Wednesday, June 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 126

இணையவழி கல்வி உதவித் தொகை விண்ணப்பம்: பாதிக்கப்படும் ஆதிராவிடர்-பழங்குடி மாணவர்கள்!

இணையவழி என்று மாணவர்களை வஞ்சிக்காமல் மாணவர்களிடம் விண்ணப்பத்தை நேரடியாக  பெற்று உதவி தொகையை வழங்கிடு!

ரசு கலைக் கல்லூரியில் படிக்கும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக  வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை இந்த முறை இணையவழியில்  பூர்த்தி செய்ய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இணையவழியில் எப்படி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்வது, அதற்கு என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்ற வழிகாட்டுதலை  இதுவரை அரசும் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களுக்கு வழங்கவில்லை. அதற்கான இணைய வசதிகளும் அரசு கல்லூரிகளில்  கிடையாது.

ஒவ்வொரு ஆண்டும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு 4000 முதல் 8000 வரை கல்வி உதவித் தொகையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு 1000 முதல் 2000 வரை கல்வி உதவித் தொகையும்  அரசு சார்பில் மாணவர்களின் வங்கி கணக்கில்  செலுத்தப்பட்டு வருகிறது.  ஆனால் இந்த ஆண்டு அதற்கான விண்ணப்பத்தை ஜனவரி மாதம்   மாணவர்களிடம் கொடுத்து கைகளால் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒவ்வொரு துறையின் வகுப்பு  ஆசிரியரும் ஜனவரி இறுதியில் வாங்கி கொண்டனர்.

ஆனால் தீடிரென்று  பிப்ரவரி 1 தேதி எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல்  இதுவரை கைகளால் பூர்த்தி செய்யப்பட்ட  கல்வி உதவி தொகைக்கான விண்ணப்பத்தை இணைவழியில் மீண்டும் பதிவு செய்ய வேண்டுமென அரசு சார்பில் சுற்றறிக்கை கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது.  விண்ணப்பத்தை பதிவு செய்து முடிக்க வேண்டிய காலக்கெடுவும், பிப்பிரவரி 1 முதல் 15 வரை, நிர்ணைத்துள்ளது அரசு.

ஆனால் இதுவரையிலும் இணைவழியில் கல்வி உதவி தொகைக்கான விண்ணப்பத்தை பதிவு செய்த அனுபவம் இல்லாத மாணவர்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

படிக்க: கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

அரசு சார்பில் இணையவழியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முதலில் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் தேவைப்படுகிறது. ஆதார் கார்டு எண் போட்டவுடன் அந்த தொலைபேசி எண்ணிற்கு வரும்   OTP யை பயன்படுத்தி அடுத்தகட்ட  விண்ணப்பத்திற்குள் செல்ல முடியும். ஆனால் ஆதார் கார்டு எடுத்த தருணத்தில் பெரும்பாலான மக்களிடம் தொலைபேசி கிடையாது. அப்பா இல்லையென்றால் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் தொலைபேசி எண் தான் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால் முதல் பக்கம் விண்ணப்பத்தை கூட பூர்த்தி செய்ய முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். எல்லா மாணவர்களும் ஒரே நேரத்தில் விண்ணப்பம் பூர்த்தி செய்ய அரசு வழங்கப்பட்ட‌ இணைப்பிற்குள் செல்வதால் தொடர்ச்சியாக இணையவழி பிரச்சினைகளும் வந்து கொண்டிகிறது. TN யுடன் தொடங்கும் புதிய  வருமானவரி சான்றிதழும், கணினி வழியாக பெறப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ்களும் அரசு வழங்கிய இணைப்பில் குறிப்பிட்ட தேதிக்குள் பதிவேற்றப்பட வேண்டும். ஆனால் அதிகப்படியாக மாணவர்கள் அட்டை வடிவிலான சான்றிதழ் தான் வைத்துள்ளனர் இதனால் எதன் அடிப்படையில் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறதோ அந்த முக்கிய ஆவணத்தை கூட  மாணவர்களால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை.

இணையவழியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சொல்லிய அரசை  கண்டித்தும் கால நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியும் 6-2-2022 அன்று திருவாரூர் திரு.வி.க கலை கல்லூரியிலும், 7-2-2023 நன்னிலம் அரசு கல்லூரியிலும், 8-2-2023 திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியிலும் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த உதவித் தொகையை பெறக்கூடிய மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள், இவர்கள் இதுவரை  இதுபோன்ற இணையவழிகளை பயன்படுத்தியது கிடையாது அதை பற்றி வழிகாட்டுதலையும் அரசு வழங்காமல் இருக்கிறது. இந்த கல்வி உதவி தொகை மூலம் தான்  ஒரளவு தன்னுடைய கல்லூரி கட்டணத்தையும், தேர்வு செலவுகளையும், போக்குவரத்து செலவுகளையும் மாணவர்கள் சமாளித்து வருகின்றனர். ஆனால் அதை தடுப்பதற்கு அரசு இணையவழி என்ற முறையை கொண்டுவந்துள்ளது.   100 ரூபாய் செலவு செய்து கணினி ‌மையத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய அளவிற்கு மாணவர்கள் யாரும்  தயாராக இல்லை. 100 ரூபாய் செலவாகும் என்பதால் அந்த விண்ணப்பங்களை பதிவு செய்யாமல் மாணவர்கள் விட்டு விடுகின்றனர்.

படிக்க: பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் போராட்டம்! பாராமுகம் காட்டிவரும் தமிழக அரசு!

முந்தைய ஆண்டுகளில் கைகளால்  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நிர்வாகத்தில் நேரடியாக கொடுத்திருந்த போதும் சில மாணவர்களுக்கு இன்றுவரை உதவி தொகை வராமல் இருக்கிறது.  இப்படி இருக்கையில் இணையவழி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் வங்கி கணக்கோடு ஆதார் எண் இணையவில்லை, வாங்கி கணக்கோடு பயன்படுத்தும் தொலைபேசி எண் இணையவில்லை, வருமானவரி சான்றிதழில் சரியாக பதிவேறவில்லை என‌‌ நொண்டி சாக்கு களை எல்லாம் சொல்லி கல்வி உதவி தொகையை நிறுத்தும் வேலையில் இப்போது அரசு இறங்கியுள்ளது.

ஏன் வங்கி கணக்கில் பணம் ஏறவில்லை என‌ கேள்வி எழுப்பி அதை அடுத்தகட்டமாக நகர்த்திச் செல்ல தொடர்ச்சியாக அலை‌ய வேண்டி‌ இருப்பதால்  கிராமப்புற மாணவர்களும் அதை விரும்புவதில்லை.

எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல்  அதற்கான பயிற்சி இல்லாத மாணவர்களிடம் தீடீரென்று இப்படி இணையவழியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சொல்லுவதானது மாணவர்களை வஞ்சிக்கும் போக்காகும். மாணவர்களிடமே கல்வி உதவி தொகையின் மீது வெறுப்பை ஏற்படுத்தி அடுத்தடுத்த ஆண்டு இந்த கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்; தற்போது விண்ணப்பிக்காமல் இருப்பதே நல்லது என்ற‌ மனநிலையை மாணவர்கள் மத்தியில் உருவாக்கி வருகிறது அரசு. இப்படி எல்லா மாணவர்களும் சோர்வுற்று யாரும் விண்ணப்பம் பதிவு செய்யாமல் இருந்தால் இந்த கல்வி உதவி தொகை முழுவதும் நிறுத்தும் வேலையை அரசு திட்டம் போட்டு செய்து வருகிறது.

வழக்கம் போல் இந்த ஆண்டும்‌ மாணவர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‌நேரடியாக வாங்கி அதை சரிபார்த்து கல்வி உதவி தொகையை மாணவர்களுக்கு அரசு வழங்கிட வேண்டும்.

பாவெல் கார்க்கி

பேனா சிலைக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கைக்கும் என்ன சம்பந்தம் | மருது வீடியோ

பேனா சிலைக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கைக்கும் என்ன சம்பந்தம்!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முறைகேடாக பயன்படுத்தாதே!

திருவாளர் மருதையன் திமுகவிற்கு ஆதரவாக நின்றுகொண்டு செய்யும் சகுனி வேலைகளை இந்த காணொலியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

‘கிருத்துவர்களையும், முஸ்லிம்களையும் எப்போது கொல்வீர்கள்’ – வெறுப்பு விஷத்தை கக்கும் காவி குண்டர்கள்!

பிப்ரவரி 5 ஆம் தேதியன்று டெல்லி ஜந்தர்மந்திரில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்துத்துவ (காவி) அமைப்புகள், சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய வெறுப்பு பேச்சுக்கள் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பாகேஷ்வர் தாம் என்கிற கோவிலுடன் தொடர்புடைய திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி என்னும் சாமியாருக்கு ஆதரவாக டில்லியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் காவி உடையணிந்த ஒருவர், “இந்தியாவை பிரிட்டிஷும், காங்கிரசும் பிரித்து ஆட்சி செய்யுங்கள் என்றார்கள். கிருத்துவர்களும் அப்படியே ஆட்சி செய்யுங்கள் என்றார்கள். ஆனால் முஸ்லிம்கள் மட்டும் கொன்றுவிட்டு ஆட்சி செய்யுங்கள் என்றார்கள். இந்துக்களாகிய நீங்கள் எப்போது கொல்வீர்கள்? நீங்கள் இறந்த பிறகா கொல்வீர்கள்? கிருத்துவர்களையும், முஸ்லிம்களையும் எப்போது கொல்வீர்கள்?” என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு விஷத்தை கக்கியுள்ளார்.

இந்துக்கள் தங்களது வீடுகளில் துப்பாக்கி, வாள் போன்ற ஆயுதங்களை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு கையில் ஆயுதங்களையும் மற்றொரு கையில் மத நூலையும் வைத்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளார் அந்த காவி சாமியார்.

படிக்க : மணிப்பால் பல்கலை: மாணவர் மீதான பேராசிரியரின் முஸ்லீம் வெறுப்பு!

இந்துக்களுக்கு எதிராக வேதங்களையும், தாய்மார்களையும், சகோதரிகளையும் தாக்குபவர்களை  தேசத்துரோக குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று கூறிய அவர், “இந்துக்களுக்கு எதிராக செயல்படும் நபர்களை எல்லையில் சுட்டுக் கொல்லுங்கள், சாலைகளில் கொல்லுங்கள்” என்று துளியும் அச்சமின்றி இஸ்லாமியர்களை கொன்று குவிக்க நேரடியாக அழைப்பு விடுத்தார்.

காவி குண்டர்களை தட்டி கேட்பவர்களே இங்கு குற்றவாளிகள்!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த மற்றொரு கூட்டத்தில் சுதர்சன் செய்தி ஆசிரியர் சுரேஷ் சவாங்கே மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் வன்முறை வெடிக்கும் என்று ஹரியானாவில் உள்ள பாஜகவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளரும், கர்னி சேனாவின் தலைவருமான சூரஜ் பால் அமு பேசினார்.

தீவிர வலதுசாரி கூட்டங்களை ஏற்பாடு செய்து அதில் கலந்துக்கொண்டு வன்முறையை தூண்டும் வகையில் பேசக்கூடியவர் சுதர்சன் செய்தி ஆசிரியர் சுரேஷ் சாவாங்கே என்பவர். இவர் இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற நாம் எல்லோரும் தியாகம் செய்ய வேண்டும் என 2021-ல் கூறினார்.

சுரேஷ் சாவாங்கே பற்றி சூரஜ் பால் அமு பேசுகையில், “சுரேஷ் சாவாங்கேவை யாராவது தொட்டால், நாங்கள் அவர்களை அனுமதிப்போமா? இந்துராஷ்டிரத்தை உருவாக்க விடாமல் யாராவது எங்களைத் தடுத்தால் அவரைக் காப்பாற்றுவீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். இந்த இரண்டு கேள்விகளுக்கும் “இல்லை” என்று அங்கிருந்த காவிக்குண்டர்கள் ஆக்ரோசமாக கத்தி கூச்சலிட்டனர்.

இந்நிகழ்வில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி “மோல்டிக்ஸ்” என்ற செய்தி நிறுவனம் டெல்லி போலீசிடம் புகாராளித்தது. ஆனால், வெறுப்பு பேச்சுக்களை பேசிய காவிக் குண்டர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் புகாராளித்த செய்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது போலீசு.

குற்றவியல் நடைமுறை சட்டம் 149-வது பிரிவின் அடிப்படையில் வன்முறையை தூண்டும் வகையில் செய்தியை வெளியிட்டதாகவும், பதிவுகளை எழுதுவதை நிறுத்த வேண்டும் என்றும் பதிவுகள் எழுதுவதை நிறுத்தவில்லை என்றால் நடவடிக்கை எடுப்போம் என்று போலீசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

படிக்க : ’முஸ்லீம்களை கொளுத்த வேண்டும்’- வெறுப்பு விஷத்தை கக்கும் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் !

போலீசு நோட்டீஸ் அனுப்பியதற்கு பதில் அளிக்கும் விதமாக மோல்டிக்ஸ் நிறுவனர் அனுதீப் ஜக்லன் தனது ட்விட்டரில் “நான் இன்னும் குழப்பத்தில் இருக்கிறேன். எதற்காக எங்களுக்கு போலீசுத்துறை இதை அனுப்பி இருக்கிறார்கள்? காவி உடையணிந்த குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் சென்றிருக்க வேண்டும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு விஷத்தை கக்கும் வகையில் காவிக் குண்டர்களை பேச அனுமதிக்கும் போலீசு, வெறுப்பு பேச்சுக்கு எதிராக புகாராளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. இந்நிகழ்வு ஒட்டுமொத்த அரசுத்துறையும் காவிமயமாகி வருவதையே மீண்டும் நமக்கு உணர்த்துகிறது.

வன்முறையை தூண்டுபவன் நிராபராதி. அதற்கு எதிராக புகார் அளிப்பவன் குற்றவாளி. இதுதான் இன்றைய இந்தியாவின் (மனு)நீதி!

ரோகித் வெமுலா

குழந்தைத் திருமண ஒழிப்பு: சிறுபான்மையினரை ஒடுக்கும் கருவி!

சாம் மாநிலத்தில் குழந்தைத் திருமண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் சிறுபான்மையினரை ஒடுக்கும் வேலையை செய்து வருகிறது ஹிமந்த பிஸ்வா ஷர்மா தலைமையிலான பாஜக அரசு. “2026 ஆம் ஆண்டிற்குள் பிற்போக்கு நடவடிக்கையான குழந்தைத் திருமணங்களை முற்றிலும் ஒழிப்பேன்” என கடந்த ஜனவரி மாத இறுதியில் தெரிவித்திருந்த ஹிமந்த பிஸ்வா அரசு, முஸ்லீம் மற்றும் பழங்குடியின மக்களை ஒடுக்கும் கருவியாக இதனை பயன்படுத்திவருகிறது.

அரசு மேற்கொண்டுவரும் ‘குழந்தைத் திருமண ஒழிப்பு’ நடவடிக்கையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது; போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 2,442 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை தொடருமானால் இந்த எண்ணிக்கை மேலும் கூடும்.

தற்போது குழந்தைத் திருமணத்தில் ஈடுபடுவோரை மட்டுமின்றி, நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குழந்தைத் திருமணத்தில் ஈடுபட்ட பெற்றோர்களையும், திருமணங்களைச் செய்துவைத்த மதபோதகர்களையும் தேடி தேடி கைது செய்துவருகிறது பாஜக அரசு. கைதுசெய்யப்படுவோரில் பெரும்பான்மையானோர் முஸ்லீம் ஆண்கள்.

படிக்க : இந்தியாவில் அதிகரித்துவரும் கிறித்துவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்!

கணவன்களை இழந்த பெண்களும், மகன்களை இழந்த தாய்மார்களும் வாழ வழியின்றி நிர்கதியாக்கப்பட்டிருகின்றனர். எங்கே தனது வீட்டிற்குள் போலீசு நுழைந்து தனது தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துவிடுமோ என்ற பயத்தில், கணவனை இழந்த, 2 குழந்தையின் தாயான பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இனியும் பொறுத்துபோக முடியாது என, கடந்த 4 ஆம் தேதி மோரிகான் மாவட்டத்தில் உள்ள லஹரிகாட் போலீஸ் நிலையத்திற்கு முன்கூடிய பெண்கள், கைது செய்யப்பட்ட தனது கணவன்களையும் மகன்களையும் விடுவிக்கும்படி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் என்றும் பாராமல் அவர்கள்மீது காட்டுமிரண்டாண்டிதனமாக நடந்து கொண்டது போலீசு. அவர்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான் – “திருமணம் நடந்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது குழந்தைகளுடன் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் எங்களை ஏன் கைது செய்கிறீர்கள்” என்பதுதான்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா, “குழந்தைத் திருமணத் தடுப்பு நடவடிக்கையில் இருந்து பின் வாங்கப் போவதில்லை” என்று கூறியவர், “5 ஆண்டு நடவடிக்கையில் இதுவொரு பகுதி மட்டும்தான்” என திமிராக பதிலளித்துள்ளார். பாஜக அரசின் இத்தகைய நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

பாஜகவின் இத்தகைய நடவடிக்கையை விமர்சிப்பதால் குழந்தைத் திருமணங்களை நாம் ஆதரிக்கிறோம் என்பதல்ல. ஆனால் சாதிய வர்ணாசிரம பிற்போக்கில் மூழ்கித் திழைத்திருக்கும் பாசிச பாஜகவுக்கு இதில் பேசவேண்டிய தேவை என்ன என்பதுதான் நமது கேள்வி. பெண்களை பாதுகாக்கவேண்டுமானால், கிராமப்புறங்களில் பள்ளிக்கூடங்களைத் திறந்திருக்க வேண்டும். கல்விபயில உதவித் தொகை வழங்கியிருக்க வேண்டும். வாழ்க்கைக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பினை வழங்கியிருக்க வேண்டும். மாறாக, 2020 இல் முஸ்லீம் பிள்ளைகள் குறிப்பாக பெண்கள் பயிலும் அசாம் மாநில அரசு நடத்திவந்த பல மதராஸாக்கள் மூடப்பட்டன. இது நடந்தது பாஜக ஆட்சியில்தான்; அப்போது கல்வி அமைச்சராக இருந்தவர் இதே ஹிமந்த பிஸ்வா தான்.

படிக்க : அதிகரித்துவரும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்கள்!

பெண்கள் பாதுகாப்பு குறித்தோ பிற்போக்குதனம் குறித்து பேச முதலில் பாஜகவுக்கு யோக்கியதை இருக்கிறதா? பாஜக ஆளும் மாநிலங்கள்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கூடாரங்களாக இருக்கின்றன. பாஜக முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள்தான் பாலியல் பொறுக்கிகளாக உள்ளனர். இதற்கு சமீபத்திய சான்று பாஜக எம்.பி பிரிஜ் பூஜன் சிங் மீதான மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார். இத்தகைய பின்னணியில் உள்ள பாஜக குழந்தைத் திருமண ஒழிப்பு என்று பேசுவது வெற்று நாடகம் என்று சுருக்கிப் பார்க்க முடியாது. மத பண்பாடுகளைக் கடைப் பிடித்துவரும் முஸ்லீம், பழங்குடியின மக்களை ஒடுக்க பயன்படுத்த கையாண்டுவரும் ஓர் கருவியே இந்த நடவடிக்கை. பல்தேசிய கலாச்சாரம், பண்பாட்டை அழித்து ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே பண்பாடு, கலாச்சாரம் கொண்ட இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கான காவிகளின் நகர்வு இது.

ஆதினி

சாலை விரிவாக்கத்தைக் கைவிடு! மக்களை வாழவிடு!

நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டியிலிருந்து, திருச்சி மாவட்டம் முசிறி இடையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்காக கடந்த செப்டம்பர் 30, 2022 அன்று தமிழக நகர்ப்புற வளார்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டினார். இச்சாலையானது, குறுகலானதும், வளைவுகளையும், வாய்க்கால்களையும் கொண்டது என்பதால், இச்சாலையில் அதிக விபத்துகள் நடக்கிறது. எனவே இச்சாலையை நான்கு வழிச்சாலை மாற்றுவது அவசியமாக இருக்கிறது என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாமக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது.

அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, இவ்விரிவாக்கப்பணி நடைபெறுகிற மேட்டுப்பட்டி முதல் முசிறி வரையில் சாலையின் இருபுறங்களிலும், குறுக்கும் நெடுக்குமாக வாய்க்கால்கள், ஏரிகள் இருக்கின்றன. தற்பொழுது நடைபெறுகிற இந்த விரிவாக்கப்பணியில், சாலையின் ஒரங்களில் உள்ள பழமையான மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்படுகின்றன, போடப்படுகிற சாலையும், இருபுறங்களிலும் உள்ள வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளை ஆக்கிரமித்துதான் போடப்படுகின்றன. இதனால் இந்த வாய்க்கால்களும், ஏரிகளும் நீர்வழிப்பாதைகளும் நிரந்தரமாக அழிக்கப்படும்.

படிக்க : NH744 – தென்காசி நான்கு வழிச்சாலை : கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை அழிக்கும் திட்டம் !

ஏற்கனவே, இப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களும் பத்தாண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாததால் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து உவர்நீராக மாறியிருக்கிறது. இந்த அபாயகரமான சூழலில்,  வாய்க்கால்கள், ஏரிகளை அழித்து நான்கு வழிச்சாலையாக்குவதன் மூலம் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். குடிநீருக்காகவும் அலைய நேரிடும். விவசாயத்திலிருந்து விவசாயிகள் வெளியேறக் கூடிய சூழலில் குற்றுயிரும், குலையுருமாக நடக்கிற விவசாயத்திற்கும் பேராபத்தாகவே இருக்கும்.

2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி,  தமிழகத்தில் உள்ள பாசனக் கட்டமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் 12 சதவீத தமிழக விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறுகின்றனர். எனவே, நீர்வழிப்பாதைகளை அழிப்பதானது விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவதை தீவிரப்படுத்தும்.

இந்த சாலை விரிவாக்கப்பணியால், நீர்வழிப்பாதைகளும், நீர்நிலைகளும் அழிக்கப்படும் என்று தெரிந்தேதான் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வருகிறது. எதேச்சதிகார முடியாட்சிக் காலத்தில், விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசனக் கட்டமைப்பை உருவாக்கித்தராமல் விவசாயிகளை வரி மூலம் கசக்கிப் பிழிய முடியாது என்று உணர்ந்திருந்தார்கள் அரசர்கள்.

அதனால்தான் பொதுமராமத்து செய்வது நிலவுடைமை சமூகத்தில் அரசின்/அரசனின் கடமையாக  இருந்தது. ஆனால், இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பும், அதன் ஆட்சியாளர்களும் விவசாயத்திற்கு அத்தியாவசியமான மராமத்து பணிகளை செய்வதில்லை.

கோப்புப்படம்

ஒருபுறம், ஏராளமான வரிகளை விதித்து மக்களை ஒட்டச் சுரண்டுவதை செவ்வனே செய்துவருகிறார்கள். மற்றொருபுறம் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம் தங்கள் எஜமானர்களாகிய கார்ப்பரேட் கும்பலின்  லாபவெறிக்கு சேவை  செய்வதையே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள்.

கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக பரந்தூரில் அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி அத்திட்டத்தை செயல்படுத்த உறுதியாக நிற்கிற தமிழக அரசுதான், சாமானிய மக்களின் நலனுக்காக வாய்க்கால்களை மீட்டெடுப்பதுகூட செய்வதில்லை. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு மரம் வளர்க்க நிதி உதவி செய்வதாக அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. ஆனால், சாலையின் இருபுறங்களிலும் உள்ள மரங்களை வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் வைப்பதற்கு எந்த முயற்சி மேற்கொள்ளவில்லை. மாறாக சாலையோரங்களில் உள்ள அத்தனை மரங்களையும் துண்டுதுண்டாக வெட்ட அனுமதித்திருக்கிறது.

மேலும், இந்த சாலை விரிவாக்கத்தினால் மட்டும் விபத்துகளைத் தடுத்துவிட முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இருக்கின்ற சாலையின் தரத்தை உயர்த்தினாலே பெருமளவில் விபத்துக்களைக் குறைக்க முடியும். திருச்சியை மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுடன் இணைப்பதற்கு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை,  கோவை – கரூர்- திருச்சி நெடுஞ்சாலை இருக்கிறது. எனவே இந்த குறுகிய, வளைவுகள் நிறைந்த, வாய்க்கால்களைக் கொண்ட இந்த சாலையில் போக்குவரத்தைக் குறைப்பதுதான் முதன்மையாகும். இந்த சாலையில் அதிக அளவு போக்குவரத்து நடைபெறுவதற்கு அன்றாட வேலைகளுக்காக செல்லும் மக்களின் இடப்பெயர்வுதான் முக்கிய காரணமாகும். திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இச்சாலையானது, குறுகலானதும், வளைவுகளையும், வாய்க்கால்களையும் கொண்டதுமாகும் விவசாயம்தான் பிரதானமாக நடைபெறுகிறது.

படிக்க : ரத்தினகிரி பெட்ரோலிய ஆலை – சேலம் எட்டு வழிச்சாலை : விவசாயிகளை விரட்டும் பாஜக அரசு !

அந்த வகையில், விவசாயத்தையும், அதன் துணைத்தொழில்களையும் லாபகரமானதாக மாற்றுவதன் மூலம், உள்ளூர் தேவைகளுக்கான அரசு தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுப்பதன் மூலமாக மட்டுமே இத்தகைய இடப்பெயர்வுகளைக் குறைக்க முடியும். அத்தகையத் திட்டங்களை உருவாக்கினால், ஒரு இடத்தில் மக்களைக் குவிப்பதையும், போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், தேவையின்றி மேம்பாலங்கள் – சாலை விரிவாக்கப்பணிகளில் மக்கள் வரிப்பணம் வீணாவதைத் தடுக்கவும் முடியும்.  ஆகையால், விபத்துகளுக்கான ஊற்றுமூலத்தை சரிசெய்வதற்கான திட்டங்களை உருவாக்காமல், வெறும் சாலைகளை விரிவுபடுத்துவதனால் மட்டும் விபத்துக்களைத் தடுக்க முடியாது.

ஆனால், கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக சேவை செய்வதையே கடமையாகக் கொண்டிருக்கிற இந்த அரசுக் கட்டமைப்பில் மக்கள் நலனுக்கான திட்டங்களை எதிர்ப்பார்க்க முடியாது. இந்த அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை வகுக்கவில்லையென்றாலும், இருக்கின்ற குறைந்தபட்ச வாழ்வாதாரக் கூறுகளை அழித்தொழிக்காமல் இருந்தால்கூட போதும், மக்கள் பிழைத்துக் கொள்வார்கள்.  ஆகவே, உங்க சாலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்; இருப்பதைக் கொண்டு எங்களை வாழவிடுங்கள் அதுவே போதும்! என்பதே மக்களின் உள்ளக் குமுறலாக இருக்கிறது. எட்டுவழிச்சாலை, பரந்தூர், காட்டுப்பள்ளி துறைமுகம், விழிஞ்ஞம், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் என நாடு முழுவதும் பற்றி எரியும் போராட்டங்களின் அடிநாதமும் இதுதான்.

வாகைச்சூடி.

தேச விரோதி, கொள்ளைக்கார அதானியை தூக்கில் போடு! சொத்துக்களை பறிமுதல் செய்! | மக்கள் அதிகாரம்

தேச விரோதி, கொள்ளைக்கார அதானியை தூக்கில் போடு!
சொத்துக்களை பறிமுதல் செய்!

மக்கள் அதிகாரம் பிரச்சார இயக்கம் – ஆர்ப்பாட்டம்

லகிலேயே இரண்டாவது பணக்காரன், ஆசியாவிலேயே முதல் பணக்காரன் இப்படி பல பெருமைகளையும்’ அடைமொழிகளையும் வாங்கிக்குவித்தவன் அதானி. இவன் பங்குகள் எல்லாம் தற்போது பலூன் போல வெடித்துச்சிதறிவிட்டன. மற்ற நாட்டு அதிபர்கள் எல்லாம் சுற்றுப்பயணம் செல்லும்போது தங்கள் மனைவியை அழைத்துச் செல்வார்கள். ஆனால் மோடியோ எல்லா நாடுகளுக்கும் அதானியைத்தான் அழைத்துச்சென்றார். பாகிஸ்தான் முதல் ஆஸ்திரேலியா, இலங்கை, இஸ்ரேல் வரை அதானி முதலீடு செய்யாத நாடே இல்லை. அதானியின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்று ஊதிப்பெருக்கினார்கள். ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நான்கு நாட்களிலேயே உலகப் பணக்கார வரிசையில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டான் அதானி.

அயோக்கியனின் கடைசிப்புகலிடம் தேசபக்தி என்பார்கள்; அதுபோல, பதறி அடித்துக்கொண்டு ஒடி வந்த அதானியும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளும் “இது இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்” என்று பொங்கினார்கள். அடுத்தடுத்த நாட்களில் 4 லட்சம் கோடிகளை பங்குச் சந்தையில் இழந்தது அதானி குழுமம். அதானி ஒரு பிராடு, மோசடி மன்னன் என்பது ஊரறிந்த விசயம்தான் என்றாலும் ஹிண்டன்பர்க் அறிக்கை படம் பிடித்து ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறது.

இந்த அறிக்கை வெளியானதற்குப் பிறகு மொத்த பங்குசந்தை உலகமும் ஆடிப்போனப் பின்னரும் நிர்மலா சீதாராமன், “இந்திய வங்கி அமைப்பு மிகவும் பலமாக உள்ளது. எந்தப் பிரச்சினையும் இல்லை” என்கிறார். அதானி குழுமத்தில் எல்.ஐ.சி.யின் முதலீடு ரூ.24000 கோடிகள் சரிந்துள்ளன. ஆனாலும் எல்.ஐ.சி நிர்வாகம் “மொத்த சொத்தில் 1% மட்டுமே அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளோம்” என்று திமிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

படிக்க : அதானியே நமோ நமஹா!

2 லட்சம் கோடி கடன்காரனான அதானி, பாரத ஸ்டேட் வங்கிக்கு தர வேண்டிய தொகை மட்டும் இருபதாயிரம் கோடிகளுக்கு மேல். எல்.ஐ.சி.யின் முதலீடும் எஸ்.பி.ஐ கொடுத்த கடன்களும் பொது மக்களின் சொத்து. மாதம் ஆயிரம், ஐநூறு என்று பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றும் என்று நம்பி எல்.ஐ.சி.யிலும்  எஸ்.பி.ஐ.யிலும் சேர்த்து வைத்த பணத்தைத் திருடி அதானியின் வாயில் போட்டுவிட்டார் மோடி.

அதானி பாசிச ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்டவன். அவனுக்காகத்தான் கடல்வளத்தை அழிக்கும் காட்டுப்பள்ளி துறைமுகம் தமிழ்நாட்டிலும், விழிஞம் துறைமுகம் கேரளத்திலும் அமைக்கப்படுகின்றன. அதானி, சிமெண்ட் ஆலைகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து சிமெண்ட் விலையை ஏற்றிக்கொண்டிருக்கிறான். தன்னுடைய தனியார் மின் உற்பத்தி, விநியோக நிலையங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்காக அரசு மின் நிறுவனங்களை ஒழித்துக்கட்டினான். மீத்தேன், ஹைட்ரோ-கார்பனை கொள்ளையடிக்க விவசாய நிலங்களை சூறையாடுகிறான். எஸ்.பி.ஐ வங்கியில் பல்லாயிரம் கோடிகள் கடன் வாங்கி பைனான்ஸ் தொழில் செய்கிறான்.

தனது சமையல் எண்ணை நிறுவனம் மூலம் மற்ற எண்ணை நிறுவனங்களை எல்லாவற்றையும் புதைகுழிக்கு அனுப்பினான். காப்பர், அலுமினியம், பெட்ரோ கெமிக்கல், சோலார் என நாட்டின் அனைத்து வளங்களையும் தனது ஆக்டோபஸ் கரங்களால் நெறித்துக் கொண்டிருக்கிறான். இவையெல்லாம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காகத்தான் தொலைக்காட்சி நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். இதைப்போலத்தான் அம்பானியும் செய்து கொண்டு வருகிறான்.

இப்போது அதானியின் மோசடிகள் வெளியாகிவிட்டன. அம்பானியின் மோசடிகள் வேறொரு நாள் வெளியாகலாம். ஆனால், இவை எல்லாம் அரசுக்கு எதுவும் தெரியாமல் நடந்ததா என்ன? மோடி – அமித்ஷா – நிர்மலா என அனைவருமே அதானியின் கூட்டுக் களவாணிகள்தான். அதானால்தான் அதானி கையும் களவுமாக சிக்கிக்கொண்ட பின்னரும் அவனை காப்பாற்றுவதற்கு இவர்கள் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கொரோனா காலத்தில் நாடே பசி, பஞ்சம், பட்டினி, சாவை எதிர் கொண்ட போது அதானியின் சொத்து மட்டும் 800 மடங்கு உயர்ந்தது. அதானி நிறுவனங்கள் மீதிருந்த 17 வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. 2004 ஆண்டு கருப்புப்பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதானியின் தம்பி ராஜேஷ் அதானி, தற்போது அதானி குழுமத்தின் மேலாண்மை இயக்குநர்.

பல ஊழல் வழக்குகள் உள்ள அதானியின் மைத்துனன் சமீர் வாரா ஆஸ்திரேலியாவில் உள்ள அதானி குழுமத்தின் சி.ஈ.ஓ., அதானியின் இன்னொரு தம்பி வினோத் அதானியின் மகள் வின்சம் வைர வியாபாரியின் மகனையும், வினோத் அதானியின் மகன் ரோட்டோமேக் முதலாளியின் மகளையும் திருமணம் செய்துள்ளனர். வின்சம் வைர வியாபாரியும் ரோட்டோமேக் முதலாளியும் பல்லாயிரம் கோடிகள் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்கள். அதானியின் மகனோ பங்குச்சந்தைகளை கட்டுப்பாடுத்தும் செ.பி.யின் கமிட்டி உறுப்பினர் மகளை திருமணம் செய்திருக்கிறார்.

இந்த நாட்டை கொள்ளையடித்த அதானி, அம்பானி, கேத்தன் பரேக், முகுல் சோஷி என அனைத்து பனியா கிரிமினல்களும் குஜராத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் முதுகெலும்பாக செயல்பட்டவர்கள். பா.ஜக.வுக்கும் பல்லாயிரம் கோடிகளை தேர்தல் நிதியாக அளித்தவர்கள். இதுதான் மோடி உருவாக்கிய குஜராத் மாடல்.

நீதிமன்றம், சட்டம், அரசியல் அதிகாரம் என அனைத்துமே இவர்கள் கையில். இந்தக் கிரிமினல் முதலாளிகளை பாதுகாப்பதுதான் பாசிச மோடி அரசின் வேலை. இதை அம்பலப்படுத்திப் போராடுபவர்களைத்தான் அர்பன் நக்சலைட்டுகளாக சித்தரித்து ஊ.பா போன்ற கருப்புச்சட்டங்களால் கைது செய்து சித்தரவதை செய்கின்றனர்.

அதானியும் அம்பானியும் வெறும் கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமல்ல; அவர்கள் பாசிஸ்டுகள். இந்த நாட்டை கொள்ளையடிக்கவும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருக்கவும் அவர்களுக்குத் தேவை இந்துராஷ்டிரம்.

படிக்க : நாட்டை சூறையாடிய கொள்ளைக்காரனே அதானி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளுக்கு இந்த நாட்டின் இயற்களை வளங்களை சூறையாடவும் கார்ப்பரேட் முதலாளிகளை கட்டுப்படுத்தவும் அதானி – அம்பானி பாசிசக் கும்பல் தேவை. ஆக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசமே இந்த நாட்டின் நாட்டு மக்களின் எதிரி என்பதையும் இந்த நாட்டு மக்களின் அனைத்து துன்பங்களுக்கும் அவர்களே காரணம் என்பதைத்தான் நாம் உணர வேண்டும்.

ஆக, தேச விரோதியும் கொள்ளைக்காரனும் பயங்கரவாதியுமான அதானி பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டு அவனுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும்.

ஆனால், இதெல்லாம் இப்போதிருக்கிற ஆட்சி முறையிலே சாத்தியமில்லை. ஏனென்றால் இது காவி – கார்ப்பரேட் பாசிச ஆட்சி. நீதித்துறை, ராணுவம், நிர்வாகம் என அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலை முறியடிக்காமல் நமக்கு வாழ்வே இல்லை.

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை கட்டியமைத்து நாடு முழுவதும் ஒவ்வொரு வீதியிலும் இந்த பாசிசக்கும்பலை எதிர்த்துப்போராடி முறியடிப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு மாற்றான பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்போம்!

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் பிப்ரவரி – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம்: ‘இந்துராஷ்டிரம்’ அதானிகளின் தேசம்!
♦ “ஒரே நாடு”! ஒன்றுகலக்காத “தமிழ்நாடு”!
♦ ஆக்ஸ்ஃபாம் அறிக்கை: இதோ மோடியின் ‘புதிய இந்தியா’!
♦ மலத்தைவிடக் கொடியது சாதிய அரசு!
♦ பேய் நாடாள்கிறது! சாத்திரங்கள் பிணந்தின்ன வேண்டாமா?
♦ திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை: பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?
♦ சத்தீஸ்கர்: கிறிஸ்தவப் பழங்குடியின மக்கள்மீது பெருகி வரும் காவி பாசிசத் தாக்குதல்கள்!
♦ புதைந்து வரும் ஜோஷிமத் நகரம்! ‘வளர்ச்சி’யின் பெயரால் நடத்தப்படும் பேரழிவு!
♦ மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!
♦ தொலைத்தொடர்பு மசோதா 2022: பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான நடவடிக்கை!

 

மதுரை: தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினரின் கொலைவெறித் தாக்குதல்!

0

துரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள காயாம்பட்டி கிராமத்தில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் அன்று ஆதிக்க சாதி வெறி பிடித்த கும்பல் ஒன்று தாழ்த்தப்பட்ட இளைஞர் கண்ணன் என்பவரை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தி உள்ளனர். உடன் இருந்த அவருடைய மனைவியையும் சேலையைப் பிடித்து இழுத்து மானபங்கம் படுத்தியுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த கண்ணன் தனது மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊரான காயம்பட்டிக்கு வந்திருந்தார்.

பக்கத்து ஊரில் இருந்த உறவினர்களை பார்க்க மனைவி குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஆதிக்க சாதி வெறி கும்பல்(7 பேர்) ஒன்று கண்ணன் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர். இருசக்கர வாகனத்தை ஏன் ஊருக்குள் வேகமாக ஓட்டுகிறாய் எனக்கேட்டு தாக்கியுள்ளனர். அவர் அணிந்திருந்த துணிகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி உள்ளனர். தனது கணவன் உடல் நலம் பாதிக்கப்பட்டவர் அவரை விட்டுவிடுங்கள் என கதறிய போதும் அவர்கள் நிறுத்தவில்லை. தடுத்துப் பார்த்தபோது அவர் அணிந்திருந்த சேலையையும் உருவியுள்ளனர். அருகில் உள்ள ஆடு மாடு மேய்க்கும் மக்கள் வந்த பிறகே நிறுத்தியுள்ளனர்.

இதைக் கேட்டு கொதித்துப் போன தாழ்த்தப்பட்ட மக்கள் உடனே காவல் நிலையத்திற்கு சென்று மனு கொடுத்தனர். அதன் பேரில் ஆதிக்க சாதி வெறியர்கள் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏழு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பிறகும் ஆதிக்க சாதி வெறியர்களின் கொட்டம் அடங்கவில்லை. மறுநாளே தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் தெருக்களை கடந்து செல்லும் போது துரத்தி அடிக்க வருவது ஆபாச வசவுகலால் திட்டுவது பெண்களை விரட்டுவது என திமிர் தனத்தை மேலும் மேலும் செய்து கொண்டிருந்தனர். கண்ணன் தாக்கப்பட்ட அன்றே கேள்விக்கு கேட்க போன மக்களை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் 26 பேர் மீது பொய் வழக்கை தொடுத்துள்ளனர். இதை போலீசும் எந்த விசாரணையும் இன்றி 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்கு போட்டு ஆதிக்க சாதியினரின் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்குவதற்கு திட்டமிட்டு வேலை செய்கிறது போலீசு.இதே வேலையைத்தான் காயாம்பட்டிக்கு அருகில் உள்ள சிட்டம்பட்டி என்ற பக்கத்து கிராமத்தில் உள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் வழக்கை திரும்ப பெற சொல்லி தலித் மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளையும் கொடுத்து வருகிறார்.


படிக்க: மதுரை: காயாம்பட்டி ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் இளைஞர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!


எந்த ஒரு தவறும் செய்யாத 26 பேர் வீட்டிற்கு கூட செல்ல முடியாமல் பொய் வழக்கை காண்பித்து போலீசு அச்சுறுத்துகிறது.

வேங்கை வயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிராக பல்வேறு ஜனநாயக சக்திகளும் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேலையில் தான் ஆதிக்க சாதி வெறியர்கள் திமிராக இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்துகின்றனர். இந்த அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் மீது குற்றத்தை சுமத்த முயற்சிக்கிறது.

இந்த காயாம்பட்டி கிராமத்தில் ஆதிக்க சாதியினர் குறிப்பாக கள்ளர்,அகமுடையார்,நாடார் கவுண்டர், நாயுடு போன்றோர் வசித்து வருகின்றனர். காயாம்பட்டி கிராமத்தைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளே அதிகமாக உள்ளன. 30 வருடங்களுக்கு முன்பு ஆதிக்கசாதி வெறியர்கள் இது போன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதன் பிறகு இப்படிப்பட்ட வன்முறைகள் நடப்பது கடந்த இரண்டு வருடங்களாக தான்.

ஆதிக்க சாதியில் உள்ள சிலர் பிஜேபியில் உள்ளனர். இவர்கள் ஊரில் உள்ள பலரையும் இணைத்துக் கொண்டு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு சிறிய விநாயகர் கோவிலை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கட்டி உள்ளனர். அந்த கோவில் அமைந்திருப்பது சாலையை ஒட்டியான இடம் அந்த வழியில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்கு போக முடியும். இந்த சாலையில் போகும் தலித் மக்களை திருவிழாக்களின் போது முறைத்துப் பார்ப்பது சீண்டுவது போன்ற வேலைகளை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார்கள்.


படிக்க: மதுரை காயாம்பட்டி சாதிய வன்முறை | களவீடியோ


கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது காயாம்பட்டி மேடு என்ற அருகில் உள்ள கிராமத்தில் இருந்த தலித் மக்கள் காயாம்பட்டி விநாயகர் கோவில் வழியில் சென்றபோது ஆதிக்க சாதி வெறியர்களால் தாக்கப்பட்டனர்.
போலீஸோ வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு போட்டுவிட்டு ஆதிக்க சாதி வெறியர்களை மென்மையாக கையாண்டது. கைது கூட செய்யவில்லை.

இதன் நீட்சிதான் பொங்கல் அன்று நடந்த தாக்குதல். மத வெறியர்களின் வருகை சாதி வெறியையும் ஊக்கப்படுத்தியுள்ளது.

இதேபோல் மதுரை அருகில் உள்ள கள்ளந்திரி, மேலூர் அருகே உள்ள பழையூர்பட்டி, திருவண்ணாமலை, சேலம் போன்ற இடங்களிலும் பொங்கல் அன்று நடந்த தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்முறைகள் வெளிவந்துள்ளன.

ஜல்லிக்கட்டு, நீட், காவிரி நதிநீர் பகிர்வு, முல்லைப் பெரியாறு, ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை, மீத்தேன் ஹைட்ரோகார்பன் பிரச்சனை,அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது, தில்லை நடராசர் கோவிலில் தமிழ் பாடும் உரிமை, கோ பேக் மோடி என பல்வேறு போராட்டங்களின் ஊடாக தமிழ் மக்கள் உயர்த்திப் பிடித்த சாதி மதம் கடந்த தமிழக மரபினை ஒழித்துக் கட்ட துடிக்கிறது காவி பாசிச கும்பல். சாதியை வைத்து மீண்டும் மக்களை பிளப்பதின் மூலம் தங்கள் உருவாக்க இருக்கும் இந்துராஷ்டிர கட்டமைப்பிற்குள் சூத்திர அடிமைகளையும் நவீன கார்ப்பரேட் அடிமைகளையும் உருவாக்க எத்தனிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல். இந்த சாதி மத வெறியர்களுடன் இணைந்து எட்டப்பன்களாக மாறப் போகிறோமா என்பது நம் அனைவரின் முன்னுள்ள கேள்வி?

ரவி

தமிழ்நாடு: பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள், ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் போராட்டம்!

0

னவரி 30 அன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள் (overhead water tank (OHD) operators) ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு-இன் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தூய்மை காவலர்களுக்கு மாதம் ₹10 ஆயிரம் வழங்க வேண்டும்; பொங்கல் போனஸ் ₹3000 வழங்க வேண்டும்; ஓய்வு பெறும் ஓ.எச்.டி ஆபரேட்டர்களுக்கு ₹3 லட்சம் பணிக்கொடையும் ₹3000 மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததை போல, பத்து வருடங்களுக்கு மேலாக பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 12,618 கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.


படிக்க: மதுரை : தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள் !


“ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவதற்கான அரசாணை (நிலை) எண். 303 (நாள்: 11.10.2017) வெளியிடப்பட்டு 63 மாதங்கள் ஆகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மூன்று ஆண்டுகள் பணி புரிந்தால் நிரந்தரமாக்குவதற்கான அரசாணை (நிலை) எண். 385 (நாள்: 10.01.2010), ₹15000 கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை (நிலை) எண். 256 (நாள் 28.05.2021), குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதம் செய்யும் அரசாணை (நிலை) எண். 62 (2D) (நாள்: 11.10.2017), மாதாமாதம் 5-ஆம் தேதியன்று ஊதியம் வழங்குவதற்கான அரசாணை (நிலை) எண். 89, மேல்நிலை ஓ.எச்.டி ஆபரேட்டர்களுக்கு ஊதிய உயர்வுக்கான அரசாணை (நிலை) எண். 20 (நாள்: 04.02.2021) போன்ற பல்வேறு அரசாணைகள் உள்ளன. அவை பின்பற்றப்படுவது தான் இல்லை” என்று தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் சந்தானம் கூறினார்.

“வருகிற தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும். அவர்களுக்கு மாதாந்திர ஊதியமாக ₹1000 – ₹2500 மட்டுமே வழங்கப்படுகிறது; இதனை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று மாநில ஒருங்கிணைப்பு குழு கோரியுள்ளது. 40,276 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 40,000-ம் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணி புரிகின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டில், பாஜக அரசு 66,025 தூய்மை பணியாளர்களை தமிழ்நாட்டில் பணியமர்த்தியது. அவர்களுக்கு மாதாந்திர ஊதியமாக ₹2600 வழங்குவதற்காக ₹206.04 கோடி நிதியையும் ஒதுக்கியது. அரசு நேரடியாக ஊதியம் வழங்கினால், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை தூய்மை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். அதனால் சுய உதவி குழுக்கள் போன்றவற்றின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு அரசு ஊதியத்தை வழங்கி வருகிறது. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகுதான் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் இவர்களின் ஊதியம் ₹2600-இல் இருந்து ₹3600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


படிக்க: தூய்மைப் பணியாளர்கள் : எடப்பாடியின் துரோகத்தைத் தொடரும் ஸ்டாலின் !


கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக பணி புரியும் ஊழியர்களுக்கு தினசரி கூலியாக ₹451 வழங்கப்படுகிறது. இதில் வாகனம், எரிபொருள், உணவுக்கான செலவுகள் ₹200. மீதம் இருக்கும் ₹250-ஐ கொண்டுதான் அவர்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். மாநிலம் முழுக்க கிட்டத்தட்ட 13,000 தொழிலாளர்கள் இதில் பணி புரிகின்றனர். அடுத்த நாள் வேலை இருக்குமா என்ற உத்தரவாதமற்ற நிலையே இவர்கள் நிலை.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (ஓ.எச்.டி) ஆபரேட்டர்களின் அடிப்படை ஊதியத்தை ₹2600-இல் இருந்து ₹4000-ஆக ஏப்ரல் 2021 முதல் வழங்குவதற்கான உத்தரவை முந்தைய அதிமுக அரசாங்கம் பிறப்பித்தது. ஆனால் அந்த உத்தரவு தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் வெவ்வேறு ஊதியம் வழங்கப்படுகிறது. சீரான ஊதியம் வழங்க அரசு அக்கறை காட்டுவதில்லை.

திமுக அதிமுக என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தூய்மைப் பணியாளர்களை கண்டு கொள்வதில்லை. அவர்களின் அவல நிலையும் தொடர் போராட்டங்களும் இயல்பு நிலையாகவே மாறிவிட்டன.

பொம்மி

நன்றி: நியூஸ் கிளிக்

சேலம் ஆதிக்க சாதி வெறியனின் ஆபாச பேச்சு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

31.01.2023

தொடரும் ஆதிக்க சாதி வெறியர்களின் வெறியாட்டம்! சேலம் ஆதிக்க சாதி வெறியனின் ஆபாச பேச்சு மீண்டும் ஓர் உதாரணம்!

கண்டன அறிக்கை

சேலம் மாவட்டம், திருமலைகிரி ஊரில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. அது, இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 26.01.2023 அன்று மாலை பிரவீன்குமார் என்ற பட்டியலின சமூகத்தை (பறையர்) சேர்ந்த மாணவன் வழிபட கோவிலுக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வன்னியர் சாதியை  சேர்ந்தவர்கள் தடுத்துள்ளனர். அந்த மாணவனை எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

தி.மு.க-ஐ சேர்ந்த ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 27.01.2023 இவரது தலைமையில் கோவிலுக்கு அருகில் பெற்றோருடன் மாணவனை வரவழைத்துள்ளனர். ஆதிக்க சாதியை சேர்ந்த பொதுமக்கள் முன்னிலையில் மிகவும் கீழ்தரமாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளான் ஆதிக்க சாதிவெறி மாணிக்கம்.

எங்கள பகைச்சுக்கிட்டு ஊருக்குள்ள தொழில் பண்ண முடியாது, ஊருல இருக்கவே முடியாது. அருகிலிருந்த மற்றொருவர் சாதி வெறியுடன் “இவன் யாரோ சொல்லி கொடுத்துதான் கோவிலுக்கு உள்ளே வந்திருக்கான் யாரு சொன்னதுனு சொல்லு, நா பாத்துக்கிறேன்” என்று ஆதிக்க சாதி திமிரோடு பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டியுள்ளான்.

28.01.2023 அன்று காவல்துறை இரு தரப்பு மக்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்துவிட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில் தான் அப்பகுதி விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் வெளியிட்ட வீடியோ 30.01.2023 அன்று சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதப் பொருளானது. இந்த ஆதிக்க சாதி வெறியனை “உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்காவிட்டால் திராவிட மாடல் ஆட்சி என்பதை தீண்டாமை மாடல் ஆட்சி என பொதுவில் அம்பலப்படுத்துவோம்” என்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் மாவட்ட செயலாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதோடு அல்லாமல் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்ப்பவர்கள் இந்த சாதிவெறியனை மக்கள் மத்தியில் அம்பலபடுத்தி ஊரைவிட்டு அடித்து விரட்டியாக வேண்டும் என்று கொந்தளிக்க தொடங்கினர்.


படிக்க: இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்


இதன் விளைவே  தி.மு.க, ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை கட்சியை விட்டு இடைநீக்கம் செய்தது. அப்போதும் எதிர்ப்புகுரல்கள் அடங்கவில்லை. மக்கள் மத்தியிலும், கூட்டணி கட்சியினர், ஜனநாயக சக்திகள் மத்தியிலும் இருந்து நெருக்கடி வந்த பின்னரே கைது நடந்துள்ளது.

இந்த திராவிட மாடல் ஆட்சி சாதி ஆதிக்க வெறியர்களுக்கு எதிரானது அல்ல,  தகவல் தெரிந்த உடனே சாதிவெறியனை கட்சி உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறது. அந்த ஊரில் உள்ள அனைத்து மக்களும் சமத்துவமாக கோவிலுக்குள் சென்று வழிபடுவதை உறுதிபடுத்தி அதிகாரிகள் கண்கானிக்க வேண்டும்.

***

குறிப்பாக இந்த மாதத்தில் மட்டும் புதுகோட்டை வேங்கைவயல், மதுரை காயம்பட்டி, விருத்தாசலம் சாத்தக்கூடல், சேலம்  என ஆதிக்க சாதியினரின் வெறியாட்டம் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்டே வருகிறது. இது ஒவ்வொரு ஊரிலும் நடப்பது தான் என்று கடந்துசெல்லாமல், அரசின் கவனத்திற்கு வரும் இதுபோன்ற சாதிவெறி சம்பவங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுப்பது தான் சரியாக இருக்கும்.

கோவிலுக்குள் நுழைந்த மாணவன், சாதி இல்லாத சமூகமாக மாற வேண்டும் என்றுகூட கருதியிருக்கலாம். ஆனால் இந்த பார்ப்பனிய சித்தாந்தமும் வருணாசிரம கோட்பாடும் மீண்டும் அந்த சாதி என்னும் சாக்கடைக்குள்ளேயே பட்டியலின மக்களை தள்ளிவிடுகிறது.


படிக்க: சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்!


இன்று, பல கிராமங்களில் சாதி பிரிவினையை வளர்ப்பதும், கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுப்பதும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலே. பட்டியலின மக்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையே பிரச்சினையை வளர்க்கும் நபர்களை தீனிப்போட்டு வளர்த்து வருகிறது காவி கும்பல்.

இதுபோன்ற சாதிவெறியர்களையும், இவர்களை ஊக்குவிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் மக்களிடம் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி விரட்டியடிக்க வேண்டியுள்ளது.

ஆதிக்க சாதி வெறியர்களையும் அவர்களை ஊக்குவிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி விரட்டியடிப்போம்!

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202

Adani – The Bandit who robbed India! | People’s Power

30.01.2023

Adani – The Bandit who robbed India!

RSS – BJP; Modi fascist clique, which sacrificed India to benefit the
Ambani – Adani fascist clique, is the culprit!

Press Release

The Hindenburg Report revealed that Adani, who is India’s richest man and 5th richest in the world, is a fraudster, traitor and a bandit.

Adani manipulated the value of his shares by starting offshore shell entities to buy shares from his listed companies, and by intimidating the LIC to buy his shares with the help of fascist Modi – Amit Shah clique. He got loans from the SBI by quoting these manipulated share values and started new companies. This is how Adani became the richest Indian in just eight years of Modi rule.

Adani Group is levelling accusations against Hindenburg. It is trying to hide behind the national pride by projecting the report as a conspiracy to decimate Indian companies.


Also read: Conspiracy to reopen the murderous Sterlite! Let’s support the struggling Tuticorin people! | People’s power


Adani Group’s stocks continue to bleed. LIC, which invested in Adani Group, suffered losses in billions. In order to make up for Adani’s loss, LIC was forced to invest another  ₹3 billion in the Adani Group. This has turned the lives of millions of people who invested in the LIC into a big question mark.

For the sustenance of Adani and Ambani in the top of the world’s rich list, the prices of petrol, diesel and LPG in India were maintained at exorbitantly higher rates, though their global prices fell. Billions of rupees was taken from the RBI reserves. Ports, airports, Navratna Public Sector Enterprises, natural resources including water, land and sky are being destroyed for the sake of Ambani and Adani. Laws are being amended to favour them. The political parties are made to abide either willfully or through intimidation; the protesting people face State repression. Those who voice for the people are incarcerated by using draconian laws like UAPA.

The RSS – BJP fascists are gifting the entire country to the Ambani – Adani fascist clique. Hindurashtra is required for them to plunder the country. The fact that the wealth of the Ambani – Adani fascist clique has increased several hundredfold and the accumulation of hundreds of billions of election funds through electoral bonds to the BJP is an example to this.


Also read: The Supreme Court’s confirmed the desicion of 10% reservation! | People’s power Press release


The reason for the prevailing of unemployment – economic crisis – inflation – poverty –hunger is the RSS – BJP; Ambani – Adani fascist clique and the recolonizational policies of privatization – liberalization – globalization pursued by it.

People’s Power is declaring that the Ambani – Adani fascist clique which plunders the people and the country, and the RSS – BJP; Modi – Amit Shah fascist clique which is sacrificing the entire country to the corporate fascist clique as enemies of the people. People’s Power is appealing to the students, youngsters, workers, peasants, fishermen and women to smash the RSS – BJP; Ambani – Adani fascism, in order to get rid of their woes.

With Comradeship,
Comrade Vetrivel Chezhian,
State Secretary,
People’s Power,
Tamil Nadu – Puducherry.
Contact : 99623 66321

மோடியின் முகத்திரையை கிழிக்கும் பிபிசி ஆவணப்படம் | தோழர் அமிர்தா வீடியோ

மோடி அரசு ஏன் இந்த ஆவணப்படத்தை தடை செய்திருக்கிறது? 2002ல் நடந்த குஜராத் கலவரத்தைப் பற்றி எடுக்கப்பட்ட படம் ஏன் இப்பொழுது இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது? ஏனென்றால் அதில் கூறப்பட்டுள்ள அனைத்துமே உண்மையின் சாட்சியமாக அமைந்திருக்கிறது. இந்த ஆவணப்படம் குறித்து ஜே.என்.யூ மாணவர்கள், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள், கேரளா தமிழ்நாட்டு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது உண்மையின் சாட்சியமாக இருப்பதால் ஜனநாயக சக்திகள் இதை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். ஜே.என்.யூ மாணவர்கள் இந்த படத்தை விடுதியில் பார்க்க முயற்சித்த போது அங்கிருந்த ஜனநாயக சக்திகளான மாணவர்கள் மீது ஏபிவிபி மாணவர்கள் கல் எரிந்துள்ளனர்.

மோடி கும்பலை அம்பலப்படுத்தி வெளியாகியிருக்கும் இந்த பிபிசி ஆவணப்படத்தை நாம் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதே போல, இருக்கக்கூடிய தொழிற்சாலைகளிலும் ஒவ்வொரு வீதிகளிலும் கிராமப்புறங்களிலும் நகர்புறங்களிலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க முகத்திரையை கிழிப்பதற்கு இந்த ஆவணப்படத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!

0

னவரி 21 அன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் துருக்கிக்கு எதிராக நடந்த ஒரு போராட்டத்தில் இஸ்லாமிய மதத்தின் புனித நூலாகக் கருதப்படும் குர்ஆன்-ஐ அதிதீவிர வலதுசாரி கட்சியான ஸ்ட்ராம் குர்ஸின் (Stram Kurs) தலைவரான ராஸ்மஸ் பலுதன் (Rasmus Paludan) எரித்தார். இந்த சம்பவம் இஸ்லாமிய நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்வீடனை துருக்கி கடுமையாக கண்டித்துள்ளது. இது ஒரு “கேவலமான செயல்” என்றும் விமர்சித்துள்ளது.

மேலும் ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சரான பால் ஜான்சன், தான் மேற்கொள்ள இருந்த துருக்கி பயணத்தை இரத்து செய்துள்ளார். இந்த சுற்றுப்பயணம் அதன் முக்கியத்துவத்தையும் அர்த்தத்தையும் இழந்துவிட்டதாக துருக்கி அரசு கூறியுள்ளது. ஸ்வீடன் அரசை கண்டித்து துருக்கியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியதை தொடர்ந்து நேட்டோ ராணுவ கூட்டணியில் இணைவதற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஸ்வீடன் விண்ணப்பித்தது (ஃபின்லாந்தும் விண்ணப்பித்துள்ளது). நேட்டோ கூட்டணியில் உள்ள 30 உறுப்பு நாடுகளும் அங்கீகரித்தால் மட்டுமே புதிதாக ஒரு நாடு அதில் இணைய முடியும். ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து இணைவதை துருக்கி மற்றும் ஹங்கேரி நாட்டு நாடாளுமன்றங்கள் அங்கீகரிக்கவில்லை. ஹங்கேரி வருகின்ற பிப்ரவரி மாதம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபின்லாந்தை கனிவாக அணுகும் துருக்கி, ஸ்வீடன் இணைவதை மட்டும் கடுமையாக எதிர்த்து வருகிறது.

துருக்கியின் ஆட்சேபனையை எதிர்த்து ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வலதுசாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தீவிர வலதுசாரி கட்சியான ஸ்ட்ராம் குர்ஸின் தலைவரான ராஸ்மஸ் பலுதன் குர்ஆன் பிரதியை எரித்தார். இதற்கு முன்னதாக, ஒரு போராட்டத்தில் துருக்கிய அதிபர் ரிசெப் தையிப் எர்துவான்-இன் (Recep Tayyip Erdoğan) உருவபொம்மை தலைகீழாக கம்பத்தில் தொங்கவிடப்பட்டது.


படிக்க: துருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘


“கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லிம் விரோத செயல்களை அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பும் (Organisation of Islamic Cooperation), பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் குர்ஆன் எரிக்கப்பட்டதை கண்டித்துள்ளன.

துருக்கி அரசிற்கு எதிராக ஆயுதமேந்திய குர்திஷ் குழுக்கள் போராடி வருகின்றன. அதிலும் குறிப்பாக, 1984-ஆம் ஆண்டிலிருந்து ஆயுதமேந்தி போராடி வருகிறது குர்திஷ் தொழிலாளர் கட்சி (Kurdistan Workers Party PKK). பி.கே.கே ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, துருக்கி, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குர்திஷ் தொழிலாளர் கட்சியின் (பி.கே.கே) சில உறுப்பினர்களுக்கும், 2016-ஆம் ஆண்டில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட சிலருக்கும் ஸ்வீடன் புகலிடம் அளித்துள்ளதாகவும், அவர்களை துருக்கிக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் துருக்கி அரசு ஸ்வீடனிடம் கோரியுள்ளது; 120 பேரின் பெயர் பட்டியலை ஸ்வீடனிடம் கொடுத்திருக்கிறது துருக்கி.

மேலும், வருகின்ற மே மாதம் துருக்கியில் தேர்தல் நடைபெற உள்ளதால், ஸ்வீடனை எதிர்ப்பதன் மூலம் தேசவெறியை கிளப்பி வாக்குகளை அறுவடை செய்ய முயற்சி செய்கிறார் துருக்கி அதிபர் எர்துவான். ஸ்வீடன் நேட்டோவில் இணைவதை மத்திய ஆசியாவின் பிராந்திய வல்லரசான துருக்கி எதிர்ப்பதற்கு இவை மட்டும் காரணமல்ல.


படிக்க: துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !


2014-ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைனின் பகுதியான கிரிமியாவை (Crimea) இணைத்துக் கொண்ட பின்பு, உக்ரைன் தனது ஆயுதப் படைகளை நவீனப்படுத்திக் கொள்ள துருக்கி அதீத ஒத்துழைப்பு வழங்கிவருகிறது; நவீன ஆளில்லா விமானங்களை விற்பனை செய்யவும் உக்ரைனுடன் ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டது. அதேவேளையில், மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது விதித்தது போன்றதான பொருளாதாரத் தடைகளை விதிக்க நேட்டோ உறுப்பினரான துருக்கி மறுத்துவிட்டது.

ரஷ்யாவின் இயற்கை எரிவாயு உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. அதை மாற்றுப்பாதையில் துருக்கி வழியாகக் கொண்டு செல்லும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை (TurkStream pipeline project), உக்ரைன் மற்றும் மேற்குலக நாடுகளின் எதிர்ப்பையும் கடந்து, ரஷ்யாவுடன் துருக்கி மேற்கொண்டது. மேலும், கடந்த 2017-ஆம் ஆண்டில் அமெரிக்க எதிர்ப்பையும் கடந்து, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை வாங்குவதற்கே அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், நேட்டோ உறுப்பினரான துருக்கி ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை வாங்கியுள்ளது.

நேட்டோ உறுப்பினராக இருப்பதன் மூலம் மேற்குலக நாடுகளின் கூட்டாளியாக விளங்கும் அதே வேளையில் ரஷ்யாவுடனான தனது உறவையும் பேணிக் கொள்கிறது துருக்கி. தற்போது ஸ்வீடனின் நேட்டோ இணைவை எதிர்ப்பதன் மூலம் மேற்குலக நாடுகளிடம் பேரம்பேசி மேலும் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு மத்திய ஆசியா – கருங்கடல் பகுதியில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எத்தனிக்கிறது.

பொம்மி

நாட்டை சூறையாடிய கொள்ளைக்காரனே அதானி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

30.01.2023

நாட்டை சூறையாடிய கொள்ளைக்காரனே அதானி!

அம்பானி  – அதானி பாசிசக் கும்பலுக்கு நாட்டைக் காவு கொடுத்த
ஆர் .எஸ் .எஸ் – பாஜக ; மோடி பாசிசக் கும்பலே குற்றவாளிகள் !

பத்திரிகை செய்தி

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரனும் உலக அளவில்  பணக்காரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில்  இருந்த அதானி ஒரு மாபெரும் மோசடிக்காரன், தேசத் துரோகி , கொள்ளைக்காரன் என்பதை ஹிண்டன் பர்க் ஆய்வறிக்கை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

லெட்டர் பேடு கம்பெனி ஒன்றை ஆரம்பித்து,  அதனை மிகப்பெரிய கம்பெனி போல பில்டப் செய்து, அதன் பெரும்பான்மைப் பங்குகளை தானே வாங்கிக் கொண்டு , மீதமுள்ள பங்குகளை பாசிச மோடி- அமித்ஷா கும்பலின் உதவியால் எல் .ஐ .சி யை மிரட்டி   வாங்க வைத்து , பங்கு மதிப்புகளை செயற்கையாக எகிற வைத்து, அதனை அடமானம் வைத்து பல்லாயிரக்கணக்கான கோடிகளை எஸ்பிஐ வங்கிகளில் கடன் வாங்கி அடுத்த இன்னொரு கார்ப்பரேட் கம்பெனியை ஆரம்பிப்பது. இப்படிப்பட்ட மோசடித்தனமான பல்வேறு வேலைகளில் ஈடுபட்டதன் மூலம் மட்டுமே கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பணக்காரனாக மாறி இருக்கிறார் அதானி.

படிக்க : ஒரே நாடு, ஒரே தேர்தல் – ரிமோட் வாக்களிப்பு இந்து ராஷ்டிரத்துக்கான அடுத்த நகர்வில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள்!

அதானியின் இந்த மோசடிகளை அம்பலப்படுத்தி இருக்கின்ற ஹிண்டன் பார்க் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள அதானி நிறுவனம், இந்திய நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் சதி என்று இந்திய தேச பெருமையில் ஒளிந்து கொள்கிறது.

கடந்த மூன்று நாட்களில் அதானியின் பங்கு மதிப்பு பெரும் அளவில் சரிந்து இருக்கின்றன .அதில் முதலீடு செய்துள்ள எல். ஐ .சி மிகப்பெரிய அளவில் பல நூறு கோடிகளை இழந்திருக்கிறது.  தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி கட்ட வேண்டும் என்பதற்காக மேலும் 300 கோடி ரூபாய்  பங்குகளை எல்ஐசி, அதானி நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறது . இதனால் எல். ஐ. சி யில் முதலீடு செய்துள்ள இந்த நாட்டின் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வு என்னாகப் போகிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

அதானியும் அம்பானியும் இந்திய உலக பணக்கார வரிசைகளில் முதல் சில இடங்களில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக, உலக அளவில் கச்சா எண்ணை வெகுவாக குறைந்த போதும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியில் இருந்து பல்லாயிரக்கணக்கான கோடிகள் களவாடப் பட்டிருக்கின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள் , நவரத்தினங்கள் என்று சொல்லக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களும் நீர், நிலம், ஆகாயம் என அனைத்து இயற்கை வளங்களும்   அம்பானி அதானிகளுக்காக பலியிடப்படுகின்றன .அதற்கேற்றபடி சட்ட திட்டங்கள் திருத்தப்படுகின்றன. கட்சிகள் மிரட்டி உருட்டி வழிக்கு கொண்டு வரப்படுகின்றன .போராடுகின்ற மக்கள் மீது அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இந்த நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் எல்லாம்  ஊபா போன்ற கருப்பு சட்டங்களால் சிறை வைக்கப்படுகின்றார்கள் .

இந்த அம்பானி ,அதானி பாசிஸ்டுகளுக்கு இந்த நாட்டையே ஆர். எஸ். எஸ் – பாஜக பாசிஸ்டுகள் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டினை முழுவதுமாக ஒட்டச் சுரண்டுவதற்கு அவர்களுக்கு தேவைப்படுவது தான் இந்து ராஷ்டிரம் .  கடந்த எட்டு ஆண்டுகளில் அம்பானி, அதானி பாசிசக் கும்பலின் சொத்து மதிப்பு பல நூறு  மடங்குகள் உயர்ந்து இருப்பதும்  பாரதிய ஜனதா கட்சிக்கு பல்லாயிரம் கோடிகள் தேர்தல் நிதி பத்திரங்கள் சேர்ந்திருப்பதுமே இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

படிக்க : அதானியே நமோ நமஹா!

இதன் நாட்டில் உள்ள வேலையின்மை  – பொருளாதார நெருக்கடி – விலைவாசி – பசி- பஞ்சம்- பட்டினி அனைத்துக்குமே மூலக் காரணம் இந்த ஆர்எஸ்எஸ் – பாஜக ;அம்பானி- அதானி பாசிச கும்பலும்  அவர்கள் பின்பற்றும் தனியார்மயம்  – தாராளமயம் உலகமயம் என்ற மறு காலனியாக்கக் கொள்கைகளும் தான் .

இப்படி நாட்டையும் நாட்டு மக்களையும் கொள்ளையடித்த அம்பானி – அதானி பாசிசக் கும்பலும் அவர்களுக்கு நாட்டையே காவு கொடுத்த ஆர்எஸ்எஸ்  – பாஜக ; மோடி – அமித்ஷா பாசிச கும்பலும் இந்த நாட்டு மக்களின் எதிரிகள் மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது. இந்த நாட்டில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளிகள், விவசாயிகள், மீனவர்கள், பெண்கள் என அனைவருக்குமே  தங்கள் இன்னல் தீர   வேண்டுமென்றால் அதற்கு முதலாக ஆர். எஸ் .எஸ் –  பாஜக ;அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர்.சி .வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம் ,
தமிழ்நாடு புதுவை
9962366321

“இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்பட திரையிடலை வரவேற்போம்! | மக்கள் அதிகாரம்

30.01.2023

பல்கலைக்கழக மாணவர்களின் “BBC Documentary: The Modi Question”
ஆவணப்பட திரையிடலை வரவேற்போம்!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, மோடி – அமித்ஷா பாசிச கும்பலை மக்கள் மத்தியில்
அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவோம்!

டந்த 10 நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி “BBC Documentary: The Modi Question”. இதனை முதல் பாகம் ஜனவரி 17ம் தேதியும், இரண்டாவது பாகம் 24ம் தேதியும் பி.பி.சி வெளியிட்டது. ஆவணப்படத்தை இந்திய சமூக வலைதளங்களில் வெளியிட ஒன்றிய அரசு தடைசெய்துள்ளது.

இந்த ஆவணப்படம் குஜராத் இனப்டுகொலையை அம்பலப்படுத்தியிருக்கிறது என்பதே தடைசெய்ய காரணம். 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் இசுலாமிய மக்களுக்கு எதிரான இனபடுகொலை நடந்தேறியதில் அன்றைய குஜராத் முதலைமைச்சர் இன்றைய பிரதமர் மோடிக்கு தொடர்புள்ளது என்பதை விவரிக்கிறது. ஆவணப்படமானது குஜராத் கலவரத்தின் குற்றவாளி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, மோடி – அமித்ஷா கும்பல் தான் என்பதை மீண்டும் உலகறிய செய்திருக்கிறது.

டெல்லி ஜே.என்.யு மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள், புனேவில் உள்ள FTII(Film and Television Institute of India) மாணவர்கள், மும்பையில் TISS(Tata Institute of Social Sciences) மாணவர்கள், ஹிமாச்சல் பிரதேச பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஆவணப்படத்தை திரையிட்டுள்ளனர்.


படிக்க: “இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!

TISS மாணவர்கள் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்த வந்தபோதும் 200 மாணவர்கள் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு திரையிடல் செய்துள்ளனர். ஜே.என்.யூவில் திரையிடல் செய்தபோது கல்லூரி நிர்வாகம் மின் இணைப்பை துண்டித்துள்ளது. மேலும், ஏ.பி.வி.பி அமைப்பினர் திரையிட்ட மாணவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹைதராபாத் பல்கலைக்கழத்தில் ஆவணப்பட திரையிட்ட போது அதற்கு எதிராக ஏ.பி.வி.பி அமைப்பினர் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை திரையிட்டுள்ளனர். ஹிமாச்சல் பல்கலைக்கழக நிர்வாகம் படத்தை திரையிட கூடாது என மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொல்கத்தா பீம் ஆர்மி மாணவர் கூட்டமைப்பு திரையிட திட்டமிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி ஜே.என்.யு மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் 24 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.

சென்னையில் கவுன்சிலர் தலைமையில் திரையிட முயன்றபோது கவுன்சிலரை கைது செய்துள்ளது. கோவையில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக திரையிட இருந்தது, சென்னையில் கைது செய்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் திரையிட திட்டமிட்டத்திற்கே காவல்துறை அனுமதி தர மறுத்து திரையிட்டால் கைது செய்வோம் என்ற தோரணையில் காவல்துறை மிரட்டியுள்ளது.


படிக்க: தொடர்ந்து பாசிச அரசால் ஒடுக்கப்படும் ஜே.என்.யு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஷெக்லா ரஷித்!


எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு மாணவர்கள் திரையிட்டிருக்கிறார்கள் என்பதை வரவேற்றாக வேண்டும். மாணவர்கள் பாசிஸ்டுகளுக்கு ஒருபோதும் அஞ்சி நிற்க மாட்டார்கள் என மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. இதற்கு முன்கையெடுத்து பல்வேறு மாநிலங்களில் திரையிட்டுள்ள இந்திய மாணவர் சங்கம் மற்றும் இடதுசாரி அமைப்புகளை வரவேற்க வேண்டும்.

குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, மோடி – அமித்ஷா கும்பல் செய்த கொடூரங்களை முழுமையாக இந்த ஆவணப்படம் கூறாவிட்டாலும் மீண்டும் ஓர் விவாதப் பொருளாக்கியதை நாம் வரவேற்க வேண்டியிருக்கிறது. இந்துராஷ்டிர கனவோடு திரிந்து கொண்டிருக்கும் பாசிச கும்பலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டிய கடமை அனைத்து ஜனநாயக, முற்போக்கு அமைப்புகள், சக்திகள் செய்ய வேண்டியுள்ளது.

பொய்கள், பேச்சுரிமை மறுப்பு, அடக்குமுறைகள், வெறியூட்டல்கள் இவை பாசிசத்தின் ஆயுதங்கள். 2002 இனபடுகொலையை எத்தனை தடைகளாலும் மறைக்க முடியாது என்பதை பாசிஸ்டுகளுக்கு செவிட்டில் அடித்துக் கூறுவோம். இனப்படுகொலையாளர்களான ஹிட்லர் – முசோலினியை அந்நாட்டு மக்கள் பழிதீர்த்தது போல் இந்திய மக்களும் காவி பாசிஸ்டுகளை பழிதீர்ப்பார்கள்.

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202