Tuesday, June 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 124

இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!

“முதலிலிருந்தே ஜெயதேவ் என்னைக் காட்டிலும் உடல் வலிமை பெற்றவர். ஆபத்துகளை எதிர்கொள்வதென்பது அவருக்கு மிகச் சாதாரண விஷயம்! அடிதடிச் சண்டைக்கு அவர் எப்போதுமே முன்னே நிற்பார். ஜெயதேவின் இச்சிறப்புக்களைக் கண்ட பகத்சிங், பிஸ்மில்லை விடுவிக்கும் ‘ஆக்சனுக்கு'(Action) ஜெயதேவை அழைத்துச் செல்ல வேண்டுமென்று முடிவு செய்தார். ஒரு நாள் மத்தியானம் பகத்சிங் தன் முடிவைத் தெரிவித்தபோது, என் பலவீனமான உடலை வெறுத்தேன். கட்சியின் பணி செய்யத் தகுதியில்லாதவன் என நான் கருதப்பட்டதற்காக மிகவும் வருந்தினேன். அதனால் சற்று நேரமே உட்கார்ந்துவிட்டு தூக்கம் வருகிறதென்று சாக்குக் கூறி ஒரு பக்கமாகப் படுத்துக்கொண்டுவிட்டேன். நான் உறங்கவில்லை என்பதை பகத்சிங் அறிவார். அவர் கொஞ்ச நேரம் பக்கத்திலிருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்துவிட்டு, என் தோளை மெல்ல உலுக்கி, “சிவா” என்று கூப்பிட்டார்.

“என்ன?” நான் அவர் பக்கம் திரும்பிக் கேட்டேன்.

“ஒரு விஷயம் கேட்கவா?”

“கேளேன்!”

ஒரு நபரின் பெயர் பெரிதா? கட்சியின் வேலை பெரிதா?”

“கட்சி வேலை தான் பெரிது”

“கட்சி வேலை தடங்கலின்றி நடந்து கொண்டே இருக்க வேண்டும். நாம் கைக்கொள்ளும் ’ஆக்சன்’கள் எல்லாம் வெற்றியடைந்து கொண்டிருக்க வேண்டும். நம்மைப் பற்றிய செய்தி நாட்டு மக்களுக்குத் தடையின்றிக் கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும். இந்த சுதந்திரப் போராட்டத்திலே நாம் ஒவ்வொரு திருப்பத்திலும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்க வேண்டுமல்லவா? இதற்கான முதல் நிபந்தனை என்ன தெரியுமா?”

படிக்க : அஷ்பகுல்லாகான் : பன்முகத்தன்மை கொண்ட ஒரு போராளி !

“வலிமையாகவும், விரிவாகவும் மக்களைத் திரட்டுவதுதான்!”

“மக்களைத் திரட்டுவதும், பிரச்சாரமும் முக்கியம். நாட்டு மக்கள் நமது துணிவையும், செயல்களையும் பாராட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் நம்முடன் நேரடித் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். நாமும் மக்களுக்கு இதுவரை நாம் குறிப்பிடும் சுதந்திரம் எவ்வாறு இருக்கப்போகிறது, வெள்ளையர்கள் வெளியேறிவிட்ட பிறகு ஏற்பட போகும் நமது அரசு எப்படி இருக்கும் என்கிற விஷயங்களை விளக்கிக் கூறவில்லை. நாம் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டி நம்முடைய லட்சியங்களை மக்கள் மத்தியிலே கொண்டு செல்லவேண்டும். காரணம், பொதுமக்களின் ஆதரவைப் பெறாமல் நாம் இதுவரை செய்து வந்ததைப் போல, வெள்ளை அதிகாரிகளையும், அவர்களின் ஏஜெண்டுகளையும், கொன்று குவிப்பதிலேயே இனியும் காலத்தைக் கடத்த முடியாது. நாம் இதுவரை மக்களைத் திரட்டுவதையும், பிரச்சாரத்தையும் அலட்சியப்படுத்தி ’ஆக்சன்’களுக்கே முக்கியத்துவம் அளித்து வந்தோம். இச்செயல்முறையை நாம் விட்டுவிட வேண்டும். நான் உன்னையும், விஜயையும் மக்களைத் திரட்டவும், பிரச்சாரத்தை நிர்வகிக்கவும் விட்டுச்செல்ல விரும்புகிறேன்” என்று கூறி பகத்சிங் சற்று நிறுத்தி,

“நாமெல்லாம் படை வீரர்கள். படைவீரர்களுக்கு எல்லாவற்றையும் விட போர்க்களம் தான் விருப்பமானது. அதனாலேயே எல்லோருமே ’ஆக்சன்’களுக்குப் போகத்துடிக்கிறார்கள். என்றாலும், நம் இயக்கத்தை முன்னிறுத்தி சிலராவது ’ஆக்சன்’கள் மேலுள்ள மோகத்தை விட்டுவிட வேண்டியது தான்; சாதாரணமாக ’ஆக்சன்’களில் பங்கெடுப்பவர்களையும், தூக்குமேடை ஏறுபவர்களையும் தான், புகழ் தேடி வருகிறது. அவர்கள் நிலை ஒரு பெரிய மாளிகையின் தலைவாசலில் பதிக்கபட்ட வைரம் போன்றது; ஆனால் அஸ்திவாரத்திற்குள் விழுந்து கிடக்கும் ஒரு சாதாரணக் கல்லுக்குள்ள முக்கியத்துவம் அந்த வைரத்திற்கில்லை”….

“வைரங்கள் மாளிகையின் எழிலை அதிகரிக்கலாம், பார்ப்பவர்களை வியப்பிலாழ்த்தலாம். ஆனால், அவை மாளிகையின் அஸ்திவாரம் ஆக முடியாது. பல நூறாண்டுகள் தமது தோள்கள் மேல் சுமந்திருக்கமுடியாது. இதுவரையிலும் நம் இயக்கம் வைரங்களைத் திரட்டியதே தவிர, அஸ்திவாரக் கற்களைச் சேர்த்து வைக்கவே இல்லை. அதனால் தான் நாம் இத்தனை மாபெரும் தியாகங்கள் புரிந்தும் மாளிகையைக் கட்டவும் ஆரம்பிக்கவில்லை. இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!”

படிக்க : ஜதீந்திரநாத் தாஸ் : விடுதலை உணர்வை தட்டியெழுப்பிய தியாகம் !

பகத்சிங் மேலும் தொடர்ந்தார்: “தியாகமும், உயிர்ப்பலியும் இரண்டு விதமானவை. ஒன்று, குண்டடிப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் மரணத்தைத் தழுவுவது. இதில் கவர்ச்சி அதிகமிருந்தாலும், கஷ்டம் குறைவு தான்! இரண்டாவது, வாழ்க்கை பூராவும் மாளிகையைச் சுமந்து கொண்டிருப்பது. போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, நமக்கு எதிரான சூழ்நிலையில் நமது தோழர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டுப் போய்க் கொண்டிருக்கும் போது நாம் ஒரு சில தேறுதல் வார்த்தைகளுக்காகத் தவிக்கிறோம். அப்படிப்பட்ட நேரங்களிலே தட்டுத்தடுமாறாமல் தமது லட்சியப் பாதையை விட்டு செல்லாதவர்கள், மாளிகையின் சுமையால் அசைந்து கொடுக்காதவர்கள், பளுவுக்குப் பயந்து தோள்களைக் கீழே இறக்காதவர்கள், ஒளி மங்கிவிடக்கூடாதென்பதற்காகத் தம்மைத் தாமே எரித்துக்கொள்பவர்கள், தன்மையான பாதையிலே இருள் சூழ்ந்துகொள்ளக்கூடாதென்று தம்மைத் தாமே மெழுகுவர்த்தியைப் போல் கரைத்துக்கொள்பவர்கள், உயிர்த்தியாகம் புரிபவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லையா?”

-சிவவர்மா

விடுதலைப் பாதையில் பகத்சிங்…. புத்தகத்திலிருந்து… பக் 39 முதல் 41 வரை.

குறிப்பு : “ஆக்சன்” (Action) என்றால்… சிறையிலிருந்து யாரையாவது விடுவிப்பதையும், எந்த அதிகாரியையாவது கொல்வதையும், கொள்ளையடிப்பதையும், போலீசாரை எதிர்த்துப் போராடுவதையும் புரட்சியாளர் மொழியில் “ஆக்சன்”என்பர்.

வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு || தோழர் மருது வீடியோ

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை திட்டமிட்டு கொட்டியவர்களை யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தாங்களே மனிதக் கழிவைக் கொட்டியதாக ஒப்புக் கொள்ளச் சொல்லி தாழ்த்தப்பட்ட மக்களை போலீசு தொடர்ச்சியாக சித்திரவதை செய்கிறது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிச எதிர்ப்பு – க்ரியா ஊக்கிகளும், நவீன அராஜகவாதிகளும் – ஒரு பார்வை

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தலைமையிலான சங்பரிவார் பாசிச கும்பல் தமிழ்நாட்டில் தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்க ஒன்றிய அரசின் துணைகொண்டும், தங்களுக்கேயுரிய கிரிமனல் வழிகளிலும் வெறித்தனத்தோடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அக்கும்பலின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தமிழ்நாடு ஏதோவொரு வகையில் எதிர்வினையாற்றிக் கொண்டே இருக்கிறது.

தமிழ்நாட்டின் இத்தகைய எதிர்ப்புப் போக்கை புரிந்து கொண்டு காவிக்கும்பல் அதற்கேற்றாற்போல் படிப்படியாக காய்நகர்த்திக் கொண்டு வருகிறது என்பது நாம் அறிந்ததே.

குறிப்பாக ஒன்றிய அரசின் கங்காணியான ஆளுநர் ஆர்.என்.ரவி மூலமாக தங்களது தாக்குதலை பாசிஸ்டுகள் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவரை காவிமயமாக்குவது, காசி தமிழ்ச்சங்கமம், தமிழ்நாடு என்று அழைக்க மறுப்பது, அரசுத் துறை செயலாளர்களை மாநில அரசுக்கெதிராக செயல்பட ஊக்குவிப்பது என்று பல்வேறு வழிகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்து விட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திமிரோடு செயல்பட்டு வருவதையும் பார்த்து வருகிறோம்.

சட்டமன்றத்தில் ஆளுநர் ரவியின் இழிவான நடவடிக்கையையும், அதற்கான எதிர்வினையையும் நாம் அறிவோம். தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்பதற்காக துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி பாசிச கும்பலின் இழிவான, சதித்தனமான செயல்பாடுகளை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கத் தயாரில்லை என்பதும் கடந்த காலங்களில் பல்வேறு விசயங்களில் நாம் பார்த்த நடைமுறை உண்மை.


படிக்க: இங்கேயும் சில நட்சத்திரங்கள் நகர்கின்றன!


அதே சமயம் இதில் நாம் திருப்தி அடைந்து விட முடியாது. குறிப்பாக, மேற்கண்ட அரசியல் பிரச்சினைகள் குறித்து பொதுவெளியில் வெளிப்பட்ட இரண்டு வகையான போக்குகளைப் பற்றி அம்பலப்படுத்துவதன் ஊடாக நாம் எதை நோக்கி நகரவேண்டும் என்பதை உணர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலாவது போக்கு, பாசிச எதிர்ப்பு என்பதே, திமுக-வை ஆதரிப்பதுதான் என்ற கோணத்தில் ”எப்புட்றா” வகை வாதப் பிரதிவாதங்களை சமூக ஊடகங்களில் நடத்தி திமுக-வை எப்பாடுபட்டாவது காப்பாற்றத் துணியும் கேடுகெட்ட சந்தர்ப்பவாதப் போக்கைப் பற்றியது. இத்தகைய நபர்கள் முற்போக்கு பேசுவதைப் பற்றி நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இவர்கள் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து போராடும் புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களை கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதுதான் பிரச்சினை.

சமீபத்தில் அப்படியொரு ‘முற்போக்கு’ யூடியூப்பர் ஒரு சமூக ஊடகத்திற்கான பேட்டியில் பேசியிருந்தார். அதில் “ஆளுநரை எதிர்த்து ஜனநாயக இயக்கங்களும், புரட்சிகர இயக்கங்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் அடையாளப் போராட்டங்கள் நடத்துகிறார்கள். ஆளுநர் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்ட வேண்டியது தானே? ஏன் தயங்குகிறார்கள், வழக்கு வந்தால் வரட்டுமே… தொடர்ச்சியாக இதைச் செய்தால் மக்கள் உணர்வு பெற்று தானாக களத்தில் சேர்ந்து கொள்வார்கள்… எழுச்சி தொடங்கும்… ஆளுநர் வெளியேற்றப்படுவார்… ஏன் இதைச் செய்யாமல் இருக்கின்றார்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை” என்று ’புதியதொரு’ கோணத்தில் பேசியிருந்தார்.

சாத்தியமான மாற்றைப் பேசுவோருக்கு (அதாவது திமுக-வின் பின்னால் அணிதிரண்டு பாசிசத்தை வீழ்த்துவது) மிகவும் அலர்ஜியான விசயம் ஒன்று இருக்கிறது. அது மக்களை அமைப்பாக்குவதன் மூலம்தான் எதிரிகளை வெல்ல முடியும் என்பது.

கடந்த காலங்களில் நமது அனுபவம் என்ன? பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்த்தும், மறுகாலனியாக்க சுரண்டலை எதிர்த்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். பார்ப்பன சாதித் தீண்டாமையை எதிர்த்த சீறீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், நெல்லை கங்கைகொண்டானில் கோக் எதிர்ப்புப் போராட்டம், தஞ்சை வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம், இறால் பண்ணை அழிப்புப் போராட்டம், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரான போராட்டம் இவையெல்லாம் ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் முன்னின்று நடத்திய போராட்டங்கள். மாதக்கணக்கான இந்த இயக்கங்களில் லட்சக்கணக்கான துண்டறிக்கைகள், பல்லாயிரக்கணக்கான சுவரொட்டிகள், ஆயிரக்கணக்கான சுவரெழுத்துக்கள், நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், போராட்டங்கள் என இடைவிடாமல் வேலை  செய்துள்ளோம்.


படிக்க: நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்


நமது பிரச்சாரங்களின் போது நம்மை தார்மீகரீதியாக ஆதரிக்கும் மக்கள் ஏன் இத்தகைய போராட்டங்களில் பெருந்திரளாக கலந்து கொள்ளவில்லை? ஏன் ஒரு எழுச்சியை நோக்கி தொடர்ச்சியாக இந்தப் போராட்டங்கள் நகரவில்லை? என்ற கேள்விதான் மிக முக்கியமானது.

பிரச்சார இயக்கங்களால் மக்களைத் திரட்ட முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. அதற்கு மக்கள் அமைப்பாக்கப்பட்டிருப்பதுதான் அடிப்படையான தேவை. அதுதான் நாம் பரிசீலிக்க வேண்டிய மிக முக்கியமான விசயம். இந்த உண்மையைப் பரிசீலிப்பது க்ரியா ஊக்கிகளுக்கு கசக்கத்தானே செய்யும்?

ஒரு எழுச்சியை உருவாக்குவது மட்டுமல்ல, அதைத் தக்கவைப்பதும், தொடர்ந்து எடுத்துச் செல்வதும்தான் முக்கியம். அதற்கு திரளான மக்கள் அமைப்பாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல் அரிச்சுவடி.

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறிப்பிட்ட அளவு எடுத்துச் செல்லப்பட்டதற்கான காரணம் குறிப்பிடத்தகுந்த அளவு விவசாயிகள் அமைப்பாக்கப்பட்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. அதனால்தான் பஞ்சாப், ஹரியானாவைத் தவிர மற்ற இடங்களில் பெருந்திரளாக திரளவில்லை.

ஆனால், பொதுவில் பார்ப்பன எதிர்ப்பு, தமிழுணர்வு என்ற வகையில் தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பிடத்தகுந்த அளவு உள்ள தார்மீக ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டு கனவுக்கோட்டை கட்டச் சொல்கிறார்கள் க்ரியா ஊக்கிகள். அதாவது திமுக-வுக்காக முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களும், புரட்சிகர இயக்கங்களும் தியாகம் செய்ய வேண்டும் என இவர்கள் கூறுகின்றனர். உழைக்கும் மக்கள் தங்களுக்கான சொந்த அடித்தளத்தை உருவாக்கத் தேவையில்லை, திமுக-வின் பின்னால் அணிதிரண்டால் பாசிசத்தை ஒழித்துவிட முடியும் என்று நம்பச் சொல்கின்றனர்.

பாசிசத்தை வீழ்த்துவதற்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டுவது, பாசிச எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய எந்தப் புரிதலுமற்ற முதலாளித்துவ சந்தர்ப்பவாதக் கும்பல்களின் உளறல்களே இவை.


படிக்க: ‘சோசலிச’, ‘ஜனநாயக’ முகமூடிகளின் துரோகத்தில் செழித்துவளரும் பாசிச சக்திகள்!


கார்ப்பரேட் திமுக-வின் பாதந்தாங்கிகளாக இருந்து கொண்டு (இவர்கள் திமுக-வின் தொடர்ச்சியான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள் பற்றி மூச்சு கூட விடமாட்டார்கள்) போகிற போக்கில் ஜனநாயக இயக்கங்களையும், புரட்சிகர இயக்கங்களையும் அவதூறு செய்வது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

மார்க்சிய லெனினியத்தின் மீதும், புரட்சிகரக் கட்சியின் தலைமையில் மக்களைத் திரட்டுவதைப் பற்றியும் நம்பிக்கையிழந்த இவர்களால் வேறு எப்படிப் பேச முடியும்?

இன்னொரு பக்கம் ஆளுநரே வெளியேறு என்று போராடுவதைக் காட்டிலும், ஆளுநர் பதவியே வேண்டாம் என்று போராட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். ஏனெனில் அப்பதவியே பிரிட்டிஷ், பார்ப்பன, பனியா முதலாளிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. எனவே அப்பதவியே வேண்டாம் எனப் போராட வேண்டும் எனக் கூறுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட தருணத்தில், அச்சூழலுக்கேற்ப முழக்கங்களை முன்வைத்துப் போராடுவதற்கு அதற்கான திட்டமும், அரசியல் முன்முயற்சியும் இன்றியமையாதது. “ஆளுநரே வெளியேறு” என்பது குறிப்பிட்ட சூழலுக்கான முழக்கம் ஆகும்.

உதாரணத்திற்கு காவி – கார்ப்பரேட் பாசிசமானது தற்போதையை சூழலில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிசமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இத்தகைய குறிப்பான சூழ்நிலைக்கேற்ப நமது அரசியல் முழக்கங்களை முன்வைத்து, மக்களிடம் கொண்டு செல்கிறோம்.

ஆனால், இப்படிப்பட்ட சிந்தனை முறையோ, நடைமுறையோ இல்லாததன் காரணமாகவே அராஜகவாதமான முறையில் தங்களது அரசியலை வெளிப்படுத்துகின்றனர். ஏனென்றால், இவர்கள் கூறுகின்ற விசயங்களை மக்களிடம் கொண்டு செல்லப்போவதில்லை. போகிற போக்கில் ஒரு அரசியல் பிரச்சினையில் அராஜகமான முறையில் தீர்வைப் பற்றிப் பேசுவது. அதற்கு பொறுப்பாக நடந்து கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் இன்னொரு பக்கம் நடைமுறையில் தங்கள் பகுதியில் ஒரு மருத்துவமனை தொடர்பான பிரச்சினையில் தலையிடும்போது குறிப்பிட்ட பிரச்சினைக்கேற்ப முழக்கம் வைக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் இவர்களை நவீன அராஜகவாத கும்பல் என்று கூறுகிறோம்.

உண்மையில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வேரடி மண்ணோடு வீழ்த்துவதற்கு, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை கட்டியமைக்க வேண்டிய பெருந்தேவை நமக்கு முன்னே உள்ளது. இச்சூழலில் பெருவாரியான உழைக்கும் மக்களை அமைப்பாக்குவதைப் பற்றிய எந்தப் பார்வையும் இல்லாத, வாய்ச்சவடால் அடித்துக் கொண்டு கிளம்பியிருக்கின்ற இத்தகைய முதலாளித்துவ சந்தர்ப்பவாத, நவீன அராஜகவாதப் போக்குகளை புரிந்து கொண்டு தொடர்ச்சியாக அம்பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

இனியன்

Adani: An enemy of the World Proletariat!

The last two years have been the toughest years in history. The world was devastated by the deadly Corona pandemic and the people had died in clusters. While people around the world were struggling to save their lives, a small group was competing to find a place in the list of the world’s richest elite. Adani was the foremost among them. At that time, his daily income was ₹1,002 crore.

Being born into an ordinary textile business family, how could he earn this much? How did he manage to reach the third spot in the world’s rich list? The only reason is the Modi-Adani alliance. Adani’s businesses and assets began to grow only after Modi became the Chief Minister of Gujarat in 2001. It would not be an exaggeration to say that Adani’s many business expansions and industrial developments were shown as Modi’s Gujarat model.

During the 2002 anti-Muslim pogrom in Gujarat, it was Adani who supported and defended Modi. Some leaders of the Confederation of Indian Industry (CII) had criticised Modi for the riots. Adani, who had opposed it from within the group, had publicly threatened to leave the federation for Modi’s sake. The Modi-Adani alliance was so strong at that time.

Adani is not only close to Modi but also to his ideological leadership, the RSS. Sudheesh Minni, the author of the book “Cellars of the Inferno: Confessions of an RSS Pracharak”, has exposed Adani’s presence at the shakhas and important meetings held at the Nagpur office, the headquarters of the RSS, as a testimony to the Adani-saffron nexus.


Also Read: Adani Namo Namaha!


In 2003, Adani had announced that he would invest ₹15,000 crore at the Vibrant Gujarat Summit of investors. Modi had acquired 15,946 acres of land at a throwaway price of ₹1-32 per square metre for the Mundra port maintained by Adani and the proposed Special Economic Zone (SEZ) project. Adani gave the land to the state-run public sector company Indian Oil for ₹600 per square metre.

The Gujarat government itself bought natural gas in the open market and sold it to Adani at a lower price; When Adani did not supply electricity to the Gujarat Electricity Board as per the contract, the government collected only a minimum penalty; The irregularities committed by the Modi-Adani alliance in the sale of shares of Mundra port to Adani at throwaway prices are incalculable. Adani, who looted crores of people’s money through these scams, entered into subsequent businesses and joined the list of the elite.

In 2009, he started 11 companies for  separate businesses. In 2012, he stepped into solar power generation. In the financial year 2012-2013, the annual income of the Adani Group increased to ₹47,352 crore. However, in 2000, the total budget of the Adani Group stood only at ₹3,300 crore.

Adani, whose looting was centred in Gujarat till 2013, began expanding across India when Modi became the Prime Minister in 2014. Modi flew in Adani’s own aircraft for the 2014 Lok Sabha election campaign. As Modi flew in Adani’s plane, shares of Adani’s companies soared. Shares of Adani’s three companies grew nearly 85.35 per cent.

After winning the election and Modi became Prime Minister, the Adani Group began to grow at a lightning pace. It further expanded its business by buying the enterprises of others in bulk. On the day, when the results of the 2014 Lok Sabha elections were declared, Dhamra port was acquired from L&T and Tata Steel for ₹5,500 crore. He purchased a 1,200 MW thermal power plant in the next three months and a 600 MW thermal power plant in the next three months.


Also read: Adani – The Bandit who robbed India! | People’s Power


If buying others’ businesses is one way, then another means is to expand one’s business in areas where one has no prior experience. Adani Group, which has nothing to do with the aviation industry, was awarded the contract to operate six airports in February 2019. For this purpose, the Adani Group has created a separate company called Adani Airport Holdings Limited. It has also entered the telecom sector with the acquisition of 5G spectrum.

As a result, the Adani Group has grown into India’s leading company in sectors such as commercial coal mining, ports, electricity, fuel production and distribution. Adani Group is pouncing into other fields too. Through this, it is expanding its influence in other countries as well.

Soon after Modi became the Prime Minister of India, he began to lay the groundwork for Adani’s international plunder. Modi himself went directly to Australia and bargained for the coal mine for Adani. Modi also provided him ₹6,500 crore from the SBI for this. Not only this, bank loans have been at the heart of the overall growth of the Adani Group. In particular, thousands of crores of rupees paid through public sector banks and written off as bad loans within a specified period of time amassed a huge capital for corporates like Adani-Ambani. The basis for this is that the government’s aim is to create Adanis by looting the tax money and bank savings of crores of working people as its primary task. The name they have given to this plundering is ‘Development of the Nation’.

Like the Australia mining deal, Modi negotiated and concluded the Sri Lankan 500-megawatt wind power project in favour of Adani. “The President (Gotabaya Rajapaksa) summoned me after a meeting and said, India’s Prime Minister Modi is pressuring him to hand over the project to the Adani group”, said Ferdinando, who was the then chairman of Sri Lanka’s electricity board.

If one method is to start power plants in one country and generate electricity and supply electricity to the government of that country, then another method of the Adani Group is to generate electricity in one country and supply power to another country. The Adani Group is following the second line of power supply to Bangladesh and the European Union countries.

The Kota Thermal Power Plant in Jharkhand is producing 1,600 MW of electricity; this is being sent to Bangladesh from December 2022. The contract for the same was signed with the Bangladesh Power Development Board (BPDB) in 2017 itself. The agreement was finalised through a meeting with Adani by the Bangladeshi Prime Minister, who visited India in September 2022.

Like the governments here, the Bangladesh government also buys electricity from Adani at a higher price. The BPDB agreed to pay 3.26 Bangladeshi taka (₹2.72) per kilowatt hour as capacity charge, which is higher than any other power plant in Bangladesh.


Also Read: Let’s uphold the day of Russian Socialist Revolution! Let’s smash RSS-BJP; Ambani-Adani fascism! | Pamphlet


Similarly, the Adani Group has said that it will produce electricity and emission-free fuel (green hydrogen) in Morocco and supply it to the European Union. The project, which supplies 10 GW of electricity, is the largest power generation project outside India.

The Adani Group aims to become the world’s largest producer by investing $50 billion in green hydrogen production within the next decade. For this, it has partnered with France’s TotalEnergies.

Apart from coal mining, power generation and distribution, Adani Port is also taking over cargo ports in other countries too. In 2017, the Adani Group was involved in the construction of a green field container port at Carey Island of Malaysia; this would be an extension of the existing Port Klang.

Similarly, in July 2022, the Adani Group captured the port of Haifa, a major trading hub on Israel’s Mediterranean coast. It took over the port in alliance with Gadot, a local chemical and logistics conglomerate. Israel is largely dependent on sea route to import and export goods to their country. It should be noted that the port of Haifa itself handles almost half of the container shipping for Israel.

While the acquisition of the port by the Adani Group is significant on that basis, it is more important that the Adani Group aims to facilitate trade routes between India, Europe and the Middle East through the port. What’s more is that the Adani Group is focused on creating an integrated global transport through its ports in Carey Island in Malaysia, Haifa in Israel and ports in India.

Since 2014, the Adani Group has not only expanded its plundering across India, but has also been expanding its plundering in many countries of the world. There have also been mass protests against Adani’s plundering in Australia and Sri Lanka. At the same time, protests are taking place in various parts of India, including Gujarat, Kerala and Tamil Nadu, against the plundering of the Adani Group and the destruction of the environment it causes. In Kerala, the people there are now actively protesting against Adani’s Vizhinjam port.

With the help of Modi, who has been deceiving people in the name of development and progress and turning the country into a hunting ground for corporate dacoits, Adani is expanding his destructive plunder not only in India but also in many other countries. In this aspect, Adani is not just an enemy of the Indian proletariat, but of the world proletariat. It is, therefore, necessary for the Indian proletariat to unite with the world proletariat in the struggle to bring down Adani. It is also our obligation to smash the Modi-Adani alliance.

தமிழ்நாட்டின் எதிரி யார்? சீமானா? வடக்கனா? | தோழர் வெற்றிவேல்செழியன் வீடியோ

வட மாநில தொழிலாளர்கள் யார்? நமது தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா கட்டுமானங்களிலும் அவர்கள் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளன. அவர்களின் ரத்தமும் சதையும் அதில ஒட்டி இருக்கிறது. ஆடு மாடுகளை விட கேவலமாக நடத்தப்படுகின்றார்கள். ஒரு சகமனிதன் அதைப் பார்த்துக் கொண்டு இனவாதம் பிடிவாதம் பேச முடியுமா? அதை பேசுபவன் தான் இந்த இன வெறி பிடித்த சீமான். ஒரு சக தொழிலாளி இப்படி ஆடு மாடுகளைப் போல மோசமாக நடத்தப்படுகிறானே என்ற கோபம் ஏன் அவருக்கு வரவில்லை என்றால், அவர் முதலாளிகளின் ஆர்.எஸ்.எஸ் – அம்பானி – அதானிகளின் ஆள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சிவராத்திரி விழாவிற்கு முர்மு: பாஜகவின் அடையாள அரசியல்! | தோழர் ரவி | வீடியோ

குடியரசு தலைவர் பழங்குடியின பெண் என்று கூறி அடையாள அரசியல் செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு. காடுகளை அழித்து மிக பிரம்மாண்டமான கோவிலை கட்டி இருக்கிறார் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ். காடுகளை பாதுகாக்கும் பழங்குடி மக்களின் இருந்து வந்த முர்மு காடழிப்பு செய்த கார்ப்பரேட் சாமியார் நடத்தும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார். இதுதான் பாசிச பாஜகவின் அரசியல். இதனை பயன்படுத்திக்கொண்டு கார்ப்பரேட் சாமியார் ஜக்கி இன்னும் பல்வேறு காடுகளை அழித்து கோவில்களை கட்டுவார்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

தோழர் ரவி
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புமாஇமு, தமிழ்நாடு.

அருந்ததியர் மக்களை வந்தேறி என்ற சீமான் | மக்கள் அதிகாரம் கண்டனம்

18.02.2023

அருந்ததியர் மக்களை வந்தேறி என்று தமிழரை பிளந்து
தமிழ் இனத்தை உடைக்கும் சீமான்!

கண்டன அறிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியின மக்களை வந்தேறிகள் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் டிஎன்ஏ சோதனை செய்யாமலேயே யார் தமிழர்? யார் வந்தேறிகள்? என்கின்ற மாபெரும் ஆராய்ச்சியை செய்து வருகிறார் சீமான். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் முதலியார் சாதியை சேர்ந்த மக்கள் அதிகமாக இருப்பதால் தன்னுடைய கட்சியும் முதலியார் சாதியை சேர்ந்தவரை நிறுத்தியுள்ளது என்று பெருமையாக கூறியுள்ளார் சீமான்.இப்படி சாதிப்பெருமையை பேசிக் கொண்டிருக்கும் சீமான் நாம் தமிழர் என்ற பேசுவதே கேலிக்கூத்தானது. அவரே அருந்ததியர்கள் வந்தேறிகள் என்ற கருத்தையும் உதிர்த்துள்ளார்.

இதற்கு எதிராக ஈரோடு பகுதியைச் சேர்ந்த அருந்ததி சாதியை சேர்ந்த மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் தமிழகத்திலே தோன்றியது என்றால் அக்காலம் முதல் நடைபெற்ற அனைத்து விடுதலைப் போர்களிலும் சாதி வேறுபாடு இன்றி அனைவரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.

வேலு நாச்சியாரின் படைத்தளபதியாய் குயிலியும் பூலித்தேவனின் தளபதியாய் ஒண்டிவீரனும் இருந்த வரலாறுதான் தமிழ்நாட்டின் வரலாறு. இது எதுவும் அறியாத சீமான், வந்தேறிகள் என்று தமிழரை பிளவுபடுத்துகிறார்.

தமிழரைப் பிளவு படுத்தி தமிழினத்தை உடைத்து தமிழ்நாட்டை கூறுபோடும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க பாசிச கும்பலின் நிகிழ்ச்சி நிரலையே சீமான் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை உண்மை.

அருந்ததியின மக்களை வந்தேறிகள் என்று கூறி தமிழின ஓர்மையை உடைக்கும் சீமானின் பேச்சினை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ; அம்பானி- அதானி பாசிசத்தால்
ஒடுக்கப்படும் மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி தமிழ்நாட்டை பாசிசத்துக்கு எதிரான அரணாக மாற்றுவோம். அதற்கு எதிரான மக்கள் விரோத சக்திகளை புறக்கணிப்போம் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு- புதுவை
9962366321

இனவெறியை தூண்டும் சீமான் மீது நடவடிக்கை எடு || மக்கள் அதிகாரம் புகார்

தேதி : 18.02.2023

அனுப்புதல் :

தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை

பெறுதல் :

காவல் ஆணையர்,
காவல் ஆணையரகம்,
சென்னை.

பொருள்: வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து இன வெறியைத் தூண்டி வரும்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க கோருதல்.

ஐயா, வணக்கம்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகிய இருவரும் நாம் தமிழர் கட்சி நடத்தும் பொதுக்கூட்ட மேடைகளில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான இனவெறியை தூண்டும் கருத்துக்களை பேசி வருகின்றனர்.

இது ஒரே இடத்தில் வேலை செய்யும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் மோதல் போக்கை உருவாக்கும் செயலாகும். சமீபத்தில் திருப்பூர், ஓசூர் போன்ற இடங்களில் உண்மையாக நடந்த சம்பவம் என்ன என்பதை அறிவதற்கு முன்பே வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான விஷமக் கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டன.

சாட்டை துரைமுருகன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது “வடக்கன் வரும்போது 25 கிலோ கஞ்சாவோடு வருகிறான். பகலில் வேலை பார்த்துவிட்டு இரவில் கஞ்சா விற்கின்றான்” என்றும், “நமது பெண்களை கையைப் பிடித்து இழுப்பான், நமது குழந்தைகளை கடத்திச் சென்று விடுவான்” என்றும் வட மாநில தொழிலாளர்களை பார்த்தாலே கோபம் வரும் அளவிற்கு இனவெறி கருத்துக்களை பேசியுள்ளார்.

புகார் அளித்த பின் பத்திரிகையாளர் சந்திப்பில் மக்கள் அதிகாரம் தோழர்கள்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 15.02.2023 அன்று ஈரோட்டில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “கஞ்சா வச்சிருக்கான், அபின் வச்சிருக்கான்,  பெண்களை கைய பிடித்து இழுத்தான், கற்பழித்தான் என்று உள்ளே தூக்கிப்போட்டு சாப்பாடு இல்லாமல் அடி வெளுத்துவிடுவேன். அவனே பெட்டியை தூக்கி கிட்டு ஓடிடுவான்” என்று விஷமத்தனமான இன வெறியூட்டும் கருத்தை பேசியுள்ளார்.

வடமாநில மற்றும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் மோதலை ஏற்படுத்தி ரத்தம் குடித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே சீமானும் சாட்டை துரைமுருகனும் இதை செய்து வருகின்றனர்.

இதனால் சமூகத்தில் அசாதாரண சூழல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே இன வெறியை தூண்டி மோதலை ஏற்படுத்தத் துடிக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் சாட்டை துரைமுருகன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

பிபிசி ஆவணப்படமும் குஜராத் படுகொலை குற்றவாளிகளும்

பிபிசி செய்தி நிறுவனம், “India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டது. முதல் பாகம் ஜனவரி 17-ம் தேதியும், இரண்டாவது பாகம் 24-ம் தேதியும் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படம் குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை இந்து மதவெறியர்களால் நடத்தப்பட்ட கலவரத்தை பற்றியும் அதில் அன்றைய தேதியில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடியின் பங்கு பற்றியும் பேசுகிறது. இதனால் பாசிச மோடி அரசு சமூக வலைதளங்களில் இந்த ஆவணப்படத்தை தடை செய்தனர். இதுவும் “கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” என்று சனநாயக சக்திகளால் கண்டிக்கப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில், இப்படி ஒரு ஆவணப்படத்தை வெளியிடவும் அதன் மூலம் 2002 குஜராத் கலவரத்தை பற்றி பிரிட்டிஷ் அரசின் அயலுறவு அலுவலகம் தயாரித்த அறிக்கையை (கடந்த 20 ஆண்டுகளாக இப்படியொரு அறிக்கை இருப்பது கூட பொதுவெளிக்கு தெரியாது) பிபிசி நிறுவனம் வெளிக்கொண்டு வந்தது பற்றிய விவாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த ஆவணப்படமும் இந்த அறிக்கையும் இந்திய அரசு நிறுவனங்கள் ஒரு இனப்படுகொலையை செய்தவர்களை அது சார்ந்த வழக்குகளிலிருந்து விடுவிப்பதில் எந்த அளவு ஒத்திசைவோடு நடந்து கொண்டது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மேலும், இப்படி ஒரு இனப்படுகொலையின் போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்த ஒருவரை, 2014 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஊடகங்கள் எப்படி வளர்ச்சியின் நாயகனாக சித்தரித்து தனிப்பெரும்பான்மை வெற்றியை தேடித் தந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

படிக்க : மோடியின் முகத்திரையை கிழிக்கும் பிபிசி ஆவணப்படம் | தோழர் அமிர்தா வீடியோ

2002 குஜராத் கலவரத்தை பற்றி அதை நெருக்கமாக இருந்து கவனித்த மனசாட்சியுள்ள சில பத்திரிகையாளர்கள், கலவரத்தின் போது நடத்தப்பட்ட கொடூரங்களை பற்றி இத்தனை ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வந்ததைவிட இந்த ஆவணப்படம் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. அந்த பத்திரிகையாளர்கள் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வந்த சில விஷயங்களை ஆவணப்படம் மேலும் சில ஆதாரங்களுடன் விளக்குகிறது அவ்வளவே.

ஆவணப்படமும் அது வெளிக்கொண்டு வந்த அந்த அறிக்கையும் சொல்லும் சில எளிய உண்மைகள் இதுதான். “வன்முறையின் அளவு அறிக்கையிடப்பட்டதை விட அதிகமாக இருந்தது; இனப்படுகொலைக்கான அனைத்து அடையாளங்களும் இந்த கலவரத்தில் இருந்தது; இந்த இனப்படுகொலையை அரங்கேற்றும் பொருட்டு ஒரு முறையான வன்முறை பிரச்சாரம் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டது; இந்தக் கலவரத்தின் நோக்கம் இந்து மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவதே; முஸ்லீம் பெண்களை பரவலாகவும் திட்டமிட்டும் பாலியல் பலாத்காரம் செய்வது கலவரத்தின் நோக்கமாக இருந்தது; வன்முறையைத் தூண்டுவதில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (VHP) அமைப்பை சேர்ந்த குண்டர்களின் பங்கு இருந்தது” என்பவைதான்.

மேலும், எவ்வாறாயினும், வி.எச்.பி குண்டர்கள் “தாங்கள் என்ன கொடூரங்கள் செய்தாலும் தண்டிக்கப்பட மாட்டோம் என்ற நிலையை மாநில அரசாங்கம் உருவாக்கி வைத்திருந்திருந்தது. அப்படி ஒரு சூழலை மாநில அரசாங்கம் உருவாக்கி வைக்காமல் இருந்திருந்தால், இவ்வளவு சேதத்தை ஒருபோதும் ஏற்படுத்தியிருக்க முடியாது” என்றும் “இதற்கு நரேந்திர மோடியே நேரடியான பொறுப்பு” என்றும் அறிக்கை உறுதிபடக் கூறுகிறது.

ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் “மோடி அலை” உருவாக்கிய பத்திரிகைகள் இந்த கலவரத்தின் இரத்தக்கறை மோடியின் கரங்களில் இருப்பது பற்றி ஒரு செய்தி கூட வெளியிடவில்லை. அப்படியொரு சம்பவம் நடந்ததையே இந்த பத்திரிகைகள் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரவில்லை. அது ஏன் என்பது ஊர் அறிந்த ரகசியம். ஏனெனில், மோடி பிரதமராக வேண்டும் என்பதை இந்திய ஆளும் வர்க்கத்தின் பெரும் புள்ளிகள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். குஜராத்தில் வணிகம் செய்வதை எளிமையாக்கியது, தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தை எளிதாக்கியது மற்றும் தனியார் திட்டங்களைத் தடுக்கக்கூடிய அதிகாரத்துவ தாமதங்கள் ஆகியவற்றை ஒப்பீட்டளவில் குறைந்ததால், நிறுவனங்கள் மோடியை தங்களுக்கு சாதகமானவராக பார்த்தது.

இந்தியாவின்  உழைக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக வர்க்கப் போரை நடத்துவதற்கும், இந்திய பெருமுதலாளிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து அதன் பெரும் ஆதாயங்களை அடைவதற்கும் தேவைப்படக்கூடிய ஒரு “பலமானவர்” என்று ஆளும் வர்க்கம் ஏற்றுக்கொண்ட பெரிய செயல்முறையின்  ஒரு பகுதி தான் மோடி.

2012 ஆம் ஆண்டே மோடியை பாஜக அதன் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக அறிவிக்கும் முன்பே மோடி பிரதமர் வேட்பாளர் என்ற பிம்பம் ஊடகங்களால் முன்தள்ளப்பட்டது.

இன்று அப்பட்டமான மதவெறியோடு செயல்பட்டு வரும் மோடி, 2014 தேர்தலுக்கு முன்பு தன்னை மிதவாதியாக முன்னிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். அவர் மத நல்லிணக்கத்தை மேம்படுத்த முயற்சிப்பது போன்று பாவனைகள் செய்தார். அவரது பேச்சுக்கள், இந்து மறுமலர்ச்சி என்பதாக இல்லாமல், வளர்ச்சி, முதலீடு போன்ற வார்த்தைகளை சுற்றியிருக்கும்படி பார்த்துக்கொண்டார். இவையெல்லாம் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட செய்திகளாக வளம் வந்தது.

மோடியிடம் கடினமான கேள்விகளைக் கேட்பதிலும், மோடி பேசும் வாய் வீச்சுகளை  விமர்சன ரீதியாக ஆராய்வதிலும் ஊடகங்கள் அக்கறை காட்டவில்லை.

2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு பற்றி ஊடகங்கள் கவலைப்படவில்லை; அவை கலவரம் பற்றிய விசாரணையின் செயல்முறையை கேள்விக்குள்ளாக்கவில்லை, குறிப்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) பங்கு, மோடி கீழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவதற்கு வழிவகுத்தது பற்றி ஊடகங்கள் எதுவும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் இதே ஊடகங்கள் “பத்திரிகை சுதந்திரம்” பறிபோவதாக இப்போது கூப்பாடு போடுகிறது.

2002 குஜராத் கலவரத்திற்கு அப்போதைய முதல்வர் மோடி உடந்தையாக இருந்ததாகக் சொல்லப்படுவதை மறுப்பவர்கள், சில மாதங்களுக்கு முன்பு – குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது – இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா (மோடியின் நெருங்கிய கூட்டாளி) “2002ல், கலவரக்காரர்களுக்கு (இஸ்லாமியர்கள்), ஒரு பாடம் கற்பிக்கப்பட்டது. அவர்களால் மீண்டும் தலை தூக்க முடியவில்லை. இதனால் குஜராத்தில் நிரந்தர அமைதி நிலவுகிறது” என்று பெருமிதமாக சொன்னார். இது பகிரங்கமாக இஸ்லாமிய மக்களை மிரட்டும் தொனியில் இருந்தது.

இப்படி ஒரு உள்துறை அமைச்சர் பேசமுடியும் என்ற சூழல் இன்று நேற்று உருவாக்கப்பட்டதல்ல. கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் படுகொலைக்கு காரணமானவர்களை விடுவிப்பதில் இந்திய அரசின் ஒவ்வொரு உறுப்பும் எத்தனை முனைப்புடன் செயல்பட்டிருக்கிறது என்பதன் சாட்சியமாக இருக்கிறது அமித்ஷாவின் மிரட்டல் பேச்சு.

பிப்.27, 2002 அன்று இரவு மோடியின் இல்லத்தில் கூட்டப்பட்ட “அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில்” மோடியின் குஜராத் மாநில அரசாங்கத்தின் வருவாய்த்துறை அமைச்சரான ஹரேன் பாண்டயா மற்றும் துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் பட் ஆகியோர் கலந்துகொண்ட ஆதாரம் மிகவும் முக்கியமானது. “இந்த சந்திப்பு ஒரு தனித்துவமான நோக்கத்தைக் கொண்டிருந்தது” என்றும் “மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்துக்கள் “எதிர்வினை” ஆற்றும் வழியில் குறுக்கிடக்கூடாது” என்றும் மோடி கூடியிருந்தவர்களுக்கு அறிவுறுத்தினார். 2009-ல், சஞ்சீவ் பட் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், ஹரேன் பாண்டயாவின் கூற்றை உறுதிபடுத்தும் வகையில் சாட்சியம் அளித்தார்.

ஆனால், 2003-ல் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் ஹரேன் பாண்டியா. தற்போது சஞ்சீவ் பட் சிறையில் இருக்கிறார்.

இந்த வழியில்தான், 2002 நிகழ்வுகள் பற்றிய விசாரணையை இந்திய அதிகாரிகள் அதன் ஒவ்வொரு கட்டத்திலும் நீர்த்துப்போகச் செய்துள்ளனர். 2002-இல் கொடூரமாக கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டபோது, ​​21 வயது மற்றும் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பிளிகிஸ் பானோவைப் போலவே, பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் உறுதியான முயற்சிகளின் விளைவாக நடந்த சிலருக்கு தண்டனைகள் கிடைத்தது.

ஆனால் அதுவும் நிரந்தரமாக அல்ல. கடந்த ஆண்டு குஜராத் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, பிலிகிஸ் பானோவின் குடும்பத்தின் கொலையில் பங்கு வகித்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரையும் மாநில அரசு வீரவணக்கத்துடன் விடுதலை செய்தது. அவர்கள் இன்று பிலிகிஸ் பானோ வன்கொடுமை செய்யப்பட்ட அதே தெருக்களில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்.

2002 படுகொலைக்குப் பொறுப்பானவர்களைக் காப்பாற்ற குஜராத்தில் உள்ள போலீசுத்துறை, நீதித்துறை மற்றும் அரசாங்க அதிகாரிகளின் முயற்சிகள் மிகவும் அப்பட்டமாக இருந்தன, இறுதியில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், மோடியை இந்த வழக்கில் இருந்து விடுவித்ததன் மூலம் நீதித்துறை நன்மதிப்பிற்கு தகுதியற்றது என்ற பெயரை ஈட்டியது.

2002 குஜராத் கலவரத்தில் அகமதாபாத்தின் முஸ்லீம் சுற்றுப்புறத்தில் 68 பேருடன்  காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி ஜாகியா ஜாஃப்ரி அது பற்றி வழக்கு தொடர்ந்தார். அவரது சாவு முஸ்லிம் எதிர்ப்பு வன்முறை மற்றும் இனப் படுகொலை என்னும் பெரிய சதியின் அங்கம் என்ற வகையில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கை பிப்ரவரி 28, 2022 அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து மேலும் ஒருமுறை தனது மோடி விசுவாசத்தை காட்டியது.

படிக்க : பிபிசி வருமான வரித்துறை ஆய்வு: ஊடகங்களை முடக்க எத்தனிக்கும் பாசிஸ்டுகள்!

அவ்வாறு செய்ததன் மூலம், உச்ச நீதிமன்றம் மோடி, அமித்ஷா மற்றும் குஜராத் அதிகாரிகளை விடுவித்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு “க்ளீன் சிட்” கொடுத்தது. அடுத்த நாள், இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி, தீஸ்தா செதல்வாட் மற்றும் படுகொலைக்கு போலீசுத்துறை உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்திய முன்னாள் குஜராத் போலீசுத்துறை அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோரைக் குஜராத் போலீசுத்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை கைது செய்தது.

இவ்வாறு கடந்த 20 ஆண்டுகளில் குஜராத் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய பாசிச மதவெறியர்களை விடுவிப்பதில் இந்திய அரசின் ஒவ்வொரு உறுப்பும் தனது பங்கை சென்மையாக செய்திருக்கிறது. பெரு முதலாளிகளும் அவர்களின் ஊதுகுழலான “வெகுஜன” பத்திரிகைகளும் இந்த பாசிஸ்டுகள் அரசதிகாரத்தை கைப்பற்ற உதவியிருக்கிறார்கள். இந்த வேலையை செய்ததற்கான‌ பலனையும் பெற்றுக்கொண்டனர்.

இப்படி பாசிஸ்டுகள், அவர்களை அரவணைக்கும் பெருமுதலாளிகள், அவர்களின் ஊதுகுழலான ஊடகங்கள், நீதித்துறை, போலீஸ், விசாரணை ஆணையம் போன்ற அரசு கட்டமைப்புகள் என எல்லாம் மக்கள் விரோதமானதாக இருக்கும்போது எத்தனை ஆவணப்படங்கள் எத்தனை முறை உண்மைகளை வெளிக்கொண்டு வந்தாலும் பலனில்லை. வெகுமக்கள் போராட்டங்களே நீதியை வழங்கும் வல்லமை பெற்றது.

ராஜன்

இனவெறியர்களால் சித்திரவதைக்குள்ளாகும் வடமாநில தொழிலாளர்கள்!

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை தாக்கினார்கள் என்ற வதந்தி பரவியதையடுத்து, உண்மை நிலைமை என்னவென்றே தெரிந்து கொள்ளாமல் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான மீம்கள், வீடியோக்கள் சமூகவலைத் தளங்களில் பெரிதளவில் வலம் வந்தன.

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான இவ்வெறுப்புப் பிரச்சாரங்கள் திட்டமிட்டே பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலில், “வடக்கு ரயில் பாவங்கள்” என்ற பெயரில் வீடியோ ஒன்று வெளியானது. 8 மில்லியன் பார்வைகளைக் கடந்த இவ்வீடியோ, “ரயில்களில் ஏறும் வடமாநில தொழிலாளர்கள் யாருக்கும் இடம் கொடுக்காமல் ஆக்கிரமித்து கொள்வார்கள்”; கண்டக்கண்ட இடங்களில் எச்சில் துப்புவார்கள், “பீடாவாயன், வடக்கன்களால் வேலை பறிபோகுது” போன்ற வசனங்கள் மூலம், வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான விஷக்கருத்தைக் கக்குகிறது. “இதுதான் தமிழ்நாட்டின் எதார்த்த நிலைமை”, “வடக்கன்ஸ் ஆதிக்கத்தில் இருந்து மீளுவோம்” போன்ற ஆயிரக்கணக்கான கமெண்டுகளும் இவ்வீடியோக்குக்கீழ் கொட்டி கிடக்கின்றன. “நான் 200 ரூபாய்க்கு வேலை செய்வேன். என் சித்தப்பா 80 ரூபாய்க்கு வேலை செய்வார்” என்ற இவ்வீடியோவில் இடம்பெற்ற வசனங்களை நாம் தமிழர் கூட்டத்தில் பேசி பூரிப்படைகிறார் சீமான்; அதனை நூற்றுக்கணக்கான இளைஞர்படை ஆரவாரத்தோடு ரசித்து வரவேற்கிறது.

படிக்க : நெடுமாறனும் சீமானும் கைக்கூலிகளே! || தோழர் மருது வீடியோ

வடமாநில தொழிலாளர்கள் மீதான இக்கருத்தியியல் தாக்குதல் என்பது அன்றாட வாழ்க்கையில் எதார்த்த நிலையாக மாறி வருகிறது. அண்மையில், இரயில் பயணத்தை மேற்கொண்டிருந்தேன். ஒரு நிலையத்தில், பெண்கள், சிறுவர்கள் என 8 – 10 வடமாநில தொழிலாளர்கள் திடுதிடுமென நான் இருந்த பெட்டியில் ஏறினார்கள். அவர்கள் கொண்டு வந்த மூட்டை பைகளோ அவர்களைவிட இரண்டு மடங்கு அதிகம். லக்கேஜ் வைக்கும் இடங்களில் வரிசையாக தங்களது மூட்டைகளை அடுக்கி, காலியாக இருந்த இருக்கைகளில் படுத்துக் கொண்டனர்.

நேரம் கடந்தது. பெண் ஒருவர் இந்தியில் வீரிட்டு கத்தும் சத்தம் கேட்டு, கண் அசந்திருந்த நான் திடீரென விழித்துக் கொண்டேன். அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என புரிந்துகொள்ள சிறிது நேரமானது.

வடமாநில தொழிலாளர்கள் ஏறிய இரண்டு நிலையங்களுக்கு அடுத்து, கூட்டம் அலைமோதியதால், இருக்கைகளில் படுத்துக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்களை எழுந்து உட்காரும்படி பயணிகள் கூறினார்கள். முன்பதிவு செய்யாத பெட்டியில் உட்கார இடமில்லை என்றால் படுத்திருப்போரை எழுந்திருக்க சொல்வது வழக்கம்தான். ஆனால், வடமாநில தொழிலாளர்கள் நாயைவிட மோசமாக நடத்தப்பட்டனர்.

அப்போது பெட்டியில் ஏறிய 22 – 25 வயதுடைய 3 தமிழ் இளைஞர்கள், இரண்டு வடமாநில தொழிலாளர்களை வற்புறுத்தி கீழே உட்காரச் சொல்லி, அவர்கள் அமர்ந்திருந்த இடங்களை ஆக்கிரமித்தனர். இருக்கைக்கு மேலே லக்கேஜ் வைக்கும் இடத்தில் படுத்திருந்த வடமாநில பெண்ணை எழுப்பி கீழே உட்கார சொன்னபோதுதான் அப்பெண் வீரிட்டு இந்தியில் கத்தினாள். அப்பெண்ணின் மொழி தெரியாது என்றாலும் அவளின் குரலில் இருந்த ஆதங்கம், பயங்கலந்த கோபத்தை யாராலும் புரிந்துகொள்ள முடியும். அப்பெண் கத்தியதையும் பொருட்படுத்தாத பயணிகள் சிலர், இடங்களை ஆக்கிரமிப்பதில் கிடைத்த வெற்றியில் சிலாகித்தப்படி அமர்ந்துகொண்டனர்.

கீழே இறங்க மறுத்த அப்பெண்ணை “இதுலாம் பொம்பளையா. இப்படி பேசுறா”, “என்னடா சொல்றா.. ஒன்னுமே புரியல” என்று அந்த மூன்று இளைஞர்களும் அப்பெண்ணை கலாய்க்க ஆரம்பித்தனர். 15 வயதுடைய ஒரு வடமாநில சிறுவனிடம் கத்திய பெண்ணைச் சுட்டிக்காட்டி “இது உங்க அம்மாவா டா இப்படி கத்துறா” என்றதும் அச்சிறுவனுக்கு ஒன்றும் புரியாமல் சிரிந்தபடி இருந்தான். “இது உங்க அப்பாவா..? இது உங்க அப்பாவா” என சில வடமாநில தொழிலாளர்களைச் சுட்டிக்காடி அவ்விளைஞர்கள் கேட்டனர்.

நேரம் சென்றது, இருந்தும் வடமாநில தொழிலாளர்களை ஏசுவதை அவ்விளைஞர்கள் சிறிதுநொடி கூட நிறுத்தவில்லை. இதில் என்ன வேதனை என்றால் வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒருத்தரும் அவ்விளைஞர்களை எதிர்த்துக் கேள்விக் கேட்கவில்லை என்பதுதான்.

ஆரம்பத்தில் வடமாநில தொழிலாளர்களின் உருவங்களைக் கேலி செய்தவர்கள் பின்னர், “எங்க போற”, “நீங்க (வடமாநில தொழிலாளர்கள்) மட்டும்தான் டிரெயின்ல போகனுமா? ஏன் நாங்கலாம் போகவேண்டாமா”, “இப்படி உட்கார்ந்துகிட்டா நாங்க எப்படி உட்காரது” என்றனர். தங்களுக்கு புரிந்தளவில் பதிலளித்த வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து கேள்விகளால் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டார்கள். கேள்விப் புரியாமல் சிரித்த அச்சிறுவனையும் சில வடமாநில தொழிலாளர்களையும் பார்த்து “சிரிச்சே எங்க பொழப்ப கெடுக்க வந்துருங்கீங்க டா” என்று எரிந்து விழுந்தனர்.

எழுப்பூரில் இறங்கவேண்டிய அவ்வடமாநில தொழிலாளர்களை விழுப்புரத்திலேயே “இதுதான் டா நீங்க இறங்கவேண்டிய இடம். மூட்டை முடிஞ்சலாம் கட்டிக்கிட்டு ஒழுங்கா கீழ இறங்குங்கடா” என்று கத்திக் கொண்டே இருந்தனர். வார்த்தைகளால் தாங்கள் தாக்கப்படுவதைப் புரிந்து கொண்ட வடமாநில தொழிலாளர்கள் எதுவும் பேசமுடியாமல் அமைதியாக இருந்தனர். வடமாநில தொழிலாளர்களை ஏசுவதில் சிறிது நேரம் தங்களது வாயிக்கு ஓய்வு கொடுத்த அந்த இளைஞர்கள், வடமாநில தொழிலாளர்கள் குறித்த சீமானின் இனவெறி வீடியோக்களை சத்தமாக வைத்து கேட்டுக் கொண்டு வந்தனர்.

20 – 25 நிமிடங்கள் அமைதியாக இருந்திருப்பார்கள் அவ்வளவுதான், வீடியோக்களைப் பார்த்துவிட்டு, மீண்டும் “உங்களால தாண்டா எங்களுக்கு வேலை போயிடுச்சு. தமிழ்நாட்டில இருக்குற நாங்க 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறோம். வடக்குல இருந்து அலுங்காம இங்க வந்து 25 ஆயிரம் சம்பாதிச்சிட்டு போறீங்க” என்று சீமான் கக்கியதை எடுத்து வாயில் போட்டு கக்கினான் ஒருவன். “வேலையும் புடுங்குவீங்க, இங்க இடமும் கொடுக்கமாட்டீங்களா டா”.. “டிக்கெட் எடுக்காம சீட்டுல உட்கார்ந்துட்டு வரீங்க” என்று பேசியபடியே, “டேய்.. டிடிஆர் வராரு டா” என்று கத்தி ஏதோ சாதித்ததுபோல் அருவருப்பாக சிரித்தனர்.

இருக்கையில் வடமாநில தொழிலாளருடன் அமர்ந்திருந்த தமிழ் பயணி ஒருவர் சிறுநீர் கழிக்க எழுந்து சென்று திரும்பி வந்து பார்த்தபோது, வடமாநில தொழிலாளர் ஒருவர் அசதியில் இருக்கையில் படுத்துவிட்டார். ”எங்கடா என் இடம்?” என்று கேட்ட அப்பெரியவரிடம், “பாருங்கண்ணா இவனுங்க இப்படிதான் பண்ணுவாங்க. இருக்க இடம் கொடுத்தா முதலாளி மாறி படுத்துக்குவாங்க” என்று அப்பெரியவரின் கோபத்தை ஏற்றிவிட்டான் ஒரு இளைஞன். அப்பெரியவரும் இளைஞர்களுடன் இணைந்து வடமாநில தொழிலாளர்களை ஏச ஆரம்பித்தார்.

படிக்க : அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்க எதிரி!

“உனக்கு அடக்க ஒடுக்கமா உட்கார தெரியாதா டா. கால விரிச்சிக்கிட்டுதான் உட்காருவியா” என்று 15 வயது சிறுவனை பார்த்து கேட்டவர்கள், “ஏன்.. உட்கார இடத்துல கட்டியா. அடங்கி உட்காரு” என மிரட்டினர். ”இங்க ஏண்டா வந்த.. கஞ்சா விக்கதான” என கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவு செய்தனர். மொழி தெரியாத ஊருக்கு பிழைப்புத்தேடி வந்த அச்சிறுவன், இளைஞர்கள் கேட்ட கேள்வியால் பயந்து கூனிக்குறுகிப் போய் அமர்ந்திருந்தான். இரவில் நான்கு மணி நேரமாக துளியும் தூங்கவிடாமல் அவனை நச்சரித்து கொண்டு கேவலமாக சிரித்துக் கொண்டிருந்தனர் அந்த இளைஞர்கள்.

வடமாநில தொழிலாளர்களை சக மனிதர்களாக பார்க்க முடியாத அளவுக்கு இவ்விளைஞர்களுக்கு இனவெறி போதை ஊட்டப்பட்டிருக்கிறது. வேலைத்தேடி குடும்பம், குட்டிகளை விட்டு பல மைல் தூரம் கடந்து வந்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள், அற்பக்கூலிக்காக மாடாய் உழைக்கிறார்கள்; அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. அவர்களை போலதான் உழைக்கும் மக்களான நாமும் சுரண்டப்படுகிறோம் என்ற உணர்வு, இனவெறியால் திரையிட்டு மறைக்கப்படுகிறது.

ஏன் வேலை இல்லை, அந்தந்த மாநிலங்களுக்குரிய வேலைவாய்ப்பை அரசு ஏன் உருவாக்கவில்லை என்று சிந்திப்பதில்லை. லாபம் ஈட்ட வடமாநில தொழிலாளர்களை, குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் மீதோ; குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலத்தவர்களை, இரயில்வே, வங்கிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளாக பணியமர்த்தும் மோடி அரசின் மீதோ இளைஞர் ‘தம்பி’களுக்கு கோபம் வருவதில்லை. சீமான் போன்றவர்களால் ஊட்டப்பட்ட இனவெறியால் நமது எதிரி வடமாநில தொழிலாளர்கள்தான்; அவர்களை நேரடியாகவும் உளவியல் ரீதியாகவும் தாக்குவதன் மூலம்தான் தங்கள் உரிமைகளை மீட்பதாக தப்பெண்ணம் கொண்டவர்கள் இவர்கள். வடமாநில தொழிளார்களுக்கு ஆதரவாக மனிதாபிமான அடிப்படையில்கூட சக உழைக்கும் மக்கள் யாரும் குரல் கொடுப்பதில்லை என்பதுதான் இனவெறியைவிட கொடூரமானது.

ஆதினி

துருக்கி நிலநடுக்க மரணங்கள்: அரசு நிகழ்த்திய படுகொலையே!

0

டந்த பிப்ரவரி 6-ஆம் தேதியன்று துருக்கி – சிரியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 46,000-ஐ நெருங்கியுள்ளது. துருக்கியின் தெற்குப் பகுதியிலும், சிரியாவின் வடக்குப் பகுதியிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கமும், பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டன. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின. தற்போது வரை துருக்கியில் 39,672 பேரும் சிரியாவில் 5,800 பேரும் பலியாகியுள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணி இன்னும் முடிவுறாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

நிலநடுக்கத்தால் துருக்கியில் 10 மாகாணங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,000 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன அல்லது இடிந்து தரைமட்டமாகிவிட்டன. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து கூடாரங்களில் வசித்து வருகின்றனர்.

துருக்கி அமைந்திருக்கும் புவியில் பரப்பு யுரேசிய மற்றும் அரேபிய தட்டுக்களின் (Eurasian and Arabian Plates) எல்லையில் உள்ளது. இவை தவிர, அனடோலிய தட்டும் உள்ளது (Anatolian plate). இத்தட்டுகள் மோதிக் கொள்வதானது வழக்கமான புவியியல் செயல்பாடு. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அரேபிய மற்றும் அனடோலிய தட்டுக்களின் மோதலால் ஏற்பட்டதாகும். இது நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான இயற்கைக் காரணம்.

ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கி மரணித்ததற்கு இயற்கை மட்டுமே காரணம் அல்ல. துருக்கியில் எந்நேரம் வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அறிவியல் உண்மை துருக்கி அரசுக்கு ஒன்றும் தெரியாததல்ல. கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 33,000 நிலநடுக்கங்கள் துருக்கியில் பதிவாகியுள்ளன. அதில் 332 நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 4.0 மற்றும் அதற்கு மேலான அளவில் பதிவாகியுள்ளன.


படிக்க: பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!


துருக்கியின் பூகோள அமைப்பையும் முந்தைய பேரழிவுகளையும் கருத்தில் கொண்டே துருக்கியின் கட்டுமான விதிகள் உருவாக்கப்பட்டன. அவற்றின் படி, கட்டிடங்களைக் கட்டும்போது நிலநடுக்கத்தை எதிா்கொள்வதற்கான பொறியியல் தர அளவுகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், இந்த பாதுகாப்பு விதிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படவில்லை. இதன் விளைவாகவே ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியில் கட்டுமானத் தொழில் என்பது பெரும் இலாபம் கொழிக்கும் ஒன்றாக உள்ளது. வெறும் 8.5 கோடி மக்கள் தொகை கொண்ட துருக்கியில், 2017-ஆம் ஆண்டு நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களின் எண்ணிக்கை 3,30,000 ஆகும். 8.3 கோடி மக்கள் தொகையைக் கொண்ட வளர்ந்த நாடான ஜெர்மனியில் வெறும் 3,800 ஒப்பந்ததாரர்கள் மட்டுமே உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற துருக்கி அதிபர் எர்துவான் “எல்லாம் விதி” என்று கூறியதன் மூலம் அரசுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே உள்ள கள்ளக் கூட்டை மறைக்க முற்படுகிறார். கட்டுமானம் தொடர்பான சட்ட விதிகள் ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்றவாறு பலமுறை மாற்றப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்களும் தாங்கள் ஈட்டும் இலாபத்தை அரசியல் கட்சிகளில் முதலீடு செய்கின்றனர்.

1999-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 17 அன்று துருக்கியின் மர்மாரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 18,000-ம் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த 2001-ஆம் ஆண்டில்‌ நிலநடுக்கத்தை தாங்கும் கட்டிடங்களை கட்டவும் ஆய்வு செய்யவும் புதிய சட்டம் இயற்றப்பட்டது. நவீன தொழில்நுட்ப மற்றும் அறிவியல் தர நிலைகளுக்கு ஏற்ப இச்சட்டத்தின் ஒழுங்குமுறைகள் 2018-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டன.


படிக்க: இந்தோனேசியாவை உலுக்கிய பேரழிவு சுனாமியும், நிலநடுக்கமும் | படக்கட்டுரை


2001-ஆம் ஆண்டின் புதிய சட்டத்திற்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடங்கள் பாதுகாப்பானவையாக கருதப்பட்டன. ஏனென்றால், புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் நிபுணத்துவம் வாய்ந்த தணிக்கை நிறுவனங்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆனால், கட்டுமான நிறுவனங்கள் தணிக்கை நிறுவனங்களை தாமே தேர்வு செய்து கொண்டன. தங்களின் இலாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக தணிக்கை நிறுவனங்களை தாமே தோற்றுவிக்கவும் செய்தன.

நிலநடுக்கத்தின் மையமாக அமைந்த காஹ்ராமன்மராஸ் (Kahramanmaras) நகரில் 2004-ஆம் ஆண்டிற்குப் பின் கட்டப்பட்ட கட்டிடங்கள். நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் இவை கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இவற்றில் பெரும்பாலானவை தரை மட்டமாகிவிட்டன.

இது ஒரு புறமிருக்க, சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டிடங்களை கட்டுவதும் அதிகரித்தது. இந்த சிக்கலை சரி செய்ய எர்துவான் அரசு, 2018-ஆம் ஆண்டில் “கட்டுமான பொது மன்னிப்பு” (construction amnesty) என்ற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது. அதாவது, 2017, டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் சட்ட உரிமம் பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு பதிவு சான்றிதழ் கட்டணத்தை செலுத்தினால் உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அது. இதன் மூலம் ஒரு கோடி மக்கள் பயனடைந்ததாகவும், அரசுக்கு 1600 கோடி துருக்கிய லிரா வருமானம் கிடைத்ததாகவும் எர்துவான் அரசு மார்தட்டிக் கொண்டது.

துருக்கி புள்ளியல் நிறுவனத்தின் கூற்றின்படி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களைச் சேர்ந்த குடிமக்களில் 51 சதவிகிதத்தினர் 2001-ஆம் ஆண்டு புதிய சட்டத்திற்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடங்களில் தான் வசித்து வந்தனர். இப்பகுதிகளில் மொத்தம் 2,94,165 கட்டிடங்கள் சட்ட அங்கீகாரம் பெற்றவை தான். தற்போது தரைமட்டமாகி இருக்கும் கட்டிடங்கள் சட்ட உரிமம் கொடுத்த அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.

இடிந்து விழுந்த கட்டங்களுக்குப் பொறுப்பானவா்கள் என சந்தேகிக்கப்படும் 131 பேரை கைதுசெய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் துணை அதிபா் ஃபுவாட் ஓக்டே (Fuat Okta) கூறியுள்ளார். இதில் 12 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாகும்.

1999-ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்ட போது, சில ஒப்பந்ததாரர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர். அவர்களும் கூட தண்டனை காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டனர். தற்போது எர்துவான் அரசு மேற்கொண்டிருக்கும் கைதுகளையும் இவ்வாறே நாம் காண வேண்டியுள்ளது. துருக்கியில் நிகழ்ந்த இம்மரணங்கள் என்பன லாபவெறி பிடித்த ஒப்பந்ததாரர்களும் ஊழல் மயமான துருக்கி அரசும் இணைந்து நடத்திய சமூகப் படுகொலை ஆகும்.

பொம்மி

‘இந்துராஷ்டிரம்’ அதானிகளின் தேசம்!

தானி குழுமம் பற்றிய ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையால், அதானியின் பங்குமதிப்புகள் மாபெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. உலகப் பணக்காரர்களின் பட்டியலில் மூன்றாம் இடமிருந்த அதானி, இத்தலையங்கம் எழுதப்படும் நேரத்தில் 15-ஆம் இடத்திற்குச் சரிந்துள்ளார். இச்சரிவு மேலும் தொடரலாம்.

எட்டாண்டுகளில் அதானி அடைந்துள்ள பகாசூர வளர்ச்சி, ஊதிப்பெருக்கப்பட்ட பலூன் என்பதை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்திவிட்டது ஹிண்டன்பர்க் அறிக்கை. பல்வேறு மோசடிகளின்மூலம் பங்குச் சந்தையில் தனது குழுமத்தின் பங்குகளைச் செயற்கையாக உயர்த்திக் காட்டி, அதைவைத்து வங்கிகளிடமிருந்து பெற்ற பல கோடி ரூபாய் கடன்களை மூலதனமாகக் கொண்டு வளர்ந்ததே அதானி குழுமம் என்பதை விரிவாக விளக்குகிறது, 106 பக்கங்களைக் கொண்ட ஹிண்டன்பர்க் அறிக்கை.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் போலியாக உயர்த்திக் காட்டப்பட்ட அதானியின் பங்குமதிப்பு 100 பில்லியன் (10,000 கோடி) டாலர்கள். இதை “கார்ப்பரேட் வரலாற்றிலேயே மாபெரும் மோசடி” (The Largest Con In Corporate History) என்று அழைக்கிறது ஹிண்டன்பர்க்.

பங்குச்சந்தை விதிகளின்படி, ஒரு நிறுவனத்தின் பங்குகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் 75 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக் கூடாது. அதானி குழுமத்தில், அதிகபட்ச வரம்பான 75 சதவிகிதத்தையும் அதானி குடும்பமே வைத்துள்ளதோடு, மீதமுள்ள பங்குகளில் 15 சதவிகிதத்தையும் வரியில்லா சொர்க்கங்களான மொரிஷியஸ் மற்றும் கரீபியன் தீவு நாடுகளிலுள்ள பினாமி நிறுவனங்கள் மூலம் அதானி குடும்பமே வைத்துள்ளதை ஹிண்டன்பர்க் அம்பலமாக்கியுள்ளது.


படிக்க: அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்க எதிரி!


நம் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து, கொள்ளையடித்த கருப்புப் பணத்தை இத்தீவுகளுக்கு கொண்டுசென்று, மீண்டும் தனது நிறுவனத்திற்கே அந்நிய முதலீடுகளாகக் கொண்டுவந்துள்ளது அதானி குடும்பம். இத்தருணத்தில், மோடி சொன்ன கருப்பு பண ஒழிப்பு நமது நினைவுக்கு வந்துசெல்கிறது.

நிதி கையாளுகை மற்றும் முக்கிய முடிவெடுக்கும் இடங்களை அதானி குடும்பத்தினரே கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை அம்பலப்படுத்தும் அறிக்கை, அவர்கள் அனைவரும் ஊரை அடித்து உலையில் போட்ட கிரிமினல்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

அதானியின் இளைய சகோதரன் ராஜேஷ் அதானி மீதுள்ள சுங்க வரி ஏய்ப்பு, சட்டவிரோத நிலக்கரி இறக்குமதி குற்றச்சாட்டுகள்; அதானியின் மைத்துனர் சமீர் வோரா மீது பினாமி நிறுவனங்கள் மூலம் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு மோசடி செய்ததான குற்றச்சாட்டு; அதானியின் அண்ணன் வினோத் அதானி, ஹவாலா பணத்தை பினாமி நிறுவனங்களின் மூலம் அந்நிய முதலீடாகக் கொண்டுவந்த வழக்கு; கௌதம் அதானியின் மீதே, மோசடியில் ஈடுபட்டதாக பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி (SEBI) நடத்திய விசாரணைகள் – என பலவற்றை அந்த அறிக்கை சுட்டுக்காட்டுகிறது.

பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்டு பல்வேறு வங்கிகளில் கழுத்து முட்ட கடன் வாங்கிவிட்ட அதானி குழுமம் (கடந்த ஆகஸ்டு நிலவரப்படி, 2.2 லட்சம் கோடி கடன்), ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான, மூன்றே நாட்களில் 5.3 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. அதானியைக் கைதூக்கிவிடுவதற்காக, மோடியின் உத்தரவுக்கு இணங்க அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ. தொழிலாளர் ஓய்வூதிய நிதியம், எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றிற்கும் இந்த நட்டத்தில் பங்கு உண்டு.

அதானி குழுமப் பங்குகளின் வீழ்ச்சியால் எல்.ஐ.சி நிறுவனம் இரண்டே நாட்களில் 16,580 கோடியை இழந்துள்ளது. அதானி குடும்பம் மஞ்சள் குளிக்க, சூறையாடப் பட்டதோ மக்கள் பணம்!


படிக்க: ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியை பற்றி வாய்திறக்காத மோடி அரசு! | தோழர் பரசுராமன் வீடியோ


ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு 413 பக்கத்தில் பதிலறிக்கைக் கொடுத்துள்ள அதானி குழுமம், “ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது, அடிப்படை ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகள்” என்று கூறியுள்ளதோடு, “இது தேசத்தின் மீதான தாக்குதல்” என்று ஒரே போடாக போடுகிறது.

ஹிண்டன்பர்க் அறிக்கையை ‘வெளிநாட்டு சதி’ என்று தூற்றுவதன்மூலம் விவாதத்தை அதானி குழுமமும் பா.ஜ.க கும்பலும் மடைமாற்றத் துடிக்கின்றன; ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான காலகட்டத்தையும், அந்நிறுவனத்தின் பின்னணியையும் அதானியின் மோசடிகளை மறைப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

“ஷார்ட் செல்லிங்” என்ற பங்குச்சந்தை ஊகபேரம் மூலம் பல கோடிக்கணக்கான டாலர்களை லாபமாக ஈட்டும் நிறுவனம் ஹிண்டன்பர்க். ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறையும் என்று முன்கூட்டியே கணித்து, அதை தரகர்களின் மூலம் வாங்கி விற்பதால் லாபம் ஈட்டுதலே “ஷார்ட் செல்லிங்” எனப்படுகிறது. கடந்த ஜனவரி 27-ஆம் தேதி அதானி குழுமம் 20,000 கோடி மதிப்புள்ள தனது பங்குகளை விற்பதாக அறிவித்திருந்த வேளையில், 24-ஆம் தேதி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது.

அதானியைப் பற்றிய அறிக்கை வெளியிட்டதன் மூலம் ஹிண்டன்பர்க் பல கோடி டாலர்களை லாபமாகப் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘நடுநிலையாளர்கள்’ அல்லது ‘பொருளாதார அறிஞர்கள்’ என்று கூறப்படுவோரில் பலர், இந்த கோணத்திலான விவாதங்களில் பங்கேற்பதன் மூலம் மையமான பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்கிறார்கள். ஹிண்டன்பர்க் ஒரு ஷார்ட் செல்லர் என்பது வெளிப்படையானது. ஆனால், அதன் மூலம் அந்நிறுவனத்தின் அறிக்கை “ஆதாரமற்றது”, “அவதூறானது” என்று எந்த பொருளாதார அறிஞர்களும் கூறத் துணிய முடியாது.


படிக்க: நாட்டை சூறையாடிய கொள்ளைக்காரனே அதானி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!


டெஸ்லா, டிவிட்டர் உள்ளிட்டு இதுவரை 30 பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடிகளை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியுள்ளது; அவற்றில் ஒன்றுகூட ஆதாரமற்றது என்று நிரூபிக்கப்பட்டதில்லை.

நாடே அதானியின் அயோக்கியத்தனத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில், இத்தருணத்தில் முக்கியமாகப் பேசவேண்டிய பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி, எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. பங்குச் சந்தையில் அதானி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை செபி பலமுறை குற்றஞ்சாட்டி விசாரித்துள்ளது. இவ்வழக்குகளில், பெரும்பாலானவை, அற்பமான அபராதத் தொகையோடு முடித்துவைக்கப்பட்டு அதானி மேலும் சூதாட அனுமதிக்கப் பட்டார். சில வழக்குகள் ஓராண்டுக்கும் மேலாக விசாரணையில் உள்ளன. ஹிண்டன்பர்க் அறிக்கையானது, செபியின் இந்நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளது.

இன்னும் சில நாட்களில் அதானிக்கு முட்டுக் கொடுத்தோ அல்லது “இதுகுறித்து விசாரிக்கிறோம்” என்றோ செபியின் சார்பில் அறிக்கை வெளியாகலாம். ஆனால், அவையெல்லாம் வெறும் நாடகமே.

எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ, செபி, ரிசர்வ் வங்கி உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளும் அதானியின் மோசடிக்கு தெரிந்தே துணை போயிருக்கின்றன என்பதுதான் ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் அம்பலமாகும் விசயம். எனவே, அதானி குழுமத்தின் மோசடி என்பது, தனியொரு கார்ப்பரேட் நிறுவனத்தின் மோசடியல்ல. இதுதான் அதானிக்கு பலம். அவரது பாக்கெட்டில், பாரதப் பிரதமர் மோடியே இருக்கிறார் எனும்போது, அவருக்கென்ன கவலை!

ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள கேள்விகள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இதேநேரத்தில், இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தைக் கட்டமைப்பதற்காக 9,500 கோடி மதிப்புள்ள டெண்டரை அந்நாட்டு அரசிடமிருந்து பெற்றுள்ளார் அதானி. மக்களின் பணத்தை மொட்டையடித்து, அதானிக்கு ‘ஜாமின்’ வழங்குவதற்கு ஒரு நாட்டின் அரசே இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான், இஸ்ரேல் பிரதமரும் மோடியின் நண்பருமான பெஞ்சமின் இவ்வொப்பந்தத்தை அதானிக்கு அளித்துள்ளார்.

வரும் 2024-க்குள் இந்துராஷ்டிரத்தை அறிவிக்க வேண்டும் என்று கூச்சல் போடும் காவி வெறியர்கள், இந்துராஷ்டிரம் “இந்துக்களுக்கான ராஜ்ஜியம்” என்று நம்மை ஏமாற்றிவருகிறார்கள். அதானியை அம்பலப்படுத்தும் அறிக்கையை, “தேசத்தின் மீதான தாக்குதல்” என்று சித்தரிப்பதன் மூலம், இந்துராஷ்டிரம் யாருக்கான தேசம் என்பதை தெளிவுபடுத்தி விட்டார்கள் காவி பாசிஸ்டுகள்!


புதிய ஜனநாயகம்
தலையங்கம்
பிப்ரவரி 2023

நெடுமாறனும் சீமானும் கைக்கூலிகளே! || தோழர் மருது வீடியோ

சீமானும் நெடுமாறனும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகள் தான். அவர்கள் ஆர்.எஸ்.எஸ்-ன் அஜண்டாவைத்தான் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதிலே யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. எப்போதெல்லாம் இந்த ஆளும்வர்க்கம்(ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிஸ்டுகள்) அம்மனமாகி நிர்கிறதோ, அப்போதெல்லாம் அவர்களை பாதுகாக்க வருகிறார்கள் இவர்கள்.

மேலும்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வேங்கை வயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு! | மக்கள் அதிகாரம்

14.02.2023

வேங்கை வயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு!
இது ஆதிக்க சாதி வெறியர்களை பாதுகாக்கும் அரசு!

பத்திரிகை செய்தி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை திட்டமிட்டு கொட்டியவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தாங்களே மனிதக் கழிவைக் கொட்டியதாக ஒப்புக் கொள்ளச் சொல்லி தாழ்த்தப்பட்ட மக்களை  போலீஸ் தொடர்ச்சியாக சித்திரவதை செய்தது.

இதற்கு எதிராக தொடர்ந்து மக்கள் குரல் கொடுத்ததன் விளைவாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இப்பொழுதும் கூட குடிநீரில் மனிதக் கழிவு கொட்டிய விவகாரத்தில், தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சிபிசிஐடி போலீசு வற்புறுத்துவதாக தாழ்த்தப்பட்ட மக்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று மனு அளித்திருக்கிறார்கள்.

மனித சமூகம் உருவாகி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆன பிறகும் சாதி ரீதியாக இழிவுப்படுத்துவதற்காக மனிதக் கழிவை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் கொட்டிய விவகாரம் உலகை உலுக்கினாலும் அது ஒருபோதும் சாதி வெறியர்களையும் தமிழ்நாடு போலீசையும் கொஞ்சம் கூட அசைத்துப் பார்க்கவில்லை என்பதே உண்மை. அவர்கள் இதை பெருமையாகவும் மனு நீதியாகவே கருதுகிறார்கள்.

படிக்க : மதுரை: தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினரின் கொலைவெறித் தாக்குதல்!

மனிதக் கழிவை கொட்டிய விவகாரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுட்டிக் காட்டும் நபரை விசாரிக்காத போலீசு, ஆதிக்க சாதி வெறியர்களை விசாரிக்காத போலீசு, தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது ஆக மிகவும் கொடூரமான விஷயமாகும்.

ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியும் ஆளும் வர்க்கமும் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் அனாதைகளாக நிற்கிறார்கள் என்பதே உண்மை. அவர்களுக்கு ஆதரவாக மட்டுமல்ல நீதிக்காக நம்முடைய போராட்டம் தொடர வேண்டும்.

ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவான போலீசின் நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் இச்செயலில் ஈடுபட்ட போலீசு அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

ஆதிக்க சாதி வெறியர்களின் கூடாரமான இந்த அரசுக் கட்டமைப்பை இனி ஒரு போதும் பயன்படுத்த முடியாது. ஆதிக்க சாதி வெறி சங்கங்களை தடை செய்யவும் ஆதிக்க சாதி வெறியர்களை சமூகமே புறக்கணிக்கவும் சாதி என்பது இழிவு என்ற கருத்தினை மக்கள் மத்தியில் தொடர்ந்து விதைக்கவும் நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்க எதிரி!

டந்த இரு ஆண்டுகளும் வரலாற்றில் மிகக்கொடிய ஆண்டுகள். கொரோனா எனும் கொடிய வைரஸினால் உலகமே நிலைகுலைந்து, கொத்துக்கொத்தாய் மக்கள் மாண்டு போயினர். உலகமே தம் உயிரைக் காக்க போராடிக் கொண்டிருந்த போது, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடிக்க போட்டியிட்டுக் கொண்டிருந்த சிறுகும்பலும் இருக்கவே செய்தது. அதில் முதன்மையான நபர் அதானி. அப்போது அவருடைய ஒருநாள் வருமானம் 1,002 கோடி.

ஒரு சாதாரண ஜவுளித்தொழில் செய்யும் வணிகக் குடும்பத்தில் பிறந்த இவரால் எப்படி இவ்வளவு வருமானம் ஈட்ட முடிந்தது? எப்படி உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடிக்க முடிந்தது? ஒரே காரணம், மோடி – அதானி கூட்டணி. 2001 இல் மோடி குஜராத்தின் முதல்வரான பின்பே அதானியின் தொழில்களும் சொத்தும் வளரத் தொடங்கின. அதானியின் பல வணிக விரிவாக்கங்கள் மற்றும் தொழில் வளர்ச்சிகளே மோடியின் குஜராத் மாடலாகக் காட்டப்பட்டன என்றால் அது மிகையாகாது.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போது, மோடியை ஆதரித்துப் பேசி பாதுகாத்தவர் அதானி. இப்படுகொலைகளுக்காக இந்தியத் தொழில் முனைவோர் கூட்டமைப்பு மோடியைக் கண்டித்தது. அப்போது கூட்டமைப்பின் உள்ளிருந்தே அதை எதிர்த்த அதானி, மோடிக்காக கூட்டமைப்பை விட்டு விலகப்போவதாகவும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். அந்தளவுக்கு மோடி-அதானி கூட்டணி அப்போதே வலுவாக இருந்தது.

மோடிக்கு மட்டுமல்ல, அவரது சிந்தாந்தத் தலைமையான ஆர்.எஸ்.எஸ்.க்குமே நெருக்கமானவர் அதானி. ஆர்.எஸ்.எஸ்-ன் தலைமையகமான நாக்பூர் அலுவலகத்தில் நடந்த ஷாகாக்கள், முக்கியக் கூட்டங்களில் அதானி கலந்து கொண்டிருப்பதை “நரக மாளிகை” என்னும் நூலின் ஆசிரியர் சுதீஷ் மின்னி அம்பலப்படுத்தியுள்ளது, அதானி – காவி உறவுக்கு ஓர் சான்று.


படிக்க: விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !


2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குஜராத் வைப்ரண்ட் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 15,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்தார் அதானி. அதானி பராமரித்து வந்த முந்த்ரா துறைமுகம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட இருந்த சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டத்திற்காக 15,946 ஏக்கர் நிலத்தை ஒரு சதுரமீட்டர் 1 முதல் 32 ரூபாய் வரை என அடிமாட்டு விலைக்குத் தூக்கிக் கொடுத்தார் மோடி. அந்நிலத்தையே அரசுப் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு, 1 சதுரமீட்டர் 600 ரூபாய் என உள்குத்தகைக்கு விட்டார் அதானி.

குஜராத் அரசே இயற்கை எரிவாயுவை வெளிச்சந்தையில் வாங்கி, குறைவான விலைக்கு அதானி நிறுவனத்துக்கு விற்றது; அதானி நிறுவனம், குஜராத் மின் வாரியத்திற்கு ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய மின்சாரத்தை வழங்காத போது, குறைவான தண்டத்தொகையையே அரசு வசூலித்தது; முந்தரா துறைமுகத்தின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு அதானிக்கு விற்றது என இக்கூட்டணி செய்த முறைகேடுகள் கணக்கில் அடங்காதவை. இம்முறைகேடுகளின் மூலம் கோடிகோடியாய் மக்கள் பணத்தைக் கொள்ளையிட்ட அதானி, அடுத்தடுத்த தொழில்களில் கால்பதித்து பெரும்பணக்காரர் பட்டியலில் இணைந்து கொண்டார்.

2009 ஆம் ஆண்டு தன்னுடைய தனித்தனி தொழில்களுக்காக 11 நிறுவனங்களைத் தொடங்கினார். 2012 ஆம் ஆண்டு முதல் சூரிய மின் உற்பத்தியில் கால் பதித்தார். 2012 -2013 நிதியாண்டில் அதானி குழுமத்தின் ஆண்டு வருமானம் 47,352 கோடியாக அதிகரித்தது. ஆனால், 2000 ஆம் ஆண்டில் அதானி குழுமத்தின் மொத்த வரவு செலவு 3,300 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2013 வரை குஜராத்தை மையமாகக் கொண்டு தன்னுடைய கொள்ளையை நடத்திக் கொண்டிருந்த அதானி, 2014 இல் மோடி பிரதமரானதும் இந்தியா முழுக்க விரிவுபடுத்த ஆரம்பித்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அதானியின் சொந்த விமானத்திலேயே பறந்து சென்றார் மோடி. அதானியின் விமானத்தில் மோடி பறக்கப் பறக்க, அதானி நிறுவனங்களின் பங்குகள் மேலேமேலே ஏறின. அதானியின் 3 நிறுவனங்களின் பங்குகள் கிட்டதட்ட 85.35% வளர்ச்சி கண்டன.

தேர்தலில் வென்று மோடி பிரதமரான பிறகு, அதானி குழுமமானது மின்னல் வேகத்தில் வளரத் தொடங்கியது. பிறரது தொழில் நிறுவனங்களை மொத்தமாக விலைக்கு வாங்குவதன் மூலம் தன் தொழிலை மேலும் விரிவுப்படுத்தியது. 2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், தாம்ரா துறைமுகத்தை 5,500 கோடிக்கு எல்&டி மற்றும் டாடா ஸ்டீலிடம் இருந்து வாங்கியது. அடுத்து மூன்று மாதங்களில் 1200 மெகாவாட் அனல்மின் நிலையத்தையும், அதற்கடுத்த மூன்று மாதங்களில் 600 மெகாவாட் அனல்மின் நிலையத்தையும் விலைக்கு வாங்கியது.


படிக்க: அதானியே நமோ நமஹா!


பிறரது தொழில் நிறுவனங்களை வாங்குவது ஒரு வழிமுறை என்றால், தனக்கு முன் அனுபவம் இல்லாத துறைகளில் எல்லாம் தன் தொழிலை விரிவுபடுத்துவது மற்றொரு வழிமுறை. வானூர்தி நிலையத் தொழிலுக்குத் துளியும் சம்மந்தம் இல்லாத அதானி குழுமத்திற்கு 6 விமான நிலையங்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் 2019 பிப்ரவரியில் தரப்பட்டது. இதற்காக அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் என்ற தனி நிறுவனத்தையே புதியதாக உருவாக்கியது அதானி குழுமம். அதே போல் 5ஜி அலைக்கற்றையை வாங்கியதன் மூலம் தொலைத்தொடர்பு துறையிலும் நுழைந்திருக்கிறது.

இதன் விளைவாக அதானி குழுமம், நிலக்கரி துரப்பனம் மற்றும் வணிகம், துறைமுகங்கள், மின்சாரம், எரிவாயு உற்பத்தி மற்றும் பகிர்மானம் போன்ற துறைகளில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக வளர்ந்துள்ளது. பிற துறைகளிலும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. இதனூடாகவே பிற நாடுகளிலும் தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது.

மோடி இந்தியப் பிரதமரான உடனேயே, அதானியின் சர்வதேசக் கொள்ளைக்கு அடிக்கோல் நாட்ட ஆரம்பித்தார். அதானிக்காக, மோடியே ஆஸ்திரேலியாவிற்கு நேரடியாகச் சென்று நிலக்கரிச் சுரங்கத்தை பேரம்பேசி வாங்கிக் கொடுத்தார். அதற்காக 6500 கோடியையும் எஸ்பிஐ வங்கியில் இருந்து தூக்கிக் கொடுத்தார். இத்திட்டம் மட்டுமின்றி, அதானி குழுமத்தின் மொத்த வளர்ச்சிக்கும் அடிநாதமாக இருந்து வருவது வங்கிக்கடன்களே. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டு தள்ளுபடி செய்யப்படும் பல்லாயிரம் கோடிகளே, அதானி – அம்பானி உள்ளிட்ட பெரும்பணக்காரர்களை உருவாக்கி வருகின்றன. கோடானுகோடி உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை, வங்கிச் சேமிப்பைச் சூறையாடிக் கொடுத்து, அதானிகளை உருவாக்குவதை அரசு தனது முதன்மைப்பணியாக செய்து வருவதே இதற்கு அடிப்படை. இப்பகல் கொள்ளைக்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர் ‘தேசத்தின் வளர்ச்சி’.

ஆஸ்திரேலியா சுரங்க ஒப்பந்தத்தைப் போல, இலங்கை மின்சார ஒப்பந்தத்தையும் மோடியே பேரம்பேசி முடித்துக் கொடுத்தார். “இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தத்தால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்க தன்னைப் பணித்தார்” என அப்போது இலங்கையின் மின் வாரியத் தலைவராக இருந்த ஃபெர்டினாண்டோவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஒரு நாட்டில் மின்சார உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி மின் உற்பத்தி செய்து, அந்நாட்டு அரசிற்கே மின் விநியோகம் செய்வது ஒரு வழிமுறை என்றால், ஒரு நாட்டில் மின் உற்பத்தி செய்து, வேறொரு நாட்டிற்கு மின் விநியோகம் செய்வது அதானி குழுமத்தின் மற்றொரு வழிமுறை. வங்கதேசம் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்ய இரண்டாவது வழிமுறையே பின்பற்றி வருகிறது  அதானி குழுமம்.

டிசம்பர் 2022 முதல் வங்கதேசத்திற்கு அனுப்பவிருக்கும் 1,600 மெகாவாட் மின்சாரத்தை ஜார்கண்டில் உள்ள கோட்டா அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்கிறது. இதற்கான ஒப்பந்தம் பங்களாதேஷ் பவர் டெவெலப்மண்ட் போர்ட் (BPDB) உடன் 2017 ஆண்டே போடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் இந்தியா வந்த வங்கதேசப் பிரதமர், அதானியுடன் நடத்திய சந்திப்பின் மூலம் இவ்வொப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிருக்கும் அரசுகளைப் போலவே, வங்கதேச அரசும் அதானியிடம் இருந்து அதிகப்படியான விலைக்கே மின்சாரத்தை வாங்குகிறது. அதானியிடம் இருந்து 1 கிலோ வாட் மின்சாரத்தை 3.26 டாக்காவுக்கு வாங்குகிறது. இந்த விலையானது அந்நாட்டு மின்சார நிறுவனங்கள் இதே அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவை விட அதிகமாகும்.


படிக்க: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! மாநாட்டுத் தீர்மானங்கள்


இதேபோல் மொராக்கோவில் மின்சாரம் மற்றும் உமிழ்வு இல்லாத எரிபொருளை (பசுமை ஹைட்ரஜன்) உற்பத்தி செய்து ஐரோப்பிய யூனியனுக்கு விநியோகம் செய்ய உள்ளதாக அதானி குழுமம் கூறியுள்ளது. 10 ஜிகாவாட் மின்சாரத்தை விநியோகம் செய்யும் இத்திட்டமானது, இந்தியாவிற்கு வெளியே மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மின் உற்பத்தி திட்டமாகும்.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் 50 பில்லியன் டாலரை முதலீடு செய்வதன் மூலம், உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக மாறுவதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது அதானி குழுமம். இதற்காக பிரான்ஸ் நாட்டு டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

நிலக்கரிச் சுரங்கம், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் மட்டுமில்லாமல், சில நாடுகளில் சரக்குப் போக்குவரத்துத் துறைமுகங்களையும் அதானி துறைமுகம் கைப்பற்றிவருகிறது. 2017-ஆம் ஆண்டு மலேசியாவில் போர்ட் கிளாங் துறைமுகத்தின் விரிவாக்கமாக கேரி தீவில் ஒரு மெகா கொள்கலன் துறைமுகத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் அதானி குழுமம் ஈடுபட்டது.

அதே போல் 2022 ஜூலையில் இஸ்ரேலின் மத்தியத் தரைக்கடல் கடற்கரையில் உள்ள ஒரு முக்கிய வர்த்தக மையமான ஹைஃபா துறைமுகத்தை அதானி குழுமம் கைப்பற்றியது. உள்ளூர் இரசாயன மற்றும் தளவாடக் குழுமமான கடோட் உடன் கூட்டணி அமைத்துக்கொண்டு இத்துறைமுகத்தைக் கைப்பற்றியது. இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கான பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய பெரும்பாலும் கடல்வழியையே நம்பி உள்ளது. ஹைஃபா துறைமுகமே இஸ்ரேலுக்கான கண்டெய்னர் சரக்குகளில் கிட்டதட்ட பாதியைக் கையாளுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அடிப்படையில் அதானி குழுமம் இத்துறைமுகத்தைக் கைப்பற்றியது முக்கியமானது என்றாலும், அதை விட முக்கியமாக அதானி குழுமமானது இத்துறைமுகம் மூலம் இந்தியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போக்குவரத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. அதைவிட, மலேசியாவில் உள்ள கேரி, இஸ்ரேலில் உள்ள ஹைஃபா மற்றும் இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் மூலம் அதானி குழுமமானது ஒரு ஒருங்கிணைந்த உலகப் போக்குவரத்தை உருவாக்கும் நோக்கத்தை மையமாகக் கொண்டே இயங்கிவருகிறது.

இப்படி அதானி குழுமமானது 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளில் அதானியின் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. இதே சமயத்தில் அதானி குழுமத்தின் கொள்ளைக்கெதிராக – சுற்றுச்சூழல் அழிப்பிற்கெதிராக குஜராத், கேரளா, தமிழ்நாடு என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கேரளாவில் அதானியின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக, அங்குள்ள  மக்கள் தற்போது தீவிரமாக போராடிவருகிறார்கள்.

கார்ப்பரேட் கொள்ளையர்களின் வேட்டைக்காடாக நாட்டை மாற்றுவதையே வளர்ச்சி – முன்னேற்றம் என புளுகி மக்களை ஏமாற்றி வரும் மோடியின் துணைகொண்டு, இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் தன் நாசகாரக் கொள்ளையை விரிவுபடுத்தி வருகிறார் அதானி. இந்த வகையில், அதானி இந்தியப் பாட்டாளி வர்க்கத்திற்கான எதிரி மட்டுமல்ல, சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் எதிரியும்கூட. எனவே, அதானியை வீழ்த்தும் போராட்டத்தில் இந்தியப் பாட்டாளி வர்க்கம், சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துடன் ஒன்றிணைவது அவசியம். மோடி-அதானி கூட்டணியை முறியடிக்கவும் இது அவசியம்.

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 இதழ்)