பட்ஜெட் : பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்படும் புதியக் கல்விக்கொள்கை !
தமிழக அரசானது 2022 – 2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் இல்லம் தேடிக் கல்வி, முன்மாதிரிப் பள்ளிகள், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் கிளைகளை தமிழ்நாட்டில் திறப்பது, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம், ஐஐடி, எய்ம்ஸில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் இளநிலை படிப்பிற்கான செலவை தமிழக அரசே ஏற்பது போன்ற திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
இத்திட்டங்களில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற திட்டம் மட்டும் பேசு பொருளாகி உள்ளது. அதுவும் தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து அதற்கு பதிலாக கொடுக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது. மற்ற திட்டங்களை பற்றி பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்ற சில கல்வியாளர்களை தவிர மற்றவர்கள் யாரும் பேசவில்லை.
மற்றபடி மொத்த பட்ஜெட்டை பற்றியும் திமுகவின் கூட்டணி கட்சிகள் மத்தியில் ஆகா ஓகோ என்ற வரவேற்பும் ஆரவாரமும்தான் உள்ளது. எனவே பள்ளிக் கல்வித்து றையில் மேற்கூறிய 5 திட்டங்களின் உண்மையான நோக்கங்களை பற்றி நாம் விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.
படிக்க :
♦ மலையம்பாக்கம் அரசுப் பள்ளியின் அவலநிலை ! மெத்தனமாக இருக்கும் அரசு !
♦ கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது நியாயமில்லை
ஐஐடி, எய்ம்ஸில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் இளநிலை படிப்பிற்கான செலவை தமிழக அரசே ஏற்பது.
”ஐஐடி, எய்ம்ஸ் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும்” என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி மற்றும் எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர மாணவர்கள் இரண்டு நுழைவுத்தேர்வுகளை கடந்து செல்ல வேண்டும். 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் பெரும்பாலும் ஐஐடி மற்றும் எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் எல்லாம் சேர முயற்சி எடுப்பதில்லை.
இளங்கலை படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் படித்துவிட்டு GATE எனும் தேர்வை எழுதி அதில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் வாங்கினால் PG COURSE ஐஐடி போன்ற நிறுவனங்களில் படிக்க முடியும். இந்த முறையை பின்பற்றிதான் நிறைய மாணவர்கள் ஐஐடியில் படிக்கின்றனர்.
இத்தகைய நுழைவுத்தேர்வுகளில் தனியார் பயிற்சி நிலையங்களில் பல இலட்சம் கட்டிப்படிக்கும் பணக்கார மாணவர்களால் மட்டுமே எளிதாக தேர்ச்சிபெற முடியும். அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோருக்கு இத்தகைய பயிற்சிகள் எட்டாக்கனியாகவே இருக்கின்றன.
நிலைமை இப்படி இருக்கும்போது இத்தகைய உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை படிப்பிற்கான செலவை அரசே ஏற்கும் என்னும் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடையக் கூடியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே.
நுழைவுத்தேர்வின்றி மாணவர் சேர்க்கை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகத்தில் (MIT,CEG,SAP,ACT ) படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்று சொல்லலாமே. அப்படி அறிவித்தால் அதிக நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்ற காரணத்தால்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் சேராத ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை அளித்துள்ளது திமுக அரசு.
இத்திட்டத்தை அறிவித்ததன் மூலம் திமுகவிற்கு மக்கள் மத்தியில் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நல்லது செய்கிறார்கள் என்ற வெற்று பிம்பம்தான் உருவாகி உள்ளது. அதை தான் அவர்களும் விரும்புகிறார்கள்.
முன் மாதிரிப் பள்ளிகள்
”அரசுப்பள்ளி மாணவர்கள் அறிவியல், தொழிற்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து கல்வி பெறும் நோக்கோடு, கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன் மாதிரிப் பள்ளிகளை இந்த அரசு தொடங்கியுள்ளது. தற்போது கல்வியில் பின்தங்கியுள்ள 15 மாவட்டங்களில் இந்த முன்மாதிரிப் பள்ளிகள் 125 கோடி செலவில் தொடங்கப்படும்” என்று பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்மாதிரிப் பள்ளி திட்டம் 2018-ம் ஆண்டு அதிமுக அரசு இருக்கும்போதே அறிவிக்கப்பட்டது. அப்போதைய அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்வாகத்தை மேம்படுத்த ரூ.50 இலட்சம் தரும். அப்பள்ளியானது மீதமுள்ள பணத்தை முன்னாள் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போதைய திமுக அரசானது ஒவ்வொரு பள்ளிக்கும் எவ்வளவு நிதி ஒதுக்குவோம் என்பதை சொல்லவில்லை. இத்திட்டத்தில் முக்கியமானது தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உதவியைபெற வேண்டும் என்பதுதான். அதையும் திமுக அரசானது வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்ற கல்வியாளர்கள் ”மாதிரிப்பள்ளி மற்றும் உயர்கல்வியைத் தொடர தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி என்ற கருத்து அனைத்து குழந்தைகளின் சமமான அணுகுமுறைக்கு எதிரானது. மாதிரிப் பள்ளிகளில் மட்டுமே படிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கற்றலில் சிறந்தவர்கள் என்ற எண்ணத்தையும் விதைக்கிறது” என்று தெரிவிக்கின்றனர்.
இத்திட்டமானது மாணவர்களின் சமமான அனுகுமுறைக்கு எதிரானது என்றாலும் அதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது. பள்ளிகளுக்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டிய பொருப்பிலிருந்து அரசானது படிப்படியாக விலகுதல்.
பள்ளிகளுக்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டிய அரசானது, தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மூலம் குறிப்பிட்ட அளவு பள்ளியை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பது அரசுப் பள்ளியை முற்றிலுமாக கைவிடுதலில்தான் போய் முடியும்.
இல்லம் தேடிக் கல்வி
தமிழ்நாட்டில் பொதுமுடக்க காலம் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. பெற்றோர்களும் பிள்ளைகளை அச்சம் இல்லாமல் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். இச்சூழலில் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களின் கல்வித்திறனை எப்படி மேம்படுத்துவது என்று யோசிக்காமல் மீண்டும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளது திமுக அரசு.
இத்திட்டம் தொடங்கிய காலத்தில் இது புதிய கல்விக் கொள்கையின் அங்கம் மற்றும் முறை சார்ந்த கல்வியை ஒழிகும் என்று ஆசிரியர்கள் வைத்த விமர்சனத்தையும், தன்னார்வத் தொண்டு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் மாணவர்களை சென்றடைய வாய்ப்புள்ளது என்பதையும் உறுதிப்படுத்தும் விதமாக திமுகவின் செயல்பாடு உள்ளது.
அசாம் மாநிலத்தில் பள்ளி மாணவர்களை ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் காவிமயமாக்குவதற்கு ஓராசிரியர் பள்ளிகள்தான் உதவிகரமாக இருந்தன. அதேபோல் இத்திட்டத்தை இங்கே தொடர்வதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்குச் சாதகமாக அமையும்.
முதலில் இல்லம் தேடிக் கல்வி திட்டமானது பொதுமுடக்க காலத்திற்கு என்று மட்டும் கூறிவிட்டு தற்போது மீண்டும் அறிவிப்பது திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதாவது புதியக் கல்விக் கொள்கையை எதிர்ப்போம் என்று சொல்லிக்கொண்டு நைச்சியமாக அமல்படுத்துவதை, பாஜக எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்-ஐ நைச்சியமாக வளரவிடுவதை இச்சம்பவம் வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள்
உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களின் கிளைகள் தமிழ்நாட்டில் திறக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமும் புதியக் கல்விக் கொள்கையின் அங்கம்தான். கல்வியை வியாபார சரக்காக மாற்றும் நோக்கம்தான்.
அரசுக் கல்லூரிகள் மட்டுமிருந்த சூழலில் படிப்படியாக தனியார் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. தனியார் கல்லூரிகள் தரத்தில் சிறந்தவை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் படிப்படியாக விதைக்கப்பட்டது. அதற்கேற்ப அரசுக் கல்லூரி என்றாலே பொறுக்கி கல்லூரி என்ற சிந்தனை உருவாக்கப்பட்டது. அரசானது அரசுக் கல்லூரிகளுக்கு படிப்படியாக நிதி ஒதுக்குவதை குறைத்து, நிர்வாகக் கட்டமைப்பையும் ஊழல்மயப்படுத்தி சீரழித்தது.
படிக்க :
♦ பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
♦ உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
மேற்கூறியவாறுதான் கல்வித்துறையில் தனியார்மயம் படிப்படியாக புகுத்தப்பட்டது. அதற்கேற்ப மக்களின் மனநிலையும் படிப்படியாக மாற்றப்பட்டது. இச்சூழலை உருவாக்கிவிட்டுதான் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் உள்ளே வருகின்றன.
எனவே இத்திட்டமானது புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம் என்று சொல்லிக்கொண்டு அதை மறைமுகமாக அமல்படுத்தும் திமுக அரசை மீண்டும் ஒருமுறை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
மொத்தமாக தொகுத்து பார்க்கும்போது மேற்கூறிய திட்டங்கள் எல்லாம் திமுக அரசின் புதியக் கல்விக்கொள்கையை அமல்படுத்தலையும், கவர்ச்சிவாத அரசியலையும்தான் பட்ஜெட் முன்மொழிகிறது என்று தெரிய வருகிறது. திமுக-விற்கு முற்போக்கு சாயம் பூசுபவர்கள்தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
அமீர்
மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! | வீடியோ
மார்ச்-28,29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் ! மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! என்ற தலைப்பில் சென்னை ஆவடியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் தொழிலாளர் விரோத சட்டங்களை கொண்ட 4 தொகுப்புகள், இன்னும் பிற சட்டத் திருத்தங்கள், வேலையின்மை, வாழ்வாதாரம் இழப்பு, பணமதிப்பழிப்பு, கார்ப்பரேட் நலத் திட்டங்கள் ஆகியவற்றால் தொழிலாளர்களையும் நாட்டின் உழைக்கும் மக்களையும் வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் மாநிலப் பொருளாளர், தோழர் விஜயகுமார் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் ஆகியோர் ஆற்றிய சிறப்புரைகளை இங்கு காணொலிகளாகப் பதிவிடுகிறோம்.
காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
எது அபாயகரமானது : வாரிசு அரசியலா? பாசிச அரசியலா?
வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. அதை எதிர்த்து போராட வேண்டும் என நடந்து முடிந்த பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி தனது திருவாயை மலர்ந்துள்ளார்.
வாரிசு அரசியல் என்பது மோடியின் எஜமானனான அமெரிக்காவின் கென்னடிபுஷ், டிரம்ப் முதல் இந்தியாவின் காங்கிரஸ் திமுக, பாமக, மதிமுக முதல் பாஜக தான் அங்கம் வகிக்கும் தே.ஜ.கூ உள்ளிட்ட பிற ஓட்டுக்கட்சிகள் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளன.
கருத்து சுதந்திரத்தை கிஞ்சித்தும் அனுமதிக்காத பார்ப்பன பாசிஸ்டுகளான ஆர்.எஸ்.எஸ் – பாஜக-வின் தீவிர உறுப்பினரான மோடி, வாரிசு அரசியல் பற்றி வகுப்பெடுப்பதுதான் சாத்தான் வேதம் ஓதிய கதையாக உள்ளது.
வாரிசு அரசியல் என்பது ஜனநாயக விரோதமானது. பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது. ஆனால், ஜனநாயகத்தைப் பற்றி, ஜனநாயகம் எனும் பதத்தையே அகராதியில் இருந்து நீக்குவதை நோக்கமாகக் கொண்ட பார்ப்பன பாசிஸ்ட்டுகள் பாசிசத்தைப் பற்றிப் பேசுவதுதான் கேலிக்கூத்து.
படிக்க :
♦ உலக மகிழ்ச்சி அறிக்கை 2022 : 136வது இடத்தில் இந்தியா !
♦ கர்நாடகா : கோயில் திருவிழாக்களில் முஸ்லீம் வணிகர்கள் வியாபாரம் செய்யத்தடை !
அதாவது அன்றாடம் அனைத்து வகை அட்டூழியங்களையும் கொடூரமான முறையில் கொலைகளையும் நடத்திவருவது ஆர்.எஸ்.எஸ்-ம் அதன் துணை அமைப்புகளும்தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்புகளில் ஒன்றான சனாதன் சன்ஸ்த்தா என்ற கொலைகார அமைப்பானது, பகுத்தறிவாளர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளையும் பயிற்சி பட்டறைகளையும் இலக்கு வைத்து தாக்கியுள்ளது. தொடர்ந்து தாக்கியும் வருகிறது.
மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தி மகாராஷ்டிரத்தில் பகுத்தறிவு இயக்கங்களையும் நடத்திவந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரை சுட்டுக்கொன்றுள்ளது இக்கும்பல். மூடநம்பிக்கை, வகுப்புவாதம் பிற்போக்குத்தனங்களை எதிர்த்து போராடிய பன்சாரே, கல்புர்க்கி போன்றவர்களையும் கொன்றுள்ளது சனாதன் சன்ஸ்த்தா என்ற இந்தக் கொலைகார அமைப்பு.
முஸ்லீம் மக்களுக்கு எதிராக யோகியின் அடியாள்படையான இந்து யுகவாகினி நடத்திய மதவெறியை தூண்டும் பிரச்சாரத்தாலும், இதன் தொடர்ச்சியான முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களாலும், வழக்குகளும் ஏராளமாக இன்று வரை நடந்து வருகிறது. யோகியும் இந்து யுவவாகினியின் உறுப்பினர்களும் இதுவரை கைது செய்யப்படவில்லை. சுதந்திரமாக இன்றுவரை வலம்வந்து கொண்டு இருக்கின்றனர்.
பஜ்ரங் தள் அமைப்பின் உறுப்பினர்கள் மூலம் மங்களூரில் சிட்டி சென்டர், ஃபோர்ம் ஃபிசா, பிக்பஜார் போன்ற பல்வேறு மார்க்கெட்களில் எல்லாம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இங்கு பெரும்பான்மையான முஸ்லீம் கடைகளை அப்புறப்படுத்தி பணிய வைத்து தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன்மூலம் எப்போதும் முஸ்லீம் வியாபாரிகளை அச்சத்திலேயே வைத்துள்ளனர்.
வி.எச்.பி.யில் உருவாக்கப்பட்ட திடகாத்திரமான உடலமைப்பைக் கொண்ட அடியாள்படையான பஜ்ரங் தள் மோடி கொடுத்த தைரியத்தில் கர்வாப்சி என்ற பெயரில் ஜலெளன் மாவட்டத்தில், கிறித்துவ மதத்திற்கு மாறும்படி பிரச்சாரம் செய்தார் என்று குற்றம் சுமத்தி அவதேஷ்குமார் என்பவருக்கு மொட்டையடித்து செருப்பு மாலை போட்டு கழுதைமேல் அமர்த்தி ஊர்வலம் நடத்தி அசிங்கப் படுத்தியுள்ளது.
அவ்வப்போது வகுப்பு வாதத்தை கிளறிவிட்டு முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. வாழ்விடத்திலிருந்து அவர்களை விரட்டியடித்துவிட்டு முஸ்லீம்கள் அற்றபகுதி என்ற அறிவிப்பு பலகையும் பொருத்தியுள்ளது.
ஆஸ்திரிலேய பாதிரியான கிரகாம் ஸ்டெயின்சையும் அவரது குழந்தைகளையும் கார்க்குள்ளேயே வைத்து உயிரோடு எரித்ததோடு அவர்கள் தப்பவிடாமல் தடுத்து தீயில் முழுமையாக எரியவிட்ட கொலைபாதகப் குண்டர்களைக் கொண்ட அமைப்புதான் இந்த பஜ்ரங் தள்.
மாட்டுக்கறி வைத்து இருப்பதாகக்கூறி பல முஸ்லீம் தலித் மக்களை பசுப் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் மதவெறிகும்பல் கொடூரமாக தாக்கியதோடு கொலையும் செய்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம். மேலும், மாநில அரசுகளை சதித்தனமாக கவிழ்ப்பது, மாநில உரிமைகளை நசுக்குவது, மாநில சுயாட்சிகளை கேள்விக்குள்ளாக்குவது விமர்சிப்பவரகள் எதிர்ப்பவர்களை கொடூரமாக கொலை செய்வது.
குறிப்பாக, தமிழகத்தில் முஸ்லீம் மக்கள்மீது வெறுப்பை மக்களிடம் உருவாக்க முடியவில்லை என்பதால் கிறித்தவர்கள், தலித் மக்கள் மீதான வெறுப்பை கொம்பு சீவிவிடுகிறது. இதன் துவக்கம்தான் தஞ்சாவூர் கிறித்துவப் பள்ளி மாணவியின் தற்கொலை. இவை எல்லாம் எந்த வகையில் ஜனநாயகத்திற்கு எதிராக இல்லை என்பதை மோடிதான் விளக்கம் தர வேண்டும். இவையெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போலதான்.
வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானதுதான், அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வெறுப்பு அரசியல் – மதவெறி அரசியல் மூலம் வன்முறையை தூண்டிவிட்டு கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றை அன்றாடம் அரங்கேற்றும் ஆபத்தான பாசிச அரசியலை ஒப்பிடும்போது வாரிசு அரசியல் எவ்வளவோ பரவாயில்லை எனலாம்.
வாரிசு அரசியல் அதிகபட்சம் தனது வாரிசுகளை கொண்டு வரும். பாரம்பரிய குடும்ப அரசியலாகவும் மற்றும் அதன்மூலம் தனக்கும் தனது வாரிசுகளுக்கும் அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான சொத்துக்களை சேர்த்துக்கொள்ளும். ஆனால், பாசிச அரசியல் சித்தாந்த அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட அமைப்புகளையும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு நிறுவனமயமாக்கப்பட்ட பாசிச அமைப்புகள் அப்படி அல்ல. சமூகத்தின் ஒரு பகுதியை எதிரியாக சித்தரித்து அவர்கள் மீதான வன்முறையை செலுத்துவதை நியாயப்படுத்தி தன்னால் முயன்றவரை பாசிசத்தை ஏற்கவைக்கும்.
அந்த வகையில் பார்ப்பன பாசிச அமைப்பில் தனது எதிரிகளாக சித்தரிப்பவர்களை கொடூரமாக சித்தரவதை செய்து ஈவிரக்கமற்ற முறையில் உயிரோடு குழந்தைகளை எரிப்பது சிறுபான்மை மக்கள் குறிப்பாக கிறித்தவர்கள், முஸ்லீம்கள், தலித்துக்கள் மீதான வன்முறையை கட்டவிழ்த்து அவர்களின் வீடுகளை இடித்து தீக்கிரையாக்குவது, அவர்கள் வாழும் இடத்தைவிட்டு விரட்டியடிப்பது போன்ற கொடூரமான செயல்களை மேற்கொள்ளும் பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தும் அளவிற்கு கொடூரமானது அல்ல ஆபத்தானது அல்ல வாரிசு அரசியல்.
ஆபத்தான பார்ப்பன பாசிச அரசியல் அதிகாரத்துக்கு வருவதை தடுத்தாக வேண்டும். இதற்கு பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிராக அனைத்துப் பிரிவு அடித்தட்டு மக்களோடு இணைந்து இருப்பது மிக மிக அவசியம், கடமையும் கூட.
படிக்க :
♦ கார்ப்பரேட் ஊடகங்களே ! உங்கள் தொழிலாளர் விரோதப் பிரச்சாரத்தை நிறுத்துங்கள் !
♦ டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !
இதன்மூலம் காவி – கார்ப்பரேட்டு பாசிசத்தை அரசியல் அரங்கில் நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக, பஜ்ரங் தள், இந்து யுகவாகினி, சனாதன் சன்ஸ்த்தா போன்ற அமைப்புகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தவதோடு அவற்றை முறியடிக்க வேண்டும். வெறுமனே போலி ஜனநாயகத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறுவது போதாது.
பாசிச அரசியலை பெரும்பான்மை இந்து மக்களின் மத்தியில் விதைத்து அவற்றை அங்கீகரிக்கும் மனப்பான்மையை உருவாக்கி சிறுபான்மை மக்கள் ஜனநாயக சக்திகள், கம்யூனிச பற்றாளர்களுக்கு எதிரான விரோதபோக்கை வெறுப்பை உருவாக்கி நிலைப்படுத்துவதையே ஒரு இலக்காகக் கொண்டு செயல்படுகிறது பாசிசக் கும்பல்.
ஆகையால்தான் பாசிஸ்டுகளுக்கு எதிராக போராட்டத்தை கட்டமைக்க பகுத்தறிவாளர்களை ஜனநாயக சக்திகளை கம்யூனிச பற்றாளர்களை இலக்கு வைத்து தீர்த்துக்கட்டப்பட்டு வருகின்றனர்.
எனவே, வர்ணாசிரம முறையை அடிப்படையாக கொண்ட பார்ப்பன விரோத பண்புகளை விதைத்து வர்க்க முரண்பாடுகளை புதைக்கும் காவி – கார்ப்பரேட்டுகளின் பாசிசத்தையும் அதன் அதிகாரத்தையும் அகற்றுவதைப் பிரதான பணியாக மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.

கதிரவன்
மார்ச் 28, 29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் ! | பாகம் 2
பாசிச மோடி அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மார்ச் 28, 29, ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதில் தமிழகம் முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள், புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மார்ச் 28, 29 பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும், காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் சார்பாக, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சிவா மக்கள் அதிகாரம், வட்டார துணைச் செயலாளர் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.
தோழர் முருகன் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் பென்னாகரம் பொறுப்பாளர் அவர்களும், தோழர் கோவிந்தராஜ் சிபிஐ (ml )லிபெரேஷன். தர்மபுரி மாவட்ட செயலாளர் அவர்களும், தோழர். கருப்பண்ணன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பென்னாகரம் தொகுதி செயலாளர் அவர்களும் கண்டன உரையாற்றினர்.
மேலும் தோழர் கோபிநாத், மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டல செயலாளர் அவர்கள் கண்டன சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக தோழர் சுந்தர், 7 வது மைல் கிளை செயலாளர், மக்கள் அதிகாரம் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
தகவல்:
மக்கள் அதிகாரம்
தர்மபுரி மண்டலம்
9790138614
000
பாசிச மோடி அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மார்ச் 28, 29, ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது
திருவாரூரில் மார்ச் 28 அன்று AITUC, CITU, LPF, SKM, தொழிற்சங்கம் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
மார்ச் 29 அன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர், ஆஷா பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பெருந்திரளாக கலந்து கொண்டார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்குபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில், நான்கு தொழிலாளர் நலசட்ட தொகுப்புகளைக் வாபஸ்பெற வேண்டும், நாட்டின் சொத்துக்களான எல்ஐசி, வங்கி, பி.எஸ்.என்.எல், ரயில்வே, தபால்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி நகர்ப்புறங்களுக்கு பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்தி ஊதியத்தை ரூ.600-ஆக உயர்த்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்து, பி.எஃப் மூலம் குறைந்த பட்ச பென்சன் மாதம் ரூ.6000 வழங்கு அங்கன்வாடி மற்றும் இதர அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தையும், சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்திடு, பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்திடு!, விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்காதே! டெல்லி விவசாயிகளின் 13 மாத காலப் போராட்டத்தின்போது கோரிக்கைகளை ஏற்ற ஒன்றிய அரசே, MSP உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று! கொரோனா காலத்தில் பணிபுரிந்த முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.15,000 உரிய பாதுகாப்பு காப்பீடு வசதிகளும் வழங்கிட வேண்டும், மற்றும் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மருத்துவத்துறை, மற்ற துறைகளில் பணியாற்றும், தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் சிறு குறு நடுத்தர தொழில்களையும் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், பாசிச மோடி அரசை கண்டித்தும், சாலைமறியல் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.
திருவாரூர்-6374741279
000
மார்ச் 28, 29 இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, “காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வேரறுப்போம்!” என்கிற முழக்கத்தின் அடிப்படையில் 29.3.2022 அன்று காலை 10 மணியளவில் வேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தோழர் சுந்தர் (ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்) தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டக்குழு செயலாளர் தோழரும், மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினருமான தோழர் பரசுராமன் சிறப்புரை ஆற்றினார். பேரணாம்பட்டு பகுதியின் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி தோழர் கிருஷ்ணன், மக்கள் அதிகாரம் அமைப்பின் முன்னணி தோழர் திலகா ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான தொழிலாளர்கள், ஜனநாயக சக்திகள் கலந்து கொண்டனர்.
தகவல் : புதிய தொழிலாளி
000
திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் மார்ச் 29 நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கமான BPWU / NDLF சங்க தோழர்கள் பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் உத்திராபதி தலைமையில் திரளாக கலந்து கொண்டனர்.
000
மார்ச் 28, 29 வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக மார்ச் 29 அன்று மாலை 5 மணியளவில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பு.ஜ.தொ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களில் ஒருவரும், சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டக் குழுக்களது செயலாளருமான தோழர் ம.சரவணன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
மணலி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (FMTU) அமைப்பின் தலைவர் திரு.அன்பு ராஜாராமன், பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன், மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டனர். தொழிலாளர்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டதும், இளம் தொழிலாளர்கள் பெருமளவு கலந்து கொண்டதும் காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் வீச்சை உணர்த்துவதாக இருந்தது.
தகவல் : புதிய தொழிலாளி.
000
தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் ஒன்றிய மோடி அரசை கண்டித்து ! மார்ச் 28,29 நாடு தழுவிய பொது வேலை நிறுத்ததின் ஒரு பகுதியாக மார்ச் 29 அன்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தொடர் முழக்கங்கள் போடப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
000
30.3.22
பத்திரிகை செய்தி
மார்ச் 28, 29-ம் தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்றது.
தமிழகத்தில் பரவலாக சாலைமறியல், ஆர்ப்பாட்டம் என்ற வடிவங்களில் தொழிலாளர்கள் தங்களின் உரிமை பறிப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது இருபத்தி எட்டாம் தேதி சென்னை முழுவதும் ஒரு அரசு பேருந்து கூட ஓடவில்லை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் தமிழகம் தழுவிய அளவில் பல்வேறு இடங்களில் தனித்தும் பிற தொழிற்சங்கங்களுடன் இணைந்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றது.
இதில் எமது அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்களும் திரளாக கலந்துகொண்டு பாசிச மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டத்திருத்தங்களையும், பொதுத்துறையை விற்பதையும் விலை வாசி உயர்விற்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் என்பது தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைந்தது.
தோழமையுடன்,
வெற்றிவேல்செழியன்,
மாநில போராட்ட ஒருங்கிணைப்பு குழு,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்க்கள் கலை இலக்கியக் கழகம்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.
கார்ப்பரேட் ஊடகங்களே ! உங்கள் தொழிலாளர் விரோதப் பிரச்சாரத்தை நிறுத்துங்கள் !
பொதுத்துறைகளை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்ப்பது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்ப்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் 2 நாள் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தை நடத்தி வருகின்றன. போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே, விலைபோகும் பத்திரிகைகளும் ஊடங்களும் வழக்கம்போலவே தங்கள் தொழிலாளர் விரோதப் பிரச்சாரத்தை நடத்த ஆயத்தமாகிவிட்டன.
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களின் பேருந்து நிலையங்கள், சென்னை மாநகரின் முக்கிய பேருந்து நிலையங்கள், பணிமனைகள் – ஆகியவற்றிலிருந்து பேருந்துகள் கிடைக்காமல் மக்கள் ‘அவதிப்படும்’ ‘செய்தியை’ நேரலையாக வழங்கி வருகிறார்கள் செய்தியாளர்கள். மக்கள் ‘அவதிப்படவிருப்பதை’ முன்கூட்டியே அவதானித்து ‘பொறுப்புணர்வுடன்’ அதிகாலை 6 மணிக்கே அங்கே படையெடுத்துவிட்டனர் போலும்.
“70% பேருந்துகள் ஓடவில்லை”, “மக்கள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் அவலம்”, “இயல்புநிலை பாதிப்பு”, “பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்ல முடியாமல் அவதிப்படும் மாணவர்கள்”, “வேலைக்குச் செல்லமுடியாமல் வீட்டுக்கும் திரும்ப முடியாமல் அவதிப்படும் மக்கள்”, “2-3 மணி நேரத்துக்கும் மேல் காத்துக்கிடக்கும் அவலம்”, “கட்டணக் கொள்ளையடிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள்”, “கிடைக்கும் பேருந்துகளில் தொங்கிக் கொண்டும் கூரைகளில் ஏறியும் பயணம் செய்யும் அவலம்”, “ஓடும் பேருந்துகளையும் நிறுத்தி அடாவடி செய்யும் தொழிற்சங்கத்தினர்”, “வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்” – இப்படிப் பலவாறாக இடைவெளியின்றி தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது இவர்களின் தொழிலாளர் விரோதப் பிரச்சாரம். முதல்வன் திரைப்பட பாணியில் ஒளிபரப்படும் இந்த அவதூறு பிரச்சாரத்திற்கு மக்களில் பெரும்பகுதி பலியாகமல் இருப்பதும் இல்லை.
படிக்க :
♦ மார்ச் 28, 29 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம் ! | புஜதொமு
♦ மார்ச் 28, 29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !
ஆளும் வர்க்கங்களின் கோரச் சுரண்டாலால் மக்கள் பாதிக்கப்படும் எந்தப் பிரச்சனையிலும் ‘அவலம்’ ‘அபாயம்’ போன்ற கடுமையான பதங்களை மறந்தும் பயன்படுத்தாத இந்த ஊடகங்களோ, மக்களும் தொழிலாளர்களும் இத்தகைய வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்களில் ஈடுபடுபடும்போது மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுகின்றன.
4 மணி நேர அவகாசத்தில் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து இந்தியாவின் புலம்பெயர் தொழிலாளர்கள் குறுக்கும் நெடுக்குமாக பல்லாயிரம் மைல்களை நடந்தே கடந்தனர். சோறின்றி, தண்ணீரின்றி கிடைக்கும் லாரிகளிலும் கண்டெய்னர்களிலும் மூச்சுத் தினற பயணம் செய்தனர். அவ்வளவு ஏன், சென்னை உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களிலும் மின்சார இரயில், பேருந்து பயணம் என்பதே அன்றாட சாகசத்திற்கு ஒப்பானது. நெரிசலிலும், படியில் தொங்கிக் கொண்டும்தான் தங்கள் அன்றாட வாழ்வைக் கழித்து வருகிறார்கள் மக்கள். வடமாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஒருவர் கால்மேல் ஒருவர் நின்றுகொண்டும், கழிவறைகளிலும், மேற்கூரைகளிலும் பயணித்துக் கொண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவரும் அவலத்தை காணாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லாலாம்.
நாட்டின் பெரும்பாலான கிராமப் பகுதிகளுக்கு ஒழுங்கான சாலை வசதிகளோ, பேருந்து வசதிகளோ, ஏன் மின்சார வசதியோ கூடக் கிடையாது. அவசர மருத்துவத் தேவைக்கும் பிரசவத்திற்கும் கூட நகரத்தை நோக்கிச் செல்ல முடியாமல் அவர்கள் தினம் தினம் அவதியுற்று வருகின்றனர். அவ்வளவு ஏன், சென்னையின் மையப்பகுதியான தரமணிக்கு அருகிலுள்ள கல்லுக்குட்டை என்ற பகுதியைச் சென்று பாருங்கள், குண்டும் குழியுமாக ஒழுங்கான சாலை கூட இல்லாமல் ஆண்டுக்கணக்கில் மக்கள் அவதியுற்று வருகிறார்கள். பிரசவத்திற்குச் செல்லும் வழியிலேயே குழந்தை பிறந்துவிடும் அளவுக்கு கொடூரமான பகுதி அது.
இவற்றையெல்லாம் “அபாயம்” “கொடூரம்” “அவலம்” என்று ஒளிபரப்பாத ஊடகங்கள். இன்னும் சொல்லப்போனால் கொரோனா ஊரடங்கின்போது, பலநூறு கி.மீ தொலைவில் உள்ள தனது ஊருக்கு தன் தந்தையுடன் சைக்கிளில் சென்ற சேர்த்த சிறுமியின் “அவலத்தை” கூச்சமேயின்றி “சாதனையாக” ஒளிபரப்பின. இன்று கிடைக்கும் பேருந்துகளில் கூரையில் ஏறிப் பயணிப்பதை ஓடி ஓடிப் படம் பிடிக்கும் தொலைக்காட்சிகள், வடமாநிலங்களில் இவை அன்றாட நிகழ்வாக இருப்பதை மறந்தும் ஒளிபரப்பியதில்லை. மோடி அரசின் பணமதிப்பழிப்பால் தங்கள் சொந்தப் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் வீதிகளில் அலைந்து செத்த ‘அவலத்தையும்’ வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர்துறந்த விவசாயிகளின் ‘அவலத்தையும்’ இதில் பாதியளவுக்குக் கூட ஒளிபரப்பவில்லை.
மக்களின், தொழிலாளர்களின் நியாயமான வேலை நிறுத்தங்களின்போது ஏற்படும் பாதிப்புகளை ஒளிபரப்ப வரிந்துகட்டிக் கொண்டுவரும் விலைபோகும் ஊடகங்கள், அதில் கால்வாசியளவுக்குக் கூட மேற்கண்ட ‘அவலங்களை’ ஒளிபரப்பியதில்லை.
மேலும் மார்ச் 28 அன்று காலையிலிருந்து எல்லாத் தொலைக்காட்சிகளும் பேருந்து நிலையங்களில் நின்று மக்கள் ‘அவதிப்படுவதை’ படம்பிடிப்பதைத்தான் ஓடி ஓடிச் செய்கின்றன. மாறாக, போராடும் தொழிலாளர்களிடம் சென்று அவர்களின் கோரிக்கைகளையும் அதன் நியாயத்தன்மையையும் கேட்பதையோ, பேட்டியெடுப்பதையோ, ஒளிபரப்புவதையோ ஒப்புக்குச் செய்வதுடன் முடித்துக் கொண்டன.
மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகவும், உரிமைக்காவும் போராடுவதை பெரும்பாலான ஊடகங்கள் செய்தியாகக் வெளியே கொண்டுவருவது கூடக் கிடையாது. நாட்டை பாதிக்கும் அதிமுக்கியமான பிரச்சினைகள் பெரும்பாலானவற்றை தங்கள் ‘விவாதக் களத்தில்’ விவாதிப்பதும் கிடையாது. உதாரணமாக திருவண்ணாமலை பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் அமையவுள்ளதை எதிர்த்து 100 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருவதை இந்த விலைபோகும் ஊடகங்கள் செய்தியாகக் கூட வெளியே கொண்டுவரவில்லை.
ஓடும் பேருந்துகளை நிறுத்தச் சொல்லி தொழிற்சங்கத்தினர் அடாவடியில் ஈடுபடுவதாக சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் பெயர்களைக் கூறி இழிவுபடுத்துகின்ற இந்த ஊடகங்கள், கார்ப்பரேட்டுகள், அதிகார வர்க்கம் தவறு செய்யும் போதெல்லாம் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் “ஒரு தனியார் நிறுவனம்” “பிரபல தனியார் நிறுவனம்” என்றும் “அதிகாரி” என்றும் குறிப்பிட்டே செய்திகளை வெளியிட்டு அவர்களைக் காப்பாற்றுகின்றன. உதாரணமாக, பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸை பெயர் குறிப்பிடாமலேயே பல பத்திரிகைகள் எழுதின. திருவண்ணாமலையில் வன்னிய சாதி வெறியர்கள் அருந்ததியர் குடியிருப்புகளைச் சூறையாடியபோது அதை, “இருபிரிவினரிடையே மோதல்” என்று அயோக்கியத்தனமாக செய்தியை வெளியிட்டு சாதி வெறியர்களுக்குச் சேவை செய்தன. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
வேளாண் சட்டங்கள் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து துக்ளக் இதழில் வெளியான கேலிச்சித்திரம் நம்மிடையே ஆத்திரத்தை கிளப்பிவிட்டது. ஆனால், இதுபோல தொடர்கதையாகிவரும் விலைபோகும் ஊடகங்கள், பத்திரிகைகளின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதப் பிரச்சாரங்கள் இயல்பாக சமூகத்தில் பொதுக்கருத்தை உருவாக்கி வருகின்றன. போக்குவரத்து ஊழியர்கள், ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் போன்றோர் தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்குப் போராடும்போதும் இவ்விலைபோகும் ஊடகங்கள் இதையே செய்தன.
படிக்க :
♦ இரயில்வே பணிக்காக தேர்வெழுதிய மாணவர்கள், போராட்டம்! தீவிரமடையும் வேலையில்லாத் திண்டாட்டம்!!
♦ வேலையில்லா திண்டாட்டம் : 15 பணியிடங்களுக்கு 11000 பேர் விண்ணப்பம் !
நாட்டில் பெரும்பாலான சிறுவர்கள் கல்வி கற்க வாய்ப்பற்று குழந்தைத் தொழிலாளிகளாக வேலைக்குச் செல்வதை ஒளிபரப்பத் துப்பில்லாத இந்த ஊடகங்கள், ஜாக்டோ – ஜியோ ஆசிரியர் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி ஒரே அடியாக ஒழிந்துவிட்டத்தைப் போன்று கூச்சலிட்டதை நாம் மறந்திருக்க மாட்டோம். “ஆசிரியர்கள் பல பத்தாயிரங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு இன்னும் கேட்கிறார்கள் பாருங்கள்” என்ற பொய்யான கருத்தை வெற்றிகரமாக மக்களின் மனங்களில் விதைத்து, அரசுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் சேவை செய்து அவர்களின் பாதத்தைக் கழுவிக் குடித்தன.
அவர்களுக்கு நாம் சொல்ல விரும்பவது இதைத்தான். விலைபோகும் ஊடகங்களே! உங்களின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதப் பிரச்சாரத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஊடகவியலாளர்களே! பத்திரிகையாளர்களே! மக்களின், தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்களுக்கு உறுதுணையாக நில்லுங்கள். பணத்திற்காகவும், டி.ஆர்.பி.க்காவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் உங்களின் ஊடக முதலாளிகள் இடும் உத்திரவுகளை எதிர்த்து நில்லுங்கள்.
அவர்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துதான்.
தீரன்
டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !
பா.ஜ.க. என்றாலே நம் நினைவுக்கு வருவது அவர்களின் பொய்களும் புரட்டுகளும், அந்த பொய்-புரட்டுகளை வைத்து அவர்கள் நடத்தும் கலவரங்களும்தான். இவைகளையெல்லாம் நடத்துவதற்கு தோதாக அவர்கள் மிகப்பெரிய தொழில்நுட்ப அணியையே வைத்துள்ளார்கள்.
பா.ஜ.க.வுடைய பொய் பிரச்சாரங்களை நாம் எளிதாக எண்ணிவிட முடியாது. 2013-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் நடந்த கலவரத்தின்போது, ஒரு போலியான வீடியோ பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ. சங்கீத் சிங் என்பவரால் பரப்பப்பட்டது. ஆனால் அந்த வீடியோ இரண்டு ஆண்டுகள் பழையது என பின்னர் விசாரணையில் தெரியவந்தது.
ஆனால், அதற்குள் அந்த நச்சுப் பிரச்சாரத்தால் தூண்டப்பட்டு நடைபெற்ற கலவரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்தார்கள்.
வடமாநிலங்களில் பசுவைக் கடத்துகிறார்கள், மாட்டுக்கறி வைத்துள்ளார்கள் என்று முஸ்லீம்களும் தலித் மக்களும் கும்பல் படுகொலை செய்யப்படுவதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பராமரிக்கக் கூடிய வாட்சப் வலைப்பின்னல்கள் முக்கிய துணை செய்கிறது. அதன்வழியாக குறுகிய காலத்திலேயே ஆயிரக்கணக்கான மக்களிடம் பரப்பப்படும் போலி செய்திகள் இந்துமதவெறியூட்டுவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
படிக்க :
♦ டெக்ஃபாக் : சங்க பரிவாரம் நடத்தும் கலவரங்களின் தொழில்நுட்ப ஊற்றுக்கண் !
♦ Tekfog: பாசிச கருத்தாக்கத்தின் முதுகெலும்பு | பாகம் 1
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மற்றும் மோடி அரசை விமர்சிப்பவர்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து தாக்கி துன்புறுத்துவதும் அத்தொழில்நுட்ப அணியின் முக்கியமான பணியாக உள்ளது. பா.ஜ.க.வின் இந்த பின்னணி குறித்து பலரும் ஆய்வு செய்து கட்டுரைகள், நூல்களை வெளியிட்டுள்ளனர். பா.ஜ.க.வின் இணைய துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட சுவாதி சதுர்வேதி என்ற பத்திரிகையாளர், பா.ஜ.க இவற்றை எப்படி செய்யமுடிகிறது என இரண்டு ஆண்டுகள் கள ஆய்வு செய்து “நான் ஒரு ட்ரால் – பா.ஜ.க டிஜிட்டல் ராணுவத்தின் இரகசிய உலகத்திற்குள்ளே” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார்.
இவ்வாறு பல்வேறு கட்சிகளும் தொழில்நுட்ப அணியை வைத்திருந்தாலும் அக்கட்சிகளுடையதை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் இணையப் படையோடு ஒப்பிட முடியாது. முதலாவதாக, டிஜிட்டல் உலகின் புதுப்புது தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதில் மிகவும் முன்னேறியது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க இரண்டாவது வெறும், கவர்ச்சிவாத பிரச்சாரங்களைச் செய்வதற்காக மட்டும் அவர்கள் இதைப் பயன்படுத்தவில்லை. தங்கள் காவி பாசிச பயங்கரவாத செயல்பாடுகளை மேற்கொள்வதற்கும் இந்த முன்னேறிய தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றது.
அவ்வாறான முன்னேறிய தொழில்நுட்ப செயலி ஒன்றுதான் டெக் ஃபாக். காவி பாசிஸ்டுகளுடைய ஊடகப் பிரச்சாரத்தில் முக்கியமான பங்குவகிக்ககூடிய இது ஒரு இரகசிய செயலி ஆகும். தற்போது வயர் இணையதளம் இதைப் பற்றி புலனாய்வு செய்து ஆய்வுக் கட்டுரை வெளியிட்ட பிறகுதான் பொதுவெளியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாசிஸ்டுகளின் கைகளில் சமூக ஊடகங்கள்
மக்களிடையே கருத்துருவாக்கம் செய்ய அவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகளில் முக்கியமானது டெக் ஃபாக் செயலியை கொண்டு டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கின் டிரெண்டிங் பகுதியை கட்டுப்படுத்துவது. பா.ஜ.க.விற்கு ஆதரவான கருத்துகளை டிரெண்ட் செய்வது; பா.ஜ.க.விற்கு எதிராக ஏதாவது பிரச்சினை எழும்போது, அதை மக்களிடம் இருந்து திசை திருப்புவதற்காக வேறொன்றை டிரெண்ட் செய்வது; பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகளை துன்புறுத்த அவர்களை இழிவாக சித்தரித்து டிரெண்ட் செய்வது என பல வகைகளில் டிரெண்டிங் பகுதியை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பயன்படுத்திக் கொள்கிறது.

டெக் ஃபாக் செயலி தானியங்கு முறையில் வேலைசெய்யக் கூடியதாக உள்ளது. அதாவது இதன் மூலம் தனிநபர்கள் அல்லது குழுக்களின் டுவிட்டுகளை தானாகவே மறுபதிவிட மற்றும் பகிரச் (re-tweet and auto-sharing) செய்ய முடியும். இவற்றை தானியங்குப்படுத்த டாஸ்கர் (Tasker) போன்ற ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்துகிறார்கள். இந்த டாஸ்கர் என்பது தொலைபேசியில் உள்ள பயன்பாடுகளை தானியங்கு படுத்த உதவுகின்ற ஒரு செயலியாகும்.
எனவே, ஒரு டெக் ஃபாக் செயலியை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளைக்கூட தனி ஒரு நபரால் கட்டுப்படுத்த முடியும். இதனால் அவர்கள் உருவாக்கும் இடுக்கைகளை (post) டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கின் டிரெண்டிங் பகுதியை மிக எளிதாக அடைய வைக்க முடியும்.
2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானின் கொட மாவட்டத்தில் கட்சியின் தொழில்நுட்ப அணியிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உண்மையோ அல்லது பொய்யான ஒன்றோ அதை வைரலாக மாற்றக்கூடிய சக்தி நம்மிடம் உள்ளது” என பேசினார். அத்தகைய சக்தியை டெக் ஃபாக் போன்ற செயலிகளே வழங்குகின்றன.
பொதுவில் ஒரு செய்தியை டிரெண்டிங் செய்வது என்று மட்டுமில்லாமல், டெக் ஃபாக் செயலியைப் பயன்படுத்தி ஒருவருக்கு தனிப்பட்ட முறையிலும் பொய்ச் செய்திகளைப் பரப்ப முடியும். மேலும் ஒருநபரின் தனிப்பட்ட தரவுகளை திருடவும் முடியும்.
குறிப்பிட்ட நபர்களை இலக்குவைத்து வாட்சப்பில் ஒரு படம் அல்லது வீடியோவை அனுப்புகிறார்கள். அந்த நபர் அப்படம் அல்லது வீடியோவை தரவிறக்கம் செய்தவுடன் அவரின் அலைபேசியில் ஒரு உளவு மென்பொருள் (spyware) நுழைந்து அவரின் வாட்சப் கணக்கை டெக் ஃபாக் செயலியுடன் இணைத்து விடும். அதன்பின், அவரின் தொலைபேசியில் இருக்கும் தொடர்பு பட்டியல் மற்றும் தனிப்பட்ட விவரங்களும் டெக் ஃபாக் செயலியால் திரட்டப்பட்டுவிடும்.
தொடர்ந்து அந்நபரை கண்கானித்துக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை அந்த நபர் தனது அலைபேசியிலிருந்து வாட்சப் செயலியை அழித்துவிட்டாலோ (Uninstall) அல்லது அலைபேசியை மீட்டமைத்தாலோ (ரீசெட் – Reset) அதனை அறிந்துகொண்டு அவரின் செயலற்று போயிருக்கும் வாட்சப் கணக்கை கையகப்படுத்தி, அவரது தொடர்பு பட்டியலில் இருக்கும் அனைவருக்கும் தங்களது பொய் பிரச்சார செய்திகளை அனுப்ப முடியும்.
இந்த செய்திகளை பெறுபவர்கள் தனக்கு நெருங்கிய நபர்தான் பகிர்கிறார் என நம்பத் தொடங்குவார். ஆனால் இதைப் பற்றி அக்கணக்கின் உரிமையாளருக்கு ஒன்றுமே தெரியாது. ஒருவேளை அதன் உரிமையாளருக்கு இதைப் பற்றி எதாவது சந்தேகம் எழுந்து ஆராயத் தொடங்கினால் ஒரு நொடியில் எல்லா தரவுகளும் அழிந்துவிடும் வகையில் வடிவமைத்துள்ளார்கள்.
மற்ற சமூக ஊடகங்களை போலல்லாமல் வாட்சப்-பை மக்கள் பார்ப்பதில்லை. வாட்சப்-இல் நமக்கு தெரிந்தவர்களிடம் இருந்து மட்டுமே நாம் செய்திகளை பெறுகிறோம் என்பதால் எந்த சந்தேகமுமின்றி மக்கள் நம்புகிறார்கள். மேலும் வாட்சப் நிறுவனம் கொடுப்பதாக சொல்லப்படும் தகவல் பாதுகாப்பு உறுதிப்படும் அதை நம்பி பயன்படுத்துவதற்கு காரணம். இதையெல்லாம் இச்செயலியின் பயன்பாடு பற்றி வெளிவந்துள்ள தகவல்கள் கேள்விக் குறியாக்கிவிட்டது.
கருத்துருவாக்கம் செய்வதற்கு டெக் ஃபாக் செயலி பல்வேறுவிதமான முறைகளை வைத்துள்ளது. செய்திக் கட்டுரைகளில் இருக்கும் முக்கியமான சொற்களை மாற்றுவதன் மூலம் கட்டுரையை திரித்து, அதன் இணைப்பை சமூக ஊடகங்களில் பரப்புவது என்பது அதில் ஒரு முறை. சான்றாக, பா.ஜ.க.வை விமர்சிக்கும் ஒரு கட்டுரையை எடுத்துக் கொண்டு, அதில் பா.ஜ.க. என்ற சொல்லை காங்கிரஸ் என்று திரித்து பரப்புவது. இதுபற்றி வாசகர்களுக்கு எந்த சந்தேகமும் வராத வகையில் இக்கட்டுரையின் பக்கம் அது இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் வலைதளத்தைப் போலேவே அச்சு அசலாக இருக்கும்.
செய்திகள் மற்றும் தகவல்களின் வழியாகத்தான் மக்கள் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மட்டுமல்லாது தகவல்களை அறிந்துகொள்வதில் சமூக ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் வகிக்கின்றனர். அந்த சமூக ஊடகங்களை பாசிச சக்திகள் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு மக்களிடையே எது பிரபலமாக இருக்க வேண்டும், மக்கள் எதைப் பற்றி பேச வேண்டும், அவர்களது விருப்பு-வெறுப்புகள் எப்படி அமைய வேண்டும் என அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். இது உண்மையில் நம்மை அச்சுறுத்தக் கூடிய விசயமாகும்.
நிழல் உலக பாசிச குண்டர்களால் ஏவப்படும் வன்முறை!
இந்த டெக் ஃபாக் செயலியுடன் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தரவு தளத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். இந்த தரவுத்தளத்தில் அவர்களால் கண்காணிப்புக்குள்ளாக்கப்படும் நபர்களின் தொழில், வயது, மொழி, மதம், பாலினம், அரசியல் விருப்பம், உடல் பண்புகள் உட்பட அனைத்துவகை அந்தரங்க விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளார்கள்.
அவர்கள் துன்புறுத்த இலக்காக வைக்கும் நபர்களின் தனிப்பட்ட விவரங்களை இந்த தரவுத்தளத்தைப் பயன்படுத்தி முதலில் தெரிந்து கொள்வார்கள். பின் டெக் ஃபாக் செயலியால் நிர்வகிக்கப்படும் பல்வேறு கணக்குகளிலுருந்து தொடர்ந்து அவர்களுக்கு ஆபாசமாக, இழிவுபடுத்தும் நோக்கில் செய்திகளை அனுப்பி சித்திரவதைக்கு உள்ளாக்குவார்கள். இந்த அளவிற்கு கொடூரமாக இருக்கும் என்றால், காவி பாசிஸ்டுகளால் குறிவைக்கப்படுவது ஒரு பெண் பத்திரிகையாளர் எனில், அவரின் மார்பக அளவைப் பற்றிக் கூட துல்லியமாக அறிந்துகொண்டு ஆபாசமாக செய்திகள் அனுப்பி துன்புறுத்துகிறார்கள்.
பா.ஜ.க.வின் இந்துராஷ்டிர கனவிற்கு எதிராக உள்ள அனைவரையும் இலக்கு வைத்து தாக்க இந்த தரவுத்தளம் அவர்களுக்கு பயன்படுகிறது. இதுவரை இந்த டெக் ஃபாக் செயலியின் மூலம் பெரும்பாலான முஸ்லீம்கள் மற்றும் பெண் பத்திரிக்கையாளர்கள் இணைய வழியில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
2021-ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தொடங்கி மே மாதம் இறுதிவரையான ஐந்து மாத காலகட்டத்தில் மட்டும் 280 பிரபலமான பெண் பத்திரைக்கையளர்களின் டுவிட்டுகளுக்கு வந்த 46 இலட்சம் பதில்களை ஆராய்ந்ததில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான பதில்கள் டெக் ஃபாக் செயலியால் நிர்வகிக்கப்படும் கணக்குகளில் இருந்து வந்தவை மற்றும் அதில் 67 சதவிகித பதில்கள் அவர்களை ஆபாசமாகவும் இழிவாகவும் சித்தரிக்கும் நோக்கில் வந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த காஷ்மீரைச் சேர்ந்த மாணவியான ஷேஹ்லா ரஷீத் ஷோரவை இந்த டெக் ஃபாக் செயலியின் மூலமாக சித்திரவதைப் படுத்தியுள்ளது காவி கும்பல். அவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார்கள், பல்வேறு கணக்குகளைப் பயன்படுத்தி நாள்தோறும் அவருக்கெதிராக இழிவான கருத்துகளைப் பதிவிட்டு வந்தார்கள். இறுதியில் அந்த மாணவி 2018-இல் டுவிட்டரிலிருந்தே வெளியேறிவிட்டார்.
அடுத்து 2020-ம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று, வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் இந்த டெக் ஃபாக் செயலியின் பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்க தொடங்கின. டெல்லியில் சி.ஏ.ஏ.விற்கு எதிராக போராடிய முஸ்லீம் மக்கள்மீது காவி கும்பலால் வன்முறை ஏவி விடப்பட்டது. இதில் மொத்தம் 53 பேர் கொல்லப்பட்டு, 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். முஸ்லீம்களின் வீடுகள், உடைமைகள் சூறையாடப்பட்டன. இந்த கலவரம் நடந்த அன்று இந்த போராட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில் பா.ஜ.க.வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா என்பவன் “போராடுபவர்களை தெருக்களில் இருந்து மூன்று நாள்களில் போலீஸ் சுத்தம் செய்யாவிட்டால் நாங்கள் அதைச் செய்வோம்” என பகிரங்கமாக கலவரத்திற்கு அறைகூவல் விடுத்தான். இது டெக் ஃபாக் கணக்குகள் மூலமாக பெருமளவில் பரப்பப்பட்டுள்ளது. எனவே டெல்லி கலவரத்திற்கு இதுவும் முக்கிய காரணமாக அமைகிறது.
இதேபோல, 2020-ல் நடந்த தப்லீகிக் ஜமாத் மாநாட்டை மையமாக வைத்து முஸ்லீம்கள் ‘கொரோனா ஜிகாத்’ நடத்துகிறார்கள். எச்சில்கள் மூலமாக கொரோனாவை பரப்புகிறார்கள் என கேவலமானதொரு பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது சங்கப் பரிவாரக் கும்பல்கள். #தப்லீக் ஜமாத் ஜிஹாத், #தப்லீக் ஜமாத் வைரஸ் போன்ற ஹாஷ்டாக்குகளை 1 இலட்சத்து 56 ஆயிரத்துக்கும் அதிகமான டுவிட்டுகளாக டெக் ஃபாக் செயலியை வைத்து பெருக்கியுள்ளார்கள். இந்த நச்சுப் பிரச்சாரம் இணையத்தில் சுமார் எட்டு கோடி பேரைச் சென்றடைந்துள்ளது. அப்போது நாடுமுழுவதும் முஸ்லீம்கள்மீது காவி கும்பல்கள் நடத்திய தாக்குலுக்கு கருத்தியல் ஆதரவாக இது அமைந்தது.
காவிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையிலான கூட்டு
டெக் ஃபாக் செயலி போன்ற உயரிய தொழில்நுட்பத்தை உருவாக்க பிரசிடெண்ட் சிஸ்டம் மற்றும் மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் என இரு கார்ப்பரேட் தொழிநுட்ப நிறுவனங்கள் உடந்தையாக இருந்துள்ளன.

இதில் மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் என்பது சமூக ஊடகங்களுள் ஒன்றான ஷேர்சாட்டை உருவாக்கிய நிறுவனம் ஆகும். மேலும் இந்தியாவின் 24 பிராந்திய மொழிகளில் செயல்படக்கூடிய ஷேர்சாட் செயலிக்கு டுவிட்டரால் நிதியளிக்கப்படுகிறது. இது 16 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது. டுவிட்டர், பேஸ்புக், வாட்சப் போன்ற மற்ற சமூக ஊடகங்களில் வெறுப்பு பிரச்சாரங்கள், பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்கு முன்னால் ஷேர்சாட்தான் இவர்களுக்கு சோதித்து பார்க்கும் களமாக உள்ளது.
அடுத்து, பிரசிடெண்ட் சிஸ்டம் என்பது 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய-அமெரிக்க பொது தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். இது நாக்பூரில் உள்ள கார்ப்பரேட் நிறுவனத்தை மையமாக வைத்துக் கொண்டு டெக் ஃபாக் செயலியை இயக்குபவர்களை ‘சமூக ஊடகப் பொறுப்பாளர்கள்’ என்ற பெயரில் பணியமர்த்தி, ஊதியமும் வழங்குகிறது. இதற்கு மேற்பார்வையாளராக பா.ஜ.க.வின் தற்போதைய மகாராஷ்டிர தேர்தல் மேலாளர் தேவங் டேவ் இருக்கிறார்.
இந்த நிறுவனம் 2015 முதல் அரசாங்க ஒப்பந்தங்களில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. 2018-ல் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பத்து மாநிலங்களில் இருக்கும் மக்களின் சுகாதார தகவல்களை சேகரித்து, சேமித்து வைக்கும் ஒரு டிஜிட்டல் தரவுத்தளத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தை இந்த நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது. அதாவது ஒரு நிழல் உலக இணையப் படைக்கு அரசின் மூலம் அதிகாரப்பூர்வமாகவே நமது விவரங்கள் சென்றுசேர்கின்றன.
சமூக ஊடக ஜனநாயகம் எனும் மாயை
இந்த டெக் ஃபாக் செயலி இல்லாமல், சட்டப் பூர்வமாகவே சமூக ஊடகங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பல்வேறு சட்டங்களை கொண்டுவந்துள்ளது மோடி அரசு. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி, “சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் 2021” என்ற பெயரில் ஒரு விதியைக் கொண்டுவந்துள்ளது.
இதன்படி, சமூக ஊடகங்களில் சட்ட விரோத, தேச விரோத கருத்துகளை முதலில் பதிவிடும் நபரை கண்டுபிடிக்க முடியுமாம். அவர்களுக்கும் அந்த உள்ளடக்கத்தை பகிரும் நபர்களுக்கும் ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் வகையில் இவ்விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விதிமுறைகள் செய்தி வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களையும் கட்டுப்படுத்துகிறது.
அதேபோல, 2020-ம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படுகின்ற தேசிய இணையவழி குற்றங்கள் புகாரளிக்கும் இணைய முகவரியின் சார்பாக, “இணையத் தன்னார்வலர்கள் திட்டம்” (Cyber Volunteers Program) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமூக அக்கறையுள்ளவர்கள் யாரும் தன்னை இந்த திட்டத்தின்கீழ் தன்னார்வலர்களாக பதிவுசெய்துகொண்டு, சமூக ஊடகங்களில் தேச விரோத, சட்ட விரோத கருத்துக்களை பதிவிடுவோரை அரசுக்கு அடையாளம் காட்டலாம் என்று அறிவித்துள்ளார்கள்.
இணைய வழியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச செய்திகளை பரப்புவோர்களை கண்டுபிடித்து தண்டிப்பதற்கு இதுபோன்ற ஒழுங்குமுறை விதிகளும் திட்டங்களும் பயன்படும் என்று மோடி அரசு தெரிவிக்கிறது. ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவதை நம்மால் எப்படி நம்ப முடியாதோ அதைப் போன்றதுதான் இந்த பிரச்சாரங்கள்.
காவிகளின் ஆட்சியில், “சட்ட விரோத – தேச விரோத” என்றால் தங்களுக்கு விரோதமானது என்று பொருள் என்பது ஊரறிந்த உண்மை. எனவே இதுபோன்ற சட்டங்கள் எதற்கு பயன்படப்போகிறது என்பதை நாம் சொல்லாமல் புரிந்துகொள்ளலாம். என்.ஐ.ஏ, ஊஃபா, தேசப் பாதுகாப்புச் சட்டம் போன்றவைகளெல்லாம் எந்த ‘தேச விரோத’-‘சட்ட விரோத’ சக்திகளை ஒழித்துக் கட்டிவருகிறதோ, அதைப் போன்ற வேலைகளை இணையவழிகளில் மேற்கொள்வதற்குத்தான் இந்த சட்டங்கள்.
000
டெக் ஃபாக் என்ற ஒரு இரகசிய செயலியை வைத்துக் கொண்டு, சமூக ஊடகங்கள் வாயிலாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வினர் விரிந்த அளவில் மதவெறி பிரச்சாரங்களை மக்களிடம் கொண்டுசென்று கருத்துருவாக்குகின்றனர். கலவரங்களை மேற்கொள்கின்றனர்.
தங்களுடைய சித்தாந்தத்தை, பயங்கரவாத நோக்கத்தை மக்களிடம் அம்பலப்படுத்திவரும் ஜனநாயக சக்திகளை இணையச் சித்திரவதை செய்து, அவர்களை சமூக ஊடகத்தைவிட்டே ஓடவைக்கவும் இச்செயலியைப் பயன்படுத்துகிறார்கள்.
படிக்க :
♦ குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்
♦ புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
மற்றொருபுறம், புதுப் புதுச் சட்டங்களையும் விதிமுறைகளையும் கொண்டுவந்து மோடி அரசு மக்களுடைய கருத்துரிமையை பறித்துவருகிறது. தங்களுக்கு எதிராக கருத்து பதிவிடுபவர்களை சட்ட ரீதியாகவே ஒடுக்கும் ஏற்பாட்டைச் செய்துவருகிறது. திரிபுராவில், அண்மையில் முசுலீம்களுக்கு எதிராக காவி கும்பல்கள் நிகழ்த்திய வன்முறையைக் கண்டித்து டுவிட்டரில் பதிவிட்டர்கள் அனைவர் மீதும் ஊபா கொடுஞ்சட்டம் பாய்ச்சப்பட்டது அதற்கு சிறந்த சான்று.
இவையெல்லாம் புதியதொரு போக்கை அறிவிக்கின்றன. யார் வேண்டுமானால் தங்களுடைய கருத்தை சுதந்திரமாக சமூக ஊடகங்களில் வெளிப்படுத்த முடியும் என்ற நிலை புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கருத்துரிமையை, விரிந்த அளவில் மக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான கருவியாக சமூக ஊடகங்கள் பயன்பட்டது. அந்த காலம் முடிவடைந்துகொண்டிருக்கிறது.
ஆனால், இதே சமூக ஊடகங்கள் மக்கள் விரோதிகளான பாசிஸ்டுகளுக்கு பயன்படுகிறது. மிகுந்த செல்வாக்கோடு தங்கள் சித்தாந்தத்தை விரிவான மக்களிடம் அவர்களால் கொண்டு செல்ல முடிகிறது.
ஒட்டுமொத்த டிஜிட்டல் உலகும் பாசிஸ்டுகளின் கைப்பாவையாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை நேசிப்பதாகவும் சர்வாதிகாரத்தை எதிர்ப்பதாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய அனைவரும், இனி சமூக ஊடகங்களில் பதிவு போடுவதன் மூலம் மட்டுமே தங்கள் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்க முடியாது. காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்காக மாபெரும் மக்கள்திரள் எழுச்சி ஒன்றிற்கு தயாராக வேண்டியிருக்கிறது. களத்தில் பாசிசத்தை வீழ்த்தாமல் இனி டுவிட்டரில் பதிவு போடும் ஜனநாயகத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது.

மதி
நூல் அறிமுகம் : ஒரு கம்யூனிஸ்ட் கிராமத்தின் கதை | பொதும்பு வீரணன்
பொதும்பு என்பது மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் ஊர். தோழர் பொதும்பு வீரணன் இந்நூலின் நாயகன். இவர் மூலமே மொத்த சம்பவமும் நகர்கிறது. அவர் எழுதிக் கொடுத்த குறிப்புகள்தான் இந்நூலின் இரத்த நாளங்கள்.
தாழ்த்தப்பட்ட குறவர் சாதியைச் சேர்ந்த தோழர் பொதும்பு வீரணன் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். 64 பக்கங்கள் கொண்ட இச்சிறுநூலில் 33 பக்கங்களே இவரது குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் சாதிய இழிவுகளையும் அதிகார வர்க்கம், போலீசின் அடக்குமுறைகளையும், கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் உறுதியான போராட்டங்களையும் உள்ளது உள்ளபடி மிகவும் எளிய நடையில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். பள்ளியில் படிக்கும்போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூறுகிறார்.
அன்றைய சூழலில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை ஊர்ச் செல்வந்தர்களின் வீட்டு வேலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதாவது பணக்காரர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக ஒடுக்கப்பட்ட மாணவர்களை ஆசிரியர்களே அனுப்பி வைப்பார்களாம். அப்படி ஒருநாள் வீரணனை அவ்வூரின் பெரும் பணக்காரரான நாகு சேர்வைக்குச் சொந்தமான கோயிலின் கட்டிட வேலைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
படிக்க :
♦ நூல் அறிமுகம் : நேமிசந்த்ரா எழுதிய “யாத் வஷேம்” | தமிழ் இலக்கியா
♦ நூல் அறிமுகம் : மதரிங் எ முஸ்லிம் || MOTHERING A MUSLIM – NAZIA ERUM || இ.பா. சிந்தன்
எப்போதெல்லாம் கூப்பிடுகிறார்களோ, அப்போதெல்லாம் பள்ளியைவிட்டு சித்தாள் வேலைக்குச் செல்ல வேண்டும். கோயிலைக் கட்டி முடித்த பிறகு, கும்பாபிசேகம் அன்று வாழை இலை சோறுபோட்டு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தனது வயதான தாயை அழைத்துக் கொண்டு எல்லோரையும்போல வீரணனும் இலையைப் பெற்றுக் கொண்டு சாப்பிடச் சென்றிருக்கிறார். இதைப் பார்த்த நாகு சேர்வை, கொதித்தெழுந்து, “ஏண்டா உனக்கெல்லாம் இலைசோறு கேட்குதா, சட்டிமுட்டி கெடக்கலையா?” என்று சாதிவெறியைக் கக்குகிறார். பிறகு, வேறுவழிதெறியாமல் அவரது தாய் தனது முந்தானையில் சாப்பாட்டை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து சாப்பிட்டிருக்கிறார்கள்.
சாதிவெறி நிலச்சுவான்தார்களிடம் மட்டுமா இருந்தது; விடுதலைக்காகப் போராடிய அன்றைய காங்கிரசு கட்சிக்காரர்களிடமும் இருந்ததை எள்ளி நகையாடுகிறார் தோழர் வீரணன்.
1943-க்கு முன்பு, நாடே சுதந்திர வேட்கையில் பற்றி எரிந்தபோது, இந்தியாவின் பல்வேறு கிராமங்கள் வரை அந்தத் தீ பரவிக் கொண்டிருந்தது. அதில் பொதும்புக் கிராமம் விதிவிலக்கல்ல.
அந்தக் கிராமத்தில் இருசசேர் பரமசிவம் சேர்வை என்பவர் காங்கிரஸ் கட்சி நடத்தும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மறியல்களில் கலந்துகொள்வார். ஊருக்கு வந்தவுடன் வாசக சாலையில் அமர்ந்து, இன்று என்ன நடந்தது என்று ஆர்வத்துடன் பத்திரிகைச் செய்திகளைப் படித்துக் காட்டுவார். அந்த சமயம் பணம் படைத்தோரும் உயர்சாதிக்காரர்களும் வீட்டிற்குள் அமர்ந்திருக்க, தாழ்த்தப்பட்டோர் வெளியில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தச் சம்பவத்தை நினைவுகூறும் தோழர் வீரணன்,
“… உள்ளே இருப்பவர்கள் (வாசக சாலைக்குள்) வெற்றிலை, பொடி போட்டு மூக்கு சிந்தினால் எங்கள் மேல் விழும். நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. யாரும் நிறுத்தச் சொல்லவும் மாட்டார்கள்.
… …. மறியலுக்கு போவோர்களுக்கு மதுரை கொன்னவாயன் சாலையில் இருந்த செட்டியார் தகர செட்டில் எங்கள் எல்லோருக்கும் சேர்த்து சாப்பாடு நடக்கும். ஆனால், வரிசையில் நாங்கள் மூன்று பேரும் (தாழ்த்தப்பட்டோர்) உட்கார்ந்து சாப்பிடக் கூடாது. தீட்டுப்பட்டுவிடும்.” என்பார்.
வீரணன் எழுத்தில் சிதறும் வெறுப்பும் கோபமும், நாட்டுச் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களிடம் கூட ஒடுக்கப்பட்ட மக்களை சக மனிதர்களாகப் பார்க்கும் ஜனநாயகப் பண்பற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்கிற சமூக எதார்த்தத்தை அறைந்து சொல்கிறது.
உள்ளூர் அளவில் நிலச்சுவான்தார்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். கூலி விவசாயிகளுக்கு மொட்டை மரக்காலில் நெல் அளந்து கொடுப்பதை கண்டித்து, நியாயமான கூலியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பெரும் பணக்காரர்களிடமிருந்து நிலத்தை பறிமுதல்செய்து நிலமற்ற கூலி, ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு போராட்டத்திலும் வீரணன் போன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் நெஞ்சுறுதி அளப்பறியது.
நிலச்சுவான்தார்களுக்கு எதிராக, பண்ணையார்களுக்கு எதிராக, பெரும் முதலாளிகளுக்கு எதிராகப் போராடினால் ‘நம்ம அரசாங்கமே’ என்றாலும் சும்மா விட்டுவிடுமா என்ன?
1948 நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆண்டு கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டுவிட்டது. நிலச்சுவான்தார்களின் கொடுமைகளுக்கு எதிராக யார்யாரெல்லாம் போராடினார்களோ அவர்களெல்லாம் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். குறிப்பாக கம்யூனிஸ்டுகளை தேடிக் கண்டுபிடித்து, கிராமப்புறங்களில் மக்கள் கூடும் இடங்களில் தண்டனை கொடுத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்படித்தான் தோழர் பொதும்பு வீரணனும் சில தோழர்களும் போலீசாரிடம் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்கள் அனுபவித்த தண்டனைகள் கொஞ்சநஞ்சமல்ல.
படிக்க :
♦ நூல் அறிமுகம் : இப்போது உயிரோடிருக்கிறேன் || நமக்கு ஏன் இத்தனை எதிரிகள் ? || முரளிதரன்
♦ நூல் அறிமுகம் || 1974 : மாநில சுயாட்சி || ஆழி செந்தில்நாதன்
சிறைச்சாலையில் ஒரு நாள் வீரணனையும் இன்னும் இரண்டு தோழர்களையும் அழைத்து, அவர்களுக்குத் தண்டனையாக உரலில் நெல் குத்தச் சொல்கிறான், சிறை வார்டன். அதுவும் பூண் இல்லாத உலக்கையால் இடிப்பதற்கு இன்னும் சிரமமாக இருக்கும். காலையில் ஒரு மூட்டையும் மாலையில் ஒரு மூட்டையும் குத்தி முடிக்க வேண்டும் என்பது உத்தரவு. குத்திக் குத்தி கைகளில் கொப்புளம் ஏற்பட்டு ரணமாகிவிடுகிறது. மறுநாளும் வார்டன் அழைக்கிறான். கொப்புளம் வைத்து வீங்கியிருக்கும் தங்களது கைகளைக் காட்டுகிறார்கள், அப்போதும் விடவில்லை. ஒரு நாள் அல்ல, இரண்டு நாட்களல்ல, இப்படியாக மூன்று நாட்கள் நடக்கிறது. கைகளால் உலக்கையை இனிமேலும் பிடிக்க முடியாது என்று புண்ணான கையைக் காண்பிக்கிறார்கள். என்னையா எதிர்த்து பேசுகிறாய்? என்று மாட்டை அடிக்கும் குச்சியைக் கொண்டு மயக்கம் வரும் வரை அடித்து நொறுக்குகிறார்கள். மயக்கம் தெளிந்தவுடன் மீண்டும் நெல் குத்தச் சொல்கிறார்கள்.
இத்தகைய கொடும் நிகழ்வுகள் ஜுலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக் குறிப்புகள் எனும் புத்தகத்தை நினைவுபடுத்துகிறது. ஆளும் வர்க்கமும் போலீசும் உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகளை ஒரே மாதிரியாகத்தான் கையாள்கிறார்கள். கம்யூனிஸ்டுகளும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான், தங்களது உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு தொழிலாளர் கூட்டத்தில் பி.சி.ஜோஷி கூறியதை தோழர் வீரணன் பதிவிடுகிறார். “காங்கிரஸ்காரர்கள் ஒரு அடி கொடுத்தால் திருப்பி 10 அடி கொடுங்கள்” என்று.
இன்று நாம் இந்து மதவெறி பாசிச நச்சுச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் தனது வானரப் படைகள்மூலம் நாடு முழுவதும் சாதி, மதக் கலவரங்களை நடத்துகிறது. விவசாயம், தொழில்துறைகளை அழித்துச் சூறையாடுகிறது. தெருவுக்கு தெரு சாகா நடத்தி அடியாட்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் ஒரு அடி கொடுத்தால் நாம் 100 அடி கொடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. ஒரு கம்யூனிஸ்டுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொதும்பு தியாகிகள் இந்நூல் மூலம் உணர்த்தும் பாடம் இதுவன்றி வேறென்னவாக இருக்க முடியும் !
நூல் ஆசிரியர் : பொதும்பு வீரணன்
முறைப்படுத்தித் தருபவர் : என்.ராமகிருஷ்ணன்
விலை : ரூ. 60
வெளியீடு : மதுரை புத்தக மையம்,
3/44, பாரதியார் சாலை. தினமணி நகர், மதுரை – 625 018.
செல் : 94869 27364
நூல் அறிமுகம் : வேலன்
மார்ச் 28, 29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !
மார்ச் 28,29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !
மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! என்ற தலைப்பின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள கிளை இணைப்பு சங்கங்களில் ஆலைவாயில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஆலைவாயில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் ம.சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார்.
தனது தலைமை உரையில், “போராடிப் பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் கார்ப்பரேட் – பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றப்படுகிறது என்றும் மேலும் விவசாயம், கல்வி, சிறு-குறு தொழில்களும் பொதுத்துறை நிறுவனங்களும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. இதை தொழிலாளர் வர்க்கமாக ஒன்றினைந்து முறியடிப்பது நமது வரலாற்று கடமை” என்று பேசி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.
பொதுச்செயலாளர் தோழர் ப.சக்திவேல் தனது உரையில் “தொழிலாளர் நலச்சட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போதே எந்த ஆலை முதலாளிகளும் சட்டத்தை மதிப்பது கிடையாது. இன்று அந்த சட்டங்கள் நமக்கு ஆதரவாக இல்லை என்றால் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை கோர முடியாது. கடுமையான உழைப்பு சுரண்டலும், அடக்குமுறைகளும் அதிகரிக்கும். தன்மீது இப்படிப்பட்ட அநீதி இழைக்கப்படுகிறது என்பதை கூட தொழிலாளி வர்க்கம் உணராமல் இருக்கின்றனர். சாதி மத உணர்வுகளை மழுங்கச் செய்து தொழிலாளி வர்க்கம் வர்க்க உணர்வை மேம்படுத்திக் கொண்டு தமக்கான அதிகாரத்தையும், உரிமையையும் நிலைநாட்ட வேண்டும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.
எமது சங்கத்தின் சிறப்புத் தலைவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – முன்னாள் மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் அவர்கள் தனது கண்டன உரையில், “தொழிலாளர் நலச்சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிறு-குறு தொழில்கள், கல்வி-மருத்துவம், இயற்கைவளம் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வைக்கப்படுகிறது. நாம் எதை சாப்பிட வேண்டும், நாம் எதை உடுத்த வேண்டும் என காவி கொள்கையில் அவர்கள் தீர்மானிக்கின்றனர். இதை தொழிலாளி வர்க்கம் உணராமல் இருப்பதற்காக சாதி, மத உணர்வுகளை மேலோங்கச் செய்து, காவி சிந்தனை மக்களுக்கு திட்டமிட்டு பரப்பப்படுகிறது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு சாகா பயிற்சி அளிக்கப்படுகிறது. கார்ப்பரேட்டுக்கு சேவை செய்வதே காவி அரசின் நோக்கமாக உள்ளது. இவற்றை முறியடிக்கின்ற வகையில் நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொள்வது நமது வரலாற்றுக் கடமை. ஆகவே நாடு தழுவிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அகில இந்தியப் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வோம்! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம்! இதை முன்னெடுத்துச் செல்லும் டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்திற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் விண்ணெதிர தொழிலாளர்கள் கண்டன முழக்கமிட்டனர். இறுதியாக சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் தனசேகரன் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
இத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.
தகவல் :
டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம்.
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு
000
மார்ச்: 28,29 பொது வேலைநிறுத்தத்தை ஒட்டி அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து ஆவடி பேருந்து நிலையம் அருகில் இன்று காலை 10 மணியளவில் சாலை மறியல் செய்யப்பட்டது, இதில் எமது பு.ஜ.தொ.மு சென்னை, திருவள்ளூர் காஞ்சி மாவட்டம் சார்பாக தொழிலாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தகவல் :
புதிய தொழிலாளி
000
பு.ஜ.தொ.மு. சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் உள்ள டி.பி.ஐ ஆவடி, ஆலையில் மார்ச்:28,29 வேலைநிறுத்தத்தை ஒட்டி இன்று ஆலை வாயில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது, இதில் பெருந்திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தகவல்:
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
டி.பி.ஐ. ஆவடி.
000
மார்ச் 28-29 தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் சங்கர் தலைமை தாங்கினார். பு.ஜ.தொ.மு -வின் மாவட்டச் செயலாளரும்,மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினருமான தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார்.
தமிழ்த் தேசிய குடியரசு இயக்கம் அமைப்பின் மாவட்ட செயலாளர் தோழர்.விக்னேசு மற்றும் திராவிடா சிட்டி மூவ்மெண்ட் ( குப்பம் ) அமைப்பைப் சேர்ந்த திரு.அபி கவுடா ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.திரளான தொழிலாளர்களும்,ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.
தகவல் :
புதிய தொழிலாளி
000
மார்ச் 28 29 பொது வேலைநிறுத்தம் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம் மாநிலம் தழுவிய போராட்டம் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் என்று தொழிலாளர்கள் விவசாயிகள் பெண்கள் தொழிற்சங்கங்கள் கட்சிகள் புரட்சிகர அமைப்புகள் என் மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை சமயநல்லூர் பகுதியில் விவசாய சங்கங்கள் தொழிலாளர் சங்கங்கள் கட்சிகள் பெண்கள் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த தோழர் லாசர் தலைமையில் நடைபெற்றது. அதில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.
தகவல் :
ம.க.இ.க, தமிழ்நாடு
000
ஒன்றிய மோடி அரசை கண்டித்து! மார்ச் 28,29 அகில இந்திய பொது வேலை நிறுத்ததின் ஒரு பகுதியின் இன்று மறியல் போது நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டோம்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
000
28.03.22 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தொழிலாளி வர்க்கத்துடன் போராட்ட களத்தில் விருதை பகுதி மக்கள் அதிகாரம் தோழர்கள் இணைந்தனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம்,
விருதை.
War on Ukraine : Russian troops, getout from Ukraine and Crimean Peninsula !
War on Ukraine :
Russian troops, getout from Ukraine and Crimean Peninsula!
US and NATO forces, getout from Eastern Europe and the Black Sea region!
♦ We shall protest against the war on Ukraine in the race for world hegemony of the U.S. and Russian superpowers!
♦ We shall defeat the war hysteria of U.S. and Western imperialist powers, which is annexing Ukraine and expanding the NATO military alliance in Eastern Europe to besiege and invade Russia.
♦ We shall break the hegemonic frenzy of U.S.-led imperialist powers that has built QUAD and AUKUS war alliances to intensify the rivalry against Russia and China into a nuclear world war.
♦ The US-led NATO alliance has no right on blaming Russia, which has waged wars of aggression on Iraq, Afghanistan, Yugoslavia, Libya and staged coups and proxy wars in other countries, imposed sanctions on Russia, Iran, Venezuela, Cuba and North Korea.
♦ We shall fight for the emancipation of the working people by developing the war between imperialist powers as a just and revolutionary civil war against imperialism, colonialism and hegemony.
♦ We shall expose pacifists (supporters and advocates of peace) the compromising forces who speak out for peace without opposing U.S – the first culprit in provoking the war, the U.S.and Russian superpowers and the hegemonic rivalry of imperialist powers.
♦ The proletariat can not support any side in the war for the domination and plunder of the imperialists! They should not ally the U.S. and Western imperialist powers in the name of opposing the Russia’s war offense!!
♦ Let us break down the oppression of bourgeois – imperialist powers that suppress the struggle for a just war of national liberation and the right to self-determination!
♦ Let us smash the imperalist conspiracies by using self-determination struggles of nationalities as a pawn to establish hegemony! Let us defeat the treachery that seeks to achieve liberation of a nationality by relying on imperialist forces!
♦ We shall fight for the independence and soverginity of the nations of the world and the right of self-determination of nationalities.
Workers of all countries, unite !
New Democracy – March 2022 | Magazine
New Democracy March – 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.
New Democracy (Puthiya Jananayagam) March – 2022
List of Articles Present in this Issue :
♦ The conspiratorial besperate motive to suppress Punjab behind the ‘security lapse’ outcry!
♦ Karnataka, Tripura, Assam : ‘The Hindurashtra menace’ spreading like wildfire!
♦ The Election Laws (Amendment) Act, 2021 : People under the legal supervision of Hindurashtra
♦ R.N.Ravi – The hand-picked spy of the fascist invasion
♦ Mekedatu Dam : In racist politics – BJP & Congress are in the same array
♦ 15 workers massacred in Nagaland : ‘Indian unity’ established through military repression !
♦ NEET Exam : The experience of legal struggle teaches the need for field struggle !
♦ Kashmir : Saffronisation obliterating constitutional freedom
♦ Afghan people starving to death because of US hegemony !
♦ Press Release – Let’s Defeat the Repression of the Foxconn Administration !
♦ War on Ukraine : Russian troops, getout from Ukraine and Crimean Peninsula! US and NATO forces, getout from Eastern Europe and the Black Sea region!
To get Free e-magazine, mail us : puthiyajananayagam@gmail.com
To Get the Magazine by Post :
Contribution : Rs. 25
Pay through G-Pay : 94446 32561
Make Payment and send your address details along with Payment receipt to our email : puthiyajananayagam@gmail.com
அமெரிக்கா, உக்ரைனில் உள்ள நவ-நாஜிக்களை அதிகாரம் பெறவைத்து ஆயுதம் ஏந்த செய்தது எப்படி?
ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அரசாங்கத்தில் உள்ள நாஜிக்களை களையெடுப்பதாக கூறி உக்ரைன் மீது படையெடுக்க உத்தரவிட்டார். ஆனால், மாஸ்கோவிற்கான முன்னால் அமெரிக்கா தூதர் மைக்கெல் மெக்பால் உட்பட பல மேற்கத்திய நாடுகளை சார்ந்த அதிகாரிகள் ‘உக்ரைனில் எந்த நாஜிக்களும் இல்லை’, மேலும் ‘இது ஒரு வெற்று பிரசாரம்’ எனவும் குற்றம் சாட்டினர்.
ரஷ்ய படையெடுப்பின் பின்னணியில், 2014-க்கு பிந்தைய உக்ரேனிய அரசின் தீவிர வலதுசார்புடைய குழுக்கள் மற்றும் நவ-நாஜி கட்சிகளுடனான பிரச்சினைக்குறிய உறவானது ஒரு தீப்பொறியாக அமைந்துவிட்டது. மேற்கு உலக நாடுகள் இதை திட்டமிட்டு மறைத்தாலும், ரஷ்யா பெரிதுபடுத்தி போருக்கான முதன்மை காரணியாக கூறிக்கொள்கிறது.
உண்மை என்னவெனில், அமெரிக்கா மற்றும் அதன் உக்ரேனிய கூட்டாளிகளின் தூண்டுதலில் 2014-ன் அப்போதைய உக்ரேனிய அரசை கவிழ்த்து, அதன் மூலம் தீவிர வலதுசாரி குழுக்களை அதிகாரம் பெறச் செய்து, கிழக்கு உக்ரேனியப் பகுதிகளில் உள்ள பிரிவினைவாதிகளுடன் மோதச் செய்ததே ஆகும். ஆனால் உக்ரேனில் உள்ள நாஜிக்களை களைப்பதாக கூறி ரஷ்யா நடத்தும் இந்த போரானது, உலகம் முழுவதும் உள்ள போர் வீரர்களையும் பங்கு பெறச் செய்வதுடன், உக்ரேனியர்கள் மற்றும் சர்வதேச நவ-நாஜிக்கள் எதிர்பார்த்த ஆயுதங்கள், இராணுவப் பயிற்சி மற்றும் போர் அனுபவம் உள்ளிட்டவை கிடைப்பதால், இந்த போர் அவர்களை மேலும் வலுப்படுத்தவே செய்யும்.
படிக்க :
♦ உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
♦ உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!
2014 – பிப்ரவரியில், அமெரிக்க ஆதரவுடன் நடந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு, உக்ரேனின் நவ-நாஜி கட்சியான ஸ்வொபோடாவும் அதன் நிறுவனர்களான ஒலே ட்யானிபோக் மற்றும் அண்ட்ரி பருபிய்-ம் முக்கிய பங்காற்றியுள்ளனர். ஆட்சி கவிழ்ப்புக்கு பிந்தைய அரசாங்கத்தின் அதிகார பொறுப்பிலிருந்து ஒலே ட்யானிபோக்-ஐ வெளியேற்ற முயற்சித்தபோதும், உதவி செயலர் நூலண்ட் மற்றும் தூதர் பியாட்டும் ஆட்சி கவிழ்ப்பிற்குமுன் தாங்கள் பணியாற்றிய தலைவர்களில் ஒலே ட்யானிபோக்–உம் ஒருவர் என ஒரு கசிந்த தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் கீவ் பகுதியில் அமைதியாக நடந்த போராட்டம் வன்முறையாகமாறி போலீசுத்துறையுடன் மோதத் தொடங்கியது. ஸ்வொபோடா – கட்சியின் உறுப்பினர்களும் ட்மி யாரோஷ்-ன் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட வலதுசாரி போராளிகளும் போலீச்த்துறையின் ஆயுதக் கிடங்கை சூறையாடியதுடன், கைப்பற்றிய ஆயுதங்களுடன் பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு பாராளுமன்ற வளாகத்தை அடைந்தனர். கடந்த 2014 பிப்ரவரி மாதத்தின் இடையில் நிசாலென்ஸ்நோஸ்தி சதுக்கத்தில் நடந்த போராட்டத்திலிருந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன் இருந்தனர்.
அமெரிக்காவின் தலையீட்டாலோ அல்லது வலதுசாரி அமைப்புகளின் வன்முறையாலோ, உக்ரேனில் நடைபெற்ற அமைதியான போராட்டம் என்ன மாதிரியான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றும், இந்த அமைதி போராட்டத்தின் விளைவால் உருவான புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகளில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நமக்கு தெரியாமலேயே போய்விட்டது.
ஆனால், போராட்டக்குழு தலைவர் ட்மி யாரோஷ் என்பவர் நிசாலென்ஸ்நோஸ்தி சதுக்கத்தின் போராட்ட மேடையேறி, பிரஞ்ச், ஜெர்மன் மற்றும் போலந்து உள்ளிட்ட நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடத்தும்படி யனுகோவிச் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒப்புதலுடன் கொண்டுவரப்பட்ட 2014-பிப்ரவரி 21 உடன்படிக்கையை நிராகரித்தார். மாறாக யாரோஷ் மற்றும் மற்ற வலதுசாரிகளும் ஆயுதங்களை கைவிட மறுத்து அரசாங்கத்தை தூக்கியெறிய பாராளுமன்றத்தில் இறுதிக்கட்ட அணிவகுப்பை நடத்தினர்.
1991-லிருந்தே உக்ரேனிய தேர்தல்களானது, டொனெடஷ்கிலிருந்து வந்த ரஷ்ய ஆதரவு அதிபர் யனுகோவிச்-க்கும் மற்றும் மேற்கு உலக நாடுகளின் ஆதரவில் குறிப்பாக ‘ஆரஞ்சு புரட்சி’-க்கு அதாவது 2005-ன் சர்ச்சைகுறிய தேர்தலுக்குபின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட யஸ்சென்கோ–க்கும் இடையில் ஊசலாடியது. உக்ரைனில் முடிவிலா ஊழலானாது ஒவ்வொரு அரசாங்கத்தையும் கரைப்படுத்தியது. மேலும், எந்த தலைவர் அல்லது கட்சி வென்றது என்பது ரஷ்யா அல்லது அதற்கு எதிரான மேற்கு உலக நாடுகள் இசைவுக்கேற்ப இருந்ததால் மக்கள் விரைவில் நம்பிக்கை இழந்தனர்.
2014-ல் ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு நூலண்ட்-ம் அரசுத்துறையும் சேர்ந்து அர்செனிய்-ஐ பிரதமராக தேர்ந்தெடுத்தது. இரண்டு ஆண்டு பதவியில் நீடித்த அவரும் கடும் ஊழல் காரணமாக தன் பதவியை இழந்தார். ஆனால் அதிபராக இருந்த பெய்ரோ போரோஷென்கோ (Peyro poroshenko) 2016 பனாமா பேப்பர்ஸ் மற்றும் 2017 பேரடைஸ் பேப்பர்ஸ்-ல் அவரது தனிவரி விலக்கு திட்டங்களில் நடந்த ஊழல்கள் அம்பலப்பட்டபோதும் 2019 வரை பதவி வகித்தார்.
யட்சென்யுக் பிரதமராக பதவியேற்றதும் ஆட்சி கவிழ்ப்புக்கு உதவியாகயிருந்த ஸ்வொபோடா கட்சியை சார்ந்த ஒலெக்சாண்டர்-க்கு துணை பிரதமர் பதவி உட்பட அக்கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகள் மற்றும் உக்ரைனின் 25 மாகாணங்களில் 3 கவர்னர் பதவிகளும் வழங்கினார். மேலும், ஸ்வொபொடோ-வின் அண்ட்ரி பருபிய், ஐந்து ஆண்டுகள் உக்ரைன் பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் பதவி வகித்தார். 2014 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ட்யானிபோக் வெறும் 1.2% வாக்குகளை மட்டுமே பெற்றதோடு, பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
2014-க்கு பின் நடந்த தேர்தலில் உக்ரேனிய வாக்காளர்கள் தீவிர வலதுசாரி அரசியலிருந்து பின்வாங்கிவிட்டனர். ஏனெனில் 2012 தேர்தலில் 10.4%-ஆக இருந்த ஸ்வோபோடாவின் (Svoboda) வாக்கு சதவீதம், 2014 ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு நடந்த தேர்தலில் 4.7%-ஆக குறைந்துவிட்டது. வெளிப்படையாக ரஷ்யாவை எதிர்க்கும் பல கட்சிகள் தோன்றியதாலும், ஸ்வொபோடா கட்சி தனது வாக்குறுதிகளை செயல்படுத்த தவறியதாலும் உள்ளூர் அரசாங்களில் அதிகாரத்திலிருந்த பகுதிகளிலும் தனது ஆதரவை இழந்தது.
2014 ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு வலதுசாரி கும்பல், ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது தாக்ககுதல் நடத்தி அவற்றை பலவீனப்படுத்துவதன் மூலம் புதிய ஒழுங்கை கட்டமைக்க தொடங்கியது. ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை ரஷ்ய ஆதரவு கும்பல் எனவும், அவர்கள் மீது நடந்தப்பட்ட வன்முறையை நாட்டை சுத்தம் செய்ய நடத்தப்படும் போர் என்றும் நியூஸ்வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அதன் தலைவர் யாரோஷ் கூறினார். இந்த போரானது மே 2 அன்று Trade Unions Houes-ல் தஞ்சமடைந்த 42 ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பாளர்களை கொடூரமாக கொலை செய்த பிறகே முடிவுக்கு வந்தது.
டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்-ல் நடந்த ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பாளர்களின் போராட்டம் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தியதும், இந்த தீவிர வலதுசாரிகள் முழு அளவிளான ஆயுதம் தாங்கிய போராட்டத்தை கையிலெடுத்தனர். உக்ரேனிய இராணுவம் தனது சொந்த மக்களுடனே போரிடுவதற்கு தயக்கம் காட்டியதால், உக்ரேனிய அரசாங்கம் புதிய தேசிய காவலர் பிரிவுகளை உருவாக்கியது.
வெள்ளை இனவெறியரான ஆண்ட்ரி பிலெட்ஸ்கி (Andriy Biletsky) வலதுசாரி ஆதரவாளர்களைக் கொண்ட அசோவ் படாலியன் எனும் படைப்பரிவை உருவாக்கினார். இதில் நவ-நாஜிக்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தினர். இதன் நோக்கம் யூதர்களையும் மற்ற தாழ்ந்தப்பட்ட இனங்களையும் உக்ரேனிலிருந்து வெளியேற்றுவது என ஆண்ட்ரி பிலெட்ஸ்கி கூறினார். சுயாட்சி குடியரசாக அறிவித்துக் கொண்ட பகுதிகளை தாக்கியதிலும், பிரிவினைவாதிகள் வசம் இருந்த நகரத்தையும் மீட்டெடுத்ததிலும் உக்ரேனிய அரசாங்கத்தை வழிநடத்தியது இந்த அசோவ் படாலியன்.
2015-ல் போடப்பட்ட ஒப்பந்ததின் மூலம் இந்த மோசமான சண்டை முடிவுக்கு வந்ததுடன், பிரிந்த குடியரசுகளுக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாக அமைந்தது. இருப்பினும் சிறிய அளவிலான உள்நாட்டுப் போர் தொடரந்தது. 2014 முதல் நடந்து வந்த இந்த சண்டையில் கிட்டத்தட்ட 14,000 பேர் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. காங்கிராஸை சார்ந்த ரோ கண்ணாவும் (Ro Kanna) காங்கிராஸின் முற்போக்கு உறுப்பினர்களும் அசோவ் படாலியன்-க்கு அளிக்கும் இராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்த பல ஆண்டுகள் போராடினர்.
இறுதியாக 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பாதுகாப்பு ஒதுக்கீடு மசோதா மூலமே அவர்களால் தடுக்க முடிந்தது. இருப்பினும் அசோவ் படாலியன் இந்த தடைகளையும் மீறி ஆயுதங்களையும், ஆயுதப்பயிற்சிகளையும் அமெரிக்காவிடமிருந்து பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.
அசோவ் படாலியன் வலதுசாரி வன்முறை தீவிரவாத நடவடிக்கைகளில் அபாயகரமானதாக வளர்ந்துள்ளது என 2019-ல் உலகெங்கும் உள்ள பயங்கரவாத மற்றும் தீவிரவாத குழுக்களை கண்காணிக்கும் அமைப்பான சௌஃபான் சென்டர் தெரிவித்துள்ளது. மேலும், இதன் கட்டுபாட்டில் உள்ள உக்ரேனிய பகுதிகளை வெள்ளை மேலாதிக்கத்திற்கான முதன்மை பகுதிகளாக மாற்றுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அசோவ் படாலியனின் பயங்கரவாத தொடர்புகள் எவ்வாறு உலகம் முழுவம் போராளிகளை தெர்ந்தெடுக்கிறது மற்றும் அதன் வெள்ளை மேலாதிக்க கருத்துக்கள் எவ்வாறு பரப்பப்படுகிறது என்பதை சௌஃபான் சென்டர் விளக்கியுள்ளது. வெளிநாட்டு போராளிகள் அசோவ் படாலியன்-ல் தாங்கள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு அவற்றை பரிசோதித்து பார்பதற்கும், புதிய போராளிகளை உருவாக்கிக் கொள்வதற்க்கும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப செல்கின்றனர்.
2019-ல் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்-ல் (Christchurch) உள்ள மசூதில் 51 வழிபாட்டாளர்களை கொலை செய்த ப்ரெண்டன் டாரன்ட் (Brenton Tarrant|) உட்பட பல வெளிநாட்டு தீவீரவாத வன்முறையார்கள் அசோவ் படாலியன் உடன் தொடர்பில் உள்ளனர். 2017-ம் ஆண்டு சார்லோட்டஸ்வில்லே-ல் (Charlottesville) நடந்த ‘உரிமையை ஒன்றிணைக்கவும்’ (Unite the Right) என்ற பேரணியின் எதிர்-போராட்டக்காரர்களை தாக்கிய குற்றவாளிகளில் பலர் ரைஸ் அபோவ் இயக்கம் (U.S Rise Above Movement) என்ற அமைப்பை சார்ந்தவர்களே. மற்ற அசோவ் படாலியன் உறுப்பினர்கள் ஆஸ்திரேலியா, ஜெர்மன், இத்தாலி, நார்வே, ஸ்வீடன், ஐரோப்பிய ஒன்றியம் என இன்னும் சில நாடுகளுக்கு திரும்ப சென்றுவிட்டனர்.
ஸ்வொபோடாவின் வெற்றி தேர்தலில் மறுக்கப்பட்டபோதிலும் நவ-நாஜிக்கள் மற்றும் தீவிர தேசியவாத குழுக்கள் அசோவ் படாலியன் உடன் தங்களது உறவை மேம்படுத்திக் கொண்டு உக்ரேனிய தெருக்களிலும், உக்ரேனிய தேசியவாதத்தின் மையப் பகுதியான உள்ளூர் அரசியலிலும் தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துள்ளன.
2019 அதிபர் தேர்தலில் செலன்ஸ்கி வெற்றிபெற்றதும் டான்பாஸ்-ஐ சேர்ந்த பிரிவினைவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மின்ஸ்க் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினால் பதவி நீக்கம் அல்லது கொலை செய்யப்படுவார் என்று தீவிரவாத வலதுசாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அந்த 2019 தேர்தலில் செலன்ஸ்கி ஒரு அமைதிக்கான வேட்பாளராகவே போட்டியிட்டார். ஆனால், வலதுசாரிகளின் அச்சுறுத்தலினால் டான்பாஸ்-ஐ சேர்ந்த தலைவர்களை பிரிவினைவாதிகள் என கூறிபேச கூட மறுத்துவிட்டார்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்பதற்கு அதிபர் ஒபாமா விதித்திருந்த தடையை ட்ரம்ப் தலமையிலான அமெரிக்க அரசாங்கம் திரும்பப்பெற்றது. மேலும், அதிபர் செலன்ஸ்கி உக்ரேனிய நகரங்களான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய நகரங்களை மீட்டெடுக்க தேவையான புதிய தாக்குதலுக்கு உக்ரேனிய படைகளைக் தயார்படுத்தினார். அவரது ஆக்ரோசமான சொல்லாடல் டான்பாஸ் மற்றும் ரஷ்யாவில் புதிய அச்சுறுத்தல்களை ஏற்ப்படுத்தியது.
உக்ரேனின் உள்நாட்டுப் போர் அந்த அரசாங்கத்தின் நவதாராளவாத பொருளாதாராக் கொள்கைகளுடன் சேர்ந்து தீவிரவாத வலதுசாரிகளுக்கு ஏற்ற நிலமாக வடிவமைத்து கொடுத்துள்ளது. ஆட்சிக் கவி்ழ்ப்பிற்கு பிந்தைய உக்ரேனிய அரசாங்கம், 1990-ல் கிழக்கு ஐரோப்பா முழுவதும் திணிக்கப்பட்ட நவதாராளவாத ‘அதிர்ச்சி சிகிச்சை’யை அப்படியே அமல்படுத்தியது. IMF–யிடமிருந்து 40 பில்லியன் டாலரை கடனாக பெற்றுக்கொண்டு அதனுடனான ஒப்பந்தப்படி, அரசுக்கு சொந்தமான 342 நிறுவனங்களை தனியார்மயமாக்கியதுடன் சம்பளம் மற்றும் ஓய்வூதியவெட்டுடன் பொதுத்துறையில் இருந்த வேலைவாய்ப்பை 20% குறைத்தது, மேலும் மருத்துவம் தனியார்மயமாக்கப்பட்டதுடன், பொதுக்கல்வியில் முதலீடு செய்யாமல் அதன் 60% பல்கலைக் கழகங்களை மூடியுள்ளது.
உக்ரேனின் ஊழலுடன் இணைசேர்ந்த இந்த நவதாராளவாதக் கொள்கைகள், அரசு சொத்துகளை இலாபகரமாக கொள்ளையடிப்பதற்கும், மக்களின் வாழ்க்கைதரம் வீழ்ச்சியடைவதற்கும், சிக்கன நடவடிக்கைக்கும் வழிவகுத்தது. ஆட்சிக் கவி்ழ்ப்பிற்கு பிந்தைய அரசாங்கம் போலந்தை அதன் முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டது. ஆனால் உண்மையில் அதன் நிலை 1990-லிருந்த ரஷ்யாவில் எலிட்சின் ஆட்சியை ஒத்திருந்தது. 2012 மற்றும் 2016-க்கு இடைப்பட்ட காலத்தில் உக்ரைனின் வளர்ச்சி 25% வரை குறைந்து. இன்று வரை ஐரோப்பியாவிலேயே ஏழ்மையான நாடாக உள்ளது.
படிக்க :
♦ உக்ரைன் போர் : ரசிய – அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை எதிர்ப்போம் || புரட்சிகர அமைப்புகள் அறிக்கை
♦ உக்ரைனை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர துடிக்கும் ரஷ்யா – அமெரிக்கா!
மற்ற இடங்களைப் போலவே, நவ தாராளவாதத்தின் தோல்விகள் வலதுசாரி தீவிரவாதம் மற்றும் இனவாதத்திற்கு எரிபொருளாக அமைந்துள்ளது. மேலும் ரஷ்யாவுடனான இப்போரால் உலகில் உள்ள மற்ற இளைஞர்களுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள இராணுவப் பயிற்சி மற்றும் போர் அனுபவம் ஆகியவற்றை தங்கள் சொந்தநாடுகளை அச்சுறுத்த எடுத்துச் செல்கின்றனர்.
அசோவ் படாலியன் சர்வதேச அளவில் செயல்படும் யுக்தியை அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்.வுடன் (ISIS) ஒப்பிட்டுள்ளது சௌஃபான் சென்டர். சிரியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் நேடோ கூட்டணியுடன் சேர்ந்து அல்கொய்தா-வுடன் தொடர்புடைய குழுக்கள் ஏற்படுத்திய அதே அச்சுறுத்தலை அசோவ் படாலியன் உக்ரேனில் ஏற்படுத்துகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ (ISIS) உருவாக்கி, அது தங்களின் மேற்கு ஆதரவு நாடுகளுக்கு எதிராக தீர்க்கமாக திரும்பியதும் அந்த கோழைகள் விரைவாக வீடு திரும்பினர்.
இப்போது ரஷ்ய ஊடுறுவலுக்கு எதிராக உக்ரேனிய மக்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். ஆனால் அமெரிக்கா, உக்ரேனிய நவ-நாஜி பினாமி படைகளுடன் அதிநவீன ஆயுதங்களில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த கூட்டணி, இதைவிட மோசமான வன்முறை மற்றும் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதில் நாம் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை.

தமிழாக்கம் : இசாஸ் ரஹ்மான்
நன்றி : Counter Currents
தில்லையில் தொடரும் தீட்சிதர் ஆதிக்கம் : தன்மானத் தமிழன் இனியும் சகிக்க மாட்டான் !
“சிறீரங்கநாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ?” என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். தமிழனையும் தமிழையும் தீண்டாமை எனும் இழிவை சுமக்க வைக்கும் பார்ப்பனிய – சனாதனம் உச்சிமீது வைத்து பாதுகாக்கப்படுவது இந்த இரண்டு கோயில்களில்தான் என்ற ஆத்திரத்தின் – சுயமரியாதை உணர்ச்சியின் வெளிப்பாடு அது.
சென்ற மாதம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜெயசீலா என்ற சிவபக்தர் சிற்றம்பலத்தில் ஏறி நடராஜரை வழிபட முயன்றபோது, அங்கிருந்த தீட்சித பார்ப்பனர்கள் கும்பலாகச் சூழந்து கொண்டு அவரை அடிக்க முயன்றதோடு, “பறைச்சி” என்று சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தியும் உள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து புரட்சிகர அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் தீட்சிதர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். தி.மு.க. அரசு சாதி சொல்லி திட்டியதற்காக தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து தனது கடமையை முடித்துக் கொண்டது. ஆனால், தில்லை சிற்றம்பல மேடை ஏறி வழிபடுவதற்கும் அங்கு தமிழ் பாடுவதற்கும் போராடுகின்ற ஜனநாயக சக்திகளைத் தடுப்பது மட்டுமின்றி, கைது செய்தும் வருகிறது.
அரியலூர் மாணவி லாவண்யா விசயத்தில், பொய்யாக செய்தியைப் பரப்பி இந்துமதவெறியூட்ட போராடிய பா.ஜ.க. உள்ளிட்ட சங்கப் பரிவார கும்பல்கள், தில்லையில் தமிழில்பாடச் சென்ற சிவபக்தருக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. அவர்களின் உயிர்நாடியே தமிழ் விரோத, பார்ப்பன சாதி மேலாதிக்க மனோபவம்தான் என்பதை இச்சம்பவமும் அம்பலப்படுத்தியுள்ளது.
படிக்க :
♦ தீட்சதர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய் ! – சென்னை ஆர்ப்பாட்டம் !
♦ பெண் பக்தையை தாக்கிய தீட்சிதனின் பார்ப்பனக் கொழுப்பு !
புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் நிலைநாட்டப்பட்ட, சிற்றம்பல மேடையிலேறி தமிழில் பாடும் உரிமையை தடுப்பதற்காக தீட்சிதர்கள் சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில், கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி பக்தர்கள் சிற்றம்பல மேடை ஏறுவதற்கு தடைவிதித்தது தீட்சிதர் கும்பல். இதையே சாக்காக வைத்து, தனது பார்ப்பன மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தும் வகையில், தீட்சிதர்களைத் தவிர வேறு யாரும் சிற்றம்பல மேடை ஏறி வழிபடக்கூடாது என ஒரு விதியை வகுத்து தொடர்ந்து செயல்படுத்தியுள்ளனர்.
தற்போது ஜெயசீலாவின் போராட்டம் காரணமாக அனைத்து சாதியினரையும் திருச்சிற்றம்பல மேடை ஏற அனுமதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தீட்சிதப் பார்ப்பனர்கள், இது ‘அரசியல்வாதிகளின் சதி’ என்று மறைமுகமாக புரட்சிகர அமைப்புகள்மீது பழி சுமத்துகின்றனர்.
பாபர் மசூதி ராமனுக்கு சொந்தமாம், தில்லைக் கோயில் தீட்சிதர்க்கு சொந்தமாம்!
40 ஏக்கர் பரப்பளவில் திசைக்கு ஒருகோபுரமாக நான்கு கோபுரங்களும் ஐந்து சபைகளையும்கொண்டது சிதம்பரம் நடராஜர் கோயில். இக்கோயில், சுமார் 2,700 ஏக்கர் நிலம்; பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் என பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டதாகும். அனைத்தையும் மொத்தமாக திருடி வைத்துள்ளது இந்த தீட்சிதப் பார்ப்பன கும்பல்.
கி.பி. பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இக்கோயில் தமிழர் – திராவிடக் கட்டிடக் கலையிலானது. சோழர், பல்லவர், விஜயநகரப் பேரரசுகளால் புனரமைக்கப்பட்டு வந்ததையும் மன்னர்களின் மானியங்களை பெற்றதையும் இக்கோயில் வரலாற்றில் அறியமுடியும். இவ்வாறு மன்னர்களால் தமிழ் மக்களிடம் இருந்து கட்டாயமாக வரிவசூல் செய்யப்பட்ட பணத்தை வைத்துக் கட்டப்பட்ட, புனரமைக்கப்பட்ட இந்த தில்லைக்கோயில் தீட்சிதப் பார்ப்பனர்களின் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.

தில்லையில் தமிழ் பாடும் உரிமைக்காக புரட்சிகர அமைப்புகள், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலைமையில் பல போராட்டங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, தில்லை நடராசர் கோயிலை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்த அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆதாரம் தீட்சிதர்கள் சொல்லிய கதை.
முன்னொரு காலத்தில், கைலாயத்திலிருந்து 3,000 தீட்சிதர்கள் சிதம்பரத்திற்கு வந்ததார்களாம். வந்து எண்ணிப்பார்க்கும்போது, எண்ணிக்கையில் ஒருவர் மட்டும் காணோமாம். தீட்சிதர்கள் எல்லோரும் குழம்பி நிற்கையில், அந்த சிவபெருமானே “மீதம் உள்ள ஒருவர் நான்தான்” என்று கூறினாராம் – இந்த புருடா கதையை ஏற்று நடராஜர் கோயில் தீட்சிதர்களின் சொத்துதான் என அங்கீகரித்ததுள்ளது உச்சநீதிமன்றம்.
தேவாரம், திருவாசகம் போன்ற புகழ் பெற்ற சைவ இலக்கியங்களில் “தீட்சிதர்” என்ற ஒரு சொல்கூட இல்லை; இக்கோயிலை தீட்சிதர்களோ அவரது வாரிசுகளோ கோயிலை கட்டியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. எனினும், தீட்சிதர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் தமிழரின் சொத்தான தில்லைகோயிலை தீட்சிதர்களுக்கு பட்டா போட்டுக் கொடுத்துள்ளது உச்சிக்குடுமி மன்றம். பாபர் மசூதியை ராமனுக்கு தாரை வார்த்தது போல.
திருட்டு தீட்சிதன் புகழ் போற்றி போற்றி !
“நானும் தீட்சிதன்” என்று சிவன் கூறியதிலிருந்து, பட்டாச்சார்யர்களுக்கும் சிவாச்சார்யர்களுக்கும் இல்லாத பெருமை தங்களுக்கு உண்டு என்று தில்லை தீட்சிதர்கள் கூறிக்கொள்கின்றனர். அதனாலேயே, எல்லாவித அக்கிரமங்களையும் பகிரங்கமாகவும் துணிச்சலாகவும் செய்துவருகிறார்கள் தீட்சிதர்கள்.
கடந்த ஆண்டு கோயில் தரிசனத்துக்கு வந்த ஒரு வன்னியர் சாதியைச் சேர்ந்த பெண்ணை அடித்தான் ஒரு தீட்சிதன். கடந்த மாதம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஜெயசீலாவையும் அடிக்க முனைந்துள்ளது தீட்சிதர் கும்பல். அவர்களைப் பொருத்தவரை சூத்திர, பஞ்சமர்கள் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும், உரிமை என்று கேட்டால் அடிதான் விழும்.
கோயிலினுள்ளே கறி தின்னுவது, பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, பக்தர்களை தாக்குவது போன்ற செயல்கள் எல்லாம் தில்லை கோயில் தீட்சிதர்களுக்கு சர்வ சாதாரணம். சைக்கிள் திருடி போலிசிடம் பிடிபட்ட தீட்சிதர்; தட்சணையை பிரிப்பதில் கொல்லப்பட்ட தீட்சிதர்; கே.ஆடூர் செல்வராஜை கொன்ற தீட்சிதர்கள், நிலத்தரகர் ராயரை கொன்ற தீட்சிதர்கள் என இருக்கும் 400 பேரும் கிரிமினல்கள்தான். அதனால்தான் 2000-ஆம் ஆண்டில் சிவனடியார் ஆறுமுகசாமியைத் தாக்கிய தீட்சிதர்கள்மீது வழக்கு பதிவு செய்யவே 55 நாட்கள் ஆனது. அவ்வழக்கில் அத்தனை தீட்சிதர்களும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். ஜெயசீலா வழக்கிலும் இந்த தீட்சிதப் பார்ப்பனர்கள் நிச்சயம் விடுதலை ஆவார்கள்.
சிவனடியாரை காப்பாற்றிய சிவப்பு
தில்லையில் தமிழ்பாடும் உரிமை என்பது சாதாரணமாக வந்துவிடவில்லை. ஆறுமுகசாமி என்ற சிவனடியார் முதன்முதலில் சிற்றம்பலத்தில் தமிழ்பாட முயற்சிக்கிறார். அவர் சிற்றம்பல மேடை ஏறக்கூடாது என்றும் அவர் கோயிலுக்குள் வந்தால் கோயில் நகைகள் திருடு போக வாய்ப்புள்ளது என்றும் தீட்சிதர்கள் சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கிட்டார்கள். தீட்சிதர்களின் வாதத்தை ஏற்று அவ்வாறே ஆறுமுகசாமி கோயிலில் நுழைய தடை விதித்தார் நீதிமன்ற நடுவர். இதற்கெதிராக உயர் நீதிமன்றத்தில் புரட்சிகர அமைப்புகள் மற்றும் அரசின் சார்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 2008-ஆம் ஆண்டு சிற்றம்பலத்தில் தமிழ்பாடும் உரிமையை சென்னை உயர்நீதிமன்றம் மூலம் பெற்றோம்.
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் சிவனடியார் ஆறுமுகசாமிக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் தில்லை சிற்றம்பலத்தில் தமிழ் பாடும் உரிமையை பெற்றுத்தந்தது.
தீர்ப்புக்கு பின்னர் மார்ச் 2, 2008-ஆம் ஆண்டு, சிவனடியார் ஆறுமுக சாமியை யானை மீதேற்றி கோயிலுக்கு அழைந்து வந்தனர் புரட்சிகர, முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். திருச்சிற்றம்பல மேடையில் ஆறுமுகசாமியை ஏறவிடாமல் தடுப்பதற்காக அம்பலத்து மேடையில் எண்ணெய் ஊற்றியதோடு, தங்கள் உடலிலும் எண்ணை தடவிக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தவர்களின் மீது பாயக் காத்திருந்தார்கள் தீட்சிதர்கள்.
கோயிலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான தோழர்கள், போலீசு படை. எதற்கும் அசராமல் தீட்சிதப் பார்ப்பனர்கள் திருச்சிற்றம்பலத்தில் ஏறிய சிவனடியார் ஆறுமுகசாமியை தாக்கினர்; உடன் வந்த போலீசு உயரதிகாரிகளையும் தாக்கினர்.
ம.க.இ.க. தோழர்கள் பலரும் தாக்கப்பட்டனர். சமீபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த சீர்காழி தோழர் அம்பிகாபதியின் மண்டை உடைந்து சிற்றம்பலத்தில் ரத்தம் தெரித்தது. அந்த ரத்தச்சிவப்பே தமிழை பாட வைத்தது.
ஆறுமுகசாமியை சிற்றம்பலத்தில் ஏற்றாமல் கோயிலைவிட்டு நகரமாட்டோம் என்று உறுதியாக தோழர்களும் மக்களும் அறிவிக்க, வேறுவழியின்றி தீட்சித குடுமிகளை உதைத்து, வெளியே இழுத்துப்போட்டு ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடையில் தமிழ் பாட வைத்தது போலீசு. “தில்லைவாழ் அந்தணர்க்கு அடியார்க்கு அடியேன்” என்ற தமிழ்ப்பாடலைப் பாடினார் சிவனடியார் ஆறுமுகசாமி. அப்போது “நீசபாஷை”யான தமிழ், சிவபெருமானின் காதுகளில் கேட்காமல் இருக்க ஊளையிட்டனர் தீட்சிதர்கள்.
இதே சிவனடியார் ஆறுமுகசாமி 2000-ஆம் ஆண்டு சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடச்சென்றபோது ரவுடி தீட்சிதப் பார்ப்பனர்களால் கை கால்கள் உடைக்கப்பட்டு கோயில் வாசலில் வீசியெறியப்பட்டார். அப்போது தில்லை சிற்றம்பல மேடையில் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்ட போராட்ட களம் புகுந்தது நக்சல்பாரி கம்யூனிஸ்டு அமைப்புதான்.
லட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள், வெளியீடுகள் மூலம் இப்பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் மூலம் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்டியது புரட்சிகர அமைப்புகள்தான். திராவிடர் கழகம், தி.மு.க, வி.சி.க, பா.ம.க. உள்ளிட்ட பல கட்சிகள்/அமைப்புகள் அதற்கு துணையாக நின்றன.
சிவனை நம்பிச்சென்ற நந்தனாரும் வள்ளலாரும் பார்ப்பன கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டனர் என்பதுதான் வரலாறு. அவர்களிடமிருந்து தப்பித்த ஒரே நபர் ஆறுமுகசாமி மட்டும்தான். ஏனெனில், சிவனடியாரை சிவன் காப்பாற்றவில்லை, சிவப்புதான் காப்பாற்றியது.
இவ்வாறு போராடிப்பெற்ற தமிழ்பாடும் உரிமையை நிலைநாட்ட தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் மடங்களும், சிவனடியார்களும் அன்று வரவில்லை. வேறு வழியின்றி நாத்திகர்களாகிய கம்யூனிஸ்டுகளே திருச்சிற்றம்பலத்தில் தமிழ்பாடும் உரிமையை நிலை நாட்டுவதற்காக திருவாசகம் பாட வேண்டியதாக இருந்தது.

போராடிப் பெற்ற உரிமையை நிலைநாட்டிக் காப்பாற்றிக் கொள்ளும் சுயமரியாதை உணர்ச்சி ஆத்திகர்களிடமே அற்றுபோன ஒரே காரணத்தால்தான் இன்றுவரை தில்லையில் கொட்டமடிக்கிறது பார்ப்பன ஆதிக்கம்.
அரசாணையும் உச்சி குடுமி மன்றமும்
தில்லைக் கோயிலை தீட்சித கும்பலிடமிருந்து மீட்டு இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்று புரட்சிகர அமைப்புகளும் ஜனநாயக சக்திகளும் தொடர் போராட்டம் நடத்தினார்கள். விளைவாக 2009-ஆம் ஆண்டு, பிப்ரவரி 2-ஆம் தேதி கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, அரசாணை வாயிலாக இந்து அறநிலையத்துறையின் கீழ் தில்லை சிதம்பரம் நடராஜன் கோயிலைக் கொண்டுவந்தது.
இதற்கு முன்னர், தில்லைக்கோயிலில் இரு தீட்சிதர்கள், சக தீட்சிதர்கள் மீது கோயில் நகைக்களவு உள்ளிட்ட புகார்கள் தெரிவித்ததை அடுத்து, 1982-ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியில் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பது என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தில்லைக் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட பின்னர், கோயில் குளம் தூர்வாரப்பட்டது. கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டன. அப்போது அந்தக் கழிவுகளில் பிராந்தி, பீர் பாட்டில்கள், ஆணுறைகள்தான் மிகுந்திருந்தன. இவை தில்லை தீட்சிதர்கள் ஆகம விதிகளை சீந்தும் யோக்கியதையை உலகுக்கே உணர்த்தின.
பக்தர்களின் காணிக்கையை தீட்சிதர்கள் கொள்ளையடிக்கும் நிலைமை மாற்றப்பட்டு கோயிலில் உண்டியல்கள் வைக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளில் உண்டியல் வருமானம் மட்டுமே ஒன்றரை கோடி ரூபாயைத்தாண்டியது. இது தவிர தங்கம், வெள்ளி, வைர நகைகளும் குவிந்தன. அரசின் கட்டுப்பாட்டில் வருவதற்கு முன்னர் உண்டியல் ஆண்டு வருமானம் முப்பதாயிரம் ரூபாய் என்றும் கையிருப்பு ரூ.199.00 என்று கணக்கு காட்டினார்கள் தீட்சிதர்கள். எனில், இத்தனை ஆண்டுகளில் இந்த திருட்டு தீட்சிதர்கள் அடித்த கொள்ளை எத்தனை நூறு கோடியை தாண்டுமோ?
இந்து அறநிலையத்துறையின் கீழ் தில்லை சிதம்பரம் நடராஜன் கோயில் கொண்டு வரப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சதர்கள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், 2009 பிப்ரவரி 2-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி தீர்ப்பு வழங்கினார்.
“நீதிமன்றத்தின் கடந்தகால பல உத்தரவுகள் தில்லை நடராஜர் கோயில் ‘பொது’ சொத்து (Public Temple) என்றுதான் வந்திருக்கின்றதே தவிர, கோயில் தீட்சதர்களுக்கு சொந்தமானது என எங்கும் சொல்லவில்லை. 1885-லேயே நீதியரசர்கள் முத்துசாமி ஐயர், ஷேப்பர்ட் அடங்கிய அமர்வு “சிதம்பரம் கோயில் தீட்சதர்களின் சொத்தல்ல” என தீர்ப்பு கொடுத்திருப்பதை சுட்டிக்காட்டி, “சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல் அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவு சரிதான்” என்று கூறி, தீட்சதர்களின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், அப்போது தீட்சிதன் ஒருவன் கோயில் சொத்தை முறைகேடாக விற்றதும் விசாரணையில் வெளிவந்தது.
சென்னை உயர்நீதிமன்ற ஒரு நபர் நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பார்ப்பன சகுனி சுப்பிரமணிய சுவாமியும் தீட்சதர்களும் தொடர்ந்த மேல்முறையீடு செய்தனர். இரு நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்றத்தின் அந்த அமர்வும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அளித்தது.
அந்த தீர்ப்பு, “தீட்சதர்களோ, அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் கோயிலை கட்டவில்லை. அதனால், கோயிலின் மீது தீட்சதர்களுக்கு உரிமைக் கொண்டாட முகாந்திரம் இல்லை” எனக் கூறி, “கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்த உத்தரவு செல்லும்” என்றது.
இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தீட்சதர்களும், சுப்பிரமணியன் சுவாமியும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த சமயம் தமிழ்நாட்டிலும் தி.மு.க. ஆட்சி மாறி, ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றிருந்தது.
ஜெயலலிதாவை சந்தித்த தீட்சிதர்கள் தங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர்கள் கோரியபடியே, அவ்வழக்கில் தமிழ்நாட்டு அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர்களைக்கூட நியமிக்கவில்லை. அதற்கு எதிராக புரட்சிகர, ஜனநாயக அமைப்புக்கள் போராட்டம் நடத்தின.
29.11.2014-ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில், “உச்சநீதிமன்றம் சென்றுள்ள தீட்சிதர்களுக்கு எதிராக, மூத்த வழக்கறிஞரை நியமித்து கோயில் சொத்துக்களை காப்பாற்ற வேண்டும்” என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையே அன்றைய சூழலை விளக்கப் போதுமானது.

பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.பாப்டே அடங்கிய உச்சநிதிமன்ற அமர்வு, “தில்லை கோயிலை தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்தது சரி அல்ல” என்று கூறி தீட்சிதர்களிடமே கோயிலை ஒப்படைத்தது. “தில்லைக்கோயில் பொதுச் சொத்துதான் என்றும் தீட்சிதர்க்கு சொந்தமல்ல” என்ற சென்னை நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு அடிப்படையான ஆதாரங்கள், 1885 தீர்ப்புக்கான ஆதாரங்கள் என எதையுமே தமிழக அரசின் வழக்குரைஞர்கள் அப்போது சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரமணியசாமி, அதிகார வர்க்கம், தீட்சிதர்கள், நீதித்துறை என பார்ப்பன அதிகார பீடம் மொத்தமும் சேர்ந்து சதித்தனம் புரிந்தனர். ஆகையால், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில் மீண்டும் தீட்சித கிரிமினல்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பீனல் கோடு பூணுல் கோடை கட்டுப்படுத்தாது!
தீட்சிதப் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் கோயில் வந்த பின்னர், கடந்த 11-9-2018 அன்று நடைபெற்ற சிவகாசி பட்டாசு தொழிலதிபர் குடும்பத்தின் ஆடம்பர திருமணத்திற்காக கையூட்டாக பல கோடி பெற்று கோயிலை திருமண மண்டபமாக மாற்றினார்கள் தீட்சிதர்கள். பொற்கூரைமீது ஏறி கோவிலில் திருட்டுத்தனமாக வெளியூர் ஆட்களை தங்கவைத்து ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் ஐந்து நட்சத்திர விடுதி போல ஆடம்பர ஏற்பாடு செய்தனர். திருமண வீட்டார் தந்த பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு வந்த பிற பக்தர்கள் தடுக்கப்பட்டனர்.
இப்பிரச்சினை வெளியே வந்த உடன் பட்டு தீட்சிதன் என்பவனை மட்டும் சஸ்பெண்ட் செய்து 1001 ரூபாய் அபராதம் விதித்தனர். இது ஒரு தண்டனையா, எந்த சட்டப் புத்தகத்தில் இது இருக்கின்றது எனக் கேள்வி எழலாம். குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் பீனல் கோடு, பூணுல் கோடை கட்டுப்படுத்தாது என்பதே அதன் பொருள். அதனால்தான் இன்று ஜெயசீலா போன்ற பக்தர்களைத் தாக்க தீட்சிதர்களுக்கு துணிச்சல் வருகிறது.
இத்தகைய பூணுல் சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்துதான் இன்று வழிபாட்டு உரிமைக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்பாடும் உரிமைக்கான போராட்டமும் அக்கோயிலை அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரவேண்டும் என்ற போராட்டமும் வேறு வேறல்ல.
விலகிச்செல்ல நமக்கு உரிமை ஏதும் இல்லை !
தீட்சிதர் ஆதிக்கத்தில் இருந்து தில்லையை மீட்க, தமிழ்பாடும் உரிமையை மீட்டெடுக்க, தில்லை சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசின் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வருவதுதான் ஒரே வழி. இதற்கு தமிழ்நாடு அரசு சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும். அன்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த நந்தன் நுழைந்தான் என்பதற்காக ‘தீட்டு’ என்று கூறி அடைக்கப்பட்ட தெற்கு வாயில் இப்போதே சல்லி சல்லியாக நம்மால் நொறுக்கப்பட வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி பாசிஸ்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். நாட்டில் மீண்டும் நவீன வடிவ பார்ப்பன கொடுங்கோன்மையை – இந்துராஷ்டிரத்தை – அதிகாரப்பூர்வமாக நிறுவும் திசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே தில்லையில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை தகர்ப்பது எளிதானதல்ல.
படிக்க :
♦ தில்லையில் ஆதிக்கம் செலுத்தும் தீட்சிதர் கும்பல் || விடுதலை இராஜேந்திரன் உரை !
♦ ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மார்ச் 7,8,9 மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது “இந்து என்று சொல்லாதே, பார்ப்பான் பின்னால் செல்லாதே” என்று திருச்சி சிறீரங்கநாதனின் கோயில் கருவறையில் பெரியார் அம்பேத்கரின் படங்களோடு நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த இரங்க நாதனை துயிலெழுப்பிய மரபுக்கு சொந்தக்காரர்கள் நாம்.
இன்று, இந்தியாவின் பிற மாநிலங்களில் ஹிஜாபுக்கு தடை, பாங்கு ஓதுவதற்கு தடை என்று காவி பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான விசயமாகவும் தில்லை தீட்சிதர் ஆதிக்கத்தை முறியடிப்பதைப் பார்க்க வேண்டும். தில்லைக்கோயிலை தமிழனுக்கு சொந்தமாக்குவது என்பது சனாதன – பார்ப்பனிய எதிர்ப்புப் போர்க்களத்தின் ஒரு படி.
தமிழ்நாட்டுக் களத்தில் நின்று நாம் அடிக்கும் அடி பார்ப்பனியத்தின் உயிர்நாடியில் விழவேண்டும். பார்ப்பன – சனாதக்கூட்டமா, தமிழனா? என்று ஒரு கை பார்க்க வேண்டும்! தன்மான உணர்ச்சி மிக்க ஒவ்வொரு தமிழனும் களம் காண வேண்டும். இதற்காக மக்களைத் தட்டி எழுப்புகிற மாபெரும் பணியை புரட்சிகர-ஜனநாய சக்திகளாகிய கம்யூனிச, திராவிட, தமிழ்த்தேசிய அமைப்புகளிடம் வரலாறு ஒப்படைத்துள்ளது.

தமிழ்
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை !
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஆனால், இலங்கையானது கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மீளமுடியாத வகையில் 1970–ல் அங்கு ஏற்பட்ட பஞ்சத்தைவிட, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
உயிராதாரமான அத்தியாவசியப் பொருட்களான சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்றவைகளின் விலையானது விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்துள்ளது. ஒரு முட்டை விலை ரூ.35 ஆகவும், ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.250 ஆகவும், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.250 ஆகவும் உயர்ந்துள்ளது.
விலைவாசி உயர்வு ஒருபுறமிருக்க, பொருட்கள் தட்டுப்பாடு என்பது பாரிய அளவில் நீடிக்கிறது. இதனால் உழைக்கும் மக்கள் வாழவழியின்றி தவிக்கின்றனர். பிள்ளைகளுக்கு உணவளிக்க இயலாமல் போவதாலும், பட்டினியாலும் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் அதிக நேரம் பட்டினியால் காத்திருந்து மயங்கி விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
படிக்க :
♦ கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை ! தீர்வு என்ன ?
♦ இலங்கை : கொரோனா பிணவறைகளின் துயரக் கதைகள் | நதீஷா அத்துகோரல | ரிஷான்
மின்சார விநியோகம் தினசரி 7½ மணி நேரம் தடை செய்யப்படுவதால் தொழில்கள், வியாபார நிறுவனங்கள், கணினிகள் இயங்குவது பாதிக்கப்படுகிறது. எரிப்பொருட்கள் இல்லாமல் போக்குவரத்து, விவசாயம், கைத்தொழில் போன்றவைகள் முடக்கப்படுவதோடு, 90% உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் இவற்றில் பணிபுரியும் பெருவாரியான தொழிலாளர்களும் வருமானமின்றி அல்லல்படுகின்றனர். வேலைகளையும் இழந்து பரிதவிக்கின்றனர்.
இவ்வளவு கொடுமைக்கு மத்தியில் நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் புதல்வரும், அமைச்சருமான நாமல் ராஜபக்ச மாலத்தீவில் கேளிக்கை விளையாட்டில் இலயித்துக் கொண்டிருக்கிறார் எனில் இதைவிட பெரிய வக்கிரம் இருக்க முடியுமா?
இலங்கைக்கு ஏன் இந்த நிலை ?
இலங்கை பொருளாதாரத்தில் அதிகப்பட்ச பங்கைச் செலுத்துவது தேயிலை உற்பத்தி, ஆடை தயாரிப்பு, சுற்றுலா ஆகியவை. தேயிலை – ஆடை உற்பத்தி ஏற்றுமதியை சார்ந்திருந்தது. சுற்றுலா வெளிநாட்டவர் வருகையைச் சார்ந்திருந்தது.
கொரோனா தொற்று தொடங்கியவுடன் குறிப்பாக 2020 மார்ச் முதல் சர்வதேச / உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுற்றுலா வருவதும் நின்றுபோனது. தற்போது கூட ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளன. இதனால் அந்நிய செலவாணி வரவு நின்று விட்டது. உற்பத்தியான தேயிலையையும், ஆடையையும் கூட ஏற்றுமதி செய்ய இயலவில்லை.
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைவாழ் மக்களும் டாலர் – அந்நிய நாணயங்கள் அனுப்புவதைக் குறைத்துக் கொண்டனர். வேறு எந்த வழியிலும் பொருளாதாரத்தை ஈட்ட வழியில்லாமல் உள்நாட்டின் அத்தியாவசிய தேவையான பெட்ரோல், டீசல், கோழி, பால்மா, எரிவாயு மற்றும் இதர பொருட்களின் இறக்குமதிக்காக இருப்பிலுள்ள அந்நிய செலாவணியும் இழக்க நேரிட்டது.
இறுதியாக அந்நிய செலாவணி (அமெரிக்க டாலர் – இதர நாட்டு நாணயங்கள்) இருப்பானது தமிழ் இந்து தகவலின்படி, இந்தியா கடனாக வழங்கிய 50 கோடி டாலர்களையும் சேர்த்தே மொத்தமாக அதன் கையிருப்பானது 90 கோடி டாலர்கள்தான் உள்ளது. இது சீனாவின் அந்நிய செலாவணி இருப்பு 3.35 டிரில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும்போது மிக மிக சொற்பமானது, ஏணி வைத்தாலும் எட்ட முடியாது.
கொரோனாவை ஒட்டி நிறுத்தப்பட்ட ஏற்றுமதியானது மீண்டும் நடந்தாலும் அதன் பழைய நிலையை எட்ட இயலவில்லை. வருடத்திற்கு 1000 கோடி டாலர்கள் மதிப்புள்ள தேயிலை, ஆடை ஏற்றுமதி செய்ததோடு, சுற்றுலா மூலம் கிடைத்த டாலர், வெளிநாட்டில் தொழில் புரிவோர், வேலை செய்வோர் அனுப்பும் டாலர், வெளிநாட்டு தூதரகங்கள் இலங்கையில் செலவு செய்யும் அந்நிய செலாவணிகள், பிற நாடுகளிலிருந்து பெறும் கடன்கள், நன்கொடைகள் மூலம், வருவாயை ஈட்டியுள்ளது.
இவற்றில் இறக்குமதிக்காக 2000 டாலர்கள் செலவழித்ததுபோக மீதியை அந்நிய செலவாணி (நாணயங்களை) கையிருப்பாக இருந்துள்ளது. இதன் மூலம் பற்றாக்குறையை ஈடுசெய்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இலங்கையின் இன்றைய அந்நிய செலவாணி தேவையோ 3500 கோடி டாலர்களாகும்.
தற்போது ஏற்றுமதியும் குறைந்து, சுற்றுலா வருவாயும், வெளிநாட்டு இலங்கைவாழ் மக்கள் அனுப்பும் வருவாயும் இல்லாமல் போய்விட்டது. இறக்குமதியும் அதிகரித்துள்ள நிலையில் மேற்கண்ட நிதியைப் பெறவும், இதன் மூலம் குறைந்து வரும் அந்நிய செலவாணியின் இருப்பை உயர்த்தவும் கடன் வாங்க வேண்டும். இல்லையேல் இறக்குமதியைக் குறைத்து அந்நிய செலாவணி இருப்பை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
இதனடிப்படையில்தான் இலங்கை மத்திய வங்கியும், நிதி அமைச்சரும் இணைந்து அத்தியாவசியமற்ற 367 பொருட்கள் பட்டியலை தயாரித்து அவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. இதில் கைபேசியும், கணினியும் அடங்கும். இவை தடை செய்யப்பட்டதால் மாணவர்களின் படிப்பும், இவை சார்ந்த வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் குறிப்பாக விவசாய உற்பத்திக்கான இரசாயன உரத்திற்கும் தடை விதித்துள்ளது. இதனால், ஒரு மூட்டை ரசாயன உரத்தின் விலை ரூ.20,000-ஐ எட்டிவிட்டது. இதற்கான மானியத்தையும் நிறுத்த முடிவு செய்துவிட்டது ராஜபக்ச அரசு.
இதன் காரணமாக 1971, 1989, 1991-களில் நடந்த கிராமப்புற இளைஞர்கள் எழுச்சியைப்போல இன்னும் நடக்கலாம் என்பதை உணர்ந்த ராஜபக்ச அரசு விவசாயத்தை இராணுவமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இரசாயன உரத்தில் ஊறிப்போன விவசாய நிலத்தில் வலுகட்டாயமாக இயற்கை உரத்தை பயன்படுத்த கட்டாயப்படுத்துவதோடு, பசுமை வேளாண்மை செயலுக்கான மையத்தை நிறுவி அதற்கு ராணுவ தளபதியை தலைவராக நியமித்துள்ளது. இதன் மூலம் சிவில் நிவாகத்தின்கீழ் உள்ள விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும், இராணுவ துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அனைத்து எதிர்ப்புகளையும் இராணுவ சர்வாதிகாரத்தால் ஒடுக்குவது என்பதை இலக்காக வைத்து செயல்படுகிறது.
இதற்கேற்ப கடுமையான சட்டங்களையும் போடுகிறது. இதன் மூலம் சுகாதார ஊழியர்கள், எறிபொருள் துறை ஊழியர்கள் மத்தியில் வளர்ந்து வரும் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதனூடே IMF-லும் கடன்பெற முயன்று வருகிறது மகிந்த ராஜபக்ச அரசு. ஆனால் அது வரியை உயர்த்த வேண்டும்; மானியங்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதிக்கும். அவற்றை ஏற்கும் பட்சத்தில் கடனை வழங்கும்.
சீனா, இந்தியா போன்ற நாடுகள் பிற நாடுகளின் பற்றாக்குறையை, பஞ்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு கடன் வழங்கும். ஆனால், தன் நாட்டின் தேவைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் கடன் வழங்கும் நாட்டின் மீதான சுரண்டலையும், ஆக்கிரமிப்பையும் மேற்கொள்ளும்.
இந்த வகையில்தான் சீனாவும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் இலங்கையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. இந்தியாவும் தற்போது SBI வங்கி மூலம் வழங்கும் (மக்களின் சேமிப்பிலிருந்து) 50 கோடி டாலர்கள் நீண்டகால கடனுக்கு, உள்நாட்டு கட்டமைப்பு மின்சார உற்பத்தி இன்னும் பிற கட்டுமான பணிகளை தங்களுடைய எஜமானர்களான அதானி, அம்பானி கும்பலுக்கு தாரைவார்ப்பதாக கூறி இருப்பதும்; இன்னும் பல்வேறு பொருளாதார கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளது. மேலும் தான் தரும் கடனுக்கு ஈடாக அத்தியாவசிய பொருள்களை ஏற்றுமதி செய்யப்போவதாகவும் கூறி உள்ளது.
IMF-ம் சரி சீனா, இந்தியா போன்ற நாடுகளும் சரி தாங்கள் தரும் கடனுக்காக அவைகள் திணிக்கும் அனைத்து சுமைகளையும் ஏற்கனவே மறுகாலனியாக்க கொள்கையால் பாதிக்கப்படும் மக்கள்மீதுதான் சுமத்தப்படும் என்பதில் ஐயமில்லை.
படிக்க :
♦ இலங்கை : இராணுவ போலீசு வன்முறைகளை எதிர்த்தல் !
♦ இலங்கை : மலையேறிச் சென்று பெண்கள் மேற்கொள்ளும் மருத்துவம் !!
இந்த சுமையிலிருந்து விடுபட, பாதிக்கப்பட்ட மக்கள் கிளர்ந்து எழுவது இயல்பே. இவற்றை ஒடுக்கவும், பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய வழிமுறைகளை தேடாமல் பழைய முறையிலேயே சமூகத்தை வழிநடத்த சிவில் பிரச்சினைகளை – மக்கள் பிரச்சினைகளை இராணுவமயமாக்கலின்கீழ் கொண்டுவர முயல்கிறது. இதன் மூலம் தேர்தல் ஜனநாயகம் ஒத்து வராது; இராணுவ சர்வாதிகாரம் தான் தீர்வு என்பதை நிலைநாட்ட முனைகிறது மகிந்த ராஜபக்ச அரசு.
எனவே இனியும் உழைக்கும் வர்க்கமாகிய இலங்கை விவசாயிகளும், தொழிலாளர்களும் தேர்தல் ஜனநாயகத்தை நம்பி பயனில்லை என்பதை உணர வேண்டும். இலங்கையை இராணுவமயமாக்கலின் கீழ் கொண்டுவரும் ராஜபக்ச அரசை தூக்கியெறியாமல் இலங்கைவாழ் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை.
இதற்கு பாட்டாளி வர்க்கம் தலைமையில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை கட்டியெழுப்பி நாடு தழுவிய அளவில் ஒரு பேரெழுச்சியை உருவாக்க வேண்டும். இந்த எழுச்சியை தொடர்ந்து இடைவிடாமல் நடத்துவதன் வளர்ச்சி போக்கில் தேச நலனில் உண்மையான, உளப்பூர்வமான அக்கறை கொண்ட உழைக்கும் மக்களுக்கான புதியதொரு அரசை கட்டியமைப்பதே தீர்வாக அமையும்.

கதிரவன்
ஏகாதிபத்தியம் உலகை ஆண்டால், போர்கள் என்பது இயல்புநிலையாகும் !
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரசியா போர் தொடுத்தது. இதற்கான பதற்ற சூழல் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே நிலவி வந்தது. ரசிய ராணுவம் உக்ரைன் ராணுவத்தை கடல், வான்வெளி, தரை போன்ற அனைத்து தளங்களிலும் செயலிழக்க வைக்கும் வகையில் ராணுவத் தளங்களின் மீது போர் தொடுத்தது. ஆனால் மக்கள் கூட்டமாக வாழும் பகுதிகளில் தாக்குதல் நடைபெறவில்லை என ரசியா ராணுவம் சொல்கிறது.
ஆனால் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்தின் (OHCHR) அறிக்கைப்படி, மார்ச் 8ஆம் தேதி வரை 516 குடிமக்கள் இறந்திருக்கின்றனர். அதில் 37 பேர் குழந்தைகள். பிரபலங்கள் (Celebrities) சிலர் “போர் வேண்டாம்” என்று கருத்து தெரிவிப்பதன் மூலம் தங்களை மனிதாபிமானம் உள்ளவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். சரி அவர்கள் பிரபலங்கள் – அரசியலற்றவர்கள். அப்படி தான் பொதுவாக பேசுவார்கள். ஆனால் இங்கே உள்ள அரசியல் கட்சிகள் கூட அப்படி தான் பொதுவாக “போர் வேண்டாம்” என்கிறார்கள். ஆனால் அந்த போருக்கு பின்னணியாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டி பற்றி, அதன் வரலாற்று தன்மை பற்றி யாரும் வாய் திறப்பதில்லை.
“எந்தவகையான ஆத்திரமூட்டல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தாலும், இத்தனை பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை எந்த வழியிலும் பிரச்சினைகளை தீர்க்கப்போவதில்லை. உடனடியான போர் நிறுத்தமும், பேச்சு வார்த்தைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” அறிக்கை வெளியிடுகிறார் சீதாராம் யெச்சூரி. ஆனால் பேச்சு வார்த்தைகளால் ஏகாதிபத்தியம் தோற்றுவிக்கும் போரை நிறுத்த முடியாது. உக்ரைன் மீதான ரசியாவின் இந்த தாக்குதல் போருக்காக வரலாற்று காரணங்களையும் அதில் அமெரிக்காவின் மேல்நிலை ஆதிக்க கொள்கை எந்த அளவு பங்காற்றி இருக்கிறது என்பதையும் உடைத்து பேசு வேண்டிருக்கிறது. அதன் போக்கில் தான் இன்றைய ஏகாதிபத்திய மறுகாலனியாக்க இடைகட்டத்தில் ஏற்படும் போர்களுக்கான தீர்வை நம்மால் முன்வைக்க முடியும்.
படிக்க :
♦ உக்ரைனை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர துடிக்கும் ரஷ்யா – அமெரிக்கா!
♦ தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
உக்ரைன் மீதான ரசியாவின் போர் விவகாரத்தில் நமது முதல் கடமை என்பது மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கு காவடி தூக்கும் ஊடகங்களின் பாசாங்கு தனத்தையும் பொய்களையும் அம்பலப்படுத்துவதாகும். உக்ரைன் மீதான ரசியாவின் இந்த போர் தேசிய இறையாண்மையையும், சர்வதேச சட்டங்களையும் மீறுவதாக கூப்பாடு போடுகின்றன மேற்கத்திய ஊடகங்கள். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் இரத்தக்கறை படிந்த வரலாற்றையும், தேசிய இறையாண்மை, சொல்லிக்கொள்ளப்படும் சர்வதேச சட்டங்கள் ஆகியவற்றை மதிக்காமல் இந்த ஏகாதிபத்தியங்கள் போர் தொடுத்ததையும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல், வியட்நாமில் அப்பாவி மக்களை கொன்று குவித்தது, சிலியில் பாசிச ஆட்சிக் கவிழ்ப்பு போன்றவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே. அப்போதெல்லாம் தேசிய இறையாண்மை, சர்வதேச சட்டங்கள் பற்றிய எந்த கூச்சலையும் மேற்கத்திய ஊடகங்கள் எழுப்பவில்லை.
மேலும் இந்த பாசாங்குதனத்திற்கு பேர்போன இந்த ஊடகங்கள் முன்வைக்கும் தேசிய இறையாண்மை என்பது முரண்பாடானதாக உள்ளது.
2014ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டி ரசியாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிபர் யானுகோவிச் ஆட்சி, யூரோ மைதான் என்று அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் நவ நாஜிக்களால் (Neo Nazi) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டது. அந்த நிகழ்விலிருந்து உக்ரைன் மீதான அமெரிக்காவின் பிடி இறுகிக்கொண்டேயுள்ளது. அமெரிக்காவின் பிராந்திய ஆதிக்க விரிவாக்கத்திற்கு துணை போகும் ஒரு பகடைக்காய் போல்தான் உக்ரைன் இருந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் தேசிய இறையாண்மை எங்கே இருக்கிறது?
சர்வதேச நாணய நிதியம் தான் உக்ரைனின் பொருளாதார கொள்கைகளை வழிமொழிகிறது, அமெரிக்க தூதரகம் தான் உக்ரைனின் அரசாங்கங்கள் அமைவதில் முக்கிய பாங்காற்றுகின்றன.
அப்படியென்றால் அமெரிக்க ரசிய ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல் உக்ரைனில் போராக வெடித்திருக்கிறது. இதை நாம் பார்க்கத் தவறக்கூடாது.
ரசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில நாடுகள் 1955ஆம் ஆண்டு வார்சா (Warsaw) ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். மேற்கு ஜெர்மனி அன்றைய தினத்தில் (NATO) நோட்டோவில் இணைந்ததன் எதிர்வினையாகவே இந்த வார்சா ஒப்பந்தம் இருந்தது. 1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தகர்ந்த உடன் வார்சா ஒப்பந்தம் களைக்கப்பட்டது. இது ரசியாவின் சர்வதேச ரீதியான பலவீனத்தை குறித்தது. சோவியத் ஒன்றியம் சிதைந்து போனது, வார்சா ஒப்பந்தம் முடிவுக்கு வந்த உடன் நோட்டோ படை நிலவுவதற்கான தார்மீக கூறுகளும் முடிவுக்கு வந்துவிட்டது. நோட்டோவை களைத்து விட்டு பனிப்போரை முடித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இது ஏகாதிபத்தியங்களின் இயல்பல்ல. அது நீடித்து நிலவுவதற்கு போர் ஒரு அவசியமான கருவி. அதனடிப்படையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் புதிய ஒற்றை துருவ மேலாதிக்கத்திற்காக நோட்டோ படையை கிழக்கு ஐரோப்பாவை நோக்கி விரிவுபடுத்தியது. இதனால் ரசியாவிற்கு அதன் எல்லைகளை சுற்றி தேசிய பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்துவதாக இருந்தது.
பல வண்ணப் புரட்சிகளின் மூலமாக கிழக்கு ஐரோப்பாவில் மேற்கத்திய அமெரிக்க சார்பு அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி அமெரிக்கா, கிழக்கு ஐரோப்ப நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பி ரசியாவின் எல்லையில் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது. இவையெல்லாம் ரசியாவை ஒரு போருக்கு தூண்டும் விதத்திலானதாக இருந்தது.
தனது எல்லையில் பாதுகாப்பு நெருக்கடிகள் இருப்பதாக தோன்றினாலும், ரசியா தனது பலவீனங்களை கணக்கில் கொண்டும், ஒப்பீட்டளவில் அமெரிக்காவின் ராணுவ மற்றும் பொருளாதார உயர்ந்தநிலையை கணக்கில் கொண்டும் ஏதும் செய்ய முடியாத நிலையில் இருந்தது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட அரசியல் பொருளாதார இராணுவ சூழல் சாசுவதமாக தங்கிவிடுவதில்லை. இயக்கவியல் படி எல்லாம் மாற்றத்திற்குரியது தான். அப்படிப்பட்ட மாற்றம் தான் 2008 ஆம் ஆண்டு நடந்தது. ஈராக் மீதான போரால் அமெரிக்கா மிகப்பெரிய பொருட் செலவையும், இழப்பையும் சந்தித்தது. அமெரிக்கா இறங்கு முகத்தில் இருந்தது. அதை பயன்படுத்தி கொண்டு ரசியா, 2008 ஆம் ஆண்டு ஜார்ஜியா மீது கூர்மையான போர் தொடுத்தது. நோட்டோவினால் ஆயுதங்கள் அளிக்கப்பட்டு, பயிற்சி அளிப்பட்டிருந்த ஜார்ஜியாவின் ராணுவத்தை நாசம் செய்தது. அப்காசியன் மற்றும் தெற்கு ஒசேஷியன் பகுதிகளை துண்டாடி அதில் தனது ஆதரவை உறுதி செய்து கொண்ட பின்பு வெளியேறியது.
அதேபோல், 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையில் நவ நாஜிக்களால் யானுகோவிச் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது, கிரிமியாவை தன்னுடன் இணைப்பதன் மூலம் ரசியா பதிலடி கொடுத்தது. இது கருங்கடல் பகுதியில் ரசியாவின் கப்பற்படைக்கு சாதகமான சூழலை உருவாக்கி கொடுத்தது. இப்படி அமெரிக்காவும், ரசியாவும் தங்களது சொந்த ஏகாதிபத்திய நலனுக்காக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இதில் பாதிக்கப்படும் உக்ரைன், ஜார்ஜியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் இறையாண்மை என்பது மருந்துக்கு கூட மதிக்கப்படவில்லை. ஆனால் ரசிய, அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் இந்த பலப்பரீட்சை, அவற்றின் பலம் மற்றும் பலவீனங்களை காட்டிக்கொடுத்துள்ளது.
அமெரிக்க மேல்நிலை வல்லரசின் பலம் 2008 ஆம் ஆண்டு ஈராக் போர், சப் பிரைம் நெருக்கடி போன்றவற்றால் குறையத் தொடங்கியது. ஆனால், ஒரு மேல்நிலை வல்லரசுக்கே உன்டான கட்டமைப்புகளை அமெரிக்கா கொண்டிருந்தது. சர்வதேச நிறுவனங்களை தனது ஏகாதிபத்திய அரசியல் ஆதாயங்களுக்காக அமெரிக்காவால் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. ஏனெனில் அமெரிக்க ஏகாதிபத்தியம் சர்வதேச அளவில் நிறுவனமயப்பட்டிருந்தது. உதாரணமாக சர்வதேச நாணய நிதியத்தை தனது நலனுக்காக பயன்படுத்தி வந்ததை சொல்லலாம்.
படிக்க :
♦ உக்ரைன்: அமெரிக்காவிற்கு சவால் விடும் ரசியா!
♦ ரசியாவை மிரட்ட முடியாமல் திணறும் அமெரிக்கா
சர்வதேச நாணய நிதியம் (IMF), என்ற நிறுவனத்தின் முக்கியமான வேலை என்பது, வளரும், பின்தங்கிய நாடுகளின் சந்தையை சர்வதேச ஏகபோக நிதிமூலதனத்தின் சூறையாடலுக்கு திறந்துவிடுவதுதான். அதற்கு அது பிரதானமாக பயன்படுத்தும் வழி, திருப்பிச் செலுத்த முடியாத கடன்களை கொடுத்து அதனை கட்ட முடியாமல் தவிக்கும் நாடுகளின் அரசுகளிடம் தனது நிபந்தனைகளை திணிப்பது. இந்த நிபந்தனைகளில் முக்கியமான ஒன்று, சர்வதேச ஏகபோக நிதியாதிக்க கும்பல் கொள்ளையடிக்க அந்த நாடுகளின் சந்தையை திறந்துவிடுவது.
2014 ஆம் ஆண்டு உக்ரைன் அதிபராக யானுகோவிச் இருந்த போது, சர்வதேச நாணய நிதியம் உக்ரைனிடம் கூலியை குறைப்பது, அந்த நாட்டில் பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய துறைகளான கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கான செலவுகளை குறைப்பது, இயற்கை எரிவாயுவிற்கான மானியத்தை குறைப்பது போன்ற நிபந்தனைகளை முன்வைத்தது. இது மக்கள் மீது பெருமளவில் சுமையை சுமத்தும் என்பதாலும், மக்கள் தனக்கெதிராக போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும் இந்த நிபந்தனைகளை ஏற்க தயக்கம் காட்டிய யானுகோவிச் ரசியாவுடன் பேச்சு வார்த்தைகளை தொடங்கினார். இது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிராகரிப்பது மட்டுமல்ல அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் விரிவாக்க முயற்சிக்கு விடப்பட்ட சாவல் என்று கருதிய அமெரிக்கா, இந்த “குற்றத்தை” செய்யத் துணிந்ததற்காக யானுகோவிச் ஆட்சியை கவிழ்க்க முடிவெடுத்தது. அமெரிக்கா ஊட்டி வளர்த்த நவ நாஜிக்களால் யூரோ மைதான் என்னும் போராட்டத்தின் மூலம் யானுகோவிச் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
அதன்பிறகு வந்த ஆட்சி, எரிவாயுவிற்கான மானியத்தை பாதியாக குறைப்பதாக வாக்குறுதி அளித்து, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 27 பில்லியன் டாலர் கடன் வாங்கியது. இது வழக்கமாக இந்த சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியம் கொடுக்கும் கடன்களின் அளவைவிட ஆறு மடங்கு அதிகமாகும். அதுமட்டுமல்ல, சர்வதேச நாணய நிதியத்தின் வழக்கத்திற்கு மாறாக உள்நாட்டு போர் நடந்துகொண்டிருக்கும் நாடான உக்ரைனுக்கு இவ்வளவு பெரிய தொகையை கடனாக அளித்துள்ளது. இந்த கடன் திருப்பிச் செலுத்த முடியாதது என்று சர்வதேச நாணய நிதியத்திற்கு நன்றாக தெரியும்.
சர்வதேச நாணய நிதியம் தனது நிபந்தனைகளால் உக்ரைன் நாட்டின் வளங்களை சர்வதேச ஏகபோக நிதிமூலதனத்திற்கு திறந்துவிடுவதன் மூலம் அதை சூறையாடுவதற்கு நிதியாதிக்க கும்பலுக்கு இயற்கை வளங்களை ஒப்படைப்பதன் மூலம் தனது கடனை சரிசெய்து கொள்ளும். இந்த திருப்பிச் செலுத்த முடியாத கடன் என்பது, அமெரிக்க அரசுக்கும், உக்ரைனின் உள்நாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும், 2014 ஆட்சி கவிழ்க்கபட்ட பிறகு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான கள்ளக்கூட்டை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
இதன் மூலம் சர்வதேச நாணய நிதியம் சர்வதேச நிதி மூலதனத்திற்கு வளரும், பின்தங்கிய நாடுகளின் சந்தையை திறந்து விடுவது
மட்டுமல்ல, அமெரிக்காவின் மேலாதிக்க பிராந்திய விரிவாக்கத்திற்கு துணை செய்யும் நிறுவனமாகவும் நடந்து கொள்கிறது என்பது தெளிவாகிறது.
சர்வதேச ரீதியில் மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஆழமான வேர்களை கொண்டுள்ளது. கிளின்டன் ஆட்சிக்காலத்தில் இருந்து அமெரிக்கா கடைபிடித்து வரும் கொள்கை, கடந்த 30 ஆண்டுகளாக நோட்டோவை விரிவுபடுத்துவதன் மூலம் தனது சொந்த மேலாதிக்க நலனை நோட்டோவில் அங்கம் வகிக்கும் பிற வட ஐரோப்பிய நாடுகளின் நலன்களை விட பெரிதாக முன்நிறுத்திக்கொண்டது. அதனால் நல்ல பலன்களையும் அறுவடை செய்துள்ளது.



இதேபோல கடந்த 26.12.2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை இருளர் குடியிருப்பைச் சேர்ந்த அஜீத் என்ற சிறுவனை ‘சந்தேகத்தின் பெயரில்’கைதுசெய்த விருத்தாசலம் போலீசு, அச்சிறுவன் இருளர் இன சமூகத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தவுடன் அவன் கைகளில் வைத்திருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டது மட்டுமல்லாமல், கடையை உடைத்து திருடியதாக ஒப்புக்கொள்ளச் சொல்லி, அவனை முட்டிபோட வைத்து இரண்டு கால்களிலும் லத்தியால் அடித்து விரல்களை நசுக்கியுள்ளனர். வலி தாங்காமல் கத்திய அஜித்திடம் உன்னை சாகடித்து விடுவோம், ஒழுங்காக திருட்டை ஒப்புக்கொள் என மிரட்டி வழக்குகளை அந்த 14 வயது சிறுவன் மீது போட்டுள்ளனர்.












