Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 292

ஆண் பெண் பேதமின்றி தோழமையாய் பழகும் குழந்தைகள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 03

டிசம்பர் 4. ரகசியக் கூட்டங்கள்

“சிறுவர்களே, எல்லோரும் எழுந்திருங்கள்.”

சிறுவர்கள் எழுந்திருக்கின்றனர்.

“நீங்கள் இன்று சீக்கிரம் கீழே சென்று சாப்பிடும் இடத்தில் சாப்பிட்டு விட்டு உடனே மேலே வாருங்கள்! இன்று நமக்கு ஒரு ரகசிய பேச்சு இருக்கும். புரிந்ததா? உட்காருங்கள்!“

“எதைப் பற்றி? என்ன ரகசியம்?” என்று சிறுமிகளுக்குத் தெரிந்து கொள்ள ஆர்வம்.

”இந்த ரகசியத்தைப் பற்றி நான் சிறுவர்களுடன் மட்டுமே பேசுவேன்! உங்களுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியக் கூடாது! மேற்கொண்டு கேட்காதீர்கள்! எப்படியிருந்தாலும் சொல்ல மாட்டேன்…”

நான் சிறுவர்களுடன் என்ன ரகசியமாகப் பேச விரும்புகிறேன்?

சிறுமிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நான் பேச விரும்புகிறேன்.

அதுவரை ஒவ்வொரு முறையும் பாடம் துவங்கவோ முடியவோ மணியடிக்கும் போது, “சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!” என்று கூறி, இதன் மூலம் எப்போதும் சிறுமிகள் முன் செல்ல வழி விட வேண்டும், அவர்களைப் பிடித்துத் தள்ளக் கூடாது என்று நினைவுபடுத்தினேன். சிறுமிகளுக்குத் தொந்தரவு தரக் கூடாது, இப்படிச் செய்தால் யாரையும் நான் மன்னிக்க மாட்டேன் என்பதை மூன்று மாதப் பள்ளி வாழ்க்கையில் சிறுவர்கள் நன்கு உணர்ந்து கொண்டனர். ஆனால் சிறுவர் சிறுமியர் உறவை ஒழுங்கு படுத்தும் விஷயத்தில் இதோடு நின்றுவிடுவது சரியல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. மேற்கொண்டு எப்படிச் செல்வது? “ஏல்லா மேல் கோட்டைக் கழற்ற உதவு! நீயாவிற்கு மேல்கோட்டை எடுத்துக் கொடு!” என்று ஒவ்வொரு முறையும் அந்தந்த சிறுவனிடம் கூறுவதா, அல்லது சிறுமிகளுக்கு உதவுவதை வகுப்பில் ஒரு பழக்கமாக்குவதா? சில சிறுவர்களுக்கு, சிறுமிகளுக்கு உதவப் பிடிக்கவில்லையென எனக்குத் தெரிகிறது.

”இயாவிற்கு மேல்கோட்டை எடுத்துக் கொடு!” என்று நான் கியோர்கியிடம் சொல்கிறேன்.

கியோர்கி இடத்தை விட்டு அசையவில்லை.

“சிறுமிக்கு மேல்கோட்டை எடுத்துத் தா!” என்று நான் திரும்பச் சொல்கிறேன்.

அவன்: ”அவளே எடுத்துக் கொள்ளட்டும்!”

“அவளாகவே எடுத்து அணிந்து கொள்ள முடியும். ஆனால் நீ உதவினால் நன்றாயிருக்கும்.”

அவன்: “உதவ மாட்டேன், அவளே எடுக்கட்டும்!..”

எலேனா தாழ்வாரத்தில் கீழே விழுந்து அழுதாள். “அவள் எழுந்திருக்க உதவு!” என்று நான் தீத்தோவிடம் சொல்கிறேன்.

தீத்தோ மெதுவாக நகர்ந்து, அழும் சிறுமியிடம் சென்று எவ்வித இரக்கமும் இல்லாமல் சொல்கிறான்: “எழுந்திரு, என்ன புலம்புகிறாய்!”

”சிறுமி எழுந்திருக்க உதவு, அவளைச் சாந்தப்படுத்து!” என்று சூரிக்கோவை அனுப்புகிறேன்.

சூரிக்கோவும் அவசரப்படாமல் எலேனாவிடம் சென்று முரட்டுத்தனமாக கையைப் பிடித்துத் தூக்குகிறான்.

“சரி, சரி, எழுந்திரு” என்கிறான்.

இப்படிப்பட்ட உதவியில் அச்சிறுமியால் எழ முடியவில்லை போலும். சூரிக்கோ இரண்டு கைகளையும் விட்டு விட, அவள் மீண்டும் தரையில் விழுந்து இன்னமும் உரக்கக் கத்துகிறாள். அவன் என்னிடம் திரும்பி வந்து அவள் மீது குற்றஞ் சாட்டுகிறான்:

“ ‘எழுந்திரு’ என்று சொல்லி நான் உதவுகிறேன். அவளோ எழுந்திருக்க விரும்பாமல் அழுகிறாள்!”

இறுதியாக, நான் சொல்லாமலேயே சாஷா அவளிடம் ஓடிச் சென்று, முழங்காலிட்டு அருகே அமர்ந்து, தலை முடியைத் தடவியபடி ஏதோ அன்பாகச் சொன்னான். சிறுமி மௌனமானாள். சாஷா இரண்டு கைகளையும் நீட்ட, அவள் அவற்றைப் பற்றிக் கொண்டு எழுந்தாள். அவள் கண்ணீரைத் துடைக்கக் கூட சாஷா உதவினான்.

என் வகுப்புச் சிறுவர்கள் அனைவரும் மென்மையான உணர்வுடையவர்களாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன், சக மாணவ மாணவியர் மீது இவர்கள் அக்கறை காட்ட வேண்டுமென விரும்புகிறேன். இவர்களை இப்பாதையில் அழைத்துச் செல்வதற்காக ரகசியப் பேச்சு நடத்துவதென முடிவு செய்தேன்.

ஏன் ரகசியப் பேச்சு? இதற்கு சில காரணங்கள் உண்டு.

முதலாவதாக, சிறுவர்களிடம் நான் என்ன சொல்கிறேன் என்று சிறுமிகள் தெரிந்து கொள்ளும் அவசியம் எதுவும் இல்லை. இல்லாவிடில், ”சிறுமிகளுக்கு மேல் கோட்டு எடுத்துத் தரும்படி சொல்லியிருக்கின்றார்கள் இல்லையா? எங்கே சீக்கிரம் தா!” என்றெல்லாம் அவர்கள் சொல்லக் கூடும். சிறுவர்களின் அன்பான அக்கறையை அவர்கள் கண்டிப்பான கடமையாக மாற்றுவார்கள். அப்போது ஆண்களின் அக்கறை எனும் நீதி நெறி தன் அழகியல் சேவையையும் தார்மிக அடிப்படையையும் இழந்து விடும். சிறுமிகளுக்கு நாங்கள் என்ன பேசினோம் என்று தெரியாவிடில், தம் சிறுவர்களின் ஒவ்வொரு செயலையும் நன்றியுணர்வோடு ஏற்பார்கள்.

இரண்டாவதாக, கதவு மூடியிருக்கும் போது சிறுவர்களுடன் அதிக வெளிப்படையாகப் பேசி, ஆண்களின் மேன்மையைப் பற்றி நன்கு விளக்க முடியும். இந்தப் பேச்சின் ரகசியத் தன்மை, தம்மை வேறு – விதமாகப் பார்க்கும்படி சிறுவர்களைக் கட்டாயப்படுத்தும்; ஏனெனில் இவர்களுடன் முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கருத்தாழத்தோடு பேசுகின்றனர், இவர்களை நம்புகின்றனர், எனவே இவர்கள் பெரியவர்களாகி விட்டனர் என்று பொருள்!

மூன்றாவதாக, குழந்தைகளுக்கு எப்போதுமே ரகசியங்கள் பிடிக்கும். இம்மாதிரியான நடவடிக்கை – இவர்களது செயற்பாட்டை ஊக்குவிக்கும். இது நம் ரகசியம்” என்றால் இது மிக முக்கியம்” என்று பொருள். அது தவிர ரகசியம் குழந்தைகள் விளையாட்டின் மிக அழகிய அம்சங்களில் ஒன்று. குழந்தைகள் ரகசியம் பேசுகின்றனர். எதைப் பற்றி? உலகம் பூராவிற்கும் தெரிந்ததை அவர்கள் ரகசியமாகப் பேசலாம். விஷயம் என்னவெனில், ரகசியத்தின் உட்பொருள் என்ன என்பதல்ல, ரகசியம் உள்ளதுதான் முக்கியம். என் வகுப்புச் சிறுவர்களுக்கு ரகசியம் வேண்டும், சிறுமிகள் பால் அவர்கள் ஆண்களுக்கு உரிய அக்கறை காட்ட வேண்டுமென நான் விரும்புகிறேன். இப்படியாக எங்கள் ஆசைகள் சந்திக்கின்றன- நான் அவர்களுக்கு ரகசியக் கட்டளைகளை இட, அவர்கள் அவற்றை நிறைவேற்றட்டும்.

சிறுவர்கள் வகுப்பறையில் நுழைந்ததும் நான் கதவை மூடி விட்டு அவர்களை என்னருகே அமரச் செய்து மெதுவான குரலில் விளையாட்டுத் தொனியின்றி, உறுதியோடு பேசலானேன்:

”நான் நம் வகுப்பில் உண்மையான ஆண் பிள்ளைகள் சங்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். யாருக்கெல்லாம் உண்மையான ஆண் பிள்ளையாக ஆசையோ கையைத் தூக்குங்கள்!”

சிறுவர்கள் பிரமித்துப் போயுள்ளனர். முதலில் சாஷா கையைத் தூக்கினான். பிறகு எல்லோரும் கைகளை உயர்த்தினர்.

“அப்படியெனில், உங்களில் ஒவ்வொருவரும் உண்மையான ஆண் பிள்ளையாக விரும்புகின்றீர்கள், இல்லையா?” என்று கேட்டபடி நான் ஒரு நிமிடம் ஒவ்வொருவரின் கண்களையும் உற்று நோக்குகிறேன். ”உண்மையான ஆண் பிள்ளை எப்படியிருக்க வேண்டுமெனத் தெரியுமா?” என்று நான் அவர்களைக் கேட்கவில்லை. எனது வகுப்புச் சிறுவர்களுக்கு இது நிச்சயமாகத் தெரியாது. பதில் எங்களைக் குழப்ப மட்டுமே செய்யும். கூட்டங் கூடிப் பேசுவதற்காக அவர்களை நான் அழைக்கவில்லை, நிபந்தனைகளைக் கூறி அவற்றை நிறைவேற்றுமாறு கோரவே நான் அவர்களை அழைத்தேன். அடுத்த கூட்டங்களில் நாங்கள் கலந்து பேச முடியும்; அனேகமாக அவற்றில் சிறுவர்கள் ஏதாவது பழகும் விதிகளை மீறினால் அது பற்றி விவாதிக்க வேண்டியிருக்கும், அல்லது எங்கள் சிறுமிகள், அம்மாக்கள், பாட்டிமார்கள், சகோதரிகளுக்கு மகிழ்ச்சிகரமான அதிசயங்களைத் தயார்ப்படுத்த வேண்டியிருக்கும். பெண்மணியின் பால் முரட்டுத் தனமாக நடக்கும் வயது வந்த மனிதனை, பெண்மணிக்கு உதவாமல், அக்கறை காட்டாமல் தொந்தரவு செய்பவரை உண்மையான ஆண்மகன் என்று சொல்லலாமா என்பது குறித்து இப்போது பேசுவோம். குழந்தைப் பருவத்திலிருந்து தான் உண்மையான ஆண் பிள்ளையாக வளர முடியுமெனக் குழந்தைகள் புரிந்து கொள்ளட்டும்.

“உண்மையான ஆண் பிள்ளைகள் சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக இருக்க விரும்பினால், இன்று முதல் நீங்கள் நமது சங்க விதிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். இதற்கு ஒப்புக் கொள்கின்றீர்களா?”

”சரி!” என்று சன்னமான குரலில் சிறுவர்கள் கூறுகின்றனர்.

“இன்று இரண்டு விதிமுறைகளை மட்டும் கூறுவேன். முதலாவது: ஒவ்வொரு சிறுமியின் விஷயத்திலும் கவனமானவர்களாக, மென்மையானவர்களாக, அக்கறை காட்டுபவர்களாக இருக்க வேண்டும். இந்த விதியை திருப்பிச் சொல்லுங்கள் பார்க்கலாம்!” குழந்தைகள் திரும்பச் சொல்கின்றனர்.

இரண்டாவது: ”சிறுமிகள் மேல்கோட்டு அணியவும் கழட்டவும் உதவ வேண்டும். இதை திருப்பிச் சொல்லுங்கள் பார்க்கலாம்!”

பின்னர் சிறுமிகளுக்கு எப்படி மேல் கோட்டை எடுத்துத் தருவதென்று பயிற்சி செய்து பார்க்கும்படி சிறுவர்களிடம் கூறினேன்.

“இதோ, சிறுமிகளின் மேல்கோட்டுகள் தொங்குகின்றன. அவசரப்படாமல், இழுத்துத் தள்ளாமல் நீங்கள் அந்த இடத்தை நோக்கி செல்கின்றீர்கள்.”

எப்படி மேல் கோட்டுகள் உள்ள இடத்திற்குச் சென்று, அவற்றைக் கழட்டுவது என்று நான் செய்து காட்டுகிறேன்.

“மேல்கோட்டை எடுங்கள்… சிறுமியை நெருங்குங்கள்… சிறுமி தன் கரங்களை நீட்டி அணிய வசதியாக இருக்கும்படி அதைப் பிடியுங்கள்… புரிந்ததா? எங்கே, சாஷா, நீ எப்படிச் செய்கிறாய் காட்டு!” சாஷா சந்தோஷமாகச் செய்து காட்டுகிறான். ”கியோர்கி, தீத்தோ, சூரிக்கோ, இப்போது நீங்கள் மூவரும் செய்து காட்டுங்கள்!”

சாஷாவும் நானும் அவர்களைத் திருத்துகிறோம், மேல் கோட்டை எப்படிப் பிடிக்க வேண்டும், எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனக் காட்டுகிறோம்.

“இப்போது எல்லோரும் மேல்கோட்டுகள் மாட்டப்பட்டுள்ள இடத்திற்கு இடித்துத் தள்ளாமல் செல்லுங்கள் பார்க்கலாம். மேல்கோட்டைக் கீழே போடாமல் இருப்பதும், குழப்பாமல் இருப்பதும் மிக முக்கியம்.”

இதை சிறுவர்கள் சில தடவைகள் செய்து பார்த்துக் கற்றுக் கொண்டனர், இறுதியில் அமைதியாக, சரிவரச் செய்ய ஆரம்பித்தனர். “உட்காருங்கள்!”

மீண்டும் அருகருகே உட்கார்ந்தோம். சிறுமிகள் கதவைத் தட்டுகின்றனர்: “கதவைத் திறவுங்கள்!” “உண்மையான ஆண் பிள்ளை ரகசியத்தை வெளியிடக் கூடாது” என்று நான் சொல்கிறேன். நாம் எவ்வளவு பேர் என்று எண்ணுங்கள்!” அவர்கள் எண்ணினர். என்னையும் சேர்த்து 22 பேர்கள். 23-வது நபருக்கு நம் ரகசியம் தெரியக் கூடாது!” மௌனம். நாங்கள் ஒருவரையொருவர் ஏதோ முக்கியமானதை, தீவிரமானதைப் பற்றிச் சிந்திக்கும் சதிகாரர்களைப் போல் பார்க்கிறோம். சிறுமிகளுக்கோ பொறுமையில்லை. “திறவுங்கள், எங்களை உள்ளே விடுங்கள்!” நான் கதவைத் திறக்கிறேன்.

படிக்க:
பாலியல் குற்றங்கள் பெருகும் நிலையில் பள்ளி மாணவர்கள் நிலை என்ன ?
சிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன ? | தோழர் ராஜு உரை | காணொளி

“என்ன பேசினீர்கள்?” என்று என்னை நோக்கி கேள்விகளைத் தொடுக்கின்றனர்.

நாங்கள் தீவிர முகபாவத்தோடு இருக்கிறோம். ரகசியத்தை வெளிவிடவில்லை.

“எதைப் பற்றியுமில்லை!”

பாடவேளை முடிந்து, சிறுமிகளுக்கு மேல் கோட்டுகளை எடுத்துத் தரும் நேரம் வந்த போது எல்லா சிறுவர்களும் உண்மையான ஆண் பிள்ளைகளாவதில் ஒரு மனதான முனைப்பைக் காட்டினர். ஆனால் ஒரு சில சிறுமிகளுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை, எப்படி நடந்து கொள்வதென அவர்களுக்குத் தெரியவில்லை. இதைப் பார்க்க வருத்தமாயிருந்தது.

பரவாயில்லை, சிறுமிகளே! விரைவிலேயே உங்களுடனும் இது போன்ற கூட்டம் நடத்துவேன். சிறுவர்கள் மீது எப்படி அக்கறை காட்ட வேண்டும், ஆண்களின் கவனத்தை எப்படி மதிக்க வேண்டும் என்பதை நீங்களும் உணர வேண்டுமல்லவா?

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

“வெறித்தனம்” – முதலாளித்துவம் திணிக்கும் சீரழிவு ! | கலையரசன்

0

கலையரசன்

ளம்தலைமுறை சினிமா இரசிகர்கள் அடாவடித்தனம் பண்ணுவது தமிழர்களுக்கு மட்டுமேயான “சிறப்புரிமை” அல்ல. இது உலகம் முழுவதும், மேற்கத்திய நாடுகளிலும் நடக்கும் விடயம் தான். என்ன வித்தியாசம்? இங்கே சினிமா பைத்தியம் என்றால் அங்கே கால்பந்து பைத்தியம். அவ்வளவு தான். இரசிகர்களின் வெறி மனநிலை எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாகத் தானிருக்கும். முதலாளித்துவ சமுதாய அமைப்பைக் கொண்ட நாடுகளில், இந்த வெறியுணர்வு திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது.

உலகிற்கே முதலாளித்துவம் போதித்த நாடு, தொழிற்புரட்சி நடந்த இங்கிலாந்து அல்லவா? அதனால் இந்த “வெறித்தனம்” கூட அங்கே தான் தோன்றியுள்ளது. பொது இடங்களில் அடாவடித்தனம் செய்யும் விளையாட்டு இரசிகர்களை ஆங்கிலத்தில் ஹூலிகன் (Hooligan) என்பார்கள். அந்தச் சொல் அதே உச்சரிப்புடன் பிற ஐரோப்பிய மொழிகளும் உள்வாங்கப் பட்டுள்ளது.

Hooligan
விளையாட்டின் பெயரில் வெறித்தனம் செய்யும் ‘இரசிகர்கள்’. (மாதிரிப் படம்)

இங்கிலாந்து கால்பந்து இரசிகர்கள் செய்யும் அடாவடித்தனம் உலகப் பிரசித்தமானது. எங்காவது ஓர் ஐரோப்பிய நகரத்தில் இங்கிலாந்து டீம் விளையாடும் மேட்ச் நடந்தால், அங்கு இங்கிலாந்து விளையாட்டு இரசிகர்களும் வந்து குவிந்து விடுவார்கள். மேட்ச் நடக்கும் நாள் முழுவதும், மதுபான விடுதிகள் நிரம்பிய நகர மத்திய பகுதி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட இடம் போல காட்சியளிக்கும்.

சாதாரண பொதுமக்கள் அந்த இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்வார்கள். இங்கிலாந்து கால்பந்து இரசிகர்கள் குடித்து விட்டு ரகளை செய்வதும், பொதுச் சொத்துக்களை அடித்துடைத்து நாசம் விளைவிப்பதும் வழமையானவை. இதனால் சில நேரம் பிற ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்து இரசிகர்களுக்கு பிரயாணத் தடை விதித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

படிக்க:
வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்
♦ மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! புதிய ஜனநாயகம் நவம்பர் இதழ் !

நெதர்லாந்தில் உலகப் புகழ் பெற்ற இரண்டு விளையாட்டுக் கழகங்கள் உள்ளன. ஆம்ஸ்டர்டாம் நகருக்குரிய ஆயாக்ஸ் (Ajax) ரொட்டர்டாம் நகருக்குரிய பையனோர்ட்(Feyenoord). பிற உலக நாடுகளிலும் இவ்விரண்டையும் பற்றி அறிந்திராத விளையாட்டு இரசிகர்கள் கிடையாது.

நெதர்லாந்து ஆயாக்ஸ் – பையனோர்ட் கால்பந்து விளையாட்டு இரசிகர்களை, நம்மூரில் விஜய் – அஜித் (அல்லது அந்தக் காலத்து எம்ஜிஆர் – சிவாஜி) சினிமா இரசிகர்களுடன் ஒப்பிடலாம். அந்தளவு வெறித்தனம். கிட்டத்தட்ட பிரதேசவாதம் போன்று காணப்படும் இந்த பிரிவினை மூன்றாவது தலைமுறை இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. இரண்டு பக்க இரசிகர் பட்டாளங்கள் வாய்த்தர்க்கம் செய்வதும், அது முற்றி கைகலப்பு நடப்பதும் வாடிக்கையானது.

ஆம்ஸ்டர்டாம் அல்லது ரோட்டர்டாம் நகரில் ஆயாக்ஸ் – பையனோர்ட் உதைபந்து போட்டி நடந்தால் சொல்லவே தேவையில்லை. இரு பக்க ஹூலிகன் பட்டாளங்களும் கத்தி, பொல்லு, வாள்களை மறைத்து வைத்து கொண்டு வந்திருப்பார்கள். ஒரு தடவை ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். அந்தளவுக்கு மோசமாக நடந்து கொள்வார்கள். மேட்ச் நடக்கும் நாட்களில், கவச உடை அணிந்த போலீசார் குவிக்கப்பட்டு, அந்த இடம் ஒரு யுத்தகளம் போன்று காட்சியளிக்கும்.

ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில், சினிமா அல்லது விளையாட்டு மீதான இரசிகர்களின் வெறித்தனம், ஆள்வோரால் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது. சினிமா / விளையாட்டு பைத்தியம் இளையோரின் மனநிலையை சீர்குலைக்கிறது. இதன் மூலம் அவர்களை அரசியல் நீக்கம் செய்யப்பட்ட தலைமுறையினராக வளர்க்க முடிகிறது.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! புதிய ஜனநாயகம் நவம்பர் இதழ் !

மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

  1. பி.எம்.சி. வங்கி முறைகேடு: வெளியே தெரியும் பனிமுகடு!
    இந்திய வங்கித் துறை எந்தளவிற்கு கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாக இயங்கி வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது, பி.எம்.சி. வங்கியில் நடந்திருக்கும் நிதி முறைகேடுகள்.
  2. மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை!
    2005-06 ஆம் ஆண்டு பட்ஜெட் தொடங்கி 2017 – 18 ஆம் ஆண்டு பட்ஜெட் முடியவுள்ள பதிமூன்று ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வருமான, சுங்க, உற்பத்தி வரித்தள்ளுபடிகளின் மொத்த மதிப்பு ஏறத்தாழ 42 இலட்சம் கோடி ரூபாய்.
  3. தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள்: மந்திரத்தால் மாங்காய் விழாது!
    வட இந்திய மாநிலங்களுக்கு இணையாகத் தமிழகத்திலும் தீண்டாமைக் குற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இது சமூக நீதி பூமி எனக் கதைப்பதால் மட்டுமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்திவிட முடியாது.
  4. கீழடி:”ஆரிய மேன்மைக்கு” விழுந்த செருப்படி!
    கீழடியில் கிடைத்திருக்கும் தொல்லியல் ஆதாரங்கள் தமிழகத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர நாகரிகம் நிலவி வந்ததை நிரூபிக்கின்றன.
  5. நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடிகள்: பா.ஜ.க.வின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது!
    நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்துத் தேர்ச்சி பெறவும் பணம் வேண்டும்; அல்லது, அத்தேர்வில் மோசடி செய்யவும் பணம் வேண்டும். இனி மருத்துவராவதற்கு அடிப்படைத் தகுதி பணம்தான்!
  6. தரம், தகுதி, பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள்!
    ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்கங்களைச் சேர்ந்த பிள்ளைகள் ஆரம்பக் கல்வி பெறுவதைக்கூடக் கொல்லைப்புற வழியில் தடுக்கும் சதியாகும்.
  7. காஷ்மீர்: இதன் பெயர்தான் இயல்பு நிலையாம்!
    துக்கமென்றால் அழ முடியாது; மகிழ்ச்சியென்றால் கொண்டாட முடியாது. – இதுதான் மோடி உருவாக்கியிருக்கும் புதிய காஷ்மீர்.
  8. காஷ்மீர் போர் குறித்த பா.ஜ.க.-வின் வரலாற்று மோசடி!
    பட்டேல் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்ற அமித்ஷாவின் கூற்று பொய் என்பதை பட்டேலின் கடிதப் போக்குவரத்துகள் தொகுதி-1 தெளிவாக்குகிறது.
  9. பா.ஜ.க.-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம்! மருமகள் உடைத்தால் பொன்குடம் !!
    ஊழலைச் சட்டபூர்வமாக்கி வருவதோடு, அ.தி.மு.க., உள்ளிட்ட ஊழல் கட்சிகளோடு கூட்டணியும் வைத்திருக்கும் பா.ஜ.க., ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசுவதற்குத் தகுதியற்றது.
  10. மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம்: அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை!
    ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே அடையாள அட்டை, ஒரே வரி என்ற வரிசையில் இந்திய மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம்.
  11. பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !
    பகவத் கீதையைப் பொறியியல் பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது சாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் குற்றங்களைக் கருத்தியல்ரீதியாக நியாயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும்.
  12. மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !
    மோடியின் பிறந்த நாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதற்காக நர்மதை நதிக் கரையோர விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டது, குஜராத் மாநில அரசு.
  13. த்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா?
    இந்தக் கொள்ளை சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை விற்பது தொடங்கி அர்ச்சகர்கள் தட்டில் விழுந்த காணிக்கை வரை பல வழிகளில் நடந்திருக்கிறது.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

செருப்புக் காலிகளை சுட்டு வீழ்த்திய சோவியத் படையணிகள் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 04a

“கவனியுங்கள்! நான் சிறுத்தை மூன்று, நான் – சிறுத்தை மூன்று, நான் – சிறுத்தை மூன்று. வலப்புறம் ‘செருப்புக் காலிகள்’, ‘செருப்புக் காலிகள்’!”.

முன்னே எங்கோ கமாண்டரது விமானத்தின் சிறுவரையுரு அலெக்ஸேய்க்குப் புலனாயிற்று. வரையுரு அசைந்தாடிற்று. “நான் செய்கிற படிச் செய்” என்று இதுகுறித்தது.

மெரேஸ்யெவ் தனது குழுவினருக்கு அதே உத்தரவை அளித்தான். அவன் பின்னே பார்த்தான். பின்னோடி அவனை விட்டு விலகாமல் அருகாகத் தொடர்ந்தான் பெத்ரோவ். சபாஷ்!

“உறுதியாயிரு, தம்பி! என்று அவனைக் கத்தி உற்சாகப்படுத்தினான் மெரேஸ்யெவ்.”

“உறுதியாயிருக்கிறேன்!” என்ற பதில் குழப்பத்துக்கும் கீச்சொலிகளுக்கும் இரைச்சலுக்கும் ஊடாக அவனுக்குக் கேட்டது.

“நான் – சிறுத்தை மூன்று, நான் சிறுத்தை மூன்று. என்னைத் தொடர்க!” என்ற உத்தரவு ஒலித்தது.

பகை விமானங்கள் அருகே இருந்தன. ஜெர்மானியருக்குப் பிடித்த இரட்டைத் தாரா வரிசையில் அணிவகுத்து சோவியத் விமானங்களுக்கு சிறிது கீழே பறந்தன. “யூ-87” ரக ஒற்றை எஞ்சின் முக்குளி வெடி விமானங்கள். இவற்றின் சக்கரச் சட்டங்கள் மடிந்து கொள்ளக் கூடியவை அல்ல. பறக்கும் போது இந்தச் சட்டங்கள் விமானத்தின் வயிற்றுக்கு அடியில் தொங்கும். சக்கரங்கள் காற்று வழிவு மூடியினால் காக்கப்பட்டிருக்கும். விமானத்தின் வயிற்றிலிருந்து மரவுரிச் செருப்புக்கள் அணிந்த கால்கள் தொங்குவது போலத் தோன்றும். எனவேதான் எல்லாப் போர்முனைகளிலும் விமானிகள் வழக்கில் இவற்றுக்குச் “செருப்புக்காலிகள்” என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது.

போலந்து, பிரான்ஸ், ஹாலாந்து, டென்மார்க், பெல்ஜியம், யூகோஸ்லோவியா ஆகியவற்றிற்கு மேலே நடந்த சண்டைகளில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்களுக்குரிய அபகீர்த்தியைப் பெற்று விட்ட இந்தப் பிரபல முக்குளி வெடி விமானங்கள் குறித்து எத்தனையோ பயங்கரக் கதைகள் போர்த் தொடக்கத்தில் உலகச் செய்தித்தாள்கள் அனைத்தாலும் பரப்பப்பட்டிருந்தன. ஆனால் சோவியத் யூனியனின் பரந்த வானில் அவை மிகு விரைவிலேயே பழையதாகி விட்டன. பற்பல சண்டைகளில் சோவியத் விமானிகள் இவற்றின் பலவீமான இடங்களை சோதித்து அறிந்து கொண்டார்கள். சிறப்பான திறமை எதுவும் இன்றியே வேட்டையாடக் கூடிய காட்டுக் கோழிகளையோ முயல்களையோ போன்றே “செருப்புக் காலிகளைத்” தாக்கி வீழ்த்துவதும் தேர்ந்த சோவியத் விமானிகளால் அற்பமாக மதிக்கப்பட்டது.

காப்டன் செஸ்லோவ் தமது ஸ்குவாட்ரனை நேரே பகை விமானங்களை நோக்கிச் செலுத்தாமல் ஒதுக்குப் புறமாக இட்டுச் சென்றார். முன்ஜாக்கிரதையுள்ள காப்டன் “சூரியனுக்கு அடியில்” போய், கண்களை குருடாக்கும் அதன் கிரணங்களின் முகமூடி மறைவில் பார்வைக்குப் புலப்படாது இருந்து திடீரெனப் பாய்ந்து தாக்கத் திட்டமிடுகிறார் என மெரேஸ்யெவ் தெரிந்து கொண்டான். அவனுக்குச் சிரிப்பு வந்தது. இவ்வளவு சிக்கலான பாய்ச்சல் காட்டுவது “செருப்புக் காலிகளுக்கு” மட்டுமீறிய மரியாதை செய்வது ஆகாதா? ஆனால் ஜாக்கிரதை கெடுதல் அல்ல. மெரேஸ்யெவ் மறுபடி பின்னேப் பார்த்தான். பெத்ரேவ் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். வெண் முகிலின் பின்னணியிலிருந்து அவனது விமானம் நன்றாக தென்பட்டது.

இப்போது பகைவிமானங்கள் சோவியத் விமானங்களின் வலப்புறம் தாழப் பறந்தன. ஜெர்மன் விமானங்கள் அழகாக, நேர் வரிசையாக, கண்ணுக்குத் தெரியாத நூல்களால் இணைக்கப்பட்டவை போலப் பறந்தன. அவற்றின் மேற்பகுதிகள் மேலிருந்து பட்ட வெயிலொளியில் கண்கள் கூசுமாறு மின்னின.

“…சிறுத்தை மூன்று. தாக்கு!” கமாண்டரது வாக்கியத்தின் துணுக்கு மெரேஸ்யெவின் காதுகளில் பாய்ந்தது.

செஸ்லோவும் அவருடைய பின்னோடிகளும் பனிக்கட்டி மலையிலிருந்து வெறியுடன் வழுகுவது போல, வலப்புறம் உயரேயிருந்த பகையணியின் விலாப்புறத்தில் பாய்ந்ததை அவன் கண்டான். எல்லாவற்றிலும் அருகிலிருந்த “செருப்புக்காலி” மீது குண்டு வரிசைகள் தாக்கின. அது உடனே குப்புற வீழ்ந்தது. செஸ்லோவும் அவருடைய பின்னோடிகளும் இவ்வாறு ஏற்பட்ட இடைவெளியில் புகுந்து ஜெர்மானிய அணியைக் கடந்து பறந்து போய் விட்டார்கள். ஜெர்மன் விமான வரிசை அவர்கள் பின்னே நெருக்கமாயிற்று. “செருப்புக்காலிகள்” முன்போலவே சிறந்த ஒழுங்குடன் தொடர்ந்து சென்றன.

தனது அழைப்புக் குறிப்பெயரைச் சொல்லிவிட்டு, “தாக்கு!” என்று கத்த வாயெடுத்தான் மெரேஸ்யெவ். ஆனால் உணர்ச்சிப் பெருக்குக் காரணமாக அவன் குரலிலிருந்து “தா-ஆ-ஆ!” என்ற சீழ்கையொலி மட்டுமே வெளிப்பட்டது. அதற்குள் அவன் ஒழுங்காகப் பறந்த பகை விமான அணி தவிர வேறு எதையும் காணாதவனாகக் கீழ் நோக்கிப் பாய்ந்தான். செஸ்லோவால் வீழ்த்தப்பட்ட விமானத்தின் இடத்தில் இப்போது பறந்த ஜெர்மன் விமானத்தை அவன் தன் இலக்காகக் கொண்டான். அவனுடைய காதுகளில் பொய்யென்ற ஒலி கனத்தது. இருதயம் தொண்டை வழியாக வெளியே வந்துவிடும் போல் இருந்தது. பகை விமான இலக்கு மையத்துக்கு வந்ததும் மெரேஸ்யெவ் சுடு விசைகளை இருகைப் பெரு விரல்களாலும் பற்றியவாறு அதை நோக்கிப் பாய்ந்தான். சாம்பல் நிறத் தூவியடர்ந்த கயிறுகள் அவனுக்கு வலப்புறம் பளிச்சிட்டனபோல் இருந்தது. ஓகோ! சுடுகிறார்கள்! குறி தவறிவிட்டார்கள். மறுபடியும், இன்னும் அருகாக. மெரேஸ்யெவ் சேதமின்றித் தப்பிவிட்டான். பெத்ரோவோ? அவனும் சேதமடையவில்லை. அவன் இடப்புறம். அப்பால் விலகிவிட்டான். பையன் கெட்டிக்காரன்! இலக்குக் காட்டியின் மையத்தில் “செருப்புக்காலியின்” சாம்பல் நிறப் பக்கப் பகுதி பெரிதாகிக் கொண்டுபோயிற்று. மெரேஸ்யெவின் விரல்கள் சுடுவிசைகள் சில்லென்ற அலுமினியத்தை உணர்ந்தன. இன்னும் கொஞ்சம்…..

தனது விமானத்துடன் தான் முற்றிலும் கலந்து ஒன்றாகி விட்டதை அப்போது தான் அலெக்ஸேய் முற்றிலும் உணர்ந்தான். விமான எஞ்சின் தன் நெஞ்சில் துடிப்பது போல அவனுக்குப்பட்டது. விமான இறக்கைகளையும் வால் சுக்கானையும் அவன் தன் உடல், உள்ளம் அனைத்தாலும் உணர்ந்தான். பாங்கற்ற பொய்க்கால்கள் கூட நுண்ணுணர்வு பெற்றுவிட்டன போன்றும், வெறிப் பாய்ச்சல் கொண்ட இயக்கத்தில் விமானத்துடன் தான் ஒன்றாகிவிடுவதற்குத் தடையாக இல்லை போலவும் அவனுக்குத் தோன்றியது. பாசிஸ்ட் விமானம் இலக்குக் காட்டியின் மையத்திலிருந்து நழுவியது, பின்பு அகப்பட்டுவிட்டது. அதை நோக்கி நேரே பாய்ந்த படியே மெரேஸ்யெவ் சுடுவிசையை அழுத்தினான். வெடியோசைகளை அவன் கேட்கவில்லை. குண்டு வரிசைகளையும் அவன் காணவில்லை.

எனினும் குண்டுகள் இலக்கில் பட்டுவிட்டன என்பதை உணர்ந்தான். எனவே பகை விமானம் விழுந்து விடும், தான் அதனுடன் மோத நேராது என்று உறுதியுடன் நிற்காமல் நேரே பகை விமானத்தை நோக்கிப் பறந்தான். இலக்குக் காட்டியிலிருந்து விலகிவிட்ட மெரேஸ்யெவ் பக்கத்தில் இன்னும் ஒரு விமானம் அடிபட்டு விழுவதைக் கண்டு வியப்படைந்தான். அதையும் அவனே தற்செயலாக அடித்து வீழ்த்திவிட்டானா என்ன? இல்லை. இது பெத்ரோவின் வேலை. அவன் வலப்புறமிருந்து திரும்பினான். சபாஷ், புதியவனே! தனது இளம் நண்பனின் வெற்றியால் மெரேஸ்யெவ் தன் சொந்த வெற்றியால் அடைந்ததைக் காட்டிலும் அதிகக் களிப்பு அடைந்தான்.

இரண்டாவது அணி ஜெர்மன் விமான வரிசையில் ஏற்பட்ட பிளவு வழியாகப் பறந்து போயிற்று. ஜெர்மன் விமான வரிசையில் அதற்குள் பெருங் குழப்பம் ஏற்பட்டது. இரண்டாவது வரிசை விமானங்களை ஓட்டியவர்கள் அனுபவம் குறைந்த விமானிகள் போலும். அவை சிதறி ஓடின, வரிசை கலந்து விட்டது. செஸ்லோவ் அணியின் விமானங்கள் இவ்வாறு சிதறிக் கலைந்த “செருப்புக் காலிகளுக்கு” இடையே பாய்ந்தன, பகை விமானங்கள் தங்கள் சொந்தக் காப்பகழ்கள் மீதே வெடிகுண்டுப் பெட்டிகளை மளமளவென்று காலியாக்குமாறு செய்தன. ஜெர்மானியர் தங்கள் காப்பு அரண்களைக் குண்டுகளால் தகர்க்கும் படி செய்வதே காப்டன் செஸ்லோவ் கணக்கிட்டுத் தயாரித்திருந்த திட்டம். சூரியனுக்கு அடியில் சென்றது இதற்கு ஒத்தாசையாக இருந்தது.

ஆனால் ஜெர்மன் விமானங்களின் முதல் வரிசை மறுபடி குறுகி ஒன்று சேர்ந்துவிட்டது. “செருப்புக்காலிகள்” சோவியத் டாங்கிகள் உடைத்துப் புகுந்த இடத்தை நோக்கி முன்னேறின. மூன்றாவது சோவியத் சண்டை விமான அணியின் தாக்கு பயன் அளிக்கவில்லை. ஜெர்மானியர் ஒரு விமானத்தை கூட இழக்கவில்லை. ஒரு சோவியத் சண்டை விமானம் பகைக் குண்டுத்தாக்குக்கு இலக்காகி விழுந்துவிட்டது. டாங்கித் தாக்கு தொடங்கிய இடம் அருகே வந்துவிட்டது. மறுபடி உயரே எழ நேரமில்லை. ஆபத்தை மதியாமல் கீழிருந்துத் தாக்குவது என்று செஸ்லோவ் தீர்மானித்தார். மெரேஸ்யெவ் மனதுக்குள் அவரை ஆதரித்தான். செங்குத்துப் பாய்ச்சலில் “லா-5 ரக விமானத்திற்கு உள்ள போர்ப் பண்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வயிற்றில் ‘குத்த’ அவனுக்கே ஆசையுண்டாயிற்று. முதல் அணி மேல் நோக்கிப் பாய்ந்தது. பீரங்கிக் குண்டுகள் ஊற்றுக்களின் கூரிய பீச்சு நீர்த் தாரைகள் போல கிழித்துச் சென்றன. இரண்டு ஜெர்மன் விமானங்கள் சரிந்து விழுந்தன. ஒன்று இரு பாதிகளாக வகிரப்பட்டது போலும், திடீரென வானில் உடைந்து சிதறியது. மெரேஸ்யெவின் விமான எஞ்சின் அதன் வாலினால் நசுக்கப்படாமல் மயிரிழையில் தப்பிற்று..

“பின் தொடர்!” என்று கத்தினான் மெரேஸ்யெவ். பின்னோடி விமானத்தின் நிழலுருவை ஒரு பார்வை பார்த்து விட்டு இயக்கு விசைப்பிடியைத் தன் பக்கம் இழுத்தான்.

படிக்க:
சிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன ? | தோழர் ராஜு உரை | காணொளி
வாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு !

தரை குப்புறக் கவிழ்ந்தது. கனத்த அடி அவனை இருக்கையில் நெரித்து அதோடு அழுத்தியது. வாயிலும் உதடுகளிலும் இரத்தத்தின் சுவையை அவன் உணர்ந்தான். அவன் விழிகளில் செந்திரை படர்ந்தது. விமானம் அநேகமாகச் செங்குத்தாய் நின்றவாறு மேல் நோக்கிப் பாய்ந்தது. இருக்கையின் முதுகுப் பாகத்தில் கிடந்தபடியே மெரேஸ்யெவ் இலக்குக் காட்டியில் “செருப்புக்காலியின்” புள்ளிகளிட்ட வயிற்றையும் பருத்த சக்கரங்களை மூடியிருந்த நகைப்புக்கிடமான “செருப்புகளையும்” அவற்றில் ஒட்டியிருந்த விமானநிலையக் களிமண் கட்டிகளைக் கூடக் கண்டான்.

இரண்டு சுடுவிசைகளையும் அவன் அழுத்தினான். அவன் சுட்ட குண்டுகள் பெட்ரோல் கலத்திலா, எஞ்சினிலா, வெடி குண்டுப் பொட்டிலோ எதில் பட்டனவோ அவனுக்குப் புரியவில்லை. ஆனால் வெடிப்பின் பழுப்புப்படலத்தில் ஜெர்மன் விமானம் மறைந்துவிட்டது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன ? | தோழர் ராஜு உரை | காணொளி

ழ்துளைக் கிணற்றில் 87 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது குழந்தை சுஜித் மீட்கப்படாமல் இறந்து போனது இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நிலவுக்கு சந்திராயன் அனுப்பும் ‘வல்லரசி’டம் கேவலம் 87 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லையா ?

பலரும் பல விதமாகப் பதில் தருகிறார்கள். அரசும் அரசு ஆதரவாளர்களும், 5 நாட்கள் அமைச்சரும் அதிகாரிகளும் உழைத்த கதையைக் கூறுகிறார்கள். ரிக்கை கொண்டுவந்தோம் – நெய்வேலி குழ்வைக் கொண்டுவந்தோம் – இராணுவத்தைக் கொண்டு வந்தோம் என சவடால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க :
♦ குழந்தை சுஜித்: ஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் !
♦ மதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு !

குழியில் விழுந்த குழந்தையை மீட்க என்ன திட்டம் இந்த அரசாங்கத்திடம் இருந்தது ? அதற்கென ஏதேனும் வழிமுறை இருக்கிறதா ? அதற்கான கருவிகள் இருந்ததா ?

ரத்தக் குழாயை அடைத்த கொழுப்பை அகற்றக் கூடிய தொழில்நுட்பமே சர்வ சாதாரணமாக கிடைக்கும் நாட்டில் 6 இன்ச் விட்டம் கொண்ட பள்ளத்தில் இருந்து குழந்தையை மீட்கும் தொழில்நுட்பத்துக்கா பஞ்சம் ?

கண்டிப்பாகக் கிடையாது ! அந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கருவியை வடிவமைக்க விரும்பாத, அதைப் பற்றி இன்றளவும் கூட சிந்திக்காத இந்த அரசுக் கட்டமைப்புதான் பிரச்சினைக்குரியது.

மலக்குழியில் இறங்கி அடைப்பை நீக்கும் தொழில்நுட்பமா இங்கு பிரச்சினை ? அத்தொழிலிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை விலக்க விரும்பாத பார்ப்பனிய, லாபவெறி சிந்தனை தானே பிரச்சினை !

டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் வைக்கும் அரசு ஏழைகளைக் காக்கும் கருவிகளை உருவாக்குவதற்கு என்றும் டார்கெட் வைப்பது கிடையாது.

மக்களுக்கு எதிராக மாறிவிட்ட இந்த அரசு இயந்திரத்தின் தோல்வியை அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு !

பாருங்கள் ! பகிருங்கள் !

வாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு !

0

ஸ்ரேலிய உளவு மென்பொருளை பயன்படுத்தி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1400-க்கும் மேற்பட்ட வாட்சப் பயனாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தியாவைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களும் இஸ்ரேலிய உளவு மென்பொருளின் உளவுக்கு ஆளானதாகவும் அந்நிறுவனம் கூறியிருந்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. இதில், சத்தீஸ்கரில் களப்பணியாற்றும் செயல்பாட்டாளர்களும் பீமா கொரேகான் சம்பவத்தில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டப்பட்ட செயல்பாட்டாளர்களுமே அதிகமாக உள்ளனர்.

ஃபேஸ்புக் நிறுவனம், டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் லேப் -உடன் இணைந்து இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ. குழுமம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்த விசாரணையில் ஈடுபட்டபோது இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

இந்திய ஊடகங்களிடம் பேசிய சிட்டிசன் லேப்-ஐச் சேர்ந்தவர்கள், பொதுவாக இதுபோன்ற உளவு மென்பொருட்களை அரசாங்கங்கள்தான் வாங்குவது வழக்கம் என தெரிவித்துள்ளனர். செயல்பாட்டாளர் பெலா பாட்டியா, “இந்திய அரசாங்கம் இதில் தொடர்புள்ளதாக” சிட்டிசன் லேப் பிரதிநிதிகள் கூறியதாக சொல்கிறார்.

ஆனால், இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள அந்த அமைப்பு தயாராக இல்லை. அதுபோல, இந்திய அரசாங்கமும் உளவு பார்த்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

சிட்டிசன் லேப், உளவு பார்க்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு, அந்தத் தகவலைக் கூறியுள்ளது. அதன் அடிப்படையில், இந்த விவகாரம் வெளியான பின், பலர் தாங்கள் உளவு பார்க்கப்பட்ட விசயத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

படிக்க:
மாவோயிஸ்டுகள் என்றாலே சுட்டுக் கொல்வதா ? PRPC கண்டனம்
♦ வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !

***

ஆனந்த் தெல்தும்டே (பீமா கொரேகான் கலவரத்தில் குற்றம்சாட்டவர்; மக்கள் உரிமைக்காக குரல் கொடுப்பவர், கல்வியாளர்) :

டந்த ஒரு வாரத்துக்கு முன் சிட்டிசன் லேப்-ஐச் சேர்ந்த மூத்த ஆய்வாளர் ஜான் ஸ்கார் ரெயில்டன், தன்னை தொடர்புகொண்டு வாட்சப் தகவல்கள் உளவுபார்க்கப்பட்டதாகத் தெரிவித்ததாகச் சொல்கிறார் ஆனந்த் தெல்தும்டே. கடந்த மே மாதம் இந்த உளவு மென்பொருள் தாக்குதலை நிறுத்திவிட்டதாகவும் அவர் அளித்த தகவல் கூறியிருக்கிறது.

ஆனந்த் தெல்தும்டே
ஆனந்த் தெல்தும்டே

“இதிலிருந்து தப்பிக்க நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. லட்சக்கணக்கான தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன. முன்பு, இதற்கெல்லாம் பெரிய வழிமுறைகள் இருந்ததாக முன்பு கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது அப்படியே இல்லை.

நாட்டின் பேரில் அரசாங்கம் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டுள்ளது. அவர்கள் யாருக்கும் எதையும் செய்யலாம். அது நீங்களாகவும் இருக்கலாம். இந்த நாடு போய்விட்டது, இந்த நாட்டை கேடுகெட்ட நாடாக அறிவித்துவிடலாம்” என்கிற ஆனந்த் தெல்தும்டே.

“பீமா கொரேகான் வழக்கில் நான் தேவையில்லாமல் இலக்காக்கப்பட்டேன். அத்தனை கடிதங்களும் ஜோடிக்கப்பட்டவை. அனைவரும் தேவையில்லாமல் இலக்காக்கப்பட்டவர்கள். அதுவே ஒரு அத்துமீறல்தான்.

அவர்கள்தான் கிரிமினல்கள். ஒரு அரசே கிரிமினலாக மாறினால் உங்களால் என்ன செய்ய முடியும்?” எனக் கேட்கிறார்.

படிக்க:
என் கைது ஜனநாயக மதிப்புகளின் மீதான நேரடி தாக்குதல் : ஆனந்த் தெல்தும்டே
♦ ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 ஐந்தாம் பாகம் | டவுண்லோடு

பெலா பாட்டியா (மனித உரிமை செயல்பாட்டாளர் மற்றும் சத்தீஸ்கரின் பாஸ்தரைச் சேர்ந்த வழக்கறிஞர்) :

த்தீஸ்கரில் வசிக்கும் பெலா பாட்டியாவுக்கும் மற்றவர்களைப் போல, தன்னுடைய மொபைல் போன் உளவு பார்க்கப்பட்டது குறித்து எதுவும் தெரியாது.

Bela Bhatia
பெலா பாட்டியா

“விசாரணையில் நம்முடைய அரசாங்கத்துக்கு இதில் தொடர்பிருப்பது தெளிவாகத் தெரிவதாக அவர்கள் தெரிவித்தார்கள். ‘இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என அவர்கள் கேட்டனர். இது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை, ஏனெனில் கடந்த சில வருடங்களாக இதுபோன்ற கண்காணிப்புகளுக்கு ஆளாகியுள்ளதாக நான் தெரிவித்தேன்., அரசாங்கம் இத்தகைய அதிநவீன கண்காணிப்பு முறையை நாடியது ஏன் என்பதுதான் எங்களுக்குத் தெரியாத விசயமாக உள்ளது” என்கிறார் பெலா பாட்டியா.

தனியுரிமை அடிப்படை உரிமை என 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தபோதும்கூட அரசாங்கம் செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் அவர். மில்லியன்கணக்கான வாட்சப் பயனாளர்கள் இருக்கும் நாட்டில் இது கவலைக்குரியதாக உள்ளது” எனவும் அவர் தெரிவிக்கிறார்.

“இந்த உளவு மென்பொருளின் தன்மையே, உங்களுடைய மொத்த வாழ்க்கையையும் அது கண்காணிக்கும் என்பதுதான். உங்கள் பாக்கெட்டுக்குள்ளேயே ஒரு உளவாளியை வைத்திருப்பதைப் போலத்தான். நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும்போது, அதன் மூலம் உங்கள் அறையை பார்க்க முடியும், கேட்க முடியும்; அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிய முடியும். உங்கள் வாழ்க்கையின் தனிப்பட்ட விசயங்களை, பொருளாதார நிலையை அதனால் உளவு பார்க்க முடியும்” என உளவு மென்பொருள் குறித்த சிறு தகவலையும் பெலா பாட்டியா பகிர்ந்துகொண்டார்.

ஆய்வு அமைப்பு சொன்னபடி, மொபைல் போனை மாற்றியிருக்கிறார் அவர்.

சுப்ரான்சு சௌத்ரி (பி.பி.சி. முன்னாள் பத்திரிகையாளர், தற்போது சத்தீஸ்கரில் பணியாற்றுகிறார்) :

CGnet Swara என்ற பெயரில் மொபைல் செய்தி குழு ஒன்றை 2009-ம் ஆண்டு தொடங்கியது முதல் சத்தீஸ்கரில் பணியாற்றுகிறார் சுப்ரான்சு சோதாரி. கடந்த செப்டம்பர் மாதம் சிட்டிசன் லேப் இவரிடன் உளவு பார்க்கப்படும் தகவலைக் கூறியுள்ளது.

Shubhranshu-Choudhary
சுப்ரான்சு சௌத்ரி

“ஆய்வு தொடர்புடைய நபர் இந்த உளவு மென்பொருள் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது என்றும் இது விலை அதிகமானது என்பதால் அரசாங்கத்தால்தான் வாங்க முடியும் என்றும் சொன்னார்” என்கிறார் சுப்ரான்சு.

“காஷ்மீரில் பணியாற்றும்போது, போன் உரையாடல்கள் பதிவு செய்வது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். வாட்சப் -ஐக் கூட இப்படி பதிவு செய்ய முடியும் என எங்களுக்குத் தெரியவில்லை. நாம் இப்போது மேலும் கவனமாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறுகிறார்.

சித்தாந்த் சிபல் (Wion செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர்) :

Wion தொலைக்காட்சியில் பாதுகாப்புத் துறை தொடர்பான செய்திகளை அளிப்பவர். அக்டோபர் 30-ம் தேதி இந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தங்களுடைய பத்திரிகையாளர்கள் பலர் இந்த உளவு தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

தற்போது பிரதமரின் வெளிநாட்டு பயணத்தில் செய்தி சேகரிக்கச் சென்றிருக்கும் சிபல், வாட்சப் உளவு குறித்த தகவல் உண்மை எனக் கூறியுள்ளார் .

ராஜீவ் சர்மா (பத்தி எழுத்தாளர்) :

திறனாய்வாளர் மற்றும் பத்தி எழுத்தாளர் ராஜீவ் சர்மா, பொதுத் தேர்தல் நடந்த கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை கண்காணிக்கப்பட்டதாக சிட்டிசன் லேப் தெரிவித்துள்ளது. அரசாங்கம் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்ததையும் சர்மா கூறுகிறார். மொபைலை மாற்றும்படி அவர்கள் கூறியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

படிக்க:
அந்தரங்கத்தை திருடும் ஃபேஸ்புக் ! காறித் துப்புகிறது உலகம் !
♦ அமெரிக்க தேர்தலில் ரசியத் தலையீடும் – கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் கூட்டும் !

“நான் மொபைல் எண்ணையோ அல்லது மொபைலையோ மாற்றவில்லை. என்னிடம் மறைக்க எதுவுமே இல்லை. இந்த நாட்டுக்கு எதிராகவோ, சமூகத்துக்கு எதிராகவோ அல்லது சட்டவிரோத செயல்கள் எதையும் செய்யவில்லை. எதற்காக என்னுடைய மொபைலை மாற்ற வேண்டும்?” என கேட்கிற அவர், “என்னை யாராவது கண்காணித்தால், அவர் அதைச் செய்யட்டும். நான் எதற்காக வளைய வேண்டும்?” என்கிறார்.

“மார்ச் முதல் மே வரை நான் நிறைய வீடியோ நேர்காணல்களை அளித்தேன். அதை டிவிட்டரில் பகிர்ந்தும் கொண்டேன். நான் சொன்னது அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களுக்கு சங்கடத்தைக் கொடுத்திருக்கும். வெளிப்படையாகச் சொல்லப்போனால், நான் சொன்னது அவர்களின் காதுகளுக்கு இசையாக ஒலித்திருக்காது” என்கிறார் சர்மா. தேர்தல் குறித்த தன்னுடைய கருத்து, தன்னை இலக்காக்கியிருக்கும் என்றும் அவர் நம்புகிறார்.

அசோக் சுக்லா (உரிமை செயல்பாட்டாளர்; அதானி குழுமத்துக்கு எதிராக வழக்காடுகிறார்) :

த்தீஸ்கர் பச்சாவ் அந்தோலன் என்ற பொதுமக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார் அசோக் சுக்லா. வாட்சப் நிறுவனத்திலிருந்து மற்ற செயல்பாட்டாளர்களுக்கு வந்த செய்தியைப் போன்றே தனக்கும் வந்ததாக தெரிவிக்கிறார் சுக்லா.

“மாநிலத்தில் உள்ள பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். கடந்த எட்டு ஆண்டுகளாக சத்தீஸ்கரின் நிலக்கரி சுரங்கங்களில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ள அதானிகளுக்கு எதிராக ஒரு வழக்கில் நான் வாதாடிக்கொண்டிருக்கிறேன். அதுபோல, மனித உரிமை மீறல்கள், பழங்குடிகளின் இடப்பெயர்வுக்கு எதிராகவும் நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, சந்தேகத்துக்குரிய சர்வதேச வாட்சப் அழைப்புகள் தனக்கு வந்ததாகவும் அவர் கூறுகிறார். அரசாங்கத்தை மட்டுமல்லாது, அரசாங்கத்தால் கண்காணிக்கப்படும் தகவலை பல மாதங்கள் கழித்து சொன்ன வாட்சப் நிறுவனத்தையும் அவர் கடுமையாக சாடுகிறார்.

இதுவரை ஒருசிலர் தாமாக முன்வந்து மோடி அரசாங்கம் தங்களை உளவு பார்த்ததை சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பட்டியல் மேலும் நீளும் என எதிர்ப்பார்க்கலாம். வழக்கமாக சங்கப் பரிவாரங்கள் யாரையெல்லாம் ‘ஆண்டி -இந்தியன்’ என சுட்டிக்காட்டுகிறார்களோ அவர்கள் நிச்சயம் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பார்கள் என யூகிக்கலாம். இன்னமும் இது யாரோ செய்த வேலை, எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என மோடி அரசாங்கம் மழுப்பினால், யார்தான் அதை நம்புவார்கள்?


கலைமதி
நன்றி :  டெலிகிராப் இந்தியா. 

அரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு !

3

மிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஏழாவது நாளாக நடந்து வருகிறது. மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவெடுத்திருக்க வேண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டு சட்டையில் புழுதியை பூசிக் கொண்டிருந்தார். சுஜித் மீட்புப் பணிகளை கவனித்திருக்க வேண்டிய பேரிடர் மீட்புத் துறைக்கான அமைச்சர் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை. விஜயபாஸ்கர் கடந்த வார இறுதியில் வடித்துக் கொண்டிருந்த முதலைக் கண்ணீருக்கு மசியாமல் மருத்துவர்கள் விடாப்பிடியாய் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

போராடும் மருத்துவர்கள் நான்கு கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் அரசுப் பணிகளில் உள்ள மருத்துவர்களுக்கு உயர் கல்விக்கென 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது – இதை மீண்டும் வழங்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை. அடுத்து தமிழக அரசு சுமார் 800 பணி இடங்களை நீக்கியுள்ளது – இந்த பணியிடங்கள் மீண்டும் நிரப்பப்பட வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.

அடுத்ததாக, அரசு மருத்துவர்கள் டைனமிக் அஸ்யூர்டு கேரியர் ப்ரொக்ரெஷன் என்ற விதியின்படி, 20 ஆண்டுகள் பணியை முடித்த பிறகுதான் நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக உயர்வுபெற்று, 1.3 லட்ச ரூபாய் சம்பளத்தை எட்ட முடியும். இளநிலை, முதுநிலை, சிறப்புப் படிப்புகளை முடித்து அரசுப் பணியில் சேரவே 30 -32 வயதாகும் நிலையில், இந்த ஊதியத்தைப் பெறும்போது ஐம்பது வயதைத் தொட்டுவிடுகிறார். இதை மாற்றி மத்திய அரசுப் பணிகளில் இருப்பதைப் போல் 13 ஆண்டுகளிலேயே பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பது மூன்றாவது கோரிக்கை.

மேலும்,  அரசு மருத்துவராக இருந்து கொண்டே முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களை பின்னுக்கு தள்ளி தனியார் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுவதை மாற்ற வேண்டும் என்பது நான்காவது கோரிக்கை.

நியாயமான இந்த கோரிக்கைகளுக்காக கடந்த ஏழு நாட்களாக மருத்துவர்கள் போராடி வரும் நிலையிலும் காய்ச்சல் மற்றும் அவசர சிகிச்சை உள்ளிட்ட முக்கியமான பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளை நம்பி வரும் நோயாளிகளை தவிக்கவிடவில்லை. எனினும், மற்ற பணிகளை புறக்கணித்துள்ளதால் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் அவதியுற்று வருகின்றனர். மக்கள் படும் துன்பங்களையும் மருத்துவர்களின் கோரிக்கையில் இருக்கும் நியாயங்களையும் கணக்கில் கொண்டு செயல்பட வேண்டிய அரசு தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு பிரேக் இன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் வியாழக்கிழமை (31-10-2019) மதியம் 2 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் அவ்வாறு பணிக்கு வராத மருத்துவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் பணி முறிவில் இருப்பதாகக் கருதப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் 30-ம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர்களது பணியிடங்களுக்கு புதிதாக மருத்துவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அரசுப் பணிக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பதாகவும் தேவைப்பட்டால் உடனடியாக மருத்தவர்களை நியமிக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

படிக்க:
தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஏன் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
♦ ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 ஐந்தாம் பாகம் | டவுண்லோடு

***

மிழகத்தைப் பொருத்தவரை வட இந்திய மாநிலங்களை விட – குறிப்பாக பசு வளைய மாநிலங்கள் – பொது சுகாதாரக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. இதன் விளைவாகவே மனித வளக் குறியீட்டெண்களில் தமிழகம் பிற இந்திய மாநிலங்களை ஒப்பிடும் போது முதல் இரண்டு இடங்களை பிடித்து வந்தது. எனினும்,  சமீப ஆண்டுகளில் மெல்ல மெல்ல இந்த கட்டமைப்பு திட்டமிட்டரீதியில் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஜூன் மாதம் மத்திய அரசின் நிதிஆயோக் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தமிழகம் பொதுச் சுகாதாரத் துறையில் பல படிகள் கீழிறங்கியிருப்பதாக சொல்கிறது. பொதுச் சுகாதாரத் துறையில் ஒவ்வொரு மாநிலமும் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்பது தொடர்பான புள்ளிவிவரங்களை National Institution for Transforming India (நிதி ஆயோக்) அமைப்பு வெளியிடுகின்றது. அதன்படி, கடந்த ஆண்டு பொதுச் சுகாதாரத் துறையில் 3-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதாரத் துறையில் ஒட்டுமொத்தச் செயல்பாட்டில், பெரிய மாநிலங்களின் பட்டியலில் 74.01 புள்ளிகளுடன் கேரளா முதலிடத்திலும் 28.61 புள்ளிகளுடன் உத்தரப்பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளது. பல்வேறு குறியீடுகளில் தமிழகம் பின்தங்கியிருப்பதாக நிதிஆயோகின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குறிப்பாக, குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்கு குறைவான எடையுடன்) குழந்தைகள் பிறப்பது கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் அதிகரித்துள்ளது.

குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அளிக்கும் விகிதத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 82.7 சதவீதமாக இருந்து இந்த ஆண்டில் 76.1 சதவீதமாக வீழ்ந்துள்ளது. ஜம்மு – காஷ்மீர், கேரளா, ஆந்திரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 100 சதவீத குழந்தைகளுக்கும் நோய்த் தடுப்பூசிகள் போடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மருத்துவமனைகளில் குழந்தை பிறக்கும் சதவீதமும் 81.8 சதவீதத்தில் இருந்து 80.5ஆகக் குறைந்துள்ளது.

நிதிஆயோக் தவறான புள்ளிவிவரங்களைக் கொண்டு தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டதாக அப்போதே தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார் – ஆனால், எது சரியான புள்ளிவிவரம் என்றும் சுகாதாரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தின் உண்மையான நிலை என்னவென்பதைக் குறித்து அவர் வாயே திறக்கவில்லை.

படிக்க:
குட்கா இழிபுகழ் விஜயபாஸ்கரின் ஊரில் மக்கள் வாழ் நிலைமை !
♦ ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை ! பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் !

இந்நிலையில் சமீபகாலத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் “மர்மக் காய்ச்சல்” என ஊடகங்களால் பெயர் சூட்டப்பட்ட டெங்குக் காய்ச்சல் பரவி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகளவில் உள்ளதாக மாவட்ட நிர்வகாமே ஒப்புக் கொண்டுள்ளது. அந்த மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 5 ஆயிரம் பேருக்காவது டெங்கு காய்ச்சல் பரவியிருக்கும் என நக்கீரன் பத்திரிகையின் செய்தி ஒன்று தெரிவிக்கிறது

குடியாத்தம் அரசு மருத்துவமனை, வாணியம்பாடி, திருப்பத்தூர், வாலாஜா மருத்துவனைகளில் மர்ம காய்ச்சலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்வதாகவும்,  சோளிங்கர்  அரசு மருத்துவமனையில் ஐம்பதுக்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் பல குழந்தைகள் உள்ளதாகவும் என்கிறது பத்திரிகை செய்திகள்.  குழந்தைகள் பிரிவில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

***

தமிழகத்தின் பொது சுகாதார கட்டமைப்பு ஏற்கனவே நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், ஆட்கொல்லி நோய்களும் வேகமாக பரவி வருகின்றது. இந்த சூழலில் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் எடுத்தெறிந்த பாணியில் பேசி வருகிறார்கள் மாநில அமைச்சர்கள்.

“மக்கள் பாதிப்பதைப் பார்த்து சும்மா இருக்கமாட்டோம்” என்கிறார் எடப்பாடி ! டாஸ்மாக் மரணங்கள் முதல் மலக்குழி மரணங்கள் வரை அன்றாடம் மக்களைக் கொல்லும் இந்த எடுபிடி அரசுக்கு இந்த டயலாக்கை பேசும் அருகதை உண்டா ?


சாக்கியன்
செய்தி ஆதாரம் :  பி.பி.சி. தமிழ், நக்கீரன். 

டெங்கு காய்ச்சலா ? பயம் வேண்டாம் | மருத்துவர் BRJ கண்ணன்

ணக்கம் நாம் இப்போது டெங்கு காய்ச்சலை பற்றி பார்ப்போம். டெங்கு என்றால் என்னவென்றால்? ஒரு வைரஸ் கிருமி. அந்தக் கிருமி நம் உடலுக்குள் சென்று ஏற்படுத்தும் காய்ச்சல் சம்பந்தமான வியாதி தான் டெங்கு. இது கொசுவின் மூலம் பரப்பப்படுகிறது. கொசு அந்த கிருமியை நம் உடலுக்குள் செலுத்துகிறது. அதனால் ஏற்படுவது தான் டெங்கு காய்ச்சல்.

நமக்கு சாதாரணமாக காய்ச்சல் ஏற்பட்டால் அது ஒரு நாள், இரண்டு நாள் அல்லது நான்கு நாட்களுக்குள் குணமாகி விடுகிறது அல்லவா? அப்படியும் இல்லை என்றால் ஒரு பாராசிட்டமால் மாத்திரை உட்கொண்டால் குணமாகி விடுகிறது அல்லவா. அது எல்லாமே வைரஸ் கிருமியால் உண்டாகும் காய்ச்சல் தான். அது எப்படி தன்னால் சரி ஆகிறது என்றால். நம் உடலே அந்த வைரஸ் கிருமியை அழித்து விடுகிறது. அந்த கிருமி நம் உடலுக்குள் இருக்கும் வரை காய்ச்சலானது இருக்கும் பிறகு மாத்திரை உட்கொண்டபின் குணமாகும். அதேபோல் நம்மில் பலரும் இந்த டெங்கு கிருமியால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அது நாம் பேராசிட்டிரமால் மாத்திரையை உட்கொண்ட பின் குணமாகியும் இருக்கலாம். அது டெங்கு கிருமி தான் என்பதை தெரியாமலேயே இந்த செயலானது நடந்திருக்கும்.

இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்? டெங்கு கிருமி என்றால் குணப்படுத்த முடியாத ஒரு பெரிய பாதிப்பு கிடையாது. நம்மில் பலருக்கும் அந்த கிருமியின் தாக்குதல் ஏற்பட்டு நாம் அதிலிருந்து குணமாகி இருக்கலாம்.

அப்படி என்றால் இந்த பிரச்சனை யாருக்கு ஏற்படும். இந்த பிரச்சனை யாருக்கு வரும்.. வராது.. என்று நம்மால் கூற முடியாது. இது எப்படி என்றால் இந்தக் காய்ச்சல் ஏற்பட்டால் மிகவும் அதிக வெப்ப நிலை நம் உடலில் ஏற்படும், சிலருக்கு தொடர்ச்சியாக வாந்தி இருக்கும், கை கால் மூட்டுகளில் அதிகமாக வலி ஏற்படும். இப்படி பிரச்சனைகளோடு சேர்ந்த காய்ச்சலாக அது இருக்கும். பொதுவாக மூன்று, நான்கு நாட்களில் காய்ச்சலானது குணமாகிவிடும். எப்படி என்றால் நம் உடலானது அந்த கிருமியை அழித்துவிடும். காய்ச்சலும் அதனால், சரியாகிவிடும். இந்தக் காய்ச்சல் குணமாகிய பிறகு தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.

சாதாரண வைரஸ் கிருமியினால் உண்டாகும் காய்ச்சலின் போது, இரண்டு மூன்று நாட்கள் குழந்தைகள் சோர்வாக இருக்கும். ஆனால், காய்ச்சல் குணமாகிய பின், குழந்தை சுறுசுறுப்பாக மாறிவிடும் சாப்பிட ஆரம்பிக்கும், ஓட ஆரம்பிக்கும் இயல்பாக விளையாட பழகிக் கொள்ளும். இதுவே டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தையானால், காய்ச்சல் குறைவான பின்பும் சரியாக சாப்பிடாது, தூங்காது, வாந்தி இருக்கும், சாப்பிட்டது உடலில் தங்காது எப்போதும் சோர்வாகவே இருக்கும். முக்கியமாக சிறுநீர் கழிப்பது மிகவும் குறைந்துவிடும். இது பெரிய பிரச்சினை. இத்தகைய சிறுநீர் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றால். உடனடியாக மருத்துவரை அணுகி இது டெங்கு காய்ச்சலா? என பரிசோதித்து அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் என்றால், இரத்தத்திலுள்ள தட்டணுக்கள் (Platelets) குறையும். இதனால் பெரிய பாதிப்பு உண்டாகும் என பொதுவாகக் கூறுவார்கள். இது ஓரளவிற்கு உண்மையும்கூட. ஏனென்றால், டெங்கு ஏற்பட்டால் தட்டணுக்கள் குறையும். அந்த தட்டணுக்கள் குறைந்தால், நம் உடலில் எங்காவது ரத்தக்கசிவு ஏற்படும். தானாகவே உடலில் ஏதோ ஒரு பாகத்தில் இரத்த கசிவு அல்லது உண்டாகும். இது மிகவும் அரிதாகத்தான் ஏற்படும். நம் உடலில் மூன்று அல்லது நான்கு லட்சம் அளவுக்கு தட்டணுக்கள் இருக்கும். இந்த டெங்கு கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தட்டணுக்கள் குறையும்.

படிக்க :
♦ டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் !
♦ தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஏன் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

ஒரு லட்சம், இரண்டு லட்சம் அளவுக்கு கூட குறையும். ஆனால், நாம் அச்சப்படத் தேவையில்லை. இந்த தட்டணுக்கள் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தால் தான். நாம் செயற்கையாக தட்டணுக்களை செலுத்துவோம். கொஞ்சம் குறைய ஆரம்பித்ததும், செயற்கையாக நாம் தட்டணுக்களை செலுத்த தேவையில்லை. இதனால் நன்மை உண்டாகாது, என்பது மட்டுமல்ல தீமை உண்டாக வாய்ப்புள்ளது. அதேபோல் தட்டணுக்கள் சீராக இருந்தால் வைரஸ் தாக்குதல் குறைவு என்றோ, தட்டணுக்கள் குறைவாக இருந்தால், வைரஸ் தாக்குதல் அதிகம் என்றோ நாம் கருதக்கூடாது. நாம் முன்னமே கூறியது போல், வாந்தி, உடல் சோர்வு முதலிய அறிகுறிகள் இருந்தாலே, நாம் வைத்தியம் பார்த்தாக வேண்டும்.

என்ன வைத்தியம் பார்க்க வேண்டுமென்றால், அடிப்படையாக நாம் முதலில் நம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் உடலில் ரத்தம் இருக்கிறது, அது பெரும்பாலும் நீர் தான். அதன் பிறகு அதன் மேல் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், புரதம் முதலியவெல்லாம் இருக்கிறது. இதில் நீரை எடுத்துவிட்டால், ரத்தமானது கெட்டியானதாக மாறிவிடும். ரத்தமானது ஓரளவுக்கு நீராக இருந்தால்தான், உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் சீராக செல்ல முடியும். இதில் நாம் நீரை எடுத்து விட்டோம் என்றால், ரத்தமானது சீராக உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்லாது.

இதனால் என்ன நடக்கிறது என்றால் அந்த ரத்தக் குழாய்களில் இருந்து தண்ணீரானது வெளியே சென்று, அந்த இடத்தில் திசுக்கள் போய் அமர்ந்து விடுகிறது. எனவே ரத்தக் குழாய்களில் உள்ள ரத்தம் கெட்டியாகி விடுகிறது. இதை எப்படி விளக்கலாம் என்றால், ஒரு இடத்தில் செம்மண் கலந்த நீர் இருக்கிறது என்றால். அதை நாம் குழாயின் மூலம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பாய்ச்சி விடலாம். இதுவே, நீர் இல்லை என்றால் அல்லது நீர் குறைவாக இருந்தால். குழாயின் உள்ளே அந்தக் கலவை சீராக செல்லாது. அதேபோல்தான் ரத்தமும் சீராக எல்லா இடத்துக்கும் செல்லவில்லை என்றால், திசுக்கள் பலவீனமடையும்.

இந்த பாதிப்புகள் எல்லாம் எப்போது நடக்கும் என்றால், காய்ச்சல் குறைந்த அந்த நான்காவது அல்லது ஐந்தாவது நாளுக்குள் இது நடந்துவிடும். நாம் நினைத்துக் கொண்டிருப்போம், காய்ச்சல் குறைந்து விட்டது, எனவே குழந்தை குணமாகிவிட்டது என்று, ஆனால் பிரச்சனையே அப்போதுதான் ஆரம்பிக்கிறது.

எனவே, நம்மில் யாரேனும் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை எப்படி அறிந்து கொள்ள வேண்டுமென்றால், காய்ச்சலானது தொடர்ந்து இருந்தாலோ, அல்லது காய்ச்சல் குறைந்த பின்பும், உடல் சோர்வாகவோ, சரியாக உணவு உட்கொள்ள முடியாமலோ, குறிப்பாக சிறுநீர் கழிக்காமலும் இருந்தால், நாம் ஒரு பரிசோதனை செய்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை. உடனே இப்படி இருந்தால் டெங்குதான் என்பது கிடையாது. ஆனால், நாம் ஒரு பரிசோதனை செய்து உறுதிபடுத்த வேண்டும்.

இந்த அறிகுறிகளோடு மருத்துவமனைக்குச் சென்றாலும், மருத்துவர்கள் எளிய முறையிலான இரத்தப் பரிசோதனையை மேற்கொள்வார்கள். குறிப்பாக ரத்தம் கெட்டியாக உள்ளதா அல்லது நீர்த்தன்மையோடு உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கான பரிசோதனையை செய்வார்கள். அடுத்ததாக கை கால்களில் ரத்த அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதற்கான சோதனை மேற்கொள்வார்கள்.

உதாரணத்திற்கு கையில் ரத்த அழுத்தம் சீராகவும், கால்களில் ரத்த அழுத்தம் குறைவாகவும் இருந்தால், நம் உடலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அடுத்ததாக நாடித்துடிப்பை பார்ப்பார்கள். அது எழுபது அல்லது என்பதற்குள் இருந்தால் பிரச்சினை இல்லை, அதுவே100 அல்லது 120 என்று இருந்தால் நம் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இது போன்ற எளிய முறைகளை முதலில் பரிசோதித்து தான், நம் உடலில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை அறிவார்கள். இதில் ஏதாவது சீராக இல்லை என்றால் தான், இந்த நபர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பார் என்றுணர்ந்து அதற்கான சிகிச்சையை தொடர்வார்கள்.

இதற்கான சிகிச்சையும் எளிமையானதுதான். உதாரணத்துக்கு ரத்தத்தில் நீர் தன்மை இல்லாமல் உறைந்து இருந்தால், நீர் சத்தை அதிகப்படுத்த சிகிச்சையளிப்பார்கள். நீர்ச்சத்தை அதிகப்படியாக அளித்தாலும் தவறு, அதேபோல் அளிக்காமல் இருந்தாலும் தவறு. சீராக இருக்க சிகிச்சை அளிப்பார்கள். ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு இந்த சிகிச்சையை தொடங்குவார்கள் இதன் மூலமே நாம் பெருவாரியான இறப்புக்களை தடுக்க முடியும்.

மிகவும் சொற்பமான நபர்களுக்குத் தான் நுரையீரலில் நீர் சேர்ந்து மூச்சுவிட முடியாத நிலைக்கு செல்வது, ரத்த அழுத்தம் பாதியாக குறைந்து அதிர்ச்சி நிலையை உண்டாக்குவது, மயக்க நிலைக்கு சென்று வலிப்பு ஏற்படுவது, நுரையீரல் செயலிழந்து போவது மாதிரியான இக்கட்டான நிலைமைகள் ஏற்படும். இவர்களுக்குத்தான் அதிதீவிர சிகிச்சை முறைகள் தேவைப்படுகிறது, இதில் சிலரை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. இது எல்லாமே மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு வருவதினால் ஏற்படும் விளைவுகள்.

படிக்க :
♦ தமிழகத்தில் தொடரும் டெங்கு மரணங்கள் : இயற்கையின் சதியா ?
♦ உசாரய்யா உசாரு ! டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா

டெங்குக்கென்று தனியாக மாத்திரை மருந்துகள் இருக்கிறதா..? கிடையாது, உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருந்தாலே குறிப்பாக அந்த மூன்று அல்லது அந்த ஐந்து நாட்களுக்குள் இதை செய்தாலே பெருவாரியான குழந்தைகளும் பெரியோர்களையும் காப்பாற்றிவிடலாம். இதைவிட பெரிய மருத்துவம் கிடையாது, இதை விட்டு நான் கசாயம் கொடுத்தேன் அல்லது இந்த பழத்தின் விதைகளை சாப்பிட்டேன் அதனால் நானும், குழந்தையும் குணமாகிவிடுவோம் என நினைத்துக் கொள்வதெல்லாம் தவறு. மேலே கூறிய தகவல்களை தொகுத்து பார்த்தோமேயானால், இந்த விதைகளும் அல்லது கஷாயமும் நம் உடலில் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவராது.

எனவே நாம் கூறுவது என்னவென்றால் டெங்கு போன்ற வைரஸ் கிருமிகள் சிலரது உடலில் இருக்கும் பின்பு உடல் சில நாட்களில் தானாக குணமாகிவிடும். சில பேருக்கு குணமாகாமல், உடல் உபாதைகள் தொடரும். அப்படி தொடரும்போது ரத்தத்தில் உள்ள நீரின் அளவை சரியாக பராமரித்து கொண்டோமேயானால் – அதை நாம் செய்ய முடியாது மருத்துவரின் துணையோடு இதை செய்து கொண்டோமேயானால் – பெரும்பாலானவர்கள் இந்த டெங்கு தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன். நன்றி.

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! புதிய கலாச்சாரம் நூல்

வைகை நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட கீழடி அகழாய்வு தமிழர்களின் பண்டைய நாகரிகத் தொன்மைக்கு சான்று பகர்கிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பகுப்பாய்வு செய்ததில் அவை சுமார் 2,600 ஆண்டுகள் பழமையானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நெசவுத் தொழில், உறைகிணறு, கழிவுநீர் குழாய்கள், உட்புறமும் வெளிப்புறமும் சுட்ட பானைகள் என ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் கீழடியில் கிடைக்கப்பெற்ற பானைகளின் மேலே தமிழி எழுத்துருவில் பெயர்களும் இருக்கின்றன. இது அம்மக்கள் அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்கள் என்பதை நிறுவியது.

முதல்கட்ட அகழாய்வு முடிந்த நிலையில் அங்கு எவ்வித மதம் மற்றும் சாதிய அடையாளங்கள் கிட்டவில்லை என்பதை அறிந்த பாஜக அரசு கீழடி ஆய்வை முடக்க அனைத்து வகை முயற்சிகளையும் எடுத்தது. அதனை எதிர்த்துப் போராடிய தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை பணியிட மாற்றம் செய்தது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு புரட்சிகர மற்றும் ஜனநாயக அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து வேறு வழியின்றி பணிந்தது மத்திய அரசு. ஆனாலும், இன்றும் வன்மம் தொடர்கிறது. பிற மாநிலங்களில் கண்டெடுத்த பொருட்களில் 20-க்கும் மேற்பட்டவற்றை கார்பன் பகுப்பாய்வுக்கு அனுப்பிய மத்திய அரசு, கீழடியில் கண்டெடுத்த பொருட்களில் வெறும் 2-ஐ மட்டுமே கார்பன் பகுப்பாய்வுக்கு அனுப்பியது.

திராவிடர்களுக்கென்று தனி நாகரிகம் – பண்பாடு கிடையாது என்றும் ஆரிய – வேத நாகரிகம்தான் அனைத்துக்கும் மூத்த நாகரிகம் என்றும் காவிக்கும்பல் பரப்பிய பொய்களை சமீபத்தில் ராகிகரியில் கிடைத்த தொல் குடியின் எலும்பில் செய்யப்பட்ட மரபணு சோதனை தகர்த்தெறிந்துள்ளது. அச்சோதனையின் முடிவுகள், சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதையும், ஆரியர்கள் வந்தேறிகள்தான் என்பதையும் ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகால ஆரிய – திராவிடப் போரில், ஆரிய – வேத – சமஸ்கிருத போலி மேட்டிமைத் திமிரை உடைத்தெறிவதற்கான கருத்தியல் ஆயுதக் கிடங்காக இந்த வெளியீடு உங்களுக்குப் பயன்படும்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! – புதிய கலாச்சாரம் நவம்பர் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

“கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • கீழடி அகழாய்வு: பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம்!
  • சிந்து சமவெளி நாகரிகம், வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள்!
  • சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகமே!
  • ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு!
  • கீழடி: மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு!
  • கிறங்கடிக்கும் கீழடி!
  • கீழடி: ‘ஆரிய மேன்மைக்கு’ விழுந்த செருப்படி!
  • சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம்!
  • கஜினி முகமது: கல்வெட்டு உண்மைகள்! பாடநூல் புரட்டுகள்!
  • தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை!
  • பார்ப்பனிய ஆதிக்க சமூகத்திற்கு டி.என்.ஏ ஆதாரம்!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

நூல் அறிமுகம் : உபரி மதிப்பு என்றால் என்ன ?

பரி மதிப்பை உற்பத்தி செய்தல் : ஓர் உழைப்பாளியின் தினசரி அத்தியாவசியப் பொருள்களின் சராசரி அளவை உற்பத்தி செய்ய ஆறு மணி நேர சராசரி உழைப்பு தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். மேலும், 3 ஷில்லிங் பெறுமான அளவு தங்கத்தில் ஆறு மணி நேரச் சராசரி உழைப்பு செயலாக்கப்பட்டிருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது, 3 ஷில்லிங் என்பது அந்த உழைப்பாளியினுmடைய உழைக்கும் சக்தியின் ஒரு நாள் மதிப்பின் விலையாக அல்லது பணக்குறியீடாக இருக்கும். அவன் தினசரி ஆறு மணி நேரம் வேலை செய்தால் தினமும் தனக்குத் தேவையான சராசரி அளவு அத்தியாவசியப் பொருள் களை வாங்குவதற்கு, அதாவது தன்னை ஓர் உழைப்பாளியாக உயிர்வாழச் செய்து கொள்வதற்குப் போதுமான மதிப்பை தினசரி உற்பத்தி செய்வான்.

ஆனால் நமது உழைப்பாளியோ கூலி உழைப்பாளி. எனவே அவன் தன் உழைக்கும் சக்தியை ஒரு முதலாளிக்கு விற்க வேண்டும். அதை அவன் தினசரி 3 ஷில்லிங்குக்கோ, அல்லது வாரம் 18 ஷில்லிங்குக்கோ விற்றால், அதை அதனுடைய மதிப்புக்கு விற்றவனாகிறான். அவன் ஒரு நூற்பாளி என்று வைத்துக் கொள்வோம். அவன் தினசரி ஆறு மணி நேரம் வேலை செய்தால், பஞ்சின் மீது அனுதினமும் 3 ஷில்லிங் மதிப்பைக் கூட்டுவான். அவனால் தினசரி கூட்டப்படும் இந்த மதிப்பு தினசரி அவன் பெறும் அவனுடைய கூலி அல்லது உழைக்கும் சக்திக்கான விலைக்குத் துல்லியமாகச் சமமானதாக இருக்கும். ஆனால் இந்நிலையில் எந்த அளவு உபரி மதிப்போ அல்லது உபரி உற்பத்திப் பொருளோ முதலாளிக்குப் போகாது. இங்கேதான் நமக்கு உண்மையான சிக்கல் ஏற்படுகிறது.

தொழிலாளியின் உழைக்கும் சக்தியை வாங்கி அதன் மதிப்பைக் கொடுத்துவிடுவதன் மூலம் முதலாளி, மற்றெந்த வாங்குவோரையும் போலவே, வாங்கிய பண்டத்தை உபயோகித்துக் கொள்ளும் அல்லது பயன்படுத்திக் கொள்ளும் உரிமையைப் பெறுகிறான். ஓர் இயந்திரத்தை ஓட வைத்து அதை உபயோகித்துக் கொள்வதை அல்லது பயன்படுத்திக் கொள்வதைப் போலவே ஓர் உழைப்பாளியை வேலை செய்ய வைப்பதன் மூலம் அவனுடைய உழைக்கும் சக்தி உபயோகித்துக் கொள்ள அல்லது பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. எனவே, தொழிலாளியின் உழைக்கும் சக்தியான தினசரி, அல்லது வார மதிப்பைக் கொடுத்து விடுவதன் மூலம் முதலாளி, அந்த உழைக்கும் சக்தியை முழு நாளைக்கும் அல்லது முழு வாரத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளும் அல்லது வேலை செய்ய வைக்கும் உரிமையைப் பெறுகிறான். வேலை நாள் அல்லது வாரத்திற்குச் சில குறிப்பிட்ட வரையறைகள் நிச்சயமாக இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைப் பற்றி இன்னும் ஆழமாகப் பின்னால் ஆராய்வோம்.  (நூலிலிருந்து பக்.5-6)

படிக்க:
மாவோயிஸ்டுகள் என்றாலே சுட்டுக் கொல்வதா ? PRPC கண்டனம்
அடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி !

கூலிக்காக ஈடுபடுத்தப்பட்ட மூலதனம் 100 பவுன் என்று வைத்துக் கொள்வோம். உபரி மதிப்பாகச் சிருஷ்டிக்கப்பட்டதும் 100 பவுன் என்று வைத்துக் கொள்வோம். தொழிலாளியின் வேலை நேரத்தில் பாதி ஊதியம் தரப்படாத உழைப்பு கொண்டது என்பதை இது நமக்குக் காட்டும். கூலிக்காக ஈடுபடுத்திய மூலதனத்தின் மதிப்பைக் கொண்டு இந்த லாபத்தை அளவிட்டால், லாப விகிதம் நூறு சதவிகிதம் ஆகிறது என்று நாம் சொல்வோம்; ஏனென்றால் ஈடுபடுத்தப்பட்ட மதிப்பு நுறாகவும் பெறப்பட்ட மதிப்பு இரு நூறாகவுமிருக்கும்.

வேறு வகையில், கூலியாக ஈடுபடுத்தப்பட்ட மூலதனத்தை மட்டுமின்றி, ஈடுபடுத்தப்பட்ட மொத்த மூலதனத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், உதாரணமாக, மொத்த மூலதனம் 500 பவுனில், 400 பவுன் கச்சாப்பொருள்கள், இயந்திரங்கள் முதலியவற்றின் மதிப்பைக் குறிப்பதாக இருக்குமானால், அப்போது லாப விகிதம் இருபது சதவிகிதம் மட்டும்தான் என்று சொல்வோம்; ஏனென்றால் லாபம் ஆகிய நூறு, ஈடுபடுத்தப்பட்ட மொத்த மூலதனத்தில் ஐந்தில் ஒரு பங்காகத்தானிருக்கும்.

லாப விகிதத்தைப் பற்றிக் குறிப்பிட்ட முதல் முறையே ஊதியம் கொடுக்கப்பட்ட உழைப்புக்கும் ஊதியம் கொடுக்கப்படாத உழைப்புக்குமிடையே உள்ள உண்மையான விகிதாச் சாரத்தை, உழைப்பின் exploitation (இந்தப் பிரெஞ்சுச் சொல்லை உபயோகப்படுத்த நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்) உடைய உண்மையான தரத்தை உங்களுக்கு எடுத்துக்காட்டும் ஒரே முறையாகும். இரண்டாவது முறை பொது வழக்கிலிருக்கும் முறை, உண்மையில் சில நோக்கங்களுக்குப் பொருத்தமான முறையே. எவ்வகையிலும், முதலாளி தொழிலாளியிடமிருந்து அபகரிக்கும் இலவச உழைப்பின் அளவை மூடி மறைப்பதற்கு இது மிகவும் உபயோகமாக இருக்கிறது. (நூலிலிருந்து பக்.13)

நூல் : உபரி மதிப்பு என்றால் என்ன ?
ஆசிரியர் : கார்ல் மார்க்ஸ்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி., சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2625 8410 | 2625 1968 | 2635 9906
மின்னஞ்சல் :ncbhbook@yahoo.com

பக்கங்கள்: 16
விலை: ரூ 10.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam

அதிகாரத் தொனி ஆசிரியருக்கு உகந்தது அல்ல !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 02

நவம்பர் 29. யாரை விருந்தினராக அனுப்புவது?

டைவேளையின் போது மூன்றாம் வகுப்பிலிருந்து குழந்தைகள் வந்து மூன்று அழகிய அழைப்பிதழ்களைத் தந்து சென்றனர்.

“இன்று எங்கள் வகுப்பில் இசை விழா. உங்கள் வகுப்பிலிருந்து மூவரை அழைக்கின்றோம். எல்லோரையும் அழைக்க முடியாதது குறித்து மன்னியுங்கள்! இவ்விழா வகுப்பறையில் நடைபெறுவதால் எல்லோருக்கும் இடம் போதாது.”

இது தான் என் வகுப்புக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் முதல் அழைப்பு.

“நன்றி! எங்கள் சார்பாக மூவரை அனுப்பி வைப்போம்” என்றேன் நான்.

அவர்கள் போனதும் என் வகுப்புக் குழந்தைகள் கேள்விமாரி பொழிந்தனர்.

“என்ன விழா?”

“யாரை அனுப்புவீர்கள்?”

நானாக யாரையும் அனுப்பப்போவதில்லை. தம் பிரதிநிதிகளைத் தாமே தேர்ந்தெடுக்குமாறு குழந்தைகளிடம் சொல்வேன். பாடம் துவங்கியதும் நான் அந்த அழகிய அழைப்பிதழ்களைக் காட்டி, அவற்றில் எழுதியுள்ளதைப் படித்துக் காட்டினேன். இசை விழா இன்னும் 10 நிமிடங்களில் ஆரம்பமாகும்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் சில சமயம் என்ன நடைபெறுமென எனக்குத் தெரியும். “யாரை அனுப்புவது” என்று ஆசிரியர் சுற்று முற்றும் பார்க்கிறார். சில குழந்தைகள் மௌனம் சாதிக்கின்றனர், ஆனால் “தயவு செய்து என்னைத் தேர்ந்தெடுங்களேன்! நான் நல்லவன்! பாருங்கள், நான் எப்படி நேராக உட்கார்ந்து உங்களைப் பார்க்கிறேன்!” என்று கண்களால் கெஞ்சியபடி அகக் கிளர்ச்சியோடு அவரைப் பார்க்கிறார்கள். கேட்பவர்களின் மீது ஆசிரியர் இரக்கம் காட்ட மாட்டார் என்று அவர்களுக்கு அனுபவத்திலிருந்து தெரியும். மற்றவர்களால் தம் ஆசையை அடக்க முடியாது. “என்னை! என்னை தயவு செய்து தேர்ந்தெடுங்கள்! நான் ஒரு தடவை கூட விருந்தினராகச் சென்றதில்லை! நீங்கள் ஒரு முறை கூட என்னைத் தேர்ந்தெடுத்ததில்லை!” என்று அவர்கள் கெஞ்சுகிறார்கள். “கத்தாதே! யாரை அனுப்புவது என்று எனக்குத் தெரியும். யார் நன்கு படிக்கிறார்களோ, குறும்பு செய்யாமல் சொன்ன பேச்சைக் கேட்கின்றார்களோ அவர்களை அனுப்புவேன்!” என்று ஆசிரியருக்குக் கோபம் வருகிறது. அவர் யாரை அனுப்புவதென முடிவு செய்து, எப்படி நடந்து கொள்ள வேண்டுமென அவர்களுக்குக் கட்டளைகள் தருகிறார்.

வகுப்புப் பிரதிநிதிகளாக இவர் தேர்ந்தெடுத்த அந்த மூவர் யார்? சாதாரணமாக, இவர்கள் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் சரிப்பட்டு வருபவர், அவருக்குப் பிடித்தமானவர்கள். அவர்களுக்கு இது தெரியும், இதைக் கண்டு அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர். ஏனெனில் இந்த வயதில் குழந்தைகள் மத்தியில் ஆசிரியரின் செல்வாக்கு தான் மிக முக்கியம். அவர்களுக்கு இந்த மனவியல் தன்மை தெரியாது தான். ஆனால் தன் செல்வாக்கால் குழந்தைகளின் விருப்பத்தை, நாட்டத்தை, குழந்தைகள் புரிந்து கொள்ளும் நியாயத்தை அடக்க முடியுமென ஆசிரியருக்குத் தெரியும். ஒருவேளை அவர் தன் செல்வாக்கை குழந்தைகளுடன் தான் கலந்து பழகுவதன் தன்மையாலும் குழந்தைகளுடன் தான் கொண்டுள்ள உறவின் தன்மையாலும் பெறாமல் தான் அவர்களின் முதல் ஆசிரியர் என்பதால் பெற்றிருக்கலாம். குழந்தைகள் தாம் பள்ளிக்கு வரும் முன்னரே இவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றனர். இவரைப் பற்றிக் குடும்பத்தில் என்ன பேசினர் என்பதைப் பொறுத்து இவர்கள் வெவ்வேறு விதமாக, கண்ணை மூடிக் கொண்டு இவரது செல்வாக்கை ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆனால் வேறுவிதமாகத் தீர்க்க வேண்டிய முக்கியப் பிரச்சினைகளைத் தன்னிச்சையாகத் தீர்க்கும் பொருட்டு ஆசிரியர் இச்செல்வாக்கைப் பயன்படுத்தலாமா? (துர்பிரயோகம் செய்யலாமா என்று நான் சொல்லவில்லை). குழந்தைகளின் பிரதிநிதிகளை ஏன் இவர் தேர்ந்தெடுக்க வேண்டும்? “யார் நன்றாகப் படிக்கவில்லையோ, யார் நான் சொல்வதைக் கேட்கப் போவதில்லையோ, யார் நன்றாக நடந்து கொள்ளவில்லையோ, யார் எனக்குக் கோபம் மூட்டுகின்றார்களோ அவர்களை நான் விழாவிற்கு அனுப்ப மாட்டேன்” என்பதை குழந்தைகளிடம் இப்படி மறைமுகமாகச் சொல்லுவதற்காகவா? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள், ஆனால் பலரின் விருப்பங்கள் நிறைவேறாததால் நீதி மற்றும் அநீதி பற்றிக் குழந்தைகளிடம் ஒரு விசேஷக் கருத்து உருவாகும். “ஆசிரியர் யாரை விரும்புகிறாரோ அவரைத் தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு என் மீது விருப்பமில்லை!” தேர்ந்தெடுக்கப்பட்டவனுக்கோ எல்லாம் நியாயமாகப்படுகிறது -”இதிலென்ன தவறு?” தேர்ந்தெடுக்கப்படாதவனுக்கோ ஆசிரியரின் செயல் அநீதியானது – ”ஏன் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை?”

படிக்க:
தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஏன் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !

இப்படிப்பட்ட போதனை முறையால் என்ன லாபம்? ஒன்றுமேயில்லை. ஒருவேளை இதனால் குழந்தைகள் மத்தியில் ஆசிரியரின் அதிகாரம் பலப்படலாம். ஆனால் ஆசிரியரின் செல்வாக்கிற்குப் பதில் வகுப்பின் கூட்டுச் செல்வாக்கு ஒரு நாள் வருமே. அப்போது என்ன செய்வது? ஆசிரியரின் அநீதி பற்றிய எண்ணங்களும் சொந்த விருப்பங்கள் புண்பட்ட உணர்வும் குழந்தைகளிடம் எஞ்சும். ஆரம்ப வகுப்பாசிரியருக்குப் பின் கல்வியின் இரண்டாவது கட்டத்தில் வரும் ஆசிரியர்கள், இந்தக் கூட்டு உணர்வை பலப்படுத்தவும், வகுப்பின் கூட்டுச் செல்வாக்கு ஒவ்வொரு குழந்தையின் மன நிலையின் வளர்ச்சி மீதும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துமாறு செய்யவும், இன்னமும் சொந்த செல்வாக்கை வென்று நிலைநிறுத்தவும் எவ்வளவு பாடுபட வேண்டும்! குழந்தைகளின் முதல் ஆசிரியர் தனது அதிகாரபூர்வமான முறைகளால் செல்வாக்கைப் பயன்படுத்தும் போது, வகுப்பின் கூட்டு முடிவைத் தன் முடிவால் மாற்றும் போது இதைப் பற்றி நினைக்கிறாரா? இந்த அதிகாரத் தொனியும் தான்தோன்றித்தனமும் ஆசிரியருக்கு உகந்தவையல்ல.

இல்லை, என் முடிவை இவர்கள் மீது திணிக்க மாட்டேன், யார் போவதென்று தீர்மானிப்பதைக் குழந்தைகளிடமே விட்டு விடுவேன்.

“குழந்தைகளே, நாம் மூவரை அனுப்ப வேண்டும்! பின்னர் அவர்கள் வந்து தாம் பார்த்ததையும் கேட்டதையும் நமக்குச் சொல்லுவார்கள். யாரால் பொறுமையாக இருக்க முடியுமோ, கேட்கும் போது புத்திசாலித்தனமான பதில்களைச் சொல்ல முடியுமோ அவர்களை அனுப்பினால் – நன்றாயிருக்கும். மூன்றாம் வகுப்பு மாணவர்களின் விழாவிற்கு யாரை அனுப்பலாம் என்று யோசியுங்கள்!”

ஒரு நிமிட இடைவெளி. இப்போது எந்த ஒரு குழந்தையின் பெயர் முன் மொழியப்பட்டாலும் அதை ஆதரித்து, நியாயப்படுத்துவது என் கடமை. நான் வாக்குவாதம் நடத்தப் போவதில்லை, யார் ஆதரிக்கின்றனர், யார் எதிர்க்கின்றனர் என்று வாக்கெடுப்பு நடத்தப் போவதில்லை. ஒரு குழந்தையின் பெயர் முன்மொழியப்பட்டு நிராகரிக்கப்பட்டால் அது அவனுக்குக் கடும் தண்டனையாக இருக்கும், அவனோ அச்சமயம் எக்குற்றமும் செய்யவில்லை. குழந்தைகளிடமிருந்து கிடைக்கப் போகும் ஆதரவின் அடிப்படையிலான என் செல்வாக்கு இங்கே செயல்படத் துவங்கும், இத்துடன் விஷயம் முடிவடையும்.

“யோசித்து விட்டீர்களா? யாரை அனுப்பலாம், சொல்லுங்கள்!”

சாஷா: “ஏக்காவை அனுப்பலாம். அவள் எப்போதும் பொறுமையானவள், புத்திசாலி, அன்பானவள். யாருக்கும் இடையூறு செய்ய மாட்டாள். அங்கும் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டாள்.”

“சாஷா, நீ சொல்வது சரி! ஏக்கா, இங்கே வா! எல்லோரும் உன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் பார்!”

விக்டர்: “கோத்தேயை அனுப்பலாம். அவனுக்கு இசை மிகவும் பிடிக்கும். அங்கு இசை விழா அல்லவா நடக்கிறது.”

“விக்டர், நீ சொல்வது சரி! இது பொறுமையாயும், கவனமாயும் இருக்க அவனுக்கு ஒரு சோதனையாக இருக்கட்டும்! கோத்தே, இங்கே வா!”

மாக்தா: “நாத்தோவை அனுப்பலாம்! ஒரு வேளை திடீரென பாடும்படியோ, கவிதை படிக்கும்படியோ சொல்லலாம். நாத்தோ நன்கு கவிதை படிப்பான்.”

“நன்றி, மாக்தா! நாத்தோவும் இதற்குத் தகுதியானவன்! சரி, இப்போது அவர்கள் அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டுமெனச் சொல்லுங்கள்!”

“எல்லோரையும் பார்த்து ‘வணக்கம்!’ சொல்ல வேண்டும்!”

“அழைப்பிற்கு நன்றி சொல்ல வேண்டும்!”

கலை நிகழ்ச்சியின் போது சத்தம் போடக் கூடாது, பேசக் கூடாது!”

“கவனமாகக் கேட்டு எல்லோருக்கும் சொல்ல வேண்டும்!”

“பாடச் சொன்னாலோ, கவிதை வாசிக்கச் சொன்னாலோ தயங்கக் கூடாது!”

“ஏதாவது பிடிக்காவிடில் பேசி, புண்படுத்தக் கூடாது!”

நான் எங்கள் வகுப்புப் பிரதிநிதிகளிடம் அழைப்பிதழ்களைத் தருகிறேன்.

“நண்பர்கள் சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்டீர்களா? அவர்கள் நம்பிக்கையை மெய்ப்பிக்க வேண்டும்! கிளம்புங்கள், தாமதமாகப் போகக் கூடாது!..”

ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுப்பதில், யாரிடம் எதைச் செய்யச் சொல்வது என்பதில் (கதை அல்லது கவிதையைப் புத்தகத்திலிருந்து படிப்பது, கரும்பலகைக்குச் சென்று கணக்குப் போடுவது, பிடித்த கட்டுரையைப் பற்றி விவாதிப்பது) இந்த அணுகுமுறையை நான் வசதியான எல்லா சந்தர்ப்பங்களிலும் பின்பற்றுவேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஏன் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

தமிழக அரசு மருத்துவர்கள் அறப்போராட்டம் ! எதற்கு இந்த போராட்டம் ?

கோரிக்கை 1

மிழ்நாட்டில் வேலை செய்யும் மருத்துவர்கள் வாங்கும் ஊதியத்திற்கும் மத்திய அரசாங்க ஊழியர் வாங்கும் ஊதியத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்து வருகிறது. கீழ்கண்ட படத்தை பார்க்கவும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஒரு மத்திய அரசு மருத்துவர் 14 வருட அனுபவம் காணும் போது பெறும் ஊதியத்தை, தமிழகத்தில் பணி செய்யும் மருத்துவர் தனது 20 வருட அனுபவத்தில் தான் பெற முடியும் என்பதை காண முடியும்.

எதற்கு இந்த ஊதிய வித்தியாசம் ?

மத்திய அரசு மருத்துவர் செய்யும் எந்த வேலைக்கும் குறைவானதல்ல தமிழக மருத்துவர்கள் செய்யும் வேலை.

டெங்கு, மலேரியா போன்ற தொற்றும் நோய் தடுப்பு; நீரிழிவு, ரத்த கொதிப்பு போன்ற தொற்றா நோய் தடுப்பு முதல் நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தங்கி சிகிச்சை எடுக்கும் அரசு மருத்துவமனைகள்.

  • வருடம் தோறும் லட்சக்கணக்கில் பிரசவங்கள்.
  • அறுவை சிகிச்சைகள்.
  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்.
  • அவசர கால சிகிச்சைகள்.

என்று நாள்தோறும் நிகழ்த்தும் தமிழக மருத்துவர்கள் கேட்பது, எங்களுக்கும் அதே அளவு சமமான ஊதிய உயர்வைத்தான்.

இது ஒரு நியாயமான கோரிக்கை ஆகும். தமிழக அரசாங்கம் செவிமடுத்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

படிக்க:
அரசு பொது மருத்துவமனை ஊழியர்களும் மனிதர்கள்தான் | ஃபரூக் அப்துல்லா
♦ மகாராட்டிரம் : 483 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் !

***

அரசு மருத்துவர்களின் அறப்போராட்டம் கோரிக்கை இரண்டு

நோயாளிகளின் எண்ணிக்கைப்படி மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அதாவது தமிழகம் என்பது பரந்து விரிந்த நிலப்பகுதியாகும்.

ஒரு மாவட்டம் போல் இன்னொரு மாவட்டம் இல்லை. ஒரு ஊர் போல் இன்னொரு ஊர் இல்லை. அதுபோல, ஒரு அரசு மருத்துவமனை போல மற்றொன்று இருக்காது.
ஒரு மருத்துவமனையில் அதிகபட்சம் புறநோயாளிகளாக தினமும் 300 பேர் வருவார்கள். மற்றொரு அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு தினமும் 3000 பேர் வருவார்கள்.

ஆனால் இந்த இரு மருத்துவமனைகளிலும் ஒரே மாதிரி எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிப்பது முறையன்று.

ஆகவே நோயாளிகளின் வருகை மற்றும் உள்நோயாளிகளாக எத்தனை பேர் தங்கி இருக்கிறார்கள் ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் எத்தனை செய்யப்படுகின்றன?, அவசர சிகிச்சைகள் எவ்வளவு ?, அந்த மருத்துவமனையின் பிடிமானப்பகுதி (catchment area) எவ்வளவு ?, பிரசவங்கள் எத்தனை நடக்கின்றன?
சிசேரியன்கள் எத்தனை?, பரிந்துரைக்கப்படும் மருத்துவமனையா?, பரிந்துரைக்கும் மருத்துவமனையா? என்று ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு மருத்துவ நியமணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை.

இது மருத்துவர்கள் மீது விழும் அதிகமான பாரத்தை குறைக்கும். ஒரு நோயாளிக்கு செலவழிக்கப்படும் நேரம் அதிகமாகும். இதனால் மருத்துவத்தில் தரம் கூடும்.

இதனால் நேரடியாக பயன்பெறப்போவது அரசு மருத்துவமனைகளில் பயன் பெறும் நோயாளிகள் தான். இந்த நியாயமான கோரிக்கையை அரசு ஏற்று உடனே ஆவண செய்ய வேண்டும்.

***

அரசு மருத்துவர்கள் அறப்போராட்டம் கோரிக்கை மூன்று

றிக்கப்பட்ட உரிமையான முதுநிலைப்படிப்புக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை அரசு மருத்துவர்களுக்கு மீண்டும் வழங்குக.

2016 -ஆம் ஆண்டு வரை அதாவது நீட்டின் வருகைக்கு முன்பு வரை தமிழகத்தில் அரசு சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலைப்படிப்பில் சேர 50 சதவிகித இட ஒதுக்கீடு இருந்தது.

இதன் வாயிலாக ஒரு ஊரில் இருந்து படித்து மருத்துவரான ஒருவர், அந்த ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிவார். பிறகு 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் பயின்று மீண்டும் அதே ஊரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வேலைக்கு வருவார்.

இதனால் அந்த ஊர் மக்கள் பயன் பெற்றனர். தன் ஊரைப்பற்றி அதன் பூலோகவியல் பொருளாதார மற்றும் சமூகவியலை அறிந்த ஒருவர் மருத்துவராக வருவதற்கும், அந்த ஊரைப்பற்றி அறியாத ஒருவர் மருத்துவராக வருவதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு.

படிக்க:
அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து – நேர்காணல்
♦ ஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ !

இந்த 50 சதவிகித இட ஒதுக்கீடைப் பெற கட்டாயம் இரண்டு வருடங்கள் அரசுப்பணியில் இருந்திருக்க வேண்டும் என்று விதி இருந்தது. இதனால் கிராமங்கள் தோறும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் மருத்துவர்கள் முன் எப்போதும் இல்லாத அளவு நிரம்பினர்.

ஆள் அரவமற்ற, ஈ.. காக்கா.. கூட போகாத சாலை வசதிகள் குன்றிய ஊர்களில் எல்லாம் மருத்துவர்கள் பணி புரிகின்றனர்.

மேலும் அந்த இட ஒதுக்கீட்டில் படித்த மருத்துவர்களிடம் இருந்து, முதுமையால் ஏற்படும் பணி மூப்பு வரை அரசுப்பணியில் இருக்க வேண்டும் என்று பத்திர வாக்குமூலம் வாங்கப்படும்.

இதன் மூலம் மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை உறுதி செய்யப்பட்டதன் விளைவாக, தமிழகம் சுகாதாரத்தில் தன்னிறைவு பெற்று ஒரு முன்னோடி எடுத்துக்காட்டு மாநிலமாக இருந்து வந்தது.

ஆனால் நீட் எனும் அரக்கன் வந்த பின், அந்த இட ஒதுக்கீட்டை ஒழித்தபடியால்
இப்போது அரசு மருத்துவர்களுக்கு கிடைத்த முக்கிய அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுவிட்டது.

இது நாளடைவில் அரசு மருத்துவமனை நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.

ஆகவே அரசு எங்களின் மூன்றாவது முக்கிய கோரிக்கையான அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை எங்களுக்கு தர வேண்டும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

ஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ !

0

வாட்சப் செயலியைப் பயன்படுத்துவோருக்கு மாதம் 6 டாலர் கூடுதல் வரியை வசூலிக்கும் அரசுக்கெதிரான போராட்டம் செறிவடைந்து, இப்போது ஊழலுக்கெதிரான போராட்டமாக மாறி உக்கிரமடைந்துள்ளது.

லெபனான் நாடு சிரியா, இசுரேல் நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இங்கு இசுலாமிய, கிறித்தவ மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

மாணவர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் அபகரிப்பதற்காக அரசு மேற்கொண்ட நரித்தந்திரமே இந்த வரி விதிப்பு நடவடிக்கை என்கின்றனர் லெபனான் நாட்டு இளம் தலைமுறையினர்.

Lebanon Protest
தலைநகர் பெய்ரூட்டின் மத்தியப்பகுதியில் அமைந்துள்ள  தியாகிகள் நினைவிடத்தில் அரசுக்கெதிரான சுவரெழுத்துக்களைத் தீட்டி, இந்த அரசு பதவியிலிருந்து விலகும் வரை ஓய மாட்டோம் என்று ஆர்ப்பரிக்கும் போராட்டக்குழுவினர்.

“நாங்கள் நடத்தும் போராட்டத்தை வாட்சப் வரி விதிப்புக்கு எதிரானது என்று மட்டும் நீங்கள் புரிந்துகொள்ளக்கூடாது; நெடுங்காலமாக நாங்கள் ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டும், நாடு ஊழல் மயமாகி பொருளாதாரம் நலிந்து வருவதைக் கண்டித்தும் போராடுவதற்கான ஒரு தொடக்கப்புள்ளியாகவே நாங்கள் இதைப் பார்க்கிறோம்” என்கிறார் போராட்டத்தில் பங்குபெறச் சென்றுகொண்டிருக்கும் மாணவர் ஜெரெமி ஊவே.

தலைநகர் பெய்ரூட்டில், முதல் இரண்டு நாட்களாக நடைபெற்ற போராட்டத்தை பாதுகாப்புப் படையினரைக் கொண்டு தடியடி நடத்தி கலைத்தது ஆளும் அரசு.  மூன்றாவது நாள் மத்தியில் சுமார் 10 இலட்சம் மக்கள் ஒன்றுகூடிய போது, காவல்துறையினரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த ஒரு புரட்சிகரமான போராட்டமாக மாறிவிட்டது. இனப்பாகுபாடுகளை ஒதுக்கிவிட்டு லெபனான் தேசியக்கொடியின் கீழ் அரசுக்கெதிரான ஒன்றுபட்ட போராட்டக்களமானது லெபனானின் தலைநகரம் பெய்ரூட்.

படிக்க:
ஐரோப்பிய யூனியன் வலதுசாரி எம்.பி-க்களை வைத்து நாடகமாடும் மோடி அரசு !
♦ அமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் !

லெபனானில் நடந்த உள் நாட்டுப் போரின் போது சிதிலமடைந்து பயன்பாட்டில் இருந்திராத கட்டிடங்கள் இப்போது தங்குமிடங்களாகிவிட்டன. பணக்காரக் குடியிருப்புக்கள் நிறைந்த நகர வீதிகளின் வெளிச்சுவர்கள் இப்போது அரசைத் தூக்கியெறிவதற்கான பிரச்சாரக் களமாக மாறி நிற்கின்றன.

வீதியில் இறங்கிப் போராடினால்தான் விடுதலை என்பதற்கு மற்றுமொரு உதாரணமாய் நிற்கிறது லெபனான் மக்களின் போராட்டம்.

எதிர்காலம் என்ற ஒன்றே நிரந்தரமில்லாத நிலையில் கற்ற கல்வியினால் என்ன பலன் ஏற்பட்டுவிடப்போகிறது என்ற பதாகையை ஏந்தி நிற்கும் பெண்மனி ஒருவர்.

சிகப்பும், வெள்ளையும், பச்சையும் இணைந்து மதங்களுக்கு அப்பாற்பட்டு நாங்கள் அனைவரும் லெபனான் குடிமக்கள் என்று ஆர்ப்பரிக்கும் கூட்டம்.

பெரிய மசூதி ஒன்றின் வாசற்பகுதியில் நின்று உரையாற்றுபவர்களைக் காண்பதற்காக, பழுதடைந்த இரும்பு வேலியின்மீது ஏறி நின்று பார்க்கும் இளைஞர்கள்.

அரசுக்கெதிரான முழக்கங்களுடன் நீண்ட லெபனான் கொடியுடன் ஆர்ப்பரித்துச் செல்லும் போராட்டக் குழுவினர் .

தடுப்பரண்களுடன் போராட்டக்குழுவை முன்னேற விடாமல் தடுக்கும் இராணுவ வீரர் ஒருவரின் கைகளை, போராட்டக்காரர் ஒருவர் பிடித்து நிற்கும் காட்சி. இராணுவத்தினரைத் தாக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கல்ல என்பதுதான் தங்கள் நிலைப்பாடு என்பதை வெளிப்படுத்துகிறார் போராட்டக்காரர்.

முதல் இரண்டு நாட்களில் யாருமே நுழையாத இடமாக இருந்த இந்த பாழடைந்த கட்டிடங்கள் மூன்றாம் நாளில் நூற்றுக்கணக்கானோரின் புகலிடமாகிவிட்டது

போராட்டக்களத்தில் ஆடல் பாடல்களுக்குப் பஞ்சமா என்ன? முதியவர் ஒருவரின் ஆடல் பாடலுக்கு இசையுடன் கூடிய வரவேற்பு

போராட்டக்காரர்களை நுழைய விடாமல் தடுப்பதற்காகப் போடப்பட்ட முள்வேலிகளில் தங்களின் கோரிக்கைகளைப் பதிவு செய்யும் இளைஞர்கள், இளம்பெண்கள். ஆண்-பெண் சமவாய்ப்பு, வாக்களிக்கும் வயதில் மாற்றம், குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள்.

நள்ளிரவிலும் ஓயாத போராட்டம்.

லெபனான் தேசியக்கொடியுடன் முகமூடி அணிந்து நிற்கும் வாலிபர்.

ஊழலைத் தவிர இந்த நாட்டில் வேறொன்றுமில்லை. ஊழலற்ற லெபனான் நாடே எங்கள் கோரிக்கை என்கின்றனர் ஹலா மற்றும் ஓமர்.

ஜெரெமி ஊவேயுடன், மிஷெல் காரா. லெபனானில் சாதாரண வாழ்க்கை வாழ்வதே மிகவும் சிரமமான ஒன்றாகிவிட்டது. உலகத்திலேயே மிகவும் நலிவுற்ற நாடுகளில் ஒன்றாக லெபனான் இருக்கும் அதே தருணத்தில், உலகிலேயே மிகவும் பணக்கார அரசாங்கங்களில் எங்கள் நாடும் ஒன்று. இனியும் இழப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை என்கிறார் ஜெரெமி ஊவே.

உள்நாட்டுப் போர் நடந்த காலம் தொட்டு இன்றுவரை எங்கள் நாடு கிரிமினல்களாலேயே ஆளப்பட்டு வந்துள்ளது. எங்களிடம் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்தனர், எங்களை ஏமாற்றி திருடி விட்டனர். எம் சகோதர சகோதரிகள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தினர்; இனியும் இந்த ஆட்சியாளர்கள் எங்களுக்குத் தேவையில்லை. ஊழலற்ற, ஜனநாயகம் வேண்டுமென்பதற்காகவே போராடுகிறோம்; இங்கிருந்தே மடிவோம்; எங்கள் குழந்தைகளுக்கும் போராடக் கற்றுக் கொடுப்போம் என்கிறார் யாரா-எல்-பன்னா.


– வரதன்
நன்றி : அல்ஜசீரா

பீரங்கிக் குழாய்களிலிருந்து செந்தீப்பொறிகள் பறந்தன !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 04

கூர்ஸ்க் பிரதேசப் போர் தீவிரமடைந்தது. விறல்மிக்க டாங்கிப் படைகளின் சுருக்கமான தாக்குதலால் கூர்ஸ்கின் தெற்கிலும் வடக்கிலும் சோவியத் அரண் அமைப்புக்களைத் தகர்த்து, இடுக்கிப்பிடியை இறுக்கி, சோவியத் சேனையின் கூர்ஸ்க் வியூகங்கள் அனைத்தையும் சுற்றி வளைத்து அங்கே “ஜெர்மானியர் ஸ்தாலின் கிராத்துக்கு” ஏற்பாடு செய்வது ஜெர்மானியர் முதலில் போட்ட திட்டம். ஆனால் சோவியத் தற்காப்பின் நிலையுறுதி காரணமாக இந்தத் திட்டம் எடுத்த எடுப்பிலேயே சிடுக்காவிட்டது. தற்காப்பு அரண் அமைப்புக்களைப் பிளந்து ஊடுருவது தங்களுக்கு இயலாது என்பதும், இது ஒரு கால் இயன்றாலுமே கூட, இதில் ஏற்படும் இழப்புக்கள் மிக மிகப் பேரழிவாகவே இருக்கும் ஆதலால் இடுக்கிப் பிடியை இயக்குவதற்குப் போதிய படைபலம் எஞ்சியிராது என்பதையும் ஜெர்மானியச் சேனைத் தலைவர்கள் ஆரம்ப நாட்களிலேயே தெளிவாக உணர்ந்தார்கள்.

ஆனால் தாக்குதலை நிறுத்துவதற்குக் காலம் கடந்து விட்டது. ஹிட்லரின் எத்தனையோ நம்பிக்கைகள் போர்த் தந்திர வகைப்பட்டவை, செயல் தந்திர வகைப்பட்டவை, அரசியல் வகைப்பட்டவை ஆகியன – இந்த நடவடிக்கையுடன் இணைந்திருந்தன. வெண்பனிச் சரிவு தொடங்கிவிட்டது. அது வர வர அளவில் பெரிதாகி, வழியில் எதிர்ப்பட்டவற்றை எல்லாம் தன்னோடு சுருட்டித் தனக்குள் இழுத்துக் கொண்டு மலை அடிவாரத்தை நோக்கிப் பாய்ந்தது. அதை இடம் பெயரச் செய்வதற்காக இப்போது அதை நிறுத்தும் ஆற்றல் இல்லை. ஒவ்வொரு கிலோ மீட்டர் முன்னேறுவதற்குள் ஜெர்மானியர்கள் அனேகமாக முழு முழு டிவிஷன்களையும் படைப்பிரிவுகளையும், நூற்றுக்கணக்கில் டாங்கிகளையும் படைப் பிரிவுகளையும் ஆயிரக்கணக்கில் லாரிகளையும் மோட்டார்களையும் இழக்க நேர்ந்தது. தாக்கி முன்னேறிய சேனைகள் இடைவிடாத இரத்தப் பெருக்கின் விளைவாக வலுவிழந்தன. ஜெர்மன் படைத் தலைமை அலுவலுகம் இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. எனினும் நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்தும் வாய்ப்பு இப்போது அதற்கு இல்லை. மூண்டெரியும் போர் நெருப்பில் மேலும் மேலும் புதிய சேமிப்புப் படைகளை ஆகுதி செய்வதைத் தவிர அதற்கு வேறு வழியில்லாது போயிற்று.

சோவியத் சேனைத் தலைவர்கள் இங்கே தற்காப்பை மேற்கொண்டிருந்த படையணிகளின் பலத்தாலேயே ஜெர்மன் தாக்குதல்களை எதிர்த்து விலக்கினார்கள். பாசிஸ்டுகளின் சீற்றம் மேலும் மேலும் மிகுந்து கொண்டு போவதைக் கண்டு, அவர்கள் தங்கள் சேமிப்புப் படைகளைப் பின்புலத்தில் தொலைவில் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள் – பகைவரது தாக்குதலின் சடவேகம் தீர்ந்து போகும் நேரத்தை எதிர்பார்த்து. மெரேஸ்யெவின் ரெஜிமென்ட் தற்காப்புக்காக அன்றி எதிர்த் தாக்குக்காக அணி திரட்டப்பட்டிருந்த சேனைக்கு விமானப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை அவன் பின்னர் தெரிந்து கொண்டான். எனவே தான் முதல் கட்டத்தில் டாங்கி வீரர்களும் இவர்களுடன் இணைந்த சண்டை விமானிகளும் மாபெரும் போர் பற்றி வெறுமே சிந்தனை செய்து கொண்டிருந்தார்கள். பகைவர்களின் படைபலம் அனைத்தையும் போரில் ஈடுபடுத்தி விட்டதும் விமான நிலையத்தில் ஆயத்த நிலை இரண்டு ரத்து செய்யப்பட்டது. விமானிகள் நிலவறைகளில் படுத்து உறங்கவும் இரவில் சீருடைகளைக் களையவும் கூட அனுமதிக்கப்பட்டார்கள்.

ஒரு நாள் காலை வேளை. இழுத்து மூடப்படாத வாயில் திரை வழியே பளிச்சென்ற வெயிலொளி ஊசியிலைகள் பரப்பிய நிலவறைத் தரை மீது விழுந்தது. நிலவறைச் சுவர்களில் அமைந்தப் படுக்கைகளில் நண்பர்கள் இருவரும் இன்னும் நீட்டிப் படுத்திருந்தார்கள். அப்போது மேலே பாதையில் யாருடைய காலடி ஒசையோ கேட்டது, போர்முனையில் மந்திர சக்திவாய்ந்த “தபால்காரன்!” என்ற சொல் ஒலித்தது.

இருவரும் போர்வைகளை உதறிவிட்டுத் துள்ளி எழுந்தார்கள். ஆனால் மேரேஸ்யெவ் பொய்க்கால்களைப் பொருத்திக் கொள்வதற்குள் பெத்ரேவ் தபால்காரனை எட்டிப் பிடித்து இரண்டுக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டு வெற்றிக் கோலத்துடன் திரும்பிவிட்டான். இரண்டும் அலெக்ஸேய்க்கு வந்திருந்தன. தாயாரிடமிருந்தும், ஓல்காவிடமிருந்தும். மெரேஸ்யெவ் அவற்றை நண்பன் கையிலிருந்து வெடுக்கெனப் பிடுங்கிக் கொண்டான். ஆனால் அதற்குள் விமான நிலையத்தில் தண்டவாளத் துண்டுகள் மீது உரக்கச் சேகண்டி அடிக்கப்பட்டது. விமானிகள் விமானங்களுக்கு அழைக்கப்பட்டார்கள்.

மெரேஸ்யெவ் கடிதங்களைச் சட்டைக்குள் மார்பருகே நுழைத்துக் கொண்டு அக்கணமே அவற்றை மறந்துவிட்டு, விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு இட்டுச் சென்ற காட்டுப் பாதையில் பெத்ரோவின் பின் ஓடினான். கைத்தடியை ஊன்றிக் கொண்டு சற்றே சாய்ந்தாடியவாறு அவன் கணிசமாக விரைந்தோடினான். அவன் விமானத்தை நெருங்குவதற்குள் எஞ்சின் மீதிருந்த உறை கழற்றப்பட்டிருந்தது, அம்மைத் தழும்பிட்ட வேடிக்கைத் தோற்றமுள்ள வாலிபனான மெக்கானிக் விமானத்தருகே பொறுமையின்றித் தவித்துக் கொண்டிருந்தான்.

எஞ்சின் சீறி முழங்கிற்று. ஸ்குவாட்ரன் கமாண்டர் ஓட்டும் “ஆறாவது” விமானத்தின் மீது மெரேஸ்யெவ் கண்ணோட்டினான். காப்டன் செஸ்லோவ் தம் விமானத்தை காட்டோர் வெளிக்குக் கொண்டு வந்தார். இதோ அவர் அறையிலிருந்த படி கையை உயர்த்தினார். “கவனியுங்கள்!” என்பது அதன் பொருள். எஞ்சின்கள் முழங்கின. அவற்றின் காற்று வேகத்தால் தரையோடு தரையாக அழுத்தப்பட்ட புல் வெளிறடைந்தது. பிர்ச் மரங்களின் பச்சைப் பிடரிகள் விமானங்கள் கிளப்பிய சுழல் காற்றில் விரித்து, கிளைகளுடன் மரங்களிலிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பத் தயாரானவைப் போலப் படபடத்தன.

படிக்க:
காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !
ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை

டாங்கிக்காரர்கள் தாக்குதல் தொடங்கப் போவதாக அலெக்ஸேயை முந்திக் கொண்டு ஓடிய விமானிகளில் ஒருவன் வழியிலேயே அவனிடம் சொன்னான். பீரங்கிப்படைகளால் உடைத்துத் தகர்த்தப்பட்ட பகையரண்களின் ஊடாக டாங்கிப் படைகளுக்கு மேலே வானத்தைப் பகை விமானங்களும் இல்லாதவாறு செய்து அதைக் காவல் காப்பது இப்போது விமானிகளின் பொறுப்பு என்றுத் தெரிந்தது. வானத்தைக் காவல் காப்பதா? எல்லாம் ஒன்றுதான். இம்மாதிரி இறுக்கம் நிறைந்த சண்டையில் இந்தக் காவல் வேலையும் வெறும்பறப்பாக மட்டும் இருக்க முடியாது.

அலெக்ஸேய் கிளர்ச்சியுற்றான். ஆனால் இது சாவு குறித்த அச்சம் அல்ல. மிக மிக வீரமுள்ள, பதற்றமற்ற மனிதர்களுக்குக் கூட இயல்பான, ஆபத்து பற்றிய முன்னுணர்வும் இல்லை இது. அவன் கவலைப்பட்டது வேறு விஷயங்கள் பற்றி. மெஷின்கன்களையும் பீரங்கிகளையும் சுடுகருவிப் பணியாளர்கள் சரிப்பார்த்தார்களோ இல்லையோ; போரில் சோதிக்கப்படாத புதிய தலைக்காப்பில் ஒலிபரப்பி பழுதாகிவிடாமல் இருக்க வேண்டுமே; பெத்ரோவ் பின் தங்கி விடாமல் இருக்க வேண்டும்; விமானச் சண்டை நிகழ்த்த நேரிட்டால் அவன் அதிசாமர்த்தியம் பண்ண முற்படாமல் இருக்க வேண்டும். கைத்தடி எங்கே? வஸீலிய் வஸீலியெவிச்சின் அந்தப் பரிசு கெட்டுப் போய்விட்டதா என்ன? பெத்ரோவுடன் தான் பிரிவு சொல்லிக் கொள்ளவில்லை என்பது மெரேஸ்யெவின் நினைவுக்கு வந்தது. அறையில் இருந்த படியே அவனை நோக்கிக் கையை ஆட்டினான். ஆனால் பெத்ரோவ் அதைக் கவனிக்கவில்லை. அந்தப் பின்னோடியின் முகம் செம் புள்ளிகள் நிறைந்து கனல் வீசியது. கமாண்டரின் உயர்த்தப்பட்ட கையைப் பொறுமையின்றி நோக்கிக் கொண்டிருந்தான் அவன்.

இதோ கை தாழ்த்தப்பட்டது. விமானி அறைகள் மூடப்பட்டன.

மூன்று விமானங்கள் கொண்ட அணி புறப்படும் இடத்தில் சீறிற்று, இயங்கத் தொடங்கிற்று, ஓடிற்று, அதன் பின்னே தொடர்ந்தது இரண்டாவது அணி. மூன்றாவது அணியும் இயங்கத் தொடங்கிற்று. முதல் விமான அணி வானில் கிளம்பிற்று. இதன்பின்னே ஓடிற்று மெரேஸ்யெவின் அணி. தட்டை நிலம் கீழே இடமும் வலமுமாக இசைந்தாடிற்று. முதல் விமான அணியைப் பார்வையிலிருந்து நழுவவிடாமல் அலெக்ஸேய் தன் அணியை அதனுடன் ஒத்தவாறு அமைத்துச் செலுத்தினான், அவனது அணியை ஒட்டினாற் போலப் பறந்தது மூன்றாவது அணி.

முனைமுக முன்னணிக்கு மேலே அவை பறந்தன, பகைவரின் பின்புலத்துக்கு மேலே அரைவட்டமிட்டன, மறுபடி முன் வரிசையைத் தாண்டின. அவற்றை எவரும் சுடவில்லை. தரை தனது கடினமான நிலவுலக விவகாரங்களில் மும்முரமாக முனைந்திருந்த படியால் தனக்கு மேலே பறந்த ஒன்பது சிறு விமானங்களைக் கவனிக்க அதற்கு நேரமில்லை. ஆமாம், டாங்கிப் படைகள் எங்கே? ஆகா, இதோ இருக்கின்றன அவை. தழைமரக் காட்டின் தளதளப்பான பசுமையிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக டாங்கிகள் வெளிவந்ததை மெரேஸ்யெவ் கண்டான். மேலிருந்து பார்ப்பதற்கு அவை பாங்கற்ற சாம்பல் நிற வண்டுகள் போலத் தென்பட்டன. நொடிப் பொழுதில் அவை மிகப் பலவாகி விட்டன. எனினும் நுரைத்த பசுமையிலிருந்து மேலும் மேலும் டாங்கிகள் வெளிவந்து பாதைகள் வழியே முன் சென்றன, பள்ளங்களைக் கடந்தன. முன் சென்ற டாங்கிகள் மேட்டின் மேல் ஏறின, குண்டுகளால் உழப்பட்ட நிலத்தை அடைந்துவிட்டன. அவற்றின் பீரங்கிக் குழாய்கள் வழியாகச் செந்தீப் பொறிகள் பறக்கலாயின. இந்தப் பிரம்மாண்டமான டாங்கித் தாக்கு, எஞ்சிய ஜெர்மன் காப்பரண் வரிசைகளின் மீது நூற்றுக் கணக்கான டாங்கிகளின் இந்தப் பாய்ச்சல், ஒரு குழந்தையையோ, பதற்றமுள்ள பெண்களையோ கூட, அவர்கள் மேரேஸ்யெவ் போல வானிலிருந்து அதை அவதானித்திருந்தால், அச்ச மூட்டியிராது. இவ்வாறு அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் தலைக்காப்பின் காதுக் குழாய்களை நிறைத்த இறைச்சலுக்கும் கணகணப்பொலிகளுக்கும் ஊடாக வந்தது காப்டன் செஸ்லொவின் குரல். அது கம்மலாகவும் இப்போது சோர்வுள்ளதாகவும் கூட தொனித்தது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! தருமபுரியில் நடைபெற்ற அரங்கக் கூட்டம் !

0

2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியின் தொன்மை தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாடு! கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள்! பாதுகாப்போம்! பரப்புவோம்! என்ற முழக்கத்தின் கீழ் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் கடந்த அக்-25 அன்று தருமபுரியில் உள்ள பெரியார் மன்றத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் தோழர் பாலன், தனது தலைமை உரையில், ”கீழடி அகழாய்வு பற்றிய உண்மைகளை தமிழ் மொழியின் தொன்மை குறித்து இன்றைய மாணவர்கள் இளைஞர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.  கீழடியில் தற்பொழுது தோண்டப்படுவது ஆரியத்தை உயர்த்திப்பிடிக்கும் பேசும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பலுக்கான சவக்குழி” என்றார்.

இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய தமிழ் அறிஞர் தோழர் கிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் மற்றும் பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆகியோர் கீழடி அகழாய்வில் கண்டறிந்த உண்மைகளிலிருந்து கிடைக்கப்பெற்ற தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்துமான தகவல்களையும்; கீழடி அகழாய்வை முன்னெடுப்பதை பல்வேறு வகைகளில் தடுப்பதோடு, இந்தி – சமஸ்கிருதத்தை திணித்துவரும் மோடி – அமித்ஷா கும்பலின் சதித்தனங்களையும் அம்பலப்படுத்திப் பேசினர்.

படிக்க:
பேராசிரியர் கிலானியின் மனித உரிமைப் பணிகளை முன்னெடுப்போம்! பாசிச சூழலை திடமாக எதிர்கொள்வோம் !
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்

இக்கூட்டத்தில் பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டு சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். நன்றியுரையோடு கூட்டம் நிறைவேறியது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்.
63845 69228.