Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 291

கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

கொரோனா வைரஸ் குறித்த ஏழு மூடநம்பிக்கைகளும் ! ஏழு உண்மைகளும் !

❌ மூடநம்பிக்கை 1 ❌

ல்லெண்ணெயை கிருமி நாசினியாக பயன்படுத்தி உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டால் / உட்கொண்டால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது.

தவறு 

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கவ நல்லெண்ணெய் உடல் முழுவதும் தேய்ப்பது பலனளிக்காது.

உண்மை

✅ அடிக்கடி கைகளை சோப் போட்டு அல்லது ஆல்கஹால் சானிடைசர் மூலம் கழுவிவருவது பலனளிக்கும்

✅ பொது இடமாக இருந்தால் கைகள் அதிகம் படும் இடத்தை க்ளோரின் சார்ந்த கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது பலனளிக்கும்

✅ தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டை/ டிஸ்யூ பேப்பர் போன்றவற்றை கொண்டு வாயை மூடி தும்முவது பலனளிக்கும்

✅ சளி / இருமல் / தும்மல் இருப்பவர்கள் மாஸ்க் அணிவது பலன் தரும்

coronavirus myths

❌ மூடநம்பிக்கை 2 ❌

கொரோனா வைரஸ் வருவதை தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் ஆண்டிபயாடிக் மாத்திரைகள் உட்கொள்ளலாமா ?

தவறு

கொரோனா என்பது ஒரு வைரஸ். வைரஸை கொல்வதற்கு வைரஸ் கொல்லி மருந்துகள் மட்டுமே பயன் தரும். ஆண்டிபயாடிக்குகள் என்பவை பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை கொண்டவை எனவே, வைரஸ் தொற்றுக்கு ஆண்டிபயாடிக்குகள் பலனளிக்காது

உண்மை

✅ சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு எச்.ஐ.வி. -க்கு எதிரான ப்ரோடியேஸ் நொதியை தடுக்கும் மருந்துகளை உபயோகித்து நோயாளிகளிடம் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இருப்பினும் இந்த மருந்துகள் குறித்து இன்னும் தீவிர ஆராய்ச்சிகள் தேவைப்படுவதால் உலக சுகாதார நிறுவனம் அந்த மருந்துகளை அங்கீகரிக்க காலம் ஆகும்.

படிக்க:
WHO : இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கு பத்தாண்டு ஊதியத்தை ஒதுக்க வேண்டும் !
விமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா !

❌ மூடநம்பிக்கை 3 ❌

சீனாவில் இருந்து வரும் பார்சல்கள்/ கண்டெய்ணர்கள்/ கடிதங்கள் போன்றவற்றில் கொரோனா வைரஸ் தொற்று இருக்கும்.

தவறு

கொரோனா வைரஸ் மனிதன் அல்லது அதற்குரிய வாழத்தகுந்த விலங்கு இவற்றின் உயிருள்ள உடல்களைத் தவிர வெளி சூழ்நிலையில் சில மணிநேரங்களுக்கு மேல் தாக்குபிடிக்க இயலாது.

உண்மை

✅ சீனாவில் இருந்து வரும் பார்சல்கள் யாவும் பல மணிநேரங்கள் முதல் பல நாட்கள் கழித்து நம்மை வந்து சேருகின்றபடியால் கொரோனா வைரஸ் கட்டாயம் அந்த பார்சல்களில் தொற்று ஏற்படுத்தும் வண்ணம் உயிரோடு இருக்காது. ஆகவே டோண்ட் வொர்ரி..

❌ முடநம்பிக்கை 4 ❌

மவுத்வாஷ் வாங்கி அடிக்கடி வாய் கொப்புளித்துக்கொண்டே இருந்தால் / தொண்டையை உலராமல் பார்த்துக்கொண்டால் கொரோனா தொற்று ஏற்படாது .

தவறு

உண்மை

✅ மவுத்வாஷ் வாங்கி அடிக்கடி வாய் கொப்புளித்தாலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இயலாது. கொரோனா வைரஸ் சுவாசப்பாதை வழியாக பரவுவதே இதற்குக் காரணம். அடுத்தவர் இருமிய இடத்தில் அந்த கிருமிகள் சளியின் நுண்துகள்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும். அதை மற்றவர் சுவாசத்தால் உள்ளே சென்று விடும்.

தண்ணீர் மூலம் பரவும் தொற்றுகள் பெரும்பாலும் தொற்று நிரம்பிய தண்ணீரை குடிப்பதால் வரும். கொரோனாவுக்கு இது பொருந்தாது. கொரோனா காற்றின் மூலம் பரவும் வைரஸ் தொற்றாகும்.

❌ மூடநம்பிக்கை 5 ❌

நி(யூ)மோனியாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் மூலம் உருவாகும் நியூமோனியாவை தடுக்கும்.

தவறு

உண்மை

✅ கொரனா வைரஸ் என்பது புதிய வகை வைரஸாகும். மனிதர்கள் இதுவரை கண்டிராத வகை இது. அதற்காகவே இதற்கு “novel” என்ற பெயர் இடப்பட்டுள்ளது.

இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது.

மற்ற நியுமோனியா உருவாக்கும் தொற்றுகளான, ஹீமோஃபிலஸ் இன்ப்ளூயன்சா பி , நியெமோகாக்கல் போன்ற தொற்றுகளுக்கு போடும் தடுப்பூசி கொரோனா வைரஸால் வரும் நியூமோனியாவை தடுக்காது.

❌ மூடநம்பிக்கை 6 ❌

மூக்கில் சலைன் சொட்டு மருந்து விட்டுக்கொண்டே இருந்தால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது.

தவறு

உண்மை

✅ மூக்கில் சொட்டு மருந்து விட்டால் கொரோனா வைரஸ் ஏற்படாது என்று எந்த அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி முடிவுகளும் இல்லை. எனவே , மூக்கடைப்பு நீக்கும் சொட்டு மருந்துகளை வாங்கி நீங்களாகவே சுய மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.

தேவைக்கு மீறி அதிகமாக மூக்கடைப்பு நீக்கும் சொட்டு மருந்து உபயோகித்துக்கொண்டே இருந்தால் மருந்தின் தன்மையால் மூக்கடைப்பு ஏற்படும் நிலை உருவாகும். இதை Rhinitis Medicamentosa என்று அழைப்போம்.

மூக்கை சலைன் ஊற்றி நன்றாக க்ளியர் செய்து வைப்பது வைரஸ் தொற்று எளிதாக உள்ளே செல்ல வழிவகை செய்யும் என்பதையும் அடிக்கோடிடுகிறேன்

படிக்க:
எல்.ஐ.சி தனியார்மயம் : 1 லட்சம் ஊழியர்கள் வெளிநடப்புப் போராட்டம் !
♦ என்ன குற்றம் செய்தாள் இச்சிறுமி ?

❌ மூடநம்பிக்கை 7 ❌

பூண்டு, மஞ்சள், கீழாநெல்லி போன்றவற்றை எடுப்பது கொரோனா தொற்று ஏற்படாமல் காக்கும்.

தவறு.

பூண்டு / மஞ்சள் போன்றவற்றிற்கு கிருமிகளை கொல்லும் தன்மை இருக்கிறது என்று அறியப்பட்டிருக்கிறது. இருப்பினும் வைரஸ்களை கொல்லும் தன்மை குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் ஆரம்பகட்டத்திலேயே இருக்கின்றன

கீழாநெல்லி கல்லீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கு வேலை செய்யும் என்று ஆய்வு முடிவுகள் உள்ளன. இருப்பினும் அதை கொரோனா தொற்றுக்கு உபயோகிப்பதை எந்த அறிவியல் ஆராய்ச்சியும் ஆதரிக்கவில்லை.

பூண்டு/ மஞ்சள் போன்றவற்றை தினசரி அதன் நல்ல விஷயங்களுக்காக உணவில் சேர்த்து வருவது என்பது வேறு. அவற்றை உண்டால் கொரோனா வராது என்று நம்புவது வேறு. இரண்டையும் குழப்பிக்கொள்ள கூடாது.

நாம் பரப்பும் இந்த மூட நம்பிக்கையை நம்பி ஒருவர் முக்கியமான நேரத்தில் மருத்துவமனையை நாடாமல் பூண்டு கஷாயம் குடித்து வீட்டிலேயே இருந்து விடும் வாய்ப்பு உண்டு.

கொரோனா குறித்த மூடநம்பிக்கைகளை அறிவியல் பார்வையில் தகர்ப்பது நமது முக்கிய குறிக்கோள்… தொடர்ந்திருப்போம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா

அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! – மாநாடு நிகழ்ச்சி நிரல்

CAA – NRC – NPR வேண்டாம் ! கல்வி, வேலை, ஜனநாயகம் வேண்டும் !
அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் !
அஞ்சாதே போராடு !

மாநாடு – கலைநிகழ்ச்சி

நாள் : 23 பிப்ரவரி, ஞாயிறு மாலை 5 மணி,
இடம் : திருச்சி உழவர் சந்தை.

நிகழ்ச்சி நிரல் :

வரவேற்புரை :

தோழர் சூர்யா
கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

தலைமை :

தோழர் காளியப்பன்
மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்

தொடக்க உரை :

நீதிபதி கோபால கவுடா
மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

உரையாற்றுவோர் :

திரு. சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ்.
(ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தவர், கர்நாடகா)

வழக்கறிஞர் பாலன்
பெங்களூரு

தோழர் தியாகு 
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

திரு. லெனின் பாரதி
திரைப்பட இயக்குநர்

திரு. பாலாஜி
ஜெ.என்.யூ மாணவர் (JNUSU முன்னாள் தலைவர்), டெல்லி

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

கலை நிகழ்ச்சி : ம.க.இ.க. கலைக்குழு

நன்றியுரை :

தோழர் செழியன்
திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

மோடி – அமித்ஷா பாசிச ஆட்சிக்கு எதிரான போராட்ட அலை ஓங்கட்டும்.
புதிய இந்தியா எழட்டும்! கார்ப்பரேட் – காவி பாசிசம் வீழட்டும்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

உரையாற்றுபவர்கள் பற்றிய குறிப்பு :

நீதிபதி கோபால கவுடா
மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

நீதிபதி கோபால கவுடா அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழகத்தில் நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு படுகொலை, மங்களூரில் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு படுகொலை ஆகியவை குறித்த உண்மை அறியும் குழுவில் பங்கேற்று, தனது கண்டனத்தைப் பதிவு செய்தவர். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருபவர். தற்போது சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நாடு முழுவதும் தனது கருத்தைப் பதிவு செய்து வருகிறார்.

திரு. சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ்.
(ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தவர், கர்நாடகா)

ர்நாடகாவில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய திரு. சசிகாந்த் செந்தில் அவர்கள் தற்போதைய அரசியல் சூழல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். “பன்முகத் தன்மை கொண்ட நமது ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. சமரசங்கள் அதிகரித்துள்ள இந்தக் காலச் சூழ்நிலையில், நான் ஐ.ஏ.எஸ் பணியில் இருப்பது தார்மீகரீதியாக சரியாக இருக்காது; எனவே, பதவியிலிருந்து நான் விலகுகிறேன்” என்று கூறி ராஜினாமா செய்துள்ளார்.

திரு. லெனின் பாரதி
திரைப்பட இயக்குநர்

“மேற்கு தொடர்ச்சி மலை” படத்தின் இயக்குநர். “உலகமயமாக்கலுக்குப் பிறகு, 200 வருடங்களில் நடக்கும் மாற்றத்தை வெறும் 20 வருடங்களிலேயே சந்தித்துவிட்டோம். அடித்தட்டு மக்களுக்கு உடைமைதான் சொத்து. ஆனால், அதில்தான் மிகப்பெரிய அரசியலும் நடக்கிறது. நான் சிறுவயதில் பார்த்த சம்பவங்களும் மக்களின் வாழ்க்கையும் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது; அதுதான் இந்தப் படமெடுக்கக் காரணம்.”

வழக்கறிஞர் பாலன்
பெங்களூரு

பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலன் அவர்கள், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருபவர். சி.ஏ.ஏ-வுக்கு எதிராக மட்டுமல்லாமல் கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராகவும் தொடர்ந்து கர்நாடகா மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில், தொலைக்காட்சி ஊடகங்கள் வழியாக தனது ஆழமான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறார்.

கவுரி லங்கேஷ், கல்புர்கி கொலை வழக்குகளில் அரசு சிறப்பு வழக்கறிஞராக உள்ளார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு : 99623 66321

தலைமை அலுவலகம்:
16, முல்லைநகர் வணிக வளாகம், 2வது நிழற்சாலை,
அசோக் நகர், சென்னை -083.
E-mail: ppchennaimu@gmail.com | fb: makkalathikaramtn |

அகப்பட்டுக் கொண்டாயா கடைசியில் ! உன்னுடைய மேல்கோட்டுதான் எனக்கு வேண்டும் !

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 14

க, முக்கிய நபர் நண்பர் வீட்டு மாடிப்படி இறங்கி வந்து, ஸ்லெட்ஜில் அமர்ந்து, “கரோலினா இவானொவ்னா வீட்டுக்கு விடு” என வண்டிக்காரனிடம் சொல்லி விட்டு, கதகதப்பான மேல்கோட்டால் உடம்பை இதமாகப் போர்த்திக்கொண்டு, இன்பமான மனநிலையில் திளைக்கலானார் (ருஷ்யனுக்கு இத்தகைய மனநிலையை விட மேலானது எதையும் கற்பனை செய்யவே இயலாது; அதாவது நாமாக எவ்விஷயத்தைப் பற்றியும் சிந்திக்காமல், ஒன்றை விட ஒன்று இன்பகரமான எண்ணங்கள் தாமே அகத்தில் எழுந்து விரைய, நாம் அவற்றைத் தொடரவோ தேடவோ கூடச் சிரமப்படத் தேவையற்ற நிலை இது). மிகுந்த மன நிறைவு கொண்டவராய், அன்று மாலையில் நடந்த களி தரும் நிகழ்ச்சிகள் அனைத்தையும், சிறிய நண்பர் குழாம் கொல்லெனச் சிரிக்கும்படி கூறப்பட்ட வேடிக்கைப் பேச்சுக்கள் எல்லாவற்றையும், எளிதில் நினைவு கூர்ந்து, அவற்றில் சிலவற்றை வாய்க்குள்ளாகவே திரும்பச் சொல்லிப் பார்த்து, அவை முன்போலவே நகைப்பூட்டுவதைக் கண்டு மகிழ்ந்தார்.

ஆகவே, அவர் வழிநெடுகப் பொங்கிப் பொங்கிச் சிரித்துக் கொண்டிருந்ததில் விந்தை எதுவும் இல்லை. சுழன்று சுழன்றடித்த காற்றுதான் எப்போதாவது அவரது களிப்பை இடை முறித்தது; எங்கிருந்தோ, என்ன காரணத்திற்கோ குப்பென்று வீசிய காற்று, அவர் முகத்தை வெட்டிச் செல்லும், அதன்மீது வெண்பனிச் சிதறல்களை அப்பும், அவரது கோட்டுக் காலரைக் கப்பற் பாய் போன்று உப்பச் செய்யும், அல்லது சட்டென இயற்கைக்கு மீறிய விறலுடன் அதைத் தூக்கி அவர் தலையை மூடுமாறு எறியும்; தலையைக் காலருக்குள்ளிருந்து விடுவிப்பதற்கு அவர் படாதபாடு படும்படிப் புரியும். தம் கோட்டுக் காலரை யாரோ மிக இறுகப் பற்றுவதைத் திடீரென உணர்ந்தார் முக்கிய நபர். திரும்பிப் பார்த்தவர், பழைய, நைந்த எழுத்தனது உடுப்பணிந்த குட்டையான ஆள் ஒருவனைக் கண்டார். அவன் அக்காக்கிய் என அடையாளந் தெரிந்துகொண்டதும் அவருக்குப் பெரும் பீதியுண்டாயிற்று.

அவனது முகம் வெண்பனி போன்று வெளேறென்று, பிரேதம் போலக் காணப்பட்டது. இறந்தவனின் முகம் விகாரமாகக் கோணுவதைப் பார்த்ததுமே முக்கிய நபரின் பீதி எல்லை கடந்து போயிற்று. அக்காக்கிய் அக்காக்கியெவிச்சின் பேய், சவக்குழியின் பயங்கரச் சுவாசத்தை அவர் மீது விட்டவாறு பேசியது: “ஓகோ! நீயா! அகப்பட்டுக் கொண்டாயா கடைசியில்! முடிவில் உன்னை வசமாகப் பிடித்துக்கொண்டு விட்டேன், அப்படித் தானே! உன்னுடைய மேல்கோட்டுதான் எனக்கு வேண்டும்! என் மேல்கோட்டைப் பற்றிக் கவலையெடுத்துக் கொள்ளாதது மட்டுமன்று, பிரமாதமாக அதட்டி உருட்ட வேறு செய்தாயே – கொடு இப்படி, உன்னுடைய மேல்கோட்டைக் கழற்றி!” என்றது.

பாவம் முக்கிய நபரின் உயிர் தொண்டைக்குழிக்கு வந்துவிட்டது. அலுவலகத்தில் பொதுவாகக் கீழ்நிலை ஊழியர்களுக்கு எதிரில் அவர் படுவிறைப்பாக இருப்பவர் தாம், அவருடைய ஆண்தகைமை வாய்ந்த தோற்றத்தையும் உடற்கட்டையும் ஒரு பார்வை பார்த்ததுமே “அடேயப்பா, என்ன மிடுக்கு!” என எல்லாருமே சொல்லுவார்கள் என்றாலும், வீர வடிவமைப்பு கொண்ட வேறு பலரைப் போன்றே அவரும் இப்போது ஒரே கிலியடித்துப்போய், மாரடைப்பு வந்துவிடுமோ எனக் காரணத்துடனேயே கலவரமடைந்தார். மேல் கோட்டைத் தாமாகவே கழற்றிக் கடாசிவிட்டு வண்டியோட்டியை விளித்து, “வீட்டுக்கு விடு, நாற்கால் பாய்ச்சலில்!” என உத்தரவிட்டார்.

படிக்க:
ஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை !
குழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் !

வழக்கமாக அவர் நெருக்கடியான சமயங்களில் தான் இவ்வாறு கட்டளையிடுவார். ஆதலாலும் சொற்களைக் காட்டிலும் மிக வலிமை வாய்ந்த வேறு முறைகளைச் சில வேளைகளில் பயன்படுத்துவார் ஆதலாலும், வண்டிக்காரன் பாதுகாப்பின் பொருட்டுத் தலையைத் தோள்களுக்கிடையே இடுக்கிக் கொண்டு, சாட்டையை வீசி, அம்புப் பாய்ச்சலில் குதிரைகளை விரட்டினான். ஆறே நிமிடங்களுக்குச் சற்றுக் கூடுதலான நேரத்திற்குள் முக்கிய நபர் தம் வீட்டுவாயில் போய்ச் சேர்ந்தார்.

வெளிறி, அரண்டு போய், மேல்கோட்டு இன்றி, கரோலினா இவானொவ்னாவிடம் செல்வதற்குப் பதில் தன் வீடு சேர்ந்து, எப்படியோ தட்டுத் தடுமாறி அறைக்குப் போனவர், இரவு முழுவதையும் நிம்மதியில்லாமல் கழித்தார். மறுநாள் காலையுணவு நேரத்தில் அவருடைய புதல்வி, “உங்கள் முகம் இன்று ஏனப்பா ஒரேயடியாக வெளுத்துப் போயிருக்கிறது?” என்று பச்சையாகவே கேட்டு விட்டாள். அவரோ, பேசாவாயராய், முந்திய நாள் தனக்கு என்ன நேர்ந்தது, தான் போயிருந்தது எங்கே, செல்ல விரும்பியது எங்கே என்பதையெல்லாம் பற்றி ஒரு வார்த்தை கூடக் கூறாமல் கம்மென்றிருந்தார்.

இந்த நிகழ்ச்சி அவர் உள்ளத்தில் ஆழப்பதிந்தது. இப்போதெல்லாம் அவர் தமது கீழ்நிலை ஊழியர்களிடம், “எப்படி ஐயா உமக்குத் துணிச்சல் வந்தது? யாரிடம் பேசுகிறோம் என்று தெரியுமா ஐயா உமக்கு?” என்று சொல்வது அரிதாகவே தான். அப்படியே சொன்னாலுங்கூட விஷயம் என்ன என்று எதிராளி விளக்கிய பின்பே.

இதைவிட வியப்பளிக்கும் சேதி என்னவென்றால் எழுத்தனின் பேய் நடமாடுவது அத்துடன் முற்றிலும் நின்று போயிற்று என்பதுதான். ஜெனரலின் மேல்கோட்டு அதற்கு நன்கு இசைந்துவிட்டது போலும்; குறைந்தபட்சம் இதற்குப் பின் யாருடைய மேல்கோட்டும் பறிக்கப்பட்டதாகப் புகார் வரவில்லை. ஆம், துருதுருவென்று வம்புக்கு அலையும் சில உற்சாகப் பேர்வழிகள் மட்டும் நகரின் வெளிப்புறப் பகுதிகளில் எழுத்தனின் பேயினுடைய நடமாட்டம் இன்னும் இருந்து வருவதாகச் சாதித்தார்கள்.

உண்மையில் கலோம்னாவைச் சேர்ந்த போலீஸ்காரன் ஒருவன் அந்தப் பேய் ஒரு வீட்டின் பின்பக்கத்திலிருந்து வருவதைத் தன் கண்களாலேயே கண்டான்; ஆனால் அவன் பலவீனமான உடலினன் (ஒரு தடவை வீட்டுக்குள்ளிருந்து பாய்ந்து வந்த சாதாரணப் பன்றிக் குட்டியொன்று அவனைக் காலை வாரி விழத் தட்டிவிட்டது; சுற்றிலும் நின்று கொண்டிருந்த வண்டிக்காரர்கள் அதைப் பார்த்து வாய்விட்டுக் கெக்கலி கொட்டி நகைக்கவே அவன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அரைக் கோப்பெக் அபராதம் – பொடி வாங்கும் பொருட்டு – விதித்தான்). ஆதலால் பேயைத் தடுத்து நிறுத்தத் துணியாமல், இருளில் அதைத் தொடர்ந்து சென்றான். கடைசியில் பேய் திரும்பிப் பார்த்து, சட்டென நின்று, “உனக்கு என்ன கேட்கிறது?” என்று வினவி, உயிருள்ளவர்களிடம் பார்க்கவே முடியாத அளவு பெரிய முட்டியைக் காட்டியது. போலீஸ்காரன், “ஒன்றுமில்லை” எனச் சொல்லிவிட்டு அக்கணமே திரும்பி நடையைக் கட்டினான். ஆனால் இந்தப் பேய் மிக மிக அதிக உயரமாக இருந்ததாம், அடர் மீசை வைத்திருந்ததாம்; ஒபுகோவ் பாலத்தின் பக்கமாகப் போய் இரவின் இருளில் மறைந்துவிட்டதாம்.

(முற்றும்)

« முந்தைய பாகம்

ரஜினி : கிறுக்கா … காரியக் கிறுக்கா ?

35

மீப காலமாக நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவின் பாடலுக்கு ஏற்ப ஆடி வரும் நடனங்கள் நேயர்களுக்கு பெரும் கேளிக்கையாய் அமைந்துள்ளன. பாஜகவின் “ஆடுறா ராமா ஆடுறா” என்கிற கீர்த்தனையும், அதன் கையில் இருக்கும் வருமான வரித்துறை என்கிற குச்சியும் ரஜினியை ஆட்டுவிக்கும் அழகைப் பார்த்தால் குரங்காட்டிகளே பொறாமையில் வெந்து தான் போக வேண்டும். அனைத்து அசிங்கங்களும் ஆசன வாயில் ஊற்றெடுத்து மலத்தொட்டியில் சங்கமிக்கும் என்கிற இமயமலை பாபாவின் தத்துவத்திற்கேற்ப இதுவும் துக்ளக் விழாவில் இருந்தே துவங்கியது.

ஜனவரி 14-ம் தேதி நடந்த துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் ராமன் – சீதை சிலைகளை அம்மணக்கட்டையாக தூக்கி வந்து பெரியார் செருப்பால் அடித்தார் என்றும், செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனது என்றும் பேசினார். இந்த செய்தியை அப்போது எந்த பத்திரிகையும் பிரசுரிக்காத நிலையில் துக்ளக் சோ அட்டைப் படத்திலேயே தைரியமாக வெளியிட்டாராம். அப்போது நடந்த திமுக அரசு பத்திரிகையை கைப்பற்றியதாம். அந்த இதழ் மீண்டும் அச்சடிக்கப்பட்டு “பிளாக்கில்” விற்றதாம்.

துக்ளக் விழாவில் ரஜினி. (கோப்புப் படம்)

ரஜினியின் பேச்சைத் தொடர்ந்து இந்த விசயத்தில் நடந்த உண்மைகள் என்னவென்பதை பெரியாரியவாதிகள் சமூக ஊடகங்களில் சொல்லத் தொடங்கினர். உண்மையில் 1971-ம் ஆண்டு சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் புராணப் புளுகுகளை தோலுரிக்கும் வகையில் படங்கள் எடுத்து வரப்பட்டுள்ளது. அப்போது சுமார் முப்பது பேர் கொண்ட ஜனசங்கிகள் (பாஜகவின் பழைய முக்காடின் பெயர்) கும்பல் ஒன்று பெரியாரை நோக்கி செருப்பை எறிந்துள்ளனர். அதில் ஒன்று ராமன் படத்தின் மீதும் விழுந்துள்ளது. ஆத்திரமடைந்த பெரியார் தொண்டர்கள் அதே செருப்பை எடுத்து ராமன் படத்தை அடித்து வந்துள்ளனர். இதை பின்னர் பெரியாரே ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார் – அதன் ஒலிப்பதிவையும் பெரியாரியவாதிகள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

ரஜினியின் விசமத்தனமான பேச்சை பலரும் குடிகாரனின் உளறல் என்று புறந்தள்ளினர். ஆனால், எந்தக் குடிகாரனும் குடித்து விட்டு பெண்டாட்டியைத் தான் அடிப்பானே தவிற போலீசை அடிக்கப் போக மாட்டான் என்பதை நாம் கவனிக்க வேண்டும். குடிகாரனின் கோட்டிக்காரத்தனத்தில் ஒரு காரியம் இருக்கும்; ரஜினிகாந்த் அடிப்படையிலேயே எச்சில் கையில் காக்காய் ஓட்டாத கஞ்சப் பிசினாறி என்பதும் காரியவாதி என்பதும் திரையுலகம் அறிந்த உண்மைகள்.

என்றால் எந்தக் காரியத்திற்காக ரஜினி இப்படி பேசியிருப்பார்? அதை பின்னர் பார்க்கலாம், இப்போது ரஜினியின் பேச்சு உண்டாக்கிய விளைவுகளைப் பார்ப்போம்.

படிக்க:
♦ கருத்துக் கணிப்பு : சி.ஏ.ஏ-வுக்கு ரஜினி ஆதரவு சரியா தவறா ?
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சியாட்டில் மாநகர கவுன்சில் தீர்மானம் !

ரஜினியின் பேச்சைத் தொடர்ந்து ராமனை தமிழக அரசியலின் நிகழ்ச்சி நிரலில் ஏற்ற பகீரதப் பிரயத்தனம் செய்தனர் பாஜகவினர். இராமனை இழிவு படுத்தி ஐம்பதாண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்து, பெரியாரைக் கண்டிக்க(!) அதே சேலத்தில், இராமன் செருப்பாலடிக்கப்பட்ட அதே இடத்தில் பேரணி ஒன்றை நடத்துவதாக அறிவித்தனர் இந்துத்துவவாதிகள். சொன்னபடி ஊர்வலமும் நடந்தது. சுமார் நாற்பது பேர் அந்த ‘பேரணி’யில் கலந்து கொண்டனர். ஐம்பதாண்டுகளுக்கு முன் முப்பது பேராக இருந்த சங்கிகளின் பலம் இப்போது சுமார் நாற்பதாக அதிகரித்திருக்கும் திடுக்கிடும் உண்மையை அன்று தமிழகம் அறிந்து கொண்டது.

போகட்டும். ஆனால், நம் சமூக வலைத்தளவாசிகள் வால்மீகி ராமாயண புத்தகத்தின் பக்கங்களுக்குள் பதுங்கிக் கிடந்த உண்மையான ராமனை கழுத்தில் துண்டைப் போட்டு மூத்திரச் சந்துக்கு இழுத்து வந்தனர். ராமன் ஒரு குடிகாரன் என்பதில் துவங்கி, அவன் பெண்டாட்டியை சந்தேகப்பட்டது, சம்பூகனை சதித்தனமாக கொன்றது வரை அலசி ஆராய்ந்தனர். சிலர் ராமனோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவனது அப்பன் தசரதனின் ஆண்மைக் குறைவு வரை பிரச்சினையை எடுத்துச் சென்று ராமனின் பிறப்பையே சந்தேகத்துக்குரியதாக்கி விட்டனர்.

இந்த விவரங்களை எல்லாம் விரிவாக எழுத ஆசைதான். ஆனால், பதிவு அடல்ட்ஸ் ஒன்லியாக மாறும் அபாயம் இருப்பதால் தவிர்க்கிறோம்.

***

தற்கிடையே துக்ளக்கில் தான் படித்ததாக சொன்னதற்கு ஆதாரத்தை “இந்து குழுமத்தை” சேர்ந்த அவுட்லுக்கில் கண்டுபிடித்த ரஜினி தரப்பு வழக்கம் போல் ஒரு தெருவோர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது; அந்த அவுட்லுக் பத்திரிகையின் கட்டுரையை எழுதியவரே தான் கேள்விப்பட்டதை எழுதியதாகவும், அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என பின்னர் அறிந்து கொண்டதாகவும் விளக்கமளித்தது போன்ற கூத்துகளும் நடந்து முடிந்தது. இதற்கிடையே துக்ளக் சோவே அப்போது (1971) நீதிமன்றத்தில் தனது “ராமன் கட்டுரைக்காக” மன்னிப்பு கேட்டு வழக்கில் இருந்து தப்பியது குறித்த தகவல்களும் வெளியானது.

சரி இப்போது காரியத்திற்கு வருவோம்.

2002 – 2005-ம் ஆண்டு காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் முறையாக வருமான வரியை சரியாகச் செலுத்தாதற்கு 66,22,436 ரூபாய் அபராதம் செலுத்த, முன்பே வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதனை எதிர்த்து ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், அந்த நோட்டீஸை ரத்து செய்தது. இந்த ரத்து நடவடிக்கையை எதிர்த்து வருமான வரித்துறை 2014-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் விசாரணையில் கடந்த ஜனவரி 29-ம் தேதி ஆஜராஜ வருமான வரித்துறை வழக்கறிஞர், ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான அபராதத் தொகையைக் கொண்ட வழக்குகளை இனி தொடர்வதில்லை எனவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது எனவும் முடிவெடுக்கப்பட்டதால், ரஜினிகாந்த் மீதான வழக்கை திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஒரு படத்திற்கு நூறு கோடிக்கும் மேல் வெள்ளையிலும், அதற்கும் மேல் கருப்பிலும் வாங்கும் ரஜினி வெறும் 66 லட்சம் ரூபாய்க்கு தன்னை நாக்பூர் சேட்டுக் கடையில் அடகு வைத்துக் கொள்வாரா? அந்தளவுக்கு அவர் பிசினாறித்தனம் கொண்டவரா என தமிழக மக்கள் வியந்து போனார்கள். சிவாஜி படத்தில் மூடப்பட்ட ‘ஆபீஸ் ரூமின்’ கூரையைப் பிய்த்துக் கொண்டு பறந்த கருப்புப் பண முதலைகளில் ரஜினியும் ஒருவர் என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். மேக்கப் போட்ட ரஜினி கதாபாத்திரத்தை விட்டு மேக்கப் போடாத ரஜினியை கும்மாங்குத்தாக குத்த விட்ட இயக்குனர் சங்கருக்கு ஆஸ்கர் என்ன நோபல் பரிசே கொடுக்கலாம்.

படிக்க:
♦ கபாலி நெருப்பா கருப்பா சொல்லுடா !
♦ செபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் !

ஆனால், மக்களை அதற்கு மேலும் வியப்பிலாழ்த்தும் தகவல்கள் ரஜினி வருமான வரித்துறையினருக்கு அளித்த விளக்கங்களில் இருந்தன. அதாவது, 2002-2003, 2004-2005 காலகட்டத்தில் தான் வட்டிக்குவிடும் தொழில் செய்ததாக வருமான வரித்துறையினருக்கு ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். சுமார் 2.63 கோடி ரூபாயை 18 சதவீத வட்டிக்கு விட்டு சம்பாதித்ததாகவும் ரஜினி வருமான வரித்துறையினருக்கு அளித்த விளக்கங்களில் இருந்தன.

ஆக விசயம் இதுதான் : வருமான வரித்துறையின் பழைய வழக்கில் இருந்து தப்பிக்கவும் புதிய வழக்குகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவும் தன்னை இந்துத்துவ பாசிஸ்டுகளிடம் வாடகைக்கு விட்டுள்ளார் ரஜினிகாந்த். காசு வாங்கிக் கொண்டு உடலை வாடகைக்கு விடும் தொழில் செய்பவர்கள் “விபச்சார அழகிகள்” என்பது தினத்தந்தி அகராதியின் விளக்கம்; இப்படி வழக்குக்காக தன்னையே வாடகைக்கு விடுவதற்கு அதே அகராதியில் வேறு ஏதாவது பெயர் இருக்கிறதா எனத் தேட வேண்டும்.

ஆனால், ரஜினிகாந்த் ஒரே குத்தில் இமயமலையை நிலாவுக்கு இடம் மாற்றும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர் என்பதை பரங்கிமலை ஜோதியில் படித்து பட்டம் பெற்ற ரஜினி ரசிகர்கள் உறுதி செய்து துண்டைப் போட்டுத் தாண்டுகிறார்கள். வயதான, அப்பாவி சுகர் பேசண்டுகள் பொய் பேச மாட்டார்கள் என்பதால் நாமும் அதை நம்புகிறோம். எனவே ரஜினி பயந்து கொண்டு மட்டும் தன்னை வாடகைக்கு விட்டிருக்க மாட்டார். ஒரு சுயவிருப்பத்தில் இருந்தே அப்படிச் செய்திருக்க வேண்டும்.

***

தான் சொந்த முறையிலேயே ஒரு சங்கி என்பதை ரஜினி தனது சமீபத்திய தெருவோர பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் சில அரசியல் கட்சிகளும் மதகுருக்களும் தங்கள் சுயலாபத்துக்காக போராட்டங்களை தூண்டி விடுகின்றனர் என்றும் கூறிய ரஜினி, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் பேராசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடம் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் மாணவர்களின் மேல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தால் வாழ்க்கையே பறிபோகும் என்றும் அன்பாக மிரட்டியுள்ளார்.

மேலும், இந்தியாவிலேயே 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று போயஸ் தோட்ட மூத்திரச் சந்தில் நின்று கூவிக் கொண்டிருந்த அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் அப்படி இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இப்படி தான் பேசிய பின்னும் மத்திய அரசு மூஞ்சியில் அடிப்பது போல் அறிவிப்பதற்கு எதிராக ரஜினி கொந்தளிக்கவில்லை; ஏனெனில், மான ரோசம் பார்ப்பதன் விலை 66 லட்சம் என்பதை அறிந்தவர் சிவாஜிராவ் கெய்க்வாட்.

முசுலீம்களுக்கு ஆபத்தென்றால் முதல் ஆளாக வருவேன் என்று ரஜினி பேட்டியளித்த அன்று மாலை நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், திரு கெய்க்வாட்டின் சொந்த ஊரான பெங்களூரில் பங்களாதேஷிகள் என வாட்சப்பில் பரப்பப்பட்ட வதந்தியை அரசே நம்பி இந்திய முசுலீம்களின் 300 வீடுகளை அரசே பொக்லைன் இயந்திரம் வைத்து தகர்த்து தரைமட்டமாக்கிய போது எங்கே போனார் என்று கேள்வி எழுப்பினார் ஆளூர் ஷாநவாஸ்.

அப்போது மட்டுமல்ல, அதற்கு முன்பும் இசுலாமியர்கள் கும்பல் படுகொலை செய்யப்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களிலும், சொந்த நாட்டிலேயே திறந்த வெளிச் சிறைக்கூடமாக ஒரு மாநிலமே மாற்றப்பட்டு கோடிக்கணக்கான காஷ்மீரி முசுலீம்கள் (இந்தியர்கள்) வதைக்கப்பட்ட போதும் என்ன செய்தார் ரஜினி என பொதுமக்கள் “சும்மா கிழிக்கின்றனர்”.

படிக்க:
♦ தினமலர் | திருமணம் – பொது வாழ்க்கை | கொரோனா வைரஸ் | அர்ஜுன் ரெட்டி | சாதி மறுப்பு | கேள்வி – பதில் !
♦ ரஜினி : எச்ச ராஜாவின் வெர்சன் 2 | துளைத்தெடுக்கிறது டிவிட்டர் !

***

ஜினிகாந்த் ஒரு பசுத்தோல் போர்த்திய கழுதைப்புலி என்கின்றனர் சிலர். அது உண்மையல்ல. தன் நெற்றியில் “பசு” என எழுதி வைத்துக் கொண்டு அதை எல்லோரும் நம்பி விடுவார்கள் என்கிற அசட்டு நம்பிக்கையில் ஜல்லிக்கட்டுக் காளைகளின் கூட்டத்திற்குள் நுழைந்த கிழட்டு நரிதான் ரஜினி.

ரஜினியின் நரை முடியில் தொங்கிக் கொண்டு நுழையப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.

அந்தளவுக்கு ரஜினி முட்டாளா என்று கேட்காதீர்கள். நாக்பூர் சேட்டுகள் அந்தளவுக்கு அறிவாளிகள்.

ரஜினியின் ஆட்டம் இந்த ஒரு தேர்தலோடு முடிந்து விடும் என்பதை அவர்கள் அறிவார்கள். (சந்தேகம் இருப்பவர்கள் சமீபத்தில் ரங்கராஜ் பாண்டே ஒரு விழா மேடையில் பேசியதைக் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ளலாம்) எனவே ரஜினி ஒரு குறுகிய கால திட்டம். ரஜினியின் அரசியல் நுழைவைக் கொண்டு இந்துத்துவத்தின் நீண்டகால நுழைவுக்கு ஆழம் பார்க்கிறார்கள்.

“குசு வரும் முன்னே, மலம் வரும் பின்னே” என்கிற பழமொழிக்கு ஏற்ப முதலில் ரஜினி, அவரைத் தொடர்ந்து இந்துத்துவ அரசியல் வருகை என்பதாக இருக்கும்.

மூக்கைப் பிடித்துக் கொண்டு சுத்தம் செய்ய தயாராய் இருப்போம் மக்களே.

மலம் நாக்பூர் சேட்டுகளுக்கு சொந்தம் என்றாலும் இந்த ஊர் நமக்குச் சொந்தமல்லவா?

– மித்ரன்

ஒரு லட்சம் டொலர் புத்தகம் | அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
புத்தகத்தின் தலைப்பே ஆச்சரியப்படுத்தியது. The Sadness of Geography. புகழ்பெற்ற எழுத்தாளர் மைக்கேல் ஒண்டாச்சியின் நாவல் ஒன்றில் வரும் வரியை தலைப்பாக ஆசிரியர் பயன்படுத்தியிருந்தார். புத்தகம் வெளிவந்த சில நாட்களுக்கிடையில் அதன் ஆசிரியரைத் தேடி தொடர்பு கொண்டேன். ஓர் உணவகத்தில் சந்தித்தோம். முதல் ஐந்து நிமிடத்தில் நான் அவரிடம் கேட்ட கேள்வி ‘ஏன் நீங்கள் புத்தகத்தை தமிழில் எழுதவில்லை?’ அவர் திகைத்து விட்டார். ஒருவரும் அவரிடம் அப்படியான கேள்வியை கேட்டிருக்கமாட்டார்கள்.

அவர் சொன்னார், ‘நான் இங்கே ஆங்கிலத்தில்தான் படித்தேன். ஆங்கிலத்தில்தான் சிந்தித்தேன். ஆகவே அந்த மொழியில் எழுதினேன்.’

‘நீங்கள் கனடாவுக்கு வந்தபோது உங்கள் வயது 19. தமிழிலேயே படித்திருந்தபடியால் உங்களுக்கு ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாது. எப்படி இது சாத்தியமாயிற்று?’

அவர் சொன்னார், ‘என்ன செய்வது? 32 வருடங்கள் தமிழ் பேசவும் இல்லை. படிக்கவும் இல்லை. எழுதவும் இல்லை. மறந்துவிட்டது, அதுதான் ஆங்கிலத்தில் எழுதினேன்.’

நூலை எழுதிய ஆசிரியருடைய பெயர் லோகதாசன் தர்மதுரை. வசதிக்காக இனிமேல் அவரை தாசன் என்றே அழைப்போம். அவர் எழுதிய புத்தகத்தின் பெயரை சிலர் ‘நிலவியலின் துயரம்’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். எனக்கு என்னவோ ‘நிலங்களின் துயரம்’ பொருத்தமானது போலத் தோன்றுகிறது.

இது நாவல் இல்லை; சுயசரிதையும் இல்லை. ஒருவரின் வாழ்க்கை குறிப்புகள் என்று வைத்துக்கொள்ளலாம். யுத்தகாலத்தில் ஓர் இளைஞன் யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்டு பல நாடுகளில் அலைந்து, அல்லலுற்று இறுதியாக 16 மாதங்களுக்கு பின்னர் கனடா போய்ச் சேரும் கதை. இதில் கற்பனை கிடையாது. உண்மையாக நடந்த சம்பவங்களின் தொகுப்பு. ஒரு யுத்த காலகட்டத்தை அப்படியே பதிவு செய்திருப்பதால் இதை ஒரு காலத்தின் வரலாறாகவும் பார்க்கலாம்.

இலங்கையில் போர் நடந்தபோதும், அது முடிந்த பின்னரும் பலர் ஆங்கிலத்திலும், தமிழிலும் போர் இலக்கியங்கள் படைத்தனர். சிலதை போராளிகளே எழுதினார்கள். சில நூல்கள் புலம்பெயர்ந்தவர்களால் எழுதப்பட்டன. ஆசிரியர் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியை நினைவுக் குறிப்புகளாக பதிந்துள்ளார். இவருடைய பதின்ம வயதில் நடந்த சம்பவத்துடன் கதை தொடங்குகிறது. அவருடைய படிப்பு, போரினால் ஏற்பட்ட இன்னல்கள், வெளிநாட்டுப் பயணங்களில் சந்தித்த அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள் என கதை விரிந்து கனடா போய் சேர்வதுடன் முடிவுக்கு வருகிறது.

கனடாவில் தாசன் 32 வருடங்கள் வாழ்ந்தாலும் அவரால் பழைய வாழ்க்கையை மறக்கமுடியவில்லை. ராணுவம் சித்திரவதை செய்கிறது, சிறையில் அவதிப்படுகிறார், கொலைகாரர்கள் துரத்துகிறார்கள். இப்படி கொடூரமான கனவுகள் தினம் அவரை துன்புறுத்தின. இறுதியில் பழைய ஞாபகங்களை எழுதுவதன் மூலம் இந்த இம்சையை கடக்கலாம் என முடிவு செய்கிறார். ஏதோ உந்துதலில் ஒரு வருடம் முழுவதும் வேலையை துறந்து வீட்டிலே உட்கார்ந்து நூலை எழுதி முடிக்கிறார். இவர் நாள் குறிப்பு எழுதுகிறவர் அல்ல. அபாரமான ஞாபக சக்தி உள்ளவர் என்பதால் அவரால் ஒவ்வொரு சிறு தகவலையும் மீட்க முடிகிறது. ஒரு சம்பவத்தை குறைத்தோ, கூட்டியோ, மறைத்தோ சொல்லவில்லை. வாசகர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு காரணம் உள்ளதை உள்ளபடியே எழுதியதுதான் என்று நினைக்கிறேன்.

இந்த நூலைப் படித்தபோது எனக்குத் தோன்றியதை ஆசிரியரிடம் கேட்டேன். ‘ஆங்கிலம் தெரியாமல் தனி ஆளாகப் படித்து, நாள்கூலியாக வேலை பார்த்து அதில் கிடைக்கும் ஊதியத்தில் பாதியை வீட்டுக்கு அனுப்பி, பரீட்சையில் வெற்றி பெற்று, வேலையில் படிப்படியாக உயர்ந்து, இன்று 32 வருடங்கள் கடந்து Fortune 500 கம்பனி ஒன்றில் உயர் பதவி வகிப்பது எத்தனை பெருமைக்குரிய விசயம். உங்களுடைய கனடா வாழ்க்கை அனுபவத்தை எழுதினால் பலர் பயன்பெற வாய்ப்புண்டு. இந்த நூலும் முழுமை பெறும். எழுதுவீர்களா?’ புன்னகை செய்தார். அதன் பொருள் என்ன? எழுதுவார் என்றுதான் நினைக்கிறேன்.

இந்நூலில் பல பகுதிகள் திகைப்பூட்டுவனவாகவும், இப்படியும் நடக்குமா என்ற கேள்வியை எழுப்புவனவாகவும், நெஞ்சை துணுக்குற வைப்பனவாகவும் இருக்கின்றன. முழுநூலை இங்கே சொல்லப்போவதில்லை. ஒன்றிரண்டு இடங்களை சுவாரஸ்யம் கருதி சொல்லலாம் என நினைக்கிறேன்.

படிக்க:
செபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் !
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

ஆரம்பமே திகிலுடன்தான் இருந்தது. அப்பொழுது தாசன் பதின்ம வயதுச் சிறுவன். அதிகாலை பெரும் கூக்குரல் கேட்டு சட்டென்று விழித்து திடீரென்று திசை தெரியாமல் ஒரு பக்கமாக ஓடுகிறான். ராணுவம் ஊரை சுற்றி வளைத்துவிட்டது. ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறது. வயலில் அவன் உயரத்துக்கு மேல் வளர்ந்து நிற்கும் நெற்கதிருக்குள் ஓடி ஒளிந்து கொள்கிறான். ராணுவத்தினரின் பூட்ஸ் சத்தங்களும் ஆட்களை துரத்திப் பிடிக்கும் கூச்சலும், அதிகார கட்டளைகளும் கேட்கின்றன. ஒரு ஹெலிகொப்டர் இவனை நோக்கி மிகப் பதிவாக பறந்து வருகிறது. சேற்றுக்குள் போய் புதைந்து கொள்கிறான். இன்னொரு தடவை வட்டமடித்து வந்து ஹெலிகொப்டர் அவனை தேடிவிட்டு போகிறது. மாலையாகிறது. அன்று முழுக்க ஒன்றுமே உண்ணவில்லை, குடிக்கவும் இல்லை. இருட்டியதும் ராணுவம் போனபின்னர் வீட்டுக்கு திரும்புகிறான்,

மாதிரிப் படம்

ஒன்றிரண்டு சம்பவங்களை கடந்து போகவே முடியவில்லை. சிறுவனாயிருக்கும்போதே தாசனை பள்ளிக்கூட விடுதியில் பெற்றோர் சேர்த்துவிடுகிறார்கள். ஒரு முறை விடுமுறையை வீட்டிலே கழிப்பதற்காக தாசன் தனியாக விடுதியிலிருந்து புறப்படுகிறான். இவன் ஏறிய ரயில் வண்டியில் எதிர்பாராத விதமாக சிங்கள ராணுவக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். இவன் ஒதுங்கிப் போய் ஒரு மூலையில் அமர்ந்தான். ஒருத்தன் வந்து இவனை எதேச்சையாகத் இடிப்பதுபோல தொட்டான். இவன் உடல் சுருங்கி மறுபக்கம் திரும்பியது அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் அதை அவமானமாக எடுத்துக்கொண்டான். ராணுவக்காரன் தன் கைகளை இவனுடைய கால் சட்டைக்குள் நுழைத்தான். அத்தனை ராணுவத்தினர் முன்னிலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டான். வெட்கம், கோபம், துயரம் ஆகிய உணர்ச்சிகள் மேலிட வீட்டுக்கு ஓடியவன் இந்த சம்பவம் பற்றி ஒருவருக்கும் மூச்சு விடவில்லை. முதன்முதலாக இந்தப் புத்தகத்தில் தான் அது பற்றி எழுதப்பட்டிருக்கிறது. வீட்டுக்குப் போனபின்னர் ஓர் எண்ணம் முளைவிட்டது. எப்படியும் நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும்.

தாசனுடைய தகப்பன் நகைக்கடை உரிமையாளர். மிகப் பெரிய செல்வந்தர். கிராமத்திலே அவருக்குத்தான் முதல் மரியாதை. எந்தக் கடைக்குப் போய் என்ன பொருள் வாங்கினாலும் விலை கேட்கமாட்டார். கடைக்காரன் சொல்லும் விலைக்கு காசுத் தாள்களை நீட்டுவார். மீதிப்பணத்தை வாங்கமாட்டார்; வாங்கினால் அது கௌரவக் குறைச்சல் என்று நினைப்பவர். ஒருநாள் சிறுவன் தாசன் தரையில் படுத்திருக்கிறான். விடிந்துவிட்டது, யாரோ தரையை குனிந்து கூட்டும் சத்தம் கேட்டு விழிக்கிறான். ஓர் இளம் பெண் அவனை எழுப்பாமல் அவன் படுத்திருந்த இடத்தை சுற்றி விளக்குமாற்றால் கூட்டியபடி நகர்கிறாள். தாயாரிடம் ஓடிப்போய் யார் இது என்று சிறுவன் கேட்கிறான். தாயார் ‘நேற்று இரவு உன் அப்பா கூட்டி வந்தார்’ என்கிறார். சிறுவனுடைய இரண்டாவது அம்மா இப்படித்தான் அவனுக்கு அறிமுகமாகிறார். ‘ஏன் எனக்கு இன்னொரு அம்மா. ஒரு அம்மா போதுமே’ என்று சிறுவன் குழம்பிவிடுகிறான்.

இப்படி அதிர்ச்சி தரும் சம்பவங்கள் பல. தாசனின் அப்பாவுடைய நகைக்கடையில் வியாபாரம் நின்றுவிட்டது. போர் நடக்கும்போது யார் நகை வாங்க வருவார்கள்? வருமானம் இல்லை, கையில் காசு இல்லாததால் வீட்டில் எந்நேரமும் சண்டை. தாசனின் அப்பா காலை மாலை என்ற வித்தியாசம் இல்லாமல் குடிக்க ஆரம்பித்தார். ஒருநாள் அவர் வீட்டுக்கு வராததால் தாசன் அவரை தேடிப் போனான். பெரியம்மா முறையான ஒருவர் வீட்டில் அவனுடைய அப்பா குடிவெறியில் தரையில் கிடந்தார். அவரை தூக்கி வர முயன்றபோது கையை வீசி பலமாக முகத்தில் அடித்தார். தாசன் நிலைதடுமாறி நிலத்திலே விழுந்துவிட்டான். கிராமத்துப் பெரிய மனிதர் கிடந்த நிலையை பார்த்து தாசனுக்கு அவமானமாகப் போனது. பக்கத்தில் கிருமி நாசினி போத்தல் இருந்ததால் அதை எடுத்து அப்படியே குடித்துவிட்டான். மயங்கி கீழே விழும்போது அவன் சிந்தனை ‘அப்பாவுக்கு நல்ல பாடம் படிப்பித்துவிட்டேன்’ என்பதாகவே இருந்தது. உடனேயே ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போனதால் ஒருவாறு தாசன் உயிர் பிழைத்தான். இதன் பின்னர் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில் பெரிய பிளவு ஏற்பட்டது.

படிக்க:
தமிழர் வரலாறும் பண்பாடும் | நா. வானமாமலை – புதிய தொடர்
♦ பாதங்கள் சொல்லும் பாடம் !

தகப்பனைப் பற்றிய உருக்கமான சம்பவம் ஒன்றையும் தாசன் பதிவு செய்கிறார். தாசனுடைய அண்ணன் லண்டனிலிருந்து இந்தியா போயிருக்கும் செய்தி அவருடைய அப்பாவுக்கு கிடைக்கிறது. மகனை எப்படியாவது சந்திக்கவேண்டும் என்று தகப்பன் விருப்பப்படுகிறார். தாசன் அப்போது கனடாவில் இருக்கிறார். போர் மும்முரமாக நடந்த சமயம் என்றாலும் தகப்பன் இந்தியா போகவேண்டும் என அடம் பிடிக்கிறார். வேறு வழியில்லாமல் ஒரு போராளிக்குழுவின் படகில் ஏறி இந்தியா போகிறார். அவருடைய கெட்ட காலம் இலங்கை கடல்படை படகை சுட்டு வீழ்த்துகிறது. தகப்பன் படு காயத்தோடு மன்னார் தீவு கடற்கரையில் அனாதரவாகக் கிடந்தபோது அந்த வழியால் போன பாதிரியார் ஒருவர் அவரை காப்பாற்றுகிறார்.

பயணத்தை மேலே தொடர்ந்து மகனைப் பார்க்கவேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறார் தகப்பன். இவருடைய கடைசி மகன் இவரை மறுபடியும் போராளிக் கப்பல் ஒன்றில் ஏற்றி அழைத்துக்கொண்டு ராமேஸ்வரம் போய்ச் சேருகிறார். அங்கே உடல் நிலை மேலும் மோசமாகி தகப்பன் இறந்துவிடுகிறார். சிறுவன் உதவியில்லாமல் அந்நிய நாட்டில் தவித்துப்போகிறான். அவனிடம் பிணத்தை புதைக்கக்கூட காசு இல்லை. ஒரு காலத்தில் சாவகச்சேரியில் மிகப் பிரபலமான நகைக்கடையின் முதலாளியாக அறியப்பட்டவர் ராமேஸ்வரத்தில் அடையாளம் இல்லாத கிடங்கில் அனாதையாக அடக்கம் செய்யப்பட்டார்.

மாதிரிப் படம்

இங்கிலாந்திலிருந்து தாசன் புறப்பட்டு கனடாவின் மொன்ரியல் நகரத்தை அடைந்த சம்பவ வர்ணனை திகில் நிறைந்தது. இப்படியும் நடக்குமா என்று ஒவ்வொரு வரி படிக்கும்போதும் சந்தேகம் தோன்றிக்கொண்டே இருந்தது. பிரான்ஸ் நாட்டில் ஒரு கை மட்டுமே உள்ள தமிழர் ஒருவர் தாசனுக்கு கள்ள பாஸ்போர்ட் செய்து கொடுத்தார். களவாடிய பிரெஞ்சுக் கடவுச்சீட்டு ஒன்றில் பழைய படத்தை நீக்கிவிட்டு தாசனுடைய படத்தை கச்சிதமாகப் பொருத்தியிருந்தார். வித்தியாசம் ஒருவருமே கண்டுபிடிக்க முடியாது. அந்த பாஸ்போர்ட்டின் முடிவு தேதிக்கு இன்னும் 3 மாதம் மட்டுமே இருந்ததால் அது முடிவதற்கிடையில் எப்படியும் கனடா போய்ச் சேர்ந்துவிடவேண்டும். ஒரு அசட்டு துணிச்சலில் தாசன் மொன்ரியல் விமானச் சீட்டை வாங்கிவிட்டார். அவருடைய நண்பர் தாசனை ஹீத்ரோ விமான நிலையத்தில் இறக்கிவிட்டு திரும்பி பாராமல் போய்விட்டார். எல்லா பயணிகளும் போன பின்னர் கடைசி நேரத்தில் டிக்கட் கவுண்டருக்கு போய் டிக்கட்டை நீட்டினார். குடிவரவு அதிகாரிகள் அதிக நேரம் தன்னை விசாரிக்கமாட்டார்கள் என்று தாசன் கணக்குப் போட்டிருந்தார். டிக்கட் பெண் அவர் பெயரைக் கேட்டார். ’அந்தோனி பிரங்கோய்’ என்று சொன்னபோது தாசனுக்கே சிரிப்பு வந்தது. அவளுடைய கேள்விகளுக்கு பாதி ஆங்கிலத்திலும் பாதி பிரெஞ்சிலும் பதில் கூறினார். பெண்ணுக்கு சந்தேகம் வலுத்தது. இவரிடம் பிரான்ஸ் தேசத்து கடவுச்சீட்டு இருந்ததால் முழுக்க முழுக்க பிரெஞ்ச் பேசும் அதிகாரி வந்து இவரை குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பித்தார். முகத்தை கோபமாகவும், எரிச்சலாகவும், மன்றாட்டமாகவும் மாற்றி மாற்றி வைத்து உடைந்த பிரெஞ்சு மொழியில் தாசன் பதில் கூறினார். அதிகாரிக்கு திருப்தியில்லை. பிரெஞ்சு தூதரகத்தை அழைத்து கடவுச்சீட்டு நம்பரை கொடுத்து அது உண்மையான பாஸ்போர்ட்டா என்று விசாரித்தார். தாசனுக்கு நடுக்கம் பிடித்தது. ஏனென்றால் அது திருடிய பாஸ்போர்ட். திருட்டுக் கொடுத்தவன் முறைப்பாடு செய்திருப்பான். ஆகவே அவர் நேரே சிறைக்கு போவதற்கு தயாரானார். ஆனால் திருட்டுக் கொடுத்தவன் என்ன காரணமோ முறைப்பாடு செய்யாததால் தாசன் தப்பினார்.

படிக்க:
என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன் | அ.முத்துலிங்கம்
♦ சாவதில் வருத்தமில்லை : ஆப்பிரிக்க அகதிகளின் மரணப்போராட்டம்

எல்லா தடங்கல்களும் நீங்கிய நிலையில் விமானம் புறப்படத் தயாராக நின்ற வாசலுக்கு ஓட்டமாக ஓடிச்சென்று போர்டிங் அட்டையை நீட்டினார். அங்கேயும் ஒரு பெண் நின்றாள். நிதானமாக ‘உங்கள் பெயர் என்ன?’ என்று ஆரம்பித்தாள். இதற்கிடையில் விமானத்துக்குப் போகும் கதவை மூடிவிட்டார்கள். ‘பூட்டவேண்டாம், நான் இந்த விமானத்தை பிடிக்கவேண்டும்’ என்று தாசன் கத்தியும் பிரயோசனமில்லை. பதறியபடி நின்றதால் அவர் மூளை வேலை செய்வதை நிறுத்திவிட்டது. பெண் அசரவில்லை. மிக அமைதியாக ‘நீங்கள் எதற்காக போகிறீர்கள்?’ ‘வேறு எதற்கு? நான் ஒரு சுற்றுலாப் பயணி.’ ‘மிக நல்லது. சுற்றுலா முடிந்த பின்னர் நீங்கள் திரும்புவதற்கான விமான டிக்கட்டை காட்டுங்கள்.’ தாசனிடம் திரும்புவதற்கான விமான டிக்கட் கிடையாது. பையில் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்து லண்டன் திரும்புவதற்கான டிக்கட் ஒன்றை அங்கேயே வாங்கினார். பெண் தன் அதிகாரத்தை பாவித்து பூட்டிய கதவை திறந்தார். அரை மணிநேரம் தாமதமாக தாசன் விமானத்துக்குள் நுழைந்தபோது பயணிகளின் கண்கள் அவரை எரிப்பதுபோல பார்த்தன. இடப் பக்கமோ வலப் பக்கமோ பார்க்காமல் நெஞ்சு படபடக்க நேரே போய் தன் ஆசனத்தில் அமர்ந்தார். விமானம் பறந்த முழுநேரமும் நெஞ்சு படபடப்பு அடங்கவே இல்லை.

மொன்ரியலில் விமானம் இறங்கியதும் பயணிகள் அவசரமாக வெளியேறினர். தாசன் பொறுமை காத்து கடைசி ஆளாக இறங்கி மெதுவாக நடந்தார். குடிவரவு அதிகாரியை நடுக்கத்துடன் அணுகி மனனம் செய்து வந்ததை சொன்னார். ‘நான் சிறீலங்காவை விட்டு வெளியேறிய தமிழன். கனடாவில் தஞ்சம் கோருகிறேன்.’ அதிகாரி வியப்புறவில்லை. ஒரு நிமிடம் கழித்து எழுந்து நின்று தாசனை அழைத்துப்போய் ஒரு சின்ன அறையில் உட்கார வைத்தார். ஒரு மேசை. இரண்டு நாற்காலிகள்; யன்னல்கூட இல்லை. சிறைதான் என்று தாசன் நினைத்தார். சிறிது நேரம் கழித்து ஓர் அலுவலர் உள்ளே நுழைந்தார். அவர் கையிலிருந்த தட்டத்தில் பலவிதமான உணவு வகைகளும், குளிர் பானமும் இருந்தன. உணவுத் தட்டை மேசையில் வைத்து ‘ ஐயா, கனடாவுக்கு நல்வரவு’ என்றார். தாசனுக்கு அந்த வார்த்தைகள் உண்மையானவை என்பதை உணர பல நிமிடங்கள் தேவைப்பட்டன.

வாழ்க்கை நினைவு நூல்கள் பல வந்திருக்கின்றன. இந்த நூல் அப்படி என்ன சிறப்பு பெற்றது? ரொறொன்ரோ பல்கலைக்கழக நூலகம் இதை ஆக விலைப்பட்ட நூல் (Best Seller) என்று அறிவித்திருக்கிறது. ஈழத்துப் போர் பின்னணியில் பல நூல்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் கட்டுரைகளாகவும், நாவல்களாகவும், சுயசரிதைகளாகவும் வெளியாகியுள்ளன. முன்னைநாள் போராளிகள், போரை நேரில் அனுபவித்தவர்கள், வெளிநாட்டில் இருந்து போரை அவதானித்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் என எல்லோருமே எழுதியிருக்கிறார்கள். இந்த நூலின் சிறப்பு இது ஒரு சாதாரண பதின்ம வயதுப் பையனின் குரலில் உண்மைக் கதையாகச் சொல்லப்பட்டிருப்பதுதான். இதில் வெளிப்பட்ட உண்மை ஒளியில் ஒரு நம்பகத்தன்மை கிடைக்கிறது. நூல் முழுக்க விறுவிறுப்புடன் நகர்கிறது. அலங்கார வார்த்தைகள் இல்லை. செயற்கையான விவரிப்புகளோ, பூச்சுக்களோ கிடையாது. மொழிநடை வித்தை கிடையாது; உத்திகள் இல்லை. எளிமைதான் இதன் பலம். அடுத்து என்ன என்று மனம் துடிக்க சம்பவங்கள் தானாகவே நகர்கின்றன. இந்த நூல் ஒரு வரலாற்றை சொல்வதுடன் ஓர் இளைஞன் கொடியதில் இருந்து நல்லதை நோக்கி ஓடும் கதையை பதிவு செய்கிறது.

ரொறொன்ரோவில் அரசு அனுமதித்த ஆகக் குறைந்த கூலி ஒருவருக்கு மணித்தியாலத்துக்கு 14 டொலர். ஒருவர் ஆறுமாதம் ஓய்வெடுத்து ஒரு புத்தகத்தை எழுதிமுடித்தால் அந்தப் புத்தகத்தின் பெறுமதி ஏறக்குறைய 17,000 டொலர்களாக இருக்கும். இந்தக் கணக்கின்படி தாசன் ஒருவருட காலம் ஓய்வெடுத்து புத்தகத்தை எழுதி முடித்திருக்கிறார். இவர் Fortune 500 கம்பனி ஒன்றில் உயர் பதவி வகித்தவர். இவருடைய ஒரு வருட உழைப்பு 100,000 டொலர்கள் என்று பார்த்தால் இந்தப் புத்தகத்தின் உண்மையான பெறுமதி ஒரு லட்சம் டொலர்கள். கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது. ஆனால் வாசித்து முடிக்கும்போது ஏற்படும் பிரமிப்பு! அதற்கு விலையே இல்லை.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

TNPSC ஊழல் – பின்னணி என்ன ? | பேரா ப.சிவக்குமார் | காணொளி

மிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை தேர்வாணைய மோசடிகள் லட்சக்கணக்கான இளைஞர்களின் வருங்காலக் கனவை சிதைத்துள்ளன. 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என அரை வயிற்று உணவுடன் கோவில்களிலும், நூலகங்களிலும் முழுநேரமாகப் படித்து பெரும் கனவுகளுடன் TNPSC தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் வாழ்க்கையை இருள் கவ்வச் செய்திருக்கின்றன, அதிகாரவர்க்க, அரசியல்வாதிகள் உள்ளடக்கிய ஒரு கும்பல் !

இதன் பின்னணி என்ன ? விளக்குகிறார் பேராசிரியர் சிவக்குமார். பாருங்கள் ! பகிருங்கள் !

TNPSC ஊழல் – பின்னணி என்ன ? | பேரா ப.சிவக்குமார்

தொகுப்பு:

செபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் !

“செபாஸ்டியன் அன் சன்ஸ் : மிருதங்கத்தை உருவாக்கித் தருவோரின் சுருக்கமான வரலாறு” என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கடந்த 02.02.2020 அன்று ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்வில் நூலின் ஆசிரியர் டி.எம். கிருஷ்ணா மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தொல். திருமாவளவன் மற்றும் திரு. ராஜ்மோகன் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்வின் வீடியோக்கள்.

மிருதங்கம் படைப்போரின் சமூக வரலாறு !

“செபாஸ்டியன் அன் சன்ஸ்: மிருதங்கத்தை உருவாக்கித் தருவோரின் சுருக்கமான வரலாறு” என்பது டி.எம்.கிருஷ்ணாவின் புதிய நூல். கர்நாடக இசைக் கச்சேரிகளிலும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளிலும் முதன்மையாக பயன்படுத்தப்படும் தாளக்கருவி மிருதங்கம். அதைத் தயாரிப்பவர்களின் வரலாற்றையும், அவர்களுக்கும் மிருதங்கம் வாசிப்போருக்கும் இடையிலான உறவையும் சமூக – வரலாற்றுப் பின்னணியுடன் உணர்த்தும் இந்த நூலின் வெளியீட்டு விழாவின் சுருக்கப்பட்ட காணொளி பதிவு !

படிக்க:
கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில் … | டி.எம்.கிருஷ்ணா
எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை

மிருதங்கத்திற்கே இந்த நிலை என்றால் பறைக்கு ?

இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தொல் திருமாவளவன் அவர்கள் பேசுகையில், நூல் ஆசிரியர் டி.எம். கிருஷ்ணா அவர்களின் முயற்சியைப் பாராட்டியும். இசைக் கலைஞருக்கும், இசைக் கருவியை உருவாக்கித் தருபவர்களுக்கும் இடையிலான சமூக இடைவெளியைப் பேசும் இந்நூல், ஒரு சமூக வரலாற்றையும் சேர்த்தே பேசுகிறது. என்றும்.

மேலும் இன்றளவும் பறை என்பது இழிவாகப் பார்க்கப்படும் சமூக அவலத்தையும் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார் தொல். திருமாவளவன்.

திருமாவளவனை ஏன் அழைத்தீர்கள் ? | கேள்வி பதில்

“செபாஸ்டியன் அண்டு சன்ஸ்” நூல் வெளியீட்டு விழா ஏற்கனவே கலாக்ஷேத்ராவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்து பத்திரிக்கையில் இந்நிகழ்வு குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து. கலாக்ஷேத்ரா அனுமதியை இரத்து செய்தது. அதற்கு காரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அழைக்கப்பட்டது தான் என பேசப்பட்டது.

அது குறித்து, கேள்வி – பதில் நிக்ழச்சியை ஒருங்கிணைத்த கவிதா முரளிதரன் அவர்களின் கேள்விகளுக்கு தொல். திருமாவளவன் பதில் அளித்துள்ளார் !

அனைத்து காணொளிகளையும் பகிருங்கள் !

தொகுப்பு:

தமிழர் வரலாறும் பண்பாடும் | நா. வானமாமலை – புதிய தொடர்

3
நா. வானமாமலை

பேராசிரியர் நா.வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் நூலைத் தொடர்ந்து, அவரது முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகளுள் ஒன்றான ”தமிழர் வரலாறும் பண்பாடும்” என்ற இந்நூலை தொடராக வெளியிடுகிறோம். அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகளை தொகுத்து, தனிநூலாக 1966-ம் ஆண்டில் என்.சி.பி.எச். வெளியிட்டிருந்தது.

வரலாறு என்று பள்ளிப் பாடங்களில் சொல்லித்தரப்படும் ”சிற்சில அரசர்கள், கவிஞர்கள், போர்வீரர்கள், அமைச்சர்கள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகள் தான் தமிழ்நாட்டின் முழுமையான சரித்திரமா?” எனக் கேள்வியெழுப்பும் பேராசிரியர் வானமாமலை, ”மனிதன் உலகில் தோன்றிய காலத்திலிருந்து உணவையும், உடையையும், இயற்கையினின்றும் பெற பல முறைகளில் முயன்றிருக்கிறான். அவ்வாறு மனிதன் இயற்கையோடு போராட்டம் நிகழ்த்தும் காலத்தில் இயற்கையின் இயக்க விதிகளை அறிந்து கொண்டு அதனைத் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்து கொள்ளப் பயன்படுத்துகிறான். இவற்றை உற்பத்தி சக்திகள் என்று நாம் அழைக்கிறோம். அவை வளர்ந்து கொண்டே செல்லுகின்றன. அவற்றின் வளர்ச்சியால் மனித சமூகம் மாறுகிறது.” என்ற கோணத்தில் அதாவது மனித சமூகத்தின் வளர்ச்சிப் போக்கிலிருந்து வரலாற்றை அணுக வேண்டுமென்கிறார்.

இத்தகைய மார்க்சிய நோக்கில் சமூகத்தில் மக்கள் எந்தவகையில் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள், உற்பத்திப் பொருள்களை எவ்வாறு தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள், மனிதர்களிடையே எத்தகைய உறவுமுறை பின்பற்றப்படுகிறது என்பதிலிருந்தும் வர்க்கங்களை பற்றிய பார்வையிலிருந்தும் தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் இந்நூலில் உள்ள பல்வேறு கட்டுரைகளில் எடுத்துரைக்கிறார், பேராசிரியர் வானமாமலை.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களில் இந்தத் தொடர் வெளியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் !

தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ! நன்றி !

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 01

பதிப்புரை

பேராசிரியர் நா. வானமாமலை

ண்பர் திரு. நா. வானமாமலை அவர்கள் தமிழக கிராமிய இலக்கியங்களில் நல்ல ஈடுபாடும் புலமையும் பெற்றவர். ‘தமிழர் வரலாறும் பண்பாடும்’ என்ற இவ்வாராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பில் காணப்படும் கட்டுரைகள் சமுதாயத்தை முழுக் கோணத்திலும் ஆராய்ந்து சிறப்புச் செய்கின்றன.

இத்தொகுப்பின் முதல் கட்டுரை சமுதாய மாற்றங்களைப் புதிய அடிப்படையில் அணுகி, ‘தமிழக வரலாறு’ படைக்க வேண்டியதன் அவசியத்தை அழகுற வலியுறுத்துகிறது.

பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்டுகோலாக அமையுமென்று நம்புகிறோம்.

பதிப்பகத்தார்

பண்டைத் தமிழர் வரலாறு தேவை

யர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இன்று இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது. இந்திய வரலாற்றுப் பாடப் புத்தகங்களை நீங்கள் படித்துப் பார்த்தால் பண்டைத் தமிழ் நாட்டின் வரலாற்றுக்கென, பத்துப் பதினைந்து பக்கங்கள் ஒதுக்கப்படிருக்கும். அப்பக்கங்களை வரிவிடாமல் வாசித்தால் கீழ்க்கண்ட செய்திகள் காணப்படும்.

“தமிழ்நாடு இந்திய நாட்டின் தென் பகுதியில் உள்ளதோர் பிரிவு. பழமையான நாகரிகம் படைத்த நாடு. சங்க காலம் எனப்படும் பழமையான காலத்தில் பல நூல்கள் தோன்றின. அவற்றுள் திருக்குறளை இயற்றியவர் வள்ளுவர் என்பார். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் முடியுடை வேந்தர் மூவர் ஆண்டனர். சோழருள் கரிகாலனும் ராஜராஜனும், ராஜேந்திரனும் புகழ் பெற்றவர்கள். சேரருள் செங்குட்டுவன் சிறந்தவன். பாண்டியருள் குறிப்பிடத்தக்கவர் யாருமில்லை. சோழர் பெருவாழ்வு வாழ்ந்த காலத்தில் கம்பன் தோன்றினான். சமணத்தை முறியடித்து சைவ வைணவ மதங்கள் தோன்றின. தமிழ் நாட்டின் வடபிரிவில் பல நூற்றாண்டுகளாக பல்லவர் செங்கோல் செலுத்தினர்.”

இதற்குமேல் தமிழ் நாட்டின் பழம் பெரும் பண்பாட்டைப் பற்றியோ, இலக்கிய வளத்தைப் பற்றியோ, இவ்விரண்டையும் உருவாக்கிய தமிழினத்தவரைப் பற்றியோ, அவர்களது சமூக வாழ்க்கையில் நூற்றாண்டு நூற்றாண்டுகளாக ஏற்பட்டு வந்த மாறுதல்களைப் பற்றியோ, அம்மாறுதல்களுக்குரிய காரணங்கள் எவை என்பன பற்றியோ, இந்நூல்கள் எதுவும் கூறுவதில்லை.

தமிழர் வரலாறு இவ்வளவுதானா; சிற்சில அரசர்கள், கவிஞர்கள், போர்வீரர்கள், அமைச்சர்கள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகள் தான் தமிழ்நாட்டின் முழுமையான சரித்திரமா? தமிழ்நாட்டின் சமூக வாழ்க்கையையும், பண்பாட்டையும், இலக்கிய வளத்தையும் கலைச்செல்வத்தையும், உருவாக்கியவர்கள் குறிப்பிட்ட நூற்றுக்கணக்கான புகழ் பெற்ற மனிதர்கள்தானா என்ற கேள்விகள் தமிழர் வரலாறு பற்றி எழுந்துள்ள சில நூல்களைப் படிக்கும்போது நமக்குத் தோன்றுகின்றன.

தமிழ் நாட்டின் வரலாறு பற்றி இந்திய வரலாற்றுப் பாடப்புத்தகங்களைத் தவிர வேறு பல நூல்கள் சென்ற ஐம்பது ஆண்டுகளில் வெளியாகியுள்ளன என்பதை நான் மறக்கவில்லை. சங்க காலத்தைப் பற்றி ‘1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்’ என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கனகசபைப் பிள்ளையின் நூலும், சமணர்களது ஆதிக்கத்தைப் பற்றி சக்கரவர்த்தி நயினார் அவர்கள் எழுதிய நூல்களும், சோழ வம்சத்தைப் பற்றி கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய நூல்களும், பல்லவர் வரலாறு பற்றி பி.டி. ஸ்ரீனிவாச அய்யங்கார் எழுதிய நூல்களும், இன்னும் பலவும் தமிழாராய்ச்சியாளர்களுக்குப் பழக்கமானவையே. ஆயினும் இவையாவும் முழுமையான தமிழர் வரலாறு ஆகா. குறிப்பிட்ட சரித்திர காலங்களின் நிகழ்ச்சிகளை இவை விவரிக்கின்றன என்பது உண்மையே. ஆனால் தமிழர் சமூகம் எவ்வாறு மாறி வந்துள்ளது என்பதையும், அம்மாறுதல்களுக்கு அடிப்படையான காரணங்கள் யாவை என்பதையும், இந்நூல்கள் சுட்டிக் காட்டவில்லை.

ஆகவே முழுமையான தமிழர் வரலாறு ஒரு புதிய அடிப்படையில் எழுதப்பட வேண்டும்.

இதுவரை பொதுவாக எந்த அடிப்படையில் வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன? ‘பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மகா புருஷர்கள் தோன்றுகிறார்கள், அவர்களே நாட்டின் வரலாற்றை உருவாக்குபவர்கள்’ என்பர் ஒரு சாரார். இக்கொள்கையின்படி இரு மகா புருஷர்கள் தோன்றுவதற்கு இடைப்பட்ட பல நூற்றாண்டுகளில் வாழும் மக்கள் வாயில்லாப் பூச்சிகள் சொல்வதைச் செய்து வாழும் இயந்திரங்கள் ஆட்டி வைக்கிறபடி ஆடுகிறவர்கள். ‘சமூக மாறுதல்கள், சரித்திர மாறுதல்கள் நிகழ்வது தீடீர்ப் பிரளயம் போன்ற புரட்சிகளால்’ என்பர் மற்றோர் சாரார். இப்பிரளயங்கள் யாராலும் உருவாக்க முடியாத எரிமலைகளைப் போல பழைமையைத் தகர்த்து புதுமையை நிறுவுகின்றன என்று தங்கள் கொள்கைக்கு அவர்கள் விரிவுரை கூறுவார்கள்.

படிக்க:
வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் !
வரலாறு : முகலாயர்கள் இந்தியர்கள் இல்லையா ?

இவை செல்லரித்துப் போன கொள்கைகள். மார்க்ஸீயவாதிகள் இக்கொள்கைகளை எதிர்த்துத் தாக்கி முறியடித்து விட்டார்கள். மகா புருஷர்கள் சமூக உணர்வின் சிருஷ்டிகள். அவ்வக்காலச் சமூக உணர்வின் சிறந்த பிரதிநிதிகள் என்ற உண்மையை அவர்கள் நிரூபித்து விட்டார்கள். இதே போல் நம் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் சூட்சுமமான கருவிகள் மூலம் அறியக் கூடிய பல மாறுதல்களின் கடைசி விளைவே பூகம்பமும், எரிமலையின் சீற்றமுமென விஞ்ஞானிகள் முடிவு கட்டியுள்ளார்கள். அதேபோல்தான் சமூக விஞ்ஞானிகளும் படிப்படியான பல சமூக மாறுதல்களின் இறுதிக் கட்டமே புரட்சிகரமான மாறுதல் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஆகையால் மேற்சொன்ன அடிப்படைகளில் தமிழர் வரலாறு என்ற மாளிகையைக் கட்ட முடியாது.

பின் எந்த அடிப்படையில் தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டும்? வாழ்க்கை நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களே, சமூக மாறுதலாகப் பரிணமிக்கின்றன. வாழ்க்கை நிலைமைகள் என்றால் என்ன? மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் உணவு, உடை, உறைவிடம் முதலியன. இம்மூன்றும் இன்றி மனிதன் வாழ முடியாது. மனிதன் உலகில் தோன்றிய காலத்திலிருந்து உணவையும், உடையையும், இயற்கையினின்றும் பெற பல முறைகளில் முயன்றிருக்கிறான். அவ்வாறு மனிதன் இயற்கையோடு போராட்டம் நிகழ்த்தும் காலத்தில் இயற்கையின் இயக்க விதிகளை அறிந்து கொண்டு அதனைத் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்து கொள்ளப் பயன்படுத்துகிறான். இவற்றை உற்பத்தி சக்திகள் என்று நாம் அழைக்கிறோம். அவை வளர்ந்து கொண்டே செல்லுகின்றன. அவற்றின் வளர்ச்சியால் மனித சமூகம் மாறுகிறது. ஆகவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி சரித்திர மாறுதல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு பெறுகிறது. அவற்றின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் அவற்றைத் தமக்கு உடைமையாகக் கொண்ட ஒரு வர்க்கமும், அவற்றைப் பயன்படுத்தி வேலை செய்யும் மற்றொரு வர்க்கமும் தோன்றுகின்றன. இவ்விரு வர்க்கங்களுக்கிடையே இயற்கையில் இருக்கும் முரண்பாடுகள் காரணமாகப் போராட்டம் நிகழ்கிறது. அப்போராட்டங்களின் விளைவாக சமூக மாறுதல்கள் தோன்றுகின்றன.

இவ்வடிப்படையில் தமிழரது சமூக மாறுதல்களைக் கவனிப்போம்.

தமிழர் வாழ்க்கை முதன் முதலில் மலைச் சாரல்களிலே தோன்றிற்று. அப்பொழுது அவர்கள் வேட்டையாடி உணவைப் பெற்றனர். வில், அம்பு, ஈட்டி, கவண்கற்கள் முதலியவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தினர். காய், கனி, கிழங்குகளைத் தேடி அலைந்தனர். மிகச்சிறிய அளவில் புன்செய் பயிர் செய்யவும் அறிந்திருந்தனர். புல் பூண்டுகள், இலைத் தழைகளால் வேயப்பட்ட குடிசைகளில் குடியிருந்தனர். இக்கூட்டத்தார் குறவர், எயினர் எனப்படுவர். அவர் கூட்டுண்டு வாழ்ந்தனர். வேலன் என்ற தெய்வத்தைப் போற்றினர். தம்மைப் போன்ற ஒரு கடவுளை மலைநாட்டு மக்கள் கற்பனையில் உருவாக்கினர். அவர்களுடைய வாழ்க்கையை மிகப் பழமை வாய்ந்த தமிழ் நூல்கள் குறிஞ்சித் திணையில் விவரிக்கின்றன. அவர்களுடைய மண வாழ்க்கையைப் பற்றியும், பொழுது போக்குகளைப் பற்றியும், சிற்சில செய்திகளை சங்க நூல்கள் நமக்கு அறிவிக்கின்றன. புராதன தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையை மேலும் ஆராய்வது அவசியம். அதற்குத் தொல்காப்பியம், பத்துப் பாட்டு, புறநானூறு போன்ற நூல்கள் துணை செய்வன.

இதன் பின்னர் இயற்கையின் கருணையை நம்பி வாழ்ந்த கூட்டத்தார் ஆடு மாடு வளர்க்கத் தொடங்கினர். ஆடு மாடுகளுக்கு வேண்டிய தீனியையும் தங்களுக்கு வேண்டிய உணவையும் பயிர் செய்து பெற முயன்றனர். ஆட்டுத் தோலை உடையாகத் தைத்துக் கொண்டனர். செருப்புத் தைத்துக் கொண்டனர். குழல் என்னும் இன்னிசைக் கருவியைக் கண்டுபிடித்தனர். வேலை செய்த களைப்புத் தீரவும், மழை வளம் வேண்டியும், மால் என்னும் தெய்வத்தை வேண்டிக் கூத்தாடினர். மால் பசு நிலைகளைப் புரக்கும் கடவுள். இவ்வாழ்க்கையை முல்லை நில வாழ்க்கையென்று சங்க நூல்கள் கூறுகின்றன. இவர்களுக்கும் மலை நாட்டு மக்களுக்கும் சிறிதளவு பண்டமாற்று வாணிபம் நிகழ்ந்திருக்க வேண்டும். மலைநாட்டார் தேனும் தினையும் கொடுத்துத் தோலுடையும் கயிறும் பெற்றார்கள். மலைநாட்டினரும், காட்டுச் சாதியினரும், சேர்ந்து விழாக்கள் நடத்துவதுண்டு. அவற்றில் ‘சல்லிக் கட்டு’ என்று இன்று அழைக்கப்படும் ’கொல்லேறு தழுவுதல்’ என்ற விளையாட்டு நடத்தப் பெறும். பாணர், பாணியர் ஆகிய கலைஞர்களது பாட்டும் கூத்தும் நடைபெறும்.

(தொடரும்)

……………………………………………………………………………………………….. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பாதங்கள் சொல்லும் பாடம் !

ந்தக் கால்கள் யாருடையது ? இந்த கால்களைக் கொண்ட மனிதரை சமீபத்தில் கிளினிக்கில் சந்தித்தேன். இந்த கால்களைக் கண்ட மாத்திரத்தில் இவரது கதையை கேட்க வேண்டும் என்று தோன்றினால், இவரது கதையைப் பகிர்கிறேன்.

இதில் நமக்கும் படிப்பினைகள் உண்டு;

இந்த கால்களைக் கண்டதும்… என்ன வேலை செய்கிறீர்கள் ஐயா என்றேன் ?

முதலில் எதுவும் சொல்லாமல் மழுப்பிய அவர் பிறகு “சாக்கடை அள்ளுற வேலை பாக்குறேன் ஐயா…” என்று மிகவும் குறுகிய குரலில் கூறினார்.

நான் கூறினேன் “ஐயா.. துப்புறவுப்பணியாளர்னு சொல்லுங்க. தூய்மைக் காவலர்னு சொல்லுங்க.. சங்கடப்படாதீங்கய்யா” என்றேன்.

50 களில் உள்ள அந்த மனிதர் கடந்த முப்பது வருடங்களாக நகராட்சி துப்புறவு பணியாளராக பணிபுரிகிறார். முப்பது ஆண்டுகள் ஆகியும் நிரந்தர வேலை இல்லாமல் தற்காலிக ஒப்பந்த முறை ஊழியராகவே இருக்கிறார்.

தினமும் 200 ரூபாய்க்குள்ளாகவே வருமானம். ஞாயிறு உட்பட வேலை உண்டு. வேலைக்கு செல்லாவிட்டால் கூலி கிடையாது.

அவரது பிள்ளைகள் பற்றி விசாரித்தேன்.

பையன்கள் மூன்று பேர், பெண்கள் இருவர்..

படிக்க:
அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download
♦ என்ன குற்றம் செய்தாள் இச்சிறுமி ?

அனைவருக்கும் திருமணம் நடந்து பேரன் பேத்திகள் பார்த்து விட்டார். ஆனாலும் தனது பிள்ளைகளில் யாரையும் படிக்க வைக்க முடியவில்லை என்ற கவலை அவருக்கு.

இப்போது பேரன் பேத்திகள் அரசு பள்ளியில் பயில்வதாக கூறினார்.

இதற்கு முன்… அதாவது முப்பது வருடங்களுக்கு முன் என்ன செய்தார் என்று கேட்டேன்.

தனது தாய், தந்தையை தான் நேரில் பார்த்தில்லை என்றும் தான் ஏழு வயதில் இருந்து மைசூரில் உள்ள ஒருவர் தோட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வருவதாகவும் கூறினார்.

சிறிது காலம் கோலார் தங்க வயல்களில் வேலை என அடுத்து தப்பியோடி தமிழகம் வந்து சேர்ந்துள்ளார்.

நான் கேட்டேன்?

ஏன் உங்கள் பிள்ளைகள் படிக்கவில்லை ஐயா?

என் பிள்ளைங்க படிக்குற காலத்துல சோத்துக்கே வழியில்லய்யா.. அதுனால அவய்ங்கல சீக்கிரம் வேலைக்கு போகச்சொல்ல வேண்டியதா போச்சு..

இப்ப என் பேரன் பேத்திக காலத்துல ஓரளவு சோத்துக்கு குறையில்லாம இருக்கோம். அதுனால படிக்க போகுதுங்க. அங்கயே சோறும் போடுறாங்கள்லய்யா.. அதுவும் தான் காரணம்..

“சரிங்கய்யா.. உங்க பேரன் பேத்திகள பனிரென்டாம் வகுப்பு வரை படிக்க வைப்பீங்களா? ”

“ஏனுங்கய்யா.. அதுக்கு மேலயும் படிக்க வைப்பேன். என் பேத்தி ஒன்னு நம்ம கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல மேற்படிப்பு படிக்குதுங்க”

“அருமைங்கய்யா… படிச்சா கொஞ்சம் கொஞ்சமா நம்ம கஷ்டம்லாம் போய்டும்.. தொடர்ந்து பேரன் பேத்திகள படிக்க வைங்க.. அவுங்க படிக்கற வரைக்கும் படிக்கட்டும்.. அதான் சரி”

“கண்டிப்பா படிக்க வைப்போம்யா.. எத்தன நாளைக்கு தான் இந்த வேலையே பாக்குறதுங்கய்யா…”

“…………”

நான் நினைத்துக்கொண்டேன்

படிக்க:
WHO : இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கு பத்தாண்டு ஊதியத்தை ஒதுக்க வேண்டும் !
♦ நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி

நீட் மட்டும் இல்லாமல் இருந்தால் இவருடைய பேரன் பேத்திகளில் கூட ஒருவர் மருத்துவராகியிருக்க முடியும்…

மீண்டும் நினைத்தேன்

நீட் ஒருநாள் இல்லாமல் போனால்
இவருடைய பேத்திகள் பேரன்களில் யாரோ ஒருவர் மருத்துவர் ஆகக் கூடும்.

நீட் ஒழிந்தது என்ற நாள்
என் வாழ்வில் கொண்டாட்டத்துடன் இருக்கும்.

நீட் ஒரு சமூக நீதிக்கொல்லி

விடை தேடும் வினாக்களாய்
நம்முடன் நிற்கின்றன
நனவாகும் கனாக்கள்….

கனவுடன் 😌

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

நூல் அறிமுகம் : வேதாந்தத்தின் கலாசார அரசியல்

வேதாந்தம் இந்திய வைதீகத்தின் முதன்மையான தத்துவம். வேதாந்தம் உபநிடதங்களில் தோற்றம் பெற்றது. பிரம்மசூத்திரம், பகவத்கீதை ஆகியவற்றின் வழி அது முழு உருப்பெற்றது. இடைக்கால இந்தியாவில் சங்கரர், ராமானுஜர், மத்வர், நிம்பர்கர், பாஸ்கரர் போன்ற பல உரையாசிரியர்கள் மூலம் அது பல புதிய வடிவங்களைப் பெற்றது. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் என்று பல போக்குகளாக அது பிரிந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வேதாந்தம் மீண்டும் இந்திய வைதீக மீட்டுருவாக்கத்தில் பங்கேற்றது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் தத்துவம் என்ற முகத்தையும் அது ஒரு கட்டத்தில் பெற்றது. இருபதாம் நூற்றாண்டில் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் போன்ற கல்வியாளர்களாலும் காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற மடாதிபதிகளாலும் புது விளக்கங்களைப் பெற்றது.

இவ்வாறாக, நீண்ட நெடிய இந்திய வரலாற்றில் வேதாந்தம் பலவகையாக தனது கலாசார அரசியலை நடத்தி வந்துள்ளது. இன்றைய இந்துத்துவச் சூழல்களில் வேதாந்தத்தின் வேர்களையும் வெவ்வேறு காலகட்டங்களில் அதன் புது உருவங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வேதாந்தத்தின் கலாசார அரசியல் எனும் இச்சிறு நூல் அந்நோக்கத்தையே முன்னிறுத்துகிறது.

இந்திய வைதீகத்தின் முதல் நூல்கள் வேதங்கள். ரிக், யஜூர், சாம, அதர்வணம் என அவை நால் வகைப்படும். இவை தத்துவ நூல்கள் அல்ல; சடங்கியல் நூல்கள். வேதகால ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்னரே இவற்றில் பலயாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆரிய நாடோடி இனக்குழுக்கள் யக்ஞங்களை மையப்படுத்தி இயற்றிய சடங்குப் பாடல்களே வேதங்கள். யக்ஞங்கள், அவற்றில் ஏற்றப்படும் நெருப்பு (அக்னி), யக்ஞங்களில் பாடப்படும் பாடல்கள் (மந்திரங்கள்), பாடல்களில் அழைக்கப்படும் வானத்து தெய்வங்களான இந்திரன், வர்ணன், வாயு, சூரியன், சந்திரன், அஸ்வினி, மாருதி போன்றோர் என்பதாக வேதங்களின் உள்கட்டமைப்பு அமைந்திருந்தது. யக்ஞம், அக்னி, மந்திரங்கள் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கும் சமூகப் பிரிவினராக பிராமணர் என்ற முதல்வர்ணம் ஆரிய இனக்குழு மக்களிடையில் தோன்றியிருக்க வேண்டும்.

வேதகால ஆரியர்கள் வடமேற்கு இந்தியா வழியாக உள்ளே நுழைந்து, அங்குமிங்குமாக சில காலம் அலைந்து, இறுதியில் யமுனை நதிக்கும் மேற்கு கங்கைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதிகளில் குடியேறினார்கள். இறக்கை கட்டிய வெறும் வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் இல்லாத ஆரிய இனக்குழுக்கள் கங்கை – யமுனை நதிக்கரைகளில் நிலைத்த வாழ்க்கையைத் தொடங்கின.

கங்கை – யமுனைக் கரைகளில் வாழத் தொடங்கிய அக்காலத்தில்தான் ஆரியர்கள் தமது வேதப் பாடல்களுக்குப் புனிதத் தன்மையை ஏற்றத் தொடங்கினார்கள். வேதங்கள் மனிதர்களால் இயற்றப்பட்டவை அல்ல என்றும் அவை தேவ ரிஷிகளால் கேட்கப்பட்டவை’ (சுருதி) என்றும் அறிவிக்கத் தொடங்கினர். ‘அபௌருஷ்ய’ என்ற சொல்லால் வேதங்களைக் குறிக்கத் தொடங்கினார்கள். அபௌருஷ்ய எனில் “மனிதத் தன்மை அற்ற” என்ற பொருள். அதாவது, வேதங்கள் தெய்வத் தன்மை கொண்டவை என்ற அலங்காரச் சொல் வேதங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது. வேதங்களுக்கு இப்படிப்பட்ட புனிதத்தன்மை ஏற்றப்பட்டது ஏன்? (நூலிலிருந்து பக்.3-4)

… பக்தி தென்னாட்டில் தோன்றியது என்று சில பிற்கால புராணங்கள் குறிப்பிடுகின்றன. பக்தி எனும் பெண் தாமிரபரணி நதிக்கரையில் தோன்றி, தனது இரு பிள்ளைகளுடன் முதலில் வடமேற்கு இந்தியாவிலும் பின்னர் வட இந்தியாவிலும் பரவிச் சென்றாள் என்று அவை குறிப்பிடுகின்றன. தென்னாடு, வங்காளம் ஆகிய இடங்களில் அதிக எச்சங்கள் காணப்படும் சைவசமயத்தின் சிவன் வைதீக மரபால் ஆரம்பத்தில் பெரிதும் புறக்கணிக்கப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. சிவன் தோலை ஆடையாக அணிந்தவன். தோல் கருவியான உடுக்கை ஏந்தியவன், இடுகாடு சுடுகாடு ஆகியவற்றில் அலைபவன், அவன் மகாயோகி, வைத்தீஸ்வரன், பூத கணங்களின் தலைவன் என்பன போன்ற அடையாளங்கள் எல்லாம் அவனை வைதீக மரபுக்கு வெளியில் நிறுத்தி வைக்கின்றன. வேத கேள்விகளின் அவிர்பாகம் பலமுறை மறுக்கப்பட்ட தெய்வம் சிவன். பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் கொண்டவன் சிவன். பக்தி ஒரு சூத்திர மரபு எனக் கூறி ஆரம்ப காலம் தொட்டு வைதீகமரபு அதனை ஒதுக்கி வைத்தது. ஆனால், பக்தியின் வெகுசன செல்வாக்கு வேதாந்தத்திற்கு அதனைத் தவிர்க்க முடியாததாக்கியது.

பக்தியை வேதாந்தம் உள்வாங்கத் தொடங்கியதன் முதல் குறிப்புகளைப் பகவத்கீதையில் காணுகின்றோம். பக்தி வேதாந்தம் வடக்கில் பகவத்கீதையிலிருந்து தொடங்கியது எனக் கூறலாம். பகவத் கீதை பிரம்மத்தை விஷ்ணுவோடு சமப்படுத்துகிறது. விஷ்ணுவை உணர்ச்சிவசப்பட்டு பணிந்து வணங்குதல், வழிபடுதல் ஆகியவையே பக்தி என அது விளக்குகிறது. “எந்தெந்த வடிவில் இறைவனை வணங்கினாலும் எல்லா வழிபாடுகளும் இறுதியில் என்னையே வந்து சேருகின்றன” என்ற அகலமான அணுகுமுறையை விஷ்ணு பகவத்கீதையில் முன்வைக்கிறார். இது தாராளத்தன்மை கொண்டதாகக் காட்சியளிக்கும். ஆனால் ஏராளமான வட்டார வழிபாடுகளைச் செரித்து அகப்படுத்தும் ஒரு பேரிறைக் கொள்கை. அத்தோடு பகவத்கீதையின் புதிய ஏற்பாடான அவதாரக் கொள்கையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் இறைவனின் முன் தம்மை முழுவதும் இழந்து சராணாகதி அடைதல் என்ற கோட்பாடும் கீதையில் பேசப்படுகிறது. (நூலிலிருந்து பக். 33-34)

டி.டி.கோசாம்பி.

… இந்திய நில உடமை மேலிருந்தும் கீழிருந்தும் இருவகையாகக் கட்டி எழுப்பப்பட்டன என்று டி.டி.கோசாம்பியும் குறிப்பிடுவார். “மேலிருந்து” என்பதை பிராமணியத்தன்மை கொண்டிருந்த மேட்டுக்குடிக் கருத்தியல்களிலிருந்து பரவிய சாதிய அமைப்பு முறை என்று புரிந்துகொள்ள வேண்டும். பக்தி இயக்கம் வேதாந்தமயப்படுத்தப்படுவதை, வெகுசனங்களுக்குள் சாதியம் திணிக்கப்படுவதை “மேலிருந்து” உருவாக்கப்பட்ட நில உடமை எனப் புரிந்து கொள்ள வேண்டும். உழவுத் தொழிலின் பரவலால் நில உடமை தோன்றுவதையும் வட்டார மேட்டுக்குடிகள் உருவாவதையும் “கீழிருந்து” தோன்றிய நில உடமை எனக் கொள்ளல் வேண்டும். பக்தி இயக்கம் மடங்களின் தலைமையை ஏற்பதும், கோயில் பொருளாதாரத்தின் தோற்றமும் “கீழிருந்து” தோன்றிய நில உடமை முறையின் அடையாளங்களாகும். திருத்தொண்டர்களின் வைசம் இக்காலத்தில் சித்தாந்த சைவமாக நிறுவனப்படுகிறது. உழவுத்தொழில் சார்ந்த வேளாளர் வட்டங்கள் இக்காலத்தில் சைவ வேளாளராகவும் அசைவ வேளாளராகவும் இரண்டுபட்டனர். வைதீகம் முன்மொழிந்த சாதிமுறைமை இப்போது இவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. இது கீழிருந்து தோன்றிய நிலப்பிரபுத்துவம்.

படிக்க:
வரலாறு: ம.க.இ.க.வின் கிடா வெட்டும் போராட்டம்
கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !

வேதாந்தத்திற்கு வெகுசன வடிவம் ஏன் தேவைப்பட்டது? வேதாந்தம் என்பது ஒருவகை சமூக உறவின் கருத்தியல் வடிவம். பிராமணர்களின் சுதர்மத்தையும் பிற மக்கள் கூட்டங்களின் சுதர்மங்களையும் வரையறுத்துக் காட்டும் கருத்தியல் அது. வெவ்வேறு சமூக வர்க்கங்களுக்கிடையில் கலாசாரத் தடைகளைக்கொண்ட ஏற்பாடு அது. தமதுசுதர்மத்தைக் காத்துக்கொள்ள பிறரது சுதர்மங்களை நிர்ணயித்த ஏற்பாடு அது. வேதாந்தத்தின் வெகுசன வடிவம் வருண – சாதி அமைப்பு குறித்த வெகுசன அங்கீகாரம். வேதாந்தத்தின் வெகுசன வடிவம் சைவத்திற்கு எதிராகவும் பழங்குடிகளுக்கு எதிராகவும் வெகுசனங்களைத் திரட்டுவதற்கும் உதவுவது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து வேதாந்தத்தின் வெகுசன வடிவம் “இந்து” என்ற புதிய பேரடையாளம் ஒன்றை உருவாக்கியது. இது இந்து தேசியம் என்ற நேரடிவடிவிலும் இந்திய தேசியம் என்ற மறைமுக வடிவிலும் தொழில்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மேற்கத்தியப் பண்பாடு, விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோருக்கு எதிரான வெகுசனத் திரட்சிக்கும் இது பயன்பட்டிருக்கிறது. (நூலிலிருந்து பக்.39-40)

நூல் : வேதாந்தத்தின் கலாசார அரசியல்
ஆசிரியர் : ந.முத்துமோகன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 40
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam

கருத்துக் கணிப்பு : சி.ஏ.ஏ-வுக்கு ரஜினி ஆதரவு சரியா தவறா ?

கருத்துக் கணிப்பு : சி.ஏ.ஏ-வுக்கு ரஜினி ஆதரவு சரியா தவறா ?

விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடக்கிறது. ரஜினிக்கோ வருமான வரி வழக்கிலிருந்து விடுதலை. கந்து வட்டிக் கடனால் சம்பாதித்ததை ஏற்றுக் கொண்ட மத்திய அரசுக்கு நன்றிக் கடனோடு வீட்டு வாசலில் போற்றி புராணம் பாடுகிறார். சிஏஏ-வை ஆதரிக்கிறார். முஸ்லீம்களுக்கு ஆபத்தில்லை என்கிறார். மாணவர்கள் பெரியவர்களிடம் விசயங்களை தெரிந்து கொண்டால் போராட மாட்டார்கள் என்கிறார்.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால் வாழ்க்கை முடிந்து விடுமென்று மாணவர்களை அச்சுறுத்துகிறார். பணமதிப்பழிப்போ, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமோ, சிஏஏ எதிர்ப்பு போராட்டமோ உடனே பாஜக சார்பில் கூப்பிடாமலேயே ஆஜராகிறார் ரஜினி. ஆன்மீக அரசியல் என்றால் அதில் காவி பஜனை இல்லாமலா போகும்?

 

இன்றைய கேள்வி :

சி.ஏ.ஏ.-வை ரஜினி ஆதரிப்பது…

♦ கண்டிக்கத்தக்கது
♦ வரவேற்கத்தக்கது

வாக்களியுங்கள் !

முகநூலில் வாக்களிக்க :

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூபில் வாக்களிக்க :

இங்கே அழுத்தவும்

அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download

அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா? மாநில உரிமை பறிப்பா?

ந்திய உயர்கல்வி நிறுவனங்களை குறிவைத்து மோடி அரசு கொண்டுவந்துள்ள Institute of Eminence – IoE திட்டம் குறித்தும்; குறிப்பாக தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் அண்ணா பல்கலை தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்தும் விளக்கி தொடர்ச்சியாக கருத்தரங்குகளை நடத்திவரும் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவினர் (Coordination Committee for Common Education – CCCE) சிறு நூல் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

இத்திட்டம் மற்றும் அதன் அபாயங்கள் குறித்து அடிப்படையான புரிதலை வழங்குகிறது, இச்சிறுநூல். கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட வெகுமக்களிடம் இவை குறித்த விழிப்புணர்வு சென்றடைய வேண்டுமென்ற நோக்கில்,  CCCE அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அந்நூலின் மொத்தப் பகுதியையும் இங்கே பதிவிடுகிறோம். படியுங்கள்! பகிருங்கள்!!

பி.டி.எஃப் கோப்பாக தரவிறக்கம் செய்ய :

அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா? மாநில உரிமை பறிப்பா?

ண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் (Institute of Eminence – IoE) என்ற சிறப்புத் தகுதியைப் பெறுவதையொட்டி பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு ‘கல்வியாளர்களான’ ஐந்து அமைச்சர்கள் மற்றும் மூன்று செயலாளர்களை கொண்ட ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது . இக்குழு அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களை (CEG, ACT, SAP, MIT) மட்டும் தனியாக பிரிப்பது மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க புதிய பல்கலைக்கழகத்தை தொடங்குவது தொடர்பான பரிந்துரைகளை தமிழக அரசுக்கு வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்திய உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தர வரிசைப் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டுமென்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு IoE என்ற திட்டத்தை 2016 ஆம் ஆண்டு மோடி அரசு அறிவித்தது. அதன்படி இந்தியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில், 10 அரசு மற்றும் 10 தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் என 20 உயர்கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவைகளை உலகத்தர வரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் கொண்டு செல்வதே இத்திட்டத்தின் இலக்கு. இதற்கென புதிய விதிமுறைகளை 2017 ஆம் ஆண்டு, UGC (Institutions of Eminence Deemed to be Universities) Regulations, 2017, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டது. அத்திட்டத்தின் கீழ் அண்ணா பல்கலைக்கழகமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசிடமிருந்து நிதிப்பங்களிப்பு தொடர்பான ஒப்புதல் கிடைத்த உடன் உயர் சிறப்புத் கல்வி நிறுவனம் (Institute ofEminence – IoE) என்ற சிறப்புத் தகுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் என மனிதவள மேம்பாட்டு

அமைச்சகம் அறிவித்தது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கி இரண்டாகப் பிரித்தால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் என்று கல்வியாளர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் அச்சம் தெரிவிக்கிறனர். ஆனால், இதுகுறித்து எந்தவித கவலையும் இன்றி ஐந்து அமைச்சர்களைக் கொண்ட குழுவை அமைத்து சிறப்புத் தகுதி பெறுவதற்கான வேலைகளை முடுக்கியுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் அண்ணா பல்கலைக்கழகம்

IoE – இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 உயர்கல்வி நிறுவனங்களையும் நிர்வகிப்பதற்கு Empowered Expert Committee – EEC என்ற குழுவை மோடி அரசு உருவாக்கியுள்ளது. இக்குழு loE – இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பல்கலைக்கழகங்களின் ஆண்டு வரவு-செலவு கணக்கை பார்வையிடுவது; ஒவ்வொரு வருடமும் இப்பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்துள்ளனவா எனச் சோதித்தறிவது; இதில் தவறுகின்ற பல்கலைக்கழகங்களுக்கு அபராதங்களை நிர்ணயிப்பது போன்ற பணிகளை செய்யும். இதில் மாநில அரசுக்கோ பல்கலைக்கழக மானியக் குழுவிற்கோ எவ்வித அதிகாரமும் கிடையாது. EEC உறுப்பினர்கள் உயர் பதவிகளுக்கான நியமனம் தொடர்பான கேபினட் கமிட்டியினால் (Appointment Committee of Cabinet – ACC) நியமிக்கப்படுவார்கள். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை உறுப்பினர்களாக கொண்ட ACC கமிட்டியானது இந்திய அரசின் உயர் பதவிகளுக்கான அதிகாரிகளை பரிந்துரைக்கும் அமைப்பாகும். உதாரணமாக ரிசர்வ் வங்கியின் கவர்னர், பாதுகாப்புக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (DRDO) தலைவர் போன்றவர்கள் இக்குழுவாலே நியமிக்கப்படுகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகம் மோடி மற்றும் அமித்ஷா – வின் கட்டுப்பாட்டின் கீழ் செல்கிறது என்றே சொல்லலாம். EEC – இன் தற்போதைய தலைவராக RSS ஆதரவாளரான முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான் சமஸ்கிருதத்தையும் வேத-புராண குப்பைகளையும் கல்லூரிகளில் கட்டாய பாடமாக வைக்க பரிந்துரைத்தவர். மேலும் இரு அமெரிக்க பேராசிரியர்கள் உறுப்பினராக உள்ளனர்.

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் 1978-ல் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசினுடைய பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நிதியுதவிகளின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் உயர்நிலையை எட்டியுள்ளது. மேலும் தமிழ்நாட்டினுடைய சமூக – பொருளாதார வளர்ச்சியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். தற்போது மத்திய அரசு ‘உலகத் தரம்’ என்ற போர்வையில் அண்ணா பல்கலைக்கழகத்தை பறித்துக்கொள்ள முயற்சிக்கிறது. இது பற்றி எவ்விதக் கவலையும் கொள்ளாத அடிமை எடப்பாடி அரசோ அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்ப்பதற்கான வேலைகளை மறைமுகமாக செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல், நீட் தேர்வு பற்றிய உண்மைகளை மறைத்ததைப் போல அண்ணா பல்கலைக்கழக விசயத்திலும் உண்மைகளை மறைத்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் பல்கலைக்கழகம் இருக்கும் என்று மக்களிடம் பொய் சொல்லிவருகிறது.

எங்கிருந்து 1,750 கோடியை ஒதுக்குவது?

சிறப்புத் தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 8 மத்திய அரசினுடையது 2 மாநில அரசினுடையது. ஒன்று அண்ணா பல்கலைக்கழகம் மற்றொன்று மேற்கு வங்காளத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம். மாநில பல்கலைக்கழகங்களை பொறுத்தவரை பல்கலைக்கழக தர மேம்பாட்டிற்கு மாநில அரசும் நிதி பங்களிப்பு செய்ய வேண்டுமென்ற புதிய நிபந்தனையை மத்திய அரசு விதித்துள்ளது. இவ்விரு பல்கலைக்கழகங்களும் IoE – இல் சொல்லப்பட்டுள்ள இலக்கை அடைய 2000 கோடிக்கு மேல் நிதி தேவை என இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டது (ஆகஸ்டு 11, 2019). எனவே, மத்திய அரசு தருகின்ற 1000 கோடிக்கு மேல் செலவாகும் தொகையை மாநில அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது பெரும் நிதிச் சுமை என்பதால் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வேண்டாம் என மேற்குவங்க அரசு அறிவித்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தினை மேம்படுத்த 2750 கோடி நிதி தேவை. மத்திய அரசின் நிதியுதவி போக மீதமுள்ள 1750 கோடியை தமிழக அரசுதான் வழங்க வேண்டும். அதாவது வருடத்திற்கு 300 கோடியிலிருந்து 400 கோடி ரூபாய் தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே நிதி ஒதுக்க வேண்டும்.

தமிழக உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் 98 அரசு கலைக் கல்லூரிகள் 39 உறுப்புக் கல்லூரிகள் 161 அரசு உதவி பெறும் கல்லூரிகள் என 300-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவைகளை நிர்வகிக்கும் உயர்கல்வித் துறைக்கு கடந்த ஆண்டு 4584.10 கோடியை தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது.

இதில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம், புதியக் கட்டிடங்கள் மற்றும் ஆய்வக செலவினங்கள் போக பல்கலைக்கழக மேம்பாட்டிற்காக வழங்கப்படும் தொகுப்பு நல்கைத் தொகையாக (Block grant) 13 பல்கலைக்கழகங்களுக்கும் சேர்த்து 538.10 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மிகக்குறைவானதாகும். தற்போதைய நிலையில் பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளதாக தமிழக அரசே ஒப்புக்கொள்கிறது. திவாலாகும் நிலையில் உள்ள சென்னை பல்கலைக்கழகமே இதற்கு சிறந்த உதாரணம். அரசு ஒதுக்குகின்ற நிதிப் போதாமையால் மாணவர்களிடமிருந்து அதிக கல்விக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் வசூலிப்பதன் மூலமே பல்கலைக்கழகங்கள் தங்களின் செலவை ஈடுகட்டுகின்றன.

மேலும் கடந்த நான்கு வருடங்களாக தமிழக அரசு அறிவித்த புதிய அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் புதிய பாடப்பிரிவுகளுக்கான கட்டிடங்கள், ஆய்வகங்கள் மற்றும் பேராசிரியர்கள் நியமனங்கள் போன்ற அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் சிறப்புத் தகுதி என்ற பெயரில் 1750 கோடிக்கு மேல் நிதி வழங்க தமிழக அரசு ஆர்வம் காட்டிவருகிறது. இதற்கான நிதி எவ்வாறு திரட்ட முடியும்? மற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைப்பதன் மூலமும் மாணவர்களின் கட்டணங்களை அதிகரிப்பதன் மூலமுமே இந்த நிதியை திரட்டப் போகிறார்கள் என்பதே உண்மை .

நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை

IoE தகுதி பெற்ற பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு மாணவர் எண்ணிக்கையில் 30% வெளிநாட்டு மாணவர்களை அனுமதித்துக் கொள்ளலாம். பேராசிரியர் நியமனங்களில் 25% வரை வெளிநாட்டு பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம்; மாணவர் சேர்க்கை முற்றிலும் திறமை அடிப்படையிலேயே (merit based system) இருக்க வேண்டும் அதற்கான முறையை பல்கலைக்கழகமே தீர்மானித்துக் கொள்ளலாம் என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

IoE இன் நோக்கமே இருபது பல்கலைக்கழகங்களும் உலகத் தர வரிசைப்பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் வரவேண்டும் என்பதுதான். எனவே தமிழகம் மட்டுமில்லாது பிற மாநிலங்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் அனுமதித்தாக வேண்டும். ஆனால் தமிழகத்தில் 69% இடதுக்கீடு உள்ளது. மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது. இந்நிலையில் மற்ற மாநிலத்தவர்களையும் அனுமதித்தால் எதனடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துவார்கள்? நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதே மத்திய அரசு கடைபிடித்துவரும் நடைமுறை. எனவே அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.களில் உள்ளது போல இந்திய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மேலும் நீட் தேர்வை போல பொறியியல் படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என மோடி அரசு கூறிவருவதை பொருத்திப் பார்த்தால் இந்த அபாயம் புரியும்.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. படிக்கின்ற மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கிராமப்புற, சமுதாய பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மற்றும் விவசாய குடும்ப சூழலில் இருந்து வந்தவர்கள். நீட் தேர்வைப் போல நுழைவுத்தேர்வு முறை அமல்படுத்தப்பட்டால் பயிற்சி வகுப்புகளுக்கு பல இலட்சங்களை கட்டி படிக்கக்கூடிய வசதி உல்ளவர்கள் மட்டுமே வருங்காலங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க முடியும். இந்த “சிறப்புத் தகுதி” வாயிலாக ஏழை, கிராமப்புற மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். திறமை என்ற போர்வையில் ஐ.ஐ.டி.களைப் போல பணம் உள்ளவர்களுக்கே அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி என்ற நிலை உருவாகும். மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு எவ்விதமான அநீதியை தமிழக மாணவர்களுக்கு செய்ததோ அதுபோன்றதொரு அநீதியை தற்போது ‘சிறப்புத் தகுதி’ என்ற பெயரில் பொறியியல் படிப்பிற்கும் மோடி – எடப்பாடி அரசுகள் செய்ய முயல்கிறது.

69% இடஒதுக்கீட்டுக்கு வேட்டு

மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் பணிநியமனங்களில் 69% இடஒதுக்கீடு தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இது மற்ற மாநிலங்களிலுள்ள இடஒதுக்கீட்டு அளவை விட அதிகமாகும். மேலும் உள் இடஓதுக்கீடும் தமிழகத்தில் உள்ளது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலோ 49.5% இடஒதுக்கீடு மட்டுமே நடைமுறையில் உள்ளது. சிறப்புத் தகுதியின் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செல்வதாலும் பிற மாநில மாணவர்களை அனுமதிப்பது கட்டயம் என்பதாலும் முழுமையாக 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது. மொத்த மாணவர் எண்ணிக்கையில் ஒரு சிறு பகுதியை தமிழகத்திற்கு ஒதுக்குவார்கள். அல்லது மொத்தமாக மத்திய அரசினுடைய 49.5% இடஒதுக்கீட்டையே நடைமுறைப்படுத்துவது என்ற வகையில் இடஒதுக்கீடு இருக்கும்.

பேராசிரியர் பணிநியமனத்தில் 69% இடஒதுக்கீட்டை பின்பற்றுவதற்கும் வாய்ப்புகள் குறைவாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தது. (THE CENTRAL EDUCATIONAL INSTITUTIONS (RESERVATION IN TEACHERS’ CADRE) ACT, 2019). அதன்படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் அல்லது Potential for Excellence மற்றும் சிறப்புத் தகுதி வழங்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொண்டுவந்த இடஒதுக்கீடு திருத்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனங்கள் தங்களின் இலக்கை அடைய ‘திறமை’ அடிப்படையில் பணிநியமனம் செய்துக் கொள்ளலாம். அதனால்தான் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது இன்றுவரை சவாலாக உள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்திற்கு IoE என்ற சிறப்புத் தகுதி வழங்கப்படுவதினால், உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்குள் வருவதற்கு ‘திறமை’ அடிப்படையில் பேராசிரியர்களை நியமிப்பது கட்டாயமாக்கப்படும். ஆகவே பேராசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை நீக்கப்பட்டு ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.களைப் போல ‘திறமை’ என்ற போர்வையில் பார்ப்பனர்களோ, வெளிநாட்டு வாழ் இந்தியர்களோ (NRI) அல்லது தொழிற்சாலையில் அனுபவம் பெற்றவர்களோதான் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். உண்மை இப்படி இருக்க தமிழக உயர்கல்வித்துறை செயலாளரோ 69% இடஒதுக்கீட்டுக்கு சிக்கல் வராது என மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக சொல்லி நயவஞ்சக நாடகமாடுகிறார்.

பல மடங்கு உயரும் கல்விக் கட்டணம் சிறப்புத் உயர்நிலை பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அக்கல்வி நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் அதில் அரசு தலையிடாது என விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை மாநில அரசே தீர்மானிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் 29,000 ரூபாயாகவும், முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான ஆண்டு கல்விக் கட்டணம் 50,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கப்படுவதினால் கல்விக் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படும். இக்கல்லூரிகளுக்கு முழுமையான நிதி தன்னாட்சி (Financial autonomy) வழங்கப்படுவதினால் அக்கல்வி நிறுவனங்களே தங்களுக்கு தேவையான நிதியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒருமுறை வழங்கக்கூடிய நிதியை தாண்டி மத்திய மாநில அரசுகள் நிதி உதவி செய்யாது. இதுவே நிதி தன்னாட்சிக்கான அடிப்படையாகும். சிறப்பு உயர்நிலை பெறும் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் நிதியைக் கொண்டு புதிய கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பேராசிரியர்களுக்கான சம்பளம், பேராசிரியர்களுக்கான ஊக்கத்தொகை, பல்கலைக்கழக பராமரிப்புச் செலவுகள் மற்றும் கடனை செலுத்துவது (HEFA loan) ஆகியவற்றுக்கான நிதியை மாணவர்களின் கல்விக்கட்டணம் மற்றும் ஆராய்ச்சிலிருந்து பெறப்படும் வருமானம் ஆகியவற்றிலிருந்து திரட்டிக்கொள்ள வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு.

இதனை தேசிய முக்கியத்துவம் கொண்ட கல்லூரிகளான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்.- களில் அமல்படுத்தி வருகின்றன. உதாரணமாக கடந்த பத்து வருடங்களில் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.களில் B.Tech படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் 25,000 லிருந்து 2 இலட்சமாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் M.Tech படிப்பிற்கான கல்விக்கட்டணம் 20,000 இலிருந்து 2 இலட்சமாக IT Council உயர்த்தியது. கடந்த ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட 2019-2024 ஆண்டிற்கான செயல்திட்ட அறிக்கையில் B.Tech கல்விக்கட்டணத்தை 4 இலட்சமாக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.சிறப்புத் தகுதி பெற்ற கல்லூரிகளுக்கு நிதி தன்னாட்சி கட்டாயம் என்பதால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் கல்விக்கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகும். தற்போது 30000 ரூபாயாக உள்ளகல்விக்கட்டணம் சில வருடங்களுக்குள் 3 இலட்சமாக உயரும் அபாயம் உள்ளது.

யார் நலனுக்காக ‘சிறப்புத் தகுதி’?

சிறப்புத் தகுதியின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படுவதினால் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகம் பயனடைவார்கள் என்று ஆட்சியாளர்கள் வாதாடுகின்றனர். இந்த வார்த்தைகளுக்கு சிலர் பலியாகின்றார்கள்.

ஆனால் பொது நுழைவுதேர்வு, 69% இடஒதுக்கீடு நீக்கப்படுவது, அதீத கல்விக்கட்டணம், மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவது போன்ற பேராபத்துகள் எந்த வகையில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நன்மை செய்யும். அரசு சொல்வதைக் கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கின்றனர். தரமான இலவச உயர் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இங்கே ‘தரம்’ என்ற போர்வையில் கிராமப்புற, சமுதாய – பொருளாதார நிலைகளில் பிந்தங்கிய சூழலில் இருந்து வரக்கூடிய மாணவர்களை பொறியியல் கல்வியில் இருந்தே வெளியேற்றுக்கின்ற சதித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உலகத் தரம் என்ற போர்வையில் யாருடைய நலனுக்காக இது கொண்டு வரப்படுகிறது?

கடந்த பத்து வருட காலமாகவே இந்திய பல்கலைக் கழகங்களை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவது என்ற பெயரில் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக மோடி ஆட்சியில் அந்நடவடிக்கைகள் எல்லாம் (GAIN, IDE, NIRF, SWAYAM, Study in India, SPARC, PMRF, IMPRINT) செயல் வடிவம் பெற்றுவருகின்றன. அதில் ஒன்றுதான் சிறப்புத் தகுதி எனும் IOE  திட்டமும். இந்திய பல்கலைக்கழகங்களை வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கக் கூடிய சந்தையாக மாற்றுவதும் அதன் மூலம் கொள்ளை இலாபமீட்டுவதுமே இவர்களின் நோக்கம்.

உலக தரவரிசைப் பட்டியலில் முதல் 100 பல்கலைக் கழகங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. இப்பல்கலைக்கழகங்களில் இலட்சக்கனக்கான வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். இம்மாணவர்களின் மூலம் பல்லாயிரம் கோடிகளை அப்பல்கலைக்கழகங்கள் வருவாயாக ஈட்டுகின்றனர். உதாரணமாக அமெரிக்காவில் மட்டும் 10 இலட்சம் வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி படிக்கின்றனர். இதன் மூலம் 44.7 பில்லியன் டாலர் (3.19 லட்சம் கோடி) வருவாய் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு கிடைக்கிறது (பிஸினெஸ் டுடே, நவம்பர் 18, 2019). இதில் 2 இலட்சம் இந்திய மாணவர்களும் அடக்கம். கல்விக்கட்டணங்கள் மற்றும் இதர செலவுகள் மூலம் இந்திய மாணவர்கள் மட்டும் ஒவ்வொரு வருடமும் 30 ஆயிரம் கோடிக்கு மேல் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கின்றனர்.

இவ்வருவாயின் பெரும் பகுதி அமெரிக்காவிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரி முதலாளிகளின் பைகளுக்கே செல்கின்றன. தரமான உயர்கல்வி என்ற போர்வையிலேயே அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் பின்தங்கிய நாடுகளிலிருந்து மாணவர்களை ஈர்ப்பதன் மூலம் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன. இதற்காகவே பல்கலைக்கழகங்களுக்கான தரப்பட்டியலும் தயாரிக்கப்படுகிறது. இப்பல்கலைக்கழக உலக தரவரிசையை தனியார் தரமதிப்பீட்டு நிறுவனங்களே (TIMES Ranking, QS Ranking) நிர்ணயிக்கின்றன. இந்நிறுவனங்கள் நிதிமூலதனங்களோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவை. உதாரணமாக TIMES நிறுவனமானது அமெரிக்காவிலுள்ள TPG Capital என்ற தனியார் முதலீட்டு (private equity) நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். பல்கலைக்கழகத்தின் தரத்தினை நிர்ணயிப்பதற்காக இந்நிறுவனங்கள் வகுத்துள்ள அளவுகோல்கள் பெரும்பாலும் ஆராய்ச்சிக் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஆராய்ச்சி கட்டுரை வெளியிடும் பதிப்பகத்தார், பன்னாட்டு கல்வி முதலாளிகள், தனியார் முதலீட்டு நிறுவனங்கள் ஆகியோரின் நலன்களில் இருந்தே வகுக்கப்படுகிறது.

இந்தியாவிலும் உயர்கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அவற்றை உலகத்தர வரிசை பட்டியலில் முதல் 200 இடங்களுக்குள் கொண்டு வருவதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சார்க் நாடுகளிலிருந்து மாணவர்களை இந்தியாவில் உயர்கல்வி படிக்க ஈர்ப்பதன் வாயிலாக அதிக லாபம் ஈட்டமுடியும் என்ற நோக்கத்திலிருந்தே பல்கலைக்கழக சிறப்புத் தகுதி (IoE) திட்டம் முன்வைக்கப்படுகிறது. இதற்காக Study in India என்ற திட்டத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் படிக்க வரும் 1000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க 300 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் நம்முடைய மாணவர்களுக்கான (தாழ்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புகளுக்காக வழங்கப்படும் தொகை) கல்வி உதவித்தொகையை படிப்படியாக குறைத்து வருகிறது மோடி அரசு. பார்ப்பனியத்தால் பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வந்துள்ள இந்திய சமூகத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய முதலாளிகளின் இலாப வெறிக்காக அந்நாடுகளில் அமல்படுத்தப்படும் திட்டத்தை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்துவது எவ்விதத்தில் சரி?

படிக்க:
கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !
தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !

IoE திட்டத்தில் தேர்ந்தெடுப்பட்டுள்ள 10 தனியார் பல்கலைக்கழகங்களில் 5 பல்கலைக்கழகங்கள் அம்பானி, மிட்டல் உள்ளிட்ட பெரு முதலாளிகளுக்கு சொந்தமானது. கடந்த 15 வருடங்களுக்குள்ளாக ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகங்கள் நூற்றாண்டைக் கண்ட பல அரசு பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளை விட சிறந்தவைகளாக மோடி அரசால் அறிவிக்கப்படுகின்றன. அதன் உச்சமாக கட்டிடமே கட்டப்படாத அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகத்திற்கும் மிட்டலின் பாரதி பல்கலைக்கழகத்திற்கும் மத்திய அரசு உயர் சிறப்புத் தகுதியை கொடுத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 அரசு பல்கலைக்கழங்களைத் தவிர உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஜாமியா மில்லியா, டில்லியில் உள்ள அலிகார், தமிழகத்தில் உள்ள பாரதியார், சென்னை பல்கலைக்கழகம், ஆந்திரா பல்கலைக்கழகம் மற்றும் ஐந்து ஐ.ஐ.டி.கள், இரண்டு என்.ஐ.டி.கள் உட்பட 48 அரசு உயர்கல்வி நிறுவனங்களை IOE திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முன்பே குறிப்பிட்டது போல இப்பல்கலைக்கழகங்கள் அரசின்கட்டுப்பாட்டின்கீழ் வராது, ஏறத்தாழ தனியார் பல்கலைக்கழங்களை போலவே செயல்படும். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி இவர்கள் தங்களுக்கான நிதியை உயர்கல்வி நிதி ஆணையத்திடமிருந்து (HEFA) கடனாகவோ அல்லது கார்ப்பரேட்டுகளிடமிருந்து நன்கொடையாகவோ (Philontharphy) பெற்றுக்கொள்ளவேண்டும். IoE, உயர்கல்வியை சர்வதேசியமாக்கல் (Internationalization of Higher Education) என்ற திட்டங்களின் மூலம் இந்திய முதலாளிகள் பெரும் கொள்ளையடிப்பதை உத்திரவாதப்படுத்துவதோடு முன்னணியான அரசு பல்கலைக்கழகங்களையும் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பதற்கான வேலையையும் மோடி அரசு செய்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கான சிறப்புத்தகுதி எனும் IOE திட்டம், உயர் கல்வியை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாகும். தரமான மற்றும் இலவச உயர் கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமை. அதற்கு கோத்தாரி குழு பரிந்துரைத்ததை போல GDP-இல் 6% கல்விக்காக மத்திய அரசு ஒதுக்க வேண்டும். ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக 3% க்கும் குறைவாகவே மத்திய மாநில அரசுகள் ஒதுக்கியுள்ளன. மேலும் மோடி ஆட்சியில் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு படிபடியாக குறைக்கப்பட்டும் வருகிறது. உலகவங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் வழிகாட்டுதல்படி கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட வரும் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கையின் விளைவாக 70 சதவிகித உயர்கல்வி நிறுவனங்கள் தனியாரிடம் உள்ளன. எஞ்சியுள்ள அரசுப் பல்கலைக்கழகங்களையும் உலகத்தரம் என்ற போர்வையில், கார்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கான ஒரு முயற்சியாக IOE திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

69% இடஒதுக்கீடு, கல்வி உதவித்தொகைகள் போன்ற சமூகநீதி கொள்கைகளினால் பின்தங்கிய சமூக-பொருளாதார நிலைமைகளில் இருந்து வந்த லட்சக்கனக்கான மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அரசு பல்கலைக் கழகங்களின் மூலம் உயர்கல்வி பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் உயர்கல்வி பெற்றவர்கள் (Gross Enrollment Ratio-49%) உள்ளனர். ஆனால் தற்போது உயர் சிறப்புத் கல்வி நிறுவனம் என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்வதும் அதை மறைமுகமாக தனியார்மயப்படுத்துவம் அரங்கேற்றப்படுகிறது. மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை முறியடிக்க மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து போராடுவது மிக  அவசியமாகும்.

நன்றி :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – சென்னை,
Coordination Committee for Common Education – CCCE, Chennai,
தொடர்புக்கு : 94892 35387, 7299361319.

என்ன குற்றம் செய்தாள் இச்சிறுமி ?

டந்த 4 நாட்களாய் இந்த செய்தி என்னை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது. தொடர் செய்திகளை படிக்கையில் கண்களில் நீர் முட்டுகிறது. இதெல்லாம் உண்மையில் நடக்கிறதா அல்லது நாம்தான் வேறு ஏதேனும் ஒரு உலகத்தில் இருக்கிறோமா என்பது தெரியவில்லை. இவையே மனசை பிசைகிறது என்றால் இன்னும் இன்னும் பாக்கி இருக்கோ என எண்ணுகையில்….

என் பெரிய குழந்தை வயது(11) இருக்கும் அந்த பெண் குழந்தைக்கு, காவல்துறையின் விசாரணை வளையத்தில் அந்தப் பெண்ணும் அவள் தோழிகளும் அவள் பள்ளியும். ஆமாம், பள்ளிக்கு வந்து அவள் வயதை ஒத்த குழந்தைகளை அதாவது 4, 5 & 6-ம் வகுப்புகளில் படிக்கிற குழந்தைகளை, பள்ளிக்கு வந்து சுமார் 45 நிமிடம் – 3 மணி நேரம் என குறுக்கு விசாரணை தொடர்ந்து நான்காவது நாளாய்.

இவ்வளவிற்கும் அந்தக் குழுந்தைகளின் ஆசிரியர்களோ அல்லது பள்ளி நிர்வாகமோ இக்குழந்தைகளுடன் இல்லாமல் ஒரு “மேக் ஷிப்ட் விசாரணை ரூமில்” விசாரிக்கப்படுகிறார்கள். பள்ளியில் ஒரு “தற்காலிக விசாரணை ரூம்” என்பது ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் இருந்ததா என நண்பர்கள் தெரியப்படுத்தவும். அக்குழந்தைக்கு தந்தை இல்லை. விவசாயம் நொடித்துப் போக கணவர் இறக்க வேறு வழியின்றி நிலத்தை குத்தகைக்கு விட்டு அக்குழந்தையின் கல்விக்காக அரசு உதவிப் பெறும் இந்த சிறுபான்மைப் பள்ளியில் ஏகப்பட்ட கனவுகளை நெஞ்சில் சுமந்து சேர்த்த அந்த எழுத்தறிவற்ற தாய் இப்பொழுது ஜெயிலில். அவருடன் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையும். பெயில் கிடைக்கவில்லை ஏனென்றால் ‘ஜட்ஜ் அய்யா’ விடுப்பில் இருக்கிறார்.

“அம்மா எங்கு இருக்கிறார்” எனவும், இரவிலும் எழுந்து “நான் செய்தது தப்புதான், எனக்கு எதுவும் வேண்டாம் என் அம்மா மட்டும் போதும்” என அரற்றியவாறு கொடும் நாட்களை உற்றார் தூரத்தில் இருப்பதால் வீடு வாடகைக்கு கொடுத்த அந்த பெரிய மனதுக்காரரின் வீட்டில் இருக்கும் அந்தப் பெண்ணின் அழுகுரலுக்கு இந்த நாகரிக சமூகத்தில் எங்கே இருக்கிறது பதில்?

படிக்க:
10 வயதுக் குழந்தைகளை தொடர்ந்து மிரட்டும் கர்நாடக காவிப் போலீசு !
♦ பேயாக மாறி போலீசுக்கே போக்கு காட்டிய அக்காக்கிய் !

செய்த குற்றம்தான் என்ன? அக்குழந்தைகள் அப்பள்ளியில் ஒரு நாடகத்தை நடத்தினர். அந்த நாடகத்தில் அக்குழந்தை பேசிய வசனமே இந்நிலையை குழந்தைக்கு தருவித்து இருக்கிறது. அந்த வசனம், “ஆவணங்கள் எங்கே என கேட்பவரிடம், செருப்பை காட்டுவோம்” என்பதுதான். இப்போது புரிந்திருக்குமே உங்களுக்கு.

இது தேசவிரோத செயல் என “சமூக செயற்பாட்டாளர்” ஒருவர் காவல்துறையில் முறையிட கர்நாடக மாநிலம் பிடார் மாவட்ட காவல்துறை நிர்வாகம் விரைந்து செயல்பட்டு உள்ளது. ஆம், விரைந்து உடனே பள்ளிக்கு சென்று அக்குழந்தையை விசாரணை செய்ய, ஆம் நான்தான் சொன்னேன், என் அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் என அக்குழந்தை சொல்ல, பின் நடந்தது எல்லாம் தான் நீங்கள் முன்பு படித்தது.

இதில் சோகம் என்னவென்றால், “ஏன் தப்பா” என அக்குழந்தை கேட்க, “இல்லையா..?” என போலீஸ் வினவ, “அப்படியென்றால் சாரி” என அக்குழந்தை சொல்லியும், “நீங்கள் பெரும் குற்றம் இழைத்திருக்கிறீர்கள், தேசத்தின் தலைமை சேவகரை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள்…”

CAA, NPR, NRC என்பவைக்கு எதிராக பேசி தேசத்துரோக செயலில் ஈடுபட்ட அக்குழந்தையின் தாயையும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியையும் ஜெயிலில் அடைத்து, தேசத்திற்கு நன்மை செய்திருக்கிறது காவல்துறை. இதுவரை சமூக வலைத்தளங்களில் அக்குழந்தை பலமுறை “ஐயாம் சாரி, ஐயாம் சாரி” என அரற்றியிருக்கிறது. இன்னும் அந்த தாயும், தலைமை ஆசிரியையும் ஜெயிலில்.

“சாதாரண பாஷை புரிய வில்லை என்றால், துப்பாக்கி பாஷையில் பேசலாம்” என தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆன யோகி ஆதித்யநாத் பேசுகிறார். நாட்டின் மத்திய மந்திரி ஒருவர் தேசவிரோதிகளை என்ன செய்யலாம், என கேட்டு “துப்பாக்கி கொண்டு கொல்லலாம்” என பதில் வர புளங்காகிதம் அடைகிறார். அவரது இக்குரலுக்கு பின் அமைதியாய் போராடி வரும் ஷாஹின் பாத் இஸ்லாமியப் பெண்கள் பகுதியில் ஜாமியா பல்கலைக்கு அருகே மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தபட்டிருக்கிறது, சில நபர்களால். “டுக்டே கேங்” கூட்டத்திற்கு பாடம் புகட்டுவோம் என நாட்டின் உள்துறை அமைச்சர் சொல்ல, அன்று மாலை ஜே.என்.யூ பல்கலையில் ஆயுதம் தாங்கிய கும்பல் தாக்குதல் நடத்தி மாணவர் ஆசிரியர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது.

துர்காவாஹினி என்ற பெயரில் சென்ற ஆண்டும் அதற்கு முன்னரும் துர்கா பூஜையின் போது கையில் வாளுடன் பெண் குழந்தைகள் ஏராளமானோர் ஊர்வலம் சென்றனர். ஆனால், யோகி ஆதித்யநாத் தொடங்கி எவரும் கைது ஏன் வழக்கு கூட போடப்படவில்லை. அவர்கள் அனைவரும் தங்களது வெறுப்பு பேச்சுக்களை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

படிக்க:
ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !
♦ CAA –க்கு எதிராக மலெர்கொட்லா வீதிகளில் திரண்ட 20,000 பஞ்சாப் உழவர்களும் பெண்களும் !

இது ஏதோ அந்தக் காலம் இல்லை, அம்மாநிலம் இல்லை அம்மாவட்ட செய்தித்தாள் பதிப்பில் ஒரு பெட்டி செய்தியாய் வந்து எவர் கண்ணிலும் படாமல் போக. நான்கு நாட்களாய் டிவிட்டரில் வலம் வந்து, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் செய்திகளாக்கி, இதோ நேற்று என்.டி.டிவியில் பிரைம் டைம் செய்தியாகவும், தனது வலைத்தளத்தின் முகப்பு செய்தியாகவும் இட்டு இருக்கிறது. சமூக வலைத்தள காலத்தில் செய்திகள் வெகு விரைவாக திரும்ப திரும்ப கவனம் பெறும் வேளையில் பிடார் பள்ளி அந்த பெண் குழந்தை செய்ததாக சொல்லும் தவறை அவள் மன்னிப்பு கோரிவிட்டாளே என்றாவது இரங்கி மன்னித்து விடும் அரசு இன்று இருக்கிறதா என்ன? நீதிமன்றங்கள் இருக்கிறதா என்ன?

காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்கும் இடத்தில் எல்லாம் நாமன்றி வேறில்லை என அன்றே இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தேச விரோத செயல் புரிந்திட்ட பாரதியின் வரிகளில் தான் மீண்டும் நாம் தஞ்சம் அடைய வேண்டி இருக்கிறது, “பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்…”

நன்றி : முகநூலில் Ram Gopal

disclaimer

இந்தியாவின் செய்தித்தாள் துறை செத்துக் கொண்டிருக்கிறதா ?

0

ந்தியாவின் நான்காவது தூண் உடனடி ஆபத்தில் உள்ளது. நாடு முழுவதும் பல செய்தித்தாள்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன. சுருங்கிவரும் வாசகர்கள், விளம்பர வருவாய், உயரும் செலவுகள், நம்பகத்தன்மை குறைதல் மற்றும் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்குதல் ஆகியவை அவர்களின் நிதி ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்திய வாசகர் கணக்கெடுப்பு சமீபத்தில் வெளிப்படுத்திய தகவல்கள், அவர்களின் எதிர்காலம் மிகவும் இருண்டதாக இருப்பதைக் காட்டுகிறது.

இதைக் கவனியுங்கள். நாட்டின் மிகப் பரவலாக விற்பனையாகும் செய்தித்தாள், டைனிக் ஜக்ரான், 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சராசரியாக 1.75 கோடி வாசகர்களைக் கொண்டிருந்தது. இரண்டாவது காலாண்டில் இருந்து 3.6 சதவீதம் குறைந்தது, முதல் காலாண்டில் 13.6 சதவீதம் குறைந்தது. சராசரி வெளியீட்டு வாசகர்களின் எண்ணிக்கை முந்தைய நாள் செய்தித்தாளைப் படித்த வாசகர்களின் எண்ணிக்கையாகும், மொத்த வாசகர்களின் எண்ணிக்கை முந்தைய 30 நாட்களில் ஒரு முறையாவது செய்தித்தாள் படித்தவர்களின் எண்ணிக்கையாகும்.

இது மற்ற செய்தித்தாள்களிலும் இதே போன்ற நிலைமைதான் உள்ளது. ஐ.ஆர்.எஸ். தரவுகளின்படி, இந்துஸ்தானின் சராசரி வெளியீட்டு வாசகர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 21 சதவீதம் சரிந்து 1.46 கோடியாக இருந்தது, அதே காலகட்டத்தில் அமர் உஜாலா 4.8 சதவீதம் குறைந்துது, மலையாள மனோரமா எட்டு சதவீதமும், ராஜஸ்தான் பத்ரிகா 10 சதவீதமும், ஈனாடு 21 சதவீதமும் குறைந்துள்ளது.

வாசகர்களின் எண்ணிக்கையில் சரிவு இருந்தபோதிலும், டைனிக் ஜாக்ரான் தினசரி இந்தியாவின் மிகவும் பரவலாகப் படிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மலையாள மனோரமா பிராந்திய தினசரிகளில் மிகவும் பரவலாகப் படிக்கப்படுகிறது, சராசரியாக 89.81 லட்சம் வாசகர்களைக் கொண்டுள்ளது.

நாட்டில் நான்கு செய்தித்தாள்கள் – டைனிக் பாஸ்கர், தினத்தந்தி, டைம்ஸ் ஆஃப் இந்தியா, லோக்மத் – மூன்றாம் காலாண்டில் அவர்களின் வாசகர்களின் எண்ணிக்கை ஓரளவு வளர்ச்சியைக் கண்டுள்ளன.. அதன் வாசகர்களின் எண்ணிக்கையில் 0.55% அதிகரித்து – மொத்தம் 58.21 லட்சம் பேர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரி மிகவும் பரவலாகப் படிக்கப்படும் ஆங்கில தினசரியாக உள்ளது.

மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தாவின் பெரிய மூன்று சந்தைகளில், ஒவ்வொரு முன்னணி ஆங்கில நாளிதழும் அதன் வாசகர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியா மும்பை சந்தையை 12.92 லட்சம் வாசகர்களுடன் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. இது இரண்டாவது காலாண்டில் 13.17 லட்சமாக இருந்தது. அதன் நெருங்கிய போட்டியாளர் இந்துஸ்தான் டைம்ஸ், அதன் சராசரி வாசகர்களின் எண்ணிக்கை இரண்டாவது காலாண்டில் சுமார் 8.69 லட்சத்திலிருந்து மூன்றாவது காலாண்டில் 8.59 லட்சமாகக் குறைந்தது.

படிக்க :
தினமலர் | திருமணம் – பொது வாழ்க்கை | கொரோனா வைரஸ் | அர்ஜுன் ரெட்டி | சாதி மறுப்பு | கேள்வி – பதில் !
♦ இந்தியாவில் புற்றுநோயின் தாக்கம் : அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட் !

டெல்லியில், டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் தலா மூன்று சதவீத வாசகர்களின் எண்ணிக்கையை முறையே 10.76 லட்சம் மற்றும் 9.28 லட்சமாகக் குறைத்துள்ளன. இருப்பினும், மும்பையைப் போலவே, அவர்கள் ஆங்கில சந்தையில் முதலிடத்தில் உள்ளனர்.

எனவே, இந்தியாவின் செய்தித்தாள் துறையில் இரங்கற்பா எழுதுவதற்கான நேரம் இதுதானா? ஊடக கருத்தாளராகவும் தொழில்முனைவோராகவும் மாறிய செய்தித்தாள் ஆசிரியர் பிரதியுமான் மகேஸ்வரி, இது மிக ஆரம்பம் என நம்புகிறார்.
“ஆனால் தற்போதுள்ள அச்சு துறையில் இருப்பவர்கள் செய்தி தளத்தில் நிலைத்திருக்க 360 கோணத்தில் பிரச்சினைகளை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். முதலில் இது ஒரு வலுவான டிஜிட்டல் நிறுவனமாக, நிகழ்வுகள் மற்றும் ஈடுபாடுகளைச் செய்தல் மற்றும் தொலைக்காட்சிகளில், வானொலிகளில் உள்ளடக்க இணைப்புகள் மற்றும் செய்தி அடிப்படையிலான நிகழ்ச்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்று அவர் யோசனை கூறுகிறார்.

ஒரே இரவில் மூடப்படும் பத்திரிகைகள்!

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட டெக்கான் க்ரானிகல் மற்றும் மும்பையை தளமாகக் கொண்ட டி.என்.ஏ ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பணப் பிரச்சினையில் சிக்கியுள்ள டெக்கான் க்ரானிகல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் டெக்கான் க்ரானிக்கல் மற்றும் ஏசியன் ஏஜ் பல பதிப்புகளை நிறுத்தியுள்ள நிலையில், டி.என்.ஏ அச்சு பதிப்பை இடைநிறுத்தியுள்ளது; ஒரே இரவில் பல பத்திரிகையாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

டி.சி.எச்.எல் சமீபத்தில் கேரளா மற்றும் பெங்களூரில் டெக்கான் க்ரானிகல் பதிப்புகளையும், மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஏசியன் பதிப்புகளையும் மூடியது. நிதி நெருக்கடி ஆழமடைவதால், ஹைதராபாத், விஜயவாடா, சென்னை மற்றும் கரீம்நகர் ஆகிய பதிப்புகள் மட்டும் லாபகரமாக உள்ளதால் அவற்றை தக்க வைத்துக் கொள்ள நிறுவனம் நினைப்பதாக டி.சி.எச்.எல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவற்றின் பதிப்புகள் மூடப்பட்ட பின்னர், டி.சி.எச்.எல் ஊழியர்கள் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகினர். பணியகங்களை மூடிவிட்டு ஊழியர்களை இடம் மாற்றுவதற்கான முடிவு சட்டவிரோதமானது என்று புகார் கூறினர். இப்போதைக்கு அவர்களுக்கு தங்குமிட உத்தரவு கிடைத்துள்ளது.

டி.சி.எச்.எல் அதன் கடன்களை வழங்கத் தவறியதால் 2017 ஆம் ஆண்டில் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், இது திவாலான நிலை மற்றும் திவால்நிலைக் குறியீட்டின் கீழ் நடவடிக்கைகள் மூலம் சென்றது. ஜூன் 2019-ல், கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஸ்ரே மல்டிபிள் அசெட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் டிரஸ்டின் விஷன் இந்தியா ஃபண்ட் நிறுவனம் கையகப்படுத்த என்.சி.எல்.டி ஒப்புதல் அளித்தது. டி.சி.எச்.எல் நிறுவனத்தில் ரூ. 408 கோடியை முதலீடு செய்ய ஸ்ரே முன்மொழிந்தது, அதன் கடன் வட்டி உட்பட ரூ. 8,180 கோடியாக இருந்தது. சுவாரஸ்யமாக, ஸ்ரே இன்னும் பொறுப்பேற்கவில்லை.

டி.சி.எச்.எல் இன் பெரும்பாலான ஊழியர்களுக்கு ஐந்து-ஆறு மாதங்களுக்கு சம்பளம் நிலுவையில் உள்ளது. என்.சி.எல்.டி.யின் தங்கும் உத்தரவு எங்களுக்கு ஒரு ஆசுவாசத்தைக் கொடுத்துள்ளதாக ஒரு டெக்கான் க்ரானிகில் பத்திரிகையாளர் கூறுகிறார். மும்பை மற்றும் கேரள அலுவலகங்களில் இருந்து அதிகமான ஊழியர்கள் சட்டப் போரில் சேர வாய்ப்புள்ளது. “ஸ்ரே மல்டிபிள் அசெட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் டிரஸ்டின் விஷன் இந்தியா ஃபண்ட், டி.சி.எச்.எல். ஐ கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, இதுவரையில் பொறுப்பேற்கவில்லை. எனவே, நிறுவனத்தின் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுவது சட்டவிரோதமானது. ”

படிக்க :
காஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் !
♦ பாஜகவை விமர்சித்த ராகுல் பஜாஜ் மீது சமூக ஊடகங்களில் காவி ட்ரோல் படை தாக்குதல் !

14 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை மற்றும் அகமதாபாத்தில் டி.என்.ஏ அச்சு பதிப்புகளை மூடியபோது, அது நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை வேலையில்லாமல் செய்தது. அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் வேலை தேட முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், டி.என்.ஏ அச்சகத்தின் தொழிலாளர்கள் மும்பையில் உள்ள தொழிலாளர் ஆணையத்திடம் சாதகமான தீர்ப்பைப் பெற்றுள்ளனர்.

புனேவில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் கேரளாவின் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியர் வினோத் மேத்யூ கூறுகையில், இது டி.என்.ஏ மற்றும் டெக்கான் குரோனிக்கிள் மட்டுமல்ல, எல்லோரும் சிரமப்படுகிறார்கள். தொழிலில் அதிர்வு ஏற்கனவே தொடங்கிவிட்டது. தெற்கில், விளம்பர வருவாய் குறைந்துவிட்டது. பல செய்தித்தாள்கள் பண நெருக்கடியை எதிர்கொள்கின்றன, சம்பளத்தை தாமதப்படுத்துகின்றன என்கிறார்.

நொறுங்கும் தொழில்

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் செய்தித்தாள் மீது 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டது, இது ஜூலை 2019 இல் வழங்கப்பட்டது. ஏற்கனவே போராடி வரும் செய்தித்தாள்களுக்கு இது பெரும் அடியாகும். இந்திய செய்தித்தாள் சங்கத்தின் பலமுறை கோரிக்கை விட்டதைத் தொடர்ந்து, கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த ஆண்டு பட்ஜெட்டில் வரி ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொழில்துறையில் பலர் இது சற்று தாமதமானது என்று நம்புகிறார்கள். உள்நாட்டு செய்தித்தாள் உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பது தனது அரசாங்கத்தின் கடமை என்று கூறினாலும் பல மாதங்களாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரியைத் திரும்பப் பெற மறுத்துவிட்டார்.

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் செய்தித்தாள் அச்சு தாள்கள் தேவை இருந்தபோதும் நிர்மலா சீதாராமன் கண்டுகொள்ளவில்லை. ஆனால், உள்நாட்டு ஆலைகள் ஒரு மில்லியன் டன் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். மேலும், இது உள்நாட்டு செய்தித்தாளின் தரம் இறக்குமதி செய்யப்பட்ட வகைகளை விட கணிசமாக தரம் குறைவாக இருந்தது. சிறிய மற்றும் நடுத்தர செய்தித்தாள்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் இறக்குமதி வரி திரும்பப் பெறப்படாவிட்டால் அவற்றில் பல மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் இவர்கள் கணித்திருந்தார்கள்.

“செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளின் வெளியீட்டாளர்கள் குறைந்த விளம்பர வருவாய் மற்றும் அதிக செயல்பாட்டு செலவுகள் போன்றவை உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்கனவே கடுமையான துயரங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். புழக்கத்தில் வருவாய் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது, டிஜிட்டல் மீடியாவின் தாக்குதலுக்கு நன்றி” என இந்திய செய்தித்தாள் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது .

செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளை மூடுவது நூற்றுக்கணக்கான நிருபர்கள், ஆசிரியர்கள் மற்றும் வடிவமைப்பு கலைஞர்களைத் தவிர, பிற ஊழியர்களை வேலையிலிருந்து வெளியேற்றுகிறது. பொருளாதார மந்தநிலை மீட்புக்கான அறிகுறிகளைக் காட்டாத நிலையில், பெரும்பாலான பெரிய விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பர செலவினங்களைக் குறைத்து விஷயங்களை மோசமாக்கியுள்ளனர். “பொருளாதார மந்தநிலை முக்கிய குற்றவாளி. சந்தை மிகவும் மோசமாக உள்ளது. செய்தித்தாள்கள் மட்டுமல்ல, டிவி சேனல்களும்கூட மோசமாக பாதிக்கப்படுகின்றன” என்று மும்பையில் ஒரு ஊடக நிர்வாகி கூறுகிறார்.

படிக்க :
ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் !
♦ நாட்டில் வன்முறைச் சூழலை உருவாக்கியிருக்கிறது பாஜக : மோடிக்கு பெண்கள் கடிதம் !

செய்தித்தாள்கள் இன்னும் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் விளம்பரங்களை ஈர்க்கின்றன என்றாலும், “அச்சு ஊடகங்கள் நிலையான சரிவில் உள்ளன” என்று மேலும் அவர் கூறினார்.

டெக்கான் க்ரானிகலில் தனது வேலையை இழந்த ஒரு மூத்த ஆசிரியர் கூறுகையில், “பத்திரிகையாளர்களுக்கு, குறிப்பாக அனுபவம் வாய்ந்த கைகளுக்கு இன்று குறைவான வேலைகளே உள்ளன. சாலையில் பலரைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது” என்கிறார் அவர்.

“மறுபுறம், நாடெங்கிலும் உள்ள ஏராளமான பத்திரிகை பள்ளிகள் பத்திரிகையாளர்களாக விரும்புகிறவர்களை தேடிக்கொண்டிருக்கின்றன, மேலும் நுழைவு நிலை சம்பளமும் குறைந்து வருகிறது.”

பல ஊடக நிறுவனங்கள் ஆட்சேர்ப்பை முடக்கியுள்ளன அல்லது “விலையுயர்ந்த” அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு பதிலாக குறைவான சம்பளம் பெறும் அனுபவம் குறைந்தவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன.

அச்சு ஊடகங்களின் சூரிய அஸ்தமனத்தை இந்தியா எவ்வளவு காலம் தாமதப்படுத்த முடியும்? இதுதான் தற்போது கேட்கப்பட வேண்டிய பொருத்தமான கேள்வி.


கட்டுரை: ஆண்டோ டி. ஜோசப்
தமிழாக்கம் : 
கலைமதி
நன்றி :  நியூஸ் லாண்ட்ரி. 

பேயாக மாறி போலீசுக்கே போக்கு காட்டிய அக்காக்கிய் !

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 13

கிர்யூஷ்கின் சந்தில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்த போலீஸ்காரன், அந்தப் பேயைக் குற்றம் இழைக்கப்பட்ட இடத்திலேயே, முன்பு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்து விட்டுத் தற்போது ஓய்வு பெற்றிருந்த இசைஞன் ஒருவன் மேலிருந்து ப்ரீஸ் கோட்டை அது உருவப்பார்த்த சமயத்தில், லபக்கெனக் காலரைப் பற்றிக் கையும் மெய்யுமாகப் பிடித்துவிட்டான். காலரைப் பற்றிப் பிடித்தவன், கூப்பாடு போட்டு இன்னும் இரண்டு போலீஸ்காரர்களை உதவிக்கு அழைத்து, திருட்டுப் பேயைப் பிடித்துக் கொள்ளும்படி அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, ஆயுளில் ஆறுமுறை கடுங்குளிர் தாக்கி மரத்துப் போயிருந்த மூக்கு மறுபடியும் விறைத்துப் போகும் முன் சூடேற்றுவதற்காக, காலணிக்குள் வைத்திருந்த பொடி டப்பியை எடுத்துத் திறந்தான்; அந்தப் பொடி பேயால் கூடத் தாங்க முடியாத அளவு காட்டமானது போலும்.

போலீஸ்காரன் வலது நாசித்துவாரத்தை விரலால் அழுத்திக்கொண்டு இடது நாசித்துவாரத்துக்குள் அரைக்கையளவு மூக்குத்தூளை உறிஞ்சி இழுப்பதற்குள் பேய் பலமாகத் தும்மிய தும்மலில் மூவர் கண்களிலும் சளி சிதறிவிட்டது. அவர்கள் கண்களைத் துடைத்துக்கொள்வதற்காக முட்டிகளை உயர்த்திய போது பேய் இருந்த சுவடு தெரியாமல் மறைந்து போய்விடவே, அது தங்கள் கைகளில் உண்மையாகவே பிடிபட்டதா இல்லையா என்று அவர்களுக்கே புரியவில்லை. அது முதல் போலீஸ்காரர்களுக்குப் பேய் என்றாலே குலை பதறலாயிற்று, எனவே அவர்கள் உயிருள்ளவர்களைக் கூடக் கைது செய்வதற்கு அஞ்சி, தொலைவிலிருந்த படியே, “யாரடா அது, டேய்! வழியைப் பார்த்து நட, ஊம்!” என்று அதட்டுவதோடு நிறுத்திக் கொண்டார்கள். எழுத்தனின் பேயோ, கலீன்கின் பாலத்துக்கு அப்பாலும் வளையவரத் தொடங்கி, பயந்த சுபாவமுள்ள மக்கள் எல்லாருக்கும் கலவரமும் திகிலும் விளைவித்தது.

முற்றிலும் உண்மையான இக்கதைக்கு அதிசயத் திருப்பம் ஏற்பட மெய்யாகவே காரணமாயிருந்த முக்கிய நபரை நாம் ஒரேயடியாக மறந்து விட்டோமே. முதலாவதாக ஒரு விஷயத்தைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுவது நியாயமாக நமது கடமை எனக் கருதுகிறோம். அதாவது தான் கடுமையாக விளாசிய அக்காக்கிய் அகன்ற பின்பு முக்கிய நபருக்கு மனத்தை என்னவோ செய்தது. பிறர்மீது அனுதாபம் அவரது இயல்புக்குப் புறம்பானதல்ல; அவருடைய இதயத்தில் பரிவுள்ள தூண்டல்கள் பல எழுவதுண்டு; அவரது பதவிதான் அவற்றை வெளிக் கிளம்பவொட்டாமல் தடுத்து விடும். தாம் நீண்ட காலமாகப் பார்க்காத நண்பர் சென்றதுமே முக்கிய நபருக்கு பாவம் அக்காக்கியைக் குறித்துக் கவலைகூட உண்டாயிற்று.

படிக்க:
ஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை !
சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !

அன்று முதல், சோகை பிடித்த அக்காக்கியின் உருவம், அதிகாரபூர்வமான கடிந்துரையைத் தாங்கத் திறனற்ற அந்த எழுத்தனின் உருவம், அவர் மனத்தைவிட்டு அகலவே இல்லை. அவனைப் பற்றிய எண்ணம் உள்ளத்தை ஒரேயடியாக உலப்பவே, அவர் தமது எழுத்தர்களில் ஒருவனை அக்காக்கிய் வீட்டிற்கு அனுப்பி, அவன் எப்படி, என்ன நிலையில் இருக்கிறான், அவனது கோட்டு கிடைத்து விட்டதா, அவனுக்கு உண்மையாகவே உதவி செய்ய முடியுமா முடியாதா என்று தெரிந்துவரச் சொன்னார். அக்காக்கிய் ஜுரம் காரணமாகத் திடீர் மரணம் எய்தியதை அறிந்ததும் அவருடைய மனச்சாட்சி நாள் பூராவும் அவரை உறுத்தியது, அவர் நிம்மதியின்றி உழன்றார். கொஞ்சம் உற்சாகம் பெறும் பொருட்டும் மகிழ்வற்ற நினைவுகளை மறக்கும் நோக்கத்துடனும் அவர் மாலையில் தமது நண்பர் ஒருவர் இல்லத்துக்குச் சென்றார். அங்கே நிறையப் பெயர் குழுமியிருப்பதையும், அதையும் விட மேலாக அவர்கள் எல்லாரும் அநேகமாகத் தமக்குச் சமமான பதவி வகிப்பவர்களே, எனவே தாம் கட்டிப்போட்டது போலிருக்கத் தேவையில்லை என்பதையும் கண்டார்.

இதனால் அவரது மன நிலைமையில் அற்புதமான மாறுதல் விளைந்தது. அவர் தங்கு தடையின்றி எல்லாருடனும் கலகலவென்று பழகினார், சுமுகமாகப் பேசினார், அன்பொழுக அளவளாவினார், மாலைப் பொழுதை இன்பமாகக் கழித்தார். சாப்பாட்டின் போது இரண்டு கிளாஸ் ஷாம்பெயின் அருந்தினார் – துன்ப நினைவுகளை அகற்ற இது கைகண்ட மருந்து என்பது யாவரும் அறிந்ததே. அன்றிரவைக் கழிப்பது பற்றிய அவரது திட்டம் ஷாம்பெயின் காரணமாகச் சற்று மாறுதல் அடைந்தது, அதாவது, உடனே வீட்டுக்குப் போகாமல், தமது தோழியான கரோலினா இவானொவ்னா என்ற சீமாட்டியின் (இவள் ஜெர்மானிய வமிசத்தில் வந்தவள் என்று தோன்றுகிறது; முக்கிய நபர் இவளுடன் மிகமிக நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்) வீட்டுக்குச் செல்வது என்று தீர்மானித்தார்.

முக்கிய நபர் இளைஞர் அன்று என்பதையும், நல்ல கணவர், குடும்பப்பற்றுள்ள தகுந்த தந்தை என்பதையும் இங்கே சொல்லிவிட வேண்டும். இரண்டு மகன்களும் (அவர்களில் ஒருவன் அரசாங்க ஊழியன்), அழகிய தோற்றமுள்ள பதினாறு வயதுப் பெண்ணும் (இவளுடைய மூக்கு ஒரு சொல்லுக்கு வளைவானதென்றாலும் பார்வைக்கு நன்றாயிருந்தது) தினந்தோறும் காலையில் அவரிடம் வந்து, அவர் கையை முத்தமிட்டு, “bonjour, papa” என்று பிரெஞ்சு மொழியில் வணக்கம் தெரிவிப்பார்கள். இன்னும் இளமை குன்றாமலும் கண்ணுக்கு லட்சணமாயுமிருந்த அவரது மனைவி முதலில் தம் கையை அவர் முத்தமிடுவதற்காக நீட்டிவிட்டு அப்புறம் அதைத் திருப்பி அவர் கையை முத்தமிடுவாள். முக்கிய நபர் மெல்லியல்பு வாய்ந்த இக்குடும்பப்பழக்கங்களால் மன நிறைவு கொண்டிருந்த போதிலும், நகரின் வேறொரு பகுதியில், வெறுமனே நட்புக்காக மட்டும் தோழி ஒருத்தியை வைத்துக் கொள்வது முறையே எனக் கருதினார். இந்தத் தோழி அவருடைய மனைவியைக் காட்டிலும் இளமையானவளும் அல்லள், அழகியும் அல்லள்; ஆயினும் இம்மாதிரி விஷயங்கள் உலகில் நடப்பது இயல்புதானே, அவற்றைப் பற்றித் தீர்ப்புக் கூறுவதற்கு நாம் யார்?

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. கடைசி பாகம் »