Tuesday, June 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 123

உளவாளி ரவியின் திமிர் பேச்சை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கின்றது!

23.02.2023

உளவாளி ரவியின் திமிர் பேச்சை மக்கள் அதிகாரம்
வன்மையாக கண்டிக்கின்றது!

பத்திரிகை செய்தி

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீனதயாள் உபாத்தியாயா எழுதிய இரண்டு புத்தகங்களின் தமிழாக்கமான சிந்தனை சிதறல்கள் மற்றும் ஒருங்கிணைந்த மனிதநேயம் ஆகிய புத்தகங்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு என்பது கண்டத்திற்குரியதாக மாறியுள்ளது.

இறையியல், டார்வினிய கோட்பாடு, கார்ல் மார்க்ஸ் கோட்பாடு மற்றும் ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகியவை தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நான்கு மேற்கத்திய சித்தாந்தங்கள் என்று பேசியுள்ளார்.

”காரல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதியுள்ளார். காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது. இன்று புறந்தள்ளப்பட்டுள்ளது என்றும் நம் நாட்டில் சிந்தனையாளர்களே இல்லாதது போல பேராசிரியர்கள் எப்போதும் ஐரோப்பியர்களை உயர்த்தி பேசுகிறார்கள்” என்ற அரிய கருத்தை உதிர்த்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார பெருமந்தம் நெருக்கடியின் போது அனைவரும் கார்ஸ் மார்க்ஸின் மூலதனம் படித்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆளுநர் அவர்கள் அறியாததது ஏனோ?

ஆர்.எஸ்.எஸ் யின் சனாதன சித்தாந்தம் என்பது தான் தர்மம் என பேசுகிறார். பிராமணன் தலையில் பிறந்தான்; சத்திரியன் தோளில் பிறந்தான்; வைஷியன் தொடையில் பிறந்தான்; சூத்திரன் பாதத்தில் பிறந்தான்! – என்ற கேடுகெட்ட சித்தாந்தம் தான் இவர்களின் சனாதன தர்மம். மனிதர்களை உயர்வானவர்கள் தாழ்வானவர்கள் என்ற கேடுகெட்ட சித்தாந்தம் உங்களுடையது? ஆனால் உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பான்மை மக்களின் அரசியல், பொருளாதார, கலாச்சார விடுதலையை சாதிக்கும் சிந்தாந்தம் எங்களுடைய கம்யூனிச சித்தாந்தம். சுவஸ்திக்கும் மார்பில் கை வைத்து வனங்கும் முறை நாஜி ஹிட்லரிடமிருந்து பின் பற்றுவது. ஆர்.எஸ்.எஸ் யின் சாகா முறை என்பதே இத்தாலிய பாசிஸ்ட் முசோலினியிடமிருந்து கற்று கொண்டது. ஹிட்லர், முசோலினியின் பாசிச வாரிசுகள் மேற்கத்திய கலாச்சாரம் குறித்து பேசலாமா?


படிக்க: தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை! வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு ! | மக்கள் அதிகாரம்


25 ஆண்டுகளில் உலகின் பெரும் வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும் என்கிறார். யாருடைய இந்தியா? அம்பானி, அதானியின் இந்தியாவா? ஏழை, நடுத்தர பெரும்பான்மை உழைக்கும் மக்களின் இந்தியாவா என்பதே நம்முடைய கேள்வி? அதானிக்கு நாட்டையே விற்று கொண்டிருக்கும் மோடியின் இந்தியாவை நாடே காறி உமிழ்ந்து கொண்டிருக்கும் போது? முன்னேறுகிறது என பிதற்றுகிறார் ஆளுநர். மோடி தான் நாடாளுமன்றத்தில் பதில் சொல்லவில்லை? ஆளுநர் சொல்லலாமே.

பெண்களுக்கு சம உரிமை, அனைவருக்கும் வீடு, கல்வி, விஞ்ஞான வளர்ச்சி என ரசியாவிலும், சீனாவிலும் சோசலிச மக்கள் படைத்த சாதனைகள் ஏராளம்.

இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து மக்கள் போராடும் போது இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ் ஆங்கிலேயர்களிடம் காலில் விழுந்து கிடந்தது. ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தவர் தான் இவர்களின் நிறுவனர் சாவர்க்கர். இப்படிப்பட்ட கேடுக்கெட்ட வரலாற்றை வைத்து கொண்டு ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் ரவி அவர்கள் இந்தியாவின் வரலாறு குறித்து கூசாமல் பேசுவது தான் நமக்கு வியப்பளிக்கிறது.

நீட் தேர்வு ரத்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட 21 மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் கிடப்பில் போடுவது என தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்கும் ஆர்.எஸ்.எஸ் ரவி, தமிழ்நாடு என்று சொல்ல கூடாது, தமிழகம் என்று சொல்ல வேண்டும் என்று தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிராக திமிர்த்தனமாக பேசி வருகிறார்.

ஆளுநர் தன்னை ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் என்று அறிவித்து கொண்டு பேசலாம். தமிழ்நாட்டின் ஆளுநர் என்று கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பிரச்சார வேலை செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். இது வன்மையான கண்டனத்திற்குரியது என மக்கள் அதிகாரம் தெரிவித்து கொள்கிறது.

தோழர் அமிர்தா,
மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்
9176801656

‘Twitter 2.0’ – Propaganda Machine of Fascists!

We have seen that something which has been the talk of the town on the internet becoming ‘trending’ on Twitter. But today, Twitter itself has become a trending topic of discussion among the masses because of the restructuring measures that has been carried out in the name of ‘Twitter 2.0’ by Elon Musk, the world’s richest man who recently took over as CEO of Twitter.

On last October, Elon Musk took full control of Twitter by buying majority stake in Twitter for $44 billion. The seizure of a company by a corporate capitalist has never been discussed with such significance. But Elon Musk’s taking over of Twitter has grabbed attention internationally.

As soon as he took over, Musk posted on his Twitter page, “The bird is freed”. He also declared that he wanted to create a common digital platform for future generations; and that he had purchased Twitter only to assist humankind and not for earning money.

But, Elon Musk is fundamentally known as an extreme right-winger; he is an anti-democratic, who censures even the parties that advance reformist policies as ‘left-wing danger’; white racist; an ardent supporter of the Republican and fascist Trump. For these reasons, his seizure of Twitter is viewed as a political move rather than just a business expansion measure; Moreover, even the liberal democrats around the world see this event as dangerous and as a threat to the freedom of expression.

The reason behind restructuring Twitter

After Elon Musk took over as the CEO of Twitter, thousands of employees, including those who served at the company’s top post, were laid off. The entire weekdays (7 days) were made into working days and the working hours were changed to 12 hours. It was announced that no questions should be asked about salaries, overtime, job guarantees, and those who do not want to abide by the new rules can resign within 36 hours. These actions sent shockwaves among the employees. So far, more than 1,000 Twitter employees have quit their jobs following the announcement.

Such actions by Elon Musk have been criticised worldwide as it will ruin Twitter, which is known as a significant social media. The hashtag #riptwitter was trended by the Twitter users.


Also Read: Adani: An enemy of the World Proletariat!


Another move of Elon Musk was the announcement that the users will now have to pay a fee of $8 for the ‘blue tick’ sign, which has so far been given to the official Twitter accounts of celebrities; and all those who pay that amount will be given blue tick recognition. As soon as the subscription service was launched, Twitter was flooded with fake accounts. Therefore, the service has been temporarily suspended.

It is commonly understood that these stupid actions taken by Elon Musk are for profiting. There is no denying this. From another perspective, if one learns about the working conditions of the companies owned by Elon Musk, it can be understood that the move is also a reorganising measure by Elon Musk to achieve his political aim.

Just as Elon Musk being a white supremacist, so many of those who hold high positions in his companies are also white supremacists. Several cases have been filed against Musk’s companies and factories for discriminating blacks. Many of those who previously worked in Musk’s companies and resigned because of ethnic and racial discrimination have also written articles exposing the working environment. Judging from this, it appears that Elon Musk’s disproportionate firing may be part of bringing Twitter under the influence of white supremacists.

Whose ‘Freedom of Speech’ is Musk advocating?

On November 18, Musk announced a new policy entitled “freedom of speech, but not freedom of reach”. According to this policy, tweets that spread hatred will be removed from Twitter and Twitter does not want the revenue generated from such posts, Musk announced.

While it was fascinating to hear, Musk’s subsequent actions have called into question, the policy he announced and exposed for whose freedom of speech Musk is advocating for. One of the most important decision was the re-activation of Donald Trump’s Twitter account, which had been banned.

Following Trump’s defeat in the 2021 US presidential election, the White House was attacked by his supporters. Trump’s account was banned by the then Twitter management as he called for a coup d’état through his posts. Today, Trump has got ‘freedom of speech’.


Also Read: Thriving Fascists: Betrayal of ‘Socialists’!


Like Trump, Musk has now reactivated a number of Twitter accounts that have been banned due to violence and hate speech. Notable among them are the Twitter accounts of Babylon Bee – a satirical website that spreads Christian fanaticism, Canadian psychologist Jordan Peterson, who made derogatory remarks about the transgender people, American singer Kanye West, who has been criticised for his anti-Semitic speech, and Andrew Tate, a former British boxer who has made derogatory remarks on women.

The Centre for Countering Digital Hate, an organization which reviewed Twitter’s operations for over a week since Musk’s acquisition, said there has been a steady rise in the number of hate mongers on Twitter.

On the other hand, media accounts that raise their voices against fascist-dictatorial States are being blocked. Recently, a Twitter media account operating in Palestine against Israeli occupations has been suspended.

Fascists celebrating Elon Musk!

Twitter has about 40 crore (396.5 million) users worldwide. While this is less than other social media platforms, Twitter is the main medium for political commentary. Sportspersons, actors, politicians and intellectuals are the major users of Twitter. Twitter has a facility called ‘Trending’, which popularly promotes ideas that are discussed by many on the internet.

Twitter has been used to a certain extent by democratic-minded petty bourgeois forces to expose the reactionaries and to comment against the oppression of fascist-dictatorial States. At the same time, Twitter was more proactive than other social media platforms in taking action against those who post hate speeches and posts inciting violence. It is for these reasons that right-wing reactionaries around the world have attacked Twitter; but today, they are all rejoicing over Elon Musk’s takeover of Twitter.

Following Musk’s acquisition of Twitter, Trump said, “I am very happy that Twitter is now in sane hands, and will no longer be run by Radical Left Lunatics and Maniacs that truly hate our country”. Twitter 2.0 has been welcomed not only by the fascists of the West, but also by the fascist gang of our country, including Vivek Ranjan Agnihotri (one of the Goebbels of the Sangh Parivar) and Kangana Ranaut.

We do not have to try hard to understand the reasons and causes of this. It’s very easy. With white supremacist and conservative Elon Musk taking over Twitter, fascists of all colours are thrilled that they have now found a propaganda machine to spread their ideas seamlessly.

Preparations for a fascist rule

On last May, Musk said, “I can no longer support the Democrats and will vote for the Republicans (i.e., in the next election)”. Within a few weeks of Elon Musk’s taking over of Twitter, Trump has announced that he will be contesting in the next presidential election. Let’s understand without saying that the US election campaign has begun.

Adani’s conspiratorial takeover of NDTV and Elon Musk’s takeover of Twitter are of the same nature. The fascists want to conceptualise the people in their favour by turning the media into their mouthpiece.

Today, the imperialist world order is mired in an unsolvable political-economic crisis. The ruling classes were pushed to the extent that they can no longer be able to carry out their exploitation under the disguise of democracy. Therefore, one of the most reactionary sections of the ruling classes is nurturing fascist groups; they are also trying to bring fascist fanatics into power. Elon Musk is a notable corporate capitalist belonging to such a section of the ruling class.

Mathi

ஐம்பது நாட்களாக தொடரும் ஓசூர் – உத்தனப்பள்ளி விவசாயிகள் போராட்டம்!

அரசின் நிலப்பறிப்புக்கெதிராக 50 நாட்களாக தொடரும்
ஓசூர் – உத்தனப்பள்ளி விவசாயிகள் போராட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஊராட்சி மன்றங்கள், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் உள்ளிட்ட சில பகுதிகளில் 3034 ஏக்கரில் சிப்காட் – V அமைப்பதற்கான அறிவிப்பை தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த ஆண்டு ஏப்ரலில் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

சிப்காட் – V அமைக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலத்தில் GMR என்ற பன்னாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் 2000 ஏக்கர் உள்ளது. அதன் அருகிலேயே மீதமுள்ள 1000 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் உள்ளது. இந்நிலமானது ஓசூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்டது. முப்போகம் விளையும் இந்நிலங்களை  கையகப்படுத்துவதற்கு நேரடியாக அரசு முயற்சி செய்து வருகிறது.

GMR நிறுவனம் வசம் உள்ள 2000 ஏக்கரும் ஏற்கனவே இப்பகுதி விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியதுதான். மொத்தமாக வாங்கிய 2500 ஏக்கரில் 500 ஏக்கரை டாடா நிறுவனத்துக்கு விற்று GMR நிறுவனம் கொள்ளை லாபம் அடித்துள்ளதாகவும். அவ்வாறு விற்கப்பட்ட நிலங்கள் பயன்பாடு இல்லாமல் கிடப்பில் கிடப்பதாகவும், அந்நிலங்களை வேளாண்மைப் பயன்பாட்டுக்கு மீட்டுத் தர வேண்டும் என்பதும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு கோரிக்கையாக உள்ளது.

கடந்த ஆண்டு நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசின் அறிவிப்பு வந்தவுடன் அதைக் கண்டித்து அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வந்த நிலையில்,  இப்பகுதியைச் சார்ந்த விவசாயிகள் உத்தனப்பள்ளியில் ஜனவரி 5 ம் தேதி முதல் 50 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


படிக்க: அழுகி நாறுது முதலாளித்துவம்! பிரிட்டன் இன்னொரு சாட்சி! | புஜதொமு


விவசாயிகள் கொடுக்க மறுக்கும் 1000 ஏக்கர் நிலப்பகுதி என்பது முப்போகம் விளையக்கூடிய செழிப்பான பகுதியாகும்.  நேரடியாக 800 குடும்பங்களுக்கு மேல் இப்பகுதியில் விவசாயம் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியைச் சுற்றி 20,000 மக்கள் வசித்து வருகின்றனர். 10,000 தென்னை மரங்கள், மாமரங்கள், இதர பழவகை மரங்கள் உள்ளன. 15 க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கான நீர்வழித்தடங்கள், ஏற்றுமதிக்கான பூக்கள், காய்கறிகள் விளைவிக்கும் 50 பசுமைக் குடில்கள், 25 கோழிப்பண்ணைகள், 500 க்கும் மேற்பட்ட கிணறுகள், ஆழ்துறை கிணறுகள் உள்ளன.

நெல், சிறுதானியங்கள், பீன்ஸ், கேரட், தக்காளி, முட்டைக்கோஸ் மற்றும் கொய் மலர்கள் விளைவிக்கப்படுகின்றன. தென்னிந்தியா முழுவதும் இங்கு விளையும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

GMR ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் உத்தனப்பள்ளி, நாகமங்கலத்தைச் சுற்றியுள்ள 2500 ஏக்கர் வரையிலான நிலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக(SEZ) 15 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகளிடம் இருந்து குறைவான விலையில் பறிக்கப்பட்டவையாகும். அப்போதைக்கு விவசாயிகளுக்கு இருந்த பொருளாதார நெருக்கடி, வறட்சியின் காரணமாக விற்றுள்ளனர்.

ஏற்கனவே நான்கு சிப்காட்கள் (சிப்காட் I, II, III, IV) அமைப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை எந்தவிதமான பயன்பாட்டுக்கும் கொண்டுவராமல் அரசின் சிப்காட் நிறுவனமே பயன்பாடு இல்லாமல் தன்வசம் வைத்துள்ளது. மேலும் தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டங்களுக்கு இடையில் பேவநத்தம் பகுதியில் 2600 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் உள்ளது. அப்படி இருக்கும்போது முப்போகம் விளையும் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள 1000 ஏக்கர் பட்டா நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு முயற்சிப்பதை விவசாயிகள் கடுமையாக எதிர்க்கின்றனர்.


படிக்க: சிவரக்கோட்டையை சிவப்பாக்கு ! சிப்காட்டை விரட்டியடி !


முப்போகம் விளையும் இந்நிலத்தையும் விட்டுவிட்டால் அகதிகளாகத்தான்  செல்ல நேரிடும் என்று தங்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். தொழில் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு அரசாங்கமே ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக  குற்றம் சாட்டுகின்றனர்.

இதில் இன்னொரு துயரம் என்னவெனில் கோயம்புத்தூர் – பெங்களூரு அதிவிரைவுச் சாலைக்காகவும் இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலத்தை இழந்துள்ளனர். சந்தை விலையை விட நூறு மடங்கு குறைவான நட்ட ஈடு மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மற்றொரு பக்கம் அரசு அதிகாரிகளோ போராடும் விவசாயிகளிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறிக்கொண்டே நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இன்னொரு பக்கம் இப்பகுதியின் (வேப்பனப்பள்ளி தொகுதி) அதிமுக எம்.எல்.ஏ வான கே.பி.முனுசாமி 50 நாட்களாக தொடர்போராட்டம் நடந்து கொண்டிருக்கிற நிலையிலும்  இதுவரை மக்கள் போராட்டத்தைப் பற்றி என்ன ஏது என்று கூட கேட்கவில்லை, நேரில் வந்து பார்க்கவில்லை என்று விவசாயிகள்  கூறினர். சட்டமன்றத்தில் எங்களது வாழ்வாதாரப் பிரச்சினையை முன்வைத்துப் பேசாமல் ரேசன் கடையில் சர்க்கரைக்கு பாக்கெட் போட்டுத் தருவதைப் பற்றி கே.பி.முனுசாமி பேசிக் கொண்டிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். எங்கள் தொகுதி எம்.எல்.ஏ வைக் காணவில்லை என்று போஸ்டர் அடிக்கப் போகிறோம் என்று உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு விவசாயிகள் போராட்டங்கள் ஏற்படுத்திய  நிர்ப்பந்தத்தில் இருந்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலுக்கட்டாயமாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று அறிவித்தார். மேலும் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக வின் ஒசூர் தொகுதி எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷ் உறுதி கொடுத்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.  ஆனால் இது போன்ற வாக்குறுதிகளை நம்புவதற்கு விவசாயிகள் தயாரில்லை. கடந்த கால அனுபவங்களில் இருந்து விழிப்புணர்வோடு இருக்கின்றனர்.


படிக்க: பயிர்கள் விளைந்தாலும் அழிந்தாலும் விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசு!


பணத்தை வைத்துக் கொண்டு எத்தனை நாள் சாப்பிட முடியும்? நிலம் இருந்தால்  விவசாயம் செய்து பல தலைமுறை வாழ முடியும் என்று யதார்த்தமாக கேட்கின்றனர் விவசாயிகள்.

காவிரி டெல்டாவில் மீத்தேன்,ஹைட்ரோகார்பன் திட்டங்கள், எட்டுவழிச்சாலை, திருவண்ணாமலை பாலியப்பட்டு பகுதியில் அமையவுள்ள சிப்காட், பரந்தூர் விமானநிலையம், ஆகியவற்றிற்காக அரசு கையகப்படுத்த துடிக்கும் அனைத்தும் செழிப்பான வேளாண் நிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு லட்சம் கோடி (1 டிரில்லியன்) பொருளாதாரமாக தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மாற்றுவதே எங்கள் லட்சியம் என்று மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைத்த சில மாதங்களில் அறிவித்தார். இதனுடைய ஒரு பகுதியாகத்தான் சிப்காட் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அரசின் செயல்பாடுகளை பார்க்க வேண்டியுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும் கொள்ளையடிக்கவே இந்த லட்சியங்கள் பயன்படுகின்றன என்பதே உண்மை.

எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் தனியார்மயக் கொள்கைப்படிதான் ஆட்சி செய்வார்கள். கார்ப்பரேட் முதலாளிகளின் நலனில் இருந்தே செயல்பட முடியும், அது விவசாயிகளுக்கு எதிராகத்தான் முடியும் என்பதற்கான உதாரணமாகத்தான் திமுக அரசின் செயல்பாடுகளும் உள்ளன.

பல்லாண்டுகளாக வியர்வை சிந்தி நிலத்தைப் பண்படுத்தி விளைநிலமாக மாற்றி வைத்திருக்கிறார்கள் விவசாயிகள். நிலப்பறிப்பு நடந்தால் 20,000 பேரின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு விடும். எக்காரணத்தைக் கொண்டும், உயிரே போனாலும் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி பகுதி விவசாயிகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு போர்க்குணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

சுயசார்போடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் விவசாயிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்து கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதுதான் வளர்ச்சி என்று அரசு சொல்கிறதென்றால், 75 ஆண்டுகால சுதந்திரம் என்பதற்கு என்ன பொருள்? இது யாருக்கான சுதந்திரம்?

தொடர்ச்சியான, இடைவிடாத போராட்டங்களின் மூலமாகவே மக்கள் தங்கள் உரிமைகளை மீட்டுக் கொள்ள முடியும், மீட்டுக் கொள்கிறார்கள் என்பதே கண்கூடான உண்மை. டெல்லி விவசாயிகள் போராட்டங்கள் உட்பட இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. ஆகையால் போராடும் விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவளிப்பது உணவு உண்ணும் அனைவரின் கடமை.

தோழர். பரசுராமன்,
மாவட்டச் செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்,
97880 11784

Thriving Fascists: Betrayal of ‘Socialists’!

In the past month or two, we can observe the trend that the fascist forces are gaining strength in the elections held in the USA, Italy, Israel, France, Sweden and Brazil. This trend is terrifying not only to the working class of these countries but also an issue of concern at the international level.

We know that the fascist forces are growing rampantly as a result of crises caused by imperialism. At the same time, the ruling class parties with the ‘democratic’, ‘socialist’ masks were responsible for the gaining of support to the fascist forces among the masses. We can observe this in every country mentioned above!

Italy: Mussolini’s heirs in power!

In October 1922, fascist Mussolini came to power in Italy. Exactly, hundred years later, his heirs have come to power. The results of the general elections were declared on October 2022. The coalition led by Brothers of Italy (Fratelli dItalia, FDI) had won the elections with 46 percent vote share. The party’s President Giorgia Meloni has become the Prime Minister of Italy.

FDI, which got only 4 percent votes in 2018, has now got 26 percent votes. The infiltration of neo-Nazi fascist groups in the State machinery and the society is the reason for their rapid growth. Moreover, Meloni is from the youth wing of Movimento Sociale Italiano (MSI), a direct descendant of Mussolini’s Fascist Party.


Also Read: Har Ghar Tiranga: The patriotic makeover of the fascists!


MSI is full of violent fascists. This party has close ties with neo-Nazi groups such as Casapound.

This fascist mob seized power by utilizing the economic crises which lasted for a long time in Italy, and the anti-incumbency against the ruling party. They hid the truth that the pro-corporate economic policies of the government were responsible for the country’s economic crises, and created and propagated a mirage that the immigrants – refugees were responsible for the crises. The party is maintaining the fascist motto ‘God – Family – Fatherland’, which was used during the times of Mussolini.

The tormenting thing is that a part of the Italian proletariat has fallen prey to the vicious campaign of the fascists. The failure of pseudo-communist parties like Rifondazione Comunista in propagating the class politics among the workers, and indulging in treachery by forming alliances with the ruling class parties form the basis for the growth in sphere of influence of the fascists.

France, Sweden: Emergence of neo-Fascists

Similar to that of France, the influence of the fascist mobs is on the rise in France and Sweden too. Though these mobs failed to capture power in the recently held parliamentary elections, they had increased their sphere of influence among the people. The election results also reflect this.

Sweden Democrats party was established by neo-Nazis. They propagate anti-Semitism to gain foothold. In France, National Rally party led by Marine Le Pen is a fascist party. Its base among the people is on the rise. It is harvesting the anti-Muslim mentality which emerged among the people as a result of 2015 Paris attacks by the ISIS terrorists.

Projecting the immigrants as the reason for the prevailing unemployment is the general tactics employed by the fascists worldwide. Sweden Democrats and France’s National Rally use this tactic well. When a black member of the lower house was speaking about the dangers faced by the migrants, an MP belonging to the fascist far-right shouted “Go back to Africa”. The actions of these fascist mobs indicate us that these hate speeches against the immigrants could soon turn into violent attacks.

Israel: Zionist Fascism!

In the recently held Israeli legislative elections, Benjamin Netanyahu again became the Prime Minister by forging an alliance with the Zionist – Fascist party “Religious Zionism”. Alliance with the fascists will intensify the attack on the Palestinians by the Zionists.

Netanyahu himself is a Jewish fanatic. He retained power for 12 years continuously by using Jewish fanaticism. Bennett and Lapid, who captured power in 2021 also Jewish fanatics.

The Bennett mob, which seized power by forming a potential coalition of colourful arrays with the pseudo-communists, United Arab List and far-right parties, did not last long. The lost Netanyahu indulged in intense Jewish fanatical campaigning. He campaigned against Bennett government’s approval on a plan to employ Palestinian workers. As a result, Knesset (Israeli parliament) coalition whip Idit Silman accused Bennett’s government of “damaging Israel’s Jewish character” and left the coalition government.


Also Read: Saffron Fascism oppressing the Minorities!


No one voted against the dissolution motion in the Knesset. Even the parties in the ruling coalition were in favour of dissolving the government, as they can’t tackle the discontent of the people.

All the regime changes that took place in Israel were expressions of dogfights among the Jewish fanatics. Jewish fanaticism against the Palestinians is averting the people from the real issues like degrading living standards and increasing inequality. This has become a trend.

The fascists, who have now joined hands with Netanyahu, are trying to take over the power of the judiciary by reducing and concentrating power in the hands of the lawmakers by using parliamentary democracy as a means to bring about fascist autocracy.

America: Fascism spreading like raging fire!

Trump-led white racist fascist mob in the United States is waiting like a bloodthirsty wolf in order to seize power once again. Although the Biden-led Democratic Party won the recently held Senate election, the Trump-led Republican Party retained 20 of the 21 seats it had already held. It won more seats than the Democratic Party in the elections to the House of Representatives.

As a result of this, Trump announced that he will be running for the 2024 presidential elections. The democratic tradition followed in the United States is to hold an internal election and announce the presidential candidate. But, Trump has announced himself as the presidential candidate, ahead of the internal election, in order to reap the support he has developed among the people. He has been inducing jingoism and campaigning about his decision to run for president; he said “America’s comeback starts right now”.

Various white supremacist outfits like Proud boys, Ku Klux Klan, Neo-Confederate, Neo-Nazi, Racist Skinhead, Christian Identity are unanimously supporting Trump.

The social media campaigning of the pro-Trump white supremacist fascist mob has increased drastically since the attempted coup in the Capitol in Washington on January 6, 2021. As of August 2022, Meta has announced that it has detected and removed 750 social media accounts, pages and groups that spread fascistic ideas on Facebook and Instagram. But in reality, the activities of fascists cannot be controlled by only imposing restrictions on social media.

Brazil: Lula’s victory is only temporary!

Fascist Bolsonaro’s defeat and Lula’s victory in Brazil’s recently held presidential election is being hailed by pseudo-communists around the world as a significant victory.

However, Bolsonaro received 49.1 percent of the votes, even after his anti-people actions such as negligence in handling the corona pandemic, which has resulted in the deaths of seven lakh people, burning much of the Amazon forests and evicting tribals, and reducing welfare spending.


Also Read: The Working People pushed towards Catastrophe by the Fascist Modi Regime!


Though Lula won the presidential election, Bolsonaro’s party has got the majority in the parliamentary and gubernatorial elections (elections for the post of Governor). In order to regain power, the Bolsonaro clique may use it to block Lula’s election promises from being delivered and cause disaffection with the ruling coalition.

Bolsonaro, who propagates evangelical Christian fanaticism, has a huge support among the evangelical denominations. So, in order to gain the support of the evangelical Christians during the election campaigns, Lula spoke in support of their religious doctrines. This is the true face of the so called ‘leftist’ Lula.

The ruling coalition parties that have joined hands to oppose Bolsonaro are also unprincipled survivalist parties. It is more likely that these political parties would leave the alliance any time.

In addition, there is a possibility that the violent evangelical Christian fanatics, at the instigation of the Bolsonaro mob, may engage in riots against minorities. Following Brazil’s election result, evangelical Christian fanatics called for a military coup and violent upsurge on social media. They indulged in anti-Communist pro-dictatorship campaigns with slogans such as “We are not thugs; We are Brazilians fighting for your freedom”, “Military intervention or communism!”, “Nothing changes in this country without military intervention!” and so on. Therefore, Lula’s success is similar to a bubble!

Let’s tear off fascists’ masks!

Fascist mobs are seizing power in many countries around the world. Whether it is the extreme right-wing reactionary cliques or a section of the ruling class under the guise of socialists, democrats and communists, they have made the recolonizational policies of privatization–liberalization–globalization as their policy.

But with the aggressive implementation of the recolonizational policies, the livelihoods of the people are being further deteriorated. Concealing that the pro-corporate policies are responsible for the deprivation of the people’s livelihoods, far-right fascist cliques are seeking to return to power again by inducing racism, jingoism, religious and ethnic hatred.

The mobs guised as protectors of democracy are implementing these recolonizational policies. But they pretend to be opposing them. Moreover, they are submerged in corruption. It is this degeneration and treachery that forms the basis for the rise and capturing of power by the fascists. Let our fight against fascism begin with tearing off the masks of these opportunistic parties!

Ameer

கோவை சட்டக்கல்லூரி: நிர்வாகத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம்!

கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர் மீது பொய் வழக்கு!
அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து மாணவர்கள் போராட்டம்!

கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எல்.எல்.எம் படிக்கும் மாணவி ஹரிதா அதே கல்லூரியில் கடந்த மே மாதம் எல்.எல்.பி படிப்பை முடித்தார். எல்.எல்.பி முடித்ததற்கான மாற்றுச் சான்றிதழைக் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். கல்லூரி நிர்வாகம் மாணவியின் மாற்றுச் சான்றிதழை தொலைத்துவிட்டு “மாற்றுச் சான்றிதழ் எங்களிடம் இல்லை உங்களிடம்தான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறது.

ஹரிதாவின் கணவர் சேக் முகமது இதே கல்லூரியில் எல்.எல்.பி படித்து வருகிறார். அவர் தன் மனைவியின் சான்றிதழை நிர்வாகத்திடம் கேட்டதற்கு அவர் மீதும் அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை வெறி தாக்குதல் நடத்துதல் (இ.பி.கோ பிரிவு 353, 506(1), 109) உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். அதுமட்டுமில்லாமல் ஷேக் முகமது, ஹரிதா தம்பதியைக் கல்லூரி முதல்வர் மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளது.

தங்கள்மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகக் கூறும் இவர்கள் சி.சி.டி.வி ஆதாரங்களைக் கேட்டதற்கு சி.சி.டி.வி செயல்படவில்லை எனக் கல்லூரி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. ஏற்கனவே ஷேக் முகமது இக்கல்லூரியின் மீது பல ஆர்.டி.ஐ-களை பதிவு செய்துள்ளார்.


படிக்க: கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!


ஷேக்-ஹரிதா ஆகிய இருவரையும் தனிப்பட்ட முறையில் பலி வாங்கும் நோக்கத்தோடு கல்லூரி நிர்வாகம் அவர்கள் மீது அராஜக போக்கைச் செயல்படுத்தி வருகிறது என்று குற்றம்சாட்டி இக்கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி 21.02.2023 அன்று மதியம் 2 மணியிலிருந்து விடிய விடிய நான்கு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர் மீது போட்ட பொய் வழக்கைத் திரும்பப் பெறுதல், இரண்டாம் ஆண்டு எல்.எல்.பி படிக்கும் தரணிஷ் உட்பட மூன்று பேரின் இடைநீக்கம் ரத்து செய்ய வேண்டும், மாணவர்கள் மீது குற்றசாட்டு வந்தால் விசாரணைக் குழுவில் கூற வேண்டும், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் மீது பிற்காலத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் கல்லூரி நிர்வாகம் எடுக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கோவை டி.எஸ்.பி-யுடன் மாணவர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை.

இரவு நடந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை மூடிவிட்டது கல்லூரி நிர்வாகம். கோவை சட்டக்கல்லூரி நிர்வாகத்தில் மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்தும், போராடும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டின் அனைத்துக்கல்லூரி மாணவர்களும் குரல் கொடுக்கவேண்டியது அவசியம்.

உலக தாய் மொழி தினம் – இந்தி திணிப்பை எதிர்ப்போம்! | தோழர் செல்வம்

பிப்ரவரி 21 என்பது உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ-ஆல் அறிவிக்கப்பட்ட நாள். பாகிஸ்தானும் வங்கதேச மக்களும் ஒன்றாக இருந்தபோது உருது மொழி ஆதிக்கம் பாகிஸ்தானால் திணிக்கப்படுகிறது. மொழி திணிப்புக்கு எதிராக போராடிய வங்கதேச மக்களை பாகிஸ்தான் அரசு சுட்டுக் கொள்கிறது. அதைப் போற்றும் விதமாகத்தான் உலக தாய்மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்களின் எழுச்சி தான் இந்தியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை கற்போம்! | Communist Manifesto | தோழர் ஆ.கா.சிவா

பிப்ரவரி 21 இன்றைக்கு ஒரு மகத்தான நாள். வரலாற்றில் ஏறக்குறைய 175 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (Communist Manifesto) மார்சிய ஆசான்களால் வெளியிடப்பட்டது. தொழிலாளி வர்க்கத்திற்கும் ஏனைய உழைக்கும் மக்களுக்கும் விடுதலைக்கான ஒரு கலங்கரை விளக்கம்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.

மேலும்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஏழை மாணவர்களை அச்சுறுத்தும் ஐ.ஐ.டி தொடர் மரணங்கள்!

ந்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT)-களில் தொடரும் சாதியப் பாகுபாடு, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் பார்ப்பனிய திமீரை அடக்காமல் இப்பிரச்சினை தீராது.

சாதியை நேராக சொல்லி தீட்டித்தான் ஒடுக்க வேண்டும் என்பதல்ல. உயர்சாதியினரின் அனுகுமுறை, பழக்கவழக்கம், அன்றாட நடவடிக்கை இவைகளே தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மாணவ / மாணவிகளை மன உளச்சலுக்கு ஆளாக்கும்.

தான் ஏதோ ஒரு வகையில் தனிமைப்படுத்தப்படுகிறோம் ஒதுக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொண்டு இப்படி வாழ்வதற்கு தற்கொலையே செய்துகொள்ளலலாம் என முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டவர்கள்தான் இங்கு அதிகம். இப்படி பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினரை தவிர யாரும் படிக்கமுடியாத, படிக்கக் கூடாத இடமாக இந்த தொழில்நுட்ப கழகங்கள் திகழ்ந்து வருகின்றன. இவற்றையெல்லாம் பேசாமல் வெறும் மாணவர்களின் இறப்பை மட்டும் பேசி கடந்துபோவதென்பது நமக்கு எந்த ஒரு இறுதி முடிவையும் தராது.

கடந்த 2014 முதல் 2021 வரை ஐஐடிகள், ஐஐஎம்கள், மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் பிற மத்திய நிதியுதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இப்படி தற்கொலை செய்து கொண்ட 122 மாணவர்களில் 24 பேர் தாழ்த்தப்பட்ட பட்டியல் வகுப்பினர். 41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். 3 பேர் பட்டியல் பழங்குடியின மாணவர்கள். மேலும் 10-க்கு மேற்ப்பட்டவர்கள் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள். இப்படி ஒட்டுமொத்த சமுதாயத்தில் ஒரு பாதி பிரிவினரையே கொன்று விட்டு அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு மேலும் பல கொலைகளை அரங்கேற்றி கொண்டுறிக்கிறது பார்ப்பன கும்பல். அந்த வரிசையில் தற்போது ஐ.ஐ.டி.களில் அடுத்தடுத்த தற்கொலைகள் தொடர்ச்சியாக நிகழந்த வண்ணம் உள்ளது.

படிக்க : டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

குறிப்பாக ஒரிரு நாட்களுக்கு முன்பு மும்பை ஐஐடி-யில் பி.டெக் படித்துவந்த தர்ஷன் சோலங்கி(18) என்ற மாணவர், தான் தங்கியிருந்த விடுதியின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பட்டியலின மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஐஐடி-யில் சேர்ந்து படிக்க தொடங்கியிருக்கிறார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தற்கொலை பற்றிய எந்த கடிதமும் எழுதி வைத்திருக்கவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் போலீசு, இத்தற்கொலையை விபத்து மரணம் என்று வழக்கு பதிவுசெய்தன.

ஆனால் ஐஐடி-யில் படிக்கும் சக மாணவர்கள் இங்கு சாதியப் பாகுபாடு அதிகமாக உள்ளது. அந்த மன உளைச்சலின் காரணமாகத் தான் தர்ஷன் தற்கொலை செய்துகொண்டான் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அவனது குடும்பத்தாரிடம் சில நாட்களுக்கு முன்பே விடுதியில் நடக்ககூடிய சாதியப் பாகுபாட்டை கூறி கவலைப்பட்டுள்ளார். இந்நிலையில்தான் தற்போது தற்கொலையும் செய்துகொண்டார் என்பது வெளிப்படையாகவே நமக்கு தெரிகிறது.

இது தொடர்பாக ஐஐடி-யில் செயல்படும் அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டம் வெளியிட்ட அறிக்கையில், “இது ஒரு தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. ஒரு கல்வி நிறுவனப் படுகொலை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் புகார் கொடுத்திருந்த போதிலும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மாணவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை நிர்வாகம் ஏற்படுத்தவில்லை. இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் இவர்கள் தகுதியற்றவர்கள் என்று கூறி முதலாம் ஆண்டு மாணவர்களை மிகவும் துன்புறுத்துகின்றனர். கல்வி நிறுவன வளாகத்தில் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் பிரதிநிதித்துவம் மற்றும் கவுன்சிலர்கள் இல்லாததும் இதற்கு ஒரு காரணம். பட்டியலின மாணவர்கள் கல்லூரி வளாகங்களிலேயே பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற உண்மையை மறைக்க முடியாது” என்று அதில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அதற்கு அடுத்தப்படியாக ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.ஐ.டி) மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

படிக்க : ஐஐடி பாம்பே: இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கு திடீர் ரத்து!

பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவி 13.02.2023 அன்று தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தது மாணவர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் மாணவி மரணம் குறித்து சக மாணவர்களே இது தற்கொலை அல்ல. அந்த மாணவி அவ்வாறு முடிவெடுக்க வாய்ப்புகள் இல்லை என பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கும் நிலையில் போலீசு பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தை உரியமுறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இப்படி தற்கொலைகள் நீண்டு வந்த நிலையில் நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அமைந்தது சென்னை (ஐஐடி) மாணவர்கள் இருவரின் தற்கொலை முயற்சி மற்றும் இறப்பு. மெட்ராஸ்(ஐஐடி) வளாகத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்துததும் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

படிப்பில் சிறந்து விளங்கியவரான ஸ்ரீவன் வன்னி என்பவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். பின்பு சக மாணவர்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் போலீசுத்துறையினர் அவ்வுடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர்.

இப்படி அனுதினமும் தற்கொலைகள் தொடர்கிறது. இதை சாதாரண செயலாக எண்ணி கடந்து செல்வது என்பது இனி நம் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு அல்ல அதை நினைப்பதற்கே பயம் கொள்ளும் நிலைமையே நோக்கி செல்லும். அதுமட்டுமல்லாமல் கல்வி என்பதோ கல்விக்கூடம் என்பதோ உயர்சாதியினரின் சொத்தாக மாறி, நம்மை போன்ற உழைக்கும் மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும். தொடரும் இத்தகைய போக்கை அனுமதிக்க போகிறோமா அல்லது அவர்களின் உயர்சாதி பார்ப்பன கொட்டத்தை அடக்க போகிறோமா என்பதில்தான் இருக்கிறது இப்பிரச்சினைகளுக்கான தீர்வு.

டேவிட்

பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்! | தோழர் அமிர்தா | வீடியோ

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ் லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்!

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். மாற்றுக் கருத்துக்களை, எதிர்ப்புக் கருத்துக்களை ஒழித்துக்கட்டுவதற்காகவே பாசிச ஏபிவிபி குண்டர்கள் மாணவர்களை தாக்கி வருகின்றனர்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

Portraits of Marx, Lenin, Periyar, Phule vandalized in the JNU! | People’s Power Condemns

20.02.2023

Portraits of Marx, Lenin, Periyar, Phule vandalized in the JNU!

Let’s put an end to the atrocities of fascist RSS – ABVP goons!

People’s Power condemns!

The portraits of Marx, Lenin, Periyar, Phule installed at the students’ union office of the Jawaharlal Nehru University in Delhi are vandalized by the RSS’s student arm ABVP. The gathered ABVP members wrote on the wall that “communists be hanged” and “Savarkar”. They attacked the Tamil students who questioned this.

The students of the JNU have been continuously protesting against the fascistic actions of the Modi government. The fascist ABVP goons are attacking the students in order to eliminate the dissent.

The fascist mob which attacked the Kerala students a few days ago is now attacking the Tamil students. The students who propagate leftist thoughts are being threatened and the portraits of Marx, Lenin, Periyar, Phule are vandalized. People’s Power strongly condemns this.


Also Read: Conspiracy to reopen the murderous Sterlite! Let’s support the struggling Tuticorin people! | People’s power


People’s Power is demanding for the dismissal of the goons who attacked the Tamil students, and to ban the fascist ABVP in the JNU.

BJP and the RSS’s student arm ABVP were never ordinary political outfits. They are fascist outfits. Annihilating democratic and revolutionary thoughts is their primary obligation. People’s Power is demanding the Tamil Nadu government to ban the fascist organizations including RSS, BJP and ABVP.

With Comradeship,
Comrade Marudhu,
Spokesperson,
People’s Power.
Contact : 99623 66321

நினைவில் கொள், இது தமிழ்நாடு! தீரனும் திப்புவும்

நினைவில் கொள், இது தமிழ்நாடு! தீரனும் திப்புவும்

மது ஒழிப்பு போராளி தியாகி சசிபெருமாளின் பிறந்த நாளான இன்று பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் தோழர் சுந்தர். அதில் கலந்து கொண்ட பிறகு தாம்பரம் செல்லும்  ரயிலில் ஏறினேன்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆறு பேர் ஏறி எனது இருக்கைக்கு அருகில் அமர்ந்தனர். பொதுவாகவே தமிழர் அல்லாதவர் என்றாலே நான் விரும்பி பேச ஆரம்பிப்பேன். அவர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் பண்பாடு, உணவு முறை, தமிழ்நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இப்படி பலவற்றை நான் பலரிடமும் விவாதித்து இருக்கிறேன். இன்றைக்கு கிடைத்தது வித்தியாசமான அனுபவம்.

அந்த ஆறு பேரும் கர்நாடகாவின் மங்களூரைச் சேர்ந்தவர்கள். அனைவரும் சுமாராக 40 வயதுகளில் இருப்பவர்கள். நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறார்கள். தி நகரில் உள்ள போத்தீஸுக்கு செல்வதற்காக வந்திருக்கிறார்கள்.

படிக்க : இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!

என் எதிரில் அமர்ந்திருந்தவரிடம் “திப்பு சுல்தான் மங்களூரை ஆட்சி செய்தாரா?” என்று கேட்டேன்.

அதற்கு பதில் இன்னொருவர் சொன்னார் “இல்லை. சிவாஜி ஆட்சி ஆட்சி செய்தார்”

அவர்களில் இருந்த இன்னொருவர் “சிவாஜி மகாராஷ்டிராவை ஆட்சி செய்தார்” என்று கூறி யாரோ ஒரு அரசியல் பெயரை சொன்னார்.

மங்களூரை சிவாஜி ஆட்சி செய்ததாக கூறிய நபர், தனது கட்டை விரலை கீழ்நோக்கி காட்டியவாறு “திப்பு கெட்டவர்” என்றார்.

“உனக்குத் திப்புவின் வரலாறு சரியாக தெரியாது” என்றேன்.

“எனக்கு திப்புவின் வரலாறு தெரியும். அவர் கெட்டவர்” என்றார்.

“உன் வரலாறு மட்டும் அல்ல நீயும் சரியானவர் அல்ல” என்றேன்.

“உன்னுடைய பெயர் என்ன?” என்றான்.

என்னுடைய பெயரை சொன்னேன். இரண்டு மூன்று முறை அவன் உச்சரித்துப் பார்த்தான்.

“நீ என்ன இந்துவா? முஸ்லிமா?” என்றான்.

“நான் என்ன மதம் என்று கூறினால்தான் பதில் சொல்வாயா?” என்றேன்.

“திப்பு சுல்தான் நிறைய இந்துக்களை கொன்றிருக்கிறார் உனக்கு தெரியுமா?” என்றான்.

“திப்பு இந்துக்களைக் கொன்றதற்கான சான்றுகளை ஏதாவது இருக்கிறதா? தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் அவர் ஆட்சி செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் அவர் எந்த ஒரு இந்துவையும் கொன்றதற்கான கதைகளும் கிடையாது, சான்றுகளும் கிடையாது. ஏதாவது டாக்குமென்ட்(ஆதாரம்) இருந்தால் கொடு” என்றேன்.

படிக்க : பாசிச எதிர்ப்பு – க்ரியா ஊக்கிகளும், நவீன அராஜகவாதிகளும் – ஒரு பார்வை

“உனக்கு திப்பு சுல்தானையும் தெரியாது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி கொண்டு போய் திப்புவுக்கு ஆதரவாக போர் செய்த தீரன் சின்னமலையையும் உனக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு எல்லாம் தெரியும். அந்த உண்மை தெளிவாக புரியும். திப்பு சுல்தானும் தீரன் சின்னமலையும் எங்கள் தலைவர்கள்” என்றேன்.

வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தான்.

“நினைவில் கொள், இது தமிழ்நாடு!” என்றேன். அதற்குப் பிறகு அவன் என் கண்களை பார்க்கவே இல்லை.

(அவர்களோடு ஆங்கிலத்தில் நடந்த உரையாடல் இது)

– மருது

அருந்ததியர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் சீமான்! | தோழர் மருது | வீடியோ

அருந்ததியர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் சீமான்!
தேர்தல் ஆணையமே, நாம் தமிழர் கட்சியை தடை செய்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், சாட்டை துரைமுருகனும் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும். அந்த நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைதேர்தலுக்காக திட்டமிட்டு சாதிய வன்முறையை உருவாக்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அந்த கட்சியும் தடைசெய்யப்படவேண்டும் என்று மக்கள் அதிகாரம் கூறுகிறது.

அருந்ததியர் சாதி மக்கள் மீது சீமானும் சாட்டை துரைமுருகனும் பாய்ந்திருக்கிறார்கள். தமிழர்களை பிரித்து பிரித்து வேட்டையாடுகிற ஓநாய்களாகவே இவர்கள் இருவரும் செயல்படுகிறார்கள்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

டெல்லி ஜே.என்.யூ.வில் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கிய, ஏபிவிபி கும்பலின் கொட்டத்தை அடக்குவோம்!

0

டெல்லி ஜே.என்.யூ.வில்
தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கிய,
ஏபிவிபி கும்பலின் கொட்டத்தை அடக்குவோம்!

பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் படங்களை
வைத்துப் போராடினால் உனக்கு ஏன் எரியுது?

ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் பெயரை மாற்றும் என்கிறார்.
ஏபிவிபி கும்பலோ தமிழ்நாட்டு மாணவர்களை தாக்குகிறது.
இந்தத் திமிர் பிடித்த பாசிச கும்பலை விரட்டியடிப்போம்.

காவி பயங்கரவாத குண்டர் படையான
ஏபிவிபி-யை தடை செய்ய போராடுவோம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – 9444836642

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

20.02.2023

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில்
மார்க்ஸ் லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு!

பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்!

கண்டன அறிக்கை!

டெல்லி ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில், ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் பாசிச குண்டர்கள் மாணவர் மன்றத்திலிருந்த மார்க்ஸ், லெனின் மற்றும் பெரியார், பூலே ஆகியோரின் படங்களை உடைத்திருக்கிறார்கள். மேலும் ‘இங்கு கம்யூனிசம் பேசக்கூடாது’ என்றும் ‘சாவர்க்கர்’ என்றும் எழுதி இருக்கிறார்கள். இதனை தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர்களையும் தாக்கியிருக்கிறார்கள்.

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். மாற்றுக் கருத்துக்களை, எதிர்ப்புக் கருத்துக்களை ஒழித்துக்கட்டுவதற்காகவே பாசிச ஏபிவிபி குண்டர்கள் மாணவர்களை தாக்கி வருகின்றனர்.

படிக்க : அசைவ உணவு சாப்பிட்ட ஜேஎன்யூ மாணவர்களை தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !

சில தினங்களுக்கு முன்பு கேரள மாணவர்களை தாக்கிய பாசிச கும்பல், இப்போது இடதுசாரி கருத்துக்களை பேசக்கூடாது என்றும் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே உள்ளிட்டோரின் படங்களை உடைத்தும் தமிழ்நாட்டு மாணவர்களை தாக்கியும் உள்ளது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டு மாணவர்களை தாக்கிய குண்டர்களை உடனே பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாசிச ஏ.பி.வி.பி அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

வழக்கம் போன்றதொரு கட்சியாக பாஜகவும், மாணவர் அமைப்பாக ஏ.பி.வி.பி.யும் எப்போதும் இருந்ததில்லை. அது ஒரு பாசிச கும்பல், ஜனநாயக மற்றும் முற்போக்கு புரட்சிகர கருத்துக்களை ஒழித்து கட்டுவதே அதன் முதல் வேலை. ஆகவே ஆர்.எஸ்.எஸ், பாஜக, ஏபிவிபி போன்ற பாசிச அமைப்புகளை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது
செய்தி தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

வேங்கைவயல் சம்பவம்: எது தேசிய அவமானம்?

றையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்கத் தொட்டில் சாதி வெறியர்களால் மலம் கலக்கப்பட்ட செய்தி பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. தமிழ்நாடு “பெரியார் மண், சமூகநீதியின் மண்” என்று பேசப்படும் சூழலில் இப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற செயல் நடைப்பெற்றிருக்கிறது. இதைப்பற்றி கருத்து தெரிவித்த சனநாயக இயக்கங்கள் யாவும் இதை “மனித தன்மையற்ற செயல்” என்றும் “தேசிய அவமானம்” என்றும் கண்டித்துள்ளனர். ஆனால், இது தமிழகத்தில் நடந்த முதல் தேசிய அவமானம் இல்லை என்பதை நாம் பார்க்கத் தவறக்கூடாது.

2002 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திண்ணியம் கிராமத்தில் முருகேசன் மற்றும் ராமசாமி ஆகிய இருவர் மனித மலத்தை உண்ணும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். மதுரை மேலஊரப்பனூரில் கடந்த 2003-ஆம் ஆண்டு முத்துமாரி என்ற பெண் மீது மலம் கலந்த தண்ணீர் ஊற்றப்பட்டது. 2004-ஆம் ஆண்டு சங்கன் என்ற நபரை சிறுநீர் குடிக்க வைத்தனர். 2019-ஆம் ஆண்டு, திருவாரூர் மாவட்டம் திருவாண்டுதுறை கிராமத்தைச் சேர்ந்த கொல்லிமலை என்ற நபருக்கு மனித மலத்தை வலுக்கட்டாயமாக ஊட்டி, அவரது உடலில் குற்றவாளிகள் சிறுநீர் கழித்தனர். கடந்த 10 ஆண்டுகளில், இதுபோன்ற 20 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் இதுபோன்ற குற்றங்களில் தண்டனை விகிதம் தமிழ்நாட்டில் 5-6% மட்டுமே.

யதார்த்த நிலை இப்படியிருக்க, “சாதி அமைப்பிற்கு எதிரான போராட்ட மரபை கொண்ட தமிழ்நாடு” என்று பெருமை பேசுவதில் எந்தப் பயனுமில்லை. சாதிக்கு எதிரான வலுவான போராட்ட மரபை கொண்ட சமூகத்தில் ஏன் தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கிறது என்பதுதான் கேள்வி.

சாதிய வன்கொடுமைகள் மற்றும் தீண்டாமையின் தீவிரத்தன்மை பற்றி, அது ஏற்படுத்தும் உளவியல் சிக்கல்கள் பற்றி இந்த ஆட்சியாளர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் எந்த அக்கறையுமில்லை. அதனால் தான் தொட்டியை சுத்தம் செய்த அதிகாரிகளுக்கு குழாய்களிலும் மலம் கலந்த நீரின் பாதிப்பு இருக்கும் என்ற எளிய உண்மை தெரியவில்லை. குழாய்கள் மாற்றப்பட இரண்டு வாரங்கள் ஆயிருக்கிறது.


படிக்க: வேங்கை வயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு! | மக்கள் அதிகாரம்


“ப்ளீச்சிங் செயல்முறையின் மூலமாக தொட்டி மற்றும் குழாய்களில் உள்ள கிருமிகளை அவர்கள் சுத்தம் செய்ததாக நினைக்கிறார்கள். ஆனால் நான் ஒவ்வொரு முறையும் கோப்பைத் தேநீரை என் வாயில் கொண்டு வரும்போதெல்லாம், அந்த மலம் கலந்த அசுத்தமான தொட்டியும், அதிலிருந்து நான் குடித்த தண்ணீரும் தான் நினைவுக்கு வருகிறது? இதற்கு அரசு என்ன செய்யப் போகிறது?” என்று கேட்கும் எளிய மக்களின் கேள்வி இந்த ஆட்சியாளர்களுக்கு புரிவதே இல்லை‌. அது புரிந்திருந்தால் இந்நேரம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.

மலம் கலந்த மனிதத்தன்மையற்ற குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்க முயற்சிக்கிறது போலீஸ். அதையும் சனநாயக இயக்கங்கள் தான் தங்களின் போராட்டங்கள் மூலம் அம்பலப்படுத்தியிருக்கின்றன. “தேசிய அவமானம்” என்று சொல்லக்கூடிய சம்பவம் பற்றி ஆட்சியாளர்கள் வாய் திறக்கவே இவ்வளவு போராட்டங்கள் வேண்டியிருக்கிறது. அவ்வாறெனில் நீதி கிடைக்க இன்னும் எத்தனை நாள் போராடவேண்டும்?

சமவத்துவ பூமி, சமூக நீதி ஆட்சி, பெரியார் மண் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்ச் சமூகம் இன்னும் வேர்மட்ட அளவில் சனநாயகப்படவில்லை. வெகு மக்கள் திரள் போராட்டங்கள் மூலமாக நடைமுறையில் சனநாயக உரிமைகளை சாதித்த போராட்டங்களை தமிழகம் கண்டதில்லை என்றே சொல்லலாம்.

பெரியாரின் திராவிடர் கழகத்தால் கோவில் நுழைவுப் போராட்டங்கள், தெருக்களில் செருப்பு அணிந்து செல்வது, பொதுக்குளத்தில் தண்ணீர் எடுப்பது போன்ற போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இந்த போராட்டங்கள் எதுவும் “கோவில் நுழைவு, தெருக்களில் செருப்பு அணிவது, பொதுக்குளத்தில் தண்ணீர் எடுப்பது” போன்றவையாவும் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள் என்ற சமூகநிலையை உருவாக்கவில்லை. அவை யாவும் அரசியல் அமைப்பு சட்டத்தில் கூட காகித சட்டங்கள் என்ற அளவில் தான் இருந்தன. ஆனால் யதார்த்தத்தில் தீண்டாமை உயிர்ப்புடனே இருந்து வந்துள்ளது.

இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்தும் இட ஒதுக்கீடுகள் மூலம் இந்த அரசமைப்பின் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதற்கானவை என்ற அளவில் சுருக்கப்பட்டுவிட்டது. இப்படி சாதி அமைப்பிற்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் இந்த அரசமைப்பிலும் தேர்தல் அரசியலிலும் சாதியை நிறுவனமயபடுத்துவாதவே இருந்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் பெரிதும் பயன்பெற்றது இடைநிலை சூத்திர சாதியினர்தான்.


படிக்க: வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு || தோழர் மருது வீடியோ


இதற்கிடையில் பட்டியல் சமூக மேட்டுக்குடியினர் அரசு அதிகாரத்தில் தங்களின் பங்கை கேட்டு 1990-களில் ஏகாதிபத்திய கைக்கூலி அறிவுஜீவிகளின் ஆதரவுடன் அடையாள அரசியலை தொடங்கி வைத்தனர். இந்த அடையாள அரசியல் கட்சிகளும், திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டு வைத்து ஓட்டரசியலில் சாதியை நிறுவனமயப்படுத்துவதில் பங்காற்றின.

குறிப்பாக சாதி அமைப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இயக்கங்களின் தோல்வி என்பது இந்த இயக்கங்களின் கோரிக்கைகள் எதுவும் ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்நிலையில் எந்த சமூக மாற்றத்தையும் உருவாக்கிவிடவில்லை என்பது தான். இந்த இயக்கங்களால் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் குறிப்பிட்ட அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது என்பது உண்மையே. ஆனால் அப்படி முன்னேறியவர்களில் பெருமளவிலானவர்கள் “புதிய பார்ப்பனர்களாக” மாறி இந்த சாதி அமைப்பை பாதுகாக்கவே நினைத்தார்கள்.

இப்போதுகூட, வேங்கைவயல் சம்பவத்தை “தேசிய அவமானம்” என்று சொல்வதும், “அரசு குற்றவாளிகளை கைது செய்யவேண்டும், மலம் கலந்த குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும், அரசு இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று சொல்லி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்யும் சனநாயக இயக்கங்கள் எவையும், சாதி அரசியல் அமைப்புச் சட்டத்திலும், அரசு அதிகாரத்திலும் நிறுவனமயமாக்கப்பட்டிருக்கும் யதார்த்த நிலையை கண்டுகொள்வதில்லை.

அப்படி புரிந்து கொண்டிருந்தால், “தேசிய அவமானம்” அந்த தண்ணீர்த் தொட்டி அல்ல; இந்த அரசியல் அமைப்புச் சட்டமும், தேர்தல் அரசியலும், இந்த அரசதிகார அமைப்பும் தான் “தேசிய அவமானம்” என்பது புரிந்திருக்கும். ஆனால் இதனால் இந்த கட்சிகளுக்கு ஓட்டுகள் வந்து சேராது என்பதால் அதைப்பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. அதனால்தான் குடிநீர் தொட்டியை ” தேசிய அவமானம்” என்று பொங்கும் இவர்களால் இந்த அரசமைப்புச் சட்டம், அரசதிகாரம் ஆகியவை மக்கள் விரோதமானது என்று சொல்ல முடிவதில்லை.

இப்போது அந்த தொட்டியை இடிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அது இன்னொரு வேங்கைவயல் உருவாவதை தடுக்கப் போவதில்லை. ஏனெனில் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் அதிகாரத்தை ப்ளீச்சிங் பொடி போட்டு கழுவ முடியாது.

ராஜன்