Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 123

புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் செப்டம்பர் – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

♦ தலையங்கம் : கோழைகளின் வீராவேசம்!
♦ சந்திரயான்-3 : போலி தேசப்பெருமித போதை!
♦ தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள்!
♦ “ஊழல் நாயகன்” மோடி!
♦ ஒருவிரல் புரட்சியா, மக்கள் எழுச்சியா”? பாசிசத்தை எதிர்கொள்ள, “சாத்தியமான மாற்று” எது?
♦ அசாம் தொகுதிகள் மறுவரையறை: வாக்குவங்கியை காவிமயமாக்கும் புதிய மாடல்!
♦ இந்திய தண்டனைச் சட்டம்: இனி இந்துராஷ்டிர தண்டனைச் சட்டம்!
♦ கார்ப்பரேட் அதானியின் கோரப்பிடியில் காட்டுப்பள்ளி!
♦ நைஜர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு: ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டி!
♦ பொதுப் பாடத்திட்டம்: தி.மு.க. அரசின் மற்றொரு கார்ப்பரேட் சேவை!

சங்கி மண்ணாக மாற்ற முயற்சிக்கிறார்கள்! | வழக்குரைஞர் பார்வேந்தன்

சங்கி மண்ணாக மாற்ற முயற்சிக்கிறார்கள்! | வழக்குரைஞர் பார்வேந்தன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

தினமலரை தடைசெய்! | தோழர் தீரன்

தினமலரை தடைசெய்! | தோழர் தீரன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

இந்தி திணிப்பு – அதிகார குவிப்பு – சர்வாதிகார போக்கு | வழக்குரைஞர் பாரதி

இந்தி திணிப்பு – அதிகார குவிப்பு – சர்வாதிகார போக்கு | வழக்குரைஞர் பாரதி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

அனிதா நினைவு நாள்: நீட் தேர்வைத் தடைசெய்ய உறுதியேற்போம்!

0

மாணவி அனிதா நீட் தேர்வை ஒழிக்க உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டங்களை மேற்கொண்டார். ”நீட் தேர்வுக்கு பயிற்சி எடுக்க என்னிடம் பணம் இல்லை. போதிய வசதி இல்லை. என்னை போன்று பல மாணவர்களின் மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவை நிறைவேற்ற நீட் தேர்வை ஒழியுங்கள்” என்று அனிதா நம்மிடம் கூறிச்சென்றார். அனிதா நம்மைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த ஆறு ஆண்டுகளில் மேலும் பல மாணவர்கள் நீட் தேர்வினால் கொல்லப்பட்டுள்ளார்கள். எனினும் நீட் தேர்வை தமிழ்நாட்டில் தடைசெய்ய முடியவில்லை.

நீட் தேர்வின் மூலம், தனியார் மருத்துவ நிறுவனங்களும், நீட் பயிற்சி மையங்களும் வருடா வருடம் கோடிக்கணக்கான பணத்தை பெற்றோர்களிடமிருந்து கொள்ளையடித்து கொழுத்து வருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் இருந்து மருத்துவராக வேண்டும் என்று படித்துவரும் அனிதா போன்ற ஏழை மாணவர்கள், உண்மையில் மருத்துவர்களாக மாறுவதென்பது அக்கிராமங்களின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும். மக்களுக்கு சேவையாற்றும் மனம் கொண்ட மக்கள் நல மருத்துவர்களை உருவாக்கும். அனிதா தற்போது மருத்துவராகி இருந்தால் அவரது கிராமத்திற்கு மக்கள் நல மருத்துவராக சென்றிருப்பார். அந்த மக்கள் நல மருத்துவர் என்ற தன்மையை அகற்றி, மருத்துவர்களையும் மருத்துவத் துறையையும் கார்ப்பரேட்மயமாக்குவதை தீவிரப்படுத்தியுள்ளது பாசிச மோடி அரசு திணித்த இந்த கொலைகார நீட் தேர்வு. காசு இருப்பவரே மருத்துவராக முடியும் – மருத்துவரானால் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்ற நிலையை உருவாக்குவதன் மூலம் மக்கள் நல மருத்துவம் என்பதை ஒழித்துக்கட்டி கார்ப்பரேட் நல மருத்துவத்தை மருத்துவத்துறையில் திணித்துள்ளது நீட் தேர்வு.

அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவ படிப்பிற்குள் செல்லும் பிரபஞ்சன்கள் நீட் தேர்வை விற்பனை செய்யும் விளம்பரதாரர்களாக கார்ப்பரேட்டுகளால் முன்னிறுத்தப்படுகிறார்கள். “நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மருத்துவராகலாம், நீ ஒழுங்கா படித்து மருத்துவராக வேண்டியதுதானே” என்று காவி-கார்ப்பரேட் பாசிசக்கூட்டம் கூச்சலிடுகிறது. ஆனால் நீட் தேர்வில் 427 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த ஜெகதீஸ்வரனால் மருத்துவராக முடியவில்லையே ஏன்? நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் இலட்சக்கணக்கில் பணம் கட்டினால்தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்ற அநீதியை கொண்டு ஜெகதீஸ்வரனை கொன்றுவிட்டார்கள் மருத்துவ மாஃபியாக்கள்.


படிக்க: நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!


பணம் படைத்த பிரபஞ்சன்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து மருத்துவம் படிக்கிறார்கள். பணம் இல்லாத ஜெகதீசன்கள் மருத்துவராக முடியாமல் கொல்லப்படுகிறார்கள். இதுதான் நீட் தேர்வின் கார்ப்பரேட் அரசியல். மருத்துவ கனவு கொண்ட ஏழை மாணவர்களுக்கு மட்டும்தான் தெரியும் நீட் கார்ப்பரேட் நலன் கொண்டது என்று. பின்புலம் இருக்கும் பிரபஞ்சன்களால் இதனை புரிந்து கொள்ள முடியாது.

அனிதா மரணித்த செப்டம்பர் 1, 2017 அன்று ஏழை மாணவர்களை நீட் தேர்வு என்ன நிலையில் வைத்திருந்ததோ அதே நிலைதான் தற்போது வரை வைத்திருக்கிறது. நீட்டுக்கு எதிரான குரல்களும் அதே கொதிநிலையில்தான் இருக்கின்றது.

அனிதா முதல் ஜெகதீசன் வரை பல விலைமதிப்பற்ற உயிர்களைக் காவு வாங்கியும் தமிழ்நாட்டில் நீடித்துக் கொண்டிருக்கிறது நீட் தேர்வு. நீட் தேர்வை நான் ஒருபோதும் தடைசெய்ய மாட்டேன் என்று திமிராக பேசித் திரிகிறார் காவி – கார்ப்பரேட் பாசிச ஆளுநர் ஆர்.என். ரவி. மாணவர் ஜெகதீசன் மரணத்திற்கு நீதிகேட்டுப் போராடிய பயாஸ்தீன்களின் அழுத்தத்தின் காரணமாக ஆளும் திமுக கட்சியே உண்ணாவிரதப் போராட்டங்களில் இறங்கியிருக்கிறது. ஆனாலும் நீட் எனும் கொலைகாரனைத் தடை செய்ய முடியவில்லை. எனவே நீட் தேர்வையும் – அதை அமல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிசக் கும்பலையும் மாபெரும் களப்போராட்டங்களை கட்டியமைக்காமல் தடைசெய்ய முடியாது. நீட்டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று அனிதாவின் நினைவுநாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்!


காளி

அனிதா நினைவு நாள்: நீட் தேர்வை தடைசெய்! | தோழர் தீரன்

அனிதா நினைவு நாள்: நீட் தேர்வை தடைசெய்! | தோழர் தீரன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

இமயமலையில் உருகிவரும் பனிப்பாறைகள்: பேராபத்தைக் காண மறுக்கும் பாசிச மோடி அரசு!

மாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீவிர மழைப்பொழிவும் பெருவெள்ளமும் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிரமான ஆலங்கட்டி மழையும், அதன்பிறகான மழை வெள்ளமும் ஆப்பிள் விளைச்சலை கடுமையாக பாதித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசம் இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட அதிகமாக 1100 விழுக்காடு கூடுதலான மழைப்பொழிவைப் பெற்றிருக்கிறது. அதேபோல் பஞ்சாபின் 12 மாவட்டங்களில் 1100 விழுக்காடு முதல் 7600 விழுக்காடு வரையில் கூடுதல் மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது. முன்னதாக 2021-இல் உத்தரகாண்ட் மாநிலம் பேரழிவை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக வடமாநிலங்களில் இது போன்ற பேரழிவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதை உலகம் அதிர்ச்சியுற பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு இது குறித்த ஆய்வில் சர்வதேச ஆய்வாளர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதுபோன்ற பேரழிவுகளுக்கும் இமயமலையின் பனிப்பாறைகள் தொடர்ச்சியாக உருகி வருவதற்கும் உள்ள தொடர்பைப் பற்றி சர்வதேச ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்த வண்ணம் உள்ளனர்.


படிக்க: ஜோஷிமத் நகர நிலச்சரிவு: வெறும் இயற்கை பேரிடரா?


இமயமலை மற்றும் இந்துகுஷ் வட்டாரத்தில் 50,000 க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் உள்ளன. அவற்றில் 30 மட்டுமே உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகின் இளம் மலைத்தொடரான இமயமலையின் பனிப்பாறைகள் தொடர்ச்சியாக உருகிக் கொண்டிருப்பதானது பேரபாயம் மிக்கதாக உள்ளது.  புவி வெப்பமடைதலால் பனிப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்கள் நிலைமையை மோசமாக்குகின்றன என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக நிலச்சரிவுகளின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

2009-அம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை 127 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு செயற்கைக்கோள் வெளியிட்ட படங்களை ஆய்வு செய்த சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பனிப்பாறைகள் உருகுவது நிலச்சரிவு அபாயத்தை மட்டும் தோற்றுவிப்பதில்லை. பனிப்பாறை ஏரிகள் (glacial lakes) திடீரென்று ஆபத்தான முறையில் வேகமாக நிரம்புவதால் உடைப்பு ஏற்பட்டு ஆறுகளில் பெருவெள்ளத்தை தோற்றுவித்து பெரும் எண்ணிக்கையிலான மரணங்களை நிகழ்த்துகிறது. இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படுவது தற்போது தொடர் நிகழ்வாகிவிட்டது.

பனிப்பாறைகள் உருகுவது பற்றி இந்திய அரசு நிறுவனங்கள் போதுமான கவனம் செலுத்தவில்லை என்று கடுமையாக ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றனர்.


படிக்க: அபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு !


மூத்த பனிப்பாறை நிபுணரான டாக்டர் டி.பி. டோபல் “நாங்கள் 2009-இல் பனிப்பாறைகளைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு மையத்தைத் தொடங்கினோம். இதை இந்திய பனிப்பாறைகள் தேசிய மையமாக உருவாக்கவும் திட்டமிடப்படிருந்தது. இது நடக்காததால் பனிப்பாறை குறித்த ஆய்வு பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறார்.

அதேபோல் இந்திய அரசின் காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய செயல்திட்டத்தின் கீழ், எட்டு தேசிய பணிகள் உள்ளன. அவற்றில் ஒன்று “இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பைப் பராமரிப்பது”. அதன் நோக்கம் இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பின் பனிப்பாறைகளைப் புரிந்து கொள்வதும், அவற்றின் தற்போதைய  ஆரோக்கியத்தை மதிப்பிடுவதும், தரவுகளை உருவாக்குவதும், புதிய முறைகளைப் பின்பற்றுவதும்” ஆகும்.

ஆனால், பாசிச மோடி அரசோ இமயமலையின் தற்போதைய ஆபத்தான  நிலைமை குறித்து எந்த அக்கறையும் காட்டாமல் இரத்தம் குடிக்கும் ஓநாயைப் போல காவி கார்ப்பரேட் பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக நாடு முழுவதும் மதக்கலவரங்களை உருவாக்கி வருகிறது; அதானி – அம்பானிகளுக்காக சேவை செய்து வருகிறது.

புவி வெப்பமடைதல் எனும் உலகளாவிய பிரச்சினையின் அங்கமே இமயமலை பனிப்பாறைகள் உருகுவதாகும். ஏகாதிபத்தியத்தின் இலாபவெறியானது புவி வெப்பமடைதலை பாய்ச்சல் வேகத்தில் உயர்த்திக் கொண்டிருக்கிறது. இதைக் கேள்வியெழுப்பாமல் சுற்றுச்சூழல் பேரழிவை ஒரு அங்குலம் கூட தடுத்து நிறுத்த முடியாது.


அய்யனார்

வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்! – மதுரையில் சுவரெழுத்து அழிப்பு! ஜனநாயக சக்திகள் கண்டனம்

வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்! –
மதுரையில் சுவரெழுத்து அழிப்பு! ஜனநாயக சக்திகள் கண்டனம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

தினமலரின் பார்ப்பன கொழுப்பு! | தோழர் மருது

தினமலரின் பார்ப்பன கொழுப்பு! | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

தினமலம் என்று சொல்லலாம்! | வழக்குரைஞர் பார்வேந்தன்

தினமலம் என்று சொல்லலாம்! | வழக்குரைஞர் பார்வேந்தன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

தினமலரை செருப்பை கழட்டி அடிக்கணும்.. | தோழர் மருது

தினமலரை செருப்பை கழட்டி அடிக்கணும்..

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

அம்பலப்பட்டுப்போன பாசிச மோடி அரசின் ’ஊழல் ஒழிப்பு’ நாடகம்

ழல் ஒழிப்பு பேசுகிற காவி கும்பலின் யோக்கியதைக்கு கர்நாடகாவின் 40 சதவீத கமிஷன் ஆட்சியே சாட்சி. ஆனாலும், ஊழல் ஒழிப்பு என்பதை தனது கொள்கை என்று பேசி வருகிறது காவி கும்பல்.

ஊழல் ஒழிப்பு என்ற பெயரில், காவி கும்பல் தனது சித்தாந்த மற்றும் அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டுவதற்காக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையைப் பயன்படுத்துகிறது என்பது சமீப காலங்களில் அம்பலமாகியிருக்கிறது. குறிப்பாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்கட்சிகளை ஒழித்துக்கட்டும் வகையில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அமலாக்கத் துறையைக் கொண்டு ரெய்டு நடத்துகிறது பாசிச மோடி அரசு.

தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி, பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு, கேரள மாநிலம் கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் 100 கோடி ரூபாய் மோசடியை ஆதாரமாகக் கொண்டு சி.பி.எம். கட்சியின் எம்.எல்.ஏ.வான மொய்தீனின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு, வருகின்ற சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலையொட்டி சத்தீஸ்கர் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு, டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, ஜார்க்கண்ட அமைச்சர் ராமேஷ்வர் மற்றும் அவரது மகன் ரோஹத் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு, நிலக்கரி ஊழல் தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்ந்த் சோரன் உதவியாளர் வீட்டில் ரெய்டு, பீகாரில் நில மோசடி வழக்கில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி மற்றும் மகள்கள் வீடுகளில் ரெய்டு என எதிர்க்கட்சிகள் மீதான மோடி அரசின் ரெய்டுகளின் பட்டியல் முடிவின்றி தொடர்கிறது.


படிக்க: சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் அம்பலமான மோடி அரசின் மெகா ஊழல்கள்! | தோழர் அமிர்தா | தோழர் புவன்


இந்த ரெய்டிலோ அல்லது இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு ரெய்டுகளிலோ முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் ஏதும் பறிமுதல் செய்யப்பட்டதாக வரலாறில்லை. மாறாக, இந்த ரெய்டுகளை அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நடவடிக்கையாகவே அனைத்துக் கட்சிகளும் கையாண்டன.

அதிலும், மோடி அரசோ, இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்காக எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டுகிற நோக்கத்தில்தான் இந்த ரெய்டுகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த ரெய்டுகளை ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளாகக் காட்டி படித்த மற்றும் ஊழல் வெறுப்பு கொண்ட குட்டி முதலாளித்துவப் பிரிவினரை தனது இந்துத்துவ அரசியலுக்கு அடியாட்படையாக திரட்டிக் கொள்கின்றது, காவி பாசிச கும்பல்.

சாரதா ஊழல் செய்த ஹிமந்த பிஸ்வா சர்மா, பாசன ஊழல் செய்த அஜித் பவார், வியாபம் ஊழல் செய்த சிவராஜ்சிங் சௌகான் உள்ளிட்ட  ஊழல்வாதிகளை தனது கட்சியில் சேர்த்துக் கொண்டு அவர்களை உத்தமர்களாக்கியதுதான் பாசிஸ்டுகள் செய்த ஊழல் ஒழிப்பு. காவி கும்பலின் இத்தகைய  ‘ஊழல் ஒழிப்பு’ நடவடிக்கைகளை முதலாளித்துவ பத்திரிக்கைகளும், ஊடகங்களுமே காரித் துப்புகின்றன.


படிக்க: ஊழல் என்ற கூக்குரல் பா.ஜ.க கும்பலின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு!


ஹிண்டன்பர்க் அறிக்கை, சி.ஏ.ஜி அறிக்கை என பாசிச மோடி அரசுக்கு எதிராக ஆவணங்கள் கிடைத்தாலும் அவற்றைக் கொண்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதை விடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் புரண்டு கொண்டிருக்கின்றன; மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக மோடியை வாய்திறக்கச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருக்கின்றன; வெற்று அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

எனவே, மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. அரசு தொடுத்துள்ள காவி-கார்ப்பரேட் பயங்கரவாதத் திட்டங்களுக்காகவும் நடவடிக்கைகளுக்காகவும், ஊழல் குற்றங்களுக்காகவும் இந்த கும்பலைத் தடைசெய்வது அவசியமானதாகும். அரசு அதிகாரத்தில் காவி பயங்கரவாத கும்பல் ஊடுருவியிருப்பதால், இக்கும்பலைத் தடைசெய்வதற்காக ஒரு மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பது காலத்தின் கட்டாயமாகும்.


அப்பு

காவிரி நீர் விவகாரம்: இந்த அநீதிக்கு விடிவு எப்போது?

31.08.2023

காவிரி நீர் விவகாரம்:
இந்த அநீதிக்கு விடிவு எப்போது?

பத்திரிகை செய்தி

வ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை பெறுவது என்பதே மிகப்பெரிய துயரமான நிகழ்வாக உள்ளது. ஒரு நதியின் கடைமடை பகுதிக்கு அந்நதியின் மீதான முற்றுரிமை உள்ளது என்பது உலக நியதி. இந்த நியதியை கர்நாடக அரசும் ஒன்றிய அரசும் எப்போதும் ஏற்பதில்லை. மாறாக கடைமடை பகுதியான தமிழ்நாட்டை வடிகாலாக மட்டுமே பயன்படுத்தி, வெள்ள நீரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி தமிழ்நாட்டில் சேதமுறச் செய்வதிலேயே குறியாக உள்ளன.

2018-இல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக தமிழ்நாடே ஒருமுகமாய் போர்க் குணத்தோடு போராடியது. அப்படி போராடி பெற்ற மேலாண்மை வாரியமோ தமிழ்நாட்டுக்கு துரோகம் விளைவிக்கிறது. 25 ஆயிரம் கன அடி நீர் இல்லாமல் தமிழ்நாட்டின் நெற்பயிர்களை காப்பாற்ற முடியாது என்ற தமிழ்நாட்டின் வாதம் நிராகரிக்கப்பட்டு, காவிரியில் நான்கு அணைகள் கட்டியுள்ள கர்நாடகத்தின் வாதம் ஏற்கப்பட்டு , தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி  நீர் திறந்து விட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. அந்த 5,000 கன அடி தண்ணீரையும் திறந்து விடக்கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த   இனவெறியர்கள் மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் சென்று இன வெறியைத்தூண்டி போராடி வருகின்றனர்.

ஒரு மாநிலத்துக்கு கொடுக்க வேண்டிய நீரை முறையாக கொடுக்க வேண்டும். நீர் குறைவாக உள்ள போது முறையாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டிய ஒன்றிய அரசு அப்பட்டமாக கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது.


படிக்க: மேக்கேதாட்டு அணை மூலம் காவிரியைத் தடுக்கப் பார்க்கிறது (காவி)ரி மேலாண்மை வாரியம்!


காவிரி நீர் பிரச்சனையில் இன வெறியோடு செயல்படும் பாஜகவை கண்டிக்கத் துப்பில்லாத எடப்பாடி பழனிச்சாமி காங்கிரஸையும் திமுகவையும் கண்டிக்கிறார். கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் ஆட்சி செய்யக்கூடிய தவறைப் பற்றி காங்கிரசின் தலைமை எதுவும் கேள்வி கேட்காது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா  உள்ளிட்ட தேசிய கட்சிகள் அனைத்தும் கர்நாடகத்தில் உள்ள தங்கள் கட்சியின் இனவெறி நிலைப்பாட்டை பற்றி கொஞ்சமும் பேசுவதில்லை. எந்த ஒரு தேசிய கட்சியும் கர்நாடகத்தில் அங்கே உள்ள மக்களிடம் சென்று தமிழ்நாடு தான் காவிரியின் கடைமடை பகுதி, தமிழ்நாட்டுக்கு தான் காவிரி மீதான முழு உரிமையும் உள்ளது என்று கூறுவதில்லை.

இந்த அரசு கட்டமைப்பிற்குள் ஒரு மாநிலத்தின் நீர் உரிமையை ஒருபோதும் பெற முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. நாளைய தினம் வெள்ளிக்கிழமை காவிரி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றங்களுக்கு பல வழக்குகளை போன்று இதுவும் ஒரு வழக்கு மட்டுமே. ஆனால் அது தமிழ்நாட்டுக்கு உயிர் நாடியான ஒரு பிரச்சனை.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என அனைத்து விவகாரங்களிலும் ஒடுக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் வருகின்றன  தமிழ்நாட்டின் உரிமைகள். நம்முடைய தமிழ்நாட்டின் உரிமைகளை மறந்து துறந்து விட்டு தான் ஒன்றிய அரசின் பெருமைகளை தலையில் தூக்கி சுமக்க வேண்டுமா?

தமிழ்நாட்டின் உரிமைகளை ஏற்காத அங்கீகரிக்காத ஒரு ஒன்றிய அரசுடன் இணக்கமாக தமிழ்நாடு ஏன் இனியும் வாழ வேண்டும் என்ற கேள்வி நமக்குள் எழாமலா இருக்கிறது?


படிக்க: மேக்கேதாட்டு: காவியை ஒழிக்காமல் காவிரி வராது!


உன்னுடன் நான் வாழ வேண்டுமென்றால் நீ என்னுடைய ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என்பது மிகச் சாதாரணமான ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தை கூட அங்கீகரிக்காத இந்த மோடி அரசின்,  கர்நாடக அரசின் அநீதிக்கு எதிராக தமிழ்நாடு போராட வேண்டும் என்பதைத் தாண்டி வேறு எந்த விடிவும் நமக்கு இப்போது கண் முன்னே கிடையாது.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வராத வரை தமிழ்நாட்டில் இருந்து எவ்விதமான வரியும் எவ்விதமான பொருளும் ஒன்றிய அரசுக்கும் கர்நாடக மாநிலத்துக்கும் கொடுக்க முடியாது என்ற நிலையை தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு மக்களும் எடுக்க வேண்டும்.

இதுபோன்ற தமிழ்நாட்டின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களே காவிரி நீரைப் பெற்றுத் தரும்; சடங்குத்தனமான போராட்டங்கள் அல்ல என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321

நியோமேக்ஸ் மோசடி! இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாறுவீர்கள் நடுத்தர வர்க்கமே?

நீங்க போடுற பணம் மூன்றிலிருந்து ஐந்து வருசத்துல டபுளாகிரும். மூணு வருசம், அஞ்சு வருசம்னு ஸ்கீம்ஸ் இருக்கு. அதுல மாசமாசம் 12% வட்டி வாங்கிக்கலாம். மாசமாசம் வட்டி வாங்காம குறைந்த வருச ஸ்கீம்ல இரட்டிப்பாவும் வாங்கிக்கலாம். திருச்சி ஏர்போர்ட் பக்கத்துல மொராய்ஸ் சிட்டி நம்ம ப்ராஜக்ட் தான்.

இன்னும் விருதுநகர், தஞ்சாவூர் பக்கத்துல வல்லம் உட்பட பல இடங்களில் நம்ம ப்ராஜக்ட் போட்டிருக்கோம்; இதோ இதுதான் விருதுநகர் ப்ராஜக்டோட வரைபடம்; இதுல நீங்க போடுற பணத்துக்கு தகுந்த மாதிரி பிளாட்ட உங்க பேருக்கு அக்ரீமெண்ட் போட்டுருவோம்; இந்த இடத்துல நாம ஒரு ஷாப்பிங் மால் கட்டப் போறோம். இந்த லே அவுட்ல இந்த இடத்துல ஹாஸ்பிடல் வருது; இங்க “விஸ்டம் வெல்த் இன்டர்நேஷனல் ஸ்கூல்” இருக்கு; கேட்டரிங் காலேஜ் இருக்கு; இன்னும் ரெண்டு, மூணு வருசத்துல இந்த இடத்தோட மதிப்பு பல லட்சங்கள்ல போயிரும்;

அப்போ உங்க பேர்ல இருக்கற பிளாட்ட திருப்பி எங்க கிட்ட குடுத்துட்டு, உங்க பணத்த ரெட்டிப்பா வாங்கிக்கலாம்; அல்லது பிளாட்டையே நீங்க வச்சுக்கலாம்;”

இவையெல்லாம் நியோமேக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட போது அள்ளி வீசப்பட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள். அதில் ஆரம்பக் கட்டத்தில் இணைந்த நடுத்தர வர்க்கத்தினரும் இதே பிரச்சாரத்தை தமது நண்பர்கள் – உறவினர்கள் வட்டாரத்தில் முன்னெடுத்தனர். அடுத்தடுத்த கட்டங்களில் ஆட்களைச் சேர்க்கச் சேர்க்க, குறிப்பிட்ட சதவீத கமிஷனும் இந்த ஏஜெண்ட்டுகளுக்கு அள்ளி வீசப்படுவதால், தன்னையும் அறியாமல் தனது சொந்த சித்தப்பா, பெரியப்பா, மாமன், மச்சான் என அனைவரையும் சில லட்சங்களை இதில் முதலீடு செய்ய வைத்தனர் இந்த ஏஜெண்ட்டுகள்.

இதுவல்லாமல் இவர்களுக்கு தாய்லாந்து டூர், புதிய கார் என இன்னபிற சலுகைகளும் ஏராளம்.


படிக்க: ஆருத்ரா பண மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது! அண்ணாமலையை கைது செய்! | தோழர் மருது


நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தச் சதுரங்க வேட்டையில் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், அரசு மற்றும் பொதுத்துறைகளிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் என பல தரப்பு நடுத்தர மக்களும் சில லட்சங்கள் முதல் கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.

படுத்துக் கிடந்த ரியல் எஸ்டேட் துறையில் அற்புதங்கள் நிகழ்த்தி, பலமடங்கு லாபம் கொட்டுவது போன்ற பிம்பத்தை கட்டியமைத்து, அதனால் பலமடங்கு வட்டி கொடுப்பதாக தனது சதுரங்க வேட்டையைத் தொடர்ந்து நடத்தி வந்தது நியோமேக்ஸ் நிறுவனம்.

Tycoons, எல்பின், UTS, FINE FUTURE, செந்தூர் பைனான்ஸ், பஜாஜ் அல்லையன்ஸ் INSURANCE, ஆருத்ரா போன்ற நிறுவனங்களால் ஏற்கனவே மக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கும் நிலையில், நியோமேக்ஸ் அந்த பித்தலாட்டத்தையே வேறு விதமாக முன்னெடுத்தது. மேற்கண்ட நிறுவனங்களெல்லாம் முதலீடு செய்யும் பணத்திற்கு எந்த உத்திரவாதமும் தராத போது, நியோமேக்ஸ் நிறுவனம் வீட்டுமனையை பணத்திற்கு ஈடாக அக்ரிமென்ட் போட்டுத்தருவதாக நம்ப வைத்தது; ‘பணம் போனாலும் பிளாட் இருக்கே’ என்று நம்பினர் முதலீட்டாளர்கள். ஆனால் இவர்களால் போடப்படும் அக்ரிமென்ட், பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யப்படுவதில்லை. முதலீடு செய்யும் பணமும் அரசு சொல்லும் வரைமுறைகளுக்கு உட்பட்டு பரிவர்த்தனை செய்யப்படுவதில்லை.

முதலீட்டாளர்கள் கொடுத்த பணத்திற்கு வெறும் 20 ரூபாய் பத்திரத்தில் நிலத்தின் சர்வே எண்ணைக் குறிப்பிட்டு உத்திரவாத பத்திரம் அளித்துள்ளனர். அதில் சர்வே எண்ணின் உட்பிரிவு எண் கூட குறிப்பிடப்படவில்லை.

மாதாமாதம் பெரும் தொகையை  வட்டியாக கொடுப்பதால்,  பலரும் தான் முதலீடு செய்த பணத்திற்கு நியோமேக்ஸ் கொடுத்த இந்த அற்ப உத்திரவாதங்களையே பெரிதும் நம்பினர்.

இன்று மாதாமதம் வரும் வட்டியும் வரவில்லை; முதலீடு செய்த லட்சக்கணக்கான பணமும் வரவில்லை. இவர்கள் கொடுத்த பத்திரத்தின் மூலம், முதலீட்டை திரும்ப  கேட்பவர்களின் தலையில்  மதிப்பு குறைந்த இடங்களைத் தான் கட்டப் போகிறார்கள்.


படிக்க: DHFL மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் தனியார்மயம் | சு. விஜயபாஸ்கர்


இந்த நிறுவனம் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும், திருச்சி பகுதி மக்களும் பெருமளவில் முதலீடு செய்துள்ளார்கள். குறிப்பாக திருச்சி பகுதியில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான BHEL -இல் பணிபுரியும் ஊழியர்கள் பெல் ஊழியர்கள் கூட்டுறவு வங்கியில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி இதில் முதலீடு செய்துவிட்டு இப்போது கையைப் பிசைந்துகொண்டு நிற்கின்றனர்.  ஓய்வு பெற்ற BHEL ஊழியர்கள் பலரும் தங்களது PF மற்றும் பணி ஓய்வின்போது கிடைத்த இதர பணப்பலன்கள் என மொத்தமாக பல லட்சங்களை இதில் முதலீடு செய்துள்ளனர். திருச்சி BHEL-இன் முன்னாள், இன்னாள் ஊழியர்கள் மட்டுமே 100 கோடி ரூபாய்களுக்கு மேல் இதில் முதலீடு செய்து ஏமாந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.  இதுபோல இன்னும் பல ஆயிரம் பேரின் சேமிப்பையும் எதிர்காலத்தையும் சூறையாடியிருக்கிறது நியோமேக்ஸ்.

பல மோசடி நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அதிக வட்டி ஆசை காட்டி மக்களை ஏய்த்த பிறகும் இதுபோன்ற ஏமாற்று நிறுவனங்களின் வலையின் நடுத்தர மக்கள் எதனால் விழுகின்றனர் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

பண மதிப்பழிப்பு, வங்கிகள் திவால், தொழில்துறை நசிவு, GST போன்ற பொருளாதாரத் தாக்குதல்களால், நிலவுகின்ற உத்தரவாதமற்ற சூழலில் எதில் முதலீடு செய்வது என நடுத்தர, உயர்நடுத்தர வர்க்க மக்கள் இயல்பாகத் தடுமாறி வருகின்றனர். இவர்களை இலக்கு வைத்து  நன்கு தெரிந்த நண்பர்கள், சொந்தங்கள் மூலமாகவே நம்பிக்கை ஊட்டி பெருமளவில் முதலீடு செய்ய வைத்துள்ளனர் இந்த நியோமேக்ஸ் நிறுவனத்தினர்.

முதலீடு செய்து ஏமாந்தவர்கள் பெரிதாக போராடவில்லை ஏன்?

இன்று இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ள போதும், முதலீட்டாளர்களில் பலர் போட்ட பணம் திரும்ப வர வேண்டுமே என்று அமைதி காக்கின்றனர். இந்த அமைதியையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதிகார வர்க்கத்தோடு இணைந்து மேலும் பல தகிடுதத்தங்களை அரங்கேற்றி வருகிறது நியோமேக்ஸ்.

‘நிறுவனச் சொத்தில் ஐந்து சதவீதத்தை விற்றாலே மொத்த முதலீட்டாளர்களுக்கும் பணத்தை செட்டில் செய்துவிட முடியும்’

‘நீங்கள் முதலீடு செய்த பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் பியூச்சரில் கிடைக்க இருக்கும் இரண்டு மடங்கு முதிர்வு தொகையை இழக்க வேண்டி வரும்’

‘முதலீட்டைத் திரும்பப் பெறுவதாலும், நிறுவனத்தின் மீது புகாரளிப்பதாலும் மேலும் நெருக்கடி தான் முற்றும். கொஞ்ச காலம் பொறுத்து இருந்தால் மீண்டு விடுவோம்’

‘முதலீட்டை இப்போது திரும்பத்தர முடியாது, வட்டி வேண்டுமானால் வாங்கி கொள்ளுங்கள்’

‘அரசியல் கட்சியினருக்கும், அதிகாரிகளுக்கும் சில இடங்களை விட்டு கொடுத்து (அதாவது லஞ்சம் கொடுத்து) பிரச்சனையை விரைவில் சரிக்கட்டி விடுவோம்’

இவையெல்லாம் தனக்கு எதிராக புகார் அளிக்காமல் இருக்க,  முதலீட்டாளர்களுக்கு  நியோமேக்ஸ் நிறுவனம் சொல்லும் சமாதான வார்த்தைகளாகும். ஆருத்ரா உள்ளிட்ட நிதிநிறுவனங்கள் மக்களை ஏமாற்றியபோது அதில் ஏமார்ந்த மக்கள் அந்நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டங்களை முன்னெடுத்தனர். அதுபோன்ற போராட்டங்கள் நிகழாமல் தடுக்கவும் இதுபோன்ற போலி சமாதானங்களைச் சொல்லி எதிர்ப்புணர்வை நீர்த்துப்போகச் செய்து வருகிறது நியோமேக்ஸ்.

மேலும் இதில் பணம் போட்டு ஏமார்ந்தவர்கள் சமூகப் பிரச்சினைகளுக்கு போராடத்துணியாத ‘இருக்கற எடம் தெரியாமல் இருக்கும்’ வகையைச் சேர்ந்தவர்கள். தனது பணத்தை இழந்தாலும் அதற்கெதிராக போராடத் துணியாதவர்கள். இப்படியானவர்களைத் தான் இந்த மோசடி நிறுவனங்கள் இலக்கு வைத்துத் துறத்துகின்றன.

நியோமேக்ஸ் – பாஜக கள்ளக்கூட்டு:

ஊழல், கொள்ளை,  பாலியல் வல்லுறவு, கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் பாஜகவில் இணைந்த பின்னர் குற்ற வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டு புனிதர்களாக்கப்படுவர்.

நியோமேக்ஸ் நிறுவனத்தை சார்ந்த இயக்குனர்கள் பாஜகவின் அண்ணாமலை நடத்தும் ஊழல் எதிர்ப்பு ஸ்பெசல் “என் மண் என் மக்கள்” பாத யாத்திரைக்கு 15 கோடி நன்கொடை அளித்துள்ளனர். இயக்குனர் குழுவில் உள்ள வீரசக்தி ஏற்கனவே பாஜகவில் இணைந்துவிட்டார் என்பதும், நன்கொடை விவகாரம் மூலமும், இந்த மோசடிப் பேர்வழிகளும் புனிதர் பட்டம் வாங்கத் தயாராகி விட்டனர் என்பதை அறிவிக்கிறது. ஆருத்ரா மோசடி நிதி நிறுவனத்துடனான பாஜக-வின் கள்ளக்கூட்டு அம்பலப்பட்டு நாறிப்போன நிலையில், நியோமேக்ஸுடனும் பாஜக கூட்டு வைத்திருப்பது தற்போது அம்பலமாகி விட்டது.

நியோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ப அரசியல் கட்சிகளின் துணையோடும், ஆளும் அதிகார வர்க்கத்தின் துணையோடும்தான்  குறிப்பிட்ட வர்க்கப் பிரிவினரை இலக்கு வைத்து கொள்ளையடிக்க புற்றீசல் போலக் கிளம்பி வருகின்றன.

வெடித்துச் சிதறி மோசடி அம்பலமான பிறகு தான் அந்நிறுவனத்தைப் பற்றி தெரிந்தது போல், அதிகார வர்க்கம் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக நாடகமாடுகிறது. இந்த கள்ளக் கூட்டினால் எப்போதும் பாதிக்கப்படுபவர்கள் மக்கள் தான்.

ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் தனியொரு நிதிநிறுவனம்  மக்கள் பணத்தை முதலீடாக பயன்படுத்த முடியாது, அதிக வட்டி கொடுக்க முடியாது என பல சட்ட வரையறைகள் இருந்தாலும், துணிந்து இது போன்ற நிதி நிறுவனங்கள் வருவதற்கும் மக்களைக் கொள்ளையடிப்பதற்குமான அடிப்படை எங்கு உள்ளது?

000

தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துகின்ற இந்த அரசுக்கட்டமைப்பு; அதற்கு சாதகமான அரசியல் அமைப்புச் சட்டம்; முதலாளிகளோடு கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டு மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்படாத அதிகார வர்க்கம் ஆகியவற்றைக் கொண்ட இந்த இரட்டை ஆட்சி முறையில் தான் இதுபோன்ற மோசடிகளுக்கான அடிப்படை உள்ளது. இது தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் மக்களை கட்டற்ற முறையில் சுரண்டவும், மக்கள் சொத்துகளைக் கொள்ளையடிக்கவும் வழிவகை செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு.

இந்த அடித்தளத்திலிருந்துதான் நியோமேக்ஸ் போன்ற மோசடி நிதி நிறுவனங்கள் உருவாகின்றன. அரசு சார்ந்த EPF, LIC, வங்கிகள் ஆகியவற்றிலேயே மக்கள் போட்ட பணத்தை கார்ப்பரேட்டுகள் சூறையாடும் இன்றைய பாசிசச் சூழலில், இதுபோன்ற மோசடி நிதி நிறுவனங்களை நம்புவது எவ்வளவு பெரிய மடைமை என்பதை நடுத்தர வர்க்கம் உணர வேண்டிய தருணம் இது.

மக்களுக்குக் கடமைப்படாத, கார்ப்பரேட் முதலாளிகளுக்கே சேவையாற்றுகிற இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பைத் தூக்கியெறிந்து, உண்மையான ஜனநாயகத்தை நிறுவுவதற்கான போராட்டத்தின் ஊடாகத்தான், உழைக்காமலேயே செல்வம் சேர்க்க முடியும் என்ற பேராசைக் கருத்திலிருந்து உழைக்கும் மக்களாகிய நம்மை விடுவித்துக்கொள்ளவும், இதுபோன்ற மோசடிகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியும்.  இல்லையேல், நியோமேக்ஸ் மட்டுமல்ல இன்னபிற கார்ப்பரேட் கும்பல்களும் நமது வங்கிச் சேமிப்பை நம் கண் முன்னரே சுருட்டிக்கொண்டு செல்லும். அந்தக் காலம் வெகு தொலைவில் இல்லை.


வாகைசூடி