Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 126

ப்ளீஸ் செத்துப் போவதற்குள் ஒரு முறையாவது சொல்லிவிடு ! வந்தே மாதரம் | கவிதை

வந்தே மாதரம் !

ப்ளீஸ் செத்துப் போவதற்குள் ஒரு முறையாவது சொல்லிவிடு !
வந்தே மாதரம்

வந்தே மாதரம்
இங்கு ஒருபோதும்
கிடைக்காது சுதந்திரம் !

மணிப்பூர் ,ஹரியானா
………. மறக்க முடியாத கனவுகள் இவை !

காஷ்மீர் தொடங்கி
பாபர் மசூதி வரை
கயர்லாஞ்சி தொடங்கி நாங்குநேரி வரை
ஒவ்வொரு ஆண்டும்
மறையாத வடுக்களின் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டே செல்கின்றன !

காலையில் கண்ணாடியை பார்க்கும் பொழுது தெரிகிறது
முகம் முழுக்க வடுக்கள்!

கல்வி முதல் காடு, மலை, கழனி வரை எல்லாம் தனியாருக்கு !

கோபுரம் முதல் கருவறை வரை அத்தனையும் அய்யருக்கு !
எங்கே இருக்கிறது சுதந்திரம்?

நடக்க
படிக்க
உடுக்க
சுவைக்க
விதைக்க
வழிபட
எதற்கும் இல்லை சுதந்திரம்!

இது சுதந்திர தினம்!

வேங்கை வயலில் என் முகத்தில் வழிந்த பீயை துடைத்துக் கொண்டே சொல்லட்டுமா?
வந்தே மாதரம் !

மணிப்பூர் தாய்மார்கள்
கும்பல் பாலியல் வன்முறையில்…..
சிதறிய குருதியை துடைத்துக் கொண்டே சொல்லட்டுமா ?
வந்தே மாதரம் !

டாக்டருக்கு படிக்க
25 லட்சம் !
வழியின்றி அப்பனும் மகனும் தூக்கில் தொங்க
எரித்த சாம்பல் கண்ணில் விழுகிறது !
இருந்தாலும் சொல்லி வைக்கிறேன்
இதற்குப் பெயர்தான் சுதந்திரம் !

கல்வி நிலையங்கள்
தொழிற்சாலைகள்
விவசாய நிலங்கள்
சிறு தொழில்கள்
எல்லாம் மடிவதற்காக காத்திருக்கின்றன
கூடவே கோடிக்கணக்கான மக்களும் !

செத்துப் போவதற்குள் ஒருமுறையாவது சொல்லி விடுங்களேன் ! வந்தே மாதரம்

செத்துப் போவதற்குள் ஒரு முறையாவது செல்பி எடுத்து விடுங்களேன் !

ஜெய்ஹிந்த்
வந்தே மாதரம்
சுதந்திரம்
ஜனநாயகம்
புரியாத பாஷைகளை
ஜெபிக்க வேண்டுமாம்!

ஆண்டவர்
கழுத்தை அறுத்துக் கொண்டே கட்டளை இடுகிறார்!

ஆண்டவரையும் அதானிகளையும் எதிர்க்காமல் ஒருபோதும் நமக்கு சுதந்திரம் கிடைக்காது!
மூச்சு விடவும் முடியாது!

தெரியாமல் இல்லை என்னதான் இருந்தாலும் என்று இழுப்பவர்களுக்கு
கொடியை நெஞ்சில் குத்தாதீர்கள்
வாயில் குத்துங்கள்.

-மருது

மக்கள் போராடும்போது களத்தில் நிற்க வேண்டும் | தோழர் திலகவதி

மக்கள் போராடும்போது களத்தில் நிற்க வேண்டும் | தோழர் திலகவதி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கை!

ந்தியா முழுவதுமுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பாட பிரிவில் புதிதாக சுவடியியல் (Manuscriptology) மற்றும் தொல்லெழுத்தியல் (Paleography) ஆகிய பாடங்களுக்கான பாடத் திட்டத்தை வடிவமைக்க சிறப்புக் குழு ஒன்றை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நிறுவியுள்ளது.

தேசிய சுவடியியல் திட்டக்குழுவின் முன்னாள் இயக்குநர் பிரபுல்லா மிஸ்ரா தலைமையில் 11 பேர் கொண்ட இக்குழுவில், ஐஐடி மும்பையின் பேராசிரியர் மல்ஹர் குல்கர்னி, குஜராத் பல்கலைக்கழகத்தின் மொழிப்பள்ளியின் முன்னாள் இயக்குநர் வசந்த பட் மற்றும் டெல்லி என்.சி.இ.ஆர்.டி.யின் சமஸ்கிருதப் பேராசிரியர் ஜதீந்திர மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவைக் கொண்டு சுவடியியல் மற்றும் தொல்லெழுத்தியல் ஆகிய பாடங்கள் சிறப்பு பாடமாகவோ அல்லது தேர்வு பாடமாகவோ (elective) வடிவமைக்கப்படும். சுவடியியல் பாடம் மூலம் கைகளால் எழுதப்பட்ட வரலாறு, இலக்கியம் ஆகியவற்றின் ஆவணங்களையும், தொல்லெழுத்தியல் பாடம் மூலம் பழங்கால, இடைநிலை எழுத்து முறைகளையும் ஆய்வு செய்யலாம் என்று கூறப்படுகிறது.

படிக்க : ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் திட்டமே மணற்கேணி | ஆசிரியர் உமா மகேஸ்வரி

இது தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்ட இந்திய அறிவு முறையை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாகும் என்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் யுஜிசி தலைவருமான ஜெகதேஷ் குமார். மேலும், பல்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட பண்டைய கையெழுத்து பிரதிகள், தத்துவம், அறிவியல், இலக்கியம் மற்றும் மதம் உள்ளிட்ட பரந்த அளவிலான பாடங்களை இது உள்ளடக்கியது என்கிறார் ஜெகதேஷ் குமார். இத்தகைய பாடத் திட்டங்கள் பல்கலைக்கழகங்களால் உடனடியாக ஏற்றுகொள்ளப்படலாம் என்றும் கூறுகிறார்.

தத்துவம், அறிவியல், இலக்கியம் என்று இவர் கூறவருவது என்ன? பிள்ளையாருக்கு யானை தலையை ஒட்ட வைத்த பிளாஸ்டிக் சர்ஜரி தொழில்நுட்பம், புற்றுநோயை குணப்படுத்த மாட்டு மூத்திரம், ராமாயணத்தில் விமானம், அர்ஜூன் பயன்படுத்திய அணுசக்தி அம்புகள், மனுஸ்மிருதி தத்துவம், வேத இதிகாச வரலாறு என அடுக்ககடுக்கான பொய்களையும் புராண குப்பைகளையும் கொட்டுவதைதான்.

இதுமட்டுமல்ல மேற்கூறிய பாடங்கள் நாட்டின் பன்முகத்தன்மையை வளர்ப்பதற்கும் அதன் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம்வாய்ந்ததாக இருக்கும் என்று புளுகுமூட்டையை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். ஆனால், இப்பாடத் திட்டத்திற்கான 75 சதவிகித கையெழுத்து பிரதிகள் சமஸ்கிருதத்தில்தான் உள்ளது என்றும் மற்ற பிராந்திய மொழிகளில் வெறும் 25 சதவிகிதம்தான் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

அதாவது இப்பாடத் திட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் செத்து புதைந்து போன சமஸ்கிருத மொழியை மீட்டுருவாக்கம் செய்வதும் புராண குப்பைகளை ஆவணம் செய்வதும்தான் நடக்கபோகிறது.

படிக்க : அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்? | ஆசிரியர் உமா மகேஷ்வரி

பன்முகத் தன்மையை வளர்ப்பதாக கூறும் இவர்கள் கடந்த காலத்தில் சமஸ்கிருதத்திற்கும் பிற மொழிகளை மேம்படுத்தவும் எடுத்த நடவடிக்கைகளை ஒப்பிட்டு பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழி மேம்பாட்டுக்கு ரூ.22.94 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதுவே சமஸ்கிருதத்தை மேம்படுத்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. இது இதர 5 மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகியவற்றுக்கு செலவிடப்பட்ட மொத்த தொகையான ரூ.29 கோடியை விட 22 மடங்கு அதிகம் என மத்திய கலாச்சார அமைச்சகத்தின் தகவல்கள் கூறுகின்றன. மேலும், 2020-ஆம் வரை ஒடியா மற்றும் மலையாளம் மொழிக்களுக்கு வளர்ச்சி மையங்களே அமைக்கப்படவில்லை; நிதியும் ஒதுக்கப்படவில்லை.

இதனை சாதாரண விஷயமாக கடந்து செல்லமுடியாது. 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு, பள்ளி கல்வி பாடத் திட்டங்களில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் பாசிச பா.ஜ.க.வின் கல்வியை காவிமயமாக்கும் மற்றொரு நடவடிக்கை இது.

ஆதினி

அனிதாவும் ஜெகதீஸ்வரனும் நம்மிடம் நீட்-ஐ ஒழியுங்கள் என்கிறார்கள் | தோழர் செல்வம்

நேற்று அனிதா இன்று ஜெகதீஸ்வரன்:
நம்மை கேட்கிறார்கள் அநீதியான நீட்-ஐ ஒழியுங்கள் என்று | தோழர் செல்வம்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஃபயாஸ்தின்கள் உருவாகிறார்கள் ஜெகதீஷ்வரன்களால்! | கவிதை

ஃபயாஸ்தின்கள் உருவாகிறார்கள் ஜெகதீஷ்வரன்களால்!

தூரத்தில் கேட்டது இடிமுழக்கம்!
எங்கோ வானம் குமுற
நனையாமல் ஒதுங்கி நின்றான்!

இப்போது
அவனருகில் மரண ஓலம்!
வெடித்து எழாமல்
வேறு என்ன செய்வான்?

எத்தனை கணம் தெரியுமா உங்களுக்கு
ஜெகதீஷின் பிரேதம்!
தோளில் சுமந்தவனை கேளுங்கள்..
நிறைவேறா கனவும் சேர்ந்த சுமை அது!

போராட வருகிறேன் எனச் சொன்ன
தந்தையும் தனயன் வழி போகினார்!
இதயம் ஒன்றுதானே இருக்கிறது
இரண்டு வலிகளை எப்படி சுமப்பது?

அனிதா ஓரிடம்!
ஜெகதீஷோ வேறிடம்!
நீட் பலிபீடம் என்னவோ ஒன்றுதான்..

ஹேஷ்டேக்கில் நீதி தேவைவில்லை ஜெகதீஷ்வரன்களுக்கு!
களத்தில் இறங்குகிறார்கள் ஃபயாஸ்தின்கள்!

பணமிருப்பதால் பிரபஞ்சன்கள் மருத்துவர் ஆகிறார்கள்!
இல்லை என்பதால் ஜெகதீஸ்வரன்கள் மண்ணுக்குள் போகிறார்கள்!
இந்த உண்மையை புரிந்துகொண்டதால் ஃபயாஸ்தின்கள்
நீதி கேட்கிறார்கள்!
நாம் என்ன செய்யப் போகிறோம்?

தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்
அது டார்வின் தியரி!
பிழைத்திருக்க ஒரே தகுதி பணம் மட்டுமே
இது கார்ப்பரேட் தியரி!

பணம் மட்டுமே குறிக்கோள்!
அது ஃபயாஸின் பணமாயிருந்தால் என்ன?
ராபர்ட்டின் பணமாயிருந்தால் என்ன?
கார்ப்பரேட் ஏற்றுக் கொள்ளும்!
காவியும் வழிகாட்டும்!

அன்று அனிதாவிற்கு வைத்த கொள்ளி
இன்று ஜெகதீஷை பற்றிக் கொண்டது!
நாளை இது செந்தீயாய் சுழன்றடிக்கும்!
பாசிஸ்டுகளை அது கொளுத்தும்!

நாம் ஒன்றிணைந்தால் ஜெகதீஷ்வரன்கள் இறப்பதை தடுக்க முடியும்!
ஆனால் ஃபயாஸ்தின்கள் உருவாவதை அவர்களால் ஒருபோதும் தடுக்க முடியாது!

அனிதா, ஜெகதீஷ் போல முடிவெடுக்காதீர்கள் என கலங்குபவர்களே!
ஃபயாஸ்தின்கள் களமிறங்குகிறார்கள்
கரம் கொடுப்போம்!

– செங்குரல்

ஏன் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடை செய்ய வேண்டும்? | தோழர் அமிர்தா

ஏன் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடை செய்ய வேண்டும்?
Why RSS – BJP should Ban? | Comrade Amirtha

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடியவரையே குற்றவாளியாக்கும் திருவாரூர் போலீசு!

16.08.2023

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடியவரையே
குற்றவாளியாக்கும் திருவாரூர் போலீசு!

மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் பொருளாளர் தோழர் முரளியை அச்சுறுத்தும் திருவாரூர் மாவட்ட போலீசை கண்டிப்பதுடன் தொடர்புடைய போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

திருவாரூர் – விளமல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னர் தோழர் முரளி வைத்துள்ள பெட்டிக் கடையில் மதுவிலக்கு போலீசார் இரண்டு பேர் வந்து ” நீ சாராயம் விற்கிறாயா” என்று கேட்டுள்ளனர்.

படிக்க : மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை உடனே மூடு!

தோழர் முரளி மக்கள் அதிகாரத்தில் இருப்பதாகவும் “சாராயத்துக்கு எதிரானவன் எப்படி சாராயம் விற்பேன்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பின் அந்த மதுவிலக்கு போலீசார் இருவரும் சென்றுவிட்டனர். ஆனால், இது குறித்து டி. எஸ்.பி இடம் புகார் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி இது பற்றி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் “தவறுதலாக வந்து விட்டனர், இனிமேல் வர மாட்டார்கள்” என்று உறுதி அளித்துள்ளார்.

ஆனால் நேற்றைய தினம்(15.08.2023) தோழர் முரளி தன் கடையை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தபோது, கொரடாச்சேரி போலீசு நிலையத்தில் இருந்து இரண்டு போலீசு (ஒருவர் சீருடையும் மற்றொருவர் சாதாரண உடையிலும் இருந்தனர்) வந்து கள்ளச்சாவி போட்டு கடையை திறந்து உள்ளே சென்றுள்ளனர்.

இதை பார்த்த தோழர் முரளி யார் என்று கேட்டபோது, “நீங்கள் சாராயம் விற்பதாக செய்தி வந்தது. அதை உறுதிப்படுத்த சோதனை செய்கிறோம்” என்று கூறியுள்ளனர். பிறகு போலீஸ் அந்த இடத்திலிருந்து சென்றுள்ளது. பூட்டி இருக்கும் கடையை திருட்டுத்தனமாக திறந்து பார்ப்பதற்கு போலீசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடுவோர் மீது திருட்டுத்தனமாக மது விற்ற வழக்கு போட முயல்கிறது. இதன் மூலம் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது போலீசு.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாதிவெறி அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ் – இந்து முன்னணி போன்ற சங் பரிவார அமைப்புகளும் தங்குதடையின்றி செயல்படுகின்றன. மக்களுக்காகப் போராடுவோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சேர்ப்பது, ரவுடிகள் பட்டியலில் சேர்ப்பது போன்ற அநீதியான நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட போலீஸ் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தோழர் முரளி கோப்பு படம்

அதன் தொடர்ச்சியாகவே தோழர் முரளி மீது சட்டவிரோத மது விற்பனை என்ற பொய்யான காரணம் சொல்லி அச்சுறுத்தல் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது திருவாரூர் மாவட்ட போலீஸ்.

தோழர் முரளி மீதான அராஜக நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டப் போலீசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் மக்களுக்காக போராடுபவர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் குருசாமி,
மாநில இணைச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321

ஏன் தமிழ்நாட்டை பற்றி ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்குகிறார்கள்? | தோழர் மருது

ஏன் தமிழ்நாட்டை பற்றி ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்குகிறார்கள்? | தோழர் மருது

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இலாபவெறிபிடித்த முதலாளித்துவ சமூகத்தில்… | கவிதை

இலாபவெறிபிடித்த முதலாளித்துவ சமூகத்தில்…

வியாக்கியானம் புதிதல்ல…
முதலாளித்துவம் தனது சவக்குழியை
தானே தோண்டுகிறது என
முன்னறிந்து சொன்ன மார்க்சின் தீர்க்கமாக
பார்வை புதிது!

மரணம் புதிதல்ல…
தூக்குமேடை ஏறி கண்களை திறந்து
மரணத்தை எதிர்கொண்ட
பகத்சிங்கின் துணிச்சல் புதிது!

வாழ்வது புதிதல்ல…
இட்லரை வீழ்த்த மகனை பறி கொடுத்த
ஸ்டாலின் போல வாழ்வது தான் புதிது…

போராட்டம் புதிதல்ல…
மக்களுக்கு புரிய வைத்து
போராடுவதுதான் புதிது!

முரண்பாடு புதிதல்ல…
அதை விவாதித்து
தீர்க்கமுயல்வது தான் புதிது!

உண்பது புதிதல்ல…
பகிர்ந்து உண்பதுதான் புதிது!

வாழ்வது புதிதல்ல…
நேர்மையுடன் வாழ்வதுதான் புதிது!

அரசியல் பேசுவது புதிதல்ல…
எந்த வர்க்கத்திற்காக பேசுகிறோம் என்ற
புரிதலுடன் பேசுவதுதான் புதிது!

கல்வி பயில்வது புதிதல்ல…
உழைப்போர் நலன்கருதி
செயல்படுவதுதான் புதிது!

புதியவன்

ஆதிக்கச் சாதி வெறியர்களை சமூகப் புறக்கணிப்பு செய்வோம் | தோழர் ரவி

ஆதிக்கச் சாதி வெறியர்களை சமூகப் புறக்கணிப்பு செய்வோம் | தோழர் ரவி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்

மோடி ஏன் அதிர்ச்சி அடைந்தார்? | தோழர் மருது

மோடி ஏன் அதிர்ச்சி அடைந்தார்? | தோழர் மருது

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நீட் மருத்துவ மாணவர்களுக்கான பலிபீடம்!

நீட் எனும் பலிபீடத்தில்; தொடர்ந்து பலியாகும் மாணவர்கள்!

டந்த ஆகஸ்டு 14-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்த, ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் நீட் தேர்வில் இரண்டுமுறை தேர்ச்சி அடைந்தும் மருத்துவக்கனவை அடைய முடியாததால் துயரம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் தாளாமல் மறுநாள்(15/08/2023) காலை, அவரது தந்தை செல்வசேகரனும் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

ஜெகதீஸ்வரன் சென்னை சைத்தன்யா சிபிஎஸ்இ பள்ளியில் படித்துள்ளார். 12-ஆம் வகுப்பில் A-கிரேடு’ல் 85 சதவிகிதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் “ஆகாஷ்”(Aagash) எனும் தனியார் நீட் பயிற்சி நிறுவனத்தில் கடந்த 2 வருடம் நீட் தேர்வு பயிற்சிப் பெற்றுள்ளார். இறப்பதற்கு முன்புதான் மூன்றாவது முறையாக பயில்வதற்கு பதிவு செய்துள்ளார்.

ஜெகதீஸ்வரன் தந்தை செல்வசேகரன் 14/08/2023 அன்று ‘சிட்டலப்பாக்கம்’ காவல்நிலையத்தில் நீட் தேர்வினால் தனது மகன் தற்கொலை செய்து கொண்டார் என்று புகார் அளித்தார். அதன்பின் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் தான் போட்டோகிராபர் தொழில் செய்வதாகவும், ஒற்றை பெற்றோராக (single parent) இருந்து தன் மகனை வளர்த்து வந்துள்ளேன் எனவும் தெரிவித்தார். மேலும் “நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் போராட வேண்டும்” என தனது இறுதி வார்த்தைகளை உருக்கமாகத் தெரிவித்தார்.

படிக்க : தொடரும் மரணங்கள்: நீட் தேர்வை தடை செய்ய களமிறங்குவோம் | தோழர் யுவராஜ்

ஜெகதீசனுக்காக வாதாடும் அவரது நண்பர் ஃபயாஸ்தின் சிபிஎஸ்இ பள்ளியில் படித்தவர், நீட் தேர்வுக்காக தனியார் கோச்சிங் சென்டருக்கு போய் படித்தும், 160 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால், ரூபாய் 25 லட்சம் செலவுசெய்து ஒரு தனியார் கல்லூரியில் சீட் வாங்கியிருக்கிறார். “எனது அப்பா பொருளாதாரத்தில் கொஞ்சம் மேலே இருந்ததால், நான் எம்.பி.பி.எஸ்  சேர்த்துள்ளேன்.

ஆனால் அந்தப் பணம் இல்லாததால் அதிக மதிப்பெண் பெற்ற எனது நண்பன் ஜெகதீசனை நாங்கள் இழந்து விட்டோம்!” மேலும், “உனக்கு கிடைத்த  வாய்ப்பு முக்கியமானது அதை வைத்து மக்களுக்கு சேவை செய்” என்று ஜெகதீஸ்வரன் கூறியதாக உருக்கமாகவும், மனக் குமுறல்களுடனும்  ஃபயாஸ்தின் தெரிவித்தார்.

அதேபோல் “சிபிஎஸ்இ பள்ளியில் படித்த மாணவர்கள் எங்களுக்கே இந்த நிலைமை என்றால் அரசு பள்ளி மாணவர்கள் இதனை எவ்வாறு எதிர்கொள்ள இயலும்” என ஃபயாஸ்தின் கேள்வி எழுப்பினார்.

000

முன்னதாக, ஆளுநர் மாளிகையில் ஆகஸ்டு 11-ம் தேதி நடந்த, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு மாணவியின் தந்தை “எப்போது நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப் போகிறீர்கள்” என்று ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு திமிர் பிடித்த வகையில் பதிலளித்த ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆளுநர்  ஆர்.என்.ரவி “நான் உள்ளவரை கண்டிப்பாக நீட்டை ரத்து செய்ய மாட்டேன்” என்று தமிழ்நாட்டு மண்ணில் இருந்து கொண்டே கொக்கரித்தார்.

கேள்வியெழுப்பியவர் அத்துடன் நிறுத்தாமல் ஒன்றிய அரசு ஊழியராக நான் இருந்ததால் என் மகளை படிக்கவைக்க முடிந்தது; நீட் தேர்வால் பணம் இருப்பவர்கள் மட்டுமே படிக்க முடிகிறது என்றும், இதனால் “கோச்சிங் சென்டர்களுக்கு தான் லாபம்” என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கும் போதே அவரிடமிருந்து மைக் பிடுங்கப்பட்டது.

மேலும் அம்மேடையில் ஆளுநர் சிபிஎஸ்இ பாடத்திட்டம்தான் சிறந்த பாடத்திட்டம், அது தான் நீட் தேர்விற்கு தேர்ச்சிப் பெற உதவும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் சிபிஎஸ்இ பள்ளியில் படித்த ஜெகதீஸ்வரன் போன்ற மாணவர்கள் தனியார் கோச்சிங் சென்டர்களுக்கு போயும் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதும், தற்கொலை செய்து கொள்வதும் இந்த பொய்களை தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.

“நேற்று அனிதா இன்று ஜெகதீஸ்வரன் நாளை உங்களுடன் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம். அனிதாவின் வலி இப்போதுதான் எங்களுக்குப் புரிகிறது” என்று குமுறுகிறார் ஃபயாஸ்தின்.

நீட் தேர்வினால் கொலைசெய்யப்பட்ட அனிதா தொடங்கி அரசு பள்ளியில் படிக்கின்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் தான் நீட் தேர்விற்கு எதிராகப் போராடுகிறார்கள் என்ற வாதம் ஆளும் வர்க்கத்தினரால் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு வந்தன.

ஆனால் அதை சுட்டெரிக்கும் விதமாக ஜெகதீஸ்வரனின் மரணமும், அவரின் நண்பர் ஃபயாஸ்தினின் பேட்டியும், ஆளுநர் மாளிகையில் மாணவியின் தந்தை ஒருவர் நீட் தேர்வுக்கு எதிராக  எழுப்பிய கேள்வியும் நீட் தேர்வுவை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கை என்பதை மறுபடியும் உணர்த்தியுள்ளது.

“தேசிய தேர்வு முகமை” மூலம் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு நீட் (NEET) என்ற நுழைவுத் தேர்வை நடத்தி ‘தகுதி’ என்ற பெயரில் மாணவர்களின் உயிரையும், அவர்களின்  மருத்துவ கனவையும் காவு வாங்கி வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

இன்று மருத்துவம் என்பது  கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தின் கூறுவது போல்,  “பணம் உள்ளவன்தான் எம்.பி.பி.எஸ் படிக்க முடியும், அப்படி பணம் கொட்டி படிப்பவர்கள் மீண்டும் பணம் பார்க்கத்தானே பார்ப்பார்கள்” என்பதுதான் உண்மை.

மருத்துவம் என்னும் சேவைத் துறையை பணம் பறிக்கும் வணிகமாக மாற்றியுள்ளது நீட் தேர்வு. இந்த நீட் தேர்வினால் மட்டும் தமிழ்நாட்டில் கடந்த 4-5 ஆண்டுகளில் இருபது மாணவர்களுக்கு மேல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை தாக்கல் செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி 2 முறை ஆளுநரிடம் ஒப்புதல் கேட்டால் முதலில் தனது நாற்காலி அடியில் போட்டு அமர்ந்து கொண்டு பின்பு தமிழக மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

குடியரசு தலைவர் இது குறித்து விசாரணை செய்துள்ளாரா? என தெரிவதற்கு முன்னரே மேலும் ஒரு உயிர் பலியாக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், இன்னும் எத்தனை உயிர்களை பலிக் கொடுத்து கொண்டே இருப்போம் என்ற கேள்வி நம்மை நோக்கி எழுப்பப்படுகிறது தானே!

ஜெகதீஸ்வரன் தந்தை செல்வசேகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்துகொண்ட ஜெகதீஸ்வரனின் நண்பர்கள் “இன்னும் எத்தனை ஜெகதீசனை, எத்தனை அனிதாவை இழக்கப்போகிறோம்?” என்று பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்கள். இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டை நோக்கியும் எழுப்பப்பட்ட கேள்விகள்.

படிக்க : எங்களை மன்னித்துவிடு ஜெகதீஸ்வரன்! நாங்கள் சுரணையற்றவர்களாக இருக்கிறோம்!

உதயநிதி அளித்த பேட்டியில், “சட்டப் போராட்டம் தான் ஒரே தீர்வு, இல்லையென்றால் தெருவில் இறங்கி போராட வேண்டியதுதான். தமிழக மாணவர்கள் போராடினால் திமுக அதற்கு ஆதரவு தரும்” என்றார். இனி சட்டப்போராட்டத்தால் தீர்வில்லை, களப்போராட்டமே நீட்டை ரத்து செய்யும் என்று ஆளுங்கட்சி அமைச்சர் தரும் ஒப்புதல் வாக்குமூலம் இது.

இனியும் சட்டப்போராட்ட மாயைகளுக்குள் நாம் ஒளிந்து கொண்டு இருந்தால் நீட் தேர்வால்  மாணவர்கள் பலியாவதை நம்மால் ஒருபோதும் தடுக்க முடியாது.

அனிதா முதல் ஜெகதீசன் தற்கொலை வரை நமக்கு உணர்த்துவது அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதைதான்! அதை வார்த்தை மூலமாகவே ஜெகதீசன் தந்தை நமக்கு உணர்த்திவிட்டு சென்றுள்ளார் “நீட்டுக்கு எதிராக போராட்டம் பண்றதுக்கு ரெடி, தமிழ்நாடு மக்கள் ஒத்துழைத்தால், தமிழ்நாட்டிலிருந்து மட்டுமில்லை இந்தியாவில் இருந்து கூட நீட் தேர்வை எடுத்து விட முடியும்” என்றார்.

இதைப் பற்றிகொண்டு தமிழ்நாட்டு மக்களும் மாணவர்களும்தான் போராட்டக் களத்திற்கு வரவேண்டியுள்ளது. “நீட் தேர்வை ரத்து செய்” என்று முழங்க வேண்டியுள்ளது.

தென்றல்

தொடரும் மரணங்கள்: நீட் தேர்வை தடை செய்ய களமிறங்குவோம் | தோழர் யுவராஜ்

தொடரும் மரணங்கள்: நீட் தேர்வை தடை செய்ய களமிறங்குவோம்
– தோழர் யுவராஜ்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆரிய பார்ப்பன கூட்டம்தான் தமிழ்நாட்டின் எதிரி | தோழர் மருது

ஆரிய பார்ப்பன கூட்டம்தான் தமிழ்நாட்டின் எதிரி | தோழர் மருது

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நெல்லையில் தொடரும் சாதிய படுகொலைகள்!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி நெடுந்தெருவில் கடந்த ஒன்பதாம் தேதி சின்னத்துரை என்கிற பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவனை அவனுடன் ஒரே பள்ளியில் படிக்கும் தேவர் சாதி மாணவர்கள் மூவர் வீடு புகுந்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

கழுத்தை நோக்கி வீசிய அரிவாளை கையால் தடுத்ததால் வலது கையிலும், தோள்பட்டை, தொடை, கால் என உடலில் சுமார் 10 இடங்களில் வெட்டுப்பட்ட சின்னத்துரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறான்.

அண்ணனை வெட்டுவதை தடுக்க வந்த சின்னத்துரையின் தங்கையின் கைகளிலும் வெட்டி இருக்கிறார்கள். இதை பார்த்து  சின்னத்துரையின் தாத்தா அதிர்ச்சியில் இறந்து போனார்.

இந்தக் கொடூரத்தை கேள்விப்பட்டு தமிழகமே பதறியது. நெல்லை மாவட்டம் அதிர்ந்து போனது. தொடர்ந்து சில தினங்களாக அடுத்தடுத்து கொலைகள் மற்றும் கொலைவெறித் தாக்குதல்கள் நெல்லையை சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் பள்ளி மாணவர்கள் கைகளில் அரிவாள் ஏந்தி சக மாணவனை சாதியின் பெயரால் அரிவாளால் வெட்டியது, எல்லோர் மனதிலும் பேரதிர்ச்சியையும், அச்சத்தையும் உண்டு பன்னியது.

படிக்க : நாடாளுமன்றம் பஜனை மடம்: எதிர் கட்சிகளே மக்களிடம் செல்லுங்கள்! | தோழர் வெற்றிவேல்செழியன்

இந்த விசயத்தில் நாங்குநேரி பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் பயத்தில் உறைந்து கிடக்க தேவர் சாதி அமைப்புகள் தொலைக்காட்சிகளிலும், யூடியூப் சேனல்களிலும்  திமுக,  மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் ஆறு பேரை கைது செய்த போலீஸ் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தது.

மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வித குற்ற உணர்ச்சியோ பயமோ இன்றி இதில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டவர்கள் நடந்து கொண்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஏற்கனவே பெருந்தெருவை சுற்றியுள்ள மூன்று ஊர்களை சேர்ந்த  தாழ்த்தப்பட்ட  மக்கள்  சாதியின் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் வாழவும் வழி தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஊரை காலி செய்து போயிருக்கிறார்கள். தேவர் சாதி வெறியர்களால் உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்  என்றால் தேவர் சாதி மாணவர்களால் சின்னத்துரை  கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறான்.

பள்ளிக்கூடம் போகும்போது பேருந்தில் தங்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்க சொல்லி தேவர் சாதி மாணவர்கள் மிரட்டுவது,  தங்களுடைய புத்தகப் பையை சுமக்க வைப்பது, சிகரெட் வாங்கி வரச் சொல்வது என தொடர்ந்து சின்னத்துரையை சாதியக் கண்ணோட்டத்தில் வேலை வாங்கி இருக்கிறார்கள்.

சின்னத்துரையிடமே அவனது அம்மாவை பற்றியும் அவதூறாக பேசியிருக்கிறார்கள். இதனால் மனம் உடைந்த சின்னத்துரை  பள்ளிக்கூடம் போகக் கூடாது என முடிவு எடுத்திருக்கிறான்.  ஊரை விட்டு செல்லவும் தயாராயிருக்கிறான்.  உறவினர் அழுத்தி கேட்கவே நடந்த கொடுமைகளை அவர்களிடம் கூறியிருக்கிறான்.

விசயம் பள்ளிக்கு தெரிய, சம்பந்தப்பட்ட மாணவர்களை விசாரிக்க முடிவு எடுத்திருக்கிறது பள்ளி நிர்வாகம். ஆனால் இந்த விசயம் கேள்விப்பட்டு, எங்கள் மீது புகார் கொடுக்க உனக்கு எவ்வளவு தைரியம் என ஆத்திரமடைந்த மாணவர்கள் சின்னத்துரையை வீடு புகுந்து வெட்டி உள்ளனர்.

சக மாணவனை உடன் படிக்கும் மாணவர்களே எவ்வாறு சாதிய வன்மத்தோடு வெட்டிக் கொலை செய்யும் அளவிற்கு போக முடிகிறது? எங்கிருந்து இவர்களுக்கு இவ்வளவு தைரியம் வருகிறது?  தேவர் சாதி அமைப்பான நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பைச் சேர்ந்த மகாராஜன் மற்றும் சில தேவர் சாதி அமைப்புகள் தாக்குதலை கண்டிப்பதாக பேசிவிட்டு தேவர் சாதியினர் பாதிக்கப்படும்போது வராமல் இப்போது ஏன் வருகிறது என போராடுபவர்களையும், திமுகவையும் கேள்வி கேட்கிறார்கள்.

இதன் மூலம் ஒட்டுமொத்த தேவரின மக்களுக்கும் தாங்கள்தான் அத்தாரிட்டி என்பதாகவும் மேற்கொண்டு இம்மாதிரியான செயலை செய்யத் தூண்டும் விதமாக தார்மீக ரீதியான ஆதரவையும் கொடுக்கிறார்கள்.

“நாங்குநேரியில் பாண்டி பய கம்பெடுத்தா சங்கரன்கோவில் வரை சர்க்கார் வண்டி ஓடாதாம்..”, “போற்றிப் பாடடி பொண்ணே..” போன்ற பாடல்கள் தென் மாவட்டங்களில் ஒவ்வொரு தேவர் சாதி நிகழ்ச்சிகளிலும் போடப்படும்.  இது போன்ற பாடல்கள் தூபம் போட சாதிய அமைப்புகள் உடன் இருந்து வழிநடத்த மாணவர்கள் கையில் அரிவாள் ஏந்தும் நிலை இன்று வந்துள்ளது.

இதுவே போதுமானதாக இருக்கிறது. மேலும் புகார் அளித்த சின்னத்துரையை வெட்டிய மாணவர்களின் ஒருவரின் பாட்டி  கண்டித்ததாகவும், உரிய நேரத்தில் வராத போலீசை கண்டித்து மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் செய்த போது வெட்டிய மாணவர்களின் உறவினர்கள் வந்து விரட்டி விட்டதாகவும் நேரில் பார்த்தோர் கூறுகிறார்கள்.  புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இதற்கு காரணம் மாமன்னன் திரைப்படம் தான் என்று கூறுகிறார்.

நெல்லை பகுதி பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனோ, இது சாதிய தாக்குதல் அல்ல, சாதாரணமாக மாணவர்களுக்கு இடையில் நடக்கும் ஈகோ பிரச்சனை தான் என்கிறார். ஆனால் பாதிக்கப்பட்ட சின்னத்துரை, எது நடக்கக்கூடாது என்று நான் நினைத்து பயந்தேனோ அது  நடந்துவிட்டது என்று பிபிசிக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருக்கிறான். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு  சிறுவன் அறிந்திருந்த சாதிய வன்மத்தை இவர்கள் அறியாதது போல நடிப்பது கேவலமானது.

படிக்க : நாங்குநேரி கொடூரம்: மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிவெறி!

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஆதரவாக ஜனநாயக முற்போக்கு சக்திகள் களத்தில் இறங்க தேவர் சாதி அமைப்புகளும், பா.ஜ.க.வும், அதன் கைக்கூலிக்  கட்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக களம் இறங்குகின்றன. இதை இணைத்துப் பார்க்கும்போது ஏதோ மிகப்பெரிய சதி திட்டம் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

தமிழகத்தை கைப்பற்ற துடிக்கும் காவி கும்பலுக்கு இம்மாதிரியான சாதிய அமைப்புகளை வைத்துக்கொண்டு கலவரத்தை ஏற்படுத்துவது கைவந்த கலை. இதை எழுதிக் கொண்டிருந்த வேளையில் நெல்லை பகுதி பாளையங்கோட்டை அருகில் உள்ள கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளர் சாதியைச் சேர்ந்த ஒருவரை கூலிப்படையினர் வெட்டி கொலை செய்ததாக மேலும் ஒரு தகவல் வந்திருக்கிறது.

பெரியார் மண், சமூக நீதி என்று பேசும் தமிழ்நாட்டில் தான் இத்தகைய சாதி படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்குள்ளாகவே திருநெல்வேலி பகுதியை சுற்றி பல்வேறு சாதிய கொலைகளும், தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில்  முத்தையா என்ற அருந்ததிய இளைஞர் காதல் பிரச்சினையால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் இதை மூடிமறைத்த போலீசு ஒரே சாதியை சேர்ந்தவர்களுக்கு இடையிலான பிரச்சனை எனக்கூறி இந்த குற்ற செயலில் ஈடுபடாத சிலரை கைது செய்து வழக்கை திசை மாற்றியது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் இதை கண்டித்து முத்தையாவின் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர். பத்து நாட்களாக நடந்த போராட்டத்தின் இறுதியில் முத்தையாவின் உடலை வாங்கவில்லை எனில் போலீசே அவரது உடலை எரித்து விடும் என  நீதிமன்றம் எச்சரித்தது.

முத்தையாவின் மரணத்திற்கு நீதி கேட்டு நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல அமைப்பின் தலைவர்கள் வந்திருந்த போதிலும் யாருக்கும் அமர்வதற்கு இருக்கை போடுவதற்கு கூட போலீசு அனுமதிக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சாதிய படுகொலைகளை மூடிமறைப்பது, திசை மாற்றிவிடுவது, நீர்த்துப்போகச் செய்வது ஆகியவற்றை  இந்த அரசு கட்டமைப்பு தொடர்ந்து செய்து வருகிறது. இதை முத்தையாவின் படுகொலையின் மீதான அரசின் நடவடிக்கையின் வாயிலாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

இதன் அடுத்த கட்டமாக சின்னதுரையின் மீதான இந்த கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மென்மேலும் நடக்காமல் இருக்க இந்த அரசு கட்டமைப்பிடமே நாம் தீர்வை  தேட முடியுமா?

தாழ்த்தப்பட்ட மாணவரான சின்னதுரையின் மீதான இந்த தாக்குதலை கண்டித்து 12- 8- 2023 அன்று நெல்லை ரயில் நிலையம் அருகில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. மக்கள் அதிகாரம் சார்பாக நெல்லை மண்டல இணைச் செயலாளர் தோழர் கின்ஷன் கலந்துகொண்டு தன்னுடைய கண்டன உரையை பதிவு செய்தார்.

அவரது பேச்சில், கல்வியில் சீர்திருத்தம் தேவை என்பதையும், ஆதிக்க சாதிப்பிரிவில்  இருக்கும் ஜனநாயக சக்திகளையும் பிற உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைத்து எடுத்துச் செல்லும்போதுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதையும் பதிவு செய்தார்.

ஜனநாயகப்படுத்தப்படாமல் பிற்போக்குத்தனமாக இருக்கும் இந்த சமூக அமைப்பே சாதிய சங்கங்கள் வளர்வதற்கு ஒரு விளைநிலமாக இருக்கிறது. சட்டத்தின் வழியாக மட்டுமே இதை மாற்ற இயலுமா? ஆதிக்க சாதிகள் பெரும்பாலும் சட்டத்தின் வழி நடப்போம், ஜனநாயகத்தை காப்போம் என கூறுவதில்லை. பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களும், இயக்கங்களுமே சட்டத்தின் வழி தீர்வு சட்டத்தை நடைமுறைப்படுத்து எஸ்.சி, எஸ்.டி ஆக்ட்டில் கைது செய்!  போன்ற முழக்கங்களை முன் வைக்கின்றன.

இதன் மூலம் இந்த சட்டத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்றாலும் வேறு மாற்று வழி தெரியாததால் இதையே கடைபிடிக்க வேண்டியதாக உள்ளது. ஆனால் இந்த சட்டத்தின் வழி இது சாத்தியமா? விதிவிலக்காக  ஒரு சில சம்பவங்களில் இந்த சட்டம் குற்றவாளிகளை தண்டித்து இருக்கிறது.

படிக்க : ஆதிக்கசாதி வெறியர்களின் கொட்டத்தை அடக்குவோம்!

ஆனால் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க இந்த சட்டம் உதவுமா? அப்படி இல்லையெனில் இந்த சட்டத்தின் வழியாக நிவாரணம் தேடுவது சரிதானா?  சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கு என்ன வழிமுறையை முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் கையில் எடுக்க வேண்டும் என்பதை ஆழமாக பரிசீலிக்க வேண்டிய தருணம் இது.

நேதாஜி சுபாஷ் சேனை போன்ற ஆதிக்க சாதி சங்கங்களையும், பா.ஜ.க மற்றும் அதன் கைக்கூலிக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என நாம் முழங்க வேண்டிய தேவை இருக்கிறது. இக்கட்டுரையை படித்து தேவர் சாதியை சேர்ந்த யாரேனும் அனைத்து தேவர்சாதி மக்களும் சாதி வெறியர்களல்ல என சீறினால்  நம்மீது அவர்கள் கோபம் கொள்ள வேண்டியதில்லை.

மாறாக  அவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் இந்த சாதி சங்கங்களை எதிர்த்து முறியடிப்பதும், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராடுவதுமே சரியான வழிமுறையாக இருக்கும்.

செங்குரல்