிக்க:
சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் !
எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !

இதற்கு எதிர்நிலையிலுள்ள கருத்துமுதல்வாதம். ஏதாவதொரு சூக்குமக் கருத்தின் நிலைப்பாட்டிலிருந்து உலகை, வாழ்வை விளக்குவது கருத்துமுதல்வாதம் ஆகும். இயற்கையிறந்த, உலகைக் கடந்த, அப்பாலைத்தன்மை கொண்ட, அநுபூதப் பண்பு கொண்ட காரணிகளால் இது உலகை விளக்கும். இறைவன், ஆன்மா, உலக ஆன்மா, பிரம்மம், பரிபூரணக்கருத்து என்பது போன்ற துவக்கங்களிலிருந்து இது உலகையும் வாழ்வையும் விளக்குவதால் கருத்துமுதல்வாதம் என்ற பெயர் பெற்றது. (நூலிலிருந்து பக்.3-4)

… பஞ்சபூதங்களின் (காற்று, நீர், நெருப்பு, மண், ஆகாயம்) சேர்க்கையே உலகம் என்று கூறுவதிலும் கூட குறைபாடு உண்டு. இது இன்று ரசாயன மூலகங்களின் சேர்க்கையே மனித வாழ்வு என்று கூறுவதற்கு ஒப்பாகும். மனித உடலின் பௌதீக, ரசாயன, உள்ளடக்கம் குறித்த ஒரு விளக்கமாக இது அமையலாம். ஆயின் மனித வாழ்வின் பிரத்தியேகப் பண்புகளை இந்த அணுகுமுறை விளக்காது. மனித சிந்தனையை, அனுபவங்களை, கற்பனையை இது விளக்காது. வரலாற்றை இது விளக்காது.

ஒரே பருப்பொருள் அல்லது பஞ்சபூதங்கள் அல்லது இயற்கை, இவற்றிலிருந்து வாழ்வின் சிக்கலான அம்சங்களை வருவித்தல் என்பதில் ஒருவித குறைத்தல்வாதம் உள்ளது. இறைவன், உலகம், ஆன்மா ஆகியவற்றை முதற்புள்ளிகளாக எடுத்துக்கொண்டு முழு உலகத்தையும் அவற்றிலிருந்து வருவித்தல் போலவே பருப்பொருட்களை, பஞ்சபூதங்களை முதல் புள்ளிகளாகக் கொண்டு உலகை விளக்குதலும் அடிப்படையில் ஒருவித இயக்க மறுப்பியல் சிந்தனையே. இரண்டுமே குறைத்தல் வாதங்கள்தான். முறையியல் ரீதியாக இரண்டுமே ஒன்றுதான். பண்டைய பொருள்முதல்வாதம் பொருள் என்பதைச் சடப்பொருள் என்றே புரிந்துகொண்டது. உற்று நோக்கினால் இப்படித்தான் இயற்கையையும் பஞ்சபூதங்களையும் பருப்பொருட்களையும் பண்டைய ஆன்மீகவாதமும் உயிரற்ற, ஆன்மாவற்ற சடப்பொருளாகக் கருதியது. அவற்றைச் சடப்பொருள் என ஏற்றுக்கொண்டதன் மூலம், பண்டைய பொருள்முதல்வாதம் ஆன்மீகவாதிகளின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டதாக ஆகிறது.

இயக்கம் குறித்த பார்வை பண்டைய பொருள்முதல்வாதத்தில் பலவீனமான ஒரு கண்ணி, சடப்பொருளாக உலகைக் குறைப்பதோடு சடப்பொருளின் பௌதீக இயக்கங்களை மட்டுமே அது இயக்கம் எனக் கொண்டது. இடப்பெயர்ச்சி, அணுக்களின் சேர்க்கை, பிரிவு என்ற மேலோட்டமான அளவில்தான் இயக்கம் புரிந்து கொள்ளப்பட்டது.

ஐரோப்பாவில் தொழில்யுகம் தொடங்கிய காலத்தில், அதையொட்டி விஞ்ஞானங்கள் உயிர்ப்பு பெற்ற காலத்தில் பொருள்முதல்வாதமும் மறுமலர்ச்சி பெற்றது. இக்காலத்தில் பருப்பொருள் என்ற நிலைப்பாட்டைக் கடந்து வளர பொருள் முதல்வாதம் முயன்றது. ஐரோப்பாவில் ஆளுகை செலுத்திய விஞ்ஞானங்களும் அவற்றின் கண்டுபிடிப்புகளும் பொருள் முதல்வாதத் தத்துவத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தின.

இக்காலத்திய பௌதீக, ரசாயன விஞ்ஞானங்கள் பொருட்களின் பண்புகளை ஆய்வு செய்தன. பொதுமைப்படுத்தப்பட்ட வடிவில் பொருட்களின் பண்புகள் கண்டறியப்பட்டன. திடத் தன்மை, உருவம், பரப்பு, எடை, அடர்த்தி, ஆற்றல், விசை என்பது போன்ற ஏராளமான பொருட்பண்புகள் கண்டறியப்பட்டன. பௌதீகப் பொருட்களின் இப்பண்புகள் பற்றிய அறிவு, அப்பண்புகளின் அளவு ரீதியான கணக்கீடுகள் தொழில் யுகத்தின் தேவைகளான இருந்தன. பொருட்பண்புகள், புலனுணர்வுகளால் அறியப்படுகின்றன என்பதுவும் இங்கு கவனிக்கத்தக்கது. இத்தகைய பின்புலத்தில் தொழில் யுகத்தின் பொருள்முதல்வாதமும் உருவானது. (நூலிலிருந்து பக்.5-6)

வாழ்க்கை நிகழ்வுகளை நாம் நேரடியாகக் காணுகிறோம்; அனுபவிக்கிறோம். இந்த நிகழ்வுகளை அவற்றின் நேரடித் தளத்தில் முடிந்த சம்பவங்களாகக் கொள்ளுதல் கூடாது. சம்பவங்கள், நிகழ்வுகளுக்கிடையிலான உட்தொடர்புகள் அறியப்படவேண்டும். வெறும் சம்பவங்கள், நிகழ்வுகளோடு நிறுத்திக் கொண்டால் நமது மேலோட்டமான அனுபவத் தளத்தைத் தாண்டிய உட்தொடர்புகளை அறிய முடியாமற் போய்விடும். நிகழ்வியல் தளத்திலிருந்துதான் நாம் தொடங்க வேண்டிவரும்.

… நிகழ்வுகளோடு நிறுத்திக்கொள்ளுதல் தனிமனித வாதத்தையும் அனுபவ வாதத்தையும் வளர்க்கும். சாராம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு அது நிகழ்வுகளை நிர்ணயிக்கிறது என்ற முடிவிற்கு வருவது சாராம்சத்திற்கு அதீத அந்தஸ்து வழங்குவதில் முடியும். சாராம்சவாதம் இன்னொரு வகையான ஒரு தலைப்பட்சமாகவும் கருத்துமுதல்வாதமாகவும் முடியும். (நூலிலிருந்து பக்.20-21)

நூல் : இயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம்
ஆசிரியர் : ந.முத்துமோகன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 24
விலை: ரூ 15.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : marinabooks | noolulagam

ஹைட்ரோகார்பன் திட்டம் – பாஜகவுக்கு எதிர்க்கட்சி கம்யூனிஸ்ட்டா காங்கிரசா | கேள்வி – பதில் !

கேள்வி : ஹைட்ரோகார்பன் குறித்த பாசிச மத்திய அரசின் சட்டத்திருத்தம்..”டெல்டா” இனி என்ன செய்ய வேண்டும்?

சி. நெப்போலியன்

ன்புள்ள மக்கள்,

டெல்டா மக்கள் மட்டுமல்ல, முழு தமிழகமும் மத்திய அரசை முடக்கும் வண்ணம் போராட்டம் செய்ய வேண்டும். அடிமை எடப்பாடி அரசின் காலத்திலேயே இந்தியாவில் அதிகம் போராட்டம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இருப்பினும் இந்தப் போராட்டங்கள் ஓரிழையில் இணைக்கப்படாமல் தனித்தனியாக நடக்கிறது. அப்படி இணையும் போது பாசிச மோடி அரசை பணிய வைக்க முடியும்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : வினவுக்கு… முன்பு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பெட்டக பதில்கள் தான் பல நாட்களாக வினவில் வருகிறது… புது கேள்விக்கான பதில்களை காணாமே ஏன்…?

செல்வராஜ்

ன்புள்ள செல்வராஜ்,

கேள்விகள் நிறைய வருகின்றன. அதில் சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு காலம் தேவைப்படுகிறது. நடப்பு நிகழ்வுகள் குறித்த கேள்விகளும் நிறைய வருகின்றன. அவற்றிற்கு உடனுக்குடன் பதிலளிக்க வேண்டிய இருக்கிறது. மொத்தத்தில் பணிச்சுமையின் சிரமத்திற்கிடையில் அவ்வப்போது பதிலளிக்க முயல்கிறோம். இனி அடிக்கடி பதிலளிக்க முடியுமென்று கருதுகிறோம். பொறுத்தருளவும்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : கொள்கை ரீதியாக பி.ஜே.பி -க்கு எதிர்க்கட்சி கம்யூனிஸ்ட்களா அல்லது காங்கிரஸா?

உடுமலைப்பேட்டை சண்முகவேல்

ன்புள்ள சண்முகவேல்,

பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை என்று பார்த்தோமானால் காங்கிரசும், பாஜக-வும் ஓரணியில் நிற்கின்றன. இந்துத்துவம் என்று வரும் போது காங்கிரசு பாஜகவிடமிருந்து கொஞ்சம் விலகி நிற்கிறது. அதே நேரம் மிதவாத இந்துத்துவத்தையும் பேசுகிறது. இதை சபரிமலை விவகாரத்திலும், மத்தியப்பிரதேச, ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்களின் போதும் நாம் பார்த்தோம்.

எனினும் ராகுல் காந்தி இந்துத்துவத்தையும், மோடி அரசையும் கடுமையாக கண்டித்து பேசுகிறார். அவரைப் போன்று மற்ற மூத்த தலைவர்கள் அப்படி பேசுவதில்லை. இதை அவரே கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவின் போது கூறியிருக்கிறார்.

தேர்தல் அரசியலில் இருக்கும் சிபிஎம், சிபிஐ கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை பொருளதாராக் கொள்கை அளவில் பாஜக – காங்கிரசிடமிருந்து வேறுபடுவதாக கூறுகிறார்கள். நாட்டுக்கு நலன் பயக்கும் அன்னிய முதலீடுகளை வரவேற்பதாகவும் கூறுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களோ இங்குள்ள தரகு முதலாளிகளோ தன்னலன் பொருட்டே முதலீடு செய்கிறார்களே அன்றி மக்கள் நலன் பாற்பட்டல்ல. மேற்கு வங்க சிங்கூரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போராடிய போது சிபிஎம் அரசு அதை ஒடுக்க முயன்றது. பின்னர் டாடாவே அதை குஜராத்திற்கு மாற்றினார். அங்கே மாநில அரசு பல ஆயிரம் கோடி சலுகை கொடுத்தும் டாடா நிறுவனத்தால் நானோ காரை வெற்றிகரமாக நடத்தமுடியவில்லை. இன்று நானோ கார் உற்பத்தியையே மூடி விட்டார்கள். ஒருக்கால் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலை திறக்கப்பட்டிருந்தாலும் மேற்கு வங்க சிபிஎம் அரசு பல ஆயிரம் கோடி சலுகைகளை கொடுத்திருக்க வேண்டும். அதனால் டாடாவிற்குத்தான் இலாபமே அன்றி மக்களுக்கு அல்ல.

இந்துத்துவக் கொள்கைகள் என்ற அளவில் இரண்டு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் பாஜக-வை எதிர்க்கின்றன. அதே நேரம் பார்ப்பனியம் என்று வரையறுப்பதோ, பார்ப்பனியத்திற்கு எதிரான சித்தாந்தப் போரட்டம், பண்பாட்டுப் போராட்டங்களை நடத்துவதோ இல்லை. அவ்வாறு செய்தால் இந்துக்கள் மனம் புண்படும் என்ற கருத்தை வைத்திருக்கிறார்கள்.

படிக்க :
திருமண நெருக்கடி | சாதியற்றவர்க்கு இடஒதுக்கீடு | துக்ளக் | கேள்வி – பதில் !
♦ CAA-க்கு எதிரான நாடகம் நடித்த சிறுமியின் தாயைக் கைது செய்த காவிப் போலீசு !

பார்ப்பனியத்தை சித்தாந்த அளவில் வேரறுக்காமல் பாஜக-வின் செல்வாக்கை வீழ்த்த முடியாது என்பதை அவர்கள் தேர்தல் அரசியல் காரணமாக கொஞ்சம் சமரசம் செய்து கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. எனினும் இன்றைக்கு மோடி அரசுக்கு எதிராக இரண்டு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் முடிந்த அளவில் தீவிரமாக போராடி வருவதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

பாஜக-வின் கொள்கைக்கு நேரெதிரான கொள்கைகளை கம்யூனிசம்தான் கொண்டிருக்கிறது. அதுதான் மாற்று என்பதும் உண்மை. அதே நேரம் கள நிலவரப்படி பல மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் பலவீனமாகவே இருக்கிறார்கள். தேர்தல் அரசியலில் இல்லாத மாலெ அமைப்புகளும் ஒரு சில மாநிலங்களைத் தாண்டி தங்களது செல்வாக்கை விரிவு படுத்த முடியவில்லை. மேலும் மாலெ அமைப்புகளில் பல பார்ப்பனியத்திற்கு எதிரான அரசியல் – பண்பாட்டு போராட்டத்தை புரிந்து கொள்வது கூட இல்லை.

இருப்பினும் இன்றைய பாசிச மோடி அரசு ஆளும் சூழலில் அனைத்து முற்போக்கு கட்சிகளும், இயக்கத்தினரும் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். இதை தேர்தல் அரசியலைத் தாண்டிய ஒரு கூட்டணியாக கட்ட வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம். இல்லை என்றால் அசுர பலத்தோடு திகழும் பாஜக-வை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவாரா – சுயமரியாதை பெரியாரா ? யாரை தெரிவு செய்வது ?

நேற்று ஒரு முக்கியமான உரையாடல் :

அந்த லேடி கேட்டார், “நீங்க எதுக்கு டாக்டர் உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணி பொது விஷயங்களை பத்தி பேசிக்கிட்டு எழுதுக்கிட்டு இருக்கீங்க? இதனால எல்லாம் யாரும் திருந்துவாங்கன்னு நினைக்கிறீங்க?” என்று என்னை கேலி செய்தார்.

அவருக்கு தெரிந்த வேறொரு ஆண் மனநலமருத்துவரை பற்றி சொன்னார், “அவரு ஹிந்துத்வாவை ஆதரிக்கிறாரு. முஸ்லிம் நடத்துற கடையில நாம சாப்பிடக்கூடாதுனு சொல்லுறாரு. நீங்களும் தான் சைக்கியாறிஸ்ட், நீங்க முஸ்லிம்களுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க…. ஒண்ணும் புரியல!” என்றார்.

மனநல மருத்துவர் ஷாலினி

நான் சொன்னேன், “1925-ல் இரண்டு பெரிய இயக்கங்கள் உருவாயின. ஒன்று ஒரு டாக்டர் உருவாக்கியது. சாதா டாக்டர் இல்லை, பிரிட்டிஷ் முறைப்படி படித்து இங்கிலிஷ் மெடிசன் பட்டம் வாங்கிய டாக்டர் ஆரம்பித்த இயக்கம் ஒன்று. அதிகம் படிக்காத ஒரு சாமானியன் ஆரம்பித்த இயக்கம் இன்றொன்று.

டாக்டர் ஆரம்பித்த இயக்கம், இந்து ராஜியம், இந்து மேலாதிக்கம் பேசியது.
பாமரன் ஆரம்பித்த இயக்கம், “அறிவு விடுதலையே எங்கள் குறிக்கோள்” என்றது.

இதற்கு பல தசாப்தங்களுக்கு பிறகு நான் பிறந்தேன். என் அம்மா ஒரு பக்தி பழம். எங்கள் வீட்டில் அரசியல், சமூகம் மாதிரி பெரிதா யாரும் பேசியதில்லை. ஒரு கிளீன் ஸ்லேட் மனதுடன் இருக்கும் எனக்கு இப்போது இரண்டு ஆப்ஷன்கள்:

1) டாக்டர் ஆரம்பித்த இயக்கம், தொடந்து பரவி, பள்ளி பருவம் முதல் மாணவர்களை cultivate செய்து இயக்கத்திற்கு உட்படுத்தியது.
2) பாமரன் ஆரம்பித்த இயக்கம், யாரையும் இயக்க ரீதியாய் cultivate செய்யாமல் மானாவாரியாய் விட்டது.

படிக்க :
தன்னார்வ மருத்துவக்குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க சேவை !
♦ கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாக பார்க்கப்பட்ட தருக்கம் ! | பொ.வேல்சாமி

இந்த இரண்டில் நான் எதை தேர்வு செய்வது?

யார் ஆரம்பித்த இயக்கம் என்பதை விட, ஒரு பெண்ணாய் எனக்கு எது survivalளுக்கு fit-டான இயக்கம் என்று நான் கூட்டி கழித்து பார்க்கிறேன்.

டாக்டர் ஆரம்பித்த இயக்கம், மத அடிப்படைவாதம் பேசுகிறது.

  • இவர்கள் தான் பிளேக் நோயை ஒழிக்க எலிகளை அழிக்க வேண்டும் என்ற போது, எலி விநாயகரின் வாகனம், அதை கொல்லக்கூடாது என்று மருத்துவர்களை தடுத்து, சில மில்லியன் மனிதர்களை காவு கொடுத்தார்கள்!
  • இவர்கள் தான் சதி ஏறுவதை ஆதரித்தவர்கள்
  • இவர்கள் தான் பாலிய விவாக தடை சட்டத்தை எதிர்த்தவர்கள்
  • இவர்கள் தான் தேவதாசி முறையை ஆதரித்தார்கள்
  • இவர்கள் தான் பெண்ணின் சொத்துரிமையை எதிர்த்தவர்கள்
  • இவர்கள் தான் பெண்ணுக்கு வங்கி கணக்கு கூட இருக்க கூடாது என்றவர்கள்
  • இவர்கள் தான் ஆணுக்கு பெண் அடங்கி போவதே நம் தர்மம் என்றவர்கள்!!

இதற்கு நேரெதிராய் அந்த சாமானியன் ஆரம்பித்த இயக்கம், பெண்ணை ஒரு சரிநிகர் சமானமான பிரஜை என்கிறது. பெண்களுக்கான எல்லா உரிமைக்காகவும் போராடியது. விதவை மறுமணம், கல்வி உரிமை, சொத்துரிமை. பெண்களுக்கான கல்வி கூடம், அபலை இல்லம், அனாதை ஆசிரமம் என்று women friendly -யான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது….

இது இப்படி இருக்க, கொஞ்சமாவது அறிவிருக்கும் பெண் இந்த இரண்டு இயக்கத்தில் எதை தேர்வு செய்வாள்?

டாக்டர் ஹெக்டேவர் ஆரம்பித்த பிற்போக்கான ஆர்.எஸ்.எஸ் எனும் பெண்ணடிமை அமைப்பா?

அல்லது பெரியார் எனும் பெண்ணியவாதி ஆரம்பித்த முற்போக்கான சுயமரியாதை அமைப்பா?”

நான் இவ்வளவு பேசியதும் அந்த லேடி எழுந்து என் கையை குலுக்கி, “இதை பத்தி இனிமே நானும் பேசுறேன்” என்றார்….

அது!!!

நன்றி : ஃபேஸ்புக்கில் மனநல மருத்துவர் ஷாலினி

அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | காணொளிகள்

மிழகத்தின் கல்விச்சூழலை சிதைக்கும் நோக்கில் அரசால் முன்னெடுக்கப்படும் அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து திட்டமும் 5-8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திணிப்பும் மாணவர்களின் கல்வி உரிமையைப பறிக்கும் இருபெரும் ஆபத்துகள்! என்பதை உணர்த்தும் விதத்தில், கடந்த ஜனவரி-30 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினர், பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவினர் (CCCE).

ஒருங்கிணைப்பாளர் பேரா வீ.அரசு தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், பேரா.கருணானந்தன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் சக்திவேல், மனநல மருத்துவர் ருத்ரன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இக்கருத்தரங்க உரைகளின் காணொளி இங்கே வாசகர்களின் பார்வைக்கு… பாருங்கள்! பகிருங்கள்!!

தேர்வு என்பதே ஒரு வன்முறை | பேராசிரியர் வீ.அரசு

♦ ”மோடி அரசு மூன்றாம் வகுப்பிலிருந்தே சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுக்க வேண்டுமென்கிறது. அறத்தை போதிக்கிறேன் என்று சொல்லி புராணங்களையும் இதிகாசங்களையும் மனுநீதியையும் சிறுவயதிலேயே திணிக்க முயற்சிக்கிறார்கள். 14 வயதுக்குள் தேர்வே இருக்கக்கூடாது என கல்வியாளர்கள் வலியுறுத்திவரும் நிலையில், ஐந்தாம் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை திணிப்பதன் மூலம் மாணவர்கள் படிப்பில் ஆர்வம் குறைவதோடு மனரீதியான தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.” என்று எச்சரிக்கிறார் பேரா வீ.அரசு.

♦ அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்து என்ற திட்டம், தமிழகத்தில் நடைமுறையில் இருந்துவரும் 69% இட ஒதுக்கீடு நடைமுறையை இல்லாதொழிப்பதோடு, மாணவர்களை கல்வியிலிருந்து அந்நியமாக்கும் சூழலை ஏற்படுத்தும் அபாயத்தையும் சுட்டிகாட்டுகிறார், பேராசிரியர் வீ.அரசு.

5-ம் வகுப்பு பொதுத்தேர்வு : குழந்தைகள் மனநலனை பாதிக்கும் |
மனநல மருத்துவர் ருத்ரன்

♦ ”தேர்வு எண்ணைக்கூட சரியாக எழுதி பழக்கப்படுத்தப்படாத, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது என்னை பொறுத்தவரையில் வன்முறை.”

♦ ” முன்பெல்லாம் சொன்ன பேச்சு கேட்க மாட்டேன்கிறான்; அடம்பிடிக்கிறான்; முரட்டுத் தனமாக நடந்து கொள்கிறான்; என்பது போன்ற காரணங்களோடு ஒழுங்கா படிக்கவும் மாட்டேன்கிறான் என்ற குறைகளைச் சொல்லி தம் பிள்ளைகளை அழைத்துவருவார்கள். அவர்கள் பெரும்பாலும் பத்தாம் வகுப்பு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஆனால், கடந்த பத்து நாட்களில் மட்டும் ஒழுங்காக படிக்க மாட்டேன்கிறான் என்று சொல்லி ஐந்தாம் வகுப்பு மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வரத்தொடங்கியிருக்கிறார்கள். பள்ளியைத் தாண்டி தனிப்பயிற்சிக்காக குறிப்பிட்ட தொகையை செலவிட்டு வரும் நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள், அதற்காக தமது அத்யாவசிய தேவைகளை சுருக்கிக்கொள்ளும் அவர்கள், அதன்காரணமாக ஏற்படும் தங்களது மன அழுத்தத்தை தங்கள் பிள்ளைகள் மீதுதான் திணிப்பார்கள். இது மேலும் அந்த மாணவனின் மனநிலையைத்தான் பாதிக்கச்செய்யும். ” என்று எச்சரிக்கிறார், மனநல மருத்துவர் ருத்ரன்.

எடப்பாடியின் அப்பன் வீட்டு சொத்தல்ல அண்ணா பல்கலைக் கழகம் | பேரா. கருணானந்தன்

”இவர்கள் முன்வைத்த தேசியக் கல்விக்கொள்கை குறித்து, கல்வியாளர்களிடமும் கலந்தாலோசிக்காமல்; பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு சடங்கை நடத்திவிட்டு;  நாடாளுமன்றத்திலும் விவாதத்திற்கு முன்வைக்காமல், அங்கு விவாதிக்கப்பட்டு இன்னும் இறுதிவடிவம் பெறாத நிலையில், அதில் பரிந்துரைக்கப்பட்ட விசயங்கள் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வருவதென்பது பெருத்த மோசடிதான்”

”அடுத்து மாநில அரசின் மோசடி. பாஜக ஆளும் மாநிலங்களிலேயே அமல்படுத்தாத நிலையில், குறிப்பறிந்து செயல்படும் மனைவியைப் போல 5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள்.”

”மாணவர்களை மதிப்பிடுவது அவசியம்தான். அது Evaluation ஆக இருக்க வேண்டும். exam ஆக அல்ல. குழந்தை அறியாமலேயே மதிப்பீடு செய்ய முடியும். இவர்கள் முன்வைக்கும் தேர்வு என்பது மதிப்பிடுவதற்கு அல்ல, மாணவர்களை வடிகட்டுவதற்கு. பொதுத்தேர்வில் தோல்வியடைந்தாலும் அடுத்த வகுப்பிற்கு அனுப்பப்படுவார்கள் என்கிறார்கள். தகுதியற்ற வகுப்பில் இருக்கிறோம் என்ற மனநிலை அந்த மாணவனை நிச்சயம் பாதிக்கும்.”

”அடுத்து, மாநில அரசு சட்டமியற்றி மக்கள் வரிப்பணத்திலிருந்து உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலை போன்ற உயர்கல்வி நிறுவனங்களை மைய அரசு கைப்பற்றும் முயற்சிதான் அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து திட்டம்.

படிக்க:
அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | செய்தி – படங்கள்
எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை

”கல்விக்கூடங்களை கபளீகரம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசு நிதிஉதவி தராது; நடைமுறையிலுள்ள பணிப்பாதுகாப்புச் சட்டங்கள் செல்லுபடியாகாது. மாநில அரசின் அதிகாரங்களை பறிப்பதை நோக்கமாக கொண்டது. முழுமையான பல்கலைகழகம் என்றிருந்த கட்டமைப்பையே சிதைக்கப்போகிறார்கள். கிளியை வளர்த்து பூனையிடம் கொடுக்க முடியுமா? ”

”இவைகளை எதிர்க்கத் தவறிவிட்டால் சமூகத் துரோகிகளாகிவிடுவோம். நாம் இதனை எதிர்க்கக் கடமைப்பட்டுள்ளோம். எதிர்த்து நிற்போம்.”

அரசுப் பள்ளிகளை விழுங்கும் மலைப்பாம்பு | ஆசிரியர் சக்திவேல்

”கோத்தாரி கல்விக்குழுவின் பரிந்துரைகளில் வெறும் பத்து சதவீதம் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேநிலைப்பள்ளி என போதுமான கட்டமைப்புகளை தமிழகத்தில் திறம்பட கொண்டு வந்திருக்கிறார்கள். தற்போது, தனியார் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் இதனை சிதைக்கப்பார்க்கிறார்கள். மலைப்பாம்பு போல பொதுப்பள்ளிகளை விழுங்கும் செயல். ”

”பள்ளிக்கூடங்கள் எழுதப்படிக்க மட்டும் சொல்லித்தரும் இடமல்ல. அனைத்து விசயங்களையும், வாழ்க்கையை புரிந்துகொள்ள, சக மனிதனோடு இணைந்து வாழ்வதையும் கற்றுக்கொள்ளும் இடமாக இருக்கிறது. அந்த சூழலை பாதுகாக்க வேண்டும்.” என்கிறார், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவரும் ஆசிரியருமான சக்திவேல்.

தொகுப்பு:

ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிச்சூடு ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்டனம் !

0

துரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி. சித்தாந்தம் உடைய இளைஞனின் துப்பாக்கிச் சூட்டினை கண்டித்தும்; அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மத்திய அரசின் டெல்லி போலீசை கண்டித்தும்; கடந்த ஜனவரி-30 அன்று கண்டன போராட்டத்தை நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.


படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு !
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ! | நூல் வெளியீடு – கருத்தரங்கம்

75% விவசாயிகளுக்கு மோடி அறிவித்த 6,000 ரூபாய் கிடைக்கவில்லை !

1

பிரதான் மந்திரி கிசான் திட்டத்தை அமல்படுத்திய முதலாண்டில் 10 விவசாயிகளில் மூன்றுக்கும் குறைவானவர்கள் மட்டுமே ரூ. 6,000 பெற்றுள்ளதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தி வயர் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 2018, டிசம்பர் முதல் 2019, நவம்பர் வரை ஒராண்டிற்கு ஒதுக்கிய தொகையில் 41% மட்டுமே மோடி அரசாங்கம் செலவழித்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 25% விவசாயிகள் மட்டுமே மூன்று தவணைகளிலும் பயனைடைந்துள்ளனர்.

மக்களவை தேர்தலுக்கு பின்னர் 8 மாதங்களை விட அதற்கு முன்பு ஐந்து வாரங்களில் தான் பி.எம் கிசானின் கீழ் அதிக விவசாயிகள் பதிவு செய்யப்பட்டனர்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தி வயர் பெற்ற தரவுகளிலிருந்தும், வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தால் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும் இது அம்பலமாகியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் கிசான் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வேகம் கணிசமாகக் குறைந்துவிட்டது என்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒன்பது கோடி விவசாயிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தேர்தலுக்கு முன்னர் முடிவடைந்த முதல் காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர் பதிவு செய்யும் வேகம் குறைந்துவிட்டது.

படிக்க:
♦ எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !
♦ ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

சுமார் 75% விவசாயிகளுக்கு திட்டம் போய் சேரவில்லை:

டிசம்பர் 2018-க்கும் 2019 டிசம்பர் தொடக்கம் வரையிலும் 3.85 கோடி விவசாயிகள் மட்டுமே ஒவ்வொரு தவணையிலும் ரூ. 2,000 பெற்றுள்ளனர். ஆனால் கிட்டத்தட்ட 14.5 கோடி விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ. 6,000 கிடைக்கும் என்று திட்டம் தொடங்கப்பட்ட போது அரசாங்கம் மதிப்பிட்டது.

திட்டத்தின் முதல் ஆண்டில் 26.6% விவசாயிகள் மட்டுமே பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் ரூ .6,000 பெற்றுள்ளனர்.

அதிகாரிகளால் மோசமாக செயல்படுத்தப்பட்டது அல்லது விவசாயிகளின் தரப்பில் பொருத்தமான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த சிக்கல் நிகழ்ந்திருக்கலாம். இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டு காலப்பகுதியில் 44% விவசாயிகள் இரண்டு தவணைகளையும் (ரூ. 4,000), 52% விவசாயிகள் ஒரே தவணையும் (ரூ .2,000) மட்டுமே பெற்றுள்ளனர். அதாவது முதலாண்டில் 48% விவசாயிகள் ஒரு தவணை கூட பெறவில்லை.

பாதி விவசாயிகள் ஒரு தவணை (ரூ .2,000) கூட பெறவில்லை. டிசம்பர் 2018 முதல் டிசம்பர் 2019 வரை – பயனடைந்த விவசாயிகளின் விழுக்காடு

கடந்த ஒராண்டு காலப்பகுதியில் 7.6 கோடி விவசாயிகள் ஒரு தவணையாக ரூ .2,000 பெற்றதாக அமைச்சகம் வழங்கிய தரவுகள் கூறுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 14.5 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதன் படி பார்த்தால் 6.8 கோடி விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் ஒரு தவணை கூட பெறவில்லை என்று தெரிய வருகிறது.

அரசாங்கம் நினைத்தபடி முதல் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 14.5 கோடி விவசாயிகளுக்கும் திட்டம் சென்றிருந்தால் இதற்கான செலவு ரூ. 87,000 கோடியாக (ரூ .6,000 x 14.5 கோடி) இருந்திருக்கும். ஆனால் உண்மையான செலவு அதில் 41% (36,000 கோடி ரூபாய்) மட்டுமே.

படிக்க:
♦ சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?
♦ பள்ளியை விட்டு பஞ்சாலைக்கு – ஓர் உண்மைக்கதை !

தேர்தல்களுக்குப் பிறகு ஆமை வேகம்:

மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியால் பிப்ரவரி 24, 2019 அன்று பிரதமர் கிசான் திட்டம் தொடங்கப்பட்டது. வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதற்கு முன்பாகவே வாக்காளர்களை முதல் தவணை (டிசம்பர் 2018 முதல் மார்ச் 2019) சென்றடைவதை உறுதி செய்வதற்காக இத்திட்டம் முன்னதாகவே செயல்படுத்தப்பட்டது.

இதன் பொருள் முதல் காலாண்டில் இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்த அரசாங்கத்திடம் ஐந்து வாரங்கள் மட்டுமே இருந்தது. இருப்பினும், இந்த காலகட்டத்தில்தான் பெரும்பாலான விவசாயிகள் பிரதமர் கிசானின் கீழ் பதிவு செய்யப்பட்டனர்.

தேர்தலுக்கு பிறகான எட்டு மாதங்களை விட அதிகமான விவசாயிகள் மக்களவை தேர்தலுக்கு ஐந்து வாரங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். டிசம்பர் 2018 முதல் டிசம்பர் 2019 வரை ஒவ்வொரு காலாண்டிலும் பிரதமர் கிசானின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை (கோடியில்)

(குறிப்பு : தொழில்நுட்ப ரீதியாக இந்த திட்டம் 2018 டிசம்பரில் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 24 ஆம் தேதியிலிருந்து 2019 மார்ச் 31 வரை மட்டுமே முதல் காலாண்டிற்காக இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளை பதிவு செய்ய அரசாங்கத்திற்கு நேரம் இருந்தது. மூலம்: வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்)

திட்டத்தை புதிதாக தொடங்கும் அதே நேரத்தில் இந்தியா முழுமைக்குமான திட்டத்தை செயல்படுத்துவதற்கான மிகக் குறைந்த திறன் மட்டுமே இருந்த போதிலும், 4.74 கோடி விவசாயிகளை மக்களவைத் தேர்தல்களுக்கு முன்னதாகவே அதாவது 2019 பிப்ரவரி 24 முதல் மார்ச் 31 வரை வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தால் பதிவு செய்ய முடிந்தது.

அதன் பிறகு வேகம் கணிசமாகக் குறைந்தது. அதாவது இரண்டாவது காலகட்டத்தில் நான்கு மாத காலப்பகுதியில் வெறுமனே 3.08 கோடி புதிய விவசாயிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டனர். 2019, நவம்பரில் முடிவடைந்த மூன்றாவது காலகட்டத்தில் 1.19 கோடி விவசாயிகளை மட்டுமே (முதல் காலகட்டத்தில் பதிவு செய்த எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே) அரசாங்கம் பதிவு செய்ய முடிந்தது.

இது தேர்தல்களுக்குப் பிறகு இரண்டாவது காலகட்டத்தில் ஆதார் கட்டாயமாகிவிட்டதால் அதன் தகவல்களை சரிப்பார்ப்பதில் ஏற்பட்ட சிக்கலை இதற்கு காரணமாக அரசாங்கம் கூறியுள்ளது. திட்டத்தின் முதல் காலகட்டத்தில் ஆதார் கட்டயமாக்கப்படவில்லை.

இதனால் ஆதார் இணைப்பு அக்டோபரில் தளர்த்தப்பட்டது. ஆயினும் மூன்றாவது காலகட்டத்தில் விவசாயிகளை பதிவு செய்வது குறைந்து இறுதியில் 1.19 கோடி விவசாயிகள் அதாவது முதல் காலகட்டத்தை விட நான்கில் ஒரு பங்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டனர்.

படிக்க:
♦ மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !
♦ வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி | மனுஷ்ய புத்திரன் கவிதை

தொடக்கத்தில் விவசாயிகளின் எண்ணிக்கையை அரசாங்கம் மிகையாக மதிப்பிட்டிருக்கலாம் என்று வேளான் அமைச்சகம் இதற்கு வேறொரு காரணம் கூறுகிறது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் மற்றும் வேளாண் அமைச்சகத்தின் ‘யார் விவசாயி’ என்ற வரையறையின் அடிப்படையில் பார்த்தால் அரசாங்கம் மதிப்பிட்டதை விட விவசாயிகள் அதிகமாக இருக்கக்கூடும் என்பதை காட்டுகிறது.

அரசாங்கத்திற்கு தேவையான தரவுகளை வழங்குவதில் விருப்பமற்ற அணுகுமுறையுடன் இருக்கும் சில மாநிலங்களும் இந்த சிக்கலுக்கு பொறுப்பேற்க வேண்டும். சான்றாக, இந்த திட்டத்தின் கீழ் பங்கேற்க மறுத்து விட்டதால் ஒரு விவசாயியின் விவரங்களை கூட மேற்கு வங்கம் வழங்கவில்லை. அரசாங்கத்தின் மதிப்பீடுகளின்படி மேற்கு வங்கத்தில் 68 லட்சம் விவசாயிகள் இருக்க வேண்டும். ஆனாலும் பிரதமர் கிசானின் கீழ் மேற்கு வங்கத்தில் பயனாளிகள் யாருமில்லை.

பயனாளிகள் குறித்த தகவல்களை மாநிலங்கள் வழங்காத வரை மைய அரசாங்கத்தினால் பணத்தை வழங்க முடியாது. எதார்த்ததில் மாநிலங்கள் கேட்டால் மட்டுமே பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும்.

பாஜக ஆளும் மாநிலங்களும் கூட இதில் குற்றவாளிகள் தான். கர்நாடகா, உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மட்டுமே 2.5 கோடி விவசாயிகள் கணக்கில் வராமல் உள்ளனர். பீகாரில் மட்டும் 1.13 கோடி பேர் கணக்கில் வராமல் உள்ளனர். அங்கு 1.5 கோடி விவசாயிகளில் 44 லட்சம் விவசாயிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நான்காவது காலகட்டத்தில் ஆறு கோடி விவசாய குடும்பங்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர்:

திட்டத்தின் முதலாண்டுக்கு பிறகு (டிசம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரையிலான) நான்காவது தவணைக்காக ஆறு கோடி விவசாயிகளின் கணக்குகளில் ரூ .2,000 பணம் போடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி 2020 ஜனவரியில் அறிவித்துள்ளார்.

தற்போது நான்காவது காலகட்டத்தில், ஆறு கோடி விவசாயிகளின் கணக்குகளில் ரூ .12,000 கோடியை மோடி போட்டிருக்கிறார். 2019, நவம்பர் 30 -க்குள் ஒன்பது கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ள நிலையில் வெறும் ஆறு கோடி விவசாயிகளுக்கு மட்டுமே இத்திட்டம் சென்றது ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நவம்பர் 30 -க்குப் பிறகு அதிகமான விவசாயிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். அந்த தரவு இன்னும் கிடைக்கவில்லை.

ரூ .12,000 கோடி பரிமாற்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், 2020 மார்ச் வரை பிரதமர் கிசானின் கீழ் செலவிட வேண்டிய தொகையில் (ரூ .95,000 கோடி) 50% மட்டுமே அரசாங்கம் செலவிட்டுள்ளது.

பொருளாதார சரிவை சமாளிக்க மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி உட்பட பல முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களே வாதிடுகின்றனர். கிராம பொருளாதார சரிவு, வேலையிழப்பு என்று உள்நாட்டில் மக்களின் வாங்கும் திறன் கடுமையாக சரிந்திருக்கும் நேரத்தில் இது போன்ற திட்டங்களின் கீழ் மக்களுக்கு மேலும் பணத்தை வழங்குவது தான் சரியான முடிவாக இருக்கும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் 47,000 கோடி ரூபாய் செலவு செய்யப்படாமல் இருப்பது எந்த அளவிற்கு மக்கள் விரோதமாக மோடி அரசாங்கம் இருக்கிறது என்பதையே அம்பலப்படுதுகிறது.


தமிழாக்கம் : 
சுகுமார்
நன்றி :  தி வயர்.