Wednesday, July 30, 2025
முகப்பு பதிவு பக்கம் 521

இந்தியர்களோடு செல்ஃபி எடுக்கப் பயப்படும் ஜெர்மனிப் பெண்

2

உனது அழகான வெள்ளைத் தோல்

வெள்ளையாகஇருப்பதால்ஒதுக்கிவைக்கப்படமாட்டீர்கள்; ரசிக்கப்படுவீர்கள். சிலநேரங்களில்பலாத்காரமும்செய்யப்படுவீர்கள்

foreigners
உங்களை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளவா? மாதிரிப் படம்.

சில சமயம் பெருநகரங்களில் அது நிகழும். சில சமயம் ஆன்மீகத் தளங்களில். அல்லது, வீதியின் மத்தியில். “உங்களை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளவா?” என்றவாறே தங்களுடைய கைப்பேசியைக் காட்டிச் சிலர் என்னை நிறுத்துவார்கள். என்னைப் புகைப்படமே எடுத்ததில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், இந்தியாவில் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டி வாரத்தில் ஒருவராவது என்னை அணுகுவார்கள். எனது பெற்றோர் எப்போதும் பணிவாக இருக்க கற்றுக் கொடுத்துள்ளதால் நான் அந்தக் கோரிக்கைகளை புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் இந்தியர்களுக்கு என் மீதான ஆர்வம் எங்கிருந்து வருகின்றது என்பதைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. எனது உடைகளா? நிச்சயம் இருக்காது – என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்ட அந்த மின்னும் புடவை அணிந்த மணப்பெண் என்னை விடப் பேரழகி தான்.

எனது உடலை போர்த்திக் கொள்ள தில்லி ஜூமா மசூதியில் எனக்கு வழங்கப்பட்ட பெரிய அழுக்கு அங்கியின் கதையைக் கேளுங்கள் – அந்த உடையில் நான் படு கேவலமாக காட்சியளித்தேன். ஆனாலும், ஐந்து இளைஞர்கள் என்னை எல்லாத் திசைகளில் இருந்தும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

பாலியல் கண்ணோட்டம் தான் எனது கேள்விகளுக்கான பதிலா? அப்படியல்ல. “மேடம் நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க” என்று அந்த எட்டு வயது அப்பாவிச் சிறுமி வாராணசியில் உள்ள இந்துக் கோயில் ஒன்றில் வைத்து என்னிடம் சொன்னாள். அவ்வாறு சொல்லி விட்டு தனது தோழிகளுடன் வரிசையில் வந்து என்னோடு செல்பி எடுத்துக் கொண்டாள். கடைசியில் கோவா கடற்கரையில் நான் பிகினி உடையில் இருப்பதைப் பார்த்த புடவை கட்டிய அந்தப் பெண் என்னிடம் “உங்களுக்கு அழகான வெள்ளைத் தோல்” என்று சொன்னாள். “ஆனால், உனக்கும் அழகான தோல் இருக்கிறது தானே?” என்றேன் ஆச்சர்யத்துடன்.

இந்தக் நிகழ்ச்சிப் போக்குகளுக்கான பதில், இனவெறி – தலைகீழ் இனவெறி. நீங்கள் வெள்ளையாக இருப்பதால் ஒதுக்கி வைக்கப்பட மாட்டீர்கள். ஆனால், உங்களின் வெள்ளைத் தோலுக்காக ரசிக்கப்படுவீர்கள். சில சமயம் பலாத்காரமும் செய்யப்படுவீர்கள்.

நவம்பர் மாதத்தின் இறுதி நாளான அன்று நடந்ததை போல. ஆண் புகைப்படக் கலைஞர்களைக் கொண்ட குழுவைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பெரிய காமெரா லென்சுகளைத் தூக்கிக் கொண்டு கோவாவின் பாலேலம் கடற்கரையில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் எனது ஜெர்மானிய தோழிகள் உட்பட சில வெள்ளைப் பெண்மணிகளை மிக நெருக்கமாக படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

selfie
மாதிரிப்படம்

வெள்ளை தான் அழகு – மேலும் அது ஒரு வியாபார உத்தி. வெண்மையாக்கும் அழகு சாதனங்களின் சந்தை மதிப்பு சுமார் ஏழாயிரம் கோடிகள். 2010-ம் ஆண்டு அழகு சாதனப் பொருட்களின் சந்தை மதிப்பு கோகோ கோலா மற்றும் தேனீரின் சந்தை மதிப்பைக் கடந்து விட்டதாகச் சொல்கிறது பி.பி.சி. 2012-ம் ஆண்டு 258 டன் அளவுக்கு தோலை வெள்ளையாக்கும் களிம்புகள் விற்றுத் தீர்ந்ததாகச் சொல்கிறது ப்ளூம்பெர்க் பத்திரிகையின் செய்தி ஒன்று. ஆண்களும் கூட இவற்றைப் பூசிக் கொள்கின்றனர். பாலிவுட்டின் பாதுஷாவாக சொல்லப்படும் ஷாருக் கான் இந்தப் பொருட்களுக்கான விளம்பரதாரர்.

ஆனால், இது அருவெறுப்பானது. வெள்ளைத் தோல் மோகத்தின் பின் வர்க்க, சாதி மற்றும் காலனியவாதம் ஆகிய மூன்று பின்னணிகள் உள்ளன.

குறிப்பாக, இந்தியாவின் கிராமப்புறங்களில் கருத்த நிறமுடையவர்கள் இன்னமும் ஒடுக்கப்படுகின்றனர். நகரங்களிலும் கூட அத்தகையவர்களை உதவியாளர்களாகவே, கூலிகளாகவோ, துப்புரவு வேலை செய்கிறவர்களாகவோ கருதுவார்கள் என்கிறார் எனது நண்பர்; அவருடைய பெற்றோர்களோ நன்கு படித்த மருத்துவர்கள்.

’ஆரிய திராவிட பிரிவினையின் காரணமாக வெள்ளையாக இருப்பவர்கள் பெரும்பாலும் மேல் சாதிக்காரர்கள்’ என்பதே தலித்துகள் இப்போதும் எதிர்கொள்ளும் பழைய கண்ணோட்டம். இடம் பெயரும் தொழிலாளர்கள் குறித்து எழுதி வரும் பத்திரிகையாளர் ஒருவர், இந்த வெண்மைப் பித்து இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் குறித்த விட்டகுறை தொட்டகுறையாக இருக்க வேண்டும் என்றார்.

அழகுக் கலை நிபுணர்கள் வெண்மையாக்கும் களிம்புகளை எந்த யோசனையும் இன்றி பூசும் அளவுக்கு அது சர்வசாதாரணமானது. எனது ஜெர்மானிய தோழி கார்லா மதுரையில் உள்ள அழகு நிலையம் ஒன்றுக்கு தனது மூன்று நண்பர்களுடன் சென்றிருந்தார். அந்த நிலையத்தை நடத்தியவர் இவரின் கால்களை பிளீச்சிங் களிம்பால் குளிப்பாட்டியதைக் கண்டு அதிர்ந்தே விட்டார்; அவரது கால்களோ ஏற்கனவே படு வெள்ளையானது.

petra-sorge
பெட்ரா சோஜெய்

”காகாசிய” (வெள்ளையினம் மற்றும் மாநிற மனித இனம்) மக்களைக் கண்டு வியப்பதோடு, அவர்களுக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகின்றது. இந்த நான்கு நண்பர்களும் மதுரையின் அந்த அழகு நிலையத்தினுள் நுழைந்த போது அங்கே மூன்று வாடிக்கையாளர்களுக்கான இருக்கைகள் தான் இருந்துள்ளன. அங்கே வேலை செய்தவர்கள் இந்த நால்வரில் ”சுத்த” வெள்ளையாக இருந்த மூவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எங்களது இந்தோ-ஜெர்மானிய தோழி ஜூலியாவின் தோல் கருப்பாக இருந்த காரணத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளார்

முன்பெல்லாம் எங்கள் குழுவிலேயே ஜூலியா தான் அழகானவரென்றும், அவரையெல்லாம் அழகுபடுத்தவே தேவையில்லை எனவும் சொல்லியிருக்கிறேன். இனி அப்படிச் சொல்ல முடியாது.

நவம்பர் 26-ம் தேதி தில்லி ஹாவ்ஸ் காஸ் கிராமத்திலிருக்கும் ‘இம்பெர்பெக்டோ’ என்கிற மதுக்கூடத்திற்கு எனது ஜெர்மானிய தோழி கரோலா மற்றும் இரண்டு இந்திய நண்பர்களோடு சென்றேன். அங்கிருக்கும் திறந்த மாடிக் கூடத்தில் எங்களில் மூவர் உணவுக்குச் சொல்லியிருந்தோம். எங்களில் நான்காமவரான பிரேன் வருவதற்குக் கொஞ்சம் தாமதமாகி விட்டது. வரவேற்பில் இருந்த பெண்மணி “தனியாக வரும் ஆண்கள் ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும்” எனக் கேட்டுத் தடுத்துள்ளார். கரோலா உடனே கீழே சென்று தாங்கள் வரும் போது நுழைவுக் கட்டணம் கேட்கப்படாத போது பிரேனிடம் மட்டும் ஏன் வசூலிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

”இரண்டு அமெரிக்கப் பெண்களான நீங்கள் இந்தியன் ஒருவனுடன் உள்ளே போவதைப் பார்த்தேன்” என்றுள்ளார் அந்தப் பணிப்பெண். ”நாங்கள் அமெரிக்கர்கள் அல்ல, ஜெர்மானியர்கள்” என்று கார்லா குறுக்கிட்டுச் சொல்லியிருக்கிறார். “அதெல்லாம் சரி.. நீங்கள் வெள்ளையர்கள் என்பதால் கட்டணம் வாங்கவில்லை; இவர் இந்தியன் தானே? எனவே காசு கொடுக்க வேண்டும்” என்று அவர் பதிலளித்துள்ளார்.

இது எங்களுக்குக் கொஞ்சம் புதிய விசயம். ‘வெள்ளையர்களான எங்களுக்கு நுழைவுக்கட்டணம் இலவசம் – அதே நேரம் இந்தியர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா?’ தங்களது சொந்த குடிமக்களையே பாகுபாட்டுடன் நடத்தும் என்னவொரு விசித்திரமான நாடு!

அந்த இரவில், அந்த மதுக்கூடத்தில் மேலாளர்கள் யாரும் இல்லை. ஊழியர்கள் மட்டுமே அங்கே இருந்தனர். ”இது தான் நிறுவனத்தின் கொள்கை. நாங்கள் எதுவும் செய்ய முடியாது” என்று அந்தப் பணிப்பெண் கூறியுள்ளார். பின்னர் நான் அந்த மதுக்கூடத்தின் பொது மேலாளரான மெர்வினிடம் பேசிய போது நடந்த விசயத்திற்கு தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிழையே காரணமென்றும், தனியாக ஆண்கள் வருவதைத் தவிர்க்கவே அப்படி ஒரு விதியைத் தாங்கள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஹாவ்ஸ் காவ்ஸில் மதுவருந்த பெரும் கும்பலே வரும் என்பதால் என்னை எச்சரிக்கையுடன் இருக்குமாறு சொன்ன அவர், தனது ஊழியர் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நேர்வதைத் தவிர்க்கவே அவ்வாறு நடந்து கொண்டதாகவும், இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ள “தேவையான நடவடிக்கைகளை” தான் எடுக்கவுள்ளதாகவும் மெர்வின் என்னிடம் தெரிவித்தார்.

வெளிப்படையாகச் சொன்னால், வெள்ளைத் தோல் மட்டும் இந்தியாவில் இருக்கும் வெள்ளைக்காரப் பெண்களின் பிரச்சினையில்லை. நாங்கள் ஜெர்மனிக்குத் திரும்பிய பின் பிரான்க்பார்ட் விமான நிலையத்தில் என்னுடன் வேலை பார்க்கும் பேபியனை இரண்டு பெண்கள் வெறித்துப் பார்த்தனர். ”வாவ், உனக்கு மிக அழகான பழுப்புத் தோல்” என்றனர் அவர்கள்.

பெட்ரா சோஜெய்
இந்தியாவுக்கு படிப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பாக சுற்றுப்பயணம் வந்த ஜெர்மன் பத்திரிகையாளர்.

தமிழாக்கம்: முகில்

செய்தி ஆதாரம்:
‘You have so beautiful white skin’: India and its problems with skin colour -indian express

வரலாறு : பார்ப்பனியத்தை வென்ற தலித் மக்களின் பீமா – கோரேகான் வெற்றித்தூண்

4

னவரி , 2017 முதல் நாள், புனே மாநகரம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் திளைத்திருந்தது. அதே நேரத்தில் அங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பீமா-கோரேகான் கிராமத்தில் இருக்கும் ஒரு நினைவுத்தூணருகே மகர் பிரிவு உள்ளிட்ட தலித் மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடினர். மராத்தா பார்ப்பன பேஷ்வா அரச பரம்பரையின் ஆட்சி அதிகாரத்தைச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வீழ்த்தப்பட்டதை நினைவுகூறவே அங்கே அவர்கள் ஒன்றுகூடி இருந்தனர்.

bhima-Koregaon-pillar
பீமா – கோரேகான் வெற்றித்தூண்

மராத்தா பேஷ்வாக்களை வீழ்த்தியதில் துணை புரிந்து இறந்து போன மகர் சமூகத்தினரைப் பெருமைப்படுத்தும் விதமாக 1851 ஆம் ஆண்டில் பீமா-கோரேகான் கிராமத்தில் ஆங்கிலேயர்கள் அந்த நினைவுத்தூணை எழுப்பினர். பீமா-கோரேகான் நினைவுத்தூணில் இருக்கும் 49 வீரர்களின் பெயர்களில் 22 வீரர்கள் மகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஒன்றுகூடலுக்கு பீமா-கோரேகான் ரான்ஸ்டம்ப் சேவா சங் (BKRSS) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. கோரேகான் கிராமத்தைச் சேர்ந்த 11 பேர்களும் மகராஷ்டிரா மாநிலம் முழுவதிலும் இருந்து 500 தன்னார்வலர்களும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மகர் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இந்திய இராணுவ வீரர்கள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இந்து இந்தி இந்தியா அடிப்படையில் அகண்ட பாரதம் பேசும் பார்ப்பனிய பாசிஸ்டுகளுக்கு ஆண்டுதோறும் நடக்கும் இந்தத் தலித் மக்களின் ஒன்றுகூடல் வேப்பங்காயாய் கசக்கும் என்பதில் வியப்பொன்றுமில்லை.

பீமா-கோரேகான் யுத்தம்

மராத்திய அரசர் பேஷ்வா பாஜிராவ்-II யை ஆங்கிலேயர்கள் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் மகர் சமூகத்தினர் மராத்திய அரசிற்குச் சேவை செய்து கொண்டிருந்தனர். ஆனால் மகர் சமூகத்தினரை பேஷ்வா நிராகரித்துவிட்டதால் அவர்கள் ஆங்கிலேயர்கள் பக்கம் திரும்பி விட்டனர். இந்த நிராகரிப்பு என்பது நூற்றாண்டுகளாக தொடரும் பார்ப்பனக் கொடுங்கோன்மையின் அங்கம். 21-ம் நூற்றாண்டிலேயே கயர்லாஞ்சிக் கொடுமைகள் பகிரங்கமாக நடக்கும் போது 19-ம் நூற்றாண்டில் தலித் மக்கள் எப்படி நடத்தப்பட்டிருப்பர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இந்த வரலாற்று வெஞ்சினம்தான் பார்ப்பனியத்தின் பிரதிநிதிகளான பேஷ்வாக்கை முறியடுக்குமாறு மகர் மக்களை ஆங்கிலேயரின் படையில் இணையச் செய்தது.

1818, ஜனவரி முதல் நாள் ஆங்கிலேயப் படைத்தளபதி எப்.எப்.ஸ்டாண்டன் தலைமையில் கிழக்கிந்திய நிறுவனத்தின் பாம்பே காலாட்படை அணியின் 500 வீரர்கள் பீமா ஆற்றைக் கடந்து 25,000 வீரர்களைக் கொண்ட மராத்தியப் பெரும்படையை பீமா-கோரேகான் கிராமத்தில் எதிர்கொண்டனர்.

பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராகத் தலித் மக்களின் விடுதலைக்கான ஓர் இன்றியமையாத திருப்பமாக இந்தப் போரை தலித் ஆர்வலர்களில் பலர் கருதுகின்றனர். இந்தப் போரில் 12 ஆங்கிலேய அதிகாரிகளும் மகர் வீரர்கள் உள்ளிட்டு 834 வீரர்களும் பங்கேற்றனர்.

books
விழாவில் வைக்கப்பட்ட புத்தக கண்காட்சியில்…

மகர் படையின் எண்ணிக்கையை 500 அல்ல 900 என்றும் பேஷ்வா படையினரின் எண்ணிக்கையை 25000 அல்ல 20000 என்றும் சமகாலத்திய ஆங்கிலேயர்களின் தகவல்கள் சில கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பேஷ்வாக்கள் ஆங்கிலேயர்களிடம் தோற்றுப் பின்வாங்கிக் கொண்டிருந்தனர். அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் கிழக்கிந்திய நிறுவனம் பேஷ்வாக்களின் தலைநகரான புனேவையும் கைப்பற்றியிருந்தது.

புள்ளிவிவரங்கள் எதுவாக இருப்பினும் இந்தப் போரானது அதுவரை வழக்கத்தில் இல்லாத புதுமையில் திகழ்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

“மராத்திய அரசர் சிவாஜியின் பழம்பெரும் வெற்றிகளில் மகர் சமூகத்தினர் இன்றியமையாத அங்கமாக இருந்து வந்தனர். அவுரங்கசிப்பால் கொல்லப்பட்ட மராத்தா அரசர் சாம்பாஜியின் உடலை மகர் சமூகத்தினர் மீட்டு வந்ததை மக்கள் மறந்து விட்டனர். பேஷ்வா படைகளுடன் சேர்ந்து பானிபட் மற்றும் கர்டா உள்ளிட்ட இடங்களில் அவுரங்கசிப்பிறகு எதிரான போர்களில் மகர் சமூகத்தினர் பங்கேற்றனர். ஆனால் வரலாறு பெரும்பாலும் பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்படுவதால் உண்மைகளில் குழப்பம் நேர்ந்து விடுகிறது” என்று BKRSS அமைப்பின் துணைத்தலைவரான கட்லக் கூறுகிறார். ஏனெனில் வரலாறு என்றுமே பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட பக்கங்கள் பூஜ்ஜியம் தான். சிவாஜியின் காலத்திற்கு பிறகு ஆட்சியைப் பற்றிய பேஷ்வாக்கள் எனப்படும் சித்பவன பார்ப்பனர்கள் தமது ஆட்சியில் வருணாசிரம் கொடுங்கோன்மையை உறுதிப்படுத்தினர். இது மகர் மக்களை கோபத்தில் ஆழ்த்தியது.

அதே நேரத்தில் ஆங்கிலேயர்கள் பொருளாதார – அரசியல் ரீதியாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் நோக்கில் இந்திய மக்களைக் கொடுமைப்படுத்தினர். தமது அரசு – இராணுவ எந்திரத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள் தேவைப்பட்டனர் என்பதால் அவர்கள் சாதி பார்க்காமல் இராணுவத்தில் தலித் மக்களை சேர்த்துக் கொண்டனர்.

ஆனால் பார்ப்பனர்கள் மகர் சமூகத்தினரை மனிதர்களாகவே நடத்தவில்லை. பார்ப்பனர்களின் தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆட்பட்ட மகர் சமூக மக்களுக்கு வெள்ளையர்கள் வாராது வந்த மாமணிகள் போல் தெரிந்ததில் வியப்பொன்றுமில்லை. அகண்ட பாரதத்தின் காலாச்சாரப் பெருமைகளைச் மொகலாயர்கள் அழித்துவிட்டதாகப் புலம்பித் தீர்க்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் இதயத்தை குத்தும் முள்ளாக, வரலாற்றின் அழியாத சின்னமாய் பீமா-கோரேகான் நினைவுத்தூண் அமைந்துவிட்டது.

people-at-feastival
நினைவுத்தூணருகே ஒன்றுக்கூடிய மகர் உள்ளிட்ட தலித் மக்கள்

மகர் சமூகத்தினர் பேஷ்வாக்களை எதிர்க்கக் காரணம் என்ன?

மராத்தி மொழி பேசும் மண்ணின் மைந்தர்களான மகர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைக் கொண்டு கட்டமைத்த கொரில்லா படைகள் தான் சிவாஜியின் மராத்திய சாம்ராஜ்ஜியத்திற்கு அடிகோலின. மராத்தா அரசின் அமைச்சர்களாக இருந்த பேஷ்வா பார்ப்பனர்கள் சிவாஜியின் காலத்திற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

பேஷ்வாக்களின் கீழ் மகர் சமூகத்தினர் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தனர். மகர் சமூகத்தினரிடையே அவர்கள் தாம் அனுபவித்த கொடுமைகளைப் பற்றிய இலக்கியங்கள், நாட்டார் வழக்குகள், செவி வழிக் கதைகள் இன்றும் தொடர்கின்றன.

இடுப்பில் கட்டியத் துடைப்பத்துடனும் கழுத்தில் தொங்கவிடப்பட்ட பானையுடனும் தான் பார்ப்பனர்கள் வாழும் நகரத்திற்குள் மகர் சமூகத்தினர் நுழைய முடியும். அவர்களது கால்களால் தீண்டப்பட்ட தரையைத் துடைப்பத்தைக் கொண்டு துடைத்துக் கொண்டும் எச்சிலை பானையில் துப்பிக் கொண்டும் நகரத்தினுள் அலைந்து திரிய வேண்டும் என்பது தான் பார்ப்பனர்கள் விதித்த மனுதர்மம். மகர் சமூகத்தினர் தங்களது சாதியையும் யாரிடமும் மறைக்கக்கூடாது. மற்றும் அவர்களுக்கு படிப்பறிவும் ஆயுதங்களைத் தூக்கும் உரிமையும் மறுக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான தண்டனைகள் என விலங்குகளை விட மோசமாக மகர் சமூகத்தினர் நடத்தப்பட்டனர்.

சித்பவன பார்ப்பனர்களின் தலைவர்களான பேஷ்வாக்களின் இந்த மனிதத்தன்மையற்ற செயல்கள் தான் மகர் சமூகத்தினரை ஆங்கிலேயர்களின் பக்கம் சேரத் தூண்டியது. நூற்றாண்டுகள் பல அடக்கியொடுக்கப்பட்ட மகர்களின் சுயமரியாதை வித்தானது பார்ப்பனியத்தை முட்டி மோதி முளைத்தெழுந்தது. பார்ப்பன பேஷ்வாக்களுக்கு எதிரான தங்களது வீரஞ்செறிந்த போரினால் ஆங்கிலேயர்களுக்கு மகர் வீரர்கள் வெற்றியைத் தேடித் தந்தனர்.

இதற்கு நன்றிக் கடனாகத் தான் போரில் இறந்த மகர் சமூக வீரர்களுக்கு நினைவுச் சின்னமாக வெற்றித்தூணை எழுப்பி அவர்களை வெள்ளையர்கள் பெருமைப்படுத்தினார்கள். அதன் பிறகுத் தொடர்ச்சியாக வெள்ளையர்கள் அவர்களை தங்களது படைக்குத் தேர்வு செய்தனர்.

சமத்துவப் படை

மகர் சமூகத்தினருக்கு நீண்ட இராணுவ வரலாறு இருந்த போதிலும் ஆங்கிலேய அரசு 1893 ஆம் ஆண்டு அவர்களைத் தங்களது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை. 1857 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிப்பாய் கலகம் (Indian Rebellion -1857) இதற்கு இன்றியமையாதக் காரணியாக இருந்தது. பிறகு முதல் உலகப்போரில் ஆங்கிலேய அரசு அவர்களைப் படைக்கு அமர்த்தி இருந்தாலும் போருக்கு பிறகு படையில் இருந்து நீக்கிவிட்டது. கடைசியாக 1945 ஆம் ஆண்டு மகர் படைவகுப்பு (Mahar Regiment) நிரந்தரமாக உருவாக்கப்பட்டது.

ambethkar
மகர் படையுடன் அம்பேத்கர்

அதே நேரம் பார்ப்பனர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இராணுவமயமாக்கிக் கொண்டிருந்தார்கள். இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருப்பதாக அம்பேத்கர் கருதினார். எனவே அதனை எதிர்கொள்ள சமத்துவப்படை (Samata Sainik Dal) என்ற துணை அமைப்பை 1926 ஆம் ஆண்டு நவம்பரில் அம்பேத்கர் தொடங்கினார். இது பின்னர் 1955 ஆண்டு அம்பேத்கர் உருவாக்கிய இந்தியப் புத்த சமூகத்தில்(Buddhist Society of India) இணைக்கப்பட்டது. பார்ப்பனர்களின் கொடுமைகளில் இருந்து தலித் மக்களைப் பாதுகாக்க அஃது உதவும் என்று அம்பேத்கர் கருதினார்.

1927, ஜனவரி முதல் நாள் பீமா-கோரேகான் கிராமத்திற்கு வெளியே இருக்கும் நினைவுச்சின்னத்தின் அருகே நடைபெற்ற ஒருக்கூட்டத்தில் அம்பேத்கர் தலைமையுரை ஆற்றினார். அதன் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நினைவுச்சின்னம் இருக்குமிடத்தில் மகர் சமூகத்தினர் ஒன்றுகூடி மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.

நவீனத் தீண்டாமை

தீண்டாமை மனிதநேயமற்ற செயலும் பெருங்குற்றமுமாகும் என்று பள்ளிக்கூட ஏடுகளில் கூட இன்று நாம் காண்கிறோம். ஆயினும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பேஷ்வாக்களின் வாரிசுகளால் தீண்டாமை இன்று நவீன முறையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. புத்தாண்டு அன்று பீமா-கோரேகான் நினைவுத்தூண் இருக்கும் பாதையில் நடக்கக்கூடாது என்பது தான் அந்த நினைவுத்தூணைப் பற்றி புனேவில் இருக்கும் ஆதிக்கச்சாதி இந்துக்களின் இன்றையக் கருத்தாக இருக்கிறது என்று புனே பல்கலைகழகத்தின் வரலாற்றாசிரியரான சாரதா கும்போஜ்கார் கூறியுள்ளார்.

“அந்த நினைவுத்தூணை அடுக்கடுக்கான பல நினைவுகள் சூழ்ந்து உள்ளன. கோரேகான் போர்க்களம் பின்னர் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு 1927 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அங்கு வருகை தந்தார். அவரது வருகைக்குப் பிறகு புனிதத்தளத்திற்கான சிறப்பை அது பெற்றுவிட்டது. அவரது மறைவுக்குப் பிறகு இந்து காலாச்சாரத்திற்கு மாற்றுக் காலச்சாரம் உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தளம் மாறிவிட்டது” என்று கூறினார் சாரதா.

அந்த நினைவிடத்தைக் கடந்து நெடுஞ்சாலைக்குச் செல்லும் வழியைத் தவிர்க்க நகரத்து நடுத்தர மக்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் நினைவுபடுத்திக் கொள்கிறார்கள். “கோரேகானில் இருக்கும் அவர்களது இடத்தில் அந்த (தலித்) மக்கள் கும்பலாக இருப்பார்கள்” என்று தங்களுக்குள் எச்சரிக்கைச் செய்து கொள்கிறார்கள் என்று சாரதா கூறினார்.

இருந்தபோதிலும் பார்ப்பனியச் சாதிக்கொடுமைக்கு எதிரான மகர் சமூகவீரர்களின் போராட்டத்தை இது நலிவடையச் செய்துவிடாது.

“நான் ஒரு புத்த பிக்கு. அமைதியில் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்த சமூகத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தவே நான் இங்கு வந்திருக்கிறேன்” என்று புத்த பிக்கு பூர்ணிமா கூறினார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து இவர் வந்திருந்தார்.

வெள்ளையர்களிடம் பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் கூழைக்கும்பிடு போட்டதுதான் பார்ப்பனர்களின் வரலாறு. சுயமரியாதைக்காக பார்ப்பனர்களின் செருக்கை அதே வெள்ளையருடன் சேர்ந்து அழித்தொழித்தது தாழ்த்தப்பட்ட மகர் சமூகத்தின் வரலாறு. முன்னது பாரத் மாதா என்றும் ஜனகனமன என்றும் தேசபக்தி வேடம் போட்டுக்கொள்கிறது. பின்னது சுயமரியாதைக்கான வரலாற்றுச் சின்னமாக பீமா-கோரேகான் கிராமத்தில் இன்றும் நிலைத்துள்ளது.

இதை  வைத்துக் கொண்டு மகர் சாதி தலித் மக்களை தேச துரோகிகள் என்று கூறுவதற்கு ஆர்.எஸ்.எஸ் தயாரா? அப்படிக் கூறினால் உனா போராட்டத்தின் தொடர்ச்சியாக செத்த மாட்டின் உடல்களை வீசினார்களே குஜராத் தலித் மக்கள், அது போன்று மராட்டிய தலித் மக்களும் அகண்ட பாரத அடையாளங்களை எரிப்பது உறுதி.

தேசபக்தி என்பது பாரதமாதா போன்ற பட்டு உடை போர்த்திய மாமி படங்களை பூஜிப்பதால் வருவதில்லை என்பதை இந்த வரலாற்றுத் தூண் கூறுகிறது. ஆங்கிலேயர்களை அண்டிப் பிழைத்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் தலைவர்களும் சரி, காங்கிரசை இந்துமயமாக்கிய திலகர் போன்ற தலைவர்களும் சரி அனைவரும் பேஷ்வாக்களைப் போன்று சித்பவன பார்ப்பனர்கள் என்பது இந்த வரலாற்றுத் தூணின் கதையை உறுதிப்படுத்திகிறது.

பேஷ்வாக்கள் ஆட்சியில் தமது பார்ப்பன சாம்ராஜ்ஜியம் பறிபோனதாலேயே சித்பவன பார்ப்பனர்கள் காங்கிரசிலும், ஆர்.எஸ்.எஸ் – இந்து மகா சபாவிலும் சேர்ந்தார்கள். இதன் காரணம் தேசபக்தி அல்ல. இழந்து போன பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை மீட்பதே. ஆனால் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து பேஷ்வாக்களை எதிர்த்த மகர்களின் நோக்கம் தமது அடிமைத்தனத்தை ஒழிப்பதே. இப்போது சொல்லுங்கள் தேச பக்தர்கள் யார் என்று!

– சுந்தரம்

செய்தி ஆதாரம்:
Why lakhs of Indians celebrate the British victory over the Maratha Peshwas every New Year
When Mahars fought on home turf, and helped Britain win

கம்பம் : ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை தாக்கும் போலீசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

2

கம்பத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீதான காவல்துறை தாக்குதலைக் கண்டித்தும் பீட்டாவை தடை செய்யக்கோரியும் மறியல், ஆர்ப்பாட்டம்!

ம்பத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மோடி, ஓபிஎஸ் அரசை எதிர்த்து தோழர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு தோழர்கள் ஊர்வலமாக  கிளம்பினார்கள். கம்பம் சிக்னல் அருகே சென்ற போது டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் ஊர்வலத்தை தடுக்க முயற்சித்த போது தோழர்கள் அப்படியே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். மறியல் செய்த தோழர்களை காவல்துறை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்த முயற்சித்தது. தோழர்களின் விடாமுயற்சியால் காவல்துறை பின் வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியது. அதன் பின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்த்து. மீண்டும் வந்த டிஎஸ்பி காவல் துறை வாகனத்தில் ஏறும்படி கூறினார்கள். வாகனத்தில் ஏறமுடியாது நடந்துதான் வருவோம் என்ற போது நிலைமையை உணர்ந்த காவல்துறை மீண்டும்  ஆர்ப்பாட்டம் செய்து கலைந்து செல்லுங்கள் என்றது. மக்கள் அதிகாரத்தின் இந்த ஆர்ப்பாட்டம் கம்பம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்,
கம்பம்.

காவிக் காளையை அடக்கு ! கேலிச்சித்திரம்

1

தமிழகத்திற்கு எதிரான காளையை அடக்கு !

Mugilan Cartoon

ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச: 95518 69588

இணையுங்கள்:

உலகம் : 2016-ம் ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் படுகொலை !

0
ஐ.எஸ்.ஐ.எல் - லுக்கு எதிரான லிபிய அரசின் கொடுமைகளைப் பதிவுச் செய்ததற்காக டச்சு நிருபரான ஜெரோயின் ஓர்லேமன்ஸ்(Jeroen Oerlemans) லிபிய நகரமான சிர்ட்டேவில் அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

“சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம்” (International Federation of Journalists – IFJ – ச.ஊ.ச) 2016 ஆண்டில் 93 பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. குறிப்பாக 2016-ம் ஆண்டில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் பத்திரிக்கையாளர்களுக்குப் பயங்கரமான நாடுகளாக இருந்துள்ளதாக அது கூறியுள்ளது.

கொலம்பியாவில் கடந்த ஆண்டுகளில் தங்களது உயிர்களை இழந்த பத்திரிக்கையாளர்களுக்கு அந்நாட்டு மக்கள் நவம்பர் மாதத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கொலம்பியாவில் கடந்த ஆண்டுகளில் தங்களது உயிர்களை இழந்த பத்திரிக்கையாளர்களுக்கு அந்நாட்டு மக்கள் நவம்பர் மாதத்தில் அஞ்சலி செலுத்தினர்.

திட்டமிட்டத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள் அல்லது இருத்தரப்புத் துப்பாக்கிசூட்டில் பலியானவர்களைச் சேர்த்து இந்த எண்ணிக்கையை ச.ஊ.ச தெரிவித்துள்ளது. இரசியாவைச் சேர்ந்த 9 பத்திரிக்கையாளர்களும், கொலம்பியாவைச் சேர்ந்த 20 விளையாட்டுப் பத்திரிக்கையாளர்களும் விமான விபத்துகளில் கூடுதலாகப் பலியாகியுள்ளனர்.

பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸில் இயங்கி வரும் ச.ஊ.ச, 140 நாடுகளில் உள்ள 6 இலட்சம் ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 2015 ஆம் ஆண்டு வரை குறைந்தது 2,297 பத்திரிக்கையாளர்களின் மரணங்களை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது.

2015 ஆம் ஆண்டை விட 2016 ஆம் ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கைச் சற்றுக் குறைவாக இருந்தாலும் அதைப் பற்றிய விசாரணையில் மெத்தனப் போக்கு இருப்பது குறித்தும் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து விலக்கு பெரும் போக்குக் குறித்தும் ச.ஊ.ச எச்சரித்திருக்கிறது. 4 விழுக்காடு இறப்புகளுக்கு மட்டுமே இதுவரை நீதி கிடைத்திருக்கிறது என்று அது கூறியுள்ளது.

“பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை சற்று குறைந்தாலும் அது வரவேற்கத்தக்கதே. ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது சிறு ஆறுதலை மட்டுமே கொடுப்பதுடன் ஊடகத்துறையில் நிலவும் பாதுகாப்பின்மை முடிவுக்கு வராமல் இருப்பது நம்பிக்கையளிப்பதாக இல்லை” என்று ச.ஊ.ச-வின் தலைவரான பிலிப்பே லேருத் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே 2015 ஆம் ஆண்டில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்களால் 112 பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

பகுதிவாரியாகப் பார்க்கும் போது 30 படுகொலைகளுடன் மத்திய கிழக்கு பத்திரிக்கையாளர்களுக்கு கொலைக்களமாக இருக்கிறது. மத்திய கிழக்கை நிரந்தர போர்க்களமாக்கி தனது ஆதிக்கத்தினை நிலை நிறுத்தும் பொருட்டு அல் கைதா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை உருவாக்கிய அமெரிக்காவே முதன்மைக் குற்றவாளி. மத்திய கிழக்கைத் தொடர்ந்து ஆசியா – பசிபிக் பகுதியில் 24 படுகொலைகளும் ஆப்பிரிக்காவில் 8 படுகொலைகளும் ஐரோப்பாவில் 3 படுகொலைகளும் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக நடந்துள்ளதாக ச.ஊ.ச கூறியுள்ளது.

அதிகபடியான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ள நாடுகள்
அதிகபடியான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ள நாடுகள்

அதுமட்டுமல்லாமல் 2016 ஆண்டு முழுதும் பத்திரிக்கையாளர்கள் பலர் காணாமல் போயுள்ளது குறித்தும் தமக்குத் தெரிய வந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

“காணாமல் போனவர்கள் பற்றிய நம்பகமான தகவல் எதுவும் இல்லை. அதுமட்டுமல்லாமல் சட்டவிரோத கும்பல்களிடமிருந்து வரும் தேவையில்லாத பிரச்சினைகளைத் தவிர்க்க சில நாடுகளில் நிருபர்கள் சுயதணிக்கை (Self-Censorship – இங்கே பத்திரிக்கையாளர் தமது அடையாளத்தை மறைத்தல் என்ற பொருளில்) செய்து கொள்கிறார்கள். இந்தப் பிரச்னைகள் இல்லை என்றால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்” என்று ச.ஊ.ச வின் பொதுச்செயலாளர் அந்தோணி பெல்லங்கர் கூறியுள்ளார்.

“படுகொலைகள், காணாமல் போதல் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான வன்முறைகளை ஆய்வு செய்ய அரசாங்கங்களைத் துரிதபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அந்த ஆய்வு வேகமாகவும் நம்பகமான முறையிலும் பத்திரிக்கையாளர்களின் உடல்ரீதியிலான பாதுகாப்பையும் அவர்கள் தனித்துச் செயல்படுவதைப் பேணும் விதத்திலும் இருக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

குற்றவாளிகள் தண்டனைகளில் இருந்து விலக்குப் பெறுவது அதிகரித்து வருவதால் பத்திரிக்கையாளர்கள் சுயதணிக்கை செய்து கொள்கிறார்கள் என்று நியூயார்க்கில் இயங்கி வரும் பத்திரிக்கையாளர் பாதுகாப்புக் குழு(The Committee to Protect Journalists) டிசம்பர் மாத அறிக்கையொன்றில் கூறியிருந்தது.

“பத்திரிக்கையாளர்களை ஆபத்தான பகுதிகளில் செயல்படுவதிலிருந்து அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறை இரண்டும் துரத்தி விடுகின்றன. மோதல் நடக்கும் இடங்களில் இருந்து வெளியேறவோ அல்லது சுயதணிக்கை செய்து கொள்ளவோ அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன” என்று பாகிஸ்தானைச் சேர்ந்த சுயாதீன பாகிஸ்தான் பத்திரிக்கை நிறுவனம்(The independent Pakistan Press Foundation) நவம்பரில் கூறியிருந்ததை CPJ மேற்கோள் காட்டியிருக்கிறது.

2016 ஆம் ஆண்டில் பத்திரிக்கையாளர்களுக்கு சிரியா மிகவும் பயங்கரமான நாடாக இருந்ததாகவும் அதற்கு அடுத்ததாக ஈராக் மற்றும் ஏமன் நாடுகள் இருந்ததாகவும் CPJ கூறியிருக்கிறது. சிரியாவில் 2011 க்குப் பிறகு நடந்து வரும் உள்நாட்டுப்போரில் இதுவரை 107 பத்திரிக்கையாளர்கள் பலியாகி இருப்பதாக அது கூறியிருக்கிறது.

உலகம் முழுவதும் இயற்கை வளங்களுக்காகவும் அதிகாரத்திற்காகவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் தோற்றுவித்திருக்கும் முரண்பாட்டுப் பின்னல்களில் சிக்கிக் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்படுகின்றனர். இதை நேரடிக்காட்சிகளாக்க ஏகாதிபத்திய செய்தி நிறுவனங்கள் முதல் தன்னார்வ ஊடகவியலாளர்கள் வரை களத்தில் குதிக்கின்றனர். இந்த அவலங்கள் தோற்றுவித்திருக்கும் சீரழிவில் மக்களோடு சேர்ந்து பத்திரிக்கையாளர்களும் மடிந்து போகின்றனர்.

ஈராக் மீதான ஆக்கிரமிப்புப்போரில் ஊடகவியலாளர்களை நேரடியாக களத்தில் இறக்கி கொல்லப்படும் ஈராக்கிய மக்களை தீவிரவாதிகளாக நம்ப வைத்தது அமெரிக்கா. தன்னுடைய ஆக்கிரமிப்பையும் போர்வெறியையும் நியாயப்படுத்த அமெரிக்கா உருவாக்கிய இந்த பிரச்சார உத்தியை பின்னர் உலகமே காரித்துப்பியது.

1993 ஆம் ஆண்டில் பட்டினிச்சாவின் விளிம்பில் சிக்கியிருந்த தென் சூடானைச் சேர்ந்த ஒரு பெண்குழந்தையையும் அவளை தின்பதற்காக காத்திருந்த பருந்தையும் ஒரு சேர எடுக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற படத்திற்கு 1994 ஆம் ஆண்டு புலிட்சர் பரிசு கிடைத்தது. கல்நெஞ்சத்தையும் கதறச் செய்யும் அந்த கோரக்காட்சியை படம் பிடித்த கெவின் கார்ட்டர் என்ற தென்னமெரிக்க பத்திரிக்கையாளர் குற்றவுணர்வால் உந்தப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வியட்நாம் உடனான போரின் போது சாலையில் நிர்வாணமாக ஓடிவரும் ‘கிம் புக்’ என்ற சிறுமியை யாரும் மறந்திருக்க முடியாது. நிக் உட் என்பவர் எடுத்த இந்தப் புகைப்படம் அமெரிக்கப் போர் வெறிக்கு என்றைக்குமான கோரச்சாட்சியாக இருக்கிறது.

பத்திரிக்கையாளர்களின் மரணங்களுக்கு நியாயம் வேண்டும் என்று கூக்குரலிடும் இந்நிறுவனங்கள் இம்மரணங்களுக்கான மூலவேர்கள் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களில் முடிகின்றன என்பதைக் குறித்து சிறுத்தும்மலைக் கூட வெளிப்படுத்துவதில்லை. ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பத்திரிக்கையாளர்களுக்கு பயங்கரமான நாடுகள் என்றால் தனது ஏகாதிபத்திய நலன்களுக்காக அந்த சோதனைச்சாலைகளை உருவாக்கிய அமெரிக்காவை என்ன பெயரிட்டு அழைப்பது?

ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளின் படி டெய்லி இலெவன் (Daily Eleven) செய்திப் பத்திரிக்கையின் புலனாய்வு நிருபரான சு மோ துன்(Soe Moe Tun) 2016, டிசம்பர் 13 அதிகாலையில் மியான்மரில் படுகொலை செய்யப்பட்டார்.
ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளின் படி டெய்லி இலெவன் (Daily Eleven) செய்திப் பத்திரிக்கையின் புலனாய்வு நிருபரான சு மோ துன்(Soe Moe Tun) 2016, டிசம்பர் 13 அதிகாலையில் மியான்மரில் படுகொலை செய்யப்பட்டார்.
ஐ.எஸ்.ஐ.எல் - லுக்கு எதிரான லிபிய அரசின் கொடுமைகளைப் பதிவுச் செய்ததற்காக டச்சு நிருபரான ஜெரோயின் ஓர்லேமன்ஸ்(Jeroen Oerlemans) லிபிய நகரமான சிர்ட்டேவில் அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் – லுக்கு எதிரான லிபிய அரசின் கொடுமைகளைப் பதிவுச் செய்ததற்காக டச்சு நிருபரான ஜெரோயின் ஓர்லேமன்ஸ்(Jeroen Oerlemans) லிபிய நகரமான சிர்ட்டேவில் அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
இரசிய நிருபரான பாவெல் செரிமெட்(Pavel Sheremet) ஜூலை மாத கடைசியில் உக்ரைனின் கிவ்வில் நடந்த ஒரு கார் வெடிகுண்டு விபத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இரசிய நிருபரான பாவெல் செரிமெட்(Pavel Sheremet) ஜூலை மாத கடைசியில் உக்ரைனின் கிவ்வில் நடந்த ஒரு கார் வெடிகுண்டு விபத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
சோமாலியாவின் தலைநகரமான மோகடிஸுவில் துப்பாக்கி ஏந்திய நபர்களால் சோமாலிய வானொலி நிருபரான அப்தியசிஸ் அலி ஹாஜி(Abdiasis Ali Haji) செப்டெம்பரில் படுகொலை செய்யப்பட்டார்.
சோமாலியாவின் தலைநகரமான மோகடிஸுவில் துப்பாக்கி ஏந்திய நபர்களால் சோமாலிய வானொலி நிருபரான அப்தியசிஸ் அலி ஹாஜி(Abdiasis Ali Haji) செப்டெம்பரில் படுகொலை செய்யப்பட்டார்.
ஆப்கனைச் சேர்ந்த தொலைகாட்சி நிலையமான அரியானாவில்(Ariana) பணிப் புரிந்து வந்த பத்திரிக்கையாளரான நெமதுல்லாஹ் ஜாகிர்(Nematullah Zaheer) சாலையோர குண்டு ஒன்று வெடித்ததில் உயிரிழந்தார்.
ஆப்கனைச் சேர்ந்த தொலைகாட்சி நிலையமான அரியானாவில்(Ariana) பணிப் புரிந்து வந்த பத்திரிக்கையாளரான நெமதுல்லாஹ் ஜாகிர்(Nematullah Zaheer) சாலையோர குண்டு ஒன்று வெடித்ததில் உயிரிழந்தார்.

– சுந்தரம்

செய்தி ஆதாரம் :
Nearly 100 journalists killed worldwide in 2016: IFJ – அல் ஜசீரா

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரத்தில் மஞ்சு விரட்டு !

0

மதுரவாயலில் மக்கள் அதிகாரம் நடத்தும் மஞ்சு விரட்டு !

 

PP Poster

pp Manjuvitattu

தமிழ் இனத்தை தமிழ் நாட்டை நசுக்க நினைக்கும் பி.ஜெ.பி.க்கு பாடம் புகட்ட, தன்மானமுள்ள மாணவர்கள் – இளைஞர்கள் என அனைவரும் இந்த அழைப்பை ஏற்று மதுரவாயலுக்கு வாருங்கள் !

இடம் : மதுரவாயல்,
நாள் : 17.01.2017.
நேரம் : மாலை 5:00 மணி.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம். 91768 01653.

_______________

விழுப்புரத்தில் மஞ்சு விரட்டு !

 

v

தமிழ் இனத்தை தமிழ்நாட்டை நசுக்க நினைக்கும் பி.ஜே.பி- RSS கும்பலுக்கு பாடம் புகட்ட, தன்மானமுள்ள மாணவர்கள், இளைஞர்கள் இந்த அழைப்பை ஏற்று விழுப்புரத்திற்கு வாருங்கள் !

இடம் : விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரில்
நாள் : 17.01.2017

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

_______________

காஞ்சிபுரம் பகுதியில்  16.01.2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் உடைப்புப் போராட்டத்தை நடத்திய அழிவிடைதாங்கி, மற்றும் அருகில் உள்ள பெருமானூர், வெம்பாக்கம் ஆகிய  ஊர்மக்களும் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினரும் இணைந்து மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில் 3,000 பேர் கலந்து கொண்டனர். மேலும் சென்னை – காஞ்சிபுரம் மக்கள் அதிகாரம் தோழர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஊர் மக்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

மாலை நேரத்தில் தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பம் மற்றும் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் மஞ்சு விரட்டு தொடங்கியது. இதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் முன்னணித் தோழர்கள், தோழர்.கணேசன், தோழர். முகுந்தன் மற்றும் பகுதித் தோழர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Kanchi manju virattu (7)

மேலும் மக்கள் அதிகாரத்தின் “ஜல்லிக்கட்டு அல்ல! இது டெல்லிக் கட்டு!” என்ற துண்டறிக்கைகள் ஆயிரக் கணக்கில் மக்களிடம் வினியோகிக்கப் பட்டது. இந்த ஊர்களிலும் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் காவல் துறை நேரில் சென்று முந்தைய நாளே மக்களை மிரட்டிப் பார்த்துள்ளது, ஆனால் மக்கள் நாங்கள் வருடா வருடம் நடத்தும் இந்த நிகழ்ச்சியை யாரும் தடுக்க முடியாது என துணிச்சலாக பதிலலித்துள்ளனர்.

மேலும் நிகழ்ச்சி நடக்கும் போது மக்களை தடுக்க வந்த போலீசிடம் 70 வயது முதியவர் ஒருவர் எங்க மாட்டை விரட்டக் கூடாது என சொல்ல நீ யார் எனக் கூறி போலீசை விரட்டிவிட்டார். மேலும் இளைஞர்கள் பலரும் “தமிழண்டா ! முடிஞ்சா தொட்டுப் பார் !” என்ற டி-சர்டுகளுடன் வலம் வந்தனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் காவல் துறை வந்து தடுத்தால் அதை எதிர் கொள்ள ஆயத்தமாக முன் நின்றனர். காவல் துறை தனது அதிகாரம் இங்கு பலிக்காது என்பதை உணர்ந்து திரும்பி சென்றது.

இவ்வாறு காவல் துறையின் அச்சுறுத்தல்களை மீறி இரவு 8:00 மணிவரை நிகழ்ச்சிகள் நடை பெற்றது இதில் சுமார் 100-க் கணக்கான காளை மற்றும் உழவுமாடுகளுடன் உற்சாக மாக நிகழ்ச்சியை நடத்தி முடித்தனர்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம். 91768 01653.

கோவை ஜிடிஎன் ஆலையில் பு.ஜ.தொ.மு – வின் புது சங்கம் உதயம் !

0

ஜி‌.டி‌.என் நிறுவனம் பல்லடம் செம்மிபாளையத்தில் செயல்பாடு வருகிறது. 228 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்கள் 150 பேர் உள்ளனர். ஜி‌.டி‌.என் நிறுவனத்தில் எண்ணெய் கிணறு சம்பந்தப்பட்ட வால்வு மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரித்தல் நடைபெறுகிறது. AEROSPACE விமானத்தின் உதிரி பாகங்களும் தயாரிக்கப்படுகிறது. அனைத்தும் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

NDLF Covai GDN (3)தொழிலாளர்கள் அனைவரும் ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி சங்கத்தில் ஒரே சங்கமாக செயல்பட்டனர். ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி சங்கத்தின் மீது தொழிலாளர்களுக்கு நம்பிக்கை இழப்பு ஏற்பட்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை நாடி வந்தனர் நமது தரப்பில் “ஏற்கெனவே ஒரு சங்கம் நிறுவனத்தில் உள்ள நிலையில் இன்னொரு சங்கத்தை துவக்குவது தொழிலாளர்களை கூறு போட செய்யும்” எனவே ஏ‌ஐ‌டி‌யு‌சி சங்கத்துக்குள்ளேயே (அமைப்பு முறைப்படி) போராடுங்கள் என்று அனுப்பினோம், தொழிலாளர்கள் அதன்படி செய்தார்கள். ஆனால் அதற்குள் ஏ‌ஐ‌டி‌யு‌சி சார்பில் புஜதொமு-வை விமர்சனம் செய்து இரண்டு வகையான துண்டுப் பிரசுரம் வெளியிட்டு அவதூறு செய்தனர்.

நாம் நம்மிடம் வந்த தொழிலாளர்களிடம் “எமது அமைப்பு சார்பில் இதற்கெல்லாம் பதில் கூறத் தேவையில்லை எனக் கருதுகிறோம் நீங்களே நேரடியாக புஜதொமு போராட்டம் நடத்திய கம்பெனிகளுக்கு சென்று விசாரியுங்கள்” என அனுப்பி வைத்தோம் ஜி‌.டி‌.என் தொழிலாளர்களும் என்பெஸ்ட், கௌரி மெட்டல், ரோட்டோரோ, சி‌.பி‌.சி, சி‌.ஆர்‌.ஐ-என நேரில் சென்று விசாரித்து நிலைமையை அறிந்தனர். இதன்பிறகு புஜதொமு சங்கத்தின் கிளையை ஆரம்பித்தே ஆக வேண்டும் என அறிவித்தனர். சி‌.ஆர்‌.ஐ கம்பெனியில் கதவடைப்புக்கு எதிராக 600 நாட்களுக்கு மேலாகியும் போராடும் ஒரே சங்கம், தொழிலாளர்கள் பக்கம் நின்று உறுதியாக போராடுவது நமது சங்கம்தான் என உறுதியாக நின்றனர். அதன்பிறகு 200க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சங்கத்தில் இணைந்தனர்.

கடந்த 18.12.2016 காலை 10:30 மணிக்கு நிறுவனத்தின் முன் கொடியேற்று விழா கிளைத் தலைவர் தோழர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் தோழர் ஆர்தர் ஜீவநேசன் கௌரவத் தலைவர் தோழர் ஜெயபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொழிலாளர்கள் தரப்பில் தோழர்கள் தோழர்கள் கனகராஜ் விஜயகுமார் அசோக், எம்.அசோக், சுப்பிரமணி, மோகன்ராஜ், முருகேசன், ஆகியோர் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். தோழர்.சந்திரஹாசன் உரைவீச்சு நிகழ்த்தினார். மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் திலீப், கோபிநாத், நித்தியானந்தம் சரவணன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர்.

NDLF Covai GDN (2)இறுதியாக மாநில துணைத் தலைவர் விளவை ராமசாமி கொடியேற்றி வைத்து உரையாற்றுகையில், ஜி‌.டி‌.என் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு மட்டும் போராட்டம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் பல்லடம் பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் தஞ்சாவூர் விவசாயிகள் போன்றோரின் பிரச்சினைகளுக்கும் போராட வேண்டும். வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கில் தொழிலாளி வர்க்கம் இயல்பாக தோன்றியது. அது புரட்சிகர உணர்வின் மூலம் தனக்கான வர்க்கமாக மாற வேண்டும், மார்க்சியம் என்பது உயிராற்றல் நிரம்பிய தத்துவம். அதனைக் கொண்டு சமூகத்தை மாற்ற வேண்டும்

காரல் மார்க்ஸும், லெனின், ஸ்டாலின், மாவோவும் உயர்த்திப் பிடித்த செங்கொடியை கம்பெனி வாயிலில் முழக்கங்களுக்கிடையில் ஏற்றி வைத்துள்ளோம். செங்கொடி உயர்ந்த உடன் காவல் துறையினர் உடனே கையில் கேமராவுடன் வந்துவிட்டனர். இதுவரை இக்கம்பெனி முன்பு காவல்துறை ஏன் வரவில்லை. சமரசமாக சங்கம் நடத்தினால் யாரும் வர மாட்டார்கள். புரட்சிகர உணர்வுடன் சங்கம் நடத்தினால் வெற்றியும் வரும். கம்பீரமான தோல்வியும். வரும் இரண்டுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

NDLF Covai GDN (1)தோல்வி வந்தாலும் அதனை தனது உழைப்பால் போராட்டத்தால் வெற்றியாக மாற்றுபவனே கம்யூனிஸ்டு. ஜி‌.டி‌.என் தொழிலாளர்கள் இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும். நாம் காய்த்து குலுங்கும் கனிமரம். நம்மீது கல்லடி நிச்சயம் விழும். நம் மீது ஏ‌ஐ‌டி‌யு‌சி வைத்துள்ள விமர்சனங்களை இது போலத்தான் பார்க்க வேண்டும்.

புரட்சிகர தொழிற்சங்கம் நாளும் ஒவ்வொரு பாடம் நடத்தும். அதனை உற்சாகத்துடன் படித்து வெற்றி பெற வேண்டும். தோல்வியின் அழகு மகத்தானது. அது நம்மிடம் உறங்கிக் கிடக்கும் ஆற்றல்களை தட்டி எழுப்பும். நம் புரிதலை மேம்படுத்தும். முதலாளித்துவ பயங்கரவாதம் அடுத்து நமக்கு விடுக்கப் போகும் சவாலை சந்திக்க அணியமாவோம் என அறைகூவி முடித்தார். தோழர் கிருபானந்தம் நன்றி கூற விழா நிறைவுற்றது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை மாவட்ட.ம்.

விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

1

ருவமழை பொய்த்துப் போனதையடுத்து தீவிரமாகும் வறட்சியும், விவசாயிகளின் தற்கொலைகளும் டெல்டா மாவட்டங்களையும் தாண்டி தமிழகமெங்கும் பரவி வருகிறது. குறிப்பாக பருவமழையை மட்டுமே நம்பிய மானாவாரி விவசாயம் முற்றிலுமாக அழிந்துவருவதால், மானாவாரி விவசாயிகளின் தற்கொலைகள் தொடங்கியுள்ளது.

மதுரைமாவட்டம் பேரையூர் தாலுக்கா, பி.கன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்த 77 வயது பெருமாள் தேவருக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 3 ஏக்கரில் விதைத்திருந்த கம்பு பயிர், மழை போய்த்துப்போனதால் முழுவதும் கருகிவிட்டது. வர்தா புயல் மூலம் எப்படியும் மழை கிடைக்கும் என்று நம்பி 5௦ செண்டில் சாப்பாட்டிற்காக நெல்நாற்று பாவி வைத்திருக்கிறார். அதுவும் பொய்த்துப் போனது. கடைசி முயற்சியாக அவ்வப்போது ஊரும் கிணற்று நீரை நம்பி பாசிப்பயிரை நடவுசெய்துவிட்டு, அதுவும் கைசேருவதற்கு உத்திரவாதமில்லாத நிலையில் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போல புலம்பிக் கொண்டிருந்தவர், வீட்டிலிருந்த காலாவதியான எக்காலாக்ஸ் மருந்தைக் குடித்து இறந்துபோனார்.

இறந்து போன விவசாயி பெருமாள் குடும்பம்
இறந்து போன விவசாயி பெருமாள் குடும்பம்

பெருமாள்தேவருக்கு நான்கு மகள், இரு மகன் என மொத்தம் 6 பிள்ளைகள்! எல்லோரும் திருமணமானவர்கள். இரு மகன்களும் ஆந்திராவில் முறுக்கு போடும் தொழில் செய்து ஓரளவு வசதியாக இருக்கிறார்கள்.

இவ்வளவு வயதான அப்பாவை நீங்கள் கூட்டிக்கொண்டு போய் வைத்திருக்கலாமே? என்று மகனிடம் கேட்டதற்கு, “எங்ககிட்டதாங்க வந்து இருந்தாரு. இங்க மழைபெய்ஞ்சிருச்சுனு தெரிஞ்சவுடனே, என்காடு மட்டும் தரிசா கிடக்குறதா… அப்படினு சொல்லிட்டு ஊருக்கு கிளம்பி வந்துட்டாரு” என்றார். “ஆறு வருடமாக தனியாக சோறு ஆக்கி சாப்பிட்டுக்கிட்டு, வைராக்கியமா விவசாய வேலையும் செய்துக்கிட்டிருந்தாரு. ரொம்ப முடியலைனா நாங்க சோறு கொளம்பு கொடுத்துப் பாத்துக்குவோம்” என்கிறார் பக்கத்து வீட்டுப் பெண்மணி. “ஊர் பொதுப்பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கடன் எடுத்திருக்கிறார். இது இல்லாமல் நூறுநாள் வேலை செய்யும் ஆட்களிடம் முப்பதாயிரம் வரை வட்டிக்கு வாங்கியிருக்கிறார். இந்தக் கடனை என்னைக்கு அடைக்கப்போகிறோம்” என்ற கவலையில்தான் தற்கொலை செய்துகொண்டு விட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

காய்ந்துபோன பருத்தியில் கனவு காணும் விவசாயி.
காய்ந்துபோன பருத்தியில் கனவு காணும் விவசாயி.

பேரையூர் தாலுக்கா முழுவதும் மானாவாரி விவசாயம்தான் அதிகளவில் உள்ளது. சுமார் 15,000 ஏக்கர் பருத்தியும், 10,000 ஏக்கர் மக்காச் சோளமும் இந்த வறட்சியால் முற்றிலுமாக அழிந்து கொண்டிருக்கிறது. கன்னியம்பட்டி கிராமம் உட்பட சுற்றுக் கிராமங்களின் நீராதாரமான அல்லிகுண்டம் கண்மாயோ புதர்காடாக கிடக்கிறது. இக்குளத்தின் கீழ்புறம் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயியோ, “ஒரே ஒருநாள் மழைகிடைத்தாலும் போட்டமுதலை எடுத்துவிடுவேன்” என்று கலங்குகிறார். “ஒரு ஏக்கரில் பருத்தி பயிரிட 15,000 ரூபாய் செலவாகுது. 10 ஏக்கரில் விதைச்சிருக்கேன். பிஞ்சும்,காயுமா இருக்கு. மழையில்லாம பிஞ்சிலேயே வெடிக்குது, இந்தப் பஞ்சை யார் வாங்குவான்” என்று பெருமூச்சு விடுகிறார் பாண்டியன். இவருக்கு ஆறுதல் சொல்வதற்குக் கூட நம்மிடம் வார்த்தைகள் இல்லை.

உசிலம்பட்டி நகரை ஒட்டிய சிட்லம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பொன்னாங்கத்தேவர் மகன் பாண்டி(67), தனது இரண்டு ஏக்கர் மானாவாரி நிலத்தில் விவசாயம் செய்து கொண்டே, மாடு வியாபாரமும் செய்து வந்தார். இந்தவருடம் மழையை நம்பி, மக்காச்சோளம் பயிரிட்டு கதிர்வரும் நேரத்தில் மழையின்றி காய்ந்த தட்டையாக நிற்பதைக் கண்ட வேதனையில், வீட்டுக்கு வரும்வழியிலேயே மாரடைப்பால் இறந்து விட்டார். இவரின் நான்கு மகன்களில் மூவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்ய, ஒருவர் விபத்தில் காலை இழந்து வீட்டில் முடமாகி கிடக்கிறார். ஒரு மகள் கணவனை இழந்து வீட்டருகிலேயே பெட்டிக்கடை வைத்திருக்கிறார்.

மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மாடு வியாபாரமும் நின்றுவிட்டது. மகனின் மருத்துவச் செலவு, பேரனின் கல்லூரி படிப்புச் செலவு ஆகியவற்றுக்கு வாங்கிய கடன் நெருக்கடிதான் பாண்டியை சாகடித்திருக்கிறது.  MSW பட்டாதாரி ஹரிஹரன் தனது இரண்டுமாடி வீட்டைக்காட்டி, “இது எங்க அப்பா சம்பாதிச்சதுங்க. நான் ரெண்டு பால்மாட்டை வச்சுதான் பொழைப்பை ஓட்டுறேன். இப்ப தீவனம்கூட கிடைக்க மாட்டேங்குது. நிலமும் தரிசாக் கிடக்குது. இந்த ஊருல பொழைக்குறதுக்கு ஒண்ணுமில்ல.” என்றவரிடம், ஏதாவது மாற்று விவசாயம் செய்ய வேண்டியதுதானே என்று கேட்டதற்கு “ஆந்திராவுல முறுக்கு போடுறதுதான் மாத்து விவசாயம். அதுக்கு மாட்டை வித்துட்டு போயிடலாமுன்னு பாக்குறேன். எவனும் வாங்க மாட்டேனுறான். தீவனத்துக்கே வழியில்லாத நேரத்துல எவன் வாங்குவான்” என்று நொந்துகொள்கிறார்!

தீவனமில்லாமல் பால் கரைப்பது எப்படி15 வருடத்திற்கு முன்பு, சிட்லம்பட்டி கிராமம் வளமான விவசாயப் பூமியாக இருந்தது. “உசிலம்பட்டி பெரிய கண்மாய்தான் இக்கிராமத்தின் நீராதாரமாக இருந்தது. கண்மாயில் நீர் தேங்கினால் இந்த ஊர்கிணறுகளில் மட்டுமல்ல, சுற்றியுள்ள பத்து கிராமங்களிலும் நீர் வற்றாது” என்கிறார்கள் இந்த ஊர் பெரியவர்கள். மழைநீரை மட்டுமே நம்பியுள்ள 42 ஏக்கர் பரப்பளவு கொண்ட உசிலம்ப்பட்டி கண்மாயில், 11 ஏக்கர் ஹவுசிங் போர்டு ஆக்கிரமிப்பில் உள்ளது. அருகில் உள்ள தனது பிளாட்டுகளுக்கு இடையூறாக இருப்பதால், இதன் வரத்துக் கால்வாயை வேறு குளத்திற்கு திருப்பிவிட்டிருக்கிறது ஓ.எஸ்.ஆர் என்ற ரியல் எஸ்டேட்டு கும்பல். எனவே மழையே பெய்தாலும் குளம் நிரம்ப வழியேயில்லை. இக்கண்மாயை நம்பியுள்ள 12 ஊரணிகளும் இன்று காய்ந்துகிடக்கிறது. சுற்றுவட்டார விவசாயிகளின் உயிராதாரமான உசிலை கண்மாயை தூர்வாருவதற்குக் கூட அரசு முன்வரவில்லை. சில விவசாயிகள் தாமாக முன்வந்து நிதிவசூலித்து சுற்றுக்கரையை மட்டும் பலப்படுத்தியுள்ளனர்.

மேலும், உசிலை வட்டார விவசாயத்திற்கு நிரந்தர தீர்வாக, வைகை அணைநீரை ஆதாரமாகக் கொண்டு 58 கிராமக் கால்வாய் திட்டத்தை அமுல்படுத்தியது தமிழக அரசு. கிளைக் கால்வாய்கள் எல்லாம் வெட்டிமுடித்தவர்கள், வைகை நீர்வரும் தொங்குபாலம் அமைக்கும் வேலையை பாதியில் கிடப்பில் போட்டுவிட்டது அரசு. மீதமுள்ள சுமார் 45 அடிநீளத்திற்கு பாலம் கட்டமுடியாமல் கடந்த 10 வருடமாக அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு விவசாயிகள் நலனில் அக்கறையில்லாத தமிழக அரசின் திமிர்தான் பாண்டியின் மரணத்திற்கு காரணம்.

ஆனால், விவசாயிகளின் சாவையும்கூட, தற்கொலை, அதிர்ச்சிமரணம் என்று வகைபிரிக்கிறது கொலைகார தமிழக அரசு. என்னிடம் நிவாரணம் பெற வேண்டுமானால் தூக்குப் போட்டோ, விஷம் குடித்தோதான் சாகவேண்டும் என்று விவசாயிகளை மிரட்டுகிறது ஓபிஎஸ் அரசு. கொலைகாரனிடமே நிவாரணம் கேட்டு கெஞ்சி நிற்கும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளனர் விவசாயிகள். ஆனால் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் இதை வெறும் நிவாரணப் பிரச்சினையாக மட்டும் பார்த்து துரோகமிழைக்கிறார்கள். சோறு திங்கும் ஒவ்வொருவரும் விவசாயிகளுக்காக களத்தில் இறங்க வேண்டிய நேரமிது. இல்லையேல் இன்றைக்கிருக்கும் தமிழகம் கூட விரைவிலேயே இல்லாமல் போய்விடலாம்.

இறந்து போன விவசாயி பாண்டி
இறந்து போன பாண்டி
பாண்டியன் மனைவி கருப்பாயி. மகள் தங்கப்பாண்டி.
பாண்டியன் மனைவி கருப்பாயி. மகள் தங்கப்பாண்டி.
சருகாகிப் போன நெல்நார்று.
சருகாகிப் போன நெல்நாற்று.
தொங்கு பாலம்.1
கட்டி முடிக்காமல் பாதியில் நிற்க்கும் தொங்கு பாலம்
கருகிய அவரை செடி.
கருகிய அவரை
அல்லிகுண்டம் கண்மாய்
அல்லிகுண்டம் கண்மாய்
வற்றிப் போயுள்ள கிணறு
வற்றிப் போயுள்ள கிணறு

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி.
உசிலம்பட்டி வட்டாரம்.

இவர்களுக்கில்லை பொங்கல் !

0

சென்ற ஆண்டு மே 5, 2016 ஆம் தேதி, டாஸ்மாக் மூடுவிழா போராட்டம் நடத்தி பல்வேறு அடக்கு முறைகளை சந்தித்து வெற்றி கண்ட, சென்னை மதுரவாயல் – நொளம்பூர் மாதாகோவில் நகர் மக்கள் பொங்கல் தினத்தை, துக்க தினமாக கடைபிடித்தார்கள்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கீழ் இயங்கும், நொளம்பூர் பகுதி ஊர் பாதுகாப்பு கமிட்டியின் மூலம் ஊர் கூட்டம் கூட்டினர். அதில், தமிழகம் முழுவது தாங்கள் வைத்த பயிர் கருகியதால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஊருக்கே உணவு தரும் விவசாயி-ன் வீடு, எழவு வீடாக இருக்கும் போது, நாம் பொங்கல் கொண்டாடுவது மிகவும் இழிவான செயல். எனவே இந்த பொங்கல் தினத்தை, துக்க தினமாக அனுசரிக்க வேண்டும் என அனைவரும் தீர்மானித்தனர். அதன் அடிப்படையில், இன்று (14.1.2017) ஊர் முழுவதும் வீதிகளிலும், தங்கள் வீடுகளிலும் கருப்புக் கொடியேற்றி கருப்பு பொங்கலாகவும், துக்க தினமாகவும் அனுசரித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை. பேச – 9445112675

______________

உழவன் வீட்டில் இழவு – பொங்கல் நாள் கருப்பு நாள் !

பொங்கல் நாளை போராட்ட நாள் ஆக்குவோம் !

என்று தஞ்சை மாவட்டம், குடந்தை வட்டம், அய்யாவாடி கிராமத்தில் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றமும், கிராம மக்களும் இணைந்து கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.

பருவ மழையும் ஏமாற்றி விட்டது. காவேரியில் தண்ணீர் விடாமல் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது. தமிழக அரசும் விவசாயிகளுக்கு நிவாரணம் என்ற பெயரில் பிச்சை போடுகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் 17 பேர் என்று கணக்கு காட்டுகிறது. மற்றவர்கள் குடும்ப பிரச்சனையால் இறந்தார்கள் என்று விவசாயிகள் தற்கொலையை அமைச்சர் கொச்சை படுத்தினார். இறந்த விவாசாயிகளுக்கு 3 லட்சமும், கருகிய பயிருக்கு 5600 ரூபாய் நிவாரண அறிவிப்பு ஒரு கண்துடைப்பு. விவசாயிகள் இறந்து விவசாயம் அழிந்த பிறகு எதை சாப்பிடுவார்கள் பணத்தையும், கட்டிடத்தையுமா….? என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.

Kutanthai (1)

Kutanthai (2)

கோரிக்கை:

  1. உயிரிழந்த விவசாயிகளுக்கு 25 லட்சம் வழங்க வேண்டும்.
  2. கருகிய பயிருக்கு ஏக்கருக்கு 25000 ரூபாய் வழங்க வேண்டும்.
  3. உயிரிழந்த விவசாய குடுபத்தினர் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்க வேண்டும்.
  4. விவசாயிகளின் மின் கட்டணம்,கல்வி கட்டணம் அனைத்தையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  5. விவசாயிகளுக்கு மாதம் இரண்டாயிரம் வழங்க வேண்டும்.

 முழக்கம்

நமக்கு சோறு போட்ட விவசாயி
கொத்து கொத்தா சாகிறானே !
கருகிய பயிரை பார்த்துப்பார்த்து
சாகிறானே சாகிறானே
நெஞ்சு வெடித்து சாகிறானே !

உழவன் வீட்டில் இழவானால்
உனக்கும் எனக்கும்
எதற்குப் பொங்கல் !

மத்திய மாநில அரசுகளே
பதில் சொல் ! பதில் சொல்!

சோறு திங்கும் அனைவருக்கும்
சொந்தமான துக்கம் இது
விவசாயிகளின் மரணத்திற்கும்
கருகிப் போன பயிர்களுக்கும்
முழுமையான நிவாரணம்
பெறும்வரை போராடுவோம்

போராடுவோம் போராடுவோம்
பெறும் வரை போராடுவோம் !

பிச்சையல்ல பிச்சையல்ல
விவசாயிகளின் நிவாரணம்
உரிமையடா உரிமையடா
உரிமையடா உரிமையடா…..!!!!!!

 தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை. 9790215184.

______________

“உழவன் வீட்டில் எழவு விழுந்தால் உனக்கும் எனக்கும் எதற்க்குப் பொங்கல்”

திருவாரூர் மாவட்டம் குழிக்கரை பகுதி கிராம மக்களும் மக்கள் அதிகாரம் அமைப்பினரும் இணைந்து பொங்கல் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி துக்க தினமாக கடைபிடித்தனர்.

3

2

1

தகவல் :
மக்கள் அதிகாரம்.

40-வது சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றின் புதிய நூல்கள் !

19

ரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் கொண்டவர்களின் தேடல்களையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றின் புதிய வரவுகள்.

kizhai-adகாவிரி : பா.ஜ.க.வின் பாக்கிஸ்தானா தமிழ்நாடு ?

பாகிஸ்தானா தமிழ்நாடு

1991 தனியார்மய சீர்திருத்தம் பலன் யாருக்கு ?

தனியார்மய சீர்திருத்தம்

வியாபம் ஊழல் அரசையே கபளீகரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க

vyapam

எது கருப்புப் பணம்? – மோடியின் டிஜிட்டல் பாசிசம்

கருப்புப் பணம்

அம்பேத்கர் – இந்துமதத் தத்துவம்

dr அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்

சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி ?

சிறந்த கம்யூனிஸ்ட்

 
40-வது சென்னை புத்தகக் காட்சியில் …
கடை எண் 434 – 435.
செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி வளாகம், சென்னை – 30
( பச்சையப்பன் கல்லூரி எதிரில் )
சனவரி 6-19, 2017

வேலை நாட்கள் : மதியம் 2 – 9 வரை
விடுமுறை நாட்கள் : காலை 11 – 9 வரை

அரசியல் தெளிவுபெற…
உழைக்கும் மக்களுக்கான தேடல்கள் ஒரே கூரையின் கீழ் …
வாருங்கள் ….!

10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே. 044-2841 2367

ஜல்லிகட்டு இல்ல இது டெல்லிக் கட்டு – மகஇக புதிய பாடல்

1
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வழங்கும்

ஜல்லிகட்டு இல்ல – இது டெல்லிக் கட்டு பாடல்

பொங்கல் விடுமுறையையே ரத்து செய்கிறது மோடி அரசு. “கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே” என்று திமிராக கேலி பேசுகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி. “திராவிட இயக்கத்தை அழிப்போம்” என்று பொங்கல் வாழ்த்து சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன். நாம் அடக்க வேண்டியது யாரை?  காளையையா, டில்லியையா?

“உன்னுடைய அதிகாரம் தமிழகத்தில் செல்லாது” என்று டில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு. இதன் பெயர் ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ச்சியாக தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை எப்படி புரிந்துகொள்வது என்று இப்பாடல் விளக்குகிறது.

 

இணையத்தில் நாங்கள் வந்த பிறகு வெளியான ம.க.இ.க பாடல்கள் அனைத்தும் வீடியோ பாடல்களாக இலவசமாக வெளியிடப்படுகின்றது.

ஆகவே இது போன்ற முயற்சிகளை தொடர்ந்து செய்ய உங்களால் இயன்றதை அல்ல, இன்னதுதான் கொடுக்க வேண்டும் என்ற கடமையுணர்வுடன் கூடிய தொகையை நன்கொடை அளியுங்கள். சினிமா உலகைச் சேர்ந்த நண்பர்கள் வாடகை இன்றியோ இல்லை குறைந்த வாடகையுடன் கூடிய ஒலிப்பதிவு அரங்கங்கள், படப்பிடிப்பு கருவிகள், கட்டணமின்றி வாசிக்க கூடிய தொழிற்முறை இசைக் கலைஞர்கள் போன்றோரை ஏற்பாடு செய்து உதவுங்கள். இலாபம், விளம்பரம் போன்ற முதலாளித்துவ கறையான்கள் இன்றி மக்களின் பங்களிப்புடன் நமது முயற்சிகள் வெற்றி பெறவும், நமது கருத்தை பரப்பவும் உங்களது ஆதரவு அவசியம். பாடலை பகிருங்கள், நிதியுதவி தாருங்கள்!

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட இரண்டு வங்கிக் கணக்குகளில் ஒன்றிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல்லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084
செல்பேசி  – 99411 75876
__________________________________

வெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.

அனைவருக்கும் ரசீது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். நன்றி!

நட்புடன்,
வினவு

பாடல் வரிகள்

ஜல்லிகட்டு இல்ல – இது
டெல்லிக் கட்டு

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு – மாட்டை
அடக்கி விட்டோம் அன்று தொட்டு – இனி
வாடிவாசல் விட்டு விட்டு
மோடி அரசை அடக்கி காட்டு

காவிரியைத் தடுத்து எங்கள்
கழனியைக் கருக்கி, உழவன்
உயிர்களைக் குடித்து மண்ணைக்
கெடுத்தவனை எதிர்த்து மோது

தமிழினை அழித்து – செத்த
சமஸ்கிருதம் திணித்து – எங்கள்
பாடத்தை திரித்த – மோடி
வேடத்தை கலைக்கிறோம் பார்

பொங்கலுக்கு விடுமுறை ரத்து – நம்மை
சீண்டிப் பார்க்குது டெல்லிக்காத்து
வீரம் எங்கே, இங்கே காட்டு – காவிக்
காளையின் கொம்பை முறித்து வீழ்த்து.

 Lyrics

Not a Bull fight – this
Is a fight with Delhi

Yes, we tamed the bull since long
At Alanga nallur and so on
That’s not a big deal, oh… come on
Tame Modi, if you can.

HE is the one who blocks Cauvery
HE is the one who parches our fields
HE is the one who takes our peasants’ lives
Tame modi, if you can.

He sends Tamil to despair and death
Shoves Sanskrit down our throat
Distorts history present and the past
Unmask modi, Yes we can.

Teasing us  is the Delhi power
Throws our  Pongal  to the sewer
Show your valour here and now
Take the saffron bull  by its horn.

Share this song. spread the message. Please support us.

டெல்லியின் கொம்பைப் பிடி : தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு !

3

people-power-press-release-header

பத்திரிகை செய்தி

 

“டெல்லியின் கொம்பைப் பிடி”
தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு!

அன்பார்ந்த தமிழ் மக்களே,

மிழ்நாட்டு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதை முடிவு செய்வதற்கு மோடி அரசு யார்? உச்ச நீதிமன்றம் யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

“அவசர சட்டம் இயற்றுங்கள்” என்ற கோரிக்கை மனுவை மோடியிடம் கொடுப்பதற்கு அதிமுக எம்பிக்கள் டில்லிக்கு படையெடுத்திருக்கிறார்கள். அந்த மனுவை வாங்குவதற்குக் கூட மோடி தயாராக இல்லை. ஆட்டு மந்தையைப் போல அமைதியாகத் திரும்பி வந்திருக்கிறார்கள் அதிமுக எம்பிக்கள்.

அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்களிலெல்லாம் போலீசு குவிக்கப்பட்டுள்ளது. “ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம்” என்று காளை வளர்ப்பவர்களிடம் எழுதிக் கையெழுத்து வாங்குகிறது தமிழ்நாட்டு போலீசு. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம்! நீதிமன்றத் தீர்ப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் இவர்கள் நிலைநாட்டுகிறார்களாம்!

jallikattu 2
நீதி, நியாயம், சட்டத்தின் ஆட்சி என்ற சொற்களை உச்சரிப்பதற்கான யோக்கியதை இந்த உச்ச நீதிமன்றத்துக்கோ மோடி அரசுக்கோ உண்டா?

நீதி, நியாயம், சட்டத்தின் ஆட்சி என்ற சொற்களை உச்சரிப்பதற்கான யோக்கியதை இந்த உச்ச நீதிமன்றத்துக்கோ மோடி அரசுக்கோ உண்டா?

காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர் அழிவதற்கும், விவசாயிகள் நெஞ்சடைத்து சாவதற்கும், உழவு மாடுகளும் பால்மாடுகளும் தண்ணீருக்குத் தவிப்பதற்கும் யார் காரணம்? காவிரி நீர் உரிமையைப் பறிப்பதற்கு கள்ளத்தனமாக கர்நாடக அரசுக்குத் துணை நின்றதுதான் இந்த உச்ச நீதிமன்றம். தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணீருக்காக கதறிய போதும், “தீர்ப்பை அமல்படுத்த முடியாது” என்று கர்நாடக அரசு திமிர்த்தனம் செய்த போது, வாயை மூடிக் கொண்டிருந்த உச்ச நீதிமன்றத்துக்கு தமிழகத்தின் மீது அதிகாரம் செலுத்த என்ன அருகதை இருக்கிறது?

தமிழகத்துக்கு வஞ்சகம் செய்வதில் கர்நாடக அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் விஞ்சிய கிரிமினல்தான் மோடி அரசு. காவிரி ஆணையம் அமைப்பதைத் தடுத்து, தமிழகத்துக்கு நிரந்தரமாக காவிரி நீர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தியிருக்கிறார் மோடி. தமிழ்நாட்டின் விவசாயத்தை அழித்த மோடியிடம், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தருமாறு கெஞ்சுவதும் மனுக் கொடுப்பதும் கேவலமில்லையா?

“ஒரு நாடு – ஒரு சட்டம்” என்று சொல்லிக் கொண்டு இவர்கள் ஆடுகிற ஆட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம், பார்ப்பனியம் ஆகியவற்றை எதிர்ப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பதால், உச்ச நீதிமன்றம் என்று அழைக்கப்படும் உச்சுக்குடுமி மன்றத்தின் நீதிபதிகளுக்கும், உச்சுக்குடுமி கட்சியான பாரதிய ஜனதாவுக்கும் தமிழ்நாடு என்றாலே வேப்பங்காயாய்க் கசக்கிறது.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான சிதம்பரம் நடராசர் கோயிலை, அறநிலையத்துறையிடமிருந்து பிடுங்கி, அங்கே மணியாட்டும் பார்ப்பன தீட்சிதர்களுக்குச் சொந்தமாக்கி தீரப்பளித்தது உச்ச நீதிமன்றம்தான்.

சாதிப் பாகுபாடின்றி அனைத்து சாதி மாணவர்களுக்கும் பயிற்சி கொடுத்து அர்ச்சகராக நியமிக்க முயன்றது தமிழக அரசு. “பார்ப்பன அர்ச்சகர்களைத் தவிர மற்றவர்கள் சாமி சிலையைத் தீண்டக்கூடாது”என்று தீர்ப்பளித்து, சாதியையும் தீண்டாமையையும் நிலை நாட்டியது உச்ச நீதிமன்றம்தான்.

“தமிழ்நாட்டு கோயில் தமிழ் மக்களுக்குச் சொந்தம். தமிழில் வழிபடுவதும் தமிழர்களை அர்ச்சகர்களாக நியமித்துக் கொள்வதும் தமிழ் மக்களின் உரிமை. அதில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கோ மத்திய அரசுக்கோ அதிகாரம் இல்லை” என்று நாம் குரல் எழுப்பவேண்டிய நேரம் இது.

தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு என்ன பாடத்திட்டம் என்பதை சொல்வதற்கு மத்திய அரசு யார்? சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திட்டத்தையும், செத்த மொழியான சமஸ்கிருதத்தையும் இந்தி திணிப்பையும் தூக்கி வெளியே வீச வேண்டிய நேரம் இது.

தமிழக மாணவர்கள் படிப்பதற்கு தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி கட்டினால், அதில் யாருக்கு சீட் கொடுப்பது என்று நீட் தேர்வு வைத்து டில்லி முடிவு செய்யும் என்கிறது உச்ச நீதிமன்றம். அடுத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அதே முறையை கொண்டுவரப் போவதாக சொல்கிறது மோடி அரசு.

கேடி கிரிமினல்களும் ஹவாலா பேர்வழிகளும் வக்கீலாக தொழில் நடத்திக் கொண்டிருக்கையில், நீதிபதிகளின் ஊழலை எதிர்த்த தமிழ்நாட்டு வக்கீல்களுக்கு மட்டும் வாழ்நாள் தடை விதித்திருக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில். பாரதிய ஜனதாக் கட்சிக்காரன்தான் இதற்கும் தலைவர் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.

அணு உலை வேண்டாமென்று கேரள மாநிலம் விரட்டியடித்தால் அது கூடங்குளத்தில் திணிக்கப்படுகிறது. “கெயில் எரிவாயுக் குழாய் எங்கள் விவசாயத்தை அழிக்கும்” என்று தமிழக விவசாயிகள் முறையிட்டாலோ, அதனை நிராகரித்து விளைநிலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிடுகிறது உச்ச நீதிமன்றம். “சட்டத்தின் ஆட்சி” என்ற பெயரில் திணிக்கப்படும் நியாயத்துக்குப் புறம்பான இப்படிப்பட்ட தீர்ப்புகளுக்கு எதற்காக நாம் கட்டுப்பட வேண்டும்?

“கரசேவை செய்யப்போகிறோம்” என்று சொல்லி உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கிக் கொண்டு, கடப்பாரை சேவை செய்து, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தவர்கள்தான் பாரதிய ஜனதாக் கட்சியினர். மசூதியை இடித்து மதவெறியைத் தூண்டி ஆட்சியையும் பிடித்து விட்டார்கள். ஆனால் மசூதியை இடித்த குற்றத்துக்கு இவர்களை இதுவரை நீதிமன்றம் தண்டிக்கவில்லை.

Jallikattu
டில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு. இதன் பெயர் ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.

மகாராட்டிரத்தில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நடக்கும் “உறியடித் திருவிழா”வில் மனிதக் கோபுரம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தபோது, “உச்ச நீதிமன்றத்துக்கு கட்டுப்பட முடியாது” என்று வெளிப்படையாகவே அறிவித்து விழாவை வழக்கம்போல நடத்தியது பாஜக சிவசேனா அரசு. உச்ச நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் சேதுக்கால்வாய் திட்டத்துக்காக தமிழகத்தில் கடையடைப்பு நடந்தபோது மட்டும் “ஆட்சியைக் கலைப்போம்” என்று திமுக அரசை மிரட்டியது. இதுதான் உச்ச நீதிமன்றத்தின் நடுநிலை. சட்டத்தை மதிக்குமாறு தமிழகத்துக்கு உபதேசம் செய்யும் அருகதை பாஜக-வுக்கோ, இந்த நீதிமன்றத்துக்கோ கிடையாது.

எல்லா விசயங்களிலும் இரட்டை வேடம் போடும் பாரதிய ஜனதா, வழக்கம் போல இந்தப் பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடுகிறது. “விஜில்” என்ற ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பினைச் சேர்ந்த ராதா ராஜன் என்பவர்தான் ஜல்லிக்கட்டுத் தடைக்கு குரல் கொடுப்பவர். மாடுகளின் மீது பெருங்கருணை கொண்டுள்ள இந்த அம்மையார், மாட்டுக்கறி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி அக்லக் என்ற இசுலாமிய முதியவரை கொலை செய்தார்களே, அந்தக் கொலையை நியாயப்படுத்துபவர்.

மதத்தின் பெயரில் மனிதப் படுகொலை நடத்தும் இத்தகைய பார்ப்பன மேட்டுக்குடியினர்தான், விலங்குகளைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்ளும் “பீட்டா” போன்ற அமைப்புகளிலும் நிறைந்திருக்கின்றனர். “விநாயகர் சதுர்த்திக்கு கறிக்கடையை மூடு, கோயில் நகரங்களில் கறிக்கடையே கூடாது, மாட்டுக்கறியை தடை செய்” என்பன போன்ற கோரிக்கைகளுக்கும் ஜல்லிக்கட்டுத் தடைக்கும் அதிக வேறுபாடு இல்லை. “மாட்டை அடக்குபவர்கள், மாட்டை வெட்டுபவர்கள், புலால் உணவு புசிப்பவர்கள் போன்றோர் கீழானவர்கள், அவர்களது பண்பாடும் கீழானது” – என்பதுதான் இவர்கள் சொல்ல வரும் கருத்து.

“மாட்டை அடக்குவதுதான் வீரம், அதுதான் உயர்ந்த பண்பாடு” என்பதல்ல நம் கருத்து. ஜல்லிக்கட்டு முதல் கோயில் திருவிழாக்கள் வரை தமிழகத்தின் பண்பாட்டு நடவடிக்கைகள் பலவற்றில் ஊடுருவியிருக்கும் சாதிப்பாகுபாட்டையும் தீண்டாமைக் கொடுமையையும் நாம் ஒருபோதும் “தமிழ் வீரம்” என்று கொண்டாட முடியாது.

மாட்டுக்கொம்பால் குத்துப்பட்டு சாவதற்கும் தயாராக இருக்கும் வீரர்கள், உச்ச நீதிமன்றம் தடை விதித்தவுடனே மொட்டை போட்டு ஒப்பாரி வைப்பது ஏன்? காவிரியைத் தடுத்தும் மணற்கொள்ளை அடித்தும் தமிழகத்தின் விவசாயத்தை அழித்து, நூற்றுக்கணக்கான விவசாயிகளை கடனுக்கும் சாவுக்கும் தள்ளிய எதிரிகளுக்கு எதிராகத் தமிழ் வீரம் கிளர்ந்து எழாதது ஏன்? விவசாயம் அழிந்த பின், விவசாயி அழிந்த பின், மாடுகள் ஏது? மஞ்சு விரட்டு ஏது? சிந்திக்க வேண்டாமா?

பொங்கல் விடுமுறையையே ரத்து செய்கிறது மோடி அரசு. “கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே” என்று திமிராக கேலி பேசுகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி. “திராவிட இயக்கத்தை அழிப்போம்” என்று பொங்கல் வாழ்த்து சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன். நாம் அடக்க வேண்டியது யாரை?  காளையையா, டில்லியையா?

“உன்னுடைய அதிகாரம் தமிழகத்தில் செல்லாது” என்று டில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு. இதன் பெயர் ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.

இவண்.
ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

மாவோயிஸ்டுகளுக்கு வழக்காடினால் கைதா ? ஆர்ப்பாட்டம் !

3

மதுரை வழக்கறிஞர் முருகனை விடுதலை செய் !

murugan arrest 2ழக்கறிஞர் முருகனை விடுதலை செய்! மாவோயிஸ்டுகளுக்கு சட்ட உதவி அளிப்பது குற்றமல்ல! என்ற முழக்கத்தின் கீழ் 12.01.2017 வியாழன் அன்று காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வழக்கறிஞர்களின் நீண்ட மவுனத்தை உடைக்கும் வகையில் விண்ணதிரும் முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் துவங்கியது. ஆர்ப்பாட்டத்தில், வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் வாஞ்சிநாதன், நெடுஞ்செழியன், ஏ.கே.ராமசாமி,வழக்கறிஞர்கள் பானுமதி,பகத்சிங்,அகவன்,பழனியாண்டி,முத்து அமுதநாதன்,ஆதி நாராயணமூர்த்தி, அய்யப்பன், ராஜா, சிவக்குமார், வழக்கறிஞர் முருகன் மனைவி வழக்கறிஞர் தேவி, வழக்கறிஞர் கனகவேல் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

உரைகளின் தொகுப்பு:

வழக்கறிஞர் முருகன் சட்டக்கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே சாதாரண மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வந்தவர்.தனது வழக்கறிஞர் தொழிலையும் மக்கள் நலனை முன்னிறுத்தியே செய்து வந்தார். கடந்த 8-ஆம் தேதி கரூர் மாவட்ட கியூ பிரிவு போலீசு முருகனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு மாவோயிஸ்ட் அமைப்பினருக்கு சட்ட உதவிகள் செய்தார் என்பது. தன்னிடம் வரும் கட்சிக்காரர்களுக்கு சட்ட உதவிகள் செய்வது வழக்கறிஞர்களின் அரசியல் சட்ட அடிப்படை உரிமை. முருகன் அல்ல எந்த வழக்கறிஞரிடம் மாவோயிஸ்ட் வழக்குகள் வந்தாலும் நடத்துவோம்.

இப்பிரச்சனையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இரண்டு வழக்குகளை முருகன் நடத்தி வருகிறார். அதில் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆகும் சூழல் உள்ளது. அதைத் தடுக்கவே முருகனைக் கைது செய்துள்ளனர். இந்தியா முழுவதும் அறிவுத்துறையினர் மீது அரசு பாசிசம் பாய்கிறது.முருகன் மீது பாய்ந்த கொடூர ஊபா சட்டம் ஓர் கருப்புச் சட்டம். இதன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரே தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டும்.இதை நாம் எதிர்க்க வேண்டும். தமிழக கியூ பிரிவு போலீசு நீதித்துறை சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளது.இது வழக்கறிஞர் சமூகத்திற்கு விடப்பட்ட சவால்.இதை நாம் எதிர்கொள்வோம்.

இந்தியா முழுவதும் கண்ணபிரான்,ராம்ஜெத்மலானி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் மாவோயிஸ்டுகள், இசுலாமிய அமைப்பினர் உள்ளிட்ட பலருக்கு ஆஜராகியிருக்கிறார்கள். அவர்களையும் சிறையில் அடைத்து விடலாமா? மூத்த வழக்கறிஞர் கண்ணபிரானிடம் நீதிபதிகள் மாவோயிஸ்டுகளுக்கு சட்டத்தில் நம்பிக்கை இல்லையே, நீங்கள் ஏன் ஆஜராகிறீர்கள்? எனக் கேட்டதற்கு, நீதிமன்றத்திற்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது, எனவே காவல்துறையை சட்டப்படி நடக்கச் சொல்லி உங்களிடம் வந்துள்ளோம்” என்றார்.

முருகன் என்ன குற்றம் செய்தார் என்பதைப் போலீசு இன்றுவரை சொல்ல மறுக்கிறது. எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.காவல்துறை தொடர்ந்து எல்லை மீறுகிறது.முருகனை மாவோயிஸ்ட் அமைப்பினர் வழக்கிலிருந்து விலகச் சொல்லி தொடர்ந்து மிரட்டி வந்த போலீசு இப்போது பொய் வழக்குப் போட்டுள்ளது. வழக்கறிஞர்கள் மீது தொடர்ந்து போலீசு அடக்குமுறையை ஏவிவருகிறது. இது தமிழகம் தழுவிய வழக்கறிஞர் போராட்டத்தால் முறியடிக்கப்படும். முருகன் தனிநபரல்ல. அவருக்குப் பின் 80,000 தமிழக வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். பொங்கலுக்குப் பின் தொடர் போராட்டம் நடத்துவோம்.

ஆர்ப்பாட்டத்தில் மதுரை வழக்கறிஞர்களின் பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது.murugan arrest 1

 பத்திரிக்கை செய்தி

துரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 13 வருடங்களாக  வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் வழக்கறிஞர் முருகன். இவரை கடந்த 08/01/2017 அன்று கரூர் மாவட்ட கியூ பிரிவு காவல்துறை கு.எண் 01/2016 வழக்கில் 18-A , 18-B , 20 , 38 OF UNLAWFUL ACTIVITIES (PREVENTION) ACT 1967  மற்றும் 120-B IPC பிரிவுகளில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளது. பத்திரிக்கை செய்திகளின்படி வழக்கறிஞர் முருகன் மீதான குற்றச்சாட்டு மாவோயிஸ்ட் அமைப்பினருக்கு சட்ட உதவிகள் செய்தார் என்பதே. கைது குறிப்பாணையில் மாவோயிஸ்ட் இயக்க உறுப்பினர்களுக்கு உதவி செய்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் முருகன் தேனி மாவட்டம் பெரியகுளம் ASST SESSIONS COURT- ல்  S.C.136/2011 என்ற வழக்கில் மாவோயிஸ்ட் அமைப்பினராக இருந்து போராடியதாக குற்றம் சாட்டப்பட்ட சுந்தரமூர்த்தி, ரஞ்சித், விவேக் ஆகியோருக்கும், பெரியகுளம் ADDL. DISTRICT COURT -ல் நடைபெறும் S.C 93/2014 வழக்கில் பாலமுருகன், முருகானந்தம், லெனின், மகாலிங்கம் உள்ளிட்டோருக்கும் மூத்த வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், என்.செல்வராஜ் ஆகியோருடன் சேர்ந்து வழக்கு நடத்தி வருகிறார். மேற்படி வழக்குகள் தற்போது முடிவுரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆக வாய்ப்புள்ளது.

இவ்வாறான சூழலில் வழக்கறிஞர் முருகனை கடந்த ஒரு மாதமாக  மேற்காணும் வழக்குகளில் இருந்து விலகச் சொல்லி கியூ பிரிவு போலிசார் மிரட்டி வந்துள்ளனர். விலகாவிட்டால் பொய்யாக வழக்கில் சேர்ப்போம் என்றும் சொல்லியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே கைது நடந்துள்ளது

இந்திய அரசியல் சட்டத்தில் தொழில் உரிமை அடிப்படை உரிமையாக வரையறுக்கப்பட்டுள்ளது. தன்னிடம் வரும் கட்சிக்காரருக்கு அவர் என்ன குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவருக்காக வழக்கு நடத்த வேண்டியது வழக்கறிஞரின் சட்டப்படியான கடமை என்பதுடன், குற்றம் சாட்டப்பட்டவரின் சட்டப்படியான உரிமையும் கூட. மும்பை தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப்புக்கு நீதிமன்றமே அரசு செலவில் வழக்கறிஞர் அமர்த்தி கொடுத்தது. எனவே வழக்கறிஞர் முருகன் தன்னிடம் வந்த கட்சிக்காரர்களுக்கு சட்டப்படியான உரிமைகளின் கீழ் வழக்கு நடத்தி வந்துள்ளார்.

மேலும் வழக்கறிஞர் முருகன் தனது கட்சிக்காரர்கள் தொடர்பான ரகசியங்களை பாதுகாக்க இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 126-ன் கீழ் கடமைப்பட்டவர். இதை மீறினால் அவர் மீது அவரிடம் வழக்கு கொடுத்தவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே வழக்கறிஞர் மீதான கருர் கியூ பிரிவு போலிசின் நடவடிக்கை சட்டவிரோதமானது ,மட்டுமல்லாமல் மிகப்பெரிய மனித உரிமை மீறல் மற்றும் அரசியல் சட்ட அடிப்படை உரிமை மீதான தாக்குதல். மேலும் சுதந்திரமாக இயங்க வேண்டிய, நீதித்துறையின் அங்கமான வழக்கறிஞர்களை அச்சுறுத்துவது நீதித்துறையின் மீதான காவல்துறையின் மேலாதிக்க முயற்சியாகும்.

வழக்கறிஞர் முருகனை UAPA –  சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது மிகவும் கொடூரமானது. இச்சட்டம் தடா, பொடா சட்டங்கள் போன்ற கருப்புச் சட்டமாகும். இச்சட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு விசாரணையே இன்றி சிறை வைக்க முடியும்.  குற்றவாளி அல்ல என்பதை சம்மந்தபட்டவர்தான் நிருபிக்க வேண்டும். சென்ற ஆண்டு , கேரள வழக்கறிஞர்கள் மீது இதே சட்டம் பாய்ந்துள்ளது.

எனவே வழக்கறிஞர் முருகன் மீதான நடவடிக்கை வழக்கறிஞர் தொழிலுக்கும், அரசியல் சட்டத்திற்கும் விடப்பட்ட சவால் ஆகும். இனிவரும் நாட்களில் காவல்துறை விரும்பாத வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களை கைது செய்யும் போக்கு உருவாகும். இது சட்டத்தின் ஆட்சி என்பதை மாற்றி போலீசின் ஆட்சி என்பதை உருவாக்கும்.

ஆகவே வழக்கறிஞர் முருகன் கைதை மதுரை வழக்கறிஞர்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக வழக்கறிஞர்கள் இந்த அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என வலியுறுத்துகிறோம். வழக்கறிஞர் முருகனை உடனே விடுதலை செய்வதோடு நீதித்துறையின் அங்கமான வழக்கறிஞர்களின் தொழில் உரிமையை காக்க சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு கருர் மாவட்ட கியூ பிரிவு போலிசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.murugan arrest 3

  • வழக்கறிஞர்கள், மதுரை.

பணமில்லா வர்த்தகம் : மக்களை நச்சுக் கூண்டுக்குள் தள்ளிய மோடி !

6

ணமதிப்பழிப்பு குறித்த அறிவிப்பு வெளியான சமயத்தில் அது கருப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழித்து விடும் என மோடியும் அவரது பக்தர்களும் சொல்லிக் கொண்டனர். நவம்பர் 8 அறிவிப்பிற்கு முன் சுழற்சியில் இருந்த 15.44 லட்சம் கோடியில் சுமார் மூன்றிலிருந்து ஐந்து லட்சம் கோடி வரை திரும்ப வராது என்றனர். அதே போல் சுழற்சியில் இருப்பதாகச் சொல்லப்பட்ட கள்ளப் பணமும் திரும்ப வராது என்றும் பீற்றிக் கொண்டனர்.

500-and-1000-rupee-notes
பணமதிப்பழிப்பு குறித்த அறிவிப்பு வெளியான சமயத்தில் அது கருப்புப்பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழித்து விடும் என மோடியும் அவரது பக்தர்களும் சொல்லிக் கொண்டனர்.

ஆனால், இவையெல்லாம் வெற்றுச் சவடால்கள் என்பது தற்போது சர்வ நிச்சயமாக நிரூபணமாகியுள்ளது. டிசம்பர் 30-ம் தேதி வரை சுழற்சியில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்களில் 97 சதவீதம் (சுமார் 15 லட்சம் கோடி) வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் சில பத்தாயிரம் கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட ரூபாய்த் தாள்கள் நேபாள் மற்றும் பூடான் நாடுகளின் மத்திய வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கவுள்ளது.

கருப்புப் பண ஒழிப்பு என்கிற ஊத்தைப் பீற்றல் எதார்த்தத்தில் காலை வாரி விட்டவுடன், மோடி பக்தர்கள் வேறு சில வாதங்களைத் தூக்கிக் கொண்டு வந்தனர்.

முதலாவதாக, சுழற்சியில் இருந்த பணம் மொத்தமும் வங்கியின் கட்டுப்பாட்டில் வருவது ஒரு வகையில் நல்லது தான் என்றும் அவ்வாறு வந்த பின் ஒவ்வொரு வங்கிக் கணக்கையும் ஆராய்ந்து யாரெல்லாம் கணக்கில் காட்டாத, வருமான வரி கட்டாத பணத்தைச் செலுத்தினர் என்பதைக் கண்டறிந்து விடுவோம் என்கிற வாதத்தை வைக்கின்றனர்.

மோடி பக்தர்களின் சிறப்பே தங்கள் முகத்தில் அப்பிக் கிடக்கும் சாணியைக் குறித்து கிஞ்சித்தும் வெட்கப்படாமல் அடுத்தவன் முதுகில் ஒட்டியிருக்கும் சுண்ணாம்பைப் பார்த்து கூச்சலிடுவது தான். வங்கிக்குள் வராது என்று சொன்ன பணம் வந்துள்ளதற்கு எந்த விளக்கத்தையும் சொல்லாமல் இந்தப் புதிய வாதத்தை முன்வைக்கின்றனர். அதாவது பூ விழுந்தால் உனக்குத் தோல்வி, தலை விழுந்தால் எனக்கு வெற்றி என்பது தான் இதன் சாரம்.

jaitley-modi
மோடி, ஜேய்ட்லி உள்ளிட்டவர்கள் தமது உண்மையான நோக்கமே ரொக்கமற்ற பரிவர்த்தனை தான் என்பது போல் பேசத் துவங்கினர்.

ஒரு வாதத்திற்காக இதை ஒப்புக் கொள்வோம். 2015 நவம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்குகள் இருந்ததாகச் சொல்கிற உலக வங்கியின் கணக்கெடுப்பு ஒன்று (World bank – gallup survey). இந்த ஓராண்டில் திருவாளர் 56 இன்சு அறிவித்த ஜன்தன் திட்டத்தின் மூலம் குறைந்தது மூன்று சதவீத அளவுக்கு வங்கிக் கணக்குகள் அதிகரித்துள்ளதென எடுத்துக் கொண்டால், இன்றைய தேதிக்கு சுமார் 70 கோடி வங்கிக் கணக்குகள் உள்ளன. நவம்பர் 8 அறிவிப்பிற்குப் பின் இதில் ஒரு சதவீத கணக்குகளில் அதிக வைப்பு நிதி செலுத்தப்பட்டதாக எடுத்துக் கொண்டாலும் 70 லட்சம் என்றாகிறது.

எழுபது லட்சம் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து, அதன் உரிமையாளரின் வருமானத்தை ஆராய்ந்து, அவரிடம் விளக்கம் கேட்டு, அந்த விளக்கத்தை பரிசீலித்து, அவர் செலுத்தியது வருமானத்திற்கு அதிகமானதா இல்லையா என்பதைக் கண்டறியும் அளவுக்கு நம்மிடம் அரசு இயந்திரமோ, நிர்வாக வசதிகளோ, தொழில்நுட்ப வசதிகளோ இல்லை என்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம். கோடிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்ட (தோராயமாக) சில ஆயிரம் கணக்குகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்றால், அவ்வாறு செலுத்தியவர்கள் விவரங் கெட்டவர்களாக இருக்கப் போவதில்லை. அப்படியே கடும் சிரமங்களுக்கிடையே சலித்து எடுத்து சில பத்து பேர்களை பிடித்தாலும் நீதிமன்றம், வழக்கு நடைமுறைகள் என வருடக்கணக்கில் இழுத்துக் கொண்டு போகும் வாய்ப்பும் வசதியும் அவர்களுக்கு உண்டு. இதை வாய்தா ராணியின் வழக்கிலேயே பார்த்து விட்டோம். அதையும் மீறி பல வருட போராட்டங்களுக்குப் பின் அபராதத்தை வசூலித்தால் அது பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்பின் முன் வெறும் பொறியுருண்டையாகவே இருக்கும்.

இரண்டாவதாக, பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் பின் ரொக்கமில்லாப் பொருளாதாரப் பரிவர்த்தனை முறைகள் வளர்ச்சி பெறும் என்றும், இவ்வகையான பரிவர்த்தனைகளே வெளிப்படையானவைகள் என்றும், எல்லோருடைய வருமானமும் வெளிப்படையாக இருக்கும் போது வரி கட்டுவோரின் எண்ணிக்கையும் கூடுமென்றும், இதன் மூலம் வரி ஏய்ப்பை தடுத்து விட முடியும் என்றும் சொல்லிக் கொண்டனர். சொல்லப் போனால், கருப்புப்பணம் மற்றும் கள்ளப்பண ஒழிப்பு என்கிற பல்லவியோடு துவங்கிய ஒப்பாரி, தனது சரணத்தில் ரொக்கமற்ற பரிவர்த்தனையை நோக்கி நகர்ந்தது. மோடி, ஜேய்ட்லி உள்ளிட்டவர்கள் தமது உண்மையான நோக்கமே ரொக்கமற்ற பரிவர்த்தனை தான் என்பது போல் பேசத் துவங்கினர்.

சொல்லி வைத்தாற் போல் ரொக்கமற்ற பரிவர்த்தனைச் சேவையை வழங்கும் ரிலையன்சின் ஜியோ மணி குறித்த அறிவிப்பும் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியானது. ஒருபக்கம் உச்சநீதிமன்றத்தில் பணமதிப்பழிப்பு தொடர்பாக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், 500 ரூபாய்த் தாள்களை அச்சிட ஏற்படும் தாமதமானது அரசின் முடிவின் படியே ஏற்படுகிறது என தெரிவிக்கிறார். நாடெங்கும் திட்டமிட்ட ரீதியில் பணத்தாள்களை புழக்கத்தில் இருந்து நீக்கும் வெறியோடு மத்திய அரசு செயல்பட்டு வந்த நிலையில், கிட்டத்தட்ட 125 கோடி மக்களையும் கழுத்தைப் பிடித்து ரொக்கமற்ற பரிவர்த்தனைக்குள் தள்ளி விட்டனர்.

ஆனால், நடந்தது என்ன? மக்கள் ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டனரா?

ரொக்கமற்ற பரிவர்த்தனையின் வளர்ச்சி குறித்து தொகுப்பான புள்ளி விவரங்களை ரிசர்வ் வங்கியே வெளியிடும் என்றும், அப்போது தான் மோடியின் வெற்றியை உலகம் அறிந்து கொள்ளும் என்றும் பக்தர்கள் கூத்தாடிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய தேதி வரை ரிசர்வ் வங்கியிடம் இருந்து அப்படி எந்த தொகுப்பான விவரங்களும் வெளி வரவில்லை. மாறாக வழக்கமாக வெளியிடும் தனித் தனி வங்கிகளின் பரிவர்த்தனை விவரங்களை மட்டுமே வெளியிட்டுள்ளது. அந்த விவரங்களை ப்ளூம்பர்க் பத்திரிகை தொகுத்துள்ளது. அது பற்றிய ஒரு சித்திரம் கீழே

Digital-Transactionsஇதில் 7 மடங்காக அதிகரித்துள்ள UPI பரிவர்த்தனையின் மொத்த மதிப்பே வெறும் 700 கோடி தான். 2 லட்சத்துக்கும் அதிகமான தொகை பரிமாறிக் கொள்ளப்படும் முறையான RTGS 15 சதவீதம் வீழ்ந்துள்ளது. 2 லட்சத்துக்கும் குறைவான தொகை பரிமாறிக் கொள்ளப்படும் முறையான IMPS மட்டும் கணிசமாக (32 சதவீதம்) அதிகரித்துள்ளது. ஈ-வாலட்டுகள் உள்ளிட்ட முறைகளில் பரிவர்த்தனையின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருந்தாலும், அந்தப் பரிவர்த்தனைகளின் சராசரி பண மதிப்பு குறைவு என்பதால் மொத்த மதிப்பும் குறைவாகவே உள்ளது. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, ரொக்கமற்ற பரிவர்த்தனை 12 சதவீதம் வீழ்ந்துள்ளது.

தடை செய்யப்பட்ட ரூபாய்த் தாள்கள், தடை செய்யப்படாத ரூபாய்த் தாள்கள், வங்கிகளிடம் இருப்பில் இருந்தவை, அரசு கஜானாவின் இருப்பு, ரிசர்வ் வங்கியின் இருப்பு என அனைத்தையும் சேர்த்து நவம்பர் 4ம் தேதி சுழற்சியில் இருந்த மொத்த ரூபாய்த் தாள்களின் மதிப்பு 17.97 லட்சம் கோடிகள். இதே மோடியின் அறிவிப்புக்கும் பிந்தைய முதல் வங்கி வேலை நாளான நவம்பர் 11ம் தேதி 17.88 கோடியாக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த டிசம்பர் 28-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, டிசம்பர் 23-ம் தேதியன்று சுழற்சியில் இருந்த மொத்த பணத்தாள்களின் மதிப்பு வெறும் 8.55 லட்சம் கோடியாக சுருங்கியுள்ளது. இது புதிதாக அச்சிட்ட 2000 மற்றும் 500 தாள்களின் மதிப்பையும் உள்ளடக்கியது.

departmental-store
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, ரொக்கமற்ற பரிவர்த்தனை 12 சதவீதம் வீழ்ந்துள்ளது.

ஆக, அச்சிட்ட ரொக்கத்தின் புழக்கம் சரிபாதியாக சுருங்கியுள்ள அதே நேரம், மோடி பக்தர்கள் பீற்றிக் கொண்டதைப் போல் ரொக்கமற்ற பரிவர்த்தனையும் சொல்லிக் கொள்ளும்படி உயரவில்லை. சுருக்கமாகச் சொன்னால் மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துள்ளது. தற்போது வேறு வழியின்றி ரொக்கமற்ற பரிவர்த்தனைக்குள் பிடித்துத் தள்ளப்பட்டவர்களும் கூட நாளை ரொக்கத் தாள்கள் புழக்கத்திற்கு வந்தபின் மீண்டும் பழைய பாணியிலான பரிவர்த்தனை முறைகளுக்கே திரும்பிச் சென்று விடுவார்கள் என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

இது வரை மோடியும் அவரது அடிமைகளும் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் லட்சிய நோக்கங்கள் என்பதாகச் சொன்ன எந்தக் காரணங்களும் நாளது தேதி வரை நிறைவேறவில்லை – அவ்வாறு நிறைவேறும் என்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்பது பட்டவர்த்தனமாக நிரூபணமாகியுள்ளது. எனினும், தனது கோமாளித்தனமான நடவடிக்கையில் ஏதாவது ஒரு ‘வெற்றியை’ காண்பித்தே தீர்வது என்கிற வெறியில் உள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு.

கள்ளப்பணம் குறித்த தமது அலப்பறைகளின் சாயம் வெளுத்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் வசம் வந்துள்ள தாள்களை மீண்டும் சோதித்து அதில் கள்ளப்பணம் இருக்கிறதாவென ஆராய்ந்து வருவதாக அறிவித்துள்ளனர். ஒருவேளை இந்த மறுசோதனையில் சில கோடி கள்ளப்பணம் இருப்பது தெரிய வந்தாலும் கூட, இவைகளுக்குச் சமமான நல்ல நோட்டுகளை ஏற்கனவே வங்கிகள் மாற்றிக் கொடுத்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு மாற்றிச் சென்றவர்களைப் பிடிப்பதும் வைக்கோல் போரில் ஊசியைத் தேடும் சமாச்சாரம் என்பதே எதார்த்தம்.

அடுத்து, ஆங்காங்கே வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைகளில் பிடிபடும் கணக்கில் காட்டாத கருப்புப் பணத்தை ஆரவாரமாக விளம்பரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் மக்களிடையே கருப்புப் பணம் ஒழிகிறது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 500 கோடிகள் பிடிபட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. இந்நடவடிக்கைகள் துவக்கத்தில் அவர்கள் எதிர்பார்த்தது போன்ற பொதுக்கருத்தை உண்டாக்கினாலும், பிடிபட்ட தொகையில் கட்டுக்கட்டாக இருந்த 2000 ரூபாய்த் தாள்களை பத்திரிகைகளில் பார்த்த மக்கள் சீக்கிரம் விழித்துக் கொண்டனர்.

இரண்டாயிரம் ரூபாய்க்கு ஏ.டி.எம் இயந்திரங்களின் முன்னே வரிசையில் தாம் நிற்கும் போது கருப்புப்பண முதலைகளோ கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்துடன் பிடிபடுவதைப் பார்க்கும் மக்கள், பணமதிப்பழிப்பு நடவடிக்கை எந்த வகையிலும் கருப்புப் பணத்தை ஒழிக்காது என்பதை உணரத் துவங்கினர்.

அடுத்து முழுவதும் ரொக்கமற்ற பொருளாதார பரிவர்த்தனையே இந்தியா போன்ற ஏழை நாடுகளில் சாத்தியமில்லை என்பதை வளர்ந்த பணக்கார நாடுகளின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் ரொக்கமற்ற பரிவர்த்தனை எந்த அளவுகளில் நடக்கிறது என்பதை கீழே உள்ள படத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்:

cashless
(Source : Bloomberg)

இந்நாடுகளில் தடையற்ற மின்சாரம், தடையற்ற இணைய இணைப்பு, பரவலான கல்வி அறிவு, இணைய அறிவு ஆகியவை உள்ளன. ஒரே ஒரு வார்தா புயலுக்கு ஒரு மாதமாக இணையத் தொடர்பு அறுபட்டுப் போகும் நாட்டைக் குறித்து நாம் பேசுகிறோம். சுமார் 25 சதவீதம் பேருக்கு கல்வியறிவே இல்லை. இணையப் பயன்பாட்டின் அளவும் பாதிக்கும் குறைவு. இவ்வாறிருக்க மக்களை ரொக்கமற்ற பரிவர்த்தனைக்குள் நெட்டித் தள்ளுவதை மூடத்தனம் என்றும் சொல்லலாம் – பாசிசம் என்றும் சொல்லலாம்.

125 கோடி மக்களின் பொருளாதார நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, உளவு பார்ப்பது, கட்டுப்படுத்துவது, அம்பானி போன்ற ஒருசில தனிப்பட்ட முதலாளிகளின் கையில் ஒப்படைப்பது, வங்கி வலைப்பின்னலுக்குள் வந்த லட்சக்கணக்கான கோடியை முதலாளிகளுக்குத் தாரைவார்ப்பது, முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் அறிவிப்பது மற்றும் பரந்துபட்ட மக்களிடம் வரிபிடுங்குவது – இவை தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் மோடி அடைய நினைக்கும் லட்சியங்கள். இந்த பாசிச உள்நோக்கங்களைக் நிறைவேற்றுவதற்கே ரொக்கமற்ற பரிவர்த்தனைக்குள் அதற்கு எந்த வகையிலும் தயாரில்லாத மக்களை வலுக்கட்டாயமாக திணிக்க முயல்கிறார் மோடி.

கிட்டத்தட்ட மொத்த பொருளாதாரத்தையும் நாட்டையும் மக்களையும் ஹிட்லரின்  நச்சுப்புகைக் கூண்டுக்குள் தள்ளி விட்டுள்ளார் மோடி.

– சாக்கியன்.

செய்தி ஆதாரம்:
In India bank account penetration surges, but 43% dormant
Cashless Economy Still a Fantasy for India
Demonetisation complete failure? 97% of banned notes back in banks: Report
Value Of Online Payments Falls In December Despite Government’s Digital Blitz
Across the aisle | Cashless economy: A distracting mirage

எறும்பும் செத்த வீட்டில் கரும்பெதற்கு ? – துரை சண்முகம்

3
ஊருக்கு ஒரு கடுதாசி!

பொங்கலுக்கு
வருவதாய் இருந்தால்
எங்களுக்கு விருப்பமில்லை

என்ன இருக்கிறது இங்கே…
தினம்
ஒரு பிணம்song slider
விவசாயி வீட்டில்

முளைப்பாரி
கேட்ட ஊரில்
ஒப்பாரி

என்னை விட்டு போயிட்டியே!…
எனச் சுற்றிலும் கதறல்
இடையே
பொங்கலோ! பொங்கல்!
எனக் கத்த எங்களால் முடியாது.

வரப்பு வெடித்து
கிடக்கையில்
வயல் நண்டுக்கேது
கொண்டாட்டம்.
வயக்காத்து நிற்கையில்
நாரைக்கேது நடமாட்டம்.

எறும்பும் செத்த வீட்டில்
கரும்பெதற்கு?
பாடைக்கு பக்கத்தில்
விருந்தெதற்கு?
விவசாயத்தின்
இடுப்பை ஒடித்து விட்டு
எம்.சி.ஆர்., ராம்ராஜ்
வேட்டி எதற்கு!
வேதனைக்குப் பொங்காமல்
ஒருநாள்தமிழன்
வேசம் எதற்கு?

போரடிக்க
வழியில்லாமல்
ஊர் மாரடிக்குது
‘போர்’ அடிச்சா மட்டும்
நீங்க எட்டிப் பார்க்க
ஊரு கேக்குது!

கருகிய நெற்பயிர்கள்
கருகிய நெற்பயிர்கள்

எங்க
ஆத்து மண‍ல சுரண்டும் போது
யாரு வந்தீங்க,
எங்க
ஆடு, மாடு தவிச்சபோது
யாரு வந்தீங்க,
தெருக்குழாயில் ஈரம்தேடி
கரிக்குருவி ஏமாந்து
கத்தும் போது யாரு கேட்டீங்க!
உருத்தெரியாமல்
ஊரு சிதைஞ்சு  கிடக்ககையில்
எங்க
பொங்க வந்தீங்க?

நெல்லு
வளர்த்துக் கொடுத்தோம்
வகை வகையா தின்னீங்க
மாடு வளர்த்துக் கறந்தோம்
மடிப்பாலு குடிச்சீங்க.

ஆடு வளர்த்துக் கொடுத்தோம்
கறிக்குழம்பு  ருசிச்சீங்க
கோழி வளர்த்துக் கொடுத்தோம்
நாட்டுக்கோழி ரசிச்சீங்க

நாங்க
மாரடைச்சி கிடந்தோம்
யாரு வந்து தடுத்தீங்க?

உழவருக்கு இல்லாத
உழவர் திருநாள்
உங்களுக்கு ஏங்க?
உழவருக்காக போராட
ஊருக்குள்ள வாங்க!

துரை. சண்முகம்