Sunday, August 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 189

பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !

PP Letter headபத்திரிக்கை செய்தி

07.01.2022

மீண்டும் ஊரடங்கு; மூடு டாஸ்மாக்கை! பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !

கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் இரவு நேர மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு நடக்கும் வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வாரத்தில் நான்கு நாட்கள் கோயில்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. ஏற்கெனவே ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் குறைந்து போயுள்ளதை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள இந்தச் சூழலில் பள்ளிகள் மூடப்படுவது என்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். மீண்டும் ஷிப்ட் முறையில் பள்ளிகளை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா சுனாமியாய் பரவி வருவதால் பொது இடங்களில் தேவையின்றி கூடக்கூடாது என்று விளம்பரம் செய்து வரும் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக்கை மூடுவது பற்றி வாயே திறக்காமல் இருப்பது மிகப்பெரிய அநியாயம் ஆகும். கொரோனா பரவல் என்பது உண்மை என்றால் முதலில் மூட வேண்டியது டாஸ்மாக்கைதான். ஆகவே தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இல்லையென்றால் கடந்த ஆட்சியின் போது டாஸ்மாக்கை மூடாத எடப்பாடி அரசின் மீது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் இப்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வைத்த விமர்சனங்களே இந்த ஆட்சிக்கும் பொருந்தும்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் மூடப்படாது. மக்கள் போராட்டங்களே டாஸ்மாக்கை மூடும் என்பதே மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

தோழமையுடன்
தோழர் சி வெற்றிவேல் செழியன் ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2022 || மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

ஜனவரி-2022 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜி−பே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜி−பே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்−ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்−அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

000

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
  • தலையங்கம்: ‘தேர்தல் சட்டங்கள் திருத்தம்’ 2021: இந்துராஷ்டிரத்தின் சட்டப்பூர்வ கண்காணிப்பில் மக்கள்
  • கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்துவரும் இந்துராஷ்டிர பேரபாயம்! – பாகம்:01
  • குழந்தைத் திருமண தடுப்பு (திருத்த) மசோதா 2021 : காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின் ஒளிந்திருக்கும் பாசிச நோக்கம் !
  • பாசிச படையெடுப்பின் கைதேர்ந்த உளவாளி ஆர்.என்.ரவி !
  • உலக மனித உரிமைகள் தினம்: பாசிஸ்டு மோடியைக் கண்டித்து உலகெங்கிலும் எழுந்த போராட்டங்கள் !
  • ஹரித்துவார் மாநாட்டின் அறைகூவல்: எச்சரிக்கை ! இந்துராஷ்டிரம் நிறுவப்படும் காலம் நெருங்குகிறது.
  • அமெரிக்காவின் மேலாதிக்க வெறியால் பட்டினியில் மடியும் ஆப்கான் மக்கள்
  • நாகாலாந்தில் 15 தொழிலாளர்கள் படுகொலை: இராணுவ ஒடுக்குமுறையில் நிலைநாட்டப்படும் ‘இந்திய ஒற்றுமை’
  • ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடும் அமெரிக்காவின் நாட்டாண்மைப் பதவியும் !

வாங்கிப் படியுங்கள் !!

தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !

“நடைமுறைப்படுத்தப்படும் தேசியக் கல்விக் கொள்கை – 2020 ! எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?” என்ற தலைப்பின் கீழ், பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) கடந்த 05-01-2022 அன்று பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் கதிரவன் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து “அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இயக்கம்” அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் உமா மகேஸ்வரி சிறப்புரை ஆற்றினார்.

ஆசிரியர் உமா மகேஷ்வரி, தனது உரையில் இந்தியா முழுவதும் மோடி அரசு ஆட்சியில் அமர்ந்த பின்னர் படிப்படியாக கல்வி காவிமயப்படுத்தப் பட்டதை அம்பலப்படுத்திப் பேசினார். மேலும், தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதையும், அரசுப் பள்ளிக் கூடங்கள் பராமரிப்பின்றி படிப்படியாக மூடப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டி உரையாற்றினார்.

ஆசிரியர் உமா மகேஷ்வரியின் உரை காணொலியாக இங்கு பதிவிடப்பட்டிருக்கிறது !

பாருங்கள் ! பகிருங்கள் !!

 

நாகாலாந்து : ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் தூக்கியெறியப் போராடுவோம்!

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற வெற்றுப் பூச்சாண்டியை  அம்பலப்படுத்துவோம் !
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் தூக்கியெறியப் போராடுவோம் !
நாகாலாந்தில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) திரும்ப பெற வேண்டும் என்று அம்மாநில மக்களும் அங்குள்ள அமைப்புகளும் பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், நாகாலாந்து மாநிலம் அச்சுறுத்தல் நிறைந்ததாக (disturbed area) உள்ளது என்று காரணம் காட்டி அச்சட்டத்தை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது ஒன்றிய அரசு.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) அமலில் இருக்கும் காஷ்மீர், நாகாலாந்து உள்ளிட்ட 9 மாநிலங்களில் இராணுவத்துக்கு எல்லையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இராணுவம் நினைத்தால் மக்கள் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் சோதனை என்ற பெயரில் அத்துமீறலாம். இராணுவம் செய்யும் கொலை, பாலியல் வெறியாட்டங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் நீதிமன்ற விசாரணையோ நடவடிக்கையோ கூடக் கிடையாது. இராணுவ நீதிமன்றங்களே இவற்றை விசாரிக்கும்.
சுருங்கக் கூறின் இம்மாநிலங்கள் அறிவிக்கப்படாத ஒரு இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் உள்ளன. இத்தகைய வானளாவிய அதிகாரங்களை கையில் வைத்துகொண்டு அப்பகுதி மக்களிடம் எல்லையற்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவதோடு, எந்தக் காரணமுமின்றி அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது இந்திய இராணுவம்.
சமீபத்தில் கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் சுரங்க தொழிலுக்குச் சென்று வீடு திரும்பிய 6 தொழிலாளர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது இராணுவம். அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த இச்சம்பவம் குறித்து மக்களவையில் பேசிய அமித்ஷா, இராணுவத்தினர், தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் என தவறுதலாக அடையாளம் கண்டுகொண்டு சுட்டுவிட்டதாகவும், அச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும் தன் ஆழ்ந்த ‘இரங்கலை’ தெரிவித்தார். தினசரி அங்குள்ள மக்கள் வேலைக்குச் சென்று திரும்பும் மக்களின் நடைமுறைக்கும், பயங்கரவாதிகளின் நடைமுறைக்கும் ‘வித்தியாசம் தெரியாமல்’ இவர்கள் சுட்டுவிட்டார்களாம், அதற்காக வருந்துகிறார்களாம். மோடி-ஷா கும்பலால் கூறப்படும் இப்பச்சைப் பொய்யை எவ்விதக் கூச்சமுமின்றி இந்தியாவின் எல்லா ஊடகங்களும் ஒளிபரப்பின.
படிக்க :
♦ AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை
♦ எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் : இராணுவ சர்வாதிகாரம்!
உண்மையில், 6 தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற பின் அவர்களை தூக்கி வண்டியில் போட்டு, அவர்களுக்கு கிளர்ச்சியாளர்களின் (பயங்கரவாதிகளின்) உடையை அணிவித்து அவர்களின் கைகளில் ஆயுதங்களைத் திணித்து அவர்களை பயங்கரவாதிகளாகவே சித்தரிக்க முயற்சித்திருக்கிறது, இராணுவம். ஆகவே, இராணுவத்தினர் தவறாகச் சுடவில்லை. ஒரு திட்டத்துடன் தான் வந்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் தெரிகிறது.
மக்கள் வருவதற்குள் கொல்லப்பட்ட 6 பேரையும் தாம் வந்த வண்டியில் தூக்கிப் போட்டு, அந்தப் பிணங்களின் மீது தார்ப்பாயும் போர்த்தப்பட்டு, அதன்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு வண்டி கிளம்பியது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு வந்த மக்கள் இராணுவ வாகனத்தை மறித்துப் பார்த்ததில் இவ்வுண்மை தெரியவந்துள்ளது. தங்கள் உறவினர்களைக் கொன்று அதன்மேல் அமர்ந்ததைப் பார்த்து ஆத்திரமுற்ற மக்கள் இராணுவத்தின் இப்பச்சைப் படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதனைப் பொறுத்துகொள்ள முடியாத இராணுவமோ நியாயம் கேட்டுப் போரடிய மக்களின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மேலும் 8 பேர் கொல்லபட்டனர். கொடூரமான மோன் மாவட்ட படுகொலை சம்பவம் நிகழ்ந்த பின்னர், நாடே முப்படைத் தளபதி பிபின்ராவத் விபத்தில் உயிரிழந்த சோகத்தில் ‘தேசபக்தி’ வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.
2021 டிசம்பர் 21-ம் தேதியன்று தினமணி நாளிதழ், இச்சம்பவத்தை பற்றி விவரிக்கும்போது, தீவிரவாதிகள் என்று நினைத்தே உழைக்கும் மக்கள் மீது இராணுவத்தினர் ‘தவறுதலாக’ துப்பாக்கிச்சூடு நிகழ்த்திவிட்டதாகவும், அதில் உழைக்கும் மக்கள் 6 பேர் ‘உயிரிழந்தனர்’ என்றும் வன்முறையில் இராணுவ வீரர் ஒருவர் ‘கொல்லப்பட்டார்’ என்றும் எழுதியிருகின்றது. ஒரே சம்பவத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை ‘உயிரிழந்தனர்’ என்றும் மக்கள் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கியபோது பலியான இராணுவ வீரரை ‘கொல்லப்பட்டார்’ என்றும் எழுதிய தினமணியின் ஊடக ‘அறத்தை’ நாம் என்னவென்று சொல்வது? ‘நடுநிலை நாயகர்களாக’ தங்களைக் காட்டிக்கொள்ளும் பத்திரிகைகளின் இலட்சணம் இதுதான்.
நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உழைக்கும் மக்கள் இராணுவத்தால் கொல்லபடுவது இது முதன்முறையல்ல. 1947-க்குப் பின்பு வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவோடு அடக்கி ஒடுக்கி இணைக்கபட்டதில் இருந்து அம்மாநிலங்களில் துப்பாக்கிச்சூடு சத்தமும் ஓலக்குரல்களும் கேட்ட வண்ணமே உள்ளது. தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பெயரில் அமலாக்கப்பட்டு, அப்பாவி உழைக்கும் மக்களைக் கொன்று குவிக்கும் இக்கொடிய சட்டத்தை (AFSPA) திரும்பப்பெற பல ஆண்டுகளாக அம்மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மோன் மாவட்ட படுகொலை சம்பவத்திற்கு பிறகு நாகாலாந்தில் இக்குரல் வலுத்து வந்தது. அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசே அவசர அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை இரத்து செய்ய ஒன்றிய அரசிடம் கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இவ்வாறு முன்பைக் காட்டிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ள சூழலில் அதை இன்னும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருப்பது நாகாலாந்து மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முடிவிற்கு  கிழக்கு நாகாலாந்து மக்கள் கூட்டமைப்பு, சர்வதேச நாகா கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாகா பழங்குடியினர் குழுக்களில் ஒன்றான ஹோஹோ வெளியிட்ட அறிக்கையில், “நாகா மக்களின் விருப்பத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. அரசின் முடிவை நாகா மக்கள் ஏற்கமாட்டார்கள். மாநிலத்தில் அமைதியான சூழல் நிலவும்போது ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நீட்டிக்க வேண்டிய அவசியமென்ன? மாநிலத்தில் இராணுவத்தினரே சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர். அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாசிச பா.ஜ.க. அரசு ஒவ்வொரு மாநிலங்களிலும் ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ என்று காரணம் காட்டி அவற்றை இராணுவ சர்வாதிகாரத்தின் பிடியில் கொண்டுவரும் தந்திரத்தைக் கையாண்டு வருகிறது. பஞ்சாப்பிலும் அசாமிலும் தற்போது எல்லைப் பாதுகப்புப் படையின் (BSF) அதிகார வரம்பை 15 கி.மீட்டரில் இருந்து 50 கி.மீட்டராக நீட்டிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது நாகாலாந்தில் சட்டத்தை நீட்டித்ததற்கும் ‘பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற அதே காரணத்தைத்தான் கூறியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாத சம்பவங்கள் வளர்ந்து வருவதைப் போலவும் அதன் மூலம் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதைப் போலவும் ஊடகங்கள் மூலம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்காகவே அவற்றை அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளாக (disturbed area) அறிவிப்பதாகவும், அங்கெல்லாம் ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீட்டிப்பதாகவும் ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் இவற்றில் கடுகளவும் உண்மையில்லை என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சகம் (MHA) வெளியிட்டுள்ள தகவல்களில் இருந்தே நாம் அம்பலப்படுத்த முடியும்.
படிக்க :
சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !
சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இச்சட்டத்தை நீட்டிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அவ்வாறு நீட்டிப்பதாயின் அதற்கான காரணங்களை வெளியிட வேண்டும் என்பது விதி. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்புவரை ‘கிளர்ச்சி சார்ந்த சம்பவங்களின்’ (Insurgency related incidents) எண்ணிக்கைகளையும் காரணங்களையும் குறிப்பிட்டு அதற்காக இச்சட்டத்தை நீட்டிப்பதாக ‘நியாயவாதம்’ (Justification) கூறிவந்த ஒன்றிய அரசோ, 2018 முதல் இப்போது வரை எவ்வித நியாயவாதமும் இல்லாமல் இந்த நீட்டிப்பைச் செய்து வருகிறது.
ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படியே, வடகிழக்கு மாநிலங்களில் 1999-இல் 1,743-ஆக இருந்த கிளர்ச்சி சார்ந்த சம்பவங்கள் ஆகஸ்டு 2021-இல் வெறும் 135-ஆகக் குறைந்துள்ளது. அசாமில் இச்சட்டத்தை நீட்டிப்பதற்காக செப்டம்பர் 10-ம் தேதி அசாம் அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் “அந்நிய நாட்டின் புலனாய்வு நிறுவனங்களால் தீய திட்டம் தீட்டப்பட்டுள்ளது” என்றும் பங்களாதேசும் மியான்மரும் சீனாவும் பூடானும் அதைச் சூழ்ந்திருப்பதாலும் “HMB, JMB, HM போன்ற இசுலாமிய பயங்கரவாதக் குழுக்களால் அசாமுக்கு ஆபத்து உள்ளது” என்றும் இச்சட்டம் நீட்டிக்கப்படுவதற்கான காரனங்கள் கூறப்பட்டுள்ளன.
ஆனால், அசாமில் 2000-இல் 536-ஆக இருந்த இச்சம்பவங்கள் 2020-இல் வெறும் 15-ஆகவும் 2021-இல் வெறும் 17-ஆகவும் குறைந்துள்ளது என்பதுதான் ஒன்றிய உள்துறை அமைச்சகமே வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரமாகும். இதேபோலத்தான் மணிப்பூரும் ‘அச்சுறுத்தல் நிறந்த பகுதியாக’ உள்ளது என்று கூறி இச்சட்டத்தை நீட்டிப்பதற்கான அறிவிப்பை டிசம்பர் 8-ம் தேதி வெளியிட்டுள்ளது மணிப்பூர் அரசு. ஆனால் 2008-இல் 740-ஆக இருந்து வந்த வன்முறைகள் 2021-இல் வெறும் 72-ஆகக் குறைந்துள்ளன. (ஆங்கில ஹிந்து நாளிதழ் 02.01.2022, பக்கம் 19)
பாசிஸ்டுகளின் புகலிடம் தேசபக்தி என்பார்கள். ‘தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்பது பாசிஸ்டுகள் காட்டும் பூச்சாண்டி என்பதை அவர்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. எனவே ‘தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற இப்பூச்சாண்டி காட்டி, அமுலாக்கப்படும் பாசிச சட்டங்களையும் இராணுவ சர்வாதிகாரத்தையும் அம்பலப்படுத்தி தோலுரித்துக் காட்டுவோம். இத்தகைய கொடிய சட்டங்களைத் தூக்கியெறிய வடகிழக்கு மாநில, காஷ்மீர் மக்களோடு கரம் கோர்த்துப் போராடுவோம்.

துலிபா

சாவித்ரிபாய் பூலே ஏன் மறைக்கப்பட்டார் ? || சிந்தன் இ. பா.

ந்தியாவின் முதல் ஆசிரியையான சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாள் (ஜனவரி 3) இன்று.  சமீபகாலங்களில் தான் அவரை நம்மில் பலருக்கும் தெரியவந்திருக்கிறது. மிகச் சமீபகாலங்களில் தான் அவரை பலரும் நினைவுகூருகிறார்கள்.
‘சாதி நல்லது’ என்றும் ‘சாதி அப்படியே தொடரவேண்டும்’ என்றும் சொன்ன இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். ஆனால் சாவித்ரிபாயை இத்தனை ஆண்டுகளாக நம்மில் பலருக்கும் தெரியாமலேயே நம் முன்னோர்கள் வைத்திருந்திருக்கிறார்களே, ‘அது ஏன்?’ என்று யோசித்துப் பார்த்தால் அவர் மறைக்கப்பட்டதற்கான காரணம் நமக்குப் புலப்படும்.
சாவித்ரிபாய் ஒரு பெண் என்பதால் தான் அவரது வரலாற்றை மறைத்தார்களா? என்று கேட்டால், “ஆம் அதுவும் ஒரு காரணம் தான். ஆனால் அது மட்டுமே ஒரேமுக்கியமான காரணமல்ல”.
படிக்க :
பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !
நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி கற்கமுடியும் என்கிற பார்ப்பனிய ஒடுக்குமுறையினால், வேறு எந்த சாதியினரும் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பள்ளிகள் உருவாவதற்கு முன்னர் இருந்த குருக்குலங்களிலும் கூட பார்ப்பனர் அல்லாத எவருமே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அதிலும், பார்ப்பன ஆண்கள் மட்டுமே கல்வி கற்கிற உரிமையினைப் பெற்றிருந்தார்கள்.
இப்படியான சூழலில் தான் சாவித்ரிபாய் புலேவைத் திருமணம் செய்திருந்த ஜோதிராவ் புலே, தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே கல்வி கற்றுக்கொடுத்தார். அதுகுறித்து கேள்விப்பட்டதும், பார்ப்பனர்கள் தங்களது படைசூழ ஜோதிராவ் புலேவின் வீட்டுவாசலில் வந்து நின்று, ஜோதிராவ் புலேவின் அப்பாவிடம் சண்டையிட்டு, ஜோதிராவ் புலேவையும் அவரது மனைவியான சாவித்ரிபாய் புலேவையும் வீட்டைவிட்டே விரட்டவைத்தனர். அதாவது, சொந்த மகனையும் மருமகளையுமே வீட்டைவிட்டு துரத்தும் அளவிற்கு ஜோதிராவ் புலேவின் அப்பாவிற்கு பார்ப்பனர்கள் நெருக்கடி கொடுத்தனர். எதற்காக? பார்ப்பனர்கள் அல்லாத ஒரு பெண் படிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக.
இந்த ஒரு புள்ளி தான் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கையை மாற்றியது என்று சொல்லலாம். இதுதான் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அது கொடுத்த கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் தான் சாணியைக் கரைத்து ஊற்றியபோதிலும், சேரை வாரி இறைத்தபோதிலும், மேலும் பல கொடூரமான தாக்குகள் நடத்தியபோதிலும், அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனைத்து சாதிப் பெண்களும் படிப்பதற்காக பள்ளிகளைத் துவங்க சாவித்ரிபாய் புலேவைத் தூண்டியது என்று சொல்லலாம்.

இந்த உண்மைகள் எவருக்குமே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் சாவித்ரிபாய் புலேவின் வரலாற்றை இத்தனை ஆண்டுகளாக சொல்லிவிடாமல் மறைத்தும், பள்ளிப்பாடத்திட்டத்தில் இடம்பெறாமல் தடுத்தும் வருகிறார்கள் சாதி மேலாதிக்கவாதிகள்…
இன்றைக்கு எல்லா சாதியைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் ஒன்றாக இணைந்து ஒரே பள்ளியில் படிக்கமுடிகிறதென்றால், அது தானாக வந்ததில்லை. பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராக சாவித்ரிபாய் புலே போன்ற எண்ணற்ற மறைக்கப்பட்டவர்களின் சாகசகங்களாலும் கடும் போராட்ட வாழ்க்கையினாலும் தான் சாத்தியமாகி இருக்கிறது.
இதனை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்… சாவித்ரிபாய் புலேவைப் பற்றி எங்கு பேசினாலும், இதையும் இணைத்தே தான் பேசவேண்டும்…
சாவித்ரிபாய் புலே குறித்து பேசுகையில், நான்கு முக்கியமான கோரிக்கைகளை நாம் தொடர்ந்து வைக்க வேண்டும்.
1. சாவித்ரிபாய் புலே குறித்து 107 எப்பிசோடுகளைக் கொண்ட தொடர் நாடகத்தை இந்தியில் தூர்தர்சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதனை அப்படியே யூட்யூபிலும் கூட தூர்தர்சன் முழுவதுமாக வெளியிட்டிருக்கிறது. அந்தத் தொலைக்காட்சித் தொடரை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து, இந்தியாவின் அனைத்து மாநில தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்ப வேண்டும், யூட்யூபிலும் பதிவேற்ற வேண்டும்.
2. சாவித்ரிபாய் துவங்கிய பெண்களுக்கான இந்தியாவின் முதல் பள்ளியின் நிலை இன்று படுமோசமாக இருக்கிறது. அதனை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்து, முழுவதுமாக சரிசெய்து, சீரமைத்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும்.
3. இந்தியா முழுக்க உள்ள அனைத்து பாடத்திட்டங்களிலும் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும்.
4. சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாளை “சமத்துவ ஆசிரியர் தினம்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஆண்டுதோறும் நாடுமுழுவதிலும் கொண்டாடப்பட வேண்டும்.
முகநூலில் : Chinthan E P
disclaimer

புதிய ஜனநாயகம் ஜனவரி – 2022 அச்சு இதழ் !

புதிய ஜனநாயகத்தின் 2022 ஜனவரி மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. தோழர்கள் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இம்மாதம் புதிதாக சந்தா கொடுத்து வாசகர்களான அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!
சந்தா பற்றிய விவரம் :
  • ஓராண்டு சந்தா- ரூ.240
  • இரண்டாண்டு சந்தா- ரூ.480
  • ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
அறிவிப்பு
அன்பார்ந்த வாசகத் தோழர்களே!
உழைக்கும் மக்களின் விடுதலைக்கான அரசியல் ஆயுதமாய் தொடர்ந்து சமர் செய்து கொண்டிருக்கும் நமது புதிய ஜனநாயகம், தனது பாதையில் அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
அதில் ஒரு பகுதியாக, நாம் முன்பே அறிவித்தவாறு புதிய ஜனநாயகம் இதழ்களில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இதழாக கொண்டு வந்துள்ளோம்.
கூடுதலாக ஒரு மகிழ்ச்சியான செய்தி, புதிய ஜனநாயகம் சார்பாக இம்மாதம் இரண்டு வெளியீடுகளை கொண்டு வர இருக்கிறோம். அவற்றையும் வாங்கிப் படித்து ஆதரிக்குமாறும் அரசியல் முன்னணியாளர்களிடம் கொண்டு சேர்க்குமாறும் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்

000

வெளியீடுகளின் விலைப்பட்டியல் :

NEW DEMOCRACY (புதிய ஜனநாயகத்தின் ஆங்கில இதழ்)
நன்கொடை : ரூ.25

 

காவி-கார்ப்பரேட் பாசிசம்: எதிர்கொள்வது எப்படி?
(புதிய ஜனநாயகம் இதழின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பு)
விலை: ரூ.80 (மாற்றத்தக்கது)
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கோரத்தாண்டவமே கொரோனா!
(வினவு தளத்தில் வெளியான தொடர் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு)
விலை: ரூ.50 (மாற்றத்தக்கது)

000

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2022 இதழின் அச்சுப் பிரதி, புதிய ஜனநாயகத்தின் ஆங்கில இதழ் (NEW DEMOCRACY), வெளியீடுகள் ஆகியவற்றைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
000

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
  • தலையங்கம்: ‘தேர்தல் சட்டங்கள் திருத்தம்’ 2021: இந்துராஷ்டிரத்தின் சட்டப்பூர்வ கண்காணிப்பில் மக்கள்
  • கர்நாடகா, திரிபுரா, அசாம்: பற்றிப் படர்ந்துவரும் இந்துராஷ்டிர பேரபாயம்! – பாகம்:01
  • குழந்தைத் திருமண தடுப்பு (திருத்த) மசோதா 2021: காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின் ஒளிந்திருக்கும் பாசிச நோக்கம்!
  • பாசிச படையெடுப்பின் கைதேர்ந்த உளவாளி ஆர்.என்.ரவி!
  • உலக மனித உரிமைகள் தினம்: பாசிஸ்டு மோடியைக் கண்டித்து உலகெங்கிலும் எழுந்த போராட்டங்கள்!
  • ஹரித்துவார் மாநாட்டின் அறைகூவல்: எச்சரிக்கை! இந்துராஷ்டிரம் நிறுவப்படும் காலம் நெருங்குகிறது.
  • அமெரிக்காவின் மேலாதிக்க வெறியால் பட்டினியில் மடியும் ஆப்கான் மக்கள்!
  • நாகாலாந்தில் 15 தொழிலாளர்கள் படுகொலை: இராணுவ ஒடுக்குமுறையில் நிலைநாட்டப்படும் ‘இந்திய ஒற்றுமை’
  • ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடும் அமெரிக்காவின் நாட்டாண்மைப் பதவியும்!

#GoBackModi என்றால் மோடி எதிர்ப்பு மட்டும்தானா?

ந்தியா முழுமைக்கும் ஒரு திட்டத்தையும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியான திட்டங்களையும் வகுத்துத் தான் ஆட்சியதிகாரத்தை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கைப்பற்றிவருகிறது.
ஒரு மாநிலத்தில் இராமனென்றால், மற்றொரு மாநிலத்தில் மாட்டுக்கறி. இது எதுவுமே சரிவராத மாநிலத்தில், அங்கே முன்னணியில் இருக்கிற கட்சிகளின் உதவியோடு காலடி எடுத்துவைத்து உள்ளே நுழைந்துவிடுவது பாஜகவின் கடைசி ஆயுதம். அப்படியாக மேற்குவங்கத்தில் ஜீரோவாக இருந்த பாஜக, மம்தா பானர்ஜியுடன் கூட்டணி வைத்து, அதன் உதவியுடன் மெகா வளர்ச்சியடைந்து இன்றைக்கு அம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறது.
படிக்க :
#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு
மோடி வரும் பின்னே ! #gobackmodi வரும் முன்னே !
அதேபோல பாஜக என்கிற கட்சியே இல்லாமல் இருந்த தமிழகத்தில் காலங்காலமாக பார்ப்பனிய எதிர்ப்பினால் வளர்ந்திருந்த திராவிடப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இருக்கிற திமுகவுடனேயே கூட்டணி வைத்து தமிழகத்தில் தடம்பதித்துவிட்டது பாஜக. ஒரு சாரணர் இயக்கத் தேர்தலில் கூட வெற்றிபெறத் தகுதியற்ற ஹெச்.ராஜாவை எம்எல்ஏ ஆக்கி சட்டமன்றத்தில் உட்காரவைத்து ஐந்தாண்டுகள் அழகு பார்த்ததே திமுக தான். திமுகவே கூட்டு வைத்தபிறகு கொள்கையே இல்லாத கட்சியான அதிமுக பாஜகவுடன் கூட்டு வைத்ததை என்னவென்று சொல்லமுடியும்.
பாஜக ஒரு தீண்டத்தகாத கட்சி என்கிற மக்களின் பொதுப்புத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, அக்கட்சியும் மற்ற கட்சிகளைப் போன்றதொரு கட்சிதான் என்கிற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியது இந்தப் புள்ளி தான்.
அதன் தொடர்ச்சியாக, இன்றைக்கு அதிமுக பாமக என தமிழகத்தின் பல்வேறு கட்சிகளில் ஊடுருவி தமிழகம் முழுவதும் தனது கிளைகளை பாஜக விரித்துக்கொண்டிருக்கிறது.
பிரியாணி அண்டா திருடர்கள் என்று நாம் கிண்டல் செய்தாலும், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அவர்கள் தான் முன்னிறுத்தப்படுகிறார்கள். கிண்டல் செய்வதானாலும் கேலி செய்வதானாலும் கூட தினமும் பாஜக இல்லாத விவாதங்களோ சண்டைகளோ இல்லாத சூழல் உருவாகியிருக்கிறது. இதெல்லாமே பாஜகவிற்கு வெற்றிதான்.
பாஜக நுழைந்த எந்த மாநிலமும் உருப்பட்டதாக வரலாறோ பூகோளமோ இல்லை. அண்டை தேசமான வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்திருக்கிற போதும், எல்லைப் பிரச்சனை கூட இல்லாமல் கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சிக்காலத்தில் அமைதியான மாநிலமாக இருந்த திரிபுரா இன்றைக்கு பாஜக ஆட்சியில் அனுதினமும் எரிந்துகொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த வடகிழக்கு இந்தியாவின் நிலையும் அது தான் இன்றைக்கு.
அதனால்… அதனால்… அதனால்… ஏற்கனவே செய்த தவறுகளை தவறுகள் தான் என்று புரிந்துகொண்டு, பாஜகவிடம் இருந்து பல அடிகள் தள்ளிநிற்பதோடு மட்டுமல்லாமல் கடுமையாக எதிர்க்க வேண்டிய கடமை மற்ற அனைவரையும் விட திமுகவிற்கு தான் அதிகம் உண்டு.
ஆகவே #GoBackModi என்பதன் பொருளானது, மோடியே திரும்பப்போ என்பது மட்டுமல்ல. மோடியே, நீயும், உன்னுடைய பாஜகவும், அதன் தலைமை அமைப்பான ஆர்எஸ்எஸ் உம், அதன் தத்துவமான பார்ப்பனியமும் எங்களுக்குத் தேவையில்லை… ஒட்டுமொத்தமாக திரும்பிப்போங்கள் என்பதே பொருள்..
முகநூலில் : Chinthan EP

disclaimer

தேசிய இனக் கோரிக்கையின் அடிப்படையும் மொழியின் முக்கியத்துவமும் : லெனின் || மணியம் சண்முகம்

‘உலகம் பூராவும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் அடையும் இறுதி வெற்றியின் காலப் பகுதி தேசிய இன இயக்கங்களுடன் இணைந்துள்ளது. பண்ட உற்பத்தி முழு வெற்றி அடைவதற்கு, முதலாளி வர்க்கம் உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்ற வேண்டும், ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசியல் வழியில் ஒற்றுமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் அதற்கு வேண்டும்.
அந்த மொழியின் வளர்ச்சிக்கும், அதன் இலக்கியம் உருப்பெற்று விளங்கவும், குறுக்கே நிற்கும் தடைகள் யாவும் அகற்றப்பட வேண்டும் – இங்குதான் இந்த இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கின்றது. மனித இடைத் தொடர்புகளுக்கு மிக முக்கியமான சாதனம் மொழியாகும்.
நவீன முதலாளித்துவத்துக்குச் சரியான வீதத்தில் மெய்யாகவே தடையற்ற விரிவான வாணிகத்துக்கும், பல்வேறு வர்க்கங்களைச் சார்ந்த மக்கள் சுதந்திரமான, விரிவான பிரிவுகளாக அமைவதற்கும், இறுதியாக சந்தையுடன் ஒவ்வொரு பெரிய சிறிய உரிமையாளரும், விற்போரும் வாங்குவோரும் பரஸ்பரம் நெருக்கமான தொடர்பு ஏறபடுத்திக் கொள்ளவும் மிக முக்கியமான நிபந்தனைகளில் மொழியின் ஒற்றுமையும் தங்குதடையற்ற வளர்ச்சியும் அடங்கும்.
படிக்க :
நூல் அறிமுகம் : தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி
தேசிய இனப் பிரச்சினையும் பாட்டாளி வர்க்கமும் – லெனினியம்
எனவே, ஒவ்வொரு தேசிய இன இயக்கத்தின் போக்கும் தேசிய இன அரசுகளை நிறுவும் திசையிலானதாகும். அவ்வரசுகளின் கீழ் நவீன முதலாளித்துவத்தின் இந்தத் தேவைகள் மிகவும் நன்றாகப் பூர்த்தி செய்யப்படும். மிகவும் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள் இந்த இலட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன.
எனவே, மேற்கு ஐரோப்பா முழுவதற்கும் ஏன் நாகரீக உலகம் முழுவதற்குமே முதலாளித்துவ காலப் பகுதியில் தேசிய இன அரசு மாதிரிப் படிவமானது சகஜமானது.’
(‘தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை’ என்ற கட்டுரையில் லெனின் இவ்வாறு கூறியிருக்கிறார்)
குறிப்பு :
இங்கே லெனின் ஒரு தேசிய இன இயக்கத்தின் பொருளாதார அடிப்படையையும், அந்த இயக்கத்தின் இறுதி இலட்சிய நோக்கையும், வர்க்க அடிப்படையிலான விஞ்ஞான நோக்கில் மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
லெனின் எடுத்துரைத்த கருத்துகளின் அடிப்படையில்தான் ஐரோப்பாவில் பொருளாதார அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும் தேசிய இன அரசுகள் அமைந்துள்ளதைக் காணலாம். ஆனால், ஐரோப்பாவில் தனித்தனி தேசிய அரசுகள் அமைந்த பின்பும், அங்கு இன்னமும் சில நாடுகளில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது சுய நிர்ணய உரிமைக்காகப் போராடி வருகின்றன. ஏன் அப்படி நடைபெறுகின்றது?
மறுபுறத்தில், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றால் காலனிகளாக ஆக்கப்பட்டு, பின்னர் நாட்டுச் சுதந்திரம் பெற்ற பெரும்பாலான ஆசிய – ஆபிரிக்க – லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மை இன ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகச் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடி வருகின்றன.
அவ்வகையான ஒரு போராட்டம்தான் இலங்கைத் தமிழர்களின் போராட்டமும் என அதன் தலைமைகளும் கூறி வருகின்றன. உண்மையில் லெனின் குறிப்பிட்டவாறு, இலங்கைத் தமிழினம் தனது முதலாளித்துவ சந்தையை உறுதிப்படுத்துவதற்காகத்தான் ஒரு அரசு வேண்டும் என்று போராடுகிறதா? அப்படியான ஒரு சுதேசிய முதலாளித்துவ சந்தை (வளர்ச்சி) இலங்கைத் தமிழினத்தின் மத்தியில் உருவாகி இருக்கிறதா? (அதாவது இரவல் வாங்கிய முதலாளித்துவ சிந்தனை இருக்கிறது, ஆனால் நடைமுறை வளர்ச்சி இருக்கிறதா என்பதே இக் கேள்வியின் அர்த்தம்)
அப்படி ஒரு வளர்ச்சி அடைந்த உள்நாட்டுச் சந்தை இருந்தால் எதற்காக தனது சொந்தப் பலத்தில் நின்று போராடாமல் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் தயவை இலங்கை தமிழினம் எதிர்பார்த்து நிற்கிறது.
இலங்கை தமிழினத்தின் போராட்டம் எத்தகையது என்பதைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிவது இன்றியமையாதது.

முகநூலில் : Maniam Shanmugam
disclaimer

Don’t Look up : நாம் மேலே பார்ப்பதை தவிர்க்கிறோம் || ராஜசங்கீதன்

“அந்த இரண்டு மார்க்சிஸ்டுகள் உலகம் முழுவதும் சென்று உலகம் அழியப் போவதாக சொல்லிக் கொண்டிருப்பதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது”என ஒரு வசனம் Don’t look up படத்தில் வருகிறது.
நாயகனும் நாயகியும் விஞ்ஞானிகள். ஒருநாள் நாயகி ஆராய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கிறாள். வால் நட்சத்திரம்! புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் கொண்டாடுகின்றனர். நாயகன் வால் நட்சத்திரம் இருக்கும் தூரத்தைக் கணக்கிடுகிறான். வால் நட்சத்திரத்தின் தூரம் ஒவ்வொரு கணக்கிடலிலும் குறைந்து கொண்டே இருக்கிறது.
வால் நட்சத்திரம் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது! ஆறு மாதங்கள்தான் கெடு! நாம் அறிந்த வகையில் இருக்கும் உலகம் அழிந்துவிடும்!
இந்த மூன்று விஷயங்களை உலகுக்கு அறிவிக்க முயலும் இரு விஞ்ஞானிகளின் கதைதான் படம்.
படிக்க :
சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
முதலில் அமெரிக்க ஜனாதிபதியிடம் பேச முயலுகிறார்கள். நடக்கவிருக்கும் தேர்தலை வால் நட்சத்திரம் பற்றிய செய்தி பாதிக்கும் என யோசிக்கிறார். தொலைக்காட்சியில் சொல்ல முயலுகிறார்கள். ‘இந்த வால் நட்சத்திரத்தை என் முன்னாள் மனைவியின் வீட்டு மேல் விழச் செய்ய முடியுமா?’ என சொல்லி விட்டு சிரிக்கிறார்.
இவை அன்றி, கூப்பிட்டால் ஜனாதிபதி பம்மி ஓடி நிற்கும் ஒரு முதலாளி, வால் நட்சத்திரத்தில் பல ட்ரில்லியன் டாலர் மதிப்பு வாய்ந்து மினரல்கள் இருப்பதாகச் சொல்கிறார். அவற்றை எப்படி எடுப்பது என்பதைப் பற்றி ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடக்கிறது.
சமூகதளங்கள் முழுக்க ‘க்ரெட்டா’வைப் போல் நாயகியை ட்ரோல் செய்யும் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது. அரசு, முதலாளி என ஆளும்வர்க்கம் விரும்புகிற பாணியில் மக்களை மந்தைகளாக்க சமூக தளங்கள் பயன்படுகின்றன.
இறுதியில் என்னவாகிறது என்பது மிச்சக் கதை!
கதையில் வரும் வால் நட்சத்திரம், வால் நட்சத்திரம் அல்ல; நிகழ்ந்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றமே என்பதை மேற்கண்ட கதையிலேயே ஒருவர் புரிந்துகொள்ள முடியும். காலநிலை மாற்றத்துக்கான எல்லாவித சாட்சிகளும் நேரடியாக நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே எப்படி insensible ஆக அரசும் ஆளும்வர்க்கமும் இருக்கின்றன என்பதையும் காலநிலை மாற்றத்தை மறுக்கும் ஆளும் வர்க்க அடிவருடிகள் சமூக ஊடகங்களைக் கொண்டு எப்படி மக்களை முட்டாள்களாக்குகின்றனர் என்பதையும் முதலாளியம் ஏன் தீர்வாக முடியாது என்பதையும் அறிவியலில் முதலாளிக்கான அறிவியல், மக்களுக்கான அறிவியல் என இரு வகை இருப்பதையும் படம் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.
இத்தகையக் கதைக்குள்தான் இரு விஞ்ஞானிகளையும் பிடிக்காத ஒரு நபர் அவர்களை மார்க்சிஸ்டுகள் எனக் குறிப்பிடுகிறார்.
விஞ்ஞானம் பேசுபவர்கள் எப்படி மார்க்சிஸ்டுகளாக முடியும்? ஆக முடியும். விஞ்ஞானம் முதலாளிகளுக்கானதாகவும் மக்களுக்கானதாகவும் இரு வகையாக இருப்பதை புரிந்து, மக்களுக்கான விஞ்ஞானத்தை அரச எதிர்ப்பு, மக்களின் பொதுப்புத்தி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பேசுபவர்கள் மார்க்சிஸ்டுகள்தான்.
அறிவியலுக்குள் இருக்கும் லாபவெறி, வர்க்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமல் ஒற்றையாய் அறிவியலைப் புரிந்து கொண்டு கண்மூடித்தனமாக பேசுபவர்கள் அறிவியல் பூசாரி கணக்கில்தான் வருவார்கள்.
காலநிலை மாற்றத்துக்கான தீர்வு அரசநிலை மாற்றமும் உற்பத்தி முறை மாற்றமும்தான் என்பதை முதலாளியமே ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு விஞ்ஞானம் அவர்களைத் தள்ளியிருக்கிறது. அதனால்தான் க்ரெட்டா உள்ளிட்டோர் ‘The system has to be changed’ என மார்க்சிய மொழியில் பேசுகிறார். உலகளாவிய இடதுசாரிகள் ‘System change, not climate change’ என அரசநிலை மாற்றத்தை பிரசாரம் செய்கின்றனர்.
மானுடத்தை அழிவிலிருந்து காக்க இயற்கையே முன் வைக்கும் தீர்வு, மார்க்சியம்தான். அதனால்தான் உலகமெங்கும் சூழலியலாளர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சமூக ஊடகப் பதர்களைக் கொண்டு Cancel செய்யப்படுகிறார்கள். அரசுகள் காலநிலை மாற்றத்துக்கான தீர்வை முதலாளியத்துக்குள்ளேயே தேடுகின்றன.
பாசாங்கையோ வழக்கமான அரசியல் உத்திகளையே கதைக்குதவாத வாதங்களையோ முன்னெடுக்கும் காலத்தை தாண்டிவிட்டோம் என்கிறோம். ஆனால் கேட்பாரில்லை.
உண்மை என்னவோ பூமியை அழிக்க வந்த வால் நட்சத்திரம் போல் தெள்ளத்தெளிவாக வானில் தெரிகிறது. நாம்தான் மேலே பார்ப்பதைத் தவிர்க்கிறோம். படத்தைப் பார்த்துவிடுங்கள்!

முகநூலில் : Rajasangeethan
disclaimer

மாரிதாசுக்கு முந்தைய ‘கருத்துரிமைக்’ கழிசடைகள் !

மாரிதாஸுக்கு கருத்துரிமை கிடையாதா?
2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதியன்று கோத்ரா இரயில் எரிப்பு நடந்தது. எந்த விசாரணையும் துவக்கப்படுவதற்கு முன்னர், அடுத்த நாளே குஜராத்தின் மிகப்பெரிய பத்திரிகைகளான சந்தேஷ் மற்றும் குஜராத் சமாச்சார் ஆகியவற்றில், மிகக்கொடூரமான வெறுப்புச் செய்திகள் பக்கம் பக்கமாக வெளியிடப்பட்டன. அதிலும் சந்தேஷில் “ஐம்பது இந்துக்கள் எரித்துக் கொலை” என்று முழுக்க முழுக்க படங்கள் அச்சிடப்பட்டு வெளியாகின. அந்த பத்திரிகையை பல்லாயிரக்கணக்கில் ஜெராக்ஸ் எடுத்து, வி.ஹெச்.பி.-யினர் தெருத்தெருவாக விநியோகித்து மிகப்பெரிய வெறுப்புப் பிரச்சாரத்தைத் துவங்கினர்.
அதுமட்டுமில்லாமல் மற்றொரு கட்டுரையில், “கோத்ரா இரயில் எரிப்பில் மீட்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளின் உடல்களை ஆய்வுசெய்ததில், அவர்கள் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களது மார்பகங்கள் அறுத்து எறியப்பட்டிருக்கின்றன. அவர்கள் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று சந்தேஷில் வெளியாகி இருந்தது.
படிக்க :
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !
கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!
மார்ச் 1-ம் தேதியன்று சந்தேஷில் வெளியான மற்றொரு கட்டுரையில், “இஸ்லாம் ஆபத்தில் இருக்கிறது. மசூதியில் இருந்து அனைவரையும் உடனடியாக கோத்ரா இரயில் நிலையத்திற்கு அழைத்து வாருங்கள். இஸ்லாமுக்கு எதிரானவர்களை கொன்று தீர்ப்போம்” என்று முஸ்லிம்கள் சொல்லியதாக எழுதப்பட்டிருந்தது.
மார்ச் 1-ம் தேதியில் வெளியான ஒரு கட்டுரையில், “சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா இரயில் நிலையத்திற்கு வரும்போது, அதற்காகவே 7000 – 8000 முஸ்லிம்கள் அந்த இரயில் நிலைய ப்ளாட்பாரமில் காத்துக்கொண்டிருந்தனர்” என்று எழுதப்பட்டது.
அதே மார்ச் 1-ம் தேதியன்று வெளியான இன்னொரு கட்டுரையில், “உத்தரப் பிரதேசத்தில் இருந்து குஜராத்துக்கு இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம்கள் தான் குஜராத்தின் பல இடங்களில் மினி பாகிஸ்தானை உருவாக்குகிறார்கள். அதனால் போலீசுத்துறை அவர்களை ‘கவனிக்க’ வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.
கோப்புப்படம் : குஜராத்தின் மிகப்பெரிய பத்திரிகைகளான குஜராத் சமாச்சார் மற்றும் சந்தேஷ்
மார்ச் 6-ம் தேதியன்று, “சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலின் ஒரு பெட்டியை எரிப்பதற்கு பதிலாக ஒட்டுமொத்த இரயிலையே எரிக்கத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இன்னொரு தாக்குதலை நடத்தவும் அந்த கும்பல் தயாராக இருந்தது” என்று குஜராத் சமாச்சார் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது.
மார்ச் 7-ம் தேதியன்று, “ஹஜ்ஜு-க்கு சென்று வரும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாத்தான் திரும்பி வருகிறார்கள். அவர்களால்தான் இந்துக்களுக்கு ஆபத்து” என்று ஒரு கட்டுரை சந்தேஷில் வெளியானது.
அதே மார்ச் 7-ம் தேதியன்று, “கோத்ரா இரயில் எரிப்பைக் கொண்டாடி, கராச்சியில் ஒரு ஊருக்கு கோத்ரா என்றே பெயர் சூட்டியிருக்கிறது பாகிஸ்தான்” என்று இன்னொரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டது.
மார்ச் 8-ம் தேதியன்று, “இப்போது போய் முஸ்லிம்களெல்லாம் இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிடுவது வேடிக்கையாக இருக்கிறது” என்று இன்னொரு கட்டுரை வெளியானது.
மார்ச் 16-ம் தேதியன்று, “ஃபத்தேகஞ்ச் மசூதியினால் கொளுத்தப்பட்ட நெருப்பு” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியானது.
மார்ச் 24-ம் தேதியன்று குஜராத் சமாச்சார் பத்திரிகையில், “சாத் கைவல் கோவிலையும், சர்சா கோவிலையும் இந்து பாடசாலைகளையும் ரிமோட் கன்ட்ரோல் மூலமாக வெடித்துச் சிதறடிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்” என்று ஒரு முதல் பக்கத்திலேயே தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டது.
மார்ச் 26-ம் தேதியன்று, “பிலாலின் ஒற்றை வார்த்தையைக் கேட்டு எந்தக் குற்றத்தையும் செய்யத் தயாராகாவே பல கிரிமினல் இளைஞர்கள் இருக்கின்றனர். அப்படித் திட்டமிட்டுத்தான் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலையே கொளுத்தியிருக்கிறார்கள்” என்று குஜராத் சமாச்சார் பத்திரிகையில் கட்டுரை வெளியானது.
முஸ்லிம்கள் மீது வெறுப்பைக் கக்கும் வகையிலான ஒரு வீடியோ சிடி தயாரிக்கப்பட்டு, தெருத்தெருவாக விநியோகிக்கப்பட்டது.
இப்படியான “கருத்துகள்” பரப்பப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், குஜராத் கலவரம் கொழுந்துவிட்டு எரிந்தது.
எந்தவொரு கருத்தையும் எவரும் சொல்வதற்கு உரிமை இருக்கிறது என்கிற நட்டநடுவாதிகளின் வாதப்படி பார்த்தால், மேலே சொன்னவை அனைத்துமே கருத்துகள்தான். இக்கருத்தை சொல்லியதன் மூலம் எவரொருவரையும் அவர்கள் தாக்கவில்லைதான். ஆனால், ஒட்டுமொத்த குஜராத் மக்களின் மனதிலும் ஆழமான முஸ்லிம் வெறுப்பினை விதைத்தன. கையில் கிடைக்கிற எதனையும் எடுத்து, முஸ்லிம்களை எங்கு பார்த்தாலும் தாக்குவதையும் கொல்வதையும் ஊக்கப்படுத்தியது இத்தகைய “கருத்துகள்”.
படிக்க :
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிக்கு ஓய்வு பெற்ற பிறகும் பதவி !
12-ம் வகுப்பு தேர்வில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்வி : பதறிய சி.பி.எஸ்.இ
தமிழகத்தில் மாரிதாஸ் என்பவன் யூட்யூப் வழியாக பரப்பிக் கொண்டிருக்கிற “கருத்துகள்” அனைத்தும், மேலே நான் குறிப்பிட்டிருக்கிற கருத்துகளுக்கு கொஞ்சமும் சளைத்தவை அல்ல. பொய்களையும், வதந்திகளையும் வெறுப்புணர்வைத் தூண்டு வகையில் பரப்பிக்கொண்டிருக்கிற மாரிதாஸ் பேசுவதையெல்லாம் கருத்து என்றோ, அவனுக்கு அதற்கெல்லாம் “உரிமை” இருக்கிறது என்றோ சொல்பவர்களை மனிதர்கள் என்கிற வகையிலேயே சேர்க்கமுடியாது.
கருத்து சுதந்திரம் மிகமிக அவசியம்தான். ஆனால் மாரிதாஸ் பேசுவதெல்லாம் “கருத்து” என்கிற வகையிலேயே வராது. இந்த சமூகத்தை அழிப்பதற்காக காற்றில் கலக்கப்படுகிற விசம் என்றுதான் அதனைச் சொல்லவேண்டும்.

முகநூலில் : Chinthan EP

disclaimer

COP26 பருவநிலை மாநாடு : முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!

கிளாஸ்கோ பருவநிலை மாநாடு (COP26) :
முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!
‘‘புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்போதோ ஓரிருமுறை நிகழ்ந்த பேரிடர்கள் இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் நிகழும்’’ – என எச்சரித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசுக் குழுவின் (IPCC) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை வெளியானது. இவ்வறிக்கையும் பருவநிலை மாற்றத்தால் தொடர்ச்சியாக நடந்துவரும் பேரிடர்களும் இப்புவிக்கோளத்தைப் பற்றிய அச்சத்தோடு கூடிய அக்கறையுணர்வை மக்கள் மனதில் தூவியுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜுலை மாதங்களிலும்கூட பருவநிலை மாற்றத்தின் கோரமான, மிகச் சமீபத்திய விளைவுகளை உலக நாடுகள் சந்தித்திருக்கின்றன. மேற்கு கனடா மற்றும் வடமேற்கு அமெரிக்காவின் பெரும்பகுதியை கொடூரமான வெப்ப அலைகள் தாக்கின. ஒரு மதிப்பீட்டின்படி, இதனால் பாதிக்கப்பட்டு சுமார் 1,400-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர். ஜெர்மனியில் இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டித் தீர்த்தது. சீனாவின் ஹுனான் பகுதியில் அம்மாகாணத்தின் ஓராண்டு சராசரி மழை அளவு வெறும் நான்கு நாட்களில் பெய்து வெள்ளக்காடாக்கியது. தெற்கு ஐரோப்பா பெரும் காட்டுத்தீயுடன் போராடியது. கிரீன்லாந்தில் முதல் முறையாக பனிப்பொழிவுக்கு மாறாக மழை பெய்தது. இந்தியாவிலும் கேரளா, உத்தரகாண்ட், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெய்துவரும் கனமழையால் நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
படிக்க :
பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் !
ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!
இந்நிலையில்தான், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கான 26-வது ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாடு (COP26) உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழலியலாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் மற்றும் புவியின் மீது அக்கறையுள்ள இளம் தலைமுறையினரால் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கப்பட்டது. அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரை இரண்டு வாரங்களுக்கு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று முடிந்த இம்மாநாட்டில் 200 நாடுகளில் இருந்து 30,000 பிரதிநிதிகள், 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
‘சூழலியல் அக்கறை’, முதலாளித்துவ அரசுகளுக்கு முதல்முறை வருவதல்ல!
COP26 மாநாடு, 1994-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ‘காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு உடன்படிக்கை’-இன் (UNFCCC) கீழ் நடைபெறும் ஒரு வருடாந்திர மாநாடு ஆகும். நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் உருவாகக்கூடிய புவி வெப்பமயமாதலுக்கு காரணமான, பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை (கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ்-ஆக்சைடு உள்ளிட்டவை) இந்த நூற்றாண்டின் பாதிக்குள் உலகளாவிய அளவில் நிகர பூஜ்ஜியத்திற்கு கொண்டுவருதல்; அதன் மூலம் உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்துதல்; பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கவும், உமிழ்வுகளை குறைப்பதற்கும் ஏழை நாடுகளுக்கு, பணக்கார – வளர்ந்த நாடுகள் ஒவ்வொரு ஆண்டிற்கும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க வேண்டும் என்ற 2009-ம் ஆண்டு உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட குறிக்கோள்களோடு இம்மாநாடு நடைபெற்றது.
இந்த ‘குறிக்கோள்கள்’ ஒன்றும் புதியவையுமல்ல. இவற்றை அடைவதற்காக நடத்துவதாகச் சொல்லப்படும் இதுபோன்ற மாநாடுகளும் புதியவையல்ல. இது ஐ.நா.வின் 26-ஆவது மாநாடாகும் (COP26). வரன்முறையற்ற கனிமவளச் சுரண்டல், காடுகள் அழிப்பு, நீர்நிலைகள் அழிப்பு, சுற்றுசூழலை நாசம் செய்யும் நாசகர தொழிற்சாலைகள், அவை வெளியேற்றும் கழிவுகள் என பருவநிலை மாற்றத்திற்கு மூலக்காரணமே சூழலியலைப் பற்றி சிறிதும் கவலைகொள்ளத் தயாரில்லாத ஏகாதிபத்திய முதலாளித்துவ உற்பத்திமுறையும் இலாபவெறியும்தான்.
முதலாளிகளின் நலனைக் கட்டிக் காக்கும் அரசுகளின் பிரதிநிதிகளோ தாங்கள் சூழலியல் சிதைவைப் பற்றி பெரிதும் ‘கவலைப்படுவதாகவும்’ அதனை சரிசெய்வதற்காக ‘பெருமுயற்சியெடுத்து’ வருவதாகவும் ஒவ்வொரு முறையும் உலக மக்களை ஏய்ப்பதற்காக இதுபோன்ற மாநாடுகளை நடத்துவதும், அதில் கூடிப் பேசி கலைவதும் வழக்கம். இதுவரை போடப்பட்ட உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட இலட்சணத்தைப் பற்றி பரிசீலித்தாலே இதைப் புரிந்துகொள்ள முடியும்.
1997-ல் முதன்முதலாக, கியோட்டோ உடன்படிக்கை (Kyoto Protocol) போடப்பட்டது. இந்த உடன்படிக்கை, ‘‘தொழில்துறையில் வளர்ந்த‌ ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 37 நாடுகளே வரலாற்றுரீதியாக புவி வெப்பமயமாதலுக்கு காரணம். எனவே அவை உடனடியாக பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைக்க வேண்டும்’’ என்று கூறியது. பெரும்பாலான நாடுகள் இவ்வொப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தன. ஆனால், அதிக அளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் நாடான அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டதால் ஓராண்டில் இவ்வொப்பந்தம் தன்னியல்பாக காற்றில் கரைந்தது.
அதன்பிறகு, 2015-ல் போடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 192 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தமானது, ‘‘பூமியின் வெப்ப அதிகரிப்பை 2 டிகிரிக்குள் வைத்திருக்க பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைக்க வேண்டும்; பருவநிலை மாற்றத்திற்கான நிதியாக ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர்களை வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும்’’ என்று கூறியது. இது இரண்டுமே தற்போது நடைபெற்ற COP26 மாநாடுவரை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், தற்போது நடந்துள்ள COP26 மாநாட்டின் முடிவுகளையும் உள்ளபடியே இவர்கள் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடத்தான் போகிறார்கள் என்பதற்கு இவர்களது கடந்தகால மாநாடுகளே சான்று. எனினும் தற்போது மாநாடு நடந்த விதம் அதில் தலைவர்கள் ஆற்றிய உரை, நிறைவேற்றிய தீர்மானங்கள் ஆகியவற்றிலிருந்தும் இந்த மாநாட்டு முடிவுகள் எவ்வாறு வெறும் பகட்டு ஆரவாரங்களாக உள்ளன என்பதைப் பார்ப்போம்.
ஒப்பந்தங்களல்ல.. கழிப்பறை காகிதங்கள்!
இந்த மாநாட்டில் 2030-க்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கனடா, பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தோனேசியா என 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையொப்பமிட்டுள்ளனர். இந்தோனேசிய அரசு அதிகாரிகள் இதில் கையெழுத்திட்டுள்ள நிலையில் இந்தோனேசிய அமைச்சர் சிடி நுர்பயா பாகர், ‘‘எங்களால் செய்யமுடியாததை அதிகாரிகளால் உறுதியளிக்க முடியாது. இந்தோனிசியாவிற்கு ‘வளர்ச்சி’தான் பிரதானமானது’’ என போட்டுக்கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக பகிரங்கமாகவே பேசியுள்ளார்.
உலகத்தின் நுரையீரலான அமேசான் காடுகளை அதே ‘வளர்ச்சிப் பணிகளுக்காக’ அழித்து வரும் பிரேசிலும் 2030-க்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரேசிலின் முன்னாள் அதிபர் பொல்சனாரோ ஆட்சியில், கடந்த ஆண்டில் மட்டும் இலண்டன் நகரை விட ஏழு மடங்கு பெரிய அமேசான் மழைக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியும், தற்போதுள்ள அரசும் சுற்றுச்சூழலைக் காப்பதற்கான எந்த அக்கறை கொள்ளவில்லை என்பதும், இத்தீர்மானங்கள் – ஒப்பந்தங்கள் நடைமுறைக்குப் போவதன் மீது நமக்கு கேள்வியை எழுப்புகின்றன.
ஏற்கெனவே 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில், இதே போல் 2030-க்குள் காடழிப்பை நிறுத்த ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அதன் பிறகு காடழிப்பு விகிதம் 41 சதவிதம் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டிற்குள்ளான பத்து ஆண்டுகளில், சராசரியாக ஆண்டொன்றுக்கு 1.5 கோடி ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டன. ஆனால் 2015-லிருந்து 2020 வரையான ஐந்தாண்டுகளில் – அதாவது பாரிஸ் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு – சுமார் 1 கோடி ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களை முதலாளித்துவ நாடுகள் வெறும் கழிப்பறைக் காகிதமாகத்தான் கருதுகிறார்கள் என்பதற்கு இவையே சான்று.
000
கிளாஸ்கோவில் 120 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட COP26 பருவநிலை மாநாடு.
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளே, வாக்குறுதி கொடுக்கத் தயங்கி தங்களது இலக்குகளைத் தெளிவாக முன்வைக்காமல் இருந்தபோது, நமது ‘56 இன்ஞ்’ மோடி அரசோ, தைரியமாக ஒரு திட்டத்தை முன்வைத்திருப்பது உலகநாடுகளால் பாராட்டப்பட்டிருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டன. அத்திட்டத்திற்குப் ‘பஞ்சாமிர்தம்’ (ஐந்து அம்ச திட்டம்) என பெயர்சூட்டியது இந்திய அரசு. ‘‘2070-ம் ஆண்டு இந்தியா பூஜ்ஜிய உமிழ்வை அடையும்; 2030-ம் ஆண்டிற்குள் தனது ஆற்றலின் 50 சதவிதத்தை புதுப்பிக்கத்தக்க வளத்திலிருந்து பெறும், புதைபடிவ பொருள் அல்லாத எரிசக்தியின் திறனை 500 ஜிகா வாட்டாக அதிகரிப்போம்; 2030-ம் ஆண்டு முடிவுக்குள் ஒரு பில்லியன் டன் அளவுக்கு  கரியமிலவாயு உமிழ்வைக் குறைப்போம்; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2005-உடன் ஒப்பிடும்போது கார்பன் தீவிரத்தை 45% குறைப்போம்’’ – என ஐந்து வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார்.
இந்தியாவின் தற்போதைய மின் உற்பத்தித் திறன் 388 ஜிகா வாட்டாகத்தான் உள்ளது. ஆனால், மோடியோ 2030-ம் ஆண்டிற்குள் புதிப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து  மட்டும் 500 ஜிகா வாட் திறனை பெறப்போவதாக கூறியுள்ளார். இக்காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த ஆற்றலில் 50 சதவிகிதம் புதைபடிம எரிபொருளல்லாத மின் உற்பத்தியின் மூலம் சாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அப்படியானால், 2030−ஆம் ஆண்டுக்குள் 1000 ஜிகா வாட்-டுக்கும் அதிகமான மின்னுற்பத்தி செய்தால் மட்டுமே அது சாத்தியம். எனில், அடுத்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மின் தேவை கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகரித்துவிடுமா என்ன?
அது சரி, வாக்குறுதிகளை நிறைவேற்றும் பழக்கம் இருந்தால் தானே இதைப்பற்றி எல்லாம் யோசிக்க வேண்டும். மோடியின் வரலாற்றிலேயே அந்தப் பழக்கம் கிடையாதே. ஆக, இதுவும் ‘5 டிரில்லியன் பொருளாதாரம்’ கட்டியெழுப்பப்பட்ட கதைதான்.
சூழல் அழிப்பு குற்றவாளிகளுடன், சூழலியல் ‘நீதி விசாரணை’
ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட மாநாட்டின் பங்கேற்பாளர்களின் பட்டியலை ஆய்வு செய்த போது , COP26-ல் எந்தவொரு தனி நாட்டையும் விட புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் பங்கெடுத்தது தெரியவந்ததுள்ளது. உலக அளவில் 71 சதவீத பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கு, வெறும் 100 உலகளாவிய நிறுவனங்கள் தான் காரணமாகின்றன. யார் இந்த சுற்றுசூழல் சீர்குலைவுக்கு முக்கியமான காரண கர்த்தாக்களோ அவர்களோடு ஆலோசனை நடத்தித்தான் ‘பூமியை பாதுகாப்பது’ பற்றி திட்டம் வகுத்திருக்கிறார்கள்.
இந்த மாநாட்டின் இறுதியில் இந்தியா, சீனா உள்ளிட்டு அதீத நிலக்கரி பயன்பாட்டாளர்களின் அழுத்தத்தால், மாநாட்டின் வரைவறிக்கையில் நிலக்கரி பயன்பாட்டை ‘‘படிப்படியாக நிறுத்த வேண்டும்’’ என்ற சொல்லுக்கு பதிலாக  ‘‘படிப்படியாக குறைக்க வேண்டும்’’ என்று மாற்றப்பட்டதை முதலாளித்துவ ஊடகங்களே கடுமையாக விமர்சித்தன. மொத்தத்தில், இம்மாநாடு ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகளால் நடத்தப்பட்ட ஒரு கபட நாடகமே என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளே!
கண்துடைப்புக்கான வாய்ச் சவடால் இலக்குகள்
புதைபடிம எரிசக்தியைத் தவிர்த்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதன் மூலம் புவி வெப்பமயமாதல், காலநிலை மாறுபாட்டைத் தவிர்ப்பதற்காக, நிர்ணயிக்கப்பட்ட ‘‘தேசவாரியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்’’ (NDC-Nationally determined contributions) COP26-இன் குறிக்கோளாகச் சொல்லப்பட்ட 1.5 டிகிரி வெப்பநிலையில் புவியை பராமரிப்பது என்ற திட்டத்திற்கு போதுமானதாக இல்லை என்று சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
பாரிஸ் ஒப்பந்தத்தின்படி ‘‘தேசவாரியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்’’-ஐ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விவாதித்து மாற்றியமைக்கும் வழக்கம் இருந்துவந்தது. இந்த மாநாட்டில்  ‘‘தேசவாரியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்’’ புதியதாக தீர்மானிக்கப்பட்டன. ஆனால் அந்தந்த நாடுகள் தமது பங்களிப்பை  முழுமையாக நிறைவேற்றினாலும் கூட 2.4 டிகிரிக்கு மேலாக வெப்பநிலை உயரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த 2.4 டிகிரி வெப்பநிலை உயர்வினால் உலகில் பேரழிவுகள் நிகழக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. உலகின் வெப்பநிலை வெறும் 2 டிகிரி உயர்ந்தாலே ஒரு பில்லியன் மக்கள் கடுமையான வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள்.
இதன் காரணமாக, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையே NDC-க்களை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியும் என்ற வழமையான முறையை மாற்றி 2022-ல் 27-வது பருவநிலை மாற்ற மாநாட்டில் இதனை மாற்றும் முடிவுக்கு வந்துள்ளார்கள்.
புவியைக் காக்க, முதலாளித்துவத்தின் கழுத்தை நெறி!
COP26 மாநாட்டை எதிர்த்து கிளாஸ்கோவில் மக்கள் பேரணியாக செல்கிறார்கள்.
COP26 மாநாடு ஒரு ஏமாற்று நாடகம் என்று உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழல் களச் செயல்பாட்டாளர்கள் மாநாடு துவங்கும் முன்னரே கூறிவந்தனர். இத்தகைய மாநாடுகளில் ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்கள் கழிவறைக் காகிதமாகவே அனைத்து நாடுகளின் அரசுகளால் கையாளப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டியே இவ்வாறு கூறுகின்றனர். முதலாளித்துவ நாடுகள் தங்கள் இலாப வெறியையே முதன்மையாகக் கருதி சூழலியலின் மேல் அக்கறை காட்டுவதில்லை என்பதையும் அவர்களின் நோக்கமெல்லாம் தங்களது முதலாளிகளின் இலாபத்தை உறுதிப்படுத்துவது மட்டும்தான் என்பதை அவர்கள் புரிந்துவைத்துள்ளார்கள்.
உலகின் பலநாடுகளையும் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளைஞர்கள் என ஒரு இலட்சம் பேர் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற மாநாட்டை அம்பலப்படுத்தி அந்நகரின் வீதிகளில் திரண்டு மிகப்பெரிய பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள். குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள், வகுப்புத் தோழர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் வீதிகளில் இறங்கினர். தங்களது கண்டனக் கூட்டத்தில் COP26 மாநாட்டில் கூடியிருந்த அரசு பிரதிநிதிகள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
இம்மாநாட்டில் கலந்துக்கொண்ட பருவநிலை மாற்ற செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் COP26 மாநாடு ஒரு “தோல்வி”, ‘‘தலைவர்கள் எதுவும் செய்யவில்லை, அவர்கள் தீவிரமாக ஓட்டைகளை உருவாக்கி, தங்களுக்கு நன்மை பயக்கும் கட்டமைப்புகளை வடிவமைத்து வருகின்றனர். மேலும் இந்த அழிவுகரமான அமைப்பில் இருந்து தொடர்ந்து இலாபம் ஈட்டுகின்றனர்’’ என்று சாடினார். ‘‘எங்களுக்கு ‘2030க்குள்.. 2070க்குள்’ போன்ற வாக்குறுதிகள் தேவையில்லை.. நாங்கள் இப்போதே, இன்றே மாற்றத்தை எதிர்ப்பார்கிறோம்’’ என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் முழங்கினர்.
புவிப் பரப்பே நிலைத்திருக்குமா? என்று மனிதகுலமே கவலையோடு பருவநிலை மாற்ற அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில், புதை படிம எரிபொருளிலிருந்து திடீரென புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதன் மூலம் ஏற்படக்கூடிய மிகப்பெரிய நட்டத்தை ஏற்றுக்கொள்ள முதலாளிகள் தயாராக இல்லை. முதலாளிகளின் நலனைக் காக்கவே உருவாக்கப்பட்டுள்ள இந்த முதலாளித்துவ அரசுகள், முதலாளிகளுக்கு எப்படி அழுத்தம் கொடுப்பார்கள்?
படிக்க :
முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !
பருவநிலை மாற்றம் : எச்சரிக்கும் ஃபானி புயல் !
ஆகவே, இதுபோன்ற மிகப் பிரம்மாண்டமான சர்வதேச மாநாடுகள் நடத்துவதும் அதில் வெற்று ஒப்பந்தங்களையும், பொய் வாக்குறுதிகளையும் கொடுப்பதெல்லாம், சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் கொதித்தெழும் மக்களின் எதிர்ப்புகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் முதலாளித்துவ அரசுகள் நடத்தும் நாடகமே.
இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அடித்தளமே இலாப வெறியாக இருக்கும்போது, பசுமைக்குடில் வாயுக்களைக் குறைப்பது, கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பது போன்ற தமது இலாபத்தைப் பாதிக்கும் எவ்வித முயற்சிகளையும் முதலாளிகள் நடைமுறைப்படுத்தப் போவதில்லை. வேதாந்தா என்ற ஒரு கார்ப்பரேட்டின், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சுற்றுச் சூழல் மாசுபாட்டை தடுத்து நிறுத்தவே 15 பேர் படுகொலையையும், பலநூறு பேர் மீதான வழக்கையும் கடந்துதான் சாதிக்க முடிந்திருக்கிறது. எனில் இந்தப் புவியின் மீதான ஒட்டுமொத்த கார்ப்பரேட் கும்பலின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த, எவ்வளவு வீச்சான மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியது இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
சுற்றுச் சூழல் மாசுபாட்டுக்கு எதிரான சூழலியல் போராட்டங்கள் முன்னேறி வளர்ந்துவருவதை நாம் ஆதரிக்கும் அதேவேளையில், முதலாளிகளின் இலாபவெறியே போட்டி போட்டுக் கொண்டு சுற்றுச் சூழலை சீரழித்து வருகிறது என்பதை உணரவேண்டும். முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பைத் தகர்த்தெறிய, உழைக்கும் மக்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலான சமூகக் கட்டமைப்பை − சோசலிசத்தை − மாற்றாக முன்வைக்கும் அரசியல் முழக்கத்தின் கீழ் அணிதிரள வேண்டும். அதுதான் சுற்றுச்சூழல் பேரழிவில் இருந்து இந்த உலகைக் காப்பதற்கான ஒரே வழி!

மதி

ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு : மோடியின் பாசிச நடவடிக்கை | தோழர் சுரேசு சக்தி

மோடி அரசு நாடாளுமன்றத்தில் எந்தவித விதாதங்களும் இன்றி, எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021-ஐ நிறைவேற்றியுள்ளது.
இது நாட்டின் உழைக்கும் மக்களின் ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து தகவல்களையும் சேகரிக்கும் ஓர் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் மக்களின் வாக்களிக்கும் சுதந்திரத்தை பறித்து தான் வெற்றி பெறுவதற்கான அடைப்படையை உருவாக்குவதற்கான திட்டத்தின் ஓர் அங்கம்தான் இந்த சட்டம்.
தேர்தல் கமிசனுக்கு தெரிந்த வாக்காளர்களின் தனி உரிமை விவரங்கள் தற்போது ஆளும் வர்க்கத்தின் கார்ப்பரேட் முதலாளிகளின் அனைவருக்கும் கிடக்கபெறும் தகவல்களாக மாறும். ஓர் தனி மனிதனின் அனைத்து உள் விவகாரங்கள் வெளிப்படையாகவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பாசிச மோடி அரசுக்கும் தெரிய வழிவகை செய்து கொடுக்கும் சட்டம்தான் இது.
பாசிசம் அரங்கேறுவதற்கு முன் ஹிட்லர், தான் ஒடுக்க நினைக்கும் மக்களின் அனைத்து விவரங்களையும் சேகரித்தான். அதன்பின் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதேபோல் தற்போது மோடி அரசு தன் இந்துராஷ்டிர கனவிற்கான பாசிச செயல்திட்டத்திற்கும், கார்ப்பரேட் சேவைக்கும் மக்களை கண்காணிக்கவே இந்த திட்டத்தை பயன்படுத்த முனைகிறது.
எனவே உழைக்கும் மக்கள் அனைவரும் பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக ஒன்றினைந்து போராடவேண்டியுள்ளது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த சட்டத்தின் அபாயங்களை விரிவாக இந்த காணொலியில் விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள் !!

சென்னையின் துயரம் – பெருவெள்ளம் : யார் காரணம் ?

2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்குப் பிறகு, தற்போது பெய்த கனமழையானது சென்னை மக்களை மீண்டும் கொடும் துயரத்தில் தள்ளியிருக்கிறது. மழைக்காலங்களில் வழமையாக பாதிக்கப்படும் சென்னைப் புறநகர் பகுதிகளான வேளச்சேரி, பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி போன்ற பகுதிகள் மட்டுமல்லாமல் தி.நகர், புரசைவாக்கம், கே.கே.நகர், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், ஓட்டேரி, வில்லிவாக்கம் உள்ளிட்டு நகரத்தின் பல முக்கிய பகுதிகளும் வெள்ளக்காடாகியுள்ளன.
பல பகுதிகளில் படகுகளின் மூலம்தான் போக்குவரத்து மேற்கொள்ளமுடியும் என்ற நிலை உருவாகியது. சாலைகளில் தேங்கிய மழைநீர், வடிகால்கள் வழியே வெளியேறவில்லை. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அனைத்து பொருட்களையும் நாசப்படுத்திவிட்டது.
சென்னையின் இந்த துயரத்திற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று சுற்றுச்சூழல் பேரழிவு. ‘‘இது வழமையாக பொழிகின்ற மழைபோல அல்ல. இயல்புக்கு மாறான அதிதீவிர மழை. காலநிலை மாற்றத்தின் விளைவாக ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒருசில நாட்களிலேயே பெய்து விடுகிறது’’ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது உலகளாவிய அளவில் ஒருபுறத்தில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, சென்னை வெள்ளத்தில் மூழ்கியதற்கு மற்றொரு முக்கியக் காரணம் இருக்கிறது.
படிக்க :
சென்னை மழை வெள்ளம் : ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் ஆக்கிரமிப்புகள் !
சென்னை மழை வெள்ளம் – ஐ.டி நிறுவனங்களின் இலாப வெறி !
அந்த இரண்டாவது காரணம், ஆக்கிரமிப்புகள். நீர்த் தேக்கங்களாகவும் வெள்ளநீர் வடிகால்களாகவும் செயல்படக்கூடிய ஏரி, குளம், குட்டை போன்றவற்றை ஆக்கிரமித்து குடியிருப்புகள், நிறுவனங்களை கட்டிவைத்தது; மழைவெள்ளம் வடிவதற்கான முறையான கால்வாய்களை வடிவமைக்காதது, இதற்காக ஒதுக்கப்பட்ட திட்டங்களில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல் போன்றவைகள்தான்.
இந்த இரண்டு காரணங்களுமே பாரிய முறையில் நாம் பரிசீலிக்க வேண்டியவை.
பேரிடர்களுக்கு இடையில் வாழும் காலம்..
இலாபவெறி பிடித்த ஏகாதிபத்திய முதலாளித்துவம் இயற்கையை வரைமுறையின்றி சுரண்டியதன் விளைவாக உயிர்க்கோளமே பேரழிவின் விளிம்பில் நிற்கிறது. அதீதமழைப் பொழிவு, கடும் வறட்சி, எதிர்பாராத திடீர் புயல்கள், தகிக்கும் வெப்ப அலை என காலநிலை மாற்றத்தால் பல்முனைத் தாக்குதல்களை எதிர்கொள்கிறது மனித குலம். ‘‘ஒரு பேரிடரைக் கடந்து வந்தால் சற்று இடைவெளிக்குப் பிறகு மற்றுமொரு பேரிடரை நாம் எதிர்நோக்கிக் காத்திருக்கலாம். இது பேரிடர்களுக்கு இடையில் வாழும் காலம்’’ என எச்சரிக்கிறார்கள் சூழலியல் செயல்பாட்டாளர்கள். சென்னை மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
கடந்த 2011-ம் ஆண்டு தானே புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, 2015-ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சென்னையே மிதந்தது, அதன்பிறகு 2017-ல் ஒக்கிப்புயல், 2018-ல் கஜா புயல், 2019-ல் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு, 2020−ம் ஆண்டு நிவர் புயல், கோடைக்காலத்தில் இதுவரை இல்லாத அளவு 106 டிகிரிக்கு அதிகரித்த வெப்பநிலை என பல்வேறு பேரிடர்களைச் சந்தித்திருக்கிறது சென்னை. அதன் தொடர்ச்சிதான் தற்போதைய அதீத கனமழை.
கடந்த நவம்பர் 7-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை சென்னையில் பெய்த மழை வழக்கத்தைக் காட்டிலும் ஐந்தரை மடங்கு அதிகம். வானில் எங்கும் கருமேகங்கள் சூழ்ந்தவண்ணமிருந்தன. மேற்சொன்ன ஆறு நாட்களில் பெய்த மழையின் அளவு 46 செ.மீ ஆகும். இது வழக்கமாகப் பெய்கின்ற அளவை விட 491 சதவிகிதம் அதிகமாகும். இவையெல்லாம் காலநிலை மாற்றத்தின் அபாயங்கள் என்கிறார்கள் சூழலியல் செயல்பாட்டாளர்கள்.
இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஒட்டுமொத்த மழையின் அளவானது 4.4 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் இந்நூற்றாண்டின் இறுதியில் 20.5 சதவிகிதமாக அவை மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். ‘‘மழையின் அளவு அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. 60 நாட்களில் பெய்யும் மழை வெறும் 20 நாட்களிலேயே பெய்யும். ஒரே நேரத்தில் மழை பெய்துவிடுவதால் அதைத் தேக்கிவைப்பது இயலாத காரியமாக இருக்கும். இதனால் வறட்சி ஏற்படும்’’ என்று சொல்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன்.
பக்கிங்காம் கால்வாயை அழித்துக் கட்டப்பட்டிருக்கும் சென்னை இரயில் வழித்தடம்
கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில், ‘ஆற்றல், சுற்றுச்சூழல், தண்ணீருக்கான குழு’ என்ற அமைப்பானது (CEEW – council for energy, environment and water) இந்தியாவின் காலநிலை பாதிப்பு குறித்து மாவட்ட அளவிலான மதிப்பீட்டாய்வை நடத்தி, அதன் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் அதிக வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் நகரங்களின் பட்டியலில் சென்னை ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. வெள்ளம், வறட்சி, புயல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை எந்த நகரம் அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறித்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தன் கட்டமைப்புகளை இழந்த சென்னை
சென்னையைப் பொருத்தவரையில் தீவிர மழைப்பொழிவின் காரணமாக ஆற்றிலோ, ஏரிகளிலோ நிரம்பி வழிந்தோடும் நீர் ஒருபுறம் வெள்ளத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது என்றால், மறுபுறத்தில், ‘‘மிகக் கன மழை’’ ஒன்றுக்கே சென்னையின் சாலைகளில் தண்ணீர் தேங்கிவிடுவதோடு, சுரங்கப் பாதைகள் வரை நிரம்பிவிடுகின்றன. ஆறு, ஏரி, குளம், கால்வாய், குட்டை என சென்னையின் பூர்வீக நீராதாரங்கள் அனைத்தையும் சிதைத்துவிட்டு நிற்பதோடு, முறையான வடிகால் கட்டமைப்புகளை வடிவமைக்காமலும் பராமரிக்காமலும் விட்டதுதான் சென்னை தத்தளிப்பதற்கு காரணம்.
000
இன்றைய சென்னை நகரம் ஒருகாலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நஞ்சை விவசாயம் (நெல் விவசாயம்) செய்து வந்த பாசனக் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. எண்ணற்ற ஏரிகள், கோயில் குளங்கள், குட்டைகள் என நீர்த் தேக்கங்கள் நிறைந்த பகுதி. சென்னையை ஊடறுத்துப் பாய்ந்து ஓடும் கூவம், அடையாறு, கொற்றலை ஆகிய ஆறுகள் இன்றுள்ளது போல கழிவுநீர் சாக்கடைகளல்ல. அன்றைய சென்னையின் விவசாயத்திற்கு உயிராதாரமாக இருந்தவை. வெள்ளம் வந்தாலும் நெல்வயல்களில் நீர்வடிவது போல, விரைவாக வெளியேறும் வகையில் ஏரிகள் ஆறுகளோடு இணைக்கப்பட்டிருந்தன. சென்னை வங்கக் கடலோரம் அமைந்துள்ளதால் ஆற்றின் வெள்ளம் கூட எளிதாக கடலில் கலந்துவிடும் வண்ணம் இருந்தது.
கூடுதலாக, நகரத்தினுள் மிகப்பெரிய வெள்ள நீர் வடிகாலாக செயல்பட்டது பக்கிங்காம் கால்வாய். சுமார் 210 ஆண்டுகளுக்கு முன்பு (1806−ம் ஆண்டு) வெள்ளையர்களால் வட சென்னையையும் எண்ணூரையும் இணைப்பதற்காக வெட்டப்பட்ட பங்கிங்கம் கால்வாய், பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டு தற்போது ஆந்திராவின் காக்கிநாடாவில் இருந்து சுமார் 792 கிலோ மீட்டர்கள் வங்க கடற்கரையோரம் பயணித்து, சென்னையின் ஊடே ஓடிக் கடந்து, விழுப்புரத்திற்கு அருகே முடிவடைகிறது.
பக்கிங்காம் கால்வாயின் சிறப்பு என்னவென்றால், அது சென்னையில் ஓடுகின்ற மூன்று ஆறுகளையும் பல்வேறு கால்வாய்களையும் இணைக்கிறது. நகரத்திற்குள் ஓடுகின்ற மழைநீரை மட்டுமல்லாமல், ஏரிகளிலிருந்து வடியும் உபரிநீரையும் உள்ளிழுத்துக் கொண்டு விரைவாக வெளியேற்றும் வேலையைச் செய்தது. மேலும் தென்சென்னையில் பொழிகின்ற மழைநீரும் பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகள் வழியாக வழிந்தோடி பங்கிங்காம் கால்வாயில் கலக்கிறது. இதுபோன்ற வெள்ள வடிகால் இந்தியாவின் வேறெந்த நகரத்திற்கும் இல்லாத சிறப்பு.
சென்னையும் புதிய தாராளவாத ‘வளர்ச்சியும்’
பலநூறு ஆண்டுகளாக சென்னையின் பூர்வகுடி மக்களின் உழைப்பால் பராமரிக்கப்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் எல்லாம் வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் மராமத்துப் பணிகள் செய்யாமல் விடப்பட்டன. விதிவிலக்காக பக்கிங்காம் கால்வாய் சரக்குகள் ஏற்றிச் செல்வதற்கான வழித்தடமாகப் பயன்பட்டதால் அது முறையாக பராமரிக்கப்பட்டது. 1990-களுக்குப் பின் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின்னர்தான் மேற்கண்ட கட்டமைப்புகள் அனைத்தும் நாசமாக்கப்பட்டு அதன் மேல் ‘வளர்ச்சித் திட்டங்கள்’ கட்டியெழுப்பப்பட்டன. அதற்கு முதல் பலி பக்கிங்காம் கால்வாய்.
1995-ம் ஆண்டின் இறுதியில், பக்கிங்காம் கால்வாய் பகுதியை சிதைத்து, அதன்மேல்தான் பறக்கும் ரயில் (MRTS) என்று அழைக்கப்படும் வேளச்சேரி இரயில்வே பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. விளைவு, அடுத்த ஆண்டே (1996) ஆகஸ்ட் மாதம் பெய்த கன மழையால் சென்னை பெரு வெள்ளத்தைச் சந்தித்தது. அப்போதே ‘‘எக்ஸ்னோரா இண்டர்நேஷனல்’’ என்ற தன்னார்வ நிறுவனம், வெள்ளத்திற்குக் காரணம் இரயில்வேயின் கட்டுமானப் பணிகள்தான் என ஆதாரங்களோடு முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது. உடனடியாக அக்கட்டுமானப் பணிக்குத் தடைவிதிக்காத நீதிபதிகள், வழக்கினை ‘விசாரிக்கலாம்’ என பத்து ஆண்டுகள் கடத்தினர். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
இறுதியாக, 2006-ம் ஆண்டு இவ்வழக்கின் தீர்ப்பில், ‘‘சென்னை வெகுவேகமாக நகரமயமாகி வருவதால் பள்ளிக்கரணை போன்ற சதுப்பு நிலங்களையும் ஏரிகளையும் காப்பாற்ற முடியாது’’ என்ற அரசு முன்வைத்த வாதத்தை அடுத்து ‘மதிப்பிற்குரிய’ நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ‘‘பறக்கும் இரயில் போன்ற பல திட்டங்களை உருவாக்கினால்தான் உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கும். சுற்றுச்சூழல்வாதிகள், தன்னார்வலர்கள் தேவையற்ற விவாதங்களை நடத்தி ஒன்றுமில்லாததைப் பெரிதாக்குகிறார்கள்’’ என்றது. இன்று அதே நீதிமன்றம்தான் 2015 மழைவெள்ள பாதிப்புக்கு பிறகு ஆக்கிரமிப்புகள் குறித்துக் கவலைப்படுகிறது.
1996-ம் ஆண்டிற்குப் பிறகு 1998, 2005, 2015 என பலமுறை சென்னை வெள்ள பாதிப்புகளைக் எதிர்கொண்டிருக்கிறது. பக்கிங்காம் கால்வாய் சிதைப்பு மட்டுமல்லாமல் 1990-களிலிருந்து சென்னையின் ஏரி, குளங்கள், சதுப்புநிலங்கள், கால்வாய்கள் என அனைத்தையும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் ஆக்கிரமித்தபோது ‘வளர்ச்சியின்’ பெயரால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது என்றபோதும் ‘வளர்ச்சியை’ பாதிக்கும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தமிழக அரசே சட்டப்பூர்வமாக மாற்றியது.
சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை சட்டப்பூர்வமானதாக அங்கீகரித்து town and country planing act என்ற சட்டத்தை 1998-ம் ஆண்டு ஒருமுறையும் 2007-ம் ஆண்டு மற்றொரு முறையும் கொண்டுவந்த தமிழக அரசின் நடவடிக்கை அதற்கு ஒரு சான்று. இவ்வாறாக, சென்னையிலுள்ள கட்டிடங்களில் 50 சதவிகிதம் கட்டிடங்கள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
000
அமிதாங்ஷூ ஆச்சாரியா மற்றும் அஜயா தீட்சித் ஆகிய சூழலியல் ஆர்வலர்கள் இணைந்து எழுதிய ‘‘நீருடன் வாழக் கற்றுக் கொள்வது’’ என்ற கட்டுரையில் ‘‘நகர்ப்புற நீர் வழித்தடங்கள் மற்றும் சதுப்பு நிலங்களின் மிகப்பெரிய ஆக்கிரமிப்பாளர் உண்மையில் தமிழக அரசு என்று சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழக நீர்நிலைகளில் நடைபாதைகள், பேருந்து முனையங்கள் மற்றும் ஐ.டி. பூங்காக்களை அரசு உருவாக்கியுள்ளது’’ என்று குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் அக்கட்டுரையில் நகர்ப்புறங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘‘காலநிலை நெருக்கடி பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களைத் தேடுகையில், காலநிலையானது, முன்னெப்போதையும் விட தீவிர மழை நிகழ்வுகளை மிகவும் கடுமையானதாகவும் கணிக்க முடியாததாகவும் ஆக்கியுள்ளது. இருப்பினும், நகர்ப்புறங்களில் வெள்ளம் மீண்டும் மீண்டும் வருவதை ஓரளவு மட்டுமே விளக்குகிறது. இதற்கான விளக்கமும் நில அரசியலில் புதைந்து கிடக்கிறது.
இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து நகரங்களும் நீர்நிலை நகரங்கள். அவை ஆறுகளால் இழைக்கப்பட்டவை, சதுப்புநிலங்கள் மற்றும் நீரூற்றுகள் கொண்டவை, மேலும் அவை கண்ணுக்கு தெரியாத நீர்நிலைகளின் மேல் உருவாக்கப்பட்டுள்ளன’’ என்கிறார்கள்.
இப்படி நில அமைப்பை, சூழலியலை ஒரு பொருட்டாக மதிக்காமல், அவற்றை சிதைக்கும் வகையில் கட்டியமைக்கப்பட்ட நகரங்கள் அனைத்தும் புதிய தாராளவாதம் உருவாக்கிய ‘வளர்ச்சி’யாகும். அதன் பரிசுதான் வெள்ளப் பேரிடர்.
யார் ஆக்கிரமிப்பாளர்கள்?
சென்னை வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளும்போது மட்டும்தான் ஆக்கிரமிப்பு குறித்த விவாதங்கள் அனல் பறக்கின்றன. அவ்வாறான நேரங்களில் பொதுவாக ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லும்போது அனைத்து மக்களையும் அதற்குள் நிறுத்திப் பேசும் போக்கு மேலோங்கி இருக்கிறது. ஆற்றங்கரையோரம் போடப்பட்ட சிறு குடிசைகள் மற்றும் சிறு வீடுகளில் உள்ள சாதாரண மக்களைக் குற்றவாளியாக்குகிறார்கள். அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மைநிலவரம் இந்த இலக்கணத்திற்கு எதிர்நிலையாக உள்ளது.
2015 வெள்ளத்திற்குப் பிறகு தமிழக அரசுக்கு அறிக்கை அளித்த அதிகாரிகள் குழு, ‘‘நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பும் மழைநீர் வடிகால்கள் சரியாகச் செயல்படாததும்தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணம்’’ என்று கூறியது. அதைத் தொடர்ந்து நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள 71,262 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை அகற்றும் பணியைத் தொடங்கினார்கள். இதுதொடர்பாக, ‘‘மிதக்குமா, மீளூமா?’’ என்ற தலைப்பில் 21.11.2020 அன்று விகடன் இணையதளத்தில் வெளிவந்த சிறப்புக் கட்டுரை ஒன்று, மொத்தமுள்ள 71,262 ஆக்கிரமிப்புகளில் 17,400 மட்டுமே அகற்றப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து கூறியது.
மேலும், ‘‘முதல்வர் அகற்றியதாகக் குறிப்பிட்ட 17,400 ஆக்கிரமிப்புகளும் ‘கல்வித்தந்தைகள்’ கட்டிய வானுயரக் கல்லூரிகளா, கார்ப்பரேட் மருத்துவமனைகளா, பிரமாண்டமான ஜவுளிக் கடைகளா, மலைக்கவைக்கும் மால்களா என்றால் சத்தியமாக இல்லவே இல்லை. ஓலைக் குடிசையில் சாக்கைப் போட்டு ஒண்டியிருப்பவர்களை விரட்டிவிட்டு, ‘ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டோம்’ என்று பொல்லாத கணக்கு எழுதுகிறது அரசு. சொல்லப்போனால், ‘‘அந்தக் குடிசைகளையெல்லாம் அகற்றவே தேவையில்லை… வெள்ளம் வந்தால், தானாக மிதந்து சென்றுவிடும்’’ என்று எந்த வகையான ‘ஆக்கிரமிப்புகள்’ அகற்றப்பட்டன என்பதையும் கட்டுரையாளர் அம்பலப்படுத்தியுள்ளார்.
மீதமுள்ள சுமார் 53,000 ஆக்கிரமிப்புகளும் யாருடைய ஆக்கிரமிப்புகள் என்று சொல்லாமலே விளங்கும். சந்தேகமில்லாமல் அவை, கல்வித் தந்தையர்களின் கல்லூரிகள், கார்ப்பரேட் மருந்துவமனைகள், பிரம்மாண்ட ஜவுளிக்கடைகள், மால்கள், அபார்ட்மெண்ட் குடியிருப்புகள் போன்றவைதான்.
பொத்தேரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம், குன்றத்தூர் மாதா கல்லூரி, போரூர் ராமச்சந்திரா கல்லூரி, மதுரவாயில் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், ஜேப்பியாரின் பனிமலர், சத்தியபாமா, ஆவடி வேல்டெக், செயிண்ட் பீட்டர்ஸ் கல்லூரி போன்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்; இராமாபுரம் மியாட் மருத்துவமனை, பாடி சரவணா ஸ்டோர்ஸ் போன்றவையெல்லாம் ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவைதான். அமைந்தகரையில் உள்ள ‘‘ஸ்கை-வாக்’’ மால் கூவம் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை ஐடி கம்பெனிகளும் ரியல் எஸ்டேட் கும்பல்களும் ஆக்கிரமித்துள்ளன.
இவையெல்லாம் ஒருநாளும் விவாதப் பொருளாவதில்லை. ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் குடிசையில் வசிக்கின்ற சாதாரண அடித்தட்டு மக்களை நகரப்புறங்களுக்கு வெளியே வீசி எறிகிறார்கள். மறுகுடியமர்வு என்று இவர்களைக் கொண்டுபோய் குடியேற்றும் பெரும்பாக்கம், செம்மஞ்சேரி போன்ற பகுதிகளே கூட ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவைதான். ஸ்மார்ட் சிட்டி, சிங்காரச் சென்னை என்று நகரங்களை கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக் கொடுக்கும் அரசுக்கு ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்பது ஒரு சாக்காக அமைந்துவிட்டது என்பதுதான் உண்மை.
அ.தி.மு.க.வின் கொள்ளையும் தி.மு.க.வின் கொள்கையும்
கடந்த 2015 வெள்ள பாதிப்புக்குப் பிறகு, சென்னை நகரில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைப்பதற்கென்றே ரூ.8,820 கோடி ஒதுக்கியது எடப்பாடி அரசு. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கென பிரத்யேகமாக சென்னையில் ரூ.1,200 கோடிகளை ஒதுக்கியது. இந்த ரூ.10,020 கோடி பணமும் எப்படி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை இந்த பெருமழை காட்டிக் கொடுத்துவிட்டது. ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, ‘‘ஒருநாள் மழைக்கே தாங்கவில்லை தி.மு.க. அரசு’’ என கொஞ்சமும் கூச்சமில்லாமல் பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
குளமாகத் தேங்கி நிற்கும் மழை நீரில், தன் குழந்தையை பாதுகாப்பாக தக்கை ஓட்டில் அழைத்துச் செல்லும் பெற்றோர்கள்.
சென்னையின் உள் மற்றும் பிரதான சாலைகளின் மொத்த நீளம் சுமார் 3,000 கி.மீ. உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி பராமரிக்கும் வடிகால்களின் நீளமோ 1,894 கி.மீ. மட்டுமே. போதுமான வடிகால்கள் இல்லாததே மழைநீர்த் தேக்கத்திற்கு முக்கிய காரணம் என்பதால் கூடுதலாக பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைப்பது என முடிவெடுக்கப்பட்டு, அதற்குத்தான் ரூ.8,820 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலும் அவ்வாறு புதிய வடிகால்கள் எதையும் கட்டவில்லை. ஏற்கெனவே இருந்த பழைய வடிகால்களையே இடித்து புதியதைப் போல கட்டி கணக்கு காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணியின் பினாமிகளுக்குத்தான் பெரும்பான்மையான ஒப்பந்தங்கள் சென்றுள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்கள் சில குறிப்பிட்ட பெரிய வடிகால்களோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த பெரிய வடிகால்கள் அடையாறு, கூவம், கொற்றலை என சென்னையிலுள்ள மூன்று ஆறுகளோடு இணைக்கப்பட்டிருக்கும், அதன் மூலம் உள்ளிழுத்துக் கொள்ளப்படும் நீரை பெரிய வடிகால்கள் ஆற்றில் கொட்டும், ஆற்றில் கலக்கும் நீர் வங்கக்கடலை நோக்கிப் பயணிக்கும். இதுதான் மழைநீர் வடிகால்கள் செயல்படும் முறை.
ஆனால் நகரத்திலுள்ள பெரும்பான்மையான வடிகால்கள் பெரிய வடிகால்களோடு இணைக்கப்படாமல் துண்டுதுண்டாக அப்படியே விடப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும்போது குறிப்பிட்ட தூரம்வரை செல்லும் நீர் அதன் கொள்ளளவு முடிந்ததும் ஏற்கெனவே அதனுள்ளிருந்த சாக்கடையோடு சேர்ந்து மேலே கொப்பளித்து வந்து நாறுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.200 கோடி செலவு செய்யப்பட்ட தியாகராய நகரில், மழைநீர் குளம் போலத் தேங்கிக் கிடக்கிறது.
000
அ.தி.மு.க.வின் ஊழல் ஒருபக்கம் அம்பலப்பட்டு நாறிக்கொண்டிருக்கையில், ‘‘சென்னை மழைவெள்ளத்திற்கு காரணம் அ.தி.மு.க.வின் கடந்த பத்தாண்டு கால ஊழலே, இதுபற்றி ‘விசாரணை’ மேற்கொள்ளப்பட்டு அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்’’ என உறுதிமொழிகிறார் மு.க.ஸ்டாலின்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து டெண்டர் ஊழல், நிர்வாக முறைகேடு – என பல விசயங்களில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க. குற்றம் சாட்டியது. ஆனால் என்ன ‘விசாரணை’ நடத்தி யாரை தண்டித்துவிட்டது? சென்னை கே.பி. பார்க் குடிசைமாற்று வாரிய கட்டிட ஊழல் பற்றி ஐ.ஐ.டி. அறிக்கை வந்தபிறகு நடவடிக்கை எடுக்கப்படுமென்று சொன்னார் அமைச்சர் சேகர்பாபு. டெண்டரில் ரூ.27 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று அறிக்கை வந்திருக்கிறது. ஆனால் தி.மு.க. இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் காமராஜ், ரேஷன் கொள்முதலில் ரூ.2,028 கோடி ஊழல் செய்திருக்கிறார் என்பது ஆதாரத்துடன் அம்பலமாகி இருக்கிறது. முந்தைய ஆட்சிக் காலத்தில் மின்சாரக் கொள்முதலில் ஒரு இலட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மீதெல்லாம் தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
நாம் தொடக்கம் முதலே சொல்லிவருவதைப் போல, தி.மு.க.வானது அ.தி.மு.க.வின் ஊழல் குறித்து பேசுவதெல்லாம் வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத்தான். ஏனெனில், நடவடிக்கை எடுக்குமளவிற்கு தி.மு.க.வினர் யோக்கிய சிகாமணிகளல்ல. வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 10,000 கோடிக்கும் மேலான மக்கள் பணத்தை கொள்ளையடித்து தின்றுவிட்டு, தற்போது சென்னை மக்களை மீண்டும் வெள்ளத்தில் தவிக்கவிட்டிருப்பது அ.தி.மு.க. மட்டுமல்ல, துறைசார்ந்த அதிகாரிகளும்தான். அத்துறைகளின் அதிகாரிகள் இல்லாமல் ஊழல் செய்திருக்க வாய்ப்பே இல்லை. எனில், அ.தி.மு.க.வைப் பற்றிப் பேசும் தி.மு.க., அதிகாரிகளைப் பற்றி பேசவில்லையே, ஏன்?
படிக்க :
சென்னை மழை வெள்ளம் – புவியியல் குறிப்பு
சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா ?
கடந்த ஆட்சியில் வெள்ளத்தடுப்பு பணிகளில் அ.தி.மு.க. அமைச்சர்களுடன் கூட்டுக் கொள்ளையடிப்பதில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சிப் பொறியாளர் நந்தகுமாருடன் உட்கார்ந்து கொண்டுதான் இந்த மழைவெள்ளம் குறித்துப் பேட்டி கொடுக்கிறார் மா.சுப்ரமணியன். இக்கொள்ளையில் பங்குபெற்ற இன்னொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான கார்த்திகேயனுக்கு உயர் கல்வித்துறை செயலாளர் பொறுப்பு கொடுத்து கவுரவித்திருக்கிறது தி.மு.க. அரசு. ‘அம்மா’வின் அரசானாலும் சரி, ‘தளபதியார்’ அரசானாலும் சரி, காசு பார்க்க வேண்டுமென்றால் அதிகாரிகளின் துணையில்லாமல் முடியுமா? கொள்ளையில் கொள்கை வேறுபாடற்றவர்கள் இவர்கள். இந்த இலட்சணத்தில் குற்றவாளிகள் மீது ‘விசாரணை’ நடத்தி நடவடிக்கை எடுப்போம் என ஏய்த்து வருகிறது தி.மு.க. போதாதகுறைக்கு ‘‘எங்கள் தலைவர் செயல்தலைவர், பாருங்கள்.. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே சென்று நேரில் பார்வையிடுகிறார், நிவாரணம் வழங்குகிறார்’’ என விளம்பரம் வேறு.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் எல்லா ஆட்சியிலும், ஏறக்குறைய இத்தகைய ஆய்வுகளும் நிவாரணங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த ஆட்சிகளும் இதற்கெல்லாம் காரணம் முந்தைய ஆட்சிதான் எனக் குற்றம்சாட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. நாமும் நிவாரணக் கோரிக்கை வைப்பதோடு முடித்துக்கொள்கிறோம். சென்னையின் துயரம் இனிமேலும் தொடராமல் இருக்க வேண்டுமென்றால், அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளின் கூட்டுக் கொள்ளையை அம்பலப்படுத்தி அவர்களைத் தண்டிப்பதற்காகவும் போராட வேண்டியிருக்கிறது.

பால்ராஜ்

தைவான் : அமெரிக்க, சீன உலக மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய மையம் !

சீனாவில் மன்னராட்சியைத் தூக்கியெறிந்த 1911-ம் ஆண்டுப் புரட்சியின் 110-ஆவது நினைவுக் கூட்ட நிகழ்ச்சியில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், ‘‘தைவான் அமைதியான முறையில் சீனாவுடன் இணைக்கப்படும், தைவான் அரசின் தனிநாட்டுப் பிரிவினைவாதம்தான், தாய்நாடான சீனாவுடன் மீண்டும் தைவானை ஒன்றிணைப்பதற்கு தடையாக இருக்கிறது. சீன அரசாங்கம் தனது தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணியை நிச்சயமாக நிறைவேற்றும்’’ என்று பேசியதைத் தொடர்ந்து சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலுள்ள பிரச்சினை சர்வதேச அளவில் பேசுபொருளானது.
ஷி ஜின்பிங்கின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய தைவான் அதிபர் சாய் இங் வென், ‘‘நாம் எந்த அளவுக்கு சாதிக்கிறோமோ, அந்த அளவுக்கு சீனாவிடமிருந்து வரும் அழுத்தமும் நமக்கு அதிகரிக்கும். தைவான் சீனாவுடன் இணைக்கப்படும் என்ற சீனாவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் நாங்கள் அடிபணிய மாட்டோம்’’ என்றார்.
தைவான் இணைப்பு குறித்து ஷி ஜின்பிங் பேசுவதற்கு சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே,  150−க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அடுத்தடுத்து தைவான் வான் பரப்பில் பறக்கவிட்டிருக்கிறது, சீனா. இதுபற்றி ‘‘கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவுடனான உறவில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் சீனா, தைவான் மீது போர்த்தொடுக்கும் நிலை உருவாகியிருக்கிறது’’ எனக் கூறுகிறார் தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சர் சியூ குவோ-செங்.
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் இவ்விவகாரங்கள் போய்க் கொண்டிருக்கும்போதே, பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘‘தைவானுக்கு சீனாவால் ஏதாவது ஆபத்து நேர்ந்தால், தைவானுக்கு நாங்கள் பாதுகாப்பளிப்போம்’’ என்கிறார். அதாவது அமெரிக்காவின் இராணுவத் தலையீடு இருக்குமென்கிறார். அவர் சொன்னதைப் போல, தைவானுக்குள் தனது இராணுவத் துருப்புகளை இறக்கியது அமெரிக்கா. ‘‘தைவான் இராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிக்க குறைந்த அளவிலான அமெரிக்கத் துருப்புகள் உள்ளன’’ என பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த சாய் இங் வென், ‘‘எங்கள் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவுடன் நாங்கள் பரந்த அளவிலான ஒத்துழைப்பை மேற்கொள்கிறோம்’’ என்று கூறினார்.
படிக்க :
தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
கியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் !
தைவானை சீனாவுடன் இணைக்கப்போவதாக ஷி ஜிங்பிங் கூறுவதும் ‘தைவானுக்கு ஆதரவு’ எனும் பெயரில் அமெரிக்கா தனது இராணுவத் துருப்புகளை தைவானில் குவிப்பதையும் புரிந்துகொள்ள நாம் தெற்காசியாவின் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவப் போக்குகளின் நிலைமைகளிலிருந்து இப்பிரச்சினையைப் பரிசீலிப்பது அவசியம்.
தைவான் மீது சீனாவிற்குள்ள மரபுரிமையும்
அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடும்
சீனா-தைவான் பிரச்சினை இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 1949-ம் ஆண்டில் இருந்தே தொடர்கிறது. காலங்காலமாக தைவான் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. தைவானைச் சேர்ந்தவர்களும் சீனாவைச் சேர்ந்தவர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே மொழி, நெருங்கிய பண்பாடு, வரலாற்றைக் கொண்டவர்கள். 1895-ம் ஆண்டு சீனாவை ஆண்ட கிங் வம்ச அரசுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போரில், தைவானை ஜப்பான் கைப்பற்றி தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் படுத்தோல்வி அடைந்தவுடன், தைவானை மீண்டும் சீனாவிடமே ஒப்படைத்துவிட்டது. உலகப் போர் முடிவடையும் போது, தோழர் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியால், சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி வெடித்துக் கிளம்பியது. பெய்ஜிங்கை தலைநகராக கொண்ட சீனாவை ‘‘மக்கள் சீனக் குடியரசு’’ (PRC – People’s Republic of China) என தோழர் மாவோ அறிவித்தார். கோமிண்டாங் படைகள் விரட்டியடிக்கப்பட்டு தற்போதுள்ள சீனா முழுமையையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
சீனாவை முடக்குவதற்கு, அரசியல், பொருளாதாரம், இராணுவம் என அனைத்துத் துறைகளிலும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.
உள்நாட்டுப் போரில் விரட்டியடிக்கப்பட்ட சியாங்கே ஷேக் தலைமையிலான கோமிண்டாங் கட்சி தனது படைகள் – பரிவாரங்களுடன் சீனாவின் ஒரு பிராந்தியமான தைவான் தீவுக்கு தப்பியோடியது. தைபெய் (taipei) நகரை தலைநகரமாக கொண்டதுதான் உண்மையான ‘‘சீனக் குடியரசு’’ (ROC − Republic of China) என தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டது. அப்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் மாவோ தலைமையிலான புதிய ஜனநாயக சீனாவை சட்டப்பூர்வ நாடாக ஏற்றுக் கொள்ளவில்லை. தைவானையே சீனாவாக ஏற்றுக் கொண்டன. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் தயவில்தான் இன்றைய தைவான் ‘இறையாண்மை’ பெற்ற தனிக் குடியரசானது.
1971-இல், சீனா தனது பொருளாதாரத்தை வலுவாகக் கட்டியெழுப்பி தலைதூக்கி நின்றபோது பெய்ஜிங்கை தலைநகராகக் கொண்ட மக்கள் சீனக் குடியரசை (PRC) அங்கீகரிக்கப்பட்ட நாடாக ஐ.நா சபையின் பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொண்டன. முன்னர் தைவானுக்கு வழங்கிய அங்கீகாரத்தை இரத்து செய்தன. அப்போது தைவானை மீண்டும் சீனா தன்னுடன் இணைத்துக் கொள்ள முயற்சித்தபோது, அதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்தது. தைவான் சீனாவினுடைய ஒரு பிரதேசம்தான் என்பதை 1979-ம் ஆண்டு (சீனாவை முதலாளித்துவப் பாதைக்கு அழைத்துச் சென்ற டெங் சியாவோ பிங் ஆட்சிக்காலம்) அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டாலும் சீனாவின் இறையாண்மைக்குக் கீழ் தைவான் கொண்டுவரப்படுவதை ஏற்றுக் கொள்ளாமல் இரட்டை நிலை வகித்தது.
அதாவது, அன்று மக்கள் சீனக் குடியரசான (PRC) தற்போதைய சீனாவும், சீனக் குடியரசாக (ROC) தன்னை அறிவித்துக் கொண்ட இன்றைய தைவானும் தாங்கள்தான் உண்மையான சீனா என்று கூறி ‘‘ஒரே சீனக் கொள்கையை’’ அறிவித்தன. இதில் மக்கள் சீனக் குடியரசின் (PRC) ஒரே சீனக் கொள்கையை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில், சீனக் குடியரசு (ROC) என்று தைவான் தன்னை அறிவித்துக் கொள்வதையும் அதன் தனி இறையாண்மையையும் அமெரிக்கா மறுக்கவில்லை.
மாறாக, தைவான் உறவுச் சட்டம் (Taiwan Relation act − 1979) என்ற ஒரு சட்டத்தை அமெரிக்காவின் செனட் சபையில் கொண்டுவந்து தைவானுடனான உறவை அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகளில் தொடர்ந்தது. அமெரிக்கா அன்றே கடைபிடித்த இந்த இரட்டை நிலைப்பாடுதான் இன்று சீனாவுக்கு எதிராக தைவானில் அது தலையிடுவதற்கான முகாந்திரத்தைக் கொடுத்துள்ளது.
ஏகாதிபத்திய சீனாவும் தைவான் தீவும்
1949-ம் ஆண்டினைப் போல தற்போதைய நிலை இல்லை. அன்று தைவானுக்கு மரபுவழி உரிமை கோரியது சோசலிச சீனா. இன்று சீனா அமெரிக்காவுக்கு சவால்விடக்கூடிய அளவிற்கு ஒரு ஏகாதிபத்திய நாடாக வளர்ந்துவரும் கட்டத்தில் உள்ளது. ஆசிய – ஆப்பிரிக்க கண்டங்களிலுள்ள பல நாடுகளை தனது அரசியல் – பொருளாதாரத் திட்டத்திற்குள் கொண்டுவந்து செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கி வருகிறது. உலக நாடுகளை இணைக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தை இதற்குச் சான்றாகச் சொல்லலாம். மேலும் பல்வேறு நாடுகளுக்கு கடன்கொடுத்து அங்கு தனது மூலதன நலன்களை விஸ்தரித்து வருகிறது.
அன்றைய சோசலிச சீனா தைவான் மக்களை சுரண்டலின் பிடியில் இருந்து விடுவிப்பதற்காக நின்றது, இன்றைய ஏகாதிபத்திய சீனா சுரண்டலுக்காக நிற்கிறது. எனவே இரண்டையும் நாம் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது.
தனது ‘ஒரே சீனக்’ கொள்கையின்படி தைவானின் வரம்புக்குட்பட்ட கிங்மென், பெங்கு, மாட்சு போன்ற சிறிய தீவுகளை சீனா தன்னுடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தைவானின் புவியியல் பரப்பு என்பது கிழக்கு ஆசியா மற்றும் தென் சீனக் கடலில் இராணுவ முக்கியத்துவம் பெற்ற பகுதியாக உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா மீது தாக்குதல்களை நடத்த தைவான் தீவைதான் ஜப்பான் பயன்படுத்தியது. இதுமட்டுமன்றி, தைவான் தீவு உலகின் கப்பல் போக்குவரத்திற்கு முக்கியமான இடமாக விளங்குகிறது. இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கிழக்கு சீனக் கடலில் உள்ள சீனாவின் கடற்கரையோரத்தில் ஆழமான நீர்த்துறைமுகங்கள் இல்லை. எனவே, தைவானை சீனா தன்னுடன் இணைத்துக் கொண்டால், அதன் நீர்மூழ்கிக் கப்பல்கள் தைவானின் ஆழ்கடல் துறைமுகங்களில் இருந்து பசிபிக் பகுதிக்கு மிக எளிதாக கொண்டு செல்லமுடியும்.
மேலும் 1990-களுக்கு பிறகு தைவான் மிகப் பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தைவானில் இருந்து மின்னணுப் பொருட்கள், கணினி, கார் உதிரி பாகங்கள், மருத்துவ சாதனங்கள், இரும்பு, கனிம இரசாயனங்கள், எண்ணெய் உள்ளிட்ட  எரிபொருட்கள், ஸ்மார்ட்போனுக்கு தேவையான உதிரிபாகங்கள் ஆகியவை தைவானிலிருந்து பெரியளவில் ஏற்றுமதியாகின்றன. தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் இப்பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, ஏற்கெனவே உலகின் உற்பத்தி மையமாக உள்ள சீனாவுக்கு மலிவான உழைப்புச் சக்தியும் கிடைக்கும்.
1981-ம் ஆண்டு ‘ஒரு நாடு இரண்டு அமைப்புகள்’ என்ற கொள்கைப்படி ஹாங்காங்கில் இருப்பது போல தைவானுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதாக சீனா முன்வைத்தது. ஆனால், தைவான் ஏற்றுக்கொள்ளவில்லை. 2005-ம் ஆண்டு, தைவானுக்கு எதிராக பிரிவினை எதிர்ப்புச் சட்டத்தை (Anti-Secession Law) பிறப்பித்தது சீனா. அமைதியான வழிமுறைகளின் மூலம் தைவானை தன்னுடன் இணைக்கும் முயற்சிக்கு தைவான் இணங்காவிட்டால், இராணுவ வழிமுறைகளைப் பயன்படுத்த சீனாவிற்கு இந்தச் சட்டம் உரிமை வழங்குகிறது.
சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க,
தெற்காசியாவில் களம் அமைக்கும் அமெரிக்கா!
சீனா மீது பொருளாதாரத் தடை, காப்புவாதம் ஆகிய ஆயுதங்களை அமெரிக்க மேலாதிக்க வல்லரசு ஏவியபோதிலும், அதனால் வெற்றி பெற முடியவில்லை. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்குப் போட்டியாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும்கூட சீனா சந்தையைக் கைப்பற்றி வருகிறது. தனது பொருளாதார ஆற்றலைக் கொண்டு அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குப் போட்டியாக சீனா வளர்ந்துள்ளதால், அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான முரண்பாடும் மோதலும் தீவிரமடைந்து வருகிறது. எனவே சீனாவை முடக்குவதற்கு, அரசியல், பொருளாதாரம், இராணுவம் என அனைத்து துறைகளிலும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. குறிப்பாக தனது கவனத்தை தெற்காசியாவின் பக்கம் திருப்பியிருக்கிறது.
அதில் ஒரு பகுதியாக, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு சீனாவுக்கு எதிராக அமெரிக்கா குவாட் என்னும் நான்கு முனைக் கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடுகள், கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதோடு, தங்களது போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் உள்ளிட்டவற்றை மற்ற நாடுகளின் விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் நிறுத்தி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் எரிபொருள்களை நிரப்பிக் கொள்ளவும் உணவு, உடை, நீர், மருத்துவம் மற்றும் இதர தொழில்நுட்ப சேவைகளைச் செய்துகொள்ளவும் முடியும். தன்னுடைய சீன எதிர்ப்பு இராணுவ போர்தந்திரத்திற்காகவே இந்த குவாட் கூட்டணியை உருவாக்கியுள்ளது என்பது உலகறிந்த இரகசியம்.
மேலும் சீனாவுடன் எல்லைப் பிரச்சினைகளைக் கொண்டுள்ள இந்தியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை தூண்டிவிட்டு அவர்களை சீனாவுக்கு எதிரன நடவடிக்கைகளில் இறக்கிவிடுவதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது அமெரிக்கா. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15 தேதி லடாக் எல்லையை ஒட்டியுள்ள கல்வான் பள்ளத்தாக்கில், சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் நடந்த பயங்கரமான மோதலின் தொடர்ச்சியாக அமெரிக்கா இந்தியாவை தொடர்ந்து போருக்குத் தூண்டிவிட்டதே இதற்குச் சான்றாகும்.
சீனாவின் அண்டை நாடுகளில் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், சீனாவிற்குட்பட்ட சுயாட்சிப் பகுதிகளில் உள்ள பிரச்சினைகளைப் பயன்படுத்தியும் சீன அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை கட்டியமைத்து நெருக்கடி கொடுத்துவருகிறது அமெரிக்கா.
ஹாங்காங்கின் ‘‘கைதிகள் பரிமாற்றச் சட்டத்தில்’’ திருத்தம் கொண்டுவர ஹாங்காங் அரசு 2019 ஏப்ரலில் முடிவு செய்தது. இச்சட்டத் திருத்தத்திற்கு எதிராக, மாணவர்களும் இளைஞர்களும் ஹாங்காங் அரசிற்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இப்போராட்டங்களை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் கூடுதலாகத் தூண்டிவிட்டன.
இதேபோல, சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள ஷின்ஜியாங் மாகாணத்தின் உய்குர் சுயாட்சிப் பிரதேசத்தில், அம்மக்களின் தனித்த அடையாளம், மரபுகள் மற்றும் பண்பாட்டுக்கு எதிராக சீன அரசின் சட்டங்களும் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகக் கூறி அங்குள்ள துர்கிஸ்தான் இஸ்லாமிய கட்சியானது (TIP – Turkistan Islamic Party) தனிநாடு கோரிக்கையை முன்வைக்கிறது. இக்குழுவை அமெரிக்காதான் ஊட்டி வளர்க்கிறது. சீனாவின் பயணிகள் விமானத்தைத் தகர்க்க முயற்சித்ததோடு, பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது கஷ்கர் நகரில் குண்டு வெடிப்புகளை நடத்தி பலரைப் படுகொலை செய்தது இத்தீவிரவாத குழு.
இவ்வாறு தெற்காசியப் பிராந்தியத்தில், சீனாவை சுற்றி வளைத்து நெருக்கடி கொடுத்து வரும் அமெரிக்காவிற்கு தற்போதைய சீனா – தைவான் பிரச்சினை பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக மாறியிருக்கிறது. ‘தைவானின் இறையாண்மையைக் காக்க உதவுகிறோம்’ என்ற போர்வையில், சீனாவிற்கு எதிராக இராணுவ மிரட்டல் விடுக்கும் வாய்ப்பை அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கிறது.
படிக்க :
கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
மக்கள் சீனக் குடியரசு – 72 : சீனா சிவப்பானது எப்படி ?
நெடுங்காலமாக தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துவரும் அமெரிக்கா, தற்போது மிகப்பெரிய அளவில் விற்பனையை அதிகரித்திருக்கிறது. 2020-ம் ஆண்டில் 280 பில்லியன் டாலர் ஆயுதங்களை விற்பனை செய்த அமெரிக்கா, 2021-ம் ஆண்டில் அதை 750 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. மேலும் தைவானுக்கு இராணுவப் பயிற்சியளிப்பதில் தொடங்கி, தனது இராணுவத் தளவாடத்தையே தைவானில் அமைத்து சீனாவை அச்சுறுத்துகிறது அமெரிக்கா.
கூடுதலாக அமெரிக்கா, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தவிருக்கும் முதல் சர்வதேச ஜனநாயக உச்சி மாநாட்டிற்கு, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் தைவானை தனி நாடாக அங்கீகரித்து அழைப்புவிடுத்துள்ளது. இவையெல்லாம் சீனா – தைவான் இடையே மேலும் கடுமையான மோதல் போக்கையும், சீனாவுடனான அமெரிக்காவின் பனிப்போரையும் தீவிரப்படுத்தியிருக்கிறது.
தைவான் சீனாவுடன் இணைவதும் இணைய மறுப்பதும் அம்மக்களுக்கும் சீன அரசுக்கும் உள்ள பிரச்சினை. சீனாவுடன் தைவான் மக்கள் இணைய மறுத்தால், அதற்கெதிராக அவர்கள் சுயமாக அணிதிரண்டுப் போராடுவதே சரியானது.
உலகெங்கும் உள்ள ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் அப்போராட்டத்தை வரவேற்க கடைமைப்பட்டிருப்பார்கள். ஆனால், தங்கள் ‘இறையாண்மையை’ வென்றெடுக்க தாம் உதவுவதாகக் கூறி உள்நுழையும் அமெரிக்காவை அம்மக்கள் நிச்சயம் புறக்கணிக்க வேண்டும். ஒரு மேலாதிக்கத்திற்கு எதிராக, இன்னொரு மேலாதிக்கத்தை அரவணைப்பதன் மூலம் உண்மையான விடுதலையையும் இறையாண்மையையும் என்றுமே வென்றெடுத்ததில்லை.
எல்லா ஏகாதிபத்தியங்களின் நோக்கமும் மேலாதிக்கம்தானே ஒழிய அவர்கள் நமக்கான ‘மீட்பர்கள்’ இல்லை. ‘‘அதிபர் சாய் இங் வென் தனது அமெரிக்க எஜமானது மேலாதிக்க நோக்கத்திற்காக தைவானை அடகு வைக்கும் தேசத் துரோகத்தை எதிர்த்து முறியடிப்போம்! தைவானது சுயநிர்ணய உரிமையை உழைக்கும் மக்கள் முடிவுசெய்வோம்!” – என்ற முழக்கம்தான் தைவானில் எழுப்பட வேண்டியுள்ளது.

வெண்பா

நாடெங்கும் உரத் தட்டுப்பாடு : விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசு!

ந்தியாவின் இரண்டு முக்கியமான பயிரிடும் பருவங்களில் ஒன்று குறுவை. வடகிழக்குப் பருவமழை தொடங்கும் இந்தக் காலகட்டத்தில் வடநாட்டில் கோதுமை – கடுகும், தென்னாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் நெல்லும் பிரதானமாக பயிர் செய்யப்பட்டு வருகின்றன. அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாய வேலைகள் மும்முரமாக நடக்கும் காலமிது. ஆனால், நாடெங்கும் கடும் உரத் தட்டுப்பாடு நிலவுவதால் வழக்கமான விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் நெருக்கடிக்கும் பெரும் வேதனைக்கும் ஆளாகியிருக்கிறார்கள் விவசாயிகள்.
ஏற்கெனவே வாங்கியிருந்த கடன்களின் அழுத்தம், தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலை – அதனால் அதிகரித்துவரும் டிராக்டர் வாடகை, மின் கட்டண உயர்வு (பல மாநிலங்களில் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் இல்லை) இவை உருவாக்கியுள்ள நெருக்கடி ஒருபக்கம், உரிய காலத்தில் மழைப்பொழிவு இருந்தும் போதிய உரங்கள் கிடைக்காத நெருக்கடி மறுபக்கம் என விவசாயிகள் பல்முனை நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். விதைப்புப் பருவம் தவறி விடுமோ, முளைத்த பயிர்கள் வளராதோ, கதிர்விட்டவை சோடை போய்விடுமோ எனத் தாளமுடியாத மன உளைச்சலில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் நாட்கணக்கில் உரம் வாங்குவதற்காக வரிசையில் நிற்கும்போதே சில விவசாயிகள் நிலைகுலைந்து வீழ்ந்து  இறந்துள்ளனர். அதே மாநிலத்தில் இன்னும் சில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இத்தனை உயிர்ப்பலிகள் நேர்ந்தாலும், உரத் தட்டுப்பாடு அறவே இல்லை எனப் புளுகும் அதிகாரிகள், அமைச்சர்களின் பேச்சுகள் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளன.
படிக்க :
விவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு !
உர விலையேற்றம்: விவசாயத்தைச் சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!
இதன் விளைவாக, விவசாயிகள் ஆங்காங்கே உரக் கிடங்குகளுக்குச் சென்று உரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். மத்தியப்பிரதேசத்தில், ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரின் தொகுதியிலேயே    விவசாயிகள் இவ்வாறு உர மூட்டைகளைக் கைப்பற்றிய சம்பவம் நடந்துள்ளது. பல இடங்களில் தனியார் உரக் கிடங்குகளில் உள்ள உர மூட்டைகளைக் கைப்பற்றி எடுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகின்றன.
இவ்வாண்டில் தமிழ்நாட்டிலும் தேவைக்கு அதிகமாகவே மழை பெய்துள்ள நிலையில், குறுவை சாகுபடிக்குப் போதுமான உரங்கள் இல்லை. மாநிலத்துக்குத் தேவையான உரங்களை அனுப்பி வைக்குமாறு மாநில வேளாண் அமைச்சர், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். பல்வேறு கட்சித் தலைவர்களும் இப்பிரச்சினை தொடர்பாக அறிக்கைவிட்டு வருகின்றனர். தஞ்சை, ஈரோடு, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போதுமான உரங்கள் கிடைக்காத நிலையில், அடுத்த லாரி எப்போது வருமென்று உரக்கடைகள் முன் விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர்.
உரத் தட்டுப்பாட்டையும், விவசாயிகளின் அவலநிலையையும் பயன்படுத்திக் கொண்டு, தாறுமாறாக விலையேற்றி கள்ளச்சந்தையில் விற்பது ஒருபக்கம்; களைக்கொல்லிகள், நுண்ணூட்டச் சத்துகள் போன்ற இடுபொருட்களைச் சேர்த்து வாங்க வேண்டும், பழைய கடன்களை அடைத்தால்தான் உரங்களைத் தருவோம் என்றும் தனியார் உரக்கடைகள் விவசாயிகளைச் சுரண்டி வருவது மறுபக்கமும் நடந்து கொண்டிருக்கிறது.
விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு பாடம் சொல்லித்தர நினைத்து, மோடி அரசு இத்தகைய பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவரும் விவசாயப் போராட்ட முன்னணியாளருமான ராகேஷ் திகாயத் குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போதைய உரத் தட்டுப்பாட்டுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனினும், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இத்தகைய நெருக்கடிகளுக்குப் பின்னால் இந்திய அரசின் விவசாய விரோத – கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளே ஒளிந்திருக்கின்றன.
இறக்குமதியே முதன்மைக் காரணம்
இந்தியாவில் 1906-ம் ஆண்டே இராணிப்பேட்டையில் உரத் தொழிற்சாலை தொடங்கப்பட்டிருந்தாலும் பசுமைப் புரட்சிக்குப் பிறகு, பெருமளவில் இரசாயன உரப் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. நாட்டின் உரத் தேவைக்கு ஏற்ப புதிய உரத் தொழிற்சாலைகளை அரசு நிறுவவில்லை. நாடு முழுவதும் 56 பெரிய ஆலைகள், 72 நடுத்தர மற்றும் சிறு ஆலைகள்  இயங்கினாலும், 9 பொதுத்துறை மற்றும் இரண்டு கூட்டுறவு உரத் தொழிற்சாலைகள்தான் அரசு சார்பில் இயங்கி வருகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் உரம் வாக்குவதற்காக வரிசையில் அலைமோதும் விவசாயிகள்.
இவை, தொடர்ந்து அதிகரித்துவரும் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானவையாக இல்லை. மேலும் உரத் தயாரிப்புக்கான மூலப்பொருட்களும் தேவைக்கேற்ப இல்லை. இதனால் நீண்ட காலமாகவே, தேவையான உரங்களை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்துவருகிறது. யூரியா, டி.ஏ.பி போன்றவை குறிப்பிட்ட அளவுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் பொட்டாஷ் உரம் மற்றும் அதற்கான மூலப்பொருட்களுக்கு முழுமையாக இறக்குமதியைச் சார்ந்தே இந்திய உரச் சந்தை இயங்குகிறது.
இந்நிலையில், பாஸ்பேட் உரங்களுக்கான மூலப்பொருட்கள் ஒருசில நாடுகளில் மட்டுமே இயற்கையாகக் கிடைப்பதால், உர மூலப்பொருள் விலைகள் உலகெங்கும் பெருமளவில் உயரும் என்றும், அதன் உற்பத்தி குறைக்கப்பட்டு விடும் என்றும் சர்வதேச வேளாண்மைப் பொருளாதார நிபுணர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தெரிவித்து வந்தனர். இந்தியாவில் கிடைக்கும் பாஸ்பேட்டும் நாட்டின் உரத் தேவைகளுக்கு இனிவரும் 29 ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
டி.ஏ.பி. போன்ற உரத் தேவைகள் குறைவாக உள்ள பிரிட்டன் போன்ற நாடுகள் கூட பாஸ்பேட் உரத்திற்கான மாற்றுகளை வெற்றிகரமாக கண்டுபிடித்து வணிகரீதியில் செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றன. ஆனால், நூற்றுக்கணக்கான வேளாண்மை ஆய்வு நிறுவனங்கள் உள்ள இந்தியாவில் அதற்கான ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்படவில்லை. ‘சுயசார்பு இந்தியா’ என முழங்கும் மோடி அரசிலும் இதே நிலைதான்.
காங்கிரஸ் வழியிலேயே மோடி
எப்போதெல்லாம் மோடி அரசின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு உருவாகிறதோ, அப்போதெல்லாம் மோடியும் அவரது சகாக்களும் காங்கிரசை நோக்கிக் கைகாட்டுவார்கள்; காங்கிரஸ் தொடங்கி வைத்ததைத்தானே செய்கிறோம் என்பார்கள். தேர்தல்கள் வந்துவிட்டாலோ, ‘‘இத்தனை ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்தது காங்கிரசு தான், அதை வேரறுக்க வேண்டும்’’ என வீரவசனம் பேசுவார்கள். ஆட்சிக்கு வந்ததும் காங்கிரசை விட வேகமாக கார்ப்பரேட் ஆதரவு மக்கள் விரோதத் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்துவார்கள்.
அதே அணுகுமுறையைத்தான் உர இறக்குமதியிலும் மோடி அரசு கையாண்டு வருகிறது. 2011-ம் ஆண்டில் சௌமித்ரா சௌத்ரி குழு பரிந்துரையின் அடிப்படையில் உரங்களின் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை உர நிறுவனங்கள் – முதலாளிகள் கையில் ஒப்படைத்தது அப்போதைய காங்கிரஸ் அரசு. விவசாயிகளுக்கு நுண்ணூட்டச்சத்து அடிப்படையில் மானியம் என்ற பெயரில் நேரடியாக கம்பெனிகளுக்கே மானியத்தைக் கொடுப்பதாக அறிவித்து செயல்படுத்தியும் வருகிறது ஒன்றிய அரசு. மேலும், தேவைக்கேற்ப உரங்களை இறக்குமதி செய்யும் உரிமையையும் தனியாருக்கே தாரைவார்த்துவிட்டது. அதாவது, விவசாயத்தைக் கார்ப்பரேட் பிடியில் சிக்கவைக்கும் சிலந்தி வலையின் ஓர் அங்கமே இத்திட்டம். நாட்டை மறுகாலனியாக்கும் நோக்கத்தில் காங்கிரசு கொண்டு வந்த இந்த விவசாய விரோத திட்டத்தைத் தீவிரமாகவும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி வருகிறது மோடி அரசு.
மானிய வெட்டும் உரத் தட்டுப்பாடும்
உற்பத்தி, இறக்குமதி, விலை நிர்ணயம் என எல்லாவற்றிலும் தனியாரின் ஆதிக்கத்தை அனுமதித்த நிலையில், அதனால் தொடர்ந்து ஏற்படும் விலையுயர்வை ஈடுகட்ட, ஆண்டுதோறும் ஒரு இலட்சம் கோடிக்கும் அதிகமாக மானியம் என்ற பெயரில் உரக் கம்பெனிகளுக்கு அள்ளிக்கொடுத்து வருகிறது ஒன்றிய அரசு. இத்திட்டம் உர நிறுவனங்களுக்கே அதிகம் பலனளித்தாலும், நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பொசிவதைப் போல விவசாயிகளுக்கு ஓரளவு ‘குறைந்த விலையில்’ உரம் கிடைத்து வந்தது. இவ்வாண்டில், மோடி அரசு இதிலும் கை வைத்திருக்கிறது.
பறிமுதல் செய்த உர மூட்டையை விவசாயி ஒருவர் தன் தோளில் தூக்கிச் செல்கிறார்.
கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ.1,33,947 கோடி உர மானியத்திற்காக ஒதுக்கிய மோடி அரசு, நடப்பாண்டில் ரூ.79,530 கோடிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது ரூ.54,417 கோடி வெட்டப்பட்டுள்ளது. அதன்பிறகு ஜூன் மாதத்தில் ஒருமுறையும், அக்டோபரில் ஒருமுறையும் மானியத்தொகையை உயர்த்தியதால், மொத்தமாக ஒரு இலட்சம் கோடியைத் தாண்டும் எனினும், இத்தொகை கடந்த ஆண்டை விடக் குறைவே.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மானியக்குறைப்பை சாக்காக எடுத்துக்கொண்ட உர நிறுவனங்கள், ‘‘சர்வதேச சந்தையில் மூலப் பொருட்கள் விலையேறிவிட்டன, போதுமான தொகையை அரசு தரவில்லை’’ என்று கூறி உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன. மேலும், தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு உரங்களின் விலையையும் கடுமையாக உயர்த்தியிருக்கின்றன. ரூ.1,200-க்கு விற்று வந்த ஒரு மூட்டை டி.ஏ.பி.யை ரூ.2,400 என நிறுவனங்கள் விலையை உயர்த்திக் கொண்டுவிட்டன. பொதுவாக விலை உயர்வு குறித்து கோபமடைந்தாலும், வேறுவழியில்லாத இந்திய விவசாயிகள் கூடுதல் விலை கொடுத்தே வாங்கினர். இப்போது ஒன்றிய அரசு மானியத்தொகையை ரூ.700 அதிகப்படுத்தி மூட்டைக்கு ரூ.1,200-ஆக ஆக்கியுள்ளது. அதாவது ரூ.2,400 விலை வைக்கப்பட்ட உரத்தை விவசாயிகள் ரூ.1,200-க்கு இனி  பெறுவார்கள்.
இந்த மானியத்தையும் கூட காலங்கடந்து, அதாவது அக்டோபர் மூன்றாவது வாரத்தில்தான் வழங்கியது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான குறுவை சாகுபடி தொடங்கிய பிறகே, அதாவது ‘கண்கெட்ட பிறகே சூரிய வணக்கம்’ செய்திருக்கிறது மோடி அரசு. இதன் விளைவாக உர நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்து, கடும் தட்டுப்பாடு உருவாகியிருக்கிறது. இப்படி குறுவை சாகுபடியை சீர்குலைத்துவிட்டு, உரத் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்கிறார் ஒன்றிய உரத்துறை அமைச்சர் மாண்டவியா. உரம் கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட உ.பி.யிலோ உரத் தட்டுப்பாடே இல்லையென அமைச்சர், அதிகாரிகள் அனைவரும் ஊடகங்களின் முன் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த நிதியாண்டில் (2020−21) உரத் தயாரிப்புக்கான பெட்ரோலிய மூலப்பொருட்களின் விலை, சர்வதேசச் சந்தையில் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்தது. இதன் காரணமாக, நார்வே உள்ளிட்ட பல முன்னணி உற்பத்தி நாடுகள், யூரியாவின் மூலப்பொருளான அமோனியா உற்பத்தியைப் பாதியாகக் குறைத்துவிட்டன. இந்த உற்பத்திக் குறைவின் எதிரொலியாக அமோனியா விலை சர்வதேசச் சந்தையில் மூன்று மடங்குக்கும் மேல் அதிகமாகியுள்ளது.
உலகின் பல நாடுகள் உரத் தேவைகளுக்கான மூலப்பொருள் தேவையை நிறைவு செய்ய பெட்ரோலிய நிறுவனங்களுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விலை நிர்ணய ஒப்பந்தம் செய்து கொள்வது வழக்கம். இப்படிப்பட்ட விலை நிர்ணய ஒப்பந்தங்களை இந்திய அரசும் கடந்த ஆண்டுவரை செய்து வந்தது. அப்படி பெறப்பட்ட மூலப் பொருட்கள் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப பிரித்து வழங்கப்பட்டு வந்தன.
ஆனால் கடந்த ஆண்டில் மோடி அரசு, தனியார் உர ஆலைகள் அவரவர் தேவைக்கு ஏற்ப தனித்தனியாக சர்வதேச ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளலாம் என்று தன் பொறுப்பைக் கைகழுவிவிட்டது. அதே சமயத்தில், ஆகஸ்ட் மாதத்தில் உரத் தட்டுப்பாடு பூதாகரமாக தெரியத் தொடங்கிய போது, உற்பத்திக் குறைவுக்கு தனியார் ஆலைகள்தான் காரணம் என்றனர் மோடி அரசின் அதிகாரிகள்.
இன்னொரு பக்கத்தில், இஃப்கோ (IFFCO) நிர்வாக இயக்குநர் யு.கே. அவஸ்தி, சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள மூலப்பொருட்களின் விலையுயர்வே காரணமென சாதிக்கிறார். சர்வதேச விலையுயர்வு ஒரு அம்சம்தான் என்றாலும், மோடி அரசின் மானிய வெட்டும், விவசாய விரோதக் கொள்கையும்தான் காரணம் என்பதைப் பற்றி இருதரப்புமே மூச்சுகூட விடுவதில்லை.
உரத்தட்டுப்பாடு, விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் தமிழக விவசாயிகள்.
தனியார்மயம், கார்ப்பரேட்மயம் என்றாலே இலஞ்ச ஊழல் தவிர்க்க முடியாத அம்சம் என்பது இந்த விசயத்திலும் அம்பலமாகியிருக்கிறது. விலை உயர்வுக்கு நியாயம் கற்பித்துப் பேசும் அவஸ்தி மீது, சி.பி.ஐ தொடுத்துள்ள ஊழல் வழக்கை உதாரணமாகக் கூறலாம்.
மானியத்தில் மஞ்சள் குளிக்கும் அதிகார வரக்கம்:
உர இறக்குமதி விவகாரத்தில் துபாயைச் சேர்ந்த கிசான் டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடமிருந்து கோடிக்கணக்கில் இலஞ்சம் வாங்கியதாக, கூட்டுறவு உற்பத்தி நிறுவனமான இஃப்கோ (IFFCO) -வின் நிர்வாக இயக்குனர் யு.கே. அஸ்வதி மற்றும் இந்தியன் பொட்டாஷ் லிமிட்டெட் (ஐ.பி.எல்) நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் பர்விந்தர் சிங் கெலாட் மீது கடந்த ஜூன் மாதத்தில் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த 2013 – 2017 ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்படும் உரம் மற்றும் மூலப்பொருட்களுக்கான மானியத்தில் மோசடி செய்யும் நோக்கில், செயற்கையாக விலையேற்றத்தைக் கணக்குக் காட்டி இறக்குமதி செய்துள்ளதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதற்கான இலஞ்சமாக ரூ.685 கோடியைப் பெற்றுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகிறது.
இதையடுத்து, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது, உர நிறுவன முறைகேடு ஆகிய வழக்குகளில் மத்திய அமலாக்கத்துறை, துபாயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜோதி டிரேடிங் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனத்தின் துணைத்தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான அமரேந்திர தாரி சிங்கை கைது செய்தது. அவஸ்தி மற்றும் பர்விந்தர் மீது சி.பி.ஐ நடவடிக்கை எடுக்கும் முன்பாக தன்னிடம் அனுமதி பெற வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை ஆகஸ்ட் மாதத்தில்  பிறப்பித்துள்ளது.
உரத்துக்கான மானியத்தை கம்பெனிகளுக்கே நேரடியாகக் கொடுப்பது, இறக்குமதி செய்து கொள்ளவும், விலையைத் தீர்மானித்துக் கொள்ளவும் கம்பெனிகளுக்கே அதிகாரம் கொடுத்தது போன்றவை பெரும் ஊழலுக்கு வழி செய்துள்ளன என்பதை மேற்சொன்ன வழக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
000
தேர்தல் வாக்குறுதிகளில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக சூளுரைத்த மோடியின் அரசு, உரங்களின் விலையைத்தான் இரட்டிப்பாக்கி இருக்கிறது. விவசாயிகளின் நண்பன் என்று சொல்லிக்கொண்டு உரங்களுக்கான மானியத்தைத்தான் வெட்டிக் கொண்டிருக்கிறது. ஊழலுக்கு எதிரான ‘தூய’ ஆட்சி தரும் மோடியின் ஆட்சியில்தான் அதிகார வர்க்கம் மானியத்தின் பெயரால் மஞ்சள் குளித்து, இலஞ்ச ஊழலில் ஊறித் திளைக்கிறது.
படிக்க :
விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய எடப்பாடி அரசிடம் சாக்குப் பைகள் இல்லையாம் !
முளைவிடும் அறுவடை நெல் || அம்பலமாகும் சங்கிப் பள்ளிகள் || கருத்துப்படங்கள் !
விவசாயிகளோ, பருவத்தில் விதைக்க வேண்டும், தருணத்தில் உரமிட வேண்டுமே என்ற பதைபதைப்பில் இருக்கிறார்கள். உரம் கிடைக்காத நிலையில், அலைந்து திரிந்து நெஞ்சடைத்து சாகிறார்கள். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் ‘நாட்டுக்காக உழைக்கும்’ மோடியோ, கடைசி நேரம் வரை போராடும் விவசாயிகளைச் சந்திப்பதுமில்லை, அவர்களின் நலன் குறித்து சிந்திப்பதுமில்லை. நேரெதிராக, விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டுவது குறித்தும், விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்குவது குறித்துமே மோடியின் அரசு சிந்திக்கிறது.
புளூம்பர்க் போன்ற சர்வதேச புள்ளிவிவர, பொருளாதார நிறுவனங்கள் வரும் ஆண்டுகளில் உணவுத் தட்டுப்பாடும் உணவுப்பண்ட விலைகளும் இந்தியா போன்ற பல நாடுகளில் அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளன. நல்வாய்ப்பாக, இந்தியா கடந்த பத்து ஆண்டுகளில் பெரும் வறட்சியையோ பயிர்ச்சேதத்தை உருவாக்கும் பெரும் விளைவுகளையோ எதிர்கொள்ளவில்லை. ஆனால், ‘வளர்ச்சி நாயகன்’ மோடியின் அரசு உருவாக்கியுள்ள உரத் தட்டுப்பாடும், அதைத் தொடர்ந்து வரவிருக்கும் உற்பத்திக்குறைவும் சில காலம் தொடர்ந்தால் அந்நிலை நிச்சயம் ஏற்படக் கூடும்.
விவசாய விரோத வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் குறித்து ஓராண்டு காலமாக அலட்டிக் கொள்ளாத மோடி, உத்தரப்பிரதேச தேர்தல் நெருங்கும் சமயத்தில் பின்வாங்கியிருக்கிறது. அதே நோக்கம்தான் உரத்துக்கான மானியவெட்டிலிருந்து பின்வாங்குவதிலும் ஒளிந்திருக்கிறது. இப்போது வெளிப்படுவது விவசாயிகள் மீதான மோடியின் அக்கறையல்ல, கார்ப்பரேட் விசுவாசமே. உரிய தருணத்துக்காக அவர்கள் பதுங்குகிறார்கள்.

கிருஷ்ணராஜ்