Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 526

ஜெய் அதானி ! ஜெய் அம்பானி ! ஜெய் டாடா ! ஜெய் ஸ்ரீராம் ! கேலிச்சித்திரம்

0
கருப்பு_மோடி வித்தை Slider

ஜெய் அதானி ! ஜெய் அம்பானி !! ஜெய் டாடா !!! ஜெய் ஸ்ரீ ராம் !!!!

கருப்பு_மோடி வித்தை

கருப்பை வெள்ளையாக்கும் மோடி வித்தை. வித்தைகள் தொடரும்…

படம் : துரை

இணையுங்கள்:

மோடி ஆசியுடன் 500 கோடி கருப்பு பணத்தில் ரெட்டி திருமணம்

1
janardhan_redding wedding 2
பெல்லாரியில் உள்ள ரெட்டியின் வீடும் வீட்டிற்கு பின்புறம் உள்ள மலை ஒன்றையும் சேர்த்து அலங்காரம் செய்துள்ளார்கள்.

நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசின் அறிவிப்பிற்கு பின் மக்கள் நிம்மதியாக தூங்குவதாகவும், கருப்பு பண முதலைகளின் தூக்கம் தான் கெட்டுவிட்டதாகவும் மோடி சொன்னார். ஆனால் உழைக்குமக்கள் ( நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகள்) தினசரி செலவுகளுக்கே தவித்துக் கொண்டிருக்கிறது. தினசரி வேலை செய்தால் தான் சோறு என்ற நிலையில் இருக்கும் உழைக்கு மக்கள் வேலை கிடைக்குமா என்று பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி சொன்னபடி மக்கள் தூங்கவில்லை. கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதே போல மோடி சொன்னதற்கு மாறாக அவரது நண்பர்களான கருப்புப் பண முதலைகளும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ஆதாரம் வேண்டுவோரை பெங்களூருவில் நடக்கும் ரெட்டி சகோதரர்களது குடும்ப திருமண உலகிற்கு அழைத்துச் செல்கிறோம்.

janardhana reddy wedding set

கர்நாடகம் மட்டுமல்ல முழு இந்தியாவிலும் பிரபலமானவர்கள் இந்த ரெட்டி சகோதரர்கள். சகோதர்களில் ஒருவரான ஜனார்தன் ரெட்டி பாரதிய ஜனதாவின் முன்னாள் அமைச்சர். இவரது மகளுக்கு நாளை (16-11-2016) திருமணம் நடக்கவிருக்கிறது. உண்மையில் அதை திருமணம் என்று சொல்வது நமக்கு வேறு வார்த்தைகள் இல்லை என்பதால்தான். இயக்குநர் ஷங்கரின் சினிமா நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்குமோ அதையும் தாண்டுகிறது ரெட்டியின் விழா.

சுருங்கச் சொன்னால் இந்த மெகா திருமணத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா? 500 கோடி ரூபாய். மோடி அரசின் கருப்பு பண நடவடிக்கையால் உழைத்து வாழும் பல குடும்பங்களில் திருமணங்கள் பிரச்சனைக்குள்ளாகியிருக்கின்றன. பல திருமணங்கள் நின்று போயிருக்கின்றன. செலவுக்கு புதிய பணமில்லாமல், பழைய பணத்தை மாற்ற முடியாமல் பல பெற்றோர் பித்துப்பிடித்த நிலையில் இருக்கின்றனர். ஆனால் ரெட்டி சகோதர்கள் மோடியின் நண்பர்கள் என்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

நான்கு நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண நிகழ்விற்கு பழைய விஜயநகர அரசு போன்று 150 கோடி செலவில் செட் அமைத்திருக்கிறார்கள். விஜயநகர அரசின் தலைநகரையே மறுநிர்மாணம் செய்திருக்கிறார்கள். ஹம்பி நகரத்தின் முக்கியமான சின்னங்களை கண்முன் கொண்டுவந்திருக்கிறார்கள்.  பாலிவுட்டின் தலை சிறந்த கலை இயக்குநர்கள் இதை வடிவமைத்துள்ளார்கள். விஜய நகர பேரரசு காலத்தல்தான் தென்னிந்தியாவில் பார்ப்பனியக் கொடுங்கோன்மை பல்வேறு நிலைகளில் உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த செட்டும், ரெட்டிகளும் நன்றாகவே பொருந்துகின்றனர்.

இந்த திருமணத்தின் அழைப்பிதழே சமூக வலைதளங்களில் அதிர்ச்சியுடன் பேசப்பட்டது. எல்.சி.டி திரை பொருத்தப்பட்ட அழைப்பிதழை திறந்தால் அதன் திரையில் ஜானர்தன் ரெட்டி மற்றும் குடும்பத்தினர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அழைப்பிதழின் விலை சுமார் ரூ.20,000. கிட்டத்தட்ட ஒரு டி.வியையே அளித்திருக்கிறார்கள். அதில் ரெட்டி சகோதரர்களது மாளிகை, கோவில், மணமக்களது அறிமுக சீன் என்று கிட்டத்தட்ட ஒரு முழு சினிமாக்குரிய பட்ஜெட்டையே செலவழித்திருப்பது நிச்சயம்.

janardhan_redding wedding 2
பெல்லாரியில் உள்ள ரெட்டியின் வீடும் வீட்டிற்கு பின்புறம் உள்ள மலை ஒன்றையும் சேர்த்து அலங்காரம் செய்துள்ளார்கள்.

மணமகன் மற்று மணமகளுக்கு பங்களா செட்டுகள் மட்டும் 36 ஏக்கரில் போடப்பட்டது. உணவருந்துவதற்கு பெல்லாரி கிராமங்களை போன்ற செட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 12 முதல் 15 வரை இரவுகளில் பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்களின் நட்சத்திர கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நட்சத்திரங்கள்தான் மோடியின் கருப்பு பண நடவடிக்கைகளை மனதார பாராட்டினர். என்ன இருந்தாலும் பாம்பின் கால் பாம்புதான் அறியுமில்லையா?

முக்கிய விருந்தினர்களை அழைத்துச் செல்ல வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டிகள் போன்ற சொகுசு வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெங்களூரூவின் முதல்தர ஐந்து நட்சத்திர ஒட்டல்களில் மட்டும் 1500 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. திருமண மைதானத்தில் 15 ஹெலிபேடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க 1000 மேலாளர்கள், 2500 மேற்பார்வையாளார்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இத்திருமணத்தை தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்கிறார்கள். இதற்கென மீடியா சென்டரை திருமண மைதானத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். இந்நிகழ்வுகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க-வின் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீராமுலு நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்ரீராமுலு சுமார் 50,000 பேர் நிகழ்வுக்கு வருவார்கள் என தெரிவித்தார். நாட்டு மக்கள் பணமில்லாமல் அதற்கு தீர்வும் தெரியாமல் அலையும் போது பா.ஜ.கவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்தகைய தேசபக்தி வேலைகளை செய்து தமது பெயரை நிலைநாட்டுகிறார்கள்.

janardhan reddy wedding 6திருமண நிகழ்வை பதிவு செய்ய பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்கள் வந்து செல்வதற்காக சிறப்பு குளிர்சாதன பேருந்துகளும், நட்சத்திர ஓட்டல்களில்  தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் நமது கவர் ஜனர்லிஸ்டுகளுக்கு இங்கே ஒரு சுரங்கமே கிடைக்கும் என்பது நிச்சயம்.

12-11-2016 அன்று மெகந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கிருஷ்ண தேவராயரின் அரண்மனை போன்ற செட்டில் நிகழ்வு நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்களும் பா.ஜ.க எம்.பி ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜனார்தன் ரெட்டியின் சகோதரர் சோமசேகர் ரெட்டி, பா.ஜ.க-வின் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நிகழ்வுக்கு வருவதாக உறுதியளித்துள்ளார், தேவகவுடா திருமணத்திற்கு முந்தைய நாள் வருவார் என்று தெரிவித்துள்ளார். மணமகளின் பெயர் அதாவது ரெட்டியின் மகளது பெயர் என்ன தெரியுமா? பிராமணி!

தற்போது பா.ஜ.க தலைமை தனது கட்சிக்காரகளை  இந்த திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ரகசியமாக ஆலோசனை கூறியிருக்கிறது. ஏற்கனவே இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள எல்லா கெட்டவார்த்தைகளாலும் மோடி காறி உமிழப்பட்டு கொண்டிருக்கும் போது ரெட்டியின் மீதான தங்கள் பாசத்தை வெளிப்படையாக காட்டினால் மக்கள் கோபம் அதிகாமாகும் என்பதால் இந்த ஏற்பாடு. ஆனால் இதையும் தாண்டி பலர் செல்வது உறுதி என்பதை மேனேஜர் மற்றும் எம்.பியான ஸ்ரீராமுலு மூலமே அறியலாம். என்ன காவிக் கட்சியினர் முக்காடு போட்டு வரவேண்டியிருக்கும்.

ரெட்டி சகோதர்கள் யார் என்று தெரியாதவர்களுக்காக சில குறிப்புகள்

“தேசிய’அரசியலை ஆட்டிப் படைப்பதில்  அம்பானி சகோதரர்கள் கில்லாடிகள் என்றால், கர்நாடகா அரசியலுக்கு ரெட்டி சகோதரர்கள் அல்லது பெல்லாரி சகோதரர்கள் என்றழைக்கப்படும் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகிய மூவரைக் குறிப்பிடலாம். 1999-ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா சுவராஜ் பெல்லாரி நாடாளுமன்றத் தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபொழுது, அவரது தேர்தல் வேலைகள், “தேவைகள்’அனைத்தையும் ரெட்டி சகோதரர்கள்தான் கவனித்துக் கொண்டனர்.

அன்று தொடங்கி அரசியலில் மட்டுமின்றி, பொருளாதாரத்திலும் அவர்கள் இந்தியாவின் “ஜி.டி.பி.’க்கு இணையாக வளரத் தொடங்கினர்.  தனி ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ஆடம்பரக் கார்கள் என இவர்களின் பகட்டு வாழ்க்கையைப் பார்த்து விக்கித்துப் போன மக்கள், “இவர்களின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கலாம்’ என இரகசியமாகப் பேசிக் கொண்டபொழுது, “எங்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தேறும்” எனச் சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்துத் தங்களின் பணத் திமிரை வெளிக்காட்டிக் கொண்டனர். சரி இப்போது இவர்களது குடும்பத் திருமணத்திற்கே 500 கோடி செலவழிக்கிறார்கள் என்றால் சொத்து எப்படியும் ஒரு 50,000 கோடிகளைத் தாண்டலாம்.

Reddy brothers” பா.ஜ.க. கடந்த பத்தே ஆண்டுகளுக்குள் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு “வளர்ந்துள்ளதற்கு’ ரெட்டி சகோதரர்களின் பண பலமும் ஒரு காரணம் என்பதை மூத்த பா.ஜ.க. தலைவர்களால்கூட மறுக்க முடியவில்லை. குறிப்பாக, கடந்த 2008- ஆம் ஆண்டு நடந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பலம் கிட்டவில்லை.  எனவே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை, “தாமரை நடவடிக்கை’ என்ற பெயரில் நடத்தியது, பா.ஜ.க.  இந்தக் குதிரை பேரத்திற்குத் தலைமேயேற்றதோடு, அதற்காகப் பல கோடி ரூபாய்களை வாரியிறைத்தார்கள், ரெட்டி சகோதரர்கள்.

இதற்கு நன்றிக் கடனாக கருணாகர ரெட்டிக்கு வருவாய்த் துறையும், ஜனார்த்தன ரெட்டிக்கு சுற்றுலாத் துறையும், ரெட்டி சகோதரர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் தரகனான சிறீராமுலுவிற்கு சுகாதாரத் துறையும் சன்மானமாக அளிக்கப்பட்டன.”

முதலாளிகளின் கருப்புப் பணத்தை காப்பாற்றவே மோடி இந்த செல்லாத நோட்டு நாடகத்தை நடத்துகிறார் என்பதற்கு ரெட்டி சகோதர்களே சாட்சி! அவர்களது திருமணமே காட்சி! மோடி நேரடியாக வர இயலாமல் போனாலும் வீட்டில் எல்.சி.டி திரையில் நேரலையில் பார்த்து வாழ்த்து தெரிவிப்பார்.

நாம் காறித்துப்புவதோடு இக்கூட்டத்தை துரத்துவதற்கான வேலைகளை பார்ப்போம்.

– அமலன்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

janardhan reddy wedding family

janardhan wedding 3

janardhan reddy daughter wedding

brahmani-reddy

brahmani

எல்.சி.டி – திரையில் தோன்றி வரவேற்க்கும் ஜனார்தன் ரெட்டி குடும்பத்தினர்  வீடியோ :

 

மேலும் தகவலுக்கு :

நத்தம் விசுவநாதன் ஒரு அன்னிய முதலீட்டாளர் – தோழர் மருதையன் உரை !

0
natham slider

மோடியின் நோக்கம் கருப்புப் பண ஒழிப்பு  அல்ல – தோழர் மருதையன் உரை – பாகம் 2

ந்த பார்ட்டிசிபேட்டரி நோட்டு என்பதெல்லாம், ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதிகள் பணம் போடுவதற்கான வழி என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. மோடி வெளிநாடுகளுக்குச் சென்று அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக நிறைய பேசுகிறார். அந்நிய முதலீடுகள் என்று இந்தியாவுக்கு வருகின்ற முதலீடுகளின் கணக்கீட்டின்படி, அதிகபட்சமாக இந்தியாவில் முதலீடு செய்திருப்பது அமெரிக்காவோ, பிரான்ஸோ, ஜெர்மனியோ பிரிட்டனோ அல்ல, இந்துமாக்கடலில் அமைந்துள்ள மொரீசியஸ் என்ற குட்டித்தீவு. மிஞ்சிப்போனால் 12 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நாடு இது. அந்த மொரீசியஸ் தீவு சுமார் 40%-க்கும் மேலான அந்நிய முதலீட்டை இந்தியாவில் போட்டுள்ளது. இதுபோன்று கேமன் தீவுகள் உள்ளிட்ட பல தீவுகள் உள்ளன.

private_bahamas_island_large_1இந்தத் தீவு நாடுகள் இவ்வளவு பணத்தை முதலீடு செய்ய எப்படி முடிகிறது?  யாருடைய பணம் அது? அந்தப் பணமெல்லாம் இந்தியத் தரகு முதலாளிகளின் கருப்புப் பணம். இங்கிருந்து பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தி பலப்பல நாடுகளைச் சுற்றி, மொரீசியஸ் சென்று இறுதியில் அந்நிய முதலீடாக இந்தியாவிற்குள் திரும்பி வருகிறது. இப்படி இந்தியா முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய கருப்புப் பணமானது ஜீவாத்மா என்றால், உலக நாடுகளில் உள்ள கருப்புப் பணம் பரமாத்மா போன்றது. பாஜக-வினருக்கு அவர்கள் மொழியில் புரியும்படியாகச் சொல்வதாக இருந்தால் ஜீவாத்மா, பரமாத்மாவில் கலக்கிறது. தேசிய சாக்கடை சர்வதேசிய சாக்கடையில் கலக்கிறது. அதற்குப்பிறகு மொரீசியஸ் வழியாக இந்தியாவிற்குள் அது நுழையும் போது புனித கங்கையாகிறது. அதாவது அந்நிய முதலீடாகிறது.

இதில் மோடி மூழ்கி எழுந்து, விழுந்து கும்பிடுவார். எந்தக் கருப்புப் பணத்தை ஒழிப்பதாகப் பேசுகிறார்களோ, அந்தக் கருப்புப் பணம் வெளி நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து அந்நிய மூலதனம் என்ற பெயரில் இங்கே நுழைகிறது. அந்தக் கருப்புப் பணத்துக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

“இந்தக் கருப்புப் பணத்தை எப்படி வெளியே எடுத்துச் செல்கின்றனர்? டாடா, அம்பானி போன்ற பெரிய கைகளை விட்டுவிடுவோம். நத்தம் விசுவநாதனை எடுத்துக்கொள்வோம். நத்தம் யார்? அதிமுக-வில் அமைச்சராவதற்கு முன் ஒயின் ஷாப் வைத்திருந்தார். பிறகு படிப்படியாக முன்னேறி அமைச்சராகினார். சமீபத்தில் அம்மா நடத்திய ரெய்டின் விளைவாக வெளிவந்த உண்மைகள் என்ன? அவருக்குத் துபாயில் சொத்து இருக்கிறது; ஒரு தீவையே விலைக்கு வாங்கிவிட்டார். இந்தோனேசியாவில் நிலக்கரிச் சுரங்கம் இருக்கிறது என்றெல்லாம் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன. அவர் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும்போது தான், அதானி குழுமம் சூரிய ஒளி மின்சாரத்தை, அளவுக்கதிகமான விலையில் தமிழத்தின் தலையில் கட்டியது. இதற்காக எவ்வளவு தொகை இலஞ்சமாக தரப்பட்டிருக்கும் என்று தெரியாது. அந்த இலஞ்சப் பணத்தையெல்லாம் ஒரு மஞ்சள் பையில் போட்டு சுருட்டி எடுத்துக் கொண்டு விமானத்தில் பயணித்து துபாயில் போட்டு விட்டு வந்தாரா நத்தம் விசுவநாதன்? அப்படி எதுவும் நடப்பதில்லை.”

அந்த நாடுகளில் அங்கேயிருக்கும் நபர் மூலமாக சொத்து வாங்கப்பட்டுவிடும் அல்லது அந்த வங்கிக்கணக்கிலே பணம் செலுத்தப்பட்டுவிடும். அப்படி ஒரு சர்வதேச வலைப்பின்னல் இந்த முதலாளிகளிடையே இருக்கின்றது. நாளை நத்தம் விசுவநாதன் ஒரு ஊழல் அமைச்சராக அல்ல ஒரு அந்நிய முதலீட்டாளராக இந்தியாவுக்குள் வருவார். இவருடைய பணம் அந்நிய முதலீடாக இங்கே வரும். ஊழல் என்பது இப்படித்தான் நடக்கிறது.

நத்தத்தை விடுங்கள், சசிகலாவின் கணவர் நடராஜன் அடிக்கடி கேமன் தீவுகளுக்குச் சென்று வருவாராம். கேமன் தீவு என்பது வரியில்லா சொர்க்கம். இதன் மக்கள் தொகையே ஒன்றரை இலட்சம் பேர்தான். அந்தத் தீவுகளுக்கு இவர் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கப் போவது போல சென்று வருகிறார். இது இந்த அரசாங்கத்துக்குத் தெரியாதா?

உதாரணமாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை கண்டுபிடித்த ஒரு வழக்கைச் சொல்கிறேன். 2010-க்கும் 2014-க்கும் இடைப்பட்ட பல்வேறு மாநிலங்கள் அனல் மின்சாரத்துக்காக நிலக்கரியைக் கொள்முதல் செய்ததில் ரூ.29,000 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்பது புலனாய்வுத் துறையின் முடிவு. இந்தோனேசிய சுரங்கத்திலிருந்து நம் நாடு நேரடியாக நிலக்கரி வாங்கியிருந்தால் ஒரு டன் நிலக்கரியின் விலை 50 டாலர்; மாறாக அந்த நிலக்கரியை வாங்கும் பொறுப்பு தனியார் தரகு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலக்கரி இந்தோனேசியாவில் தான் இருக்கின்றது; ஆனால் அது ஏழு, எட்டு நபர்களிடம் கைமாறுகிறது. துபாயில் இருக்கும் கம்பெனி ஒன்று காகிதத்தின் மூலம் அதை சிங்கப்பூருக்குக் கைமாற்றுகிறது. சிங்கப்பூரில் இருந்து வேறொரு நாட்டுக்கு அதே முறையில் கைமாறுகிறது. இப்படியாக ஒவ்வொரு கை மாறும் போதும் அந்த நிலக்கரியின் விலை $3, $5, $6 என அதிகரித்துக் கொண்டே போகிறது. இறுதியாக பல்வேறு நாடுகளில் காகிதங்கள் வழியாக நடத்தப்பட்ட வர்த்தகத்தில் ஒரு சுற்று சுற்றி வரும் போது இதே நிலக்கரி டன் ஒன்றுக்கு $87 டாலராக உயர்ந்து விடுகிறது. அதாவது, $37 டாலர்கள் அதிகரிப்பு.

இந்த ஊழலில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, ஒடிஷா போன்ற மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு மின்சார வாரியம் மட்டும் இந்த மோசடியான விலை உயர்வால், இழந்திருக்கும் தொகை ரூ.1500 கோடி. இந்த ஊழலில் மாநில அரசுகள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அதானி, அம்பானி, ரூயா, ஜிண்டால், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. அதானி குஜராத்திலுள்ள ஒரு மின் நிலையத்திற்கு எந்திரங்களை இறக்குமதி செய்த வகையில், எந்திரங்களின் விலையைக் கூட்டிக் காண்பித்து ரூ.6000 கோடி ஊழல் செய்திருக்கிறார் என்று கண்டுபிடித்திருக்கிறது வருவாய் புலனாய்வுத்துறை. அந்த அதானியின் விமானத்தில் ஏறித்தான் இந்த நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார் மோடி. இந்த அதானியின் காசில் தான் மோடி பிரதமரானார். அதானிக்கு ஆஸ்திரேலியாவில் சுரங்கம் வாங்கித் தருவதற்காகவே மோடி கணக்குப்பிள்ளை போல அதானியின் கூடவே சென்றார். அந்த மோடி கருப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாக நம்மை நம்பச் சொல்கிறார்.

இப்போது வருவாய் புலனாய்வுத் துறை “ஏன் நிலக்கரியை $87-க்கு வாங்கினீர்கள்? ஏன் இத்தனை கைகள் மாறின?” என்று கேட்டால், “இதெல்லாம் வழக்கமான வணிக நடவடிக்கை” என்று பதில் வரும். சட்டப்படி இது குற்ற சாட்ட முடியாதது. ஆனால் இந்த வழக்கில் என்ன நடந்ததென்றால், இவர்கள் கைமாற்றிவிட்ட கம்பெனிகள் அனைத்தும் லெட்டர்பேட் கம்பெனிகள். இப்படி பொய்யான கம்பெனிகளின் பேரில் $37 டாலர் வரை செயற்கையாக உயர்த்தப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்ட முடிந்தாலும், குற்றவாளிகளுக்குச் சேர்ந்திருக்கக்கூடிய பணத்தை புலனாய்வுத் துறைகளால் கைப்பற்ற முடியுமா? அல்லது முடக்க முடியுமா? முடியாது, அதற்கான அதிகாரம் இந்த அரசுக்கு இல்லை. இது போன்று முதலீடு செய்யப்பட்ட ரூ.29,000 கோடிப் பணம் இந்தியாவிற்குள் அந்நிய மூலதனம் என்ற பெயரில் வரும். அது வெள்ளைப் பணமாக வரும். கருப்பை வெள்ளையாக மாற்றுகின்ற இந்த நடவடிக்கைக்கு அரசாங்கமே உடந்தையாக இருக்கும்போது, கருப்புப் பணத்தைப் பிடிக்கிற கேள்வி எங்கிருந்து வந்தது?

இந்த ரூ.29,000 கோடி தொகை என்பது அதிகாரிகளும், அமைச்சர்களும் மட்டுமே அடித்த கொள்ளை அல்ல. நத்தத்துக்கோ அல்லது தொடர்புடைய அதிகாரிகளுக்கோ எலும்புத்துண்டு போல ஒரு சிறு தொகைதான் கிடைத்திருக்கும். ஆனால் கறியைப் போல பெரும் தொகையை விழுங்குவது இந்தத் தரகுமுதலாளிகள்.

இங்காவது நிலக்கரியை வாங்கினார்கள்; அதில் ஊழல் நடந்தது. ஆனால் எதுவுமே வாங்காமலேயே வெறும் காகிதத்தைக் காட்டியே நடைபெற்ற பல நூறு கோடி ரூபாய் ஊழல்கள் உள்ளன. இந்தக் கருப்புப் பணத்தைப் போட்டு வைப்பதற்காகவே வங்கிகள் பஹாமா தீவிலும் உள்ளது. இதன் மொத்த மக்கள் தொகையே மூன்றரை இலட்சம் தான். 2008-ம் ஆண்டில் இந்த பஹாமா தீவுக்கு இந்தியாவில் இருந்து செய்யப்பட்ட ஏற்றுமதியின் மதிப்பு $22 இலட்சம் டாலர் (சுமார் 15 கோடி ரூபாய்) ; இரு ஆண்டுகள் கழித்து இந்த நாட்டிற்கான ஏற்றுமதியின் மதிப்பு $280 கோடி டாலராகியது (19,000 கோடி ரூபாய்); அப்படி என்ன ஏற்றுமதி நடந்தது? இரண்டு இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன. ஒன்று ரிலையன்ஸ் மற்றொன்று எஸ்ஸார். இவர்கள் இருவரும் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்ததாகக் கணக்கு காட்டியிருக்கிறார்கள். பஹாமாவிலுள்ள மூன்றரை இலட்சம் பேரும் 24 மணி நேரமும் வண்டிகளில் சுற்றித்திரிந்து பெட்ரோலிலேயே குளித்து, பெட்ரோலையே குடித்தாலும் கூட அவ்வளவு பெட்ரோலை அங்கே செலவிட முடியாது.

Reddy brothers
ரெட்டி சகோதரர்கள் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அபிமானப் பிள்ளைகள்

இது ஒரு நடைபெறாத வணிகம். இதில் அம்பானிகள் மட்டுமல்ல, பாஜக-வில் உள்ள ரெட்டி சகோதரர்களும் ஈடுபட்டுள்ளனர். ரெட்டி சகோதரர்கள் கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தையே விழுங்கியவர்கள் இன்னும் கூடுதலாகச் சொன்னால், கர்நாடக எல்லையையே ஆந்திராவுக்குள் நகர்த்தி வைத்தவர்கள். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அபிமானப் பிள்ளைகள்.

இந்த ரெட்டி சகோதரர்கள் கர்நாடகாவிலிருந்து உயர்தரமான இரும்புக் கனிமத்தை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். அங்கேயுள்ள துறைமுகங்களின் மூலம் எடுக்கப்பட்ட கணக்கின்படி, 5000 கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுங்கத்துறை மூலமாகத் தெரிவிக்கப்படும் கணக்கு வெறும் 1000 முறை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று காட்டுகின்றது.  4000  கப்பல் எப்படி விட்டுப்போனது? அதிலிருந்து கிடைத்த வருவாய் எங்கே? அது எங்கே முதலீடு செய்யப்பட்டிருக்கிறது?  இது மோடிக்குத் தெரியாதா?

ஆகவே கருப்புப் பணம் என்பது, எங்கேயோ  பெட்டியில் வைத்திருப்பதை எடுத்துக் கொண்டு வருவதல்ல. கருப்பு நடவடிக்கைகளைக் கையாள்வது எப்படி என்பதைப் பற்றியது தான் இந்தப் பிரச்சினை. இப்படி கருப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்துகின்ற எல்லா வழிமுறைகளையும் வகுத்திருக்கிறார்கள். இப்படி வகுத்த நிகழ்வுகள் மிக முக்கியமாக நடைபெற்றது பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் தான்.

“உலக வங்கியின் அறிக்கையின்படி 1998-2004 க்கும் இடைப்பட்ட காலத்தில் தான் அதாவது வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் தான் இந்தியாவிலேயே கருப்புப் பணம் மிக அதிகமான அளவிற்கு அதிகரித்திருக்கிறது. 2011-ல் 2G ஊழல் போன்ற பிரச்சினை எல்லாம் வர ஆரம்பித்த பிறகு அத்வானி கருப்புப் பணத்திற்கு எதிராக இரத யாத்திரை தொடங்கினார். 70 இலட்சம் கோடி கருப்புப் பணம் வெளிநாட்டில் இருக்கின்றது; அதைக் கைப்பற்றி இங்கே கொண்டு வரப் போகிறேன் என்று கூறினார்; அத்வானி அன்று இரும்பு மனிதராக தூக்கி நிறுத்தப்பட்டார். கருப்பு பணத்தை அப்படியே அடித்துத் தூக்கி கொண்டு வந்து விடுவார் என்ற மாதிரி ஒரு பிரமை உருவாக்கப்பட்டது. ஆனால் அவரை அடித்துத் தூக்கி விட்டார் மோடி.”

அன்னா ஹசாரேவை, 2G ஊழலை.. இது போன்ற விவகாரங்களை எல்லாம் முன் வைத்து கருப்புப் பணத்தை நாங்கள் கைப்பற்றி கொண்டு வரப் போகிறோம். ஆளுக்கு 15 இலட்சம் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கப் போகிறோம் என்று பிரச்சாரம் செய்தவர் மோடி. ஆனால் இதே யு.பி.ஏ (UPA)  ஆட்சிக் காலத்தில் கருப்புப் பணப் பிரச்சினையின் மிக முக்கியமான ஒரு சான்றாக இருந்தது வோடஃபோன் வரி ஏய்ப்பு வழக்கு. அந்த வரி ஏய்ப்பு வழக்கில், வரியை வசூலிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தது. அதற்குப் பின்னால் இத்தகைய வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக பிரணாப் முகர்ஜி ஒரு சட்டம் கொண்டு வந்த போது ஜெனரல் ஆண்டி அவாய்டென்ஸ் ரூல்ஸ் (GAAR) என்ற சட்டம் கொண்டு வந்த போது , அதை எதிர்த்துப் பெரும் குரலை எழுப்பியவர் இன்றைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

அன்றைக்கு காங்கிரசு ஆட்சியில் இருந்தபோது சுவிஸ் வங்கியில் இருந்து பணத்தைக் கொண்டு வந்தீர்களா என்று இவர்கள் கூச்சல் எழுப்பினார்கள். அப்போது ”சுவிஸ் வங்கியினர் பெயரைக் கொடுக்க மாட்டேன் என்கின்றனர். நாம் என்ன இரானுவத்தையா அனுப்ப முடியும்” என்று பாஜக வை கேலி செய்தார். மறுபேச்சு பேசாமல் உட்கார்ந்தார்கள் இந்த பாஜக-காரர்கள். இன்றைக்கு அதே வழக்கில் பிரணாப் முகர்ஜி என்ன பதிலைச் சொன்னாரோ அதே பதிலைத் தான் உச்சநீதிமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியும் சொல்லியது.

ரூ.70 இலட்சம் கோடியை பிரித்துத் தருகிறேன் என்று சொன்ன மோடி அதைப் பற்றி பேசுவதில்லை. இப்போது வந்து உள்நாட்டுப் பணத்தை எப்படியாவது கொண்டு வரணும் என்று பிளேட்டை திருப்பிப் போடுகிறார்கள். சரி, உள்நாட்டில் எங்கே இருக்கிறது கருப்புப் பணம் என்று உனக்குத் தெரியாதா? இதைக் கண்டுபிடிப்பதற்குப் பொறுப்பான துறைகள் என்ன?  இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட், என்ஃபோர்ஸ்மென்ட், ரெவின்யூ இன்டெலிஜென்ஸ், சி.பி.ஐ இதர எண்ணற்ற துறைகள் மற்றும் உன்னுடைய ஃபைனான்ஸ் மினிஸ்ட்ரி எல்லாம் இருக்கின்றது . அவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்?  ஒன்று, இந்த கருப்புப் பண முதலைகளிடம், கார்ப்பரேட் முதலாளிகளிடம் விலை போய் விட்டார்கள். அல்லது நீங்களே கூடி வகுத்த சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்று நீங்களே முடிவு செய்து விட்டீர்கள்.

நீங்கள் வரி வசூல் செய்வதற்காக நிர்வாகம் செய்வதற்காக வைத்திருக்கிற இந்த அரசமைப்பு என்பது கையாலாகாததாகி விட்டது. விலை போய் விட்டது. உன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை,  எங்கே கருப்புப் பணம் என்று கண்டுபிடிக்க ரூ.500, ரூ. 1000 செல்லாது என்று சொல்லி நாட்டு மக்கள் அனைவரையும் துன்புறுத்துகிறாய்.

இந்த அறிவிப்பை அமல்படுத்துவதற்கு முன்பு முப்படைத் தளபதிகளை எல்லாம் பார்த்துப் பேசினாராம் மோடி.. எதற்கு? உள்நாட்டில் மக்கள் கலகம் வரும், மக்களைச் சமாளிப்பதற்காக. கருப்புப் பணம் வைத்திருக்கக் கூடிய முதலைகளுக்கு எதிராகத் தளபதிகளோ, இராணுவமோ ஏவப்படவில்லை, ரூ.500-ம் ரூ.1000-மும் செல்லாது என்று கூறிவிட்டால் மக்களுக்கு ஏற்படக் கூடிய நெருக்கடி, அவர்களுக்கு வரக்கூடியக் கோபத்திலிருந்து அரசாங்கத்தைத் தற்காத்துக் கொள்வதற்கு முப்படைத் தளபதிகளோடு ஆலோசனை நடக்கிறது.

இத்தனையும் செய்துவிட்டு  தொலைக்காட்சி விவாதங்களில் பி.ஜே.பி சார்பாகப் பேசக் கூடிய பேச்சாளர்கள் என்ன சொல்கின்றனர்? “இது கருப்புப் பணத்தை ஒழிப்பதை நோக்கி ஒரு சின்ன நடவடிக்கை” இதென்று பணிவாகப் பேசுகிறார்கள். ஒழிப்பதெல்லாம் இன்றைக்கு முடிகின்ற காரியமில்லை என்று கடவுளைக் காண முடியாத மாதிரி அதைப் பேசுகிறார்கள்.

அப்படியெனால் எதற்காக நாட்டையே துன்பத்தில் ஆழ்த்துகின்ற இந்த நடவடிக்கை? இதற்கு முற்றிலும் வேறு நோக்கம் இருக்கிறதென்று சொல்கிறோம்.

-தொடரும்

ஆடியோ : ஆடியோவை தரவிறக்கம் செய்ய சுட்டியில் வலது பொத்தானை அழுத்தி சேவ அஸ் ஆப்சனை தெரிவு செய்யவும்.

பிற பாகங்களுக்கு :

மோடி : பினாமியே பினாமி சொத்துக்களை கைப்பற்றுமா ? கேலிச்சித்திரங்கள்

4

கருப்பு பண முதலைகளால் என் உயிருக்கு ஆபத்து. – மோடி

modi-cartoon-1-post

***

பினாமி சொத்துக்களை மீட்க நடவடிக்கை. – மோடி

modi-cartoon-2

திருவாளர் சங்கி மங்கி.

முதல் ரெண்டு நாள்ல கருப்பு பணத்தை ஒழிச்சிட்டாரு,
அடுத்த ரெண்டு நாள்ல பினாமி சொத்துக்களை ஒழிச்சுருவாரு,
அடுத்த நாள் காலையிலிருந்து ஊழல் இந்தியா க்ளீன் இந்தியாவாயிடும்

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

இணையுங்கள்:

திருடனுக்கு பதுக்கத் தெரியாதா ? – இட்லிக் கடை அம்மா

0
kollllai

இட்லிக் கடை அம்மாவின் குமுறல் – சென்னை சைதாப்பேட்டை சலவைத் துறை

தினமலர் பத்திரிக்கையை மட்டும் படித்து மோடியை கருப்புப் பணம் ஒழிக்க வந்த கண்ணன் என்றும் நாட்டுக்காக இந்த கஷ்டத்தை பொறுத்துக் கொள்ளுங்கள், நாட்டின் பொருளாதாரம் முன்னேற ஒருசில தியாகங்களை செய்ய வேண்டும் என ஒரு பக்கம் மென்மையாக பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் ரெண்டு நாள் சாப்பிடாவிட்டால் செத்துப்போக மாட்டாங்க… என்று பேசும் அறிவாளிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ் – குண்டர்களுக்கும் சாதாரண மக்களின் கஷ்டங்கள் ஒருபோதும் தெரியாது. அடிப்படை வசதிகளே இல்லாமல் தினசரி வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ள சென்னை சைதைப் பகுதியில் சாதரண இட்லிக்கடை வைத்திருக்கும் அம்மாவின் குரலைக் கேளுங்கள். 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பைப் பற்றியும், அதன் பாதிப்பை பற்றியும் முகத்தில் அறைவது போல கேட்கிறார். பாருங்கள், பகிருங்கள்!

நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்.

வரிசையில் நிற்கும் மக்களை கேலி செய்யும் அறிஞர்கள் – கேலிச்சித்திரம்

3

ஏ.டி.எம் கள் முழுமையாக செயல்பட மூன்று வாரங்கள் ஆகும். – செய்தி

modi cartoon

” கபாலி டிக்கெட் வாங்கவும், ஜியோ சிம் வாங்கவும் வரிசையில் நிற்க முடியுது. ரூபாய் நோட்டுக்காக நிற்க முடியாதா ? மாற வேண்டியது அரசாங்கமல்ல மக்கள் தான் ”

…இப்படி டயலாக் பேசுன அறிவாளிகள் எல்லாம் அடுத்த மூனு வாரத்துக்கு எங்கே நிற்க்கப் போறீங்கன்னு பார்க்கலாம்.

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

இணையுங்கள்:

மோடிய திட்டாதவங்க யாரு ? தமிழ் ஃபேஸ்புக்கின் விளாசல் – தொகுப்பு

16

Manitham Mattun

அம்பானியும் அதானியும்
ஆடிய ஆட்டத்தில் விழுந்த
ஓட்டைகளை
அப்பாவிகளின் உழைத்து தேய்ந்த எலும்புகளால் அடைப்பதற்கு பெயர் அரசாங்கமாம்
தூ..

_______________

Edgar Solomonraja

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எனப்படுவது…
இப்போதைக்கு 2 வகைப்படும்….

  1. எதிரிகளை அழித்துவிட்டதாக நாடகமாடுவது!
  2. சொந்தகுடிகளை நாடகமாடி அழித்துவிடுவது!

#மோடி_அகராதி

____________________

Barathi Thambi

விளைவுகள்….

//கான்பூரில் பணம் இல்லாததால் மக்கள் ரேசன் கடைகளை சூறையாடி அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை பங்கிட்டு எடுத்துச்சென்றனர்!//

//உபியில், பணம் இல்லாததால் மக்கள் பேங்கை அடித்து நொறுக்கி பணத்தை பங்கிட்டு எடுத்துச்சென்றனர்//

//இன்று திட்டமிட்ட இரயில் பயணத்துக்கு பயணச்சீட்டு எடுக்க போதிய பணமில்லை. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என நேற்றே முயற்சித்தாலும் காத்திருப்போர் பட்டியல் 50க்கு மேல் இருந்தது. எனவே பயணச் சீட்டு எடுக்காமல் பயணிப்பது என முடிவெடுத்தேன்.

ரயிலில் பரிசோதகர் வந்தார். ஏ டி எம் களில் பணமில்லை, அதனால் பயணச்சீட்டு எடுக்கவில்லை, இது என் பிரச்சினை அல்ல, அரசு உருவாக்கிய பிரச்சினை அதனால் அபராதமும் கட்ட முடியாது, இல்ல சட்டபடிதான் நடந்துக்க வேணும் என்றால் என் ஏடிஎம் கார்டை தருகிறேன். அபராதம் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதா என அவருடன் வாதம் செய்ததில், உட்காருங்க சார் என்றார். //

____________________

Bala G

பீதியா இருக்கு..

மோடிஜீயின் ஆப்ரேசன் அமாவாசை மணி.. இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ரிலீஸ் குறித்து பொதுமக்கள் கடுமையாக விமர்சிப்பதைப்பார்த்து அவர் கடுப்பாகிப்போய் அடுத்த அட்டாக்கா நாலாயிரம் ரூபாய் நோட்டை ரிலீஸ் பண்ணிட்டார்னா என்ன பண்றது..

எதுக்கும் அடக்கியே வாசிப்போம்..

மரண பயத்தை காட்டிட்டான் பரமா மொமண்ட்..

____________________

தே.கி. மலையமான்

ஒரு ஆந்திரக் கட்டிடத் தொழிலாளி அவருக்கு தெரிந்த அரைகுறைத் தமிழில் நேற்றிரவு வீட்டருகே என்னிடம் “என்க்கிட்ட 30000 ரூபா இருந்தது அதுல ஒரு பத்தாயிரத்த மாத்தினேன் அதுக்கு கமிசனா ஒரு ஆயிரத்துக்கு 200 வீதம் 2000 ரூபாக் கொடுத்து மாத்தினேன் என்றார்.” சரிங்க பேங்குக்கு போய் மாத்த வேண்டியதுதானா..ஏன் இந்த மாதிரி புரோக்கர்ங்கிட்ட எல்லாம் மாத்தனும் ன்னே்ன்..என்கிட்ட அக்கெளண்ட் இல்லையே என்றார்..(இதுதான் பலக்கோடிக்கணக்கோரின் நிலைமை அவர்களுக்கு போதிய கால அவகாசமோ போதிய முறையான வழிக்காட்டுதலோ செய்யாமல் திட்டம் அறிவித்ததனால் எவ்வளோ துயர்).அதுக்கு இப்ப நான் என்ன பண்ணும்ங்க என்றேன். “பாக்க நீங்க போலீஸ் மாதிரி இருக்கீங்க”..அவங்கள மாதிரி ஆளுங்கள ஏதாவது பண்ணனுங்க சார் அதான் என்றார் வேதனையுடன்… எனக்கு என்ன சொல்லி அவருக்கு புரியவைப்பதென்றே தெரியவில்லை…மீதி இருக்குற 20000 ரூபாயவாவது பேங்க் ல போய் மாத்துங்க..வோட்டர் ஐடி இருந்தாலே போதும்..2 அல்லது 3 நாளு கழிச்சிப் போய் மாத்திக்குங்க கண்டவங்கக்கிட்ட கொடுத்து ஏமாறாதீங்க என்று சொல்லிவிட்டு மகனை கூட்டிவர அப்பா வீட்டிற்கு நகர்ந்தேன்…

இதுபோல் எத்தனை கோடி பேர் தங்களது பல வருட சேமிப்பை ஒரே ஒருவரின் மடத்தனமான நடவடிக்கையால் இழந்துக்கொண்டிருக்கின்றனரோ?? ஏழைகளின் கண்ணீரில் கார்ப்பரேட்களின் சிரிப்பை ரசிக்கிறார் ஜப்பானிலிருந்து இந்நாட்டு பிரதமர்.

____________________

Raja Hussain

மோடி ஏன் ஜப்பான் சென்றார்?

இந்திய மக்கள் மோடியின் மீது கொண்டிருக்கும் வெறுப்பு எந்த அளவிற்கு உள்ளதென்றால் மோடியின் உருவ பொம்மையை கொளுத்த மாட்டோம் மோடியையே கொளுத்தி விடுவோம் என்ற அளவிற்கு நிலைமை உள்ளதால் மோடி ஜப்பானுக்கு தப்பி ஓடியதாக தகவல்!!!

____________________

Sellampillai Rajkumar

4000 க்கும் 4500க்கும் என்ன அப்படி பெரிய வித்தியாசம் என்று RBI விளக்கவேண்டும். தினமும் எடுக்கலாம், வாரத்துக்கு 24000 ரூபாய் எடுக்கலாம் என்று கணக்கு வேறு கொடுக்கிறார்கள். தினமும் வங்கிக்கு வந்து வரிசையில் நின்றால், குடும்பத்துக்கு மோடி வந்தா கஞ்சி ஊற்றுவார். உழைக்கும் மக்களின் அடிமடியில் கைவைத்து இருப்பதை பிடிங்கி வங்கியில் சேர்த்து அதையும் கார்பொரேட் நிறுவனத்துக்கு கொடுக்க இருக்கிறது.

கருப்பு பண முதலைகள் வெறும் 1% பேர் தான் அவர்களும் அதை தங்கமாக, நிலமாக, டாலராக வெளிநாட்டில் முடங்கி இருக்கிறது. அதை விடுத்து 99% மக்களின் வாழ்க்கையில் விளையாடி கொண்டு இருக்கிறது மோடி அரசாங்கம்.
வாராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்ட முதல் 10 பேரின் கடன் மட்டும் 10 லட்சம் கோடிக்கும் மேல். [அம்பானி சகோதர்கள் மட்டும் 3 லட்சம் கோடி].

சுழற்சியில் இருப்பதாக அரசு சொல்வது 16 லட்சம் கோடி. மேற்படி 10 லட்சம் எந்த கணக்கில் வருகிறது..??

கடந்த மூன்று நாட்களாக அப்பாவி மக்களிடம் இருந்து பிடிங்கி வங்கிக்கு கொண்டு வந்த தொகை 2 லட்சம் கோடிகளாம்..

வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணம் மட்டுமே 10 லட்ச கோடிக்கு மேல், எப்படி கணக்கு காண்பிப்பது என்று தெரியாமல் தான் சிறுவாடுகளின் மேல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று ஒன்றை தொடங்கி நடத்தி கொண்டு இருக்கிறார்கள். சுருக்குப்பை, கடுகுடப்பா, முதியோர்களின் முந்தானை முடிச்சியில் இருக்கும் சிறு தொகைகளை வங்கிக்குள் வந்து கொண்டு இருக்கின்றன.\

இதில்லாமல் வீடுவீடாக சென்று தங்கவேட்டை நடத்தும் திட்டம் ஒன்றும் இருக்கிறதாம்.

எளியோர்களின் மீது மோடி அரசு பெரும் போர் ஒன்றை தொடங்கி இருக்கிறது..
எளியோர்கள் தாக்கு பிடிப்பார்களா, அல்லது பர்மா அகதிகளை போல் சொந்த நாட்டிலே அனைத்தையும் இழந்து அகதிகளாய் அடிமைகளாய் அலைவார்களா…??

காலம் தான் பதில் சொல்ல வேண்டும் !!

________________

Prakash JP

//வங்கிகளில் லட்சம் கோடி டெப்பாசிட்… கருப்பு பண ஒழிப்புக்கு வெற்றி — தினமலம் கூவல்….//

ப்பா என்னே அறிவு.. செல்லாது என அறிவிப்பதற்கு சில மணிநேரம் முன்பு ATM ம்மில், எடுத்த பத்தாயிரம் ரூபாயில் இருக்கும் பத்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை, அடுத்தநாள் அதே வங்கியில் செலுத்தினால், அது மீட்கப்பட்ட “கருப்பு பணம்மா” ?? முட்டாள் கூட்டம்….

பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்தை “கருப்பு பணம்” என்று கூசாமல் சிலர் சொல்கிறார்கள்..

சாதாரண மக்களிடம் கையிருப்பில் உள்ள, செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்துகிறார்கள்.. அது எப்படி கருப்பு பணமாகும்??

__________________

.சுரேஷ் குமார் கொத்தமங்கலம்

பண முதலைகள் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணத்தை எல்லாம் மோடி அண்ணாச்சி அவர்கள் ஜப்பான் புல்லட் ரயிலில் ஏற்றிக்கொண்டு மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கிறார்.

ஊருக்கு வந்ததும் அவர் தேர்தலின் போது அளித்த வாக்குப்படி இந்தியர்கள் அனைவரது வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சத்தை வரவு வைப்பார் என்பதை இங்கே தெரியப்படுத்துகிறோம்.

ஆகவே மக்களே இப்போது தாங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை விரைவாக சென்று வங்கியில் செலுத்துங்கள்.
அம்பானிக்கும் , அதானிக்கும் வராக்கடன்கள் கொடுக்க பணம் தேவைப்படுகிறது.

____________________

Vini Sharpana

பதிவை பார்த்தெல்லாம் நான் இதுவரை யாரையும் அன்பிரண்ட் செய்ததில்லை. ஆனால், இப்போது ஒருவரை நீக்கியே விட்டேன். அவர் ’மோடியால் கருப்பு பணம் ஒழிந்துவிட்டது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’ என்பதுபோல ஒரு நாளைக்கு 20 பதிவுகளாவது போட்டு எனக்கு கடுமையான எரிச்சலை உண்டாக்கிவிட்டார். நானே 2000 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு சில்லரை கிடைக்காமலும் எதுவும் வாங்கமுடியாமலும் கடுப்பில் இருக்கிறேன் 🙁 எங்கு பார்த்தாலும் பேங்க்குகளிலும் ஏ.டி.எம் வாசலிலும் மக்கள் தவித்துப்போய் நீண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள். அவர்களது வலி வேதனையெல்லாம் அறியாமல் ஜப்பானுக்கு சுற்றுலா சென்றிருக்கும் கேடியை புகழவும் ஒரு இழிமன நிலை கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது

____________________

Abdul Hameed Sheik Mohamed

“மோடி என்ன செய்தாலும் நீங்கள் ஆதரிக்க மறுப்பதற்கு என்ன காரணம் ? ” என்று ஒரு நண்பர் ஆதங்கத்துடன் இன்பாக்ஸில் வந்து கேட்கிறார்.

நான் ஒரு முட்டாள் இல்லை என்பதைத்தவிர ஒரு காரணமும் இல்லை

____________________

Madanraj Rajagopal

சாப்பிடக்கூட காசு இல்லாதவர்கள் பாரத் மாதாகீ ஜே என சொன்னால் பத்து நிமிடத்தில் பசி தீரும்.

குழந்தைக்கு பால் இல்லாவிட்டால் பக்கத்தில் இருக்கும் பசு மாட்டு மூத்திரத்தை சங்கில் ஊற்றி கொடுக்கவும். மூத்திரம் வைரத்தைவிட மேலானது என நீதிமன்றமே உறுதி செய்திருக்கிறது.

வைத்தியத்துக்கு பணம் இல்லாவிட்டால் அடிவயிற்றில் இருந்து ஜெய்ஹிந்த் என கத்தவும். நாபிகமலத்தின் வாயிலாக குண்டலினி கிளம்பி நோய்கள் தீரும்.

வங்கி கியூவில் நிற்க சிரமமாக இருந்தால் மோடிக்காக மேக்னா படேல் ஆடிய வீடியோக்களை போனில் பார்க்கவும். மோடிக்காக எதையும் தியாகம் செய்யலாம் எனும் எழுச்சியும் கிளர்ச்சியும் உண்டாகும்.

அதிகம் பகிருங்கள், இந்த தகவல் ஒவ்வொரு இந்தியனையும் போய் சேரட்டும். மோடியின் கரத்தினை வலுப்படுத்துவோம்.

share if you are a true indian.

1 share = 100 glass of cow urine.

____________________

Ramachandran Muthaiah

மோடி வந்தா சேஞ்சு வரும்னு சொன்ன பலபேரு சேஞ்சிக்காக ரோடு ரோடா அலையுறதா நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுது ?

____________________

Syed Abdul Kadhar

பெரும்பாலும் அனைத்து ஏடிஎம்களும் பணமின்மையால் மூடப்பட்டு விட்டன.

விடுப்பின்றி கூடுதல் பணி நேரம், ஓய்வின்மை இவைகளால் கடும் உடல் மன நெருக்கடிகளுக்கு உள்ளாகும் வங்கி ஊழியர்கள் ஓரிரு நாட்கள் வேலை நிறுத்தம் செய்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஜப்பானில் இருக்கும் மோடி, ஜப்பானிலேயே இருந்து கொள்ள வேண்டிவரும்..

____________________

Jamalan Tamil

கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்கு என்பார்கள்.. தற்போது ஆறு நாட்கள்கூட தாங்கவில்லை. தமிழகத்தில் 4500 கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டுள்ளன. 1500 நியாயவிலைக்கடைகள் மூடப்பட உள்ளது. காரணம் கிராமமக்களின் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் வங்கி கூட்டுறவு வங்கிதான். இவர்கள்தான் கிராமங்களின் பொருளியல் நிர்வாகத்தை செய்பவர்கள். இவர்கள்தான் நியாயவிலைக்கடைக்கான பொருட்களை வாங்குபவர்கள். தற்போது மத்திய ரிசர்வ வங்கி இவர்களை தனிநபர் கணக்கு என்று சொல்லி பணம் வழங்குவது பத்தாயிரம்தானாம்.. இதை வைத்து வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லையாம். ஏழை விவசாயிகளின் சேமிப்பும் வரவு செலவு கடன் எல்லாம் அந்த வங்கிகளில்தான் நடைபெறுகிறது என்பதாவது ரிசர்வ் வங்கிக்கும் தான் அறிவித்த 24 ஆயிரத்தையே 25 ஆயிரம் என்று தொலைக்காட்சியில் உளறும் அரசு பொருளாதார விவகாரத்திற்கான செயலளார் சக்தி காந்த தாஸ் க்கும் தெரியுமா?

paytm ல் பல லட்சம் டிராண்ஸ்க்ஷன் நடந்துவிட்டதாக பெருமையில் பீற்றுகிறார்கள் பிஜேபி நடுநிலை கூஜாதூக்கிகள். உண்மையில் பே-டிஎம் யாருக்கு பணத்தை அளிக்கிறது. குப்பன் சுப்பன் என்கிற கிராமபுற ஏழை சில்லறை வியபாரிகளா? பே-டிஎம் நடத்துபவர் ஆங்கிலம் தெரியாத ஏழையாக இருந்து இன்று மில்லியனர் ஆகிவிட்டார் என்று பீற்றுகிறார்கள். அவர் பணக்காரராவதில் என்ன பெருமை. கோடிக்கணக்கான ஏழைகளின் வயிற்றில் அடித்தால்தான் ஒருவன் பணக்காரனாக முடியும். நல்லா இருக்கு இவிக நடுவு நிலமை… இந்த பத்திரிக்கை சொம்பு தூக்கிகள்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூணாம்.

அட வெட்கங்கெட்டவைங்களா? இதற்க்குத்தான் வெள்ளையும் சுள்ளையுமா அலைஞ்சீங்களா?

____________________

Arul Ezhilan

மோடியின் கண்ணீர்!

மக்கள் தங்கள் சேமிப்பு பணத்தை இழந்து விட்டு தெருத்தெருவாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஒரு கேடும் இல்லை. அவர்கள் மிகப் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் ஜப்பானில் இருந்து திரும்பிய மோடி என்னை கொலை செய்தாலும் மக்களுக்காக நிற்பேன் என்று வெட்டி சவடால் அடித்திருக்கிறார். நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஒருவன் சாட்டையால் தன்னை அடித்தபடியே நம்மிடம் பிச்சை எடுப்பான் அது நமக்கு அருவறுப்பையும் எரிச்சலையும் கொடுக்கும் ஆனால் அடித்து அடித்து ரத்தம் வர வர பரிதாபம் தேட முயல்வான்.. இது பற்றி ராகுல் அடித்திருக்கும் கமெண்ட்தான் ஹிட் //ஜப்பானில் சிரிப்பு, இந்தியாவில் கண்ணீர்// …

____________________

Veera Kumar

தினமலர் பேப்பர படிச்சுட்டு தன்னை பெரிய பொருளாதார மேதையாக நினைத்து கொள்ளும் சில முட்டாள்கள் தவிர்த்து அத்தனை மக்களும் மோடியை கேவலமாக திட்டுகிறார்கள் .

____________________

சு.விஜய பாஸ்கர்

இப்போது சென்னை நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருக்கிறோம்.

எனக்கு கடும் தண்ணீர் தாகம். ஆளுக்கொரு பாட்டிலாக இரண்டு தண்ணீர் பாட்டில்கள் உள்ளன. ஆனால் தண்ணீர் குடிக்க இயலவில்லை. சிறுநீர் முட்டிக்கொண்டு வருகிறது. என்ன செய்ய.. இதனால் தூங்கவும் இயலவில்லை. தண்ணீர் இருந்தும் குடிக்க முடியவில்லை. சிறுநீரும் கழிக்க இயலவில்லை. தண்ணீர் பாட்டிலை பார்த்துகொண்டே, சிறுநீரை அடக்கிப்பிடித்துக்கொண்டு, தூங்காமல் விழித்துக்கொண்டு வருகிறேன்.

இப்போ சீனை மாற்றிப்போடுங்க.

வீட்டில் அரசி இல்லை. பணம் 500 ரூபாய் தாள்கள் பல உள்ளன. பசி வயிற்றை கிழிக்கிறது. 500 ரூபாயை வாங்க கடை இல்லை. பசியோடு 500 ரூபாயை பார்த்துக்கொண்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும்.

பொறுத்திப் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் பொறுமையாக இருந்துகொள்ளுங்கள்.

பக்கத்தில் அமர்ந்திருக்கும் தோழரிடம் கேட்டேன். “முட்டிக்கிட்டு வருதே என்ன செய்ய?”.. அவர் சொன்ன பதில் “எல்லாருக்கும் அதே நிலைதான், ஆனா எப்போ ட்ரைவருக்கும் கண்டருக்கும் முட்டிக்கிட்டு வருதோ, அப்போதான் எல்லாருக்கும் விடிவு வரும்”.

இப்போ முடிவு பண்ணிக்கொள்ளுங்கள். யாருக்கு முட்டவைக்க வேண்டும் என்று.

பின்குறிப்பு: ட்ரெயின்ல போயிருக்கலாமே ஜீன்னு சொல்ற அறிவாளிகளும், டெபிட் கார்டு யூஸ் பண்ணலாமே ன்னு சொல்ற தேச பக்தர்களும் பக்கத்தில் வந்துறாதீங்க. மலத்தை கரைச்சி வச்சிருக்கேன்.

____________________

Paraneetharan K

மக்கள் இந்த கஷ்டத்தை இன்னும் 50 நாட்களுக்கு பொறுத்துக் கொள்ள வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி!

திருவாளர் பொதுஜனம்: ரெண்டு வருடமா பொறுத்துக்கொண்டு விட்டோம்…இதில் ஐம்பது நாள் என்ன, இன்னொரு ரெண்டரை வருடம் பொறுத்துக்கொள்கிறோம். பிறகு உங்களை அத்வானி, வாஜ்பாய் இருக்கும் இடத்துக்கு ஒரே அடியா அனுப்பி வைக்கிறோம்.

____________________

Saravanan Savadamuthu

கருப்பு பணம் தானே வேணும்?

முதல்ல ஊர் சுத்தறத நிறுத்திட்டு, இவனுங்க வங்கியில வாங்குன கடன கட்ட சொல்லு…

திருட்டுப் பணம் தானா வெளியில் வரும்…. மிஸ்டர் கேடி

  1. ஜிவிகே ரெட்டி (GVK Group) (33933 Crores)
  2. வேனுகோபால் தூத் (Videocon Group) (45405 Crores)
  3. மதுசூதன ராவ் (Lanco Group) (47102 Crores)
  4. ஜி.எம்.ராவ் (GMR Group) (47976 Crores)
  5. சஜன் ஜிந்தல் (JSW Group) (58171 Crores)
  6. மனோஜ் கவுர் (Jaypee Group) (75163 Crores)
  7. கவுதம் அதானி (Adani Group) (96031 Crores)
  8. சசி ருஇயா & ரவி ருஇயா (Essar Group) (101000 Crores)
  9. அனில் அகர்வால் (The Vedanta Group) (103000 Crores)
  10. அனில் அம்பானி (Reliance Group)(125000 Crores)

(மேல உள்ள பட்டியலில் உள்ள 10 பேர் நம் தேசத்தின் பொது துறை வங்கிகளில் வாங்கி கட்டாத கடனின் ஒரு சிறிய பகுதி இது.)

தகவல் அ.முத்துகிருஷ்ணன்

____________________

Bala G

எப்போதும் வீட்டு பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடையில் தான் காய்கறிகள் பணம் கொடுத்து வாங்குவோம்..

இன்று கையில் செல்லாத (யாருமே வாங்கிக்காத) இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இரண்டு இருக்கு..
எஸ்.ஜே.சூர்யா சொல்ற மாதிரி ” இருக்கு.. ஆனா இல்ல.. ”

வேற வழியில்லாமல் அம்பானி கடையில் போய் டெபிட் கார்ட்டை தேய்ச்சு காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்கினேன்.. என்பதைவிட வாங்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்..

இதுதான் மோடிஜியின் ராஜ தந்திர அரசியல்..
புரிகிறதா..

____________________

Ravi Shankar

இன்று
பலரின் தாடிகளுக்கு
லேடி காரணமல்ல,
மோடியே காரணம்.

ஷேவ் பண்ண கூட காசில்லைடா !

____________________

Poornachandran Ganesan

மோடி மஸ்தான் வேலை
இந்தியாவில் இருக்கும் கருப்புப் பணம் சுமார் 16 லட்சம் கோடி என்று தெரிகிறது. இதில் சுமார் 13 லட்சம் கோடிப்பணம் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளில்தான் புழங்கிவந்தது. பத்துமாதமாகத் திட்டமிட்ட மோடி, இந்த அளவு பணத்திற்கு நூறுரூபாய் ஐம்பது ரூபாய் நோட்டுகளை அடிக்கச் சொல்லி வைத்துக் கொண்டல்லவா 500-1000 ரூபாய் நோட்டுகளை முடக்கியிருக்க வேண்டும்? மக்கள் அவதிப்பட்டு கையில் காசின்றித் தவித்து செத்துச் சுண்ணாம்பான பிறகுதான் 100 ரூபாய் நோட்டுகளை அடிப்பார்களா? இன்னும் 50 நாட்கள் இப்படியே அவஸ்தைப் படும்படி பிரதமர் சொல்கிறார். அப்புறம் மட்டும் என்ன? பலன் பூஜ்யம்தான். மோடியின் வித்தை தெரிந்தோ தெரியாமலோ நிறையப் பேர்-குறிப்பாக பாஜகவினர், அறிவிப்புக்கு முன்னாலேயே பணத்தை மாற்றி விட்டார்கள் என்று செய்திகள் வருகின்றன.

____________________

Appanasamy Apps

ஐயய்யோ! கருப்புப் பணத்தை ஒழித்த அரசு இப்போ பினாமி சொத்துகளையும் பறிமுதல் செய்யப்போகிறதாம்!

மிக்சி, ஓடாத கிரைண்டர், கேஸ் ஸ்டவ், டிவி, பிரிஜ், வாஷிங், மிஷின், ஒரு ஓட்டை கூலர், மூணு சீலிங் பேன், ஒரு கம்யூட்டர், நாலு பேண்ட், எட்டு சட்டை, ஆறு பணியன், ஆறு ஜட்டி எதுக்குமே என்னிடம் பில் இல்லை.. பினாமியாக நான் சேர்த்துள்ள சொத்துகள் இவை. இதை எப்படி பதுக்குவேன்? யாராவது ஐடியா சொல்லுங்களேன்.

____________________

Venkat Ramanujam

நானோ சிப் கூட ஓகே ., ஆனா 120mtr பூமி அடியில் வச்சாலும் காட்டி கொடுக்கும்ன்னு விட்டிங்கே பாரு ஒரு நூலு .. ? திருப்பதியில் வெங்கிக்கு ஜிலேபி போடுறங்கான்னு சொன்ன பிக்காலி 420 கோஷ்டி தானடா நீங்க .. ?

#15lakhsmasterstroke மண்டையாஸ் தாங்க முடியலடா ..?‍♂

____________________

Aga Mugan

நெல்லை மாவட்டத்தில் 425 கிராம பஞ்சாயத்துகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 408 கிராம பஞ்சாயத்துகளும் உள்ளன. இங்கு பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. பல விவசாயிகளுக்கு வங்கி கணக்கு, ஆதார் அட்டை போன்ற விபரங்கள் இல்லை. இதனால் அவர்கள் தங்கள் தேவைக்காக பணத்தை வீட்டில் வைத்திருந்தனர்.

தற்போது ரூ.500, ரூ.1000 செல்லாது என்பதால் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். கிராமங்களில் உள்ள வங்கி, தபால் நிலையங்களுக்கு சென்றால் பணம் இல்லை என்று திருப்பி அனுப்பப்படுகின்றனர். சில வங்கிகளில் போதிய பணம் இல்லாமல் டெபாசிட் செய்து விட்டு நாளை வந்து வாங்கி கொள்ளுமாறு ஊழியர்கள் கூறுகின்றனர்.

இதனால் காய்கறி மார்கெட்டுகள், பலசரக்கு கடைகள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நேரத்தை பயன்படுத்தி கிராமப்புற வங்கிகள் பொது மக்களிடம் ஆதார் அட்டையை கேட்டு கெடுபிடி செய்து வருகிறது. பணத்தை மாற்ற ஏதேனும் ஒரு அடையாள சான்று காண்பித்தால் போதும் என அரசு அறிவித்துள்ள நிலையில் பல வங்கிகள் ஆதாரை மட்டுமே கேட்பது புரியாத புதிராக உள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆதார் எண் இல்லாத விவசாயிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

____________________

Meenakshi Sundaram Somaya

நம்பவே முடியாத மோடி
==============================

கொல்ல சதி உயிரையும் கொடுப்பேன் என்று வசனம் பேசிய மோடி யின் ஒரு நாள் COSTUME..மூன்று உடைகள் …

____________________

Anthony Fernando

அனைத்து அமைப்புகளும் தெருவில் இறங்கி போராட வேண்டிய நேரமிது. தெருவில் நிற்பதை நிறுத்தி விட்டு தெருவில் இறங்கி போராட்டத்தை ஆரம்பிப்போம்.

____________________

சம்பத் இளங்கோவன்

 ஊரே அல்லோகலப்படும் தகவலை யாரும் அம்மையாரிடம் சொல்லவில்லை போலும் அறிக்கையில ஒரு வார்த்தை காணோம். அதிர்ச்சியான தகவலை எதுக்கு சொல்லிக்கிட்டுன்னு நினைச்சிருக்கலாம்தானே?
_______________

ரேசன் அரிசிக்கு வேட்டு – தமிழ் மக்களின் வயிற்றிலடிக்கும் மோடி !

5
தனியார்மயம் ஏற்றுக் கொள்ளாத அனைவருக்குமான பொது விநியோக முறை நடைமுறையிலுள்ள தமிழகத்தின் ரேஷன் விநியோகம்.

2013 – செப்டம்பரில் மைய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்வரும் நவம்பர் -1 முதல் தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறது, அ.தி.மு.க. அரசு. இச்சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொது விநியோக முறைக்கு எதிராக இருப்பதைக் குறிப்பிட்டு, அதனைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கடந்த மூன்றாண்டுகளாக மறுத்து வந்தது தமிழக அரசு. இந்நிலையில், தமிழகத்திற்கு மாதாந்தோறும் ஒதுக்கீடு செய்துவரும் மொத்த அரிசி ஒதுக்கீட்டில் 1.26 இலட்சம் டன் அரிசியை, ஒரு கிலோ ரூ.8.30-க்குப் பதிலாக, சந்தை விலையில் ரூ.22.53-க்கு மட்டுமே இனி தருவோம் எனக் கட்டளையிட்டு, அ.தி.மு.க. அரசைப் பணிய வைத்துவிட்டார், மோடி.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புதல் தெரிவித்திருக்கும் அறிக்கை அம்மாவின் பெயர் இல்லாமல், தமிழக அரசின் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. கேவலம், அரிசியின் விலையை உயர்த்துகிறேன் – என மோடி சொன்னவுடன், உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவது அம்மாவின் துணிச்சலுக்குக் களங்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதாலோ அல்லது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரித்த கருணாநிதியை எதிர்த்து மூன்றாண்டுகளுக்கு முன்பு அம்மா அறிக்கை போர் நடத்திய வரலாறு காரணமாகவோ இந்த ஒப்புதல் அவரது பெயரில் வெளியிடப்படவில்லை.

தனியார்மயம் ஏற்றுக் கொள்ளாத அனைவருக்குமான பொது விநியோக முறை நடைமுறையிலுள்ள தமிழகத்தின் ரேஷன் விநியோகம்.
தனியார்மயம் ஏற்றுக் கொள்ளாத அனைவருக்குமான பொது விநியோக முறை நடைமுறையிலுள்ள தமிழகத்தின் ரேஷன் விநியோகம்.

இந்தியாவிலேயே இரண்டு மாநிலங்கள்தான் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குச் சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வந்தன. அதிலொன்று, தமிழகம்; மற்றொன்று கேரளம். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால், தமிழகமோ, கேரளமோ பொது விநியோக முறையில் பின்னுக்குப் போய்விடவில்லை. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமும் வாராது வந்த மாமணியல்ல.

1990-களில் தனியார்மயம்-தாராளமயம் நடைமுறைப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்பட்டு வந்த அனைவருக்குமான பொது விநியோக முறையைக் கைகழுவுமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட்ட அப்போதைய நரசிம்ம ராவ் அரசு, வறுமைக் கோட்டுக்குக் கீழே, மேலே எனக் குடும்ப அட்டைகளை இரண்டாகப் பிரித்து, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்ப அட்டைகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே மானிய விலையில் அரிசி, கோதுமை வழங்கப்படும் என அறிவித்தது. இதன் மூலம் மானியத்தின் பயன்கள் உண்மையான ஏழைகளை மட்டுமே சென்றடையும் என்று கூறி, இந்தப் பாகுபாட்டை நியாயப்படுத்தியது. ஆனால், இந்த நடைமுறை ஏழைகளுக்கு எதிரானதாகவே அமைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச் சாவுகளும், நோஞ்சான் குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமானது.

இந்த நிலையில், இந்திய மக்கள் அனைவருக்கும் படியளக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, மன்மோகன் சிங்-சோனியா காந்தி கூட்டணியால் கொண்டுவரப்பட்டதுதான் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம். முந்தையது வறுமைக் கோடு என்ற மோசடிக் குறியீடை முன்வைத்து குடும்ப அட்டைகளை இரண்டாகப் பிரித்ததென்றால், பிந்தைய உணவுப் பாதுகாப்புச் சட்டம் சதவீதக் கணக்கீடுகளை வைத்து பொது விநியோக முறையை இரண்டாகப் பிளந்தது.

“படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்” என்பார்களே, அது போல, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற நாமகரணத்தைச் சூட்டிக் கொண்டுள்ள இச்சட்டம், இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பது அளிப்பதை அடியோடு ரத்து செய்கிறது. அனைவருக்குமான பொது விநியோக முறைக்கு மாறாக, நகர்ப்புறங்களில் 50 சதவீதப் பேருக்கும், கிராமப்புறங்களில் 75 சதவீதப் பேருக்கும் மட்டுமே மானிய விலையில் தானியங்கள் அளிக்கப்பட வேண்டும் என வரையறுத்துள்ள இச்சட்டம், அரிசி கிலோ ரூ.3.00, கோதுமை ரூ.2.00, மோட்டா ரக தானியம் கிலோ ரூ.1.00 என்ற விலையில், குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் ஐந்து கிலோ வீதம் இந்த தானியங்களுள் ஏதாவது ஒன்று விநியோகிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது.

உணவின்றி தவிக்கும் உழைக்கும் மக்கள் தமிழகத்தில் இவை இரண்டுக்கும் நேர் எதிரான பொது விநியோக முறைதான் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்பொழுது தமிழகத்திலுள்ள இரண்டு கோடியே மூன்று இலட்சம் குடும்ப அட்டைகளுள் ஒரு கோடியே தொண்ணுத்தொரு இலட்சம் குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஒரு குடும்ப அட்டைக்குக் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச தானியத்தின் அளவு ஐந்து கிலோ மட்டும்தான். ஆனால், தமிழகத்திலோ இந்தக் குறைந்தபட்ச அளவு 12 கிலோவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பம் மூன்று நபர்களைக் கொண்டிருந்தாலே தமிழகத்தில் 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. ஆனால்,  தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ என்ற வீதத்தில் இந்த அளவு 15 கிலோவாகக் குறைந்துவிடும்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளுக்கு அதிகபட்சமாக 50 கிலோ வரை தானியங்கள் பெற முடியும். ஆனால், தமிழகப் பொது விநியோக முறையின் கீழ் அதிகபட்ச அளவு 20 கிலோதான். இந்த வேறுபாடு இருந்தாலும், தமிழகத்தில் நடைமுறையிலுள்ள பொது விநியோக முறையின் கீழ் இந்த 20 கிலோ அரிசியையும் இலவசமாகப் பெற முடியும். ஆனால், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் பொது விநியோக முறையில் வறுமை கோட்டுக்குக் கீழே வாழும் அட்டையைப் பெற்றவர்கள்கூட, கிலோ ஒன்றுக்கு மூன்று ரூபாய் பணம் கொடுத்துதான் தானியங்களைப் பெறமுடியும்.

இந்தியாவில் இரண்டே இரண்டு மாநிலங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொது விநியோக முறையைத் தனியார்மய-தாராளமயச் சீர்திருத்தத்திற்கு ஏற்ப ஒழித்துக்கட்டி விட வேண்டும் என்பதுதான் மைய அரசின் தீய நோக்கம். அதனைச் செயற்படுத்தும் முதல்படியாக, தமிழகத்தில் ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப அட்டைதாரர்கள் வறுமைக் கோட்டைத் தாண்டிவிட்டதாகவும், அந்த அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்படும் அரிசியை, இனி சந்தை விலையில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும் எனக் கட்டளையிட்டுக் காரியத்தைச் சாதித்துவிட்டது, மோடி கும்பல்.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டாலும், அனைவருக்குமான பொது விநியோக முறையும், விலையில்லா அரிசித் திட்டமும் தொடரும் எனத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக, 2,100 கோடி ரூபாய் கூடுதல் மானியச் செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதாவது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி ரேஷன் கார்டுகள் இரண்டாகப் பிரிக்கப்படுவதைத் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் மொத்த அரிசியில் 1.26 இலட்சம் டன் அரிசியைத் தமிழகம் சந்தை விலையில் வாங்க வேண்டிய கூடுதல் செலவு தமிழக அரசின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிதிச்சுமைகூட இரண்டாம்பட்சமானதுதான். அரசின் தண்டச் செலவுகளையும் வரி ஏய்ப்புகளையும் தடுத்துவிட்டால், இந்தக் கூடுதல் மானியச் செலவைச் சமாளித்துவிட முடியும்தான்.  ஓரளவு நீதியான, சமத்துவமான ரேஷன் முறையை, அனைவருக்குமான பொது விநியோக முறையை நடைமுறைப்படுத்தி வந்ததற்காகத் தமிழகம் தண்டிக்கப்பட்டிருக்கிறது என்பதும், ரேஷன் விநியோகத்தைத் தீர்மானிக்கும் உரிமை தமிழகத்திடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இப்பிரச்சினையின் மையம்.

உணவற்ற உழைக்கும் மக்கள்தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்தால், தமிழகத்திற்குக் குறைந்த விலையில் அரிசி வழங்க முடியாது எனக் கறார் காட்டும் மோடி அரசு, காவேரி விவகாரத்தில் கர்நாடகத்தின் மீது இதில் கடுகளவாவது பாய்ந்திருக்குமா ? மாறாக, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட முடியாது என்று கூறி, கர்நாடகாவைக் காப்பாற்றியிருக்கிறது. ஒரு காகிதச் சட்டத்தைவிட, காவேரி மீதான தமிழகத்தின் உரிமையும் பல இலட்சம் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமும் எந்த விதத்தில் தாழ்ந்து போய்விட்டது?

தனியார்மயத்திற்குச் சார்பான தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தமிழகத்தின்  மீது வலிந்து திணிக்கும் மோடி அரசு, தமிழக விவசாயிகளின் நலன்களையும் உரிமைகளையும் ஓரளவிற்காவது பிரதிபலிக்கும், சட்டத்துக்கு இணையான காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த மறுக்கிறது. ஜல்லிக்கட்டை அனுமதிக்குமாறு தமிழகத்திலிருந்து எழும் கோரிக்கையை உச்சநீதி மன்ற உத்தரவைக் காட்டி ஒதுக்கித் தள்ளும் மோடி அரசு, காவேரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாகத் தரப்பட்ட உச்சநீதி மன்ற உத்தரவை அமல்படுத்த மறுக்கிறது.

திராவிடக் கொள்கைகளால்தான் தமிழகம் சீரழிந்து நிற்பதாக முதலைக் கண்ணீர் வடிக்கும் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல், அதற்கு மாற்றாகத் தேசியத்தையும், பா.ஜ.க.வையும் முன்னிறுத்துகிறது. ஆனால், ரேஷன் அரிசி விநியோகம் தொடங்கி மருத்துவ படிப்புக்கு மாணவர்களைச் சேர்ப்பது வரை, காவிரியில் தமிழகத்தின் உரிமை தொடங்கி மாநில அரசின் வரி விதிப்பு உரிமை ஈறாக, மோடியின் ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்துப் பறிக்கப்படுகின்றன. கூடங்குளத்தில் அடுத்தடுத்து அணுஉலைகள், சமஸ்கிருதத் திணிப்பு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பெயர் மாற்றம் என வரிசைக் கட்டி வரும் மோடி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் பார்ப்பன இந்துத்துவா கும்பலுக்குத் தமிழக மக்களின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் எடுத்துக் காட்டுகின்றன. ஆர்.எஸ்.எஸ்.பார்ப்பனக் கும்பலும், மோடியும் தமிழக மக்களின் எதிரியாக நிற்பதை அம்பலப்படுத்துகின்றன.

– குப்பன்

___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________

கருப்புப் பண நபர்களிடம் உண்டியலோடு கெஞ்சும் மோடி !

0

சுயவிளம்பர மோகத்தில் திளைக்கும் மோடிஅரசு, தனது புதிய சாதனையாக பல்லாயிரம் கோடிகளுக்குக் கருப்புப் பணத்தை மீட்டு விட்டதாக இப்போது ஆரவாரமாக விளம்பரப்படுத்தி வருகிறது.

மோடி அரசு கொண்டுவந்துள்ள ”ஐ.டி.எஸ். எனும் வருமானம் அறிவிக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.65 ஆயிரம் கோடிக்கும் மேலாக கருப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு எந்த அரசும் இந்த அளவுக்கு அதிகமான கருப்புப் பணத்தை மீட்டதில்லை” என்று பெருமிதம் கொள்கிறார் பா.ஜ.க. தலைவர்அமித் ஷா.

Hunter_Modibharosa-post”இதற்குமுன் காங்கிரசு அரசாங்கம் 1997-ஆம் ஆண்டில் கொண்டுவந்த வீ.டி.ஐ.எஸ். எனும் திட்டத்தின்கீழ் ரூ.30,000 கோடி அளவுக்குத்தான் கருப்புப் பணம் வெளியே வந்தது. ஆனால் முந்தைய ஆட்சியாளர்களின் சாதனைகளை விஞ்சும் வகையில், எதிர்பார்த்ததைவிட அதிகமான அளவில் கருப்புப் பணம் வெளியே வந்து மோடி அரசின் திட்டம் மிகப் பெரிய வெற்றியைச் சாதித்துள்ளது” என்று பூரிக்கிறார் அருண் ஜெட்லி.

முன்பு இந்திராகாந்தி ஆட்சியின்போதும், பின்னர் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோதும் தானாக முன்வந்து கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிக்கொள்ளும் திட்டங்கள்அறிவிக்கப்பட்டன. முந்தைய திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றிவிட்டு, அதே வழியில்தான் இந்த சூரப்புலிகளும் இப்போது கருப்புப்பண மீட்பு நாடகத்தை நடத்தியுள்ளனர்.

மோடி அரசு அறிவித்துள்ள ஐ.டி.எஸ். திட்டத்தின்படி, 2016 செப்.30-ஆம் தேதிக்குள் வருமான வரி 30%, அபராதம் 15%  – ஆக மொத்தம்  45% தொகையைக் கட்டிவிட்டு இதுவரை கணக்கில் காட்டாத சொத்துக்களைக் கருப்புப்பணப் பேர்வழிகள் சட்டப்பூர்வமாக்கிக் கொள்ளலாம்;  அபராதத் தொகையை அடுத்த ஆண்டுக்குள் மூன்று தவணைகளில் செலுத்த சலுகை தரப்படும்; அவர்களைப் பற்றிய எந்தத் தகவலையும் அரசு வெளியிடாது; எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

இதன்படி, இப்போது 64,275 பேரிடமிருந்து ரூ.65,200 கோடி தொகை வசூலிக்கப்பட்டதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது. அதாவது, சராசரியாக ஒரு கருப்புப்பணப் பேர்வழியிடமிருந்து ஒரு கோடி ரூபாய்தான் வசூலாகியிருக்கிறது. இதிலே, ஒரு தனிநபரிடமிருந்து மட்டும் 10,000 கோடி ரூபாய் கிடைத்ததாம். அந்த நபர் யார் என்று தெரியவில்லை.

தனியார்மய – தாராளமயமாக்கத்துக்குப் பிறகு, கடந்த 20 ஆண்டுகளில் உள்நாட்டிலேயே கருப்புப் பணம் பூதாகரமானதாக வளர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ பாதியளவுக்குக் கருப்புப் பணத்தால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே கூறுகின்றனர். இந்நிலையில், ஒரு பெரு நகரத்திலேயே கருப்புப்பணப் பேர்வழிகளிடமிருந்தும் அமைச்சர்களிடமிருந்தும் இத்தனை கோடிகளுக்கும் மேலாகக் கைப்பற்ற முடியும். ஆனால், நாடு தழுவிய அளவில் வேட்டை நடத்தி சராசரியாக ஒரு கருப்புப்பணப் பேர்வழியிடமிருந்து ஒரு கோடியைத்தான் மோடி அரசு வெளியே கொண்டுவந்திருக்கிறது.

மாதத்துக்கு 2 கேசு கொடுங்கண்ணே என்று கள்ளச்சாராய வியாபாரிடம் மாமூல் வாங்கும் போலீசுக்காரன் பேரம் பேசுவதைப்போலத்தான், மோடி கும்பலின் கருப்புப்பண மீட்பு நாடகமும் நடந்துள்ளது. வருமானவரி அதிகாரிகள் கருப்புப்பண முதலாளிகளைப் பார்த்துப்பேசி, உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது, கொஞ்சம் பெரிய மனது வைத்து ஒத்துழையுங்கள், பிரதமரின் லட்சியக் கனவை நிறைவேற்றுங்கள் என்று கெஞ்சி உண்டியல் வசூலைப்போல கேட்க, அவர்களும் தருமம் போடுவதுபோல கொஞ்சம் கருப்புப் பணத்தை கணக்கில் காட்டியிருக்கிறார்கள். இதற்குத்தான் இத்தனைஆரவாரக் கூச்சல்கள்!

உள்நாட்டில் கருப்புப்பண வேட்டையின் யோக்கியதை இப்படி சந்தி சிரிக்கும்போது, வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்கப் போவதாக மோடி அரசு அடித்த சவடால்களோ இன்னுமொரு கேலிக்கூத்து.

”வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நூறு நாட்களில் மீட்டுக் கொண்டு வருவோம்; அப்படி கொண்டுவரப்படும் கருப்புப் பணத்திலிருந்து ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் பணத்தைப் போடுவோம்” என்று அண்டப்புளுகை அள்ளி வீசியது பா.ஜ.க. மோடியின் நூறுநாள் ஆட்சியில் ஒரு சல்லிக்காசு கருப்புப் பணத்தைக்கூட மீட்க முடியாமல் போனதோடு, கருப்புப்பண பேர்வழிகள் வெளிநாட்டில் பதுக்கியுள்ள சொத்துகளுக்கு வரி மற்றும் அபராதமாக 60% செலுத்தி இந்தியாவிற்குள் கொண்டுவரலாம் என்று மோடி கும்பல் சலுகை காட்டியபோதிலும், அதுவும் தோற்றுப்போய், அந்தத் திட்டமும் புஸ்வாணமாகிப் போய்விட்டது.

வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டள்ள கருப்புப் பணத்தைப் பிடிப்பதுதான் எங்கள் கொள்கை. ஆனால், பாருங்கள் அதிலே சிக்கல் வந்துவிட்டது. இருந்தாலும், உள்நாட்டு கருப்புப் பணத்தைக் கைப்பற்றுவதற்கு திட்டங்களை அறிவித்து அதிலே சாதனை படைத்துவிட்டோம் என்று இப்போது கூச்சமின்றி மார்தட்டிக் கொள்கிறது மோடி அரசு.

ஊழல் இல்லாத ஆட்சி, கருப்புப் பண மீட்பு – என்ற இரு முக்கிய வாக்குறுதிகளை வைத்துத்தான் மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அவையும் அம்பலப்பட்டுப் தோற்றுப்போய்விட்டன.

மோடி என்றால் மோசடிப் பேர்வழி என்பதற்கு இவற்றைவிட வேறென்ன சான்று வேண்டும்?

– குமார்

___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________

எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1

32
Marudhiyan

ருப்புப் பணத்தை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கட்டுக்கட்டாகக் கட்டி இரும்புப் பெட்டிக்குள் போட்டு பூமிக்கடியில் புதைத்து வைத்திருக்கிறார்கள்; கட்டிலுக்கு அடியில் மெத்தையில் வைத்துத் திணித்து தைத்து வைத்திருக்கிறார்கள் என்பது போன்ற கருத்துக்களை மக்கள் மத்தியில் திரைப்படங்கள் உருவாக்கியிருக்கின்றன. திரைப்படங்கள் தோற்றுவிக்கும் இந்தக் கருத்தை மக்கள் மத நம்பிக்கைகளைப் போல ஏற்றுக்கொண்டுள்ளனர்.  ரஜினி நடித்த சிவாஜி சினிமாவிலாவது கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு ஆடிட்டர்களையும்,  பணக்காரர்களின் வீட்டு வேலைக்காரர்களையும் கூப்பிட்டு   “உங்க ஐயா பணத்தை எங்கே ஒளிச்சு வெச்சுருக்காருன்னு சொல். இல்லையென்றால் உதைப்பேன்” என்று இயக்குநர் சங்கர் மிரட்டுவார்.  அடையாளம் காட்ட மறுத்தவனை ஆள் வைத்து உதைத்து வழிக்குக் கொண்டுவருவார்.

அந்த மாதிரி பிரதமர் மோடி, கருப்பு பணத்தை எப்படி ஒழிப்பது என்று இயக்குநர் சங்கரிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம். பா.ஜ.க-வின் ஆடிட்டர் குருமூர்த்தியைக் கேட்டால் யார் யாரெல்லாம் கருப்புப் பண ஆடிட்டர்கள் என்பதை அவரே சொல்லி விடுவார். அந்த ஆடிட்டர்களைகருப்புப் பண முதலைகளை அடையாளம் கண்டுபிடித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு கருப்புப் பணத்துக்கு எந்த விதத்திலும் சம்பந்தமேயில்லாத கோடிக்கணக்கான ஏழை மக்களின் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறார் மோடி. இதனால் சில இடங்களில் மாரடைப்பினால் மக்கள் இறக்கும் நிலை கூட ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு வணிகர்களுக்கும், சாதாரண மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இது தாங்கவொனாத் துயரத்தை அளித்திருக்கிறது.

இருந்தபோதிலும் கருப்புப் பணம், கள்ள நோட்டுக்கள் இந்த நாட்டிலிருந்து ஒழியுமென்றால் அதற்காக இந்தத் துன்பத்தை நாங்கள் சகித்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். ஒரு நல்ல நோக்கத்திற்காக நம்முடைய பிரதமர் நடவடிக்கை எடுத்தியிருக்கிறார். இருந்தாலும் மக்களுக்கு இவ்வளவு துன்பம் தராமல் செய்திருந்தால் இதை வரவேற்றிருப்போம் என்ற வகையில்தான் மக்களிடையே கருத்து நிலவுகிறது அல்லது ஊடகங்களால் அப்படித்தான் கருத்து உருவாக்கப்படுகிறது. உண்மையிலேயே இது கருப்புப் பணத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையா  என்பதுதான் எங்களுடைய கேள்வி.

எல்லோரும் சொல்வதைப் போல, இந்த நடவடிக்கையால் முழுமையாக கருப்புப் பணத்தை ஒழித்துவிட முடியாது அல்லது அரைகுறையாகத் தான் முடியும் என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை.

“இது கருப்புப் பண முதலைகளின் மீதான தாக்குதல் இல்லை; யார் கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணோ அவர்களுடைய சார்பில், அவர்களுடைய அரசான  இந்த மோடி அரசு மக்களின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது என்கிறோம். மக்கள் கையிலிருக்கிற சேமிப்பு, உழைத்து சம்பாதித்த பணம் இவற்றையெல்லாம், யார் கருப்புப் பணத்தை உருவாக்குகிறார்களோ அந்தப் பெருமுதலாளிகளின் கையில் கொண்டு சேர்ப்பதுதான் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம்.”

கருப்புப் பணத்தை, இந்த நடவடிக்கையால் ஒழிக்க முடியும் என்று சொல்பவர்கள் அல்லது நம்புபவர்கள் அது எப்படி என்பதை விளக்க வேண்டும். இது ஏன் கருப்புப் பணத்தை ஒழிக்காது என்பதை விளக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மோடி எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையைப் போலத் தெரிகிறது. ஆனால் உண்மையில் அதுவல்ல.

இது தோற்றுப்போன மோடி அரசு எடுத்திருக்கும் அரசியல் நடவடிக்கை. 2014 தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மோடி அளித்த வாக்குறுதிகள் பல. உலகத்திலேயே எந்த அரசியல் தலைவனும், டொனால்ட் ட்ரம்ப் போன்ற கேடுகெட்ட அரசியல் தலைவன் கூட அளித்திடாத வாக்குறுதியை மோடி அளித்தார். நான் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தைக் கைப்பற்றி ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 இலட்சம் போடுவேன் என்று மோசடியாக வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என்று கேட்டபோது ” அது சும்மானாச்சுக்கும் எலெக்சனுக்காக சொன்னது” என்று பதிலளித்தார் அமித் ஷா. அந்த அளவிற்கு நேர்மையோ  நாணயமோ இல்லாத அரசு இது.

மோடி பல நம்பிக்கைகளை உருவாக்கினார். வேலை வாய்ப்பை உருவாக்கப் போகிறேன். விலைவாசியை குறைக்கப் போகிறேன் என்று அளந்து விட்டார். வளர்ச்சி தான் என்னுடைய ஒரே கொள்கை என்று பேசினார். மேக் இன் இந்தியா , ஸ்டார்ட் அப் இந்தியா, சிட் டவுன் இந்தியா , டிஜிட்டல் இந்தியா, ஸ்வச் பாரத் என்று ’பஞ்ச டயலாக்’ திட்டங்களை அறிவித்தார். அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றினார். வானொலியில் ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசினார். ஆனால் இரண்டாண்டுகள் தாண்டிய பிறகும் இன்னதை சாதித்தேன் என்று சொல்லிக்கொள்ளும்படியாக மோடியால் எதையும் கூறமுடியவில்லை. மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள்தான் மிச்சம்.

இந்த சூழ்நிலையில் தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பது தான் மோடி அரசின் முன்னாள் இருக்கின்ற கேள்வி. மோடி அரசு இதற்காகத் தொடர்ந்து இரண்டு முறைகளைக் கையாள்கிறது.  பொதுமக்களுடைய கருத்தை இரண்டு துருவங்களாகப் பிரித்து மோத விடுவது. ஒரு எதிரியை உருவாக்கி அவன்தான் நாட்டு மக்களின் எதிரி என்று காட்டுவது. அவர் எதிரியா இல்லையா என்பது பற்றி நாட்டு மக்களிடம் விவாதம் நடக்கும். இதுதான் தேசம் சந்திக்கும் முதன்மையான பிரச்சினை என்று ஒரு பிரச்சினையை அவர்கள் எழுப்புவார்கள். அதுகுறித்து ஆம் இல்லை என்று விவாதம் நடக்கும்.

பா.ஜ.க என்ற கட்சியே அப்படித்தான் ஆட்சிக்கு வந்தது..  இராமன் அயோத்தியில் தான் பிறந்தான். எனவே மசூதியை இடித்து கோயில் கட்டியே தீருவோம் என்றனர். இதற்கு எதாவது ஆதாரம் இருக்கின்றதா? அது மக்களிடையே விதைக்கப்பட்ட ஒரு மத நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வைத்து தேசம் முழுவதையும் இரண்டு கூறுகளாகப் பிளந்து, மதக்கலவரங்களை உருவாக்கி, அதன் மூலம் பெரும்பான்மை இந்து மதவெறியைத் தூண்டித்தான் ஆட்சிக்கு வந்தார்கள்.

இப்போது மோடி வந்ததில் இருந்து என்ன நடக்கிறது? பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள், அனுப்பபடுகிறார்கள். அதனால் தான் காசுமீர் பிரச்சினை என்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதிகளை அனுப்புகிறதா என்றால் ஆமாம் அனுப்புகிறது. ஆனால் அதுதான் காசுமீர் பிரச்சினைக்குக் காரணமா என்றால், இல்லை.

எல்லோருக்கும் பொருந்துகிற சட்டத்தை இசுலாமியர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். தலாக் தலாக் என்று மூன்றுமுறை சொன்னால் மணவிலக்கு என்று சொல்கின்றனர். இப்படி இசுலாமிய மதவாதிகள் பேசுகிறார்களா இல்லையா என்றால் ஆமாம் பேசுகிறார்கள். ஆனால் மதரீதியான சட்டங்கள் ஏற்றத்தாழ்வுகள், சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இந்துக்களிலும் இருக்கிறதா இல்லையா? ஆனால் இசுலாமியர்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டிருப்பது போல ஒரு சித்திரத்தை உருவாக்கி அதன் மீது ஒரு விவாதத்தை தொடங்குகிறார்கள். அடுத்ததாக இப்போது கருப்புப் பணம். கருப்புப் பணம் என்பது இன்னொரு இராம ஜென்ம பூமி.

கருப்புப் பணம் யார் வைத்திருக்கிறார்கள் என்பது இந்த அரசாங்கத்திற்கு தெரியாதா? இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்டுக்கு தெரியாதாம். என்ஃபோர்ஸ்மென்ட்  டைரக்டரேட்டுக்கு தெரியாதாம். மோடிக்கும் தெரியாதாம். ரூ.1000-யும் ரூ.500-யும் முடக்குவதன் மூலம், அதாவது கொக்கு தலையில் வெண்ணை வைத்து கருப்புப் பணத்தை பிடிக்கப் போகிறார்களாம்!

மோடியின் ஸ்வச் பாரத்துடன் இதை ஒப்பிடலாம். திடீரென்று மோடி துடைப்பதுடன் கிளம்பினார். உடனே ஷாருக்கான், கமல ஹாசன் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் துடைப்பத்தை எடுத்தார்கள். இந்தியா தூய்மையாகி விட்டதா?

இந்தியாவின் தலைநகரத்தில் பிள்ளைகளை பள்ளிகூடத்துக்கு அனுப்ப வேண்டாம்; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. காரணம், சுற்றுசூழல் மாசு. தூய்மை இந்தியா என்று துடைப்பத்தை எடுத்தாரே மோடி. ஏன் டெல்லி தூய்மையாகவில்லை?

“கார்கள், வாகனங்கள் உருவாக்கிய புகையை, ஆலைகள் உருவாக்கிய புகையை எவனாவது துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்ய முடியுமா? முடியாது. புகையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் கார்களை தடுக்க வேண்டும், குறைக்க வேண்டும். அல்லது மாசு ஏற்படுத்தும் ஆலைகளை அப்புறபடுத்த வேண்டும்.  ஆட்டோமொபைல், கார்கள் விற்பனையை அதிகரிப்பதுதான் மோடியின் கொள்கை. எப்படி துடைப்பத்தை வைத்து புகையைச் சுத்தம் செய்ய முடியாதோ அது போல 500 ,1000 ரூபாய் நோட்டுக்களைத் தடை செய்து கருப்புப் பணத்தை ஒழிப்பதும் முடியாது.”

கருப்புப் பணம் என்றால் என்ன? முறைகேடான தொழில்களில் சேர்த்த பணம் கருப்பு பணம். அது ஒரு வகை. முறையாகத் தொழில் செய்பவர்களும் வரி ஏய்ப்பு செய்கிறார்கள். அந்த வரி ஏய்ப்பு செய்த பணமும் கருப்புப் பணம்.

முறைகேடு என்று எடுத்துக்கொண்டால் இலஞ்சம் வாங்குவது. அதிகாரிகள் இலஞ்சம் வாங்கி கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கின்றனர். அதுபோல அரசியல்வாதிகளிடமும் கோடிக்கணக்கில் பணம் இருக்கின்றது. அவர்களெல்லாம் வைத்திருக்கும் கருப்புப் பணத்தில் 30% வருமான வரி கட்டிவிட்டால் அது வெள்ளையாகிவிடுமாம்.

கிட்டத்தட்ட 65,000 கோடிக்கும் மேல் கருப்புப்பணத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறோம் என்று மோடி அரசு அறிவித்திருக்கிறது. 65,000 கோடி அரசாங்கத்தின் கைக்கு வந்துவிட்டதாக பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சில நூறு பேர் தாங்கள் வைத்திருந்த 65,000 கோடிக்கு வரியையும் அபராதத்தையும் கட்டியிருக்கிறார்கள். அரசுக்கு 28,000 கோடி வரி வந்திருக்கிறது. அவ்வளவுதான்.

“எப்படி சம்பாதித்தீர்கள் என்று கேட்க மாட்டோம். வரியை மட்டும் கட்டி விடுங்கள்” என்று கருப்புப் பண பேர்வழிகளின், அவர்கள் காலில் விழாத குறையாகக் கெஞ்சித்தான் இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 65000 கோடி என்பது கஞ்சா விற்ற காசா, இலஞ்சம் வாங்கிய காசா என்பதை ஐ.டி. டிபார்ட்மென்ட் விசாரிக்கவில்லை.

ஆனால் பாமர மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? கருப்பு பண பேர்வழிகள் 500, 1000 த்தை வங்கியில் கொடுத்தால் சிக்கிக் கொண்டுவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல, வரி  கொடுத்தால் எல்லாக் குற்றங்களும் மன்னிக்கப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை.

ஜெயலலிதா வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்கப்பட்டது. “அந்தப் பணத்திற்கு நான் வரி கட்டிவிட்டேன்” என்பதுதான் நீதிமன்றத்தில் அம்மா சொன்ன விளக்கம். ஆனால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போட்டால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஒருவர் அந்த வருமானம் எப்படி வந்தது என்பதை சொல்லியாக வேண்டும். அதனால்தான் ஜெயாவின் வாதம் எடுபடவில்லை.

ஆனால் இந்த விதி மற்ற கருப்புப் பண முதலைகளுக்குப் பொருந்தாது. கருப்பை வெள்ளையாக்கும் மோடி அரசு உள்ளிட்ட எல்லா அரசுகளும் எனக்கு வரியை மட்டும் கொடுத்துவிடு. உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று சொல்லித்தான் கருப்பை வெள்ளையாக்குகின்றனர்.

500, 1000 ரூபாய் செல்லாது என்று இரவு 8:30 மணிக்கு மோடி அறிவித்த பிறகு விடிய விடிய சென்னை உள்ளிட்ட அனைத்து இந்திய நகரங்களிலும் நகைக் கடைகள் திறந்திருந்தன. இன்னொரு பக்கம் ஏ.டி.எம்-ல் மக்கள் கூட்டம். நாளைக்கு சோற்றுச் செலவுக்கு 400 ரூபாய் கிடைக்குமா என்று. ஒரே இரவில் கிராமுக்கு ரூ.1500, ரூ.2000 என தங்கம் விலை ஏறுகிறது. கருப்புப் பணத்தை பிடிப்பது தான் இந்த அரசாங்கத்தின் நோக்கமென்றால் நகைக்கடைக்கு வந்தவனையெல்லாம் அப்படியே வளைத்துப் பிடிக்க வேண்டியது தானே.

கருப்புப் பணத்தை காகிதப் பணமாக வைத்துக் கொள்ளாதீர்கள். தங்கமாக வாங்கி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்; சொத்தாகவோ, ரியல் எஸ்டேட்டாகவோ ஷேராகவோ வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் காகிதப்பணமாக மட்டும் வேண்டாம் என்கிறது மோடி அரசு.

மோடி தன் உரையிலேயே சொல்கிறார். பணப்பொருளாதாரத்தை ஒழித்து அனைவரையும் வங்கிப் பொருளாதாரத்துக்குள் கொண்டுவரப் போகிறேன் என்கிறார். கருப்புப் பணம் தொடர்பான ஆய்வுகள் என்ன சொல்லுகின்றன. வங்கிப்பொருளாதாரத்தை தங்களுடைய பொருளாதார நடவடிக்கைக்கு அடிப்படையாக வைத்திருக்கும் மிகப்பெரிய தரகு முதலாளிகள் பன்னாட்டு நிறுவனங்கள்தான் கருப்புப் பணத்தினுடைய மிக முக்கியமான இருப்பிடம் என்று சொல்கின்றன.

இதே பா.ஜ.கவினர் முன்னர் சொன்னார்களே, அந்த 70 இலட்சம் கோடி கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பது யார்? உள்ளூர் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், இலஞ்ச ஊழல் பேர்வழிகளுமா? சிலர் அப்படி இருப்பார்கள். ஆனால் மிகப்பெரும்பான்மையாக இந்த கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் இந்த நாட்டினுடைய மிகப்பெரிய தரகு முதலாளிகள் டாடா, அதானி, அம்பானி.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்தில் உருவாகிறது. அதை உருவாக்குபவர்கள் இவர்கள் தான். எனவே வங்கிகளின் மூலம் உருவாகும் கருப்புப் பணம் என்பதுதான் முதன்மையானது. ரூ.500, ரூ.1000 – ஆக மாற்றி தேர்தல் நேரத்திலே விநியோகிப்பது, அல்லது மற்ற செலவுகளுக்குக் கருப்புப் பணமாகப் பயன்படுத்துவது என்பதெல்லாம் ஒரு கொசுறு.

அப்படிப்பட்ட கருப்பு பணம் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் அது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானது. முக்கியமான குற்றவாளிகள் யாரோ, இந்தக் கருப்புப் பொருளாதாரத்தின் ஊற்றுக்கண்கள் யாரோ, அவர்களைப் பற்றி எந்த ஊடகமும் பேசுவதில்லை. ஏனென்றால் எல்லா ஊடகங்களும் அவர்கள் கையில் இருக்கிறது. மோடியும் பேசுவதில்லை? ஏனென்றால் மோடி அவர்கள் பையில் இருக்கிறார். கருப்புப் பண முதலைகளில் மிக முக்கியமானவரான அதானி, அவருடைய சட்டைப்பையில் இருக்கும் மோடி, கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறாராம். நம்மை நம்பச் சொல்கிறார்.

இந்த மையமான விடயத்திலிருந்து திசைதிருப்பவே கருப்புப் பணத்தோடு கள்ளநோட்டையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார் மோடி. பாகிஸ்தானிலிருந்து ரூ.500, ரூ.1000 கள்ள நோட்டுகளை அடித்து விடுகின்றனர். அது கணிசமான அளவிற்கு இந்தியப் பொருளாதாரத்தில் ஊடுருவியிருக்கின்றது. அதை ஒழிக்க வேண்டுமென்றால் இது போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கவியலாதவை என்று பாஜகவை சார்ந்தவர்கள் வாதாடுகின்றனர். கள்ள நோட்டுக்களை ஒழிப்பது தான் இவர்கள் நோக்கம் என்றால், மக்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கலாம். உங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்து புதிய நோட்டுக்களை வாங்கிக்கொள்ளுங்கள்; அப்படி செய்யவில்லையென்றால் நீங்கள் வைத்திருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாதவையாகிவிடும்” என்று சொல்லியிருக்கலாம்.

இது ஒன்றும் புதியதல்ல, 2015-இல் அப்போதைய கவர்னராக இருந்த இரகுராம் ராஜன் 2005-ம் ஆண்டுக்கு முன்னர் அச்சிடப்பட்ட ரூ.500 நோட்டுக்களை குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள் என்று அறிவித்தார். கள்ள நோட்டைப் பிடிப்பதுதான்  நோக்கம் என்றால் அப்படி செய்திருக்கலாம். அப்படியே வைத்துக் கொண்டாலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை அடிக்கத் தெரிந்தவர்களுக்கு இந்தப் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களையும் அடிக்க முடியாதா என்ன?

இதற்கு பாஜக கட்சியினர் ஒரு பதில் வைத்திருக்கின்றனர். புதிய 2000 ரூபாய் நோட்டில் கம்ப்யூட்டர் சிப் (Chip) பொருத்தப்பட்டுள்ளதாம், அதனால் அதை வானத்திலிருந்தே பார்த்து எங்கே இருக்கின்றதென்பதைக் கண்டுபிடிக்கமுடியுமாம்.

”உலகத்தில் இதுவரை யாருமே இப்படி ஒரு தொழில்நுட்பத்தில் நோட்டு அடிக்கவில்லை, வதந்தியை நம்பவேண்டாம்” என்று ரிசர்வ் வங்கியே சொன்ன பிறகும் தொலைக்காட்சியில் பேசக்கூடிய பாஜக-வின் உண்மை விளம்பிகள் ரூ.2000 நோட்டில் சிப் இருக்கிறது என்று துணிந்து பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.

வேறு ஒரு கேள்வியும் எழுகிறது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்கு கள்ள நோட்டுக்களை அச்சடித்து விநியோகிப்பதைத் தவிர வேறு வழியில்லையா என்பது தான் அந்தக் கேள்வி. ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இருக்கட்டும். பார்ட்டிசிபேட்டரி நோட்(Participatory Note) என்றொரு  நோட்டு இருக்கிறது. அது ரூபாய் நோட்டு அல்ல.

அந்த நோட்டில் தாவூத் இப்ராஹீம், ஹஃபீஸ் சையது அல்லது பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ போன்ற யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதிலே யார் முதலீடு செய்கிறார்கள் என்று கேள்வி கேட்கக்கூடாது என்பது தான் அதிலிருக்கக்கூடிய முக்கியமான முதல் விதி. அதை பாகிஸ்தானிலிருந்து அனுப்ப வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நியூயார்க்கிலோ, வாஷிங்டனிலோ, இலண்டனிலோ அல்லது பாரீசிலோ அந்தப் பணத்தை முதலீடு செய்யலாம். வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் (Foreign Institutional Investors) வாயிலாக இந்தியாவில் இருக்கக்கூடிய BHEL அல்லது BSNL போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலோ அல்லது அம்பானி, அதானி நிறுவனங்களிலோ மூலதனம் போட முடியும்.

யார் அந்தப் பங்குகளை வாங்குகிறார்கள் என்று கேட்பதற்கான அதிகாரம் மோடி அரசுக்குக் கிடையாது. இப்படி அனாமதேயமாக மொட்டைக்கடுதாசியைப் போல யார் போடுகிறார்கள் என்றே தெரியாமல், அவன் கஞ்சா விற்பவனாக இருந்தாலும், விபச்சாரம் செய்பவனாக இருந்தாலும், ஆயுதக் கடத்தல் பேர்வழியாக இருந்தாலும் பாகிஸ்தான், அமெரிக்க உளவாளியாக இருந்தாலும், யார் வேண்டுமானாலும் இந்தியப் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய முடியும், அதை அரசாங்கம் சோதிக்க முடியாது என்ற ஒரு ஏற்பாட்டைச் செய்தது யோக்கியர் என்று பெயர் பெற்ற வாஜ்பாயியின் ஆட்சி. அவர் காலத்தில் தான் இந்த பார்ட்டிசிபேட்டரி நோட் என்ற மொட்டைக்கடுதாசி முதலீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்றைக்கும் இது அமலில் இருக்கிறது. “ தாவூத் BHEL-லிலோ, BSNL-லிலோ, கோல் இந்தியாவிலோ அல்லது தனியார் நிதி நிறுவனங்களிலோ முதலீடு செய்திருப்பார். அவற்றிலிருந்து கிடைக்கும் ஈவுத்தொகையையோ (டிவிடெண்ட்) அல்லது விற்றுக் கிடைக்கக் கூடிய வெள்ளைப் பணத்தையோ தீவிரவாதிகளுக்க வினியோகிப்பது சுலபமா? இல்லை, பாகிஸ்தானில் ஒரு அச்சகம் வைத்து அங்கே ரூ.500 மற்றும் சிப் பொருத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகளை அச்சடித்து, மூட்டையாகக் கட்டி, கழுதையின் முதுகில் ஏற்றி அதனை இமயமலையில் ஏற்றி அதற்குக் காவலாக இரண்டு தீவிரவாதிகளைப் போட்டு மலையின் மறுபக்கம் கொண்டுவந்து இந்திய பார்டர் செக்யூரிட்டி ஃபோர்சையும், கம்பிவேலிகளையும் தாண்டி, மூட்டைகளை இந்தப் பக்கம் தூக்கிப் போட்டு, இங்கேயுள்ள தீவிரவாதிகளிடம் பிரித்துக்கொடுத்து, அப்புறம் குண்டு வெடிக்கச்செயவது சுலபமா?

யாரிடம் கதை சொல்கிறார்கள் இவர்கள்? போதைமருந்து வியாபாரிகள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள், கருப்புப் பண முதலைகள் வரையில் எல்லா அயோக்கியர்களும் அடையாளம் தெரியாமல் முதலீடு செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருப்பது உங்கள் அரசு. அப்படி வருகின்ற அந்நிய முதலீடு அதிகரிக்க அதிகரிக்க அதையே தன்னுடைய சாதனையாக மோடி சொல்லிக் கொள்கிறார். அதாவது கருப்புப் பணம் உள்ளே வருவதைத் தான் வளர்ச்சி என்று சொல்லுகிறார். ஆனால் இங்கே கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகவும், அதைப் பூமிக்கடியில் டிரங்குப் பெட்டிகளில் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் அதைக் கண்டுபிடிக்கப் போவதாகவும் நமக்குக் காதிலே பூ சுற்றுகிறார் மோடி.

-தொடரும்

ஆடியோ : ஆடியோவை தரவிறக்கம் செய்ய சுட்டியில் வலது பொத்தானை அழுத்தி சேவ அஸ் ஆப்சனை தெரிவு செய்யவும்.

பிற பாகங்களுக்கு :

மோடி அறிவிக்கும் முன்னரே பணத்தை மாற்றிய பா.ஜ.க முதலைகள் !

31
bjp_tweet

“கட்சிகாரங்களுக்கு தகவல் சொல்லி முன்னாடியே அவங்க பணத்தை மாத்திருப்பாங்கப்பா. நாமதான் கஷ்டப்படனும்”

ஐநூறு, ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த மறுநாள் அதன் பாதிப்புகள் குறித்து கேட்டபோது மளிகை கடை அண்ணாச்சி ஒருவர் கூறியது.

bjp_tweet
பா.ஜ.க-வின் பஞ்சாப் தலைவர்களில் சஞ்சீவ் கம்போஜ் அவரது டிவிட்டர் பக்கத்தில் புது நோட்டையே காட்டிவிட்டார். நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஊடக பிரச்சாரகர்கள் உள்ளிட்டு பலரும் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பை மிக இரகசியமாக  செயல்படுத்தப்பட்ட துல்லிய தாக்குதல் என்று வருணித்தார்கள். நடுத்தரவர்க்கமும் இப்படி தான் நினைத்திருந்தார்கள். தற்போது அண்ணாச்சி தன் அனுபவத்தில் கூறியது சரிதான் என்பதை உறுதி செய்யும்விதமாக ரூபாய் நோட்டு விவகாரத்தில் நடந்திருக்கும் ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டது நவம்பர் 8-ம் தேதி. ஆனால் நவம்பர் 6-ம் தேதியே பா.ஜ.க-வின் பஞ்சாப் மாநில தலைவர்களில் ஒருவரான சஞ்சீவ் கம்போஜ் என்பவர் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தகவல் மட்டுமல்ல புதிய ரூ.2000-த்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதோடு இந்த 2016 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்தின் அளவு மிக அதிகமாக அதிகரித்திருக்கிறது. அதாவது ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தான் வைப்பு தொகை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக மார்ச் காலாண்டில் 2 லட்சம் கோடி, ஜூன் காலாண்டில் 1 லட்சம் கோடியாக வளர்ந்து வந்த வைப்பு தொகை இந்த ஜூலை காலாண்டில் ஆறு லட்சம் கோடி அளவிற்கு வளர்ந்துள்ளது. பார்க்க firstpost  – இணையத் தளத்தில் வந்துள்ள செய்தி.

Quarterly bank deposits
இந்த கலாண்டில் ஆறு லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ள வைப்புத் தொகை. ( நன்றி : firstpost )

ஆக பா.ஜ.க தலைவர்களுக்கு அரசின் முடிவு முன்னரே தெரிந்திருப்பதும், அதே சமயத்தில் டெபாசிட் தொகை வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக அதிகரித்ருப்பதையும் இணைத்து பார்க்கும் போது பா.ஜ.க-வின் கருப்புப் பண முதலைகளுக்கு முன்னரே தகவல் கொடுத்துவிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. மோடி அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாள் மேற்கு வங்க பா.ஜ.க-வின் வங்கி கணக்கில் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தியிருக்கிறது, மார்க்சிஸ்டு கட்சி

இதுமட்டுமல்ல் இந்தி பத்திரிகையான தைனிக் ஜார்கன்,அக்டோபர் 27-ம் தேதியே அரசின் புதிய ரூபாய் நோட்டு குறித்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியிலிருக்கும் தனது தொடர்புகள் மூலம் இத்தகவலை பெற்று வெளியிட்டிருக்கிறார் பத்திரிகையாளர் பிரஜேஷ் துபே.

கருப்பு பணம் என்பது பெருமளவில் வெளிநாட்டு வங்கிகளிலும், அந்நிய நிதி மூலதனமாகவும் பல்வேறு பெயர்களில் பங்கு சந்தைகளிலும் சுற்றிவருகிற ஒன்று. அதே நேரம் ரூ.500, ரூ.1000 என்று பணமாக பதுக்கி வைத்திருப்பது சிறிய அளவிலானது. அதனால் மோடியின் நடவடிக்கை முதலாளிகளின் கருப்பு பணவிசயத்தில் எதையும் சாதிக்க முடியாது என்பதும் இது மக்கள் மீதான தாக்குதல் என்பதை முன்னரே எழுதியிருந்தோம். ஆனால் உள்நாட்டில் இருக்கும் இந்த சிறிய அளவு கருப்புப் பணத்தைக் கூட பா.ஜ.கவின் கூட்டாளிகளான முதலாளிகள், தொழிலதிபர்கள், கட்சிப்பிரமுகர்கள் வெள்ளையாக்கி வங்கிகளில் முன்னெச்சரிக்கையாக சேர்த்திருப்பது அம்பலமாயிருக்கிறது.

ஆக இந்த சர்ஜிக்கல் ஸ்டைரக் நடத்தப்பட்டிருப்பது மக்களிடம் மட்டும் தான். மக்களுக்கத்தான் இந்த செல்லாத நோட்டுப் பிரச்சினை தெரிந்திருக்கவில்லை. ஆனால் கருப்பு பண முதலைகளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. அதனால் தான் எந்த கருப்பு பண முதலைகளும் வங்கியின் வாசலில் நிற்கவில்லை. கருப்பு பணத்தின் மூலவர்களில் ஒருவரான ரஜினிகாந்த் உள்ளிட்டு சினிமா பிரபலங்கள், ஐ.பி.எல் விளையாட்டு வீரர்கள் மோடியை ஆதரிக்கிறாரகள். ஆனால் அப்பாவி மக்கள் தான் வங்கியில் நிற்கிறார்கள். மோடி அறிவித்த இரவில் பணம் இருந்தும் சோறு கிடைக்காமல் இருந்தார்கள்.

இது தொடர்பாக ஊடகங்களில் பேசிய பா.ஜ.க பேச்சாளர்கள் உள்ளிட்டு சிலர் ஒரு சிறிய அளவிலாவது கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்று கூறிவந்தார்கள். அப்ப்டி சிறிய அளவில் கூட எதையும் மோடியின் அறிவிப்பு சாதிக்கவில்லை என்பதோடு அதிலும் ஊழலும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இத்தனையும் செய்துவிட்டு ஐநூறு, ஆயிரம் ரூபாய் செல்லாது என மோடி அறிவித்திருப்பது கருப்புப் பணத்தை திரும்ப கொண்டு வரும் என்றும் அதை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள். அர்னாப் முதல் பாண்டே வரை இதே பல்லவியை சலிக்காமல் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

BJP (Bharatiya Janata Party) spokesperson Meenakshi Lekhi during a press conference in Kolkata on Oct.27, 2013. (Photo: IANS)
பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெகி

ஆனால் பா.ஜ.க – கட்சியே இந்நடவடிக்கை கருப்பு பண விவகாரத்தை திசை திருப்பக்கூடிய செயல் என்றும், பொதுமக்களுக்கு எதிரான ஒன்று என்றும் அறிவித்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதிர்ச்சியடைய தேவையில்லை. எதிர்கட்சிகளாக இருக்கும் போது தவிர்க்க இயலாமல் சில உண்மைகளை பேசுவது அவசியமாகிறது. அப்படியான சூழலில் பா.ஜ.க தெரிவித்த கருத்து தான் அது.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் முன்னர் காங்கிரஸ் ஆட்சியின் போது 2005-ம் ஆண்டில் முந்தைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ன மாற்றப்போவதாக அறிவித்தார்கள். அப்போது பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெகி தெரிவித்த கருத்துக்களைப் பார்ப்போம்.

“நாட்டின் வளர்ச்சி குறைந்துவிட்டது. சகல துறைகளிலும் அரசு திணறி வருகிறது. வாராக்கடன் அதிகரித்து பொருளாதாரம் சிக்கலில் இருக்கிறது. இச்சூழலில் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து மாற்றும் அரசின் மாய்மாலம், மக்களின் கவனத்தை திசை திருப்பக்கூடிய செயல்.

ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவிக்கும் ப.சிதம்பரத்தின் இந்த திட்டம் பணக்காரர்களுக்கானது. மக்களுக்கு எதிரானது. இத்திட்டத்தின் மூலம் சுவிஸ் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொண்டு வரமுடியாது. அதே சமயத்தில் வங்கி கணக்கு இல்லாத ஏழை மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். தங்கள் பணத்தை அமெரிக்க டாலரிலும், யூரோவிலும், பவுண்டிலும் வைத்திருப்பவர்களை பாதிக்காது, ஆனல் சாதாரண மக்களின்ஒவ்வொரு பைசா சேமிப்பையும் பாதிக்கும்.

இது போன்ற திசை திருப்பும் நடவடிக்கையாயால் படிப்பறிவில்லாத, வங்கி வசதியில்லாத சாதரண மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். இத்திட்டம் ஏழைகளுக்கு எதிரானது. 65% இந்திய மக்கள் வங்கியில்லாமல் ரூபாய் நோட்டாகத்தான் தங்கள் பணத்தை சேமிக்கிறார்கள். சிறிய அளவில் சேமிப்பு வைத்திருப்பவர்கள், வங்கி கணக்கு இல்லாதவர்கள், தங்கள் சிறிய வாழ்நாள் சேமிப்பை வைத்திருப்பவர்கள் இதன் மூலம் குறிவைக்கப்படுகிறார்கள். இத்திட்டம் பொதுமக்களை இடைத்தரகர்களுக்கு இரையாக்கும்.

இத்திட்டம் கருப்புப் பணத்தை ஒழிக்காது. கருப்புப் பண முதலைகள் எந்த சிரமும் இல்லமால் தங்கள் பணத்தை மாற்றிக்கொள்வார்கள். அதற்கு தேவையான வேலைகளை செய்துகொள்ள ஆட்களை அமர்த்தி பணத்தை மாற்றிக்கொள்வார்கள்.

சுவிஸ் எச்.எஸ்.பி.சி வங்கி கணக்குகளின் விவரங்கள் அரசிடம் இருக்கிறது. ஆனால் அதை வைத்து கருப்பு பண முதலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு கள்ள மவுனம் சாதிக்கிறது.”

ஆக தாங்கள் தற்போது எடுத்துள்ள நடவடிக்கை எத்தையது என்பதையும் அதன் தாக்கம் என்ன என்பதுமல்லாமல் அதன் நோக்கத்தையும் தன் வாயிலேயே அறிவித்திருக்கிறார்கள். மக்களை வதைப்பதில் இவர்கள் எவ்வளவு கைதேர்ந்தவர்கள் என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும் ? வீடியோவை பாருங்கள் பகிருங்கள்.

 

மேலும் தகவல்கள் :

சிறப்புக் கட்டுரை : கருப்புப் பணம் என்றால் என்ன ? பிரபாத் பட்நாயக்

1
Money box

மோடி அரசின் கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கை ! – பேராசிரியர் பிரபாத் பட்நாயக்

320px-Prabhat_Patnaik,_2012_December_12_
பேராசிரியர் பிரபாத் பட்நாயக்

வம்பர் 8 இரவு 8 மணிக்கு தேசிய தொலைக்காட்சிகளில் தோன்றிய நரேந்திர மோடி அந்நாளின் நள்ளிரவிலிருந்து, அதாவது வெறும் நான்கு மணி நேரத்தில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சட்டப்ரீதியான தகுதியை இழக்கும் என்று அறிவித்தார். இந்த வினோதமான முடிவு ‘கருப்புப் பணத்தை” தாக்கும் என்று நியாயப்படுத்தினார். அது மட்டுமின்றி “பயங்கரவாதிகள்” பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாமல் போய்விடுமென்றும் கூறினார்; அரசாங்கத்தை உற்சாகமாக ஆதரித்துவரும் சில தரப்பினர் மோடியின் இந்த முடிவு “பயங்கரவாதத்தின் மீது தொடுக்கப்பட்ட துல்லியத் தாக்குதல்” என்பது வரை பேசிவிட்டனர்.

கள்ள நோட்டுகள் பற்றி பிறகு பேசுகிறேன். முதலில் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியே வழக்கத்திற்கு மாறாகப் பாராட்டியிருக்கும் “கருப்புப் பண” விவகாரத்தை முதலில் பார்க்காலாம். ஆயிரம், ஐநூறு ரூபாய்த் தாள்களை மதிப்பிழக்கச் செய்த மத்திய அரசின் நடவடிக்கை ‘கருப்புப் பணத்தின்’ மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்கிற வாதம், ‘கருப்புப் பணத்தின்’ தன்மை குறித்து கொஞ்சம்கூடப் புரிதல் இல்லாமல் முன்வைக்கப்படும் ஒன்று. நிதானமில்லாமல் எளிமைப்படுத்தப்படும் கருத்தும் கூட.

‘கருப்புப் பணம்” என்பது டிரங்குப் பெட்டிகளிலும், தலையணை உறைகளுக்குள்ளும் கற்றை கற்றையாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் என்கிற உள்ளார்ந்த புரிதலிலிருந்து வரும் கருத்து அது. 500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தால் அதிக எண்ணிக்கையிலான பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை ஒப்படைத்துவிட்டு, புதிய நோட்டுகளைப் பெறும் பரிவர்த்தனைக்காக வங்கிகளுக்கு செல்வார்களாம்; அவர்கள் மீது வங்கிகளுக்கு சந்தேகம் ஏற்பபட்ட உடன் வரி நிர்வாக அதிகாரிகளுக்கு வங்கிகள் புகார் தெரிவிக்குமாம்;  உடனே அவர்கள் குற்றவாளிகளைப் பிடித்து விடுவார்களென்றெல்லாம் இந்த அனுமானங்கள் இப்படியான புரிதலிருந்து வருகின்றன. இப்படி ‘கருப்புப் பணம்’ வெளிச்சத்திற்கு வரும்போது, எதிர்காலத்தில் தவறுகள் நடக்காது என்று சொல்கிறது அந்த அனுமானம்.

’கருப்புப் பணம்’ உண்மையிலேயே நோட்டுகளாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று வைத்துக் கொண்டாலும், இந்த வாதத்தின் இரண்டாவது பகுதி அர்த்தமற்றதுதான். ஒருவர் கணக்கில் வராத 20 கோடிகளை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருக்கிறாரென்றால், அவர் புதிய நோட்டுகளைப் பெறுவதற்காக 20 கோடியையும் எடுத்துக்கொண்டு வங்கிக்குச் செல்லமாட்டார். (எப்படியிருந்தாலும் அவர் அப்படிச் செய்ய அனுமதிக்கப்படவும் மாட்டார்). அதற்கு பதிலாக, அவர் பல அடிமைகளிடம் சிறு தொகைகளைக் கொடுத்து வங்கிகளுக்கு அனுப்பி வைப்பார். இறுதிக் கெடு தேதியான டிசம்பர் 30-க்குப் முன் இப்படி பல நாட்கள் செய்வார்.

Black-money
கருப்புப் பணம்’ என்ற இந்த கருத்தாக்கமே அபத்தமானது. ‘கருப்புப் பணம்’ என்று சொல்லும்போதே நம் மனக்கண்ணில் தோன்றும் பிம்பம் வெளிப்படையாக வங்கித் வைப்புத் தொகையாக இருக்கும் பணமல்ல.

உண்மையில் பார்த்தால் இந்த தொடர் முயற்சி கூட அவருக்குத் தேவைப்படாது. பழைய நோட்டுகளுக்குப் பதில் கமிஷனை எடுத்துக் கொண்டு புது நோட்டுகள் தருவதாகக் கூறி பல தரகர்கள் விரைவில் வருவார்கள். இப்படி “கருப்புச் செயல்பாட்டாளர்கள்” பழைய ”கருப்புப் பண” நோட்டுகளை பரிவர்த்தனை செய்து புதிய நோட்டுகளைப் பெறும்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வதால் பதுக்கப்பட்டிருக்கும் பணக்குவியல் வெளிவந்து விடும் என்று ‘நிபுணர்கள்’ பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முன்வைக்கும் வாதம் பொருளற்றது.

அதை விட முக்கியமானது, ‘கருப்புப் பணம்’ என்ற இந்த கருத்தாக்கமே அபத்தமானது. ‘கருப்புப் பணம்’ என்று சொல்லும்போதே நம் மனக்கண்ணில் தோன்றும் பிம்பம் வெளிப்படையாக வங்கித் வைப்புத் தொகையாக இருக்கும் பணமல்ல; தலையணை உறைகளுக்குள்ளோ அல்லது மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்ட பெட்டிகளுக்குள்ளோ பதுக்கப்பட்டிருக்கும் கற்றை கற்றையான நோட்டுகள்தான் நினைவுக்கு வரும். உண்மையில் பார்த்தால், ‘கருப்புப் பணம்’ என்று நாம் சொல்லும்போது, கள்ளக்கடத்தல், போதைமருந்து விற்பனை, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் சப்ளை செய்வது போன்ற முழுமையான சட்டவிரோதச் செயல்களையோ அல்லது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையோ, அல்லது வரி செலுத்துவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்படாமல் நடக்கும் செயல்பாடுகளையோதான் குறிக்கிறோம்.

சான்றாக, நூறு டன் உலோகங்களை தோண்டி எடுத்துவிட்டு, வரியைக் குறைப்பதற்காக 80 டன்களைக் கணக்கில் காட்டுவதை நாம் ‘கருப்புப் பண’ உற்பத்தியாகக் கொள்கிறோம். அதே போல், 100 டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துவிட்டு, 80 டாலர் மதிப்புள்ள பொருட்களையே ஏற்றுமதி செய்வதாகக் கணக்கில் காட்டுவதும், மீதமுள்ள 20 டாலர்களை சட்டவிரோதமாக ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கியில் போட்டு வைப்பதும் ‘கருப்புப் பண’ உற்பத்திக்கு மற்றொரு சான்றாகும். அல்லது, ரூபாயை ஹவாலா முறையில் அன்னிய கரன்சியாக மாற்றி அயல் நாட்டு வங்கிகளில் பதுக்குவதும் ‘கருப்புப் பண’ உற்பத்திதான். சுருக்கமாகச் சொன்னால், ‘கருப்புப் பணம்’ என்பது பலவகையான அறிவிக்கப்படாத நடவடிக்கைகளையே குறிக்கும்.

‘கருப்புப் பணம்’ என்பது ஒரு இருப்பைக் குறிப்பதல்ல, ஓட்டத்தைக் குறிப்பது என்பதுதான் இதன் பொருள். ‘கருப்புச் செயல்பாடுகள்’ அவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபத்தைத் தருபவை; பணத்தைக் குவித்து வைத்திருப்பது லாபம் தராது. வர்த்தகச் செயல்பாடுகள் என்பதற்கு மார்க்ஸ் சொல்லியிருப்பது “கருப்புச் செயல்பாடுகளுக்கும்’ பொருந்தும்; அதாவது, பணத்தை சுற்றில் விடுவதால்தான் லாபம் ஈட்ட முடியுமேயொழிய, பதுக்கி வைப்பதினால் அல்ல; ’கஞ்சன்’ முன்னதைச் செய்வான், முதலாளி பின்னதைச் செய்வான். வர்த்தகப் பணம் குறைந்த அல்லது நீண்டகாலத்திற்கு இருப்பாக வைக்கப்படும் என்பது உண்மைதான் (உதாரணமாக, மூலதனம்-பண்டம்-மூலதனம் என்கிற சுழற்சியில்); ஆனால் இது ‘வெள்ளை நடவடிக்கைகளுக்குப்’ (வர்த்தகம்) பொருந்தும் அளவிற்கு ‘கருப்பு நடவடிக்கைகளுக்கும்’ பொருந்தும்.

அதனால்தான், ‘கருப்புப் பணம்’ இருப்பாக வைக்கப்படும் என்றும், ‘வெள்ளைப் பணம்’ சுற்றில் விடப்படும் என்றும் அவற்றின் தனித்தன்மையை வரையறுப்பதற்கு ஆதாரமே இல்லை. எல்லாப் பணமும் சில இடைவெளிகளுக்குப் பிறகு சுற்றி வருகிறது; ‘கருப்புச் செயல்பாடாக’ இருந்தாலும் ‘வெள்ளைச் செயல்பாடாக’ இருந்தாலும் இதுதான் உண்மை. ஆகவேதான், ‘கருப்புப் பணத்தை” வெளியே கொண்டுவருவதன் சாரம் “கருப்பு நடவடிக்கைகளைத்” தேடிக் கண்டுபிடிப்பதில் இருக்கின்றதேயொழிய, இருப்பாக வைத்திருக்கும் பணத்தைத் தாக்குவதில் அல்ல. இதற்கு, நேர்மையான, முறையான, சிரமம் மிகுந்த புலனாய்வு தேவைப்படுகிறது.

money
‘கருப்புப் பணம்’ இருப்பாக வைக்கப்படும் என்றும், ‘வெள்ளைப் பணம்’ சுற்றில் விடப்படும் என்றும் அவற்றின் தனித்தன்மையை வரையறுப்பதற்கு ஆதாரமே இல்லை.

கணினிகளின் காலத்திற்கு முன்பேயே, முனைப்புக் கூடிய புலனாய்வின் வாயிலாக எந்தவொரு வரி ஏய்ப்பாளரையும் பிடித்துவிடுவார்கள் என்ற பெருமை பிரிட்டிஷ் அரசின் உள்நாட்டு வருவாய்ச் சேவை அமைப்புக்கு இருந்தது. இந்தியாவை விட சிறியநாடு பிரிட்டன் என்பது உண்மைதான். ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, அதன் அளவிற்கும் தேவைக்கும் ஏற்றதுபோல் அதிகமான அலுவலர்களைக் கொண்ட அமைப்பை உருவாக்கலாம். இதை நாம் செய்துவிட்டால், பொறுமையும், திறமையும் நிறைந்த வரி நிர்வாக அமைப்பை ஏற்படுத்திவிட்டாலே உள்நாட்டிலிருக்கும் ‘கருப்புப் பணத்தையாவது’ வெளிக் கொண்டுவர முடியும்.

ஆனால், ஒரு கணிசமான அளவு ‘கருப்புச் செயல்பாடுகள்” அயல்நாட்டிலிருக்கும் வங்கிகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றன. உள்நாட்டில் இருப்பதை விட இந்தச் செயல்படுகளின் அளவு மிக அதிகம் என்று சிலர் கூறுவார்கள். தேர்தலுக்கு முன் நரேந்திர மோடியும் ‘கருப்புப் பணத்தை’ வெளிநாட்டிலிருந்து ‘திரும்பக் கொண்டு வருவதைப்” பற்றிதான் பேசினார். பெரும்பாலான ‘கருப்புப் பணம்’ வெளிநாட்டில் இருக்கிறது என்பதை சூசகமாக உணர்த்தினாலும், அவரும் ‘கருப்புப் பணம்’ என்பது ஒரு பதுக்கிவைக்கப்பட்ட குவியல், அது ஒரு செயல்பாடு என்ற அப்பாவித்தனமான புரிதலில்தான் இருந்தார். ‘கருப்பு நடவடிக்கைகளுக்கு’ பெரும் மூலாதாரமாக அன்னிய வங்கிகள் இருக்கும்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது சாமானிய மக்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்துமேயன்றி, அத்தகைய கருப்பு நடவடிக்கைகளை ஒழிக்க உதவாது.

ரூபாய் நோட்டுகளைச் மதிப்பிழக்கச் செய்வது இந்தியாவில் இது முதல் முறையல்ல. ஜனவரி 1946-இல், 1000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன. 1978-இல் மொரார்ஜி தேசாய் அரசாங்கம் 1,000, 5,000, 10,000 ரூபாய் நோட்டுகள் ஜனவரி 16 நள்ளிரவிலிருந்து செல்லாது என்று அறிவித்தது. 1978-லும் (1946லும் கூட) இது பொதுமக்களை பாதிக்கவில்லை. ஏனெனில், அவர்களில் மிகப்பெரும்பாலானோர் அந்த நோட்டுகளைப் வைத்திருக்கவில்லை. ஏன், பார்த்ததுகூட இல்லை. (1978இல் கூட 1000 ரூபாய் என்பது பெரும் தொகை; சாமானியர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பார்த்தது இல்லை).

மொரார்ஜி அரசின் நடவடிக்கை பொதுமக்களை பாதிக்கவில்லை; ‘கருப்புப் பணம்’ என்கிற தீமையையும் ஒழிக்கவில்லை. மோடி அரசின் நடவடிக்கையும் அதேபோல் பயனற்றதாகப் போகும்; அதே நேரத்தில் பொதுமக்களின் வாழ்க்கையையும் கடுமையாகப் பாதிக்கும் என்கிற பக்க விளைவும் இருக்கும்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது ‘கருப்புப் பணத்தை’ கட்டுபடுத்துகிறதோ இல்லையோ, இந்த நடவடிக்கை பணத்தை ரொக்கமாகப் பயன்படுத்தும் பொருளாதார அமைப்பிலிருந்து மாறிச்செல்லும் நீண்டகால விளைவினை ஏற்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் நிதி உதவி பெறாத, கணக்கில் வராத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் என்று சிலர் வாதிடுகிறார்கள். அன்னிய வங்கிகளின் நிதியுதவியுடன் நடைபெறும் ‘கருப்பு நடவடிக்கைகள்’ இந்த ரொக்கமில்லாத இந்தியாவின் பார்வையிலிருந்து தப்பித்து விடும் என்பது ஒரு புறமிருக்க, ரொக்கமில்லாத இந்தியா என்பதே, ஒரு கிரெடிட் கார்டு வாங்குவதற்கும், வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும் ஒரு சாமானியன் படும்பாட்டினை அறியாத மேல்தட்டு வர்க்கத்தின் பகல் கனவுதான்.

ten thousand rupees
மதிப்பிழக்கச் செய்யப்பட்ட் பத்தாயிரம் ரூபாய் தாள்.

”எல்லைக்கு அப்பால்’ அச்சிடப்படும் போலி நோட்டுகளின் சுழற்சியைத் தடுப்பதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க முடியுமென்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. புதிய நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் கள்ள நோட்டு உற்பத்தியைத் தடுக்கும் என்கிற அனுமானத்திலிருந்துதான் இந்த வாதம் எழுகிறது. அப்படியே இருந்தால் கூட போலிகளை உருவாக்க முடியாத வகையிலான புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தும் இந்தப் பணியை படிப்படியாக, யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் செய்திருக்கலாம். இப்படித்தான், பழைய நோட்டுகளை மாற்றி புதியவற்றை அறிமுகப்படுத்தும் பணி இதுவரை நடந்து வந்திருக்கிறது. நவம்பர் 8 இரவிலேயே பனிச்சரிவு போல் கள்ள நோட்டுகள் வந்து குவியும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கக் கூடிய நிலை இல்லையே? மக்களின் பாதுகாப்பு உணர்வின் மீதும், சவுகரியங்கள் மீதும் அதிரடியான ஆச்சரியமூட்டக்கூடிய பெரும் தாக்குதலை ஏன் அரசாங்கம் அந்த இரவில் தவிர்க்கவில்லை.?

மோடி அரசின் இந்த நடவடிக்கை, நவீன இந்தியாவின் வரலாற்றில் முன்னெப்போதும் நடந்ததில்லை. பெரும்பணக்காரர்கள் வைத்திருக்கும் நோட்டுகளை மட்டும் மதிப்பிழக்கச் செய்து, பிறரின் நோட்டுகளுக்கு விலக்கு அளித்த பிரிட்டிஷ் அரசாங்கம் கூட மோடி அரசை விட மக்களின் உணர்வுகளுக்கு அதிகம் மதிப்பளித்திருக்கிறது. இந்த அவசர நடவடிக்கை, அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமுல்படுத்தும் வகையில் மோடி எடுத்துவரும் ஏராளமான பிற நடவடிக்கைகளைப் போன்றதுதான். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இது மக்களுக்கு எதிரானது.

– பிரபாத் பட்நாயக்
நன்றி: thecitizen
( பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னால் பேராசிரியர் மற்றும் பல்வேறு பொருளாதார கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார்.  ‘சிடிசன்’ இணைய இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் )

தமிழாக்கம் : விஜயசங்கர் ராமச்சந்திரன்
(
ஃபிரண்ட்லைன் ஆசிரியரான விஜயசங்கர் ராமச்சந்திரன் அவரது  ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவருக்கு எமது நன்றி.)

மோடி என்ன பெரிய பருப்பா ? மக்கள் கருத்துக்கள் !

9

காசேதான் கடவுளப்பா
அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமப்பா…
கைக்கு கை மாறும் பணமே

உன்னை கைப் பற்ற நினைக்குது மனமே…

து வேற நேரம் காலம் தெரியாம கத்திகிட்டு கெடக்கு. முதல்ல அந்த ரேடியோவ நிறுத்துடா தம்பின்னு கோபமா சத்தம் போட்டுட்டேன். நேத்துலேருந்து ஆயிரம், ஐநூறுங்கற வார்த்தைதான் எல்லா வடிவத்துலயும் காதுல ரீங்காரமா கேட்டுட்டே இருக்கு இதுல பாட்டுலயும் காசு பணமுன்னா கண்ண கட்டுது. வேலைய முடிச்சுட்டு இருக்குற பணத்த கைச்செலவுக்கு மாத்திகிட்டு வரலன்னு அவசரமா கெளம்பும் போது பாட்டு வேற?

பின்ன என்னங்க! காசுதான் எல்லாமுன்னு அந்த கடவுளுக்கே தெரியும் போது மோடிக்கு தெரியாம இருக்குன்னா அவரு எப்பேர்பட்ட முட்டாளா இருந்துருக்கனும். நியாயமா பாத்தா மோடி மேலதான் இந்த கோபம் வந்துருக்கனும். நமக்கு மட்டும்தான் இந்த கோபம் வருதோன்னு தோணவே வங்கிக்கு வந்தவங்கக்கிட்டையும் பேசி பாத்தேன்.

இவங்க எல்லாம் எங்க காம்பவுண்ட சேர்ந்தவங்க (இருந்தவர்களில் முஸ்லிமும் அடக்கம்). எங்க நிலைமைய பாத்துட்டு அவங்க அடையாள அட்டைய பயன்படுத்தி எனக்கு 52 ஆயிரம் பணம் எடுத்து கொடுத்துருக்காங்க.
இவங்க எல்லாம் எங்க காம்பவுண்ட சேர்ந்தவங்க (இருந்தவர்களில் முஸ்லிமும் அடக்கம்). எங்க நிலைமைய பாத்துட்டு அவங்க அடையாள அட்டைய பயன்படுத்தி எனக்கு 52 ஆயிரம் பணம் எடுத்து கொடுத்துருக்காங்க.

சென்னையோட முக்கியமான இடத்துல இருக்கும் அந்த ஸ்டேட் பேங்கு வாசல்ல புதுசா மாத்துன பணத்தோட பத்துபேர் நின்னாங்க. அவங்கள்ட்ட பேசுனோம்.

நாங்க ஜாபர்கான் போட்டையிலேருந்து வர்ரோம். பையனுக்கு வர ஞாயித்து கிழமை கல்யாணம் வச்சுருக்கோம். தாலி, பட்டுபுடவை வேஷ்டி, மத்த துணிமணி, மண்டபத்துக்கு, மளிகை சாமான் எதுக்குமே பணம் இல்ல. யாருகிட்ட கடன் கேக்க முடியும். அப்படியே குடுத்தாலும் நூறு நூறாவா குடுப்பான். செலவுக்கு வேணுமேன்னு இருந்த பணத்த எல்லாம் எடுத்துட்டோம். வாங்குற பொருளுக்கு கார்டு (டெபிட்கார்ட்) தேச்சு பணம் கொடுக்கவும் முடியாது. டெபாசிட் பண்ணினாலும் 4 ஆயிரம்தான் கொடுப்பான். எப்படி யோசிச்சாலும் மண்ட கொழம்புது. கல்யாண வேலை அப்படியே தேங்கி போயி நிக்குது.

இவங்க எல்லாம் எங்க காம்பவுண்ட சேர்ந்தவங்க (இருந்தவர்களில் ஒரு முஸ்லிமும் அடக்கம்). எங்க நிலைமைய பாத்துட்டு அவங்க எல்லாரும் சேந்து அடையாள அட்டைய பயன்படுத்தி எனக்கு 52 ஆயிரம் பணம் எடுத்து கொடுத்துருக்காங்க. திரும்பவும் வரிசைல நிக்கலாமா இல்ல வேற பேங்குக்கு போகலாமான்னு யோசிச்சோம் ஒருத்தர் ஒரு நாளைக்குதான் பணம் எடுக்கலாமுன்னு சொல்லிக்குறாங்க. அதான் நாளைக்கு வரலாமான்னு பேசிட்டு இருக்கோம்.” என்றார்.

கட்டிட தொழிலாளி ஒருவர் “நேத்து ஒரு நாள் பொறி கலங்கி போனாப்போல போச்சு. நானு கட்டட தொழிலாளிங்க. வேலை முடிஞ்சு கூலி வாங்கிட்டு வந்த பணம் வீட்டுக்கு வந்ததும் செல்லாதுன்னா எப்படி இருக்கும் சொல்லுங்க. சத்தியமா நேத்து ஒரு ரூபா கிடையாது. இன்னைக்கு வரைக்கும் எதுவுமே வாங்கல. பிள்ளைகள வச்சுகிட்டு பால் கூட வாங்க முடியாம வெறும் வறடீதான் குடிச்சோம்.” என்றார்

காலை வேலையின் பரபரப்பினால் அடங்காத வேர்வையோட, வாரப்படாத தலையுமா, அள்ளி சொறுகிய சேலையுமா பணம் செல்லுமா செல்லாத என்ற பெரும் பேச்சுடன் அதே வளாகத்துக்குள் இருந்த ரேசன் கடையில நின்றது பெண்கள் கூட்டம்.

சரவணபவன் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகை
சரவணபவன் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகை

“வாங்குனா சில்லறை கொடுக்கனுமே அதுக்கு அவங்க எங்க போவாங்க.” என்றார் ஒருவர்.

“அதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டு பிறகு செல்லாதுன்னு சொல்லிருக்கனும்.”

“பத்து நாளையில நம்ம நெலமை சரியாகிடும். பணக்காரன் பாடுதான் திண்டாட்டம். வச்சுருக்க பணத்துக்கு வரி கட்டியாகனும். அப்படி பதுக்கி வச்சுருக்கப் பணத்த ஒழிக்கதாங்க இதெல்லாம்.”

“அப்படியே நேர்மையா கட்டிடகிட்டிட போறானுங்க”

“ஒருத்தர் கிட்ட 100 கோடி பணம் இருக்குன்னு வச்சுக்குங்க. பேங்கல கொண்டந்து போட்டா வருமான வரி கட்டித்தான் ஆகனும் ஏமாத்தவே முடியாது”

“ஒருத்தரால எவ்வளவு பணம் வரி இல்லாம மாத்த முடியுமோ அதுக்கு ஆளு ஒன்னுக்கு இவ்வளவு கமிஷன் தாரேன்னா நானும் போவேன் நீயும் போவே. ஒன்னையும் என்னையும் ஏற்பாடு பண்ணித் தர ஆளு இருக்கும். ரேசன் சாமான் வாங்க 150 பணத்துக்கு என்ன செய்றதுன்னு முழிச்சுட்டு இருக்கவங்க கிட்ட பதுக்கி வைக்கிறதுக்கு ஏது பணம். பணக்காரன் மண்ணு, மனையா வச்சுருப்பானே தவிர பணமா எதுக்கு வச்சுருக்கான்” என்று நீண்டது அந்த விவாதம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில கூட்டம் சரவணபவன் ஹோட்டலையும் தாண்டி நின்னுச்சு. வரிசையின் நீளத்தைப் பாத்தா நமக்கு பணம் கிடைக்குமோ என்ற அச்சம் எல்லார் முகத்துலையும் தெரிஞ்சது. இந்த பேங்குல மாத்திரலாமா அந்த பேங்குல மாத்திரலாமான்னு நாலு எடத்துக்கு மாறி மாறி அலைஞ்சோம். நாங்க மட்டுந்தான் அப்படின்னு பாத்தா நின்னவங்கல்ல பாதி பேரு அப்படிதான்னு அப்புறந்தான் தெரிஞ்சது.

“இன்னைக்கே எனக்கு அவசரமா 50,000 ஆயிரம் பணம் வேணும். சரக்கு வந்து மூணு நாளாச்சு. இன்னைக்கு பார்சல எடுக்கலன்னா திருப்பி அனுப்பிருவானுங்க. அக்கவுண்டுல பணம் இருந்தும் எடுக்க முடியல. எடுத்தாலும் வெறும் 4 ஆயிரத்த வச்சுகிட்டு நாக்கா வழிக்க முடியும். யாருகிட்டயும் உதவியும் கேக்க முடியாது. மானங்கெட்ட அரசாங்கத்தை நம்பி எப்படி தொழில் செய்றது.” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

உங்க கிட்டையும் எங்கிட்டையும் பணம் இல்ல நமக்கு பாதிப்பும் இல்ல. பணக்காரந்தான் இதுல மாட்டப் போறான். மோடி சரியாதான் முடிவு எடுத்துருக்காரு.
உங்க கிட்டையும் எங்கிட்டையும் பணம் இல்ல நமக்கு பாதிப்பும் இல்ல. பணக்காரந்தான் இதுல மாட்டப் போறான். மோடி சரியாதான் முடிவு எடுத்துருக்காரு – மோடிக்கு ஆதரவாக வெடித்த ஒரு பார்ப்பனர் (காவி சட்டைக்காரர்)

அதே வரிசையில் பட்டையும் பூணூலுமாக ஒரு பெரியவர் கோபத்தோட பேசியனார். அவருக்கு முன்னால் யாரும் வரிசையில புகுந்துட்டாங்களா என்று விசாரிச்சா கருத்து சுதந்திரம் இல்லன்னாரு.

“வச்சுருக்க பணத்தை டிசம்பர் கடைசி தேதிக்குள்ள மாத்திக்கனும், இல்ல ரிசர்வ் வங்கியல போதுமான ஆவணங்கல கொடுத்து பழய பணத்தப் புது பணமா மாத்திக்கனும். இப்படிதான் பேப்பர்ல போட்டுருக்கு. இவரு (முன்னாடி இருப்பவர்.) நல்லா பேப்பர படிச்சு பாருங்க ரிசர்வ் வங்கி கிளைகள்ளையும் மாத்திக்கலாம்னு போட்டுருக்குன்னு சொல்லிட்டு, அரசாங்கத்தையும் திட்றாரு.

எனக்கு விசயம் தெரியாதுன்னு நெனச்சு பேசுராரு. உங்க கிட்டையும் எங்கிட்டையும் பணம் இல்ல நமக்கு பாதிப்பும் இல்ல. பணக்காரந்தான் இதுல மாட்டப் போறான். மோடி சரியாதான் முடிவு எடுத்துருக்காரு. ஆனா மம்தா, மோடியோட முடிவு தவறுன்னு சொல்லிருக்கா அவள நிக்க வச்சு சுடனும். எது பேசவும் கருத்து சுதந்திரமே இல்லாம போச்சும்மா” என்றார். விட்டா அவரு உடனே போய் சுட்டுறுவாருன்னு தோணுச்சு. டாடா, பிர்லா, அம்பானி, அதானி வகையறாக்களெல்லாம் வெளிநாட்டுல முதலீடா பதுக்கியிருக்கிறதெல்லாம் தெரியாத அளவுக்கு அவரு அப்பாவியா? ஆனா அவரோட அதிகார தொனியா பாத்தா அப்படி தெரியல.

இதையெல்லாம் வேடிக்கை பாத்துட்டு இருந்த சரவணபவன் ஊழியரிடம் பணப் பிரச்சனையில் வியாபாரம் எப்படி இருக்கு என பேச்சு கொடுத்தோம்.

“நீங்களே சொல்லிட்டிங்க பணம் பிரச்சனைன்னு பிறகு வியாபாரம் எப்படின்னா என்னத்த சொல்றது. நேத்து கடையில போராட்டம் பண்ணி வீட்டு செலவுக்கு ஐநூருவா வாங்கிட்டு போனேன். அறிவிப்பப் பாத்ததும் சமையலைக் கொறச்சுதான் செஞ்சோம். இருந்தும் யாரும் வரல, நாங்கதான் சாப்பிட்டோம். வியாபாரம் பாதிக்குமே சரி பேங்குல மாத்திக்கலான்னு வாங்குனா அதுக்கும் சேத்து வருமான வரி கட்றது யாரு.

நானுமே பிரச்சனையில மாட்டிகிட்டேன். வீடு கட்ற செலவுக்கு வேணுமேன்னு தீபாவளி அன்னைக்கிதான் 2 லட்சத்துக்கு நகைய வித்துட்டு பணமா வச்சிருந்தேன். பணம் செல்லாதுன்னதும் நகை விலை பவுனுக்கு 2 ஆயிரம் ஏறி போச்சு. இப்ப வித்து இருக்கலாமேன்னு வருத்தப்படுறதா? இல்ல இருக்குற பணத்த முழுசா மாத்த முடியுமான்னு கவலப்படுறதா சொல்லுங்க” என்றார்.

நேத்து கடையில போராட்டம் பண்ணி வீட்டு செலவுக்கு ஐநூருவா வாங்கிட்டு போனேன். அறிவிப்பப் பாத்ததும் சமையலைக் கொறச்சுதான் செஞ்சோம்.
நேத்து கடையில போராட்டம் பண்ணி வீட்டு செலவுக்கு ஐநூருவா வாங்கிட்டு போனேன். அறிவிப்பப் பாத்ததும் சமையலைக் கொறச்சுதான் செஞ்சோம் – சரவணபவன் ஊழியர்.

மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண், “பணம் செல்லாதுன்னு தெரிஞ்சப்ப விடிஞ்சு செலவு பன்ன 110 ரூபாய தவிர காசு கெடையாது. காலையில காலேஜ் பேற பிள்ளைக்கு பஸ்சு டிக்கட்டுக்கு என்ன பன்றது.  குழு பணம் வங்கியில போட எங்க உறுப்பினர்கள் கொடுத்தது ஞாபகத்துக்கு வந்தச்சு. இருந்த ரெண்டு ஐநூருவா நோட்ட வச்சுட்டு இருந்த நூறுருவா நோட்ட எடுத்துகிட்டேன்.

ராத்திரி வெளியூருக்கு போறேன்னு இரயில்வே ஸ்டேசனுக்கு போன எங்கூட்டுக் காரரு டிக்கெட் தர மாட்டேங்குறாங்க. டிக்கெட் தந்தா சில்லறை தர மாட்டேங்கறாங்கன்னு வீட்டுக்கு திரும்பியே வந்துட்டார். அவராவது பரவால்ல போகாமையே திரும்பிட்டார். வெளியூர் காரங்க பாதி ராத்திரி ரயிலுக்காக காத்துக் கெடந்தவங்க நெலம ரெம்ப மோசம்னாரு. குழந்தைங்கள வச்சுகிட்டு பாலு கூட வாங்க முடியாம அவதிப் பட்டாங்களாம். மோடி செஞ்சது தப்பு ரைட்டுங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும் அர்த்த ராத்திரியில கண்ணக் கட்டி காட்டுல விட்டாப்போல செஞ்சுபுட்டேரே அதுதான் மனசு ஆரல.”

“பக்கத்தில் இருந்தவர் சொன்னார், “நேத்து வேலை முடிஞ்சு கூலி வாங்கிட்டு வரும் போது பஸ்சுல டிக்கெட்டு தரலன்னுட்டாங்க. ஐநூறுவா மாத்த ஐடி புருப் இருக்கான்னு கேக்குறான். ரேசன் கார்டு ஜெராக்ஸ்ச கொடுத்தா வாங்காம நடு வழியிலேயே எறக்கி விட்டுட்டான். எங்கூட வியாபாரம் பாக்குறவங்க பூ, பழம், காய் எல்லாமே விக்காம வீணா போச்சு. காசு இருந்தாதானே மக்களும் வாங்குவாங்க.” என்றார்.

அவர் கூட வந்தவரோ “மூனு நாளா எம்பையனுக்கு உடம்பு சரியில்லை நேத்து இருந்த இருநூறு ரூபாய டாக்டருக்கு குடுத்து வைத்தியம் பாத்துட்டேன். 700 ரூபாய்கி மருந்து எழுதிக் கொடுத்துருக்காரு. கையில இருந்த ஐநூறு செல்லாதுன்னு மருந்து தர மறுத்துட்டாங்க. காசு இருந்தும் இன்னைக்கி சாயங்காலம் வரைக்கும் மருந்து வாங்க முடியல. சுருண்டு படுத்துருக்கான் எம்பையன். இப்படி திடீர்னு ஒரு முடிவெடுத்தா மக்கள் எப்படி சிரமப்படுவாங்கன்னு கொஞ்சமாச்சு யோசிச்சி இருப்பாங்களா?

“ரொம்ப அடாவடியா இருக்குங்க, மோடி என்ன பெரிய பருப்பா (மயிர) ராத்திரியோட ராத்திரியா விடிஞ்சா பணம் செல்லாதுன்னு அவன் சௌகரியத்துக்கு ஆணவமா அறிவிச்சுட்டான். பாலு, தண்ணி எதுவும் வாங்க முடியலங்க. ஆயிரம் ஐநூறு செல்லாதுன்னு அரசுதானே அறிவிச்சுச்சு அவங்களுதுதானே கேஸ் கம்பெனி, ரேசன் கடை, ரயில்வே ஸ்டேசன், பஸ்சு இதெல்லாம். அங்க வாங்கலாமில்ல.” என்றார் ரேசன் கடையில நாங்க சந்தித்த ஒரு பெண்.

மோடியின் திமிரை அந்தப் பெண் புரிந்துகொண்ட மாதிரி டி.வியிலயோ இல்லை பத்திரிகைகள்ள கட்டுரை எழுதற அறிஞருங்களுக்கோ தெரியல! என்ன இருந்தாலும் பாதிக்கப்பட்டது நாம இல்லையா?

– சரசம்மா, சங்கவை.

மாவீரன் திப்பு – மானங்கெட்ட ஆர்.எஸ்.எஸ் : கேலிச்சித்திரம்

0
thippu-rss cartoon-Slider

திப்புசுல்தான் சாதாரண மன்னன் தான். சுதந்திர போராட்ட வீரன் அல்ல. – கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு

thippu-rss cartoon

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

இணையுங்கள்: