“சிலவற்றை அடைய, சிலவற்றை இழந்து தான் ஆக வேண்டும்” என்கிறார் பாரதிய ஜனதாவின் பாராளுமன்ற உறுப்பினர் கோபால் ஷெட்டி. வங்கிகள் முன்பும், ஏ.டி.எம் இயந்திரங்கள் முன்பும் வரிசையில் நிற்கும் மக்கள் இறந்து போவதைக் குறித்து கேள்வியெழுப்பிய போது, “ஒவ்வொரு ஆண்டும் இரயில்வே தண்டவாளங்களில் 3500 பேர் சாகிறார்கள். ஐந்து லட்சம் மக்கள் சாலை விபத்தில் சாகிறார்கள். இன்னும் நிறைய பேர் தீவிரவாத தாக்குதல்களிலும் வேறு காரணங்களாலும் இறந்து போகிறார்கள். எவரும் இதைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த பாரதிய ஜனதாவைச் சேர்ந்த எஸ்.வி சேகர், “128 கோடி மக்களில் 25 பேர் தானே இறந்துள்ளனர்” என்று கொக்கரித்துள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்களிடம் பேசும் போது, வங்கிகளின் முன் வரிசைகட்டி நிற்பவர்கள் எல்லாம் ‘அசுர சக்திகள்’ எனவும், கள்ளப் பணத்தை மாற்றிச் செல்ல மக்களைப் போல் மாறுவேடமிட்டு வந்திருப்பார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதாவின் ஆதரவு பெற்ற கருப்புப் பண முதலையான பாபா ராம்தேவ், எதிர்கட்சிகள் திட்டமிட்டு ஏ.டி.எம் இயந்திரங்களின் முன்னும், வங்கிகளின் முன்னும் மக்களை நிறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
தங்களுடைய அன்றாடத் தேவைகளுக்காக தாம் உழைத்துச் சம்பாதித்த பணத்தை எடுக்க வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களின் முன் நிற்கும் மக்களை கருப்புப் பணத்தை மாற்ற வந்தவர்கள் என இழிவு படுத்துகிறார் பிரதமர் மோடி. ஜப்பான் சுற்றுப் பயணத்தின் போது இது குறித்து உரையாற்றிய மோடி, “காங்கிரசு 25 பைசா நாணயங்களைச் செல்லாது என்று அறிவித்த போது நாங்கள் ஏதாவது கேட்டோமா?” என சில்லறைத்தனமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். மேலும், தனது அறிவிப்பு வெளியானதற்கு மறுநாள் திருமணம் உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தவர்கள் திகைத்துப் போய் விட்டார்களாக்கும் என்று தனது கைகளால் சைகை செய்து நீட்டி முழக்கிய போது ஜப்பானின் கோபே நகரில் அவரது பேச்சைக் கேட்க கூடியிருந்த இந்தியர்கள் கைகொட்டிச் சிரித்தனர்.
மோடி அறிவித்த பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை துன்பமாகத் துவங்கி மெல்ல மெல்ல வரலாறு காணாத பொருளாதாரப் பேரிடரை நோக்கி முன்னேறி வருகின்றது. கருப்புப் பொருளாதாரத்தின் இயக்கம் மற்றும் அதன் விளை பொருளான கருப்புப் பணத்துக்கும் இந்த நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள பொருளாதார மேதமை கூட அவசியமில்லை – ரஜினி துவங்கி கவுதம் அதானி வரை யாரெல்லாம் இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ளார்கள் என்பதைக் கவனித்தாலே விளங்கும். என்றாலும் இந்நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணத்தை ஒழித்து விடுவதாகச் சவடால் அடித்து வரும் பாரதிய ஜனதா கும்பல், மக்களின் வாழ்க்கையை மீளாத துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருப்புப் பண ஒழிப்பு என்பதே மோசடி என்பது ஒருபுறமிருக்க, இந்த நடவடிக்கைகளின் விளைவாக மக்கள் படும் துன்ப துயரங்களும் அதைக் குறித்து இந்துத்துவ கும்பலுக்கு இருக்கும் அலட்சியமும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்கு ஆபாசத்தின் எல்லைகளைத் தாண்டியுள்ளது. பணம் எடுக்கச் சென்று அதிர்ச்சியில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் இதுவரை 50-ஐத் தொட்டுள்ளது. மோடியின் அறிவிப்பு வெளியானவுடன் கருப்புப் பண பேர்வழிகள் அனைவரும் மாற்று உடை கூட இல்லாமல், சோற்றுக்கும் வழியின்றி வங்கிகளின் முன் பராரிகளாக நிற்கப் போகிறார்கள் எனக் கனவு கண்ட நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த கணிசமானவர்கள், பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
ஆனால், அவர்களது இன்பக் கிளுகிளுப்பு ஓரிரு நாட்கள் கூட நீடிக்கவில்லை. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதாக சொல்லப்படும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் மோடியின் அறிவிப்பு வெளியாகி ஒருவாரம் கழித்த நிலையிலும் இன்னமும் புழக்கத்திற்கு வரவில்லை. சுழற்சியில் இருந்த ரூபாய் நோட்டுக்களில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு மட்டும் சுமார் 84%. 10, 20, 50 மற்றும் 100 ரூபாய்த் தாள்கள் மீதமுள்ள 16 சதவீத மதிப்புள்ளவைகள். இந்நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் கூட சில்லறையாக மாற்ற முடியாமல் எதார்த்தத்தில் செல்லாக்காசாகி உள்ளது. மேலும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2000 மற்றும் 500 ரூபாய்த் தாள்களைக் கையாள்வதற்கு ஏதுவாக வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களை சீரமைக்க வேண்டிய பணியும் முழுமையாக நிறைவேறவில்லை – அவ்வாறு ஏ.டி.எம் இயந்திரங்களை முழுமையாக மறுசீரமைக்க சுமார் 30லிருந்து 60 நாட்களாகும் என பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு என மீம் போட்டு பீற்றினர் மோடி விசுவாசிகள்
இதற்கிடையே பழைய நோட்டுக்களை மாற்றிக் கொண்டவர்களில் பலரும் தங்களது அத்தியாவசிய செலவுகளைக் கூட சுருக்கிக் கொண்டு கையிலிருக்கும் 100 ரூபாய்த் தாள்களை சேமிக்கத் துவங்கியுள்ளனர். இந்தப் போக்கின் விளைவாக 100 ரூபாய்த் தாள்களின் சுழற்சியும் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது. வங்கிகளில் நேரடியாகச் சென்று பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள ஏற்கனவே நிர்ணயித்திருந்த 4,500 ரூபாய் என்கிற வரம்பை 2,000 ரூபாயாக குறைப்பதாக அறிவித்துள்ள அரசு, ஒருவரே மீண்டும் மீண்டும் வந்து பணம் மாற்றுவதைத் தடுக்க விரலில் அழியாத அடையாள மை வைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. மக்கள் நியாயமாக உழைத்து சம்பாதித்த பணத்தைக் கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு நெட்டித் தள்ளியிருக்கும் மோடி, இன்னொரு பக்கம் வங்கிகளில் சுமார் 7000 கோடி ரூபாய் அளவுக்கு நிலுவையாக உள்ள முதலாளிகளின் கடன்களை வாராக் கடனாக அறிவித்து கைகழுவியுள்ளது.
இதற்கிடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய்த் தாள்கள் சாயம் போவதும் தெரிய வந்துள்ளது. இதற்கு பதில் அளித்த மத்திய நிதித் துறைச் செயலாளர் சக்திகந்ததாஸ், சாயம் போனால் கள்ள நோட்டுக்கள் என்றும் சாயம் போகாவிட்டால் நல்ல நோட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி உடனேயே கள்ள நோட்டுக்களை வெளியாகிவிட்டதை இவர்கள் ஒப்புக்கொள்கிறார்களோ என்னமோ! துவக்கத்தில் அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து வந்த படித்த நடுத்தர வர்க்கத்தினர், கையில் காசின்றிக் குடல் காய்ந்து போன நிலையில் அரசின் கோமாளித்தனங்கள் ஒவ்வொன்றாக வெளியாகத் துவங்கியதை அடுத்து நொந்து போயுள்ளார்கள். பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து சிறு மற்றும் நடுத்தர வர்த்தகப் பிரிவில் சுமார் 25 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கிறது அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (Confederation of All India Traders).
தினசரி 14,000 கோடிகள் புரளும் சிறு வர்த்தகச் சந்தையில் சுமார் 40 சதவீதம் வர்த்தகர்களுக்கிடையிலான பரிவர்த்தனையாகவும், 60 சதவீதம் மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனையாகவும் உள்ளது. மோடியின் அறிவிப்பிற்குப் பின் வர்த்தகம் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும், பணத் தட்டுப்பாட்டின் விளைவாக விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
தனது வாக்கு வங்கியில் கணிசமான சதவீதம் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் ஆத்திரம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதை உணர்ந்த மோடி, கோவாவில் (ஜப்பானில் இருந்து திரும்பிய பின்) உரையாற்றும் போது இந்நடவடிக்கயின் விளைவாக தனது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டாலும் பின் வாங்கப் போவதில்லை என்றும், நாட்டு நலனுக்காக மக்கள் மேலும் சிறிது காலம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உணர்ச்சிகரமாகப் பேசி முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.
மோடி பேசிய போது தெறித்த எச்சில் காய்வதற்குள் கர்நாடக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டி தனது மகளுக்கு 500 கோடியில் கல்யாணத்தை நடத்தி வைத்துள்ளார்.
500 கோடி செலவில் ஜனார்தன் ரெட்டி வீட்டு ஆடம்பரத் திருமணம்
“அது தான் ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் 22 கோடி இந்தியர்களுக்கு வங்கிக் கணக்குகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோமே? மடியில் கனமில்லாதவர்கள் தங்களது பணத்தை வங்கியில் கொண்டு போய் மாற்றிக் கொள்ள வேண்டியது தானே? நடுத்தர வர்க்கத்துக்கு ஒரு நாளுக்கு எத்தனை ஆயிரங்கள் செலவாகி விடப்போகிறது? நாங்கள் தான் ஏ.டி.எம்மில் நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய் எடுக்க வகை செய்யப்பட்டுள்ளதே?” என்றெல்லாம் எகத்தாளமாய்க் கொக்கரிக்கின்றனர் இணைய இந்துத்துவ பீரங்கிகள்.
ஆனால், மொத்த இந்தியர்களில் 74 சதவீதம் பேரே கல்வியறிவு பெற்றவர்களாகவும் – அதிலும் வெறும் 40 சதவீதம் பேரே ஒரு படிவத்தைப் படித்துப் புரிந்து கொண்டு அதை நிரப்பும் அளவுக்கு கல்வியறிவு கொண்டவர்கள் என்பதைக் குறித்து இந்த இணைய மொண்ணைகள் வாய் திறப்பதில்லை. மேலும், கிராமப்புற மக்களில் வெறும் 6 சதவீதம் பேருக்குத் தான் ஏ.டி.எம் இயந்திரங்களை இயக்கும் அறிவு உள்ளது எனத் தெரிவிக்கிறது People research on India’s consumer economy (PRICE) என்ற நிறுவனத்தின் ஆய்வு ஒன்று. மேலும், ஊரகப் பகுதிகளில் போதுமான அளவுக்கு வங்கி வலைப்பின்னல் இல்லாத நிலையில், விவசாயிகளும் கிராமப் புற மக்களும் அடைந்துள்ள துயரங்களைச் சொல்லி மாளாது.
பொதுவாகவே இந்துத்துவ பாசிஸ்டுகள் பிறருக்கு துன்பம் வரவழைத்து அதிலிருந்து இன்பம் காணும் சாடிஸ்டுகள் என்பது நமக்குத் தெரியும் – தற்போது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில் பிறரின் துயரங்களில் மகிழ்ச்சி காணும் ஷாதென்ஃபராய்தெ (Schadenfreude) என்கிற மனநோயால் பீடிக்கப்பட்டவர்களைப் போல் மக்கள் மேல் ஒவ்வொரு நாளும் விதவிதமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். வரலாற்று காணாத வக்கிரங்களை மக்கள் மேல் காவி கும்பல் ஏவி விட்டுள்ள நிலையில், “எல்லையிலே இராணுவ வீரன் நிற்கையிலே.. ஏ.டி.எம் முன் வரிசையில் நிற்க உங்களுக்கு என்ன கேடு?” என்பது போன்ற ஆபாச நகைச்சுவைகளை உற்பத்தி செய்பவர்கள் சிந்திக்கட்டும்.
பெரு முதலாளிகளைக் காப்பாற்றுவதற்காக மோடி அறிவித்த கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தினால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போயிருக்கின்றனர். அன்றாட வேலைகளை விட்டுவிட்டு வங்கிக்கு அலையும் இவர்களுக்கு இந்த செல்லாத நோட்டு தோற்றுவித்திருக்கும் துன்பங்கள் அளவிடமுடியாதவை! அதையே எக்காளம் செய்கின்றார்கள், மோடியை ஆதரிக்கும் நபர்கள்! பாசிச மோடிக்கு சற்றும் குறைவில்லாத சிந்னையை இவர்களும் கொண்டிருக்கிறார்கள். சாதாரண மக்கள் மீதான இவர்களின் வன்மம்தான் முதலாளிகள் மீதான மோடியின் பக்தியை நியாயப்படுத்துகிறது.
– வினவு
Vijay Elumalai
சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் லீ குவான் யூ. போல இந்தியாவில் மோடி பிறந்துள்ளார் என சிங்கப்பூர் நாளிதழ் புகழாரம். ஊர் உலகமும் மோடியை பாராட்டுது. இங்கே உள்ள கூமுட்டை முண்டம் மோடியை தூற்றுது. கேட்டால்…. எங்களை பேங்க் வாசலில் காக்க வைத்து விட்டார் என்கிறார்கள்.
எவனோ ஒரு நடிகன் நடித்த படத்திற்கு டிக்கெட் வாங்க ராத்திரி பகலாக தியேட்டர் வாசலில் காத்தி௫ப்பிங்க.
யாரோ ஒரு தலைவர் வ௫கிறார் என்பதற்காக கொழுத்துற வெயில்ல குவார்ட்ட௫க்கும் பிரியாணி க்கு காத்து௫ப்பிங்க. கிரிக்கெட் என்றால் பைத்தியமாக ஸ்டேடியம் முன்பாக காத்தி௫ப்பிங்க ஆனால் நாடு முன்னேற இரண்டெ௫ நாள் வங்கி வாசலில் காத்தி௫க்க மாட்டீங்க?
நாட்டிற்காக இந்த சிறிய சிரமத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாதவன். இந்த நாட்டில் இ௫க்க தகுதியே இல்லாதவன்.
?மோடி ஜீ…??
Muthu Siva
“ஹலோ நான் சாமான்யன் பேசுகிறேன்” அப்டின்னு இந்நேரம் ஒரு உருக்கமான கடிதம் வந்துருக்கனுமே..!!!
பாக்கியநாதன்
எல்லையில் 24*7 மணிநேரம் துப்பாக்கியைத் தூக்கி கொண்டு நிற்கிறார்கள் நமது நாட்டினை பாதுகாப்பதற்காக ஆனால்,
இங்கே ஒரு கூட்டம் இரண்டு மணி நேரம் கியூவில் நிற்க பொலம்பித் தள்ளுராங்க..ஏண்டா நாட்டோட பொருளாதார வளர்ச்சிக்காக ஒரு ரெண்டு மணி நேரம் கியூவுல நிக்க மாட்டிங்களாடா ?
த்தா எவானாவது கருப்பு பணம் எங்க ? கள்ள நோட்ட ஒழிச்சிங்களானு கேட்டு இந்த பக்கமா வந்துராதீங்க வாயிலயே வெட்டுவேன் ..
Kavarimaan
இரவு பகலாய் எல்லையில் பணிபுரியும் ராணுவத்தினர், மற்றும் காவல்துறை பண மாற்ற அவஸ்தைப்படும் நாமும்…
இதுவும் ஒரு தேசத்தொண்டு! ஜெய்ஹிந்த்
கார்த்திக்முத்தரையர்புதுக்கோட்டை
தயவு செய்து வருவாய்க்கு அதிகமாக வைத்திருக்கும் பணத்தை அண்டை மாநிலத்தில் உள்ள கோவில் உண்டியல்களில் செலுத்தாதீர்கள் அப்படி செலுத்தினால் அந்த மாநிலம் தான் வளர்ச்சி அடையும் , எனவே அப்படி உண்டியலில் செலுத்த விரும்பினால் தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் உள்ள உண்டியலில் செலுத்தினால் தமிழகம் வளர்ச்சி அடையும் வல்லரசாக மாறும்…. இது உண்மையென்றால் அதிகம் பகிரவும்…..
இப்படிக்கு,
மக்கள் நலன் கருதுவோர்,
ஜெய்ஹிந்த்…..
பாக்கியநாதன்
அளவுக்கு அதிகமா பணம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு யோசனை:
திருப்பதி கோவில் உண்டியல் ல போட்டுருங்கடா கொஞ்சம் புண்ணியமாவது கிடைக்கும்…
( அது ஏன் திருப்பதில போட சொல்ரேன்னு தெரிஞ்சவன் பிஸ்தா )
AcuHealer Krishnan
வங்கியிலிருந்து புதிதாக வாங்கிய இரண்டாயிரம் ரூபாய்த் தாளோடு நண்பர் ஒருவர் வந்து என்னை சந்தித்தார். எங்கே அந்த ரூபாய் நோட்டை காண்பியுங்கள் என்று ஆர்வமிகுதியில் கேட்கவே சிரித்துக்கொண்டே தந்தார். கையில் வந்த பளபளா நோட்டை பார்த்ததும் எனக்குள் ஒரு பூரிப்பு. ” இருங்க என் பாக்கெட் ல வச்சிட்டுத் தர்றேன் ” என சொல்லி பாக்கெட்டுக்குள் வைத்ததும் திடீரென பட பட வென ஒரு சத்தம். நான் வெலவெலத்துப்போய் நண்பரை பயத்துடன் பார்க்க அவரோ குறும்புப் புன்னகை பூத்தபடியே என்னை பார்த்தார்.
பிறகு தான் புது 2000 ரூபாய் நோட்டு பற்றி என்னிடம் விளக்கினார். அதாவது அந்த நோட்டை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துப் பார்க்கமுடியும். ஆனால் அதற்கு சம்பந்தமில்லாத யாராவது அந்த நோட்டை பாக்கெட், மணிபர்சு அல்லது வீட்டிலோ வெளியிலோ வேறு எங்காவது வைத்தால் அலாரம் அடிக்க ஆரம்பித்துவிடும். ஒருத்தர் எவ்வளவு நேரம் தான் கையிலேயே 2000 ரூபாய் நோட்டை வைத்திருக்க முடியும்?! எல்லாரும் சொல்வது போல இதுவொன்றும் நேனோ டெக்னாலஜியில் தயாரிக்கப்பட்டதல்ல. அதைவிட Advanced நியூரோமார்ஃபிக் டெக்னாலஜி மூலமே இது சாத்தியம் ஆகும். உலகின் வேறெந்த நாட்டிலும் இதுபோன்ற நோட்டு தயாரிக்கப்படவில்லை. இந்தியாவில் தான் முதன்முறையாக இது செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த மூன்றாவது மாதத்திலேயே இது தொடர்பாக ஒரு உயர் தொழில்நுட்ப குழுவை அமைத்து வேலைகளை முடுக்கி விட்டுள்ளார். தனது வெளிநாட்டு பயணங்களின் போதும் அங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்களிடம் இதுபற்றி விவாதித்து கடைசியாக இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் …!
நண்பர் சொன்ன தகவல்களைக் கேட்டு ஆச்சரியத்தின் உச்சிக்கே போனேன். ஒரே நாளில் ஒட்டுமொத்த தேசத்தையே கறுப்புப் பணமற்ற தேசமாக மாற்றிக்காட்டிய பிரதமர் மோடி என் மனதிற்குள் மிக உயர்ந்த இடத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளார். நான் பிறந்தது முதலே என்னை பலரும் ராசியில்லாதவன், அதிர்ஷ்டம் இல்லாத ஆள், போன ஜென்மத்தில் பாவம் செய்தவன் என்றெல்லாம் கேலி செய்வதுண்டு. ஆனால் இன்று அவர்களை தேடிப்பிடித்து சொல்வேன் : இப்படிப்பட்ட ஒரு மனிதர் எனக்குப் பிரதமராக கிடைத்திருக்கிறார் என்றால் நான் எவ்வளவு அதிர்ஷ்டமும் புண்ணியமும் செய்திருக்கவேண்டும்?!
#ஜெய்ஹிந்த்
எங்க வீட்ல எல்லோரும் அமெரிக்காலயா இருக்காங்க.. நானும் அடுத்த வாரம் வந்துருவேன்..
சரியா வரி கட்டுற யாரும் இதுக்கு பயப்பட அவசியமே இல்ல.. ஏன் அக்கவுண்ட்ல பணத்தை போட்டு கார்டை பயன்படுத்தலாமே? அமெரிக்காவில் கூட அப்படி தான் 😛
ஒருவேளை மோடி இதை செய்யலைனா கருப்பு பணத்துக்கு எதிரா ஒன்னுமே செய்யலைன்னு சொல்லுவிங்க..
Boopathy Murugesh
நான் அமெரிக்காவிலிருந்து டாலரில் அனுப்ப முடியும் எனும்போது நீங்க பெங்களூரிலிருந்து ரூபாய் டிரான்ஸ்பர் பண்ண முடியல என்பதைல்லாம் போய் ராகுல் காந்தி மாதிரி எவன்ட்டயாவது சொல்லுங்க..
பெங்களூரிலிருந்து கார்டை ஊருக்கு குடுத்துவிட்டா போலீஸ் புடிச்சுருமா? இல்ல வீட்ல ஒருவரிடம் கூடவா அக்கவுண்ட் இல்ல? கார்டு இல்ல? உழைத்த பணத்தை பயன்படுத்த என்ன பயம்?
Saran Mass
ஆட்சிக்கு வந்தோமா ஹாயா சம்பாதிச்சோமா குடும்பத்தை கோபுரத்தில் வச்சோமா நாலு பேருக்கு ஜிங்க் ஜக் பண்ணிட்டு கட்டிங்க சுவிஸ்சில் போட்டோமா அடுத்த எலக்ஷன்ல ஜெயிச்சா மீண்டும் அதையே செஞ்சோமா அப்படி தோத்துட்டா எதாவது ஒரு தீவ வாங்கிட்டு அங்க செட்டில் ஆனோமானு இல்லாம ஒரே நாட்ட திருத்தரேன் மக்களுக்கு உழைக்கறேனுட்டு இருக்காரு இந்த மனுஷன்…
இப்ப பாரு ஒன்னுக்கு ஒழுங்கா போகத்தெரியாதவன் கூட உலக பொருளாதாரம் பேசிட்டு இருக்கான்…நாங்க பாட்டுக்கு நாளு ஜோக்கு நாளு கிளுகிளுப்பு படத்தில் ஆசம், சூப்பர்னு கமெண்ட்ட போட்டு நிம்மதியா இருந்திருப்போம்… இவனுங்க வாந்தி எடுப்பதையெல்லாம் பார்க்க வச்சிட்டீங்க
இதெல்லாம் தேவையா மோடிஜி? இவனுங்க ஆட்டு மந்தைங்க..
Ravi Kumar Bjp Thengapattanam
வெளி நாட்டு பத்திரிகைகள் மோடிஜி அவர்களின் கறுப்பு பண ஒழிப்புக்கு பாராட்டு. ஆனால் இந்தியாவில் உள்ள சில தேச விரோத ஊடகங்கள், மீடியாக்கள் மோடிஜி க்கு எதிராக ஒப்பாரி வைக்கின்றன.
elva Mani with Ganesan
முதன் முறையாக மோடிஜி ராஜாங்கத்தை பாராட்டி மோடி பஞ்ச் என்ற தலைப்பில் பல்வேறு கட்டுரைகளை பதிப்பித்துள்ளது விகடன் இதழ். நிறை குறைகளை சுட்டி காண்பித்து தலையங்கமும் எழுதியுள்ளது. மோடிஜியின் பாதை இப்போதுதான் பலருக்கு புரிய ஆரம்பித்துள்ளது.
மரணவியாபாரி எனபொய்பரப்புரை செய்யபட்டஇந்த மாமனிதரின்
உண்மையான உழைப்பும், தேசபக்தியும் அனைவரும் ஒப்புக்கொள்ளும் நாள்விரைவில் வரும்.
Kettavan Da Amar
பேங்க்’ல #Wifi இலவசம்’ன்னு மட்டும்
ஒரு #அறிவிப்ப விடுங்க #மோடிஜி
#நீங்களே அடிச்சு #விரட்டுனாலும்
பேங்க விட்டு #கிளம்ப மாட்டோம்???
Selvar Durai
ஜெய் மோடி_ஜி ……..
கடந்த இரு வருடங்களாக இந்தியாவில் ஒரு இடத்திலும் குண்டு வெடிக்கவில்லையே !! கடந்த 63 வருடங்களாக … எத்தனை பிரதம மந்திரி… எந்த எந்த நாட்டிற்கு சென்றார்கள்… என்ன .. என்ன .. கிழித்தார்கள் உங்களுக்கு தெரியுமா ?????
பொழுது விடிந்து பொழுது போனால் சீனாகாரன் குதிரையில் நமது எல்லை தாண்டி வந்து பெயிண்ட் அடிப்பதை நிறுத்தி விட்டானே ,,,, ஏன் ????? பன்னிஸ்தான்… எல்லையில் ஆட்டம் போடுவது குறைந்தது ஏன் ??? குட்டிபன்னி ..வங்காளம்… வாலை சுருட்டிக்கொண்டு… இருப்பது ஏன் ??
63 வருடங்களில் ரயில் நிலையங்கள் எப்படி இருந்தன… இப்பொழுது எப்படி உள்ளது தெரியுமா???? 63 வருடங்களில் ரயில்கள் தாமதமாக வருவதை தவிர வேறு என்ன தெரியும்… இப்பொழுது நேரப்படியும்… முன்னதாகவே வருவது தெரியுமா !!!! 3 வருடங்களாக முல்லாவின் ஒட்டு வாங்க கட்டப்பட்ட ராணுவத்தின் கை அவிழ்த்து விட்டபின்… மியன்மாரில் பூந்து வேட்டையாடியதை இதற்கு முன்பு கேட்டது உண்டா..!!!!!!!
பணம் உள்ளவனுக்குத்தான் வங்கி … ஏழைகளுக்கு ஏங்கி ….இது கடந்த 63 வருடங்களில் …. இன்று… கோடிக் கணக்கான ஏழைகள் வங்கி கணக்கு உள்ளது!!! முத்ரா திட்டம் மூலம் 10 லட்சம் வரை கடன் ..பெற்று உள்ளது தெரியுமா. ??? ஜீவன் ஜ்யோதி திட்டத்தில் 2 லட்சம் காப்பீட்டு தொகை கடந்த 63 வருடத்தில் எந்த பாமரனுக்கு கிடைத்ததா ????? சுரக்ஷா பீமா மூலம் வெறும் 12 ரூபாய்க்கு விபத்து காப்பிடு 2 லட்சம் கடந்த 63 வருடத்தில் எந்த பாமரனுக்காவது கிடைத்ததா…??? உஜ்வலா திட்டம் மூலம் 5 கோடி குடும்பகளுக்கு இலவச எரிவாயு திட்டம் கடந்த 63 வருடங்களில் எந்த ஏழைக்காவது கிடைத்ததா….????? கடந்த 63 வருடங்களில் கிடைக்காத 7000 கிராமங்களுக்கு மின் வசதி கிடைத்தது தெரியுமா?????
கடந்த 63 வருடங்களில் எந்த தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு சுய தொழில் செய்ய 10 கோடி ரூபாய்கள் கிடைத்ததா…????? கடந்த 63 வருடங்களில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு OROP எவனாவது கொடுத்தானா….இல்லை …மதித்தானா… ராணுவ வீரர்களை….
மோதி நாடு .. நாடா சுற்றுகிறாராம்…. சொல்ல வந்து விட்டாங்க … பன்னிகளும்… பாவாடைகளும்… வந்தேறிகளும்… டம்பளர்களும்.. .. 2017 வருடம் முதல் வெளி நாட்டில் சுற்றிய சுற்றலுக்கு வேலை வாய்ப்புகள் மலை போன்று வர உள்ளது… அப்ப தெரியும் மோதி … உலகம் சுற்றிய வாலிபனா என்று.. உங்க ஆயா வெளி நாட்டு காரனிடமும் … வெளிநாட்டு இந்தியர்களிடமும் 22,000 கோடி ரூபாய் பெற்றார்களே…. அதை கேட்க மாட்டீர்களே !!!!
நீங்கள் என்னநாட்டிற்கு செய்தீர்கள்….?? ஹெல்மெட் போட சொல்வதை கேட்டீர்களா…???? நோ பார்கிங் இல் தானே வண்டியை நிறுத்துவீர்கள் ????? ONE WAY இல் எதிராக எவ்வளவு வேகமாக வருவீர்கள் ????? எச்சில் துப்பாதே என்ற பலகை மறையும்படி எச்சில் துப்பும் நீங்கள் … கேள்வி கேட்க வந்து விட்டீர்கள் …!!
முதலில் நீங்கள் திருந்துங்க. அப்புறம் மோதியை குறை கூறலாம்…
ஜெய் ஹிந்த்… ஜெய் ஹிந்த்… ஜெய் ஹிந்த்..????
Venkat Boss
#மோடிஜி யின் அருமை தெரியாத வெகுசில நன்றிகெட்ட நாய்களின் கவனத்திற்கு!
மாபெரும் தலைவர் ஆகிறார் பிரதமர் மோடி…! பணப்புரட்சி பற்றி பேச ஐ நா அழைப்பு..! உலகம் முழுக்க பணப் புரட்சி..!! மாபெரும் தலைவர் ஆகிறார் நமது பிரதமர் மோடி..! கருப்பு பணத்தை ஒழிக்க மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது..! இந்திய மக்கள் முதலில் நிறைய இடர்பாடுகளைச் சந்தித்தாலும் பின்னர் புரிந்து கொண்டு அமோக ஆதரவை அளிக்க துவங்கி விட்டனர்..!
பாக். முன்னாள் அதிபர் முஷாரப் தனது பாராட்டுகளைக் கூறினார். ஆஸ்திரிரேலிய அரசும் பணபுரட்சியைத் துவங்கி விட்டது. உலக நாடுகளின் தலைவர்கள் மோடியை தொடர்பு கொண்டு இது எப்படி சாத்தியம் என்று விசாரித்தபடி இருக்கிறார்கள். இந்நிலையில் ஐநா சபை வரை எதிரொலித்தது மோடியின் பணப் புரட்சி..! இது குறித்து ஐநா சபையில் உரையாற்ற அழைப்பு விடுத்துவிட்டது..! அங்கு எழுச்சி மிகு உரையாற்ற தயாராகி விட்டார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி..!
வெள்ளைகாரணைக் கூட நடுதெருவில் நிற்கவைத்து சாதனை மோடிஜி…
Krishna Dhasarathan
குஜிலிவாலுக்கும் மம்தா பேகத்திற்கும் கருப்பு கொடி காண்பித்த டெல்லி வியாபாரிகள். மோடிஜியின் கருப்பு பண ஒழிப்புக்கு எதிராக தர்ணா செய்ய வந்த குஜ்லிவாலுக்கும், மம்தா பேகத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தும், மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டும் கலக்கிய டெல்லி வியாபாரிகள். கலங்கிய எதிர் கட்சிகள்.
மோடிஜி.. நீங்க கலக்குங்க !!
நல்லவர்கள் எல்லாம் இனி உங்கள் பக்கம் !!
கே.வி.ஆர். திருவாடானை பாண்டியர்வம்சம் சேதுபதிசீமை
தற்போது , பாரத பிரதமர் மோடிஜி அவர்களை விமர்சிப்பவர்கள் எல்லாம் தேச விரோத கும்பலும் , கொள்ளை கும்பலும்தான்….
எவ்வளவோ கஷ்டங்களும் , துயரங்களும் இருந்தாலும் தேச பக்தர்களும் , ஏழைகளும் பிரதமர் மோடிஜி அவர்களை முழு மனதோடு பாராட்டுகிறார்கள் , புகழ்கிறார்கள் .. R Kesava Raman Konar Singapore ·
மக்கள் எதற்காக எனக்கு வாக்களித்தார்களோ அதை
முடிக்காமல் நான் ஓய போவதில்லை.! “அடுத்த தேர்தலுக்காக வேலை செய்பவன் அல்ல நான் அடுத்த தலைமுறைக்காக வேலை செய்கிறேன்””இந்த முடிவால் எனக்கு என்ன நடந்தாலும் அஞ்ச போவதில்லை”இந்த நாளுக்காகவே எனது குடும்பத்தை தியாகம் செய்துள்ளேன்.!
Venky VenkyBoy with Palanivel Rajan and 34 others.
எங்களைபோல் வெளிநாட்டில் கஷ்டபட்டு உழைக்கிறவனுக்குதான் தெரியும் பணத்தின் அருமையும் மதிப்பும்…
நன்றி மோடிஜி… போட்டான்பாரு சீங்கப்பூர் பத்திரிகைல… சிங்கப்பூரை வளார்ச்சியின் உச்சத்திற்க்கே கொண்டு சென்று உலக நாடுகளை திகைக்க வைத்த மறைந்த சிங்கப்பூர் அதிபார் #லீ_குவான்….
இந்தியாவில் பிரதமார் மோடியாக மீண்டும் பிறந்துள்ளாார்.-சிங்கப்பூர் பத்திரிகை..
இது நவம்பர் புரட்சி நூற்றாண்டின் துவக்கம். 1917, நவம்பர் 7 – உலகின் முதல் தொழிலாளிவர்க்க அரசு அமைந்த நாள்.
இது கலாச்சாரப் புரட்சியின் ஐம்பதாண்டு நிறைவு. மே, 1966-இல் தான் சோசலிசத்தை உள்ளிருந்தே கவிழ்க்கும் முதலாளித்துவ மீட்புக்கு எதிரான சீன கலாச்சாரப் புரட்சி தொடங்கியது.
இது நக்சல்பாரி எழுச்சியின் ஐம்பதாம் ஆண்டு. மே, 1967-இல்தான், திருத்தல்வாத கம்யூனிஸ்டு தலைமையின் நாடாளுமன்ற சரண்டைவுப் பாதைக்கு எதிரான போர்க்குரலாக நக்சல்பாரி உழவர் எழுச்சி தொடங்கியது.
இது கார்ல் மார்க்ஸின் பிறந்தநாளின் 200-வது ஆண்டு தொடக்கம். முதலாளித்துவத்தின் மரணத்தையும், தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தையும் முன்னறிவித்த பேராசான் மார்க்ஸின் பிறந்த நாள் மே 5, 1818.
ஐம்பதாம் ஆண்டு, நூறாம் ஆண்டு போன்றவை ஒருங்கே அமையப் பெறுவது ஒரு தற்செயல் நிகழ்வுதான். ஆனால் அந்தக் குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட நிகழ்வுகளும், அவற்றுக்கு இடையிலான உறவும் தற்செயலானவைகள் அல்ல. அவ்வகையில் இந்நான்கு நிகழ்வுகளும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்தவை.
1917 ரசிய சோசலிசப் புரட்சி என்பது முதலாளித்துவம் முயன்றாலும் மறக்கவே முடியாத கெட்ட கனவு. மனித சமூகத்தை தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வதாகக் கூறி வந்த முதலாளித்துவ வர்க்கத்தை, அதிகாரத்திலிருந்து அகற்றியது மட்டுமல்ல, அது சமூகத்துக்குத் தேவைப்படாத வர்க்கம் என்பதையும் சமூக முன்னேற்றத்தின் தடைக்கல் என்பதையும் நடைமுறையில் நிரூபித்தார் நவம்பர் புரட்சியின் நாயகன் தோழர் லெனின்.
இன்று சோசலிசம் தோற்றுவிட்டதாக முதலாளித்துவம் தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொள்கிறது. இருப்பினும் அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு – என ஒவ்வொரு துறையிலும் சோசலிசம் நிகழ்த்திய சாதனைகள் தொல்பொருட்களாகப் புதைந்து விடவில்லை. அவை பல்வேறு வடிவங்களில் உலகெங்குமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளாக உயிருடன் உலவுகின்றன.
தொழிலாளிகளுக்கான பணி உத்திரவாதம், ஓய்வூதியம், வேலையின்மைக்கான உதவித்தொகை, பெண்களுக்கான உரிமைகள் – என சோசலிச ரசியா முன்னோக்கி எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் முதலாளித்துவத்தின் மீது இடியென இறங்கியது. இன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் தொழிலாளி வர்க்கம் பெற்றிருக்கும் பல உரிமைகள், அன்று தத்தம் நாடுகளில் சோசலிசப் புரட்சியைத் தடுக்கும் பொருட்டு முதலாளித்துவம் மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கைகளே!
சோசலிசத்தின் தோல்வி குறித்து பெருங்கூச்சல் போடும் முதலாளி வர்க்கம், அதனைக் காட்டிலும் நெடிய வரலாறு கொண்ட தன்னுடைய தோல்வியைப் பேசுவதில்லை. சுதந்திரச் சந்தையின் இடத்தை ஏகபோகம் கைப்பற்றிக் கொண்டிருப்பதையும், ஜனநாயகம் மெல்ல மெல்ல பாசிசமாக உருமாறி வருவதையும், உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் முதலாளித்துவம் தவிப்பதையும், முதலாளித்துவத்தின் கருவறையிலேயே கிளர்ந்தெழும் மக்களின் போராட்டங்களையும் அது தனது தோல்வியாக கூறிக் கொள்வதில்லை.
ஆனால் ஒரு நூற்றாண்டுக்குள் சோசலிசம் தோற்றுவிட்டதாக தீர்ப்பு கூறுகிறது. மனித குலத்தின் வரலாற்றுடன் ஒப்பிடும்போது நூறு ஆண்டுகள் என்பது ஒரு நாளின் ஒரு மணித்துளி. பிறந்த முதல் ஐம்பது ஆண்டுகளில் வெற்றி மேல் வெற்றி ஈட்டிய சோசலிசம், பிந்தைய ஆண்டுகளில் சரிவையும் தோல்வியையும் சந்தித்தது உண்மைதான்.
ஒரு நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தை மனித உடலில் சோதித்துப் பார்த்து, அதன் விளைவுகள் – பக்க விளைவுகள் என்ன என்பதை ஓரளவு புரிந்து கொள்வதற்கே அறிவியலுக்கு, ஒரு மனிதனின் ஆயுட்காலமே தேவைப்படுகிறது. சோசலிசம் என்பது சமூக அறிவியல். இது மனித சமூகத்தின் வாழ்நிலை மீதான சோதனை; சிந்தனை மீதான சோதனை. சடப்பொருளின் மீதோ, தன்னிலை உணரவியலாத உயிர்ப்பொருளின் மீதோ நடத்தப்படும் இயற்கை விஞ்ஞான சோதனை அல்ல. சிந்திக்கின்ற மனிதர்கள் மீதான சோதனை. உற்பத்தி சாதனங்களின் மீதான தனியுடைமையை ஒழிப்பது மட்டுமல்ல, அந்தக் கருத்தாக்கத்தையே சமூகத்தின் நினைவிலிருந்து அகற்றுவதற்கான சோதனை.
உற்பத்தி சாதனங்களின் மீதான தனியுடைமை ஒழிக்கப்பட்டு விட்டாலும், சமூகத்தில் பரவியிருக்கும் முதலாளித்துவ வர்க்க சிந்தனை உடனே அகன்று விடுவதில்லை. அது கம்யூனிஸ்டு கட்சிக்கு உள்ளேயும் தலையெடுக்கிறது. மக்களுக்கு பதில் சொல்லும் கடமையிலிருந்து தவறிய அதிகாரத்துவப் போக்காக, திறமைக்கு முன்னுரிமையும் சலுகையும் அளித்து அதிகாரத்தில் அமர்த்த வேண்டுமென்றும் ‘’இலக்குதான் முக்கியம்; வழிமுறை முக்கியமல்ல’’ என்றும் கூறுகின்ற முதலாளித்துவ சிந்தனைப் போக்காக அது வெளிப்படுகிறது.
இத்தகைய போக்குகள் அதிகாரத்தில் இருக்கும் ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்குள் தலையெடுக்குமானால், அதற்கு எதிராகப் போராட மக்களைக் களத்தில் இறக்க வேண்டும் – சோசலிச அரசே அமைந்தாலும் வர்க்கப் போராட்டம் தொடரத்தான் செய்யும் என்றார் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர் தோழர் மாவோ. சொன்னது மட்டுமல்ல, , சோசலிசத்தின் கீழ் தொழிலாளி வர்க்கம் தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு நடத்த வேண்டிய கலாச்சாரப் புரட்சியின் அறைகூவலாக, ‘’தலைமையகத்தைத் தகர்த்தெறியுங்கள்’’ என்ற அறைகூவலையும் விடுத்தார்.
இருப்பினும் சீனக் கம்யூனிஸ்டு கட்சியை முதலாளித்துவப் பாதையாளர்கள் கைப்பற்றிக் கொள்வதை சீனத் தொழிலாளி வர்க்கத்தால் தடுக்கவியலவில்லை. இன்று முதலாளித்துவ மீட்புக்குப் பின்னர் சமூகத்தில் அதிகரித்து வரும் சீரழிவுகளும் ஏற்றத்தாழ்வுகளும் சோசலிசம் குறித்த ஏக்கத்தை சீனமக்களிடம் தோற்றுவித்து வருவதை சீன முதலாளி வர்க்கத்தாலும் தடுக்கவியலவில்லை.
முதலாளித்துவ மீட்புக்கு எதிராக சீனத்தில் கலாச்சாரப் புரட்சி தொடங்கிய அதே காலத்தில், நாடாளுமன்ற நாற்காலி கம்யூனிஸ்டு இயக்கமாக மாறி விட்ட இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்திலும் ஒரு புரட்சி வெடித்தது. மே, 1967-இல் நக்சல்பரி கிராமத்தில் வெடித்தெழுந்த உழவர் புரட்சி, ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியின் உருவாக்கத்துக்கு வித்திட்டது. இடது விலகல் காரணமாக இ.பொ.க (மா-லெ) பின்னடைவைச் சந்தித்த போதிலும், இந்த அரசமைப்பைத் தூக்கியெறிய வேண்டுமென்று அது விடுத்த அறைகூவல், இன்றைக்கு முன்னிலும் பொருத்தமானதாகியிருக்கிறது. ஆளும் வர்க்கம் தோற்கடிக்கப்படவில்லை என்பது உண்மைதான். எனினும், அது ஆளும் அருகதை இழந்து தோற்றுவிட்டது. தன்னை அகற்றும் வலிமையை பாட்டாளி வர்க்கம் பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தினால், அது அதிகாரத்தில் நீடிக்கிறது.
உலக முதலாளி வர்க்கத்தின் நிலையும் அதுதான். முதலாளித்துவத்தின் முடிவை, அதனை ஒழித்துக் கட்ட வேண்டிய பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையை முன்னறிந்து சொன்ன மார்க்சும் மார்க்சியமும் செத்துவிட்டதாக முதலாளித்துவம் பிரச்சாரம் செய்யாத நாளில்லை. மார்க்சியம் சாகவில்லை என்பதை தொழிலாளி வர்க்கம் புரிந்திருக்கிறதோ இல்லையோ, முதலாளி வர்க்கம் தெளிவாகப் புரிந்திருக்கிறது.
“இத்தனை நாடுகளில் தோல்வியடைந்த பின்னரும் சோசலிசம் என்ற இந்தக் கருதுகோள் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு நாடுகளில் தலையெடுப்பது ஏன்? சோசலிசம் என்பது மனிதனின் உள்ளுணர்விலேயே உறைந்திருக்கிறதா? ஒரு வேளை அது மனித மூளையின் அங்கமாக இருந்தால், அதனை சமாளித்து சுதந்திரச் சந்தையின் ஆதாயங்களை மனிதர்களுக்குப் புரிய வைப்பது எப்படி?” என்று ஆராய்ச்சி நடத்துகிறது அமெரிக்க முதலாளித்துவம். மூளையை அறுத்தெறிவதன் மூலம் சோசலிசக் கருத்தை வெல்ல முடியுமா என்று சிந்திக்கிறது.
சோசலிசம் பெறவிருக்கும் வெற்றியை இதைக்காட்டிலும் தெளிவாக யாரேனும் கூற இயலுமா? இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் மனித குலத்தின் சிந்தனையில் உயிர்வாழும் மார்க்ஸை அகற்ற முடியாத முதலாளித்துவத்தின் தோல்வியைத்தான் மேலும் தெளிவாக யாரேனும் விளக்க இயலுமா?
சாதா திருடர்கள் மாட்டும் போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு திருடனைப் பிடி என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களை விட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல் கலாம் கனவு கண்ட, இயக்குநர் ஷங்கர் கிராபிக்ஸாக செய்து பாரத்த இந்தியக் குடிமகன் என்று மக்களும் அதை மெய்மறப்பார்கள், ஆதரிப்பார்கள்.
அம்பானி, அதானி, டாடா போன்றோர் ஸ்பெஷல் திருடர்கள் என்பதால் அவர்களெல்லாம் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தை இயக்குபவர்கள், வெளிப்படையாக பேசமாட்டார்கள். சினிமா உலகம் இன்னும் பழைய சென்டிமெண்டுகளில் முக்குளிப்பதால் அங்கே நட்சத்திரங்களுக்கு அறிவு கம்மி.
நவம்பர் 8 அறிவிப்பு வந்த உடனேயே, “புதிய இந்தியா பிறக்கட்டும், ஜெய் ஹிந்த்” என்று ரஜினி, மோடியின் கருப்புப் பண ஒழிப்பு போருக்கு முரசு கொட்டினார். முரட்டுக் காளையில் துவங்கி கபாலி வரை அவரது நட்சத்திர வாழ்க்கையே கள்ளக் கணக்கால் கட்டப்பட்டதுதான். திரையரங்க டிக்கெட்டிலிருந்து அவர் வாங்கும் ஊதியம் வரை கருப்பே பிரதானம். இது ஊரறிந்த உண்மை என்றாலும் அம்பானியை உழைத்து முன்னேறியவராக நம்பும் உலகம் இவரையும் உழைத்து சம்பாதித்தவராக நம்புகிறது.
விசிடி கடையில் வீரம் காட்டும் விசால் சார் உங்க வருமான கணக்கையும் கொஞ்சம் காட்டுங்க
நடிகர் சங்கத் தலைவர் விஷால் இடையில் தானும் ஒரு ரவுடிதான் என்று காட்டுவதற்கு சிறு நகரங்களில் உள்ள சி.டி விற்கும் கடைகள், கேபிள் டி.வி அலுலகங்களுக்கு பவுன்சர்களுடன் படையெடுத்தார். தூங்கிக் கொண்டிருக்கும் ஊழியர்களை தட்டி எழுப்பி புதிய படம் எடு, யார் ஓனர் என்று அதிகார தோரணையுடன் மிரட்டுவார். பிறகு சி.டிக்களை அள்ளிக் கொண்டு செல்வார். அப்புறம் போலீசு வரும். தந்தியில் செய்தியும் வரும். இதெல்லாம் ஊழலுக்கு எதிரான போராட்டமாம். அதாவது திருட்டு வி.சி.டிக்கு எதிராக திரையுலகத்தை காப்பாற்ற போராடுகிறாராம்.
போகட்டும். நாமும் அதே போல விஷால், சூர்யா, ரஜினி, கமல் வீடுகளுக்கு சென்று வருமான வரி ரசீதை எடு, போன படத்துக்கு வாங்கிய தொகை எவ்வளவு, வங்கி புத்தகத்தை எடு, சொத்து பத்திரங்களை காட்டு என்று கேட்கலாம். அதை சரிபார்த்து போலீசுக்கும் போகலாம். அதற்கு நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் விஷால் ஏற்பாடு செய்ய வேண்டும். இது கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டம்.
கபாலிக்கு ரஜினி வாங்கியது எவ்வளவு என்று தாணுவுக்கு தெரியும். தாணுவோடு ஜாஸ் சினிமாஸ், சசிகலா இறுதியில் அப்பல்லோ இரண்டாம் தளத்தில் இருக்கும் கடவுளுக்கும் தெரியும். கடவுளுக்குத் தெரிந்த உண்மை மனிதர்களுக்கு எப்படி தெரியும்?
கபாலிக்கு முந்தைய படமான லிங்காவும் அப்படித்தான் கள்ளப் பண வழியில் வசூல் செய்ய முயன்றது. அதை எதிர்பார்த்து வினியோகஸ்தர்கள் 200 கோடி ரூபாய்க்கு வாங்கினாலும் படம் படுத்துவிட்டது. பிறகு அவர்கள் பிச்சை போராட்டம் நடத்த இருந்தது தனிக்கதை. அந்த லிங்கா திரைப்பட பாடல் விழாவில் இயக்குநர் அமீர், சேரன், வைரமுத்து போன்றோர் கலந்து கொண்டு முதுகு சொறிந்தனர்.
“காந்தியும் காமராஜரும் போல ரஜினி சார் இந்த நாட்டுக்கு நல்லது செய்யணும்” என்று இயக்குநர் சேரன் பேசினார். இதையே கொஞ்சம் விரிவுபடுத்தி அம்பேத்கரையும் சேர்த்தார்கள், கபாலி படத்தை கொண்டாடிய அறிஞர்கள். ஒரு வேளை கருப்பு – வெள்ளை இரண்டிலும் காந்தி படம் இருப்பதாலும், காமராஜர் போல இமேஜ் பார்க்காமல் நரை தாடியோடு வெளியே வருகிறார் என்பதாகவும் சேரனை நாம் புரிந்து கொள்ளலாம். எப்படியோ கருப்பில் வாங்கினாலும் காந்தி காந்திதானே?
இயக்குநர் அமீரோ அந்த விழாவில் ரஜினியை தமிழகத்தின் முதலமைச்சராக தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று பேசினார். அம்மாவின் கோபத்தை கிளப்பிவிட்டு அண்ணனை ஒரு வழி செய்யலாம் என்று உள்குத்தோடு பேசினாரோ தெரியவில்லை.
பரவாயில்லை, அதே அமீர் தற்போது கருப்பு பண விவகாரத்தில் ரஜினியை கேள்வி கேட்டிருக்கிறார். சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசிய போது,
“இந்த நாட்டில் எத்தனை அக்கிரமங்கள் நடந்திருக்கும்போது, எதற்குமே வாய் திறக்காத ரஜினிகாந்த், ரூபாய் நோட்டு விவகாரத்துக்கு மட்டும் வாய் திறக்க வேண்டிய அவசியம் என்ன? காரணம் நீண்ட கால கள்ள நட்பு. புதிய இந்தியா பிறந்துவிட்டது எனச் சொல்கிறார்.
புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று சொல்கிறீர்களே, பழைய இந்தியாவில் ‘கபாலி’ என்ற ஒரு படம் வெளியானதே அதற்கு திரையரங்க டிக்கெட் விலை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் விற்பனை செய்தார்களா? உங்களுடைய சம்பளம் என்ன? அந்த படத்தின் மொத்த வியாபாரம் என்ன? அத்தனையும் கணக்கில் வந்திருக்கிறது என யாராவது காட்ட முடியுமா?
இயக்குநர் அமீர்
இப்படி இருக்கும்போது கறுப்புப் பணத்தின் அளவு என்பது என்ன இங்கே? எதை வைத்து முடிவு செய்கிறீர்கள்? 150 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சம்பாதிக்கக் கூடிய ரஜினி, கறுப்புப் பணத்தை ஒழிக்க ஆதரவு கொடுக்கிறார் என்று சொன்னால் என்ன அநியாயம் இது”
என்று பொங்கியிருக்கிறார்.
லிங்கா படத்திற்கு பிறகு ரஜினி ஏதும் தேதி தருவதாக ஏமாற்றினாரா தெரியவில்லை. இல்லை கபாலிக்கு முன்னர் ரஜினி கருப்பில் வாங்குவது தெரியாமல் இருந்தாரா ? அல்லது நீயே முழுத் திருடன் நீ போய் கருப்பு பண ஒழிப்பை ஆதரிக்கலாமா என்று கேட்டாரா?
எப்படியோ அவர் எந்த நோக்கில் கேட்டாலும் கேள்வியில் உண்மை இருக்கிறது. அதை பரபரப்புச் செய்திகளாக வெளியிட்ட ஊடகங்கள் யாவும் அதே கேள்வியை கேட்கவில்லை. மோடியின் அறிவிப்பு நாடகத்தை போற்றிய ஊடகங்கள், ரஜினி முதலான திரைமாந்தர்களின் கருப்புப் பணத்தை கேட்காதது அதிசயமல்ல. “ஊழலை ஒழிக்க வந்த மகாத்மா, பாகுபலி” என்று அட்டைப் படங்களில் போட்டுத் தாக்கும் குமுதம் இதழ் அதே பாகுபலியின் கருப்பு பக்கத்தையோ, கபாலியின் திருட்டுக் கணக்கையோ கண்டுகொள்ளாது.
ரஜினி நடிக்கும் எந்திரத்தின் இரண்டாம் பாகமான “2.0” படத்தின் “பர்ஸ்ட் லுக் விழா” மும்பையில் பிரம்மாண்டமாய் நடக்கிறதாம். இதை யூ டியூபி-லும், படத்தை தயாரிக்கும் லைக்கா கம்பெனியின் செயலி மூலம் நேரலையாகவும் பார்க்கலாமாம். நிகழ்ச்சியை பாலிவுட்டின் இயக்குநர்-தயாரிப்பாளர் கரண் ஜோகர் வழங்குகிறாராம். இதை தினமலர், தி இந்து, விகடன், தந்தி, தினமணி அனைத்தும் வெளியிட்டிருக்கின்றன. இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம்தான் என அடைமொழியோடு சேர்த்து போடும் இந்த ஊடகங்கள் சூப்பர் ஸ்டார் என்றாலே கருப்புப் பணம்தான் என்பதை வெளியிடுவதில் என்ன தயக்கம்?
கபாலி என்ற அடித்தட்டு மக்களின் பெயரை பயன்படுத்தியதையும், அதை கபாலி எனும் சிவனின் பெயராக ரஜினி ஏற்றதையும் சாதனையாக அறிவித்த இயக்குநர் ரஞ்சித், கருப்புப் பணம் குறித்து என்ன சொல்வார்?
ஒருவேளை கருப்புப் பணம், வெள்ளைப் பணம் என்ற பெயர்கள் கருப்பாக இருக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும், இதே போன்று வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை இருண்ட காலம் என்று பழிக்கிறார்கள் என்று புதிய தத்துவங்களை அள்ளி விடலாம். இதை ஏற்கனவே நியூஸ் 18 காலை நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்திருக்கிறார். அதாவது கள்ளப் பணம், கள்ள நோட்டு என்று பேசுவதை இதற்கு முன்பாகவே அவர் பயன்படுத்துகிறாராம். பொலிட்டகலி கரெக்ட் என்று வார்த்தைகளை பிடித்து தொங்கும் இவர்கள் பொருட் பிழை குறித்து அஞ்சுவதில்லை.
முரட்டுக் காளையில் துவங்கி கபாலி வரை அவரது நட்சத்திர வாழ்க்கையே கள்ளக் கணக்கால் கட்டப்பட்டதுதான்.
துண்டு சீட்டில் ஒரு கோடி, 50 இலட்சம் என்று கருப்புப் பணத்தை வாங்கி உள்ளே சென்ற பச்சமுத்துவின் டி.வியில் வேலை பார்த்த ஜென்ராம் இப்போது நியூஸ் 18-ல் வேலை செய்கிறார். புதிய தலைமுறை எனும் லோக்கல் பெருச்சாளியின் டி.வியில் இருந்து ஆசிய அளவிலான டைனோசரின் டி.வியில் அமர்ந்து கொண்டு அவர் அம்பானிகளின் ஊழல், கருப்பு பணம் குறித்து வாயே திறக்க முடியாது. ஆகவே கருப்பு என்றால் மக்களை இழிவு படுத்துவது என்று வார்த்தைகளில் நல்லவராக போராடுகிறார். பாவம்,வாழ்த்துக்கள்!
கம்யூனிசம் மட்டுமல்ல விபச்சார பகுதி கூட சிவப்போடு அடையாளப்படுத்தப்படுகிறது. சாலை சந்திப்பு ஒழுங்கமைப்பில் கூட சிவப்பே அபாயத்திற்கும், வண்டிகள் நிற்பதற்கும் காட்டப்படுகிறது. இதனால் சிவப்பை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று நாம் வெட்டி ஆய்வில் இறங்கலாமா? உண்மையிலேயே கருப்பு பணம் என்பது அத்தகைய நிறவெறியில் இருந்து தோன்றியதாகவே இருக்கட்டும். முதலில் மோடி, அதானி, அம்பானிகளின் கருப்புப் பண கொள்ளையை ஒழித்து விட்டு பிறகு நாம் வார்த்தையை மாற்றலாம். மாறாக இதை மாபெரும் அறவியல் மீறலாக பேசுவது இறுதியில் கருப்புப் பண முதலாளிகளுக்கே ஆதாயமாக போகிறது.
கபாலி படத்திலும் அதுதான் நடந்தது. ஜெயா சசி கும்பலின் கொள்ளை மற்றும் பார்ப்பனியத்தின் பக்தனான ரஜினியை குறி வைத்து பேசுவதற்கு பதில் சாதி வெறியர்களுக்கு எதிரான அடையாளமாக அதுவும் பி.எம்.டபிள்யூ காரில் போகும் தாதாவாக ரஜினியை முன்னிறுத்தினார்கள். கபாலியை போராளி என்று போற்றுவதும், ரஜினியை ஒரு கருப்புப் பண நாயகன் என்று பேசாமல் அமைதி காப்பதும் வேறு வேறு அல்ல.
ரஜனியின் யோக்கியதையை விடுதலை சிறுத்தைகளின் கூட்டத்தில் கேள்வி கேட்டதன் மூலம் கபாலி படத்தில் சறுக்கி விழுந்த சிறுத்தைகளுக்கு கொஞ்சம் வெட்கம் வந்திருக்கலாம். எனினும் திருமாவளவனோ இல்லை இயக்குநர் ரஞ்சித்தோ இல்லை ஊடகங்களோ கேட்காத கேள்வியை தைரியமாக எழுப்பியிருக்கிறார் அமீர். அந்த வகையில் அவருக்கு பாராட்டுக்கள்!
ரஜினி போன்று பாலிவுட் முதலைகள் பலரும் மோடியை ஆதரித்திருக்கின்றனர். அங்கும் இதே நிலைதான். சினிமாவில் கருப்பு பணத்தை நம்பி வாழ்பவர்கள்தான் சினிமா கதைகளில் ஊழலை எதிர்த்து பேசுகிறார்கள். அப்படித்தான் அதானி குழுமத்தால் முன்னிறுத்தப்படும் மோடியும் கருப்புப் பண ஒழிப்பை பேசுகிறார்.
நட்சத்திரங்களின் கருப்பு பக்கத்தை மறைக்கும் கயமைத்தனத்தை ஒழிக்கும் வரை கருப்புப் பணத்தையும் ஒழிக்க முடியாது.
மோடியின் நோக்கம் கருப்புப் பண ஒழிப்பு அல்ல – தோழர் மருதையன் உரை – பாகம் 4 (இறுதி)
கட்டாய வரி விதிப்பு, கண்காணிப்பு என்பது மட்டுமல்ல மக்களுடைய சேமிப்பு, சம்பளம், சிறு வணிகர்களிடம் புழங்கும் பணம் ஆகிய அனைத்தையும் வங்கிக்குள் கொண்டுவருவதுதான் இவர்களது நோக்கம். பணப் பொருளாதாரத்திலிருந்து வங்கிப் பொருளாதாரத்துக்கு மாற்றுவதன் மூலம் மக்களுடைய பணம் வங்கிக்கு செல்கிறது. அப்புறம், வங்கிப் பணம் மல்லையாக்களின் பணமாகிவிடும்.
மல்லையாவை மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். 2013 க்கும் 15 க்கும் இடையில் மட்டும் 29 அரசு வங்கிகள் 1,20,000 கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன. அதானி, அம்பானி போன்ற முதலாளிகள் கடனுக்கு வட்டி கூடக் கட்டுவதில்லை. தொடர்ந்து வட்டி கட்டவில்லை என்றால் அதை வாராக் கடன் என்று கருத வேண்டும். அதனை தவிர்ப்பதற்காக, மீண்டும் அதே முதலாளிக்கு மேலும் கடன் கொடுத்து, அந்த கடன் தொகையிலிருந்தே வட்டியை வரவு வைத்திருக்கின்றன அரசுடைமை வங்கிகள்.
இப்படி வாராக்கடனை வரப்போகிற கடன் போல பொய்க்கணக்கு காட்டுகிறார்கள் வங்கி அதிகாரிகள். நீங்கள் பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டுவிட்டால் அது இளவரசி ஆகிவிடுமா என்று அரசு வங்கிகளின் தலைவர்களைக் கேட்டார் ரகுராம் ராஜன் இப்படித்தான் 2015 ஆம் ஆண்டு இறுதியில் வாராக்கடன் 4 இலட்சம் கோடி என்று வங்கிகள் பொய்க்கணக்கு காட்டினார்கள் அதனைத் துருவி ஆராய்ந்தவுடன், மூன்றே மாதங்களில் வாராக்கடன் 6 இலட்சம் கோடி என்ற கணக்கு வெளியே வந்தது.
பி.என்.பி பாரிபாஸ் என்ற நிதித்துறை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் எகனாமிக் டைம்ஸ் இல் வெளிவந்திருக்கிறது. இந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசு வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் 75 இலட்சம் கோடி. அவற்றில் 12 இலட்சம் கோடி கோவிந்தா, வாராக்கடன் என்கிறது அந்த அறிக்கை.
இதில் இந்தியாதான் ஆசியாவிலேயே முதலிடம். வாராக்கடன் கொரியாவில் 5.8, சீனா 6.66%, தாய்லாந்து 2.4%, இந்தியா 16.1%. அனில் அம்பானிக்கு வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் 1,21,000 கோடி. அதற்கு ஆண்டு வட்டி 8299 கோடி. ஆனால் அனில் அம்பானியுடைய நிறுவனங்களின் ஒரு ஆண்டுக்கான விற்றுமுதலே வெறும் 9848 கோடிதான். இப்படி ஒரு சிறு தொழிலதிபரோ வியாபாரியோ கடன் வாங்க முடியுமா? விவசாயிக்கு கடன் கிடைக்குமா? ஒரு பத்தாயிரம் ரூபாய் வங்கிக் கடன் வாங்க நாம் என்ன பாடு படவேண்டும்? வாராக்கடன் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை கொள்ளையடித்த முதலாளிகளின் பெயரைக்கூட வெளியிட முடியாது என்று சொல்லும் மோடிதான் கருப்பு பண முதலைகளை ஒழிக்கப்போகிறாராம்.
பணப்பரிவர்த்தனையை நிறுத்துங்கள், வங்கிப் பரிவர்த்தனைக்கு வாருங்கள் என்ற அழைப்பின் பொருள், உங்கள் பணத்தை அம்பானி, அதானியிடம் கொடுத்து வையுங்கள், பத்திரமாக இருக்கும் என்பதுதான். இதோ, கீழே கிடக்கிற பணம் உங்களுடையதா பாருங்க என்று சொல்லி உங்களைக் குனிய வைத்து பிக் பாக்கெட் அடிப்பார்கள் திருச்சி ராம்ஜி நகர் திருடர்கள். இதோ, உங்களுக்கு சேரவேண்டிய கருப்பு பணத்தை மீட்டுக் கொடுக்கப் போகிறேன் என்று உங்களுக்கு ஆசை காட்டி உங்கள் பணத்தை பிடுங்கி பனியா முதலாளிகளிடம் கொடுக்கிறார் மோடி.இதுதான் உண்மை.
பாகிஸ்தான் புழக்கத்தில் விட்டிருக்கும் கள்ள நோட்டுகளின் மதிப்பு 400 கோடி ரூபாய் என்கிறது ரிசர்வ் வங்கி. 2500 கோடி என்கிறது இன்டெலிஜென்ஸ் பீரோ கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிகளுக்கு போட்டிருக்கும் நாமத்தின் மதிப்போ– 12 லட்சம் கோடி. 400 கோடிக்காக தேசத்தையே தெருவில் நிறுத்தியிருக்கும் மோடி 12 லட்சம் கோடிக்காக அம்பானிகளை தெருவில் நிறுத்தி விசாரிப்பாரா?
இந்த உண்மையை எல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டு மோடிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் மோடியின் அறிவுத்துறை கூலிப்படையான ஊடகங்கள் மோடியால் கருப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியாமல் போகலாம் கருப்பு பண பேர்வழிகளுக்கு கொஞ்சமாவது நெருக்கடி வந்திருக்கிறதா இல்லையா என்று சாமர்த்தியமாக கேள்வி எழுப்புகிறார்கள்.
ஓவியம் : முகிலன்
ஐயா, கொசு உற்பத்தியாகும் பண்ணை – கூவம் ஆறு கருப்பு பணம் உற்பத்தியாகும் இடம் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம், ஊழல் அதிகாரவர்க்கம் அந்த கூவத்தை பாதுகாக்கும் மோடி, வீதி வீதியாக கொசுவுக்கு புகை போடுகிறார் இந்த மோசடியை அம்பலப்படுத்துவதா, அல்லது நாலைந்து கொசு செத்தாலும் நல்லதுதானே என்று பாராட்டுவதா?
பேராசிரியர். பிரபாத் பட்நாயக் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார் ஊரில் ஒரு குற்றம் நடந்தால் போலீசார் குற்றத்தை புலனாய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டுமா? அல்லது தெருவில் உள்ள மக்களையெல்லாம் ஸ்டேசனில் வைத்து அடித்து விசாரிக்க வேண்டுமா? எது கருப்பு பண குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டிய அணுகுமுறை என்று கேட்கிறார்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை, விற்பனை வரித்துறை, ஆர்.டி.ஓ ஆபீஸ் அதிகாரிகள், சுங்கத்துறை, கலால் துறை அதிகாரிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் – எங்கெல்லாம் கருப்பு பணம் இருக்கும் என்று நமக்கு தெரிகிறது. ஆனால் பிரதமருக்கு தெரியவில்லையாம். நம்ப முடிகிறதா? போகட்டும். திருப்பூர் கன்டெயினர் பிடிபட்டதே அந்தப் பணத்தின் கதை என்ன ? அன்புநாதன் கோடவுனில் கைப்பற்றப்பட்ட பணமென்ன உஜாலா வெள்ளையா? போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து 2500 கோடி பணத்தை கூரை வரை அடுக்கி வைத்திருந்த கேதன் தேசாய் என்பவன், அவன் மீது போடப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அந்த உத்தமனை உலக மருத்துவ கவுன்சில் தலைவராக சிபாரிசு செய்யவில்லையா திருவாளர் மோடியின் குஜராத் அரசு. இந்த நாட்டில் கருப்பு பண பேர்வழிகளுக்காகவே ஒரு கட்சி உண்டென்றால் அது black money janata party தான். சேட்டுகளின் தாய்கழகமல்லவா பாரதிய ஜனதா சேட்டு என்றாலே, நம்பர் 2 வணிகம் என்பது நாடறிந்த உண்மையல்லவா?
பணப்பொருளாதாரம் வேண்டாம். வங்கிக்கு வா, வங்கிக்கு வா ன்னு கூப்பிட்டும் மக்கள் வரவில்லை. அவர்களை வரவழைப்பது எப்படி? ஆயிரம், ஐநூறு செல்லாது என்று அறிவித்தால் வங்கியின் வாசலில் வந்து நின்றுதானே ஆகவேண்டும்? அதைத்தான் செய்திருக்கிறார் மோடி. இதோ, சொந்தப் பணத்தை மாற்றுவதற்கு பிச்சைக்காரர்களைப் போல வங்கிகளின் வாசலில் காத்து நிற்கிறார்கள் மக்கள். தொழில்கள் அழிகின்றன. சிறு வணிகம் அழிகிறது. நோயாளிகள் சாகிறார்கள். நாடே நிலைகுலைந்திருக்கிறது. இது நிர்வாகத் திறமையின்மை என்று சிலர் மோடி அரசை விமரிசிக்கிறார்கள்.
இது நிர்வாகத் திறமையின்மையா, திட்டமிட்ட சதியா? முட்டாள்தனமா, முட்டாள்தனம் போலத் தெரிகின்ற அயோக்கியத்தனமா? புழக்கத்தில் இருக்கின்ற பணத்தில் 85% ஐ செல்லாது என்று அறிவித்தால் நாட்டில் என்ன நடக்கும் என்பதை நிர்வாகம் தெரியாத அடி முட்டாள் கூடப் புரிந்து கொள்ள முடியும். முகேஷ் அம்பானியின் முன்னாள் ஊழியரான ரிசர்வு வங்கி கவர்னருக்கும், அதானியின் இந்நாள் ஊழியரான மோடிக்கும் இது புரியாமலா இருக்கும்? எதற்காக வரிசையில் நின்று அல்லல் படுகிறீர்கள்? டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுக்கு மாறிக்கொள்ளுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை சொல்கிறது ரிசர்வ் வங்கி. ஏ.டி.எம் இல்லையென்றால் என்ன, பேடிஎம் (paytm)-முக்கு மாறிக் கொள்ளுங்கள் என்கிறது பேடிஎம் கம்பெனியின் விளம்பரம்.
நந்தன் நிலேகனி, Unique identification authority of india என்ற ஆதார் அட்டை திட்டத்தின் தலைவர். unified payment interface என்ற திறன்பேசி மூலம் வங்கி பரிவர்த்தனை நடத்தும் செயலி (App – ஐ) உருவாக்குவதில் பங்காற்றியவர். மக்கள் படும் துன்பத்தைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்.
“people will need to figure things out over the next few weeks because the dislocation that will happen when people will not have their notes and the retailer will not accept notes, they will realize that cash was thought of as such a friction-free thing. Now, they will suddenly find that it’s a nuisance. I think this will push people towards digital transactions.”
“அடுத்த சில வாரங்களில் மக்கள் முடிவு செய்தாகவேண்டும். கையில் ரூபாய் நோட்டுகள் இல்லையென்றால் என்ன ஆகும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். கடைக்காரர்கள் பணத்தை வாங்க மாட்டார்கள். கையில் பணமாக வைத்துக் கொண்டு செலவிடுவதுதான் தொந்தரவு இல்லாத வழி என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பணமாக கையில் வைத்திருப்பதுதான் தொந்தரவு என்று இப்போது புரிந்து கொள்வார்கள்.” இந்த சூழ்நிலை டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி (வங்கி – கடன் அட்டை) மக்களை நெட்டித் தள்ளும்.
மக்களுக்கு நேர்ந்த அசவுகரியத்துக்கு வருந்துவதாக மோடி சொல்கிறாரே அது உண்மையா, நிலேகனி சொல்வது உண்மையா? இது நிர்வாகத்திறமையின்மையா சதித்திட்டமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
மக்களை வங்கிக் கணக்கு என்ற வலையில் சிக்கவைத்து அவர்களுடைய சேமிப்பு பணத்தை அபகரித்து தரகு முதலாளிகளுக்கு வாரி வழங்குவது பெரு முதலாளிகளுக்கு வரி விலக்கு, சிறு வணிகர்கள் முதல் சுய தொழில் செய்வோர் வரை அனைவருக்கும் வரி விதிப்பு, இதிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்க வைக்க வங்கிக் கணக்கு. ஆதார் அட்டையையும் வங்கிக் கணக்கையும் இணைத்து மானிய வெட்டு. பணப் பரிவர்த்தனையிலிருந்து கடன் அட்டை பரிவர்த்தனைக்கு மாற்றுவதன் மூலம் சிறுவணிகத்தை மெல்ல அழிப்பது 4ஜி ஆண்டிராய்டு போன், ஆதார் அட்டை, கடன் அட்டை அனைத்தையும் இணைப்பதன் மூலம் குடிமக்களின் எல்லா நடவடிக்கைகளையும் அம்பானியின் கண்காணிப்புக்கும் அரசின் கண்காணிப்புக்கும் உட்படுத்துவது இதுதான் நந்தன் நிலேகனியின் டிஜிடல் இந்தியா, ரிலையன்ஸ் ஜியோ வின் டிஜிடல் இந்தியா, மோடியின் டிஜிடல் இந்தியா அல்லது டிஜிட்டல் பாசிசம்.அர்ஜென்டினாவில் இத்தகைய வங்கி நெருக்கடி வந்தபோது அதன் அதிபர் மக்கள் எழுச்சிக்கு பயந்து தப்பி ஓடினார். கிரீசில் மக்கள் போராட்டம் வெடித்தது. சேமநல நிதியை (PF) முடக்குவதாக மோடி கூறியவுடன் பெங்களூரூ நகரத்தை முடக்கியது படிப்பறிவு இல்லாத எளிய ஆயத்த ஆடை தொழிலாளர்களின் எழுச்சி. அடுத்த கணமே பின்வாங்கியது மோடி அரசு.ஏமாந்தது போதும். கேள்வி எழுப்புங்கள், இல்லையேல், 2002 இல் குஜராத் முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி நம் அனைவருக்கும் நேரும்.
கேள்வி எழுப்புங்கள்…, போராடுங்கள். உங்களை வீதிக்கு வரவழைத்து விட்டார் மோடி !
வீதியில்தான் இதற்கு விடை காண வேண்டும் ! கேள்வி எழுப்புங்கள் !! போராடுங்கள் !!!
__________________________________________
ஆடியோ : ஆடியோவை தரவிறக்கம் செய்ய சுட்டியில் வலது பொத்தானை அழுத்தி சேவ அஸ் ஆப்சனை தெரிவு செய்யவும்.
தேசியக் கொடி போர்த்தப்பட்எட நிலையில் ரவி சிசோடியாவின் சடலம். (உள்படம்) ரவி சிசோடியா.
இந்து மதவெறிக் கும்பலால் அடித்தே கொல்லப்பட்ட முகம்மது அக்லக் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதக் குற்றவாளிகளுள் ஒருவனான ரவி சிசோடியா, கடந்த அக்டோபர் மாதம் சீறுநீரகக் கோளாறு காரணமாகச் சிறையிலேயே இறந்து போனான். கட்சிக்காரன் இறந்து போனால், அவனது உடல் மீது கட்சிக் கொடியைப் போர்த்துவதுதான் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இந்து மதவெறிக் கும்பலோ கிரிமினல் குற்றவாளியான சிசோடியா உடலின் மீது தேசியக் கொடியைப் போர்த்தி, அவனைத் தேசத் தியாகி போலக் கௌரவப்படுத்தி அடக்கம் செய்திருக்கிறது.
உ.பி. மாநிலம், தாத்ரி மாவட்டத்திலுள்ள பெசாரா கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அக்லக் படுகொலை வழக்கு பத்தோடு பதினொன்றைப் போல சாதாரண வழக்கு அல்ல. மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, ஆர்.எஸ்.எஸ். கும்பல் முன்னெடுத்துவரும் பசு பாதுகாப்பு என்ற இந்து பயங்கரவாதத் திட்டத்தின் அங்கமாக நடத்தப்பட்ட படுகொலை அது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளும் கணக்குக் காட்டுவதற்காகச் சிறையில் தள்ளப்பட்டவர்கள் அல்ல. அக்குற்றவாளிகள் அனைவரும்முகம்மது அக்லக் குடும்பத்தினரால் அடையாளங்காட்டப்பட்டவர்கள்.
தேசியக் கொடி போர்த்தப்பட்எட நிலையில் ரவி சிசோடியாவின் சடலம். (உள்படம்) ரவி சிசோடியா.
சிறையில் விசாரணைக் கைதிகள் இறந்து போவதும், அம்மரணம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்படுவதும் பரவலாக நடந்து வருகிறது என்றாலும், இறந்து போகும் கைதிகள் தியாகியாகச் சித்தரிக்கப்படுவதில்லை. ஆனால், அசாதாரணமான சூழ்நிலையில் இறந்துபோகும் தனது கட்சிக்காரர்களைத் தியாகியாகச் சித்தரித்து, பொதுமக்களை அச்சுறுத்தக்கூடிய கலவரங்களையும் ரவுடித்தனங்களையும் நடத்துவதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறது, இந்து மதவெறிக் கும்பல்.
கோவை இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார், பா.ஜ.க. மருத்துவ அணிச் செயலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, பரமக்குடி நகர பா.ஜ.க. செயலர் முருகன், விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த சூரி உள்ளிட்ட பலர் கந்துவட்டி, ரியல் எஸ்டேட், பெண் விவகாரம் என ஏதோவொரு காரணத்தால் கொல்லப்பட்டிருப்பதை மறைத்து, அவர்களைத் தியாகியாக்கி கலவரங்களை நடத்தியதைத் தமிழகமும் கண்டிருக்கிறது.
ரவி சிசோடியா விவகாரத்தில் இன்னும் ஒருபடி மேலே போய், அவனது மரணத்திற்கு உ.பி. மாநில அரசு நட்ட ஈடு தரவேண்டும்எனக் கோரியதோடு, சிசோடியாவின் சடலத்தை உடனடியாக அடக்கம் செய்யாமல் போட்டு வைத்திருந்து, பதட்டச் சூழ்நிலையை உருவாக்கி, உ.பி. மாநில அரசைப் பணிய வைத்தது.
உ.பி. மாநில அரசு இந்து மதவெறிக் கும்பலின் மிரட்டலுக்குப் பணிந்து ரவி சிசோடியாவின் குடும்பத்திற்கு 20 இலட்ச ரூபாய் நட்ட ஈடு அளித்தது. மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா, உ.பி. மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோம் உள்ளிட்டோர் சிசோடியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். “சிசோடியாவின் மரணத்திற்குப் பழிக்குப் பழி வாங்குவோம்” என இந்து மதவெறிக் கும்பல் முழக்கமிட, தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட சிசோடியாவின் உடல், மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் வழியாக தேசபக்தி என்பதற்குப் புதிய பொருளைக் கற்பித்திருக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.
ரவி சிசோடியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மோடி அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா.
இந்திய தேசியக் கொடியைப் புனிதப் பசுவாகத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதிலும், அதனின் புனிதத்தை மீறுவது மன்னிக்க முடியாத குற்றமாகஊருக்கு உபதேசிப்பதிலும்மற்ற கட்சிகளைவிட, இந்து மதவெறிக் கும்பல்தான் முந்திக் கொண்டு நிற்கும். இப்படி ஊருக்குப் பொருத்தப்படும் நியாயம் தனக்குப் பொருந்தாது என்பதை கிரிமினல் குற்றவாளி சிசோடியாவின் உடல் மீது தேசியக் கொடியைப் போர்த்திக் காட்டியிருக்கிறது, அக்கும்பல்.
சிசோடியாவைத் தியாகியாகச் சித்தரிப்பதன் வழியாக, உ.பி.யில் முகம்மது அக்லக்கைப் படுகொலை செய்தது; குஜராத் மாநிலம், உனாவில் பசுவைக் கொன்று அதன் தோலை உரித்தார்கள் எனப் பழிபோட்டுத் தாழ்த்தப்பட்டோரைத் தாக்கியது; அரியானாவில் மாட்டுக் கறியைச் சாப்பிட்டதாக ஊதிவிட்டு, ஒரு ஏழை முசுலீமின் வீடு புகுந்து, அவரது குடும்பத்தாரைக் கொலைவெறியோடு தாக்கி, அக்குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களை வன்புணர்ச்சி செய்தது எனத் தொடரும் சட்டவிரோத அட்டூழியங்கள் அனைத்தையும் நாட்டிற்குத் தேவையான நியாயமான நடவடிக்கைகள் எனக் காட்டிவிட முயலுகிறது, ஆர்.எஸ்.எஸ்.
தனதுஇந்துமதவெறி பயங்கரவாதக் குற்றங்கள் அனைத்தையும் தேசியத்தோடு முடிச்சுப்போடுவது ஆர்.எஸ்.எஸ்.-க்குக் கைவந்த கலை. பாபர்மசூதியைத் தரைமட்டமாக்கிய குற்றத்தை, தேசிய அவமானச் சின்னத்தை இடித்துத்தள்ளியதாக நியாயப்படுத்தியது. குஜராத்தில் நடந்த போலி மோதல் கொலைகள் அனைத்தும் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட முசுலீம் பயங்கரவாதத்திற்கு எதிரான தேசபக்த நடவடிக்கைகளாகச் சித்தரிக்கப்பட்டன.
சோராபுதீன் போலி மோதல் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அமித் ஷா விடுவிக்கப்பட்டு, தேசியத் தலைவராக்கப்பட்டார். குஜராத்தில் போலி மோதல் கொலைகளை நடத்திய போலீசு அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டு, அதிகாரமிக்க பதவிகளில் மீண்டும் அமர்த்தப்பட்டனர். உ.பி. முசாஃபர் நகர் கலவரத்திற்குத் தலைமை தாங்கிய மகேஷ் ஷர்மா கலாச்சாரத் துறை அமைச்சர்; சங்கீத் சோம் உ.பி. சட்டமன்ற உறுப்பினர். ரவி சிசோடியாவின் உடலுக்குத் தேசியக் கொடி.
குஜராத் மாநிலம் உனாவில் இந்து மதவெறிக் கும்பலால் தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்.
அக்லக் படுகொலை வழக்கும்கூட இந்து மதவெறிக் கும்பலுக்குச் சாதகமாக வளைக்கப்படுகிறது. அக்லக் படுகொலை செய்யப்பட்ட நாளன்று, அவர் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட கறியைப் பரிசோதித்து, அது ஆட்டுக் கறிதான் என விரிவான ஆய்வறிக்கையை அளித்தது, தாத்ரியில் உள்ள ஆய்வகம். ஆனால், இந்த அறிக்கை புறக்கணிக்கப்பட்டு, மதுராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, அந்தக் கறி மாட்டுக் கறி என எந்தவிதமான ஆதாரமும் இன்றி ஒற்றை வரி அறிக்கையைப் பெற்றிருக்கிறது, உ.பி. மாநில சமாஜ்வாதி அரசு. இதன் அடிப்படையில் அக்லக் குடும்பத்தினர் மீது பசுவதைத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென உ.பி. மாநில போலீசு வாதாடியதை ஏற்றுக்கொண்டு, முதல் தகவல் அறிக்கையைப் பதியுமாறு உத்தரவிட்டிருக்கிறது, உ.பி. கீழமை நீதிமன்றம்.
தன்னை மதச்சார்பற்ற கட்சியாகக் கூறிக்கொள்ளும் சமாஜ்வாதிக் கட்சி ஆட்சியின் இலட்சணமே இப்படி இருக்கும்பொழுது, உ.பி.யில் பா.ஜ.க. அதிகாரத்தில் இருந்திருந்தால், சிசோடியாவை அரசு மரியாதையோடு அடக்கம் செய்திருப்பார்கள்.
அக்லக் குடும்பத்திற்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதியை அம்பலப்படுத்தியும் கண்டித்தும் உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்குக் கடிதம் எழுதினார், உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி கட்ஜு. அதன் பிறகும்கூட அக்லக் குடும்பம் பழி வாங்கப்படும் விவகாரத்தில் உச்சநீதி மன்றம் தலையிடவில்லை. இந்து மதவெறியின் சோதனைச் சாலையாக உள்ள குஜராத்தான் இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் எனச் சான்றளிக்கிறார், உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தாக்கூர். இப்படி பொது அறம், நீதிக்கு எதிராகப் பேசும் நீதிபதிகள் இருக்கையில், அக்லக் குடும்பத்திற்கு நீதி வழங்கப்படும் என நம்புவது மூடநம்பிக்கையைவிடக் கேடானது.
இந்து மதவெறிக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட முகம்மது அக்லக் (இடது) மற்றும் அக்கொலை வழக்கு இந்து மதவெறிக் கும்பலுக்குச் சாதகமாக நடத்தப்படுவதை அம்பலப்படுத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான முசுலீம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு, போலீசால் சோடிக்கப்பட்ட தீவிரவாத வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு, பத்து பதினைந்து ஆண்டுகள் சிறையில் கழிந்த நிலையில், நீதிமன்றங்களால் சாவகாசமாக நிரபராதிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அப்படியான நிரபராதிகளுக்கு, அவர்கள் முசுலீம்கள் என்பதாலேயே உரிய நட்ட ஈடு வழங்க அரசும், நீதிமன்றங்களும் மறுத்து வருகின்றன. அப்படி வழங்கினால், போலீசின் செயல்திறன் வீழ்ந்து போகும் என அநியாயமாகச் சப்பைக் கட்டுகின்றன. ஆனால், அக்லக் படுகொலை வழக்கிலிருந்து ரவி சிசோடியா விடுவிக்கப்படும் முன்பே, அவனது குடும்பத்திற்கு இருபது இலட்ச ரூபாய் நட்ட ஈடாக அரசால் வழங்கப்படுகிறது.
“தேசம், தேசியக் கொடி, தேசிய ஒருமைப்பாடு, தேச பக்தி” என்றாலே சாமியாடும் நிலைக்குச் சென்றுவிடும் நடுத்தர வர்க்கம், இவையெல்லாம் நாட்டின் நலன், வளர்ச்சி, பாதுகாப்போடு சம்பந்தப்பட்டவையாகக் கற்பிதம் செய்து வைத்திருக்கிறது. ஆனால்,தேச பக்திக்கு அத்தாரிட்டியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலோ, இந்து மதவெறியே தேச பக்தி, இந்திய தேசியம் என்பதே இந்து தேசியம்தான் எனக் காட்டுகிறது. அந்த வகையில் இந்திய தேசியக் கொடி தனக்கு உரிய இடத்தில் – சிசோடியாவின் உடல் மீது போர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், இது யாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்த வேண்டுமோ, அவர்கள், வலிக்காத மாதிரியே நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சோவியத் ஒன்றியத்தின் முக்கிய பிரச்சனையை நான் உணர்ந்து கொண்டேன். சோவியத் ஒன்றியத்தில், வாழ்க்கை சலிப்பூட்டுவதாக(bore) இருந்தது என்பதே அது. அங்கே அண்டை குடியரசுகளுடன் போர்கள் இல்லை, பிரிவினைவாதம் இல்லை, இன அழிப்பு இல்லை, இரவு நேர திடீர்ச் சோதனைகள் இல்லை, பொருளாதார நெருக்கடி இல்லை, கிரிமினல் கும்பல்களின் ஆதிக்கம் இல்லை – சலிப்பு அதன் நேர்த்தியான வடிவில் இருந்தது.
சோவியத் ஒன்றியத்தில், இன்று நாம் அறிந்துள்ள கலகத் தடுப்புப் போலீசு பிரிவு என்ற ஒன்று இருந்ததில்லை. சோவியத் ஒன்றிய வரலாற்றில் ஒரே ஒரு மக்கள் கலகம் நொவொசெர்காஸ்கில்(Novocherkassk) ஏற்பட்டது. அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு சிறப்புப் படை பிரிவுகள் அங்கே இருந்திருக்கவில்லை. தண்ணீர் பீய்ச்சிகள், கண்ணீர்ப் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள், குண்டாந்தடிகள் இல்லை; உண்மையில் இவை எதுவுமே இல்லை. அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்குமாறு பணிக்கப்பபட்ட வீரர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
ஜனநாயகத்தின் கோட்டையான அமெரிக்காவிலோ நிலைமை முற்றிலும் வேறுபட்டு இருந்தது. நியூ ஜெர்சியில் நடந்த கலகத்தில் சில நூறு பேர் கொல்லப்பட்டனர். 1992-ஆம் ஆண்டு நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கலவரத்தில் 52 பேர் கொல்லப்பட்டனர். பால்டிமோரில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் சடலமாயினர். நான் பாதிக்கப்பட்டவர்களின் துல்லியமான எண்ணிக்கையை குறிப்பிடாததற்கு உலகின் மிக உயர்ந்த ஜனநாயக அரசாங்கம் கலகங்கள் குறித்த தரவுகளை தணிக்கை செய்துள்ளது என்று பொருள். இவை போல டஜன் கணக்கில் மேலும் பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
நான் அமெரிக்காவில் தினசரி நிகழ்வாகிவிட்ட நிராயுதபாணியான மக்கள் போலீஸ் அதிகாரிகளால் படுகொலை செய்யப்படுவதைப் பற்றி பேசவில்லை. மேற்சொன்ன அனைத்தும் தண்ணீர் பீய்ச்சிகள், கவசம், குண்டாந்தடிகள், கண்ணீர்ப்புகை, கையெறி குண்டுகள், குருடாக்கும் லேசர் கதிர்கள், ரப்பர் தோட்டாக்கள் போன்ற பல ஜனநாயக கருவிகளின் ஆதரவுடன் நடந்துவருகின்றன.
சோவியத் ஒன்றியத்தில், வாழ்க்கை சலிப்பூட்டுவதாக இருந்தது. சோவியத் ஒன்றியம் உடைந்த உடனேயே கேளிக்கை (Fun) துவங்கிவிட்டது. ஆர்மேனியர்கள், அஜர்பைஜானியர்கள் மீது கரபாக்குக்காக (Karabakh) போர்தொடுத்தனர், டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் (Transnistria) போர் மூண்டது, ஜார்ஜியர்கள் மீதான இன அழிப்பு அப்காசியா(Abkhazia) மற்றும் தெற்கு ஒசெட்டியா(South Ossetia) முழுவதும் பரவியது. செசென்ய தீவிரவாதிகள் மத்திய ஆசியாவில் இருந்து மனித கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தலுடன் இணைந்து உருவாகினர், கிரிமினல் கும்பல்கள் அதிவேக விகிதத்தில் பெருகத் தொடங்கின, மற்றும் பல.. இவை உண்மையில் மிகவும் கேளிக்கையாக (கிளுகிளுப்பாக) இருந்தது.
அமெரிக்காவை யாருமே உடைக்க முயலாத போது, அமெரிக்கர்கள் நிலைமையை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர். மற்றொரு நாட்டை – யூகோஸ்லாவியா – உடைத்து சிதறச் செய்தனர். அவர்கள், செர்பியாவின் மீது குண்டு வீசினர். கொசோவாவில் ஒரு ஜிகாதிய உறைவிடத்தை உருவாக்கினர். வேறு சில நாடுகளில் படையெடுத்து, பல லட்சம் மக்களை படுகொலை செய்தனர். மற்ற பல நாடுகளில் சதித்திட்டமிட்ட ஆட்சி கவிழ்ப்புகளை நடத்தினர். மேலும் உலகம் முழுவதும் கூடுமான வரை பற்பல இராணுவ தளங்களை கட்டினர். அமெரிக்கா அடுத்ததாக எந்த நாட்டின் மீது படையெடுக்கும் என்பதில் கூட ஒருவர் துணிந்து தனது பணத்தை பந்தயம் கட்டலாம். எல்லாம் மிகக் கேளிக்கையாக இருந்தது.
சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் மக்களுக்கு கிடைத்த இலவச அடுக்கு மாடிக் குடியிருப்பு, இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் மற்றும் உடல்நல பராமரிப்பு இல்லங்களுக்கான இலவச நுழைவுச்சீட்டு போன்ற சலிப்பூட்டுபவைகளுடன் இம்மொத்த கேளிக்கைகளையும் ஒருவர் ஒப்பிட்டுவிட முடியுமா? இப்போதெல்லாம், மக்கள் ஒன்றன் பின் ஒன்றாக தங்கள் கடன்களை உயர்த்தியும், தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு அடமானம் வைத்தும், சுகாதாரக் காப்பீடு செலுத்தியும் கேளிக்கையடைகிறார்கள். மேலும் இந்த அனைத்து கேளிக்கைகளுக்கும் ஈடுகொடுக்க இரண்டு அல்லது மூன்று பணியிடங்களில் வேலையும் செய்கின்றனர்.
உக்ரைனிலும் கூட சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின் நீண்ட காலமாக வாழ்க்கை மிக சலிப்பாக இருந்தது. அங்கு குற்றக் கும்பல்களிடையே மோதல்கள், மிரட்டி பணம் பறிப்பது போன்றவை இருந்திருந்தாலும், அவை சலிப்படைய வைத்தன. உக்ரேனியர்களிடம் உள்நாட்டுப் போர்களோ, இன அழிப்போ எதுவும் இல்லை. மக்களுக்கு இரவில் தங்கள் சமையலறைகளில் வைத்துப் பேசிக்கொள்ள எதுவும் இல்லை.
மைதான் கலவரத்தினூடாக(Maidan Riots) கேளிக்கை வந்து சேர்ந்தது. உள்நாட்டுப் போர் வந்தது. உக்ரைனியர்கள் ஒவ்வொரு மூலையிலும் புடினின்(Putin) ஒற்றர்களை தேடியலைவது தொடங்கியது. பொறோஷென்கோ(Poroshenko) “எனக்கு நிறையப் பணம் கொடுங்கள்” என்ற தனது மிகப்பெரிய உலகச் சுற்றுப்பயணதிற்கு சென்றார் (சுற்றுப்பயணம் மிக வெற்றிகரமானதாக இருந்தது; பொறோஷென்கோ அதை நீட்டிக்க திட்டமிட்டுள்ளார்). இறுதியாக உக்ரைன் குடிமக்கள் பேசிக்கொள்வதற்கு ஏதோ சிலவிசயங்கள் கிட்டின. உதாரணமாக, ரஷ்ய எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுமான பணியின் மூலமாக யாட்சென்யுக்(Yatsenyuk) எத்தனை மில்லியன்களைத் திருடுவார்.
இப்போது, மத்திய கிழக்கின் முரண்பாடுகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்று மற்றொரு உலகப் போருக்கு கட்டியம் கூறுகின்றன. மில்லியன் கணக்கான அரபு அகதிகள் ஐரோப்பாவையே மூழ்கடிக்கின்றனர். சோவியத் யூனியன் இல்லாமல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக மாறிவிட்டது என்று ஒருவர் உணராமல் இருக்கவே முடியாது.
மத்திய மாநில அரசுகளின் பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுகளின் மேம்பாட்டிற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி பெருமளவில் செலவிடப்படாமலிருப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட/ பழங்குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் ரூ. 2.8 லட்சம் கோடிகள் மத்திய மாநில அரசுகளால் செலவிடப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான நிதியைத் திருப்பிவிட்டு டெல்லியில் நிர்மாணிக்கப்பட்ட காமன்வெல்த் விளையாட்டு கிராமம்; (கோப்புப் படம்)
தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்கு என சொல்லிக்கொண்டு ”பட்டியல் சாதியினருக்கான துணைதிட்டம்” (Scheduled Caste Sub Plan), மற்றும் ”பழங்குடியினருக்கான துணை திட்டம்”(Tribal Sub Plan) ஆகிய பட்ஜெட் வறைமுறைகள் 70-களின் இறுதியில் கொண்டுவரப்பட்டன. இதன்படி மத்திய மாநில அரசுகள் தங்களின் மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட/பழங்குடிளின் மக்கள் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீகித நிதியை மேற்கண்ட திட்டங்களில் ஒதுக்கி செலவிடவேண்டும்.
அதன்படியும் இறுதியாக நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியும் இந்தியாவில் மத்திய பட்ஜெட்டில் 16.5% பட்டியல் சாதியினர் துணைத்திட்டத்திற்கும், 8.6% பழங்குடியினர் துணைதிட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. மேற்கண்ட திட்டங்கள் அமலுக்கு வந்த காலம் முதல் 2014-15 ஆண்டுவரை ஒதுக்கப்பட்ட தொகை என்பது, ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய தொகையைக் காட்டிலும்
சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்கள் (5,27,723.72 ) குறைவாகும்.
இது ஒருபுறமிருக்க, ஒதுக்கப்பட்ட நிதியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடைசி மூன்று ஆண்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டால், 2012-13 ஆண்டில் மட்டும் ரூ. 3952 கோடிகளும், 2013-14-ல் 6839 கோடிகளும், 2014-15 மிக அதிகபட்சமாக 20,513 கோடிகளும் பயன்படுத்தப்படவில்லை. அதிலும் திருவாளர் மோடி ஆட்சியில் இந்த தலித் வெறுப்பு (பயன்படுத்தப்படாத நிதியின் அளவு) முந்தைய ஆண்டுகளை காட்டிலும் 250% மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மோடிதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலுக்கு தலைகுனிவதாக கண்ணீர் வடிக்கிறார். அதைக் கேட்டு புளகாங்கிதம் அடையும் தலித் தலைவர்களும் இருக்கிறார்கள்.
(இடது) சிதிலமடைந்த நிலையில் உள்ள சென்னை எம்.சி.ராஜா தாழ்த்தப்பட்டோர் விடுதிக் கட்டிடம். (கோப்புப் படம்)
மாநில வாரியாக எடுத்துக்கொண்டால் தாழ்த்தப்பட்ட மக்களின் நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பதில் ஆந்திரா, உத்திரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களும், பழங்குடிமக்கள் நிதியில் ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களும் முன்னிலை வகிக்கின்றன. 2005 முதல் 2014 ஆண்டுகளில் ஆந்திரா மாநிலம் செலவிடாத தொகை ரூ.19,367 கோடி. உத்திரபிரதேசம் ரூ.16,970 கோடி. 2014-15 ஆண்டிற்கான நிதியில் 61% (ரூ.4,643) தொகையை செலவு செய்யாமல் வைத்திருக்கிறது தெலுங்கானா. பழங்குடியினருக்கான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் அவர்களை மாவோயிஸ்டுகள் பக்கம் போகவிடாமல் தடுப்பதாக ஆளும் வர்க்கம் சொல்லிக் கொள்கிறதே, அந்த மாநிலங்களின் யோக்கியதை இது.
தலித்திய மாயாவதியின் உத்திரபிரதேசம் பயன்படுத்தபடாத நிதியில் முன்னணி மாநிலங்களின் ஒன்றாக இருக்கிறது. மாயாவதியின் ஆட்சிக் காலமான 2007-12 ஆண்டுகளில் சுமார் 3500 கோடிகளுக்கு மேலாக செலவிடப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை2002-2015 ஆகிய 13 ஆண்டுகளையும் சேர்த்து மொத்தம் ரூ. 5,000 கோடிகள் செலவிடப்படவில்லை. தாழ்த்தப்பட்டோருக்கான நிதியைச் செலவிடும் விசயத்தில் கேரளாவும் தமிழகமும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பரவாயில்லை என்கிறது, இந்தப் புள்ளி விவரம்.
நிலவும் அரசமைப்பில் பங்கேற்பதன் மூலம் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவு ஏற்படுத்த்த முடியும் பேசும் தலித் தலைவர்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கூட பெற்றுத்தரமுடியவில்லை என்பதே யதார்த்த நிலை.
சரி, செலவு செய்யப்பட்டது யாருக்கு ?
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையைத் தாமதமின்றி வழங்கக்கோரி திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப்படம்)
ஒதுக்கப்பட வேண்டிய அளவு நிதி ஒதுக்கப்படவில்லை. ஒதுக்கிய தொகையும் செலவிடப்படவிலைலை என்பவை ஒருபுறம். செலவிடப்பட்ட தொகை யாருடைய நலனுக்காக செலவிடப்பட்டது என்பது மிக முக்கியமான கேள்வி. இதற்கு நல்ல உதாரணம் குஜராத்தின் நர்மதா அணைக்கட்டு திட்டம். இத்திட்டம் பழங்குடிமக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்று அம்மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அவர்களுக்குரிய நிவாரணமோ, மாற்று இடமோ தரப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, பழங்குடி மக்கள் துணைத்திட்ட நிதியை நர்மதா அணைக்கட்டு திட்ட நிறுவனத்திற்கு ஒதுக்கியிருக்கிறது குஜராத் அரசு. அது மட்டுமல்ல, விவேகானந்தரின் 150-வது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டங்களுக்கும் இந்த நிதியை குஜராத் அரசு திருப்பி விட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது தெகல்கா.
ஜார்கண்டு, சட்டிஸ்கார், ஆந்திரா, தெலிங்கானா மாநிலங்களில் பழங்குடி மக்கள் நலன் என்ற பெயரில் செலவிடப்பட்ட தொகை, என்னென்ன இனங்களுக்குச் செலவிடப்பட்டுள்ளது என்ற விவரங்களை எடுக்க முடிந்தால் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள இயலும். பழங்குடி மக்களுக்கான நிதியை பழங்குடி ஒழிப்பு – மாவோயிஸ்டு ஒழிப்பு நடவடிக்கைக்காக செலவிடப்பட்டிருப்பதையும் நாம் காணக்கூடும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது தாழ்தப்பட்ட மக்கள் மேம்பாட்டு நிதியை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு திருப்பிவிடப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. அதே போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மாநிலத்திற்கு விமானம் வாங்குவதற்கும், முதலமைச்சர் வீட்டிற்கு ஹெலிபேட் அமைப்பதற்கும், மாவட்ட தலைநகரங்களில் சாலைகள் அமைப்பது போன்ற வேலைகளுக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதேதான் பிற மாநிலங்களிலும் நடந்திருக்கிறது. தொகையில் மட்டும்தான் வேறுபாடு.
மொத்தத்தில் இத்திட்டங்களினால் கணிசமாகப் பயனடைகிறவர்கள் அமைச்சர்கள், கார்ப்பரேட் கட்டுமான நிறுவனங்கள், காண்டிராக்டர்கள்! ஆனாலும் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். தலித் மக்கள் நலனுக்காக எந்த ஆட்சி அதிகம் நிதி ஒதுக்கியது என்று தங்களுக்குள் சண்டையிட்டும் கொள்கிறார்கள்.
இது, இந்தியாவின் பெரிய ஊழல் முறைகேடுகளில் ஒன்று. எல்லா கட்சிகளுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் இதில் பங்கிருக்கிறது. ஆனால் இதை ஊழல் என்றோ முறைகேடு என்றோ எவரும் பேசுவதில்லை. தீண்டாமையையும் சாதி ஆதிக்கத்தையும் ஊழலாகவோ, முறைகேடாகவோ கருதாத மனப்போக்கு இதனை எப்படி ஊழலாகக் கருத முடியும்?
ஒருபுறம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறைகள், பெருகி வரும் சாதி சங்கங்கள், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிரான வன்முறைகள், முன் எப்போதைக் காட்டிலும் தேர்தல் அரசியலில் அதிகரித்துவரும் சாதி அமைப்புகளின் செல்வாக்கு, பழங்குடி மக்களை வெளியேற்றி அவர்களுடைய நிலத்தை அபகரித்துக் கொள்வதையே வளர்ச்சியாகச் சித்தரிக்கும் பொருளாதாரக் கொள்கை – தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்கான நிதி ஒதுக்கீடு என்ற இந்தப் பிரச்சினைய மேற்கூறிய பின்புலத்தில் வைத்துப் பாருங்கள். நிலவுகின்ற அரசமைப்புக்குள்ளேயே தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தைச் சாதித்துவிட முடியும் என்ற நம்பிக்கை எத்தனை அபத்தமானது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.
கயர்லாஞ்சி படுகொலை வழக்கைக் கையாண்ட அதிகாரிகளில் ஆகப் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தபோதிலும், போட்மாங்கே குடும்பத்துக்கு இந்த அரசமைப்பில் நீதி கிடைக்கவில்லை. நிதி கிடைக்காததில் வியப்பேதும் இல்லை. தேர்தல் அரசியல் மூலமாகவே தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை அடைந்துவிட முடியும் என்று பேசுவதற்கும், பேசுபவர்களை நம்புவதற்கும் இன்னமும் ஆளிருக்கிறதே, அதுதான் வியப்புக்குரியது.
ஜனநாயகத்தின் பக்தர்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர். இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த மாபெரும் தோல்வி என்கின்றனர் அமெரிக்கத் தெருக்களில் பேரணியாகச் செல்லும் மக்கள். அமெரிக்க முதலாளித்துவ பத்திரிகைகளோ திகைப்பில் ஆழ்ந்துள்ளன – நடந்து முடிந்த சம்பவங்களை நம்ப முடியாபமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதற்கெல்லாம் பொருள் விளக்கம் சொல்லும் அமெரிக்க அறிவுஜீவிகள் சொந்த நாட்டில் நடந்து முடிந்துள்ளவற்றுக்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எதிர்காலத்தில் நிலைமையை எப்படிச் சமாளிப்பது, எந்தவிதமாக தங்களது நலன்களைக் காத்துக் கொள்வது என முதலாளி வர்க்கம் ஆலோசிக்கத் துவங்கி விட்டது. அமெரிக்காவின் அண்டை நாடுகள் வேறுவழியின்றி ’பொறுத்திருந்து’ பார்க்கப் போவதாக அறிவித்துள்ளன. தேர்தல் கருத்துக்கணிப்புப் புலிகளோ தங்கள் தலைகளை பூமிக்குள் புதைத்து விட்டு ஆசன வாயால் முனகிக் கொண்டுள்ளனர்
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்றுள்ளார்.
முதலாளித்துவ பத்திரிகைகள் நம்பமுடியாத ஒன்று நடந்தேறி விட்டது போல புலம்பி வருகின்றன. அமெரிக்க ஜனநாயகத்தின் பக்தர்களோ ஒரு சுபயோக சுபதினத்தில் உலக ஜனநாயகத்தின் கருவறையை முதன்முறையாக திறந்து பார்த்ததைப் போலவும், அது உண்மையில் விபச்சார விடுதியின் அறையாக இருப்பதை அப்போது தான் கண்டுபிடித்தவர்களைப் போலவும் வாயடைத்துப் போய் நிற்கின்றனர். டிரம்பின் வெற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒரு அடிமுட்டாளை – பொறுக்கியை – ஊரறிந்த அயோக்கியனை – புளுகனை – ஏமாற்றுக்காரனை – பெண் பித்தனை ஏன் அமெரிக்கர்கள் தங்கள் அதிபராகத் தெரிவு செய்தனர்?
முதலில் இந்தத் தேர்தல் நல்லவற்றுக்கும் தீயவற்றிற்கும் இடையே நடந்த மோதல் அல்ல. கேவலத்திற்கும் கழிசடைக்கும் இடையே நடந்த போட்டி – இதில் கழிசடை வென்றுள்ளது. பல ஜனநாயக காதலர்கள் முன்னிறுத்தியதற்கு நேர் எதிரான பிம்பம் கொண்டவர் ஹிலாரி கிளிண்டன். குறிப்பாக விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்திய மின்னஞ்சல்கள் ஹிலாரி எந்தளவுக்குப் போர் வெறி கொண்டவர் என்பதையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தோற்றத்தில் நேரடியாக பங்குடையவர் என்பதையும் அம்பலப்படுத்தின.
பெருவாரியான வெள்ளையின தொழிலாளிகள் டிரம்புக்கு வாக்களித்தோடு, அமெரிக்காவின் மத்திய பகுதி மொத்தமும் அவரை ஆதரித்திருப்பது தற்போது தெளிவாகியுள்ளது. இவர்களில் கணிசமானவர்கள் படிப்பறிவில்லாதவர்கள், இனவெறியர்கள் என்பதையும் அமெரிக்க ஊடகங்கள் தற்போது பீறாய்ந்து வருகின்றன. குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராவதற்கான போட்டியின் போது நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் வெள்ளை இனத்தவர்களின் குரலை ஓங்கி ஒலித்தார் டிரம்ப்.
தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வந்த சமயத்திலேயே குடியரசுக் கட்சியில் பெருவாரியாக தங்களை இணைத்துக் கொண்டு டிரம்புக்கு ஆதரவான பிரச்சாரங்களை நடத்தி வந்தனர், கூ கிளக்ஸ் கிளான் என்கிற வெள்ளை நிறவெறி அமைப்பின் உறுப்பினர்கள். எட்டாண்டுகளாக நடக்கும் கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமாவின் ஆட்சி, அதிகரித்து வரும் எல்.ஜி.பி.டி உரிமைகள் குறித்த விவாதங்கள் உள்ளிட்டவைகளோடு அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபராக முன்னிறுத்தப்பட்ட ஹிலாரி கிளிண்டன் என அனைத்தும் ஒன்று சேர்ந்து வெள்ளை இனவெறியர்களை மொத்தமாக டிரம்பின் பின் அணிதிரட்டியது. டிரம்ப் வென்றதை அடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அவரை அதிபராக ஏற்க மறுத்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கூ கிளக்ஸ் கிளான் வெற்றிப் பேரணிகளை நடத்தி வருகின்றது.
டொனால்ட் டிரம்புக்கு எதிரான மக்களின் போராட்டம்.
இது ஒருபுறம் இருக்க, அமெரிக்க வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் ஹிலாரி கிளிண்டனை ஸ்தாபனத்தின் (Establishment) பிரதிநிதியாக (ஆளும் வர்க்கத்தின் ஒட்டு மொத்தமாக) அடையாளம் கண்டனர். இதோடு சேர்த்து கடந்த எட்டாண்டு ஜனநாயக கட்சியின் ஆட்சியும், அதற்கு எதிரான அதிருப்தியையும் ஹிலாரி சுமக்க வேண்டியிருந்தது. இதனுடன் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்களும் இணைந்து கொள்ளவே, அவருடைய தோல்வி ஏறக்குறைய உறுதியானது.
இதற்கு நேர்மாறாக டொனால்ட் டிரம்ப் அமைப்பு முறைக்கு எதிரானவராக அடையாளம் காணப்பட்டார். தேர்தல் பிரச்சாரங்களின் போது டிரம்ப் அடித்த வாய்ச்சவடால்களை ‘அறிவார்ந்த’ பத்திரிகையாளர்கள் முகம் சுழித்த போது மக்கள் முகம் மலர்ந்தனர். ஃபோர்ட் கார் கம்பெனித் தொழிற்சாலைக்கு அருகே நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், “ஏய் போர்டு கம்பெனி முதலாளியே, இங்கேயிருந்து தொழிற்சாலையை மெக்சிகோவுக்கு மாற்றினால், அமெரிக்காவுக்குள் நுழையும் ஒவ்வொரு காருக்கும் வரியைப் போட்டுத் தீட்டி விடுவேனாக்கும்” என்று முழங்கிய போது கூடியிருந்த தொழிலாளர்கள் ஆர்ப்பரித்தனர். இதே போல் சீனாவில் உற்பத்தியாகும் ஆப்பிள் போன்களுக்கு வரியை உயர்த்தப் போவதாக டிரம்ப் அறிவித்து முதலாளிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தார் – மக்களோ அதை இரசித்தனர்.
அடுத்து, ஒபாமாவின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அதன் வெளியுறவுக் கொள்கைகளை புதிய பிற்போக்குவாதிகளும் (Neo conservatives) தாரளவாத போர்வெறியர்களுமே (Liberal hawks) தீர்மானித்தனர். அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை புரியும் இப்பிரிவினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சிந்தனைக் குழாம்களின் வழிகாட்டுதல் சிரியா உள்ளிட்ட போர்களையும், ரசியாவுடனான மோதல் போக்கையும் தீர்மானித்தன.
துவக்கத்திலிருந்தே ரசியாவுடன் மோதல் போக்கைக் கைவிடுவதைக் குறித்து பேசி வந்த டிரம்ப், சிரிய போர் அமெரிக்காவின் மிகப் பெரிய தவறு என விமர்சித்து வந்தார். தற்போது டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கையிலோ, ரசியாவுக்கு எதிரான போக்கிலோ எதாவது மாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படை உள்ளதா? இல்லை. ஏனெனில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்பது அதன் ஏகாதிபத்திய பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டது. ஒரு நாட்டுடன் போர் வேண்டுமா வேண்டாமா என்பதை முதலாளிகளின் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப்படும் அமெரிக்க ஆளும் வர்க்கமே தீர்மானிக்கிறது – அதை அறிவிக்கும் உரிமை மட்டுமே அதிபருக்கு உண்டு.
எனினும், டிரம்ப் தனது பிரச்சாரங்களில் போர்களுக்கு எதிராகவும், அமெரிக்க பொருளாதார நலன்களுக்கு எதிராக (ரசியாவுடன் இணக்கமாகச் செல்வது) எப்படி பேசினார்? இது அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதன் நலன்களை பிரதிபலிக்கும் அமெரிக்க அரசு கட்டமைப்புக்கும் எதிராதனாயிற்றே? அவர் ஏன் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டும்? இங்கே தான் டிரம்பின் தனிப்பட்ட பண்புகள் முன்னுக்கு வருகின்றன.
விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்திய மின்னஞ்சல்கள் ஹிலாரி எந்தளவுக்குப் போர் வெறி கொண்டவர் என்பதையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தோற்றத்தில் நேரடியாக பங்குடையவர் என்பதையும் அம்பலப்படுத்தின. நன்றி படம்: விக்கி லீக்ஸ்
டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளிண்டனைப் போல் ‘அனுபவம்’ வாய்ந்த அரசியல்வாதி அல்ல. பிறக்கும் போதே வாயில் வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர். அவரது வாயிலிருந்து கரண்டியை உருவும் போது என்னவெல்லாம் வழிகிறதோ அதெல்லாம் கட்டளைகள். அந்தக் கட்டளைகளை நிறைவேற்றும் கடமை அந்தக் கட்டளைகளுக்கு உட்பட்ட அனைவருக்கும் உண்டு என நம்புகிறவர்.
தானே ஒரு பெருமுதலாளி என்பதால் , அந்த உலகத்தின் இருண்ட பக்கங்கள் டிரம்புக்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும். அரசாங்கத்தின் திரைமறைவு இயக்கம், அது எந்தளவுக்கு முதலாளிகளின் நலனோடு பிணைக்கப்பட்டுள்ளது, அரசுக்கு முதலாளிகள் அளிக்கும் உத்தரவுகள் கொள்கை முடிவுகளாக எவ்வாறு அமல் படுத்தப்படுகின்றது, இதில் மக்களுக்கு சொல்லப்படுவது எவை – சொல்லப்படாத உண்மைகள் எவை, போர்கள் ஏன் நடக்கின்றன – அதன் பின் உள்ள சொல்லப்படாத காரணங்கள், மக்கள் நலன் என்பதாக முன்வைக்கப்படும் திட்டங்களின் உண்மை நோக்கம் என்ன – என்பதெல்லாம் மக்களை விட மிகத் தெளிவாக அதே உலகத்தில் இயங்கும் டிரம்புக்குத் தெரியும்.
அவர் ஒரு முதலாளி என்றாலும் உதிரித்தனம் கொண்ட மைனர். எனவே, ரசியாவுடனான மோதல் போக்கோ, சிரியாவில் நடக்கும் போரோ… எதனைக் குறித்தும் பேசும் முன்பாக அது முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் கட்டிக் காப்பாற்றும் அரசுகட்டமைவின் (Establishment) கருத்துடன் ஒத்துப் போக வேண்டுமே என்கிற அச்சம் டிரம்பிடம் இல்லை. அவர் அந்தக் கட்டமைவிற்கு மேலாகத் தன்னை நிறுத்திப் பார்க்கிறார். எனவே அதன் போலித்தனங்களையும், ஊடகங்களின் வழியாக அது எவ்வாறு நியாயப்படுத்தப்படுகின்றது என்பதையும் அறிந்தவர். லட்சக்கணக்கான மக்களின மரணங்களையே குழிதோண்டிப் புதைத்த அந்த உலகத்தில், தனது ‘கருத்துக்கள்’ கடலில் கரைத்த பெருங்காயமே என்பதை அவர் முற்றாக அறிந்துள்ளார்.
அப்படி அனைத்துக்கும் மேலிருந்து பார்ப்பதால், அவர் அளித்த வாக்குறுதிகளுக்கு விளக்கங்கள் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை – பொறுப்பேற்க வேண்டிய தேவையுமில்லை. ஒவ்வொன்றும் பேசும் போது பேச்சாக இருக்கும் – பேசி முடித்த பின் தெறித்து விழுந்த எச்சிலாக இருக்கும். இவற்றில் எதையாவது டிரம்ப் நிறைவேற்றுவாரா? அது அவரின் அந்தந்த நேரத்திய மனநிலையைப் பொறுத்தது. குடிகாரன் பேச்சு போலத் தான். நேற்று வரை நீங்கள் சொன்னவற்றில் இன்னதெல்லாம் நிறைவேற்றப்படவில்லையே என்று நாளை யாராவது கேட்டால் “அப்படியா சொன்னேன்” என்று புறங்கையால் ஒதுக்கி விட்டுப் போவார் அல்லது ”நீ எவன்டா அதைக் கேட்க” என்று அதே புறங்கையை ஓங்கவும் செய்வார்.
எனவே தான், ”ஒபாமா கேரைத் தூக்கிப் போடுவேன் – போட்டபின் எதாவது ஒன்றைக் கொண்டு வந்து விடலாம்” “சீனாவை தட்டி வைப்பேன்” “ரசிய அதிபர் புதின் நல்லவர்.. அவரை ஈசியாக டீல் செய்வேன்” “மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு சுவரைக் கட்டுவேன் – அதற்கான செலவை மெக்சிகோவை ஏற்கச் செய்வேன்” என்பதில் துவங்கி எதைக் குறித்தும், எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமானாலும் அவரால் பேச முடிகிறதது. சீமான், விஜயகாந்த் வகையறாக்கள் அளிக்கும் வாக்குறுதிகளை கவனித்துப் பார்த்தால், அதில் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற பொறுப்போ, நாளை பதில் சொல்லியாக வேண்டுமே என்கிற அச்சத்தையோ நாம் காண முடியாது. டிரம்ப் ஒரு சர்வதேச சீமான்.
ஹிலாரி ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி (Seasoned politician) என்பதால் எதைக் குறித்தும் வாக்குறுதி அளிப்பதற்கு முன் அதன் சாதக பாதகங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு பேச வேண்டியிருந்தது. ஆனால், டிரம்ப் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் சாத்தியப்பாடுகள் குறித்து அவருக்கு எந்த அக்கறையும் இல்லை. வேலையிழப்புக்கு என்ன காரணம்? வந்தேறிகள். அதற்கு என்ன செய்யலாம்? அவர்களை விரட்டியடித்து விடலாம். இதைத் தான் படிப்பறியும், உலக ஞானமும் இல்லாத வெள்ளையின தொழிலாளர் வர்க்கம் விரும்பியது. ஹிலாரி கிளிண்டன் மற்றும் அவரது பிரச்சாரக் குழுவினர் மெனக்கெட்டு கட்டமைத்த “ரசிய பூதம்” “இசுலாமிய வேதாளம்” ”மூன்றாம் உலக காட்டுமிராண்டிகள்” போன்றவற்றை வெறும் வெற்றுச் சவடால்களின் மூலமாகவே ஊதித் தள்ளிவிட்டார் டிரம்ப்.
கடந்த ஓராண்டுகளாக குடியரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடர்ந்து வரும் ஆவணப்பட இயக்குனர் மைக்கேல் மூர், டிரம்ப் வெல்லப் போகிறார் என்பதை முன்னரே யூகித்து விட்டார். குடியரசுக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த வாக்காளர் ஒருவர், மைக்கேல் மூரிடம் “நாம் டிரம்புக்கு ஓட்டளிக்க வேண்டும். அனைத்தையும் தலைகீழாக கவிழ்த்துப் போட வேண்டும்” (Shake things up) என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனம் தனது லாப வேட்டைக்காக உள்நாட்டிலிருந்து உற்பத்தி ஆலைகளை மூன்றாம் உலகநாடுகளுக்குக் கடத்திச் சென்றதால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது அமெரிக்க தொழிலாளர் வர்க்கம். இந்தப் போக்கானது பொதுவில் குற்றச் செயல்களை அதிகரித்திருந்தாலும், குறிப்பாக கருப்பினத்தவரிடம் அதிகரித்தளவில் காணப்படுகின்றது. மாறாக வெள்ளையினத்தவரிடம், வேலையிழப்புகள் நம்பிக்கையற்ற நிலையைத் தோற்றுவித்து போதைப் பழக்கத்தை அதிகரித்துள்ளது. எனவே வழமையான ஆளும் வர்க்கப் பசப்பல்களை அவர்கள் நம்ப மறுக்கின்றனர். மறுபுறம் இதே பிரிவினர் கல்வியறிவற்றவர்களாகவும், அரசியல் அறிவற்றவர்களாகவும் இருப்பதால் டிரம்ப் முன்மொழியும் எளிமையான தீர்வுகளுக்கு பலியாகினர். இதோடு கூடவே, வெள்ளையினத்தின் இறுதி மீட்பராக டிரம்ப்பை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டர் இனவெறி அமைப்பினர்.
தற்போது அமெரிக்கா ஒரு அதிதீவிர வலதுசாரிப் பாதைக்குள் அடியெடுத்து வைத்திருப்பதாகவும், கூ கிளக்ஸ் கிளான் போன்ற இனவெறி அமைப்புகள் குடியரசுக் கட்சியைக் கைப்பற்றும் அபாயம் இருப்பதாகவும் லிபரல் ஜனநாயகவாதிகள் அச்சப்படுகின்றனர். ”டிரம்ப் போன்ற ஒரு அரைவேக்காட்டின் விரல் நுனியில் அமெரிக்க அணுகுண்டுகளை இயக்கும் சிவப்புப் பொத்தான் இருப்பதை நினைத்தாலே நடுக்கமாக உள்ளது” எனப் பதறுகிறது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை.
தாராளவாத ஜனநாயக காதலர்கள் அச்சப்படுவதைப் போல் அணுகுண்டின் சிவப்புப் பொத்தானின் மேல் டிரம்பின் விரல்கள் தாளமிட்டு விடுமா? உறுதியாகச் சொல்ல முடியாது. அரசுக் கட்டமைவிற்கு உள்ளே வானளாவிய அதிகாரத்துடன் நுழைந்துள்ள டிரம்ப்பை அது தனக்கேற்றபடி மறுவார்ப்பு செய்யுமா இல்லையா என்பதைப் பொறுத்தது. ஒருவேளை அரசுக் கட்டமைவின் தேவைகளுடன் டொனால்ட் டிரம்பின் சிந்தனைப் போக்கு பொருந்தி வரவில்லை என்றால்? ஹிலாரிக்கு இருப்பதைப் போல் திட்டமிட்ட கொடூர (systematic cruelty) மனம் டிரம்புக்கு இல்லை என்பதால் – அச்சச்சோ மக்கள் பாவம் என்றும் சிந்திக்கலாம்; அல்லது ஹிலாரியைப் போல் விளைவுகளைக் கணக்கிட்டுப் பார்க்கும் பொறுமை இல்லாததால் – மூன்றாம் உலகக் குரங்குப் பயல்கள் செத்தொழியட்டும் என்றும் சிந்திக்கலாம். எனினும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த அமெரிக்க அரசுக் கட்டமைவு தனக்கேற்றபடி டிரம்ப்பை தகவமைத்துக் கொள்ளும் வாய்ப்புகளே அதிகம் என்பதையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, பெண்களைக் குறித்து இழிவாக சிந்திக்கும் ஒரு பொறுக்கியை எப்படி அமெரிக்க வாக்காளர்கள் தெரிவு செய்தனர் எனக் கலங்குகின்றனர் மேற்கத்திய பாணி பெண்ணுரிமை ஆர்வலர்கள்.
அது தான் அமெரிக்கா. பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடற்கரையோர மாநிலங்களைத் தாண்டி அமெரிக்காவின் மத்திய பகுதி மொத்தமும் தீவிர கத்தோலிக்க அடிப்படைவாத கருத்துக்களுடனும் மத்திய கால கலாச்சார விழுமியங்களுடனுமே உள்ளது. டிரம்ப்புக்கு வாக்களித்த பெண்ணிடம் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபர் ஒருவர் ”பெண்களை இழிவாக பேசும் டிரம்ப்புக்கு ஏன் வாக்களித்தீர்கள்?” எனக் கேட்டதற்கு அவர் அளித்த பதில், “அவர் தான் உண்மையான ஆம்பிள்ளை”.
ஆணாதிக்க எதிர்ப்பு, எல்.ஜி.பி.டி இயக்கங்கள், ஒருபாலினத் திருமணங்கள் என்பவை எல்லாம் நகரங்களில் உள்ள படித்த உயர் நடுத்தர வர்க்க அமெரிக்கர்களின் உலகத்துடன் முடிந்து விடுகின்றது. உண்மையான அமெரிக்காவோ கத்தோலிக்க தாலிபான்களின் சித்தாந்தத்தில் லயித்துக்கிடக்கிறது.
இறுதியாக, டிரம்ப் இசுலாமியர்களுக்கு எதிரானவர் என்பதால் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் எதாவது எலும்புத் துண்டுகள் கிடைக்கும் என வாயில் எச்சிலூறக் காத்திருக்கின்றனர் அமெரிக்கவாழ் இந்தியர்கள். உண்மையில் டிரம்ப் குடியரசுக் கட்சியை வெளியிலிருந்து வந்து கைப்பற்றியவர் என்பதால் உட்கட்சியிலிருந்து எழும் கலகக் குரல்களை எதிர்கொள்ள வெள்ளையின வெறியர்களையே நம்பியுள்ளார். வெள்ளையின வெறியர்களை அவர் தனது ஏவல் நாய்களாகப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இனவெறியர்களைப் பொருத்தவரையில் தலையிலிருப்பது குல்லாவா குடுமியா என்பதல்ல பிரச்சினை – தோலின் நிறம் கருப்பா வெளுப்பா என்பதே முக்கியம்.
எனவே, முதலில் நாஜிகள் தாக்கப் போவது உங்களையல்ல – ஆனால் உங்கள் பாதுகாப்பும் உறுதியல்ல.
நவம்பர் 8 இரவு செல்லாத நோட்டை அறிவித்து விட்டு மோடி ஜப்பான் சென்றார். புல்லட் ரயில், அணு மின்சாரத்திற்காக பிடில் வாசித்தார். பிறகு கோவா வந்தார். விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கிளிசரின் வடித்தார். பிறகு உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றார். மக்கள் தம்மை ஆதரிப்பதாக கூறினார். 50 நாட்களில் நிலைமை சரியாகும் என்றார். பிறகு பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளை சந்திக்கிறேன் என்று சவால் விட்டார்.
பெருமுதலாளிகளுக்கு வராக்கடனாகவும், கடனாகவும் இலட்சம் கோடிகளை வாரி வழங்கும் இந்திய அரசு சார்பில் சாதாரண மக்களின் பணத்தை பிடுங்கும் திட்டமே மோடியின் செல்லாத நோட்டு திட்டம். இதனால் அம்பானி – அதானி கருப்புப் பண முதலைகள் மனம் மகிழ உழைக்கும் மக்களை வதைத்து வருகிறது மோடியின் அரசு. இந்த ஏழு நாட்களில் இது வரை செல்லாத நோட்டுக்களை மாற்ற முடியாமல் மாரடைப்பில், தற்கொலையில், நிலை குலைந்து இறந்து போனோர் 33 பேர். இதில் ஒரு கொலையும் உண்டு.
படம் : துரை
ஹஃப்பிங்டன் போஸ்ட் வெளியிட்டிருக்கும் இந்தப் பட்டியல் பல்வேறு முக்கிய ஊடகங்களின் செய்திகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது ஊடகங்கள், காவல் நிலையங்களுக்கு வராத சாவுகள் இன்னும் பிரம்மாண்டமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.
1. பஞ்சாபின் தார்ன் தரன் பகுதியைச் சேர்ந்தவர் சுக்தேவ் சிங். அவரது மகளுக்கு திருமணம் நடக்க நான்கு நாட்களே இருக்கின்றன. அப்போது மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பைக் கேட்டவர் அதிர்ச்சியடைந்து மாரடைப்பால் காலமானர். “எங்களது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனது கணவர் பெரும் பதட்டத்தில் இருந்தார். மார்பு வலிக்கிறது என்று கூறிக்கொண்டே இறந்து போனார்” என்கிறார் சுக்தேவ் சிங்கின் மனைவி சுர்ஜித் கவுர்.
2. உத்திரப் பிரதேசத்தின் புலன்ஷ்தார் பகுதியைச் சேர்ந்த மாணவன் சுமித். இவனது தந்தை எல்லைப் பாதுகாப்பு படையில் பணிபுரிகிறார். செல்லாத நோட்டு காரணமாக தனது தாய் சில்லறை நோட்டுக்களை தரமறுத்ததால் சுமித் தற்கொலை செய்து கொண்டான்.
3. ஒடிசாவின் சம்பல்பூரில் இரண்டு வயது குழந்தையை சிகிச்சைக்காக ஆட்டோவில் ஏற்றிச் செல்ல ஓட்டுநர் மறுத்துவிட்டார். காரணம் பெற்றோர்களிடம் சட்டவிரோதமான 500 நோட்டு மட்டும் இருந்தது.
4. தெலுங்கானா மாநிலத்தின் செகந்தராபாத்தில் செல்லாத நோட்டுக்களை மாற்றுவதற்காக 2 மணி நேரமாக வரிசையில் நின்ற 75 வயது பெரியவர் லஷ்மி நாராயணா நிலை குலைந்து மயங்கி இறந்து போனார். கையிலிருந்த ஒன்றே முக்கால் இலட்சம் பணத்தை சேமிப்பு கணக்கில் போடுவதற்காக அவர் வங்கிக்கு சென்றிருந்தார்.
5.பீகாரின் அவுரங்காபாத்தில் வங்கி வரிசையில் நின்ற முதியவர் சுரேந்திர சர்மாவும் இறந்து போயிருக்கிறார்.
6. மத்திய பிரதேசத்தின் சட்டார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான ஹல்க் லோதி மோடி அறிவிப்பின் விளைவால் தற்கொலை செய்து கொண்டார். ராபி பருவ சாகுபடிக்கான உரங்களை வாங்குவதற்கு திட்டமிட்டிருந்த அவரிடம் மோடி அறிவித்த செல்லாத நோட்டுக்கள் மட்டுமே இருந்தன.
7. உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அசிஸ் அன்சாரி எனும் 60 வயது தொழிற்சாலை தொழிலாளி, வங்கி வரிசையில் நோட்டை மாற்றுவதற்காக நிற்கும் போது மாரடைப்பால் மரணமடைந்தார்.
8. கிழக்கு உத்திரப்பிரதேசத்தின் ஜலூன் பகுதியைச் சேர்ந்த ரகுநாத் வர்மா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். அவரும் வங்கி வரிசையில் மரணமடைந்தார். “திருமண செலவுகளுக்காக கையில் இருக்கும் 2 இலட்சத்தை மாற்றுவதற்காக அவர் மூன்று நாட்களாக வங்கி சென்று வந்தார். வங்கி மேலாளரின் காலில் விழுந்து கெஞ்சினாலும் பலனில்லை”, என்கிறார் அவரது மகன் ரவி.
9. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரான மகேஷ் சர்மாவிற்கு சொந்தமான கைலாஷ் மருத்துவமனையின் கிளை ஒன்று, மேற்கு உத்திரப்பிரதேசத்தின் புலன்ஷாரில் இருக்கிறது. நோய்வாய்ப்பட்ட குழந்தை ஒன்றை சேர்க்கும் போது மருத்துவமனை நிர்வாகம் பத்தாயிரம் ரூபாயை முன்பணமாக கட்டுமாறு பெற்றோரிடம் சொன்னது. மோடியின் செல்லாத நோட்டுக்கள் மட்டுமே வைத்திருந்த பெற்றோர் கதறியும் நிர்வாகம் ஏற்கவில்லை. குழந்தை இறந்து போனது.
10. தில்லியைச் சேர்ந்த 24 வயது ரிஸ்வானா மூன்று நாட்களாக செல்லாத நோட்டுக்களை மாற்ற முடியவில்லை என்ற அதிர்ச்சியில் மின் விசிறியில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11. குஜராத்தின் சூரத்தில் இரு குழந்தைகளின் 50 வயது தாய் ஒருவர், தற்கொலை செய்து கொண்டார். காரணம் கடைக்காரர்கள் மோடியின் செல்லாத நோட்டுக்களை பெற மறுத்ததால் தனது குடும்பத்திற்கு தேவையான உணவை அவரால் அளிக்க முடியவில்லை.
12. வங்கி சென்று புதிய நோட்டு பெறமுடியாமல் தனது சகோதரன் திரும்பியதைக் கண்டு மனமுடைந்த மேற்கு உத்திரப்பிரதேசத்தின் ஷாம்லியைச் சேர்ந்த 20 வயது ஷாபனா, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
13. கர்நாடகா மாநிலத்தின் சிக்பல்லபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், தனது குடிகார கணவனுக்குத் தெரியாமல் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த 15,000 ரூபாய் பணத்தை இருப்பு வைக்க வங்கிக்குச் சென்றார். அங்கே யாரோ அவரது பணத்தை திருடியதையடுத்து தற்கொலை செய்து கொண்டார்.
14. சட்டீஸ்கரின் ராஜ்காரைச் சேர்ந்த 45 வயது விவசாயி ஒருவர் மூன்று நாட்களாக வங்கி சென்றும் 3,000 ரூபாயை மாற்ற முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டார். அந்த பணத்தை தமிழகத்தில் மாட்டிக் கொண்ட தனது குழந்தைகளுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தார்.
15. குஜராத்தின் லிம்பிடி நகரைச் சேர்ந்த 69 வயது பெரியவர் செல்லாத நோட்டுக்களை மாற்றுவதற்காக இந்தியன் வங்கிக் கிளை ஒன்றில் நிற்கும் போது நிலை குலைந்து மாரடைப்பால் காலமானார்.
16. கான்பூரைச் சேர்ந்த யாருமற்ற ஒரு முதிய பெண் பணத்தை எண்ணும் போது மரணமடைந்தார். அவரது உடலருகே மோடி அறிவித்த செல்லாத நோட்டுக்கள் 2.69 இலட்சம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
17. அதே கான்பூரில் ஒரு இளைஞர், மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு வந்து காலமானார். அதற்கு முந்தைய தினம்தான் பல மாதங்களாக விற்காமல் இருந்த அவரது நிலம் விலை பேசப்பட்டு ரூ 70 இலட்சத்தை முன்பணமாக பெற்றிருந்தார்.
18. செல்லாத நோட்டுக்களை வைத்திருந்த காரணத்திற்காக மும்பை மருத்துவமனை ஒன்று புதிதாக பிறந்த குழந்தை ஒன்றை சிகிச்சைக்காக சேர்க்க மாட்டோம் என்று மறுத்தது. அதனால் குழந்தை இறந்து போனது. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பழைய பணம் செல்லுபடியாகும் என்று மோடி அறிவித்திருந்தார்.
19. ஆந்திராவின் விசாகப்பட்டனத்தைச் சேர்ந்த கோமலி எனும் 18 மாதக் குழந்தை இறந்து போனது. குழந்தையின் பெற்றோர் மருந்து வாங்குவதற்காக புதிய நோட்டுக்கள் தரவில்லை என்று மருத்துவமனை மறுத்துவிட்டது.
20. உத்திரப் பிரதேசத்தின் மனிபுரியில் இருந்த மருத்துவர்கள் ஒருவயது குழந்தையான குஷ்ஷின் அதிக காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். பழையை 500, 1000 நோட்டுக்கள் மட்டும் வைத்திருந்ததால் பெற்றோர்கள் வேறு வழியின்றி குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்ததும் அது மரணமடைந்தது.
21. ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் ஒரு பிறந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. குழந்தையின் தந்தையான சம்பலால் 500, 1000 நோட்டுக்களுக்குப் பதில் 100 ரூபாய் நோட்டுக்களை ஏற்பாடு செய்து கொண்டு வரும்போது குழந்தை மரித்துவிட்டது.
22. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சலவைத் தொழில் செய்யும் பெண்மணி வங்கிக் கணக்கில் தன்னிடம் உள்ள இரு 1000 ரூபாய் நோட்டை போடச் சென்றார். அப்போது அந்த நோட்டுக்கள் செல்லாது என்று சிலர் சொன்ன போது என்ன ஏது என்று புரியாமல் அதிர்ச்சியடைந்து மரணமடைந்தார்.
23. தெலுங்கானாவின் மகுபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது கண்டுக்குறி வினோதா தன்னிடம் உள்ள சேமிப்பு பணமான 55 இலட்சம் ரூபாய் செல்லாது என்று அறிந்த போது தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்ப நிலத்தை விற்று அந்தத் தொகை மூலம் கணவரின் சிகிச்சை, மகளின் வரதட்சணை, மற்றும் ஒரு சிறு நிலத்தை வாங்குவதற்கும் அவர் திட்டமிட்டிருந்தார்.
24. மேற்கு வங்கத்தின் ஹவ்ராவைச் சேர்ந்த ஒரு கணவன் அவனது மனைவியான மது திவாரியை கொலையே செய்து விட்டான். செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு அவனது மனைவி ஏ.டி.எம் சென்று வெறுங்கையோடு திரும்பியதே காரணம்.
25. பீகாரின் கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது ராம் அவாத் ஷா கடும் மாரடைப்பால் காலமானார். காரணம் அவர் சேமித்து வைத்திருந்த ரூ. 35,000 பணம் மோடி அறிவித்த செல்லாத நோட்டாக இருந்ததால் அவரது வருங்கால மருமகன் அதை ஏற்க மாட்டான் என்பதே.
26. கேரளாவின் தலசேரியைச் சேர்ந்த 45 வயது உண்ணி, கேரள மின்வாரியத்தில் பணிபுரிந்தவர். மோடி அறிவிப்புக்கு முந்தைய தினம்தான் அவர் கடனாக வங்கியிலிருந்து ரூ 5 இலட்சத்த்தை வாங்கியிருந்தார். மறு தினம் இதை எப்படி மாற்றுவது என்று தத்தளித்தவர் வங்கிக்குச் சென்று பணம் செலுத்தும் சீட்டை நிரப்பும் போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து போனார்.
27. மும்பை வங்கி ஒன்றில் பழைய செல்லாத நோட்டுக்களை இருப்பு வைக்கச் சென்ற 72 வயது விஸ்வாஸ் வர்தக், மாரடைப்பால் காலமானார்.
28. தனது பண்ணையில் வேலை செய்த தொழிலாளிகளுக்கு கூலி கொடுப்பதற்காகாக வங்கி சென்று பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக வரிசையில் நின்ற பர்கத் ஷேக் மாரடைப்பால் காலமானார். குஜராத்தின் தாராபூரைச் சேர்ந்த அவருக்கு வயது 47.
29. கேரளாவின் ஆலப்புழையில் பணத்தை மாற்றுவதற்காக ஒரு மணிநேரமாக வங்கி வரிசையில் நின்ற 75 வயது முதியவர் கார்த்திகேயன் நிலை குலைந்து மரணமடைந்தார்.
30. அதே போன்று கர்நாடகாவின் உடுப்பியில் வரிசையில் நின்ற 96 வயது கோபால ஷெட்டி மரணமடைந்தார். அப்போது வங்கி திறந்திருக்க கூட இல்லை.
31. மத்தியப் பிரதேசத்தின் சாகரைச் சேர்ந்த 69 வயது வினய் குமார் பாண்டே ஒரு ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர். அவரும் நோட்டுக்களை மாற்றச் சென்ற போது வங்கியில் காலமானார்.
32. மத்தியப் பிரதேசத்தின் போபாலில், ஸ்டேட் வங்கி கிளை ஒன்றின் காசளரே இறந்து போனார். நீண்ட வரிசையில் இருக்கும் மக்களை சமாளிப்பதற்கு வங்கி ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்ய பணிக்கப்பட்டனர்.
33. உத்திரப்பிரதேசத்தின் பைசாபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மோடி அறிவிப்பைப் பார்க்கும் போதே நெஞ்சு வலிப்பதாக உணர்ந்தார். மருத்துவர் வருவதற்குள் மரணமடந்தார்.
இவை போக தமிழகத்திலும் ஏனைய இந்தியாவிலும் இறந்தவர்கள் கணக்கு நமக்கு தெரியவில்லை. வட கிழக்கு இந்தியா உள்ளிட்டு பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கிராமங்களில் பணமில்லாமல் மக்கள் படும் அவதிகள் நாளிதழ்களில் வந்திருக்கின்றன. ஆகவே இந்த கொலைப்பட்டியல் இன்னும் நீளும். அடுத்து விரலில் மை வைக்க வேண்டும் என்று தாக்குகிறார்கள். அதில் எத்தனை பேர் பலியாவர் என்பது தெரியவில்லை.
வரிசையில் நின்று மரிக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் நாம் வீதியில் இறங்க வேண்டும். அரசையும் பொருளாதாரத்தையும் பாசிச மயமாக்கி வரும் மோடி அரசை தூக்கி எறியாமல் இந்தியாவில் அமைதியோ, வாழ்வோ வரப்போவதில்லை.
மே.வங்கத்தின் சிங்கூரில் டாடாவின் நானோ கார் திட்டத்துக்காக விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை 12 வாரங்களுக்குள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டுமென கடந்த ஆகஸ்டு 31-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு சிங்கூர் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அவர்களுக்குத் திரும்பக் கிடைத்துள்ளபோதிலும், நாடு தழுவிய அளவில் முக்கியத்துவம் பெற்ற சிங்கூர் விவசாயிகளின் போராட்டம் எழுப்பிய மையமான கேள்விக்கு நீதித்துறை இதுவரை விடையளிக்கவில்லை. சிங்கூர் விவசாயிகளின் போராட்டமானது தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல்போயுள்ளதோடு, அப்போராட்டத்தைச் சட்டவாதத்தில் மூழ்கடிப்பதுதான் இப்போது நடந்துள்ளது.
நிலப்பறிப்புக்கு எதிராக சிங்கூர் விவசாயிகளின் போராட்டம். (கோப்புப்படம்)
சிங்கூர் நிலப்பறிப்புக்கு எதிரான வழக்கானது இரண்டு முக்கிய விவகாரங்களைக் கொண்டதாகும். ஒன்று, போலி கம்யூனிச இடதுசாரி அரசாங்கம் டாடாவின் நானோ கார் திட்டத்திற்காக விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்ததைப் பற்றியது. இரண்டாவது, விவசாயிகளின் போராட்டத்தைத் தனது அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டு 2011-இல் ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கம், சிங்கூர் விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி அளிக்கும் நோக்கத்துடன் நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து டாடா நிறுவனம் தொடுத்துள்ள வழக்கு பற்றியது. முந்தைய ‘இடதுசாரி ‘அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கையகப்படுத்தப்பட்ட நிலமானது தனக்குச் சொந்தமானது என்றும், மம்தா அரசின் சட்டமானது ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் டாடா நிறுவனம் தொடுத்துள்ள வழக்கு இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தற்போது, சிங்கூரில் விளைநிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதைப் பற்றிய வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோபால கவுடா, அருண் மிஸ்ராஆகியோர் வெவ்வேறு காரணங்களைக் கூறி தனித்தனியாகத் தங்கள் தீர்ப்பை எழுதியுள்ளனர். நீதிபதி கோபால கவுடா, “1894 -ஆம் ஆண்டின் சட்டத்தில் பிரிவு 3 (எஃப்) இல் குறிப்பிட்டுள்ள ‘பொது நோக்கத்திற்காக’ (Public Purpose) என்கிற விதி சிங்கூரில் நிலம் கையப்படுத்தப்பட்டதற்குப் பொருந்தாது. ஏனெனில், இந்த நிலம் ஒரு தனியார்முதலாளி தொழில் தொடங்குவதற்காகத் தரப்பட்டுள்ளதால் இதில் ‘பொதுநோக்கம்’ என்பது அறவே இல்லை”என்று தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
நீதிபதி அருண் மிஸ்ரா, “ஒரு தனியார் முதலாளித்துவ நிறுவனம் தொழில் தொடங்குவதற்காக விவசாயிகளிடமிருந்து நிலத்தை அரசு கையகப்படுத்தி அளிப்பது என்பதில் ‘பொதுநோக்கம்’அடங்கி இருக்கிறது. ஒரு முதலாளி தொழில் தொடங்குவதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, பொருளுற்பத்தியும் பெருகி நாட்டில் வளர்ச்சி ஏற்படுகிறது” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நிலைக்குமா? நீடிக்குமா?: பறிக்கப்பட்ட நிலம் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் சிங்கூர் விவசாயிகள்.
இரண்டு நீதிபதிகளும் பொதுப் பயன்பாடு பற்றி முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், 1894-ஆம் ஆண்டு சட்டத்தின் பகுதி 7-இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள், நிலம் கையகப்படுத்தப்பட்டபோது சரியாகப் பின்பற்றப்படாததால் சிங்கூரில் நிலங்களைக் கையகப்படுத்தியது செல்லாது என்று இத்தீர்ப்பை அளித்துள்ளனர். மற்றபடி, சிங்கூர் விவசாயிகளின் போராட்டம் எழுப்பிய ”எது பொதுப்பயன்பாடு?” என்ற மையமான கேள்விக்கு நீதித்துறை இன்றுவரை விடையளிக்காமல் நழுவிக் கொண்டுள்ளது.
1894-ஆம் ஆண்டின் காலனிய காலத்து நிலம் கையகப்படுத்தல் சட்டப்படி, ”பொதுப் பயன்பாட்டுக்காக” எந்த நிலத்தையும் அரசாங்கம் கட்டாயமாக அபகரித்துக் கொள்ளலாம். அன்று ரயில்வே துறைக்காக நிலங்களைக் கையகப்படுத்த வெள்ளைக்காரன் கொண்டுவந்த இந்தச் சட்டத்தைக் கொண்டுதான், போலி சுதந்திரத்துக்குப் பின்னர் ரயில்வே, அணைகள், சுரங்கங்கள், மின் நிலையங்கள் முதலான அரசுத்துறை நிறுவனங்களை அமைக்க இந்திய ஆட்சியாளர்கள் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தினர். பொதுப் பயன்பாட்டுக்கானது, நாட்டின் வளர்ச்சிக்கானது என்ற நோக்கில்தான் தங்கள் நிலங்களை விவசாயிகளும் கொடுத்தனர். தோற்றத்திலாவது பொதுப் பயன்பாடாக இருந்த நிலை தனியார்மய – தாராளமயத்துக்குப் பிறகு இப்போது அடியோடு மாறிவிட்டது. தொழில் வளர்ச்சியைச் சாதித்து வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி, தனியார் முதலாளிகளுக்கு அளிப்பதில் தவறில்லை – இதுதான் ”பொதுப்பயன்பாடு” என்று அரசு இப்போது விளக்கமளிக்கிறது. பொதுப்பயன்பாடு என்ற பெயரில் நடக்கும் இந்தக் கார்ப்பரேட் கொள்ளையும் அடக்குமுறையும்தான் விவசாயிகளும் உழைக்கும் மக்களும் எதிர்த்துப் போராட வேண்டிய மையமான விசயமாக உள்ளது.
சிங்கூர், நந்திகிராமம், கலிங்காநகர் – என நாடெங்கும் தொடர்ந்த விவசாயிகளின் போராட்டத்தால் பொதுக் கருத்து வலுப்பட்டு, முதலாளித்துவ ஊடகங்களே ”பொதுப்பயன்பாடு” என்ற பெயரில் அரசாங்கமானது பெருமுதலாளிகளுக்கு விளைநிலங்களைப் பிடுங்கிக் கொடுக்கும் அடியாள் வேலை செய்வதை அம்பலப்படுத்தின. நாடெங்கும் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகளின் வீரியமான போராட்டத்தின் காரணமாகவே அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு கூட்டணி அரசு 2013-ஆம் ஆண்டு “நிலம் கையப்படுத்தல், மறுகுடியமர்த்தம், மறுவாழ்வு, சட்டத்தை (LARRA-2013) நிறைவேற்றியது.
கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கூட்டணியை வீழ்த்தி பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. விவசாயிகளின் போராட்டத்தால் சிங்கூரிலிருந்து வெளியேறிய டாடா நிறுவனத்தை அழைத்து நானோ கார் தொழிற்சாலை தொடங்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த அன்றைய குஜராத் முதலமைச்சரான மோடி, இப்போது பிரதமராகியுள்ளார். இப்பேர்பட்ட மோடி, ”பொதுப் பயன்பாட்டுக்காக” விவசாய நிலங்களை ஆக்கிரமித்து நூறு பொலிவுறு நகரங்கள் (Smart Cities) அமைக்கப் போவதாக அறிவித்தார். மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த 2013-ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் பிரிவு 3 (இசட்-ஏ) விதிகள், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கத் தடையாக இருப்பதால், அச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து முந்தைய காலனிய காலச் சட்டத்தையே நிலைநாட்டும் வகையில் புதிய சட்டத்தை மக்களவையில் கொண்டுவந்து நிறைவேற்றத் துடித்தார். அரசுத்துறைகளுக்கு மட்டுமின்றி, எந்தவொரு தனியார் முதலாளிக்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்த விவசாயிகளின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை, இதற்கெதிராக பாதிக்கப்பட்டோர் வழக்கு தொடுக்க முடியாது என்பதுதான் மோடி கொண்டுவரத் துடிக்கும் புதிய சட்டத்தின் சாரம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள மோடி கும்பலின் நிலம் கையகப்படுத்தல் திருத்தச் சட்டம் எனும் கொடிய பாசிச சட்டமானது விவசாயிகளின் தலைக்குமேல் கத்தியாக இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், டாடா நிறுவனமோ, சிங்கூரில் 900 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்குப் பெற்று ‘இடதுசாரி’ அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதையும், அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துமாறும் வழக்கு தொடுத்திருக்கிறது. நிலுவையில் உள்ள அந்த வழக்கு விசாரணைக்கு வந்து, குத்தகை ஒப்பந்தம் சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் இன்னுமொரு அமர்வு தீர்ப்பளித்தால் என்னவாகும்? நீண்ட போராட்டத்தின் மூலம் சிங்கூர் விவசாயிகளுக்கு நிலம் கிடைத்தாலும், வேறொரு தீர்ப்பின் மூலம் அந்த நிலங்கள் பறிக்கப்படலாம். இந்த அபாயத்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதன் மூலம் முறியடிக்க முடியாது. மோடி அரசின் கொள்கையை நாடாளுமன்றத்தின் மூலமோ, சட்டத் திருத்தத்தின் மூலமோ தடுத்து நிறுத்திடவும் முடியாது.
இந்நிலையில், ”பொதுப் பயன்பாடு” என்ற பெயரில் விளைநிலங்களையும் கனிம வளங்களையும் ஆக்கிரமிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் அடக்குமுறைக்கும் எதிராக விவசாயிகளும் உழைக்கும் மக்களும் சட்டத்துக்கு அப்பாற்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களைக் கட்டியமைப்பதே இன்று அவசர அவசியக் கடமையாக முன்நிற்கிறது.
மோடியின் நோக்கம் கருப்புப் பண ஒழிப்பு அல்ல – தோழர் மருதையன் உரை – பாகம் 3
கடந்த சில நாட்களாக நடைபெறுகின்ற விவாதத்தைக் கவனித்தால், ஒரு முக்கியமான விஷயத்தை எல்லாருமே திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றனர். அதாவது, காகிதப் பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்திற்கு முடிவுகட்ட வேண்டும்; ரொக்க பரிவர்த்தனை அற்ற பொருளாதாரத்திற்கு (Cashless Economy) மாறிக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.
அப்படி மாறிக் கொள்ளும் போதுதான் இலஞ்ச ஊழலை ஒழிக்க முடியும்; அதுதான் சர்வரோக நிவாரணி என்று வலியுறுத்துகின்றனர். இதுவரை நாம் பார்த்த விஷயங்களெல்லாம் கேஷ்லெஸ் எக்கானமி அல்லது வங்கிப் பொருளாதாரத்தில் இருக்கக் கூடியவர்கள் செய்யக் கூடிய ஊழல்தான், அதில் உருவாகக் கூடிய கருப்புப் பணம் என்பதைப் பற்றியும், மேலும் அதுதான் முதன்மையான ஊற்றுக்கண்; அதாவது கார்ப்பரேட் முதலாளிகள் என்பதை இவ்வளவு நேரம் பேசினோம்.
குளோபல் ஃபைனான்சியல் இன்டெக்ரிட்டி(Global Financial Integrity) என்ற அமைப்பு செய்த ஆய்வில், மொத்தமாக உலகளவில் சுவிஸ் வங்கி போன்ற பல்வேறு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் யார் யாருடையது, அது எவ்வளவு என்பதைக் கூறுகிறது.
அந்த ஆய்வில், அரசியல்வாதிகள் அதிகாரிகளுடைய பணம் 3 சதவீதமாகும். போதைமருந்து கடத்தல் போன்ற சட்டவிரோத அல்லது முறைகேடான தொழில்களிலிருந்து வருகின்ற வருமானம் 33 சதவீதமாகும். மீதமுள்ள 3-ல் 2 பங்கு, ஏறத்தாழ 64 சதவீத பணம் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகள், தரகு முதலாளிகள் இவர்களுடைய பணம் தான் சுவிஸ் வங்கி போன்ற பல வங்கிகளில் கருப்புப் பணமாக அமர்ந்திருக்கிறது.
உண்மை இப்படியிருக்கும்போது எல்லோரும் பேங்க் அக்கவுண்ட் ஆரம்பிக்காததும், கார்டு வழியாகப் பரிவர்த்தனை செய்து கொள்ளாததும் தான் ஒரே காரணம்; எல்லோரையும் வங்கிப் பொருளாதாரத்துக்குள் கொண்டுவர வேண்டுமென்று இவர்கள் ஏன்? இப்படி வங்கிக்குள் கொண்டுவர வேண்டுமென்று மோடி முதலில் சொல்லத் தொடங்கவில்லை. அது யுபிஏ(UPA) காங்கிரசு கூட்டணி ஆட்சிக் காலத்தில் வந்தது. அவர்கள் சொல்லும்பொழுது எல்லோருக்கும் வங்கி கணக்கு ஆரம்பித்து, இனிமேல் மானியத்தை வங்கியில் போட்டு விடுகிறோம், அங்கே வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். அதாவது மானிய விலையில் ரேசன், சிலிண்டர் கொடுக்கமாட்டோம், சந்தை விலையில் வாங்கிக் கொள்ளுங்கள், இடைப்பட்ட தொகையை அங்கேச் செலுத்திவிடுகிறோம் என்று யுபிஏ அரசு இருக்கும் போதே தொடங்கினார்கள்.
அதற்குக் கடுமையான எதிர்ப்பிருந்த காரணத்தினால் அவர்கள் அதைக் கைவிட்டார்கள். 2014 ஆம் ஆண்டு மோடி வந்த பிறகு அதையே சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள், திரும்பப் பிரச்சனையாகும் என்பதனால் மிகவும் தந்திரமாகவும், சூழ்ச்சியாகவும் என்ன செய்தாரென்றால் ‘’நான் பொருளாதாரத் தீண்டாமையை ஒழிக்க விரும்புகிறேன்’’. இந்த நாட்டில் ஆகப் பெரும்பான்மையான மக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கிறார்கள், அதனால் அவர்களுக்கு அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டும்.
வங்கிக் கணக்கு இல்லாமல் ஒரு மனிதனா? இந்தியக் குடிமகனா?. கணக்கு ஆரம்பித்தால் எல்லோருக்கும் 5000 ரூபாய் வரை கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று முதலில் ஆசையைக் காட்டுகிறார். அதற்குப் பிறகு எரிவாயு உருளைக்கு மானியம் வேண்டுமென்றால் அக்கவுண்ட் இருந்தால் தான் கிடைக்கும் என்ற கட்டாயத்தை உருவாக்குகிறார்.
இன்றைக்கு உணவுக்கு அதாவது ரேசனுக்கும், ரேசன் கடைக்குப் பதிலாக ரேசன் மானியம் வரப் போகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் வங்கிக் கணக்குகளை 23 கோடி பேர் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதைச் சாதனையாகக் கூறிக் கொள்கிறார்கள். இதெல்லாம் மோசடியான (Fraud) கணக்கு. வங்கி ஊழியர்களே 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் என்று போட்டுத் தொடங்கிய கணக்குகள் தான் என்பது அம்பலமாயிருக்கிறது.
அந்தக் கணக்குகளில் யாரும் பரிவர்த்தனை செய்து கொள்வதில்லை, அதெல்லாம் செயல்படாத கணக்குகள் (Dead Account) என்பதும் அம்பலமாயிருக்கிறது. இருந்தாலும் கூட எப்படியாவது வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்ய வைக்க வேண்டும் என்ற முயற்சியிலே இவர்கள் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். தினமலர் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியிட்டனர். செல்போன் ஆப் (Mobile App) வழியாக காய்கறிகள் வாங்கலாம், பூக்காரம்மாவுக்கு பணம் கொடுக்கலாம், எப்படி கொடுக்கலாம்? இனி எதிர்காலம் என்பது இதுதான் என்றாகிவிட்டது. அதனால் எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதைப் படம் போட்டு விளக்கம் தருகிறார்கள்.
இந்த மோடினுடைய 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பாராட்டுத் தெரிவித்து முழுபக்க அளவிற்கு விளம்பரம் கொடுத்திருக்கிறது பேடிஎம்(Paytm). செல்போன் முலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான கேட்வே(Gateway) நிறுவனம். இவர்களெல்லாம் விளம்பரம் கொடுத்துக் கொண்டாடுவது ஏன்? மக்களை வங்கிக் கணக்கு தொடங்கென பிடித்து நெட்டித் தள்ளுவது ஏன்? என்பதுதான் கேள்வி. பெரும்பான்மையான உழைக்கும் மக்களும் சரி, சிறு வணிகர்களும் சரி வங்கிப் பொருளாதாரத்திற்கு வெளியே இருக்கிறார்கள்; பணப் பொருளாதராத்தில் இருக்கின்றனர். அவர்களைக் கட்டாயமாக வங்கிப் பொருளாதாரத்திற்குள் கொண்டு வருவதற்கு வேறு எந்த காரணத்தையும் இவர்களால் சொல்ல முடியவில்லை. திரும்பத் திரும்ப என்ன சொல்கின்றனர் என்றால் ரொக்க பரிவர்த்தனையற்ற பொருளாதாரத்தில்தான் ஊழல் ஒழியும் என்கிறார்கள். அது எப்படி ஒழியும்?
இதைப் பார்ப்பவர்கள், கேட்பவர்களிடம் எப்படி விளக்குகின்றனர் என்றால் எல்லாமே ஏ.டி.எம் கார்டை தேய்ப்பதாக வந்துவிட்டால் ஆர்.டி.ஓ ஆபிசில் எப்படி இலஞ்சம் வாங்குவார்கள்? அதைப் பற்றி இவர்கள் கவலைப்படத் தேவையேயில்லை. அதற்கும் அவர்கள் வழி கண்டுபிடிப்பார்கள். தேர்தல் கமிசன் கெடுபிடிகள் எல்லாம் தொடங்கிய போது பணம் அப்படி கொடுக்க முடியாது, இப்படி கொடுக்க முடியாது, பறக்கும் படை, அந்த படை, இந்த படையென்று சொன்னார்கள். அதையெல்லாம் தாண்டி டோக்கன் கொடுத்து பணம் எப்படி வினியோகிப்பது எப்படி என்பதை ஓட்டுக்கட்சிகள் கண்டுபிடித்ததை போல இலஞ்சம் வாங்குவதற்கும் கொடுப்பதற்குமான வழிகளை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்.
இலஞ்சம் எப்படி வாங்குவது என்பதை ஆர்.டிஓ ஆபிசில் பார்க்கக் கூடாது. வேறு எங்கே பார்க்க வேண்டும்? இலஞ்சம் வேண்டுமென்பது அதானியின் தேவை. அதானிக்கு நத்தம் விஸ்வநாதன் இருந்தால்தான் 5,000 கோடி திருட முடியும். அம்பானிக்கு மோடி இருந்தால் தான் பல்லாயிரம் கோடிக்கணக்கான இயற்கை வளங்களை சூறையாட முடியும். 4G மாதிரி அலைக்கற்றைகளை அடிமாட்டு விலைக்கு அபகரிக்க முடியும்.
இப்படியாக அந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலஞ்சம் ஊழல் என்பது தேவை. முதலாளித்துவ சுரண்டல், முதலாளித்துவ அமைப்பு என்பது இலகுவாக இயங்குவதற்கு, அவர்களுக்கு இந்த அரசு இயந்திரம் வேலை செய்ய வேண்டுமானால், அந்த குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிட்டி புள்ளி விவரத்தில் சொன்னதுபோல 3% தான் அரசியல்வாதிகள் அதிகாரவர்க்கத்தினரின் பணம். 64% என்பது கார்ப்பரேட் முதலாளிகளுடைய பணம். இந்த 64% கருப்புப் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வளர வேண்டும் என்று சொன்னால் அந்த 3% இலஞ்ச ஊழல் பணம் நிரந்தரமாக கிடைக்கும்படி இருக்க வேண்டும். அதை உத்திரவாதப்படுத்தும் பொறுப்பு டாடாவிற்கும், பிர்லாவிற்கும், அம்பானிக்கும், அதானி, மிட்டல் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இருக்கிறது. இங்கே கார்டு தேய்ப்பது வந்தால் அங்கே ஊழல் ஒழிந்து விடும் என்று சிந்திப்பதைப் போல முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை.
எல்லா மக்களையும் வங்கிக் கணக்கிற்குள் கொண்டு வருவதற்க்கான நோக்கம் என்ன? பெரும்பான்மை மக்களை வரி கட்ட வைப்பது தான் என்னுடைய நோக்கம் என்று அருண் ஜேட்லி தெளிவாகச் சொல்கிறார். அப்படியென்றால் பெரும்பான்மை மக்கள் இப்போது வரி கட்டாமலா இருக்கின்றனர்? இன்கம்டாக்ஸ் கட்டாதவர் தான் வரி கட்டாதவரென்று பலர் நினைக்கலாம். ஆனால் மறைமுக வரிகளாக நாம் எண்ணற்ற வரிகளைக் கட்டிக் கொண்டு இருக்கிறோம்.
இப்போது வரிகளை எல்லாம் ஒருங்கிணைத்து கொண்டு வரப்பட்டிருக்கிற ஜி.எஸ்.டி(GST)-ல் அதிகபட்ச வரி 28% என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் எஜூகேசன் செஸ், அந்த செஸ், இந்த செஸ்னு வாங்குவாங்க. இதல்லாமல் ஐ.டி. போன்ற நிறுவனங்கள், வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மறைமுக வரியாக இதை செலுத்துகின்ற அதே நேரத்தில் நேர்முக வரியாக வருமான வரியும் செலுத்துவார்கள்.
அப்படி அவர்கள் செலுத்தும் வரி என்பது கணிசமாகப் பார்த்தால் 30-40% இருக்கும். ஆனால் முதலாளிகள் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள்? முதலாளிகள் செலுத்துகின்ற அதிகபட்ச நேர்முக வரி என்பது 30% . உலகத்திலேயே மிகக் குறைவான நேர்முக வரி விதிப்பு உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா.
தனியார்மய, தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட தொடங்கிய 1994-1995 காலம் முதல் இன்று வரை யாருக்கு வரி குறைக்கப்பட்டிருக்கிறது, யாருக்கு வரி கூட்டப்பட்டிருக்கிறது என்பதை பரிசீலித்துப் பாருங்கள். சாதாரண உழைக்கும் மக்களுக்கு வரிப் படிப்படியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு உதாரணம் சொல்கிறேன். சேவை வரி என்பது ஒரு வரி. இப்போது நாம் செல்பேசியிலிருந்து ரீசார்ஜ் செய்கின்றோம், டாப் அப் செய்கின்றோம். அதற்கு அந்த சேவையை வழங்குவதற்காக அவனுக்கு காசு கொடுக்கின்றோம். விவரமாகப் பார்த்தால், அரசாங்கத்திற்கு அவன் வழங்குகின்ற சேவைக்குப் பணம் கொடுத்து தான் நாம் வாங்குகிறோம். சேவை வரி என்ற வரியை நாம் யாருக்கு கொடுக்கிறோம்? எதற்காகக் கொடுக்கிறோம்? ஏன் அவ்வளவு தொகையை அங்கே வாங்குகிறார்கள்? ஓட்டல் பில் முதல் எல்லா துறைகளுக்கும் சேவை வரி வந்து விட்டது. அது ஒரு உதாரணம்.
ஆனால் இதே காலக்கட்டத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் சூப்பர் டாக்ஸ் என்று இருந்த காலகட்டம் எல்லாம் உண்டு. மிகப்பெரிய பணக்காரர்களின் வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் போனால், 80-90% வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலையெல்லாம் இருந்தது.
ஆனால் அந்த வரிவிதிப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டு 30% சதவீதத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். வரியைக் குறைப்பதற்கு சொல்லப்பட்ட இரண்டு காரணங்களை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். வருமான வரியை அல்லது நேர்முக வரியை, மூலதனத்தின் மீதான வரியை முதலாளிகளின் மீதான வரியை குறைத்தால் தான் அந்நிய முதலீட்டாளர்கள் அல்லது முதலாளிகள் முதலீடு போடுவார்கள். தொழில் தொடங்குவார்கள். அதனால் வரி போடக் கூடாது என்பது ஒரு வாதம்.
இரண்டாவது என்ன? அரசாங்கம் அதிகமாக 60,70.80% என்று வரி விதிப்பதால் தான் வரி ஏய்ப்பு செய்கிறார்கள். அதனால் நீங்கள் வரியைக் குறைவாக வைத்தீர்கள் என்றால் முதலாளிகள் நேர்மையாக வரியைக் கட்டி விடுவார்கள். நீங்கள் நேர்மையற்ற முறையில் அடாவடியாக அதிகமாக வரியை விதித்ததால்தான் இந்த வரி ஏய்ப்பு என்ற சிந்தனையே முதலாளிகளுக்கு வருகிறது என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.
ஆனால், தனியார்மய தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்ட இந்த காலகட்டத்தில் சாய்நாத் போன்ற எழுத்தாளர்கள் பலரது ஆய்வின் படி சராசரியாக ஆண்டிற்கு 5 இலட்சம் கோடி அளவிற்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரி விலக்கு அளிக்கபட்டிருக்கிறது. ஆண்டுதோறும் வரி குறைக்கப்பட்டிருகிறது.
இதனால் தான் 90% ல் இருந்து 30% க்கு வந்து விட்டது வருமான வரி. அப்படி குறைத்த பிறகு கருப்புப் பணம் குறைந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் கருப்புப் பணம் பன்மடங்கு அதிகமாகிவிட்டது என்பது தான் ஆய்வுகள் கூறுகின்ற தகவல்.
இப்படி 90% ல் இருந்து 30% வரிக் குறைக்கப்பட்டிருப்பதை நாம் எப்படிப் பார்ப்பது? 90% வரி முடியாது. சரி 80% ஆக குறைக்கிறோம்,அப்புறம் 60% ,50%, 40% ஆக குறைக்கிறோம். அப்படியும் கட்ட முடியாது என்று சொல்லச் சொல்ல அவர்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை வெள்ளை என்று ஒத்துக் கொள்கிறோம்; மிச்சத்துக்காகவாவது கட்டுங்க என்று கருப்புப் பணத்தை வெள்ளை என்று அங்கீகரிக்கிறது இந்த அரசாங்கம்.
அவை வெறுமனே வரி குறைப்பு மட்டுமல்ல. சில வரிகளை மூலதன ஆதாய வரி, வெல்த் டாக்ஸ் போன்றவை முற்றிலுமாக அகற்றப்பட்டிருக்கின்றன. ஆக முதலாளிகள் , நான் வரி கட்ட முடியாது கருப்புப் பணம் தான் வைத்துக்கொள்வேன் என்று சொல்லும் போது அரசாங்கம் மண்டியிட்டு அவர்கள் முன் தாள் பணிந்து நீங்கள் வைத்திருக்கும் கருப்புப் பணத்தை இவ்வளவு ரூபாய் வரைக்கும் நாங்கள் வெள்ளை என்று ஒத்துக் கொள்கிறோம் என்று இறங்கி வருகிறது; அப்படி இறங்கி வந்து வந்து இனி வரியே கட்ட வேண்டாம், வரி என்று ஒன்றும் உங்களுக்கு கிடையாதுப்பா என்று சொன்னாலும் இந்த முதலாளிகள் திருப்தி அடையப் போவதில்லை.
சென்னையில் இருந்த நோக்கியா நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணற்ற சலுகைகள் வழங்கப்பட்டது அந்நிறுவனத்திற்கு. அவர்கள் போட்ட மூலதனத்திற்கு மேல் பலமடங்கு இலாபம் அடைந்து விட்டார்கள். எல்லாம் முடிந்த பிறகு 22,000 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என்று கேட்ட போது, முடியாது என்று சொல்லி கம்பெனியையே மூடிவிட்டுப் போய்விட்டனர்.
இதுதான் வரி செலுத்துவதன்பால் முதலாளிவர்க்கம், பன்னாட்டு முதலாளிகள் கொண்டிருக்கின்ற அணுகுமுறை. இப்போது வரி கட்டுவது ஏன் என்று மக்களைக் கேட்டால் என்ன பதில் சொல்கின்றனர்? வரி இருந்தால் தானே அரசாங்கம் இயங்க முடியும். அப்போது தான் ரோடு போடுவார்கள். தண்ணீர் கொடுப்பார்கள். பள்ளிக்கூடம் இருக்கும். ஆஸ்பத்திரி இருக்கும். வேண்டிய வசதிகள், அடிப்படைத் தேவைகளை மக்களுக்குச் செய்து கொடுப்பார்கள் என்பதே மக்களுடைய புரிதல். ஆனால் அதெல்லாம் நமக்கு இப்போது செய்து கொடுக்கப்படுகிறதா என்றால் இல்லை. முன்பு பெயரளவிற்கு இருந்தது. இப்போது அதுவும் இல்லை.
அது ஒருபக்கம் இருக்கட்டும். முதலாளி எதற்கு வரி கட்டுகிறான் என்றால் அவன் தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொடுக்க வேண்டும். சாலை, மின்சாரம், வங்கிக் கடன் போன்ற வசதிகளை எல்லாம் அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும். இதைச் செய்து கொடுத்தால் மட்டும் போதாது. அந்த முதலாளியினுடைய தொழிலை, சொத்தைப் பாதுகாக்க வேண்டும். தொழிலாளர்களுடைய தொழிற்சங்கம் போராட்டம், கோரிக்கை என்று சொன்னால் அங்கே போய் முதலாளியின் சொத்திற்கு நாயைப் போல காவலுக்கு நிற்க வேண்டும். இது தான் அரசாங்கத்திற்கு முதலாளிகள் வரி கட்டுவதற்க்கான காரணம்.
கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், முதலாளிகளுக்கு அரசாங்கத்தால் ஏற்கனவே செய்து வந்த சேவையைக் காட்டிலும் மேலதிகமான சேவைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அவர்களுக்கு சலுகை விலையில இலவசமாக நிலம் தருவது, மின்சாரத்தை குறிப்பிட்ட காலம் வரைக்கும் இலவசமாக தருவது, குறைந்த விலையில் தருவது, தண்ணீரை இலவசமாக தருவது, இலவசமாக சாலை போட்டுக் கொடுப்பது, வங்கிக்கடனை குறைந்த வட்டிக்கு ஏற்பாடு செய்து தருவது, அவர்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பதற்கு ஏற்பாடு செய்து தருவது என்று ஒரு வேலை பாக்கி இல்லாமல் தோளில் சுமந்து தூக்கித் திரிகிறது இந்த அரசாங்கம். கடந்த 20 ஆண்டுகளாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
அதே நேரம் நமக்கு என்ன நடக்கிறது என்று சொன்னால், இதற்கு முன்பு இருந்தது போல அரசுப் பள்ளிகள் இப்போது கிடையாது, அரசு மருத்துமனைகள் இப்போது கிடையாது எல்லாமே தனியார் மருத்துவமனைகள். ஒரு சாலை கிடையாது. எல்லாமே டோல்கேட் தான். இப்படி தண்ணீர் உள்ளிட்ட எல்லாச் சேவைகளுமே காசிருந்தால் மட்டுமே என்று ஆக்கப்பட்டுவிட்டது.
அரசாங்கம் நம்மிடம் வரி வாங்கிக் கொண்டு செய்கின்ற சேவை என்று ஒன்றில்லை. என்ன மிச்சம் இருக்கிறது என்று சொன்னால்; இந்த கோரிக்கைகளுக்காகப் போராடினால் போலீசு வந்து நிற்கும்; ஆர்.டி.ஓ வந்து நிற்பாரு. போலீசையும் தாண்டிப் போனால் வேறு எதாவது துணை இராணுவப் படைகளோ, இராணுவமோ வந்து நிற்கும். இப்படி இந்தப் படைகள், மக்களை ஒடுக்குகின்ற படைகள், மக்களை ஒடுக்குகின்ற அதிகார நிறுவனங்கள், அவர்களுக்கு ஊதியம் தருவதற்கும், அவர்களைப் பாதுகாக்க, என்பதற்கு மட்டும்தான் நம்முடைய வரிப்பணம் பயன்படுத்தப்படுகிறதே தவிர, மக்களுக்கான சேவைக்கு நம்முடைய வரிப்பணம் பயன்படுத்தப்படுவதில்லை.
நம்மை ஒடுக்குகின்ற இந்த சேவை என்பது யாருக்கு ஆற்றப்படும் சேவை? இது முதலாளிகளுக்கு ஆற்றப்படும் சேவை. சிங்கூரில் போராட்டம் நடந்தால் போலீசு அங்கே அணிவகுத்து நிற்கிறது. அது யாருக்கு செய்கிற சேவை? டாடாவிற்கு செய்யும் சேவை. எஸ்.ஆர்.எம்(S.R.M), பிரபல கருப்புப் பண அதிபர். இன்றைக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொளந்து கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மோடி பின்னால் உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். மோடிக்கு முன்பாக அந்தத் தொலைகாட்சி நிகழ்ச்சியின் நெறியாளர் மோடி பேசியதையே பேசிக் கொண்டு இருக்கிறார். அப்புறம் மற்ற பங்கேற்பாளர்கள் எல்லாம் இருக்கின்றனர். கருப்புப் பணத்த ஒழிப்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர். இப்படி ஒருக் கேலிக்கூத்து வேறு எங்காவது நடக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
சில மாதங்களுக்கு முன்னால் தான் அந்த தொலைக்காட்சியின் அதிபர் உள்ளே சென்று வந்தார். துண்டு சீட்டுல ரூ.50 இலட்சமும், ஒரு கோடியும் வாங்கிக் கொண்டு மெடிக்கல் சீட்ட விற்பனை செய்த அயோக்கியத்தனத்திற்காக அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு அவரது கையாள் மதன் ஓடி விட்டார், அது எனக்குத் தெரியாது என்று கூறினார் அவர். கமிசனர் ஆபிசுக்குப் போய் மக்கள் புகார் கொடுத்தால் புகாரை எடுக்கமாட்டேன் என்கிறார்கள். புகார் பதிவு செய்ய மறுக்கிறார்கள்.
வேறுவழியின்றி பணத்தைப் பறிக் கொடுத்தவர்கள் எல்லோரும் பச்சமுத்துவின் வீட்டைத் தேடி வந்தால் அந்த வீடு இருக்கின்ற தெருவில் கூட நுழைய முடியாமல் போலீசு மறித்து நிற்கிறது. யாரைக் காப்பாற்ற? பலகோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய ஒரு கருப்புப் பண பேர்வழியைக் காப்பாற்ற!
பங்களா நாய்க்கு கறி வாங்கிப் போடுவதும் பிஸ்கட் வாங்கிப் போடுவதும் யாருடைய வேலை? அந்த நாய் யாருடைய சொத்தைப் பாதுகாக்கின்றதோ அந்த சொத்துக்குரிய முதலாளியுடைய வேலை அது. அப்படி இந்த அரசை, தன்னுடைய சொத்தை காவல் காக்கின்ற, தன்னுடைய சொத்தை பெருக்குவதற்கு கையாள் வேலை பார்க்கின்ற இந்த அரசு , அதற்கு கூலி கொடுக்க வேண்டியது, வரி கட்ட வேண்டியது இதனால் ஆதாயம் அடைகின்ற முதலாளி வர்க்கத்தின் பொறுப்பு.
ஆனால் இந்தப் பங்களா நாய்கள் யார் மீது ஏவி விடப்படுகிறதோ அந்த மக்கள் அல்லது அந்த முதலாளியிடம் அடிமைகளாக, தொழிலாளிகளாக வேலை பார்க்கின்ற மக்களாகிய நீங்கள் தான் அந்த நாயை சோறு போட்டு வளர்க்கணும். நம்மையே கடிக்கின்ற நாய்க்கு நாமே சோறு போட்டு வளர்க்கணும். அதாவது இந்த அரசாங்கம் மக்களுக்கு எதிராகத் தான் இருக்கும், முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவாகத் தான் இருக்கும். ஆனால் அந்த அரசாங்கத்திற்கான சம்பளத்தை எல்லாம் மக்கள் தங்களுடைய வரிப்பணத்தில் இருந்து மட்டும் தான் கொடுக்கணும். முதலாளிகள் 5 காசு ஈயமாட்டார்கள் என்பது தான் இப்போதைய கொள்கை.
வரி வலையை அகலமாக்குவோமே ஒழிய ஆழமாக்க முடியாது என்பதுதான் மோடி அரசின் கொள்கை. ஆழமாக்குவது என்றால் அதிக பணம் வைத்திருக்கின்ற பெரு முதலாளிகள் மீதான வரியை அதிகப்படுத்துவது. வரி வலையை அகலப்படுத்துவது என்றால் என்ன? பெரு முதலாளிகளை விட்டுவிட்டு, ஐந்து, பத்து சம்பாதிப்பவர்களைக் கூட கட்டாயப்படுத்தி அரசுக்கு வரி கட்ட வைப்பது. அதற்காகத்தான் நம்மை ரொக்க பொருளாராத்திலிருந்து வங்கி பொருளாதாரத்திற்கு வருமாறு மோடி அழைக்கிறார், அருண் ஜேட்லி அழைக்கிறார்.
இப்படி வங்கி பொருளாதாரத்திற்கு போவதால் வரும் நன்மை என்ன? ஏனென்றால் இப்போது பேசும் போதே எப்படி சொல்கிறார்கள் என்றால் ரொக்க பரிவர்த்தனை என்பதே சட்டவிரோதமானது, கிரிமினல் அயோக்கியத்தனம் போலவும் வங்கிப் பொருளாதாரம் என்பது சட்டப்பூர்வமானது, யோக்கியர்கள் செய்வது போலவும் பேசுகிறார்கள். ஆனால் உண்மை என்ன என்பதை இதுவரை பார்த்தோம். வங்கி சார்ந்த பொருளாதாரத்தில்தான் பெருங் குற்றங்கள் நடக்கின்றன.
சிறு வணிகர்கள், அவர்களிடம் வாங்கும் சாதாரண மக்கள் போன்றோர் வங்கிப் பொருளாதாரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டுவிட்டால் என்ன நடக்கும்? மக்கள் அனைவரின் விவரங்களும் அரசின் கைக்குள் செல்லும். அது மட்டுமல்ல, அரசிடம் ஆதார் அட்டை – உலகில் வேறு எங்குமே இல்லாத பயோ மெட்ரிக் கார்டு – இருக்கிறது. கை ரேகையையும், கருவிழி ரேகையையும் பதிவு செய்கின்ற அட்டை அது. இது மொத்த மக்களையும் குற்றவாளிகளாக ஆக்குகின்றன அட்டை. ஒரு கண்காணிப்பு அரசை உருவாக்குவதற்கு இதை ஒரு சோதனையாக இந்தியாவில் செய்கிறார்கள்.
இந்த அட்டை வரும்போது என்ன சொன்னார்கள். பல்வேறு தனித்தனி அட்டைகளை வைத்து சிரமப்படவேண்டாம், இந்த அட்டையை மட்டும் காட்டினால் போதும் வேலை முடிந்துவிடும் என்று சொன்னவுடன் மக்கள் அதை ஏற்றார்கள். இந்த அட்டை இருந்தால் நமக்கு ஒரு பாதுகாப்பு என்று நம்பினார்கள். பிறகு என்ன நடந்தது?
ஆதார் அட்டை இருந்தால்தான் வங்கிக் கணக்கு துவங்க முடியும், காஸ் மானியம் கிடைக்கும், ரேசன் கார்டு கிடைக்கும், இனி ஆதார் அட்டை இருந்தால்தான் கட்டணக் கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க முடியும் என்ற நிலை வரப்போகிறது. அப்படி ஆதார் அட்டை என்பது எல்லாவற்றுக்குமானதாக மாற்றப்பட்டுவிட்டது. இனி ஆதார் அட்டையும் வங்கிக் கணக்கும் இணைக்கப்படும். ஏற்கனவே சொன்ன தினமலர் விளம்பரம் போல, உங்கள் வங்கிக் கணக்கை செல்பேசிக்குள் கொண்டு வாருங்கள், செல்பேசி செயலி மூலம் உங்களது பரிவர்த்தனையை செய்து கொள்ளுங்கள் என்கிறார்கள்.
செல்பேசி யாரிடம் இருக்கிறது? 4 ஜி-யினுடைய ஆகப்பெரும்பான்மையான கட்டுப்பாடு அம்பானியின் கையில் இருக்கிறது. ஆக செல்பேசி, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு அனைத்தும் ஒரு வலைப்பின்னலில் கொண்டு வரப்படும். அரசாங்கமும் அம்பானியும் ஏற்கனவே ஒரு வலைப்பின்னலில்தான் இருக்கிறார்கள்.
ஆக மக்களுடைய நடவடிக்கைகள், நிதி நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்படும், கட்டுப்படுத்தப்படும். வரி விதிப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
– தொடரும்
ஆடியோ : ஆடியோவை தரவிறக்கம் செய்ய சுட்டியில் வலது பொத்தானை அழுத்தி சேவ அஸ் ஆப்சனை தெரிவு செய்யவும்.