Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 101

அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா: தொடர்ந்து வேட்டையாடப்படும் பத்திரிகை சுதந்திரம்

மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பத்திரிகை சுதந்திரம் என்பது தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் “அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2023” நிறைவேற்றப்பட்டது.

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, 146 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்த பின்பு, இம்மசோதா மக்களவையில் டிசம்பர் 21 அன்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மோடி அரசால் டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.

இந்த கருப்புச் சட்டம் குறித்து “எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா” தனது கவலையைத் தெரிவித்துள்ளது. இச்சட்டத்தில் உள்ள “பத்திரிகைப் பதிவாளரின் அதிகாரங்களை விரிவுபடுத்துதல், பத்திரிகைகளை வெளியிடுவதற்கு மீதான புதிய கட்டுப்பாடுகள், செய்திகளை வெளியிடுவதில் தொடர்ச்சியாக அரசின் அதிகார நுழைவு, பல விதிகளில் உள்ள தெளிவின்மை மற்றும் அதிகாரத்தைச் சுற்றியுள்ள தெளிவின்மை” முதலியவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட போதே இது குறித்து புதிய ஜனநாயகம் இதழில் எழுதியுள்ளோம். முக்கியத்துவம் கருதி அதைத் தற்போது மீள்பதிவு செய்கிறோம்.

***

டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!

னது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்ற தடையாக இருப்பவர்களை பல்வேறு வகையில் ஒடுக்கி வரும் பாசிச மோடி அரசு தனது அடுத்த கட்ட இலக்காக டிஜிட்டல் செய்தி ஊடகங்களைக் குறிவைத்துள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் “அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022” அதற்கான ஏற்பாடாகும்.

இம்மசோதா 2019 ஆம் ஆண்டே கொண்டுவரப்பட்டது. ஆனால் இதன் மீது பல்வேறு எதிர்ப்புகள் எழுந்ததால் அப்போது நிறைவேற்றப்படவில்லை. தற்போது இம்மசோதா மீண்டும் அவைக்கு வந்திருக்கிறது.

பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்கள் மட்டுமல்லமால் முதன்முறையாக டிஜிட்டல் ஊடகங்களையும் உள்ளடக்கி இச்சட்ட மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது. இச்சட்ட மசோதா அமல்படுத்தப்பட்ட 90 நாட்களுக்குள் டிஜிட்டல் ஊடக செய்தி வெளியீட்டாளர்கள் தங்களை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்; விண்ணப்பிக்காவிட்டால் அவர்களின் ஊடகத்திற்கு தடை விதிக்கப்படும் என்கிறார்கள்.

ஏற்கெனவே அமலில் இருக்கும் பத்திரிகை மற்றும் புத்தகப் பதிவு சட்டம் 1867க்கு மாற்றாகவே இப்புதிய மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. இப்புதிய மசோதாவைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு முன் ஏற்கெனவே அமலில் இருக்கும் சட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.


படிக்க : உதய்பூர், காஷ்மீர் சம்பவங்கள்: திரை கிழிந்தது காவிகளின் பயங்கரவாத சதி!


1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பிறகு நிறுவன ரீதியாக தன்னை எதிர்க்கும் பத்திரிகைகளை ஒடுக்குவதற்காகவே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆங்கிலப் பத்திரிகைகளை மட்டும் கட்டுப்படுத்திய இச்சட்டம் 1878-ஆம் ஆண்டிற்கு பிறகு அனைத்து வட்டார மொழி பத்திரிகைகளையும் கட்டுப்படுத்தியது. அதிகார மாற்றத்திற்கு பின்னரும் இச்சட்டம் தொடர்கிறது.

தற்போது 155 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த காலனித்துவ சட்டத்தை நீக்கி புதிய சட்டம் கொண்டுவருகிறேன் என்ற பெயரில், டிஜிட்டல் ஊடங்களைக் குறிவைத்து ஒடுக்குவதற்கேற்ப புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

***

புதிய சட்ட மசோதாவின் பிரிவு 5 மற்றும் 6-இன் படி, மத்திய அரசால் பத்திரிகை தலைமை பதிவாளர் (Press Register General) நியமிக்கப்படுவார். இவரிடம் அச்சு ஊடகங்களைப் போல டிஜிட்டல் ஊடகங்களையும் பதிவு செய்ய வேண்டும். இந்த அதிகாரி ஒரு ஊடகம் தொடர்பான எந்த தகவலையும் ஆணையிட்டு பெறலாம், எந்தவொரு ஊடக நிலையத்தையும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் போன்ற வானளாவிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர் நினைத்தால் ஒரு ஊடகத்தை தடை செய்யலாம் அல்லது அதன் மேல் அபராதம் விதிக்காலம். இவரின் தீர்ப்பே இறுதியானது. இவரும் இவருக்கு கீழ் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் யாரும் மாநில அரசுக்கு கட்டுப்பட வேண்டிய தேவையில்லை.

இதுவரை எந்த சட்டவிதிகளின் கீழும் கட்டுப்படுத்தப்படாத டிஜிட்டல் ஊடகங்கள் இச்சட்ட மசோதாவின் படி நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடுகின்றன.

இச்சட்ட மசோதாவின் படி, பத்திரிகையின் ஆசிரியர் கண்டிப்பாக இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். பிரிவு 4 மற்றும் 11-ன் படி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டப்படி 1967 (UAPA) தண்டிக்கபட்டவர்களும் மற்றும் அரசின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டு அதற்காக தண்டிக்கபட்டவர்களும் எந்த வகை ஊடகமும் நடத்த முடியாது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2014-2020 வரை 10,522 பேர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பலரும் மோடி அரசின் பாசிச ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்த சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆவர். எனவே பத்திரிகையாளர் மீது ஊபா வழக்கு பதியப்பட்டிருக்கக் கூடாது என்பது மறைமுகமாக அந்த ஊடகங்கள் பா.ஜ.க. அரசை எதிர்ப்பவையாக இருக்கக் கூடாது, அவ்வாறு எதிர்த்தால் அவர்கள் ஊடகங்களை நடத்த முடியாது என்று சொல்வதாகும்.

மோடி அரசு இச்சட்டத்தை கொண்டு வருவதற்கான முக்கியமான நோக்கம் டிஜிட்டல் செய்தி ஊடகங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே. ஏனென்றால் பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் தற்போது மோடி அரசிற்கு எதிராக வாய் திறப்பதில்லை. இந்நிலையில் மோடி அரசின் பாசிச ஆட்சிக்கு எதிராகக் குரல்கொடுப்பது தி வயர், குவிண்ட், ஸ்க்ரோல் போன்று முற்போக்கு-ஜனநாயக சக்திகளால் நடத்தப்படும் டிஜிட்டல் ஊடகங்களே.

பெகாசஸ், டெக் ஃபாக் செயலி, பீமா கோரேகான் வழக்கு என மோடி அரசின் பல சதிச் செயல்களை வயர் போன்ற இணையதளங்களே வெளிக்கொண்டு வந்துள்ளன. இதனால்தான் இவற்றை ஒடுக்கிவிடத் துடிக்கிறது மோடி அரசு.

2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நியூஸ் கிளிக், ஜூலையில் தைனிக் பாஸ்கர்,’பாரத் சமாச்சார்’ மற்றும் செப்டம்பரில் நியுஸ்லாண்டரி’ என தனது செயல்பாடுகளை விமர்சிக்கும் ஊடக நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகள்மீது வருமான வரித்துறையை ஏவியது மோடி அரசு.

இணையம், கணினி, மொபைல் முதலியவற்றில் பகிரப்படும் உரை, ஆடியோ, வீடியோ என டிஜிட்டல் வடிவத்தில் செய்திகளை வழங்கும் அனைத்தையும் இச்சட்டம் ஊடகங்களாகக் கருதி பதிவு செய்ய வலியுறுத்துகிறது. இதன்படி வலைதளங்கள் மட்டுமல்லாது செய்திகளை வழங்கும் யூடியூப் சானல்கள், முகநூல் கணக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் இச்சட்டம் கட்டுப்படுத்தும் என்பதுதான் பொருள்.

இன்றைய டிஜிட்டல் உலகில் மிகப்பெரிய கருத்துரிமை சாதனமாகத் திகழ்வது சமூக ஊடகங்களே. சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான கருவியாக வெகுமக்கள் சமூக ஊடகங்களையே பாவிக்கிறார்கள். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல உலகெங்கும் பல தன்னெழுச்சிப் போராட்டங்களில் மக்கள் சமூக ஊடகங்களையே தங்கள் கருத்துப் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்துகின்றன. உலங்கெங்கும் மக்கள் விரோத சர்வாதிகார, பாசிச ஆட்சியாளர்கள் இந்த கருத்துரிமை சாதனங்களைக் கண்காணிக்கவும் ஒடுக்கவுமான சட்டங்களை இயற்றிவருகிறார்கள். அந்த வகையிலேயே மோடி அரசு இச்சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது.


படிக்க : நாட்டை சூறையாடும் காவி – கார்ப்பரேட் கூட்டணி ஆட்சி!


பத்திரிகை சுதந்திரம் குறித்து “எல்லைகள் கடந்த பத்திரிகையாளர்கள்” எனும் உலக பத்திரிகையாளர்கள் அமைப்பு அண்மையில் வெளியிட்ட பட்டியலில் 180 நாடுகளில் இந்தியா 150வது இடத்தில் பின்தங்கி இருந்தது. இதற்கு முக்கிய காரணம் பத்திரிகையளர்கள் மீதான மோடி அரசின் ஒடுக்குமுறைகள். பத்திரிகையாளர்களை தேசவிரோத வழக்கு, ஊபா உள்ளிட்டவைகளின் கீழ் ஒடுக்குவதை இவ்வமைப்பு வன்மையாக கண்டித்திருந்தது.

கொரோனா ஊரடங்கில் மக்களின் துன்பங்களை எழுதிய பத்திரிகையாளர்கள் மீது ‘வதந்தி பரப்புகிறார்கள்’ என்று வழக்கு தொடரப்பட்டது. உத்தரப் பிரேதச மாநிலம்  ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தைச் சந்திக்க சென்ற கேரள பத்திரிகையாளர்களை தேசத் துரோக வழக்கில் கைது செய்தது யோகி அரசு. டெல்லியில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலைப் பற்றி செய்தி வெளியிட்ட மீடியா ஒன் தொலைக்காட்சி மீது தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 48 மணி நேரம் தடை விதித்தது.

மேலும் 2019-ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்புரிமையை ரத்து செய்தது மட்டுமல்லமால் அங்கு இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டு, பத்திரிகைகளுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; மீறி செய்தி வெளியிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்து மோடி அரசு. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தப் பாசிச அடக்குமுறைகளை எதிர்த்து களத்தில் போராடாமல் இனி கருத்து சுதந்திரத்தைப் பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.


மதி

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2022 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மழைவெள்ள பாதிப்பில் தூத்துக்குடி! | களத்தில் தோழர்கள்

மழைவெள்ள பாதிப்பில் தூத்துக்குடி! | களத்தில் தோழர்கள்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் அவலநிலை! குமுரும் மாணவர்கள்!

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் அவலநிலை! குமுரும் மாணவர்கள்!

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



களத்தில் தோழர்கள் – தூத்துக்குடி | உதவ அழைக்கிறோம்!

களத்தில் தோழர்கள் – தூத்துக்குடி

ழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏரல், காமராஜ் நகர், தாளமுத்து நகர், சிலுவைப்பட்டி, பெத்தநாச்சி நகர், சண்முகபுரம், இடையற்காடு ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் நிவாரணப் பணிகளிலும் மீட்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாவட்ட மக்களுக்கு உதவ அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும் தன்னார்வலர்களும் தேவைப்படுகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உடனடியாக தொடர்புகொள்ளவும்.

தொடர்புகொள்ள:
செல்வம் 9597494038,
மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பொன்முடி தண்டனை – ஜெயாவுக்கு நடந்தது தான் நடக்கும் | தோழர் மருது

பொன்முடி தண்டனை – ஜெயாவுக்கு நடந்தது தான் நடக்கும் | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நெல்லை மழை வெள்ள பாதிப்பு | பாதிப்பில் மக்கள்

நெல்லை மழை வெள்ள பாதிப்பு | பாதிப்பில் மக்கள்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நெல்லை மழைவெள்ள பாதிப்பு | களத்தில் தோழர்கள் | கள நிலவரம்

நெல்லை மழைவெள்ள பாதிப்பு | களத்தில் தோழர்கள் | கள நிலவரம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தோழர் ஸ்டாலின்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு! | மீள்பதிவு | ஸ்டாலின் 145

டிசம்பர் 21, உலகில் வேறு எந்தத் தலைவர்களையும் விட முதலாளித்துவத்தால் மிக அதிகமாக தூற்றப்பட்டவரும், அதேபோது உலகம் முழுக்க சுரண்டப்படும் கோடிக்கணக்கான மக்களால் இன்றைக்கும் நேசிக்கப்படுபவருமான தோழர் ஸ்டாலினுடைய 145-வது பிறந்த தினம்.

லெனின் தலைமையில் நடத்தி முடிக்கப்பட்ட புரட்சியைக் காப்பாற்றுவது மற்றும் சோசலிசத்தைக் கட்டியமைப்பது ஆகிய மிகப்பெரிய பொறுப்புகள் லெனினுக்குப் பிறகு சோவியத் யூனியனின் இரண்டாவது தலைவரான தோழர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் சோவியத் யூனியனின் தலைவராக தோழர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முதல் உலகப்போரினாலும், உள்நாட்டுப் போரினாலும் நொறுங்கிக் கிடந்த நாட்டை தோழர் லெனின் உருவாக்கிய புதிய பொருளாதாரக் கொள்கை மீண்டும் உயிர்ப்பித்தது. அதன் பிறகு தோழர் ஸ்டாலின் பாட்டாளி வர்க்கம் மற்றும் உழவர் வர்க்கத்தின் துணையோடு உலகின் முதலாவது சோசலிச சமுதாயத்தைக் கட்டமைக்கும் போராட்டத்தைத் தொடங்கினார்.

தோழர் ஸ்டாலினின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் சோவியத் மக்களின் முழுமையான ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட்டன. முதலாளித்துவ நாடுகளில் 1930-களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம் உலகநாடுகளில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கு நேர்மாறாக சோசலிச சோவியத் யூனியன் இயந்திரத் தொழில் முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. தொழிலாளர்கள் தங்களது சோசலிசத் தாய்நாட்டிற்காக விருப்பப்பூர்வமாக உழைத்தனர். இன்னொரு பக்கம் கிராமப்புறங்களில் கூட்டுப்பண்ணை அமைப்பு உறுதிப்படுத்தப்பட்டு வறுமையும், பாதுகாப்பு இன்மையும் பரிபூரணமாக ஒழித்துக்கட்டப்பட்டது.

ஏகாதிபத்திய முதலாளித்துவ நெருக்கடிகளால் ஜெர்மனியிலும், இத்தாலியிலும் உருவான பாசிசம் மிகப்பெரும் அபாயமாக உலகை அச்சுறுத்தியது. ஹிட்லரும், முசோலினியும் ஐரோப்பாவை விழுங்கிவிட்டு உலகையே விழுங்குவதற்காக களமிறங்கினர். பாசிச ஓநாய்கள் சோவியத் யூனியன் மீது பாய்ந்தன.


படிக்க : ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – டீசர்


பாசிசத்தை வீழ்த்தி உலகைக் காப்பதுதான் முதற்கடமை என்ற நிலையில், அந்தப் பொறுப்பை தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் எடுத்துக் கொண்டது. சோவியத் யூனியனை ஹிட்லர் வீழ்த்தி விடுவான், கம்யூனிசத்தை ஒழித்துவிடலாம் என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் கண்ட கனவு சுக்குநூறானது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தலைமையில் இரண்டு கோடி சோவியத் மக்கள் தங்களது இன்னுயிரைக் கொடுத்து பாசிச ஹிட்லரை வீழ்த்தி உலகைக் காத்தனர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகெங்கும் எழுந்த தேசிய விடுதலைப் போராட்டங்கள், சோசலிசப் புரட்சிகளுக்கு தோழர் ஸ்டாலின் செய்த உதவிகள் மகத்தானவை. உலகின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் விடுதலைக்கு நேசக்கரம் நீட்டினார்.

இரண்டாம் உலகப் போரினால் நாடு மிகக் கடுமையாக சிதிலமடைந்திருந்தது. கிராமங்கள், நகரங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் நாஜிகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தன. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மக்களின் துணைகொண்டு நாட்டை மீண்டும் கட்டியெழுப்பினார்.

தோழர் ஸ்டாலின் காலத்தில் சோசலிசம் எவ்வாறு கட்டியமைக்கப்பட்டது என்பதைப் பற்றி சோவியத் யூனியன் சென்று நேரில் பார்த்து ஆய்வு செய்த அமெரிக்க எழுத்தாளர் அன்னா லூயிஸ்ட்ராங் பின்வருமாறு கூறுகிறார். “கடந்த சகாப்தத்தைத் திரும்பிப் பார்க்கும்போது மக்கள் அதனை ஸ்டாலின் சகாப்தம் என்று சொல்லக்கூடும். கோடிக்கணக்கான மக்கள் உலகத்தின் முதல் சோசலிச நாட்டைக் கட்டமைத்தனர். ஆனால் அந்த வேலைக்குப் பொறியாளராக இருந்தவர் அவர்தான். அந்தக் காலம் முதற்கொண்டு எல்லாவற்றின் மீதும் அவர் முத்திரை பதிந்து இருந்தது.

எனது மேற்குலக நண்பர்களுக்குச் சொல்லிக் கொள்வேன்: அது வரலாற்றின் மிகவும் செயலூக்கமுள்ள சகாப்தங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. ஒருக்கால் அவற்றிலேயே ஆகச் சிறந்ததாக அது இருக்கக்கூடும். ருஷ்யாவின் வாழ்க்கையை மட்டுமல்ல, உலகத்தின் வாழ்க்கையையே அது மாற்றியது”.

சோசலிச பொருளாதாரத்தில் மட்டுமல்ல, விஞ்ஞானம், கலை இலக்கியம் யாவற்றின் வளர்ச்சியிலும் முக்கியமான பங்களிப்புகளைச் செய்தார், தோழர் ஸ்டாலின் அறிவியல் வளர்ச்சியை சோசலிசத்தை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பது என்ற அம்சத்துடன் இணைத்தார். இதன் மூலம் தனது ஆழமான தத்துவார்த்தப் புரிதலை நடைமுறையில் இணைத்தார்.

முதலாளித்துவச் சுரண்டலை மீண்டும் நிலைநாட்டும் நோக்கில் கட்சிக்குள் திரிபுவாதம் தலைதூக்கிய காலத்தில் அதனை எதிர்த்து தீவிரமான தாக்குதலைத் தொடுத்தார். திரிபுவாதத்தை எதிர்த்த தோழர் ஸ்டாலினின் விடாப்பிடியான போராட்டம் என்பது உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு அவர் அளித்த மிகப்பெரும் கொடையாகும்.

தோழர் ஸ்டாலினுக்குப் பின்னர் வந்த ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான குருசேவ் தலைமையிலான திரிபுவாதக் கும்பல் அவரை இருட்டடிப்பு செய்வதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது. அவரது நினைவுச் சின்னங்களை அழித்தனர். கிரெம்ளினில் லெனின் நினைவகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை அங்கிருந்து அகற்றி வளாகத்திற்கு வெளியில் புதைத்தனர். இன்னொரு பக்கம் முதலாளித்துவம் அவரைப் பற்றி ‘கொடுங்கோலர்’, ‘சர்வாதிகாரி’ என்று அவதூறு பரப்புவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள கோடானகோடி உழைக்கும் மக்களின் மனங்களில் இருந்து அகற்றி விடலாம், கம்யூனிசத்தை ஒழித்துவிடலாம் என்று பகற்கனவு காண்கிறது.

இதையெல்லாம் தாண்டி கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் உள்ளங்களில் தோழர் ஸ்டாலின் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் என்றைக்கும் விட இப்போது தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார். முதலாளித்துவம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கி உலகெங்கும் பாசிசத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அழிவுப்பாதையில் இவ்வுலகைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை, பாசிச அடக்குமுறைகள், போர்கள் என உலகம் செல்வதை நாம் கண்ணுறுகிறோம்.


படிக்க : இன்றைய பாசிச சூழலில் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார்! | தோழர் அமிர்தா | வீடியோ


பாசிசத்தை வீழ்த்தியதிலும், சோசலிசத்தைக் கட்டமைத்ததிலும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு திரிபுவாதத்தை எதிர்த்த உறுதியான போராட்டத்திலும் மாபெரும் வரலாற்றுப் பங்களிப்பை தோழர் ஸ்டாலின் நமக்கு வழங்கியுள்ளார். அதனால், பாட்டாளி வர்க்க ஆசான்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

உலகம் பாசிசத்தை எதிர்நோக்கியுள்ள இன்றைய நெருக்கடியான சூழலில் தடைக்கல்லாக திரிபுவாதம் உழைக்கும் மக்களைக் கவ்விக் கொண்டுள்ளது. ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தேவையில்லை’ என்று கூறி பாசிசத்திற்கு பாதந்தாங்கும் போக்கு மேலோங்கியுள்ளது.

மக்கள் அடித்தளம் கொண்ட போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைப்பதன் மூலம் திரிபுவாதத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் பாதையில் உறுதியோடு பயணிக்க தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில் உறுதியேற்போம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வெல்லட்டும்!

ங்கதேச நாட்டின் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, கூலி உயர்வை வலியுறுத்தி அரசின் கடும் ஒடுக்குமுறைகளையும் மீறி போராடி வருகின்றனர். வங்கதேசத்தில் 3,500-க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 40 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் அந்நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலானோர் பெண் தொழிலாளர்கள். மிகச்சொற்ப அளவிலான கூலியே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் போராட்டத்தின் விளைவாக மிகக் குறைந்த அளவிலான கூலி உயர்வும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

அந்தவகையில், வங்கதேச அரசு இந்த ஆண்டு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். விண்ணைமுட்டும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் தங்களின் அன்றாட வாழ்க்கைச் செலவீனங்களைக் கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாமல் அல்லல்பட்டு வரும் தொழிலாளர்கள், நியாயமான, குறைந்தபட்ச கூலி உயர்வுக்காக கடந்த அக்டோபர் மாத இறுதியிலிருந்து போராடி வருகின்றனர்.

தொழிலாளர்கள் தங்களது ஊதியத்தை 8,000 (6,058 ரூபாய்) டாக்காவிலிருந்து 23,000 (17, 418 ரூபாய்) டாக்காவாக உயர்த்த வேண்டும் என்று போராடி வரும் சூழலில், வங்கதேச அரசோ, கடந்த நவம்பர் 10 அன்று வெறும் 12,500 (9,466 ரூபாய்) டாக்காவாக ஊதியத்தை உயர்த்தி அரசிதழிலில் அறிவித்திருக்கிறது.

வங்கதேச தொழிலாளர் சட்டம் 2006-இன் படி, குறைந்தபட்ச ஊதிய வாரியம்தான் (Minimum Wage Board) சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்துறை முதலாளிகள் தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகள் பெற்று, கூலி உயர்வு குறித்து முடிவு செய்யும் அமைப்பாகும். வாரியத்தின் முடிவுகள் தொழிலாளர் துறைக்கு அனுப்பப்பட்டு, தொழிலாளர் துறை இறுதி முடிவு எடுத்து, அதனை அரசிதழில் வெளியிட்டு சட்டமாக்குவது என்பதே அந்நாட்டு நடைமுறையாகும்.

எனவே, குறைந்தபட்ச ஊதிய வாரியத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் தொழிற்துறை முதலாளிகள் தரப்பிலிருந்து 200-க்கும் மேற்பட்ட முன்மொழிவுகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. ஊதியத்தை 25,000 (18,933 ரூபாய்) டாக்கா வரை உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்கள் தரப்பிலிருந்தும், 12,500 டாக்காவாக உயர்த்தியதை 10,400 (7,876 ரூபாய்) டாக்காவாக குறைக்க வேண்டும் என்று முதலாளிகள் தரப்பிலிருந்தும் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இவற்றின்மீதான இறுதி முடிவு வருகிற நவம்பர் 26 அன்று எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.


படிக்க: வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம்!


கடந்த ஜனவரி மாதத்தில் வங்கதேச தொழிலாளர் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயத்த ஆடை தொழிலாளர்களது வாழ்வாதாரத்திற்கான குறைந்தபட்ச மாதாந்திர ஊதியமாக 33,368 (25,271 ரூபாய்) டாக்கா நிர்ணயிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வையும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தேவைகளையும் கணக்கில்கொண்டுதான் ஊதியத்தை நிர்ணயித்துள்ளது, ஆய்வு நிறுவனம்.

ஆயத்த ஆடைத் தொழிலாளார்களோ ஆய்வு நிறுவனம் நிர்ணயித்ததை விடக் குறைவாக தங்களது ஊதியத்தை 23,000 டாக்கா உயர்த்தினால் போதுமென்று போராடி வருகின்றனர். அந்த ஊதியத்தைக் கூட வழங்காமல் தொழிலாளர்களின் போராட்டத்தை மிருகத்தனமான ஒடுக்கிவருகிறது, வங்கதேச அரசு.

தொழிலாளர்களின் போராட்டத்திற்கான காரணம்!

தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மிகக்குறைந்த அளவில் வழங்கும் உலகின் பல நாடுகளில் வங்கதேசமும் ஒன்று. வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் தற்போதைய ஊதியமான 8000 டாக்கா என்பது, 2018 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஊதிய உயர்வாகும். இந்திய ரூபாய் மதிப்பில் 6,058 ரூபாய் ஆகும். அதாவது மிகக் குறைவான ஊதியத்தில் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டப்படுகிறது.

மேலும் கழிவறை, சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இன்றி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து தொழிலாளர்கள் கொத்துகொத்தாக உயிரிழக்கின்றனர். 2013 ஆம் ஆண்டு 1100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பலிகொண்ட எட்டு மாடிகளைக் கொண்ட ராணா பிளாசா கட்டிட விபத்தே அதற்கு சான்றாகும்.

இக்கட்டிட விபத்திற்கு பிறகு, பாதுகாப்பு வசதிகள் ஓரளவுக்கு முன்னேறியிருக்கின்றன என்று கூறப்பட்டாலும், பாதுகாப்பு வசதிகள் மோசாமாகத்தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, தொழிற்சங்க உரிமையின்மை, ஆபாசமான வார்த்தைகளில் திட்டுவது, பெண் தொழிலாளர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற ஒடுக்குமுறைகளால் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருகின்றனர்.

தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமை பேசினால் அவர்களை “காணாமல் ஆக்குவது” என்பதுதான் வங்கதேச ஆயத்த ஆடை முதலாளிகளின் வழக்கமாகும். புதியதாக தொழிற்சங்கத்தை பதிவு செய்ததற்காக பிப்லப் என்ற தொழிலாளர் உட்பட 11 தொழிலாளர்கள், காணாமல் போயிருக்கின்றனர் என்கிறது, சர்வதேச தொழிலாளர் அமைப்பு. கடந்த ஜூன் மாதத்தில், வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர் கூட்டமைப்பின் காசிபூர் தலைவரான ஷாகிதுல் இஸ்லாம், காசிபூரைச் சேர்ந்த ஆயத்த ஆடை தொழிற்சாலை நிர்வாகத்தால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது இறப்பிற்கு காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.

இத்தகைய கொடூர உழைப்புச் சுரண்டலும், தொழிலாளர் உரிமையின்மையும், விலைவாசி உயர்வும்தான் வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசின் அடக்குமுறையை எதிர்கொண்டு உறுதிமிக்க வகையில் போராடி வருவதற்கு அடிப்படையாகும்.

தொழிலாளர்களின் போராட்டத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கும் ஷேக்ஹசீனா அரசு!

கடந்த அக்டோபர் 30 அன்று, காசிபூரில் உள்ள டாக்கா-மைமென்சிங் மற்றும் டாக்கா-டாங்கைல் தேசிய நெடுஞ்சாலைகளில் போராடிய தொழிலாளர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் தாக்குதல் நடத்தியிருக்கிறது, வங்கதேச காவல்துறை. அதுமட்டுமின்றி தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தியிருக்கிறது. இதில், 26 வயதான ரசல் என்ற தொழிலாளி கொல்லப்பட்டிருக்கிறார்.

ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றும் வரும் போராட்டத்தில், 3 தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்; நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். பெயரைக் குறிப்பிட்டு 200 தொழிலாளர்கள் மீதும், பெயர் குறிப்பிடாமல் 18,000 தொழிலாளிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையும், முதலாளிகளின் குண்டர்படையும் கூட்டுச் சேர்ந்துகொண்டு தொழிலாளர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கின்றன. மிர்பூரில் நடைபெற்ற போராட்டத்தில், மமுசுமா அக்தார் என்ற பெண் தொழிலாளியை மூன்று குண்டர்கள் துரத்திச் சென்று தாக்கியிருக்கின்றனர். “அவர்கள் எனது முதுகு, தொடை, கை ஆகிய இடங்களில் கொடூரமாக தாக்கினர்” என்கிறார். இத்தாக்குதலால் அவரது கை உடைந்துள்ளது.

“அவர்கள் இரக்கமற்ற முறையில் என்னைத் தாக்கினார்கள். எனது வாழ்வாதாரமே எனது கைகளை நம்பித்தான் இருக்கிறது, ஆனால் அவர்கள் கைகளையே குறி வைத்து தாக்கினர்” என்கிறார், புஷ்ரா பேகம் என்ற மற்றொரு பெண் தொழிலாளி. “போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது” என்று மிரட்டியதாகவும் கூறுகின்றனர், தொழிலாளர்கள்.

தொழிலாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கை பற்றியும் போலீசின் அடக்குமுறை பற்றியும் எதுவும் பேசாத வங்கதேசப் பிரதமர் ஷேக்ஹசீனா, தொழிலாளர்கள் போராட்டத்தால் 19 தொழிற்சாலைகள் தாக்கப்பட்டதாக அவதூறை அள்ளி வீசுகிறார்; தொழில் தடைபட்டுள்ளதாக வருத்தப்படுகிறார். மேலும், “உயர்த்தப்பட்ட ஊதியத்தைக் கொண்டு வேலை செய்யுங்கள்; சிலரின் தூண்டுதலால் போராட்டம் நடத்தினால், உங்கள் வேலையை இழக்க வேண்டி வரும்; உங்களது கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்” என்று மிரட்டுகிறார்.

தொழிலாளர்களின் ரத்தம் குடிக்கும் கார்ப்பரேட் ஓநாய்கள்!

1970 களிலிருந்தே, வங்கதேசமானது மேற்குல நாடுகளைச் சேர்ந்த கார்ப்பரேட் ஆயத்த ஆடை நிறுவனங்களின் முக்கியமான உற்பத்தி சாலையாக இருந்து வருகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஆயத்த ஆடை உற்பத்தி நாடாக வங்கதேசம் இருக்கிறது. வங்கதேச நாட்டின் பொருளாதாரமும் பிரதானமாக ஆயத்த ஆடை ஏற்றுமதியை சார்ந்து இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதியின் மூலம் வங்கதேசத்திற்கு 55 பில்லியன் டாலர் (4,58,400 கோடி ரூபாய்) வருவாய் கிடைத்திருக்கிறது.

உலகளவில் அறியப்பட்ட ஆயத்த ஆடை நிறுவனங்களான நைக், பூமா, லெவிஸ், மார்க்ஸ் & ஸ்பென்சர், சி &ஏ, பி.வி.எச், ஜாரா, எச் & எம், கேப் மற்றும் ப்ரைமார்க் ஆகியவை வங்கதேசத்தில் அயல்பணி (அவுட்சோர்சிங்) மூலம் தான் தங்களது நிறுவனத்திற்கு தேவையான ஆடைகளை உற்பத்தி செய்கின்றன. மிகக் குறைந்த செலவில் ஆடைகளை உற்பத்தி செய்து தங்களது நிறுவனத்தின் அடையாளக் குறியை (ஸ்டிக்கர்) ஒட்டிக்கொள்கின்றன. அமேசான், வால்மார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் ஆயத்த ஆடைகளுக்கு வங்கதேசத்தை தான் சார்ந்து இருக்கின்றன.

அமேசான், பிளிப்காட் போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களில் ஆயிரம் முதல் மூவாயிரம் ரூபாய் வரை விற்கப்படும் டி-சர்ட்கள், அவற்றின் உற்பத்தி செலவுக்கும் குறைவான விலையில்தான் வங்கதேசத்திலிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. இதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள், உற்பத்தி செய்த ஆடைகளுக்கான பணத்தைத் தாமதமாகக் கொடுப்பது, உற்பத்திக்கான ஆர்டர் கொடுத்துவிட்டு தாமதமாக ஆர்டரை ரத்து செய்வது, உற்பத்தி செய்த பொருட்களை தாமதமாகக் கொள்முதல் செய்வது, உற்பத்தி நிறுவனங்களுக்கும், ஆர்டர் கொடுக்கின்ற நிறுவனங்களுக்கும் இடையில் இடைத்தரகர்களை நியமித்துக் கொள்வது என பல உத்திகளைக் கையாளுகின்றன.


படிக்க: ஐஃபோன் – ஆயத்த ஆடை : சீன – வங்கதேச தொழிலாளரைச் சுரண்டும் அமெரிக்கா – ஜெர்மனி !


வங்கதேசத்தில் உள்ள 1000 ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அபர்டீன் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில், கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலையான செயல்முறை செலவை (Operating Cost) (வாடகை, ஊதியம், நிர்வாகம், உற்பத்திக் கருவிகள் பராமரிப்பு, காப்பீடு உள்ளிட்டவை சேர்த்து) நிர்ணயிப்பதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் எந்நேரத்திலும் இந்த செயல்முறைச் செலவைக் குறைக்கும் நிலைமை இருக்கிறது; தொழிற் போட்டியின் காரணமாக அக்குறைந்த செலவிலும் உற்பத்தி செய்ய வேண்டியிருக்கிறது என்கிறது ஆய்வு.

வங்கதேச ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியின் சுமை முழுவதும் தொழிலாளர்கள் மீதுதான் சுமத்தப்படுகிறது. ஒரு முழுக்கை சட்டையை 45 நிமிடத்திலும், டி-சர்ட்-யை 8 நிமிடத்திலும் உற்பத்தி செய்ய வேண்டிய நிலைக்குத் தொழிலாளிகள் தள்ளப்படுகின்றனர். குறைவான உற்பத்தித் திறன் கொண்ட இயந்திரங்களைக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்.

அத்தியாவசிய வாழ்வாதாரத்திற்கு தேவையானதைவிட குறைந்த கூலிதான் நிர்ணயிக்கப்படுவதால், தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள அதிகபட்ச நேரம் உழைக்கும் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். இவ்வாறு மேற்குலக நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கதேசத் தொழிலாளிகளை ஒட்டச் சுரண்டி கொழுத்த லாபமடைகின்றன. நாம் தரம் உயர்ந்தவை என்று வாங்கி அணியும் இந்த நிறுவன ஆடைகளின் மினுமினுப்பில் ஒளிந்திருக்கிறது வங்கதேச தொழிலாளர்களின் இரத்தம் தோய்ந்த உழைப்பு.

எனவேதான், ஹசீனா அரசு தனது எஜமானர்களான மேற்கத்திய ஏகாதிபத்திய மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் லாபத்தை உத்திரவாதம் செய்ய தொழிலாளர்களின் கூலியை உயர்த்த மறுக்கிறது; தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குகிறது.

தொழிலாளர்களின் போராட்டத்தினால் உற்பத்தி பாதிக்கப்பட்டவுடன், தொழிலாளர்களின் ரத்தம் குடித்த ஏகாதிபத்திய ஓநாய்கள் தனது அடிவருடி ஹசீனா அரசை பெயரளவிற்கு கண்டிப்பது, தொழிலாளர்களுக்காக கண்ணீர் சிந்துவது என நாடகமாடுகின்றன. மார்க்ஸ் & ஸ்பென்சர் மற்றும் சி & ஏ நிறுவனங்கள், தொழிலாளர்கள் மீதான வன்முறையைக் கண்டிப்பதாகவும், உற்பத்தி சங்கிலியில் தொழிலாளர்களின் பாதுகாப்பையும், குறைந்தபட்ச கூலியையும் உத்திரவாதம் செய்வதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கின்றன.

மேலும், எச் & எம் நிறுவனமானது தொழிலாளர்களின் உயர்த்தப்பட்ட கூலியை ஈடு செய்வதற்காக வங்கதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளின் உற்பத்தி செலவை உயர்த்திக் கொடுக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த செய்தியானது, தொழிலாளர்களின் ஒரு மாதப் போராட்டத்தின் பலனாகும்.

எனவே ஆயத்த ஆடை தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்; தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கும் வகையில் இதர உழைக்கும் வர்க்கங்களுடன் இணைந்து மாபெரும் மக்கள்திரள் போராட்டங்களாக கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்களை ஏகாதிபத்திய நுகத்தடியில் சிக்கியிருக்கும் வங்கதேசத்தை விடுவிக்கும் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும்.அப்பொழுதுதான் தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான விடுதலை சாத்தியமாகும்.

அந்த வகையில் வங்கதேச தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டத்தை ஆதரிக்க வேண்டியது இந்திய தொழிலாளி வர்க்கத்தின் கடமையாகும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஸ்பார்ட்டகஸ் (அடிமைச் சமுதாய சரித்திர நாவல்) | நூல் அனுபவம்

நீதிக்கு எதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை” என்று பகத்சிங் கூறினார். அடடா! எவ்வளவு ஆழ்ந்த பொருளுள்ள வாக்கியம். ஆம், எப்போது வர்க்கங்கள் தோன்றியதோ, எப்போது ஒடுக்குமுறைகள் தோன்றியதோ, அப்போதே அதற்கெதிரான போராட்டங்களும் தோன்றின.

இந்த நீண்ட நெடிய போராட்டத்தில், கி.மு-வில் (அதாவது ஆண்டான் அடிமை காலகட்டத்தில்) தோன்றியவன் தான் ஸ்ப்பார்ட்டகஸ். இவன் ஒரு அடிமை, கோரூ! கோரூ என்றால் அடிமைகளின் வாரிசு. இது தான் ஸ்ப்பார்ட்டகஸின் வரலாறு. ஆனால், மிகுந்த கட்டுப்பாடுடைய நேர்த்தியான ரோமானிய படையையும் ஒட்டுமொத்த ரோம் சாம்ராஜ்யத்தையும் கதிகலங்க வைத்தவன்.

நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று பெயரளவில் ஜனநாயகம் இருப்பதாகக் கூறிக் கொண்டாலும் எவ்வளவு அடக்குமுறைகள்! தற்போது உழைக்கும் மக்களுக்கு இருக்கும் சில உரிமைகள் கூட பல்வேறு போராட்டங்களாலும் தியாகங்களாலும் அடையப்பட்டவை தான்.

தற்போதைய நிலையே இதுவென்றால், ஆண்டான் அடிமைச் சமுதாயத்தில் அடிமைகளின் வாழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்று நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அது எப்படிப்பட்டதாக இருந்தது என்ற சித்திரத்தை தான் இந்நூல் நமக்கு வழங்குகிறது.

இந்நூலில் அடிமைகளின் வாழ்வும் ஆண்டைகளின் வாழ்வும் மிகவும் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஆட்டு மந்தைகள்; ஆளத்தகுதியற்றவர்கள். இவர்களை வழிநடத்திச் செல்ல திறமை தகுதி வாய்ந்த மனிதர்கள் தேவை; அவர்கள்தான் ரோமானிய உயர்குடியினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும். இவர்களுக்கு சேவை செய்யப் படைக்கப்பட்ட ஒரு இயந்திரம் தான் அடிமை! அன்று முதல் இன்றுவரை ஆளும் வர்க்கத்தின் அடிமைகளாகவே உழைக்கும் மக்கள் இருத்த வைக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: நூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு || மு. இனியவன் || முரா. மீனாட்சி சுந்தரம்


அடிமைகளை சிலுவையிலுடுவது என்பது சர்வசாதாரணமான நிகழ்வு. ஒரு அடிமை ’தவறு’ செய்தால் அவனை சிலுவையிலிட்டு மற்ற அடிமைகளுக்கு உணர்த்துவது தான் அங்கு பின்பற்றப்பட்ட நடைமுறை. சிலுவையிலிடப்பட்ட அடிமை எவ்வளவு நாட்கள் உயிர்பிழைத்திருப்பார் என்று பந்தயமே நடைபெறும்.

அடிமைகளை விவசாயத்தில் தொடங்கி வீட்டு வேலை, சுரங்க வேலை, மாடமாளிகைகள் எழுப்புவது என அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்தி இரத்தத்தை உறிஞ்சி வேலை வாங்கினார்கள்‌.  அடிமைகளின் குருதியால்தான் ரோமானிய சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டது. மேலும், ரோமானிய ஆண்டைகளின் பொழுதுபோக்குக்காக மற்போர் அரங்குகள் நடத்தப்படும். அங்கு, சேவல் சண்டைகளைப் போல் அடிமைகளுக்கிடையில் சண்டை போடவிட்டு ரசித்துக் கொண்டிருக்கும் கொடூரங்கள் அரங்கேறும்.

அடிமைகளைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பதே உயிரோடு வாழ்வது மட்டும் தான். அன்றாடம் எஜமானர்களின் சவுக்கடிகளில் இருந்து தப்பித்தாலே போதுமானது. இதுபோன்ற வரலாற்றுச் சூழல் தான் ஸ்ப்பார்ட்டகஸ்ஸை உருவாக்கியது.

கொடூரமான நியூபியா தங்கச் சுரங்கத்தில் வேலைவாங்கப்பட்ட  ஸ்ப்பார்ட்டகஸ் மற்போர் அரங்கில் சண்டைபோடுவதற்காக வாங்கப்படுகிறான். மற்போர் அரங்கில் அடிமை வீரர்களுக்கு சகல வசதியும் செய்து கொடுக்கப்படும்; பலி கொடுக்கும் ஆட்டினை நன்கு வளர்ப்பதுபோல். அப்பொழுதுதான் அடிமை நன்றாகச் சண்டையிடுவான். ஸ்ப்பார்ட்டகஸூம் பல சண்டைகள் போடுகிறான்; வெற்றி அடைகிறான். ஆனால், அவனால் கொல்லப்படுவதோ அவனைப் போன்றதொரு அடிமை தான்.

ரோமானிய ஆண்டைகளுக்காக அடிமைகள் பலியிடப்படுகின்றனர். இந்த அடிமைமுறையை அவன் முற்றிலும் வெறுத்தான். மற்போர் அரங்கில் உள்ள சக அடிமைகளின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்கிறான். மற்போர் அரங்கின் சமையலறையில் இருந்து தான் அந்த கிளர்ச்சி உதயமானது; ரோமானியர்களை ஆட்டங்காண வைத்த அடிமைகளின் கிளர்ச்சி! ஆனால் அது நசுக்கப்பட்டுவிட்டது என்பது கசப்பான செய்தி.

இந்த புத்தகத்தை படித்தால் பல இடங்களில் நம்மை அறியாமலேயே அழுகை வந்துவிடும். ஹோவர்ட் ஃபாஸ்டின் காட்சியை விளக்கும் முறையும் தமிழில் மொழிபெயர்த்த ஏ.ஜி. எத்திராஜுலுவின் மொழிபெயர்ப்பும் நம்மை கதையோடு ஒன்ற வைக்கிறது.

உலகில் உள்ள பெரும்பாலான நூல்கள் அரசர்களைப் பற்றியும் தளபதிகளைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நூல்களை இயற்றத்தான் எழுத்தாளர்களும் விரும்புவார்கள். ஆனால், அமெரிக்கா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான ஹோவர்ட் ஃபாஸ்ட் எழுதிய இந்நூல் அடிமைகளின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

அடிமைமுறையை எதிர்த்து அடிமை வீரன் ஸ்ப்பார்ட்டகஸ் தோன்றினான். இன்றோ பாசிச இருளால் சூழப்பட்டு ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகிறோம். எனவே, இன்றைய காலகட்டத்திற்கும் பல ஸ்ப்பார்ட்டகஸ்கள் தேவைப்படுகிறார்கள்.

நூலின் பெயர்: ஸ்பார்ட்டகஸ் (அடிமைச் சமுதாய சரித்திர நாவல்)
ஆசிரியர்: ஹோவர்ட் ஃபாஸ்ட் | ஏ.ஜி.எத்திராஜ்லு (தமிழில்)
பதிப்பகம்: சிந்தன் புக்ஸ்


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



எதிர்க்கட்சிகளே, “பாசிச சர்வாதிகாரம் ஒழிக!” என மக்களோடு சேர்ந்து முழங்க வேண்டிய தருணம் இது!

எதிர்க்கட்சிகளே, “பாசிச சர்வாதிகாரம் ஒழிக!” என மக்களோடு சேர்ந்து
முழங்க வேண்டிய தருணம் இது!

இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு
141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம்.

எதிர்கட்சிகளே, இனியும் நாடாளுமன்றத்தில் பாசிஸ்ட்டுகளிடம் விளக்கம்
கேட்டுக்கொண்டு இருக்கப்போகிறீர்களா? அல்லது

மக்கள் மன்றத்திற்கு வந்து இந்த பாசிச அரசை அம்பலப்படுத்தப் போகிறீர்களா?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நெல்லை சமாதான புரம் மழைவெள்ள பாதிப்பு! | களத்தில் தோழர்கள்

நெல்லை சமாதான புரம் மழைவெள்ள பாதிப்பு! | களத்தில் தோழர்கள்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அர்ஜெண்டினா – நெதர்லாந்து: பாசிஸ்ட்டுகள் வெற்றி! இந்திய ஜனநாயக சக்திகள் கற்க வேண்டிய பாடம்!

அர்ஜெண்டினா மற்றும் நெதர்லாந்து: பாசிஸ்ட்டுகள் வெற்றி!
பாசிச எதிர்ப்பில் இந்திய ஜனநாயக சக்திகள் கற்க வேண்டிய எதிர்மறை பாடம்!

லகம் முழுவதும் ஏகாதிபத்திய முதலாளித்துவம் சமூக – அரசியல்-பொருளாதார நெருக்கடியில் சிக்கி ஒரு முட்டுச் சந்துக்கு வந்துள்ளது. உலகெங்கும், வேலையில்லா திண்டாட்டமும், பட்டினிச் சாவுகளும் அதிகரித்து வருகின்றன. ஊதிப் பெருக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியும்கூட சொல்லிக் கொள்ளும்படி இல்லை. விண்ணைத் தொடுமளவிற்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பணவீக்கம், டாலருக்கு நிகரான நாணய மதிப்பு குறைவு என உலக முழுக்க ஏகாதிபத்திய முதலாளித்துவ பேய் பிடித்தாட்டுகிறது.  ஏகாதிபத்தியத்தால் அடக்கி ஒடுக்கப்படும் நாடுகள் மட்டுமின்றி, ஏகாதிபத்திய நாடுகளிலும் தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் வீதியிலிறங்கிப் போராடுகின்றனர்.

பொருளாதாரரீதியாக உலகமயமாக்கலை முன் தள்ளிய நாடுகள் தற்போது காப்புவாதத்தைக் கடைபிடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஜனநாயக உரிமைகள் பற்றி பேசப்படும் நாடுகளில் கூட, அகதிகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற சமூகக் காப்புவாதம் கடைபிடிக்கப்படுகிறது. அந்தளவிற்கு, இன்றைய ஏகாதிபத்திய முதலாளித்துவம் சமூக-அரசியல்-பொருளாதார ரீதியாக தோல்வியடைந்திருக்கிறது, எதிர்நிலைக்கு மாறியிருக்கிறது.  இந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை கொரோனா பெருந்தொற்றுக்காலம் தீவிரப்படுத்தியிருக்கிறது. இதன் எதிரொலியாகத்தான் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான மேலாதிக்கப் போர்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த பின்புலத்திலிருந்துதான் ஏகாதிபத்திய முதலாளித்துவவாதிகள் தங்களது சுரண்டலை மேலும் தீவரப்படுத்த, பாசிச சக்திகளை வளர்த்து வருகிறார்கள், உலகெங்கும் பாசிஸ்ட்டுகள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியமான தனது சரிந்துவரும்  உலக மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள, மூன்றாம் உலக நாடுகளில் பாசிச சக்திகளை ஊக்குவித்தும், ஆட்சிக் கவிழ்ப்புகள் மூலம் பொம்மை அரசுகளை உருவாக்கியும் வருகிறது. ஏற்கனவே தெற்காசிய பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியது. தற்பொழுது, ‘ஜனநாயக’ப் பூர்வமாகவே, தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் தீவிர வலதுசாரியான ஜாவியர் மில்லெ அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

“அர்ஜெண்டினாவின் டிரம்ப்” என்றும்,  “பைத்தியக்கார மனிதன் (Madman)” என்று அழைக்கப்படும், மில்லே அதிபர் தேர்தலில் 56 சதவீத ஓட்டுகள் பெற்றிருக்கிறார். அர்ஜெண்டினாவின் ஆளும் மையவாத மற்றும் இடதுசாரி கூட்டணி கட்சிகளின் வேட்பாளரும், தற்போதைய நிதியமைச்சருமான செர்ஜியோமஸ்ஸா 44 சதவீத வாக்குகள் பெற்றிருக்கிறார். மில்லேவின் வெற்றியை, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரேசிலின் அதிபர் பொல்சான்ரோ வரவேற்றிருக்கின்றனர். அர்ஜெண்டினாவை மீண்டும் வலுவாக்குங்கள் என்று டிரம்ப் மில்லேவைப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெரியளவிற்கு அரசியல் பாரம்பரியமில்லாத ராக்பாடகரும், தொலைக்காட்சி பொருளாதாரவாதியுமான மில்லேவிற்கு அர்ஜெண்டினாவின் இளம் வாக்காளர்கள், அதுவும் 30 வயதிற்குட்பட்டவர்கள்தான் வாக்களித்திருக்கின்றனர். ஆளும் கூட்டணி கட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், 143 சதவீதத்திற்கும் அதிகமான தீவிர பணவீக்கம், வேலையின்மை ஆகியவைதான் இந்த இளம் வாக்காளர்களை இந்த வலதுசாரியின் பின் அணிதிரட்டியிருக்கிறது. அணிதிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.


படிக்க: துருக்கி தேர்தல் முடிவு: தேவை, பாசிசத்திற்கு எதிரான மாற்று ஜனநாயகத் திட்டம்!


இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில்தான் மில்லே பெருவாரியான அர்ஜெண்டினா இளைஞர்களுக்கு சமூக வலைதளங்களில் அறிமுகமாகியிருக்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில்,  தொடர்ச்சியான யூடியூப் விவாதங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், டிக்டாக் காணொளிகள் மூலமாக மில்லேவை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது அர்ஜெண்டினாவின் (ராணுவ சர்வாதிகார) வலதுசாரி கும்பல்.

18 முதல் 29 வயதிற்குட்பட்ட இளைஞர்களில் 45 சதவீதத்திற்கும் அதிகமானோர், உணவு வழங்கும் (Food delivery) வேலைதான் செய்கின்றனர். இந்த இளைஞர்கள்தான் மில்லேவை தேர்ந்தெடுக்கப் பின்புலமாக இருந்திருக்கின்றனர். இவர்கள்தான் 2019-இல் நடந்த அதிபர் தேர்தலில், மையவாத மற்றும் இடதுசாரி கூட்டணி கட்சியின் ஆல்பர்ட் பெர்ணாண்டஸை ஆதரித்தவர்கள். நடந்து முடிந்த தேர்தலில், இடது சாரி இளைஞர்கள்கூட மில்லேவிற்கு வாக்களித்திருக்கின்றனர். அந்த இளைஞர்களுக்கு அர்ஜெண்டினாவில் தற்போது நிலவும் பணவீக்கத்தைக் குறைப்பதும், வேலைவாய்ப்பை உருவாக்குவதும்தான் முதன்மையானதாக இருக்கிறது. “முதலில் எனது சட்டைப்பைக்குள் சிறிது பணம் பெறுவதே தேவையாய் இருக்கிறது” என்கின்றனர், இளைஞர்கள்.

ஏனெனில் அந்தளவிற்கு கொடுமையான சூழல் அங்கு நிலவுகிறது. பணவீக்கத்தால், தங்களது அத்தியாவசிய அன்றாட தேவைகளை ஈடுசெய்து கொள்ள தங்களது பழைய துணிகளை விற்று வயிற்றைக் கழுவும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.

எனவேதான், மின் ரம்பத்தை (Chainsaw) கையில் வைத்துக் கொண்டு இந்த அமைப்புமுறையை வீழ்த்துவேன் என்று பிரச்சாரம் செய்த மில்லே  “மீட்பராக” தெரிந்திருக்கிறார். மற்றபடி, அர்ஜெண்டினாவின் பெசோ நாணயத்திற்கு பதிலாக, அமெரிக்காவின் டாலரைப் பயன்படுத்துவது, மத்திய வங்கியை மூடுவது, கம்யூனிச எதிர்ப்பு, சமூக நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டுவது, சட்டபூர்வக் கருக்கலைப்பை ஒழிப்பது, அனைத்துத் துறைகளையும் தனியாமயமாக்குவது, பருவநிலைமாறுபாடு என்பது சோசலிசவாதிகள் பொய் என்ற மில்லேவின் கொள்கைகள் அவர்களுக்குப் பிரச்சினையாகவில்லை.

மேலும், தென் அமெரிக்காவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அர்ஜெண்டினாவில் வரலாறு காணாத அளவிற்கு பணவீக்கம் நிலவுவதற்கு மையவாத இடதுசாரிகளின் அர்ஜெண்டினாவை அமெரிக்காவிற்கு அடகு வைக்கின்ற பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம். 2019-ல் அதிபராக ஆட்சிப் பொறுப்பேற்ற பெர்ணான்டஸ் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்பெற அர்ஜெண்டினாவை அடகு வைத்தார். இவர்களின் பொருளாதாரக் கொள்கைகள்தான் அர்ஜெண்டினாவின் பணவீக்கத்திற்கு காரணமென்றாலும், தீவிரமாகி வரும் பணவீக்கத்தைக் குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவி செய்யவில்லை. அர்ஜெண்டினாவின் டாலர் இருப்பு வெகுவாக குறைந்தபிறகும், பணவீக்கம் 100 சதவீதத்தைத் தொட்ட பிறகும் சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளவில்லை என்பதற்காக அர்ஜெண்டினாவிற்கு வழங்குவதாக இருந்த 44 மில்லியன் டாலர் கடனை கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியம் வழங்கவில்லை.


படிக்க: இத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு !


இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து பாலும், மருந்துப் பொருட்களும் கிடைக்காமல் மக்கள் அவதியுற்று, ஆளும் ராஜபக்சே கும்பலுக்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருந்த போதும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதிஉதவி செய்யவில்லை. இலங்கைக்கு கடைபிடித்த அதே நடைமுறையைத்தான் அர்ஜெண்டினாவிற்கு கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுவது, அர்ஜெண்டினாவில் தனியார்மயத்தைத் தீவிரப்படுத்துவது, பெயரளவிற்கான சமூக நலத்திட்டங்களையும் ஒழித்துக்கட்டுவதுதான் அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கையாக இருக்கிறது. எனவேதான், அர்ஜெண்டினாவில், பணவீக்கத்தைத் தீவிரப்படுத்தி அமெரிக்க ஆதரவாளரும், தீவிர வலதுசாரியுமான ஜாவியர் மில்லே அந்நாட்டின் அதிபராகியிருக்கிறார்.

இலங்கையைப் போல், ரணில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்கியது போல,  மில்லே ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அர்ஜெண்டினாவிற்கு கடனுதவி வழங்கப்படும். பணவீக்கம் குறையும். அதேசமயம், அர்ஜெண்டினா உழைக்கும் வர்க்கத்தின் மீது பொருளாதார ரீதியான தாக்குதல்களும், பாசிச தாக்குதல்களும் வலுப்பெறுவதும் மிகத் தீவிரமாக அரங்கேறும் என்பதையும் அர்ஜெண்டினா மக்கள் எச்சரிக்கையாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.

000

அர்ஜெண்டினாவைப் போலவே, மேற்கு ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் வரலாற்றில் முதன்முறையாக, “நெதர்லாந்தின் டிரம்ப்” என்று அழைக்கப்படும் தீவிர வலதுசாரியான கீர்ட் வில்டர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 150 இடங்கள் கொண்ட நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் 37 இடங்களில் வில்டரும், கன்சர்வேட்டிவ் மக்கள் கட்சியின் மார்க் ருட்டே 24 இடங்களிலும், இடதுசாரி தொழிலாளர் கூட்டணி 25 இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கின்றனர். மக்கள் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த வில்டர் 2006-இல் சுதந்திரக் கட்சியை (Party for Freedom) உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வில்டர் தனது தேர்தல் வாக்குறுதிகளில் வெளிப்படையாக இஸ்லாமிய மற்றும் அகதிகள் வெறுப்பைக் கக்கியிருக்கிறார். தனது தேர்தல் வாக்குறுதிகளில், “நெதர்லாந்து ஒரு இஸ்லாமிய நாடு அல்ல; இஸ்லாமிய பள்ளிகள், குரான் மற்றும் மசூதிகளுக்கு இடமில்லை”என்று அறிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, நெதர்லாந்தின் பிரச்சினை அகதிகள்தான் என்றும் பேசியிருக்கிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தில், “நாம் மீண்டும் நெதர்லாந்தை டச்சுக்காரர்களுக்கான நாடாக மாற்றுவோம். நாம் புலம்பெயர்வுகளையும், புகலிடம் தேடுபவர்களையும் கட்டுப்படுத்துவோம். மீண்டும் மக்கள் தங்கள் வாலட் அட்டைகளில் நிறைய பணம் பெறுவர்” என்று பேசியிருக்கிறார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நெதர்லாந்து விலக வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து ஐரோப்பிய நாடுகள் மீளாத சூழலில், ரஷ்ய -உக்ரைன் போரானது அந்நாடுகளில் பொருளதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களால் ரஷ்யா மீது போடப்பட்ட பொருளாதாரத் தடையால், பொருளாதாரரீதியாக மேற்கு ஐரோப்பிய நாடுகள்தான் வெகுவாக பாதிக்கப்பட்டன. இந்நாடுகள், எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்காக ரஷ்யாவையே சார்ந்திருந்தன. ஆகவே, ரஷ்யா மீது போடப்பட்ட பொருளாதாரத் தடையால், இந்நாடுகளில், குறிப்பாக நெதர்லாந்தில் பணவீக்கமும், வாழ்க்கைச் செலவுகளும், எரிவாயு மற்றும் எண்ணெய் தேவையும், பொருளாதார ஏற்றத்தாழ்வும் வெகுவாக அதிகரித்தன.

நெதர்லாந்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும், அகதிகள் பிரச்சினையையும் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் முக்கியப் பங்காற்றின. இத்தேர்தலில், வில்டர் மட்டுமின்றி வில்டரை எதிர்த்துப் போட்டியிட்ட மைய வலதுசாரிகளான சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் கட்சியும் அகதிகள் பிரச்சினையையே கையிலெடுத்தன. நெதர்லாந்தில் பெரும்பாலும் அகதிகளாக குடியேறுபவர்கள் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“நெதர்லாந்தின் மைய வலதுசாரிகள், வாக்காளர்களைக்  கவர்வதற்காக புலம்பெயர்வு பிரச்சினையைக் கையிலெடுத்தன. இது தீவிர வலதுசாரிகளுக்கு வாக்களிப்பதேற்கே வழிவகுத்தது” என்கிறார் லெய்டன் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியரான சிமோன் ஓட்ஜேஸ்.

இந்தப் பொருளாதார அரசியல் பின்புலத்திலிருந்துதான், நெதர்லாந்து வரலாற்றில் முதல்முறையாக தீவிர வலதுசாரியான வில்டர் வெற்றிபெற்றிருக்கிறார். ஆட்சி அமைக்க 76 இடங்கள் தேவையிருப்பினும், வில்டரின் வெற்றியை மேற்கு ஐரோப்பிய பாசிச ஆளும் வர்க்கப் பிரிவுகள் கொண்டாடுகின்றன. ஏற்கனவே, ஸ்வீடன், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, ஹங்கேரி, பின்லாந்து என பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பாசிச சக்திகள் அதிகாரத்திலும், ஆட்சியிலும் பங்கேற்று இருக்கின்றன. இந்நாடுகளின், பாசிச சக்திகளும் தங்களது நாடுகளில் இஸ்லாமிய வெறுப்பையும், அகதிகளை எதிரிகளாக சித்தரித்துமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள். தற்போது நெதர்லாந்தில், பாசிச வில்டரின் வெற்றிக்குப் பிறகு, தீவிர வலதுசாரி சித்தாந்தம் ஐரோப்பிய அரசியலில் முதன்மையாக மாறியிருக்கிறது.

000

அர்ஜெண்டினாவிலும், நெதர்லாந்திலும் பொருளாதார நெருக்கடி பாசிச சக்திகள் வலுப்பெற ஒரு காரணமாகியிருக்கிறது என்பது எந்தளவிற்கு உண்மையோ, அந்தளவிற்கு இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்கின்ற கட்சிகளின், உலகமயத்திற்கு எதிரான தேசிய பொருளாதாரத் திட்டமின்மை, பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக சித்தாந்தப் போராட்டமின்மை, மக்களை ஜனநாயக சித்தாந்த ரீதியாக வளர்த்தெடுக்காமை ஆகியவை காரணமாக உள்ளது.

இதேபோன்றுதான் நமது நாட்டிலும் தோல்வி முகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காவி பாசிஸ்ட்டுகள் தீவிரப்படுத்துகிற தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகளுக்கு எதிரான, சுயதேசிய பொருளாதாரத் திட்டத்தை முன்வைக்கின்ற குறைந்தபட்ச செயல்திட்டத்தை முன்வைக்காமல் காவி பாசிஸ்ட்டுகளை தேர்தலில் வீழ்த்த முடியாது. இதுதான் மேற்கு ஜரோப்பா மற்றும் அர்ஜெண்டினாவில் பாசிச சக்திகளின் எழுச்சி நமக்குக் கற்பிக்கும் எதிர்மறை பாடமாகும். எனவே, வெறும் கவர்ச்சிவாத இலவசத் திட்டங்களை மட்டும் நம்பாமல், பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக சித்தாந்த-அரசியல்-பொருளாதார திட்டங்களை முன்வைத்து இந்திய உழைக்கும் மக்களை அணிதிரட்ட வேண்டியது காலத்தின் அவசியமாகிறது.


வாகைசூடி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தூத்துக்குடி மழை வெள்ளம் | தோழர் அமிர்தா – தோழர் செல்வம் | கள நிலவரம்

தூத்துக்குடி மழை வெள்ளம் | தோழர் அமிர்தா – தோழர் செல்வம் | கள நிலவரம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



‘மைலார்டு மன்றங்களின்’ மீது காறி உமிழும் உத்தர பிரதேச பெண் நீதிபதியின் கடிதம்

ப்போது நான் நம்பிக்கையற்றவளாக உணர்கிறேன். அப்படி இருக்கும்போது மற்றவர்களுக்கு நான் எப்படி நீதி வழங்குவேன். எனக்கு இனி வாழ விருப்பமில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் நடை பிணமாக இருக்கிறேன் எனவே கண்ணியமாக சாக அனுமதி கொடுங்கள்”, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களுக்கு உத்தர பிரதேச பெண் நீதிபதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட வார்த்தைகள் இவை.

இந்தக் கடிதம் நம்மில் பலரையும் உலுக்கி எடுத்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டாக தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளுக்கு எதிராக அந்த பெண் நீதிபதி பல்வேறு புகார்களை அளித்துள்ளார். ஆனால், கீழமை நீதிமன்றங்கள் தொடங்கி உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வரை எந்த அசைவையும் அவரது புகார் ஏற்படுத்தவில்லை.

உத்தர பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தின் பெண் சிவில் நீதிபதிக்கு அதே மாவட்டத்தின் “மாவட்ட நீதிபதி” தொடர்ந்து பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் நீதிபதி “மாவட்ட நீதிபதி வெளிப்படையாக நீதிமன்றத்திலேயே எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இரவு வீட்டுக்கு வரச் சொல்கிறார். சக நீதிபதிகளையும் இணைத்துக் கொண்டு வருகிறார்.  திறந்த நீதிமன்றத்தில் வைத்து அவமானப்படுத்தப்பட்டேன். ஒரு குப்பையை விட, பூச்சியை விட  மோசமாக நடத்தப்பட்டேன்” என்று தனக்கு நடந்த கொடுமையை விவரிக்கிறார்.

நமது நாட்டின் பெண்களுக்கு அவர் கூறும் வலி மிகுந்த வார்த்தைகள் இவை: “இந்தியாவில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் இதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பாலியல் துன்புறுத்தலுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள். போஷ் (POSH – Protection of Women from Sexual Harassment Act) எனப்படும் பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் சுத்தமான பொய். நீங்கள் புகார் செய்தால், நீங்கள் சித்திரவதை செய்யப்படுவீர்கள். உச்ச நீதிமன்றம் உட்பட எனது குரலை யாரும் கேட்கவில்லை.”

ஆம் நமக்கு புனித மன்றங்களாக கற்பிக்கப்பட்ட நீதிமன்றங்களின் யோக்கியதை இதுதான். கடந்த ஒன்றரை வருடமாக அந்தப் பெண் நீதிபதி நடத்திய போராட்டமே அதற்கு சாட்சி.


படிக்க: ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?


உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து வெறும் எட்டு வினாடிகளில் அது டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்பதை குறிப்பிடுகிறார். ஒரு பெண் நீதிபதிக்கே இந்த நிலை என்றால் மற்ற பெண்களின் நிலை  என்ன?

இதே உத்தர பிரதேசம் தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மகாராஷ்டிரா என அடுத்தடுத்து இந்தப் பட்டியல் நீள்கிறது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளால் உலகளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுப்பதற்கு போஸ்கோ, போஷ் உள்ளிட்ட எண்ணிலடங்கா சட்டங்களை கொண்டு  வந்துள்ளதாக இவர்கள் சொல்லிக் கொண்டாலும், எதார்த்தத்தில் குற்றங்கள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது என்பதையே புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துகிறது.

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சித்தாந்தம் ஆதிக்கம் செலுத்தும் பசுவளைய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இன்னும் தீவிரமாக வளர்ந்து வருகிறது. காவிக்கும்பலால் கற்பிக்கப்படும் பார்ப்பனிய ’வர்ணாசிரம தர்மம்’ பெண்களை அடிமைகளாகவும் போகப் பொருட்களாகவுமே காட்சிப்படுத்துகிறது.


படிக்க: பாலியல் குற்றவாளிக்கு ஜாதகம் பார்க்க சொன்ன கூமுட்டை நீதிமன்றம்!


கலாச்சாரத்தை காக்கிறோம் எனும் பெயரில் இவர்கள் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகள் நாளுக்கு நாள் மிகவும் குரூரமாக வளர்ந்து வருகிறது. குரூரக் கும்பலின் வளர்ச்சி தான் பாலியல் வன்கொடுமையின் வளர்ச்சியாகவும் பரிணமித்து வருகிறது. இந்த குரூரமான பாசிச கும்பலின் பிரதிநிதிகள் சிலர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாகவும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றனர். மனுநீதியை மேற்கோள் காட்டி வழங்கப்படும் தீர்ப்புகள் எல்லாம் இதையே எடுத்துரைக்கின்றன.

சூரிய நெல்லி வழக்கு முதல் பில்கிஸ் பானு வழக்கு  வரை நீதிமன்றங்கள் குற்றவாளிகளை காத்து நிற்கும் ஆணாதிக்க, சாதி, மத  மன்றங்களாக செயல்பட்டு  புனிதம் எல்லாம் ஒன்றுமில்லை என பல்லிளித்து நிற்கிறது. இதன் மற்றொரு தீவிர வெளிப்பாடுதான் தற்போது பெண் நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதி.

அந்தப் பெண் நீதிபதி இறுதியாக வலியுறுத்தும் அந்த வார்த்தை ”ஆன்மா அற்று உயிரற்று போகிறேன்;  என்னை கண்ணியமாகச் சாக அனுமதியுங்கள்”. அநீதி நிலை நாட்டப்படும் இந்த நாட்டில் கண்ணியமான சாவு என்பது கூட நிராகரிக்கப்படும் என்பதுதான் எதார்த்தமாக உள்ளது.


ரவி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube