Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 290

“அச்சச்சோ கம்யூனிச பூதம்!’ – அல்பேனியா பயணக்கதை | கலையரசன்

0

கலையரசன்

“அன்னை தெரேசா விமான நிலையம் உங்களை வரவேற்கிறது!” அல்பேனியாவின் தலைநகர் திரானாவின் நவீன சர்வதேச விமான நிலையத்திற்கு அன்னை தெரேசா பெயர் சூட்டப் பட்டுள்ளது. இந்தியாவில் அநாதை சிறுவர்களுக்கு தொண்டு செய்து உலகப் புகழ் பெற்ற அன்னை தெரேசா இனத்தால் அல்பேனியர். ஆனால் அவர் மாசிடோனியா தலைநகர் ஸ்கோப்யேவில் பிறந்து வளர்ந்தவர். இனத்தால் அல்பேனியர் என்றாலும் இன்றைய அல்பேனிய தேசத்துடன் சம்பந்தம் அற்றவர். ஆனாலும் என்ன? அல்பேனிய தேசியவாதிகள் போற்றுவதற்கு ஒரு பிரபலமான புள்ளி தேவை. அவ்வளவு தான்.

அல்பேனியாவின் உண்மையான பெயர் ஷ்கிபேரிசே (Shqipërisë)! அவர்கள் பேசும் மொழியும் அப்படித்தான் அழைக்கப்படுகிறது. ஆனால் வெளியுலகில் பிற மொழியினர் அல்பேனியா என அழைத்து வந்தனர். ரோம சாம்ராஜ்யம் இருந்த காலத்தில் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இலிரியர் என அழைக்கப் பட்டனர். அவர்கள் பேசிய இலிரி மொழி அழிந்து விட்டது. இன்றைய அல்பேனியர் தாமே பண்டைய இலிரிய இனத்தின் வம்சாவளியினர் என உரிமை கோருகின்றனர். அதில் ஓரளவு உண்மை இருந்தாலும், இன்றைய அல்பேனியர்கள் ஒரு கலப்பினமாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

அல்பேனியா ஓர் ஐரோப்பிய நாடாக இருந்த போதிலும், வெளியுலகில் அதைப் பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் மிகக் குறைவு. அது திரானா விமான நிலையத்தை பார்த்தாலே புரிந்து விடுகிறது. வான்வழிப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள இன்றைய காலத்திலும் அங்கு வரும் பயணிகளினதும், விமானங்களினதும் எண்ணிக்கை மிகக் குறைவு. அதனால் ஓர் உள்ளூர் விமான நிலையம் போல காட்சியளிக்கிறது. ஐரோப்பியக் கண்டத்தில், லக்ஸம்பேர்க்கிற்கு அடுத்த படியாக அல்பேனியா தான் பரப்பளவில் சிறிய நாடு. (அதாவது சுயாதீனமாக இயங்கக் கூடிய இறைமையுள்ள நாடு. மொனாக்கோ, வாட்டிகன் போன்ற சிறிய “தேசங்கள்” பிற நாடுகளில் தங்கியுள்ளன.)

அல்பேனிய நாணயத்தின் பெயர் லெக் (Lek). அண்ணளவாக 1 யூரோவுக்கு 120 லெக் மாற்றிக் கொடுக்கிறார்கள். நாணய மாற்று சேவையில் யூரோ சில்லறையாக கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும் நாடு முழுவதும் ஜெர்மன், கிரேக்க வங்கிகளின் கிளைகள் உள்ளன. அவற்றின் ATM ல் ஐரோப்பிய வங்கி அட்டையை போட்டு பணம் எடுக்கலாம். அல்பேனியா இன்னமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்துக் கொள்ளப் படவில்லை. ஆனால், பல துறைகளில் ஐரோப்பிய முதலீடுகள் வந்து குவிகின்றன. விமான நிலையத்திற்கு அருகில் பன்னாட்டு நிறுவனங்களின் சுதந்திர வர்த்தக வலையம் உள்ளது.

அல்பேனியா ஒரு காலத்தில் இத்தாலியின் காலனி போன்று கருதப் பட்டது. முதலாம் உலகப்போருக்கு பின்னர் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி அல்பேனியாவுக்கு உரிமை கோரினார். அதை செயலில் காட்டுவதற்காக இராணுவத்தை அனுப்பி அல்பேனியாவை ஆக்கிரமித்து இத்தாலியுடன் இணைத்துக் கொண்டார். அன்று எந்த நாடும் இத்தாலியின் அடாத்தான செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பனிப்போரின் முடிவில் அல்பேனியாவில் முதலிட்ட முதலாவது மேற்குலக நாடும் இத்தாலி தான். இத்தாலியின் வணிக நிறுவனங்கள் அல்பேனியாவின் மலிவு விலைக் கூலி உழைப்பை பயன்படுத்திக் கொண்டன. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் இத்தாலியர்கள்.

படிக்க:
♦ ஐயாவின் கணக்குப் புத்தகம் | அ. முத்துலிங்கம்
♦ ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் !

அல்பேனியாவில் சிறிய அளவில் எண்ணை வளம் உள்ளது! ஏற்கனவே பெட்ரோலிய தொழிற்துறை சிறப்பாக இயங்கி வருகின்றது. நெதர்லாந்தின் ஷெல் நிறுவனம் இன்னும் பல இடங்களில் எண்ணை எடுக்கலாமா என ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அல்பேனியாவின் பொருளாதார முக்கியத்துவம், அதனால் ஏற்பட்டு வரும் அபிவிருத்தி பற்றி ஓரளவு புரிந்து கொள்ளலாம். அங்கு முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையை விட நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் என்ன? அல்பேனியா இன்னமும் ஐரோப்பாவில் மிகவும் வறுமையான நாடாக கணிப்பிடப் படுகின்றது. அத்துடன் கிரிமினல் குற்றங்கள் மலிந்த நாடாகவும் வெளியுலகில் கருதப்படுகின்றது.

விமான நிலையத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திரானா நகருக்கு செல்வதற்கு தனியார் மினி பஸ் சேவை உள்ளது. பயணக் கட்டணம் முன்னூறு லெக்(2,5 யூரோ) மட்டுமே. இந்த நாட்டில் யாருக்கும் சுற்றுச் சூழல் மாசடைதல் பற்றிய விழிப்புணர்வு இல்லைப் போலிருக்கிறது. போகும் வழி எங்கும் ஓடைகளிலும், ஆறுகளிலும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் தேங்கிக் கிடந்தன. இதை நாடு முழுவதும் கண்டிருக்கிறேன்.

அதே போல இன்னொரு எதிர்மறையான அம்சத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். நகரத் தெருக்களில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் வாகனம் ஓட்டுகிறார்கள். இதை ஏற்கனவே சென்னைத் தெருக்களில் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு வித்தியாசம். சென்னையில் பாதசாரிகள் பச்சை விளக்கில் பாதையை கடக்கும் நேரத்திலும் வாகனத்தை மிக வேகமாக ஓட்டிக் கொண்டு வருவார்கள். ஆனால் அல்பேனியாவில் பாதசாரிகளுக்கு வழிவிட்டு மெதுவாக ஓடுகிறார்கள். மற்றும்படி இரண்டு நாடுகளிலும் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் பண்பு ஒரே மாதிரியாக உள்ளது. திரானாவில் நிறையப் பேர் சைக்கிள் பாவிக்கிறார்கள். சைக்கிள் ஓடுவதற்கு தனியான பாதை ஒதுக்கி இருக்கிறார்கள்.

எயர்போர்ட் பஸ் நேராக திரானா நகர மத்திக்கு வருகின்றது. ஏற்கனவே இணையம் மூலம் அருகில் இருந்த ஹொஸ்டல் பதிவு செய்திருந்த படியால் அதிக தூரம் நடக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களும் நகர மத்திக்கு அருகிலேயே உள்ளன. எல்லாவற்றையும் நடந்து சென்றே பார்க்கலாம். Google map பார்த்தே தெருக்களை கண்டுபிடிக்கலாம்.

அல்பேனிய மொழி லத்தீன் எழுத்துக்களை பயன்படுத்துவதால் இடங்களின் பெயர்களை வாசித்து அறிவதில் சிரமம் இல்லை. (சில எழுத்துக்களின் உச்சரிப்பு வித்தியாசம்.) இடம் தெரியாவிட்டால் யாரையாவது கேட்கலாம். அல்பேனியாவில் பரவலாக ஆங்கிலம் பேசுகிறார்கள். எல்லோரும் அல்ல. பெரும்பாலும் இளைஞர்களுக்கு ஓரளவேனும் ஆங்கிலம் தெரிகிறது. வயதானவர்கள் அல்பேனிய மொழி மட்டுமே பேசுவார்கள். ஆனாலும், தம்மால் முடிந்த அளவுக்கு சைகை மொழியில் காட்டி உதவுகிறார்கள். தெருவில் போகும் போலீஸ்காரரை கேட்டாலும் உதவுவார்கள். அநேகமாக எல்லாப் போலீஸ்காரர்களுக்கும் ஆங்கிலம் தெரியும்.

படிக்க:
♦ “ஸ்டாலின் பிறந்த மண்” – ஜோர்ஜியா பயணக் கதை | கலையரசன்
♦ யானிஸ் பெராக்கீஸ் : வாழ்வின் வலிகளை பதிவு செய்த புகைப்படக் கலைஞர் | படக்கட்டுரை

அல்பேனியா ஒரு செலவு குறைந்த நாடு. ஆகவே, நாடு முழுவதும் எட்டு யூரோவில் இருந்து இருபது யூரோக்குள் ஒரு ஹொஸ்டலில் தங்கலாம். அதை விட பணக்கார வாடிக்கையாளர்களுக்கான ஆடம்பர ஹோட்டல்கள் நிறைய உள்ளன. நாடு முழுவதும் சிறிய நகரங்களில் கூட புதிதாக ஹோட்டேல்கள் கட்டப் பட்டுள்ளன. அதைத் தவிர கரையோர பகுதிகளில் நிறைய ரிசொர்ட்கள் முளைக்கின்றன. சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்த அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் அல்பேனியா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. எதிர்காலத்தில் அது மாறலாம்.

பிற ஐரோப்பிய நகரங்களை பார்த்தவர்களுக்கு திரானா ஏமாற்றம் அளிக்கலாம். அது மத்தியதரைக் கடலோர நகரங்களின் தோற்றத்தைக் கொடுக்கிறது. அங்கு குளிரை விட வெயில் கடுமையாக இருக்கும். அதனால் எல்லாக் கட்டிடங்களிலும் ஏசி பொருத்தி இருக்கிறார்கள். நான் தங்கியிருந்த எந்த விடுதியிலும் வெப்பமூட்டும் சாதனத்தைக் காணவில்லை. உண்மையில் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அல்பேனியாவில் குளிர் குறைவு தான்.

திரானா இத்தாலிய காலனிய காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகரம். அங்குள்ள அழகான கண்ணைக் கவரும் அமைச்சு அலுவலக கட்டிடங்களும் இத்தாலியர் கட்டியவை தான். நகர மத்தியில் ஸ்கந்தர்பேர்க் சதுக்கம் உள்ளது. அதன் தொடக்கத்தில் அல்பேனிய தேசிய நாயகன் ஸ்கந்தர்பேர்க் சிலை உள்ளது. அதன் அருகில் ஒரு பழைய மசூதி உள்ளது. அதற்கும் அருகில் ஒபெராவும், புத்தகக் கடையும் உள்ளது. அந்தக் கடையில் அல்பேனியா பற்றி எழுதப்பட்ட அனைத்து ஆங்கில நூல்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன. அத்துடன் இத்தாலி மொழி நூல்களும் உள்ளன.

விசாலமான ஸ்கந்தர்பேக் (Skanderbeg) சதுக்கத்திற்கு அருகில் முன்பொரு காலத்தில் பெரியதொரு ஸ்டாலின் சிலை இருந்தது. அதை அகற்றி விட்டார்கள். அல்பேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், பொது மக்களும் ஒன்றுகூடும் நிகழ்வுகள் பல நடந்துள்ளன.

அந்தக் காலத்தை நினைவுகூருவதற்கு எஞ்சியுள்ளது ஒரு மியூசியம் மட்டுமே. சதுக்கத்தின் மறு முனையில் தேசிய சரித்திர அருங்காட்சியகம் உள்ளது. அதில் சோஷலிச நாடாக இருந்த காலத்தில் எடுத்த படங்களும் வைக்கப் பட்டிருந்தன. நான் சென்றிருந்த நேரம் மியூசியத்தை பூட்டி திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதனால் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டேன். மியூசிய கட்டிடத்தின் முன்புற வாசலுக்கு மேலே ஒரு பிரமாண்டமான ஓவியம் வரையப் பட்டுள்ளது. சோஷலிச யதார்த்தவாத ஓவியம் என்று சொல்லும் தரத்தில், அல்பேனிய கலாச்சார உடையில் ஆயுதமேந்திய மனிதர்கள் காணப்படுகின்றனர். அது அல்பேனிய விடுதலைப் போராட்டத்தை குறிப்பதால் இன்னமும் அப்படியே அங்குள்ளது.

ஸ்கந்தர்பேக், ஐநூறு வருடங்களுக்கு முன்னர் ஓட்டோமான் துருக்கியருக்கு எதிராக அல்பேனிய இனக்குழுக்களை ஒன்று திரட்டி போராடினார். ஸ்கந்தர்பேக் விடுதலை பெற்றுத் தந்த அல்பேனிய இராச்சியம் சில தசாப்த காலமே நீடித்தது. அதற்குப் பின்னர் ஓட்டோமான் சாம்ராஜ்ய ஆளுகையின் கீழ் வந்து விட்டது. இருப்பினும், ஆயிரமாயிரம் வருடங்களாக அயலில் உள்ள வல்லரசுகளால் மாறி மாறி ஆளப் பட்டு வந்த அல்பேனியா, ஸ்கந்தர்பேக் காலத்தில் தான் தனித்துவமான தனிநாடாக அடையாளப் படுத்திக் கொண்டது. அதனால் இன்றைய அல்பேனிய தேசியவாதிகள் ஸ்கந்தர்பேக்கை உயர்த்திப் பிடிக்கின்றனர்.

சிவப்பு நிற பின்னணியில், இரட்டைத்தலைகளை உடைய கழுகு சின்னம் பொறித்த அல்பேனிய தேசியக் கொடி, முதன்முதலாக ஸ்கந்தர்பேக் காலத்தில் பயன்பாட்டில் இருந்தது. இடையில் நாற்பது வருட காலம் சோஷலிச நாடாக இருந்த போதும் இதே கொடியைத் தான் கழுகின் தலையில் மஞ்சள் நட்சத்திரத்தை சேர்த்து பயன்படுத்தி வந்தனர். தற்கால அரசு சின்னங்களில் மஞ்சள் நட்சத்திரத்தை அகற்றி விட்டு, அதற்குப் பதிலாக ஸ்கந்தர்பேர்க் முடியை சேர்த்திருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் அல்பேனியா முதலில் இத்தாலி பாசிசப் படைகளாலும், பிற்காலத்தில் ஜெர்மன் நாஸிப் படைகளாலும் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெறுவதற்காக பல ஆயுதபாணி இயக்கங்கள் போராடி வந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கது என்வர் ஹோஷா தலைமையிலான அல்பேனிய கம்யூனிஸ்ட் கட்சி. ஆரம்ப காலங்களில் அல்பேனிய கம்யூனிஸ்டுகள் தம்மை வெளிப்படையாக இனங்காட்டிக் கொள்ளவில்லை. ஒரு பழமைவாத சமூகத்தில் பரந்தளவு ஆதரவை பெற்றுக் கொள்வது கடினம் என்பதால், மற்றைய ஆயுதக்குழுக்களையும் இணைத்து அல்பேனிய விடுதலை முன்னணி என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி இருந்தனர். இருப்பினும் அதில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அளவுக்கதிகமாக இருந்தது. இதைத்தவிர அல்பேனிய தேசியவாதிகளின் இயக்கம் தனியாக போராடிக் கொண்டிருந்தது.

படிக்க:
♦ ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் !
♦ என்ன நடக்கிறது சிரியாவில் ?

1944 ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத இயக்கத்தில் இருந்தவர்களை கைது செய்த படியால் அதன் முக்கிய தலைவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்று பிரிட்டிஷ்படையினருடன் சேர்ந்து கொண்டனர். பிற்காலத்தில், அதாவது பனிப்போர் காலத்தில், பிரிட்டனும், அமெரிக்காவும் புலம்பெயர்ந்த அல்பேனிய தேசியவாதிகளை ஊடுருவ விட்டு கிளர்ச்சியை உண்டாக்க நினைத்து தோற்றுப் போனமை வரலாறு.

அல்பேனியாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதற்கு பல காரணிகள் சாதகமாக அமைந்திருந்தன. முதலாவதாக அல்பேனிய விடுதலை முன்னணி என்ற பெயரில் இயங்கியதால், நேச நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் ஆதரவு கிடைத்து வந்தது. அதற்காக பிரிட்டிஷாருக்கு அல்பேனிய உள்விவகாரம் தெரியாது என்று அர்த்தம் அல்ல. என்வர் கோஷா ஒரு கம்யூனிஸ்ட் என்பது ஏற்கனவே தெரிந்திருக்கும். இருப்பினும் அவர் சோவியத் யூனியனுடன் தொடர்பில் இருந்தமைக்கான எந்த ஆதாரமும் இருக்கவில்லை. அத்துடன் அவர் பிரான்சில் கல்வி கற்றவர் என்பதால் ஒரு இடதுசாரி ஜனநாயகவாதி என்று எடை போட்டிருக்கலாம். மறுபக்கத்தில் ஜெர்மன் ஆக்கிரமிப்புப் படையினர் அல்பேனியாவை முக்கியமாகக் கருதவில்லை. அவர்களது கவனம் முழுவதும் யூகோஸ்லேவிய யுத்தகளத்தில் இருந்தது. இந்த குழப்பரகமான சூழ்நிலையை பயன்படுத்தி என்வர் ஹோஷா தலைமையிலான கம்யூனிச போராளிகள் அல்பேனியா முழுவதையும் தமது சொந்த பலத்தில் விடுதலை செய்து விட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட திரானாவில் என்வர் ஹோஷாவும் பிற கம்யூனிஸ்ட் தலைவர்களும் வருகை தந்த நேரம் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி நின்று வரவேற்புக் கொடுத்தனர். இன்று வரையிலான அல்பேனிய வரலாற்றில் வேறெந்த அரசியல் தலைவருக்கும் அந்தளவு மக்கள் ஆதரவு இருக்கவில்லை என்பதை ஹோஷாவின் எதிரிகளே ஒத்துக் கொள்கின்றனர். இத்தாலி, ஜெர்மன் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெற்றுத் தந்த படியால் அன்றிருந்த மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு (அப்படி காட்டிக் கொள்ளா விட்டாலும்) பெருமளவு ஆதரவு இருந்தமை புரிந்து கொள்ளத் தக்கதே.

அல்பேனியா நாற்பது வருட காலமாக ஹோஷாவின் ஆட்சியின் கீழ் ஒரு தீவிரமான கம்யூனிச நாடாக இருந்தது. அவரது மரணத்தின் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் மீண்டும் முதலாளித்துவத்தை கொண்டு வந்து விட்டனர். 1991 இல் இருந்து அல்பேனியா ஒரு முதலாளித்துவ நாடு. பல கட்சித் தேர்தல் முறை கொண்டு வரப் பட்டது. முன்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்கள், கட்சியை கலைத்து விட்டு சமூக ஜனநாயகக் கட்சி என்ற புதிய அவதாரம் எடுத்தனர். லிபரல்கள் ஒன்று சேர்ந்து ஜனநாயகக் கட்சி அமைத்தனர். அன்றிலிருந்து இன்று வரை நடக்கும் பொதுத் தேர்தல்களில் சோஷலிசக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் மாறி மாறி அரசாங்கம் அமைத்த போதிலும் மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை.

நான் தங்கியிருந்த ஹொஸ்டல் வரவேற்பாளரிடம் நாட்டு நடப்புகள் பற்றி விசாரித்தேன். அந்த இளைஞன் தான் தொண்ணூறுகளுக்கு பிறகு பிறந்த படியால், முன்பிருந்த சோஷலிச ஆட்சி பற்றி எதுவும் தெரியாது என்றான். தற்போதைய காலத்தில் எந்தக் கட்சியிடமும் கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை என்றான். அவை தங்களுக்குள் அடிபடுவதற்கே நேரம் சரியாக இருப்பதாகவும் நாட்டைக் கவனிப்பதில்லை என்றும் சொன்னான். அல்பேனியாவில் மிகக் குறைந்த சம்பளம் ஏறத்தாள இருநூறு யூரோக்கள். அதே நேரம் படித்த பட்டதாரிகள் கூட அதிகம் சம்பாதிக்க முடியாது. மாபியாக் கிரிமினல் கும்பல்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமே பெருமளவு பணம் சம்பாதிக்க முடிகிறது.

அல்பேனியாவில் Tirana Times, Albanian Daily News என்று இரண்டு ஆங்கில வாரப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. இரண்டிலும் வரும் செய்திகளில் பெரியளவு வித்தியாசம் இல்லை. அந்த நேரத்தில் ஒரு மாபியா குழு செய்த கொலை பற்றிய செய்தி முக்கிய இடம் பிடித்திருந்தது.

Albanian Daily News இல் உள்நாட்டு அரசியல் பற்றிய கட்டுரை ஒன்று கவனத்தைக் கவர்ந்தது. 2008 ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மீளுயிர்த்துள்ள கம்யூனிச அல்லது மார்க்சிய கருத்துக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வருவதாகவும், அதற்கு அல்பேனியாவும் தப்பவில்லை என்றும் எழுதியுள்ளது. குறிப்பாக இளைஞர் குழுக்கள், NGO க்கள் மத்தியில் மார்க்சியக் கருத்துக்கள் செல்வாக்கு செலுத்துவதாக “கவலைப்” படுகிறது. மேலும் அல்பேனியா முன்னொரு காலத்தில் கொடூரமான கம்யூனிச சர்வாதிகார ஆட்சியின் கீழ் துன்பப் பட்டதாகவும், எதிர்ப்பாளர்கள் படுகொலை செய்யப் பட்டதுடன், தடுப்பு முகாம்களில் அடைக்கப் பட்டதாகவும் நினைவுகூருகின்றது.

கம்யூனிச கடந்த காலத்தில் நடந்த குற்றங்கள் இன்னமும் ஆய்வு செய்யப் பட்டு வருவதாகவும், அதையெல்லாம் நமது இளைய தலைமுறையினர் மறந்து விட்டார்களா என்றும் கேட்கிறது. கம்யூனிசகால குற்றங்கள் பற்றிய கற்கைகள் நிலையத்தின் தலைவரும், பிரபல இலக்கியவாதியுமான Agron Tufa, முன்னாள் இந்நாள் கம்யூனிச ஆதரவாளர்களின் மிரட்டல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி விட்டாராம். ஆகவே, “எப்படி அல்பேனியாவில் மீண்டும் அந்தக் கொடிய கம்யூனிசத்தை கொண்டு வர முடியும்?” என்று அந்தப் பத்திரிகை நீலிக்கண்ணீர் வடிக்கிறது. (Something in Common between Arben Kraja and Agron Tufa, Albanian Daily News, January 31, 2020)

அச்சச்ச்சோ!

(தொடரும்)

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் !

சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் எப்போதாவது மன்னிப்பு கேட்டாரா, இல்லையா என்பது குறித்த பதிவுகள் ஏதும் அரசிடம் இல்லை என்று இந்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தகவல் அறிந்தவர்களின் கருத்துப்படி, சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர்.

1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன் பிறகு 9 ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார்.

“சாவர்க்கர் சகோதரர்கள் சிறைச்சாலைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய எங்களை ரகசியமாக தூண்டிவிடுவார்கள். ஆனால் எங்களுடன் வெளிப்படையாக இணைந்து கொள்ள சொன்னால் பின்வாங்கிவிடுவார்கள். சாவர்கர் சகோதரர்களுக்கு கடின உழைப்பு கொண்ட வேலைகள் வழங்கப்படவில்லை” என்று பரிந்திர கோஷ் என்ற மற்றொரு கைதி பின்னர் ஒரு சமயம் தெரிவித்தார்.

15 நாட்களுக்கு ஒரு முறை கைதிகளின் எடை அளவிடப்படும். சாவர்க்கர் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 112 பவுண்டுகள் எடை இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினோல்ட் கிரீடோக்கிடம் அவர் நான்காவது முறை மன்னிப்பு கேட்டபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக அதிகரித்திருந்தது.

தன் மீது கருணை காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திந்தார். பதிலுக்கு, அவர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்திற்காக பணியாற்ற தயாராக இருந்தார்.

படிக்க:
♦ பயங்கரவாத பாஜக : இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி வேண்டுமாம் !
♦ காந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ !

ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்? அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரனம் என்ன என பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல், இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

காந்தி கொலை வழக்கில் தங்கள் மீது படிந்த கறையை நீக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ். -க்கு நீண்ட காலம் எடுத்தது. இந்த வழக்கில் சாவர்க்கர் சிறைக்குச் சென்றார், பின்னர் வழக்கில் இருந்து விடுபட்டு 1966 வரை வாழ்ந்தார், ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.”

ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கூட அவரை புறக்கணித்தது. அவர் எப்போதுமே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். காந்தி கொலை தொடர்பாக சாவர்க்கர் மீதான சந்தேகம் எப்போதும் மறையவே இல்லை என்பதே காரணம். சாவர்கருக்கு தெரியாமல் காந்தி படுகொலை நடந்திருக்க முடியாது என்று கபூர் கமிஷன் அறிக்கையிலும் தெளிவாக கூறிவிட்டது.

நீங்கள் சாவர்க்கரை மதிக்க விரும்பினால், காந்தியின் சித்தாந்தத்தை முற்றிலும் பின்தள்ள வேண்டும். அதேபோல் காந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சாவர்க்கரின் சித்தாந்தத்தை நிராகரிக்க வேண்டும்.

என்ன நடக்கிறது சிரியாவில் ?

சிரியாவில் எந்தெந்த படைகள் எந்தெந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதை விளக்கும் வரைபடம். (நன்றி : அல்ஜசீரா)

ட்டு ஆண்டுகளாக நடந்து வரும் சிரிய போர் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

இதுவரை மேற்கு உலக லிபரல் பத்திரிகைகளால் போராளிகள் என அழைக்கப்பட்டு வந்த சிரிய அரசு எதிர்ப்பு ஆயுத குழுக்களை (free Syrian army) இன்று அதே பத்திரிகைகள் பயங்கரவாதிகள் என எழுதுகின்றன.

அதே நேரம் துருக்கி அரசு குர்துகள் மீது படையெடுக்க வசதியாக அமெரிக்க துருப்புகளை விலக்கி கொண்ட டிரம்ப்; துருக்கி மீது பொருளாதார தடை விதிக்கப் போவதாக மிரட்டுகிறார்.

மற்றொரு பக்கம் சிரிய அரசை இதுவரை எதிர்த்து போராடிய குர்துகள் தற்போது சிரிய அரசுடன் ஒப்பந்தமிட்டிருக்கிறார்கள். இவ்வாறு சிரிய அரசு – ஜிகாதி பயங்கரவாதிகள் – குர்து தேசிய இன மக்கள் – துருக்கி – அமெரிக்க – ரஷ்யா என பல நலன்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் சிரிய போரில் சமீபத்தில் அணிசேர்க்கை மாறியுள்ளது.

***

ன்னி முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் சிரியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்து வருகிறது. இரானைப்போல மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு சவாலாக இருந்து வந்தது சிரியா. அதன் சர்வாதிகார அதிபர் பஷாரை கவிழ்க்க விரும்பியது அமெரிக்கா. இந்நிலையில் அரபு வசந்தம் என்கிற பெயரில் துனிசியாவில் ஆரம்பித்த வண்ணப் புரட்சிகளின் பின்னணியில்; அதே போல சிரியாவிலும் போராட்டங்கள் ஆரம்பித்தன. இந்த போராட்டத்தினை முகாந்திரமாக கொண்டு முன்னர் ஆப்கானில் செய்ததுபோல இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளித்து பஷாருக்கு ஆதரவாக களம் இறங்கின அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்.

சுதந்திர சிரிய படைகள் என்கிற பெயரில் பல ஜிகாதி குழுக்களை ஒருங்கிணைத்து ஆயுதமளித்தன மேற்குலக நாடுகள். அதன் பத்திரிகைகளோ மேற்கண்ட அல்-கயிதா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளை சிரிய போராளிகளாக சித்தரித்தன. சிரிய அதிபர் பஷார் ‘இப்போராளிகளுக்கு’ எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும் அதை தடுக்க அமெரிக்கா, சிரியாவின் மீது நேரடியாக படையெடுக்க வேண்டும் எனவும் மேற்குலகில் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது.

Bashar_al-Assad
சிரியா நாட்டு அதிபர் பஷார் அல் – ஆசாத்

இந்த சந்தர்பத்தில் ரக்கா நகரை தலைநகராகக் கொண்டு தங்களது கிலாபத்தை அமைத்தது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு. பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ எதிர்ப்பதையே முகாந்திரமாக கூறி அமெரிக்கா சிரியாவிற்குள் நுழைந்தது. சிரிய அரசுக்கு எதிராக தனிநாடு கோரி போராடிவந்த குர்து தேசிய போராளிகளை ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போரில் ஈடுபடுத்தி வந்தது அமெரிக்கா.

சிரிய அதிபர் ஆசாத்தின் வீழ்ச்சி கிட்டத்தட்ட உறுதியானது. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தாக்குபிடிப்பார் என்பது மட்டுமே கேள்வியாக இருந்தது. 2011-ல் ஆரம்பித்து 2015 வரை முக்கிய நகரங்கள் அலப்போ, ரக்கா, ஐடில்ப் உள்ளிட்ட நகரங்கள் கைப்பற்றப்பட்டு தலைநகர் டமாஸ்கஸ், அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்குள் முடக்கப்பட்டது ஆசாத் அரசு.

மிக தாமதமாக 2015-ல் தனது ஆதரவு சிரிய அதிபரைக் காப்பாற்ற நேரடியாக களத்தில் குதித்தது ரஷ்யா-ஈரான் கூட்டணி. அதிபர் பஷாரை எதிர்த்து போராடுபவர்களை பயங்கரவாதிகள் என அறிவித்து சிரிய படைகளுக்கு உதவின ரஷ்யா-ஈரான் நாடுகள். சிரிய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இரஷ்ய படைகள் சிரிய படைகளுக்கு உதவி செய்தன. இரஷ்ய விமானங்கள் சிரிய படைகளுக்கு வான் பாதுகாப்பு வழங்கியது.

சிரியாவின் மொத்த நிலப்பரப்பு, 1. சிரிய அரசு மற்றும் அதன் ரஷ்ய – ஈரான் படைகள்; 2. குர்து படைகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி, 3. அமெரிக்கா – சிரிய அரச எதிர்ப்புப் படைகள்; 4. ஐ.எஸ்.ஐ.எஸ் என நான்காக பிரிந்திருந்தது.

படிக்க:
♦ துருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘
♦ ஒரு லட்சம் டொலர் புத்தகம் | அ. முத்துலிங்கம்

ரஷ்யா- அமெரிக்கா நேரடி மோதல் வராத வண்ணம் சிரிய அரச படை – சுதந்திர சிரிய எதிர்ப்பு படையை எதிர்த்தும், குர்துகள் படை –  ஐ.எஸ்.ஐ.எஸ் படைகளை எதிர்த்தும் தாக்குதல் நடத்திவந்தன. ரஷ்ய படைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் படையை எதிர்த்து தாக்குதல் நடத்திவந்தன. இப்படி சொல்லப்பட்டாலும் எண்ணெய் வயல்கள் நிரம்பிய பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர எல்லா தரப்பும் மோதிக்கொண்டன. 2016-ல் ரஷ்ய ஆதரவுடன் முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்ற ஆரம்பித்தது சிரிய அரசு.

இதே சமயத்தில் அமெரிக்காவின் கூட்டாளியாகவும் நேட்டோ நாடுகளில் ஒன்றாகவும் இருந்த துருக்கியின் அதிபர் எர்டோகன் அந்நாட்டில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்கு பிறகு இரஷ்யாவுடன் இணக்கமானார். ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்கு பின் மேற்குலக நாடுகள் இருப்பதாக பேசப்பட்டது. பின்னர் அமெரிக்கவின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவின் S-400 ராணுவ தளவாடங்களை வாங்கி ரஷ்யாவுடன் மேலும் நெருக்கமானார் எர்டோகன்.

டொனால்ட் ட்ரம்புடன் துருக்கி அதிபர் எர்டோகன்

ஆரம்பத்தில் மேற்குலக நாடுகளுடன் சேர்ந்து சிரியாவின் அதிபர் பஷார் பதவி விலகுவதுதான் சிரிய பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று முன்வைத்தது துருக்கி.  பின்னர் அதை கைவிட்டதுடன் ரஷ்யா – ஈரான் ஆகிய நாடுகளுடன் சிரிய விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.

அமெரிக்கா, சிரிய குர்துகளுடன் இணைந்து ஆசாத்துக்கு எதிராக உருவாக்கிய சிரிய ஜனநாயக படையை (Syrian democratic forces – SDF) தனது நலன்களுக்கு எதிரானது என்பதாகவே கருதியது துருக்கி.

துருக்கியில் தனிநாடு கேட்டு ஆயுதபோராட்டத்தில் ஈடுபட்டு வரும்  குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் ஒரு பகுதிதான் சிரிய ஜனநாயக படை (Syrian democratic forces – SDF) என்று துருக்கி குற்றம் சாட்டியது. இதன் மூலம் தனது நாட்டில் போராடும் குர்துகள் மேலும் வலிமையடைவார்கள் என அஞ்சியது.

ஆனால் சிரிய ஜனநாயக படை தான் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஆசாத் படைகளுக்கு எதிராக அமெரிக்காவின் துருப்பு சீட்டாக இருந்து வந்தது. ஐ.எஸ்.ஐ.எஸ்.-ஐ வீழ்த்தி சிரியாவின் ஒரு கணிசமான பகுதியை தனது கட்டுப்பட்டில் கொண்டு வந்தது SDF.

***

ந்த பின்னணியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வருமானம் வராத போர்களை தவிர்க்க விரும்பினார். “நேட்டோ படைகளுக்கு அமெரிக்காதான் அதிகம் செலவழிக்கிறது. மேற்குலக நாடுகள் அதிகம் செலவழிக்க முன்வரவேண்டும்,” “ சவுதி உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்க அதிகம் செலவழிக்கிறது. ஆனால் அதற்கான நலன்கள் கிடைக்கவில்லை” என ஒரு பக்காவான முதலாளியாக கணக்கிட்டார்.

அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்கு பிறகு முடிவில்லாத போர்களை முடிக்க போவதாகவும் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற போவதாகவும் அறிவித்தார். ஆனால் அது நடைமுறையில் அமல்படுத்தப்படவில்லை.

இரண்டாம் உலகப்போரில் அதிகம் ஈடுபடாமல் தனது பொருளாதாரத்தை வலுப்படுத்திய நாடு அமெரிக்கா. அது போல அமெரிக்கா தற்போது ஆப்கான், ஈராக், சிரியா என ஆக்கிரமிப்பு போர்களை ஆரம்பித்து செலவழித்து விழிபிதுங்கி கொண்டிருக்கும் போது சீனா அது போன்ற எந்த போர்களும் இல்லாமல் அமெரிக்காவிற்கு போட்டியாக வளர்ந்து வருகிறது.

வருமானம் வராத போர்களை கைவிட்டு, வளர்ந்துவரும் சீனாவின் செல்வாக்கை தடுப்பது அமெரிக்காவின் தேவையாக இருக்கிறது. மத்திய கிழக்கிலிருந்து தன்னை விடுவித்துகொண்டு சீன செல்வாக்கு மண்டலங்களாக உருவாக வாய்ப்பிருக்கும் பகுதிகளை குறிவைப்பது தான் அமெரிக்காவின் நோக்கம். ஆனால் ஆரம்பித்த போரை முடிக்க முடியாமல் திணறுகிறது.

சிரியாவிலிருந்து அமெரிக்க வெளியேற்றத்திற்கு இதுதான் காரணம். இம்முறை பலிகடாவாக்கப்பட்டவர்கள் குர்துகள். அமெரிக்க உத்திரவாதத்தின்படி பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொடுத்து பஷார் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் என இரு முனைகளில் போராடிய குர்துகளை துருக்கியின் கொடும்கரங்களில் காட்டிகொடுத்துவிட்டு கிளம்பியிருக்கிறது அமெரிக்க படைகள்.

படிக்க:
♦ அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?
♦ TNPSC ஊழல் – பின்னணி என்ன ? | பேரா ப.சிவக்குமார் | காணொளி

இதை புரிந்துகொள்ள சமீபத்தில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் பேசியது உதவும். “ஆப்கானை சோவியத் ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற அமெரிக்க உளவுத்துறைக்கு உதவியாக ஆப்கானில் தாங்கள் தான் ஜிகாதிகளை உருவாக்கியதாகவும், பின்னர் அமெரிக்கா வெளியேறிய பிறகு தாங்கள் உருவாக்கிய முஜாகிதீன்களால் தாங்களே பாதிக்கப்படுவதாகவும்” பேசியிருந்தார்.

இதே கருத்தை சவுதி இளவரசர் சல்மானும் கூறியிருந்தார். வஹாபியிசத்தை வளர்ப்பதாக மேற்குலக பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அந்த வேலையை எங்களுக்கு கொடுத்ததே அமெரிக்காதான் என பதிலளித்திருந்தார்.

அக்டோபர் 2019, 7-ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் – துருக்கி அதிபர் எர்டோகனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ‘அமெரிக்க கூட்டாளியான குர்துகளை’ துருக்கி தாக்குவதற்கு வசதியாக சிரியா – துருக்கி எல்லையிலிருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறின.

சவுதி இளவரசர்

மீண்டும் தனது துரோக வரலாறை நிரூபித்தது அமெரிக்கா. அக்டோபர் 9 முதல் துருக்கி நாட்டு துருப்புகள் குர்து பகுதிகள் மீது தாக்குதலை ஆரம்பித்து நடத்திவருகின்றன. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான குர்துகள் தங்கள் ஊரை விட்டு இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் சாரை சாரையாக நகரங்களை காலிசெய்து அச்சத்தில் வெளியேறி வருகிறார்கள்.

தங்களை துருக்கியிடம் அடமானம் வைத்த அமெரிக்க துருப்புகளின் மீதும், அவர்களின் கவச வாகனங்கள் மீதும் அழுகிய பழங்களையும், கற்களையும் வீசி குர்து மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.

உலகின் யாருக்கும் ஈடு இணையில்லாத மகாகணம் பொருந்திய அமெரிக்க இராணுவம் அழுகிய பழங்களால் தாக்கப்படும் காட்சிகள் உலகம் முழுவதும் வெளியாகி அமெரிக்க மானத்தை கப்பலேற்றின.

இதையடுத்து தனது ஒளிவட்டத்தை காப்பாற்றிக் கொள்ள துருக்கி குர்துகள் மீது படையெடுக்கலாம், ஆனால் எல்லை மீறிப் போனால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அது தொடர்பாக ஒரு கடிதம் எர்டோகனுக்கு எழுதியதாக செய்தி வெளியாகியது. அதில் “துருக்கிய பொருளாதாரத்தை அழிக்கவும் தயங்கமாட்டேன் என எச்சரித்திருந்தார்…”

***

ப்போரை தொடர்ந்து நடத்த வேண்டிய தேவை எர்டோகனுக்கு இருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எர்டோகன் கட்சி படுதோல்வியடைந்தது.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தேசிய வெறியை மக்களிடையே ஊட்டி இழந்த தன் செல்வாக்கை நிலைநாட்ட இந்தபோர் எர்டோகனுக்கு பயன்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் ஒன்றுபட்டு எர்டோகன் கட்சியை வீழ்த்திய எதிர்கட்சிகள் குர்துகள் விசயத்தில் எர்டோகன் எதிர்பார்த்தபடியே பிளவுபட்டுள்ளனர். இதனால் இப்போரை எர்டோகன் உடனடியாக நிறுத்துவது அவ்வளவு சாத்தியமில்லை.

டிரம்பின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் அக்கடிதம் குப்பை தொட்டிக்கு சென்றடைந்ததாக அடுத்த நாளே மேற்குலக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது எதிர்பார்த்த ஒன்றுதான்.

சிதைந்து போயுள்ள சிரியா…

வேறுவழியில்லாமல் குர்துகள் முன்னர் தாங்கள் எதிர்த்த அதிபர் பஷாருடன், ரஷ்யா வழிகாட்டுதல்படி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். அதன்படி குர்துகள் தங்கள் கட்டுப்பட்டிற்குள் உள்ள பகுதிகளை சிரிய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். சிரிய ராணுவம் எல்லைக்கு விரைந்து துருக்கி படைகளை எதிர்கொள்ளும். சிரியாவிற்குள் குர்துகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

இதே போல அமெரிக்க படைகள் வெளியேறி செல்லும் இராணுவ முகாமிற்குள் இரஷ்ய படைகள் செல்வதும், அதை இரஷ்ய ஊடகங்கள் ஒளிபரப்பியதும் அமெரிக்க செல்வாக்கு சரிகிறதா? என்கிற விவாதத்தை சி.என்.என் முதல் நம்மூர் நியூஸ்7 வரை ஆரம்பித்து வைத்தன.

படிக்க:
♦ சிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச்சாலை!
♦ சிரியாவின் இறுதிப் போர் – வெளிவராத உண்மைகள்

அழுகிய பழங்களாலும், உலக பத்திரிகைகளாலும் அடிவாங்கி அவமானப்பட்ட அமெரிக்கா, அதன் துணை அதிபரை துருக்கிக்கு அனுப்பி இடைக்கால போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

இதன்படி குர்துப் படைகள் பின்வாங்கி செல்ல வேண்டும். சிரிய துருக்கி எல்லையில் பாதுகாப்பட்ட பகுதிகளை துருக்கி உருவாக்கும். அது துருக்கியின் கண்காணிப்பில் இருக்கும். அதில் சிரிய போரின் அகதிகளை துருக்கி மீள்குடியேற்றம் செய்யும் என்பதாக ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்கிறது.

இவ்விவகாரம் தொடர்பாக இரஷ்யா இதுவரை அதிகாரபூர்வமாக பெரிதும் எதுவும் தெரிவிக்காத நிலையில் இந்த ஒப்பந்தம் என்ன ஆகும். துருக்கி எல்லைக்குள் நிற்குமா? குர்துகளின் எதிர்காலம் என்னவாகும்? போன்ற கேள்விகள் விடை தெரியாமலே இருக்கின்றன.

இராமச்சந்திரன்

என்ன நடக்கிறது சிரியாவில் ? | Syria War

செய்தி ஆதாரம் :

 

ஐயாவின் கணக்குப் புத்தகம் | அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
யா ஒரு நாள் என்னை ஒட்டு மாங்கன்று வாங்க அழைத்துப் போனார். என்னுடைய வாழ்நாளில் ஐயா அழைத்து அவருடன் நான் மட்டும் போனது அதுவே முதல் தடவை; கடைசியும். வீட்டில் ஏழு பேர் ஐயாவுடன் போகக்கூடிய தகுதி பெற்றிருந்தும் ஐயா என்னையே தேர்வு செய்திருந்தார். அது அளவில்லாத பெருமையாக இருந்தது. அவர் மனம் மாறுவதற்கிடையில் உடை மாற்றி புறப்பட்டேன். ஒட்டுமாங்கன்று வாங்க முடியாது, நாங்கள்தான் உண்டாக்கவேண்டும். சாதரண மாங்கன்று ஒன்றை வாங்கி நல்ல பழம்தரும் மரக் கிளையுடன் ஒட்ட வைத்து தினம் தண்ணீர் ஊற்றவேண்டும். அந்த வேலைதான் எனக்கு தரப்பட்டது. என் சகோதரர்களின் பொறாமையை தக்க வைப்பதற்காக நான் என் ஏமாற்றத்தை வெளியே காட்டவில்லை.

தினமும் அதிகாலை சிறாப்பர் வீட்டுக்குப் போய் நான் மரத்துக்கு தண்ணீர் ஊற்றுவேன். சிறாப்பர் என்பது அவருடைய பெயர் அல்ல. அப்பொழுதெல்லாம் வங்கிகளில் காசாளர்களை சிறாப்பர் (shroff) என்றே அழைத்தார்கள். இவர் தன் வீட்டிலும் ஒரு வங்கி நடத்தினார். ஐயா இவரிடம் காசு கடன் வாங்குவார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து வட்டி வாங்கிப் போவார். அவருடைய கன்னச் சதைகள் தண்ணீர் நிரப்பியதுபோல ஊதிக்கிடக்கும். சிரித்தால் கண் இமைகள் தானாகவே மூடிவிடும். ஒரு தாரா நடப்பதுபோல போல கால்களை அகட்டி வைத்து நடப்பது வேடிக்கையாக இருக்கும். நானும் சிறுவயதில் அப்படித்தான் நடப்பேனாம். எனக்கும் ஒருகாலத்தில் வீட்டிலே பட்டப் பெயர் சிறாப்பர். பின்னர் அது வழக்கழிந்துவிட்டது.

ஐயாவிடம் முதிரை மரத்தில் செய்த பெட்டகம் ஒன்று இருந்தது. உள்மரம் சந்தனம் என்பதால் அதை திறந்ததும் நல்ல மணம் வீசும். பெட்டியை எட்ட நின்று பார்ப்போம்; கிட்டப்போய் தொடமுடியாது. அதற்குள் நான் விரும்பிய இரண்டு பொருட்கள் இருந்தன. ஒன்று எங்கள் சாதகக் கட்டுகள். சாத்திரியார் வரும்போது அவை வெளியே எடுக்கப்படும். இரவிரவாக வீட்டிலே சாதகம் பார்ப்பார்கள். இரண்டாவது, ஒரு தடித்த அட்டை போட்ட தொக்கையான கணக்குப் புத்தகம். குத்து விளக்கை கொளுத்திவைத்து அந்த வெளிச்சத்தில் ஐயா, வயலட் பென்சிலை நாக்கில் தொட்டு தொட்டு கணக்கு எழுத்துவார். பின்னர் கணக்குப் புத்தகம் மரப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்படும்.

மாதிரிப் படம்

ஐயாவுக்கு நிரந்தர வருமானம் கிடையாது. அவராக ஒரு வேலைக்குச் சென்றதில்லை. புகையிலை வியாபாரம்தான். சிப்பம் சிப்பமாக கட்டி ரயிலில் கொழும்புக்கும், கண்டிக்கும், மாத்தளைக்கும், கேகாலைக்கும் அனுப்புவார். பின்னர் மூன்று மாதத்துக்கு ஒருமுறை புறப்பட்டு இந்த ஊர்களுக்கெல்லாம் சென்று பணத்தை அறவிட்டு வருவார். அநேகமாக பாதி பணம்தான் கிடைக்கும். அம்மா ஏதும் தேவைக்கு காசு கேட்டால் மீதி கடன் அறவிட்ட பின்னர் தருவதாகச் சொல்வார். அப்படி ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. தினம் பெட்டகத்தை திறந்து கணக்குகள் எழுதிவிட்டு மறுபடியும் பூட்டிவைப்பார்.

ஐயாவுக்கு புத்தகங்கள் எதிரி. வீட்டில் இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதிகமாக உபயோகம் கண்டதும் அந்தப் புத்தகம்தான். வீட்டிலே பல்லி யாராவது உடம்பிலே விழுந்து கொண்டேயிருக்கும். ஐயா உடனே பஞ்சாங்கத்தை புரட்டி பலன் பார்ப்பார். நாலு நாள் கழித்து அது எப்படி பலித்தது என்று நாலு பேருக்குச் சொல்வார். பஞ்சாங்கத்தை தவிர வீட்டிலே பாடப்புத்தகங்களும் இருந்தன. மூத்த அண்ணர் ஒருவர்தான் புதிதாக புதிய மணத்துடன் புத்தகத்தை அனுபவிப்பார். அதன் பின்னர் அது வரிசையாக ஒவ்வொரு வருடமும் கைமாறி கீழே வரும். என் முறை அணுகும்போது, முன் அட்டை பின் அட்டை எல்லாம் கிழிந்துபோய் பரிதாபமான நிலையில் தொட்டால் ஒட்டிப் பிடிக்கும் தன்மையுடன் இருக்கும். எனக்குப் பின்னர் இன்னும் இரண்டு பேருக்கு அது போகவேண்டும்.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் !
♦ யாழ்ப்பாணத்தில் இலவச வாசகசாலை !

நாவல்களையும், வாரப் பத்திரிகைகளையும் இரவல் வாங்கி ஐயாவுக்குத் தெரியாமல் படிப்பேன். அம்மா என் பக்கம் என்றபடியால் விசயம் ஒருமாதிரி போய்க்கொண்டிருந்தது. ஒரே எதிரி தம்பிதான். ஐயாபோல அவனும் புத்தகங்களுக்கு எதிரி. என்னை எப்பொழுதாவது நாவலுடன் பார்த்தால் ஐயாவுக்கு மூட்டிவிடுவான். அப்படியிருந்தும் பாடப் புத்தகத்துக்குள் ஒளித்து வைத்து திகம்பரசாமியார் முழு நாவலையும் படித்துவிட்டேன்.

பஞ்சாங்கத்தில் பலன் பார்ப்பதோடு மட்டும் ஐயாவுக்கு பல்லியுடனான சம்பந்தம் முடிவுக்கு வரவில்லை. ஐயாவின் வாழ்வில் பல்லி பெரும் பங்கு வகித்திருக்கிறது. அவருக்கு இரண்டுதாரம். நாங்கள் ஏழு பேர் இரண்டாம் தாரத்துக்கு பிறந்தவர்கள். முதல் தாரத்துக்கு இரண்டு பிள்ளைகள். முதல் தார மனைவி இறந்தவுடன் பிள்ளைகளைப் பார்க்க ஐயாவுக்கு ஆள்தேவை. நல்லூரில் இருந்து ஒரு பெண்ணின் சாதகத்தை தரகர் அவசரமாகக் கொண்டு வந்தார். சொந்தக்காரர்கள் நெருக்கினார்கள். ஐயாவால் முடிவெடுக்க முடியவில்லை. கோயில் சுவரில் ஏறிக்குந்திவிட்டார். ஏதாவது ஒரு சைகை கிடைத்தால்தான் இறங்குவதாக சங்கல்பம். காலையில் ஏறியவர் மதியம் ஆகியும் இறங்கவில்லை. பின்னேரமும் மறைந்து வானத்திலிருந்து இருட்டு மட்டும் இறங்கியது. ஐயாவுக்கு பசியில் கண் மங்கியது. அப்போது ஒரு பல்லி சத்தம் போட்டது. அதுக்கும் பசி. ஐயா எதிர்பார்த்த சம்மதம் கிடைத்து பொத்தென்று குதித்தார். திருமணம் முடிந்து நாங்களும் பிறந்தோம்.

மாதிரிப் படம்

அம்மா எப்படி 15 வயதில் இரண்டாம் தாரமாக இரண்டு பிள்ளைகளுடைய ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டார் என்பது இன்றைக்கும் புதிர்தான். அந்தக் காலத்தில் அவர் வேறு என்ன செய்திருக்க முடியும்? பெரியவர்கள் சொன்னதைக் கேட்கவேண்டியதுதானே. மணமுடித்து வரும்போது அவருக்கு நீண்ட கூந்தல் இருந்தது என்று சொல்வார்கள். தூங்கும்போது ஒரு தலையணையில் அவர் தலையும் இன்னொரு தலையணையில் அவர் கூந்தலும் கிடக்குமாம். ஒருநாள் நான் அம்மாவிடம் நேரில் கேட்டுவிட்டேன். அம்மா ஏன் நீங்கள் சிரிப்பதில்லை. அவர் சிரித்தார்; அது முழுச் சிரிப்பு இல்லை. இரண்டாம் பரிசு பெற்ற ஒருவரின் சிரிப்பு.

ஐயாவுக்கும் எங்களுக்குமிடையே நிறையத் தூரம் இருந்தது. அவர் என்னைத் தூக்கியது நினைவில் இல்லை. தலையை தடவியது கிடையாது. நான் பெரிய குளப்படிக்காரன் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். சின்ன வயதில் வீட்டில் உள்ள பொருள்களை உடைத்துவிடுவேன். ஒருமுறை அம்மாவுடைய வெண்கலக் குடத்தை போட்டு நெளித்துவிட்டேன். இன்னொரு தடவை ஐயா அருமையாகப் பாதுகாத்த சுவிஸ் மணிக்கூட்டை உடைத்தேன். ஆனால் ஐயாவால் மன்னிக்க முடியாத ஒரு குற்றத்தை நான் செய்தேன். எங்களிடம் மிகப் பழமையான கருங்காலி மரத்தில் செய்த கட்டில் ஒன்று இருந்தது. நாலு பக்கமும் நுளம்பு வலை போடுவதற்கு வசதியாக மரத்தூண்கள் இருக்கும். ஒருநாள் இந்த மரத்தூணை எவ்வளவு தூரத்துக்கு வளைக்கலாம் என்று பரீட்சித்துப் பார்த்தபோது அது படாரென்று பெரிய சத்தத்துடன் முறிந்தது. ஐயாவின் கண்களில் முதலில் கோபமும் பின்னர் சோகமும் தெரிந்தது. அது பரம்பரையாக வந்த கட்டில். அவருடைய மனதில் அது எத்தனை பெரிய துயரத்தை உண்டாக்கியிருக்கும். நான் ஓடுவதற்கு தயாராகவே இருந்தேன். ஆனால் அவர் என்னை தண்டிக்கவே இல்லை. அதன் பின்னர் ஐயா வெளியே புறப்படும்போது வீட்டில் அத்தனை பேர் இருந்தாலும் என்னை மட்டும் தனியே அழைத்து இப்படி சொல்வார். ‘சுவர், தூண்கள், கூரை பத்திரம். நான் திரும்பும்வரை பார்த்துக்கொள். உடைத்துவிடாதே.’

படிக்க:
பேயாக மாறி போலீசுக்கே போக்கு காட்டிய அக்காக்கிய் !
♦ அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! – மாநாடு நிகழ்ச்சி நிரல்

ஒரு தடவை எனக்கு ஒரு ரூபா கிடைத்தது. வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர் எனக்கு கொடுத்தது. அந்தக் காலத்தில் அது மிகப் பெரிய காசு. நான் அதுவரை சில்லறைக் காசுகளைத்தான் பார்த்திருக்கிறேன். எனக்கு தாளாக ஒரு ரூபா கிடைத்திருந்தது. மூளையில் கனவு தொடங்கிவிட்டது. ஆங்கிலப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் பத்திரமாக ஒளித்து வைத்து ஒவ்வொருநாளும் தொட்டுப் பார்ப்பேன். இந்தச் செய்தி ஐயாவின் காதுகளுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்துவிட்டது.

ஏதோ அவசரத்துக்கு அவர் என்னிடம் ஒரு ரூபா கடன் கேட்டார். ஒரு பக்கம் பெருமையாக இருந்தது. திரும்பக் கிடைக்குமா என்ற அச்சமும் என்னை திக்குமுக்காட வைத்தது. என் முழுச் செல்வத்தையும் கேட்கிறார். எப்படி மறுக்கமுடியும்? அந்த புதுத்தாளை ஒருமுறை ஆசைதீர தடவிப்பார்த்துவிட்டு கொடுத்தேன். கொடுத்த கணமே பெரும் சோகம் என்னைக் கவ்வியது. ஒரு வாரம் கழித்து ஐயாவிடம் கடனைக் கேட்டேன். அடுத்த வாரம் என்றார். பொறுத்திருந்து அடுத்த வாரமும் கேட்டேன். ‘இப்ப அவசர வேலையாக இருக்கிறேன். பிறகு கேள்’ என்றார். இப்படி தினம் நான் கேட்பதும் ஒவ்வொருவிதமான பதில் வருவதும் வழக்கமாகிவிட்டது. ஒரு கடிதம் எழுதிப் பார்த்தேன், அதற்கும் பதில் இல்லை. ஆறு மாதம் ஓடிவிட்டது. அவர் ஒருநாள் மரக்கட்டிலில் ஓய்வாக உட்கார்ந்திருந்தபோது மடக்கினேன். ‘என்னுடைய காசு’ என்றேன். ’என்ன காசு?’ என்றார். எனக்கு தலை சுழன்றது. வீடு சுழன்றது. என்ன விளையாடுகிறாரா? அவருக்கு மறந்துவிட்டது. என் முகத்தை திருப்பி ஐயாவுடன் நான் பலநாள் பேசவில்லை. நான் கோபத்தில் அவருடன் பேசவில்லை என்பது ஐயாவுக்கே தெரியாது.

கொழும்பு, கண்டி போன்ற வெளியூர்களுக்கு ஐயா போகும்போது வீடு பெரும் தடல்புடலாக இருக்கும். அம்மா சுழன்று சுழன்று வேலை செய்வார். ஐயாவுக்கு வேண்டிய பலகாரங்களைச் சுட்டு பெட்டிகளில் அடைப்பார். சூட்கேசை இரண்டுநாள் முன்னரே அடுக்கினாலும் ஐயா மறுபடியும் அடுக்குவார். ஐயா திரும்பும்வரைக்கும் அம்மா பதற்றமாகவே இருப்பார். ஒருமுறை ஐயா போய் பல நாட்களாக கடிதம் இல்லை. திடீரென்று ஒருநாள் தந்தி வந்தது. அம்மா குழறி அழத்தொடங்கினார். தந்தியின் வாசகம் இதுதான். ‘நான் அநுராதபுரம் ரயில் ஸ்டேசனில் சேமமாக இருக்கிறேன்.’ அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. கொழும்பிலிருந்து புறப்பட்ட ரயில் பாதி வழியில் கவிழ்ந்து பலர் உயிரிழந்து விட்டனர். இந்தச் செய்தி எங்களுக்கு தெரியாது. ஐயா சிறு காயத்துடன் தப்பி காட்டு வழியில் நடந்து அநுராதபுரம் ஸ்டேசனில் நின்று தந்தி கொடுத்திருக்கிறார். ஐயா வீட்டுக்கு வந்த பின்னரும் அம்மாவின் அழுகை ஒருவாரமாக ஓயவில்லை.

அபூர்வமாக ஐயா சந்தோசமாக இருந்திருக்கிறார். பெரிதாக குடிக்கும் பழக்கம் இல்லை. கள்ளுக்கொட்டில் போனதே கிடையாது. வீதியிலே ஆடி ஆடி நடந்தது கிடையாது. எப்பொழுதாவது அவருடைய வெளியூர் வியாபார சிநேகிதர்கள் வந்தால் டவுனுக்கு போய் பிராண்டி வாங்கிவந்து நண்பரும் அவருமாக மரக்கட்டிலில் உட்கார்ந்து குடிப்பார்கள். மகிழ்ச்சி அப்படியே துள்ளும். தொடையிலே தாளம்போட்டு பாட்டுப் பாடுவார். எங்களை கைகாட்டி அருகில் வரும்படி கூப்பிடுவார். நாங்கள் போகமாட்டோம். இவர் வேறு யாரோ என்று எங்களுக்குத் தோன்றும்.

படிக்க:
பாதங்கள் சொல்லும் பாடம் !
♦ உடலழகன் போட்டி | அ முத்துலிங்கம்

ஒருவர் வாழ்ந்த மிக நீண்ட வாழ்க்கையில் இப்படி ஒன்றிரண்டு சம்பவங்கள் மட்டுமே நினைவில் வருகின்றன. சிதறியிருக்கும் புள்ளிகளை தொடுத்து ஒட்டகம் உண்டாக்குவதுபோல இந்தச் சம்பவங்களின் கூட்டுத் தொகைதான் என் ஐயாவின் வாழ்க்கை. எங்கள் வீட்டில் நிறைய பலாமரங்கள் இருந்தன. அவற்றைக் கயிறு கட்டி இறக்கி ஊர்க்காரருடன் பங்குபோடுவோம். என்னுடைய இரண்டாவது அண்ணர் கொடுக்கு கட்டிக்கொண்டு மரம் ஏறினார். ஒரு பக்கம் கத்தியையும், மறுபக்கம் கயிற்றின் நுனியையும் செருகியிருந்தார். இதுவே அவருக்கு முதல் தடவை. உச்சக் கொம்பில் பெரிய பழம் தொங்கியது. கயிற்றினால் காம்பைக் கட்டினார். ஒரு கிளையின் மேலால் கயிற்றை கீழே விட்டார். ஐயா கயிற்றை இழுத்துப் பிடிக்க அண்ணர் காம்பை வெட்டினார். பலாப்பழம் பெரும் சத்தத்துடன் கீழே விழுந்து சிதறியது. கயிற்றுக் கட்டுக்கு மேலே வெட்டாமல் அண்ணர் கீழே வெட்டிவிட்டார். அண்ணரின் கால்கள் நடுங்கின. அவருக்கு கீழே நூறு அடி காற்று. அப்பொழுது ஐயா சொன்னது மறக்க முடியாதது. ‘சரி, மகனே. கத்தியையும் கயிறையும் ஞாபகமாக மேலே எடுத்துப்போனாய். மூளையை மட்டும் கீழே விட்டுவிட்டாய். சரி, களைத்துப் போயிருப்பாய். மெதுவாக இறங்கு.’ அருமையான பழம் சிதறிப் போனதில் ஐயாவுக்கு பெரும் கோபம்.

ஒருமுறை என்னிலும் அந்தக் கோபம் திரும்பியது. எனக்கு சைக்கிள் ஓட்டுவதற்கு ஆசை. ஆனால் வீட்டில் இருந்த ஐயாவின் சைக்கிளை பார்க்கலாமே ஒழிய தொடமுடியாது. ஐயாவை பார்க்க ஒருத்தர் தொலை தூரத்திலிருந்து அடிக்கடி வருவார். அவர் தன் சைக்கிளை யானை கட்டுவதுபோல பெரிய சங்கிலியால் கட்டி ஒரு மரத்துடன் இணைத்துவிடுவார். ஒருநாள் அவர் வந்தபோது ஐயா இல்லை. வழக்கம்போல சைக்கிளை கட்டாமல் சாய்த்துவிட்டு திண்ணையில் உட்கார்ந்தார். அந்தத் தருணம் கடவுளால் அருளப்பட்டது. அதை தவறவிட்டால் வாழ்நாள் முழுவதும் துக்கிப்பேன். நான் சைக்கிளை மெதுவாக உருட்டி வெளியே கொண்டுவந்து ஏறி ஓட்டினேன். எங்கள் கிராமத்தில் எங்கே சுற்றினாலும் 3, 4 தெருக்கள்தான். நான் பல சாகசங்கள் செய்தபடி தெருக்களில் ஓட்டினேன். இருந்தும், எழும்பியும், குனிந்தும், குனியாமலும், கையை விட்டும், விடாமலும், நின்றும், நில்லாமலும், மிதித்தபடியும், மிதிக்காமலும் வேகமாக ஓட்டினேன். தூரத்தில் ஐயா வருவது புழுதியில் தெரிந்தது. சைக்கிளை திருப்பினேன்; அது திரும்பவில்லை. பிரேக் பிடித்தேன் , அது பிடிக்கவில்லை. என் சைக்கிள் ஐயாவின் சைக்கிளோடு மோதி, ஐயா மல்லாக்காக விழுந்தார். நான் குருவிபோல சட்டென்று எழும்பி மறைந்துவிட்டேன்.

அன்று நான் வீட்டுக்கு திரும்பவில்லை. மாலையாகும் வரைக்கும் வீதிகளில் சுற்றினேன். பசி தாங்க முடியாமல் மெதுவாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தேன். ஐயா காத்துக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் கால் செருப்பைக் கழற்றி என்னை அடிக்க வந்தார். நான் வீட்டைச் சுற்றி மூன்று தரம் ஓடினேன். பின் நாளில் இந்தச் சம்பவதை விவரிக்கும்போது நான் இப்படி எழுதினேன். ‘சப்பாத்தை தூக்கிக்கொண்டு ராசகுமாரன் சிண்டரெல்லாவை துரத்தியதுபோல அப்பா என்னை துரத்தினார். எவ்வளவு துரத்தினாலும் ஐயாவின் செருப்பு என் முதுகை சந்திக்கவே இல்லை.’

ஐயாவுக்கு வயதானபோது அவரால் வியாபாரத்தை கவனிக்க முடியவில்லை. நிறுத்தலாம் என நினைத்தார், அனால் பொருட்களைக் கடனாக வாங்கியவர்களின் பட்டியல் மிக நீண்டதாக இருந்தது. எத்தனை முயன்றும் பணத்தை மீட்க முடியவில்லை. கடன்காரர்கள் நெருக்கத் தொடங்கினார்கள். ஐயாவுக்கு வேறு வழியில்லை. மூன்று தலைமுறை கண்டு வந்த பெரிய காணி ஒன்றை விற்று கடனை அடைத்தார். அப்பொழுது நான் கணக்காளர் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒருவாறு விசயம் புரிந்தது. 30 வருடமாக ஐயா செய்த வியாபாரம் நட்டத்தில்தான் ஓடியது. அவர் வியாபாரம் செய்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. ஆரம்பத்திலேயே காணியை விற்றிருந்தால் அந்தக் காசிலேயே எங்கள் காலத்தை ஒட்டியிருக்கலாம். இதை நான் ஐயாவிற்கு சொல்லவே இல்லை. அவர் மனது கஷ்டப்பட்டிருக்கும். வீட்டிலே ஓர் ஆண்மகன் எப்படி சும்மா இருப்பது? வியாபாரம் செய்வதுபோல ஒரு பாவனை இருக்கவேண்டும். அப்பொழுதுதானே மரியாதை.

படிக்க:
ஒரு லட்சம் டொலர் புத்தகம் | அ. முத்துலிங்கம்
♦ சோவியத் சிறுகதை: வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு !

ஐயாவுக்கு ஓர் அண்ணர் இருந்தார். பெரிய ஐயா என்று அழைப்போம். அவர் என்ன செய்தார் என்பது தெரியாது. எந்த நேரமும் அவருக்கு ஒரு தேவை இருக்கும். மிக உயரமாக, மேல் சட்டை அணியாமல் முரட்டுத் தோற்றத்தில் காட்சியளிப்பார். கைகளைத் தொட்டால் மரப்பட்டை போல இருக்கும். ஏதாவது உதவி கேட்டு வருவார். ஒரு நாள் இரவு சூள பிடித்துக்கொண்டு இலைகளை மிதித்தபடி அவசரமாக வந்தார். அப்பொழுதுதான் முதன் முதலாக சூள் என்னவென்று பார்த்தேன். தென்னம் பாளையை கீறி பற்றவைத்த தீப்பந்தம் அது. ஐயாவுடன் ஏதோ சத்தமாக பேசிவிட்டு யோசனையுடன் திரும்பினார். தீப்பந்தத்தில் அவர் நிழல் பின்னால் விழுந்தது. அது ஏதோ சோகச் செய்தி சொன்னதுபோல பட்டது.

அடுத்தநாள் அதிகாலை பெரும் ஆரவாரம் கேட்டு எழுந்தேன். எல்லோரும் அலறியடித்துக்கொண்டு ஓட நானும் ஓடினேன். தண்டவாளத்தை தாண்டியதும் ஒரு பெரிய மரத்தின் உச்சியில் பெரிய ஐயா தூக்கில் தொங்கினார். அவருக்கு வயது எழுபதுக்கு மேலே. எப்படி அத்தனை உயரம் ஏறினார், எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. ஒருத்தருக்கும் கேடு நினைக்காத மனிதப் பிறவி அவர். ஐயாவின் கண்களில் நீர் வழிந்ததை முதல்முறை பார்த்தேன். இரண்டாவது தடவை அம்மா இறந்தபோது கண்ணீர் விட்டார். பெரிய ஐயாவுக்கு ஏதோ துயரம் இருந்தது. ஐயா அதைத் தீர்த்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. மிக உயரத்தில் ஒற்றைக் கயிற்றில் அவர் உடல் ஆடியது மறக்கமுடியாத காட்சியாக நிற்கிறது.

ஒட்டுமாங்கன்று எப்பொழுது காய்க்கும் என்று ஐயா பார்த்துக்கொண்டே இருந்தார். அது காய்க்க முன்னரே ஓர் இரவு தனிமையில் இறந்துபோனார். நாங்கள் எல்லோரும் கொக்குவிலில் கூடினோம். ஐயாவை அவருடைய மரக்கட்டிலில் கிடத்தியிருந்தார்கள். ஒரு காலத்தில் தண்டவாளத்தை ஒரு கையால் தூக்கியவர், ஊரில் பிரபலமான சண்டியனை ஒற்றை விரலால் நெஞ்சில்தொட்டு நிறுத்தியவர். அவர் உடலை பார்த்து திடுக்கிட்டேன். சதைகள் உருகி வெறும் எலும்புக்கூடுதான் எஞ்சியிருந்தது. 31-ம் நாள் காரியங்கள் முடிந்த பின்னர் ஐயாவின் பெட்டகத்தை திறந்து ஆராய்ந்தபோது சாதகக் கட்டுகளை காணவில்லை. வேறு பொருட்களும் மறைந்துவிட்டன. ஆக மிஞ்சியது கணக்குப் புத்தகம்தான். நான் அதை எடுத்துக்கொண்டேன்.

அப்பொழுது சாட்டர்ட் கணக்காளர் பரீட்சையில் சித்தியடைந்து நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆகவே ஐயாவின் கணக்குப் புத்தகத்தை ஆராயவேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்தது. கணக்காளர் படிப்பில் ஒற்றை பக்க கணக்கு, இரட்டைப் பக்க கணக்கு என இரண்டு வகை இருந்தது. இரண்டுக்கும் இடைப்பட்ட கணக்குத்தான் ஐயாவுடையது. அவராக உண்டாக்கியது. புத்தகத்தில் சிட்டை கணக்குகள், ரசீதுகள், காசு வரவுகள், செலவுகள், கொடுத்தவர்கள், வாங்கியவர்கள் என சகலதும் இருந்தன. ஆனால் என்னுடைய கணக்காளர் மூளையில் ஒன்றும் ஏறவில்லை. ஒருவருடைய பெயரை எழுதி வெட்டியிருப்பார். அவர் கடனை தந்துவிட்டாரா அல்லது இறந்துவிட்டாரா?

ஒவ்வொரு மாதமுடிவிலும் கோடு இழுத்து புதிய மாதம் தொடங்கியது. எப்படி இந்தப் புத்தகம் அவருக்கு உதவியது என்பது புரியவே இல்லை. திடீரென்று ஒரு பக்கத்தில் வரவேண்டிய கணக்குகள் இருந்தன. அதிலே 10 – 15 பேர்கள். அந்தக் கடன்கள் வந்தனவா என்றும் தெரியவில்லை. அடுத்த பக்கத்தில் கொடுக்கவேண்டியவர்கள் கணக்கு. பெயர்களை வரிசையாக படித்துக்கொண்டே வந்தேன். பல பெயர்கள் எனக்கு தெரிந்த பெயர்கள்தான். ஒரு பெயரில் கண் நின்றது. சிறாப்பர் – ரூ 1.00. அதன் பின்னர் என்னால் ஒன்றுமே படிக்க முடியாமல் போனது. புத்தகத்தை மூடினேன்.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் !

1
மாணவர் போராட்டங்களைஒடுக்கும் போலீசு.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி சென்ற ஜாமியா மாணவர்களை கடுமையாக தாக்கிய டெல்லி போலீஸ் !

ஜாமியா நகரவாசிகள் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் அடங்கிய நூற்றுக்கணக்கானவர்கள் பாராளுமன்றத்தை நோக்கி நடத்திய பேரணி மீது டெல்லி போலீசார் வன்முறையை ஏவி விட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மீது முரட்டுத்தனமாக நடந்து கொண்டதுடன் அவர்களது ஆடைகளை பிடித்திழுத்தும் அந்தரங்க இடங்களில் அடித்தும் கொடூரமாக நடந்துகொண்டது போலீசு.

“என்னுடைய அந்தரங்க பகுதிகளை போலீஸார் பூட்ஸ் கால்களால் மிதித்தார்கள் மேலும் ஒரு பெண் போலீஸ் என்னுடைய புர்க்காவை இழுத்து என்னுடைய அந்தரங்க பகுதிகளை லத்தியால் அடித்தார்” என்று ஒரு மாணவப் போராட்டக்காரார் கூறினார். மேலும் குறைந்தது 40 பேர்களாவது போலீஸ் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களுக்காக அன்சாரி சுகாதார மையம், புனித குடும்பம் மருத்துவமனை மற்றும் அல் ஷிஃபா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள கூறுகின்றன.

டெல்லி காவல்துறை மீண்டும் ஜாமியா மாணவர்கள் மீது கொடூரங்களை கட்டவிழ்த்து விடுகிறது. CAA, NRC, NPR -க்கு எதிராக போராடுவதற்கான எங்கள் உறுதியை உங்கள் தடிகளால் உடைக்க முடியாது – என்று உமர் காலித் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

காயமடைந்த / மயக்கமடைந்த நூற்றுக்கணக்கான ஜாமியா மாணவர்கள் அன்சாரி சுகாதார மையம் மற்றும் புனித குடும்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரும் இப்போது அல் ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். ஜாமியா மாணவர்களுக்கு உதவி தேவை. அவர்களுக்கு உதவ வேண்டிய நேரமிது என்று புஷ்ரா கானும் பகிர்ந்திருந்தார்.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் !
♦ உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56

ஜாமியா முன்னாள் மாணவர்கள் உட்பட போராட்டக்காரர்கள் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு (ஜே.சி.சி) தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) மற்றும் வரவிருக்கும் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த அவர்களுக்கு அனுமதி இல்லை என்று போலீஸ் தெரிவித்தது. பல்கலையை சுற்றிலும் பலமாக போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. போலீஸ் மற்றும் துணை இராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளதாக ராஜ் சேகர் ஜா டிவிட்டரில் பதிந்துள்ளார்.

‘நாங்கள் ஆவணங்களைக் காட்ட மாட்டோம்’, ‘நாங்கள் ஆங்கிலேயர்களுக்கே அஞ்சாதபோது, மற்றவர்களுக்கு ஏன் பயப்பட வேண்டும்’ போன்ற முழக்கங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர். பெண்கள் பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆண்கள் சாலை இருபுறத்திலும் மனித சங்கிலி அமைத்து பெண்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல வழி செய்தனர்.

டெல்லி போலீசின் அராஜகம்.

“இரண்டு மாதங்களாக நாங்கள் போராடுகிறோம். அரசாங்கத்திலிருந்து யாரும் வந்து எங்களிடம் பேசவில்லை. எனவே நாங்கள் அவர்களிடம் சென்று பேசுவோம்” என்று போராட்டத்தில் கலந்து கொண்ட செபா அன்ஹாத் கூறினார்.

போலீஸ் தடியடியினால் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுடன் நிற்போம் என்று ஆல்வின் அபி டுவிட்டரில் பகிர்ந்தார்.

டெல்லியில் மற்றுமொரு போராட்டமும் நடந்தது. ஜாமியா மாணவர்களை போலவே முழக்கங்களை எழுப்பிக்கொண்டு குடிமை சமூக உறுப்பினர்கள் மத்திய டெல்லியின் தெருக்களில் நடந்து சென்றனர்.

போராட்டக்காரர்கள், பல்வேறு அளவிலும் வண்ணங்களிலும் பலகைகள் மற்றும் பதாகைகளை ஏந்தி காலை 11 மணியளவில் மண்டி மாளிகையில் ஒன்றுகூடி பின்னர் ஜந்தர் மந்தரை நோக்கி அணிவகுத்து சென்றனர். அங்கேயும் போலீஸ் மற்றும் துணை இராணுவப்படை குவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்திற்கு அனுமதி வாங்கியிருப்பதாக கூறிய போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் வரை பேரணி செல்வோம் என்று கூறினார்கள். இந்த போராட்டத்திற்கு இந்திய வெல்ஃபேர் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

படிக்க:
ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !
♦ கருக்கலைப்பு – குடும்பக் கட்டுப்பாடு : ஆண்கள் மனநிலை என்ன ? | மருத்துவர் அனுரத்னா

நமாஸ் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது தன்னுடைய மகன் முஹமத் ரியாஸ் (30) போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறிய முஹமத் ஷரீஃப் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டார். அவர் கான்பூரிலிருந்து போராட்டத்திற்கு வந்திருந்தார்.

“அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்னுடைய மகனை என் வீட்டிற்கு எடுத்து வந்தார்கள். நான் உடனே அவனை ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். ஒரு நபர் கூட என் வீட்டிற்கு வந்து நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று கேட்கவில்லை. போலீசார் எங்களுடன் தவறாக நடந்து கொண்டனர். திருமண விழாவில் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பும் போது ரியாஸ் போலீசாரால் கொல்லப்பட்டார்” என்றார் ஷரீஃப்.

போராட்டக்காரர்கள் விடுதலைப் போராட்ட வீரர்களான பகத் சிங் மற்றும் சந்திர சேகர் ஆசாத் மற்றும் சமூக சீர்திருத்தவாதி சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் புகைப்படங்களை ஏந்திக்கொண்டு அரசாங்கம் “கறுப்புச் சட்டத்தை” நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


சுகுமார்
நன்றி :  தி வயர். 

பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிரான விசத்தை கக்குவது ஏன் ?

0

பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிரான விசத்தை கக்குவதற்கு அடிப்படையாக இருந்த கலாச்சார மோதல் குறித்த கோல்வால்கரின் கருத்து

1939 -ல் This is We or Our Nationhood Defined (1939) என்ற நூலில், வரலாற்றின் முடிவுறாத மோதல் குறித்து கோல்வால்கர் எழுதுகிறார்:

விதி வசத்தால் போரின் அலையானது இப்போது இந்த பக்கமாக மாறுகிறது. ஆனாலும் இன்னும் போர் தொடர்கிறது. முடிவு எட்டப்படவில்லை

இந்த போரின் தலைவிதி எப்போதுவரை முடிவு செய்யப்படாமல் இருக்கும்? வெற்றியடையும் வரை தான். இறுதியாக முடிவு செய்யப்பட்டு தீர்க்கப்படும் போது தான் போரின் வெற்றி கிடைக்கிறது.

கோல்வால்கரிடம் அத்தகைய போரின் போக்கு தெளிவாகிறது:

இனத்தின் ஆன்மா விழித்தெழுந்து கொண்டிருக்கிறது. சிங்கம் சாகவில்லை, தூங்கிக்கொண்டிருந்தது. மீண்டும் தன்னைத்தானே அது கிளர்ச்சியடைய செய்கிறது. மீளுருவாக்கம் செய்யப்பட்ட இந்து தேசம் தன்னுடைய வலிமையால் எதிரியின் படையை வீழ்த்துவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது.”

இராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்) 1940 முதல் 1973 வரை வழிநடத்திய கோல்வால்கர், முடிவில்லாத ஒரு இனப்போரைக் கனவு காண்கிறார். அவர் இன உணர்வை வரையறுப்பதற்காக ஒரு விலங்கியல் உருவகத்தை தன்னுடைய இந்து தேச கருத்தாக்கத்துடன் இணைக்கிறார். எதிரியை ஒழிப்பதற்கு இனத்தின் ஆன்மா தூக்கம் கலைய வேண்டும். தற்செயலாக, கடந்த ஆண்டு சிகாகோவில் மோகன் பகவத்தின் சர்ச்சைக்குரிய உரையில் அதே சிங்க உருவகம் மீண்டும் எழுந்தது.

இத்தகைய இனப்போரை நடத்துவதற்கு தேவையான அடுத்தகட்ட நடவடிக்கையை கோல்வால்கர் கையிலெடுக்கிறார். மக்களாட்சியின் கருத்தாக்கத்தை அவர் தாக்குகிறார்: “மக்களாட்சியின் தவறான கருத்துக்கள் எங்களுக்கு தவறான பார்வையை கொடுத்தன. முன்னால் படையெடுப்பாளர்களுடனும் எதிரிகளுடனும் சேர்ந்து அயல்நாட்டார் சூட்டிய இந்தியன் என்ற பெயரில் எங்களை ஒரு வர்க்கமாக அடையாளப்படுத்தி கைகோர்த்துக் கொண்டு அவர்களை வெல்ல முயற்சித்தோம். இந்த விஷத்தின் விளைவினால் எதிரிகளை கூட நண்பர்களாக நம்புகின்ற நிலைக்கு நாங்களாகவே தள்ளப்பட்டோம். எங்கள் சொந்த கைகளாளேயே உண்மையான தேசியத்தை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம்”.

இந்தியராக இருப்பது – இந்த சொல் கிரேக்க சொற்பிறப்பியல் அடிப்படையிலானது, வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் அன்னியராக இருப்பது தான். அதாவது ஒருவரின் இன அடையாளத்தை இழப்பது என்பதே இதன் பொருள். கோல்வால்கரைப் பொறுத்தவரை, நட்பு அரசியலை ஊக்குவிக்கும் வரை மக்களாட்சி என்பது தவறான கருத்தாகும். இந்த நட்பு ‘நச்சு’ போன்றது. ஏனெனில் இது போர் செய்வதற்கான வெறித்தனத்தை பலவீனப்படுத்துகிறது. போரை நம்புபவர்களுக்கு நண்பர்கள் கிடையாது.

படிக்க:
♦ பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !
♦ நீலச்சட்டை பேரணி – சாதி ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்கள் !

மக்களாட்சி குறித்த ஐயங்களை எழுப்பிய கோல்வால்கர் சிறுபான்மையினர் என்ற கருத்தை நோக்கி திரும்புகிறார். லீக் ஆஃப் நேஷனில் (League of Nations) இருந்து மேற்கோள் காட்டுகிறார்:

“சிறுபான்மையினர் – ‘ஒரு தேசத்தின் உடலில் இணைக்கப்பட்ட வர்க்கம்‘.  ‘இனம், மதம் மற்றும் மொழி அடிப்படையில் பெரும்பான்மையான மக்களிடமிருந்து வேறுபடும் குடிமக்கள் தாம் சிறுபான்மையினர் என்றழைக்கப்படுகிறார்கள்என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு தேசத்திற்கும் அதன் சொந்த தேசிய இனம், மதம் மற்றும் மொழி கட்டாயம் இருக்க வேண்டும் (கலாச்சாரம் தனியாக குறிப்பிட தேவையில்லை. இனம், மதம் மற்றும் மொழி ஆகியவற்றைக் குறிப்பிடும் போது அது மறைமுகமாக உள்ளது.) ”

“குடிமகன்” என்ற சொல்லை நிராகரித்து, சிறுபான்மையினர் – வெளிநாட்டினர், அல்லது வெளியிலிருந்து வந்தவர்கள், தேசிய அரசியலில் அவர்கள் பங்கேற்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள, “இணைக்கப்பட்ட” என்ற சொல்லில் கோல்வால்கர் கவனம் செலுத்துகிறார். அவரைப் பொறுத்தவரை, தேசத்தின் மகத்தான, தனித்துவமான கருத்தாக்கத்தை சிறுபான்மையினர் பிளவுபடுத்துகிறார்கள்.

“ஜெர்மனியர்கள் பரம்பரையாக வைத்திருந்த, அரசியல் மோதல்களால் பிரிக்கப்பட்ட தேசத்தின் பகுதிகளை ஒரு குடையின் கீழ் மீண்டும் கொண்டுவர நவீன ஜெர்மனி முயன்றது.” என்று நாஜி ஜெர்மனியை கோல்வால்கர் புகழ்ந்துரைக்கிறார்.

தேசிய நிலப்பகுதி என்பது இன பாரம்பரியம் குறித்த ஒரு விடயமாகும். பேரரசுக்கான ஒரு நவீனகால கருத்தாக்கத்தால் அதன் வரலாறு தீர்மானிக்கப்படுகிறது. உண்மையில், வரலாறு பற்றிய கருத்தாக்கமே ஒரு போலி வரலாறு. இங்கு வரலாறு என்பது இன வரலாற்றின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிறது. நவீன தேசிய அரசு என்கின்ற கருத்தாக்கத்திற்கு முன்னர் ஜெர்மனியாகவோ இந்தியாவாகவோ இருந்தவை தான் கோல்வால்கரின் கூற்றுப்படி உண்மையான தேசிய நிலப்பகுதி. “ஒரு தேசமாக இருக்கவோ வாழவோ மக்களுக்கு ஒரு பாரம்பரிய நிலப்பகுதி இருப்பது இன்றியமையாதது” என்று கோல்வால்கர் வலியுறுத்துகிறார்,

இன கருத்தாக்கத்தை சுற்றி பாரம்பரிய கருத்தாக்கம் எப்படி பிணைக்கப்பட்டுள்ளது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது. அவர் கூறும்போது இது மேலும் தெளிவாகிறது: “வேர்மட்ட அளவில் வேறுபாடுகள் கொண்ட இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் முழுமையாய் ஒன்றிணைக்கப்படுவது சாத்தியமற்றது என்ற ஜெர்மனியின் அனுபவம் இந்துஸ்தானில் நாம் கற்றுக்கொண்டு ஆதாயமடைய ஒரு நல்ல பாடம். இனவெறி அடிப்படையில் கலாச்சாரம் புரிந்து கொள்ளப்படுகிறது. இனவெறி எல்லைகளுக்கு வெளியே கலாச்சார ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை. கோல்வால்கரின் கலாச்சாரம் பற்றிய கருத்து கண்டிப்பாக பிரிவினைவாத அடிப்படையிலானது.

நேரு மற்றும் தாகூரின் அணுகுமுறை:

இதற்கு மாறாக, டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் ஜவஹர்லால் நேரு எழுதுகிறார்:

“பவுத்தரோ அல்லது சமணரோ இந்திய சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் நூறு விழுக்காட்டு படைப்பாகும். இருப்பினும் நம்பிக்கை அடிப்படையில் அவர்கள் இந்து கிடையாது. எனவே, இந்திய கலாச்சாரத்தை இந்து கலாச்சாரம் என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. பிற்காலத்தில் இந்த கலாச்சாரத்தின் மீது இஸ்லாம் பெரிதாக செல்வாக்கு செலுத்திய அதே சமயத்தில் இந்தியாவின் ஒரு தனித்துவமாக அடையாளமாகவும் அது இருந்தது ”.

படிக்க:
♦ கொல்கத்தா : ஒரு மாதமாக பெண்கள் தலைமையில் தொடரும் போராட்டம் !
♦ சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !

இங்கே நேரு கலாச்சாரத்தையும் தேசத்தையும் தொடர்புபடுத்த முயற்சிக்கிறார். ஆனால் இது கோல்வால்கருக்கு முற்றிலும் எதிரானது. தேசிய கலாச்சாரத்தை வரையறுக்க இனம் அல்லது மதத்தை உருவாக்குவதற்கு பதிலாக, இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையாக பல்வேறு மதங்களின் வரலாறு மற்றும் இருப்பை நேரு பொருத்துகிறார். நேரு எளிமையான ஒரு வரலாற்று உண்மையை வரையறுக்கிறார்: இந்து என்பவர் ஒரு இந்தியர், ஆனால் இந்தியர் என்பவர் இந்து மட்டுமல்ல. பவுத்தமும், சமணமும், இஸ்லாத்தைப் போலவே இந்தியாவில் தனித்துவமாக உள்ளன.

இந்தியாவில் இஸ்லாத்தின் தனித்துவம் என்பது மற்ற மதங்களுடனான மோதல் காரணமாக உருவானதாகும். இந்த சந்திப்பு போர்களை உருவாக்கியது மட்டுமல்லாமல் கலாச்சாரத்தையும் உருவாக்கியது. கோல்வால்கர் போரில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு கலாச்சாரத்தை மறுக்கிறார்.

கோல்வால்கரிடமிருந்து வேறுபடும் இரவீந்திரநாத் தாகூரரையும் இங்கே எடுத்துக் கொள்வோம். ‘இந்திய கலாச்சாரத்தின் மையம் (The Centre of Indian Culture)’என்கின்ற தனது கட்டுரையில் அவர் எழுதுகிறார்:

நவீன ஐரோப்பிய கலாச்சாரத்தின் உண்மையும் வலிமையும் அதன் நீரோட்டமான இயக்கத்தில் உள்ளது. அது [தேசியம் குறித்த] அனைத்து சிக்கல்களும் கடுமையாக சரி செய்யப்பட்டு நம்மிடம் வருகிறது. அவற்றின் தெய்வீக தோற்றம் காரணமாக கிட்டத்தட்ட நம்முடைய சொந்த சாத்திரங்களைப் போலவே நம் மனம் எதிர்பில்லாத முறையில் விமர்சனமின்றி இருக்க வேண்டும்.”

பாரம்பரிய அறிவின் கெட்டித்தன்மைக்கு மாறாக, கலாச்சாரத்தின் இந்த இலகிய தன்மையை தாகூர் வரவேற்கிறார். அதே கட்டுரையில், அவர் கலாச்சாரத்தை “மனதின் வாழ்க்கை” என்று வரையறுக்கிறார்.

மனதுக்கும் இனத்துக்கும் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. இனம் என்பது ஒரு உயிரியல் கருத்தாக்கம். இது நிறம் பற்றிய கருத்தாக்கமாகும். இது ஓரளவு மற்ற (இனரீதியாக வேறுபட்ட) மக்களின் நிற ரீதியிலான பாரபட்சமான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. மனம் என்பது ஒருவரின் இன அடையாளத்துடன் முற்றிலும் அடையாளம் காண முடியாத – அல்லது தாழ்ந்து போகாத சிந்தனை மற்றும் அனுபவத்தின் கலவையாகும். உடல் அனுபவிப்பதை மனம் செயலாக்குகிறது, மேலும் அதைப் எதிரொளிக்கிறது. மனதின் வாழ்க்கை, பல வழிகளில், கலாச்சாரத்தின் வாழ்க்கையை குறிக்கிறது. மனமும் உடலும், எதிரொளிப்பு மற்றும் அனுபவமாக நமது கலாச்சார நினைவகத்தின் ஒரு பகுதியாகும். இதிலிருந்து தான் இனக் கோட்பாடுகள், வரலாற்று மற்றும் கலாச்சார மோதல்களிலிருந்து எடுக்கப்பட்ட மிகைப்படுத்தல்களின் அடிப்படையில் வேற்றுமையை உருவாக்கி, (மற்றவரின்) அறிவையே போராக மாற்றுகின்றன.

“நவீன கலாச்சாரம் குறித்த நம்முடைய கருத்து என்பது இலக்கண மற்றும் ஆய்வக எல்லைக் கோடுகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்ற புலனுணர்வு அல்லது பகுத்தறிவு அவதானிப்பை கட்டுரையில் தாகூர் உருவாக்குகிறார். இதற்கு நவீன இனவெறி மொழியைச் சுற்றியுள்ள இரண்டு முதன்மையான சொற்களை அவர் பயன்படுத்துகிறார்: இலக்கணம் மற்றும் ஆய்வகம். இலக்கணம் ஒரு மொழியின் விதிகளை வரையறுக்கிறது. ஆனால் மொழி குறித்தான ஒரு விஞ்ஞான கருத்தாக்கத்தை தூய்மை அடிப்படையில் உருவாக்க அதன் இலக்கணம் பயன்படுத்தப்படும்போது, ​​மொழியின் திறந்த மற்றும் உயிர்ப்புத்தன்மை ஒரு குடுவையில் அடைபடுகிறது. ஒரு ஆய்வகத்தில், மொழியின் விஞ்ஞான விதிகள் ஒரு கோட்பாட்டை உருவாக்க பயன்படுத்தப்படும் போது தர்க்கம், இனமாக தாழ்த்தப்படுகிறது.

படிக்க:
♦ ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் அறிவியல் படும் பாடு !
♦ கேள்வி பதில் : முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன ?

இவை அனைத்தும் கலாச்சாரம் என்ற கருத்தை எவ்வாறு பாதிக்கின்றன?

நேரு மற்றும் தாகூரைப் பொறுத்தவரை, கலாச்சாரம் என்பது பாரம்பரியம் மற்றும் வரலாறு ஆகிய இரண்டின் எல்லைகளை தாண்டுகிறது. கோல்வால்கரைப் பொறுத்தவரை, பாரம்பரியம் என்பது மதம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றை சேர்ந்தார் போல் குறிக்கும் ஒரு சொல். இது இன வேறுபாட்டை வரையறுக்கிறது. தாகூர் மற்றும் நேருவின் பார்வையில், கலாச்சாரம் என்பது போரை கடந்த ஒன்று. அதாவது, இரு தரப்பினரும் வன்முறையில் ஒருவரையொருவர் எதிர்கொண்ட பிறகு, கலாச்சாரம் எஞ்சியிருக்கிறது. கலாச்சாரம் என்பது வன்முறை வரலாற்றில் எஞ்சியதாகும்.

வரலாற்றில் மிச்ச மீதி இருந்த வன்முறை பற்றிய கருத்தை தக்கவைத்துக்கொள்வதே கலாச்சாரத்தின் பணி என்று கோல்வால்கர் நம்புகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காலாச்சாரத்தை எது அழித்ததோ அதற்கே மீண்டும் கொண்டு செல்ல விரும்புகிறார். கோல்வால்கரின் பணி முரண்பாடானது, ஆபத்தானது மற்றும் துன்பமானது. அவர் போர் குறித்தான கருத்தால் கலாச்சாரத்தை வரையறுத்து பாதுகாக்கிறார்.

சிறுபான்மையினர்களுக்கு எதிரான நிரந்தர கலாச்சார போர்:

1975 மற்றும் 1976 க்கு இடையில், “கட்டாயமாக சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும் (Society Must Be Defended)” என்ற தன்னுடைய கவர்ச்சிகரமான தொடர் சொற்பொழிவுகளின் மூலம் 17 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே போர் என்ற கருத்தானது அனைத்து அதிகார நிறுவனங்களையும் வரையறுப்பதாக பிரெஞ்சு சிந்தனையாளரான மைக்கேல் ஃபோக்கால்ட்(Michel Foucault) குறிப்பிடுகிறார். போரை உருவாக்கும் மனநிலையைப் பற்றிய ஃபோக்கோவின் விளக்கம் கோல்வால்கருக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதைக் காட்ட சில முதன்மையான பத்திகளை அவரது உரையிலிருந்து பார்க்கலாம்.

மைக்கேல் ஃபோக்கால்ட்

(ஒரு சமூகத்தின்) சட்டத்திற்கு எதிராக மத்தியக்காலத்தில் போருக்கு முன்னுரிமை அளித்த அதிகாரத்தின் இரு கட்டமைப்பு தோற்றம் பற்றி பேசுகையில், ஃபோக்கோ தன்னுடைய மனநிலையைத் திறக்கிறார்:

“வேறுவிதமாகக் கூறினால், எங்களை எதிர்கொள்ளும் எதிரிகள் இன்னும் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். மேலும் நல்லிணக்கமோ அல்லது சமாதானமோ எதுவும் போரை முடிவுக்கு கொண்டு வராது. நாங்கள் உண்மையில் வெற்றியாளர்களானால் மட்டுமே இது முடிவடையும். ”

இதேபோன்ற, 17 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய மனநிலையை கோல்வால்கரும் எதிரொலிக்கிறார். கலாச்சாரத்தின் இனரீதியான கருத்தை மத சிறுபான்மையினருக்கு எதிரான நிரந்தரப் போரில் ஈடுபடுவதாக மாற்றியுள்ளார். நீங்கள் போரை நம்பினால், அமைதி என்பது உண்மையற்றது மட்டுமல்ல, விரும்பத்தகாததும் கூட என்கிறார்.

போர் ஒரு கொள்கை என்பதால் அது அரசின் சித்தாந்தத்திலிருந்துதான் வர வேண்டும். போரை நம்பும் பாசிச அரசு, எதிரிகளாக கற்பனை செய்யும் அனைவருடனும் போரில் ஈடுபடும் ஒரு அரசாகும். சிறுபான்மையினர் அரசியல் உரிமைகளை கோரும் தகுதியுடையவர்களாக இருப்பதால் “சிறுபான்மையினர்” என்ற சொல்லை அத்தகைய ஒரு அரசு விரும்பவில்லை.

கோல்வால்கர் விளக்கியபடி, “நாங்கள் தேசிய மீளுருவாக்கம் செய்ய நிற்கிறோம், ஆனால் அரசியல் உரிமைகள் எனும் இடையூறுகளாலான அரசுக்கு அல்ல”. மறைமுகமான வாதம் என்னவென்றால், பெரும்பான்மை சமூகத்தின் மறுசீரமைக்கப்பட்ட பாரம்பரிய பெருமைகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய மீளுருவாக்கமானது சிறுபான்மையினர் உரிமைகள் பற்றி கவலைப்பட தேவையில்லை. ஆனால் இதன் பொருள் இன்னும் அதிகமாக இருக்கும் .

படிக்க:
♦ பிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் ?
♦ மகஇக அதிரடி – சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை ! கோல்வால்கருக்கு செருப்படி !

“சமூகம் கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும்” சொற்பொழிவில் போர் சித்தாந்தவாதிகளை ஃபோக்கோ விளக்குகிறார் : தேசம் இனி காட்டுமிராண்டித்தனமான மற்றும் போர்க்குணமிக்க உறவுகளில் பங்காளியாக இருக்காது. தேசம் என்பது அரசின் செயல் வடிவமிக்க உறுதியான மையமாகும். தேசம் என்பதே அரசு, அல்லது குறைந்தபட்சம் அரசுக்கான வடிவமாக இருக்கும்”.

இந்து ராஷ்டிரம் என்பது அரசின் இடத்தில் தேசத்தை வைக்கும் இந்த கருத்துக்கு ஒப்பானது. ஒரு அரசாக அது மாற முற்படுகிறது. உறுதியான சொற்களில் சொல்வதானால், அரசை போன்ற செயல்பாடுகளை கொண்ட விழிப்புணர்வு படைத்த சமூகம் இது. இந்த இடத்தில் தான் சமூகம் என்ற கருத்திற்கு ஆபத்து வருகிறது. சமூகம் ஒரு நிறுவனமாக கருதப்பட்டால், அதன் முக்கிய வரலாற்று நோக்கம் அதனுள்ளேயே போர் நடத்துவதுதானென்றால் சமூகம் என்ற கருத்தே இங்கே அழிக்கப்படுகிறது.

மக்களாட்சி என்ற கருத்தின் மூலம் இந்து தேசத்திற்கான தேவையை நீர்த்துப்போகச் செய்ததற்காக இந்திய தேசிய காங்கிரஸின் நிறுவனர்களை கோல்வால்கர் கடிந்துகொள்கிறார்: “… இந்த நாட்டில் ஒரு “உண்மையான” மக்களாட்சியை உருவாக்குவதற்கான நம்முடைய காட்டு வாத்து துரத்தலில், [நாங்கள்] நமது உண்மையான இந்து தேசத்தின் பார்வையை முற்றிலுமாக இழந்துவிட்டோம்”.

கோல்வால்கரைப் பொறுத்தவரை மக்களாட்சி என்பது பிடிபடாமல் உள்ள அதே நேரத்தில் ஒரு இந்து தேசம் அவரை பொருத்த வரையில் சாத்தியமானது மற்றும் விரும்பத்தக்கதாக உள்ளது. ஒரு மக்களாட்சியை விட ஒரு மதவாத அரசு (இந்து ராஷ்டிரா) என்ற கருத்தை அவர் விரும்புகிறார். ஒரு மக்களாட்சியின் விருப்பம் ஏன் ஒரு காட்டு வாத்து துரத்தல் என்பதற்கான காரணங்களை அவர் முன்வைக்கவில்லை. ஆனால் இந்து ராஷ்டிரத்தை அடைவதில் இருந்து ஒரு மக்களாட்சி விலகுகிறது என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார். சமுதாயத்தின் (மக்களாட்சி) நிர்வாகத்தை விட அல்லது நமது சமூக மற்றும் மத வேறுபாடுகளை விட ஒரு நாடு போரை நிர்வகிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்கிறார்.

கோல்வால்கரைப் பொறுத்தவரை, எதிரியை பெயரிட்டு அழைக்க ஜனநாயக அரசுக்கு ஆண்மை இல்லை. “எங்களது இன ஆன்மாவை தூங்க விட்டதாக” இந்திய தேசிய காங்கிரஸை அவர் குற்றம் சாட்டினார். அவரைப் பொறுத்தவரை, இது “நம்முடைய தற்போதைய மகிழ்ச்சியற்ற நிலைக்கு மூலக்காரணியாக இருந்து வருகிறது…. நம்முடைய அக்கறையற்ற எதிரிகளை கட்டிப்பிடிப்பதன் மூலம், நம்முடைய இருப்புக்கு ஆபத்தை விளைவிப்பதற்கும் காரணம் இதுவே”. எதிரிகளை நாட்டை விட்டு வெளியேற்ற மக்களாட்சியை கண்டிப்பாக ஒழிக்க வேண்டும் என்பதே நம்முடைய அரசியல் தர்க்கமாக இருக்க வேண்டும்.

தேசத்தை தேடி: இந்தியாவின் மற்றொரு சிந்தனையை நோக்கி (Looking for the Nation: Towards Another Idea of India) என்ற நூலின் ஆசிரியர் எம் அ நாஷ் ஃபிராக் பட்டாச்சார்ஜி (M​a​​nash Firaq Bhattacharjee). இது Speaking Tiger Books வெளியீட்டாளர்களால் 2018, ஆகஸ்டில் வெளியிடப்பட்டது.


கட்டுரையாளர் : Manash Firaq Bhattacharjee
தமிழாக்கம் : 
சுகுமார்
நன்றி :  தி வயர். 

கருக்கலைப்பு – குடும்பக் கட்டுப்பாடு : ஆண்கள் மனநிலை என்ன ? | மருத்துவர் அனுரத்னா

ருக்கலைப்பு செய்து லேப்ரோஸ்கோப்பி குடும்பக் கட்டுப்பாடு செய்ய அனுமதிக்கப்பட்டார் ஒரு பெண். கருக்கலைப்புக்கான மாத்திரைகள் வழங்கப்பட்ட நிலையில் அவரைத் தவிர வேறு அவர் உறவினர்கள் யாருமே மருத்துவமனையில் இல்லை.

சட்டப்படி கருக்கலைப்பு செய்யவோ குடும்பக் கட்டுப்பாடு செய்யவோ கணவரின் அனுமதி தேவையில்லை. அது எங்கள் செவிலியர்கள் அனைவருக்கும் தெரிந்தாலும் சில நேரங்களில் வடிவேலு மாதிரி (எங்கே என் உறவினர் என்று சுடுகாட்டில் வந்து சத்தம் போட்டு சாம்பல் அள்ளி பூசுவாரே) எல்லாம் முடிந்த பிறகு கணவர் வந்து சண்டைக்கு வருவார். அதனால் உறவினரின் கையொப்பம் வாங்கி வைக்கிறார்கள் செவிலியர்கள். நான் அவ்விடத்தில் இருந்தால் உறவினர் கையொப்பம் எல்லாம் வாங்கவே மாட்டேன்.

இப்பெண்ணிற்கான அறுவைச் சிகிச்சைக்காக நான் அறுவை அரங்கம் சென்றதும் ஒரு செவிலியர் பதறிக்கொண்டு ஓடிவந்தார் என்னிடம். “மேடம் அவர் கணவர் இப்பவரை வரல மேடம்” என்றார். ”கணவர் எதுக்கு இதுக்கு, சட்டமே கணவர் தேவையில்லை எனும் போது நீங்கள் ஏன் அந்த கணவருக்காக காத்து இருக்கீங்க, அதுவும் மனைவிக்கு இன்று அறுவைச் சிகிச்சை எனத் தெரிந்தும் மருத்துவமனை பக்கம் எட்டிப் பார்க்காத கணவரெல்லாம் ஒரு ஆளா, யாரும் தேவையில்லை எனக்கு, அப்பெண் மட்டும் கையொப்பம் போட்டால் போதும், நான் அப்பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்து நுண்துளை (laparoscopic sterilisation) குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வேன்” என்று சொல்லி அப்பெண் போட்ட ஒற்றைக் கையெழுத்து கொண்டு கருக்கலைப்பும் நுண்துளை குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்தேன்.

சட்டமே கணவர் தேவையில்லை என்ற பின்னும் நாம் ஏன் கணவருக்கு அங்கே முக்கியத்துவம் கொடுக்கனும்? இப்படி கொடுக்கும் முக்கியத்துவங்களால் நாளடைவில் ஆம்பள கையெழுத்து போட்டால்தான் பொம்பள அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற நிலை வந்துவிடும். அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.

பெண்களே… தேவையற்ற கர்ப்பம் எனில் அரசு மருத்துவமனையை நாடவும். கருக்கலைப்பும் குடும்பக் கட்டுப்பாடும் இலவசமாக செய்யப்படுகிறது. இரகசியம் காக்கப்படுகிறது.

படிக்க:
பாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்
♦ சர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது ! | ஃபரூக் அப்துல்லா

ஆண்களே…. பெண்களை மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்ய நிர்பந்திக்க கூடாது. நீங்களும் முன்வர வேண்டும். ஆண்களும் வாசக்டமி செய்ய முன்வர வேண்டும். அம்பேத்கரையும் பெரியாரையும் பேசிக்கொண்டே பெண்ணுரிமை பேசும் ஆண்கள் கூட வாசக்டமி செய்ய முன்வருவதில்லை. எவ்வித தயக்கமும் இதில் தேவையில்லை. வாசக்டமி செய்வதற்கு உள்நோயாளியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வாசக்டமி செய்வதால் கணவன் மனைவி உறவிலும் பாதிப்பு வராது.

நம் பகுதியில் வாசக்டமி செய்யவோ, பெண்களுக்கான நுண்துளை குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யவோ விரும்புகிறவர்கள் நமது பொன்னேரி அரசு மருத்துவமனையில் வந்து தலைமை மருத்துவரையோ அல்லது பிரசவ பகுதியில் உள்ள மருத்துவர்களையோ நாடவும்.

ஃபேஸ்புக்கில் 25.11.2019 அன்று வெளியிடப்பட்ட பதிவு.

♦ ♦ ♦

வாசக்டமி

த்தியின்றி இரத்தமின்றி ஒரு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை (நிரந்தர) செய்யமுடியுமென்றால் அது ஆண்களுக்கு செய்யப்படும் வாசக்டமி தான். கத்தியில்லாமல் இரத்தம் இல்லாமல் பெண்களுக்கு இதை செய்ய முடியாது. பெண்கள் ஏதோ பயந்து நடுங்குபவர்கள் போலவும் ஆண்கள்தான் ஏதோ தைரியசாலிகள் போலவும் கட்டுக்கதைகள் நிறைய இருக்கிறது நம் சமூகத்தில். தைரியசாலி என்பான், முற்போக்குவாதி என்பான், ஆனால் மனைவியை அனுப்புவான் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு.  ஆனால் தான் வரமாட்டான்.

இன்று மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 நபர்களுக்கு வாசக்டமி செய்யப்பட்டது. அனைவருமே தன்னார்வத்தோடு வந்தவர்கள். காலையில் வந்தார்கள். வாசக்டமி முடித்து மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கே போய்விட்டார்கள். அவ்வளவு எளிதான ஒரு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை தான் வாசக்டமி. இன்று நான் மற்றும் இரு ஆண் மருத்துவர்கள் (Dr.Maheswar, Dr.Madhan) மூவரும் இணைந்து இந்த 15 நபர்களுக்கும் இச்சிகிச்சை அளித்தோம்.

முகநூலைத் திறந்தாலே முற்போக்கு சிந்தனைகள்தான் அதிகம் பேசப்படுகிறது. ஆனால் இதில் மட்டும் தொய்வு ஏன்? வாசக்டமி செய்தால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாது என்று நினைப்பதும் ஓர் மூடநம்பிக்கை தான். வெற்றிகரமாக இன்றைய பணியினை நிறைவு செய்த போது குரூப் போட்டோ எடுக்கலாம் வாங்க என மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பணியாளர்கள் அழைத்தனர். அருமையான புகைப்படம் இது. மருத்துவமனையின் வெளித் தோற்றம் மட்டுமல்ல மருத்துவமனையின் உள் தோற்றமும் அவ்வளவு சுத்தமாக பசுமையாக பராமரிக்கப்படுகிறது. உள்ளே அப்பல்லோ ஆஸ்பத்திரி மாதிரி இருக்கு என சிலர் சொல்வதையும் இன்று கேட்டேன். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவர் ராஜேஷ் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பயணம் இதேபோல் என்றும் தொடரட்டும்.

படிக்க:
தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா பெண் சிசுக்கொலை ?
♦ நிலவுடமையும் சேர சோழ பாண்டிய மன்னன் வரலாறும்

அனு நீ DGO தானே, உனக்கு எதுக்கு வாசக்டமி, நீ சிசேரியன் பண்ணு, பெண்களுக்கு கு.க. பண்ணு, கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய், லேப்ராஸ்கோபி கு.க. செய் பெண்களுக்கு, இதையெல்லாம் நீ செய்கிறாய், இதுவே போதும் என்று என்னை ஒதுக்காமல் வாசக்டமி செய்யவும் என்னை தயார்படுத்திய எங்கள் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஃபேஸ்புக்கில் 04.12.2019 அன்று வெளியிடப்பட்ட பதிவு.

நன்றி : ஃபேஸ்புக்கில் மருத்துவர் அனுரத்னா

உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 56

உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு 

அ.அனிக்கின்

ஸ்மித்தினுடைய ஆரம்ப விமரிசகர்கள் பொதுவாக அவருடைய முறைகளையும் கருத்துக்களையும் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே அவருடைய செல்வாக்கு – குறிப்பாக ரிக்கார்டோவுடன் இணைந்து – பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபதுக்கள் வரையிலும் மிகவும் அதிகமாக இருந்தது. அதற்குப் பிறகு நிலைமை மாறியது. ஒரு பக்கத்தில் மார்க்சியம் தோன்றியது. மறு பக்கத்தில் எழுபதுக்களில் அரசியல் பொருளாதாரத் துறையில் அகநிலை மரபு தோன்றி வெகு சீக்கிரத்தில் முதலாளித்துவ விஞ்ஞானத்தில் மேலாதிக்கம் பெற்றது.

ஸ்மித்தைப் பற்றி “கடுங்கண்டிப்பான” அணுகுமுறை பின்பற்றப்பட்டது; இயற்கையாகவே அவருடைய மதிப்புத் தத்துவம் அதற்கு முதல் பலியாயிற்று. ஆனால் இது உடனே நடந்துவிடவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் பாதியில் பிரபலமான முதலாளித்துவப் பொருளியலாளராக இருந்த அ. மார்ஷல் ரிக்கார்டோவின் போதனையுடன் ஒரு இணைப்பை நீடித்து வைத்துக் கொண்டு அவருடைய கருத்துக்களைப் புதிய அகநிலைக் கருத்துக்களோடு சமரசப்படுத்துவதற்குக் கடுமையான முயற்சிகளைச் செய்த வராவார். அவர் ஸ்மித்தைப் பற்றி, “மதிப்பைப் பற்றி அவருடைய சமகாலத்தவர்களான பிரெஞ்சு, ஆங்கில சிந்தனையாளர்கள் மற்றும் அவர்களுக்கு முன்பிருந்தவர்களின் ஊகங்களை இணைத்தும் வளர்த்தும் கொண்டு சென்றதே அவர் செய்த முக்கியமான பணி”(1) என்று எழுதினார்.

இதற்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல அமெரிக்கப் பொருளியலாளரான பால் டக்ளஸ் வேறுவிதமாக எழுதினார். ஸ்மித்துக்கு முன்பிருந்தவர்களின் எழுத்துக்களில் அதிகமான முக்கியத்துவம் கொண்டிருந்தவற்றை அவர் நிராகரித்துவிட்டாரென்றும் தம்முடைய மதிப்புத் தத்துவத்தின் மூலம் ஆங்கில அரசியல் பொருளாதாரத்தை ஒரு முட்டுச் சந்துக்குள் செலுத்திவிட்டாரென்றும் அதிலிருந்து அது வெளியே வருவதற்கு முழுமையாக ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டதென்றும் குற்றம் சாட்டினார். ஷம்பீட்டர் தம்முடைய பொருளாதார ஆராய்ச்சியின் வரலாறு என்ற புத்தகத்தில் ஸ்மித்தைப் பற்றி வெளிப்பார்வைக்கு மரியாதையும் ஆனால் அடிப்படையில் அதிகமான அவநம்பிக்கையும் கொண்ட அணுகுமுறையை வலுப்படுத்துகிறார்.

ஷம்பீட்டர்

ஸ்மித் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை ஆதரிப்பதாகச் சொல்ல முடியுமா என்று கூட அவர் உண்மையிலேயே சந்தேகப்படுகிறார். கடைசியாக, பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியைப் பற்றிய ஒரு சாதாரணமான புத்தகத்தில் (ஜே. பெல் என்பவர் எழுதிய புத்தகம்) பின் வருமாறு எழுதப்பட்டிருக்கிறது: “மதிப்புத் தத்துவம் சம்பந்தமாக ஸ்மித்தின் கருத்துரைகள் அறிவை வளர்ப்பதைக் காட்டிலும் குழப்பத்தையே அதிகமாக ஏற்படுத்துகின்றன. அவருடைய எழுத்தில் பிழைகள், தவறுகள், முரண்பாடுகள் நிறைந்திருக்கின்றன.”(2)

இவற்றிலிருந்து ஒரு விஷயம் சந்தேகத்துக்கு இடமில் லாதபடி நிச்சயமாகத் தெரிகிறது. ஸ்மித்தின் மதிப்புத் தத்துவத்தில் மோசமான குறைகள் உள்ளன என்பதே அது. ஆனால் மார்க்ஸ் சுட்டிக்காட்டியது போல, இந்தத் தவறுகளும் முரண்பாடுகளும் தர்க்க ரீதியானவையாகவும் பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சிக்குத் தமக்கே உரிய வழியில் பயனுள்ளவையாகவும் இருந்தன.

உழைப்பளவை மதிப்புத் தத்துவம் பற்றிய தொடக்க நிலையான, மிகச் சாதாரணமான விதிமுறையிலிருந்து (அது வெறுமே பொருளற்ற வழக்காக மட்டுமே அந்த நிலையில் தோன்றுகிறது) முதலாளித்துவத்தின் கீழ் சுதந்திரமான போட்டி நிலைமைகளில் பண்ட – பணப் பரிவர்த்தனை மற்றும் விலையின் உருவாக்கம் என்ற உண்மையான அமைப்பை நோக்கி முன்னேறுவதற்கு ஸ்மித் முயற்சி செய்தார். இந்த ஆராய்ச்சியின்போது சில தீர்க்க முடியாத முரண்பாடுகளை அவர் சந்தித்தார். இதன் கடைசிக் காரணம் ஸ்மித்திடம் (மற்றும் ரிக்கார்டோவிடமும்) முதலாளித்துவத்தைப் பற்றிய வரலாற்று ரீதியான கருத்து இல்லாததும் மூலதனத்துக்கும் கூலி உழைப்புக்கும் இடையிலுள்ள உறவுகளை அவர்கள் சாத்தியமான ஒரே உறவுகளாக, எக்காலத்துக்கும் உரிய உறவுகளாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதே என்று மார்க்ஸ் கருதினார். இவைகளைத் தவிர ”சமூகத்தின் பூர்விக நிலை” மட்டுமே ஸ்மித்துக்குத் தெரிந்திருந்தது, அவர் அதை ஒரு கட்டுக்கதை என்றே கருதினார். எனினும் அவர் மதிப்புப் பிரச்சினையை அதிகமான விஞ்ஞானச் செறிவோடு அணுகினார்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : 1962 அரசியல் நிகழ்வுகள்
♦ ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் அறிவியல் படும் பாடு !

ஸ்மித் நுகர்வு மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு என்ற கருதுகோள்களை தனக்கு முன்பிருந்த வேறு எவரையும் காட்டிலும் அதிகமான துல்லியத்தோடு வரையறுத்து விளக்கினார். பிஸியோகிராட்டுகளின் வறட்டுத்தனமான கோட்பாட்டுவாதத்தைக் கைவிட்டு உழைப்புப் பிரிவினை பற்றிய தமது சொந்தத் தத்துவத்தை தமது வாதத்துக்கு ஆதாரமாக வைத்து மதிப்பைப் படைப்பதென்ற கருத்து நிலையில் பார்க்கும் பொழுது பயனுள்ள உழைப்பின் எல்லா வகைகளுமே சமமதிப்புடையவை என்பதை அவர் அங்கீகரித்தார். அவ்வாறு செய்யும் பொழுது, பரிவர்த்தனை மதிப்பு என்பது (மார்க்சின் மேற்கோளில் கூறுகிறபடி) மதிப்பின் உள்ளடக்கத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது, அதாவது எல்லாவிதமான மனித நடவடிக்கையுமான உழைப்பை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவர் அறிந்து கொண்டார்.

டேவிட் ரிக்கார்டோ.

உழைப்பு என்பது சூக்கும், ஸ்தூலமான உழைப்பு என்ற இரண்டு தன்மையைக் கொண்டிருக்கிறது என்ற மார்க்சின் கண்டுபிடிப்புக்கு இது இட்டுச் சென்றது. நுட்பமில்லாத, சாதாரண உழைப்பைக் காட்டிலும் நுட்பமுள்ள, சிக்கலான உழைப்பு ஒவ்வொரு கால அளவுக்கும் அதிகமான மதிப்பைப் படைக்கிறது, சில குணங்களை உதவியாகக் கொண்டு அதை முதலில் சொல்லப்பட்டதாக வகைப்படுத்த முடியும் என்பதை ஸ்மித் உணர்ந்து கொண்டார். ஒரு பண்டத்தின் மதிப்பின் அளவு ஒரு தனிப்பட்ட உற்பத்தியாளர் அதில் செலவிட்ட உழைப்பைக் கொண்டு உண்மையில் நிர்ணயிக்கப்படுவதில்லை, எடுத்துக் கொள்ளப்பட்ட சமூகத்தின் நிலையில் சராசரியாக அவசியமான உழைப்புச் செலவைக் கொண்டு தான் நிர்ணயிக்கப் படுகிறது என்பதை அவர் ஓரளவுக்குப் புரிந்து கொண்டார்.

ஒரு பண்டத்தின் இயற்கையான விலையையும் சந்தை விலையையும் ஸ்மித் வேறுபடுத்திக் காட்டியது பயனுள்ளதாக இருந்தது. இயற்கையான விலை என்பது அடிப்படையில் பரிவர்த்தனை மதிப்பின் பணத் தோற்றம் என்று அவர் புரிந்து கொண்டார்; நெடுங்கால அளவில் சந்தை விலைகள் அதை நோக்கி ஒரு வகையான ஊசலாட்ட மையத்தைப் போல ஈர்க்கப்படுகின்றன என்று நம்பினார். சுதந்திரமான போட்டியில் தேவையும் அளிப்பும் சமநிலையில் இருக்கு மானால், சந்தை விலைகள் இயற்கையான விலைகளோடு பொருந்தி வருகின்றன. மேலும் நீண்ட காலப் பகுதியில் விலைகள் மதிப்பிலிருந்து வேற்றுமைப்படுவதை ஏற்படுத்தும் காரணிகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கு அவர் அடித்தளம் அமைத்தார்; ஏகபோகமே மிக முக்கியமானதென்று அவர் கருதினார்.

வரப்போகின்ற நூற்றாண்டு முழுவதிலும் மதிப்பு மற்றும் விலை உருவாக்கத் தத்துவத்தின் மையத்தில் இருந்த பிரச்சினையை முன்வைத்திருப்பதில் ஸ்மித்தின் ஆழமான நுண்ணறிவைக் காண முடியும். மார்க்சிய இனங்களில் இதை மதிப்பு உற்பத்தியின் விலையாக உருமாற்றமடைவதென்று சொல்கிறோம். லாபம் மூலதனத்துக்கு விகிதாச்சார அளவில் இருக்க முற்படும் என்பதையும் லாபத்தின் சராசரி விகிதத்தின் தன்மையையும் ஸ்மித் புரிந்து கொண்டிருந்தார். தன்னுடைய இயற்கையான விலைக்கு அதை ஆதாரமாகக் கொண்டார். இந்த நிகழ்வை உழைப்பளவை மதிப்புத் தத்துவத்துடன் அவரால் தொடர்புபடுத்த முடியவில்லை, இணைக்க முடியவில்லை என்பதில் அவருடைய பலவீனம் அடங்கியிருக்கிறது.

எங்கெல்ஸ் எழுதியது போல, ஸ்மித்திடம் ”மதிப்பு பற்றி இரண்டு மட்டுமல்ல, மூன்று அபிப்பிராயங்கள் கூட இருக்கின்றன; இன்னும் சரியாகச் சொல்வதென்றால் கூர்மையான வேறுபாடுகளைக் கொண்ட நான்கு அபிப்பிராயங்கள் இருக்கின்றன. இவை அதிகமான குதூகலத்தோடு பக்கத்தில் போவது மட்டுமல்ல ஒன்றோடொன்று இணைந்தும் போய்க் கொண்டிருக்கின்றன.”(3)  அந்தக் காலத்தில் வளர்ச்சிக்குக் கொண்டு வரப்பட்டு ஸ்மித்தினால் பதிவு செய்யப்பட்ட உழைப்பளவை மதிப்புத் தத்துவத்துக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பன்முகத்தன்மை கொண்ட, ஸ்தூலமான நிகழ்வுப் போக்குகளுக்கும் இடையே போதுமான அளவுக்கு விஞ்ஞான, தர்க்கரீதியான இணைப்புகளைக் கண்டுபிடிக்க அவரால் முடியவில்லை என்பதே இதற்கு முக்கியமான காரணம் என்பது தெளிவு. எனவே அவர் தனது ஆரம்பக் கருதுகோளைத் திருத்தி வகைப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.

படிக்க:
♦ ’தேஷ துரோக’ பயணியை ‘போட்டுக்கொடுத்த’ உபேர் ஓட்டுநருக்கு விழிப்புணர்வு குடிமகன் விருது !
♦ பாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்

முதலாவதாக, ஒரு பண்டத்தில் அடங்கியிருக்கும் அவசியமான உழைப்பின் அளவின் மூலமாக மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது (இது தான் முதலாவது கருத்து, முக்கியமானதும் கூட). இதனோடு அந்தக் குறிப்பிட்ட பண்டத்துக்கு வாங்கக் கூடிய உழைப்பின் அளவினால் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்ற இரண்டாவது கருதுகோளை நுழைத்தார். சாதாரணமான பண்டப் பொருளாதாரத்தில், கூலி உழைப்பு என்பது இல்லாமலும் பண்ட உற்பத்தியாளர்கள் தங்களுக்குச் சொந்தமான உற்பத்திச் சாதனங்களைக் கொண்டு பாடுபடுகின்ற பொருளாதாரத்தில் இது அளவைப் பொறுத்த வரையிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. உதாரணமாக, ஒரு நெசவாளி துணியைக் கொடுத்து ஒரு ஜோடி காலணிகளை வாங்குகிறார். அந்தத் துணி ஒரு ஜோடி காலணிகளின் மதிப்புக்குச் சமம் என்று சொல்லலாம். அல்லது காலணிகள் தயாரிப்பாளர் ஒரு ஜோடி காலணிகளைத் தயாரிப்பதற்கு எடுத்துக் கொண்ட நேரத்திலுள்ள உழைப்பின் மதிப்பைக் கொண்டிருக்கிறதென்று சொல்லலாம். ஆனால் அளவு ரீதியான பொருத்தம் அதன் முற்றொருமைக்கு நிரூபணம் அல்ல; ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட பண்டத்தின் மதிப்பை அளவு ரீதியாக ஒரே ஒரு வழியைக் கொண்டு அடுத்த பண்டத்தின் தெரிந்த அளவைக் கொண்டு – மட்டுமே நிர்ணயிக்கலாம்.

ஆடம் ஸ்மித்

இந்தக் கருத்தை, மதிப்பைப் பற்றிய தமது இரண்டாவது பொருள் விளக்கத்தை முதலாளித்துவ உற்பத்திக்குப் பயன்படுத்த முயற்சித்த பொழுது ஸ்மித் முற்றிலும் கீழே விழுந்தார். காலணிகள் தயாரிக்கும் தொழிலாளி ஒரு முதலாளியிடம் வேலை செய்கின்றாரென்றால் அவரால் தயாரிக்கப்பட்ட காலணிகளின் மதிப்பும் அவருடைய “உழைப்பின் மதிப்பும்”, அதாவது அவருடைய உழைப்புக்காக அவர் பெறுகின்றதும் முற்றிலும் வெவ்வேறானவையாகும். தொழிலாளியின் உழைப்பை வாங்குகின்ற முதலாளி (அவர் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை, உழைப்பதற்கான ஆற்றலை வாங்குகிறார் என்பதை மார்க்ஸ் நிரூபித்தார்) அந்த உழைப்புக்குத் தான் கொடுப்பதைக் காட்டிலும் அதிகமாகப் பெறுகிறார் என்பதே இதன் பொருள்.

இந்த நிகழ்வை உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்குவதற்கு ஸ்மித்தினால் முடியவில்லை. எனவே “பூர்வீக சமுதாய நிலையில்”, முதலாளிகளும் கூலி உழைப்பாளிகளும் இல்லாத சமுதாயத்தில், அதாவது மார்க்சிய வர்ணனைப்படி சாதாரணமான பண்டப் பொருளாதாரத்தில் மட்டுமே மதிப்பு உழைப்பினால் நிர்ண யிக்கப்படுகிறது என்று தவறாக முடிவு செய்தார்.

முதலாளித்துவ நிலைமைகளுக்கென்று ஸ்மித் மதிப்புத் தத்துவத்தின் மூன்றாவது பதிப்புருவத்தை அமைத்தார். ஒரு பண்டத்தின் மதிப்பு தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் முதலாளியின் லாபம் (சில துறைகளில் நில வாரம் உட்பட) ஆகியவற்றை உள்ளடக்கிய செலவுகளைக் கொண்டிருக்கிறது என்று முடிவு செய்தார். மதிப்பைப் பற்றிய இந்தத் தத்துவம் மூலதனத்தின் சராசரி லாபம் அல்லது அவர் எழுதியது போல “லாபத்தின் இயற்கையான விகிதம்” என்ற நிகழ்வை விளக்குவதாகத் தோன்றியது அவருடைய நம்பிக்கையை மறுபடியும் உறுதி செய்தது. ஸ்மித் மதிப்பை உற்பத்தி விலைக்குச் சாதாரணமாகச் சமப்படுத்திவிட்டார்; அவற்றுக்கு இடையேயிருந்த சிக்கலான இடைநிலை இணைப்புக்களை அவர் கவனிக்கவில்லை.

அடுத்த வரப்போகும் நூற்றாண்டில் முக்கியமான பாத்திரத்தை வகிக்கப் போகின்ற “உற்பத்திச் செலவுகளின் தத்துவம்” இதுவே. தன்னுடைய பண்டத்தின் விலை பிரதானமாக செலவுகள் மற்றும் சராசரியான லாபத்தைக் கொண்டும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் உள்ள தேவை, அளிப்பைக் கொண்டும் நிர்ணயிக்கப்படுகிறது என்று நினைக்கின்ற முதலாளியின் செய்முறையான கருத்து நிலையை ஸ்மித் மேற்கொண்டார். உழைப்பு, மூலதனம், நிலவுடைமை ஆகியவை மதிப்பை உருவாக்கும் சமமதிப்புக்கள் என்று காட்டுவதற்கு மதிப்பைப் பற்றிய இந்தக் கருத்து அதிகமான இடமளித்தது. முதலாளிகள், நிலவுடைமையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு அரசியல் பொருளாதாரத்தை உபயோகிக்க முயற்சி செய்த ஸேயும் இதர பொருளியலாளர்களும் வெகு சீக்கிரத்தில் இதை ஸ்மித்திடமிருந்து அறிந்து கொண்டார்கள்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1)  J. Schumpeter, History of Economic Analysis (p. 307) என்ற புத்தகத்தில் தரப்படுகிற மேற்கோள்.  

(2)  J. Bell, A History of Economic Thought, p. 188.

(3)  பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1979, பக்கம் 402 பார்க்க .

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் !

ஷாகீன் பாக் போராட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மட்டுமல்லாமல் ஜாமிய மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் பெண்கள் தலைமையேற்று 55 நாட்களாக நடத்தும் ஒரு தொடர்ப் போராட்டம்.

போராட்டக்காரர்களின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தின் காதுகளுக்கு எட்டவில்லை; ஆனால் ஷாஹீன் பாக் போராட்டத்தின் போது இறந்து போன கைக்குழந்தை குறித்து கவலைப் படுகிறது உச்ச நீதிமன்றம். அதற்காக தானாகவே முன்வந்து (suo moto) அது குறித்து விசாரணை ஒன்றை நடத்துகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் இதுவரை 25 பேர் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி நீதிமன்றம் இதுவரை கேள்வி எழுப்பவில்லை.

குழந்தையின் தாய் நாசீயா.

போராட்டக்காரர்களின் வீடுகளுக்குள் சட்டவிரோதமாகப் புகுந்து அவர்களது சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் தயாரில்லை. கர்நாடகா மாநிலம், பிதாரில், நரேந்திர மோடியை விமர்சிக்கும் நாடகம் ஒன்றில் பள்ளிச் சிறுவர்கள் நடித்ததற்காக அவர்கள் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் துன்புறுத்தப்படும் போது உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது.

வழக்கும் இல்லாமல், விசாரணையும் இல்லாமல் மாதக்கணக்கில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்கள் பற்றி விசாரிக்கத் உச்ச நீதிமன்றம் தயாரில்லை. காஷ்மீர் மக்கள் இணையத்ததைப் பயன்படுத்தவதற்கான உரிமையை வழங்க உச்ச நீதிமன்றம் மறுக்கிறது. CAA -வுக்கு எதிராக அமைதியின்மையும், கொந்தளிப்பான சூழலும் நிலவுவதாக நீதிபதிகள் கருதினாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்க மறுக்கிறது.

எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகள், தங்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு அசாம் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 1000 பேருக்கு உச்ச நீதிமன்றம் நீதி வழங்கவில்லை. “முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்; இஸ்லாமியர்கள் மட்டுமே முகாம்களில் இருப்பார்கள்” என்று இந்த வாரம் மோடி அறிவித்த போதும், அதில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை.

படிக்க:
♦ 2002 குஜராத் இனப் படுகொலை குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை !
♦ பாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்

அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படாத 19 லட்சம் பேரில், முஸ்லிம்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் வாய்ப்பு குறித்த பிரச்சனையை உச்நீதிமன்றம் காது கொடுத்துக் கேட்கத் தயாரில்லை. அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதில் நடைபெற்ற கடுமையான முறைகேடுகள் குறித்து விசாரிக்கவும் அது தயாரில்லை. லட்சக் கணக்கானவர்களை சட்ட விரோதிகளக அறிவிக்கக் காரணமாக இருந்த, NRC தயாரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பா.ஜ.க அரசு ஒப்பந்த நீட்டிப்பு செய்தது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை. ஆவணங்களில் உள்ள சில எழுத்துப் பிழைகள் மற்றும் மாறுபட்ட தேதிகள் உள்ளிட்ட அற்பக் காரணங்களுக்காக பலர் ‘வெளிநாட்டினராக’ அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த பிரச்சனை மீதும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை.

பாபர் மசூதி எழுப்பப்பட்டிருந்த நிலத்தைப் பறித்து, மசூதியை இடித்தக் கயவர்களிடமே ஒப்படைத்துள்ளது உச்ச நீதிமன்றம். மசூதியை இடித்தக் குற்றவாளிகள் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வற்புறுத்தவில்லை. எல்.கே அத்வானி மீதான வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. முப்பதாண்டுகளைக் கடந்த இந்த வழக்கில் அவருக்கு தற்போது 90 வயது ஆகிறது.

சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ள, முக்கியத்துவம் வாய்ந்த NPR மற்றும் NRC குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் தயாராக இல்லை. உச்ச நீதிமன்றத்தின் மாற்றாந்தாய் மனப் போக்கு குறித்து இப்படி நிறைய சொல்ல முடியும்.

சொல்வதற்கு கசப்பானதாக இருந்தாலும், இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான பாரபட்சமானப் போக்கையே உச்ச நீதிமன்றம் கடைபிடிக்கிறது என்பதுதான் உண்மை. எதை விசாரிக்க வேண்டும்? எதை விசாரிக்கக் கூடாது? என்பதை தீர்மானிக்கும் அதன் போக்கே இதை நிரூபிக்கிறது. சாதாரண காலங்களில் இந்த நடை முறை முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்றாலும் ஒரு அசாதாரமான சூழல் நிலவும் போது உச்ச நீதிமன்றம் இவ்வாறு நடந்து கொள்வது கவலைக்குரிய ஒன்று.

இலட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வுரிமைக்காக வீதியில் இறங்கிப் போரடிக் கொண்டிருக்கும் போது, இந்தியா தனது சொந்த நாட்டு மக்குளுக்கு என்ன செய்கிறது என்பதை உலகமே உற்றுநோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் தனது சொந்த நாட்டு மக்களை பாரபட்சமாக நடத்துகிறது என்கிற உண்மை வெளிப்படையாக தெரிந்த போதும் பெரும்பான்மைவாதத்தில் சிக்குண்டு உச்ச நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் அபாயகரமானது.

படிக்க:
♦ பாபர் மசூதி இடிப்பு வழக்கு : மறுக்கப்படும் நீதி !
♦ உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் ?

சட்டத்தின ஆட்சி மூலம் இந்தியாவில் சிறுபான்மையினரின் நலன் பேணப்படும் என்கிற நற்பெயரை மோடியும் இந்த அரசும் களங்கப்படுத்திவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மையான பாராளுமன்னற உறுப்பினர்கள் இந்தச் சட்டத் திருத்ததிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர உள்ளனர். இன்னும் சில நாட்களில் பிரசல்சுக்குச் செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோரை விடுவிக்க வேண்டும், காஷ்மீரிகளுக்கு இணைய வசதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் எனக் கோரும் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தை 59 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள் என்பது நாம் நினைத்துக்கூட பார்க்காத ஒன்று. அதுவும்கூட நடந்து விட்டது.

அவர்களுக்குத் தேவையானதை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். 1950 -இல் 8 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 2008 இல் 31 ஆக உயர்த்த வேண்டும் என்பதற்குப் பதிலாக இன்று 33 ஆக உயர்த்திக் கொண்டனர். மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய தலைமை நீதிபதி நீதிமன்ற அமர்வு ஒன்று மற்றும் அன்றாட வழக்குகளை விசாரிப்பதற்கான 2 நீதிபதிகளைக் கொண்ட 13 அல்லது 14 அமர்வுகள் உச்ச நீதிமன்றத்தில் செயல்படுகின்றன. இந்தியாவில் உள்ளது போன்று 2 நீதிபதிகளைக் கொண்ட 14 அமர்வுகள் உலகில் வேறு எங்கேனும் உண்டா? நாம் வடிவமைத்திருக்கும் உச்ச நீதிமன்ற வடிவம் அமெரிக்க மாதிரியிலானது. ஆனால் அங்கு இருப்பதோ 12 நீதிபதிகள் கொண்ட ஒரே ஒரு அமர்வு மட்டுமே.

ஆனால் இத்தனை அமர்வுகள் இருந்தும் ஏதாதவது நீதி கிடைக்கிறதா? இந்தக் கேள்விக்கான பதில் மக்களிடமிருந்து வர வேண்டும். இன்று அரசு மிருகத்தனமாக நடந்து கொள்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். தனது நாட்டிலிருந்து குறிப்பாக உச்ச நீதிமன்றத்திலிருந்து தங்களுக்கு நீதி கிடைக்கிறது என்று இந்த நாட்டு முஸ்லீம்கள் கருதுகிறார்களா? அவர்கள் சார்பாக என்னால் பேச முடியாது என்றாலும் என்னிடம் அதற்கான உறுதியான பதில் ஏதும் கிடையாது.

(டெக்கான் கிரானிக்கிள் ஏட்டில் ஆகர் படேல் அவர்கள் எழுதிய கட்டுரையின் சாரம்.)


கட்டுரையாளர் : Aakar Patel
தமிழில் : 
ஊரான்
நன்றி :  டெக்கன் க்ரானிக்கல். 

குறிப்பு : மேலும் போராட்டக்காரர்களால் போக்கவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் மீதான வழக்கு ஒன்றும் தனியாக பிப்ரவரி 10 அன்று விசாரணைக்கு வந்தது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்த உரிமை உண்டு எனக்கூறி 55 நாட்களாக நடைபெறும் இந்தப் போராட்டத்தை தடை செய்யமுடியாது என உச்ச நீதிமன்றம் 10.02.2020 அன்று தீர்ப்பளித்துள்ளது.

நீலச்சட்டை பேரணி – சாதி ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்கள் !

ட்டாட்சியர் அலுவலகம்,வட்டார போக்குவரத்து அலுவலகம்… தொழிலாளர் நலத்துறை அலுவலகம், பட்டுவளர்சித்துறை என அரசு அலுவலகங்கள் நிரம்பிய பாலசுந்தரம் சாலையில் வழக்கத்துக்கும் மாறாக, நேற்று (09.02.2020) உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

சாதி ஒழிப்பு மாநாடும் பேரணியும் நடத்த அனுமதி கொடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் அனுமதிபெற்று நடத்தப்பட்ட மாநாடு இது. ‘இதுதான் இடம்’ என்று சனி காலைதான் காவல்துறை இந்த இடத்தை ஒதுக்கிக்கொடுத்தது.

அந்த தகவல் எல்லா அமைப்புகளுக்கும் செல்லும்முன்பாகவே மாநாட்டுக்கான நேரம் வந்துவிட்டது. சோடை போகவில்லை. முதன் முதலாக கூட்டம் நடத்த கொடுக்கப்பட்ட அந்த இடத்தில் ஆட்டம், பாட்டம் முழக்கம் என இயக்கங்கள் களைகட்டி தெறிக்கவிட்டார்கள்.

ஆனால் பேரணியாக செல்வதற்கென்று அனுமதிக்கப்பட்ட இடம்தான் மிக மிக குறைந்த தூரமாக இருந்தது. 950 மீட்டர் அதிகபட்சமாக அவ்வளவுதான் இருக்கும். பாலசுந்தரம் சாலையின் ஒரு மருங்கில் தொடங்கி, இன்னொரு மருங்கில் முடிக்கவேண்டியிருந்தது. வந்தவர்கள் நெருக்கி நிற்கத்தான் இடம் சரியாக இருந்தது, அட்ஜஸ் செய்து நடந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் நிறைந்திருந்த அந்தக் கூட்டத்தின் சராசரி வயது 35 தானிருக்கும் என நினைக்கிறேன். இது ஒரு நல்ல சமிங்கை…

‘இன்னும் கொஞ்சம் ஷார்ப் பிளான் செய்திருக்கலாமோ’ என்கிற எண்ணங்கள் இருந்தாலும், குறுகிய காலத்தில், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில்.
ஒருங்கிணைத்த அமைப்புகள் இந்த மாநாட்டையும் பேரணியையும் அர்ப்பணிப்போடு திறம்பட நடத்திக்காட்டியிருக்கிறார்கள்.

பேரணியின் முக்கியமான சில அம்சங்களாக.

1. பேரணியில் அமைப்பில் இல்லாத பொதுமக்களும் கணிசமான அளவு கலந்துகொண்டார்கள்.

2. அழைப்பிதழ் கொடுக்கப்படாத சில நற்பணி இயக்க நண்பர்களையும் பேரணியில் காண முடிந்தது.

3. அம்பேத்கரை கடுமையாக விமர்சிக்கும் நண்பர்களையும் கூட்டத்தில் காணமுடிந்தது.

4. ஒரு கட்டுப்பாடான ஒழுங்கு பேரணியில் இருந்தது.

படிக்க:
நூல் அறிமுகம் : 1962 அரசியல் நிகழ்வுகள்
♦ ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் அறிவியல் படும் பாடு !

இனி பேரணியில் ஆங்காங்கே கிடைத்த கேள்விகளையும், விவாதங்களையும் தொகுத்துப்பார்க்கலாம் :

1. கட்சிகளை புறக்கணித்து இயக்கங்கள் மட்டுமே கலந்துகொள்கிற கூட்டமைப்பாக இதனை தொடர்ந்து வைத்திருக்கவேண்டிய அவசியம் இருக்கிறதா?

2. ஆம் எனில் இயக்கமாக இல்லாமல் கட்சியாக. இயங்கும் வாழ்வுரிமை கட்சியின் வேல் முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, மனித நேயமக்கள் கட்சியின் ஜவஹருல்லா ஆகியோர் ஏன் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

3.  ‘பேச்சாளர்களாகத்தானே அழைத்திருக்கிறோம். கூட்டமைப்பில் இல்லைதானே’ என்றால் பேச்சாளர்களாக, ஏன் இடதுசாரிகளையும் இதர கட்சிகளையும் அழைத்திருக்கக்கூடாது.

4. கருப்பு – நீலத்தை அடுத்து, இன்னும் சிலமாதங்களில் நடக்க இருக்கும் செஞ்சட்டைப்பேரணியை இடதுசாரிகள் இல்லாமல் எப்படி நடத்தமுடியும்.

ஒரே உணர்வாளர்கள் அல்லது ஒரேமாதிரியான அமைப்புகள் மாறி மாறி சட்டையைப் போட்டுக்கொண்டு (இப்படி நடப்பது Cross learning & Cross feelings க்கு
ஒருவகையில் உதவிகரமாக இருக்கும் என்றாலும்) எல்லாப்பேரணியிலும் நடப்பதற்கு மாறாக எல்லா சட்டைக்காரர்களையும் உள்ளடக்கிய முழுமையான கூட்டமைப்பாக இதை மாற்ற ஏதேனும் செய்தாகவேண்டும்.

சில சிக்கல்களிருந்தாலும் இதைச்செய்வதில்தான் முற்போக்கு அமைப்புகளின் வெற்றி இருக்கிறது.

சாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

வீரவணக்க தீர்மானங்கள்

1. சாதிக் கொடுமைகளை எதிர்த்தும், சாதி ஆதிக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தோடும் களமாடிய – கருத்துப்போர் நிகழ்த்திய திருவள்ளுவர், ஒளவையார் தொடங்கி எண்ணற்ற தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், கருத்தாளர்கள் மற்றும் 1957 ஆம் ஆண்டு சாதி ஒழிப்புக்காக சாதியைப் பாதுகாக்கின்ற சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்திச் சிறை சென்றதோடு மட்டுமின்றி, அப்போராட்டக் காலச் சூழலில் ஈகியர்களான எண்ணற்ற தோழர்கள் உள்ளிட்ட 20 – ஆம் நூற்றாண்டின் சாதி ஒழிப்புப் போராளியர்களாக முனைந்து எழுந்த அறிஞர்கள், இயக்கச் செயற்பாட்டாளர்கள், களப் போராளியர்கள், முன்னின்ற பொதுமக்கள் என அனைவருக்கும் மற்றும் அண்மையில் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்த நிலையில் மறைவுற்ற பதினேழு ஏதுமறியா மக்களுக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது.

2. தமிழ்நாட்டிற்கு வெளியே பார்ப்பனிய சாதிய வெறிகளுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த அறிஞர்கள் எழுத்தாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான போராளியர், வெகு மக்கள் என அனைவருக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.

3. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தன்னுயிர் ஈந்த எண்ணற்ற போராளிகளுக்கும் ஈகம் செய்திருக்கின்ற தமிழீழ மக்களுக்கும் ஆதரவு தெரிவித்து உயிரை ஈந்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் அப்துல் ரகூப், முத்துக்குமார், செங்கொடி உள்ளிட்ட அனைவருக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.

படிக்க:
’தேஷ துரோக’ பயணியை ‘போட்டுக்கொடுத்த’ உபேர் ஓட்டுநருக்கு விழிப்புணர்வு குடிமகன் விருது !
♦ அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! – மாநாடு நிகழ்ச்சி நிரல்

கொள்கைத் தீர்மானங்கள் :

4. சாதிவெறி மதவெறியைத் தூண்டி மக்களிடையே ஒரு பக்கம் பகை உணர்வுகளை உருவாக்கிக் கொண்டிருப்பதோடு ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அடையாளம் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறி கொண்டு இயங்குகிற இந்திய அரசு, இந்தியாவிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு மொழித் தேசங்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் அடையாளங்களையும் மறுக்கிறது. தமிழ் ஈழ ஏதிலியர்களுக்குக் குடியுரிமை வழங்க மறுப்பதோடு, மதச் சிறுபான்மை மக்களுக்கும் குடியுரிமை வழங்க மறுத்து இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுகிற முயற்சி செய்கிற நோக்கில் உள்ள இந்திய அரசை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்நிலையில் மக்கள் தங்கள் இன அடையாள உரிமைகளையும், மொழித் தேச அளவில் தங்களைத் தமிழர்கள் என்றே பதிந்து கொள்ளவும், தமிழக மக்களைக் குடியுரிமையோடு இங்கு வாழ வைக்கவும், மதச் சிறுபான்மையினருக்கு எவ்வகை இடர்களும் ஏற்படாத வகையில் குடியுரிமை வழங்கவும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

5. தமிழகத்தில், சாதி ஆணவப் படுகொலைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே வருகின்றன. சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்குச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றமே வலியுறுத்தி உள்ளது. தவிரவும் இந்தியச் சட்ட ஆணையம் மற்றும் இந்திய மகளிர் ஆணையம் ஆகியவையும் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளன. இந்நிலையில் சாதி ஆணவப் படுகொலைகள் குறித்து இதுவரையில் தமிழகஅரசு ஏதும் கருத்தறிவக்காமல் இருப்பது சரியன்று. எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டும், நடப்பு நிலையைக் கருத்தில் கொண்டும் சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்கச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், சாதிமறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தவும், சாதிமறுப்புத் திருமணங்களை நடத்திவைக்கவும், சாதிமறுப்புத் தம்பதிகளுக்குச் சட்ட, சமூகப்பாதுகாப்பு வழங்கவும் அவர்களின் வாரிசுகளைச் சாதியற்றவர்களாகப் பதிவுசெய்து அவர்களுக்குச் சிறப்புரிமை வழங்கவும் சாதிமறுப்புத் திருமணப் பாதுகாப்பு ஆணையம் என்கிற பெயரில், ஒரு தனி ஆணையம் அமைத்திட வேண்டும் எனவும் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசுகளை இம் மாநாடு வலியுறுத்துகிறது.

6. சாதி ஆணவப் படுகொலைகள் நடந்தால், அதற்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் பொறுப்பு ஏற்க வேண்டும் என நீதிமன்றங்கள் வலியுறுத்தி உள்ளன. எனவே சாதி ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடக்கும் மாவட்டங்களில் அம் மாவட்ட ஆட்சியரும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

7. சாதி, மத மறுப்புத் திருமணம் செய்யும் இணையருக்குக் குறிப்பிட்ட காலம்வரை பாதுகாப்பு வழங்கப் பாதுகாப்பு இல்லங்களைப் பஞ்சாப் அரசு நிறுவி உள்ளது. அதைப் போன்ற பாதுகாப்பு இல்லங்களைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என இம்மாநாடு பரிந்துரைக்கிறது.

8. சாதி, மத மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணையர்களை நாட்டின் சிறந்த குடிமக்களாக அறிவிக்க வேண்டும். மேலும் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், காவல் உயரதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாக்களில் அவர்களைப் பாராட்டிச் சிறப்பிக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும், சாதிமறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தவும், நெருங்கிய இரத்த உறவுத் திருமணங்கள் செய்வதைத் தவிர்க்கப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும், குறிப்பாக நெருங்கிய இரத்த உறவுத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை மற்றும் உடலியல் குறைபாடுகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவியல் அடிப்படையிலான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

9. தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009, அனைத்துத் திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் திருமணம் நடந்த இடத்தில்தான் திருமணம் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சலுகையையும் அது வழங்கி உள்ளது. அச்சட்டப்படி சாதி குறித்து எதுவும் கேட்கப்படுவதில்லை. ஆனால் தற்பொழுது அச் சட்டத்தின் கீழ்த் திருமணம் செய்ய இருப்பவர்களின் மதம் பற்றிக் கேட்கப்படுகிறது. சாதி / மதம் குறித்து எவரும் தெரிவிக்க வேண்டியதில்லை என 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தில் மதம் பற்றிக் கேட்கக் கூடாது என்பதோடு, எந்தவகைக் கால வரையறையும் இருக்கக்கூடாது என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

10. சாதி மறுப்புத் திருமணம் செய்யும் இணையருக்குச் சிறுதொழில் நடத்த வட்டியில்லாக் கடன், தொழில் நடத்த அனுமதி வழங்குவதில் முன்னுரிமை, இலவச வீட்டுமனைப் பட்டா, வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு போன்றவை அனைத்துப் பிரிவு சாதியினருக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும், சாதி மறுப்புத் திருமணம் செய்த இணையரின் குழந்தைகளுக்கு அனைத்து நிலைகளிலும் கட்டணமில்லாக் கல்வியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறப்பு இடஒதுக்கீடும் வழங்க வேண்டும் எனவும் இம்மாநாடு வேண்டுகிறது.

11. சாதி மறுப்புத் திருமண இணையருக்கு இராசசுத்தான் அரசு ரூ.5 இலட்சம் உதவித் தொகை வழங்குகிறது. பல மாநிலங்கள் குறைந்தது ஒரு இலட்சம் ரூபாய்வரை உதவித்தொகை வழங்குகின்றன. ஆனால் இந்தியாவிலேயே மிகக் குறைந்த உதவித் தொகையைத்தான் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதிலும் பட்டம் பெற்ற பெண்களுக்கு அதிக உதவித்தொகையும், பட்டம் பெறாத பெண்களுக்குக் குறைவான உதவித்தொகையும் வழங்குகிறது. எனவே இந்தப் பாகுபாட்டைக் களைந்து, சாதிமறுப்பு இணையருக்கு இராசசுத்தான் அரசு வழங்குவதுபோல் ஐந்து இலட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என இம்மாநாடு வேண்டுகிறது.

படிக்க:
ஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப் போராட்டம் சாத்தியமா ? | கேள்வி – பதில் !
♦ ரஜினி : கிறுக்கா … காரியக் கிறுக்கா ?

12. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணையரின் குழந்தைகளுக்கு மருத்துவம். மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு இடங்களைத் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. ஆனால் 69 விழுக்காட்டிற்குமேல் இந்த இட ஒதுக்கீடு வருவதால், அதை வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஆனால் அந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. சாதிமறுப்புத் திருமண இணையரின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையைப் பறிக்கும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விரைவுபடுத்தி நீதியை மீட்டுத்தருமாறு இம் மாநாடு தமிழக அரசைக் கோருகிறது.

13. பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமைகள் குறித்துத் தொடர்ந்து மீளாய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனும் சட்டப் பொறுப்பு இருந்தாலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அப்படிப்பட்ட கூட்டங்கள் நடைபெறுவதில்லை. எனவே இப்படிப்பட்ட மீளாய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் எனவும், அவற்றின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகள் பொதுவெளியில் பகிரப்பட வேண்டும் எனவும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

14. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களில், அதே சாதியைச் சார்ந்தவர்களை அந்தக் காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகளாக எக்காரணம் கொண்டும் நியமிக்கக் கூடாது என இம்மாநாடு வற்புறுத்துகிறது.

15. கல்வி நிலையங்களில் சாதியை வெளிப்படுத்தும்படி வண்ணக் கயிறுகளை அக் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் கட்டி வரக் கூடாது என்ற தெளிவான ஆணையை வெளியிட வேண்டும் என இம் மாநாடு தமிழக அரசைக் கோருகிறது.

16. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கான பள்ளிகளில், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும், அப் பகுதியிலுள்ள கல்வி நிலையங்களின் அடிப்படைக் கட்டமைப்பை விரைந்து மேம்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை இம்மாநாடு வேண்டுகிறது.

17. கல்விநிலையங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயரை நீக்க வேண்டும் எனவும், தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பு குறித்த செய்திகளைப் பாடத் திட்டத்தில் இணைக்க வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

18. அனைத்துப் பட்டியல்சாதி, பழங்குடியர்களின் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதியர்களின் வீடு, நிலமற்றக் குழந்தைகளுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

19. நிலமற்ற பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக 1892 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்- இந்திய அரசால் பஞ்சமி நிலம் என்ற பெயரில் விவசாய நிலம் வழங்கப்பட்டது.

தற்போது அந்த நிலத்தின் பெரும்பகுதி வசதிபடைத்த பட்டியல் மற்றும் பழங்குடிகள் அல்லாதவர்கள் அரசியல் மற்றும் சாதி செல்வாக்கைப் பயன்படுத்தி பஞ்சமி நிலத்தை அபகரித்துக் கொண்டனர். தொடர் பஞ்சமிநில மீட்புப் போராட்டங்களின் விளைவாக கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் அனைத்து பஞ்சமி நிலங்களையும் மீட்டு உரிய பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களையும் உறுப்பினராகக் கொண்டு ஒரு மத்திய கமிட்டி அமைத்து ஆறு வார காலங்களுக்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கைகளையும் தமிழ்நாட்டு அரசும், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பஞ்சமி நில மத்தியக் கமிட்டியும் எடுக்கவில்லை. இதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

20. தீண்டாமைச் சுவர்கள் சாதிய வன்கொடுமைகளை அதிகப்படுத்தும் நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு இழப்புகளை ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசே முழுப் பொறுப்பெடுத்து தமிழகமெங்கும் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமைச் சுவர்களைக் கணக்கெடுத்து அவற்றையெல்லாம் தரைமட்டமாக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

21. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்ற நடைமுறையைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் எனவும், இந்து சமய அறநிலையத் துறை என்ற பெயரைத் தமிழர்களின் சமய அறநிலையத் துறை என மாற்றிப் பெயரிட வேண்டும் எனவும், தமிழக ஆலயங்களில் சமசுக்கிருத பூசனை(அர்ச்சனை)க் கட்டணத்தில் பாதிக் கட்டணம் மட்டுமே தமிழ்ப் பூசனை (அர்ச்சனைக்கு)ப் பெறப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை இம் மாநாடு வேண்டுகிறது.

22. தமிழக உயர்நெறி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென்று மிக நீண்ட காலமாகப் போராடி வருகின்ற வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை தமிழக உயர்நெறிமன்றம் சிறிதும் பொருட்படுத்தாமல் தட்டிக் கழிப்பதை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மிக விரைவில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்கவில்லையென்றால் வெகுமக்களைத் திரட்டி அதற்கெனத் தனியே போராட வேண்டியிருக்குமென தொடர்புடைய துறையினருக்கு இம் மாநாடு வலியுறுத்திச் சொல்லிக் கொள்கிறது.

22. தமிழகத்தில் செயல்படுகிற ஐஐடி உள்ளிட்ட இந்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் முழுமையான அளவில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என இம் மாநாடு கடுமையாக வலியுறுத்துகிறது.

23. கேரள மாநிலத்தைப் போல, பூசகர்(அர்ச்சகர்)களாகப் பயிற்சி பெற்ற ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களையும் கோயில்களில் பூசகர் (அர்ச்சகர்)களாகத் தமிழக அரசுப் பணி நியமனம் செய்ய வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

24. திண்டுக்கல்லில் கடந்த இருபதாண்டுகளாக நிறுவ மறுக்கப்பட்டுவரும் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்குத் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது. விரைந்து சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படாமல் போகுமானால், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பே முன்னெடுத்துத் திருவள்ளுவர் சிலையை நிறுவும் என இம் மாநாட்டின் வழி அறிவிக்கிறது.

25. இந்திய அரசியல் சட்டத்தை யாத்தளித்த சிற்பி என்கிற பெருமைக்கும், சாதி ஒழிப்புப் போராட்டக் குறியீடாகவும் அறியப்படுகிற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக் கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நிறுவ காவல்துறை தொடந்து மறுத்துவரும் நிலையில் தமிழகஅரசே பொறுப்பெடுத்துத் தமிழ்நாடின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நிறுவ வேண்டும் என இம் மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

26. அண்மைக் காலமாய்ச் சாதிவெறியோடும், மதவெறியோடும் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் எனக் குமுகத் தலைவர்களின் சிலைகளை உடைத்திடும் கயவாளிகளின் போக்கை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், அப்படியான குமுகப் பகைவர்களை அரசு கடுமையாக ஒடுக்கவேண்டும் என மாநாடு வலியுறுத்துகிறது.

27. கோவை மாவட்ட சிறுவாணி நீர்வளம் புகழ்பெற்ற நிலையிலிருக்க அதை இதுவரை கையாண்டு வந்த கோவை மாநகராட்சி கோவை மாநகருக்கும், கோவை மாவட்ட அளவில் பல ஊர்களுக்கும் தண்ணீரை நிறைவோடு வழங்கிவரும் நிலையில் பிரான்சு நாட்டைச் சார்ந்த சூயஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்திற்கு அப்படியே அக் குடிநீர் உரிமையை விற்றுவிட்ட கொடுமையை தமிழக அரசு செய்திருக்கிறது. இதன்மூலம் இலவயமாகவும், மிகவும் மலிவான விலையிலும் தண்ணீரைப் பெற்றுவந்த கோவை மாநகர, மாவட்ட வெகுமக்கள் அனைவரும் பெரும் நெருக்கடிகளுக்குள்ளாகி அதிகப்படியான நீரைப் பெறக்கூடிய அவலமான சூழல் உருவாக இருக்கும் நிலையில், அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் உறவிற்கும், அதை ஏற்படுத்திய தமிழக அரசின் நடைமுறைக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இவ் வொப்பந்தத்தை கைவிட்டுவிட்டு கோவை மாவட்டவாழ் மக்களுக்கு மாநகராட்சியின் பொறுப்பிலேயே தண்ணீரை வழங்க வலியுறுத்துகிறது.

28. தமிழக மக்களின் எவ்வகை உரிமைகளுக்கும் குரல்கொடுக்காத திரைப்பட நடிகர் இரஜினிகாந்து, அண்மைக் காலமாகத் தமிழகத்தின் உரிமைகளுக்குப் போராடுகிற மக்களின் போராட்டங்களையும், போராடுபவர்களையும் இழிவுபடுத்தித் திமிரோடு பேசிவருவதை இக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. மக்கள் போராடி வென்றெடுத்த பல உரிமைகளை ஏற்று மகிழ்கிற அவரின் திமிர்பிடித்த பேச்சுகள் இனி தொடரக்கூடாது என்றும், அவர் நாவடக்கிப் பேச வேண்டும் என்றும் எச்சரிக்கிறோம்..

29. குடிமக்கள் திருத்தச் சட்டம், தேசியக்குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு போன்றவற்றை எதிர்த்து இந்தியா முழுவதும் தீவிரமான மக்கள்திரள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தனது மக்கள் பகை நடவடிக்கைகளைச் செயல்படுத்தியே தீருவோம் எனும் பாசிச பாரதீய ஜனதாக் கட்சிக்குப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் சாதி / மத வேறுபாடுகளை ஊக்குவிக்கும் பார்ப்பனிய பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராகத் தமிழக மக்கள் சமரசமற்ற போராட்டங்களை எழுச்சியுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு இம் மாநாட்டின்மூலம் அறைகூவல் விடுக்கிறது.

30. பெரியார் மண் எனப்படும் தமிழகத்தில் பகுத்தறிவு மற்றும் அறிவியலுக்கு எதிரான பரப்புரை, பார்ப்பன இந்துத்துவ அமைப்புகளால், ஊடகங்களால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் மனப்பான்மையை (Scientific Temper ) ஒவ்வொருவரிடமும் பெருமளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.

எனவே பெருகி வரும் சாதி / மதப்பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தமிழகம் எங்கும் தமிழ்ச் சான்றோர் திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பேராசான் கார்ல் மார்க்சு போன்றோர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் பெயர்களில் படிப்பகங்கள், நூலகங்கள் போன்றவற்றைப் பெரியாரிய உணர்வாளர்கள் ஒவ்வேர் ஊரிலும் தொடங்கவேண்டும்.

போராட்ட அறிவிப்புத் தீர்மானம் :

31. சாதி ஆணவ வெறிகளுக்கு அடித்தளமாகவும், பார்ப்பனியக் கருத்தாக்கங்களின் தொகு மொத்த வெளிப்பாடாகவுமே மனுதர்மம் எனும் பார்ப்பனிய, சாதிவெறி பிடித்த நூல் உள்ளது என்பதைத் தமிழ் அறிஞர்கள் பலரும், தந்தைபெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் அடையாளப்படுத்தியும், அதை மறுத்த செயல்பாடுகளை முன்னெடுத்தும் இருக்கின்றனர். அம்பேத்கரும், பெரியாரும் அக் கருத்துக்கும், செயற்பாடுகளுக்கும் முன்னோட்டமாக மனுதர்மத்தைத் தீயிட்டுக் கொளுத்தியும் இருக்கின்றனர்.. அவர்களின் வழிகாட்டலில் வெறிபிடித்த பார்ப்பனிய சாதிய ஆணவ நூலான மனுநுாலை எதிர்வரும் மே 20-ஆம் நாள் அதாவது அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளில் தமிழகமெங்கும் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை முன்னெடுப்பது எனப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, சாதி ஒழிப்பு மாநாட்டின்வழி அறிவிக்கிறது.

நன்றி : ஃபேஸ்புக்கில் Lakshmanasamy Odiyen Rangasamy

பாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்

0

கொல்கத்தா, பார்க் சர்க்கஸில் நடந்து வரும் போராட்டத்திற்காக திவிஜேந்திரலால் ராயின் (Dwijendralal Roy) புகழ்பெற்ற பாடலான “தனோ தன்யோ புஷ்போ போராவிலிருந்து – இது தான் நான் பிறந்த மண், நான் மரணிக்கும் மண்ணாகவும் இது இருக்கட்டும்” என்ற வரியுடன் ஒரு சுவரொட்டியை ஒரு இளம்பெண் தயாரித்துக் கொண்டிருந்தார்.

வங்கத்தின் கலாச்சார எதிர்ப்பென்பது அன்றாட பாடல்களையும் எதிர்ப்பிற்கான தூண்டுதலாக மாற்றுகிறது. டி.எல். ராயின் கவிதைகள், பாடப்படாத தாகூரின் ஜன கண மன வரிகள் மற்றும் ரகுபதி ராகவ் ராஜா ராமின் மந்திரங்கள் தெருக்களிலும் கூட்டங்களிலும் கேட்கப்படுகின்றன. தேசியவாத அல்லது பக்தி பாடல்கள் போராட்டத்திற்கான வடிவமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க தருணமிது.

வங்காள இசைக்கலைஞரான மௌசுமி போமிக் (Moushumi Bhowmik).

“போராட்டம் என்பது மக்களை நடவடிக்கைக்குத் தூண்டுவதோ அல்லது சில உயர்ந்த இலட்சியத்தை அடைவதோ மட்டுமல்ல கூட்டுப்பாடலைப் பற்றியதும் கூட. தற்போதைய தருணத்தில் உறுதியாக நீங்கள் இருக்கிறீர்கள். அன்பு ஒருபக்கமும் வெறுப்பு இன்னொரு பக்கமுமாக ஒன்றை மற்றொன்று தீவிரப்படுத்துகிறது” என்றார் வங்காள இசைக்கலைஞரான மௌசுமி போமிக் (Moushumi Bhowmik).

ஜனவரி பிற்பகுதியில் மௌசுமியின் ஜாதவ்பூர் அடுக்குமாடி வீட்டில் நாங்கள் சந்தித்தோம். கொல்கத்தாவின் குளிர்கால சூழலில் நிலவும் சீற்றம், பதட்டம் ஆகியவற்றை தனிச்சிறப்பான இசை ஒன்றாக்குகிறது. ​​நாங்கள் அப்போது விவாதித்த பாடலின் இரண்டு வரிகளை அவர் பாடினார். இசைக்கருவிகள் இல்லாமல் ஆழமான மெல்லிசை போன்ற அவரது குரல் அறை முழுவதும் எதிரொலித்தது. இது அவருடைய குரலை அறிந்த எவருக்கும் நன்றாகத் தெரியும்.

“நான் குறிப்பாக பாடல்களை மரபுரீதியானதாகவோ அல்லது அதற்கு மாறானதாகவோ அனுகவில்லை” என்று அப்போது அவர் கூறினார். “இசை இயல்பாக சேர்ந்து வருகிறது. நீங்கள் வளரும் பருவத்தில் இந்த பாடல்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் அவற்றை (நீண்ட காலமாக) பாடாமல் இருந்திருக்கலாம். நீங்கள் யாரிடமிருந்தும் அவற்றைக் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவை ஏராளம்.”

சில சூழ்நிலைகள், அந்த பாடல்களின் நினைவுகளைத் தூண்டும் என்று மௌசுமி விளக்கினார்.

குடியுரிமை (திருத்த) சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவெட்டிற்கு எதிரான இயக்கம் அத்தகைய தூண்டுதலாக உள்ளது. மேலும் எல்லைகளையும் மொழிகளையும் தாண்டி மக்களைச் சென்றடைய செய்கிறது. ஜனவரி 18 அன்று பிலிப் மோரின் (Philip More) கலாச்சார நிகழ்ச்சியில் அவரது சொந்த வங்க பாடல் வரிகளையயும் ஜோன் பேஸின் (Joan Baez) ஒரு பாடலையும் இசைத்தார்.

படிக்க:
♦ கொல்கத்தா : ஒரு மாதமாக பெண்கள் தலைமையில் தொடரும் போராட்டம் !
♦ ’தேஷ துரோக’ பயணியை ‘போட்டுக்கொடுத்த’ உபேர் ஓட்டுநருக்கு விழிப்புணர்வு குடிமகன் விருது !

பூமியின் களைப்புற்ற தாய்மார்கள் அனைவரும் இறுதியாக ஓய்வெடுக்கட்டும்
நாம் அவர்களது குழந்தைகளை கைகளில் ஏந்திக்கொண்டு நம்மால் முடிந்ததைச் செய்வோம்

வயலில் சூரியன் மறையும் போது
அன்பிற்கும் இசைக்கும் நாம் பலன் தருவோம்
பூமியின் களைப்புற்ற தாய்மார்கள் ஓய்வெடுக்கட்டும்

“என்னுடைய தாயின் முகத்தில் நிழலொன்று ஆழமாக விழுகிறது – இது நான் முப்பதாண்டுகளுக்கு முன்பு எழுதிய முதல் பாடல்” என்று அவர் விளக்கினார்.

அந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் ஒரு பாடலை அவர் நினைவு கூர்ந்தார். “அங்கே அமர்ந்திருக்கும் அனைத்து தாய்மார்களையும் நான் நினைத்தேன். நாம் மண்ணை தாயாக எப்படி கருதுகிறோம். மண்ணுடனான நம்முடைய சொந்தம் அது” என்று கூறினார்.

அரசின் குடியுரிமை பற்றிய வரையறையுடன் இந்த சொந்தம் என்ற கருத்து முரண்பட்டுள்ளது. மௌசுமியின் இந்த கருத்தாக்கத்தை அவரது உழைப்பு பெரும்பங்கு செழுமைப்படுத்தியுள்ளது. 2003 -ஆம் ஆண்டில் ஒலிப்பதிவாளார் சுகந்தா மஜும்தாருடன் இணைந்து அவர் உருவாக்கிய பயணக் காப்பகத் திட்டம் (The Travelling Archive project) வங்காள நாட்டுப்புற இசையின் களப்பதிவுகளை வங்கதேசம், மேற்கு வங்கம், அசாமிற்கு அருகிலுள்ள பகுதிகள் மற்றும் வங்கதேசத்தில் குடியேறிய கிழக்கு இலண்டன்வாசிகள் கேட்பதற்கான ஒரு கூட்டு முயற்சியாகும். “நான் தேசம் என்ற வரயறைக்கு அப்பால் பணியாற்றி வருகிறேன்” என்று அவர் கூறினார்.

அவர் தனது வாழ்நாள் முழுவதும் எல்லைகளைத் தாண்டி பயணம் செய்துள்ளார்: “இடம் பெயர்ந்து செல்வதும் தங்குவதற்காக ஒரு வீட்டைத் தேடுவதும் எப்போதும் எனது வேலைக்கு மையமாக இருந்தன. இந்த மண்ணிற்கு சொந்தம் என்ற உணர்விலிருந்து ஜன கண மன பாடலை நான் பார்க்கிறேன். அந்த மெல்லிசையும் பாடல் வரிகளும் நம்முடைய நினைவில் பதிக்கப்பட்டுள்ளன. இந்த பாடல் நமக்கு சொந்தமானது.” என்றார்.

தேசிய கீதத்தின் பாடப்படாத வரிகளை கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா கடந்த மாத தொடக்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் புதுப்பித்தார். ஜனவரி 3 அன்று ஒரு முகநூல் பதிவில் மௌசிமி எழுதினார்: “நான் டி.எம். கிருஷ்ணாவின் ‘பாடப்படாத தேசிய கீதத்தை’ காலையிலிருந்து கேட்கிறேன். நான் உண்மையில் உட்கார்ந்து அந்த தேசிய கீதத்தைக் கேட்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை (இது தேசிய கீதம் அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார். ஆனால் அவை நீண்ட கவிதையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டடு பாடிய வரிகள்); கேளுங்கள், மீண்டும் கேளுங்கள், சிந்தியுங்கள்… ”

படிக்க:
♦ அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! – மாநாடு நிகழ்ச்சி நிரல்
♦ கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

“நாங்கள் அந்த வரிகளை ஒன்றாகப் பாடினோம். பலரும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். நாங்கள் அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம், பழைய நண்பர்களைச் சந்தித்தோம், புதியவர்களை உருவாக்கினோம்” என்று அவர் விவரித்தார்.

ஒரு சமயத்தில், காவல்துறையின் பின்னால் அவர்கள் நடந்து கொண்டிருந்தனர். “நாங்கள் பாடியபோது, ​​காவல்துறை திரும்பிப்பார்த்தது – அநேகமாக பாடலை அவர்கள் விரும்பியிருக்கலாம். “நீங்களும் ஏன் இந்த பாடலைக் கற்றுக் கொண்டு எங்களுடன் பாடக்கூடாது?” என்று அவர்களில் ஒருவரிடம் கேட்டேன். உடனே போலீஸ்காரர்கள் நாங்கள் முன்னே போக வழி ஏற்படுத்தி கொடுத்தார்கள்.”

அடுத்ததாக பார்க் சர்க்கஸ் மைதானத்தில் பாடல் வரிகளைப் பாடினார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து பாடினார்கள்.

ஆனந்த பஜார் செய்தித்தாளில் வந்திருந்த ஒரு புகைப்படத்தையும் தலைப்பையும் மௌஷுமி நினைவு கூர்ந்தார். அது இப்போதும் அவரது நினைவில் பதிந்துள்ளது:

“அது ஷாஹீன் பாக்கில் 20 நாள் குழந்தையை வைத்திருக்கும் ஒரு தாயின் புகைப்படம். அவர் அங்கே அமர்ந்திருக்கிறார். மேலும் கீதத்திலிருந்து பின்வரும் வரிகள் புகைப்படத்தின் கீழே இருந்தன: நாடு அழிந்துபோகும் இரவுகளின் இருண்ட காலங்களில் / இரக்கமுள்ள தாயே நீதான் அசையாமல் விழிப்புடன் அருள்கூர்ந்து எங்களைப் பாதுகாத்துக்கொண்டிருந்தாய்”… இது மைக்கலாஞ்சலோவின் தாயும் சேயும் போன்றது. “

டி.எல். ராயின் “ஏராளமான தானியங்கள், பூக்கள் மற்றும் செல்வங்கள் நிறைந்த எங்கள் மண்” பாடலில் மௌசுமி இந்தியாவை குறிக்கும் இரண்டு வரிகளை எடுத்து இந்தியாவை அன்பு மற்றும் பாசத்தின் மண்ணாகத் தேர்ந்தெடுத்தார்:

“தாய்மார்கள் மற்றும் சகோதரர்களிடமிருந்த இது போன்ற பாசத்தை நாம் எங்கே காண முடியும்
நான் உங்களை என்னுடைய இதயத்தில் தாங்குகிறேன்
இதுதான் நான் பிறந்த மண், நான் மரணிக்கும் மண்ணாகவும் இது இருக்கட்டும்.”

“நாங்கள் இந்த வரிகளை மீண்டும் மீண்டும் பாடி அவர்களையும் பாடும்படி மாற்றினோம். இது தான் நாம் உண்மையாக நாம் விரும்பும் தன்மையான நாடு.”

தேசிய மேலாதிக்க கருத்தாக போராட்டக்காரார்கள் கருதிய “எங்கள் நாடு எல்லா நாடுகளின் ராணி” என்ற வரிகளைப் பாடுவதை பாடகர்கள் தவிர்த்தனர்.

படிக்க:
♦ CAA –க்கு எதிராக மலெர்கொட்லா வீதிகளில் திரண்ட 20,000 பஞ்சாப் உழவர்களும் பெண்களும் !
♦ ரஜினி : கிறுக்கா … காரியக் கிறுக்கா ?

ராகுபதி ராகவ் ராஜா ராம் போன்ற பாடல்வரிகளையும் மௌசுமி தனது போராட்ட இசை வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளார். குறிப்பாக காந்தியுடனான தொடர்புக்காக அறியப்பட்ட பாடல்கள் வழக்கத்திற்கு மாறான மற்றொரு தேர்வாகும். கபீரின் பாடலை பாடலாமா அல்லது பார்க் சர்க்கஸில் பார்வையாளர்களுக்கு சொந்தமான மற்றொரு பாடலை பாடலாமா என்று பாடகர்கள் குழு மௌசுமியின் வீட்டில் விவாதித்தது.

“ரகுபதி ராகவ் ராஜா ராம்… எங்களில் ஒருவர் பாட ஆரம்பித்தார். இந்த பாடலை நாங்கள் பாட வேண்டும் என்று நினைத்தோம். ஃபைஸைச் (ஃபைஸ் அகமது ஃபைஸ்) சுற்றியுள்ள சர்ச்சையும், அல்லாவைப் பற்றிய குறுகிய வாசிப்பும் இருந்த போதுதான் இது நடந்தது. ரகுபதி ராகவின் ஒரு வரி “ஈஸ்வர் அல்லா, எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள்” என்று வரும். ‘பகவான்’ என்ற வார்த்தையில் எல்லாம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அது உடைந்து போனதொரு தருணம். அது அழகானதாக இருந்தது” என்று மௌசுமி விளக்கினார்.

ஆனால் அந்த இயக்கத்தில் உள்ள அனைவரும் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. சிலர் இராமனைப் பற்றிய புகழ்மாலையை போராட்டக்களத்திற்கு கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். “இஸ்லாமிய மத முழக்கங்களுடன் உங்களுக்கு சிக்கல்கள் உள்ளன என்று சிலர் வாதிட்டனர். இதுபோன்ற முழக்கங்களை எழுப்ப வேண்டாம் என்று போராட்டக்காரர்களிடம் சொன்னீர்கள். ஆனால் இப்போது மதச்சார்பற்ற மக்கள் ரகுபதி ராகத்தை புரிந்து கொண்டுள்ளனர்”.

ஜே.என்.யூ. -வில் நடந்த வன்முறையை எதிர்த்து ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேரணியில் மௌசுமி பாடப்படாத கவிதை வரிகளை முதன்முதலில் பாடினார்.

காந்தியின் இராமனை அடிப்படையாக வைத்தும் போராட்டம் நடத்தினார்கள். இருப்பினும், “இந்த பாடல் ஒத்துழையாமை இயக்கத்தில் பிறந்தது. அந்த நேரத்தில் முதல் பதிப்பு மட்டுமே பாடப்பட்டது. நேரமும் முக்கியமானது” என்று மௌசுமி பதிலளித்தார். “என்னைப் பொறுத்தவரை இது ஒரு புரட்சிகரமான பாடல்” என்று மேலும் கூறினார்.

1946 -ஆம் ஆண்டு நவகாளி கலவரத்தின் போது, ‘ஈஸ்வர் அல்லாஹ் தேரோ நாம்’ என்ற வரிகளை காந்தியின் கொள்ளு மருமகள் மிருதுலா எழுதியுள்ளார் என்று அறிஞர் திரிதீப் சுஹ்ருத் கூறுகிறார்.

பயண காப்பகங்கள் திட்டத்தில் இருந்தபோது, வங்கதேசத்தின் கிஷோர் கஞ்சைச் சேர்ந்த சங்கர் தேவு-டன் நடந்த சந்திப்பைப் பற்றி மௌசுமி என்னிடம் கூறினார்: “லவ, குச, சீதா மற்றும் இராமன் ஆகியோரின் கதையை அதன் அனைத்து விதங்களிலும் சங்கர் பாடினார். பாடியபோது அவர் உடைந்து போனார். சில நேரங்களில் பார்வையாளர்களும் உடைந்து விடுவார்கள். எல்லோருக்கும் வீட்டில் வேதனையும் துன்பமும் இருக்கிறது. சங்கர் பாடியது போல அவர்கள் கதையையும் தொடர்புபடுத்தலாம். இராமன் என்ற சொல்லிற்குள் பல விடயங்கள் உள்ளன. ” என்றார்.

அவர்களது பாடல்களால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆகியவை ஆதாயமடைவார்கள் என்று மக்கள் நினைத்தால் மன்னிப்பு கேட்பதாக பாடகி கூறினார். ஆனால் “நாங்கள் இன்னும் இந்த பாடலைப் பாடுவோம்” என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.


கட்டுரையாளர் : மோனோபினா குப்தா
தமிழாக்கம் : 
சுகுமார்
நன்றி :  த வயர். 

யாழ்ப்பாணத்தில் இலவச வாசகசாலை !

‘புத்தகங்களும் நானும்’ நடமாடும் இலவச வாசகசாலை – எம். ரிஷான் ஷெரீப்

டந்த சில வருடங்களாக நாடு முழுவதிலும் இலவச நூலகங்கள் எனும் முயற்சியை மேற்கொண்டு, பொது மக்களிடம், அவர்கள் வாசித்த புத்தகங்களைச் சேர்த்தெடுத்து வாசகசாலைகள் அற்ற ஊர்களில் பேருந்து நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும், வைத்தியசாலைகளிலும் இலவச நூலகங்களை அமைத்த முயற்சி மிகுந்த வெற்றியளித்தது. அதைக் குறித்து நீங்களும் உங்கள் தளத்தில் பதிந்திருந்த எனது பதிவு பரவலான வரவேற்பைப் பெற்று பலரும் புத்தகங்களை அனுப்பியிருந்தார்கள். அந்தந்த இடங்களில் அமைக்கப் பெற்ற நூலகங்களுக்கு அந்தந்த இடங்களின் மேலதிகாரிகளுக்கே பொறுப்பை வழங்கியிருப்பதால் அவை இப்போது பலரதும் கவனத்தைப் பெற்று சிறப்பாக இயங்கி வருவதோடு, புத்தக வாசிப்பாளர்களாக பலர் இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

சிங்கப்பூரிலிருந்து எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், சென்னையிலிருந்து எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன், கோயம்புத்தூரிலிருந்து ஜே.வி. விஜயகுமார் ஆகியோர் பெருந் தொகையான தமிழ் புத்தகங்களை அனுப்பியிருந்ததால், அவற்றை கவிஞர் கருணாகரன் மூலமாக கிளிநொச்சியிலிருக்கும் வறிய கிராம நூலகங்களுக்கும், இன்னும் பிற நூலகங்களுக்கும் பகிர்ந்தளிக்க முடிந்தது. இவ்வாறாக இலவச வாசிகசாலை விபரத்தை பலரதும் கவனத்துக்குக் கொண்டு சென்ற உங்களுக்கும், புத்தகங்களை அனுப்பி வைத்திருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும், பேரன்பும் என்றும் உரித்தாகும்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, கடந்த ஒன்றரை வருட காலமாக எனது ஊர் அமைந்துள்ள மாவட்டத்தில் வாசிகசாலைகளற்ற மலைக் கிராமங்களுக்கு புத்தகங்களை எடுத்துச் சென்று அங்குள்ள சிறுவர்களை புத்தகங்களை வாசிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு பெட்டிக்குள் புத்தகங்களை இட்டு சைக்கிளில் ஏற்றிச் சென்று கிராமத்திலுள்ள பொது மண்டபமொன்றில் போயிருந்து, சைக்கிளையும் பெட்டியையும் கண்டு ஒன்று சேரும் பெற்றோர்களையும், பிள்ளைகளையும் கூப்பிட்டு அவர்களிடம் புத்தகங்களிலுள்ள கதைகளையும், வாசிப்பின் பயன்களையும் எடுத்துரைத்து இலவசமாகப் புத்தகங்களை வழங்கி விட்டு வருதல், இரண்டு கிழமைக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட தினத்தை அடுத்து வரப் போகும் தினமாகக் கூறுதல், குறிப்பிட்ட அத் தினத்தில் போய் அந் நூல்களைத் திருப்பி வாங்கிக் கொண்டு வேறு நூல்களை வழங்கி வருதல் இப்படியாக பதினைந்து கிராமங்களுக்கு இந்த இலவச நடமாடும் நூலக சேவையைச் செய்ய முடிந்தது.

இந்த இலவச சேவையைப் பயன்படுத்தும் வாசகர்களிடம் முன்பு வழங்கிய நூல்களைத் திரும்பப் பெறும்போது பெரியவர்களிடமும், சிறுவர்களிடமும் அவர்களது வாசிப்பனுபவம் மற்றும் நூல் குறித்த விமர்சனத்தை கூறுமாறு அல்லது எழுதித் தருமாறு கோரப்படும். அவர்களும் தம்மாலியன்ற விதத்தில் நூலைப் பற்றிக் கூறும்போது அல்லது எழுதித் தரும்போது இச் சேவையின் பயனை ஆத்மார்த்தமாக உணர முடிகிறது.

படிக்க:
♦ ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் அறிவியல் படும் பாடு !
♦ ஒரு லட்சம் டொலர் புத்தகம் | அ. முத்துலிங்கம்

இந்த எண்ணக் கரு நண்பரும், சிறுவர் நல, பராமரிப்பு உத்தியோகத்தருமான திரு. மஹிந்த தசநாயக்கவுடையது. அவர் ஒரு வறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து பட்டதாரியானவர். எனவே கிராமப்புறங்களில் வாசிக்கத் தேவையான புத்தகங்கள் கிடைப்பதிலுள்ள சிக்கல்களை அவர் நன்கு அறிவார். அவரது முயற்சியால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மலைக் கிராமங்களில் இந்த இலவச நடமாடும் நூலக சேவையை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடிகிறது.

திரு. மஹிந்த தசநாயக்கவுடன் எம். ரிஷான் ஷெரீப். (வலது)

இந்த வருடம், இந்தச் சேவையை எமது மாவட்டத்துக் கிராமங்களோடு மாத்திரம் நிறுத்தி விடாது, பிற மாவட்டங்களிலுள்ள வறிய கிராமங்களிலும் இதனை முன்னெடுக்கத் திட்டமிட்டோம். எனவே போரால் பாதிக்கப்பட்ட, பல வறிய கிராமங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணத்துக்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டு போகத் தீர்மானித்தோம். நான் தயாரித்துக் கொடுத்த பெட்டியை, நண்பர் மஹிந்த தசநாயகவின் மனைவி வாங்கிக் கொடுத்த சைக்கிளில் பிணைத்து யாழ்ப்பாணத்துக்கு புகையிரதத்தில் அனுப்பியாயிற்று. ஆனால் ஏற்கெனவே தமிழ் நூல்கள் எல்லாவற்றையும் விநியோகித்து முடித்திருந்தோம். எனவே புதிதாக நூல்களைக் கொள்வனவு செய்ய வேண்டியிருந்தது.

வறிய தமிழ்ப் பிள்ளைகளுக்கு நூல்கள் வாங்க வேண்டும் என்ற விடயத்தைக் கூறியதும் மஹிந்த தசநாயக்கவின் சிங்கள நண்பரொருவர் இருபதாயிரம் ரூபாயை இலவசமாக அனுப்பியிருந்தார். அதை எடுத்துக் கொண்டு நானும், மஹிந்தவும் விடிகாலையே புறப்பட்டு கொழும்பிலிருக்கும் குமரன் புத்தக நிலையத்துக்குப் போய் இருபதாயிரம் ரூபாய்க்கு தமிழ்ப் புத்தகங்களைக் கொள்வனவு செய்தோம். இலவச நடமாடும் நூலக விடயத்தைக் கூறியதும், புத்தக நிலைய உரிமையாளர் திரு. குமரன் அவர்கள் (எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்களது மகன்) நாம் வாங்கிய நூல்களுக்கு தன்னாலியன்ற சிறந்த விலைக் கழிவினை வழங்கி உதவினார். அதனால் இலங்கை, இந்திய வெளியீடுகளான ஏறத்தாழ நூற்றைம்பது நூல்களை வாங்க முடிந்தது.

அவற்றைப் பொதி செய்து எடுத்துக் கொண்டு நள்ளிரவு புகையிரதத்தில் யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டு மறுநாள் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தோம். அங்கு, ஏற்கெனவே புத்தகங்கள் வழங்கப்பட வேண்டிய வறிய பிள்ளைகளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவிகள் இனங் கண்டு அவர்களை கொக்குவில் கோயிலருகே ஒன்றிணைத்திருந்தார்கள். அப் பிள்ளைகள் கொக்குவில் புகையிரத நிலையத்தருகே குடிசைகளில் வசிக்கும் பிள்ளைகள். அப் பிள்ளைகள் அந்த மாணவிகளோடு நெருக்கமாக இருப்பதையும், மாணவிகள் அவர்களோடு தமிழில் கதைப்பதையும் காண முடிந்தது. இரண்டு வயது பெண் குழந்தையொன்று மாணவியின் கையிலேயே அமர்ந்து கொண்டு தனது தாயிடம் செல்ல மறுத்தது. கொக்குவிலைச் சேர்ந்த துவாரகாவும் இன்னும் இரண்டு இளைஞர்களும் கூட அங்கு வந்து சேர்ந்து நூல்களை விநியோகிக்க உதவினார்கள்.

படிக்க:
♦ பிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் ?
♦ உலக புத்தக தினம் : புத்தக வாசிப்பு – பலன்கள் பதினைந்து

காலையிலிருந்து கொக்குவிலில் சேர்ந்திருந்த சிறுவர்களுக்கு ஒரு தொகுதி நூல்களை விநியோகித்து விட்டிருந்தோம். எனினும் அங்கு இலவசமாக வழங்கப்படும் நல்ல நூல்களை எடுத்துக் கொண்டு சென்று வாசிக்கக் கூடிய பிள்ளைகளின் தட்டுப்பாடு நிலவியது. நாம் சென்றது வார இறுதி நாளில் என்பதால், பெருமளவான பிள்ளைகள் பிரத்தியேக (ட்யூஷன்) வகுப்புகளுக்குச் சென்றிருந்தமை எமக்கு ஆச்சரியமளித்தது. வாரத்தில் ஐந்து நாட்கள் பாடசாலையில் காலையிலிருந்து மாலை வரை படித்துக் களைத்துப் போன பிள்ளைகளை சனி, ஞாயிறு விடுமுறை தினங்களிலும் விடிகாலையிலிருந்து இரவு வரை பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்புவது சரியா? அவர்களுக்கு விளையாடுவதற்கோ, வேறு தமக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளைச் செய்வதற்கோ பெரியவர்கள் நேரம் கொடுப்பதே இல்லை. பாடசாலையில் ஒழுங்காகவும், முறையாகவும் கற்பித்தால் பிள்ளைகள் பணம் கொடுத்துக் கற்க வேண்டிய பிரத்தியேக வகுப்புகளுக்கான அவசியமே இல்லையே? தமிழ்ப் பிரதேசங்களில் ஏன் இந்த நிலைமை காணப்படுகிறது? இதைப் பற்றி மேலும் கூறினால் பிரத்தியேக வகுப்பாசிரியர்களும், சில பெற்றோர்களும் கோபிப்பார்கள். இது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விடயம். விடயத்துக்கு வருவோம்.

யாழ்ப்பாணத்தில் தன் நண்பர்கலுடன் எம். ரிஷான் ஷெரீப்.

யாழ் சிறுவர் நல, பராமரிப்பு உத்தியோகத்தர் ராஜீவனைத் தொடர்பு கொண்டபோது சுன்னாகம், மானிப்பாய் வழியே சங்கிலிப்பாய் கிராமத்துக்கு அவர் எம்மை அழைத்துச் சென்றார். அங்கு அவரது முயற்சியின் கீழ், திரு. கஜரூபன் அவர்களது ஒருங்கிணைப்பில் புத்தகங்களை வாசிக்கக் கூடிய ஐம்பது, அறுபது பிள்ளைகள் ஒன்று சேர்ந்திருந்தார்கள். நாட் கூலி வேலைகளுக்குச் செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகள் என்பதால் தனிப்பட்ட வாசிப்புத் தேவைகளுக்காக நூல்களை வாங்கி வாசிப்பதென்பது அவர்களுக்கு பெரும் கனவு. அவ்வாறானவர்களுக்கு புத்தகங்களை வழங்க முடிந்ததில் பெரும் திருப்தியை உணர்ந்தோம். எஞ்சிய நூல்களை கஜரூபனிடம் கொடுத்தோம். இரு கிழமைக்குப் பின்னர் அப் பிள்ளைகள் வாசித்து முடித்த நூல்களைக் கேட்டு வாங்கி எஞ்சிய நூல்களை விநியோகிக்குமாறு கூறி விட்டு அன்றிரவு புகையிரதத்தில் புறப்பட்டு மறுநாள் வீடு வந்து சேர்ந்தோம். புதிதாகச் சேரும் தமிழ் நூல்களை எடுத்துக் கொண்டு அடுத்த மாதம் யாழ்ப்பாணம் செல்லவிருக்கிறோம்.

படிக்க:
♦ ’தேஷ துரோக’ பயணியை ‘போட்டுக்கொடுத்த’ உபேர் ஓட்டுநருக்கு விழிப்புணர்வு குடிமகன் விருது !
♦ குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உண்டாக்குவது எப்படி ?

‘புத்தகங்களும் நானும்’ எனும் இந்த இலவச நடமாடும் நூலக சேவை குறித்து முன்பே நான் வெளிப்படையாக அறியத் தந்திருந்தால் நூல்களைப் பெற்றுக் கொள்வதிலும், நூல்களைப் பெற்றுக் கொள்ளத் தகுதியானவர்களைக் கண்டடைவதிலும், ‘நீங்கள் NGO வா?’ ‘அரசாங்கம் உங்களை அனுப்பியதா?’ ‘உல்லாசமா ஊர் சுற்ற வேண்டிய வயதில, இந்த வெயிலில் ஏன் இதைச் செய்து திரியுறீர்?’ போன்ற கேள்விகளை எதிர்கொள்ளாதிருக்கவும் முடிந்திருக்கும். பல மாவட்டங்களிலுமிருக்கும் வறிய தமிழ், முஸ்லிம் கிராமங்களில் இதைத் தொடர்ந்தும் செய்யவிருப்பதால் இப்போதேனும் இதைப் பதிந்து வைப்பது தாமதமில்லை என்று தோன்றுகிறது.

பிள்ளைகளின் வாசிப்பு ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் சிநேகபூர்வமான சுற்றுச் சூழல் ஆகியவற்றை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டு ‘புத்தகங்களும் நானும்’ எனும் இலவச நடமாடும் நூலக சேவை பல பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்காலத்தில் பிள்ளைகள் தொழில்நுட்பக் கருவிகளோடு ஓரிடத்துக்குள் அடைபட்டு, ஒரு விதத்தில் தனிமைப்பட்டிருக்கும் நிலைமை காணப்படும் சூழலில் புத்தகங்களை வாசிக்கப் பழக்குவதன் மூலம் சுற்றுச் சூழலையும், சமூகத்தையும் நேசிக்கும் மனிதர்களாகி எதிர்காலத்தைச் சந்திப்பவர்களாக அப் பிள்ளைகளை மாற்ற முடியும். இதை இலக்காகக் கொண்டு நட்போடு கை கோர்ப்பதே ‘புத்தகங்களும் நானும்’ சேவையின் எதிர்பார்ப்பாகும்.

வாசகர்கள் தாம் வாசித்து முடித்த நூல்களை இலவசமாக அனுப்பி வைத்தால் அவற்றையும் சேகரித்து வறிய கிராமப்புறங்களுக்கு இவ்வாறு வழங்குவோம். எழுத்தாளர்களும் தாம் வெளியிட்ட நூல்களின் பிரதிகளை அனுப்பி வைக்கலாம். வாசகர்கள் அந் நூல்கள் தொடர்பாக ஏதேனும் விமர்சனங்களை முன்வைத்தால் அவை எழுத்தாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இச் சேவையை, தன்னலம் பாராது சேவை மனப்பான்மையோடு தமது பிரதேசங்களிலும் முன்னெடுக்க விரும்புகிறவர்களும் எம்மை அணுகலாம். தொடர்புக்கு mrishansh@gmail.com

பெரியவர்கள், பிள்ளைகளுக்கு வழங்க வேண்டியது முன்னுதாரணங்களையேயன்றி, அறிவுரைகளை அல்ல. அத்தோடு உலகத்தை நேசத்தோடு ஒன்றிணைக்க நல்ல புத்தகங்களாலும், புத்தக வாசிப்பாளர்களாலும் முடியும், இல்லையா?

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

disclaimer

நூல் அறிமுகம் : 1962 அரசியல் நிகழ்வுகள்

1962-ம் ஆண்டு சுழற்சிகள் நிறைந்த ஆண்டாகும். 1962-ல் தான் சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சிறப்பு மாநாடு நடைபெற்றது. தோழர் பாலதண்டாயுதம் கட்சியின், சென்னை மாவட்டக் குழுச் செயலாளராக இருந்தார். மாநில மாநாட்டை சென்னையில் நடத்துகிற குமாரமங்கலம், ஏ.எஸ்.கே., கே.முருகேசன் போன்ற மூத்த தோழர்களுடன் அரிபட், பரமேஸ்வரன், கஜபதி, டி. பழனிச்சாமி, தா. பாண்டியன் என்று பலரும் இருந்தோம்.

பாலன் விடுதலையான நாளில் இருந்தே திமுக எதிர்ப்பில் கூர்மையாக இருந்தார். மாநில மாநாட்டிற்காக சிறப்பான ஏற்பாடுகளில் இறங்கினோம். நிதி வசூலும் நடந்தது. தோழர்கள் மத்தியில் தமிழ்நாடு முழுவதும் உற்சாகம் வீறிட்டுத் தெரிந்தது. ‘ஜனசக்தி’யில் பெட்டிச் செய்திகளையும் உணர்ச்சியூட்டும் கட்டுரைகளையும் எழுதித் தள்ளினோம். தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன் ‘ஜனசக்தி’யில் எழுத என்னை ஊக்கப்படுத்தினார். முழுக்க முழுக்க திமுக எதிர்ப்பு. அதில் அவருக்கு உடன்பாடு கிடையாது. காங்கிரஸ் எதிர்ப்பும் கூர்மையாக இருக்க வேண்டும் என்பது அவரது நிலை. அதுதான் அன்றைக்கும் சர்ச்சைக்குரியதாக இருந்த பிரச்சினை. (நூலிலிருந்து பக்.5)

… தேர்தல் வேலை தொடங்கிய சில நாட்களுக்குள் தோழர் அஜய்குமார் கோஷ் இறந்து விட்ட அதிர்ச்சிச் செய்தி வந்தது. தேர்தல் கூட்டம் அஞ்சலிக் கூட்டமாக மாற்றப்பட்டது.. அஞ்சலி உரை ஆற்றிய ஜீவா, பகத்சிங்கைப் பற்றித் தொடங்கி அவரது தியாக வரலாற்றைக் கூறியவர், தூக்குமேடை ஏறும் நேரத்தில் கூட ‘அரசும் புரட்சியும்” என்ற லெனினுடைய நூலை பகத்சிங் படித்துக் கொண்டிருந்தது பற்றியும், பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன்’ என்ற புத்தகத்தை மொழிபெயர்த்ததற்காக தான் கைதான சம்பவங்ளையும் குறிப்பிட்டார்.

ஜீவாவை கால்களிலும், கைகளிலும் சங்கிலிகளால் கட்டி ஒரு சிங்கத்தை அழைத்துச் செல்வது மாதிரி இழுத்துச் சென்றதையும் வருணித்தார். “நாடு முழுவதிலும் பகத்சிங்கின் புகழ் பரவியது. பகத்சிங் ஏன் குண்டு வீசினான்?” வெள்ளையரை எதிர்த்து பல அதிதீவிரக் குழுக்கள் பல இடங்களில் போராடி வந்தனர். ஆனால் பகத்சிங் குண்டை மட்டும் நம்பியவனல்லன். அவன் இளமையிலேயே சோஷலிஸத்தை நாடியவன். அது எவ்வாறு உருவானது தெரியுமா?

பாலதண்டாயுதம்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்ததைக் கண்டித்து நாடெங்கிலும் கண்டனக் குரல் எழுந்தது. கல்கத்தாவில் நடந்த பெரிய கூட்டம் ஒன்றில் பேசிய தேசிய இயக்கத்தலைவர்களில் ஒருவராக பெர்தாபிரகன்சா என்ற அம்மையார், கடுங்கோபத்துடன்  “இந்த நாட்டில் இளைஞர்களே இல்லையா? அவர்கள் உதடுகளில் இருப்பது மீசைதானா? ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று பேச, அந்தச் செய்தி பரவ, பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தோழர்கள் “இருக்கிறோம் அம்மா. கேட்பாய் எங்கள் பதிலை சில நாட்களுக்குள்!”” என்று முழங்கி விட்டுத்தான், நாடாளுமன்ற மைய மண்டபத்தில், வெள்யைனை எச்சரிக்கும் முறையில் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பினர். தலைமறைவாக இருந்தபோது வங்கத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தலைவர்களைச் சந்திக்க பகத்சிங் வந்தார். அங்கு தோழர்கள் டாங்கேயையும், பரத்வாஜையும் வேறு சிலரையும் சந்தித்தார். அவர்களுடன் மூன்று நாட்கள் தங்கி விவாதித்து விட்டுத்தான் இந்துஸ்தான் சோஷலிஸ்ட் அமைப்பு என்பதையும் உருவாக்கினர். ‘அரசும் புரட்சியும்’ என்ற புத்தகம் அப்பொழுது கடைகளில் கிடைக்காது. தடை செய்யப்பட்ட புத்தகம். அந்தப் புத்தகத்தை இந்தத் தலைவர்களிடமிருந்து பெற்றுச் சென்றவர்தான் பகத்சிங். வங்கம் வந்திருந்த போது தீவிரவாத இளைஞர்களைச் சந்தித்தார். அவரைச் சந்தித்து, வெள்ளையரை எதிர்த்த இயக்கத்தில் தன்னைச் சேர்த்துக் கொண்டவர்தான் அஜய்குமார் கோஷ். (நூலிலிருந்து பக்.14-15)

… இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியில் ஏற்பட்ட பிளவு அதில் யார் யார், எந்தப் பக்கம் என்ன காரணங்களுக்காகச் சேர்ந்தார்கள் என்று காரணங்களை இங்கு விரிந்துரைக்காது விடுகிறோம். அது ஒரு தனி நூலில் ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

இந்தக் கட்டத்தில் அந்தச் சோதனையை ஜீவா எவ்வாறு சந்தித்தார்? அது அவரை எவ்வாறு பாதித்தது?

ஜீவா.

அதுபற்றி அவர் கூறிய சில கருத்துக்களை மட்டும் எழுதுகிறேன். 1962 சிறப்பு மாநாட்டிற்குப் பின் தமிழ் மாநிலக் குழுவின் செயலாளராக தோழர் மணலி கந்தசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலச்செயற்குழுவில் தோழர்கள் மணலி கந்தசாமி, எம். கல்யாண சுந்தரம், என்.கே.கிருஷ்ணன், பாலதண்டாயுதம், ப.மாணிக்கம், கே.டி.கே.தங்கமணி இடம் பெற்றிருந்தனர். ஜீவாவும் செயற்குழுவில் இருந்தார். பி. ராமமூர்த்தியும் இருந்தார்.

என்னை சென்னை மாவட்டக் குழுச்செயலாளராகத் தேர்ந்து எடுத்தனர். ஓராண்டு மட்டுமே நான் செயலாளராக இருந்தேன். பின்னர் டி.பழனிச்சாமி செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர் பாலதண்டாயுதமும், நானும் தமிழ்நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஜீவா யோசனை கூறுகிற நிலையோடு அலுவலகத்தில் தங்கி விட்டார். சில இடங்களுக்கு மட்டும் சென்று பேசினார். (நூலிலிருந்து பக்.21-22)

நூல் : 1962 அரசியல் நிகழ்வுகள்
ஆசிரியர் : தா.பாண்டியன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 40
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : marinabooks

நிலவுடமையும் சேர சோழ பாண்டிய மன்னன் வரலாறும்

1
நா. வானமாமலை

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 02

முதல் பாகம்.

நிலைத்த வாழ்க்கை காரணமாக உற்பத்திச் சக்திகள் வளர்ந்திருக்க வேண்டும். ஆடு மாடுகளுக்குத் தீனியும், தங்களுக்கு உணவும் பெறுவதற்கு முல்லை நில மக்களிலே ஒரு பகுதியார் ஆற்றங்கரைகளிலே குடியேறி நன்செய்ப் பயிர் செய்யக் கற்றுக் கொண்டார்கள். குளங்கள் தோண்டப்பட்டன. ஆறுகளை மறித்து அணைகள் கட்டப்பட்டன. அகன்ற நிலப்பரப்புக்கள் சாகுபடிக்கு வந்தன. இப்புதிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சிறிதளவு உணவுக்குப் போக தானியம் மிஞ்சியது. மேலும் நீண்ட வாய்க்கால்களைத் தோண்டினார்கள். மடைகளை அமைத்தார்கள். மேலும் விளைச்சல் பெருகியது. உழவுக்கு வேண்டிய கருவிகள் செய்யவும், ஆடு மாடுகளைப் பாதுகாக்கவும், ஆடை நெய்யவும், தோலிலே ஏற்றங்களுக்கு வேண்டிய பைகள் செய்யவும், விளைந்த நெல்லைப் பாதுகாக்கக் கட்டடங்கள் எழுப்பவும் தனித்தனிப் பிரிவினர் தோன்றினர். இவ்வாறு சிக்கலான வேலைப் பிரிவினை எழுந்தது. இவற்றை மேற்பார்க்க சிறுசிறு பிரதேசங்களில் குறுநில மன்னர்கள் தோன்றினர். பெரிய ஆறுகளின் நீரை முழுதும் பரந்த அளவு நிலத்தில் பாய்ச்சி விவசாயம் செய்யவும் பல பகுதியினரையும், ஒருங்கு விவசாயத் தொழிலிலே ஈடுபடுத்தவும் மத்திய ஆட்சி தேவையாயிற்று. பரந்த நிலப்பரப்பின் தலைவர்களாக இருந்தவர்கள் முடியுடை மன்னர்களானார்கள். எந்தப் பகுதியில் விளைச்சல் அதிகம் கண்டு தானியம் மிஞ்சியதோ அப்பகுதி வலிமையுடையதாயிற்று.

பக்கத்திலுள்ள வளர்ச்சியடையாத பகுதிகளைப் போரின் மூலம் தன் ஆட்சிக்குக் கீழ் கொணர்ந்தது. இவ்வாறு நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்கள் சேர, சோழ, பாண்டியரது ஆட்சிக்குட்பட்டனர். தனித்தனியாக வாழ்ந்த மலை நாட்டினரும், காட்டுச் சாதியினரும் பயிர் செய்து உற்பத்திச் சக்திகளை வளர்த்துவிட்ட மருத நிலத்தவருடைய ஆதிக்கத்திற்குட்பட்டனர். இவர்களிடையே பல போராட்டங்கள் நிகழ்ந்தன, பாரி, பேகன் போன்ற மலைநாட்டு குறுநில மன்னர்கள் முடியுடை மன்னர் மூவரால் தோற்கடிக்கப்பட்டனர். வாழ்க்கை முறை மாறிற்று. சமூக அமைப்பும் மாறிற்று. இம்மாறுதல்கள் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்திருக்க வேண்டும். பயிர்த்தொழிலை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பைப் பற்றிய செய்திகள் மருத நிலத்தைப் பற்றிய செய்யுட்களிலே காணப்படுகின்றன. முன்னிருந்த இரண்டு சமூக அமைப்புகளைவிட இச்சமூக அமைப்பில் மனிதன் வளமாக வாழ்ந்த காரணத்தாலும், மிகுந்த ஓய்வு கிடைத்ததின் காரணமாகவும் கலைகள் வளர்ந்தன. கோயில்கள் தோன்றின. சிற்பங்கள் எழுந்தன. நீண்ட காவியங்கள் தோன்றின.

இந்தச் சமூகத்தில் தமிழ் மக்கள் உற்பத்தி சக்திகளுக்கும், தங்களுக்குமுள்ள உறவு காரணமாக இரு பிரிவாகப் பிரிந்தனர். ஒன்று ‘நிலக்கிழார்’ அல்லது நிலவுடைமையாளர். மற்றொரு பிரிவினர் அவற்றில் உழைத்துப் பிழைக்கும் உழவர்கள். இச்சமூகத்தில் வர்க்கப் பிரிவினையும், முரண்பாடும் தோன்றிவிட்டன. அது எவ்வாறு தோன்றிற்று, எப்படி வளர்ச்சியுற்றது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். தங்களுடைய வாழ்க்கை நிலைமையில் தோன்றிய மகிழ்ச்சிகரமான, மாறுதலைச் சுட்டிக்காட்டும் முறையில் மருத நிலத்தவர் இந்திரனைத் தங்கள் தெய்வமாகக் கொண்டனர். இந்திரன் சுக வாழ்வின் பிரதிநிதி.

தமிழ்நாடு முப்பெரும் பிரிவுகளாக இணைக்கப்பட்ட காலத்தில் வாணிபமும் தலை தூக்கத் தொடங்கியது. சிறுசிறு கிராமங்களில் கைத்தொழில் செய்து கிராமத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் முடியரசு தோன்றியபின் போதாது. ஆகவே தொழில் பிரிவு தோன்றி, தனித்தனியாக தொழில் செய்து தங்கள் செய்பொருட்களை நெல்லுக்குப் பரிவர்த்தனை செய்து கொண்ட முறை நிலைகுலைந்தது. பொன்னும் பொற்காசுகளும் பரிவர்த்தனைக்குப் பொதுப் பொருளாயின. பொருள்களைத் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் ‘வணிகச் சாத்துக்கள்’ என்ற வணிகர் கூட்டம் தோன்றியது. இவர்கள் பொருள்களை உற்பத்தி செய்வதில்லை. ஆனால் ஒரு பகுதியில் இருந்து மற்றோர் பகுதிக்குக் காளைகள் மீதும், சகடங்கள் மீதும், பொருள்களை ஏற்றிச் சென்று விற்பர். உள்நாட்டு வாணிபம் பெருக மன்னர்கள் சாலைகள் அமைத்தனர்.

இந்தச் சமூகத்தில் தமிழ் மக்கள் உற்பத்தி சக்திகளுக்கும், தங்களுக்குமுள்ள உறவு காரணமாக இரு பிரிவாகப் பிரிந்தனர். ஒன்று ‘நிலக்கிழார்’ அல்லது நிலவுடைமையாளர். மற்றொரு பிரிவினர் அவற்றில் உழைத்துப் பிழைக்கும் உழவர்கள். இச்சமூகத்தில் வர்க்கப் பிரிவினையும், முரண்பாடும் தோன்றிவிட்டன. அது எவ்வாறு தோன்றிற்று, எப்படி வளர்ச்சியுற்றது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

இவ்வணிகச் சாத்தினர் பல பொருட்களை நாடெங்கும் பரப்பினர். ஆடைகள், அணிகலன்கள், தானிய வகைகள், மிளகு, பாக்கு, வாசனைத் திரவியங்கள் ஆகிய பொருட்களைத் தமிழ்நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றோர் பகுதிக்குக் கொண்டு சென்று விற்றனர். இவர்களுள் ஒரு பகுதியினர் பெரும் பொருள் திரட்டினர். அவர்கள் சமூகநிலை உயர்ந்தது: மூலப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிலங்கள் குறுநில மன்னர்களின் உடைமையாக இருந்தன. செய்பொருட்களை ஆக்குபவர்கள் தொழிலாளிகள். அவர்களை ஓரிடத்தில் சேகரித்து அவர்கள் செய்து தரும் பொருட்களுக்கு விலை கொடுத்து வணிகர்கள் வாங்கினார்கள். ஆக, நிலத்தொடர்பு இல்லாத இரு வர்க்கங்கள் இப்பொழுது தோன்றத் தொடங்கின. வணிகர்களது செல்வாக்கு ஓங்க ஓங்க அவர்கள் மூலப்பொருள் உற்பத்திக்குச் சாதனமான நிலத்தின் சொந்தக்காரர்களது ஆதிக்கத்துக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டியதாயிற்று. அவர்களது நிலவுடைமையைப் பாதுகாக்கும் திட்டத்தையும் கொள்கையையும் காக்க வேண்டி வந்தது. அதற்காகக் கைத்தொழில் செய்யும் தொழிலாளரையும், விவசாயிகளையும் தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள முயன்றார்கள். இவ்வணிகர்கள் பெருங்குடி வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களுடைய ஆதிக்கம் ஓங்கியிருந்த காலத்தைச் சிலப்பதிகாரம் சித்தரிக்கிறது. சமணமும், பௌத்தமும் இவர்கள் ஆதரித்த மதங்கள். அவை சமூக அடிமைத்தனத்தைத் தாக்குகின்றன. புத்த மதத்தையும் இவர்கள் ஆதரித்தார்கள். இவர்கள் காலத்தில் பெரு நகரங்கள் தோன்றின.

படிக்க:
ரஜினி : கிறுக்கா … காரியக் கிறுக்கா ?
அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download

நகரங்கள் கைத்தொழில் உற்பத்திக் கேந்திரங்களாக இருந்தன. நகரங்களின் உள்ளமைப்பையும், வாணிப வளத்தையும், வாழ்வோர் நிலையையும் சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது. சேர, சோழ, பாண்டிய ராசதானி நகரங்களை அது வர்ணிக்கிறது. அப்பொழுது பெருங்குடி வணிகர்களுடைய செல்வாக்கு உச்ச நிலையிலிருந்தது என்பதையும், சுட்டிக் காட்டுகிறது. இது தவிர அயல்நாடுகளோடு மரக்கலங்கள் மூலம் வாணிபத் தொடர்பிருந்தமைக்கும், அதன் மூலம் பெருங்குடி வணிகர்கள் ‘பெரு நிதியம்’ திரட்டினார்கள் என்பதற்கும் சான்றுகளுள்ளன. இவர்களுடைய வளர்ச்சிக் காலத்திலேதான் கடற்கரையில் மீன் பிடித்தும், உப்புக் காய்ச்சியும் பிழைத்து வந்த பரதவரும், உமணரும், சங்கு குளித்தல், முத்துக் குளித்தல் போன்ற தொழில்களைக் கற்றிருக்க வேண்டும். அயல் நாட்டு வாணிபத்துக்காக, புகார், கொற்கை, தொண்டி, முசிறி போன்ற துறைமுகங்கள் தோன்றின. அங்கே யவனர் கலங்கள் வந்து தங்கிச் சென்றன. துறைமுகச் சாவடிகளில் பொதிகள் அடுக்கப்பட்டுச் சுங்கம் வசூலித்ததற்கு அடையாளமாக மன்னனது முத்திரை பதிக்கப்பட்டன. இச்செய்தியைப் ‘பட்டினப் பாலை’ கூறுகிறது.

இவ்வாறு பெருங்குடி வணிகரின் செல்வாக்கு உயர்ந்தோங்கிய காலத்தில் அரசியல் வாழ்விலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். சோழ நாட்டின் வளப்பம் காரணமாக அங்குதான் பெருங்குடி வணிகர் வர்க்கமும் வளர்ந்து வாணிபத்தைப் பெருக்கியது. வாணிபத்துக்குச் சந்தையாக தமிழ்நாடு முழுதும் இருக்க வேண்டும் என்பது அவர்களது நலனுக்கு உகந்ததாக இருந்தது. ஆகையால் அவர்கள் தமிழ்நாட்டின் முப்பெரும் பிரிவுகளிலும் தங்குதடையற்ற வியாபாரம் பெருக விரும்பினர். அதற்குத் தகுந்த சித்தாந்தத்தையும் உருவாக்கினர். மூன்று பிரிவுகளும், ஒன்றென்னும் எண்ணத்தை வளர்த்தனர். மூன்று மன்னர்களும் போராடாமல் வாழவேண்டுமென விரும்பினர். தமிழ் மன்னர் மூவரும் போராடாமல் வாழ்ந்தால் தங்கள் வாணிபம் பெருகுமல்லவா? ஆகவே சமாதானம் தமிழரின் பொதுவான கலை பண்பாட்டு ஒருமை இவற்றை அவர்கள் வலியுறுத்தினர். சேர வம்சத்தினராயினும், இளங்கோவடிகள் தன் கால சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்டவராதலால் சிலப்பதிகாரத்தில் இக்கொள்கைகளை வெளிப்படையாகவும், உட்பொருளாகவும் கூறுகிறார். தமது வாழ்த்துக் காதையில் சேர, சோழ, பாண்டிய நாட்டின் தலைநகரங்களுக்கும் மன்னருக்கும் வாழ்த்துக் கூறுகிறார். இது தமிழ் நாட்டின் ஒருமையை வலியுறுத்துவதற்காகவே.

வாழியரோ வாழி
வருபுனல் நீர் வையை
சூழு மதுரையார் கோமான்
தன் தொல்குலமே
வாழியரோ வாழி
வருபுனல் நீர்த் தன் பொருதை
சூழ்தரும் வஞ்சியர் கோமான்
தன் தொல்குலமே
காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்
பூவிரி கூந்தல் புகார்

இம்முறையில் பொருளாதார வாழ்வையும் வர்க்க முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு மக்களின் வரலாறு முழுதும் எழுதப்பட வேண்டும். இவ்வரலாற்றைத் தனியொருவர் எழுதுவது இயலாது. நூற்றுக்கணக்கான வரலாற்று வல்லுநர்கள். தமிழ் அறிஞர்கள், மார்க்ஸீயவாதிகளின் கூட்டு முயற்சியால் இவ்வரலாறு உருவாக வேண்டும். முதன் முதலில் பல கருத்து வேற்றுமைகள் தோன்றுவது இயற்கையே; பல கருத்து மோதல்களின் விளைவாக உண்மை வெளிப்படும். பண்டைத் தமிழர் சரித்திரத்தை ஆரம்ப முதல் மத்திய காலம் வரைக்கும் ஆராய்ந்து எழுதுவதற்குப் பரவலான சான்றுகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கிடக்கின்றன. அவற்றைச் சேகரித்துச் சமூக வளர்ச்சி தொழில் கண்ணோட்டத்தில் ஒரு வரலாறு உருவாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட தமிழர் வரலாறு நமக்கு அவசியம் தேவை.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் அறிவியல் படும் பாடு !

4

ர்ஜுனன் போரில் அணுசக்தி கொண்ட அம்புகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்த மேற்கு வங்க ஆளுனர் ஜக்தீப் தன்கர் முதல், விநாயகருக்கு யானைத்தலையை ஒட்ட வைத்த பிளாஸ்டிக் சர்ஜரி தொழில்நுட்பம், ஆதிகாலத்திலும் இந்தியாவில் இருந்தது என்று உறுதிபடக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி வரை பாஜக-வின் அறிவியல் அறிஞர்கள் படை விரிவடைந்து செல்கிறது.

ஒவ்வொரு மேற்கத்திய அறிவியல் கண்டுபிடிப்புகளும் ஏற்கெனவே வேதங்களிலோ அல்லது மகாபாரத்திலோ இருப்பதாக வலியுறுத்தும் தலைவர்களைக் கொண்டுள்ளது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி. இந்த தலைவர்களை இரண்டு பிரிவினராகப் பிரிக்கலாம்.

  1. முதல் வகையினர், காரண – காரியங்களை பரவவிடாமல் தடுப்பவர்களாகவும், அனைத்து அறிவியலையும் கைவிடுபவர்களாகவும் இருக்கின்றனர். அல்லது, அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளும், அறிவும் ஏற்கெனவே மகாபாரதத்திலும் வேதங்களிலும் அல்லது பண்டைய இந்தியாவில் அறியப்பட்டவை, நடைமுறைப்படுத்தப்பட்டவை என்று கூறுபவர்கள்.
  2. இரண்டாவது வகையினர், தொடர்ந்து பசுக்களையும், அவற்றின் சிறுநீரையும் சாணியையும் போற்றிப் புகழந்து கொண்டிருப்பவர்கள்.

பாஜக அறிவியல் அறிஞர்கள் குறித்த டெலிகிராப்-ன் கையேடு :

இந்துத்துவ ‘விஞ்ஞானிகள்’ (கேலிப்படம் – தியாஸ் தாஸ். நன்றி : டெலிகிராப் இந்தியா)

ஜக்தீப் தன்கர் (மேற்குவங்க கவர்னர்) :

கடந்த ஜனவரி 14, 2020 அன்று 45-வது கிழக்கிந்திய அறிவியல் காட்சியில், “ராமாயண காலத்தில் பறக்கும் இயந்திரங்கள் இருந்ததாகவும், அர்ஜுனன் பயன்படுத்திய அம்புகள் அணுசக்தி கொண்டவையாக இருந்தன என்றும் கூறி பார்வையாளர்களை  திடுக்கிடச் செய்தார். “வானூர்திகள் 1910 அல்லது 1911-ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுப்படுகிறது. நாம் நமது இலக்கியங்களுல் நுழைந்தால் ராமாயணத்திலேயே நாம் விமானங்களைக் காணலாம். மகாபாரதத்தில் அர்ஜுனன் பயன்படுத்திய அம்புகள் அணுசக்தி கொண்டவையாக இருந்தன”

பிப்லப் தேப் (திரிபுரா முதல்வர்) :

கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மகாபாரதத்தைப் பற்றி பேசிய திரிபுரா முதல்வர், பாரதப் போர் நடந்திருக்கும் போது அங்கு நடப்பவை அனைத்தும் உடனுக்குடன் கண் இல்லாத மன்னனான திருதிராஷ்டிரனுக்கு தெரியவந்தது; இது அந்தக் காலத்திலேயே செயற்கைக் கோள் தொலைதொடர்பும், இணையமும் இருந்ததைக் காட்டுகிறது” என்று கூறியிருந்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில் சிவில் (குடிமையியல்) சேவகர்களாவதற்கு இயந்திரப் பொறியாளர் மாணவர்களை விட சிவில் (கட்டிடக்கலை) பொறியாளர் மாணவர்களே பொறுத்தமானவர்கள் என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:
திரிபுரா : பாஜக முதல்வரின் கூமுட்டைதனத்தை விமர்சித்த மருத்துவர் பணிநீக்கம் !
♦ அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! – மாநாடு நிகழ்ச்சி நிரல்

ஆனந்த்குமார் ஹெக்டே (முன்னாள் திறன் மேம்பாட்டு மத்திய அமைச்சர்) :

சமஸ்கிருதத்தின் தீவிர விசிறியான இவர் கடந்த பாராளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில்தான் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-ம் ஆண்டு ஜூன்-21 அன்று சமஸ்கிருத மொழியே வருங்காலத்தைய சூப்பர் கம்யூட்டர்களின் மொழியாக இருக்கும் என்ற பார்வைக்கு உலகம் முழுவதும் பல அறிஞர்கள் வந்தடைந்துள்ளனர் என்று கூறியிருக்கிறார். ஆனால் தப்பித்தவறி கூட அந்த அறிஞர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.

நரேந்திர மோடி (இந்தியப் பிரதமர்) :

கடந்த அக்டோபர் 2014 அன்று மும்பை மருத்துவர்கள் முன்னிலையில் பண்டைய வேத காலத்துக்குப் பயணித்த மோடி, “நாம் வான்வெளி அறிவியலைப் பற்றி பேசுகையில், நமது முன்னோர்கள் வான்வெளி அறிவியலில் தங்களது பெரும் திறனைக் காட்டியுள்ளனர். ஆரியபட்டா சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் சொல்லிச் சென்றதை அறிவியலாளர்கள் இன்று அங்கீகரித்துள்ளனர். நான் சொல்லவருவது என்னவென்றால், நாம் ஏற்கெனவே இத்தகைய திறனைக் கொண்டுள்ளோம்; அவற்றை நாம் மீண்டும்பெற வேண்டும்.” என்று பேசினார்.

திரிவேந்திர சிங் ராவத் (உத்தரகாண்ட் முதலமைச்சர்) :

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 27 அன்று, உலகிலுள்ள விலங்குகள் சாம்ராஜ்ஜியத்தில் ஆக்சிஜனை உள்ளிழுத்து ஆக்சிஜனையே வெளியே விடும் ஒரே விலங்கின பசு மட்டுமே என்று புதிய திருப்புமுனைக் கண்டுபிடிப்பை வெளியிட்டார். மேலும் பசுவுக்கு அருகில் வாழ்ந்து வருவது காசநோயைக் குணப்படுத்தும் என்றும் தெரிவித்தார். என்ன…! சிறப்பாக குணமாக வேண்டுமெனில் பசுவுக்கு எவ்வளவு அருகில் வாழ வேண்டும் என்பதை மட்டும் அவர் தெரிவிக்கவில்லை. மற்றொரு நிகழ்வில் கர்பிணிப் பெண்கள் அறுவை சிகிச்சை மகப்பேறைத் தடுக்க பகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள கருட கங்கா-வில் இருந்து வரும் குடிநீரைக் குடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ரஞ்சித் ஸ்ரீவத்சவா (உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்) :

பசுக்கள் அனைத்தும் இந்துக்கள் என்றும் அவை இறந்ததும் அவற்றை புதைக்கக் கூடாது. புதைத்தல் என்பது முசுலீம்களின் பண்பாடு. பசுக்கள் இறந்தால் அதன் உடலை வெந்நிறத் துணிகளால் சுற்றி, இந்து முறைப்படி தீயிட்டு எரிக்க வேண்டும் அல்லது மின் தகன மேடையில் இட்டு எரிக்கப்பட வேண்டும். அதற்காக தனியாக மயானங்கள் கட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பேச்சில் மறக்க முடியாத பகுதி எதுவெனில், “முசுலீம்களின் வீடுகளில் இருக்கும் பசுக்களை திரும்ப எடுத்துக் கொள்ளவேண்டும். நம் வீட்டுப் பெண்கள் முசுலீம்கள் வீட்டுக்குச் செல்வதை லவ் ஜிகாத் என்று நாம் பார்க்கும்போது, நாம் தாயாகக் கருதும் பசுக்கள் அவர்களது வீட்டில் இருப்பதையும் லவ் ஜிகாத் என்றுதானே எடுத்துக் கொள்ளவேண்டும் ? பசுக்களுக்குப் பதில் அவர்கள் ஆடுகளை எடுத்துக் கொள்ளட்டும். ஆடுதான் அவர்களது தாய்” என்று பேசினார்.

கிரிராஜ் ஜிங் (மீன்வளம், கால்நடை – பால்வளத்துறை மத்திய அமைச்சர்) :

இவர் பேசியதைப் பற்றி பட்டியலிட இடம் பத்தாது. கடைசியாகக் கடந்த முறை (ஜனவரி14, 2020 அன்று) அறிவியலாளர்களிடம் மாட்டு மூத்திரம் மற்றும் சாணியை மேலும் ஆய்வுக்கு உட்படுத்துமாறும், இதன் மூலம் பசுக்கள் பால்தருவதை நிறுத்திய பின்னும் அவை கால்நடை விவசாயிகளுக்கு பணம் ஈட்டித் தரும் என்றும் அதனால் பால் கொடுப்பதை நிறுத்திய பசுக்களைக் கைவிடுதல் குறையும் என்றும் கூறியுள்ளார்.

படிக்க:
குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !
♦ இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்

சத்யபால் சிங் (உயர்கல்வி அமைச்சர்) :

மும்பையின் முன்னாள் போலிசு கமிசனரான சத்யபால் சிங், டார்வினின் பரிணாமக் கொள்கையைக் கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் பலமுறை கையில் எடுத்திருக்கிறார். பார்லிமெண்டில் அவர் பேசுகையில், “நமது கலாச்சாரம் நம்மை ரிஷிகளின் குழந்தைகள் எனக் கூறுகிறது. நான் நாம் குரங்குகளின் குழந்தைகள் என நம்புபவர்களை புண்படுத்த விரும்பவில்லை; ஆனால் நமது கலாச்சாரத்தின்படிநாம் ரிஷிகளின் குழந்தைகள்” என்றார். இதற்கு பாராளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்தார். தான் ஒரு ஹோமோசேப்பியன் என்றும் தமது பெற்றோர்கள் ‘சூத்திரர்கள்’ என்றும் குறிப்பிட்டார். ஆனால் பாராளுமன்றத்தில் சத்யபால் சிங்கின் படையினர் பரிணாமக் கொள்கை பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்படவேண்டும் என்றனர். அவரது முத்தாய்ப்பான வாதம் : குரங்கு மனிதனாக மாறியதற்கு எந்த ஒரு நேரடியான சாட்சியும் இல்லை.

பிரக்யா சிங் தாக்கூர் (போபால் எம்.பி – மாலேகான் குண்டுவெடுப்பில் குற்றம்சாட்டப்பட்டவர்) :

அனைத்து பாஜக தலைவர்களுமே பசுமாதாவின் முன் மண்டியிட்டு இருந்தார்கள் என்றாலும், பசு குறித்த விவாதத்தின் தலைசிறந்த நபர் பிரக்யாசிங் தாக்கூர் தான். மாட்டு மூத்திரத்தைக் குடித்ததால்தான் தனது புற்று நோய் குணமானதாகக் குறிப்பிட்டார். “நான் பசு மூத்திரம், பஞ்ச கவ்யம் மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் ஆகியவற்றை உட்கொண்டதன் மூலம்தான் புற்றுநோயிலிருந்து தானாக குணமடைந்தேன்” என்றார்.

பஞ்சகவ்யம் என்பது பசுவின் சாணமும், மூத்திரமும் பாலும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்த கலவையாகும். அவரது மருத்துவர்கள் இதனை மறுத்து அறிக்கை விட்டனர். அவருக்கு புற்றுநோயைக் குணமாக்க, மார்பக நீக்கம் உட்பட சில அறுவை சிகிச்சைகள் செய்ததாகக் குறிப்பிட்டனர். பசுவுடன் நெருங்கியிருப்பதன் மூலம் பிற உடல்நலப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பசுவை குறிப்பிட்ட வகையில் தேய்ப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை சரி செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹர்ஷ் வர்தன் (அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர்) :

அல்ஜீப்ரா மற்றும் பித்தகோரஸ் தேற்றத்தையும் இந்தியாதான் கண்டுபிடித்தது என்றும், பின்னர், பிறர் அதை தங்களது கண்டுபிடிப்பாக அறிவித்துக் கொள்ள தாராளமாக அனுமதித்து விட்டது என்றும் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் கூறியிருக்கிறார். “நமது அறிவியலாளர்கள் பித்தகோரஸ் தேற்றத்தைக் கண்டுபிடித்தனர். நாம் அந்தப் பெருமையை கிரேக்கர்களுக்குக் கொடுத்துவிட்டோம். அதே போல, அல்ஜீப்ரா கண்டுபிடிப்பின் பெருமையை அரேபியர்களுக்குக் கொடுத்துவிட்டோம்.” என்றார்.

2018-ம் ஆண்டு மார்ச் மாதம், ஸ்டீபன் ஹாக்கிங் இறந்த பின்னர் மீண்டும் களத்தில் இறங்கிய ஹர்ஸ் வர்தன், ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியை விட சக்தி வாய்ந்த அறிவியல் கொள்கைகளைப் பற்றிய அறிவு வேதங்களில் பொதிந்திருக்கும் என்று ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளதாகக் கூறியிருந்தார். இது குறித்த விவரங்களை பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அதைக் கண்டுபிடிப்பது பத்திரிகையாளர்களின் பணி என்று கூறினார். கொடுமையென்னவென்றால், இந்த கண்டுபிடிப்பை இந்திய அறிவியல் மாநாட்டில் அவர் பேசியுள்ளார் என்பதுதான்.

சங்க பரிவாரத்தால் உந்துதல் பெற்ற பரப்புரையாளர்கள் சிலர் :

பசுக்களின் பண்புகள் மற்றும் சக்திகள் குறித்து தொடர்ச்சியாக புதிய புதிய கண்டுபிடிப்புகளை பலரும் படைக்க, பாஜக தலைவர்கள் உந்துதலாக இருக்கின்றனர். அவ்வாறு உந்துதல் பெற்ற சிலர் பின்வருமாறு

நாகேஷ்வர ராவ் :

ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மகாபாரதத்தில் குதித்துள்ளார். இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிய அவர் “மகாபாரதத்தில் 100 கவுரவர்கள் உருவானது ஸ்டெம் செல் மற்றும் டெஸ்ட் டியூப் தொழில்நுட்பத்தால் தான்” என்று பேசியுள்ளார். மேலும், “பகவான் விஷ்ணு ஏவுகணைகளை தனது விஷ்ணு சக்கரத்தின் மூலம் வழிநடத்தினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜுனகத் விவசாய பல்கலைக்கழகம் :

இப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த “அறிவியலாளர்கள்”, ஐந்தாண்டு ஆய்வுக்குப் பின்னர், தங்கத்தின் சுவடுகளை பசு மூத்திரத்தில் கண்டறிந்ததாகத் தெரிவித்தனர். அதர்வண வேதக் குறிப்புகள் மூலம் தாம் இதனை அறிந்ததாகத் தெரிவிக்கின்றனர். மேலும் மழைக்காலத்தை விட வெயில் காலத்தில் அதிகமான தங்க சுவடு பசு மூத்திரத்தில் கிடைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். இவர்களின் இந்தக் கண்டுபிடிப்புகள், மேற் சரிபார்ப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  தெரிவித்துள்ளார்.

இப்போ சொல்லுங்க …. இந்தியா வல்லரசாகிடும் தானே !


தமிழாக்கம் :
நந்தன்
நன்றி :  டெலிகிராப் இந்தியா.