Thursday, August 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 289

குழந்தைகளே ! நீங்கள் இல்லாத வெற்று வகுப்பு, எனக்கு சலிப்பாக உள்ளது !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 07

நீங்கள் இல்லாத வெற்று வகுப்பில் எனக்குச் சலிப்பாக உள்ளது

ன்று எங்கள் பள்ளி வாழ்க்கையின் கடைசி 170வது – நாள்.

குழந்தைகள் வரும் முன் எல்லாவற்றையும் தயார் செய்யும் பொருட்டு நான் மிகவும் சீக்கிரமாகவே வந்து விட்டேன்.

தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையில் குழந்தைகள் இந்தக் கல்வியாண்டில் எழுத்துப் பயிற்சியிலும் கணிதப் பாடத்திலும் செய்த முதல் மற்றும் கடைசி வேலைகளை வைக்கிறேன். முதல் எழுத்துப் பயிற்சியின் போது (செப்டம்பர் மாதம் 8-ம் தேதி) தெளிவற்ற கையெழுத்தில் குழந்தைகள், எழுத்துகளுக்குப் பதில் வட்டங்களால் முதல் வார்த்தைகளை “எழுதியுள்ளனர்”: நான்கு வட்டங்கள் “அம்மா“, “அப்பா“, ஐந்து வட்டங்கள் – ”தாயகம்”… கடைசி வேலையை இவர்கள் நேற்று செய்தார்கள். “நான் பள்ளியில் என்ன கற்றுக் கொண்டேன்” எனும் தலைப்பிலான கட்டுரையாகும் இது. கணிதப் பாடத்தில் முதல் பயிற்சி (செப்டம்பர் 9) “ஒன்று” என்னும் எண் வரிசையாக எழுதுதல், வரைகணித வடிவங்களுக்கு வண்ணம் பூசுதல். கடைசி கணிதப் பாடத்தில் (மே 16-ம் தேதி) தாமே உருவாக்கிய கணக்குகளைப் போட்டனர், வரைகணித வடிவங்களை வரைந்தனர். ஒவ்வொரு குழந்தையின் இந்த 4 வேலைகளும் இன்று ஸ்டேன்டில் உள்ளன. அதே சுவரில் ஒரு பெரிய வெள்ளைத் தாளை மாட்டி, அருகே மேசையில் வண்ணப் பென்சில்களை வைத்தேன். தாளின் மேல் “எனது பள்ளி வாழ்க்கை“ என்று எழுதப்பட்டுள்ளது; இதில் குழந்தைகள் வரைய வேண்டும். தாழ்வாரத்திலும் வகுப்பறையிலும் புகைப்படங்களை மாட்டினேன். இதில் ஒவ்வொரு குழந்தையும் அவனுடைய பள்ளி வாழ்க்கையின் ஒரு தருணத்தில் காட்சியளிக்கிறான் – சிலர் யோசனையில் மூழ்கியிருக்கின்றனர், சிலர் இடத்திலிருந்து எழுந்து ஏதோ கத்துகின்றனர், சிலர் கொட்டாவி விடுகின்றனர், சிலர் அருகில் உள்ளவருடன் பேசுகின்றனர், சிலர் நடனமாடுகின்றனர், சிலர் பூங்காவில் எறும்புகளைக் கவனிக்கின்றனர்… இப்படங்களை இதற்கு முன் குழந்தைகள் பார்க்கவில்லை. ஒரு சிறு ஆல்பம் நான் தயாரித்தேன், அதில் 40 பக்கங்கள், செப்டெம்பரின் முதல் நாட்களில் ஒவ்வொரு குழந்தையும் “நான் சிறுவனாக இருந்த போது” என்ற தலைப்பில் சொன்னவற்றைப் பற்றிக் குறிப்புகள் எழுதியுள்ளேன்.

இந்த அதிசயங்களின் மூலம் குழந்தைகள் எப்படி வளர்ந்துள்ளனர் என்று அவர்களுக்குக் காட்டவும், பெற்றோர்களுக்கு அவர்களின் குழந்தைகள் எப்படி மாறி, பெரியவர்களாகி விட்டனர் என்று காட்டவும், நான் என்ன சாதித்துள்ளேன் என்று பார்க்கவும் நான் விரும்புகிறேன்.

எல்லாம் செய்தாகி விட்டது. நான் வெற்று வகுப்பில் குழந்தைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். டெஸ்குகளைப் பார்க்கிறேன்.

இதோ இது மாரிக்கா உட்காருமிடம். இந்தச் சின்னஞ் சிறு மாணவி வகுப்பறையில் நுழைந்ததுமே என்னிடம் வந்து, “வணக்கம்!” என்று சொல்லுவாள், பின் என்னைப் பற்றி ஏதாவது கேட்பாள். நான் ஏதாவது புதிதாக அணிந்திருந்தால் கண்டிப்பாகச் சொல்லுவாள்:

“இன்று எவ்வளவு அழகாக இருக்கின்றீர்கள்!” பின் புதிய பொருளைத் தொட்டுப் பார்ப்பாள். “உனக்காகத்தான் இன்று நான் அழகாக உடையணிந்து வந்திருக்கிறேன். உனக்குப் பிடித்துள்ளதா?” என்று பதில் சொல்வேன்.

அவள் புன்முறுவல் பூத்தபடி என்னைக் கட்டிக் கொள்வாள்.

சமீபத்தில் ஒரு நாள் அவள் அம்மா வந்து, பள்ளி நேரத்திற்கு முன்னதாகவே மாரிக்காவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினாள்.

“இல்லை, நான் போகமாட்டேன்!” என்று மாரிக்கா உறுதியாக மறுத்து விட்டாள்.

அம்மா என்னென்னவோ சொல்லிப் பார்த்தாள். ஒன்றும் பயன் தரவில்லை.

“ஏன் பிடிவாதம் பிடிக்கிறாய்?” என்று அம்மா கோபமாகக் கேட்டாள்.

“நான் பிடிவாதம் பிடிக்கவில்லை! இது பள்ளிக்கூடம்!”

“அப்படியெனில் இனி உன்னைப் பள்ளிக்கே அழைத்து வர மாட்டேன்.”

“அழைத்து வர மாட்டாயா? நான் உன்னை வேலைக்குப் போக விடாவிடில் எப்படியிருக்கும்?”

நான் மாரிக்காவிடம் அம்மா சொல்லுவதைக் கேட்குமாறு கூறவில்லை என்ற அதிருப்தியோடும், இன்னும் ஒரு முறை மகளை அழைத்துச் செல்ல பள்ளிக்கு வர வேண்டுமே என்ற எண்ணத்தோடும் அம்மா திரும்பிச் சென்றாள்.

இதோ இங்குதான் சுருட்டை முடியுடைய, ஓய்வற்று அலைந்து திரியும் சிறுவன் அமர்ந்திருப்பான். இவன் விஷயத்தில் எனது போதனை முறை எதுவும் பலிக்கவில்லை.

நவம்பர் இறுதியில் கூட அவனால் வார்த்தையில் ஒலிகளைப் பிரிக்க இயலவில்லை, எழுத்துகளையும் எண்களையும் குழப்பினான், எந்த எழுத்தையும் எண்ணையும் காட்டினாலும் அது நான்கு என்றான். பிப்ரவரி ஆரம்பத்தில் ஒரு சில எழுத்துகளைக் கற்றுக் கொண்டாலும் இவற்றைக் கொண்ட எளிய அசைகளைக் கூட அவனால் படிக்க இயலவில்லை. நான் அவனை எதையாவது வரையச் சொன்ன போது அவன் ஒரு தாறுமாறான வடிவத்தை வரைந்தான், அது ஒரு முக்கோணம் போலிருந்தது, அதன் ஓரத்தில் சிறு வட்டங்கள் இருந்தன. “இது வீடு, இந்த வட்டங்கள் சக்கரங்கள்” என்றான் அவன். பின் இதே மாதிரி வரைந்து, பந்தயக் கார் என்றான். அனேகமாக, இந்தப் பல்பொருள் படத்திலும் பல அர்த்தமுள்ள “நான்கு” என்ற எண்ணிலும் ஏதோ ஒரு விசேஷ அர்த்தம் இருக்க வேண்டும், இதை நான் கண்டுணர வேண்டும்.

நீண்ட காலத்திற்கு அவனால் வகுப்பு ஒழுங்கு முறைகளுக்குப் பழகிக் கொள்ள முடியவில்லை. தானாக எழுந்து வகுப்பில் அங்குமிங்கும் நடந்தான், மேல்கோட்டை எடுத்து அறையின் நடுவில் உதறுவான். ஒரு முறை அவன் வகுப்பில் விசிலடிக்கத் துவங்கிய போது மற்ற குழந்தைகளே அவனிடம் தொந்தரவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொண்டனர். அவனிடம் அன்புடன் நடந்து கொள்ளுமாறும் அக்கறை காட்டுமாறும் குழந்தைகளிடம் சொல்ல நான் பெரும் பாடுபடவேண்டியிருந்தது.

சிறுவனே, இந்தக் கோடை விடுமுறையின் போது நிறைய புத்தகங்களைப் படித்து, நிபுணர்களுடன் கலந்து பேசி செப்டம்பரில் உனக்கான ஒரு போதனை முறையுடன் கண்டிப்பாக வருவேன். இயற்கையன்னை உனக்குத் தராததை அல்லது பறித்துக் கொண்டதைத் திரும்பப் பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எல்லாம் சரியாகி விடும் என்ற நன்னம்பிக்கை எனக்குள்ளது. ஏனெனில் இது இல்லாவிடில் உனக்கு உதவ முடியாது. மேலும் நீயும் அன்பானவனாகி, படிப்படியாக படிப்பின் மீது ஆர்வம் காட்டுவதால் எனக்கு நம்பிக்கை ஊட்டுகிறாய். நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம்! எனக்கு வேறு வழியில்லை!…..

இதோ இந்தக் கடைசி டெஸ்க் தாத்தோவின் இடம்.

“தாத்தோ, நீ என்ன படிக்கிறாய்?“

“டாமஸ் ஸாயரின் அதிசாகசங்கள்”.

இது நவம்பரில் நடந்தது.

“இப்போது என்ன படிக்கிறாய், தாத்தோ?”

“கேக்கெல்பெரி ஃபினின் அதிசாகசங்கள்”.

இது ஜனவரியில் நடந்தது.

“தாத்தோ, உன் கைகளில் என்ன புத்தகம்?”

“ரகசியத் தீவு”.

“இதை நீ படிக்கிறாயா?”

பாதி படித்து விட்டேன். பெரிதும் சுவாரசியமாக உள்ளது!

இது ஏப்ரலில் நடந்தது. அனேகமாக, இன்று தாத்தோ தான் கோடை விடுமுறையில் எந்தப் புத்தகங்களைப் படிக்கப் போகிறான் என்று கூறுவான். சண்டை போடாமல் இரு, நீ படித்த புத்தகங்களைப் பற்றி நண்பர்களுக்குச் சொல், நான் உனக்கு சிக்கலான கணக்குகளைக் கொண்டு வந்து தருவேன். கொண்டு வரட்டுமா?..

…இதோ இந்த இடத்தில் இன்று யாரும் உட்கார மாட்டார்கள், ஒரு மாதமாக இந்த இடம் காலியாக உள்ளது. அம்மா தன் மகனோடு மாஸ்கோவிற்குச் சென்று விட்டாள். குழந்தைகள் இச்சிறுவனை அடிக்கடி நினைத்துப் பார்த்து ஏங்குகின்றனர். சமீபத்தில் தேன்கோ என்னிடம் சொன்னான்: “நேற்று எனக்கு ஒரு கனவு வந்தது. அவன் நம்மிடம் திரும்பி வந்து அற்புதமான கவிதைகளைப் படித்தான். அவனால் எப்படி இவ்வளவு கவிதைகளைப் படிக்க முடிந்தது என்று நாம் ஆச்சரியப்பட்டோம். நாம் கை தட்டினோம், பின் நான் விழித்துக் கொண்டேன்!”

நேற்று கணிதப் பாடத்தில் குழந்தைகளுக்கு மிகவும் சிக்கலான ஒரு கணக்கைத் தந்தேன். “கரும்பலகையில் நான் இரண்டு கோடுகளை வரைந்திருக்கிறேன். நீங்கள் இவற்றைக் கற்பனையில் பார்க்க வேண்டும், ஏனெனில் இவற்றை நான் இப்போது காட்டப் போவதில்லை. ஒரு கோட்டின் நீளம் “x” செ.மீ., மற்றதன் நீளம் 15 செ.மீ., இரண்டின் நீளத்தையும் சேர்த்தால் 22 செ.மீ. வரும். முதல் கோட்டின் நீளம் எவ்வளவு?” கணக்கை எழுத்து வடிவில் எழுதாமல் அவர்களால் இதைப் போட முடியவில்லை. அப்போது ஏக்கா சொன்னாள்: “இப்போது அவன் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும், அவன் இக்கணக்கைப் போட்டிருப்பான்”. ஆம், இந்தச் சிறுவனின் தந்தை தான் தன் மகனைப் பற்றி யோசிக்காமல், தாயை விவாகரத்து செய்தார். அத்தாய் மகனுடன் மாஸ்கோ சென்றாள்.

சிறுவனே! நிச்சயம் நீ நல்ல மனிதனாவாய், மனிதர்களின் மீது உள்ள நம்பிக்கையை இழக்காதே! தந்தை இப்படி யோசனையின்றி நடந்து கொண்டதால் உனக்கு மிகவும் பிடித்தமான நபரை நீ இழந்து விட்டாய். நமது உண்மையான ஆண் பிள்ளை சங்கத்தில் உனக்குத்தான் முதன் முதலாக புரோமித்தியஸ் பட்டம் வழங்கினோம். நீ புரோமித்தியஸ் போல் வளர்ந்து பெரியவனாவாய், சிறுவனே! நாங்கள் உனக்கு அடிக்கடி கடிதங்களை எழுதுவோம். நேற்று உனது 38 வகுப்பு நண்பர்களும் உனக்கு கடிதங்களை எழுதினார்கள். அவர்கள் என்ன எழுதினார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இந்த 38 சந்தோஷ செய்திகளும் ஏற்கெனவே விமானத் தபாலில் அனுப்பப்பட்டு விட்டன என்று நம்புகிறேன்…

…நடுவரிசையில் உள்ள இந்த இரண்டாவது டெஸ்கும் இன்று காலியாக இருக்கும். இங்கிருந்த சிறுமியை போர்டிங் பள்ளியில் சேர்த்து விட்டனர். இவளுக்காகவும் குழந்தைகள் ஏங்குகின்றனர். இவளுக்கும் 38 கடிதங்கள் அனுப்பப்பட்டன. நானும் அந்த போர்டிங் பள்ளி இயக்குநருக்கு எழுதினேன்… நாளை நானே நேரில் சென்று பேசுவது நல்லது…

…மூன்றாவது வரிசை, மூன்றாவது டெஸ்க். இங்கே கோச்சா உட்காருகிறான்.

அவன் எப்போதும் எதையாவது, ஆமையை அல்லது சிவப்புக் கல்லைத் தேடுவான்.

சமீபத்தில் ஏதோ தலைமையகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொன்னான்.

“என்ன தலைமையகம்?” என்றேன் நான்.

“பூமியடித் தலைமையகம். நாங்கள் ஒரு குழியைக் கண்டுபிடித்தோம். அதன் மீது பெரிய அட்டைகளைப் போட்டு மூடினோம். அதைப் பெரிது செய்ய ஆரம்பித்தோம், அப்போது ஒரு செத்த நாயைக் கண்டுபிடித்தோம். அதை வெளியில் இழுத்தோம்.”

“யார் அந்த ’நாங்கள்’?”

“அது ரகசியம், ஆனால் உங்களுக்குச் சொல்லுவேன். தலைமையகத்தில் நான் இவர்களைச் சேர்த்திருக்கிறேன்…” அவன் தன் ஆறு நண்பர்களின் பெயர்களை என் காதில் சொன்னான்.

“நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?”

“இன்னமும் தெரியாது!”

இவனுடன் என்ன செய்வதென எனக்குத் தெரியும். நீங்களே செய்த விளையாட்டுப் பறவைகளின் பந்தயம் நடத்துமாறு அல்லது விண்வெளிவீரர்கள் பற்றிய கண்காட்சி நடத்துமாறு அல்லது 1941-1945-ல் பாசிசத்திற்கு எதிராக நடந்த மாபெரும் தேசபக்த யுத்த சம்பவங்கள் பற்றித் தாத்தாமார்களிடமிருந்து அறியுமாறு அல்லது கதைப் போட்டி நடத்துமாறு திடீரென உங்களுக்கு ரகசிய கட்டளைகளைப் பிறப்பிக்கலாமே! இதைப் பற்றி விரிவாகப் பேச இப்போது முடியாது, மீண்டும் கூடும் போது பேசுவோம்.

ஆனால் உனக்கு நமது பொது ரகசியம் பற்றி தெரியாது! நாங்கள் எல்லோரும் உனக்கு ”எதிராக” சதி செய்துள்ளோம்!

“வலேரி மாமா வந்து விட்டார்!” என்று உன் தந்தை வகுப்பறையில் நுழைந்ததும் எல்லா குழந்தைகளும் கத்தினார்கள்.

உன் நண்பர்களும் நீயும் பள்ளி வாயிலருகே அவருக்காக அடிக்கடி காத்திருக்கின்றீர்கள். அவர் உங்களுக்கான இசையுடன் மட்டுமின்றி அன்புடன், பாசத்துடன், புன்முறுவலுடன் எப்போதும் வருவார். அவர் இசையைப் பற்றி சுவாரசியமாக விளக்கினார், பியானோவில் உங்களுக்காக வாசித்துக் காட்டினார், இசை நாடக ஒத்திகைகளை நடத்தினார்… ஆனால் உன் குடும்பத்தில் நடந்த சோகத்தைப் பற்றி உனக்கு மட்டும் தான் தெரியாது.

“அவருக்கு ஒரு விபத்து நேர்ந்து தொலைதூர நகரத்தில் மருத்துவமனையில் இருக்கிறார். குணமாகும் வரை நீண்ட நாட்களுக்கு அவர் அங்கிருப்பார்!” என்று உன்னிடம் இப்படிச் சொன்னார்கள்.

அன்றைய தினம் (நீ பள்ளியில் இல்லை) நடந்ததைக் கேள்விப்பட்டதும் குழந்தைகள் அழுதனர். உனது மென்மையான இதயத்தில் காயம் ஏற்படாமலிருக்க, உரிய நேரம் வரை இந்தப் புனிதமான பொய்யைக் காப்பதென நாங்கள் முடிவு செய்தோம்.

…இங்கே தேயா உட்காருகிறாள். எங்கே நிமிர்ந்து நேராக உட்கார்! எழுதும் போது கூன் போடக் கூடாது!..

…அருகே தேயாவின் சகோதரன் லேரியின் இடம். நிதானமாகப் பேசு, உன் கழுத்து புடைத்து விடுகிறது…

…இது தீத்தோவின் டெஸ்க். ஆண் பிள்ளையாக இரு! இருட்டில் பயப்படாதே!..

…இங்கே ரூசிக்கோ உட்காருகிறான். உனது முன் யோசனையும் திறமையும் எனக்கு மகிழ்ச்சி தருகின்றன. ஆனால் ஏன் பொய் சொல்கிறாய்? இந்தத் தீய பழக்கத்திலிருந்து உன்னை விடுவிக்க நான் வழிகளைத் தேடுகிறேன்…

…இது நீயாவின் இடம். நீ என்ன வரைகிறாய்? கையில் பூ ஏந்திய ஒரு சிறுவனின் படமா? இதை யாருக்குப் பரிசளிக்கப் போகிறாய்? எனக்கா? நன்றி, நீயா! இதை என் அறையில் மாட்டி வைப்பேன்!..

…அருகே நாத்தோவின் இடம். நீ என்ன முணுமுணுக்கிறாய்? புதிய கவிதைகளைப் படித்து விட்டாயா? எப்போது எங்களுக்கு இவற்றைச் சொல்வாய்? இப்போதா?…

…இந்த டெஸ்கில் விக்டர் உட்காருகிறான். என்ன விஷயம், சிறுவனே? நான் உனக்கு ஒரு சிக்கலான கணக்கைத் தரட்டுமா? இது என்னிடம் தயாராயுள்ளது. மேசையிலிருந்து எடுத்துக் கொள்!..

…இது இலிக்கோவின் இடம். ஜார்ஜிய மொழி உச்சரிப்பை நன்கு கற்றுக் கொண்டாயா?..

…இங்கே எலேனா உட்காருகிறாள். அதிகமாக வெட்கப்படாதே! பயப்படாதே, உன் திறமைகளை நம்பு!

…இது ஏல்லாவின் இடம். உன் தங்கை பேச ஆரம்பித்து விட்டாளா? அவள் பேசும் முதல் வார்த்தை என்ன என்று கவனித்து சொல். என் வாழ்த்துகளை அவளுக்குச் சொல்!..

…இங்கே கோத்தே உட்காருகிறான். எங்கே பியானோவில் உன் பாட்டை வாசி, எல்லோரும் உன்னைக் கேட்கின்றனர்…

…இங்கே கீகா உட்காருகிறான். நீ ஏன் இன்று சோகமாக இருக்கிறாய்? அம்மாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றார்களா? வருத்தப்படாதே, அவளுக்கு விரைவில் உடல் நலம் சரியாகி விடும்! அவளுக்கு உனது கதையைப் பரிசாக எடுத்துச் செல். இது அவளுக்குப் பிடிக்கும்!..

படிக்க:
பாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் !
வாரணாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !

…இது லேலாவின் இடம். உனக்கு என்னம்மா ஆயிற்று? நீயே உன்னைத் தண்டித்துக் கொள்கிறாயா? எதற்காக? தப்பு செய்து விட்டாயா? எப்போது? சரி, உனக்கே தெரியும்!..

…இது ஏக்காவின் இடம். தேன்கோவையும் கோத்தேயையும் மன்னிக்க வேண்டும் என்கிறாயா? அவர்கள் இனி இப்படி செய்ய மாட்டார்களா? சரி, நல்லது…

…இது தேக்காவின் இடம். நீ என்ன எழுதியிருக்கிறாய்? 2,500+2,500= 5,000? அற்புதம், சரி! ஏன் சாக்பீசால் டெஸ்கில் எழுதுகிறாய்?.. இங்கே… ஆனால் வகுப்பில் ஒருவரும் இதுவரை இல்லை. குழந்தைகளே, விரைவாக வாருங்கள்! நீங்கள் இல்லாத வெற்று வகுப்பில் எனக்குச் சலிப்பாக உள்ளது!

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

பாபர் மசூதி விவகாரம் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா | நேர்காணல்

1

அயோத்தி விவகாரம் நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையே நடக்கும் போர் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா

பிரபல வரலாற்றாசிரியர் திவேந்திர நாரயண் ஜா, ஆரம்ப கால இந்திய வரலாற்றில் பொருளாயத கலாச்சாரம் குறித்த ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருந்தவர். தனது 35 ஆண்டுகால கல்வி துறைசார்ந்த பணியில் பண்டைய கால இந்தியாவின் சமூக, பொருளாதார சூழல் குறித்து ஆழமான ஆய்வைச் செய்தவர். தொழில்முறை வரலாற்றாசிரியரான இவர், வரலாற்று ஆய்வுகளிலிருந்து சமகாலத்தில் எழும் அரசியல் விவாதங்களில் தொடர்ச்சியாக தனது கருத்தினை சொல்லிவருபவர்.

வரலாற்றாசிரியர் திவேந்திர நாரயண் ஜா (டி.என். ஜா)

விளைவாக, இந்துத்துவ கும்பலின் தொடர்ச்சியான தாக்குதலை எதிர்கொண்டுவருபவர். உதாரணத்துக்கு பண்டைய இந்தியாவின் உணவுப் பழக்கமாக மாட்டிறைச்சி உண்பது இருந்தது குறித்த ‘The Myth of the Holy Cow’ நூலில் பல வரலாற்று ஆதாரங்களோடு எழுதியபோது, இவருடைய கருத்தை ஏற்க மறுத்த காவிகள் இவரைக் குறிவைத்தனர். நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு எப்போதும் வரலாற்று ஆதாரங்களுக்கே இவர் முக்கியத்துவம் கொடுத்தார்.

பாபர் மசூதிக்கு அடியில் ஒரு இந்து கோயில் இருப்பதாக வெளியான ஒரு அறிக்கையை நிராகரித்து வரலாறு மற்றும் தொல்பொருள் சான்றுகளை ஆராய்ந்த ஒரு சுயாதீன குழுவில் இவரும் ஒருவர்.

தி வயர் இணையதளத்துக்கு (உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்) அளித்த பேட்டியிலும், பாபர் மசூதிக்கு அடியில் இந்து கோயில் இருந்தது என்பதற்கான கோட்பாட்டை இவர் மறுத்தார். இந்திய தொல்பொருள் ஆய்வகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது, ராமஜென்மபூமி – பாபர் மசூதி விசயத்தில் இந்து முசுலீம் மோதலாக சங்க பரிவாரத்துக்கு எப்படி உதவியது என்பது குறித்தும் இவர் பேசியிருக்கிறார்.

***

விரைவில் உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீது தீர்ப்பளிக்க இருக்கிறது. எனவே, இது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஒரு தொழில்ரீதியான வரலாற்றாசிரியர் என்றவகையில் நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அயோத்தி விவகாரம் நெருப்பின் மேலே பல காலமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்துக்களும் முசுலீம்களும் பிரச்சினைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். முன்பே, ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களில் சொன்னதுபோல, நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையே நடக்கும் போராகத்தான் நான் இதைப் பார்க்கிறேன்.

அயோத்தியில் பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் சுற்றளவுக்குள்தான் ராமன் பிறந்தார் என்பதை நிரூபிக்கவே சாத்தியமில்லை. இந்த நம்பிக்கையில் எந்தவித எதார்த்தமும் இல்லை. நம்பிக்கையின் அடிப்படையில் வரலாற்றை எழுத முடியாது என்பதை தொழில்முறை வரலாற்றாசிரியாகச் சொல்கிறேன். இங்கே எழுதப்பட்டவை அல்லது சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனாவாதத்தின் அடிப்படையாகக் கொண்டவை.

படிக்க :
♦ பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் !
♦ வாரனாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !

‘ராமஜென்மபூமி – பாபர் மசூதி : நாட்டுக்கு ஒரு வரலாற்றாசிரியரின் அறிக்கை’ என்ற வரலாற்றாசிரியர்களைக் கொண்ட குழுவில் நீங்களும் இருந்தீர்கள். உங்களுடைய முக்கியமான கண்டுபிடிப்பு என்ன?

முதலில், ஒருவிசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். சூரஜ் பன், அதர் அலி, ஆர். எஸ். சர்மாவுடன் நானும் சேர்ந்து இந்த அறிக்கையை உருவாக்கினோம். அரசு அல்லது இந்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு தரப்பினரிடமிருந்து எந்தவித ஒத்துழைப்பையும் பெறாமல் சுயாதீனமாகவே இந்த அறிக்கையை தயாரித்தோம். எழுத்துப்பூர்வமான, தொல்பொருள் ஆதாரங்களின் அடிப்படையில் மசூதிக்கு அடியில் இந்து கோயில் இல்லை என்ற முடிவுக்கு வந்தோம்.

இந்த மோதலை இந்திய தொல்பொருள் ஆய்வகம் வளர்ப்பதை எப்படி பார்க்கிறீர்கள். இந்திய தொல்பொருள் ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையில் பாபர் மசூதி, இந்து கோயிலின் நான்கு தூண்களின் மேல் கட்டப்பட்டது எனக் கூறியது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

தூண்களின் அடிப்படையில் அங்கே கோயில் இருந்ததாக இந்திய தொல்பொருள் ஆய்வகமும், ஒரு இந்து கட்சியும் வாதிட்டன. இதில் சில விசயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் முன்னாள் தலைவராக இருந்த பி.பி. லால், முதன் முதலில் ஆயோத்தியில் ஆய்வு மேற்கொண்டவர்; இவர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது முதல் விசயம். தனது முதல் அறிக்கையில் தூண்கள் இருப்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.

1988-ம் ஆண்டு Indian Council of Historical Research கருத்தரங்கில் ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தார். அதிலும் தூண்கள் குறித்து எதுவும் இல்லை. இராமாயணத்தின் வரலாற்று தன்மை குறித்து உரையாற்றிய அவர், தூண்கள் குறித்து பேசவேயில்லை.

அக்டோபர் 1990-ல் ஆர்.எஸ்.எஸ். இவருடைய ஆய்வுக்கட்டுரை ஒன்றை பிரசுரித்தது. அதில், மசூதிக்கு அருகில் தூண் போன்ற அமைப்பு இருப்பதாகக் கூறியிருந்தார். அயோத்தியில் அகழாய்வு நடத்தி 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிச் சொல்கிறார்! அறிஞர்கள் வளர்ந்துகொண்டே இருப்பார்கள், அவர்களுடைய கருத்துக்களும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், லால் வெறித்தனமான வேகத்துடன் வளர்ந்துவிட்டார். இதுதான் இவருடைய தூண் குறித்த கண்டுபிடிப்பை சந்தேகத்துக்குரியதாக மாற்றுகிறது.

இரண்டாவதாக, மசூதியின் நுழைவாயில் உள்ள இசுலாமிய சித்திரங்கள் இல்லாத 14 கருப்பு தூண்கள், அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டவை; கட்டடத்தின் வலுவை தாங்குவதற்கு நிறுத்தப்பட்டவை அல்ல. இதுபற்றி நாங்கள் நால்வரும் ஆராய விரும்பினோம். ஆனால், இந்திய தொல்பொருள் ஆய்வகம், அகழாய்வு குறிப்புகளை தர மறுத்துவிட்டது.

படிக்க :
♦ அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்
♦ பாத்திமா தற்கொலை : பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய் ! புமாஇமு கண்டனம்

இந்திய தொல்பொருள் ஆய்வகம், தனது அறிக்கையை வரலாற்றாசிரியருக்கும் அகழ்வாராய்ச்சியாளருக்கும் வழங்கவில்லையா?

நீதிமன்றம் சொன்ன அகழ்வாய்வின் இறுதி அறிக்கையை நான் பார்க்கவில்லை. ஆனால், இந்த அறிக்கையைப் படித்த அகழ்வாராய்ச்சியாளர்களும் வரலாற்றாசிரியர்கள் அதை நிராகரித்துவிட்டார்கள். முதலாவதாக, இந்த அகழாய்வை செய்த இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அறிவியல் முறைப்படி ஆய்வை செய்யவில்லை. இரண்டாவதாக, இங்கே கோயில் இருந்தது என்கிற முன் அனுமானத்தின் அடிப்படையில் இவர்கள் அகழ்வாய்வில் ஈடுபட்டார்கள். மூன்றாவதாக, இந்த அறிக்கை ஆதாரங்களை புறந்தள்ளுகிறது. உதாரணத்துக்கு, இங்கே கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் எலும்புகள், மண்பானைகள், வழவழப்பான தரை ஓடுகள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

பெரும்பான்மை இந்தியர்கள், சொல்லப்போனால் நீதிமன்றங்களும்கூட வரலாறு /  வரலாற்று ஆதாரங்களை புறம்தள்ளிய நம்பிக்கையின் அடிப்படையிலான கருத்தின் மூலம், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை புரிந்துகொள்கிறார்கள். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்து கட்சிகளின் நம்பிக்கையை மட்டும்தான் கருத்தில் கொண்டது என்பது என் பார்வை. வரலாற்று சான்றுகள் முற்றிலும் புறம்தள்ளப்பட்டு, குப்பையில் போடப்பட்டன.

ராம ஜென்மபூமிக்கு மேலேதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்கிற கருத்தாக்கம் எப்படி பிரபலமானது? இந்திய வரலாற்றில் ராமர் கோயில்கள் குறித்த எழுத்துப்பூர்வமான, பிற ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா?

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஸ்கந்த புராணம்தான் கடவுள் ராமர் பிறந்த இடம் அயோத்தி என முதன்முதலில் பேசியது. இதன் பல பதிப்புகளில், பெரும்பான்மையும் திருத்தல்களே அதிகம். ஸ்கந்த புராணத்தின் பகுதியாக வரும் அயோத்தியமகத்மியா முழுமையும் 18-ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம்,

அதன் உள் சான்றுகளின் அடிப்படையில் ஆராயும்போது, இது 1600 (கி.மு.)க்கு முந்தையது அல்ல. 30-க்கும் மேற்பட்ட புனித தலங்களைக் குறிப்பிடுகிறது, இதில் ஒன்று ஜன்மஸ்தலம். ஆர்வத்துக்குரியவகையில், உரையை தொகுத்தவர்கள் எட்டு வசனங்களை ஜன்மஸ்தலத்துக்கும் 100 வசனங்களை ராமர் சொர்க்கத்திற்குச் சென்றதாக குறிப்பிடும் இடத்தும் எழுதியிருக்கிறார்கள். அந்த இடம் ஸ்வர்க்கத்துவாரா என்று அழைக்கப்படுகிறது. வி.எச். பி உள்ளிட்ட பிற இந்துத்துவ அமைப்புகள் முதன்மைப்படுத்திக் கூறும் இந்த ஸ்கந்த புராணம், ராமரின் பிறப்பைவிட மரணத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

ஸ்கந்த புராணத்தை தொகுத்தவர்களுக்கு அவர் பிறந்த இடத்தைவிட மரணித்த இடம் முக்கியமாகப் பட்டிருக்கிறது. மேலும், ஸ்வர்க்கத்துவாரா, சராயு நதிக்கரையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது ராமர் பிறந்த இடம் எனக் கூறிக்கொள்ளும் மசூதி இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது.

1765-க்கு முன்னர் அயோத்திக்கு வருகை தந்த பிரெஞ்சு ஜேசுட் பாதிரியார், அவர்தான் முதல்முறையாக சிதிலமடைந்த கோயிலின் மீது மசூதி நிர்மாணிக்கப்படுவதாகச் சொன்னார். ஆனால், அது பிரபலமடைய காலம் பிடித்தது.

வரலாற்று நூல்களில் அயோத்தி எப்போதும் ஒரு யாத்திரை தளமாகக் கருதப்பட்டதா? துளசி தாஸின் ராம்சரித்மானாஸ் அயோத்தி குறித்து என்ன சொல்கிறது?

பண்டைய காலங்களில் அயோத்தி ஒரு இந்து புனித யாத்திரை தளமாக இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது 18-ம் நூற்றாண்டின் இறுதியில்கூட பிரபலமாகவில்லை. கொண்டாடப்பட்ட ராம்சரித்மானாஸ் நூலில் ஆசிரியர் துளசிதாஸ், அயோத்தியை யாத்திரை தளமாகக் குறிப்பிடவில்லை. அவர் பிரயாக் யாத்திரைக்கான பிரதான இடமாக இருந்தது என்று மட்டும்தான் குறிப்பிடுகிறார்.

அயோத்தி பிற மதங்களான சமணம் அல்லது பவுத்த மதத்தின் மையமாக இருந்திருக்க வாய்ப்புண்டா?

அயோத்தி மத்திய காலங்களில் முக்கியமான பவுத்த மையமாக இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஸ்வர்த்தன் காலத்தில் இந்தியா வந்த சீன யாத்திரிகர் இவான் சுவாங், இங்கே பவுத்தர்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இங்கே 100 பவுத்த மடாலங்களும் பத்து பார்ப்பன கடவுளர்களின் கோயில்கள் மட்டுமே இருந்ததாக பதிவு செய்திருக்கிறார்.

பவுத்த மற்றும் சமண உரைகளில் அயோத்தி, சாகெட் என்ற பெயரில் அறியப்படுகிறது. மேலும், தொடக்ககால தீர்த்தங்கரான ரிஷப்நாத் பிறந்த இடம் என்றும் சமணர்கள் கோருகிறார்கள். இரண்டு யூத தீர்க்கதரிசிகள் அயோத்தியில் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அபு ஃபசல் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, இந்த நகரம் பல மதங்களின் முக்கியத்துவம் வாய்ந்த புனித இடமாகும்.

எப்படி, எப்போது அயோத்தி விவகாரம், மதப் பிரச்சினையாக உருவெடுத்தது என நீங்கள் நினைக்கிறீர்கள். உண்மையில், இந்துத்துவ குழுக்கள் இப்போது, பாபர் மட்டுமல்ல, முசுலீம் ஆட்சியாளர்களான அவுரங்கசீப், திப்பு சுல்தான் ஆகியோரும் கோயில்களை அழித்ததாக கோருகிறார்கள்…?

முசுலீம் ஆட்சியாளர் இந்து கோயில்களை அழித்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கோயில்களையோ அல்லது வழிபாட்டுத் தலங்களையோ அழிப்பதில் இந்துக்கள் மிகவும் இழிவானவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சமணர்கள் மற்றும் பவுத்தர்களின் எண்ணற்ற மத தலங்களை அவர்கள் அழித்தார்கள் என்பதை நிரூபிக்க முடியும். நாட்டில் யார் அதிகமாக கோயில்களை அழித்தார்கள் என்பது நிச்சயமாக ஆய்வுக்குரிய விசயம்.

இடைக்கால இந்தியாவில் வகுப்புவாத மோதல் நடந்ததற்கு அதிக ஆதாரங்கள் இல்லை. ஆனால், ஆயோத்தியில் இந்து முசுலீம் மோதல் 1855-ம் ஆண்டு நடந்தது. இந்தப் பிரச்சினை அவாத் நவாபின் அதிகாரிகளால் தீர்த்து வைக்கப்பட்டது. சீதா கி ரசோய் என்று அழைக்கப்படும் சிலைகள் மசூதிக்கு வெளியே வைக்க அனுமதித்தன் மூலம் நவாப்பின் அதிகாரிகள் பிரச்சினையை தீர்த்துக் கொண்டனர். வக்ஃபு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

1885-ம் ஆண்டில் பைசாபாத்தின் துணை நீதிபதியும் அவாத் நீதி ஆணையரும் முசுலீம்கள் தொடர்ந்து மசூதியை வைத்திருப்பது என்றும், சீதா கி ரசோய் இந்துக்களிடமும் தருவதாக நிலப்பிரச்சினையை தீர்த்து வைத்தனர். இந்த விவகாரம் 1930-களில் மீண்டும் எழுந்தபோது, சூழ்நிலை மாறியிருந்தது, மதவாதம் வளர்ந்திருந்தது.

விவகாரத்தின் வகுப்புவாதத்தில் மைல்கல்லாக 1949 டிசம்பரில், ராமரின் சிலை மறைமுகமாக மசூதிக்குள் வைக்கப்பட்டது. 1984-ம் ஆண்டு, பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற முழக்கத்துடன் விசுவ இந்து பரிசத் உருவானபோது, இந்த விவகாரத்தில் வகுப்புவாதம் எதிர்பாராத ஊக்கத்தைப் பெற்றது.

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் கோயில் அழிப்பு கோட்பாடு குறித்து ஆய்வு செய்த அறிஞர்கள் இருந்தார்களா? வங்காள மருத்துவ சேவையில் பணிபுரிந்த ஸ்கார்டிஷ் மருத்துவர் பிரான்சிஸ் புக்கனன் 1810-ல் அயோத்திக்கு சென்றதாகவும் இந்தக் கோட்பாட்டை குப்பையில் தள்ளியதாகவும் நீங்கள் ஒரு முறை சொன்னது நினைவிலிருக்கிறது.

நிச்சயமாக, எச். எம். எலியட் மற்றும் ஜான் டாசன், முசுலீம் ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட கோயில்கள் குறித்து 1871-ல் எழுதியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பிரச்சினைகள் அவர்கள் ஆராயவில்லை. இருப்பினும், அவர்கள் அழிக்கப்பட்டது என்பதன் உண்மையை குறிப்பிட்டிருக்கலாம். இந்து கோயில்களின் அழிவு /அவதூது குறித்து சொன்ன முக்கியமான வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்கார் ஆவார்.

படிக்க :
♦ பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !
♦ எனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்

இடிப்பைத் தொடர்ந்து நடந்த முழு நீதிமன்ற நடவடிக்கைகளிலும் நீதிமன்றங்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களை உள்ளடக்கியிருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?

நிச்சயமாக, நீதிமன்ற நடவடிக்கைகளில் வரலாற்றாசிரியர்களை கலந்தாலோசித்திருக்க வேண்டும். மசூதிக்கு அடியில் கோயில் இருந்ததா? என்பதை தீர்மானிக்கும் பணியை சர்வதேச நிபுணர்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஒரு வரலாற்று உண்மையின் மேல், நீதிமன்றம் மட்டும் தீர்ப்பை வழங்கிவிட முடியாது. ஆனால், வரலாற்றாசிரியர்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களின் அறிக்கையை வெறும் கருத்தாக நிராகரிக்கும் நீதித்துறையிலிருந்து ஒருவர் என்ன எதிர்பார்க்க முடியும்?

உங்கள் குழு நீங்கள் ஆராய்ந்த அறிக்கையை இந்திய அரசாங்கத்திடம் சமர்பித்தது. அதற்கு அரசாங்கம் சொன்ன பதில் என்ன?

எங்கள் அறிக்கையை அயோத்தி பிரிவின் பொறுப்பாளராக இருந்த திரு வி.கே. தால் மூலம் இந்திய அரசாங்கத்திடம் சமர்பித்தோம். அவரிடமிருந்தோ அல்லது அரசாங்கத்தின் வேறு எவரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை.

இறுதியாக, வரலாற்றின் மாறுபட்ட கண்ணோட்டங்களுக்கிடையில் ஒரு சாதாரண நபர் எப்படி தனது கருத்தை உருவாக்கிக் கொள்கிறார்? அயோத்தியில் ராமர் கோயில் உள்ளது என நம்புகிறவர்கள், மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் மட்டுமே அங்கே கோயில் இல்லை என சொல்வதாகக் கூறுகின்றனர்?

சாதாரண நபருக்கு கற்றுத்தர வேண்டும். மேலும் அவர்கள் பகுத்தறிவு பார்வையில் அதை ஏற்க வேண்டும். என்னிடம் தயாராக இதற்கொரு பதில் இல்லை. ஆனால், தவறு செய்யாதீர்கள். அங்கே கோயில் இல்லை என்பது பரப்புரை செய்யப்பட்டதற்கு மார்க்சியவாதிகள் பொறுப்பல்ல. இந்துத்துவ குழுக்கள்தான், தங்களுடைய வழக்கை வாதிக்க முடியாமல், மார்க்சியத்தின் மீதான அச்சத்தில் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


நேர்காணல்: Ajoy Ashirwad Mahaprashasta.
தமிழாக்கம் :  அனிதா
நன்றி : தி வயர். 

பாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் !

ஃபாத்திமாவைப் பற்றி படித்து விளங்கிக் கொண்டதை எழுதியிருக்கிறேன். ஃபாத்திமாவிற்கு ஒரு இரட்டைச் சகோதரி இருக்கிறார். தாய், தந்தை, சகோதரி, தம்பி என அனைவரிடமும் அன்பாக இருந்த பெண். இந்தக் குடும்பம் சவுதியில் இருந்திருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் குடும்பம் கேரளா திரும்பியிருக்கிறது.

சிவில் சர்வீஸ் படிக்கும் ஆசையில் பத்தாம் வகுப்பிற்குப் பின் ஸ்டேட் போர்டிற்கு மாறியிருக்கிறார். இவருடைய இரட்டைச் சகோதரி ஆயிஷா சட்டம் படிக்கிறார்.

ஃபாத்திமா இறந்தது 9 நவம்பர் அன்று. நவம்பர் 8-ம் தேதி சவுதியில் இருந்த தந்தையோடு வீடியோ காலில் பேசியிருக்கிறார். பேசும்போது நிறைய அழுதிருக்கிறார். அப்போது மூக்குத்தி அணிந்த ஒரு பெண் ஃபாத்திமாவை சமாதானப் படுத்தியிருக்கிறார். அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறார் ஃபாத்திமாவின் தந்தை. அந்தப் பேச்சின் சாரம் என்னவென்று தெரியவில்லை.

ஃபாத்திமா படித்துக் கொண்டிருந்தது இண்டிக்ரேட்டட் எம்.ஏ. பிறர் குறிப்பிட்டுள்ள படி வீட்டைப் பிரிந்த மனச் சோர்வால் அவர் இறந்திருக்க வாய்ப்பில்லை என்கிறது அவர் குடும்பம். ஏனெனில் நவம்பர் 15 செமஸ்டர் தேர்வு; 27 -ம் தேதி அவர் விடுமுறைக்கு வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

ஃபாத்திமாவின் மரணத்தை ஒரு நிகழ்வாகவே அவர் துறையும், நிர்வாகமும், சக மாணவர்களும் கண்டு கொள்ளவில்லை என்கிறது அவர் குடும்பம்.

அவர் மரணத்திற்கு முன் போனை ஒரு நாள் அணைத்து வைத்திருக்கிறார். எது அவரை பயமுறுத்தியது என்ற கேள்வி இருக்கிறது.

படிக்க:
வாரனாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !
பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் !

லாஜிக் பாடத்தில் இண்டர்னல் தேர்வு நடந்திருக்கிறது. அதில் இருபதுக்கு 13 மதிப்பெண்கள் வாங்கினார் ஃபாத்திமா. அப்படியும் அவர்தான் வகுப்பில் முதல். தனக்கு 18 மதிப்பெண்கள் வரவேண்டியது என துறைத் தலைவரிடம் அப்பீல் செய்திருக்கிறார். துறைத் தலைவர் அதை ஏற்று வழிமொழிந்திருக்கிறார். சம்பந்தப் பட்ட பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் இது குறித்து தன்னை நவம்பர் 11 -ம் தேதி சந்திக்கும்படி மெயில் அனுப்பியிருக்கிறார். ஆனால் அந்த சந்திப்பு நடக்கும் முன்பே ஃபாத்திமா மரணமடைந்து விட்டார். சுதர்சனிடம் பயம் கொண்டிருந்தார் ஃபாத்திமா. அதைத் தன் பெற்றோரிடம் சொல்லியிருந்திருக்கிறார்.

ஃபாத்திமாவின் செல்பேசி காவல் நிலையத்து மேசையில் சார்ஜ் இல்லாமல் கிடந்திருக்கிறது. அங்கு சென்ற குடும்பம் அதைப் பார்த்திருக்கிறது. ஆயிசாவும் அதே போல் ஒரு செல்பேசியைப் பயன்படுத்தியதால் தன் சார்ஜரை வைத்து சார்ஜ் செய்திருக்கிறார். அப்போது போன் லாக் செய்யப்படாமல் இருந்திருக்கிறது. அதில்தான் தன் மரணத்திற்குக் காரணம் சுதர்சன் பதமனாபன் என்ற செய்தி இருந்தது.

வேறு பல ஆசிரியர்களையும் இணைத்து இணையத்தில் பரப்பப்பட்ட போலி மரண வாக்குமூலம்

ஃபாத்திமா எழுதியதாகச் சொல்லப்படும் இன்னொரு குறிப்பு பொய்யானது. அந்த அலங்கார ஆங்கிலம் ஃபாத்திமாவின் மொழியுமல்ல. அந்த மற்ற இரு பேராசிரியர்களையும் அவர் குற்றம் சாட்டவில்லை. இதில் யாருக்கு, என்ன நோக்கம் என யோசிக்க வேண்டி இருக்கிறது.

ஃபாத்திமாவின் தந்தை சுதர்சன் தவிர இன்னும் சிலருக்கு இந்த மரணத்தில் தொடர்பு இருக்கிறது எனச் சொல்கிறார்.

என் பெயரே எனக்குப் பிரச்சினை என்ற வாக்கியத்தைத் தன் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார் ஃபாத்திமா.

ஐ.ஐ.டி.யின் பழைய மாணவர்கள் இங்கு தற்கொலை என்பது எப்போதும் நடக்கக் கூடியது.இத்தனை நாட்கள் அதன் மேல் ஊடக வெளிச்சம் விழுந்ததில்லை என்கிறார்கள்.

இங்கு உயர்த்திக் கொண்ட சமூகம்தான் பெரும்பான்மை. எனவே ஆசிரியர்களுக்கு அந்தப் பக்கச்சார்பு உண்டு என்கிறார்கள்  பழைய மாண்வர்கள். சுதர்சன் ஈகோ பிடித்த மனிதர் எனச் சொன்ன பழைய மாணவர்களும் உண்டு. அவர் ஜெர்மனி சென்ற போது ஹிட்லரின் கேஸ் சேம்பரின் முன் விக்டரி சைகை காட்டி ஒளிப்படம் எடுத்திருந்தார் எனச் சொல்கிறார்கள் பழைய மாண்வர்கள்.

ஃபாத்திமாவின் தாய்க்கு தூக்க மருந்து கொடுத்து அமைதிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இனி ஒரு ஆயிஷா தன்னில் ஒரு பாதியான ஃபாத்திமாவை இழக்கக் கூடாது என்கிறார் அவர் சகோதரி. அவர் தந்தை என் பொன்மோளுக்கு நியாயம் கிடைக்கும்வரை நான் சென்னையை விடப் போவதில்லை என்கிறார்.

எல்லாவற்றையும் நோட்ஸ் எடுக்கும் வழக்கம் உள்ள ஃபாத்திமா இறப்பதற்கு முன் 28 நாட்களின் நிகழ்வையும் நோட்ஸ் எடுத்திருக்கிறார். அது அப்படியே விசாரணைக்குப் பயன்படட்டும் என நம்பிக்கை கொள்வோம்.

தொடர்புடைய சுட்டியை இங்கே அளிக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன் எனக்குத் தெரிந்தவர் ஐ.ஐ.டி.யின் மன நல ஆலோசகராக இருந்தார். அவர் சொன்னவற்றில் இருந்து அந்த வளாகத்தின் சிக்கல்கள் எனக்கு விளங்கியது.

பலிபீடங்களான உயர்கல்வி நிறுவனங்கள்!

என் முதுகலை ஆய்வின்போது ஐ.ஐ.டி.யின் humanities துறையின் பேராசிரியர்கள் எனக்கு உதவியிருக்கிறார்கள். அதன் பிறகும் அத்துறையின் செமினார்களுக்குப் போய் வந்திருக்கிறேன். ஆனால் பின்னாளில் ஐ.ஐ.டி.யின் பொறியியல் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த போது சமூக பொறுப்பும், sensitivity இல்லாத அறிவும் எதற்கு எனவும் யோசித்திருக்கிறேன்.

ஐ.ஐ.டி. மட்டுமல்ல மாணவத் தற்கொலை எங்கு நடந்தாலும் அது அநியாயம். ஆனால் கல்வியை வெறும் வியாபாரம் ஆக்கியது , ரசீது இல்லாமல் அநியாயக் கட்டணம் வசூலிப்பது, சாராய முதலாளி, மணற் கொள்ளைக்காரர்கள், முன்னாள் அடியாட்கள் கல்விக்கூடம் நடத்துவது , மதிப்பீடு இல்லாத சில ஆசிரியர்கள், சில மாணவர்கள் என இருக்கும் சூழலில் என்ன எதிர்பார்க்க முடியும்?

ஆனால், ஐ.ஐ.டி. அரசுப் பணத்தில் நடக்கிறது. எனவே அச்சூழலின் அரசியல் பற்றிப் பேச மக்களுக்கு உரிமை உண்டு.

கீதா நாராயணன்.

ஐ.ஐ.டி.யில் இருக்கும் மாணவர்களிடம் விரிவாக விசாரணை செய்யுங்கள். Objectively approach the issue of discrimination and violence!

எங்கு மாணவத் தற்கொலை நடந்தாலும் அந்த வளாகத்தின் சூழல் குறித்து விரிவான ஆய்வு வேண்டும்.

இன்னொன்று நானும், நாராயணனும் பல மாணவர்களுக்கு mentor ஆக இருந்திருக்கிறோம். சின்னஞ்சிறு  ஊரிலிருந்து ஆங்கிலம் தெரியாமல்,முதல் தலைமுறையாய் படிக்க வரும் மாணவர்களுக்கு வழிகாட்டும் செயல் அது. அப்படி வரும் மாணவர்களின் மன நிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து சொல்கிறேன். ஒரு கல்வி நிறுவனம் மாணவர்களை ஆற்றுப்படுத்த ஆலோசனை மையங்களை நடத்த வேண்டும். இது அந்த திருச்சி மாணவிக்காக! It is the duty of our education ministry to invest on it.

நன்றி : முகநூலில் கீதா நாராயணன்

லெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்

பெரியாரியர்கள் மற்றும் அம்பேத்கரியர்கள் குறித்து அவதூறாகப் பேசிய யோகா சாமியார் பாபா ராம்தேவ்-ஐக் கண்டித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் #arrestRamdev என்ற ஹேஷ்டேக் ஞாயிற்றுக்கிழமை டிரெண்டானது.

கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 11),  ரிபப்ளிக் டிவியின் நேர்காணல் ஒன்றில், சாதி எதிர்ப்பு தலைவர்களான அம்பேத்கர் மற்றும் பெரியாரை பின்பற்றுகிறவர்கள் அறிவுசார் தீவிரவாதத்தை முன்னெடுப்பதாகவும் ‘அறிவுசார் தீவிரவாதம்’ என்ற வார்த்தையை தானே உருவாக்கியதாகவும் கூறினார்.

முன்னதாக, அயோத்தி தீர்ப்பை அடுத்து ரிபப்ளிக் டிவி அர்னாப்பு, ராம்தேவும் குதூகலித்ததைக் (கேமராக்கள் முன் ராம்தேவ், அர்னாப்பை தூக்கி குதூகலித்தார்) கேலி செய்து, சமூக ஊடகங்களில் மீம்கள் உலாவந்தன. இந்த மீம்களை ராம்தேவின் பேட்டிக்கு முன் தொகுப்பாக வெளியிட்டது ரிபப்ளிக் டிவி.

இந்நிலையில், சமூகத்தின் மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்கள் இழிபடுத்திய ராம்தேவை கைது செய்ய வலியுறுத்தியும் அவருடைய பொருட்களை புறக்கணிக்கக்கோரியும் ட்விட்டரில் பலர் கருத்திட்டனர்.

வழக்கமாக பெரியார் – அம்பேத்கரை காவிகள் இழிபடுத்தும்போதெல்லாம் தென்னக மக்களே அதிகமாக கொதிப்படைவார்கள். ஆனால், இம்முறை ராம்தேவுக்கு பதிலடி வடநாட்டவர்களிடமிருந்தே அதிகம் வந்தது.

தலித் பிரச்சினைகள் குறித்து ட்விட்டரில் எழுதிவரும் பத்திரிகையாளர் திலீப் மண்டல்,  ராம்தேவின் தடித்தனம் குறித்து நிறைய ட்விட்டகளைப் பதிவு செய்தார்.

அரசியல் செயல்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, நேர்காணலில் வீடியோ பகிர்வை வெளியிட்டு ‘பெரியார் அம்பேத்கர் இழிபடுத்தி, எங்களை அறிவுசார் தீவிரவாதிகள் என அழைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.

அதுபோல, பலர் ட்விட்டரில் தங்களுடைய எதிர்ப்புக்குரலை பதிவு செய்தனர். “ராம்தேவ் நம்முடைய மரியாதைக்குரிய பெரியார் அம்பேத்கர் பிர்சாவை அவமதித்துவிட்டார். ராம்தேவ்-ஐயும் அவருடைய பொருட்களையும் நாம் புறக்கணிக்க வேண்டும். அவர் மீது வழக்கு தொடர வேண்டும். நாங்கள் ராம்தேவ் கைது செய்யப்பட வேண்டும் என விரும்புகிறோம்” என தெரிவிக்கிறார் சுனில் குமார் மீனா.

கப்பார்: ராம்தேவ் யாதவ் என்ற பெயரிலேயே ஒரு களங்கம் உள்ளது.  அவர் கூட்டமைப்பின் அடிமை. அவர் பகுஜனில் பிறந்த ஒரு துரோகி. அனைத்து பகுஜன்களும் நம்முடைய பெரிய மனிதர்களை அவதூறை செய்ய யாருக்கும் துணிவில்லை என்பதை இவர்களுக்கு நிரூபிக்க வேண்டும். அவர்களுடைய காதுகளை அடையுங்கள்…

தலித் வாய்ஸ் : ராம்தேவின் கூற்றுப்படி, அறிவுசார் தீவிரவாதம் என்பது…

  1. நீங்கள் அம்பேத்கரியர் எனில்
  2. நீங்கள் பெரியாரியர் எனில்
  3. சமூக நீதி நம்புகிறவர் எனில்
  4. பெண்ணியத்தை நம்புகிறவர் எனில்
  5. ஜனநாயகத்தை நம்புகிறவர் எனில்
  6. தாராளவாதத்தை நம்புகிறவர் எனில் நீங்கள் அறிவுசார் தீவிரவாதி.

நீங்கள் நம்பினால், பதஞ்சலி பொருட்களை புறக்கணியுங்கள்.

தீபா பஷீர் : பாபா ஒரு கருப்பு ஆடு, தன்னுடைய நண்பனான அரசாங்கத்தைப் பயன்படுத்தி இந்தியாவை முட்டாளாக்கப் பார்க்கிறார். ஊழல்வாதி பாபா ராம்தேவ்!

கவுதம் பாரதி : இப்போது ராம்தேவ் ஒத்துழைப்பின் அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டார். அவர் எப்போதும் தான் சார்ந்திருக்கிற பகுஜன் சமூகத்திற்கு எதிராகவே பேசுகிறார். இப்போது அவர் எங்கள் தலைவர்களை அவமதித்துள்ளார். அவர் மீது வழக்கு தொடரப்படவேண்டும்.

#ArrestRamdev, #BoycottPatanjaliProducts போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டான நிலையில், காவி ட்ரோல்படை பதஞ்சலி ராம்தேவுக்கு ஆதரவாக களமாடத்தொடங்கியது.

ஷியாம்: பாஜக ஐடி பிரிவு, எஸ்.ஸி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் சிறுபான்மையினரின் ட்விட்டர் ட்ரெண்டுக்கு பதிலடி தர ஆரம்பித்துள்ளது.

இந்த விவகாரத்தை வைத்து பலர் ராம்தேவை கேலி செய்தும் பதிவிட்டனர்.

‘எதற்காக  #ArrestRamdev என்பதை மக்கள் ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கிறார்? எப்படியென்றாலும், கருப்பு பணம், உள்நாட்டு பொருட்கள் என்ற பெயரில் பொய்யான ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்து மோசடி செய்யும், முட்டாளாக்கும் அவரை கைது செய்யுங்கள் என்கிறார் ரிஸ்வான்.

இப்படி மக்களை கொதிப்படைய வைத்த ராம்தேவ் அந்த நேர்காணலில், பெரியாரை பின்பற்றுகிறவர்கள் எதிர்மறைத்தன்மையை அதிகரித்துவிட்டதாக கூறினார்.

“பெரியாரை ஆதரிப்பவர்கள் கடவுளை பின்பற்றுகிறவர்களை முட்டாள்கள் என்கிறார்கள். அவரை வணங்குகிறவர்களை குற்றவாளி ஆக்குகின்றனர். கடவுளை தீயசக்தி என்பதுபோன்ற முட்டாள்தனமான கருத்துக்களை சொல்கிறார்கள்” என பிதற்றிய ராம்தேவ்.

’நமக்கு லெனின், மார்க்ஸ், மாவோ தேவையில்லை. இந்திய கலாச்சாரத்துக்கு எதிரான பார்வை அவர்களுடையது. இவர்களை பின்பற்றுகிறவர்கள் மோசமானவர்கள்’ எனவும் கூறினார்.

படிக்க :
மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !
வாரனாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !

மேலும், இவர்களைப் போன்ற தலைவர்களைப் பின்பற்றுகிறவர்கள் நாட்டை பிரிப்பதாகவும் இவர்களை குறிக்க அறிவுசார் தீவிரவாதிகள் என்ற சொல்லை உருவாக்கியதாகவும் கூறினார்.

‘அர்பன் நக்ஸல்கள்’ என தங்களை எதிர்ப்போரை அழைத்து வந்த காவிகும்பல், இப்போது ‘அறிவுசார் தீவிரவாதிகள்’ என்பதையும் அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது. நகர்ப்புற நக்ஸல்கள் என்றாலும் அறிவுசாரி தீவிரவாதிகள் என்றாலும் காவிகளுக்கு எதிராக மக்களே திரண்டு வந்து பதிலடி கொடுக்கிறார்கள். இதற்கு காவி ஆட்சியாளர்களின் பின் ஓடி ஓளிந்துகொண்டிருக்கும் ராம்தேவே சாட்சி.


தமிழாக்கம் : அனிதா
நன்றி : டெலிகிராப் இந்தியா

மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !

மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !!

கஸ்ட் பிற்பகுதியில், குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டுவதற்காக அதன் மதகுகள் மூடப்பட்டன. அவ்வணையின் நீர் மட்டம் உயர உயர, நர்மதா நதி பாய்ந்துவரும் மத்தியப் பிரதேசம், தார் மாவட்டத்திலுள்ள சிகால்டா உள்ளிட்ட 178 கிராமங்களுக்குள் நதி நீர் புகுந்து, அம்மக்கள் அனைவரையும் நிர்க்கதியாக்கிவிட்டது.

“அரசு அணையை நிரப்பி எங்களை மூழ்கடிக்குமென்றும், பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானோருக்கு நிவாரணம் வழங்காமல் கைவிடுமென்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை” எனக் கலக்கத்துடன் கூறுகிறார், பாரத் என்ற மீனவர். தனது வாழ்க்கையே தொலைந்து போன நிலையிலும் பூனையொன்று பசியாறுவதற்காக, ஆற்றுநீரில் மூழ்கிப்போன ஒரு தகரக் கொட்டகையின் உச்சியில் ஒரு ரொட்டித் துண்டை எடுத்து வைத்திருந்தார், அவர்.

1989- அணை கட்டுவதற்காக இந்தப் பகுதியிலிருந்து இடம் பெயரச் செய்யப்பட்ட 32,000 குடும்பங்களில் பெரும்பாலானோருக்குச் சட்டப்படி வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை, மாற்றுக் குடியிருப்புகள், நிலங்கள் உள்ளிட்டவை எவையும் இன்னமும் வழங்கப்படவில்லை. வீட்டுமனை கொடுக்கப்பட்டிருந்தால், வீடு கட்டத் தேவையான பணம் கொடுக்கப்படவில்லை; விளைநிலம் கொடுக்கப்பட்டிருந்தால், அதில் பாதியளவு நிலம் பயிர் விளையாத மலட்டு பூமி. இதுதான் மக்களுக்குக் கிடைத்திருக்கும் நிவாரண உதவிகளின் இலட்சணம்.

தண்ணீரில் மூழ்கிப் போயிருக்கும் ம.பி.-யிலுள்ள நிஸார்புர் கிராமம்.

ஆனால், நர்மதா கட்டுப்பாட்டு ஆணையமோ, இந்த அணைக்கட்டால் பாதிக்கப்பட்ட குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த 230 கிராமங்களில் வாழ்ந்து வந்த 2.5 இலட்சம் மக்களுக்கும் அனைத்து இழப்பீடுகளும் வழங்கப்பட்டு விட்டதாகவும், நிலுவை ஏதுமில்லை என்றும் கூறுகிறது. ஆணையத்தின் கோப்புகள் இந்தக் கிராமங்களில் யாரும் வசிக்கவில்லை என்று கூறுகின்றன. அதனால் அணையின் முழுக் கொள்ளளவிற்கு நீரை நிரப்பிக் கொள்ள குஜராத் அரசிற்கு அனுமதியும் அளித்தது.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அணையின் திறனைப் பரிசோதிப்பதற்காக, அதன் முழு உயரத்திற்கும் (138.68மீ) நீரைத் தேக்கி மதகுகளையும் மூடியதாகச் சொல்கிறது குஜராத் அரசு. உண்மையில் அது மோடியின் பிறந்தநாளுக்காக குஜராத் அரசு அளித்த பரிசு. மோடியை மகிழ்விக்க அணையை நிரப்பிய குஜராத் முதல்வர் மறுபுறத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை ஆற்று நீரில் மூழ்கடித்துவிட்டார்.

மோடி தனது பிறந்த நாளான செப்டம்பர் 17, 2019 அன்று நர்மதை ஆற்றில் மலர்தூவிக் கொண்டாடிவிட்டுச் சென்ற சில தினங்களில், வெள்ளப்பெருக்கால் மார்பளவு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த தனது கால்நடைகளை மீட்டெடுக்க போராடினார், பவாதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோலு அம்பாராம்.

காபர் கேடா பகுதியைச் சேர்ந்த 65 வயதான விவசாயி நத்து சீதாராம் முகாட்டி, தனது 2.5 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த மிளகாய் ஆற்று நீரில் முழ்கிப் போனதால், ஒரே நாளில் 1.5 இலட்சம் ரூபாயை இழந்துவிட்டதாகக் கூறி கதறுகிறார்.

படிக்க:
காஷ்மீர், நர்மதா : ஜனநாயகத்தை நொறுக்குவதற்கான சோதனைச் சாலைகள் !
தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !

செழிப்பான கிராமங்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீருக்குள் மூழ்கி மடிந்துபோயின. மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காகப் பல கிராமங்களும், கிராம மக்களும் அவர்களின் வாழ்வாதாரங்களும் நீரால் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

1961-ல் ஜவஹர்லால் நேரு நர்மதா அணைக்கு அடிக்கல் நாட்டியபோதே, அணையால் பாதிப்பு ஏற்படுமோ என பயப்பட்ட மக்கள், 1990-களில் அது உண்மையானதைக் கண்டனர். 18 இலட்சம் ஹெக்டேர் விளைநிலங்களின் பாசன வசதிக்காகவும், 1450 மெகாவாட் மின் உற்பத்திக்காகவும் வறண்ட கட்ச், சௌராஷ்டிரா கிராமங்களின் நீர்த் தேவைக்காகவும் இந்த அணை கட்டப்பட்டிருக்கிறதெனக் கூறப்பட்டாலும், கட்ச், சௌராஷ்டிரா பகுதி மக்களின் குடிநீர்த் தேவையைக்கூட இந்த அணை இன்றுவரை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை.

ம.பி. மாநிலம் – சோட்டா பர்தா கிராமத்தில் மூழ்கிப்போன வீடுகள் – குடும்பங்கள் குறித்து நடைபெற்ற கணக்கெடுப்பு.

முப்பதாண்டு கால சட்டப் போராட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதப் போரட்டங்களால் தடைபட்டு வந்த அணை கட்டுமானப் பணிகள் மோடி பிரதமரான பின்னர் (2014) துரித கதியில் நடந்தேறின.  2017-ல் தனது பிறந்தநாளின்போது அணையை திறந்து வைத்தபோதுகூட, இந்த அணையால் காலி செய்யப்பட்ட 230 கிராமங்கள் மற்றும் இடப்பெயர்வுக்கு ஆளான 2.5 இலட்சம் மக்களுள் பெரும்பாலோருக்கு நிவாரணம் ஏதும் கொடுக்கப்படவில்லை.

இப்போது வெள்ளத்தால் மேலும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். தன் மூன்று ஏக்கர் விளைநிலத்தையும் வீட்டையும் இழந்த அம்பாராம் “இந்த அரசு எங்களை எறும்புகளைப் போல வெளியேற்றும் என்பதை எதிர்பார்க்கவில்லை” எனக் கலங்குகிறார்.

2017-ல் மத்தியப் பிரதேச அரசால் கட்டப்பட்ட தகரக் கொட்டகையில் நூற்றுக்கணக்கான கிராம மக்களுடன் வாழ்ந்து வரும் அவர், வேலை தேடி அல்லாடுவதாகக் கூறுகிறார். அவரது அழுகுரலைக் கேட்டு ஓடிவந்த மற்றவர்கள், அம்பாராமை பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பெண் பத்திரிகையாளர் ரோஹிணி மோகனை அரசு அதிகாரியாக நினைத்து, “எங்கள் வீட்டு மனைகளைக் கொடுங்கள், எத்தனை வருடங்கள் இதற்கு? எங்கள் பெயர்களையும், எண்களையும் குறித்துக் கொள்ளுங்கள் அம்மா” எனப் படபடவென்று பொரிந்து தள்ளினர்.

இந்த அணையால் நர்மதா பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள பேரழிவுகளும், இழப்புகளும் பெரும்பான்மை மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுவிட்டன.

படிக்க:
மோடியின் நர்மதா அணை பிரகடனம் : சதிகாரன் புத்திசாலி ! சகிப்பவன் குற்றவாளி !!
♦ ஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி !

பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டிவிடும் கதையாக, அணையின் கட்டுமானத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அணையை அதன் முழு உயரத்திற்குக் கட்டுவதற்கு அனுமதித்த உச்ச நீதிமன்றம், “பள்ளிகள், சாலை வசதி, குடிநீர் வசதிகள் உள்ள கிராமப்புறங்களில் வீட்டு மனைகள் தந்து பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்த வேண்டும். புதிய வீடு கட்டிக் கொள்ள 5.8 இலட்சம் ரூபாயும், விளைநிலமும் அல்லது இழந்த விளைநிலத்திற்கு மாற்றாக 60 இலட்சம் ரூபாய் இழப்பீடும், நிலமற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார இழப்பீடும், நாட்டுப்புற மீனவர்களுக்கு நீர்த்தேக்கப் பகுதிகளில் மீன் பிடிக்க உரிமமும் தரவேண்டும்” என உத்தரவிட்டது. ஆனால், இவையெல்லாம் நீதிபதிகளின் கையெழுத்துப் பதிவாகியிருந்த காகிதத்தில்தான் இருந்தன.

அந்த மக்களுக்கு இழப்பீடு தருவதற்குப் பதிலாக அணையை நிரப்பி அவர்களை நீரில் மூழ்கடித்துவிட்டது குஜராத் அரசு. இத்தனை ஆண்டுகளில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இடப் பெயர்வுக்கான இழப்பீடுகள் முறையே 19 மற்றும் 33 கிராம மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மிக அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்ட மத்தியப்பிரதேசமோ,  நிவாரண உதவிகளை வழங்குவதில் மிகவும் பின்தங்கியுள்ளது.

மோடி தனது பிறந்த நாளைக் கொண்டாட சர்தார் சரோவர் அணைக்கட்டிற்கு வருவதைக் கண்டித்து, அந்நதியின் மீதான பாலத்தை மறித்து நர்மதை பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம்.

நர்மதா பாதுகாப்பு இயக்கம் 31,593 குடும்பங்கள் இழப்பீட்டு தொகைக்காக அப்பகுதியில் காத்திருப்பதாக வெள்ளம் வருவதற்கு முன்பாக ஜூலை 2019-இல் அறிக்கை அளித்திருந்தது. இது குறித்து கேட்டதற்கு மத்திய பிரதேச அதிகாரிகளும், அணையைக் கட்டிய சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி. ராஜீவ் குப்தாவும், “இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்துச் சொல்ல முடியாது” என மறுத்துவிட்டனர்.

அணை கட்டலாமா, வேண்டாமா? என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை வெள்ளத்தில் மூழ்கடித்ததை நியாயப்படுத்த முடியுமா?

ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சாலைகள், பாலங்கள் அமைக்க சூறையாடப்பட்டுவிட்ட நிலையில், வெள்ளமும் தன் பங்குக்கு பெருமளவு அழித்துவிட்டது. நிலவுடமையாளர்களைக் காட்டிலும் விவசாயக் கூலிகளைத்தான் இந்த வெள்ளம் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

நந்த்ஹான் கிராமத்தைச் சேர்ந்த ருக்தி ரது, “அரசு மூன்று வேளை உணவு கொடுப்பது சரிதான். ஆனால், வேலையில்லாமல் மருத்துவச் செலவுகள், கால்நடைகளுக்கான உணவு, பள்ளிக்கட்டணம், போக்குவரத்து ஆகியவற்றுக்கு என்ன செய்வது?” எனக் கேட்கிறார்.

இழப்பீடு கிடைக்குமென்ற அதிகாரிகளின் வாக்குறுதிகளை நம்பி இடம்மாறிய, போர்ஹெடி கிராமத்தைச் சேர்ந்த 200 பழங்குடியினக் குடும்பங்கள், “இடம்பெயர்ந்தவர்கள் பட்டியலில் தங்களது பெயர்கள் இல்லையென்றால் என்ன செய்வது?” என்ற அச்சத்தில் தற்போது உறைந்து போயுள்ளனர்.

அவர்களுள் கல்வியறிவு பெற்றவரான 35 வயது புவான் சிங் ராவத், அக்கிராம மக்களின் மறு வாழ்வுக்கான கோரிக்கை மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றபோது, “முதலில் அப்பா நிலத்தைக் கேட்டு வந்தால், அடுத்து மகன் வருகிறான்” என அதிகாரிகளால் கேலி செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.

இன்றைக்கு வெள்ளம் அதிகாரிகளின் பல பொய்களைக் காட்டிக் கொடுத்துள்ளது. இன்று மூழ்கிப்போயிருக்கும் காட்னெரா போன்ற பல கிராமங்கள் பாதிக்கப்பட்ட கிராமக் கணக்கில் வரவில்லை. மறுகுடியேற்றம் செய்யப்பட்ட சில கிராமங்கள்கூட தண்ணீரில்தான் மிதந்து கொண்டிருக்கின்றன.

மிகப் பெரியதும் வளமிக்கதுமான நிசார்பூர் கிராமம் மூழ்கடிக்கப்பட்டு பேய் கிராமமாகியுள்ளது. 3 மாடிக் கட்டிடங்கள் கூடப் பனிப்பாளங்கள் போல வெள்ள நீரில் மிதந்து கொண்டிருக்கின்றன.

தமது கிராமத்தை, சொந்தங்களை, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் 75 வயதான விவசாயி சங்கர் சிங், “உங்களைப் போன்ற நகரவாசிகளால் இதைப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். திடீரென உங்களது முன்னோர்கள் வாழ்ந்த கிராமத்தை, நீங்கள் பிறந்த இடத்தை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்படுவது, இருப்பிடத்தை மாற்றுவது போல அவ்வளவு எளிதானதல்ல. நீங்கள் உங்களது தொடர்புகளை, கலாச்சாரத்தை, பாதுகாப்புணர்வை இழந்துவிடுவீர்கள்” என்கிறார்.

இப்படித் தனது வலிமையைக் காட்டுவதற்காக இலட்சக்கணக்கான மக்களின் உலகத்தையே அழித்திருக்கிறார், நரேந்திர மோடி. புதிய இந்தியா, புதிய இந்தியா என மூச்சுக்கு முன்னூறு தடவை கூவி வரும் மோடியின் புதிய இந்தியாவின் வெள்ளோட்டம் இதுதானோ!

மொழியாக்கம்: மேகலை

(தி இந்து ஆங்கில நாளிதழின் சண்டே மெகஸின் என்னும் இணைப்பில், (06.10.2019) ரோஹிணி மோகன் என்ற பெண் பத்திரிக்கையாளர் எழுதிய தமது உலகத்தை இழந்த மக்கள்” என்ற செய்திக் கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு.)

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

அவன் எங்கோ மறைந்து விட்டான் ! அடித்து வீழ்த்தப்பட்டுவிட்டானா ?

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 05a

ணைகள் ஒன்றன் பின் ஒன்றாக வானில் சுற்றிவந்தன. காற்றில் சிக்கலான வட்ட நடனம் தொடங்கியது.

இந்தக் குழப்பத்தில் பகை விமானம் எது தன் விமானம் எது என்று அனுபவம் உள்ள கண்கள் தாம் பகுத்தறிய முடியும். காதுக் குழாய்கள் வழியே விமானியின் செவிகளில் பாயும் தனித்தனி ஒலிகளை வேறுபிரித்து அறிவது அனுபவம் உள்ள செவிகளுக்கே இயலுவது போல. அந்த நேரத்தில் வானத்தில் எத்தனை எத்தனை வித சத்தங்கள் ஒலித்தன : தாக்குபவனின் கரகரத்த வசவுச் சொற்களும், காயமடைந்தவனின் முனகல்களும் ஆழ்ந்த பெரு மூச்சின் கரகரப்பும் என்று இப்படிப் பற்பல ஒலிகள். ஒருவன் சண்டைப் போதையில் வேற்று மொழியில் பாட்டு முழங்கினான். மற்றொருவன் குழந்தைப் போல அரற்றி “அம்மா” என்றான். மூன்றாமவன் சுடுவிசையை அழுத்தியவாறு போலும், “இந்தா, இந்தா, இன்னும் இந்தா!” என்று வன்மத்துடன் கூறினான்.

திட்டமிட்டிருந்த இரை அலெக்ஸேயின் இலக்குக்குத் தப்பி விட்டது. அதற்குப் பதிலாக தனக்கு உயரே ஒரு “யாக்” விமானம் பறப்பதையும் நேரான இறக்கைகளைக் கொண்ட, சுருட்டு வடிவான “போக்” விமானங்கள் அதன் வாலுடன் ஒட்டினாற் போல விடாது தொடர்வதையும் அவன் கண்டான்.

“போக்” விமான இறக்கைகளிலிருந்து ஒரு போகான இரண்டு குண்டு வரிசைகள் “யாக்’ விமானத்தை நோக்கிப் பாய்ந்தன. அவை அதன் வாலில் பட்டுவிட்டன. அலெக்ஸேய் உதவிக்காக நேரே அம்பு போல மேலே விரைந்தான். கணப் போதின் ஒரு பகுதி நேரத்தில் அவனுக்கு மேலே கரு நிழல் ஒன்று தோன்றியது. அந்த நிழல்மீது தன் எல்லா பீரங்கிகளிலிருந்தும் முழு மூச்சாகக் குண்டுகளைப் பாய்ச்சினான் அலெக்ஸேய். “போக்” விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பதை அவன் காணவில்லை. “யாக்” விமானம் சேதமுற்ற வாலுடன் தனியாகத் தொடர்ந்து பறந்ததை மட்டுமே அவன் கண்டான். இந்தக் களேபரத்தில் பெத்ரோவ் பின் தங்கிவிட்டானோ என்றுத் திரும்பிப் பார்த்தான் அலெக்ஸேய். இல்லை, பெத்ரோவ் அனேகமாக அருகருகவே பறந்தான்.

படிக்க:
கேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை !
பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் !

“பின் தங்கிவிடாதே, தம்பி” என்று பற்களின் இறுக்கு வழியே கூறினான் அலெக்ஸேய்.

கணகணப்பும் சடசடப்பும் பாட்டும் காதுகளில் ஒலித்தன. வெற்றி முழக்கமும் அச்ச மிகுதியால் வீரிடலும், கரகரப்பும், பற்களை நெரிப்பதும், திட்டு வசவுகளும், ஆழ்ந்த பெருமூச்சும் கேட்டன. இந்த ஓசைகளை கேட்கையில் தரைக்கு வெகு உயரே சண்டை விமானங்கள் போரிடுவதாகத் தோன்றவில்லை. பகைவர்கள் ஒருவரையொருவர் கைகளால் இறுகப் பற்றியவாறு, கரகரப்பதும் பெருமூச்சு விடுவதுமாக, பலத்தை எல்லாம் ஒரு முனைப்படுத்தித் தரையில் புரள்கிறார்கள் என்று தோன்றியது.

அலெக்ஸேய் தாக்குவதற்குப் பகை விமானத்தைத் தேடும் பொருட்டு வானத்தை சுற்றிலும் கண்ணோட்டினான். திடீரென்று அவனுக்கு முதுகுத்தண்டு திடீரெனச் சில்லிட்டு விட்டது போலவும் பிடரியில் மயிர்க் கூச்செறிவது போலவும் உணர்வு உண்டாயிற்று. தனக்குச் சற்றுக் கீழே “லா-5” விமானத்தையும் அதை மேலிருந்து தாக்கிய “போக்” விமானத்தையும் அவன் கண்டான். சோவியத் விமானத்தின் எண்ணை அவன் கவனிக்கவில்லை. ஆனால் அது பெத்ரோவ் என்பதை புரிந்து கொண்டான், உணர்ந்தான். தனது எல்லா பீரங்கிகளிலிருந்தும் சடசடவென்று குண்டு மழை பெய்தவாறு அவன் மேல் நேராகப் பாய்ந்தது “போக்கே-வூல்ப்” விமானம். இன்னும் அரை நொடியில் பெத்ரோவின் பாடு தீர்ந்துவிடும் போல் இருந்தது.

சண்டை மிக மிக அருகே நடந்துகொண்டிருந்த படியால் விமானத் தாக்கு விதிகளை கடைபிடித்தவாறு நண்பனுக்கு உதவ செல்வது அலெக்ஸேக்கு இயலாதிருந்தது. திரும்புவதற்கு நேரமோ இடமோ இல்லை. ஆபத்தில் இருந்த நண்பனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அபாயத்தை மேற்கொள்ளத் துணிந்தான். தன் விமானத்தைக் கீழ் நோக்கித் திருப்பி விரைவை அதிகப்படுத்தினான். தனது சொந்த கனத்தின் ஈர்ப்பு வேகம் சட வேகத்தாலும் எஞ்சினின் முழு ஆற்றலாலும் பன்மடங்காகி விடவே, விமானம் அசாதாரண இறுக்கத்தால் அதிர்ந்து நடுங்கியவாறு கல் போல – அல்ல, கல்போல அல்ல, ராக்கெட் போல – ‘போக்’ விமானத்தின் குட்டை இறக்கைகள் கொண்ட உடல் மீது நூல்கள் போன்று குண்டுவரிசைகளைப் பாய்ச்சியபடி விழுந்தது. இந்த தலைதெறிக்கும் வேகம் காரணமாகவும் திடீரென கீழே பாய்ச்சுவதாலும் நினைவு தப்புவதை உணர்ந்தான் அலெக்ஸேய்.

அகாதத்தில் விரைந்து வீழ்கையில் அவனது கண்கள் குறுதி நிறைந்து மங்கின. எனவே தன் விமானத்தின் உந்து சக்கரத்துக்கு முன்னே எங்கேயோ “போக்” விமானம் வெடித்துப் புகை சூழ்ந்ததை அவன் அரைகுறையாகக் கண்டான். பெத்ரோவ் எங்கே? அவன் எங்கோ மறைந்து விட்டான். எங்கே அவன்? அடித்து வீழ்த்தப்பட்டுவிட்டானா? குதித்துவிட்டானா? போய்விட்டானா?

சுற்றிலும் வானம் தெளிவாயிருந்தது. எங்கோ பின்னால் கண்ணுக்குத்தெரியாத விமானத்திலிருந்து அமைதியான குரல் வானில் ஒலித்தது குரல்:

“நான் – கடற்பறவை இரண்டு, பெதோத்தவ். நான்-கடற் பறவை இரண்டு பெதோத்தவ். அணிவகுத்துக் கொள்ளுங்கள் என் அருகே திரும்புவோம் நான் – கடற்பறவை இரண்டு…..”

பெதோத்தவ் அணியை விட்டுச் சென்றுவிட்டார் போலும்.

“போக்கே-வூல்பைச்” சுட்டு வீழ்த்திய பிறகு தன் விமானத்தை வெறிகொண்ட செங்குத்துத் தலைகீழ்ப் பாய்ச்சலிலிருந்து சம நிலைக்குக் கொண்டு வந்ததும் மெரேஸ்யெவ் பேரார்வத்துடன் ஆழ்ந்த மூச்சிழுத்தான். அபாயம் விலகி விட்டதால் ஏற்பட்ட களிப்பை, வெற்றி மகிழ்ச்சியை உணர்ந்தவாறு, நிலவிய அமைதியில் திளைத்தான் அவன். திரும்பு வழியை நிச்சயிப்பதற்காகத் திசைகாட்டியைப் பார்த்தான், பெட்ரோல் குறைவாக, விமான நிலையம் சேர்வதற்கே போதும் போதாதுமாக இருப்பதைக் கவனித்து முகம் சுளித்தான். ஆனால் சூனியத்துக்கு அருகே இருந்த பெட்ரோல்மானி முள்ளைவிட அதிக பயங்கரமான ஒன்று அடுத்த கணமே அவனுக்குப் புலனாயிற்று. பறட்டைப் பிடரி போன்ற மேகத்திலிருந்து அவனை நோக்கிப் பாய்ந்தது, எங்கிருந்தோ வந்த “போக்கே-வூல்ப்-190” விமானம். சிந்திக்க நேரமில்லை, விலகித் தப்ப இடமில்லை.

பகைவர்கள் ஒருவர் மீது ஒருவர் விரைவாகப் பாய்ந்தார்கள்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

நள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை

நள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில்

மிழக கேரளா எல்லையில் அடர்ந்த மலைக்காடு.

“ஏன் ஆயீஷா, மாப்பிள்ளை பாக்க வந்தாங்களே என்னாச்சு”

“அத ஏன் மேடம் கேக்குறீங்க, வாரவனெல்லாம் கவர்மென்ட்டு நர்ஸுன்னு நம்பி வாரானுங்க. அப்புறம் என் சம்பளம் என்னன்னு தெரிஞ்சதுமே, சொல்லாம கொள்ளாம ஓடிடுறானுங்க” என சிரித்தாள் .

“டாக்டர் !…. டாக்டர் !…”

கதவு தட்டும் சத்தம் கேட்டது. செல்போனில் மணி இரவு 1.00 காட்டியது. கதவை திறந்தவள்.

“என்னமா.. கேசு”

“மங்கா வந்திருக்கா மேடம். வலி ஆரம்பிச்சிடுச்சு போல”

“அப்டியா” என்றவள் உடைமாற்றி கொண்டு தயாரானாள்.

அந்த அடர்த்த மலைக்காட்டில், அப்படி ஒரு சிறிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதை அவ்வளவு எளிதாக நம்பிவிட முடியாது .

ஒரே ஒரு பெண் மருத்துவரும், நர்ஸும் மட்டுமே. இருவருக்குமே வயது 25-ல் இருந்து 30-க்குள் இருக்கலாம். ஏதோ இருப்பதை வைத்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த அந்த அதரப்பழசான quarters-உம் இன்றோ நாளையோ இடிந்து விழும் நிலையில் இருந்தது. பாம்புகள் வந்து செல்வதெல்லாம் இந்த 2 வருடங்களில் அவர்களுக்கு சர்வசாதாரணம்.

மங்கா, காட்டுவாசி. கணவன் யானை மிதித்து இறந்துவிட, தனியாளாக அருகில் இருந்த ரிசார்ட்டில் கூலி வேலை செய்து பிழைத்த வந்தாள். நிறைமாத கர்பிணி. பிரசவம் இன்றோ நாளையோ என்று இருந்தவள். இப்போது வலியோடு வந்திருக்கிறாள்.

வெளியே இடியும் மின்னலும் என, வானம் ஒரு பெருமழைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

மங்காவை பிரசவ அறை கட்டிலில் கிடத்தினோம். ஆயிஷா BP பார்த்து கொண்டிருக்க, நான் பிரவத்துக்கான tray தயார் செய்தேன்.

மங்கா வலியில் “அம்மா .. அம்மா” என முனகிக் கொண்டிருந்தாள்.

“ஏய் மங்கா. இதைப் பாருடி, அதான் நானும் அயீஷாவும் இருக்கோம்ல, என்னத்துக்கு கெடந்து பயப்படற” என அவள் கைகளை தொட.

“சரிங்ககா” என் கைகளை இறுக்கி பற்றிக்கொண்டாள்.

அதற்குள் மழை சற்று பலமாக பிடித்திருந்தது. புயல் காற்று வீசும் சப்தம் ஜன்னல் வழியாக வீசுவது கேட்கவே கொஞ்சம் பயமாக இருந்தது.

“மேடம் BP 170 இருக்கு” என்ற ஆயிஷாவின் குரலில் கொஞ்சம் பதட்டம்.

பிரசவத்தில் BP 120 என்பதே கொஞ்சம் அதிகம்தான். 170 என்பதெல்லாம் ஆபத்துக்கான அறிகுறி.

“என்னமா சொல்ற, நல்லா பாத்தியா” என்றவாறே நானே இன்னொரு தடவை பார்த்தேன். 170-க்கு கொஞ்சம் மேலே இருந்தது .

“ஆயீஷா, கடைசியா மங்காக்கு எப்பமா BP பார்த்தோம்”

“நேத்து சாயந்தரம் கூட வந்திருந்தா மேடம் . நார்மலா தான் இருந்துச்சு”

“ஹ்ம்ம்.. யூரின் செக் பண்ணுமா” என்றேன்.

சில நிமிடங்களில்.

“மேடம் , அதுவும் positive”

சிறுநீரில் உப்பு அதிகம் , BP -யும் அதிகம். உடனே மேல்சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். இல்லை என்றால் தாய் சேய் இருவருக்கும் பாதுகாப்பில்லை.

மங்காவிடம் எதுவும் சொல்லவில்லை. எதுவும் பேசாமல் அமைதியாக வயிற்றில் இருந்த குழந்தையின் இதயத்துடிப்பை பார்த்தாள். நல்லவேளை குழந்தை இந்த நொடி வரை நலம்.

இடி இடிக்கும் சப்தம் காதுகளை பிளந்தது. மின்னல் வெட்டுக்கள் கண்களைக் கூசியது. இவளுக்கும் கொஞ்சம் அடிவயிறு மாதவிடாய் வலியில் கனத்தது. Pad மாற்றி கொண்டால் பரவாயில்லை என்று தோன்றியது.

“ஆயீஷா 108-க்கு கால் பண்ணுமா, நான் இதோ வந்துடறேன்” என்றவள் சில நிமிடங்களில் வந்து…

“என்னாச்சு ஆயிஷா, வண்டிக்கு சொல்லிட்டியா”

“இல்ல மேடம், லைன் போகவே மாட்டேங்குது”

“Landline”

“அதுவும் போகல மேடம்.”

“BSNL try பண்ணி பாரும்மா . அது சில நேரத்துல போகும்”

மங்கா வலியில் துடித்து கொண்டிருந்தாள் .

சில நொடிகளில் “மேடம் ! BSNL ரிங் போகுதுங்க”

இவள் கையில் இருந்து போனை பிடுங்கினாள்.

“ஹலோ. நான் சிவன்மலைக்காடு PHC டாக்டர் பேசுறேன்”

அந்தப்பக்கம் எந்த சப்தமும் கேட்கவில்லை .

“ஹலோ, நான் சிவன்மலைக்காடு PHC டாக்டர். இங்க ஒரு பிரசவ கேஸு, 170 BP , எகிலம்ப்சியா (ஆபத்தான பிரசவ நிலை) மாதிரி இருக்குங்க. உடனே வண்டி அனுப்புங்க ப்ளீஸ்”

அந்தப் பக்கம் மீண்டும் அமைதி.

“உடனே வாங்க ப்ளீஸ்” என்றவள் கட் செய்தாள் .

“என்னாச்சுங்க மேடம்”

“அவங்களுக்கு கேட்டுச்சா இல்லையான்னு தெரியலையேமா”

மீண்டும் 108-க்கு அழைத்தாள். லைன் போகவில்லை.

“வேற எதாவது ஆம்புலன்ஸ் கிடைக்குமா ஆயீஷா”

“அர்த்தராத்திரில இந்த காட்டுல ஆம்புலன்சுக்கு எங்க மேடம் போறது . வெளியே வேற மழை பிச்சிகிட்டு பேயுது”

முதலுதவி மருந்துகளை உடனடியாக செலுத்தினோம . இனி ஒரு மணி நேரத்திற்கு ஒரு டோஸ் போட வேண்டும்.

“இன்னும் எத்தனை டோஸ் மா பாக்கி இருக்கு”

“ரெண்டு டோஸ் மேடம்”

மனதுக்குள் கணக்கு போட்டேன் அதிகபட்சம் இரண்டரை மணிநேரம் சமாளிக்கலாம், அதற்குள் இவளை கோவை GH-க்கு எப்படியாவது கொண்டு சென்றுவிட வேண்டும்.
மீண்டும் BP பார்த்தார்கள் .அது சற்றும் குறைந்தபாடில்லை.

மங்காவோ “தலை வலிக்குதுகா” என்றாள். அனைத்தும் ஆபத்துக்கான அறிகுறிகள்.

கையுறை போட்டுக்கொண்டு, மங்காவின் பிறப்புறுப்பை ஆய்வு செய்தாள்.

கனநொடியில் பனிக்குடம் உடைந்து, இவள் முகத்தில் தெளித்தது உதட்டில் சில துளிகள் பட்டு இவளுக்கு குமட்டியது. துடைத்துக் கொண்டு, பிறப்புறுப்புக்குள் கைவிட்டு குழந்தையின் தலையின் இருப்பை பரிசோதித்தாள். குழந்தை பிறக்க இன்னும் சிறிது நேரம் அவகாசம் இருப்பது தெரிந்தது.

மங்காவின் பிறப்புறுப்பு வழியாக ரத்தமும், அதன் கீழே மலமும் கலந்து ஒருவித சொல்ல முடியாத வாசத்தோடு வந்துகொண்டிருந்தது. பிரசவம் எல்லாம் சினிமாவில் காட்டுவது போல ரொமான்டிக் கிடையாதே. அது மலமும், சிறுநீரும், ரத்தமும் கலந்த இயற்கை ஆயிற்றே.

ஒரு மணி நேரம் முடிந்திருக்கும். அடுத்த டோஸ் மருந்தை செலுத்தினார்கள். இன்னும் ஒரு மணி நேரத்திற்கான மருந்து மட்டுமே கையிருப்பு இருந்தது . 108 ஆம்புலன்ஸ் வருவதற்கான அறிகுறி எதுவுமே தெரியவில்லை.

“ஆயீஷா ! பேசாம நம்ம கார்லயே கூட்டிட்டு போய்டலாம்டா”

ஆயீஷா சற்று அதிர்ச்சியானாள்.

“என்ன மேடம் சொல்றீங்க, இந்த காட்டு வழியில, அதுவும் இந்த பேய் மழைல, நாம எப்புடி மேடம்”

“வேற வழி இல்லடா. எதாவது பண்ணலைனா செத்துடுவா”

ஆயீஷாவுக்கும் வேறு வழியில்லை என்று புரிந்தது.

“சரிங்க மேடம் . நீங்க வண்டிய எடுங்க . நான் shift பண்ண ரெடி பன்றேன்”

பிரசவம் எல்லாம் சினிமாவில் காட்டுவது போல ரொமான்டிக் கிடையாதே. அது மலமும், சிறுநீரும், ரத்தமும் கலந்த இயற்கை ஆயிற்றே.

மீதமிருந்த அந்த ஒரு டோஸ் மருந்தையும், ஆயிஷா பத்திரபடுத்திகொள்ள
இவள் காரை reverse எடுத்து start செய்தாள். பின்னர் இருவரும் கைத்தாங்கலாக மங்காவை பின்சீட்டில் கிடத்தினர். ஆயீஷா மங்காவின் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டாள்.

முழு வேகத்தில் வைப்பர் வைத்தும், மழை வீசும் வேகத்தில் சாலை சுத்தமாகத் தெரியவில்லை. வழியெங்கும் சேறும் சகதியுமாக கார் கட்டுப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது. நல்ல வேலையாக காட்டாற்று பாலத்தை தாண்டி வெள்ளம் இன்னும் வரவில்லை. வழியாக மண் ரோட்டைத் தாண்டி தார் ரோட்டை அடைந்தார்கள்.

“மேடம். மங்கா மயங்கிட்டா மேடம்”

“இன்னொரு டோஸ் போடும்மா. சீக்கரம் போயிடலாம்”

கடைசி கையிருப்பு மருந்தும் செலுத்தப்பட்டு விட்டது. மழையோடு புயல் காற்றும் சேர்ந்து கொண்டது.

“ம்மா ஆயீஷா . விடாம போன் அடிச்சிக்கிட்டே இரும்மா. லைன் கிடைச்சா உடனே குடும்மா”

“சரிங்க மேடம்”

இருளில் திடீரென்று சடன் பிரேக் அடித்து நிறுத்தினாள். வண்டியின் சக்கரம் கிறீச்சிட்டு நின்றது .

நடுவில் ஒரு மரம் சாலை நடுவே விழுந்திருந்தது . நல்ல வேளையாக இவர்கள் அதில் மோதவில்லை. சற்றும் யோசிக்காமல் இவள் இறங்கி அந்த மரத்தை தள்ள முயற்சித்தாள். காட்டு மரம் கொஞ்சமும் அசையவில்லை .

ஆயிஷாவும் இறங்கி வந்து முயற்சித்தும், பயனில்லை. மின்னல் வெளிச்சத்தில் எதையோ பார்த்த ஆயீஷா இவள் கையை பிடித்து இழுத்து வந்து காருக்குள் தள்ளினாள் . இவளும் முன் சீட்டில் அமர்ந்து கண்ணாடியை அவசர அவசரமாக ஏற்றினாள். காரின் லைட் அனைத்தையும் அணைத்தாள்.

“என்னமா என்ன பண்ற என்னாச்சு”

“ஷ்ஷ்ஷ்..” என்று என் வாயை கையால் பொத்தி அது ஒரு திசையில் கை காட்டினாள் .

ஒரு யானைக்கூட்டம் குட்டிகளோடு மெதுவாக கடந்து சென்றது. காரின் கண்ணாடி அருகே வந்த ஒரு யானையின் கண்கள், கண்ணாடிக்கு மறுபுறமிருந்த இவள் கண்களுக்கு மிக அருகில் இருந்தது . இவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது .

சிறிது நிமிடங்கள் கழித்து, அவைகள் கடந்து போனதை உறுதி செய்தபின் , பயம் கொப்பளிக்க மங்காவின் நாடியை பார்த்தாள். நல்ல வேலையாக இன்னும் துடித்துக் கொண்டிருந்தது .

பயத்திலும், இதற்குமேல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாதே என்கிற விரக்தியில் அவளுக்கு ஓவென்று அழுகத் தோன்றியது . காரை விட்டு வெளியேறி, கொட்டும் மழையில் சாலையை மறைத்திருந்த அந்த மரத்தில் அமர்ந்து கொண்டாள். அவளால்

திடீரென்று ஓடி வந்த ஆயிஷா “மேடம் .. அங்க பாருங்க”

எனக்கும் இன்ப அதிர்ச்சி. சற்று தொலைவில் நீலமும் சிகப்புமாக சைரன் விளக்குகள் மினுக்கியபடி 108 ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது .

இவர்கள் இருவரும் “ஸ்டாப் ஸ்டாப்” என கைய்யசைத்து வண்டியை நிறுத்தினர்.

உள்ளிருந்து வந்த 108 பணியாளர் “மேடம் . நீங்க சிவன்மலைக்காடு PHC டாக்டர்தானே”

“ஆமாங்க நான்தான்”

“சென்னை 108 control ரூம்ல இருந்து பேசுனாங்க மேடம். உங்க patient எங்கேங்க ?”

உடனடியாக ஸ்ட்ரெச்சர் வைத்து மங்காவை வண்டியில் ஏற்றினோம். கடைசியாக அந்த மரத்தைத் தாண்டும்போது தவறி விழுந்து அவள் தலை ஒரு ஆம்புலன்ஸ் கம்பியில் மோதியது .

(சில மணி நேரம் கழித்து)

அவள் கோவை அரசு மருத்துவமனை வார்டில் மயக்கத்தில் இருந்து விழித்தாள்.

பயிற்சி மருத்துவர்களும், செவிலியர்களும் தத்தம் வேளைகளில் பிசியாக இருந்தனர். கட்டில் அருகே ஆயீஷா சூடாக பால் ஆற்றிக் கொண்டிருந்தாள்.
மெதுவாக கண் திறந்தவள்

“ஆயிஷா…மங்காக்கு …?”

மலர்ந்த முகமாக ஆயீஷா

“டெலிவெரி ஆயிடுச்சுங்க மேடம். சிசேரியன் பண்ணி எடுத்துட்டாங்க. பொம்பள புள்ள. ரெண்டு பேரும் நல்லாருக்காங்க”

அவளின் செல்போன் அலறியது

ஆயிஷா போனை எடுத்தாள் “ஹலோ”

“மேடம் DD office-ல இருந்து பேசுறாங்க” என்று குடுத்தாள்.

“ஹலோ”

“டாக்டர் ! ஒரு சின்ன விஷயம் தப்பா நெனச்சிக்காதீங்க”

“சொல்லுங்க சார்”

“நீங்க போன வாரம் strike-ல கலந்துகுட்டதுக்காக உங்களுக்கு Punishment transfer வந்திருக்கு”

இவள் சற்று விரக்தியாக

“பரவால்ல சார் . இது எதிர்பார்த்தது தான . நாளைக்கு காலைல வந்து ஆர்டர் வாங்கிக்குறேங்க” என்று கட் செய்தாள் .

(சில நாட்கள் கழித்து)

“இந்தம்மா மங்கா. புள்ளைக்கு birth certificate குடுக்கோணும். புள்ளைக்கு என்ன பேரு வெக்க போற”

“வேறென்ன பேரு, என் புள்ள உசுர காப்பாத்துன சாமி , எங்க டாக்டரக்கா பேருதேன் இவளுக்கும்”

“அதென்னமா உங்க டாக்டராக்க பேரு”

“அனிதா-ங்க…. டாக்டர் அனிதா”

நன்றி: முகநூலில் – ம. சிவசந்திரன் 

disclaimer

பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !

பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !

கீதாசாரம் எனத் தலைப்பிடப்பட்ட ஒரு சிறு பதாகை வீடுகளிலும் கடைகளிலும் மாட்டப்பட்டிருப்பதை நம்மில் பலர் பார்த்திருக்கக்கூடும். அதிலுள்ள வாசகங்களான, “எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது” என்பன போன்றவை  தத்துவ சாயலில் அமைந்திருப்பதால், பொதுமக்களை ஈர்த்து, அவர்களுள் பெரும்பாலோர் அதனையே கீதையின் சாரம் எனப் புரிந்து வைத்திருக்கின்றனர்.

விடயம் என்னவென்றால், பகவத் கீதையில் இந்த வாசகங்கள் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்று தேடினால், எந்த அத்தியாயத்திலும் எந்த சுலோகத்திலும் அவை காணக் கிடைக்காது. அதாவது, கீதையில் சொல்லாத ஒன்றைத்தான், கீதையைப் படிக்காமலேயே கீதையின் சாரம் என்று மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.

இன்னொருபுறத்திலோ, பார்ப்பனக் கும்பல் திட்டமிட்டே கீதையை இந்து மதத் தத்துவ போதனையாகப் பாமர இந்துக்களின் மூளையில் திணித்திருக்கிறது. பகவத் கீதையின் இத்தகுதியை அம்பேத்கர் தொடங்கி கி.வீரமணி உள்ளிட்டுப் பலரும் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

“கிறித்தவ சமயத்திற்குப் பைபிளைப் போல, இந்து சமயத்திற்குப் பகவத் கீதை வேதமாகுமா? அது வேதமாயின், அது எதனைப் போதிக்கிறது? எவ்வகைக் கோட்பாட்டைப் போதிக்கிறது?”

“நான்கு வருணக் கோட்பாட்டிற்கும் தத்துவரீதியில் பாதுகாப்பளிக்க முன்வருகிறது, கீதை. நான்கு வருணங்களை இறைவன் படைத்தான் என்று திட்டவட்டமாகக் கீதை கூறுகிறது. எனவே, வருண தருமம் அணுவளவும் ஐயத்திற்கிடமின்றிப் புனிதமானது, கடவுள் படைப்பு என்பதையும் தாண்டி நியாயப்படுத்துகிறது.”

“பக்தியால் மட்டும் மோட்சத்தை அடைய முடியாது. பக்தியுடன் வருண ஆசாரத்தையும் கடைபிடித்தல் வேண்டும். சுருங்கக் கூறின், பக்தியால் மட்டும் ஒரு சூத்திரன் எவ்வளவு பெரிய பக்தனாயினும் மோட்சம் அடைய முடியாது. மேல் வருணத்தாருக்காகவே வாழ்ந்து, உழைத்து மடிந்தால்தான் மோட்சத்தை அடையமுடியும்”

“பகவத் கீதையின் முதன்மை நோக்கம் சதுர்வருணத்தைக் காப்பதும் நடைமுறையில் அவ்வமைப்பைக் கட்டிக் காப்பதுமேயாகும்”

– எனக் கீதையிலிருந்தே எடுத்துக்காட்டி, அதனுடைய உயிர் நாடியை அம்பலப்படுத்தியிருக்கிறார், அம்பேத்கர்.

அண்ணா பல்கலைப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை திணிக்கப்படுவதற்கு எதிராக ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் மதுரையில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இப்படி வருண-சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நூலை எப்படி அனைத்து இந்துக்களுக்குமான ஒரு புனித நூலாகக் கருத முடியும்? சாதிப் பாகுபாட்டை, ஏற்றத்தாழ்வை ஆதரிப்பதன் காரணமாகவே வரலாற்றின் குப்பைக் கூடையில் தூக்கியெறிய வேண்டிய பகவத் கீதையைப் பாடநூலாக, அதுவும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பாடமாகப் பரிந்துரைத்திருக்கிறது, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE). அப்பரிந்துரையை உடனடியாக அமலுக்குக் கொண்டுவரும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது, அண்ணா பல்கலைக் கழகம்.

பித்தளைக்குத் தங்க முலாம் பூசுவது போல, நான்கு வருணப் பாகுபாட்டை ஆதரிக்கும் கீதையை வாழ்வியல் அறிவுரைகளைக் கூறும் நூலாகக் காட்டி, அதனைப் பொறியியல் மாணவர்களிடம் திணிப்பதை நியாயப்படுத்துகிறார்கள் இந்துமதவெறியர்கள். “பொறியியல் மாணவர்களுக்கு அன்பு, நன்றியுணர்ச்சி, தவறுகளைத் திருத்திக் கொள்ளும் விரிவான மனது, சுய ஒழுக்கம், நேர்மை, புதிய சவால்களை எதிர்கொள்ளும் துணிவு ஆகிய பண்புகளைப் புகட்ட வேண்டுமென்றும், இப்பண்புகள் அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் சொல்லும் உபதேசங்களில் உள்ளதாகக்” கூறுகிறார்கள்.

படிக்க :
♦ விடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் !
♦ பகவத்கீதை – புராணக்கதைகளை பொறியியல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கு ! CCCE கண்டனம்

மேலும், “பிளாட்டோவையும் சாக்ரட்டீசையும் பாடத்தில் படிக்கும் போது கீதையைப் படிப்பதில் என்ன தவறு? கீதையைப் படித்தால் தனிமனித ஆளுமையை வளர்த்துக் கொள்ள முடியும்; நிர்வாக மேலாண்மையை கற்றுக் கொள்ள முடியும்” என கீதைக்கு ஆதரவாக வாதங்களை முன்வைக்கின்றனர். இந்த அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கீதையில் “சுய உணர்தல்”, “மனதை வெல்ல அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொல்லும் வழிகள்” என இரண்டு தலைப்புகள் பாடத் திட்டமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒரு புதிய பாடத் திட்டத்தைக் கொண்டு வரவேண்டுமானால், போர்டு ஆஃப் சர்வீசஸ், அகடமிக் கவுன்சில், சிண்டிகேட் என மூன்று கட்டங்களில் முன்வைக்கப்பட்டு, மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த பிறகே புதிய பாடத்திட்டம் குறித்துத் துணைவேந்தர் அறிவிக்க வேண்டும். ஆனால், மாநில உயர்கல்வித் துறை அமைச்சருக்கே தெரியாமல், பல்கலைக்கழக நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல், கொல்லைப்புற வழியாக பகவத் கீதையைக் கட்டாயப் பாடமாக கொண்டு வந்தது அண்ணா பல்கலைக் கழகம். இந்தச் சதித்தனமான திணிப்புக்கு எதிராகக் கடுமையான கண்டனங்கள் எழுந்தவுடனேயே, “இது கட்டாயம் அல்ல, விருப்பப் பாடம்தான்!” எனத் துணை வேந்தர் சூரப்பா முதல் பா.ஜ.க. நாராயணன் வரை அனைவரும் சமாளித்தார்கள்; சமாளித்தும் வருகிறார்கள்.

“புதிய கண்டுபிடிப்புகள், உலகச் சந்தையில் பொறியியலின் தாக்கம், காலத்திற்கு ஏற்ப வளரும் தொழில்கள் எனப் பல்வேறு விசயங்களைப் பொறியாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து, அதற்கேற்ப தமது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என 28.09.2019 அன்று மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் 23 நிறுவனங்களைச் சேர்ந்த மனிதவள வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கு நேர்மாறாகக் காலத்தால் பின்தங்கிய, பிற்போக்குத்தனமான, மனித சமத்துவத்துக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருக்கும் கீதையைப் பாடத்திட்டத்தில் புகுத்துகிறார்கள் எனில், இவர்களின் நோக்கம்தான் என்ன?

கல்வியை கார்ப்பரேட்மயமாக்குவது மட்டுமின்றிக் காவிமயமாக்குவதும் ஆர்.எஸ்.எஸ்.-ன் அடிப்படைத் திட்டங்களுள் ஒன்று. இந்த அடிப்படையில்தான் மாநில அரசிடமிருந்து கல்வியுரிமையைப் பறிக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை-2019 அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஆரம்பக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரையிலும் இந்தி, சமஸ்கிருத மொழி பாடத்திட்டத்தைக் கட்டாயமாக்குவது, இந்திய வரலாற்றை ஆர்.எஸ்.எஸ்.-ன் நோக்கங்களை ஈடுசெய்யும் வண்ணம் மாற்றியமைத்துக் கற்பிப்பது, வேத கணிதம், வேத விஞ்ஞானம் ஆகிய பார்ப்பன சரக்குகளைப் பாடத் திட்டத்திற்குள் கொண்டுவருவது, வேத கல்வி வாரியம் அமைப்பது, மாணவர்களுக்கு அறநெறிகளைப் போதிப்பது என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளைத் தன்னார்வலர்களாக நுழைப்பது என அடுத்தடுத்துப் பல மாற்றங்களைப் புகுத்தி வருகிறது, மோடி அரசு. இந்த அடிப்படையில்தான் நவீன அறிவியலோடு தொடர்புடைய பொறியியல் கல்லூரி பாடத் திட்டத்தில் அறிவியலுக்குத் தொடர்பேயில்லாத பகவத் கீதை திணிக்கப்படுகிறது.

இந்தியைத் திணிக்காதே என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தும் சர்வதேச ஒற்றுமைக்கான வடகிழக்கு மன்றத்தின் மாணவர்கள்.

இத்தகைய திணிப்புகளின் வழியாக ஆர்.எஸ்.எஸ். எதைச் சாதிக்க முனைகிறது? இன்றைய நிலையில் சூத்திர, பஞ்சமர்களுக்குக் கல்வியை நேரடியாக மறுக்க வழியில்லை. எனினும், அடித்தட்டு மக்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிக்கும் விதத்தில் கல்விப் புலத்தில் பல்வேறு மாற்றங்களைத் தரம் என்ற பெயரில் கொண்டு வருகிறார்கள்.

3, 5, 8, 10, 11, 12-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள், மருத்துவக் கல்வியில் நீட் தேர்வு மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகள், 8-ம் வகுப்பு வரை எந்தவொரு மாணவனையும் ஃபெயிலாக்கக்கூடாது என்ற விதி திருத்தப்பட்டிருப்பது, குறைவான எண்ணிக்கை கொண்ட அரசுப் பள்ளிகளை மூடுவது, கல்லூரிகளுக்குத் தன்னாட்சி வழங்குவது மற்றும் தொழிற்கல்வியைப் புகுத்துவது ஆகியவை அனைத்துமே மேற்சொன்ன நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய வழிகளே.

இத்தடைகளையெல்லாம் தாண்டி ஒடுக்கப்பட்ட சாதி – வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியில் இடம்பெற்றுவிட்டாலும், அவர்களிடம் பார்ப்பன மேலாண்மையைப் பதிய வைக்கும் நோக்கிலேயே உயர்கல்விப் புலத்தில் பகவத் கீதை, சமஸ்கிருத வகுப்புகள் கொண்டு வரப்படுகின்றன. பார்ப்பன மேலாண்மை, சாதி ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமை உள்ளிட்ட பிற்போக்குக் கருத்துக்களை நயமான வார்த்தைகளிலும் பண்டைய பாரதப் பாரம்பரியம் என்ற பெயரிலும் இயல்பாக்கத் திட்டமிடுகிறார்கள்.

படிக்க :
♦ சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு
♦ பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை ! ம.க.இ.க கண்டனம்

பீற்றிக் கொள்ளப்படும் பாரத பாரம்பரியத்தில் பார்ப்பன வைதீக மரபு மட்டும்தான் உள்ளதா? வேதங்களை மறுத்த மரபுகள் உள்ளன. மேலும், புத்த, ஜைன, இஸ்லாமிய மதப் பிரிவுகளும், சைவ சித்தாந்தப் போக்குகளும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு வேத, சமஸ்கிருத மரபிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதிலிருந்தே பார்ப்பன பாசிஸ்டுகளின் உள்நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

ஏற்கெனவே உயர் கல்வி நிலையங்களில் சாதிப் பாகுபாடு, குறிப்பாக தாழ்த்தப்பட்ட மாணவர்களை ஒதுக்கும் போக்கு மேலோங்கி வருவதை ரோஹித் வெமுலா உள்ளிட்ட மாணவர்களின் தற்கொலைச் சாவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. இந்நிலையில் சாதிப் பாகுபாடுகளைக் களையும் முற்போக்குக் கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பரப்புவதற்குப் பதிலாக, வருணப் பாகுபாட்டை நியாயப்படுத்தும் கீதையைப் பாடத் திட்டத்தில் சேர்ப்பது, அத்தகைய சாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் குற்றங்களைக் கருத்தியல்ரீதியாக நியாயப்படுத்துவதற்கே பயன்படும்.

பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தற்போதைய தேவையென்ன? முதலாவதாக, புற்றீசல் போலப் பெருகியிருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் அடிக்கட்டுமான வசதிகளும், கல்வி கற்பிக்கும் திறனும் தரமிக்கதாக அரசால் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். பொறியியல் படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடிய வகையில் பொருளியல் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

ஆனால், இதற்கு நேர்மாறாக மாணவர்களின் தனிமனித ஆளுமை (personality Skill), மாணவர்களுக்கு மேலாண்மைத் திறமை (Managerial Skill), மானுடவியல் (Humanity) பற்றிப் பயிற்றுவிப்பதாகக் கூறி கீதையை படிக்கச் சொல்வது அம்மாணவர்களை ஏமாற்றும் சதிச் செயலாகும்.

இந்திரா காந்தி கொண்டுவந்த அவசர நிலை ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் தீய நோக்கில் “பேச்சைக் குறை, உழைப்பைப் பெருக்கு” என்ற முழக்கம் அரசால் முன்வைக்கப்பட்டது. மோடி அரசோ அதனிடத்தில், “கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே” என உபதேசிக்கும் கீதையை மாணவர்களிடத்தில் புகுத்துகிறது.

ஊரான்

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

எனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்

“அப்பா.. எனது பிரச்சினையே
எனது பெயர்தான்”
செல்போனில் வைக்கப்பட்டிருந்த
ஒரு பெண்ணின்
தற்கொலைக் குறிப்பின் வாசகம்
கண்ணில் விழுந்த ஒரு துரும்பைபோல
உறுத்துகிறது

உங்களுக்கு அது விசித்திரமாக இருக்கலாம்
ஒருவர் பெயர் அவரை
தற்கொலைப்பாதை வரை
அழைத்துச் செல்லுமா எனில்
ஆம், அழைத்துச் செல்லும்
அவளது பெயர்
குறுவாளின் பளபளக்கும் முனையாக
அவளை தொடர்ந்து வந்துகொண்டிருந்தது
பிறகு ஒரு நாள் அது
அவள் தொண்டையில் இறங்கியது

எனக்கும் அப்படி இருக்கிறது
ஒரு பெயர்
நான் அந்தத் துயரத்தை நீண்டகாலமாக
சுமந்துகொண்டிருக்கிறேன்

அந்தப் பெயரினால்
நான் சில இடங்களில்
வாசல்படியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறேன்
சில இடங்களில்
சகிப்புத் தன்மையுடன்
வரவேற்பரை வரைக்கும்

பாதுகாப்பு மிக்க
நுழைவாயில்களில்
காவலர்கள் எல்லோரையும்
ஒரு முறை சோதித்தார்கள் எனில்
என்னை மட்டும் மூன்றுமுறை சோதித்தார்கள்
என்னை ஒரு முறை
என் கடவுளை ஒரு முறை
என் பெயரை ஒரு முறை

என் பெயரினால்
எனது விண்ணப்பங்கள்
எல்லா இடங்களிலும்
கடைசிக்கு தள்ளப்படுகின்றன

சுங்கச் சோதனைகளில்
சந்தேகத்தின் பெயரில்
என் ஆசன வாயில் திறந்துபார்க்கப்படுகிறது

படிக்க :
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்
♦ உங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் ! மனுஷ்யபுத்ரன்

என் சிநேகிதி
உன் வீட்டில்
எப்போதும் இறைச்சி வாடையும்
மீன் கவுச்சியும் அடிக்குமா என்று கேட்கிறாள்

என் ரத்தத்தில்
வெடிமருந்து வாசனை இருக்கலாம் என
என் நண்பர்களே சந்தேகிக்கிறார்கள்

பிறர் தன் திறமையை
ஒருமுறை நிரூபித்தால்
நான் இருமுறை நிரூபிக்க வேண்டும்
பிறர் தன் விசுவாசத்தை
ஒருமுறை நிரூபித்தால்
நான் நான்குமுறை நிரூபிக்க வேண்டும்
பிறர் தன் தேசபக்தியை
ஒரு முறை நிரூபித்தால்
நான் நூறுமுறை

நான் என் பெயருக்காக
வேட்டையாடப்பட்டபோது
ஓடி ஒளிந்துகொள்ள முயன்றேன்
அவர்கள் என் பெயரின் வாசனையால்
நான் இருக்குமிடத்தை
எளிதில் தெரிந்துகொண்டார்கள்

நான் பிறகு
ஒரு தலைமறைவு குற்றவாளிபோல
வேறொரு பெயரை சூடிக்கொண்டேன்
அவர்கள் நள்ளிரவில்
என்னைத் தட்டி எழுப்பினார்கள்
என் சொந்தப் பெயரின் அடையாள அட்டையை
என் முகத்தில் விட்டெறிந்தார்கள்

நான் கடற்கரை மணலில்
வெறுமனே உட்கார்ந்திருக்கிறேன்
யாரோ ஒருவன்
என்னை உற்றுப்பார்க்கிறான்
” ஏன் இங்கிருக்கிறாய்..
அரேபிய பாலைவனத்திற்குபோ”‘ என்கிறான்

ஒரு இளம் பெண்
தன் பெயரின் சுமைதாங்காமல்
தூக்கில் தொங்குகிறாள்
அவள் உடலின் எடையைவிடவும்
அந்த பெயரின் எடை
ஆயிரம் மடங்கு கனத்ததாக இருக்கிறது

அவள் இறக்கிறாள்
அவளது பெயர் இறக்கவில்லை
அது துடித்துக்கொண்டிருக்கிறது
காயம்பட்ட ஒரு பறவையாக

நன்றி: மனுஷ்ய புத்திரன்

disclaimer

காஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி !

காஷ்மீர் போர் குறித்த பா.ஜ.க.-வின் வரலாற்று மோசடி !

“1947- காலக் கட்டத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஜம்மு காஷ்மீர் களத்தில் நடந்த போரில் ஜவஹர்லால் நேரு சமரசக் கொள்கையைக் கடைப்பிடித்தார். அன்று மட்டும் இந்திய இராணுவத்தை அவர் சுதந்திரமாக இயங்க அனுமதித்திருந்தால், ஒன்றுபட்ட காஷ்மீரே இந்தியாவின் வசம் வீழ்ந்திருக்கும்” என சங்கப் பரிவாரங்கள் பல காலமாக வாதிட்டு வருகின்றன. இந்த வாதம் ஒரு வரலாற்று மோசடி என்பதை இந்திய இராணுவத்தின் ஆவணங்களே அம்பலப்படுத்துகின்றன.

வழக்குரைஞரும் அரசமைப்புச் சட்ட வல்லுநருமான ஏ.ஜி.நூரானி, தி வயர் இணையதளத்தில் எழுதிய “காஷ்மீர், சட்டப்பிரிவு 370 முதல் பிரிவினை வரை: நேருவுக்கு எதிரான பா.ஜ.க. பரப்பும் வெறுப்புக்கு அடித்தளமாக அமைந்திருப்பவை பொய்களே” எனும் கட்டுரையில் இந்திய இராணுவம் வெளியிட்டிருக்கும் “ஜம்மு காஷ்மீரில் இராணுவ நடவடிக்கைகளின் வரலாறு” என்ற ஆவணத்திலிருந்து அப்பொழுது சமாதான உடன்படிக்கை அவசியமாக இருந்ததை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

அப்பகுதியை புதிய ஜனநாயகம் வாசகர்களுக்குச் சுருக்கமாக மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறோம்.

  • ஆசிரியர் குழு.

♦ ♦ ♦

பிரதமர் நேருதான் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்தார். அதன் விளைவு, காஷ்மீரின் அந்தப் பகுதி இப்பொழுது பாகிஸ்தான் வசமாகிவிட்டது. இத்தேசத்தின் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்தவரைப் பொருட்படுத்தாமல் நேரு தன்னிச்சையாக எடுத்த முடிவால் ஏற்பட்ட நிலை இது. பிறரது கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கப்பட்டு இருக்குமானால் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீர் இந்தியாவின் வசம் இருந்திருக்கும் என்று அமித்ஷா உள்ளிட்டு சங்கப் பரிவாரத்தினர் கூறிவருகின்றனர்.

இது அப்பட்டமான பொய். பட்டேல் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்ற அமித்ஷாவின் கூற்று பொய் என்பதை பட்டேலின் கடிதப் போக்குவரத்துகள் தொகுதி தெளிவாக்குகிறது.

Kashmir-History
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வந்திறங்கும் இந்திய இராணுவச் சிப்பாய்கள். (கோப்புப் படம்)

இராணுவ வரலாற்று நிபுணர் S.N. பிரசாத் அவர்களால் பேட்டிகள் மற்றும் அதிகாரபூர்வ ஆவணங்களின் அடிப்படையில் இது தொடர்பான இராணுவ விஷயங்கள் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளன. இவர் பாதுகாப்பு அமைச்சகத்தின் வரலாற்றியல் பிரிவு இயக்குனராக பணியாற்றியவர். ஜம்மு காஷ்மீரில் இராணுவ நடவடிக்கைகளின் வரலாறு (1947-48) என்ற தொகுப்பு பாதுகாப்பு அமைச்சகத்தின் வரலாற்றுப் பிரிவால் 1987-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.  அதில் விவரிக்கப்பட்ட அன்றைய களநிலை பற்றிய வரலாற்றுப் பகுப்பாய்வு இங்கு விரிவாகத் தரப்படுகிறது.

முறையான பாகிஸ்தான் இராணுவத்தின் காலாட்படை டிவிசன்கள் இரண்டும், ஆசாத் காஷ்மீர் இராணுவம் என்றழைக்கப்பட்ட ஒரு காலாட்படை டிவிசனும் டிசம்பர், 1948-ல் எதிரியின் தரப்பில் போர்க்களத்தில் இருந்தன. இவை பாகிஸ்தான் இராணுவத்தின் 14 காலாட்படை பிரிகேடுகள் அல்லது 23 காலாட்படை பட்டாலியன்கள் மற்றும் ஆசாத் காஷ்மீர் இராணுவத்தின் 40 காலாட்படை பட்டாலியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. கூடுதலாக 19,000 சாரணர்கள் மற்றும் முறைசாராப் போர் வீரர்களும் இருந்தனர்.

இதற்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் 12 பிரிகேடுகள் கொண்ட 2 காலாட்படை டிவிசன்கள், மொத்தத்தில் முறையான இராணுவத்தின் சுமார் 50 காலாட்படை பட்டாலியன்கள் மற்றும் இந்திய மாநிலங்களின் படைகள், கூடுதலாக ஜம்மு காஷ்மீர் மக்கள் படை மற்றும் கிழக்கு பஞ்சாப் மக்கள் படையின் 2 பட்டாலியன்கள் நம்மிடம் இருந்தன.

இராணுவ பலம் தொடர்பான மேற்சொன்ன ஒப்பீட்டு விபரங்களை உத்தேச மதிப்பீடுகள் எனக் கொண்டாலும், ஜம்மு காஷ்மீரில் எதிரிப் படை இந்திய இராணுவத்தைவிட எண்ணிக்கையில் விஞ்சி நின்றிருக்கிறது என்பது தெளிவு.  இத்தகைய சூழலில், எதிரியைக் காட்டிலும் தீரமும், திறமையும் ஒருகால் கூடுதல் சுடுதிறனும் அதனுடன்கூடச் சின்னஞ்சிறு விமானப்படையின் விலைமதிப்பற்ற உதவியும் சேர்ந்து போர்க்களத்தில் இந்திய இராணுவத்தின் கை ஓங்கியிருப்பதைச் சாத்தியமாக்கின.

படிக்க:
காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !
♦ நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !

1948-ம் ஆண்டின் இறுதியில் இந்திய இராணுவத்திடம் 127 காலாட்படை பட்டாலியன்கள் இருந்தன. இவற்றில் சுமார் 50 பட்டாலியன்கள் ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் இருந்தன. 29 பட்டாலியன்கள் அதிமுக்கியமான இந்திய – பாகிஸ்தான் எல்லையைக் காக்கும் பணியில், கிழக்கு பஞ்சாபில் இருந்தன. சட்டம் –  ஒழுங்கு பராமரிப்புக்கு இன்னமும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ரசாக்கர்கள் இருந்த ஹைதராபாத்தில் 19 பட்டாலியன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு வலுவான இராணுவ பலம் தேவை என்று ஹைதராபாத் இராணுவ கவர்னர் கோரியிருந்தார். இவ்வாறாக உள்நாட்டுப் பாதுகாப்பையும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் விரிந்த எல்லைப் பாதுகாப்பு பணியையும் செய்வதற்கு வெறும் 29 பட்டாலியன்களே பாக்கி இருந்தன.  இதுவே பிற பகுதிகளின் அவசரத் தேவைக்கான ரிசர்வ் பட்டாளமாகவும் இருக்க வேண்டியிருந்தது.

ஜம்மு காஷ்மீரின் மொத்த இராணுவத்துக்கும் தேவையான பொருட்கள் மற்றும் தளவாடங்களைக் கொண்டு செல்வதற்கு ஒரேயொரு இருப்புப்பாதை மற்றும் ஒற்றைத்தடத் தார்சாலைதான் இருந்தது. இந்தச் சாலையோ மிக நீண்டது, பலவீனமானதும் கூட.  இதன் குறுக்கே ஏராளமான குறுகலான பாலங்கள் வேறு.

Kashmir-History
போர்க்களத்தில் இந்தியச் இராணுவச் சிப்பாய்கள். (கோப்புப் படம்)

பின்தளத்திலிருந்து போர்முனைக்கு பொருட்களையும் தளவாடங்களையும் கொண்டு செல்வதில் இத்தகைய இடர்ப்பாடுகள் இருந்த காரணத்தினால், ஜம்மு காஷ்மீரில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் துருப்புகளை பராமரிக்க முடியாது என்ற நிலைமையே இந்தியாவுக்கு இருந்தது.

பாகிஸ்தானுக்கு அத்தகைய எந்த ஒரு வரம்பும் இல்லை. பாகிஸ்தானின் பின்தளப் பிரதேசத்திலிருந்து ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு எண்ணற்ற சாலைத் தொடர்புகள் இருந்தன. அதிலிருந்து குறுந்தடங்கள் மற்றும் சாலைகள் மூலமாக போர்க்களத்தின் முன்னணிப் பகுதியை அவர்கள் எளிதில் அடைய முடியும்.

இவற்றால் ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் கடுமையான இடர்ப்பாடுகளுக்கு மத்தியில்தான் செயல்பட வேண்டியிருந்தது. ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் மட்டும் நடத்தப்படும் போர் நடவடிக்கைகளின் மூலமாக எதிரியை முறியடிப்பது என்பது சாத்தியமற்றதாக இருந்தது. ஒரு தீர்மானகரமான வெற்றியைச் சாதிக்க வேண்டுமானால் பஞ்சாப்பின் விரிந்த சமவெளியில் போரை நடத்துவதற்கு பாகிஸ்தானை இழுத்து வரவேண்டியது தேவையாய் இருந்தது. எனவே, ஜம்மு காஷ்மீர் முழுவதையும் எதிரியிடம் இருந்து விடுவிக்க வேண்டுமானால் பாகிஸ்தானுடன் ஒரு முழுமையான போரில் இறங்கவேண்டியது அவசியமாக இருந்தது. (பக்கம்: 373-375)

காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளை இந்தியா கைப்பற்றிக் கொண்டது.  1948 – 49 -ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு முழு வீச்சான போரை நடத்தும் நிலையில் இந்தியா இல்லை.

படிக்க:
தன்னாட்சி மலைக் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கு : லடாக் மக்கள் போராட்டம் !
♦ திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

பிரச்சினையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பார்வைக்குக் கொண்டுசெல்லுதல்

ன்றைய போர்க்கள நிலைமைகளில்  உடனடிப்  போர் நிறுத்தம் அத்தியாவசியமானதாக இருந்தது.  இந்தியா அதற்கான செயல்முனைப்பு காட்டாது இருந்திருந்தால், பாகிஸ்தான் முதலில் ஐ.நா. சென்று இந்தியாவை எதிர்மனுதாரர் ஆக்கியிருக்கும். டிசம்பர் 8, 1947-ல் லியாகத் அலி கானைச் சந்திப்பதற்கு மவுண்ட்பேட்டனும் நேருவும் லாகூர் சென்றிருந்தபோதுதான் முதன் முதலின் இந்தப் பிரச்சினை விவாதத்துக்கு வந்தது. அவர்கள் ஒரு வரைவு ஒப்பந்தம் தொடர்பாக விவாதித்தனர். இப் பிரச்சினையை ஐ.நா.வின் முன் வைப்பதற்கு லியாகத் அலி கான் சம்மதம் தெரிவித்தார். நேருவை இதற்குச் சம்மதிக்கச் செய்யும் முயற்சியில் இறங்கினார் மவுண்ட்பேட்டன்.

1947, டிசம்பர் 21-22 தேதிகளில் மீண்டும் டெல்லியில் அவ்விவாதம் தொடர்ந்தது.  கடைசி வரையிலும் இப்பிரச்சினையை ஐ.நா.வுக்கு எடுத்துச் செல்லும் கோரிக்கையை நேரு கடுமையாக எதிர்த்துவந்தார் எனினும், டிசம்பர் அன்று அவர் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். இதற்கான வரைவில் இடம்பெற்றிருந்த சுதந்திர காஷ்மீர் என்ற தெரிவை நீக்கிவிட்டு, காந்தியும் இதற்கு ஒப்புதல் அளித்தார். (எஸ். கோபால்; நேரு; தொகுதி-2; பக்கம்-22)

மொழியாக்கம் : கதிர்

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

ஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் !

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி ஃபாத்திமா லத்தீஃப்-ன் மரணத்திற்கு நீதி கேட்டு சுமார் 200-க்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி. மாணவர்கள் சி.எல்.டி வளாகத்தின் முன்பு ஒன்றிணைந்தனர். நேர்மையான, வெளிப்படையான நிர்வாக விசாரணையும், போலீசு விசாரணைக்கு ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தங்களது கோரிக்கையில், மாணவர்களின் புகார்கள் மற்றும் குறை தீர்க்கும் கமிட்டியை உருவாக்க வேண்டும் என்றும் மாணவர்கள் பேரவையால் ஒருமனதாக நிறைவேற்றப்ப்படும் மாணவர் நல விவகாரங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தக் கூடுதலில் மாணவி பாத்திமா லத்தீஃபின் மரணத்திற்கான பல்வேறு காரணங்கள் குறித்துப் பேசிய மாணவர்கள் பின்னர் அங்கிருந்து பேரணியாகச் சென்று ஐ.ஐ.டி இயக்குனரிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

படிக்க :
ரோஹித் வெமுலா முதல் நஜீப் வரை : தீவிரமடையும் பார்ப்பன பாசிசம்
♦ ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?

***

Today, around 200 students of IIT Madras gathered outside CLT to demand justice for the death of Fathima Lathief. The students demanded for a fair and transparent internal inquiry and cooperation to the police investigation.

The students also demanded for forming a complaints and grievance redressal committee and the necessary mechanisms for student well-being as unanimously decided by the Students Legislative Council.

The students then discussed on the various factors behind the death of Fathima. Then, they rallied to the Director’s office and submitted to him a representation containing their demands.

***

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்: அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் – முகநூல் பக்கத்திலிருந்து.

தீய சொல் இதயத்தில் கல்லாக விழும் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 06

மார்ச் 7: “சின்ன” விஷயங்களைப் பற்றி

காலை. வகுப்புத் துவங்கும் மணி இன்னமும் அடிக்கவில்லை.

நான் கரும்பலகையில் பயிற்சிகளை எழுதுகிறேன். சில சிறுவர் சிறுமியர் என்னிடம் ஓடி வந்து ”இலிக்கோ அழுகிறான்” என்றனர்.

இலிக்கோ பொறுமையுள்ள சிறுவன். அவன் அழுகிறான் என்றால் உண்மையில் ஏதோ நடந்துள்ளது என்று பொருள். “ஏன் அழுகிறான்?”

இலிக்கோ, மேல்கோட்டுகளை மாட்டும் இடத்தில் மூலையை நோக்கியபடி நிற்கிறான்.

“ஏனெனில் சான்த்ரோ அவனைத் தொந்தரவு செய்தான்!”

”இலிக்கோவிற்கு முடி வெட்டியிருக்கின்றனர், சான்த்ரோ ஏதோ கேலி செய்கிறான்!”

ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? சான்த்ரோவை அருகே அழைத்து, அவன் மோசமாக நடந்து கொண்டதாக எல்லோருக்கும் கேட்கும்படி சொல்லி, இலிக்கோவிடம் மன்னிப்புக் கேட்கும்படி கூறலாம். இது ஒரு வழி.

என்னிடம் ஓடி வந்த சிறுமிகளிடம், இப்படி நண்பனுக்கு விரோதமான வகையில் நடந்து கொண்டதற்காக சான்த்ரோவை வெட்கப்படும்படி சொல்லலாம். இது இரண்டாவது வழி.

இலிக்கோவை அருகே அழைத்து, அவனுக்கு எப்படி முடிவெட்டியுள்ளனர் என்று பார்த்து, “நீ அழகாக, உண்மையான ஆண் மகனைப் போல் ஆகியிருக்கிறாய். எனக்கும் சிறு வயதில் இப்படி முடி வெட்டிக் கொள்ளப் பிடிக்கும்” எனலாம். யாராவது அவனைக் கேலி செய்ததை குறிப்பிடாமலிருக்கலாம். இது மூன்றாவது வழி.

இந்த சம்பவத்திற்கு எவ்வித முக்கியத்துவமும் தராமல், “நான் வேலையாய் இருக்கிறேன்” என்று சிறுமிகளிடம் சொல்லலாம். இது நான்காவது வழி. வேறு வழிகளும் இருக்கக் கூடும். இதில் எதைத் தேர்ந்தெடுப்பது? நான் சான்த்ரோவைத் தண்டித்தால் இதன் மூலம் வகுப்பு நண்பர்கள் முன் அவனை நான் இழிவுபடுத்தியதாக ஆகக் கூடும். ஒருவேளை அவன் இலிக்கோவை கேலி செய்யவே விரும்பவில்லையோ? கேலி செய்யக் கூடாதுதான், ஆனால் தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்வதும், நாசூக்காக, கவனமாக நடக்கத் தெரிந்து கொள்வதும் குழந்தைகளுக்கு அவ்வளவு எளிதல்ல.

சான்த்ரோவை வெட்கப்படுத்தும்படி, கண்டிக்கும்படி சிறுமிகளிடம் சொன்னால் அவர்கள் அவனை வெட்கப்படுத்தும் ”முறையில்” பின் சான்த்ரோ சிறுமிகள் மீது குற்றம் சாட்டுவான். அப்போது புதிய பிரச்சினை தோன்றும். இதைத் தீர்ப்பது இன்னமும் சிக்கலாயிருக்கும்.

நிலவரத்தைச் சுமுகமாக்க, எனது செல்வாக்கை மட்டும் பயன்படுத்தினால் (“நீ அழகாகி விட்டாய்”) ஒருவேளை மற்றவர்கள் (என்னை ஆதரிக்க வேண்டும் என்பது தெரியாமலேயே) என்னை ஆதரிக்காமலிருக்கலாம்.

இலிக்கோவின் புண்படுத்தப்பட்ட சுயமரியாதையை புனர் நாட்ட குழந்தைகள் என்னை ஆதரிக்க வேண்டியது அவசியம். இப்படி நடந்தால் சான்த்ரோ தானாகவே கண்டிக்கப்பட்டவனாவான். தன் நடத்தையைப் பற்றி சான்த்ரோ யோசித்துப் பார்க்கும்படி செய்ய, இதே போல் எதிர்காலத்தில் நடக்காமலிருக்க நான் அவனுடன் நேருக்கு நேராக, விளையாட்டுத்தனமின்றிப் பேச வேண்டும். – நான் தொடர்ந்து கரும்பலகையில் பயிற்சிகளை எழுதிய படியே அருகில் உள்ள சிறுவர்களிடம் சன்னமான குரலில் சொல்கிறேன்:

“நான் இப்போது இலிக்கோவை அருகே அழைத்து அவனுக்கு ஒன்று சொல்வேன். நீங்கள் என்னை ஆதரிக்க வேண்டும். சரியா?” சிறுவனைக் கூப்பிடுகிறேன்: ”இலிக்கோ, அந்தப் பெரிய ஸ்கேலைக் கொண்டு வா!”

இலிக்கோ கண்ணீரைத் துடைத்து விட்டு, ஸ்கேலைக் கொண்டு வருகிறான்.

சான்த்ரோ தூரத்தில் நிற்கிறான். குழந்தைகள் என்னிடம் முறையிட்டது அவனுக்குத் தெரியும், எனவே, தொலைவில் நின்று என்ன நடக்கும் என்று பார்க்கிறான்.

“நீ முடி வெட்டிக் கொண்டாயா?” என்று நான் வியப்பும் மகிழ்ச்சியுமாகக் கேட்கிறேன். ”எங்கே காட்டு பார்க்கலாம்!”

இலிக்கோ மெதுவாகத் தொப்பியைக் கழட்டுகிறான்.

“திரும்பு! உனக்கு முடிவெட்டியவர் திறமையானவர் போல் தெரிகிறது! நன்கு முடி வெட்டியிருக்கிறார்! சிறு வயதில் எனக்கு இம்மாதிரி ஒட்ட வெட்டிக் கொள்ளப் பிடிக்கும். ஆனால் அப்போதெல்லாம் இது மாதிரி அழகாக வெட்ட மாட்டார்கள். என்னைப் பார்த்து சிறுவர்கள் சிரித்தனர், கேலி செய்தனர். ஆனால் நான் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளவேயில்லை. இரண்டு, மூன்று வாரங்களில் தலை நிறைய முடி வளர்ந்து விட்டது… இப்படி உன்னை எனக்கு அதிகம் பிடிக்கிறது, நீ உண்மையான ஆண்மகன் போலிருக்கிறாய். அப்படித்தானே, சிறுவர்களே?”

படிக்க:
கேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை !
100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை

உடனே சிறுமிகளும் சிறுவர்களும் என்னை ஒரு மனதாக ஆதரித்தனர். அப்போது தான் வகுப்பறையில் நுழைந்தவர்கள் கூட, நடந்தது என்ன என்று தெரியாமலேயே நான் சொல்வதை ஆமோதித்தனர்.

ஏல்லா: “இலிக்கோ இப்படியிருப்பது எனக்குப் பிடித்துள்ளது!”

கீகா: “எனக்கும் இப்படி முடிவெட்டிக் கொள்ள ஆசையாக உள்ளது!”

இயா: “நன்றாகத்தானே இருக்கிறது! நீ ஏன் தொப்பியைக் கழற்ற வெட்கப்படுகிறாய்?”

“பாருங்கள், உங்களுக்காக எப்படிப்பட்ட கணக்குகளை நான் தயார் செய்கிறேன்!” என்று வேண்டுமென்றே எல்லோர் கவனத்தையும் இலிக்கோ முடி வெட்டியதைப் பற்றிய பேச்சிலிருந்து திசை திருப்புகிறேன்.

பாடவேளையின் போது குழந்தைகள் என் காதில் தம் விடைகளைச் சொன்ன போது நான் சான்த்ரோவை அணுகி அவன் காதில் மெதுவாகச் சொன்னேன்: “இந்தக் கணக்கை நீ சரியாகப் போட்டாய். ஆனால் நீ இலிக்கோவிடம் நடந்து கொண்ட விதம் நன்றாக இல்லை! நீ உண்மையான ஆண்மகனாக இருக்க விரும்பினால் இடைவேளையின் போது இலிக்கோவிடம் சென்று “என்னை மன்னித்து விடு, இலிக்கோ, நான் உன்னைக் கேலி செய்ய விரும்பவில்லை” என்று சொல். நீ எப்படி இதைச் செய்கிறாய் என்று நான் பார்த்துக் கொண்டிருப்பேன்!”

சிறிது நேரம் கழித்து இலிக்கோவிடம் சென்று காதில் மெதுவாகச் சொன்னேன்: “சான்த்ரோ உன்னிடம் வந்து மன்னிப்பு கேட்டால் மன்னித்து விடு, எல்லாவற்றையும் மறந்து விட்டதாகச் சொல். சரியா?”

இவர்கள் இதே மாதிரி நடந்து கொண்டனர்…… முதல் இடைவேளையின் போது சிறுமிகள் தேன்கோவையும் வாஹ்தாங்கையும் என்னிடம் அழைத்து வந்தனர்.

”இவர்கள் ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தனர்” என்று மாயா கோபத்தோடு சொன்னாள்.

நான் என்ன செய்வது? சிறுவர்களைத் தண்டிப்பதா? இவர்கள் தம் செயலைப் பற்றித் தாமே யோசித்துப் பார்க்குமாறு விடுவது தான் நல்லது. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.

“குழந்தைகளே, இப்போது நான் இவர்களுக்கு ஒரு வேலை தரப் போகிறேன். இதைச் செய்து முடித்ததும், இப்படி ஒருவருடன் ஒருவர் கலந்து பழகக் கூடாது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்களென எண்ணுகிறேன். இந்தப் பழமொழிகள் எழுதிய 40 தாள்கள் எல்லோருக்கும் தருவதற்காக எனக்கு வேண்டும்” என்று குற்றம் புரிந்தவர்களைப் பார்த்துக் கூறுகிறேன். ”இந்தப் பக்கத்தை எடுத்துச் சென்று தலா 20 தாள்களில் எழுதி வாருங்கள். இடைவேளைகளில் உட்கார்ந்து எழுதுங்கள். நாளை மறுநாள் முடிக்க வேண்டும். நான் ஏன் இந்த வேலையை உங்களுக்குத் தருகிறேன் என்று புரியும் என எண்ணுகிறேன். இதோ தாள், இதில் எழுதுங்கள்!”

ஒரு தாளில் பின்வரும் நான்கு பழமொழிகளை எழுதித் தருகிறேன்:

நல்ல வார்த்தை வாளையும் கீழே போடச் செய்யும்.

நல்ல வார்த்தையால் உலகம் ஒளிமயமாகும்.

கெட்ட வார்த்தை நண்பனையும் விரோதியாக்கும்.

தீய சொல் இதயத்தில் கல்லாக விழும்.

சிறுவர்கள் இதை வாங்கிக் கொண்டு உடனே எழுத உட்கார்ந்தனர்.

ஒரு வாரத்திற்குப் பின் “நல்ல வார்த்தை – மருந்து” எனும் தலைப்பில் வகுப்பில் ஒரு கலந்துரையாடலை நடத்துவேன். தேன்கோவும் வாஹ்தாங்கும் அனேகமாக அதில் தீவிரப் பங்கேற்று தம்மைப் பற்றி நிறையப் பேசுவார்களென எண்ணுகிறேன்…

….பெரிய இடைவேளையின் போது குழந்தைகளைப் பூங்காவிற்கு அழைத்துச் சென்றேன். குழந்தைகள் விளையாட ஆரம்பித்தனர். நீயாவும் ஏல்லாவும் காணாமற்போய் விட்டார்கள் என்பதை திடீரெனக் கண்டுபிடித்தோம். அவர்களைத் தேட ஆரம்பித்தோம். எனக்குக் கவலை உண்டாயிற்று. குழந்தைகளும் கவலைப்படுகின்றனர். அவர்கள் எங்கே போயிருக்க முடியும்? அனுமதியின்றி அவர்கள் எப்படிப் போகலாம் என்று குழந்தைகள் கண்டிக்கின்றனர். இடைவேளை முடிவடைகிறது. இறுதியாக அவர்கள் வயலில் பூத்த பூக்களை கை நிறையக் கொண்டு வருகின்றனர்.

“இது உங்களுக்கு!” என்று கூறி பூக்களை என்னிடம் நீட்டுகின்றனர்.

நான் பதில் சொல்லும் முன்னரே எல்லாப் பக்கங்களில் இருந்தும் குழந்தைகளின் கோபக் குரல்கள் ஒலிக்கின்றன.

”நீங்கள் எங்கே போனீர்கள்? ஏன் அனுமதியின்றி சென்றீர்கள்? எங்கள் விளையாட்டைக் கெடுத்து விட்டீர்கள்!”

“நாங்கள் ஆசிரியருக்கு பூ பறிக்கப் போனோம்” என்று ஏல்லா சமாதானம் சொல்கிறாள்.

”அவருக்கு பூக்கள் எதற்கு, நீங்கள் அவருக்கு எவ்வளவு வருத்தம் ஏற்படுத்தினீர்கள் தெரியுமா!”

“உங்களுக்காக அவர் எவ்வளவு கவலைப்பட்டார் தெரியுமா!”

“உங்களுக்கு வெட்கமாயில்லையா!”

“நாங்கள் எல்லா இடங்களிலும் உங்களைத் தேடினோம்!”

குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் எப்படி புத்தி சொல்கின்றார்கள் என்பதைப் பார்த்த நான், இந்தப் பொதுக் கோபத்தில் தலையிடாமல் இருப்பது தான் நல்லது என்று முடிவு செய்தேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

நூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ?

து ஏதோ புதிதாக தயாரிக்கப்பட்ட கல்விக்கொள்கை அல்ல. ஏற்கனவே 2000-ம் ஆண்டு வாஜ்ய்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு கார்ப்பரேட் முதலாளிகளான பிர்லா – அம்பானி தலைமையில் ஒரு கல்வி குழு அமைத்தது. அந்த குழு கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படைகள் இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் மையமாக இருக்கின்றது. அதன்பின் 2014-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது டி.எஸ். சுப்ரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அது 2016-ல் வரைவு அறிக்கையை வெளியிட்டது. நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் இப்போது கஸ்தூரிரங்கன் குழு தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரித்து வெளியிட் டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள பல பரிந்துரைகள் கல்வியை சர்வதேச சந்தைக்கு திறந்துவிட வேண்டும் என்ற காட்ஸ் ஒப்பந்த அடிப்படையில் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டன.

… பல்தேசிய இனங்களின் மொழி இனம் கலாச்சாரம் அனைத்தையும் ஒழித்து கட்டிவிட்டு கல்வியை இந்திய பண்பாடு என்ற பெயரில் சமஸ்கிருதம் பண்பாட்டை புகுத்தி, இந்து, இந்தி, இந்தியா என்ற தனது நீண்ட கால கனவான இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாக கல்வியை பயன்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல். இன்னொரு பக்கம் பல இலட்சம் கோடி வணிகம் புரளும் இந்திய கல்விச் சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாட திறந்து விடுவது. பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கின்ற இந்த தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க வேண்டும். அது எந்த வடிவில் வந்தாலும் சரி முறியடிக்க வேண்டும்.

கார்ப்பரேட்டுகள், காவிகளின் நலனை ஒன்றிணைத்து ஒட்டு ரக வீரியத்தன்மையுடன் வரும் இந்த தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து எமது பு.மா.இ.மு. – வும், பல்வேறு அமைப்புகள், இயக்கங்களும் போராட்டங்களையும், விவாதக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது. அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை குறித்து விமர்சனப்பூர்வமான கட்டுரைகளின் தொகுப்பாக இந்த சிறு வெளியீட்டைக் கொண்டு வருகிறோம்.

… பல மாநிலங்கள், பல மொழி பேசும் மக்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட நாட்டில் மாநிலங்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற வகையில் ஒற்றைத் தன்மை கொண்ட ஒரு தேசிய கல்விக்கொள்கை என்பது இருக்க முடியாது, இருக்கக் கூடாது. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். பெரும்பான்மை மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட, தாய் மொழி வழியிலான, அறிவியல்பூர்வமான, இலவச – கட்டாயக் கல்விக்கல்வியை முன்னிறுத்தும் ஒரு மாற்றுக் கல்விக் கொள்கையை உருவாக்கும் போராட்டமாக இதனை வளர்த்தெடுக்க வேண்டும். போராட்டக்களத்தில் உள்ள மாணவர்களையும், ஆசியர்களையும், உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைக்கும் தொடர் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த சிறுவெளியீட்டை கொண்டு வருகிறோம். பயன்படுத்துங்கள்! பரப்புங்கள்! நன்றி! (நூலின் முன்னுரையிலிருந்து)

அரசியலமைப்பு முன்னிறுத்தப்பட வேண்டிய இடங்களில், கையாளப்படும் மற்றொரு வார்த்தை ‘சமுதாயம்’ (community) (பக்.29). இதன்படி, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் ‘சமுதாயத்தின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படுகிறது.

இது தே.க. கொள்கை -2019 கூறும் சமுதாயம்’ என்பது என்ன என்ற கேள்வியைக் கேட்கத் தூண்டுகின்றது. சாதி, மதம் மற்றும் வர்க்கம் என்று பிளவுண்டு கிடக்கும் இந்தியச் சமூகத்தை ஒரு ஒற்றை சமூகமாகக் கட்டமைப்பது மிகவும் ஆபத்தானது. இது சமூகத்தின் ஆதிக்க சக்திகளின் பிடியில் பொதுக்கல்வி அடிமைப்பட்டுவிடும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

எடுத்துக்காட்டாக, தே.க. கொள்கை -2019-ன்படி, கல்வித் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் வகையில், பள்ளி நிர்வாகக் குழுக்களில் (School Complex Management committees) சமுதாயம்’ முக்கியப் பங்கை வகிக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது (பக். 173). இது மட்டுமல்லாமல், ஆரம்ப குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (Early childhood care and education), கல்வி மற்றும் எண் அறிவுத் திறமைகளை மேம்படுத்துதல் (ப.எண். 57), கல்விக் கான உரிமையை நடைமுறைப்படுத்துதல் (பக். 67) போன்றவற்றிலும் ‘சமுதாயத்தின் பங்கு ஊக்குவிக்கப்படுகிறது.

மேலும், 6 – லிருந்து 8 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எந்த வகையான தொழிற்பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானிப்பதில் இந்த ‘சமுதாயம் ‘தான் பரிந்துரைகளைக் கொடுக்கும் (பக்.95). ஆரம்பக் கல்விபோல, உயர் கல்வித் துறைகளும் ‘சமுதாயத்துடன்’ இணைந்து செயல்படும் (பக்.202). இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், தே.க.கொள்கை -2019 கூறும் ‘சமுதாயம்’ ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், ஆதிவாசிகள், உடல் ஊனமுற்றோர், மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரின் பிரதிநிதித்துவத்தை கொண்டிருத்தல் முக்கியம். ஆனால் பிரதிநிதித்துவம் குறித்து எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை ஆகையால், தே.க.கொள்கை -2019 ஒரு ஒற்றைப் பார்வை கொண்ட ஆளும் வர்க்கத்தின் சாதியின் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் ஒரு கல்வி முறையைத் திணிக்க முற்படும் செயலாகவே அமையும். (நூலிலிருந்து பக்.7-8)

இந்திய உயர் கல்வியைச் சர்வதேசமயமாக்குவது குறித்து அதாவது, சர்வதேசச் சந்தையோடு இணைப்பது குறித்து அறிக்கை விரிவாகப் பேசுகிறது. இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் 15% வெளிநாட்டு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, வெளிநாட்டு பேராசி ரியர்களை இந்தியாவிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணியமர்த்துவது, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோடு சேர்ந்து ஆராய்ச்சி மற்றும் படிப்புகள் வழங்குவது – போன்ற பரிந்துரைகள் சொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உள்ள சட்ட ரீதியிலான தடைகளை அரசு நீக்க வேண்டும் என அறிக்கை கூறுகிறது. (பக்.12.4)

படிக்க:
ஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து !
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

இவையனைத்தும் ஏற்கெனவே, உயர் கல்விச் சீர்திருத்தம் குறித்து காட்ஸ் ஒப்பந்தம் கூறியுள்ள பரிந்துரைகளாகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி அரசு செய்து வருகின்ற UGC மற்றும் MCI கலைப்பு, வெளிநாட்டு பேராசிரியர்களைப் பணியமர்துவது, NIRF, MOOCs, மேன்மைதகு நிறுவனங்கள் திட்டம் – ஆகியவை உயர் கல்வியை சர்வதேசப்படுத்துதல் என்ற நோக்கத்திலிருந்தே உருவாக்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உயர் கல்வியில் அதிக லாபமீட்டுவது போல தெற்காசிய நாடுகளிலிருந்து அதிக மாணவர்களை இந்தியாவை நோக்கி ஈர்ப்பதன் வாயிலாக தனியார் கல்வி முதலாளிகள் அதிக லாபம் பெறவே அரசு இப்பரிந்துரைகளைக் கூறியுள்ளது. எனவே, இதை அனைவரும் நிராகரிக்க வேண்டும். (நூலிலிருந்து பக்.48)

நூல் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ?
ஆசிரியர் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

வெளியீடு : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
நெ-7, மாதாகோவில் நகர் முதல் தெரு, நொளம்பூர், சென்னை – 600 095.
தொலைபேசி எண் : 94451 12675
மின்னஞ்சல் : rsyfchennai@gmail.com

பக்கங்கள்: 48
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

கேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை !

கேள்வி: //பாரத ரத்னா விருதும் பாஜக காவிகளும் பற்றி …?//

– செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

மோடி அரசு பதவியேற்றதிலிருந்து இதுவரை ஐவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கின்றது. மதன் மோகன் மாளவியா, அடல் பிகாரி வாஜ்பாய், பிரணாப் முகர்ஜி, பூபேன் அசாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகியோர்தான் அந்த ஐவர்.

மதன் மோகன் மாளவியா காசி இந்து பல்கலைக் கழகத்தை நிறுவியவர். காங்கிரசு தலைவராக இருந்தாலும் இந்துத்துவக் கொள்கைகளை முன்னிறுத்தியவர். முசுலீம்களுக்கு தனி வாக்குத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதையும் கிலாபத் இயக்கத்தில் காங்கிரசு பங்கேற்பதையும் எதிர்த்தவர். அந்த வகையில் இவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கொண்டாடி வருகிறது.

வாஜ்பாயியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அக்மார்க் ஆர்.எஸ்.எஸ் காரர். பாஜக-வின் பிரதமராக பணியாற்றியவர். பிரணாப் முகர்ஜி மோடியின் முதல் ஆட்சியில் பாஜக-வின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குடியரசுத் தலைவராக இருந்து ஒத்தூதிய காங்கிரசுகாரர். நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் காங்கிரசுக் கட்சி கண்டனத்தையும் மீறி கலந்து கொண்டு சங்கிகளுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தவர். பூபேன் அசாரிகா மிகச் சிறந்த இசைக் கலைஞர் என்றாலும் தனது இறுதிக் காலத்தில் பாஜக-வில் இணைந்தார்.

நானாஜி தேஷ்முக் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர். சங்கிகளின் ராமராஜ்ஜிய பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்தவர். இந்தக் கொள்கைகள் என்பது சமூக ஏற்றத்தாழ்வை விட்டுவிட்டு தனிமனிதனைச் சீரமைக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் உன்னால் முடியும் தம்பி வகையாறாதான். வல்லரசு

இப்படி பாரத ரத்னா விருதுப் பட்டியல் சங்கிகளின் மனம் கவர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது இனி அத்வானி, கோட்சே, சாவர்க்கர், ஹெட்கேவார், சியாம் பிரசாத் முகர்ஜி, கோல்வால்கர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை கலைமாமணி விருதுகளை கண்டு கொள்ளாதது போல பாரத ரத்னாவையும் பாராமுகமாக விட்டு விட முடியாது. தொடர்ந்து விமரிசிக்க வேண்டும்.

நன்றி!

படிக்க:
100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை
♦ அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் !

♦ ♦ ♦

கேள்வி: //முதலாளித்துவ அமைப்பு முறை தோற்று வருவதாலேயே சோசலிசம் வந்து விடுமா?//

– சி.நெப்போலியன்

ன்புள்ள நெப்போலியன்,

முதலாளித்துவ அமைப்பு முறையின் தோல்வி அதன் இயங்கு முறையிலேயே உள்ளார்ந்து உள்ளது. தனி நபர் சொத்து குவிப்பும் – பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வருமானமிழப்பதையும், தனிப்பட்ட தொழிற்சாலையின் திட்டமிட்ட உற்பத்தியும் – நாடு தழுவிய அராஜக உற்பத்தியுமான இரு முரண்பாடுகள் முதலாளித்துவம் தானே தோண்டிக் கொண்ட சவக் குழிகள். இந்த அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு சொத்துடமையை சமூகத்திற்கு சொந்தமாக்குவதும், பெரும்பான்மை மக்களுக்கான திட்டமிட்ட மைய உற்பத்தியும் சோசலிசம் முன் வைக்கும் தீர்வுகள். அல்லது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அழிவிலிருந்து வந்தடைந்தே ஆகவேண்டிய மாற்றங்கள். அதைத்தான் புரட்சி என்கிறோம்.

இந்த மாற்றத்தை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான புரட்சியே சாதித்துக் காட்டும். ரசியாவிலும், சீனாவிலும் அப்படித்தான் புரட்சிகள் நடந்தேறி சோசலிச சமூகம் உருவாக்கப்பட்டது. சரி இது வரலாறு மற்றும் அறிவியல்.

இன்றைய நிலைமையில் உலகெங்கிலும் அப்படி ஒரு சோசலிச முகாம் இல்லை. மார்க்சிய லெனினிய கட்சிகளும் பலவீனமாக உள்ளன. எந்த நாட்டிலும் அவை தீர்மானகரமான சக்தியாக இல்லை. அதே நேரம் முதலாளித்துவத்தின் தோல்வி, அதன் கட்டமைப்பு நெருக்கடி காரணமாக உலகெங்கிலும் போராட்டங்கள் பல்வேறு நாடுகளில் வெடித்து வருகின்றன. தொடர்ந்து நடக்கின்றன. முதலாளித்துவம் ஒழியட்டும் என்ற அரசியல் முழக்கங்கள் ஐந்து கண்டங்களிலும் முழங்குகின்றன. இந்தப் போராட்டங்களினூடாக சில நாடுகளில் கம்யூனிஸ்டுக் கட்சிகள் பலமடைந்து சோசலிச புரட்சி வருவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருப்பதாக சொல்லலாம். அதன் மூலம் மீண்டும் இவ்வுலகில் ஒரு சோசலிச முகாம் தோன்றி உலகை வழிநடத்தலாம். அப்படி நடக்கவில்லை என்றால்?

முதலாளித்துவம் தனது உள் முரண்பாடுகளால் இந்த உலகை பெரும் போருக்குள் தள்ளி, சுற்றுச்சூழலை நாசம் செய்து அழிவைக் கொண்டு வரும்.

ஆகவே முதலாளித்துவத்தின் தோல்வி ஒரு அறிவியல் எனும் போது அதன் தீர்வில் இந்த உலகம் அழியுமா இல்லை புரட்சியால் காப்பாற்றப்படுமா என்ற இரண்டு தீர்வுகளே உள்ளன. மூன்றாவது ஏதுமில்லை.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி: //சீன அதிபரின் சென்னை வருகை எதற்காக?//

– சி. நெப்போலியன்

மோடியைப் போல சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தனது பிம்பத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விளம்பரப்படுத்துகிறார். வருகையில் நடந்த கண்காட்சிகள், விருந்துகளில் இது ஒரு நோக்கம். மற்றொருபுறம் அமெரிக்காவிற்கு போட்டியாக சீனா பொருளாதார, அரசியல் அரங்கில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் முதலீடுகளைக் கொட்டி தனது செல்வாக்கு மண்டலங்களை வர்த்தகத்தின் மூலம் உருவாக்க விரும்புகிறது. இந்தியா, அமெரிக்காவின் அடியாளாக இருந்தாலும் வர்த்தகம் என்ற முறையில் சீனாவோடும் உறவாட வேண்டிய தேவை இருக்கிறது. சீன உறவை முற்றிலும் துண்டித்துக் கொள்ள முடியாது. அதனால்தான் பிரேசிலில் நடக்கும் பிரக்சிட் அமைப்பிலும் இந்தியா பங்கு பெறுகிறது. அமெரிக்காவிற்கு போட்டியான இந்த பொருளாதார அரசியல் அமைப்புகள் இப்போது பெரிய அளவிற்கு பங்களிப்பு செய்யவில்லை என்றாலும் எதிர்காலத்தில் செய்யலாம். அது அமெரிக்க சீன முரண்பாட்டின் வளர்ச்சியாகவும் பார்க்கலாம்.

நன்றி!

♦ ♦ ♦

படிக்க:
கம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் ? கேள்வி – பதில்
♦ கேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா ?

கேள்வி: //சீனா மீதான இந்திய ஆளும் வர்க்கங்களின் திடீர் பாசத்திற்கு காரணம் என்ன என புரியவில்லை?

சர்வதேச அளவில் அமெரிக்கா தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள் உலகை ஆட்டிப் படைக்கும் அதே பொழுது, சீனாவும் இந்த மே.நி. வல்லரசுகளை சாராமல் சுயமாக பொருளாதார ரீதியாக வளர்ந்து வந்துள்ளது. இதற்கு காரணம் மாவோவின் கம்யூனிசம் அல்ல என்றும் அதிகாரவர்க்க முதலாளித்துவம் மாவோவின் காலத்திற்கு பின் சீனாவின் அதிகாரத்தை கைப்பற்றியதும்தான் காரணம் என தெரிகிறது.

ஆனால், பிற மேல்நிலை வல்லரசுகளுக்கு போட்டியாக வளர்ந்தது எப்படி? புரியவில்லை.

மற்றும், தற்போதைய உலக பொருளாதார மந்தத்தில் சீனாவும் சிக்கி உள்ளதா? தெரியவில்லை.

இந்தப் பின்னணியில் இந்திய ஆளும் வர்க்கங்களின் சமீபத்திய நடவடிக்கைகளை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.//

– திப்பு

ன்புள்ள திப்பு,

முன்னர் பார்த்த கேள்வி பதிலின் தொடர்ச்சியாக சில விசயங்களைப் பார்க்கலாம். சீனா இன்று அமெரிக்காவிற்கே சவால் விடும் அளவிற்கு ஒரு வல்லரசு நாடு போல வளர்ந்து விட்டதா என்று கேட்டால் ஆம், அப்படி வளர்ந்திருக்கிறது. இங்கிலாந்து, பிரான்சு, ரசியா, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த ராணுவ பட்ஜெட்டை விட சீனாவின் ராணுவ பட்ஜெட் அதிகம். அமெரிக்காவின் பட்ஜெட் இதை விட சில மடங்கு அதிகம் என்றாலும் இன்று அமெரிக்காவிற்கு அடுத்து இராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடு சீனாதான்.

அமெரிக்காவின் அன்றாட வாழ்க்கையில் புழங்கப்படும் சட்டை முதல் செல்பேசி வரை சீனாதான் தயாரிக்கிறது. அமெரிக்காவின் அன்றாட நுகர்வு சீனாவை நம்பி இருக்கிறது என்றால் மிகையில்லை. இன்னொரு புறம் சீனாவை புறந்தள்ளி பொருளாதார மேலாண்மையை பெறுவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவோடு வர்த்தகப் போரை துவக்கியுள்ளார். பதிலுக்கு சீனாவும் அமெரிக்க இறக்குமதிக்கு வரிகளை உயர்த்தி உள்ளது.

சீனா இந்த பிரம்மாண்டமான பொருளாதார நிலைமையை எப்படி அடைந்தது?

மாவோ காலம் வரையிலான சீனா அடிப்படைக் கட்டமைப்புகளை வலுவாக கட்டியது. பின்னர் டெங்சியோ பிங் காலத்தில் அந்த அடிப்படைக் கட்டமைப்பின் வலுவில் முதலாளித்துவ பொருளாதாரம் கொண்டு வரப்பட்டு வேகமாக பொருளாதாரம் வளர்ந்தது. திறமையான தொழிலாளர்கள், மலிவான கூலி, பிரம்மாண்டமான அடிக்கட்டமைப்பு வசதிகள், அதற்கு மலிவான கட்டணங்கள் என்று சீனாவில் கட்டமைப்பை வல்லரசு நாடுகள் நன்கு பயன்படுத்திக் கொண்டன. மறுபுறம் சீனாவும் இந்த வர்த்தகத்தின் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டியது. இன்று அமெரிக்கா உள்ளிட்டு பல நாடுகள் வெளியிட்டுள்ள கடன்பத்திரங்களின் கணிசமான பகுதி சீனாவிடம்தான் உள்ளது. சோசலிசம் உருவாக்கிய மூலதனத்திரட்சியை சீன அதிகார வர்க்கம் திருடிக் கொண்டு இந்த முதலாளித்துவ வளர்ச்சியை சாதித்திருக்கிறது.

உலக பொருளாதார நெருக்கடியின் விளைவு சீனாவிலும் இருக்கிறது என்றாலும் வல்லரசு நாடுகள் போல பெரும் பாதிப்பு இல்லை. தனது நிதி மூலதனத்தை பெருக்கும் பொருட்டு சீனா உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் பல்வேறு முதலீடுகளைச் செய்து வருகிறது. நிலத்திலும், நீரிலும் அது செயல்படுத்தி வரும் பட்டுவழிப்பாதை திட்டம் பல்வேறு நாடுகளின் துறைமுகங்களையும், சாலைகளையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இருக்கும் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான சீன தொழிலாளிகளும், சீன அதிகாரிகளும் பணிபுரிகின்றனர்.

சரி, சீனாவின் இந்த வளர்ச்சி உள்நாட்டில் என்ன சாதித்திருக்கிறது?

வாரத்திற்கு இரண்டு பில்லியனர்கள் புது வரவாக அறிமுகமாகும் அளவிற்கு பெரும் பணக்காரர்கள் சீனாவில் வளர்ந்து வருகிறார்கள். சீன கம்யூனிசக் கட்சியிலேயே பெரும் பில்லியனர்கள் உறுப்பினர்களாகவும், பொறுப்பிலும் உள்ளனர். மறுபுறம் வறுமையும், வேலையின்மையும், சமூக நலத்திட்டங்களிலிருந்து மக்கள் தூக்கியெறியப்படுவதும் சீனாவில் நடக்கிறது. சீனத் தொழிலாளிகள் சீனாவின் கிழக்கு பொருளாதார மண்டல நகரங்களில் தம்பதி சகிதராக பணி புரிகின்றனர். ஆனால் அங்கே அவர்கள் ஒரு தரமான வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பமாக வாழ முடிவதில்லை. தமது குழந்தைகளை தொலை தூரத்தில் உள்ள கிராமங்களில் வயதான பெற்றோரிடம் விட்டு விட்டு நகரங்களில் ஓடிக் கொண்டிருக்கின்றனர். பணிநேரமும் அதிகம். நல்ல கல்வி, நல்ல சுகாதாரம் ஆகியவை நகரங்களில் பெரும் செலவு பிடிக்கும் வண்ணம் இருப்பதால் சீனத் தொழிலாளிகளின் குடும்ப வேர் இன்னமும் கிராமங்களிலேயே இருக்கிறது.

இன்று உலகிலேயே அணு அணுவாய் குடிமக்களைக் கண்காணிக்கும் நாடாக சீனா உருவெடுத்துவிட்டது. தலைநகர் பீகிங்கில் அடையாள அட்டை இல்லாமல் ஒருவர் கூட வாழ முடியாது. அப்படி பிழைக்கும் மக்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு நகரத்தை விட்டே துரத்தப்படுகிறார்கள். இப்படி வர்க்கரீதியான ஏற்றத்தாழ்வு சீனாவில் வளர்ந்து வருகிறது. இருப்பினும் இன்னமும் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியும், சுகாதாரமும், வேலையும் ஓரளவுக்கு வழங்கப்படுவதால் ஒட்டு மொத்த புள்ளிவிவரம் மற்ற நாடுகளை விட வாழ்க்கைத் தர மேம்பாட்டில் அதிகம் இருக்கும். இதற்கு, அங்கே வறுமை குறைந்து வருவதாக பொருள் இல்லை.

சீன முதலாளிகளுக்கு குறைவான வரிகளே விதிக்கப்படுகின்றன. பல முதலாளிகள் தமது சொத்துக்களை வரி இல்லா சொர்க்கங்களில் கொண்டு செல்கின்றனர். சீனாவின் பணக்காரக் குழந்தைகள் அனைத்தும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் படிக்கின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மகளே அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்றில் படிக்கிறார். ஆனால் சீன அதிபரின் வருட ஊதியம் 22,000 டாலர் மட்டுமே. அதாவது மாதம் தோராயமாக ஒன்றரை லட்ச ரூபாய் மட்டுமே. இந்த வருமானத்தில் அவரது மகள் எப்படி அமெரிக்காவில் படிக்க முடியும்? அதற்கு சீனாவில் அனைவரும் ஒரு குடும்பமாய் வாழ்கிறார்கள். சீன அதிபரின் மாமன், மச்சான், அத்திம்பேர் முதலாளிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் அதிபர் மகளின் கல்விச் செலவை ஏற்பார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். சீன கம்யூனிசக் கட்சியின் பொலிட் பீரோவில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் சீனாவின் ஏதாவது ஒரு தனியார் தொழிற்துறையைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

இந்த நிலைமைகள் அனைத்திற்கும் ஒரு கட்சி சர்வாதிகாரம் என்ற அரசியல் அமைப்பு சாதகமாக இருக்கிறது. நாட்டின் செல்வ வளங்களை வல்லரசு நாடுகளுக்கு விற்பதற்கும், பணக்காரர்களை உருவாக்குவதற்கும், ஏழைகளை நகரங்களில் வாழமுடியாதபடி செய்வதற்கும், போராட்டங்களை முடக்குவதற்கும் இந்த போலிக் கம்யூனிச ஆட்சி பொருத்தமாக இருக்கிறது.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் !

1

பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்

2003-ம் ஆண்டில் பாபர் மசூதிக்கு அடியில் இராமன் கோயில் இருந்ததற்கு சான்று உள்ளதாக கூறிய இந்திய தொல்லியல் துறையில் (Archaeological Survey of India – ஏ.எஸ்.ஐ) ஆய்வில் ஈடுபட்ட தொல்லியலாளர்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து இல்லை.

இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு கீழே ஒரு பிரமாண்டமான கட்டமைப்பு இருந்ததற்கான சான்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறிய தொல்லியல் துறை அதற்கு 574 பக்க அறிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 2003 ஆகஸ்டில் வழங்கியது. ASI-ன் அறிக்கையை “தெளிவற்ற மற்றும் தன் முரண்பாடானது” என்று வழக்கின் ஒரு தரப்பான சன்னி வக்ஃபு வாரியம் கூறியது.

தொடர்ந்து, வக்ஃபு வாரியம் தரப்பில் சுப்ரியா வர்மா மற்றும் ஜெயா மேனன் என்ற இரண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ASI-ன் அகழ்வாராய்ச்சிகளை கவனித்தனர். ஏ.எஸ்.ஐ.யின் ஆய்வு முடிவுகளை, தொடர்ந்து செப்டம்பர் 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பையும் ஏன் அவர்கள் எதிர்த்தார்கள் என்பதை பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில் (Economic and Political Weekly) அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார்கள். அதன் படி, அகழ்வாராய்ச்சியின் போது, ஏ.எஸ்.ஐ பின்பற்றிய பல்வேறு நடைமுறைகளுக்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆய்வின் போது, “ஏ.எஸ்.ஐ. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் மனதில் ஏற்கனவே ஒரு முன்முடிவு இருந்தது என்பது உண்மை” என்று அவர்கள் கூறினார்கள்.

இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள் மீதான ASI-யின் அதிகாரம் காரணமாக அதன் அறிக்கை கேள்விக்குட்படுத்தப்படவில்லை என்று கட்டுரையாசிரியர்கள் கூறினார்கள். “இந்தியரோ அல்ல வெளிநாட்டவரோ எந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் தளங்களை ஆராய அல்லது அகழ்வாராய்ச்சி செய்ய விரும்பினால் ASI-யிடமிருந்து உரிமம் பெற வேண்டும். எனவே எந்தவொரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் இந்திய தொல்லியல் துறைக்கு எதிராக அல்லது அதன் காலாவதியான முறைகளுக்கு எதிராக பேச தயாராக இல்லை” என்று கூறினார்கள்.

கர சேவகர்கள், 1992 டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து இப்போது 26 ஆண்டுகள் ஆகின்றன. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்னதாகவே சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று இந்துத்துவ பிற்போக்குச்சக்திகள் அழுத்தம் கொடுக்கின்றனர்.

படிக்க:
ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?
♦ புதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் !

நடைமுறை குறைபாடுகளுடனான முடிவுகளை ஏ.எஸ்.ஐ வந்தடைந்தது எப்படி என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியரான வர்மா Huffington Post பத்திரிக்கையிடம் பேசிய போது கூறினார். “பாபர் மசூதியின் கீழ் ஒரு கோயில் இருந்தது என்பதற்கு இப்பொழுது கூட தொல்பொருள் சான்றுகள் எதுவும் இல்லை” என்று அவர் வாதிடுவதுடன், “பாபர் மசூதிக்கு அடியில், உண்மையில் பழைய மசூதிகளே உள்ளன” என்று மேலும் கூறினார்.

அந்த இடத்தில் ஒரு கோயில் இருந்தது என்பதற்கு ஏ.எஸ்.ஐ மூன்று சான்றுகளை பயன்படுத்தியது – அனைத்தும் கேள்விக்குரியவை என்று வர்மா Huffington Post-டிடம் கூறியுள்ளார்.

1) ஒரு மேற்கு சுவர் : “மேற்கு சுவர் மசூதிக்குரிய ஒரு அம்சமாகும். அந்த சுவருக்கு முன்பு தான் நமாஸ் என்று நீங்கள் சொல்லுவீர்கள். இது கோவிலுக்குரிய ஒரு அம்சம் அல்ல. கோவில் இதைவிட மிகவும் வேறுபாடான அமைப்பு கொண்டது”.

2) ஐம்பது தூண் தளங்கள் : “இவை முற்றிலும் புனையப்பட்டவை. இது குறித்து பல புகார்களை நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்தோம். தூண் தளங்கள் என்று அவர்கள் கூறுவதுடன் ஒப்பிட்டால், இவை வெறுமனே உடைந்த செங்கற்களின் துண்டுகள் மற்றும் அவற்றுக்கு இடையில் சேறு பூசப்பட்டிருக்கிறது” என்பது தான் எங்கள் வாதம்.

3) கட்டிட துண்டுகள் : “இந்த 12-ல் [மிக முக்கியமான கட்டிடக்கலை துண்டுகள்] ஒன்று கூட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்படவில்லை. மசூதியின் சுண்ணாம்பு தளத்திற்கு மேலே கிடந்த சிதைவுகளிலிருந்து இவை எடுக்கப்பட்டன… ஒரு கோயிலில் அதுவும் ஒரு கல் கோயிலில் (இது ஒரு கல் கோயில் என்று கூறப்படுகிறது) அவர்கள் கண்டுபிடித்ததை விட செதுக்கப்பட்ட பொருள்கள் அதிகம் இருக்கும்.

முந்தைய அகழ்வாராய்ச்சிகள் :

பாபர் மசூதியைச் சுற்றி நடத்தப்பட்ட பழைய அகழ்வாராய்ச்சிகள் குறித்தும் வர்மா பேசினார். முதலாவது, ஏ.எஸ்.ஐ.யின் முதல் தலைமை இயக்குனர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் (Alexander Cunningham) 1861-ம் ஆண்டில் நடத்தியது. அயோத்தியில் மூன்று குன்றுகளில், இரண்டு புத்த ஸ்தூபிகள் மற்றும் ஒரு விஹாரம் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளதை வர்மா கோடிட்டு கட்டுகிறார். அப்பகுதியில் உள்ள சில கோயில்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் செவிவழி கதைகளைப் பற்றி அவரது அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று வர்மா கூறுகிறார்.

இரண்டாவது அகழ்வாராய்ச்சி 1969-ம் ஆண்டில் பாபர் மசூதி அருகே பனாரஸ் இந்து பல்கலைக்கழக தொல்பொருள் துறையால் (Department of Archaeology of the Banaras Hindu University) நடத்தப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியின் சில பதிவுகள் இன்றுவரை தப்பிப் பிழைத்திருந்தாலும், வரலாற்றின் தொடக்ககாலத்தில் மற்றும் இடைக்காலத்தில் இப்பகுதியில் குடியேற்றம் நடந்ததாக அவர்கள் முடிவு செய்தனர்.

1975 மற்றும் 1980-க்கு இடையில், ஏ.எஸ்.ஐ.யின் அப்போதைய தலைமை இயக்குனராக இருந்த பி.பி.லால் இந்த திட்டத்தை புதுப்பித்தார். இப்பகுதி குறித்த வரலாற்றில் லாலின் பணிகள் குறிப்பிடத்தக்கவை.

எனவே லாலின் வேலைத்திட்டம் தனித்து நிற்பதன் பின்னனி என்ன? வர்மாவின் கூற்றுப்படி (தெளிவுக்காக திருத்தப்பட்டது),

அயோத்தி, மதுரா மற்றும் வாரணாசி ஆகிய மூன்று தளங்களில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் கோயில்களின் முழு சிக்கலையும் 1988 வாக்கில் (விஸ்வ இந்து பரிஷத்) கையில் எடுத்தது. 1975 மற்றும் 1978 -க்கு இடையில் அயோத்தியில் எடுக்கப்பட்டு, அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதாகக் கூறிய தூண் தளங்களின் புகைப்படத்தை மாந்தன் (Manthan – இராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம்) இதழில் (அதே ஆண்டில்) பி.பி.லால் வெளியிட்டார். மேலும் குரோஷியாவில் (Croatia) நடந்த உலக தொல்பொருள் மாநாட்டிலும் அந்த புகைப்படத்தை முன் வைத்ததுடன், அங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டால் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பார்கள் என்று கூறினார்.

படிக்க:
பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் ! | காணொளி
♦ பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! | விடுதலை ராஜேந்திரன்

பாபர் மசூதி நினைவுச் சின்னத்திலிருந்து ஒரு பெரிய அளவிலான அரசியல் இயக்கத்தை உருவாக்க பாஜக-வுக்கு லாலின் கூற்றுக்கள் உதவியதுடன் 1992-ல் மசூதி இடிக்கப்பட்டது. 1999-ம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தபின், அகழ்வாராய்ச்சி மீண்டும் பெரிய நிகழ்ச்சி நிரலாக மாறியது. வர்மாவின் கூற்றுப்படி, 2002-ல் அங்கு அகழ்வாராய்ச்சி செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏ.எஸ்.ஐ க்கு கட்டளையிட்டது.

கேள்விக்குரிய ASIன் அறிக்கை:

தனது இறுதி அறிக்கையில் விரும்பத்தக்க பல விடயங்களை ஏ.எஸ்.ஐ விட்டுவிட்டது என்கிறார் வர்மா. அறிக்கையின் தொடக்கம் சாதாரணமாக இருந்தாலும் முடிவு தனித்து நிற்கிறது என்று அவர் ஹஃபிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.

முழு அறிக்கையையும் நீங்கள் படித்தால், கோவில் பற்றி எதையும் அவர்கள் குறிப்பிடப்படவில்லை என்பது தெரியும். இது ஒரு தரமான அறிக்கை. … மனித எலும்பு எச்சங்கள் பற்றிய ஒரு தலைப்பு மட்டும் அதில் காணாமல் போய்விட்டது. அதை தான் அவர்களும் கண்டுபிடித்தார்கள். ஆனால் அவர்கள் அதை ஒருபோதும் வெளியிடவில்லை.

நீங்கள் மேலும் காண்பது என்னவென்றால், அந்த [பிற] தலைப்புகளை எழுதியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் கடைசியில், எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை. அறிக்கையின் கடைசி பத்தியில், மேற்கு சுவர், தூண் தளங்கள் மற்றும் சில கட்டட துண்டுகள் ஆகியவற்றின் சான்றுகளின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் ஒரு கோயில் இருந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள். இது உண்மையில் மூன்று வரிகளில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இல்லையெனில், விவாதத்தில் எங்கும், ஒரு கோயில் இருப்பதாக ஒரு பேச்சும் இல்லை. அதே சான்றுகளுடன், பாபர் மசூதியின் கீழே இரண்டு அல்லது மூன்று சிறிய மசூதிகள் இருந்தன என்பதை நாங்கள் விளக்கியுள்ளோம்.

[ இந்த கட்டுரை முதலில் டிசம்பர் 6, 2018 அன்று தி வயர் தளத்தில் வெளியிடப்பட்டது. நவம்பர் 8, 2019 அன்று மீண்டும் வெளியிடப்பட்டது வாசகர்களுக்காக இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. ]


சுகுமார்
நன்றிதி வயர்.